கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வரை 2011.04

Page 1


Page 2

器/ö ○撤 அதிவுேம் ஆயிரம் 6aparoQ)
அறிவியல் பல்சுவை மாசிகை
s
துகளிலா நெஞ்சில் - சாதி துளிர்ப்பதும் இல்லை - சமயப் புகைச்சலும் இல்லை - மற்றும் புண்செயல் இல்லை - தம்பி அகத்திலே அன்பின் வெள்ளம் மூளும்; திய அச்சம் போகும்! நீ எந்நாளும் துய்மை செரடா தம்பி - எண்
சொல்லை நீ பெரிதும் நம்பி
-Uாரதிதாசன்
w
உள்ளே. *
RS, எதுவரை.? (தொடர் கட்டுரை) O3 > தமிழ் வட்டம் 05
& சஞ்சீவி பர்வதத்தின் சாரல்
(தொடர்) O6 இ. சிறுவர் உரிமைகள் - தொடர் O9 > விரதமிருத்தல் பயனுடையதா? 13 NYSA. Let's Learn to speak in 17
English XIS. BussineSS LetterS 21
இ பல்பயன் தரும்) மரங்கள்
மகோகனி 23 இ. முகாமைத்துவத்தின் திறமை 26 Sa Auto Shutdown 30 `இ சிறுகதை 34 S சித்திரை சிரிப்பாளா? - கவிதை 41 $ மாதமொருமனிதர் 43 RS தமிழா! உன் பெயர் தமிழா? 46
சின்னஞ்சிறு தகவல்கள்
இமனிதனுடைய காதுகளால் 130 dB
(டெசிபெல்) அளவுதான் பொறுத்துக்கொள்ள முடியும்.
&உலகிலேயே அதிக வயதில்
பிரதமரானவர் மோகரார்ஜி தேசாய். இவர் 1977-03-24இல் பதவியேற்ற போது வயது 81.
YS.நத்தைகளால் தொடர்ந்து மூன்று
ஆண்டுகள் வரை நித்திரை கொள்ள முடியும்.
இகறையான் ஒருநாளைக்கு
முப்பதாயிரம் முட்டைகள் இடும்.
இஉலகிலேயே வெப்பமான இடம்
அசீசியா (லிபியா).
இஉலகிலேயே குளிர்ந்த இடம்
சைபீரியா (ரஷ்யா).
இவிமானம் பறக்கும் உயரத்தை அளக்க உதவும் கருவி அல்டி மீற்றர்.
இஐக்கிய நாடுகள் சபை 1945-10-24
இல் தொடங்கப்பட்டது.
இமுதன் முதலில் காகிதத்தில் ரூபா
நோட்டுகளை அச்சிட்டு வெளியிட்ட நாடு சீனா.
இ.ஜனாதிபதிக்கு ஒரு வருட காலம்
பதிவி கொணர்ட் நாடு சுவீற்சலாந்து.
s, மிக நீண்ட நாள் வாழும் மிருகம்
முதலை (300 ஆண்டுகள்).
O1

Page 3
வரை
சிந்திய குறள்கள்
எவ்வதுறைவது உலகம் உலகத்தோடு அவ்வ துறைவது அறிவு
எப்படி உலக மக்கள் வாழ்கிறார்களோ அவர்களிடமிருந்து வேறுபடாமல் சேர்ந்து வாழ்வதுதான் புத்திக் கூர்மையான செயல்.
It is a part of wisdom to conform to the ways of the world.
பொன்மொழி
ல் முன்னேறும் சந்தர்ப்பங்கள் தானாக வருவதில்லை அவை
உருவாக்கப்படுகின்றன. - ஆரிஸன் ஸ்வெட்
ல் கற்பனை செய்யாதவன், சிறகு இல்லாத பறவையைப் போன்றவன்.
- வில்ஹெல்பிரடிUெல்
ல் வெற்றியை விட தோல்வி தான் அதிகமாக படிப்பினையைச் சொல்லிக்
கொடுக்கின்றது. - கார்ல் றெனின்கர்
ல் நாளை என்றால் தாமதமாகிவிடும், அதனால் இன்றே வாழ்ந்து விடுங்கள்.
- மோர்ஷியஸ்
ல் செல்வத்தினால் வரும் புகழ் நிலைப்பதில்லை. சாதனையால் வரும் புகழுக்கு
எதுவும் ஈடாகாது. - சோக்ரடிஸ் ક્ષે பெருந்தன்மையுடன் நடந்து கொண்டால், பெருவாழ்வு தேடி வரும். 0ேகள் ல் எப்போதும் அச்சத்தில் இருப்பதை விட ஆபத்தை ஒருமுறை சந்திப்பதே மேல்.
- டெஸ்கார்ட்ஸ்
 

வரை
Ø எதுவரை?
அன்பிற்கினிய இளைய தலைமுறையினரே.
இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்களுடன் இந்த மடலில் உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்வடைகின்றேன். சென்ற மடலில் உங்கள் பெற்றோர்களை மூன்று வகைப்பட்டியலினுள் அடக்கி, உங்கள் பெற்றோர் எந்த வகை என்ற வினாவுடன் விடைபெற்றதை மறந்து விட்டீர்களா? இதோ விடையுடன், விளக்கத்துடன் வந்திருக்கிறேனர்.
பொதுவாக "நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம்” என்று கூறுவது வழக்கம். நல்ல குடும்பத்தில் எப்பொழுதும் சமநிலை பேணப்படவேண்டும். புதிய மாற்றங்கள் ஏற்படும் போது அதற்குத் தம்மை இசைவாக்கிக் கொள்வது அவசியம். ஒருவரை ஒருவர் மதிக்கும் நிலையில் தட்டிக்கொடுத்தல், பாராட்டு வழங்குதல், தவறுகள் ஏற்படும் போது அதனை மற்றவர் மனது புணர்படாத வகையில் ஆரோக்கியமாகச் சீர் செய்வது அவசியம். சில பெற்றோர்கள் தமது கடந்த கால வாழ்வில் தாம் செய்த சில தவறுகளைப் பிள்ளைகள் அறிந்துவிடக் கூடாது
எண்பதற்காகத் தம்மைப் பல வழிகளிலும் நியாயப்படுத்திக் காட்ட முயன்று கொணர்டிருப்பார்கள். அதனாலேயே சில நட்புகளை, உறவுகளைத் தடை செய்து சர்வாதிகாரப் போக்கை கடைப்பிடிப்பார்கள். தமது வாழ்வைத் திறந்த புத்தகமாக முனர்வைக்கவல்ல பெற்றோர்கள் உணர்மையில் மகத்தானவர்களே.
பிள்ளையுடனர் நட்புரிமையோடு பழகும் பெற்றோர் பிள்ளையின் ஒவ்வொரு செயலையும் நேர் மனப்பாங்கோடு கையாள்பவர்களாக இருப்பார்கள். நல்லதொரு ஜனநாயகப் பர்ைபு கொண்ட தலைமைத்துவம் இருக்கும் பட்சத்தில் பிள்ளை தனது துயரங்களை, வெற்றிகளை, விருப்புக்களை மனந்திறந்து பேசும். இதனால் பிள்ளைக்கு எதிர்ப்படும் உறவுகளால் ஏற்படும் சிக்கல்கள் ஆரோக்கியமான முறையில் கையாளப்பட்டு சுமுகமான நிலை குடும்பத்தில் ஏற்படும். பிள்ளைமேல் பெற்றவர் பூரண நம்பிக்கை வைக்க வேண்டுமானால் பிள்ளைகளும் நேர்மையானவர்களாக இருக்க வேணர்டும் அல்லவா?
O3

Page 4
வரை
குழந்தைகளாக இருந்த போது உங்கள் மேல் அண்பைப் பொழிந்த பெற்றோர், நீங்கள் இளையோர் ஆகும் போது ஏன் எதிரிகளாக மாறுகின்றனர்? ஆம்! இது சிந்திக்கப்படவேண்டிய ஒன்று தான். கட்டிளமைப்பருவத்தை அணிமிக்கும் போது பிள்ளை, பெற்றவர்களின் அரவணைப்பிலிருந்து விலகித் தனது காலில், தனது போக்கில் தனியாக இருக்கவும், தம்மைத் தாமே ஆளும் திறன் கொணர்டவர்களாகவும் வாழ்வதற்கு ஆவலாக இருப்பார்கள். இதனைப் பெற்றோர்கள் புரிந்துகொணர்டு தமது கட்டுப்பாடுகளை சட்டதிட்டங்களை எல்லைகளை நீளக்கயிற்றில் விடுவது போல விரிவாக்கிக் கொள்ள வேண்டும். இதற்கு நம்பிக்கை, புரிந்துணர்வு, வளைந்து கொடுக்கும் தன்மை,
தாங்குதிறன் என்பன பெற்றோரின் மனநிலையில் உருவாக வேண்டும். மேலும் பிள்ளை சொல்வதை, அதன் நியாயத்தை அதன் வாயாலேயே சொல்வதற்கு அனுமதிக்கவேண்டும். கேட்பதற்கும் தாயாராக இருக்க வேண்டும். இந்த உறவுக்குள் பேரன், பேத்தி, மாமா, சித்தப்பா, அயலவர்கள் எவரையும் அனாவசியமாக நுழைய அனுமதிக்கக் கூடாது. என்ன இளையோரே. அப்படி எல்லாம் இருந்தால் உங்கள் பெற்றோர்தான் உலகத்திலேயே இலட்சியப் பெற்றோர்கள்! அன்புள்ளவர்களே கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. எழுதுங்கள். அதுவரை விடைபெறும்.
பகீரதி கணேசதுரை ஆசிரியை, யா/ மகாஜனக் கல்லூரி (விமர்சனங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்)
விவேக வரிகள்
ல்தன்னை வெல்லக் கற்றுக்கொண்டவனிடமே
நாகரீகத்தின் முதிர்ச்சி இருப்பதாகச்
சொல்லலாம்.
ல்நாம் நினைக்கும் ஒவ்வொரு எண்ணமும், நாம்
செய்யும் ஒவ்வொரு செயலும் குறிப்பிட்ட
காலத்திற்குப் பின் துட்சுமமாக நம்மிடமே
திரும்புகின்றன.
சுவாமி விவேகானந்தர்
Ո4
 

வரை
தமிழ் வட்டற் திரு. சு. ஆழ்வாப்பிள்ளை
ஏழும் ஐந்தும் மையண்ணா, ஒண்றே முக்கால் தையண்ணா
எங்கள் முன்னோர்கள் உரையாடும் போது வேடிக்கையாக விரைவில் விளங்கிக்கொள்ள முடியாதவாறு இலக்கணத்தோடு அல்லது சிலேடையைப் பயன்படுத்திப் பேசிக்கொள்வார்கள். உதாரணமாக: "ஏழும் ஐந்தும் மையுன்னா", "ஒன்றே முக்கால் தை யன்னா”.
இதில் என்ன இருக்கிறதெனப் பார்ப்போம். “7” இற்கு தமிழ் எழுத்தில் - எ
“5” இற்கு தமிழ் எழுத்து - ரு பின்னால் "மை" என்ற எழுத்தைச் சேர்க்க ‘எருமை” என்று வரும். இதேபோல் அவனொரு "ஒன்றே முக்கால் தையன்னா” என்றால், ஒன்று - க, முக்கால் - ளு, இதனுடன் “தை” என்பதையும் சேர்த்தால் “களுதை” என்று வரும். மற்றையவர்களுக்கு விளங்காத படி எம் முன்னோர்கள் நகைச்சுவையாகப் பேசுவார்கள். ஆனால் இரண்டாவதாகக் கூறியது தவறு. அதாவது "கழுதை” என்ற சொல்லுக்கு மவுள "ழு" வரவேண்டும். எனவே ஏழும் ஐந்தும் மையன்னா" என்பது சரி. ஆனால் "ஒன்றே முக்கால் தையன்னா என்பது தவறு. அன்பு நேயர்களே! தவறாது மீண்டும் சந்திப்போம். அன்பு கலந்த வணக்கம்.
"ஏன் அந்த வாத்தியார், இப்படி சந்தம்போட்டு பிள்ளைகளை ஏசுறார்”
“பிள்ளைகளை அமைதியாக இருக்கச் சொல்லித்தாண்”
c. 1122.”
05

Page 5
வரை
பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் குப்பன் என்ற வேடுவனையும் அவனது காதலியையும் கதாபாத்திரங்களாக வைத்து தமிழ் நாட்டில். கறையாக பழந்திருக்கும் மூடக்கொள்கையை படம் பிழத்து சுவையாக
தரும் இலக்கியத்தைத் *3
*్య.* $్క iز
தழுவியே இவை எழுதப்பட்டது.
"என்னடி வஞ்சி உனக்கு இன்னலும் இல்லாமல் இந்த இதுவும் தெரியாதா? நாமிருவர் மலையை அனுமன் தூக்கிச் சென்று இங்கு வந்தோம். எமக்கோர் இலங்கையில் வைத்தான். பின்னர்
O6
 
 

வரை
மூலிகைகளின் சக்தியால் இராமனும் இலக்குவணனும் எழுந்தார்கள். கடுகளவும் ஆடாமல் மலையை பழைய, இருந்த இடத்திற்கு எடுத்து வந்தான். கண்ணாடிப் பாத்திரத்தை எடுப்பது போல் எடுத்து வந்து மீண்டும் இவ்விடத்தில் வைத்தான் அனுமன். இந்தப் பகுதிதான் எனக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கிறது.”
ஆச்சரிய சம்பவத்தை குப்பன் அறிவித்தான். மீண்டும் அதே பக்கத்திலிருந்து சத்தம் பிறந்தது.
"இம்மட்டும் இன்றைக்கு கதையை முடிக்கின்றேன். செம்மையாய் நாளை சொல்லுகிறேன் இத்தொடரை. இராமாயணத்தின் சுவையான இப்பகுதியை கேட்டோர், உரைத்தோர் எல்லோருமே இங்குள்ள போகங்களை எல்லாம் அனுபவிப்பர். அங்கே உள்ள வைகுந்தத்தை தடையின்றிச் சேர்வார்கள். ஜானகி காந்தஸ் பரணே ஜயராம்.”
"மானோ தென்ன” என்றான் வையம் அறியாக் குப்பன்.
"முன்பு நான் உங்களுக்கு முத்தம் கொடுக்கையிலே “ஐயையோ” தொடங்கி இதுவரைக்கும் இராமாயணம் சொல்லி நாளைக் கழிக்கின்ற ஏமாந்தார்க்காக கெசமானன் என்றுரைக்கும் பாகவதன் பலபேரைக் கூட்டிச் சொன்னான்.
அப்படியான உழைப்பை பத்தோ பதினைந்து பாகவதர் பெற்றிடுவார். இதில் சித்தம் மலைக்க ஒன்று மில்லை.
“இப்போ கையிலிருக்கும் காட்சி தரும் மூலிகையை விழுங்கி அவ்விடத்தில் பாருங்கள்” என்று சொல்லிக் கொண்டு குப்பனுக்கும் உண்ணக் கொடுத்து வஞ்சியும் உண்டாள். குப்பன் வஞ்சி இருவருக்கும் வேறொன்று தெரிகிறது. ஓர் மாளிகையினுள்ளே மக்கள் கூட்டத்தையும், பாகவதர் நடுவில் இருப்பதையும் குப்பன் வஞ்சி இருவரும் கவனித்தார்கள். பட்டை, நாமம் உடைய பாகவதர் ரூபாயை தட்டிப் பார்ப்பதையும், சந்தோஷம் கொள்வதையும் கண்டார்கள். கண்டு கடகட வென்றே சிரித்தார்கள்.
இதைப் பார்த்த இளவஞ்சிக்கு எள்ளளவும் தாங்க முடியவில்லை. வானளவு தோற்றங்கள், வானரங்கள், இராமர்கள், அனுமார்கள். சாம்பவந்தர் ஒன்றல்ல ஆயிரம் நூல்கள் உரைக்கட்டும், விஷ்வரூப பெருமை மேலேறும் வன்மைகள், உஸ் என்ற சத்தங்கள், அஸ் என்ற சத்தங்கள் எவ்வளவோ நூலில் எழுதிக் கிடக்கட்டும், கிருபை, செழுங்கருணை, அஞ்சலிக்கை, முத்தி, சொர்க்கம், வைகுந்தம் எதையும் உரைக்கட்டும். இத்தனையும் சேரட்டும் என்ன பயன்
O7

Page 6
வரை
உண்டு? நமக்குள்ள பகுத்தறிவை, நம்பமுடியாத ஏற்றுக்கொள்ள முடியாத ஏடுகளால் என்னை எவரும் மாற்றவோ அசைக்கவோ முடியாது. சித்தம் சலியாத திறன் நமக்கு வேண்டும், மக்கள் உழைப்பில் மலையாத நம்பிக்கை பொங்கி எழவேண்டும். நல்லநிலை நாளும் உயர்த்தி, புல்லநிலை போக்கி புதியநிலை தேடல் வேண்டும். மீளாத மூடப் பழக்கங்கள் மீண்டும் உமை வந்து சேராமல் இருப்பதற்கு நானும் கழையின்றி சஞ்சீவி பர்வதத்தில் கூப்பிட்டேன். தற்செயலாக பயப்படும் நிலையையே கண்டோம். உங்கள் மனதில் உறைந்து கிடந்த அழிவு செய்கின்ற மூடப் பழக்க வழக்கங்கள் இனிமேல் உங்களுக்கு இருக்காது என்று நினைக்கிறேன்.
உங்களுடைய கையை நீண்டி சாரலிலே முத்தம் தரும்படி கேட்டீர்கள். நான் ஏற்கவில்லை. ஈரமலையில் யான் தந்தேன், ஏற்கவில்லை. சத்தங்களைக் கேட்டு சலித்துவிட்டீர்கள் பயத்தால். இப்போ நீங்கள் என்னுடன் சேர்ந்து இனிய முத்தம் பெறுவீர்கள்.
வஞ்சி! இன்றைக்கு நான் ஏழனத்துக்குள்ளானேன். நீ ஏன் எனக்கு முன்பு சொல்லவில்லை. இராமாயணம் என்ற இழிவான கதை பூமியிலே இருப்பதை இப்போதே அறிகிறேன். நம்பத் தகாத
வெல்லாம் நம்பவைத்து தாங்கள் நலம் சம்பாதிக்கும் சரித்திரக் காரர்களால், நாடு நலிந்து போவதை இன்று மனதார உணர்ந்து கொண்டேன்.
தமிழ் நாட்டில் மேன்மையுடைய பொதியமலை, செந்நெல் வயல்கள், செழுங்கரும்புத் தோட்டங்கள், தின்ன கனிகள், தெவிட்டாப் பயன் மரங்கள் இன்பம் செறிந்திருக்கும் இப்பெரிய தேசத்தில் முப்பத்து முக்கோடி மக்கள் இருந்தென்ன? இயற்கை வளங்கள் இருந்தென்ன? மூடப் பழக்க வழக்கம் எப்போதான் எம்மைவிட்டகலும்? அன்றுதான் விமோசனம்.
"வஞ்சி வானம் வடிவழகு காட்டுவதைப் பார். சாலையில் ஓர் அன்னத்தை அதன் பேடு தேடுகிறது. என்ன சொல்கிறாய் இளவஞ்சி? உன் நெஞ்சை என் நெஞ்நாக்கிப் பார்” என்றுரைத்தான் குமுறுமுள்ளக் குப்பன்.
சிரித்தாள் இளவஞ்சி "செல்வோம் நாம் சாரலுக்கு”. சென்றார்கள் . அழகு சோலை அருவியின் ஊற்று, முல்லை மலர்ந்த மாலை நேரம். அவர்கள் தம்மை மறந்த நிலை. ஆசையோடு குமுறும் குப்பன் நெஞ்சால் இளவஞ்சியன் நெஞ்சை அளந்தான். இறுக அணைத்தான். “விடாதே" என்றாள்.
முற்றும்.
08
3፡

Soil EBridge
சிறுவர்கள் என்றால் யார்?
பொதுவாக 18 வயதுக்குட்பட்ட அனைவரும் சிறுவர்களாக கணிக்கப்படுவர் என ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையால் 1989ம் ஆணர்டில் உருவாக்கப்பட்ட சிறுவர் உரிமைகள் பிரகடனம் கூறுகின்றது. இதனடிப்படையில் இவ்வயதுக்குட்பட்ட சிறுவர்களின் குணவியல்புகளை வெள்ளை மனம் படைத்தவர்கள், துடுக்குத்தனம் மிக்கவர்கள், கள்ளம் கபடமற்றவர்கள், விளையாட ஆசைப்பட்டவர்கள், அண்பை எதிர்பார்ப்பவர்கள், பயம் தெரியாதவர்கள், வன்முறையை எதிர்ப்பவர்கள், பெறுமதி சார்பில்லாது விருப்பப்படுபவர்கள்,
இனிப்புச் சுவையை அதிகம் விரும்புபவர்கள், பாகுபாடு பற்றிச் சிந்திக்கத் தெரியாதவர்கள் என வகைப்படுத்தலாம். சிறுவர் உரிமைகள் உருவாகக் காரணம் என்ன?
1923ம் ஆணர்டிற்கு முன்னரான காலப்பகுதிச் சிறுவர்களைப் பார்த்தால் இவர்களுக்கென்று ஒ தனிப்பட்ட சலுகைகளோ, இவர்களை ஒரு மெண்மையானவர்களாகப் பார்க்கவேணடும் என்ற எணர்னமோ, அவ்வயதுடையோருக்கு சில விசேட சலுகைகள் செய்யவேண்டும் என்ற நோக்கமோ இருந்ததில்லை.
09

Page 7
அக்காலத்தில் சிறுவர்கள் பல்வேறு கொடுமைகளுக்கும் துஷ்பிரயோகங்களுக்கும் உட்பட்டு உடல், உளரீதியாக பாதிக்கப்பட்டு பல்வேறு இன்னல்களை நாளாந்தம் அனுபவித்து வந்துள்ளனர். இந்நிலையில் 1923ம் ஆண்டில் சுவிற்சலாந்து நாட்டின் எக்லான்ரனி ஜெப் எனும் பெண்மணி முதல்முறையாக "சிறுவர் உரிமைகள்” எனும் தொகுப்பை வரைந்தார். இதன் பின்னர்தான் சிறுவர்களுக்கென ஒரு தினம் வேண்டும் என்றும் அவர்களையும் பெரியவர்கள் பாதுகாத்து, பராமரிக்க வேண்டும் என்ற சிந்தனையாலும் ஐப்பசி முதலாம் திகதியை சர்வதேச சிறுவர் தினமாகப் பிரகடனப்படுத்தி சிறுவர்களுக்காக நினைவுகூர்ந்து வருகின்றது.
சிறுவர் உரிமைகள் என்றால் என்ன?
சிறுவர் உரிமைகள் எனப்படுவது சிறுவர்களைப் பாதுகாப்பதற்காகவும், அவர்களது குணவியல்புகளுக்கேற்ப பராமரிப்பதற்காகவும், உருவாக்கப்பட்ட சிறுவர் உரிமைகள் பட்டயம் மூலம்
வரை
சிறுவர்கள் தமக்கு உரித்தான உரிமைகளை அறிந்து கொள்ளவும், அவற்றின் மூலம் தம்மைத்தாமே பாதுகாத்துக்கொள்ளவும், பிறரினால் ஏற்படும் ஆபத்துக்களிலிருந்து தம்மை விடுவிக்கவும் இது உதவுகின்றது. இவர்களுக்கான முக்கிய உரிமைகளாக 134 உறுப்புரைகள் வழங்கப்பட்டிருப்பினும் இவற்றில் 42 உறுப்புரைகள் சிறுவர்களை நேரடியாக பாதுகாப்பதற்காகவும் மிகுதி உறுப்புரைகள் இச் சிறுவர் உரிமைகள் சமவியத்தை அமுல்படுத்தும் விதமாகவும் வழங்கப்பட்டிருக்கின்றது.
இவை:
1. சிறுவர்கள் என்றால் யார் என
வரையறுக்கப்பட்டுள்ளது.
2. சிறுவர்களை சாதி, குலம், பால்,
ஏழை, பணக்காரர் போன்ற விதங்களில் பாகுபாடு காட்டக்கூடாது என விளக்குகின்றது.
3. சிறுவர்களின் உயரிய நலன்கள் பேணப்படும் முகமாக அவர்கள் தொடர்பான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட வேணர்டும்.
4. சிறுவர் உரிமைப் பட்டயத்தில்
உள்ளடக்கப்பட்ட சகல உரிமைகளையும்
10

வரை
IO.
செயலுருப்படுத்துவதற்கு அரசாங்கம் இயலுமான சகல விதமான ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும்.
. சிறுவர் தொடர்பான பெற்றோர்,
குடும்பத்தினரின் கடமைகள் தொடர்பாக அரசாங்கம் மதிப்பளிக்கவேண்டும்.
. சிறுவர்கள் உயிர்வாழ்தலுக்கும்
முன்னேறுவதற்குமான வழிவகுத்தல் வேண்டும்.
குழந்தை பிறந்ததும் தனக்கென
ஒரு பெயரை வைக்கவும், குழந்தையின் பிறப்பு பதிவுசெய்யவும் வேண்டும்.
. பிள்ளை தனது பெற்றோருடன்
வசிக்கும் உரிமையுடையதாக பெற்றோர் பிரிந்திருந்தால் அவர்களைத் தனித்தனியாக சந்தித்து, தமது உறவுமுறை பேணுவதற்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும்.
பிள்ளையின் பெற்றோர்
வேறுநாடுகளில் இருந்தாலும் பிள்ளை மீளவும் அவர்களுடனர் சேர்ந்து வாழ உரித்துடையதாகும்.
சிறுவர்களை வேறுநாடுகளுக்கு விருப்பமின்றி பெற்றோரோ, வேறுநபர்களினால் கடத்திச் செல்லப்படுமிடத்து அதற்குரிய நடவடிக்கை அரசாங்கம் எடுக்க
11.
12.
13.
14.
15.
16.
கடமைப்பட்டுள்ளது.
பிள்ளையினர் எணர்ணங்கள், கருத்துக்களுக்கு மதிப்பளிக்கவேண்டும்.
பிள்ளைகள் சுதந்திரமாக தகவல்களைத் திரட்டிக்கொள்ளவும், கருத்துக்களை வெளியிடவும் உரித்துடையவர்கள்.
ஒவ்வொரு பிள்ளையும் தன் புனிதத்துவத்தைப் பேண உரித்துடையவர்.
பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களினால் பிள்ளைகளுக்கு இழைக்கப்படும் துன்புறுத்தல்களை விட்டு விலகியிருக்க சிறுவர்களுக்கு உரிமையுணர்டு. இவற்றை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் கடப்பாடாகும்.
பெற்றோரில்லாத குழந்தைகளைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் வேணர்டும்.
ஒரு பிள்ளை உடல், உள ரீதியில் பாதிக்கப்பட்டிருப்பின்
6J6060Tu பிள்ளைகளுக்குரித்தான சகல சலுகைகளும் அந்தப்பிள்ளைக்குக் கிடைக்க வசதி செய்தல் வேண்டும்.
11

Page 8
17. சகல பிள்ளைகளும் கட்டாய
முதனிலைக் கல்வி இலவசமாக வழங்கப்படவேண்டும். இவர்களுக்கு இரண்டாம் நிலைக்கல்வி மற்றும் எதிர்காலக்கல்விக்கான வழிவகைகளை ஏற்பாடு செய்தல் வேணடும்.
18. விளையாட்டுக்கள்,
மகிழ்ச்சிகள், கேளிக்கைகள், கலாசார நடவடிக்கைகள் ஆகியவற்றில் ஈடுபடுவதற்கு உரித்துடையவர்கள்.
19. எந்தவொரு பாலியல் சார்ந்த
செயற்பாடுகளிலும் ஈடுபடுத்தல், அல்லது அவற்றுக்கான தூணர்டுதல் அளித்தல் எவையிலுமின்றி பிள்ளைகள் பாதுகாக்கப்படல் வேணர்டும்.
20. சிறுவர் ஊழியத்திலிருந்து
சிறுவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அத்துடன் எந்தவொரு ஆயுதப்படையிலும் 18 வயதுக்குக் குறைந்தவர்களை இணைத்துக்கொள்ளவோ, போராட்டங்களில் ஈடுபடுத்தவோ கூடாது. மேலும் இவர்களுக்கு நீதிமன்ற
நடைமுறை மூலம் தீர்வை பெற்றுக்கொடுக்கவும்,
அவர்களுக்கான புனர்வாழ்வு ஆதரிப்பு வழங்கவும் உரித்துடையவர்கள். இதுபோன்ற முக்கிய உரிமைகளை சிறுவர்களின் நலன்களை பாதுகாக்கவும், அவர்களின் முன்னேற்றமான வாழ்வுக்கு வழிசமைக்கவுமாக உருவாக்கப்பட்டுள்ளது.
எனவே அடுத்த அத்தியாயத்தில் இவ்வாறான சிறுவர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான எமது நாட்டில் இலங்கை அரசு எடுத்துவரும் நடவடிக்கை தொடர்பாகவும், கட்டமைப்புத் தொடர்பாகவும் விரிவாக நோக்குவோம்.
தொடரும்.
S.M.E.Bridget
சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர்,
பிரதேச செயலகம், நல்லூர்
12
 

வரை
இன்றைய காலகட்டத்தில்
எம்மவர்களில் யாரைப்பார்த்தாலும் விரதம், விரதம் என்றபடிதான். தாம் நினைப்பவை நடந்தேற வேண்டும் என நினைந்து ஒரு விரதம் கூட மிச்சம் விடாமல் விரதமிருப்பவர்களும் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள். ஏன், உடம்பில் காய்ச்சல் போன்ற நோய்கள் இருக்கும் போதும் பிடித்த விரதத்தை கைவிட்டுவிடக்கூடாது என்று வெறும் வயிற்றுடன் மருந்துகளை சாப்பிட்டு மேலும் நோய்களை கூட்டிக்கொள்பவர்களும் எம்மிடையேதான் இருக்கிறார்கள். பார்த்தால் ஒல்லியான தோற்றம் கொண்டவராகவும் நோஞ்சானாகவும்
விரதம் இருத்தல்
பயனுடைய சிறந்த செயலா..?
இருப்பார், கேட்டால், "நான் இன்றைக்கு விரதம், பச்சை தண்ணிகூட குடிக்கமாட்டேன்” என்பார்கள். அறிவுரை கூறி உண்ணச்சொன்னால், இல்லை, பிடித்த விரதத்தை கைவிட முடியாது, கடவுள் குற்றமாகிவிடும்; என்றெல்லாம் சொல்லி எம் கருத்தை உதறித்தள்ளிவிடுவார்கள். கடவுள் நம்பிக்கை தேவைதான், ஆனால் உடல் ஆரோக்கியத்திற்கு உலை வைக்குமளவிற்கு, கண்மூடித்தனமாக விரதம் இருப்பது பெரிய விபரீதத்தில் கொண்டுபோய் விடும் என்பது பலருக்கு தெரிவதில்லை. ஒவ்வொருவரும் தினமும் விரதம் இருக்கிறோம் என்பதை உண்ணா நோன்பு இருப்பவர்கள் ஒவ்வொருவரும் உணர்ந்துகொள்ள வேண்டும். எப்படியென்று கேட்கிறீர்களா? இரவிலே துங்கிக்கொண்டிருக்கும் போது யாரும் உண்பதில்லையே! அதுவும் விரதம் தானே. அதுவே போதும் என்கிறார்கள் டாக்டர்கள்
விரதம் இருப்பதனால் நம் உடலில் உள்ள இன்சுலினின் சுரப்பு சீராக்கப்படுவதுடன் கொழுப்புச் சத்தும் குறைவடைந்து எடை குறைகின்றது. அது மட்டுமல்லாது
13

Page 9
வரை
உணவுக்கால்வாய், உடல் கலங்களில் உள்ள நச்சு பதார்த்தங்கள் அகற்றப்படுவதுடன் உணவுக்கால்வாயிலுள்ள உறுப்புகளுக்கு ஒய்வும் கிடைக்கின்றது. இதயநோய், மூட்டுவலி, இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட சில வகை நோய்கள் தீர மருந்துகளுடன் இப்படி சில சமயம் குறைந்தபட்ச நோன்பு இருக்க டாக்டர்களே நோன்பு இருக்க யோசனைகள் சொல்கிறார்கள். மன அழுத்தம், சோர்வு நீங்க குறைந்த பட்ச அளவில் வயிற்றை காயப்போடுவது நல்லது. இதன் காரணமாக சமிபாட்டுக்கு பயன்படவேண்டிய சக்தியை உபயோகித்து உடலானது சோர்வு நீங்கி புத்துணர்வு பெறுவதாக கூறப்படுகிறது. உண்ணா நோன்பு சில கலங்கள் வளர்ச்சியடைய உதவுவதுடன் பழுதடைந்த கலங்கள் புத்துயர் பெறவும் உதவும். இவை எல்லாவற்றிற்கும் மேல் எம் சமுதாயத்தில் வாழும் ஏழை மக்களின் பசியை உணர்ந்து அவர்களுக்கு உதவிட வழிசெய்வதில் மனிதநேய பண்பை வளர்க்கின்றது இந்த விரதம். மேலே குறிப்பிடப்பட்டவைகளை விரதமிருப்பதன் சாதக விளைவுகளாக கூறலாம்.
நம்பிக்கையின் அடிப்படையில் எதையும் பொருட்படுத்தாமல்
மாதத்தில் சில நாட்கள் சாப்பிடாமல் இருப்பதும், தண்ணிர் கூட குடிக்காமல் இருப்பதும் தேவையில்லாத உடல் உபாதைகளை ஏற்படுத்தும். விரத காலத்தின் போது உடலுக்கு தொடர்ந்து போக வேண்டிய சத்துக்கள், விற்றமின்கள் மறுக்கப்படுகின்றன. அதனால் மூளை உட்பட முக்கிய உறுப்புகளின் செயல்பாடு பாதிக்கப்படும். கழிவுகளை அகற்றும் பணியை நீர் செய்கின்றமையால் அதை குடிக்காமல் இருக்கும் போது உடலில் கழிவுகள் சேர்கின்றன. பெண்கள் அடிக்கடி உண்ணாமல் நோன்பு இருப்பது அவர்களின் உடலில் இரத்தச் சோகை ஏற்பட வழி வகுத்துவிடும். சர்க்கரை நோய் வரக்கூடியதற்கான ஒரு முக்கிய காரணியாகவும் விரதம் இருக்கின்றது. மேலே குறிப்பிடப்பட்டவைகளை விரதமிருப்பதன் பாதக விளைவுகளாக கூறலாம்.
14
 

விரதமிருந்தாலும் அடிக்கடி தண்ணிர் குடிப்பது முக்கியம். அப்போது தான் உடலிலுள்ள கழிவுகள் வெளியேற்றப்பட முடியும்; உடலில் சோர்வும் ஏற்படாது. விரதம் முடிந்ததும், உடனே ஒரேயடியாய் ஒரு பிடிபிடிப்பது தானே நம்மவர்களின் வழமை. அது சிறந்ததல்ல. பழரசம் அல்லது ஏதாவது குடிபானம் அருந்தி அதன் பின்னர் படிப்படியாக சாப்பிடும் அளவினை அதிகரிப்பதே சிறந்த முறையாகும். விரத காலத்தின் போது மனதின் கட்டுப்பாட்டு தன்மையும் கூடுகிறது. அதாவது தமக்கு பிடித்த உணவு அல்லது பானம் எதுவாக இருந்தாலும் உண்பதில்லை என்கின்ற ஒரு மனப்பக்குவம் வருகிறது. தமக்கு பிடித்த உணவொன்று விரத நேரத்தில் கிடைக்கும் போது அதனை வைத்து விரதகாலம் முடிந்தபின் உண்ணும் வழக்கமும் சிலரிடையே இருக்கின்றது. அதிலொன்றும் குறை கூறுவதற்கில்லை; விரதம் நிறைவடையும் வரை நமது மனம் பொறுமையாக இருக்கிறது பாருங்கள், அதுதான் முக்கியம். என்னதான் விரதத்தினால் மனக்கட்டுப்பாடு வளர்க்கப்பட்டாலும், விரத காலத்தின் போது சிலருக்கு
அருகிலே செல்ல முடியாது; அதாவது வேலைப்பழுவுடன் விரதமிருப்பவர்கள் சிலர் பசி
மற்றும் வேலைப்பழு போன்ற காரணங்களால் உடனிருப்பவர்களுடன் எரிந்து விழுவதனை நீங்களும் கவனித்திருப்பீர்கள். விரதம் என்ற பெயரில் தாமும் கஷ்டப்பட்டு மற்றவர்களையும் கஷ்டப்படுத்துபவர்களை என்னவென்று சொல்ல. இதைவிட அவ்வாறானவர்கள் கடவுளை நன்றாக கும்பிட்டுவிட்டு வேளாவேளைக்கு சாப்பிடுவது சிறந்தது; அப்படிப்பட்டவர்கள் உடற்பயிற்சிகளினுாடாக உடல் ஆரோக்கியத்தினை பேணலாம்.
உடல் பருமனாக இருப்பவர்கள் சிலர் சாப்பிடுவதை குறைத்துக் கொண்டாலோ, சாப்பிடாமல் விட்டாலோ உடல் எடை குறையும் என்று தவறான போக்கை கையாள்கின்றார்கள். கேட்டால் உணவு கட்டுப்பாடு(Diet) என்பார்கள். சாப்பிடாமல் இருந்தால் கொழுப்பு
15

Page 10
வரை
குறைவது உண்மையென்றாலும் தவறான போக்கினால் உடல் பலவீனமடைய வாய்ப்புக்கள் உள்ளன. இதன் காரணமாக பின்னர் உடலில் கொழுப்பு அதிகமாகி மாறான விளைவை தான் ஏற்படுத்தும். இப்படியான நிலைமையில் சாப்பிடாமல் இருக்கின்ற ஒருவர் மேலும் குண்டாகிவிடும் ஆபத்தும் உண்டு.
நலமாய் இருப்பதற்காக (உடல்,மனம்) விரதமிருந்து நலம் கெட்டு வாடுவதனை சிறந்த விரத
32ஆம் பக்கத்தின் தொடர்ச்சி.
விெவாகரத்து செய்ய முடியாத நாடு
பயனாக கொள்ளமுடியாது. எனவே, குறைந்த பட்ச விரதம்தான் உடலுக்கு நல்லது. அதுவும் டாக்டர்களிடம் ஆலோசனை பெற்று அதன்படி செய்தால் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. விரதம் இருப்பதற்கெல்லாம் டாக்டரை கேட்பதா என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், கண்டிப்பாக ஒருவரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு டாக்டர் உரியமுறையில் ஆலோசனை வழங்குவார்.
க.கபிதாஸ்
(சப்ரகமுவ பல்கலைக்கழகம்)
- அயர்லாந்து ஜெப்பான் தீவுகளின் எண்ணிக்கை - 4
ஆெட்சிமாற்றம் இல்லாத நாடு - மெச்சிக்கோ
அெந்தமான் தீவுகளின் எண்ணிக்கை - 204
3ெ65 நாட்கள் கொண்ட ஆண்டு முறையை ஏற்படுத்தியவர் - Thorth
ெெதாலைக்காட்சியில் பயன்படுத்தப்படும் மூன்று அடிப்படை நிறங்கள் -
சிவப்பு, பச்சை, நீலம்
பொம்புகள் வாசனையை உணர்வது - நாக்கின் மூலம்
ெெஹாலிவுட் அமைந்துள்ள இடம் - கலிபோர்ணியா
அெஸ்வான் அணை அமைந்துள்ள நதி - நைல் நதி
உெலகின் புகழ்பெற்ற ஹாஸ்ய நடிகர் - சார்லி சப்ளின்
இெந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைக்க உழைத்தவர்கள்
மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, மோதிலால் பண்டிட் விஜயலக்சுமி, மண்டித மலவியா, சுபாஸ் சந்திரபோஸ், ஜகதீஸ் சந்திரபோஸ்
16

வரை
LET'S LEARN TO SPEAKN ENGLISH
ஆங்கிலத்தில் பேசப் பழகுவோம் தொடர். 12
மாதமொரு உரையாடல்
AMonthly Conversation
By: Professor A.V. Manivasagar, Ph.D.
Head/Dept. of Political Science University of Jaffna
AT THE BOOKSHOP
In this lesson a customer goes to a Book Shop for buying certain books and a dialogue takes place between the customer and the bookseller.
Bookseller: What can Idoforyou, please?
Customer: I want to purchase a few books.
Bookseller: Which book do you want, please?
Customer: I want to purchase some books for my brother who is studying in B.A. Political Science and a few books for myself to prepare for the competitive examinations.
Bookseller: In which University is your brother studying? Customer: My brother is studying at Jaffna University.
Bookseller: Can you name the subjects for which you want the books for
him?
Customer: I want to purchase books for Political Thought and
International Law.
BookSeller: Do you wantbooks by Indian authors or Western authors?
Customer: I want books by western authers only, please.
17

Page 11
வரை
鷗
iëictisi i 鵬一
سe oسط ][ifig[i | ※? 疆 渭了巅 --
觀 SALASSASeSASASASASASAMS MIFT $Nܕ݁ܓ݂ܽܝܳܗܶܐ
BookSeller:
Customer:
Bookseller:
Customer:
Bookseller:
Customer:
Bookseller:
Customer:
Bookseller:
For Political Thought we have books by Prof. Sabine and Prof. Ebenstein. For International Law we have books by Prof..Oppenheim and Prof. Fenwick. I can show you the books by all these authors, then you can choose yourself.
Please show me the books.
Here are the books, please.
Which book would you recommend for Political Thought?
In my openion, Prof. Sabine's book is the best one on this subject.
What about the International Law?
For International Law, Prof. Oppenheimiaan authority.
Thank you. Then please give me these very two books, one by Prof. Sabine and the other by Prof. Oppenheim.
O.K. please. I'll get these two bookspacked. Now which books do you want for competitive examinations?
18
 
 
 
 
 
 
 
 
 
 

வரை
Customer:
Bookseller:
Customer:
Bookseller:
Customer:
Bookseller:
Customer:
Bookseller:
Customer:
Bookseller:
First of all, I want a good book on General Knowledge written in English. Secondly, I want some books on English Essays and English vocabulary.
For General Knowledge we have got a good book written by Mr.S.K.Sachdeva. For English essays, I would recommend you to purchase two books Current College Essays and Essays for Cometitive Examinations, written by Prof.G.K.Puri.
What about English vocabulary?
For English vocabulary also I would recommend to purchase a book, Instant Vocabulary, written by Prof.G.K.Puri.
Thank you. Now please pack up these books also. I am in little hurry. Give me the bill quickly.
Here is your bill, please.
Please have this thousandrupee note, deduct the amount of the bill and return to me the blance.
Here's your balance please.
Thankyou.
No mention, please. You are always welcome.
Some books are to be tasted, Others to be swallowed, and some few to be chewed and digested.
- BACON (Essays. Of Studies)
A book is a success when people who haven't read it pretend they have.
— Mc Carthy
19

Page 12
வரை
Pe&& (@BONGOgo BUSINESS LETTERS (4)
From the Pen of Prof.A.V. Manivasagar....
Part 1 - Financial Letters
Money makes the man (ARISTODEMUS). Business links all mankind (GARFIELD). The motto of business is money. Business letters are with money motto infused into them. They are purposively divided in this series into three parts - financial, commercial and managerial - though absolute partition is an eluding one. These technically and scrupulously written content-specific business letters are concise, clear and convincing in nature. Here you have not to think but to pick and choose.
2... NOTICE FOR PAYMENT
Dear Sir,
We have made several approaches to you for the payment of our outstanding dues. You have however, not sent even a reply.
According to our agreement, we expect from you settlement of our account within three days. Therefore, you are advised that in your own interest, please expendite our bills within a week, failing which we shall take legal steps to recover the same.
Expecting an early compliance by you,
Yours faithfully,
விருப்பத்தெரிவு : வியாபாரக் கழதங்கள்
20
 
 

வரை
2.2. REPLY TO ABOVE
Dear Sir,
We regret to inform you that we have recently suffered heavy losses and the firm is going to liquidation.
Please send all your claims to the Official Liquidator for payment. Thanking you,
Yours faithfully,
3... NOTICE FOR SETTLEMENT
Dear Sir,
It is now April 2011 and the account for goods supplied to you during March / April 2010 is still outstanding.
We have already written to you several times regarding the matter and have furnished invoices in duplicate.
In the circumstances, we regret to inform you that unless we receive the payment within a week, we may be compelled to instruct our lawyers to institute legal proceedings against you,
Assuring you of our best help always,
Yours faithfully,
13.2. REPLY TO AEBOVE
Dear Sir,
Goods supplied by you to us in March/April 2010 were defective. As they below specifications and hence not fit for being supplied to our customers, so these were returned to you in April. As a result of this no
payment is due from us to you.
Yours faithfully,
21

Page 13
Qiang
13.3. ANOTHER REPLY
Dear Sir,
Kindly send your man to settle the account in person to avoid further delay.
We will issue the cheque after settlement.
Yours faithfully,
14.1. LETTER THREATENING PROCEEDINGS
Dear Sir,
I very much regret to inform you that unless your account is fully and finally settled with us before the close of the current month, I shall be forced to entrust the file to my lawyers for necessary action.
Yours faithfully, 14.2. REPLY TO ABOVE
Dear Sir,
Serious irregularities have been noticed in the account submitted by you and unless you are kind enough to submit a proper account, I am afraid I would not be able to pay off just because of your threat of legal action.
I regret I cannot submit to blackmail.
Yours faithfully,
Neither a lender nor a borrower be.
- SHAKESPEARE
Money borrowed is soon sorrowed. - JOHN RAY
22
 

வரை
IG UITLIG BOSCÓ) LOTTEGGI
क्षं 8*े:
பேராசிரியர் குமிகுந்தன், தலைவர், விவசாய உயிரியல் துறை, விவசாயபீடம், யாழ். பல்கலைக் கழகம்.
பூகோள வெப்பமடைதல் என்பதிலேயே பலரும் சிந்தனைச் சலவை செய்து கொண்டிருக்கும் இந்நாட்களில் இதற்கு காரணமான பச்சை வீட்டு வாயுக்கள் (Green House Gases) 6T60T இனங்காணப்பட்ட நைற்றஸ் ஒட்சைட்டு, காபனீர் ஒட்சைட்டு, மற்றும் மீதேன் என்பனவற்றின் செறிவு வளிமண்டலத்தில் அதிகரிப்பது காரணமாக கூறப்பட்டுள்ளது. பச்சை வீட்டு வாயுக்களினால் பூமியின் வெப்பநிலை அதிகரித்து பல்வேறு விளைவுகளைத் தோற்றியிருக்கின்றது. இதில் 2005ம் ஆண்டு உலகரீதியான தகவலின் படி அமெரிக்கா 16%, சீனா 17% மற்றும் இந்தியா 5% பச்சை வீட்டு வாயுக்களை வெளியிட்டது அறியப்பட்டுள்ளது. இதனை நிவர்த்திசெய்வதன் ஓரங்கமாக உலகமெங்கும் மர நடுகை ஊக்குவிக்கப்பட்டுள்ளமையை இங்கு சுட்டிக்காட்டலாம். அவ்வாறு மரநடுகைக்கு தெரிவுசெய்யப்படும்
மரங்களுள் மகோகனியும் ஒன்று. மகோகனி
மகோகனிக்கு சுவிற்றினியா LDGBÆSITÆ56Of? (Swietenia mahogani) எனும் தாவரவியல் பெயருண்டு. இது மீலியேசியே தாவரக்குடும்ப உறுப்பினர். இதனை மேற்கிந்திய மகோகனி, மகோகனி மற்றும் கியூபன் மகோகனி என பொதுவாக அழைப்பர். என்றும் பச்சையாக இருக்கும் மகோகனி 30-40 மீற்றர் வரை வளரக்கூடியது. இதனது தண்டுப்பகுதி அல்லது மரம் நீண்டு நேராக வளருவதுடன் அதனது விட்டம் 120 செ.மீ ஆகவும் இருக்கும். மிகவும பெறுமதிவாய்ந்த மரமாக கருதப்படுவதனால்
23

Page 14
மகோகனிக்கு மவுசு அதிகம்.
மகோகனியில் சிறிய இலை கொண்ட சுவிற்றினியா மகோகனியும் பெரிய இலை கொண்ட சுவிற்றினியா மக்குறோபில்லா இனங்களும் உள்ளன. பெரிய இலை கொண்ட இனத்தை மேற்குலக நாடுகளில் விரும்பி வளர்க்கின்றார்கள்.
மேற்கிந்தியதீவு, பகாமா ஆகியவற்றை பூர்வீகமாகக் கொண்ட இம்மரம் பிற்காலங்களில் ஆசியப்பிராந்தியத்தில் வளர்க்கப்படலாயிற்று. இந்தியா, பீஜித்தீவுகள், பங்களாதேஷ், இந்தோனேசியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இம்மரத்தை விரும்பி நடுகை செய்கின்றனர். மரநடுகைக்கு உகந்ததும் பசுமையாக இருப்பதும் இம்மரத்தின் சிறப்புக்களெனலாம்.
மகோகனியை சோசலிச GLITLS6flies6ir (Dominican Republic) LDfbpub Glu556t) (Belize) நாடுகளின் தேசிய மரமாக வைத்திருக்கின்றார்கள்.
இம்மரம் வளர்வதற்கு சூரிய வெளிச்சம் நேரடியாக விழவேண்டும். ஆனாலும் அரைவாசி நிழலிலும் தக்கன பிழைத்து வாழக்கூடிய மரமிது. செயற்கைக் காடுகளில் இதனை வளர்ப்பதற்கு இவ்வியல்பு
உதவியாயிருக்கும்.
விதை மூலம் இனப்பெருக்கப்படும் இம்மரத்தின் விட்டம் 70-80 செ.மீ ஆக வரும்போது முற்றிவிட்ட நிலையில் பூக்களையும் காய்களையும் உருவாக்க ஆரம்பிக்கும். முதிர்ச்சியடைந்த மரமொன்று சராசரியாக ஒவ்வொன்றும் 10-20 செ.மீ நீளங்கொண்ட 800 காய்களையும், ஒவ்வொரு காயிலும் 50 விதைகளையும் கொண்டிருக்கும்.
சிறந்த மரமாகவும் செம்மண்ணிற நிறமுடையதாகவும் இருப்பதனால்
* தளபாடத் தேவைகளுக்கு
மகோகனியை விரும்பிப் பயன்படுத்துவர். சிறந்த விலைமதிப்புள்ள தளபாடங்களை செய்வதற்கு மகோகனி பயன்படுத்தப்படுகின்றது. அதேவேளையில் பல வகையான வாத்தியக்கருவிகளை உருவாக்குவதற்கும் மகோகனி மரத்தை பயன்படுத்துகின்றார்கள்.
24
 

வரை
கிற்றார் வாத்தியத்தின் பின் பகுதி, ட்றம்ஸ் வாத்தியத்தின் வெளிப்புற கோது என்பன மகோகனி மரத்தினாலானவை. மருத்துவக் குணம்
மகோகனி மரம் பலவகையான மருத்துவக் குணமுடையதாக அறியமுடிகின்றது. அதியுயர் குருதியழுத்தம், புற்றுநோய், நெஞ்சு நோ மற்றும் குடலில் காணப்படும் ஒட்டுண்ணிகள் என்பனவற்றுக்காக மகோகனியை
பயன்படுத்தியிருக்கிறார்கள். குறிப்பாக குடற்புண்களை குணமாக்க மகோகனி விதைச்சாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. குடற்புண்களை (Ulcer) குணமாக்குவதற்கு மகோகனி விதைச் சாறிலுள்ள பொசுபோலிப்பிட்டுக்கள் மற்றும் நீண்ட நிரம்பலடையாத கொழுப்பமிலங்கள் காரணமெனவும் கண்டறியப்பட்டுள்ளது.
崇尝崇
மாயங்ங்டம்
இந்தப் படத்தில் நடுவில் உள்ள புள்ளிளை உற்றுப் பார்த்தபடி தலையை முன்னும்
பின்னுமாக அசையுங்கள். அதிசயத்தை உணர்வீர்கள்.
25

Page 15
வரை
முகாமைத்துவத்தின் திறமை
இன்று ஜப்பான் நாட்டில் பேரழிவு ஏற்பட்டுள்ளது. ஆனால் இரண்டாம் உலக யுத்தத்தின்பின் முழுமையாக அழிந்த நிலையிருந்த அந்நாடு மிகக்குறுகிய காலத்துள்ளேயே உலக
பொருளாதார அளவில்
முன்னணி ஜப்பானின் பிரபலமான ஒரு இடத்தைப்பிடித்ததையும் நாம் வாசனைத்திரவியங்கள் உற்பத்தி மறப்பதற்கில்லை. இந்நிலையை நிறுவனத்தில் நடந்த ஒரு சம்பவமே அடைய எத்தனையோ காரணங்கள் அது. ஒருநாள் ஒரு இருப்பினும் அந்நாட்டின் வாடிக்கையாளரிடமிருந்து தொழிற்துறை அந்நிறுவனத்திற்கு ஒரு முகாமைத்துவத்தைப்பற்றி முறைப்பாடாக அக்கம்பனித் மறக்கமுடியாத ஒரு விடயத்தைச் தயாரிப்பான ஒரு சொல்வார்கள். சுருக்கமாக அதனை சவர்க்காரப்பெட்டியை "வெற்றுச் சவர்க்காரப் பெட்டி” வாங்கியபோது அது வெறுமையாக
விடயம் என்றே அங்கு அறியப்பட்டது. இருந்தது என்பதுதான். அதாவது பெட்டிக்குள் சவர்க்காரம் இல்லை.
"வாழ்க்கையில் r திகைத்துப்போன அந்த இல்லாதவற்றைத் முதற்தரக் கம்பனி அதிகாரிகள் தேடிக்கொண்டிருக்கும் காரணத்தை அறிய உடனடியாகச் ஒருவனிடம் எதுவுமே செயற்படத் தொடங்கினார்கள். இருக்காது. ஆனால், இந்தமாதிரியான தயாரிப்புக்களைச் வாழ்க்கையில் எவை உண்டோ செய்யும் தொழிற்சாலைகள் ஒரு அவற்றைப் பார்க்கும் ஒருவனிடம் "Luig (up60p" (Belt System)6Out எல்லாமே இருக்கும்” பின்பற்றுவன. அதாவது
26
 

தயாரிக்கப்படும் பொருள் ஒவ்வொரு நிலையாக ஒரு நீண்ட பட்டியில் செல்லும். தனியங்கி முறையில் அளவுகள் வெட்டப்பட்டு, பெயர் மற்றும் அடையாளங்கள் பதியப்பட்டு, உறையினுள் அல்லது பெட்டியினுள் அடக்கப்பட்டு சந்தைப்படுத்தல் பகுதிக்கு அனுப்பப்படும். இந்நிலையிலேயே ஒரு பெட்டி வெற்றுப்பெட்டியாகச் சென்றுவிட்டது.
அதிகாரிகள் பொறியியலாளர்களிடம் இக்குறையை நிவர்த்தி செய்யவேண்டி, அதாவது அனைத்துப் பெட்டிகளும் கண்காணிக்கப்பட்டு அவை
வெறுமையாக இல்லை என உறுதிப்படுத்தப்பட, நடவடிக்கை எடுக்கப் பணித்தார்கள். அவர்களும் ஒரு எக்ஸ்றே முறையிலான ஒரு கருவியைப் பொருத்தி அதனை ஒரு
திரையில் தெரியவைத்து, அதற்கு இரண்டு தொழிலாளர்களை அந்தப் பிம்பங்களைப் பார்த்து உறுதிப்படுத்த அமர்த்தி விட்டார்கள். வேகமாக ஒடும் பட்டியில் வெற்றுப்பெட்டி காணப்பட்டவுடன்
ஒரு பட்டனை அமுக்கிவிட்டால் அது அடையாளப் படுத்தப் பட்டுவிடும். இந்நிலையில் வெற்றுப்பெட்டிகள் வெளியிற்செல்வது தவிர்க்கப்படும்.
பாராட்டப்படவே ண்ைடும்தான். அந்த பொறியியலாளர்கள் மிகவும் கடினமாக உழைத்து இக்கருவியைக் கண்டுபிடித்தார்கள். செலவும் அதிகம்தான். அத்துடன் இரு தொழிலாளர்களும் வேலைக்குச் சேர்க்கப்பட்டு சம்பளமும்
27

Page 16
வரை
கொடுக்கவேண்டியதாகிவிட்டது.
ஆனால் ஒரு தொழிலாளி இந்நிலையை எதிர்கொண்டபோது இந்த நவீனமுறையை நினைக்கவோ செயற்படுத்தவோ இல்லை. மிக எளிதான ஒரு வேலையைச் செய்து விட்டார். அதாவது ஒரு வலுவான மின்விசிறியை ஒடும் பட்டியின் அருகிலே, ஏற்றஒரு கோணத்தில் பொருத்திவிட்டார். வெற்றுப் பெட்டிகளை அந்த விசிறியின் காற்று அடித்துத் தள்ளிவிடும்.
எனவே, எப்பொழுதும் எளிய முறையில் எப்படித் தீர்க்கலாம்
தீர்வுகளில் முழுக்கவனத்தைச் செலுத்தவேண்டுமே தவிர பிரச்சனைகளிலேயே கவனத்தைச் செலுத்துவதால் மட்டும் பயன் இல்லை.
"வாழ்க்கையில்
இல்லாதவற்றைத் தேடிக்கொண்டிருக்கும் ஒருவனிடம் எதுவுமே இருக்காது. ஆனால், வாழ்க்கையில் எவை உண்டோ அவற்றைப் பார்க்கும் ஒருவனிடம் எல்லாமே இருக்கும்”
米米米
ச.சதானந்தசர்மா
என்பதையே பார்க்கவேண்டும். திருநெல்வேலி.
தவறான சாவி.
ஒரு நாட்டில் அரசனிடம் அதிக முடியாததால் தனக்கு செல்வம் இருந்தது. அத்தோடு நம்பகமான ஒரு தளபதி அழகான மனைவியும் அவருக்கு ஒருவனிடம் ஒப்படைத்துவிட்டு
இருந்தாள். ஒருநாள் அரசன் போருக்கு புறப்படவேண்டியிருந்தது. இத்தனை செல்வங்களையும் மனைவியையும் தனியாக விட்டுச் செல்ல அவனுக்கு மனமில்லை. அதனால் அனைத்துச் செல்வங்களையும் தன் மனைவியையும் சிறிய கோட்ட்ையொன்றினுள் பூட்டினான். சாவியை போர்க்களத்திற்கு கொண்டுபோக
போர்க்களத்திற்கு விரைந்தாண். அரசன் பாதிவழிகூடச் சென்றிருக்கமாட்டானர். பின்னாலே தளபதி பதைபதைத்து ஓடிவந்து “மன்னா! தாங்கள் தவறான சாவியைத் தந்துவிட்டுப்போகிறீர்கள். இதனால் கோட்டையைத் திறக்க முடியாது” என்றான்.
28

வரை
Auto-Shutdown
இன்றைய உலகில் கணனி உபயோகிக்காத இடமே இல்லை. நமது கணனியின் செயற்பாட்டை அதிகரிக்க நாம் சில பயனுள்ள மென்பொருட்களை நிறுவி இருப்போம். இந்த வரிசையில் நாம் இந்த மென்பொருளையும் நிறுவுவது அவசியமாகிறது.
நாம் கணனியில் வேலை செய்து கொண்டு இருப்போம். திடீரென ஏதோ ஒரு முக்கியமான வேலையால் அல்லது ஞாபகமறதியால் நம் கணனியை அணைக்காமல் சென்றுவிடுவோம். நாம் வீட்டுக்கு போன பிறகு தான் ஞாபகம் வரும். அந்த நேரங்களில் நம் கணனியின் விபரங்களை மற்றவர்கள் பார்க்கும் வாய்ப்பு அதிகம்.
அந்த சமயங்களில் இந்த மென்பொருள் மிகவும் உபயோகமானதாக இருக்கும். இந்த மென்பொருளில் கொடுக்கப்பட்டுள்ள நேர அளவை பொறுத்து உங்கள் கணனி தானாகவே Shutdown செய்யப்படும். இந்த மென்பொருள் epoolb Automatic Restart Gaulig)
அடிைத்து கடினிகளுக்கும் அறுசீலம் தேறுைல49 90ர்பொருள்.
தொகுப்பு தர்சன், கொழும்பு a st ****** ఇete &&&
LLeLeeY eeeLLL eLee CBkk eeeeeLSSSeS eY eeeee0 eeeeeeL zS
8 Saecke
3: Keiaiw tex
೪ × ೫೩#$ *ಢಿಳಿಃw
கொள்ளும் வசதியும் உள்ளது.
இந்த மென்பொருளில் Auto Shutdown, Auto Logoff, Auto Hibernate ஆகிய வசதிகள் அடங்கி உள்ளது. இதற்கு முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்கள் கணனியில் நிறுவிக் கொள்ளுங்கள். இப்பொழுது இந்த மென்பொருளை திறந்து கொள்ளுங்கள்.
இதில் உங்களுக்கு தேவையான அளவு நேர இடைவெளியை தெரிவு செய்து கொள்ளுங்கள். இதில் நீங்கள்
29

Page 17
வரை
தேர்வு செய்தால் ஒரு நாளைக்கு தான் தேர்வு செய்ய முடியும். வாரம் முழுவதும் குறிப்பிட்ட நேரத்தில் Shutdown ஆக வேண்டும் என நினைத்தால்
Glp p 6ir6T Every week on என்பதில் கிளிக் செய்து இதில் உள்ள நாட்களை தேர்வு செய்து கொண்டு நேரத்தையும் தேர்வுசெய்து கொள்ளலாம்.
கீழே உள்ள பகுதியில் ஒரு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் Shutdown ஆக வேண்டும் என்பதை தேர்வு செய்து கொள்ளலாம். இதில்
குறிப்பிட்ட வேலைக்கு
idows
*sts»xtkeys &x exisc the Sekow extix.
జిభ్ళనీళ్ల
Estatdean
ERestat at-si +a-R
kostenky stå sit A+
Zirabernate card saif -- A + H El60 at:sat-a+u
LeLeeLe kkLCLCLeLLL LLekkekLLeLe LeLYSLt ttLLL LLLLLLLLeizLLL LkLZS
Aktikata o fiston f3ff *WF
########
XXßeigweiwe 2irrwe
arts from
&Every week će
GólÚLil'L Shortcut Key Glaug
கொள்ளும் வசதியும் உள்ளது. Q6og5 set GéFuu Shortcut tab கிளிக் செய்து உங்கள் கிபோட்டில் Ctrl அழுத்தி உங்களுக்கு வேண்டிய எழுத்தை அழுத்தவும். இனி நாம் நம் கணனியை அணைக்காமல் சென்றாலும்
கவலைப் படவேண்டியதில்லை. நம் விபரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருக்கும்.
தரவிறக்கச் சுட்டி
http://download.cnet.com/AutoShutdown/3000-2381 4
CZ כ-8 אופט
10640426.html?tag=mncol;2
30
 
 
 
 
 
 
 

வரை
அதில்ல் நிரோ நிடைகள்
மூென்று அடிப்படை நிறங்கள் - சிவப்பு, மஞ்சள், நீலம்
உெலோக நாணயங்கள் புழக்கத்தில் இல்லாத நாடு - பராகுவே
(தென்அமெரிக்கா)
பூெச்சியத்தை உலகிற்கு அறிமுகப்படுத்திய நாடு - இந்தியா உெராமன் இலக்கத்தில் குறித்துக்காட்ட முடியாத எண் - பூச்சியம் செத்தில்லாத உணவு - நீர் கெலப்படம் செய்யமுடியாத உணவுப்பொருள் - கோழிமுட்டை
பெசுமைப் புரட்சி ஏற்பட்ட ஆண்டு - 1960, தாயகம் - மெக்சிக்கோ
அெமெரிக்கப் பசுமைப்புரட்சியின் பிறப்பிடம் - பொஸ்டன்
உெலகில் மிகப் பிரபலமான பொழுதுபோக்கு - தபால் தலை சேகரித்தல்
சுெத்தமான தங்கத்தின் கரட் - 24 கரட்
கெடல் நீர் நீலமாக இருக்கும் அளவு - 10 அடி அெச்சுப்பிழை உள்ள நாணயங்களுக்கு வழங்கப்படும் பெயர் - Fido
கொல்ஷிட் என்பது - எட்டுமணி நேரத்திற்கு நடிப்பதற்கான ஒப்பந்தம்
விெமானத்தில் செல்பவர்களுக்கு வானவில் தெரியும் வடிவம் - வட்டம்
ஆெறுகள் இல்லாத நாடு - அரேபியா திெருமணத்தின் போது தேசிய கீதம் கட்டாயமாகப் பாடப்படும் நாடு -
நைஜீரியா ெெபண்களுக்கு கட்டாய இராணுப் பயிற்சி அளிக்கும் நாடு - இஸ்ரேல்
விெமான விபத்துக்களின் காரணத்தைக் கண்டறிய உதவும் கறுப்புப்
பெட்டியின் நிறம் - மஞ்சள் அல்லது செம்மஞ்சள்
ஒெரு தலைமுறை இடைவெளி என்பது - 28 வருடங்கள்
பெல்வேறு இசைக் கருவி, புத்தளிப்புக் கருவிகளை ஒன்றாக வாசித்தல்
பல்லியம்
நொட்டின் பெயரைக் குறிப்பிடாது முத்திரை வெளியிடும் நாடு - இங்கிலாந்து
31

Page 18
வரை போராளுமன்றங்களின் தாய் என்று சிறப்பிக்கப்படும் பாராளுமன்றம் -
பிரிட்டன் (உலகின் முதல் பெண் ஜனாதிபதி - மரியா எத்தொலோ பெரோன்
(ஆஜன்டீனா 1074) உெலகத்திலேயே மிக அதிகமாகக் கிளைகளைக் கொண்ட வங்கி - ஸ்டேட்
இந்தியன் வங்கி உெலகில் மிகப் பழமையான தேசிய கீதம் உள்ள நாடு - ஜப்பான் உெலகிலே வரி விகிதம் கூடுதலாக கூடுதலாக உள்ள நாடு - நோர்வே கெடற்கரை, புகையிரதம், சாலை வசதியில்லாத நாடு - லாவோஸ் பெத்துவருடங்களுக்கு ஒருமுறை பிறந்தநாள் கொண்டாடும் நாட்டினர் - சீனர் கெருணைக் கொலையை சட்டபூர்வமாக அனுமதித்த முதல் நாடு -
நெதர்லாந்து வெருடம்தோறும் பூமியில் புதைந்து வரும் நாடு - நெதர்லாந்து கெண்ணாடித் தொழிலுக்குப் பெயர்பெற்ற நாடு - பெல்ஜியம் பெடகு வடிவில் அமைந்துள்ள நாடு - இத்தாலி வெருடம்தோறும் புதிய ஜனாதிபதியைத் தெரிவுசெய்யும் நாடு - சுவிற்சலாந்து உெலகில் மிகப் பழமையான பாராளுமன்றம் உள்ள நாடு - ஐஸ்லாந்து திெனசரி பத்திரிகை இல்லாத, படிக்கத்தெரியாத மக்கள் உள்ள நாடு -
காம்பியா உெலகில் தட்டையான, சமதளமான நாடு - மாலைதீவு உெலக மக்கள் அமைதியாக வாழ்வதற்கு உகந்த நாடு - நோர்வே உெலகில் அதிக மக்களால் தயாரித்து உண்ணப்படும் உணவு- நூடில்ஸ் கிெறிஸ்மஸ் வாழ்த்து அட்டையை அறிமுகம் செய்த நாடு - நோர்வே ஒெரு நாட்டின் பரப்பளவுக்குள் அமைந்திருக்கும் இன்னொரு நாடு - லெசதோ
(ஆபிரிக்கா) ஒெரே நாடாக இருக்கும் கண்டம் - அவுஸ்ரேலியா பெழமைவாய்ந்த செய்தி நிறுவனம் - ரொயிட்டர் தெனக்கு என்று தாய் மொழி இல்லாத நாடு - சுவிற்சலாந்து ஒெருபோதும் மலராத பூ - அத்திப் பூ ேெவர் இல்லாத தாவரம் - கஸ்கியூட்டா
உெலகில் வmமையான நாடு - mவாண்டா
O) நாடு - று 16 ஆம் பக்கத்தில் தொடர்கிறது.
32

வரை
Beauty of Mathematics
1 X 8 + 1 = 9
12 x 8 + 2 = 98 123 x 8 + 3 = 987 1234 x 8 + 4 = 9876 12345 x 8 + 5 = 98765 123456 x 8 - 6 - 98.7654 1234567 x 8 + 7 = 9876543 12345678 x 8 + 8 = 98765432 123456789x8十9=987654321
9 x 9 + 7 = 88
98X9十6 = 888 98.7 x 9 - 5 = 8888 9876 x 9 + 4 = 88888 98765 x 9 + 3 = 888888 987654 x 9 + 2 = 8888.888 9876543 x 9 + 1 = 8888.8888 98765432 x 9 -- 0 = 888888.888
Brilliant, isn't it?
And look at this symmetry:
x 1 = 1
11 x i = 121 11 x 111 = 12321 111 x 11 11 = 1234321 11111 x 11111 = 123454321
111111 x 111111 = 1234565432
1 x 9 + 2 = 11
12X9十3=111 123 x 9 + 4 = 1111 1234X9十5=11111 12345 x 9 - 6 = 1 1111 123456 x 9 - 7 = 1 1111 1234567 x 9 - 8 = 11111111 12345678 x 9 + 9 = 1111111 123456789 x 9 +10= 1111111111
111111 x 1111111 = 1234567654321 11111111 x 11111111 = 12345678765432 111111111 x 111111111 = 1234567898765432
S.Sathananthan, Th irunelively
33

Page 19
வரை
சிறுகதை
பத்து நிமிடத்துக்கு முன் சொல்லியிருந்தால்..?
பேராதனைப்
பூந்தோட்டத்தில் சேரண் ஒரு பெணர் பல வாரங்களாக வந்து போவதை அவதானித்துக் கொணர்டே
வந்தான்.
அவளுடைய புண்ணகை இல்லாத முகத்தில் வேதனை படர்ந்திருந்தது. சேரனுக்குத் தெரிந்தது. பல நாட்களாக காண்பதனால் சில சமயங்களில்
ஆந்தப் பெண்ணைக்
காணும் போது தலையாட்டிக்கொணர்டே சிரித்துக் கொணர்டு செல்வானர். சில
மயங்களில் அவளும் பதிலுக்குச் சிரித்ததுணர்டு. அவள் யார்? 1ார்ப்பதற்கு நன்றாகப் படித்தவள் போல் தெரிகிறாள். எனவே அவளை பார் என்று அறியவேண்டும் எண்பது சேரனின் மனப்போராட்டம். இண்று எப்படியும் அவளுடன் பேசவேண்டும் என்று முடிவெடுத்த காரணத்தினால்
சு.ஆழ்வாப்பிள்ளை له خرځلام }
அவள் வரும் போது
“மன்னித்துக்கொள்ளுங்கள் உங்களோடு நாண் சில நிமிடம் பேசலாமா?” என்றான். ஒரு வித அதிர்ச்சியடைந்த அந்தப் பெண சிறிது தடுமாற்றத்துடன் “என்னுடனா?” என்று புருவத்தை வளைத்தபடி கேட்டாள்.
“ஆம் உங்களுடன் தான்” எண்றாண் சேரன்.
"அப்படி எண்ன பேச
34
 
 
 

வரை
இருக்கிறது?” என்று சிறிது புன்னகை ததும்பக் கேட்டாள்.
"அப்படி விசேஷமாக ஒன்றும் இல்லை. ஏதோ உங்களைப் பார்க்கும் போது பல துன்பங்களையெல்லாம் கட்டிச் சுமக்கிறவள் போலத் தெரிகிறது. உங்களிடம் மெளனத்தைத் தான் அதிகம் பார்க்கிறேன். அது-எண்ன என்பதை அறியலாமா?”
“என்னுடைய வாழ்க்கை ஒரு சோகமான கதை. எண்னோடு கூடப் பிறந்தவர்கள் மூன்று பெணர்கள். நாங்கள் ஒரு காலத்தில் சீரும் சிறப்புமாக வாழ்ந்தவர்கள். எண் தந்தையார் ஒர் பெரிய வர்த்தகர். நல்லா இருந்த காலத்தில் பலருக்கு உதவி செய்து, அவருடைய நணர்பர்களுக்கெல்லாம் உதவிசெய்து, நண்பர்களுடைய பிள்ளைகளின் கல்விக்கும் திருமணவாழ்வுக்கும் அதிக பணம் செலவழித்தவர். எதிர்பாராத விதமாக வர்த்தகத்தில் பெரும் இழப்பு ஏற்பட்டு இன்று ஒட்டாண்டி ஆகிவிட்டார். அவர் நண்பர்களிடம் சென்று எங்களுடைய படிப்புக்காக உதவி கேட்டார். “ஆம் பார்ப்போம்” என்று கூறிய நணர்பர்கள் இறுதியில் காலைவாரிவிட்டார்கள். நான் பல தொல்லைகள் மத்தியில் என்னுதைடய பீ.ஏ பட்டத்தை முடித்துவிட்டேன். என்னோடு சர்வகலாசாலையில் படித்த சக மாண்வர் ஒருவர் என்னை
விரும்புவதாகவும், காதல் திருமணம் செய்வதாகவும் உறுதியளித்திருந்தார். ஒர்நாள் அவர் எனக்கு திடுக்கிடும் செய்தி ஒன்றைச் சொன்னார். “எங்களுடைய திருமணத்தில் நான் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேணடியவ்னாக இருக்கிறேன். உண்ணிலே நான் கொண்ட பாசம் நிலையானது. அதில் எந்த மாற்றமும் கிடையாது. எனக்கு சகோதரிகள் இருக்கிறார்கள். அவர்களுடைய பொறுப்பை நானே ஏற்கவேண்டியவனாக இருக்கிறேன். எனக்கு திருமணம் பேசப்பட்டது. எண் தந்தையார் சீதனமாக பத்துலட்சம் ரூபா தருவதாக இருந்தால் இந்தத் திருமணத்திற்கு சம்மதம். அத்தோடு ஒரு பெண்ணுக்குத் தேவையான நகை அத்தனையும் போடப்பட வேண்டும். கொழும்பிலோ அல்லது கண்டியிலோ ஒரு வீடு கொடுக்க வேண்டும். எண் மகனுக்கு ஒரு வாகனம் வேனிடிக்கொடுக்க வேண்டும். இதைத் தவிர நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. சம்மதமாயின் வருகிற சித்திரை மாதமே திருமணத்தைச் செய்யலாம்”. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எனினுடைய பொல்லாத காலம்.
"அப்படியானால்
உணர்மையாகவே எண்னைக் காதலித்தீர்கள். அதற்கு என்ன முடிவு சொல்கிறீர்கள், எனினுடைய நிலை என்ன?” இப்படியான காதல்
35

Page 20
வரை
இருப்பதை என்னுடைய அப்பாவிடம் ஒருநாள் சொன்னேன். அப்பாவுக்கு கோபம் வந்துவிட்டது.
“எனக்கு காதலிலிலும் மணர்ணாங்கட்டியிலும் நம்பிக்கை கிடையாது. எத்தனையோ அழகான பெண்கள் இப்படிக் காதலித்து வாழ்க்கையை நாசம் செய்து விட்டார்கள். ஏதொ சில நிமிஷங்களில் உணர்ச்சி காரணமாக காதல் என்ற ஒன்று உருவாகி விடுகிறது. காதல் என்ற அந்தப் புனிதமான சொல்லுக்கு மாசை ஏற்படுத்திவிட்டார்கள். சினிமாத்துறையினரும் கதாசிரியர்களும் ஒருவன் ஒருத்தியைக் கண்டு பேசி, சிரித்துவிட்டால் அது அவர்களுக்குக் காதலாகிவிடுகிறது. இந்த நிலையற்ற காதலுக்குச் சிறப்பான இடத்தைக் கொடுத்துவிட்டார்கள் பணத்தைச் சம்பாதிக்கின்ற சினிமா, பேசும் படக் கதாசியர்கள். எனக்கு இந்தக் காதல் எல்லாம் தேவையில்லை”
"அப்பா அப்படியென்றால் காதலில் உங்களுக்கு நம்பிக்கை கிடையாதா?” என்று நான் ஆவேசத்தோடு கேட்டேன்.
"அப்படியல்ல காதல் எண்றதன் பொருளை இந்தக் கதாசிரியர்கள் தெரிந்து கொள்ளவில்லை. தாய் தனி குழந்தையைக் காதலிக்கிறாள். சமயப்பாடல்களிற் கூட ‘காதலாகிக் கசிந்து கணிணிர் மல்கி." என்று ஞான சமபந்தர் கடவுளின் மேல்
ஈர்க்கும் அன்புக்கு காதல் என்று உயர்ந்த தமிழ்ச் சொல்லை பிரயோகிக்கிறார். தொண்ணுற்றொண்பது வீதமான காதல் வாழ்வு தோல்வியையே அடைந்திருக்கிறது. ஏன் எப்படி நடக்கிறதென்று எணர்ணுகிறாயா? காதல் செய்யும் ஆணும் பெண்ணும் உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் திடீர் முடிவினால் இந்தக் காதல் தோல்வியடைகிறது. ஆணி எப்படியானவன்? இவர்களுடைய பெற்றார்நிலை என்ன? இவர்களுடைய பின்னணி என்ன? என்றெல்லாம் இருபாலாரும் யோசிப்பதில்லை. பேசிச்செய்யும் திருமணத்தில் அணுவளவாக இரு குடும்பத்தினரும் ஆய்வு செய்து இரு குடும்பத்திற்கும் சரியென்று கண்டபின்பு ஒவ்வொருவரை பற்றியும் அவர்கள் தழலில் சென்று விசாரணை செய்து திருமணம் செய்யப்படுகிறது. பேசவேண்டியதைப் பேசிகொடுப்பது வருவது எல்லாவற்றையும் உறுதிப்படுத்திய பிண்னரே திருமணம் நடைபெறுகிறது. இதுதான் எங்கள் காலமுறை. என்னால் இந்த காதலையெல்லாம் ஏற்ப முடியாது.”
"அப்பா நீங்கள் எந்த நூற்றாண்டில் வாழ்கிறீர்கள். மற்றவர்களின் காதலைப் போல் நினைக்காதீர்கள் எங்கள் காதலை. அவர் படிப்பிலோ பணிபாட்டிலோ எந்தவகையிலும் குறைந்தவரல்ல. அவர் சொன்ன
36

வரை
சொல்லைக்காப்பாற்றுவார்.
1ங்களுடைய பாசம் போலியானதல்ல. பெற்றார் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் யாருக்கும் சொல்லாமலே எண்னை வந்து திருணம் செய்வதாக உறுதி கூறியிருக்கிறார். எண்னிடம் அதிக பாசம் வைத்திருக்கிறார். எப்படியும் வரும் ஆண்டில் பெற்றாருடைய அனுமதிகிடைத்தாலும் சரி கிடைக்காவிட்டாலும் சரி திருமணம் உறுதியாக நடக்கும் என்று சொல்லிவிட்டார். நீங்கள் ஏன் இதற்கு இடைஞ்சலாக இருக்கிறீர்கள்”
"நீ சிறுபிள்ளை, உனக்கு உலக அனுபவமே காணாது. உங்களைப் போல் இந்த நிலையில் இருப்பவர்களுக்கு அனுபவம் மிக்க நாங்கள் சொல்வதெல்லாம் பிழையாகவே இருக்கும். உங்களுடைய கருத்துக்கு மாறாக நாங்கள் ஏதாவது சொன்னால் வாழ்க்கையின் எதிரியாகத்தான் எங்களைத் தெரியும்.”
“அப்பா உங்களுடைய கணிகளுக்கு மனிதனின் காதல் புலப்படவில்லை. இலக்கியத்தில் இருக்கும் காதல் கூட உங்களுக்கு தெரிவதில்லை. இராமாயணப் பாத்திரத்தில், வேறு இலக்கியங்களில் வரும் காதலைக் கூட நீங்கள் பிழை சொல்லத் தவறமாட்டீர்கள்”
"மகளே! இலக்கியத்தில் வந்த காதல் கூடப் பொய்யானது என்பதை
நான் நிரூபித்துக் காட்டுகிறேன். *அணர்னலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்” என்று இராமாயணத்தில் சிறப்பாகச் சொல்லப்படுகிறது. அதிலே இராமருக்கும் சீதைக்கும் ஏற்பட்ட காதல் நிலையான காதலோ அல்லது உணர்மையான காதலோ அல்ல என நிரூபிக்கப்படுகிறது. எப்படியென்று எணர்ணுகிறாயா? இராம, இராவண யுத்தம் நடைபெற்றபின்பு அயோத்தியில் சீதை சமேதராய் இருந்த இராமனுக்கு முடிசூட்டு வைபவம் நடைபெறுகிறது. சில காலங்கள் செல்ல ஒர் நாள் ஒரு சலவைத் தொளிலாளி தன்னுடைய மனைவியை போட்டடித்தான். "நீ எண்னை அந்த வெட்கம் கெட்ட இராமண் என்று எணர்ணிவிடடாயா? இராவணனி கடத்திச் சென்ற சீதையை சிறிது கூட நாணாமல் திறையெடுத்து வந்து சிம்மாசனத்தில் வைத்துதான் மகுடம் தடினான். நான் அந்த இராமனைப் போல தண்மானம் இல்லாதவன் அல்ல. இவ்வளவு நாட்களாக யாரோஒருவருடன்
இருந்து விட்டு வந்த உன்னை நான்
ஏற்றுக்கொள்வதற்கு ஒரு கணம் கூட நான் தயாராக இல்லை.” என்று சொல்லி மீண்டும் அடித்தான். இதை இரவிலே கவனித்துக்கொணர்டிருந்த இராமன் வேதனை மேலிட்டான். உடனே சீதையைக் காட்டுக்கு அனுப்பிவிடுகிறான். கருவுற்றிருந்த சீதை குசன் எண்ற பிள்ளையைப்
37

Page 21
வரை
பெற்றாள்.
எல்லா தேசங்களுக்கும் தானே சக்கரவர்த்தியாக வரவேண்டும் என்ற நோக்கத்தால் பழைய வழமைப்படி தானே தலைசிறந்த சக்கரவர்த்தி என்பதை நிரூபிப்பதற்கு சில முறைகள் இருந்தன. எனவே இராமன் தான் வளர்த்துவந்த குதிரையை அவிழ்த்து விட்டான். அந்தக் குதிரையில் அயோத்திய அரசின் பெயரும் குதிரைக்குச் சொந்தமான இளவரசின் பெயரும் எழுதிக்கட்டப்பட்டிருந்தது. இதை எதிர்ப்பவர்கள் சக்கரவர்த்தி ஆவதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்பதைக் காட்டுவதற்கு அந்தக் குதிரையைப் பிடித்துக் கட்டிவிடுவார்கள். உடனே குதிரைக்குச் சொந்தமான அரசன் குதிரையை கட்டிவைத்திருக்கும் மன்னனுடன் போர் தொடுத்து வெற்றிவாகை தடினாற்றாண் அவரை ஒரு சக்கரவர்த்தி என்று தேசத்து மன்னரும், மக்களும் ஏற்றுக்கொள்வார்கள். அதன்படியே இராமன் தன்னுடைய குதிரையை அவிழ்த்து விட்டான். எந்த ஒருவருக்கும் அயோத்தி மன்னனான இராமனை எதிர்க்கும் துணிச்சல் இல்லை. ஆனால் இராமனுடைய மகன் குசன் தன் தம்பி லவனோடு சேர்ந்து குதிரையைக் கட்டிவிட்டான். குதிரையை கட்டியதைக் கேள்வியுற்ற அயோத்தி மன்னனி இராமன் அதை மீட்பதற்காகப் போர் தொடுத்தாண். போரிலே இராமனுடைய படைகள்
அத்தனையும் அழிந்து விட்டன. அதிர்ச்சியடைந்த இராமன் யாரிந்தச் சிறுவர்கள் நானே போருக்குச் சென்று குதிரையையும் மீட்டு வெற்றிவாகை தடுகிறேன் எண்று புறப்பட்டு, குசன் தன்னுடைய மகன் என்று தெரியாத இராமன் அந்த சிறுவர்கள் இருவரையும் வெல்ல முடியாது திணறினான். குசனை வளர்த்த முனிவர், இராமன் தன்னுடைய மகன் குசனோடுதான் சண்டையிடுகிறான். என்பதை உணர்ந்து கொணர்டார். பேராபத்து வந்ததே என்று அஞ்சி, இராமனிடம் சென்று நடந்த வரலாறு முழுவதையும் கூறினார். சீதையும் வந்து சேர்ந்து விட்டாள். போரும் நின்றுவிட்டது. எல்லோரும் மகிழ்சியுற்றார்கள்.
அப்போது அருகில் நின்ற சீதையை இராமன் பார்த்து “ஏதோ நடக்க வேண்டியதெல்லாம் நடந்து முடிந்து விட்டது. போனது போகட்டும். நீஅயோத்தி அரண்மனைக்கு வா” என்று இராமன் கூறினான்.
சீதைக்கு ஒரே கோபமாக இருந்தது. “முன்பு எண் கற்பில் சந்தேகப்பட்டு நான் தீக்குளித்துக் காட்டினேன். பின்பு எவனோ ஒரு சலவைத்தொழிலாளி சொன்ன சொல்லிற்காக எண்னைக் காட்டுக்கு அனுப்பினிர்கள். இவ்வளவெல்லாம் நடந்த பின்பு நான் மனைவியாக வாழ முடியுமா?” என்று சீறினாள்.
38

வரை
பக்கத்தில் நின்ற சீதையின் கரத்தினைப் பிடிக்க இராமன் சென்றான். கைக்கு எட்டாதவாறு சீதை ஓடினாள். இராமனும் பின்தொடர்ந்தே சென்றான். பூமியிலோர் வெடிப்பு ஏற்பட்டது. அந்த வெடிப்புக்குள் சீதை மறைந்து விட்டாள். பழையபடி வெடிப்பும் ஒன்றாகச் சேர்ந்துவிட்டது. இராமன் பதறினான். வேதனை தாங்க மாட்டாமல் அருகில் பாய்ந்து கொண்டிருந்த ஆற்றில் வீழ்ந்து தற்கொலைசெய்து கொணர்டான். இராமனும் சீதையும் ஒருவரையொருவர் காதலித்துத்தான் திருமணம் செய்துகொண்டார்கள். தெய்வீகக்காதல் என்று சொல்லும் அந்தக் காதலே சிதைந்துவிட்டது. காதல் என்ற ஒன்று என்பதெல்லாம் ஒரு பொய்க்கதை. நானும் இந்தக் காதலை எற்றுக்கொள்ளமாட்டேன்.” என்று அப்பா விடாப்பிடியாகவே நின்றார். இந்தக் கதையைக் கேட்ட போதும் எண்னை நேசித்தவரை என்னால் மறக்க முடியவில்லை. "இவற்றையெல்லாம் நீசொல்லும் போது உன்னுடைய காதலன் உனக்கு ஏதாவது பதில் சொல்லவில்லையா?” என்று அவசரமாகக் கேட்டான் சேரனர்.
"நான் மீண்டும் கேட்காமல் விடவில்லை. அப்பா சொன்னது போல காதல் எண்பது உடன் தோன்றி உடனழியும் ஒரு மோசமான உணர்ச்சியா? என்றேன். எண்னை நீங்கள் திருமணம் செய்வீர்களா?
இல்லையா?
கவலையோடு அவர் எண் முகத்தைப் பார்த்தார். "மண்ணித்துக்கொள்ளுங்கள். எனக்கும் சகோதரிமாருடைய பாரங்கள் இருக்கின்றன. தலைக்கு மேல் பொறுப்புணர்டு. எனினால் எதுவும் சொல்லமுடியாது. இருந்தாலும் என்னுடைய பெற்றாரைக் கேட்டுத்தான் அவர்கள் அனுமதியுடன் சொல்ல முடியும்” என்றார்.
“எனக்கு கட்டுக்கடங்காத கோபம் வந்துவிட்டது. பெற்றாரையா கேட்க வேண்டும்? பெற்றாரைக் கேட்டா என்னோடு பழகினிர்கள், காதலித்தீர்கள் என்றேன்.”
"நான் எது சொன்னாலும் உனக்கு விளங்காது. இந்தத் திருமணம் நடக்காது” என்று சொல்லிச் சென்றுவிட்டார்.
“இன்று எனினுடைய கவலையெல்லாம் ஒரு தொழில் தேடவேண்டும். அதுவே எண் நித்திய வேதனை." என்று கணி கலங்கினாள். சேரனின் கணிகளிலிருந்து நீர் வடிந்தது.
"நீ கவலைப்பட வேண்டாம். நானும் எதிர்நீச்சல்களைச் சந்தித்த பின்புதான் இன்று ஒரு விரிவுரையாளனாக இருக்கிறேன். எனக்குப் பல பெரிய மனிதர்களையும், தொழிலதிபர்களையும் தெரியும். உனக்கு சிறந்த ஒரு தொழில்
39

Page 22
வரை
எடுத்துத்தர என்னால் முடியும். நீ வருகிற முதலாம் திகதி ஒரு நேர்முகப்பரீட்சைக்கு வரவேண்டும். அந்த இடத்தில் நானும் ஒருவனாக விசாரணைக்குழுவில் இருப்பேண். உண்னுடைய பட்டப்படிப்பு, மேலதிக படிப்பு, பொதுச் சேவைகளில் நீ தொணர்டாற்றிய நற்சாட்சிப் பத்திரங்கள் எல்லாவற்றையும் தவறாமல் கொண்டுவர வேண்டும்” என்றாண் சேரன்.
சற்றுத் தயங்கிக் கொணர்டே "ஆம்" என்ற சாயலில் அவள் தலையசைத்தாள். “எனக்கு ஏதோ தலைவலியாக இருக்கிறது. நான் உடனடியாக வீட்டிற்குப் போக வேண்டும்” என்று எழுந்தவள் "இதை நீங்கள் பத்துநிமிடத்திற்கு முன் சொல்லியிருந்தால் நன்றாய் இருந்திருக்கும்” என்றுவிட்டு புறப்படத் தயாரானாள்.
அவளைத் தடுத்த சேரண் தன் பணப்பையை எடுக்க கையை சட்டைப்பையினுள் கொணர்டு சென்றான். அவளுக்குச் செலவுக்காக பணம் கொடுக்க நினைத்தவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அன்று அவன் அலுவலகத்தில் வேதனமாகப் பெற்ற பணம் அந்தப் பணப்பையில்தான் இருந்தது. அதிர்ச்சியைக் காட்டிக்கொள்ளாமல் சிறிது சிந்தித்தான். “பத்து நிமிடத்திற்கு முண் சொல்லியிருந்தால் நன்றாயிருக்கும்.” என்றதன்
அர்த்தமும் அவனுக்குப் புரியவே, “இது அவளின் தவறல்ல; வறுமையின் தவறு. எண்னைப் போன்ற இளைஞர்கள் நினைத்தால் இதற்கு தீர்வு காணமுடியும்” எண்றெணர்ணியவண் "வருகிற மாத்திலிருந்து நாண் உண்னுடைய செலவுக்கு பணம் தருகிறேன். நாம் அடிக்கடி சந்தித்துக்கொள்வோம்” அவளை நோக்கிக் கூறினான்.
“உங்களுக்கு ஏனர் வீணர் சிரமம். வேணர்டாம்” அவள் சங்கடப்பட்டுக்கொணர்டே தயங்கினாள்.
“என் மனைவிக்கு உதவுவதில் எனக்கெண்ன சிரமம் இருக்கப்போகிறது” அவள் தடுமாறியே போனாள். எதிர்பார்க்காத வார்த்தைகள். வெறும் வார்த்தைதானா? இது உணர்மையா? என திகைத்தவள், ஒருகணம் அவனை உற்றுப் பார்த்தாள். அவனுடைய பார்வைக்குள் அவளுடைய வாழ்வு அடங்கியிருந்தது போலவே அவளுக்குப் பட்டது. அதனால் நாணி குறுகிவிட்டாள்.
அந்தச் சோலையிலிருந்த மரத்தின் பழுத்த இலைகள், புதிய தளிர்கள் துளிர்ப்பதற்கு இடைஞ்சலாக இராமல் உதிர்ந்துகொணர்டன.
米米米
40

வரை
சித்திரையாள் சிரிப்பாளா?
-இரா வண்ணன்
சீரழகே சித்திரையே எழில்கள் கொஞ்சும்
சீரியளே வனப்புமிக்காய் உன்னைக் காண ஆரமுதே காத்திருந்தோம் அம்மா கேளிர்
அன்புசெய்வார் இல்லாமல் அழுதே வாழ்ந்தோம் வீரமுள்ள எம்மறவர் உரிமைக் காக
வீறுகொண்டு போர்தொடுத்தார் பயனில் லாத காரணத்தால் வெங்கொடுமைச் சாக்காட்டிற்குள்
கவிழ்ந்து விட்டார் இதையறிந்து சிரிப்பாயோநி
அன்னைதமிழ் ஈழத்துச் செல்வர் தம்மை
அழிப்பதற்கு துணைநின்று துரோகம் செய்த கன்னக்கோல் வைத்தகருணாநிதியை
காண்பதற்கே கூசுகின்ற கயவன்றன்னை இன்னமுந்தான் அமைச்சனென இருந்து வாழ
இடம்கொடுத்த விபீடணரை மனதில் எண்ணி துன்பமுற்றோம் தூயவளே சிரிப்பாயோ நீயே
துவண்ட தமிழ் நெஞ்சங்கள் துயரைக் கேளிர்
41

Page 23
வரை
போகட்டும் என்றிருந்தால் எவ்வாறம்மா
போர்க்களத்திற் பட்டவடு மாற வில்லை சாகட்டும் தமிழரினம் மாற்றார் சொன்னால்
சகிப்பதற்கு முடியவில்லை இந்த வார்த்தை ஆகட்டும் எதுவெனினும் பொறுமை யோடு
அமர்ந்திருப்போம் விபீடணரை நோக்கி என்றும் நோகட்டும் என்றுநீவிடாதே தாயே
நுதலழகி சித்திரையாள் சிரிப்பாளோதான்
காலமெனும் சித்திரையே நீசிரித்தால்
கண்மணியே தமிழருக்கு சிறப்புண்டாகும் ஞானமதில் எம்பெருமை சிறந்து ஓங்க
நன்மணிநீ செம்பொன்னே நகைதான் செய்வாய் தூயவளே நின்னைநாம் நம்பு கின்றோம்
துன்பங்கள் அகன்றுவிடும் நின்பிறப்பால் தாயவளாய் வந்தவளே அன்பு கூர்ந்து
தயவான சித்ரையே சிரிப்பாய் மாதோ
தையலர்தை மகளாக வந்த எங்கள்
தாரணியே சித்திரையே சிரிப்பாய் அம்மா மெய்யதுவாய் வாழ்த்துகின்றறோம் உள்ளம் பொங்க
மேன்மையுறு பெண்ணரசி வாழ்க வென்று கையறுஒர் நிலைதன்னில் இருக்கும் எம்பால்
கணிவோடு கடைக்கண்ணால் கருணை காட்டி வையகமே உய்கவென ஆசி கூறி
வண்டமிழர் சித்திரையே சிரிப்பாய் மாதோ
தாரகைநீதமிழ்ச்சுவடிக் கன்னத் தாளே
தருமமதைக் கூறுதிருக் குறள்நெஞ் சாளே பூரணியே சித்திரையே தமிழாம் தாய்க்கு
பூமாலை புகழ்மாலை சூட்டி யெம்மோ டோரணியாய் இருந்தெமது உரிமை தன்னை
ஒற்றுமையாய் பெற்றிடவே உறுதிதாரிர் வீரனென சான்றோராய் வாழச் செய்வீர்
வியப்புமிகு சித்திரையே சிரிப்பாய் மாதோ
42

வரை
மாதமொரு மணிதம்
வேலுப்பிள்ளை கந்தசாமி
வாசகர்களே! “மாதமொரு மனிதர்” என்ற இப்பகுதியில் எமது நாட்டில் இலைமறை காய்களாக இருக்கும் திறமையாளர்களை, தொழில் முயற்சியாளர்களை அல்லது நல்ல சமூக முன்மாதிரிகளை அறிமுகஞ்செய்கிறோம். நீங்களும்
எமக்கு அனுப்பிவையுங்கள்.
இத்தகையோரைப் பற்றிய தகவல்களை
ஆசிரியர்
உழைப்பால் உயர்வு பெற்ற மனிதர்கள் காலத்தை வென்று என்றும் வாழ்தகவுடையவர்களாக மிளிர்வது இயல்பானது. தானும் வளர்ந்து பிறரும் பயன்பெறும் வகையில் வாழ்வை அமைத்துக் கொள்ளும் மாந்தர்கள் உலகில் அரிதாகவே பிறக்கின்றனர். அப்பேற்பட்ட சிறப்புப் பெருந்திய மனிதராகத்தான் திரு. வேலுப்பிள்ளை கந்தசாமி அவர்கள் காணப்படுகிறார். 1940 ஆம் ஆண்டு சரவணை கிழக்கு, ஊர்காவற்றுறையில் பிறந்த இவரிடம் சிறு பராயத்தில் இருந்து துடிப்பும், பிறருக்கு உதவும் பண்பும் இயல்பாகவே இருந்து வந்திருக்கிறது. துர்அதிஸ்டவசமாக தனது 14 வது வயதில் பொக்குளிப்பான் நோய் கண்டு தனது பார்வைப் புலனை இழந்தார். தன் வாழ்வு கணத்த இருளின் சகதிக்குள் அகப்பட்டுக்கொண்டிருப்பதாக உணர்ந்ததாக அத்தருணத்தை அவர் நினைவுகூருகிறார். இயற்கையின் எழில் விளையாடித் திரிந்த இடங்கள், பார்த்துப்
பழகிய முகங்கள் எல்லாமே படிமங்களாக மனதில் புதைந்து போக எதிர்கால வாழ்வை சூனியமாக உணரும் நிலைக்கு அப்போது அவர் தள்ளப்பட்டதாக குறிப்பிடுகின்றார்.
வைத்திய சிகிச்சையின் போது வைத்தியசாலையில் அவருடன் சிகிச்சை பெற்ற திரு.சிதம்பரப்பிள்ளை என்பவர் அவரது நிலையைக் கண்ணுற்று அவருக்கு உதவும் முகமாக சந்நிதியான் திருவடியில் அவரைக் கொண்டு வந்து சேர்த்தார். பெற்றோர்க்கு இது தொடர்பில் மனக்கவலை இருந்து வந்த போதும், சந்நிதி முருகன் ஆலய நிழலில் தான் வாழவேண்டும் என்ற
43

Page 24
வரை
அவரது திடமான முடிவு அவரது வாழ்வில் பெரும் திருப்பு முனையாக அமைந்ததென்றே குறிப்பிடவேண்டும். ஆரம்ப காலங்களில் சந்தனம் முதலான பூசைத் திரவியங்களைத் தயாரித்து பக்தர்களுக்கு வழங்கி வந்தவர், பின்னர் கற்பூர விற்பனையை தனது வாழ்வாதாரத் தொழிலாக மாற்றியமைத்துக்கொண்டார். அப்போதிருந்த புறச் சூழல் அவர் கல்வி நீரோட்டத்தில் இணையும் வாய்ப்பை இல்லாமற்செய்தது. அது அவரது மனதைப் பெரிதும் வாட்டிய விடயமாய்
அமைந்துவிட்டது.
1980 ம் ஆண்டு காலப் பகுதியில் யாழ். விழிப்புலனற்றோர் சங்கத்தில் இணையக் கிடைத்த வாய்ப்பை முருகப் பெருமானின் பேரருட்திறனின் வெளிப்பாடாகவே தான் உணர்வதாக திரு. கந்தசாமி அவர்கள் நினைவகூருகின்றார். யாழ்.விழிப்புலனற்றோர் சங்கத்துடனான இணைவின் பின் தனது வாழ்வியலைச் சமூகப்பணியென்ற பரிணாமத்திலும் நிலைநிறுத்திக் கொண்டார். பார்வைப் புலனற்றவர்கள் கல்வி என்ற வழிமுறை ஒன்றினூடாக நிறைவான வாழ்வை எய்த முடியுமென கந்தசாமி அவர்கள் திடமாக நம்புகின்றார். தனக்குக் கிடைக்கத் தவறிய வாய்ப்பு தன்னைப் போன்ற பிறருக்கு தடையின்றிக் கிடைக்க வேண்டும் என்ற பெருநோக்கோடு 1996ம் ஆண்டு, தான் உழைத்து சேமித்து வைத்திருந்த பத்தாயிரம் ரூபாவுடன் "கந்தசாமி கல்வி நிதியம்”
ஒன்றை யாழ்.விழிப்புலனற்றோர் சங்கத்தில் உருவாக்கினார். இந்த நிதியினூடாக பார்வையற்ற பல்கலைக்கழக மாணவர்கள் முதற்கொண்டு ஏனைய கல்விப் புலத்திலிருக்கின்ற மாணவர்களும் நிறைவான பயனைப் பெற்று வருகின்றனர். தனது உழைப்பிலிருந்து பெறுகின்ற பணத்தையும், நிதியத்திற்கென கொடையாளர்கள் வழங்குகின்ற நிதியையும் "கந்தசாமி நிதியத்தில்” வைப்புச் செய்து கல்விக்கான அரிய சேவையை திரு.கந்தசாமி அவர்கள் வழங்கி வருகின்றார். இந் நிதியம் உருவாக்கப்பட்டதன் பின் தான் கல்வியில் மிளிர முடியவில்லையே என்ற தனது வேதனை குறைவடைந்திருப்பதாகக் கூறி கந்தசாமி அவர்கள் திருப்தியடைகிறார். சந்நிதி முருகன் ஆலய நிழலில் வாழக்கிடைத்ததும், பயனுள்ள பணிகளை ஆற்றுகின்ற வாய்ப்பைப் பெற்றதும் தன் வாழ்வின் பெரும் பேறுகளாகவே திரு. கந்தசாமி அவர்கள் காண்கிறார். இத்தகைய தகைமைசார் மனிதர்கள் என்றும் மனதிற்கொள்ளத்தக்கவர்கள். மாதமொரு மனிதர் பகுதியில் திரு.கந்தசாமி அவர்களின் வாழ்வியல் பதிவாக்கம் பெறுவது "வரை” குடும்பத்திற்கு பூரணமான நிறைவைத் தருகின்றது.
க.தர்மசேகரம்
44

வரை
V யுதிர் போட்டி இல. 6 சோ. கிருஷ்ணதாஸ்
கீழுள்ள புதிர்களுக்கான விடைகளை 10-06-2011 இற்குமுன் எமது
முகவரிக்கு அனுப்பிவைக்கலாம். சரியான விடையனுப்பிய அதிஷ்டசாலி
மாணவருக்கு ரூபா 500.00 வழங்கப்படும்.
அருகே தரப்பட்ட உருவங்கள் ஒரே மாதிரியானவை. இவற்றைப் பயன்படுத்தி சதுரமொன்றை റ 7
உருவாக்கிக் காட்டுங்கள்.
அருகே உள்ள கூட்டல் சரியாவதற்கு TWO அவ்வெழுத்துக்களுக்குப் பதில் THREE என்ன இலக்கங்கள் வரவேணடும். -- SEVEN
TWELVE
2. CD, DE, EF, FG, ..............
வெற்றிடத்தில் வரவேண்டிய ஆங்கில எழுத்துக்கள் யாவை?
1) கோழிகள் - 15, ஆடுகள் -10 iii)
புதிர்ப் போட்டி இல, 14 இற்கான பரிசை வெல்பவர் செல்வி சி. சிவதர்சிகா, தரம் 11, யா/வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி.
இதழ் 14ல் வெளிவந்த புதிர் போட்ழக்கான விடைகள்
ii) i 173
263 459
45

Page 25
வரை
தமிழா! உன் பெயர் தமிழா?
எம்மில் பலருக்கு தமிழ்ப்பெயர்கள் இல்லை. வேற்று இனத்தவரைப் பொறுத்தமட்டில் எந்த நாட்டினராயினும் சரி அல்லது எந்த மதத்தினராயினும் சரி அவர்கள் தத்தம் மொழியிலேதான் பெயரிட்டுக்கொள்கிறார்கள். தமிழர்கள் மட்டும் வேற்று மொழிகளிலே பெயரிட்டுக்கொள்வதில் பெருமையும் கொள்கிறார்கள்.
இருந்தும் தமது பிள்ளைகளுக்கு தூயதமிழ்ப் பெயர்கள் சூட்ட இன்றும் அக்கறைகாட்டும் பெற்றோர்கள் இருந்துகொண்டுதாணிருக்கிறார்கள். அவர்களுக்காக பிறமொழிப் பெயர்களும் அவற்றுக்கு நேரான தமிழ்ப்பெயர்கள் அல்லது அவற்றின் அர்த்தங்களைத் தொகுத்துத் தருகிறோம். தொடர்ந்தும் தூயதமிழ்ப்பெயர்களை இப்பகுதியில் அறிமுகம்செய்யவுமுள்ளோம்.
மகளிர் பெயர்கள்
அஞ்சுகம் கிள்ளை கலாவல்லி கலைக்கொடி அமிர்தவல்லி அமுதவல்லி கவிதா இசைமொழி அம்புஜம் தாமரை கல்யாணி மங்கலி அருணா சிவந்தி கெளசல்யா கோமகள் அனுஸ்யா நல்லம்மாள் 565 பொன்னி ஆனந்தவல்லி இன்பவல்லி கனகாம்புஜம் பொற்றாமரை ஆனந்தி இனியவள் கஸ்தூரி மானகத்தி இந்திரா விண்ணரசி காந்திமதி மதியொளி இந்துமதி நிலாமதி காஞ்சனா வேட்கையள் ஈஸ்வரி செல்வி காமாட்சி எழிற்கண்ணி 20LLOT இறையம்மை காயத்ரி சுடரொளி
69T விடிவெள்ளி கெளரி பச்சையம்மாள் ஊர்வசி விண்ணழகி 3-(5,556).T பெண்ணழகி ஜெயந்தி வென்றி சந்திரமதி மதிநிலா ஜோதி சுடரொளி சந்திரா மதியரசி ஹேமா பொன்னி சாந்தி அமைதி 5.D6ԾIT தாமரை சாருலதா எழிற்கொடி கலாராணி கலையரசி சாவித்திரி நற்கலை
46

சித்ரா சிவகாமி
சியாமளா சுகந்தி
die5600TT சுகுமாரி சுகாசினி
சுசீலா சுந்தரவல்லி
சுதா
T சுப்புலட்சுமி சுமதி செல்வராணி சொர்ணலதா தனலட்சுமி திவ்யா
தீபா
நதியா நளினி நித்யா
நிர்மலா
சித்திரம் சிவநேயம் கார்மேனி நறுமணம் குணவழகி நற்செல்வி இன்பவாணி நற்குணம் பூங்கொடி வெள்ளச்சி
நல்லம்மை நன்மகள் நன்மதி திருவரசி பொற்கொடி திருச்செல்வி நேர்த்தி சுடரொளி ஆறணி
தாமரை மெய்யம்மை
மாசிலி
ஆடவர் பெயர்கள்
ஜகந்நாதன் ஜனார்த்தனன் சாரங்கபாணி சாஸ்திரி சிங்காரம் சிதம்பரம் சிவலிங்கம் சிவானந்தம் சிற்சபை சுந்தரமூர்த்தி சுப்பிரமணியன்
திருமால் மக்கட்செல்வன் திருமால் கலைஞன் ஒப்பனை, அழகு தில்லை சிவமுதல் சிவனருள் சிற்றம்பலம்
அழகுரு முருகன்
வரை
சூரியன் ஞாயிறு, பரிதி சூரியமூர்த்தி - ஞாயிற்றுருவினன் கோணாசலம் - அண்ணாமலை சோமசுந்தரம் - மதியழகு ஞானசம்பந்தம் - அறிவுக்கொழுந்து ஞானப்பிரகாசம் - அறிவொளி தட்சிணாமூர்த்தி- தென்முகன் தண்டபாணி - முருகன், திருமால் தருமேஸ்வரன் - அறவாணன் திரவியம் - செல்வம் நடராசன் - அம்பலவாணன் நந்தகுமரன் - திருமால் நவநீதகிருஷ்ணன்- திருமால் நவமணி - ஒன்பான்மணி நீலகண்டன் - நஞ்சுமிடற்றன், மைக்கழுத்தன் நாராயனண் - திருமால் பசுபதி - சிவன் பஞ்சாட்சரம் - ஐந்தெழுத்து பத்மநாபன் - திருமால் பரஞ்சோதி - பேரொளி பாலசுந்தரம் - இளவழகு பாலசுப்பிரமணியம். இளமுருகு பாலகிருஷ்ணன் - இளங்கண்ணன் பாஸ்கரன் - பகலோன், பரிதி மகாதேவன் - மாதேவன் மாணிக்கவாசகன்- மணிமொழி மோகனசுந்தரம் - நச்சினார்கழகன் விருத்தாசலம் - பழமலை வேணுகோபால் - வேய்ங்குழலன் வேதாசலம் - மறைமலை வேதாரணியம் - மறைக்காடு வைகுண்டம் - திருமாலுலகு
ളിമണ്ണൂർ ബ്രി.
தொகுப்பு: திசையன்
47

Page 26
வரை
“வரை’ சந்தா விபரம் நீங்களும் இந்த அறிவியல் பல்சுவை மாசிகையின் சந்தாதாரராகுவதன் மூலம் எமது முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்க முடியும்.
உள்நாடு தனிப்பிரதி - ரூ.40 ஓராண்டுச் சந்தா - ரூ.480 2 ஆண்டுச் சந்தா - ரூ.950 3 ஆண்டுச் சந்தா - ரூ.1400 ஆயுள் சந்தா - ரூ.20,000, வெளிநாடு ஆண்டு சந்தா -40 US$ ஆயுள் சந்தா - 400 US$
முகவரி:
ஆசிரியர், *வரை” வெளியீட்டகம், இல, 10,
சம்பியன் வீதி, கொக்குவில், யாழ்ப்பாணம்.
சந்தா தொகையை, காசோலை மூலமாகவோ அல்லது எமது கணக்கில் பணத்தை வைப்பிலிட்டு ரசீதை அனுப்புவதன் மூலமாகவோ அல்லது காசுக் கட்டளை மூலமாகவோ (சுண்னாகம் தபால் நிலையத்தில் மாற்றக்கூடியதாக) எமக்குக் கிடைக்கச்செய்யலாம். வங்கி கணக்கு மூலம் அனுப்புபவர்கள்
R.Thananjeyan, Commercial Bank - Chunnakam. A/C No. 8107.0049956T6örp
கணக்கிலிட்டு ரசீதை அனுப்பவும்.
*ട്ട് * * ETửrt TreTiger: * ಪ್ಲೆ: : பேராசிரியர் ஏ.வி.மணிவாசகர் 蟹 リ〉説 o 66) தலைவர். அரசியல் விஞ்ஞானத்துறை, யாழ்.
శ్రీగఢగy பல்கலைக்கழகம், அதிவேல் ஆற்றி ஆசிரியர்: பேராசிரியர் கசத்தியசீலன், SODUSOSOO திரு.சு.ஆழ்வாப்பிள்ளை பீடாதிபதி பட்டப்பின்படிப்புகள் பீடம் யாழ்.
பல்கலைக்கழகம், இணை ஆசிரியர்கள்: பேராசிரியர். க.தேவராசா,
திரு.இ.கிருபாகரன் (0717884331) செல்வி. மீரா இரவீந்திரகுமரன்
இதழ் குழு
க. அன்பழகன் - 077 2092013, 077 9876937 (வவுனியா)
ஆ. பரமேஸ்வரன் - 0779791366 (மட்டக்களப்பு). திரு.க.தர்மசேகரம்
திரு.வ.சசிகுமார்
செல்வி ஏ.பிறென்டா
செல்வி ம. துளசிகா
ஒவியம்: திரு.சு.ஆழ்வாப்பிள்ளை செல்வன் தே. அகிலன்
இந்த அறிவியல் பல்சுவை மாசிகை "வரை" குழுமத்தினரால் தெல்லி பதிப்பகம், கொக்குவில் இல் அச்சிட்டு வெளியிடப்படுகிறது.
பீடாதிபதி முகாமைத்துவ மற்றம் வணிக கற்கைகள் பீடம், யாழ். பல்கலைக்கழகம் பேராசிரியர் கு.மிகுந்தன், தலைவர், விவசாய உயிரியல்துறை விவசாய பீடம், யாழ் பல்கலைக்கழகம், வைத்தியகலாநிதி திருமதி. தாரணி குருபரன் இரத்த வங்கி, யாழ் போதனா வைத்தியசாலை, திருமதி. பகீரதி க்ணேசதுரை
ஆசிரியை, யாlமகாஜனக் கல்லூரி திரு. சி.சந்திரன் உப அதிபர், சைவப்பிரகாச மகளிர் கல்லூரி 666furt T.P. 024 222 2281 திருமதி. செம்மனச்செல்வி தேசிகன் உயர்தர ஆசிரியர், வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி வவுனியா TP: 0242226062, O24 222 2425
48


Page 27
Studiwel, K.K.S
ஆங்கிலம் பயில விரும்
முற்றிலும் புறம்தள்ளாமலும்
மூழ்கிவிடாமலும் புதிய கற்பிக்
Taught by: Kuna M
 
 
 
 
 
 

ற்றுத்தர வழிசெய்துதரப்படும்.
வோர்க்கு இலக்கணத்தை இலக்கணத்திற்குள் முற்றிலும்
எளிமையான வழியில் கப்படும்.
sc (TIP: 0777363797)