கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2010.12

Page 1


Page 2
Z= E | தரமான தங்க நகைகளுக்கு.
| NAGALING
ፓe
Design Manufactur Sovereign G JeUg
101, Colombo
Te: O81
(SÈ CENTR SU
SUPPERSO CONF
Dealers in all find Food Colours, Food Chemi
76 B, Kings Tel : 081-2224187, 08
 

JK || ueuers Nš
ers and క్రై" ers of 229246.T. jold Quality ellery 萎
Street, Kandy - 2232545 قرية
AL ESSENCE PPLIERS
ECTIONERS AG BAKERS
ls of Food essences, |cols, Coke ingredients etc.
Street, Kandy |-2204480, 081-4471.563

Page 3
பகிர்தலின் மூலம்
oifillfloib
ஆழமும்
பெறுவது
Gm Gorb
ஆசிரியர் தி. ஞானசேகரன் இணை ஆசிரியர் : ஞானம் ஞானசேகரன் ஓவியர் :
கெளதமன்
தலைமை அலுவலகம் : கண்டி, தொடர்புகளுக்கு. தி. ஞானசேகரன் ஞானம் கிளை அலுவலகம் 3-B, 46ஆவது ஒழுங்கை, கொழும்பு - 06. தொலைபேசி: 01-2586013
O777-306506
+61 02 80077270 தொலைநகல்: 011-2362862 E-mail: editor Gignanam.info Web : www.gnanam.info
வெளிநாட்டு, உள்நாட்டு வங்கித் தொடர்புகள்: Swift Code :- HBLILKLX T. Gnanasekaran Hatton National BankWellaWatte Branch AVCNo. O09010344631
ஞானம் சஞ்சிகையில் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்து புனைபெயரில் எழுதுபவர்கள் தமது சொந்தப் பெயர், முகவரி ஏற்றுக் கொள்ளப்படும் படைப்புகளைச் செவ்வைப்படுத்த
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2010
 

இதழினுள்ளே .
o axožbag:Bř
தமிழ்நேசன் O5 அல்வையூர் கே.ஆர். திருத்துவராஜா 13 சே. ஞானராசா 13 தீபிகா ஆனந்தநேசன் 17 சித்திரா சின்னராஜன் 20 கருணாகரன் 22
o abt (6afair
முருகபூபதி O3 பிரகலாத ஆனந்த் 10 தமிழன்பன் 16 செங்கை ஆழியான் 27 சிற்பி 33 கலாநிதி ந. சுப்பிரமணியன் 40
O gb
கொற்றை. பி. கிருஷ்ணானந்தன் O7 க. பரணிதரன் 14 பாலா சங்குபிள்ளை 18 ம. நிரேஸ்குமார் 24 o Girirai
தெளிவத்தை ஜோசப் தி. ஞானசேகரன் 34
e பர்மியயிக்குரிசான்னகதைகள்
கவிஞர் சோ.ப. 2 0 நூல் மதிப்புரை
குறிஞ்சி நாடன் 49
• சமுகநூலகனை இனக்கிய
ழ்வுகள்
கே. பொன்னுத்துரை 52 O utilagigs/
a, a diggsi 23
மானா மக்கீன் 38
துரை மனோகரன் 45
கே. விஜயன் 47
e வாசகர்பேசுகிறார் 54
கட்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்புடையவர்கள். ஆகியவற்றை வேறாக இணைத்தல் வேண்டும். பிரசுரத்திற்கு ஆசிரியருக்கு உரிமையுண்டு. - ஆசிரியர்

Page 4
சர்வதேச தமிழ் எழுத்
சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு 2011 ஜனவரி நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் இலங்கை, இந்தியா, மலேசிய ஐரோப்பிய நாடுகளிலிருந்து நூற்றுக்கணக்கான கலை இம்மாநாட்டில் உலகத்தமிழ் இலக்கியம், ஈழத்துத் ஆவணப்படுத்தல், நிகழ்த்து கலைகளும் நுண்கலைகழு இலக்கியம், சிற்றிதழ்கள் ஆகிய துறைகளில் ஆய்வரங் பல்வேறு நாடுகளிலிருந்து வருபவர்களும் தத்த மாநாட்டில் ஆராயவிருக்கிறார்கள்.
இலங்கையைப் பொறுத்தவரை ஏறத்தாழ முப்பது ( போரின் தாக்கம் இலங்கையின் கலை இலக்கிய முய இவற்றை வெளிக்கொணரக் கூடிய சந்தர்ப்பத்தை இந்த காரணத்தினால் இம்மாநாடு முதன் முதலில் இலங்கைய இலங்கையில் முப்பது வருடகாலம் போரின் நெருக்க மத்தியில் வாழ்ந்து கொண்டிருந்த தமிழ் மக்கள் தமது தமி தமது தொப்புள் கொடி உறவுகளோடு கலந்து பேசிச் சி பரந்துவாழும் தமிழர்களோடு கருத்துப் பரிமாற்றம் செய்யவும் எழுச்சி பெறவும் ஓர் ஆரம்பம் தேவை. அந்த ஆரம்பமாக இ இந்த மாநாடு இலங்கையில் யுத்தத்தினால் சீர்குtை கலை இலக்கிய வாதிகளிடையே ஓர் உறவுப் பாலத்தை பல்வேறு அரசியல் கருத்துநிலை கொண்ட கை உரையாடலை ஏற்படுத்திக்கொடுக்கும் ஓர் களமாகவும் ! எதிர்காலத்தில் இலங்கையில் உள்ள கலை இலக் இலக்கியவாதிகளோடு இணைந்து பல்வேறு கலை இல இம்மாநாடு வழிசமைக்கும்.
கடந்த முப்பது வருட காலத்தில் போரின் விளைவாக இலக்கியம் எனப் புதிய பரிணாமங்கள் ஈழத்து இலக்கியத் மதிப்பீடும் இந்த மாநாட்டின் மூலம் கிடைக்கவிருக்கிறது. இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து சென்ற எழுத் இருக்கும் மொழிகளைக் கற்று அந்த மொழிகளில் இலக்கியங்களைத் தமிழ் மொழிக்கு மாற்றம் செய்தும் சென்றிருக்கிறார்கள். இவை பற்றியும் இம்மாநாட்டில் ே கடந்த பதினைந்து வருட காலத்தில் கணினியி
புதிய செயற்பாடுகள் நடந்த வண்ணம் இருக்கின்றன. இை இந்த மாநாட்டு நிகழ்ச்சிகளை உலகெங்கும் பரந் ஒளிபரப்புச்செய்ய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள6 இந்த மாநாடு சம்பந்தமான விடயங்களை அறிந்து 3956Tqpasapiwww.tamilwriters.org agh.
எதிர்காலத்தில் வெவ்வேறு நாடுகளில் இத்தகைய திட்டமிடப்பட்டுள்ளது.
முதன்முதலாக நடைபெறும் இந்தச் சர்வதேச தமி தமிழ் இலக்கிய வாதிகள், தமிழ் ஆர்வலர்கள், தமிழ் சிறப்பான ஆரம்பத்தை ஏற்படுத்துவதோடு சம்பந்தப்பட் அடுத்த வளர்ச்சிக் கட்டத்திற்குக் கொண்டுசெல்ல ஆக் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
2
 

தின்பெருக்கைப்போல்கலைப்பெருக்கும் பிப்பெருக்கும் மேவு மாயின், ல் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம் விழிபெற்றுப்பதவி கொள்வார்.
நாளர் மாநாடு - 2011
6,7,8,9 ஆம் திகதிகளில் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில்
, சிங்கப்பூர், அவுஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து, இலக்கியவாதிகள் கலந்துகொள்ள விருக்கிறார்கள். தமிழ் இலக்கியம், சிறுவர் இலக்கியம், செவ்விதாக்கம், நம், இணையமும், வலைப்பதிவுகளும், மொழிபெயர்ப்பு தகள் நடைபெறவுள்ளன. மது நாட்டுத் தமிழ் இலக்கிய முயற்சிகள் பற்றி இந்த
வருடகாலம் உள்நாட்டுப் போர் நிகழ்ந்திருக்கிறது. இந்தப் ற்சிகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ச் சர்வதேச எழுத்தாளர் மாநாடு வழங்கவேண்டும் என்ற பில் நடைபெறவிருக்கிறது. டிக்கு முகம் கொடுத்துக்கொண்டு பல்வேறு சிரமங்களுக்கு ழ் உணர்வுகளை வெளிப்படுத்தவும் புலம்பெயர்ந்து வாழும் ந்தனைப் பரிமாற்றம் செய்யவும் உலகளாவிய ரீதியில் , தம்மைக் கட்டியெழுப்பவும், வீழ்ச்சியுற்ற நிலையிலிருந்து இந்தச் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாடு அமையும். லந்துபோயிருக்கும் தமிழ், முஸ்லிம், சிங்கள, மலையகக்
ஏற்படுத்தும் சந்தர்ப்பமாகவும் அமையும். லை இலக்கியவாதிகளிடையே ஓர் ஆரோக்கியமான இந்த மாநாடு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கியவாதிகள் உலகளாவிய ரீதியில் பரந்து வாழும் கலை க்கிய முயற்சிகளை, சமூகப் பணிகளை ஆற்றுவதற்கும்
5 புலம்பெயர் இலக்கியம், புகலிட இலக்கியம், போர்க்கால தில் ஏற்பட்டிருக்கின்றன. இவை தொடர்பான கணிப்பும்,
நாளர்கள் பலர் தாம் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில் இலக்கியம் படைத்தும், அந்த மொழிகளில் உள்ள தமிழ் இலக்கியத்தை பல்வேறு தளங்களுக்கு எடுத்துச் பசப்படவிருக்கிறது. ன் வரவு தமிழ் இலக்கியத்திலும் பல விரிவுகளையும் டல், கணினி இலக்கிய இதழ்கள், வலைப்பதிவுகள் எனப் வ பற்றியெல்லாம் இம்மாநாட்டில் பேசப்படவிருக்கிறது. து வாழும் மக்கள் கணினியில் கண்டுகளிக்க நேரடி T.
கொள்ள ஓர் இணையத்தளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடுகளை நடத்தவும்
எழுத்தாளர் மாநாட்டில் உலகெங்கும் பரந்து வாழும் இலக்கிய இயக்கங்களைச் சார்ந்தவர்கள் கலந்து ஒரு
டோரை ஒன்றிணைத்து தமிழ்க் கலை இலக்கியத்தை கபூர்வமான ஆலோசனைகளையும் வழங்க வேண்டும்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2010

Page 5
அடைப்பட அதிதி
முதுமையிலும் இளமைகு கலைவளன் சி.சு. நாே
0Iழுபத்தியொன்பது வயதில் கலை, இலக்கிய அமைப்பொன்றுக்கு தலைவராக ஒருவர் ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்ட தகவல் எம்மவர்களுக்கு சற்று வியப்பாகவிருக்கலாம். அவுஸ்திரேலியாவில் எம்மத்தியில் அயராமல் இயங்கிக்கொண்டிருக்கும் அந்த மூத்த தலைமுறை சமூகப்பணியாளர், கலை, இலக்கியவாதி கலைவளன்" சி.சு.நாகேந்திரன் அவர்களைப்பற்றித்தான் இப்பத்தியில் குறிப்பிட விரும்புகின்றேன்.
சமீபத்தில் நடந்த எமது அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் அவர் தலைவராக ஏகமனதாகத் தெரிவானார்.இச்சங்கம் வருடாந்தம் நடத்தும் தமிழ் எழுத்தாளர் ஒன்றுகூடல் நிகழ்வில் தவறாமல் கலந்துகொள்ளும் இவர் அதன் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பார். சங்கத்தின் ஒன்றுகூடல் எழுத்தாளர் விழா மெல்பனில் சிட்னியில் கன்பராவில் நடந்தாலும் சாக்குப் போக்குச் சொல்லாமல் தமது உடல் நலத்தையும் பொருட்படுத்தாமல் அர்ப்பணிப்பு உணர்வுடன் பங்கேற்று கருத்தரங்குகளில் கட்டுரையும் சமர்ப்பிப்பார்.
யாழ்நல்லூர் இவரது பூர்வீகம் எனச்சொல்லப்பட்டாலும் பிறந்தது கேகாலையில் 1921 ஆம் ஆண்டில். அவரது தந்தையார் தொழில் நிமித்தம் இப்பிரதேசத்தில் வாழ்ந்த காலத்தில் பிறந்த சிசு. நாகேந்திரன் அவர்களின் வாழ்வில் அவரது ஒன்பதாவது வயதில் எதிர்பாராத சம்பவம் ஒன்று நிகழ்ந்திருக்கிறது.
நாகேந்திரனின் ஒன்பதாவது வயதில் தந்தையார் முற்றும் துறந்த துறவியாகி குடும்பத்தையும் உத்தியோகத்தையும் துறந்து வட இந்தியா நோக்கி ஒரு சந்நியாசி கோலத்துடன் புறப்பட்டுவிட்டார். ஒன்பது வயது நாகேந்திரன் அருமைத்தாயாரினதும் அன்பு அண்ணனினதும் அரவணைப்பில் வளர்ந்திருக்கிறார்.
தந்தையார் இந்தியா வடக்கு நோக்கிச்செல்லவும் தாயார் இலங்கை வடக்கு நோக்கி குழந்தைகளை அழைத்துக் கொண்டு வந்து விட்டார். அந்நாளைய அரிவரிதொடக்கம் லண்டன் மற்றிக்குலேஷன் வரையில் யாழ். பரமேஸ்வரா கல்லூரியில் (இன்றைய பல்கலைக்கழகம்)படித்த நாகேந்திரன், பின்னர் யாழ். மத்திய கல்லூரியில் வர்த்தக முகாமைத்துவம் Össig, London Chamber of Commerce 9 (Lig) fl'60EF555 தோற்றினார்.
1944இல் மன்னார் அரசாங்க அதிபராக கடமையாற்றிய சிற்றம்பலம் அவர்களிடம் தட்டச்சாளராக பணியாற்றும் அரச நியமனம் கிடைத்தது.பின்னர் கொழும்பில் அரசதிணைக்களம் ஒன்றில் பணிபுரியும் போது கணக்காய்வாளராக பதவி உயர்வு
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2010

ன்றாதவர் கந்திரன்
-முருகபூதி
பெற்றார். அதனைத்தொடர்ந்து, 1979 இல் சேவையிலிருந்து ஒய்வுபெறும் வரையில் பல்வேறு திணைக்களங்களில் பணியாற்றியிருக்கிறார்.
நான்கு பிள்ளைகளின் தந்தை. ஒரு சாதாரண எழுதுவினைஞருக்குரிய ஊதியம். எளிமையான வாழ்க்கை இவற்றுக்கு மத்தியில் பிள்ளைகளைப் படிக்கவைத்து நல்ல நிலைமைக்கு அவர்களை உயர்த்திவிட்டு, தனது தந்தையைப் போன்றே ஒரு துறவுக்கோலம் பூண்டு அமைதியாக தமது பணியைத் தொடருகிறார். தமது துறவு வாழ்க்கையை சமூகத்திற்கு பலவழிகளிலும் பயன்படும் விதமாக இவர் அமைத்துக் கொண்டிருப்பதுதான் அவரது சிறப்பு. அத்துடன் மற்றவர்களுக்கு முன்மாதிரியானதாகவும் திகழுகிறது.
அதனாலும் அவர் எமது நெஞ்சத்துக்கு நெருக்கமான வராகின்றார்.
இளமைக்காலத்தில் படிப்பில் படுசுட்டி எனப்பெயரெடுத்த இவர், மாணவர் தலைவராகவும் பல்துறை விளையாட்டு வீரராகவும் திகழ்ந்திருக்கிறார். உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம், டெனிஸ், டேபிள்டெனிஸ் முதலானவற்றிலும் வல்லவராகியிருக்கிறார். அயராது இயங்கும் இவரது சூட்சுமம் இந்தப் பின்னணிகள்தான் என்பது எமக்குப் புரிகிறது.
இவரது கலை உலக வாழ்க்கையும் ஆரோக்கியமானது. தேடல் நிரம்பியது. கொழும்பில் தொழில் நிமித்தம் வாழ்ந்த காலத்தில், ராஜ் நகைச்சுவை நாடக மன்றம் இவரை உள்வாங்கியிருந்தமையால் இம்மன்றம் மேடையேற்றிய பல நாடகங்களில் தோன்றினார். யாழ்ப்பாணம் திரும்பியதும் அச்சுவேலி ராஜரட்ணத்துடன் இணைந்து அந்நாட்களில் பிரபல்யமாகியிருந்த சக்கடத்தார் என்னும் நாடகத்தில் ஒரு பாத்திரமானார்.
இந்நாடகம் ஆயிரம் தடவைகளுக்கு மேல் மேடையேறியிருக்கும் என்பது நாகேந்திரனின் அபிப்பிராயம். யாழ்ப்பாணத்தில் கலைஞர்கள் தாசீசியஸ், குழந்தை சண்முகலிங்கம், திருநாவுக்கரசு (நந்தியின் சகோதரர்) ஆகியோருடனும் இணைந்து இயங்கியிருக்கிறார். ரகுநாதனின் நிர்மலா, வி.எஸ் துரைராஜா தயாரித்த குத்துவிளக்கு முதலான திரைப்படங்களிலும் தோன்றியிருக்கிறார்.
ஆச்சிக்குச்சொல்லாதை, வா கோட்டடிக்கு , கவலைப்படாதே, மின்னுவதெல்லாம் பொன்னல்ல, தொடாதே, அவமானம், ஊர் சிரிக்குது, அது அப்ப. இது இப்ப, முதலான பல நகைச்சுவை நாடகங்களிலும் நடித்திருக்கும் நாகேந்திரன், யாழ். திருநெல்வேலி நாடக அரங்கக்கல்லூரியினால் தயாரிக்கப்பட்ட வையத்துள் தெய்வம், கந்தன் கருணை

Page 6
அன்னத்துக்கு அரோஹரா, கூடி விளையாடு பாப்பா, இனி என்ன கலியாணம், கவிஞர் அம்பியின் வேதாளம் சொன்ன கதை முதலானவற்றிலும் நடித்திருப்பதுடன், பொறுத்தது போதும், கோடை, ஆகியவற்றின் மேடையேற்றத்தின் போது அரங்க நிர்மாணப்பணியையும் திறம்பட மேற் கொண்டிருக்கிறார்.
அந்நாட்களில் தமிழ் வானொலி நேயர்களின் விருப்பத்துக்குரிய நாடகங்களாகத்திகழ்ந்த சிறாப்பர்குடும்பம், லண்டன் கந்தையா முதலானவற்றிலும் நடித்திருக்கிறார். இங்கிலாந்திலும் சிறிது காலம் வாழ்ந்திருக்கும் இவர் அங்கு களரி நாடகப்பள்ளியின் சார்பாக மேடையேறிய புதியதொரு வீடு,அபசுரம், எந்தையும் தாயும் முதலானவற்றிலும் பங்கேற்றிருக்கிறார்.இவ்வாறுஒருநாடகக் கலைஞனாக தமது இருப்பை வெளிப்படுத்திக்கொண்டவர்,அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்தபின்னர்தன்னை ஒரு எழுத்தாளனாகவும் நிலை நிறுத்திக்கொண்டார்.
தான் இந்தக் கங்காருநாட்டில் ஒரு எழுத்தாளனாக மாறியதும் விந்தையான நிகழ்வுதான் என்று குறிப்பிட்டார். தமது பேத்திக்கு அந்தக்கால யாழ்ப்பாணம் எப்படி இருந்தது எனச்சொல்லிக்கொடுப்பதற்காக எழுதிய கட்டுரைகளே பின்னர் சிட்னியிலிருந்து வெளியாகும் கலப்பை இதழில் பிரசுரமானதுஎன்றார்.குறிப்பிட்ட கட்டுரைகளே பின்னர் அதே பெயரில் தமிழகத்தில் நூலுருவாகி பலரதும் பாராட்டையும் விமர்சனங்களையும் பெற்றது.
இந்நூலுக்கு கிடைத்த வரவேற்பினால் உற்சாகமடைந்த சி.சு.நாகேந்திரன், பிறந்த மண்ணும் புகலிடமும்
ஈழத்து எழுத்தாளர்களு
தமிழ் நாடு கலை இலக்கியப் பெருமன்றமும், நியூ ெ நூல்களுக்கான இலக்கியப்போட்டியில் (2009) எட்டுத் பரிசளிக்கப்பட்டது.
ஆய்வு, மொழிபெயர்ப்பு நாவல், சிறுகதை, சிறுவர் நூ நூல்களுக்கான பரிசளிப்பு 08.10.2010 இல் தமிழ் நாடு நெல் பல்கலைக்கழகத்தில் நடந்தேறியது.
சிறந்த நாவலுக்கான அழகியநாயகி அம்மாள் நினைவு பட்டங்கள்”என்ற நாவலுக்காகப்பெற்றார்.
சிறந்த சிறுவர் நூலுக்கான தவத்திரு குன்றக்குடி “குறும்புக்கார ஆமையார்' என்ற சிறுவர் நூலுக்காகப்பெற் சிறந்த நாடக நூலுக்கான அரந்தை நாராயணன் நிை நூலுக்காக தமிழ்மணி அகளங்கன் பெற்றார்.
பரிசளிப்பு விழாவினை, தமிழ்நாடு கலை இலக்கியப் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகமும் இணைந்து காலையில் எழுத்தாளர் பொன்னீலனின் 'மறுபக்கம்" இடம்பெற்றன.
பிரதமவிருந்தினராக தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சியின் கொண்டார்.மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் எழுத்தாளர் பொன்னிலன் உட்பட பலர் கலந்து கொண்டு வி பரிசு பெற்றவர்கள் சார்பில் தமிழ்மணி அகளங்கன் அவ தமிழகத்துகலை இலக்கிய அமைப்புஒன்று சர்வதேச ரீ துறைகளுக்குப் பரிசுகளைப் பெற்றது ஈழத்து எழுத்தாளர்க

என்னும் மற்றுமொரு கட்டுரைக் தொகுதியையும் வரவாக்கினார். இந்நூலை எமது அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் வெளியிட்டது. கடந்த 2008 ஆம் ஆண்டு சிட்னியில் நடந்த எட்டாவது எழுத்தாளர் விழாவிலும் பின்னர் மெல்பனில் நடந்த இலக்கிய ஒன்றுகூடலிலும் விமர்சன அரங்கிலும் இந்நூல் இடம்பெற்றது.
1994ஆம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து விடைபெற்று அவுஸ்திரேலியாவுக்கு புலம் பெயர்ந்த தருணத்தில் கலைஞர் தாசீசியஸ் உட்பட் பலர் இவருக்கு அளித்த பிரிவுபசார வைபவத்தில் கலைவளன்' என்ற பட்டமளிக்கப்பட்டார்.
நாடகக்கலைஞனாக அறிமுகமாகி எழுத்தாளனாக தன்னை வளர்த்துக் கொண்ட சி.சு. நாகேந்திரன், சிறந்த ஒளிப்படக்லைஞருமாவார். எமது சங்கத்தின் ஆஸ்தான ஒளிப்படக் கலைஞர் பதவியும் இவருக்குத் தரப்பட்டிருக்கிறது.
அவுஸ்திரேலியாவில் எமது தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தில் மட்டுமல்ல, விக்ரோரியா ஈழத்தமிழ்ச்சங்கம், தமிழர் புனர்வாழ்வுக்கழகம்,இலங்கை மாணவர் கல்விநிதியம் ஆகியனவற்றிலும் சாக்குப் போக்குச் சொல்லாத அர்ப்பணிப்புணர்வுடன் இதயசுத்தியோடு இயங்கும் இந்த எழுபத்தியொன்பது வயது உலகம் சுற்றும் இளைஞர் தற்போது எமது சங்கத்தின் தலைமைப்பொறுப்பையும் ஏற்றிருப்பதன் மூலம் சங்கத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
கலை,இலக்கியம் மற்றும் சமூகப்பணிகளில் சகலராலும் நேசிக்கப்படும் சிசு. நாகேந்திரன் விதந்துபோற்றுதலுக்குரிய பண்பாளர். முன்மாதிரியானவர்.
நக்கு தமிழகத்தில் பரிசு
சஞ்சுரி புத்தக நிறுவனமும் இணைந்து நடாத்திய சிறந்த துறைகளுக்கான சிறந்த நூல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு
ஸ், நாடகம், கவிதை, கட்டுரை ஆகிய துறை சார்ந்த சிறந்த லை மாவட்டம் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார்
பரிசினை வவுனியூர் இரா.உதயணன் தனது “நூல் அறுந்த
டிகளார் நினைவுப் பரிசினை ஒ. கே. குணநாதன் தனது Tf. ாவுப்பரிசினை "கங்கையின் மைந்தன்” என்ற தனது நாடக
பருமன்றமும், நியூ செஞ்சுரி புத்தக நிறுவனமும் நெல்லை னோன்மணியம் சுந்தரனார்பல்கலைக்கழகத்தில் நடாத்தின. வலின் திறனாய்வுநிகழ்வும் மாலையில் பரிசளிப்பு நிகழ்வும்
முன்னாள் தலைவர் திரு. RV நல்லகண்ணு அவர்கள் கலந்து ணைவேந்தர், தமிழியல் துறைத் தலைவர், பேராசிரியர்கள் வைச் சிறப்பித்தனர்.
கள் சிறப்புரையாற்றினார். பாக நடாத்திய போட்டி ஒன்றில் ஈழத்தவர்கள் மூவர் மூன்று க்குப் பெருமை சேர்ப்பதாகும்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2010

Page 7
క్రై క్టి
வெறுமையோடு நிற்கின்
அனைத்தையும் பகிர்ந்து அருகருகே வளர்ந்த
அக்கா இல்லை
சிறுகச் சிறுக சேலித்துக் கட்டிய வீடு இல்லை
கோடை வெயிலுக்கு குடையாய் நின்ற வேப்ப மரம் இல்லை
குடத்தால் தண்ணீர் ஊற்றி வளர்த்த
கறுத்தக் கொழும்0ான் | முர0ரம் இல்லை
ஒறப்பிறத்து விளையாறய சறப் பூங்கன்றுகள் இல்லை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அணில் ஒத் திரியும் அல? 0ரங்கள் வேலியில் இல்லை
ട്ട
காகங்கள் குறியிருந்து கத்துகின்ற
ருநாவல் 0ரலில்லை
கக்கூசு இல்லை
கோழிக்கூடு இல்லை கட்டி வளர்த்த நாய் இல்லை. கதைலேசும் கிள் இல்லை.
உயிர்கள்.
உட0ைகள்.
உணர்வுகள் . କ୍ବର୍ତ୍୩୫୦, ୭ ଡ୍ରିଣ୍ଟି6ö୦୯:Lଉor !
ஒன்றுமில்லாமையிலிருந்துதானே கடவுளும் உலகைப் படைத்தராம்
எனக்கும் இது
படைப்புக் காலம்தான் ھی۔}
ଅguୋ[Ö ଔ୦୩୩) !

Page 8
ஈழத்தில் தமிழ் இலக்கியம் - கார்த்தி இலங்கையின் தனித்துவத்தை யையும் இணைத்து நிற்கும் ஒ முறையினைச் சிறப்பாக இந்த முக்கிய நோக்கமாகும். இலங் தமிழகத்து இலக்கியங்களுடன மட்டிடுவதற்குப் பதிலாக இல தோன்றுவதற்குக் காலாகவிரு இந்நூல் இனங்காண்கிறது.
ISBN 978-955-659-243-6 விலை 6
இலங்கையின் இனவரைவியலும் ம
இலங்கையின் இனவரைவியலு கட்டுரைகளைக் கொண்டதாய் சமூகங்களின் சாதிக்கட்டமை விரிவாக எடுத்துரைக்கிறது. ெ முரண்பட்ட உள் அடுக்குக6ை வருகிறார்.
பிறைஸ் றயான், நூர் யல்ம ஜிஜின்ஸ், ஒட்வார் ஹொலப் மைக்கேல் றொபர்ட்ஸ், ஏ.ஜே அறிஞர்களாலும் எழுதப்பட்ட இருந்தும் கருத்துக்களைத் தொ முக்கிய கோட்பாடுகளையும், ! கூறுகிறது. இந்நூலில் இடம் பெற்றுள்ள மூலநூல்களி நிலையில் நன்கு அறியப்பட்டவர்கள். அவ்வகையில், சார்ந்த அறிவிலக்கியத்துக்கு இந்நூல் ஒரு அரிய பங்க
ISBN 978-955-659-274-0 விலை 4
ജൂ @ @ ●
பிற்கால இலக்கண மாற்றங்கள் (எ
இந்த நூல் வரலாற்று மொழியி நேமிநாதம், நன்னூல், இலக்க இலக்கணக்கொத்து, தொன்னு இலக்கணம் எனும் நூல்களை இந்நூலை எழுதியுள்ளார். இ6 இனி ஆசிரியர்களின் உதவியி: கணத்தைக் கற்பதற்கானதொரு ஐயமில்லை.
ISBN 978-955-659-273-7 விலை 6
குமரன் பு B3-C3, Ramya Place, Colombo 10, Tel 242
3, Meigai Vinayagar Street, {
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கேசு சிவத்தம்பி பும் தமிழ் இலக்கியத்தின் பொதுமை
இலக்கிய மரபு இலங்கையில் தோன்றி வளர்ந்த ய வாசகர்களுக்கு எடுத்துக் காட்டுவதே இந்நூலின் கையிலே தோன்றிய தமிழ் இலக்கியங்களைத் ஒப்பு நோக்கி அவற்றின் இலக்கியத்தரத்தை ங்கையினுள் இத்தகைய இலக்கியங்கள் த சமூக பண்பாட்டு வரலாற்றுச் சக்திகளை
50.00 L55515Gior: XXiV + 324
ானிடவியலும் - க. சண்முகலிங்கம்
ம் மானிடவியலும் என்னும் பொதுத் தலைப்பில் 12 விளங்கும் இந்நூல் இலங்கையின் சிங்கள தமிழ்ச் ப்பு பற்றி சமூகவியல், மானிடவியல் அடிப்படையில் வவ்வேறு சமூகங்களின் உட்புறத்தையும், அவற்றின் ாயும் நூலாசிரியர் வெளிச்சத்திற்குக் கொண்டு
ன், மைக்கேல் பாங்ஸ், மக்ஜில்வரே, ஜனிஸ் ஆகிய மேற்கு நாட்டு ஆய்வாளர்களாலும்,
வில்சன், நியுடன் குணசிங்க ஆகிய இலங்கையின் ஆய்வு நூல்களில் இருந்தும், கட்டுரைகளில் குத்தும், சுருக்கியும், தழுவியும் தமிழில் தருவதோடு எண்ணக்கருக்களையும் இந்நூல் தெளிவுற எடுத்துக் ன் ஆசிரியர்கள் இத்துறையில் உலகளாவிய தமிழில் சமூகவியல், மானிடவியல் துறைகள் ளிப்பு என்பதில் ஐயமில்லை.
0.00 பக்கங்கள்: xwi + 139
拿
ழுத்து) - க. வீரகத்தி யலின் பாற்பட்டது. தொல்காப்பியம், வீரசோழியம், ண விளக்கம், பிரயோக விவேகம், ல் விளக்கம், முத்துவீரியம், சுவாமிநாதம், அறுவகை மூலங்களாகக் கொண்டு ஆசிரியர் ஆராய்ந்து க்கணத்தைச் சுருக்கமாகவேனும் பயின்றவர்கள் ன்றி புத்தம் புதிய பார்வையுடன் தமிழிலக்
நல்ல வழிகாட்டியாக இது விளங்கு மென்பதில்
0,00 | 1355/5.156ή: Xνiii + 259

Page 9
மேகலா கொஞ்சம் கொஞ்சமாக பொறுமையை இழக்கின்ற நிலைமைக்கு வந்து விட்டாள். தாய் ரெலிபோன் கதைக்க அந்தக்கூட்டுக்குள் நுழைந்தவள் தன்னை தன் தமையனுடன் கதைக்க விடாமல் இவ்வளவு நேரமாக என்னதான் கதைத்து தொலைக்கிறாளோ என்று சினப்பட்டுக் கொண்டாள். எழுந்து இரண்டு மூன்று தடவை குறுக்குமறுக்குமாக நடந்து விட்டு மீண்டும் வந்து அமர்ந்து கொண்டாள்.
அந்த தொலைத்தொடர்பு நிலையத்தில் முன்பென்றால் ஓரளவு சனம் இருக்கும். ஒவ்வொருவரும் தங்களுக்கு வரும் அழைப்புகளுக்கோ அல்லது தாமாக எடுத்துப் பேசுவதற்கோ காத்திருக்க வேண்டியிருக்கும். ஆனால் இப்போதெல்லாம் வீடுகளுக்கு ஓரளவு ரெலிபோன்கள் கிடைத்துவிட்டன. அதுமட்டும் அல்லாமல் எல்லோர் வீடுகளிலும் எல்லோர் கைகளிலும் கைத்தொலைபேசிகள் வேறு
மேகலாவும் தாயும் கேபிளுடனான தொலைபேசிக்கு எவ்வளவோ முயற்சிசெய்தும் அது இதுவரை கைகூடவில்லை. இலண்டனில் இருந்து மேகலாவின் அண்ணன் ஆனந்தன் இரண்டு கைத்தொலைபேசிகள் அனுப்பியிருந்தும் அவைகளது சேவை ஒழுங்காக கிடைப்பது இல்லை. அதிலும் நீண்ட நேரம் கதைக்க வேண்டிய தேவையிருந்தாலும் அவர்கள் இந்தத்தொலைத்தொடர்பு நிலையத்துக்கு வந்து ஆறுதலாக கதைத்து விட்டுச் செல்வதுதான் அவர்களுக்கு வசதியாக இருந்தது.
மூன்று நான்கு பேர்தான் அங்கே காத்திருந்தார்கள். தனது தாய் பவளம் நீண்ட நேரம் கதைத்துக்கொண்டிருப்பது அவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றது. என்பதை அவர்களது முகத்திலிருந்து மேகலா புரிந்து கொண்டாள். என்றாலும் தாயின் குணம் தெரியாததல்ல “சுருக்கமாக கதையம்மா” என்று சொன்னாலும் அவா கேட்கப்போறதில்லை என்று நினைத்துக்கொண்டு பேசாமல் இருந்தாள். 99
“உங்கடை அண்ணாவோடையோ அம்மா கதைக்கிறா முன்கதிரையிலிருந்த வசந்தாமாமி பேச்சுக்கொடுத்தா
“ஒமோம்” உங்கடை அண்ணாவுக்கு ஓரிடமும் பார்க்கேல்லையோ, “உங்கை வயசும்முப்பதுமுப்பத்தொண்டைதாண்டியிருக்குமே” வசந்தாமாமி விடுப்பு கேட்கத்தொடங்கிவிட்டா!
"அண்ணாவுக்கு இன்னும் விசா கிடைக்கேல்லை மாமி அதனாலை இன்னும் ஒரு கல்யாணமும் சரிவருகுதில்லை. ஆரும் விசா உள்ள பொம்புளை கிடைச்சா நல்லது. தேடுறம் இன்னும் பலன்வரவில்லைப் போல”
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2010
 

விணானந்தன்
இதற்கு மேலேயும் இருந்தால் வசந்தா மாமிக்குப் புதினம் சொல்லிக்கொண்டிருக்க வேணும் என்று நினைத்த மேகலா மெதுவாக எழுந்து போய், மேசைமேலிருந்த தினசரிப்பத்திரிகைக்குள் முகத்தைப் புதைத்தாள்.
மேகலாவின் தாய் பவளத்தை வசந்தாமாமிக்குப் பிடிப்பதேயில்லை. வசந்தா மாமிக்கு மட்டுமல்ல அந்த பகுதியிலிருக்கின்ற அனேகம் பேருக்கு இப்போது பவளத்தை பிடிப்பதில்லை. அந்தரம் அவசரத்துக்கு ஏதும் காசு மாற வருபவர்கள் மட்டும்பவளம் அன்ரிபவளம் அன்ரி என்று"ஐஸ்” வைத்து தாங்கள் வந்த காரியத்தை நிறைவேற்றிக்கொண்டு போய்விடுவார்கள். ஏதும் விசேஷங்களுக்கு இரவல் நகை வாங்க வருபவர்களும் அப்படியேதான். வாய் தடுமாறி பவளம் ஆச்சி என்று அழைத்துவிட்டாலோ அவ்வளவுதான். எதுவித உதவியும் கிடைக்காது. உடனே முகம் கறுத்து விடும். ஏதும் சாக்குப் போக்குச் சொல்லி வெறுங்கையோடு அவர்களை அனுப்பிவிடுவா.
இப்போது அறுபத்தைந்து தாண்டிவிட்ட பவளம் அன்ரியை அவவை விட வயதால் குறைந்தவர்கள் பலர் மூன்று நான்கு வருடங்களுக்கு முன்னர் பவளம் ஆச்சி என்றுதான் அழைத்து வந்தனர். எப்போது அடிக்கடி கொழும்பு போய் வரத்தொடங்கினாவோ அதன் பிறகு
“பவளம் அன்ரி, நீங்கள் அப்படி செய்தால்தான் நல்லது எண்டு பூபாலன்தான் சொன்னவன்”
என்றோ, “பவளம் அன்ரி, எப்ப ஊருக்குப் போறியள் நான் கொஞ்சச் சாமான் தந்து விடப்போகிறவள் என்று மரகதம் கேட்டவள் நான் மறுத்துப் போட்டன்” என்றோ சம்பாஷணையூடாக அடிக்கடி தானே சொல்லிச்சொல்லி பவளம் அன்ரி என்றே தன்னை அழைக்க வேண்டுமென்ற தனது விருப்பத்தை நிறைவேற்றியே விட்டா.
பவளம் அன்ரியின் புருஷன் மேசன் வேலைதான் செய்து வந்தவர். பங்குனி சித்திரை காலங்களில் மட்டும் கள்ளுச்சீவுகிற தொழிலைச் செய்வார். ஆனால் அவர் பெரிய உழைப்பாளி அல்ல. தேட்டமென்று ஏதும் மிஞ்சாவிட்டாலும் சீவியப்பாடு போய்க்கொண்டிருந்தது. மகன் வெளிநாடு போய் இரண்டு மூன்று வருடங்களுக்குப் பிறகு அவரை தொழிலொன்றும் செய்யாதபடி இவர்கள் தடுத்து விட்டார்கள். அதன் பின்னர் நாளொன்றுக்கு நூற்றியம்பது ரூபா மட்டும் பவளம் அன்ரி தன்னுடைய இல்லத்தரசனுக்கு "அலவன்ஸ்” வழங்குவா. அது அவரது கள்ளுச்செலவு, பீடி போன்றவற்றுக்கு மிச்சம் மீதியாகப் போதும்.

Page 10
இப்பகுதிகளில் அந்தக்காலத்திலென்றால் அறுபத்தைந்து வயதில் கூட உரம்பலமான உடல்வாகுடன் இயலக்கூடியளவு தொழில்களைச் செய்து வந்தார்கள். வெளிநாடு என்று எப்போதுபிள்ளைகள் கிளம்பினார்களோ, தகப்பன்மார் ஐம்பது ஐம்பத்தைந்து வயதுடன் இவ்வளவு காலமும் சோறு போட்ட தொழில்களுக்கு முழுக்குப்போட்டு விட்டார்கள் - பிள்ளைகளின் கட்ளைப்படி
"மோன் தகப்பனை இனிவேலைக்கு விடவேண்டாமாம் ஐயா இவ்வளவு காலமும் கஸ்டப்பட்டு உழைச்சுப்பார்த்தது போதுமெண்டு சொல்லிப்போட்டான்"
என்றோ அல்லது “எங்கடை இவருக்கு பிறசரும், டயபற்றிசும் கொஞ்சம் இருக்கு பின்னை வேலைக்கு போறதை நிப்பாட்டிப்போட்டன் என்றோ சொல்லிக்கொள்வது பாசனாகிவிட்டது. இப்படிச் சொல்லிச் சொல்லியே பல ஆண்களை நோயாளிகளாக்கி விட்டார்கள் என்பது வேறு விஷயம். அதன் பின் அனேக குடும்பங்களில் தற்போதைய எங்களுடைய அரசியலமைப்பு முறையில் உள்ள ஜனாதிபதியாக தாய்மாரும் பிரதமராக தகப்பன்களும் மாறிவிட்டார்கள்.
பவளம் அன்ரியின் மகன் ஆனந்தன் தகப்பனைப்போல் அல்ல. பெரிய சீவல் தொழிலாளி நல்ல வேலைக்காரன் வீட்டுப்பொறுப்பையுணர்ந்துபடிப்பை இடையில் நிறுத்திவிட்டு பதினேழுவயதில் தொடங்கி இருபத்திநான்கு வயதில் இலண்டனுக்கு போகும் வரை கள்ளுச்சீவியே நன்றாக உழைத்தவன். மூன்று தடவை அதிகூடிய அளவில் கள்ளுச்சீவிகொடுத்தவன் என அவன் அங்கம் வகிக்கும் பனை தென்னை வள கூட்டுறவுச் சங்கத்தினால் கெளரவிக்கப்பட்டு பரிசுகள் பெற்றவன். என்றாலும் தன்னோடொத்த வயதினரைப் போல தானும் வெளிநாடு போனால்தான் தன் தமக்கைமார் இருவரையும் தங்கை ஒருத்தியையும் நல்ல முறையில் கரைசேர்க்கலாம் என்ற எண்ணத்தில் இலண்டன் போய்ச்சேர்ந்தான்.
இங்கே கஸ்டப்பட்டு உழைத்த அனுபவத்தில் இலண்டனிலும் ஆனந்தன் கடினமாக உழைக்கத் தயங்கவில்லை. அவனுக்கு நிரந்தர வதிவிட உரிமை கிடைக்காவிட்டாலும்கூட அப்படி இப்படி இரண்டுநேரம்மூன்று நேரம் வேலைச்செய்து காசாக அனுப்பிக்கொண்டிருந்தான்.
என்னதானிருந்தாலும் பவளம் அன்ரி நல்ல நிர்வாகிதான். தனது மூத்த பெண்பிள்ளைகள் இருவரையும் வெளிநாட்டு மாப்பிள்ளைகளுக்கு அனுப்ப முயற்சி செய்து முடியாமற்போய்விட்டாலும் சோர்ந்துவிடவில்லை. ஒருத்தியை அவள் காதலித்த அவளுடன் கூடப்படித்து பின்னர் ஆசிரியர் தொழில் பார்ப்பவனுக்கே, நல்ல சீதனம் கொடுத்து ஊரில் வீடுவாசலுடன் மணம் முடித்துக் கொடுத்தாள். அவள் கணவனின் தொழில் நிமித்தம் மன்னாரில் இருக்கின்றாள். அடுத்தவளுக்கு இதேபோன்று சீதனங்களுடன் யாழ்ப்பாணத்தில் எழுதுவினைஞராக வேலை பார்க்கும் ஒருவனைக்கட்டிக்கொடுத்து, ஊரில் அவர்களுக்கு சீதனமாகக் கொடுத்த வீடடிலேயே தானும் மகள் மேகலாவும் வசிக்கின்றார்கள்.
பவளம் அன்ரியை இரண்டு மூன்று வருடங்களாக இரண்டு ஆசைகள் பாடாய்ப்படுத்துகின்றது. ஒன்று ஏ.எல் படித்து விட்டு வீட்டிலிருக்கும் மேகலாவையாவது நல்ல
8

வெளிநாட்டு மாப்பிள்ளையைப்பார்த்து அனுப்பிவைக்க வேண்டும். மற்றது கொழும்பில் ஒரு வீடுவாங்க வேண்டும். வீடு வாங்கிவிட்டு ஊரிலுள்ள இரண்டு வீடுகளையும் யாருக்காவது வாடகைக்கு கொடுத்து விட்டு மன்னாரில் இருப்பவளையும் அவரவர் கணவன்மாருக்கு வேலையில் இடமாற்றம் எடுத்துக்கொண்டு தானும் கொழும்பில் செற்றிலாகிவிடவேண்டும்.அடிக்கடிகொழும்புபோய்வந்ததும் பவளம் அன்ரிக்கு கொழும்பு நன்றாகவே பிடித்து விட்டது. ஊரில் ஒரு சின்ன வருத்தம் என்றாலும் “கொழும்பு அப்பலோவில் காட்டுகிறதுதான் நல்லது” என்பதுதான் அவளது அட்வைஷாக இருக்கும். ஆனால் “லொட்ஜ்" வாழ்க்கை பவளம் அன்ரிக்கு வெறுத்துப்போய்விட்டது.
இப்போதைய சராசரிப்பெண்களின் சிந்தனைக்குப் பவளம் அன்ரி மட்டும் விதிவிலக்கல்லவே. மேகலாவை வெளிநாட்டுக்கு அனுப்பி விட்டால் ஊரில் உள்ள சில தாய்மாரைப்போலவேதானும் அடிக்கடிபிள்ளைப்பேறுஅதுஇது என்று வெளிநாடு போய் வரலாம் என்று நினைக்கின்றாள். அதிலும் கொழும்பில் வீடென்றால் இன்னும் சுகமல்லவா?
மகன் ஆனந்தன் இலண்டனில் ஒரு பெரிய சீட்டுக்கட்டுவது அவவுக்கு தெரியும். ஒரு நாள் ரெலிபோன் கதைக்கும் போது 'தம்பி சீட்டு எடுத்து என்ன செய்யப்போறாய்மோனை. சீட்டுக்காசு கிட்டத்தட்ட எவ்வளவு வரும்” என்று கேட்டாள்.
ஒரு ஐம்பது லட்சம் வரும். என்ன செய்யிறதென்று பிறகு யோசிப்பமம்மா”
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2010

Page 11
கவனம் தம்பி ஏமாத்திப்போடுவாங்கள் நான் ஒண்டு கேட்கிறன்,கோவிச்சுப்போடாதைமோனை'
"நீங்கள் கேட்டால் நான் எப்படியம்மா கோவிக்கிறது தயங்காமல் கேளுங்கோ'
பவளம் அன்ரிக்கு தயக்கமாய்த்தான் இருந்தது. என்றாலும் கேட்டு விட்டா?
“சீட்டை எடுத்து கொழும்பில் ஒரு வீடுவாங்குவமே தம்பி”
“உங்களுக்கென்ன விசரே அம்மா. கொழும்பில் வீடு வாங்கிறது சின்ன அலுவலே. பிளற்சிலை வாங்கிறதெண்டாலேயே ஒண்டரைக்கோடி இரண்டுகோடிக்கு மேலே வேணும். உழைச்ச காசை உங்கை ஒண்டுக்கும் அனுப்பாமலிருந்தால் என்னட்டைகாசிருந்திருக்கும்,இப்பஉது முடியுமே”
பவளம் அன்ரிக்கு உஷார் வந்து விட்டது. தனது கொழும்பு அனுபவம் கைகொடுக்க பேச்சைத்தொடர்ந்தாள்.
“அது தம்பி பம்பலப்பிட்டி வெள்ளவத்தைப்பக்கம் எண்டால்தான் கணக்க வேணும். மோதர, மட்டக்குளி பக்கமெண்டால் ஐம்பது அறுபது இலட்சத்தோடே சமாளிக்கலாம்”
கொஞ்ச நேரம் அந்தப் பக்கம் சத்தமில்லை. “என்ன தம்பி ஒரு பதிலையும் காணேல்லை” “சரியம்மா அப்படியே செய்யுங்கோ.வாறமாசம்சீட்டுக்காசு கையிலை கிடைக்கும். ஆரிட்டையும் குடுத்து ஏமாறாமல் மன்னாரிலை இருக்கின்ற பெரியக்காவின்ரை அத்தானிடம் சொல்லி நல்ல வீடாகப் பார்க்கச் சொல்லுங்கோ’
தொலைபேசி உரையாடல் இனிது நிறைவேறியது. அதன் பின் பவளம் அன்ரி தனது மன்னார் மருமகனிடம் சொல்லியதோடு மட்டும் நின்றுவிடாது வேறு சிலரிடமும் சொல்லி வைத்து அதற்குரிய ஆயத்தங்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றா.
இன்று ஒரு மாதத்தின் பின் தாயையும் தங்கையையும் ஆனந்தன் ரெலிபோன் கதைக்க கூப்பிட்டதன் பேரில்தான் இருவரும் தொலைபேசிநிலையத்திற்கு வந்திருக்கின்றார்கள். பவளம் அன்ரிக்கு நிச்சயமாகத் தெரியும் மகனின் கையில் இப்போது சீட்டுக்காசு கிடைத்திருக்குமென்று.
மேகலாபத்திரிகையில் கவனத்தை செலுத்தியிருந்தாலும் இன்று வழமைக்கு மாறாக தாயின் குரல் அந்தக் கூட்டுக்கு வெளியில் கேட்பதை உணர்ந்தாள். ஏதோ வாதாடுவதுபோல் தெரிந்தது. மற்றவர்களும் இதை அவதானிப்பதை இவள் அவதானித்தாள். இவளுக்குக்காரணம் புரியவில்லை. மெல்ல எழுந்து தாயின் அருகே போக எத்தனிக்க திடீரெண்டு ரெலிபோன்கூடுதிறந்ததுதாய்வேர்க்கவிறுவிறுக்கவெளியே வநதா.
( arDBIreo assoe) (GS
வாசகர்களே, எழுத்தாளர்களே, கலைஞர்க
உங்கள் பகுதியில் இடம்பெறும் கலை இலக்கி அனுப்பிவையுங்கள். ஒவ்வொரு மாதமும் 20 அடுத்துவரும் இதழில் இடம்பெறும். 200 சொற்களு
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2010

“அவன் உன்னோடைகதைக்க வேணுமாம். போய் அந்த விசரனோடை கதை"
வெளியேறியதும் தனக்காக காத்திருக்காமல் நேரே வீடு நோக்கிக் கோபத்தோடு போய்க்கொண்டிருக்கிற தாயைப் பார்த்தபோது அவளுக்கு ஆச்சரியமாகவும் திடுக் காட்டமாகவும் இருந்தது. ஒருநாளும் அம்மா இப்படி அண்ணாவை கோபித்தது கிடையாதே என்று யோசித்தவள் மற்றவர்கள் இதை கவனித்ததை இட்டு கூனிக்குறுகினாள். கூட்டுக்குள் போனதும் றிசிவரை கையிலெடுத்து “ஹலோ அண்ணா” என்றாள்.
ஆனந்தனின் குரல் மறுபுறத்தில் கேட்கிறது “தங்கைச்சி, அம்மாவுக்கு ஒண்டும் விளங்காது. அவ கோவிச்சுக்கொண்டு போனா போகட்டும். பரவாயில்லை. நான் சொல்றதைக்கவனமாகக்கேள். என்னைத்திருப்பிஅனுப்புறநாள் வெகுதூரத்திலில்லை. போன மாசமும் நூறு பேருக்கு மேலே இங்கையிருந்து அனுப்பப்பட்டது உங்கை பேப்பரிலை பார்த்திருப்பாயெண்டு நினைக்கிறன். நாங்கள் சிலபேர் இப்ப கிழமைக்கொருக்கால் போய் கையெழுத்து வைக்கவேணும். இவங்களாகதிருப்பியனுப்பமுந்திநாங்களாகவேவந்திட்டால்சில நன்மையளும்கிடைக்கும்-என்னதங்கச்சிஒண்டும்பேசாயம்”
"நீங்கள் சொல்லுங்கண்ணா” கொழும்பிலே வீடுவாங்கிற விசயம் சரிவராது. நான் வந்து பழையபடி கள்ளுக்கருப்பணி சீவிறனோ அல்லது வேறையேதும் தொழில் செய்யிறனோ தெரியாது. உங்கை வந்து நிலைமையைப் பார்த்து ஏதும் செய்யலாம். ஆனால் என்ன தொழில் செய்தாவது உனக்கு நல்ல வாழ்க்கை அமைச்சுத்தருவன். அதைப்பற்றி நீ யோசிக்க வேண்டாம். நான் முந்தி கள்ளுச்சீவின எங்கடவீட்டுக்கு மேற்கால இருக்கிற காணி தெரியும்தானே. அது இருபது பரப்பு அதுக்குள்ள குறைஞ்சது முன்னூறு பனைக்கு கூடுதலாக நிண்டது. அந்தக்காணியை இப்ப வேலுப்பிள்ளை வாத்தியார் விக்கப்போறாராம். வித்துப்போட்டுக் கனடாவுக்குப் போய் மகனோடசெற்றிலாகப் போறாரெண்டு அவரின்ரை பெறாமகன் இங்கை எனக்கு சொன்னவன்.நான் சீட்டுக்காசு முழுவதையும் அனுப்புறன். ஐயாவையும் சின்னக்காட அத்தானையும் அனுப்பிவிைைலயை பேசி முடிவாக்கி உடனே வாங்கி போடுங்கோ. காணி கைநழுவிப்போக விட்டிடவேண்டாம். சரிதானே"
“சரியண்ணா அப்படியே செய்யிறம்” சொல்லிவிட்டு றிசிவரை வைத்தாள் மேகலா, வீட்டைநோக்கி நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையுமாகச் சென்று கொண்டிருக்கும் அவள் தனது சிந்தையிலும் ஏதோ தெளிவான ஒளிக்கீற்றுக்கள் தென்படுவதுபோல் உணர்ந்தாள்.
லக்கிய நிகழ்வுகள்)
Bor யே நிகழ்வுச் செய்திகளை சுருக்கமாக எழுதி எமக்கு ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கும் செய்திகள் ரூக்கு மேற்படில் அச்செய்தி பிரசுரிக்கப்படமாட்டாது. - கே. பொன்னுத்துரை

Page 12
கண்டனக் கை
சொல்லி O
நெற்றிக் கண்ணைக் காட்டினும் குற்றம் குற்றமே என்று இறைவனோடு வாதாடியவர் நக்கீரர். நியாயமான பிழைகளை சுட்டிக்காட்டிய அவர் வித்தகர். இன்று மேலெழுந்த வாரியாக பிழை பிடித்து பிரபலமடைய நினைக்கும் சிறந்த படைப்பாளி எஸ்.பொ. வை நினைத்து சிரிப்பதா வேதனைப்படுவதா என்று புரியவில்லை. சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு பற்றி எந்தவித ஆதாரமுமின்றி குற்றம் சாட்டிய தீராநதி கட்டுரையாளருக்கு தாம் பதிலளிக்க வேண்டியதில்லை என்பது மகாநாட்டு அமைப்பாளர்கள் சிலரின் கருத்து. மேற்படி மகாநாட்டு சர்வதேச அமைப்பாளர் முருகபூபதியும், அந்தனி ஜீவாவும் தீராநதியில் பதிலளித்துள்ளார்கள்.
சிறுதுளியும் உண்மையற்றதும், எதுவித ஆதரமற்றதுமான எஸ்.பொ.வின் கண்டனம் அவரது இயல்பான வழிகளில் ஒன்றுதான். நல்லை நகர் ஆறுமுகநாவலர் வளர்த்த கண்டனக் கலையைத் தனது ஆதர்சமாக குறிப்பிடும் கட்டுரையாளர், தமிழ் எழுத்தாளர் மகாநாடுபற்றி எழுதியிருப்பதில் வியப்பில்லைத்தான். அவரது கட்டுரையில் கிண்டலும் சீண்டலும் மிதப்பாக நிற்கிறது.இதை விடுத்து மூத்த படைப்பாளியான அவர் சில ஆலோசனைகளை முன்வைத்திருப்பாரானால் அவரைப் பாராட்ட முடியும் கட்டுரையாளருக்கு யார் மீது கோபம் என்பது தெரியவில்லை. சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி என்பது போல் அநாவசியமாக ராஜபக்ச அரசை இலங்கையில் நடக்கவுள்ள சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாட்டுடன் தொடர்புபடுத்துவதானது, மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போன்றது. கருணாநிதி நடத்தி முடித்த தமிழ்ச் செம்மொழி மகாநாட்டுக்கும் இங்கே கொழும்பில் நடக்க இருக்கும் சர்வதேச எழுத்தாளர் மகாநாட்டுக்குமிடையே ஒற்றுமை காணவிளையும் கட்டுரையாளர் முதலில் ஒன்றைப்புரிந்துகொள்ள வேண்டும். இங்கு நடக்க இருப்பது முழுக்க முழுக்க அரசியல் கலப்பற்ற, எழுத்தாளர்களினால் முன்னெடுக்கப்படும் மகாநாடு. இது செம்மொழி மகாநாடு போல மறைமுகமான உள்நோக்கம் கொண்டதல்ல. அரசின் பங்களிப்பு எதுவும் இல்லாத சர்வதேச எழுத்தாளர்களின் நிதி திரட்டலிலும், வழங்கலிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மகாநாடு. பலவித இன்னல்களால் தாயகத்தைப் பிரிந்து சென்ற படைப்பாளிகள் தமது தாயக எழுத்தாளர்களையும் பல்வேறு நாடுகளிலும் பரந்திருக்கும் எழுத்தாளர்களையும் பிறதேசத்து தமிழ் எழுத்தாளர்களையும் ஒன்று கூட்டி துயரைப்பகிர்ந்து கொள்ளுவதுடன், சமகால உலக இலக்கியப்போக்கு, தமிழ் இலக்கியத்தின் தற்போதைய படைப்புநிலைபற்றிகலந்துரையாடவாய்ப்பை ஏற்படுத்தும் ஒரு மகாநாடாக இடம்பெறஉள்ளது. நான் பார்வையாளர் மட்டுமே,
10

ல விற்பன்னரே, அங்கள்!
- பிரகலாத ஆனந்த்
இந்த மகாநாட்டை நடத்தவுள்ளவர்கள் முன்வைத்துள்ள பன்னிரண்டு அம்சத்திட்டமானது மகா நாட்டை முன்னெடுத்துச்செல்லும் வழிகளுக்கான ஒரு திறவுகோலாக உள்ளது. இக்கன்னி முயற்சியானது எதிர்வரும் காலங்களில் இவ்வாறான மகாநாடுகளை பல்வேறு நாடுகளில் நடாத்துவதற்கான ஒரு முன்னோடியாக அமைவதுடன், எதிர்கால நடவடிக்கைகள் பற்றி கலந்துரையாடி முறையான திட்டங்களை உருவாக்குவதற்கு வழி வகுக்கும். அத்துடன் சர்வதேசமெங்கும் பரந்திருக்கும் தமிழ்ப் படைப்பாளிகளை ஒன்றிணைக்கவும் தொடர்புகளை விஸ்தரிக்கவும் இம்மகாநாடு வழிகோலும், எட்டப்பட்ட முடிவுகளை, ஏற்றுக் கொள்ளப்பட்ட திட்டங்களை செயல் வடிவம் பெறச் செய்யும் மார்க்கத்தையும் இந்த மகாநாடு சாத்தியமாக்கும் அல்லவா?
படைப்பாளிகளின் ஒரே கோரிக்கை எழுத்துச் சுதந்திரம் தான் என்று கட்டுரையாளர்கூறுவது எவ்வளவு அபத்தமானது. படைப்பாளிகளுக்கு சுதந்திரமாக இயங்கும் வாய்ப்புமுக்கியம் தான். அது இன்று உலகின் பல்வேறு நாடுகளிலும் கேள்விக்குறியாக உள்ளது. எமது நாட்டில் எழுத்தாளர்களின் சுதந்திரமான செயற்பாடு அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. பல எழுத்தாளர்களும் படைப்பாளிகளும் இனம் காணப்பட்டவர்களினாலும், இனங்காணப்படாத அதேநேரம் ஊகிக்கச் கூடியவர்களாலும் கொலை செய்யப்பட்டமை எமது நாட்டில் இன்னும் தொடரவே செய்கிறது. சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதும், ரசனைக்கு தீனிபோடுவதும் படைப்பாளியின் பங்கல்லவா? கடந்த மூன்று தசாப்தத்திற்கு மேலாக ஈழத்து எழுத்தாளருக்கு சுதந்திரம் நாட்டின் எந்த மூலையிலும் இருந்ததில்லை. எஸ்.பொ. வுக்கு வெளியே முடிகிறது.
இலக்கியப் படைப்புகளை செம்மைப்படுத்துவது பற்றி சாடுகிறார். எழுத்தாளன் பிறப்பதில்லை; உருவாகிறான் உருவாக்கப்படும் போது புதிய படைப்பாளிகளுக்கு செம்மைப்படுத்தல் அவசியமாகிறது. கட்டுரையாளர் கூட தாம் பலரது கதைகளை திருத்தி எழுதிக் கொடுத்ததாக முன்னர் கூறியுள்ளார். ஒரு படி மேலே சென்று தானே எழுதிக் கொடுத்ததாக குறிப்பிட்டதாக ஞாபகம். அது சரி, ராஜபக்ச சகோதரர்களுக்கும் செம்மைப்படுத்தலுக்கும் என்ன தொடர்பு? கட்டுரையாளருக்கே வெளிச்சம்
மொழிபெயர்பு தொடர்பாக கருத்துக் கூறுகையில் கட்டுரையாளர் தன்னைப் பற்றி பெருமையாகப் பீற்றிக் கொள்வதைப்பார்க்கும்போது, அமைப்பாளர்களில் ஒருவராக தன்னையும் உள்வாங்கவில்லையே என்ற ஆதங்கம் தான் வெளிப்படுகிறது. அமைப்பாளர்கள் சகலகலாவல்லவர்களாக இருக்க வேண்டும் என்பதில்லை. மகாநாட்டை சிறப்புற நடாத்தக் கூடியவர்களாக இருந்தால் போதுமானது.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2010

Page 13
இதரவிடயங்களை பல்வேறு அறிஞர்களின் பங்களிப்போடு நிறைவேற்றலாம் அல்லவா?
இலக்கிய நூல்களையும் இதழ்களையும் ஆவணப்படுத்தலை இன்றைய காலகட்டத்தில் எழுத்தாளர்களின் அமைப்புகள்தான் செய்யவேண்டிய நிலை. எப்படி ஆவணப்படுத்தல், பாதுகாப்பதற்கான வழிகளுக்கும் இட்டுச் செல்லும், தழிழ் சுவடிகளையும் நூல்களையும் அழிப்பது ஜே.ஆர். காலத்து யாழ்நூலக எரிப்பு காலம் தொட்டே தொடர்ந்து வருகிறது. இன்றுவரை வந்த எந்த அரசும் தமிழ் நூல்களைப் பாதுகாப்பதில் அக்கறை செலுத்த வில்லை. கட்டுரையாளர் சொல்வதில் அமைப்பாளர்களும் கவனம் செலுத்தல் நன்று. அது சரி இந்த மகாநாட்டின் அமைப்பாளர்களில் யார் ராஜபக்ச அரசுடன் நெருங்கியவர்கள் என்பது தெரியவில்லை. கட்டுரையாளர் தெளிவுபடுத்துவாரா?
அழிவுகளால் பாதிக்கப்பட்ட பல தமிழ் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்.கலாபரமேஸ்வரன்,ரஜனி திரணகம,காவலூர் ஜெகநாதன், சந்திரபோஸ் சுதாகர் உட்பட பல படைப்பாளிகளும், இன்னும் பல பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்களும் கொல்லப்பட்டுள்ளார்கள். புதுவை இரத்தினதுரை அற்புதமான கவிஞர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை, இவர் சீருடை அணிந்த ஒருபோராளி என்பதால் இப்போது போரின் பின் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார். அவர் மட்டுமன்றி இப்பட்டியலில் இன்னும் பலரும் அடங்குவர். நிதியம் உருவாக்கும் யோசனை நல்ல விடயம். வெளியே இருந்து கொண்டு புதுவை இரத்தினதுரையை முதன்மைப்படுத்தல் சுலபம். இங்கும் பலர் அவரை உண்மையில் நேசிக்கிறார்கள். அவரது கவிதைகள், பாடல்கள் யாரால் தான் மறக்க முடியும்?
இலங்கையில் தொடர்ச்சியாக வெளிவரும் சிற்றிதழ் பட்டியலை அமைப்பாளர்களினால்தயாரித்துத்தரமுடியுமா? என கட்டுரையாளர் கேட்கிறார். இன்று இலங்கையில் 35க்கு மேற்பட்ட சிற்றிதழ்கள் வெளிவருகின்றன. மூத்த சஞ்சிகையான மல்லிகை நான்கு தசாப்தங்களுக்கு மேலாக வெளிவருகின்றது. ஆரம்ப காலத்தையும் , யாழ். மண்ணை விட்டு மக்கள் விரட்டப்பட்ட காலத்தையும் விட்டால் மல்லிகை மாசிகை தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. மணிக்கொடி சரஸ்வதி, எழுத்து, தீபம், கணையாழி என தமிழகத்திலேயே காத்திரமான சிற்றிதழ்கள் கூட நின்றுவிட்ட நிலையில்மல்லிகை தனிமனித உழைப்பில் அதிக பொருளாதார பலமுமின்றி வாசகர்களின் ஆதரவை நம்பி வெளிவருகின்றது. கடந்த 12ஆண்டுகளில் ஒரு இதழ்கூடதவறாமல் வெளிவந்து கொண்டிருக்கிறது ஞானம். இதை மட்டும் கட்டுரையாளர் ஒத்துக்கொண்டமைக்கு ஏதாவது காரணம் இருக்கக் கூடும். தொடர்ச்சியாக கட்டுரையாளரின் நேர்காணலைபலஇதழ்களில் ஞானம் வெளியிட்டதால் ஞானம் பற்றி அறிந்திருக்கிறார். இன்று மல்லிகை, ஞானம், ஜீவநதி, தொண்டன், செங்கதிர் உட்பட சில மாதாந்த சஞ்சிகைகள் தடங்கலின்றி வெளிவருகின்றன. இன்னும் படிகள், கொழுந்து நீங்களும் எழுதலாம் உட்பட பல சிறு சஞ்சிகைகளைக் குறிப்பிடலாம். கொழுந்து, படிகள் போன்ற சஞ்சிகைகள் குறைந்த பக்கங்களுடன் வந்தாலும் இலட்சிய நோக்குடன் வெளிவருகின்றன. இருக்கிறம்' என்றொரு சஞ்சிகையும் மாதம் இருமுறை தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கின்றது. நகைச்சுவை ஏடான சுவைத்திரள்,
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - sibus 2010

பெண்ணிய சஞ்சிகையான பூங்காவனம் என்பனவும் குறிப்பிடத்தக்கவை. இந்த இடைக்காலத்தில் சில சஞ்சிகைகள் அற்ப ஆயுளில் நின்று போனதுமுண்டு. இதில் ஒரு உண்மை என்னவெனில் எந்த ஒரு சஞ்சிகையும்ராஜபக்சவிடம் மான்யம் பெற்றுவெளிவரவில்லை.மிகுந்த பொருளாதார நெருக்கடிக்கு உள்ளே தனிமனித மற்றும் கூட்டு முயற்சியால் வெளிவருகின்றன.
எழுத்தாளர் மகாநாடு ஒன்றினால் வாசிப்புப் பழக்கத்தை எப்படி முன்னெடுக்கலாம் என்பதுதான் தனக்குத் தெரியவில்லை என்று கட்டுரையாளர் சொல்கிறார். இன்று வாசிப்பு பழக்கம் குன்றிவரும் வேளையில் அதை பல தரப்பினரும் ஊக்குவிக்க வேண்டிய நிலையில் உள்ளார்கள். குறிப்பாக பெற்றோர்களும், ஆசிரியர்களும் இப்பணியை முன்னெடுக்கலாம். எழுத்தாளர் மகாநாடு ஒன்றிலும் இதுபற்றி கவனம் எடுக்க வேண்டியமை காலத்தின் தேவை. எவ்வாறு ஊக்கப்படுத்தலாம் என்பதைப் பற்றி ஆராய்ந்து முடிவெடுப்பதில் என்ன தப்பு இருக்கிறது?
சாதனையாளர்களுக்கு விருது கொடுப்பது பற்றி கிண்டலடிக்கும் தீராநதி கட்டுரையாளர், சிவத்தம்பியும், ஜீவாவுமா வாழ்நாள் சாதனையாளர்கள் என்று குறிப்பிடும் போது, அவர்கள் சாதனையாளர்கள்தான் என்ற தொனி மறைந்திருக்கிறது.
மகாநாட்டில் கூடும் எழுத்தாளர்கள் பாலம் கட்டும் கொத்தனார் வேலைக்குத் தான் லாயக்கு என்று எஸ்.பொ எதை வைத்துக்கொண்டு குறிப்பிடுகிறார்? யார் யார் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற பட்டியல் அவரிடம் உண்டா? நல்லது. பாலம் கட்டுவது கூட தவறில்லை. சிதறிப்போன நெல்லிக்காய் மூட்டை போலாகிவிட்ட ஈழத் தமிழ் எழுத்தாளர்களும், உலகநாடுகள் எங்கும் பரந்திருக்கும் தமிழ் எழுத்தாளர்களும் ஒன்றிணைய இந்த மகாநாடு ஒரு பாலம் கட்டும் அல்லவா? வெளிநாட்டு தமிழ் எழுத்தாளர்களின் உறவும் கிட்டுமல்லவா?
இந்த மகாநாட்டு அமைப்பாளர்கள் தங்களைச் சகலகலா வல்லவர்களாக பாவனை செய்வதுதான் மிகவும் பரிதாபகரமாக இருக்கிறது என்று கட்டுரையாளர் குறிப்பிடுகிறார். பலவித காரணங்களால் தேக்கமடைந்திருக்கும் ஈழத்து தமிழ்கலை இலக்கிய வாதிகளை புத்துயிர்ப்படைய வைக்கவும், ஊக்குவிக்கவும் இப்பட்டறைகள் உதவும் அல்லவா? அமைப்பாளர்கள் அதற்கான தகமை சார் கலைஞர்களை ஒன்றிணைக்க முயல்கிறார்கள். கைலாசபதி, சிவத்தம்பி போன்றோரின் மேல் தன் எதிரலையை எப்போதும் பாய்ச்சும் கட்டுரையாளர் இங்கும் அதைவிட்டுவைக்காது தொடர்கிறார். மக்கள் அனைவரும் மனோரீதியில் பாதிக்கப்பட்டுள்ள வேளையில், இந்த நரகலோகமாக மாறிப் போயிருக்கும் இலங்கையை சர்வதேச மகாநாடு கூடுவதற்கான சொர்க்க பூமியாக அமைப்பாளர்கள் எதற்காகத் தேர்ந்தெடுத்துள்ளார்கள்? என்று கேட்கும் கட்டுரையாளர், மேலும் யதார்த்த நிலைகளுக்கு அப்பாற்பட்ட திரைமறைவு ஊக்கிகள் காரணிகளாக இருக்கலாம் என்று சந்தேகிக்கிறார். இந்த மகாநாடு ஒரு வெளிப்படையான மகாநாடுதான். எந்த மறைமுக நோக்கமும் கொண்டதோ அன்றி யாருடைய பின்னணியிலோ நடக்கவில்லை என்பது இங்கு வெளிப்படையான விடயம். துன்பப்பட்டுப் போயுள்ள மக்கள்
11

Page 14
மத்தியில் தான் எழுச்சி தேவை. தமிழ் மிகவும் தாழ்த்தப் பட்டுள்ள நிலையில் இதன் தேவை இன்னமும் முக்கியத்துவம் பெறுகிறது. இது ஒரு பகட்டு மகாநாடு அல்ல துயர் பகிரும் வாய்ப்புள்ள மகநாடு. படைப்பாளிகளால் என்ன இனி செய்யப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கக் கூடிய LD57 SITG).
தன்னை விட்டால் உலகத்தில்வேறுஎழுத்தாளன் இல்லை என்ற தலைக்கணம்தான் இளம் எழுத்தாளங்களை ஊக்குவிப்பது பற்றிய கருத்தை கேள்விக்குள்ளாக்கும் கட்டுரையாளரிடம் தெரிகின்றது. சிதம்பர ரகசியத்தை விண்டு காட்ட கட்டுரையாளரும் மகாநாட்டில் கலந்து சிறப்பிக்கலாமே! செப்பமாக தமிழ் இலக்கியப்படைப்பை தரமுடியாது தவிப்பதாக யாரைப் பற்றி எதை வைத்துக் கொண்டு எஸ்.பொ பிதற்றுகிறார்? இன்று ஈழத்துபத்திரிகை வாரமலர்களும் சிறு சஞ்சிகைகளும் களம் அமைத்திராவிட்டால் இளம் எழுத்தாளர்கள் எப்படி முளை விட்டிருக்க முடியும்? மல்லிகையில் வளர்ந்தவன் நான்; இப்படி பலர்.
குறும்படம் பற்றிய பிரக்ஞையை வ்ளர்த்து எப்படி சினிமா ரசனையை வளர்க்க முடியும் என கட்டுரையாளர் கேட்கிறார். இதிலும் தன்னைப் பற்றிய பெருமை பேசலையே காணமுடிகிறது. உண்மையான இரசனை வளர்ப்பு பற்றி சிந்திக்க மறந்து விடுகிறார். பிழை கூறி அவதாரம் எடுக்கும் எஸ். பொ வையே இதுபற்றிய குறிப்பிலும் அடையாளம் காணமுடிகிறது. ஏ. இரகுநாதன் போன்றோர் மாத்திரமன்றி புதிய இளைய குறும்படக் கலைஞர்களும் கலந்து இவ்விழாவைச் சிறப்பிக்கலாம் அல்லவா?
அனைத்துக் கலைகளின் கரபந்துக்காரர்களாக தம்மை நியமித்துக் கொள்ளும் விழா அமைப்பாளர்களின் அடாவடித்தனம் என வார்த்தை ஜாலங்கள் புரியும் எஸ்.பொ.
2O 11 gρσοτ. *ஞானம் ? புதிய உள்நாடு தனிப்பிரதி : Bunr 85/= ஆண்டுச் சந்தா : BUIT 1000/= ஆறு ஆண்டுச்சந்தா : ரூபா 5000/= ஆயுள் சந்தா : eglur 20000/=
சந்தா காசோலை மூலமாகவோ, மணியோடர் மூலமாகவோ அனுப்பலாம். மணியோடர் வென்ணவத்தைதபால் நிலையத்தில் மாற்றக் கூடியதாக அனுப்பப்படல் வேண்டும். இலகுவாக மேலதிகச் செலவின்றி சந்தா அனுப்பும் வழி ;- உங்கள் பகுதியில் உள்ள ஹட்டன் நஷனல் வங்கியில் T. Gnanasekaran, Hatton National Bank - Wellawatte நடைமுறைக் கணக்கு இலக்கம் - 009010344631 என்ற கணக்கில் வைப்பு செய்து வங்கி ரசீதை எமக்கு அனுப்புதல் வேண்டும்
Aaaaaaas ஓராண்டு Australia (AUS) 40 Europe (e) 30 India (Indian Rs.) 500 Malaysla (RM) 60 Canada (S) 40 UK (£) 25
Other (USS) 35 மூன்று சந்தாதாரர்களைச் சேர்த்துத் தருபவர்களுக்
12

அவர்களே, முதலில் இங்கே நடக்கும் மகாநாடு பற்றி புரிந்து கொள்ள முற்படுங்கள். எல்லாக்கலைகளிலும் அமைப்பாளர்கள் வித்துவர்களாக இல்லாது விட்டாலும் வித்துவர்களை ஒன்றிணைக்க பொது அழைப்பு விடுக்கிறார்கள்.இவ்அழைப்பு உன்னத படைப்பாளி உங்களுக்கும் தான். செய்வதை செய்ய விடுங்கள் முடிந்தால் நீங்களும் கைகொடுங்கள். குட்டையைக் கலக்கி மீன் பிடிக்க முயலாதீர்கள். இவ்வாறு நடப்பதன் மூலமாவது சண்டைக்காரன் என்ற உங்கள் நிலையை மாற்ற முயற்சிக்கலாமே. அல்லது கலகக்காரன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை என்று நினைக்கிறீர்களா?
இந்த மகாநாட்டின் மூலம் சர்வதேச எழுத்தாளர் சமூகத்தையாரும் ஏமாற்றமுனையவில்லை என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். அரசுக்கும் இந்த மகாநாட்டுக்கும் எதுவித தொடர்புமில்லை என்பதனை முதலில் தெளிவு படுத்துகிறேன். புலம் பெயர் எழுத்தாளர்கள் பலர் இந்த மாநாட்டை முன்னின்றுநடத்துகிறார்கள். இந்த சர்வதேச எழுத்தாளர்களின் இணைப்பாளராகச் செயற்படும் முருகபூபதி இதை தெளிவுபடவே கூறியுள்ளார். தயவுசெய்து அநாகரிகமான முறையில் இந்த மகாநாட்டுக்கு அரசியல் சாயம் பூசிக் குழப்பத்தை ஏற்படுத்தர்தீர்கள்.
மகாநாட்டு எழுத்தாளர்களை தமிழ நாட்டு எழுத்தாளர்கள் எதிரிகளாக கருதவில்லை, பலர் பங்குபற்றுகிறார்கள் அவர்களை நீங்கள்தான் குழப்பியடிக்கிறீர்கள். தூய்மையான மகாநாட்டிற்கு போலியான சாயம்பூச முற்படுகிறீர்கள். எஸ்.பொ. அவர்களே! இம்மகாநாடு இரண்டு வருடங்களுக்கு முன்னதாகவே திட்டமிடப்பட்ட விடயம். ஐம்பது ஆண்டுகள் ஏற்படாத மாற்றத்தை இனியாவது ஏற்படுத்த முயலுவதில் என்ன தவறு? சொல்லுங்கள், கண்டனக் கலை விற்பன்னரே!
வரி முதல்
சந்தா விபரம்
GalofpsiTysicsig USBTh9gu : Swift Code: HBLILKLX
அனுப்ப வேண்டிய பெயர் முகவரி :
T. Gnanasekaran Gnanam Branch Office 3-B, 46th Lane, Wellawatte.
ஞானம் விளம்பர விகிதம்
பின் அட்டை : BLIT 10000/= முன் உள் அட்டை : ரூபா 8000/= பின் உள் அட்டை : ரூபா 8000/- உள் முழுப்பக்கம் : ரூபா 5000/- உள் அரைப்பக்கம் : ரூபா 3000/- இரண்டு ஆண்டு மூன்று ஆண்டு 80 110 60 80 950 1 400 120 170 80 110
50 70 70 100 ஒரு வருடம் ஞானம் இனாமாக அனுப்பப்படும்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2010

Page 15
பகல் பொழுது ஒருவாறாய் இருள் கெளவிக் கொண்டது
சத்தங்களினால் செவிப்பறைகள் கிழிந்து போனதான ஒருணர்வு என்னுள் தரிக்கிறது தண்ணிர் போத்தலும் நீரிழந்து ஈரமற்று நிலத்தில் சாய்ந்து கொண்டது ஆறு சீவன்களும் சிறிய பதுங்கு குழியினுள் முடங்கி ஒன்றிரண்டாய் பொழுதுகளும் கழிந்தே போயின பறவைகளின் சந்தடியின்றியே விடியலும் உணர்த்தியது நெல்விதைத்து புதிரெடுத்து அறுவடை செய்த கரங்கள் உலை வைத்து உண்டுறங்கி பல பொழுதுகளாயின ஆனாலும். நிமிர்ந்து எட்டி நடந்து நடையை வேகமாக்கி
பையினுள் நிறைத்த உமிக்குள் அரிசியை தேடுகிறேன்.
- ஆல்வைபூA 82 ஆஃ இடுத்ரேவonடி
Τ
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2010
 

Baf, (ThT JIFT öbbi, TSIDill.
ஆழம் அறியாது காலை விடாதே வேழம் துரத்தினும் வெல்லும் - வழி அறிந்து செயற்பட கொல்லும் புலி வெறியோ தணியும் பார் !
உள்ளத்தில் ஒன்று உதட்டில் ஒன்று கள்ளம் கபடம் வைத்து - பழகுவர் வார்த்தை நம்பி மோசம் போகாதே பார்த்து நடந்து கொள் !
வாசிப்பு எழுத்து பயிற்சி பெற்று யோசிக்கத் தெரியும் நல்லது - எதுவென பட்டறிவு வந்தபின் உனக்கு மேலும் கெட்டநிலை வாராது காண் 1
ஆசை காட்டி ஆவன செய்வதாய் காசை பறிப்பர் கவனமாய் - இரு சுயநலம் உடையோர் நலம் காண é9uI606)Iử LI(66)Iử g]6ỏILIrh !
பாராட்டிப்பேசி உச்சியில் வைத்து நீராட்டுவர் மனம் மகிழும் - ஆயினும் கொப்பில் ஏற்றி கோடரியால் மரம் தப்பாது தறிப்பர் அறி !
பந்தம் பிடித்து பதவி தேடுவர் சொந்தம் என்று சொல்வர் - அவரோ நடிப்பு வல்லமை உள்ளவர் என்பது படிப்பு படிக்கத் தெரியும் !
நூல் பல கற்று நுண்ணறிவு பெற்று ஆல்போல் தளைக்க அனுபவம் - பெறவே நாளும் பொழுதும் நலிவின்றி இருக்கும் ஆளும் உன்னை அறிவு !

Page 16
மதனின் கவனம் கலைந்துகொண்டிருந்தது அடுத்த நாள் வகுப்புக்கான ஆயத்தத்தை இன்று கிடைக்கும் நேரத்தில் செய்து வைத்துவிடவேண்டும் என்ற முன்ஜாக்கிரதை எண்ணத்தை நிறைவேற்றவிடாமல் சற்றுமுன் கேட்டசெல்போன்'அழைப்பு அலைக்கழித்துக் கொண்டிருந்தது. 9.
“டேய்மதன் நான் கணேஸ் கதைக்கிறன்டா “சொல்லு”
"இன்றைக்கு எனக்குபேர்த்டேடா அதுக்கு இன்றைக்குப் பின்னேரம் ஒரு பார்ட்டி கொடுக்கப் போறன்.நீயும் கட்டாயம் வரவேணும்"
“மெனி மெனி மோர் ஹப்பிறிற்றேன்ஸ் ஒவ் த டே கணேஷ், ஆனால், என்னாலை பார்ட்டிக்கு வரரேலாது.”
"ஏன்டா மதன், நீ எங்களிலையிருந்து விலகி விலகிப் போறாய் நீ கட்டாயம் வாறாய். அஞ்சு மணிக்கு வாசிகசாலையடிக்கு வா."
பதிலுக்குக் கூடப் பொறுத்திருக்காது. செல்போன் இணைப்பைத் துண்டித்துவிட்டான் கணேஷ். அப்போதிருந்து தான் இந்த மன அலைக்கழிவு.
மதன் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருப்பவன். தனது குடும்ப நிலையை எண்ணி, தனது படிப்புச் செலவுகளுக்காவது உதவுமேயென்று ஆங்கில பாடத்தில்ரியூ சன் வகுப்புகளும் எடுத்துக் கொண்டிருந்தான். மதனின் நண்பர் குழாமுக்கு அவன் தங்களில் ஒருவனாக இருப்பது மகிழ்ச்சி. விளையாட்டுக்களின் போதும் சனசமூகநிலையை நிகழ்வுகளின்போதும் பிரச்சினைகள் ஏற்படும்போதும் மதன் சொல்லும் ஆலோசனைகள் அவர்களுக்கு ஏற்றுக் கொள்லுத்தக்கதாக இருக்கும். அவனின் ஆலோசனை வழியேஅேவர்கள் தீர்மானம் எடுப்பார்கள்.
மற்றும் தன் நண்பர்களை மதித்தான். அவர்களுடன் சேர்ந்து இயங்கவேண்டும் என்று விரும்பினான். தான் கேள்விப்படுகின்றஒருசில விடயங்களைத் தவிர அவர்களிடம் பாரதூரமான கெட்டபழக்கங்கள் ஏதும் இல்லை என்பதுதான் அவனின் அனுமானம். சந்தர்ப்பம் கிடைக்கும் போது, அவர்களிடம் எடுத்துச் சொல்லி அந்த விடயங்களையும் தவிர்க்கச் செய்துவிடலாம் என்றுதான் அவன் நம்பினான்.
அவனின் நண்பர்கள் தினமும் மாலை வேளைகளில் வாசிகசாலை முன்னால் கூடுவார்கள். தாம் கேள்விப்பட்ட சங்கதிகளை செய்திகளைத் தங்களுக்குள் பரிமாறிக் கொள்வார்கள். சிலவேளைகளில் வாக்குவாதப்படுவார்கள். பின்புஎவ்வித குரோதமுமின்றிநட்புணர்வோடுதங்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்வார்கள். நண்பர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்படும் வேளைகளிலெல்லாம் அவர்களிடம் பகைமை வளரவிடாமல் மதன் பார்த்துக்கொண்டான். எல்லோரும் மதனின் சொற்படி நடந்தனர்.
ஆனாலும் எப்படியோ அவர்களுட் சிலர் குடிக்கப்பழகிக் கொண்டதாக மதன் அறிந்தான். இது பற்றி அறிந்தபோது அவர்களிடம் நேரடியாகவே அதுபற்றிக் கேட்டறிந்துகுடியின் தீங்கு பற்றி அவன் எடுத்துரைத்தான். ஆனால் அவர்களோ, தாங்கள் பியர் மட்டுமே குடிப்பதாகவும் பியர் குடிப்பதால் இரத்தம்சுத்திகரமாகும் என்றுமதனிடம் சொல்லித்தப்பிக்கப் பார்த்தனர்.
14

இதன்பின்பு மதன் பார்ட்டி' களைத் தவிர்த்துக் கொண்டான். பெற்றோர்களே பார்ட்டிக்காகப் பெருந் தொகைப் பணத்தைப் பிள்ளைகளுக்குக் கொடுப்பதை வழக்கமாக்கிக் கொண்டமை அவனுக்கு ஆச்சரியத்தை தந்தது. அந்த விருந்துகளில் இரகசியமாக, குடிவகையும் ஓர் ஆங்கமாக இருப்பது மதனுக்குத் தெரியவந்ததிலிருந்துதான் விருந்துகளைத் தவிர்த்து வந்தான். 'ஊருடன் கூடி வாழ் என்ற முதுமொழி அவனுள் உள்ளெவித்ததன் காரணமாக குடிக்காக நண்பர்களை வெறுக்காது அவர்களுடன் ஒத்தியங்கிவந்தான்.
மதன் தவிர்க்க முடியாமல் ஒரு சில பிறந்தநாள் விருந்துக்குப் போனாலும் அதிக நேரம் தங்கமாட்டான். அதனால் பிறந்த நாள் விருந்தின் இறுதி அங்கத்தை மதன் ஒருபோதும் பார்த்ததே இல்லை. இறுதி அங்கத்தின் சுவாரஸ்யமான விடயங்களை எல்லாம் பிறர் சொல்லக் கேட்டிருக்கிறான். இப்போதும் அதனால்தான் யோசித்துக் கொண்டிருக்கிறான்.
நேரம் ஐந்து மணியாகிக் கொண்டிருந்தது. மதனுக்கு முடிவெடுக்க முடியாமலிருந்தது. போவதா, விடுவதா என்று குழம்பிக் கொண்டிருந்தான்.மீண்டும்செல்போன்'அழைப்பு 'மதன் ஏன்டா இன்னும் வரேல்லை? எல்லாரும் வந்திட்டாங்கள். இன்றைக்கு பார்ட்டி வீட்டில் இல்லை. தாஜ் ஹொட்டெல்லை. வா.கெதியாவா.
"நான் வரேல்லை. கணேஸ் எல்லாரும் ட்றிங்ஸ் எடுக்கிறதுக்கு நான் இடைஞ்சலா இருப்பன்.அதுதான் நான் வரேல்லை”
'மதன், ஊரோடை ஒத்தோடவேணுமடா.நீகுடியாட்டில் பறவாவில்லை. கூட இருந்து சந்தோஷிக்கலாம் தானே. உடனை வெளிக்கிட்டு வா..?
வாசிகசாலையடிக்கு மதன் சென்றபோது எல்லோரும் தயாராக நின்றனர். வெவ்வேறு டிசைன்கள் போட்ட ரீசேட் அணிந்து'ரிவிஎஸ்மோட்டார்ச்சைக்கிள்களில் அணிவகுத்து நின்றனர். மதனைக் கண்டதும் விரைந்து வருமாறு துரிதப்படுத்தினர். மதன் சைக்கிளில் வருவதாகச் சொன்னான். "உவன் சைக்கிளிலை வந்து சேர்றதுக்கிடையிலை நாங்கள் இரண்டு றவுண்ட போய்விடுவோம்". அவர்களுள் ஒருவன் மதனுக்குக் கேட்காதவாறு முணுமுணுத்தான்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2010

Page 17
“சரி, சரி, எப்படியாவது வந்துசேர்”என்று சொல்லிவிட்டு, எல்லோரும் இரண்டு பேர், மூன்று பேராக மோட்டார் சைக்கிள்களில் ஏறிவிரைந்தனர்.
தாஜ் ஹோட்டல் இரண்டு கிலோமீற்றர் தூரம் தள்ளி ஒதுக்குப்புறத்தில் இருந்தது. தாஜ்ஹோட்டல்'ஏன் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் இருக்கிறது என்பது இப்போதுதான் மதனுக்கு விளங்கியது.மதன் சைக்கிளில் அங்குசென்றபோது கணேஸ் இவனை முன் ஹோலில் நின்று வரவேற்றான். புரியாணிக்கு ஒடர் கொடுத்துவிட்டு ஜிஞ்சர் பியர் சோடா ஒன்றை வரவழைத்தான். அவனுடன் சேர்ந்து ஜிஞ்சர் பியர் கொஞ்சம் குடித்துவிட்டு உள்ளே சென்றுவந்தான்.மதனுக்கு சிரிப்பாக வந்தது. அவர்களுக்கு பியர் தனக்கு ஜிஞ்சர் பியர் என்று தனக்குள்ளேயே சொல்லிப் பார்த்து நகைத்துக் கொண்டான்.
புரியாணி உண்டு முடித்து, உள்ளே கைகழுவச் சென்றவன் பக்கத்து'ஹோலை எட்டிப்பார்த்தான்.திகைப்பாக இருந்தது. புரியாணி எல்லாம் நிலத்தில் சிந்தியிருக்க, மேசையில் வெவ்வேறு ரக குடிவகைப் போத்தல்கள் நிறைந்திருக்க அங்கு ஒலித்துக்கொண்டிருந்த இசைக்கேற்ப கைகளில் மது நிரம்பிய கிளாஸ்களை வைத்துக் கொண்டு அவனது நண்பர்கள் ஆடிக்கொண்டிருந்தனர்.
பேசக்கூடாத வார்த்தைகளை எல்லாம் உளறிக்கொண்டு தமக்குபிடித்தமான சினிமாக்காரிகளின் பெயர்களைச் சொல்லி 'ஜ லவ் யூ சொல்லிக் கொண்டிருந்தனர். மதன் அந்தக் கூடத்தினுள் காலடி எடுத்து வைத்ததும், ஒருவன் ஓடி வந்து மதனைக் கட்டியணைத்துக் கொண்டே மது நிரம்பிய கிளாசை மதனுக்கு முன்னால் நீட்டினான்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2010
 

“மச்சான் மது! நீ இன்றைக்குக் குடிக்கோணும். கணேசின்ரை சந்தோசத்துக்காகக் குடிக்கோணும்.”
அவனுடன் சேர்ந்து மேலும் இருவர் ஒத்தூதினர். 'ஓம் மச்சான் குடிச்சுப்பார். அப்பதான் சொர்க்கம் தெரியும்.
மதனுக்கு வியப்பாக இருந்தது. தன்னுடன் ஒருபோதும். அவ்வாறாக வார்த்தைப் பிரயோகம் செய்யாதவர்கள் குடிபோதையில் உளறுபவற்றைக் கேட்கக் கேட்க மதனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
மதுஅருந்தும்போது தன்னிலை மறக்கக்கூடிய இன்பம் உண்மையிலேயே ஏற்படுகின்றதோ என இவன் தனக்குள்ளேயே ஒரு கணம் கேட்டுக் கொண்டான். கட்டிளமைப் பருவத்தினரின் நடத்தைப் பிறழ்வுகளுக்கு மதுதான் மூலகாரணமோ என்று சிந்தித்தான்.
சாதுக்கள் போல பதுங்கிக்கொண்டிருந்தவர்களும் கூட, மதுவின் போதை தந்த மனவெழுச்சியுடன் ஊக்கம் பெற்று வித்தியாசமாக நடந்து கொள்வதைக் காண மதனுக்கு ஆச்சரியமாக இருந்தது.
கூடவே அவர்கள் பற்றியதான ஒரு சோகமும் அவனுள் எழுந்தது.
இப்போது மதுவின் போதை தந்த எழுச்சியில் ஊக்கம் பெற்ற தனது நண்பர்கள், இந்த ஊக்கத்தையே தொடர்ந்து தேடத்தொடங்கினார்கள் என்றால் இது எங்கே போய் முடியும் என்றுமதன் ஆழமாகச் சிந்தித்தான்.
இதன் அடுத்த கட்டம் போதைவஸ்துப் பாவனையாகலாமோ..?
போதைவஸ்துப் பாவனையால் ஏற்படக் கூடிய தீங்குகளையும் உளநோய்களையும்மதன் எண்ணிப்பார்த்தான். உளவியலில் தான் அறிந்து கொண்டவற்றை இவர்களுக்கு எப்படி விளங்க வைக்க முடியும் என்று நினைத்துக்கொண்டே மலைத்துப்போய் நின்றிருந்தான் மதன்.
வழமையாக மதனுக்கு மரியாதை கொடுக்கும் இன்னும் இரு நண்பர்கள் கிளாஸில் மதுவை ஊற்றி எடுத்துக் கொண்டு அவனை நெருங்கினர்.
நண்பர்கள் மதனைப்படுத்துகின்ற பாட்டைக் கண்டு கணேஷ் ஓடி வந்தான். சொறி டா மதன். நீ ஏன் இங்கை வந்தனி என்று கேட்டு. அவனை முன்ஹோலுக்கு அழைத்து வந்தான்.
கணேஷிடம் நிதானம் இருந்தது. அவனும் குடித்திருந்தான். அளவாகக் குடித்திருப்பான்' என மதன் நினைத்துக்கொண்டான்.
கணேஷ் சங்கடத்துடன் பேசினான். 'மதன், இது ஒரு மாயை இந்த மாயமான உலகத்துக்குள்ளை நீ வரவேண்டாம். நீ என்றைக்கும் நல்லவனாய் எங்களுக்கெல்லாம் நல்ல நண்பனா இரு”
மதனுக்கு ஆச்சரியமாக இருந்தது. நல்ல நிலையில் இருந்தபோது ஊரோடு ஒத்தோட வேணும் என்று உபதேசம் செய்தவன். இப்போது இங்கே வராதே என்று எச்சரிக்கை விடுப்பது ஒன்றுக்கொன்றுமுரணாக இருந்தது.
சைக்கிளை எடுத்துக் கொண்டு வீடு திரும்பிய மதன் மாயா உலகத்திலிருந்து தப்பித்துக் கொண்டோமே என்று நினைத்துக் கொண்டு நாளைய பாடத்துக்கான ஆயத்தத்தில் இறங்கினான். அவனின் உள்ளுணர்வு விழித்துக் கொண்டு 'நீ மட்டும் தப்பினால் போதுமா?" என அவனைக் கேட்டது. இவன் பாடஆயத்தத்தை இடைநிறுத்தி விட்டு, என்ன செய்யலாம்?” என்று யோசிக்கத் தொடங்கினான்.

Page 18
துே இலங்கையில் ந
எழுத்தா6
இலக்கிய வரலாற்றில் இது ஒரு முதல் முயற்சி. இதை நடாத்தும் பழுத்த இலக்கியவாதி லெ.முருகபூபதி ஒரு வருடத்திற்கு மேலாக இதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறார். புலம் பெயர்ந்த எழுத்தாளரான இவர் அவுஸ்திரேலியாவிலிருந்து கொண்டே இதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்.
ஒவ்வொரு நாட்டிலும் இதற்கான உபகுழுக்களை நியமித்துள்ளார். ஒவ்வொரு நாட்டிலுமுள்ள தமிழ் இலக்கிய வாதிகள் மகிழ்ச்சியுடன் இதற்கான பங்களிப்பைச் செய்கின்றனர்.
இவ்விழா இலங்கையில் - கொழும்பில் - நடைபெறுவதுபற்றி சிலருக்கு, மனக்குறைகள் இருக்கலாம். ஆனால் அதற்காக,மிகமுக்கியமான இந்த இலக்கிய நிகழ்வை நடாத்த விடாமல் தடுப்பதும், மாநாட்டுக்கு எதிரான கருத்துக்களை வெளியிடுவதும், ஆரோக்கியமான செயல்கள் அல்ல.
இம்மனக்குறைகளைப் பின்வருமாறு தொகுக்கலாம் 1. தமிழகம் - இம்மாநாட்டைத் தமிழகத்தில் நடாத்த வில்லை என்ற மனக்குறை
2. சில எழுத்துலக ஜாம்பவான்கள் - தமக்கு இவ்விழாவில் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லையே என்ற மனக்குறை.
இந்த இரண்டும் சேர்ந்தால் என்ன ஆகும்? இம்மாநாட்டுக்கு எதிரான கருத்துக்கள் வெளியாகும். அதுவும் சிறுபிள்ளைத்தனமான வாதங்களுடன் கருத்துக்கள் வெளிப்படும் அது இயல்புதானே? அண்மையில், “கல்கி’ பத்திரிகை பிரபல எஸ். பொ. அவர்களைப் பேட்டிகண்டு, அவர் இம்மாநாட்டுக்கு எதிராக வெளியிட்ட கருத்துக்களை ஒரு கட்டுரையாக கல்கி 19.9.2010 இதழில் வெளியிட்டுள்ளது. சபாஷ்! வழக்குப்போடு என்பது அதன் தீர்ப்பு
இந்த நேர்காணலில் ஒரு கேள்வி வருமாறு சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நீங்கள் தீவிரமாக எதிர்ப்பதன் நோக்கம் என்ன?
இதற்கான எஸ்.பொ.வின் பதில் வருமாறு. யாழ்ப்பாண வடபகுதியில் நான்கு லட்சம் ராணுவ குடும்பத்தினரும், ஒரு லட்சம் ராணுவத்தினரும் குடியேற்றப்பட்டுள்ள நிலையில், ஈழத்தில் உள்ளோர் சகஜமான வாழ்வுக்குத் திரும்பாமல் தூக்கமின்றி உழலும் சூழலில் இந்த மாநாடு தேவையா? மேலும் அவர் கூறுவது
16
 
 

டக்கும் சர்வதேச
ார் மாநாடு
1இம்மாநாட்டோடுதொடர்புடையவர்களான ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், ஆஸ்திரேலிய நடேசன் போன்ற பன்னிரண்டு பேர் முள்ளி வாய்க்கால் படுகொலைக்கு முன்பு ராஜபக்சவுடன் விருந்துண்டு தமிழ்த் தேசியத்திற்கு எதிராக வாழ்ந்தவர்கள். எனவே, இம்மாநாட்டை நடத்த தமிழ்த் தேசியம் பேச இவர்களுக்குத் தகுதியில்லை.
மற்றொரு கருத்து மாநாட்டுக்கு எதிராகக் கருத்துக்களைப் பிரசுரிக்க வேண்டாம் என இலங்கை அரசு அங்குள்ள தமிழ்ப் பத்திரிகைகளை மிரட்டியுள்ள நிலையில்.மக்கள் துன்பம்பற்றிப் பேச, மாநாட்டில் அனுமதி இருக்காது. பிறகேன் இம்மாநாடு?
இன்னொரு கருத்து கிழக்கு மாகாணத்தில் ஒவ்வொரு கிராமத்திலும், இப்போது ஒரு புத்த கோயில் கட்டப்பட்டு வருகிறது. தமிழ்ப்பாரம்பரிய தனித்துவத்தைப் பாதுகாக்க, இம்மாநாட்டாளர்களால், முடியுமா? இந்தக் கருத்துக்களில் பார்த்த மாத்திரத்தே, அவை தர்க்க ரீதியற்றவை என்பது புரிந்துவிடும். ஆனாலும் இக்கருத்துக்கள் தொடர்பாக நாம் பின்வரும் கேள்விகளைக் கேட்கிறோம்.
(i) இம்மாநாட்டை நடத்தாமல் விட்டால், மேற்படி தமிழர்கள் பிரச்சினை தீர்ந்து விடுமா?
(i) இப்போது இலங்கையில், வடக்கு, கிழக்கு உட்பட இலக்கியமாநாடுகள் சமய விழாக்கள் நடைபெறவில்லையா?
அவை நிராகரிக்கப்படவில்லையே?
(i) அண்மையில் நல்லூர்க்கந்தன் உற்சவம், மிகக் கோலாகலமாக நடைபெற்று, நாள்தோறும்
தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பானதே அது பரவாயில்லையா? (iv) முள்ளிவாய்க்கால்படுகொலைக்கு முன்பு இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவுடன் விருந்து சாப்பிடுவதில் என்ன தவறு? அப்படிப்பட்டவர்கள், இம்மாநாட்டுடன் சம்பந்தப் படுவதில் என்ன தவறு?
(v)இம்மாநாடு தமிழ் இலக்கிய மாநாடு இதற்கும் தமிழ்த் தேசியத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லையல்லவா?
(v) மக்கள் துன்பம் பற்றி பேசுவதற்கு இம்மாநாட்டில் இடமில்லை எனவே அதற்கான அனுமதியும் தேவை இல்லை. (wi)தமிழர் உரிமைப் போராட்டத்திற்கும், இம்மா நாட்டுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. அதனால் தமிழ்ப் போராளிகள் இம்மாநாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவுமில்லை. (vi) இம்மாநாட்டில் பங்களிப்புச் செய்பவர்கள் இன உணர்வு அற்றவர்களல்லர். இன உரிமைப் போராட்டத்துக்கு எதிரானவர்கள் அல்லர்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2010

Page 19
() பல்வேறுபிரச்சினைகளுக்கு மத்தியில், அண்மையில் தமிழகத்தில் செம்மொழி மாநாடு நடைபெற்றதைப் போலவே இலங்கையிலும், பல்வேறு இன உரிமைப் பிரச்சினைகளுக்கு மத்தியில் இம்மாநாடு - சர்வதேச எழுத்தாளர் மாநாடு நடைபெறுகிறது. எனவே இதைத் தடுக்க வேண்டிய அவசியமில்லை. எனவே இம்மாநாட்டுக்கு எதிராகத் தெரிவிக்கப்படும் இத்தகைய கருத்துக்கள், மொட்டைத்தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போலாகுமல்லவா?
ஆகவே -
(1) தனிப்பட்ட வக்கிரங்களை வெளிப்படுத்தாமல் தமிழகமும், தமிழ் எழுத்தாளர்களும் இம்மாநாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.
(i) ஒத்துழைப்பு வழங்காவிட்டாலும் பரவாயில்லை எதிர்ப்புத் தெரிவிக்காமலாவது இருக்க வேண்டும்.
கணித கருவிப்பெட்டியில்
வட்டம் கீறும் கருவி Gl
அதில் இறுக்கப்பட்டவன்சில்
நான்
5. நிற்குமிடத்தில்நிற்கிறாய் உன்னைச் சுற்றிவிட்டமிடுகிறேன் நான்
என் உயிரைஇறப்புகளுடன் araoltó! என் உயிரைவாழ்தலிலிருந்து கழித்தும் ஏன் உயிரை வலிப்புகளுடன் வபருக்கியும்! இன்பம்கான என்னாதே! இப்பவும் உன்னால் வகுபட்டுக்கொண்டே இருக்கிறேன் நான்!
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2010
 

(i) ஈழத்தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள, இனப்பிரச்சினை களைத்தீர்ப்பதற்கு வேறுவகையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
கடந்த காலங்களில் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, கோலாலம்பூரில் நடைபெற்றது, தமிழகத்தில் நடைபெற்றது. அதைப்போலவே சர்வதேச எழுத்தாளர் மாநாடு இலங்கையில் நடைபெறுகிறது.
இம்மாநாட்டுக்கும், இலங்கையில் பல வருடங்களாக நிலவுகிற இனப்பிரச்சினைகளுக்கும் எவ்வித சம்பந்த முமில்லை. இலங்கையில் தற்போது ஜனாதிபதி தமிழருக்கெதிராகதவும், தமிழ் இனத்துக் கெதிராகவும் மேற்கொள்கின்ற நடவடிக்கைகளை உலக நாடுகள் நன்கு அறியும்.
இந்த மாநாடு இலங்கையில் நடைபெறுவதால் மேற்படி உலகப் பார்வை மறைந்து விடப்போவதில்லை.
17

Page 20
шил 6p/ 4/hї (J//76
IDழை விடாமல் கொட்டியது. கடந்த இரண்டு மூன்று நாட்களாக போக்குக் காட்டிக் கொண்டிருந்த மழை விடியற் காலையிலிருந்து கொட்டிக் கொண்டிருக்கிறது. சின்னமணி காம்பறா வாசலிலிருந்தவாறு வானத்திலிருந்து பெய்து கொண்டிருக்கும் மழையையே வெகுநேரம் பார்த்துக் கொண்டிருந்தான். கடந்த இரண்டு நாட்களாக படுத்த படுக்கையாக இருந்தவன் - நீண்ட நாட்களுக்குப்பின் மழை பெய்வதைப்பார்ப்பதற்காக வருத்தத்தையும்பொருட்படுத்தாமல் வாசலுக்கு வந்து விட்டான். மழையினால் வெயில் பட்டு இறுகியிருந்த மண்ணில் ஈரம் பட்டு வந்த அந்த வாசனை அவன் மூச்சுக் காற்றில் பட்டு அவனை மெய்மறக்கச் செய்தது. அந்த மண்ணில் பிறந்து அதே மண்ணில் வளர்ந்து உறவாடிய அவன் அந்த மண்ணை விட்டு பிரியப் போகிறானா? இது நிஜமா? வெறும் கனவாக பிரமையாக இருக்கக்கூடாதா? “இங்கே பாரு சின்னமணி - நான் சொல்றதை கவனமாக கேளு. உன்னோட இரண்டு சிறுநீரகங்களும் பழு தடைஞ்சிடுச்சி சீக்கிரமா சத்திரசிகிச்சை செய்யணும். சில நேரங்கள்ள வேறொரு சிறுநீரகம்பொருத்தவேண்டியதாக்கூட இருக்கும்.எப்படியும் ஏழட்டு லட்சம் தேவைப்படலாம். சீக்கிரமா யோசிச்சி ஒரு முடிவுக்கு வா. இதைத் தவிர வேற வழியில்லை.”
சின்னமணி - அப்படியே தலையில் இடி இறங்கியவனாக சற்று நேரம் சிலையாக நின்று விட்டான். ஆலமரத்தின் வேர் போல அவன் எத்தனை பேருக்கு உயிர் கொடுத்துக் கொண்டிருக்கிற்ான். இப்போது ஆணிவேருக்கே ஆபத் தென்றால்..? அவனால் எண்ணிப்பார்க்கவே முடியவில்லை. ஆஸ்துமா நோயில் அல்லலுறும் அவன் அம்மா லட்சுமி, ஒரு கண் பாதிப்புற்ற நிலையிலும் தோட்டத்தில் வேலை செய்யும் அவன்தந்தை பொன்னுசாமி,பேராதனை பல்கலைக்கழகத்தில் இரண்டாம் வருடம் பொறியியலாளர் படிப்பு படிக்கும் தம்பி வேலுசாமி, திருமணத்திற்காக காத்திருக்கும் அக்கா சுந்தரி, இவர்களுக்கெல்லாம் மேலதிகமாக கஸ்தூரி.?
சின்னமணி - பத்துவரை படித்துவிட்டு வறுமையின் காரணமாக கொழும்புக்கு வேலைக்குப் போனான். அவன் வேலை செய்த கடை முதலாளிமிகவும் நல்லவர். கடுமையான - உழைப்பாளியான அவனுக்கு நியாயமான சம்பளத்தை வழங்கினார். குடும்பத்துக்காக கடுமையாக உழைத்த அவன் தன் உடலை கவனிக்க தவறிவிட்டான். நேரத்துக்கு சாப்பிடுவதில்லை.
சின்னமணியின் உழைப்பு ஓரளவுக்கு அவன் குடும்பத்தை காப்பாற்றியது. தம்பியின் படிப்புக்கு உதவியது.
18
 

தன் கடமைகளையெல்லாம் முடித்து விட்டு தனக்காக காத்திருக்கும் அவன் மாமன் மகள் கஸ்தூரியை கைப்பிடிக்கவும் எண்ணியிருந்தான். ஆனால்.?
சின்னமணி - இன்னமும் வாசலிலேயே நின்ற வண்ணம் மழையையே பார்த்துக் கொண்டிருந்தான். கடந்த ஒரு மாதமாக அவன் வேலைக்குப் போகவில்லை. வைத்தியர் எப்போது அதைப்பற்றி கூறினாரோ அப்போதே அவன் நடைப்பிணமாகிவிட்டான்.இரவில் உறக்கம் வரவில்லைதான் இறந்துவிட்டால் தன்னையே நம்பியிருக்கும் இவர்களின் நிலை? மூச்சு விடவும் சிரமப்பட்டுக்கொண்டிருந்த அவன் தாய் இவனால்தான் ஓரளவு சீராக மூச்சு விடுகிறாள். இவன் மூச்சு நின்றுவிட்டால்.?
"அண்ணா.இன்னும்ரெண்டுவருஷத்துலநான்பட்டத்தோட வெளியில் வந்துடுவேன். அப்புறம் நீ கஷ்டப்பட தேவையில்லை. ஒருபொறியியலாளராவது என்னோடஆசை.கனவு.”
“மணி. எங்க வீட்ல மாப்பிள்ளை பார்க்கிறாங்கட நீங்க எனக்கு முறை மாப்பிள்ளையாயிருந்தாலும் இன்னமும் கரை சேர முடியாதளவுக்கு கஷ்டத்தோடயிருக்கிற உங்களுக்கு மணம் முடிச்சிகுடுக்க எங்கப்பாவுக்கு மனசில்ல. ஆனாலும் நான் பிடிவாதமாதான் இருக்கேன். எவ்வளவு காலம்னாலும் நிச்சயம் உங்களுக்காக காத்திருப்பேன்.”
ஒரு மனிதனுக்கு பிரச்சனைகள் வருவது சகஜம்தான். ஆனால் பிரச்சனைகளை எதிர்கொள்ள துணிவு மட்டும் போதுமா? உடலில் வலு வேண்டும். முக்கியமாக உயிர் இருக்க வேண்டும். “தம்பீமணி. உனக்குத்தான் சுகமில்லையேடா.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2010

Page 21
ஏன் மழை நேரத்துல வாசல்ல நிற்கிறே. குளிர் உடம்புக்கு ஒத்துக்காதுடாராஜா. உள்ள வாதம்பீ.”
அவன் தாய் தாய்மை உணர்வுடன் படுக்கையிலிருந்தவாறு அன்பொழுக பேசியது கூட அவன் காதில் விழவில்லை காய்ந்த கட்டுவிறகு தீப்பட்டு எரிவதைப் போல அவன் உள்ளம். வேதனையால் வெந்துத் தணிந்தது. நான் சாக மாட்டேன். நிச்சயமாக நான் சாகமாட்டேன் என் தம்பி படித்து பட்டம் பெறும் வரை என் உயிர் போகாது. அக்காவின் கழுத்தில் மஞ்சள் கயிறு ஏறுவதற்கு முன் என் கண்கள் நிச்சயம் மூடிவிடாது. எனக்காக காத்திருக்கும் கஸ்தூரி கழுத்தில் என் தாலி ஏறும்வரை நான்சாகமாட்டேன். சட்டென அவனுக்கு உடம்பு முழுவதும் வலியேற்பட்டது. ஏதோ ஒன்று தொண்டைக்குழிக்குள் வந்து அடைப்பதைப் போல இருந்தது அவன் மிகவும் கஷ்டப்பட்டு மெதுவாக வாசல் படிக்கட்டில் கால் வைத்து வெளியேவந்தான்.மழை இன்னமும் பலமாக பெய்தது. வாசலின் வலதுப் பக்கம் ஒரு சவுக்குமரம் இருந்தது. அது அவன் நட்டமரம். ஒவ்வொரு நாளும் தண்ணிர் ஊற்றி வளர்க்கப்பட்ட அந்த மரம் மிக செழிப்பாக உயரமாக வளர்ந்திருந்தது. அவன் மிகவும் கஷ்டப்பட்டு அந்த மரத்தினருகில் சென்றான். அதைக் கெட்டியாக பிடித்துக் கொண்டான். அந்த மரம் மிக அமைதியாக அசைவின்றி நின்றிருந்தது. மழை விடாமல் கொட்டியது. அவன் அந்த
சர்வதேச தமிழ் எழுத்
இலங்கை கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் 2011ஜனவரி எழுத்தாளர் மாநாடு தொடர்பான தகவல்கள். சிறப்புப் பேராளர்கள்: இந்த மாநாட்டுக்காக வெளிநாட்டி அரங்குகளுக்கு தலைமை வகிப்பவர்களும், ஆய்வுக் கட் கணிக்கப்படுவர். இவர்கள் பேராளர்களாகக் தம்மைப்பதிவுெ பேராளர்கள் கலை இலக்கியவாதிகள், இலக்கிய ஆர்வல தம்மைப் பதிவு செய்யலாம். இவர்களுக்கு மாநாடு நடைடெ வெளியீடுகள், நூல்கள், கோப்பு ஆகியவை அடங்கிய பொதி பேராளர்களாக பதிவு செய்பவர்கள் கீழ்க்காணும் முக அனுப்பிப்பதிவுசெய்து கொள்ள வேண்டும். பணம் அனுப்ப ( TAMILWRITERSASSOCIATION, HATTONNATIONAL பணம் கட்டிய வங்கிரசீத்தை அனுப்ப வேண்டிய முகவரி
TGNANASEKARAN,3-B,46LANE, COLOMBO-06 பணத்தை மணியோடர் மூலமாக அனுப்புபவர்கள் மேலே குறி மாற்றக் கூடிய விதமாக அனுப்பவேண்டும். பணம் கிடைத்த மாநாட்டுமண்டப வாயிலில் தங்களைப்பேராளராகப் பதிவுெ பார்வையாளர்கள்: விண்ணப்பப் பத்திரத்தைச் சமர்ப் மாநாட்டில் பங்குபற்றலாம். பார்வையாளர்களுக்குப்பேராளர்க ஆய்வுக்கட்டுரைகள்: 1 சிறுவர் இலக்கியம், 2. ஈழத்து (eding), 5. ஆவணப்படுத்தல், 6. நிகழ்த்துகலைகள், நுண்கள் இலக்கியம், 9. சிற்றிதழ்கள்,10. பெண்ணியம் ஆகிய துறைக மலரொன்றும் வெளியிடப் படவிருக்கிறது. இம்மலருக்கு க மாநாட்டில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிப்பவர்களும் 06.12.2010 அனுப்பி வைக்க வேண்டும். 06.12.2010 க்குப் பின்னர் கிை கொள்ளப்படமாட்டாது.
ஆய்வுக்கட்டுரைகள் துறைசார்ந்த அறிஞர் ( தெரிவுசெய்யப்பட்ட கட்டுரைகளே ஆய்வரங்குகளில் சமர்ப்பி
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2010

மரத்தைப் பிடித்தவாறு அதனருகே அமர்ந்தான். அவனுடைய சிறுவயது நினைவுகள் வந்து போயின. பத்தாம் வகுப்பில் சிறந்த பெறுபேறுகள் பெற்றிருந்தும் கஷ்டத்தினால் வேலைக்குப் போன அந்த நாட்கள் ஞாபகத்துக்கு வந்தது. அக்கா சுந்தரி, தம்பி வேலுசாமி தந்தை பொன்னுசாமி, ஏக்கத்துடன் காத்திருக்கும் கஸ்தூரி அனைவரினதும் முகங்கள் வந்து போயின. கடைசியாக தாயின் முகம் வந்தப்போது அவன் கண்கள் தானாக கண்ணிர் சிந்தியது. “நான் சாக மாட்டேன்” என திரும்பத்திரும்ப வாய் முணுமுணுத்தது.
மழைத் தண்ணீர் அவன் வாயினுள்ளே சென்றது. அவனுக்கு தாகமாக இருந்தது. இதயம் வேகமாக துடித்தது. திடீரென கால் கைகளில் உணர்வுகள் அற்றுப்போவதைப்போல இருந்தது. அவன் தன் சக்தியெல்லாவற்றையும் ஒன்றுதிரட்டி “நான் சாகமாட்டேன்.? எனக் கூற முற்பட்டான். ஆனால் திறந்த வாய் அப்படியே மூடாமல் நின்று போனது. மழைத் தண்ணீர் வாய் வழியாக உள்ளே போகாமல் வெளியே வடியத் தொடங்கியது. எங்கேயோ மின்னல் வெட்டியது. மழை இன்னமும் விடாமல் பெய்து கொண்டேயிருந்தது. அந்த சவுக்கு மரம் எந்தவித அசைவுமில்லாமல் மழையில் நனைந்து கொண்டேயிருந்தது.
(யாவும் கற்பனை)
தாளர் மாநாடு -2011
57,89 ஆம் திகதிகளில் நடைபெறவிருக்கும் சர்வதேச தமிழ்
லிருந்து வருகை தருபவர்களும், மாநாட்டில் இடம்பெறும் -டுரைகள் சமர்ப்பிப்பவர்களும் சிறப்புப் பேராளர்களாகக் செய்வதற்கு எவ்வித கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. ர்கள் ரூபா ஆயிரம் (1000) செலுத்திப் பேராளர்களாகத் றும் நாட்களில் உணவு, தேநீர் போன்றவற்றுடன் மாநாட்டு பும் வழங்கப்படும். வரிக்கு 2010 டிசம்பர் 25 ஆம் திகதிக்கு முன்னர் பணத்தை வேண்டிய வங்கி கணக்கு விபரம்: BANKWELLAWATTEBRANCHA/CNUMBEROO901.0448539
ப்பிட்டபெயர் விலாசத்திற்கு வெள்ளவத்தை தபாற்கந்தோரில் தும் ரசீது அனுப்பி வைக்கப்படும். அந்த ரசீதைக் காண்பித்து சய்துகொள்ளலாம். பித்து தம்மைப் பார்வையாளர்களாக பதிவு செய்த எவரும் 5ளுக்குரிய சலுகைகள் வழங்கப்படமாட்டாது.
இலக்கியம், 3. உலகத்தமிழ் இலக்கியம், 4. செவ்விதாக்கம் லைகள் 7.இணையமும் வலைப்பதிவுகளும், 8. மொழிபெயர்ப்பு ளில் அமையவேண்டும். சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டு ட்டுரை சமர்ப்பிக்க விரும்புபவர்களும் சர்வதேச எழுத்தாளர் க்கு முன்னர் தமது கட்டுரைகளை திரு.தி. ஞானசேகரனுக்கு டைக்கும் கட்டுரைகள் எவ்வித காரணம் கொண்டும் ஏற்றுக்
குழுவினால் பரிசீலிக்கப்படும் அறிஞர் குழுவினால் க்க அனுமதிக்கப்படும்.
- தி. ஞானசேகரன்
19

Page 22
சித்திரா சின்னராஜன்
வாலித்தாகத்திற்கு தேன் குடிக்க வட்டமிடும் ulerts aftect பருவச் சைடிகளில் பூத்துக் குலுங்கும் மங்கை மலர்களை கசக்கி மனந்தபின் கைவிட்டுப் புறப்பது வேறு மலருக்காகவா..?
“எங்கள் இல்வாழ்வு 2 dibGoTarti uluaertoprest5” qdin உறுதி மொழிதந்தவரே உறவுப் பாலத்தை உள்ளத்தில் கட்டிஜிட்டு வாழ்க்கை என்னும் ஒடத்தை என் கண்ணிரில் மிதக்கeைடு எந்த மாதவியுடன் கானல்வரிப் பாடலைப்
սրԼւ* சென்றீர்கள்.?
காதல் கவிதைகளை விரைந்து
என் இதயத்திற்கு
ர்ச்சனை மலர்களாய்
சமர்ப்பணம் செய்தவரே !
Sarasolo கலையாத
என் வாழ்வுக்கு
சமாதி கட்டிவிட்டு
எந்த மங்கைக்காக
புதுக்கவிதை எழுதத்
வதாடங்கி விட்டீர்கள்.?
தினம்தினம் உங்கள் அன்பு திேகளை என் இதயப் பேரேடில்
مش
MANØMAJOROPEAAEROPEAAEROMANOMAJERØMaeøeMaret.
 

6/W6/W6/W
நிரந்தர வைப்பாகச் சேமித்து வைத்தேன் ஆனால் நீங்களோ prieulel– aspréarrasbouluprti என்னை விசிவிடீடு புது உறவுதேடிப்
νύμιει ξσξαπτ---2
eldrugy உங்கள் வரவுக்காக புல்லாங் குழலாய் կարcղծ இசைத்தேன் என்னை
வெந்தணலில் விறகாய் வீசிவிடீடு எந்த மோகினியுடன் தேன் நிலவைக் கான மோகம் கைாண்டீர்கள் ?
உங்களை ஓர் இராமனாக எண்ணிய என்னை அர்ப்பணம் செய்தேன். ஏனோ இராவணன் போல் elears வனங்களை நாடி ஆராதனை செய்கிறீர்கள்
கணவன் இறந்த பின்பே ஒரு வயன் விதவையாகிறாள். ஆனால் நீங்கள் உயிருடன் இருந்து வகாண்ட என்னை விதவையாக ஆக்கிவிட்டீர்களே ...!
மஞ்சள் குங்குமம் மாலை ofturтарз மங்களப் பைாருளாய் மணநாளில் தந்தீர்கள் ! தாலியைக் கட்டி வேலியாய் விடீடீர்கள் ! δύξυπεl σξαππ
ealesrairylu
விெள்ளாட்டுக் கிடாயாய்
&ala தோட்டங்களில்
மேச்சல் தேடுறீர்கள் !
peaQoevatoevonoevoepeataevaepeaeoevepea
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2010

Page 23
தன்னை இழந்த தணிக்கை அதிகாரி முன்னிடு:
திங்கஸார் சாயதெள தன் சமயப்பேருரையை நிறைவுசெய்த போது, டாம்பீகமாகத் தோற்ற மளித்த ஒரு போதகர்அவரை அணுகி “சுவாமி அகம் என்ற LO 6) Uj6) எவ்வாறு விட்டொழிப்பது என எனக்கு உபதேசிக்க வேண்டும்” என்று கேட்டார். அவர் ஆகமங்களில் தனக்கு உள்ள அறிவை வெளிக் காட்டி வாதம் புரியவிரும்புகிறார் என்பதை விளங்கிக் கொண்ட சாயதெள “கற்றறிந்த இல்லறத்தீர், நான் பிரசங்கம் செய்து களைத்துவிட்டேன். அன்றியும் தன்னை இழந்த சமயத்தணிக்கை அதிகாரியாக வர நான் விரும்பவில்லை” என்றார்.
ప్రg:
எல்லாத் தணிக்கை அதிகாரிகளையும் போலவே இந்த சமயத்தணிக்கை அதிகாரியும் ஆகமங்களில் தேர்ச்சி பெற்றிருந்ததுமல்லாமல், ஈவிரக்கமற்றவராய் இருந்ததோடு, அரசனின் விசுவாசியாயும் விளங்கினார்.ஒருநாள்மாலை,தன் “இரையைத் தேடித்தெருவில் அலைந்துகொண்டிருந்தபோது, ஊருக்குப்போய், தன் தாயைப் பார்க்கும் ஆசையால், குருமடத்திலிருந்து களவாக வெளியேறிய ஒரு சீடப்பிள்ளையை 'லபக்” என்று பிடித்துக்கொண்டார்."இந்த இருளில் பெருந்தெருவில், சீடப்பிள்ளை என்ன செய்கிறீர்” என்று அவரை மறித்துக் கேட்டார். சீடர் நடுங்கியபடி சொன்னார். “பெரிய அதிகாரியே! நான் கேவலம் ஒரு சீடன் அம்மாவைப் பார்க்கப் போன நான், இப்பொழுது குருமடத்துக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறேன்” “உம்மை நான் கைது செய்கிறேன். உமது தலைமைக் குருவிடம் என்னை அழைத்துச்செல்லும்,உமக்கெதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்றார் தணிக்கை அதிகாரி
பயந்து போன ஏழைச்சீடர் திமிர்பிடித்த தணிக்கை அதிகாரியை குருமடத்துக்கு அழைத்துச்சென்றார். மூடி இருந்த படலைக்கு வெளியே நின்ற படி தணிக்கை அதிகாரி உரத்துக் குரல்கொடுத்தார். “அரசர் ஆணை, கதவைத் திறவுங்கள் மதிப்புக்குரிய சமயத் தணிக்கை அதிகாரி தலைமைக்குருவைச் சந்தித்து, வழிதவறிய ஒரு துறவிக்கெதிராகக் குற்றப்பத்திரிகை முன்வைக்க விரும்புகிறார்" கதவுக்குப் பொறுப்பான தொண்டர் ஓர் ஒட்டையினூடாகப் பார்த்தார். தணிக்கை அதிகாரி தாம் கைதுசெய்த சீடரோடு நிற்பதைக்கண்டார். நடுங்கிக் கொண்டிருந்த சீடர் தப்பியோடுவதற்கு ஒரு வாய்ப்பளிக்க விரும்பிய தொண்டர் சொன்னார் “மதிப்புக்குரிய தணிக்கை அதிகாரி அவர்களே,தலைமைக்குருதியானத்தில் இருக்கிறார். அவரைக் குழப்ப முடியாது. அவர் அனுமதியின்றி கதவைத்திறக்கவும் முடியாது. தயவுசெய்து காலையில் வாருங்கள்”
தணிக்கை அதிகாரி கடும்கோபம் கொண்டார். குருமடத்தின் கதவை உடைத்து உள்ளே போக அரசரால் கூட
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2010
 

முடியாது என்பது அவருக்குத் தெரியும். நள்ளிரவு ஆகிவிட்டபடியால், அண்மையிலுள்ள மடத்தில் இரவைக் கழிக்க முடிவு செய்தார் "சீடரே நீர் இப்பொழுது ஒரு கைதி என்பது நினைவில் இருக்கட்டும். தப்பியோட முயற்சி செய்தீராயின் ராஜதுரோகக் குற்றத்துக்குள்ளாவீர்” என்று எச்சரித்தார். அதன்பின், கீழே அமர்ந்து ஒரு தூணில் முதுகைச் சாய்த்தவராய், சீடரை வைத்தகண் வாங்காது நோக்கியபடி இருந்தார், இரண்டொரு மணித்தியாலம் செல்ல தவிர்க்க முடியாதபடிதணிக்கை அதிகாரிஉறங்கிவிட்டார்.
சீடப்பிள்ளை சிந்திக்கலானார் “இப்பொழுது நான்தப்பி ஓடினால், பொழுது விடிந்ததும் இவர் தலைமைக் குருவிடம் போய், என்னை ஒப்படைக்கும் படி கேட்பார் எனவே, இவரை ஏமாற்ற ஒருவழி காணவேண்டும்”தலையைப்போட்டுடைத்த பின், ஒரு வெளிச்சம் ஏற்பட்டது. இந்தக் கட்டத்தில் தணிக்கை அதிகாரிவாயைத்திறந்தபடி குறட்டைவிட்டுக்கொண்டிருந்தார். சீடர் தணிக்கை அதிகாரியின் ஆடையைக் களைந்து, தன் மஞ்சள் அங்கியால் அவரைப் போர்த்தினார். அதிகாரியின் உடையை அணிந்து கொண்டு குருமடத்துக்கு ஓடினார். காத்திருந்த தொண்டர் அவரை உள்ளே அனுமதித்தார்.
பொழுது புலர்ந்தது, கண்விழித்த தணிக்கை அதிகாரி சீடர் ஓடிவிட்டதையும், தான் மஞ்சள் அங்கி அணிந்திருப்பதையும் கண்டு ஆத்திரமடைந்தார், குரு மடவாயிலுக்குப் போய்த் தன்னை இன்னார் என அறிவித்து தலைமைக்குருவை உடனே காணவேண்டும் எனக்கோரினார், “நீர் எப்படித் தணிக்கை அதிகாரியாக இருக்கமுடியும் ? மதிப்புக்குரிய தணிக்கை அதிகாரி கைதுசெய்த வழிதவறிய சீடர் அல்லவோ நீர்” என அப்பாவித்தனமாய்க் கேட்ட தொண்டர் “எங்களுடைய குருமடத்தைச் சேர்ந்தவர் என அவரிடம் பொய் சொல்லியிருக்கிறீர்.தணிக்கை அதிகாரியிடம் மீண்டும் அகப்படும் முன் ஒடித்தப்பும்” என மூச்சுவிடாமல் பேசினார்."நான்தான் தணிக்கை அதிகாரி”என வாதாடினார் வந்தவர் “அப்படியாயின் நீர் கைதுசெய்த சீடர் எங்கே” என மடக்கினார் தொண்டர். “அவர் தப்பி ஓடிவிட்டார் என்றார் தணிக்கை அதிகாரி அப்படியாயின் நீர் உம்மைத்தொலைத்து விட்டு, சீடராக அவதாரம் எடுத்துவிட்டீர்”எனக்கேலிசெய்தார் தொண்டர். தோல்வியினால் ஏற்பட்ட அவமானத்தை தாங்க முடியாததணிக்கை அதிகாரி, இரவுதங்கியமடத்துக்குப்போய், ஒளித்துக்கொண்டார். மறுநாள் இரவுதான் வெளியே வந்து, தன் வீடுபோய்ச் சேர்ந்தார்.
21

Page 24
பள்ளியிலிருந்து திரும்பி வந்தவுடன்
அவன் வைத்துச் சென்ற ஏராளம் முகங்களிலுமிருந்து சிலவற்றை அணிந்து கொண்டு
மரங்களோடும் பறவைகளோடும் விளையாழனான் பிறகு அவனுடைய கூட்டாளிகளும் வந்தார்கள் வெவ்வேறு விதங்களிலான முகங்களோடும் குரல்களோடும்
முற்றத்தில் வானத்தை இறக்கி அதில் வண்ணமியர்கள் திசைகளை மாற்றி
நிறங்களை மாற்றி கோணங்களை மாற்றி விரும்பியவாறெல்லாம் குழைத்தரிகள் បូព៌ា មិញ ព្រោយតាលី ម៉ាយឃឺយព្រួយរយជាច្រើ சுவிங்கமாகவும் மாறிக் கொண்டிருந்தது
அந்தப் பின்னேரத்தை அவர்கள்
ឃ្លភ្នំឆ័ ៦ ឆ្នា பொழுது ஒரு தீராயானமாகிக் கரைந்துவர அதை அவர்கள் பருகினார்கள் அவர்களிடம் சிறகுகளிருந்ததை
அப்போது நான் கண்டேன்.
 

இரவு, ஆந்து உறங்கிய குழந்தையைச் சுற்றி கனவு முட்டைகள் மிகுந்து கொண்டிருந்தன. 66យល់
எழுந்த குழந்தை பள்ளிப்பையில் அடைந்து கொண்டிருந்தான்.
புத்தகங்களுக்கிடையிலும் குறிப்பேடுகளிலும் திணறிக் கொண்டிருக்கும் பதற்றத்தையும் நெருக்கழயையும்
கனவு முட்டைகள் நொருங்கிக் கிடந்தன வெளியே,
பறக்கவும் நதியாகிக் குதித்தோடவும் ឱ១fiយក៏ យួរថា மலரவும் தெரிந்த குழந்தைகளை எதுக்காக பள்ளிக்கு அனுப்யவேணும் என்றெனக்குப் புரியவில்லை.
பாழாய்போன இந்த ប្រវរ្យឈឺ ការប្រឹក្សាឃុំ புழுத்த நாட்களையும் தள்ளுவதற்காக ©ហើយចាំ ចាំតាម៉ៃ យ៉ាំង២ បច្ចេ5 வேணும் எற்ாள் ព្រួយ
அதுவும் சரிபோலத்தான் பட்டது பிழையென்று தெரிந்தபோதும்,
ഞു தைஇந்
সোিসরােনারঞ্জ

Page 25
எதிரிவினை
மாற்றுக் கரு மதிப்பளிக்கப்
ஆரோக்கியமான சர்ச்சை
fழத்தில் இன்றைக்குப் பத்திரிகைகள் ஆயினும் சரி, சஞ்சிகைகள் ஆயினும் சரி ஆரோக்கியமான விவாதங்களைக் கிளப்புவதாகக் காணோமே என்று நான் கவல்வதுண்டு. அக்குறை, இன்று ஞானத்தினால், தீர்ந்துள்ளது. இத்தகைய ஆரோக்கியமான சர்ச்சைகளை வளர்த்தெடுப்பதன் வாயிலாக, புதிய சிந்தனைகளுக்குக் களம் படைக்கலாம். அவ்வகையில், அண்மைக்காலமாக, ஞானம் இதழின் பக்கங்களில் தஸ்லிமா நஸ்ரீன் சர்ச்சைக்குரியவராக மாறி இருக்கிறார். இவ்விவாதம் இன்னும் தொடரப்படுவது காலத்தின் கட்டாயமாகிறது.
ஒருசமூகவியல் (Sociology) ஆய்வுமாணவனாக நின்று இவ்விவாதத்தில் பங்கு பற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வகையில், சென்ற இதழின் சாரணா கையூம் எழுதியுள்ள விடயங்களை புறவயமாகவும், பக்கச் சார்பின்றியும், நடுநிலையாகவும் அணுக முற்படுகிறேன்.
மேலாதிக்கக்கருத்தியல்:
தந்தையாதிக்க/ஆணாதிக்கப்பார்வை நமது இலக்கியம் தொடர்பான கண்ணோட்டத்தையும் பாதிக்கவே செய்கிறது. அந்த வட்டத்தினுள்தான் சாரணா கையூமும் அடங்குகிறார். வாசிக்கும் சமூகத்தை அகலிதமாகச் சிந்திக்கத் தூண்டிய காத்திரமான எழுத்தாளர்களைத்'தாக்குவதில் அப்படி ஒன்றும் ஆச்சரியமில்லை. ஆயின், இந்திய எல்லையையும் தாண்டிப் பலராலும் படிக்கப்பட்டு, இன்றளவும் நயக்கப்படுகின்ற வால்காவிலிருந்து கங்கை வரை நூலாசிரியரையும், சியோனிஸத்தின் கைக்கூலிக்காரராகச் சித்திரிப்பதே எனக்கு வியப்பை ஏற்படுத்தியது. மனித நாகரிகப் பரிணாமத்தின் படிமுறை வளர்ச்சியை எவ்விதமான பூச்சுற்றலும் இன்றி, சமூக விஞ்ஞானப்பாங்கில் முன்வைத்த நூல் அது.
அழகியலா? கருத்துச்சாரமா?
தஸ்லிமா, இலக்கிய மாணவியாக இருந்ததே இல்லை” என்கிற பேராசிரியர் சிராஜுலின் கூற்றினை எடுத்தாளும்
தமிழ் ஆர்வலர்களே!
சர்வதேச எழுத்தாளர் விழாவிற்கு இ
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2010

தத்துகளுக்கு பட வேண்டும் !
- ਲ ਲਈਸੁ6
இழுக்குப் பல்கலைக்கழகம்
கையூம், எழுத்தின் அழகியலை விட, அதனது கருத்துச் சாரமே பிரதானமானது என்பதை கவனிக்கத் தவறி விட்டார்.
உண்மையில், 'தஸ்லிமாவின் உணர்வுகளை நாம் சரியாகப் புரிந்து கொள்ள முன்வர வேண்டும். பேராசிரியர்களால் உண்மையான இலக்கியவாதிகளை இனங்காண முடிவதில்லை என்கிற விடயத்தையும் நாம் ஞாபகப்படுத்திக் கொள்ளவேண்டும்.
தஸ்லிமாஒருஎதார்த்தவாதி
பென்குயின் நிறுவனத்துக்கு விலை போனவராகவும், மேலைத்தேயவாதிகளின் முகவராகவும் சித்திரிக்கப்படும் தஸ்லிமா ஏன் அவ்வாறு எழுதும் சூழ்நிலை ஏற்பட்டது? பால்நிலை சார் பக்கச் சார்பான, திணிக்கப்படும் கருத்தியல்கள், புலப்பதிவுகள், அசமத்துவமான சமூகச் சட்டங்கள் தஸ்லிமாவின் நிஜவாழ்வின் குரல்வளையை நெரித்த போது, வீறிட்டுப் பிரவகித்த காம்பீர்ய நாதமே லஜ்ஜா !
பாரதி பாடினான், "அச்சமும், நாணமும் நாய்கட்கு வேண்டுமாம்” என்று. ஆண் எதையும், எப்படியும் எழுதலாம்பெண்தன் உணர்வுகளை அடக்கி,வெறும் அழகுப்பதுமையாக வலம்வர வேண்டும் என்பது என்ன நியாயம்?
பாலியல் பற்றி இன்றைய நவீன யுகத்தில் வெளிப்படையாக எழுதுவது சமூகக் குற்றமா? பெண்கள் வெளிப்படையாக எழுத முன்வரும்போது, அவர்களது தனிப்பட்ட வாழ்வின் சில அடையாளங்களை காட்டி வாய்ப்பூட்டுப் போடும் கைங்கரியத்திலேயே கையூமும் இறங்கியுள்ளார்.
என் வரையில் தஸ்லிமா ஒரு மனவழுத்த நோயாளி அல்லர். அவரின் வாழ்வியலை, சிந்தனையின் விசாலிப்பை புரிந்து கொள்ளத்தவறும் குறுக்கலான, மரபார்ந்த, ஒரே வார்ப்பான (Storeo type) சிந்தனை முறைமையிலும், பார்வையிலுமே நோய் உள்ளது.
ன்னும் 36 நாட்களே இருக்கின்றன.
23

Page 26
“செல்வராகவன்"
பிறசன்ற் சேர்”
“காயத்திரி"
பிறசன்ற் சேர்”
அகல்யா"
பிறசன்ற் சேர்”
கயல்விழி”
மெளனம்.
கயல்விழி.?”
"அவள் இண்டைக்கும்வரேலசேர்"
கயல்விழி அடிக்கடி பாடசாலைக்கு வராமல் வீட்டில் நிற்பதை எனக்குத் தெரியப்படுத்தும் நோக்கத்துடன் அந்த மாணவி 'இண்டைக்கும் என்ற சொல்லைக் கொஞ்சம் அழுத்திச் சொன்னாள். கயல்விழிபாடசாலைக்கு ஒழுங்காக வராததை நானும் சிலநாட்களாக கவனித்துவருகிறேன்.
நான் முதல் முதலாக டீயூட்டி அஸ்யூம் பண்ணிய நாளிலிருந்தே எனக்கு கயல்விழி மீது ஒரு தனிப்பற்று. என்சின்ன வயதிலேயே நான் வாசித்த அகிலனின் கயல்விழி நாவல்தான் அதற்குக் காரணமா? அல்லது என் இளமைக்காலத்து காதலியின் (முதல் காதலி) தோற்றத்தில் அவள் இருந்ததுதான் அதற்குக் காரணமா? நான் அறியேன்.
எனது பட்டப்பின் கல்வி டிப்ளோமா வகுப்புகளில் ஆசிரியத்துவத்திற்கு இலக்கணமாய் விளங்கும் ஆசான்களின் விரிவுரைகளில் கற்கின்ற சர்ந்தர்ப்பம் கிடைத்ததன் விளைவாகவும்,
ஆசிரியர் பணியில் ஈடுபட்டு சில வருடங்கள் கடந்துவிட்டதால் ஏற்பட்டுவிட்ட ஆசிரியத்துவப் பணியின் விளைவாகவும்,
அவளை என்மகளை நோக்குவது போன்றே நோக்கினேன்.
முதல் முதலாக டீயூட்டி அஸ்யூம் பண்ணிய நாளை எளிதில் மறந்து விடமுடியாது. அதிலும் ஆசிரியராக கடமையேற்கும் நாள் இருக்கிறதே, அந்தநாளை யாரால்தான் மறந்து விடமுடியும்?
இவர்தானா இனி எங்களுக்குப் படிப்பிக்கப் போகும் ஆசிரியர்?’ என்ற ஆவலுடன் நோக்கும் மாணவர்களின் JITT606JLL JLN.
புதிதாக ஒருவர் வந்து விட்டார். எமது ஆளணிப் பற்றாக்குறை குறைகிறது. இவர் எமது பாடசாலைக்கும் மாணவர்களுக்கும் மனமுவந்து சேவையாற்றுபவராக இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் வரவேற்கும் அதிபரும்,
புதிதாக எமக்கொரு நண்பன் கிடைத்து விட்டான். இவனையும் எம்முடன் இணைந்து கடமையாற்ற வைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் நோக்கும் ஆசிரியர்களும்,
‘ஆரிதுபுதுசா வந்திருக்கிறது? பாப்பம் என்ன கிழிக்கப் போகுதெண்டு. என மனதிற்குள் வாழ்த்தும் சில ஆசிரியர்களும்,
24
 

அப்பாடாகிஸ்றிக்கு ஒருத்தன் புதுசா வந்திட்டான். ரைம் ரேபிள் சுமைகுறையும் என்று சிந்திக்கின்ற ஆசிரியர்களும்,
இனி transfer இற்கு அப்பிளை பண்ணலாம் என்று கணக்குப் போடும் சிலரும்,
உவர் டிகிரி முடிச்சாப்போல பெரியாளே? பாப்பம். எங்கட எக்ஸ்பீரியன்ஸிக்கு முன்னால தாக்குப்பிடிக்கிறாரே எண்டு என்றுதம்மைத்தாமே குறைத்து மதிப்பிடும் ஆசிரியர்களும்,
தாம் நினைத்ததை வெளியில் சொல்லாமல் முகமலர்ச்சியுடன் வரவேற்கும் அந்த நாளை மறந்துவிட முடியுமா என்ன?
"Göi Graduateappointment(ö63Göğ5660TGU60), 965f போட்டிருக்கிறாங்கள்” அதிபர் என் முகத்தை உற்றுப்பார்க்கின்றார்.
"சொல்லுங்கோ சேர்"
EiSir history special Gaig firstclass956555,555. ஆனால். இப்ப AL க்குப் போடேலாது. அதுதான் யோசிக்கிறன்"
"அது பரவாயில்லை சேர் எந்த வகுப்பெண்டாலும் நான் செய்யுறன்"
"thankyouசேர். இதேமாதிரிசிந்தனையோடதொடர்ந்தும் வேலை செய்யுங்கோ. இப்ப ஏழாம் வகுப்பைப் பொறுப்பெடுங்கோ"
நான் சற்று அதிர்ச்சியடைத்து பின்னர் சுதாகரித்துக்கொண்டேன். அதிபர்அதனைப்புரிந்துகொண்டார்.
"இப்ப வாசுகிரீச்சர் meternity லீவில நிக்கிறா. அந்த வகுப்பைப் பாருங்கோ. next year time table செய்யேக்க உங்களுக்குALதாறன்"
"சரிசேர்”
நான் வகுப்பிற்குச் சென்ற முதல் நாளே கயல்விழியை இனம்கண்டுகொண்டேன். கயல்விழியின் சுறுசுறுப்பும், புதிய விடயங்களை அறிந்துகொள்வதில் உள்ள ஆர்வமும்,படிப்பதில் உள்ள அக்கறையும், கற்றல் புறச் செயற்பாடுகளில் உள்ள ஈடுபாடும் என்னை மாத்திரமின்றி வேறுசில ஆசிரியர்களையும் அவளின் மீது அக்கறை கொள்ளச் செய்ததில் எந்தவொரு வியப்பும் இல்லை.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2010

Page 27
சர்ந்தர்ப்பவசமாக நான் அதே வகுப்பிற்கே தொடர்ந்தும் வகுப்பாசிரியராக கடமையாற்றவேண்டியசூழ்நிலை ஏற்பட்டது. புதுசா வந்தவர்ருக்கு இப்பALtimetableஐத் தூக்கிக் குடுக்கேலாது”
நாங்கள் experienceteachcrsஇருக்கிறம் அவருக்குஎப்பிடி இப்பALகுடுக்கிறது?"
“Degree முடிச்சாப்போல பெரியாக்களோ, உடன் AIL குடுக்கேலாது கொஞ்சநாளைக்கு இருக்கட்டும்"
அவரவர் பாட்டுக்கு எதேதோ பேசிக்கொண்டார்கள். “சேர் என்ன செய்வம்? நீங்கள் புதுசா வந்தனீங்கள். கொஞ்சம் ஸ்ராஃப்பை அனுசரிச்சுப் போனால் நல்லது”
"நான் ஒரு மறுப்பும் சொல்லேல சேர். எந்த வகுப்பெண்டாலும் செய்யுறன்"
இடைநிலை வகுப்புக்களுக்கு வரலாற்றுப்பாடத்திற்கும், கயல்விழியின் வகுப்பிற்கு வகுப்பாசிரியாராகவும் மூன்று வருடங்களாக பொறுப்பாக இருக்கிறேன்.
இடைநிலை வகுப்புக்களுக்கு கற்பிப்பதென்பது ஒரு வித்தியாசமான அனுபவம். கிடைத்தற்களியஇன்பம். அதனை சொல்லிலோ எழுத்திலோ வடித்துவிட முடியாது. நேசித்து அனுபவித்தால்மட்டுமே விளங்கும். அந்த அனுபவத்தை இழக்க விரும்பாமலே நான் தொடர்ந்தும்மறுப்புச்சொல்லாமல் அந்தத் ரைம்ரேபிளை ஏற்றுவருகிறேன் என்பது யாருக்கும் தெரியாத ரகசியம்
குழந்தைப் பருவத்தில் பாடசாலைக்கு வந்து, பிள்ளை பருவத்தைக் கடந்து, கட்டிளமைப் பருவத்தை அணுகும்போது அம்மாணவர்களின் நடத்தைகளில் ஏற்படுகின்ற மாற்றங்கள் எம்மை அதிசயிக்க வைக்கும்.
"மூக்கு வடிவதுகூடத்தெரியாமல் அழுதுகொண்டிருந்த இவனா இது?" என்ற எண்ணம் அடிக்கடிதோன்றும்.
விஞ்ஞான ரீதியாக சொல்வதாக இருந்தால் ஓமோன்களின் விளைவினால் ஏற்படும் மாற்றங்கள் என்று சொல்லலாம். சாதாரண வார்த்தைகளில்உடல் வளர்ச்சிஎன்று சொல்லலாம். காரணம் எதுவாக இருந்தாலும், அந்த வயதில் அவர்களின் ஒட்டுமொத்த செயற்பாடும் மாறுவதென்னவோ உண்மைதான்.
ஆண் பிள்ளைகளாக இருந்தால் தம்மைத்தாமே பெரியவர்களாகப் பாவனை செய்து, தம்மை மற்றவர்கள் பெரியவர்களாக கருதவேண்டும் என்பதற்காகவே தம்முடைய நடத்தைகளை மாற்றிக்கொள்வர்.
பெண்பிள்ளைகளாக இருந்தால் அச்சம், மடம், நாணம், பயிப்பு எனும் நால்வகைக் குணங்களும் ஒருங்கே கிடைக்கப்பெற்றுதன்னை மற்றவர்கள்'இவள் அழகானவள். நல்லபழக்கவழக்கம் உள்ள பண்பான பிள்ளை'என்றுமதிப்பிட வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் நடந்து கொள்வர்.
பருவகால மாற்றம் போன்று இப்பருவ வளர்ச்சியும் ரசிக்கத்தக்க ஒன்றுதான். அந்த வாய்ப்பு தொடர்ச்சியாக சீனியர் ரீச்சர்ஸினால் எனக்கு வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
ஏழாம், எட்டாம், ஒன்பதாம் தரங்களில் கயல்விழி ஒரு நாளேனுேம் பாடசாலைக்கு வராமல் நிற்பதில்லை. பத்தாம்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2010

தரத்திலிருந்து அவளை ஏழரைச்சனியன் நன்றாகப் பிடித்து விட்டது என்று எண்ணுமளவிற்கு அவளின் பாடசாலை வரவு மோசமானதாக இருந்தது.
இதைப்பற்றி ஒருநாள் அவளிடம் விசாரித்தேன். அவளிடமிருந்து எந்தவொரு பிரயோசனமான பதிலையும் பெறமுடியவில்லை.
அவளின் வீட்டிற்குச் சென்று தாய், தகப்பனை விசாரித்து,
அதிபரிடமும் முறைப்பாடு செய்து, தண்டனை வழங்கி, அவளைப்பாடசாலைக்கு ஒழுங்காக வரச்செய்வதற்காக நான் எடுத்த எந்தவொரு முயற்சியும் பயனளிக்கவில்லை.
உவருக்கேன் தேவையில்லாத வேலை? எத்தின பிள்ளையள் ஒழுங்கா வராமல் இருக்குதுகள். அவளிலமட்டும் ஏன் உவளவு அக்கறை?
உவற்ற போக்குவாக்குகள் அவளவு சரியில்லை. பொம்பிளப்பிள்ளயளெண்டா விழுந்தடிச்சுக் கவனிக்கிறார்
போன்ற முதுகுக்குப்பின்னால் கதைக்கும் கதைகளும், சேர்கிராமப்புறங்களில்உப்பிடித்தான் சேர். தாய்தகப்பன் பிள்ளயளக் கவனிக்கிறேல. அவங்களுக்குப்பிள்ளப்பெறவே நேரங்காணாது டசின்கணக்கில பெத்துவச்சிருக்கிறாங்கள்" "நீங்கள் கணக்க யோசிக்கிறியள் சேர். என்ன நடந்தாலும் நடக்கட்டுமெண்டு பேசாமல் இருக்கப்பழக வேணும்"

Page 28
அதுகளயும் குற சொல்லேலாது சேர். சாப்பாட்டுக்கு வழி கிடந்தாவெல்லோ படிப்பைப் பற்றி யோசிக்கிறதுக்கு பெடியள் எல்லாம்சனிஞாயிறுலீவுக்களல்லாம்வேலக்குப்போறாங்கள்சேர்" இப்படி எனக்கு அறிவுரை சொல்வதாக நினைத்து என்னைக் கட்டிப்போடும் முயற்சியில் தான் பலர் ஈடுபட்டிருந்தார்கள்.
பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டிக்கான பயிற்சிகளில் மாணவர்கள் ஈடுபட்டிருந்த போது கயல்விழி வகுப்பில் மேசையின் மேல் தலைவைத்துப் படுத்திருப்பதைக் கண்டு ஒருநாள் கூப்பிட்டு விசாரித்தேன்.
"காலிலகிழுவங்கட்டைகுத்தி நடக்கேலாது சேர்”என்று நொண்டி நொண்டி நடந்து காட்டினாள்.
கயல்விழியின் நடத்தைமாற்றம் எனக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. சயன்ஸ் "ரீச்சரிடம் இது தொடர்பாக கலந்தாலோசிக்க முயன்றேன். ஏனோ அவர் அன்றிலிருந்து என் முகத்தில் விழிப்பதைத் தவிர்க்கத் தொடங்கிவிட்டார்.
பிறகு ஒரு நாள், "லேடீஸ் ரீச்சரோட என்ன கதக்கிறதெண்டு தெரியாது. மனேர்ஸ் தெரியாத ஆள்"என்றுசயன்ஸ்ரீச்சர்கதைத்ததாகக் கேள்விப்பட்டேன்.
ஆசிரியத்துவத்தின் மகத்துவத்தை உணராமல் ஒவ்வொருவரும் நடப்பதை அவதானித்த போது கையாலாகாதவனாக நின்றேன். சில நாட்களுக்குப் பிறகு கயல்விழிமுற்றுமுழுதாகபாடசாலைக்குவராமல்நின்றுவிட்டாள். ஒருநாள் காலை நேரம், பிறேயர்ஸ் முடிந்து வந்தபோது “என்ன சேர்? பேரன் பிறந்திருக்கிறானாம்?" என்று ஒரு ஆசிரியர் கேட்டபோது,உண்மையில் எனக்கு எதுவுமே விளங்கவில்லை.
“என்ன ரீச்சர் சொல்லுறியள்?" “உங்கட கிளாஸ் பெட்டைக்கு ஆம்பிளப்பிள்ள பிறந்திருக்குதாம்"
நான் திகைத்துப் போனேன். பூமி பிளந்து அண்ட வெளியில் தூக்கி வீசப்பட்டது போன்று தலை சுற்றத் தொடங்கியது. எனது சந்தேகத்தைத் தீர்ப்பதற்காக வகுப்புக்கு விரைந்தேன். வகுப்பில் மாணவர்கள் குசுகுசுவென்று ஏதோ கதைத்துக் கொண்டிருந்தார்கள். என்னைக் கண்டதும் சட்டென்று வகுப்பு அமைதியானது.
ஒரு மாணவிதயங்கித் தயங்கி என்னருகே வந்தாள். “தே’ நான் சொல்லு என்பதுபோலப்பார்த்தேன்.
கயல்விழிக்கு ஆம்பிளப்பிள்ள பிறந்திருக்குதாம் சேர்" “என்னடி சொல்கிறாய்?" நான் கோபமாகக் கேட்டேன். "அதுதான் சேர். கயல்விழிக்கு ஆம்பிளப்பிள்ள பிறந்திருக்குதாம்"
"உனக்கென்னண்டு தெரியும்?" "கயல்விழின்ர வீட்டுக்கு பக்கத்தில இருக்கிற மீனா சொன்னவள்”
அவள் தனிமையை நாடியபோதும், எப்போதும் சோம்பலாக இருந்தபோதும், பாடசாலைக்கு ஒழுங்காக வராதபோதும்
26

பாடசாலைச் செயற்பாடுகளில் ஆர்வமில்லாமல் இருந்தபோதும்,
அக்கறை எடுக்காத ஆசிரியர்களுக்கும், என்னைப்போல் அரைகுறை அக்கறை எடுத்த ஆசிரியர்களுக்கும் இன்று கதைப்பதற்கு சுவாரசியமான சம்பவம் ஒன்று அகப்பட்டுவிட்டது.
ஒரு ஆசிரியரின் பணி வகுப்பறையில் கற்றல் கற்பித்தலுடன் நிறைவடைந்து விடுவதில்லை. மாணவனின் நலன்களிலும், அவனது நடத்தைகளிலும் அக்கறை கொண்டதாகவும், அவனது செயற்பாடுகளுக்கான பின்னணிக்காரணங்களை அறிந்து அதற்கான பரிகார நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும், அவனை அரவணைத்து அன்பு செலுத்தி வழிநடத்தி நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் ஏற்ற நற்பிரசையாக உருவாக்குவதற்கும், அந்த நோக்கங்களை அடைவதற்காக ஓயாது பாடுபடுவதாகவும் இருக்க வேண்டும். இதுவே தமது தலையாய பணியென்பதை ஒவ்வொரு ஆசிரியரும் உணர்ந்து நடக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் சஞ்சிகையொன்றில் வெளிவந்த"எதுவரை நீளும் ஆசிரியர் பணி?” என்ற கட்டுரை ஞாபகத்திற்கு வந்தது.
ஒரு சில நாட்களின் பின்னர் அந்தக் குழந்தை பெற்ற குழந்தையின் தந்தை அவளின் சித்தப்பன் என்றும், அவளது பெற்றோர்கள் வயல் வேலைக்காக சென்றிருந்த மழை நாள் ஒன்றில் தனது காம இச்சையைத் தீர்த்துக் கொள்வதற்காக அந்தச் சிறிய மலரை ஏதேதோ சொல்லி ஏமாற்றி நுகர்ந்தான் என்பதையும் கேள்விப்பட்ட போது நான் ஆசிரியராக இருப்பதில் அர்த்தம் இல்லை என்ற முடிவுக்கு வரவேண்டி இருந்தது.
பின்குறிப்பு
ஒவ்வொரு பெற்றோர்களும், முக்கியமாக கிராமப்புறங்களிலும்,தமிழர்களின் தலைவிதியாகவும் நிரந்தர வதிவிடங்களாகவும் மாறிவிட்ட அகதி முகாம்களிலும் வாழுகின்ற பெற்றோர்கள் தமது கட்டிளமைப் பருவப் பிள்ளைகளின் நடத்தைகளிலும் செயற்பாடுகளிலும் மிகுந்த அவதானத்துடன் இருத்தல் வேண்டும். அவர்களுக்கு தேவையான புத்திமதிகளையும், அறிவுரைகளையும் எல்லா நேரத்திலும் தவறாமல் வழங்கி, அவர்களை நல்லதொரு மனிதனாக, சமுதாயத்திற்கு ஏற்ற ஒரு பிரஜையாக மாற்றுவதற்கான முயற்சிகளில் ஓயாதுஈடுபட வேண்டும்.
ஆசிரியர்கள் கற்பிப்பது மட்டுமே தமது பணியென இருக்காது மாணவர்களுக்கு பல்வேறு வழிகளில் வசதி செய்பவர்களாகவும், வழிநடத்துபவர்களாகவும், ஆலோசகர்களாகவும் செயற்பட வேண்டும். இந்தக் கருத்துக்கள் பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் சென்றடைய வேண்டும் என்ற ஆவலே இக்கதையை எழுதுவதற்கு உந்து சக்தியாக அமைந்தது.
"சிறுவர்கள்மீதான பாலியல்துஸ்பிரயோகம்தண்டனைக்குரிய குற்றமாகும். மண்ணில் சுதந்திரமாய் வாழுவதற்கான எல்லா வகை உரிமைகளும் சிறுவர்களுக்கும் உண்டு”
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2010

Page 29
நவீன புனைகதைகளுள் சிறுகதைகள் வெளிவருகின்ற வேகமும் எழுத்தாளர்களால் அவை எழுதப்படுகின்ற தொகையும் மிக அதிகமாகும். ஆனால் எழுதப்படுகின்ற சிறுகதைகள் சிறுகதை என்ற இலக்கியத்தின் வகைக்குள் அமையாது போகின்றன. அதற்குக் காரணம் சிறுகதை வகை பற்றிய தெளிவின்மையே ஆகும். சிறுகதை என்றால் என்ன? பெயருக்கேற்ப சிறிய இலக்கிய வகை அது. உலகின் பெரும்பாலான சிறந்த சிறுகதைகள் பெரிதும் ஒரு சிக்கலை ஏற்படுத்தி இறுதியில் அவிழ்த்து விடை காண்பதாக அல்லது வாசகன் முற்றிலும் எதிர்பார்க்காத திருப்பத்துடன் நிறைவுறுவதாகவுள்ளன. படிப்பவன் மனதில் இறுதியில் ஒர் உணர்ச்சியை எஞ்சவிடுவனவாக அல்லது வாழ்க்கைக்கு ஒர் ஒளிப் புள்ளியைக் காட்டுவனவாக நல்ல சிறுகதைகள் அமைகின்றன. இன்றைய இளம் எழுத்தாளர்கள் தமது சிறுகதைகளில் சிலிர்க்க வைக்கும் உள்ளடக்கத்தை தெரிவு செய்கிறார்கள். ஆனால் மற்றைய உருவத்தையும் சிறுகதை நேர்த்தியையும் கைவிட்டுவிடுகிறார்கள். சிறுகதைக்குரிய நேர்த்தி என்பது எழுத்தாளனின் ஆளுமையைப் பொறுத்தது. சிறுகதை நிகழும் களவிபரணை, நடை, உத்தி, பாத்திரங்கள், உவமானங்கள், எல்லாவற்றிற்கும் மேலாக சமூகச் செய்தி எனப்பலவற்றைப் பொறுத்தது.
ஆனந்தனின் தண்ணீர் தாகம், இலங்கையர்கோனின் வெள்ளிப்பாதசரம் வைத்தியலிங்கத்தின் பாற்கஞ்சி எனும் கதைகள் பற்றிக் கடந்த முறைகளில் ஆராய்ந்தோம். இம்முறை சம்பந்தரின் மதம்'என்ற சிறுகதைைைய ஆராய்வோம். தமிழ்ச் சிறுகதைகளுக்கு அழுத்தமான காவிய மரபினைத் தந்தவர் சம்பந்தன் ஆவார். கலைமகள். கிராம ஊழியன். மறுமலர்ச்சி ஈழகேசரி முதலான பத்திரிகைகளில் அவரது பட்ைப்புகள் வெளிவந்தன. இருபதுக்கு மேற்பட்ட சிறுகதைகளைப் படைத்துள்ளார். ஈழத்தில் சிறுகதைகளில் உருவமும் உள்ளடக்கமும் செப்பமாக அமைவதற்குச் சம்பந்தனின் ஆரம்ப காலக்கதைகள் உதவியுள்ளன. சம்பந்தனின் சிறுகதைகளில் ஆத்மதத்துவ விசாரணைகள் அழுத்தமாகப் பதிந்திருக்கும். அவரின் சிறுகதைகளின் தொகுப்புதுறவு என்பதாகும்.
ஈழம் சிறுகதைத் துறையில் தலைநிமிர்ந்து நிற்பதற்கு வித்திட்ட பெருமை சம்பந்தரைச்சாரும். 1923 இல் பிறந்த சம்பந்தர் 1938இல் தனது முதலாவது சிறுகதையான தாராபாயை கலைமகளில் எழுதினார். இந்து - முஸ்லிம் இனக்கவரத்தை அடிப்படையாகக் கொண்டு சிறுகதை எழுதப்பட்டது. அதேபோல் எழுதப்பட்ட இன்னொரு சிறுகதை தான் மதம் அவரது எல்லா சிருஷ்டிகளிலும் சிறந்ததாக எனக்குப்பிடித்தது இதுதான்' என்பார் கனக செந்திநாதன். மதத்தின் கரு அல்லது உள்ளடக்கம் மிக எளிமையானது
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2010
 

- செங்கை ஆழியான் க. குணராசா
முஸ்லிம்பெண்ணான சலீமாவை காப்பாற்றியசந்திரநாத் என்ற இந்து இளைஞன் அவளைப் பாதுகாப்பாக உரியவிடத்தில் சேர்ப்பிக்கிறான். அதனால் காயமடைகின்றான். இரண்டு சமூகங்களுக்கான இனக்கலவரம் அர்த்தமற்றதென எடுத்துரைக்கிறான். மிகச் சிறியதொரு கருவை ஆசிரியர் அற்புதமான கதையாக உருவாக்கியுள்ளார். இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் முன்னர் வெடித்த இனக்கலவரம் அப்பாவி மக்களை அநியாயமாகப் பலிகொண்டது. முஸ்லிம்களும் இந்துக்களும் பலியாகினார்கள். அத்தகைய இனக்கலவரமொன்றில் சலிமா என்ற முஸ்லிம் பெண்ணை சந்திரநாத் காப்பாற்றுகிறான். இனக்கலவரங்களை அடிப்படையாகக் கொண்ட பல சிறுகதைகள் வெளிவந்துள்ளன. இலங்கையில் மூத்தபடைப்பாளி வரதர் கற்பு என்றொரு சிறுகதையைப் படைத்துள்ளார். முஸ்லிம் மக்களது வெறியும் இந்து மக்களின் வெறியும் இச்சிறுகதையில் நன்கு சித்திரிக்கப்பட்டுள்ளன. சம்பந்தரது சிறுகதைகளில் உலகப் பொதுமைஉள்ளடக்கமாக அமையும் சிறப்பைக் கொண்டுள்ளன. கதைகளின் உள்ளடக்கமாக மானிடநேயம் அமைவது பொதுப்பண்பாகும். சம்பந்தரின் சிறுகதைகள் உலகப் பொதுப் பண்புகளையே பேசுகின்றன. எல்லைகளைக் கடந்தவை.
இக்கதையில் பெரிதான உத்தி கையாளப்படவில்லை. சாதாரணமான உத்தியாயினும் கதை சொன்ன முறையால் வலுவடைந்துள்ளது. இச்சிறுகதையில் தொடக்கம், வளர்ச்சி, முடிவு என்ற விதிமுறையில் சாதாரணமான ஒழுங்குமுறையில் தான் கருதிய கருவை விபரித்துவிடும் சிறுகதைகளில் ஒன்றாக இச்சிறுகதையுள்ளது. மதம் அவ்வகையானது. இந்த வகைக்கு கதாசிரியர் நல்ல கதைசொல்லியாக இருக்கவேண்டும். மதம் நல்ல கதைசொல்லியால் எழுதப்பட்டுள்ளது.இச்சிறுகதையை சம்பந்தன் நான்கு பகுதிகளாக விபரித்துள்ளார். கால நீட்சி கவனத்திற்கொள்ளப்படவில்லை.1939களில் இவ்வகையான நல்ல சிறுகதையை எழுதியுள்ளார் சம்பந்தன் என்பது கவனிக்கத்தக்கது. புதிதாகக் கதை எழுதுபவர்கள் இந்த சாதாரண உத்தியையே கையாளலாம். தொடக்கம், வளர்ச்சி, முடிவு என்ற ஒழுங்கு முறையில் எழுதுவது ஏற்றதாகும் . கதையை வெகு இலகுவாக விபரித்துவிடலாம். காலநீட்சியை மனதில் கொள்ளாது கதையை மன 2 "؟. விருப்புப்படி ஒழுங்கு முறையில் சொல்லிவிடலாம். கதையை விபரிக்கும்போது சில கலையழகு முறையை கையாளவேண்டும் அவ்வளவுதான். அதைத் தான். சிறுகதைக்குரிய நேர்த்தி என்கின்றோம்.
27

Page 30
மதம் எளிமையான தமிழ் நடையில் எழுதப்பட்டுள்ளது. அழகான உரைநடைகையாளப்பெற்ற சிறுகதை இதுவாகும். ஆசிரியரின் உரைநடையில் மிக்க எளிமை காணப்படுகின்றது. காவியச் சுவை கொண்டவை. கற்பனை திறன் வாய்ந்தவை. இலக்கணவழுவற்றவை. "சலிமா என்னை ஒரு கெட்டவன். மனிதத் தன்மை இல்லாதவன் என்று சொல்லும்படி செய்துவிடாதே. எனக்காக கொஞ்சம் பொறுத்திரு” எனப்போகும். வலிந்து பெரிய வசனங்களை ஆசிரியர் தவிர்த்துள்ளார். வெள்ளிப்பாதசரத்தில் இலங்கையர்கோன் உரைநடையில் கையாண்ட அழகும் இலக்கியநயமும் இல்லை என்றேகுறிப்பிடவேண்டும். ஆனால்,பாத்திரங்கள் உரையாடும் போதும் பேச்சுவழக்கு கையாளப்படவில்லை. உரைநடையில், இவர் புனிதத் தன்மையைக் கையாள்வதாக செம்பியன்செல்வன் கூறுவார். பாத்திரங்கள் தூய்மையான தமிழில் உரையாடுகின்றன. இன்றைய சிறுகதைகளில் பாத்திரங்கள் தமது பிரதேச பேச்சுத்தமிழையே பேசுகின்றன. இஸ்லாமிய பேச்சுத் தமிழ் தென்னிலங்கைப் பிரதேசத் தமிழ். கிழக்கிலங்கைப்பேச்சுத்தமிழ்மலையகப்பேச்சுத்தமிழ் என்பன சர்வசாதாரணமாகச் சிறுகதைகளில் கையாளப்பட்டு வருகின்றன. பாத்திரங்களின உரையாடலில் அவ்வாறு கையாள்வது சிறப்பானது என்பது என் கருத்து. பாத்திரங்களை அவற்றின் இயல்புகளைப் படிப்படியாக வளர்த்துள்ளார். சந்திரநாத் மனிதநேயம் மிக்கவன். இந்து மதத்தினரிடையே செல்வாக்குடையவன்.செல்வந்தன். இரக்க குணம் உடையவன். இவை அனைத்தும் படிப்படியாக சம்பந்தரின் முழுக்கதையிலும் சொல்லப்படுகின்றன. அவரின் கதையைமுழுமையாகப்படித்தபின்னரேபாத்திர இயல்புகளைப் புரிந்து கொள்ளலாம். பேச்சு வழக்கில்லாமல் சிறப்புற்ற சிறுகதைக்கு சம்பந்தரின் மதம் தக்க உதாரணம்.
நல்லதொரு சிறுகதையின் நேர்த்தியை கையாளும் ஏற்ற உவமைகள் எடுத்தியம்புகின்றன. ஆனால், மதத்தில் அவ்வாறான உவமைகளை மருந்துக்கும் காணமுடியாது. இதனைக் கொண்டு அதற்காக இச்சிறுகதையைத் தள்ளிவிட முடியாதுள்ளது.எனினும் தக்க உவமைகள் தனிக் கம்பீரத்தை சிறுகதைகளுக்குத் தருகின்றன என்பதை மறந்து விடக் கூடாது. நமது முன்னோடி எழுத்தாளர் 1939 களில் தக்க உவமைகள் இல்லாமலேயே இப்படியொரு அற்புதமான கதையை எழுதியுள்ளார் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
மனித குலத்திற்கான இரக்கத்தைக் கதை எங்கும் காணலாம். இனக்கலவரத்தினால் ஏற்படும் இழப்பினை சமூகத்திற்கு ஒவ்வாமையை ஆசிரியர் விபரிக்கத் தவறவில்லை. சமூகப்பயன் அதுதான்.
பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்னும் எண்ணமே இன்று தேசம் முழுவதும் நடக்கும் எல்லாக் கொடுமைக்கும் காரணம் என்பதை நீ உணரவில்லையா சலீமா?
‘முஸ்லிம்கள் என்று பிறந்த ஒரு குற்றத்திற்காக அநியாயமாக யார்யார் கொல்லப்பட்டார்களோ?
நீங்கள் மனித ஜன்மம்தானா? அல்லது பிசாசு கூட்டமா? ஒன்றுமே அறியாத ஏழைகளை வதம்செய்தீர்கள்
நான் ஹிந்துவாகப் பிறந்து விட்டேன். நீங்கள் முஸ்லிம்களாப் பிறந்து விட்டீர்கள். ஆயினும் என்ன? நாமெல்லாரும் இந்த நாடு பெற்ற குழந்தைகள் தாமே? இப்பழைய சிறுகதையில் ஒருமுழுமையிருக்கிறது.
28

O D5ID
- சம்பந்தன் *சலிமா அவள் அசையவில்லை. சந்திரநாத் அவளைப் பார்த்தபடியே நின்றான். நிமிஷங்கள் ஒவ்வொன்றாகக் கழிந்துகொண்டே இருந்தன. அவள் தலையில் முக்காடு விலகி ஒரு புறத்திலே கிடந்தது. முதல் நாள் வாரிவிட்ட கூந்தல் கலைந்து பறந்து கொண்டிருந்தது முகத்தை மேசையோடு சேர்த்தபடி கவிழ்ந்திருந்தாள். ஆயினும் அவள் விம்மி விம்மி அழுது கொண்டிருப்பது நன்றாகவே தெரிந்தது. சந்திரநாத் மறுபடியும் “சலீமா” என்று கூப்பிட்டான். அப்பொழுது அவனுடைய குரலிலும் ஒரு வித கரகரப்பு தட்டியது. சில நிமிஷங்கள் கழிந்தன அவள் அசையாமல் அப்படியே தான் இருந்தாள். மூன்றாம் முறையாகவும் கூப்பிட்டுக்கொண்டு அவன் மெல்ல மெல்ல நடந்து அவளுக்கருகில் வந்தான். அப்பொழுதுதான் அவள் தலையைத் தூக்கினாள். கண்ணிர் அவளது பொன் போன்ற கன்னங்களில கோடு கிழித்து ஒடிக் கொண்டிருந்தது. அதைப்பார்த்தவுடன் அவனும் பேசமுடியாமல் அழுபவன் போலவே நின்றான். சிறிது நேரம் சென்றது. பிறகு அவள் அவனைப் பார்த்து ஒருவித ஏளனம், ஆவேசம் எல்லாம் கலந்த குரலில் இதைக் கேட்டாள்.
“உங்கள் ஹிந்து சமூகத்திற்கு மேலும் மேலும் வெற்றிக்குமேல் வெற்றி கிடைக்கிறது. இல்லையா?
சந்திரநாத் ஒன்றுமே பேசவில்லை. அவள் அதே தொனியில் மறுபடியும்பேசினாள்.ஆனால் விஷயம் வேறொன்றாக இருந்தது. “என்னை எதற்காக இங்கே கொண்டு வந்து வைத்திருக்கிறீங்கள்?"
இப்படியாக ஒரு கேள்வி கிளம்பும் என்று அவன் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. அதனால் சிறிது நேரம் யோசித்துக்கொண்டே நின்றுவிட்டு பிறகு சொன்னான்.
"உன் தந்தையும் இதையே விரும்பியிருந்தார். என் கடமையும் இதுதானே?”
அவள் மேலும் பேச விரும்பாதவள் போலவே மெளனமாக இருந்தாள். சந்திரநாத் அவளைப் பார்த்தபடியே அங்குமிங்குமாக நடந்து கொண்டிருந்தான். சிறிது நேரம் சென்றதும் அவள் மீண்டும் ஆரம்பித்தாள். அதற்குள்ளாக மறுபடியும் அவளுடைய கண்கள் கலங்கிவிட்டன.
"அந்தப் பக்கத்தில் வசித்த நம் ஜனங்கள் எல்லோருமே கொல்லப்பட்டுவிட்டார்களா?
“எனக்கு நிச்சயமாக ஒன்றுமே தெரியாது, சலிமா. நான் இங்கே வருவதற்கு முன்பே எல்லாம் நடந்து விட்டது. உன் தந்தையார் உன் விஷயமாக அறிவித்திருந்தாராம். அதைக் கேட்டதுமே புறப்பட்டு உன்னிடம் வந்தேன்.
அவள் மறுபடியும் விம்மி விம்மி அழத்தொடங்கினாள். அதைப்பார்த்ததும்அவன்கிட்டச்சென்றுசலிமா,எப்படியோஎல்லாம் நடந்துவிட்டது.வீணாக அழாதே அழுதுதான்வரப்போவதுஎன்ன? நீஒரு குழந்தையா?"என்று ஆறுதல் சொன்னான்.
அவளுடைய கண்களும் முகமும் சிவந்து பொங்கி இருந்தன. அடிக்கடி பெருமூச்சு விட்டுக்கொண்டு சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2010

Page 31
அப்போது வேலைக்காரி ஒருத்தி ஒரு தட்டில் ஏதோ உண்ணுவதற்கும் குடிப்பதற்கும் கொண்டு வந்து அவள் முன்னிலையில் வைத்துவிட்டு சென்றாள். அவளை இடைமறித்து, "இது யாருக்காக?” என்று சலீமா கேட்டாள். அந்த வேலைக்காரி ஒன்றுமே பேசாது சந்திரநாத்தையும் அவளையும் மாறிமாறிப்பார்த்துக் கொண்டு நின்றாள்.
அப்போது அவன் பதில் சொன்னான். “வீணாக உன்னையே வெறுத்துக்கொள்ளுகிறாய்.நீபடித்தவள் அதிலும் அறிவுள்ளவள். வாழ்க்கையில் எல்லோருக்குமே துன்பங்கள் எதிர்பாராத நிலையில் மலைபோல வந்து விழுகின்றன. அதற்காக எல்லோருமே இறந்துவிடுகிறார்களா?
அவள் ஆவேசத்துடன் எழுந்து நின்று சொன்னாள். “இது தற்செயலாக நிகழ்ந்த ஒன்றா, மறந்து விட? பழிக்குப்பழிவாங்க முடிந்தால் ஒரு சமயம் நான் மறக்கக்கூடும். என் ஆசையும் அதுவே"
பழிக்குப்பழி வாங்க வேண்டும் என்னும் எண்ணமே இன்று தேசம் முழுவதும் நடக்கும் எல்லாக் கொடுமைக்கும் காரணம் என்பதை நீஉணரவில்லையா சலீமா?
எங்கோ எவனோ யாரையோ கொன்றதற்கு வேறு ஒரு மூலையிலேவாடும்ஒன்றுமறியாதமக்களைக்கொன்றுசூறையாட நான் விரும்பவில்லை. என் பெற்றோர்களை, உறவினர்களை, காரணம் நீதி நியாயம் ஒன்றுமே இன்றி யார் கொன்றார்களோ அவர்களையே தண்டிக்க வேண்டும் என்று உயிர் துடிக்கிறது. இதில் நியாயம் இல்லை என்று சொல்லயாராலும் முடியாது”
“சலீமா, நீசொல்வது சரியாகவே இருக்கலாம். ஆனால் அதில் ஒரு பிரயோஜனமும் கிடைக்கப்போவதில்லை.பதிலுக்கு இன்னும் அனேகருடைய கண்ணிரால் நமது நாட்டு மண் நனைக்கப்படும் என்பது மட்டும் நிச்சயமாகும்.”
இந்த வார்த்தைகள் அவளிடத்தில் ஒருமாறுதலையும் உண்டு பண்ணி விடவில்லை. அவள் முன்போன்ற உணர்ச்சிகளுடனேயே காணப்பட்டாள். பேச்சைநிறுத்திவிட்டு அவளைப் பார்த்தபடியே சந்திரநாத் மெளனமாக இருந்தான். சிறிது நேரத்திற்குள் அவள் மறுபடியும் எழுந்து நின்று, “இவ்வளவிற்குப் பிறகும் என்னை எதற்காக இங்கே பாதுகாத்து வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? நான் போக வேண்டும். இதைத்தவிர என்னால் இப்போது வேறு ஒன்றும் சொல்ல முடியாது” என்று சொன்னாள்.
“எங்கே போக வேண்டும் என்கிறாய்?” எங்கேயா? என்னுடைய இடத்திற்குத்தான். முஸ்லிம்கள் என்று பிறந்த ஒரு குற்றத்திற்காக அநியாயமாக யார் யார் கொல்லப்பட்டாகளோ அவர்கள் செத்துகிடக்கும் இடத்திற்குத் தான் நான் போக வேண்டும்”
சந்திரநாத் இதற்கு ஒரு பதிலும் சொல்ல விரும்பவில்லை. நிலத்தைப் பார்த்தபடி எதையோ சிந்தித்துக்கொண்டு சும்மா இருந்தான்.
அவள் தொடர்ந்து பேசினாள். வரவர அவளுடைய வார்த்தைகளில், தோற்றத்தில் ஒருவித வேகமும் வர்மமும் கலந்து காணப்பட்டன.
“இனி எனக்கு யாருமே உரிமையானவர்களல்ல. என்னுடைய துன்பத்திற்கு மரணத்திற்கு கண்ணிர் விடத்தக்கவர்கள் எல்லோருமே பூண்டோடு அழிக்கப்பட்டு விட்டார்கள். இனி எனக்கு மரணம் தான் சுகம் தரும். நானும் அதையே விரும்புகிறேன்.”
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2010

மேலே அவளால் பேச முடியவில்லை. திரும்பவும் மேசை மீது முகத்தை வைத்துக்கொண்டு விம்மி விம்மி அழத்தொடங்கினாள்.
அதைப்பார்த்தவுடனே சந்திரநாத் எழுந்து அவளுக்கருகில் போய் நின்று, “சலீமா” என்று உருக்கமாகக் கூப்பிட்டான். அந்தக் குரலுக்குச் செவி கொடுக்காமலிருக்க அவளால முடியவில்லை. அதனால் தலையைத் தூக்கிப் பார்த்தாள். அவன் அவளது கையைப் பிடித்துக்கொண்டே இதைச் சொன்னான்:
'நீ மறுபடியும் குழந்தையைப் போலவே பேசுகிறாய் நடக்கக்கூடாதது நடந்துவிட்டது என்பது உண்மைதான். இந்த நிலையிலும் நிதானமான பாதையில் நியாயத்தோடு நடக்கக்கூடிய ஆற்றலை சம்பாதித்துக்கொள்வதுதான் மனிதத் தன்மை. அதை இழந்துவிடுவது மிகவும் இலேசு. ஆனால் அதைக் காப்பாற்றுவது எல்லோருக்கும் இயலாத காரியமாகும். ஒருவேளை நீ என்னிடத்திலே சந்தேகப்படுகிறாயா?”
சிறிதுநேரம் வரையில் மெளனமாக இருந்துவிட்டு மறுபடியும் தொடங்கினாள்:
"இதோ பார், நீ யாருக்காக இவ்வளவு கவலைப்பட்டு அழுகிறாயோ அவர்களையும் காப்பாற்றி உன்னையும் அழாமல் செய்திருப்பேன். துரதிருஷ்டவசமாக நான் அப்பொழுது இங்கே இருக்கவில்லை. கடைசியில் உன்னை மட்டுமே காப்பாற்ற முடிந்தது இனி உன்னைப் பாதுகாத்து வைப்பதும் உன் மனத்திற்கு ஆறுதலைத் தேடித் தருவதும் என் கடமை.”
அவன் பேச்சை நிறுத்தினதும் அவள் தொடங்கினாள். “தயவுசெய்து பெரிய மனசு வைத்து என்னைச் சாகவிட்டு விடுங்கள். இதுதான் நீங்கள் எனக்குச் செய்யும்பெரிய ஆறுதல்.”
சந்திரநாத் அவளைப்பார்த்தபடியே சிலைபோல இருந்தான். அவளுடைய உள்ளம் எந்தவிதமான சமாதானத்தாலும் ஆறுகிற நிலையில் இல்லை என்பது நன்றாக விளங்கியது. சிறிது நேரம் வரையில் அவனாலும் ஒன்றும் பேசமுடியவில்லை. பிறகு ஒருவாறு சமாளித்துக் கொண்டு, “சலீமா, என்னை ஒரு கெட்டவன், மனிதத்தன்மை இல்லாதவன் என்று சொல்லும்படி செய்துவிடாதே. எனக்காகக் கொஞ்சம் பொறுத்திரு” என்று வேண்டினான்.
அவள் மேலே ஒன்றுமே பேசவில்லை. வேதனைகளை அடக்கிக்கொண்டு ஒருவாறுமெளனமாக இருக்க முயன்றாள். அப்போது வெளியே கொஞ்ச தூரத்துக்கப்பால் வெறிகொண்ட ஜனங்களின் குமுறல் கடலின் அலைபோலக் கேட்கத்தொங்கியது. அந்தச்சத்தம் காதில் விழுந்ததும் அவன் எழுந்த நின்று, “சலீமா” இன்றும் தொடங்கி விட்டார்கள். என்றே தோன்றுகிறது. நான் போக வேண்டும். ஐயோ! மனிதர்கள் தர்மத்தையும் கடமையையும் மறந்து எப்படி மிருகங்களாக மாறுகிறார்களோ,தெரியவில்லை.நான் போய்ச் சீக்கிரமாகத் திரும்பிவிடுகிறேன், சலீமா” என்று சொன்னான்.
“வேண்டாம் நீங்கள் அந்த இடத்திற்குப்போகவே கூடாது. ஒருவேளை உங்களையும் நான் இழந்து விடநேரிடும்.”
"திடீரென் இப்படி ஏன் சொன்னேன்?" என்று அப்போது அவளுக்கே தெரியவில்லை. ஆனாலும் அவளுடைய மிருதுவான பெண் உள்ளம் இதையே தான் விரும்பியது. சந்திரநாத் இந்த வார்த்தைகளைக் கேட்டதும் ஏனோ மிகுந்த
29

Page 32
ஆறுதலடைந்தான். பிறகு, சலிமா, நீ ஒன்றுக்கும் பயப்படாதே எனக்கு ஒரு தீங்குமே வந்து விடாது. நான் இந்த சமயத்தில் வீட்டினுள்ளே இருப்பது பெரிய துரோகமாகும் என்று சொல்லிக்கொண்டே வெளியேறினான். போகும் போது வாசலிலே நின்ற வேலையாளைப் பார்த்து, "ஜாக்கிரதை' என்று எச்சரித்துவிட்டுச் சென்றான்.
தெருவில் இறங்கினதும் கூக்குரல்கள் வருகிற திக்கை நோக்கி வேகமாக நடந்தான்.சிறிதுநேரத்திற்குள் ஜனங்களின் வெறி கொண்ட பேய்க்கூத்து அவன் கண்ணுக்கு நன்றாகத் தெரிந்தது. மேலே அவன் ஒடியே சென்றான். வேங்கையின் கோரமான இயல்புடைய அந்த ஜனக்கூட்டமும் அவனைக் கண்டதும் மெல்ல விலகியது. சிலர் உண்மையாகவே பயந்து ஒதுங்கினார்கள். இன்னும் சிலருக்கு அவனுடைய இரக்கம் அவ்வளவாகப்பிடிக்கவில்லை. ஆனாலும் அவர்களும் மெல்ல ஒதுங்கி அவ்விடத்தை விட்டு அகன்றார்கள்.
அதற்கிடையில் அந்தப் பகுதியில் வசித்த முஸ்லிம்கள் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என்ற எல்லாரும் அவனைச் சூழ்ந்துகொண்டார்கள்.பரிதாபகரமான அவர்களதுமுகத்தைப் பார்த்ததும் சந்திரநாத் அழுதுவிட்டான். பிறகு அவர்களுக்கு வேண்டிய ஆறுதல் சொல்லித் தன் ஆட்களின் உண்மையான சிலரை அவர்களுடைய பாதுகாப்புக்காக நிறுத்தி வைத்து அவர்களுக்கு நம்பிக்கை தந்தபிறகே வீட்டை நினைத்தான்.
சலீமா சாளரத்தின் வழியாகத் தெருவைப் பார்த்துக் கொண்டே இருந்தாள். ஜனங்கள் பிரேதக் களையுடன். அங்குமிங்குமாகப் போய் கொண்டிருந்தார்கள். "இது ஏன்?” என்று சிந்திக்கவும் அவளால் அப்பொழுது முடியவில்லை. சிறிது நேரத்தில் ஒரு கூட்டத்தவர்கள் அந்தப் பக்கத்தில் வந்தார்கள். அவர்களைப் பார்த்ததுமே இன்ன இடத்தில் இருந்துதான் வந்துகொண்டிருக்கிறார்கள். என்பதை அவள் தெரிந்து கொள்ளக் கூடியதாய் இருந்தது.
அவர்களில் பலர் இளைஞர்கள். சிலர் நடுத்தர வயதினர். இரண்டொரு கிழவர்களும் இருக்கத்தான் செய்தார்கள். ஒருவெற்றிக்குப்பின் ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் வருகிற யுத்த வீரர்களைப் போல அவர்களும் உல்லாசமாகவே வந்தார்கள். அதைப்பார்த்ததும் அவளுக்கு உடம்பெல்லாம் பற்றிக் கொண்டது. எழுந்து சாளரத்துக்குப் பக்கத்திலே வந்துநின்று கையைக் காட்டி ஒருவனைக் கூப்பிட்டாள். எல்லோரும் திரும்பிப்பார்த்தார்கள்.
“நீங்கள் மனித ஜன்மங்கள் தானா? அல்லது பிசாசுக் கூட்டமா?”
இந்த வார்த்தைகளைப் பேசும்போது அவளிடம் அலாதியான ஒரு கம்பீரம் காணப்பட்டது. வந்தவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. அவர்கள் அதில் நின்றபடியே தடுமாறினார்கள். மறுபடியும் அவள் பேசத்தொடங்கினாள்:
“ஒன்றுமே அறியாத ஏழைகளை வதைசெய்தீர்கள். கொள்ளையடித்தீர்கள். எல்லாம்மறுபடியும் வட்டியோடுசேர்த்து அனுபவிக்கும் நாள் தூரத்தில் இருக்கவில்லை. அடே நான் யார் தெரியுமா? உங்களால் கொல்லப்பட்ட, கொள்ளையிடப்பட்ட அந்த நிரபராதிகளான முஸ்லிம்களின் கூட்டத்தில் தவறியிருக்கும் ஒருத்திதான். பதிலுக்கு வஞ்சம் தீர்க்கும்
30

வரையில் உயிரோடு இருக்கிறேன் என்பதை மறந்து விடவேண்டாம்”
அவள் துர்க்கை போலவே அப்போது விளங்கினாள். அதற்குள் சிலர் நிமிர்ந்து பார்த்துவிட்டு “ இது சந்திரநாத் அவர்களின் வீடு என்றார்கள். உடனே எல்லோருமே மேலே பார்த்துவிட்டு யோசித்துக்கொண்டு நின்றார்கள். ஒருவனுக்கு மட்டும் அவளுடைய வார்த்தைகள் பொறுக்கவில்லை. அவன் வாசல்பக்கமாகஒடினான்.அதற்குள்வாயிலிலேநின்றவேளையாள் அவனை வெளியேதள்ளிக்கதவைத்தாழிட்டுவிட்டான்.
அப்பொழுதுதான் சந்திரநாத் அங்கே வந்து சேர்ந்தான். வீட்டின் அருகே நின்ற ஜனங்களைப் பார்த்ததும், என்ன? என்று கேட்டான். அவனைக் கண்டதும் அந்த ஜனங்கள் நழுவ ஆரம்பித்தார்கள். அவன் எல்லோரையும் மறித்துநிறுத்திக் கொண்டு இரண்டொரு வார்த்தை மட்டும் பேசினான்.
"நீங்கள் தானா உண்மையான ஹிந்துக்கள்? ஐயோ! நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் மதத்தின் பழம்பெருமைக்கு தர்மத்திற்கு அழிவு தேடி விட்டீர்கள். பரம்பரையாக வந்த சகிப்புத்தன்மை எப்படி உங்களிடம் இருந்து மறைந்தது? பதிலுக்கு இராட்சசர்களாகி விட்டீர்களே? உங்களைப் பார்க்கவே என் கண்கள் கூசுகின்றன.”
கடைசியில் அவன் தொண்டை குழறியது. அவ்வளவில் பேச்சை நிறுத்திவிட்டு படிமீது ஏறிநின்று அந்த ஜனங்களை ஒருமுறை பார்த்தான். எல்லோரும் கணத்தில் அந்த இடத்தை விட்டு மறைந்து விட்டார்கள்.
சந்திரநாத் மேலும் சிறிது நேரம் வரையில் அதிலேயே நின்று விட்டு உள்ளே நுழைந்தான். எதிரில் சலீமா நின்றாள். அப்போது அவளிடம் நிரந்தரமாக உறைந்துகிடந்தசோகத்தின் திரை முழுவதும் விலகி இருக்க ஒருவித ரெளத்திரமே காணப்பட்டது. அவன் அவளை ஒருமுறை உற்றுப்பார்த்துவிட்டு மெல்லச் சிரித்துக் கொண்டே, “சலீமா, உள்ளே போ இது என்ன பைத்தியக்காரத்தனம்?” என்று ஒரு மாதிரியாகச் சொன்னான். அவளோ அதை அலட்சியமாகக் கேட்டுக்கொண்டு.அங்குமிங்குமாக நடந்துகொண்டிருந்தாள். அப்பொழுதுதாள் அந்தத் தந்திவந்தது. சந்திரநாத் அதை வாங்கிப் படித்ததும், “சலீமா, எல்லோரும் செளக்கியமாக பாக்காவிலே இருக்கிறார்களாமே"என்றுதந்தியைநீட்டினான். உடனே, உண்மையாகவா?” என்று கூச்சலிட்டுக்கொண்டே அவள் ஓடிவந்தாள். பிறகுகொஞ்சநேரமாக அங்குமிங்குமாகச் சிறுகுழந்தையைப்போலவே குதித்துக்குதித்துஒடித்திரிந்தாள். பிறகு அவனுக்கருவில் வந்து உட்கார்ந்து கொண்டு “என்னை எப்போது டாக்காவிற்கு அனுப்பப் போகிறீர்கள்?” என்று கேட்டாள்.
"நீ எப்போது போக விரும்புகிறாய்?" “எவ்வளவு சீக்கிரமாகப் போக முடியுமோ, அது உங்களையே பொறுத்தது'
சந்திரநாத் சிறிது வரையில் யோசித்துக் கொண்டிருந்துவிட்டுச் சொன்னான்.
“சலீமா, எதிர்பாராமல் திடீர் திடீரென்று எங்குமே கலகங்கள் முளைத்துவிடுகின்றன. அதனாலேதான் யோசிக்கின்றேன். அல்லது.”
அதற்குள் அவள் இடைமறித்து, "நீங்கள் கஷ்டப்பட வேண்டாம். என்னை வண்டியில் ஏற்றிவிட்டாலே போதும், எப்படியாவது நான் போய்விடுகிறேன் என்றாள்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2010

Page 33
இதைக்கேட்டதும் அவனுக்குச் சிரிப்புத்தான் வந்தது. சலீமா அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். பிறகு சந்திரநாத் இதையே சொன்னான்: “ஒன்றுக்கும் அவசரப்படாதே சலீமா எப்படியாவது உன்னை அங்கே கொண்டுபோய் சேர்த்து விடுகிறேன். நினைத்தவுடனே எதையும் செய்துவிடக் கூடிய நேரம் இதுவல்ல என்பதை நீயே நன்றாக உணருவாய்'
அவளெல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு மெளனமாக இருந்தாள். பிறகு எழுந்து சென்று அங்கே கிடந்த பட்சணத்தட்டை எடுத்துக்கொண்டு வந்து அவனுக்கு முன்பாக வைத்தாள்.
“விருந்தாளி சாப்பிடுமுன் வீட்டுக்குடையவனான ஒரு ஹிந்து சாப்பிடுகிற வழக்கம் இல்லையே?
“அது உண்மையாக இருக்கலாம். ஆனால் நீங்கள் சாப்பிடுமுன் நான் எதையும் தொடமாட்டேன் என சத்தியஞ் செய்துவிட்டேன் என்று வைத்துக்கொண்டால்.”
அவள்பேச்சைநிறுத்திவிட்டுத்தட்டை எடுத்துநீட்டினாள். அவன் அந்தத் தட்டை வாங்கித் தனக்கு முன்னால் வைத்துவிட்டு அவளுடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். மறுபடியும் அவள் தொடங்கினாள்: “ஒரு முஸ்லிம் பெண் கொடுக்க, உயர்ந்த ஹிந்து குடும்பத்திலே பிறந்த நீங்கள் உண்ணக்கூடாது என்று இருக்கிறீர்களா?”
அவ்வளவில் அவன் சாப்பிடத் தொடங்கினான். அப்பால் இரண்டு பேருமாகவேபட்சணங்களைக் காலிசெய்தார்கள்.
பிறகு அவள் சந்திரநாத்தைப் பார்த்து, “உங்களிடம் ஒன்றுகேட்கிறேன், ஒளிக்காமலே சொல்லுகிறீர்களா?"என்று கேட்டாள். அவன் வெறுமனே தலையை மட்டும் அசைத்துத் தன் சம்மதத்தைத் தெரிவித்தான்.
“சிலமணி நேரத்திற்கு முன் நான் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு நீங்கள் என்மீது வெறுப்புக் கொள்ளவில்லையா? மறைக்காமல் சொல்லுங்கள்.”
அவன் சாந்தமான குரலிலே “சலிமா, எதற்காகவும் நான் கோபிக்கிறதில்லையே” என்றான்.
"ஆனாலும் என் அறிவில்லாத வார்த்தைகளை நீங்கள் மறந்து விடவேண்டும்”
“நீஅப்படி எதையும் சொல்லிவிடவில்லை.” “என்னுடைய மனம் சாந்தியடையவில்லையே” “அதற்கு என்ன செய்ய வேண்டும்?” “உங்களுக்கு எது இஷ்டமோ அதன்படி என்னைத் தண்டித்துவிடுங்கள்.”
“சரிதண்டிக்கிறேன்; அதற்குரியநேரம் வரட்டும்’ஏனோ, இரண்டு பேருமாகவே சிரித்தார்கள்.
3
மறுநாள் அதிகாலையிலேயே அந்த வீட்டுவாசலிலே ஒரு வண்டி வந்து நின்றது. சந்திரநாத் அது யார் என்று பார்க்க ஆளை அனுப்பினான். அதற்குள் அந்தக் கிழவர் உள்ளே வந்து விட்டார். முதிர்ந்த நிலையிலும் அவருடைய வாயிலிருந்துவந்த வார்த்தைகள் இளமைகளைத் தொட்டுக்காட்டின.
"சந்திரநாத்"என்றுமுதலில் ஆத்திரத்தோடுகத்தினார். அவன் ஒன்றும் புரியாமலே ஓடி வந்து, "நமஸ்காரம் தாத்தா” என்று வணங்கினான். அவர் அவனுடைய வணக்கத்தை ஏற்கவில்லை. மேலும் ஆத்திரம் கொண்டவராய், “நீ அந்நிய
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2010

மதத்தைச் சேர்ந்த ஒர் இளம்பெண்ணை இங்கே வைத்திருக்கிறாயாமே?”என்று உறுமினார்.
அவன் ஒன்றுமே பேசவில்லை. அவருடைய கோபம் மேலும் உச்சநிலையைக் கிட்டியாது.
“எதற்காக அவளை நீஇங்கே வைத்திருக்க வேண்டும்? எங்கள் ஹிந்து தர்மத்துக்குச் சாவுமணி அடித்துவிட்டாயே” அப்பொழுதுதான் அவன் வாயைத் திறந்துமெல்லப்பதில் சொன்னான்:
“தாத்தா, இதனால் நான் ஹிந்துதர்மத்துக்குச் சாவுமனி அடிக்கவில்லை. உண்மையில் ஹிந்து தர்மத்தைச் சாக விடாமல் காப்பாற்றி விட்டேன்.”
கிழவர் தன் வாயில் வந்தபடியெல்லாம் திட்டிக் கொண்டே வெளியே சென்று வண்டியில் ஏறி விட்டார். அவன் அவர் பின்னோடு போய் நமஸ்கரித்துவிட்டுத் திரும்பி வந்தான். அதுவரைக்கும் உள்ளே நின்ற சலிமா அப்பொழுதுதான் முன் ஹாலுக்கு வந்து சேர்ந்தாள். அவளுடைய முகம் கொஞ்சம் வாடியிருந்தது. அதைப்பார்த்ததும், “இந்த மனிதர்களுடைய எந்த விதமான வார்த்தைகளையும் நீபொருட்படுத்தக்கூடாது அவர்கள்“பாட்டன் சொன்னான்”அப்பன் செய்தான்” என்று தர்மம் பேசுபவர்கள். சலிமா, இது என் வீடு, ஆதலால் உனக்கும் உரிமை உண்டு. எனவே நீசிந்திக்க நியாயமே இல்லை” என்று ஆறுதல் சொன்னான். அவள் சிறிதுநேரம் வரையில் ஒன்றுமே பேசாமல் இருந்துவிட்டு, ‘எப்படியானாலும் என்னைச் சீக்கிரம் அனுப்பிவிடுங்கள்” என்று கேட்டுக் கொண்டாள்.
இதைக்கேட்டதும் அவனும் “சரி” என்று தலையை அசைத்தான்.
4
அன்றைக்கே புறப்படுவதற்குரிய எல்லா ஆயத்தங்களையும் செய்து முடித்தார்கள். அவனுடைய மோட்டார்வண்டியைச் சாரதி வாயிலிலே கொண்டு வந்து நிறுத்திவிட்டு வெளியே வந்து நின்றான்.
சந்திரநாத் தன் அறையிலிருந்து புறப்பட்டு நேரே அவள் இருந்த அறையை நோக்கி நடந்தான். அவன் வருவதைக்கண்டதும் சலீமா எழுந்து நின்று, “புறப்பட ஆயத்தமா”என்று கேட்டாள்.
“ஆம்; இதை உன் கைப்பெட்டியினுள்ளே வை” “எதற்காக இதை நான் வைத்துக்கொள்ள வேண்டும்?” அவர்களும் எல்லாவற்றையும் இழந்தே போயிருக்கிறார்கள். இது அவசியம் உங்களுக்குத் தேவைப்படும்.
"ஆனாலும் இவ்வளவும் எதற்கு?” "பரவாயில்லை” “ஐயோ! இதில் எத்தனை ஆயிரம் தந்திருக்கிறீர்கள்?” “பாரமாக இருக்கிறதா?” அவள் பேசாமல் நின்றாள். அதை வாங்கி அவளது கைப்பெட்டியைத் திறந்து அவனே வைத்துவிட்டான்.
மோட்டார் வண்டி பாதையிலே போய்க்கொண்டிருந்தது. சந்திரநாத்தே வண்டியை ஒட்டிக் கொண்டு போனான். சலீமா பின்புறத்து ஆசனத்தில் உட்கார்ந்திருந்தாள். இடையில் “எதற்காக மோட்டார் ஒட்டியை நிறுத்திவிட்டுவருகிறீர்கள்?” என்று அவள் கேட்டாள். நான் இப்பொழுது உங்கள் மதத்தைச் சேர்ந்தவர்கள் வாழுகிற இடத்துக்கு வருகிறேன். அவர்களோ
31

Page 34
இன்று ஜாதி மாத வெறியில் நமக்கும் வழிகாட்டிகளாக இருக்கிறார்கள். அபாயம் வந்தாலும் நான் அமைதியாகவும் சந்தோஷமாகவும் ஏற்பேன். “எனக்காக மற்றவர்கள் ஏன் அகப்பட்டுக் கொள்ள வேண்டும்?”என்று எண்ணியதால்.” என்று இழுத்தான்.
அவள் உடனே “வண்டியை நிறுத்துங்கள் என்று கூச்சலிடத் தொடங்கி விட்டாள். கடைசியில் வண்டியை நிறுத்தியே அவளைச் சமாதானம் செய்ய முடிந்தது. பிறகு அவளும் முன்பக்க ஆசனத்துக்கு வந்து உட்கார்ந்து கொண்டாள்.
வண்டி மறுபடியும் போய்க் கொண்டிருந்தது. இடையில், “சலீமா நீ ஒரு முஸ்லிம் பெண். உங்கள் ஜாதிப் பெண்கள், ஆசாரப்படி வெளியே தலையைக் கூட நீட்டுவதில்லை. அப்படியிருக்க அந்திய மதத்தவனாகிய ஒருவனுக்குபக்கத்தில் நீ உட்கார்ந்திருக்கிறாயே..” என்று அவன் பேசி முடிப்பதற்குள்ளாகவே அவள் தொடங்கிவிட்டாள்.
“எல்லா மதத்திலும் இப்படியான உளுத்துப்போன கட்டுப்பாடுகள் இருக்கத்தான் இருக்கின்றன. அது உண்மையில் நியாயமென்றே வைத்துக் கொண்டாலும் நீங்கள் சம்பந்தப்பட்ட மட்டில் என்னை யாரும் தடுக்க முடியாது”
அவன் திரும்பி அவளைப் பார்த்துக்கொண்டே “ஏன் அப்படி” என்று கேட்டான். “அது என் இஷ்டம்” மறுபடியும் சந்திரநாத் திரும்பி அவளைப் பார்த்தான்.
இரண்டு பேருடைய உள்ளத்திலும் உண்டான மலர்ச்சி அவர்கள் முகங்களில் வெளியாகி மறைந்தது. வண்டி மேலே போய்க்கொண்டிருந்தது.
“இன்னும் எத்தனை மைல் போக வேண்டும்?” என்று இடையில் சலீமா கேட்டாள்.
“பாதி தூரத்துக்கு மேலே வந்துவிட்டோம். இனி ஹந்துக்களினால் எந்த அபாயமும் வராது. நீ பயமின்றி இருக்கலாம்.”
அவள் இதைக் கேட்டதும், ஆனால் இனித்தான். நான் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் அல்லவா? என் உயிர்போன பிறகே உங்களுக்கு ஏதேனும் தொந்தரவு வரலாம்” என்று சொல்லிவிட்டு மெல்லச் சிரித்தாள்.
“சலிமா, நீயோ ஒரு பெண் எப்பொழுதும் பெண்களைக் காப்பாற்ற ஆண்கள் தங்களைத்தியாகம் செய்வதுதான் தர்மம் நீ நினைப்பது தப்பு”
“இந்தத் தர்மங்களைப் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது ஆனாலும் நான் அப்படித்தான் செய்வேன். அதை யாரும் தடுக்க முடியாது.”
சந்திரநாத் மெளனமாகவே வண்டியை ஒட்டிக்கொண்டு சென்றான். “போகவேண்டிய தூரத்தில் பெரும்பகுதி கழிந்து விட்டதல்லவா? என்று இடையில் அவள் கேட்டாள். அவனும் "ஆம்" என்று தலையை அசைத்தான்.
ஒரு சந்திப்பில் திரும்பியவுடனே திடீரென்று ஒரு ஜனக்கூட்டம் எதிரே காட்சி கொடுத்தது. அவர்களது நிலையைக் கண்டதும். சந்திரநாத் திகைத்து வண்டியை நிறுத்தினான். அந்தக் கூட்டத்திலிருந்த சிலர் வேகமாக அவர்களது வண்டியை நோக்கி ஓடி வந்தார்கள். அதற்குள் ஒருவன் தூரத்திலிருந்தே கல் ஒன்றை வீசி எறிந்தான். அது
32

வண்டியின் முன்புறத்திலே பட்டுத் தெறித்துக் கண்ணாடியை உடைத்து விட்டது. ஒரு கண்ணாடித்துண்டு சந்திரநாத்தின் நெற்றியில் பறந்து ரத்தத்தைப் பெருகச் செய்தது.
கணத்துள் சலிமா அந்த ஜனக்கூட்டத்தின் முன்பாக நின்றாள். அவளைப் பார்த்ததும், "இவள் ஓர் உயர்ந்த ஜாதி முஸ்லிம் பெண்” என்பதை எல்லோரும் உணர்ந்து கொண்டார்கள். உடனே சிலர் பின்வாங்கி ஒதுங்கினார்கள். மற்றவர்கள் வெறிகொண்டு தான் நின்றார்கள். அதற்குள் ஒருவன் சொன்னான்: "அடே இவன் ஒரு ஹிந்துவாகவே இருக்க வேண்டும்.”
எல்லோரும் சந்திரநாத்தையே பார்த்தார்கள். அந்தக் கூட்டத்தின் ராட்சத எதிர்ப்பை அடக்கிச் சலிமாவின் குரல் எழுந்து கேட்டது.
"எல்லோரும் விலகுங்கள். உங்கள் ஜாதியை உங்கள் மதத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களைப்காதுபாத்த இந்த மகான் யாராக இருந்தாலும், எந்த மதத்தவராக இருந்தாலும் என்ன? நீங்களும் உங்கள் மதத்தாரும் அவர் காலடியில் மண்டியிட்டு வணங்கக் கடமைப்பட்டவர்களாக இருக்கிறீர்கள்.
"நான் யார் என்று இன்னும் நீங்கள் உணரவில்லையா? என்னையும் என்னைப்போன்ற உங்கள் மனிதர்களையும் காப்பாற்றிய உங்கள் ஆண்டவனின் அன்பரது புனித உள்ளத்தைப்புண்படுத்திவிட்டீர்கள்.”
பேச்சை நிறுத்திவிட்டு எல்லோரையும் ஒருமுறை நிமிர்ந்து பார்த்தாள். அத்தனை பேரும் அசையாமல் அப்படியே நின்றார்கள். பிறகு அவள் தன் புடவையின் ஒரு தலைப்பைக் கிழித்து அவனது நெற்றியில் வழிந்த ரத்தத்தைத் துடைத்துக் கட்டுப்போட்டாள்.
சந்திரநாத் அசையாமல் அப்படியே இருந்தான். முன்புறத்தில் நின்றவர்களில் சிலர் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்கள்.
உள்ளே அவன் வண்டியை விட்டு இறங்கிநின்று இதையே சொன்னான்: "நான் ஹிந்துவாகப் பிறந்து விட்டேன். நீங்கள் முஸ்லிம்களாகப் பிறந்து விட்டீர்கள். ஆயினும் என்ன? நாமெல்லோரும் இந்த நாடு பெற்ற குழந்தைகள் தாமே!”
அவ்வளவோடு நிறுத்திவிட்டு அந்தக்கூட்டத்தைநோக்கி நமஸ்கரித்தான். அதைப் பார்த்துக் கொண்டு நின்ற ஒரு வயோதிபர் அருகில் வந்து அவன் கைகளைப் பிடித்துக் தன் கண்களில் ஒத்திக் கொண்டார்.
வண்டி புறப்படும் பொழுது கூட்டத்தினர் எல்லோருமே அமைதியாக நின்று தங்கள் வணக்கத்தைத் தெரியப்படுத்தினார்கள்.
வண்டிபோய்க்கொண்டிருந்தது. “சலீமா” என்றான் சந்திரநாத் அவள் தன் கையினால் அவனது நெற்றியைத் தடவிக் கொண்டே"வலிக்கிறதா?”என்று கேட்டாள்.
சந்திரநாத் சொன்னான்: "வலி எப்பொழுதோ மறைந்து விட்டது. அதற்கு மாறாக உடம்பு முழுவதும் குளிர் உள்ளம் இனிக்கிறது. சலீமா”
உடனே அவள் அவனது கையைப் பிடித்துத் தன் கண்களில் ஒத்திக்கொண்டாள்.அந்தக் கையில் இரண்டு துளி நீர் ஒட்டிக்கொண்டிருந்தது.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2010

Page 35
20Gua துெ 251jay5)
25. கலைச்செல்விவளர்த்தஎழுத்தாளர்கள்-3
கிவிஞர்பாசத்தியசீலனைத்தமிழ் இலக்கிய இரசிகர்கள் பலர் இன்றும் நினைவில் வைத்திருப்பதற்கு அவரிடமிருந்த அபார கவிதையாற்றலே காரணம்,ஒசைச் சிறப்பும் இனிமையும் எளிமையும் நிறைந்த பல கவிதைகளை அவர் எழுதியுள்ளார். அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட அவர் மிக இளவயதிலேயே கவிதைகளை எழுதத்தொடங்கி விட்டார் “கவிதையைத் தருவாள் தோழா” என்ற கவிதை மூலம் 1962 மாசியில் அவர் “கலைச் செல்வி’ வாசகர்களுக்கு அறிமுகமானார். அதே ஆண்டு யாழ்ப்பாணம் வைத்தீஸ்வர வித்தியாலயத்தில் நடைபெற்ற யாழ் இளம் எழுத்தாளர் சங்கத்தின் ஆண்டு விழாவின் ஓர் அங்கமான கவியரங்கிற் கலந்து கொண்டு அவர் பாடிய “பாடிப் பயனென்?” என்ற தலைப்பிலான கவிதை, அவ்விழாவிற்குச் சமுகமளித்த எழுத்தாளர்கள், கவிஞர்கள்,பத்திரிகை ஆசிரியர்கள் போன்ற அனைவரதும் பாராட்டையும் பெற்றது. 1962 ஆவணியில் வெளிவந்த “கலைச்செல்வி" கலைவிழா மலரில் அவருடைய அந்த கவிதையை முழுமையாகவே வெளியிட்டேன். தமிழக ஒவியர் யாதவன் வரைந்த கலைச்செல்வி அட்டைப்படம் பற்றி அவர் எழுதிய “ஓவியமும் காவியமும்”1962 புரட்டாதி இதழில் வெளிவந்தது. கலைச் செல்வி 1963 ஆனி இதழில் அவர் எழுதிய “விழி திறப்பு” என்ற நீண்ட கவிதையும் அவருடைய கவித்துவச்சிறப்புக்கு உதாரணமாக அமைந்தது.
“மண்ண்வன்” என்ற புனைபெயரில் யோ. பெனடிக் பாலன் எழுதிய 'மனக்கோலம்”சிறுகதை 1962மாசி இதழில் இடம்பெற்றது. கல்யாணத்திற்காக ஏங்கி நிற்மும் குரூபி ஒருத்தியின் எண்ணச்சிதறல்களை ஒன்றாக்கிபீமன்க்கோல” த்தை வரைந்திருந்தார் அவர். யாழ் இளம் எழுத்தாளர் சங்கம் நடத்திய சிறுகதைப்போட்டியில் அவர், இரண்டாவதுப்பரிசைப் பெற்றிருந்ததையும் என் அறிமுகக் குறிப்பிற்சேர்த்துள்ளேன். கலைவிழாவை யொட்டிக் “கலைச்செல்வி” நடத்திய அகில இலங்கைச் சிறுகதைப்போட்டியிலும் இவருக்கு இரண்டாவது பரிசு கிடைத்தது.பெற்றெடுத்தமகனின் நல்வாழ்விற்காக தன் வாழ்நாள் முழுவதும்தன்னை வருத்திப்பாடுபட்ட ஒர் அருமைத் தாயின் அவல வாழ்க்கையை சோக ரசம் இழையோடச் சுவையாகச் சொல்லப்பட்ட “மெழுகுவர்த்தி” என்ற அந்தச் சிறுகதை 1962 ஐப்பசி “கலைச் செல்வி'யில் இடம்பெற்றது.
கலைச்செல்வி சிறுகதைப் போட்டியில் முதற் பரிசைப் பெற்றவர் “செம்பியன் செல்வன்” என்பதை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன்.மூன்றாம்பரிசைப்பெற்றவர்எம்எம்மக்கீன், ஈழத்தில் உள்ள முஸ்லிம் எழுத்தாளர்களுள் இவர் குறிப்பிடத்தக்க ஒருவர் என்பதையும் இவருடைய நாடகங்களும் ஒலிச்சித்திரங்களும் இலங்கை வானொலியில் அடிக்கடி இடம் பெறுகின்றன என்பதையும் என் அறிமுக உரை வெளிப்படுத்தியது.மருதானையையும் ஆனைக்கோட்டையையும் இணைத்து அசல் யாழ்ப்பாணப் பாத்திரமொன்றை இவர்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2010

ు ジ
உருவாக்கிக் கதையில் உலாவவிட்டதையும் நான் விடேமாகக் குறிப்பிட்டிருந்தேன். சந்தர்ப்பம் கிடைக்கின்ற வேளைகளிலெல்லாம் “கலைச்செல்வி’யின் இலக்கியச் சேவைகளைப்பாராட்டுவதைதன் இயல்பாக்கிக்கொண்டுள்ளவர் மக்கீன். "எழுதிச் செல்லும் விதியின் கை” என்ற அவருடைய சிறுகதை 1963 புரட்டாதி-ஐப்பசி இதழிலும், "அப்துல்லாவின் பெருநாள் அவ்வாண்டு மார்கழி இதழிலும் வெளிவந்தன.
“கலைச்செல்வி'நடத்தியநகைச்சுவைகட்டுரைப்போட்டி தொடர்பான பகுதியில் இந்நாட்டின் நகைச்சுவை எழுத்து நகைச்சுவை எழுத்தாளர் சம்பந்தமாகச் சில கருத்துக்களை வெளியிட்டிருந்தேன். நகைச்சுவை எழுத்தாளர்களின் “தட்டுப்பாடு”பற்றியும் குறிப்பிட்டிருந்தேன். நல்ல ஒரு நகைச் சுவை எழுத்தாளரை ஈழத்து இலக்கிய உலகுக்கு அறிமுகம் செய்து வைக்கும் வாய்ப்பு 1962 ஆம் ஆண்டிற் “கலைச்செல்வி’க்குக் கிடைத்தது. அந்த ஆண்டு டிசெம்பர் மாதம் பொ.சண்முகநாதன் எழுதிய"சிறுகதை எழுதுங்கள்” என்ற கட்டுரை வெளியானது.1963 பொங்கல் மலரில் அவர் எழுதிய கட்டுரையின் தலைப்பு “கந்தர் புராணம்” என்பது. “கொழும்பு பெண்” 1962 பங்குனியிலும், "எழுத்தாளன்” புரட்டாதி “கலைச்செல்வி'யிலும் “கொழும்புப் பெண் வேண்டாம்”1964வைகாசியிலும், “இதோ ஒரு பத்திகை”1966 ஐப்பசி, “கலைச் செல்வி'யிலும், இடம்பெற்றன. பாடசாலைச் சிறுவர்கள் அவசியம் படித்துப் பார்க்க வேண்டிய “றிச்சேட் கிழவன்” என்ற சிறுகதை 1965 ஆனி இதழில் வெளிவந்தது. கலைச் செல்வி” வெளியீடான “கொழும்புப் பெண்” என்ற இவருடைய முதலாவது கட்டுரைத் தொகுதியே இலங்கையில் வெளியான முதலாவது நகைச் சுவைக் கட்டுரைத் தொகுதி என்ற பெருமைக்கும் உரியது.
இப்போது இலண்டன் மாநகரைத் தன் வாழ்விடமாக்கி, "புதினம்’ இதழ்மூலம் அங்குள்ள நம்மவரின் மொழியார்வம், இனப்பற்று ஆகியவற்றைத் தூண்டியும் அவர்களின் கலை இலக்கிய முயற்சிகளுக்கு ஊக்கமளித்தும் வரும்பாமா இராஜ கோபால் “கலைச்செல்வி’மூலமே எழுத்துத் துறையில் காலடி எடுத்து வைத்தவர். மாணவனாக இருந்த அவர் இலக்கிய ஆர்வம் காரணமாகக் “கலைச்செல்வி’ சம்பந்தமான சில ப்ொறுப்புக்களையும் ஏற்றுக்கொண்டார். "இரட்டையர்கள்” என்ற தலைப்பில் அவர் எழுதிய சிறுவர் தொடர்கதை பலருடைய பாராட்டையும் பெற்றது. “கலைச்செல்வி”யில் இடம்பெற்ற பலதும்பத்தும்”என்றபல்சுவைத்தொகுப்பைத் தயாரிப்பதிலும் அவர் பெரிதும் உதவினார்.
இலங்கைமலையகத்தைச் சேர்ந்த இரா.இளஞ்செழியன் என்பவருடைய முதலாவது சிறுகதை "மல்லிகைப்பூ 1962 டிசெம்பர் இதழில் வெளிவந்தது.இளைஞன் ஒருவனின் ஏக்கம் நிறைந்த வாழ்க்கையை இனிய தமிழ் நடையில் அவர் எழுதியிருந்தார். அவர் எழுதிய "பிரம்ை” (பங்-சித் 1965), தொடர்ச்சி37ம் பக்கம்
33

Page 36
சந்தில் தி. ஞானசேகரன்
1602-2009ல் அகவை எழுபத்தைந்தை நிறைவு செய்து 160 கொண்டாடிய தெளிவத்தை ஜோசப் அவர்களின் இலக் கெளரவிக்கும் முகமாக இந்த நேர்காணல் தொடரை ஞான
பூபாலசிங்கம் பூரீதரசிங் அவர்களுக்காக செங்கை ஆழியான் தொகுத்தளித்த ஈழத்து முன்னோடிச்சிறுகதைகள் ஒரு வரலாற்றுத்தடம்.
இந்தத் தொகுதியுடன் இலக்கிய நூல்களாக ஒரு ஆறு அல்லது எழு நூல்களை பூபாலசிங்கம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது என்று நினைக்கின்றேன்.
நீர்வை பொன்னையனின் இரண்டு சிறுகதைத் தொகுதிகள்-பாதை-வேட்கை
தெணியானின் இரண்டு நாவல்கள் - மரக்கொக்கு - காத்திருப்பு
மரக்கொக்கு ஒரு வித்தியாசமான நாவல் முற்போக்கு எழுத்தாளர்களில் தெணியானின் வித்தியாசம் போல மரக்கொக்கு என்னும் தலைப்புதி.ஜானகிராமனின்மரப்பசுவை நினைவுபடுத்தினாலும் கூட
கே. விஜயனின் மனநதியின் சிறு அலைகள்' நாவல், சிங்களம், பெளத்தம் என்று மொழியின் பெயராலும் மதத்தின் பெயராலும் பேரினவாதம் வளப்படுத்தப்படத் தொடங்கிய காலங்களில் இலங்கையின் இடதுசாரி இயக்கங்களின் தோற்றம் செயற்பாடுகள் பற்றிப் பேசுகின்ற நெசவாலைத் தொழிலாளர் பற்றிய நல்லதொருநாவல் விஜயனுடையது.
இந்த வரிசையில் பூபாலசிங்கம் வெளியிட்ட ஈழத்து “முன்னோடிச் சிறுகதைகள்” நூல் செங்கை ஆழியான் அவர்களால் தொகுக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு எழுபது எண்பது ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட சிறுகதைகளை, அவற்றை எழுதிய கதாசிரியர்கள் பற்றிய குறிப்புக்களைத் தேடுவது, தொகுப்பது என்பது எத்தனை கடினமான காரியம். இந்த நூலின் ஒருசில கதாசிரியர்கள் பற்றிக்குறிப்பிடுகையில் இது அன்னாரின் புனை பெயர். அவருடைய இயற்பெயரை அறிந்து கொள்ள முடியவில்லை என்று ஒரு வேதனையுடன் குறிக்கின்றார் செங்கை ஆழியான் அவர்கள். ஈழத்தமிழ் இலக்கியம் எதிர்கொள்ளும் ஒருபாரதூரமான பிரச்சினை இது ஒரு எழுபது எண்பது ஆண்டுகளுக்கு முந்திய ஒரு எழுத்தாளன் பற்றிய விபரங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பற்றவர்களாகவே நாம் இருக்கின்றோம்.இவைகள் தனி மனித முயற்சிகளுக்கு அப்பாற்பட்டவைகள்.
ஆவணக்கூடங்கள், சுவடிகள் காப்பகம் போன்ற நிறுவன ரீதியான அமைப்புக்கள் செய்ய வேண்டிய பணிகள் இவை
34
 
 
 
 
 
 

2010ல் பவள விழா LUŬ LUGOTEGIO ESTÉ; 5 Supërgësinë.
9BG56OTOS தெளிவத்தை ஜோசப்
துரதிஷ்டவசமாக நம்மத்தியில் அவைகள் இல்லை. பல்கலைக் கழகங்கள் இவை பற்றிய அக்கறையற்றவைகளாகவே இருக்கின்றன.
அரச ரீதியாக இயங்கும் இந்நிறுவனங்கள் - தேசிய நூலகம் போன்றவைகளின் தமிழ்ப் பிரிவுகள் தமிழ்தானே என்னும் ஏனோ தானோநிலையிலேயே இயங்குகின்றன.
ஒரு பத்து வருடத்துக்கு முன் வந்த படைப்புக்களைத் தேடிக் கொள்வதே பெரும்பாடாக இருக்கிறது நமக்கு. இத்தனைக்கும் மத்தியில், செங்கை ஆழியானின் தனிமனித முயற்சிதந்திருக்கும் இதுபோன்றதொகுதிகள் மெய்சிலிர்க்கச் செய்பவைகள்தான்.
துரைவியின் ‘உழைக்கப் பிறந்தவர்கள் 1997ல் வெளிவந்தது. வெளியீட்டு விழாவுக்குத் தலைமை தாங்கிய பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் இப்படி ஒரு தொகுதி யாழ்ப்பாணத்தில் இருந்து எப்போதோ வந்திருக்க வேண்டியது என்று குறிப்பிட்டார்.
2001ல் ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள் தொகுப்பை வெளியிட்டதன்மூலம்பூரீதரசிங்அவர்களும் செங்கை ஆழியான் அவர்களும் அந்தப்பணியினை சிறப்பாகச் செய்துள்ளனர்.
பூபாலசிங்கம் பதிப்பகம் ஈழத்து இலக்கியத்துக்காக இன்னும் நிறையச் செய்திருக்கலாம் என்னும் ஆதங்கம் எனக்குண்டு.
ஒரு வருடத்துக்கு இரண்டு அல்லது மூன்று இலங்கை எழுத்தாளர்களின் நூல்களையாவது வெளியிட இலக்கிய மனம் கொண்ட அவர் முன்வரவேண்டும். கையைச் சுட்டுக் கொள்ளுங்கள் என்று நான் கூற முன்வரவில்லை. புத்தக விநியோகத்தில் கரை கண்டவர் நீங்கள்.மணிமேகலை ரவிக்கு முடியுமென்றால் - நம்மவர்களின் நூல்களை வெளியிட்டு கையைச் சுட்டுக்கொள்ளாமலிருக்க - உங்களால் முடியாதா என்றுதான் கூற முனைகின்றேன்.
துரைவியின் உழைக்கப்பிறந்தவர்கள் வெளியான அதே 1997ல் செங்கையாழியான் தொகுத்த மறுமலர்ச்சிக்கதைகள் வெளிவந்தது. வடக்கு கிழக்கு மாகாண சபையின் கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சு இந்த நூலுக்கான நிதியுதவியை செய்துள்ளது.
அமைச்சின் செயலாளர் சுந்தரம்டிவகலாலா அவர்களின் இலக்கியமனம் இதைச் செய்யத்தூண்டியிருக்கிறது.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2010

Page 37
சுந்தரம் டிவகலாலா அவர்கள் விரிந்த இலக்கிய மனம் கொண்டவர்.
மல்லிகையின் வெள்ளி விழா மலர் வெளியீட்டு நிகழ்வுக்காக கொழும்பிலிருந்து நானும் மேமன்கவி, திக்குவல்லைக்கமால், அந்தனிஜீவா, ஆப்டீன், அல் அஸமத், தர்மசீலன் ஆகிய இலக்கிய நண்பர்களும் யாழ் சென்றிருந்தோம். 1990 மார்ச்சாக இருக்கலாம்.
அப்போது யாழ் மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளராக இருந்தவர் சுந்தரம் டிவகலாலா அவர்கள். கொழும்பிலிருந்து ஒரு இலக்கிய நண்பர் குழாம் மல்லிகைக்காக யாழ்ப்பாணம் வந்திருக்கிறது என்று மகிழ்ந்து போனவர். அவரது இல்லத்தில் எங்களுக்கு இராப்போஜன விருந்தளித்துக் கெளரவித்தார். சு. டிவகலாலா என்று கை எழுத்திட்டு ஆளுக்கொரு நூல் கொடுத்தார். எனக்குக் கிடைத்த நூல் அமரர் டானியலின் தண்ணிர் நாவல்.
2002ல் யாழ் இலக்கிய வட்டம் மூலமாக சுதந்திரன் சிறுகதைகளைத் தொகுத்து 750 பக்கங்களில் ஒரு பெருந்தொகுதியை உருவாக்கி இருக்கின்றார் செங்கை ஆழியான்.
சுதந்திரனில் வெளியான 109 சிறுகதைகள் கொண்ட பாரிய தொகுதி இது.
இதற்கான நிதியினை வழங்கியவர் வடக்குப்புனர்வாழ்வு, புனரமைப்பு மற்றும் தமிழமுலாக்கல் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா அவர்கள் என்ற செய்தியையும் செங்கை ஆழியான் அவர்கள் பதிந்து வைத்துள்ளார் அந்த நூலில்,
மலையகத்திலும் மாகாண சபைகள் இருக்கின்றன. அமைச்சர்கள் இருக்கின்றார்கள். அரச நிதியும் இருக்கலாம். இதுபோல் இலக்கியத்துக்காக இலக்கிய நூல்களை வெளியிடுவதற்காக ஏதாவது உதவி செய்துள்ளார்களா என்பதுதான் தெரியவில்லை!
பிந்திய 90களில் யாழ் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் நாயகமாக செங்கை ஆழியான் அவர்கள் ஏற்றிருந்த பதவியும் ஈழகேசரி,மறுமலர்ச்சி, சுதந்திரன்;ஈழநாடு போன்றவைகளின் தேடுதலுக்கான ஒரு சக்தியாக, வாய்ப்பாக அமைந்திருந்தமையும் குறிப்பிடக்கூடியதே.
இதுபோன்ற தொகுப்புக்களுக்கப்பாலும் அவரது எழுத்துப்பணிகள் ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் வரலாற்றுச் செழுமை தேடும் பணிகளாக மிளிர்ந்துள்ளன.
2000ஆம் ஆண்டின் ஆரம்பகாலத்தில் அவர் மல்லிகையில் எழுதிவந்த ஈழத்து முன்னோடி நாவல்கள் பற்றிய கட்டுரைத்தொடர் எத்தனை முக்கியத்துவமானது.
1856ல் வெளிவந்த காவலப்பன் கதையில் இருந்து அவர் எழுதி வந்த குறிப்புக்களும் பட்டியலும் அதற்கு முன் ஈழத்து நாவல்கள் பற்றி வெளியிடப்பட்ட நூற்பட்டியலிலிருந்து வேறுபட்டதாகவும் கூடுமானவரை பூரணத்துவமானதாகவும் அமைந்திருந்தது.
மலையகத்திலிருந்து 1937ல் வெளிவந்த மஸ்கெலியா ஆபோல் அவர்களது"சுந்தரமீனாள் அல்லது காதலின் வெற்றி என்ற நாவலும்.
1940ல் இரத்தினபுரி இதியல்லையைச் சேர்ந்த GS.M. சாமுவேல் அவர்கள் வெளியிட்ட கண்ணனின் காதலி' என்ற நாவலும் அவரது பட்டியலுக்குள் இடம்பெறவேண்டும் என்றும் மல்லிகையூடாக அறிவித்ததுடன் இலக்கியகரிசனையுடனான
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2010

தேடுதல் உழைப்பு மட்டுமல்லாமல் யாராவது செய்து தான் ஆகவேண்டும் என்னும் வரலாற்று நிர்ப்பந்தங்களும் இவை என்று பாராட்டியும் மல்லிகைக்கு எழுதி இருந்தேன்.
உங்களது ஞானத்தில் கூட ஆரம்ப இதழ்களில் ஈழத்து இலக்கிய நம்பிக்கைகள் என்று இளம் புதிய எழுத்தாளர்களை அறிமுகம் செய்யும் தொடர் ஒன்று எழுதினார்.
அவரைத் தொடர்ந்து அன்புமணி, இக்பால் ஆகியோரும் இளம் எழுத்தாளர்களை இந்த நம்பிக்கைகள் வரிசையில் ஞானத்தில் அறிமுகம் செய்தனர். பதிவிலிட்டனர்.
வரலாறு என்பது வரலாறு படைத்தவர்கள் படைத்தவைகள், மட்டுமல்ல வரலாறு படைக்கப் போகின்றவர்களையும் சார்ந்ததே என்பதை செங்கை ஆழியான் அவர்கள் நன்கு உணர்ந்தவர்தான்.
ஈழத்து இலக்கிய நம்பிக்கைகளில் அவர் அறிமுகம் செய்திருந்த ஒருவர் கவிஞர் கனிவுமதி
மலையகக் கவிதை உலகில் பிந்திய எண்பதுகளில் பிரவேசித்து90களில்பத்திரிகைகளில் கவிதைகள் பிரசுரித்துத் திடீரென 2003ல் மல்லிகைப் பந்தலினூடாக அப்புறமென்ன கவிதை நூலை வெளியிட்டுக் கொண்டவர் இன்று கனிவுமதியாகியிருக்கும் புஷ்பராஜ்
கவிஞர், கனிவுமதி, ஒவியர் புஸ்பா என்பதெல்லாம் என்னைப் பொறுத்தவரை இரண்டாம் பட்சமே எனக்கும் குடும்பத்தினருக்கும் புஷ்பராஜ்தான்.
பிந்திய எழுபதுகளில் நான் ரஜமல்வத்தையில் இருந்தேன். ரஜமல்வத்தை என்பது மட்டக்குளியின் நுழைபாதை போன்றது.
ரஜமல்வத்தையில் நான் இருந்த வீட்டில் ஒரு சிறிய அனெக்ஸ் இருந்தது. நான் குடியேறும்போது வீட்டுக்காரருடைய உறவினர் ஒருவர் அதில் இருந்தார். அவர் போன பின் அது காலியாகக் கிடந்தது. வீட்டுக்காரர் வாடகையை கொஞ்சம் கூட்டி அனெக்ஷில் யாரையாவது வைத்துக் கொள்ளுங்கள் என்றார்.
திரு.திருமதி அன்னலெட்சுமிராஜதுரை கொஞ்சகாலம் இருந்தார்.தீர்த்தக்கரை சாந்திகுமார்சிலமாதங்கள் இருந்தார். சாந்திகுமார் திருமணமாகாதவர். அவருடைய சகோதரியின் பிள்ளைகள் இருவர் படிக்கும் பிள்ளைகள் அவருடைய பராமரிப்பில் இருந்தனர். ஒரு பையனும் பொண்ணுமாக.
எனது மூத்த மகளுக்கு 12 வயதிருக்கும், மற்ற மூன்றும் பத்து வயதுக்குக் கீழ்தான். அனெக்ஸில் இருந்த இரண்டும் கிட்டத்தட்ட அதே வயதுதான். படிப்பிற்காக எங்களுடன் விடப்பட்டிருந்த அண்ணனின் மூன்று பிள்ளைகளும், மனைவியின் அக்காள், அண்ணன் பிள்ளைகள் என்று வீடு ஜேஜே என்றிருக்கும். பிள்ளை மடுவம் போல்,
ஆண்பிள்ளைகள் எல்லாரும் வீட்டின் முன்னாலிருக்கும் ரஜமல்வத்தை சந்தியில் பிள்ளையார் பந்தடிப்பார்கள்.
முகத்துவாரம் இந்துக்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த புஷ்பராஜும் இந்தப்பந்தடிக்கும் கூட்டத்துடன் சேர்ந்திருந்தார்.
அரைக்கால்சட்டை போடுகின்ற வயது அது. அவருடைய உறவினர்கள் நானிருந்த வீட்டின் அருகே இருந்திருக்கின்றனர். அங்கே வந்து எங்கள் வீட்டுப் பிள்ளைகளுடன் பந்தடித்துப் பிறகு என்னிடம் வந்து சேர்ந்தவர் அவர்.

Page 38
வகுப்பு உயர உயர பந்தடிப்பதை விடவும் படம் வரைவதில் ஆர்வம் கொண்டிருந்தார். ஒரு சங்கோஜத்துடன் சுருட்டிக்கொண்டுவந்த படங்களை விரித்துவிரித்து என்னிடம் காட்டுவார்.
அவருடைய ஓவியம் வரையும் ஆர்வத்தைக் குறைத்து விடக் கூடாது என்பதை உணர்ந்திருந்தேன் என்றாலும் ஒவியம் என்றால் பெண்களை அழகாக வரைவது என்பது மட்டுமல்ல என்று கூறி இருக்கின்றேன்.
பெண்களே இல்லாத ஒரு கதைக்கு எப்படிப் படம் வரைவது என்பதற்காக கதையையே நிராகரித்து விடும் சங்கதிகள் நானறிந்ததே
பிறகு ஒரு நல்ல ஒவியராக வருவார் என்பதை அவருடைய அந்த சிறுவயது ஓவியங்கள் எனக்குணர்த்தின.
ஞானம், மல்லிகை மற்றும் இலக்கிய நூல்களுக்கான அட்டை ஓவியம் என்று தன்னை நிலை நாட்டிக் கொண்டிருக்கின்றார் அல்லவா! ஞானத்தின் ஒரு சில இதழ்களின் முன் அட்டைகளை அவருடைய ஓவியங்கள் அலங்கரித்துள்ளன. கற்றுக் க்ொள்ளும் ஆர்வம் மிக்கவராகவே இன்றைய கனவு மதியை அன்று நான் கண்டிருக்கின்றேன்.
சில நாட்களின் பிறகு ஒரு அப்பியாசக் கொப்பியைக் கொண்டு வந்து மெதுவாக நீட்டினார். என்ன என்றேன். ஒரு சில கவிதைகள் எழுதி இருக்கின்றேன் என்றார்.
நான் யாருக்கும் வாத்தியாராக இருக்கப்பிடிக்காதவன், விரும்பாதவன் இருந்தாலும் அவரிடம் கவிதை எல்லாம்பிறகு பார்த்துக் கொள்ளலாம். முதலில் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றேன். பிறகு படிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றேன். படிப்பதற்குப் புத்தகங்கள் வாங்கிச் செல்வார். 90களில் பத்திரிகைகளில் கவிதைகள் எழுதினார். திடீரென மல்லிகைப்பந்தலூடாக ஒரு கவிதை நூலையும் அப்புறமென்ன. அடுத்ததாக கம்பவாரிதியின் முன்னுரையுடன் கட்டாந்தரை என்னும் அற்புதமான லேஅவுட்டுடன் அருமையானதொரு கவிதை நூலையும் வெளியிட்டுக் கொண்டவர் கனிவுமதி
பத்மநாப ஐயர், மேமன்கவி, அமரர் பெனடிக்ட் பாலன் ஆகியோரும் அப்போது மட்டக்குளி வாசிகளே. அடிக்கடி வீட்டுக்கு வருவார்கள்.
முருகபூபதி, அமரர்மு.கனகராஜன், ஷம்ஸ், அல் அஸமத் என்று அடிக்கடி ரஜமல்வத்தை வீட்டின் முன் அறையில் எங்களது இலக்கியக் கச்சேரி நடைபெறுவதுண்டு.
முருகபூபதி அவர்கள் நான் அவுஸ்திரேலியா போகின்றேன் ஜோ நாளை மறுநாள் பயணம் என்று திடீரென ஓடிவந்து கூறியதும் இந்த ரஜமல்வத்தை வீட்டில்தான்.
மாத்தளை கார்த்திகேசு அவர்களும் அடிக்கடி வருவார். அமரர் பெனடிக்ட் பாலன் எத்தனை அற்புதமான மனிதர்! மாத்தளை கார்த்திகேசு தன்னுடைய குறிஞ்சி வெளியீடு மூலம்பெனடிக்ட்பாலனின்தலை விதியைப் பறிகொடுத்தோர், சிறுகதைத் தொகுதியைப் போட்டுக் கொண்டிருந்த நாட்கள் அவை,
பெனடிக்ட் பாலன் என்னிடம் கூறினார். தெளிவத்தை என்னுடைய ஒரு சிறுகதைத் தொகுதி கூட இன்னும் வரவில்லை. மாத்தளை ஒரு தொகுதியைப் போட்டுக் கொண்டிருக்கின்றார். ஆனால் இப்போது தினக்குரல் சாமி
36

ஒரு தொகுதிக்கான நிதி உதவியைத் தருவதாக உறுதி அளித்திருக்கின்றார்.என்று இழுத்தார்.
இரண்டும் வரட்டுமே மகிழ்ச்சிதானே என்றேன் மகிழ்ச்சி என்ன மகிழ்ச்சி, கதைகள் வேண்டுமே ஆர்க்கைவில் தேடி எடுப்பது சரிப்படாது என்றார். கூடுதலான கதைகள் தாமரையில் வந்தவைதான் என்றார். 'விபச்சாரம் செய்யாது இருப்பாயாக’ என்பதுதான் இந்தத் தொகுதிக்கான தலைப்பு என்று தீர்மானித்துக் கொண்டேன் அதே இல்லை என்னிடம் என்றார். ஆறேழு கதைகளே இருக்கின்றன என்றார். என்னிடம் இருக்கிறது என்றேன். ஆனால் தேட வேண்டும். நாலைந்து நாள் தாருங்கள் என்றேன். அந்த நாலைந்துநாட்களுக்குள் தினசரி இரவு எட்டுமணிபோல்கேட் கொண்டி ஒலிவிடும்.
அவர் நிற்பார். முதல்நாளே என்னிடம் கூறினார்.'தெளிவத்தை எனக்கு மருந்து உங்கள் வீட்டைத் தாண்டிப் போய் தான் அருந்த வேண்டும். நான் வியாதிக்காரன். மருந்து தீர்ந்து விட்டதென்றால் இப்படியேதான் போகவேண்டும். மருந்து வாங்க. மற்றப்படி கதை கிடைத்ததா என்று கேட்டு உங்களை சங்கடப்படுத்த அல்ல. என்னுடைய மருந்துக்காக. என்றார். அவருடைய மருந்து என்ன என்பது எனக்குத் தெரிந்தது தான்.
ஒரு நாள் என் அழைப்பை ஏற்று உள்ளே வர மறுத்து கேட்டிடமே நின்று பேசிக்கொண்டிருந்தார். ஏன் வெளியேயே நிற்கின்றோம் என்று கேட்டேன்.
மருந்து கொஞ்சம் கூடிவிட்டது தெளிவத்தை அம்மா கோபிப்பா உள்ளே வந்தா'என்றார்.
என்ன அற்புதமான மனிதர் பெனடிக்ட் பாலன். விபச்சாரம் செய்யாதிருப்பாயாகக் கதையைத் தான் முதலில் தேடிக்கொடுத்தேன். பிறகு ஒரு ஆறுகதைகள் போல் ஒரே வாரத்தில் தேடிக் கொடுத்தேன். மகிழ்ந்துபோனார்.
இந்தத்தொகுதிவருகிறதென்றால் அது உங்களால்தான் என்றார்.
அப்படி என்றால் சாமி அவர்கள் என்றேன். இரண்டு கை சேர்ந்தால்தான் தட்டலாம் ஒலிஎழுப்பலாம் - சக்கரங்கள் இரண்டும் ஒன்றாக இயங்கினால் தான் வண்டி ஒடும் என்று சிரித்தார்.
இரண்டு சிறுகதைத் தொகுதிகளும் வெளிவந்து அவரை களிப்படையச் செய்தன.
விருந்தும் மருந்தும் மூன்று வேளை என்பார்கள் கட்டுப்பாட்டுடன் இருக்கவேண்டும் என்பதற்காக கூடிவிட்ட மருந்தே அவருக்கு எமனாகவும் வந்திருக்கவேண்டும் என்று எண்ணுகின்றேன். தி.ஞா : ஒரு எழுபது எண்பது ஆண்டுகளுக்கு முந்திய தமிழ் எழுத்தாளர்கள் பற்றிய விபரங்களைக் கூடத் தேடிக் கொள்ள முடியாத பாரிய பிரச்சினை ஈழத்தமிழ் இலக்கியத்துக்கு இருக்கிறது என்று கூறினீர்கள். அதற்கான விடிவு அல்லது மாற்று வழி ஏதாவது இருப்பதற்காகக் கருதுகின்றீர்களா? தெ.ஜோ : தமிழ் மொழி ஒரு அதிகார மொழியாக அரச மொழியாக-ஆட்சிமொழியாக அமையவேண்டும். அதற்கான செயற்பாடுகள் மிகுந்த - தேர்ந்த - அரசியல் சாணக்கியத்துடன் முன்னெடுக்கப்பட வேண்டும்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2010

Page 39
அரசாங்கத்தில் ஆளும் அணியில், தமிழர்கள் அமைச்சர்களாக, உயர் பதவியாளர்களாக இருக்கலாம். ஆனால் தமிழ்மொழி இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். கண்டி மன்னன் தமிழில்தான் கையொப்ப மிட்டிருக்கின்றான் என்று நாம் பெருமையுடன் நமக்குள்ளே பேசிக் கொண்டிருக்கையில் கண்டி காணாமல் போய்விட்டது. இன்னும் புதிது புதிதாக வெவ்வேறு இடங்கள் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன. உலகில் தமிழ் வழங்கிய எத்தனையோ நாடுகளில் இன்று தமிழ் காணாமல் போயிருக்கிறது. இலங்கைத் தமிழன் உலகமெங்கும் இருக்கின்றான் என்று நாம் பெருமைப்படலாம். ஆனால் அங்கெல்லாம் இன்னும் எத்தனை காலத்துக்குத் தமிழ் இருக்கும் என்பதை நாம் உணர வேண்டும்.
அங்கெல்லாம் எப்படியாவது போய் விட்டும். இங்காவது நமது மொழியை நாம் பாதுகாக்க வேண்டும். வளர்த்தெடுக்க வேண்டும்.
அஷ்ரப் சிஹாப்தீன் அவர்கள் பூரீலங்காவில் இருந்து பூரீரங்கப்பட்டினம் வரை என்னும் ஒரு சிறிய பயண அனுபவ நூல் வெளியிட்டிருக்கின்றார். அதில் கேரளத்துக்குப்போன அனுபவம் பற்றி எழுதும் போது (பக்கம் 5) சேரமான் பெருமாள் நிறுவிய சேர ராஜ்யமாக இது இருந்தபோது இங்கு தமிழ் மொழி பேசப்பட்டது என்பது வரலாறு என்று குறிக்கின்றார்.
இன்று கேரள மானிலத்தின் மொழியாக கோலோச்சுவது இலக்கியச் செழுமையும் உலக இலக்கியத்துக்கு அணி செய்யும் மொழி என்றும் பெருமைப்படும் மலையாள மொழி. தமிழ் அங்கிருந்து காணாமல் போய்விட்டது.
இன்று சிங்கள மொழியின் சீர்மை, செழுமை, வரலாறு, இலக்கியம், இலக்கிய முன்னோடிகள் பற்றிய சிறப்பான வெளிவருகைக்கான காரணம் அது இந்த நாட்டின் அதிகார மொழி - ஆட்சி மொழி என்பதிலும் உள்ளடங்கியே இருக்கின்றது.
33h Luišs iš GgTLİršá
வாழ்வோம் வா (ஆணி 1965) திலகம் அழிந்தது (மார்கழி 1965) ஆகியவை “கலைச்செல்வி” யில் வெளியான ஏனைய சிறுகதைகளாகும். இலக்கியப் பணியில் அவர் தொடர்ந்தும் ஈடுபட்டாரா? இப்போதும் எழுதிக் கொண்டிருக்கிறாரா? போன்ற கேள்விகளுக்குரிய விடைகள் கிடைக்கவில்லை.
பாடசாலை மாணவர்களையும் எழுத்தாளர்களையும் உருவாக்கும்முயற்சியின் முதற்படியாக அவர்களின் வகுப்பறை அனுபவங்களை எழுதவைப்பது பொருத்தமாக இருக்கும் எனக்கருதி “ஆசிரியர் சொன்ன கதை” சம்பந்தமான அறிவித்தல் வெளியிடப்பட்டது. சோம்பலுற்ற மாணவர்களுக்குச் சுறுசுறுப்பை உண்டாக்குவதற்காக மாணவர்களின் தவறுகள் சிலவற்றை நேரடியாகச் சுட்டிக்காட்டாமல், மறைமுகமாகச் சொல்லி அவர்களை திருத்துவதற்காக பாடப் பரப்புக்கு அப்பால், தமக்கு நல்லவையாகத் தெரிந்த சில சம்பவங்களை உண்மைகளைத் தமது மாணவர்களுக்கும் தெரியப் படுத்துவதற்காக ஆசிரியர்கள் சில சந்தர்ப்பங்களிற்சுவையான சில கதைகளைச்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2010
 

క్షీ
வழிவா! உங்கட அப்பா. முந்தி
sooTäscöI LITL on osoli 3,5 இருந்தவரோ?
அடடே...! எப்படி &odor(6 பிடிச்சனிர்? ஓ. சாத்திரியார் பரம்பரை ஆச்சே."
இதுக்கெல்லாம் சாத்திரமும், சம்பிரதாயமும் எதுக்கு.? அவர் எழுதிற கதை, கவிதைகளுக்கு சதுரங்கம், முக்கேணக் காதல், வட்டத்துக்குள் ஒரு கரும்புள்ளி, நேர்கோடு ஓவியமாகுமோ.
சொல்வதுண்டு, மாணவர்கள் ரசித்த அந்தக் கதைகளை - அந்தக் கதைகள் சொல்லப்பட்ட சந்தர்ப்பங்களையும் குறிப்பிட்டுக் “கலைச்செல்வி" க்கு எழுதியனுப்புமாறு கேட்டிருந்தோம். மாணவர்கள் பலர் மிகுந்த உற்சாகத்துடன் தாம்ரசித்த கதைகளை எழுதி அனுப்பினார்கள்.1962பொங்கல் பலரில் “ஆசிரியர் சொன்ன கதை"யை எழுதியவர் இரா. சிவச்சந்திரன். எவ்விதமான திருத்தங்களோ மாற்றங்களோ இல்லாமல் தன் கதையை அச்சிலே பார்த்ததால் ஏற்பட்ட உற்சாகத்தாலோ என்னவோ அவர் சுயமாகவே கதைகளை எழுதியனுப்பத்தொடங்கினார். துடிப்பு(ஜப்+கார்த்திகை1963) வாழ்வே வேறுதான் (பங்+சித் 1964), உறவின் நிழல் (ஆவணி 1965) ஆகிய, சிறுகதைகளும். இன்பம் (மார்கழி 1963) என்ற உருவகக் கதையும், “கலைச்செல்வி'யில் வெளிவந்தன. சில காலம்பூரணி இலக்கியக் குழுவுடன் இணைந்து இயங்கியவர், தொடர்ந்து எழுதாமல் விட்டதற்கு பல்கலைக்கழகப் பணிகள் காரணமாக இருக்கலாம்
இனி, அடுத்த இதழில்
37

Page 40
நாடகங்களுக்கு வந்த
நாலுபேருக்கும் நன்றி - ့်နှီး S)
இந்த இலக்கங் s
களைச் சற்று கவனத்திற் கொள்க: 19.08.03.
இலங்கை அரசின் தேசிய நாடக விழா நவம்பர் 02 - 16 வரையில் நடந்த பொழுது எதிர்பார்த்தது போல் பெரும்பான்மை மொழியில் குறு நாடகங் களாக 19ம் முழு நீள நாடகங்களாக 08ü அரங்கேற 03 மட்டும் தமிழில்
அதிலும் கூட இரண்டு சிங்களத் தழுவல் - மொழி பெயர்ப்பு.
பரிசுக்காக பணவருவாயைக் கருத்திற் கொண்டு வளரத்துடிக்கும் சில தமிழ்க் கலைஞர்களின் பெயர்களில் திரை மறைவில் நின்று இயக்கியவர்கள் - தயாரித்தவர்கள் பிரபல சிங்கள நெறியாளர்களும் தயாரிப்பாளர்களும்,
ட்கம் வெட்கம் அவர்களுக்கன்று நமக்கு
Şა ჯაგავდა:&s அதிலும் அடுத்த கேவலம், முதலிரண்டு நாடகங்களையும் காண வந்த தமிழ் நாடக ஆர்வலர்கள் நான்கு பேருக்கு மேல் இல்லை. மூன்றாவது நாள் குஞ்சும் குளுவானுமாக (பங்குபற்றிய) கலைஞர்களின் குடும்பத்தினரும், பத்துக்கு மேற்படாத வேறு சில தமிழ்ப் பேசுவோரும். இவர்களோடு மூன்று நாடகங்களையும் பார்க்க சிறுதொகை சிங்களக் கலைஞர்களும் ஆர்வலர்களும்,
இவ்வாறான இழிநிலை ஏன் இலங்கைத் தமிழ் நாடகத்துறைக்கு ஏற்பட்டது?
தமிழ் நாடகவிழா ஒன்றிருப்பது யாருக்காவது தெரிந்திருந்ததா?
நெற்றி புடைத்தது, நெஞ்சுவெந்தது. இலங்கைக் கலைக்கழகத்தின் அரச நாடகக் குழுவில் இரண்டே இரண்டு தமிழ் அங்கத்தினர்கள் மட்டுமே! அவர்களுக்கு இருந்த சொல்லிமாளாத நாடக ஏற்பாட்டு வேலைகளில் அரங்கிற்கு (மண்டபத்திற்கு) தமிழ் ரசிகர்களைக் கொண்டு வருவதையும் சேர்க்கலாமா?
பதிலைச் சொல்லத் தெரியவில்லை, அபிமானிகளே! 6TÜLJLg (3LLI T ° 雛 எவ்வாறோ, பிறக்கப் போகிற 2011-லிலாவது கொஞ்ச நஞ்ச கொழும்பு | வாழ் கலைஞர்களும், வட - கிழக்கு பாவப்பட்ட ஜன்மங்களுடன் சேர்ந்த கலைஞர்களும் ஏதாவது செய்யாமற் போனால் நடக்கப் போகிற சங்கதி என்ன தெரியுமா?
38
 
 
 
 
 
 

エ
ჯა“
59
6\)
சிங்கள நாடகத்துறையினர் பண வருவாயை மட்டும் ருத்தில் கொண்டு தமிழ் நாடக விழா நடத்துவர் அரச ட்டத்தில் தாராள இடம் கிடைக்கும் பழைய மொந்தைகளை மாழிபெயர்ப்புதழுவல் என்ற பிரிவில் உள்ளடக்கி, அவற்றைத் மிழாக்கிக் கொடுக்கும் கைக்கூலிகளின் உதவியோடு ஜோன் சில்வா அரங்கில் பெரமேளமிடுவர்
ர் அடிக்குறிப்பு :
மேற்குறிப்பிட்ட இரு நாடகங்களின் பின்னணியில் செயல்பட்ட சிங்களக் கலைஞர்களும், ஒரேயொரு சுய துக்கத் தமிழ்க் கலைஞர் குழாமும்பெற்ற பண நோட்டுகள் எத்தனை என்பதை ஒசையிட எனக்கு வல்லமை இருந்தும் உஷ் மூச் அதிகாரபூர்வ ஒசை கலாசார அலுவல்கள் திணைக்களமே பொறுத்திருங்கள்.
லைஞர் தொ.கா. உட்பட தமிழ் ஒழிப்பே ஒழிப்பு! அறியாப்பருவத்திலே அன்னை தமிழ் ஊட்டிய ாய்ப்பாலால் தமிழ்ப்பாசம் எல்லோரையும் போல எனக்கும் ருப்பதால் -
சமீபத்தில் சென்னையில் இருந்த பொழுது அறையில் தா.கா. தமிழ் ஒளிபரப்புகள் ஒவ்வொன்றையும் அவதானித்துக் காண்டிருந்த பொழுது தமிழ் அலைவரிசைகள் அன்புடன் ழங்கிய அழகுப்பெயர்கள் இவை:
Le GUIT — GETT Le 6UIT மிஸ்டர் அன் மிஸர்ஸ் பாய்ஸ் அன் கேர்ள்ஸ் காமெடி டைம் காமெடி ஷோ
காமெடி
ஸ்டார் சிங்கர் ஸ்டார் காமிரா ஆக்ஷன் டாப் டென் மூவிஸ் கோலிவூட் டைம் சூப்பர் டென் கோலிவூட் பஸ் ஸ்டார்ஸ் உங்களுடன் ஜாக்பாட்
ஒன் பை டு ஸ்டண்ட் ஷோ ஹோலிவூட் மூவ்மெண்ட் கோல்டன் மூமெண்ட்ஸ் ஜஸ்ட் உள்ளே
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2010

Page 41
தொடர்ந்து சேகரிக்க முயன்றேன். நித்திராதேவி அன்பா அரவணைக்க தூங்கிப் போனேன்.
ஒரு கொசுறுத்தகவல் நமது மகா சக்திக் காரர்க தமிழ் நாட்டவரையும், தூக்கி வீசக் கூடிய பெயர்கை வைக்கிறார்கள்! உதாரணத்திற்கு இரண்டு நம்ம ஹிட்ஸ் ஸ்போர்ட்ஸ் ஃப்ளாஷ்
வளர்க தமிழுணர்வு
ருநீலங்கா - சீனா ஜயவேவா! சீ வகுப்புகளைத் தேடுங்கள்
"விஜிதா யாப்பா என்ற பிரபலமானதொரு புத்த விற்பனை நிறுவனத்திற்குள் நுழைய நேரிட்டபொழுது அந்த புத்தகம் கண்ணில் பட்டுத் தொலைத்தது
“சிங்கள - சீன அகராதி' எடுத்துப் பார்க்காம நகர முடியவில்லை.
களனிப் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர கைவண்ணம் என்பது மட்டுமல்ல, அங்கே சீனமொழியிய பிரிவும் உள்ளது என்பதையும் புரிந்து கொள்ள முடிந்தது.
இந்நாட்டின் திரு - திருமதி பெரும்பான்மைக மண்ணில் மேலோங்கி வரும் சீன ஆதிக்கத்தையும், பார் தொழில்துறை வியாபித்தலையும் உணர்ந்த நிலையில் உரி நடவடிக்கைகள் மேற்கொண்டிருப்பது துலாம்பர எதிர்காலத்தைத் துல்லியமாகக் கணக்கிட்டுக் காரிய மாற்ற தொடங்கியுள்ளனர்.
தொடர்ந்து என்ன நிகழ்வுகள்? பல்கலைக்கழக மட்டத்தில் மட்டுமல்ல, விகாரைகளிலு வீதியோர டியூட்டரிகளிலும் சீனமொழி ஆரம்ப வகுப்புக தொடங்கிவிடும் அங்கே நூற்றுக்கு நூறு அவர்கே இருப்பார்கள்.
சமீபத்தில் நிகழ்வொன்று வடகொரிய வேலை வாய்ப் பெற அந்நாட்டு மொழித்தேர்ச்சிப் பரீட்சை எழுத கொழும்பி காளான் போல எழும்பிய நிலையங்கள் நூற்றுக்கும் மேலே ஒ தமிழனோ முஸ்லீமோ அங்கில்லை.
இப்பொழுது வடகொரிய மனிதவள அபிவிருத் நிறுவனப் பணிப்பாளர் றின் கில் சுன் சொல்லும் செய் 'கொரிய மொழித் தேர்ச்சிப் பரீட்சை நடத்தப்பட்ட நாடுகளி இலங்கை முன்னணி வகிக்கின்றது"
இதையே தான் எதிர்காலத்தில் நம் வீட்டிற்கு அருகி இருந்து கொண்டு சீனமும் சொல்லும் நிச்சயமாக
ஆக - என் ஒசை எதிர்ப்பைத் தெரிவிப்பதற்கு அல் உங்கள் மக்கள் - அந்த மக்களின் சந்ததிக இலங்கையில் கடைத்தேற வேண்டுமெனின் (அதாவ புலம் பெயராமல் இங்கேயே இருந்து விடத் தீர்மானிப்பே வேகமாக - மிக, வேகமாகச் சீன மொழி கற்று கொள்ளுங்கள்
ஒரு காலத்தில், வடக்கிலே. ஆங்கிலம் கற்றார்களே அப்பு வேடிக்கையான ஒசைகள் அல்ல இவை இதிலே சோடை போனோமோ கொழும்பிலும் பி நகரங்களிலும் முட்டி மோதப் போகும் சீனர்களைப் பார்த் பே, பே என விழிப்போம்.
சரி, எப்போ பிள்ளை குட்டிகளோடு சீன வகுப்புகளை தேடிப் போவோம்? அல்லது நாமே பிசினஸ் தொடங் Si GB (36) TLDT?
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2010

لموال
பிற 迪
ாத் கி
ஒரு கொசுறுத் தகவல் :
இரவு 9.00க்கு இ.ஒ.கூ. தமிழ்த் தேசிய ஒலிபரப்பின்
பண்பலையை ஒதுக்கித் தள்ளிக் கொண்டு ஒலிக்கும் தமிழ்ச்
சீன நிகழ்ச்சிகளிலும் சீன வகுப்புகள் உண்டு
மானிப்பாயில் ஒரு வெள்ளையர் தமிழ்வழிக் கல்வி முன்னோடி!
பெரிய பெரிய கலாநிதிகளுக்குத் தெரிந்த ஒருவர் தான் அவர் என் போன்ற கல்லாநிதிகளுக்கு இப்பொழுதே தெரிகிறது
1822-1884 இக்காலக் கட்டத்தைச் சேர்ந்த சாமுவேல் ஃபிஷ்கிரின் அமெரிக்க மிஷனரியின் ஒர் அங்கம் தமிழில் மருத்துவப் படிப்புகளைக் கற்றுத் தரமுடியும் என்பதை சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன் நிரூபித்தது அதிசயம்
யாழ். மானிப்பாயில் தமிழ்வழி மாணவர்களுக்கு அலோபதி மருத்துவக் கல்வியைத் தமிழிலேயே போதித்தது வைர வரலாறு அதற்கு முன் முயற்சியாக கலைச் சொல் அகராதியையும் ஆங்கிலம்-தமிழ் அகராதியையும் தயாரித்தவர். மனுஷ அங்காதி பாதம், மருந்துச் சரக்குகளின் பெயர், கெமிஸ்தம், மனுஷசுகரணம், இரண வைத்தியம் இப்படி மாணவர்களுக்கு தமிழில் மருத்துவம் கற்பிப்பதற்காக பல நூல்களை அந்தக் காலத்திலேயே எழுதி தமிழால் முடியும் என்று சாதித்துக் காட்டினார் ஃபிஷ்கிரீன்.
அடுத்த மாதம் மிகக் கோலாகலமாக நிகழவுள்ள நாலுநாள் அனைத்துலக எழுத்தாளர் மாநாட்டில் இந்த எழுத்தாளரையும் நினைவுகூர்ந்து கெளரவப்படுத்தலாமே!
நாவலில் கல்லைக்கட்டி நதியில் போடு:
நான் எழுதிய முதல் நாவல் சுவாமியும் சிநேகிதர்களும் இதை நான் இங்கிலாந்திலுள்ள பல பிரசுர நிறுவனத்தினருக்கும் அனுப்பினேன். அனைவரும் திருப்பி அனுப்பி விட்டார்கள். கடைசியாக (ിLബം്', என்ற வெளியீட்டாளருக்கு அனுப்பினேன். அத்துடன் இணைத்திருந்த கடிதத்தில், இந்த நாவல் ஏற்கப்படாவிட்டால், ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் எக்ஸ்டர் கல்லூரியில் கற்கும் என் நண்பன் பூர்ணாவுக்கு அனுப்பி விடுகஎனக் கேட்டுக்கொண்டேன். பூர்ணாவுக்கும் ஒரு கடிதம் எழுதி என் நாவல் நிராகரிக்கப்பட்டு உனக்கு அனுப்பப்பட்டால், நீ அதில் ஒரு கல்லைக் கட்டி தேம்ஸ் நதியில் போட்டுவிடு! என்று. நான் எதிர்பார்த்தபடியே என் நாவல் நிராகரிக்ப்பட்டு பூர்ணாவிடம் போய்ச் சேர்ந்தது! ஆனால், அவர் நான் சொன்னபடி அதைத் தேம்ஸ் நதியில் போடவில்லை! லண்டனிலுள்ள பல பிரசுரகர்த்தர்களிடம் போனார். கடைசியில் கிரஹாம் கிரீன் என்ற பிரபல ஆங்கில எழுத்தாளரிடம் அதைக் கொண்டு போய்க் கொடுத்தார். அவர் அதைப் படித்து விட்டு ஒரு பிரசுரகர்த்தரிடம் சிபாரிசு செய்தார். அவர் அதை உடனே ஏற்றுக் கொண்டார். எனக்கு அட்வான்ஸாக இருபது பவுன் அனுப்பினார்.
திரு. ஆர்.கே. நாராயணன்
39

Page 42
(அடிப்படைகள் - வரலா
ரோப்பிய (மற்றும் அமெரிக்க)த் திறனாய்வியற் சிந்தன்ைகள் பற்றிய நோக்கிலே புறநிலைக் கொள்கை சார்ந்ததான புதுமுறைத் திறனாய்வு சார் பார்வைகள் கடந்த கட்டுரையின் பிற்பகுதியில் கவனத்திற் கொள்ளப்பட்டன. இப்பார்வைகளின் செல்வாக்கைக் குறைக்கும் வகையில் செயற்பட்டுநின்றவை மார்ச்ஸியத் திறனாய்வுப் பார்வைகள். இவற்றையும் புறநிலைக் கொள்கையின் புதிய வரலாற்றுக்கட்டமாக அமைந்த அமைப்பியல் சார் சிந்தனைகளையும் இங்கு சுருக்கமாக நோக்கலாம். அவற்றைத் தொடர்ந்து வடமொழித் திறனாய்வியலின் முக்கிய அம்சங்களும் இங்கு கவனத்திற்கு வருகின்றன.
2.2.3. மார்க்ஸியத் திறனாய்வுப் பார்வைகள் மற்றும் அமைப்பியல் சார் சிந்தனைகள் - ஒரு சுருக்கக் குறிப்பு.
மார்க்ஸியம்' என்ற சமூக அறிவியலானது சமூக அமைப்பை 'ஒரு கட்டிடமாக உருவகிப்பது. அக்கட்டிட அமைப்புக்கு பொருளியல் சார்ந்த அம்சங்கள் அடித்தளமாக அமைவன என்பதும் அந்த அடித்தளத்தின் மீதமைந்த மேற்கட்டுமான அம்சங்களாகவே அரசியல், சட்டம், சமயம் மொழி,இலக்கியம் மற்றும் கலைபண்பாட்டுமரபுகள் முதலியன திகழ்கின்றன என்பது மார்க்ஸிய தத்துவத்தின் பொது அடிப்படையாகும். இத்தத்துவத்தின் அடியாக உருவான இலக்கிய நோக்கானது, இலக்கிய ஆக்கத்தை, சமூகச் சூழல்சார் வாழ்விய்ல் பிரச்சினைகளின் பிரதிபலிப்பு ஆகக் காண்பதாகும். படைப்புக்கான படைப்பாளியின் 'அநுபவ அம்சத்துக்குப் பின்புலமாகவும் அடித்தளமாகவும் சூழல்சார் காரணிகள் உள்ளன என்பது இதன் உறுதியான நிலைப்பாடாகும். இக்காரணிகளே 'படைப்புக்கான அநுபவங்களைத் தோற்றுவிக்கின்றன என்பதும் அவற்றைப் பிரதிபலிக்கும் அழகியற் செயற்பாடுகளே கலை மற்றும் இலக்கிய ஆக்கமுயற்சிகள் என்பதுமே மார்க்ஸியத் திறனாய்வியலின் பொது அடிப்படையாகும்.
இவ்வகையில் இந்நோக்கு படைப்பின் உள்ளடக்க அம்சத்துக்கு முதன்மை தருவது அத்துடன் படைப்புச் செயற்பாட்டைச் சமூகத்துக்குப் பயன்படுவதான ஆக்கமுயற்சியாகவும் கருதிநிற்பது. முன்னர் நாம் நோக்கிய புதுமுறைத் திறனாய்வு சார் சிந்தனைகளிற் பலவும் கட்டமைப்பை அதாவது வடிவத்தை முதன்மைப்படுத்தி அமைந்த பார்வைகளாகும். அப்பார்வைகளுக்கு எதிரான ஒரு தளம் சார்ந்ததாகவே மேற்படி மார்க்ஸிய இலக்கிய
40
 

N
- புதிய எல்லைகள்)
- கலாநிதி நா. சுப்பிரமணியன்
நோக்கு திகழ்ந்துவருகின்றமை தெளிவாகும். இந் நோக்கானது ஒரு இலக்கியக் கோட்பாடாக உருப்பெறும் நிலையில் ரியலிசம் எனப்படும் யதார்த்தவாதத்துடன் மிகநெருக்கமான உறவு கொண்டது. (யதார்த்தவாதம் என்ற படைப்பியற் சிந்தனையானது இலக்கிய ஆக்கத்தை சமூகச்சூழலின் பிரதிபலிப்பு ஆகக்கொள்வதென்பதையும் அவ்வகையில் உள்ளடக்கத்தை முதன்மைப்படுத்துவ தென்பதையம் முன்னரே நோக்கியுள்ளோம்)
இந்தயதார்த்தவாதத்தளநிலையில் மார்க்ஸிய இலக்கிய வாதிகள் நிகழ்த்திய விவாதங்கள் பல. இவர்களால் வெளிப்படுத்தப்பட்ட கருத்தாக்கங்களும் பலவாகும். அவை யாவற்றையும் இருமுக்கிய வகைகளில் அடக்கலாம்.
ஒருவகைப் பார்வை படைப்பின் உள்ளடக்கத்தில் 'வர்க்கச்சார்பு என்ற அரசியல் அம்சத்துக்கு முதன்மை தந்து, உழைக்கும் மக்களுக்கு நம்பிக்கையூட்டுவது' என்ற நோக்கிலமைந்ததாகும். இதுவே ரஷ்யாவில் 1930களில் ஸ்டாலினது ஆட்சியில் உருவாக்கப்பட்ட சோஷலிஸ் யதார்த்தவாதம் என்ற கோட்பாடாகும். இது ஒரு படைப்பியற் கொள்கையாகவும் திறனாய்வுப் பார்வையாகவும் வெளிப்பட்டதாகும். (முன்னைய கட்டுரையில் ரியலிஸம் பற்றிய பகுதியில் இதுபற்றி நோக்கியுள்ளோம்.) இக்கருத் தாக்கம் உள்ளடக்க அம்சத்துக்கு மிகை அழுத்தம் தருவது என்பதோடு குறித்த அரசியல் நிலைப்பாட்டை நோக்கி இலக்கியத்தை இட்டுச்செல்வதுமாகும்.
மார்க்ஸிய நோக்கின் இன்னொருவகைசார்பார்வைகள், உள்ளடக்க அம்சத்துக்கு உரிய இடத்தை வழங்குவதோடு படைப்பின் கலைத்தன்மைக்கும் உரிய இடம் வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தினடியாக உருவானவையாகும். ‘வாழ்வின் அநுபவ அம்சங்களிலிருந்தே இலக்கியம் பிறக்கின்றது. என்ற அடிப்படையில் உருவான பார்வைகள் இவை படைப்பாளி தனது அரசியற்சார்பை (வர்க்கச் சார்பை) எழுத்திலே வலிந்து புகுத்த முற்படும் நிலையில் படைப்பின் அநுபவ அம்சத்துக்கும் அதுசார்ந்ததான கலைத்தன்மைக்கும் ஊறுநேர்ந்துவிடும் என்பதான எச்சரிக்கையுணர்வினடியாக வெளிப்பட்ட சிந்தனைகள் இவை. மார்க்ஸிய paw6.ufa56fGGANTIS JTTGOT 6J6566) (Friedrich Engels, 1820- 1895) மற்றும் ரஷ்யாவில் மார்க்ஸிய அரசியலை முன்னெடுத்தவர்களில் முக்கியமான ஒருவரான லியோ ட்ராட்ஸ்கி (Leon Trotsky , 1879 - 1940) ஆகியோரிடம் கருக்கொண்டிருந்த இவ்வாறான எண்ணக்கூறுகள் பின்னர் ஜோர்ஜ்லூகாக்ஸ் (GeorgLukacs, 1885-1979), அந்தோனியோ
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2010

Page 43
fyThé (Antonio Gramsci, 1891 - 1937), Gg/DuffL LDTriögsh) (Herbert Marcuse 1898-1979) SALuf GLD6gif (PiemeMeshey, 1938-) முதலிய ஐரோப்பிய மார்க்ஸியச் சிந்தனையாளர்களால் வளர்த்தெடுக்கப்பட்டன. இவ்வாறான பார்வைகள் பலவும் பொதுவாக (முன்னர் நாம் நோக்கிய) விமரிசன யதார்த்தவாதம் என்ற படைப்பியற் கொள்கையுடன் சார்த்தி இனங்காணப்படுவனவாகும்.
மேலே முற்சுட்டியவாறாகப் புதுமுறைத் திறனாய்வுக் கொள்கைகளும் அவற்றினின்றும் வேறுபட்ட நிலைகளில் மார்க்சியப் பார்வைகளும் இயங்கிநின்ற சூழலில் அவற்றினிடையிலான முரண்பாடுகளுக்கு ஊடாக,இலக்கியத் திறனாய்வியலை இன்னொரு புதிய கட்டத்துக்கு நகர்த்தும் வகையில் உருவான கருத்தாக்கங்களே அமைப்பியல் மற்றும் பின் அமைப்பியல் சார் சிந்தனைகளாக வெளிப்பட்டனவாகும். இவற்றின் தொடர்நிலையிலான கருத்தாக்கமே பின்நவீனத்துவம் ஆகும்.
அமைப்பியல் என்ற திறனாய்வு அணுகுமுறையானது இலக்கிய ஆக்கமொன்றை மொழிசார் கட்டமைப்பு ஆகப் பார்ப்பதும் அக்கட்டமைப்புக்கான மூலக்கூறுகளைச் சமூகத்தின் ஒட்டுமொத்தப் பண்பாட்டுத் தளங்களின் மூலங்களில் இனங்கண்டு காட்டுவதுமான முயற்சிகளின் விளைபொருளாக வெளிப்பட்டதாகும் இவ்வகையில் முதலில், மேற்படி பண்பாட்டுத்தளங்களுக்கு சமூக மனம்' என்ற அருவமான அமைப்பு உளது என்பது உணரப்பட்டது. அவ்வமைப்பின் மொழிசார் வெளிப்பாட்டுநிலைகளாகவே படைப்பாக்கங்கள் தரிசிக்கப்பட்டன. இப்பார்வையை விளக்கியுரைக்கும் முறைமையிலேயே அமைப்பியல் ஒரு கோட்பாடாக உருவாக்கம் எய்தியது.
ஒரு படைப்பாக்கத்தின் கட்டமைப்பானது சமூகத்தின் கூட்டு நனவிலி மனம்' என்ற அடித் தளத்தின்புறநிலைத் தோற்றமாகும் என்பதே அமைப்பியல் என்ற கோட்பாட்டின் தெளிபொருள் ஆகும். மொழியியல் மற்றும் உளவியல் என்பன சார்ந்த நுட்பமான சொல்லாடல்களூடாக இந்தக் கருத்தாக்கம் 85|''L60)LOś85úUs".6 sir 647 gyd. & (cyfi (Ferdinand de Saussure, 1857 -1913). G6)6S 'IJITGnosh) (Claude Levi Strauss, 1908-2009), CrystLogit gró516m) sit (Roman Jacobson, 1896-198) typg,65u6) is 6flair சிந்தனைகளூடாக உருப்பெற்ற கோட்பாட்டு வடிவம் இது.
இவ்வகையில் இங்கு'அமைப்பு எனச் சுட்டப்படுவது,ஒரு இலக்கிய ஆக்கத்தில் அமைந்துள்ளவையான தொனிப்பொருள், அதுசார்ந்த உணர்வுநிலை, அதனை வெளிப்படுத்துவதற்குப் பயன்படும் மொழிநடைசார்ந்த அழகியற்கூறுகள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதான அருவ வடிவமான சமூக மனம்' என்பதையே உணர்த்தி நிற்பதாகும்.மேற்படி கூறுகள் ஒன்றுடனொன்றுகொண்டுள்ள உறவே அமைப்பியல் முறைமையிலான திறனாய்விற் கவனத்துட்கொள்ளப்படுகிறது. சுருங்கக்கூறுவதாயின் படைப்புக்குள் கட்புலனாகாத நிலையிலுள்ள உணர்வுக்கூறுகள் மற்றும் இலக்கியக் கோட்பாட்டம்சங்கள் ஆகியவற்றைக் கண்டறிந்து காரண காரிய நிலையில் விளக்கியுரைக்கும் செயற்பாடாகவே அமைப்பியல் அணுகுமுறை அமைகிறது. இவ்வணுகுமுறையின்படி புதுமுறைத் திறனாய்வுப் பார்வைகள் முன்னிறுத்தும் படைப்பின் கட்டமைப்பு சார்ந்ததான என்ற அழகியல் அம்சம்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2010

முக்கியத்துவமற்றதாகிறது. அநுபவம், 'உத்தித்திறன் மற்றும் மொழிநடை முதலானவற்றின் கூட்டுருவான மேற்படி அழகியலம்சமானது சமூகத்தின்- சமூகமனத்தின் - ஒட்டுமொத்த ஆளுமை என்பதில் அடங்கிவிடுகின்றது என்பதே அமைப்பியல் தரும் செய்தியாகும் இதன்படி படைப்பாளி என்ற தனிமனிதரின் படைப்பாளுமையின் முக்கியத்துவம் நிராகரிக்கப்படுவதும் தெரிகின்றது.
மேலும் அமைப்பியல் அணுகுமுறையானது, மார்க்ஸியம் சார்ந்த யதார்த்தவாதங்கள் சுட்டுகின்ற சமூகச் சூழலின் பிரதிபலிப்பு என்பதற்குரியதான படைப்பாளியின் சமூகம்சார் பார்வை என்ற அம்சத்தையும் பின்தள்ளிவிடுகின்றது. ‘இலக்கியப் பொருளுக்கான அடிப்படையானது படைப்பாளியின் பார்வை அல்ல' என்பதும், சமூகத்தின் இருப்பிலுள்ள மொழி மற்றும் கலாசார ஒழுங்கமைவுதான் அடிப்படையானது' என்பதுமே அமைப்பியல் தரும் செய்தியாகும். மொழிக்கு எந்த அளவுக்கு ஆற்றல் உளதோ.நம்மிடம் உள்ள மொழியால் எந்த அளவுக்கு யதார்த்தத்தை உருவகப்படுத்திக்கொள்ள முடிகிறதோ . அந்த அளவே படைப்பின் யதார்த்தமும் அமையமுடியும் என்பதே அமைப்பியலின் நிலைப்பாடாகும்.
சுருங்கக் கூறுவதானால் புதுமுறைத் திறனாய்வாளரும் அவர்களுக்கு எதிர்நிலையினரான மார்க்சியப் பார்வையாளர்களும் முதன்மைப்படுத்தி நின்ற கூறுகளை முக்கியத்துவமிழக்கச் செய்து அவை யாவற்றுக்கும் சமூகமனம் (சமூகத்தின் கூட்டு நனவிலி மனம்) என்ற அமைப்புக்குள் அமைதிகண்டதன் மூலம் திறனாய்வுப் பார்வையை இன்னொரு தளத்துக்கு நகர்த்தியமையே அமைப்பியலின் வரலாற்றுப் பங்களிப்பு ஆயிற்று
இவ்வாறு உருவான அமைப்பியலை வரலாற்று முறைமையில் நோக்கினால் அது முற்சுட்டிய லானது புறநிலைக்கொள்கையின் புதியதொரு கட்டம் என்பதை உய்த்துணரமுடியும். புறநிலைக்கொள்கை சார்ந்த வையான புதுமுறைத் திறனாய்வுப் பார்வைகள் பலவும் இலக்கியத்தைப் புறநிலை நோக்கிற்குரிய ஒரு மொழிக்கட்டமைப்பாகக் காண்பன. அமைப்பியலும் அவ்வாறுதான் அணுகுகின்றது. ஆனால் அப்புறநிலை மொழிக்கட்டமைப்புக்கு உள்ளே"கட்புலனாகாத ஒரு அகநிலை அமைப்பை அது காணமுற்படுகிறது. புறநிலைக் கொள்கையின் புதியதொரு கட்டமாக அமைப்பியல் கருதப்படுவதற்கான காரணம் இதுதான்.
இவ்வாறு அமைந்த அமைப்பியல் தொடர்பான விமர்சனமாக உருவாகி படைப்புக்கும் சமூகத்துக்கும் - உலகுக்கும்-உள்ள இடைவெளியை எடுத்துப்பேசும் வகையில் வெளிப்பட்டனவே பின் அமைப்பியல் சிந்தனைகள் ஆகும் உளப் பகுப்பாய்வு, அறிவமைப்பு, தத்துவம் ஆகிய பல்வேறு துறைகளூடாக வெளியிடப்பட்ட இச் சிந்தனைகள் இலக்கியத்தை அதன் மொழிசார் முழுமை என்ற எல்லையைத் தாண்டி வெளிக் கொணர்ந்து, சமூகநிலைப்பட்ட முழுநிலைப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தியவையாகும். இவ்வாறான பின் அமைப்பியல் அணுகுமுறைக்கான கருத்தாக்கங்களை முன்வைத்த சிந்தனையாளர்கள் என்றவகையில்ஜாக்லக்கான்
41

Page 44
(Jacques Marie Emile Lacan, 1901-1981), (GJATGUTTGöTLJiğ6) Roland Barthes, 1915-1980), gTë Gjfgjit (Jacques Deerrida 1930-2004), 65ITLîlãoš;GGIT (Michel Focaoult, 1926-1984-)6óGLITg|Tri (Jean -Francois Lyotar 1924-1998) LopgungusSur assiug56IT (Julia Kristeva,1941-) முதலியோர்முக்கியமானவர்களாவர்.
பின் நவீனத்துவம் என்ற சிந்தனைப்போக்குப் பற்றிப் பேசமுற்படும்போது முதலில் நாம் கவனத்திற் கொள்ள வேண்டிய அம்சம் அது திட்டப்பாங்காக நிறுவப்பட்டகோட்பாட்டு வடிவம் அல்ல என்பதேயாகும். அது ஒருபார்வை மற்றும் அணுகுமுறை என்ற அளவிலேயே சிந்திக்கப்பட்டுவருவது. சமூகத்தின் பண்பாட்டு வரலாற்றுத் தொடர்ச்சியில் நிகழும் மாற்றங்கள், அத்தொடர்பில் எதிர்கொள்ளநேரும் பிரச்சினைகள் முதலியவற்றைச் சுட்டியுணர்த்தும் வகையில் கடந்த நூற்றாண்டில் மேலைத்தேயங்களில் உருவான ஒரு புரிதல் முறைமை இது குறிப்பாக, சமூகவியல் மற்றும் நுண்கலைசார் அம்சங்களை மையப்படுத்தியதாகவே இப் புரிதல்முறைமை உருவானது. வரலாற்றுச் செல்நெறியில் ஒரு நிலையைச் சுட்டியுணர்த்தும் வகையில் உருவான இப் புரிதல்முறைமை யானது பொதுவாகப் பின் நவீனத்துவ falo'(PostModern Condition) 6TsirGD 6 yria, UG 6.55g). (இப்பொருண்மையில் PostModernism என்ற இச்சொற்றொடர் முதன்முதலில் வரலாற்றறிஞரான டொய்ன்பீ (Arnold Joseph Toynbee, 1889-1975) 6T6äTLETIJITŝio9j6) JgJ A Study of History என்ற நூலில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுவர். அவரது இந்நூல் 1938இல் வெளிவந்ததாகும்)
இவ்வாறு வரலாற்றுச் செல்நெறியில் ஒரு நிலையைச் சுட்டியுணர்த்துவதற்கு உருவான இச்சொல் நாளடைவில் இந்நிலைசார்ந்த பார்வைகள் மற்றும் அணுகுமுறைகள் என்பவற்றை அடையாளம் காட்ட முற்பட்டது. அதன் தொடர்ச்சியாகக் கோட்பாடுகளை உருவாக்கும்முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆயினும் அம்முயற்சிகள் முழுமைபெறவில்லை என்பதே இன்றுவரையான நிலையாகும். பின் நவீனத்துவம்' என்ற பெயரில் அமைந்த பார்வைகள் மற்றும் அணுகுமுறைகள் என்பவற்றில் பெரும்பான்மையானவை பின்அமைப்பியல் என்ற கோட்பாட்டுத்தளத்தில் வேர்கொண்டுள்ளவை என்பது இங்கு நமது கவனத்துக்குரியது. மேற்சுட்டிய பின் அமைப்பியல் சிந்தனையாளர்களே பின் நவீனத்துவத்துக்கான குருமுதல்வர்களாகவும் கொள்ளப்படுபவர்களாவர்.இதனால் பின் அமைப்பியல் மற்றும் பின் நவீனத்துவம் ஆகிய இரண்டையும் தனித்தனியாக வேறுபடுத்தி நோக்காமல் ஒன்றாக இணைத்துப் பேசும் ஒரு மயக்கநிலையும் தமிழ்ச் சூழலில் நிலவிவருகின்றது. (இவை தொடர்பான மேலதிக விளக்கங்களைப் பின்னர் உரிய சந்தர்ப்பத்தில் நோக்கலாம்) பின் நவீனத்துவ சார்பான திறனாய்வுப்பார்வையின் நிலவும் முக்கிய கருத்தாக்கமொன்று மட்டும் இங்கு கவனத்துக்கு முன்வைக்கப்படுகிறது. ஒரு எழுத்தாக்கத்துக்கு நிலையான அர்த்தம் (கருத்துபொருள்) என்றும் ஒன்று இல்லை. எனவே உண்மை என்று ஒன்றும் இல்லை. எல்லாமே மாற்றமடைந்து கொண்டிருக்கின்றன. காலம் என்பது எவ்வாறு ஒரு கடைசிப் புள்ளி இல்லாமல் தொடர்கின்றதோ அதேபோல எழுதப்படுவனவற்றின் அர்த்தங்களும் கடைசிப்புள்ளி
42

அற்றவையாகும் எழுதப்பட்ட ஒவ்வொரு பிரதியும் அதன் ஒவ்வொரு சொல்லும் காலந்தோறும் புதிய புதிய அர்த்தங்களைத் தோற்றுவித்துக்கொண்ட இருக்கின்றன. இதனால் ஒவ்வொரு பிரதியும் பன்முகத்தன்மை கொண்டனவாகின்றன.
இதுவரை திறனாய்வியலின் உலகுதழுவிய பரிமாணம் என்ற வகையில் ஐரோப்பியத்திறனாய்வியற் பரப்பின் வரலாறு நோக்கப்பட்டது. இப்பார்வையிலே செவ்வியல் முதல் பின் நவீனத்துவம் வரையான வரலாற்றுச் செல்நெறி மேலே கோடிட்டுக்காட்டப்பட்டது. அடுத்து இந்தியச் சூழலின் திறனாய்வியலில் அடிபதிக்கிறோம். இதில் தமிழ்த் திறனாய்வியல் பற்றிய பார்வைக்கு முதல் அதன் சகமொழியான வடமொழியின் திறனாய்வியல் கவனத்துக்குரியதாகிறது.
2.3. வடமொழிசார்ந்ததிறனாய்வுப்பார்வைகள். தமிழ்ச் சூழலிலே வடமொழி எனச் சுட்டப்பட்டுவரும் ஸம்ஸ்கிருத மொழியின் இலக்கியவரலாறானது ஏறத்தாழ கி.மு. 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டதான வேத இலக்கியப்பரப்பிலிருந்து தொடங்கித் தொடர்வதாகும். இருக்கு முதலிய வேத சங்கிதைகள் பிராஹ்மணங்கள், ஆரண்யகங்கள், உபநிடதங்கள், தர்மசாஸ்திரங்கள், புராணங்கள், இதிஹாஸங்கள், காவியங்கள் என்பனவாகத் தொடரும் வரலாறு இது. இவ்வகையில் கி.பி. 12 ஆம் நூற்றண்டுவரை வடமொழி இலக்கிய வரலாற்றில் ஒரு சீரான தொடர்ச்சியும் வளர்ச்சியையும் காணமுடிகிறது. (அதன்பின் அவ்வரலாறானது மரபின் தொடர்ச்சி என்ற அளவில் மட்டும் அமைந்ததாகும்) இந்த நீண்ட வரலாற்றுத் தொடர்ச்சியிலே இலக்கியம் என்ற வகைக்குரிய அழகியல் அம்சங்கள் கொண்ட ஆக்கங்களாகக் கொள்ளப்படுவன காவியங்கள் ஆகும்.
வடமொழிக் காவியப் பரப்பானது காட்சிக்குரிய காவியங்கள் (திருஷ்ய காவ்ய), வாசிப்புமற்றும் செவிவழியான கேள்விக்குரியகாவியங்கள் (ஸ்ரவ்ய காவ்ய) என இருவகைப்படுவதாகும். காட்சிக்காவியங்கள் எனப்படுவன அரங்கில் நடிக்கப்படுவதற்கான நாடகப் பிரதிகளாக எழுதப்பட்டவையாகும். மற்றவை வாசிப்புக்குரிய வகையில் எழுதப் பெற்றவை. இவ்வாறான காவிய ஆக்கங்களின் உள்ளடக்கக்கூறுகள் மற்றும் கட்டமைப்பு நிலை என்பன தொடர்பாக அம்மொழியிலே பல்லாண்டுகளாக விரிவான விவாதங்கள் நிகழ்ந்துவந்துள்ளன. இவ் விவாதங்களின் பேறுகளான சிந்தனைகளின் தேறல்கள் அலங்கார சாஸ்திரம்' என்ற தனித்துறையாக உருவாக்கம் பெற்றுள்ளன. இந்த அலங்கார சாஸ்திர மரபினூடாகவே வடமொழித் திறனாய்வியலின் வரலாற்றை நாம் தெரிந்துகொள்கிறோம்.
மேற்படி அலங்கார சாஸ்திர மரபானது ஒர் இலக்கிய ஆக்கம்(அதாவது கவிதை-காவியம்)எவ்வாறுஉருவாகிறது? என்பதுபற்றியும் சாரசரிவழக்குநிலையிலுள்ள மொழியானது இலக்கிய மொழி எனத்தக்க வகையில் எத்தகு அழகியல் பரிமாணங்களை எய்துகின்றது?’ என்பது பற்றியும் விரிவாக எடுத்துரைத்துள்ளது. இவ்வகையில் முன்வைக்கப்பட்ட சிந்தனைகள் இருவகைப்படுவன. ஒருவகையின் இலக்கியத்தின்உணர்வுநிலைக்கு அடிப்படையான உள்ளடக்க
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2010

Page 45
அம்சம்' பற்றியனவாகும். இன்னொரு வகையான சிந்தனைகள் அதன் கட்டமைப்புநிலைதொடர்பானவையாகும். உணர்நிலை, உள்ளடக்கக அம்சம் என்பன பற்றிய சிந்தனைகள் ரஸம் மற்றும் த்வனி (தொனி) ஆகிய கருத்தாக்கங்களாக வெளிப்பட்டன. கட்டமைப்பு தொடர்பான சிந்தனைகள் குறிப்பாக வக்ரோத்தி, குணம், ரீதி, ஒளசித்யம் முதலிய பலநிலைக் கருத்தாக்கங்களாக வெளிப்பட்டுக் கோட்பாட்டு வடிவங்களை எய்தின. வரலாற்றுமுறைப்படி நோக்கும் பொது உணர்வுநிலை சார்ந்ததான ரஸம் பற்றிய கருத்தாக்கம் முந்தையதாகவும் அதனை அடுத்துக் கட்டமைப்பு தொடர்பான சிந்தனைகள் உருவாகி வளர்ந்தமையும் தெரியவருகின்றன. ரஸம் என்ற கருத்தாக்கத்தைத் தொடர்ந்து குறிப்பாக வக்ரோத்தி, குணம் மற்றும் ரீதி ஆகிய கருத்தாக்கங்கள் உருவாயின.இவற்றின் அடுத்தகட்டமாகவே உணர்வுநிலைக்கு உரிய இடமளித்து அதன் தொடர்பில் உள்ளடக்கத்தை சார்ந்ததான தொனி என்ற கருத்தாக்கம் ஒரு கோட்பாடாக உருவானமை தெரிகிறது. இதனை அடுத்தே எல்லாவற்றையும் உள்ளடக்கிய தொகுநிலைக்கட்டமைப்புப் பார்வையான ஒளசித்யம் (பொருத்தப்பாடு) என்ற கோட்பாடு உருவாக்கம் பெறக்காண்கிறோம்.
ரஸம் என்ற வடசொல் பொதுவாக சாராம்சம் மற்றும் சுவை ஆகிய பொருண்மைகளில் வழங்கிவருவதாகும். இந்திய ஆன்மிக மரபிலே இச்சொல் பிரம்ம அநுபவத்தை உணர்த்தும் வகையில் வழங்கப்பட்டுவந்துள்ளது. கலை, இலக்கியம் ஆகிய துறைகளில் இச்சொல்அழகியல் அநுபவம் என்ற சிறப்புப் பொருளில் பயில்வது. காதல் வீரம், பயம், முதலியனவாக ரஸங்கள் பலநிலைகளில் விரிவுபெறுவனவாகும். இலக்கிய ஆக்கங்களை வாசிப்பவர்கள், செவிமடுப்பவர்கள் மற்றும் அரங்க நிகழ்வுகளைச் சுவைப்பவர்கள் எய்தும் இவ்வகை ரஸாதுபவ நிலைகளுக்கான காரண - காரியக் கருத்தாக்கங்களே வடமொழி இலக்கிய மரபிலே ரஸ்க் கோட்பாடு எனச்சுட்டப்படும் சிந்தனைமரபாக வடிவமைதி பெற்றுள்ளன. இக்கோட்பாட்டுக்கான மூலக்கூறுகளை முதன்முதலில் கி.மு.2ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி. 2ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டதாக அறியப்படும் நாட்டியசாஸ்திரம் என்ற நூலிலேயே தரிசிக்கிறோம். பரதமுனிவர் என்பாரின் ஆக்கமாகக் கருதப்படும் இந்த நூல் நடனம், நாடகம் என்பனசார்ந்த கோட்பாட்டம்சங்கள் பலவற்றை விளக்கியுரைப்பதாகும். மேற்படி கலைசார் செயற்பாடுகளுடன் சுவைஞர் அநுபவநிலையில் இணைவு பெறுவதைப்பற்றி எடுத்துரைக்கப்படுமிடத்திலேயே ரஸம் என்ற சொல்லின் பயிற்சியை முதலில் நாம் காண்கிறோம். மேற்படி கலைகளின் அபிநய பாவங்களால் சுவைஞருடைய உணர்ச்சிகள் தூண்டப்படுவதான நிலையைக் குறிக்கும் வகையில் இச்சொல் பயிற்றுள்ளமையை அங்கு நோக்கியுணரமுடிகின்றது.
இவ்வாறு நடனம், நாடகம் ஆகிய கலைகளின் கட்புல அநுபவநிலைகள் சார்ந்து தோற்றங்கொண்டதான ரஸம் பற்றிய அழகியற் கருத்தாக்கம் இசை, இலக்கியம் என்பவற்றையும் உள்ளடக்கி இந்திய அழகியல்சார் முக்கிய கோட்பாடுகளிலொன்றாக விரிவும் வளர்ச்சியும் எய்தியமையை இந்திய அழகியல் மரபு தெளிவாக இனங்காட்டியுள்ளது
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2010

கட்டமைப்புநிலை பற்றிப் பேசுவனவாக உருவான கருத்தாக்கங்கள் முக்கியமாக கவிதையாக்கத்தில் சொற்கள் குற்றமற்றவகைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டுச் அழகுற அமைக்கப்படும் முறைமை, மற்றும் புதிய மாறுபட்ட முறைமைகளில் விடயங்களை எடுத்துரைக்கும்பாங்கு என்பன பற்றிய சிந்தனைகளாக விரிவுபெற்றவையாகும். கி.பி. 6ஆம் நூற்றாண்டினராக அறியப்படும் பாமஹர், தண்டி மற்றும் அவர்களுக்குப்பின் வந்தர்களான வாமனர் மற்றும் குண்டகர் முதலியபலர் இவ்வகைச் சிந்தனைகளை முன்வைத்தனர்.
இவர்களுள் பாமஹர்புதிய-மாறுபட்ட-முறைமைகளில் விடயங்களை எடுத்துரைக்கும் பாங்கு பற்றிச் சிந்தித்து எடுத்துரைத்தவர். இம்முறைமை வக்ரோத்தி எனப்படும், எதனையும் உள்ளவாறே நேரடியாகக் கூறாமல் அழகுபட (சுற்றிவளைத்து) எடுத்துரைக்கும் உத்திமுறைமையில் அடங்கிவிடுகின்றன என்பது பாமஹரது கருத்தாகும்.இதனை அவரது காவ்யாலங்காரம் என்ற இலக்கண நூல் மூலம் தெரிந்துதெளியலாம். இவ்வாறு இவரால் முன்னிறுத்தப்பட்டதான மேற்படி வக்ரோத்திக் கருத்தாக்கமானது. பின்னாளில் குண்டகர் (கி.பி. 10ஆம் நூ.ஆ.)என்பாருடைய வக்ரோத்தி ஜீவிதம் என்ற நூலாக்கத்தில் ஒரு கோட்பாடு என்றவகையிலான வரையறை எய்தியது.
மேற்சுட்டிய பாமஹரின் காலத்தவரான தண்டி அவர்கள் தமது காவ்யாதர்சம் என்ற நூலிலே, சொற்களும் கருத்துகளும் இணைவுபெறுவதால் ஏற்படும் குண நலன் பற்றிச் சிறப்புற எடுத்துரைக்கிறார். கவிதையின் நடையானது பத்துக்குணங்களால் சிறப்புறுகிறது. என்பது இவருடைய கருத்தாகுதம், அவருக்குப்பின்வந்தவரான வாமனர் (கி.பி. 89ஆம் நூ.ஆ.) என்பார் ரீதி என்ற கோட்பாட்டை உருவாக்கினார். குணங்களோடு அமைந்த அழகிய சொல்லாட்சியே - நடையே ரீதிஎன்பதாற்கட்டப்பட்டுள்ளமை தெரிகின்றது.
இக்காலப்பகுதிகளைச்சார்ந்து வேறுபல சிந்தனையாளர்களும் கவிதையின் கட்டமைப்புநிலை தொடர்பான பல்வேறு நுட்பமான கருத்தாக்கங்களை முன்வைத்துவந்தனர். இவ்வாறாக கட்டமைப்பு பற்றிப் பேசிநின்ற இக்கருத்தாக்கங்கள் சொற்கள் மற்றும் அவை இடம்பெறும் ஒழுங்குநிலை என்பவற்றை முக்கியத்துவப் படுத்திநின்றதால் மேலே முற்சுட்டிய ரஸம் என்ற உணர்வியல் அம்சமானது உரிய கவனத்தைப் பெறத் தவறியது. சொற்கள் தொடராக இணைவுபெறும் முறைமை, நடை மற்றும் கட்டமைப்பில் பல்வேறு அம்சங்கள் ஆகியவற்றால் தோற்றுவிக்கப்படும் ஒரு அம்சமாகவே ரஸம் என்ற கருத்தாக்கம் பலரால் எடுத்துப்பேசப்பட்டது.
இவ்வாறான வரலாற்றுச் சூழலில்தான் கி.பி.9ஆம் நூற்றாண்டினரான ஆனந்தவர்த்தனர் என்பார் ரஸத்துக்கு உரிய முக்கியத்துவத்தை அளிக்க முன்வந்தார். பரதர் முன்னிறுத்திய இக்கோட்பாட்டை உரியவாறு விரித்துரைத்தவரான இவர் அத்துடனமையாது அதனுடன் தொடர்புடையதான த்வனி(தொணி) என்பதை ஒரு தனிக் கோட்பாடாக உருவாக்கம் செய்து முன்னிறுத்தினார்.
த்வனி' என்ற வடசொல்லானது பொதுநிலையில் சப்தம் என்ற பொருளில் ஒசையைக் குறிப்பது. இலக்கிய
43

Page 46
நிலையிலே இச்சொல் மேற்படி பொதுப் பொருளைக்கடந்து அவ்வோசையாலுணர்த்தப்படும் குறிப்புப்பொருளைச் சுட்டிநிற்பதாகும். 'குறிப்புப் பொருள் என்பது வெளிப்படைச் செய்தியாக அல்லாமல் உய்த்துணரத்தக்க வகையில் அமையும் பொருண்மையைச் சுட்டிநிற்பது. இவ்வகையில் தொனி என்பது ஒரு இலக்கியத்தின் - காவியத்தின் - மூலம் உணர்த்தப்படும் பொருண்மையையே (Suggested Meaning) இது குறித்து நிற்பாதாகும். இது பற்றிய கருத்தியலே தொனிக்கோட்பாடாக உருப்பெற்றதாகும்.
இவ்வாறு ஆனந்த வர்த்தனரால் எடுத்து விளக்கப்பட்ட தொனி என்ற அம்சம் பற்றி ஏற்கெனவே பரதர் உணர்ந்திருந்தார் என்றும் அதுதொடர்பான எண்ணக்கருக்கள் அவருடைய நாட்டியசாஸ்திரத்தில் ஏலவே பயின்றுள்ளன என்றும் ஆய்வுகளால் தெரியவருகின்றது. இவ்வாறு நோக்கும்போது பரதர்காலம் முதல் தொடரும் தொனி என்ற எண்ணக்கருவுக்குத் திட்டப்பாங்கான ஒரு கோட்பாட்டு வடிவம் தந்தவர், ஆனந்த வர்த்தனர் எனலாம்.
இக்கோட்பாடு மேற்படி ரஸ்க் கோட்பாட்டுடன் கொண்டுள்ள தொடர்பு பற்றிய ஒரு விளக்கம் இங்கு அவசியமாகிறது. ரஸக்கோட்பாடானது அநுபவதிலை பற்றிமட்டும் பேசுவது. தொனிக்கோட்பாடானது அந்த அநுபவநிலைக்குக் காரணமாக முக்கியமான பின்புல அம்சம் பற்றிய விளக்கமாகும். குறித்த ஒரு இலக்கிய ஆக்கம் தரும் அநுபவத்தில் - ரஸத்தில் - திளைக்கமுயலும் ஒருவர்.அத்திளைப்பில் முழுமை எய்துவதற்கு அவ்வாக்கத்தின் தொனி ப்பொருளை உணர்ந்திருக்கவேண்டியது அவசியமாகிறது. என்கிறார் ஆனந்தவர்த்தனர். தொனி என்ற அம்சத்தின் ஊடாகவே ரஸம் என்ற அநுபவநிலை முழுமை பெறுகிறது என்பதே அவர் தரும் செய்தியாகும். இவ்வகையில் தொனியே இலக்கியத்தின் - கவிதையின் நிறைவான இலட்சிய நிலை என்பதை அவர் நிறுவமுயன்றுள்ளார். இவ்வாறான அவரது சிந்தனைகளின் முக்கியபதிவாக அமைவது த்வன்யாலோகம் என்ற நூலாக்கம். இந்நூலாக்கத்துக்கு கி.பி. 10 ஆம் நூற்றாண்டினரான அபிநவகுப்தர் என்பார் லோசனம் என்ற தலைப்பில் விளக்கவுரையொன்றை எழுதியுள்ளார்.
மேற்படி தொனிக் கோட்பாடு சமகாலத்திலும் பின்னரும் பல வாதப்பிரதிவாதங்களை எதிர்கொண்டது. எனினும் இந்திய அழகியலின் முக்கிய கோட்பாடுகளிலொன்றாக இது நிலைத்துவிட்டது.
புரவலர்புத்தகப்பூங்க முன்பொருபோதும் நூல்வெளியிடாத எழுத் இத்திட்டத்தின் மூலம் பயன் பெற விரும்பும் அணிந்துரை, ஆசிரியர்பற்றியவிபரம், இரண் **স্কক্ষপ্তঃ மொழிஆகியவற்றை இணைத்துகீழ்க்காணு
எழுத்தாளருக்கு 300 பிரதிகள் இலவசமாக வழங்கப்படுவதே எழுத்தாளருக்கே வழங்கப்படும். இலங்கை எழுத்தாளர்கள் யாே ஏற்றுக்கொள்ளப்படாத பிரதிகள்எழுத்தாளருக்குத்திருப்பிஅனுப்பப்படு தொடர்பு முகவரி : தேர்வுக்குழு, புரவலர் புத்தகப் பூங்கா, இ தொ. பேசி: 077 4181618, 078
ܢܬ
 

மேற்படி தொனிக்கோட்பாட்டை அடுத்து வடமொழித்திறனாய்வியலில் அழுத்திப் பேசப்பட்ட கருத்தாக்கமே ஒளசித்யம் ஆகும். இச்சொல் பொருத்தப்பாடு எனப்பொருள்தருவதாகும். கட்டமைப்பு சார்ந்தனவாகிய வக்ரோத்தி, குணம், ரீதி ஆகியனவும், ரஸம், தொனி எனப்படும் உணர்வுசார் கூறுகளும் தத்தமக்குரிய அளவுப்பொருத்தங்களுடன் அமைதல் என்பதே இக்கருத்தாக்கத்தின் தெளிபொருளாகும். இவற்றில் ஒன்று மிகினும் காவியச்சுவை பாதிப்புறும் என்பதை விவாதநிலையில் விரிவாக முன்வைத்த கோட்பாடு இது.இவ்வகையில் இது ஒரு தனிக்கோட்பாடாக அன்றி,கோட்பாடுகள் பற்றிய கோட்பாடாக உருவானதாகும். மேலேநோக்கிய அபிநவ குப்தரின் மாணவரான கேஷ்மேந்திரன் (கி.பி.11ஆம்நூ.ஆ) என்பாரால் எழுதப்பட்டதான ஒளசித்திய விசார சர்ச்சா என்ற நூலாக்கம் இக்கோட்பாட்டை விளக்கியுரைப்பது.
வடமொழி இலக்கியத்திறனாய்வியல் தரும் சுருக்கமான காட்சி இதுதான்.
மேற்படி வடமொழிசார் திறனாய்வியல் மரபானது காவியம் என்ற இலக்கிய வகையை மையப்படுத்திய சிந்தனை என்பதை மேலே நோக்கினோம். இக்காவியமரபானது முடியாட்சிச் சூழலின் மன்னர்கள்,பெருநிதிபடைத்தோர் மற்றும் கடவுளர்கள் ஆகியோர்பற்றிய கருத்தியல்கள் சார்ந்ததாகும். அவர்களையே தலைமைப் பாத்திரங்களாகக் கொண்டு அறம், ஒழுக்கம் என்பன தழுவிய வாழ்வியலைக் கட்டமைத்துக்காட்டுவதே காவியமரபின் - குறிப்பாக மஹாகாவிய மரபின் பொதுப்பண்பாகும். இந்த Loly Sir தேவைக் கேற்றவகையிலேயே மேற்சுட்டிய திறனாய்வியற் சிந்தனைகள் உருவாக்கம் பெற்றுள்ளன என்பது இங்கு நமது கவனத்திற்குரியதாகும்.
இலக்கியத் திறனாய்வியல் என்ற பொதுப்பரப்பில் இவை இலக்கியக்கொள்கை என்ற வகைமைக்குள் அமைவனவாகும். ஐரோப்பிய திறனாய்வியல் மரபுகளுடன் தொடர்புறத்தி நோக்கினால் மேற்படி வடமொழிசார்கொள்கைகள் பொதுவாக கிளாஸிஸம் எனப்படும் செவ்வியல் வகைமைக்குள் அமைகின்றமை தெரிகின்றது. ரஸம்தொடர்பான சிந்தனைகள் ரொமாண்டிஸம் என்ற புனைவியற் பண்புகளைக் கொண்டுதிகழ்வதையும் உய்த்துணர முடிகின்றது.
இனி நாம் நேரடியாக தமிழ்மொழியின் இலக்கியத் திறனாய்வியலில் அடிபதிப்போம்.
(தொடரும்)
ாமாதம் ஒருநூல் வெளியீட்டுத்திட்பம்
தாளர்களின் நூல்கள் இத்திட்டத்தின் மூலம் வெளியிடப்படுகின்றன. எழுத்தாளர்கள் தமது படைப்பின் இரண்டு பிரதிகளோடு என்னுரை எடுபுகைப்படங்கள், முன்னர்நூல்கள் வெளியிடவில்லை என்றஉறுதி றும் முகவரிக்கு அனுப்பிவைக்கவேண்டும். எழுத்தாளர் விரும்பினால்
ாடு வெளியீட்டு விழா நடத்தி அதில் கிடைக்கும் பணம் முழுவதும் பேரும் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம். நூல் ஆக்கத்திற்கு th.
இல 25, அவ்வல் சாவியா ரோட் கொழும்பு - 14.
5318503
السـ
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2010

Page 47
மன்னாரின் பெருவிழா
கிருணாநிதி மீது எனக்குக் கடுமையான விமர்சனம் உண்டு. ஆனால், அவரது தமிழ்ப்பற்று, தமிழ் ஆற்றல் பற்றி எனக்குக் கருத்து வேறுபாடு இல்லை. கருணாநிதி கோயம்புத்தூரில் தமிழ்ச் செம்மொழி விழாவினை நடத்திய பின்னர், இலங்கையிலும் ஒரு புது உத்வேகம் ஏற்படத் தொடங்கியுள்ளது. இலங்கையில் வெவ்வேறு இடங்களில் தமிழ்ச் செம்மொழி விழாக்கள் நடைபெறத்தொடங்கியுள்ளன. அந்த வகையில், அண்மையில் மன்னாளிலும் தமிழ்ச்செம்மொழி விழா சிறப்பாக நடைபெற்றது. இலங்கையின் பிற இடங்களில் இதுவரை நடைபெற்ற செம்மொழி விழாக்களுக்கும் மன்னாரில் இடம்பெற்ற செம்மொழி விழாவுக்கும் இடையே பாரிய வேறுபாடு உண்டு.
பிற இடங்களில் நடந்த செம்மொழி விழாக்கள் ஏதோ ஒருவகையில் அரச அதிகாரிகளின் அனுசரணையுடன் நடத்தப்பட்டன. வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் எனப் பார்த்துக் “கோஷ்டி கானம்” இசைக்கப்பட்டது. குழு மனப்பாங்கோடு அவை நடத்தப்பட்டன என்பது வெளிப்படை ஆனால், மன்னாரில் நடைபெற்ற விழா அப்படியன்று. அரசியல் கலப்பு எதுவும் இல்லாமல் தேசிய நோக்கோடு சகலரையும் அரவணைத்து நடத்தப்பட்டது. இன்னார் இனியார் என்று பார்க்காமல் எல்லோரையும் ஒரே முகத்தோடு பார்த்தமையே மன்னார் விழாவின் முதல் வெற்றியாகும். தமிழ்ச் செம்மொழி விழாக்களை இதுவரை நடத்தியவர்களும், இனி நடத்த இருப்பவர்களும் மன்னார் தமிழ்ச்சங்கதின் தலைவர் தமிழ்நேசன் அடிகளாரிடமும்,செயலாளர் சிவகரனிடமும் பாடம் கேட்பது நல்லது அரசியல்வாதிகள் எவரினதும் தலையீடு இல்லாமல் துணிச்சலாக ஒரு விழாவினைச் செம்மையாக எப்படி நடத்துவது என்பதை இருவரும் சாதித்துக் காட்டிவிட்டனர். இந்த இருவரையும், அவர்களோடு இணைந்து செயற்பட்டவர்களையும் தமிழ்கூறு நல்லுலகம் பாராட்டவும், நன்றி சொல்லவும் கடமைப்பட்டுள்ளது.
நான்கு நாள் விழாவில், மூன்று நாட்கள் ஆய்வரங்குகள் நடைபெற்றன. ஆய்வரங்குகள் மன்னார் தமிழ்ப் பாடசாலையொன்றில் நடைபெற்றுக் கொண்டிருந்ததுபோது, நகரமண்டபத்தில் பொதுமக்களுக்கான நிகழ்ச்சிகளும் நடந்து கொண்டிருந்தன. ஆய்வரங்குகள் இயன்ற முறையில் சிறப்பாக நடைபெற்றன. மாலையில் கலை நிகழ்ச்சிகள் நகர மண்டபத்தில் இடம்பெற்றன. முதல்நாள் இசை விழாவும், இரண்டாம் நாள் நாட்டிய விழாவும் மூன்றாம் நாள் நாடக விழாவும் நடைபெற்றன. நாடக விழாவில் மட்டும் என்னால் கலந்துகொள்ளமுடியாமற் போய்விட்டது.
இசைவிழாவும், நாட்டிய விழாவும் மிகச் சிறப்பாக இருந்தன. இசைவிழாவில் இனிய இசையைரசிக்க முடிந்தது.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - kvúbuř 2010
 

இவ்வளவு சிறந்த கலைஞர்கள் எமது நாட்டில் இருக்கிறார்களே என மகிழவைத்தது. நாட்டிய விழாவில் இடம்பெற்ற நிகழ்ச்சிகள் அனைத்தும் அற்புதமாக இருந்தன. அதிலும் சசிதரனும், இன்னொரு மாணவியும் இணைந்து ஆடிய நடனங்கள் பிரமிக்க வைத்தன. தில்லானாவைப் பெண்களால்தான் சிறப்பாக ஆடமுடியும் என நான் நினைத்திருந்தேன்.ஆனால், அதனை ஆண்களாலும் சிறப்பாக ஆடமுடியும் என்று நிரூபித்துவிட்டார் சசிதரன். கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட சகல கலைஞர்களையும் மனம் திறந்து பாராட்டவேண்டும்.
விழா நிகழ்ச்சிகளின் போது மண்டபங்கள் நிறைந்து வழிந்தன. மன்னாரே விழாக்கோலம்பூண்டிருந்தது. மன்னார் மக்களின் கலை இலக்கிய ஆர்வத்தைப் பாராட்ட வேண்டும். இயல்பாகவே மன்னார் ஒரு கலைப்பூமி. அதனைத் தமிழ்ச் செம்மொழி விழா நிரூபித்துக் காட்டியது.
விழாவில் இலங்கையின் பல பிரதேசங்களையும் சேர்ந்த பல்வேறு அறிஞர் பெருமக்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் எனப்பலரும், கலந்துகொண்டனர்.பலரை ஓரிடத்தில் சந்திக்கக் கூடிய வாய்ப்பினையும் இவ்விழா ஏற்படுத்தித்தந்தது. மன்னாரின் விருந்தோம்பல் பண்பையும் நன்கு அனுபவிக்க முடிந்தது. விழாவில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த அனைவரும் ஞானோதயம் என்ற இடத்தில் தங்கவைக்கப்பட்டனர். மன்னாரின் கடுமையான வெப்பத்துக்கு மத்தியில் ஞானோதயம் ஒரு பாலைவனச் சோலையாக விளங்குகிறது. ஞானோதய வளாகத்துக்குள் நுழைந்ததும், மன்னாரின் வெப்பமே தெரிவதில்லை. ஞானோதயத்தை அழகாகவும், குளிர்ச்சியாகவும் வைத்திருக்கிறார்கள்.
மொத்தத்தில் மன்னார் தமிழ்ச் செம்மொழி விழா ஆக்க பூர்வமான செயற்பாடுகளைக் கொண்டதாக விளங்கியதோடு, சிறந்த அனுபவத்தையும் வழங்கியது. மன்னாரின் பெருவிழா, மனத்தை நிறைவித்த திருவிழா.
தமிழ்த்திரையுலகில் ஒரு புதியவரவு
தமிழ்த் திரைப்படங்கள் பெரும்பாலும் வாய்பாட்டுப் படங்களாகவே வெளிவருவது வழக்கம், அருமையாகச் சில திரைப்படங்கள் வாய்பாட்டு விதிகளுக்கு மாறாக, வெளிவருவதுண்டு. அத்தனக்ய திரைப்படங்களுள் ஒன்று, அண்மையில் வெளிவந்த மைனா,பிரபுசாலமன் இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் திரைப்பட ரசிகர்களுக்குப் புதிய களத்தை அறிமுகப்படுத்துவதோடு, புதிய அனுபவத்தையும் ஏற்படுத்துகின்றது.
சுருளி, மைனா, இரண்டு பொலிஸ்காரர்கள் இத்திரைப்படத்தின் முக்கியாத்திரங்கள் இவர்களைச் சுற்றியே
45

Page 48
கதை நகர்கிறது. மனிதாபிமானம் என்பது திரைக்கதையின் வலுவான அம்சமாக அமைகிறது. பாத்திரவார்ப்பு குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது. கிராமியம், மண்வாசனை என்பவற்றுக்கான அர்த்தத்தை இயக்குநர் பிரபு சாலமன் அழுத்தமாக இத்திரைப்படத்தில் புலப்படுத்தியிருக்கிறார். விநியோகஸ்தர்களுக்காகவும்,தமிழ்ப்படம்இப்படித்தான் இருக்கும் என்று பார்த்துப் பார்த்துப் பழகிப்போன ரசிகர்களுக்காகவும் இயக்குநர் விரும்பியோ விரும்பாமலோ ஆங்காங்கே சில சினிமாத்தானங்களைச்செருகியிருந்தாலும்,மொத்தத்தில்மைனா யதார்த்தத்தின் பக்கமேதலைசாய்த்துப்பறந்திருக்கிறது.
சுருளியாக நடித்திருக்கும் வித்தார்த், மைனாவாக நடிக்கும் அமலா பால், பொலிஸ் அதிகாரியாக வரும் சேது அவரது உதவியாளரான பொலிஸ்காரர்ராமையாவாக நடிக்கும் தம்பிராமையா ஆகியோர் அற்புதமாகத்தங்களது நடிப்பாற்றலை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் அமலாவுக்குப் போதிய சந்தர்ப்பம் அளிக்கப்பட்டால் சிறந்தவொரு நடிகையாக மிளிர்வார். அறிமுக நடிகரான வித்தார்த், அனுபவமுள்ள நடிகராகவே தம்மைக் காட்டியுள்ளார். சேது பொலிஸ் அதிகாரிக்குரிய மிடுக்கையும், மிரட்டல் தன்மையையும் ஆரம்பக் கட்டங்களில் காட்டிமனிதத்தன்மையுள்ள மனிதனாக இறுதிக்கட்டங்களில் தமது நடிப்புத் திறனைப் புலப்படுத்தியிருக்கிறார். இத்திரைப்படத்தைப் பார்ப்பவர்கள் பொலிஸ்காரர் பாத்திரமேற்ற தம்பி ராமையாவை அவ்வளவு சுலபத்தில் மறக்கவே முடியாது. ஆசை, கோபம், வஞ்சனை, இரக்கம், சமாளிப்பு, நகைச்சுவை, மனிதாபிமானம், குடும்பபாசம் போன்ற எத்தனை குண இயல்புகளையும் தமது நடிப்புத்திறன் மூலம் வெளிப்படுத்தி, தாம் ஒரு சிறந்த குணசித்திர நடிகர் என்பதைத் தாராளமாகக் காட்டியுள்ளார். இப்படியொருபாத்திரத்தையும், அதற்கேற்றநடிப்புத்திறனையும் தமிழ்த் திரைப்படங்களில் காண்பது அரிது (ஒரு சிவாஜி கணேசனால், ஒரு கமலஹாசனால் காட்டமுடியலாம்). பிற துணைப்பாத்திரங்களான சுருளியின் தந்தை, மைனாவின் தாய், மைனாவுக்கும் தாய்க்கும் அடைக்கலம் கொடுத்த கிழவி போன்றபாத்திரங்களில் நடித்தவர்களும் கிராமியம் கலந்த தமது இயல்பான நடிப்பாற்றலை வெளிப்படுத்தியிருந்தனர்.
மைனா திரைப்படத்தில் இயக்குநர் பிரபு சாலமனுக்கு அனுசரணையாக ஒரு மும்முனைப்போட்டி நடைபெற்றிருக் கிறது. படத்தின் தொடக்கம் முதல் முடிவுவரை இம்மும்முனைப் போட்டி இடம் பெற்றிருக்கிறது. இத்தகைய மும்முனைப் போட்டியில் இறங்கியவர்கள் ஒளிப்பதிவாளர் சுகுமார், படத்தொகுப்பாளர் எஸ். கே. வி. தாஸ் இசையமைப்பாளர் டி இமான் ஆகியோர் ஆவர். கதை, களம், கதாபாத்திரங்கள் இயக்கம் ஆகியவற்றுக்கு, இவர்கள் மூவரதும் ஒத்துழைப்பு பலம் சேர்த்திருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் சரிவை நோக்கிய பயணத்தில் சென்றுகொண்டிருக்கும் போது, டி. இமான் உயர்வை நோக்கிய பயணத்தில் வந்துகொண்டிருக்கிறார்
இப்போதெல்லாம் புதிய தமிழ்த்திரைப்படங்கள் பார்த்து முடித்ததும், உடனடியாகவே அவற்றின் கதையும், பாடல்களும் மறந்துவிடுகின்றன. இதற்கு மாறாக, திரைப்படம் முடிந்த பின்னரும் மனத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய படைப்பாக மைனா விளங்குகிறது. இதுவே அதன் வெற்றி அரசியலும் அறிவிப்பாளர்களும்
இப்போதெல்லாம் அரசியல் வாதிகள் தான் அரசியல் பேசுகிறார்கள் என்பதில்லை. அவர்களைப் போலவே
46

அதிகாரிகளும், அறிவிப்பாளர்களும் கூட அரசியல் பேசுகிறார்கள். அவர்களது செயற்பாடுகளைக் கவனிக்கும் போது அசல் அரசியல்வாதிகளாகவே மாறிவிட்டனரோ என்ற சந்தேகம் தான் ஏற்படுகிறது.
முன்னர் ஒருதடவை, யாழ்ப்பாணத்தில் கோயில் வாசலில் நின்று கொண்டு சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் அரசியல் பேசிய அறிவிப்பாளர் ஒருவரைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அண்மையில் இலங்கை வானொலியின் தென்றலில் அதிர்வுகள் நிகழ்ச்சியில் இடம்பெற்ற அதிர்ச்சி தரும் விடயத்தைக் குறிப்பிட்டிருந்தேன். அந்த அதிர்வுகள் நிகழ்ச்சி வரவர அலங்கோலநிகழ்ச்சியாக மாறிக்கொண்டிருக்கிறது.
நாள்தோறும் காலையில் இலங்கை வானொலியின் மூத்த அறிவிப்பாளர் ஒருவர் அந்த நிகழ்ச்சியை வழங்கிவருகிறார். அவ்வப்போது அவருடன் வேறு சில அறிவிப்பாளர்களும் கலந்து கொள்வது உண்டு. உண்மையில் அந்த மூத்த அறிவிப்பாளர் நல்ல குரல்வளமும்,திறமையும் கொண்ட ஒருவர். சிறந்த வானொலி நடிகர்களுள் ஒருவர் அவரது திறமை பற்றிச் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒலிபரப்பப்பட்டதென்றல் பேட்டி நிகழ்ச்சியொன்றிலும் குறிப்பிட்டிருக்கிறேன். அவர் இலங்கை வானொலிக்குக் கிடைத்த சிறந்த ஒலிபரப்பாளர்களுள் ஒருவர் என்பதில் சந்தேகம் இல்லை, ஆனால் இத்தகைய திறமை வாய்ந்த மூத்த அறிவிப்பாளரான அவர் வழங்கும் அதிர்வுகள் நிகழ்ச்சியைத்தான் சகிக்க முடியவில்லை. அந்த நிகழ்ச்சியை அவர் நடத்தும்போது, தாம் ஓர் அறிவிப்பாளர் என்பதை மறந்து, யாருக்கோ வக்காலத்துவாங்கும் அரசியல்வாதியைப் போலவே நடந்துகொள்கிறார். தமது திறமையை எல்லாம் வீணடித்து வானொலி நேயர்களை மூளைச்சலவை செய்யும் முயற்சியில் நாள்தோறும் ஈடுபடுகிறார்.
தமிழ், முஸ்லிம் மக்களின் நிலங்கள் வடக்கிலும் கிழக்கிலும் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. தமிழ்மக்களில் ஒரு சாரார் வடக்கிலும் கிழக்கிலும் கண்ணிரும் கம்பலையு மாகச் சொத்து சுகங்களை இழந்து வருந்தினர்; வாழ்வாதாரங்களை இழந்து வாடிப்போயிருக்கின்றனர். சாதாரணமாகப்பத்திரிகைகளைப்பார்த்தாலே இவை விளங்கும். இந்த நிலையில், ஏதோ தேனும்பாலும் ஒடுவதைப்போல அந்த மூத்த அறிவிப்பாளர் காட்டப்பார்க்கிறார். மக்களின் இதயங்களை வெல்ல முயலவேண்டுமே தவிர, அவர்களை முட்டாள்களாக்க முயலக்கூடாது.
அந்த நிகழ்ச்சியில் பங்குபற்றும் நேயர்கள் பெரும்பாலும் ஒரேபாணியிலேயே பேசுகிறார்கள்.தங்கள் கண்பார்வையையும் மூளையையும் எங்கோ தொலைத்து விட்டவர்கள் போலவே அவர்கள் பேசுகின்றனர்.சிலருக்குதங்கள் குரல் வானொலியில் ஒலிபரப்பப்பட்டால் போதும் என்ற விருப்பத்தில் எதையெதையெல்லாமோ அலட்டுகிறார்கள். சிலவேளைகளில் நேயர்கள் பேசிகொண்டிருக்கும் போது தொடர்பு அறுந்துவிடுவதுண்டு. அந்த நேரம் மிகவும் மகிழ்ச்சிக்குரியது எத்தனையோ தடவை இந்த நிகழ்ச்சி ஒலிப்பரபாகும் போது நான் வானொலியை நிறுத்தியிருக்கிறேன்.
அறிவிப்பாளர்கள் வானொலியில் அரசியல் பேசவேண்டிய தேவை இல்லை. எதிர்காலத்தில் தாமும் ஒர் அரசியல்வாதியாக வரவேண்டும் என்ற இரகசிய ஆசையை அந்த மூத்த அறிவிப்பாளர் கொண்டிருக்கிறாரோ தெரியவில்லை. என்ன இருந்தாலும், அறிவிப்பாளர்களுக்கும் கொஞ்சமாவது மனச்சாட்சி வேண்டும்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - l, súbuř 2010

Page 49
ஓர் இரசனைக் குறிப்பு
வாசிப்புத் திங்களில் Gafnn(s
பொத்தகசாலை
வாசிப்பு திங்கள் ஐப்பசி (30.10.2010) அன்று தமிழ்ச் சங்கத்தில் ஒர் உன்னத நிகழ்வு. நூல் கண்காட்சி ஒரு மண்டபத்தில் நூல் வெளியீடு, செய்தி மடல் வெளியீடு, நினைவுப் பேருரை, சொற்பொழிவு, நூல் வழங்கல் அத்துடன் லட்டு, வடை, குளிர்பானம் என ஒர் அசத்தல் அசத்திவிட்டது சேமமடு பொத்தகசாலை.
"நவீன உலகமயச் சூழலில்
வாசிப்பின் உன்னதங்கள்
மேலெழுகையில்.
நாம் எங்கே நிற்கின்றோம்” என்பதுதான் தொனிப்பொருள்.
“தமிழர்களே! வாருங்கள் தமிழர்களே! தமிழுக்கு வளம் சேர்க்க வாருங்கள்!” என்பதுதான் அழைப்போசை சேமமடு பொத்தகசாலை சேமமடு பதிப்பகம், பத்மம் பதிப்பகம் அழைப்போசையின் உரித்தாளர்கள்.
சங்கரப்பிள்ளை மண்டபம் பெரியது. கடலில் மீன்கள் போல நூல்களால் அது நிறைந்துவிட்டது. விநோதன் மண்டபம் கொஞ்சம் விசாலம் குறைவானது. ஆறுதலாக அமர்ந்து நிகழ்வுகளை அவதானிக்கும் வசதி குறைவு. ஆனாலும் இலக்கிய ஆர்வலர்களின் முண்டியடிப்பும், நெருங்கி அமர்ந்து வியர்வைத்துளிர்களின் அரும்பலோடு உரைகளை அவதானிக்கச் செய்து விட்டார்கள் நிகழ்வில் சொற்பொழிவு மழைபொழிந்தவர்கள்.
தலைமை உரை, நினைவுப் பேருரை என முறையே பேராசிரியர்களான சபா ஜெயராசாவும், சோ. சந்திரசேகரனும் நிகழ்த்தி அருந்தகவல்களை அள்ளி வழங்கியபோது செய்தி மடல் அறிமுகவுரை நிகழ்த்திய எஸ்.எம்.என்.எஸ்.ஏ. மர்சூம் மெளலான அருந்தமிழ் உரையால் நெஞ்சத்தை அள்ளிக்கொள்ள,நன்றியுரையின் போது"நான் சளைத்தவன் இல்லை விட்டேனா பார்” என்பதைப் போன்று செல்வன் பத்மசீலன் சஞ்சயன் மடைதிறக்க புதுப்புனலென உரை பகிர்ந்து அமர்க்களப்படுத்திவிட்டான்.
“அடிசக்கை தரமான் கூட்டமென்று சொல்லுரியல்”
இசங்களெல்லாம் தகர்ந்து விழும் இவ்யுகத்தில் ஈகோவிசம் அம்மாடி! என்று அலறச் செய்யும் விதத்தில் பேயாட்டம் போடும் காலம் இது.
பொன்னாடைகளும், விருதுகளும், அடைமொழிகளும் புகழுரைகளும் ஈகோவிசத்தின் அகர விஷ்வரூபத்திற்கு ஆணிவேராகி உரமூட்டுகின்றன. இத்தகைய ஒரு சூழலில் கல்விமான் பேராசிரியர் ச. முத்துலிங்கம் அவர்களின் வாழ்வியல் பற்றி பேராசிரியர் சோ. சந்திரசேகரன் வழங்கிய தகவல்கள் பெரியவர்களெல்லாம் எத்தகைய எளிமையுடன் வாழ்ந்திருக்கிறார்கள்’ என பிரமிப்படையச் செய்கின்றது.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2010
 

பேராசிரியர் ச.மு.குறித்துநம்முடன் இருக்கும்பேராசிரியர் சோ. ச.நல்ல தகவல்களை வழங்கினார்
பெற்றோர்களில் பெரும்பாலோர் ஆங்கிலக்கல்வி இன்டர் நெஷனல் ஸ்கூல் கலைப்பாடமா’ என்னடா கலைப்பாடம் விஞ்ஞான பாடமே பாடம் என தலைக்கேசத்தை பிடுங்கிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் கலைப்பட்டதாரிகளின் பெருமைகள் குறித்தும் சாதனைகள் குறித்தும் மேடைகள் அதிர விளாசித் தள்ளுபவர் பேராசிரியர் சந்திரசேகரன். இங்கும் அதன் அதிர்வலைகளை கேட்க முடிந்தது.பேராசிரியர் ச. முத்துலிங்கம் அதற்கோர் உதாரண கலைப்பட்டதாரியாக முன்வைக்கப்பட்டார். மர்சும் மெளலானாவின் உரை கனதியானது. அதில் ஜனரஞ்சகத் தன்மை இல்லை என்ற போதும் அச்சரசுத்தமும்,சீரான மொழிப்பிரயோகமும் இளைஞர் அவரின் ஆளுமைகளாக இருந்தன என்பதினால் சபையோர் செவி அமுதம் பருகினர்.
சதா பழமையை கட்டிப்பிடித்துக் கொண்டு அழுது கொண்டிருக்காமல் புதிய மரபுகளுக்கான அடித்தளமாக நமது எண்ணும் எழுத்தும் மலரவேண்டும் என்பது அவர் உரையின் உள்ளடக்கமாகத் திகழ்ந்தது.
சேமமடு பதிப்பகத்தின் 100 புதிய பதிப்புகள் கொழும்பு தமிழ் சங்கத்திற்கு வழங்கப்பட்டன. திரு. பத்மசீலன் இவற்றை வழங்க,ஆகா' என்று திருவாளர்கள் மு.கதிர்காமநாதன், ஆ. இரகுபதி பாலழறீதரன், செ. திருச்செல்வம் ஆகியோர் விழுந்ததடித்துக் கொண்டுபோய் வாங்கிக் கொண்டார்கள். புத்தகம் என்றால் "ஐயாமார்க்கு அல்வா மாதிரி வணங்கி வாங்கிக்கொண்டார்கள்.
கல்வியும் உளவியலும் “சேமமடு நூலகம் இதழ் 04” செய்தி மடலும் வெளியிடப்பட்டன. கூட்ட முடிவில் அருகில் இருந்த சகோதரி செய்தி மடல் விலையைக் காட்டி யாரிடம் கொடுப்பது என்று கேட்டார். அட என்னங்க நீங்க, வடை,லட்டு, குளிர்பானம், மடல் எல்லாமாகச் சேர்த்து ஒர் அரஞ்சு வர்ண நோட்டைஎன்னிடம் கொடுங்கள்”என்றுகையை நீட்டினேன்.
“அடப்பாவிமனுஷா அம்மணிவிழுந்து விழுந்து சிரித்தார், எப்போதிருந்து இந்த தொழில்
சித்திரம் பேசுதடி - பத்தி எடுத்து பேசலாமோடி
கார்ட்டூன் எனப்படும் கேலிச்சித்திர படைப்பில் நமது நிலை என்ன? பரிதாபகரமானதுதான். சிரித்திரன் சுந்தர் அற்புதமாக அதற்கென ஒரு சஞ்சிகை நடத்தினார். அவர் அமரரானதன் பின்னர் சிரித்திரன் நல்லதொரு முயற்சியாகத் திகழ்கிறது.எனினும் நமது சிற்றிதழ்கள் கூட இந்தகனதியான அம்சத்தை ஏதோ தீண்டத்தகாத அம்சமாகவே கருதுகின்றன. ஆசைக்காகவேனும் ஒரு கனதியான சித்திரத்தை அவை பிரசுரிப்பதில்லை.
47

Page 50
"அம்மான் பிரசுரிக்க மனசில்லாமல் இல்லைஐயா இங்கே ஒரு கொம்பனும் வரைவதற்கு இல்லை. ஆசிரியர்கள் இப்படி அங்கலாய்த்துக்கொள்கிறார்கள்.
இந்தியாவில் நிலைமை வேறு. அதிலும் தமிழ் நாட்டில் கேலிச் சித்திரக்காரர்கள் சக்கைப் போடுகிறார்கள். மதன் நூல்வடிவில் வெளியிட்டுள்ள தொகுதிகளை படித்தாலே அடேயங்கப்பா!' என்று அசந்து போகாமல் இருக்க முடிவதில்லை. பலன்தார்த்த நூல்களை படித்துவிட்ட மலைப்பு ஏற்படும். சிரிப்புமழைதான் போங்கோ. ஆனால் கருத்தூன்றிப் படித்தால் அனைத்தும் சீரியஸ் அலசல்கள்தான்.
அதுசரி கிண்டல் சித்திரங்கள் ஒருபுறமாக இருக்கட்டும். கேலியான திறனாய்வுப்பத்திகள் நம்மிடம் உண்டா?
“தொலைஞ்சுது போ! 'சித்திரங்களே இல்லை. எழுத்துக்கள் எங்கிருந்துவரும்?
வீஆர் சீரியஸ் மைண்டட் நம் எழுத்தாளர்களில் பெரும்பாலோரும் பத்தி எழுத்தாளர்களும் இப்படித்தான் 'உம்மூனா மூஞ்சுகளாக இருக்கிறார்கள். இவர்கள் எழுத்துக்களில் சீரியஸ் இல்லை. பேச்சில் மட்டும்தான். ஏதோ சீரியஸ் பாவனை, சுத்த ஹம்பக்.
குர்திப்சிங்க சிறந்தபத்திரிகையாளர்.இவரதுகேலியான பத்திகளும், உரைகளும் பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தியவை. கவிதாகூரின் விழாவொன்றில் இவர் கேட்ட கேள்வி பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியதுடன் நூற்றுக்கணக்கான தாகூர்பற்றி கட்டுரைகள் எழுதுவதற்கும் உந்துதலாக அமைந்துவிட்டது.
“யாரப்பா இந்த தாகூர்? எதுக்கு இந்த தாடிக்கார கிழவனுக்கு இப்படி ஒரு விழா?”
இப்படித்தான் குர்தீப்கேட்டுத்தொலைத்தார். “அடப்பாவி நீயெல்லாம் திறனாய்வாளன், பத்திரிகை ஆசிரியன்,இப்படி பேசலாமா? அவருக்குநோபல்பரிசுகிடைத்தது, உனக்கு கிடைக்கவில்லை என்று பொறாமை வயிற்றெரிச்சல் என்றெல்லாம்கரிச்சுக்கொட்டினார்கள்.தாகூரைப்பற்றிஉனக்கு ஒன்றும் தெரியாதா! இதோ தெரிந்துகொள் என்று கட்டுரை கட்டுரைகளாக எழுதித்தள்ளினார்கள்.
“ஏலே! குர்தீப் சாகேப் நீர் இப்படி பேசலாமே?” கேள்விகளாப் போட்டு குடைந்தார்கள்.
“எத்தனையோ பேரிடம் கவிஞர் பற்றி பத்திரிகைக்கு கட்டுரை எழுதும்படி கேட்டேன் 'டைம் நகி நகி என்று பீத்தினார்கள். போட்டேன் ஒரு போடு. பைபிள் போன்றுபுத்தகம் வெளியிட கட்டுரைகள் வந்துசேர்ந்துவிட்டன”என்றார்குர்தீப் கரிச்சுக் கொட்டும் அர்ச்சனைகள் தூவப்படுவது இயல்பானதுதான். அது ஒரு விசயத்தின் பலஹினமான பக்கம், ஆனால் தாகூர்பற்றிவிபரமாக எழுதப்பட்ட கட்டுரைகள் அதன்
48
 

சக்திமிக்க ஆதாரமான பக்கமாகும். அதற்குக் காரணம் கேலிச் சித்திரங்களும் கேலிபத்திகளும் கனதியான அரசியல் மட்டும் அல்லஇலக்கிய அம்சங்களாகபாரதத்தில்வளர்ச்சிகண்டுள்ளன. கேலிச்சித்திரங்களும், கேலிபத்திகளும் இலக்கியத்திறனாய்வு என்ற அம்சத்திற்குள் அடங்குகின்றனவா?
sSé & LLDITS, Humour in Literary Criticism 6T goth நாணயத்தின் இருபக்கங்களாக அவை அடங்கத்தக்கவை. ஆனால் சித்திரங்கள் வெறும் நகைச்சுவை துணுக்குகளாக இன்றும் பெரும்பாலோரால் கருதப்படுகின்றன. பத்திகள் பொறாமையால் ஒருவரை அவமதிப்பதற்காக எழுதப்படுவதாக கருதப்படுகின்றன என்று தூற்றப்பட்டு பத்தியாளன் கண்ணியக் குறைவான வார்த்தைகளுக்கு உள்ளாகிறான். எனினும் முதிர்ச்சிமிக்க சிந்தனையாளர்கள் இவற்றை சமூக உரையாடல்களாக மாற்றிவிடுகிறார்கள். அதுவே சுமுகமான இலக்கிய வளர்ச்சிக்கான உரைகல்லாகும்.
குர்தீப் சிங்கின் உரை ஒரு தூண்டுதல். அவ்வளவுதான் வளர்ச்சி காணாதவர்கள் கன்னா பின்னா வென தாக்கினார்கள். சிறந்த சிந்தனையாளர்கள் தாகூர் பற்றிய உண்மை நிலையை நூற்றுக்கணக்கான கட்டுரைகளால் பரிணமிக்கச் செய்தார்கள்.
1912010 இலங்கை ஜனாதிபதி இரண்டாவது முறையாக பதவிஏற்றார்.பத்திரிகைகள் விசேட அநுபந்தங்கள் பிரசுரித்தன. லங்காதீப்என்றபத்திரிகை அதிகபக்கங்களுடன் வெளிவந்தது. பல கட்டுரைகள் புகழாரம் சூடின. இவற்றுக்கு நடுவில் ஒரு கேலிச்சித்திரம் பிரசுரமாகியிருந்தது. ஜனாதிபதி யுத்தத்திற்கு முன்னர்யுத்தத்திற்குபின்னர் ஆகியஇருநிலைகளும்,சாதாரண மக்களின்நிலையும் சித்திரிப்பாக அமைந்திருக்கிறது.
ஓர் அற்புதமான படத்தைப் பாருங்கள்! ஒர் அற்புதமான விமர்சனம்,நகைச்சுவையுடனும் அரசியல் தெளிவுடனும் காட்சி தருகிறது அல்லவா?
இந்நாட்டின் ஜனாதிபதியாக முடியாத ஒரு வயிற்றெரிச்சல்காரன்தான் இந்த சித்திரத்தை வரைந்துள்ளான்' என்று விமர்சனத்திற்குள்ளான ஜனாதிபதி சொல்வாரென்றால் அது பெரிய அபத்தம் அல்லவா.
சொல்லமாட்டார். ஏனென்றால் கேலிச்சித்திரம் சகித்துக் கொள்ளும் ஒன்றாகிவிட்டது. கேலி பத்தி எழுத்துக்களும் இலக்கிய உலகில் சகித்துக் கொண்டு நயந்து உண்மையை தேடும் ஓர் அம்சமாக வேண்டும்.
“போதுமடா சாமி! போதும். கேலிச் சித்திரங்களையே உள்வாங்க முடியாத நம் இலக்கிய உலக ஈகோக்கள் பத்திகளையா உள்வாங்கும்.?
“அடிசக்கைஅப்புடிபோடுராசா அதுதானே அடிபோடாத குறையாக ஓரம்போ ஓரம்போ'என்று போடுகிறார்கள்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2010

Page 51
型s); எண்ணிலா குணமுடையோர் ஆசிரியர் : யோகேஸ்வ சிவப்பிரகாசம் வெளியீடு ஜீவநதி வெளியீடு விலை ரூபாய்100/=
நூலாசிரியர் யோகேஸ்வ சிவப்பிரகாசம் சிறுகதை, கவிை கட்டுரை, விமர்சனம் போன்ற ப துறைகளில் தடம்பதித்து வெற் கண்டவர். இவரது நான்கு சிறுகதைக் தொகுதிகள் இரண் கட்டுரை நூல்கள் இதற்கு முன்னதாகவே வெளிவந்துள்ளன உரைநடைச் சித்திரமாக சிறுகதை அமைப்பிலும் தோற்ற பெறும் இந்நூல் "ஜீவநதி'யில் தொடராக வெளிவந் கட்டுரைகளின் அமைப்பாகும். நாற்பத்துநான்கு பக்கங்களை கொண்ட கையடக்கமான நூலாகவும், வாசிக்க தொடங்கினால் ஒரேமூச்சில் படித்து முடிக்கக் கூடிய நூலாகவு உள்ளது.
நூலின் முன் அட்டையில் காணப்படும் பல்வேறு தோற் முடைய முகங்களைப் போல், பல்வேறு வகையா6 குணாம்சங்களைக் கொண்ட மனிதர்களை இந்நூலில் தரிசிக் முடிகிறது. இப்பாத்திரங்கள் இன்றும் நம்மிடையே உலவு உறவாடும் நிஜமான மனிதர்களே. ஆனால் சிலர் முகமூ அணிந்தவர்கள். மிகக் கூர்மையாகப் பார்த்தால் ஒழி அவர்களை இனம் காண்பது அரிது. சமூகத்திலு குடும்பத்திலும் பிளவுகளையும் பிணக்குகளையும் உண்டாக் வேடிக்கை பார்க்கும் ஆசாட பூதிகள். இவர்களை வரவேற்பது உறவு கொள்வதும் தீமையே பயக்கும் என்பதை நூ கூறுகிறது. ஒதுங்கி வாழ்வதே உத்தமம்
பொன்னாச்சிப் பிள்ளை வீட்டுக்கு வீடு கதை காவு மட்டமான பெண். ஊருக்கு உதவும் தர்மலிங்கள் மற்றவர்களிடம் குறை கேட்கும் மனிதரானாலும், பழக் தோஷத்தினால் பிறர்க்கு உதவுவதை நிறுத்தவில்லை லீலாதேவி ஊரை ஏய்த்துப்பிழைக்கும் பெண் தீங்கின் மொத் உருவம் “சிறைப்பட ஒருப்படேன்' என்ற கட்டுரையில் பேசு சிங்கத்தின் உணர்வுகளை மனித சமுதாயம் புரிந் கொள்ளவேண்டும். வீரத்தை விட்டு இயற்கையான கர்ச்சனையை விட்டு கூண்டுக்குள் அடைபட்டு அடிமையா வாழும் வாழ்க்கையை வெறுத்துப் பேசுகிறது. நமக்கும் இதி செய்தி இருப்பது தோன்றுகிறது. முருகமூர்த்தி போ குறைகாணும் குருடர்களும் நம்மிடையே இன்று உலவுகின்றனர். மிருனாளினி வீட்டில் சங்கக்கை சமாச்சாரத்தை வாந்தி எடுக்கும் சத்தியலட்சுமிை சந்திக்கலாம். பேச்சுக்குப் பேச்சு எதிர்மறை அர்த்தம் கண் வாயாடும் பழனிவேலுவும் வருகிறார். பதவிக்காக ஒடித்திரியு சண்முகநாதனையும் கண்( மகிழலாம். சுவையான புத்தக படிக்கலாம்; பாதுகாப்பாகவு இருக்கலாம்.
நூல் : சாம்பல் பறவைகள் ஆசிரியர் : எஸ். அரசரத்தினம் வெளியீடு : சத்தியா பப்ளி
கேஷன்ஸ் கல்முனை விலை : குறிப்பிடப்படவில்லை
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2010
 
 

நூலாசிரியர் எஸ். அரசரெத்தினம் சிறந்த சிறுகதை ஆசிரியர் ஏலவே பல நூல்களை வெளிக்கொணர்ந்தவர். "சாம்பல் பறவைகள்” என்ற இக்குறுநாவல் வன் னி ப் போ  ைர ப் பின்புலமாகக் கொண்டு எழுதப் பெற்றுள்ளது. ஆனந்தன் பவானி காதலில் கதை தொடங்கினாலும் கதை முழுவதும் யுத்தத்தின் கொடுமைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
'வன்னிமக்களின் உண்மையான உழைப்பும் அவர்தம் போராட்டமும் வெறும் சாம்பலாகாமல் கோரைப்புல்லாக மீண்டும் மீண்டும் முளைத்து ஏதிர்கால சந்ததியினருக்கு சாட்சி பகர்ந்து கொண்டிருக்க வேண்டும் என்ற பேரவாவை இக்குறுநாவல் பூர்த்திசெய்கிறது”என்று வி. எஸ். இதயராஜா குறிப்பிடுகிறார். மணியத்தாரின் கண்டிப்பான வளர்ப்பில் வந்த ஆனந்தன் மாஸ்டர் உருத்திரபுரம் முருகேசு, பவானி ரீச்சரிடம் காதல் கொள்கிறார். ஆனந்தனின் தந்தை மறுப்புக் கூற ஆனந்தன் பொறுமையைக் கையாள்கிறான். பவானி விரக்தியுற்று கிளிநொச்சி மகாவித்தியாலயத்திற்கு மாற்றம் பெறுகிறாள்.
போரின் கெடுபிடி சூடுபிடிக்கிறது. பெட்டிபடுக்கையுடன் மக்கள் இடம்பெயர பவானி அப்பா முருகேசு, அண்ணன் குமார் அண்ணி சாரதா மகள் உமாவுடன் புளியம்பொக்கணைக்கு இடம் பெயர்கிறார்கள். வழியில் முருகேசர் நெஞ்சுவலியால் இறக்கிறார். இருட்டு மரு கிராமம் சுதந்திரபுரம் இரணைப்பாலை புதுமாத்தலனை என்று இடம் மாறுகின்றனர். குமாரின் மனைவி சாரதா பங்கருக்குள்ளேயே ஆண் குழந்தையை பெற்று விட்டு உயிர்துறக்கிறாள். பால்வாங்கக் கூட வழியில்லாத குமார், பவானி, உமா ஆகியோரும் இராணுத்தினரிடம் சரணடைய செல்கின்றனர். இடையில் இறந்தது குழந்தை. இராணுவம் வவுனியா முகாமுக்கு கொண்டு வந்து விடுகிறது.
கதையில் ஷெல் வீச்சும், துப்பாக்கிச்சூடும் எறிகணையும் விழுந்து ஆயிரமாயிரம் மக்கள் இறந்து போவதையும் இறந்தவர்களை அடக்கம் செய்யாமலே விட்டு வரும் அவலத்தையும், மரங்களில் தொங்கும் உடல் உறுப்புக்கள், காக்கைகளும் கழுகுகளும் கிழிக்கும் உடல்களையும் பார்க்க சகிக்க முடியாதுள்ளது. மணியத்தார் உலக நாடும் இந்தியாவும் உதவும் என எதிர்பார்த்து ஏமாந்தார். வவுனியா முகாமில் பவானியை சந்திக்கச் சென்ற ஆனந்தன் ஏமாற்றத்துடன் வீடு திரும்புகிறான். பவானியின் நிலை என்ன அறிய சாம்பல் பறவைகள் நாவலைப் படிக்கவும்.
நூல் : மாவை கந்தன் ஆலயம் ஆசிரியர் : திரு. கா. சிவபாலன் அச்சிட்டோர் அனுஷ் பிரின்டர்ஸ், கொழும்பு விலை ரூபாய் 250=
49

Page 52
சைவத்திரு கா. சிவபாலன் அவர்கள் பதிப்பாசிரியராக இருந்து வெளிக்கொணர்ந்துள்ள மாவை கந்தன் ஆலய வரலாற்று நூல், நமக்கு பல அரிய உண்மைகளை அறியத் தருகிறது. அட்டைப்படத்தில் அழகிய கோபுரத்துடன் காணப்படும் திருமுருகன் திருப் பொலிவு அனைவரையும் அஞ்சேல் என்று அபயமளிக்கிறது.
நூலுக்கு ஆசியுரையை மகாராஜ ரீது சண்முகநாதக் குருக்களும் அணிந்துரையை நீதியரசர் க. வி. விக்னேஸ்வரன் அவர்களும் வழங்கியுள்ளார்கள். கோவில் பற்றிய ஒரு குறிப்பை பேராசிரியர் கா. சிவத்தம்பி வழங்கியுள்ளார். பதிப்புரையை கா. சிவபாலன் எழுதியுள்ளார்.
நூலினுள்ளே நுழைந்து பார்த்தால் மாவை கந்தசுவாமியார் ஆலயம் கட்டிய இறுதிவாசகங்கள், கந்தபுராணக் கவிமலர்கள், மாவிட்டபுரக் காலம், மாவிட்டபுர தல எல்லைகள், வாயில் இராஜபோபுரம், கோவிற் கடவை, மாவை ஆதீன நிர்வாக பரிபாலனம், மாவை ஆதீனத்தின் ஆறாவது ஆதீனகர்த்தா, சிதம்பர தீட்சிதர்கள், ஏழாவது ஆதீனகர்த்தா மகாராஜபூரீ சு.து. சண்முகநாதக் குருக்கள், கந்தபுராண ஏடு, மஹோற்சவ கால விழாக்கள் போன்ற பல விபரங்கள் உள்ளன.
நூலிலிருந்து கீழ்க்காணும் விபரங்களை அறிய முடிகிறது. மாவை கந்தன் கோவில் யாழ். காங்கேசன் துறை வீதியில் 10வது மைலில் உள்ளது. 74அடி உயரமான இராஜகோபுரம் உள்ளது. இதை அமைத்தது ரங்கூன் பண்டாரம் என்று சொல்லப்படும் நாகலிங்கத் தேசிகர் மேற்படி கோயில் அர்ச்சகர் இரத்தினக் குருக்களால் ஆரம்பிக்கப்பட்ட பரிபாலன அறக்கட்டளையால் நிர்வாகம் நடைபெறுகிறது. தலைமுறை தலைமுறையாக ஒரே குடும்பத்தில் உள்ளவர்களே அர்ச்சனை செய்கிறார்கள். தீர்த்தோற்சவம் சிவராத்திரி மாசிமகம், ஆடி அமாவாசை காலங்களில் நடைபெறுகிறது.
பாண்டியமன்னன் உக்கிரப் பெருவழுதியின் மகள் அங்கசுந்தரியின் குதிரை முகம் நகுலகிரி தீர்த்தத்தில் நீங்கியதாகவும் அதனால் மாவிட்டபுரம் என்று பெயர் வழங்குவதாகவும் அறியக்கிடக்கிறது.
மூர்த்தி, தலம், தீர்த்தம், விசேடம் பெற்ற கோயிலாகும். மேற்படி நூலில் பல புகைப்படங்கள் நிகழ்ச்சிகளை விபரிக்கிறது. பாமாலை தொகுத்த 45 புலவர் பட்டியல், மாவைப்பதி அறிஞர்கள் பட்டியல் வெளியிடப்பட்ட நூல் பட்டியல் என்பனவும் இடம்பெற்று முழுமையான நூலாகியுள்ளது.
நரல் 76 கவிதைகள் ஆசிரியர் திருமலை
வெளியீடு அகில இலங்கை இளங்கோ கழகம்
இக்கவிதை நூல் அகில
প্ল'গৰ্গঋষিঃ
, સ્ટેટ્સ, ફ્રેડ સ્ટેક્ન છૂર્ક இலங்கை இளங்கோ கழகம்,
శg:eడాయితీ కణరf
திருமலைக் fl6O6TT LLUIT 6ù வெளியிடப்பட்டுள்ளது. இதழாசிரியர் தில்லைநாதன் பவித்திரன், கவிஞரும் கட்டுரையாசிரியரும் இலக்கியச் செல்வருமான பெரிய ஐங்கரன் அவர்கள் ஆலோசனை கூறி வழிநடத்தியுள்ளார். இதழாசிரியர் உதவியாசிரியர்கள் அனைவரும்பெரிய ஐங்கரனின் மாணவர்கள்.
இளம் மாணவரிடயே மொழி அறிவு மொழியுணர்வு, நாட்டுப் பற்று கலாசாரம் என்பன பெருக வேண்டும் என்ற
50
 

நோக்கத்துடன் இக்கவிதை நூல் வெளிவந்துள்ளது. தமது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள பெரிய ஐங்கரன் அவர்கள் நல்ல நிலத்தை தேர்ந்தெடுத்துள்ளார். விதைகளில் மிக நல்லவற்றைத் தேர்ந்தெடுத்து விதைத்து நீரூற்றி, பசளையிட்டு பாதுகாத்துவருகிறார். விளைவு மிக நேர்த்தியாக இருக்கும் ான்பதில் ஐயமில்லை.
திருகோணமலையிலுள்ள பாடசாலை மாணவர்களின் ஆக்கங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. மாணவர்களின் உள்ளக்கிடக்கையை உணர்ச்சி மிக்க சொல்லோவியங்களால் தெளித்துள்ளமை வாசனையாளனுக்கு மகிழ்ச்சியை அளிப்பதோடு, இளைய நெஞ்சங்களின் உள்ளக் குமுறலையும் கனவையும் நிதர்சனமாக விளக்குகிறது.
உவர்மலை விவேகானந்த வித்தியாலயம், புனித சூசையப்பர் கல்லூரி, கோனோஸ்வரா வித்தியாலயம், சண்முக இந்து மகளிர் வித்தியாலயம் புனிதமரியாள் கல்லூரி, மெதடிஸ்த வித்தியாலயம், ஸாகிரா கல்லூரி விக்னேஸ்வரா வித்தியாலயம், விபுலாநந்த கல்லூரி, பிரான்சிஸ் சவேரியார் கல்லூரி, செல்வநாயகபுரம் இந்து வித்தியாலயம், கலைமகள் வித்தியாலயம் ஆகியவற்றைச் சேர்ந்த எழுபத்தாறு மாணவர்களின் கவிதைகள் இடம் பெற்றுள்ளன.
படைப்பாளிகளின் எண்ணக்கருவூலங்கள் சிலவற்றைப் பொறுக்கி எடுத்துள்ளேன்.
கோள்களை தமிழன்னையின் கொலுசாக்கிதாரகையைத் தலையில் சூட எண்ணும் நெஞ்சங்கள், குடிநிலமெல்லாம் வெடிபட்ட தலைகள், 'பிறந்த குழந்தையும் பிணமானது: பிறவித்துயர்நிலையானது "இறைவன் தந்ததோ பிறவி, குரு தந்ததோ கல்வி'தேன் கொடுத்து உதவி தேவனைச் சேரும் மலரிடம் பாடம்கற்போம்,'ஆயுதம் பெருக்கி, அநாதைகளாக்கும் அதிகாரவர்க்கம், அழிவது எப்போது? கலாசாரத்திற்கு அதிகாரவர்க்கம், அழிவது எப்போது? கலாசாரத்திற்கு கல்லறை எழுப்பப்படுகிறது. மண்விட்டு வந்தோம் புண்பட்ட நெஞ்சுடன் என் இதய நதியில் ஒடமாய் உன் நினைவுகள். கொலைக்கான அறைகூவல் ஒருபக்கம் அமைதிக்கான அழுகுரல் மறுபக்கம் இப்படி எத்தனை எத்தனையோ முத்துக்கள் சிதறிக் கிடக்கின்றன. தேடி எடுத்து தித்திக்கச் சுவைபபது வாசகா கடமை
நூல் இருபதாம் நூற்றாண்டுக் கவிதை ஆசிரியர் பெரிய ஐங்கரன் வெளியீடு : மீரா பதிப்பகம் விலை ரூபாய் 100/=
புலோலியூர் புகழால் புகழ் பெற்றது. குமாரசுவாமிப் புலவர், கதிரைவேற் பிள்ளை தில்லைநாத நாவலர், சிவபாத சுந்தரனார். கந்த - முருகேசனார். போன்ற சான்றோர் பிறந்த ஊரில் பிறந்தவர் பெரிய ஐங்கரன். இளையவர். ஆனால் அறிவுத்துறையில் முதியவர் பன்னூற் பயிற்சி பெற்ற இவர் சிறந்த நுண்ணறிவாளர், தமிழில் மட்டுமல்ல வேற்றுமொழிப் பயிற்சியும் கொண்டவர். முன்னதாகவே பல நூல்களை இலக்கிய உலகுக்குத் தந்தவர்.
இருபதாம் நூற்றாண்டுக் கவிதை என்ற இந்நூல் எண்பத்தாறுபக்கங்களைக் கொண்டது.தினபதி ஞாயிறு இதழ் பொறுப்பாசிரியர் பாரதி இராஜநாயகம் அவரோடு பிரபல
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2010

Page 53
எழுத்தாளர் புலோலியூர் இரத்தினவேலோன் ஆகியோர் நூல் மதிப்பீடு செய்து வாழ்த்தியுள்ளனர்.
இந்நூலில் புதுக்கவிதையில் படிமவியம், பெண்மொழ கவிதை, கவிதையில் முரண்கோட்பாடு, சோலைக்கிளியி நாயோடு சம்பாசித்தல், நவீன கவிதைகளில் அஃறிணை பெயர்கள், மாணிக்க வாசகரின் நாய், பாரசீக கவிஞா6 தலையணை, புறநானூறு ஒரு எளிய அறிமுகம் உமர்கயாமி ஒரு கவிதை, இருபதாம் நூற்றாண்டுக் கவிதை என் தலைப்புகளில் பதினொரு கட்டுரைகள் இடம்பெற்றுள்ள ஞானம், ஜீவநதி, நீங்களும் எழுதலாம் தினக்குரல் போன் சஞ்சிகைகளில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப் இந்நூல்.
ஒரு ஓவியமோ சிற்பமோ சொற்களின் மூலமா வெளிப்படுத்தும் முறையே படிமம் என்று எஸ்ரா பவுண்ட் கூ இருப்பதை எடுத்துக் காட்டுவதோடு, "உணர்ச்சியும் அறிவு இணைந்த மன விளைவே படிமம் என்று நூலாசிரிய கூறுகிறார். பெண்மொழிக் கவிஞர்களில் குட்டி ரேவதி, சல்ப மைத்திரி,சுகிர்தராணி, திலகமாலா, கனிமொழி போன்றோரி கவிதைகளின் படிம அழகுகளை சித்திரித்துக் காட்டியுள்ள பாரசீகக் கவிஞன் ரூமியின் மஸ்னவி காவியத்தில் உள் கவிதைகள் பலவற்றை விளக்கி ஆன்மீக சிந்தனைகை விழிப்புறச் செய்துள்ளார்.
இருபதாம் நூற்றாண்டுக் கவிதையில் பாரசீகக் கவிஞ அடோனிஸ் எழுதிய கவிதைகளை சிவசேகரம் பாலை என் மொழி பெய்ர்த்துள்ளார். ஒரு சிறுவனின் முகத்தை தாங்கி சவப்பெட்டி ஒரு காக்கையின் வயிற்றின் மேல் எழுதிய புத்தகம் இவைகளுக்கு ஐங்கரன் தரும் விளக்கம் மிக அற்புதமானது
நூல் : கருத்துக் கலசம் ஆசிரியர் : சூசை எட்வேட் வெளியீடு : அகில இலங்ை இளங்கோ கழகம் விலை ரூபாய் 200/=
திருகோண மலை யை சேர்ந்த சூசை எட்வேட் அவர்களி ஆக்கமே இச்சிறு நூல். குற போன்று ஈரடிக் செய்யுள்களை கொண்டது. ஆயிரத்து முப்ப பாக்கள் இதில் அடங்கியுள்ளன. கருத்துக் கலசம் என் இந்நூலில் உள்ள பாடல்கள் பல மல்லிகை, ஜீவநதி போன் இதழ்களில் வெளிவந்தவை தெருக்குறள் என் தலைப்பிலேயே இடம்பெற்றுள்ளன. நீங்களும் எழுதலா துணை நின்றது.
நூலின் கருத்துக்கள் முன்னோர்களின் முதுமொ பொன் மொழி ஆகியவற்றிருந்தும் பெறப்பட்ட6ை மனிதரிடத்து இருந்து பெற்றதை மீண்டும் மனிதர்க்ே அளிக்கிறேன் என்று நூலாசிரியர் கூறியுள்ளார்.
எழுத்தாளர் பெரிய ஐங்கரன் அவர்கள் நீண் முன்னுரையொன்றை எழுதி நூலாசிரியரை ஊக்குவித் ள்ளார். சில இடங்களில் புறநானூறு பளிச்சிடும்; சி இடங்களில் கீதாஞ்சலி பளிச்சிடும்; சில இடங்களி ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்க பளிச்சிடும். சில இடங்களில் சுந்தரராமசாமியின் ஒ புளியமரத்தின் கதை பளிச்சிடும். சில இடங்களில் பட்டு கோட்டையோ, பாரதியோ, பாரதிதாசனோ வெளிவருவார்க
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - lq,8 ibLuri 2010
 

前
5
6) இடங்க்ளில் 6ਪ655ਪਹੈ , ; 5 ਸੁੰ ਸੁ தலைதுக்குவார்கள் என்று குறிப்பிடுகிறார். "வேசி சில்லறையாகவும் பத்தினி மொத்தமாகவும்
விற்கிறாள் தம் அழகை” ”மானத்தை விற்றுமானத்தை மறைக்க
ஆடை அணிவாரும் உண்டு. "சிற்றின்பம் துறந்தார்க் கெல்லாம் ஈண்டு மற்றின்பம் எல்லாம் கை கூடும்”
இந்நூலில் ஆன்மீகம், அரசியல், குடும்பம், காதல், கல்வி வறுமை, மென்மை, சுகாதாரம், விடுதலை வேட்கை என்பன பளிச்சிடுகிறது.
நூல் எஸ். எம். ஜெமீல் அவர்களின் அறிவாக்கங்கள் ஆசிரியர் : எஸ். எல். சியாத் 9痙DDL வெளியீடு : குமரன் புத்தக இல்லம் விலை ரூபாய் 600/-
முஸ்லிம் எழுத்துலகில் பிரபல எழுத்தாளரும், ஆய்வாளரும், பதிப்பாசிரியரும், மொழி பெயர்ப் பாளரும், சமூக சேவையாளருமான எஸ்.எச்.எம். ஜெமீல் அவர்களின் முழுமையான ஆக்கங்களை வெளிப்படுத்தும் நூல் இதுவாகும், இவ்வரிய முயற்சியை எஸ். எல். சியாத் அஹமட் அவர்கள் கொண்டு வந்துள்ளார். ஜனாப் ஜெமீல் அவர்களின் வரலாற்றுத் தொகுப்பு நூலாகவும் இதனை கொள்ளலாம்.
ஜனாப்ஜெமீல் அவர்கள் கிழக்கு மாகாண சாய்ந்தமருது கிராமத்தில் புகழ்பெற்ற குடும்பத்தில் பிறந்தவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பட்டத்தையும் யாழ் பல்கலைக்கழகத்தில் எம். ஏ. பட்டத்தையும் பெற்றவர்.
இவரது ஆக்கங்கள் தத்துவம், சமயம், சமூகவியல், மொழி, இலக்கியம், தூய விஞ்ஞானம், வரலாறு முதலிய சார்புடையனவாக உள்ளது. தினகரன், வீரகேசரி தினபதி, சிந்தாமணி, தினக்குரல், நவமணி, மித்திரன், ஞானம், வளர்மதி மல்லிகை போன்ற சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன.
இந்நூலில் இவரது வரலாறு, எழுதிய நூல்கள், தொலைக்காட்சி இலங்கை வானொலி பேச்சுகள் கலந்துரையாடல்கள், இவர் தொகுத்த நாட்டார் பாடல்கள், பெற்ற கெளரவங்கள், என்பன இடம் பெற்றுள்ளன.
இவர் இதுவரை எழுதிய நூல்கள் பதினேழு, மொழி பெயர்ப்பு நூல்கள் இரண்டு, பதிப்பித்த நூல்கள் பன்னிரண்டு. எழுதிய ஆய்வுக் கட்டுரைகள் நூற்றுப்பத்து புத்தகங்களுக்கு எழுதிய மதிப்புரைகள், பதிப்புரைகள் ஐம்பது. வானொலி நிகழ்ச்சிகள் நூற்றுமுப்பது.1949 இல் இருந்து சேகரிக்கப்பட்ட பத்திரிகை செய்தி நறுக்குகள் 1838 பல அல்பங்களாக உள்ளன.
இவர் பெற்றுக் கொண்ட கெளரவங்கள் பல ஈராக் அரபு நாடு ஆசிரியர் மாநாட்டில் பெற்ற விருதுகள் இலங்கை அரசின் சாகித்ய விருது 1995 வடக்கு கிழக்கு மாகாண சாகித்யவிருது 1995 அட்டாளைச் சேனை மீலாத்விழா நஜ்முல் உலூம் விருது மலேசியாவில் தமிழருவி விருது என்பன போன்ற பல பயிற்சிக்கலாசாலை அதிபராகவும் கல்விப் பணிப்பளராகவும், முஸ்லிம் அமைச்சின் செயலாளராகவும், தென்கிழக்குப் பல்கலைக்கழக பதிவாளராகவும் பல பதவிகளை வகித்தவர். இந்நூல் கலைக் களஞ்சியமாக போற்றத்தக்கது.
5

Page 54
கொழும்புத் தமிழ்ச் சங்கம் மாதந்தோறும் நடத்தும் தனித்துவம் மிக்க அற்றைத் திங்கள் நிகழ்வில் பேராசிரியர் சோ. சந்திரசேகரன் கலந்து சிறப்பித்தமைக்காக சங்கத்தலைவர் மு. கதிர்காமநாதன், பொதுச் செயலாளர் ஆ. இரகுபதி பாலறுநீதரன் ஆகியோர் பொன்னாடை போர்த்திக் கெளரவப்படுத்தினர். அருகில் சங்கத் துணைப்பொருளாளர் சி. பாஸ்கராவும் காணப்படுகிறார்.
தகவல்- கே. பொன்னுத்துரை
பேராசிரியர் சபா. ஜெயராசாவிற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் "இலக்கிய கலாநிதி என்ற பட்டத்தினை வழங்கி கெளரவித்தமைக்காக அவரைப் பாராட்டும் , நிகழ்வொன்று கொழும்புத் தமிழ்ச் சங்க வினோதன் மண்டபத்தில் நடைபெற்றபோது பேராசிரியர் சோ. சந்திரசேகரன் அவருக்குப் பொன்னாடை போர்த்தி கெளரவம் செய்தார். அருகில் நிகழ்விற்கு தலைமை வகித்த கொழும்புத் தமிழ்ச் சங்க பொதுச் செயலாளர் ஆ. இரகுபதி பால பூரீதரன் காணப்படுகிறார்.
தகவல்- கே. பொன்னுத்துரை
அண்மையில் (2010 செப்டெம்பர் 30ம் திகதி) அலரி மாளிகையில் விமர்சையாக நடைபெற்ற அரச இலக்கிய விருது வழங்கும் வைபவத்தில் 2009ஆம் ஆண்டு வெளிவந்த சிறந்த இலக்கிய படைப்புகளுக்கான தெரிவில் தமிழ் மொழியிலான நூல்களிலே "துயரம் சுமப்பவர்கள் நாவல் அரச சாஹித்திய விருதினைப்பெற்றது. நூலின் ஆசிரியர் நீ.பி.அருளாளந்தம் இலங்கை சனநாயக சோஷலிச குடியரசின் ஜனாதிபதி மேதகு மகிந்த ராஜபக்ஷ அவர்களிடமிருந்து இவ்விருதினைப் பெற்றுக் கொண்டார். அருகில் தேசிய மரபுரிமைகள் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கெளரவ பவித்ரா வன்னியாராச்சி அவர்களும் காணப்படுகிறார்.
கெளரவிக்கப்பட்டார்
அண்மையில் மூதூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் அதன் முகம்மது கனி அவர்கள் தலைமையில் நடத்தப்பட்ட 2010க்கான இலக்கியப் பெருவிழாவின் போது சமூக சேவையாளரும், சமாத கவிஞருமான பன்முக எழுத்தாளர் 'கலாபூஷணம் ஏ. எஸ். இப்ற அவர்களின் நீண்ட கால இலக்கிய சேவையைப் பாராட்டி பொன் கெளரவிக்கப்பட்டார். இவர் பல இலக்கிய நூல்களை வெளியிட் விருது போன்ற விஷேட விருதுகளையும் வென்றுள்ளார் என்பது
52
 

பிரதிச் செயலாளர் எம். எச். கலாசார சாகித்திய கலை ான நீதவானும் பிரபல மூத்த ாஹிம் மூதூர், கலைமேகம்" பட்டாடை விருதுகள் வழங்கி டதுடன் பொற்கிழி, ஆளுநர் குறிப்பிடத்தக்கதாகும்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2010

Page 55
நல்லூர் கம்பன் கோட்டத்தில் நீண்ட காலத்தின் பின் வி கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ், கலாசாலை விரிவு புராணம் காட்டும் வாழ்வியல்' என்ற நூலின் அறிமுகவிழ கோவில் வீதியில் உள்ள கம்பன் கோட்டத்தில் கம்பவாரிதி (
இந்நிகழ்வில் ஆசியுரைகளை நீர்வை மணி கு. தியாகர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் ஆகியோரும் வா தலைவர் செஞ்சொற் செல்வர் ஆறு. திருமுருகன், கோப்பா ஆகியோரும் நூல் அறிமுகவுரையை தென்கிழக்குப்பல்கலை தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி அதிபர் திருமதி சிவமல சண்முகதாஸும் வழங்கினர். நிகழ்வில் பல்கலைக்கழக, கலா மாணவர்கள், பாடசாலை அதிபர்கள் எனப் பலர் கலந்து செ
சிவனு லெட்சுமணன் மலையக தியாகி சிவனுலெட்சுமணனின் மாணவர்களிடையே நாட்டார் பாடல் சேகரிப்பு போ தீர்மானித்துள்ளது.
மலையக மக்களின் வரலாற்று ஆவணமாகவு பாடல்கள் பழமொழிகள் என்பனவற்றினை சேக மாணவர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகின்றது. தெரிவு செய்யப்படும் பாடல், ! சிவனுலெட்சுமணன் நினைவுப்பேருரையின் போது நூலில் பாடியவர், தொகுத்தவர் விபரம், பெயர் என்ப6 இதற்கான பரிசில்கள் 2011 மே மாதத்தில் நடைடெ போது வழங்கப்படும். போட்டியில் பங்குபற்றும் மாணவ வைக்க வேண்டும். போட்டியின் விதியின்படி 10 விடுகதைகளையும் சேகரித்து அனுப்புதல் வேண்டும். நேரடியாக மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்டவையாக போட்டியாளர் மாணவர் என்பதை உறுதிப்படுத்த இடப்படல் வேண்டும்) யாரேனும் ஒருவரால் உறுதிப்ப தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி திரு. சு உலகே6 19/10, திம்புல்ல வீதி, ஹட்டன்.
r ஓம் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாந 米· "இச்சகம் உள்ளவரை உங்கள் அச்சக உங்கள் உள்ளக் கருத்துக்களை எல்லா சகல விதமான அச்சுத்தே
O O யுனி ஆர்ட்ஸ் டுரி
Quality Off-set P. + Offset Printing + TDigita + TDigital Banner Printing + ( + Hot Stamp Printing Importers of Indian Wedd
யுனி ஆர்ட்ஸ் (பி.
sh-Arts O O 48B, புளுமெண்டால் தொலைபேசி: 2330195, 2334194. தொலைந
gjygfig5a5g$u9hóio Fast Digital Print (Colour Pri
ܢܠ
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2010

) ரையாளர் ச. லலீசன் ஆகியோரால் தொகுக்கப்பட்ட பெரிய 17.11.2010 புதன்கிழமை காலை 10.30 மணிக்கு நல்லூர் }. ஜெயராஜ் தலைமையில் இடம் பெற்றது. ஜக் குருக்கள், நல்லை ஆதீன முதல்வர்யூரீலயூரீ சோமசுந்தர pத்துரைகளை தெல்லிப்பழைபூரீ துர்க்காதேவி தேவஸ்தானத் ய் ஆசிரிய கலாசாலை அதிபர் வே. கா. கணபதிப்பிள்ளை கழக மொழித்துறைத் தலைவர் க. இரகுபரனும் நயப்புரையை அநந்தசயனனும் நிறைவுரையை கலாநிதி மனோன்மணி சாலை விரிவுரையாளர்கள், பட்டநெறி மாணவர்கள், ஆசிரிய ாண்டனர். - தி. மயூரகிரி
O : நினைவுப் போட்டி நினைவுத் தினத்தை முன்னிட்டு பாடசாலை ட்டியொன்றினை நடத்த முச்சந்தி இலக்கிய வட்டம்
ம் சான்றாதாரமாகவும் திகழும் மலையக நாட்டார் : ரித்து வெளியிடவும் அவை சேகரிப்பு தொடர்பில் இம் முயற்சி ஆதர்சனமாக அமையும் என விடுகதை, பழமொழிகள் என்பனவற்றுக்கு எதிர்வரும் பரிசில்கள் வழங்கப்படும். அத்துடன் தொகுக்கப்படும் எவும் பிரசுரிக்கப்படும். றவுள்ள சிவனுலெட்சுமணன் நினைவுப் பேருரையின் ர்கள் டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி நாட்டார் பாடல்களுடன் 10 பழமொழிகள் அல்லது அனுப்பப்படும் பாடல்கள், பழமொழிகள், விடுகதைகள் இருத்தல் வேண்டும். அதிபர், பிரதி அதிபர், ஆசிரியர் (உத்தியோக முத்திரை டுத்தப்படல் வேண்டும். ஸ்பரா, அமைப்பாளர், முச்சந்தி இலக்கிய வட்டம்,
சக்தி N ாடு சிறப்புற எமது வாழ்த்துக்கள்! 米米
ம் நிலைக்கும்? - கவிப்பேரரசு வைரமுத்து ம் எழுத்துருவில் அழகுற வழவமைத்தும் வைகளுக்கும் நாடுங்கள். றைவேட்) லிமிட்டட் inters eir Publishers (Printing + Screen Printing raphic Designing + Typesetting 7 + Carton Making ing Cards etr Cultural Ornaments
opGa) 6úlól"Lo.
வீதி, கொழும்பு 13. as6o: 2478133. Slooroorcó536): unieart Osltnet.lk
nt) 23"X 12 “அளவு வரை செய்து தரப்படும்.
الصـ
53

Page 56
ஞானம் சஞ்சிகைக்கு பணிவான வணக்கம் அக்டோபர் இதழில் வேலமுதன் ஐயாவின் தவம் குறுங்கன பெற்றோரின் அன்பையும் ஆதரவையும், பெற்று காதலின் L வியக்கத்தக்கது மட்டுமன்றி அவர்களின் மனவலிமை மெச் இடமளிக்கவில்லை என்பதற்கு மேலாக பல விடயங்களைச் சா மனித வாழ்க்கையில் மழலைச் செல்வங்களைப் பெற்றும வசைபாடவாழ்ந்தமை வருத்தமாக உள்ளது. மற்றொரு விடயம் என்னவெனில் இக்கதையில் எழுத்தாளர் மச பெற்றோர் உயிருடன் இருந்து அவர்களின் சம்மதத்துடன் இத் அவர்களும் இத்தவத்திற்கு ஆதரவாக இருந்திருக்க வே திருமணத்திற்கு ஆதரவாய் இருந்து அவர்களின் விரதத் சொல்ல முடியாது. அஜந்தாவின் பெற்றோர்களின் மனமாற்றம்ப பத்து ஆண்டுகள் என்பது அதிகமே.
மொத்தத்தில் இக்கதை சமூக சீர்திருத்தத்திற்கு பங்களி:
女女女女 நவீன இலக்கியத்துக்கு சாரமான மாதசஞ்சிகை என்ற ஆ முறையில் ஒவ்வொரு கட்டுரையின் கீழும் ஒரு இருவரியில் கொள்வது நன்று.
எஸ். ஆர்.பாலச்சந்திரனின் படம் கம்பீரமாக இருந்தது. இருந்திருக்கும்.
வழமையாக, நவீனர்கள் மனுதர்மத்தை இகழும் ஒருவரிே ஒருகுலத்துக்கு ஒருநீதி என்ற, மனோன்மணிய ஆசிரியரின் “வ என்று பயந்தேன். நல்லகாலம் ஆசிரியர் அதிகம் பிழைக்கவி பொருள்விளங்காததாக உள்ளது.நவீனர்களே,அறக்கோட்பாடு பூரணத்துவ மதிப்பு அளிக்கமுடியாது relative value மட்டுமே என்றும் மறுதலிக்கும்போக்கில் செல்கின்றனர்.நவீனமெய்யிய புறந்தள்ளி கிளிப்பிள்ளைகளாகி, பாடசாலைகளில் படிக்கின்றன “மனுதர்மசாத்திரம்” என்பதை LawsofManu எனமொழிப்ெய ஆக்கித்தருவதே அன்றி, சட்டங்களை வகுத்துவிரித்து எழுதவி பாலகிருஸ்ணனை மெச்சுவதுடன், அவருடையவசனத்தில் கட்டை விரலை தட்சிணையாகக் கேட்டது. பகுத்தறிவுப்பாசை பிறருக்கு ஒருநீதியும் அன்று, ஏகலைவன் துரியோதனன் பச் தர்மத்தைக் காப்பாற்ற அதர்ம வழியைக்கையால் தேவையில்லை, அவர்கட்டைவிரலை வேண்டியதுதர்மமேலோக அஸ்திரங்கள் (ஆயுதங்கள்) இருப்பது லோக க்ஷேமத்துக்குத் அழிப்பதும் ஒன்றல்ல.
ஐன்ஸ்ரைன் ஹிட்லரின் கொடுமையால் அழியும் யூத இ அஸ்த்திரமாக்கினால் உலகை சர்வாதிகார அதர்மத்திலிருந்துக செய்யும் படி கடிதம் எழுதினார். ஒப்பன் ஹைமர் பரிசோதை பேரெல்லையைக் கண்டபோதுபகவத்கீதையின் அழிவுச் சுலோக செய்து, படையிடம் அளித்தார். றுஸ்வெல்ட்கிறீஸ்தவதர்மத்ை இருவாரத்துள் யப்பான் சரணாகதி அடையும் என்றகணிப்பு ஆயுதங்களும் எவ்வளவு அழியும் என்றதைக் கணக்கில் எடுத்தா இல்லை என தர்மம் காட்டினார். குண்டு போட்டதை அறிந்த விட்டது எனப்பேசிக்கொண்டது.இன்று அதர்ம இராச்சியம் ஈரா
54
 

தபடித்தேன்,சற்று சிந்திக்க வைத்தது. புனிதத்தை நிருபிக்க கதையின் நாயகர்கள் இயற்றிய தவம் சத்தக்கது. ஏனெனில் அவர்கள் தங்களின் உணர்ச்சிகட்கு தித்துள்ளனர். கிழ வேண்டிய காலப்பகுதியில் மதிகெட்ட மாந்தர் மலடர் என்று
ாலிங்கனின் பெற்றோர் பற்றி குறிப்பிடவில்லை. மகாலிங்கனின் திருமணம்நிகழ்ந்திருந்தால் LL S S LeAeESLSS SSSS S AAALLL SYS SAYLS L ண்டும். அப்படியாயின் அவர்களையும் மெச்ச வேண்டும். தை விரும்பாதவர்களாய் இருந்தால் கூட அவர்கள் மேல் தவறு மகிழத்தக்கது. எனினும் அவர்களின் கல்நெஞ்சத்தைக் கலைக்க
க்கும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.
சிவ. வரதகரன் 女女 y அந்தஸ்து ஈழத்து இலக்கியத்தில்ஞானத்துக்கு உண்டு அந்த கட்டுரையாசிரியரை அறிமுகப்படுத்தும் வழக்கத்தை வைத்துக்
அவரைப்பற்றி ஒரிருவரிகள் இறுதியில் இருந்தால் மகிழ்ச்சியாய்
யனும் சேர்த்திருப்பர் எனப்பார்த்தேன். “உள்ளுவரோமனுவாதி பழங்கி அடிபட்ட சொற்றொடரை (Cliche) அடி ஒற்றிப்போவாரோ ல்லை. தர்மம், அதர்மம் காலாகாலமாக எல்லா அறிஞருக்கும் கள் காலந்தோறும் இடந்தோறும்மாறுபவை, அதனால் அவற்றுக்கு அளிக்க முடியும் என்றும், அறத்துக்கு ஒரு பெறுமதியும் இல்லை 1ல் மாணவர்கள்,பழைய தர்மம் சார்பிரச்சினை விவாதங்களைப்
T. ர்ப்பதே பிழை. அது, சமூகத்தில் சட்டமியற்றுவோருக்குத்தளத்தை பில்லை. ல் ஒரிரு தடக்குகள் இருப்பதையோசிக்கின்றேன். ஏகலைவனின் றயினர் சுட்டும் “பிராமணப்புத்தி’யும் அன்று. தனக்கு ஒருநீதி, க்கம் சேரும் சந்தர்ப்பம் வரும் என எதிர்பார்க்கவும் முடியாது. ண்டேன் என்று துரோணர் மொழிந்ததற்கிரங்கவும் தர்மமே.வேதம் அறியா வேடனிடம்மந்திர அடிப்படையில் இயங்கும் தடையாகும், மானுக்கு எய்வதும், மனித இனத்தை ஒரம்பால்
னத்தின் அவலத்தில் அகப்பட்டு, அணுவைப்பிளந்து, சக்தியை காப்பாற்றலாம் என்று அமெரிக்க ஜனாதிபதிக்கு அணு ஆராய்ச்சி னயைச் செய்து, அவதானிப்புக் கோபுரத்திலிருந்து அழிவின் ங்களை வாய் முணுமுணுக்க, அதனை அங்கீகரித்துக்குண்டைச் தச் சிந்தித்து, பின்நிற்க,ஐஸன்ஹோவர் இப்போ போடாவிட்டால், உளதாயினும் அச்சிறு இடைவெளியில் அமெரிக்க படைகளும் ல், ஹிரோஷிமா, நாகசாகியை அழிப்பதுஅத்துணைப்பெருந்தீமை உலகம் மனித மனச்சாட்சியின் தலையில் குண்டு போடப்பட்டு னும், வடகொரியாவும் அணுகுண்டு தயாரிக்க விடாமல் சிண்டைப்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2010

Page 57
பிடித்து இழுக்கிறது. காந்தியின் இந்தியாவும், அதிற்பாதியான கட்டிக்கொஞ்சுகின்றது. இதுதான் அறக்கோட்பாடு என ஒன்று அணுவாயை அகலத்திறந்து உலகையே அழிக்கப்போகிறது எ ரூஷ்யா லியூஷியோவை சிறை வைத்துள்ள சீனா ஆகியவை ம கூச்சலிடும்புண்ணியவான் மனிதப்படுகொலைகளைத்தராளம இவற்றை உன்னிப்பார்ப்போர்துரோணர் "அதர்ம வழியைக் கை
ஐம்பதுகளில் வினோபாஜியின் கீதைப் பேருரைகள் தமிழி ஒரு அசோகன் அல்லவே” எனக் கீதைக்கேட்டும் அவனது சு அசோகன் புத்த தர்மத்தை அறிந்தவுடன் தர்மச்சக்கர பிரவர்த்த கண்டித்தார். அசோகன் மண்ணாசையால் போரிட்டு பல்லாயி தர்மத்தில் போரின் அடிப்படை என்ன என்பதை விளங்காதவர் ச பிரசித்தி பெற்ற வரலாற்று நூலில் அசோகன் ஒருவனே உல மாமனிதன் என்று புகழ்ந்தார். அவரை பின்பற்றிய ஜவஹர்லால் காலத்தின் பிள்ளைகள். காலம் கடந்த சாஸ்வதமான தர்மத்தை வளர்ந்தபடியால் எமக்கும் தர்ம - அதர்ம முரண்பாடுகளை விள
பொ. கைலாசபதியின் உளவியல் கட்டமைப்பில் தர்மத்துக் விளங்குவது கஷ்டம் அதனாலேயே தர்மர் துரோணர் போன்ற ெ
★女丸 “ஞானம்"புரட்டாதி இதழ்கண்டேன், படித்தேன்,நயந்தே தொடர்ச்சி இலக்கிய இதயங்களுக்கு ஐப்பசி மழைத் தூறல்
முறைதவறும்பதிப்புமுயற்சிகள் பற்றிய "ஆசிரியர் பக்கச் மானாமக்கீன் பல்துறைக் கலைஞர் இன்றுஆய்வாளராய் கனிந் பேணுபவர். அவர் பற்றிய பதிவுகள் இளைய தலைமுறையினர்க் தமிழில் இலக்கிய திறனாய்வியல் பற்றிய நா. சுப்பிரமணி என்கிற பெயரில் தனிப்பட்ட பிராதாபங்களும், காய்தல்,உவத்தலு முயற்சி பற்றியும், அத்துறையில் நிலவும் தேக்கச் சூழல், அ நோக்கியிருப்பது சிந்தனையைக் கிளறுவதாகும்.
வை. சாரங்கனின் அகால மறைவுஈழத்து இலக்கிய உலகிற் அவலம் பேசுகிறது.
தெளிவத்தையுடனான நேர்காணல் இம் முறை தொடர்ந் செம்மையான, புடமிடப்பட்ட இலக்கியவாதி அவர் தி ஆவணப்படுத்தலுக்குரியது. அதிகமாய்,முதியவர்கள் அவர்தம் இயலுமாயின் கேளுங்கள்! மொழிப்பெயர்ப்புக் கவிதையிற் கவ6 வாதஸலல வாழ
★★丸
மன்னார் தமிழ்சங்கத்தின் செம்மொழி விழாவை ப தலையங்கத்தைக் கண்டேன். புகழ வேண்டியவற்றை புகழும் , அறிந்தவரையில் சர்வமத சமரச விழாவாக மன்னாரில் செட் மட்டுந்தான் கல்லடிபடும். அதுபோல சிறப்பான ஒரு விடயம் நன மனிதநேயத்துக்கு அப்பால் பட்ட செயல், இதை ஒருபுறம் வைத் முன்மாதிரியாக இருந்து விழாவை சிறப்பாக செய்துமுடித்த விழ தெரிவித்து கொள்கிறேன். விசேடமாக வெளிமாவட்டங்களிலி அளவிடமுடியாத மகிழ்வைத் தருகிறது.
அதேநேரம் எமது மேல் மாகாண சாஹித்திய விழாவைய செறிந்து வாழும் மேல் மாகாணத்தில் தமிழ் சாஹித்திய நடத்தியுள்ளதையிட்டு அதனை ஏற்பாடுசெய்தவர்களுக்கும் ந அமையட்டும் என வாழ்த்துகிறேன். சில ஆலோசனைகளை கூறுபோடாமல் தமிழ் மொழி பேசும் சர்வ மதத்தினரும் ஒன்றி மாநாடாக ஒழுங்கு செய்து, மேல்மாகாணத்தில் பிறந்தவர்களு நிச்சயம். சிந்தித்தால் சிறப்பு வரும்.
மேலும் இவ்விதழில் தென்னிலங்கை இலக்கியகர்த்தாக்க தேடியுள்ளீர்கள்.கமால் நீண்டகாலம் இலக்கியப்பணிபுரிய என நன்றி.
தானம் - கலை இலக்கிய சஞ்சிகை - 4Füuř 2010

ா பாகிஸ்தானும் அணுகுண்டு செய்து விட்டதால் அவற்றைக் இல்லை எனப்பேசும் மேற்குலகம் சந்திக்கும்படுபாதாளவிளிம்பு ன்பதைமறக்கிறது. அணு விஞ்ஞானி சகரோவைச் சிறையிட்ட னித உரிமைகாக்கும் அறத்தைக் கடைப்பிடிக்க வில்லை என்று கச் செய்த அரசுத்தலைவர்களைப் பாராட்டி அறிக்கை விடுகிறார். 6யாண்டேன்” என்று கூறியிருக்கத் தேலையில்லை. ல் வந்தபோது, பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை “அர்ச்சுனன் டித்திரியப் போர் வெறி தணியவில்லை, கலிங்கப் போரின் பின் கர் ஆயினார் என்றும் அசோகனை வானளாவ உயர்த்தியதைக் ாம் பேரைக் கொன்று விட்டு மனம்திருந்தினான் என்பது பாரத கூற்று. அகிம்சையை முதன்மைப்படுத்திய எச்.ஜி.வெல்ஸ் தனது கவரலாற்றில் போரில் வெற்றிப்பெற்றபின், போரைக் கைவிட்ட நேருவும், அதே கருத்தை வெளியிட்டார். அவர்கள் அனைவரும் விளங்கினவர்கள் அல்லர். நாம் இந்த அறிவுசார் பின்னணியில் ாங்கும் அளவுகோல்கள் பிழைத்துவிட்டன. குமேலே பிம்பமோ பிரதிபிம்பமோ இல்லை, அதை எவ்விதமாயும் பரியவர்கள் கூட தர்மசங்கடப்பட்டுள்ளனர்.
-ஆ. சபாரத்தினம்*女★大 ன். சிற்றிதழ்களின் வறட்சி நிலவும் இக்காலத்தில், ஞானத்தின்
சிந்தனைகள்”தொடர்பில் உரியவர்கள், கவனங்கொண்டாற் சரி. துள்ளார். கீழைக்கரை மண்ணோடும் இலக்கியத் தொடர்புகளைப் குப் பலன் தருவன.
ரியனின் கட்டுரை காலத்துக்குப் பொருத்தமானது. திறனாய்வு லூம் அரங்கேறுவது தொடரத்தான் செய்கிறது.தமிழில் திறனாய்வு தற்கான காரணங்கள் பற்றியும் கட்டுரையாசிரியர் ஆழமாக
குமற்றுமோர் இழப்பு ஜின்னாவின் கவிதை'மரபிலே"மலையக
திருப்பது பாராட்டுக்குரியது. தெளிவத்தை ஒரு நேர்மையான, னகரனில், வரைந்த "மலையகச் சிறுகதை வரலாறு” கதைமாந்தராய் இடம்பெற்றமை குறித்த தொடரும் நேர்காணலில் னம் பதிப்பின் நன்று த்துக்கள்.
சா. சசீதரன், கிழக்குப்பல்கலைக்கழகம் 女★女 ற்றிய குறிப்புகளுடன் 126ம் இலக்க ஞானத்தின் ஆசிரிய ஆசிரியருக்கு எனது முதல் நன்றி, ஆசிரியர் அவர்களே! நான் ம்மொழி விழா நடைபெற்றுள்ளது. பழம் நிறைந்த மரத்துக்கு டைபெற்றால், ஆதங்கப்படுவோர் சொல்லடி கொடுப்பார்கள். இது துவிட்டு, கவலைப்படாமல் எடுத்த காரியத்தை முடித்து பலருக்கு ா ஏற்பாட்டாளர் சகலருக்கும் எனது நன்றியையும், வாழ்த்தையும் ருந்து சென்றவர்களை கெளரவப் படுத்தியதை அறிந்த போது
ம் இதனுடன் ஒப்பிட முடியாவிட்டாலும், தமிழ் மொழிபேசுவோர்
விழாவொன்றை ஏற்பாடு செய்து இரண்டு வருடகாலம் ன்றி கூறுகிறேன். அடுத்துவரும் காலங்களில் மேலும் சிறப்பாக ாயும் முன்வைக்கிறேன். வரும் காலங்களில் செம்மொழியை ணைந்து செம்மொழி சாஹித்திய சர்வமத சமரஸ செம்மொழி க்கு முன்னுரிமைகொடுத்து, விழாவினை நடாத்தினால் வெற்றி
5ளில் ஒருவராகியதிக்வல்லை கமாலுக்கு இடமளித்து பெருமை துவாழ்த்துக்களை கூறிக்கொள்கிறேன்.வதிரிசி.ரவீந்திரனுக்கு
பாணந்துறை எம். பி. எம். நிஸ்வான்
55

Page 58
2011 ஜனவரி 6,7,8,9 ஆம் திகதிக
சர்வதேச எழுத்தாளர் விழா
O O விண்ணப்
1. முழுப்பெயர்:
3. பிறந்த திகதி:
5. தற்போதைய வதிவிடம்:
7. தொலைபேசி எண்:
9. மின்னஞ்சல் முகவரி:
11. ஈடுபாடு கொண்ட துறைகளில் பெற்ற அனுபவங்கள்/வெளியிட்ட நூல்கள் பரிசுகள்! கெளரவங்கள்.
13. பேராளராயின் எத்தகைய பங்களிப்புச் செய்ய
விரும்புகிறீர்?
15. வெளிநாட்டவராயின் கொழும்பில் தங்குமிட வசதி மாநாட்டு ஏற்பாட்டாளரால் செய்து தரப்பட வேண்டுமா?
0 விண்ணப்பப்படிவத்துடன் சமீபத்திய
புகைப்படம் ஒன்றையும் இணைக்கவும்.
56

ளில் கொழும்பில் நடைபெறவுள்ள
ாவில் பங்குபற்றுவதற்கான பப் படிவம்
ஆண்/பெண்.
பிறந்த இடம்:
தொடர்பு முகவரி:
8. செல்லிடத் தொலைபேசி எண்:
10. ஈடுபட்டுள்ள துறைகள்:
12. விழாவில் எவ்வகையில் பங்குபற்ற
விரும்புகிறீர்? பேராளர்/பார்வையாளர்.
14. விழாவில் பங்குபற்றும் நாட்களில் கொழும்பில்
தங்கியிருக்கும் முகவரி:
16. தேசிய அடையாள அட்டை / கடவுச்சீட்டு எண்
விண்ணப்பப்படிவத்துடன்.
O
மேலதிக தகவல்கள் ஏதாவது இருப்பின் தனித்தாளில் எழுதி இணைக்கவும்.
கையொப்பம்:
* பிரதி எடுத்துப் பாவிக்கலாம்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - டிசம்பர் 2010

Page 59
துரித - கயை மணமக்கள் தெரிவுக்குச் சுய குரும்படி மயெழுவேல் அமுதனே துரித
行 ចា ឆ្នាំ ២០០០០Trbយាចា និយា៣ចា Bសាឆ្នាំ முேதன் பாரிய சேவைக் 8
0 விவரம்
விவரங்களுக்குத் தனிம புகழ்பூத்த, சர்வதேச, ச குரும்பசிட்டியூர், மாயெழு சனி, ஞாயிறு நண்பகலி
0 தொலைபேசி
236O488 12.360694 || 48
0 சந்திப்பு முன்னேற்பாட்டு ஒழுங்கு
முகவரி 8-3-3 மெற்றோ மாடிம6 33ஆம் ஒழுங்கை ஊடா கொழும்பு - 06
ܒܸܰ
பூபாலசிங்கம் புத்தகசாலை - 202,
= 5-75.555élysir - ELIJIT56n
பூபாலசிங்கம் புத்தகசாலை - 309/
பூபாலசிங்கம் புத்தகசாலை - 4, அ
புக் வாப் - யாழ். பல்கலைக்கழக
துர்க்கா - சுன்னாகம்,
ப நோ கூ சங்கம் - கரவெட்டி, ெ
வங்கா சென்றல் புத்தகசாலை - 8
மாரிமுத்து சிவகுமார் - பூரீகிருஷ்ண
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

២៣០០ ប្រចបំ២០fit ட்டணக் குறைப்பு
னித நிறுவநர், “சுய தெரிவுமுறை முன்னோடி’ மூத்த, கலருக்குமான திருமண ஆலோசகர் ஆற்றுப்படுத்துநர் வேல் அமுதனுடன் திங்கள், புதன், வெள்ளி மாலையிலோ, லோ தயங்காது தொடர்புகொள்ளலாம்
3929
முறை
னை (வெள்ளவத்தை காவல் நிலையத்திற்கு எதிராகவுள்ள க) 55ஆம் ஒழுங்கை,
i i }
s
தெரிவு முறையே மகோன்ன மணவாழ்வுக்குக்
s
லய மணமக்கள் தெரிவுக்குச் சுயதெரிவு முறையே
கிடைக்கும் இடங்கள் ༽
340, செட்டியார் தெரு, கொழும்பு - 11
ன. தொலைபேசி: 077 9268808
\, 2/3 காலி வீதி, வெள்ளவத்தை
பூஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்.
வளாக அருகாமை, யாழ்ப்பாணம்.
நல்லியடி
1. கொழும்பு வீதி, கண்டி
ராஸ், இல 86, சைட் வீதி, ஹட்டன்.
گرے

Page 60

DASALE, SRI LANKA. . ΕAX: 0094-081-2420740 nd asltnet.lk