கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அரும்பு 1999.03

Page 1


Page 2
மூளைக்கு வேலை
விவேக வினாக்கள் ஏழு
தகவல் அனுப்புவதற்காக இரகசியக் குறியீட்டு முறையொன்றைப் பயன் UG5gh (56) if MEET TODAY AT TWO P. M. GT60T Glaissou GYYN NIXUSUNNQIJ. G. என்று எழுதியனுப்பினார். அதே முறையில் எழுதப்பட்ட MYHX ULOGVO VS JIMN 6T6āTO Ghay-Liuĝo (g5ĵhüugal LLITg5]? "
கடிகாரமொன்று ஒரு மணித்தியாலத்திற்கு 8 நிமிடங்கள் வீதம் முந்தி ஒடுகின் றது. காலை 8 மணிக்குச் சரியான நேரம் வைக்கப்பட்டு 4 மணித்தியாலங் களின் பின்னர் ஊசியை எத்தனை நிமிடங்கள் பின்னோக்கித் திருப்பினால் மாலை 4 மணிக்கு அக்கடிகாரம் சரியான நேரத்தைக் காட்டும்?
A, B என்பன கண்முகி வடிவான இரும்புக் குற்றிகளாகும்.Aயின்நீளம், அகலம், உயரம் என்பவற்றை விட Bயின் நீளம், அகலம், உயரம் என்பன இருமடங்கு பெரியனவாக இருப்பின் Bயின் நிறை Aயின் நிறையின் எத்தனை மடங்காக இருக்கும்?
தாளொன்றில் வரையப்பட்டுள்ள159 பருமனுடைய கோணமொன்றை, நான்கு மடங்கு உருப்பெருக்கிக் காட்டக்கூடிய பூதக் கண்ணாடியொன்றினூடாகப் பார்க்கும் போது அக்கோணம் எத்தனை பாகை பருமனுடையதாகத் தோற்ற மளிக்கும்?
சதுர வடிவில், நான்கு சுவர்களைக் கொண்டதாகவும் ஒவ்வொரு சுவரிலும் ஒரு யன்னல் இருக்கக் கூடியதாகவும், உள்ளேயிருந்து எந்த யன்னலினூடாகப் பார்த்தாலும் தெற்குத் திசை தெரியக் கூடியதாகவும் ஒரு வீட்டை அமைப் பதற்கு வழியென்ன?
நீளம், அகலம், உயரம் என்பன தலா 4 cm பருமனுடைய கண்முகி வடிவான மரக்குற்றியொன்றின் வெளி மேற்பரப்பு முழுவதும் சிவப்பு நிறம் பூசப்பட்டது. பின்னர் இக்குற்றியானது, ஒவ்வொன்றும் 1 cm நீளமும் 1cm அகலமும் 1cm உயரமும் கொண்ட சிறிய கணக்குற்றிகளாக வெட்டப்பட்டது. இவ்வாறு வெட்டிப் பெறப்பட்ட சிறிய கணக்குற்றிகளுள் இரண்டு முகங்களில் மாத்திரம் சிவப்பு நிறத்தைக் கொண்டவை எத்தனை காணப்படும்?
1860 பெப்ரவரி 29ம் திகதி பிறந்த ஒருவர் 75 வருடங்கள் வாழ்ந்த பின்னர் 1935 ஜனவரி 29ம் திகதி காலமானார். அவர் தன்னுடைய வாழ்வு காலத்தில் தனது எத்தனை பிறந்த நாட்களைச் சந்தித்திருப்பார்?
(விடைகள் 36ம் பக்கத்தில் தரப்பட்டுள்ளன).
"ട്",

பூபாலசிங்கம் புத்தகசாலை ,4لاه کاتولانا لله ,4.3
nos ir Čilu oleh, - - - - - - - - - - - N
j0Գ) உங்களுடன ஒரு நிமிடம். g)05 7一、 வாசகர்களே!
ம்பின் பணி தொடர்வதற்கு
சகர்களாகிய நீங்களும் எமது முகவர்களும் வழங்கி வரும் உறுதுணையாக அமைந்துள் ளது. பல்வேறு சிரமங்களுக்கு மத்தி எம். ஹாபிஸ் ஸ்ஸ்தீன்ழ்ப்ாலயிலும் ரும்பைத் தொடர்ந்து வெளி
டா" யிட வேண்டும் என்ற வேணவா 1 Published By: வோடு நாம் செயற்படுவதற்கு நீங்கள் ISSADEEN MEMORIAL வழங்கி வரும் ஊக்கமும் ஒத்துழைப் EDUCATIONAL FOUNDATION புமே காரணமாக இருக்கின்றன. 147, MAINSTREET, DHARGATOWN- 12090 இந்த இதழ் முதல் அரும்பின்
Phone/Fax: 034-70151. விலையை இருபது ரூபாவாக அதிகரித்
பொது ,י"
, ஜிமிதி ®ಣಕ್ಕಿ:9 | A/?:
---
E-Mail : royalG)eureka.lk துள்ளோம். இது எமது வாசகர்களுக் orpಳ್ತಜ್ಜೈನ್ಡ° !o್!
147, Main Street, Dharga Town. . அமையக் கூடும். எனினும் அரும்பு கையறாது வெளிவர வேண்டுமா آنها اشیا لایههای از မြို့ရှို့ wagen 25* யின் இப்படியொரு நடவடிக்கை A.J. Prints, 44 station oad, Dehiwala***, அவசியமாகியுள்ளது. எனவே இந்த
உள்ளே .وكلماتينيسيسي விலையேற்றத்தைச் சகித்துக் " N கொண்டு எமக்கு உங்கள் ஆதரவைத் நீதிக் கதை 2 % வழங்குவீர்கள் என எதிர் சிறுநீரகச் செயலிழப்பு 3 \ பார்க்கிறோம். LOTífuLIIT, GALOMT6öOTLGB6mosTif 6 Y ຫຼິດຄໍາ 8 அரும்புக்கு ஆக்கங்கள் அனுப்ப டேபில் டென்னிஸ் 11 லாமா எனப் பலரும் கேட்கின்றனர். பூமியை வலம் வந்தோர் 13 எவரிடமிருந்தும் ஆக்கங்கள் பெறும் இரைப்பைப் புண் 15 நோக்கம் எமக்கு இல்லை என்பதை தலாய் லாமா 17 ஏற்கனவே கூறியிருக்கிறோம். எனி நரி 19 | னும் வாசகர்களால் அனுப்பப்படும் சமாதானத் தூதுவர்கள் 21 தரமான ஆக்கமொன்றுக்கு இரு பக்கங் விண்வெளிப் பிரயாணம் 24 களை ஒதுக்கலாமா என ஆலோசித்து நயகராவை நோக்கி 27 வருகின்றோம். முதலில் இது பற்றிய காஷ்மீர் பிரச்சினை 30 உங்கள் கருத்துக்களை அறிய விரும்பு ! மைக்ரோப்ரொஸஸர் 33 1 கிறோம். அதன் பின்னரே இறுதி 1 ரொயிட்டர் செய்திச் சேவை 35 முடிவொன்று மேற்கொள்ளப்படும். ஸேர் ஐஸ்க் நியூட்டன் 37 மீண்டும் சந்திப்போம். ஜெர்மன் மொழி 40 17 ܐܸܢ ܠ நன்றி சர்வதேசச் சங்கம் 42 எம் ஹாபிஸ் இஸ்ஸதின் வெங்காயம் 44 ஜிப்ஸிக்கள் - 46 25.03.1999 ஆசிரியர் பொது அறிவுப் போட்டி 48 2 - ســـــــــــــــــــخ

Page 3
ஒரு நீதிக் கதை
மரத்தில் அறைந்த ஆணிகள்
சிறிய விடயங்களுக்கெல்லாம்
மற்றவர்களோடு கோபித்துக் கொள்ளும் வழக்கமுடைய சிறுவன் ஒருவன் இருந் தான். கோபம் வந்ததும் மற்றவர்களை மோசமான வார்த்தைகளால் ஏசி அவர் களது மனதை நோவிப்பான். இச்சிறுவ னின் போக்கைக் கண்டு கவலைப்பட்ட அவனது தந்தை அவனைத் திருத்து வதற்கு வழி தேடலானார்.
ஒரு நாள் அச்சிறுவனை அழைத்த தந்தையார் "இனிமேல் உனக்குக் கோபம் வந்து யார் மனத்தையாவது நோவிக்க நேருகின்ற ஒவ்வொரு தடவையும் எமது
தோட்டத்து மரக் கதவில் ஒர் ஆண்uைநீக அறைய வேண்டும்" எனக் கட்டளையிட்
LTi.
என்று புதிய கட்டளையொன்றைப் பிறப்பித் தார் தந்தை.
சிறுவனும் உற்சாகத்தோடு தினமும் ஒவ்வொரு ஆணியாகப் பிடுங்கிக் கொண்டே வந்தான். அவன் இப்போது எவர் மனதையும் தனது வார்த்தைகளால் புண்படுத்துவ்தில்லை.இறுதியில் ஒருநாள் கதவில் அறையப்பட்டிருந்த கடைசி ஆணியும் பிடுங்கப்பட்டது. இதனைச் சந்தோஷத்தோடு தனது தந்தையிடம் போய்த் தெரிவித்தான் சிறுவன்.
தந்தையார் அச்சிறுவனைத் தோட் டத்துக்கு அழைத்துச் சென்று அந்தக் கதவைக் காட்டி'மகனே! கதவில் அறைந் திருந்த ஆணிகளையெல்லாம் பிடுங்கி விமேதாகச் சந்தோஷப்படுகிறாய். ஆனால்
முதலாவது நாளிலேயே பதினேழு அந்தக் கதவைப் பார்! அதில் அறையப் பட்ட ஆணிகள் ஏற்படுத்திய காயங்கள் //அப்படியே இருக்கின்றன. இது போன்று
ஆணிகளைக் கதவில் அறைய வேண்டிய தாயிற்று. எனினும் அடுத்தடுத்த நாட்க ளில் அறையப்படும் ஆணிகளின் எண் ணிக்கை குறையத்தொடங்கியது. கஷ்டப் பட்டு ஆணி அடிப்பதை விட கோபத்தை அடக்கிக் கொள்வது எளிதானது என்று சிறுவன் கருதத் தொடங்கியதே இதற்குக் காரணமாகும். இவ்வாறு அறையப்படும் ஆணிகளின் தொகை படிப்படியாகக் குறைந்து இறுதியில் ஒருநாள் அவன் ஒர் ஆணியைக் கூட அறைய வேண்டிய தேவை ஏற்படாமல் போயிற்று.
"அப்பாஇன்றுநாள் ஒருவர் மனதை யும் நோவிக்கவில்லை" என்று அவன் தந்தையிடம் பெருமிதமாகக் கூறினான்.
"நல்லது. இனிமேல் இவ்வாறு ஒருவரோடும் கோபிக்காமல் இருக்கும் ஒவ்வொரு நாளும் கதவில் அறையப்பட்ட ஆணிகளில் ஒன்றைப் பிடுங்கிவிடு!"
தான் எமது வார்த்தைகளால் நாம் பிறர் மனதில் ஏற்படுத்தும் புண்களும். நாம் பின்னிர் எமது வார்த்தைகளை வாபஸ் வாங்கிக் கொண்டாலும் அவற்றால் மனதில் ஏற்பட்ட காயங்கள் ஒருபோதும் ஆறுவதில்லை. எனவே வீணாகக் கோப முற்று மற்றவர் மனங்களைப் புண்ணாக் காமல் இருப்பதே மேலானது" என்றார். து
மனித மனமானது முகம் பார்க்கும் கண்ணாடியைப் போன்றது. கண்ணாடி ஒரு முறை உடைந்த பிறகு அதனை எவ்வளவுதான் சேர்த்து ஒட்டினாலும் முன்போல ஒழுங்காக முகத்தைக் காட்டாது.
2
 
 

f
5டுமையான சிறுநீரகச் செயலிழப் பினால் பாதிக்கப்படுவோர்களின் எண் னிக்கை இலங்கையில் வருடந்தோறும் அதிகரித்து வருவதாக வைத்திய நிபுணர் கள் கூறுகின்றனர். வைத்திய அறிக்கை களின்படி சிறுநீரகங்கள் செயலிழந்த நிலையில் 1500க்கும் மேற்பட்ட நோயாளி கள் இருப்பதாகவும் இறுதிக் கட்டத்தை எய்திய நோயாளிகள் வருடந்தோறும் சுமார் 100 பேர் வரை கண்டு பிடிக்கப்படுவதாக வும் தெரியவந்துள்ளது. இலங்கையில் அநுராதபுர மாவட்டத்திலேயே ஆகக் கூடு தலான நோயாளிகள் பதிவுசெய்யப்பட்டுள் ளனர். அங்கு 1996ம் ஆண்டில் மாத்திரம் 106 பேர் சிறுநீரகப் பாதிப்புக்களினால் மரணமடைந்துள்ளனர்.
1985ம் ஆண்டு முதல் இதுவரை சுமார் 300 சிறுநீரக மாற்றுச் சிகிச்சைகள் இலங்கையில் செய்யப்பட்டுள்ளன. பெருந் தொகையான நோயாளிகளுக்கு இத்த கைய மாற்றுச் சிகிச்சை செய்ய வேண்டி யுள்ள போதிலும் பெருஞ் செலவு, அரச வைத்தியசாலைகளில் உள்ள வசதிக் குறைவுகள் என்பன காரணமாக அது சாத்தியமற்றதாக உள்ளது. பூரீ ஜயவர்தன புர, கண்டி மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலை என்பவற்றில் மாத்திரமே சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்கான வசதி கள் உள்ளன.
கடுமையான சிறுநீரகச் செயலிழப் புக்கு ஆளாகியுள்ளவர்களை சிறுநீரக மாற்றுச் சிகிச்சை செய்யப்படும் வரை உயிரோடு வைத்திருப்பதற்குத் தேவை யான Haemodialysis இயந்திரங்கள் 25 மட்டுமே முழு நாட்டிலும் இருக்கின்றன.
சிறுநீரகச்
(RENAL FAILURE)
嫩
*;"
ஆகக்குறைந்தது 150 இயந்திரங்களாவது இப்போதைய நிலையில் நம் நாட்டுக்குத் தேவைப்படுவதாக இத்துறையில் முன் னோடியாகப் பணிபுரியும் பேராசிரியர் ரிஸ்வி ஷெரிப் கூறியுள்ளார்.
ஆரம்பத்தில் சிறு சிறு நோய்களைக் கவனிக்காமல் விடுவதன் காரணமாகவே இறுதியில் சிறுநீரகங்கள் செயலிழந்து போகும் நிலை ஏற்படுவதாக வைத்தியர் கள் கூறுகின்றனர்.
சிறுநீரகக் கலன்கோள அழற்சி (Glomerulo nephritis), forfjö, gG
பழற்சி (Pyelonephritis), ஆபத்தான உயர்
3
(e)(559.955th (Malignant hypertension), சிறுநீரகங்களினுள் மெழுகு போன்ற LoTIGLT(36it Liguguh 5606) (Amyloid disease), சிறுநீர்ப்பாதையில் ஏற்படும் அடைப்புக்கள், நீரிழிவு காரணமாக ஏற்ப டும் சிறுநீரகப் பாதிப்பு, சிறுநீரகத்தில் ஏற்படும் கற்கள், சிறுநீரகக் கசநோய் (renal tuberculosis) (ELITGörp (ESTi S606) கள் பிற்காலத்தில் சிறுநீரகங்களின் செயலிழப்புக்குக் காரணமாக அமைய லாம். அளவுக்கதிகமாக வலி நிவாரணி (analgesic) மருந்துகளை உட்கொள்வ தும் இந்த ஆபத்தை ஏற்படுத்த வல்லது என்பதை நாம் கவனித்தல் வேண்டும்.
உடலில் தோன்றும் யூரியா போன்ற கழிவுகளையும் குருதியில் சேருகின்ற தேவையற்றதும் ஆபத்தானதுமான இரசா யனச் சேர்வைகளையும் கழிவாக அகற்று வதே சிறுநீரகங்களின் பிரதான தொழிலா கும். சிறுநீரகங்கள் பாதிக்கப்படும் போது இத்தொழிற்பாடு சரிவர நிகழ்வதில்லை.

Page 4
இதனால் குருதியில் யூரியாவினதும், சல்பேற்று, பொசுபேற்று அயன்களினதும் பீனோல்கள், குவாடினின் சேர்வைகள், அரோமற்றிக் அமைன்கள் போன்ற கடுமை யான நச்சுப் பொருட்களினதும் செறிவுகள் பெருமளவு அதிகரிக்கத் தொடங்கும்.
குருதியின் அமில-மூல சமநிலை பாதிக்கப்படுவதனால் அமிலத்தன்மை அதிகரிக்கும்.நீரும் சோடியம் அயன்களும் இழையங்களில் சேர்வதனால் எடிமா (pedema) என்னும் வீக்க நிலை ஏற்படும். நுரையீரல்களும் இவ்வகை வீக்கத்தினால் பாதிக்கப்படும். குருதியில் பொற்றாசியம் அயன்களின் செறிவு அதிகரிக்கும் ஆபத் தும் ஏற்படலாம். அத்தோடு செங்குருதிக் கலங்களின் உருவாக்கத்துக்குத் தேவை யான சில புரதங்கள் சிறுநீரகங்களினால் உற்பத்தியாக்கப்படாமற் போவதனால் அனிமியா என்னும் குருதிச் சோகை நிலை யும் உருவாகும்.
சிறுநீரகச் செயலிழப்பு (Kidney or Renal failure) மறைவான முறையிலேயே மெல்ல மெல்ல விருத்தியடையும். எனவே ஆரம்ப கட்டத்தில் மிகக் குறைவாகவே அறிகுறிகள் தென்படும்.
ரம்ப கட்டத்தில் மிகையாகச் சிறுநீர் வெளியேறல், இரவில் சிறுநீர் கழித்தல்,உடற் பலவீனம் போன்ற அறிகுறி களே புலனாகும். குருதியமுக்கம் உயர்ந்தி ருக்கும். சிறுநீரைச் சோதித்துப் பார்த்தால் அதில் சிறிதளவு புரதமும், சில செங் குருதிக் கலங்களும் மணியுருவான GLIT(535(65th (granular casts) 35II 600Ti படும். குருதியில் யூரியாவின் அளவு சிறிது அதிகரித்திருக்கும். எனினும் புரதம் குறைந்த உணவை உட்கொள்ளும் போது இவ்வதிகரிப்பு மறைந்துவிடும். இறுதிக் கட்டம் தோன்றும் வரை இவ்வாரம்பநிலை பல வருடங்களுக்குநீடிக்கலாம். நோயாளி யில் போசணை,நீர் உட்கொள்ளும் அளவு, உப்புக்களின் சம நிலை என்பவற்றைச் சரிவரப் பேணுவதன் மூலம் ஆரம்பகட்டத்
தில் அவரது ஆரோக்கியம் கெடாமல் காத்துக் கொள்ளலாம்.
சிறுநீரகச் செயலிழப்பு இறுதிக் கட்டத்தை அடையும்போது உடலின் எல்லாத் தொகுதிகளிலும் பாதிப்புக்கள் ஏற்படும். நரம்புத் தொகுதி பாதிக்கப்படு வதனால் நோயாளி ஆரம்பத்தில் களைப்ப டைந்தவராகவும் எதிலும் அக்கறையற்ற வராகவும் காணப்படுவார். அடிக்கடி தலை வலி ஏற்படும். நோய் நிலை முற்றும் போது அவர் அரைத்தூக்க நிலைக்கு ஆளாவ தோடு இறுதியில் கோமா நிலை ஏற்படும். திடீர்த்தசை இழுப்புக்களும் வலிப்புநிலை யும் தோன்றக் கூடும்.
நாக்கு வரண்டு போவதோடு அதன் மீது அழுக்குக் கபில நிறமான படை
யொன்று உண்டாகும், வாயிலிருந்து
சிறுநீர் வாசம் வீசுவதோடு தொந்தரவான முறையில் விக்கல், குமட்டல், வாந்தி என்பன ஏற்படும். உணவுக் கால்வாயினுள் குருதிப் பெருக்கு ஏற்பட்டு குருதி கலந்த வயிற்றுப்போக்கு ஏற்படலாம். குடலினுள் யூரியாகழிக்கப்பட்டு அதிலிருந்து அரிப்புத் தன்மையான அமோனியா தோன்றுவதனா லேயே மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் உண் டாகின்றன.
சுவாசப் பைகளில் திரவம் சேர்ந்து வீக்கம் ஏற்படுவதனால் மூச்சு விடுவது கஷ்டமாகும். அத்தோடு பற்றீரியா பங்கசு போன்றவை காரணமாக சுவாசத் தொகு திக்குரிய தொற்று நோய்களும் தோன்ற லாம். சுற்றோட்டத் தொகுதியில் ஏற்படும்
பாதிப்புக் காரணமாக குருதியமுக்கம்
அதிகரிக்கும். விழித்திரை வீங்குதல், விழித்திரையில் குருதி பெருகுதல், நாடி கள் தடிப்படைதல் போன்ற மாற்றங்களும் நிகழலாம். சில நோயாளிகள் இதயம் செய லிழப்பதனால் மரணமடையலாம். எனினும் பெம்பான்மையானோரில் சிறுநீரகச் செய லிழப்பே மரணத்துக்குக் காரணமாக அமைகின்றது.

சிறுநீரகச் செயலிழப்பின் இறுதிக் கட்டத்தில் ஏற்படும் சோகையை இரும்புச் சத்து வழங்குவதன் மூலம் குணமாக்க முடியாது.குருதி மாற்றீடு செய்வதே இதற்குரிய ஒரே வழியாக இருக்கின்றது. குருதியில் பொசுபேற்று அயன்கள் அதிக ரிப்பதன் காரணமாக எலும்புகளில் Osteodystrophy என்ற நோய்நிலை ஏற்படும் சாத்தியமும் ஓரளவுக்கு இருக்கின்றது. இதனால் எலும்புகள் பலவீனமடையும்.
கலன்கோளத்தில் சிறுநீர் வடிகட்டப் படும் வீதம் ஒரு நிமிடத்துக்கு 3 ml வரை குறையும் போது நோயாளி தனது இறுதிக் கட்டத்தை அடைந்துவிட்டார் என்று கருத முடியும். இந்நிலையில் அவரது மரணம் உறுதியாகிவிடும். இவ்வாறானவர்களை haemodialysis என்னும் செயல்முறைக்கு உட்படுத்துவதன் மூலம் ஓரளவு ஆரோக்கி யமானவர்களாக மாற்றமுடியும். ஒரு வாரத் துக்கு மூன்று தடவைகள் 10 மணித்தி LITGoth 655th dialysis machine GT60TLIGh செயற்கைச் சிறுநீரக இயந்திரத்தோடு இவர்களது குருதிச் சுற்றோட்டத்தை இணைத்து வைப்பதன் மூலம் இதைச் சாதிக்க முடியும்.
இறுதிக் கட்டத்தை அடைந்த நோயா ளியைக் காப்பதற்குரிய மாற்று வழி சிறு
நீரக மாற்றுச் சிகிச்சையாகும். இதற்கான மாற்றுச் சிறுநீரகத்தை இறந்த ஒருவரின் உடலிலிருந்து அல்லது உயிருடனுள்ள
ஒருவரிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். வழங்கப்படும் சிறுநீரகத்தை உடல் ஏற்க மறுப்பதே இச்செயன் முறையிலுள்ள பெரும் பிரச்சினையாகும். பொருத்தமான வழங்குனர் (donor) ஒருவரைத் தெரிவு செய்வதன் மூலமும், சிறுநீரகத்தைப் பொருத்திய பின்னர் உடலின் நிர்ப்பீடனத் தொகுதியை அடக்கி வைப்பதன் மூலமும் இதனைச் சமாளிக்க முடியும்.
இறந்தவர்களிடமிருந்து பெறப்பட்ட சிறுநீரகங்களுள் பாதிக்கு மேற்பட்டவை
நோயுற்ற சிறுநீரகம்
M மாற்றுச் சிறுநீரகம்
சிறுநீரக மாற்றுச் சிகிச்சை முறை
நான்கு வருடங்கள் வரை தொழிற்படக் கூடும். உயிருள்ள ஒருவரிடமிருந்து பெறப் பட்டவை இதைவிடக் கூடிய காலம்பிழைத் துத் தொழிற்படுவதுண்டு.எனினும் மாற் றுச் சிகிச்சையை அடுத்து நிர்ப்பீடனத் தொகுதியை அடக்குவதற்காக வழங்கப் படும் சிகிச்சைகள் காரணமாகப் பலவித மான புற்றுநோய்கள் உருவாவது அவதா னிக்கப்பட்டுள்ளது.
சிறுநீரகச் செயலிழப்புக்கு வழி கோலக் கூடிய காரணிகள் பற்றிக் கவன மாக இருப்பதன் மூலம் இவ்வாபத்தான நிலைமை ஏற்படாமல் காத்துக் கொள்ள வழியுண்டு.
தினமும் போதியளவுநீர் அருந்துதல், தேவையற்ற மருந்துகளை அதிகளவு உட் கொள்ளாதிருத்தல், streptococcus வகை பற்றீரியாவினால் உண்டாகும் tonslitis போன்ற தொற்றுக்களுக்கு உடனடி சிகிச் சை பெற்றுக் கொள்ளுதல், சல்பா இன மருந்து வில்லைகளை உட்கொண்ட பின்னர் அதிகளவு நீர் அருந்துதல், சிறு நீர்ப்பாதையில் ஏற்படும் உபாதைகளுக்கு உடன் சிகிச்சை பெறுதல், எவ்வித காரண முமின்றி உடலில் குறிப்பாகக் கண்களைச் சூழவும், முழங்கால், கணுக்கால் மூட்டுக்க ளிலும்) எடிமா எனும் வீக்க நிலை தோன் றும் போது வைத்திய உதவியை நாடுதல் போன்றவற்றின் மூலம் மேற்குறித்த ஆபத் தான நிலை ஏற்படாமல் ஓரளவு காத்துக் கொள்ள முடியும். -

Page 5
நாடு முழுவதிலும் வியாபித்து வரு கின்றது.நகரங்களில் போன்றே கிரா மங்களிலும் பாலர் பாடசாலைகள்
பதற்கு முன்பதாகப் பாலர் பாடசாலை
uDráu/ 6lud/añrléans/tó
சிறார்களைப் பாடசாலையில் சேர்ப்
களுக்கு அனுப்பும் வழக்கம் இப்போது
தனியாரினாலும் சமூக ஸ்தாபனங் களாலும் நடாத்தப்பட்டு வருகின் றன. இவற்றைப் பொதுவாக மொண்டஸோரிகள் (Montessor Schools) என அழைப்பர்.
மொண்டலோரி என்பது இத்தாலியில் வாழ்ந்த பெண் கல்வியி யலாளர் ஒருவரின் பெயராகும். Maria Montessori என்ற பெயருடைய இவர் இத்தாலியிலுள்ள Chiaravale என்ற இடத்தில் 1870ம் ஆண்டு பிறந்தார். ரோம் பல்கலைக்கழகத்தில் வைத்தியத் துறை யில் உயர் கல்வி பெற்ற இவர் 1869ல் வைத்தியக் கலாநிதிப்பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். இத்தாலியின் முதலாவது
பெண் வைத்தியர் என்ற பெருமை இவரை
யே சாரும்.
ரோம் பல்கலைக்கழகத்தின் உள நோயியல் பிரிவில் வேலை செய்த காலத் தில் இவர் சிறுவர் கல்வி பற்றி அக்கறை காட்டத் தொடங்கினார். மன வளர்ச்சி குறைந்த பிள்ளைகளுக்கான விசேட
பாடசாலையொன்றை இவர் 1898ம் ஆண்
டில் ஆரம்பித்தார். இப்பிள்ளைகளின் புலன்களையும் தசைத் தொழிற்பாடுகளை யும் மேம்படுத்துவதற்கு அவர் கைக் கொண்ட விசேடமுறைகள் நல்ல பயனை அளித்தன. எனவே தனது கற்பித்தல் முறைகளைச் சாதாரண பிள்ளைகளிலும் பிரயோகித்துப் பார்ப்பதற்கு அவர் முடிவு செய்தார்.
GJITLh [b35flói) (9)(55g5 San Lorenzo
என்ற சேரிப்பகுதியில் சிறார்களுக்
கான நிலையமொன்றை ஆரம்பிக் / கும் பொறுப்பு மாரியாவிடம் ஒப் படைக்கப்பட்டது. 1907ம் ஆண்டில் அவர் 'சிறுவர் இல்லம்' (Casa dei Bambini) என்ற பெயரில் ஒரு கல்வி நிலையத்தை அங்கு நிறு னார். இந்நிலையத்தில் அவர் மற்கொண்ட பணியின் விளை வாக சிறுவர் கல்வி பற்றிய பரந்த அனுபவத்தை அவரால் பெற்றுக் கொள்ள முடிந்தது.
பிள்ளைகளுக்குப் பாடங்களைச் சொல்லிக் கொடுக்கும் வழமையான முறைக்குப் பதிலாக அவர்களைத் தாம் விரும்பிய தொழிற்பாடுகளில் சுயாதீன மாக ஈடுபடச் செய்வதன் மூலம் கற்றல் அனுபவங்களை வழங்குவதே மொண்ட ஸோரி கைக்கொண்ட முறையாகும். இந்தக் கற்பித்தல் முறை ரூஸோ (Jean Jacques Rousseau 1712-1778), Le 5Glu6io (Friedrich Froebel 1782-1852) போன்ற அறிஞர்களால் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டிருந்த போதிலும் அதனை வெற்றிகரமாக அமுல்படுத்திய பெருமை மொண்டஸோரியையே சாரும்.
தனது முறை பற்றி ஆசிரியர்களுக் குப்பயிற்சி வழங்குவதற்காக அவர் தேசிய மொண்டஸோரி பாடநெறியொன்றை1909 இல் ஆரம்பித்தார். சர்வதேச நெறியொன்று 1913 இல் ஆரம்பிக்கப்பட்டது. இதில் கலந்து பயிற்சி பெறுவதற்காக பிரிட்டன், ஐக்கிய அமெரிக்கா, ஸ்பெயின், நெதர் லாந்து போன்ற பல நாடுகளிலிருந்து ஆசி ரியப் பயிலுனர்கள் வந்து சேர்ந்தனர். அவரிடம் நேரடியாகப் பயிற்சிபெற்றவர்கள் நம் நாட்டிலும் இருந்தனர்.
 
 
 
 
 
 

அத்தோடுநின்றுவிடாது பல பயிற்சி நிறுவனங்களையும் கல்லூரிகளையும் பிற நாடுகளில் அவரே நேரில் சென்று ஆரம் பித்து வைத்தார். இவ்வாறு 1917 இல் ஸ்பெயினிலுள்ள பாஸிலோனா நகரிலும் 1919 இல் லண்டனிலும் பயிற்சி நிறுவனங் கள் ஸ்தாபிக்கப்பட்டன. இத்தாலிய அரசு 1922ம் ஆண்டு மொண்டஸோரியை அரசாங்கப் பாடசாலைப் பரிசோதகராக நியமனம் செய்தது.
எனினும் பிற்காலத்தில் உருவான முஸோலினியின் பாஸிஸ் அரசுக்கு மொண்டஸோரியின் கோட்பாடுகள் பிடிக் கவில்லை. சிறார்களைத் தாம் விரும்பிய வாறு சுயாதீனமாக இயங்க அனுமதிப்பதை விரும்பாத அரசு1936இல் மொண்டஸோரி இயக்கத்தைத் தடைசெய்தது. இதற்கு முன்னரே (1935ல்) ஜெர்மனியில் ஹிட்லரும் இவ்வியக்கத்துக்குத் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
மொண்டஸோரி எழுதிய The
Montessori Method 6T6örp (ST6air. ஆங்கில மொழிபெயர்ப்பு 1912 இல் வெளிவந்தது. இதன் விளைவாக இங்கி லாந்திலும் அமெரிக்காவிலும் அவரது கல்விமுறை நன்கு பிரபல்யம் அடைந்தது. 96) if 6Tugglu Advanced Montessori Method என்ற நூல் 1917 இல் வெளி வந்தது.
கற்றலின் போது பிள்ளைக்கு வெகுமதிகளோ தண்டனைகளோ வழங் கப்படக் கூடாது என்ற மொண்ட ஸோரியின் கோட்பாட்டைப்பற்றிய கருத்து வேறுபாடுகள் பரவலாகக் காணப்படு கின்றன. எனினும் பாலர் கல்விக்கு உயிரூட்டியவர் என்ற வகையில் மாரியா மொண்டஸோரியின் பங்களிப்புமகத்தான தாகும். இன்று உலகெங்கும் மக்களால் நினைவுகூரப்படும் ஒன்றாக மொண்ட ஸோரியின் பெயர் திகழ்கின்றது.
LOITrfuLJIT GLOT 6T (36muITrf 1952uh ஆண்டு தனது 82வது வயதில் காலமா னார்.
எது இழியது?
டயோஜினிஸ் என்ற கிரேக்க தத்துவஞானி 'சூப்' தயாரிப்பதற்காகச் சிறிது பயற்றம் பருப்பைக் கழுவிக் கொண்டிருந்தார். இதனை அரிஸ்டிப்பஸ் என்ற தத்துவஞானி கண்டு விட்டார். அரச சபையில் அரசருக்குத் துதி பாடுவதன் மூலம் அவரது அனுக்கிரகத்தைப் பெற்று வந்த அரிஸ்டிப்பஸ், சொகுசான உணவுகளை உண்டு ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.
டயோஜினிஸை இடித்துரைக்க நினைத்த அரிஸ்டிப்பஸ் "என்னைப் போல் நீரும் அரசரைப் புகழ்ந்து பேசப் பழகியிருந்தால் இப்படிப் பருப்பு போன்ற இழிந்த உணவுகளை உண்டு வாழ வேண்டி நேர்ந்திருக்காது” என்றார்.
அதைக் கேட்ட டயோஜினிஸ் “என்னைப் போல் நீரும் பருப்பு போன்ற எளிய உணவுகளை உண்டு பழகியிருந்தால் இப்படி அரசருக்குத் துதிபாடுவது போன்ற இழிந்த வேலைகளைச் செய்ய வேண்டி ஏற்பட்டிருக்காது’ என்றார் அமைதியாக,
|
மனிதனும் குரங்கும் சமூகத்தில் ஒருவருடைய அந்தஸ்து படிப்படியாக அதிகரிக்கும் போது அவருடைய நிலைமை மரத்தில் ஏறுகின்ற ஒரு குரங்கின் நிலைக்கு ஒப்பாகிவிடுகின்றது. குரங்கு எவ்வளவு உயரத்துக்கு மரத்தின் மேல் ஏறுகின்றதோ அந்தளவுக்கு அதன் பின்புறம் பார்ப்போருக்குத் தெரியத் தொடங்குகிறது.
7

Page 6
உலகிலுள்ள மிகப்பெரியதும் சனத்
தொகை கூடியதுமான நாடுகளுள் பிரேஸி லும் ஒன்றாகும். லத்தீன் அமெரிக்க நாடு
களில் மிகப் பெரியதான இது தென் அமெரிக்கக் கண்டத்தின் நிலப்பரப்பில் பாதியளவுக்கு - வடக்கே பூமத்திய கோட் டிலிருந்து தெற்கே மகரக்கோடு வரை - வியாபித்திருக்கின்றது.
சுமார் 10,000 வருடங்களுக்கு முன்னரே ஆதி அமெரிக்கக் குடியினர் பிரேஸிலில் குடியேறி இருப்பார்கள் என நம்பப்படுகின்றது. எனினும் ஐரோப்பியர் கள் அங்கு சென்றது கி.பி.1500ம் ஆண்டி 6UITG5lih. gjigj 9,6ổoTty 6ão Pedro Alvares Cabral என்ற போர்த்துக்கேயர் பிரேஸிலில் காலடி வைத்தார். அவரே இந்த நாட்டில் போர்த்துக்கேயர்களின் அதிகாரத்தை ஏற்படுத்தினார். இதனையடுத்து வந்த மூன்று நூற்றாண்டுகளிலும் போர்த்துக் கேயர்கள் மாத்திரமே அங்கு குடியேற அனுமதிக்கப்பட்டனர். இதனால் பிரேஸில் போர்த்துக்கேயக் குடியேற்ற நாடாக
மாறியது. லத்தீன் அமெரிக்க நாடுகளுள்
பிரேஸிலில் மாத்திரமே போர்த்துக்கேய
மொழி தேசிய மொழியாக இருக்கின்றது. ஏனையவை அனைத்தும் ஸ்பானிய மொழி
பேசும் நாடுகளாகும்.
போர்த்துக்கேய வர்த்தகர்கள் இந் நாட்டிலிருந்து சிவப்பு நிறச் சாயமொன்
றைத் தருகின்ற வைரமான மரமொன்றின் கட்டைகளை ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்தனர். இந்தச் சாயம் லத்தீன் மொழி
யில் brasile என அழைக்கப்பட்டது. எனவே இந்த மரத்தை brazilwood என அவர்கள் அழைக்கலாயினர். இறுதியில் தமது குடியேற்ற நாட்டுக்கு Brazil என்ற் பெயரைப் போர்த்துக்கேயர்கள் இட்டனர்.
போர்த்துக்கேயரின் வருகைக்கு முன்னர் பிரேஸிலின் பல பகுதிகளில் அமெரிக்க ஆதிக் குடியினரே வசித்து வந்தனர்.இவர்கள் பல கோத்திரங்களாகப் பிரிந்து வாழ்ந்தனர். 1500 இன் பின் பெருமளவு போர்த்துக்கேய நாட்டினர் அங்கு வந்து குடியேறலாயினர். அவர்கள் தமது விவசாய நிலங்களில் வேலை செய் வதற்காக ஆபிரிக்காவிலிருந்து அடிமை களை இறக்குமதி செய்யத் தொடங்கினர். 16ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் மேற்கு ஆபிரிக்கா, கொங்கோ, அங்கோலா, மொஸாம்பிக் போன்ற பகுதிகளிலிருந்து கறுப்பு இன மக்கள் இவ்வாறு அடிமை களாக அங்குகொண்டு செல்லப்பட்டனர். எனவே ஆதி அமெரிக்கர் போர்த்துக் கேயர், ஆபிரிக்கர் ஆகிய மூன்று பிரிவினர தும் வம்சாவளியினரே இன்று பிரேஸிலின் சனத்தொகையை ஆக்கியுள்ளனர். இவர் களுள் பெரும்பாலானோர் கலப்பு இனத்த வராக இருக்கின்றனர்.
பிரேஸிலின் உத்தியோக மொழி யாகப் போர்த்துக்கேய மொழியே இருக் கின்றது. 1938 முதல் பாடசாலைகளில் கட்டாய போதனா மொழியாகவும் இது திகழ்கிறது. எனினும் நாட்டின் தென் பகுதியில் ஜெர்மன் மற்றும் இத்தாலிய மொழிகளைப் பேசுவோரும் உள்ளனர்.
 
 
 

கல்வி கற்ற பிரேஸிலியர்கள் தமது இரண் டாம் மொழியாக ஆங்கிலத்தை அல்லது பிரெஞ்சு மொழியைப் பயன்படுத்துகின் றனர். அத்தோடு நூறுக்கும் அதிகமான சுதேச är: இந்த நாட்டில் உள் 6Т60T (96) film)6TTupi, Gé, Arawak, Carib என்பன பிரதானமானவையாகும்.
சனத்தொகையில் 90 சதவீதத்தினர் கத்தோலிக்க மதத்தைச் சார்ந்தவர்கள். சுமார் 7 சதவீதத்தினர் புரட்டஸ்தாந்து மதத்தினராவர். அண்மைக் காலத்தில் பெந்தகோஸ்தல் (PenteCostal) குழுக்க ளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள் ளது. இவை தவிர பாரம்பரிய நம்பிக்கை களும் சமயங்களும் பல்வேறு பிரிவினரால் அனுஷ்டிக்கப்படுகின்றன.
பிரேஸிலின் வட பகுதியில் ஈரலிப் பான வெப்ப வலயக் காலநிலை காணப்படு கின்றது. சராசரி வெப்பநிலை 25°C ஆகவும் சராசரி வருடாந்த மழை வீழ்ச்சி 2200 mm ஆகவும் இருக்கின்றன. அங்கு வறட்சிநிலை ஏற்படுவதே இல்லை. மத்திய பிரேஸிலில் சவான்னாக் காலநிலை காணப்படுகின்றது. இங்கு சராசரி வரு டாந்த மழை வீழ்ச்சி1600 mm ஆகும். வட கிழக்குப் பகுதியில் மழை அரிதாகவே பெய்கின்றது. சில சந்தர்ப்பங்களில் மழையே இல்லாத கடும் வறட்சி நிலையும் ஏற்படுகின்றது.
அமெரிக்கக் கண்டத்திலுள்ள மிக நீண்ட நதியான அமேஸன் பிரேஸிலினுT டாகப் பாய்கின்றது. நைல்நதிக்கு அடுத்த தாக உலகின் மிக நீண்ட நதி இதுவாகும். இதன் பெரும்பகுதியினூடாகக் கப்பல் போக்குவரத்து நடைபெறுகின்றது. அமே ஸன் நதியைச் சூழவுள்ள பிரதேசத்தில் தான் உலகின் மிகப் பெரிய மழைக் காடு காணப்படுகின்றது.
பிரேஸிலில் பெருந்தொகையான வன விலங்கு இனங்கள் வாழ்கின்றன. தென்னமெரிக்காவில் காணப்படுகின்ற
750 முலையூட்டி இனங்களுள் 394 இனங்கள் பிரேஸிலில் உண்டு. மொத்தம் 1635 பறவை இனங்களும் 502 அம்பீபியன் இனங்களும் அங்கு இருப்பதாக மதிப் பிடப்பட்டுள்ளது. பல்லிகள், ஒணான்கள், பாம்புகள், ஆமைகள், முதலைகள் போன்ற ரெப்தீலியாக்களின் பெருந்தொகையான இனங்கள் அங்கு அங்கு வாழ்கின்றன. அத்தோடு 1500 வகையான நன்னீர் மீன் இனங்களும் 70,000 பூச்சி இனங்களும் பிரேஸிலில் உண்டு. அங்குள்ள வன விலங்குகள் பற்றிய ஆய்வுகள் இன்னும் பூர்த்தியடையவில்லை. எனவே மேற்குறிப் பிட்ட எண்ணிக்கைகள் ஒரு குறை மதிப் பீடாகவே இருக்கும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
பிரேஸில் நாட்டிலுள்ள மிகப் பெரிய 59 Tih sur(86). T L636on (São Paulo) என்பதாகும். முன்னைய தலைநகரான fIGLIT 5 GlegG60TuSEJIT (Rio de Janeiro) இரண்டாவது- பெரியநகராகத் திகழ்கின் றது. 1960ம் ஆண்டில் பிரஸிலியா என்ற புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நகரம்நாட்டின் தலைநகராகப் பிரகடனப்படுத்தப்பட்டது. இது நாட்டின் உட்பகுதியில் அமைந்துள் ளது.
1822ம் ஆண்டு பிரேஸில் சுதந்திரம்
அடைந்தது. 1889ம் ஆண்டு அது ஒரு குடியரசாக மாறியது. தற்போதைய தேசி யக் கொடியில் பச்சைநிறப்பின்னணியின் மீது மஞ்சள் நிறச் சாய்சதுரமொன்றும் அதுனுள்ளே இளநீல நிற வட்டமொன்றும் உண்டு. இந்த வட்டத்தினுள் பிரேஸில் குடியரசாக மாறிய தினத்தன்று இரவில் ரியோ த ஜனெயிரோ நகரின் மீதிருந்த வானத்தின் தோற்றம் சித்தரிக்கப்பட்டுள் ளது. அதற்குக் குறுக்காக தேசத்தின் இலட்சிய வாக்கியமான Ordem e Progresso (ஒழுங்கும் முன்னேற்றமும்) என்பது பொறிக்கப்பட்டுள்ளது.

Page 7
பிரேஸிலின் நிலப்பரப்பு 8,547,404 சதுர km ஆகும். இது இலங்கையின் நிலப் பரப்பின் 130 மடங்காகும்.1997ம் ஆண்டின் கணிப்பீட்டின் படி சனத்தொகை 167660, 687 ஆகவும் சனத்தொகை அடர்த்திசதுர kmக்கு 20 பேர்களாகவும் இருந்தது. இலங்கையின் சனத்தொகை அடர்த்தி சதுர kmக்கு 270 பேர்கள்) 。 பிரேஸிலின் மொத்தத் தேசிய உற்பத்தி 748.9 பில்லியன் டொலர்களா கும். சோயா, கோப்பி, புகையிலை, கரும்பு, இரும்புத் தாதுக்கள், வெள்ளியம், பொன், பொசுபேற்றுக்கள் என்பன பிரதான உற்பத்திப்பொருட்களாகத் திகழ்கின்றன. வாகனங்கள், வாகன உதிரிப்பாகங்கள், கோப்பி, சீனி என்பன முக்கிய ஏற்றுமதிப் பொருட்களாகும். பிரேஸிலின் நாணயம் Cruzeiro எனப்படுகின்றது.
நாட்டின் உத்தியோகப் பெயர் பிரே ஸில் கூட்டாட்சிக் குடியரசு (Federative Republic of Brazil) 6TGöTuğ/Toğub.p5ITü”ış60T : தும் அரசாங்கத்தினதும் தலைவராக ஜனாதிபதி இருக்கின்றார். இவர் பொது வாக்கெடுப்பு மூலம் 4 வருடத் தவணைக் குத் தெரிவு செய்யப்படுகின்றார்.
நாட்டின் ஆட்சி மன்றம் இரு சபை களைக் கொண்டுள்ளது. அவற்றுள் 517 உறுப்பினர்களைக் கொண்ட பிரதிநிதிகள் சபைக்கு 4 வருடங்களுக்கு ஒரு தடவை
தேர்தல் நடைபெறுகின்றது. 16 வயதுக்கு
மேற்பட்ட அனைவருக்கும் வாக்குரிமை உண்டு இரண்டாவது சபையான செனட் சபையில் 81உறுப்பினர்கள் இருப்பர்.இவர் களது பதவிக்காலம் 8 வருடங்களாகும்.
சப்தம் போடாதீர்கள்
மழை கடுமையாகப் பெய்துகொண்டிருந்தது. அந்த நெடுஞ்சான்லயின் ஒரத்தில் ஒரு கார் நின்றிருந்தது. ஒரு பெண் நனைந்தவாறு தனியே அக்காரின் பங்சரான டயரொன்றை மாற்றுவதற்கு
முயற்சித்துக் கொண்டிருந்தாள்.
அந்த வழியாகத் தன் காரைச் செலுத்திக் கொண்டு வந்த ஒரு மனிதன் இந்தக் காட்சியைக்
கண்டு தனது வாகனத்தைச் சற்று நிறுத்தினான். அந்தப் பெண்ணின் பரிதாப நிலையைக் கண்டு
அனுதாபப்பட்ட அவன் தனது காரை விட்டிறங்கி அவளது காரருகில் சென்றான்.
அவளைப் போய்க் காரினுள் அமர்ந்துகொள்ளுமாறு கூறிவிட்டு அவன் நனைந்தபடியே
பழுதடைந்த டயரை மாற்றி முடித்தான். தனது நல்ல செயலை நினைத்து மகிழ்ந்தபடியே அப்பெண்ணின்
அருகில் சென்ற அவன் உரத்த குரலில் "அம்மணி எல்லாம் சரியாகச் செய்துவிட்டேன்’ என்று கூறிச்
சிரித்தான்.
ஐயோ! சப்தம் போடாதீர்கள் பின் சீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் என் கணவர் எழும்பி
விடுவார்’ என்று அமைதியாகக் கூறினாள் அந்தப் பெண் சாரதி.
என்ன நடந்ததோ!
அமெரிக்காவில் உப ஜனாதிபதிப் பதவியின் பிரபல்யமற்ற தன்மையைப் பற்றிச் சுட்டிக் காட்டு
வதற்குக் கூறப்படும் கதை இது
அமெரிக்க நகரொன்றில் தனியாக வசித்துக் கொண்டிருந்த முதியவர் ஒருவரைச் சந்திப்பதற்கு அவரது தூரத்து உறவினர் ஒருவர் வந்திருந்தார்.
"உங்களுக்கு இரண்டு ஆண் மக்கள் இருந்தார்களே! அவர்கள் இருவரும் எங்கே?” என்று
கேட்டார் வந்திருந்த உறவினர்.
“அதையேன் கேட்கிறீர்கள்! மூத்தவன் தனியாக விவசாயம் செய்யப் போவதாகக் கூறிவிட்டுத் தெற்கு நோக்கிப் போனான். இளையவன் போன தடவை தேர்தலில் நின்று வெற்றிபெற்று நாட்டின் உப ஜன்ாதிபதியானான். இருவருக்குமே என்ன நடந்தது என்று இதுவரை ஒரு தகவலும் இல்லை” என்று
பெருமூச்சு விட்டாராம் முதியவர்.
 

மேசையொன்றின் மீது பாரம்
குறைந்த செலுலொயிட் பந்து ஒன்றினை Rackets எனப்படும் மட்டைகளினால் அடித்து ஆடப்படும் விளையாட்டேTable
Tennis எனப்படும் மேசைப்பந்து விளை
யாட்டாகும்.
(TABLE TENNIS)
டேபில் டென்னிஸ் மேசை274m (9
அடி) நீளமும் 152 m (5 அடி) அகலமும் கொண்டது. மேசையின் மேற்தளம்நிலத்தி
லிருந்து 76.2 cm (2% அடி) உயரத்தில்
இருக்கும். 1524 cm (6 அங்குலம்) உயர முள்ள வலையொன்றினால் விளையாட்
டுத் தளம் இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட் டுள்ளது. மேற்பரப்பின் நடுவே நீளவாக்கில்
ஆட்டத்தின் போது பயன்படுத்தப்படு கின்றது. மேசையின் மேல்தளம் % அங்கு லத் தடிப்புள்ள 5 படைகள் கொண்ட ஒட்டுப்பலகையால் ஆக்கப்பட்டிருக்கும். ஒர் அடி (30.1 Cm) உயரத்திலிருந்து நியம டேபில் டென்னிஸ் பந்தொன்று விழச் செய்யப்பட்டால் அது 8 முதல் 9 அங்குல உயரத்துக்கு மேலெழும்பக் கூடியதாக மேசையின் மேற்பரப்பு இருக்க வேண்டும்.
டேபில் டென்னிஸ் பந்துவெண்ணிற செலுலொயிட்டினால் செய்யப்படுகின்றது. அதன் விட்டம் 3.81 cm (1.5 அங்குலம்) ஆகவும் நிறை 2.5 g ஆகவும் இருக்கும். பந்தை அடிப்பதற்கான racket என்னும் மட்டை, மரத்தால் செய்யப்படுகின்றது.
வரையப்பட்ட வெண்கோடு இரட்டை
பருக்கள் போன்ற சிறிய நீட்சிகளைக்
கொண்டிருக்கலாம் அல்லது அழுத்தமாக இருக்கலாம்.
சாதாரண டென்னிஸ் ஆட்டத்தில் போன்று டேபில் டென்னிஸிலும் பந்தை வலைக்கு மேலாக இரு புறங்களுக்கும் மாறி மாறி இரு ஆட்டக்காரர்களும் அடித் தல் வேண்டும். ஒருவர் அடித்த பந்து மேசையின் மறு பாதியில் பட்டு எழும்பிய
பின்னரே மற்றவர் அடித்தல் வேண்டும்.
ஒருவர் பந்தைத் தவறவிட்டால் அல்லது அவர் அடித்த பந்து வலையில்
பட்டால் அல்லது மேசையில் விழாது அப்பால் சென்றுவிட்டால் எதிர் ஆட்டக் காரருக்குப் புள்ளி வழங்கப்படும். ஆட்ட ஆரம்பத்திலும் ஒவ்வொரு புள்ளி பெறுத
லின் பின்பும் முதலில் பந்தைப்பரிமாறுபவர் உள்ளங்கையில் அதனை வைத்துச் சிறிது
மேலே போட்டபின் அது கீழ்நோக்கி வரும் போது அடித்தல் வேண்டும். இவ்வாறு பரிமாறும் (service) போது மேசையில் பரிமாறுபவரின் பக்கத்தில் பந்து பட்ட பின்னரே வலைக்கு மேலால் அடுத்த பக்கத்துக்குச் செல்லல் வேண்டும். 5 புள்ளிகள் பெறப்படும் வரை ஒருவர் தொடர்ந்து பந்தைப் பரிமாறுவார். பின்னர்
அடுத்த 5 புள்ளிகள் வரை எதிர் ஆட்டக் காரர் பந்து பரிமாறத் தொடங்குவார்.
அது முட்டை வடிவமாக இருப்பதோடு
அதன் மேற்பரப்பு மென் இறப்பரினால்
மூடப்பட்டிருக்கும். இந்த இறப்பர் மேற்பரப்பு
11
முதலில் 21 புள்ளிகளைப் பெறுபவரே ஆட்டத்தில் வெற்றிபெற்றவராகக் கருதப் படுவார். இருவரும் 20 புள்ளிகள் வீதம் பெற்றுச்சரிசமநிலையொன்று ஏற்பட்டால்

Page 8
ஒருவர் மற்றவரை விட 2 புள்ளிகள் கூடு தலாக எடுக்கும் வரை ஆட்டம் தொடரும். அவ்வாறு தொடர்ந்து ஆடும்போது ஒவ்வொரு புள்ளிக்கும் பின்னர் பரிமாறும் சந்தர்ப்பம் மற்றவருக்கு வழங்கப்பட வேண்டும். ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவி லும் ஆட்டக்காரர்கள் மேசையின் மறு பக்கத்துக்கு இடமாறிக் கொள்ள வேண் டும். இதேபோன்று இறுதி ஆட்டத்தின் போது 10வது புள்ளி பெறப்பட்ட பின்னர் இடமாற்றம் நடைபெறுதல் வேண்டும்.
பந்தைத் திருப்பி அடித்த பின் வலை யில் பட்டு மறு பக்கத்துக்குச் செல்லும் அடிகளும் மேசையின் விளிம்பில் படாது மேசையின் பக்கத்திலே பந்து பட்டதாக
நடுவர் கருதினால் அடித்தவர் அந்தப்
புள்ளியை இழந்து விடுவார்.
பக்கத்துக்கு இரண்டு பேர் வீதம் நான்கு பேர் ஆடும் ஆட்டம் இரட்டை ஆட்டம் (Doubles) எனப்படும். ஒவ்வொரு பக்கத்திலும் ஆண்-பெண் கலந்து ஆடினால் அது கலப்பு இரட்டை ஆட்டம் (Mixed Doubles) 6T60TLIGib. gryl'60L ஆட்டங்களின் போது ஆடுகளத்தின் வலப் புறத்தில் உள்ளவர்மறுபக்க வலப்புறத்தில் உள்ளவருக்குப் பந்தைப் பரிமாற வேண் டும். ஒவ்வொரு பங்காளியும் ஒன்று விட்டு ஒன்றாகவே பந்தை அடிக்கவோ திருப்பி அனுப்பவோ வேண்டும்.
ஒர் ஆட்டக்காரருக்கு ஐந்து புள்ளி கள் வரை பந்து பரிமாறப்படும். பின்னர் எதிர்த்தரப்பு ஆட்டக்காரர்கள் இடம்மாறிக் கொள்வர். அதனையடுத்து 5 புள்ளிகள் பெறப்படும் வரை முன்னையவர் பந்தைப் பரிமாறுவார். AB, XY என இரு சோடி ஆட்டக்காரர்கள் விளையாடும்போது பந்து பரிமாறப்படும் ஒழுங்குAX,X->B, B-Y YPA என்ற முறையில் அமைந்திருக்கும்.
இவ்விளையாட்டு இங்கிலாந்திலே யே ஆரம்பமாகியது. ஆரம்ப காலத்தில்
12
சாப்பாட்டறை மேசைகளின் மீது இறப்பரி னால் அல்லது தக்கை (cork) யினால் ஆக்கப்பட்ட பந்துகளைக் கொண்டே இது விளையாடப்பட்டது.1900ம் ஆண்டளவில் செலுலொயிட்டினாலான பந்து அறிமுகப் படுத்தப்பட்ட பின்னர் இவ்விளையாட்டு இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் நன்கு பிரபல்யம் அடைந்தது. டேபில் டென்னிஸ் ஆட்டத்துக்கான உபகரணத் தொகுதிகள் Gossimar, Whiff-Whaff, Ping-Pong முதலிய பெயர்களில் பிரபல்யமடைந்தன. Ping-Pong என்பதே முதலில் உரிமைப் பதிவு (patent) செய்யப்பட்ட பெயராகும். முதலாம் உலகப் போரின் பின்னரே டேபில் டென்னிஸ் என்ற பெயர் உபயோகத்துக்கு வந்தது.
டேபில் டென்னிஸ் விளையாட்டை சர்வதேச ரீதியில் பிரபல்யப்படுத்தும் நோக்கில் 1926 ஆம் ஆண்டு பெர்லின் நகரில் கூட்டமொன்று நடத்தப்பட்டது. இதில் ஜெர்மனி, அவுஸ்திரியா, ஹங்கேரி, இங்கிலாந்து, வேல்ஸ், சுவீடன், செகோஸ் லோவேகியா ஆகிய நாடுகளின் பிரதிநிதி கள் கலந்துகொண்டனர்.இக் கூட்டத்தின் போதுதான் சர்வதேச டேபில் டென்னிஸ் gth(GLn6ITGOTih (International Table Tennis Federation-ITTF) shog, TSld, scrut'll gil. 140 நாடுகள் அங்கத்துவம் வகிக்கும் இச்சம்மேளனம் இரு வருடங்களுக்கு ஒரு தடவை உலக சம்பியன்சிப் போட்டிகளை நடத்துகின்றது.
1960கள் முதல் 1980களின் ஆரம்பப் பகுதிவரை சீனவீரர்களே இந்தச் சம்பியன் போட்டிகளில் முன்னணியில் நின்றனர். இடைக் காலங்களில் ஜப்பான், சுவீடன், ஹங்கேரி ஆகிய நாடுகள் வெற்றி பெற்றி ருக்கின்றன. 1980 களின் பிற்பகுதியில் ஒலிம்பிக் போட்டிகளில் டேபில் டென்னிஸ் இடம்பெறத் தொடங்கிய பின்னர் தென் கொரியாவும் சுவீடனும் சீனாவின் ஆதிக் கத்தை முறியடிப்பதில் வெற்றி பெற்றன.
 

*ళ్ల மஹெலன் O
"முன்னோடிகள்
பேர்டினன்ற் LnQg606öT' (Ferdi
nand Magellan) 6TsiTu6).Ji g(5 (BLITig, துக்கேய மாலுமி ஆவார். 1480இல் பிறந்த இவர் போர்த்துக்கல், நாட்டுக் கடற் படை யில் சேர்ந்து மத்தியதரைக் கடலிலும் இந்து சமுத்திரத்திலும் பல வருடங்கள் கப்பலோட்டியாக வேலை செய்திருந்தார். மொரக்கோ நாட்டு சுல்தானிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட செல்வங்களில் ஒரு பகுதியைக் கவர்ந்து கொண்டார் எனப்பழிசுமத்தப்பட்ட காரணத்தால் இவர் 1514 இல் கடற்படையிலிருந்து ஒய்வு பெற்றார். பின்னர் புவியின் அமைப்பு, கடற் பாதைகள் என்பன பற்றிய ஆய்வில் மஜெலன் ஈடுபடலானார்.
அக்காலத்தில் ஐரோப்பாவுக்குக் கொண்டுவரப்பட்ட வாசனைத் திரவியங் களில் பெரும்பகுதி கிழக்காசியாவில் உள்ள மொலக்கா (Molucca) தீவுகளி லிருந்தே பெறப்பட்டன. இத்தீவுகள் இப் போது இந்துனேஷியாவின் ஒரு பகுதியாக இருக்கின்றன. ஐரோப்பியர்கள் கிழக்குத்
திசையில் ஆபிரிக்காவைச் சுற்றிச் சென்று
இந்து சமுத்திரத்தைக் கடந்தே மொலக் காத் தீவுகளை அடைந்தனர். இதற்குப் பதிலாகத் தென் மேற்குத் திசையில் பிரயாணம் செய்து தென்னமெரிக்காவின்
“இதனை மகெலன் என உச்சரிப்போ ரும் உள்ளனர். எனினும் போர்த்துக்கேய மொழி யில் இது மஜெலன் என்றே உச்சரிக்கப் படுகின்றது.
13
தென் முனையைக் கடந்து செல்வதன் மூலம் மொலக்காத்தீவுகளை அடையலாம் என மஜெலன் கருதினார். இவ்வாறு செல் லும் போது அமெரிக்காவுக்கும் ஆசியா வுக்கும் இடையிலுள்ள சமுத்திரத்தைக் கடக்க வேண்டியிருக்கும் என்பதை அவர் அறிந்திருந்தார். இச்சமுத்திரத்தை ஐரோப் பியர்கள் முதன் முதலாக 1513 இல் தான் கண்டிருந்தனர்.
மேற்குறித்த புதிய கடற்பாதையை ஆய்வதற்காக மஜெலன் முன்வைத்த திட்டத்தைப் போர்த்துக்கேய அரசர் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். எனினும் ஸ்பா னிய அரசரான ஐந்தாவதுசார்ள்ஸ் இத்திட் டத்தை ஆதரித்து உதவ முன்வந்தார். மொலக்காத் தீவுகளில் ஸ்பானிய ஆதிக் கத்தை நிலைநாட்டுவதே அவரது நோக்க மாக இருந்தது.
1519 செப்டம்பர் 20ம் திகதிமஜெலன் தனது ஆய்வுப் பிரயாணத்தை ஸ்பெயி னிலுள்ள Sanlucar என்ற துறைமுகத் 66ôl(5gl gyth GğgöITri. Trinidad, San Antonio, Victoria, Concepcion, Santiago என்ற பெயர்களுடைய ஐந்து கப்பல் களில் மொத்தம் 265 பேர் இப்பிர யாணத்தில் பங்குபற்றினர். முதலில் வட அத்திலாந்திக் சமுத்திரத்திலுள்ள கனெரி (Canary) தீவுகளில் தரையிறங்கிய மஜெலன் Cape Verde தீவுகளைக் கடந்து பிரேஸிலின் கரையை அடைந்தார். தென் அமெரிக்காவின் கிழக்குக் கரையோரம் நெடுகே பிரயாணம் செய்த அவரது கப்பல்கள் Patagonia துறைமுகப் பகுதி யில் நங்கூரமிட்டு கடுங்குளிர்காலத்தைக் கழித்தன. s
இதற்குள் மஜெலனுக்குப் பல பிரச்சி னைகள் ஏற்படலாயின. கப்பல்களில் சென்ற ஸ்பானிய மாலுமிகள் போர்த்துக் கேயரான மஜெலனின் தலைமையை விரும்பவில்லை. எனவே அவர்கள் அடிக் கடிகலகம் செய்யலாயினர். மீண்டும் பிரயா

Page 9
ணத்தை ஆரம்பித்து முன்னே
றிய போது Santiago என்ற
கப்பல் கடலில் மூழ்கி விட்டது.1 தென்னமெரிக்காவின் முனையி லுள்ள அதுவரை அறியப்படாத நீரிணையினூடாகக் கண்டத் தின் மறுபுறத்தை அடைய மஜெ லன் எத்தனித்த போது San Antonio என்ற கப்பலில் சென்
வர்கள் அவரது ஆணைக்குக் கீழ்ப்படிய மறுத்து வேறு திசை யில் சென்றுவிட்டனர். அவர்களுக்கு என்ன நடந்தது என்பது இதுவரை தெரிய வரவில்லை.
பிற்காலத்தில் மஜெலனின் நீரிணை என அழைக்கப்பட்ட அந்த நீரிணையினூ டாக 36 நாட்கள் பிரயாணம் செய்த பின் 1520 நவம்பர் 28ம் திகதி மஜெலன் குழுவி னர் ஒரு பெரிய சமுத்திரத்தை அடைந் தனர். அச்சமுத்திரம் மிக அமைதியான தாகக் காணப்பட்டதால் மஜெலன் அதற்கு பசிபிக் (Pacific) எனப் பெயரிட்டார். நீரோட்டங்களினதும் தென் கிழக்கிலி ருந்து வீசிய வர்த்தகக் காற்றினதும் துணையோடு பிரயாணம் செய்த மூன்று கப்பல்களும் 1521 மார்ச் 6ம் திகதி பசிபிக் கின் மரியானா பகுதியிலுள்ள குவாம் தீவை அடைந்தன. இது மொலக்காத் தீவு களுக்கு வடக்கே மிகத் தூரத்தில் இருந் தது.
சிலநாட்கள் குவாமில் தங்கியிருந்த பின் மஜெலன் பிலிப்பைன்ஸை நோக்கிப் பிரயாணத்தை ஆரம்பித்தார். பிலிப்பைன் ஸை அடைந்த அவர், ஸ்பானிய மன்னரின் பெயரில் அத்தீவுகளைக் கைப்பற்றத் தொடங்கினார். எனினும் துரதிர்ஷ்டவச மாக 1521 ஏப்ரல் 27ம் திகதிMactan என்ற சிறுதீவின் குடிமக்களால் மஜெலனும் அவரது மாலுமிகளுள் 40 பேரும் கொல் லப்பட்டனர்.மஜெலன் இறந்தபின் ஆய்வுப் பிரயாணத்தின் தலைமைப் பதவியை ஜூவான் செபஸ்தியன் டெல் கானோ (Juan Sebastian del Cano) 6T6óTp6ñoluIT னியர் பொறுப்பேற்றுக் கொண்டார். எஞ்சி
யிருந்த இரு கப்பல்களிலும் பிரயாணத் தை ஆரம்பித்த அவர்நீண்டகாலம் கடலில் அலைந்த பின் 1521 நவம்பர் 8ம் திகதி மொலக்காத்தீவுகளை அடைந்தார்.
Trinidad என்ற கப்பலிலுள்ளவர்கள் வந்த பாதையில் திரும்பிச் செல்ல எண்ணி மரியானாப்பகுதியை நோக்கிச் சென்றனர். இடையில் மனம் மாறி மீண்டும் மொலக்கா வை நோக்கி வந்தபோது போர்த்துக்கேயக் கடற்படையினரால் அவர்கள் அழிக்கப் பட்டனர்.
எஞ்சியிருந்த Victoria கப்பல் 1521 டிசம்பர் 21ம் திகதி மேற்கு நோக்கிய தனது பிரயாணத்தை ஆரம்பித்தது. இந்து சமுத் திரத்தைக் கடந்து ஆபிரிக்காவின் நன்னம் பிக்கை முனையைச் சுற்றிச் சென்ற அக் கப்பல் அத்திலாந்திக் சமுத்திரத்திலுள்ள Cape Verde தீவுகளை அடைந்தது.
அப்போது அக்கப்பலில் 31 பேரே எஞ்சி
14
யிருந்தனர். அவர்களில் 13 பேர் உணவும் நீரும் தேடிக் கரையிறங்கிச் சென்றபோது போர்த்துக்கேயரிடம் மாட்டிக்கொண்டனர். மீதியாக இருந்தவர்கள் ஸ்பெயினை நோக்கிப் பிரயாணத்தை மேற்கொண்ட னர். இறுதியாக சுமார் மூன்று வருடப் பிரயாணத்தின் பின் 1522 செப்டம்பர் 6ம் திகதி Victoria கப்பல் ஸ்பெயினின் Sanlucarதுறைமுகத்தை அடைந்தபோது 16 மாலுமிகளே உயிரோடு இருந்தனர். இவர்களே உலகத்தை முதன் முதலாகச் சுற்றி வந்தவர்கள் என்ற பெருமைக்கு உரியவர்களாவர். து
 
 
 
 
 

சிறுகுடலில் சுரக்கப்படும் சிறு குடற் சாறும் அங்கு வந்து சேரும் பித்தச் சாறும் இரைப்பைக்குள் திரும்பிச் செல்லும் நிலை சிலரில் காணப்படுகின்றது. இவ்வாறான வர்களிலும் இரைப்பைப் புண் உண்டாகும் சாத்தியக்கூறு அதிகமாகும். பித்தம் இரைப்பையின் சீதப்படையைத் தாக்கிச் சேதமாக்குவதே இதற்குக் காரணமாகும்.
தீவிரமான மன அழுத்த நிலை ரைப்பையின் உட்சுவரைப் பாது (stress), கவலை என்பன காரணமாகவும் காக்கும் சீதப்படை அரிக்கப்படுவதனா இரைப்பைப் புண்கள் உண்டாகலாம். இவ் லேயே இரைப்பைப் புண் உண்டாகின்றது. வாறான உள நிலைகள் காரணமாக இரைப்பைச் சுவரினால் சுரக்கப்படும் அலையு நரம்பு (vagus nerve) அருட்டப் ஐதரோகுளோரிக் அமிலமும் பெப்சின் படுவதனால் இரைப்பைச்சாறுமிகையாகச் என்ற நொதியமுமே சீதப்படையின் சுரக்கத் தொடங்கும். இது இறுதியில் அரிப்புக்குக் காரணமாக இருக்கின்றன. இரைப்பைப் புண்ணைத் தோற்றுவிக்கும். இவற்றின் தொழிற்பாடு காரணமாக சீதப் தலைக் காயங்கள், தீக் காயங்கள், சத்திர படை சமிபாடடைவதனாலேயே இந்நிலை சிகிச்சை என்பவற்றுக்கு ஆளானவர் உருவாகின்றது. களில் இரைப்பைப் புண் உண்டாவதற்கும் சாதாரண ஒருவரில், இரைப்பைச் இதுவே காரணமாக இருக்கின்றது. - சுவர் இவ்வாறு தனது சுரப்புக்களினாலே இரைப்பைப் புண்ணினால் ஆண் யே சமிபாடடைவதைத் தவிர்ப்பதற்குரிய களே கூடுதலாகப் பாதிக்கப்படுகின்றனர். இசைவாக்கங்கள் காணப்படுகின்றன. பொதுவாக ஆண்-பெண் பாலாரிடையே இதனால் தான் எல்லோரிலும் இரைப்பைப் இரைப்பைப் புண் காணப்படும் விகிதம் 21 புண் தோன்றுவதில்லை. எனினும் ஒருவ ஆகும்.
f6) இரைப்பைச் याए] அதிகளவில் சுரக்கப் வயிற்றில் இரைப்பைக்கு மேற்புற படும்போது இரைப்பைப்புண் உண்டாகும் மாக ஏற்படும் வலியே பிரதான அறிகுறி சாத்தியம் அதிகரிக்கின்றது. யாக இருக்கும். நோவுள்ள இடத்தைக்
அஸ்பிரின் போன்ற மருந்துகள் காட்டுமாறு கேட்கப்பட்டால் நோயாளி ஒரு இரைப்பை உட்சுவரின் சீதப்படையைச் விரலினால் வயிற்றின் மேற்புறத்தைச் சேதமடையச் செய்கின்றன. இதனால் சுட்டிக்காட்டுவார். இந்த வலி பெரும்பா அமிலமும் பெப்சினும் சீதப்படையைத் லும் உணவோடு தொடர்புடையதாக தாக்குவதற்கு வழியேற்படுகின்றது. இருக்கும். இரைப்பைப் புண் காரணமான அஸ்பிரின் அதிகளவில் உட்கொள்ளப் வலி உணவுட்கொண்டு ஒரு மணித்தியா படும் நாடுகளில் இரைப்பைப் புண்ணுக்கு லத்திற்குள் தோன்றும் உணவு உட்கொள் வழிகோலும் பிரதான காரணியாக அது விதி" அது குறைவதில்லை. மிக அரிதா திகழ்கின்றது. ibuproten (Bruter), கவே இரவு நேரத்தில் ஏற்படும். (சிறுகுடற் MeenamicAcid (Ponstan), indometh. புண் உள்ளவர்களில் உணவு வேளை acin (Indocid) ஆகிய மருந்துகளும் களுக்கு இடையில் தான் வலி உண்டா அஸ்பிரினைப் போன்று இரைப்பிைப் கும்.உணவுட்கொண்டதும் அது குறைந்து புண்ணை ஏற்படுத்தக் கூடியவையே. விடும்.
15

Page 10
விட்டே ஏற்படும். சில வாரங்களுக்குத்
அத்தோடு இரவில் நித்திரை கொண்டு 2-3 மணித்தியாலத்திற்குள்
வலி ஏற்படுவதனால் உறக்கம் கெட்டுப்
போகும்). வாந்தியெடுப்பது வலியைக் குறைப்பதற்கு உதவும்.
இரைப்பைப் புண் காரணமான வலி குறித்த கால இடைவெளிகளில் விட்டு
தொடர்ச்சியாக வலி இருக்கும்; பின் முற்றாக மறைந்து விடும். சில வாரங்க ளுக்கு அல்லது மாதங்களுக்குப் பின்னர்
ளுககு
மீண்டும் தோன்றும். எனினும் காலஞ்செல்
லச் செல்ல இக்கால இடைவெளி குறைவ தோடு வலியும் நீண்டநாட்களுக்குநிலைக்
கத்தொடங்கும்.
பேரியம் உணவுச் சோதனையொன்
றை மேற்கொள்வதன் மூலம் இரைப்பைப் புண்ணை இனங்கண்டு கொள்ள முடியும். மாவட்ட மற்றும் ஆதார வைத்தியசாலை களில் இச்சோதனையைச் செய்து கொள்ள முடியும்.
சிகரெட் புகைத்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்கள் இரைப்பைப் புண் ணை மேலும் மோசமடையச் செய்யும். இந்நோயுள்ளவர்கள் அஸ்பிரின் போன்ற மருந்துகளை முற்றாகத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். புது வைத்தியர்களி டம் சிகிச்சை பெறச் சென்றால் தனக்கு இரைப்பைப் புண் இருப்பது பற்றி முன் கூட்டியே கூறிவிட வேண்டும்.
Antacids என்னும் அமில எதிரிகள் (Digiene, Gelusil, Aludrox, GavisCon, போன்றவை) வலியை இல்லாமற் செய்ய உதவுகின்றன. கூடிய அளவுகளில் 4-6 வாரங்களுக்கு இவற்றைக் கொடுத்தால் புண் ஆறவும் தொடங்கும்.இவற்றுள் Gaviscon என்பது இரைப்பைப் புண் ணைக் குணமாக்க உதவக்கூடியது.
விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை. எனவே இவற்றை மிகையான அளவுகளில் உட்கொள்வது உசிதமானதல்ல.
இரைப்பைப்புண்ணைக் குணமாக்கு 6) gibG5 Cimetidine (Tagamet) 1996)6Nogji ranitidine (Zantac) 6T6örgy) Lo (C5,6Dg5
வழங்க வேண்டும். இது தகுதியான வைத்
தியர் ஒருவரினால் சிபாரிசு செய்யப்பட வேண்டும். மேற்குறிப்பிட்ட இரு மருந்து களும் இரைப்பைச் சாற்றின் சுரப்பைக் கட்டுப்படுத்துவதன் மூலம் நிவாரணத்தை வழங்குகின்றன.
மருந்துகளினால் நிவாரணம் கிடைக் காதவர்களுக்கு சத்திர சிகிச்சையே மாற்று வழியாகும். இரைப்பைச் சுவரின் சுரப்பி களைத் தூண்டுகின்ற அலையு நரம்பின் பகுதிகளைத்துண்டிப்பதன் மூலம் அல்லது
புண் ஏற்பட்டுள்ள பகுதியை வெட்டி நீக்கு
வதன் மூலம் நிவாரணம் வழங்கப் படுகின்றது.
இரைப்பைப் புண் தீவிரமடைந்தால் இரைப்பைச் சுவரில் துளை ஏற்படலாம். இது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத் தும். மேலும் அளவுக்கதிகமான குருதிப்
பெருக்கு ஏற்படுவதற்கும் இது வழிகோலக்
எனினும் இம்மருந்துகள் பல தீய பக்க
16
கூடும்.
எனவே இரைப்பைப் புண் இருப்பவர் கள் அதற்குரிய சிகிச்சையைப் பெற்றுக் கொள்வதில் கண்ணுங்கருத்துமாக இருப் பது அவசியம்.இரைப்பையை நீண்ட நேரத் துக்கு வெறுமையாக வைத்திருப்பதும் நிலைமையை உக்கிரமடையச் செய்யலாம். இடைக்கிடை சிறிய அளவுகளில் உணவுட் கொள்வதன் மூலம் இதனைத் தவிர்க்க முடியும். அதிக காரத் தன்மையும் எண் ணெய்த்தன்மையும் கொண்ட உணவுகள் இத்தகைய நோயாளிகளுக்கு உகந்தன வல்ல.
 
 
 

திபெத் நாட்டிலுள்ள பெளத்தர் களின் ஆத்மீகத் தலைவரே தலாய் லாமா (Dalai Lama) 6T66TD Lig, 65. Guujirgi) அழைக்கப்படுகின்றார். முன்னர் திபெத் தின் ஆட்சியாளராகவும் தலாய் லாமா பதவிக்குரியவரே இருந்து வந்துள்ளார்.
இப்போது இந்தப் பதவியை வகிக்கும்
தென்ஸின் கியத்ஸோ என்பவர் 14வது தலாய் லாமா ஆவார். திபெத்தைச் சீனா கைப்பற்றிக் கொண்டதன் பின்னர் சீன ஆட்சியாளரோடு ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக இவர் 1959ம்ஆண்டு திபெத் தை விட்டு இந்தியாவுக்குச் சென்றார். இன்று வரை தனது சொந்த நாட்டுக்குச் செல்ல முடியாத நிலையில் இவர் இந்தியா வில் வாழ்ந்து வருகின்றார்.
தலாய் லாமாக்கள் புத்தர் பெருமா னின் அவதாரங்கள் என்றே திபெத் மக்கள் நம்புகின்றனர். ஒரு தலாய் லாமா இறந்த தும் அவரது ஆத்மா புதிதாகப் பிறந்த குழந்தையொன்றின் உடலினுள் புகுந்து கொள்வதாக அவர்கள் விசுவாசிக்கின் றனர். பல்வேறு சோதனைகளினூடாக இந்தக் குழந்தை இனங்காணப்பட்ட பின் அது ஊர்வலமாக லாஸா நகருக்கு எடுத் துச் செல்லப்பட்டு சம்பிரதாய முறையில் தலாய் லாமா என்ற புனிதப் பதவியில் அமர்த்தப்படும். லாஸாவிலுள்ள 1000 அறைகளைக் கொண்ட பொதாலா’ அரண்மனையே தலாய் லாமாவின் வாசஸ் தலமாகும்.
தலாய் லாமா என்ற பதவியை முதன்
es
17
முதலாவதாக வகித்தவர் திரேபுங்' ஆசிர மத்தின் பிரதம குருவாக இருந்த ஸோ னாம் கியத்ஸோ என்பவராவார். 1578 இல் மொங்கோலியத் தலைவரான அல்தான் கான் என்பவரே இந்தப் பதவியை வழங்கி னார். அத்தோடு ஸோனாம் கியத்ஸோ வுக்கு முன்பு வாழ்ந்த பிரதம குருக்கள் சிலருக்கும் இப்பதவிப் பெயர் வழங்கப்பட லாயிற்று. 1642 இல் இன்னொரு மொங்
கோலியத் தலைவரான குஷ்ரி கான் என்ப
வர் ஐந்தாவது தலாய் லாமாவை திபெத் தின் ஆத்மீகத் தலைவராகவும் ஆட்சி யாளராகவும் நியமித்தார். அது முதல் தலாய் லாமாப் பதவி வகிப்பவர்களே திபெத்தின் ஆட்சியாளர்களாக இருந்து வநதுளளன.
தற்போதைய தலாய் லாமாவான தென்ஸின் கியத்ஸோ 1935ம் ஆண்டு திபெத்தில் தக்ஸ்தர் என்ற கிராமத்தி லுள்ள ஒரு மாட்டுத் தொழுவத்தில் பிறந் தார். அவர் இரண்டு வயதுச் சிறுவனாக இருக்கும் போதே, மதகுருக்களினால் புத்தரின் அவதாரம் என இனங்காணப் பட்டார். தொடர்ச்சியான சோதனை களுக்கு உட்படுத்தப்பட்ட பின் அவர் லாஸாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பொதாலா அரண்மனையில் குடியமர்த்தப் பட்டார்.
அவரது நான்காவது வயதில் திபெத்தின் அரசராக முடிசூட்டப்பட்டு சிங்க முடியாசனத்தில் அமர்த்தப்பட்டார். அங்கு 18 வருட கால சமயக் கல்வி நெறி யொன்றை அவர் கற்க வேண்டி இருந்தது. தனது மூத்த சகோதரனுடன் அந்தப் பிரமாண்டமான மாளிகையில் தனியே வசிக்க வேண்டியநிலை சிறுவரான தலாய் லாமாவுக்கு ஏற்பட்டது. ஏழு வயதிலேயே அமெரிக்க ஜனாதிபதியின் விசேட தூது வர் உட்படப் பிரமுகர்கள் பலரை அவர் வரவேற்று உபசரிக்க வேண்டியிருந்தது.
தனது இளம் பருவத்தைத் தனிமை

Page 11
யிலே பெரும்பாலும் கழித்த தலாய் லாமா ஒய்வு நேரங்களில் டார்ஸனின் கதைகள், வரலாற்றுக் கதைகள் முதலியவற்றைக் கொண்ட திரைப்படங்களைத் தனது மாளிகையிலேயே கண்டுகளித்தார். சில வேளைகளில் மாளிகையின் கூரையில் ஏறிக்கொண்டு தொலைநோக்கியால் தூரத்தில் தெரியும் காட்சிகளைப் பார்த்து மகிழ்வார்.
1950ம் ஆண்டில் சீனாவின் கம்யூ னிஸப் படைகள் ஆறு திசைகளிலிருந்து திபெத்தைத் தாக்கிய போது அச்சிறு நாட்டின் அமைதி சீர்குலைந்தது. சீனத் தலைவர்களோடு பேச்சுவார்த்தை நடாத்து வதற்காக 5 பேர் கொண்ட ஒரு தூதுக் குழுவை பீஜிங்கிற்கு அனுப்பினார் தலாய் லாமா. அப்போது அவரது வயது 15 ஆக இருந்தது. எனினும் சீன ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்த முடியாமற் போனதோடு
முழு திபெத்தும் சீனாவின் ஆதிக்கத்துக்
குள் வந்தது.
1959 இல் 30,000 திபெத்தியர்கள்
சீன ஆட்சியாளர்களுக்கெதிராகக் கிளர்ந்
து எழுந்தபோது சீனப்படையினர் கடுமை
யான அடக்குமுறைகளைப் பயன்படுத்தி
னர். இந்நேரத்தில் படைவீரரைப் போல் மாறுவேடம் பூண்டு தனது மாளிகையி லிருந்து தப்பிச் சென்ற தலாய் லாமா உலகின் மிக உயர்ந்த மலைத் தொடர் களைக் கடந்து இந்தியாவுக்குள் தஞ்சம் புகுந்தார்.இரண்டு வாரங்கள் நீடித்த இந்த பிரயாணத்தின்போதுYak இனமாடொன் றே அவருக்கு வாகனமாகப் பயன்பட்டது.
அன்று முதல் இன்று வரை இந்தி யாவிலேயே தங்கியிருக்கும் தலாய் லாமா டெல்லியிலிருந்து 400 km வடக்கே உள்ள தர்மசாலா என்ற இடத்திலிருந்து கொண்டு தனது பணிகளைத் தொடர்கின் றார். வைத்தியர்களும் சோதிட வல்லுனர் களும் ஏழு அமைச்சர்களும் அவரைச் சூழ இருக்கின்றனர். எனினும் அவர் அளவுக் கதிகம் வாய் திறப்பதை இந்தியா விரும்பு
வதில்லை. சீனாவின் ஆத்திரத்தைக் கிளப் பிவிடுவாரோ என்ற பயமே இதற்குக் காரணமாகும்.
சீனப்படைகள் இதுவரை பெருந் தொகை திபெத்தியர்களைக் கொன்றுள் ளனர். பெருந்தொகையானோர் அரசியல் கைதிகளாகச் சிறைகளில் அடைக்கப் பட்டுள்ளனர். இந்த நிலையில் திபெத் துக்கு மீண்டும் செல்லும் வாய்ப்பு தலாய் லாமாவுக்குக் கிடைக்குமோ என்பது சந்தே கமாகவே இருக்கின்றது. இப்போது சீனாவின் அனுசரணையுடன் நியமிக்கப் பட்டுள்ள பஞ்சன்லாமா என்னும் துணைத் தலைவரே திபெத்தில் இருக்கின்றார்.1995 இல் புதிய பஞ்சன்லாமா ஒருவரை இனங் காண்பதற்குச் சீன அதிகாரிகள் எடுத்த முயற்சிய்ை தலாய் லாமா கடுமையாக எதிர்த்தார்.
இவ்வாறான சிக்கலான நிலையிலும் தலாய் லாமா மிக அமைதியாகவும் நம்பிக் கையோடும் இருக்கின்றார். அவர் எப்போ தும் அஹிம்சை வழியையே போதிக்கின் றார். சீனர்கள் மீது வெறுப்புக் கொள்வ தற்குப் பதிலாக அவர்கள் மீது அன்பும் கருணையும் காட்ட வேண்டும் என்றே கூறுகின்றார். எனினும் சீனர்கள் திபெத் தை விட்டு வெளியேற வேண்டும் என்ப தில் உறுதியாக நிற்கின்றார் 'வெண் தாமரையை ஏந்தியவர்' என்ற கெளரவப் பெயருக்குரிய தலாய் லாமா.
அவர் 1984 இல் எழுதிய "கருணை யும், தெளிவும் அக நோக்கும்" (Kindness, Clarity and Insight) 6T6örs) (BJT656b g5Lng) மதக் கோட்பாடுகளைத் தெளிவாக 6fl6Töélu46îT6TITri. Jean-Claude Carrière என்ற பிரெஞ்சு திரைக் கதை எழுத்தாள ருடன் இணைந்து தலாய் லாமா எழுதிய "வன்செயலும் இரக்க உணர்வும்" (Violence and Compassion) 6T6öTO ST6)
1996 இல் வெளிவந்தது. இதில் அரசியல்
18
மற்றும் ஆன்மீக விடயங்கள் ஆராயப் பட்டுள்ளன. ெ

சினிடே (Canidae) என்னும் நாய்க் குடும்பத்தைச் சேர்ந்த விலங்கு இனங்க ளுள் உருவிற் சிறியவை நரிகளாகும். நாய்கள், ஓநாய்கள் (Wolves), வட அமெரிக்க ஒநாய்கள் (Coyotes) என்பன வும் இக்குடும்பத்தைச் சேர்ந்தவையே.
கட்டையான கால்களும், நீண்டு குறுகிய மூஞ்சியும், நிமிர்ந்த முக்கோண வடிவக் காதுகளும், அடர்த்தியான உரோ மமும், நீண்ட அடர்த்தியான வாலும் நரி களுக்குரிய சிறப்பியல்புகளாகும். நரிகள் ஆசியா, ஆபிரிக்கா, ஐரோப்பா, வட,தென் அமெரிக்கா ஆகிய பிரதேசங்களிலுள்ள வனங்களிலும் பாலைநிலங்களிலும், பசும் புதர்க் காடுகளிலும் வாழ்கின்றன. வட துருவத்தின் பனிப்பிரதேசங்களில் வாழும் நரி இனமொன்றும் உண்டு.
எலிகள், கண்டெலிகள், முயல்கள், பறவை முட்டைகள், பழ வகைகள், பெரிய பூச்சிகள், விலங்குகளின் பிணங்கள் போன்றவையே நரிகளின் பிரதான உணவு களாகும். சிறிய விலங்குகளையே இரையா கக் கொள்வதனால் பெரிய வேட்டை விலங்குகளைப் போன்று நரிகள் கூட்ட மாக வேட்டையாடுவதில்லை. ஒவ்வொரு நரியும் தனக்கென ஒதுக்கிக் கொண்ட அதிகாரப் பிரதேசத்தினுள் தனியாகவே இரைதேடும். சுமார் 8 சதுர km பரப்பள வுடைய இப்பிரதேசத்தினுள் வேறு நரிகள் வருவதற்கு அனுமதிக்கப்பட மாட்டா.
19
Red fox என்னும் சாதாரண நரி இனமே உலகில் பரவலாகக் காணப்படு கின்றது. இவ்வின நரி 90 முதல் 105 cm வரை (வாலைத் தவிர்த்து) நீளமுடையது. சுமார் 7 kg நிறையுடையது. இதன் காது களும் பாதங்களும் கறுப்பாக இருப்ப தோடு வாலின் நுனிவெண்மையாக இருக் கும். இதன் தோல் செங்கபில நிறமான அல்லது கறைச் சிவப்பான மயிர்களைக் கொண்டிருக்கும். Red fox இன நரிகள் வட ஆபிரிக்காவிலும், ஆசியா, ஐரோப்பா, வட அமெரிக்கா ஆகிய பகுதிகளில் வட துருவம் வரையிலும் வியாபித்துக் காணப் படுகின்றன.
நரிகள் விரைவாக ஒடக் கூடியவை. மணிக்கு சுமார் 48 km வரையான வேகத் தை இவற்றால் அடைய முடியும். இவை எந்நேரமும் விழிப்புணர்வோடு இருக்கும். இவற்றின் கேள்வி, பார்வை,மணநுகர்ச்சிப் புலன்கள் நன்கு கூர்மையானவை. எனவே எளிதில் கண்டுகொள்ள முடியாத விதத் தில் இவை மனிதர் வாழும் இடங்களுக்கு அண்மையில் வாழக்கூடியனவாக இருக் கின்றன. சிறு காடுகளையும் வயல்களை யும் கொண்ட பண்ணைகள் நரிகளுக்கு மிக உகந்த வாழிடங்களாக அமைந்துவிடு கின்றன. வயல்களில் பெருமளவு காணப் படும் எலிகள் அவற்றுக்கு உணவாகின் றன. அவுஸ்திரேலியாவில் முயல்களினால் வயல்களுக்கு ஏற்படும் தொல்லையை நீக்குவதற்காக நரிகள் அறிமுகப்படுத் தப்பட்டுள்ளன.
பெண் நரிகளின் கர்ப்ப காலம் 49 முதல் 56 நாட்களாகும். ஒரே தடவையில் 2 முதல் 8 வரையிலான குட்டிகள் பிறக்கின் றன. பொதுவாக நிலத்தில் அமைக்கப்பட்ட வளைகளினுள்ளேயே இக்குட்டிகள் பாது காக்கப்படுகின்றன. பிறக்கும்போது கண் மூடப்பட்ட நிலையில் உள்ளநரிக் குருளை கள் சுமார் ஐந்து வாரங்கள் வரை இரு பெற்றோரினாலும் கண்காணித்து வளர்க் கப்படுகின்றன. குருளைகள் ஒரளவு

Page 12
வளர்ந்ததும் குறித்த ஆட்சிப்பிரதேசத்தை விட்டு வெளியேறி விடுகின்றன; அல்லது வெளியேற்றப்படுகின்றன. சாதாரண நரி யினத்தின் ஆயுட்காலம் சுமார் 12 வருடங் களாகும.
வட அமெரிக்காவிலுள்ள சில காடு களிலும் புதர்நிலங்களிலும் வசிக்கும் நரை நிற நரிகள் (grey fox), உருவத்தில் சிறிய வை. நாய்க் குடும்பத்தைச் சேர்ந்த மிருகங் களுள் மரம் ஏறக் கூடியவை இந்த இன நரிகள் மாத்திரமே. Swift fox என்னும் இன்னோர் இனம் தென் கனடாவிலுள்ள பெரிய சமவெளிகளிலும் ஐக்கிய அமெரிக் காவின் வட மாநிலங்களிலும் காணப்படு கின்றது. இராப் பழக்கமுள்ள இவ்வின நரியின் பருமன் சாதாரண நரியின் பரும னில் மூன்றிலொரு பங்காகும்.
வட துருவப் பிரதேசத்தில் வாழ் கின்ற துருவ நரிகளின் தோல் மயிர்கள் குளிர் காலத்தில் வெண்ணிறமாகவும் கோடை காலத்தில் கபிலநிறமாகவும் இருக்கும். கிரீன்லாந்தில் காணப்படுகின்ற
ஒரு வகைத் துருவ நரிகளின் தோல் மயிர் கள் நீலம் கலந்த நரை நிறமாக இருக்கும். துருவ நரிகள் குளிர்காலத்திலும் சுறுசுறுப் பாக இயங்கிக்கொண்டே இருக்கின்றன. ஏனைய துருவ உயிரினங்கள் ஈடுபடுவது போல் குளிர் காலத் தூக்கத்தில் அவை ஈடுபடுவதில்லை. இவை திமிங்கிலப் பிணங்களையும், துருவக் கரடிகள் தின்ற பின் எஞ்சிய மாமிசத் துண்டங்களையும் சிறிய கடற் சிங்கங்களையும் உணவாகக் கொள்கின்றன. இவற்றின் காதுகள் கட் டையாகவும் வட்டமாகவும் இருப்ப தோடு அடர்த்தியான மயிர்களையும் கொண்டுள் ளன. இதன் காரணமாக உடலிலிருந்து வெப்பம் இழக்கப்படுவது கட்டுப் படுத்தப் படுகின்றது.
Redfox வகை நரி இனத்தின் விஞ் ஞானப் பெயர் Vulpes Vulpes என்பதாகும். grey fox என்னும் நரை நிற நரியினம் Urocyon cinereoargenteus 6T6ÕT6Juh துருவ நரி Alopex lagopus எனவும் பாகுபடுத்தப்பட்டுள்ளன.
முட்டை ஆராய்ச்சி
N
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ஆரம்ப காலத்தில் ஆங்கிலேயரான விஞ்ஞானத்துறைப் பேராசிரியர்ஒருவர் இருந்தார். தீக்கோழிகளைப் (Ostrich) பற்றித்தாம் ஆய்வொன்றுசெய்வதாகவும் அதற்காகத் தீக்கோழி முட்டைகள் தேவைப்படுவதாகவும் அவர் தெஹிவல மிருகக் காட்சிச்
சாலைக்கு அறிவித்திருந்தார்.
இவரது ஆராய்ச்சிக்கு உதவ விரும்பிய மிருகக் காட்சிச்சாலை அதிகாரிகள் அங்குள்ள தீக்கோழிகள் இடும் முட்டைகளைக் குறித்த பேராசிரியருக்குத் தொடர்ந்து அனுப்பி வந்தனர். பல மாதங்கள் இவ்வாறு கடந்த போதிலும் பேராசிரியரின் ஆய்வுகள் பற்றி எவ்விதத் தகவலும் வெளி வராதது அந்த அதிகாரிகளுக்குப் பெரிய ஏமாற்றத்தை அளித்தது.
எதற்கும் விசாரித்துப்பார்த்துவிடுவோமே என்றுநினைத்த அவர்கள் ஒருவரைப் பேராதனைப் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைத்தனர். பேராசிரியரின் நடவடிக்கைகள் பற்றி விசாரித்துப் பார்த்தபோதுதான் தீக்கோழி ஆராய்ச்சியின் மர்மம் துலங்கியது.
அந்தப் பேராசிரியர் இலங்கைக்கு வரமுன்னர் தென் ஆபிரிக்காவிலே வேலை செய்திருக்கி
றார்; அங்கு தீக்கோழிமுட்டைகளைச்சாப்பிட்டுப்பழகிவிட்டார்; அந்தப்பழக்க தோசம் இலங்கைக்கு வந்தபின்னரும் அவரைவிட்டபாடில்லை; எனவேதான் தீக்கோழிமுட்டைகளைப்பெற்றுக்கொள்ளக் கூடிய தந்தரோபாயமொன்றை அவர் கையாண்டிருக்கிறார் என்ற உண்மை தெரியவந்தது.
20

JIDTJT6OIJ)
தூதுIெTகெ
உலகில் சமாதானத்துக்கு அச்சு றுத்தல் ஏற்படும் வேளைகளில் சம்பந்தப் பட்ட நாடுகளுக்கிடையே இணக்கத்தை யும் பரஸ்பர நல்லெண்ணத்தையும் வளர்ப்பதில் முக்கிய பங்கு வகிப்பவர் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் ஆவார். ஐ.நா.சாசனத்தின் 99வது
சரத்தின்படி, சர்வதேச ரீதியில் அமைதிக்
கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் சந்தர்ப்பங்களில் அது பற்றி ஐ.நா. பாதுகாப்புச் சபையின் கவனத்துக்குக் கொண்டுவரும் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஐ.நா. சபையின் பிரதான செயல் நிறைவேற்று உத்தியோகத்தரான செய லாளர் நாயகம், பாதுகாப்புச் சபையின் சிபாரிசின் பேரில் ஐ.நா. பொதுச் சபை யினால் நியமிக்கப்படுகின்றார்.இப்பதவிக் குரிய தவணைக்காலம் 5 வருடங்களாகும். ஐ.நா.சபையின் ஆரம்பம் முதல் இதுவரை, ஏழு பேர் இவ்வுயர் பதவியை வகித் துள்ளனர். அவர்கள் பற்றிய சுருக்கமான குறிப்புக்களைக் கீழே தருகின்றோம்.
ஐ. நா. சபையின் முதலாவது செயலாளர் நாயகமாகத் தெரிவு செய்யப் பட்டவர் நோர்வே நாட்டு ராஜதந்திரியான ட்ரைகிவ் லீ என்பவராவார். நோர்வேயின் ஒஸ்லோ நகரில் 1896ம் ஆண்டு பிறந்த இவர் அங்குள்ள பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். 1926 இல் நோர்வீஜிய தொழிலாளர் கட்சியின் தேசிய செயலாள ராகத் தெரிவு செய்யப்பட்ட அவர் 1935இல் நீதி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
1940 இல் ஜெர்மன் படைகள் நோர் வேயைக் கைப்பற்றிய பின் லண்டனில்
21.
அமைக்கப்பட்ட நோர்வே அரசாங்கத்தில் இவர் வெளிநாட்டமைச்சராகக் கடமை புரிந்தார். 1945 இல் சான் பிரான்ஸிஸ்கோ நகரில் இடம்பெற்ற ஐ.நா. மாநாட்டுக்கு நோர்வே தூதுக்குழுவின் தலைவராகச் சென்ற லீ அடுத்த ஆண்டில் ஐ.நா. சபையின் செயலாளர் நாயகமாகத் தெரிவு செய்யப்பட்டார். சோவியத் யூனியனின் நெருக்குதல் காரணமாக அவர் 1952ம் ஆண்டு நவம்பரில் அப்பதவியிலிருந்து ராஜினாமாச் செய்யவேண்டி ஏற்பட்டது. நோர்வேக்குத் திரும்பிய பின்னர் அங்கு அமைச்சரவையில் அங்கம் வகித்த அவர் 1968 இல் காலமானார். -
டாக் ஹமர்ஷீல்ட் (Dag Hjalmar Agne Carl Hammarskjöld)
1905 ஜூலை 29ம் திகதி சுவீடனில் பிறந்த டாக் ஹமர்ஷில்ட் அங்குள்ள உப்ஸ்லா மற்றும் ஸ்டொக்ஹோம் பல் கலைக்கழகங்களில் உயர் கல்வி கற்றார். பல்வேறு அரசாங்கத்திணைக்களங்களில் பதவி வகித்த பின்னர் 1946 இல் அவர் சுவீடிஷ் ராஜதந்திர சேவையில் சேர்ந்தார். 1951இல் உதவி வெளியுறவு அமைச் சராகவும் இலாகா அற்ற அமைச்சராகவும் நியமிக்கப்பட்ட அவர் 1952ம் ஆண்டில் ஐ.நா. சபைக்குச் சென்ற சுவீடிஷ் தூதுக் குழுவுக்குத் தலைமை தாங்கினார். 1953 ஏப்ரல் 7ம் திகதி ஹமர்ஷில்ட் ஐ.நா. சபையின் செயலாளர் நாயகமாகத் தெரிவு செய்யப்பட்டார். ஐ.நா. சாசனத்தில் குறிக்கப்பட்ட கடமைகளுக்கு அப்பாலும் பல்வேறு ஆக்கபூர்வமான முயற்சிகளில் ஈடுபட்ட அவர் சர்வதேசத் தகராறுகளின் போது சிறந்த இணக்கப் பேச்சாளராகவும் சமாதானத் தூதுவராகவும் செயற்பட்டு வெற்றியும் நற்பெயரும் பெற்றார்.

Page 13
கொங்கோப் பிரச்சினையின் போது (1960-61) ஐ.நா.சபை தலையிட்ட வேளை யில் ஹமர்ஷீல்ட் சோவியத் யூனியனின் அதிருப்திக்கு ஆளாகினார். கொங்கோ விலிருந்த பிரிவினைவாதக் குழுவொன் றின் காரணமாகத் தோன்றிய பிரச்சினை
தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்துவதற்
காகக் கொங்கோ சென்று கொண்டிருந்த போது விமானம் விபத்துக்குள்ளாகியதால்
ஹமர்ஷில்ட் கொல்லப்பட்டார். இது 1961
செப்டம்பர் 27ம் திகதி நிகழ்ந்தது. மறை
வின் பின்னர் அவருக்கு 1961ம் ஆண்டுக்
குரிய சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 96TT 51T6ởTŮ (U Thant)
ஹமர்ஷில்டின் மரணத்தை அடுத்து பர்மா (மியன்மார்) நாட்டு ராஜதந்திரியான ஊ தாண்ட் என்பவரைத் தற்காலிக செயலாளர் நாயகமாகப் பொதுச்சபை 1961 நவம்பர் 3ம் திகதி நியமனம் செய்தது. 1966ம் ஆண்டு இவர் மீண்டும் இதே பதவிக்குத் தெரிவு செய்யப்பட்டார்.
பர்மாவில் 1909 ஜனவரி 22ம் திகதி பிறந்த இவர் ரங்கூன் பல்கலைக் கழகத்தில் கல்வி கற்றார். பின்னர் தனது சொந்த ஊரிலிருந்த உயர் பாடசாலையில் சிரேஷ்ட ஆசிரியராகவும் தலைமையாசிரி யராகவும் கடமையாற்றினார். 1947 இல் பர்மா சுதந்திரம் பெற்ற பின்னர் ஊ தாண்ட் பல உயர்பதவிகளில் பணியாற்றினார்.1957 இல் ஐ.நா. சபையில் பர்மாவின் நிரந்தரப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் சுமார் 10 வருடங்கள் செயலாளர் நாயக மாகக் கடமை புரிந்த அவர் 1971 டிசம்பரில் ராஜினாமாச் செய்தார்.
ஐ.நா. சபையின் செயலாளர் நாயக மாக நியமிக்கப்பட்ட ஒரே ஆசிய நாட்டவர் என்ற பெருமைக்குரிய ஊதாண்ட் பொறு மையும் சாணக்கியமும் மிக்க இணக்கப் பேச்சாளராகத் திகழ்ந்தார். இவர் 1974 நவம்பர் 25ம் திகதி நிவ்யோர்க் நகரில் காலமானார்:
22
(Gjirii (G6) ITốoč60ộmüh (Kurt Waldheim)
நான் கா வ து செயலாளர் நாயகமா கத் தெரிவு செய்யப் பட்டவர் அவுஸ்திரி யாவைச் சேர்ந்த குர்ட் வோல்ட்ஹைம் ஆவார். 1918 இல் பிறந்த இவர் வியன்னா பல் கலைக் கழகத்தில் கல்வி பயின்றார். 1945 இல் அவுஸ்திரிய வெளிநாட்டுச் சேவை யில் சேர்ந்த இவர் பல்வேறு உயர் பதவிகளை வகித்தார்.1960 முதல் 1964 வரை கனடாவில் அவுஸ்திரிய தூது வராகவும் கடமை புரிந்தார். 1968 முதல் 1970 வரை அவுஸ்திரியாவின் வெளி விவகார அமைச்சராக இருந்த வோல்ட் ஹைம் 1971 இல் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.
1972 ஜனவரி 1 ம் திகதி ஐ.நா. சபையின் செயலாளர் நாயகமாகத் தெரிவு செய்யப்பட்ட வோல்ட்ஹைம் 1976 இல் மீண்டும் அப்பதவிக்குத் தெரிவானார்.1981 இல் மூன்றாவது தடவையாகவும் பதவி யேற்க அவர் எடுத்த முயற்சி சீனாவின் வீட்டோ காரணமாகக் கைகூடவில்லை.
1986 இல் அவர் அவுஸ்திரியாவின் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லரின் படையில் அவர் பதவி வகித்த காலத்தில் யுத்தக் குற்றங்களைப் புரிந்த தாக அவர் மீது குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. இதனால் 1992 இல் பதவிக் காலம் முடிந்த பின் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடாது ஒதுங்கிக் கொண்டார். ஜாவியே பேரேஸ் த கெயியா (Javier Pérez de Cuéllar)
பேரூ நாட்டு ராஜதந்திரியான
ஜாவியே பேரேஸ் த கெயியா 1981 டிசம் பரில் செயலாளர் நாயகமாகத் தெரிவு
 

பிறந்த இவர் லிமாவி லுள்ள கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றார்.
8 1944இல் வெளி நாட்டுச் சேவையில் சேர்ந் த அவர் பிற்காலத்தில் சுவிட்ஸர்லாந்து, சோவியத் யூனியன் ஆகிய நாடுகளில் பேரூவின் தூதுவராகக் கடமையாற்றி னார்.1971முதல் 1975 வரை ஐ.நா.சபையில் பேரூவின் நிரந்தரப் பிரதிநிதியாக இருந்த அவர் 1981 முதல் 1991 வரை செயலாளர் நாயகமாகப் பணிபுரிந்தார்.
இவருடைய பதவிக்காலத்தில் FHIIT6ÜT
-ஈராக் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதிலும் லெபனானில்
பணயக்
கைதிகளை விடுவிப்பதிலும் வெற்றி
பெற்றார். 1991 இல் மூன்றாவது தடவையாகப் போட்டியிட மறுத்துவிட்ட பேரேஸ் த கெயியா, 1995 இல் பேரூவின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு தற்போதைய ஜனாதிபதி அல்பேற்றோ பியூஜிமோரியினால் தோற்கடிக்கப்பட்டார். பூட்ரோஸ் பூட்ரோஸ் காலி (Boutros Boutros Ghali)
செயலாளர் நாயகமாகத் தெரிவு செய்யப்பட்ட முதலாவது ஆபிரிக்கரும் அராபியருமான பூட் ரோஸ் காலி 1922 இல் எகிப்திய கிறிஸ்தவக் குடும்பமொன்றில் பிறந் தவர். பரிஸிலுள்ள ஸோர்பொன் பல்கலைக் கழகத்திலும் அமெரிக் காவிலுள்ள கொலம்பி யா பல்கலைக்கழகத்திலும் பயின்ற இவர் ஆங்கிலம், அரபு, பிரெஞ்சு ஆகிய மும் மொழிகளிலும் சரளமாகப் பேசக் கூடியவர்.
சட்டத்துறைப் பேராசிரியராகவும் பத்திரிகையாளராகவும் கடமையாற்றிய பின் இவர் 1977முதல் 1991வரை எகிப்தின்
கல்வி கற்ற இவர்1961இல்
23
ராஜாங்க அமைச்சராகப் பணிபுரிந்தார். முன்னாள் எகிப்திய ஜனாதிபதி அன்வர் ஸாதாத் 1977 இல் முதல் தடவையாக இஸ்ரவேலுக்கு விஜயம் செய்த போது அவருடன் சென்ற பூட்ரோஸ் காலி 1979 இல் செய்துகொள்ளப்பட்ட அரபுஇஸ்ரவேல் சமாதான உடன்படிக்கையில் (கேம்ப் டேவிட் உடன்படிக்கையில்) முக்கிய பங்கு வகித்தார்.
1992 ஜனவரி 1ம் திகதி முதல் ஐ.நா. செயலாளர் நாயகம் பதவியை ஏற்ற அவர் பல்வேறு விவகாரங்களில் தாம் நினைத்த வற்றைத் தயங்காமல் கூறிய காரணத்தால் அமெரிக்காவினதும் வேறு சில அங்கத் துவ நாடுகளினதும் அதிருப்தியைச் சம்பாதித்துக் கொள்ள நேர்ந்தது. இதனால் 1996 இல் இரண்டாவது தடவையாகப் போட்டியிட அவர் எடுத்த முயற்சியை அமெரிக்கா தனது வீட்டோவைப் பயன் படுத்தித் தடுத்துவிட்டது.
கானா(Ghana) நாட்டின், குமாஸி நகரில் 1938 இல் பிறந்த భఖళ கோபி அன்னான் 1997 S. 狮 இல் ஐ.நா.சபையின் ஏழா வது செயலாளர் நாயக மாகத் தெரிவு செய்யப் பட்டார். அமெரிக்காவில்
பொருளாதாரத்துறையில் பட்டம் பெற்றார்.
“ኣ?
1962இல் ஐ. நா. சபையின் உத்தி யோகத்தர் ஒருவராகச் சேர்ந்த இவர் 1992 வரை ஐ.நா. சபையின் பல்வேறு முகவர் நிறுவனங்களிலும் உயர் பதவிகளை வகித் துள்ளார். ஐ. நா. சபையின் உத்தியோ கத்தர் ஒருவர் செயலாளர் நாயகமாகத் தெரிவு செய்யப்பட்ட முதற் தடவை இதுவாகும். இவரது பதவிக் காலம் 2002ம் ஆண்டு முடிவடையவுள்ளது.

Page 14
மியின் வளிமண்டலத்திற்கு அப்பாலுள்ள பிரதேசமே பொதுவாக விண் வெளி (space) என அழைக்கப்படு கின்றது. சர்வதேச விண்வெளிப்பிரயாண சம்மேளனம் (FA) என்ற நிறுவனத்தின் தீர்மானத்தின் படி தரையிலிருந்து 100 km உயரத்துக்கு அப்பால் செல்லக்கூடிய பிரயாணமொன்றே விண்வெளிப் பிரயா ணம் என அழைக்கப்பட முடியும்.
புவியின் ஈர்ப்பு விசையையும் வளி மண்டலத்தையும் கடந்து விண்வெளியை அடைவது எளிதான காரியமல்ல. புவித் தரையை விட்டு மேல்நோக்கிச் செல்ல முனையும் அனைத்துப் பொருட்களையும் புவியின் ஈர்ப்பு விசை கீழ்நோக்கி இழுத்துக் கொண்டே இருக்கும்.இதனால், மேல் நோக்கி எறியப்பட்ட பொருளொன் றின் வேகம் படிப்படியாகக் குறைந்து பூச்சியப் பெறுமானத்தை அடையும். பின் னர் அது கீழ்நோக்கி விழத் தொடங்கும்.
எனவே, மனிதனால் செய்யப்பட்ட பொருளொன்று விண்வெளிக்கு அனுப்பப் பட வேண்டுமாயின் அது முதலில் புவியீர்ப்பிலிருந்து தப்பிச் செல்வது அவசியமாகின்றது. இவ்வாறு தப்பிச் செல்வதற்கு அப்பொருள் மிக உயர்ந்த ஆரம்ப வேகமொன்றில் மேல்நோக்கி ஏவப்பட வேண்டும். இவ்வேகம் தப்பல் (36) J35th (escape Velocity) 6T60TLI(Bih. புவிக்குரிய தப்பல் வேகம் செக்கனுக்கு
11200 m (மணிக்கு 40,000 km) ஆகும். இவ்வளவு பிரமாண்டமான ஆரம்ப வேக மொன்றை வழங்குவது செயல்முறையில் சாத்தியமானதல்ல.
விண்வெளிக் கலமொன்றையோ, செய்மதியொன்றையோ விண்வெளிக்கு ஏவுவதற்கு ரொக்கட் (Rocket) எனப்படும் சாதனம் பயன்படுத்தப்படுகின்றது. ரொக் கட் என்பது நியூட்டனின் மூன்றாம் விதியின்படி எதிர்த்தாக்கத்தைப் பயன் படுத்தி இயங்கும் ஒரு வாகனம் ஆகும். அதன் இயக்கத்துக்குத் தேவையான எரிபொருளையும், அவ்வெரிபொருளை எரிப்பதற்குத் தேவைப்படும் ஒட்சிசனை யும் ரொக்கட் தன்னகத்தே கொண்டிருக் கும். எனவே சாதாரண ஜெட் விமானங் களைப் போலன்றி, ஒரு ரொக்கட்டானது தனது இயக்கத்திற்குப் புவியின் வளி மண்டலத்தில் தங்கியிருப்பதில்லை. ரொக் கட் என்ஜின்கள் வேலைசெய்வதற்குத் தேவையான எரிபொருள் திண்ம
வடிவிலோ திரவ வடிவிலோ இருக்கலாம்.
24
ஒட்சியேற்றுங் கருவியாகத் திண்ம அல்லது திரவச் சேர்வைகளோ அல்லது LOX என்னும் திரவ ஒட்சிசனோ பயன்படுத்தப்படலாம்.
மணிக்கு 40,000 km என்ற ஆரம்ப வேகத்தை எந்தவொரு ரொக்கட்டினாலும் அடைய முடியாது. எனவே முதலில் g என்னும் புவியீர்ப்பு காரணமான ஆர் முடுகலுக்குச் (9.8 mS*) சமனான ஆர்முடுகலுடன் மேபேறச் செய்து பின்னர் படிப்படியாக ரொக்கட்டின் வேகத்தை அதிகரிக்கச் செய்வதே இப்போது கடைப்பிடிக்கப்படும் பொதுவான செயல் முறையாகும். புவித்தரையிலிருந்து மேல்
 

நோக்கிச் செல்லச் செல்ல வளிமண்ட லத்தின் அடர்த்தி குறைவதோடு புவியீர்ப் பும் நலிவடைகின்றது. எனவே ஓரளவு
Saturn-5 மேலெழும்புகிறது
உயரத்தை அடைந்த பின்னர் இயக்கத் துக்கு எதிரான தடை குறைவடைவதனால் ஆர்முடுகலை அதிகரிப்பது எளிதாகின்
சந்திரனை நோக்கி அனுப்பப்படு கின்ற விண்வெளிக் கப்பல்களும் செவ் வாய், வெள்ளி, வியாழன் போன்ற கிரகங் களை நோக்கி அனுப்பப்படும் ஆளில்லாக் கலங்களும் பல அடுக்குகளைக் கொண்ட இராட்சத ரொக்கட்டுக்களைப் பயன்ப டுத்தி விண்வெளிக்கு ஏவப்படுகின்றன. மூன்று அல்லது நான்கு அடுக்குகளைக்
உச்சிப்பகுதியிலேயே ஏவப்பட வேண்டிய விண்கலம் அல்லது செய்மதி பொருத் தப்பட்டிருக்கும். இயக்கத்தின் ஆரம்ப கட்டத்தில் ரொக்கட் என்ஜின் வழங்கும் உந்த விசையானது விண்கலம் உட்பட ரொக்கட்தொகுதியின் மொத்த நிறையின் இரண்டு மடங்காக இருந்தால் மாத்திரமே gக்குச் சமனான ஆர்முடுகலொன்றை அடைய முடிகிறது.
மனிதனைச் சந்திரனில் இறக்கிய அபொல்லோ விண்வெளிக் கப்பல்களை ஏவுவதற்குப் பயன்படுத்தப்பட்ட Saturn -
5 என்ற ரொக்கட் வகையை நாம் உதார
ணத்துக்கு எடுத்துக் கொள்வோம். இந்த இராட்சத ரொக்கட் 11 m உயரமுடையது. இதன் உச்சிக்கு அண்மையிலேயே விண் வெளி வீரர்களைக் கொண்டு செல்லும் விண்கலம் பொருத்தப்பட்டிருந்தது.
Saturn - 5 ரொக்கட் மூன்று அடுக் குகளைக் கொண்டது. இது இயங்க ஆரம்பிக்கும் போது முதலாம் கட்டத்தில் அமைந்துள்ள 5 பெரிய என்ஜின்களும் சுத்திகரிக்கப்பட்ட மண்ணெண்ணெயை யும் திரவ ஒட்சிசனையும் எரியச் செய்து மொத்தமாக 3400 தொன் (19.5 மில்லியன்
கொண்ட இந்த ரொக்கட்டுக்களின்
W நியூட்டன்) உந்த விசையை ஏற் படுத்துகின்றன. மு த ல ம் கட்டத்திலுள்ள எ ரி பொருள் முழுவதும் 150 செக்கன்களுக் குள் முற்றாகத்
000 லீற்றர் எரிபொருளு பயன்படுத்தப்படுகின்றன.
முதலாம் கட்டம் எரிந்து முடிந்ததும் இரண்டாம் கட்டம் செயற்பட ஆரம்பிக்கும். அதற்கிடையில் என்ஜின்களையும் காலி யான எரிபொருள் தொட்டிகளையும் கொண்ட முதலாம் கட்டம் ஏனைய பகுதி யிலிருந்து பிரிந்து விழுந்து விடும். இதனால் ரொக்கட்டின் நிறை பெருமள வில் குறைக்கப்படுவதோடு மேலும் உயர்ந்த வேகத்தை அடைவது இலகு வாகின்றது.
இரண்டாம் கட்டத்திலும் ஐந்து என்ஜின்கள் அதே முறையில் திரவ எரி பொருட்களைப் பயன்படுத்தி மொத்தம் 4535 தொன் உந்து விசையை ஏற்படுத் துகின்றன. 6.5 நிமிட நேரம் எரிகின்ற இந்தக் கட்டம் விண்வெளிக் கலத்தை 115 km உயரம் வரை கொண்டு செல்லும். இந்திலையில் இரண்டாம் கட்டம் முழுவ தும் பிரிந்து விழுந்து விடும். இதனால் மொத்தச் சுமை மேலும் குறைவடையும். இதனையடுத்து மூன்றாம் கட்டம் செயற் படத் தொடங்கும்.
25

Page 15
ന
ديني
nk
மூன்றாம் கட்டத்தில் ஒரு தனி என்ஜினே உண்டு. இது திரவ ஐதரசனை எரிபொருளாகப் பயன்படுத்துகின்றது. இங்கும் திரவ ஒட்சிசனே தகனத் துணை யாக உபயோகிக்கப்படுகின்றது. இந்த என்ஜின் 25 நிமிடங்கள் இயங்கும் போது விண்வெளிக்கப்பல் மணிக்கு 27350 km என்ற வேகத்தை அடைந்துவிடும்.பூமியை விண்வெளியில் வலம் வருவதற்கு இந்த வேகம் போதுமானதாகும். பூமியை வலம் வந்தவாறே மூன்றாம் கட்ட என்ஜின் மீண்டும் இயங்கத் தொடங்கும் போது மணிக்கு 40, 000 km ஐ விடக் கூடிய வேகத்தை அடையும் விண்கலம் புவியீர்ப் பிலிருந்து தப்பிச் சந்திரனை நோக்கிச் செல்ல ஆரம்பிக்கும். ر','''
இப்போது பயன்படுத்தப்படும் Space shuttle என்னும் வகையைச் சேர்ந்த கொலம்பியா போன்ற விண்வெளிக் கப்பல்கள் Saturn வகை ரொக்கட்டு களிலிருந்து வேறுபடுகின்றன. இவற்றை மேலே ஏவுவதற்குப் பயன்படுத்தப்படும் ஆரம்ப கட்ட ரொக்கட் என்ஜின்கள் கழற்றி எறியப்படுகின்ற போதிலும் ஏனைய பகுதிகள் மீண்டும் பயன்படுத்தப்படக் கூடியனவாக உள்ளன. புவிக்குத் திரும்பி வரும் போது சாதாரண விமானங்களைப் போன்று தரயிறங்கக் கூடிய இவ்விண் கலங்களை மீண்டும் மீண்டும் புதுப்பித்துப் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத் தக்கது.
புவியைச் சுற்றியுள்ள சுற்றுப் பாதை யொன்றில் புவியை வலம் வருவதற்காக அனுப்பப்படும் தகவல் தொடர்புச் செய் மதிகள், வானிலைச் செய்மதிகள், இரா ணுவ உளவுபார்க்கும் செய்மதிகள் போன்ற வையும் ரொக்கட்டுகளைப் பயன்படுத் தியே ஏவப்படுகின்றன. எனினும் இவை புவியீர்ப்பிலிருந்து முற்றாகத் தப்பிச் செல்வதில்லை. இந்த ரொக்கட்டுகள் மணிக்கு சுமார் 28, 800 km வேகத்தை
அடையும் போது 125 km உயரத்தை எட்டி விடுகின்றன.இவ்வுயரத்தில் ரொக்கட்டின் இயக்கம் நின்றதும் செய்மதி விடுவிக் கப்படும். பின்னர் அது ஒரு சுற்றுப் பாதை யில் புவியை வலம் வரத் தொடங்கி விடுகின்றது.
ரொக்கட்டுக்களைப் பயன்படுத்தி விண்கலங்களை விண்வெளிக்கு அனுப்ப முடியும் என்ற கருத்தை முதன்முதலில் விஞ்ஞானரீதியாக விளக்கியவர் கொன்ஸ்
டான்றின் ஸியொல்கோவ்ஸ்கி (Konst
antin E. Ziolkovsky 1857 - 1935) 6T6ůTM) ரஷ்ய விஞ்ஞானி ஆவார். இவரே விண் வெளிப் பிரயாணத் தின் தந்தை என அ  ைழ க் க ப் படுகின்றார்.
செவிப் புலன் கு  ைற பா ட் டி ன்
காரணமாக இளமையில் கல்வி பெற
26
முடியாமற் போன போதிலும் இவர் பிற் காலத்தில் சுயமாகக் கல்வி கற்று ஆசிரி யரானார். ரொக்கட்டுகள் செய்யப்படு வதற்குப் பல தசாப்தங்களுக்கு முன்னரே பல அடுக்கு ரொக்கட்டுக்களைப் பயன் படுத்துவதன் அனுகூலங்கள் பற்றி இவர் விவரமாக எழுதி வைத்திருந்தார். எனினும் ரொக்கட் எதனையும் தயாரிப்பதற்குத் தேவையான வசதிகள் இவருக்குக் கிடைக்கவில்லை.
திரவ வடிவ எரி
 ெப ா ரு  ைள க் கொண்டு இயங்கிய முதலாவது ரொக்கட் டைத் தயாரித்த பெரு மை அமெரிக்கரான ரொபர்ட் கொடார்ட் (Robert Hutchins Goddard) என்பவரையே
சாரும். இத்தகைய ரொக்கட் ஒன்றை இவர் 1926
இல் இயக்கிக் காட்டினார்.
 
 

நயகராவை
நோக்கி . . .
அது 1998 ஜூலை 4ம் திகதி. அன்று காலையில் கனடாவின் ஒன்றா ரியோ மாகாணத்தில், பெல்வில் என்ற
அழகிய நகரிலுள்ள எனது நண்பரின்
வீட்டிலிருந்து எமது பிரயாணத்தை ஆரம் பித்தோம். அன்று மாலைக்குள் அமெரிக் காவின் பென்ஸில்வேனியா மாநிலத்தி லுள்ள பிட்ஸ்பேர்க் நகரை அடைவதே எமது நோக்கமாக இருந்தது. வழியில் உலகப் புகழ்பெற்ற நயகரா நீர்வீழ்ச்சி களைத் தரிசித்துச் செல்வது எனவும் தீர்மானித்திருந்தோம்.
எனது நண்பர் என்னோடு ஒன்றாகப் படித்தவர். இப்போது நீண்டகாலமாகக் கனடாவில் வாழ்கின்றவர். அவருக்கு அங்குள்ள பாதைகள் பற்றிநல்ல பரிச்சயம் இருந்தது. எனினும் பிட்ஸ்பேர்க் வரை செல்வதற்குரிய மிக இலகுவான பாதை எது என்பதை முந்திய நாள் இரவில் இண்டர்நெட் மூலம் பெற்றுக் கொண்டே நாம் ஆயத்தமானோம். நண்பரே காரைச் செலுத்தினார். அது மணிக்கு 140 km வேகத்தில் பறந்தது. கனடாவின் பாதை களில் அத்தகைய வேகத்தில் செல்வது கஷ்டமாக இருக்கவில்லை. எனினும்
அனுமதிக்கப்பட்ட உச்ச வேகத்தை விட அது கூடுதலாகவே இருந்தது.
இண்டர்நெட் தந்த அறிவுறுத்தல் களைச் சரியாகப் பின்பற்றியவாறே சென்ற நாம் பி. ப. 2.00 மணியளவில் Niagara Falls என்ற நகரை அடைந்தோம். இந்நகர் கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தி (6) (SLL) g(556,667 ppg). Niagara Falls என்ற பெயருடைய இன்னொரு நகர் கனேடிய எல்லையின் மறுபுறத்தில் அமெ ரிக்காவின் நிவ்யோர்க் மாநிலத்திலும்
27
இருக்கின்றது. இவ்விரு நகர்களுக்கும் ஊடாக அமெரிக்காவையும் கனடாவையும் பிரித்தவாறு நயகராநதி ஓடுகின்றது. இது கடல் மட்டத்திலிருந்து 174 m உயரத் திலுள்ள ஈf(Erie) என்ற பேரேரியிலிருந்து 80 m உயரத்தில் அமைந்துள்ள ஒன்றா ரியோ ஏரியை நோக்கிப் பாய்கின்றது.
நயகரா நதியிலிருந்து உருவாகின்ற இரண்டு பிரதான நீர் வீழ்ச்சிகள் இருக் கின்றன. இவ்விரு நீர்வீழ்ச்சிகளும் கூட் டாக இணைந்துநயகராநீர்வீழ்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன. பூர்வீக அமெரிக்க -இந்திய மொழியில் 'நயகரா' என்பது "முழங்குகின்ற நீர்" என்று பொருள்படும். இவ்விரு நீர்வீழ்ச்சிகளிலும் ஒன்று அமெரிக்கப் பகுதியில் இருக்கின்றது. 6T60T(36) gg, American falls 6T60T LIGth. கனடாவினுள் இருக்கின்ற நீர்வீழ்ச்சி Canadian falls என அழைக்கப்படுகின்றது. பின்னையது குதிரைலாட வடிவத்தில் வளைந்து இருப்பதனால் Horseshoefals என்ற பெயரும் அதற்குண்டு.
அமெரிக்க நீர்வீழ்ச்சிக்கும் கனேடிய நீர் வீழ்ச்சிக்கும் இடையில் Goat Island என்ற பெயருடைய பாறைப் பாங்கான தீவொன்று இருக்கின்றது. நயகரா நதி இத்தீவைக் கடக்கும் போது இரு கிளைகளாகப் பிரிவதனாலேயே இவ்விரு நீர்வீழ்ச்சிகளும் உருவாகியுள்ளன. அமெரிக்க நீர் வீழ்ச்சியின் அகலம் 320 m

Page 16
Whirlpool Bridge مر
Rainbow Bridge
CANADA
(1050 அடி) ஆகும். அதன் நீர் 56 m (184 அடி) கீழ் நோக்கிப் பாய்கின்றது. இந்நீர் வீழ்ச்சியின் ஒரு பக்கத்தில் Bridal Veil fals என்ற குறுகியநீர்வீழ்ச்சிப்ாய்கின்றது. Luna Island என்ற பெயருடைய சிறு தீவொன்று இவ்விரு நீர்வீழ்ச்சிகளையும் பிரிக்கின்றது.
Horseshoe falls 6T66T60th 5(360Tyu நீர்வீழ்ச்சியே பார்ப்போர் மனதைக் கவர்ந் திழுக்கின்றது. அதன் 675 m (2215 அடி) நீளமுடைய வளைந்த விளிம்பிற்கு மேலா கப் பேரிரைச்சலோடு பாயும் பிரமாண் டமான நீர்த்திணிவு 54 m (76 அடி) தூரம் கீழே பாய்கின்றது. நாம் கனடாப் பகுதியி லிருந்து கொண்டே நீர்வீழ்ச்சிகளை அவதானித்தோம். உண்மையில் அவற் றின் கம்பீரத் தோற்றத்தையும், விசாலத் தையும், அழகையும் வெறும் வார்த்தை களால் விவரித்துவிட முடியாது. வைத்த கண் வாங்காமல் பல நிமிடங்கள் அவற் றைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். எங்கும் வியாபித்து நின்ற பேரோசையும் விழும் நீரிலிருந்து மேலே கிளம்பும் நீர்த்திவலைகளால் ஆன பனிமூட்டமும் புற உலகை மறக்கச் செய்துவிடுகின்றன.
இந்நீர்வீழ்ச்சிகளினூடாகப் பகல் வேளையில் ஒரு செக்கனுக்கு சுமார் 2830 கன மீற்றர் (100,000 கன அடி) நீர் பாயவிடப்படுகின்றது. இரவிலும் சுற்றுப் பிரயாணிகள் வராத காலங்களிலும் இதீன்
28
E3rd Wei Fails
Luna island
பாதியளவே பாயவிடப்படும். நீர் பாயும் அளவைக் கட்டுப்படுத்துவதற்கான சிக் கலான பொறிமுறையொன்று 1963ம் ஆண்டு செய்து முடிக்கப்பட்டுள்ளது. மொத்த நீரில் 90% கனேடிய நீர்வீழ்ச் சியினூடாகவும் 10% அமெரிக்க நீர்வீழ்ச் சியினூடாகவும் பாயக்கூடியவாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கனேடிய நீர்வீழ்ச்சியில் வந்துவிழு கின்ற பிரமாண்டமான நீர்த்திணிவின் காரணமாக அதன் அடிப்பகுதியில் 55 m (180 அடி) ஆழமான பள்ளமொன்று உருவாகியுள்ளது. இப்பகுதியில் உருவாகி L6ir GT (Eiffs 606) Maid of Mist GT60T அழைக்கப்படுகின்றது. இதுநீர்வீழ்ச்சியின் அடிப்பகுதியிலிருந்து சுமார் 4 km தூரத் Sig5 6.Suri S556ir 6Tg). Maid of Mist என்ற பெயருடைய இரண்டு பெரிய வள்ளங்கள். நனையாதவாறு விசேட உடைகளனிந்த பிரயாணிகளை ஏற்றிக் கொண்டு நீர்வீழ்ச்சியின் அடிவாரம் வரை சென்று வருகின்றன. 5 டொலர் செலுத்தி னால் ரெயின்கோட் போன்ற விசேட உடையை அணிவித்து இவ்வாறு அழைத் துச் செல்கின்றனர். நீர்வீழ்ச்சியின் கீழ்ப் பகுதியை நோக்கி இந்த வள்ளங்கள் நகர் வதைக் காணும் போது உடல் சிலிர்க்கத் தொடங்குகின்றது.
கனடாவும் அமெரிக்காவும் நீர்
மின்னுற்பத்திக்காக இவ்விரு நீர்வீழ்ச்
 
 
 
 
 
 

சிகளையும் பயன்படுத்திக் கொள்கின்றன. அமெரிக்காவின் நிவ்யோர்க் மாநிலத்தில் Lewiston என்ற இடத்துக்கருகில் Robert Moses என்ற பெயருடைய நீர்மின் வலு
நிலையம் உள்ளது. கனடாவில் Queens
ton 6T6örp gll 556) Sir Adam Beck என்னும் நீர்மின்வலு நிலையம் இருக்கின் றது. இவற்றுக்குப் பெரிய கால்வாய்கள், சுரங்கப்பாதைகள் முதலியவற்றினூடாக நீர் வழங்கப்படுகின்றது. கனேடிய மின்வலு நிலையத்திலிருந்து இலவசமாக வழங்கப் படும் மின்னோட்டத்தைப் பயன்படுத்தி இரவு வேளைகளில் 24 பெரிய துருவு விளக்குகள் நயகரா நீர்வீழ்ச்சிகளை வண்ண ஒளியால் அழகுபடுத்துகின்றன.
நயகராவின் கவர்ச்சியிலிருந்து ஒருவாறு விடுபட்டு பிட்ஸ்பேர்க் நோக்கிய எமது பிரயாணத்தை மீண்டும் ஆரம்பித் தோம். கனடாவிலிருந்துநயகரா நதியைக் கடந்து அமெரிக்காவுக்குள் செல்வதற்கு ஒன்பது பாலங்கள் இருக்கின்றன. இரு புறங்களிலுமுள்ள Niagarafalsநகரங்கள் இரண்டையும் இணைக்கின்ற வானவிற் LITGoth (Rainbow bridge) 1941 B6) builth திகதி திறக்கப்பட்டதாகும். நாம் இந்தப் பாலத்தைப் பயன்படுத்தாமல் சிறிது தூரம் சென்று கனடாவின் Fort Erie என்ற இடத்தையும் அமெரிக்காவின் Bufalo பகுதியையும் தொடுக்கின்ற சமாதானப் LITGuj605 (Peace bridge), Dool (B5IIb.
1927 இல் திறக்கப்பட்ட இப்பாலம் கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடை யிலான சமாதானத்தையும் நல்லுறவையும் நினைவுகூர்வதற்காக நிர்மாணிக்கப்பட்ட தாகும். இரு நாடுகளுக்கும் இடையிலான போக்குவரத்தில் பெரும்பகுதி இதனூடா கவே இடம்பெறுகின்றது. இந்தப் பாலத்தி னுரடாகச் செல்லும் போது இரு நாடுகளை
யும் பிரிக்கின்ற எல்லைக்கோடு பாலத் திற்குக் குறுக்கே வரையப்பட்டிருப்பதைக் கண்டேன். இக்கோட்டின் ஒரு புறத்தில் கனடாவின் தேசியக் கொடியும் மறுபுறத் தில் அமெரிக்கத் தேசியக் கொடியும் இரண்டுக்கும் இடையில் ஐ.நா. சபையின் கொடியும் பறந்துகொண்டிருந்தன. மிகவும் சுமுகமான முறையில் தமது எல்லைகளை வகுத்துக் கொண்டு நல்லுறவைப் பேணும் அவ்விரு நாடுகளினதும் சிறப்பினைக் கண்டு களிப்படையாமல் இருக்க முடிய வில்லை.
அமெரிக்காவின் 222வது சுதந்திர தினமான அன்று எல்லையைக் கடந்து அமெரிக்காவுக்குள் புகுந்த நாம் எல்லைப் பிரதேசத்திலுள்ள குடிவரவு மற்றும் சுங்க அதிகாரிகளைத் திருப்திப்படுத்திய பின் நிவ்யோர்க் மாநில எல்லைக்குள் நுழைந் தோம். அங்கிருந்து மீண்டும் எமது நீண்ட பிரயாணத்தை அதிவேகத்தில் தொடர்ந் தோம்.
இடையில் சிறிது வழிதவறிவிட்ட படியால் கார் பிட்ஸ்பேர்க் விமான நிலை யத்தை அடைந்த போதுநான் லொஸ் ஏஞ் ஜலிஸ் நோக்கிச் செல்லவேண்டிய 6.30 மணி விமானம் ஏற்கனவே புறப்பட்டுப் போயிருந்தது. நண்பரிடம் விடை பெற்றுக் கொண்ட நான் இரவு 8.30க்குச் செல்லும் அடுத்த விமானத்திலேயே லொஸ் ஏஞ்சலிஸ் நோக்கிப் பறந்தேன். நாலரை மணித்தியாலங்களாகப் பல அமெரிக்க நகரங்களின் மீது பறந்த அந்தப் பிரயா ணத்தின் போது நாடெங்குமுள்ள அமெ ரிக்க மக்கள் தங்கள் நாட்டின் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதற்காகக் கொளுத்தி மகிழ்ந்த அலங்கார வண்ண வானவேடிக்கைளை வானிலிருந்தே அவ தானிக்க முடிந்தது.
“இன்றைய உலகின் பிரச்சினைகளுக்குக் காரணம் குற்றம் செய்பவர்களின் தொகை அதிகரித்திருப்பதல்ல. மாறாக, குற்றங்கள் செய்யப்படுவதைக் கண்டும் காணாதது போல் இருப்பவர்களின் தொகை அதிகரித்து வருவதே காரணமாகும்.”

Page 17
ಕ್ಲಿನ್ತಿ பாகிஸ்தானுக்கும் இடையே மூன்று பெரிய யுத்தங்கள் ஏற்படுவதற்குக் காரணமாக அமைந்த காஷ்மீர் பிரச்சினை இதுவரையும் தீர்வு காணப்படாத ஒன்றாகவே இருக்கின்றது. இன்றும் இருநாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பிரதேசத்தில் சிறு சிறு கைகலப் புக்கள் நடந்தவண்ணம் இருப்பதோடு காஷ்மீர் பிரச்சினை ஒரு சர்வதேச பிரச்சி னையாக உருவெடுத்தும் வருகின்றது.
இந்திய உபகண்டத்தின் வடக்கில் அமைந்துள்ள காஷ்மீரின் மொத்த நிலப் பரப்பு 222,236 சதுர km ஆகும். வடக்கில் ஆப்கானிஸ்தான், சீனா என்பனவும், கிழக்கில் சீனாவும், தெற்கில் இந்தியாவின் ஹிமாசல் பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களும் மேற்கில் பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புறமாகாணம், பஞ்சாப் மாகாணம் என்பனவும் காஷ்மீரின் எல்லை களாக இருக்கின்றன.
காஷ்மீர் மலைப் பாங்கான பிரதேச மொன்றாகும். வடக்கில் கராகோரம் மலைத் தொடரின் உயர்ந்த பனிபடர்ந்த சிகரங்களும் தெற்கிலே ஜம்மு பகுதியைச் சூழ்ந்துள்ள மலைகளும் காணப்படு கின்றன. நாட்டின் மத்திய பகுதியில் அழ கான காஷ்மீர் பள்ளத்தாக்கு இருக்கின் றது. இந்து மாநதி காஷ்மீரினூடாகப் பாய்கின்றது. காஷ்மீரை "இந்தியாவின் சுவிட்ஸர்லாந்து" என அழைப்பது உண்டு.
கிறிஸ்துவுக்குப் பல நூற்றாண்டு
களுக்கு முன்னர் வடக்கு மலைப் பிர
தேசங்களில் வாழ்ந்த 'காஷி' என்ற மக்கள்
கூட்டத்தின் பெயரிலிருந்தே காஷ்மீர் என்ற
காஷ்மீர் 3 பிரச்சினை... < کت
30
பெயர் தோன்றியிருக்கக் கூடும் என நம்பப்படுகின்றது. ஆதியில் இந்துக்களின் ஆதிக்கத்துக்கு உட்பட்டிருந்த இப்பிர தேசத்தில் கி.மு. 245 ஆம் ஆண்டளவில் பெளத்த சமயம் அறிமுகப்படுத்தப்பட்டது. கி. பி. 14ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் முஸ்லிம் ஆட்சியாளர்களின் கீழ் வந்த காஷ்மீர் அதே நிலையில் இரண்டு நூற் றாண்டுகள் திகழ்ந்தது. 1590ம் ஆண்ட ளவில் முகலாயப் பேரரசரான அக்பர் காஷ்மீரைக் கைப்பற்றி அதனை அப்பேர ரசின் ஒரு பகுதியாக இணைத்துக்கொண் LITri.
1756 முதல் ஆப்கானியர்களின் ஆட்சிக்குட்பட்டிருந்த காஷ்மீரை 1812ம் ஆண்டு ரஞ்சித்சிங் என்ற பஞ்சாப்பிரதேச மகாராஜா கைப்பற்றிக் கொண்டார். இந்தி யாவின் பெரும் பகுதியை பிரித்தானியர் கள் கைப்பற்றிய பின்னர் ஜம்மு பகுதியின் ஆட்சியாளராக இருந்த காலுப் சிங் என்ற சீக்கியர் 1846 இல் பிரித்தானியரோடு செய்து கொண்ட ஒர் உடன்படிக்கையின் படி காஷ்மீரின் ஆட்சியாளராகத் தன்னை ஆக்கிக் கொண்டார்.
1947இல் பிரித்தானியர்களால் இந்தியா பிரிக்கப்பட்ட போது பாகிஸ்தான் என்ற புது முஸ்லிம் நாடு உதயமாகியது. அவ்வேளையில் காஷ்மீரின் சனத்தொகை யில் பெரும்பான்மையினராக முஸ்லிம்கள் இருந்தனர். எனவே காஷ்மீர் யாருக்குச் சொந்தம் என்பது பற்றி ஒர் இழுபறி நிலை ஏற்பட்டது. வரலாற்றுரீதியான உறவுகளின் அடிப்படையில் காஷ்மீர் தனக்கே உரியது என இந்தியா வாதாடியது. எனினும்
 
 

காஷ்மீர் முஸ்லிம்களில் ஒரு பிரிவினர் பாகிஸ்தானோடு இணைவதையே விரும் பினர். இவ்வாறு பாகிஸ்தானோடு இணை யும் முயற்சியை காஷ்மீரின் அப்போதைய ஹிந்து ஆட்சியாளரான ஹரிசிங் எதிர்த் தா.
இந்நிலையில் பாகிஸ்தான் தனது படைகளைக் காஷ்மீருக்கு அனுப்பி அப் பகுதியைக் கைப்பற்றிக் கொண்டது. இதனையடுத்து ஹரிசிங் காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும் ஒப்பந்தப் பத்திரத்தில் கைச்சாத்திட்டார். எனவே காஷ்மீரில் தனது உரிமையை நிலைநாட்டு வதற்காக இந்தியா தனது இராணுவத்தை அங்கு அனுப்பி பாகிஸ்தானியப் படை களின் மீது தாக்குதலை ஆரம்பித்தது. இரு சாராருக்கும் இடையில் நிகழ்ந்த யுத்தத் தில் பாகிஸ்தானியர்கள்தாம் பிடித்திருந்த பெரும் பகுதியை விட்டுக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 1949 ஜனவரி யில் ஐ.நா. சபையின் தலையீட்டின் மூலம் இருதரப்பினருக்கும் இடையில் யுத்தநிறுத் தம் ஏற்பட்டதோடு அப்போதைய யுத்த நிறுத்த எல்லைக்கோட்டின் அடிப்படையில் காஷ்மீர் இருபகுதிகளாகப் பிரிக்கப்பட்டது.
1962 இல் இடம்பெற்ற இந்திய-சீன யுத்தத்தின் போது இந்தியாவுக்குச் சொந்த மான காஷ்மீரின் வடகிழக்கிலுள்ள லடாக் என்னும் மக்கள் குடியேற்றமில்லாத ஒரு பகுதியைச் சீனா கைப்பற்றிக் கொண்டது. இப்போது காஷ்மீரின் பெரும் பகுதி இந்தியாவின் ஆதிக்கத்தின் கீழ் இருக் கின்றது. ஜம்மு-காஷ்மீர் என்ற பெயரில் இந்தியாவின் மாநிலமொன்றாகக் கருதப் படும் இப்பகுதியின் பரப்பு 100, 569 சதுர km ஆகும். இதன் தலைநகராக பூரீ நகர் திகழ்கின்றது. 1991ம் ஆண்டின் கணிப் பீட்டுப்படி இம்மாநிலத்தின் சனத்தொகை 7, 718,700 ஆக இருந்தது.
பாகிஸ்தானின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதி ஆஸாத் (சுதந்திர) காஷ்மீர் என
31.
அழைக்கப்படுகின்றது. இதன் தலைநகர் முஸாபரா-பாத் ஆகும். 78,932 சதுர km பரப்பளவுடைய ஆஸாத் காஷ்மீரில் சுமார் 3 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். சீனாவின் வசமுள்ள பகுதியின் பரப்பு சுமார் 42,735 சதுர km ஆகும்.
இந்தியாவின் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீரில் சிவில் நிர்வாகம் அடிக்கடி சிக்கல்களுக்கு உள்ளாகி வந்துள்ளது. காஷ்மீரை இந்திய ஆதிக்கத்திலிருந்து விடுவித்துச் சுதந்திர நாடாக்க வேண்டும் என்ற இலட்சியத்தோடு போராடும் காஷ்மீர் விடுதலைக் குழுக்கள் இந்திய நிர்வாகத் துக்கும் இராணுவத்துக்கும் எதிராக வன் முறைத் தாக்குதல்களை நடாத்திவருகின் றன. இக்குழுக்களுக்கும் பாகிஸ்தான் நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவுவ தாக இந்தியா குற்றஞ்சாட்டுகின்றது.
தங்கள் தலைவிதியைத் தாங்களே தீர்மானித்துக் கொள்வதற்குரிய வாய்ப்பு காஷ்மீர் மக்களுக்கு வழங்கப்பட வேண் டும் என பாகிஸ்தான் சர்வதேச ரீதியில் கோரிக்கை விடுத்து வருகின்றது. இவ்வா றான வாய்ப்பொன்று வழங்கப்பட்டால் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட காஷ்மீர் பாகிஸ்தானுடன் இணைந்துகொள்ளக் கூடும் என இந்தியா அஞ்சுகின்றது. இதனால் காஷ்மீர் மக் களின் விடுதலை உணர்வுகளை இரா ணுவ பலத்தினால் அடக்க அது முனை கின்றது எனப் பாகிஸ்தான் கூறுகின்றது. காஷ்மீரில் இந்தியப் படையினரின் மனித உரிமை மீறல்கள் சர்வதேச சமூகத்தின் கவனத்துக்குப் பலமுறை கொண்டுவரப் பட்டுள்ளன.
1965 ஆம் ஆண்டில் மேற்குப் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடை யிலுள்ள ரன் ஒப் கட்ச் (Rann of katch) என்ற பகுதியில் இரு நாட்டுப் படைகளும் மோதிக் கொண்டன. இந்த யுத்தம் படிப்படியாக பஞ்சாப், காஷ்மீர் ஆகிய

Page 18
டிக்கை கைச்சாத் |திடப்பட்ட போது:
பிரதேசங்களுக்கும் பரவியது. யுத்த டாங்கி களும் விமானப் படையும் பயன்படுத் தப்பட்ட இந்த யுத்தம் 1965 செப்டம்பரில் உச்சக் கட்டத்தை அடைந்த போது அப்போதைய சோவியத் யூனியனின் பிரதமரான அலெக்ஸி கொஸிஜின் இரு நாடுகளுக்கும் இடையில் சமாதான முயற்சிகளை மேற்கொண்டார். இதன் விளைவாக இந்தியாவுக்கும் பாகிஸ்தா னுக்கும் இடையில் சமாதான உடன்படிக் கையொன்று தாஷ்கண்ட் (Tashkent) நகரில் கைச்சாத்திடப்பட்டது. பாகிஸ்தான் ஜனாதிபதி ஐயூப் கானும் இந்தியப் பிரதமர் லால் பஹதூர் சாஸ்திரியும் இதில் கைச்
சாத்திட்டனர். உடன்படிக்கையில் கைச்
சாத்திடச் சென்ற பிரதமர் சாஸ்திரி தாஷ் கண்டில் திடீரென மரணமடைந்ததும் குறிப்பிடத்தக்கது.
1971இல் பாகிஸ்தானில் உள்நாட்டுப் போர் ஏற்பட்டது. கிழக்குப் பாகிஸ்தானில் முஜீபுர்ரஹ்மான் என்பவரின் தலைமையில் பிரிவினைப் போராளிகள் தனி வங்காள தேசமொன்றுக்கான போராட்டத்தை ஆரம் பித்தனர். அவர்களை அடக்குவதற்குப் பாகிஸ்தான் தனது இராணுவ பலத்தைப் பயன்படுத்திய போது இந்தியா அதில் தலையிட்டது. இதனால் இரு நாடுகளுக் கும் இடையில் 1971 டிசம்பரில் கடும் போர் மூண்டது. இந்தப் போரில் கிழக்குப் பாகிஸ்தானில் இருந்த பாகிஸ்தானிய
32
இராணுவம் முற்றாகத் தோற்கடிக்கப் பட்டது. இறுதியில் கிழக்குப் பாகிஸ்தான் பங்களாதேஷ் என்ற பெயரில் புதிய நாடொன்றாக மாற்றமடைந்தது.
1990இல் இந்தியப் படையினருக்கும் காஷ்மீர் பிரிவினை ஆதரவாளர்களுக்கும் இடையிலான மோதல்கள் அதிகரிக்கத் தொடங்கின. 1996 இல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்தியா நடத்திய தேர்தலைப் பிரிவினைக் குழுக்கள் பகிஷ்கரித்ததோடு பூீநகரிலும் வாக்களிப்புநிலையங்களிலும் குண்டுகளையும் ரொக்கட்டுகளையும் வெடிக்கச் செய்து தமது எதிர்ப்பைத் தெரிவித்தன. பெரும்பாலான வாக்காளர் கள் இந்தியப் படையினரால் ஆயுத முனையில் பலவந்தமாக எடுத்துச் செல்லப்பட்டு வாக்களிக்கச் செய்யப் பட்டனர். இத்தேர்தலில் The National conference என்னும் கட்சியினர் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றனர். இவர்கள் காஷ்மீர் கூடுதலான தன்னாட்சி உரிமை களோடு இந்தியாவின் ஒரு பகுதியாக
இருப்பதையே விரும்புகின்றனர்.
இன்று இந்தியாவும் பாகிஸ்தானும் அணுகுண்டுகளைத் தயாரித்திருப்ப தோடு தமது படைபலத்தைப்பும் பெருமளவு பெருக்கிக் கொண்டுள்ளன. காஷ்மீர் பிரச்சினைக்குத் திருப்திகரமான தீர் வொன்று காணப்படவில்லையாயின் பயங்கரமான போரொன்று நிகழக்கூடிய ஆபத்து எப்போதும் இருந்துகொண்டே இருக்கும்.
இந்நிலையில், 1999 பெப்ரவரியில் இந்தியப் பிரதமர் வாஜ்பே அவர்கள் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்து பாகிஸ் தான் பிரதமர் நவாஸ் ஷெரீபுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தியிருப்பது ஒரளவு நம்மிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. எனினும் இரு நாடுகளும் தங்கள் நிலைப் பாட்டில் குறிப்பிடத்தக்க மாற்றமெதனை யும் செய்திருப்பதாகத் தெரியவில்லை.
 
 
 
 

8.
கம்பியூட்டர் விஞ்ஞானம்
மைக்ரோப்ரொஸஸர் (Microprocessor)
என்றால் என்ன?
பெர்ஸனல் கம்பியூட்டர் பயன்படுத்தும் ஒருவரிடம் உங்களிடம் என்ன வகையான கம்பியூட்டர் இருக்கிறது? என்று கேட்டால் அவர் நிச்சயமாகத் தனது கம்பியூட்டரின் வர்த்தகப் பெயரைச் சொல்ல மாட்டார். மாறாக அதனுள் அமைந்துள்ள ‘சிப் (chip) எனப்படும் மைக்ரோ ப்ரொஸஸரின் (Microprocessor) பெயரை அல்லது குறியீட்டெண் ணையே கூறுவார். காரணமென்ன?
கம்பியூட்டர்களில் மட்டுமன்றி நாம் பயன்படுத்துகின்ற மைக்ரோவேவ் அவன் கள் (Microwave Ovens), வீடியோ கெஸட் ரெகோடர்கள் (VCR), கல்கியுலேடர்கள்,
போடோ கொபியர்கள், லேஸர் பிரிண்டர்கள் ரோபோக்கள், வாகனங்கள் முதலியவற்றில்
அவற்றின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த வும், சந்தர்ப்பங்களுக்கேற்றவாறு தீர்மானங் களை மேற்கொள்ளவும் மைக்ரோப்ரொ ஸஸர்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இவ்வாறான சுய கட்டுப்பாடுடைய டிஜிட்டல் இலக்ட்ரோனிக் சாதனங்களின் (Intelligent Devices) Slygyri GOT Gla Liburt". டுக் கூறாக மைக்ரோப்ரொஸஸர் பயன்படு கின்றது. எனவேதான் பெர்ஸனல் கம்பியூட் டர்கள் தம்முள் இருக்கும் மைக்ரோப்ரொ ஸஸரின் பெயரால் அழைக்கப்படுகின்றன.
பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இது பல இலக்ட்ரோனிக் சுற்றுகள் மிகச் சிக்கன மாகவும் நுண்ணியதாகவும் ஒரு பிலாஸ்டிக் கவசத்தினுள் அடைக்கப்பட்டதும், மற்றைய இலக்ட்ரோனிக் கூறுகளுடன் இணைக்கக் கூடிய இணைப்பு முனைகளைக் (pins) கொண்டுள்ளதுமான ஒரு கூறாகும். மைக் ரோப்ரொஸஸரும் இவ்வாறானதொரு IC தான். எனினும் இவை VLSI தொழில் நுட்
Eri1856ir '99.6m)." (Integrated Circuit)
33
செய்யப்பட்ட
பத்தைப் பயன்படுத்திச் 60)6JLL JITG5lo. VLS (Very Large Scale Integration) என்பது மிக நெருக்கமாகவும்,நுண் னியதாகவும் (1 மில்லியனுக்கும் அதிகமான ட்ரான்ஸிஸ்டர்களைப் பயன்படுத்திச்) செய் யப்பட்ட ICகளைக் குறிக்கின்றது. இவ்வா றான ICக்களைத்தான் சுருக்கமாக Chips என்று அழைக்கின்றோம்.
மைக்ரோப்ரொஸ்ஸர்கள் துவித எண் 3,6061T (Binary Numbers) glycuso)LLUT55 கொண்ட குறிப்பிட்ட ஒரு மொழியை (அறி வுறுத்தற் தொகுதியை) விளங்கிக் கொண்டு அதன்படி செயற்படக் கூடியவை. இரண்டு வித்தியாசமான மின்னழுத்த வேறுபாடு களைக் (Voltages) கொண்டே துவித எண் கள் இவற்றுக்கு உணர்த்தப்படுகின்றன. தற் பொழுது பயன்படுத்தப்படும் அதிவேக மைக் ரோப்ரொஸஸரொன்றினுள் ஏறத்தாழ 10 மில்லியன் ட்ரான்ஸிஸ்டர்கள் அமைந்துள்
660.
மைக்ரோப்ரொஸஸர்கள் அவற்றின் வலுவுக்கும் வேகத்துக்கும் ஏற்றவாறு வகைப்படுத்தப்படுகின்றன. வலுவானது, ஒரு குறிப்பிட்ட மைக்ரோப்ரொஸஸரால் எத் தனை துவித எண்களைக் கொண்ட ஒரு சொல்லைக் கையாள முடியும், எத்தனை மில் லியன் அறிவுறுத்தல்களை ஒரு செக்கனில் ஏற்றுக் கொண்டு செயற்படுத்த முடியும் (MIPS - Million Instructions Per Second) என்பனவற்றை அடிப்படையாக வைத்தே கணிக்கப்படுகின்றது.
(36.15th MHz (Mega Hertz) 6T6örp அலகில் குறிக்கப்படுகிறது. மைக்ரோப்ரொ ஸஸரின் உள்ளே அமைந்துள்ள ஒவ்வொரு சுற்றும் (Circuit) செயற்படுவதற்கு கடிகாரத் துடிப்புக்கள் (Clock pulses) தேவைப்படு

Page 19
கின்றன. இதற்காக மைக்ரோப்ரொஸஸரி னுள் துடிப்புக்களைப் பிறப்பிக்கும் ஒரு கடி காரம் அமைந்துள்ளது. இது ஒரு செக்கனில் எத்தனை துடிப்புக்களைப் பிறப்பிக்கின்றது என்பதையே மைக்ரோ ப்ரொஸஸரின் வேகம் குறிக்கிறது. உதாரணமாக 450 MHz கம்பியூட்டரொன்றின் மைக்ரோப்ரொஸஸர் கடிகாரம் ஒரு செக்கனுக்கு 450 மில்லியன் துடிப்புக்களைப் பிறப்பிக்கின்றது.
மைக்ரோப்ரொஸஸரின் பிலாஸ்டிக் கவசம் சற்றுப் பெரிதாக இருப்பினும் அதன் (plgé dial LIG)608, (Circuit Board) 63 yai) நுனியின் பருமனுடையதாகும். சாதாரண இலக்ட்ரோனிக் சாதனங்களில் பயன் படுத்தப்படும் ட்ரான்ஸிஸ்டரான BJT (Bipolar Junction Transistor) 6608, ட்ரான்ஸிஸ்டர்கள் மைக்ரோப்ரொஸ்ஸர் உற்பத்தியில் பயன்படுத்தப்படுவதில்லை. Lorports MOSFET (Metal Oxide Semi-conductor Field Effect Transistor) 6603560uuě சேர்ந்த மிகநுண்ணிய, வெற்றுக் கண்களால் பார்க்க முடியாத பருமனையுடைய, குறைந்த மின்வலுவில் செயற்படக்கூடிய ட்ரான்ஸிஸ் டர்களே பயன்படுத்தப்படுகின்றன. இவை ஏனைய இலக்ட்ரோனிக் கூறுகளின் தொழில்களையும் செய்யக் கூடியவாறு ஒழுங்குபடுத்தப்பட முடியும். எனவே பெரும் பாலான VLSI சுற்றுக்களில் ட்ரான்ஸிஸ் டர்கள் மாத்திரமே பயன்படுத்தப்படுகின்றன.
முதன் முதலில் மைக்ரோப்ரொஸஸ ரொன்றை 1969ம் ஆண்டு அமெரிக்கா 6$gygirGIT Intel Corporation 6T6örp Soj660Th உற்பத்தி செய்தது. எவ்வாறாயினும் இன்று Motorola, Cyrix, AMD, NexGen, DEC (Digital Equipment Corporation) 9. "LIL பல நிறுவனங்கள் மைக்ரோப்ரொஸஸர் களை உற்பத்தி செய்கின்றன.
குறித்தவொரு மைக்ரோப்ரொஸஸர் பயன்படுத்தும் அறிவுறுத்தற் தொகுதியின் (Instruction Set) தன்மையைப் பொறுத்து 96 si6Op CISC (Complex Instruction Set Computing) 6Taiph RISC (Reduced instruction Set Computing) 6T6örgpin 61605
34
படுத்தலாம். இன்று உலகில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் IBM மற்றும் IBM 100% compatible (IBMகம்பியூட்டரைப்பின்பற்றிச் செய்யப்பட்ட) கம்பியூட்டர்களில் Intel, AMD, Cyrix, NexGen போன்ற நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும்01SC வகையான மைக்ரோப்ரொஸஸர்களே பயன்படுத்தப்படு கின்றன.
எனினும் Mac என்று அழைக்கப் LIGh Apple Macintosh Lobosh PowerPC போன்ற பெர்ஸனல் கம்பியூட்டர்களில் Motorola நிறுவனத்தின் RISC வகையான மைக்ரோப்ரொஸஸர்களே பயன்படுகின்றன. இவற்றுள் RISC மற்றும் CISC வகைகளில், ஒரு வகைக்காகச் செய்யப்பட்ட கம்பியூட் டருக்காகத் தயாரிக்கப்பட்ட கம்பியூட்டர் மென்பொருள் நிகழ்ச்சிகளை (Software Programs) மற்றைய வகையில் இயக்க முடியாது. ஒவ்வொரு நிறுவனமும் தான் உற்பத்தி செய்யும் மைக்ரோப்ரொஸஸர் களுக்கு குறியீட்டெண்களையும் பெயர் களையும் இடுகின்றது. உதாரணமாக Intelஇன் மைக்ரோ ப்ரொஸஸர்கள் 8086, 80286 முதல் 80486 வரை ஆரம்பத்தில் இலக்கமிடப்பட்டாலும் தற்போது Pentium, Pentium II என்று பெயரிடப்படுகின்றன. ஒவ்வொரு வகையும் செயல்திறன் மற்றும் வேகம் என்பவற்றில் வேறுபட்டதாகும்.
தற்போதுள்ள மைக்ரோப்ரொஸஸர் 5(156ir 915 (6.15(p60)Luigi Digital Equipment Corporation960TITốio 9 huġġ6 GléFüuuüuGlü DEC Alpha AXP gb(5th. இதன் வேகம் தற்பொழுது 1 GHz (Giga Hertz = 1000 MHz) gé, élity usir GTS). இவை சாதாரண பெர்ஸனல் கம்பியூட்டர் களில் பயன்படுத்தப்படாவிடினும் விசேட தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுகின் றன.உதாரணமாக அண்மையில் வெளிவந்த Jurassic Park, Lost World, Titanic (ELITsarp திரைப்படங்களைத் தயாரிப்பதற்கு DEC Alpha மைக்ரோ ப்ரொஸஸரைக் கொண்ட கம்பியூட்டர்களே பயன்படுத்தப்பட்டுள்ளன. தொகுப்பு: இர்ஷாத் ஹாபிஸ்
 

மற்றும் தொலைக்காட்சிச் சேவைகளுக் கும் செய்திகளை வழங்கும் செய்தி நிறு வனங்களுள் ரொயிட்டர் (Reuter) நிறு வனம் முன்னணியில் நிற்கின்றது.
ரொயிட்டர் செய்திச் சேவையின் ஆரம்பகர்த்தா போல் ஜூலியஸ் ரொயிட் Li (Paul Julius Reuter) 6TGÖTAM) GiggsfLn6of யர் ஆவார். 1816ம் ஆண்டு ஜெர்மனியில் கஸெல் என்ற இடத்தில் பிறந்த இவருக் குப் பெற்றோர் இட்ட பெயர் Israel Beer Josaphat என்பதாகும். 1844 இல் தான் இவர் தனது பெயரை ரொயிட்டர் என மாற் றிக் கொண்டார்.
ஆரம்பத்தில் புத்தக விற்பனையாள
ராக இருந்த ரொயிட்டர் 1849இல் சுயாதீன
மான செய்தி முகவர் நிறுவனமொன்றைப் பரிஸ் நகரில் ஆரம்பித்தார். எனினும் சில மாதங்களில் அம்முயற்சி தோல்வியடைந் தது.1850இல் அவர் ஜெர்மனியில் Achen என்ற இடத்திலும் பெல்ஜியத்தில் பிரஸல்ஸ் நகரிலும் செய்தி சேகரிக்கும் நிலையங்கள் இரண்டை ஆரம்பித்தார். அக்காலத்தில் ஜெர்மன் தந்திச் சேவை Achenஇல் முடிவடைந்தது. பெல்ஜிய தந்திச் சேவை பிரஸல்ஸில் ஆரம்பித்தது. இவ்விரு இடங்களுக்கும் இடையில் தந் தித் தொடர்பில் இடைவெளியொன்று காணப்பட்டது. எனவே தனது இருகாரியா லயங்களுக்கும் இடையே செய்திகளை அனுப்புவதற்கு ரொயிட்டர் புறாக்களைப் பயன்படுத்தினார். பெரும்பாலும் ஐரோப் பிய பங்குச் சந்தை விலைகள் பற்றிய செய்திகளே இவ்வாறு அனுப்பப்பட்டன.
1851இல் ரொயிட்டர் லண்டன் நகருக் குக் குடிபெயர்ந்தார். லண்டன் பங்குப் பரிவர்த்தனை நிலையத்துக்கு அண்மை
GT:ssii செய்திச் சேவை
பத்திரிகைகளுக்கும் வானொலி
35
யில் அவர் தந்திக் காரியாலயமொன்றை ஆரம்பித்தார். ஆரம்பத்தில் லண்டனிலும் பரிஸிலும் உள்ள தரகர்களுக்கு பங்குச் சந்தை விலைகளை அனுப்புவதிலேயே அவர் ஈடுபாடு காட்டினார். எனினும் விரை வில் பொதுவான செய்திகளையும் அனுப் பக்கூடிய வகையில் அச்சேவை விரிவாக் கப்பட்டது.
அந்த தசாப்தத்தின் இறுதிப் பகுதி யாகும் போது ஐரோப்பா முழுவதிலும் ரொயிட்டரின் அலுவலகங்கள் ஆரம்பிக் கப்பட்டிருந்தன. அவற்றிலிருந்து லண்டன் டைம்ஸ்' உட்படப் பல முக்கிய செய்தித் தாள்களுக்கு செய்திகள் அனுப்பி வைக்கப்பட்டன. பின்னர் இங்கிலாந்தி லிருந்து ஜெர்மன், பிரான்ஸ் ஆகிய நாடு களுக்கும் பிரான்ஸிலிருந்து அமெரிக்கா வுக்கும் தந்திக் கம்பிகளை நிர்மாணித்த ரொயிட்டர் தனது செய்திச் சேவையை மேலும் விரிவாக்கினார்.
தனது வியாபார முயற்சிகளை 1865 g6io Reuter’s Telegram Company 6T6óTAO பெயரில் அவர் கூட்டிணைத்தார். பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் மத்திய கிழக்கு, இந்தியா, சீனா, அவுஸ்திரேலியா, ஆபிரிக்கா ஆகிய பிரதேசங்களுக்கு ரொயிட்டரின் தந்திச் சேவை வியாபித்தபோது அவரது செய்திச் சேவையும் உலகளாவியதாக மாறியது.
ரொயிட்டர் 1878 இல் ஒய்வு பெற்றுக் கொண்டு கம்பனியின் நிர்வாகத்தைத் தனது மகன் ஹேபர்ட் என்பவரிடம் l'UGODLġġ5Tri. 1916 g6io Roderick Jones என்பவர் கம்பனியின் தலைவராகவும்

Page 20
பங்காளராகவும் மாறினார். அவர் கம்பனி யின் பெயரை Reuters Ltd. என மாற்றி யமைத்தார். 1920களில் லண்டன் செய்தித் தாள்களுக்குச் செய்தி வழங்குவதற்காக டெலி பிரிண்டர் கருவிகளைப் பயன் படுத்த ஆரம்பித்த ரொயிட்டர் நிறுவனம் ஐரோப்பாவுக்குச் செய்தி விநியோகம் செய்ய வானொலியை உபயோகிக்கலா யிற்று.
1925இல், பல பிரிட்டிஷ் செய்திப் பத்திரிகைகளை உள்ளடக்கிய PressAsSociation என்ற அமைப்பு ரொயிட்டர் நிறுவனத்தின் பிரதான பங்குதாரராகியது. ரொயிட்டர் நிறுவனத்தின் அப்போதைய தலைவரான ஜோன்ஸ், பிரிட்டிஷ் அரசுக் குச் சார்பானவர் என சந்தேகிக்கப்பட் டதால் அவர் நிறுவனத்திலிருந்து வெளி யேற்றப்பட்டார். ரொயிட்டர் செய்தி நிறுவ னத்தின் சுயாதீன இயல்பைப் பாதிக்கும் வகையில் எந்தத் தனிநபரோ அல்லது அமைப்போ அதில் ஆதிக்கம் செலுத்த முடியாத வகையில் அதன் பங்குக் கட் டமைப்பு இப்போது ஒழுங்குபடுத்தப் பட்டுள்ளது.
இரண்டாம் உலகப் போரின் (19391945) ShairGOTri, Associated Press (AP), United Press International (UPI) முதலிய அமெரிக்க செய்தி நிறுவனங்கள் ரொயிட்டருடன் போட்டியிடலாயின.இதன் விளைவாக ரொயிட்டர் தனது கவனத்தை
நிதித்துறை தொடர்பான தகவல்களின் பக்கம் கூடுதலாகச் செலுத்தத் தொடங் கியது.
19649 ŝi) Stockmaster 6T6örp சேவையை ரொயிட்டர் நிறுவனம் அறி முகப்படுத்தியது. இதன் மூலம் உலகின் எந்தப் பகுதியினதும் பங்குச் சந்தை விலைகளைக் கம்பியூட்டர் மூலம் எவரும் அறிந்து கொள்ள முடியும். 1973இல் அறிமுகப்படுத்தப்பட்ட Reuters Monitor என்ற சேவை, கம்பியூட்டரினூடாக உல கின் நாணய மாற்று வீதங்களில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளை அவ்வப்போது அறிந்து கொள்ள உதவுகின்றது. இவற்றினூடாக ரொயிட்டர் கம்பனியின் வருமானம் பல மடங்கு அதிகரித்தது.
1990களில் தகவல் தொடர்புத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி செய் திச் சேவையை மேலும் நவீனமயப்படுத்து வதில் ரொயிட்டர் நிறுவனம் முனைந்து flairpg). g6örg Reuters Television முன்னர் Visnews) சேவை 90க்கும் மேற்பட்டநாடுகளிலுள்ள தொலைக்காட்சி நிலையங்களுக்குத் தினமும் பல்வேறு வகையான செய்தி வீடியோப் படங்களை செய்மதியினூடாக வழங்கிக் கொண்டிருக் கிறது.
g'(ELITS Reuters Holdings PLC என அழைக்கப்படும் ரொயிட்டர்நிறுவனம் தனது தலைமையத்தை லண்டன் மா நகரில் கொண்டுள்ளது.
மூளைக்கு வேலை - விடைகள்
SEND ARUMBU BYPOST 64நிமிடங்கள்
8 மடங்கு அதே (15”) பருமனுடையதாக
5. அந்த வீடு வடதுருவத்தின் மீது
அமைக்கப்பட வேண்டும்
6. 24
7. 17 (1900 ஒரு லீப் வருடமல்ல)
குறிப்பு:- அரும்பு இதழ்-8இல் பிரசுரிக்கப்பட்ட விவேக வினாக்களில் 2ம் வினாவுக்குரிய விடை 11 ஆகும். எனினும் தவறுதலாக 10 எனத் தரப்பட்டிருந்தது.

இ ங்கிலாந்து நாட்டுக் கணித மே  ைத யு ம் பெளதிகவியலா ளருமான ஸேர் ஐஸக் நியூட்டன் அவர்கள் வரலாற்றில் தோன்றிய மிக உன்னதமான விஞ்ஞானிகளுள் ஒருவராகக் கருதப்படு கின்றார். நவீன விஞ்ஞானம், கணிதம் என்பவற்றின் முன்னேற்றத்திற்கு அவர் வழங்கிய பங்களிப்பு அளப்பரியதாகும்.
நியூட்டன், இங்கிலாந்திலுள்ள லிங்
கன்ஷயர் பிரதேசத்திலுள்ளWoolsthorpe,
என்ற இடத்தில் 1642 டிசம்பர் 25ம் திகதி (கிரிகரியின் புதிய கலண்டரின்படி 1643 ஜனவரி 4ம் திகதி) பிறந்தார். அவர் பிறப் பதற்கு முன்பே அவரது தந்தை இறந்து விட்டார். நியூட்டனுக்கு 2% வயதான போது தாயார் மறுமணம் செய்த காரணத்
தால் அவர் தன் பாட்டியிடம் வளரவேண்டி
ஏற்பட்டது. அயலிலிருந்த Grantham என்ற ஊரில் கல்வி பெற அனுப்பப்பட்ட அவர் அங்குள்ள விடுதியொன்றில் தங்கி யிருந்து கல்வி கற்றார். அவரது அறையில் Clark என்ற பெயருடைய அபோத்திக்கரி ஒருவரும் தங்கியிருந்தார். இவர்தான் நியூட்டனின் உள்ளத்தில் விஞ்ஞானப் பரிசோதனைகள் செய்வதற்கான ஆர்வத் தை ஏற்படுத்தினார்.
நியூட்டன், 1661 இல் கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தின் ட்ரினிட்டி கல்லூரி யில் சேர்ந்து உயர் கல்வி பயின்றார். 1665 இல் அவர் தனது இளமாணிப் பட்டத்தை (Bachelor's degree) Guiboló, GigsmatioT டார். அவ்வருடத்தில் பிளேக் என்னும் கொள்ளை நோய் பரவிய காரணத்தால் ட்ரினிட்டிக் கல்லூரி மூடப்பட்டது. எனவே நியூட்டன் தமது ஊரிலுள்ள பண்ணைக்
37
ஸேர் ஐஸக் நியூட்டன்
(Sir Isaac Newton)
குச் சென்று அங்கு இரண்டு வருடங் களைக் கழித்தார். அவ்விரு வருடங்களும் நியூட்டனின் வாழ்க்கையில் மிகவும் பய னுள்ள ஒரு காலமாக அமைந்தன. பிற் காலத்தில் அவர் விருத்தி செய்த கணித விஞ்ஞானக் கருத்துக்களுக்குரிய அத்தி வாரம் இக்காலத்திலேயே இடப்பட்டது.
ஒளியின் நிறப்பிரிகை பற்றிய பரி சோதனைகளையும் சிறந்த தொலை நோக்கியொன்றுக்கான ஆடியொன்றைத் தயாரிக்கும் முயற்சிகளையும் அவர் இந்தக் காலத்தில் தான் ஆரம்பித்தார். மரத்தி லிருந்து கீழே விழுந்த அப்பிள் பழத்தை அவதானித்து அவர் கண்டுபிடித்ததாகக் கூறப்படும் ஈர்ப்பு பற்றிய கோட்பாடும் இந்தப் பண்ணையில் வைத்தே உருவாகி யது. அத்தோடு நுண்கணிதத்தின் அடிப் படைகளையும் அவர் இக்காலத்திலேயே கண்டறிந்தார். அப்போது அவரின் வயது 24 ஆக இருந்தது.
1667 இல் மீண்டும் ட்ரினிட்டிக் கல் லூரியில் சேர்ந்த நியூட்டன் 1668 இல் (upg|LDITGof LJ'L-5605 (Master's degree) பெற்றுக் கொண்டார். பல்கலைக் கழகத் தின் வழமையான பாடத்திட்டத்தில் ஆர் வம் காட்டாத அவர் தனக்கு ஆர்வமும் பிடிப்புமுள்ள கணிதம், இயற்கைத் தத்து வம் போன்ற துறைகளிலேயே அதிக ஈடுபாடு காட்டினார். எவரது வழிகாட்ட லுமின்றிச் சுயமாகவே கெயற்பட்ட அவர் கணிதத் துறையில் ஏற்பட்டுவந்த புதிய விருத்திகளை ஆராயலானார். இதன் விளைவாகப்பல அடிப்படைக் கண்டுபிடிப் புக்களை அவரால் செய்ய முடிந்தது.
1668 இல் நியூட்டன் தனது முதலாவது தொலை காட்டியை நிர்மா னித்தார்.தனது 26வது வயதில் (1669இல்)

Page 21
அவர் கேம்பிரிஜில் ஒரு கணிதப் பேரா சிரியராக நியமிக்கப்பட்டார். பேராசிரியர் பதவியில் அவர் ஒரு வாரத்துக்கு ஒரு மணித்தியாலம் மட்டுமே விரிவுரையாற்ற வேண்டியிருந்தது. அத்தோடு மாணவர் களை மேற்பார்வை செய்வதற்கு நான்கு மணித்தியாலங்கள் போக மீதி நேரம் முழுவதும் அவரது சொந்த ஆய்வுகளுக்கு
ஒதுக்கப்படக் கூடியதாக இருந்தது. எனவே பேராசிரியராக இருந்த 22 வருடங் களிலும் தீவிரமானதும் தடையற்றதுமான ஆராய்ச்சியில் ஈடுபட அவருக்கு வாய்ப்புக் கிட்டியது.
நியூட்டனின் முதலாவது சாதனை
கணிதத்துறையிலேயே இடம்பெற்றது. 1666 இல் அவர் விருத்திசெய்த நுண் கணிதம் (Calculus) எனும் கணித முறை யானது, நவீன கணிதத் துறை பாரம்பரிய கிரேக்க கேத்திரகணிதத்துக்கு அப்பால் முன்னேறிச் செல்ல வழிவகுத்தது. நுண் கணிதத்தை நியூட்டன் கண்டுபிடித்த போதிலும் அவர் அதனை ஐரோப்பிய
கணித உலகுக்கு அறிமுகப்படுத்த
முயற்சி எடுக்கவில்லை. பிறரின் கண்ட னங்களையும் விமரிசனங்களையும் பற்றி நியூட்டன் கொண்டிருந்த இயல்பான அச் சம் காரணமாக அவர் தன் கண்டுபிடிப் புக்களைப் பற்றிய தகவல்களை வெளி யிடத்தயங்கினார்.
இந்நிலையில் ஜெர்மனியைச் சேர்ந்த Gehm islf 6öü6oflLösu (Gottfried Von Leibniz) என்பவர் நுண்கணிதக் கோட் பாடுகளைத் தானாகக் கண்டுபிடித்து1684 இல் அதனை வெளியிட்டார். எனினும் 1704ம் ஆண்டு வரை நியூட்டன் தனது கண்டுபிடிப்பை வெளியிடாத காரணத் தால் நுண்கணிதத்தை முதலில் கண்டு பிடித்தவர் யார் என்ற உரிமைப்போராட்டம் 1705 முதல் 1724 வரை நீடித்தது. இதனால் லீப்னிட்ஸுடன் மோதிக்கொள்ள வேண்டி ய நிலை நியூட்டனுக்கு ஏற்பட்டது.
நியூட்டன் தயாரித்த முதலாவது ஒளியியல் தொலைகாட்டி
நியூட்டன் ஈடுபாடு காட்டிய இன் னொரு துறை ஒளியியல் (optics) ஆகும். சூரிய ஒளியானது பலநிறங்களால் ஆக்கப் பட்டுள்ளது என்பதை அரியமொன்றி னுாடாக ஒளிக்கதிர்களைச் செலுத்தி அவர் செய்துகாட்டினார்.நிறங்கள் பற்றிய தனது கொள்கையை அவர் 1672 இல் லண்ட னிலுள்ள ரோயல் சொசைட்டிக்கு அறிவித் தார். ரோயல் சொசைட்டியின் வெளியீ டொன்றில் அது பிரசுரிக்கப்பட்டபோது அதற்குக் கடுமையான கண்டனம் எழும் பியது. இதனால் மனம் தளர்ந்த நியூட்டன் தனது கேம்பிரிஜ் படிப்பறைக்குள் ஒதுங்கி வாழத் தொடங்கினார். அதேவேளை1672 இல் அவர் லண்டன் ரோயல் சொசைட் டியின் உறுப்பினராகத் (F.R.S) தெரிவு செய்யப்பட்டார்.
ஒளியியல் பற்றிய ஈடுபாட்டை முற்றா கக் கைவிட்ட நியூட்டன் 1679ம் ஆண்டள வில் ஈர்ப்பு பற்றிய கணிதப் பிரச்சினையில் கவனம் செலுத்தலானார். நீண்டகாலமாக
அவரது மனதை ஈர்த்திருத்த இவ்விடயம்
38
பற்றி ஆழமாக ஆய்வுசெய்த போதிலும் தான் கண்டறிந்தவற்றை நூல் வடிவில் பிரசுரிக்க அவர் விரும்பவில்லை.இவ்வாறு நூல்களை எழுதி வெளியிடுவது தனது ஆராய்ச்சிக்கு இடையூறு செய்யும் என அவர் கருதினார்.
1684இல் பிரபல பிரிட்டிஷ் வானவிய லாளரும் கணித மேதையுமான எட்மண்ட் M06Ở (Edmund Halley) (Gly;"L6O)6OTě சந்தித்து கோள்களின் இயக்கம் பற்றிக்
 
 

கலந்துரையாடலானார். இதனையடுத்து நியூட்டன் இயக்கம் பற்றிய தனது விதி களை உருவாக்கினார். இம்மூன்று விதி களும் நவீன இயக்கவியலின் அடைப்படை களாக அமைந்துவிட்டன. இவ்விதிகளை
கெப்லரின் சுழற்சி இயக்கம் பற்றிய
விதிக்குப் பிரயோகித்த நியூட்டன், ஈர்ப்பு (universal gravitation) usinóu 6$560LL உருவாக்கினார். இது பற்றிய கொள்கை 6DuLu gļ6Jíři Philosophiae Naturalis Principia Mathematica 6T6öTAO BIT Gurrës எழுதி 1687 இல் வெளியிட்டார். எட்மண்ட் ஹலீயின் தூண்டுதலே இதற்குக் காரண மாக அமைந்தது. இந்நூலின் வெளியீடு விஞ்ஞான வரலாற்றில் ஒரு திருப்புமுனை
யாக அமைந்தது.
இந்த நூலை வெளியிட்டபோதும் நியூட்டனுக்குப்பெரிய பிரச்சினையொன்று ஏற்பட்டது. இந்நூலில் உள்ள பிரதான கருத்துக்கள் நியூட்டன் தம்மிடமிருந்து திருடிக்கொண்டவையே என ஆங்கிலேய பெளதிகவியலாளரான ரொபர்ட் ஹஜூக் என்பவர் குற்றம் சுமத்தலானார். எனினும் பெரும்பாலான வரலாற்றாசிரியர்கள் இந்தக் குற்றச்சாட்டு தவறானது என்றே குறிப்பிட்டுள்ளனர்.
1688 இல் நியூட்டன், கேம்பிரிஜ் பல்
கலைக்கழகத்தின் பிரதிநிதியாக இங்கி
லாந்தின் பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து வந்த நான்கு வருடங்களும் அவர் கடுமை யாக உழைக்க வேண்டி ஏற்பட்டது. 1693 இன் கோடைக்காலத்தில் நியூட்டனுக்குக் கடுமையான மனவெழுச்சிச் சீர்குலைவு ஏற்பட்டது. அவருக்குப்பைத்தியம் பிடித்து விட்டதாகவும் வதந்திகள் பரப்பப்பட்டன. சிறிது காலத்தின் பின் அவரது நிலைமை
சீரான போதிலும் அவருடைய ஆக்கத் திறமைகள் பழைய நிலைக்குத் திரும்ப வில்லை.
நியூட்டன் எப்போதும் வறுமையோடு தான் வாழ்ந்தார். அவருக்கு உதவும் முக மாக இங்கிலாந்து அரசு அவரை லண்ட னிலுள்ள அரச நாணய உற்பத்திச் சாலை யின் (Royal mint) நிருவாகியாக நியமித் தது. 1696 இன் பின் நியூட்டன் அங்கேயே வசித்தும் வந்தார்.1703இல் அவர் ரோயல் சொசைட்டியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். இறக்கும் வரை அவர் இந்தப் பதவியை வகித்தார். எனினும் இந்தப்பதவிக்காலத்தின்போதுநியூட்டன் நடந்துகொண்ட விதம்'பலர் அவரோடு மோதிக்கொள்வதற்கு வழிவகுத்தது.நுண் கணிதத்தின் மூலகர்த்தா யார் என்பது பற்றி லீப்னிட்ஸோடு இருந்த பிரச்சினை யை விசாரிப்பதற்கு ஒரு குழுவைநியமித்த நியூட்டன், தனக்குச் சார்பான முறையில் குழுவின் அறிக்கையைத் தானே இரகசி யமாக எழுதினார்.
1705இல் பிரிட்டிஷ் மகாராணி Anne என்பவரால் நியூட்டன் ஸேர் பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
நியூட்டன் 1727 இல் தனது 85வது வயதில் காலமானார். அவர் இறப்பதற்கு முதல்நாள் மாலையில் ரோயல் சொசைட்டி யின் கூட்டமொன்றுக்குத் தலைமை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.ஈர்ப்பு விதி, இயக்கவிதிகள், ஒளியியல் தொலை காட்டி, நிறக்கொள்கை, குளிரல் விதி, நுண்கணிதம் எனப் பல்வேறு விடயங்கள் தொடர்பாகத் தனது பெயரை வரலாற்றில் பதித்துவிட்டுச் சென்ற அவர் ஒரு மாபெரும் விஞ்ஞானி என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. -
உள்ளம் மட்டுமே!
முறிந்து போன பின்னரும் வேலை செய்யக்கூடிய ஒரே உபகரணம் மனித
T.E. Kalen

Page 22
மொழி
ந்து-ஐரோப்பிய மொழிக் குடும் பத்தைச் சேர்ந்த ஜெர்மனிய மொழிகள் என்னும் உபகுடும்பத்தின் வழிவந்த ஒரு கிளை மொழியே ஜெர்மன் மொழியாகும். ஜெர்மனியில் சுமார் 71 மில்லியன் மக்களின் தாய் மொழியாக இது திகழ்கின்றது. அத்தோடு அவுஸ்திரியா, லக்ஸம்பேர்க், வடக்கு சுவிட்ஸர்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளிலும் பல மில்லியன் மக்கள் இம்மொழியைப் பேசுகின்றனர். ஐரோப்பா வுக்கு வெளியே ஐக்கிய அமெரிக்க இராச்சியங்கள், கனடா, பிரேஸில், ஆர் ஜண்டினா ஆகிய நாடுகளிலும் ஜெர்மன் மொழி பேசும் மக்கள் கணிசமான எண் ணிக்கையில் வாழ்கின்றனர். ஜெர்மன் மொழியில் உயர் ஜெர்மன், தாழ் ஜெர்மன் என இரண்டு பிரிவுகள் உண்டு.
14ம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை ரோமப் பேரரசின் உத்தியோகபூர்வ எழுத்து மொழியாக லத்தீன் மொழியே திகழ்ந்து வந்தது. ரோமப் பேரரசரான நான்காம் லூயி (1314 - 47) என்பவரின் ஆட்சிக்காலத்தில் அரசவை ஆவணங்களுக்குரிய மொழியாக ஜெர்மன் ஏற்றுக்கொள்ளப்பட்டது. கி. பி. 1480 1500 காலப் பகுதியில் Saxony, Meissen ஆகிய நகராட்சிப் பகுதிகளிலும் லீப்ஸிக், விட்டன்பேர்க் ஆகிய பல்கலைக் கழகங்களிலும் உத்தியோக மொழியாக ஜெர்மன் அறிமுகப்படுத்தப்பட்டது. கி. பி. 1500ஆகும்போது கல்வி கற்ற வகுப்பினரின் எழுத்துமொழியாக ஜெர்மன் மாறியிருந்தது. 16ம் நூற்றாண்டில் மார்ட்டின் லூதர் பைபிளை ஜெர்மனுக்கு மொழிபெயர்த்தார். இந்த மொழிபெயர்ப்பும், அவர் எழுதிய
40
ஏனைய சமய நூல்களும், நியம வடிவான ஜெர்மன் மொழியொன்று சூழ உள்ள பிரதேசங்களில் பரவுவதற்கு வழிவகுத்தன. 1600ம் ஆண்டாகும் போது இவ்வடி வம் ஜெர்மனியின் இலக்கிய மொழியாக உறுதி பெறலாயிற்று.
20ம் நூற்றாண்டிலே தான் ஜெர்மன் சொற்களுக்குநியமமான எழுத்துக் கூட்டும் (Spelling) முறையொன்று உருவாக்கப் பட்டது. அதுவரை வெவ்வேறு பிரதேசங் களில் வெவ்வேறு முறையில் சொற்கள் எழுதப்பட்டு வந்தன. எனினும் நாடளாவிய ரீதியில் சீரான உச்சரிப்பு முறையொன்று காணப்படுவதில்லை. நன்கு படித்த ஜெர் மனியர்கள் கூட பேசும் போது தமது பிராந்தியத்துக்குரிய உச்சரிப்பு முறைகளை யே பயன்படுத்துகின்றனர்.
ஆங்கில மொழியில் பயன்படுத் தப்படும் ரோமன் எழுத்துக்களே ஜெர்மனி லும் உள்ளன. ஆங்கில அரிச்சுவடியின் 26 எழுத்துக்களுக்கும் மேலதிகமாக ,ே a, b, ப் என நான்கு எழுத்துக்கள் உள்ளன.
எனினும் பெரும்பாலான எழுத்துக் களின் உச்சரிப்புமுறையில் சிறிது வேறுபாடு காணப்படுகின்றது. உயிரெழுத்துக்கள் உச்சரிக்கப்படும் முறை பின்வருமாறு: a எழுத்து அ அல்லது ஆ என உச்சரிக்கப்படுகிறது. உ+ம்: addrasse = அட்ரஸே - (விலாசம்) Name = நாமெ -
(பெயர்)
à 6T(95605 gyúléfilGuóálóù Packet + Parentஇல் வரும். a ஐ உச்சரிப்பதுபோல் உ+ம்: Gaste (கெஸ்டெ) விருந்தாளி, Spater (ஸ்பேடர்) தாமதம் e எழுத்து எ அல்லது ஏ என உச்சரிக் கப்படும். உ+ம்: Esta- எஸ்ட்ட முதலாவது) இதே போன்று
1= இ அல்லது ஈ உ+ம்: Ich -இஷ் நான்)
O - ஒ உ+ம்: Oben - ஒபன் (மேலே) 6 = eu - உ+ம்: ofnet (ஒய்ப்னெட்) திறந்த,

Mochte (மொய்ஷ்ட்ட) விருப்பம் u - உ அல்லது ஊ உ+ம்: Muter
முட்டர்) தாய் ப்=ue=உ+ம்:Buro (பியூரோ) காரியாலயம். Grப்n (குருய்ன்) பச்சை நிறம்
 ெம ய் யெ மு த் து க் க  ைள ப்
பொறுத்தமட்டில் பின்வரும் வித்தியாசங் களை இனங்காணலாம்: b - சொல்லின் ஆரம்பத்தில் ஆங்கில b போன்றும் ஒர் அசையின் இறுதியில் வரும்போது p போன்றும் உச்சரிக்கப்படும். d - சொல்லின் ஆரம்பத்தில் ஆங்கில d போன்றும்ஒர் அசையின் இறுதியில் t போன்று உச்சரிக்கப்படும். .ே g - ஒர் அசையின் இறுதியில் k போன்றும் மற்ற இடங்களில் get இல் உள்ள g போன்றும் ஒலிக்கும். ch - "ஷ்" என்றும் க்ஹ்' என்று தொண்டையின் ஆழத்திலிருந்தும் ஒலிக் கும். உ+ம்: Ich (இஷ்) - நான்
Machen (மாக்ஹென்) - செய்தல் au - 'ஒள' Kaufen (கவுபன்)-
விலைக்குவாங்குதல் ei -ஐ Mein (மைன்) - என்னுடைய eu - "ஒய் - Leute (லொய்ட்ட) - மக்கள் ie-ஈ- Liebe (லிபெ) - அன்பு i-y போன்றே உச்சரிக்கப்படும் Ja (யா)
LO qu - க்வ Quale (க்வல்லே) - கிணறு
6 s - முதலிலும் இடையிலும் வரும் போது Z போன்றும் இறுதியில் வரும்போது SS போன்றும் ஒலிக்கும். Sauber - ஸவ்பர் (சுத்தம்) - Was (வஸ்) - என்ன? 8 - இது SS ஐக்குறிக்கும் விசேட எழுத்தாகும். WeiBer =Weisser (வைஸர்)
வெள்ளை V= f என்ற ஒளியையே தரும். Water
(fபாட்டர்) தகப்பன் Sch= sh GLIT6örg F6öléGlh. (Schule –
(ஷ9லெ)-பாடசாலை st = sht போன்று ஒலிக்கும். Sp = shp (GJITGÖTAMI Gę6ólēsē5th.
Z = ts போன்று ஒலிக்கும். பொதுவான ஜெர்மன் சொற்றொடர் களையும் வாக்கியங்களையும் கீழே தருகின்றோம். Guten Morgen – (G|GlL6öTGLOITffö56ö)-
காலை வந்தனம் Guten Abend – (Glo GlL6örg GlL16ört')–
மாலை வந்தனம் Dankeschon - (டங்கெஷோன்) - மிக்க
நன்றி Danke - (_éIGle) – B6örg) Vielen Dank (fG606öT Lälé)– LJ60
நன்றிகள் Wie heißen Sie? (6f 609MGlsw6öT 6rö?)–
உங்கள் பெயர் என்ன? lch heif8e Peter - (g)éis 605) m6m) [i' Lii) -
என் பெயர் பீட்டர்
Sie - ஸி-நீ, நீங்கள், அவர்கள், உங்கள் sie – (6Mö) – 96) 16T Du - டு -(நி - (சிறுவர்களுக்கும், நன்றாக பழகியவர்களுக்கும் மாத்திரம் பிரயோகிக் கலாம்) பன்மை: Euch - (ஒய்ஹ்) Er - எர்) - அவன் Es - (எஸ்) - அது Wir – (6ńlff) – BiTélé56ff hre - இஹ்ரெ) - உங்களுடைய Herrn – Gl)Mff6ö) – ŚlG) Frau - (fப்ரவ்) - திருமதி, பெண், மனைவி Fraulain - (fப்ரவ்லய்ன்) - செல்வி Auf wiedersehen- (g|5üfü ஸேஹென்) =(Goodbye) மீண்டும்
சந்திப்போம் 1- Eins - (அய்ன்ஸ்) - ஒன்று 2- ZWei - (ஸ்வை) - இரண்டு 3 - Drei-(ட்ரை) - மூன்று 4 - Vier - (fபியர்) - நான்கு 5 - Funf- (fusifi) - gitgil 6 - Sechs - (ஸெஹ்ஸ்) - ஆறு 7-Sieben - ஸிபென்) - ஏழு 8 - Acht - (ஆக்ட்) - எட்டு 9 - Neum - (நொய்ன்) - ஒன்பது 10 - Zehn - (ஸேஹ்ன்) - பத்து
6. Li
(தொகுப்பு உதவி நபீஸ் இஸ்ஸதீன்) ெ

Page 23
ன்றைய ஐக்கிய நாடுகள் சபை யின் முன்னோடியாக இரண்டாம் உலகப் போருக்கு முந்திய காலத்தில் உலக நாடு களுக்கிடையே சமாதானத்தையும் நம்பிக் கையையும் ஏற்படுத்தும் இலட்சியத்துடன் உருவாக்கப்பட்ட அமைப்பே League of Nations என அழைக்கப்பட்ட சர்வதேசச் சங்கமாகும்.
முதலாம் உலகப் போர் முடிவடைந்த பின்னர் வெற்றி பெற்ற நாடுகளுக்கும் தோல்வியுற்ற நாடுகளுக்கும் இடையில் பரிஸ் நகரில் கைச்சாத்திடப்பட்ட வேர் ஸெய் (Versailes) சமாதான உடன்படிக் கையின் அடிப்படையில் 1920 ஜனவரி 10ம் திகதி சர்வதேசச் சங்கம் உருவாக்கப் பட்டது. சங்கத்தை அமைப்பதற்கான சட்ட திட்டங்கள் 1919 ஏப்ரல் 28ம் திகதியே அங்கீகரிக்கப்பட்டிருந்த போதிலும் சமா தான உடன்படிக்கையில் ஜெர்மனி கைச் சாத்திடும் வரை சங்கம் அமுலுக்கு வர வில்லை.
சர்வதேசச் சங்கத்தை உருவாக்குவ தற்கு முன்னின்று உழைத்தவர் அப்போ தைய அமெரிக்க ஜனாதிபதியானவுட்ரோ 656.6m)6ór (Woodrow Wilson) 9.6) Tit. போரில் ஈடுபட்டிருந்த நாட்டுத் தலைவர்க ளுக்குக் கடிதங்கள் அனுப்பியும், சொற் பொழிவுகளை நிகழ்த்தியும் இதற்காக அயராது உழைத்த அவர் சமாதானமாநாட் டில் நேரில் கலந்துகொண்டு சங்கத்தின் சட்ட்விதிகளை வரைவதிலும் ஈடுபட்டார்.
எந்த நாடும் விரும்பினால் சர்வ
42
சர்வதேசச் சங்கம்
(LEAGUE OF NATIONS)
WoodrowWilson
தேசச் சங்கத்தில் உறுப்பினராகும் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. அத்தோடு ஏதேனும் ஒரு காரணத்துக்காகச் சங்கத்திலிருந்து வாபஸ் பெற்றுக் கொள்ளும் சுதந்திரமும் அங்கத்துவ நாடுகளுக்கு இருந்தது. சங்கம் தனது அதிகாரத்தைப் பொதுச் சபை, கவுன்ஸில், நிரந்தரச் செயலகம் ஆகியவற்றினூடாகச் செயற்படுத்தியது. பொதுச் சபையில் எல்லா உறுப்பு நாடு களும் அங்கத்துவம் வகித்தன. ஒவ்வொரு வருடமும் ஜெனிவாநகரிலிருந்த தலைமை யகத்தில் பொதுச் சபை கூடியது.
போரில் வெற்றிபெற்ற வல்லரசு நாடுகளான பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் ஆரம்பத்தில் கவுன்ஸிலின் நிரந்தர உறுப்பினர்களாக இருந்தன. பின்னர் சோவியத் ஒன்றியம், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கும் இவ்வந் தஸ்து வழங்கப்பட்டது. அத்தோடு மூன்று வருடங்களுக்கு ஒருதடவை பொதுச்சபை யால் தெரிவு செய்யப்பட்ட நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளும் கவுன்ஸிலில் இருந் தன. சங்கத்தின் நிர்வாக வேலைகளைச் செயலகம் நிறைவேற்றியது.
ஆக்கிரமிப்பாளர்களுக்கும் சங்கத் தின் சாசனத்தை மீறுபவர்களுக்கும் எதி ராக நடவடிக்கை எடுக்கும் சக்தி சர்வதேச சங்கத்துக்கு இருக்கவில்லை. ஏனெனில் முக்கியமான தீர்மானங்கள் அனைத்துக் கும் அங்கத்துவ நாடுகள் யாவற்றினதும் ஏகோபித்த அங்கீகாரத்தைப் பெற வேண் டிய இக்கட்டான நிலை இருந்தது. இறுதி
 
 
 
 

யில் சங்கம் செயலிழந்து போவதற்கு இது வும் ஒரு காரணமாக அமைந்தது.
எனினும் சர்வதேசச் சங்கத்தின் eff அமெரிக்காவின் அரசியலே முக்கிய காரணம் என வரலாற்றாசிரியர் கள் குறிப்பிடுகின்றனர். சர்வதேசச் சங்கத் தின் தோற்றத்திற்குக் காரணமாக இருந்த அமெரிக்கா அதில் அங்கத்துவம் பெறவே இல்லை. அமெரிக்க செனட் சபை சர்வ தேசச் சங்கத்தின் உருவாக்கத்தைக் கடுமையாக எதிர்த்ததோடு வேர்ஸெய் சமாதான உடன்படிக்கையை அங்கீகரிக்க வும் மறுத்துவிட்டது. இதனால் ஜனாதிபதி வில்ஸனுக்கு எதுவும் செய்ய முடியாமற் போய்விட்டது. அமெரிக்கப் பொதுமக்க ளின் ஆதரவைத் தன் பக்கம் திருப்புவதற் காக அவர் நாடளாவிய பிரசார இயக்க மொன்றை 1919 செப்டம்பரில் ஆரம்பித் தார். எனினும் அந்த முயற்சியின் ஆரம்ப கட்டத்திலேயே அவர்நரம்புத்தளர்ச்சியுற்று வீழ்ந்ததனால், அவருக்குப் பாரிசவாதம்
ஏற்பட்டது. அதுமுதல் அவர் நடமாட முடி
யாத நிலைக்கு ஆளாகி இறுதிவரை சக்கர நாற்காலியிலே இருக்க வேண்டி நேர்ந்தது. எனவே, ஆரம்பத்திலிருந்தே சர்வ தேசச் சங்கத்தில் அமெரிக்காவின் பங் கேற்பு இல்லாமற் போய்விட்டது. சோவியத் யூனியன் கூட 1934ம் ஆண்டு வரை அச்சங்கத்தில் சேரவில்லை. 1935 இல் ஜெர்மனி தனது அங்கத்துவத்தை வாபஸ் பெற்றுக் கொண்டது. எனவே முக்கியமான உலக நாடுகள் அனைத்தும் பங்கேற்கின்ற ஒரு சங்கமாக சர்வதேசச் சங்கம் திகழ முடியவில்லை. உலகநாடுகளுக்கிடையில் போர்கள் ஏற்படுவதைத் தடுக்க வேண்டு மாயின் எல்லா நாடுகளும் சங்கத்தில் சேர்ந்திருப்பது அவசியமாக இருந்தது.
1921 இல் அல்பேனியாவின் மீது யுகோஸ்லாவியா படையெடுத்தபோதும் 1925 இல் கிரேக்கத்தின் மீது பல்கேரியா படையெடுத்த போதும் விளைந்த போர்
43
களைத் தடுப்பதில் சர்வதேசச் சங்கம் ஒரளவு வெற்றிகண்டது. எனினும் அதற் குக் கீழ்ப்படிய விரும்பாத நாடுகள் சங்கத் திலிருந்து விலகிச் செல்லத் தொடங்கிய தால் நிலைமை சீர்குலைய ஆரம்பித்தது. தனது ஆயுத பலத்தை அதிகரித்துவந்த ஹிட்லரின் ஜெர்மனி 1935 இல் விலகிக் கொண்டது. அதைத் தொடர்ந்து, மஞ்சூரி யாவின் மீது படையெடுத்த ஜப்பானும் சர்வதேசச் சங்கத்திலிருந்து விலகிச் சென்றது. எதியோப்பியாவின் மீது படையெ டுத்த பாஸிஸ் இத்தாலி 1937 இல் தனது அங்கத்துவத்தை வாபஸ் பெற்றுக் கொண் L-gk
இந்த நிலையில், மஞ்சூரியாவைக் கைப்பற்றிய ஜப்பானுக்கெதிராகவோ,1938 இல் அவுஸ்திரியாவையும், செகொஸ் லோவாக்கியாவின் பெரும் பகுதியையும் கைப்பற்றிய ஜெர்மனிக்கு எதிராகவோ சர்வதேசச் சங்கம் எதுவித நடவடிக்கை யையும் எடுக்க முடியாமற் போய்விட்டது. 1939 இல் இரண்டாம் உலகப்போர் ஆரம்ப மாகியதும் சர்வதேசச் சங்கத்தின் வங்கு ரோத்துத் தன்மை தெட்டத் தெளிவாகிய தோடு அது முற்றாகச் செயலிழந்தும் போயிற்று.
இரண்டாம் உலகப்போர் முடிவடை யும் தறுவாயில் தான் சர்வதேசச் சங்கத் துக்குப்பதிலாக ஐக்கியநாடுகள் சபையை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டது. 1945 ஏப்ரலில் அமெரிக்காவின் ஸான் பிரான்ஸிஸ்கோநகரில் இடம்பெற்ற மாநாட்டில் ஐ. நா. சபையின் சாசனம் வரையப்பட்டது. 1946 இல் சர்வதேசச் சங்கத்தின் சொத்துக்களை ஐ. நா. சபை பொறுப்பேற்றுக் கொண்டது. அத்தோடு சர்வதேசச் சங்கத்தோடு இணைந்து செயற்பட்டு வந்த சர்வதேச தெழிற் காரியா லயம், சர்வதேச நீதிமன்றம் என்பனவும் ஐ. நா. சபையோடு இணைத்துக் கொள்ளப் பட்டன.

Page 24
அமெரிக்காவில் உள்நாட்டுப்போர் நடந்து கொண்டிருந்த காலத்தில் முன் னணித் தளபதிகளுள் ஒருவரான யுலி ஸிஸ் எஸ். கிராண்ட் என்பவர் இராணுவத் தலைமையகத்துக்கு அவசரச் செய்தி யொன்றை அனுப்பினார். "போதியளவு வெங்காயம் கிடைக்கும் வரை எமது
படைகள் யுத்தத்தில் ஈடுபடுவதை இடை
நிறுத்தி வைத்துள்ளேன்" என்ற அவரது செய்தியைக் கண்டதும் உடனடியாகப் புகைவண்டி மூலம் தேவையான வெங்கா யத்தை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்தளவுக்கு வெங்காயத் தை மிக அத்தியாவசியமான உணவுப் பண்டமாக அவர்கள் கருதினார்கள். இன்று இந்தியாவில் கூட அரசியலில் வெங்காயத்தின் செல்வாக்கு முனைப்பா கக் காணப்படுகின்றது. யார் குறைந்த விலையில் மக்களுக்கு வெங்காயம் வழங்க முன்வருகிறார்களோ அவர்களுக் கே வாக்குகள் கிடைக்கும் நிலை இருக் கின்றது.
சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பி ருந்தே பெரும்பாலான ஆசிய நாடுகளில் வெங்காயம் உணவுப் பொருளாகப் பயன் படுத்தப்பட்டுவந்துள்ளது. புராதன எகிப்தி லும் வெங்காயம் பயன்படுத்தப்பட்டதற் கான சான்றுகள் கிடைத்துள்ளன. வெங் காயத்தைத் தெய்வீகத் தன்மை கொண்ட தாக அக்கால எகிப்தியர்கள் கருதினர். அவர்கள் சத்தியப்பிரமாணம் செய்யும் போது உள்ளங்கையில் வெங்காயமொன் றை வைத்துக்கொண்டே அவ்வாறு செய் வது வழக்கமாக இருந்துள்ளது. பிர
A.
கலங்காதோரையும் கண்கலங்க வைக்கும்
44
மிட்டுக்களை நிர்மாணிப்பதில் பங்கு கொண்ட அடிமைகளுக்கு வெள்ளைப் பூடு, ஈரவெங்காயம் என்பனவற்றைப்பெரு மளவில் கொண்ட உணவே வழங்கப்பட்ட தாகத் தெரியவந்துள்ளது.
பிற்காலத்தில் ஸ்பானியர்களால் வெங்காயம் ஏனைய நாடுகளில் அறிமுகப் படுத்தப்பட்டது. இன்று சீனா, இந்தியா, முன்னைய சோவியத் யூனியனின் குடி யரசுகள், அமெரிக்கா ஆகிய நாடுகளே வெங்காயத்தைப் பெருமளவில் உற்பத்தி செய்கின்றன. பயிரிடப்படும் வெங்காய வகைகள் யாவும் Alum cepaஎன்ற தாவர இனத்தின் பல்வேறு உப இனங்களாகும். வெள்ளைப்பூடு (Alum sativum), லிக்ஸ் (Allium porrum), Shallots 6T6IOTČILI(Buh Gl6) IråJG5IITLIJŮų,6ốoTG (AlliumasCalonicum) முதலியன Alium சாதியைச் சேர்ந்த ஏனைய தாவர இனங்களாகும்.
வெங்காயம் ஈராண்டுத்தாவரமொன் றாகும். பொதுவாக வெங்காயத் தாவர மொன்றில் பெரிய நிலக்கீழ்க் குமிழிலி ருந்து நேராக மேல் நோக்கி வளர்கின்ற சுமார் ஆறு மெல்லிய நீண்ட இலைகள் காணப்படுகின்றன. குமிழின் கீழ்ப்பகுதியி லிருந்து ஆழமற்ற நாருரு வேர்கள் வளர்ந் திருக்கும். குமிழ் பல படைகளால் ஆனது. இதுவே உணவுக்குச் சுவையும் மணமும் ஊட்டுவதற்காகப் பயன்படுத்தப்படுகின் Dġjil
வெங்காயத் தாவரம் இரண்டாவது வருடத்தில் பூக்கின்றது. பூவிலிருந்து பெறப்படும் கறுப்பு நிற வித்துக்களைப்
 
 
 

லாம். விசேடமாகப் பெறப்பட்ட விதை வெங்காய வகைகளும் பயிர்ச் செய்கைக் காகப் பயன்படுத்தப்படுகின்றன.
இன்று சந்தையில் காணப்படும் உலர்ந்த குமிழ்கள் பல்வேறுபருமன்,நிறம், வடிவம் என்பவற்றைக் கொண்டிருப்ப தோடு சுவையிலும் வேறுபடுகின்றன. கார மானசுவையுடைவை சமைத்தே உண்ணப் படுகின்றன. மென்சுவையுடைய வகைகள் பச்சையாக உண்ணப்படுவதுண்டு. கபில நிறத் தோலுடைய ஸ்பானிய வெங்காயம் பெரிதாகவும் மென்சுவை கொண்டதாக வும் இருக்கும். பேர்மூடாவகைகள் அரிந்து பச்சையாகச் சாப்பிடப்படுகின்றன.
உற்பத்தியாகும் பெரிய வெங்காயம் ஒரளவு காரத் தன்மை யுடையது. வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மென்மஞ்சள் நிறமான குளோப் வகை வெங்காயம் சிறிது வித்தி யாசமான இயல்புகளைக் கொண்டது. அப்பிள் போன்ற மென்சதையும் இனிய சுவையும் கொண்ட வெங்காய வகைகளும் உண்டு.
வெங்காயத்துக்கு மருத்துவ இயல்பு கள் உண்டு என்பதை ஆதிகாலத்திலி ருந்தே மனிதர்கள் அறிந்திருந்தனர். மருத்துவத்தின் தந்தை எனக் கருதப்படும் ஹிபோக்ரட்டிஸ் கூட, கண்பார்வையைத் தெளிவாக்க வெங்காயம் உதவுகின்றது
இலங்கையில்
பயன்படுத்தி அதனை விருத்தி செய்ய
எனக் கருதினார். விசர் நாய்க்கடி, ஜல தோஷம், உயர் குருதியமுக்கம், மூட்டு வீக்கம் போன்ற நோய்களுக்கு வெங்காயம் சிறந்த சிகிச்சையாக அமையும் என நம்
முன்னோர் நம்பினர்.
பிரித்தானியாவில் செய்யப்பட்ட ஆய்வொன்றின்படி அதிகளவுவெங்காயத் தை உணவில் சேர்த்துக் கொள்பவர்களில் குருதிக் குழாய்களினுள் குருதி கட்டியாவ தனால் ஏற்படக்கூடிய ஆபத்தான நோய் நிலைகள் மிகக் குறைவாகவே ஏற்படுகின் றன என்பது தெரியவந்துள்ளது. வெங்கா யத்தில் அடங்கியுள்ள Prostoglandin - A என்ற இரசாயனச் சேர்வையே இதற்குக் காரணம் என எடுத்துக் காட்டப்பட்டுள் ளது. வெங்காயத்தில் கல்சியம், இரும்பு, நயசீன், விற்றமின்கள் போன்றவை ஓரளவு உண்டு. எனினும் அதன் கலோரிப் பெறு
மானம் புறக்கணிக்கத்தக்கதாகும்.
வெங்காயத்தை உரிக்கும் போது அல்லது வெட்டும் போது கண்களில் நீர் வடிவதற்குக் காரணம் அதிலுள்ள புரொப்பீனிதைல் கந்தக ஒட்சைட்டு என்னும் சேர்வையாகும். விரைவில் ஆவி யாகும் இச்சேர்வை கண்ணில் பட்டதும் கண்ணிலுள்ள ஈரலிப்போடு சேர்ந்து சல்பூரிக் அமிலத்தை உண்டாக்குகின்றது. இவ்வமிலத்தின் காரணமாக கண்ணில் அரிப்பெடுக்கும் போது கண்ணிர்ச் சுரப்பி
கள் தூண்டப்பட்டு கண்ணிர் சுரக்கப்படு
கின்றது.
காரணம் என்னவோ?
விட்டார்.
கருதுகின்றேன்.”
சில காலத்துக்கு முன்னர் இந்தியாவில் இருந்த புத்திசாதுரியம் மிக்க வழக் கறிஞர்களுள் ஒருவராக திரு ஸி. பீ. ராமஸ்வாமி ஐயர் திகழ்ந்தார். இந்திய அரசு அவரை ஒரு நீதிபதியாக நியமிக்க முனைந்த போது அவர் முடியாது என மறுத்து
தனது மறுப்புக்கு அவர் கூறிய காரணம்:
“அர்த்தமற்ற விடயங்களைச் சில மணித்தியாலங்கள் பேசுவது அர்த்தமற்ற பேச்சுக்களை நாள் முழுதும் கேட்டுக் கொண்டிருப்பதை விட மேலானது என நான்

Page 25
5TCLT125GTTi ()T(s)
ஜிப்ளஸி’க்கள்
ஜிப்ஸிக்கள் (Gypsies) 6T6örp அழைக்கப்படும் நாடோடி மக்கள் உலகின் பல பகுதிகளிலும் வாழ்கின்றனர். எகிப்தியர் என்பதைக் குறிக்கும் Egyptians என்ற சொல்லின் திரிபடைந்த வடிவமே 'ஜிப்ஸிஸ்' ஆகும். இவர்கள் முதன் முதலாக ஐரோப்பாவுக்கு வந்த போது, தமது மூதாதையர்கள் எகிப்தி லிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் என்ற கதையைப் பரப்பியிருந்தனர். ஹிரொட் என்ற இடத்திலிருந்து குழந்தை யேசுவும் அவரது பெற்றோர்களும் தப்பி வந்த போது அவர்களை வரவேற்க மறுத்த காரணத் தாலேயே தமது முன்னோர் எகிப்திலிருந்து வெளியேற்றப்பட்டதாக அவர்கள் கூறிவந் தனர்.
எனினும் நவீன கருத்துக்களின் படி இந்த நாடோடி மக்கள் கூட்டத்தின் பூர்வீக இடம் வட இந்தியாவிலுள்ள இந்து நதிப் பள்ளத்தாக்காகும். ஜிப்ஸிக்கள் பேசும் ரோமானி என்ற மொழியில் பல இந்திய மொழிகளின் சாயல்கள் இருப்பது இதனை உறுதிப்படுத்துகின்றது. கி.பி. 900-1000 ஆண்டளவிலேயே இவர்கள் இந்தியாவை விட்டு வெளிக்கிளம்பியுள்ளனர். இவர்கள் இப்போது ரோமாக்கள் (Romas) எனவும் அழைக்கப்படுகின்றனர்.
இந்தியாவிலிருந்து மேற்கு நோக்கி இவர்கள் இடம் பெயர்ந்த போது முதலில்
பாரசீகத்தில் சில காலத்தைக் கழித்துள்
ளனர். அங்கிருந்து இரு கூட்டங்களாகப் பிரிந்து ஒரு பிரிவினர் வட மேற்காக ஐரோப்பாவுக்கும் மற்றவர்கள் மேற்கே ஸிரியாவுக்கும் தென் மேற்கே வட ஆபிரிக்காவுக்கும் சென்றுள்ளனர். 14ம்
நூற்றாண்டாகும்போது ஐரோப்பாவை அடைந்துவிட்ட அவர்கள் அந்நூற்றாண் டின் இறுதியாகும் போது டனூப் நதிக்கு வடக்கேயுள்ள பகுதிகளிலும் பால்கன் (Balkan) நாடுகளிலும் நிலைகொண்டி ருந்தனர். பின்னர் ஏற்பட்ட துருக்கியர் களின் படையெடுப்பின் காரணமாக இவர் கள் மேற்கு நோக்கி நகர்ந்து ஜெர்மனியை அடைந்தனர். அங்கிருந்து பிரான்ஸ், சுவிட் ஸர்லாந்து, இத்தாலி ஆகியநாடுகளுக்கும் அங்கிருந்து இங்கிலாந்துக்கும் போய்ச் சேர்ந்தனர்.
1500களில் ஐரோப்பாவிலே ஜிப்ஸிக் களுக்கு பொது மக்களின் ஆதரவு நன்கு கிடைத்தது. வேட்டை நாய்களைப் பயன் படுத்தி வேட்டையாடவும், தமக்கேயுரிய சொந்த வழக்கு மன்றங்களை நடத்தித் தண்டனை வழங்கவும் அவர்களுக்கு உரிமை வழங்கப்பட்டிருந்தது. அவர்களில் பெரும்பாலானோர் குறிபார்த்தல், ரேகை சாஸ்திரம் பார்த்தல், குதிரை வர்த்தகம், உலோக வேலை போன்ற தொழில்களில் ஈடுபட்டிருந்தனர்.
ஐரோப்பிய மக்கள் வழங்கிய ஆதர வைத்துஷ்பிரயோகம் செய்யத் தொடங்கிய
ஜிப்ஸிக்கள் ஏமாற்று வேலைகளிலும் சமூக
46
விரோதச் செயல்களிலும் ஈடுபடத்தொடங் கினர். இதனால் அவர்களுக்கெதிரான கசப்புணர்வும் வெறுப்பும் மக்களிடையே
 

W ¥)
தலையெடுக்கத் தொடங்கின. எனவே கள் பயன்படுத்துகின்றனர். வசதி குறைந் அவர்களுக்கு அங்கு வழங்கப்பட்டிருந்த தவர்கள் முன்போல் குதிரை வண்டிகளை சலுகைகள் வாபஸ் பெறப்பட்டதோடு யும் கழுதைகளையும் உபயோகிக்கின் கடுமையான எதிர் நடவடிக்கைகளும் றனர். ஜிப்ஸிக்கள் தாய் வழிக் கோத்தி மேற்கொள்ளப்படலாயின. ரங்களாகவே வாழ்கின்றனர். ஒவ்வொரு P o கோத்திரத்துக்கும் ஒரு தலைவர்இருப்பார். ப்ஸிக்கள் குழந்தைகளைத் திருடு o sign மனித Hಲ್ಲಿ சாப்பிடுவதா அவரே வழககுகளை விசாரித்து நீதி
O LSL S ASSSLS SSS0 S SSS 6) p51(56) is st. கவும் வதந்திகள் பரப்பப்பட்டன. இதன் விளைவாக அவர்கள் ஆயிரக்கணக்கில் இந்த நாடோடி மக்கள் பல்வேறு
தியடிக்கப்பட்டனர்.18ம்நூற்றாண்டு வரை இவர்களிடையே இசைத் திறமை உள் யிலும் ஜெர்மனியில் அவர்கள் காட்டு ளோர் நிறைய உள்ளனர். புல்லாங்குழல் விலங்குகளைப் போல் வேட்டையாடப்பட் வாசித்தல், நடனம் போன்ற கலைகளில் டனர். சில நாடுகளில் அவர்கள் அடிமை இவர்கள் திறமை காட்டுகின்றனர். களாகப் பண்ணைகளில் வேலைக்கு ஐரோப்பிய கலைத்துறைகளில் இவர்களது அமர்த்தப்பட்டனர். ஸ்பெயினில் முஸ்லிம் ! புகணிசமானதாகும். கள் ஆட்சிபுரிந்த காலத்தில் ஜிப்ஸ்க்கள் இ"பெரும்பாலான ஜிப்ஸிக்கள் இப் அங்கு சுதந்திரமாக வாழ்ந்தனர். எனினும் போது தென்கிழக்கு ஐரோப்பாவிலேயே
கிறிஸ்தவர்கள் ஸ்ப்ெபினை மீண்டுஜ்ற வாழ்கின்றனர். இவர்கள் ரோமானி மொழி கைப்பற்றியீபின்னர் நிலைலுருதி யை அல்லது ரோமானி கலந்த உள்ளூர் மாறிவிட்டது. JAV. No மொழிகளைப் பேசுகின்றனர். ஜிப்ஸிக்
ஜிப்ஸிக்களை ஒழுங்கான முறையில் இ92 தனியான சமயங்கள் எதுவும்
இல்லை. இவர்களில் பெரும்பான்மையினர் வறுமை நிலையில் உள்ளனர். பண வசதி மிக்க ஜிப்ஸிக்களை ஸ்வீடன் நாட்டில் காணலாம். இரண்டாம் உலகப் போருக்கு முன் ஜெர்மனியிலிருந்த ஜிப்ஸிக்களுள் சுமார் 400,000 பேர் ஹிட்லரின் நாஸிப் படைகளினால் நச்சு வாயு ஊட்டிக் கொல் லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குடியமர்த்துவதற்கு எடுக்கப்பட்ட முயற்சி களும் தோல்வியிலேயே முடிவுற்றன. 1767இல் அவுஸ்திரிய மகா ராணியாக இருந்த மாரியா தெரேசா, ஜிப்ஸிக்கள் கூடாரங்களில் வாழ்வதையும் ரோமானி மொழியைப் பேசுவதையும் தமது தலைவர் களைத் தாமே தெரிவுசெய்துகொள்வதை யும் தடை செய்தார். அவர்கள் ஒழுங்கான முறையில் வீடுகட்டி வாழ்ந்து தொழில் இன்று உலகில் 12 மில்லியன் ஜிப் செய்ய வேண்டும் எனவும் அவர் கட்டளை ஸிக்கள் இருப்பார்கள் என மதிப்பிடப் பிறப்பித்தார். எனினும் அக்கட்டளை புறக் பட்டுள்ளது. 1979ஆம் ஆண்டு ஐ.நா.சபை கணிக்கப்பட்டது. பிற்காலத்தில் ஜிப்ஸ்க் ரோமா எனப்படும் இந்த ஜிப்ஸிக்களை களுக்கெனக் குடியேற்றத் திட்ட்ங்கள் தனித்துவமான ஒரு மக்கள் கூட்டமாக அமைக்கப்பட்ட போதிலும் அவர்கள் அங்கீகரித்தது S SS S S
6) ಸ್ಥೀ''ಅಸಿது மெல்ல நழுவிச் சென்று " வாசகக்களின் கவனத்திற்கு
அரும்பு 3,6,7 ஆகிய இதழ்களின் பிரதி கள் மாத்திரமே எம் கைவசம் இருக்கின் றன. அரும்பு-1, 2, 4, 5, 8 என்பன முற்றாக விற்றுத் தீர்ந்துவிட்டன. 47
இன்றும் ஐரோப்பாவிலுள்ள ஜிப்ஸிக் கள் நாடோடிகளாகவே வாழ்கின்றனர். நவீன போக்குவரத்து முறைகளை அவர்

Page 26
(பொது அறிவுப் போட்டி இல : 8)
வாசகர்களே!
பின்வரும் பத்து வினாக்களுக்குமுரிய சரியான விடைகளைத் திருத்தமாக ஒரு தாளில் எழுதிக்கடிதஉறையினுள் இட்டுத் தபாலில் அனுப்பி வையுங்கள். விடைத் தாளில் உங்கள் பெயர், முகவரி, மாணவ ராயின் பாடசாலையின் பெயர் என்பவற் றை விபரமாக எழுதத் தவறாதீர்கள். அனுப்பவேண்டிய முகவரி:
Editor,
ARUMBU
ROYAL COMPUTER CENTRE
147, MAIN STREET,
DHARGA TOWN-12090
போட்டி முடிவு திகதி: மே 10,1999
கீழே தரப்பட்டுள்ள அரும்பு சின்னத்தை வெட்டி விடைத்தா ளில் ஒட்டி அனுப்பத் தவறாதீர்கள். இச்சின்னம் ஒட்டப்படாத விடை கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டா. பத்து வினாக்களுக்கும் சரியான விடைகளை எழுதியனுப்பும் வாசகர்களுள் அதிர்ஷ்டசாலியாகத் தேர்ந்தெடுக்கப் படும் மூவருக்குப்பணப் பரிசுகள் வழங்கப் படும்.
முதற் பரிசு ரூபா 500.00 இரண்டாம் பரிசு ரூபா 250.00 மூன்றாம் பரிசு ரூபா 100.00 மேலும் 20 அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் அரும்பில் பிரசுரிக்கப்படு வதோடு அவர்களுக்கு அரும்பின் அடுத்த இதழ் இலவசமாக அனுப்பி வைக்கப்படும்.
س- - - - سد س- مس - سمس - سد است. سیس- - - -سن- خسهخ
அரும்பு பொது அறிவுப்
போட்டி - 8
48
குறிப்பு: இங்கு கேட்கப்பட்டுள்ள வினாக் களுள் சிலவற்றுக்கான விடைகள் இந்த இதழில் வெளிவந்துள்ள கட்டுரைகளில் பொதிந்துள்ளன.
வினாக்கள்: 1. பிரேஸில் நாட்டினூடாகப் பாயும் பிரதான நதி எது? 2.ஐ.நா.சபையின் செயலாளர்நாயகமாகப் பணியாற்றிய ஆசிய நாட்டவர் யார்? 3. ரொயிட்டர் செய்திச்சேவையின் ஆரம்ப கர்த்தாயார்? 4. உலகின் கூரை என அழைக்கப்படும் நாடு எது? 5. தற்போதைய பங்களாதேஷ் பிரதேசம் 1971க்கு முன் என்ன பெயரால் அழைக்கப் பட்டது? 6. நயகரா நதியில் அமெரிக்க நீர் வீழ்ச்சிக்கும் கனேடிய நீர்வீழ்ச்சிக்கும் இடையிலுள்ள தீவின் பெயர் என்ன? 7. விண்வெளிப் பிரயாணத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்? 8. வெள்ளைப்பூடு (Garic) தாவரத்தின் தாவரவியற் பெயர் என்ன? 9. ஸேர்ஜஸக் நியூட்டன் எந்தப்பல்கலைக் கழகத்தில் கணிதப் பேராசிரியராக இருந்தார்? 10. இந்தியாவின் எந்த மாநிலத்தின் தலை நகராக கல்கத்தா மாநகர் அமைந்துள் ளது?
அடுத்த இதழ்
அரும்பு இதழ் -10 எதிர்வரும் 1999 மே 25ம் திகதி வெளிவரும்.
 
 
 

அரும்பு பொது அறிவுப் போட்டி - 7 சரியான விடைகளும் பரிசு பெறும் அதிர்ஷ்டசாலிகளும்
கேட்கப்பட்டிருந்த கேள்விகளுக்கான சரியான விட்ைகள் பின்வருமாறு:
1. ஹேக் (டென்ஹாக்) 2. JIT600s (Queen) 3. ஆதிகிரந்த் 4. 1972 டிசம்பர் 11 5. லண்டன் 6. 1993 நவம்பர் 1 7 கிம்பர்லி 8. இலங்கை தொழிலாளர் கட்சி - 1922 9. Camelus dromedariu:S 10. யூரி ககாரின்
சரியான விடைகளை அனுப்பியவர்களில் அதிர்ஷ்டசாலிகளாகத் தெரிவு செய்யப்பட்டோர் விபரம் பின்வருமாறு:
1üh Luflg (ebLIT 500): M.F.M. Rizwan,
55A, Jummah Mosque Rd, Meepe, Padukka.
2uh Lurfag, (e5LITT 250): M. Farhan Ismath,
240, Rambukandana, Rideegama, Kurunegala.
3h Urfe, (er5LIIT 100): M.R.S. Ruwaidha,
120/1, Thakkya Road, Mahawatta, Mawanella.
இலவசமாக அரும்பு - 8 ஐப் பெறும் அதிர்ஷ்டசாலிகள்: . M.A.M. Mafaz, 237/B, Delgastenna, Akurana. . S.Ama nullah, Dharul Falah Road, Ward No.4, Pottuvil. . M.H.M. Hifas, 87, Gorakaduwa, Maradana, Beruwala. . Mohamed Shafeek, 27A, Zavia Road, Dharga Town. . M.S. Isar, Knox Road, Mutur-04. . M.T. Fathima Ansifa, 234/D, Sharif Town, Nambuluwa, Pasyala. . M. M. F. Kameena, 65, Thakya Road, Thalapitiya, Galle. . M. L. H. Kareem, 22, Hondenigoda Road, Mawanella.
M.T.M. Amil, 623/2, Galle Road, Kalutura. 10. M.I.M. Ifthikar, 89/1, Meegahamulla, Atulugama, Bandaragama. 11. M. A. F. Shafeeka, 90/3, Uyan Watta, Dewanagala. 12. M.A.M. Hussain, 411, New Street, Welligama. 13. A.S. Rayeeza, 56, Central Mosque Road, Kinniya-2. 14. A.S.F. Rihana, B/12/1, Mosque Road, Hapugastalawa. 15. M.A. F. Rismina, 137/1, Uyanwatta, Dewanagala. 16. Husni M. Jabir, 94, Elamula, Pasyala. 17. M. L.J. Mursala, 139/4, Muruthalawa, Mawanella. 18. Nazeeha Saleem, 93, Rammalaka, Pilimatalawa. 19. M.U.F. Siraasa, 419, Rambukkana Road, Madige, Galagedara. 20. M. M. Haseem, No.13, "Nusrath", Polgahawela, Ethungahakotuwa
அனைவருக்கும் எமது பாராட்டுக்கள்!

Page 27
s¬ 19 :* ܦܲܓܼ ܕ ܒܒ ܡܸܙܝܓ ܦܢܝ.
。菁 9) Ihlö56T 9) 6T6 TLD
இன்று மனிதன் தனது உடலாே கின்றான். எனினும் அவனது உள்ளே இன்றைய உலகில் காணப்படும் பெரு காரணம் மனிதர்களின் உள ஆரோக்கி
உங்கள் உள்ளம் எந்தளவுக்கு அறிந்து கொள்ள விரும்பினால் பின் இல்லை எனப் பதில் அளியுங்கள்
1. உங்களுக்கு வாழ்க்கையில் பற்றும்
@_6ট্যTLIা ?
2. உங்கள் வயது, உடல் முதிர்ச்சி என்ட கடமைகளையும் பொறுப்புக்களைய 3. ஒய்வு நேரத்தை நீங்கள் கழிக்கும்
யையும் திருப்தியையும் அளிக்கின்ற 4. நேர்மை, வாய்மை,நல்லொழுக்கம் ே சூழ்நிலைகளிலும் ஒரே விதமாகப் பு 5. நீங்கள் தனியாக இருக்கும் நேரங்க கள், உங்கள் நண்பர்களிடமும் குடுப் யாகக் கூறக்கூடியவையாக இருக்க 6. மற்றவர்கள் மீது பெருமளவு அன்ட விரும்பப்படுபவராகவும் நீங்கள் இரு 7. மற்றவர்களுக்கு எதுவித இடைஞ்ச் களை நிறைவேற்றிக்கொள்ள முடிய 8. கோபம், மகிழ்ச்சி, கவலை போன் நீங்கள் இலகுவில் நிலைகுலையா இருக்கின்றீர்களா? 9. நீங்கள் கற்கும் கல்வி அல்லது செய் நிறைவையும் மகிழ்ச்சியையும் வழங் 10. எவரிலும், எதிலும் குறைகளை மட் பாங்கு உங்களிடம் இருக்கின்றதா இந்த வினாக்களுக்கெல்லாம் உங்கள் தீர்களாயின் நிச்சயமாக நீங்கள் நல்ல இருக்கின்றீர்கள். ஏதேனும் வினாவொன்றுக்கு "ஆம்" எ பற்றிச் சிந்தித்துச் சீர்திருத்திக் கொள்;
Printed at A.J. Prints, 4
 

,', ' ')
ബ
---- t ாக்கியமானதா? ராக்கிய்ம் பற்றி அதிக கவனம் செலுத்து மா ஆரோக்கியமற்று அவதியுறுகின்றது. நம்பாலான சமூகப் பிரச்சினைகளுக்குக் யம் கெட்டுப்போயிருப்பதேயாகும்.
ஆரோக்கியமாக இருக்கின்றீது என்பதை ாவரும் வினாக்களுக்கு ஆம் அல்லது
அன்றாடத் தொழிற்பாடுகளில் ஆர்வமும்
வற்றுக்கு ஏற்ற வகையில் உங்களுக்குள்ள ம் சரிவர நிறைவேற்றுகின்றீர்களா? விதம் உங்களுக்கு உள்ளார்ந்த மகிழ்ச்சி றதா? போன்றவற்றைஎல்லாச் சந்தர்ப்பங்களிலும் பின்பற்றுகின்றீர்களா? , 1ளில் உங்கள் மனதில் உதிக்கும் சிந்தனை பத்தினரிடமும் மறைக்காமல் வெளிப்படை கின்றனவா? | காட்டுபவராகவும் மற்றவர்களால் நன்கு நக்கின்றீர்களா? ஈலும் ஏற்படாத விதத்தில் உங்கள் தேவை |மாக இருக்கின்றதா? ற மன எழுச்சிகளைப் பொறுத்தமட்டில் ாதவராகவும் உறுதிப்பாடுடையவராகவும்
பும் தொழில் உங்களுக்குப் பொதுவாக மன குகின்றதா?
டும் தேடாது நிறைகளைக் காணும் மனப்
மனச்சாட்சிப்படி "ஆம்" என விடையளித் உள ஆரோக்கியம் ੭ 66566
ன விடையளிக்க முடியாதிருந்தால் அது பது நல்லது.
4, Station Road, Dehiwela