கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அரும்பு 2001.03

Page 1


Page 2
மூளைக்கு வேலை
விவேக வினாக்கள் ஏழு
() பெட்டியொன்றில் ஒரு தொகை 10 ரூபா நாணயங்களும் 5 ரூபா நாணயங்களும் உள்ளன. அவற்றின் மொத்தப் பெறுமதி ரூபா 135/= ஆகும். 5 ரூபா நாணயங் களின் தொகை 10 ரூபா நாணயங்களின் தொகையின் இருமடங்கைவிட ஒன்று குறைவாயின் பெட்டியிலுள்ள 10 ரூபா நாணயங்களின் எண்ணிக்கை யாது?
(2) சிவில் போக்குவரத்துக்கான விமானங்களைப் பதிவு செய்வதற்காக ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு தனித்துவமான குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள குறியீடு 4R என்பதாகும். இலங்கையில் பதிவு
செய்யப்பட்ட விமானங்களுக்கு 4R-AAA, 4R-AAB. 4R-AAZ, 4R-ABA. 4R-ABZ, 4R-ACA என்றவாறு தொடரெண்கள் வழங்கப்படுவது வழக்கம். இந்த வகையில் இலங்கையில் பதிவு செய்யப்பட்ட நூறாவது விமானத்தின் பதிவுத் தொடரெண் என்னவாக இருக்கும்?
(3) கொழும்பு மத்திய பஸ்நிலையத்திலிருந்து 40 நிமிடங்களுக்கு ஒரு முறை கண்டிக்கும், 45 நிமிடங்களுக்கு ஒரு முறை மாத்தறைக்கும், 2 மணித்தியாலத் திற்கு ஒருமுறை பதுளைக்கும் பஸ் வண்டிகள் புறப்படுகின்றன. அதிகாலை 6.00
மணிக்கு 3 இடங்களுக்குமான பஸ் வண்டிகள் ஒருமித்துப் புறப்பட்டனவாயின்
மீண்டும் எத்தனை மணிக்கு அவை ஒருமித்துப் புறப்படும்?
(4) A, B எனும் இரு மரங்களில் புறாக்கள் உள்ளன. Aயில் உள்ளதைவிட இருமடங்கு புறாக்கள் Bயில் உள்ளன. Bயிலிருந்து 6 புறாக்கள் Aக்குப் பறந்தால் இரு மரங் களிலுமுள்ள புறாக்களின் எண்ணிக்கை சமனாகிவிடும். ஆரம்பத்தில் ஒவ்வொரு மரத்திலுமிருந்த புறாக்கள் எத்தனை? (5) 1961ம் ஆண்டு ஒரு வகையில் விசேடமானது. அதனைத் தலைகீழாக வாசித் தாலும் அதே பெறுமானத்தையே காட்டியது. இதே சிறப்பியல்பைக் கொண்டதாக அடுத்து வரப்போகும் ஆண்டு எது? (6) பின்வரும் எண் தொடரில் அடுத்து வரவேண்டிய இரண்டு எண்களும் யாவை?
64, 35, 32, 19, 16, 11, 8, ........ a (7) 36 பேர் 140 m நீளமான மதிலை 21 நாட்களில் கட்டி முடிப்பார்களாயின் அதே விதமான 50 m நீளமுள்ள மதிலை 18 நாட்களில் கட்டி முடிப்பதற்கு எத்தனை
பேர் தேவை?
(விடைகள் 43ம் பக்கத்தில் தரப்பட்டுள்ளன)
 
 
 

பூாசிைங்கம் [ }}%ổhổ66öề
குA ஆஸ்பத்திரி விதி /
2. a oči ureата, - - .
அருமபு
பொது அறிவுச் சஞ்சிகை இதழ் 21 ஆசிரியர் எம். ஹாபிஸ் இஸ்ஸதீன் Editor: M. Hafiz Issadeen Published By: issadeen Memorial Educational Foundation. 147, Main Street, Dharga Town-12090
Sri Lanka *** Phone: 034-70151 E-Mail: royal Geureka.lk
Web site: WWW.arumbu.itgo.com
Type-setting & Computer Lay-out by: RoyAL COMPUTER CENTRE, 147, Main Street, Dharga Town, Sri Lanka
Printed by: A.J. Prints, 44, Station Road, Dehiwala.
உள்ளே . . . .
கண்ணில்லாதவர் உலகில் 2 வால் வெள்ளிகள் 3 நோர்வே 6 இராட்சத பண்டா 9 சிகாகோவில் சிலநாட்கள் 11 வாதக் காய்ச்சல் 14 சலாகைக் குறியீடுகள் 16 பிலிப்ஸ் கம்பனி 18 ரக்பி உதைபந்தாட்டம் 20 மனிதன் சந்திரனுக்குப் போனானா? 23 குடற் புழுக்கள் 27 இப்ன் பதூத்தா 29 புவியதிர்வை அளத்தல் 33 ஸுனாமி 36 கேலன் 37 கம்பியூட்டர் முன்னோடிகள் 40 கஸ்பியன் கடல் 42 உங்களுக்கு எந்நேரமும் களைப்பாக. 44 போலிச் சாமியார் 45
பொது அறிவுப் போட்டி-20 48
الكوم
أسهم
உங்களுடன் ஒரு நிமிடம் .
அன்புள்ள வாசகர்களே!
இன்று எமது உடலாரோக்கியத் |தைப் பேணும் விடயத்தில் நாமெல்
லோரும் அதிகளவு கவனமும் ಆಗಿ | | ಆ6ರ್ಯTIgo செலுத்துகின்றோம். எனி னும் ஆரோக்கியமான உடலைக் கொண்டவர்கள்கூட உள ஆரோக்கி |யம் பாதிக்கப்பட்டநிலையில் அவதிப் படுவதைக் காணக்கூடியதாக இருக் கின்றது.
போட்டி ரீதியான சமூக அமைப்பு, இனங்களுக்கிடையிலான பகைமையுணர்வுகள், தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாக ஏற்பட்டு வரும் நிம்மதியற்ற வாழ்க்கை முறை என்பன காரணமாக இன்று மனிதர் CLCಳೆ??! மான பாதிபபுககள ஏறபடடு வருகன றன.
எம்மோடு வாழும் உள ஆரோக் கியம் பாதிக்கப்பட்டவர்களின் பிரச் சினைகளைப் புரிந்துகொண்டு அவர் களுக்கு உதவுவதும் அவர்கள் சமூ கத்திலிருந்து ஒதுக்கப்படாமல் காப்ப தும் பொறுப்புணர்வுமிக்க அனைவ தும் கடமையாகும்.
இதனால்தான் உலக சுகாதார ஸ்தாபனமும் (WHO) உள ஆரோக்கி யம் பாதிக்கப்பட்டோருக்கு உதவுதல் என்னும் விடயத்தை 2001 ஏப்ரல் 7ம் திகதி இடம்பெறவுள்ள உலக சுகா தார தினத்தின் கருப்பொருளாகக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிறர் நலம் பேணுவதில் அக் கறை கொள்வோம்.
நன்றி
எம். ஹாபிஸ் இஸ்ஸதீன்
ஆசிரியர் 20. O3. 2001

Page 3
t;"| KSk *
- சிந்தனைக்கு ஒரு சின்னக் கதை
கண்ணில்லாதவர் உலகில்
ஒரு நாட்டில் மலைகளால் சூழப் பட்ட பள்ளத்தாக்கொன்றிலே பிற உல கோடு எவ்விதத் தொடர்புமில்லாத மக் கள் கூட்டமொன்று வாழ்வதாகவும் அவர்கள் அனைவருமே பிறவிக் குருடர் கள் எனவும் ஒரு கதை உலவியது. இது வரை யாருமே சென்றிராத அந்தப் பள்ளத் தாக்குக்குச் சென்று உண்மையை அறிந்து வர விரும்பினான் ஒருவன். மிகவும் கஷ் டப்பட்டு மலையேறி அந்தப் பள்ளத் தாக்கை அடைந்த அவனை அங்கு கண்ட காட்சிகள் பிரமிக்கச் செய்தன.
அங்கு பெரிய வயல்களிலே கோது மை நேர்த்தியாகப் பயிர் செய்யப்பட் டிருந்தது. பிறவிக்குருடர்களான அந்த மக் கள் அங்கு பல்வேறு வேலைகளில் ஈடு பட்டிருந்தனர். அவர்களுடைய கண்கள் நிரந்தரமாக மூடிய நிலையிலேயே இருந் தன. இவன் அவர்களுக்கு அண்மையில் சென்றபோது யாரோ அந்நியன் வந்துள் ளான் என்பதை உணர்ந்துகொண்ட அவர் களில் சிலர் இவனைப் பிடித்துக் கொண் டனர். இவன், தான் வந்த காரணத்தை அவர்களுக்கு எடுத்துக் கூறிய போது அவர்கள் இவனை விடுவித்து உட் கொள்ள உணவும் பானமும் வழங்கினர். “உங்கள் வயல்கள் மரகதப் போர் வை போல் பச்சை நிறமாக இருக்கின் றன.’ என்று வர்ணிக்கத் தொடங்கினான் இந்த மனிதன்.
"பச்சை நிறமா? என்ன உளறு கிறாய்?’ என்று அவர்கள் திருப்பிக் கேட் டனர்.
“ஆம்! அது மட்டுமா சூரிய ஒளியில் கதிர்கள் யாவும் பொன்னிறமாய் மின்னு கின்றனவே” என்றான் இவன்.
“என்ன? சூரிய ஒளி என்கிறாய்! பொன்னிறம் என்கிறாய்! நீ பெரிய பொய்
2
காரன்போல் தெரிகிறதே' என்று ஆத் திரத்தோடு கத்தலாயினர் அந்த மக்கள்.
"நான் உண்மையைத் தான் சொல் கிறேன். உங்கள் வயல்களின் அழகு என் னைப் பிரமிக்கச் செய்கின்றது' என்று தன் கருத்தை உறுதிப்படுத்த முயற்சித்தான்
ଜ}Jଜ0T.
"அழகார் இதென்ன இவன் இல் லாதவற்றையெல்லாம் சொல்லுகிறான். இந்தப் பொய்யனைச் சும்மா விடக் கூடாது' என்று கோபத்துடன் கூறிய அவர்கள் அவனது கைகால்களைக் கட்டித் தம் தலைவனின் சபைக்கு இழுத்துச் சென்றனர்.
“இந்தப் பொய்யன் எங்கிருந்தோ வந்திருக்கிறான். இவன் பச்சை என் கிறான், ஒளி என்கிறான், பொன்னிறம், அழகு என்றெல்லாம் பொய்களை அடுக் கிக்கொண்டே போகிறான். இவனைச் சும்மா விட்டால் நம் சமூகத்தையே கெடுத்துவிடுவான். இவனுக்குத்தாங்கள்
நல்ல தண்டனை கொடுக்க வேண்டும்'
எனத் தம் தலைவரிடம் வேண்டிக் கொண் டனர்.
தலைவனும் இவனுக்கு நூறு கசை யடி கொடுத்துச் சிறையிலடைக்குமாறு உத்தரவிட்டான். அவ்வாறே கசையடி பெற்ற அவன் இருள் குகையொன்றினுள் பூட்டப்பட்டான்.
அக்குகையினுள்ளே கண் தெரி கின்ற கிழவரொருவரும் சிறையிலடைக் கப்பட்டிருந்தார். சில காலத்துக்கு முன் வனைப்போல் வந்து மாட்டிக்கொண்
டவர் தான் அக்கிழவரும். அக்கிழவர்
இவனைப் பார்த்து 'தம்பி, கண்ணில் லாதவர்கள் மத்தியில் கண்ணுள்ளவனாய் இருப்பது எவ்வளவு ஆபத்தானது என்பதைப் புரிந்து கொண்டாயா?” என்று கேட்டார்.
21 - {0ازی) yع
 
 
 

Löng þério C0 f18t.
We' 51 லத்துக்குக் காலம் வானத் தில் வால் வெள்ளிகள் தோன்றி மறைவதை ஆதிகாலம் தொட்டே மனிதன் அவதானித்து வந்துள்ளான். கி. மு. 466ம் ஆண்டில் தோற்றமளித்த பிரகாசமான வால் வெள்ளியொன்று பற்றிப் பல வரலாற்றுப் பதிவுகள் காணப்படுகின்றன. வால் வெள்ளி தோன்றுவது ஒர் அபசகுனம் எனவும் நிகழப் போகும் பேரழிவொன்றை அல்லது முக்கிய நிகழ்வொன்றை அது எதிர்வு கூறுகிறது எனவும் முற்கால மக்கள் நம்பலாயினர்.
தூம கேது' எனவும் அழைக
4 ఏప్రీ
வால் வெள்ளிகள்
COmetS
சென்றுவிட்ட பின்னர் வால் தென் பட மாட்டாது.
வால் வெள்ளியை வளிமண் டலத்தில் ஏற்படும் தோற்றப்பா டொன்றாகவே ஆரம்ப கால அறி ஞர்கள் கருதி வந்தனர். டென்மார்க் நாட்டு வானியலாளரான தைக்கோ Lil JIT Ggo (Tycho Brahe) GTGöтL16) i தான் வால்வெள்ளியும் ஒரு வான் பொருளே (celestial body) என்பதை 1577இல் நிரூபித்துக் காட்டினார். சூரியனைச் சுற்றி வலம் வருகின்ற ஞாயிற்றுத் தொகுதியைச் சேர்ந்த கோள்களின் இயக்கத்தைக் கட்டுப் படுத்துகின்ற அதே விதிகளுக்கு அமையவே வால் வெள்ளிகளும் இயங்குகின்றன என்ற உண்மையை 17ம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரிட்டிஷ் ஓானியான ஸேர், ஐஸ்க் நியூட் இேத்துக் காட்டினார்.
الا கப்படுகின்ற வால் வெள்ளியானது Coma
குறிக்க ஆங்கிலத்தில் Cometry"
சொல்லே பயன்படுத்தப்படுகின்றது. (3)3, Stella Cometa (LDufiGlEIT GiTL நட்சத்திரம்) என்ற லத்தீன் மொழிப் பெயரிலிருந்தே தோன்றியுள்ளது.
வால் வெள்ளிகள் சூரியனைச் சுற்றி வருகின்ற வான் பொருட் களாகும். அவை தமது சுற்றுப் பாதை யில் சூரியனுக்கு அண்மையாக இருக்கும் போது ஒளிருகின்ற நீண்ட வாற் பகுதியொன்றைக் கொண் டிருக்கும். இந்த வால் எப்போதும் சூரியனுக்கு எதிர்த் திசையிலேயே நீண்டிருப்பதோடு, சூரியனை விட்
டுத் தொலைவில் செல்லும் போது
நீளத்தில் குறுகிக்கொண்டே செல் லும். சூரியனை விட்டு அப்பால்
அரும்பு-21
என அழைக்கப்படும் முகில் போன்ற தட்டொன்றினுள் அமிழ்ந்துள்ள சிறிய கருவொன்றினால் ஆக்கப்பட் டிருப்பதாகக் கருதப்படுகின்றது. வால் வெள்ளியின் முழுத் திணிவும் அடங்கியிருக்கின்ற இக்கருவானது பனிக்கட்டியையும் தூசுத் துணிக் கைகளையும் கொண்ட ஒர் அழுக்குப் படிந்த பனிப் பந்து போல் (dirty snowball) g) (1555) airpg. 6T airp 5(155605 Fred L. Whipple 6T airp அமெரிக்க வானியலாளர் 1949இல் முன்வைத்தார். இக்கருப் பகுதியில் மெதேன்(CH), அமோனியா (NH), நீர் போன்றவை உறைந்த நிலையில் பனிக்கட்டிகளாகக் காணப்படு வதாக நம்பப்படுகின்றது.
3

Page 4
வால் வெள்ளியொன்றின் Coma என்னும் முகில் படை உட் பட்ட தலைப் பகுதியானது பரு மனில் ஜ"பிட்டர் கோளைவிடப் பெரிதாக இருக்கக் கூடும். எனினும் பெரும்பாலான வால் வெள்ளி களின் திண்மப் பகுதியின் பருமன் ஒரு சில கனகிலோமீட்டருக்கு மேல் இருக்காது. உதாரணமாக 1986இல் காட்சியளித்த ஹலியின் வால் வெள்ளியினது (Halley's Comet) தூசு நிரம்பிய கருப்பகுதி பருமனில் சுமார் 15km X 4km அளவுடையதாகவே இருந்தது.
ஒரு வால்வெள்ளி தனது சுற்றுப் பாதையில் இயங்கியவாறு சூரி யனை அண்மிக்கும் போது சூரிய
வெப்பத்தின் காரணமாக அதன் கரு
விலுள்ள பனிக்கட்டிகள் ஆவியாகி வாயு நிலையை அடைகின்றன. இதன் விளைவாக வால் வெள்ளி யின் பிரகாசம் பன்மடங்கு அதிகரிக் கின்றது. அத்தோடு அதற்கு பிரகாச
மான வாற் பகுதியொன்றும் உரு
வாகின்றது. இந்த வால் சிலவேளை களில் பல மில்லியன் கிலோமீட்டர் தூரத்துக்கு விண்வெளியில் நீண்டிருக் கக் கூடும்.
வால் வெள்ளிகளின் பெரிய வால்கள் அயனாக்கப்பட்ட மூலக் கூறுகளைக் கொண்டிருக்கும். காப னோ ரொட்சைட்டு, காபனீரொட் சைட்டு என்பவற்றின் மூலக்கூறு களும் இவ்வாறு அயனாகிக் காணப்படலாம். சூரியனின் Corona என்னும் பிரகாசமான வெளிப் பகுதி யிலிருந்து வெளியாகும் சூடான வாயுக்களைக்கொண்ட சூரியக் 5 Tgbg5)GöT (Solar Wind) G) gub IT (3) காரணமாகவே வால் வெள்ளியின் வாற்பகுதி சூரியனுக்கு எதிரான திசைக்குத் தள்ளப்படுகின்றது. இச்
4.
சூரியக் காற்று செக்கனுக்கு சுமார் 400km என்ற அசுர வேகத்தில் வீசிக் கொண்டே இருக்கிறது.
வால் வெள்ளிகளில் பிரதான வாலுக்கு மேலதிகமாக தூசுத் துணிக் கைகளால் ஆக்கப்பட்ட சிறிய வாற் கள் பலவும் காணப்படலாம். இச் சிறு வால்கள் வளைந்து இருப் பதோடு பிரதான வாலைவிடப் பிரகாசத்தில் கூடியனவாகவும் இருக்கும். Coma பகுதியிலுள்ள தூசு சூரியக் காற்றினால் ஊதித் தள்ளப் படுவதன் காரணமாகவே இச்சிறு வாற்கள் தோன்றுகின்றன.
1996 - 97ம் ஆண்டுகளில் எமது வானில் தோன்றிய Hale-Bopp என்ற பிரகாசமான வால் வெள்ளியில் மூன்றாவது வகையர்னவாலொன்று இருப்பதை வானியலாளர்கள் அவ தானித்தனர். மிகக் குறுகிய இந்த வால் வெற்றுக் கண்களுக்குப் புலப்படவில்லை. இது நடுநிலை யான சோடியம் அணுக்களால்
ஆக்கப்பட்டிருந்ததை விஞ்ஞானிகள்
கண்டுபிடித்தனர். இந்த சோடியம்
வால், பிரதான அயன் வா லைப்
போன்று நிமிர்ந்திருந்த போதிலும் சிறிது வித்தியாசமான திசையிலே யே நீட்டிக்கொண்டிருந்தது.
சூரியனைவிட்டு விலகிச் செல்லும் போது வால் வெள்ளி யொன்றின் தூசுப் படலம் அளவில் குறையத் தொடங்கும். இதனால் வால் மறைந்துவிடும். சிறிய சுற்றுப் பாதைகளில் சூரியனைச் சுற்றி வருகின்ற வால் வெள்ளிகளின் வாற்
கள் மிகக் குறுகியனவாக இருப்
பதனால் அவை பெரும்பாலும் புலப் படுவதில்லை. அதேவேளை சுமார்
320,000,000 km நீளமுடைய வாலைக்
கொண்ட வால்வெள்ளிகளும் இருக் கின்றன. இதுவரை பதியப்பட்டுள்ள
அரும்பு-21

சுமார் 1400 வால் வெள்ளிகளுள் பாதிக்கும் குறைவானவையே வெறுங் கண்ணுக்குப் புலப்படக் கூடிய வால்களைக் கொண்டிருந்தன. எனினும் சுமார் 10 சதவீதமான வற்றின் வால்கள் மாத்திரமே மிகத் தெளிவாகவும் திட்டவட்டமாகவும் புலப்பட்டுள்ளன.
வால் வெள்ளிகள் நீள்வட்டப் பாதைகளில் சூரியனைச் சுற்றி வரு கின்றன. சுமார் 200 வால் வெள்ளி களின் சுற்றுகைக் காலம் (சூரியனை ஒரு தடவை சுற்றிவர எடுக்கும் காலம்) துவரை கணிக்கப்பட் டுள்ளது. இப்பெறுமானம் Encke's Comet என்பதற்குரிய 3.3 வருடங்கள் முதல் 1858இல் தோன்றிய Donati's Cometஇற்குரிய 2000 வருடங்கள் வரை வேறுபடுகின்றது. ஹலியின் வால் வெள்ளியின் சுற்றுகைக் காலம் 76 வருடங்களாகும். அது மீண்டும் 2062இல் தோற்றமளிக்கும்.
சில வர்ல் வெள்ளிகளின் சுற்றுப் பாதைகளின் அமைப்பு காரணமாக அவை ஞாயிற்றுத் தொகுதியை விட் டும் அப்பால் சென்றுவிடுகின்றன. இதனால் சில வால் வெள்ளிகளின் சுற்றுகைக் காலம் 40,000 வருடங் களுக்கு மேலும் நீடிக்கக் கூடும். 1996இல் காட்சியளித்த பிரகாசம் மிக்க வால் வெள்ளியானHyakulake என்பது மீண்டும் திரும்பி வர சுமார் 10,000 வருடங்கள் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வால் வெள்ளிகள் பூமியில் வந்து மோதினால் என்ன நடக் குமோ என்ற பயம் நீண்ட்காலமாக மனிதனின் மனதில் இருந்து வரு கின்றது. உண்மையில் பூமியானது பல தடவைகள் பல வால் வெள் ளிகளின் வாற் பகுதியினூடாகப் பிரயாணம் செய்துள்ளது. அவ்வா
21 - {اطلازی) eyی
Lu IT rî? Lu
தாக
றான சந்தர்ப்பங்களில் குறிப்பிடத் தக்க தாக்கங்கள் எதுவும் உணரப்பட வில்லை. எனினும் வால் வெள்ளி யொன்றின் கருப்பகுதி நகரொன்றின் மீது மோதினால் நிச்சயமாக அந்நகர் முற்றாக அழிந்துவிடும். என்றாலும் அப்படியான நிகழ்வுக்குரிய சாத் தியம் மிக மிகக் குறைவாகும்.
வரலாற்றுக்கு முற்பட்ட காலத் தில் பெரிய வால்வெள்ளிகள் பல பூமியில் மோதியிருக்கக் கூடும் எனச் சில விஞ்ஞானிகள் நம்புகின்றனர். புவியில் பரவலாக வாழ்ந்த டைன ஸோர்கள் அனைத்தும் திடீரென முற்றாக அழிந்து போவதற்கும் இத்தகைய மோதலொன்றே காரண மாக இருந்திருக்கலாம் என இப் போது நம்பப்படுகின்றது.
6m முதல் 9m வரை விட்ட முடைய ஆயிரக் கணக்கான வால் வெள்ளிகள் ஒவ்வொரு மணித்தி யாலமும் புவியின் மீது மோதிக் கொண்டிருப்பதாகச் சில வானியலா ளர்கள் கருதுகின்றனர். இவ்வால் வெள்ளிகள் உறைந்த நீரினால் (பனிக்கட்டியால்) ஆனவை என்றும் இவை புவியிலுள்ள சமுத்திரங்களை நீரினால் நிரப்ப உதவுகின்றன என வும் அவர்கள் கூறுகின்றனர்.
1992இல் ஷூமேக்கர் - லெவி 9 என்ற வால் வெள்ளி ஜாபிட்டர் கோளின் ஈர்ப்பு மண்டலத்திற்குள் நுழைந்த போது 21 பெரிய துண்டங் களாகப் பிளவுற்றது. 1994 ஜூலை யில் ஒரு வாரகாலமாக இத்துண்டங் கள் சுமார் 210,000 km/மணி வேகத் தில் ஜ"பிட்டரின் அடர்ந்த வளிமண் டலத்தினுள் நுழைந்தன. அவை ஜ"பிட்டர் தரையில் மோதியபோது வெடிப்புக்கள் ஏற்பட்ட தோடு இதன் விளைவாக உருவான தீப்பந்துகள் பூமியை விடவும் பெரி
(15 fig567.
5

Page 5
நடுநிசியில் சூரியன் தெரியும் நாடு நோர்வே
ரோப்பாவின் ஐந்தாவது பெரிய நாடான நோர்வே, வட ஐரோப்பாவிலுள்ள ஸ்கண்டினே விய தீபகற்பத்தின் மேற்குப் பகுதி யில் அமைந்துள்ளது. நோர்வே இராச்சியம் (நோர்வீஜிய மொழி uîGio: Kongeriket Norge) GTGOT 2) gjig) யோகபூர்வமாக அழைக்கப்படும். இந்நாட்டின் பரப்பளவு (323,878 சதுர km) இலங்கையின் பரப்பளவை விட ஐந்து மடங்கு அதிகமாகும். எனினும் அந்நாட்டில் சுமார் 4.5 மில்லியன் மக்களே வாழ்கின்றனர்.
நோர்வேயின் வடக்கெல்லை யில் Barents கடலும் மேற்கில் நோர் வீஜியன் கடல், வட கடல் என்பன வும் தெற்கில் Skager நீரிணையும் கிழக்கெல்லையில் ஸ்வீடன், பின் லாந்து, ரஷ்யா ஆகிய நாடுகளும் அமைந்துள்ளன. மலைப்பாங்கான தரையமைப்புக்கொண்ட நோர்வே யில் சுமார் 160,000 ஏரிகள் பரவிக் காணப்படுகின்றன.
முன்னைய யுகங்களில் பல தட வைகள் பனிப்பாறைகளுக்கு அடி யில் மறைந்து போனதாகக் கருதப் படும் நோர்வேயில் இன்றும் சுமார் 1700 பனிக்கட்டிப் பாறைகள் (glaciers) காணப்படுகின்றன. அந்நாட் டின் வடக்கு, மேற்குக் கரைகளில் உள்ள செங்குத்தான பாறைகளுக் கிடையே நீண்டிருக்கும் கடலின் நீட்சிப் பகுதிகள் fjords (fபியோட் கள்) என அழைக்கப்படுகின்றன. இவை நோர்வேயின் தரையமைப் புக்குரிய ஒரு சிறப்பம்சமாக உள் ளன. நாட்டின் பிரதான நதியாக
நடுநிசியில்கு
Gloma (fỂ GIT id 578 km) 355 (T5g5 t'i படுகின்றது. Massa (மியொஸ்ா) என்பதே அங்குள்ள ஏரிகளுள் மிகப் பெரியதாகும். அது 368 சதுர km
பரப்பளவுடையது. தெற்குப் பகுதி
யிலுள்ள Galdha என்ற சிகரமே (2,469 m) மிக உயர்ந்த மலைச் சிகரமாகத் திகழ்கின்றது.
6) IL. அமெரிக்காவிலுள்ள அலாஸ்காப் பகுதி அமைந்துள்ள அதே வட அகலாங்குகளிலேயே நோர்வேயும் அமைந்துள்ளது. எனி னும் நோர்வேயின் காலநிலை அலஸ்காவினது அளவுக்குக் குளிரா னதாக இல்லை. இதற்குக் காரணம் அத்திலாந்திக் சமுத்திரத்திலுள்ள Gulf Stream எனப்படும் வெப்பநீர் அருவியாகும். இதனால் குளிர்காலத் திலும் fjordகள் உறைந்து போவதில்
ᎶᏡ) ᎶuᏪ .
நோர்வேயின் சராசரி வளிமண் பல வெப்பநிலை கோடை காலத் தில் வடக்கில் 10 C ஆகவும் தெற்கில் 17C ஆகவும் இருக்கும். குளிர்காலத் தில் இப்பெறுமானங்கள் முறையே -10 C -2' C ஆகக் குறைவடைகின் றன. சராசரி வருடாந்த மழைவீழ்ச்சி கிழக்கில் 750 mm எனவும் மேற்கில் 2,052 mm எனவும் கணிக்கப்பட் டுள்ளது.
நோர்வேயின் வடக்குப் பகுதி யே நடுநிசியில் சூரியன் காணப்படும்
6
அரும்பு 21
 

g) Lib (Land of Midnight Sun) 6TaoT அழைக்கப்படுகின்றது. அங்கு மே மாத நடுப்பகுதியிலிருந்து ஜூலை LDITg5 இறுதிவரை சூரியன் மறைவதே
இல்லை. (பூமத்திய கோட்டுக்கு
அருகிலுள்ள எமது நாட்டில் போல் அங்கு சூரியன் வானில் உச்சிக்கு வருவதில்லை. மாறாகத் தொடு வானில் தெற்குத் திசையில் பக்க வாட்டிலேயே உதித்து மறைகின்றது. மேற்குறிப்பிட்ட காலத்தில் அது தொடர்ச்சியாகத் தொடு வானில் தென்படும்.) மறுதலையாக நவம்பர் இறுதி முதல் ஜனவரி முடியும் வரை அங்கு சூரியன் தொடு வானுக்கு அப்பால் மேலெழும்புவதே இல் ଗ0 ) (ଜର) ,
நாட்டின் தாழ் நிலங்களில் இலையுதிர் காடுகளும் மலைப் பிர தேசங்களில் ஊசியிலைக் காடுகளும் காணப்படுகின்றன. நோர்வேயின் நிலப்பரப்பில் கால் பங்கு காடு களையே கொண்டுள்ளது. 0.3% நிலம் மாத்திரமே பயிர்ச்செய்கைக்குத் தகுதியானதாய் இருக்கிறது. பார்லி, உருளைக் கிழங்கு, OatS, கோதுமை போன்றவை பிரதான பயிர்களாக உள்ளன.
ஒஸ்லோ (Oslo) நகரே நோர் வேயின் தலைநகராகத் திகழ்கின்றது. சனத்தொகையில் 98% ஆனவர்கள் ஆதி ஜெர்மனிய இனத்தவர்களின் வழித்தோன்றல்களாவர். ஸாமி (Sami) அல்லது Lapps என அழைக் கப்படும் மக்கள் கூட்டத்தினர் பிரதான சிறுபான்மையினராக (01%) உள்ளனர். 90% மக்கள் புரட்டா ஸ் தாந்து மதத்தின் Lutheran பிரிவைச் சேர்ந்தவர்கள். நோர்வே மொழியே (Norwegian) அரசகரும மொழியாக விளங்குகின்றது.
பாரம்பரியமாக மீன்பிடித்தல், வெட்டு மர (Timber) உற்பத்தி என்
அரும்பு-21
பனவே நோர்வே நாட்டுப் பொரு ளாதாரத்தின் அடிப்படைகளாக இருந்துள்ளன. எனினும் இரண்டாம் உலகப் போரின் பின்னர் அந்நாட்டில் சுரங்கத் தொழில், உற்பத்தித் துறை என்பன கணிசமாக விருத்தியடைந் துள்ளன. இன்று இரும்பு சார்ந்த கலப்புலோகங்கள் உட்பட ஏனைய உலோகங்களின் ஏற்றுமதியில் நோர் வே உலகளாவிய ரீதியில் முதலிடம் வகிக்கின்றது. அத்தோடு மேற்கு ஐரோப்பாவில் கடலுக்கடியிலான பெற்றோலிய மற்றும் இயற்கை வாயு வளங்களை ஆகக்கூடுதலாகக் கொண்ட நாடாகவும் அது திகழ் கின்றது. ஐரோப்பாவில் மிகப்பெரிய ல்மனைற்றுப் படிவுகளும் அங்கு தான் உள்ளது. நீர்மின் உற்பத்தியிலும் மக்னீசியம் அலுமீனியம் ஆகிய உலோகங்களின் உற்பத்தியிலும் நோர்வே உலக அரங்கில் முன்ன ணியில் திகழ்கின்றது.
மிகப் பெரியதும் நவீனமானது மான வாணிபக் கப்பற் படை யொன்று நோர்வேயின் வசம் உள் ளது. எனினும் அண்மைக் காலத்தில் ஏற்பட்ட சில பிரச்சினைகளால் இக்கப்பல்களின் தொகை
LI போது ಬ್ಲೌಜ್ಜೈ கட்டும் தொழிற்றுறிையூம் #* கண்டுள்ளது. کال( "
நோர்வேயின் யாப்புக்கு உட்பட்ட முடியாட்சியொன்றாகும். 1814இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் யாப்பின்படி Storting எனப் படும் தனிச் சபைப் பாராளுமன்றத் திடமே சட்டவாக்க அதிகாரம் வழங் கப்பட்டிருக்கின்றது. அதன் உறுப் பினர்கள் 4 வருடத் தவணைக்காக விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் மூலம் தெரிவு செய்யப்படுகின்றனர். தேர்தலின் மூலம் தெரிவு செய்யப்
7

Page 6
பட்ட உறுப்பினர்களுள் காற் பங் கினர் Lagting என்னும் உயர் சபை யிலும் ஏனையோர் Odelsting என் னும் கீழ்ச் சபையிலும் அங்கம் வகிப் பர். சட்டவாக்கத் தேவைகளுக் கேற்ப இரு சபைகளும் தனித்தனி யாகவோ ஒன்றாகவோ கூட்டங் களை நடாத்துகின்றன.
நிர்வாக அதிகாரம் பெயரள வில் முடிக்குரிய மன்னரிடமே உள் ளது. எனினும் அவரது கடமைகள் வெறுமனே சடங்குபூர்வமானவை யாகவே உள்ளன. பிரதமரின் தலை மையில் இயங்கும் இராஜாங்க gFGou Gu (State Council) 9 6it60 LD யான நிர்வாக அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றது. பாராளுமன் றத்தின் ஒத்திசைவுடன் மன்னரே பிரதமரையும் ராஜாங்க சபையையும் தெரிவு செய்கின்றார். நோர்வே தொழிற்கட்சியும் கன்ஸர்வேட்டிங் கட்சியும் பிரதான அரசியல் கட்சி களாகத் திகழ்கின்றன.
கி. மு. 7000 - 6000 கால இடை வெளியில் வாழ்ந்ததாகக் கருதப்
படும் மனிதர்கள் பயன்படுத்திய கற்கால உபகரணங்களும் கருவி களும் நோர்வேயில் கண்டெடுக்கப் பட்டுள்ளன. கி. மு. 3000க்கும் 2500க் கும் இடைப்பட்ட காலத்தில் புதிய மக்கள் கூட்டத்தினர்கள் நோர்வே யில் குடியேறியிருக்கலாம் என நம் பப்படுகின்றது. கி. வ. 9ம் நூற்றாண் டின் இறுதிப்பகுதியில் சிம்மாசனம் ஏறிய முதலாம் ஹரால்ட் (Harald I) என்பவரே நோர்வேயின் முதலாவது மன்னராகக் கருதப்படுகின்றார்.
கி. வ. 1442 முதல் 1814 வரை டென்மார்க் நாட்டு மன்னர்களே நோர்வேயை ஆட்சி செய்தனர்.
1815இல் நோர்வே ஸ்வீடனுடன்
இணைக்கப்பட்டு அந்நாட்டு முடி யாட்சிக்கு உட்படுத்தப்பட்டது. 1905இல் நோர்வே தனி இராச்சி யமாக மாறும் வரை அங்கு ஸ்வீடிஷ் ஆட்சி நிலைபெற்றது.
முதலாம் உலகப் போரிலும் இரண்டாம் உலகப் போரின் ஆரம் பத்திலும் நோர்வே நடுநிலைமை வகித்தது. எனினும் 1940ம் ஆண்டு ஜெர்மன் இராணுவம் நோர்வேயை ஆக்கிரமித்துக் கொண்டதால் அரச ரும் அரசாங்கமும் இங்கிலாந்துக்குத் தப்பிச் செல்ல நேர்ந்தது. போர் முடியும் வரை நோர்வேயில் ஜெர் மன் ஆட்சி நீடித்தது. எனினும் இறுதி யில் ஜெர்மன் படைகள் தோற்கடிக் கப்பட்டு நோர்வேயின் சுயாட்சி நிலைநிறுத்தப்பட்டது. து
இல்லையே! "சங்கர் பாடசாலைக்கு வரமுன் நீ ஏன் ஒழுங்காக வாய் முகம் கழுவுவதில்லை. நீ இன்று காலையில் உட்கொண்ட உணவு என்னவென்றுகூட உன் வாயைப் பார்த்துச்
சொல்லலாமே!” என்றார் ஆசிரியை.
"டீச்சர், நான் என்ன சாப்பிட்டேன் என்று சொல்லுங்க பார்ப்போம்” என்றான்
சங்கர்.
GG இடியப்பம்”
“இல்லையே! நேற்றுத்தானே இடியப்பம் சாப்பிட்டேன்”
8
அரும்பு-21
 

இராட்சத பண்டா Giant Panda
பண்டா (Panda) என்ற பெய ரால் அழைக்கப்படும் கரடிபோன்ற உருவமுடைய முலையூட்டி விலங்கு சீனாவின் மேல் மத்திய பிரதேசங் களில் உள்ள மூங்கில் காடுகளில் வசிக்கின்றது.
முன்னர் சீனாவிலும், மியன் மாரிலும் பரந்த அளவில் பண்டாக் கள் வசித்து வந்துள்ளன. எனினும் மனிதனின் காடழிப்பு, வேட்டை யாடுதல் போன்ற நடவடிக்கைகள் காரணமாக இவ்விலங்குகளின் தொகை கணிசமான அளவு வீழ்ச்சி யடைந்தது. இன்று சீனாவின் ஸெக் வான் மாகாணத்திலும் அதற்கு அண் மையிலுள்ள கன்ஸ்", சென்ஸி ஆகிய மாகாணங்களிலும் திபெத்திய மேட்டு நிலங்களின் கிழக்கு விளிம்பு களிலும் உள்ள சிறு மூங்கிற் காடு களில் மாத்திரமே இவ்விலங்குகள் காணப்படுகின்றன.
அழிவை எதிர்நோக்கியுள்ள விலங்கினமாகப் பிரகடனப்படுத் தப்பட்டுள்ளPanda இனத்தில் சுமார் 1000 விலங்குகள் மாத்திரமே இப் போது உயிரோடிருப்பதாக மதிப் பிடப்பட்டுள்ளது. அத்தோடு உலக
21 - {اطلازی) sey
N நாடுகளின் விலங்குக் காட்சிச்சாலை
களில் சுமார் நூறு விலங்குகள் அடைத்து வளர்க்கப்பட்டு வருகின் றன. இவை யாவும் சீன அரசினால் அன்பளிப்புச் செய்யப்பட்டனவா கும். சீனாவில் பண்டாக்கள் வாழும் காட்டுப் பகுதிகள் இயற்கைச்சரணா லயங்களாகச் சீன அரசினால் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன.
e இராட்சதப் பண்டா 1.5m நீள மும் 100kg நிறையும் கொண்டதாக வளரக் கூடியது. அதன் உடல் பாலாடை போன்ற வெண்ணிற முள்ள அடர்த்தியான மயிர்களால் போர்த்தப்பட்டுள்ளது. இப்போர் வையின் மீது தோள்பட்டைகளுக்குக் குறுக்காகவும் முன்னங்கால்களிலும் தடித்த கறுப்பு நிறப்பட்டையொன்று காணப்படுகின்றது. பின்னங்கால்கள் கறுப்பாக இருப்பதோடு இரு செவி களிலும் கண்களைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கறுப்பு நிறமான பெரிய அடையாளங்கள் காணப்படு கின்றன.
பண்டா பெரும்பாலும் மூங் கில் தாவரத்தின் இலைகளையும் ளம் தண்டுகளையும் மாத்திரமே உணவாகக் கொள்கின்றது. அதன் முன்னங் காலில் உள்ள பெரு விரல் போன்ற கட்டமைப்பு மூங்கில் லைகளையும் தண்டுகளையும் பற்றிப்பிடிக்க உதவுகின்றது. பண்டா வின் அகன்ற பெரிய பற்கள் மூங்கில் தண்டையும் வேரையும் மெல்லு வதற்கும் அரைப்பதற்கும் ஏற்றன 6) TE சைவாக்கம் அடைந்துள்
(6)T6ზT.
எனினும் பண்டாவின் சமிபாட் டுத் தொகுதியோ ஊனுண்ணிகளுக் குரியது போன்று இருக்கிறது. என வே அதனால் செலுலோசைச் சமி பாடடையச் செய்ய முடிவதில்லை. மூங்கிலில் பெரும்பகுதி செலுலோ
9

Page 7
சையே கொண்டிருப்பதனால், தனக் குத் தேவையான அளவு போசணை யைப் பெற்றுக் கொள்வதற்காகப் பிரமாண்டமான அளவு மூங்கிலைத் தினமும் அது உட்கொள்ள வேண்டி யுள்ளது. எனவே பண்டா இன விலங்கொன்று தினமும் 15 முதல் 30kgநிறையுள்ள மூங்கிற் பகுதிகளை உட்கொள்கின்றது. இதற்காக ஒரு நாளைக்கு 10-12 மணித்தியூரலத்தை அது செலவிட வேண்டி நேரிடுகின் றது. அதேவேளை அடைத்து வளர்க் கப்படும் பண்டாக்களோ தானியங் கள், பால், மரக்கறி வகைகள் முத லியவற்றை விரும்பி உண்ணப் பழ கிக் கொள்கின்றன.
பண்டா தரையில் நடக்கும் போது தட்டுத் தடுமாறியவாறே நடக்கும். எனினும் மரத்திலேறும் போது துடிதுடிப்பாகச் செயற்படும். இனம் பெருக்கும் காலம் தவிர்ந்த ஏனைய காலங்களில் பண்டா தனித் தே வாழும். பொதுவாக மார்ச் முதல் மே வரையான காலத்திலேயே அது தன் துணையை நாடுகின்றது.
கருக்கட்டல் நிகழ்ந்தால் 122 முதல் 163 நாள் வரையான கர்ப்ப காலத்தின் பின்னர் ஒகஸ்ட் அல்லது செப்டம்பரில் ஒன்று அல்லது இரண்டு குட்டிகள் ஈனப்படும். உடன்பிறந்த குட்டி உருவில் மிகச் சிறியதாகவும் குருடாகவும் உரோ மங்கள் அற்றதாகவும் இருக்கும். அதன் நிறை 100gக்கு மேல் இருக் காது. அசைய முடியாத குட்டியை தனது முன்னங்கால்களால் தன் நெஞ் சோடு சேர்த்து அணைத்தவாறு தாய் விலங்கு கவனித்துக்கொள்ளும்.
பிறந்து சுமார் 45 நாட்களில் குட்டி கண்களைத் திறந்து கொள் ளும். 75 நாட்களில் அது ஊர்ந்து செல் லத் தொடங்கும். சுமார் 5 மாதங்
10
களில் மூங்கிலைச் சாப்பிட ஆரம் பித்துவிடும். 18 மாதங்கள் கடந்த பின் தாயைப் பிரிந்து தனியாகச் சென்று விடும். இலிங்க முதிர்ச்சி ஏற்படு வதற்கு ஆறு முதல் ஏழு வருடங்கள் பிடிக்கும். காட்டிலே வாழும் பண் டாக்களின் இனப்பெருக்க வட்டம் மிக மெதுவாகவே நிகழ்கின்றது. அடைத்து வளர்க்கப்படும் நிலைமை களில் பண்டாவை இனம்பெருக்கச் செய்வது மிகச் சிரமமான காரி யமாகும்.
பண்டாக்கள் குகைபோன்ற நிலையான வாழிடங்களை அமைத் துக்கொள்வதில்லை. எனினும் அவை குளிர் காலத்தில் பெரிய மரப் பொந்துகளை அல்லது கற்குகை களைத் தேடிக் கொள்கின்றன. அவை குளிர்கால உறக்கத்தில் ஈடுபடுவது மில்லை. மிக நெருங்கிச் சென்றா லன்றி இவ்விலங்குகள் மனிதனைத் தாக்க முயற்சிப்பதில்லை. இவை கரடிக் குடும்பத்தைச் சேர்ந்தனவா யினும் கரடிகளைப் போன்று உறு மல் ஒலியை ஏற்படுத்தாது ஆடு களைப் போன்று கத்துகின்றன.
(p6ốTGOTř Panda606 Procyonidae என்ற விலங்குக் குடும்பத்தைச் சேர்ந் ததாகவே பாகுபடுத்தியிருந்தனர். தற்போது Ursidae என்னும் கரடிக் குடும்பத்தைச் சேர்ந்ததாக அது பாகுபடுத்தப்படுகின்றது. எனினும் மண்டையோடு, பற்கள் என்பவற் றின் கட்டமைப்பில் Pandaக்கள் கரடி களிலிருந்து அதிகம் வேறுபடுகின் றன. எனவே இவ்விலங்கினத்தை Ailuropodidae 6T 6ăTp g5 Gof? Laŭ Lu "L குடும்பமொன்றாகப் பாகுபடுத்து வது பற்றியும் ஆலோசனைகள் முன் வைக்கப்பட்டுள்ளன. Panada வின் விலங்கியற் பெயர் Aituropoda melanoleuca என்பத்ாகும்.
21 - اازقی)sy

பிரயாண நினைவுகள்
சிகாகோவில் சி
சிகாகோ மாநகரில் நான் கட்டா யம் பார்க்க வேண்டிய இடங்கள் என ஒரு சிறு பட்டியலை எழுதித் தந்திருந்தார் பிட்ஸ்பேர்கில் சந்தித்த அமெரிக்க நண்பர் ஒருவர். அந்தப் பட்டியலை ஊர் நண்பர் களிடம் காட்டி ஆலோசனை கேட்டேன். ஆம்! கட்டாயம் பார்க்கவேண்டிய இடங்கள் தாம் இவை' என்று அவர் களும் அங்கீகாரம் அளித்தனர். எனவே அந்தப் பட்டியலில் உள்ளவற்றையெல் லாம் எப்படியாவது பார்த்துவிட வேண் டும் எனத் தீர்மானித்துக் கொண்டேன்.
மறுநாள் பகலுணவின் பின்னர் சிகாகோவின் down town பகுதியை நோக்கிச் சென்ற என்னோடு இளைஞர் கள் சிலரும் வந்தனர். நாம் வாகனங்களில் ஏறி மிச்சிகன் ஏரிக்கரை நெடுகே செல் Q) in Lakeshore Drive 6T657g) to 615(5)(35 சாலை வழியாகச் சென்றோம். ஏரி யிலிருந்து வீசும் தொடர்ச்சியான காற்று சிகாகோ நகரவாசிகளுக்கு ஒர் அருட் கொடையாகவே இருக்கிறது. இதனால் தான் சிகாகோவைThe Windy City என அமெரிக்கர்கள் அழைக்கின்றனர். எனி னும் குளிர் காலத்தில் இது அசெளகரி யமாகவும் மாறிவிடுகிறதாம்.
முதலில் அமெரிக்காவிலுள்ள மிக வும் உயரமான கட்டடமான ஸியர்ஸ் LQJ68) J (Sears Tower) LITil ILigj 61613 திட்டமிட்டோம். எனவே எமது வாக னங்களை வசதியான இடமொன்றில் நிறுத்திவிட்டு ஸியர்ஸ் டவரை நோக்கிக் கால்நடையாகச் சென்றோம். அந்த அற் புதக் கட்டடத்தின் உச்சியிலுள்ள காட்சி காண் கூடத்திற்கு ஏறுவதற்காக வருடந் தோறும் 15 இலட்சம் பேர் வருகை தருவதாகக் கூறினார்கள்.
21 - بافارقاوى
ஸியர்ஸ் டவர் அமைந்துள்ள நகரின் பகுதி அடர்ந்துயர்ந்த கொங்கிரீட் காடு போன்றே தோற்றமளித்தது. பாதைகளின் இரு மருங்குகளிலும் வானுயர் கட்ட
டங்கள் தொடராக இருந்தமையினால்
சூரிய ஒளி அப்பிரதேசத் ள் நுழைய முடியாதிருந்தது.இதனில்,எங்கும் இருள் சூழ்
போன்ற் உணர்வே ஏற்பட்டது. ಙ್ಳ
கியூவரிசையில் நின்று நுழைவுச் சீட்டுக்களைப் பெற்றுக்கொண்ட பின்னர் அதிவேக லிப்ட்' மூலம் நாம் ஸியர்ஸ் டவரின் உச்சிக்கு ஏறினோம். 1973இல் திறக்கப்பட்ட 1450 அடி (442 m) உயர முடைய இக்கட்டடம் 110 மாடிகளைக் கொண்டது. நாம் ஏறிச் சென்ற லிப்ட் அத்தனை மாடிகளையும் ஒரு நிமிடத்தில்
கடந்து எம்மை உச்சிக்குக் கொண்டு
சேர்த்தது. அந்த வேகத்தில் நாம் கதிகலங் கிப் போகாமல் இருப்பதற்காக லிப்ட் டின் உள்ளே அகன்ற திரைTVஇல் ஏதே தோ ஒளிபரப்பினார்கள். ஏற்கனவே
11.

Page 8
கனடாவிலுள்ளCNTower இன் உச்சிக்கு ஏறிய அனுபவம் இருந்தும் என் மனதில் ஒருவகைப் படபடப்பு ஏற்படத்தான் செய்தது.
ஸியர்ஸ் டவரின் Sky deck என்னும் காட்சி காண்கூடத்திலிருந்து முழுச்சிகா கோவையும் பார்க்க முடியும். வளி மண் டலம் தெளிவாக உள்ள நாட்களில் அமெரிக்காவின் நான்கு மாநிலங்களின் பகுதிகள் அங்கிருந்து தென்படுவதாகக் கூறினார்கள். தொலைவைப் பார்ப்ப தற்கு வசதியாக தொலைகாட்டிகளும் வைக்கப்பட்டிருந்தன. 25 சத நாணய மொன்றை உள்ளே செலுத்தினால்தான் அக்கருவிகளைத் தேவையான விதத்தில் அசைக்க முடிந்தது.
அந்தக் காட்சி காண் கூடத்தினுள் ளே சிகாகோ நகரின் சமூக, கலாசார வரலாற்றினைச் சித்தரிக்கும் வகையில் நிலையான கண்காட்சியொன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அங்கு விஜயம் செய்வோர் சிகாகோவைப் பற்றிப் பல அரிய தகவல்களைப் பெற்றுக்கொள்ள இது உதவுகின்றது. அந்தக்கண்காட்சியில் நானும் அதிக நேரம் லயித்துப் போயிருந் தேன்.
1833இல் ஒரு கிராமமாக ஆரம்பித்த சிகாகோ விரைவில் நகரொன்றாக விருத் தியடைந்திருக்கிறது. 1871 ஒக்டோபர் 8ம் திகதி அங்குள்ள ஒரு தொழுவத்தில் மாடொன்று எண்ணெய் விளக்கொன் றைக் காலால் தட்டிவிட்டதனால் ஏற் பட்ட தீ பரவி மூன்று நாட்களில் சிகாகோ நகர் முழுவதும் எரிந்து சாம்பலாகிப் போயுள்ளது. இரண்டு கட்டடங்கள் மாத் திரமே அழிவிலிருந்து தப்பியுள்ளன. அக்கட்டடங்கள் இரண்டும் இன்றுவரை நினைவுச் சின்னங்களாகப் பேணப்பட்டு வருகின்றன.
வர்த்தகத்துக்கு மாத்திரமன்றி கல் விக்கும் பெயர் பெற்ற ஓர் இடமாகச் சிகாகோ திகழ்கின்றது என்பதையும்
12
ஸியர்ஸ் டவர் பற்றிய சில தகவல்கள்
* 1973ம் ஆண்டு திறக்கப்பட்ட ஸியர்ஸ் டவர் 10 மாடிகளைக் கொண்டது. இதன் கூரை உச்சி வரை உள்ள உயரம் 1450 அடிகளாகும். * உச்சியில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு அண்டனாக்களுடன் சேர்த்து இதன் உய ரம் 1730 அடிகளாகும். * இதனைக் கட்டி முடிப்பதற்கு மூன்று வருடங்கள் பிடித்தன. 1600 தொழிலாளர் கள் வேலை செய்தனர். *சுமார் 4,500,000 சதுர அடி நிலப்பரப்புக் கொண்ட இக்கட்டடத்தின் மொத்த நிறை 225,000 தொன்களாகும். * இதில் 16,000 கண்ணாடி யன்னல்கள் உண்டு. இதனுள் 68,800 km நீளமான தொலைபேசிக் கம்பிகளும் 3,200 km நீளமான மின் கம்பிகளும் 40,000 km நீளமான நீர்க் குழாய்களும் பயன்படுத்தப்
பட்டுள்ளன. t
அறிந்துகொள்ள அக்கண்காட்சி உதவி
யது. இதுவரை நோபெல் பரிசு பெற்றுள் ளோரில் சுமார் 70 பேருக்கு மேற்பட் GLITij University of Chicago65)aö LDT 6007 வர்களாகவோ ஆசிரியர்களாகவோ இருந்தவர்களாம். உலகிலுள்ள வேறு எந்த உயர்கல்வி நிறுவனமும் சிகாகோ பல்கலைக்கழகத்தின் இச்சாதனையை முறியடிக்க முடியாது என அங்கு குறிப் பிடப்பட்டிருந்தது.
எல்லாவற்றையும் பார்த்து முடித்த பின்னர் நாம் அதே லிப்ட்' மூலம் கீழே இறங்கினோம். ஸியர்ஸ் டவர் பற்றிய நினைவுச் சின்னங்களை விற்கும் கடை கள் பல கீழ்ப்பகுதியில் இருந்தன. அத் தோடு அந்த அற்புதக் கட்டடத்தை வடிவ மைத்து நிர்மாணித்த கிழக்கு வங்காளக் கட்டடக் கலைஞர் பஸ்லுர் ரஹ்மான்
21 - (پلاژی sy

கான் அவர்களின் நினைவுச் சின்ன மொன்றும் அங்கு நிறுவப்பட்டிருந்தது.
நாம் வெளியே வந்தபோது மழை துர ஆர்ம்பித்திருந்தது. எனவே தொலை வில் நிறுத்தியிருந்த எமது கார்களை நோக்கிச் செல்ல முடியாமல் பாதை யோரத்தில் ஒதுங்கி நின்றோம். அப் போது அவ்வழியாக வந்த வாடகைக் காரொன்று எம்மருகே வந்து நின்றது. அந்த டாக்ஸியின்சாரதியும் எனது ஊரைச் சேர்ந்த ஒருவர்தான் என்பதைக் கண்டதும் எனக்கு ஆச்சரியமே ஏற்பட்டது. ‘நாம் கார்களில்தான் வந்திருக்கிறோம். மழைக் காகச் சற்று ஒதுங்கி நின்றோம்” என்று என்னோடு வந்தவர்கள் அவருக்கு விளக் கினர். ஆனால் அவர் என்னை விட வில்லை. "நீங்கள் எனது காரில் கட்டா யம் வரவேண்டும். எனது மனைவி உங்களிடம் கல்வி கற்றவர்’ என்று கூறி அன்பாக அழைத்தார். அவரது அழைப் பைத் தட்ட முடியாமல் நான் அவரது காரிலே செல்ல ஒப்புக்கொண்டேன்.
அன்று இரவு வெகு நேரம் வரை நாம் சிகாகோ நகர வீதிகளில் அலைந்து திரிந்தோம். புது மணச் சோடியொன்றை ஏற்றிக்கொண்டு வீதிகளில் வலம் வரும் பாரம்பரியக் குதிரை வண்டியொன்றைக் கண்டேன். வெண்ணிறக் குதிரைகள் பூட்டப்பட்ட அவ்வாறான வண்டிகள்
உல்லாசப் பிரயாணிகளுக்காகவும் சேவையிலிடுபடுத்தப்படுவது தெரிந்தது. “Navy Pier Children's Museum' 6TGT அழைக்கப்படும் சிறுவர்களுக்கான உல் லாசபுரிக்கும் விஜயம் செய்தோம். சிறு வர்களை மகிழ்விப்பதற்கான மெரிகோரவுண்ட் போன்ற சாதனங்கள் பல அங் கிருந்தன. அத்தோடு சுமார் 50 தொட்டில் கள் பொருத்தப்பட்ட இராட்சத சுழலும் இராட்டினமொன்றும் அங்கிருந்தது. அச் சக்கரத்தின் தொட்டில்களில் அமர்ந்த வாறு சிறுவர்களைப் போன்று நாமும் அந்தரத்தில் சுழன்று மகிழ்ந்தோம். சக் கரத்தின் சுழற்சியோடு நாம் மேலே சென்றபோது கண்ணுக்குத் தெரியும் தூரம் வரை சிகாகோ நகர் மின்னொளியில் ஜொலிப்பதைக் கண்டு மெய்ம்மறந்து போனேன். −
நடுநிசியாகிய பின் கீழைத்தேய உணவகமொன்றுக்கு என்னை அழைத்துச் சென்றனர். அங்கு பல்வேறு வகை இந் திய பாகிஸ்தானிய உணவுகள் கிடைத் தன. களைப்புத் தீரும்வரை உண வருந் திவிட்டு வதிவிடம் வந்து சேர்ந்தோம்.
மறுநாள் பகலுணவின் பின்னர் Lisp Guibp Chicago Field Museum 6Tair னும் அரும் பொருட் காட்சிச் சாலை யைப் பார்க்கச் செல்வதெனத் தீர்மானித் துக் கொண்டோம் (தொடரும்)
பாதியே போதும் தொண்டையில் முள்ளொன்று சிக்கிக் கொண்டதால் மிகவும் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருந்த பணக்காரர் ஒருவர் நிவாரணம் தேடி ஒரு வைத்தியரிடம்
சென்றார்.
வேதனையால் துடித்துக் கொண்டிருந்த அந்த மனிதரை உடனடியாகக் கவனித்த வைத்தியர் பெரும் சிரமத்தோடு முள்ளை வெளியே எடுத்துவிட்டார்.
அவஸ்தை நீங்கி ஆறுதல் பெற்ற அந்தப் பணக்காரர் “முள்ளை எடுத்ததற்கு நான் எவ்வளவு பணம் தர வேண்டும்?” என்று வைத்தியரிடம் கேட்டார்.
“பெரிதாக ஒன்றும் வேண்டாம். முள்ளு தொண்டையில் இருந்து கொண்டு அவதிப்படுத்தியபோது அதை எடுப்பவருக்கு எவ்வளவு பணம் கொடுப்பதற்கு
நீங்கள் தயாராக வைத்தியர்.
அரும்பு-21
இருந்தீர்களோ அதில் பாதியைத் தந்தால் போதும்” என்றார்
13

Page 9
பற்றீரியாத் தொற்றுக்கள் கார ணமாகத் தொண்டையில் tonsitis, Gg5T Git60) di 5 () (sore throat) போன்ற பாதிப்புக்கள் ஏற்படுவது FEggL DIT (J5lüd. (6) LI Tg5 G) IIT 5 Streptococcus என்னும் வகையைச் சேர்ந்த பற் ரீரியாக்களின் தாக்கத்தினாலேயே இத்தகைய பாதிப்புக்கள் ஏற்படு கின்றன.
சில சந்தர்ப்பங்களில் tonsitis, தொண்டைக் கட்டு போன்ற தொற் றுக்களைத் தொடர்ந்து Rheumatic fever என்னும் வாதக் காய்ச்சல் தோன்றலாம். பொதுவாக மேற் குறிப்பிட்ட தொற்றுக்களிலிருந்து குணம் கிடைத்து வரும் போதே இக்காய்ச்சல் உண்டாகும். வாதக் காய்ச்சலின் போது உடலிலுள்ள பெரிய மூட்டுக்களில் வலி ஏற்பட்டு அவை வீங்கும். இந்நிலையில் அம் மூட்டுக்களைச் சூழ உள்ள பிரதேசம் சிவந்தும் சூடாகவும் மென்மை யாகவும் காணப்படும்.
மூட்டுக்களில் ஏற்படும் இப் பாதிப்புக்கள் ஒரு வகை மூட்டி லிருந்து ன்னொரு வகைக்கு டம்பெயரலாம். வாதக் காய்ச் சலால் பாதிக்கப்பட்டவரில் பசி யின்மை, அதிக வியர்வை, தோல் சிவத்தல் போன்ற அறிகுறிகள் தென் படும். சிலரில் தோலுக்குச் சற்றுக் கீழாக வலிதரக்கூடிய சிறு கட்டுக்கள் தோன்றலாம்.
வாதக் காய்ச்சலின் போக்கு ஆளுக்கு ஆள் பெருமளவு மாறு
14
படலாம். பொதுவாக 12 வாரங் களுக்குள் இதன் தாக்கம் தணிந்து விடுவதுண்டு. எனினும் வாதக் காய்ச் சலின் போது இதயத்தில் பாரதூர மான பாதிப்புக்கள் ஏற்படுவதற்கான சாத்தியம் உண்டு என்பதை நாம் மறக்கக்கூடாது. இவ்வாறான காய்ச் சலின் போது இதயத்திற்கு மேலுள்ள பகுதியில் நோவு ஏற்படுதலும் இத யத் துடிப்பின் ஒழுங்கில் சீர்குலைவு ஏற்படுவதும் இதயப் பாதிப்புக்குரிய அறிகுறிகளாகும்.
வாதக் காய்ச்சலைத் தொடர்ந்து இதயத்தில் பின்வரும் வகையான பாதிப்புக்கள் நிகழக் கூடும். (1) endocarditis : 3)guš56õt 2 "J; வரின் சுற்றுறை (lining) அல்லது தய வால்வுகள் பாதிக்கப்படுதல். (2) pericarditis இதயத்தைச் சுற்றி யுள்ள உறை பாதிக்கப்பட்டு வீங் குதல். (3) myocarditis : 9); u 15 g Gogoscir பாதிப்புற்று வீங்குதல். மேற்குறித்த எந்தவொரு நிலைமை யும் இதயத்தில் நிரந்தரமான சேதத் தை ஏற்படுத்திவிடக் கூடும்.
இதயச் சுற்றுறைகளிலும் வால் வுகளிலும் ஏற்படுகின்ற நோய் நிலை மைகள் காலப்போக்கில் தணிந்து போனாலும் இரண்டு விதமான குறைபாடுகள் நிலைத்து நிற்கலாம். அவையாவன :
(1) வால்வொன்றில் ஏற்பட்ட வடுவின் காரணமாக அவ்வால் வினால் உரிய அளவுக்குத் திறந்து
21 - الاطبازویی eyع
 

கொள்ள முடியாமற் போதல். இந் நிலை Stenosis எனப்படும். இந் நிலைமையில் இதயத் துடிப்பின் போது அவ்வால்வினுரடாகக் குருதி பாயும் அளவில் குறைபாடு ஏற் படும்.
(2) பாதிக்கப்பட்ட வால்வு ஒன்றினால் ஒழுங்காக மூடிக்கொள் ள் முடியாமற் போதல். இதன் கார ணமாக இதயத் துடிப்பின் போது செல்லவேண்டிய திசைக்கு எதிரான திசையில் குருதி கசியத் தொடங்கும். இதன் விளைவாக insufficiency என்ற குருதியோட்டக் குறைபாட்டு நிலைமை உருவாகும்.
மேற்குறிப்பிட்ட குறைபாடு களில் தனித்து ஒன்றோ அல்லது இரண்டும் சேர்ந்தோ நிலைபெறும் போது இதயத்தின் வேலைச் சுமை அதிகரிக்கும். இதனைக் கவனித்து உரிய முறையில் சிகிச்சை வழங்கப் LILITigil GLIT 687 Tab heart failure 6Tair னும் இதயத் தொழிற்பாட்டுத் தடை ஏற்படலாம்.
இடது சோணைக்கும் இடது தயவறைக்கும் இடையிலுள்ள (1536, it 6) I Tai) G36) I (mitral valve) பெரும்பாலும் Stenosis என்னும் பாதிப்புக்கு உள்ளாகின்றது.
தொகுதிப் பெருநாடியின் ஆரம் பத் தானத்தில் உள்ள வால்வும் (aortic valve) g),5560) 5u Lust 9, L'ilyai(5
உள்ளாகலாம். ஏனைய வால்வுகள் மிக அரிதாகவே பாதிக்கப்படு 3)aitp601. Echo cardiogram Giglig9) to சோதனை மூலம் இத்தகைய குறைபாடு ஒருவரில் இருக்கின்றதா என்பதை அறிந்துகொள்ள முடியும். இவ்வாறு பாதிப்புக்குள்ளான வால்வுகளை இப்போது சத்திர சிகிச்சை மூலம் திருத்திக்கொள்ள முடியும்.
மேற்குறிப்பிட்ட இதய நோய் கள் வாதக் காய்ச்சலின் விளை வாகவே ஏற்படுவதனால் இவை Rheumatic heart diseases 6160T egy60ypás கப்படுகின்றன. வாதக் காய்ச்சல் உண்டாகும் சந்தர்ப்பங்களில் உரிய சிகிச்சையைத் தாமதமின்றிப் பெற்
றுக்கொள்வதன் மூலம் இந்த ஆபத் துக்களைத் தவிர்த்துக்கொள்ள முடியும்.
சிறு பிள்ளைகளில் tonsitis, தொண்டைக் கட்டு போன்ற தொற் றுக்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் எச்சரிக்கையாக இருந்து வைத்திய உதவியைப் பெற்றுக் கொள்வதன் மூலம் வாதக் காய்ச்சல் வரா மற் தடுத்துக்கொள்ள முடியும். வாதக் காய்ச்சல் ஏற்பட்ட ஒருவருக்கு மீண்டும் மீண்டும் அது வருவதற்கு வாய்ப்புண்டு. எனவே இந்த விடயத்த திலும் எச்சரிக்கையாக இருட்
எது அவமானம்?
அவசியமாகும். கு گگه తో
EMطلي
நீங்கள் உங்கள் இலட்சியங்களை அடையாமற் போவதை வாழ்க்துையில் ஏற்படும் துக்ககரமான நிகழ்வாகக் கருத முடியாது. ஏனெனில் அடைவதற்கு எவ்விதமான இலட்சியங்களும் இல்லாத நிலையில் வாழ்வது தான் வாழ்க்கையின் பெருஞ் சோகமாகும். இலட்சியக் கனவுகள் நிறைவேறாத நிலையில் ஒருவர் இறந்து போவது ஒரு பேரிடர் அல்ல. ஆனால் அத்தகைய கனவுகளே காணாத வாழ்வு தான் ஓர் அனர்த்தமாக இருக்கும். சிகரத்தை அடையாமற் போவது அவமானத்திற்குரியதல்ல. மாறாக அடைவதற்குச் சிகரங்களே இல்லாமற் போவது தான் அவமானமாகும். தோல்வி அடைவது பாவமல்ல - ஆனால் உயர் இலட்சியங்கள் எதுவும் இல்லாத வாழ்க்கைதான் பாவமானது.
அரும்பு-21
15

Page 10
FGM) STGM) höh குறியீடுகள்
Bar Codes (ର வெளிநாடுகளில் இருந்து
தருவிக்கப்படும் பல்வேறு பாவ னைப் பொருட்கள், புத்தகங்கள், சஞ்சிகைகள் போன்றவற்றில் மெல் லியதும் தடித்ததுமான கறுப்புக் கோடுகளைக்கொண்ட (மேலே காட்டப்பட்டுள்ளது போன்ற) குறி யீடுகள் அச்சிடப்பட்டிருப்பதைக் கண்டிருப்பீர்கள். சமாந்தரமாகவும் நிலைக்குத்தாகவும் அமைந்த இக் கோடுகளின் தொடர் குறித்த பண் டத்தை இனங் கண்டுகொள்வதற்கு உதவும் ஒரு விசேட குறியீடாகப் பயன்படுத்தப் படுகின்றது. இவ் வகையான குறியீடுகள் ஆங்கிலத்தில் Bar Codes (சலாகைக் குறியீடுகள்) என அழைக்கப்படுகின்றன.
Bar Code 626356ò 5T600T (5)D கோடுகள், தடிப்பிலும் அவற்றுக் கிடையிலான இடைவெளியின் அள விலும் வேறுபடுகின்றன. வித்தியாச மான தடிப்புடைய இக்கோடுகள் துவித எண் குறியீடுகளான (binary digits) 0, 1 என்பவற்றைக் குறித்து நிற்கின்றன. இவ்வெண் குறியீடு களின் ஒரு தொகுதி ஓர் அலகாகக் கொள்ளப்படுகின்றது. இவ்வாறான பல்வேறு அலகுகள் ஒன்றிணைந்து ஒர் எண் தொடரை (சிலவேளை களில் ஆங்கில எழுத்துக்களின் தொ டரை) உருவாக்குகின்றன. இத் தொடரைக் கொண்டே குறித்த பண் டம் இனங்கண்டறியப் படுகின்றது.
சலா கைக் குறியீடுகள் பண் டத்தைச் சுற்றிவரும் உறையின் மீது
16
அச்சிடப்பட்டிருக்கலாம். அல்லது அது தனியாக வேறு தாளில் அச் சிடப்பட்டுப் பண்டத்தின் மீது ஒட் டப்பட்டிருக்கலாம். பொதுவாக ஒரு நிறுவனத்தில் வைக்கப்பட்டுள்ள பல்வேறு பொருட்களின் வகை தொகை என்பன பற்றிய விபரங் களைப் பதிவு செய்து பேணுவதற் காகவே சலா கைக் குறியீடுகள் உதவுகின்றன. இப்போது, பெரிய விற்பனை நிலையங்கள், கள்ளுசிய சாலைகள், நூலகங்கள் போன்ற நிறு வனங்களில் சலாகைக் குறியீடுகள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்
றன.
சலா கைக் குறியீடொன்றை மனிதர்கள் நேரடியாக வாசித்துப் புரிந்துகொள்வது கடினமாகும். என வே லேஸ்ர் கதிர்களைப் பயன் LIG5535 (6.5IT fibl (5) in Laser Scanners என்னும் கருவிகள் இதற்காக உபயோகிக்கப்படுகின்றன. இக்கரு Gớle560) GTL’i (6) u Tg GJIT 35 Barcode readers என அழைப்பதும் உண்டு. இவை, குறித்த மீடிறன் கொண்ட லேஸர் கற்றையொன்றை (Laser beam) உபயோகித்து ஒரு சலாகைக் குறியீட்டிலுள்ள வெவ்வேறு கோடு களின் விளிம்புகளைப் பிரித்தறிந்து கொள்கின்றன. சலா கைக் குறியீ டொன்றில் உள்ள தரவுகளை எந்தத் திசையிலிருந்தும் வாசித்துக் கொள் ளக்கூடிய இக்கருவிகள் அத்தரவு களைக் கம்பியூட்டரொன்றுக்குச் செலுத்துகின்றன. கம்பியூட்டர் அத்
21 - اپاطازوییلاقی

தரவுகளைத் தொகுத்துத் தேவைக் கேற்ற விதத்தில் உபயோகித்துக் கொள்ளும்.
ப்போது பல்வேறு வடிவங் களைக்கொண்ட Scanner கருவிகள் Bar Code 560 GT 6). It St Lugsb3, T3, l'i பயன்படுத்தப்படுகின்றன. இவற்றுற் சில, கையில் வைத்திருக்கக்கூடிய அளவுக்குச் சிறியனவாக இருக்கும். இவற்றைப் பொருளொன்றிலுள்ள Bar Code இன் மீது நகர்த்துவதன் மூலம் அதிலுள்ள தரவுகளை வாசிக் கச் செய்யலாம். Super Markets போன்ற விற்பனை நிலையங்களிலே மேசைகளில் பதிக்கப்பட்டBar Code Readers உபயோகிக்கப் படுகின்றன. இவற்றின் மீதாகப் பொருளை நகர்த் தும் போது அதிலுள்ள சலா கைக் குறியீட்டின் தரவுகளை இக்கருவிகள் வாசித்துணர்ந்து அவற்றை உரிய கம்பியூட்டருக்கு அனுப்பிவிடுகின் றன.
சீரான உற்பத்திப் பொருட் (gg5uit G5 (up 60 p (Uniform Product Code - UPC) என்ற முறைக்கமைந்த சலாகைக் குறியீடுகளே விற்பனை நிலையங்களில் பயன்படுத்தப்படு கின்றன. விற்பனைக்குள்ள ஒவ் வொரு பண்டத்துக்கும் தனித்துவ மான எண் தொடரொன்றை இக் குறியீடுகள் உள்ளடக்கியிருக்கும். பண்டத்தின் உற்பத்தியாளர், விலை, காலாவதியாகும் திகதி முதலிய தகவல்களை இவ்வெண் தொடர் குறித்து நிற்கும். எனவே ஒரு பண்டத் திலுள்ள சலாகைக் குறியீட்டிலிருந்து
அதன் வகை, விலை என்பவற்றைக் கம்பியூட்டர் பதிந்துகொண்டு சுயா தீனமாக அதற்குரிய விலைப் பட்டி யலைத் (invoice) தயாரித்து விடுகின்
Dģ
g(3JITILIT 67laö EAN (Europeaan Article Number) 6 TGörp (35 gólu fill "G முறையும் ஜப்பானில் JAN (Japanese ArticleNumber) 6Taip gj5lui (5) முறையும் பண்டங்களில் சலாகைக் குறியீடுகளைப் பதிக்கப் பயன்படுத் தப்படுகின்றன. புத்தகங்களிலே காணப்படும் சலாகைக் குறியீடுகள் ISBN (International Standard Book Number) என்ற எண்ணின் அடிப் படையில் ஆக்கப்பட்டனவாகும். ஒரு புத்தகத்தின் விலை அதனை வெளியிட்ட நாடு என்பன போன்ற தகவல்களை இந்தக் குறியீட்டு முறை உள்ளடக்கியிருக்கும்.
Bar Code Ligdig in (up 60 sp 1970களில் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று அது பெரும்பாலான வா ணிபத்துறைகளில் இன்றியமையாத
தாக மாறியிருக்கின்றது. சில்லறை
விற்பனைத் துறையில் மட்டுமன்றி, அடையாள அட்டைகளைத் தயா ரித்தல், ஆவணங்களுக்குக் குறியிடு தல் போன்ற இன்னும் பல துறை களிலும் அது உபயோகிக்கப்படு கின்றது. இப்போது பரம்பரை அல குகள் பற்றிய ஆய்வுகளில் பரம்பரை அலகுகளையும், DNA மூலக்கூறு களையும் குறியிட்டு வைப்பதற்கும் சலாகைக் குறியீடுகள் உபயோகிக்கப் படுகின்றன. இ
ஏன்? ஒரு விற்பனை நிலையத்தின் முகாமையாளரைத் தேடிச் சென்ற ஒரு பெண்"ஐயா உங்கள் கடைக்கு
99 விற்பனை ஊழியர்கள் தேவையா?" எனக் கேட்டாள்.
“மன்னிக்கவும் எங்களிடம் போதியளவு ஊழியர்கள் இருக்கிறார்கள்’ என்றார் முகாமையாளர். "அப்படியானால், துணி வாங்க வந்த என்னை ஏன் இவ்வளவு நேரம் காக்க வைக்கிறீர்கள்?”
என்று திருப்பிக் கேட்டாள் அவள்.
அரும்பு-21
17

Page 11
மின் விளக்குகள், மின் உப கரணங்கள், இலக்ட்ரோனிக் சாத னங்கள், கம்பியூட்டர்கள், தொலைத் தொடர்புச் சாதனங்கள் போன்ற பெருந்தொகையான உற்பத்திப் பொருட்கள் தாங்கி வரும் பிலிப்ஸ் (PHLIPS) என்ற வர்த்தகப் பெயர் யா வரும் அறிந்த ஒன்றாகும், நெதர்லாந் தின் ஐண்ட்ஹோவன் (Eindhoven) என்ற நகரில் தலைமையகத்தைக் G5It alsTG) 6irat Philips Electronics NV என்ற கம்பனியே இப்பொருட்கள் அனைத்தையும் உற்பத்தி செய்து சந்தைப்படுத்துகின்றது. ۔
டச்சுப் பொறியியலாளரான Gerard Philips என்பவர் சாதாரண மின் குமிழ்களை (வெள்ளொளிர்வு விளக்குகளை) உற்பத்தி செய்வதற் காக 1891ம் ஆண்டு இக்கம்பனியை ஆரம்பித்தார். இத்தொழில் முயற் சிக்கான நிதி உதவியை அவரது தந்தையாரானFrederik Philips வழங் கியிருந்தார். ஆரம்ப காலத்தில் இந்நிறுவனத்தின் பெயர் Philips and Company என்றே இருந்தது.
பிழைப்பதற்காகப் போராடிக் கொண்டிருந்த பிலிப்ஸ் கம்பனியின் நிர்வாகத்தில் Gerardஇன் தம்பியான Anton Philips 1895g),gi) G3 grii jjigy கொண்டார். அதன் பின்னர் கம்பனி துரித வளர்ச்சி காணலாயிற்று.
பிலிப்ஸ் கம்பனி ஆரம்பத்தி லிருந்தே ஆராய்ச்சிக்கு முக்கிய டம் வழங்கியது. அதன் ஆய்வு களை மேலும் வலுப்படுத்தும் நோக்
18
ຫຼືເດດ ເດ໋ ສ ທີ່ ເຕົ L.IE: Hill. G. I'll le Sill.i. ill. I get |
குடன் 1914ம் ஆண்டு தனியான ஆராய்ச்சிப் பிரிவொன்று உருவாக் கப்பட்டது. இதுவே பிற்காலத்தில் Philips Research Laboratories 9.5 உருப்பெற்றது.
தனது உற்பத்திகளைப் பன் முகப்படுத்தும் நோக்குடன் 1920இல் பிலிப்ஸ் கம்பனி ரேடியோக் கருவி களையும் வேறு சாதனங்களையும் உற்பத்தி செய்யத் தொடங்கியது. இம்முயற்சி நல்ல வெற்றியை அளித்தது. பிலிப்ஸ் ரேடியோக்களும் டேப் ரெகோர்டர்களும் மக்களால் விரும்பி உபயோகிக்கப்படலாயின. இரண்டாம் உலகப் போரின் போது (1939 - 1945) பிலிப்ஸ் கம்பனியின் தொழிற்பாடுகள் யாவும் தடைப் பட்டன. ஜெர்மனிய ஆக்கிரமிப்புக் காரணமாக கம்பனி நிர்வாகத்தினர் ஐக்கிய அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தனர்.
போர் முடிவுற்ற பின்னர் பிலிப்ஸ் கம்பனி அபரிமிதமாக வளர்ச்சி அடைந்தது. Philips, Magnavox, Norelco (up56ólu 6)I sig, தகப் பெயர்களில் அது தனது உற்பத்திப் பொருட்களை உலகெங் கும் சந்தைப்படுத்தலாயிற்று. CD 6TGörGDJüd Compact Disc, 35 G) GYv jib நாடா, வீடியோ கஸெற் ரெகோர்டர் போன்றவற்றை உருவாக்குவதில் பிலிப்ஸ் கம்பனியின் பங்களிப்பு முதன்மையானதாகக் கருதப்படு கின்றது. 20ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியாகும் போது ஐரோப்பாவி
அரும்பு-21
 

லேயே மிகக் கூடுதலானோர் தொழில் புரியும் தனியார் வர்த்தக நிறுவனங்களுள் ஒன்றாக பிலிப்ஸ் கம்பனி விளங்கிற்று.
இன்று பிலிப்ஸின் உற்பத்திப்
பொருட்களுள் மின்விளக்கு வகை
கள், பற்றரிகள், TVக்கள், ரேடியோக் கள், CD Playerகள் ஒலிப்பதிவுக் கருவிகள் வீடியோ ரெகோர்டர்கள், மின் விசிறிகள், வீட்டுப் பாவனைக் கான பல்வேறு மின் உபகரணங்கள், மின் சவரப் பொறிகள், காரியாலய மின் உபகரணங்கள், தொலைத் தொடர்புச் சாதனங்கள், கம்பியூட்டர்
கள் போன்ற நூற்றுக் கணக்கான சாதனங்கள் அட்ங்குகின்றன.
1970 வரை பிலிப்ஸ் குடும்பத் தினர் கம்பனியை நிர்வகித்து வந்த னர். இப்போது பிலிப்ஸ் கம்பனி யின் உற்பத்தி ஆலைகளும் சந்தைப் படுத்தும் துணை நிறுவனங்களும் உலகளாவிய ரீதியில் அமைக்கப்பட் டுள்ளன. ஆசியாவிலே சீனா, இந்தி யா, இந்துனேஷியா, மலேஷியா போன்ற நாடுகளிலெல்லாம் பிலிப்ஸ் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. கு
நானும் அப்படித்தான்!
மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் தனது மாணவர்கள்
குழுவொன்றுடன் செயல்முறைப் பாடம் நடத்துவதற்காக வைத்தியசாலைக் குச் சென்றார். அங்குள்ள நோயாளிகள் சிலரின் நோய் விபரங்களை மாணவர் களுக்கு விளக்கி அவர்களது வைத்திய அறிவைச் சோதிப்பதே அவரது நோக்க LOPT-95 இருந்தது.
ஒரு நோயாளியின் கட்டிலுக்கு அருகே சென்ற அவர் அங்கிருந்த எக்ஸ் ரே படத்தைச் சுட்டிக்காட்டி “இங்கே பாருங்கள் இவனது இடது காலின் எலும்புகள் இரண்டும் முறுக்குண்டு போயுள்ளன. இதனால்தான் இவன் நொண்டியவாறு நடக்கிறான்” என்று விளக்கினார்.
பின்னர் ஒரு மாணவனைப் பார்த்து “பீட்டர் இவ்வாறான நிலைமையில் நீர் என்ன செய்வீர்?’ என்று கேட்டார்.
சிறிது நேரம் யோசித்த அம்மாணவன் “சேர்! நானும் நொண்டியவாறு தான் நடப்பேன்’ என்றான்.
நான் என்ன செய்ய?
மழை நீர் நிரம்பி வழிந்த பாதையைக் கடக்க முடியாமல் ஒரு மூதாட்டி தடுமாறிக் கொண்டிருந்தாள். அப்போது அவ்வழியாக வந்த ஓர் இளைஞன் அவளைத் தூக்கிக்கொண்டு போய் மறுபுறத்தில் விட்டான்.
அவனை நன்றிப் பெருக்குடன் பார்த்த மூதாட்டி தனது கைப்பையைத் திறந்து 2 ரூபா நாணயமொன்றை அவனுக்கு நீட்டினாள்.
அதனைப் பெற்றுக்கொள்ள மறுத்த இளைஞன்”அம்மணி என்னுடைய அப்பா ஒரு பிரதி அமைச்சர் தெரியுமா?’ என்றான் பெருமிதமாக.
“அதற்கு நான் என்ன செய்ய மகனே! என்னிடம் சில்லறைக் காசு இவ்வளவுதானே இருக்கிறது” என்றாள் மூதாட்டி பரிதாபத்தோடு.
அரும்பு-21 19

Page 12
ரக்பி உதைபந்தாட்டம்
Rugger or Rugby Football
இங்கிலாந்திலே Rugby 6Tair னும் இடத்திலிருந்த Rugby School என்ற பாடசாலையில் 1823ஆம் ஆண் டில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஒரு நிகழ்ச்சியே ரக்பி உதைபந்தாட் டம் என்ற புதுவகையான விளை யாட்டுக்கு வழிகோலியது. சாதாரண உதைபந்தாட்டத்தில் கால்களால் பந்து உதைக்கப்பட வேண்டும் என் றே விதிகள் கூறுகின்றன. எனினும் மேற்குறிப்பிட்ட பாடசாலையில் இடம்பெற்ற உதைபந்தாட்ட மொன்றின் போது ஒரு மாணவன் பந்தைக் கையில் எடுத்துக்கொண்டு எதிர்ப்பக்கத்தை நோக்கி ஓடியிருக் கிறான். இதனைத் தொடர்ந்து அப் பாடசாலையில் உதைபந்தாட்டத் தின் போது பந்தை இவ்வாறு தூக்கிச் செல்வது அனுமதிக்கப்பட்டிருக் கிறது.
பிற்காலத்தில் இங்கிலாந் திலுள்ள ஏனைய பாடசாலைகளும் பல்கலைக்கழகங்களும் இப்புது முறையான விளையாட்டைத் திருத் தியமைத்து ஆடத்தொடங்கின. 1860 களில் இன்றைய ரக்பி உதைபந் தாட்டம் அங்கீகரிக்கப்பட்ட ஒரு விளையாட்டாக உருவெடுத்தது. இதன் விதிகளைச் சீர்செய்து நியமப் படுத்துவதற்காக 1871இல் English Rugby Union என்ற நிறுவனம் உரு வாக்கப்பட்டது. இந்நிறுவனத்தின் சட்ட விதிகளுக்கு அமைய விளை யாடப்படும் ரக்பி வகை Rugby Union Football என அழைக்கப்படு கின்றது.
2O
இன்று இலங்கை உட்பட இங் கிலாந்து, அவுஸ்திரேலியா, நியூ ஸிலந்து, ஜப்பான், பிரான்ஸ், இத் தாலி, தென்னாபிரிக்கா முதலிய 100க்கும் மேற்பட்ட நாடுகளில் Rugby Union Football 67760) 6Turt Li'l படுகின்றது. இவ்விளையாட்டுக் குரிய கட்டுப்பாட்டுச் சபையாக அயர்லாந்தின், டப்ளின் நகரில் அமைந்துள்ள ரக்பி உதைபந்தாட்டச் FGØo Lu (International Rugby Football Board - IRFB) 656Tig, Sairpg).
1895இல் வட இங்கிலாந்தைச்
சேர்ந்த 22 விளையாட்டுக் கழகங்கள்
ரக்பி யூனியனிலிருந்து பிரிந்து சென்று புதிய அமைப்பொன்றை உருவாக்கின. இவ்வமைப்பு 1922 (upgai Rugby Football League a TGOT அழைக்கப்படுகின்றது. இவ்வமைப் பின் விதிகளுக்கு இணங்க ஆடப் படும் விளையாட்டு வகை Rugby League Football GTGOT'il (5)ib.
ரக்பி யூனியன் உதைபந்தாட்டம் பொழுதுபோக்குக்காக மாத்திரமே விளையாடப்படுகின்றது. ரக்பி லீக் உதைபந்து பெரும்பாலும் தொழில் ரீதியாக (professional) விளையாடப் படுகின்றது. இருவகை விளையாட் டுக்களும் ஒரே விதமான ஆடு களத்தில் ஆடப்பட்ட போதிலும் பங்குபற்றுவோர் தொகை விளை யாட்டு விதிகள் என்பவற்றில் குறிப் பிடத்தக்க வேறுபாடுகளைக் கொண்
டுள்ளன. இக்கட்டுரையில் ரக்பி
யூனியன் வகையைப் பற்றியே விளக் கங்கள் இடம்பெறுகின்றன.
அரும்பு-21
 

ரக்பி யூனியன் உதைபந்தாட்ட அணியொன்றில் 15 ஆட்டக்காரர்கள் இருப்பர். இவர்களுள் 8 பேர் முன் னணி ஆட்டக்காரர்களாகவும் (for
wards) 7 பேர் பின்னணியினராகவும்.
(backs) இருப்பர். (ரக்பி லீக் அணி யொன்றில் மொத்தம் 13 பேர் மாத் திரமே இருப்பர்.) ஆட்டமொன்று நிகழும் போது காயப்பட்டால் அன்றி ஆட்டக்காரர் எவரையும் பிரதி யீடு செய்தல் முடியாது. காயப்பட்ட ஒருவர் ஆட்டத்திலிருந்து வெளி யேறினால் மீண்டும் சேர்ந்துகொள்ள அனுமதிக்கப்பட மாட்டிார். ஓர் ஆட்டம் பொதுவாக 80 நிமிடங் களுக்கு நீடிக்கும். இக்காலம் 40 நிமிடங்களைக்கொண்ட இரு பாதி களாகப் பிரிக்கப்பட்டிருக்கும்.
ரக்பி ஆடுகளம் நீளத்தில் 100mக் குக் கூடாமலும் அகலத்தில் 69 m ஆகவும் இருக்கும். ஆடுகளத்தின்
LDğ{3}) u? Gö Gğ5qoyğ55T55 half-way line .
என்னும் நடுக்கோடு இருக்கும். அத்தோடு ஒவ்வொரு பாதியிலும் Goal இலிருந்து 22 m தூரத்தில் ஒரு குறுக்குக் கேர்டு வரையப்பட்டிருக் கும். ஒவ்வொரு Goalக்கும் பின் GOTT Gö 22 m glȚUjgs)țb(g56řit dead-ball line என்ற கோடு காணப்படும். பந்து இத னைத் தாண்டிவிட்டால் அது ஆடு களத்தை விட்டு வெளியேறிவிட் டதாகக் கருதப்படும்.
ஒவ்வொரு Goal பகுதியிலும் 5.6 m இடைவெளியில் இரு g) LI IT மான கம்பங்கள் (uprights) நடப்பட் டிருக்கும். இக்கம்பங்களுக்குக் குறுக் காக நிலத்திலிருந்து 3 m உயரத்தில் கிடையான குறுக்குச் சட்டமொன்று (croSS bar) (6)LuIT (55,5lijLJL'Lq_(5ögjlp. ரக்பி விளையாட்டில் காற்றடிக்கப் பட்ட முட்டை வடிவான பந்து உப யோகிக்கப்படுகின்றது. அமெரிக்க
அரும்பு-21
உதைபந்தாட்டத்தில் பயன்படுத்தப் படும் பந்தைப் போலன்றி இதன் அந்தங்கள் மழுங்கினவாகவே காணப்படும்.
ஒருவர் பந்தை நிலத்தில் வைக்க இன்னொருவர் அதனை உதைப் பதன் மூலம் ரக்பி ஆட்டம் ஆரம்பிக் கப்படும். அதனைத் தொடர்ந்து Scrummage egy GöGg5 Scrum 616örg) lib நிகழ்வு இடம்பெறும். இதன்போது ஒவ்வோர் அணியினதும் முன்னணி ஆட்டக்காரர்கள் தமது கைகளை அடுத்துள்ளோரின் தோள்களின் மீது போட்டுக்கொண்டு தலை குனிந்த
வாறு தம்மை ஒருவரோடு ஒருவர்
நெருக்கமாகப் பிணைத்துக் கொள் வர். இவ்வாறு பொருத்திக்கொண்ட ஒவ்வோர் அணியினரும் எதிரணி யைத் தள்ளிய வண்ணம் கால்களால் பந்தைக் கொழுவி இழுத்துப் பின்னால் நிற்கும் தமது Scrum half என்னும் ஆட்டக்காரருக்குத் தள்ள முயற்சிப்பர். இவ்வாறு பந்தைப் பெற்றுக்கொள்ளும் இந்த ஆட்டக் காரர் அதனைத் தூக்கிக்கொண்டு எதிர்ப்பக்க goal பிரதேசத்துக்கு ஒட லாம்; அல்லது பந்தை எதிர்த்திசை நோக்கி உதைக்கலாம்; அல்லது உட னடியாகத் தமது அணியினருக்குப் பந்தை 'pass’ பண்ணலாம்.
இப்படிப் பந்து பாஸ்பண்ணப் பட்டதும் அந்த அணியினர் பந்தை எதிரணியின் goal lineஐக் கடந்து முன்கொண்டு செல்ல முயற்சிப்பர். அவ்வாறு கோட்டைக் கடந்து பந்தி னால் நிலத்தைத் தொட்டால் try ஒன் றைப் பெறலாம். ஒரு tryக்கு 5 புள்ளி கள் கிடைக்கும். (Rugby League இல் 4 புள்ளிகளே வழங்கப்படுகின்றது.) Try ஒன்றைப் பெற்றுக்கொண்ட அணியினருக்கு Conversion என்னும் மேலதிக முயற்சிக்கு வாய்ப்பளிக்கப் படும். பந்தினால் நிலத்தைத்
21

Page 13
தொட்ட இடத்திலிருந்து goal 1ineக்குச் செங்குத்தான நேர்கோ டொன்றில் அமைந்த ஏதேனுமொரு Li GirafluiaSobigil Conversion Kickg அடிக்கலாம். அடிக்கப்பட்ட பந்து goal கம்பங்களுக்கு இடையால் குறுக்குச் சட்டத்துக்கு மேலாகச் செல்லுமாயின் குறித்த அணியின ருக்கு மேலதிகமாக 2 புள்ளிகள் வழங்கப்படும்.
பந்தைத் தம்வசம் கொண்டுள்ள அணியினர் எவரும் பந்தை முந்தி எதிர்ப்பக்கத்துக்குச் செல்வது தவறா கும். பந்தைக் கையில் கொண்டிராத எந்த ஆட்டக்காரரையும் தடுத்து நிறுத்த முயற்சிக்கவும் கூடாது. பந்தை எடுத்துக்கொண்டு ஒடுபவர் எதிரணியினரால் நிலத்தில் வீழ்த்தப் பட்டால் அவர் பந்தைக் கைவிட்டு விட வேண்டும். அதன் பின்னர் ஆட்டம் தொடரும்.
ரக்பி விளையாட்டுச் சிக்கலா னது போல் தோன்றினாலும் இரண் டு பிரதான விதிகளே அதனைக் கட்டுப்படுத்துகின்றன. அவையா வன : (1) ஆட்டக்காரர்கள் பந்தை முன்னோக்கி paSS செய்ய முடியாது. (2) ஆட்டத்தின் போது ஏற்கனவே தமது அணியைச் சேர்ந்த ஒருவர் தமக்குப் பின்னாலுள்ள பிரதேசத்தில் (தமது goalக்கு அண்மையில்) கடைசி யாகப் பந்தைத் தொட்டிருப்பின்
மீண்டும் அதே அணியினர் பந்தைத் தொட முடியாது.
சிறு தவறுகளுக்குப் பரிகார மாக Scrummage நடைமுறைப்படுத் தப்படும். பெரிய தவறுகளுக்காக எதிரணியினருக்கு free kick வாய்ப் பொன்று வழங்கப்படலாம். இதன் மூலம் goal பெறப்பட்டால் 3 புள்ளி கள் கிடைக்கும். பந்தை எடுத்துக் கொண்டு ஓடுபவர் இடையில் பந் தை நிலத்தில் விழவிட்டு அது மேலெ ழும் போது அதனை goalஐ நோக்கி அடிக்கலாம். இவ்வாறு அடிப்பது drop kick GTGOTLIG) id. (3).5ib(5th 3 புள்ளிகள் கிடைக்கும். N
எதிரணி ஆட்டக்காரர் ஒருவர் அடித்த பந்து மேலெழும்பி வரும் போது தமது பகுதியில் 22 m கோட் டுக்குப் பின்னாலிருந்து ஒருவர் பிடித்துக்கொண்டால் அவர் Mark என்று கூற வேண்டும். இவ்வாறு Mark எனக் குறிப்பிட்ட ஆட்டக்கார ருக்கும் free kick வாய்ப்பொன்று வழங்கப்படும்.
ஓர் அணியில் ஏழு பேரைக் (6.5IT GTL Rugby Sevens a Tairp 6, 1605 விளையாட்டு 1883இல் ஸ்கொட் லாந்தில் ஆரம்பமாகியது. இன்று ஆசிய பசிபிக் பகுதிகளில் இது பிரபல்யம் அடைந்துள்ளது. World Cup Sevens G3 LUIT L’q. 55 Gir 19939) Gö ஆரம்பமாகின. -
வித்தியாசமான கருத்து பிரபல ஆங்கிலேய மதகுருவான ஸிட்னி ஸ்மித் என்பவர் தனது நண்பரான வழக்கறிஞர் ஒருவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார். கலாநிதி ஸ்மித்தின் புத்திசாதுரியத்துக்கும் வாதத் திறமைக்கும் ஈடுகொடுக்க முடியாமற் தவித்த வழக்கறிஞர் இறுதியில் அவரை அவமதிக்கும் நோக்குடன் “எனக்கு ஒரு படுமுட்டாளான மகன் இருந்தால்
அவனை நான் ஒரு மதகுருவாகத் தான் ஆக்குவேன்” என்றார்.
அதைக் கேட்டுச் சிறிதும் சலனமுறாத கலாநிதி ஸ்மித் “அந்த விடயத்தில் உங்கள் தந்தையாரின் கருத்து வித்தியாசமாக இருந்திருக்கிறது போல் தெரிகிறது” என்றார்
நிதானமாக,
22
21 د{باbاتJ0و

அபொல்லோ விண்வெளிக்கலங் கள் மூலம் 1969 - 1972 காலப்பகுதியில் அமெரிக்காவின் NASA நிறுவனம் மனி தர்கள் ப்லரைச் சந்திரத் தரையில் இறக்
கிய நிகழ்ச்சிகள் நவீன விஞ்ஞானத்தின்
பெருஞ் சாதனைகளாகப் போற்றப்படு வதை நாம் அறிவோம். எனினும் அமெரிக்காவின் இச்சாதனைகள் யாவும் NASA புரிந்த ஏமாற்று வித்தைகளே என் றும் உண்மையில் அமெரிக்கா எந்த வொரு மனிதனையும் சந்திரத் தரையில் இறக்கவில்லை என்றும் இப்போது பர பரப்பான செய்திகள் வெளிவரத் தொடங் கியுள்ளன.
ஐக்கிய அமெரிக்காவின் நியு ஜெர்ஸி மாநிலத்தைச் சேர்ந்த Ralph Rene (ரால்ப் ரீன்) என்பவர் சுயமாகக் கற்றுத் தேர்ந்த ஒரு பொறியியலாளர். NASA மேற்கொண்டதாகக் கூறப்படும் சந்திரப் பிரயாணங்கள் பற்றிய வீடியோ நாடாக் களையும் போட்டோக்களையும் கடந்த பத்து வருடங்களாகத் துருவித் துருவி ஆராய்ந்துள்ள இவர், இப்போது “NASA Mooned America” GT Görp (6) Luulu fî Gö நூலொன்றை வெளியிட்டுள்ளார். மனி தன் சந்திரனில் காலடி வைத்ததாகக் கூறும் சம்பவங்கள் அனைத்தும் பொய் யானவையே என அடித்துக்கூறும் Ralph Rene, தனது கருத்துக்களை நிரூபிப்பதற் காக அருமையான வாதங்கள் பலவற்றை இந்நூலில் முன்வைத்துள்ளார்.
1961 ஏப்ரலில் சோவியத் யூனியன்
யூரி ககாரின் என்பவரை முதன் முதலாக விண்வெளிக்கு ஏவிய போது ஐக்கிய
21 - {اطلازی)sy
உண்மையாகவே மனிதன் சந்திரனுக்குப்
போனானா?
அமெரிக்கா விண்வெளிப் போட்டியில் பின்னடைந்துவிட்டது தெளிவாகியது. இதனால் கலக்கமுற்ற அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எப். கென் னடி அமெரிக்க பாராளுமன்றத்தின் அவ சரக் கூட்டமொன்றைக் கூட்டி, உணர்ச்சி ததும்பப் பேசினார். “இந்தத் தசாப்தம் முடிவடைய முன்னர் அமெரிக்கா மனி தனைச் சந்திரனுக்கு அனுப்பிவைத்தே தீரும்” என அவர் சூளுரைத்ததோடு அதற் காக 40,000 மில்லியன் அமெரிக்க டொலர் களை ஒதுக்குவதாகவும் வாக்குறுதியளித் தார். விண்வெளிப் பந்தயத்தில் அமெரிக் காவுக்கு ஏற்பட்டிருந்த தலைகுனிவை நிவர்த்தி செய்வதே அவரது குறிக்கோ
"ಸ್ಡಿ
ந்த நிலையில்தான் NASAவின் அபொல்லோ விண்வெளி யாத்திரைகள் ஆரம்பமாகின. அபொல்லோ - 11, 12, 14, 15, 16, 17 ஆகிய ஆறு விண்வெளிக் கலங்களில் சென்ற 18 பேரில் 12 பேர் சந்திரத் தரையில் இறங்கி நடமாடிவிட் டுப் பூமிக்குத் திரும்பியதாக NASA நிறு வனம் உலகுக்கு அறிவித்தது. இந்தப் பிரயாணங்களை நிரூபிப்பதற்குரிய சான்றுகளாக சந்திரனிலிருந்து கொண்டு வரப்பட்டனவாகக் கூறப்படும் சில பாறைத் துண்டுகளும், அங்கு பிடிக்கப் பட்டதாகக் கருதப்படும் வீடியோ படங் களும், போட்டோக்களும் மாத்திரமே இருக்கின்றன.
அப்படியான பாறைகளை ஆய்வு கூடமொன்றில் தயாரித்துக்கொள்வது சிரமமான காரியமல்ல என்கிறார் ரீன்.
23

Page 14
சந்திரனில் பிடிக்கப்பட்டதாகக் கூறப்
படும் வீடியோப் படங்களும் போட்
டோக்களும் போலியானவையே என நிரூபிப்பதற்கும் அவர் தர்க்கரீதியான சான்றுகள் பலவற்றைச் சமர்ப்பித்துள் ளார்.
சந்திரத் தரையில் பிடிக்கப்பட் டதாகக் கூறப்படும் வீடியோப் படங்கள் தெளிவற்றவையாகவே உள்ளன. இதற் குக் காரணம் நாஸா நிறுவனம் வெளித் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு நேரடி இணைப்பை வழங்காததாகும். ஹல்ஸ்டனிலுள்ள அதன் தலைமை யகத்து TV திரையிலிருந்தே ஏனையவர் கள் அக்காட்சிகளைப் பதிவு செய்து கொள்ள வேண்டியிருந்தது. மனிதன் முதன் முதலாகச்சந்திரனில் காலடி வைக்
கும் வரலாற்று முக்கியத்துவம் மிக்க
நிகழ்ச்சியின் போது நாஸா இவ்வாறு நடந்துகொண்டது அதன் ஏமாற்று நாட கத்தின் ஓர் அங்கமே என்கிறார் ரீன். தெளிவின்மை காரணமாக எவரும் அவ் வீடியோப் படங்களைத் துருவி ஆராய முடியாதுள்ளது.
அதேவேளை சந்திரத் தரையில் எடுத்ததாகக் கூறப்படும் ஆயிரக் கணக் கான போட்டோக்கள் மிகத் தெளி வாகவும் திருத்தமாகவும் அமைந்துள் ளன. அவற்றுள் ஒரு படம்கூட மங்கலா கவோ கோணலாகவோ அமைய வில்லை. எனினும் இந்தப் போட்டோக் களே சந்திரப் பிரயாணத்தின் போலித் தன்மையை நிரூபிப்பதற்குப் பெரிதும் உதவியுள்ளன.
சந்திரனில் மனிதன் இறங்கியதாகக் கூறப்படும் நிகழ்வுகளை உண்மையென நம்ப முடியாதிருப்பதற்குப் பின்வரும் காரணங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன: 9 சந்திரத் தரையில் நடப்பட்ட அமெ ரிக்காவின் தேசியக் கொடி படபடத்துக் கொண்டிருப்பதை போட்டோக்கள் காட் டுகின்றன. வளிமண்டலமோ காற்றோ
இல்லாத சந்திரத் தரையில் அக்கொடி படபடத்தது எப்படி? 0 நீல் ஆம்ஸ்ட்ரோங் சந்திரனில் முதன் முதலாகக் காலடி வைக்கப்போகும் காட்சி அவருக்கு முன்னாலிருந்து படம் பிடிக்கப்பட்டுள்ளது. அப்படியானால் அப்படத்தைப் பிடித்தவர் சந்திரத் தரை யில் ஏற்கனவே இருந்திருக்க வேண் டுமே அவர் யார்?
0 மேலேயுள்ள படம் சந்திரத் தரையில் நடமாடும் விண்வெளி வீரர் ஒருவரைக் காட்டுகிறது. அவர் அணிந்துள்ள தலைக் கவசத்தின் கண்ணாடி முகப்பில் (visor) அவருக்கு முன்னால் நிற்கும் விண்வெளி வீரர்கள் இருவரின் விம்பங்கள் தெரிகின் றன. ஒவ்வொரு அபொல்லோ பிரயா ணத்தின் போதும் இரண்டு பேர்தான் சந் திரனில் தரை இறங்கினர். மூன்றாமவர் தாய்க் கப்பலிலேயே இருந்துள்ளார். எனவே, ஒருவரின் vis0இல் மேலும் இரண்டு பேரின் விம்பங்கள் தெரிவது எப்படி? அப்படியாயின் மூன்று பேர் சந்திரனில் இறங்கியிருக்க வேண்டுமே!
24
அரும்பு-21
 
 
 

9 மேற்குறித்த படத்தில் ஒருவரின் Visorஇல் தெரியும் மற்ற இருவரில் எவ ரது கை ம் கமரா இல்லை. அப்படி யாயின் இந்த போட்டோவைப் பிடித்த வர் யார்?நான்காவது நபர் ஒருவர்சந்திரத் தரையில் இருந்தாரா? 0 பிடிக்கப்படும் காட்சியைக் கமரா வினூடாகப் பார்த்துக்கொள்ளக் கூடிய 686, 60 Lugii li (View finder) 6Tairgin சாதனம் இல்லாத கமராக்களையே விண் வெளி வீரர்கள் சந்திரத் தரையில் பயன் படுத்தினார்களாம். அப்படியான கமராக் களினால் எடுக்கப்பட்ட படங்களில் ஒன்றுகூட கோணலாகிப் போகாமல் எல் லாமே திருத்தமாக அமைந்தது எப்படி? 9 அபொல்லோ விண்வெளி வீரர்கள் அணிந்திருந்த விசேட உடுப்புக்களினுள் ஓர் உதை பந்தினுள் இருப்பதைவிடக் கூடுதலான அமுக்கம் இருந்தத்ாகNASA கூறியது. அவ்வாறு வளியினால் ஊதிப் போன உடுப்புக்களை அணிந்துகொண்டு அவர்கள் தம் விரல்களால் கமராக்களை எவ்விதப் பிசகுமின்றி இயக்கியது எப் படி? கமராவில் பில்ம் சுருள்களை மாற் றிக்கொண்டது எப்படி? 0 சந்திரத் தரையில் பிடிக்கப்பட்ட போட் டோக்களில் ஒன்றேனும் அதே வேளை யில் பிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் வீடி யோப் படங்களுடன் பொருந்துவனவாக இல்லை. இது வியப்புக்குரியதாகும். o சந்திரத் தரையின் மீது சூரிய ஒளி மாத் திரமே இருந்திருக்க முடியும். எனினும் அங்கு பிடிக்கப்பட்ட படங்களில் தென் படும் ஒளி நிழல் அமைப்புக்களைப் பார்க்கும் போது பல ஒளிமுதல்கள் பயன் படுத்தப்பட்டுள்ளன என்பது நன்கு புல
னாகின்றது. சூழவுள்ள பகுதிகளெல்லாம்
நிழலாய் இருக்கும் போது அமெரிக்கக் G)35 IT qlugib United States 6TGórp G)gIT jib றொடரும் மாத்திரம் எந்நேரமும் பிரகா சமான ஒளியில் மிளிர்வது குறிப்பிடத்தக்க
அரும்பு-21
அம்சமாகும். எனவே, சக்தி வாய்ந்த மின் விளக்கு ஒளியிலேயே இப்படங்கள் பிடிக்கப்பட்டிருக்க வேண்டும் என்கிறார் விருதுகள் பல பெற்ற David Percy என் னும் பிரிட்டிஷ் படப்பிடிப்பாளர்.
0 சந்திரத் தரையை எந்நேரமும் சக்திவாய்ந்த அண்டக் கதிர்கள் (cosmic
rays) தாக்கிக்கொண்டே இருக்கின்றன.
இந்நிலையில் அபொல்லோ விண்வெளி வீரர்கள் பயன்படுத்திய பில்ம் சுருள்கள் இக்கதிர்களால் சிறிதளவேனும் பாதிக் கப்படாமல் போனது எப்படி? 0 சந்திரத் தரையில் து பதிந்தனவாகக் காட் டப்படும் விண் வெளி வீரர்களின் பாதணி அடையா ளங்களும் சந்திர வாகனத்தின் டயர் அச்சுக்களும் ஆழமா கவும் தெளிவாகவும் இருக்கின்றன. ஈரத் தன்மை சிறிதுமே இல்லாத, தூசுப் படை யாலான சந்திரத் தரையில் இவ்வாறான பதிவுகள் ஏற்பட்டிருக்க முடியாது. o சந்திரனின் மீது ஆட்களை இறக்கிய ஈகிள் என்ற சந்திரக் கலம் தரையிறங்கும் போது தனது வேகத்தைக் குறைப்பதற் sits retro-rockets 6Tairgito (36), 5d. குறைப்பு ரொக்கட்டுக்களை எரியச் செய் ததாகNASA கூறியது. அந்த ரொக்கட்டுக் களிலிருந்து வெளியான வாயுத் தாரை காரணமாக சந்திரத் தரையிலுள்ள தூசு விசையோடு கிளறப்பட்டிருக்க வேண் டும். எனினும் அப்படி நிகழ்ந்ததாக வீடி யோப் படங்களோ போட்டோக்களோ காட்டவில்லை.
0 அபொல்லோ - 16இன் சந்திரக் கலம் சந்திரனிலிருந்து கிளம்பும் காட்சி சந்திரத் தரையிலிருந்து மேல்நோக்கிய திசையில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தைப் பிடிப்பதற்கு சந்திரத் தரையில் தங்கி நின்றவர் யார்?
25

Page 15
9நீல் ஆம்ஸ்ட்ரோங், எட்வின் அல்ட்ரின் போன்ற சந்திரனில் காலடி வைத்ததாகக் கூறப்படும் முன்னோடி மனிதர்கள் சமூ கத் தொடர்புகள் இன்றி ஒதுங்கிப் போய்த் தனிமையாய் வாழ்வது ஏன்? உலகை ஏமாற்றிய ஓர் போலி நாடகத்தில் பங்கேற்றோமே என்ற குற்ற உணர்வு
தான்காரணமா? இல்லையேல் உலகளா வியரீதியில் புகழ்பெற்ற இவர்கள் அமெ ரிக்காவின் சமூக அரசியல் துறைகளிலே பெரும் புள்ளிகளாக மாறி யிருக்கலாம் அல்லவா? - 0 விருந்தொன்றின் போது, சந்திரனில் காலடி வைத்த இரண்டாவது நபராகக் கருதப்படும் எட்வின் அல்ட்ரினிடம் “சந் திரத் தரையில் காலடி வைக்கும் போது உங்கள் மனதில் ஏற்பட்ட உணர்வுகள் யாவை?’ எனக் கேட்கப்பட்டது. அப் போது தட்டுத்தடுமாறியவாறு எழுந்து நின்ற அல்ட்ரின் கட்டுப்படுத்த முடி யாதவாறு அழுதுகொண்டு சபையை விட்டு வெளியேறினாராம். மனச்சாட்சி உறுத்தியதுதான் இதற்குக் காரணமா?
வேறுபாடு
தீயணைக்கும் படையில் பணிபுரியும் ஒருவர் சங்கீதம் கற்றுக்கொள்ள ஆசைப் பட்டு இசைக் கல்லூரியொன்றில் சேர்வதற்காக விண்ணப்பித்தார்.
0 சோவியத் யூனியனுடன் Gold War என்
னும் மறைமுக யுத்தத்தில் ஈடுபட்டிருந்த
போது தான் அமெரிக்கா சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பியது. எனவே சந்தி ரனில் மனிதன் இறங்கியதை நிரூபிப் பதற்கு ஏதேனும் பிரகாசமான ஒளிச் சமிக்ஞையொன்றை சந்திரத் தரையில் உருவாக்கியிருக்கலாம். பெரிய மக்னீ சியம் சுவாலைகளை இதற்காகப் பயன் படுத்தியிருக்கலாம். அவ்வாறான எத னையும் நாஸா செய்யாமல் விட்டது
ஏன?
எனவே சந்திரனில் மனிதன் இறங் கினான் என்பதை நிரூபிப்பதற்கு ஏக சான்றாக உள்ள புகைப்படங்களும் வீடி யோப் படங்களும் சந்தேகத்துக்குரியன வாக இருப்பதனால் அப்படியான நிகழ் வுகள் இடம்பெறவில்லை என்றே நம்ப வேண்டியுள்ளது என்கிறார் ரால்ப் ரீன்.
அபொல்லோ விண்கலங்கள் பூமி யை விட்டு வெளிக் கிளம்பியது உண்மை யே! எனினும் அவை விண்வெளியில் சுற்றிவிட்டுத் திரும்பினவே ஒழிய சந்திர னின் பக்கமே போகவில்லை என்பதே இவரது வாதமாகும். சந்திரனில் காலடி வைத்து நடமாடுவது போன்ற காட்சி களெல்லாம் நெவாடாப் பாலைவனத்
தில் அதற்கென வடிவமைக்கப்பட்ட
நிலப்பரப்பொன்றிலேயே படம் பிடிக்கப்
பட்டுள்ளன என ரால்ப் ரீன் கருதுகின்
றார்.
வாசகர்களே! உங்கள் அபிப்பிராயம்
நேர்முகப் பரீட்சையின் பூோது இசைக் கருவிகள் பற்றிய அவரது அடிப்படை அறிவைச் சோதிப்பதற்காக “வயலினுக்கும் பியானோவுக்கும் இடையிலுள்ள பிரதான வேறுபாடு என்ன?” என வினவப்பட்டது.
சிறிது நேரம் யோசித்த அவர் “வயலினை விட பியானோ எரிந்து சாம்பலாவதற்கு அதிக நேரம் எடுக்கும்” என விடையளித்தாராம்
26
21 – أباقاقيره
 
 
 
 
 

மனிதனில் நோயுண்டாக்கும்
குடற் புழுக்க
怒效 జ్ఞజభవః
10 னிதனின் குடலினுள் ஒட் டுண்ணியாக வாழ்ந்தவாறு நோய் களை உண்டாக்கும் நெமட்டோடு (Nematode) வகைப் புழுக்கள் பல இருக்கின்றன. இவற்றுள் கீரைப் புழு, வட்டப் புழு, சாட்டைப் புழு கொளுக்கிப் புழு என்பன முக்கிய மானவையாகும். .
Sagi Lop (Thread worm)
Enterobius vermicularis 6 TGỗT னும் இனத்தைச் சேர்ந்த இப்புழுக் கள் உலக நாடுகள் அனைத்திலும் பரவலாகக் காணப்படுகின்றன. இவை குறிப்பாகச் சிறு வயதி னரையே பாதிக்கின்றன. ஆண் புழு 2 - 5 mm நீளமும் பெண் புழு 8 - 13 mm நீளமும் உடையனவாக இருக் கும். கீரைப் புழு முட்டைகள் அழுக் கடைந்த கைகள் மூலம் எமது வாயை அடைகின்றன. பின்னர் அவை சிறு குடலை அடைந்து அங்கே விருத்தி யாகின்றன. எனினும் வளர்ந்த புழுக் கள் பெரும்பாலும் பெருங் குடலி லேயே காணப்படும்.
முதிர்ச்சியடைந்த பெண் புழுக் கள் பாதிக்கப்பட்டவரின் குத வாயைச் சுற்றி முட்டையிடுகின்றன. தனால் மல வாயிற் பகுதியில் ಟ್ವಿ: வேளையில் கடுமையான நமைச்சல் அல்லது அரிப்பு ஏற் படும். பெண்களில் இலிங்க உறுப் பிலும் இவ்வாறான பாதிப்பு ஏற்
படக்கூடும். நமைச்சலுள்ள பகுதி
யைச் சொறியும் போது நுண்ணிய முட்டைகள் விரல்களில் ஒட்டிக்
கொள்வதால் அவை மீண்டும் வாயை அடைந்து மீள் தொற்று ஏற் பட வழி ஏற்படுகின்றது. வளர்ந்த புழுக்கள் ஆசனப் பகுதியில் அல்லது மலத்தில் அசைவதைக் காணக் கூடி யதாக இருக்கும்.
Pyrantel Pamoate (Combantrin) egy GöGvg|| Mebendazole - 100 mg (Vermox) என்னும் மருந்தை ஒரு தடவை உட்கொள்வதன் மூலம் இப் புழுவின் தொல்லையிலிருந்து தப்ப முடியும். இரண்டு வாரங்களின் பின் னர் மீண்டும் ஒரு தடவை மருந்து உட்கொண்டால் மீளத் தொற்று ஏற்படாமற் தவிர்த்துக் கொள்ள Gno IT Lib.
ஒரு குடும்பத்தில் உள்ளவர்கள் அடிக்கடி கீரைப் புழுவினால் பாதிக் கப்படுவார்களாயின் குடும்பத்தவர் egy60)GOTG) I(5űb Mebendazolé - 100mg வில்லைகளை ஒரு நாளைக்கு இரண் டு வீதம் 3 நாட்களுக்கு உட் கொள்ள வேண்டும். பத்து நாட்களின் பின்னர் மீண்டும் அதே விதமாக மருந்து உட் கொள்ள வேண்டும். இக்காலத்தில் நகங்களை வெட்டிச் சுத்தப்படுத்திக் கொள்வதோடு இரவு உடுப்புக் களையும் கட்டில் விரிப்புக்கள், போர்வைகள் போன்ற வற்றையும் நன்றாகக் கழுவிச் சுத்தம் செய்து கொள்வது அவசியமாகும்.
al'L’ Cup (Round worm)
Ascaris lumbricoides 6T 6örp இனத்தைச் சேர்ந்த இவ்வகைப் புழு தோற்றத்தில் மண் புழுவை ஒத்தது.
27
அரும்பு-21

Page 16
எனினும் மண் புழுவில் இருப்பது போன்ற துண்டங்கள் உடலில் காணப்படுவதில்லை. வட்டப் புழுக் கள் இளம் மஞ்சள் நிறமானவை. 20 cm முதல் 35 cm வரை நீளத்தை
9 6ö) LLI6ö)6) .
முதிர்ந்த முட்டைகளால் மாச டைந்த உணவுகளை உட்கொள்ளும் போதே வட்டப் புழு மனிதனைத் தொற்றுகின்றது. முன்சிறுகுடலில் வைத்து முட்டையிலிருந்து வெளி யேறும் குடம்பிகள் சுவாசப்பை களை அடைந்து அங்கே மேலும் விருத்தியடைகின்றன. சுவாசப் பைச் சிற்றறைகளுக்குள் நுழையும் இக் குடம்பிகள் பின்னர் சுவாசப்பைச் சிறு குழாய்கள், வாதனாளி என்ப வற்றினூடாக மேலேறித் தொண் டையை அடைந்து அங்கிருந்து களத்தினூடாகச் சிறுகுடலைச் சென் றடைகின்றன. சிறுகுடலிலேயே அவை முதிர்ச்சி நிலை எய்துகின்றன. கடுமையான தொற்றுக்களின் போது குடம்பிகள் சுவாசப்பைகளினூடாக இடம்பெயர்வதன் காரணமாக Pulmonary eosinophilia 6 TGổTp G35 IT diu நிலைமை ஏற்படக் கூடும்.
சிறுகுடலில் முதிர்ந்த வட்டப் புழுக்கள் இருக்கும் போது குமட் டல், வயிற்று வலி, சீரற்ற வயிற்றுப் போக்கு போன்ற அறிகுறிகள் ஏற்பட லாம். சிலவேளையில் அறிகுறிகள் எதுவும் தோன்றாமல் இருக்கவும் கூடும். சிலரில் வளர்ந்த புழு
வொன்று வாயினால் அல்லது குதத் தினூடாக வெளிவரவும் கூடும்.
கடுமையான தொற்று ஏற்பட்ட சிறுவர்களில் ஒன்றோடொன்று பின் னிக்கொண்ட புழுத் திரள் காரண மாகச் சிறுகுடலில் அடைப்பு ஏற் படலாம். பெருந்திரளான புழுக்கள் போசணைக்காகப் போட்டியிடு வதன் காரணமாகச் சிறுவர்களில் போசணைக் குறைபாடு தோன்றவும் இடமுண்டு. இவை தவிர பித்தக் கான், சதையக் கான், குடல் வளரி (appendix) என்பன அடை படுதலும் வளர்ந்த புழுக்கள் காரணமாக விளை யக் கூடும்.
Piperazine உப்புக்கள் (உதார GOTib antipar) egy Gö6vg| Levamisole 9ļGbag Pyrantel (Combantrin) gos தடவை உட்கொள்வதன் மூலம் வட்டப் புழுக்களை நீக்கிக் கொள்ள Gortů). Mebendazole (Vermox) 6) pší குவதாயின் தினசரி இரண்டு தடவை வீதம் மூன்று நாட்களுக்குத் தொடர்ச் சியாக கொடுப்பது அவசியமாகும்.
புழுக்கள் காரணமாகச் சிறு குட லில் அடைப்பு ஏற்படும் சந்தர்ப் பங்களில் மூக்கு, இரைப்பை என்ப வற்றின் ஊடாக உறிஞ்சுவதன் மூலம் அடைப்பை நீக்க வைத்தியர்கள் முயற்சிப்பர். அவ்வாறு செய்ய முடி யாமற் போனால் பிள்ளையைச் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்துவது அவசியமாகிவிடும். பா
இறுதி விருப்பம் கொலைக் குற்றத்துக்காக ஒருவனுக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டிருந்தது. தண்டணை நிறைவேற்றப்படும் தினத்தன்று “காலை உணவுக்கு ஏதும் விசேடமாகச் சாப்பிட விரும்புகிறாயா?’ என அவனிடம் வினவப்பட்டது.
“ஆம் காளான்களைச் சாப்பிட ஆசைப்படுகிறேன். அவை நஞ்சாக இருக்குமோ
எனப் பயந்து இவ்வளவு காலமும் என்றான் அந்தக் குற்றவாளி.
28
இந்த ஆசையை அடக்கிக் கொண்டிருந்தேன்'
அரும்பு 21

Ug Ijji I Ibn Batutah
நீராவிக்கப்பல் கண்டுபிடிக்கப் படுவதற்கு முந்திய காலத்தில் ஆகக் கூடுதலான தூரம் பிரயாணங்களை மேற்கொண்டவராகக் கருதப்படு பவர் மொரொக்கோ நாட்டுத் தேச சஞ்சாரியான இப்ன் பதூத்தா ஆவார். 14ம் நூற்றாண்டில் வாழ்ந்த அராபியரான வர் தமது வாழ் நாளில் அன்றைய முஸ்லிம் நாடுகள் அனைத்துக்கும் விஜயம் செய்த தோடு சீனா, சுமாத்திரா போன்ற தூர இடங்கள் பலவற்றுக்கும் சென்றார். நவீன போக்குவரத்து வசதிகள் எது
வுமற்ற அக்காலத்தில் இவர் பிரயா
ணம் செய்த மொத்தத் தூரம் சுமார் 120,000 km என மதிப்பிடப்பட்டுள் துெ.
இப்ன் பதூத்தாவின் முழுப் ծլյաո அப்துல்லாஹ முஹம்மத் இப்ன் அப்துல்லாஹ் அல்லவாத்தி அத்தன்ஜி இப்ன் பதுரத்தா என் பதாகும். இவர் மொரொக்கோ விலுள்ள தான்ஜியேர் என்ற இடத் தில் 1304 பெப்ரவரி 24ம் திகதி பிறந் துள்ளார். இவரது முன்னோர்களில் பலர் சிறந்த இஸ்லாமிய நீதிபதி களாக இருந்தவர்களாவர். இப்ன் பதுரத்தா 1325இல் தனது 21வது வயதிலே மக்காவுக்குப் புனித யாத் திரையை மேற்கொள்வதன் மூலம் தனது பிரயாணங்களை ஆரம்பித் தார். சமயக் கடமையை நிறைவேற் றுவதும் எகிப்து, ஸிரியா, ஹிஜாஸ்
(இப்போதைய ஸவூதி அரேபியா) போன்ற நாடுகளிலுள்ள புகழ்பெற்ற மார்க்க அறிஞர்களிடம் சமயக் கல் வியைப் பெற்றுக் கொள்வதுமே அவ ரது ஆரம்ப நோக்கங்களாக இருந் தன.
மக்காவிலிருந்து டூனிஸ், திரிப் பொலி ஆகிய நகரங்களினூடாக அவர் எகிப்துக்குச் சென்றார். உலக நாடுகளையெல்லாம் சுற்றிப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் அங்குதான் அவருக்கு ஏற்பட்டது. அவரது காலத் தவர்கள் வர்த்தகம், புனித யாத்திரை, கல்வி போன்ற நடைமுறைத் தேவை களுக்காகப் பிரயாணங்களை மேற்
கொண்ட வேளையில் இப்னு பதூத்
தாவோ புதிய நாடுகளையும் மக்க ளையும் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தின் காரண மாகவே பிரயாணங்களில் ஈடுபட் டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு தடவை சென்ற பாதையால் இன் னொரு தடவை செல்வதில்லை என அவர் தனக்குத்தானே விதியொன் றை அமைத்துக் கொண்டிருந்தார்.
அக்காலத்தைய இஸ்லாமிய அறிஞர்கள் பலரிடம் கல்விபெற்று நீதிபதியாவதற்குரிய தகைமை களைப் பெற்றிருந்தபடியால் இப்னு பதுரத்தா சென்ற டமெல்லாம் அவருக்குப் பெருமதிப்பும், மரியா தையும் கிடைத்தன. அவர் ஆகக் குறைந்தது 60ஆட்சியாளர்களையும்,
29
21 - (۹ اطلازولی sey

Page 17
பெருந்தொகையான ஆளுனர்கள், அரச பிரதானிகள், சமயப் பெரியார் கள் முதலியோரையும் தமது பிரயா ணங்களின் போது சந்தித்திருக்கிறார். இச்சந்திப்புகள் அவருக்கு நல்ல வரு மானத்தையும் தேடிக் கொடுத்த தனால் அவர் தொடர்ந்தும் பிரயா ணங்களை மேற்கொள்ள வாய்ப்பு ஏற்பட்டது. W−
எகிப்தின் கெய்ரோ நகரிலிருந்து தமது பிரயாணத்தை ஆரம்பித்த ப்னு பதூத்தா செங்கடல்வரை சென்று அங்கிருந்து திரும்பி சிரியா விற்குச் சென்றார். அங்கிருந்து ஒரு யாத்திரிகர் கூட்டத்துடன் சேர்ந்து மக்காவிற்குச் சென்றார். 1926இல் ஹஜ் யாத்திரையை முடித்துக் கொண்ட அவர் அராபியப் பாலை வனத்தைக் கடந்து ஈராக், தெற்கு ஈரான், அஸர்பைஜான் ஆகிய இடங் களுக்கு விஜயம் செய்தார். வழியில் அவர் ஈரானின் கடைசி மொங் கோலிய அரசரான அபூஸையித் என்பவரையும் இன்னும் பல சிற்றரசர்களையும் சந்தித்தார்.
1327 இற்கும் 1330 இற்கும் இடைப்பட்ட காலத்தை அவர் மக்காவிலும் மதீனாவிலும் மிக அமைதியாகக் கழித்தார். பின்னர் படகொன்றில் ஏறி ஜித்தா வுக்குச் சென்ற ப்னு பதூத்தா செங் கடலின் இரு கரையோரங்கள் நெடு கிலும் பிரயாணம் செய்த பின் யெம னை அடைந்தார். அந்நாட்டைத் தரைமார்க்கமாகக் கடந்து சென்ற அவர் மீண்டும் ஏடன் துறைமுகத் திலிருந்து கப்பல் மூலம் கிழக் காபிரிக்கக் கரையோரம் நோக்கிப் பிரயாணமானார்.
அப்பிரயாணத்தின் போது கில்வா (இன்றைய தான் ஸானியா) வரையான நகர ராச்சியங்கள் பலவற்றுக்கு விஜயம் செய்தார். அங்
30
கிருந்து திரும்பி வரும்போது தெற்கு அராபியா, ஒமான், தெற்கு பாரசீகம் என்பவற்றுக்குச் சென்றுவிட்டு பார சீக வளைகுடாவிற்கு வடக்காகப் பிரயாணம் செய்து 1332இல் மீண்டும் மக்காவை அடைந்தார்.
அங்கிருக்கும் போது, டெல்லி யில் இருந்துகொண்டு இந்தியாவை ஆட்சி செய்த முஹம்மத் இப்னு துக்ளக் (1325 - 51) என்பவரைப் பற்றியும் முஸ்லிம் அறிஞர்களுக்கு அவர் வழங்கும் அற்புதமான நன் கொடைகள் பற்றியும் இப்னு பதூத் தா கேள்விப்பட்டார். எனவே எப்படியாவதுதுக்ளக்கின் அரச சபை யைச் சென்றடைய வேண்டும் என்று தீர்மானித்த அவர் இந்தியாவை அடைவதற்கு ஒரு சுற்றுப் பாதையை உபயோகிக்கலானார். முதலில் வடக்கு நோக்கிச் சென்ற அவர் எகிப் தையும் ஸிரியாவையும் கடந்து லத்தாக்கியா(Latakia) என்ற இடத் தில் கப்பல் ஏறி சின்ன ஆசியாவிற் குச் சென்றார். அன்றைய துருக்கியர் களின் பிரதேசங்களினூடாக வெவ் வேறு திசைகளில் பிரயாணம் செய்த இப்னு பதூத்தா அங்குள்ள ஆட்சி யாளர்களினாலும் சமயக் குழுவின ராலும் வரவேற்று கெளரவிக்கப்பட் LLIT fi.
அங்கிருந்து கருங்கடலைக் கடந்து கிரீமியா(Crimea)வுக்கும் பின் னர் வடக்குக் கோகஸஸ், வோல்கா நதியின் கீழ்ப் பகுதியிலுள்ள சரே ஆகிய இடங்களுக்கு விஜயம் செய்தார். அங்கிருந்து பல்கேரியா விற்கும் காமா என்ற இடத்திற்கும் தான் சென்றதாக அவர் எழுதியுள்ள போதிலும் அவரது பிரயாணத்தின் இப்பகுதி பற்றி வரலாற்று ஆசிரி யர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
கொன்ஸ்தாந்திநோபிளில் இருந்து ரஷ்யப் புல்வெளிகளினூடா
21 تد{ اbاتJ0و

கத் திரும்பி வந்த அவர் இந்தியாவை நோக்கிப் பயணத்தைத் தொடர்ந் தார். வழியில் மத்திய ஆசியாவிற்குச் சென்று அங்குள்ள புகாரா, ஸ்மர் கந்த், பல்க், முதலிய புராதன நகரங் களைத் தரிசித்தார்.
குராஸான், ஆப்கானிஸ்தான் முதலிய பிரதேசங்களினூடாகப் பிரயாணஞ் செய்த அவர் ஹிந்துக் குஷ் மலையைக் கடந்து 1333 செப் டம்பர் 12ஆம் திகதி இந்திய எல்லை யை அடைந்தார். இவ்வேளையில் இப்னு பதூத்தா பெயரும் புகழும் பெற்ற ஒருவராக இருந்ததனால் இந் தியாவின் ஆட்சியாளரான முஹம் மத் இப்னு துக்ளக் அவரை வர வேற்று அவருக்குச் செல்வத்தை வாரி வழங்கினார். பின்னர் இப்னு பதுரத்தா டில்லியின் பிரதம நீதிபதி யாக நியமிக்கப்பட்டார். ப்பத வியை அவர் பல வருடங்கள் வகித் தார். இடைக்காலத்தில் துக்ளக்கின் அதிருப்திக்கு ஆளான போதிலும் 1342இல் இந்தியாவின் தூதுவராக சீனச் சக்கரவர்த்தியிடம் அனுப்பப் பட்டார்.
டெல்லியிலிருந்து சீனாவை நோக்கிப் புறப்பட்டபோது வழியில் ஹிந்துக் கிளர்ச்சியாளர்களால் இப் னு பதூத்தாவும், அவரது குழு வினர்களும் தாக்கப்பட்டனர். எனி னும் அவர் மயிரிழையில் உயிர் தப்பினார். மலபார் கரைவழியாகச் செல்லும் போது கல்லிக் கோட் டைக்கு அண்மையில் கப்பல் கவிழ்ந் ததால் அவர் தனது உடைமைகளை யும் சீனச் சக்கரவர்த்திக்கு கொண்டு சென்ற பரிசுப் பொருட்களையும் இழக்க நேரிட்டது. இதனால்துக்ளக் கின் கோபத்திற்கு ஆளாக வேண்டி வருமோ எனப் பயந்த இப்னு பதூத் தா, மாலைதீவுகளுக்குச் சென்று
அரும்பு-21
அங்கு சுமார் 2 வருடங்கள் நீதிபதி யாகப் பணிபுரிந்தார். அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்ட அவர் அரச குடும்பத்தில் திருமணம் செய்த தோடு அந்நாட்டின் சுல்தான் ஆக வருவதற்கும் ஆசைப்பட்டார்.
அங்கு சூழ்நிலை ஆபத்தான தாக மாறவே அவர் இலங்கைக்கு வந்து இந்நாட்டு அரசனைச் சந்தித் ததோடு சிவனொளிபாத மலைக்கும் (Adam's Peak) 05guin Gatig, it ii. பின்னர் மீண்டும் மாலைதீவுக்குச் சென்று அங்கிருந்து வங்காளத்திற் கும் அஸ்ஸாமிற்கும் விஜயம் செய் தார். மீண்டும் சீனாவுக்கான பயணத் தைத் தொடர விரும்பிய அவர் கடல் மார்க்கமாக சுமாத்திராவுக்குச் சென் றார். அங்கிருந்த முஸ்லிம் சுல்தான் வழங்கிய புதிய கப்பலில் ஏறி அவர் சீனாவிலுள்ள ஸைத்தூன் (இன்றைய Ch’uan-chu) 6Taip gjGopcup35356ë போய் இறங்கினார். அங்கிருந்து உள்நாட்டு நீர்ப்பாதைகள் வழியாக
பீஜிங் வரை சென்று திரும்பினார்.
சீனாவிலிருந்து திரும்பும் வழி யில் சுமாத்திரா, மலபார், பாரசீக வளைகுடா என்பவற்றினூடாக பக் தாத்திற்கும் அங்கிருந்து ஸிரியாவிற் கும் போனார். 1348இல் சிரியா விலும், எகிப்திலும் உள்ள பல நகரங்களுக்கு விஜயம் செய்த இப்னு பதூத்தா அதே ஆண்டில் தனது இறுதி ஹஜ் யாத்திரையை மேற் கொண்டார். இறுதியாகத் தன் சொந்த நாட்டிற்கு செல்ல விரும்பிய அவர் எகிப்திலுள்ள அலெக்சாந்திரி யாவில் கப்பலேறி அங்கிருந்து டுனீஸ் நகருக்கும் அடுத்து ஸார்டீ னியா, அல்ஜியஸ் ஆகிய இடங் களுக்கும் சென்றார். இறுதியாக 1349 நவம்பரில் மொரொக்கோவின் அப் போதைய தலைநகரான Fez நகரை அடைந்தார்.
31.

Page 18
தான் அறிந்து கொள்ளாத முஸ்லிம் நாடுகள் மேலும் இரண்டு இருப்பது இப்னு பதூத்தாவுக்குப் பின்னர் தான் தெரிய வந்தது. அவற்றுள் ஒன்று ஸ்பெயினில் எஞ்சி யிருந்த முஸ்லிம் இராச்சியமான கிரனாடா ஆகும். எனவே இப்ன் பதூத்தா 1350இல் கிரனாடாவுக்கு விஜயத்தை மேற்கொண்டார். அதன் பின்னர் 1352இல் அவர் மேற்கு சூடா னுக்குச் சென்றார். மொரொக்கோ ஸுல்தானின் கட்டளையின் பேரில் ஸ்ஹாரா வைக் கடந்து மேற்கு ஆபிரிக்காவுக்குச் சென்ற பயணமே இப்னு பதூத்தாவின் கடைசி நாடு காண் பிரயாணமாகும். அங்கு மாலி சாம்ராஜ்யத்தில் ஒரு வருடத்தைக் கழித்த பின்னர் அவர் 1353 இறுதிப் பகுதியில் மொரொக்கோவுக்குத் திரும்பினார்.
மொரொக்கோ ஸ-ால்தானின் வேண்டுகோளின்படி இப்னு பதூத் தா தனது பிரயான நினைவுகளை
என்ற எழுத்தாளர் அவற்றை ஒரு நூலாக எழுதினார். "ரிஹற்லாஹற்’ என அழைக்கப்படும் இந்நூல் புவியியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. அன்றைய முஸ்லிம் உலகின் சமூக, அரசியல், பொருளாதார வரலாற் றினை இது தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகின்றது. அத்தோடு இப்ன் பதுரத்தாவின் உணர்வுகள், அவருடைய குணவியல்புகள் போன் றவற்றையும் இந்நூலின் மூலம் வாச கர்கள் அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கிறது.
இப்னு பதூத்தா வின் வாழ்க் கையின் இறுதிக் காலம் பற்றிய தக வல்கள் எதனையும் அறிந்துகொள்ள முடியாதுள்ளது. மொரொக்கோ நக ரொன்றில் நீதிபதியாகப் பணிபுரிந்து வருகையில் அவர் 1368இல் அல்லது 1369இல் மரணித்ததாகவும் அவரது உடல், பிறந்த ஊரான தாஞ்ஜியேரில் அடக்கம் செய்யப்பட்டதாகவும்
எடுத்துக்கூற இப்னு ஜூஸையி மாத்திரம் தெரிய வந்துள்ளது. ஊ
தந்திரோபாயம்
அது அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் சூடுபிடித்திருந்த காலம். பொது விருந்தொன்றின் போது சந்தித்துக்கொண்ட ஜோர்ஜ் புஷ் ஆதரவாளர் ஒருவரும் அல்கோர் ஆதரவாளர் ஒருவரும் தமது தேர்தல் பிரசார தந்திரோபாயங்கள் பற்றிப் பேசிக் கொண்டனர்.
“வாக்காளர்களின் ஆதரவைப் பெறுவதற்காக நாங்கள் பல உபாயங்களைக் கையாள்கின்றோம். உதாரணமாக நான் வாடகைக் கார்களில் செல்லும் போதெல்லாம் சாரதி கேட்கும் தொகையைவிட ஐந்து டொலர் கூடுதலாகக் கொடுத்துவிட்டு அவரிடம் "புஷ்ஷ"க்கு வாக்களியுங்கள்’ எனக் கூறுவேன்’ என்றார் புஷ் ஆதரவாளர்.
“ஒஹோ! நானும் இதே முறையைத் தானே பின்பற்றுகிறேன். நான் வாடகைக் காரில் செல்லும் போதெல்லாம் சாரதி கேட்கும் தொகையை விட ஐந்து டொலர் குறைவாகக் கொடுத்துவிட்டு அவரிடம் புஷ்ஷ"க்கு வாக்களியுங்கள்’ எனக் கூறுவேன்” என்றார் அல்கோர் ஆதரவாளர்.
ஒரு கொசுவானது ஒரு குதிரையைக் கடித்து அதனைச் சிறிது முனகச் செய்யலாம். இருந்தாலும் ஒன்று வெறும் பூச்சிதான். மற்றது எப்போதும் குதிரை தான்.
- -ஸாமுவேல் ஜோன்ஸன்
32 21 – القاوقرى

கடந்த ஜவரியில் இந்தியா வின் குஜராத் மாநிலத்திலே ஏற் பட்ட பயங்கரப் பூமி அதிர்வின் விளைவுகள் எல்லோர் மனதிலும் பிரமிப்பையும் பீதியையும் ஏற்படுத் தியுள்ளன. ஒரு சில வினாடிகள் மாத்திரமே நீடித்த இப்புவியதிர் வினால் இவ்வளவு பெரிய அழிவு ஏற்பட முடியுமானால், இதனைவிட வலிமையான அதிர்வுகள் முழு உல கையும் உருக்குலைத்துவிட மாட்டா வா? என்ற கேள்வி பலர் மனதிலும் தோன்றியுள்ளது.
பூமியில் ஏற்படும் அதிர்வு களைப் பதிவு செய்வதற்குப் புவி யதிர்வுப் பதிகருவி (seismograph) என்ற உபகரணம் பயன்படுத்தப்படு கின்றது. பல்வேறு வகை பான பொறிமுறைகளைப் பயன்படுத்தி இயங்கும் புவியதிர்வுப் பதி கருவிகள் இன்று பயன்பாட்டில் உள் ளன. பூமி அதிரும் போது உண்டா கும் ஆட்டத்தின் வீச்சத்தை அளப் பதற்கு இவை உதவுகின்றன. இவ் வீச்சத்தினை அடிப்படையாக வைத் தே புவியதிர்வின் வலிமை (seismic magnitude) தீர்மானிக்கப்படுகின் pg|J. 0.0000 l mm (pg5 Gö 1 m GJGONU யான வீச்ச வேறுபாடுகளை அளக் கக்கூடிய அளவுக்கு உணர்திறனுடை யனவாக இன்றைய பதிகருவிகள் விளங்குகின்றன.
இன்று உலகெங்கும் புவியதிர் வைப் பதிவு செய்வதற்கென ஆயிரத் துக்கும் மேற்பட்ட நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்நிலையங்
அரும்பு-21
புவியதிர்வை அளத்தல்
Measuring Earthquakes
களில் பதியப்படும் தரவுகளிலிருந்தே உலகில் ஏதேனுமோரிடத்தில் நிக ழும் புவியதிர்வின் வலிமை தீர் மானிக்கப்பட்டு அறிவிக்கப்படுகின் றது. இலங்கையில், கொழும்பு பெளத்தா லோக்க மாவத்தையில் அமைந்துள்ள வானிலை அவதான நிலையத்தில் புவியதிர்வுப் பதிகருவி யொன்று அமைக்கப்பட்டுள்ளது.
புவியதிர்வுகளின் பருமனைக் குறிப்பதற்கு ரிக்டர் அளவுத்திட்டம் (Richter Scale) o LIGust 6)åg5 L i Lj(S) கின்றது. புவியினுள் அதிர்வு உரு வான புள்ளிக்கு (epicentre) நேராக மேலே மேற்பரப்பிலிருந்து 100 km . தூரத்தில் பூமி எவ்வளவு ஆட்டம் கண்டது என்பதையே இவ்வளவுத் திட்டத்தின் மூலம் குறிக் கின்றனர்.
நாம் முன்னர் கூறியது போல 0.00001 mm முதல் 1000 mm வரை யான அசைவுகளை இன்றைய புவி யதிர்வுப் பதிகருவிகள் உணரக் கூடி யனவாக இருப்பதனால் இவ்வளவு பெரிய வீச்சை அளவுத்திட்ட மொன்
றில் குறிப்பது சிரமமாகும். இவ்வா
றான சந்தர்ப்பங்களில் உண்மை யான பெறுமானத்துக்குப் பதிலாக அப்பெறுமானத்தின் பத்தை அடியா கக்கொண்ட மடக்கையை (LOgarithm) பயன்படுத்துவது வழக்கம். எனவே ரிக்டர் அளவுத்திட்டமும் மடக்கை சார்ந்த ஓர் அளவுத் திட் டமாகவே அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான அளவுத் திட்ட மொன்றினால் குறிக்கப்படும் பெறு
33

Page 19
மானமொன்று 1 இனால் அதிகரிக் கும் போது அது பத்துமடங்கு அதி கரிப்பையே குறிக்கின்றது என்பதைக் கவனத்தில் கொள்ளல் வேண்டும். உதாரணமாக ரிக்டர் அளவுத்திட் டத்தில் பருமன் 7 ஆகவுள்ள புவியதிர் வானது பருமன் 6ஐக் கொண்ட அதிர் வைவிடப் பத்துமடங்கு வலிமை யானதாக இருக்கும். (அதேவேளை வெளியிடப்படும் சக்தியின் அளவு 32 மடங்கு கூடுதலாக இருக்கும்.)
ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த புவியதிர்வியல் அறிஞரான Charles F. Richter GT Göt Lu Gu G3, U 1935இல் ரிக்டர் அளவுத்திட்டத்தை வடிவமைத்தார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் இடம் பெறுகின்ற புவியதிர்வுகளைத் தரப்
படுத்துவதற்காகவே ஆரம்பத்தில்
வ்வளவுத்திட்டம் தயாரிக்கப் பட்டது. பிற்காலத்தில் Richter உம் அவரது சகாக்கள் சிலரும் சேர்ந்து இவ்வளவுத்திட்டத்தை உலகளாவிய ரீதியில் பயன்படுத்தப்படக் கூடிய தாகத் திருத்தியமைத்தனர். ஜெர்ம னியில் பிறந்தவரான பேராசிரியர் Beno Gutenberg (1889-1960) 6T6ötl u62 uñ இப்பணியில் Richterக்குத் துணை
LTS இருந்தார்.
ரிக்டர் அளவுத்திட்டத்தில் பரு மன் 5 ஆகவுள்ள புவியதிர்வுகளை Moderate earthquakes (15(5):55 ULDIT GOT வை) எனவும் பருமன் 6 ஆக உள்ள 6) libó0p Large earthquakes (Gufu வை) எனவும் 7 ஆக இருப்பவற்றை Major earthquakes (515) l'Il Gil 5555 அளவு பெரியவை) எனவும் 8 அல் லது அதைவிடக் கூடிய வற்றை great earthquakes (பிரமாண் டமானவை) எனவும் விஞ்ஞானிகள் வகைப்படுத் துகின்றனர். அண்மையில் குஜராத் தில் இடம் பெற்ற புவியதிர்வு 7.9 பருமனுடையதாகும்.
34
ரிக்டர் அளவுத்திட்டத்துக்கு
உச்ச எல்லையொன்று கிடையாது.
எனினும் பருமன் 8 அல்லது அதை விடக்கூடிய புவியதிர்வுகள் மிக மிக அரிதாகவே இடம்பெறுகின்றன. உலகளாவிய ரீதியில் இப்படியான பேரதிர்வுகள் சராசரியாக வருடத் துக்கு ஒன்று வீதமே இடம்பெறு வதாக அறியப்பட்டுள்ளது. இது வரை பதியப்பட்டுள்ள மிகப்பெரிய புவியதிர்வின் பருமன் சுமார் 9.5 ஆகும். தன் காரணமாக வெளி விட்ப்பட்ட சக்தியின் அளவு ஹிரோ விமாவில் வெடித்த அணுகுண்டை ஒத்த 66,000,000 அணுகுண்டுகளின் சக்திக்குச் சமனாகும் என மதிப் பிடப்பட்டுள்ளது.
பருமன் 10ஐக் கொண்ட புவி யதிர்வொன்றை உருவாக்குவதற்குத் தேவையான அளவு சக்தியை புவி ஒட்டினால் சேமித்துவைக்க முடி யாது என விஞ்ஞானிகள் நம்பு கின்றனர். எனினும் ஏதோ ஒருவகை யில் பருமன் 12ஐக் கொண்ட புவி யதிர்வொன்று உருவாகுமானால் புவியிலுள்ள மலைகளெல்லாம் பிடுங்கியெறியப்பட்டுப் பூமி இரு பாதிகளாகப் பிளந்துவிடும் என விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர். உலக அழிவு இவ்வாறே ஏற்படும் எனத் திருமறையில் எடுத்துக் கூறப் பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
அரும்பு-21
 

ரிக்டர் அளவுத்திட்டத்தில் கீழ் எல்லைகூட இல்லை. பூச்சியப் பரு மனுடைய புவியதிர்வைவிடப் பத்து
மடங்கு பருமன் குறைந்த அதிர்வை IV - கட்டடங்களுக்குள்ளே இருப் இவ்வளவுத்திட்டத்தில் -1 ஒன்று போர் உணர்ந்துகொள்வர். எனக் குறிப்பர். இவ்வாறு சய பெறு பெரிய வாகனமொன்று கட்ட மானமுடைய புவியதிர்வுகள் தின டத்தில் மோதியது போன்ற மும் நிகழ்ந்த வண்ணமே இருக்கின் உணர்வு ஏற்படும். றன. எனினும் இவற்றை உணர்ந்து V - பலரால் உணரப்படும். பலர் கொள்வது கடினமாகும். உறக்கத்திலிருந்து எழுந்து கொள்வர். மரங்களும் தூண் ரிக்டர் அளவுத்திட்டம் களும் ஆடுவதைக் காணலாம். 25 பொதுவாக உணரப்படுவு " : தில்லை. எனினும் புவியதிர் ஒடுவார்கள். தளபாடங்கள் வுப் பதிகருவிகளால் பதியப் o o படுகின்றன. அசைவுறும் மிகச் சிறியளவு 3.5 - பலரால் உணரப்படும் சேதம் ஏற்படும். 45 - சுற்றுட் N, O, G VI - எல்லோரும் வீடுகளை விட்டு ற்றுப்புறத்தில் ஓரளவு \ச்சதம வெளியே ஒடுவர். ஒழுங்காக 6.0 - வேற்ேபடுத்தும் புவி நிர்மாணிக்கப்படாத கட்டடங் யதிர்வுகள். 56T குறிப்பிடத்தக்க அளவு சேதமடையும். ஏனையவை சிறி 7.0 - குறிப்பிடத்தக்க அளவு பெரிய தளவு சேதமடையும்.
புவியதிர்வுகள் VI - விசேடமாக நிர்மாணிக்கப் 8.0 அல்லது அதற்குமேல்:- பட்ட கட்டடங்கள் சிறிதளவு பிரமாண்டமான புவியதிர் சேதமடையும். ஏனையவை வுகள. SLSASSSLS SSSSS SLSSS SS SS இடிந்து விழும். ரிக்டர் அளவுத்திட்டத்திற்குப் x : கட்டடங்களும் குறிப் புறம்பாக திருத்தியமைக்கப்பட்ட பிடத்தக்க அளவு சேதமடையும். மெர்கால்லி அளவுத்திட்டம் (Modi- அவற்றுள் பல அடித்தளத்திலி fied Mercalli Scale = MM Scale) ருந்து பெயர்ந்துவிடும். பூமியில் என்பதும் புவியதிர்வியல் அறிஞர் பிளவுகள் காணப்படும். களால் உபயோகிக்கப்படுகின்றது. X - பல கட்டடங்கள் அழிவுறும். இவ்வளவுத் திட்டத்தின்படி புவி தரை மோசமாகப் பிளவுற்றுக் யதிர்வுகள் 1 முதல் X11 வரை தரப் காணப்படும். படுத்தப்படுகின்றன : XI - பெரும்பாலும் எல்லாக் கட்ட டங்களும் இடிந்து விழும். மெர்கால்லி அளவுத்திட்டம் பாலங்கள் சிதைவுறும். தரை யில் மிக அகன்ற பிளவுகள் 1 - எவராலும் உணரப்படுவதில் தோன்றும்.
ᏛᏈᎠᎧᎲ) XI - முற்றான அழிவு. தரையில் I - சிலரால் உணரப்படும் அலைகள் தோன்றும். - அரும்பு-21 35
III
நடுக்கத்தைப் பலர் அவதானிப் பர். எனினும் அது புவியதிர்வு என்பதை உணர மாட்டார்கள்.

Page 20
0ெ"னாமி என்ற ஜப்பானிய மொழிச் சொல்லின் கருத்து “துறை முக அலை’ என்பதாகும். கடலுக்கடி யில் ஏற்படும் புவியதிர்வு, எரிமலை வெடிப்பு, நிலச்சரிவு போன்றவை காரணமாகக் கடலில் உருவாகும் அதிர்வலையைக் குறிக்கும் விஞ் ஞானச் சொல்லாக இது உபயோகிக் கப்படுகின்றது.
நீரினுள் ஒரு பொருளைப் போட்டால் உண்டாகும் வட்ட அலைகளைப் போன்றே, புவியதிர் வின் காரணமாகக் கடல் தரை குலுங் கும் போதும் அலைத் தொடரொன் று உருவாகின்றது. 100 km முதல் 200 km வரையான அலை நீளத்தைக் கொண்ட இந்த ஸுனாமி அலைகள் சமுத்திர ஆழத்தினூடாகப் பல நூறு கிலோமீட்டர்கள் பிரயாணம் செய் கின்றன. இவ்வாறு செல்லும் போது இவ்வலைகள் மணிக்கு 750 - 800 km வேகத்தை அடைந்துவிடுகின்றன.
ஆழ்கடலில் ஸ"னாமி அலை யொன்றின் உயரம் 50 cmக்கு குறை வானதாகவே இருக்கும். எனினும், ஆழமற்ற கரைப்பகுதியை அடையும் போது அது 15 m (50 அடி) அல்லது
அதைவிடக் கூடுதலான உயரத்தை அடைந்துவிடும். இந்த இராட்சத அலைகள் பிரமாண்டமான கன வளவு நீரைத் தாக்குவதனால் இவை அபரிமிதமான சக்தியைக் கொண் டனவாக இருக்கும். எனவே இப்படி யான ஸானாமி அலைகள் தாக் கும்போது கடற்கரையை அண்மிய குடியேற்றங்கள் முற்றாக அழிக்கப் படுவது தவிர்க்க முடியாததாகி விடு கின்றது.
பசிபிக் சமுத்திரத்தைச் சுற்றி யுள்ள சுமார் 32 500 km நீளமான “ gj56of G) 160) GTub” (Ring of fire) என்ற பிரதேசமே ஸ-ஸுனாமி அலை களின் உருவாக்கத்திற்குப் பெயர் பெற்றதாகும். இக்கடற் பிரதேசத் தில் பெருமளவு எரிமலைகள் காணப் படுவதோடு அடிக்கடி புவியதிர்வு களும் ஏற்படுகின்றன. 1819ம் ஆண்டு முதல் சுமார் 40 ஸ"னாமி அலைகள் ஹவாய்த் தீவுகளைத் தாக்கியிருப் பது குறிப்பிடத்தக்கது.
சூறாவளிகளின் போது கடலில் ஏற்படும் கொந்தளிப்பின் காரண மாக உருவாகும் பேரலைகள் ஸ"னாமி அலைகளிலிருந்து வேறு பட்டவை. சூறாவளி கரையை அடையும் போது இக்கடல் அலை கள் கரையோரப் பிரதேசங்களில் பெரிய வெள்ளப் பெருக்குகளை ஏற்படுத்துவது வழக்கம். கடல் மட் டம் பெருகியிருக்கும் வேளையில் (high tide) (6.5IT fig, Gilil, 3ribul'LITG) கூடிய சேதத்தை ஏற்படுத்தும். 1970இல் பங்களாதேஷில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பின் காரணமாக சுமார் 500,000 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. ை
அறியாமை ஆட்சி புரியும் இடத்தில் அறிந்தவனாய் இருப்பது முட்டாள்
தனமாகும்.
36
- தோமஸ் கிரே அரும்பு-21
 
 

ஆதிகாலக் கிரேக்க தேசத்தின் ஒரு பகுதியான Pergamum (இன் றைய துருக்கியில் உள்ள Bergama) என்ற இடத்தில் கி. வ. 129இல் பிறந்த Galen (கிரேக்க மொழியில் GalenOS) என்பவர் சிறந்த மருத்து வராகவும் எழுத்தாளராகவும், தத் துவஞானியாகவும் புகழ்பெற்றவர். மருத்துவத்தில் இவர் வகுத்த கொள்கைகளும் செயன்முறைகளும் ஐரோப்பாவிலே மத்திய காலம் முதல் 17ம் நூற்றாண்டின் இறுதி வரை பெருஞ் செல்வாக்குடன் விளங்கியது குறிப்பிடத்தக்கது.
பணம் படைத்த கட்டடக் கலை ஞர் ஒருவரின் மகனாகப் பிறந்த கேலன் ஆரம்பத்தில் தத்துவஞானம், இலக்கியம் ஆகிய துறைகளிலேயே கல்வி பெற்றார். எனினும் 16ம் வய தில் அவரது கவனம் மருத்துவத் துறையை நோக்கிச் செல்லலாயிற்று. தனது பிறந்த ஊரிலும் Smyrna (துருக் கியிலுள்ளதற்போதையIZmir) என்ற இடத்திலும் மருத்துவம் பயின்ற அவர் இறுதியில் எகிப்திலுள்ள அலெக்ஸாந்திரியாவில் தனது கல்வி யைத் தொடர்ந்தார். பண்டைய உலகில் மருத்துவக் கல்வியின் மத் திய நிலையமாக அலெக்ஸாந்திரி யாவே திகழ்ந்து வந்தது குறிப்பிடத் தக்கது. பத்து வருடங்களுக்கு மேல் அங்கு மருத்துவம் பயின்ற கேலன் 157ம் ஆண்டு தனது சொந்த ஊருக்குத் திரும்பி அங்கிருந்த முக்கிய படைப் பிரிவொன்றின் வைத்தியராகப் பணி புரிந்தார்.
அரும்பு-21
மருத்துவக் கல்விக்கு 毅” அடிப்படை அமைத்த கிரேக்க மேதை
1 GG5606õT (Galen)
முன்னேற வேண்டும் என்ற ஆர் வம் காரணமாக கேலன் 162இல் ரோம் நகருக்குக் குடிபெயர்ந்தார். அங்கு உடற்கூறியல் தொடர்பாக அவர் பகிரங்கமாகச் செய்த செய்து காட்டல்களும், குணமாக்கப்பட முடியாது என ஏனைய வைத்தியர்கள் கைவிட்ட நோயாளிகளைக் குண மாக்குவதில் அவர் ஈட்டிய வெற்றி களும் கேலனுக்கு மருத்துவத் தொழி லில் பெரும் புகழை ஈட்டிக் கொடுத் தன. அவரது பரந்த, ஆழமான அறிவு, விவாதத் திறமை, செல்வாக்கான சமூகத் தொடர்புகள் முதலியனவும் இதற்கு உறுதுணையாக அமைந்தன. 1689) Gð Marcus Aurelius 6T 6örp ரோமப் பேரரசனின் மருத்துவராக நியமனம் பெற்ற கேலன் அது முதல் 207ம் ஆண்டுவரை பல ரோமப் பேரரசர்களின் அரசவை மருத்துவ ராகப் பணிபுரிந்தார். அவர் கி. வ. 216 அளவில் இறந்திருக்கலாம் எனத் தெரியவருகின்றது.
உடற்கூறியலையே (Anatomy) மருத்துவத்தின் அடிப்படை என கேலன் கருதினார். ஆபிரிக்கக் குரங் குகள், செம்மறி ஆடுகள், வெள்ளாடு கள் போன்ற பல்வேறு மிருகங்களின் உடல்களை வெட்டித் திறந்து உடற் றொழிலியல் (Physiology) பற்றிப் பல ஆய்வுகளை அவர் மேற் கொண்டார். ஏழு சோடி மண்டை யோட்டு நரம்புகளைப் பிரித்து இனங்கண்ட கேலன், இதயத்தி லுள்ள வால்வுகள் பற்றியும் விவரித் தார். நாடிகளுக்கும் நாளங்களுக்கும்
37

Page 21
இடையிலுள்ள கட்டமைப்பு வேறு பாடுகளையும் அவர் அவதானித் தார். நாடிகள் குருதியைக் கொண்டு செல்கின்றன என்ற உண்மையை அவரே முதன் முதலாக எடுத்துக் காட்டினர். நாடிகள் வளியைக் கொண்டு செல்வதாகவே அதுவரை காலமும் - சுமார் 400 வருடங்களா கப் போதிக்கப்பட்டு வந்தது.
எமது குரலை மூளையே கட்டுப் படுத்துகின்றது என்பதை அவர் பரி சோதனை மூலம் எடுத்துக் காட்டி னார். அத்தோடு முன்னாண் நரம் புகள், சிறுநீரகம், சிறுநீர்ப்பை முதலி யவற்றின் தொழிற்பாடுகள் பற்றியும் அவர் பரிசோதனைகள் மூலம் நிரூ பித்துக் காட்டினார். அக்கால சமூக மரபுகள் இறந்த மனித உடல்களை வெட்டித் திறப்பதை அனுமதிக்காத காரணத்தால் கேலனின் முயற்சிகள் பெருமளவு பாதிக்கப்பட்டன. என
வே மிருகங்களின் உடல்களை வெட்
டித் திறந்து கண்டறிந்த விடயங்களின் அடிப்படையில் மனித உடற்கூறை யும் விளக்க முயற்சித்ததால் அவர் பல தவறான முடிவுகளை எடுக்க நேர்ந்தது.
உடற்றொழிலியல் பற்றிய கேல னின் கருத்துக்கள் பிளேட்டோ, அரிஸ்டோட்டில் போன்ற தத்துவ ஞானிகளினதும், புகழ்பெற்ற வைத் தியரான ஹிப்போ கிரட்டிஸினதும் கருத்துக்களின் கலவையாக இருந் தது. முழு மருத்துவ அறிவுத் தொகு தியினதும் ஊற்றுக் கண்ணாக அவர் ஹிப்போ கிரட்டிஸை மதித்துப் போற்றினார்.
மனித உடலானது ஒன்றோ டொன்று தொடர்புடைய மூன்று தொகுதிகளால் ஆனது என கேலன் கருதினார். உணர்வுக்கும் சிந்த
னைக்கும் பொறுப்பாக மூளையும்
38
நரம்புகளும் இருப்பதாகவும் இதய மும் நாடிகளும் உடலுக்கு உயிர் வாழத் தேவையான சக்தியை வழங் குவதாகவும் ஈரலும் நாளங்களும் போசணைக்கும் வளர்ச்சிக்கும் பொறுப்பாக இருப்பதாகவும் அவர் கருதினார்.
குருதி ஈரலிலே உற்பத்தியாகி நாளங்களினூடாக உடலெங்கும் செல்கின்றது எனவும் அங்கு குருதி போசணையாகவோ தசையாகவோ மாற்றப்படுகின்றது என்றும் கேலன் நம்பினார். உடற்றொழிலியல் பற் றிய கேலனின் பிழையான கருத்துக் களை மறுத்துரைக்கப் பல நூற்றாண் டுகளாக எவரும் முன்வரவில்லை. 17ம் நூற்றாண்டில் வில்லியம் ஹாவி என்ற ஆங்கிலேய மருத்துவர் குருதிச்
சுற்றோட்டம் பற்றிச் சரியான விளக்
கத்தை வழங்கும் வரை கேலனின் கருத்துக்களே நிலைபெற்று நின்றன. ஹிப்போ கிரட்டிஸின் கோட் பாடுகளின் அடிப்படையில், மனித உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமாயின் உடலை ஆக்கியுள்ள நான்கு நீர்த்தாதுக்களான குருதி, மஞ்சட் பித்தம், கரும் பித்தம், கபம் (Phlegm) என்பன சமநிலையில் இருக்க வேண்டும் என்றே கேலனும் போதித்தார். இக்கருத்துக்கள் அடுத் து வந்த 1400 ஆண்டுகளாக மருத் துவத் துறையில் ஆதிக்கம் செலுத்தி வரலாயின. -
கேலன் பல துறைகளிலும் ஆற்றல் வாய்ந்தவராக இருந்ததோடு
வளமிக்க எழுத்தாளராகவும் திகழ்ந்
தார். அவர் 300க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவற்றுள் சுமார் 150 நூல்கள் இன்றும் முற்றா கவோ பகுதியாகவோ பேணப்பட்டு
வருகின்றன. மருத்துவத்துக்கு அப்
பாற்பட்ட மொழியியல் போன்ற
அரும்பு-21

துறைகளிலும் அவர் பேரார்வம் காட்டியுள்ளார். சிறந்த தர்க்கவியல் அறிஞரான அவர் விஞ்ஞான ஆய்வு முறை பற்றியும் எழுதியுள்ளார்.
கேலனுடைய ஆயுட் காலத்தி
லேயே அவரது நூல்கள் நன்கு பரம் பல டைந்தன. கி. வ. 500 ஆகும் போது அவரது ஆக்கங்கள் அலெக் ஸாந்திரியாவிலே கற்பிக்கப்பட லாயின. 9ம் நூற்றாண்டிலே கேல னின் கிரேக்க மொழி ஆக்கங்களை ஒன்று திரட்டிய அராபியர்கள் அவற் றை அரபு மொழிக்கு மொழிமாற்றம் செய்யலாயினர். 850ம் ஆண்டிலே பக்தாத் அரசவையில் பணிபுரிந்த மருத்துவரான ஹ"னைன் ப்ன் இஷாக் என்பவர் தானும் தனது உத வியாளர்களும் அரபுக்கு மொழி பெயர்த்த கேலனின் 129 நூல்களின் பட்டியலொன்றை வெளியிட்டிருந் தார். இம்மொழிபெயர்ப்புகளின்
காரணமாக அரபு-முஸ்லிம் உலகின் மருத்துவத் துறையானது கேலனின் கோட்பாடுகளின் மீது பெரிதும் தங்கியிருக்கலாயிற்று.
11ம் நூற்றாண்டு வரை மேற்கு ஐரோப்பாவிலே கேலனின் செல் வாக்கு மிகச் சொற்பமானதாகவே இருந்தது. எனினும் அதன் பின்னர் ஹ"னைனின் மொழிபெயர்ப்புக் களும், அவற்றுக்கு வேறு அராபிய மருத்துவர்கள் எழுதிய வியாக்கி யானங்களும் லத்தீன் மொழிக்கு மொழிபெயர்க்கப்படலாயின. பிற்காலத்தில் (1525இல்) கேலனின் ஆக்கங்கள் முழுமையாக கிரேக்க மொழியில் அச்சிடப்பட்டன. அதன் பின்னர் அவற்றின் லத்தீன் மொழி பெயர்ப்புகள் தொடர்ந்து வெளிவர லாயின. இவையே ஐரோப்பாவில் கேலனின் கருத்துக்கள் பரவுவதற்குக் காரணமாக அமைந்தன.
σπίτι έρ
வாகன நெரிசலற்ற நெடுஞ்சாலையொன்றில் அதிவேகத்தில் சென்றுகொண்டிருந்த வாகனமொன்று பாதையிலிருந்து விலகி அருகிலிருந்த டெலிபோன் கம்பமொன்றில் பலமாக மோதியது. அதனைத் தனிமையில் ஒட்டிச் சென்ற இளைஞன் சுய உணர்வற்றுக் குற்றுயிராகக் கிடந்தான்.
அவ்வழியாக வந்த பொலிஸ்காரர் ஒருவர் விபத்து நடந்த இடத்தைச் சுற்றும் முற்றும் பார்த்தார். அவ்விடத்தில் பயத்தால் வெளிறிப்போன மனிதனொருவன் நின்றுகொண்டிருப்பதைக் கண்ட அவர் அவனிடம்
விபத்துப் பற்றி விசாரிக்க எண்ணி,
“இந்த விபத்து நடப்பதை நீர் நேரில் கண்டீரா?” என்று கேட்டார்.
“ஆம்’ என்பது போல் தலையை அசைத்தான் அந்த மனிதன். அவனது உடல் பயத்தால் நடுங்கிக்கொண்டிருந்தது.
“நீர் ஏன் சிறுபிள்ளை மாதிரி பயந்து நடுங்குகிறீர்? இப்படியான விபத்தெல்லாம் சகஜமாக நடப்பவை தானே’ என்று அவனை அதட்டிய பொலிஸ்காரர்"அது சரி விபத்து நடந்த போது நீர் எங்கே இருந்தீர்?’ என்று சிறிது அதிகாரத் தோரணையில் கேட்டார்.
“இதோ இந்தத் தொலைபேசிக் கம்பத்தின் உச்சியில் திருத்த வேலை செய்துகொண்டிருந்தேன்’ என்றான் அவன் முறிந்து விழுந்திருந்த கம்பத்தைக்
காட்டியவாறு. அரும்பு-21
39

Page 22
இன்றைய இலக்ட்ரோனிக் கம்பியூட்டர்கள் உருவாக்கப் படு வதற்கு வெகு காலத்திற்கு முன்னரே எண் ரீதியான கணிப்புக்களைச் செய் வதற்காகப் பல்வேறு கருவிகளும் உபகரணங்களும் பயன்படுத்தப்பட் டுள்ளன. ஆரம்ப காலம் முதல் இத்துறையில் ஏற்பட்ட பிரதான
முன்னேற்றங்கள் கீழே நிரற்படுத்
தப்பட்டுள்ளன: 0 கி.மு.3500வது ஆண்டளவில் பபி லோனியர்கள் கணிப்புக்களைச் செய் வதற்காகக் களிமண்ணால் செய்யப் பட்ட ஒரு வகைத் தட்டுக்களையும் உருண்டைகளையும் பயன்படுத் தினர். 0 கி. மு. 2600வது ஆண்டளவில் சீனர் கள் Abacus என்னும் எண் சட்டத் தைப் பயன்படுத்திக் கணிப்புக் களைச் செய்ய ஆரம்பித்தனர். 0 கி. வ. 1645இல் பஸ்கால் (Blaise Pascal) என்ற பிரெஞ்சு விஞ்ஞானி பொறிமுறையாக இயங்கும் கணிப் புக் கருவியொன்றை வடிவமைத் தார். Pascaline என அழைக்கப்பட்ட இக்கருவியினால் 8 தானங்கள் கொண்ட எண்கள் வரை கூட்டவும் கழிக்கவும் முடிந்தது. எனினும் பெருக்கல் பிரித்தல் முதலிய செய் முறைகளை அதனால் நிறைவேற்ற முடியவில்லை. 0 கி. வ. 1671இல் கொட்பிரீட் வில் (6))o 6öso (Goffried Wilhelm Von Leibniz) என்ற ஜெர்மன் தத்துவ (65 it 60f Stepped Reckoner 6T60T அழைக்கப்பட்ட கணிக்கும் சாதனத் தை உருவாக்கினார். பொறிமுறை
40
கம்பியூட்டர் முன்னோடிகள்
கம்பியூட்டரின் தந்தை' எனக் கெளர
யாக இயங்கிய இச்சாதனம் கூட் டல், கழித்தல்களைச் சுயமாகச் செய்தது மட்டுமன்றி பிரித்தல், பெருக்கல் செய்முறைகளையும் நிறைவேற்றியது. oGss Suir (John Napier- 1550-1617) என்பவர் அறிமுகப்படுத்திய மடக் கைகளை அடிப்படையாக வைத்து William Oughter GTaöIp -g,ể16)(3G)uĩ Side Rule என்னும் எளிய கணிக்குங் கருவியை உருவாக்கினார். நவீன கல்குலேட்டர்கள் பயன்பாட்டுக்கு: வரும்வரை இவை ப்ரவலாக இல் யோகிக்கப்பட்டு வந்தன. } O 18229)6ò LuGLigo (Charles Babbage என்ற ஆங்கிலேயக் கணிதவியலாளர் Difference Engine 6 TGörGDJüd (6) Luft gó) யைக் கண்டுபிடித்தார். இக்கருவி யினால் பலவிதமான கணிதப் பிரச்சி னைகளைத் தீர்க்க முடியுமாக இருந் தது. இதன் அடிப்படையில் மேலும் திருத்தங்களைச் செய்து அவர் உரு 6) IT disu Analytical Engine 6T6örp 5(5 வியே இன்றைய கம்பியூட்டருக் ஒரு முன்னோடியாக அமைந்த இதனால்தான் சார்ள்ஸ் பப்ே
விக்கப் படுகின்றார்.
சார்ள்ஸ்பபேஜம்அவரதுகணிப்புப்பொறியும்
அரும்பு-21
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

o 1880இல் ஹெர்மன் ஹொலரித் (Dr. Herman Hollerith) 6 TGăTp (6) Lu T só) யியலாளர் அமெரிக்காவின் குடித் தொகை மதிப்பீட்டுத் தரவுகளைப் Luggy Guttigligib5ft 5 Punched Card என்னும் துளையிட்ட அட்டை களைப் பயன்படுத்தினார். (Punched
Card (up 60 padu 1801 g) as Joseph
Marie Jacquard 6Taiti 16) i 56ër@l Sllqj திருந்தார்.) O GiggsT sig? Lg6ö (George Boolè — 18151864) என்பவரினால் அறிமுகப்படுத் தப்பட்ட பூலியன் அட்சர கணிதம் (Boolean Algebra) 6Tairgin (515ust டுத் தர்க்கமுறையானது நவீன கம்பி யூட்டர்களின் செயற்பாட்டுக்கு அடிப் படை அமைத்துக் கொடுத்தது. 0 முதலாவது டிஜிட்டல் இலக்ட் ரோனிக் வகைக் கம்பியூட்டர் Howard H. Aiken 6TGöTLu6) I(5űb egy6.J.Ug) சகாக்களும் சேர்ந்து உருவாக்கிய MARK-1 என்பதாகும். இது சுமார் 15 m நீளமும் 2.4 m உயரமும் கொண் டது. இதில் பொறிமுறையாக இயங்
கும் கூறுகளும் காணப்பட்டதனால்
(up (ugp 60) LD ULI IT 605T லக்ட்ரோனிக் கம்பியூட்டர் என இதனைக் கருத முடியவில்லை.
0 முதலாவது டிஜிட்டல் இலக்ட் ரோனிக் கம்பியூட்டர் என்ற பெரு GOLDjig5rîuugi John V. Attanasoff 6 TGăT பவரும் அவரது மாணவரான Clifford Berry 6Tairua) (5th got'll sta, O (356) unTš66) uLu Attanasoff-Berry Computer (ABC) என்பதாகும். எனினும் இதன் தொழிற்பாடு மட்டுப்பட் டதாக இருந்ததனால் எவரும் இத னைக் கவனத்திற் கொள்ளவில்லை. og)yisé760) GwuíîGö, John Mauchly, John | Presper Eckert Jr. 6 TGồTG3Lu T ṁGOTIT Gö பென்ஸில்வேனியா பல்கலைக்கழ கத்தில் 1946ம் ஆண்டு உருவாக்கப்
அரும்பு-21
Lu LENIAC (Electronic Numerical Integrator and Calculator) 6Tait G5 உலகின் முதலாவது டிஜிட்டல் இலக்ட்ரோனிக் கம்பியூட்டர் என்ற புகழைப் பெற்றுக்கொண்டது. இதில் 18,000 வால்வுகளும் (valves), 70,000தடையிகளும் (resistors), 10,000 ஒடுக்கிகளும் (condensers) பயன் படுத்தப்பட்டிருந்தன. இது ஒரு செக் கனில் 5000 கூட்டல்களைச் செய்யக் கூடியது. தனி மனிதனால் தீர்க்கப் படுவதற்கு 100 வருடங்கள் பிடிக் கின்ற கணிதப் பிரச்சினையொன்றை ENIAC இரண்டு மணித்தியாலங் களில் தீர்க்கக் கூடியதாக இருந்தது.
30.5 m (100 egy ig) SGT(Iplb 3 m
உயரமும் 1 m அகலமும் கொண்ட
இந்த இராட்சத கம்பியூட்டர் இப் போது ஐக்கிய அமெரிக்காவிலுள்ள ஸ்மித்ஸோனியன் மியூஸியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த ENIAC கம்பியூட்டர் தசம (decimal) எண்களை (பத்தை அடியாகக் கொண்ட எண்களை) அடிப்படையாகக் கொண்ட தரவு களையே கையாளக்கூடியதாக இருந் திது.
தசம எண் முறைக்குப் பதிலாக இரண்டை அடியாகக் கொண்ட துவித (binary) எண்களைப் பயன் படுத்தியே கம்பியூட்டர்கள் தொழிற் பட வேண்டும் என்ற ஆலோசனை யை ஹங்கேரி நாட்டுக் கணித மேதை Ulu T GOT f@lu IT GổT ÉgųLD6őT (John Von Neumann) என்பவர் முன்வைத்தார். இதன் அடிப்படையில் UNIVAC-1 என்ற கம்பியூட்டர் முதன் முதலாக உருவாக்கப்பட்டது.
இன்றைய கம்பியூட்டர்களின் கட்டமைப்பும் fபொன் நியூமன் சிபாரிசு செய்த முறையில் அமைந் திருப்பதும் குறிப்பிடத் தக்கது. து 4.

Page 23
குறைப்பதற்காக ஆகசு குடாவின் வாய்க்குக் கு 1980இல் அணைக்கட்டெ T5 L - u gu இதன் A t y உரு வான JË ள்
த்தேக்கம் பல வருடங்க | நிலைத்திருக்கும் என எதி ர்பார்க்
கப்பட்டபோதிலும் 1983ஆவதற்குள்
E b 2 ജ
g
துக்கு 14 - 200m
:ே 'a7', (b)
'' காவா சு. 。
து. கஸ் பியன் க டலின் எல்லை
i, GF) Giii) CaSilur களாக மேற்கில் அஸர்பைஜான் 靶 Օ 61 T ବ ! ଟି ଗଡା଼ ବା II) ର । டகிழ
(C21|L]] re 67cm 。 。/-、 。/-、。 | Hyಣ್ರ Marಿ...! ம் கிழக்கில் கஸாகிஸ்தானும்
ாழியில் அழைக்கப்
ක, *。 a ܐܠܐ a கிழக்கின் மீதிப் பகுதியில் துர் . 25 მპა ქ. த்திலுள்ள உள் (ğ5g5I UFI,
5 m, Y . م: السير ಭ T] @ _侬)泷、凸@L) *
@@o * மந்திருக்கின்ற @ 01', ) இக் வடக்குத் தெற்காக சுமார் . . . . தென்மேற் தெற்கு மற்றும் தென்மேற் ,' به هم می به سال '( '' 210 நீளமும் கிழக்கு மேற்காக 'آسہ
. யோரங் 6T6J. L. T67) தல் 436km வரை அகலமும்
ܙܝܢܐ மலைத்தொடரும் கோக் اسر . ,پوٹہ۔ | 5 Π. σ007 L இக்கடலின் மொத்
தென்மேற்கு ந்துள்ள ஒர் உவர்
,"r)
li
『 。
| VV 9
a தக கரை,
r
த t"
é
Casus) மலைத்தொடரும் அை
* L I 371 OOO சதுர km என
பி
s ! (s க்கின் ତଥୈi. ப்பட்டுள்ளது. இது இலங்கை திருக்கின்றன * ኳ ዋ - #بھمبر بهر پ இக்கட லின் கிழக்குக் கரைே ன் நிலப்பரப்பின
| | | | U. து ஐநதரை o o tw w a
ரத்தில் பெரிய விரிகுடாக்கள் க
ଗଏt
",
به منی: )
க محمN
6) g LD T si 170m சராசரி
Ga, major Giron. Gai Vodsk, Garabogazköl 67637-1677 (tų, , 11 ഒ1ഞ ഖ. பின்னையது மி
G9、
ய அது மிக ஆழமாக ' _/。
' ஆழம் குறைந்தது. இதனருகே
உப்புக்களைப்
னுடைய நீர் மட்டம் 竺__一。°。 w
ப் பி ரித்தெடு
"..." T
லும் சராசரியாகச் சாதாரண
கடல் மட்டத்திலிருந்து 28m தாழ்
வாக இருக்கின்றது. கஸ்பியன் கட்
லுக்கு நீரைக் கொண்டுவந்து சேர்க் r கும் ஆறு 列
IT (Volga), ų[]
து நீர்ப்பாசனம்
ྋ VS། i பெற Lü y ம் 70களிலும்گی = !
if LU $ତ୪t[Dବot.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Kura நதி மேற்கிலிருந்தும் கஸ்பியன் கடலை நோக்கிப் பாய்கின்றன. எனினும் இக்கடலிலிருந்து நீரை வெளியே கொண்டுசெல்வதற்கு எந்த ஊடகமும் காணப்படுவதில்லை.
உள்நாட்டு நீர் வழிகளைக் கொண்ட பரவலான வலையமைப் பொன்று கஸ்பியன் கடலை, போல்ட்டிக் கடல், வெண் கடல், கருங்கடல் என்பவற்றுடன் தொடர்பு படுத்துகின்றன. இந்நீர்வழிகளுள் வோல்கா நதி முக்கியமானதாகும். இவற்றினூடாக அஸர்பைஜானின் Baku பகுதியிலுள்ள எண்ணெய் வயல்களின் உற்பத்திப் பொருட்கள் வட ஐரோப்பாவைச் சென்றடையக் கூடியதாக இருக்கின்றது.
கஸ்பியன் கடலில் மீன் வளமும் செறிந்திருக்கின்றது. வருடந்தோறும் பெருந்தொகையான மீன்கள் இங்
கிருந்து பிடிக்கப்படுகின்றன. இவற் p! Gir Sturgeon, Salmon, Perch, herring Carp முதலிய மீனினங்கள் குறிப் பிடத்தக்கவை. இவை தவிர ஆமை கள், கடற் பன்றி (Porpoise), கடற் சிங்கம் (Seal) என்பனவும் இக் கடலில் பெருமளவு காணப்படுகின் றன.
இக்கடலில் தென்கிழக்குப் பகுதியிலிருந்து வீசும் கடும் மழை யுடன் கூடிய காற்றுக்கள் காரண மாகக் கப்பல் போக்குவரத்து அடிக் கடி ஆபத்துக்குள்ளாகின்றது. குளிர் மாதங்களில் கஸ்பியன் கடலின் வட பகுதிகள் பனிக்கட்டியினால் மூடப் பட்டு விடுகின்றன. துர்க்மேனிஸ் தானின் Krasnovodsk, அஸர்பைஜா Gofalöt Baku, UJGyuu IT Gớ76ốT Makhachkalla என்பனவே கஸ்பியன் கடலிலுள்ள பிரதான துறைமுகங்களாகும். -
மாயத் தோற்றங்கள்
輯 島 இங்கு தெரிவது ஒரு செவ்வித் 该※ . . . . . . . . தியப் பெண்ணின் முகமா இந்த யானைக்கு எத்தனை கால்கள்? அல்லது ஒர் எஸ்கிமோ
எண்ணிப் பாருங்கள் ! மனிதனா?
மூளைக்கு வேலை (விடைகள்) (1) 7 (2) 4R-ADW (3) நண்பகல்12.00 மணி (4) A-12, B-24 (5) 6009 (6) 7, 4 (7) 15 பேர்
அரும்பு-21 43

Page 24
லருக்கு எந்நேரமும் உடலில் களைப்பு இருக்கும். படிக்கவோ வேறு வேலைகள் செய்யவோ முடியாத அள வுக்கு உடல் சோர்ந்து காணப்படும்.
இவ்வாறு சோர்வு ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உண்டு. தினமும் இர வில் போதியளவு நித்திரை கொள்ளா விட்டால் உடலில் களைப்பு ஏற்படுவது இயற்கையே! இரவில் நீண்ட நேரம் விழித்திருந்துவிட்டு அதற்குப் பதிலாகப் பகலில் நித்திரை கொண்டாலும் உடலில் ஏற்பட்ட சோர்வு முற்றாக நீங்காது.
போசணைக் குறைபாடு, குருதிச் சோகை போன்ற நிலைமைகளும் உட லில் சோர்வை ஏற்படுத்தும். புரதம், இரும்புச் சத்து, விட்டமின் B, C என்பன போதியளவில் உணவில் சேர்த்துக் கொள் ளப்பட வேண்டும்.
சிகரெட் புகைத்தல், கோப்பி அருந் துதல் போன்ற பழக்கங்களுக்கு அடிமை யானவர்களுக்கு அவை கிடைக்காமற் போகும் போது உடல் சோர்ந்து போகும். எனவே இப்படியான தேவையற்ற பழக் கங்களைத் தவிர்த்துக் கொள்வதே நல் லது. உடற் பயிற்சியில்லாமையும் உடற் சோர்வுக்கு வழிவகுக்கலாம்.
தொடர்ச்சியான உடற் சோர்வுடன்
தணிந்த காய்ச்சலும், தலை சுற்றல், சுரப் பிகளில் வீக்கம் போன்றவையும் காணப் L'LT 6ö influenza, hepatitis (pg6Ölu
வைரஸ் தொற்றுகள் ஏற்பட்டிருக்குமோ
எனச் சந்தேகிக்கலாம்.
உடற் களைப்போடு தீராத தாகம்
இருப்பின் அது நீரிழிவு (diabetes) நோ
யின் அறிகுறியாக இருக்கலாம். தலை
44
வலி, தலைசுற்று, இனிப்புக்களில் அதிக நாட்டம், மனநிலையில் திடீர் மாற் றங்கள் போன்றவை ஏற்படின் குருதியில் குளுக்கோஸ் செறிவு குறையும் hypoglyCaemia நோயாக இருக்கலாம்.
உடற்சோர்வுடன்நிறை அதிகரிப்பு, முகம், கை, கால்கள் பஞ்சடைத்தது போல் ஊதிப்போதல், தோல் உலர்தல், தசை வலி, குளிரைத் தாங்க முடியாமை போன்றவை இருப்பது தைரொயிட்டுக் (g56opLIT Lig-Göt (hypothyroidism) gygól
குறியாகும்.
மிகைத் தைரொயிட்டு (hyperthyroidism) என்னும் நிலையில் நிறை குறைதல், நரம்புத் தளர்ச்சி, துரிதமான இதயத் துடிப்பு, அடிக்கடி மலம் கழிதல், உறக்கமின்மை, அதிகளவு வியர்வை, தசைப் பலவீனம் முதலியவற்றோடு உடற் சோர்வு காணப்படும்.
இதயத் துடிப்பு வீதம் அதிகரித்தல், நெஞ்சுவலி, மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகளோடு இணைந்து உடற் சோர்வு காணப்படுவது இதய நோய்க் குரிய அடையாளமாகும்.
உரக்கத்தில் பலமான குறட்டை ஒலி, மூச்சுத் திணறுவது போன்ற 5560ЛТ வுகள், விழித்தெழுந்ததும் மூச்சுத் தடைப் படுதல் போன்ற அறிகுறிகள் காணப்படு மாயின்சுவாசப் பாதையில் தடையேதும்
ஏற்பட்டிருப்பதாகக் கருத முடியும்.
மேற்குறிப்பிட்ட நோயறிகுறிகள் தென்படும் சந்தர்ப்பங்களில் உடற் களைப்பு பற்றி அசட்டையாக இருக் காமல் வைத்திய உதவியை நாடுவது அத்தியாவசியமாகும். ம
அரும்பு-21
 

ரஷ்யாவை
ஆட்டிப் படைத்த போவிச் சாமியார்
ரஷ்யாவில் சோஷலிஸப் புரட் சி ஏற்படுவதற்கு முன்னர் அங்கு ஸார் (Czar) பரம்பரையைச் சேர்ந்த இரண் டாம் நிக்கலஸ் என்ற மன்னர் ஆட்சி செய்து வந்தார். அவரது மனைவி அலெக்ஸாண்ட்ரா ரஷ்யாவின் ராணியாகத் திகழ்ந்தார். அக்காலத் தில் அரச குடும்பத்தினரோடு நட்பு றவு ஏற்படுத்திக்கொண்ட ஒரு போலிச் சாமியார் ரஷ்ய அரசை ஆட்டிப் படைத்த விதமும் அரச குடும்பத்துக்கு அவப் பெயரையும் அழிவையும் தேடிக் கொடுத்த வரலா றும் சுவாரஷ்யமானவையாகும்.
கிரிகரி யெபிமோவிச் நொவிக் என்ற இயற்பெயருடைய இம்மனி தன் சைபீரியாவில் பிறந்து வளர்ந்த ஒரு நாட்டுப்புறப் பாமரனாவான். கல்வியறிவற்ற இவனது ஒழுக்கக் கேடுகள் நிறைந்த வாழ்க்கையின் காரணமாக இவனுக்கு Rasputin (ரஸ்பியுட்டின்) என்ற பெயர் வழங் கப்படலாயிற்று. ரஷ்ய மொழியில் இதன் பொருள் ஒழுக்கம் கெட் டவன் என்பதாகும். -
இந்த ரஸ்பியுட்டின் தனது 18வது வயதில் ஒரு சமயப் பிரிவின ருடன் சேர்ந்து கொண்டு அவர்களது சமயக் கொள்கையைத் தனது மன இச்சைகளுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொண்டான். தொடர்ந்து ஒழுக்கம் தவறி வாழ்வதன் மூலம் ஆசைகளற்ற நிலையை அடைய முடியும் எனவும் அதன் மூலம் இறைவனை நெருங் கலாம் எனவும் அவன் போதிக்க
Rasputin
லானான். எனினும் ரஸ்பியுட்டின் ஒரு மதகுருவாக மாறவில்லை.
தனது 19வது வயதில் திருமணம் செய்துகொண்ட அவனுக்கு நான்கு பிள்ளைகள் பிறந்தனர். எனினும் அத்திருமணம் ரஸ்பியுட்டினின் வாழ்க்கை முறையை மாற்றி அமைக் கவில்லை. வீட்டைவிட்டு வெளியே றிய அவன் கிரேக்கம், ஜெரூஸலம் போன்ற பிரதேசங்களுக்கு விஜயம் செய்தான். இதன் மூலம் புனிதமான தெய்வீக மனிதன் என்ற பெயரைப் பெற்றுக்கொண்ட அவன் நோயாளி களைக் குணமாக்கவும் நடக்கப் போகும் விடயங்கள் பற்றி எதிர்வு கூறவும் ஓரளவு ஆற்றல் பெற்றிருந் தான.
இவ்வாறு அலைந்து திரிந்த ரஸ்பியுட்டின் 1903ம் ஆண்டில் ரஷ் யாவின் அன்றைய தலைநகரான செயின்ற் பீட்டர்ஸ்பேர்க் நகரைச் சென்றடைந்தான். அங்கு அரச குடும் பத்தோடு தொடர்புடைய பெருமக் களுடன் பழகும் வாய்ப்பு அவனுக் குக் கிட்டியது.
அசிங்கமாக உடையணிந்து திரிந்த அவனது கண்களோ அனை வரையும் கவரக்கூடிய வகையில் ஒளிமிகுந்தனவாய்க் காணப்பட்டன. நோய்களை குணமாக்குவதில் அவ னுக்கிருந்த ஆற்றல்மற்றோர் மனதில்
45
அரும்பு-21

Page 25
அவன் மீது நன்மதிப்பை ஏற்படுத் ਉugl.
1905ம் ஆண்டு ரஸ்பியுட்டின்
ரஷ்ய அரச குடும்பத்துக்கு அறிமுக
மானான். ரஷ்ய சிம்மாசனத்துக்கு வாரிசாக இருந்த மன்னரின் மகன் அலெக்ஸ்ஸெவ் நிக்கொல யெவ்விச் என்பவன் குருதி உறையா நோயி னால் (ஹீமோ பீலியா) பாதிக்கப் பட்டிருந்தான். 1908இல் அவனுக்கு கடும் குருதிப் பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் அரசனும் அரசியும் ரஸ்பியுட்டினின் உதவியை நாடினர். ரஸ்புட்டின் தனது ஹிப்னொட்டிஸ் ஆற்றலைப் பயன்படுத்தி இளவர சனுக்கு ஒரளவு நிவாரணம் வழங் கினான். அவ்வாறு செய்துவிட்டு அரசமாளிகையை விட்டு வெளி யேறும் போது இளவரசனினதும் முழு அரச பரம்பரையினதும் தலை விதி தன் கைவசம் இருப்பதாக அவன் ஒர் எச்சரிக்கையை விடுத் தான். இதனை அரசரும் அரசியும் நம்பியதனால் அடுத்து வந்த எட்டு வருடங்களிலும் ரஸ்பியுட்டினின் செல்வாக்கு அரச குடும்பத்திலும் நாட்டிலும் தலைவிரித்தாடுவதற்கு வழியேற்பட்டது.
அரச குடும்பத்தின் முன்னிலை யில் இருக்கும்போது ரஸ்பியுட்டின் பணிவுமிக்க, புனிதான மனிதனைப் போல் நடந்து கொண்டான். எனி னும் அரச அவைக்கு வெளியிலே அவன் பெரும் ஒழுக்கக் கேடனா கவே இருந்தான். தனது உடலைத் தொடுவதன் மூலம் ஆத்ம விமோ சனம் பெறலாம் என அவன் கூறி யதை நம்பிய பெருந்தொகையான பெண்கள் அவனால் வழி கெடுக்கப் பட்டனர். அவனது அட்டகாசங்கள் பற்றி அரசருக்கு எடுத்துக் கூறப்பட்ட போதிலும் அவர் அவற்றை நம்ப
46
மறுத்துவிட்டார். அதுமட்டுமன்றி ரஸ்பியுட்டினிற்கு எதிராக முறைப் பாடு செய்பவர்களைத் தண்டிக்கவும் தலைப்பட்டார்.
1911 ஆகும்போது ரஸ்பியுட் டினின் நடத்தை மிகவும் மோசமான தாக மாறியது. அப்போது பிரதம மந்திரியாக இருந்த ஸ்டொலிப்பின் என்பவர் ரஸ்பியுட்டினின் துர்நடத் தைகள் பற்றி மன்னருக்கு ஒர் அறிக் கை சமர்ப்பித்தார். இதன் விளை வாக மன்னர் ரஸ்பியுட்டினை அரச வையை விட்டு வெளியேற்றினார். எனினும் அரசி அல்ெக்ஸாண்ட்ரா சில மாதங்களுக்குள் ரஸ்பியுட்டினை திருப்பி வரவழைத்துக்கொண்டார். தனது மனைவியின் மனதை நோவிக் கவோ மகனின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கவோ விரும்பாத மன்னர் ரஸ்பியுட்டினுக்கு எதிரான குற்றச் சாட்டுக்களையும் அவனது துர்நடத் தைகளையும் பொருட்படுத்தாது விட்டுவிட்டார்.
ரஷ்ய ஆட்சியிலே ரஸ்பியுட் டினின் செல்வாக்கு முதலாம் உலகப் போரின் போது உச்ச நிலையை அடைந்தது. மன்னர் நிக்கலஸ் 1915 செப்டம்பரில் ரஷ்யப் படைகளுக்குத் தலைமைதாங்கி யுத்தகளத்துக்கு சென்றார். இந்நிலையில் அரசி
அரும்பு-21
 

அலெக்ஸாண்ட்ரா உள்நாட்டு விவ காரங்களுக்கு பொறுப்பாக இருந் தாள். அவளது பிரதான ஆலோச கராக ரஸ்பியுட்டின் விளங்கினான்.
இக்காலத்தில் சிறிய அதிகாரி
கள் முதல் அமைச்சர்கள் வரை ரஸ்பியுட்டினின் விருப்பத்திற்கமை யவே நியமிக்கப்படலாயினர். இத னால் தகுதியற்ற சந்தர்ப்பவாதிகள் பலர் அமைச்சர்களாக வந்தனர். இராணுவ விவகாரங்களில் ரஸ்பி யுட்டினின் தலையீடு ரஷ்யாவுக்குப் பாதகமான விளைவுகளை ஏற்படுத் தியது. ரஸ்பியுட்டின் அக்காலத் திலிருந்த எந்தவொரு அரசியல் குழு வையும் ஆதரிக்கவில்லை. எனினும் முடியாட்சியையோ தன்னையோ எதிர்ப்பவர்களை அவன் கடுமையாக எதிர்த்து நின்றான்.
இந்நிலையில் ரஸ்பியுட்டி னைக் கொலை செய்வதன் மூலம் ரஷ்யா வை அழிவுப் பாதையி லிருந்து காப்பதற்குப் பலர் முயற் சித்தனர். எனினும் இம்முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. 1916ம் ஆண்டு அரச குடும்பத்தோடு தொடர் புடைய சிலர் ரஸ்பியுட்டினைக் கொல்வதற்குச் சதித்திட்மொன்றைத் தீட்டினர்.
அவ்வாண்டு டிஸம்பர் 29ம் திகதி ரஸ்பியுட்டினை விருந்துக் கழைத்த அவர்கள் அவனுக்கு நஞ்சு கலந்த மதுபானத்தையும் உணவை யும் உட்கொள்ளக் கொடுத்தனர். நஞ்சை உட்கொண்ட பின்னரும் அவன் இறக்காததைக் கண்ட அவர் களுள் ஒருவர் பதட்டமடைந்து அவனைத் துப்பாக்கியால் சுட்டார். சூடுபட்ட ரஸ்பியுட்டின் கீழே விழுந்த போதிலும் மீண்டும் எழுந்து ஒடலானான். அப்போது இன்னு மொருவர் அவனைச் சுட்டார். அப் படியும் அவன் இறக்கவில்லை. பின் னர் அவர்கள் அவனைப் பிடித்துக் கைகால்களைக் கட்டி உறைந்து போயிருந்த Neva ஆற்றில் ஒரு குழி யைத் தோண்டி அதனுள் அமிழ்த்தி விட்டனர். இறுதியில் ரஸ்பியுட்டின் குளிர் நீரில் அமிழ்ந்து இறந்து போனான்.
ரஸ்புட்டினின் கொலை அரசி அலெக்ஸாண்ட்ராவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எப்படியாவது தனது முடியாட்சி முறையை தொடர அவள் திட உறுதி பூண்டாள். எனி னும் 1917இல் வெடித்த மாபெரும் ஒக்டோபர் புரட்சியின் விளைவாக ரஷ்யாவின் முடியாட்சி முடிவுக்கு வந்தது. ை
அரும்பு இதழ்களைத் தபால் மூலம் பெற்றுக்கொள்ளல் அரும்பு இதழ்களைத் தொடர்ச்சியாகத் தபால் மூலம் பெறவிரும்புவோர் அடுத்துவரவுள்ள6 இதழ்களுக்கும் ரூபா 130/= மனியோடர் மூலம் அனுப்பலாம். தனிப்பிரதி தேவைப்படுவோர்தபாற்
கட்டணத்தையும் சேர்த்து ரூபா 22.00 அனுப்பவும்.
மனியோடர் அனுப்பும் போது பணம் பெறுபவர் பெயர் M. Hafiz SSadeen எனவும் தபாற் கந்தோர் Dharga Town எனவும் குறிப்பிடத் தவறாதீர்கள்.
இல3,6,11,14,17,19, 20 ஆகிய இதழ்களின் பிரதிகள் மாத்திரமே கைவசம் உள்ளன.
அரும்பு முன்னைய பிரதிகள் எமது கைவசம் மேலதிகப் பிரதிகள் இல்லாத முன்னைய அரும்பு இதழ்களின் போட்டோப் |Slyglassoor Palm LeafBook Shop, Palm Leaf Hotel, 211/1, Olcott Mawatha, ColombO-11 என்ற முகவரியில் நேரில் பெற்றுக்கொள்ளலாம். பிரதியொன்றின் விலைருபா 40/-.
அரும்பு-21
47

Page 26
(பொது அறிவுப் போட்டி இல . 20)
வாசகர்களே! பின்வரும் பத்து வினாக்களுக்குமுரிய சரியான விடைகளைத் திருத்தமாக ஒரு தாளில் எழுதிக்கடிதஉறையினுள் இட்டுத் தபாலில் அனுப்பி வையுங்கள். விடைத்தாளில் உங்கள் பெயர், முக வரி, மாணவராயின் பாடசாலையின் பெயர் என்பவற்றை விபரமாக எழு தத் தவறாதீர்கள்.
அனுப்ப வேண்டிய முகவரி: EDITOR - ARUMBU' ROYAL COMPUTER CENTRE, 147, MAIN STREET, DHARGA TOWN - 12090. போட்டி முடிவுத திகதி:2001 மே 05
பத்து வினாக்களுக்கும் சரியான விடைகளை எழுதியனுப்பும் வாசகர்களுள் அதிர்ஷ்டசாலியாகத் தேர்ந்தெடுக்கப் படும் மூவருக்குப் பணப் பரிசுகள் வழங் கப்படும்.
முதற் பரிசு ரூபா 500.00 இரண்டாம் பரிசு ரூபா 250.00 மூன்றாம் பரிசு ரூபா 100.00 மேலும் 20 அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் அரும்பில் பிரசுரிக்கப்படுவ தோடு அவர்களுக்கு அரும்பின் அடுத்த இதழ் இலவசமாக அனுப்பிவைக்கப்படும்.
குறிப்பு: இங்கு கேட்கப்பட்டுள்ள
வினாக்களுள் சிலவற்றுக்கான விடைகள்
இந்த இதழில் வெளிவந்துள்ள கட்டுரை களில் பொதிந்துள்ளன.
---------------------حجحی அரும்பு அறிவுப்
(3U III* IQ. (20)
வினாக்கள்:
1. புகழ்பெற்ற ஹலியின் வால்வெள்ளி எத்தனை வருடங்களுக்கு ஒரு தடவை எமது வானில் தோன்றுகின்றது? 2. நோர்வே நாட்டுப் பாராளுமன்றத்தின் பெயர் என்ன?
3. இலங்கைக்கு விஜயம் செய்த பிரபல தேச சஞ்சாரியான இப்ன் பதுரத்தாஹ் எந்த நாட்டைச் சேர்ந்தவர்? 4. பிரபல விஞ்ஞான எழுத்தாளரான ஆர்தர் C. கிளார்க் அவர்களின் பிறந்த நாடு எது? 5. கம்பியூட்டரின் தந்தை என அழைக்கப் படுபவர் யார்?
6. ரஷ்யாவின் கடைசி மன்னரின் பெயர் என்ன?
7. ஸ்கண்டினேவியநாடுகள் என அழைக் கப்படும் மூன்று நாடுகளும் எவை? 8. புவியதிர்வுகளின் பருமனைக் குறிப் பதற்குப் பயன்படுத்தப்படும் பிரதான அளவுத்திட்டங்கள் இரண்டும் எவை? 9.இராட்சத பண்டாவின் (giant panda) விலங்கியற் பெயர் என்ன?
10 இலங்கையில் கடல் மட்டத்திலிருந்து
ஆகக்கூடிய உயரத்தில் அமைந்துள்ள புகையிரதநிலையம் எது?
அடுத்த இதழ்
அரும்பு இதழ் -22எதிர்வரும் 2001 மே 20ம் திகதி வெளிவரும்.
அரும்பு-21
 
 
 
 
 

அரும்பு பொது அறிவுப் போட்டி - 19 சரியான வின்டகளும் பரிசு பெறும் அதிர்ஷ்டசாலிகளும்
கேட்கப்பட்டிருந்த கேள்விகளுக்கான சரியான விடைகள் பின்வருமாறு:
1. எட்வின் ஆம்ஸ்ட்ரோங் 2. மிச்சிகன் ஏரி 3. கத்தோலிக்கம் 4. ஒல்லாந்திலுள்ள ஹேக் நகர் 5. 1977 6. 1892 7. காபனிரொட்சைட்டு, நீராவி (மெதேன், நைத்திரசு ஒட்சைட்டு, CFCs) 8. திருS.W.R.D. பண்டாரநாயக்க 9. பெல்ஜியம் 10. மகாகவி பாரதியார்
இம்முறை பெருந்தொகையினர்10 விடைகளையும் சரியாக அனுப்பியிருந்தனர். அவர்களுள் அதிர்ஷ்டசாலிகளாகத் தெரிவு செய்யப்பட்ட மூவரினதும் விபரங்கள் பின்வருமாறு: 1th Lurfag, (e5LIIT 500): M.F.M. Safeek, Zahira National College, Puttalam 2uh uflasi (ebuT250): Rifasa Lafir, Ogodapola, Kahatowita 3h Urfly, (eIBUT 100): K.M.M. Musthaq, Zahira National School, Mawanella
இலவசமாக அரும்பு-21ஜப் பெறுகின்ற 25 அதிர்ஷ்டசாலிகளின் பெயர் விபரங்கள்:
M.N.F. Nasliya, Mohideen Mw., Hareemaluwa, Rambukkana . S. Amirtha, Nelliyady Central College, Nelliyady, Karaveddy . F. Farzana Raheem, Dharul Ilm, Galhinna . M. Nawfar, Thembily Watta Camp, Palliwasathurai
S. M. Ramees, 2nd year, Jamiah Naleemiah, Beruwala A. H.S. Naseema, Weykada, Moragala, Eheliyagoda . M.H.M. Niroosh, Mullipothana 8. M.H. C. Thaiyib, Kahatagahamada, Pahamune 9. A. Raiza Hasmath, Market Road, Sainthamaruthu-8 10. K. Araseswaran, Kala imagal Veethy, Nallur North, Jaffna 11. M. N. Aysha Shahany, Hassenpura, Ganitha pura, Wara kapola 12. M.I.Hussain, Mosque Road, Sangattikulam, Anamaduwa 13. Z.A. Nirusha, Nusriya Manzil, Bandawa, Polgahawela 14. M. A. Siharath, Rahmaniya Street, Kinniya-01 15. Safrina Sally, Kandy Road, Thihariya, Kalagedihena 16. S.A. Ameer-ul-Haq, Hijra Mawatha, Kekunagolla 17. S. Theepa, Shanthi Illam, Alvai South, Alvai 18. S.M.L.F. Rismiya, New Road, Kalmunaikudy-13, Kalmunai 19. M. M. Rihana, I.L.A. College, Mannar Road, Puttalam 20. M: B. Kamil, Central Road, Pottuvi| 21. F. Sharmina Athaulla, Mosque Rd, Napawala, Awissawella 22. S. Nagalingam Vijenthiran, St. Leonard's Estate, Hallgranoya 23. M. M. M. Siyan, Nayawala Rd., Mawanella 24. Fahima M. Musthafa, Ayesha Balika M.V., Akkaraipattu 25. S. Rihana Hameed, 3rd Lane, Katugoda, Galle.
அனைவருக்கும் எமது பாராட்டுக்கள்!

Page 27
அரும்பு -21
s
*۱* ...
Cl6)Ingib póluqửb C ஒவ்வொருவர் வாழ்விலும் 6) மாறி இடம்பெறுகின்றன. ஒருவருை
நிகழ்வு தோல்விக்குரியதா வெற்.
எதிர்பார்ப்புகளும் மன்ப்பரங்குகளு களுமே (Values) தீர்மானிக்கின்றன தோற்றமளிக்கும் ஒர்ே நிகழ்வு இன்ே (SU(16) தென்படலாம்.
சில வேளைகளில் வெளிப்பன றமளிக்கும் ஒன்று உண்மையில் இ இருக்கலாம். அதேபோன்று தோல்வி
காலப்போக்கில் நன்மையும் பயனும்
இதனால்தான் வெற்றியைக் கண்டு கவோ தோல்வியைக் கண்டு மனம் பெருமக்கள் அறிவுரை வழங்கியுள்ள கும் இறைவன் செயல். அவனே ஒவ் இரகசியத்தை அறிந்தவன். எனவே என்ற நம்பிக்கையோடு வாழ்வதன் மூ எம் மனதைப் பாதிக்காமல் காத்துக்
ஒரு மனிதனை வாழ்வில் பற் னுக்கு ஊக்கமளித்து உற்சாகமூட்ட றன. அதே போன்று ஒருவனைப் ப மாற்றுவதற்கு இடையிடையே தே எனவே தான் “இறைவா! என்ை வதற்கு எனக்குப் போதியளவு வெ வுள்ளவனாக ஆக்குவதற்குத் தே6ை தா” என்று கூறுகின்றது ஒரு பிரப8
வெற்றியும் தோல்வியும் எம்
| இரு ஆக்கிரமிப்புச் சக்திகளாகும்.அ6
விடாது வாழ்வதன் மூலமே நாம் வ
அடைந்துகொள்ள முடியும்.
PRINTED BY A.J. PRINTS - 4.

ٹینا چاہتا صا)
AFRUMBU - 2ij
༽
தால்வியும்
வற்றிகளும் தோல்விகளும் மாறி டய வாழ்வில் இடம்பெறும் ஒரு ரிக்குரியதா என்பதை அவரது ம், அவர் போற்றும் விழுமியங் வெற்றி போன்று ஒருவருக்குத் னொருவருக்கு அப்படியல்லாதது
டயாக வெற்றி போன்று தோற் ழப்புக்கும் கவலைக்குமுரியதாக யின் வடிவில் வரும் ஒரு நிகழ்வு தருவதாக அமைந்து விடலாம். டு பெருமையால் துள்ளிக் குதிக் தளரவோ கூடாது என அறிஞர் ானர். எல்லாம் எம்மை இரட்சிக் வொரு நிகழ்வினதும் அடிப்படை நடப்பன எல்லாம் நன்மைக்கே மலம் அன்றாட நிகழ்வுகள் எதுவும் கொள்ளலாம்.
றுக் கொள்ளச் செய்யவும் அவ வும் வெற்றிகள் தேவைப்படுகின் ணிவும் அடக்கமும் உள்ளவனாக ால்விகளும் அவசியமாகின்றன. ன உற்சாகமுள்ளவனாக ஆக்கு ற்றிகளைத் தா! என்னைப் பணி யான அளவு தோல்விகளையும் பிரார்த்தனை. ம உள்ளத்தை ஆட்கொள்ள வரும் ற்றின் முன்னால் நிலைகுலைந்து ாழ்வின் உண்மை இலட்சியத்தை
STATION ROAD, DEHIWALA