கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அரும்பு 2001.08

Page 1
ま * 、、。
&#No
 

Magaz
〔 门 3
* Educat

Page 2
Azeri
மூளைக்கு வேலை விவேக வினாக்கள் 6J(LA?
() சதுரமொன்றின் சுற்றளவும் பரப்பளவும் எண்ணளவில் சமனாயின் அதன்
பக்கமொன்றின் பருமன் யாது?
(2) 66.00 ரூபா, A, B, C என்போருக்கிடையில் பங்கிடப்பட்டபோது B இன் பங்கானது Aஇன் பங்கின் இரு மடங்காகவும் Cஇன் பங்கானது B இனதை விட 4/= ரூபாவால் குறைவாகவும் இருந்தன. Bக்குக் கிடைத்த பங்கின் பெறுமானம் யாது?
(3) ஒரு சிறுவன் 300/= ரூபா முதலிட்டு கோழிக் குஞ்சுகள் சிலவற்றை வாங்கினான். 5 குஞ்சுகள் இறந்த பின் மீதி ஒவ்வொன்றையும் 4/= ரூபா வீதம் விலை கூட்டி விற்ற போது அவனது வியாபாரத்தில் 20/= ரூபா இலாபம் கிடைத்திருந்தால் ஆரம்பத்தில் அவன் வாங்கிய கோழிக் குஞ்சுகள் எத்தனை?
(4) ஒரு நீர்த்தாங்கியை நிறைப்பதற்கு இரு குழாய்கள் பொருத்தப்பட்டுள்ள. அவை இரண்டும் சேர்ந்து வெறுந்தாங்கியை நிரப்ப 6 நிமிடம் எடுக்கும். அவற்றுள் தனியே ஒரு குழாய் தாங்கியை 15 நிமிடத்தில் நிரப்பினால் மறு குழாய் எவ்வளவு நேரத்தில் நிரப்பும்? (5) பஸ்ஸொன்றில் சென்றுகொண்டிருந்த பிரயாணிகளில் அரைவாசிப்பேர் ஒரு நிறுத்துமிடத்தில் இறங்கினர். அப்போது ஒருவர் ஏறினார். பின்னர் மற்ற நிறுத்துமிடத்தில் கால் பங்கினர் இறங்க இன்னொருவர் ஏறினார். தற்போது பஸ்ஸில் இருப்போர் தொகை முதலில் இருந்ததைவிடப்12 பேர் குறைவாயின் ஆரம்பத்தில் எத்தனை பேர் இருந்திருப்பர்? (6) ஒரு புகைவண்டி தந்திக் கம்பம் ஒன்றை 20 செக்கனில் கடக்கிறது. தன்னைவிட இருமடங்கு நீளமும், வேகமும் உடைய இன்னொரு வண்டி சமாந்தரப் பாதையில் எதிராக வந்தால், அவை ஒன்றையொன்று கடக்க எவ்வளவு நேரம் எடுக்கும்? (7) மாம்பழம் ஒன்றின் விலை கொய்யாப் பழமொன்றின் விலையைவிட 3/= ரூபா அதிகமாகும். 7 கொய்யாப் பழங்களும், 8 மாம்பழங்களும் வாங்கும் பணத்துக்கு, 6 மாம்பழங்களும், 12 கொய்யாப் பழங்களும் வாங்கலாம் எனின் மாம்பழமொன்றின் விலை என்ன ?
(விடைகள் 33ம் பக்கத்தில் தரப்பட்டுள்ளன)
 
 
 

ஆசிரியர்: ' எம். ஹாபிஸ் இஸ்ளதிே
ARUMBU Educational Magazine (Tamil)
. Issue No:23
Editor : M. Hafiz Issadeen
Published By: Issadeen Memorial Educational Foundation
70, Main Street, Dharga Town-12090 Sri Lanka.
Phone: 034-70151 E-Mail: royal Geureka. Ik Web Site: WWWarumbu.itgo.com Type-Setting 8 Computer Lay-out by: Roy AL CoMPUTERs, 70, Main Street, Dharga Town, Sri Lanka.
* სკკ ള பொது அறிவுச் சஞ்சிகை جم" ༣ ། உள்த M
இதழ் الاومة .ga
அதுதான் வேண்டும் . 2 மூன்று சகோதரிகள் 3 பொய் கூறுவதைக் கண்டறியும். 6 பொதுசன அபிப்பிராய வாக்கெடுப்பு 7 ஜப்பானின் பூஜி மலை 9 இந்து ஆரிய மொழிகள் 11 மலேஷியா 13 பென்குவின் 17 TATA வர்த்தக சாம்ராஜ்யம் 20 பிரிட்டிஷ் மியூஸியம் 23 எஸ்கிமோவர்கள் 26 ஸர் வில்லியம் தொம்ஸன் 29 MiG போர் விமானங்கள் 32 அமெரிக்காவில் சில நாட்கள் 34 உளநிலை காரணமாக ஏற்படும். 37 கடற் குதிரை 39 Orion என்னும் வேட்டைக்காரன் 41 கறுப்புத் தோலும் வெள்ளைத் தோலும் 44 பெளத்த சமயத்தின் பிரிவுகள் 46 பொது அறிவுப் போட்டி-22 48
அன்4ள் வாசகர்களே!
ஒரு நிமிடம். / இந்த இதழுடன் அரும்பு தனது
ஆைந்ததுே வருடத்தில் காலடி வைக் "؟ قال لا
கின்றது. பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் அரும்பைத் தொடர்ந்து வெளியிடுவதற்கும் அதன் தரம் குன் றாது பேணுவதற்கும் எமக்கு அருள் புரிந்த எல்லாம் வல்ல இறைவனுக் குச் சிரம் பணிந்து நன்றி கூறுகின் | зона
400 (0.
ஆசிரியரின் அமெரிக்கச் சுற் 1றுப் பிரயாணம் காரணமாக இந்த 1 இதழ் மூன்று வாரங்கள் தாமதித்தே வெளிவருகின்றது. இதனால் உங் களுக்கு ஏற்பட்ட அசெளகரியங் களுக்காக வருந்துகின்றோம்.
அச்சுக் கடதாசியின் இரு மடங்கு விலையேற்றம், ஏனைய உற்பத்திச் செலவுகளின் அதிகரிப்பு என்பன காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் கூட நாம் அரும்பின்
(8ც J6ზტf? 6)) விலையை உயர்த்தாது @1 கின்றோம்.
அரும்பின் விற்பனையில் அதி கரிப்பை ஏற்படுத்துவதன் மூலம் | விலையதிகரிப்பைத் தவிர்த்துக் கொள்ளலாம் என நம்புகின்றோம். இந்த வகையில் வாசகர்களாகிய உங்களதும் எமது விற்பனை முகவர் களினதும் பூரண ஒத்துழைப்பை
(Tüb 6T360/166686öT(3/2)/Tü), நாம் எதிர்பார்க்கின்றோம்
எதிர்காலத்திலும் அருமபு தன் அறிவுப் பணியைச் சிறப்பாக மேற் கொள்வதற்கு இறையருள் கிட்ட வேண்டும் எனப் பிரார்த்திப்போம்.
நன்றி எம். ஹாபிஸ் இஸ்ஸதீன் 50820 ஆசிரியர்
محص============----------
Printed by: A.J. Prints, 44, Station Road, Dehiwala.

Page 3
அதுதா
ஒரு வியாபாரி"பூனைக் குட்டிகள், 畿
锦 விற்பனைக்கு உண்டு’ என்ற அறிவித் தலைத் தனது கடைக்கு முன்னால் தொங் கவிட்டிருந்தார். பெற்றோருடன் கடைத்
தெருவுக்குப் பொருள் வாங்க வரும்
பிள்ளைகளையும் அவர்கள் மூலம் அவர் களது பெற்றோர்களையும் தமது கடைக் குள் கவர்ந்திழுப்பதே அவரது நோக் கமாக இருந்தது.
இவ்வறிவித்தலைக் கண்ட சிறு வனொருவன் தனியே அக்கடைக்குள் நுழைந்தான். "ஐயா, உங்கள் பூனைப் குட்டிகளைப் பார்க்கலாமா?’ என்று அவன் கடைக்காரரிடம் கேட்டான். அவ னது அந்த வேண்டுகோளைப் பொருட் படுத்தாத கடைக்காரர் ஏனைய வாடிக் கையாளர்களைக் கவனித்துக் கொண்டி ருந்தார். சிறுவன் மீண்டும் கோரிக்கை
விடுக்கவே அவர் பூனைக் குட்டிகள்
இருக்கும் இடத்தைக் காட்டினார்.
பஞ்சு போன்று மிருதுவான சில
பூனைக் குட்டிகள் அங்குமிங்கும் ஓடி விளையாடிக் கொண்டிருந்தன. 'ஒரு குட்டி என்ன விலை?” என்று கேட்டான் சிறுவன்.
“இவை நல்ல ஜாதிப் பூனைகள். ஒரு குட்டிக்கு நூறு ரூபா தேவை" என்றார்கடைக்காரர்.
அவற்றுள் ஒரு கறுப்புப் பூனைக் குட்டி ஒழுங்காக நடக்க முடியாமல் பின்னங்கால்களை இழுத்தவாறு சிரமப்
பட்டு நகர முயற்சிப்பதைச் சிறுவன்
கண்டான். "100 ரூபா தருகிறேன். அந்தக் குட்டியை எனக்குத் தருகிறீர்களா?’ என்று
ன் வேண்டும்!
தார்.
* ႔မွ *ို; R அதனைக காட்டியவாறு ஆாவததுடன்
கேட்டிான் சிறுவன்.
“தம்பீர் அதற்குப் பிறப்பிலேயே கால் ஊனம். ஒழுங்காக நடக்க முடியாது. அதனால் எந்தப் பிரயோசனமும் இருக் காது. நல்ல குட்டிகளில் ஒன்றை எடுத்துக் கொள்' என்று கனிவோடு ஆலோசனை கூறினார் கடைக்காரர்.
“இல்லை எனக்கு அந்தப் பூனைக் குட்டி தான் வேண்டும். அதற்கு நீங்கள் விலையைக் குறைக்கக் கூடாது. 100 ரூபா தந்து நான் அதனைப் பெற்றுக் கொள் வேன்” என்று உறுதியாகப் பேசினான் அந்தச் சிறுவன்.
ஒன்றும் புரியாது விழித்த கடைக் காரர் அவனுக்கு அந்தப் பூனைக் குட்டி யைக் கொடுத்து 100 ரூபா பணத்தையும் பெற்றுக் கொண்டார். என்றாலும் அவ ரது மனம் அமைதி கொள்ளவில்லை. "ஏன் தம்பீர் இப்படி இந்தப் பூனைக் குட்டியே வேண்டும் - அதுவும் மற்ற வற்றின் விலைக்கே வேண்டும் - என அடம்பிடித்தாய்?’ என்று கேட்டு வைத்
சிறுவன் ஒன்றுமே பேசாது தனது நீளக் காற்சட்டையை உயர்த்தித் தன்னு டைய வலது காலைக் காட்டினான். அது ஊனமுற்று உருக்குலைந்திருந்தது. அதன் மீது பூட்டப்பட்டிருந்த இரும்புக் கம்பி களும் இரும்பு சப்பாத்துமே அவனை நிலைநிறுத்திக் கொண்டிருந்தன.
‘உன்னைப் போன்று கருணை
யுள்ள எஜமானர்கள் அடுத்த குட்டி
களுக்கும் கிடைக்கட்டும்!” என்றார் கடைக்காரர் கண்களைத் துடைத்தவாறு.
உங்கள் இயல்புகளை உள்ளது உள்ளவாறே ஏற்றுக்கொண்டு நிபந்தனை கள் ஏதுமின்றி உங்களை மதித்து நேசிப்பவர்களின் அன்பே மெய்யான
தாகும்.
அரும்பு-23
 
 
 

ங்கில இலக்கிய வரலாற் றிலே அழியா இடம் பெற்றுக் கொண்ட சகோதரிகள் மூவரைப் பற் றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? சார்ளற் ப்ரொன்றே (Charlotte Brontë), GTLBlais) LIGJIT GörGp (Emily Bront8), ஆன் ப்ரொன்றே (Anne Bronte) ஆகிய இச்சகோதரிகள் மூவ
ரும் பதினெட்டாம் நூற்றாண்டில்
இங்கிலாந்திலே வாழ்ந்தவர்கள்.
சார்ளற், எமிலி, ஆன் ஆகிய மூவரும் இங்கிலாந்தின் யோர்க் ஷயர் மாவட்டத்திலுள்ள Thomton என்ற இடத்திலே பிறந்தவர்கள். வர்களுக்கு மாரியா, எலிஸபெத் என்ற இரு மூத்த சகோதரிகளும் Branwell என்ற சகோதரனும் இருந் தனர். வர்களது தந்தையாரான பட்ரிக் ப்ரொன்றே அயர்லாந்தில் பிறந்தவர். அவர் யோர்க்ஷயரிலுள்ள ஹா வேர்த் (Haworth) என்ற கிரா மத்தில் மதகுருவாக நியமிக்கப்பட் டிருந்தார். எனவே Bronte குடும் பத்தின் வாழ்க்கை அக்கிராமத்துட னேயே பின்னிப் பிணைந்திருந்தது.
சார்ளற் ப்ரொன்றே 1816 ஏப்ரல் 21ம் திகதி பிறந்தவர். எமிலி ப்ரொன் றே 1818 ஜூலை 30ம் திகதியும் ஆன் ப்ரொன்றே 1820 மார்ச் 17ம் திகதியும் பிறந்தவர்கள்.அவர்களது தாயார் 1821இல் இறந்து போகவே சார்ளற் றும் எமிலியும் அவர்களது மூத்த
23 - اطلازوییلاقی
ஆங்கில இலக்கிய வரலாற்றில் அழியாத் தடம் பதித்த மூன்று சகோதரிகள்
Charlotte Bronte
சகோதரிகள் இருவரும் கற்றுக் கொண்டிருந்த சமய சார்பான விடு திப் பாடசாலைக்கு அனுப்பிவைக் கப்பட்டனர்.
Cowan Bridge 6T6örp g) gig லிருந்த, மதகுருக்களின் பிள்ளை களுக்கான அந்தப் பாடசாலை மிக மோசமான நிலையில் நடாத்தப் பட்டு வந்தது. அங்குள்ள சுகாதாரக் கேடுகள் காரணமாகக் கடுமையாக நோயுற்ற மூத்த சகோதரிகளான
மாரியாவும் எலிஸபெத்தும் ஊருக்
குத் திரும்பி வந்து 1925இல் இறந்து போயினர். இதன் விளைவாக சார்ளற்றும் எமிலியும் அப்பாட சாலையிலிருந்து வீட்டுக்குத் திருப்பி அழைக்கப்பட வேண்டி நேர்ந்தது.
வீட்டிலேயே தங்கியிருந்த இளைய சகோதரிகள் மூவரும் தம் மிடமிருந்த மரத்தாலான போர் வீரர் பொம்மைகளைப் பாத்திரங்களாக் கிக் கதைகள் புனையலாயினர். அங்க் fìuIT (Angria), 6).95IT GiồTLT Gù (Gondal) என்ற இரு கற்பனைச் சாம்ராஜ்யங் களை அடிப்படையாக வைத்து அவர்கள் பல கதைகளை எழுதினர். 1829இல் எழுத ஆரம்பிக்கப் பட்ட Angria பற்றிய கதைகளைக் கொண்ட சுமார் நூறு சின்னஞ் சிறு
தொகுதிகளின் கையெழுத்துப் பிரதி
கள் இன்றும் பேணப்பட்ட நிலை யில் உள்ளன. எனினும் 1831இல்
3

Page 4
ஆரம்பிக்கப்பட்டு Gondal பற்றி எழு தப்பட்ட கதைகளின் பிரதிகள் எது வும் நிலைத்திருக்கவில்லை. அச் சிறுமிகள் மூவரும் எழுதிய கள் பிற்காலத்தில் அவர்கள் எழுதிய நாவல்களுடன் தொடர்பு, இலக்கிய ஆய்வாளர் களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.
1831இல் மீண்டும் வேறொரு பாடசாலையில் சேர்ந்த சார்ளற் ஓராண்டுக்குள் வீடு திரும்ப வேண் டியதாயிற்று. 1935இல் அதே பாட சாலையில் ஆசிரியராகச் சேர்ந்த அவர் எமிலியையும் அங்கு அழைத் துச் சென்றார். 1842இல் சார்ளற்றும் எமிலியும் பிரஸ்ஸல்ஸ் நகருக்குச் சென்று பிரெஞ்சு மொழி கற்றுக் கொண்டனர். பல்வேறு இடப் பெயர்வுகளின் பின்னர் மூன்று சகோதரிகளும் 1845இல் மீண்டும் வீட்டில் ஒன்றாக இணைந்தனர்.
எமிலி சில கவிதைகளை எழுதி
வைத்திருப்பதைக் கண்டுகொண்ட
சார்ளற் தம் மூவரினதும் கவிதை களைக்கொண்ட நூலொன்றை வெளியிடுவது எனத் தீர்மானித்தார். சார்ளற், Currer Bell என்ற புனைப் பெயரிலும் எமிலி, Ellis Bell என்ற பெயரிலும், ஆன், Acton Bell என்ற பெயரிலும் எழுத முற்பட்டனர். இப்புனைப் பெயர்கள் அவர்களின் இயற்பெயர்களின் முதலெழுத்துக் களையே கொண்டிருப்பதைக் காண லாம்.
அவர்களுடைய கவிதைகளின் Gigit (5'il Poems by Currer, Ellis and Acton Bell GTGörp G)Luu fiai gyai களுடைய சொந்தச் செலவிலேயே 1846இல் நூலாக வெளியிடப்பட் டது. எனினும் அந்நூலின் இரண்டு பிரதிகள் மாத்திரமே விற்பனையா
4.
க்கதை
கொண்டிருந்த
யின. இதில் சார்ளற்றின் 21 கவிதை
களும் எமிலியின் 21 கவிதைகளும்
ஆனின் சில கவிதைகளும் அடங் கியிருந்தன. இவற்றுள் எமிலியின் கவிதைகளே தரச் சிறப்புடையன வாய் இருந்தன என்பது இலக்கிய விமர்சகர்களின் கருத்தாகும்.
அதன் பின்னர் சகோதரிகள் மூவரும் தனித்தனியாக நாவல்களை எழுதி வெளியிட முனைந்தனர். சார்ளற்றின் Jane Eyre என்ற நாவல் 1847இல் வெளிவந்தது. ஆனின் Agnes Grey GTGörp 5T Gyugyib GTLÉlgól usair. Wuthering Heights GT airp நாவலும் அதே ஆண்டில் சற்றுப் பிந்தி வெளியாயின. புனைப் பெயர் களிலேயே இவை எழுதப்பட்டிருந்த தால் அவற்றின் ஆசிரியர்கள் யார் என்பது பற்றிப் பல ஊகங்கள் தெரி விக்கப்படலாயின. இறுதியில் சகோ தரிகள் லண்டனுக்கு வந்து தமது வெளியீட்டாளரைச் சந்தித்த பின் னரே உண்மை தெளிவாகியது.
அவர்களது சகோதரன் 1848இல் நோயுற்று இறந்தான். ஈமச்சடங்கில் கலந்துகொண்ட போது எமிலியும் நோயுற்று 1848 டிஸம்பர் 19ம் திகதி தனது 30வது வயதில் இறந்து போனார். அந்த ஆண்டில் The Ten
ant of Wildfell Hall GT Går p g5 GO155||
இரண்டாவது நாவலை ஆன் வெளி
யிட்டார். எனினும் 1849 மே 28ம்
திகதி தனது 29வது வயதில் அவரும் காலமானார்.
தனது தந்தையுடன் தனித்துப் போன சார்ளற் 1849இல் Shirley என்ற நாவலை வெளியிட்டார்.
அவரது பிரஸ்ஸல்ஸ் நகர அனுபவங்
களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட் Willete என்ற நாவல் 1853இல் வெளியாகியது. 1854இல் தனது தந்தையின் உதவியாளரான
23 - اطلاژوییلاقی
 
 
 

Arthur Bell Nicholls 6Taituolaoud சார்ளற் திருமணம் செய்தார். கர்ப்ப முற்றிருந்த போது கசநோய் ஏற்பட் டதால் சார்ளற் 1855 மே 31ம் திகதி மரணமடைந்தார். அப்போது அவ ருக்கு வயது 39 ஆக இருந்தது.
சார்ளற்றின் இன்னொரு நாவ லான The professor என்பது அவரது மறைவின் பின் 1857இல் வெளி வந்தது. Emma என்ற பெயரில் அவர் எழுத ஆரம்பித்த நாவலொன்று முடிக்கப்படாமலேயே போய்விட் Ligl. sy6)Ji 67(p3) u The Secret, Lily Hart ஆகிய இரு கதைகள் முதன் முதலாக 1978இல் தான் பிரசுரிக்கப் LIL LIL G605 T.
Bronte சகோதரிகளின் மறை
வுக்குப் பின்னர் அவர்களைப் பற்றிய பேரார்வம் ஆங்கில வாசகர்களி டையே பரவலாக ஏற்படலாயிற்று. சகோதரிகள் மூவரினதும் தனிப்பட்ட வாழ்க்கை நிகழ்வுகள், அவர்களது இளமைக் கால மரணங்கிள், அவர் களுடைய வியக்கத்தக்க இலக்கிய சாதனைகள் என்பனவே இற்றை வரை இந்த ஆர்வம் நிலைக்கக் காரணமாயுள்ளன.
ஆங்கில வாசகர்களிடையே சார்ளற்றின் Jane Eyre என்ற முதல் நாவலுக்குள்ள மவுசு இன்றுவரை குறையவில்லை. பெண்கள் தொடர் பான பிரச்சினைகளையும் அக்கறை களையும் உணர்ச்சிபூர்வமாக எடுத் தியம்பும் ஓர் ஆக்கமாக அது விளங் குகின்றது. எனினும் சகோதரிகள் மூவரினதும் ஆக்கங்களுள் மிகுந்த சிறப்புடையதாகக் கருதிப் போற்றப் படுவது எமிலி எழுதிய Wuthering heights என்ற நாவலேயாகும். காலத்தை விஞ்சி நிற்கும் இவ்வற் புதப் படைப்பு இன்றும் இலக்கிய ஆர்வலர்களால் பாராட்டப்படுகின் pg.I. Jane Eyre, Wuthering heights ஆகிய இரு நூல்களும் இலங்கை யிலுள்ள பிரதான பாடசாலை நூல கங்களில்கூட தவறாமல் இடம்பெற் றிருந்தது குறிப்பிடத் தக்கது.
சார்ளற்றின் வாழ்க்கை வரலாறு Elizabeth Gaskell GTGörp egy 6). Ug5) [56öTL6ìu T Gò The Life of Charlotte Bronte என்ற பெயரில் 1860இல் வெளியிடப்பட்டது. இச்சகோதரி களைப் பற்றி W Gerin என்பவர் எழுதிய The Brontes என்ற சரிதை நூல் 1974இல் வெளிவந்தது. ய
6T6ÖT6OT 6î jiji UIITTIJib?
வாகன விபத்தொன்றின் போது ஒரு பெண்ணின் காதுச் சோணை முற்றாக அறுந்து போய்விட்டது. வேறு காதொன்றைப் பொருத்திக் கொள்வ தற்காக அவள் பிளாஸ்திக் சத்திரசிகிச்சை நிபுணரொருவரிடம் சென்றாள்.
நிபுணரும் சத்திரசிகிச்சை மூலம் வேறு காதொன்றைப் பொருத்தி விட்டார். மூடியிருந்த பண்டேஜை அவிழ்த்துப் பார்த்த போது அந்தப் பெண்ணுக்கு ஆத்திரம் பொங்கி வந்தது. நேரே சத்திரசிகிச்சை நிபுணரிடம் போய் "ஐயா! நீங்கள் ஆணொருவரின் காதையல்லவா எனக்குப் பொருத்தி யிருக்கிறீர்கள்’ என்று எரிந்து விழுந்தாள்.
“அம்மணி ஆண் காதுக்கும் பெண் காதுக்கும் இடையில் அப்படிப் பெரிய வேறுபாடு எதுவும் இருக்காதே’ என்றார் நிபுணர்.
“ஏன் இருக்காது?
இப்போது மற்றவர்கள் சொல்வது ஒன்றும் என்காதில்
விழுவதில்லையே” என்று அங்கலாய்த்தாள் அப்பெண்.
அரும்பு- 23
இல்லுனர் மே ஆகி 5
臀

Page 5
விசாரணைக்கு உட்படுத்தப் பட்ட ஒருவர் மனமறியப் பொய் கூறுவாராயின் அவ்வேளையில் அவ ரது உடற் தொழிற்பாடுகளில் சடுதி யான மாற்றங்கள் ஏற்படுகின்றன. பொதுவாக அவரது குருதியமுக்கம், நாடித் துடிப்பு, சுவாச வீதம் என்பன அதிகரிக்கின்றன. ஒருவர் விசார ணைக்கு உட்படுத்தப்படும் வேளை யில் மேற்குறிப்பிட்ட அவரது இயல் புகளைப் பதிவு செய்து கொள்வதன் மூலம் அவர் பொய் சொல்கின்றாரா இல்லையா என்பதை ஓரளவுக்கு அறிந்துகொள்ள முடியும்.
இவ்வாறு பொய் கூறப்படு வதைக் கண்டறிய உதவும் பல்வேறு உபகரணங்களை ஆய்வாளர்கள் தயா ரித்துள்ளனர். Polygraph எனப்படும்
இவ்வுபகரணங்கள் பொது வழக்கில்
Lie detectors (பொய்யறி கருவிகள்) எனவும் அழைக்கப்படுகின்றன.
Polygraph என்பது உண்மை யில் குருதியமுக்கம், நாடித் துடிப்பு, சுவாச வீதம், வியர்வையின் அளவு போன்றவற்றை அளக்க உதவும் பல் வேறு கருவிகளின் தொகுதியொன் றாகும். இக்கருவிகளின் அளவீடுகள் வரைபுத்தாளொன்றில் தானியங்கிப் பேனாக்களினால் வரைபாக்கப்படு கின்றன. இவ்வரைபிலிருந்து பரீட் சிக்கப்படுபவரின் நிலைமையை உய்த்தறிந்துகொள்ள முடிகின்றது.
1945இல் அமெரிக்கக் குற்ற வியல் துறை நிபுணரான ஜோன்
பொய் கூறுவதைக் கண்டறிய உதவும் கருவி POLYGRAPH
ܡܡܐ
INDUNUN
எட்வர்ட் ரீட் (Reid) என்பவரால் வடி 6) 60) LD 55' l'L Reid Polygraph என்ற கருவி தசை அசைவுகளையும் பதியக் கூடியதாக இருந்தது.
6 TGOføDJüd Polygraphy? LČ LuuLuGðir படுத்தி எடுக்கப்படும் தீர்மானம் எந் தளவுக்கு நம்பகமானது என்பதில் கருத்து முரண்பாடுகள் உள்ளன. உணர்வுகள் மரத்துப்போன கடுங் குற்றவாளிகள், உளநோய் காரண மாகப் பொய் கூறுவோர் முதலிய வர்களைப் பொறுத்தமட்டில் Polygraph பதிவுகள் வித்தியாசத்தைக் காட்டாமல் இருக்கவும் கூடும். அதே போன்று பதட்டம், நரம்புத் தளர்ச்சி, பயம் என்பன காரணமாக உண்மையைப் பேசும் ஒருவரிலும் குருதியமுக்கம், நாடித்துடிப்பு, சுவாச வீதம் என்பன அதிகரிப்பைக் காட்டக் கூடும்.
பொதுவாக நீதிமன்ற வழக்கு விசாரணைகளில் Polygraph சோத னைகளின் முடிவுகள் சான்றுகளாக ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. எனினும் பொலிஸ் மற்றும் குற்றப் புலனாய்வுத்துறையினர் சந்தேக நபர் களின் கூற்றுக்களைப் பதிவுசெய்யும் போது Polygraph சோதனைக்கு அவர்களை உட்படுத்துவது சகஜம். இவ்வகையான சோதனைகள் தனி நபரின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகக் கருதும் சில நாடுகள் Polygraph பயன்பாட்டைத் தடை செய்துள்ளன.
“முழு உலகமும் உங்களை விட்டு நழுவிச் செல்லும் வேளையில்
6
உங்களைத் தேடி வருபவர்தான் உண்மையான நண்பர்.”
23 - {باbاتJ0و
 
 

ஏதேனுமோர்
வ்ெவகையான சந்தர்ப்பங் களில் பொதுமக்களின் தீர்ப்பைப் பெற்றுக் கொள்வதற்காகப் பொது சன அபிப்பிராய
பற்றி இலங்கை அரசியலமைப்பின் XIம் அத்தியாயத்தில் உள்ள 85ம், 86ம் உறுப்புரைகள் வரையறை செய்துள்ளன. ܐ ܕܟ݂ܬ݂ܺ
சட்ட மூலமொன்றை அல்லது
அதன் ஏற்பாடொன்றைப் பற்றிப் பொதுசன அபிப்பிராய வாக்கெடுப் பொன்றின் மூலம் மக்களின் அங்கீ
காரத்தைப் பெறுவது பற்றிய விளக் கங்கள் அவ்வத்தியாயத்தின் 85ம்
உறுப்புரையில் தரப்பட்டுள்ளன.
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக் கப்பட்டு உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையில் (சமுகமளிக்கா தோர் உட்பட) மூன்றில் இரண்டு பங்குக்குக் குறையாதோர் சாதகமாக வாக்களித்துள்ள சட்டமூலமொன் றைப் பின்வரும் நிலைமைகளில் மக் கள் அங்கீகாரத்தைப் பெறுவதற்காக மக்கள் முன் சமர்ப்பித்தல் ஜனாதி
பதியின் கடமையாகும் :
(1) குறித்த சட்டமூலம் அல்லது அதன் ஏற்பாடு மக்கள் தீர்ப்பைப் பெறுவதற்காக மக்கள்
முன் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என
அமைச்சரவை சிபாரிசு செய்தல் (ii) குறித்த சட்டமூலம் அல்லது
அதன் ஏதேனுமோர் ஏற்பாடு மக்கள் தீர்ப்பைப் பெறுவதற்காக மக்கள் முன் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் தீர்மானித்தல்.
அரும்4-23 -
பொதுசன அபிப்பிராய வாக்கெடுப்பு (REFERENDUM)
சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூல மொன்று பாராளுமன்றத்தினால்
வாக்கெடுப் பொன்று நடாத்தப்படலாம் என்பது
செல்லுபடியான வாக்குகளில் முழுப்
慈 唯
து
நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில்
அதனை மக்கள் தீர்ப்புக்கு விட
வேண்டும் என ஜனாதிபதி கருதி
னால் அவர் தன் விருப்புப்படி அவ் வாறு அதனை மக்கள் முன் சமர்ப்
பிக்கலாம்.
எனினும் அரசியலமைப்பின்
ஏதேனும் ஏற்பாட்டை நீக்குவதற்கு
அல்லது திருத்துவதற்கு அல்லது
புதிய ஏற்பாட்ொன்றை அரசியல மைப்பில் சேர்ப்பதற்கு அல்லது
நடைமுறையிலிருக்கும் அரசிய லமைப்பை நீக்குவதற்கும் மாற்றீடு
செய்வதற்கும் வழிவகுக்கும் ஒன்றாக மேற்குறித்த சட்டமூலம் அல்லது
ஏற்பாடு இருந்தால் அதனை மக்கள் தீர்ப்புக்காக ஜனாதிபதி சமர்ப்பிக்க (Lp L9-L1 stg51.
ஜனாதிபதியினால் மக்களிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஏதேனும் சட்டமூலம் அல்லது ஒரு சட்டமூலத் தின் ஏதாவது ஏற்பாடு தொடர்பாக
மக்கள் தீர்ப்பைப் பெறுவதற்கென
பொதுசன அபிப்பிராய வாக்கெடுப்
பொன்றை நடாத்துவது தேர்தல் ஆணையாளரின் ெ பாறுப்பாகும்.
அத்தகைய வாக்கெடு ப்பொன்றை
நடாத்திய பின்னர் அவர் அதன்
முடிவை ஜனாதிபதிக்குத் தெரிவித்
மக்கள் தீர்ப்புக்காகச் சமர்ப்பிக்
கப்பட்ட சட்டமூலம் அல்லது ஏற்
பாடு பொதுசன அபிப்பிராய வாக் கெடுப்பின் போது அளிக்கப்பட்ட
7

Page 6
பெரும்பான்மையான வாக்குகளி னால் அங்கீகரிக்கப்படின், அது மக்களால் அங்கீகரிக்கப்பட்டதாகக் கருதப்படுதல் வேண்டும்.
எனினும் அளிக்கப்பட்ட வாக் குகளின் மொத்தத் தொகை தேர்தல் இடாப்பிலுள்ள மொத்த வாக்காளர் தொகையில் மூன்றில் இரண்டு பங்கைவிடக் குறைவாக இருப்பின், மொத்த வாக்காளர் தொகையில் மூன்றிலொரு பகுதியினருக்குக் குறையாதோரால் அங்கீகரிக்கப்பட் டால் மாத்திரமே குறிப்பிட்ட சட்ட மூலம் அல்லது ஏற்பாடு அங்கீகரிக் கப்பட்டதாகக் கருதப்படுதல் வேண் டும்.
சட்டமூலமொன்றல்லாத வேறு ஏதேனுமொரு விடயம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என ஜனா
மக்களிடம்
திபதி கருதுவாராயின் அத்தகைய விடயத்தையும் மக்கள் தீர்ப்புக்காக
அவர் மக்களிடம் சமர்ப்பிக்கலாம் என அரசியலமைப்பின் 86வது உறுப்புரை கூறுகின்றது. இந்நிலை மையிலும் குறித்த விடயம் தொடர் பாக பொதுசன அபிப்பிராய வாக் கெடுப்பொன்றைத் தேர்தல் ஆணை யாளர் நடாத்துதல் வேண்டும்.
சட்டமூலங்களையும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங் களையும் மக்கள் தீர்ப்புக்கென சமர்ப்பிப்பதற்கான தேர்தல் முறை, அத்தேர்தலுக்காகப் பயன்படுத்த வேண்டிய தேர்தல் இடாப்பு, தேர்தல் விதிமுறைகள் போன்ற சகல விடயங்களையும் பாராளுமன்றம் சட்டத்தின் மூலம் ஏற்பாடு செய்தல் வேண்டும். து
புதன் கோளை ஆராயத் தயாராகும்
ஞாயிற்றுத் தொகுதியிலே சூரியனுக்கு மிக அண்மையிலிருக்கும் புதன்
கோளைப் பற்றி மேலும் அறிந்து கொள்வதற் காக MESSENGER என்ற விண்வெளிக்
கலத்தை 2004 மார்ச் மாதத்தில் அனுப்பி
வைக்க அமெரிக்காவின் NASA நிறுவனம் jité 6 (5é6örpg). MESSENGER GTGörp Gulf MErcury Surface, Space ENvironment, GEo-chemistry and, Ranging என்பதன் குறுக்கமாகவே அமைந் துள்ளது என NASAவின் அறிக்கை யொன்று கூறுகின்றது.
புதனை நோக்கி ஐந்து வருடங்கள்
பிரயாணம் செய்த பின் இந்தத் தானியங்கி, விண்கலம் 2009 ஏப்ரல் தொடக்கம் ஒரு
வருட காலத்திற்குப் புதன் கோளை வலம்
வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் கொண்டுசெல்லப்படவுள்ள கமரா, லேஸர் கு
MESSENGER ஆய்வுக் கலம்
செய்யும்.
துயரமானி, காந்தமானி, திருசியமானி
போன்ற கருவிகள் புதனைப் பற்றிய விரி வான தகவல்களைப் பெற்றுக்கொள்ள வழி புதனின் தரைக் கட்டமைப்பு, அதன் மெல்லிய வளிமண்டலத்தின் இயல்புகள்,
அதன் உயிர்ப்பான காந்த மண்டலம் என்பன
பற்றிய விபரமான தகவல்களை MESSEN
GER அனுப்பிவைக்க உள்ளது.
1974ம் 1975ம் ஆண்டுகளில் Mariner
10 என்ற விண்கலம் மூன்று தடவைகள் புதனைக் கடந்து பறந்ததன் பின்னர் இது
வரை அக்கோளை ஆராய்வதற்காக எந்த முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இக்கால எல் லைக்குள் செவ்வாய், வெள்ளி என்பன
பற்றிப் பெறப்பட்ட புதிய தகவல்கள் அவை
பற்றிய பழைய கோட்பாடுகளை மாற்றி யமைக்க உதவியுள்ளன. எனினும் புதன் தொடர்பான பல புதிர்கள் இதுவரை விடை
யளிக்கப்படாமலேயே இருந்து வருகின்றன.
அரும்பு-23
 
 
 
 
 
 

பல நூறு கவிஞர்களையும் ஒவியர்களையும் ஒளிப்படக் கலை ஞர்களையும் தன்பால் கவர்ந்திழுத்து ஆயிரக்கணக்கான கவிதைகளுக்கும் ஒவியங்களுக்கும் ஒளிப்படங்களுக் கும் கருப்பொருளாய் அமைந்த ஒரு மலை உலகில் இருக்குமானால் அது ஜப்பானிலுள்ள fபூஜி மலைதான் என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. உலகப் புகழ்பெற்ற பிரிட் டிஷ் மியூஸியத்தில்கூட இம்மலை யை விடயப் பொருளாகக் கொண்டு தீட்டப்பட்ட நூறு ஒவியங்கள் காட் சிக்கு வைக்கப்பட்டிருப்பதைக் காண முடியும்.
ஜப்பானிய மொழியில் fபூஜி -ஸான்’ என அழைக்கப்படும் இம்மலைக்கு fபூஜியாமா' என்ற பெயரும் உண்டு. ஜப்பானிலே உள்ள மிக உயர்ந்த மலையான இது, ஹொன்ஷூ தீவின் மத்திய பகுதியில் தோக்யோ நகரிலிருந்து 100km மேற் காகப் பசுபிக் கரையோரத்துக்கு அரு காமையில் அமைந்திருக்கின்றது. இதன் உயரம் 3776 m (12,388 அடி) ஆகும். ஒர் எரிமலையான fபூஜி, இறுதியாக 1707இல் வெடித்தது. அது முதல் இம்மலை உறங்கு நிலை யிலே காணப்பட்டாலும் இதனை ஒர் உயிர்ப்பான எரிமலையாகவே புவிச்சரிதவியலாளர்கள் கருதுகின் றனர்.
அழகான கூம்பு வடிவத்தைக் கொண்ட fபூஜி மலை உலகம் முழு வதும் பிரசித்தமடைந்துள்ளது. ஜப் பான் தேசத்தின் புனிதச் சின்ன
அரும்பு- 23
gilu VIGOflaðir fபூஜி மலை
(Mount Fuji) Y Z
மொன்றாகக் கருதப்படும் இதன் உச்சியில் அமைந்துள்ள வழிபாட்டுத் தளங்களைத் தரிசிப்பதற்காக ஆயிரக் கணக்கான மக்கள் வருடந்தோறும் இம்மலைக்கு ஏறுகின்றனர். ஜூலை 1 முதல் ஒகஸ்ட் 26ம் திகதி வரையான காலமே இந்த யாத்திரைக்குரிய கால மாகும்.
மரபு வழிக் கதைகளின்படி கி. மு. 286ம் ஆண்டில் ஏற்பட்ட புவியதிர் வொன்றின் போதே பூஜி மலை உருவாகியதாகக் கூறப்படுகின்றது. எனினும் இவ்வெரிமலை சுமார் 600,000 வருடங்களுக்கு முன்பாகத் தோன்றியிருக்கலாம் என்பதே விஞ் ஞானிகளின் பொதுவான கருத்
தாகும்.
எளிய கூம்பு வடிவான தனி எரி மலை யொன்றாக fபூஜி தோற்ற மளித்தாலும் உண்மையில் அது மூன்று வெவ்வேறு எரிமலைகளை உள்ளடக்கியிருக்கின்றது. கொமி தாகே, கோரிபூஜி, ஷின் பூஜி ஆகிய இம்மூன்றில் ஷின் பூஜி மிக அண்மைக் காலத்திற்குரியதாகும். சுமார் 10,000 வருடங்களுக்கு முன்னர் உயிர்ப்படைந்த இவ்வெரிமலை காலத்துக்குக் காலம் கனன்று கொண் டும் வெடித்துக் கொண்டும் இருந்து வந்துள்ளது. ஆயிரக் கணக்கான வருடங்களாக வின் பூஜியிலிருந்து வழிந்த எரிமலைக் குழம்பும் ஏனைய பொருட்களும் மற்ற இரு எரி மலைகளையும் மூடிக்கொண்டதனா
லேயே பூஜியின் இன்றைய வடிவம்
உருவாகியிருக்கின்றது.
9

Page 7
பூஜியின் அடிவாரம் சுமார் 125 km சுற்றளவைக் கொண்டுள்ளது. அதன் விட்டம் சுமார் 40 - 50 km இருக்கலாம். மலையின் உச்சியில் சுமார் 500 m விட்டத்தையும் 250 m ஆழத்தையும் கொண்ட எரிமலைக் குடைவு (Crater) காணப்படுகின்றது.
விளிம்புப் பகுதியில் எட்டுச் சிகரங்
களும் அமைந்துள்ளன. எரிமலைக் குழம்பினால் அணையிடப்பட்டு உருவான இவ்வேரிகள் கிழக்கு மேற் காக யமனாகா, கவா(g)கூச்சி, ஸாய், மொதோஸ" எனப் பெய
துள்ள கவா(g)கூச்சியே இவற்றுள் மிகத் தாழ்வாக உள்ள ஏரியாகும். இதன் அசைவற்ற நீரிலே பூஜி
தெளிவாகப் பிரதிபலிப்பதைக் காண முடியும்.
இவ்வெரிமலையைச் சூழ
வுள்ள பிரதேசம் சுற்றுலாப் பகுதி யாக நன்கு விருத்தியடைந்துள்ளது. fபூஜி ஏரிகளுள் மிகப் பெரியதான 6.4
ஏரியைச் சூழ வரப் பல சுற்றுலா விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. fபூஜி மலைக்குத் தென் கிழக்காக
இக்குடைவின் சீரற்ற வடிவமுடைய
கடதாசி ஆலைகளும்
மலையின் தலைகீழான விம்பம்
சதுர km பரப்புடைய யமனாகா
வருடந்தோறும் ஓர் இலட்சத்திற்கும்
உள்ள எரிமலைப் பாங்கான ஹா கோன் பிரதேசம் வெந்நீரூற்றுகளுக்
குப் பெயர் பெற்றது. அங்கும்
சுற்றுலா விடுதிகள் காணப்படுகின் ഗ്രങ്ങ.
fபூஜி மலைப் பிரதேசத்தில்
பெருமளவு நிலக்கீழ் நீரும் அரு
விகளும் காணப்படுவதனால் அங்கு ரசாயனத் தொழிற்சாலைகளும் நிறுவப்பட்
டுள்ளன. அத்தோடு பயிர்ச்செய்கை,
பாற் பண்ணை, மீன் வளர்ப்பு போன்ற தொழில்களும் மேற்கொள் ளப்படுகின்றன.
புனித மலையாகக் கருதப்படு வதனால் பூஜி மலையைச் சூழ கோவில்களும் வழிபாட்டுத் தளங் களும் நிறைந்துள்ளன. உச்சியிலுள்ள குடைவின் விளிம்பிலும் ஆழமான
அடிப்பகுதியிலும்கூட வழிபாட்டுத்
தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பூஜி மலைக்கு ஒர் ஆன்மா இருப்
பதாக நம்பும் ஒரு சமயப் பிரி
வினரும் ஜப்பானில் இருக்கின்றனர். இம்மலைக்கு ஏறுவது ஒரு புனிதச்
செயலாகவே பொதுவாகக் கருதப்
படுகின்றது. முற்காலத்தில் வெள்
ளை ஆடைகளை அணிந்தவாறே மக்கள் இம்மலைக்கு ஏறுவது
வழக்கமாக இருந்தது. இப்போதும்
மேற்பட்ட மக்கள் மலையேறுவதற் காக அங்கு கூடுகின்றனர். ய
அரும்பு இதழ்களைத் தபால் மூலம் பெற்றுக்கொள்ளல்
T*T
மனியோடர் பிரதியை எமக்கு அனுப்பாமல் த அனுப்பப்பட வேண்டியது என்பதை
அரும்பு இதழ்களைத் தொடர்ச்சியாகத் தபால் மூலம்பெறவிரும்புவோர் அடுத்துவரவுள்ள6 இதழ்களுக்கும் ரூபா 130/-மணியோடர் மூலம் அனுப்பலாம். தனிப்பிரதி தேவைப்படுவோர் தபாற் கட்டணத்தையும் சேர்த்துரூபா 2200 அனுப்பவும்.
மனியோடர் அனுப்பும் போது பணம் பெறுபவர் பெயர் M. கந்தோர் Dharga Town எனவும் குறிப்பிடத் தவறாதீர்கள். (சிலர் தபாற்
ல் தம்வசம் வைத்துக்கொள்கின்
விடாதீர்கள்) இல:17,19,20, 22 ஆகிய இதழ்களின் பிரதிகள் மாத்திரமே கைவசம் உள்ளன.
fi Quur M. Hafiz Issadeen GTGCTGjih gurih ந்தோரில் தரப்படும் அப்பிரதி எமக்கு
鷺
அரும்பு- 23
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

DDDu SJSukD DDD D D mu mDS uDDD uS DDD S uu
ரிய மொழிகள்
இந்து-ஆ
सहयोगको लागि देश विदेश Efter FF: HT Jr. (Indo-Aryan Languages) réteg
இந்தியா, இலங்கை, பாகிஸ்
தான், ப்ங்களாதேஷ் ஆகிய நாடு
களில் பேசப்படும் மொழிகளுள் பெரும்பாலானவை இந்து - ஆரிய மொழிக் கூட்டத்தைச் சேர்ந்தனவா கும். இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்தில் சுமார் 547 இந்து - ஆரிய மொழிகள் அங்கு வழக்கிலிருந்ததாக ஒரு கணிப்பீடு தெரிவிக்கிறது. எனி னும் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் முதலிய திராவிட மொழி கள் இக்கூட்டத்தில் அடங்குவதில் 6ð)GN),
இந்து - ஐரோப்பிய மொழிகள் என்னும் பிரதான மொழிக் குடும் பத்தின் ஒரு கிளையான இந்து - ஈரா னிய மொழிக் கூட்டத்தின் கீழ் வரு கின்ற ஓர் உப கூட்டமாகவே இந்துஆரிய மொழிகள் கருதப்படுகின்றன.
இந்து - ஆரிய மொழிகளை (1) பழைய இந்து-ஆரிய மொழிகள் (2)இடைக்கால ந்து-ஆரிய மொழிகள் (3) நவீன இந்து - ஆரிய மொழிகள் என மூன்று பிரிவுகளாக மொழியியலாளரர்கள் வகுத்துக் காட்டி யுள்ளனர்.
இருக்கு, யசுர், ஸாமம், அதர் வம் ஆகிய புராதன இந்து வேதங் களின் மொழியே மிகப் பழைய இந்து - ஆரிய மொழி வடிவமாகக் கருதப்படுகின்றது. இதனுடன் ஒன்
றித் தோன்றிய பல்வேறு பேச்சு வழக்
குகள் பொதுவாகச் சமஸ்கிருதம்
என்ற பெயரால் அழைக்கப்படுகின்
றன. சமஸ்கிருதம் என்பதன் பொருள்
3.
र समाजका सबै वर्ग, संघ } तपाईंको
பண்படுத்தப்பட்டது, தூய்மையாக் கப் பட்டது' என்பதாகும். கி. மு. 1800ம் ஆண்டளவில் இந்தியாவின் வடமேற்குப் பிரதேசத்தில் பேசப் பட்ட சமஸ்கிருத வடிவமே இருக் கு' அல்லது பவுடிகம்’ என்ற வேதத் தில் காணப்படுவதாக அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
கி. மு. 5ம் நூற்றாண்டளவில் இந்தியாவில் வாழ்ந்த பாணினி என்ற அறிஞர் தாம் எழுதிய இலக் கண நூலில் சமஸ்கிருத மொழியை விவரித்து அதற்குரிய இலக்கண விதிகளையும் வகுத்துக் காட்டினார். பாணினி விவரித்த மொழிக்கு மிக வும் நெருக்கமான ஒரு மொழி வடி வமே செம்மையான சமஸ்கிருதம் (Classical Sanskrit) 67GOT egy 60ypő, கப்பட்டது. கீதோபதேசம்’, 'பஞ்ச தந்திரம்’ போன்ற கதைகளும் இலக் கிய, இலக்கண, தத்துவ நூல்களும் ந்த சமஸ்கிருத வடிவத்திலேயே ಟ್ಟಿ:॰: சமஸ்கிருதத் தைத் தமிழில் வடமொழி என்றும் குறிப்பிடுவர்.
மகாபாரதம், ராமாயணம் ஆகிய புராதன காவியங்களில் பயன் படுத்தப்பட்டுள்ள மொழி வடிவம் காவிய சமஸ்கிருதம் (Epic Sanskrit) என அழைக்கப்படுகின்றது. இந்த வடிவம் கிறிஸ்தவ யுகத்துக்குச் சற்று முந்திய காலத்தில் பயன்படுத்தப்பட் டிருக்கிறது.
கி. மு. 500ம் ஆண்டு முதல் அண்
மைக் காலம் வரை சமயம், இலக்
11.
அரும்பு- 23

Page 8
கியம், அறிவியல் போன்ற துறை களில் சமஸ்கிருதம் ஆதிக்கம் செலுத் திவந்தது. தற்போது இந்து அறிஞர் கள் மத்தியில் இம்மொழி பயன்பாட் டிலுள்ள போதிலும் பரந்தளவில் பயன்படுத்தப்படுவதில்லை. சமஸ் கிருதத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்களையும் இப்போது காண்பதரிது. ஹிந்தி மொழியில் உபயோகிக்கப்படும் தேவநகரி எழுத்துக்களைப் பயன்படுத்தியே சமஸ்கிருதமும் எழுதப்படுகின்றது.
கி.மு. 3ம் நூற்றாண்டு முதல் கி. வ. 4ம் நூற்றாண்டு வரையான காலத் தில் கல்வெட்டுக்களிலும் இலக்கிய ஆக்கங்களிலும் பயன்படுத்தப்பட்ட மொழிகள் பிற கிருத மொழிகள் என அழைக்கப்படுகின்றன. இம் மொழிகளே இடைக்கால இந்து - ஆரிய மொழிகள் என வகைப்படுத் தப்படுகின்றன.
பிறகிருத மொழிகளுள் வழக்.
கொழிந்து போன எழுத்து மொழி பாலி ஆகும். இது பெளத்த வேத நூல்களிலும் கதைகளிலும் உபயோ கிக்கப்பட்டுள்ளது. பாலி தவிர்ந்த இன்னும் பல பிறகிருத மொழிகள் பெளத்த மற்றும் ஜைன சமய நூல்க ளிலும் இலக்கியங்களிலும் பயன் படுத்தப்பட்டுள்ளன. மஹாராஷ்த்ரி என்ற மொழி பிறகிருத மொழிகளுள் மிகச் சிறப்புற்றிருந்ததாக அறிஞர்கள் கூறியுள்ளனர். இம் மொழியில் பல காவியங்கள் இயற்றப்பட்டுள்ளன.
பிற கிருத மொழிகள் என்ற வகையில் அடங்காத அபபிரம்ஸ்’
என்ற மொழியும் இடைக்கால
இந்து - ஆரிய மொழிப் பிரிவைச்
சேர்ந்ததாகக் கருதப்படுகின்றது. இம்
மொழியும் இலக்கிய மொழியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. காளி தாஸனின் நாடகமொன்றில்கூட அப பிரம்ஸ செய்யுள் அடிகள் இடம் பெற்றுள்ளன.
கி. வ. 10ம் நூற்றாண்டளவில் தோன்றிய ஹிந்தி, வங்காளி போன்ற மொழிகளும் அவற்றின் வழிவந்த புதிய மொழிகளும் நவீன இந்துஆரிய மொழிப் பிரிவைச் சேர்ந்தன வாகும். இவற்றுள் இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்திலும் பங் களாதேஷிலும் பேசப்படும் வங் காளி, இந்திய மொழிகளான இந்தி, குஜராத்தி, மராத்தி, அஸ்ஸாமி, ஒரியா, பாகிஸ்தானில் பேசப்படும் பஜ்சாபி, ஸிந்தி, மாலைதீவு மொழி யான தி வெஹி, இலங்கையின் சிங்களம், நேபாள மொழி போன்ற நூற்றுக் கணக்கான மொழிகள் அடங் குகின்றன. (வித்தியாசமான எழுத்து முறைகளைக் கொண்டிருந்த போதி லும் உருதும் ஹிந்தியும் ஒன்றே என்பது கவனிக்கத்தக்கது).
இன்று உலகில் நவீன இந்து - ஆரிய மொழிகளைப் பேசுவோர் தொகை 900 மில்லியனுக்கும் அதிக LDTG5id. m
UITIT FTf? ஒரு வைத்திய நிபுணரைத் தேடிவந்த நோயாளியொருவர் "டொக்டர் எனது இதயத்தில்தான் கோளாறு இருக்கிறது என்று நீங்கள் சொன்னீர்கள். அது தவறு என்றும் எனது சுவாசப் பையில் தான் ஏதோ அடைப்பு இருக்கிறது என்றும் வேறு இரண்டு வைத்தியர்கள் கூறுகின்றார்களே' என்றார்.
"அப்படியானால் கொஞ்சம் பொறுத்திருந்து பாரும். யார் சொல்வது சரி என்பதைப் பிரேத பரிசோதனையின் போது கண்டுபிடித்துக் கொள்ளலாம்”
12
என்றார் அந்த வைத்தியர் ஆறுதலாக,
அரும்பு- 23

தென் கிழக்காசியாவிலுள்ள தென்சீனக் கடலிலே மலேஷியா அமைந் திருக்கின்றது. இது 13 மாநிலங்களையும்
2 சமஷ்டிப் பிராந்தியங்களையும் கொண்ட ஒரு சமஷ்டி அரசாகும். இங்கு அரசியல் யாப்புக்கு உட்பட்ட முடியாட்சி நடைபெறுகின்றது. சமஷ்டிப்பிராந்தியங் களுள் ஒன்றான குவாலா லம்பூர் மலேஷி யாவின் தலைநகராகத் திகழ்கின்றது.
இந்நாடு மேற்கு மலேஷியா, கிழக் கு மலேஷியா என இரு பிரதான பிரிவு களைக் கொண்டுள்ளது. தீபகற்ப மலே ஷியா எனவும் அழைக்கப்படும் மேற்கு மலேஷியா மலாயத் தீபகற்பத்தின் தென் பகுதியையும் அதற்கு அண்மையிலுள்ள
தீவுகளையும் கொண்டுள்ளது. இதன்
வடக்கெல்லையில் தாய்லாந்தும் தென் கரைக்கு அப்பால் சிங்கப்பூரும் காணப் படுகின்றன.
கிழக்கு மலேஷியா என்பது போர் னியோ தீவின் வட பகுதியையும் அதன் கரைக்கு அப்பாலுள்ள சில தீவுகளையும் உள்ளடக்கிய பிரதேசமாகும். (இந்த போர்னியோ தீவின் வடகரைப் பகுதியில் தான் புரூணை என்னும் நாடு அமைந் துள்ளது. இத்தீவின் தெற்குப் பகுதியில் இந்துனேஷியாவுக்குச் சொந்தமான கலிமன்தான் என்ற பகுதி காணப்படுகின் றது. மேற்கு, மலேஷியாவுக்கும் கிழக்கு மலேஷியாவுக்கும் இடையில் சுமார் 640 km தூரத்துக்கு தென்சீனக் கடல் விரிந் திருக்கின்றது. -
மலேஷியாவின் மொத்த நிலப் பரப்பு 329,758 சதுர km ஆகும். இதில் சுமார் 60% மேற்கு மலேஷியாவுக்குரியது.
23 - اپازویی eyع
தீபகற்ப மலேஷியா வடக்குத் தெற்காகச் சுமார் 800 km நீளமுடையது. கிழக்கு மேற்காக அதன் ஆகக்கூடிய அகலம் 330 km ஆகும். இதன் வடக்கிலுள்ள மலைத் தொடர் கிழக்கிலும் மேற்கிலும் உள்ள கரையோரப் பிரதேசங்களைப் பிரித்து நிற்கின்றது. தீபகற்பத்தின் தென்பகுதி பெரும்பாலும் தட்டையானது. இத்தீப கற்பத்துக்கு அண்மையில் சிறிய தீவுகள் பல காணப்படுகின்றன. இவற்றுள் வட மேற்கிலுள்ள லங்காவ், பினாங் என்ப வையும் தென்கிழக்கிலுள்ள தியொமான் என்பதும் குறிப்பிடத்தக்கனவாகும்.
போர்னியோ தீவிலுள்ள சரவாக், சபாஹ் (Sabah) ஆகிய மாநிலங்களும் Labuan என்னும் தீவும் கிழக்கு மலேஷி யாவை ஆக்கியுள்ளன. போர்னியோ தீவி லுள்ள மலேஷியப் பிரதேசம் அகலத்தில் 275 km வரையும் நீளத்தில் 1130 km வரை யும் வியாபித்துள்ளது. தென்மேற்கிலுள்ள
சரவாக்கின் கரையோரப் பிரதேசம்
சேற்றுத் தன்மையான தாழ்நிலத்தைக் கொண்டுள்ளது. உட்பகுதி மலைப்பாங் கானது. மலேஷியாவின் மிக உயர்ந்த சிகர மான கினபாலு (Kinabalu) என்ற மலை (உயரம் 4,101 m) சபாஹற் மாநிலத்தின் கரையோரப் பகுதியில் அமைந்துள்ளது.
நாட்டின் மிக நீளமான ஆறுகளான Rajang (560 km), Kinabatangan (560 km) என்பன கிழக்கு மலேஷியாவிலேயே உள் ளன. தீபகற்ப மலேஷியாவிலுள்ள ஆறு 5G5 6ir Pahang (470 km), Kelantan (400 km), Perak (240 km) GTGåTLU GOT (ypj:GuLL DIT னவை. இவ்வாறுகள் யாவும் கப்பற் போக்குவரத்துக்கு உகந்தனவாகக் காணப்
13

Page 9
படுகின்றன. மலேஷியாவின் ஆறுகளில் பெரும்பாலானவை நீர்வீழ்ச்சிகளைக் கொண்டிருப்பதால் நீர் மின்னுற்பத்திக்கு ஏற்றனவாக உள்ளன. மேற்கு மலேஷி யாவிலுள்ளBera என்பதே நாட்டின் மிகப் பெரிய இயற்கை ஏரியாகும்.
மலேஷியாவிலே தாவர வளம் அபரிமிதமாகக் காணப்படுகின்றது. கரை யோர கண்டல் காடுகளும், தாழ்நில வெப்பவலயக் காடுகளும், மேட்டுநில தேக்குக் காடுகளும் இதில் அடங்குகின் றன. நாட்டிலே சுமார் 8000 பூக்குந்தாவர இனங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட் டுள்ளது. 2500க்கும் மேற் பட்டவை மர இனங்களாகும். தாழ்நிலக் காடுகளில் மஹோகனி, தேக்கு போன்ற வர்த்தக முக்கியத்துவமுள்ள வெட்டு மர னங்கள் பெருமளவு வளர்கின்றன. வற்றுள் பெரும்பாலானவை 50 m உயரத்தையும் 3 m சுற்றளவையும் அடை வதுண்டு. உலகின் மிகப் பெரிய மலரான raftesia கிழக்கு மலேஷியாவிலேயே காணப்படுகின்றது. மலேஷியாவின் நிலப்பரப்பில் காற்பங்கு பயிர்ச்செய்கைக் காகப் பயன்படுத்தப்படுகின்றது:
மலேஷியக் காடுகளில் பெருந் தொகையான விலங்கினங்கள் வாழ்கின் றன. இவற்றுள் யானை, புலி, கரடி, மானினங்கள், காண்டாமிருகம், ஒராங் குட்டான், gibbon என்னும் வாலில்லாக் குரங்குகள் போன்ற முலையூட்டிகளும், ராஜ நாகம், மலைப்பாம்பு உட்பட நூற் றுக்கும் மேற்பட்ட பாம்பு இனங்களும் அடங்குகின்றன. அத்தோடு முதலைகள் உட்பட 80க்கும் மேற்பட்ட பல்லி, ஓணான் இனங்களும் பெருந்தொகை யான பூச்சியினங்களும் அங்கு உண்டு. பறவை இனங்களுக்கும் அங்கு குறை வில்லை. தீபகற்ப மலேஷியாவில் மாத் திரம் சுமார் 650 பறவையினங்கள் வாழ் கின்றன.
மலேஷியாவின் இயற்கை வளங் களுள் வனவளம் முதலிடம் பெறுகின் 14
றது. அத்தோடு வெள்ளியம், செம்பு, யுரேனியம் என்பவற்றின் படிவுகளும்
பெருமளவில் காணப்படுகின்றன. கரை யை அண்டிய கடற்பகுதிகளில் குறிப்
பிடத்தக்க அளவு பெற்றோலிய எண்
ணெய் மற்றும் வாயுப் படிவுகள் இருக் கின்றன. பெருந்தோட்டப் பயிர்களில் இறப்பர் முக்கிய இடத்தை வகிக்கின்றது. மலைப்பாங்கான பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் காலநிலை சூடாகவும் ஈரலிப்பாகவுமே விளங்கு கின்றது. தினசரி வெப்பநிலை 200 முதல் 30 C வரை வேறுபடுகின்றது. தீபகற்பப் பகுதியில் சராசரி வருடாந்த மழைவீழ்ச்சி சுமார் 2500 mm ஆகும். சரவாக், சபாஹற் மாநிலங்களின் வட சரிவுகளில் வருடாந் தம் 5,000 mm க்கு மேற்பட்ட மழை பொழிகின்றது.
2000ஆம் ஆண்டில் மலேஷியாவின் சனத்தொகை 21,820,143 என மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. இதன்படி நாட்டின் சராசரி சனத்தொகை அடர்த்தி சதுர கிலோமீட்டருக்கு 66 பேர்களாகும். எனி னும் கிழக்கு மலேஷியாவை விட மேற்கு மலேஷியா 7 மடங்கு கூடிய சனத்தொகை அடர்த்தியைக் கொண்டுள்ளது. மொத்த மக்கட் தொகையில் சுமார் 56% நகர்ப் புறங்களிலேயே வாழ்கின்றனர். Kuala Lumpur, Ipoh, Johor Baharu, Petaling Jaya, Kelang, Kuala Terenggannu, George Town (முன்னைய பினாங்) என்பனவே நாட் டின் பிரதான நகரங்களாகத் திகழ்கின்றன. சுதேச மலாயர்களும் ஏனைய சுதேச மக்கள் கூட்டத்தினரும் சனத்தொகையில் 59% ஆக உள்ளனர். இவர்கள் பூமிபுத்ரா' (மண்ணின் மைந்தர்கள்) என அழைக்கப் படுகின்றனர். அவர்களோடு சீனர்கள் (29%), இந்தியர்கள் (7%) ஆகியோரும் சிறிதளவு இந்துனேஷியர், தாய்லாந்து
நாட்டினர், அவுஸ்திரேலியர் முதலியோ
ரும் வாழ்கின்றனர். மேற்கு மலேஷியா வில் ஐந்தில் மூன்று பங்கினர் மலாயர் களாவர். நாட்டின் தேசிய மொழியாக அரும்பு- 23
 

மலேஷியாவின்
முதலாவது பிரதமர்
பாஷா மலேஷியா (மலாய் மொழி) திகழ்கின்றது. அத்தோடு ஆங்கிலம், சீனம், தமிழ் ஆகிய மொழிகளும் அங்கு பரவலாக உபயோகிக்கப்படுகின்றன. “ மலேஷியாவின் உத்தியோகபூர்வ சமயமாக இஸ்லாம் விளங்குகின்றது. மலேஷியர்களில் பாதிக்கு மேற்பட்டோர். முஸ்லிம்களாவர். அங்குள்ள சீனர்கள் பெளத்தம், கன்பூஷியனிஸ்ம், தாவோ யிஸ்ம் போன்ற சமயங்களைப் பின்பற் றுகின்றனர். இந்தியர்களுள் பெரும்பான் மையினர் இந்துக்களாவர். சபாஹற், சர வாக் பிரதேசங்களில் கிறிஸ்தவர்களும் பாரம்பரிய சமயங்களைப் பின்பற்றுபவர் களும் இருக்கின்றனர்.
6 வயது முதல் 16 வயது வரை கட் டாயக் கல்வி அங்கு அமுல்படுத்தப்படு கிறது. ஆரம்பக் கல்வியை மலாய், சீனம், ஆங்கிலம், தமிழ் ஆகியவற்றுள் ஏதேனு மொரு மொழியினூடாகப் பெற்றுக் கொள்ள முடியும். இடைநிலைக் கல் விக்குரிய மொழியாக மலாய் மொழியே திகழ்கின்றது. எனினும் சீனம், தமிழ் ஆகிய மொழிகளினூடாகவும் கல்வி பெறக்கூடிய வாய்ப்பு தொடர்ந்தும் காணப்படுகின்றது. ஆங்கிலம் கட்டாய இரண்டாம் மொழியாகப் போதிக்கப் படுகின்றது.
ஆசியாவில் புதிதாகக் கைத்தொ ழில் மயமான பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக மலேஷியா கருதப் பட்ட போதிலும் அங்கு சுபீட்சத்தோடு வறுமையும் பரவலாகக் காணப்படுகின் றது. மலேஷியாவின் பொருளாதாரத்தில்
சீனர்களும் இந்தியர்களும் கூடுதலான ஆதிக்கத்தைக் கொண்டுள்ளனர். இத னால் பூமிபுத்ராக்கள் மனக்கசப்படைந்த நிலையில் காணப்படுகின்றனர். இவ் வேற்றத்தாழ்வுகள் காரணமாக மலாயர் களுக்கும் சீனர்களுக்கும் இடையில் இனக் கலவரங்கள் அடிக்கடி தலைதூக்கி யுள்ளன.
மலேஷியாவின் பொருளாதாரம்
பெற்றோலியம், இயற்கை இறப்பர்,
வெள்ளீயம், பாம் எண்ணெய், வெட்டு மரம் போன்ற மூலப்பொருட்களின் ஏற்று மதியை நம்பியே இருந்தது. எனினும் இப்போது உற்பத்தித் துறை பாரிய வளர்ச்சியைக் கண்டு வருகின்றது. மின் மற்றும் இலக்ட்ரோனிக் உபகரணங்கள், துணி வகைகள், கட்டட நிர்மாணப் பொருட்கள், இரசாயனப் பொருட்கள் என்பன அங்கு உற்பத்தி செய்யப்படு கின்றன. Proton' என்ற பெயரில் மலே
ஷியா மோட்டார்கார்களையும் உற்பத்தி
செய்வது குறிப்பிடத்தக்கது. 1998இல் மொத்த உள்நாட்டு உற்பத்தி 72.5 பில்லி யன் டொலர்களாக இருந்தது.
மலேஷியாவின் பணஅலகு ரிங்கிட் (Ringgit) என்பதாகும். இது 100 சென் களாகப் (Sen) பிரிக்கப்பட்டுள்ளது.
சமஷ்டி யாப்புக்கு உட்பட்ட முடி
யாட்சியான மலேஷியாவின் பாராளு
மன்றம் இரண்டு சபைகளைக் கொண் Lgs. Dewan Rakyat 6TGOTŮLUG) in LDä56ït பிரதிநிதிகள் சபை 193 உறுப்பினர்களைக் கொண்டது. இவ்வுறுப்பினர்கள் பொதுத் தேர்தல் மூலம் ஐந்துவருடத்தவணைக்குத் (65 íîGy(675F uiuuu L'ILJ (6) 6 u fi. Dewan Negara என்னும் செனட் சபை 70 உறுப்பினர் களைக் கொண்டுள்ளது. செனட்டர்களின் பதவிக்காலம் 6 வருடங்களாகும். சட்ட வாக்க அதிகாரம் சமஷ்டி மற்றும் மாநில சட்டசபைகளிடையே பகிர்ந்தளிக்கப்பட் டுள்ளது. ..
அரசின் தலைவராக சமஷ்டியின் உயர் தலைவர் (மன்னர்) இருக்கிறார்.
15
அரும்பு-23

Page 10
பரம்பரையாக வரும் சுல்தான் என்னும் ஆட்சியாளர்கள் ஒன்பது பேரிலிருந்து இவர் தெரிவுசெய்யப்படுகின்றார். இவ ரது பதவிக்காலம் 5 வருடங்களாகும். செயல் நிறைவேற்று அதிகாரம் பிரதம அமைச்சரிடமே உள்ளது. பாராளுமன்றத் திலுள்ள பெரும்பான்மைக் கட்சியின் அல்லது கூட்டணியின் தலைவரே இப் பதவிக்கு அரசுத் தலைவரினால் நியமிக் கப்படுகின்றார். ஐக்கிய மலாயர்களின் தேசிய அமைப்பு (UMNO) என்னும் கட்சியின் தலைவரான மஹாதிர் பின் முஹம்மத் என்பவரே இப்போது பிரதம அமைச்சராக இருக்கிறார்.
ன்றைய மேற்கு மலேசியப் பகுதி 19579)6iv Federation of Malaya 6TGötp பெயரில் பிரிட்டனிடம் இருந்து சுதந் திரம் பெற்றது. 1963இல் இந்நாடு சிங்கப்பூர், சரவாக், சபாஹ் ஆகியவற் றுடன் சமஷ்டி முறையில் இணைந்து கொண்டபோது அதன் பெயர்Pederation of Malaysia என மாற்றப்பட்டது. எனி னும் 1965இல் இச்சமஷ்டியிலிருந்து வில கிக்கொண்ட சிங்கப்பூர் தன்னை ஒரு தனிக் குடியரசாகப் பிரகடனப்படுத்திக் கொண்டது. 1957இல் எழுதப்பட்ட சமஷ்டி யாப்பின் அடிப்படையிலேயே இன்றைய மலேஷியா நிர்வகிக்கப்படு கின்றது. -
தொழில் இரகசியம்
தனது கம்பியூட்டரின் பிரிண்டரில் எழுத்துக்கள் தெளிவாகப் பதியாததைக் கண்ட ஒருவர் அதனைத் திருத்துவதற்காக ஒரு கம்பனிக்கு எடுத்துச் சென்றார்.
“பிரிண்டரைக் கழற்றிச் சுத்தம் செய்தால் எல்லாம் சரியாகிவிடும். அவ்வாறு
செய்வதற்கு நாங்கள் 500/= ரூபா அறவிடுவோம். அதற்குப் பதிலாகப் பாவனையா ளர் கைநூலைப் பார்த்து நீங்களே அதனைச் சுத்தம் செய்து கொள்ளலாம்” என்று அங்கு திருத்த வேலை செய்யும் ஓர் இளைஞன் அவருக்கு ஆலோசனை கூறினான்.
“உனது ஆலோசனைக்கு நன்றி! ஆனால் நீ இப்படிச் செய்வதால் கம்பனியின் வருமானம் குறையுமே! உனது முதலாளி கோபித்துக்கொள்ள மாட்டாரா?” என்று திருப்பிக் கேட்டார் அந்த மனிதர்.
“இல்லை. இது முதலாளியின் யோசனைதான் வாடிக்கையாளர்கள் தாமே இயந்திரங்களைத் திருத்த முயற்சித்தால்தான் பெரிய ரெபயார் வேலைகள் எமக்குக் கிடைக்கும்” என்று தனது கம்பனியின் தொழில் இரகசியத்தைக் கூறிவைத்தான் இளைஞன்.
உமக்கென்ன தெரியும்?
தனது பருத்த உடலின் நிறையை அளந்து பார்ப்பதற்காகக் குளியலறைத் தராசின் மீது ஏறிய ஒருவர் மூச்சைக் கட்டுப்படுத்தித் தனது தொந்தி வயிற்றை உள்ளிழுத்துச் சுருக்க முயற்சித்துக் கொண்டிருந்தார்.
தனைக் கண்ட அவரது மனைவி'அப்படி ஏன் செய்கிறீர்கள்? அவ்வாறு கஷ்டப்பட்டு வயிற்றை உள்ளிழுப்பதனால் தராசு நிறையைக் குறைத்துக் காட்டப் போவதில்லையே’ என்றாள்.
“உமக்கென்ன தெரியும் நான்தராசின் ஊசியைப் பார்த்துக் கொள்வதற்கு அல்லவா முயற்சிக்கின்றேன்’ என்றார் அந்தத் தொக்கை மனிதர் பரிதாபமாக,
16 - ^ அரும்பு-23

అS وايي؟
முற்காலத்திலே வடஅத்தி லாந்திக் பிரதேசத்தில் வாழ்ந்து பின்னர் முற்றாக அழிந்து போன Great Auk என்னும் பறக்க முடியாக் கடற் பறவைகளைக் குறிக்கவே ஆரம்பத்தில் பென்குவின் (Penguin) என்ற பெயர் பயன்படுத்தப்பட்டது. பிற்காலத்தில் பூமியின் தென்னரைக் கோளத்திலே காணப்படுகின்ற அவற்றையொத்த பறக்க முடியாத நீர் வாழ் பறவை இனங்களைக் குறிப் பதற்கு இப்பெயர் பிரயோகிக்கப்பட லாயிற்று.
தற்போதுள்ள பென்குவின்கள் 16 இனங்களாகவும் 6 சாதிகளாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவற் றுள் பெரும்பாலானவை அந்தார்ட் டிக்காவிலும் அதற்கு அண்மை யிலுள்ள தீவுகளிலும் வாழ்கின்றன. ஏனையவை அவுஸ்திரேலியா, தென் னாபிரிக்கா, தென்னமெரிக்கா என்ப வற்றின் கரையோரப் பகுதிகளிலும் கலபகோஸ் (Galapagos) தீவுகளிலும் காணப்படுகின்றன.
Emperor Penguin, King Penguin என்பனவே பென்குவின் இனங் களுள் மிகப் பெரியனவாகும். இவ் விரு இனங்களும் அந்தார்ட்டிக் பனிப்பாறைப் பிரதேசங்களில் வாழ்
கின்றன. முன்னைய இனப் பறவை கள் 120 Cmக்கு மேல் உயரமுடைய 6076) it 5, 6, 16 TisairspaOT. King Penguin இனப் பறவைகள் 90cm - 98cm வரை உயரத்தை அடையக்கூடும். அவுஸ்திரேலியாவிலும் நியூஸிலந் திலும் காணப்படும் சிறிய நீலப் பென்குவின்களே உருவில் மிகச் சிறி யனவாகும். இவற்றின் உயரம் 40cm அல்லது அதைவிடக் குறைவாகவே இருக்கும்.
பெரும்பாலான பென்குவின் களில் மார்புப் பகுதி வெண்ணிற மாகவும் முதுகுப் புறம், தலை என் பன கறுப்பாகவும் இருக்கும். எனி 60)|LD emperor, king Lippa) b 69 gólu நீலப் பென்கு வின்களில் முதுகுப் புறம் நீலங்கலந்த சாம்பல் நிறமாகக் காணப்படுகின்றது. பெரும்பாலான பென்குவின் இனங்களின் தலை யிலும் கழுத்திலும் சிவப்பு, செம் மஞ்சள் அல்லது மஞ்சள் நிறமுடைய பகுதிகள் அமைந்திருப்பதுண்டு. பென்குவின்களின் கட்டையான கால்கள் உடலின் பின்புறமாகத் தள்ளி அமைந்திருப்பதனால் அவை நிமிர்ந்த நிலையிலேயே எப்போதும் காணப்படுகின்றன.
பென்குவின்கள் நன்றாக நீந்தக் கூடியவை. இறுக்கமாக அமைந்த அவற்றின் இறக்கைகள் சிறந்த துடுப் புக்களாகப் பயன்படுகின்றன. திசை திரும்பலுக்கு மாத்திரமே கால்கள் உபயோகிக்கப்படுகின்றன. @JGÕID GÖTALJ பறவைகளைப் போன்று பென் குவின்களும் நுரையீரல்களால் சுவா சிப்பதனால் நீருக்கடியால் நீந்தும் போது அவை வளியைப் பெறுவதற் காக இடையிடையே மேற்பரப்புக்கு வருகின்றன. இவை மீன்கள், கண வாய், இறால், நண்டு, சிறிய கடல் விலங்குகள் முதலியவற்றை உண
17
23 - {0قازقgoyo

Page 11
வாக உட்கொள்கின்றன. அடைத்து வளர்க்கப்படும் போது பெரிய
இனப் பென்குவின்கள் தாமாக உண.
வை எடுத்து உண்பதில்லை. எனவே தொடர்ந்தும் அவற்றுக்குக் கை களால் உணவூட்டுவது அவசியமாகி விடும்.
பென்குவின்கள் எப்போதும் கூட்டமாகவே வாழ்கின்றன. இனப் பெருக்கஞ் செய்யும் காலத்தில்
அவை அதற்கேயுரிய பாரம்பரிய
இடங்களில் பல்லாயிரக் கணக்கில் ஒன்றுசேர்வது வழக்கம். இவ்விடங் கள் சிலவேளைகளில் கடலிலிருந்து பல கிலோமீட்டர்களுக்கு அப்பால் அமைந்திருக்கக் கூடும். பல நூறு பரம்பரைகளாக இவ்விடங்களை நோக்கிப் பென்குவின்கள் நகர்ந்து சென்றதன் காரணமாக வழி நெடுகே உள்ள பாறைகள் தூர்ந்து போயிருப் பதைக் காணமுடியும்.
னப்பெருக்கக் காலத்தில் சில பென்குவின் இனங்கள் தடிகளாலும் கற்களாலும் கூடுகளைக் கட்டிக் கொள்வதுண்டு. King மற்றும் Emperor இனப் பென்குவின்கள் கூடுகள் எதனையும் கட்டுவதில்லை. இவ் வினங்களில், தாய்ப் பறவை தனது பாதத்தின் மீது வைத்தே முட்டையை அடைகாக்கின்றது. பெரும்பாலான பென்குவின் இனங்களில் பெண் பறவை ஓர் இனப்பெருக்க வட்டத் தில் இரண்டு முட்டைகளை இடு கின்றது. இம்முட்டைகள் வெள்ளை யாகவோ பசிய நிறமாகவோ இருக் கலாம். அடைகாத்தற் காலம் இனத்திற்கு இனம் வேறுபடுகின் றது. King பென்குவின்களில் இக் காலம் 50 நாட்களுக்கு மேலாக இருக்கும். வேறு சில இனங்களில் 32
- 36 நாட்களில் முட்டைகள் பொரித்
து விடுகின்றன.
18
பொதுவாக இரு பாற் பறவை களும் அடைகாப்பதிலும் குஞ்சு களுக்கு உணவூட்டுவதிலும் ஈடுபடு கின்றன. சில இனங்கள் அடைகாக் கும் காலத்தில் முற்றாக உணவு உட்கொள்ளாது விரதமிருப்பது வழக் கம். முட்டையிலிருந்து வெளிவரும் போது பென்குவின் குஞ்சுகளின் உடலைச் சூழ கருநரை நிறமான மென்னிறகுப் போர்வையொன்று காணப்படும். குஞ்சுகள் ஒரளவு விருத்தியடைந்த பின்னர் தனியான வளர்ப்பிடங்களில் வைக்கப்பட்டு உணவூட்டி வளர்க்கப்படுவதுண்டு. மென்னிறகுகள் முற்றாக உதிர்ந்து முதல் இறகுகள் வளர்ந்த பின்னர் குஞ்சுகள் தாமாக உணவு தேடி கடலுக்குச் சென்று விடுகின்றன.
பொதுவாக, ஏனைய பறவை யினங்களில் வருடந்தோறும் இறகு கள் படிப்படியாக உதிர்ந்துபோகப் புதிய இறகுகள் உருவாவதுண்டு. எனினும் பென்குவின்களில் குறுகிய காலத்தினுள் எல்லா இறகுகளும் குவியல் குவியலாக உதிர்ந்து போய் விடுகின்றன. இவ்வாறு இறகுதிர்க் கும் வேளைகளில் பென்குவின்கள் வீங்கிப் போனது போல் அலங் கோலமாகக் காட்சியளிக்கின்றன. பழைய இறகுகள் முற்றாக உதிர்ந்து புதிய இறகுகள் விருத்தியடையச் சில வாரங்கள் பிடிக்கும். இக்காலத் தில் பென்குவின்கள் இரைதேடி
நீருக்குள் செல்வதில்லை.
கடுங்குளிரைத் தாங்கக்கூடிய
உடலமைப்பைக் கொண்டிருப்பதே
பென்குவின்களின் விசேட சிறப் பியல்பாகும். தலை, கால்கள், இறக் கைகள் என்பன மிகச் சிறியனவாக இருப்பதனால் உடற் கனவளவோடு ஒப்பிடும் போது பென்குவினின் உடல் மேற்பரப்பளவு மிகச் சிறிய
அரும்பு-23

தடித்த
தாகும். இது உடலிலிருந்து வெப்ப இழப்பைக் குறைப்பதற்குப் பெரி தும் உதவுகின்றது. அத்தோடு பென் ಅ¶ தோலுக்குக் கீழே காழுப்புப் படையொன்றும் காணப்படுகின்றது. வெப்பத்தைக் காப்பதற்கு இதுவும் துணைபுரி கின்றது. Emperor பென்குவின்களே குளிரைத் தாங்குவதற்கு ஏற்ற இசை வாக்கங்களை அதிகளவில் கொண் டுள்ளன. அவை முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் பிரதேசத்தின் வெப்பநிலை -60°C ஐ விடவும் தாழ் வாக இருக்கும். وايي؟
உடலிலுள்ள கொழுப்புக்கா
கவும் தோலுக்காகவும் பென்குவின்
களை மனிதர்கள் கொல்வதுண்டு. எனினும் அந்தார்ட்டிக் பிரதேசத்தை
மனிதனால் எளிதில் அண்ட முடியா மல் இருப்பதனால் பென்குவின் குடித்தொகை பாதிக்கப் படாது பேணப்பட்டு வருகின்றது. நீர்நாய்
கள், திமிங்கிலங்கள் போன்றவையே
பென்குவின்களின் இயற்கை எதிரி களாக உள்ளன. Skua என்னும் பெரி ய கடற்பறவைகள் பென்குவின் முட் டைகளையும் குஞ்சுகளையும் பெரு மளவு கவர்ந்து சென்றுவிடுகின்றன.
(6) LIGăTGg56ớlaốT56ðir Sphenisciformes
என்ற வருணத்தைச் சேர்ந்தவை. King
பென்குவின்கள் Aptenodytes pata gonica எனவும் Emperor பென்குவின் கள் Aptenodytesforster எனவும் சிறு fỂGvi' (6) Lu GỗTg56î6ðré956řit Eudyptula mi107 எனவும் பாகுபடுத்தப்படுகின்
06õT.
ଗର୍ଭିtୱର0] ଐ(5ର)ର01!
கடும் வறுமையால் பாதிக்கப்பட்ட குடும்பமொன்று உணவின்றிப் பல நாட் கள் பட்டினியால் வாடியது. பசி பொறுக்க முடியாத அவர்கள் பாதையோரத்திலி ருந்த புல்லைப் பிடுங்கிச் சாப்பிடத் தொடங்கினர்.
அவ்வழியாகக் காரில் சென்றுகொண்டிருந்த பிரபல வழக்கறிஞரொருவர்
இக்காட்சியைக் கண்டார். காரை நிறுத்திவிட்டு அவர் அந்தக் குடும்பத்தினரிடம்
சென்று “ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள்?’ என்று வினவினார்.
“பல நாட்களாக உணவின்றி வாடுகிறோம். பசி பொறுக்க முடியாததனால் ந்தப் புல்லைச் சாப்பிடுகின்றோம்” என்றான் குடும்பத் தலைவன்.
"அப்படியா! நீங்கள் எல்லோரும் என் காரில் ஏறிக்கொள்ளுங்கள் என்
வீட்டுக்குப் போவோம்” என்றார் வழக்கறிஞர்.
எதிர்பாராது கிடைத்த அதிர்ஷ்டத்தை வியந்தவாறு அந்தக் குடும்பத்தினர் காரில் ஏறிக்கொண்டனர். கார் சற்று நேரத்தில் வழக்கறிஞரின் பெரிய பங்களாவை
அடைந்தது.
பட்டினிக் குடும்பத்தினரைக் கீழே இறங்கச் சொன்ன வழக்கறிஞர் "அதோ எனது பூந்தோப்பில் அளவுக்கு அதிகமாகப் புல் வளர்ந்திருக்கிறது. நீங்கள் அனை
வரும் அதனைச் சாப்பிடுங்கள்' என்றார்.
விற்பனை முகவர்கள் தேவை
அரும்பு இதழ்களை ஒழுங்காகப் பெற்றுக்கொள்ள முடியாதுள்ள பிரதேசங்களில் விற்பனை முகவர்களாகச் செயற்பட விரும்புவோர் ‘அரும்பு’ ஆசிரியருடன் தொடர்பு கொள்ளலாம். முகவர்களுக்கு 20% கழிவு வழங்கப்படும்.
அரும்பு- 23
19

Page 12
KSSN
O אצאאא&
இந்தியாவிலுள்ள மிகப் பெரி ய வர்த்தகக் கம்பனிகளின் ஒன்றிய LIDIT 35 TATA GROUP OF COMPANIES திகழ்கின்றது. இந்த வர்த்தக சாம் ராஜ்யத்தின் ஆரம்பகர்த்தாவாக இருந்தவர் ஜம்சேத்ஜி நஸர்வான்ஜி பாட்டா என்பவராவார். பார்ஸி மதகுருக்களின் குடும்பமொன்றைச் சேர்ந்த இவர் 1839 மார்ச் 3ம் திகதி நவ்ஸாரி என்ற இடத்தில் பிறந்தார்.
பம்பாயிலிருந்த எல்பின்ஸ்டன் கல்
லூரியில் கல்வி கற்ற பின் 1858இல் தனது தந்தையாரின் ஏற்றுமதி வியாபாரத்தில் இணைந்து கொண்
LIT fi .
வியாபாரத்தில் அதீத திறமை காட்டிய நஸர்வான்ஜி தனது தந்தை யின் வர்த்தகத்தைத் துரிதமாக வியா
பிக்கச் செய்ததோடு சீனாவின் சங் ஹாய் நகரிலும் ஒரு கிளையை ஆரம் பித்தார். உலகின் பல பகுதிகளுக்கும் விஜயம் செய்த அவர் வெற்றிகரமான வர்த்தகக் கோட்பாடுகள் பலவற்றை
அமுல்படுத்தினார். புதிய தொழில்
நுட்பங்களைப் பிரயோகித்தல், தொழிலாளருக்கு உகந்த வேலைச் சூழலை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களது சேமநலன்களில் அக்கறை செலுத்தல் என்பன அவரது கொள் கைகளில் பிரதானமானவையாக அமைந்திருந்தன.
1877இல் நாக்பூரில் நிறுவப் பட்ட Empress Mills என்ற பருத்தி ஆலை அவரது முதலாவது முக்கிய
தொழில் முயற்சியாக அமைந்தது.
பருத்தித் துணி உற்பத்தியில் பிரித்
D வர்த்தக சாம்ராஜ்யம்
தானியரோடு நேரடியாகப் போட் டியிட்ட அவர் 1886இல் ஸ்வதேஷி மில்ஸ் கம்பனி என்ற பருத்தி ஆலை யையும் ஆரம்பித்து வைத்தார். அன் றைய தேசிய விடுதலை இயக்கத் துக்கு அவர் காட்டிய ஆதரவை
இவ்வாலையின் பெயர் பிரதிபலித்து
நின்றது. 臀
பீஹார் மாநிலத்தில் ஸ்க்சி
N என்ற இடத்தில் நஸர்வான்ஜி டாட்
டா இரும்பு மற்றும் உருக்கு உற்பத் தித் தொழிற்சாலையொன்றை நிறு வினார். அதில் பணிபுரிந்த தொழி லாளர்களுக்காகத் தொழிற்சாலை
யின் சுற்றுப்புறத்தில் வீடுகளையும்
பாடசாலைகளையும் வைத்திய சாலையொன்றையும் அவர் அமைத் துக் கொடுத்தார். கிராமப் புறமாக இருந்த அப்பிரதேசம் இன்று ஜம்சேத்பூர் என்னும் இராட்சதக் கைத்தொழிற் பேட்டையாக மாறு வதற்கு டாட்டாவின் முயற்சிகளே
காரணமாக அமைந்தன.
மும்பாயில் தாஜ்மஹால் என் னும் புகழ்பெற்ற உல்லாசப் பயண ஹோட்டலை நிர்மாணித்து நடாத் திய அவர் மேற்கு காட்ஸ் மலைத் தொடரில் நீர் மின்னுற்பத்தி நிலைய மொன்றை அமைப்பதற்கும் நட வடிக்கை எடுத்தார்.
முழு இந்தியாவையும் நவீன கைத்தொழில் நாடொன்றாகக் கட்டி யெழுப்ப வேண்டும் என டாட்டா ஆவல் கொண்டிருந்தார். நாட்டின் கல்வி மற்றும் ஆராய்ச்சி வசதிகளை மேம்படுத்துவதன் மூலமே இத
20
அரும்பு- 23
 
 
 
 
 
 

னைச் சாதிக்க முடியும் என அவர் நம் பினார். நாட்டின் பல பகுதிகளிலும் பல்வேறு கல்வி நிறுவனங்களை அவர் உருவாக்கினார். எனினும்
விஞ்ஞான ஆய்வுகளுக்கான உயர்
கல்வி நிலையமொன்றை நிறுவ வேண்டுமென்ற அவரது ஆசை அவரது ஆயுளுக்குள் நிறைவேற்றப் பட முடியாமற் போயிற்று.
நஸர்வான்ஜி டாட்டா 1904 மே 19ம் திகதி ஜெர்மனியில் காலமா னார். அதன் பின்னர் அவரது புத்தி Ties#5GITT GOT Sir Dorabji Jamsetji Tata (1859 - 1932), Sir Ratanji Fata (1871 - 1918) ஆகியோர் தமது தந்தையின் வர்த்தக மற்றும் சமூக சேவை முயற் சிகளை விரிவுபடுத்தினார்கள். 19093)Gö LIBIJвођfiGov Indian Institute of Science 6TGöTip 9 - uLtii 356ö6ĵ7 [ś7gpJ வனத்தை நிறுவி அவர்கள் தமது தந் தையின் இலட்சியத்தை நிறை வேற்றி வைத்தனர். இந்நிறுவனம் இன்றும் தனித்துவமான ஓர் ஆய்வு நிலையமாக விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
ஜம்செத்ஜி டாட்டா, ரதன்ஜி டாட்டா ஆகிய ருவரும் பம் பாய்ப் பிரதேச நீர் மின்னுற்பத்திச் செயற்றிட்டத்தைப் பூர்த்தி செய்த தோடு தமது ஆரம்ப வர்த்தக நிறு வனங்களையெல்லாம் Tata Sons and Company என்ற பெயரின் கீழ் கொண்டு வந்தனர். அத்தோடு தமது கம்பனியின் கிளைகளை லண்டன், பரிஸ், நிவ்யோர்க், சங்ஹாய், கோ பே (ஜப்பான்) ஆகிய இடங்களிலும் உருவாக்கினர். இவர்களது காலத் @Giv Tata Iron and Steel Company இந்தியாவிலேயே மிகப் பெரிய தனி யார் இரும்பு, உருக்குத் தொழிற் சாலையாக மாறியது.
1932இல் ஜம்செத்ஜி டாட்டா வின் மறைவை அடுத்து கம்பனி
*ጥ'ጫነሡ, గిరి
, წ° 637/g,
ஸ்தாபகரின் சகோதரி மகன்க்லேர் நவ்ரோஜி சக்லத்வாலா என்பவர் டாட்டா கம்பனிகளின் தலைவராகப் பொறுப்பேற்றார். இவரது காலத் தில் Tata Airlines என்ற விமான சேவை நிறுவனம் உருவாக்கப்பட் டது. 1940இல் இதன் பெயர் Air India என மாற்றப்பட்டது. இந்நிறு வனமே 1953இல் அரசுடைமையாக் கப்பட்டு இன்றைய இந்தியன் எயார் லைன்ஸ், எயார் இந்தியா ஆகிய இரு கம்பனிகளும் உருவாக்கப்பட் டன. அரசுடைமையாக்கலின் பின் னரும் எயார் இந்தியா விமான சேவையின் முகாம்ை டாட்டா நிறு
வனத்திடமே ஒப்படைக்கப்பட் டிருந்தது குறிப்பிடத்தக்கது.
1938இல் சக்லத்வாலாவின்
மறைவையடுத்து ஜெஹாங்கிர் ரதன்ஜி தாதாபோய் டாட்டா (J.R.D. Tata) என்பவர் டாட்டா நிறுவனங் களின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். இவரே எயார் இந்தியா நிறு வனத்தின் ஸ்தாபகராகக் கருதப்படு கின்றார். 1938 முதல் 1993 வரை டாட் டா வர்த்தக சாம்ராஜ்யத்தின் தலை வராக இவர் திகழ்ந்தார். இவரது நிர்வாகக் காலத்தில் டாட்டா கம் பனிகளின் வர்த்தக முயற்சிகள் பலதரப்பட்ட துறைகளில் வியா பித்து வளரலாயின. 1993இல் இவ ரது மறைவின் பின்னர் அவரது மருமகன் ரத்தன் நவால் டாட்டா என்பவர் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
உருக்கு, துணிவகைகள், பஸ் கள், லொறிகள், ஜீப்கள், கார்கள், ரெயில் என்ஜின்கள், சீமெந்து, இரசா யனப் பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள், விவசாய உபகரணங் கள், தொலைத்தொடர்புச் சாதனங்
கள் போன்ற பல்வேறு உற்பத்திப்
பொருட்களை டாட்டா நிறுவனங்
அரும்பு-23
21

Page 13
。。。***
fire " . ""
கள் உற்பத்திசெய்து சந்தைப்படுத்து கின்றன. அத்தோடு ஐந்து நட்சத்திர ஹோட்டல் தொடர்களை நடாத்துவ தோடு மின்னுற்பத்தியிலும் அவை ஈடுபட்டுள்ளன. இந்த வகையில் இந்தியாவின் மிகப் பெரிய தனியார் உற்பத்தி நிறுவனமாக டாட்டா குரூப் திகழ்கின்றது. பெரும்பாலான டாட்டா தொழிற்சாலைகள் பீஹா ரில் உள்ள ஜம்சேத்பூர் நகரிலேயே
Tata Trust 6 TGörggyüD [5úd 323605 நிதியம் வைத்தியசாலைகளுக்கும் ஆய்வு நிறுவனங்களுக்கும் நிதியுதவி வழங்கி வருகின்றது. இந்நிதியத் தினால் நிறுவப்பட்ட அடிப்படை ஆய்வுக்கான டாட்டா நிறுவனம் (Tata Institute for Fundamental Research) இந்தியாவின் பொருளா தார, தொழில்நுட்ப வளர்ச்சிக்குப் பெருந்துணையாக விளங்கி வருகின்
அமைந்திருக்கின்றன. [DტI- ” ܓ ܬ
[IIIIÎLIfì(1ỹjh.jI?
தனக்குக் கிடைத்த அழைப்புக்கிணங்க தனது மகளின் வகுப்பாசிரியரைச் சந்திந்த ஒரு பெண், பாடங்களில் மகளின் முன்னேற்றம் எப்படியிருக்கிறது என ஆசிரியரிடம் கேட்டாள்.
“உங்கள் மகளுக்கு எல்லாவற்றிலும் ஒரே தடுமாற்றம்! கணிதப் புத்தகத்தில் ஒரு பயிற்சியைச் செய்துவரச் சொன்னால் இன்னொன்றைச் செய்து வருகிறாள். வகுப்பில் தனக்குரிய ஆசனத்தை விட்டு வேறொன்றில் அமர்கிறாள். திங்கட்கிழமை வரும்போது செவ்வாய்க்குரிய புத்தகங் களைக்கொண்டு வருகிறாள். இப்படிச் சின்னச் சின்ன விடயங்களிலெல்லாம் ஒரே குழப்பம் தான்’ என்று முறைப்பட்டார் ஆசிரியர்.
“ஐயோ! இது ஏன் என்று எனக்குப் புரியவில்லையே! இவள் யாரிட மிருந்து இந்தக் கோளாறைப் பெற்றுக் கொண்டாளோ?” எனத் தலையில் கையை வைத்தாள் அந்தத் தாய். *“
“மிஸிஸ் பீட்டர் இப்போது உங்களோடு அதிக நேரம் செலவழிக்க முடியாது. நான் உங்களை வியாழக்கிழமை தான் வரச் சொன்னேன். ஆனால் இன்று புதன்கிழமை வந்திருக்கிறீர்கள் எனக்கு வேறு வேலை இருக்கிறது.” என்று விடைபெற்றார் வகுப்பாசிரியர். 猕,
2
அது கோழைத்தனம்
தங்கள் திருமண வாழ்க்கையின் ஐம்பதாவது ஆண்டு நிறைவைக்
கொண்டாடிக் கொண்டிருந்தனர் ஒரு வயோதிபத் தம்பதியினர். அவர்களை வாழ்த்துவதற்கு வந்த நண்பர் ஒருவர் “இவ்வளவு நீண்ட மணவாழ்க்கையின் போது விவாகரத்துச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எப்போதாவது வந்ததுண்டா?’ என அந்தக் கணவரிடம் கேட்டார்.
“சே! அப்படிக் கோழைத்தனமான நினைப்பு வந்ததேயில்லை. ஆனால் கொலை செய்ய வேண்டும்’ என்ற எண்ணம் பலமுறை வந்திருக்கிறது” என்றார் அந்த வயோதிபர்.
22 ܢ ܥ அரும்பு- 23
 

மியூஸியத்துக்கு முன் a
ந்த வருடமும் எனது அமெரிக் கச்சுற்றுல்ாவை முடித்துக்கொண்டு நாடு திரும்பும் வழியில் லண்டன் மாநகரில் ஒரு வாரத்தைக் கழிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. சென்ற வருடம் லண்டனில் தங்கியிருந்த காலத்திற்குள் அங்குள்ள உலகப் புகழ்பெற்ற பிரிட்டிஷ் மியூஸியத் தையும் Kew Gardens என்னும் அரச தாவரவியற் பூங்காவையும் பார்ப்பதற்கு அவகாசம் கிடைக்காமற் போய்விட்டது. எனவே இந்தத் தடவை அவற்றை எப்படி யாவது பார்த்துவிட வேண்டும் எனத் திட்டமிட்டிருந்தேன்.
ஜூலை 8ம் திகதி ஞாயிற்றுக் கிழ மை காலையில் பிரிட்டிஷ் மியூஸியத் தைப் பார்க்கச் செல்வதற்கு லண்டனில் எனக்குப் புகலிடம் அளிக்கும் எனது நண் பர் பாரூக் ஏற்பாடு செய்திருந்தார். பாட சாலை விடுமுறை தினமாக அவரது பிள்ளைகளும் என்னோடு வந்
23- لفظ ترقی اردو
இருந்ததால்
தனர். மியூஸியத்தின் வாயிலடிக்கே எம் மைத் தமது காரில் கொண்டு போய் இறக்கினார் நண்பர். பிரித்தானியாவின்
தேசிய அரும்பொருட்காட்சிச் சாலை
யான பிரிட்டிஷ் மியூஸியம் லண்டனி லுள்ள புளூம்ஸ்பரி வட்டாரத்தில் Russel Street என்ற தெருவிலே அமைந்திருக் கின்றது.
பிரித்தானிய பாராளுமன்றத்தில் 1753ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்ட மூலம் ஒன்றினூடாக இந்த மியூஸியம் நிறுவப்பட்டிருக்கிறது. இதன் ஆரம்ப காலக் காட்சிப் பொருட்களாக Sir Hans Sloane, Robert Harley, Sir Robert Cotton ஆகிய மூவரின் தனிப்பட்ட சேகரிப்புக் களே உபயோகிக்கப்பட்டுள்ளன. 1759
இல் பொதுமக்களின் பார்வைக்காகத்
திறந்து வைக்கப்பட்ட இம்மியூஸியம் மொண்டேகு ஹவுஸ்’ என்ற கட்டடத் திலேயே அமைக்கப்பட்டிருந்தது.
பிரிட்டிஷ் மியூஸியத்தின் இப்போ துள்ள பிரதான கட்டடம் Sir Robert Smirke என்பவரால் வடிவமைக்கப்பட்டு மொண்டேகு ஹவுஸ் இருந்த இடத்தில் 1823-52 காலப்பிரிவில் கட்டிமுடிக்கப்பட் டுள்ளது. பிற்கால்த்தில் இக்கட்டடத்தில் பல மாற்றங்களும் இணைப்புக்களும் செய்யப்பட்டுள்ளன. மியூஸியத்தின் வட்ட வடிவான வாசிப்பறை 1850இல் கட்டப்பட்டது. செம்பினாலான குவி மாடத்தைக் கொண்ட இவ்வாசிப்பறை யில் கார்ல் மார்க்ஸ், வேர்ஜீனியா வுல்ப், தோமஸ் கார்லைல் போன்ற புகழ்பெற்ற மனிதர்களெல்லாம் நெடு நேரத்தைக் கழித்திருக்கின்றனர்.
இப்போது இந்த வாசிப்பறைக்கும் அதைச் சூழவுள்ள கட்டடங்களுக்கும் இடையிலுள்ள பகுதியின் மீது அழகான கண்ணாடிக் கூரையொன்று அமைக்கப் பட்டுள்ளது. இக்கூரை மியூஸியக் கட்ட டத் தொகுதிக்கு அலாதியான அழகைக் கொடுக்கின்றது. இக்கூரையை அமைக்
23

Page 14
கும் வேலை 1998 மார்ச்சில் ஆரம்பிக்
கப்பட்டு மிக அண்மைக் காலத்தில்தான் பூர்த்தியாகி இருக்கின்றது.
ஆரம்ப காலத்தில் பிரிட்டிஷ் மியூ ஸியத்தில் இயற்கை வரலாற்றோடு தொடர்புடைய (தாவரங்கள், விலங்கு கள், கணிப்பொருட்கள் சம்பந்தமான) காட்சிப் பொருட்களும் வைக்கப்பட் Lq (55,5637, 18819)Gö (3)606), South KenSington என்ற இடத்திலுள்ள புதிய கட் டடமொன்றுக்குக் கொண்டு செல்லப் Lil' (6) 9 ig Natural History Museum என்ற விசேட காட்சிக்கூடம் உருவாக்கப் பட்டது.
1973இல் இயற்றப்பட்ட பாராளு மன்றச் சட்டமூலமொன்றின்படி பிரிட் டிஷ் மியூஸியத்தின் நூலகம், வேறுபல நூல் திரட்டுக்களோடு ஒன்றிணைக்கப் பட்டு British Library என்ற பெருநூலகம் உருவாக்கப்பட்டது. எனினும் ஆதிகாலக் கையெழுத்துப் பிரதிகளும் புராதன நூற்
றெர் குதிகளும் இன்றும் மியூஸியத்திலே
யே பேணப்பட்டு வருகின்றன.
பிரிட்டிஷ் மியூஸியத்தைப் பார்ப் பதற்கு நுழைவுக் கட்டணம் எதுவும் அற விடப்படுவதில்லை. எனினும் “2 பவு ணுக்குக் குறையாமல் வழங்கி இந்நிறு வனத்தைப் பேணி நடாத்த உதவுங்கள்' என்ற வேண்டுகோளோடு கண்ணாடியா லான பெரிய ஊண்டியல் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இப்பெட்டிகளுக் குள் உலகின் பல தேச நாணயக் குற்றி
களும் நோட்டுகளும் பெருமளவில் சேர்ந்
திருப்பதைக் காணக்கூடியதாக இருந்தது. அவற்றுள் இலங்கை நாணயங்களும் கூட ਉDiB560
கண்காட்சிக் கூடங்கள் புவியியல்
அடிப்படையிலும் ஐரோப்பிய வரலாற்
றுக் கால அடிப்படையிலும் பிரிக்கப்பட்
டிருந்தன. முதலில் நாம் ஆசியப் பிரி
வினுள் நுழைந்தோம். இலங்கையி லிருந்து கொண்டுசெல்லப்பட்ட வெண்
கலச்சிற்பமொன்றே அங்கு முதலில் எம்
ஆட்சிக் காலத்தில் எல்லாவற்றையு
கண்களுக்குத் தென்பட்டது. இலங்கை, இந்தியா போன்ற நாடுகளின் பெறு மதிமிக்க கலைப் பொக்கிஷங்களைப்
பார்க்க வேண்டுமாயின் பிரிட்டிஷ்
மியூஸியத்துக்குத் தான் போக வேண்டும் என்பார்கள். அந்த அளவுக்கு அவர்களது
எடுத்துச் சென்றிருக்கிறார்கள்.
ஆசியப் பிரிவில் பெளத்த மற்றும் இந்து நாகரீகங்களோடு தொடர்புடைய சிற்பங்களும் கலைப் பொருட்களுமே பெருமளவில் காணப்பட்டன. சீனா, கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் அரும்பொருட்கள் வேறு கூடங்களில் தனியாக வைக்கப்பட்டிருந்தன. சீனா விலிருந்து பெறப்பட்ட பொருட்களுள் புராதன கண்ணாடிப் பாத்திரங்கள், பீங் கான் பொருட்கள் முதலியன முக்கிய இடம் பெற்றன.
ஜப்பான் பிரிவில் ஒரே ஓவியரி னால் வரையப்பட்ட பியூஜி மலையைச் சித்தரிக்கும் நூறு ஒவியங்கள் தொடராகக் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. ஒவ் வொரு பிரிவிலுமிருந்த எண்ணிலாக் காட்சிப் பொருட்களைப் பற்றி நுணுக் கமாக அறிந்துகொள்ள முற்பட்டால் ஒரு பிரிவைப் பார்த்து முடிக்கவே ஒரு நாள்
போதாமற் போகலாம். எனவே நுனிப்
புல் மேய்வது போல் முடிந்தளவு விரை வாக ஒரு பிரிவிலிருந்து இன்னொன் றுக்கு இடம்பெயரலானோம்.
எகிப்தியப் பிரிவே என்னுள் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியது. ஏனைய பகுதி களைவிட அங்குதான் சனநெரிசலும்
கூடுதலாக இருந்தது. பிரித்தானியர்கள் எகிப்தை ஆட்சி செய்த காலத்தில் அங்கி
ருந்த பெரும்பாலான அரும்பொருட் களைத் தூக்கி வந்து விட்டார்கள். இவற் றுள்Mummy எனப்படும் பதனிடப்பட்ட புராதன பிரேதங்கள் மிக முக்கியமான வை. பெருந்தொகையான மம்மிகளும் அவற்றைக் கொண்டிருந்த அழகான 。 அரும்பு- 23
 
 
 

செதுக்கு வேலை கொண்ட பிரேதப் பெட் டிகளும் அந்த மியூஸியத்தில் இருந்தன.
சில உடல்கள் பதனிடப்பட்டு ஒரு வகைப் புட்டையினால் முற்றாகச்சுற்றப் பட்ட நின்லயில் இருந்தன. அந்த உடல் களின் அமைப்புக்கள் வெளியே தெரி வதில்லை. அப்படியான ஒரு மம்மியை Scan செய்து அந்தப் படத்தை வைத்திருந் தனர். அது எலும்புக் கூட்டின் அமைப் பைத்தான் காட்டியது. இரண்டு பிரேதங் கள் முற்றாகத் திறந்த நிலையில் வைக் கப்பட்டிருந்தன. அவற்றிலொன்று முழு மையாக இருந்தது. கால்களை மடித்த வாறு உறங்கும் நிலையில் அது காணப் பட்டது. தசைகள் அழுகாமல் உலர்ந்து போயிருந்தன. உருவம் நன்றாகப் புலப் படக் கூடியவாறு முகம், கை, கால்கள் எல்லாம் சீராக இருந்தன. அது கி. மு. 3400ம் ஆண்டளவில் இறந்த ஒரு மனித னுடையது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. கடந்த 5400 வருடங்களாக அது சிதை யாமல் இருப்பது அக்கால எகிப்தியரின் அறிவு வல்லமையையே புலப்படுத் தியது. , ஐரோப்பியப் பகுதியில் கிரேக்க, ரோம கால அரும்பொருட்களும் பிந்திய காலப் பொருட்களும் பெருமளவில் இருந்தன. அவற்றின் விபரங்களையெல் லாம் வாசித்துப் புரிந்து கொள்வதற்குப் பொறுமையோ அவகாசமோ இருக்க வில்லை. ஏதேனுமொரு குறித்த வரலாற் றுப் பிரிவைப் பற்றி ஆராய்கிறவர்கள் தமக்குத் தேவையான பகுதியைப் போய்ப் பார்த்துக் குறிப்பெடுத்துக் கொள்வதைத் தவிர எல்லாப் பகுதி களையும் ஒரே தாவில் பார்த்து முடிப் பதில் அர்த்தமில்லை என்பதை உணர்ந்து கொண்டேன். அந்தளவுக்கு அந்த மியூஸி யம் விசாலமாகவும் அதன் விடயப் பரப்புக்கள் விரிந்தனவாகவும் இருந்தன.
ஆபிரிக்க, செவ்விந்தியப் பிரிவுகள் அவ்வளவுதூரம் கருத்தைக்கவர்வனவாக இருக்கவில்லை. தனியான இஸ்லாமிய கலைப் பிரிவொன்றும் இருந்தது. அதி லும் எம்மைப் போன்ற விடயம் சார்ந்த ஆர்வமெதுவும் இன்றிப் பொதுவாகப் பார்க்கவரும் பார்வையாளர்களுக்கெனப் பெரிதாக எதுவும் இருக்கவில்லை.
உலகிலே வேறெங்கும் காணக் கிடைக்காத பல அரும்பொருட்கள் இந்த மியூஸியத்திலே இருக்கின்றன. இவற் றுள் புராதன எகிப்திய உருவ எழுத்துக் களை வாசித்துப் புரிந்துகொள்ள உதவிய Rosetta Stone 6T6örp 56v, 2 st 616örp புராதன மெசப்பத்தேமிய நகரிலிருந்து கண்டெடுக்கப்பட்ட பொன், வெள்ளிக் கலைப் பொருட்கள், இங்கிலாந்திலே Sufolk என்ற பகுதியில் Sutton Hoo என்ற இடத்தில் அகழ்ந்தெடுக்கப்பட்ட7ம் நூற் றாண்டைச் சேர்ந்த கப்பற் புதைகுழியி லிருந்த பொருட்கள், பல்லேறு நாடுக ளின் புராதன நாணயங்கள் என்பன குறிப் பிடத்தக்கனவாகும்.
நாம் நடந்து களைத்துப் போன தால் மாலை நான்கு மணியாகியதும் மியூஸியத்தை விட்டு வெளியேறினோம். வெளியே வரும்போது, “நமது முன் னோர்களெல்லாம் இவ்வளவு திறமை சாலிகளாகவும் உழைப்பாளிகளாகவும் இருந்திருக்கிறார்களே' என்ற எண்ணம் தான் பொதுவாக என்னை ஆட்கொண் டிருந்தது. இல்லாவிடில், மின்சாரமில் லாத, பெற்றோலிய எரிபொருட்கள் இல்லாத, திருத்தமான அளவு கருவி களோ ஆயுதங்களோ இல்லாத அக்காலத் தில் அவர்கள் இப்படியான அற்புதக் கலைப் பொருட்களையெல்லாம் விகி தாசாரம் பேணிச் சமச்சீர் குலையாமல் எப்படிச் செய்திருக்க முடியும்? ய
Museum என்ற சொல் Mouseion என்ற கிரேக்க மொழிப் பதத்திலிருந்து உருவா கியுள்ளது. இதன் பொருள் Musesஇன் தேவாலயம்' என்பதே. Muses என்பவள் கலைகளுக்குப் பொறுப்பான ஆதி கிரேக்க தேவதையாவாள்.
23 - اطلازوییلاقی
25

Page 15
※
Gersissir
sign)f(i.e.
V7
VAIVANA VSV
டெ துருவத்தை அண்மிய, சாதாரண மனித வாழ்க்கைக்குச் சிறி தும் ஒத்துவராத, கடுங்குளிர்ப் பிர தேசங்களில் வாழும் ஒரு விசேட மக் கள் கூட்டத்தினரே எஸ்கிமோவர்கள் (Eskimos) என அழைக்கப்படுகின் றனர். கிரீன்லாந்து, வட அமெரிக் காவின் ஆர்க்டிக் பிரதேசம், ஸைபீ ரியாவின் வட கிழக்கு அந்தம் முத லிய பிரதேசங்களின் கரையோரப் பகுதிகளில் இந்த எஸ்கிமோவர்கள் வசிக்கின்றனர்.
1977இல் அலஸ்காவிலுள்ள Barrow என்ற இடத்தில் இடம் பெற்ற எஸ்கிமோ வர்களின் சுற்றுத் துருவ மாநாட்டில் Eskimo என்ற
பெயருக்குப் பதிலாக linuit (இனு
யிற்) என்ற பெயர் பயன்படுத்தப்பட வேண்டும் என உத்தியோகபூர்வ மாகத் தீர்மானிக்கப்பட்டது. எஸ் கிமோ மொழியில் Inuit என்பதன் பொருள் உண்மையான மக்கள்’ என்பதாகும். எனவே எஸ்கிமோவர் களை இனுயிற் என அழைப்பதே மிகப் பொருத்தமானதாகும். எனி னும் எஸ்கிமோ என்ற பெயர் இன் னும் பொது வழக்கில் இருப்பதால் இக்கட்டுரையில் நாமும் அதனையே பயன்படுத்தியுள்ளோம்.
வளர்ந்த எஸ்கிமோ வர்களின் சராசரி உயரம் 5 அடி 4 அங்குல மாகும். ஆர்க்டிக் பகுதியின் கால நிலைக்கு ஏற்றவாறு அவர்களது உடல் அனுசேபத் தொழிற்பாடு களும் சுற்றோட்டத் தொகுதியும்
26 -
(The Eskimos)
üzil
நன்கு சைவாக்கம் அன் டந்துள் ளன. இவர்கள் வாழும் பிரதேசம் சுமார் 5150 km தூரம் வரை வியாபித் திருப்பதனால் உலகிலே மிகவும். சனத்தொகை அடர்த்தி குறைந்த மக்கள் கூட்டத்தினராக வர்கள் கருதப்படுகின்றனர். வாழும் புவி யியற் பிரதேசத்துக்கு ஏற்ப எஸ்கி மோ வர்கள் எட்டுக் கூட்டத்தினரா கப் பிரிக்கப்படுகின்றனர்.
தொல்பொருள், மொழியியல் மற்றும் உடற்றொழிலியல் சான்று களின்படி எஸ்கிமோவர்கள் ஆசியக் கண்டத்திலிருந்து பெரிங் நீரிணை யினுாடாக வட அமெரிக்காவின் ஆர்க்டிக் பிரதேசங்களை அடைந்: திருப்பார்கள் என நம்பப்படுகின்றது. கி. மு. 2000ம் ஆண்டுக்கு முன்பே இக்குடிபெயர்வு இடம்பெற்றதற் கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
அமெரிக்கக் கண்டத்தில் வாழ்ந் த செவ்விந்திய ஆதிக் குடியினரே வடக்கு நோக்கி இடம்பெயர்ந்து எஸ்கிமோவர்களாக மாறியிருக்கின் றனர் என முன்னர் கருதப்பட்டது. எனினும் எஸ்கிமோ வர்களிடம் ஆசியர்களுக்குரிய உடலமைப்பே பெருமளவு காணப்படுகிறது. அவர் களது ஒப்பீட்டளவில் சிறியனவான கை, கால்கள் அவர்களைச் செவ்விந்” தியர்களிலிருந்து நன்கு வேறுபடுத் திக் காட்டுகின்றன. அத்தோடு எஸ் கிமோவர்களில் 'B' வகைக் குருதி யைக் கொண்டவர்கள் கணிசமான விகிதத்தில் காணப்படுகின்றனர்.
ட அரும்பு-23
 
 
 
 

23 - پلاژی sy
எனினும் செவ்விந்தியர்களின் பரம் பரைகளில் 'B' வகைக் குருதி அறவே காணப்படுவதில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கதாகும்.
ருபதாம் நூற்றாண்டின் இறு திப் பகுதிக் கணிப்பீட்டின்படி எஸ்
கிமோ இனத்தவர்களின் எண்ணிக் கை சுமார் 117,000 ஆக இருந்தது. இவர்களுள் சுமார் 51,000 பேர் கிரீன் லாந்து மற்றும் டென்மார்க் பிரதே சத்திலும் 43,000 பேர் அலஸ்காவிலும் 21,000 பேர் கனடாவிலும் 1,600 பேர் ஸைபீரியாவிலும் வாழ்ந்து வந்தனர்.
எஸ்கிமோவர்கள் வாழும் பிர
தேசங்களில் தாவரங்களைக் காண்
பது அரிது. எனவே அவர்களுக்குத் தானியங்களோ, காய்கறிகளோ, பழங்களோ உணவாகக் கிடைப் பதில்லை. தனியாக மீன்களையும், கடற் சிங்கம் (Seal), திமிங்கிலம், Wairus போன்ற விலங்குகளின் இறைச்சியையுமே அவர்கள் உண வாகக் கொள்கின்றனர். கோடை காலங்களில் Caribou என்னும் பணி மான்களை அம்பு-வில் கொண்டு வேட்டையாடி அவற்றின் இறைச் சியைப் புசிக்கின்றனர்.
இப்போது அயலிலில் வாழும் ஏனைய மக்களுடன் ஏற்பட்டுவரும் தொடர்புகள் காரணமாக வேறு வகை உணவுகளையும் அவர்கள் பெற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்பட் டுள்ளது. சில பகுதிகளில் வாழும் எஸ்கிமோ வர்கள் வேட்டையாடு வதற்காக இப்போது ரைபிள்களை யும் பயன்படுத்துகின்றனர்.
Seal என்னும் கடற் சிங்கங்களே எஸ்கிமோவர்களுக்கு மிகப் பயனுள் ளவையாகத் திகழ்கின்றன. அவற் றின் தோலினால் உடைகள், கூடாரங் கள், பாதணிகள், தோணிகள் முதலி யவை செய்யப்படுகின்றன. அவற்
றின் கொழுப்பு எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகின்றது.
எஸ்கிமோ வர்கள் நீரில் பிரயா ணம் செய்வதற்குத் தோலினாலான கயாக் (Kayak) என்னும் தனியாள் தோணிகளைப் பயன்படுத்துகின் றனர். கூட்டமாகச் செல்லும் போது உமியாக் (Uniak) என்னும் பெரிய படகுகள் உபயோகிக்கப்படுகின் றன. பனிபடர்ந்த தரையின் மீது பிரயாணம் செய்வதற்கு நாய்களி னால் இழுத்துச் செல்லப்படும் Dogsledge என்னும் சறுக்கு வண்டி களை அவர்கள் உபயோகிக்கின் றனர். தற்போது Snowmobiles என் னும் நவீன பனி வாகனங்களும் புழக் கத்துக்கு வந்திருக்கின்றன.
குளிர் காலத்தில், திமிங்கில எலும்புகளாலும் கற்களாலும் நிலத் தினுள் அமைக்கப்பட்ட வீடுகளில் இவர்கள் வசிக்கின்றனர். சில பிரதேசங்களில் பனிக்கட்டிகளால் நிர்மாணிக்கப்பட்ட அரைக் கோள வடிவான Igloo என்னும் வீடுகளில் அவர்கள் வாழ்கின்றனர். கோடை காலத்தில் விலங்குத் தோலினால் அமைக்கப்பட்ட கூடாரங்களே இதற்காகப் பயன்படுத்தப்படுகின் றன.
கடுங் குளிரிலிருந்து உடலைக்
காத்துக் கொள்வதற்காக எஸ்கிமோ
வர்கள் Caribou மான்களின் உரோமத் தினால் தயாரிக்கப்பட்ட ஆடை களை அணிகின்றனர். எஸ்கிமோ ஆண்களும் பெண்களும் நீர் புகாத தோல் சப்பாத்துக்களையும் இரட் டைப் படைகொண்ட கால்சட்டை களையும், தலைக் கவசத்துடன் கூடிய ரட்டைப் படை மேலங்கியையும் அணிவது வழக்கம். ஆடைகள் யாவும் தோலினாலும் உரோமங் களாலுமே செய்யப்படுகின்றன.
27

Page 16
lnupiaa, Yupik 2,6u LSJg T687 மொழிகளும் அவற்றின் பேதங் களும் எஸ்கிமோ வர்களிடையே வழக்கத்தில் உள்ளன. புவியியல் வேறுபாடுகளுக்கு ஏற்பப் பேசப் படும் மொழியும் வேறுபடுகின்றது. உலகிலுள்ள மொழிகளுள் கற்றுக் கொள்வதற்கு மிகவும் கஷ்டமான வையாகவும் மிகச் சிக்கலானவை யாகவும் இவை கருதப்படுகின்றன. Inupiaq Losbgyld Yupik G)LD/Tyflg56stab வளமான வாய்மொழி இலக்கியங் கள் காணப்படுகின்றன. கிரீன்லாந் தைச் சேர்ந்த சிலர் Inupiaq மொழி யில் நூல்களை எழுதியும் உள்ளனர். இம்மொழியில் முதலாவது நூல் 1742இல் வெளிவந்துள்ளது.
எஸ்கிமோ வர்களிடையே பூர் வீக மத நம்பிக்கைகளே இருக்கின் றன. சூழலிலுள்ள எல்லாப் பொருட் களுக்கும் ஆன்மா உண்டு என அவர் கள் நம்புகின்றனர். அவர்களுடைய சமயச் சடங்குகள், வேட்டையாடு தல் போன்ற அன்றாடத் தொழிற்
பாடுகளுடன் தொடர்புடையன
பகுதிகளில் வாழும் சில எஸ்கிமோ வர்கள் கிறிஸ்தவ மதத்தைத் தழுவி யுள்ளனர்.
குடும்பமே எஸ்கிமோவர்களின் முக்கிய சமூக அலகாக விளங்குகின் றது. தமது உறவினருக்கு உதவுவதற் குக் கடமைப்பட்டிருப்பதே சமூகத் தின் அடிப்படைச் சட்டமாக உள் ளது. வீடமைத்தல், வேட்டையாடு தல், மீன்பிடித்தல் என்பன ஆண் களின் கடமைகளாகக் கருதப்படுகின் றன. பெண்கள் உணவு சமைப்பதி லும், விலங்குகளின் தோலைப் பதனிடுவதிலும் ஆடை தயாரிப்பதி லும் ஈடுபடுகின்றனர்.
உலகில் துரிதமாக ஏற்பட்டு வரும் விஞ்ஞான தொழில்நுட்ப முன்னேற்றங்கள் எஸ்கிமோ வர் களின் வாழ்க்கை முறையிலும் தாக் கத்தை ஏற்படுத்தி வருவதால் அவர் களது உணவு முறை, வீடமைப்பு, ஆடையணிகள், போக்குவரத்து போன்றவற்றிலும் மாற்றங்கள் துரி தமாக ஏற்பட்டு வருவதைக் காணக்
வாகும். கனடா, அலஸ்கா போன்ற கூடியதாக உள்ளது.
என்ன செய்தீர்?
நூல் வெளியீட்டு விழா வொன்றிலே சிறப்புரை நிகழ்த்த வருமாறு அரைகுறைப் படிப்பாளியான ஓர் அரசியல்வாதி அழைக்கப்பட்டிருந்தார். தமக்கு வழங்கப்பட்டிருந்த 20 நிமிட அவகாசத்துக்கு ஏற்ற வகையில் பேச்சொன்றை எழுதித் தருமாறு அவர் தனது செயலாளரைப் பணித்தார். செயலாளரும் அவ்வாறே எழுதிக் கொடுத்தார்.
விழாவிலிருந்து வீடு திரும்பிய அரசியல்வாதி"நீர் என்ன கிறுக்கு வேலை செய்தீர்? நான் 20 நிமிடப் பேச்சுத்தானே எழுதிக் கேட்டேன். ஆனால், நீர் எழுதித் தந்த பேச்சைப் பேசி முடிய ஒரு மணித்தியாலம் பிடித்துவிட்டது. சபையோரில் முக்கால்வாசிப் பேர் இடையில் எழுந்து போய்விட்டனர். உம்மால் எனக்குப் பெரிய அவமானம்’ என்று செயலாளரின் மேல் எரிந்து விழுந்தார்.
“நீங்கள் சொன்னபடி 20 நிமிடப் பேச்சுத்தானே நான் எழுதினேன். அத்தோடு நீங்கள் கேட்டபடி இரண்டு மேலதிகப் பிரதிகளையும் வைத்திருந் தேனே' என்று பரிதாபமாகப் பதிலளித்தார் செயலாளர்.
28 அரும்பு-23

19ம் நூற்றாண்டின் தலைசிறந்த விஞ்ஞானி
ஸர். வில்லியம் தொம்ஸன்
(656 of it syl-Lord Kelvin)
நவீன பெளதிகவியலுக்கு அத்திவாரமிட்டுக் கொடுத்த விஞ் ஞானிகளுள் பிரிட்டிஷ் விஞ்ஞா னியான ஸர். வில்லியம் தொம்ஸன் முக்கியமான ஒருவராகக் கருதப்படு கின்றார். பொறியியற் துறைக்கும் பெளதிகவியலுக்கும் அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பிற்காக இங் கிலாந்தின் விக்டோரியா மகாராணி அவருக்கு Sir பட்டத்தை வழங்கி யதோடு பிரபுத்துவப் பதவியொன் றையும் கொடுத்தார். தனால் பிற்காலத்தில் அவர் Lord Kelvin (கெல்வின் பிரபு) என்ற கெளரவப் பட்டத்தினால் அழைக்கப்படலா
| 60TIT Π.
தொம்ஸன் 1824 ஜூன் 26ம் திகதி வட அயர்லாந்திலுள்ள பெல் பாஸ்ட் நகரில் பிறந்தார். அவரது தந்தை ஜேம்ஸ் தொம்ஸன் கணித பாட நூலாசிரியராக இருந்ததோடு பிற்காலத்தில் ஸ்கொட்லாந்திலுள்ள கிளஸ்கோ (Glasgow) பல்கலைக்
கழகத்தில் கணிதப் பேராசிரியரா.
கவும் பணியாற்றினார். இதன் கார ணமாக சிறு வயதிலேயே பெருமள வு நவீன கணித அறிவைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு வில்லியம் தொம்ஸனுக்குக் கிடைத்தது. அது வரை பிரிட்டிஷ் கல்லூரிகளின் கலைத்திட்டத்தில் சேர்க்கப்படாத நவீன கணிதக் கோட்பாடுகளை யெல்லாம் அவர்தம் தந்தையாரிடம்
கற்றுக் கொண்டிருந்தார்.
அவர் இதுபற்றி
தமது 10ம் வயதிலேயே கிளஸ் கோ பல்கலைக்கழகத்தில் சேர்ந்த தொம்ஸன் அங்கு மெட்ரிகுலேஷன் பரீட்சையில் சித்தியெய்தினார். அங்கு க்ல்வி கற்கும் போது Fourier 6 TGăTLu Guri 6 TQLpgSQL Analytical Theory of Heat (வெப்பம் பற்றிய பகுப்பாய் வுக் கொள்கை) என்ற நூலைப் படிக் கும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியது. திண்மங்களினூடாக வெப்பத்தின் பாய்ச்சலைப் பற்றிக் கணிதரீதியாகப் பகுப்பாய்வு செய்யும் அக்கொள்கை அக்கால பிரிட்டிஷ் விஞ்ஞானிகளின்
கண்டனத்துக்குள்ளாகி இருந்தது.
இக்கொள்கையை ஆதரித்த தொம் ஸன் அதனை வெப்பத்துக்கு மட்டு மன்றி ஏனைய சக்தி வகைகளுக்கும் பிரயோகிக்க முடியும் என நம்பி னார். தனது 16வது 17வது வயதுகளில் இரண்டு ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டார்.
அதற்கு முன்னர் தனது 15வது வயதில் அவர் எழுதிய “பூமியின்
வடிவம் பற்றிய ஒரு கட்டுரை” என்ற
ஆய்வுக் கட்டுரைக்கு கிளாஸ்கோ பல்கலைக்கழகம் அவருக்கு தங்கப் பதக்கமொன்றை வழங்கிக் கெளர வித்தது. தொம்ஸனின் அபார கணி தத் திறமையைப் புலப்படுத்திய அக்கட்டுரை அவரது இறுதிக் காலம் வரை அவருக்குப் புத்துணர்வையும் ஊக்கத்தையும் ஊட்டி வந்ததாகச் சொல்லப்படுகின்றது.
அரும்பு-23 -
29

Page 17
தனது 17வது வயதில் கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெற்ற தொம்ஸன் நான்கு வருடக் கற்கையின் பின்னர் உயர் கெளர வங்களோடு பட்டப் பரீட்சையில் சித்தி பெற்றார். 1845இல் பரிஸ் நகருக்குச் சென்ற அவர் Henri-Victor Regnault என்ற புகழ்பெற்ற விஞ் ஞானியின் ஆய்வுகூடத்தில் ஆய்வுச் செய்முறைகள் பற்றிய திறமைகளை யும் அனுபவத்தையும் பெற்றுக் கொண்டார்.
1846இல் கிளாஸ்கோ பல்கலை கழகத்தின் பெளதிகவியல் பேராசிரி யர் பதவி வெற்றிடமான போது
தொம்ஸன் தமது 22வது வயதில் அப்
பதவிக்கு ஏகமனதாகத் தெரிவு செய் யப்பட்டார். 1899ம் ஆண்டில் அப் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்யும் வரை அவர் 53 வருடங்கள் தொடர்ச்சியாகப் பெளதிகவியற்று றைத் தலைவராகப் பணிபுரிந்தார்.
சடப்பொருள், சக்தி என்பன பற்றி வெளியிடப்பட்டுள்ள அனைத் துக் கொள்கைகளும் ஓர் ஒன்றித்த
(6)5IT Girgo),560)u (unified theory) Gibstd;
கியே குவிகின்றன எனத் தொம்ஸன் உறுதியாக நம்பினார். இயக்கமும் வெப்பமும் ஒன்று இன்னொன்றாய் மாற்றப்படக் கூடியவை என்ற (6)576TaO)560u James Prescott Joule (யூல்) என்பவர் அக்காலத்தில் வெளி யிட்டிருந்தார். வெப்பம் பற்றிய அக் கால அறிவுக்கு முரணாய் அமைந்த
க்கொள்கைக்கு ஆதரவாக 1851
ல் தொம்ஸன் வெளியிட்ட கணித ரீதியான பகுப்பாய்வு யூலின் கொள் கைக்குப் பொது அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுத்தது. வெப்பவியக் கவியல் பற்றிய இரண்டாவது விதி (2nd Law of Thermodynamics) தொடர்பான தொம்ஸனின் கருத்
30
துக்கள் இக்கட்டுரையிலேயே இடம் பெற்றிருந்தன.
மின்னியல், காந்தவியல் என் பன பற்றிய தொம்ஸனின் ஆய்வுகள் அவரது கேம்பிரிஜ் மாணவ காலத் திலேயே இடம்பெற்றன. இவற்றின் அடிப்படையிலேயே பிற்காலத்தில் James Clerk Maxwell (LDj6iv(6)6) u Giv) ஒளி பற்றிய தமது மின்காந்தக் கொள் 603560) uLu (electromagnetic theory of 1ight) முன்வைத்தார். 19ம் நூற் றாண்டு விஞ்ஞானத் துறையின் மிக முக்கியமான சாதனையொன்றாகக் கருதப்படும் இக்கொள்கைக்கு தொம்ஸனின் ஆய்வுகளே அத்திவார மிட்டுக் கொடுத்தன. இதனை மக்ஸ் வெல் ஒப்புக் கொண்டதோடு தொம் ஸனைத் தனது குருவாகவும் போற்ற லானார்.
19ம் நூற்றாண்டின் விஞ்ஞான வளர்ச்சிக்குத் தொம்ஸன் செய்த பங்களிப்புக்கள் பலவாகும். மைக்
கல் பரடே, Fourier, யூல் போன்
றோரின் விஞ்ஞானக் கருத்துக் களுக்கு அவர் உறுதியூட்டி அவற்றை மேம்படுத்தினார். திண்மங்களில் வெப்பத்தின் பாய்ச்சலையும் கடத் திகளில் மின்னின் ஓட்டத்தையும் கணித முறையில் ஒப்பீடு செய்யும் முறையை அவரே ஆரம்பித்து வைத் தார். தனிவெப்பநிலை அளவுத்திட் LjGog, (absolute temperature scale) அறிமுகப்படுத்திய பெருமையும் அவரையே சாரும். எனவேதான் தனிவெப்பநிலைக்குரிய அலகுக்கு Kelvin (குறியீடு K) என்ற அவரது கெளரவப் பெயர் இடப்பட்டுள்ளது.
மின்னியல், காந்தவியல், வெப் பவியக்கவியல், நீரியக்கவியல் ஆகிய துறைகளில் மட்டுமன்றி புவிப் பெளதிகவியலிலும் அவர் பல ஆய்வு களைச் செய்துள்ளார். புவியின் வடி
அரும்பு- 23

வம், கடல் மட்டத்தின் ஏற்றத்தாழ் வுகள், வளிமண்டல மின்னியல், புவிவெப்பம், புவிச் சுற்றுகை, புவிக் காந்தவியல் போன்றன அவரது கவனத்ண்த ஈர்த்திருந்த சில விட யங்களாகும். புவியினதும் அதி
லுள்ள உயிரினங்களினதும் தோற்றம்
பற்றிய சார்ள்ஸ் டார்வினின் கோட் பாட்டை தொம்ஸன் எதிர்த்து நின் றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. உல கில் முதன் முதலாக மின்விளக் கினால் ஒளிபெற்ற வீடு தொம்ஸ்
னுடையதே என்றும் கூறப்படுகின்
ܕܝܼܠ இங்கிலாந்துக்கும் வட அமெ ரிக்காவுக்கும் இடையில் அத்திலாந் திக் சமுத்திரத்துக்கு அடியால் 3000 மைல் நீளமான தந்திக் கேபிளைப் பொருத்தும் பணியில் பிரதான ஆலோசகராக தொம்ஸன் பணியாற் றினார். இப்பணிக்காக அவர் கண்டு பிடித்த ஆடி கல்வனோமானி(Mirror Galvanometer) அக்காலத் தொலைத் தொடர்புத் துறையில் இன்றியமை யாச் சாதனமாக அமைந்தது. அவரது இப்பணிக்காகவே விக்டோரியா மகாராணி அவருக்கு 1866இல் Sir பட்டத்தை வழங்கினார்.
தொம்ஸனின் பெயருக்குப் பின்னால் இருந்த அளவுக்குப் பட் டம் பதவிகள் பிரிட்டிஷ் பொது நலவாயத்தில் வேறு எவருக்கும் இருந்ததில்லை. உலகெங்கிலுமுள்ள பல்கலைக்கழகங்களும், அறிவியற் கழகங்களும் அவருக்குப் பெருந் தொகையான கெளரவப் பட்டங்
றது
களை வாரி வழங்கின. 1851 g) Gö
லண்டன் ரோயல் சொஸைட்டியின் உறுப்பினராகத் தெரிவு செய்யப் பட்ட அவர் 1890 முதல் 1895 வரை அதன் தலைவராகவும் இருந்தார்.
அரும்பு- 23
சுமார் 600க்கு மேற்பட்ட ஆய் வுக் கட்டுரைகளை எழுதிய வில் லியம் தொம்ஸன் தனது பல கண்டு
பிடிப்புக்களை பேட்டன்ற் என்னும்
ஆக்கவுரிமைப் பதிவு செய்திருந்தார்.
அத்தோடு தான் கண்டுபிடித்த மின்
கருவிகளை உற்பத்தி செய்து சந்தைப் LIG)ggagsibast 5 Kelvin & White என்ற கம்பனியையும் நிறுவினார். பெரும் செல்வந்தராகத் திகழ்ந்த зу олађеће 18929)ob Baron Kelvin என்ற உயர் பதவிநாமம் வழங்கப் L-iġbli
வில்லியம் தொம்ஸன் 1907 டிஸம்பர் 17ம் திகதி தமது ஸ்கொட் லாந்து இல்லத்தில் காலமானார். அவரது பூதவுடல் லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் மாளிகையில் ஸர் ஐஸக் நியூட்டனின் கல்லறைக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
31.
冲

Page 18
MiG
G III fi விமானங்கள்
சென்ற ஜூலை மாதத்தில் கட்டுநாயக்க விமான நிலையம் தாக்கப்பட்டபோது இலங்கை விமா னப்படையின் MiG-27வகையைச் சேர்ந்த சக்திவாய்ந்த போர் விமான மொன்றும் அழிந்து போனதை வாசகர்கள் அறிந்திருப்பீர்கள். MiG குடும்பத்தைச் சேர்ந்த போர் விமா னங்களைப் பற்றிய விளக்கமொன்
றைத் தருகின்றது இக்கட்டுரை.
ன்னை நாள் சோவியத் gụ6öfìu65) Görở Gổgiị59, Artem Mikoyan, Mikhail Gurevich ஆகிய இரு பொறி யியலாளர்கள் இணைந்து போர் விமானங்களை வடிவமைப்பதற் கான நிறுவனமொன்றை 1939இல் உருவாக்கினர். இந்நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டு உற்பத்தி செய் யப்பட்ட போர் விமானங்களேMiG என்ற பெயரால் அழைக்கப்படுகின் றன. இங்கு M எழுத்து Mikoyan என்பதையும் G எழுத்து Gurevich என்பதையும் குறிக்கின்றது. சிறிய i எழுத்து ரஷ்ய மொழியில் and என்பதைக் குறிக்கின்றது. எனவே Mikoyan and Gurevich GTGöTLg,6ổT சுருக்க வடிவமே MiG ஆகும்.
ஆரம்ப காலMiG விமானங்கள் Propeller என்னும் உந்து சுழலிகளைக் கொண்டு இயங்கின. இவை இரண் ட்ரம் உலகப் போரில் கணிசமான அTெவு
32
உபயோகிக்கப்பட்டன. 1946இல் முதன்முதலாகப் பறக்க
MiG-15
விடப்பட்ட MiG-9 ஜெட் என்ஜின் களைக் கொண்டிருந்தது. எனினும் 1947இல் வெளிவந்த MiG-15 விமா னம் ஜெட் வகைச் சண்டை விமா னங்களுள் சிறந்ததொன்றாகக் கருதப் பட்டது. தனி என்ஜினையும் ஒற்றை ஆசனத்தையும் கொண்ட இவ்விமா னம் கொரியப் போரின் போது பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. 1971இல் ஜே. வீ. பீ. கிளர்ச்சி ஏற்பட் டபோது இலங்கை விமானப் படை யும் சில MiG-15 விமானங்களைப் பெற்றுக்கொண்டது குறிப்பிடத் தக்கது.
MiG-15 இன் மேம்படுத்தப் பட்ட வடிவமானMiG-171960களில் வியட்னாம் போரின்போது வட
வியட்னாமினால் பயன்படுத்தப்
பட்டது. அத்தோடு 1967ம் ஆண்டு அரபு-இஸ்ரேலிய யுத்தத்தின் போது சண்டை மற்றும் குண்டு வீச்சு விமா னமாக இதனை எகிப்தும் சிரியாவும் பயன்படுத்தின.
இரண்டு ஜெட் என்ஜின்களைக் கொண்ட MiG-19 ஐரோப்பாவில் உற்பத்தி செய்யப்பட்ட முதலாவது
மிகையொலி (Supersonic) சண்டை
விமானமாகும். அதனையடுத்து வெளிவந்தMiG-21 தனி என்ஜினைக் கொண்டிருந்த போதிலும் நிறை குறைந்ததாக இருந்ததால் ஒலியை விட இரண்டு மடங்கு வேகத்தில் பறக்கக்கூடியதாக இருந்தது. எளி மையான வடிவம், குறைந்த பரா மரிப்புச் செலவு, லகுவான
அரும்பு-23
 

கையாள்கை, வசதிகளற்ற விமானத் தளங்களிலிருந்து செயற்படும் திறன் போன்ற சிறப்பியல்புகள் காரண மாக MiG-21 புகழ்பெற்ற சண்டை விமானமாகத் திகழ்ந்தது. 1970களில் அரபு நாடுகளின் விமானப் படை களின் முதுகெலும்பாக MiG-21 விமானங்களே அமைந்திருந்தன.
1972இல் அறிமுகப்படுத்தப்
பட்ட MiG-23, சபல்வேறு உயரங்
களிலும் வேகங்களிலும் சிறப்பாகச்
செயற்படக்கூடியதாக இருந்தது. மிக
நுணுக்கமான இலக்ட்ரோனிக் உணர் கருவிகள் இதில் பொருத்தப்பட் டிருந்தன. மிகத் தொலைவிலுள்ள எதிரி விமானங்களைக் கண்டறிந்து தாக்கக் கூடியனவாக இவை இருந் தன. வானிலிருந்து தரையைத் தாக் குவதற்கு ஏற்ற வகையில் மாற்றி யமைக்கப்பட்ட MiG-23இன் வடி வமே MiG-27 ஆகும். கூடுதலான ஆயுதங்களைக் கொண்டு செல்லக் கூடியதாக இது வடிவமைக்கப்பட் டுள்ளது.
1970களில் சேவைக்கு வந்த MiG-25 வகை சுமார் 80,000 அடி (24 km) உயரத்தில் ஒலியைவிட 2.7 - 2.8 மடங்கு அதிகமான வேகத்தில் பறக் கும் ஆற்றலைக் கொண்டிருந்தது. சேவையிலுள்ள வேறு எந்தவொரு விமான வகையும் வேகத்தில் MiG25ஐ விஞ்ச முடியவில்லை. ஆகக் கூடிய உயரத்தில் பறந்த விமானம் என்ற சாதனையையும் இந்த வகை விமானமொன்றே நிகழ்த்தியுள்ளது. குறைந்த வேகத்தில் குறைந்த உயரத்தில் செயற்படக்கூடியதாக மாற்றியமைக்கப்பட்டMiG-25 இன்
με
տ ծ"visio
"'Allot
வடிவமே 1983இல் அறிமுகப்படுத் தப்பட்ட MiG-31 ஆகும். இரண்டு ஆசனங்களைக்கொண்ட இவ்வகை, எதிரி விமானங்களை வழிமறித்துத் தாக்குவதற்கு உபயோகிக்கப்படு கின்றது.
1985இல் சேவைக்கு வந்த இரட்டை என்ஜின் கொண்ட தனி ஆசன விமானமானMiG-29 வானில் சண்டையிடுவதற்கும் தரைத் தாக் குதலுக்கும் ஏற்றதாகத் தயாரிக்கப் Lullʻ (6) 6íT6Tg5I. MiG-23, MiG-25 வகைகள் தவிர்ந்த ஏனைய MiG வடிவங்கள் சோவியத் யூனியனுக்கு வெளியே சீனா, போலந்து, செக் கோஸ்லோ வாக்கியா, இந்தியா போன்ற நாடுகளிலும் உற்பத்தி செய்யப்பட்டன. கு
மூளைக்கு வேலை (விடைகள்)
(1) 4 (2) 28/= 25 )3( ܗ குஞ்சுகள் (4) 10 நிமிடம் (5) 22 பேர் (6) 20 செக்கன் (7) 5/- (guit îůty: Rawsan) 33 23 - بافارقاوى

Page 19
****
';് ess." :
பிரயாண நினைவுகள்
భ?
July
சிகாகோவின் ஒஹெயா (OHare) விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட அமெரிக்கன் எயார்லைன்ஸ் ஜெட் விமா னம் லொஸ் ஏஞ்ஜலிஸ் நகரைச் சென்ற டைவதற்கு நான்கு மணித்தியாலங் களுக்கு மேல் பிடித்தது. இரு நகரங் களுக்கும் இடையிலான மூன்று மணித் தியால நேர வித்தியாசமும் பிரயாணக் காலமும் சேர்ந்து ஏதோ இன்னொரு
நாட்டுக்குத்தான் போகிறோமோ என்று
எண்ணத் தோன்றியது.
சென்ற தடவை லொஸ் ஏஞ்ஜ லிஸில் தங்கியிருந்த போது பார்க்கத் தவறிய சில இடங்களை இந்தத் தடவை பார்த்துவிட வேண்டும் எனத் திட்டமிட் டிருந்தேன். அத்தோடு அமெரிக்கா 65gy6irat International Ventilator Users Network (IVUN) 6Taip sip GIGOTib (6616i யிடும் செய்திமடலின் ஆசிரினியயான Judith Fischer என்பவரையும் நான் அங்கு சந்திப்பதற்கு ஏற்பாடாகியிருந்தது. நோயுற்றிருக்கும் எனது மகனுக்காகVentilator என்னும் சுவாசத் துணைக் கருவி யொன்றைப் பெற்றுக்கொள்ள நான் இலங்கையில் மேற்கொண்ட போராட் டம் பற்றிய எனது கட்டுரையொன்றை அச்செய்தி மடல் ஏற்கனவே பிரசுரித்திருந் தது. நான் லொஸ் ஏஞ்ஜலிஸ் வருவதாகச் சொன்னதும் என்னை வந்து சந்திப்பதாக Judithஅறிவித்திருந்தார்.
லொஸ் ஏஞ்ஜலிஸில் எனக்குத் தங் குமிட வசதி தருபவர் என்னோடு ஒன் றாய்ப் படித்த எனது ஊர்நண்பரொருவர். அவரும் மனைவியும் நகரின் சுற்றுப்
34
சில நாட்கள். ရွှို%§Zနွို
*初澤
IV 7.N. புறத்தில் வீடொன்றை வாடகைக்கு எடுத் துத் தனியே வாழ்கின்றனர். எனக்கு வசதி யாக ஜூலை 4ம் திகதி அமெரிக்க சுதந்திர தினத்தோடு வார இறுதியையும் சேர்த்து நண்பர் விடுமுறை பெற்றிருந்தார். என வே அவரோடு முக்கியமான சில இடங் களைத் தரிசிப்பதற்கு நல்ல வாய்ப்புக் கிடைத்தது.
முதல் நிகழ்ச்சியாக அமெரிக்கச் சினிமா உலகின் தலைநகரான ஹொலி வுட் விஜயம் அமைந்தது. அங்குள்ள யுனி வர்ஸல் ஸ்டுடியோவின் காட்சிகூடங் களில் நான் பெற்ற அனுபவங்கள் பற்றி “யுனிவர்ஸல் ஸ்டுடியோவில் ஒரு நாள்' என்ற தலைப்பில் ஏற்கனவே எழுதி விட்டேன். லொஸ் ஏஞ்ஜலிஸுக்கு விஜ யம் செய்யும் எவரும் நிச்சயமாகப் பார்த்து மகிழக்கூடிய ஓர் இடமாக அது அமைந்திருக்கிறது. இப்போது ஜப்பா னிலும் அப்படியானTheme Park ஒன்றை யுனிவர்ஸல் ஸ்டுடியோ நிறுவனத்தினர் அமைத்திருக்கின்றனர்.
அடுத்ததாக Getty Center என்ற நிறு வனத்துக்கு நண்பர் என்னை அழைத்துச் சென்றார். லொஸ் ஏஞ்ஜலிஸில் கம்பி யூட்டர் நிபுணராக வேலை செய்யும் ஒரு சிங்கள நண்பரும் எம்மோடு சேர்ந்து @g5T GITLIT iii. Jean Paul Getty (1892-1976) என்பவர் ஒரு காலத்தில் உலகின் மிகப் பெரிய பணக்காரராக இருந்தவர். பெற் றோலிய எண்ணெய்க் கம்பனி உரிமை யாளர். தமது சொத்தில் பெரும்பகுதி யைச் செலவு செய்து உலகெங்கிலும் இருந்து அரிய கலைப் பொக்கிஷங்களை
23 - كفارقي روى
 
 
 
 
 
 

ஆயிரக் கணக்கில் சேகரிப்பதே அவரது பொழுதுபோக்காக இருந்திருக்கின்றது.
அவரது நினைவாக அமைக்கப் பட்ட அற்புதமான கலைக் கண்காட்சிக் கூடமே eேty Center. நகரிலிருந்து ஒதுக் குப் புறமான குன்றொன்றின் மீது நிர் மாணிக்கப்பட்டுள்ள இந்நிலையத்தை அடைவதற்கென விசேடமான funicular railway எனப்படும் இரட்டை ரயில் சேவை உண்டு. இந்த வகை ரயில் சேவை யில் உருக்குக் கேபிள்களால் பிணைக்கப்
பட்ட என்ஜினற்ற இரண்டு ரயில் வண்
டிகள் ஒரே நேரத்தில் இயங்குகின்றன. ஒரு வண்டி குன்றுக்கு மேலே ஏறும் போது அடுத்த வண்டி கீழே இறங்கும். ஏறிய வண்டி கீழே இறங்கும் போது மற்றது மேலே ஏறும். ஓரிடத்தில் நிலை யாக அமைக்கப்பட்ட என்ஜின் அல்லது மின் மோட்டர், வண்டிகளை ஒரே நேரத்தில் இயக்குகின்றது. சிறு குன்றுகளுக்கு ஏறி இறங்கப் பயன்படும் இத்தகையfunicular railway அமெரிக்கா விலும் ஐரோப்பாவிலும் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றது.
Getty Center கண்காட்சிக்கூடத்தின் சுவர்கள் யாவும் இத்தாலியிலிருந்து விசேடமாகத் தருவிக்கப்பட்ட சலவைக் கற்களால் ஆக்கப்பட்டிருந்தன. அக்கற் களைக் கொண்டுவருவதற்கு நூறு கப்பல் பிரயாணங்கள் மேற்கொள்ளப்பட்ட தாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெறப் பட்ட அரிய சிற்பங்கள், ஒவியங்கள், நுண் கலைப் பொருட்கள் முதலியன அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. கூரை யினூடாகப் பரந்து வரும் சூரிய ஒளியைக் கொண்டே காட்சிப் பொருட்கள் ஒளியூட்
டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்க ஓர்
அம்சமாகும்.
கட்டடத் தொகுதியைச் சுற்றிவர அழகான பூந்தோட்டமொன்று அமைக்
கப்பட்டிருந்தது. செயற்கையாக அமைக்
கப்பட்ட நீரோடையொன்றில் நீர் கீழ்நோக்கிப் பாய்ந்துகொண்டே இருந் தது. நீரின் பாதையில் வித்தியாசமான பருமனும் அமைப்புமுடைய கற்பாறை கள் திட்டமிட்ட முறையில் வைக்கப்பட் டிருந்தன. இப்பாறைகளில் தொடர்ச்சி யாக நீர் அருவிமோதும் போது மென்னி சையொன்று தோன்றும் வகையில் இவ் வமைப்பு நிர்மாணிக்கப்பட்டிருந்தது.
அன்று அமெரிக்காவின் சுதந்திர தினமாக இருந்ததால் பெருந்தொகையா னவர்கள் Getty Centerக்கு வருகை தந் திருந்தனர். உணவகமொன்றும் அங்கிருந் ததால் பசியையும் ஓரளவு தணித்துக் கொள்ளக்கூடியதாக இருந்தது. நாம் . உணவருந்திக் கொண்டிருக்கும்போது வானிலே ஐந்தாறு ஜெட் விமானங்கள் இரைச்சலுடன் சென்று மறைந்தன. அவற் றின் பின்னால் பல வண்ணப் புகையினா GJIT GT GREETINGS GTaip GJIT pjg| வானில் பெரிய எழுத்துக்களில் தோன்றி நீண்ட நேரம் நிலைத்து மெதுவாய் அழிந்து மறைந்தது.
அன்று மாலையில் சுதந்திர தின விழா வானவேடிக்கைகளைக் கண்டு களிப்பதற்காக நண்பர் என்னை அழைத் துச் சென்றார். எனினும் நாம் தாமதமாகிச் சென்றதனால் நிகழ்ச்சிகள் முடிவுற்று மக்கள் திரும்பிக்கொண்டிருந்தனர். என வே அந்த வாகன நெரிசலில் மாட்டிக் கொண்டு விடுவோமோ எனப் பயந்து உடனே வீடு திரும்பிவிட்டோம்.
மறுநாள் ஜூடித் என்னைத் தேடிக் கொண்டு நண்பரின் வீட்டுக்கு வந்து சேர்ந்தார். இதற்கு முன்னர் தொலைபேசி யிலும் ஈமெயில் மூலமும் தொடர்பு கொண்டிருந்த போதிலும் அன்றுதான் நேரடியாகச் சந்தித்துக் கொண்டோம். தனது வாழ்க்கையைப் பொதுப் பணிக் காக அர்ப்பணித்துக்கொண்ட பெண் அவர். இலங்கையிலுள்ள சுகாதார வசதிகள் பற்றி ஆர்வத்தோடு வின
35
அரும்பு- 23

Page 20
வினார். சுமார் ஒரு மணிநேரம் உரை யாடிய பின்னர் விடைபெற்றுச் சென்றார்.
இன்னொரு நாள் மாலையில் அண்மையிலிருந்த விண்வெளி அவதான நிலையத்துக்கு(observatory) நண்பரோடு சென்றேன். அங்குள்ள பெரிய தொலை காட்டியினூடாக உடுத்தொகுதிகளை அவதானிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
விண்வெளி பற்றிய நல்ல விளக்கத்தை
வழங்கும் நிரந்தரக் கண்காட்சியொன்றும் அங்கிருந்தது. மாணவர்களுக்கு மிகவும் பிரயோசனமளிக்கக்கூடிய வகையிலேயே அமெரிக்கர்கள் எல்லாக் கண்காட்சி களையும் ஒழுங்கு செய்கின்றனர். எமது மாணவர்களுக்கு இப்படியான வாய்ப் புக்கள் இல்லையே என்பதை நினைக்க மனவருத்தமாக இருந்தது. அங்கிருந்த கோள்மண்டலத்திலும் காட்சியொன் றைக் கண்டுகளித்தோம். புவியில் வாழ்ந் த டைனஸோர்கள் எப்படி அழிந்து போயிருக்கலாம் என்பதை விளக்கும் நிகழ்ச்சியொன்றைக் காட்டினார்கள்.
இவ்வாறு லொஸ் ஏஞ்ஜலிஸில் ஒரு வாரம் விறுவிறுப்பாகக் கழிந்தது.
அங்கிருந்து லண்டன் நோக்கிச் செல்ல வேண்டிய மிக நீண்ட விமானப் பயணத் தை நினைக்கும் போதே மனம் களைப் படைந்தது. எனினும் திட்டமிட்டபடி அமெரிக்கன் எயார்லைன்ஸின் போயிங்777 நவீன விமானத்தில் லண்டன் நோக் கிப் புறப்பட்டேன். சுமார் 11 மணித் தியாலங்கள் நீடித்த அப்பிரயாணத்தின் போது எட்டு நேர வலயங்களைக் கடந்து சூரியனுக்கு எதிர்த் திசையில் பயணம். செய்ததால் இரவு, பகல், நேரம் என்பன பற்றிய உணர்வு முற்றாகக் குழம்பிப் போய்விட்டது. 7ம் திகதி மாலை 6.50க் குப் பறக்க ஆரம்பித்த விமானம் லண்டன்
ஹீத்ரோ விமான நிலையத்தில் தரை
யிறங்கிய போது அங்கு 8ம் திகதி பிற்பகல் 1.30ஐத் தாண்டியிருந்தது.
லண்டனில் உள்ள நண்பர் ஏற்பாடு செய்தபடி என்னை அழைத்துச்செல்வதற் காக இருவர் அங்கு வந்து சேர்ந்தனர். அவர்களது வாகனத்தில் ஏறி வடமேற்கு லண்டனில் நீஸ்டன் என்ற அமைதியான பகுதியில் வசிக்கும் நண்பரின் வீட்டைச் சென்றடைந்தேன். து
ஆந்தை ஆராய்ச்சி ༣ பறவைகளின் நடத்தை பற்றி ஆராய்வதில் ஆர்வம் கொண்ட ஒருவர் ஒவ்வொரு
நாளும் இரவில் தன் வீட்டுப் பின்புறத்தில் நின்றவாறு ஆந்தை அலறுவது போல் குரலெழுப்பிக் கொண்டிருந்தார். தனது குரலுக்கு ஆந்தையொன்று பதிலளிக்குமா என
அவர் எதிர்பார்த்தார்.
எதிர்பார்த்தது போலவே ஒரு நாளிரவு ஆந்தையொன்று பதிலுக்கு அலறுவது அவருக்குக் கேட்டது. அன்று முதல் தொடர்ந்து ஒரு வருடத்துக்கு மேலாக அவரும் அவர்
கண்களுக்குப் புலப்படாமல் அலறும் அந்த ஆந்தையும் o
இருந்தது. அந்த ஆந்தையுடன் கருத்துப் பரிமாறிக்
கொடுத்துக் கொள்வது வழக்கமாக
ரவில் மாறி மாறிக் குரல்
கொள்ளும் முறைகள் பற்றியும் அவர் தீவிர ஆயீவில் ஈடுபடலானார்.
ஒரு நாள் அவரது மனைவியும் அவர்களுடன் அவ்வளவு தொடர்பு கொண்டிராத பக்கத்து வீட்டுக் காரியும் சந்தித்துப் பேசிக்கொண்டனர். இரவில் தனது கணவரும் ஆந்தையொன்றும் மாறி மாறிக்குரல் கொடுத்துக் கொள்வது பற்றிய செய்தியை அவள் தனது அடுத்த வீட்டுக்காரியிடம் கூற நேர்ந்தது. -
“என்ன ஆச்சரியம்! எனது கணவரும் பல மாதங்களாக இரவில் ஓர் ஆந்தையின் குரலுக்குப் பதிற் குரல் கொடுத்து வருகிறார்” என்றாள் பக்கத்து வீட்டுப் பெண்.
36
அரும்பு-23

ணவின் சமிபாட்டுக்கு அவசிய மான இரைப்பைச்சாற்றின் சுரப்பு, உண வுக் கால்வாயின் அசைவுகள், சமிபாட் டுறுப்புக்களுக்கான குருதிச்சுற்றோட்டம் முதலிய செயற்பாடுகள் ஒருவரின் மன நிலைகளாலும் உணர்ச்சிகளாலும் பாதிக் கப் படக்கூடியனவாகும். எனவே களம், இரைப்பை, சிறுகுடல் ஆகிய உறுப்புக் கள் தொடர்பான பல கோளாறுகள் உள வியற் காரணிகளின் விளைவாகத் தோன் றுவது சகஜமாகும். இக்கோளாறுகளிற் சில உடல் ரீதியான நோய்களைப் போன் றே தோற்றமளிக்கின்றன.
கடுமையான மன உளைச்சல், கவ G0) Group|LGöT 5%lıqULu QJö5üD (anxiety neurosis) போன்ற நிலைமைகளுக்கு ஆளாகியுள் ளவர்களில் வாய் உலர்தல், தொண்டை யில் ஏதோ அடைத்துக்கொண்டது போன் ற உணர்வு, உணவில் விருப்பமின்மை, குமட்டல், வாந்தி, அதிகளவு வளியை வாயினூடாக விழுங்குதல் காரணமாக ஏற்படும் ஏப்பம், வயிற்றில் அவதியுணர் வும் நோவும், வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல் போன்ற பரந்த அளவிலான அறிகுறிகள் தோன்றலாம். மனநிலையில் கடும் தளர்ச்சி (depression) ஏற்பட்டவர் களில் உணவில் விருப்பமின்மையோடு வாயில் விரும்பத்தகாத சுவையுணர்வும் மலச்சிக்கலும் உருவாகும்.
நோயாளியின் நோய் வரலாற்றைக் கவனமாக ஆராய்ந்தால் பின்னணியில்
இருப்பதை அறிந்து கொள்ள முடியும். தமது நோயறிகுறிகளைத் திருத்தமாக விபரிக்க முடியாதவர்களாக இத்தகைய நோயாளிகள் இருப்பர்.
சிலவேளைகளில் இவர்கள் தரும் விவரணங்கள் மிகைத்துக் கூறப்படுவன
அரும்பு-23
உளவியல் சார்ந்த பிரச்சினையொன்று
உளநிலை காரணமாக ஏற்படும்
சமிபாட்டுக் கோளாறுகள் %}&*
வாகவும் நம்ப முடியாதனவாகவும் இருக்கலாம். வர்கள் முறைப்பாடு
செய்யும் வலிகளும் நோவுகளும் உணவு
டனோ நேரத்துடனோ தெளிவான தொடர்புகளைக் கொண்டிருக்க மாட்டா. ஒரு வலி அல்லது நோவு ஒரு குறித்த இடத்திலன்றிப் பரவலாகவும், தொடர்ச் சியானதாகவும், ஆவர்த்தன ஒழுங்கெது வும் இல்லாமலும் இருப்பின் அல்லது மாதக் கணக்கில் அல்லது வருடக் கணக் கில் நீடித்திருப்பின் அது பெரும்பாலும் உளவியற் காரணிகளால் உருவாகியதாக இருக்கக்கூடும்.
மேற்குறிப்பிட்ட வகையான நோ யாளிகளின் உடலைப் பரிசோதித்துப் பார்த்தால் அசாதாரணமான வியர்வை, விரைவான நாடித்துடிப்பு போன்ற இயல் புகள் இருப்பதை இனங்கண்டு கொள்ள லாம். இவ்வியல்புகள் கவலையும் ஏக்க மும் கொண்ட உளநிலையின் பிரதிபலிப் புக்களாகும். இத்தகைய நோயாளிகள் முறைப்பாடு செய்யும் அறிகுறிகளுக் கான உளவியல் காரணத்தை அறிந்து அவர்களுக்கு அதுபற்றி விளக்கமளிப்பது அவசியம்.
தொண்டையில் ஏதோ திரளொன் று அடைத்திருப்பது போன்ற உணர்வை Globus hystericus 6700 LDC559/6/h (5) பிடுகின்றது. இது விழுங்குதலோடு தொடர்பற்ற உணர்வொன்றாகும். எனி னும் உணவை அல்லது நீரை விழுங்கு
வதன் மூலம் இதிலிருந்து நிவாரணம்
கிடைக்கக்கூடும். உளரீதியாக நெருக் கடிக்கும் கவலைக்கும் ஆளானவர்களே பெரும்பாலும் இந்நிலைக்கு உள்ளாகின் றனர். இந்நிலை உள ரீதியான காரணி களால் உண்டானது என்று தீர்மானிப் பதற்கு முன்பாக உடல் ரீதியான நோய்
37

Page 21
எதுவும் இதற்குக் காரணமாக உள்ளதா
என்பதைக் கவனமாகச் சோதித்தறிவது
அவசியமாகும்.
வாந்தி, anxiety neurosis என்னும் கவலை நிலையின் பொதுவான அறிகுறியொன் றாகும். சாதாரணமாக நித்திரை விட்
டெழுந்தவுடன் அல்லது காலையுணவின்
பின்னரே வாந்தி ஏற்படும். பகலின் பிந்
திய நேரங்களில் வாந்தி வருவது மிக அரி
தாகும். விழித்தெழுந்ததும் வாழ்க்கை
யின் அன்றாடக் கவலைகளுக்கு முகங்
கொடுக்க நேரிடுவதன் எதிர்த் தாக்கமாக வே இவ்வாறு வாந்தி ஏற்படுகின்றது.
இளவயதினரில் பாடசாலைக்குச் செல் வதில் உள்ள வெறுப்புக் காரணமாகவும்
இப்படி வாந்தி உண்டாகலாம்.
மேற்குறிப்பிட்ட வகையான வாந் தியின் போது இரைப்பைச்சாறுகள் மாத் திரமோ அல்லது உணவும் சேர்ந்தோ வெளிவரலாம். இத்தகைய, உளநிலை காரணமான வாந்தி தொடர்ச்சியாக நீண்டகாலத்திற்கு நீடிக்கவும் கூடும். எனி னும் அதன் காரணமாக உடல் நிறையில் குறிப்பிடத்தக்க குறைவு எதுவும் ஏற் படாது. உடல்நோய் காரணமான வாந்தி களிலிருந்து இந்த வகையைப் பிரித்தறி
வதற்கு இவ்வியல்பு பெரிதும் உதவியாக
அமைகின்றது.
鷲 *、 ※●リ e e
பவள விழாக் காணும் B.B.C.இன் தமிழோசை பிரிட்டிஷ் ஒலிபரப்புக் கூட்டுத்தாப்னம் என்னும் B.B.C. நிறுவனம் உலகின் பல்வேறு மொழிகளில் ஒலிபரப்புக்களை நடாத்தி வருகின்றது. 1941 மே மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டB.B.C. இன் தமிழ் மொழி ஒலிபரப்பான தமிழோசை" இந்த ஆண் டில் தனது பவள விழாவைக் கொண்டாடுகின்றது.
இலங்கை நேயர்களிடையே புகழ் பெற்றுள்ள தமிழோசையின் வரலாறு பற்றி
அரும்பு வாசகர்களுக்குத் தகவல் தரும் நோக்குடன் நாம் அதன் தயாரிப்பாளர்களோடு தொடர்பு கொள்ள முயற்சித்தோம். முதலில் இண்டர்நெட்டிலுள்ள தமிழோசையின்
வெப்தளத்தை அணுகினோம். அதில் தமிழோசையின் தொலைபேசி, Fax இலக் கங்களின் இறுதி நான்கு தானங்களும் XXXX என்றே தரப்பட்டிருந்தன. வேறுதர்வுகள் தரப்படாததனால் Xஇன் பெறுமானத்தை எம்மால் கண்டுகொள்ள முடியவில்லை. எனினும் tamilடுbbc.co.uk என்ற ஈமெயில் முகவரிதரப்பட்டிருந்ததால் அந்த முகவரிக்கு
எமது பணிவான வேண்டுகோளொன்றை அனுப்பி வைத்தோம். ஆனால், அப்படி ஒரு முகவரி உபயோகத்தில் இல்லை எனக் குறிப்பிட்டு எமது அஞ்சல் எம்மிடமே திரும்பி
வந்தது.
கடந்த ஜூலையில் அரும்பு ஆசிரியர் லண்டன் சென்றிருந்த போது தமது நண்பர்
ஒருவரினூடாகத் தமிழோசை அறிவிப்பாளர் ஒருவரின் தொலைபேசி இலக்கத்தைப்
பெற்றுத் தொடர்பு கொண்ட போதெல்லாம் Answering Machine ஒன்று தான்
பதிலளித்தது. அதில் பதிவு செய்து வைத்த செய்திக்கும் எந்தவிதப் பதிலும் இதுவரை கிடைக்கவில்லை. It is -
ங்கிலேய அதிகாரி ஒருவருடன் தெ
洲
பதிலளிக்க எழுந்து வந்தத காதில் ஊதிய சங்காகப் போய்விட்டது. மகத்தான பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் உத்தியோகத்தர்களுக்கு எம்மைப் போன்ற சில்லறைகளெல்லாம் எம்மாத்திரம் என்ற உண்மையை அறிந்து கொள்ள எமக்கு எவ்வளவு காலம் பிடித்தது பாருங்கள்
上メ。
தோல்வியை ஒப்புக்கொள்ள விரும்பாத 5 Tib, B.B.C. World Serviceg) air ாடர்புகொண்டு பெற்றுக் கொண்ட தொலைபேசி லக்கமொன்றினூடாக மீண்டும் தமிழோசையுடன் தொடர்பு கொண்டபோது, ண்ணன் என்பவரும் Answering Machineஐத் தான்
முடுக்கிவிட்டார். அதில் பதிவு செய்து வைத்த எமது இரண்டாவது செய்தியும் செவிடன்
அரும்பு-23
 
 
 
 
 

கடற் குதிரை
(Sea Horse)
கடலில் வாழும் உயிரினங் களுள் விநோதமான உருவமுடைய gir atgirl Lisair (bony fish) g)607GLD Sea Horse எனப்படும் கடற் குதிரை யாகும். குதிரையின் தலையை ஒத்த வடிவமுடைய தலையைக் கொண்ட கடற் குதிரைகள் Symgnathidae என்ற விலங்குக் குடும்பத்தைச்சேர்ந்தவை. உலகக் கடல்களில் சுமார் 35க்கும் மேற்பட்ட கடற் குதிரை இனங்கள் வாழ்வதாக நம்பப்படுகின்றது.
கடற் குதிரையின் தலையின் வடிவம் காரணமாகவே அதற்கு இப்பெயர் வழங்கப்பட்டுள்ளது. அதன் உடல் முழுவதும் கரடுமுர டான எலும்புத் தட்டுக்களால் மூடப் பட்டுள்ளது. அதனுடைய நீண்ட வால் பாம்பின் வாலைப் போன்று காணப்படுவதோடு தலை ஒரு கோணத்தில் அமைந்திருக்கின்றது. அதன் கண்கள் இரண்டும் ஒன்றோ டொன்று தொடர்பின்றிச் சுயாதீன மாகத் திரும்பக் கூடியனவாக உள் ளன. கடற் குதிரைகளின் பருமன், நிறம் என்பன இனத்துக்கு இனம் வேறுபடுகின்றன. எனினும் எல்லா இனங்களும் ஒரே அடிப் படை வடிவத்தையே கொண்டுள்ளன.
கடற் குதிரையொன்றின் பரு மன் 10 cm முதல் 30 cm வரை வேறு படலாம். அவை கடற்கரையோரங் களில் சிறிய கடற் தாவரங்கள், பாசி கள் போன்றவை காணப்படும் பகுதி களிலேயே வசிக்கின்றன. அவை ஒய் வாக இருக்கும் போது கடற் தாவர மொன்றின் ஏதேனும் ப்குதியைத் தம்
彰入
வாலினால் சுற்றிப் பற்றிக் கொள் கின்றன. அவை உணவுட்கொள்ளும் போதுகூட வாலினால் தாவரமொன் றைப் பற்றியவாறே நீரில் மிதந்து
வரும் உணவுகளைப் உண்கின்றன.
கடற் குதிரைகளுக்குக் கிடை யாக நீந்த முடிந்த போதிலும் அவை பொதுவாக நிமிர்ந்த நிலையிலேயே நீந்துகின்றன. முதுகுப்புறமாக உள்ள செட்டையை மிக விரைவாக அசைப் பதன் மூலமே அவை செலுத்து விசையைப் பெறுகின்றன. எனினும் மீனினங்களுள் மிகவும் மெதுவாக அசைகின்றவை கடற்குதிரைகளே. உச்ச வேகத்தில் நீந்தினாலும் அவை 1 km தூரடத்தைக் கடப்பதற்கு 2% நாட்களுக்கு மேல் பிடிக்கும்.
பெண் கட்டற் குதிரைகள் தமது முட்டைகளை ஆண் விலங்கின் வயிற்றில் காணப்படும் ஒரு பையி னுள் ஈனுகின்றன. பெண்ணின் நீண்ட வடிவமுடைய முட்டை ஈனும் உறுப்பு இதற்கு வசதியான தாக அமைந்துள்ளது. குஞ்சுகள் பொரிக்கும் வரை ஆண் விலங்கே முட்டைகளைச் சுமந்து திரியும். ஒரே தடவையில் சராசரியாக ஐம்பது
39
பிடித்து
23 - اپاطازقی)sy

Page 22
முட்டைகள் இவ்வாறு இடப்படு கின்றன. எனினும் பெரிய கடற் குதிரையொன்றின் பையில் 1500க்கும் மேற்பட்ட முட்டைகள் ஒரே தடவை யில் பொரித்திருந்தது அவதானிக்கப் பட்டுள்ளது.
முட்டை இடப்பட்டு 3 LD IT îio 5 வாரங்களின் பின்னர் மிக நுண்ணிய குஞ்சுகள் ஆணின் வயிற்றுப் பையி லிருந்து நீந்தி வெளியே வருகின்றன. பொதுவாக கடற் குதிரைகள் தம் இனப்பெருக்கத் துணைகளை மாற் றிக் கொள்வதில்லை என ஆய்வாளர் கள் குறிப்பிடுகின்றனர்.
கடற் குதிரைகள் சூழலுக்கும் சந்தர்ப்பத்துக்கும் ஏற்றவாறு தம் உடல் நிறத்தை மாற்றிக் கொள்வது அவதானிக்கப்பட்டுள்ளது. சில வேளைகளில் சூழவுள்ள கடற் தாவ ரங்களின் நிறத்தை அவை கொண் டிருப்பதால் அவற்றை இனங்கண்டு கொள்வது சிரமமாகிவிடுகின்றது.
ஒரு பெண் விலங்கு ஆண் விலங்குக்
கூட்டமொன்றின் மத்தியில் தன் துணையைத் தேடிக் கண்டுகொண்ட தும் அதன் நிறத்தில் மாற்றம் ஏற்படுவதாகவும் அதே நேரத்தில் குறிப்பிட்ட ஆணும் நிறமாற்றம்
அடைவதாகவும் ஆய்வு அறிக்கை யொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல நாடுகளில் கடற் குதிரைகள் உணவாக உட்கொள்ளப்படுகின்றன. சீனர் வின் பாரம்பரிய மருந்துகள் பலவற்றில் கடற் குதிரை முக்கிய கூறாக இருக்கின்றது. சாதாரண நிலையிலும் உலர்த்தப்பட்ட நிலை யிலும் கடற் குதிரைகளைப் பல நாடுகள் ஏற்றுமதி செய்கின்றன. அளவுக்கு மீறிப் பிடிக்கப்படுவதால் கடற் குதிரை இனங்கள் சிலவற்றின் குடித்தொகை குறையும் ஆபத்தும் காணப்படுகின்றது. எனினும் கடற் குதிரைக்கு இயற்கை எதிரிகள் குறைவு. ஏனெனில் ஏனைய மீன்கள் இதனை இரையாகக் கொள்ள விரும்புவதில்லை.
Syngnathidae GTGötp. (g5(6) DLuigj 96) Hippocampus 676Тр Gu(bogoš திற்கு உரியதாகப் பாகுபடுத்தப்பட் டுள்ள கடற் குதிரை இனங்களில் Hippocampus hudsonius 6T Gör Lugi பரவலாகக் காணப்படும் ஓர் இன மாகும். இலங்கையின் கடலோரங் களில் காணப்படும் கறுப்பு நிற 9) GOTửd Hippocampus fuscus GTGOTŮ பாகுபடுத்தப்பட்டுள்ளது. ம
66660 GT6660ITIT?
இரண்டாம் வகுப்பில் படிக்கும் அந்தச் சிறுவன் பாடசாலை விட்டு வந்ததும் தன் தாயிடம் சென்று “அம்மா எதிர்காலத்தில் பாடசாலைக்கு வரச்கூடிய தம்பி தங்கைகள் யாரும் எனக்கு இருக்கிறார்களா? என வகுப்பு டீச்சர் கேட்டார்” என்று சொன்னான்.
இந்தக் காலத்து ஆசிரியர்கள் இவ்வளவுதூரம் கரிசனையுடையவர்களாக இருக்கிறார்களே என்று உள்ளூர மகிழ்ந்த தாய், “எங்களுக்கு நீதான் ஒரேயொரு பிள்ளை என்று கூறியதும் டீச்சர் என்ன சொன்னார்?’ என ஆவலோடு கேட்டாள். -
'கடவுளுக்கு நன்றி' என்று தான் டீச்சர் சொன்னார்’ எனப் பதில் வந்தது சிறுவனிடமிருந்து.
40 ட அரும்பு- 23

இரவு வானில் வலம் வரும் ORION 616örgyld
வேட்டைக்காரன்
AYA }
களைக்கொண்ட நட்சத் களை அல்லது உடுத்தொகுதிகளை(ConStellations) நாம் காண முடிகின்றது. இவற்றுள் வெற்றுக் கண்களுக்கு மிகத் தெளிவாகப் புலப்படும் கூட்டங்களுள் ஒன்றாக வேட்டைக்காரன் (Orion, the Hunter) திகழ்கின்றது. டிஸம்பர் முதல் மார்ச் வரையான காலத்தில் வானில் தென்படும் இக்கூட்டத்தில் மிகப் பிரகாச மான உடுக்கள் (நட்சத்திரங்கள்) பல ருப்பதனால் அதனை எவரும் எளிதாக னங்கண்டுகொள்ள முடியும்.
இவ்வுடுக் கூட்டத்துக்கு வழங்கப்
பட்டுள்ள Orion என்ற பெயர் கிரேக்க பழங்கதைகளில் வரும் ஒரு வேட்டைக்
கார்னைக் குறிக்கின்றது. தனது இடுப்பு வாரிலே(belt) வாளொன்றை ஏந்திய வேட்டைக்காரன் ஒருவனின் உருவத்தை இவ்வுடுக்கூட்டம் பிரதிபலிப்பதாக முன் னோர் கருதியதனாலேயே இதற்கு இப் பெயர்சூட்டப்பட்டுள்ளது.
ORION கூட்டம் வான் மத்திய Gas TLG LI(55uigi) (celestial equator)
அமைந்திருப்பதால் புவியின் இரண்டு அரைக் கோளப் பகுதிகளிலிருந்தும் இத
னை அவதானிக்க முடியும். (சில உடுத்
தொகுதிகள் வடவரைக் கோளம், தென் னரைக் கோளம் ஆகியவற்றுள் ஏதேனும் ஒரு பகுதியிலுள்ளவர்களுக்கு மாத்திரமே
புலப்படுகின்றன.)
Orionஇன் இடுப்பு வாரைக் குறிக்
கும் மூன்று உடுக்களும் பூமத்திய கோட்
டுக்கு நேர் மேலே கிழக்கு மேற்காக நேர்கோட்டில் அமைந்திருப்பதைக் காண
திரக் கூட்டங்
லாம். வேட்டைக்காரனில் ஏழு பிரகாச
மான உடுக்களை அவதானிக்க முடியும்.
9600, Betelgeuse, Rigel, Bellatrix, Alnilam, Al-Nitak, Saiph, Mintaka Gi30It', பெயரிடப்பட்டுள்ளன.
Betelgeuse (Laibgp6öb6Guyav)
ORION கூட்டத்திலுள்ள மிகப் பிர காசமான உடுவாகிய இது கிழக்குப் புற மாக உள்ள வேட்டைக்காரனின் வலது தோளைக் குறிக்கின்றது. இதற்கு Alpha (0)-Orionis என்ற பெயரும் உண்டு. அரபு மொழியில் Orion ஐ ஜவ்ஸா’ என அழைப்பர். எனவே'யத்-அல் ஜவ்ஸா’ (Orion இன் கை) என்ற அரபுச் சொற்
றொடரிலிருந்தேBetelgeuse என்ற பெயர்
வந்திருப்பதாகக் கருதப்படுகின்றது.
புவியிலிருந்து சுமார் 310 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் அமைந்துள்ள பிற்றல்கியுஸ் கடுஞ்செந்நிறமான இராட் சத உடுவொன்றாகும். இதன் பருமனும்
ஒளிர்வும் காலத்துக்குக் காலம் மாற்ற
மடைவதனால் இது மாறும் உடு (Variable Star) என்னும் வகையிலேயே அடங் குகின்றது. அதனுடிைய விட்டம் சுமார்
419 மில்லியன் km முதல் 580 மில்லியன்
km வரை வேறுபடுவதாக அறியப்பட் டுள்ளது. எமது சூரியனைவிட 430 - 625 மடங்கு பெரிய இவ்வுடுவை எமது ஞாயிற்றுத் தொகுதியின் மத்தியில் வைத் தால் அது புதன், வெள்ளி, பூமி, செவ் வாய் ஆகிய நான்கு கோள்களையும் விழுங்கிவிடக்கூடிய அளவுக்குப் பெரி தாக இருக்கும்.
41.
அரும்பு- 23

Page 23
பிற்றல்கியுஸ் தனது ஆயுளின் இறு
திக் கட்டத்தை நெருங்கி வருவதாக வானியலாளர்கள் கருதுகின்றனர். அதனு டைய கரு எரிபொருள் அரிதாகும் போது அது பெரு வெடிப்பொன்றுக்கு உள்ளாக லாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இராட்சத உடுக்கள் இவ்வாறு வெடிப்புக் குள்ளானால் அவை கண்ணுக்குப் புலப் படாத நியூத்திரன் உடுக்களாக அல்லது Black holes என்னும் கருத்துளைகளாக மாறிவிடுகின்றன. 1998இல் Hubble தொலைகாட்டி மூலம் பிடிக்கப்பட்ட பிற்றல்கியுஸின் படங்களும் இவ்வுடு சீரற்ற முறையில் எரிகின்றது என்பதை எடுத்துக் காட்டியுள்ளன.
RIGEL - fî2@gai
Orion கூட்டத்திலுள்ள இரண்டா வது மிகப் பிரகாசமான இவ்வுடுவை beta (8)-Orionis எனவும் அழைப்பர். வேட் டைக்காரனின் இடது காலைக் குறிக்கும்
இவ்வுடுவின் பெயர் "ரிஜ்ல் அல் ஜவ் ஸா' (Orion இன் கால்) என்ற அரபுச்
சொற்றொடரிலிருந்து வந்துள்ளது.
நீலங்கலந்த வெண்ணிறமுடைய இராட்சத உடுவான ரிஜெல் புவியி லிருந்து 600 ஒளி வருடங்களுக்கு அப்பால் இருக்கிறது. சூரியனைவிட 35 மடங்கு விட்டம் கூடிய இதன் உண்மையான
ஒளிர்வு சூரியனுடையதைவிட 25,000
மடங்கு அதிகமாகும். eேlatrix - பெலற்ரிக்ஸ்
பிரகாசத்தில் மூன்றாவது இடத்தை வகிக்கும் இதற்கு Gamma () - Orionis என்ற பெயரும் உண்டு. வேட்டைக் கார னின் இடது தோளைக் குறிக்கும் இவ் வுடு சுமார் 350 ஒளிவருடங்களுக்கு அப் பால் இருக்கின்றது. இதன் ஒளிர்வு எமது சூரியனின் ஒளிர்வினது 2300 மடங்குக்குச் சமனாகும்.
Belatrix என்பது பெண் போராளி' என்பதைக் குறிக்கும் இலத்தீன் மொழிச் சொல்லாகும்.
42
Al-Nilam - அல் நிழாம்
Epsilon(e)-orionis 6160TG)|b egy60)!pő, கப்படும் இவ்வுடு பிரகாசத்தில் நான் காவது இடத்தை வகிக்கிறது. இது வேட்டைக்காரனின் இடுப்புவாரில் (belt) காணப்படும் மூன்று உடுக்களுள் நடுவில் உள்ளதாகும். புவியிலிருந்து சுமார் 1400 ஒளிவருடங்களுக்கு அப்பா லுள்ள அல்-நிழாம் எமது சூரியனைவிட 50,000 மடங்கு கூடுதலான ஒளிர்வுடை
யது. எனினும் அதன் தொலைவு காரண
மாக அது இரவு வானில் தெரியும் உடுக் களுள் பிரகாச்த்தின்படி 30வது இடத்தைப் பெறுகின்றது.
விட்டத்தின்படி அல்-நிழாம் சூரிய னைவிட 15-30 மடங்கு பெரியதாக இருக்
கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதன்
மேற்பரப்பு வெப்பநிலை சுமார் 250000 அளவுக்கு இருக்கக் கூடும். இத்தகைய உயர் வெப்பநிலை கொண்ட இராட்சத 9 (6)j,.5 Git Super giants GTGOT 9/60) páh55Ü படுகின்றன.
A-Nitak - அல் நிதாக்
Zeta()-Orionis என்றும் அழைக்கப் படுகின்ற இதன் அல்-நிதாக் என்ற பெயர் அரபு மொழியில் இடுப்பு வாரைக்குறிக் கும் சொல்லிலிருந்து பெறப்பட்டுள்ளது. வேட்டைக்காரனின் இடுப்பு வாரின் கிழக்கு அந்தத்தில் இருக்கும் அல் நிதாக் Orion கூட்டத்திலுள்ள5வது பிரகாசமான உடுவாகும்.
சுமார் 1400 ஒளி வருடங்களுக்கு அப் பாலுள்ள இந்த உடுவின் ஒளிர்வு எமது சூரியனின் ஒளிர்வைவிட 25,000 மடங்கு அதிகமானது. அதன் மேற்பரப்பு அதியுயர் வெப்பநிலையை (சுமார் 26,000 C) கொண்டிருப்பதனால் அல் நிதாக் பிரகாச
மான நீலநிறத்தில் ஒளிர்கின்றது.
Saiph - GM6vfi'i
'ஸைப்' என்ற அரபுச் சொல்
வாளைக் குறிக்கின்ற போதிலும் இவ்
அரும்பு- 23

வுடு வேட்டைக்காரனின் வலது முழங் காலையே குறித்துக் காட்டுகின்றது. இதற்குKappa (k)-Orionis என்ற பெயரும்
உண்டு.
ஃார்10 ஒளிவருடங்களுக்கு அப் பாலுள்ள ஸைfப், எமது சூரியனை விட
50,000 மடங்கு ஒளிர்வு கொண்டது. விட் பத்தின்படி சூரியனைவிட 12-23 மடங்கு பெரியதான இந்த உடுவின் மேற்பரப்பு வெப்பநிலை சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலையைவிட நான்கு மடங்கு
உயர்வானது. இதுவும் அல்-நிழாம், அல்
நிதாக் என்பவற்றைப் போன்று நீலநிற
மான அதி இராட்சத உடு வகையைச்
சேர்ந்தது. Mintaka - tSliggir
மிந்தகா’ என்ற அரபுச் சொல் இடுப்பு வாரைக் (belt) குறிக்கின்றது. வானியலாளர்கள் இவ்வுடுவுக்கு Delta (6) - Orionis எனப் பெயரிட்டுள்ளனர். வேட்டைக்காரனின் இடுப்பு வாரின் மேற்கு அந்தத்தில் உள்ள மிந்தகா சரியாக
வான் நடுக்கோட்டின் மீது அமைந்திருக் கின்றது. Orion கூட்டத்தில் பிரகாசத் தின்படி ஏழாவது இடத்தை இவ்வுடு
வகிக்கின்றது.
நிச்சயமாக நீங்கள் தான்! அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ஜோர்ஜ் W. Ly6i புத்திக் கூர்மையும் பொது அறிவும் குறைந்தவர் என்ற அபிப்பிராயம் அமெரிக்கர்களிடையே
பரவலாகக் காணப்படுகின்றது. இது தொடர்பாகப் பல கட்டுக் கதைகள் இண்டர்
நெட்டிலே உலா வருகின்றன. அவற்றிலொன்று பின்வருமாறு:
மறு உலகிலே சொர்க்கத்தில் நுழைவதற்காக மனிதர்கள் முண்டியடித்துக்கொண்டு
கியூ வரிசையில் சென்றுகொண்டிருந்தனர். சொர்க்க வாயிலை அடைந்த விஞ்ஞானி அல்பேர்ட் ஐன்ஸ்டைன் "நான் சார்புக் கொள்கையைக் கண்டுபிடித்த விஞ்ஞானி
ஐன்ஸ்டைன், என்னைச் சுவர்க்கத்தில் நுழைய விடுங்கள்” எனக் காவல் புரிந்த தேவ
தூதரிடம் வேண்டினார்.
*ஒவ்வொருவரும் எதையாவது கூறி ஏமாற்றிவிட்டுச் சொர்க்கத்தில் நுழையப்
பார்க்கிறார்கள். எனவே ஐன்ஸ்டைன் நீங்கள் தான் என்பதை நிரூபித்தால் மட்டுமே
உங்களை அனுமதிக்க முடியும்” என்றார் தேவதூதர்.
கரும்பலகையொன்றையும் வெண்கட்டியையும் கேட்டுப் பெற்றுக்கொண்ட ஐன்ஸ்டைன் தனது சார்புக் கொள்கையினைச்சமன்பாடுகளை எழுதி நிரூபித்துக்காட்டி
னார். எனவே அவர் சுவர்க்கத்தில் நுழைய அனுமதிக்கப்பட்டார்.
அடுத்து வாயிலை அடைந்தவர் பிரபல ஒவியர் பப்லோ பிகாஸ்ஸோ, அவர்தான்
பிகாஸ்ஸோ என்பதை நிரூபிக்குமாறு தேவதூதர் கேட்கவே, அவரும் கரும்பலகையில் அற்புதமான ஓவியமொன்றைச் சட்டென வரைந்து காட்டினார். அவர் பிகாஸ்ஸோ தான் என ஒப்புக்கொண்ட தேவதூதர்அவரையும் சொர்க்கத்தில் நுழைய அனுமதித்தார். அடுத்ததாகச் சென்ற ஜோர்ஜ் W. புஷ் தேவதூதரிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.
“பாருங்கள் உங்களுக்கு முன்னால் ஐன்ஸ்டைனும் பிகாஸ்ஸோவும் வந்தார்கள். அவர்கள் தமது அடையாளத்தை நிரூபித்த பின்னரே அவர்களை உள்ளே அனுமதித் தோம். அது போன்று நீங்களும் நிரூபித்தாக வேண்டும்” என்றார் தேவதூதர்.
“ஐன்ஸ்டைனும் பிகாஸ்ஸோவும் என்கிறீர்களே! அவர்கள் யார்?’ என்று திருப்பிக் கேட்டார் புஷ்.
"சந்தேகமேயில்லை. நிச்சயமாக நீங்கள் ஜோர்ஜ் W. புஷ்ஷாகத் தான் இருக்க வேண்டும்” என்று ஒப்புக் கொண்டார் தேவதூதர் ۔
அரும்4-23 - - 43

Page 24
GGGGOG
பூமத்திய கோட்டைச் சூழ வுள்ள வெப்பவ்லயப் பிரதேசங் களில் வசிப்பவர்களின் தோல் கரு மையாகவும் இடைவெப்ப வலயங் களிலும் துருவப் பிரதேசங்களிலும் வாழ்பவர்களின் தோல் வெண்மை
யாகவும் இருப்பதைக் காண்கின்
றோம். தோல் இழையங்களில் காணப்படும் மெலனின் (Melanin) என்ற நிறப்பொருளின் செறிவுக்கு அமையவே தோலின் நிறம் இருக் கும் என்பது விஞ்ஞானிகளின் கருத் தாகும். மெலனின் அதிக செறிவில்
காணப்படுபவர்களிலேயே தோலின்
கருமையும் கூடுதலாக இருக்கும்.
வெள்ளைத் தோலைவிடக்
கறுப்புத்தோல் நோய் எதிர்ப்புத் தன் .
மை கூடியது என்பதைப் புதிய ஆய் வுகள் எடுத்துக் காட்டியுள்ளன. அவுஸ்திரேலியாவின் ஸிட்னி நகரில் ஆய்வு மேற்கொண்டுள்ள உயிரிய
லாளரான ஜேம்ஸ் மக்கின்றொஷ்
என்பவரால் அண்மையில் Journal of Theoretical Biology 6Tairpg)51f)ai) எழுதப்பட்டுள்ள கட்டுரையொன்
றில் இதுபற்றி விளக்கமாகக் குறிப்
பிடப்பட்டுள்ளது.
முலையூட்டிகளில் மெலனோ
சோம்கள்(melanosomes) எனப்படும்
சிறு பைகளினுள்ளேயே மெலனின் காணப்படுகின்றது. பெரிதாகவும்
அதிகளவிலும் காணப்படுகின்ற
மெலனோசோம்களே கருமையான
தோலுக்குக் காரணமாக இருக்கின்
றன.
எமது நிர்ப்பீடனத் தொகுதியில் உள்ள லைசோசோம்களைப் (lyso
Somes) போன்றே எமது உடலை
44
穹
தோலும்
ஆக்கிரமிக்கின்ற நுண்ணங்கிகளுக்கு
எதிராக மெலனோசோம்களும் தொழிற்படுவதாக திரு. மக்கின் றொஷ் கருதுகின்றார். லைசோ சோம்கள் உடலுக்குள் வரும் நுண் ணங்கிகளைச் சுற்றிவளைப்பதோடு நொதியங்களைப் பயன்படுத்தி அவற்றை அழித்தும் விடுகின்றன.
மனிதத் தோலிலிருந்து பெறப் பட்ட மெலனோசோம்கள் நுண் ணங்கிகளின் தொழிற்பாட்டைத் தடைசெய்வதை ஆய்வுகூடப் பரி சோதனைகள் எடுத்துக் காட்டியுள் ளன. மெலனின் ஒட்டுந்தன்மை உள்ள மூலக்கூறொன்றாகும். பற் ஹீரியாவும் பங்கசுகளும் மெலனின் மூலக்கூறுகளில் ஒட்டிச் சிக்கிக் கொள்வதனால் அவற்றின் உயிர்த் தொழிற்பாடுகள் தடைப்பட்டு விடுகின்றன.
மனிதர்களில் நோய் எதிர்ப்புச் சக்தியை (நிர்ப்பீடனத்தை) சீராக்க உதவுகின்ற attractin என்ற புரதம், மெலனின் உருவாக்கத்தையும் சீர் படுத்துவதாக அறியப்பட்டுள்ளது. நிர்ப்பீடனமும் மெலனினும் ஒன் றோடொன்று தொடர்புடையன வாக இருக்கலாம் என்பதை இது எடுத்துக் காட்டுகின்றது என்கிறார் மக்கின்றொஷ். 娜。
கருமையான தோலுடையவர் கள் ஏனையவர்களைவிடக் குறைவா கவே கடும் தோல் நோய்களினால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதும் அவதானிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆதாரமாக வியட்நாம் போரின் போது பெறப்பட்ட முக்கிய அவ தானிப்புக்களை இவ்வாய்வாளர்
● அரும்பு-23
 
 
 

சுட்டிக்காட்டியுள்ளார். அப்போரின் போது அமெரிக்கப் படைவீரர்களில் வெள்ளையர்களும் கறுப்பர்களும், ஏனைய க்ருமையான நிறமுடையவர் களும் இருந்தனர். வியட்நாமின் மீகொங் ஆற்றின் கழிமுகப் பகுதிக்கு
அனுப்பப்பட்ட அமெரிக்க வீரர்கள்
Sterptococcи:s pyogenes отобтр циф நீரியாவினால் உருவாக்கப்படும் கடு
களைவிட வெள்ளைத் தோலுடைய வர்களில் மூன்று மடங்கு கூடுதலாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தோலை நுண்ணங்கிகளிலிருந் து பாதுகாப்பதில் மெலனின் ஆற் றும் பங்கைப் பற்றி விஞ்ஞானிகள் மேலும் ஆய்வுகளில் ஈடுபட உள்ளார்கள். எது எப்ப்டியிருப் பினும் கறுப்புத் தோலுடையவர்கள்
னார்கள்.
என்று புஷ்ஷிடம் பெருமைப்பட்டுக்கொண்டார் மகாராணியார்.
அதைப்பற்றிப் பெருமிதப்பட்டுக் கொள்வதற்கு நல்ல வாய்ப்பொன்று கிடைத்திருக்கின்றது. து
மையான தோல் நோய்க்கு ஆளா இந்நோய்க்கு ஆளாகும் தன்மை கருமையான தோலுள்ளவர்
цђfin шfropa
தன்னை புத்திமட்டமானவர் என அமெரிக்க மக்கள் நினைப்பதைப் பற்றி ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷாக்கு ஒரே மனக் கவலை. இங்கிலாந்துக்கு விஜயம் செய்தபோது அவர் தனது மனக்குறையைப் பற்றி எலிஸபெத் மகாராணியிடம் முறையிட்டார். a “நீர் ஏன் அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டும்? நான் வைத்திருப்பது போல் சில புத்தி சாலிகளைச் சூழவர வைத்துக்கொண்டால் பிரச்சினை தீர்ந்துவிடும்” என்றார் மகாராணி. தனது கூற்றை நிரூபிக்க நினைத்த அவர், பிரதமர் டோனி பிளயரை அழைத்து, “டோனி, உமது பெற்றோருக்கு ஒரு குழந்தை பிறந்து அது உமது சகோதரனாகவோ சகோதரியாகவோ இல்லாவிடில் அக்குழந்தை யாராக இருக்கலாம்?’ என ஒரு புதிர்க் கேள்வியைக் கேட்டார்.
"அக்குழந்தை நானாகத்தான் இருக்க வேண்டும்’ எனச் சட்டெனப்பதிலளித்தார் பிளயர் “பாரும் எவ்வளவு சிறந்த புத்திசாலிகளை நான் என்னைச் சூழ வைத்திருக்கிறேன்!” சரி! நானும் செய்துபார்க்கிறேன்’ என்று மனதில் நினைத்துக்கொண்டு புஷ் அமெரிக்காவுக்குத் திரும்பினார்.
நாடு திரும்பியவுடன் தம்மைச் சூழவுள்ளவர்களின் புத்திக்கூர்மையைப் பரிசீலிக்க விரும்பிய அவர், முதலில் உப ஜனாதிபதி டிக் சேனியை அழைத்து, “சேனி உமது பெற்றோ ருக்கு ஒரு குழந்தை பிறந்து அது உமக்குச் சகோதரனாகவோ சகோதரியாகவோ இல்லாவிடில் அக்குழந்தை யாராக இருக்கும்?” என்று அதே புதிர்க் கேள்வியைக் கேட்டார்.
அதற்கு விடை தெரியாது தலையைச் சொறிந்த உப ஜனாதிபதி விடையளிப்பதற்கு ஒரு நாள் அவகாசம் தருமாறு புஷ்ஷிடம் கேட்டார். விரக்தியோடு அனுமதி கொடுத்தார் புஷ்.
உடனடியாக வெளிநாட்டு அமைச்சர் கொலின் பவலிடம் சென்ற சேனி, "பவல் உமது பெற்றோருக்கு ஒரு குழந்தை பிறந்து அது உமது சகோதரனாகவோ சகோதரியாகவோ இல்லையேல் அக்குழந்தை யாராக இருக்கலாம்? என்று கேட்டார்.
"அக்குழந்தை நானாகத்தான் இருக்க வேண்டும்” என்று சட்டெனப் பதில் வந்தது பவலிடமிருந்து. உடனே புஷ்ஷிடம் விரைந்து சென்ற சேனி, “நீங்கள் என்னிடம் கேட்ட் கேள்விக்குச் சரியான விடை கண்டுபிடித்து விட்டேன்’ என்றார்.
“சரி. உமது பெற்றோரின் அக்குழந்தை யாராக இருக்குமென்று கூறும் பார்ப்போம்” என்றார் புஷ்.
“அக்குழந்தை கொலின் பவல் தான்’ என்று கம்பீரமாக விடைகொடுத்தார் கேனி, புஷ்ஷாக்கு ஆத்திரம் பொங்கி வழிந்தது. “உமது புத்தி இவ்வளவு மட்டம்ாக இருக்கிறதே! அக்குழந்தை யார் தெரியுமா? டோனி பிளயர்தான்’ என்றார் புஷ் மிடுக்கான குரலில்,
அரும்பு- 23 45

Page 25
சிமார் 25 நூற்றாண்டுகளுக்கு முன்பு தோன்றிய பெளத்த சமயத் திலே காலப்போக்கில் கோட்பாட்டு அடிப்படையிலான பல பிரிவுகள் தோன்றலாயின. ஆரம்ப காலத்தில் பதினெட்டுப் பிரிவுகள் இருந்ததாகக்
கூறப்பட்ட போதிலும் அவற்றுக்
கிடையே பெரிய அளவிலான முரண் பாடுகள் காணப்பட்டதாகத் தெரிய வில்லை.
கெளதம புத்தரின் மறைவுக்குப் பின்னர் அவரது போதனைகளையும்
கோட்பாடுகளையும் விளக்குவதற்
காகக் காலத்துக்குக் காலம் பிக்கு
மாரின் சங்கசபைகள் கூடலாயின. கி.
மு. 4ம் நூற்றாண்டில் கூடிய இரண் டாவது சங்கசபையின் போதே முதலாவது பெரிய பிரிவினை தோன் றியது. அப்போது 'மஹாசங்கிக’
எனத் தம்மை அழைத்துக்கொண்ட
ஒரு குழுவினர் பிரிந்து சென்றனர். அவ்வாறு பிரிந்து செல்லாது மீதி யாயிருந்தோர் தேரவாதிகள் ள்ன அழைக்கப்பட்டனர். ' தேரவாத” என்ற பாலிச் சொற்றொடரின் கருத்து மூத்தோர் வழி என்பதாகும்:
சர்வஸ்திவாதிகள்’ என்று அழைக்கப்பட்ட இன்னொரு குழு வினர் பிரிந்து சென்ற போது மீண்டும் பெரிய பிரிவினை ஏற்பட்டது. மீதியாயிருந்த தேரவாத குழுவினர் இந்தியாவின் பல பகுதிகளிலும் பரந்து செயற்பட்டனர். கி. மு. 3ம் நூற்றாண்டளவில் - இந்தியாவில் அசோக மன்னனின் ஆட்சிக் காலத்
46
பௌத்த சமயத்தின் 65JOIT5, IDODTUIT60I ['fରାର୍ଥୀ ଗାଁ
தில் - தேவாத பெளத்தம் இலங்கை யை அடைந்தது. இங்கு மஹா விகாரை, அபயகிரி, ஜேதவன ஆகிய மூன்று மடங்களையும் சார்ந்தனவாக தேரவாதத்தின் மூன்று உப பிரிவுகள் தோன்றின.
இலங்கையிலிருந்து கிழக்கு நோக்கிப் பரவிய தேரவாத பெளத் தம் 11ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் மியன்மாரில் ஆதிக்கம்
கொண்டதாக மாறியது. 13ம் 14ம்
நூற்றாண்டுகளாகும் போது அது கம்போடியாவிலும் லாவோஸிலும் நிலைபெற்றுவிட்டது.
தேரவாதம் பழைமை பேணும் போக்குடையது. அதில் புத்தரின் போதனைகளுக்கு மரபு ரீதியான வியாக்கியானமே வழங்கப்படுகின் றது. அதில் பிக்குமாரினதும் சாதா ரண மக்களினதும் பங்களிப்புக்கள் தெளிவாக வேறுபடுத்தி வரையறுக் கப்பட்டுள்ளன. சுய முயற்சியால் ஞானம் பெறுவதன் மூலம் ஒருவர் அரஹத்’ என்னும் புனித நிலையை
அடைவதே தேரவாத பெளத்தர்
களின் இலட்சியமாகும். எனினும் ஒருவர் துறவு நிலையை அடையாத வரை அவரால் இப்புனித நிலையை அடைய முடியாது என தேரவாதக் கோட்பாடு கூறுகின்றது.
தேரவாத பெளத்தர்களின் பிர தான சமய நூலாக 'திரிபிடகம்’ திகழ்கின்றது. இவர்கள் வரலாற்று ரீதியான புத்தரை (கபிலவஸ்துவில்
பிறந்த கெளதம சித்தார்த்த' என்ப
அரும்பு-23
 
 
 

வரை) ஒரு பரிபூரணமான குருவாகக் கருதி வழிபடுகின்றனர். எனினும் மஹாயான பெளத்தர்கள் வழிபடு வது போன்று விண்ணில் வாழ் வதாகக் கருதப்படும் புத்தர்களை யோ, போதிசத்துவர் என்னும் புனித ஆத்மாக்களையோ வழிபடுவதில் லை. தேரவாத பெளத்த பிக்குகள் திருமணம் செய்யாது பிரம்மச்சாரிய ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பது கட்டாயமாகும்.
பெளத்த சமயத்தின் அடுத்த பெரும்பிரிவான மஹாயான பெளத் தம் கி. வ. 1ம் நூற்றாண்டளவில் உரு வாகியது. மஹாயான என்ற சொற் றொடரின் கருத்து பெருவாகனம்' என்பதாகும். மற்றப் பிரிவினர்களை விடத் தாமே உயர்ந்தவர்கள் எனக் கருதும் இப்பிரிவினர் தேரவாதப் பிரிவை “ஹறினயான’ (சிறு வாகனம்) என்றே அழைக்கின்றனர்.
மஹாயான பெளத்தம் அதிக
கண்டிப்புக்களற்ற முற்போக்கான கோட்பாடொன்றையே முன்வைக் கின்றது. புத்தரின் போதனைகளுக் குப் புதுவிதமான விளக்கங்களை வழங்கும் இப்பிரிவினர் புத்தரின்
யல்பு பற்றியும் பெளத்தர்களின்
லட்சியம் பற்றியும் வித்தியாச மான கருத்துப் படிவங்களைக் கொண்டுள்ளனர். வரலாற்று ரீதி யான புத்தரை அவர்கள் விண்ணுலக புத்தர் ஒருவரின் பூவுலக அவதாரமா கவே கருதுகின்றனர்.
፵orsነoሞ فارو و في "كي"هي
a
தேறுவந்த "ப்ெளத்தர்களின் இலட்சியமான அரஹத் நிலையை அடைதல் என்பது ஒரு குறுகிய சுயநலமான இலட்சியம் என மஹா யானப் பிரிவினர் கருதுகின்றனர். அவர்களது கோட்பாட்டின்படி ஞானம் பெறுவதன் மூலம் போதி சத்வ’ என்ற நிலையை அடைவதே பெளத்தர் ஒருவ்ரின் இலட்சியமாக இருக்க வேண்டும். போதிசத்துவர் ஒருவர் புத்தர் என்ற அடுத்த கட்டத் தை அடைவதற்கு முன்னர் ஏனைய அனைவரினதும் மீட்சிக்காகப் பாடு பட வேண்டும். எனவே போதிசத் துவர் என்ற நிலையை அடைந்தவர்
கருணை நிரம்பிய ஒருவராகவே
கருதப்படு கின்றார். போதிசத்துவர் ஒருவர் தேடிக்கொள்ளும் புண்ணி யங்களை அவர் விரும்பிய வேறு ஒரு வருக்கு வழங்க முடியும் என்றும் மஹாயான பெளத்தர்கள் நம்பு கின்றனர்.
மஹாயான பெளத்தம் சீனா, கொரியா, ஜப்பான், திபெத் ஆகிய நாடுகளில் காணப்படுகின்றது. இதி லிருந்து மேலும் பல புதுப் பிரிவுகள் ந்நாடுகளில் தோன்றியுள்ளன. வற்றுள் ஸென் (Zen) பெளத்தம், நிச்சிரென் பெளத்தம், தெந்தாயி என்பன குறிப்பிடத்தக்கனவாகும். மஹாயான வேதநூல்கள் பெரும் பாலும் திபெத்திய, சீன மொழி களிலேயே காணப்படுகின்றன. அவற்றின் சமஸ்கிருத மூலநூல்கள் இல்லாதொழிந்துவிட்டன. ப
பிழை திருத்தம்
அரும்பு 22 இதழில் 28ம் பக்கத்தில் கிறிஸ்தோபர் கொலம்பஸ்’ என்ற கட்டுரையில் 1492 என்பதற்குப் பதிலாக இரண்டு இடங்களில் 1892 எனத்
தவறுதலாக அச்சிடப்பட்டிருந்தது.
45ம் பக்கத்தில் வெளியான மூளைக்கு வேலை விடைகளில் (2)ம் வினாவுக்குரிய சரியான விடை29 எனவும் (7)ம் வினாவுக்குரிய சரியான விடை
30 எனவும் திருத்தப்பட வேண்டும்.
47
அரும்பு- 23

Page 26
வாசகர்களே!
பின்வரும் பத்து வினாக்களுக்குமுரிய
தபாலில் அனுப்பிவையுங்கள்
விடைத்தாளில் உங்கள் பெயர்,முக வரி, மாணவராயின் பாடசாலையின் பெயர் என்பவற்றை விபரமாக எழு
தத் தவறாதீர்கள். எமது புதிய முகவரி பின்வருமாறு: EDITOR - ARUMBU ROYAL COMPUTERS, 70, MAIN STREET, DHARGA TOWN - 12090. போட்டி முடிவுத் திகதி 2001 செப்டம்பர் 30
கீழே தரப்பட்டுள்ள அரும்பு
கள். இச்சின்னம் விடைகள் ஏற்றுக்கொள்ளப்பட
பத்து வினாக்களுக்கும் சரியான விடைகளை எழுதியனுப்பும் வாசகர்களுள் அதிர்ஷ்டசாலியாகத் தேர்ந்தெடுக்கப் படும் மூவருக்குப் பணப் பரிசுகள் வழங் கப்படும்.
முதற் பரிசு ரூபா 500.00 இரண்டாம் பரிசு ரூபா 250.00 மூன்றாம் பரிசு ரூபா 100.00 , . மேலும் 20 அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் அரும்பில் பிரசுரிக்கப்படுவ
தோடு அவர்களுக்கு அரும்பின் அடுத்த
இதழ் இலவசமாக அனுப்பிவைக்கப்படும்.
Gurt" te (22 48 -
பொது அறிவுப் போட்டி இல: 22)
சரியான விடைகளைத் திருத்தமாக ஒரு
ாளில் எழுதிக்கடித உறையினுள் இட்டுத் களில் பொதிந்துள்ளன.
1. மலேஷியாவின் முதலாவது பிரதம மந்திரியின் பெயர் என்ன?
நூல் எது?
3. GTLN66) ČIGJITGörGpp (Emily Brontë)
எழுதிய பிரபல நாவலின் பெயர் என்ன? 4 ORION உடுக் கூட்டத்திலுள்ள உடுக்
ாளில் ஒட்டி அனுப்பத் தவறாதீர் ட்டப்படாத
குறிப்பு: இங்கு கேட்கப்பட்டுள்ள வினாக்களுள் சிலவற்றுக்கான விடைகள் இந்த இதழில் வெளிவந்துள்ள கட்டுரை
வினாக்கள்:
2. தேரவாத பெளத்தர்களின் பிரதான சமய
களுள் மிகப் பிரகாசமானது எது? 5. ஜப்பானின் பூஜி எரிமலை இறுதியாக எந்த ஆண்டில் வெடித்தது? 6. தற்போது சமஸ்கிருதம், ஹிந்தி போன்ற மொழிகள் எழுதப்படும் எழுத்துமுறை என்ன பெயரால் அழைக்கப்படுகின்றன?
7. கெல்வின் பிரபு எந்தப் பல்கலைக்
கழகத்தில் பெளதிகவியற் பேராசிரியராக இருந்தார்?
8. தமிழ்நாட்டில் சென்னை மாநகரினூ
டாகப் பாயும் துர்வாடைக்குப் பெயர்பெற்ற நதியின் பெயர் என்ன? 9. நெற் தாவரத்தின் தாவரவியற் பெயர் என்ன? *
வளியிடுவதற் குப் பொறுப்பான ஐரோப்பியமத்திய வங்கி
எந்த நகரில் அமைந்துள்ளது?
அடுத்த இதழ் அரும்பு இதழ்-24எதிர்வரும் 2001 ஒக்டோபர் 10ம் திகதி
அரும்பு-23
10. யூரோ நாணயத்தை G
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அரும்பு பொது அறிவுப் போட்டி - 21 சரியான விடைகளும் பரிசு பெறும் அதிர்ஷ்டசாலிகளும்
கேட்கப்பட்டிருந்த கேள்விகளுக்கான சரியான விடைகள் பின்வருமாறு:
1. மும்பாய் 2. UrSuS maritimus 3. 1846 4. தியவன்ன ஒய 5. ஜூலியஸ் நியரேரே 6. இத்தாலி 7. LT65 8.Stanley Kubrick 9. Robert Knox 10. சாந்தா மாரியா
இம்முறை பெருந்தொகையினர் 10 விடைகளையும் சரியாக அனுப்பியிருந்தனர்.
அவர்களுள் அதிர்ஷ்டசாலிகளாகத் தெரிவு செய்யப்பட்ட மூவரினதும் விபரங்கள் பின்வருமாறு:
thusfig, (eBLIT 500): M. A. M. Hasni, Mawanella Road, Hemmathagama 2 hurfly, (eBLIT250): R. F. Risla, Courts Road, Mawanella 3th Lifli (eIBUT 100): Azmina Anzar, S.M. Road, Dharga Town
. M
M
F.
M
M A
இலவசமாக அரும்பு-23ஜப் பெறுகின்ற 25 பேரின் பெயர் விபரங்கள்
Ahamed Alavi, Delanga, Gelioya A. H. M. Hafis, Main St., Sainthamaruthu-9 Hazeel Ahamed, Doolmala, Thihariya, Kalagedihena M. Y. Samiya, Babul Hassen Central College, Warakapola B. M. Ashim, Metthagedara, Wattegama Rd, Madawala Bazaar M. T. Rinas Mohamed, Mannar Road, Puttalam Rahana Raheem, Soysakele Road, Nawalapitiya M. Nashan, Cooray Road, Kalutara Nuha Thasleem, Abdul Cader MW., Kal-Eliya A. G. M. Ihthisam, Ogodapola, Kahatowita M. Irshad Ali, Kaburady Road, Kattankudy-2
. A. K. Jeeshan Elahi, Zahira College Road, Mawanella . P. Sumaiya, AlavWa Road, Polgahawela . S. M. Mafaz, Second Lane, Rockhill, Kegalle . M. J. Raza Mohamed, Al-Badriya M.V., Kahatowita . M. B. M. Rameez, Kottegoda, Welligama . M. J. Sahmy, Sangama, China Bay . M. M. M. Farha, Madawakkulam Muslim M.V., Andigama . Mayeesha Mauroof, K/Azhar Central College, Akurana
Nazeeha Nizam, 9th Mile Post, Alawatugoda
• N. F. Safana, Galadeniya, Udatalawinna . N. F. Riyasa, Marawa, Atulugama, Bandaragama . A. F. Rinosa, T/Kinniya Muslim Balika V., Kinniya . M. Rubina, Al-Manar Rd, Maruthamunai-2 . M. F. Zabira, Al-Muneera B.M.V. Road, Eravur-3
அனைவருக்கும் எமது பாராட்டுக்கள்!

Page 27
அரும்பு - 23
frt
செல்வமும்
அதிக அதிகமாகப் பண மூலமே சந்தோஷத்தையும் வ பெற்றுக்கொள்ள முடியும் என் வடைந்து வருகின்றது. எனவே களுக்காக வாழ்க்கையின் பெரு துணிகின்றோம். இதற்காகக் கு களைக்கூடத் தியாகம் செய்து தொழில்புரிய முயல்கின்றோம்
ஆனால் அதிகளவில் பண யான செல்வந்தனா ? இல்லை குறைத்துக் கொள்பவனே உன் றனர் அறிஞர் பெருமக்கள். நாம் மாக வளர்த்துக் கொள்வதன் சம்பாதிக்க வேண்டும் என்ற நி
எனினும் இவ்வாறு அதிக காக நாம் செய்யும் தியாகங்கள் பணத்தைவிடப் பல மடங்கு கூட விடுகின்றோம். சிலர் தம் வாலி தையும் அடகு வைத்துப் பை அவர்கள் வாழத் தொடங்கும் ே அவர்களை ஆட்கொண்டு விடு
உலகில் பிறந்து, மனித உழைத்து அழியாப் புகழ் பெற்ற ஏழ்மையான குடும்பங்களி6ே உண்மையை நாம் மறந்துவிடக் தவிர்த்துக்கொண்ட எளிமையா ஆற்றலும் திறமையும் கொண்ட நிலமாக இருக்கின்றது.
வறுமையை ஒழிக்க வேண் கின்றோம். ஆனால் உண்மையி ஆடம்பரமே. நேர்மையான, சுறு தான் மனித நாகரிகத்தை உச்ச நி மகத்தான குணங்களை மனி இருக்கின்றது.
PRINTED BY A.J. PRINTS -

ARUMBU - 23
༽
வறுமையும்
த்தைச் சம்பாதித்துக் கொள்வதன் ாழ்க்கையில் அதிக பயனையும் ற நம்பிக்கை எம்மிடையே வலு ப, பணம் சம்பாதிக்கும் முயற்சி நம்பகுதியைச் செலவழித்துவிடத் டும்ப வாழ்க்கையின் சந்தோஷங் விட்டுத் தூர தேசங்களில் சென்று
). ம் சம்பாதிக்கிறவன்தான் உண்மை தனது தேவைகளை முடிந்தளவு எமையான செல்வந்தன் என்கின் எமது தேவைகளை அளவுக்கதிக காரணமாகவே அதிகம் பணம் ர்ப்பந்தம் ஏற்படுகின்றது. மாகப் பணத்தைச் சம்பாதிப்பதற் பின் பெறுமதி, சம்பாதிக்கப்படும் டியது என்பதை நாம் உணரத் தவறி பப் பருவத்தையும் ஆரோக்கியத் னம் தேடுகின்றனர். இறுதியில் பாது அகால முதுமையும் நோயும் கின்றன. வர்க்கத்தின் மேம்பாட்டுக்காக வர்களில் பெரும்பாலானவர்கள் Uயே பிறந்திருக்கின்றனர் என்ற கூடாது. வீண் ஆடம்பரங்களைத் ன வாழ்க்கை தான் மேன்மையும் வர்களை உற்பத்தி செய்யும் விளை
எடும் என்று நாம் கோஷம் போடு ல் ஒழிக்கப்பட வேண்டியது வீண் சுறுப்பான, தன்னலமற்ற ஏழ்மை லை அடையச் செய்ய உதவுகின்ற தருள் உருவாக்கக் கூடியதாக
4, STATION ROAD, DEHIWALA