கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அரும்பு 2004.09

Page 1


Page 2
இ) மூளைக்கு வேலை
sỹ
விவேக வினாக்கள் ஏழு
() பின்வரும் பெருக்கலை அவதானியுங்கள் : இதில் ஒரு சிறப்பியல்பு
இருக்கின்றது. 48 X 159 = 7,632 இங்கு 1 முதல் 9 வரையான இலக்கங்கள் அனைத்தும் பங்கேற்றுள்ளன. இதே போன்ற வேறு பெருக்கல் எதனையும் உங்களால் எழுத முடியுமா?
(2) 1 முதல் 9 வரையான இலக்கங்களை ஒரு தடவை மாத்திரம் கொண்டுள்
ளதும் 11ஆல் மீதியின்றிப் பிரிக்கப்படக் கூடியதுமான ஆகப் பெரிய எண் |
LITU) ? (3) வியாபாரி ஒருவன் A, B, C, D, E, F ஆகிய ஆறு கூடைகளில் முறையே 29, 12, 23, 5, 6, 14 ஆகிய எண்ணிக்கையில் முட்டைகளை வைத்திருந் தான். இவற்றுள் சில கூடைகளில் கோழி முட்டைகளும் ஏனையவற்றில் வாத்து முட்டைகளும் தனித்தனியாக இருந்தன. இக்கூடைகளுள் ஒன்றைச் சுட்டிக்காட்டிய வியாபாரி “நான் இதனை விற்றுவிட்டால்
என்னிடம் வாத்துமுட்டைகளைவிட இரண்டு மடங்கு கூடுதலாகக் கோழி
முட்டைகள் எஞ்சியிருக்கும்” என்றான். அவன் சுட்டிக்காட்டிய கூடை எதுவாக இருக்கலாம்? (4) தன் மனைவியைவிட 8 வயது மூத்த ஒருவர் சென்ற ஆண்டு தாம் வாகன மொன்று வாங்கியபோது அதன் பதிவிலக்கத்திலுள்ள முதலிரு இலக்கங் களும் அவரது வயதையும் அடுத்த இரு இலக்கங்களும் தனது மனைவி யின் வயதையும் குறிப்பதை அவதானித்தார். இந்த ஆண்டு அவர் வாங் கிய இன்னொரு வாகனத்தின் இலக்கத்தகட்டில் முதலிருஇலக்கங்களும் அவரது வயதின் இருமடங்கையும் குறிப்பனவாக இருந்தன. தற்போதைய அவர்களது வயதுகளின் கூட்டுத்தொகை 70 ஆயின் புதிய வாகனத்தின் பதிவிலக்கம் (ஆங்கில எழுத்துக்களின்றி) யாது? (5) பின்வரும் தொடரின் அடுத்த இரு உறுப்புக்களையும் காண்க.
1J, 3M, 5M, 7J, , (6) ஒரு கன மீட்டர் கனவளவுள்ள உலோகத்தாலான கனக் குற்றியொன்றை 1 கன மில்லிமீட்டர் கனவளவுள்ள சிறு கனக் குற்றிகளாக வெட்டிய பின் அவற்றை ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கும்போது உருவாகும் தூணின் உயரம் எவ்வளவாக இருக்கும்? (7) செவ்வகக் குற்றி வடிவமுள்ள இரண்டு செப்புப் பாத்திரங்கள் உள்ளன. அவற்றை ஆக்கியுள்ள செப்புத் தகடுகளும் ஒரே தடிப்புள்ளவை. ஒரு பாத் திரத்தின் கொள்ளளவு அடுத்ததைவிட 8 மடங்கு கூடுதலாயின் அப்பாத் திரம் அடுத்ததைவிட நிறையில் எத்தனை மடங்கு கூடியதாக இருக்கும்?
(விடைகள்39ம் பக்கத்தில் தரப்பட்டுள்ளன)
 

g@09 *驚劇 (9) *基áu"= டிொது அறிவுச் சஞ்சிகை உங்களுடன் ஒரு நிமிடம். இதழ் : 35 அன்புள்ள வாசகர்களே! ஆசிரியர் : அரும்பு 35வது இதழ் வெளி எம். ஹாபிஸ் இஸ்ஸதீன் வருவதில் தாமதம் ஏற்பட்டதையிட்டு ARUMBU வருந்துகிறோம். தவிர்க்க முடியாத Educational Magazine (Tamil) 2žಲ್ಲೆ: காரணமாக இத்
No. 35 E | ᏧᏪᎼᎵᏈ JALC2). WIN. 5×No! இவ்விதழ் முதல் கேள்வி-பதில் M. Hafiz Issadeen என்ற பகுதியை ஆரம்பித்து வாசகர்
களின் தரமான கேள்விகளுக்குப் பதி
By: o:, , : : a, Published By லளிக்க நடவடிக்கை எடுத்துள்
issadeen Memorial Educational Foundation
70, Main Street, Dharga Town-12090 ளோம். இப்பகுதிக்கு வாசகர்கள்
Sri Lanka. I || || அனுப்பி வைத்துள்ள கேள்விகள் Ph: 034-2270151 E-Mail: royal Geureka. Ik I (D9962/13656 (30 UU607 3045 3.co || Web site: www.arumbu.itgo.com யனவாக இருப்பதைக் கண்டு மகிழ்ச் Type-setting & Computer Lay-out by: சியடைகிறோம்.
RoyAL CoMPUTERs, அருமபு இதழில் మిల్ల
70, Main Street, Dharga Town, Sri Lanka. ஆக்கங்கள் பற்றிய வாசகர்களின்
e கருத்துக்களையும் விமர்சனங்களை உள்ளே . . . | யும் எதிர்பார்க்கின்றோம். அத்தோடு
மேலே செல்லக் காரணம் 2 எதிர்காலத்தில் கட்டுரைகள் எழுதப் லியூகிமியா என்னும் குருதிப்புற்றுநோய் 3 பட வேண்டிய விடயத் தலைப்புக் கள் பற்றியும் வாசகர்கள் எமக்கு மாதுளை 6 ஆலோசனை கூற முடியும். காயல்பட்டணத்தில் சிலநாட்கள் II 9 பொது அரிேேபாட்டிகளில் griff of glorfeit 12 பங்குபற்றுபவர்களை ஊக்குவிக்கும்! இலக்ட்ரோனிக் வர்த்தகம் 15 | நோக்கோடு இந்த இதழ் முதல் பணப் கேள்வி-பதில் 18 பரிசுகளின் எண்ணிக்கையை மூன்றி கல்கத்தா | l லிருந்து ஐந்தாக அதிகரித்துள்ளோம்.
எமது வாசகர்கள் - குறிப்பாகப் பாட
வகைக் கோள்கள் கண்ணடபிடிப்பு 26 d e ፴) Ug阅 اgLال சாலை மாணவர்கள் - இப்போட்டி
நீர் நாய் 27 களில் தொடர்ந்தும் ஆர்வத்தோடு எரிகாயங்களுக்கான முதலுதவி 29 கலந்துகொள்வார்கள் என எதிர் கம்போடியா 32 பார்க்கிறோம். " . நிறங்கள் 35 எமது பணி குறைவின்றித் ஈரான்-ஈராக் யுத்தம் 37 தொடர்வதற்கு உங்கள் ஆதரவை வில்லிஸ் கரியர் | என்றும் நாடுகிறோம். இன்றெல் கோர்பரேஷன் 42 || ! நன்றி. அமெரிக்கா உலகுக்கு. 45 எம். ஹாபிஸ் இஸ்ஸதி |
120.09.2004 "ஆசிரியர்
பொது அறிவுப் போட்டி-34 48

Page 3
சிந்தனைக்கு ஒரு குட்டிக்கதை
மேலே செல்லக் காரணம்!
தந்தையொருவர் தனது பள் ளிப் பருவ மகனைப் பட்டம் விடு வதற்காகக் கடற்கரைக்கு அழைத்துச் சென்றார். நேர்த்தியாகச் செய்யப் பட்டிருந்த அந்த அழகான பட்டத் தில் நூலைக் கட்டி அதனை மேலே செலுத்த ஆரம்பித்தார் தந்தை. பட்டத்தை மேலே ஏற்றுவதற்குச் சிறுவன் அவருக்குத் துணையாக நின்று ஆவலோடு உதவினான்.
பட்டம் மெல்ல மெல்ல மேலே ஏறத் தொட்ங்கியது. சிறிது நேரத்தில் அது மிக மிக உயரத்தில் மிக கம்பீரமாகப் பறந்து கொண்டிருந் தது. அது பறக்கும் அழகைக் கண்டு சிறுவன் பிரமித்துப் போய் நின்றான். "அப்பா ! இந்தப் பட்டம் இப்படி உயரே செல்வதற்குக் கார ணம் என்ன?’ என்று ஆர்வத்தோடு கேட்டான் அவன்.
“அதற்கு இந்த நூல் தான் கார ணம்” எனத் தான் பிடித்திருந்த 器 நூலைக் காட்டினார் தந்தை.
"அதெப்படி? இந்த நூல் தானே பட்டத்தை மேலும் உயரே செல்ல விடாமல் தடுத்துக் கொண்டிருக் ஐ கிறது? பட்டம் மேலே செல்வதற்கு அது காரணமாக அமைய முடி யுமா?” என்று குறுக்குக் கேள்வி கேட்டான் சிறுவன்.
"இதோ! நடப்பதைப் பார்” என்று கூறிய தந்தை தனது சட்டைப் பையிலிருந்த பேனாக் கத்தியை ,02
எடுத்து பட்டத்தின் நூலை அறுத்து விட்டார்.
உறுதியாகப் பறந்து கொண் டிருந்த அப்பட்டம் நூல் அறுந்ததும் சிறிது படபடத்து ஆடத் தொடங் கியது. சிறிது நேரத்தில் அது நிலை குலைந்து வானில் அங்குமிங்கும் சுழன்று ஆடியது. இறுதியில் தலைகுப்புற வந்து எங்கோ தொலை வில் தரையில் விழுந்தது. அதைக் கண்ட சிறுவன் "ஐயோ! என் பட்
ቄ ? 9
டம்' என அலறலானான்.
"மகனே! இந்த நூல் அந்தப் பட்டத்தை மேலே செல்லவிடாது தடுத்துக் கொண்டிருப்பது போல் உனக்குத் தோன்றினாலும் உண் மையில் பட்டம் நிலைகுலையாமல் உறுதியாக மேலே செல்வதற்கு அதுதான் காரணமாக இருந்திருக் கிறது என்பது இப்போது புரிகின் றதா?
இந்நூலைப் போன்றவை தான் பெற்றோரின் கண்டிப்பும் கட்டுப் பாடும். பெற்றோரின் கட்டுப்பாடு பிள்ளைகளை முன்னேறவிடாமல் தடுப்பது போல் தோன்றக்கூடும். ஆனால் உண்மையில் அந்தக் கட்டுப் பாடுதான் அவர்கள் வழி தவறிச் சீரழியாமல் அவர்களை வாழ்க் கையில் முன்னேறச் செய்வதற்கு அடிப்படைக் காரணமாக இருக் கிறது” என்று விளக்கம் கொடுத்தார் தந்தை.
அரும்பு-35

மெது உடலில் குருதிக் கலங் களை உருவாக்குவதில் எலும் பு LD360) guild (bone marrow), 15608Tsiig, G) g5 st SS utid (lymphatic System) முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற் றில் ஏற்படும் அசாதாரண மாற்றம் காரணமாக உருவாகும் புற்று நோயே லியூகீமியா எனப்படுகின் றது. ‘லியூகீமியா’ என்றால் கிரேக்க மொழியில் வெள்ளைக் குருதி' என்று பொருள். இந்நோய் பொது வாக வெண்குருதிக் கலங்களிலேயே ஆரம்பிக்கின்றது.
எமது குருதியிலுள்ள வெண் குருதிக் கலங்கள் நோய்த் தொற்று களுக்கு எதிராகப் போராடும் வல்ல மை உடையவை. சாதாரண நிலை மைகளில் இக்கலங்கள் உடலின் தேவைகளுக்கு ஏற்பச் சீரான முறை யில் வளர்ந்து பிரிகையடைகின்றன.
லியூகீமியா இச்செயன்முறையைச்
சீர்குலைத்து விடுகின்றது.
லியூகீமியா நோயினால் பாதிக்
கப்பட்டவர்களில் எலும்பு மச்சை
யானது அசாதாரணமான வெண்
குருதிக் கலங்களைப் பெருமளவில் உற்பத்திசெய்யத் தொடங்கும். இக்
கலங்கள் சாதாரண குருதிக் கலங் களைவிடத் தோற்றத்தில் வித்தியாச மாக இருப்பதோடு உரிய முறையில் தொழிற்படும் ஆற்றலையும் கொண் டிருக்க மாட்டா. இறுதியில் அவை சாதாரண வெண்குருதிக் கலங்களின் உற்பத்தியையே தடுத்துவிடுகின்றன. இதனால் நோய்களுக்கெதிராகப்
அரும்பு- 35
லியூகீமியா என்னும் குருதிப் புற்று நோய்
(Leukaemia)
WX
போராடும் ஆற்றல் சீர்குலைந்து விடுகின்றது.
இது மட்டுமன்றி லியூகீமியாக் கலங்களின் அபரிமிதமான பெருக் கம் காரணமாக எலும்பு மச்சையில் ஏனைய குருதிக் கலவகைகளின் உற்பத்தியும் நெருக்கடிக்குள்ளா கிறது. இவ்வாறு உடல் இழையங் களுக்கு ஒட்சிசனைக் கொண்டுசெல் லும் செங்குருதிக் கலங்களினதும் குருதி உறைவதற்குத் துணைசெய்து குருதிப்பெருக்கைத் தடுக்க உதவும் குருதிச் சிறுதட்டுக்களினதும் உற் பத்தி நலிவடைகின்றது.
பலர் நினைப்பது போல் லியூ கீமியா என்பது சிறுவர்களுக்கு மாத் திரமே உரிய நோயொன்றல்ல. லியூ கீமியாவில் நான்கு பிரதான வகை களும் பல உப வகைகளும் உண்டு. இவற்றுள் ஒருசில மாத்திரமே சிறு வர்களில் பொதுவாகக் காணப்படு கின்றது. எனினும் மொத்தமாக நோக்கும்போது லியூக்கீமியா சிறு வர்களைவிட 10 மடங்கு அதிகமாக வளர்ந்தவர்களையே பாதிக்கின்றது. வெற்றிகரமான முறையில் சிகிச்சை வழங்கப்படாவிடில் உயி ருக்கு ஊறு விளைவிக்கக்கூடிய ஓர் ஆபத்தான நோயாகவே லியூகீமியா விளங்குகின்றது.
ஒவ்வொரு வகை லியூகீமியா விலும் அறிகுறிகளும் குணங்குறி களும் வித்தியாசமானவையாகவே காணப்படுகின்றன. எனினும் எல்லா வகைகளுக்கும் பொதுவான அறி
O3

Page 4
குறிகளும் குணங்குறிகளும் பின்வரு
DIT QUOI :
e காய்ச்சல் அல்லது உடல் குளிர்தல் e தொடர்ச்சியான களைப்பும் உடற் பலவீனமும் 6 அடிக்கடி ஏற்படும் தொற்றுக்கள் e உணவில் விருப்பம் அற்றுப் போதலும் நிறைக் குறைவும் 9 நிணநீர்க் கணுக்களில் வீக்கமும் ஈரல், மண்ணீரல் என்பன பெரிதா தலும் e எளிதில் ஏற்படும் குருதிப்
பெருக்குகள் e உடல் முயற்சிகளில்
ஈடுபடும்போது மூச்சுத் திணறுதல் e தோலில் நுண்ணிய செந்நிறப் புள் ளிகள் (petachiae) தோன்றுதல் 9 அதிகளவு வியர்த்தல் (குறிப்பாக இரவில்) 0 எலும்புகளில் வலியும் எலும்பு மென்மையாதலும்.
அறிகுறிகளினதும் குணங்குறி களினதும் தீவிரத் தன்மை, சம்பந்தப் பட்டுள்ள குருதிக் கலங்களின் எண் னிக்கை, அவை ஒன்று திரளும் இடம் என்பவற்றைப் பொறுத்து வேறுபடும்.
வைத்தியர்கள் லியூகீமியா நோயை இரண்டு முறைகளில் பாகுபடுத்துகின்றார்கள். இவற்றுள்
முதலாவது, லியூகீமியா நோய் முற் றுகின்ற வேகத்தை அடிப்படையா கக் கொண்டது. இம்முறையின்படி (350 ista) aslg8u6)un (Acute leukaemia), நீண்டகால லியூகீமியா (Chronic leakaemia) 6T67 g)c5 6.1605 கள் இனங்காட்டப்படுகின்றன.
குறுங்கால லியூகீமியாவில் அசாதாரண குருதிக் கலங்கள் யாவும் முதிர்ச்சியடையாதனவாகவே இருக் கும். அவற்றால் தம் இயல்பான தொழிலை நிறைவேற்ற முடியாது. அதேவேளை அவை மிகத் துரிதமா கப் பெருக்கமடைகின்றன. எனவே நோய் குறுகிய காலத்தில் மோச மான நிலையை அடையும். இவ்
04
வகை லியூகீமியா வுக்கு உடனடி யான, தீவிர சிகிச்சை அவசியம்.
நீண்டகால லியூகீமியாவில் முதிர்ச்சியடைந்த கலங்களே பாதிக் கப்பட்டிருக்கும். இவை மந்த கதி யிலேதான் பெருக்கமடையும். அத் தோடு ஒரு குறிப்பிட்ட காலத்துக்குத் தம் தொழிலைச் செய்ய அவற்றால் முடியும். சில வகையான நீண்டகால லியூக்கீமியாக்களில் அறிகுறிகள் வெளியே தெரியாமலேயே இருக் கலாம். அல்லது பல வருடங்களுக்கு நோய் இனங்கண்டறியப்படாமலே யே போகலாம். -
இரண்டாவது வகையான பாகு பாடு பாதிக்கப்பட்டுள்ள குருதிக் கல வகையை அடிப்படையாகக் கொண் L-g5. g)g56ăTLuq. Limphocytic leukaemia, Myelogenous leukaemia 67 687 இருவகை லியூகீமியாக்கள் உண்டு. முதல் வகையில் நிணநீர்க் குழியங்
கள் எனப்படும் வெண்குருதிக் கல
வகையே பாதிப்புக்கு உள்ளாகின் றன. இரண்டாம் வகையில் செங் குருதிக் கலங்கள், வெண்குருதிக் கலங்கள், குருதிச் சிறுதட்டுக்கள் என்பவற்றை உற்பத்தி செய்யும் கலங் களாகப் பின்பு விருத்தியடைகின்ற Mycloid cells என்னும் கலவகைகள்
பாதிக்கப்படுகின்றன.
இதன்படி லியூகீமியாவில் நான் கு பிரதான வகைகள் உண்டு. அவை ᏓᏗᎱᎢ ᎧᎫᎶᏈᎢ :
1. Acute Myelogenous Leukaemia
(AML): இதுவே மிகப் பொதுவாகக் காணப்படும் லியூகீமியா வாகும். இது சிறுவர்களையும் வளர்ந்தவர் களையும் பாதிக்கின்றது.
2. Acute Lymphocytic Leukaemia (ALL): இளம் பிள்ளைகளில் அதிக மாகக் காணப்படும் குருதிப் புற்று நோய் இதுவே. இளவயது குருதிப்
அரும்பு-35

புற்றுநோயாளர்களுள் 75 சதவீதத் தினர் இதனாலேயே பாதிக்கப்படு 3: கின்றனர். பொதுவான வகையாகும். எவ்வித 3. Chronie Myclogenous Leukaemia சிகிச்சையுமின்றி நீண்டகாலத்திற்கு (CML) இது பிரதானமாக வளர்ந் இந்நோயாளர்கள் நலமாக வாழக் தவர்களையே பாதிக்கின்றது. இது கூடும். இது சிறுவர்களைத் தாக்கு
குரோம சோம் குறைபாடொன் வதில்லை. றுடன் தொடர்புடையது. CML இவை தவிர அரிதான வேறு
வகையினால் பீடிக்கப்பட்ட ஒருவர் வகை லியூக்கீமியாக்களும் உண்டு. மாதக் கணக்கில் அல்லது வருடக் . . . . . . கணக்கில் நோய் அறிகுறிகள் இன் (லியூகீமியாவுக்கான காரணம், 。 றிக் காணப்படலாம். எனினும் இறு அதிவி கண்டறியும் முறை, அதற திக் கட்டத்தில் புற்றுநோய்க் கலங் கான சிகிச்சை முறைகள் என்பன கள் துரிதமாகப் பெருகத்தொடங் பற்றி அடுத்த இதழில் கவனிப் கும். போம்.)
பரிகாரம்
ஒரு கல்லூரியிலிருந்த நாணயம் போட்டுப் பேசும் தொலைபேசியையே அங்குள்ள ஆசிரியர்களும் மாணவர்களும் பயன்படுத்தி வந்தனர். சிலநாட்களாக அந்தத் தொலைபேசி பழுதாகி வேலை செய்யாமல் இருந்தது. இதைக் கண்ட மாணவனொருவன் அதனை உடனடியாகத் திருத்தித் தருமாறு வேறொரு தொலைபேசிமூலம் தொலைபேசிக் கம்பனியாரிடம் வேண்டிக் கொண்டான்.
அவன் முறைப்பாடு செய்த போதெல்லாம் "இதோ வருகிறோம்” அல்லது “நாளை வந்து திருத்தித் தருகிறோம்” என்ற பதில்களே கம்பனி அதிகாரிகளிடம் இருந்து வந்தன. ஆனால் எவரும் வந்து அதனைத் திருத்திய தாகத் தெரியவில்லை.
சில நாட்களின் பின் அந்த மாணவன் மீண்டும் தொலைபேசிக் கம்பனியாருடன் தொடர்பு கொண்டு, "இனி நீங்கள் வரத் தேவையில்லை. தொலைபேசி நன்றாக வேலை செய்கிறது. ஒரு சிறு பிரச்சினையைத் தவிர'
"அது என்ன பிரச்சினை? எனத் திருப்பிக் கேட்டார் கம்பனி அதிகாரி. “பெரிதாக ஒன்றும் இல்லை. நாம் பேசி முடிந்த பின்னர் போட்ட நாணயமெல்லாம் திரும்பி வந்து விடுகின்றன” என்றான் மாணவன்.
மறுநாளே தொலைபேசியைத் திருத்துவதற்கு ஆட்களை அனுப்பி வைத்தது கம்பனி.
6)luljl
நாடகாசிரியர் ஜோர்ஜ் பெர்னார்ட் ஷோ தனது விருந்தினர் ஒருவருக்கு Rodin என்ற சிற்பியினால் பல வருடங்களுக்கு முன் செதுக்கப்பட்ட தனது மார்பளவு உருவச்சிலையைக் காட்டிக் கொண்டிருந்தார். "இந்தச் சிலையில் ஒரு விநோதம் இருக்கிறது. இது ஒவ்வொரு நாளும் இளமையாகிக் கொண்டு வருகின்றது” என்றார் வயதாகிக் கொண்டிருந்த ஷோ.
அரும்பு-35
05

Page 5
மாதுளை POMEGRANATE
செந்நிறமான
ம ணி க  ைள ப்
போன்ற, சாறு நிரம்பிய 39 Goő), GoYT களைக் கொண்ட மாதுளம் பழம்
அ  ைன வ ரா லும் விரும்பி உண்ணப் படுகின்றது. POmegranate என ஆங் கிலத்திலும் Granada என ஸ்பானிய மொழியிலும் அழைக்கப்படும் மாதுளை ஈரான் முதல் வட இந் தியாவின் ஹிமாலயப் பகுதி வரை யான பிரதேசத்துக்குரிய சுதேச தாவரமொன்றாகும். ஆதிகாலம் தொட்டு இது மத்தியதரைக் கடலைச் சூழ்ந்த பிரதேசங்கள் அனைத்திலும் பயிரிடப்பட்டு வந்துள்ளது.
இப்போது இந்தியா, ஈரான்,
மலேசியா, இந்துனேஷியா, பிலிப் பைன்ஸ், ஆபிரிக்கா வின் வெப்ப வலய நாடுகள் முதலியவற்றில் மாதுளை பரவலாகப் பயிரிடப்படு கின்றது. 1769இல் இது வடஅமெரிக் காவின் கலிபோர்னியாப் பகுதிக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இப் போது ஐக்கிய அமெரிக்காவில் கலிபோர்னியா, அரிசோனா ஆகிய மாநிலங்களின் வறண்ட பகுதிகளில் மாதுளை பயிர்செய்யப்படுகின்றது.
மாதுளை மரம் நேர்த்தியாகவும்
வட்ட வடிவில் கிளை பரப்பியும் காணப்படும். 4 m முதல் 5 m வரை யான உயரத்திற்கு இது வளரும். சில பிரதேசங்களில் 7 m - 10 m வரை உயரமான மாதுளை மரங்களையும் காண முடியும். குட்டையாக வளரும்
06
விசேட வகைகளும் உண்டு. பொது வாக இலையுதிர் காலத்தில் மாது ளையின் இலைகளும் உதிர்ந்து விடுகின்றன. எனினும் சில பிர தேசங்களில் இலைகள் உதிர்க்கப் படாமல் தொடர்ந்தும் மரத்திலே தங்கியிருக்கக்கூடும்.
மாதுளை மரத்தின் தண்டு செங்கபில நிறப் பட்டையினால் மூடப்பட்டிருக்கும். காலப்போக் கில் பட்டை நரை நிறமானதாக மாறிவிடும். கிளைகள் விறைப்பான வையாகவும், கோண வடிவில் பிரிந் தும் காணப்படும். அவை பெரும்பா லும் முட்களைக் கொண்டிருக்கும். தாவரத்தின் அடிப்பகுதியிலிருந்து உறிஞ்சிகள் (நிலத்தின் அடியிலிருந்து உருவாகும் தண்டுகள்) தோன்ற லாம். மாதுளைத் தாவரம் நீண்ட காலத்திற்கு உயிர் வாழக்கூடியது. ஐரோப்பாவிலுள்ள சில மாதுளை மரங்கள் 200 வருடங்களுக்கு மேல் பழையவை. எனினும் சுமார் 15 வரு டங்களின் பின்னர் மாதுளை மரம் தனது வீரியத்தை இழந்து விடுகின் (Dg51.
பளபளக்கும் மேற்பரப்பைக் கொண்ட மாதுளையின் இலைகள் குறுகியனவாகவும் கூர்முனை கொண்டனவாகவும் இருக்கும். மாதுளம் பூக்கள் சிவப்பாக அல்லது வெள்ளையாக அல்லது பன்னிற முடையதாகக் காணப்படும். அவற் றில் 5 முதல் 8 வரையான அல்லிகள் (இதழ்கள்) இருக்கும். செந்நிறக் குழாய் போன்ற சதைப்பாங்கான புல்லி பழத்திலும் தொடர்ந்து எஞ்சி யிருக்கும். பூக்கள் தனித்தனியாக இரண்டு அல்லது மூன்று கொண்ட கூட்டங்களாகவோ கிளை களின் அந்தங்களில் தோன்றுகின்றன. மாதுளையில் தன்மகரந்தச் சேர்க் கையும், பூச்சிகள் மூலமான அயன்
அரும்பு-35
 

மகரந்தச் சேர்க்கையும் இடம் பெறுகின்றன.
மாதுளங் கனி ஒரளவு உருண்
டையானத்ாகவும் அகலத்தில் சுமார்
7 Cm முதல் 13 Cm கொண்டதாகவும்
காணப்படும். அதன் அடிப்பகுதியில்
புல்லி முனைப்பாகத் தெரியும். தடித்த, பதனிட்ட தோல் போன்ற மாதுளம் பழத் தோல் பொதுவாக மஞ்சள் நிறத்தின் மீது மென்சிவப்பு
அல்லது கடுஞ் சிவப்புக் கலந்ததாகக்
காணப்படும். பழத்தின் உட்பகுதி மென்சவ்வுச் சுவர்களினாலும் வெண் னிறக் கடற்பஞ்சு போன்ற, கசப்புச் சுவை கொண்ட இழையங்களி னாலும் பல அறைகளாகப் பிரிக்கப் பட்டிருக்கும்.
இனிய, அமிலத் தன்மையான சாறு கொண்ட மணி போன்ற மாதுளஞ் சுளைகள் இவ்வறைகளுக் குள் காணப்படும். ஒவ்வொரு சுளையும் கோண வடிவான ஒரு வித்தைக் கொண்டிருக்கும். சுளை களினுள் இருக்கும் சாறு மென் சிவப்பாக அல்லது சிவப்பாக அல் லது வெண்மையாகக் காட்சி தரும்.
மாதுளைத் தாவரம் முதலாவது வருடத்திலேயே காய்க்கத் தொடங் கக்கூடும். எனினும் இதற்குப் பொது வாக 2% - 3 வருடங்கள் பிடிக்கும். உகந்த சூழ்நிலைகளில் பூக்கள் தோன்றி 5 - 7 மாதங்களில் கனிகள் முதிர்ச்சியடையும். கணிதரும் காலங் களில் உயர்ந்த வெப்பநிலை இருந்
தால்தான் நல்ல சுவையுள்ள கனிகள்
கிடைக்கும்.
சூரிய வெப்பம் நன்றாகக் கிடைக்கக்கூடிய பகுதிகளில் நடப் பட்டால் மாத்திரமே மாதுளை கனிகளைத் தரும். நிழல் உள்ள பகுதிகளில் வளரும் தாவரங்கள் பூக்கள் உருவாகிய பின்னர் காய்க் காமல் விடலாம்.
35 - byاتولاى
மாதுளைப் பயிர்ச்செய்கைக்கு
சாதாரண தோட்ட மண் ஏற்றது. எனினும் அது சுண்ணாம்புத் தன்மை யான அல்லது பாறைகளைக் கொண்ட நிலங்களிலும் நன்றாக வளரும். உறுதியாக வளர்ந்த பின்னர் அவற்றினால் நீண்ட கால வறட்சி யைத் தாங்கிக்கொள்ள முடியும். எனினும் நல்ல கனி உற்பத்திக்கு நீர்ப்பாசனம் அவசியம். ஓரளவு உவர்த் தன்மையான நீரையும் மாதுளை சகித்துக்கொள்ளும்.
மாதுளை நடப்பட்டு ஆரம்ப காலத்தில் அமோனியம் சல்பேற்று
போன்ற நைதரசன் பசளையொன்
றை இடுவது நல்லது. எனினும் பிற்காலத்தில் செயற்கைப் பசளை கள் அதிகம் தேவைப்பட மாட்டாது. இருப்பினும் கூட்டுப்
றைப் பயன்படுத்துவது நல்ல
விளைச்சலுக்குத் துணை செய்யும்.
கிளைகளின் அந்தங்களிலேயே பூக்கள் தோன்றுவதால் அதிகளவு, கிளைகளை உருவாக்கும் நோக்
கோடு மாதுளைத் தாவரத்தை காலத் துக்குக் காலம் கத்தரித்து விடுவது அவசியம். -
பசளை' போன்ற சேதனப் பசளையொன்
மாதுளைத் தாவரத்தை வித்துக்
களிலிருந்து உருவாக்க முடியும். எனினும் வெட்டுத் துண்டுகளை
நடுவதன் மூலமே பெரும்பாலும் மாதுளை பயிர்செய்யப்படுகின்றது. பீடைகளாலும் நோய்களாலும் மாதுளைத் தாவரம் மிக அரிதாகவே பாதிக்கப்படுகின்றது.
காய்கள் பழுக்கும்போது தோல் சிறப்பியல்பான நிறத்தைக் காட்டும். அத்தோடு விரல்களால் தட்டும்போது உலோகத்தில் தட்டு வது போன்ற ஒலி உண்டாகும். மிகையாக முதிர்ச்சியடைய முன் னரே மாதுளங் கனி பறிக்கப்பட
07

Page 6
வேண்டும். இல்லையேல் அதன் பெறுமானம் மிக்கது. சமிபாட்டுத் தோள் வெடித்து திறந்துகொள்ளக் தொகுதிக் கோளாறுகளின்போது கூடும்.அப்பிளைப் போன்றே மாது இது மருந்தாகப் பயன்படுத்தப்படு ளங் கனியையும் சுமார் 7 மாதங்கள் கின்றது. அத்தோடு பதனிட்ட வரை பேணி வைக்க முடியும். இவ் தோலுக்கு நிறமூட்டுவதற்கும் இது வாறு களஞ்சியப்படுத்தி வைக்கும் பயன்படுத்தப்படுகிறது. போது மாதுளங் கனியின் சாறும் மாதுளை Punicaceae என்ற சுவையும் அதிகரிக்கும். தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. மாதுளங் காயின் தோள் இதன் தாவரவியற் பெயர் Punica (மாதுளம் பட்டை) மருத்துவப் granatum என்பதாகும். து
biDLI (DIQ LIDTT? அரசியல்வாதிகள் குழுவொன்று தூரப் பகுதியொன்றுக்கு பஸ் வண்டியொன்றில் பிரயாணம் செய்துகொண்டிருந்தது. கிராமப் புறமொன்றி னுரடாகச் செல்லும்போது வண்டி பெரிய மரமொன்றில் மோதி ஒரு வயலி னுள் போய் விழுந்தது. அதிலிருந்த அரசியல்வாதிகள் எவரும் எழுந்திருக்க வில்லை.
அவ்வயலில் வேலை செய்துகொண்டிருந்த கிராமத்து விவசாயி இந்த விபத்தைக் கண்டான். அவன் வயலின் அருகிலேயே பெரிய குழியொன்றைத் தோண்டி அந்த அரசியல்வாதிகளையெல்லாம் புதைத்துவிட்டான்.
மறுநாள் அவ்வழியாக வந்த பொலிஸ் அதிகாரியொருவர் சிதைந்து போயிருந்த பஸ் வண்டியைக் கண்டு என்ன நடந்தது என்று விவசாயியிடம் விசாரித்தார். நடந்ததை அவன் விவரித்தான். "எல்லோரையும் புதைத்து விட்டீரா? அவர்களில் ஒருவராவது உயிரோடிருக்கவில்லையா?” என்று ஆச்சரியத்தோடு கேட்டார் அதிகாரி.
“தாம் சாகவில்லை எனச் சிலர் சொன்னார்கள் தான். ஆனால் அரசியல் வாதிகளின் பேச்சை நம்பமுடியுமா? வாயைத் திறந்தால் பொய்யைத்தானே பேசுவார்கள்” என்று விளக்கமளித்தான் விவசாயி.
w கேள்வி - பதில் பகுதி
வாசகர்களின் கேள்விகளுக்கு விடையளிப்பதற்காக 3 முதல் 5 பக்கங்களை ஒதுக்குவதற்குத் தீர்மானித்து, இவ்விதழில் நடைமுறைப் படுத்தி உள்ளோம்.
பொதுவாக யாவருக்கும் பயனளிக்கக்கூடிய அறிவு சார்ந்த விடயங் கள் பற்றி தெளிவு பெறுவதற்காகக் கேள்விகளை வாசகர்கள் இப்பகுதிக்கு அனுப்பி வைக்கலாம். அவற்றுள் பயனுள்ளவை என நாம் கருது பவற்றுக்கு மாத்திரம் பதில் அளிக்கப்படும்.
இப்பகுதியில் கேள்விகளைக் கேட்க விரும்புவோர் தமது கேள்வி களைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் எழுதித் தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். அனுப்ப வேண்டிய முகவரி : Ges56T6S - Luģ66ão, Arumbu 70, Main Street, Dharga Town-12090
08 . . m - 35 - اطازوییلاقی

பிரயாண அனுபவங்கள்
t
கிரி யல் பட்டணத்தில் நான் கலந்து கொள்வதற்காகச் சென்ற திருமண வைபவங்கள் விமர்சையாக இடம்பெற்றன. மாப்பிள்ளையை அழைத்துச் செல்லும் ஊர்வலம், புஹாரி மஜ்லிஸ் மண்டபத்தில் இடம்பெற்ற நிகாஹ்' வைபவம், வலீமா விருந்து என நட்ந்த பல் வேறு வைபவங்களிலும் கலந்து கொண்டேன். திருமணத் தினத்தன்று ಟ್ಟಿ:? வரவேற்பு நிகழ்ச்சி ரவு வரை நீடித்தது. அப்பிரதேச சட்டசபை உறுப்பினர் (MLA) உட்பட ஊர்ப்பிரமுகர்கள் பலர் வந் திருந்தனர்.
நான் ஓரளவு ஒதுங்கியிருந்து அந்த நிகழ்ச்சிகளை அவதானித்துக் கொண்டிருந்தேன். அவ்வூர் மக்கள் பண்பும் பரிவும் மிக்கவர்களாகவே காணப்பட்டனர். ஒருவரையொரு வர் கட்டித்தழுவி நலம் விசாரிப்பதும் ஹாஸ்யமாகப் பேசிக்கொள்வதும் சகஜமாக இருந்தது. ஆண்களுக்கு மத்தியில் பெண்கள் நடமாடுவதைக் காண முடியவில்லை. அவர்களுக் கெனத் தனியான இடம் ஒதுக்கப்பட் டிருந்தது. இடையிடையே ஆண்கள் சிலரோடு உரையாடினேன். நான் இலங்கையிலிருந்து வந்திருப்பதாகச் சொன்னதும் “எந்த ஊர்?’ என்று பலர் கேட்டனர். அந்தளவுக்கு இலங் கையைப் பற்றிய பரிச்சயம் அவர் களுக்கு இருந்தது.
கல்யாண விருந்துக்காகச் சமை யல் நடக்கும் இடத்தைப் பார்க்க என்னை அழைத்துச் சென்றனர்.
அரும்பு- 35
காயல் பட்டனத்தில் சில நாட்கள் II
அங்கு இடம்பெற்றுக்கொண்டிருந்த சமையல் வேலைகளைப் பார்த்த போது நான் பிரமித்துப் போனேன். பெரும்பாலும் முழு ஊரையும் விருந்துக்கு அழைத்திருந்தார்கள் போல் தெரிந்தது. ஆங்காங்கே பல பெரிய சட்டிகளில் பிரியாணிச் சோறு வெந்துகொண்டிருந்தது. ஒவ்வொரு சட்டி பிரியாணிக்கும் 10 முதல் 12 ஆடுகளின் இறைச்சி சேர்க்கப்படு வதாகச் சொன்னார்கள்.
பிரியாணி சமைப்பதில் காயல் பட்டணத்துச் சமையற்காரர்கள் பெயர் எடுத்தவர்கள். நடுத்தர வயது தாண்டிய ஒரு சமையற்காரருடன் உரையாடினேன். இலங்கையைப் பற்றிய பரிச்சயம் அவருக்கு நிறைய இருந்தது. அது எந்தளவுக்கென்றால் நான் எனது ஊரின் பெயரைச் சொன் னதும் "தர்கா டவுனில் எங்கே? மீரிப் பண்ணையா?’ என்று எமது ஊரின் ஒரு பகுதியின் பெயரைக் குறிப்பிட் டுக் கேட்டுவிட்டார். எமது அடுத்த ஊரான பேருவலையில் நடந்த பெரிய திருமண விருந்துகள் சில தமது கைவரிசையே என அவர் கூறிய போது நான் வாயடைத்துப் போ னேன்.
திருமண நிகழ்ச்சித் தடல்புடல் களுக்கு இடையே ஒய்வு கிடைத்த நேரங்களில் காயல்பட்டணத்தின் கல்வி, கலாசார, சமூகச் சிறப்பியல்பு களை அவதானிப்பதற்கு நான் எத்த னித்தேன். அங்கு அறிமுகமான அன்பர் ஒருவர் ந்த வகையில் எனக்குப் பேருதவியாக அமைந்தார்.
O9

Page 7
கம்பியூட்டர் பயிற்சி நிலையம், குர்ஆன் மனனம் செய்யும் 'ஹிப்ழ் மத்ரஸா உட்படப் பல அவர் என்னை அழைத்துச் சென்றார். அத்தோடு அவ்வூரைச் சேர்ந்த அறி ஞர்கள், எழுத்தாளர்கள் போன்ற சிலரையும் நான் சந்திப்பதற்கு ஏற் பாடு செய்தார். இலக்கிய ஆர்வலர் களின் திடீர்க் கூட்டமொன்றைக் கூட்டுவதற்கு அவர் எடுத்த முயற்சி காலம் போதாமையால் கைகூட ഖിഡ്ഢ, ി
காயல்பட்டணத்தில் கணிச மான தொகையினர் புனித குர்ஆன்
முழுவதையும் மனனம் செய்தவர்
களாக இருக்கிறார்கள். குர்ஆன் மனனம் செய்விப்பதில் ஈடுபடும் 'ஹிப்ழ் மத்ரஸாக்கள் பல அங்கிருக் கின்றன. பாடசாலைக்குச் செல்லும் பிள்ளைகள் ஆறாம் அல்லது ஏழாம் வகுப்பில் இடைவிலகி இம்மத்ர ஸாக்களில் சேர்ந்து முழுநேர மாண வர்களாகப் புனித குர்ஆனை மனனம் செய்வதில் ஈடுபடுகின்றனர். சுமார் ஒன்றரை முதல் இரண்டு வருடங் களுக்குள் இப்பணியை முடித்துக் கொண்டு அவர்கள் மீண்டும் பாட சாலையில் சேர்ந்து பொதுக் கல்வி யைத் தொடர்கின்றனர். இந்த வகை யில் பாடசாலைகளுக்கும் மத்ரஸா வுக்கும் இடையில் பரஸ்பர புரிந்
துணர்வும் ஒத்துழைப்பும் இருப்ப
தைக் காணக்கூடியதாக இருந்தது.
இவ்வாறு இடையில் விலகிக்
குர்ஆனை மனனம் செய்வதால்
பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம் தடைப்படாதா என்று என்னை அங்கு அழைத்துச் சென்ற அன்பரிடம்
இடங்களுக்கு
பல இளைஞர்களின் புகைப்படங் கள் இருந்தன. “பாருங்கள் இவர்கள் அனைவரும் இவ்வாறு இடையில் விலகி 'ஹிப்ழை முடித்தவர்கள் தான். இன்று உயர்கல்வியை முடித்து இன்ஜினியர்களாகவும், கணக்காளர் களாகவும் வேறு உயர் பதவிகளிலும் இருக்கிறார்கள். திருக் குர்ஆனை மனனம் செய்த மாணவர்கள் பிற் காலத்தில் ஏனையவர்களைவிட மிகச் சிறப்பான முறையில் கல்வி யில் திறமை காட்டுகிறார்கள்’ என்று விளக்கம் தந்தார் அவர். மனதை ஒருமைப்படுத்துவதில் கிடைக்கும்
பயிற்சி, இற்ைவனின் திருமறையை
உள்ளத்தில் சுமந்திருப்பதன் பேரருள்
என்பன இணைந்தே அவர்களை
இவ்வாறு மாற்றிவிடுகின்றன என நான் நினைத்துக் கொண்டேன்.
திருமண வலீமா’ விருந்து
முடிந்த மறுநாளே சென்னை நோக் கிப் புறப்பட நான் திட்டமிட்டிருந் தேன். புறப்பட முன் காயல் பட் பணக் கடைத்தெருவுக்குச் சென்று சில பொருட்களை வாங்கிக் கொண்டேன். என்னை அன்புடன் வரவேற்று உபசரித்த அனைவரிட மும் விடைபெற்றுக்கொண்டு எனது மீள் பயணத்திற்கு ஆயத்தமானேன்.
அன்று மாலை 3.30க்குச் சென்னை
மெதுவாகக் கேட்டேன். “நிச்சயமாக
இல்லை” என்று உறுதியோடு பதி லளித்த அவர் பெரிய Album ஒன்
றைத் திறந்து காட்டினார். அதிலே 10
நோக்கிச் செல்லும் பஸ்ஸில் ஏற் கனவே ஆசன ஒதுக்கீடு செய்திருந் தேன். எனினும் குறிப்பிட்ட பஸ் ஒரு மணித்தியாலம் தாமதமாகியே வந்தது.
எனது வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டத்தில் எனக்கு உதவி செய்து என்னைத் தூக்கிவிட்ட பெரியவரைச் சந்தித்து நன்றி பாராட் டக் கிடைத்த ஆத்ம திருப்தியோடு நான் காயல்பட்டணத்திலிருந்து விடைபெற்று சென்னை நோக்கிய
அரும்பு-35
 

பயணத்தைத் தொடங்கினேன்.
மாலை 4.30க்குப் புறப்பட்ட அந்த
பஸ் திருநெல்வேலி, கோவில்பட்டி வழியாக மதுரையை அடைந்தது.
மதுரையில் தேநீருக்காக 30
நிமிடங்களுக்கு மேல் தரித்து நின்றோம். வரலாற்றுப் புகழ் மிக்க அந்நகரில் இறங்கிச் சிறிது நேரம் உலாவிய போதிலும் அதனைச் சுற்றிப் பார்க்கச் சந்தர்ப்பம் கிடைக் காதது கவலையையே தந்தது. பஸ் வண்டி திருச்சியைச் சென்றடைந்த போது நள்ளிரவாகி இருந்தது.
வழி நெடுகே இருந்த காட்சி களை அவதானித்த வண்ணம் சென்ற தனால் எனக்கு நித்திரையே வர வில்லை. இந்தியாவில் ஏற்பட்டு வரும் பொருளாதார முன்னேற்றத் தை எங்கும் காணக்கூடியதாக இருந்தது. நெடுஞ்சாலைக்கு அண் மையில் நிறுவப்பட்டிருந்த பெரிய தொழிற்சாலைகளும் திறந்த வெளி களிலே அமைக்கப்பட்டிருந்த காற் றாலைகளும் இம்முன்னேற்றத்திற் குச் சாட்சி பகர்வனவாக இருந்தன.
அதேவேளையில் இந்தியா வின் கிராமிய மக்களது எளிமையை யும் கடும் உழைப்பையும் வழி நெடு கே இருந்த அவர்களது சிறிய வீடு களும் பாரிய வாழைத் தோட்டங் களும் வயல்களும் பறைசாற்றிக் கொண்டிருந்தன. சென்னைக்குச் செல்லும் பஸ் வண்டிகளிலும் லொறிகளிலும் ஏற்றுவதற்காகப் பெருந்தொகையான வாழை இலைப் பொதிகளை வைத்துக் கொண்டு கிராமத்தவர்கள் காத்திருப் பதைக் கண்டேன். சென்னை யிலுள்ள சைவ ஹோட்டல்களுக்குத்
தேவையான வாழை இலைகள் தினமும் இவ்வாறு ஏற்றிச் செல்லப் படுவதாக அறிந்தேன்.
நாம் சென்னையைச் சென் றடைந்தபோது காலை 7.00 மணி நெருங்கியிருந்தது. நேரே சென்னை புரோட்வேப் பகுதியிலுள்ள ஏற்கன வே பழக்கமான ஒரு விடுதியில் போய்த் தங்கி ஒய்வெடுத்துக் கொண்டேன். குடும்பத்தினருக்காகச் சில பண்டங்களை வாங்கிக் கொள்வ தோடு எனது கம்பியூட்டரில் பயன் படுத்தப்படுகின்ற தமிழ் எழுத்து வடிவங்களைத் தயாரித்த Lastech என்ற நிற வனத்துக்குச் செல்ல வேண்டிய தேவையும் எனக்கு இருந்தது.
எப்படியோ மூன்று நாட்களைச் சென்னையில் தனியாகவே கழித் தேன். விடுதி அறையில் தனிமையில் ஒதுங்கிக் கிடப்பதும் ஹோட்டல் சாப்பாடும் பெரும் அலுப்பைத் தருவதாக இருந்தது. போதாக் குறைக்கு அங்கு காசுக்கு வாங்கிய குடிநீர்கூட தாகத்தைத் தீர்ப்பதாக இருக்கவில்லை.
காயல்பட்டணத்தின் இனிய நினைவுகள் சென்னை வெய்யிலில் கருகிப் போய்விட முன் வீடுவந்து சேர்ந்துவிட வேண்டும் என நினைத் தேன். எனவே ஏற்கனவே திட்மிட் டிருந்ததை விட ஒரு நாள் முன்ன தாகவே விமான ஆசனமொன்றைப்
பெற்றுக் கொண்டு இலங்கை வந்து
சேர்ந்தேன். களைப்புடன் வீட்டை அடைந்த என்னிடம் குடும்பத் தாரிடம் சொல்லி மகிழ வேண்டிய காயல்பட்டண அனுபவங்கள் நிறை யவே இருந்தன. ய
அனுபவம் என்பது ஒரு கடுமையான ஆசிரியர். அது பரீட்சையை முதலில் நடத்திவிட்டுப் பின்னரே பாடத்தைப் புகட்டுகிறது.
அரும்பு- 35
11

Page 8
(Ş
சார்ளி சப்ளின் என்ற நகைச்சுவை
நடிகரைப் போன்று உலகளாவிய ரீதி
யில் புகழ் பெற்றவர்கள் வேறு எவ ரும் இருக்க முடியாது. அந்த அள வுக்கு மொழி வேறுபாடின்றி உலக நாடுகள் அனைத்திலும் சார்ளி சப்ளி னின் நகைச்சுவைப் படங்கள் இன் றும் சிறுவர் முதல் பெரியோர் வரை ரசிகர்களால் விரும்பி ரசிக்கப்படு கின்றன.
சார்ளி சப்ளினின் முழுப்பெயர் சார்ள்ஸ் ஸ்பென்ஸர் (Charles Spencer Chaplin) 6T65TL15T கும். இவர் 1889 ஏப்ரல் 16ம் திகதி லண்டனில் பிறந்தார். அவரது பிள் ளைப் பருவம் வறுமை, பட்டினி, கொடுமை, தனிமை என்பன நிறைந் ததாக இருந்தது. தமது பெற்றோரி னால் கைவிடப்பட்ட அவர் பாடசா லைக்குச் செல்லாமல் நாடக மேடை களை நாடினார்.
1910ஆம் ஆண்டு நாடகக் குழு வொன்றுடன் அவர் ஐக்கிய அமெரிக் காவில் சுற்றுளா மேற்கொண்டார். பின்னர் அங்கேயே தங்கிவிடத் தீர்மா னித்தார். அவர் நடித்த முதலாவது p6TT GÖIN LD di Lu Lid Making A Living என்ற பெயரில் 1914ஆம் ஆண்டு வெளிவந்தது. இப்படம் பெரிய வர்வேற்பு எதையும் பெறவில்லை.
அதே ஆண்டில் வெளிவந்த Kid Auto Races at Venice 67667p S60) Ji',
2
சப்ளின்
சார்ளி சப்ளின்
SCHARLIE CHAPN
படத்தில் தான் விரும்பியபடி நடிப் பதற்கு சார்ளி சப்ளினுக்கு அவகாசம் வழங்கப்பட்டது. இதில்தான் சப்ளின் எவராலும் மறக்க முடியாத தனது வினோத ஆடைகளோடு முதன்முதலாகக் காட்சியளித்தார்.
பை போன்ற நீளக்கால்சட்டை, மாற்றியணிந்த சப்பாத்துகள், குட் டையாகக் கத்தரிக்கப்பட்ட மீசை, அழுக்குத் தொப்பி, கைப்பிரம்பு, தள் ளாடிய நடை முதலிய சார்ளி சப்ளி னின் சிறப்புச் சின்னங்கள் இத் திரைப்படத்திலேயே முதன்முதலா கப் புகுத்தப்பட்டன. இவையே அவருக்கு இறவாப் புகழைப் பெற் றுக்கொடுத்த சிறப்புச் சின்னங் களாக அமைந்தன.
இந்தத் திரைப்படத்தைத் தொடர்ந்து அவரது புகழ் அமெரிக்கா வில் மட்டுமன்றி உலகின் பல நாடு களிலும் விரைவாகப் ப்ரவியது. அெ ரது பெயர் உலகம் முழுவதும் பரிச் சயமானதாக மாறியது. அவரது பெய ரில் கேளிச் சித்திரங்களும் கவிதை களும் ஹாஸ்யத் துணுக்குகளும் உல கப் பத்திரிகைகளில் பிரபல்யமாகின. சார்ளி சப்ளின் பொம்மைகள் உல கெங்கும் விற்பனையாகின.
இதனால் சார்ளி சப்ளின் திரைப் படங்களுக்கு அதிக மவுசு ஏற்பட் டது. ஆரம்பத்தில் வாரத்திற்கு 150 டொலர் பெற்ற சப்ளினின் சம்பளம் திடீரென வாரத்திற்கு 1250 டொல ராக அதிகரித்தது. The Tramp (1915), One A.M. (1916), The Pawnshop (1916), Behind The Screen (1916),
The Rink (1916), Easy Street (1917),
அரும்பு-35
 
 
 

The Cure (1917), The Immigrant (1917), The Adventurer (1917), A Dog's Life (1918), Shoulder Arms (1918), The Pilgrim (1919) 6Tairu GOT
ஆரம்பகாலத்தில் சார்ளி சப்ளின் தயா
ரித்து வெளியிட்ட குறுந் திரைப்படங் களுள் புகழ்பெற்ற சிலவாகும். அவ ரது படங்களை அவரே தயாரித்து நெறிப்படுத்தினார் என்பது குறிப் பிடத்தக்கது.
அவரது முழு நீளத் திரைப்படங் 565 Git. The Kid (1921), The Gold Rush (1925), The Circus (1928), City Lights (1931) என்பன அமோக வெற்றி பெற்றன.
சார்ளி சப்ளினின் படங்கள் சாதாரண மக்களால் மாத்திரமன்றி உலகின் பிரபல தலைவர்களாலும் விரும்பி ரசிக்கப்பட்டன். வின்ஸ்டன் சர்ச்சில், லெனின், ஸ்டாளின், ஜவ ஹர்லால் நேரு, அடோல்ப் ஹிட்லர் போன்ற அக்கால உலகத் தலைவர் கள் சார்ளி சப்ளின் திரைப்படங்களின் பிரத்தியேகப் பிரதிகளைப் வைத்துக் கொண்டு ஒய்வு நேரங்களில் பார்த்து மகிழ்ந்தனர். ஹிட்லர் எந்த அளவுக்கு சார்ளி சப்ளின் மீது பிரியம் வைத்தி ருந்தா ரென்றால் தனது "ஹிட்லர் மீசையைக்கூட சார்ளி சப்ளினைப் பின்பற்றியே வைத்திருந்தார்.
சப்ளினின் புகழ் காரணமாக ஏனைய நாடுகளிலுள்ள திரைப்பட நடிகர்கள் சிலரும் அவரால் புத்தூக் கம் பெற்றனர். தமிழ் நாட்டின் மக் கள் அபிமானம் பெற்ற சிரிப்பு நடிக ரான கலைவாணர் N.S. கிருஷ்ணன் அவர்கள்கூட இந்தியாவின் சார்ளி சப்ளின்’ என்றே அழைக்கப்பட்டார்.
1927 முதல் பேசும் திரைப்படங்
கள் வெளிவரத் தொடங்கிய போதி லும் சப்ளின் தொடர்ந்தும் ஊமைப் படங்களையே தயாரித்து வெளியிட்
அரும்பு- 35
டார். சினிமா என்பது ஒரு கட்புல ஊடகமாக இருப்பதனால் தனது ஹாஸ்யப் படங்களுக்கு சொற்கள் தேவைப்படாது என அவர் கூறியிருந் தார்.
அவர் தயாரித்த முதலாவது பேசும் படம் 1946இல் The Great Dictator என்ற பெயரில் வெளிவந்தது. அதன் பின்னர் அவர் தயாரித்த Limelight (1952), A King in New York (1957) என்பனவும் அவரது இறுதித் 963) gử LILLDIT GöI A CounteSS From Hong Kong (1967) 6Taitlugib Gugid படங்களாகவே வெளிவந்தன. எனி னும் சப்ளினின் ஊமைப் படங்களுக் குக் கிடைத்த வெற்றி இப்படங்களுக் குக் கிடைத்ததாகச் சொல்ல முடி
LI IT ġ5].
சார்ளி சப்ளின் ஐக்கிய அமெரிக் காவில் வாழ்ந்து புகழ்பெற்ற போதி லும் அதன் பிரஜையாக மாற அவர் விரும்பவில்லை. அவர் எப்போதும் ஏழைகளையே ஏற்றிப் பேசுவதால் அவரை ஒரு கம்யூனிஸ்ட் என அமெ ரிக்க அரசு குற்றம் சாட்டியது. அமெ ரிக்க அரசு எப்போதும் அவரை வெறுப்புக் கண்களால் நோக்கிய தோடு அவர் அமெரிக்காவில் ஒழுக் கச் சீர்கேட்டுக்கு வழிவகுப்பதாகவும் கருதியது. இதனால் அமெரிக்காவை விட்டு வெளியேறிய அவர் 1952இல் சுவிட்ஸர்லாந்து நாட்டில் நிரந்தரமா கக் குடியேறினார்.
எனினும் திரைப்படத் துறைக் குச் செய்த சேவைகளைப் பாராட்டி வழங்கப்பட்ட விசேட அகடமி விருது உட்படப் பல விருதுகளைப் பெற்றுக்கொள்வதற்காக 1972இல் ஐக்கிய அமெரிக்கா வுக்கு குறுகிய விஜயம் ஒன்றை அவர் மேற்கொண் டார். 1975இல் பிரிடிஷ் மகாராணி யார் அவருக்கு Sir பட்டம் வழங்கிக் கெளரவித்தார்.
13

Page 9
சார்ளி சப்ளின் 1977 டிசம்பர் 25ம் திகதி காலமானார். அவர் எழுதிய GuLu Fíî60Dg5 bis Gö My Autobiography என்ற பெயரில் 1964இல் வெளிவந் gigi. 9)g My Early Years 67 airp தலைப்பில் 1982இல் மீள் பிரசுரம் Gstitutiu'll g5). My Life in Movies என்ற நூலையும் அவர் 1975இல் எழுதினார்.
புகழ்பெற்ற திரைப்பட இயக்கு GOTři Sir Richard Attenborough goy Guig, ளால் தயாரிக்கப்பட்ட சார்ளி சப்ளி
னின் வாழ்க்கை வரலாறு பற்றிய திரைப்படம் Chaplin என்ற பெயரில் 1992இல் வெளியாகியது.
அண்ட்று ஸரிஸ் என்ற திரைப் படத் துறை ஆய்வாளர் சார்ளி சப்ளி னைப் பற்றிக் குறிப்பிடும்போது “சினிமாத் துறை உருவாக்கிய மிக முக்கியமான கலைஞர் இவரே” என்றும் “அத்துறையின் சர்வதேசச் சின்னமாக அவர் திகழ்கிறார்’ என் றும் கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.
9F6) GLITTLIQ !
நடிகர் சார்ளி சப்ளினின் புகழ் உச்சியிலிருக்கும் காலத்தில் சார்ளி சப்ளினைப் போன்று வேஷம் போடக்கூடியவர்களைத் தெரிவு செய்து பரிசளிப்பதற்கான போட்டிகள் பெரும்பாலான அமெரிக்க நகர்களில் ஏற்பாடு செய்யப்பட்டன. அவரைப் போன்ற முகத் தோற்றமுடைய பலர் அவரைப் போன்றே கோமாளித்தனமான உடைகளை அணிந்து போட்டிகளில் பங்குகொள்ளலாயினர். சிலர் அசல் சார்ளி சப்ளினைப் போன்றே தோற்ற மளித்தனர்.
இதைக் கண்ட சார்ளி சப்ளினுக்குச் சும்மா இருக்க முடியவில்லை. தன்னை யாரென்று இனங்காட்டிக் கொள்ளாமல் அவரும் அப்படியான போட்டியொன்றில் ஒருதடவை கலந்துகொண்டார். முடிவு : சார்ளி சப்ளின் நான்காவது இடத்துக்கே தெரிவு செய்யப்பட்டார்.
அவதானத்தின் அவசியம்
விஞ்ஞானத்தில் அவதானத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிக் கற்பித்த ஆசிரியர் அதனை வலியுறுத்துவதற்காகப் பரிசோதனையொன்றைச் செய்யப் போவதாகத் தன் உயர் வகுப்பு மாணவர்களிடம் கூறினார்.
ஆமணக்கு எண்ணெய், வேப்பெண்ணெய், மண்ணெண்ணெய் ஆகியவற்றை ஒரு முகவையில் கலந்த அவர் அந்தக் கலவைக்குள் தன் விரலொன்றை விட்டுக் கலக்கினார். பின்னர் தன் விரலை வாயில் விட்டுச் சூப்பினார்.
அதன் பின்னர் அக்கலவை ஒவ்வொரு மாணவனுக்கும் வழங்கப்பட்டது. அவர்களும் தம் ஆசிரியர் செய்தது போலவே செய்தனர். ஆனால் அதன் சுவையைத் தாங்க முடியாமல் அவர்களது முகங்கள் சுளித்துப் போயின.
அதைக் கண்ட ஆசிரியர், “மாணவர்களே நீங்கள் உங்களது அவதானத் திறனைச்சரியாகப் பயன்படுத்தவில்லை என்றே நினைக்கிறேன். நான் வாயில் போட்டுச் சூப்பிய விரலும் கலவைக்குள் போட்ட விரலும் ஒன்றல்ல” எனறாா.
14 .." 35 - {اطلازوییلاقی

ண்டர்நெட்டின் ஊடாக அல்லது வேறு கம்பியூட்டர் வலை யமைப்புக்களினூடாக பண்டங் களையும் சேவைகளையும் பரிமாரிக் கொள்வதே இலக்ட்ரோனிக் வர்த் தகம் அல்லது e-வர்த்தகம் எனப்
படுகிறது.
பாரம்பரிய வர்த்தகத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்
கிணங்கவே இலக்ட்ரோனிக் வர்த் தகமும் நிகழ்த்தப்படுகிறது. இங்கும் வாங்குபவர்களும் விற்பவர்களும் பணத்திற்குப் பகரமாகப் பண்டங் களைப் பரிமாறிக்கொள்கிறார்கள். எனினும் இப்பரிமாற்றம் பாரம் பரிய முறையில் இடம்பெறுவது போல் சந்தை வெளிகளிலோ விற் பனைக் கூடங்களின் உள்ளோ இடம் பெறாமல் கம்பியூட்டர் வலை யமைப்புக்களினூடாக நடைபெறு கின்றது.
இலக்ட்ரோனிக் வர்த்தகம் வாடிக்கையாளர்களுக்கு பல வசதி களை வழங்குகிறது. அவர்கள் வீட் டைவிட்டு வெளியே செல்லா ம லேயே இண்டர்நெட்டினூடாக வாரத்தின் எந்த நாளிலும் எந்த நேரத்திலும் உலகிலுள்ள பல்வேறு
விற்பனையாளரின் விலைகளைத்
தெரிந்து கொள்ளவும் ஒப்பிட்டுப் பார்க்கவும் தேவையான பண்டங் களைக் கொள்வனவு செய்யவும் முடியும்.
இலக்ட்ரோனிக் நூல்கள், இசைக் கோப்புக்கள், ஸொப்ட் வெயார்கள் போன்ற சில பண்
இலக்ட்ரோனிக் வர்த்தகம்
E-Commerce டங்களைப் பொறுத்தமட்டில் தமக் குத் தேவையானவற்றை உடனடி யாக இண்டர்நெட்டினூடாகவே பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் வாடிக்கையாளருக்கு உண்டு.
விற் ப  ைன யா ளர்களை ப் பொறுத்தமட்டில் செலவுகளைக் குறைத்துக்கொள்வதற்கும் சந்தை யை விரிவுபடுத்துவதற்கும் e-வர்த்த கம் வசதியளிக்கிறது. அவர்கள் விற் பனைக் கூடங்களை நிர்மாணிக் கவோ அவற்றுக்கு ஆளணிகளை
நியமிக்கவோ களஞ்சியசாலைகளை
வைத்திருக்கவோ தேவையில்லை. இதன்மூலம் தொழிலாளர்களுக் கான கொடுப்பனவு பெருமளவு மிச்சப்படுத்தப்படுகிறது.
உலகளாவிய ரீதியில் இண்டர் நெட்டினூடாக தம் பண்டங்களை யும் சேவைகளையும் சந்தைப்படுத்து வதனால் புவியியல் எல்லைகளைத் தாண்டி வர்த்தகம் செய்யும் வாய்ப்பு விற்பனையாளர்களுக்குக் கிடைக் கிறது. அவர்களுடைய விற்பனை முயற்சிகள் தமது வர்த்தக நிலையத் தினதோ அல்லது களஞ்சியசாலை யினதோ அமைவிடத்தினால் கட்டுப் படுத்தப்படுவதில்லை.
மேலும் பண்டங்களை உற்பத்தி செய்யவும் சந்தைப்படுத்தவும் முன் னர் வாடிக்கையாளர்களின் விருப்பு வெறுப்புக்களை அறிந்துகொள்வதற் கும் உற்பத்தியாளர்களுக்கு இண்டர் நெட்டினூடாக வாய்ப்புக் கிடைக் கிறது.
15
அரும்பு- 35

Page 10
எனினும் e-வர்த்தகத்தில் சில பிரதிகூலங்களும் இருக்கத்தான் செய்கின்றன. சில வகையான பண் டங்களை இண்டர்நெட்டினூடாக ஒடர் செய்து பெற்றுக்கொள்வதற்கு வாடிக்கையாளர்கள் தயங்குகின் றனர். இதற்குக் காரணம் தாம் வாங் கப்போகும் பொருளை வாங்கு வதற்கு முன்னர் சோதித்துப் பார்க்க வேண்டும் என்று வாடிக்கையாளர் கள் நினைப்பதாகும்.
உதாரணமாக வீட்டுத் தளபா டங்கள் தொடர்பான e-வர்த்தகம் வீழ்ச்சியடைந்தே காணப்படுகிறது. தாம் விலை கொடுத்து வாங்கும் பெறுமதிமிக்க தளபாடங்களை நேரில் பார்த்து வாங்க அதிகமா னோர் விரும்புவதே இதற்குக் கார ணமாகும்.
தமக்குத் தேவையான பொருட் களைக் கொள்வனவு செய்வதற்காக ஷொப்பிங்’ செல்வது பலரைப் பொறுத்தமட்டில் மகிழ்ச்சி தரும் சமூக அனுபவமாகவே இன்றும் விளங்குகிறது. இந்த அனுபவத் தையும் மகிழ்ச்சியையும் இண்டர் நெட் மூலம் ஷொப்பிங் செய்து அடைய முடியாது.
இண்டர் நெட் டினுா டா க ச் செய்யப்படும் கொள்வனவுகளுக் கும் பெறப்படும் சேவைகளுக்கும் உரிய கொடுப்பனவைச் செய்வதற் காக கிரெடிட் கார்ட்களே பொது வாகப் பயன்படுத்தப்படுகின்றன. வாடிக்கையாளர் தமது கிரெடிட் கார்ட் இலக்கத்தை விற்பனையா ளருக்கு அல்லது சேவை வழங்குப வருக்கு இண்டர்நெட் ஊடாக வழங்
கினால் அதனை உபயோகித்து.
வாடிக்கையாளரின் வங்கிக் கணக் கிலிருந்து உரிய தொகையை அவர் கள் பெற்றுக்கொள்வார்கள். இவ்
வாறு இண்டர்நெட்டினூடாகத் தமது கிரெடிட் கார்ட் இலக்கத்தை வழங்குவது எந்த அளவுக்குப் பாது
காப்பானது என்பது பற்றிய ஐயமும்
வாடிக்கையாளர்களுக்கு உண்டு.
இலக்ட்ரோனிக் வர்த்தக நட வடிக்கைகளில் பெரும் பகுதி சில் லறை வியாபாரம் சம்பந்தப்பட்ட தாகவே இருக்கிறது. எனினும் ஏல விற்பனை, மொத்த விற்பனை, சேவை வழங்கல் போன்ற இன்னும் பல நடவடிக்கைகளையும் அது உள்ளடக்கியிருக்கிறது. சில நிறு வனங்கள் விற்பனையாளர்களையும் வாடிக்கையாளர்களையும் தொடர்பு படுத்துகின்ற தரகுச் சேவைகளை இண்டர்நெட் மூலம் நடத்துகின்றன. E-வர்த்தகத்தின் விருத்திக்குத் தடையாக இருக்கின்ற சில பிரச் சினைகளும் உள்ளன. குறிப்பாக விற்பனை வரிகளை அறவிடுவது தொடர்பாக பல பிரச்சினைகள் தோன்றியுள்ளன. இண்டர்நெட்டி னுாடாக நடைபெறும் வர்த்தக நட வட 'கைகளில் பெரும்பாலானவை உரிய வரி செலுத்தப்படாமலேயே இடம்பெறுகின்றன. இதனால் அர சாங்கங்கள் தம் வருமானத்தைப் பெருமளவு இழந்து வருகின்றன. நாடுகளின் எல்லைகளைக் கடந்தும் இவ்வர்த்தகம் நடைபெறுவதனால் நாடுகளுக்கிடையிலான தீர்வை ஒப்பந்தங்களும் மீறப்பட்டு வருகின் றன. எனவே e-வர்த்தக நடவடிக்கை களுக்கு விசேட வரி விதிக்கப்பட வேண்டும் எனப் பல நாடுகளில் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இண்டர்நெட் மூலம் பொருள் கொள்வனவு செய்யும் வாடிக்கை யாளர்களின் அந்தரங்கத் தகவல்கள் வெளியாருக்கு கிடைக்காமல்
அரும்பு-35
16

அரும்பு- 35
தடுப்பதும் ஒரு முக்கிய பிரச்சினை யாக இருக்கின்றது.
2000, 2001ஆம் ஆண்டுகளில் பெருந்தொகையான e-வர்த்தக நிறு வனங்கள் வங்குரோத்து நிலையை அடைந்தன. தற்குக் காரணம் அவை விளம்பரத்துக்கும் ஏனைய தேவைகளுக்கும் செய்யும் முதலீடுட் டுடன் ஒப்பிடும்போது கிடைக்கும் &: வீதம் மிகக் குறைவாக
போது e-வர்த்தகம் மீண்டும் ஓரள வுக்கு தலைதூக்கி வருகிறது.
உலகில் e-வர்த்தகத் துறையில் வெற்றிகரமாக முன்னேறிய நிறு வனங்களுள் Amazon.com என்பது சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. புத்தக விற்பனையில் ஈடுபட்ட இந்நிறு வனம் குறுகிய காலத்தில் பெரு வளர்ச்சி கண்டதோடு அதிகளவு இலாபத்தையும் ஈட்டிக் கொண்டது.
ருந்ததேயாகும். எனினும் தற்
தாமதம் ஏனோ? காலையில் வகுப்புக்குத் தாமதமாக வந்த மாணவனைப் பார்த்து “ஏன் இவ்வளவு தாமதம்?” என வகுப்பாசிரியர் கேட்டார்.
“டீச்சர் நான் வருகிற வழியில் ஒருவர் ஐந்து ரூபா நாணயத்தைக் காணாமல் போட்டுவிட்டார்’ என்று பதிலளித்தான் மாணவன்.
“அவர் பணத்தைக் காணாமல் போட்டால் அவரே அதனைத் தேடிக்கொள்ள வேண்டியது தானே! நீயேன் அதற்காக உன் நேரத்தை வீணாக்கினாய்?’ என்று கடிந்துகொண்டார் ஆசிரியர்.
“இல்லை டீச்சர், அந்த நாணயம் எனது காலுக்கடியில் தான் இருந்தது. அதனால் அவர் தேடிவிட்டு அப்பால் போகும்வரை நான் அசையாமல் அதே இடத்தில் நிற்க வேண்டியதாயிற்று” என்று விடை பகர்ந்தான் அந்தச் சிறுவன்.
ܠܙܐ . . تاشکنازق از ماهی به
விபரங்களுக்கு :
அரும்பு கட்டுரைத் தொகுப்பு நூல் அரும்பு இதழிலே வெளிவந்த மனித நோய்கள் தொடர்பான 30 கட்டுரைகள் தொகுக்கப்பட்டு அழகிய வண்ண அட்டையுடன் நூலொன்றாக வெளியிடப்பட்டுள்ளது.
100 பக்கங்கள் கொண்ட இந்நூல் தரமான 70gsm தாளில் அச்சிடப்பட்டிருக்கிறது. ---
பிரதியொன்றின் விலை ரூபா 125.00 தபாலில் பெற விரும்புவோர் மனியோடர் மூலம் ரூபா 135.00 அனுப்புதல் வேண்டும்.
அரும்பு சஞ்சிகையில் இதுவரை வெளிவந்துள்ள தரமான ஹாஸ்யத் துணுக்குகளின் தொகுப்பு அரும்பு ஜோக்ஸ்' என்ற பெயரில் நூலாக 2004 ஒக்டோபர் 15ம் திகதி வெளிவருகிறது. பிரதியொன்றின் விலை ரூபா 65.00 மாத்திரமே. 104 பக்கங்கள் கொண்ட இந்நூலைத் தபால் மூலம் பெற விரும்புவோர் ரூபா 75.00 மனியோடர் அனுப்புதல் வேண்டும்.
Editor, Arumbu 70, Main Street, Dharga Town-12090 Phone : 034-227O151
நோய்கள்
17

Page 11
கேள்வி - பதில்
“உலக அதிசயங்கள் எவை?”
கேள்வி : 1. உலக அதிசயங்கள் ஏழும் எவை? 11. இவை காலத்துக்குக் காலம் மாற்றப்படுகின்றனவா? I. சீகிரிய ஓவியங்கள் 8வது அதிச யமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள் ளதா ? தெளிவான விளக்கம் தாருங் கள். 62766ý7 R. R. ///76Øy
&ീബ്ബ/7ഖ பதில் :
ஆதிகாலத்தில் பல்வேறு நாடுகளில் பிரயாணம் செய்து அவதானங்களை மேற் கொண்ட கிரேக்க மற்றும் ரோம நாட்டு அறிஞர்கள் தாம் கண்ட அதிசயிக்கத்தக்க கட்டடங்களையும் கலைப் பொருட் களையும் உலக அதிசயங்கள் என வர்ணித் தார்கள். இவர்களுள் பலர் தமது சொந்த அபிப்பிராயப்படி சில நிர்மாணங்களை உலக அதிசயங்கள் எனப்பட்டியல்படுத்தி வைத்தார்கள். இவ்வாறான ஒன்றுக் கொன்று வேறுபட்ட பல பட்டியல்கள் பண்டைக்காலத்தில் இருந்துள்ளன.
இன்று பொதுவாக ஏற்றுக்கொள் ளப்பட்டுள்ள ஏழு உலக அதிசயங்களி னதும் பட்டியல் கி. மு. 2ம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரயாண நூல் ஆசிரியரான Antipater of Sidon 676öTL16)IUIT Gö 3 (LIT fië கப்பட்டது என நம்பப்படுகின்றது. இப் பட்டியலிலுள்ள அதிசயங்கள் யாவும் மத் தியதரைக் கடலின் கிழக்குக் கரையோரப் பகுதிக்கு அண்மையிலேயே அமைந்துள் ளன. எனவே உலகின் ஏனைய பகுதிகளி லிருந்த அதிசயிக்கத்தக்க ஆக்கங்கள் எதுவும் இப்பட்டியலில் அடக்கப்பட வில்லை என்பது தெளிவாகின்றது.
இவ்வேழு அதிசயங்களும் அவை
நிர்மாணிக்கப்பட்ட கால வரிசை ஒழுங்
சிலை. 32 m உயரமான
கிலேயே பட்டியல்படுத்தப்பட்டிருந்தன. இப்பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்த உலக அதிசயங்கள் ஏழும் பின்வருமாறு : 1. எகிப்தின் பிரமிட்டுக்கள் - இவை கி. மு. 2500ம் ஆண்டளவில் நைல் நதியின்
மேற்குக் கரையில் அமைக்கப்பட்டவை.
அவற்றின் முகப்புப் பகுதிகள் அகற்றப் பட்டுள்ள போதிலும் பிரதான பிரமிட் டுக்கள் இன்றும் எஞ்சியிருக்கின்றன. இவற்றுள் மிகப் பெரியது சுமார் 12 ஏக்கர் நிலத்தை மூடியிருக்கிறது. இதனை நிர் மாணிக்க சுமார் 100,000 தொழிலாளர்கள் முப்பது வருடங்கள் உழைத்ததாக கிரேக்க வரலாற்றாசிரியர் ஹிரோடோட்டஸ் குறிப்பிட்டுள்ளார். 2. பாபிலோனின் தொங்கும் தோட்டம். (கி. மு. 6ம் நூற்றாண்டு) 3. ஒலிம்பியாவிலிருந்த Zeus என்ற தெய்வத்தின் சிலை. கிரேக்க சிற்பியான
Pidias என்பவரால் செதுக்கப்பட்ட
இச்சிலை 12 m உயரமானதாக இருந்தது. (கி. மு. 5ம் நூற்றாண்டு) 4. சின்னாசியாவில் இருந்த Temple of Artemis என்ற ஆலயம். (கி. மு. 3ம் நூற்றாண்டு) 5. சின்னாசியாவில் இருந்த Mausoleum of Halicarnassus என்றசலவைக் கல்லால் நிர்மாணிக்கப்பட்ட நினைவு மாடம். (கி. மு. 3ம் நூற்றாண்டு) 6. சின்னாசியாவின் கரையோரத்துக்கு அப்பாலுள்ள Rhodes என்னும் கிரேக்கத் தீவில் அமைக்கப்பட்டிருந்தThe Colossus of Rhodes என்னும் இராட்சத வெண்கலச் இச்சிலை துறை முக நுழைவாயிலில் அமைந்திருந்தது. இது கி. மு. 224இல் ஏற்பட்ட புவியதிர் வின் போது அழிந்து போயிற்று.
35 - {0ازی sey
18

7. எகிப்தின் அலெக்ஸாந்திரியா துறை முகத்துக்கு அண்மையில் தீவொன்றில் egy60LD35üul Lg-(5j5 The Pharos of Alexandria என்ற வெளிச்ச வீடு. கி. மு. 280 அளவில் நிர்மாணிக்கப்பட்ட இது 134m உயரமாக இருந்தது. கிறிஸ்து வருடம் (கி. வ.) 955 ஆகும் போது இக்கட்டடம் புவியதிர்வினாலும் புயலினாலும் பெரு
மளவு சேதமடைந்திருந்தது. 14ம்
நூற்றாண்டில் ஏற்பட்ட ஒரு புவியதிர்வு அதனை முற்றாகத் தரைமட்டமாக்கியது.
ன்றும் பண்டைய உலக அதிசயங் கள் என்ற வரிசையில் இவ்வேழு ஆக் கங்கள் மாத்திரமே குறிப்பிடப்படுகின் றன. இவற்றுள் முதலாவது மட்டுமே
இப்போது எஞ்சியிருக்கிறது. இவை
யாவும் கிறிஸ்துவுக்கு முந்திய காலத்திற்குரியனவாகும். பிற்காலத்தில் வெவ்வேறு நபர்கள் தத்தமது அபிப் பிராயப்படி உலக அதிசயங்களின் வரி சையில் வேறு ஆக்கங்களைச் சேர்த்திருக் கலாம். ப்பட்டியல்கள் எதுவும் உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட் டதாகத் தெரியவில்லை.
எட்டாவது உலக அதிசயமாக இலங்கையிலுள்ள சீகிரிய அங்கீகரிக்கப் பட்டுள்ளது என்ற கருத்துக்கு எவ்வித ஆதாரமும் இல்லை. அத்தோடு அப்படி யொரு தேர்வு நடைபெறுமாயின் அந்த இடத்துக்குப் போட்டியிட சீகிரியவை விட அதிசயமான எத்தனையோ ஆக்கங் கள் உலகெங்கும் இருக்கின்றன. மேலும் உலக அதிசயங்களை நிர்ணயிப்பதற்கு எவ்விதமான சர்வதேச அமைப்பும் g)65606). GTGofalo World Heritage Site என்ற வரிசையில் உலக வரலாற்றுத்தலங்
அரும்பு- 35
களுள் ஒன்றாக யுனெஸ்கோ வினால் சீகிரிய அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பது உண்மையே.
நவீன உலகில் எத்தனையோ அதிச யமான நிர்மாணங்கள் மனிதனால் உரு வாக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் 20ம் நூற்றாண்டின் நவீன உலக அதிசயங் களைப் பெயரிடும் முயற்சியில் அமெ ரிக்க சிவில் பொறியியலாளர்கள் சங்கம் ஈடுபட்டது. உலகின் பல பாகங்களையும் சேர்ந்த நிபுணர்களின் உதவியோடு அச் சங்கம் நவீன உலகின் ஏழு அதிசயங்கள் எனப் பின்வருவனவற்றைத் தேர்ந்தெடுத் தது: (1) ஐக்கிய அமெரிக்காவிலுள்ள எம்பயர் ஸ்டேட் கட்டடம். (2) தென் அமெரிக் காவில் பேரூ நாட்டுக்கும் பிரேஸி லுக்கும் இடையில் நிர்மாணிக்கப்பட் டுள்ள இதாய்பு egy 6060T (Itaipu Dam). (3) கனடாவின் Toronto நகரிலுள்ள CN கோபுரம். (4) பனாமாக் கால்வாய். (5) ங்கிலாந்துக்கும் பிரான்ஸ்"க்கும் டையில் கடலுக்கடியால் செல்லும் Channel Tunnel 6T6ip 3, Tilsil Lust 60gs. (6) வட கடலின் அலைவீச்சுக்களிலிருந்து வடமேற்கு ஐரோப்பிய கரையோரப் பகுதியைப் பாதுகாக்க அமைக்கப்பட் டுள்ள வடகடல் பாதுகாப்பு அமைப்பு. (7) கலிபோர்னியாவிலுள்ளGolden Gate Bridge என்ற பாலம்.
புதிய முன்னேற்றங்கள் காரணமாக ப்பட்டியல் இப்போது செல்லுபடியற் றதாக மாறியுள்ளது கவனிக்கத்தக்கது.
மொத்தமாகச் சொல்வதாயின் புராதன காலத்திலும் சரி இப்போதும் சரி உலக அதிசயங்களைத் தெரிவுசெய்வதற் கான எவ்வித நியம அளவுகோலும் ருந்ததில்லை. அதற்கான அமைப்பும் ருந்ததில்லை. நாம் காணும் பெயர்ப் பட்டியல்கள் எல்லாம் ஒரு தனிநபரால் அல்லது ஒரு சிலரால் தம் அனுபவத்தின தும் அபிப்பிராயத்தினதும் அடிப்படை யில் தெரிவுசெய்யப்பட்டனவாகும்.
*曇 Kio estas -egiptara AEA — 19

Page 12
"எலும்புமச்சை மாற்றுச் சிகிச்சை என்றால்
665 கேள்வி : எலும்பு மச்சை மாற்றுச் சிகிச்சை என்றால் என்ன?
பதில் :
பெரிய எலும்புகளின் உட்புறமாக வுள்ள குழிகளுக்குள்ளே நிரம்பியுள்ள மென்மையான கூழ் போன்ற இழையத் தையே எலும்பு மச்சை என்கிறோம். இது செம்மச்சை, மஞ்சள் மச்சை என இரு வடிவங்களில் காணப்படுகின்றது. எமது உடலிலுள்ள மிகப்பெரிய இழையங் களுள் ஒன்றான எலும்பு மச்சை வளர்ந்த ஒருவரின் உடல் நிறையில் 2% -5% வரை இருக்கும்.
ஒரு குழந்தை பிறக்கும் போது அதன் எல்லா எலும்புகளினுள்ளும் சிவப்பு மச்சையே காணப்படும். குருதி உற்பத்தி நடக்கும் மையமாக இச்செம்மச் சையே தொழிற்படுகிறது. குழந்தை வளர்ச்சியடையும்போது கை கால் எலும் புகள் போன்ற நீண்ட எலும்புகளின் தண்டுப் பகுதியின் உள்ளே இருக்கும் செம்மச்சை மஞ்சள் மச்சையினால் பிரதி யீடு செய்யப்படும்.
செங்குருதிக் கலங்கள், வெண்குரு திக் கலங்கள், குருதிச் சிறுதட்டுக்கள் ஆகிய் அனைத்தும் எலும்பு செம்மச்சை யிலேயே உற்பத்தியாகின்றன. அவசர நிலைமைகளில் குருதிக் கலங்களின் உற் பத்தி அதிகரிக்கப்பட வேண்டி ஏற்பட் டால் எமது உடல் மஞ்சள் மச்சையை செம்மச்சையாக மாற்றி விடுகின்றது.
எலும்பு மச்சையில் ஏற்படும் நோய் கள் குருதிக் கலங்களின் உற்பத்தியைப் பாதிப்பதனால் அவை உயிராபத்தை ஏற்படுத்தக்கூடும். நச்சுத் தன்மையான இரசாயனப் பொருட்கள், கரு வெடிப் புகள் காரணமாக ஏற்படும் கதிர்வீச்சுக்
20
அஸிஸ்,கல்முனை
65 92
கள், X-கதிர்கள் போன்றவை எலும்பு மச்சையைத் தாக்குவதனால் குருதிக் கலங்களின் உற்பத்தி குறைந்து Aplastic anaemia என்ற ஆபத்தான சோகை நோய் ஏற்படுகின்றது. லியூக்கீமியா என்னும் குருதிப் புற்று நோய் காரணமாகவும் எலும்பு மச்சை பாதிக்கப்படுகின்றது.
இவ்வாறான நோய்களுக்குச் சிகிச் சையாகவே எலும்பு மச்சை மாற்றுச் சிகிச்சை பிரயோகிக்கப்படுகின்றது. எலும்பு மச்சை மாற்றுச் சிகிச்சையொன் றைச் செய்வதற்கு முன்னர் நோயாளி யினதும் எலும்பு மச்சையை வழங்கப் போகிறவரினதும் (வழங்கியினதும்) குருதி வகைகள் மிக நெருக்கமாக ஒத் திருக்கின்றனவா என்பதைச் சோதித் தறிந்துகொள்ள வேண்டும். இல்லை யேல் ஆபத்தான நிர்ப்பீடன எதிர்த்தாக் கங்கள் ஏற்படலாம்.
பின்னர் உறிஞ்சி (Syringe) ஒன்று 1 ισότ இணைக்கப்பட்ட நீண்ட ஊசி யொன்றைப் பயன்படுத்தி மச்சை வழங் குபவரின் இடுப்பெலும்பிலிருந்து சிவப் பு மச்சை உறிஞ்சி எடுக்கப்படும். இவ் வாறு எடுக்கப்பட்ட மச்சையிலிருந்து வெண்குருதிக் கலங்கள் அகற்றப்படும். இப்படிச் செய்வதற்குக் காரணம் வழங்கியின் வெண்குருதிக் கலங்கள் நோயாளியின் இழையங்களைத் தாக்கி அழிப்பதைத் தடுப்பதேயாகும்.
வ்வாறு சுத்திகரிக்கப்பட்ட மச் சை, நோயாளிக்கு அவரது நாளமொன் றினூடாக உட்செலுத்தப்படும். இதன் மூலம் அவரது குருதிக்குள் முதிர்ச்சியடை யாத ஆனால் ஆரோக்கியமான கலங்கள்
புகுத்தப்படுகின்றன. இக்கலங்கள் அவ
ரது மச்சைக்குள் சென்று முதிர்ச்சியடைந் து பின்னர் பிரிகையுற்று சுற்றோட்டத் தொகுதிக்கு ஆரோக்கியமான குருதிக்
அரும்பு-35

பதில் :
கலங்களைத் தொடர்ச்சியாக வழங்கத் தொடங்கும்.
எலும்பு மச்சை மாற்றுச் சிகிச்சை
பயனுடையதாக இருப்பினும் அது
எலும்பு மச்சை நோய்களை அல்லது
குருதி நோய்களைக் குணமாக்கிவிடும்
என எல்லாச் சந்தர்ப்பங்களிலும் எதிர் பார்க்க முடியாது. ஏனெனில் வழங்கியின் குருதியும் நோயாளியின் குருதியும் நூற் றுக்கு நூறு ஒத்துப் போவது மிக அரிதே. இந்நிலையில் நோயாளியின் நிர்ப்பீடனத்
தொகுதி அவரது உடலுக்குள் செலுத் தப்படும் வழங்கியின் கலங்களில் ஒரு
பகுதியைத் தாக்கி அழித்துவிடக்கூடும். இப்படி நிகழ்ந்தால் மாற்றுச் சிகிச் சையின் பயன் முழுமையாகக் கிடைக் காமற் போகலாம்.
எலும்பு மச்சை மாற்றுச் சிகிச்சையை முதன் முறையாகச் செய்த அமெரிக் கப் புற்றுநோய் நிபுணர் டோர்னால் தோமஸ். இவருக்கு 1990 ஆம் ஆண் டில் உடற்றொழிலியல் அல்லது மருத்
துவத்திற்கான நொபெல் பரிசு வழங் கப்பட்டது.
“பட்டர், மாஜரீன் என்பவற்றில் எது நல்லது?”
Lii' Lir (Butter), Longfoir (Margarine)
ஆகிய இரண்டிலும் எமது இதயத்தின்
ஆரோக்கியத்திற்கு உகந்தது எது?
- எஸ். கணேசன், கொழும்பு 6
பொதுவாக இதய ஆரோக்கியத் தைப் பொறுத்தமட்டில் பட்டரைவிட மாஜரீனே நல்லதெனக் கருதப்படுகின் றது. மாஜரீன்கள் தாவர எண்ணெய்களி லிருந்தே தயாரிக்கப்படுகின்றன. எனவே அவற்றில் கொலஸ்ட்ரோல் மிகக் குறைவாகவே காணப்படுகின்றது. அத் தோடு நல்ல கொழுப்புக்களும் பட்ட ரைவிட மாஜரீனில் கூடுதலாகக் காணப் படுகின்றன. பல்-நிரம்பாக் கொழுப்புக் 565 to (Polyunsaturated fats), 560f 5uld LufT i (65 T (půLjig; GB GLD (Mono unsaturated fats) இவ்வாறு நல்ல கொழுப்புக் கள் எனக் கருதப்படுகின்றன.
பல் நிரம்பாக் கொழுப்புக்கள்LDL (LOW Density Lipoprotein) 6TGirglid கொலஸ்ட்ரோல் வகையைக் குறைப் பதற்கு உதவுகின்றன. இந்த LDL கொலஸ்ட்ரோலைத்தான் மருத்துவர்கள் கெட்ட’ கொலஸ்திரோல் என்கிறார்கள். தனி நிரம்பாக் கொழுப்புக்களும் கெட்ட கொலஸ்ட்ரோலின் அளவைக் குறைக்க உதவுவதோடு ஒட்சியேற்றத்தை யும் எதிர்த்து நிற்கின்றன. கொழுப்பு ஒட்சியேற்றத்தின் காரணமாகவே உட லில் கலங்களும் இழையங்களும் சேதத் துக்கு உள்ளாகின்றன.
பட்டர் விலங்குக் கொழுப்பினால் ஆக்கப்பட்டுள்ளதால் அதில் அதிகளவு கொலஸ்ட்ரோலும் நிரம்பிய கொழுப் புக்களும் காணப்படுகின்றன.
எனினும் எல்லா வகையான மாஜ ரீன்களும் இதய ஆரோக்கியத்துக்கு உகந் தவை எனக் கருத முடியாது. உண்மை யில் சிலவகை மாஜரீன்கள் பட்டரை
21
அரும்பு- 35

Page 13
விடவும் மோசமானவையாக இருக் கலாம். பெரும்பாலான மாஜரீன் வகை கள் ஐதரசனேற்றம் (Hydrogenation) என்ற செயன்முறையின் மூலமே தயாரிக்கப் படுகின்றன. இந்தச் செயன்முறையின் போதுTransfats எனப்படும் தீய கொழுப் புக்கள் உருவாக்கப்படுகின்றன. இவை குருதியிலுள்ள கொலஸ்ட்ரோலின் அள
வை அதிகரிக்கச் செய்து இதய நோய் ஆபத்தை ஏற்படுத்த வல்லவை.
மிகக் கெட்டியான மாஜரீன்கள் அதிகளவு transfats என்னும் கொழுப்புக் களைக் கொண்டிருக்கும். திண்மத் தன் மை குறைந்த மாஜரீன்களில் இவ்வகைக் கொழுப்புக்கள் குறைவாகவே காணப் படும்.
* அதிக கல்சியம் ஆபத்தானதா?”
கேள்வி : கல்சியம் பற்றாக்குறையினால் ‘0ste0p00sis’ எனும் நோய் ஏற்படலாம் எனக் கூறப்படுகின்றது. எனினும், கல்சியம் அதிகம் உட்கொள்ளப் படும்பொழுது சிறுநீரகக் கல், பித்தப் பைக் கோளாறுகள் என்பன ஏற்பட லாம் என ஒரு கருத்து நிலவுகின்றதே, இது உண்மையா?
எம். ரிஷான் ஷெரீப் மொறட்டுவை பல்கலைக்கழகம்
பதில் :
எலும்புகளில் பெருமளவு நுண் துளைகள் ஏற்பட்டு அவை நலிவடைந்து எளிதில் முறியக்கூடியனவாக மாறும் நிலையையே Osteoporosis என்கிறோம். இந்நிலைமை உள்ளவர்களில் மணிக் கட்டு, முள்ளந்தண்டு, இடுப்பெலும்பு என்பவற்றில் முறிவு ஏற்படுவது சகஜ மாகும். எனினும் எல்லா எலும்புகளும் பாதிக்கப்படலாம்.
இந்நிலையை ஏற்படுத்தக்கூடிய காரணிகளில் உள்ளெடுக்கப்படும் கல் சியத்தின் அளவு குறைதல், போதியளவு உடல் தொழிற்பாடு ல்லாமை, corticosteroids போன்ற சில மருந்துகள் என்பன முக்கியமானவை. இந்நோய் தொடர்பான வரலாறு உள்ள குடும்பங் களைச் சேர்ந்தவர்களும் இதனால் பாதிக்கப்படும் சாத்தியத்தை அதிகம் கொண்டிருப்பர். ஆண்களைவிடப் பெண்
22
களே அதிகமாகப் பாதிக்கப்படுகின்ற GÕTIT.
மாதவிடாய் வட்டம் நின்றுவிட்ட பெண்களில் Osteoporosis மிகப் பரவலா கக் காணப்படுகின்றது. இதற்குக் கார ணம் அவர்களது சூலகங்கள் ஈஸ்ட்ரோசன் (Oestrogen) என்ற ஒமோனைச் சுரக்காமல் விடுவதாகும். 70 வயது பிந்திய முதியவர் களிலும் முதுமை தொடர்பான OSteoporosis ஏற்படலாம். இவ்விருவகை தவிர இளவயதினரைத் தாக்குகின்ற, காரணம் அறியப்படாத Osteoporosis வகையொன்றும் உண்டு. இதுidiopathic osteoporosis 6TGTiju(Sib.
பாரிசவாதம் போன்ற நோய்கள் காரணமாக எலும்புகளின் பயன்பாடு குறைதல், ஓமோன் மற்றும் போசணைச் சீர்குலைவுகள், சில மருந்துகள் என்பன காரணமாக ஏற்படும் நோய் Secondary Osteoporosis 6760Tiu(9ib.
இந்நோய் நிலை ஏற்படாமல் தவிர்ப்பதற்குக் கையாளப்படும் முறை களுள் உட்கொள்ளப்படும் கல்சியத்தின் அளவை அதிகரிப்பதும் ஒன்றாகும். நடு வயது தாண்டிய பெண்களில் OsteoporoSis ஏற்படாமல் தடுப்பதற்குச் செயற் கையாகத் தொகுக்கப்பட்ட ஈஸ்ட்ரோசன் சேர்வைகள் வழங்கப்படுகின்றன. (எனி னும் இவ்வகைச் சிகிச்சை பெண்களில் புற்றுநோய் ஆபத்தை அதிகரிப்பதாக இப்போது தெரிய வந்துள்ளது.)
35 - اپازوییلاقی

ஒருவரின் அன்றாட கல்சியத் தேவை 1000 mg முதல் 1500 mg வரை வேறுபடலாம். சிலரைப் பொறுத்த மட்டில் ஒரு நாளைக்கு 2000 mg வரை கல்சியத்தை ஆபத்தின்றி உள்ளெடுக் கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர். எனினும் சிபாரிசு செய்யப்பட்ட அன் றாட அளவைவிட அதிகமாகக் கல் சியத்தை உட்கொள்வது மலச்சிக்கலை யும் சிறுநீரகக் கோளாறுகளையும் ஏனைய பிரச்சினைகளையும் உருவாக்
கலாம். சிறுநீரகத்திலும் சிறுநீர்ப் பாதை யிலும் கற்கள் உருவாவதற்கு மிகையான கல்சியம் உள்ளெடுப்புக் காரணமாகிறது. ஈரல் போன்ற ஏனைய உறுப்புக்களின் இழையங்களில் கல்சியப் படிவுகள் ஏற்
படுவதனாலும் கோளாறுகள் ஏற்பட
இடமுண்டு.
எனவே Osteoporosis உள்ளவர்கள் வைத்திய மேற்பார்வையுடனேயே தமது கல்சிய உள்ளெடுப்பை அதிகரித்தல் (36) 167(6) (b.
6JIDTIÖAO (DIQ LIITTIJI? ஆண்களுக்கான பொழுதுபோக்குக் கிளப்' ஒன்றில் நள்ளிரவு வரை மது அருந்திவிட்டுப் போதையில் கார் ஒட்டிச் செல்பவர்களைக் கைது செய்வதில் ஒரு பொலிஸ்
அதிகாரி கைதேர்ந்தவராக இருந்தார்.
ஒரு நாள் இரவு நடுநிசி நெருங்கும் வேளையில் அவர் அந்தக் கிளப்புக்கு வெளியே ஆயத்தமாக நின்றார். அக்கிளப்பிற்கு முன்னால் பல கார்கள் வரிசையாக நின்றிருந்தன. அவற்றின் உரிமையாளர்கள் உள்ளே குடித்துக் கொண்டிருந்தார்கள். மதுபோதையில் இருப்பவர்களைக் கண்டுபிடிப்பதற்கான சுவாசப் பகுப்பாய்வுக் கருவியையும் பொலிஸ் அதிகாரி
தயாராக வைத்திருந்தார்.
சிறிது நேரத்தில் நேர்த்தியாக உடையணிந்த ஒருவன் தள்ளாடியபடி வெளியே வந்தான். அவனால் நேராக நடக்கவே முடியவில்லை போல் தெரிந்தது. தட்டுத் தடுமாறியபடி நிறுத்தி வைத்திருந்த ஒவ்வொரு காராகத் துளாவிய அவன் ஒருவாறு தனது காரைத் தேடிப் பிடித்தான். பின்னர் தனது பைகளில் கையைவிட்டு நீண்ட நேரமாகக் கார்ச் சாவியைத் தேடலானான். ஒருவாறு சாவியைக் கையிலெடுத்து கதவைத் திறப்பதற்கு முயற்சித்தபோது
சறுக்கிக் கீழே விழுந்தான்.
இதையெல்லாம் மறைந்து நின்று அவதானித்துக் கொண்டிருந்த பொலிஸ் அதிகாரி அவன் காரில் ஏறி அதனைச் செலுத்தத் தொடங்கும்வரை பொறுமையாகக் காத்திருந்தார். இதற்குள் அங்கே நின்றிருந்த மற்றக் கார்களில் வந்தவர்கள் எல்லாம் அங்கிருந்து
போய்விட்டனர்.
ஒருவாறு தன்னைச் சுதாகரித்துக்கொண்டு தரையிலிருந்து எழும்பிய அந்த மனிதன் தள்ளாடியபடி கதவைத் திறந்துகொண்டு சாரதியின் ஆசனத்தில் அமர்ந்தான். அவன் காரை
ஸ்டார்ட் செய்து முன்னோக்கிச் செலுத்த முயன்றபோது பொலிஸ் அதிகாரி முன்னால் பாய்ந்து,
“குடிபோதையில் கார் ஒட்ட முயற்சிப்பதற்காக உம்மைக் கைது செய்கிறேன்” என்றார்.
“இல்லை! நான் குடிக்கவே இல்லை’ என்று நிதானமாகச் சொன்னான் அந்த மனிதன். “என்னையா ஏமாற்றப் பார்க்கிறீர்! அது வேகாது’ என்று கூறிய அதிகாரி சுவாசப் பகுப்புக் கருவியை வெளியே எடுத்து அதற்குள் வெளிமூச்சை ஊதும்படி கட்டளையிட்டார். அவனும் பதற்றமில்லாமல் அப்படியே செய்தான். அவனது வெளிச்சுவாச வளியில் மதுசாரம்
அறவே இல்லை என்பதைக் கருவி காட்டியது.
மனம் தளர்ந்துபோன பொலிஸ் அதிகாரி "இவ்வளவு நேரமும் போதையில் இருப்பது போல் தள்ளாடித் தடுமாறினாயே! அது ஏன்?’ என்று கேட்டார்.
“மது போதையிலிருந்த மற்றவர்கள் தாம் இங்கிருந்து தப்பிச் சென்றுவிடும் வரை என்னை அப்படி நடிக்கச் சொன்னார்கள்’ என்றான் அந்த மனிதன்.
35 - يقرقرى
23

Page 14
உலக நகர்கள் 1
Ö56Dóbjpg|T (CULCUTTA or KOLKATA)
ந்தியாவின் மேற்கு வங் காளTம்ாநிலத்தின் தலைநகராக விளங்கும் கல்கத்தா நகர், கங்கை நதியின் கிளை நதிகளுள் ஒன்றான ஹூக்லி நதியின் கரைகளில், வங்காள விரிகுடாவிலிருந்து 100 km வடக்காகவும் பங்களாதேஷ் எல் லையிலிருந்து 70 km மேற்காகவும் அமைந்துள்ளது.
இந்தியாவில் மும் பாய் நக ருக்கு அடுத்ததாக அதிக சனத் தொகையைக் கொண்டுள்ள கல் கத்தா, கிழக்கிந்தியாவின் பிரதான வர்த்தக, நிதி மற்றும் உற்பத்தித்துறை மத்திய நிலையமாக விளங்குகின் றது. 1600களின் பிற்பகுதியில் ஆங்கி லேய கிழக்கிந்தியக் கம்பனியினரால் ஒரு வர்த்தகத் தலமாக உருவாக்கப் பட்ட இந்நகர் 1773 முதல் 1911 வரை பிரிட்டிஷ் இந்தியாவின் தலைநக ராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கல்கத்தா மாநகர் 185 சதுர km பரப்பைக் கொண்டது. இந்நகர் புவிக் கடகக் கோட்டுக்கு 19 தெற்கே அமைந்திருப்பதால் அங்கு பருவப் பெயர்ச்சிக் காலநிலையே நிலவுகின் றது. அதன் சராசரி வருடாந்த மழை வீழ்ச்சி 1625mm. இதில் பெரும்பகுதி ஜூன் முதல் செப்டம்பர் வரையான காலப்பகுதியில் கிடைக்கப் பெறு கின்றது. மார்ச் முதல் செப்டம்பர் வரையான காலம் சூடாகவும் ஈரப்பதன் கூடியதாகவும் இருக்கும். ஜூலை மாதத்திற்குரிய சராசரி வெப்பநிலை 29 C ஆக இருப்பினும் 24
மே, ஜூன் மாதங்களில் வெப்ப நிலை 38 C வரை அதிகரிப்பதுண்டு. குளிர்காலம் மிதமானதாக இருப் பதால் சராசரி ஜனவரி வெப்பநிலை 16° Cஆக இருக்கும். சிலவேளை களில் இது 10 C வரை குறையலாம். கல்கத்தா நகரின் பிரதான அடையாளச் சின்னங்களுள் ‘மை தான்’ என்றழைக்கப்படும் பூங்கா முக்கியமானது. இதனுள் பல குறும் பாதைகளும், கொல்ரிப் மைதானம், குதிரை ஓட்டத் திடல், கிரிக்கட் திடல், பல உதைபந்தாட்டக் களங் கள் என்பவற்றோடு ஆங்கிலேயர் 3671765 35L LL Lil' L Fort William என்ற கோட்டையும் அமைந்துள் ளது. மைதானின் தென் அந்தத்திலே " Victoria Memorial என்ற பாரிய கட் டடம் காணப்படுகின்றது. ஐரோப் பிய மறுமலர்ச்சிக் காலக் கலைநுட் பங்களுடன் 1921இல் கட்டி முடிக்கப் பட்ட இது இந்தியக் கலைகளின் செல்வாக்கையும் கொண்டுள்ளது.
கல்கத்தா நகரின் வரலாற்று முக் கியத்துவம் மிக்க ஏனைய கட்ட டங்களுள் மாநில அரசின் அமைச் சுக்களைக் கொண்டுள்ள Writer's Building, கொங்கிரீட்டினாலான குவிமாடத்தைக் கொண்ட பிரதான தபால் நிலையம், 55 m உயரமான கோபுரத்துடன் கூடிய உயர் நீதிமன் றக் கட்டடம் என்பன குறிப்பிடத் தக்கனவாகும். இவை தவிர தக்ஷி ணேஸ்வரர் கோவில், ராமகிருஷ்ண
மிஷன் தலைமையகம், பிரஷாந்த்
அரும்பு-35
 

ஜயின் கோயில், சலவைக் கல் மாளிகை (Marble Palace), நாகோதா பள்ளிவாசல் என்பனவும் கல்கத் தாவின் கட்டட நிர்மாணத்துறைச் சின்னங்களர்கத் திகழ்கின்றன.
கல்கத்தாவுக்கு விஜயம் செய் பவர்கள் அங்குள்ள இந்திய அரும் பொருட் காட்சிச்சாலை, பிர்லா கைத்தொழில் மற்றும் தொழில் நுட்ப மியூஸியம், தாவரவியற் பூங்கா என்பவற்றைக் கண்டுகளிக்கத் தவறமாட்டார்கள். மேற்படி தாவர வியற் பூங்காவிலுள்ள இராட்சத ஆலமரம் சுமார் 380 m சுற்றளவுக்குத் தன் கிளைகளைப் பரப்பியுள்ளது.
இந்தியாவின் மிக முக்கியமான துறைமுகங்களுள் ஒன்றான கல் கத்தாத்துறைமுகம் ஹஜூக்ஸி நதியில் அமைந்திருக்கிறது. கல்கத்தாவின் சர்வதேச விமான நிலையம் சுபாஷ் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையம் எனப் பெயரிடப்பட்டுள் ளது. சுபாஷ் சந்திர போஸ் இந்தி யாவின் சுதந்திரத்துக்காகப் போரா டிய வங்காள வீரர் ஆவார்.
ஐந்து மில்லியனுக்கும் மேற் பட்ட சனத்தொகையைக் கல்கத்தா கொண்டுள்ளது. அந்நகரின் சனத் தொகை அடர்த்தி ஒரு சதுர kmக்கு 25,000 பேருக்கும் கூடியதாகும். பெருந்தொகையான மக்கள் அங்கு வீதியோரங்களிலும் சேரிகளிலும் வாழ்வதைக் காணலாம். நகரின் பாதைகள் எப்போதும் பாதசாரிகளா லும் வாகனங்களாலும் நிரம்பியே காணப்படும். சைக்கிள் ரிக்ஷோக் கள் நகருக்குள் அனுமதிக்கப்படுவ தில்லை.
கல்கத்தாவின் சனத்தொகையில் 83 சதவீதத்தினர் இந்துக்கள், 14 சதவீதத்தினர் முஸ்லிம்கள். கிறிஸ் தவர்கள், ஜயின் சமயத்தினர், சீக்கியர்கள் ஆகியோர் சிறுபான்
அரும்பு-35
மைக் குழுக்களாக அங்கு வாழ்கின் றனர். நகரின் சனத்தொகையில் 60% வங்காள மொழியைப் பேசுகின் றனர். ஏனையவர்கள் ஹிந்தி (23%), உர்து (11%), ஒரியா (1.3%) முதலிய மொழிகளைப் பேசுகின்றனர். ஆங் கிலமும் பரவலாகப் பயன்படுத்தப் படுகின்றது.
இந்தியாவின் புகழ்மிக்க கல் கத்தா பல்கலைக்கழகம் அங்கேயே இருக்கின்றது. நொபெல் பரிசு பெற் றவர்களான கவிஞர் ரபீந்திரனாத் தாகூர், பெளதிகவியல் அறிஞர் C.V. ராமன், அன்னை தெரேஸா ஆகி யோர் கல்கத்தாவிலேயே வாழ்ந் துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக் கது. தாகூரின் இல்லம் தற்போது ரபீந்திர பாரதி பல்கலைக்கழகம் என்ற பெயரில் நுண்கலைக் கல்வி நிலையமாக மாற்றப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதி கலை மியூஸிய மாகத் திகழ்கின்றது.
கல்கத்தா ஒரு காலத்தில் இந்தி யாவின் முக்கிய உற்பத்தி மைய மாகத் திகழ்ந்தது. இன்று அதன் பொருளாதார நிலை பெரிதும் வீழ்ச்சி கண்டுள்ளது. உலகப் பெரு நகர்களுள் அடிப்படை வசதிகள் மிக வும் குறைந்ததாகக் கல்கத்தா இருக் கின்றது. எனினும் பல உள்நாட்டு வர்த்தகக் கம்பனிகள், வங்கிகள், சர்வ தேசக் கம்பனிகள் முதலியன தம் தலைமையகத்தைக் கல்கத்தாவிலே யே அமைத்துக் கொண்டுள்ளன. இந்தியாவின் மிகப் பெரிய கம்பனி களுள் ஒன்றான பிர்லா (Birla) நிறு வனத்தின் தலைமையகமும் கல்கத் தாவிலேயே அமைந்திருப்பது குறிப் பிடத்தக்கது.
கல்கத்தா (Culcutta) என்ற பெயரை எழுதும் முறை 2001 ஜனவரி முதலாம் திகதி முதல் Kolkota என மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
25

Page 15
மெது ஞாயிற்றுத் தொகுதிக்கு அப்பால் இருக்கும் உடுக்களைச் (Stars) சுற்றி வருகின்ற புது வகையான கோள்கள் இரண்டைத் தாம் கண்டு பிடித்திருப் பதாக வானியலறிஞர்கள் குழுவொன்று 31. 08, 2004இல் அறிவித்துள்ளது. ஞாயிற் றுத் தொகுதிக்கு அப்பால் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள கோள்களை விட மேற்குறித்த கோள்கள் மிகச்சிறியன வாக இருக்கின்றன. இவற்றின் பருமன் பூமியின் பருமனைவிட 10 - 20 மடங்கு பெரியதாக- நெப்சூன் கோளின் பரு மனை ஒத்ததாக இருப்பது குறிப்பிடத் தக்கது.
எமது ஞாயிற்றுத் தொகுதிக்கு அப் பால் இதுவரை சுமார் 140 கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேற்குறிப் பிட்ட புதுக் கோள்கள் இரண்டையும் தவிர ஏனையவை யாவும் ஜூப்பிட் டரைப் போன்று வாயுவாலான இராட் சதக் கோள்களாகும். பூமியை ஒத்த பாறைகளால் ஆக்கப்பட்ட சிறிய கோள் களும் ஞாயிற்றுத் தொகுதிக்கு அப்பால் இருக்கலாம் என்ற நம்பிக்கையைப் புதிய கண்டுபிடிப்பு உறுதிப்படுத்தியுள்ளது. இவற்றைத் தேடிக் கண்டு பிடிப்பதே கோள் தேடும் பணியில் ஈடுபட்டுள்ள வானியலாளர்களின் எதிர்கால நோக் கமாக இருக்கின்றது.
இத்துறையில் புகழ் பெற்றவர் sGMTIT GOT Dr. Paul Butler, Dr. Geoffry Marcy, Barbara McArthur 2,6Gust Gu Ligé கோள்கள் இரண்டையும் கண்டுபிடித்துள் ளனர். இவ்விரு கோள்களும் தம் தாய் உடுவுக்கு மிக நெருக்கமாகவே வலம் வந்துகொண்டிருக்கின்றன.
26
மில்லியன் km ஆகும். Gliese-436 என்ற
களுக்கு அப்பால் அமைந்திருக்கிறது.
எமது ஞாயிற்றுத் தொகுதிக்கு அப்பால் புது வகைக் கோள்கள் கண்டுபிடிப்பு
இவற்றுள் முதலாவது கோள் Gliese-436 என்ற உடுவை 2.5நாட்களுக்கு ஒரு தடவை சுற்றிவருகின்றது. அவை இரண்டுக்கும் இடையிலான தூரம் 4.1
உடு சிம்மம் (Leo) என்ற உடுத்தொகுதி யில் புவியிலிருந்து சுமார் 30 ஒளி வருடங்
ரண்டாவது புதுக் கோள் கடகம் (Cancer) என்ற உடுத்தொகுதியிலுள்ள55Cancri என்னும் உடுவை ஏறக்குறைய 3 நாட்களுக்கொரு தடவை வலம் வந்து கொண்டிருக்கிறது. எமதுசூரியனைவிடச் சிறிது பாரம் குறைந்ததான 55-Cancri சுமார் 41 ஒளிவருடங்களுக்கு அப்பால் இருக்கின்றது. இவ்வுடுவைச் சுற்றி வரு கின்ற மேலும் மூன்று இராட்சத உடுக்கள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதுவரை அறியப்பட்டுள்ள வகையில் நான்கு கோள்த் தொகுதியொன்றைக் கொண்டுள்ள ஒரே உடு55-Canci ஆகும். புதிய கோள் இவ்வுடுவிலிருந்து சுமார்5.6 மில்லியன் kmதூரத்தில் இருக்கின்றது.
புதிய கோள்கள் பிட்டரை விடச் சிறியனவாக இருப் பதனால் அவை பாறையினால் அல்லது பாறையும் பனிக்கட்டியும் கலந்து ஆக்கப் பட்டிருக்கலாம் என விஞ்ஞானிகள் நம்பு கின்றனர். சார்பளவில் எமக்கு அண் மையில் இருக்கும் 950 உடுக்களைக் கவன மாக அவதானித்ததன் விளைவாகவே மேற்படி கோள்கள் இரண்டும் கண்டு பிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புதிய கோள்கள் பற்றி மேலும் விபரம் தேவையானோர் http://
planetquest.jpl.nasa.gov 67 Görp (626JŮ
தளத்தை அணுகலாம். ப
35 - اپDازی لاتی
 
 
 

நீர் வாழ் ஊனுண்ணியான நீர் நாய் அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து மற்றும் அந்தார்ட்டிகா தவிர்ந்த உலகின் ஏனைய எல்லாப் பகுதி களிலும் காணப்படுகின்றது. நீர் நாய் னங்களுள் மிகப் பொதுவானது ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் பரவலாகக் காணப்படும் ஆற்று நீர் sitti (Eurasian River Otter) g) got LDIT(5ib.
இவ்வினம் பிரிட்டிஷ் தீவுகள், ஐரோப்பா, இமாலயப் பிரதேசங் கள், தென் இந்தியா, இலங்கை, சீனா, மியன்மார், தாய்லாந்து, இந்தோசீனா, தாய்வான், ஜப்பான், இந்துனேசியா முதலிய பகுதிகளில் பரவலாக வாழ்கின்றது. இவ்வின நீர் நாய்கள் ஆறுகள், அருவிகள், ஏரிகள், குளங்கள், சதுப்பு நிலங்கள், நெல் வயல்கள் போன்ற நன்னீர்ப் பகுதி களிலும் கடற்கரையோரங்களிலும் வசிக்கின்றன. இவை தம் வளையை நீர் நிலையை அடுத்துள்ள தரைப் பகுதியில் அமைத்துக் கொள்கின்
றன.
நீர்நாய்கள் Mustelidae என்ற விலங்குக் குடும்பத்தைச் சேர்ந்தவை. ஐரோப்பிய-ஆசிய நீர் நாய் இனம் Lutra lutra எனப் பாகுபடுத்தப் பட்டுள்ளது. தென்இந்தியாவிலும் லங்கையிலும் காணப்படும் உப | 9)GTb Lutra lutra nair GTGötu5T (gb.
நீர் நாய்
(Otter)
Lutra canadensis 676öıp G36u G3 p/Ti இனம் வட அமெரிக்காவில் காணப் படுகின்றது.
நீர் நாயின் உடல் 75 cm வரை நீளமாக இருக்கலாம். அது உருளை வடிவமாக நீண்டு தடித்து இருக்கும். அதன் கால்கள் குட்டையாகவும் பருத்தும் காணப்படும். அடர்த்தி யாகவும் மினுமினுப்புள்ளதாகவும் அமைந்த கபில நிற உரோமத்தினால் அதன் உடல் போர்த்தப்பட்டிருக் கிறது. வயிற்றுப் புறம், கழுத்து, கன்னங்கள், கீழ்த்தாடை என்பவற்றி லுள்ள உரோமங்கள் பழுப்பு நிற மாகக் காணப்படும். தடித்த, கூம்புரு வான சதைப்பிடிப்புள்ள வால் அடிப் பகுதியிலிருந்து நுனிவரை கூரா கிச் செல்கின்றது. இது உடலின் நீளத்தில் அரைப்பங்களவு நீளமுடையது.
நீர் நாய்களின் தோலில் கரடு முரடான காவல் மயிர்களால் ஆன உட்போர்வையொன்றும் காணப் படுகின்றது. இக்காவல் மயிர்கள் விலங்கு நனைந்திருக்கும்போது உட்போர்வையை ஈரமின்றிக் காக்க உதவும். ஏனைய நீர் வாழ் முலை யூட்டிகளில் இருப்பது போன்ற கொழுப்பினாலான காவல்படை நீர் நாய்களில் இல்லை. எனவே தம் உடலைச் சூடாக வைத்திருக்க அவை தம் ரோமங்களிலேயே தங்கியிருக்க வேண்டியுள்ளது.
இவ்விலங்குகளின் தலை வட்ட வடிவில் தட்டையாகி இருக்கும். வட்டமான சிறிய காதுகள் தலையின்
27

Page 16
இருபுறத்திலும் தாழ்வாக அமைந் துள்ளன. அவற்றின் மூஞ்சிப் பகுதி
அகன்று வட்டவடிவில் காணப்
படும். அதில் தடித்த மீசை மயிர்கள் அடர்த்தியாக இருக்கும். தடித்த, குட்டையான கழுத்து தலையின் அளவுக்கு அகன்று காணப்படும். சிறிய உருண்டையான கண்கள் முகத்தின் மேற்பகுதியில் அதிக இடைவெளியுடன் அமைந்திருக் கின்றன.
நீர் நாயின் கால்களில் ஐந்து விரல்கள் வீதம் உண்டு. நீந்துவதற்கு வசதியாக விரல்களுக்கிடையில் மென்சவ்வுப் படலம் காணப்படுகின் றது. முன்னங் கால்களைவிட பின் னங் கால்கள் நீளமாக இருக்கும். நீர் நாய் மெதுவாக நீந்தும் போது நான்கு கால்களையும் துடுப்புக்களா கப் பயன்படுத்துகின்றது. எனினும் விரைவான நீச்சலின்போது முன்னங் கால்களை உடலோடு சேர்த்து மடித்துக்கொண்டு பின்னங்கால் களையும் வாலையும் மாத்திரமே நீந்தப் பயன்படுத்தும். நீருக்குள் தாவும்போது காதுகளையும் மூக்குத் துவாரத்தையும் மூடிக்கொள்ள அதனால் முடியும்.
வளர்ந்த நீர்நாயில் 36 பற்கள் உண்டு. ஒவ்வொரு தாடையிலும் வெட்டும் பற்கள் 6 வீதமும் வேட் டைப் பற்கள் 2 வீதமும் காணப் படும். மேல்தாடையில் 8 முன்கடை வாய்ப் பற்களும் 2 கடைவாய்ப் பற்களும் இருக்கும். கீழ்த்தாடையில்
6 முன்கடைவாய்ப் பற்களும் 4 கடை
வாய்ப் பற்களும் காணப்படும். பெண் விலங்குகளில் 2 - 3 சோடி பால் முலைகள் இருக்கும். இரு பால் விலங்குகளிலும் குதப் பகுதி யில் மணப்பொருள் சுரப்பிகள் காணப்படுகின்றன.
ஐரோப்பிய ஆசிய ஆற்று நீர்
நாய்கள் மீன்களையும் தவளை,
இறால், நண்டு மற்றும் நீர்வாழ்
முள்ளந் தண்டில்லா விலங்குகள் முதலியவற்றையும் ரையாகக் கொள்கின்றன. வாத்துக்கள் போன்ற பறவைகளையும் முயல்கள், எலிகள் போன்ற விலங்குகளையும் கூட அவை உட்கொள்வதுண்டு. நீர் நாய் கள் தம் இரைகளை வாயினாலேயே பிடிக்கின்றன. முன்னங்கால்கள் இதற்காகப் பயன்படுத்தப்படுவதில் Goð) GoR),
பெண் விலங்குகளில் கர்ப்ப
காலம் சுமார்2 மாதங்களாகும். ஒரே
சூலில் 2-3 குட்டிகள் ஈனப்படுகின் றன. பிறக்கும்போதே குட்டிகள் உரோமத்தினால் மூடப்பட்டிருக் கும். எனினும் கண்கள் மூடியே இருக்கும். பிறப்பின்போது அவை சுமார் 12 cm நீளமும் 99 - 122 கிராம் நிறையும் கொண்டனவாகக் காணப் படும். 2 - 3 வாரங்களில் அவை தவழ்ந்து செல்லத் தொடங்கும். எனினும் 4-5 வாரங்களின் பின்னரே கண்கள் திறந்துகொள்கின்றன.
எட்டாம் வாரமாகும் போது பற்கள் முளைக்கத் தொடங்குவ
தோடு அவை நீந்தவும் ஆரம்பித்து
விடுகின்றன. பாலூட்டல் 3-4 மாதங் கள் வரை நீடிக்கும். 8 - 12 மாதங் களின் பின்னர் குட்டிகள் தாயைவிட் டுப் பிரிந்து சென்றுவிடுகின்றன.
நீர் நாய்கள் பெரும்பாலும் தனித்தே வாழ்கின்றன. ஒவ்வொரு
விலங்கும் தனது வாழிடப் பிரதேசத்
தை வரையறை செய்துகொள்ளும். இவை வித்தியாசமான குரலொலி களை எழுப்பக் கூடியவை. தகவல் பரிமாற்றத்துக்காக அவற்றால் பயன்படுத்தப்படும் சுமார் 12 விசேட ஒலி அழைப்புக்கள் இனங்காணப் பட்டுள்ளன. -
35 - {اطلازوییلاقی
28
 

அதிக வெப்பம் காரணமாகத் தோலில் ஏற்படக்கூடிய காயங்களை யே நாம் பொதுவாக எரிகாயங்கள் (burns) எனக் கருதுகின்றோம். எனி னும் கடுமையான எரிகா யமொன் றின் போது தோலுக்கு மேலதிகமாக அதற்குக் கீழுள்ள ஏனைய இழையங் கள் பலவும் பாதிக்கப்படலாம். அத் தோடு வெப்பத்தினால் மாத்திர மன்றி மின்னோட்டம், இரசாயனப் பொருட்கள், எக்ஸ்ரே போன்ற கதிர் வீச்சுக்கள் முதலியவற்றாலும் எரி காயங்கள் உண்டாகலாம்.
கடுமையான எரிகாயங்கள் காரணமாக அதிர்ச்சி (Shock), திரவ இழப்பு, இரசாயனச் சமநிலைக் குலைவு போன்ற பல பிரச்சினைகள் உடலில் ஏற்படலாம். இவற்றின் விளைவாக உயிருக்குக்கூட ஆபத்து நேரக்கூடும். எனவே ஏற்பட்டுள்ள எரிகாயம் எந்தளவுக்குப் பாரதூர மானது என்பதை முதலில் நிர்ணயித் துக் கொள்ள வேண்டும்.
எரிகா யமொன்றின் பாரதூரத் தன்மையை நிர்ணயிக்கும் போது காயத்தின் தரத்தையும் (degree) பாதிக்கப்பட்டுள்ள பகுதியின் பரப்
பையும் கருத்திற்கொள்ளவேண்டும்.
பொதுவாக எரிகாயங்களைப் பின் வரும் முறையில் தரப்படுத்த முடி
ԱվԼD.
முதற்தர எரிகாயங்கள்
(First degree burns)
இவை மிக எளிய எரிகாயங்க
ளாகும். இவற்றில், புறத்தோல் (epi35 - يافارقانى.
எரிகாயங்களுக்கான
முதலுதவி
(First Aid for Burns)
dermis) எனப்படும் தோலின் புறப் படையே வெந்து போயிருக்கும். எனினும் அதனூடாகத் தோலின் கீழ்ப்படைகளுக்கு வெப்பம் தாவி யிருக்காது.
இவ்வகை எரிகாயங்களின் போது பொதுவாகத் தோல் செந்நிற மாகிக் காணப்படும். சிலவேளை களில் அவ்விடத்தில் வீக்கமும் எரி வும் காணப்படலாம். கைகள், பாதங் கள், முகம், இடுப்பு, ஆசனப் பகுதி, பிரதான மூட்டுக்கள் போன்ற பகுதி கள் கணிசமாகப் பாதிக்கப்படாத நிலையில் முதற்தர எரிகாயங்களை சிறு எரிகாயங்களாகக் (minor burns) கருதி அதற்கேற்பச் சிகிச்சையளிக்க сотво. இரண்டாம் தர எரிகாயங்கள் (Second degree burns)
தோலின் புறப்படையுடன் சேர்ந்து அதன் கீழுள்ள இரண்டாம் படையும் வெந்து போயிருந்தால்
அது இரண்டாம் தர எரிகாயம் எனப் படும்.
இவ்வகையான எரிகா யங்
களின் போது தோல் கடுமையாகச் சிவந்தும் ஏதோ அப்பப்பட்டது போன்று உருச்சிதைந்தும் தோற்ற மளிக்கும். அத்தோடு கொப்புளங்கள் தோன்றும். இரண்டாந்தர எரிகாயங் களில் கடுமையான வலியும் வீக்க மும் உண்டாகும்.
இரண்டாந்தர எரிகா யமொன் றின் விட்டம் 5 - 7.5 cm அளவுக்குள் ளாக இருப்பின் அதனைச் சிறு எரி 29
O
* リ*

Page 17
காயமாகக் கருதி அதற்கேற்றவாறு சிகிச்சை வழங்கலாம். காயத்தின் பரப்பு மேற்சொன்னதை விடப் பெரி தாக இருந்தால் அல்லது கைகள், பாதங்கள், முகம், இடுப்பு, ஆசனப் பிரதேசம், பிரதான மூட்டுக்கள் போன்ற ஏதேனும் பகுதியில் அவ் வகை எரிகாயம் ஏற்பட்டிருந்தால் உடனடியாக வைத்திய உதவியை நாடுவது அவசியம். சிறு எரிகாயங்களுக்கான முதலுத விச் சிகிச்சை முறை : (5 - 7.5 Cm ஐ விடச் சிறிய விட்டமு டைய இரண்டாந்தர எரிகாயங்களுக் கும் இவை பொருந்தும்.) 9 முதலில் எரிகாயத்தைக் குளிரச் செய்யுங்கள். வெந்துள்ள பகுதியைச் சுமார் 15 நிமிடங்களுக்கு ஒடும் குளிர் நீரில் பிடியுங்கள். குளிர் நீரைக் காயத் தின் மீது மெதுவாக ஊற்றலாம். இது சாத்தியமில்லையாயின் பாதிக்கப் பட்ட பகுதியைக் குளிர் நீரினுள் அமிழ்த்தி வைக்கலாம். அல்லது குளிர் நீரில் தோய்ந்த கம்பளித் துணி யினால் மெதுவாக ஒத்தலாம். எரிகா யத்தின் மீது பனிக் கட்டிகளை (ஐஸ்) ஒருபோதும் வைக்கக் கூடாது. e எரிகாயத்தைக் குளிராக்கும் போது தோலிலிருந்து வெப்பம் நீக்கப்படுவ தால் வீக்கம் குறைவடையும். e எரிகாயம் முற்றாகக் குளிராக்கப் பட்ட பின்னர் தோலுக்கு இதமளிக் கக்கூடிய கிரீம் ஒன்றை அல்லது லோசன் ஒன்றை காயத்தின்மீது தடவலாம். இதற்காக நுண்ணுயிர் கொல்லி மருந்து கொண்ட கிரீம் ஒன்றையோ லக்டோ கலமைன் போன்ற லோசன் ஒன்றையோ பயன் படுத்த முடியும். இவை தோல் உலர் வதைத் தடுப்பதோடு செளகரிய உணர்வையும் ஏற்படுத்தும். 6 அடுத்து, எரிகாயத்தை கிருமிநீக்கம்
30
செய்யப்பட்ட Gauze துணியினால் மூடிக் கட்டுங்கள். கரடுமுரடான பருத்தித் துணிகளைப் பயன்படுத்தி னால் தோலில் அரிப்பு ஏற்படலாம். காயத்தின்மீது அதிக அமுக்கம் ஏற் படுவதைத் தவிர்த்துக் கொள்வதற் காகக் கட்டுத்துணியை இறுக்கிக் கட்டுவதைத் தவிர்க்க வேண்டும். காயத்தைச் மூடிக் கட்டுவதன்மூலம் காயம் வளியுடன் தொடர்புறாது தடுக்கப் படுவதோடு கொப்புளித்த தோலுக்கு பாதுகாப்பும் கிடைக்கின் றது. அத்தோடு, வலியைக் குறைக்க வும் அது உதவுகிறது. e வலியைக் குறைப்பதற்காக வலி நிவாரணி ஒன்றை உட்கொள்ள லாம். இதற்காக பரசிற்றமோல் (பனடோல்), அஸ்பிரின் (டிஸ்பி fflaðir), Ibuprofen (Brufen) G3LuíT Götp 67g5 னையும் உட்கொள்ள முடியும். (சிறு வர்களுக்கு அஸ்பிரின் கொடுப்ப தைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.) சிறு எரிகாயங்கள் மேலதிக சிகிச்சை எதுவுமின்றி ஒரிரு வாரங் களுள் குணமாகிவிடும். அவ்வாறு குணமாகும் போது பாதிக்கப்பட்ட இடத்தில் தோல் நிறமாற்றமடைய லாம்.
அதிகரித்த வலி, செந்நிறமாதல், காய்ச்சல், வீக்கம் அல்லது திரவக் கசிவு போன்ற தொற்றுக்குரிய அறி குறிகள் ஏற்படுகின்றனவா என்ப தைத் தொடர்ந்து அவதானிக்க வேண்டும். அவ்வாறு தொற்று ஏற் படுமாயின் வைத்திய உதவியை நாட வேண்டும். காயம் ஏற்பட்ட இடத் தில் வேறு காயங்கள் ஏற்படாமல், ஒரு வருடத்திற்கேனும் காத்துக் கொள்வது நல்லது. கவனிக்கவேண்டியவை 1. காயத்தைக் குளிராக்க பனிக்கட்டி யை (ஐஸ்) பயன்படுத்தாதீர்கள்.
அரும்பு-35

ஏனெனில் பனிக்கட்டியின் கடும் குளிர் தோலை மேலும் சேதப்படுத்த லாம். 2。 கொப்புளிங்களை உடைக்காதீர்
கள். திரவம் நிரம்பிய கொப்புளங்கள்
தொற்றிலிருந்து பாதுகாப்பை வழங் குகின்றன. கொப்புளங்கள் தானாக உடைந்தால் அவ்விடத்தை மென் சவர்க்காரத்தையும் நீரையும் பயன்
படுத்திக் கழுவுங்கள். பின்னர் நுண் ணுயிர் கொல்லி கிரீம் ஒன்றைத்
தடவி கட்டும் துணியால் மூடிக் கட்
டுங்கள். நுண்ணுயிர் கொல்லிக் கிரீம்
கள் காயம் ஆறுவதை விரைவாக்கு வதில்லை. எனினும் தொற்று ஏற் படாமல் அவை தவிர்க்கின்றன. சில வகையான நுண்ணுயிர் கொல்லி கிரீம்கள் தோலில் பரு போன்ற புண்
களை (rash) ஏற்படுத்தலாம். அப்படி
யாயின் அதனைப் பயன்படுத்து வதை உடனே நிறுத்திவிடவும். 3. பெரிய எரிகாயமாயின் எந்த வித மான எண்ணெய்களையோ, கிரீம் களையோ அதன்மீது பூசுதல் கூடாது. மூன்றாந்தர எரிகாயங்கள்
இவ்வகை எரிகாயங்கள் மிகப் பாரதூரமானவை. தோலின் எல் லாப் படைகளும் அவற்றின் கீழுள்ள கொழுப்பு, தசை முதலியனவும் சில வேளைகளில் எலும்புகளும்கூட பாதிக்கப்படலாம். எனினும், வலி உணரப்படாமல் போகலாம். உட லின் சில பகுதிகள் கருகி கறுப்பாகி ருக்கலாம். அல்லது உலர்ந்து வெண்ணிறமாய்த் தோன்றலாம்.
னால் உருவாகும் காபனோ ரொட் சைட்டு அல்லது வேறு நச்சு ஆவிகள் காரணமாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படலாம். -
- இத்தகைய காயங்களைப் பொறுத்தமட்டில் உடனடியாக வைத்திய உதவியை நாடுவது அவ சியமாகும். வைத்திய உதவி கிடைக் கும் வரை பின்வரும் நடவடிக்கை களை மேற்கொள்ளலாம். 1. எரிந்த ஆடைகளை அகற்ற முயற் சிக்க வேண்டாம். எனினும் எரிந்து கொண்டிருக்கிற அல்லது உருகிக் கொண்டிருக்கிற துணிகள் பாதிக்கப் பட்டவரின் உடலுடன் தொடுகை யுறாதவாறு தடுத்துக் கொள்ள வேண் டும். அத்தோடு, அவர் புகையினால் அல்லது வெப்பத்தினால் பாதிக்கப் படாதவாறும் கவனித்துக் கொள்ள வேண்டும். 2. பாதிக்கப்பட்டவர் சுவாசிக்கின் றாரா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அவரது சுவாசப் பாதை தடைப்பட்டிருக்கிறது என நீங்கள் சந்தேகித்தால் அத்தடையை நீக்குவதற்கு முயற்சியுங்கள். சுவாசம் நின்றிருந்தால் செயற்கைச் சுவாசம் அல்லது இதய-சுவாச புத்துயிர்ப்பு வழங்கல் (CPR) செயன்முறையை ஆரம்பிக்கவும். 3. எரிகாயமுள்ள பகுதிகளை மூடி வையுங்கள். இதற்காக கிருமி நீக்கம் செய்யப்பட்ட ஈரமான கட்டும் துணி யொன்றை அல்லது சுத்தமான பருத் தித் துணி ஒன்றைப் பயன்படுத்த லாம். ய
துணி போன்ற பொருட்கள் எரிந்தத
விற்பனை முகவர்கள் தேவை அரும்பு சஞ்சிகை ஒழுங்காக வினியோகிக்கப்படாத பிரதேசங்களில் அதற்கெனப் புதிய விற்பனை முகவர்களை நியமிக்க உத்தேசித்துள்ளோம். 25 பிரதிகளுக்கு மேல் பெற்றுக்கொண்டு வினியோகிக்க விரும்புபவர்கள் தமது விண்ணப்பங்களை எழுத்து மூலம் ஆசிரியருக்கு அனுப்பி வைக்க வேண்டும். முகவர்களுக்கு 20% கழிவு வழங்கப்படும்.
31.
அரும்பு-35

Page 18
தென்கிழக்காசியாவிலுள்ள عبر
கம்போடியா நாடு கம்பூச்சியா என்ற பெயராலும் அழைக்கப்படுகின்றது. சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் இது ஒரு பேரரசாக இருந்து சுமார் 600 வருட காலம் தென் கிழக் காசியாவில் ஆதிக்கம் செலுத்தியது.
கம்போ டியாவின் தற்போ தைய உத்தியோகபூர்வப் பெயர் கம்போடிய இராச்சியம் (Kingdom of Cambodia) என்பதாகும். இதன் வடகிழக்கில் லாவோஸ் நாடும் கிழக்கிலும் தென்கிழக்கிலும் வியட் நாமும் மேற்கிலும் வடமேற்கிலும், தாய்லாந்தும் அமைந்திருக்கின்றன. இதன் தென்மேற்கில் தாய்லாந்து வளைகுடா அமைந்துள்ளது. இந் நாட்டின் மிகப்பெரிய நகரான Phnom Penh (6)5 Tüd (6)L16ö1) 9g;6ät தலைநகராகவும் இருக்கிறது.
நாட்டின் பெரும்பகுதி தாழ்ந்த சமநிலத்தைக் கொண்டுள்ளது. இச் சமநிலத்தின் கிழக்கே அமைந்துள்ள மலைத்தொடர் கம்போடியாவை வியட்நாமிலிருந்து பிரிக்கிறது. கம் போடியாவின் மிக உயர்ந்த மலைச் 6F35 Tüd Phnom Aural 6 TGötLug5 T (g5ửd. இது கடல் மட்டத்திலிருந்து 1813 m 2 - U(p60) Lti g51.
கம்போ டியா வின் மிக முக் கியமான ஆறு மீகொங் என்பதாகும். தென்கிழக்காசியாவின் மிக நீண்ட நதியான இது உலக நதிகளுள் 10வது இடத்தை வகிக்கிறது. மீகொங் நதி கம்போடியா வினூடாக வடக்குத் தெற்காகப் பாய்கிறது. இதன்
32
5tnGL TIITQUI III
Cambodia
பெரும்பகுதி கப்பற் போக்குவரத் திற்கு ஏற்றதாக உள்ளது. கம்போடி யாவிலுள்ள மிகப் பெரிய ஏரியான தோன் லேஸாப் பெருமளவு நன்நீர் மீன்களைக் கொண்டுள்ளது.
கம்ப்ோடியாவின் நிலப்பரப் பில் 53% காடுகளால் மூடப்பட்டுள் ளது. யானை, மான், காட்டு மாடு, வேங்கை, கரடி, புலி போன்ற விலங் குகளும் நாரை, கிளி, காட்டுக் கோழி, வாத்து போன்ற பறவை களும் அங்கு காணப்படுகின்றன. ந்நாட்டில் நச்சுப் பாம்புகள் பெருமளவில் உண்டு.
நாட்டின் நிலப்பரப்பில் 21 சதவீதத்திலேயே பயிர் செய்யப்படு கின்றது. நெல்லே பிரதான பயிரா கும். அத்தோடு இறப்பர், சோளம், சோயா அவரை, மிளகு என்பனவும் வர்த்தக ரீதியில் பயிரிடப்படுகின் றன. பூசணி, மா, வாழை, அன்னாசி முதலியன நுகர்வுக்காகப் பயிர் செய்யப்படுகின்றன. கால்நடை களும் எருமைகளும் விவசாயத்துக் காக உபயோகிக்கப்படுகின்றன.
நாட்டின் வெட்டுமர வளங்கள் தவறான முகாமை காரணமாக துரித கதியில் தீர்ந்துவருகின்றன. கம்போ டியாவில் பாரிய அளவில் கனிய வளங்கள் காணப்படாத போதிலும் நாட்டின் வடமேற்கில் ஓரளவு இரத் தினக்கல் படிவுகள் உள்ளன. நாட் டின் மத்திய பகுதியில் கணிசமான அளவில் கறியுப்பு, மங்கனீசு மற்றும் பொசுபேற்றுப் படிவுகள் இருக்கின்
றன.
அரும்பு-35
 
 
 

கம்போடியாவில் வெப்ப வல யத்துக்குரிய பருவப்பெயர்ச்சிக் கால
நிலை காணப்படுகின்றது. டிசம்பர், ஜனவரி என்பன மிகக் குளிரான மாதங்களாகவும் மார்ச், ஏப்ரல் என்பன மிகச் சூடான மாதங்களா கவும் விளங்குகின்றன. மழை காலம் மே முதல் ஒக்டோபர் வரை நீடிக் கிறது. நாட்டின் மத்திய பகுதியில் சுமார் 1400 mm ஆகவுள்ள சராசரி வருடாந்த மழைவீழ்ச்சி மலை மற்றும் கரையோரப் பகுதிகளில் 3800 mm வரையாகக் காணப்படுகிறது. வருடாந்த சராசரி வெப்பநிலை 27C ஆகும்.
காடழிப்புக் காரணமாகக் கம் போடியாவின் வனவுயிர்கள் பெரி தும் பாதிக்கப்பட்டுள்ளன. 2002ம்
சுறுத்தலுக்கு உட்பட்டனவாகப் பிர கடனப்படுத்தப்பட்டுள்ளன. இவற் றுள் 24 முலையூட்டி இனங்களும் அடங்கியுள்ளன. சூழல் மாசடைதல் காரணமாக பாதுகாப்பான குடி நீரைப் பெற்றுக் கொள்வதும் பெரிய பிரச்சினையாக மாறி வருகின்றது.
2003ஆம் ஆண்டு மதிப்பீட்டின் படி கம்போடியாவின் சனத்தொகை 13,124,764 ஆகும். அங்கு சனத் தொகை அடர்த்தி சதுர kmக்கு 72 பேர்களாக உள்ளது. மலேரியா நோய் பரவலாகக் காணப்படும் நாட்
டின் மலைப் பகுதிகளிலும், நீர் பற்றாக்குறையாகவுள்ள வட மாகா ணங்களிலும் மக்கள் மிகக் குறை வாகவே வாழ்கின்றனர். - சனத்தொகையில் 90 சதவீதத் தினர் சுதேச கம்போடிய இனத்தவர் களாவர். வியட்நாமியர்கள் 5% காணப்படுகின்றனர். மீதித் தொகை யினரில் வடகிழக்கு மலைப் பகுதி களில் நாடோடிகளாக வாழும் கோத்திரத்தினரும் (4%) சீனர்களும் (1%) அடங்குவர்.
கெமெர் (Khmer) என்ற கம் போடிய மொழியே நாட்டின் உத்தி யோகபூர்வ மொழியாகும். முன்னர் நாட்டின் இரண்டாவது மொழியாக பிரெஞ்சு மொழி விளங்கியது. எனி னும் தற்போது அவ்விடத்தை ஆங் கிலம் சுவீகரித்துக் கொண்டுள்ளது. வியட்நாமிய மொழியும் சீன மொழி யின் சில வடிவங்களும் ஆங்காங்கே பயன்படுத்தப்படுகின்றன.
கம்போடிய மக்களில் சுமார் 85 சதவீதத்தினர் தேரவாத பெளத்த சமயத்தைப் பின்பற்றுகின்றனர். 14ம் நூற்றாண்டுக்கு முன்னர் மஹாயான பெளத்தமே அங்கு பிரதான சமய மாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ப்போது சிறுபான்மையினரே அப்பிரிவைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். ரோமன் கத்தோலிக்கம், இஸ்லாம் ஆகிய சமயங்களும் அங்கு சிறு தொகையினரால் பின்பற்றப்படு கின்றன.
கிராமப்புறக் கம்போடியர்கள் மிக எளிமையான முறையிலேயே ஆடை அணிகின்றனர். பெண்கள் பருத்திச் சட்டையும் கணுக்கால் வரை நீண்ட அங்கியும் அணிவது வழக்கம். நகர்ப்புற மக்கள் மேற் கத்திய ஆடைகளை அணிகின்றனர். நாட்டு மக்களில் 80 சதவீதத்தினர் கிராமங்களிலேயே வசிக்கின்றனர்.
33
35 - اړيضاويلاى |

Page 19
இப்பகுதிகளில் உள்ள வீடுகள் மூங் கிலினால் கட்டப்பட்டு ஒலையி னால் வேயப்பட்டுள்ளன. ஆற்று வெள்ளத்திலிருந்து தப்பிக் கொள் வதற்காகப் பெரும்பாலான வீடுகள் நிலத்திலிருந்து சிறிது உயரத்தில் கம்பங்களின் மீது நிர்மாணிக்கப் படுகின்றன.
கம்போடிய இலக்கியத்தில் இராமாயணம், மகாபாரதம் ஆகிய புராதன இந்தியக் காவியங்கள் முக்கிய இடம் பெறுகின்றன. பண் டைய கம்போடிய இராச்சியத்தின் ஆட்சி மொழியாக சமஸ்கிருதம் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது இக்காவியங்களின் கம் போடிய மொழி வடிவங்களே பயன்படுத்தப்படுகின்றன.
கம்போ டியா உலகின் மிக வறிய நாடுகளில் ஒன்றாகும். 2001 இல் அதன் தலா தேசிய உற்பத்தி 280 டொலர்களாக இருந்தது. உள்நாட்டு யுத்தத்தின் காரணமாக நாட்டின் பொருளாதாரம் முற்றாகச் சீர்குலை வுற்றதே இதற்குக் காரணமாகும். கம்போடியாவின் நாணயம் ரியெல் (Riel) என்பதாகும். இது நூறு சதங்களைக் கொண்டது. கம்பூச்சிய
தேசிய வங்கியே வெளியிடுகின்றது.
போக்குவரத்துக்குரிய பாதை வசதிகளும் தொலைத்தொடர்பு வசதிகளும் தலைநகர் தவிர்ந்த பிற பகுதிகளில் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன.
1993 செப்டம்பர் முதல் கம்போ டியாவில் முடியாட்சி மீள அமைக் கப்பட்டுள்ளது. இப்போது மன்னரே அரசின் தலைவராக இருக்கிறார். எனினும் அரசாங்கத் தலைவரான பிரதமரிடமே நிர்வாக அதிகாரம் இருக்கிறது. இரண்டு சபைகளைக் கொண்ட பாராளுமன்றம் சட்ட வாக்க அதிகாரத்தைக் கொண்டுள் ளது. தேசிய பேரவை எனப்படும் கீழ்ச்சபை 122 உறுப்பினர்களைக் கொண்டது. இவர்கள் ஐந்து வருடத் தவணைக்குப் பொதுத் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படுகின்றனர். உயர் சபையான செனட் சபை தேசிய பேரவைக்கு ஆலோசனை வழங்கு கின்றது. எதிர்காலத்தில் செனட் சபையின் 61 உறுப்பினர்களும் பொதுத் தேர்தல் மூலம் 6 வருடத் தவணைக்குத் தெரிவு செய்யப்பட GỊ Git GMTGOTři.
நாணயத்தை
சந்தோசத்திற்கு வழி
ஜனாதிபதியும் பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவரும் ஒரு பத்திரிகையாள ரோடு ஹெலிகப்டரில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது ஜனாதிபதி 1000 ரூபா தாளொன்றை யன்னலினூடாக வெளியே எறிந்தார். “இதைப் பெற்றுக் கொண்டு யாராவது ஒருவர் சந்தோசமாக இருப்பார்தானே?” என்றார் அவர்.
இதைக் கண்ட பிரதமர் "1000 ரூபாத் தாளுக்குப் பதிலாக இரண்டு 500 ரூபாத் தாள்களை நீங்கள் வீசியிருந்தால் இரண்டு பேர் சந்தோசப் பட்டிருப் பார்களே' என்றார். அதைக்கேட்ட எதிர்க்கட்சித் தலைவர்"அப்படிச் செய்யா மல் பத்து 100 ரூபாத் தாள்களை வெளியே எறிந்திருந்தால் நாட்டு மக்களில் பத்துப் பேராவது சந்தோசப் படுவார்களே' என்று கூறினார்.
இவற்றையெல்லாம் செவிமடுத்துக் கொண்டிருந்த பத்திரிகையாளர் “எல்லாவற்றுக்கும் மேலாக உங்கள் மூவரையும் வெளியே எறிந்தால் நாட்டு மக்கள் அனைவரும் சந்தோசப்படுவார்களே' என்றார்.
34 . W
35 - اطلاژی ey

நிறங்கள் மனித வாழ்க்கையில் அதிக முக்கியத்துவமுடையனவாக இருக்கின்றன. அவை பொருட் களுக்கு அழகையும் கருத்தையும் கொடுப்பதோடு அப்பொருட்கள் பற்றிப் பல்வேறு தகவல்களையும்
தருகின்றன. மனிதன் நிறங்களை தகவல் வழங்கும் ஊடகமாகப் பயன்படுத்தும் சந்தர்ப்பங்களும் நிறைய உள்ளன.
மின்காந்த அலைகளுள் எமது கண்களுக்குப் புலனாகக்கூடிய அலை நீளங்களே எமக்கு ஒளியாகத் தெரிகின்றது. இவ்வலை நீளங் களைக் கொண்ட பகுதியை நாம் கட் புலனாகும் திருசியம் (Visible Spectrum) என்கிறோம். இப்பகுதி யிலுள்ள வெவ்வேறு அலை நீளங்கள் வித்தியாசமான உணர்வு களை எமது பார்வைப் புலனில் ஏற் படுத்துகின்றன. இவ்வாறு கட்புல னாகும் மின்காந்த அலைகளினால் எமது மூளையில் உருவாக்கப்படும் உணர்வே நிறம் எனப்படுகிறது.
நிறங்களை உணர்ந்துகொள் ளும் திறன் மனிதனுக்கும் இன்னும் சில விலங்குகளுக்கும் மாத்திரமே உண்டு. மிகச் சிக்கலான நரம்பு சார்ந்த உடற்றொழிலியல் செயன் முறையொன்றின் மூலமே எமது மூளை நிறங்களை உணர்ந்துகொள் கின்றது.
சாதாரண வெள்ளையொளி மின்காந்த அதிர்வுகளால் ஆக்கப்பட் டுள்ளது. இவ்வதிர்வுகளின் அலை நீளங்கள் 0.35 மைக்ரோ சென்றிமீற்றர் முதல் 0.75 மைக்ரோ சென்றிமீற்றர்
அரும்பு- 35
வரை சீராகப் பரவியுள்ளன. இவ் வதிர்வுகளின் செறிவு மிக வலிமை யாக இருந்தால் ஒளி வெள்ளையாக இருக்கும். அவற்றின் செறிவு குறைவாக இருந்தால் ஒளி சாம்பல் நிறமாக இருக்கும். செறிவு அறவே இன்றி பூச்சியமாக இருப்பின் அங்கு ஒளி இருக்காது. அதாவது கறுப்பாக இருக்கும்.
குறித்த அலை நீளமுடைய ஒளி யானது வேறொரு அலைநீளம் கொண்ட ஒளியிலிருந்து பண்பு ரீதி யில் வேறுபட்டுக் காணப்படும். இவ் வேறுபாடே நிறமாக எமக்குத் தோற்றமளிக்கிறது.
உதாரணமாக 0.000075 cm அலைநீளமுடைய ஒளி எமக்குச் சிவப்பாகத் தோன்றும். அதே வேளை 0.000035 Cm அலைநீள முடைய ஒளி ஊதா நிறமாக உணரப் படும். ஊதா வுக்கும் சிவ0ப்புக்கும் இடைப்பட்ட அலைநீளங்கள் நீலம், பச்சை, மஞ்சள், செம்மஞ்சள் என் பனவாக உணரப்படுகின்றன.
ஒரு தனி அலைநீளத்தை அல் லது அடுத்தடுத்த சில அலைநீளங் களை மாத்திரம் கொண்ட ஒளியின் நிறமானது தூய திருசிய நிறம் என அழைக்கப்படும். இத்தகைய தூய நிறங்கள் ஆய்வுகூடத்திற்கு வெளியே மிக அரிதாகவே காணப்படுகின்றன. இவ்வகை நிறங்கள் முற்றாக நிரம்பலடைந்தவை (Saturated) எனக் கருதப்படும்.
நாம் அன்றாடம் சந்திக்கும் நிறங்கள் பல்வேறு அலைநீளங்களின் கலப்பாகவே இருக்கும். இதனால்
35

Page 20
அவ்வகை நிறங்களை நிறம்பா நிறங்கள் என்பர்.
மனிதக் கண்கள் நிறங்களை உணர்ந்துகொள்ளும் முறை மிகவும் சிக்கலானது. எனவே ஒரேவிதமான
நிற உணர்வை வித்தியாசமான
பெளதிகத் தூண்டிகள் எம்மில் ஏற் படுத்தலாம். உதாரணமாக, சிவப்பு, பச்சை ஒளிகளை உரிய செறிவில் கலக்கும் போது அக்கலவை தூய மஞ்சள் நிறம் போன்று எமக்குத் தோற்றமளிக்கும். எனினும் அக்கல வையில் மஞ்சளுக்குரிய அலைநீளங் கள் இருக்கமாட்டா.
சிவப்பு, நீலம், பச்சை ஆகிய ஒளிகளை வெவ்வேறு அளவுகளில் கலப்பதன் மூலம் எந்தவொரு நிறத் தின் உணர்வையும் ஏற்படுத்த முடி யும். எனவே இம்மூன்று நிறங்களும் கூட்டலுக்குரிய முதன்மை (additive primary colours) sip iš 55 Git GT GOT அழைக்கப்படுகின்றன.
இம்முதன்மை நிற ஒளிகளை சம செறிவுகளில் ஒன்று சேர்க்கும் போது வெள்ளை ஒளியின் உணர்வு உருவாக்கப்படுகிறது.
வெள்ளொளியின் பகுதி உறிஞ் சல் காரணமாகவே நாம் அன்றாடம் அனுபவிக்கும் நிறங்கள் தோன்று கின்றன. பொருட்களுக்கு நிறத்தை வழங்கும் நிறப்பொருட்கள் வெள் ளொளியின் சில அலநீளங்களை உறிஞ்சிக்கொண்டு ஏனையவற்றைத் தெறிக்க அல்லது ஊடுசெல்ல விடு கின்றன. இவ்வாறு உறிஞ்சப்படா மல் வரும் அலைநீளங்களே நிற
உணர்வை எமக்கு ஏற்படுத்துகின் றன.
கூட்டலுக்குரிய முதன்மை நிறங் களின் ஒளியை உறிஞ்சுகின்ற நிறங் கள் கழித்தலுக்குரிய முதன்மை நிறங் 5 Git (substractive primary colours) எனப்படும். பச்சை ஒளியை உறிஞ் சுகின்ற சிவப்பும், நீல ஒளியை உறிஞ் சுகின்ற மஞ்சளும், சிவப்பொளியை உறிஞ்சுகின்ற நிலமுமே கழித்தலுக் குரிய முதன்மை நிறங்களாகும். இவை நிறப்பொருட்களுக்குரிய முதன்மை வர்ணங்கள் (pigment primaries) எனவும் அழைக்கப்படும்.
சிவப்பு நிறப் பொருளொன் றின் மீது பச்சை ஒளியைப் பாய்ச் சினால் அது எமக்கு கறுப்பாகவே தெரியும். இதற்குக் காரணம் பச்சை ஒளியைச் சிவப்பு நிறப் பொருள் உறிஞ்சிக் கொள்வதாகும்.
கழித்தலுக்குரிய முதன்மை நிறங்களைக் கொண்ட நிறப் பொருட்களை வெவ்வேறு அளவு களில் கலப்பதன் மூலம் எமக்குத் தேவையான எந்த நிறத்தையும் உருவாக்கிக்கொள்ள முடியும். வர்ண போட்டோக்களிலும் வர்ண அச்சு முறைகளிலும் இந்நிறங்களைக் கலப் பதன் மூலமே இயற்கை நிறங்கள் பெறப்படுகின்றன. உதாரணமாக இவ்விதழின் முன் அட்டையிலுள்ள நிறங்கள் யாவும் மஞ்சள், மென் 96). JL1 (magenta), i5@) to (cyan), கறுப்பு ஆகிய நான்கு நிறங்களையும் வெவ்வேறு அளவுக்ளில் ஒன்றின்மீது
ஒன்று அச்சுப் பதிப்பதன் மூலமே
உருவாக்கப்பட்டுள்ளன.
அரும்பு இதழ்-1 அரும்பு இதழ்-1 இன் சொற்ப எண்ணிக்கைப் பிரதிகள் மீண்டும் அச்சிடப் பட்டுள்ளன. இதன் பிரதியொன்று ரூபா 30.00 வீதம் விற்கப்படுகிறது. தபால் மூலம் பிரதியைப் பெற விரும்புவோர் ரூபா 35.00 பெறுமதியான மனியோடரை அனுப்பி
வைக்கலாம்.
36
அரும்பு-35

அரும்பு- 35
பாரசீக வளைகுடா நாடுகளான ஈரானுக்கும் ஈராக்குக்குமிடையே 1980 முதல் 1988 வரை நீடித்த போர் 20ஆம் நூற்றாண்டின் மிக நீண்ட, அழிவுமிக்க போர்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இருந்தும் இப்போரின் இறுதியில் எந்தச் சாராருக்கும் புவியியல் ரீதியிலோ அர சியல் ரீதியிலோ எவ்விதமான இலாப மும் கிடைக்கவில்லை.
ஈராக்குக்கும் ஈரானுக்கும் இடை யில் உள்ள எல்லைப்பகுதி பல நூற் றாண்டுகளாகச் சர்ச்சைக்குரியதாக இருந் து வந்துள்ளது. முதலாம் உலகப் போரின் (1914-1918) பின்னர் இன்றைய ஈராக் நாடு உருவாக்கப்பட்டபோது இச்சச்சரவு முனைப்படைந்தது. ஈராக்குக்கு கடல் தொடர்பை வழங்குகின்ற ஷத் அல் அராப் என்ற ஆற்றுப் பிரதேசம் தொடர் பாக முரண்பாடுகள் அதிகரித்தன.
ஷத் அல் அராப் பகுதியின் கட்டுப் பாட்டை ஈராக்குக்கு வழங்கும் வகையில் 1937ஆம் ஆண்டு எல்லை உடன்படிக் கையொன்று கைச்சாத்திடப்பட்டது. எனினும் இவ்வுடன்படிக்கையின் பின் னரும் பிரச்சினைகள் தொடரவே செய் தன.
1970களில் ஈராக்கிலுள்ள குர்திஷ் மக்கள் அந்நாட்டு அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்தனர். ஈரான் கிளர்ச்சியாளர் களுக்கு ஆதரவளித்தது. 1975இல் கைச்சாத்
திடப்பட்ட ஒரு சமாதான உடன்படிக்கை யின்படி ஷத் அல் அராப் நதிப் பாதையை
ஈரானுடன் பகிர்ந்து கொள்ள ஈராக்
உடன்பட்டது.
எட்டு வருடங்கள் நீடித்த FFUJITT6ÖT — FFUJITTjh
யுத்தம்
1979ஆம் ஆண்டு ஆயத்துல்லா
கொமைனி அவர்களின் தலைமையின்
கீழ் ஈரானின் மதச் சார்பற்ற ஆட்சி கவிழ்க்கப்பட்டு ஷியாப் பிரிவினரின் இஸ்லாமிய ஆட்சி ஏற்பட்டபோது ஈராக்கின் ஆட்சியாளர்களது மனதில் ஒரு வகை அச்சம் ஏற்பட்டது. ஈராக்கின் சனத் தொகையில் பெரும்பான்மையினராக ஷியாக்கள் இருந்தது இதற்கொரு காரண LOff'(Gt.P.
புரட்சியின் பின்னர் ஈரானில் ஏற்பட் ட அரசியல் உறுதியற்ற நிலைமை அந்நாட்டை நலிவுறச் செய்தது. 1979 நவம் பரில் பல அமெரிக்கப் பிரஜைகள் ஈரானில் பணயக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டனர். இதனால் ஈரானுக்கும் அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகளுக் கும் இடையில் கடும் எதிர்ப்புணர்வு ஏற்பட்டது. இந்நிலைமையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள ஈராக்கிய ஜனாதிபதி ஸதாம் ஹ"ஸைன் எத்தனித்தார்.
1980இல் எல்லைமீறல்கள் தொடர் பாக இரு நாடுகளும் ஒன்றையொன்று குற்றம் சாட்டலாயின. அத்தோடு ஷத் அல் அராப் தொடர்பாக 1975இல் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையை ரத் துச் செய்வதாக ஈராக் அறிவித்தது. இறுதி யில் 1980 செப்டம்பர் 22ம் திகதி ஈரான் மீதான முழு அளவிலான படையெடுப் பொன்றை ஈராக் ஆரம்பித்தது.
சுமார் 500 km நீளமான எல்லை நெடுகே ஈரானுக்குள் புகுந்த ஈராக்கியப் படைகள் ஈரானிய எல்லைக் காவல்
37

Page 21
படைகளை முறியடித்து தென்மேற்கு ஈரானுக்குள் நுழைந்தன. அத்தோடு எண்ணெய் வளம் மிக்க குஸெஸ்தான் மாகாணத்திலுள்ள கொரம்ஷார் என்ற நகரை அவை கைப்பற்றிக் கொண்டன. எல்லை நெடுகே இருந்த ஏனைய நகர் களையும் முற்றுகையிட்டன.
எனினும் ஈராக் எதிர்பார்த்ததை விடக் கடுமையான முறையில் ஈரானும் எதிர்த்தாக்குதல் நடத்தியது. அது தனது கடற்படை வலிமையைப் பயன்படுத்தி கடல் முற்றுகையொன்றைச் செய்ததோடு விமானத் தாக்குதல்கள் மூலம் ஈராக்கியப் படைகளின் முன்னேற்றத்தைத் தடுத்தது. 1981இல் ஈரான் தனது முதலாவது முழு அளவிலான எதிர்த்தாக்குதலை ஆரம்பித்தது. எனினும் ஈராக் அதனை
முற்றாக முறியடித்தது. இவ்வாறு முடி
வில்லா யுத்தமாக அது தொடரலாயிற்று. இடைக் காலத்தில் யுத்தநிறுத்தமொன் றை மேற்கொள்ள ஈராக் உடன்பட்ட போதும் தனது மண்ணிலிருந்து ஈராக்
கியப் படைகள் வெளியேறும் வரை போரை நிறுத்தப் போவதில்லை என
ஈரான் உறுதியாக நின்றது.
1982இல் பெரிய தொண்டர் படை களைத் திரட்டி ஈரான் கடும் தாக்குதல் களை மேற்கொண்டது. எண்ணிக்கையில் கூடிய ஈரானியப் படைகளுக்கு ஈராக் பெரும் உயிர்ச் சேதத்தை ஏற்படுத்திய போதிலும் இறுதியில் ஈராக்கியப் படை கள் பின்வாங்க வேண்டி ஏற்பட்டது. சிறிது காலத்திற்குள் ஈரானியப் படை களின் உற்சாகம் தளர்ந்த பின் இழந்த நிலப்பரப்புக்களை ஈராக்கியப் படைகள் மீண்டும் கைப்பற்றலாயின. இதே நிகழ் வுத் தொடர் மீண்டும் மீண்டும் இடம் பெறலாயிற்று.
எதிர்பார்த்தவாறு எளிதான வெற்றி கிடைக்காததால் ஈராக்கியப் பாதுகாப்புத் துறை விரக்தியடைந்தது. எனவே 1983இல் ஈரானியப் படைகளுக்கு எதிராக
38
நச்சு வாயுத் தாக்குதல்களை ஈராக் மேற் கொண்டது. அத்தோடு ஈரானிய நகர்க ளையும் பெற்றோலிய ஆலைகளையும் ஈரானியக் கப்பல்களையும் தாக்குவதற்கு ஏவுகணைகளையும் குண்டுவீச்சு விமா னங்களையும் பயன்படுத்தியது. பதிலடி யாக ஈரானும் ஈராக்கிய நகர்கள் மீதும் பொருளாதாரத் தளங்கள் மீதும் தாக்குதல் களை நடத்தியது.
இந்நிலையில் இப்போரை நிறுத்து வதற்கு மத்திய கிழக்கு நாடுகளோ ஏனைய உலக நாடுகளோ தீவிர முயற்சி எதனையும் மேற்கொள்ளவில்லை. யுத் தத்தை நிறுத்துமாறு கோரும் தீர்மான மொன்று ஐ. நா. பாதுகாப்புச் சபையில் நிறைவேற்றப்பட்டது உண்மையே. எனி னும் ஈரானிலிருந்து வேற்று நாட்டுப் படைகள் வெளியேற வேண்டும் என்ற அந்நாட்டின் கோரிக்கையை எவரும் ஆதரித்ததாகத் தெரியவில்லை. ஈரானுக் கும் மேற்கு நாடுகளுக்கும் இடையில் உருவாகியிருந்த பகைமை உணர்வு இதற் கொரு காரணமாகும்.
எனினும் எகிப்து, ஜோர்தான், ஸவூதி அரேபியா ஆகிய நாடுகள் ஈராக் குக்கு இராணுவ மற்றும் ராஜதந்திர ரீதியில் ஆதரவளித்தன. சிரியா மாத் திரமே ஈரானுக்கு ஆதரவளித்தது. ஐக்கிய அமெரிக்காவும் மறைமுகமாக ஈராக் கிற்குத் தன் ஆதரவை வழங்கியது. ஈரான் இஸ்ரவேலிடமிருந்து சில உதவிகளைப் பெற்றுக்கொண்டது. அதேவேளை இர கசியமான முறையில் ஈரானுக்கு ஆயுத விநியோகம் செய்வதற்கான ஓர் ஏற்பாட் டை அமெரிக்கா செய்திருந்தது.
இலகுவாக வெற்றி கிடைக்கும் என நம்பியதால் ஈராக் ஆரம்பத்தில் சர்வதேச உதவி எதனையும் நாடவில்லை. எனினும் போரின் நிலைமை மோச மாகிக் கொண்டு சென்றபோது அது பிரச்சினையை சர்வதேச மயமாக்க எத்த னித்தது. ஈராக் ஈரானியக் கப்பல்களைத்
அரும்பு- 35

தாக்கியபோது பதிலடியாக ஈரான் ஈராக் கியக் கப்பல்களை மாத்திரமன்றி அதற்கு உதவி கொண்டுவரும் ஏனைய நாட்டுக் கப்பல்களையும் தாக்கத் தொடங்கியது. இதனால் பாரசீக வளைகுடாவினூடாக மேற்கு நாடுகளுக்கான எண்ணெய் வினி யோகம் தடைப்படும் ஆபத்து ஏற்பட் டது. ity
இதனால் அமெரிக்கக் கடற்படை பாரசீக வளைகுடாவில் தனது நடவடிக் கைகளை அதிகரித்தது. இது ஈராக்குக்குச் சாதகமான நிலைமையொன்றை உரு வாக்கியது. 嫩 1986இல் ஈராக்கின் அல் பாவ் என்ற நகரை ஈரான் பிடித்துக்கொண்டது.
லொன்றை நடத்தி ஈராக்கிய அரசாங் கத்தைக் கவிழ்ப்பதற்கு ஈரானியத் தலை வர்கள் திட்டமிட்டனர். இதனால் பதற்ற மடைந்த உலக நாடுகள் யுத்தத்தை நிறுத்தி பழைய எல்லைகளுக்குத் திரும்புமாறு கோரும் தீர்மானமொன்றை ஐ. நா. பாது காப்புச் சபையில் நிறைவேற்றின. இதனை ஈராக் உடனடியாக ஏற்றுக் கொண்ட போதிலும் ஈரான் மசிய வில்லை.
மீண்டும் தன்னைத் தயார்படுத் திக்கொண்ட ஈராக் 1988இல் அல் பாவ்
1987இல் கடுமையான இறுதித் தாக்குத
நகரிலிருந்தும் ஏனைய எல்லைப் பகுதி களிலிருந்தும் ஈரானியப் படைகளைத் துரத்தியடித்தது. இதற்குப் பதில் தாக் குதல் நடத்தும் நிலையில் ஈரான் இருக்க வில்லை. அத்தோடு சர்வதேச நிலை மைகள் ஈராக்கிற்கு பெரிதும் சாதகமாக இருந்ததனால் ஐ. நா. பாதுகாப்புச் சபையின் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு யுத்தத்தை நிறுத்திக்கொள்ள ஈரான் முடிவு செய்தது. இதன்படி 1988 ஆகஸ்ட் 20ம் திகதி இரு நாடுகளும் யுத்த நிறுத்தத்தை அமுல்படுத்தத் தொடங்கின.
எட்டு வருடங்கள் நீடித்த இப் போரின் காரணமாக சுமார் ஐந்து இலட் சத்திற்கும் மேற்பட்ட ஈரானியர்களும் அதன் பாதியளவு ஈராக்கியர்களும் கொல் லப்பட்டனர். காயமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனுக்கும் மேல் என மதிப்பிடப்பட்டது. அத்தோடு இரு நாடுகளுக்கும் ஏற்பட்ட இழப்புதலா 500 பில்லியன் டொலர்களுக்கும் மேலாகும். இத்தனை இழப்புகளுக்கு மத்தி யில் நடத்தப்பட்ட இந்தப் போரினால் இவ்விரு நாடுகளுக்கும் எவ்வித நன் மையும் ஏற்படவில்லை. ஏற்கனவே இருந்த பிணக்குகளும் சச்சரவுகளும் எவ்விதத் தீர்வும் காணப்படாமல் இன்றும் இருக்கத்தான் செய்கின்றன.
மூளைக்கு வேலை - விடைகள்
(1) இவ்வாறான ஒன்பது பெருக்கல்களை எழுதலாம். அவையாவன:
12 X 483 = 5,796 27 Χ 198 = 5,346 28 X 157 = 4,396
2) 987,652,413
7) 4 மடங்கு
42 Χ 138 = 5,796 39 X 186 = 7,254 4 Χ 1,738 - 6,952
(3) 6,60L. A 5) 9S, 11N (மாதங்களின் பெயர் முதலெழுத்து)
18 Χ 297 = 5,346 | 48 Χ 159 = 7,632
4 X 1,963 = 7,852
(4) 7862
(6) 1000 km
sains): Fun with Mathematics
39

Page 22
வளிசீராக்கல் தொழில்நுட்பத்தின் தந்தை
வில்லிஸ் கரியர்
WILLIS CARRIER
(Father of Air-Conditioning)
இன்றைய வீடுகளிலும், காரி யாலயங்களிலும், தொழிற் கூடங் களிலும் Air-conditioning என்ற வளி சீராக்கல் செயன்முறை முக்கிய இடத்தை வகிப்பதை நாம் காண லாம். அடைக்கப்பட்ட இடமொன் றிலுள்ள வளியின் வெப்பநிலை யையும் ஈரப்பதனையும் எமக்குத் தேவையான அளவுகளில் பேணிக் கொள்ள உதவும் செயன்முறையே Air conditioning - வளி சீராக்கல் என அழைக்கப்படுகின்றது.
இத் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்து உலகுக்கு வழங்கியவர் வில்லிஸ் ஹவிலண்ட் கரியர் (Willis Haviland Carrier) 67GöIp egyG)LDíj5ü பொறியியலாளர் ஆவார். Air-conditioning தொழில்நுட்பத்தின் தந்தை என வில்லிஸ் கரியர் போற்றப் பட்டாலும் அந்தச் சொற்றொடர் அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட தல்ல.
துணி ஆலைகளில் துணி நெய் வதற்குப் பயன்படுத்தப்படும் நூல் களைப் பதப்படுத்துவதற்காக வளி யுடன் நீராவியைச் சேர்க்கும் சாதன மொன்றை 1906இல் Stuart H. Cramer என்ற அமெரிக்கப் பொறி யியலாளர் பேட்டன்ற் (patent) உரிமைப் பதிவு செய்திருந்தார். இவ்வுரிமைப் பதிவில் அவர்தான் Air-conditioning 6 TGórp G)ġFIT jibG) pT L - ரை முதன்முதலாகப் பயன்படுத்தி இருந்தார்.
வில்லிஸ் கரியர் நிவ் யோர்க் மாநிலத்திலுள்ள அங்கோலா என்ற இடத்தில் 1876இல் பிறந்தார். குடும் பப் பண்ணையொன்றில் தம் சிறு பிராயத்தைக் கழித்த அவர் உள்ளூர்ப் பாடசாலைகளிலே கல்வி கற்றுக் கொண்டார். பின்னர் புலமைப் பரிசிலொன்றைப் பெற்று நிவ் யோர்க் மாநில Cornel பல்கலைக் கழகத்தில் நுழைந்த அவர் 1901இல் பொறியியலாளராகப் பட்டம் பெற்று வெளியேறினார்.
1902(3)6) Buffalo Forge Company என்ற நிறுவனத்தில் வேலைக்கு அமர்ந்த கரியர், அங்குள்ள அச்சகத் தில் பொருத்துவதற்காக வளியின் ஈரப்பதனைக் கட்டுப்படுத்தும் சாதன மொன்றை வடிவமைத்தார். அச் சடிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் கடதாசித் தாள்கள் சுருங்குவதைத் தடுப்பதற்காக இவ்வாறான சாத னங்கள் தேவைப்பட்டன. தாளில் ஏற்படும் சுருக்கம் பல்வர்ண அச்சிடு தலின்போது விரும்பத்தகாத விளை வுகளை ஏற்படுத்தின.
1906இல் தனது சாதனத்தை “வளியைப் பரிகரிப்பதற்கான உப (5 JaOOTio (Apparatus for treating air) என்ற பெயரில் வில்லிஸ் கரியர் “பேட்டன்ற் உரிமைப்பதிவு செய்து கொண்டார்.
வளி சீராக்கிகளின் தயாரிப்புக்கு
அடிப்படையாக அமைந்த தனது கணிப்பீட்டுச் சூத்திரத்தை அவர் அரும்பு- 35
40
 

1911இல் அமெரிக்க பொறிசார் பொறியியலாளர்கள் சங்கத்திற்குச் சமர்ப்பித்தார் இச்சூத்திரம் இன்றும் வளி சீராக்கித் தொழிற் துறையில் அடிப்படைக் கணிப்பீடுகளைச் செய் யப் பயன்படுகின்றது. தான் ரெயில் வண்டியொன்றுக்காகக் காத்திருந் தபோது, இது பற்றிய ஞானம் தனது மூளையில் தற்செயலாக உதித்த தாகக் கரியர் குறிப்பிட்டிருந்தார்.
வளியின் வெப்பநிலையையும் ஈரப்பதனையும் சீராக்குவதற்குரிய வசதியேற்பட்டதனால் ஒளிப்படப்
படலங்கள் (films), புகையிலை,
மருந்து வில்லைகள், துணி வகைகள் போன்ற பல்வேறு பொருட்களின் உற்பத்தித் தரம் முன்னேற்றம் கண் டது. வில்லிஸும் வேறு பொறியிய லாளர்கள் ஆறுபேரும் இணைந்து 35,000 டொலர்களை முதலிடு செய்து Carrier Engineering Corporation என்ற நிறுவனத்தை 1915இல் ஆரம் பித்தனர். வளி சீராக்கல் தொழில் நுட்பத்தை மேம்படுத்துவதே இந் நிறுவனத்தின் பிரதான நோக்கமாக இருந்தது.
1921இல் வில்லிஸ் கரியர் தமது மையக் கவர்ச்சிக்குரிய குளிரூட்டும் G). Il 56ou (Centrifugal refrigeration Machine) உரிமைப் பதிவு செய்தார். பெரிய கட்டடங்களினுள் வளியைச் சீராக்குவதற்கு மிக ஏற்றதாக இது அமைந்தது. உற்பத்தித் துறைக்கு மேலதிகமாக மனிதர்களின் செளகரி
யத்துக்காக வளியைக் குளிரூட்டும் முயற்சி 1924இல் ஆரம்பமாகியது. இந்த வகையில் முதலாவது வளி சீராக்கி மிச்சிகன் மாநிலத்தில் டெற்ரொயிட் நகரிலிருந்த J. L. HudSOn என்ற விற்பனைக்கூடத் தொகு தியில் பொருத்தப்பட்டது. குளிரூட் டப்பட்ட விற்பனைக் கூடங்களில் வாடிக்கையாளர்கள் பெருமளவில் கூடத் தொடங்கினர். இதனால் அங்கு வியாபாரம் பெருகியது. கோடை கால வெப்பத் தாக்கத் திலிருந்து நிவாரணம் பெற வளி சீராக்கல் உதவலாயிற்று. -
இதேபோன்று சினிமாக் கூடங் களும் வளிசீராக்கிகளைப் பயன் படுத்தலாயின. நிவ்யோர்க்கிலிருந்த Rivoli Theatre 67667 p. 360fLDs is கூடத்தில் வளிசீராக்கி பொருத்தப் பட்டதால் கோடை காலத்தில் வருமானம் பெருமளவு அதிகரிக்க லாயிற்று. வீடுகளில் பயன்படுத்தப் LuLiga, Lau “Weather maker” 6TGiip வளிசீராக்கிச் சாதனத்தை 1928இல் கரியர் விருத்தி செய்தார்.
வளி சீராக்கல் தொழில்நுட்பம் தொடர்பான சுமார் 80 பேட்டன்ற் உரிமைப் பதிவுகளை வில்லிஸ் கரியர் பெற்றுக்கொண்டிருந்தார். அவரால் ஆரம்பிக்கப்பட்ட கரியர் கோர்ப்பரேஷன் என்ற நிறுவனம் உலகில் வளி சீராக்கிகளை உற்பத்தி செய்வதில் முன்னணியில் நின்றது. கரியர் 1950இல் காலமானார்.
அரும்பு இதழ்களைத் தபால் மூலம் பெற்றுக்கொள்ளல்
அரும்பு இதழ்களைத் தபால் மூலம் பெற விரும்புவோர் அடுத்து வரவுள்ள 6 இதழ்களுக்கும் ரூபா 175/= மணியோடர் மூலம் அனுப்பலாம். தனிப்பிரதி தேவைப் படுவோர் தபாற் கட்டணத்தையும் சேர்த்து ரூபா 30.00 அனுப்பவும்.
மனியோடர் அனுப்பும்போது பணம் பெறுபவர் பெயர் M. Hafiz Issadeen எனவும் தபாற் கந்தோர் Dharga Town எனவும் குறிப்பிடத் தவறாதீர்கள்.
அரும்பு 35
41
甄可丐

Page 23
கிம்பியூட்டர்களின் மூளை என அழைக்கப்படும் மைக்ரோ புரோ ஸ சர்களைத் தயாரிக்கும் கம்பனி களுள் முன்னணியில் இருப்பது ஐக்கிய அமெரிக்காவிலுள்ள இன் றெல் கோர்ப்பரேஷன் Intel Corporation 676örp sólg) 6).16ð! LDIT (5 to. PC எனப்படும் பேர்ஸனல் கம்பியூட் டர்களுக்குரிய மைக்ரோ புரோ ஸசரை இக்கம்பனியே கண்டுபிடித் தது. இன்று உலகிலுள்ள PCக்களுள் 80 சதவீதமானவை Intel புரோ ஸசர்களையே பயன்படுத்துகின்றன என்பது கவனிக்கத் தக்கது.
ஐக்கிய அமெரிக்காவில் கலி போர்னியா மாநிலத்திலுள்ள Santa Clara என்ற இடத்தில் தலைமை யகத்தைக் கொண்டுள்ள இக்கம்பனி கம்பியூட்டர் வலையமைப்புக்குரிய சாதனங்கள், நினைவுச் சாதனங்கள்,
சுப்பர் கம்பியூட்டர்கள் போன்றவற்
றையும் உற்பத்தி செய்கின்றது.
இன்றெல் கம்பனி 1968ஆம் gy,650TG) Gordon Moore, Bob Noyce என்ற இரு பொறியியலாளர் களினால் ஆரம்பிக்கப்பட்டது. இவர் கள் இருவரும் தாம் வேலை செய்து 6 fig, Fairchild Semiconductor 6 airp கம்பனியிலிருந்து விலகியே இத னைத் தொடங்கினர். பின்னர் Andrew Grove என்பவரும் இவர்களோடு சேர்ந்து கொண்டார். இவர்தான் 1987இல் இன்றெல்
42
கம்பனியின் பிரதான நிர்வாகியாக மாறினார்.
| Intel 6Taip 6) Lui Integrated electronics என்ற சொற்றொடரி லிருந்தே உருவாக்கப்பட்டது.
உலகின் முதலாவது மைக்ரோ புரோஸசரை இன்றெல் நிறுவனம் 1971இல் உருவாக்கியது. 4004 என அழைக்கப்பட்ட இப்புரோஸசரை Ted Hoff என்ற பொறியியலாளர் விருத்திசெய்தார். 42 mm X 32 mm பருமனுடைய ச்சாதனம் 2300 திரா சிஸ்டர்களை உள்ளடக்கியிருந் ததோடு உலகின் முதலாவது இலக்ட் ரோனிக் டிஜிட்டல் கம்பியூட்டரான ENIACஇன் வலுவுக்குச் சமனான செயற்பாட்டு வலுவைக் கொண் டிருந்தது.
4004 மைக்ரோ புரோ ஸசரும் 1974இல் அறிமுகப்படுத்தப்பட்ட இன்றெல்லின் 8080 என்ற மைக்ரோ புரோஸ்சரும் கல்கியுலேட்டர்கள், வீதி சமிக்ஞை விளக்குகள் போன் றவற்றில் பயன்படுத்தப்படலாயின. உலகின் முதலாவது பெர்ஸனல் கம்பியூட்டரான Altair 8800 என் பதிலும் 8080 மைக்ரோ புரோஸசரே பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத் தக்கது.
இன்றெல் கம்பனி விருத்தி செய்த 8088 என்ற புரோஸ்சரைப் பயன்படுத்தி IBM கம்பனி தனது முதலாவது PC வகைக் கம்பியூட்
அரும்பு-35
 

டரைச் சந்தைக்கு அறிமுகம் செய் தது. அதனைத் தொடர்ந்து வந்த IBM-PCக்களிலும் அவற்றையொத்த நகல் (clone) தயாரிப்புக்களிலும் Intel புரோ ஸசர்களே பெரும்பாலும் பயன்படுத்தப்படலாயின. இதனால் மைக்ரோ புரோ ஸசர் தயாரிப்பில் முன்னணி இடத்தை Intel சுவீகரித் துக்கொண்டது.
ஏற்கனவே 1970இல் Intel சந் தைக்கு அறிமுகப்படுத்தியிருந்த DRAM (Dynamic Random Access Memory) என்ற நினைவகச் சுற்றுகள் சந்தையில் வெற்றிகரமாக விற்ப்னை யாகி வந்தன. 1971 g) Gö Intel அறிமுகப்படுத்திய EPROM என்ற வகை நினைவகச் சுற்றுகளும் அதே போன்ற வரவேற்பைப் பெற்றன. இவை அக்காலத்திலிருந்த Mainframe வகைக் கம்பியூட்டர்களில் பயன்படுத்தப்பட்டு வந்தன.
எனினும் 1980களின் நடுப்பகு தியில் குறைகடத்தி உற்பத்தித் துறை யில் ஏற்பட்ட மந்த நிலை Intel கம் பனியைப் பெரிய அளவில் பாதித் தது. போட்டிக் கம்பனிகள் மலிவான DRAM சுற்றுக்களை உற்பத்திசெய்து சந்தைப்படுத்தியதால் Intel இன் விற்பனை வருமானம் சடுதியாக வீழ்ச்சியடைந்தது. இதனால் DRAM உற்பத்தியை முற்றாக நிறுத்திக் கொள்வதோடு எட்டுத் தொழிற் சாலைகளை மூடிவிடவும் வேண்டிய நெருக்கடி நிலை இன்றெல் கம் பனிக்கு ஏற்பட்டது.
1982இல் 80286 என்ற புரோ ஸசரை Intel அறிமுகப்படுத்தியது. வெறுமனே 286 எனவும் அழைக் 35 Ŭ Lu LoL @)g5J, IBM PC/AT 6)J G8) 3; கம்பியூட்டர்களிலும் அவற்றின் நகல் வடிவங்களிலும் (clones) பயன்படுத் தப்பட்டது. இதனைத் தொடர்ந்து
35 - اطلاژویی sey
IBM PCக்கள் வர்த்தகத்துறையினரின் முதற் தெரிவாக மாறின. 1988இல் சுமார் 15 மில்லியன் கம்பியூட்டர்கள்
80286 புரோஸசரைக் கொண்டனவாக
இருந்தன.
வேகத்திலும் செயற்றிறனிலும் கூடிய மைக்ரோ புரோ ஸசர்களை உற்பத்தி செய்வதில் Intel தொடர்ந் தும் கவனம் செலுத்தியது. இதன் விளைவாக 1985இல் Intel 80386 (386) என்ற புரோஸசரும் 1989இல் Intel 486 GTGöILgiữ) 1993(g)Gò Pentium என்பதும் உருவாக்கப்பட்டன. 1995இல் அறிமுகப்படுத்தப்பட்ட Pentium Pro 6TGörugI 5.5 liblab65luair திரான்சிஸ்டர்களை உள்ளடக்கி யிருந்தது.
MMX என்னும் பல்லூடக (Multimedia) தொழில்நுட்பத்தைக் (6) 35 IT GðITL Pentium MMX 6 TGör Lugo 7.5 மில்லியன் திரான்சிஸ்டர்களைக்
கொண்ட Pentium 11 என்பதும்
1997இல் அறிமுகப்படுத்தப்பட்டன. அவற்றை அடுத்து செயற்பாட்டு வேகம் கூடிய Pentium II வகைகளை Intel உற்பத்தி செய்யலாயிற்று. அத்தோடு Celeron என்ற பெயரில் விலை குறைந்த Pentium 11 புரோ ஸ்சர் ஒன்றையும் அது அறிமுகப்படுத் தியது.
1000 மெகா ஹேர்ட்ஸ் (MHz) வேகமுள்ள Pentium II புரோ ஸ சரொன்று 2000ம் ஆண்டில் சந்தைக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து 2001இல் 2.5 GHz செயற்பாட்டு வேக முடைய Pentium 4 அறிமுகமாகி யது.
இன்று கம்பியூட்டரொன்று Intel புரோஸ்சரைக் கொண்டுள்ளது (Intel Inside) 67 68Tä (gögóli 966) Ig| அக்கம்பியூட்டருக்கு அந்தஸ்தை வழங்குவதாகக் கருதப்படுகின்றது.
43

Page 24
Intel புரோ ஸசர்கள் இவ்வளவு தூரத்திற்கு அபிவிருத்தி அடைவதற் குக் காரணமாக இருந்தவர் அதன் பிரதான நிர்வாகியாக பணி புரிந்த Andrew Grove 6T65TL 61 GJ. இன்று வருமானத்தின் அடிப்படையில் அமெரிக்காவின் மிகப்பெரிய கம் பணிகளுள் ஒன்றாக Intel Corporation
திகழ்வதற்கு அவரது தொழில்நுட்பத்
திறனும் அயராத முயற்சியுமே காரணமாகும.
2003இல் இன்றெல் தனது Centrino என்ற தொழில்நுட்பத்தை அறிமுகஞ் செய்தது. கம்பியூட்டர் களை கம்பித் தொடர்புகளின்றி ண்டர்நெட்டுடன் இணைப்பதற்கு த்தொழில்நுட்பம் பயன்படுத்தப் பட்டு வருகிறது. து
இரு நண்பர்கள்
பேராசிரியர் ஒருவர் இரவுணவின் பின்னர் தன் நண்பரோடு உரையாடிக் கொண்டிருந்தார். அவர்களது உரையாடல் நள்ளிரவையும் தாண்டி நீண்டு கொண்டிருந்தது. பேராசிரியர் விடாமல் தொடர்ந்து பேசினார். அதிகாலை 2 மணியை நெருங்கியதும் நண்பர் அடிக்கடி கொட்டாவி விட்டுப் பார்த்தார். ஆனால் பேராசிரியர் புரிந்துகொள்வதாக இல்லை. இறுதியில் “உங்கள் பேச்சில் குறுக்கிடுவதற்கு மன்னியுங்கள். காலையில் 9 மணிக்கு எனக்கு முக்கியமான வேலையொன்றிருக்கிறது’ என்று மெதுவாக எடுத்துச் சொன்னார் நண்பர். -
சுற்றும் முற்றும் பார்த்த பேராசிரியர், "ஐயோ! கடவுளே. நீங்கள் என் வீட்டுக்கு வந்திருக்கிறீர்கள் என்றல்லவா நினைத்துக் கொண்டிருந்தேன்' என்று கூறியவாறு எழுந்து தன் வீட்டை நோக்கி விரைய்லானார்.
1 9 GDIflis, TI GITI (652
அமெரிக்க உல்லாசப் பிரயாணிகள் சிலர் ஸ்பெயினில் உள்ள முஸ்லிம் ஆட்சிக் காலத்துக் கட்டடங்களைப் பார்க்கச் சென்றனர். அங்கிருந்த பெரிய கடிகாரமொன்றைக் காட்டிய வழிகாட்டி அது உள்ளூர் நேரத்தை மட்டுமன்றி உலக நகர்கள் பலவற்றின் நேரங்களையும் காட்டக் கூடியது என விளக்கினான்.
"அப்படியானால் வொஷிங்டன் நகரின் நேரத்தைக் காட்டும் பகுதி எது?” என்று கேட்டாள் அமெரிக்கப் பெண்ணொருத்தி.
"அம்மணி அக்காலத்தில் அமெரிக்கா என்ற நாடே இருக்கவில்லையே!”
என்றான் வழிகாட்டி பணிவாக,
இப்படித்தான் இருப்பேன் ஒருவன் தனது வேலை முடிந்து மாலையில் களைப்புடன் வீடு திரும்பிய போது வீட்டை மூடிவிட்டுத் அவனது மனைவி எங்கோ சென்றிருந்தாள். அவள் திரும்பி வரும்
வரை அவன் வாசற்படியின் மீது அமர்ந்தவாறு காத்திருந்தான். ஆனால் வெகு நேர
மாகியும் மனைவி திரும்பி வரவில்லை.
"அவனது பரிதாப நிலையைக் கண்ட அண்டைவீட்டுக்காரர் உங்கள் மனைவி திரும்பி வரும் வரை எங்கள் வீட்டிற்கு வந்து ஏதாவது சாப்பிட்டுவிட்டுக் களைப்
பாறுங்கள்’என அன்போடு அழைத்தார்.
“வேண்டாம்! அப்படி உண்டுவிட்டுக் களைப்பாறினால் எனது ஆத்திரமும்
கோபமும் தணிந்துவிடும். அவள் வரும் வரை நான் இப்படியே
பதில் வந்தது அந்த மனிதனிடமிருந்து. 44
இருக்கிறேன்'என்று
帖
அரும்பு- 35
 

அமெரிக்கா
பட்ரிக் ஜே. பியுகனன் 2S What does America offer the World?
இக்கட்டுரையை எழுதியபட்ரிக் ஜே.பியுகனன் அவர்கள் அமெரிக்க ஜனாதிபதித்
娜
தேர்தல்கள் இரண்டின் போது குடியரசுக் கட்சி வேட்பாளர் பதவிக்குப் போட்டியிட்டவர் 2000ம் ஆண்டுஜனாதிபதித் தேர்தலில் சீர்திருத்தக் கட்சியின்(Reform Party) வேட்பாள ராகநின்றவர். இவர் மூன்று ஜனாதிபதிகளின் கீழ் வெள்ளைமாளிகையில் பணியாற்றி இருக்கிறார் The American Conservative என்ற செய்திஇதழின் ஆரம்பகாத்தாவும் ஆசிரியரும் இவரே. இக்கட்டுரைஅச்சஞ்சிகையிலிருந்தே பெறப்பட்டது)
“முஸ்லிம் உலகில் பெண் களுக்கு விடுதலை பெற்றுக் கொடுக் கும் முயற்சியை நாம் முன்னெடுத் துச் செல்வது எப்படி?” என்ற கேள் gîl dig5 tî&#ffil * : Gl uff Gŵr (Richard Perle) 6Tairugui An End to Evil ($60 LD5(5 ஒரு முடிவு) என்ற தனது நூலில் “எமது எதிரிகள் தான் அவர்களதும் - அதாவது இஸ்லாமியப் பெண்களி னது - எதிரிகள் என்பதையும் எமது வெற்றிதான் அவர்களது வெற்றியாக வுமிருக்கும் என்பதையும் நாம் இஸ் லாமியப் பெண்களுக்குத் தொடர்ந்து நினைவூட்டிக் கொண்டேயிருக்க வேண்டும்” என விடையளிக்கிறார்.
எனினும், எமது அமெரிக்க நவீன பழைமைவாதிகளது முஸ்லிம் உலகப் பெண்கள் விடுதலை முயற்சி களுக்கு ஈராக்கின் அபூகுரைப் சிறைக் கூடத்தில் லின்டி ங் லண்ட் (Lynndie England) Gua GöIp egyG)LDíli, கப் பெண்களின் நடத்தையைக் காட் டும் புகைப்படங்கள் ஒரு பின்னடை வை ஏற்படுத்தியிருக்கின்றன.
உண்மையில் ஈராக்கிய சிறைக் கைதிகளுக்கு அமெரிக்க இராணுவப் பொலிசார் வழங்கிய சித்திரவதை கள், ஈராக்கிய ஆண்களைப் பாலியல் ரீதியாக மானபங்கப்படுத்திய காட்சி
அரும்பு- 35
கள்; முஸ்லிம் பெண்களுக்கு அங்கு வழங்கப்பட்ட பாலியல் சித்திர வதைகள் போன்றவற்றின் புகைப் படங்கள் பெரிய கேள்வியொன்றை எழுப்பியிருக்கின்றன. உண்மையில் மேற்கத்தியவர்கள் முஸ்லிம் உலகுக் குக் கற்றுக் கொடுக்கப்போகும் விழு மியங்கள்தான் யாவை?
“இந்தப் போர் ஆழமான முறையில் பாலியல் பற்றியதே' என்கிறார் இன்னொரு நவீனப் பழை மைவாதியான சார்ல்ஸ் க்ரவுதமர் (Charles Krauthamner).“ 3:LDëgj6ub, பாலியல் விடுதலை ஆகிய எமது
இரட்டைக் கோட்பாடுகளே தீவிர
வாத இஸ்லாத்திற்கு அச்சுறுத்தலாக அமைந்திருக்கின்றன” என்கிறார் அவர்.
ஆனால் இந்த க்ரவுதமர் கூறு கின்ற இரட்டைக் கோட்பாடுகள் யாருடையவை? எங்களுடையது என அவர் கூறும் பாலியல் விடு தலைக் கோட்பாடு 1960களில் உரு வான ஒரு புரட்சிக்கே உரியது. அத னைத்தான் மதபக்தியுள்ள கிறிஸ்த வர்களும் யூதர்களும் முஸ்லிம்களும் வருடக் கணக்காக எதிர்த்து வந்திருக். கிறார்கள்.
45

Page 25
பாலியல் விடுதலை என்பதால் க்ரவுதமர் எதனைக் கருதுகிறார்? Britney Spears G3 LITT Götapi GTLDg5 g)GMTid பெண்கள் ஆபாசமான முறையில் உடையணிவதற்கும் நடந்து கொள் வதற்கும் நாம் வழங்கியுள்ள உரி மையா? அல்லது கருத்தடைச் சாத னங்களை பாடசாலை மானவர் களும் உபயோகிப்பதற்கு நாம் வழங் கியுள்ள உரிமையையா? அல்லது பெற்றோரின் அனுமதியின்றி மாண வர்கள் கருச்சிதைவு செய்து கொள் வதற்கு நாம் கொடுத்துள்ள உரிமை 600 UJULJIT?
Gloria Steinem, Betty Fredam போன்ற பெண் விடுதலைப் போரா ளிகளும் பெண்களுக்கான தேசிய அமையம் போன்ற இயக்கங்களும் போதிக்கும் சமத்துவக் கோட் பாட்டைப் பழைமை வாதிகளே நிராகரிக்கிறார்கள். இப்படியிருக்க நாம் ஏன் அதனை முஸ்லிம் உலகத் தின் மீது திணிக்க முயற்சிக்க வேண் டும்? நாம் ஏன் ஸ்லாத்துடன் இணைந்து நின்று எமது ஹொலிவுட் டையும் Hillary ஐயும் எதிர்க்கக் கூடாது?
'தார்மீக உண்மைகள் எல்லாக் கலாச்சாரங்களிலும் எல்லாக் காலங் களிலும் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியானவையாகவே இருக்கின் றன’ என ஜனாதிபதி புஷ் ஒரு தடவை கூறியிருந்தார்.
எனினும், சமபால்த் திருமணங் களும் Stem cell ஆராய்ச்சியும் எந்த ளவுக்குத் தார்மீகமானவை என்ற விடயத்தில் ஜனநாயகக் கட்சியின் ஜோன் கெரி கூட ஜோர்ஜ் புஷ்ஷ" டன் இணங்கிப் போக மாட்டார். விவாறான விடயங்களில் பழை மைவாத அமெரிக்கர்களின் சிந்தனை யானது லிபரல் ஜனநாயக வாதி
46
களைவிட பயபக்தியுள்ள முஸ்லிம்
களுடன் தான் பெருமளவில் ஒத்துப்
போகின்றது. -
ஒரு காலத்தில் மகத்துவமிக்க
தெய்வீகக் குடியரசாக இருந்த எமது
நாடு இப்போது பேரரசு அமைக்கும் சீரழிவை
போக்கில் தார்மீகச் அடைந்து கொண்டிருக்கின்றது என எம்மில் சிலர் கருதுகின்றோம். ஆனால் இதையே உலகை ஆளு வதற்கான பெரு வாய்ப்பாக நவீனப் பழைமைவாதிகள் காண்கின்றனர்.
அண்மையில் எமது ஜனாதிபதி பேசும்போது பலத்த கரகோஷத்திற் கிடையே பின்வருமாறு சொன்னார். “விழுமியங்கள் பற்றி நாம் காட்டும் ஈடுபாட்டை நினைத்து நான் அதிகம் பெருமைப்படுகிறேன். எமது முன் னோக்கிய பயணத்தின்போது எமது வெளிநாட்டுக் கொள்கையில் ஒரு முக்கியக் கூறாக இந்த விழுமியங்கள் பற்றிய ஈடுபாடு இருக்கப் போகி றது. இவை வெறுமனே அமெரிக்க விழுமியங்கள் அல்ல. இவை அகி லத்திற்குரிய விழுமியங்கள். அகிலத் திற்குரிய உண்மைகளைப் பேசும் விழுமியங்கள்.”
இவர் கூறும் இந்த அகிலத்துக் குரிய விழுமியங்கள் எவை? MTV கூறும் அமெரிக்க விழுமியங்களை இவர் 'உலக ஜனநாயகப் புரட்சி’ என்ற பெயரில் முஸ்லிம் உலகின்மீது திணிக்க முயற்சித்தால் அவர் நாகரி கங்களுக்கிடையிலான போரொன் றைத் தான் தோற்றுவிப்பார். இப் போரை அமெரிக்கர்களால் வெல்ல முடியாது. ஏனெனில் இந்தப் போரில் ஈடுபட அவர்கள் விரும்ப மாட்டார்கள். இது நவீன பழைமை வாதிகளின் போராக ருக்கலாம். ஆனால் அமெரிக்கர்களான எங்களது போராக இருக்க முடியாது.
 
 
 
 
 

சுதந்திரத்தைப் பற்றி புஷ் பேசும்
போது அது மனித சமுதாயத்திற்கு
இறைவன் தந்த கொடை என்கிறார். ஆனால் இவர்கருதும் சுதந்திரம்தான்
என்ன? எமது அரசியல் திட்டத்தின் முதலாவது திருத்தத்தின் ஊடாக Larry Flynt போன்றோருக்கு ஆபா
சத் திரைப் படங்களை உருவாக்க வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தையா? அல்லது இஸ்லாமியர்களின் சமய நம்பிக்கையை நிந்தனை செய்யும்
601 60)95uîlai), “The Satanic Verses” 6 TGörp | நூலை வெளியிடுவதற்கு ஸல்மான்
ருஷ்திக்கு உள்ள சுதந்திரத்தையா?
சுதந்திரம் பற்றிய இவ்வகையான கருத்தினை இஸ்லாமிய உலகம் நிராகரிக்கின்றதாயின் அவர்களது சிந்தனையை மாற்றுவதை நாம் ஏன் கடமையாகக் கொள்ள வேண்டும். அவர்களது நிலை தவறானது என்று நாம் ஏன் நினைக்க வேண்டும்?
எமது ஜனாதிபதி சுத்ந்திரம் பற் றிப் பேசும்போது எமது பிள்ளைகள் பாடசாலையில் பைபிளை வாசிக் கக் கூடாது என்றும் அவர்களுக்குப் பத்துக் கட்டளைகளைக் கற்பிக்கக் கூடாது என்றும் தடை செய்கின்ற யாப்பின் முதலாம் திருத்தத்தைப் பற்றித்தான் கருதுகின்றாரா?
தார்மீக ரீதியான சிலுவை யுத்த மொன்றை நடத்த ஜனாதிபதி விரும் பினால் எதிரி எமது வாயிலுக்குள் தான் இருக்கிறான் என்பதை அவர் அறிந்துகொள்ள வேண்டும். எமது நாகரிகத்தை எதிர்நோக்கியுள்ள தார்மீக, பண்பாட்டு அச்சுறுத்தல்கள்
அமெரிக்காவுக்கு வெளியேயிருந்து
அரும்பு- 35
வரவில்லை. அவை உள்ளேயிருந்
துதான் வருகின்றன. நாம் எதிரியைச் சந்தித்து விட்டோம்: நாங்கள்தான் அந்த எதிரி. அமெரிக்காவின் ஆத் மாவைக் காப்பாற்றுவதற்கான
போரின் வெற்றி தோல்வி எதுவும் ஈராக்கின் பலூஜாவில் தீர்மானிக்கப் படப் போவதில்லை.
துரதிர்ஷ்டவசமாக 1954இன் கிறிஸ்தவ அமெரிக்காவை விட 2004இன் சமய நம்பிக்கையற்ற அமெரிக்கா வினால் பண்பாட்டுத் துறையில் உலகுக்கு வழங்கக்கூடி யவை மிகச் சொற்பமே. நாம் உல குக்கு ஏற்றுமதி செய்யும் திரைப் படங்கள், புத்தகங்கள், சஞ்சிகைகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், வீடி யோக்கள், இசைகள் என்பனவற்றில் பெரும்பாலானவை அபினி யுத்தத் தின் போது சீன மக்களுக்கு பிரிட்டிஷ் கடற்படையினர் திணித்த போதை வஸ்துக்களைப் போன்றே நச்சுத் தன் மையானவையாக இருக்கின்றன.
தனது சிசுக்களில் மூன்றிலொரு பங்கினைக் கொன்று போடுவது தான் பெண்கள் விடுதலை என ஏற் றுக்கொள்ளும் ஒரு சமூகம், தன்னி னச் சேர்க்கைத் திருமணங்களை சமூக முன்னேற்றம் எனக் கருதும் ஒரு சமூ கம், கனிஷ்ட உயர் பாடசாலைகளில் கற்கும் 13 வயதுச் சிறுமிகளுக்கு கருத் தடைச் சாதனங்களை வழங்கும் ஒரு சமூகம் முதலில் பாவமன்னிப்புக் கேட்கும் இடத்தை - அல்லது அதை விடச் சிறப்பாக பேயோட்டுபவர் ஒருவரைத்தான் நாட வேண்டும். LDIT pTg, Elmer Gantry ệọử G3LIII GöI01 ஆலயப் பிரசங்க மேடைகளில் ஏறிக் கொண்டு மனித சமுதாயத்துக்கு அமெரிக்க விழுமியங்களின் உன்ன தத்தைப் பற்றிப் பிரசங்கம் செய்ய முயற்சிப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை.
அரும்பு பழைய பிரதிகள் அரும்பு 1, 3, 23, 24, 25, 27, 28, 29, 31, 32, 33, 34 என்பவற்றின் பிரதிகள் மாத்திரம் எமது கைவசம் உள்ளன.
47

Page 26
(பொது அறிவுப் போட்டி இல . 34)
வாசகர்களே! பின்வரும் பத்து வினாக்களுக்குமுரிய சரியான விடைகளைத் திருத்தமாக ஒரு தாளில் எழுதிக் கடித உறையினுள் இட்டுத் தபாலில் அனுப்பி வையுங்கள். விடைத்தாளில் உங்கள் பெயர், முக வரி, மாணவராயின் பாடசாலை யின் பெயர் என்பவற்றை விபரமாக எழுதத் தவறாதீர்கள். எமது முகவரி பின்வருமாறு: EDITOR - ARUMBU' ROYAL COMPUTERS, 70, MAIN STREET, DHARGATOWN - i.2090. போட்டி முடிவுத் திகதி 2004.11.20
கீழே தரப்பட்டுள்ள அரும்பு சின்னத்தை வெட்டி, விடைத் தாளில் ஒட்டி அனுப்பத் தவறாதீர் கள். இச்சின்னம் ஒட்டப்படாத விடைகள் - ஏற்றுக்கொள்ளப்பட மாட்டா.
பத்து வினாக்களுக்கும் சரியான விடைகளை எழுதியனுப்பும் வாசகர் களுள் அதிர்ஷ்டசாலியாகத் தேர்ந்தெடுக் கப்படும் ஐவருக்குப் பணப் பரிசுகள் வழங்கப்படும்.
முதற் பரிசு ரூபா 500.00 இரண்டாம் பரிசு ரூபா 300.00 மூன்றாம் பரிசு ரூபா 150.00 4ம் 5ம் பரிசுகள்: ரூபா 100.00
மேலும் 25 அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் அரும்பில் பிரசுரிக்கப்படுவ தோடு அவர்களுக்கு அரும்பின் அடுத்த இதழ் இலவசமாக அனுப்பிவைக்கப்படும்.
àssimisaria
48
வினாக்கள்:
1. மாதுளை எந்தத் தாவரக் குடும்பத்தைச்
சேர்ந்தது?
2. சார்ளி சப்ளின் இறுதியாகத் தயாரித்த திரைப்படத்தின் பெயர் என்ன?
3. பண்டைக் கால உலக அதிசயங்களுள்
காலத்தால் மிக முந்தியது எது?
4. கல்கத்தா மாநகர் எந்த நதியின் கரைகளில் அமைந்திருக்கிறது?
5. கம்போடியா, வியட்நாம், லாவோஸ் ஆகிய நாடுகள் கூட்டாக என்ன பெயரால் அழைக்கப்படுகின்றன?
6. ஈரான்-ஈராக் யுத்தத்தின் போது ஈரானுக்கு ஆதரவளித்த ஈராக்கின் அண்டை அரபுநாடு எது?
7. இலங்கையில் காணப்படும் நீர்நாய் இனத்தின் விலங்கியற் பெயர் யாது?
8. இலங்கையின் முதலாவது தேசிய விமான சேவை என்ன பெயரால் அழைக்கப்பட்டது?
9. வர்ணத் தொலைக்காட்சிப் பெட்டி யொன்றின் இலத்திரன் குழாய் உருவாக் கும் அடிப்படைநிறங்கள் மூன்றும் எவை?
10. உலகின் முதலாவது பேர்ஸனல் கம்பியூட்டரின் (PC) பெயர் என்ன?
அடுத்த இதழ்
அரும்பு இதழ் -36 எதிர்வரும் 2004, 11, 25ம் திகதி வெளிவரும்.
அரும்பு- 35
 

அரும்பு பொது அறிவுப் போட்டி - 33 ரியான விடைகளும் பரிசு பெறும் அதிர்ஷ்டசாலிகளும்
கேட்கப்பட்டிருந்த கேள்விகளுக்கான சரியான விடைகள் பின்வருமாறு:
1. தாய்பே 2. 111ஆம் அத்தியாயம் 3. Pteropus giganteuS 4. 915fluJI" 19ë, BL6ólóóT 9|Jef (Queen of the Adriatic) 5. FFJIT6öT 6. திருவனந்தபுரம் 7.1956ஆம் ஆண்டு 8. பிரான்ஸ் 9. கிராமப் பிறழ்வு 10. frfluJIT
இம்முறை நூற்றுக்கணக்கானோர் சரியான விடைகளை அனுப்பியிருந்தனர். அவர்களுள் அதிர்ஷ்டசாலிகளாகத் தெரிவு செய்யப்பட்ட மூவரினதும் விபரங்கள் பின்வருமாறு:
th Uring (elBLIT 500). M.R.M. Raslan, Dumbuluwawa, Hemmathagama
2h Urflagi (e5UT 250): A. S. Fathima Nusra, Bamunumulla, Atulugama 3th Lurflag, (e 5LIIT 100): M.R.M. Rafsan Jany, WP/GMAI Badriya M.V., Kahatowita இலவசமாக அரும்பு-35ஜப் பெறுகின்ற 25 பேரின் பெயர் விபரங்கள் Mafraha Mansoor, Indiriligoda, Maggona M.U.F. Haseena, Bamunum ulla, Atulugama, Bandaragama Hafeela Anas, Spill Road, Puttalam Rush dha Muvaffik, Sri Guna lan kara MW. Dehiwala F.M.F. Safna Farwin, A. G. Office Road, Galewela M. R. M. Raashid, D. P. Quartes Al-Humaisara N.S., Chinafort, Beruwala Fasna Subair, Marawa, Atulugama, Bandaragama M.J.F.Jumana, Al-Akeel M.M.V., Mattamagoda, Kotiyakumbura Naseeha Mohamed Ali, Kadayan Kulam Rd., Canal Lane, Puttalam 10. Rimsiya Aroos, Meegahamulla, Atulugama, Bandaragama 11. F. Fasla Lafeer, Hirimbura Cross Rd., Galle 12. M. N. Muhammed Rashard, Mosque Road, Hapugastalawa 13. M. A.M. Ziyan, Mafoor Crescent, Kalutara South 14. H. M. M. Aathif, K. K. Street, Puttalam 15. A.R.M. Rizvi, Doragamuwa Road, Udathalawinna Madige 16. M.L.F. Sumaiya, New Street, Welligama 17. H. F. M. Faisal, Abdeen Mw., Daluwakotuwa, Kochchikade 18. J.Z.M. Nasik, Mannar Road, Puttalam 19. M. F. Rasheena, Madawa kkulama, Andigama 20. M.S. Sifani Zunfath, Masjid Road, Puttalam 21. M. H. F. Rismina, Bulanawewa, Dewa huwa 22. M.I.M. Ismath, 3rd Cross Street, Puttalam 23. F. S. Salman Faris, Miella, Hakmana 24. M. N. Abdul Rahman, J.P. Road, Puttalam 25. A. H. F. Shafna, Akurana Muslim Balika Maha Vidyalaya, Akurana
அனைவருக்கும் எமது பாராட்டுக்கள்!

Page 27
அரும்பு - 35
(6) LIjib (8 pT (bii) Ii
இன்றைய சமூகத்தில் பிள நாடுகிறார்கள். இதனால் பெற்றோ முன்னேற்றத்துக்குத் தடையாக இரு காலத்திற்கேற்ற அறிவில்லாத பத் பெற்றோரைப் புறக்கணிக்கவும் ச துணிகிறார்கள். தமது நண்பர்கை ஆலோசகர்களாகவும் வாழ்க்கை அவர்கள் முனைகின்றார்கள்.
பெற்றோரின் நியாயமான கண் முன்னேற்றத்தைத் தடுப்பதற்குப் பு உறுதியோடு முன்னேற்ற உதவுகி பிள்ளைகள் உணரத் தவறிவிடு ஒருவகையில் முன்னேறிச் சாதனை இளம் பிராயத்தில் பெற்றோரினா களாகவே இருக்கின்றனர். “பெற்ே திருந்தால் நாம் எவ்வளவோ உயர்ந் கொள்பவர்களும் நிறைய இருக்கின் இங்கு கட்டுப்பாடு என்பது அ யாள்கையைக் குறிக்கவில்லை. மா காரணமாக வழிதவறிச் செல்ல வ வதையே அது குறிக்கிறது. ஒரு தன்னலம் குறைந்த பாசத்தையும் க/ அதன் பெற்றோர்களே. வேறெவரது தூய்மையானவையாக அமைந்துவி
தம் பெற்றோரைவிடப் பி அறிவைப் பெற்றுக்கொண்டாலும், கோடு சிந்திப்பதிலும் பெற்றோர் ே எனவே சிலவேளைகளில் பெற்றோ தவறானது போல் தோன்றினாலும் யைப் பிள்ளைகள் உணர்ந்துகொ மேலாகத் தம் பெற்றோருக்கு உரி மதிப்பவர்களுக்கு இறைவனின் பே ஆலோசனைகளைப் பின்பற்றியத6 பாதிக்கப்பட மாட்டார்கள் என நா ܢܠ
PRINTED BY A.J. PRINTS -

ARUMBU - 35
༄༽
ଗାଁTର0) ଗTü(ଗibili, II
ாளைகள் அதிகளவு சுதந்திரத்தை ரின் கண்டிப்பும் கட்டுப்பாடுகளும் தம் நப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். தாம் பசலிகள் என்று அவர்கள் தம் லவேளைகளில் இழித்துரைக்கவும் )ளயும் சமவயதினரையுமே சிறந்த க்கு வழிகாட்டிகளாகவும் கொள்ள
ாடிப்பும் கட்டுப்பாடுகளும் ஒருவனின்
திலாக அவனை நிலைகுலையாமல் ன்றன என்பதைப் பெரும்பாலான கிறார்கள். வாழ்க்கையில் ஏதோ புரிந்தவர்களுள் பெரும்பாலானோர் ல் கண்டிப்புடன் வளர்க்கப்பட்டவர் றார் எம்மைக் கட்டுப்படுத்தி வளர்த் திருப்போம்’ என்று அங்கலாய்த்துக் ாறனர். |ளவுக்கு மீறிய, நியாயமற்ற அடக்கி றாக இளவயதின் அனுபவமின்மை ாய்ப்பளிக்காது கவனித்துக் கொள் பிள்ளையின் மீது உண்மையான, சிசனையையும் காட்டக்கூடியவர்கள் பாசமும் கரிசனையும் அந்தளவுக்குத் ட முடியாது. ர்ளைகள் எவ்வளவுதான் கூடிய வாழ்க்கை அனுபவத்திலும் தூரநோக் மம்பட்டவர்களாகவே இருப்பார்கள். ரின் ஆலோசனையோ, கண்டிப்போ காலப்போக்கில் அவற்றின் பெறுமதி ள்ள நேரிடலாம். எல்லாவற்றுக்கும் மரியாதை கொடுத்து அவர்களை ாருள் கிடைப்பதனால் பெற்றோரின் காரணமாக அவர்கள் ஒருபோதும் நம்பலாம்.
الصر 4, STATION ROAD, DEHIWALA