கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நான் 1991.03-05

Page 1
பங்குனி ஊரில்  ைஇஇஇ
மனத் இக்கலினால் பயனடைவு
உங்களை ஆராக்கியப்படுத்து $à: விவேகம், நற்பண்புகளின்
வெற்றி வாழ்வின் ஐந்து இர
சிறுவர்
அனுபவம் ஒரு திருப்புமுனை
6
0
 
 

ց տնuւգ .
உங்கள் மனமே!
ਉ
ਘ
O
22
35.
臺@
46

Page 2
2 காதார முறையில்
ஆல் சுகத்திற்கு அருமருந்தாகவும்,
"உங்கள் விருந்தினரை மகிழ்விக்கவும்
அருந்த உகந்தது !
is - ܢ ܢܝ ܝ ܒ ܝܡ
தோலகட்டி - தயாரிப்புக்கள்
n !,
- - - - .. " ' * F *
* நெல்லி ரசம் * முந்திரிகைரசம் * மாதுளை ரசம்
* நன்னரிரசம் * ஊறுகாய் A குருன்தலம் ”
செபமாலை, புனிதர்களின் வரவணிக்கங்கள், "நான் வெளியீடுகள். ༦ ལ་ ༼ཁ་ཆེ་༽ བཀྲ་
இன்னும் பல பொருட்களே நீங்கள் யாழ் நகரிலேயே தட்ையின்றி பெறுவதற்கு ஓர் நிலையம் கீழ்க்காணும் முகவரியில்
ஆரம்பித்துள்ளது. J་
உண்மையான அசல் தோலகட்டி தயாரிப்புக்களைப் பெற இன்றே நாடுங்கள்
செபமாலைதாசர் ஆச்சிரமம், அருள் ஆச்சிரமம்,
தோலகட்டி 5, ரெம்பிள் ருேட்,
. :z uu FEyj» tʼa i. 3mi RSöf if».
 
 
 
 
 
 
 
 
 
 
 

இதயம் ஒன்றிய ஈடுபாடு
மனித மனம் நலம் பெற, தாக்கங்களிலிருந்தும் ஏக் கங்களிலிருந்தும் விடுபட, உளவியல் ரீதியாக ஈடுசெய்ய விழைவது இன்றியமையாதது. போர்ச் சூழலில் வாழுகின்ற நமது மக்கள் அனுபவிக்கின்ற துன்ப துயரங்கள் எல்லோர் மனங்களிலும் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகின் றன. ஏற்கனவே மனித மனங்களை மதியாமல், சட்டங்களை யும் சம்பிரதாயங்களையும் முதன்மைப்படுத்தி வாழு ம் பழமை விரும்பிகள்" மேலும் தங்களது மனங்களைக் கடி னப்படுத்திக் கொள்ளுகின்றார்கள். இதன் வி ைள வாக வேதனைகளை அனுபவிக்கும் தாழ் நிலை வாழ்மனங்கள் மேலும் மேலும் துன்புறுத்தப்படுகின்றன. கருணை, காருண் யம், அன்பு, அறன் அருகிப்போக, க டு மை, கருமித்தனம், வரட்டுக் கெளரவம், அகந்தை, ஆணவம் அதிகரிக்கின்றன. சமுதாயத்தைச் சமமாக்கும் முயற்சி தளர்வுறுகின்றது.
ஒரு சமுதாயத்தின் நன்மைகளில் மட்டுமல்ல, தீமை களிலும் எமக்குப் பங்குண்டு. ஏழைகளின் கண்ணிரினை, ஏழைகளின் ஏக்கத்தினை, ஏழைகள் அனுபவிக்கும் வேதனை (பினை ஏழையர் கூட்டத்திற் பிறந்த ஒருவனே பெரும் பாலும் உணருவான். அவர்களது விடுதலைக்கான வழியை 'ம அவனே காட்டுவான். ஏழையர்க்கான பொருள் சார் முன்னேற்றத்தினையும் அவனே தொடக்கிவைப்பான்.
உள்ளத்தை ஊடுருவித் தைக்கும் படியான இதயம் ஒன் ரிய ஈடுபாடு, அவன் காலெடுத்து வைப்பதிலே பளிச்சிடும். இந்த ஈடுபாடு மனித கு லத் தி ன் விமோசனத்துக்கு வழி (*60, točju87cev அமைகின்றது.
A இந்நிலை, வார்த்தையும் வாழ்க்கையும் ஒரு மித் த, போதனையும் சாதனையும் ஒருமித்த, அன்பும் அறனும் ஒரு மித்த மநிைலை உருவாக்கப்படுவதன் மூலமே சாத்தியமாகும்.

Page 3
鬱 I சஞ்சிகை
வின்சன்ற் பற்றிக் 0 M , B, A இணை ஆசிரியர்: -
எஸ். டேமியன் 0. M. M. A ஆணே ஆசிரியர்கள் Cổg Tagai Lu Guðm
எஸ். அன்புராஜ்
தொடர்பு
எம். எம். நிக்ஸன் எஸ் அல்றின் பி, இயூஜின் &! ଟିଥି{0}' titly:
எஸ். அங்கோனிமுத்து
.ே ரட்னmாஜ் இ அலேதாஸ் அச்சமைப்பு:
மணி ஓசை
9. ரவிராஜபுத்திரன்
இருந்து
மலர் 17 இதழ் 2 பங்குனி - வைகாசி, 1991
வாசகர்களுக்கு
நான் வெளிவருவதில் ஏற். படும் த ந ம தம் நாட்டுச்சூழலே இந் நிலையிலும் சந்தா தாரருக்கு g 50 = ទំៗ ញេញ இதழ் க ள் தொடர்ந்து அனுப்பிவைப்போம்.
அடுத்த இதழுக்கான ஆக்கங் களையும் தங்கள் சந்தாக்களையும் விலாசங்களையும் உறுதிப்படுத்திக் கொள்ள 25-5-91 முன் தொடர்பு தொள்ளுங்கள்
என்றும் நான் 黏丽辱属丽蕊氯醇醚 நான் வளர நாம் துணை
அடுத்த இதழுக்கு
" செலவுடன்) தனிப்பிரதி ரூ 10-00 Ο 'நான் ஆசிரியர் விரைவில் எழுதி 9/go) UV リsip。 %' சுவாமியார் வீதி, கொழும்புத்துறை,
Tbů. T6B5 b.
முழுமையான ஆக்கங்களை
ஆலோசகர்: உளவியல் தொடர்பான பிரச்
லோ, வ. இராயப்பு ക്ലിത്ത്66', O. M. , , S, T. D.
象 6', ஆண்டுச் சந்தா ரூ 50 = 00 கருதது0ே0
N -
 
 

D sor5 G.55, si anfarsi பயனடைவது எப்படி?
ബ
ஒவ்வொரு மனிதருக்கும் ஏதோ ஒரு வகையான மனச்சிக்கல் இருக்கவே இருக்கிறது. அது, தாழ்வுச் சிக்கலாகவோ உயர்வுச் சிக் கலாகவோ, அன்றி ஏதோ ஒரு வகைக் கோளாறிலிருந்து தோன்றிய தாக்வோ இருக்கலாம். ஆனால், இந்தச் சிக்கல்களை மனித நலப் பகைப்புலனில் நெறிப்படுத்தி, வாழ்வுக்குப் பயனுள்ள தா க்க லா ம், ஆக்க வேண்டும்!
இந்த அடிப்படையில் வண. எவ், டானியல் அடிகளார் மனச் சிக்கல் பற்றிய கட்டுரைத் தொடரை எழுத முன் வந்து, இவ்விதழில், அதற்கான அறிமுகத்தை வழங்கியுள்ளார்.
அடுத்த இதழில் ஈடிபஸ் கொம்ப்ளெக்ஸ் எனப்படும் த ய் மீ து ஏற்படும் இனக் கவர்ச்சிச் சிக்கல் பற்றிய கட்டுரை இடம் பெறும்
- ஆசிரியர்
மனச் சிக்கல் என்ற வார்த்தை மக்கள் பாவனையில் மிகப் பிரசிததி பெற்ற தொன்றாக விளங்கிய போதிலும், அதன் ஆழமான கருத்துச் செறிவுகள் அனைத்தையுமே அறியாதவர்களாய் இருக்கின்றோம்.
வீட்டில் ஒருவருக்கு ஏற்படும் மனத்தாக்கம், ஒரு தொழி லாளியின் அல்லது ஒரு உத்தியோகஸ்தரின் சமூக வழமைக்கு ஒவ்வாத நடத்தை இவைகளைப் பார்க்கும் போது, இவர்கள் "ஒரு குறிப்பிட்ட மனச் சிக்கலின் தாக்கத்துக் குட்பட்டவர்கள் .என்ற முடிவுக்கு வருகின்றோம் 7 ܡܕܡ.
மனச் சிக் கல் கள் எல்லோரிடமும் காணப்படுகின்றன. உதாரணமாக, இருவர் ஒரு உல்லாசப் பயணத்தில் ஈடுபடு கின்ற வேளையில் அல்லது பொழுது போக்காக வாகனச் சவாரி செய்கினற வேளையில், அவர் கள் காணும் காட்சி களைப் பற்றிய விமர்சனம் அவர்கள் சிந்தனையின் விளை வாகவோ, அல்லது சில வேளைகளில் சிந்திக்காமலேயோ
3 நான்

Page 4
ஆவரவர் மனப்பான்மைக்கு ஏற்ற வாறு வித்தியாசப்பட்டதாக இருக் இக் காண்டோம். ஒருவர் இயற் கையை இரசித்தவாறே இயற்கை வளத்திலும், ஏன் ஒரு சிறிய மலரின் அமைப்பிலும் தம்மை பறி கொடுத்தவராயிருப்பின், நாம் அவரை இயற்கைப் பித்தன் ஆல் லது அழகு இரசிகன் (Photographic Complex) GTGörinth, in றவர், வீதியில் தன்னைக் கடந்து செல்லும் பலரக வாகனங்களையும் அவற்றின் அமைப்பு, நிறம், அல் லது எந் நாட்டின் உற்பத்தி என் பதில் ஆழ்ந்து போயிருப்பாரானால் நாம் அவரை வாகனப் பித்தன் (Motoring Complex) GT Gör g h அழைப்போம்.
இப்படி எத்தனையே விதமான சிக்கல்கள் இருக்கின்ற போதிலும், அவற்றில் அதிமுக்கியம் வாய்ந்த தாய்க் கருதப்படும் ஒரு சிலவற் றைப் பற்றி ய கருத்துக்களைத் தொடர்ந்து வரும் கட்டுரைகளில் ஆராய்வோம்,
இக்கருத்துக்களைப் பின்வரும் கோணங்களில் இருந்து ஆ ரா ய உத்தேசித்துள்ளோம்:
. எப்படி, ஏன் இச் சிக்கல்கள் தோன்றுகின்றன? இவைகள் எ வ் லா று உருவாகின்றன? இவைகள் மனித நடத்தையில் ஒவ்வாறான மு எண் பாடு களைத் தோற்றுவிக்கின்றன?
இவ்வுணர்ச்சிகளால் நாம் ஆட் கொள்ளப்படாது, நாமே அவற்
: :*)
{ୋortåå 4
றைக் கட்டுப்படுத்தி, தெறிப்
Ա655 (tքtդ նյւթն?
வாசகர்கள் தங்கள் சுய நிலை யைக் கண்டு கொள்வதற்கும் இவை எப்படித் த ங் இ னி ல் செயல் ப டு கிற தென் ப தை அறிந்து கொள்வதற்கும் இது ஒரு அரிய சந் த ரீ ப் ப மா ய் அமைகின்றது.
மனச்சிக்கல்களின் தன்மை:
குமாரி, தனக்குப் பே ரிை யி ல்
அடைத்து வ ரு ம் கட்டிப்பாலில் ஏதோ ஒரு அமோக பிரியம் இருப்
பதைத் தன் குடும்பத்தவர்கள் வே றோர் கண்ணோட்டத்தில் நோக்குகிறார் ஆளென்றும், தன்
னைப்பற்றி ஒர் தப்பபிப்பிராயம் கொண்டுள்ளார்களென்றும், தனது குடும்ப வைத்தியரிடம் எடுத்துக் கூறினாள். ' அதில் ஒன்றும் தப் பில்லையே! எனக்குக் கூட இக் கட்டிப் பாலில் ஒரு தனி இன்பம் உ ண் டே' என்கின்றார் அவ்
வைத்தியர், குமாரி, மகிழ் ச் சி
பொங்கியவளாய், " அ ப் படி யா னால் நீங்கள் கட்டாயமாக ஒரு நாள் எங்கள் வீட்டுக்கு வர வேண்
டும். எப்போதும் ஒரு பெ ட் டி
நிறையக் கட்டிப்பால் என் கையி ருப்பில் இருக்கும்' என்று கூரி
ஆகவே, விதிவிலக்கில்லாது எல்
லோரிடமும் சிக்கல்கள் காணப்படு கின்றன. நாம் விரும்பினாலும்
சரி, விரும்பா விட்டாலும் சரி,
அவை ந ம து வாழ்க்கையுடன்
டி டி டி'

இரண்டறக் கலந்து, சில வேளை களில் அரை குறையான அறிகுறி "இளாகவோ, வாய் தடுமாறியோ, வேறு சில சந்தர்ப்பங்களில் முழுத் தாக்கமாக வோ வெளிபடும். அவை, நமக்குப் புலப்படும் சிற் தனையின் வெளிப்பாடாக இல்லாத போதிலும், நம் ஆளுமைக்குத் தென்பூட்டுகின்றன. மெருகூட்டு கின்றன. சிக்கல்களும் அவற்றின் அறிகுறிகளும் உண்மையிலேயே உளப் பிறழ்வின் அறிகுறி அல்ல. ஆனால், அவை மனித இயல்புக்கு உரித்தானவை எ ன் பதை நாம் மனதில் இருத்த வேண்டும். அவை சரியான முறையில் நெறிப்படுத் தப் பட் டு க் கையாளப்பட்டால் வெற்றிகரமான, சந்தோஷ்மிக்க ஒரு வாழ்க்கைக்கு அடிகோலும் என்பதில் ஐயப்பாடில்லை.
எங்கள் அடிப்படைத் தேவை களுக்கும், நாங்கள் வாழும் சூழ் நிலைக்குமிடையில் 6յ մ) Ա 6) լb முரண்பாட்டின் விளை வாக த் தோன்றுவதுதான் சிக்கல், எங்கள் தேவைக ள் பூர்த்தியாக்கப்பட வேண்டி அபயக்குரல் எழுப் பும்
வேளையில், நமது சூழல் அவற்
1றை நேரடியாகத் தடை செய்யு மானால், அவை வேறு குறுக்கு வழிகளில் தங்கள் நிறைவைப் பெற்றுக் கொள்ள முயலகின்றன. அவைதான் சிக்கல்கள்
ஆகவே நமது பல்வேறு கருத் துக்கள் ஞாபகங்கள், ஆசைகள் ஒன்றோடொன்று வேறு பட்ட அளவுகளில் பின்னிப் பிணைக்கப்
பெற்றுத்தான் சிக்கல் கருப்பெறு
கின்றது. அது நனவிலி உள்ளத் தில் ஆரம்பமாகி, அங் கே யே தரித்து நின்று, மனப்பாங்குகள், வேறுபட்ட மனக் கிளர்ச்சிகள், சில செய்காரியங்கள் மூலமே வெளிக் ஒருவரிடம் தனித்து ஒரேயொரு சிக்கல் மட்
ந்ேதான் இருக்குமென்பதல்ல. அது
வேறு பல சிக்கல்களுடன் வலைப் பின்னலைப் போன்று பிணைக்கப் பெற்றிருக்கும் அதன் அறிகுறிகள் தன்னும் மற்றைய சிக்கல்களின் அறிகுறிகளுடன் நெருக்கமுள்ள தாகவே இருக்கும்.
ஒவ்வொரு நபரிலும் இருக்கும் ஒவ்வொரு சிக்கலும், முழு மூச் சாக நின்று செயற்படவும், அவ ரின் ஆளுமை மேல் ஆதி க்கம் செ லுத் த வு ம் எத்தனிக்கிறது. ஆனாலும், எல்லாச் சிக்கல்களும் முக்கிய இடத்தைப் பெறமுடியாத
காரணத்தால், ஏதோ ஒன்று மற்
றையவைகளிலும் பார்க்க அதிக வலிமையுடன் மேற்கிள்ம்பும். ஒரு வரிடம் செயலாற்றும் சிக்கல்களில்
அவருடைய நடத்தையில் எது ஆதி க்க ம் செலுத்துமென்பது,
அ வ ரு டை ப மனச்சார்புகள், வாழ்க்கையில் ஏற்பட்ட சம்பவங் கள், நணவு உள்ளத்தில் ஆழமாய்ப்
பதிந்து வாழ்க்கையையே குறிப்
பிட்ட ஒரு அமைப்புக்குள் உருவாகி கிய அநுபவங்களிலேயே தங்கியிருக்
கும். ஒருவரிடம் முக்கியவிடத்தை
வகிக்கும் சிக்கலானது, அவருடைய சக்திகளின் சம நில்ையில் அற்ப ஆட்டம் காணும் ஒரு நிலையை எற்படுத்துகிறது. அத்துடன், இது அவருக்கு ஒரளவு வேதனையை

Page 5
ஆம், முரண்பாட்டு நிலையையும் உண்டு பண்ணுகிறது. மாறாக, இக்இலிர சக்தியை எதிர்க்காது ஆக்க பூர்வமான வழியில் அதனை நெறிப்பதேதினால், அது ஒரு பொழுதும் ஒவ்வாத அல்லது பிர யோசனமற்றதொரு மு ர ண் பாடாகத் தென்படமாட்டாது.
ஆகவே, முக்கியலிடத்தை வகிக் கும் இக்குறிப்பிட்ட சிக்கலானது நேரிய வழியில் ந  ைட முறைப் படுத்தப்படுவதனால் பயனுள்ள தொன்றாகிறது. ஆரோக்கிய மான ஒருவன் தன்னிடம் ஆதிக் இம் செலுத்தும் சிக்கல் ஒன்று இல்லையென்பானாகில், அவ ன் ஒரு இடைநிலை (Mediocre) மணி தன் ஆகி விடுகிறான். ஆனால், அதேவேனை அனைத்து மேதை இ வி ன தும், நிபுணர்களினதும் வாழ்க்கை வரலாற்றை உ ற் று நோக்குங் கால், அங்கே சிக்கல்கள் இருந்தமையையும், இருக்கின்றமை யையும் அவதானிக்க முடிகின்றது:
அநேக தாக, இச் சிக்கல்கள் கட்டுப்
பாட்டுக்குட்பட்டதாய், அதிக ஆற்றலுடன் இெயல்படுவதைக் இாண்போம். இதுவே ஒருவனை
உயரிய தனித்துவத்திற்கும், தனக் குரிய சிறந்த பாணியில் செயற் படவைப்பதற்கும் (Original) புதி தாக ஒன்றைக் தோற்றுவிப்பதற் கும் (Creative) காரணியாகின்றது.
ஒருவன் இச்சிக்கல்களைக் கட்டுப்
படுத்தாமல், தா ன் தோன்றித் தனமாகச் செயற்பட்டு தன்னை
# !! !!! 6
གཤམ་
ஆட்கொள்ள வி டு வா னா இ 鼬。 அவை அவனுள் புகுந்த கிருமிகள் போலவும், புற்று நோய் போலவும் செயற்பட்டு, அவனது உள வள வாழ்க்கையை மு ற் று முழு தாய் சிதைத்துவிடும் அல்லது குறைத் து விடும் சமூகம் அவனைக் கேலிக் கும் சிரிப்புக்கமுரிய ஒரு முட்டிா ஒாக எடை போட அவை வைத்து
விடும்.
சுருங்கக் கூறின், ஒவ்வொருவரி லு ம் சிக்கல்கள் இருக்கின்றன. gಳಿಕಿಡಿ இல்லாதிருப்பின் ஆ வ ன் மனிதன் ஆ ல் ல ன். அனைத்துச் சிக்கல்களும் தீயவை என்று ம் அல்ல, அ  ைெ அனைத்தும் (ரிற் நாக நல்லவை என்றும் அல்ல. சில அகற்றப்பட வேண்டியவை, பேணி வளர்க்கப்பட வேண்டி
[].jණීණි.f 3
அன்றா ட வாழ்க்கையில் ஏற் படும் சுவராஸ்யமான உண்மைச் சம்பவங்கள், சிரிப்புத் துணுக்குகள் மற்றும் கட்டுக் கதைகள் தனுடைய மனச் சிக் கல்க ளின் விளைவுகளைத்தான் எ டு த் து கீ இரட்டுகின்றன. இரு ச ம் பவ ே இனைப் பார்ப்போம்.
- தன்னுடைய கடைக்குப் பின் புறமாய் இருக்கும் படுக்கை அ றை யில் மரணத்தோடு போராடிக் கொண்டிருக்கும் ஒரு வியாபாரி அழுகையும் கண்ணிருமாய் அவ  ைன ச் குழ நிற்கு ம் அ வ ண் து குடும்பம்:

வியாபாரி அம்மா இங்கே நிற்
இறாவா???
| Bគឺ ៖ "ஆம், அப்பா'
ឆ្នាំpmer?**
"ஆம், அப்பா'
நிற்கிறாளா?
"ஆம், அப்பா'
வியாபாரி; மகன் ரவி இங்கே
நிற்கிறானா?
LLOSAS jy : "ஆம், அப்பா'
* அப்ப மு ன் ன ல் இடையைக் கவனிக்க அங்கே ஒரு வ ரு மே இல்லையா?" என்று இத்தினான்.
கவலை நிரம்பிய முகத்துடன், காப்புறுதி வாடிக்கையாளன் ஒரு வ ன் தன்து காப்புறுதி முகவரிடம் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக நஷ்ட ஈடு கோரி விண் ன ப் பி க் கின்றான்.
pសff
அதிஇ சேதமா?'
தீ விபத்து ஏற்பட்ட திகதி
வாடிக்கையாணன் * அ, தி இ ம் இ ல் லை ஒரு இதில் மட்டுந்தான்."
முகவர்;
*ஆதவின் பெறுமதி எவ்வTவிருகி கும்?"
வாடிக்கையாளன்: "கிட்டத் தட்ட ரூபா 300/-க்குள் இருக்கும்'
முகவர்:
9 a. 奴
வாடிக்கையாளன்: (ஒறிது தயங்கியபின் கூறினான்) 1830 வருடங்களுக்கு முன்பு'
முகவரி: (வியப்புடன்) 30 வருடங்களுக்கு முன்பு? என் இப்ப?"
வாடிக்கையாளன்:
இதஷ தீப்பிடித்த நாளிலிருந்து இ ற் றை வரை அதைப் பழுதி பார்க்கும்படி ଜୀର୍ତ୍ତୀ ।ugଶଜ୍ଞ ଭଣ୍ଡା ଗ୍ରନ୍ଥି நச்சரிக் துக் கொண்டே இருக்கிறாள். இதற்குமேலும் அவளது நச்சரிப்பை இகிக்க என்னால் முடியாது." இ
(தொடரும்
உடலழகு சிறக்க உள்ளத்தூய்மையே அவசியம்

Page 6
இதய அஞ்சலி
"நான்' சஞ்சிகையின் ஆலோசகராக இருந்து, உள்ளத்தைத்தொடும் உள வியல் கட்டுரைகளினால் இறுதிவரை பல வாசக இதயங்களைக் கவர்ந்த இறையியல் கலாநிதி லோ வ இராயப்பு, மா. ம. தி. அடிகள் 6 - 5 = 91 ல் இறைபதம் அடைந்து விட்டார். இத்துயரச் செய்தியினை வாசகர் நெஞ்சங்களுக்கு தெரிவிப்பதோடு, அவரது ஆன்ம சாந்திக்காக இறைவனை இறைஞ்சுகிறோம்.
പ്പെട്രേ
சிந்திப்போம் செயலாற்றுவோம்
'அடக்கமுடையார் அறிவிலார் என்றெண்ணி
கடக்கக் கருதவும் வேண்டா - மடத்தலையில் ஒடுமீ னோட உறுமின் வருமளவும் வாடியிருக்குமாம் கொக்கு" மேற்கண்ட செய்யுளில் உள்ளவாறு பிறர் மட்டில் நமது கணிப்புத் தவறாய் இருக்கலாம். அல்லது பிறர் நம்மைப் பற்றித் தவறான மதிப்
-
நமது மதிப்பீடுகள் தவறான்ால் நாம் பாதிப்பு அடைய நேரிடும்.
இந்த நிலை ஏற்படாதவாறு கவனிப்பது அவசியம் வினாக்களுக்குத் தகுந்த பதில் காண்பது பயனுள்ளதாகும்.
தம்மைப்பற்றி நாம் தகுந்த மதிப்பீடு செய்வதுண்டா? ,ே பிறரைப் பற்றிய நமது மதிப்பீடுகள் சரியா? 3 பிறர் நம்மைத் தவறாக மதிப்பிடுவதற்குக் காரணங்கள் என்ன? 4 மதிப்புக் கொடுக்க வேண்டியவர்களுக்கு நாம் தகுந்த மதிப்புக்
கொடுக்கின்றோமா? 5. பிறரின் நன்மதிப்பை நாம் கெடுக்கின்றோமா? 6 பிறர் நம்மை மதிக்கக் கூடிய விதத்தில் நாம் நடக்கின்றோமா?
பிறரை நாம் தகுந்த விதத்தில் மதித்து நடந்தால் பிறரும் நம்மை மதித்து நடப்பர்! -
S SS SS ttmt Tut t ttt t tt tttt S ttt S S S S 00S
|#f76%) හි

ஒரு குழந்தையின் உருக்கமான வேண்டுகோள்!
எ9து கைகளோ சிறிய  ைவ பாலைத் தட்டி ஊற்றும் எண்ணம் எனக்கில்லை. எனது க ச ல் களும் சிறியவை. தயவு செய்து மெது வ ச த நடவுங்கள். அப்போதுதான் நானும் உங்களோடு கூட வரமுடியும், வடிவான, அலங் காரமான பொருட்களை நான் விரும்பித் தொடும் போது எனது கைகளைத் தட்டாதீர்கள். எதனையும் விளங் கி க் கொள்ளும் தன்மை எனக்கு இல்லை. நான் உங்களுடன் பேசும்போது தயவு செய்து என்  ைன வேதானியுங்கள். உண்மையிலேயே நீங்கள் என் மீது அக்கறை செலுத்துகிறீர் கள் என்பதை நான் உணரச்
எனது உணர்வுகள் மிருதுவானவை. நாள் (մ (էք 6մ ցil th என்னை நச்சரிக்காதீர்கள். தெரியாத் தனம் என்ற உணர்வு இல்லாத தவறுகள் செய்தால் அதைப் பெரிது படுத்தாதீர்கள். நான் வரையும் படம் பூரணமாக இருக்கும் என எதிர் பாராதீர்கள். நான் போடும் படுக்கை ஒழுங்காக இருக் கும் எனக் கருதாதீர்கள்! நான் ஒன்றைச் செய்ய முயலு வதற்காகவே என்னில் அன்பு கொள்ளுங்கள்.
ஞாபகத்தில் வைத்திருங்கள் நான் ஒரு குழ ந்  ைத சின்னஞ் சிறியவன். சிறிய - முதியவனல்லன். சில நோங் களில் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதை என்னால் விளங்கிக் கொள்ள முடிவதில்லை. உங்களை நான் மிகவும் விரும்புகின்றேன். நான் நானாக இருப்பதற்காகவே என் னில் அன்பு கூருங்கள். நான் செய்பவைகளுக்காக மாத்தி ரம் என்னை நேசியா தீர்கள், எ ன்  ைன முழுமையாகவே நேசிபுங்கள்!
9 BTិ

Page 7
இ மருத்துவ மனைகளிலுள்ள அரைவாசிப் பேர்களும் தங்கள து மனப்போக்கினால் நோயானவர்களே!
மற்றெல்லாக் காரணிகளையும் விட, எந்த ஒன்று எ மது கவலைகளுக்கும் சந் தோசமின்மைக்கும் காரணமாயுள்ளது?
ஒருவர் நீண்ட இா லம் இருப்பது!
ஒரு மருத்துவர் என்ற நிலையில், இது தான் என்விடையாக இருக்க முடியும்.
நீண்ட கால சுகவீனம் இதை நினைக் கும் போது பெரும் பயமாகத்தான் இருக்
ஆரோக்கியப் படுத்துவது
Τς5 1 0
கும். ஏனெனில் மனித உடலைப் பிடிக்கும் ஆயிரம் பிணிகளில் 999 ஐ விட ஒன்று மட்டும் மிகவும் பொதுவான ஒன்றாக உள் ளது. பெருவெட்டான கணிப்பின்படி, மருத் துவர்களை நாடிச் செல்வோரில் 50 வீதத் தினரை இந்த வியாதி பீடிக்கின்றது. நியூ ஒர்லியன்ஸ் ஒச்னர் மருத்துவமனை வெளி யி ட்ட அறிக்கையின்படி, தொடர்ச்சியாக அனுமதிக்கப்பட்ட 500 நோயாளிகளில் 77 விதத்தினரை இந்த நோய் தாக்கியுள்ளது. இந்த நோய்க்கு வயது, தொழில் எ ன் ற பாகுபாடில்லை. எவருக்கும் இந் த நோய் தொற்றும். இந்த நோயைக் கண்டு பிடிப் பதற்கும், சிகிச்சையளிப்பதற்கும் பெ ரும் பனச் செலவும் ஏற்படும்.
மூலம் டாக்டர் ஜோன் தொகுப்பு: பி. ஏ. சி. ஆனந்தராஜா

இதன் பெயரைத் தரத் தயக்க மாயுள்ளது; ஏ னெ னரி ல் உட னேயே உங்கள் மனங்களில் தப் பெண்ணங்கள் தோன்றக்கூடும். முதலாவதாக இது ஒரு வியாதி பல்ல என்று எண்ணத் தோன்றும். உங்களையே ஏமாற்றிக் கொள்ளா தீர்கள்! இதை முன்பு "சைக்கோள நியுறோசிசு" (உ ள நரம்புநோய்) என்றும், இப்போது சைக்கோ சோமற்றிக் நோய், அ தாவ து Psycho D. GIr, Soma » Lã ) Dlalaga(G) டல் நோயென்றும் அழைப்பர். அதாவது நோ யா எளி இது தனக்கு ஒரு நோ ய ல் ல என்று நினைக்கும் வியாதி அல்ல. இது பித்தப்பை திருகு வலி  ைய ப் போ ன் று, நிஜமான- கொடுர மான வலியைக் கொடுக்கக் கூடிய தொன்றாகும்.
சைக்கோ சோ மற்றிக் வியாதி பக்ரீரியா, வைரஸ், அல்லது புதிய இழைய வளர்ச்சியால் உண்டாவ தல்ல. அன்றாட வாழ்க்கை நிலை யில் ஏற்படும் சந்தர்ப்ப சூழ்நிலை களால் ஏற்படுவது. இ ைத ஒரு வார்த்தையால் குறிப்பிட முயற்சித் தாலும் மு ன்று வார்த்தைகளை பாவிக்கலாம் போலுள்ளது. அவை பரந்த கருத்தில் ஒன்றாயிருந்தா லும் தரத்தில் வித்தியாசப்படுகின் ᎯᎠᎶᎼᎢ .
அங்கலாய்ப்புக்கள் (அ) கஷ்டங்கள் (சு) குழப்பங்கள் (கு) ஆகும்.
இவற்றை அ. க. கு என்க் குறிப்
இந்த அ. க. கு, விலான "படை தடிப்பேறி உட்புக முடியாத நிலை ஏற்படுவதனால் அதை ஊடறுத்துமகிழ்ச்சி, இன்பம் என்ற நிலைக்கு வரமுடியாமல் போகவே சைக்கோ சோமற்றிக் வியாதி மீ டி தி து க் கொள்கின்றது.
இந்த அ. க. கு. வினால் அவதிப் படுபவர்களைப் பொதுவாக மூன்று குழுக்களாகப் பிரிக்கலாம்.
முதலாவது, மனத்திருப்தியில் லாத வறுத்துக் கொ ட் டி ன' மன நிலை ப் பேர்வழிகளாகும்.
எனது நண்பர் ஒருவருக்கு அழ கான தோட்டம் ஒன்றிருந்தது. அந்த வழியாகப் போகும் போது, ந எண் பரு டை ய தோட்டத்துப் பயிர்கள் எவ்வளவு செ ஆழி ப் பாக வுள்ளன; நிச்சயம் இது அவருக்கு சந்தோஷத்தைக் கொடுக்க வேண் டும்." என்று எனக்குள் எணணி (8ািগ্লড্‌ষ্টা",
ஒரு நான் அவரைப் பீ சீ த் து 'உம்முடைய தோட்டப் பயிர்கள் நல்லா க விளைஞ்சிருக்கு," என் றேன்.
அதற்கு அவர், 'ஓம், ஓம்! நல்லா விளைஞ்சென்ன? மழை வந்து அழிச்சுப் போடுமே" என் றார், *
ஆனால் அவருக்கு அந்த முறை நல்ல அறுவடை, அவற்றை நல்ல விலைக்கும் விற்றார்.
11 aggg

Page 8
பின்பு அ வரைச் ச ந் தி த் துக் சேட்டேன்: 'எட்டடி? இந்த முறை நல்ல அறுவடை தானே?' என்று. 'ஒ பரவாயில்லை! ஆனால் என்ன மிஞ்சப் போகுது? கையும் சனக் கும் சரிதான். என்று பதிலளித் தார் அவர்,
இத்தகைய நபர்சள் இறுதியில்
சைக்கோ சோ மற்றிக் வருத்தத் திற்கு உள்ளாவார்கள், அசிலும் மிகவும் சரிமையாசப் பாதிக்கட்டடு வார்கள் பெரும்பாலும் வாழ்க்கை ( ( ang h u(na Goa), i'ai (Invalids) விழுந்து விடுவார்கள். இவர்களுக் ஒன்றுமே செய்ய முடியாது.
இரண்டாவது வரையினர் எம் யில் பலர் இதைச் சேர்ந்தவர்கள், நாள் முழுவதும் எகைப்பற்றியா Guj Faj (7 di, ajat 651 JULI".G), gjitë லாய்த்துப் ப தற் ற ப் பட் டு க் கொண்டேஇருப்பார்கள், விட்டிலோ வேலைத்தலத்திலோ இந்த நிலை தான்! அப்படியொன்றுமில்லா விட் டால் பக்கத்து வீட்டிலுள்ள அம்மா ளைப் பற்றி க் கவலைப்படுவார் 以鼠方搏
"ஐயோ! இந்த மனுசி எப்படித் தான் இத்தனை பிள்ளைகளையும் வளர்த்தெடுக்கப் போ கு தோ?" என்று கவலைப்படுவர். இப்படி ஏதாவது ஒன்றைப்பற்றி "வொறி பண்ணிக்கொண்டே இருப்பார்கள்
மூன்றாவது வகை யி ன ர், அ. க. கு. வினால் கூர்மையாகப் பாதிக்கப்படுபவர்கள். இவர்களுக்கு வாழ்க்கை சிக் க லாக அமைவ
i5 (76.37 l. 2
துண்டு, பொருளாதாரக் கஷ்டம், குடும்பப் பிரச்சினை இப்படிப் பல குழப்பங்கள் நிகழலாம். இரண் டாவது வகையினரை விட இந்த மூன்றாவது வகையினரைக் குணப் படுத்துவது இலகுவானது. ஆனால் இரண்டாவது வகையினரை விட முதலாவது வகையினரைக் குண்ப்
தொன்றாகும்.
இந்த அ. க. கு' வினால் நோய் எவ்வாறு உண்டாகிளிறது? இதை விளங்கிக்கொள்ள யோசனை இள், உணர்ச்சிகள் என்றால் எ ன் ஒர என்பதைப் புரிந்து கொள் ள வேண்டும். ந்ெதிப்பது, யோசிப்ப தென்றால் அது மூளைக்குள் மட் டும் தான் நடப்பதொன்று எனப் பொதுவாக நாம் எண்ணிக் கொள் ளுகின்றோம். இது தவறானதா
கும்.
நாம் யோசிக்கும் போது முழு உடலிலு முள்ள நரம்புக்கணத் தாக்கங்கள் அதில் பங்கு கொள் குளுகின்றன. இந்த நரம்புகளும் அதன் கணத்தாக்கங்களும் ஒன் றோடொன்று தொடர்புள்ளன வாகும் உணர்வுகள் நாம் யோசிப் பவற்றுக்கு நிறமூட்டுகின்றன். உட லில் காணக் கூடிய மாற்றத்தை ஏற்படுத்தும் மனநிலையே ρευση வாகும் என்கின்றார் உளவியலா ளர் வில்லியம் ஜேம்ஸ் என்பவர்.
கோபம் என்பது எம்மில் வெளிப் Li丽Lü万历城 函Tömö*小u * 矿时 வுகளில் ஒன்று. இதனால் ஒருவ ரின் முகம் சிவந்து, கண்கள் விரிந்து

தசைகள் இறுக்கமடைந்து, சில வேளைகளில் உடல் நடுக்கமும் ஏற்படுகின்றது. உணர்வின் மன நிலை உடலில் வெளிக் காட்டு கின்றது.
தர்மசங்கடமான நிலைக்களா வதும் ஒருவகை உணர்ச்சிதான் ! வெட்கித்து, முகம் சிவ ப் பது தோலிலுள்ள வியாதியால் அல்ல, இந்த உணர்வு, குருதிக் குழாய் களை விரிவடையச் செய்வதனால் ஏற்படுகின்றது!
சிலர் இரத்தத்தைக் கண்டதும் வாந்தியெடுப்பர் அல்லது மயக்கம் போட்டு விழுவர். இதுவும் உணர்வு களில் ஒருவகை. குருதி, அருவருப் பாண எண்ணத்தை உருவாக்கிய தும் வயிற்றில் குமட்டல் ஏற்பட்டு வாந்தியைத் தூண்டும்; இதயமும் மூளைக்குச் செ ல் லும் குருதிக் குழாய்களும் மயக்கத்தை வருவிக்கின்றன.
இவையெல்லாம் எ வ வா று நோயை உண்டு பண்ணுகின்றன? பெரும் பாலு ம் விரும்பத்தகாத உணர்வுகள், தசைகளில் இறுக் தத்தை ஏற்படுத்துகின்றன. உதா ரணமாக நாள் முழுவதும் உங்கள் சிந்தனை விரும்பத்தகாதவையா யிருந்தால் - தசைகள் இறுக்க மடைகின்றன். கை வி ர ல் களை மடித்து முட்டியைத் தளர்வாக வைத்திருந்தால் வலிப்பதில்லை. ஆனால் இறுக்கமாக நெடுநேரம் வைத்திருந்தால் வலிக்கத் தொடங் குகின்றது. அழுத்தம், இறுக்கம். இவற்றின் விளைவு நோவாகும்.
அல்லது.
இறுக்கம் ஆ ல் ல து சரென் சனை'க் காட்டும் பகுதி க ளி ல் கழுத்தின் பின் புறத் தசைத் தொகுதி முதலாவது இட தி தை வகிக்கின்றது. ஆரம்பத்திலேயே தொல்லைதரக் கூடிய மற்றொரு தசைத் தொகுதி குடற்களத்தின் மேற்பகுதியாகும். இதில் அழுத் தம் ஏற்படும் போது கட்டி? உண் டாவதைப் போன்ற உணர்வு ஏற படும் விழுங்க முடியாமல் கஷ் டம் தோன்றும் களத்தின் கீழ்த் தொகுதித்தசைகளுக்கு நெருக்கம்
ஏற்பட்டால் ஆபத்தான விளைவு
கள் நேர லாம். பெரும்பாலும் வயிற்றுப்பகுதி முழுவதும் இதில் பங்கெடுக்கும் வயிற்றுத் தசை களுக்கு அழுத்தம் நேரிடும்போது நமக்குள் கனதியான = தொல்லை தரும் அழுத்தத்தை உணருகின் றோம். அழுத்தம் தொடர்ந்து அதிகரித்தால் வயிற்றுப் புண் ணிைனால் ஆல்சர் வரும் வலியை ջ 600 Ա ցարլի,
எங்கள் நகரில் வாழ்ந்த வர்த தகர் ஒருவருக்கு இநத அல்சர் வலி ஏற்பட்டது அவருக்குப் பல கஷ்டங்கள் வியாபாரத்தில் கடும் போட்டி சிடுசிடுப்பு நிறைந்த மனைவி; சொல் கேளாத மகன் ! அவரின் வலி நின்றபாடில்லை. பல மருத்துவர்கள் ஆவ ரு க் கு அல்சர் இல்லை என வலியுறுத் தினர். ஆனால் அவர் பொழுது போக்குக்காகத் துண் டி ல் மீன் பிடிக்கச் செல்கையில் வலி மறை வதை அவதானித்தார். மருத்துவர் கூற்றையும் நம்பினார்.
13 ibi Taar

Page 9
இத்தகைய தசை இறுக்க கலி பெருங்குடலிலும் நிகழலாம். இத னைப் பலர் பித்தப்பை திருகுவலி என்றெண்ணி அ வ தி ப் படு வ ரி. ஆ ன ர ல் அது உண்மையல்ல, அவர்களின் அதிருப்தியே பெருங் குடலை நசுக்குகின்றது. ஆனால் உண்மை என்னவெனில் அவர்கள் அனுபவிக்கும் வலி நிஜமானது என்பதேயாகும். இந்த வலி ஒரு வருக்கு பெருங்குடலின் கீழ்ப்பகு தியை அடைந்தால் 'அப்பென்டி சைற் றி ஸ்" (குடல் வளரி = அளர்ச்சி) என்றே கருதி விடுவார் இதைக் கேட்டு அ வ ரு டைய வயிறறை வெட்டித் திறக்காமலி ருக்கும் ஒரு வைத்தியரே மிகத் திறமையான ஒரு சத்திர சிகிச்சை யாளராயிருப்பார்
குடற் தொகுதித் தசைகளை விட குருதிக் குழாய்த்தசைகளும் உணர்ச்சிகளால் தாக்கப்படுகின் றன. உணர்ச்சிகளாலும், அவற் றின் காரணமாக நர ம் டி க ள் கிளர்ச்சி அடைவதாலும், மண்டை யோட்டின் உள்ளும், வெளியேயு முள்ள குரு தி க் குழாய்களுக்கு ஏற்படும் அழுத்தத்தால் இத் தலைவலி உண்டாகின்றது. இப்படி டாக்டர்களிடம் ஒடும் "ரென்சன்' தலைவலிக்காரர்கள் பலர்.
தோலியல் மருத்துவர்களால் இஇர்சையளிக்கப்படும் பல தோல் வியாதிகள், தோலிலுள்ள குருதிக் குழாய்கள் பயம், ப த ஹ் ற ம், விரக்தி போன்ற உணர்ச்சிகளுக் குட்படுவதால் உண்டாகின்றன. ஒரு நபர் இத் த  ைக ய உணர்ச்சி
A Tr
களுக்குள்ளாகும்போது, குருதிக் குழாய்களில் அழுத்தம் ஏற்பட்டு அதன் மெல்லிய சுவர்களினுடாது குருதி ப் பா ய ம் வெளியேறித் தோலுக்குச் செல்கின்றது. இந்தப் பாயத்தினால் தோலிழையம் தடிப் படைகின்றது. இந் த ப் பா யம் தோலின் பரப்பிற்குத் தள்ளப் பட்டு = தோற் புரவையில் கடியும், செதில் போன்ற பொருக்குகளும் ஏற்படுகின்றன. இதனால் நரம்பு வழித்தோல் வருத்தங்கள் உண்டா கின்றன.
நரம்புவழி இறு க் கத் தி ற் கு ('ரென்சன்") மிகவும் பொருத்த் மான பகுதி நெஞ்சறையின் இடப் பக்கமாகும். வலப்பக்கத்தில் வலி யிருந்தால் மக்க ள் மருத்துவர் களை நாடுவதில்லை. இடப்பக்க வலியென்றால் கவலை ஏற்படுகின் றது. "வலப்பக்கமா? ச்சே! அது ஒன்றும் செய்யாது!" என்று மன உறு தி ஏற்படுகிறது. இடப்பக்க மென்றால்? 'அது இருதய வியாதி தான்?" எனப் பெரும் பீதி ஏற் படுகிறது. அந்த வலியை எதிர்பார்த் துக்கலங்குவார்கள் அந்த எதிர் பார்ப்பே வலியைக் கொண்டுவரும்
53ö23 இறுக்கத்தினால் விளை யும் ' ைசக் கோ சோமற்றிக்"
நோய்களின் அறிகுறிகள் ஒரு வகை
யானவை. உடலுக்குள் உள் ள அகஞ்சுரக்கும் சுர ப் பித் தொகு திக்கு எம் உணர்ச்சிகளினால் வரும் தாக்கம் பிறிதொரு வகை யாகும். வி தி யில் படுவேகமாக வாகனத்தை ஒ ட் டி ச் செ ဓါး) @)ခြုကြီး

றோம். திடீரென குறுக்கு வழியால் ஒரு வாகனம் எதிர்ப்படுகின்றது. ஒ ட் டு ப a ff) går
சுவாசம் வேகமடைகின்றது. இத
யம் படபடக்கின்றது. அத்தோடு சிறு மயக்கமும் ஏற்படலாம்.
மூளையில் உருவாகும் அதீத Lu III (8 10 961) ду60JU στου Θυ πιο தோற்று விக்கின்றன. pungo) GTLTéò செலுத்தப்படும் நரம்புக் கனத் நாக்கம் அதிரினல் சுரப்பிக்குச் சென்றதும், அச்சுரப்பி அதிரிலீ னைக் குருதிக்குள் 1ழ்த்து தின் றது. இந்தச்சாறு இதய த் தை அடைந்ததும் அது படபடக்கும்; மூளையில் சுவாசத்தை இயக்கும் ஒமயத்தை அடைந்ததும் 6. இணறல் உண்டாகும் குரு தி க் குழாய்களுக்கு அச்சாறு சென்றால் அவை சுருங்கி மயக்கத்தை வரு விக்கும்.
ஒத்தோ சோமற்றிக்' வியா இகள் வேறு பல அங்க விளைவு களையும் ஏற்படுத்துகின்றன. அங் லாப்பு அல்லது கோப்ம் நிகழும் ஒவ்வொரு முறையும் இதயத்தின் குருதிக் குழாய்கள் நசுக்கப்பட்டு
li bi MM MN 607 தாக்கங்களைக் கொடுக்கும்.
ஒதுக்கோ சோமற்றிக் நோயா
ளர்கள் எங்கும் காணப்படுகின் றனர் மருத்துவ மனைகளிலும் வீடுகளில், படுக்கைகளில் வீழ்ந் தும் அல்லற்படுகின்றனர்.
இவற்றைத் தவிர்ப்பதற்கு зун =
கச் சிந்திக்கக் கற்றுக் கொள்வது
ஒவ்வொரு பல்கலைக்கழகமும் ம்னிதர்களுக்கு அவர்கள் வாழும் கலையைக் கற்பிக்க வேண்டும்.
ST10,1 மனப்போக்கையும் சிந்த னையையும் மகிழ்ச்சியான வழி களில் செலுத்தப் பழக வேண்டும்
வாழ்க்கையின் முழுநேரத்தையும் மகிழ்ச்சியாகக் கழிக்க முடியுமென் பது நிச்சய மானதல்ல. ஆனால் யதார்த்த பூர்வமான சில ஆ (3.a) If சனை களைக் கடைப்பிடிப்பதன் மூலம் இந்த சைக்கோ சோமற்றிக் வியாதி நம்மை அணுகாது பாது காத்துக் கொள்ள முடியும்!
. வாகன ங் களி ல் இயந்திரக் கோளாறுகளை எதிர்பார்ப்பதைப் போல் பயந்து உங்கள் உள உணர் வுகளைப் பற்றிய நித்திய ஆராய்ச் சியில் ஈடுபடாதீர்கள். 2. நீங்கள் செய்யும் தொழிலை ஈடுபாட்டுடன் விரும்பிச் செய்யப் பழகினால், அ gi 657 ir Gð anggih ரென்சனைத் தவிர்க்க முடியும்ம் செய்யும் வேலையை எப்படியா வது செய்து தொலைத்து வேண்டும் என்று வேண்டா வெறுப் புடன் செய்வது விறைப்பையும் விரக்தியையும் வரவழைக்கும்.
3. வேலைப் பளுவால் ஏற்படக் கூடிய ரென்சனை அங்கலாய்ப்புக் களை இலகுவாக்க இளைப்பாற் பொழுதுபோக்கு முயற்சிகள், சமூ கப் பண்றி கள் ஆகியவற்றைத் தெரிவு செய்யுங்கள், !
盟。 மக்களை நேசிக்கப் பழகுங் கள், குரோதங்கள் வெறுப்புக்
1ό ριτεθε

Page 10
களை மனதில் காவித் தி ரி வ து உடலில் பாதிப்புக்களை உருவாக் கும் , 'எனக்கு அந்த மனித ன் பேசுகின்ற முறை பிடிக்கவில்லை. அவருடைய நடை உடை பார்க்கி அருவருப்பாயுள்ளது.' இந்த வகை யில் சில மனநோயாளிகள் பதில் ஆளி பார்கள். இவர்களுடைய மன நிலையை ஆராய்ந்தால் இந்த நபர்கள், யாரையுமே நேசிப்பதாக இல்லை. ஆனால் , தாம் மக்க ளோடுதான் வாழ வே ண் டும் எனவே மக்களை விரும்பக் கற் றுக் கொள்ள வேண்டும்.
5 எம்மைச் சுற்றியுள்ள உலக வாழ்க்கை சிக்கல்கள், இன்னல் கள் மலிந்தன. இவற்றின் மத்த பிலே திருப்தியும் மனநிறைவும் கொண்டு விேக்க பழகவேண்டும். திருப்தியடையாத மனம், ஒன்  ைற விட் டு ஒன்று தாவிப்பாய்ந்து (தொழில், நண்பர்கள், வீடு 6Tסיlt பலவறறில) அங்கலாய்ப்புறும்,
6. வாழ்க்கையில் வரும் எதிர் பாரசீக இடுக்கண்கள், இழப்புக் ஆள் எம்மைத் தாக்கி விழுத்தாமல்
அவற்றிற்கு முகம் கொடுக்கப் பழகு வது "சைக்கோ சோமற்றிக்" நோய் எம்மில் மேலிடாமல் பார்த்துக் கொள் ைஉதவிபுரியும்
7 பிறரோடு வைக்கும் உறவு களில் இன் சொல் பேசுவது, நன்றி செலுத்து வது திறமையைப் பாரட்டுவது, நகைச்சுவையில் ஈடு படுவது- இவை நெஞ்சுக்கு ஆரோக் கியமான மருந்துகளாகும்.
வாழ்க்கையில் வரும் பிரச்சினை களுக்கு அவ்வப் போது தீர்க்கமான முடிபுகளை எடுப்பதும், அவற்றை நடைமுறைப் படுத்துவதும் பெரும் பரலான உடல் உளச் சித்துல் இளை நிவர்த்தி செய்கின்றன. . . . . .
ஆரம்பத்தில் குறிப்பிட்ட இந்தப் பொதுவான நோயைத் தவிர்த் துக் கொள்ள இலகுவான திறவு கோல் இதுதான் :
'இயன்றவரைக்கும் என் மனப்
போக்கையும் சிந்தனைகளையு ik மகிழ்ச்சியாக வைத்திருக்க முயற் சிப்பேனாக' •
அழுகை - ജ് ഉണ്ട് ബg )
மனோதத்துவ நிபுணர்களும், வைத்திய நிபுணர்களும் குழந்தைகள் வளர்ந்தவர்கள் அழுவதனால் ஆரோக்கியமாக வாழலாம் என -24, 35 TU பூர்வமான கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு வாழ்வதிலும் பார்க்க ஆ வ ற் றை வெளிப்படையாக, கண் னிர் விட்டு அழுவதனாலும், தாங்க முடியாத துயரத்தை வாய்விட்டுக் கதறி அழுவதனாலும் உடலில் ஏற்படும் அழுத்தத்தை தவிர்த்துக் கொள்ளலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
:ജൈ',
5ft Gil 16

தயக்கத்தைத் தகர்த்தெறிவோம்!
- அன்புக்குழந்தை
மயக்கம் என்பது, எமது உடலின் இயக்கங்களில் வற்படுகின்ற ஒரு நோய். இதை மருந்தினால் மாற்ற முடியும், தயக்கம் என்பது ஒரு விதமான மனநோய். இதற்கு எவரும் இடமளிக்கக் கூ டா து LT M T T T S T ttS S S tt S T T ttt tttS
U/5 IT 35/ .
பல மரம் கண்ட தச்சன் ஒரு மரத்தையும் பது போல தயங்கித் தயங்கி நிற்பவர்கள். தாங்க ள் எடுத்த ஒரு கருமத்தையும் செய்ய முடியாதிருப்பர்
வருங்காலம் எப்படியாகுமோ? என நாம் சிந்தித்துக் கொண்டிருப் பதால் துன்பம் ஏற்படுகின்றது; நிகழ்கால மும் விண நின்றது. இன்னும் நடக்காத நிகழ்வைப் பற்றி எண்ணி எண்ணி பொருளில்லாமல் தயங்கு வதால் துன்பமே மிஞ்சுகின்றது. இவ்வாறு பலர் துன்பத்தில் ஆகிப் பட்டுக் கொள்ளுகின்றனர். துன்பம் அதிகரித்து விட்டால் எ தி லு ம் தயக்கம். பாடசாலை செல்லத் தயக்கம் படிக்கத் தயக்கம்; பரீட்சை எழுதத் தயக்கம். இவ்வாறு எதிலும் த பக்கத்துடனேயே இரு ப் பர், 例m @m DJr@s沉arh°一ü劲历J-15立5T5°动沉b@@盘动,、 குன்றித் துன் பத்திலே நாம் உழலக் கூடாது. எம்மிடம் எத்தனையோ ஆற்றல்கள் உண்டு. தயக்கத்தைத் தகர்த்துக் கொண்டு அவை வெளி வர வேண்டும் எமது ஆற்றல்களை வெளிக் கொணர்வதன் மூல ம் வாழ்வில் வெற்றி காண்பது நிச்சயம் !
மனிதனின் மனம் பரசூட் குடையைப் போன்றது. வனத்தில் பறக்கும் விமானத்திலிருந்து குதிக்கும் போது “பரசூட் தானாகவே விரிந்து செயலாற்றுவதைப்போல, மனமும் ஆபத்து வ ரு ம் போது, தயக்கம் ஏற்படும் போது, துன்பம் வரும் போது தானாகவே இயங்கி ஆபத்துகளை மேற் கொள்ளத் தொடங்கி விடுகிறது எ ன் கி ற ர் டெவான் பிரபி உள்ளம் இவ்வாறு எமக்கு உதவும் போது, ஆபத்து வரும்போது என் கலங்க வேண்டும்? துன்பம் வரும் போது ஏன் துவ ள வேண்டும்? தயக்கம் வரும்போது ஏன் தள்ளாட வேண்டும்?
17 நான்

Page 11
உடலைட்பற்றியோ, உள்ளத்தைப்பற்றியோ, வீட்டைப்பற்றியோ நாட்டைப் பற்றியோ எதுவாயினும் சரி, நம்பிக்கையோடு தயக்குமின் றிச் செயற்பட்டால் வெற்றி நம்முடையதே ஆகும்!
அதே வேளை, தயக்கம் கூடாது என்பதற்காக எந்த ஒரு செய லையும் பகுத்துப் பார்க்காமல், நிதானத்தை இழந்து செய்ய முன்வரக் ofin. L-ff35l.
நியூயார்க் நகரத்திலே நிறுத்த மற்ற நடனப் போட்டி ஒன்று ந.ை பெற்றது. யார் கூடுதலான நேரம் நடனமாடுகிறார்கள் எ ன் பதை க் காண்பிக்க ஏற்படுத்தப்பட்ட வேடிக்கை நிகழ்ச்சி, பல ஜோடிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஆடிக் கொண்டிருக்கையிலேயே 65 ஜோடி பினர் கால்கள் ஓய்ந்து நின்று விட்டனர். ஆனால் ஒரேயொரு ஜோடி மட்டும் அலுக்காமல் சலிக்காமல் ஒரு இரவும் பகலும் ஆடினர். அந்த மங்கை ஆடவனின் தோளில் சாய்ந்தபடி, நித் திரை செய்து கொண்டு ஆடிக்கொண்டிருந்தவள் திடீரெனே மயங்கிக் கீழே விழுந்தாள். சுற்றி யிருந்து பார்த்தோர் பதறினர் இந்தச் செயல் தயக்கத்தினால் நடந்த செயல் என்று எண்ணலாமா? மாறாக, ஒரு வேடிக்கையாக நிகழ்த்தப் பட்ட ஒரு செயலேயாகும்.
ஆபத்து, பயம், தயக்கம் இவை மூன்றும் எமது வாழ்வை அலங் கோலப்படுத்துபவை. இந்த மூன்றிலும், ஒன்று கூட ஒரு காரியத்தைச் செவ்வனே செயலாக்க இடமளிக்காது. அநேகமான செயல்கள் நடந தேறத் தடையாக இருப்பது தயக்கம்தான். இதனால் உள்ளத்திலே தடுமாற்றம் ஏற்படும். இத் தடுமாற்றத்தினால் ஏமாற்றமும் சம்பவிக்
is 6). TIA,
தயக்கம் ஏற்பட்டால் கவலைப்பட்டுப் பயனில்லை, உள்ளத்துக்கு ஒய்வு கிடைத்தால் தயக்கம் உடனே மறைந்துவிடும். தயக்க நிலையை மாற்றுவதற்கு உணவை, இருக்கும் இடத்தை மாற்றுவது பலன் தரு இ. சுற்றுலாக்கள் போய் வருவதன் மூலமும் புதிய இடங்களைச் சென்று பார்ப்பதன் மூலமும் தயக்கத்தை ஒரளவு குறைக்கலாம்.
தயக்கம் நீங்கி வரழ ஐந்து சிறந்த வழிகளுண்டு.
1. ஒரு கஷ்டமான வேலையைச் செய்வதா? விடுவதா? என்று முடிவு எடுக்க அதிக நேரம் தயங்கித் தயங்கிப் பின்னடையக் கூடாது இயன்ற அளவுக்கு விரைவாக ஒரு முடிவுக்கு வர வேண்டும். இதனால்
காலி விரயத்தைத் தவிர்க்கலாம்.
18 (5 føår
 

நெருங்கிய நண்பரிடமே அல்லது நீங்கள் வளர்க்கும் பிராணியிடமோ அன்றேல் எவரிடத்தாயிலுமி உ ங் க ள் தயக்கத்தை இர விட்டுச் சொல்லுங்கள். நீங்கள் சிெய ன்னவரிடமிருந்து உங்களுக் உதவி கிடைக்காமல் போகலாம். ஆனால் உங்கள் உளச்சுமை குறை யும், தயக்கம் மறையும், எனவே விரைவாகச் செயலில் ஈடுபடுவீர்கள்
3. தயக்கத்தின் ஆணிவேரைக் கண்டு பிடிக்க வேண்டும், வீணாக மனதை அலட்சியப் போக்கில் விடக் கூடாது, , u uluʼit. j t Lğ; ó#n. L.—fT" gil* ஏனெனில் பயப்படப் JILIÚLui தயக்கம் எம்மை ஆட்கொள்ளும். தடு மாற வைக்கும். எனவே எப்போதும் மன உறுதியுடன் இருக்க வேண்
டும்.
4 அறிஞர்களிடமோ அல்லது உதவிக்கரம் நீட்டுபவர்களிடமோ அல்லது வழிகாட்டிகளிடமோ வழி கேட்க வேண்டும்.
5. தயக்கத்துக்குரிய காரணத்தைக் கண்டு பிடித்து அதைத் தீர்க்க முயல வேண்டும். மீண்டும் ஒரே மாதிரியான துன்பங்கள் தொடராமல்
காளை மாட்டை, அதன் முன் பாய்ந்து, கொம்பிலே பிடித்து நிறு வேண்டுமேயொழிய, பின்பக்கம் சென்று உதை வாங்கக் கூடாது, தக்க தருணத்தில் தயக்கத்தை நீக்க வழி தேடுங்கள்
உடலுக்கு ஒய்வு கொடுப்பது தயக்கம் ஏற்படாது இருக்க இன்றி LIGNLOLjff S 605 வழியாகும். ஒய்வை உடனுக்குடன் தருவதற்காகத் தான் உறங்குகின்ற நிலையை இயற்கை நமக்கு இனாமாகத் தந்தின் ஊது. ஒய்வு என்றால் வெறுமனே உறக்கம் என்பதல்ல. உறங்காமலும் ஒய்வு கொள்ளலாம். ஒய்வும், ஆறுதலும், அமைதியும் நிறைந்த உறக் கம் வாய்க்கப் பெறுமானால் தயக்கம் தலை காட்டாது.
தயக்கம் என்ற நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், முதலில் சிறு சிறு செயல்களைச் செய்து முடிக்க முன்வர வேண்டும். அவ்வாறாயின் ஊக்கமும் துணிவும் பெற்றுத் தொடர்ந்து பெ ரி ய பெரிய செயல் களைச் செய்து வெற்றி பெற முடியும்,
இத்தகைய வெற்றிகளால் உற்சாகமும் நம்பிக்கையும் ஏற்படும். தயக்கத்தை நாம் தகர்த்தெறிந்து விடலாம் 魯
19. [[$( '#'

Page 12
O வீட்டு மருத்துவ மூலிகை O
-- இ. தில்லை 醚重字g齿
வேறு பெயர்கள் : அஸ்வத் தம், சராசரம், கடனம் (பழந்தமிழில் திருமரம்)
பெரும் மர வகுப்பைச் சேர்ந்தது. உயர்ந்து படர்ந்து வளரக் கூடியது. அடர்த்தியாக வளர்வதில்லை. தெய்வத்தன்மையுடையது என நம்பப்படுவதால் இது கோவில்களிலும், கோயிலுக்கு அடுத்துள்ள இடங்களிலும் பயிராக்கப்படுகின்றது. வீதி ஒரங்களிலும் பரவலாக வளர்ந்திருப்பதைக் காணலாம். அரசி, ஆடி, ஆவணி மாதங்களில் பூக்கும்.
- இலை, வித்து, பட்டை வேர். សាធារ :- துவர்ப்பு, இைப்பு
6ճ մlայլb :- குளிர்மை
:- இனிப்பு செய்கை வித்து :- மலம் இழக்கி
է (35յի
__"Go)L துவர்ப்பு
ഴ്ത്തി
குணம்  ைஇலை :-
() சூலகத்துடன் கூடிய கோளாறு கீளை போக்கி சூல் அமையச்செய் Այլն: (i) உடல் வன்மையைப் பெருக்கும். (ii) காய்ச்சல் போக்கும், விதை :- இலகுமலகாரி.
மரப்பட்டை, வேர்ப்பட்டை - புண்கள், சருமரோகங்களை
ஆற்றும்.
6. 20
 
 

நோய் தீர்க்கும் அரசின் செயல்முறைகள்
I.
5.
காய்ச்சல் (ஜுரம்) குணமாக அரசம் இலைக் கொழுந்தைப் பாலில் அவித்து சீனி சேர்த்துக் கொடுக்க காய்ச்சல் தணியும்.
சீதபேதி குனமாக - அரச மரத்தின் அ டி ட்பகுதியில் இளர்ந் திருக்கும் ஊதா நிறமான இளம் கொழுந்தைப் பறித்து அம்மி யில் வைத்து மைபோல் அரைத்து எலுமிச்சம் பழம் அளவு எடுத்து ஒரு டம்ளர் தயிரில் கலந்து காலை வேளையில் மட்டும் கொடுத்து வந்தால் சீதபேதி குணமடையும்,
மலச்சிக்கல் குணமாக - அரFம் வித்தை தக்களவில் பொடிசேர்து உட்கொண்டுவர மலச்சிக்கல் நீங்கி பசித்தி வலுப்பெறும்,
கால்களில் தோன்றும் பித்தவெடிப்பு மறைய - அரச மரத்தின் அடிப்பகுதியை ஆழமாகக் கத்தியால் கீறினால் பால் வடியும். இப் பாலை பித்தவெடிப்புக்களில் சலிக்கத் தடவினால் ஒரேநாளில் குணத்தைக் காணலாம்.
அரசமரப்பட்டையை சேகரித்து உலர்த்தி துளாக்கிக்கொள்ள வேண்டும். பின்பு இரும்புச் சட்டியை அடுப்பில் வைத்து இந்தத் தாளைப் பொட்டு கருகும்வரை வறுத்து எடுத்து கண்ணாடிப் புட்டிக்குள் பத்திரப்படுத்திக்கொள்க.
மேற்கூறிய (5ல் கூறப்பட்ட) அரசம்பட்டைத்தூளை ரணம், புண் சொறி போன்ற சருமக்கோளாறுகள் தோன்றும்போது தேங்காய் எண்ணெயுடன் கலந்து நோய் ஏற்பட்ட இடத்தில் தடவி வந்தால் குணமாகும்.
பத்திரப்படுத்தி வைத்துள்ள அரசம்பட்டைத் தூளை தொண்டைக் கம்மல், தொண்டை ரணம், விக்கல், இருமல் ஏற்படும்போது ஒரு தேக்கரண்டி எடுத்து ஒரு டம்ளர் நீரில் ஊறவைத்து வடி கட்டிய பின் அதனைச் சாப்பிட மேற்கூறிய நோய்கள் குணமடையும்.
ஆம் நாளெடுக்கும் புண்கள் உள்ளவர்கள் அரசம்பட்டையின் நுண் னிய துளை புண்ணில் நூ விவர புண் ஆறும்.
அலசிவிதையை உட்கொண்டவர்களுக்கு அரசம் இலைத் துளிரை அரைத்து உடன்பேறக்கூடிய எவ்வித பாலுடனும் அல்லது தேங் காய்ப் பாலுடன் உடனடியாகக் கொடுத்து உயிரை மீட்கலாம்.
கையில் தயிர் இருக்க வெண்ணெய்க்கு அலைவான் ஏன்?"
2. I g୩ଶ ଖି -

Page 13
(664, நற்பண்புகளின் சாரதி
லோ, வ, இராயப்பு மா. ம. தி. இறையியல் கலாநிதி
ஆறறிவு கொண்ட மக்களுள் எவரும் ந ல் வாழ்வு வாழ நல் லொாழுக்க நற்பண்புகளைக் கடைப்பிடிப்பது இ ன் றி ய  ைம ய ர த து காரணம், இந்த நற்பண்புகளே மனிதன் மனிதனாக வாழவும் அவன் தனது கடைசிக் கதியை இலகுவாக அடையவும் தகுந்த வழிகளாகவும் அமைகின்றன.
பற்பல நல்லொழுக்க நற்பண்புகள் இருந்தாலும் பல மெய்யியல், இறையியல் நிபுணர்களின் கூற்றுப்படி இவைகள் முக்கியமாக நான்கு பகுதிகளுக்குள் அடக்கப்படுகின்றன. அதாவது விவேகம், நீதி மட் டுத்தனம், மனோபலம் அல்லது திடம்
இவைகளுள் நீதி (Julice) மனித சித்தத்தோடு தொடர்புள்ளது. இந்த நற்பண்பின் மூலம் மக்கள் ஒருவரொருவருடைய உரிமைகளை மதிக்கத் துரிண்டப்படுகின்றனர்.
மட்டுத்தனம் (temperance) மக்கள் தங்கள் வாழ்வில் எதையும் சரியான அளவுடன் கடைப்பிடிக்க வழிவகுக்கிறது.
மனோபலம் அல்லது திடன் (fortitude) மக்களைத் தேவையற்ற பயத்திலிருந்து விலகித் துணிவுடன் செயலாற்ற உதவுகின்றது.
இந்த நல்லொழுக்கப் பண்புகளிலும் பார்க்க விவேகம் (prudense) சாலச் சிறந்தது; உன்னதமானது. அது மனித புத்தியுடன் சம்பந்தப் பட்டது. ஒரு குறிக்கப்பட்ட சூழ்நிலையில், அல்லது சந்தர்ப்பத்தில் எல்லாக் காரணங்களையும் நன்கு ஆ ரா ய் ந் து எப்படி நியாயமான முறையில் செயலாற்ற வேண்டுமெனத் தீர்மானஞ் செய்ய வழி வகுக் கும் நற்பண்பே விவேகமெனப்படும்.
மனிதன் ம னி த னாக வாழவும் அவன் தனது கடைசிக்கதியை க் கி நற்பண்புகள் நான்கும் ஒத் @ 610 ԱՔ கு 飙
நான் 22

துழைக்கின்றன, ஆனால் ஏனைய நல்லொழுக்க நற்பண்புகளை நல் வழிப்படுத்தி அவைகளைச் சரியான திசையில் கொண்டு செலுத்துவது
விவேகமே. இதனால்தான் தோமஸ் அக்குவினாஸ் என்னும் மெய்யி
பல், இறையியல் வல்லுநர் விவேகத்தை நல்லொழுக்க நற்பண்புகள்
அனைத்தையும் நல்வழிப்படுத்தும் சாரதி என்று கூறியுள்ளார். அர
சில் துறையோடு ஒப்பிட்டுப் பார்த்தால், நீ தி  ைய வெளிவிவகார
அமைச்சுக்கும் விவேகத்தை முதல் அமைச்சருக்கும் ஒப்பிடுகின்றனர் ஒரு
விவேகமும் மனச்சான்றும்
எந்த ஒரு கல்வியூட்டுதலினதும் நோக்கம் முழுமனிதனை உரு வாக்குவதே. முழுமனிதனென்றால் தனது மனச்சான்றின்படி ஒழுகுப வன். காரணம் மக்களை நல்லொழுக்கமுள்ளவர்களாக்கி அவர்களின் ஆனந்த வாழ்வுக்குத் திறவுகோலாயிருப்பது மனச்சான்றுதான். ஒவ் வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இறைவனால் அருளப்பட்ட சுதந் விரத்தை, தன்னுரிமையைத் தக்க முறையில் பயன்படுத்த வழிகாட்டி யாக வுள்ளது மனச்சான்றே.
தானே தனக்கென விதித்துக் கொள்ளாத தன் உள் ள த் தி ல் இறைவன் வரைந்த சட்டமொன்றை மனிதன் கொண்டுள்ளான். நல் ைெத எப்பொழுதும் நாடிச் செல்லவும் தீமையை விலக்கவும் அவன் உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து ஒரு குரலொலி அறிவுறுத்துகிறது அது அவனது இதயச் செவிகளுக்கு இதைச் செய்! அதை விலக்கு 1. என உரைக்கிறது. இவ்வொலி இ  ைற வ ணி ன் குரலொலியின் எச் ரொலியே, இதையே நாம் மனச்சான்றென அழைக்கிறோம். மன, சான்றுக்கும் விவேகத்துக்கும் நெருங்கிய தொடர்புண்டு விவேகதி னச்சான்றைப் பூரணப்படுத்துகிறது. மனச்சான்று மக்களை விவேகி களாக வளரத் தூண்டுகிறது.
மக்கள் விவேகத்தோடு செயலாற்ற 3 காரியங்கள் தேவை:
1. தேர்ந்து தெளியும் திறன்
(Wise deliberation) அதாவது ஒரு செயலில் இறங்குமுன் குறிக் கப்பட்ட சந்தர்ப்பங்களில் எந்தெந்த வழிகள் சரியானவை என அலசி ஆராய்ந்து, இந்த வழிகளைக் கடைப்பிடித்தால் என்ன
"Canonఐ267 நேரிடும் என்பதைப் பொது ஒழுக்க விதிகளிலிருந்து
சீர்தூக்கிப்
శ్రీడ్డ *f76ট্রা

Page 14
safoj, ĝis a Gör ( Sound judgment) அதாவது குறிச் சட்ட ட்ட ஒரு சந்தர்ப்பத்தில் ரு நல்ல முடிவை அடைய இவ்வாறு தான் செயலாற்ற வேண்டுமென்ற தீர்மானம் இதைச் சிலர் செயல் முறைத் திறன் (practical Judginrein) Gĩaổi nữ. அழைப்பர்.
3, 8 LDG ung as La S. (Timely decision)
அதாவது இப்பொழுது இவ்விடத்தில் இதைத்தான் செய்ய மேண்ேடு மென்ற கட்டளை,
மக்கள் விவேகத்தோடு செயலாற்றப் பின்பற்றுதல் அவசியம். こ 。
1. நிச்சயமான மனச்சான்றையே எப்பொழுதும் பின்பற்றவேண்டும்.
அதாவது நாம் ஒரு செயலில் இறங்கும் வேளை அது சரியான தென்று உறுதியுடன் தீர்மானித தால் அத்தகைய மனச்சான்றைப் பின் பற்றக் சட ைமட்டட்டிருக்கிறோம். இதனால் அந்த மனச்சான்று தான் உண்மையான மனச்சான்று என்பது அல்ல அதன் பொருள் சிலசமயங் களில் நிச்சயமான மனச்சான்று தவறான மனச்சான்றாக இருக்கலாம். * Fம் தகுந்த ஆராய்ச்சியின் பின் ஒருவர் ஒரு சொல் சைதான் உண்மை யானது என உறுதியுடன் தீர்மானித்தால், அவரது மனச் சான்று έκή ιμπάδη, ŽR. Gðið 5Ở if it Uff G57 மனச்சான்றாக இல்லாவிடி னும், அவர் தனது உறுதியான மனச்சான்றைப் பின்பற்ற வேன்டுமென விவேகம் வலி யுறுத்கிறது.
மனச்சான்றுடன் ஒரு பொழுதும் தீர்மானம் எடுக்கக்
சந்தேகமுள்ள மனச்சான்று என்றால் தனது மு டி வுக் கு எதிர் நியாயங்களுண்டென்றும் அவைகளுக்குத்தகுந்த விடையைக்காண முடியா தென்று அறிந்தும் பயத்துடன் தீர்மனித்தல். உ+ம். மாதாந்தம் 5 வீத வட்டி வாங்குதல் சரியான தென்று ஒரு சிலர் கூறுகின்றனர் வேறு பலர் அ நீதி என்கின்றனர். இருந்தும் சரிதானென்று பயத்துடனும் தயக்கத்துடனும் தீர்மானித்தால் அது சந்தேகமுள்ள மனச்சான்றெனப் 136)ւԻ. .
ஒரு செயல்பற்றிப் பல அபிப்பிராயங்கள் உள்ளன என வைத்துக் கொள்ளுவோம். எது சரியான தென்று உறுதியுடன் அறியாது செய லில் இறங்குவது விவேகமுள்ள செ ய ல ன்று. உ+ம். கருச் சிதைவு செய்வது எந்தச் சந்தர்ப்பத்திலும் தீமையான தெனச் சிலர் கூறுகின்
 

றனர். வேறு சிலர் ஒரு சில சந்தர்ப்பங்களில் குறிப்பாகத் தாயின் உயிரைக் காப்பாற்றுவதற்காகச் கருச்சிதைவு செய்யலா மெனக் கருது ன்ெறனர். எது சரியானது, ஏற்றுக் கொள்ளக் கூடியது என்று சந்தேக முள்ள மனச்சான்றுடன் ஒரு தீர்மானம் எடுப்பது அறநெறி விதிகளுக்கு முரணானது.
இத்தகைய சந்தர்ப்பங்களில் விவேகத்துடன் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்றால், முதல் முதலில் சந்தேகத்தைத் தீர்க்க முயலவேண் டும் அறநெறி நூல்களைப் படி ப் ப த ன் மூலமோ, இவ்விடயங்கள் பற்றிக் கற்றுத் தேர்ந்த அறிஞர்களிடம் ஆலோசனை கேட் ப த ன் மூலமோ, சந்தேகத்தைக் களையலாம், அது வரை தீர்மானம் நிறுத்தி வைக்கப்பபட வேண்டும்,
ஆனால் சில சந்தர்ப்பங்களில் ஏனையோருடன் கலந்தாலோசிப் பது சாத்தியப்படாது. உடனடியாக ஒரு தீர்மானம் எடுக்க வேண்டி நெரிடலாம். அவ்வேளை ஒரு விவேகி எப்படிச் செயலாற்றலாம்?நிச்சய மான மனச்சான்றே அறநெறியின் படி நாம் ஒழுகுவதற்கேற்ற உறுதி யான வழிகாட்டி. எனவே சாத்தியமான பல அபிப்பிராயங்கள் ஒரு செயல்மட்டில் இருக்கும் வேளை, அவற்று ஸ் எதை எற்றுக் கொள் வதென நிச்சயமான மனச்சான்று தீர்மானிக்க வேண்டும்.
இதற்கு அறவியலில் சில விதிகளுண்டு. அவற்றுள் பல ரா லு ம் ாற்றுக் கொள்ளப்படுவது, நிகழ்தகவுக்கோட்பாடு (Prababilism) ஆகும்
அதாவது நல்லொழுக்கச் செயல்களைப் பொறுத்தமட்டில் ஒரு வரின் கடமைகள் பற்றிச் சந்தேகம் எழும்பொழுது எந்த வொரு உண்மையாகவே நிகழ்தகவுள்ள - அதாவது சாதகமான அபிப்பிராமத் தையும் பின்பற்றலாம்.
ஒரு அபிப்பிராயம் இருவழிகளில் உண்மையாகவே நிகழ்தகவுள்ள காக ஏற்றுக் கொள்ளப்படலாம். ஒன்று அதற்கு அகமூல ஆதாரம் (Infrinsic Authority) இருந்தால் அதாவது அந்த அபிப்பிராயத்துக் இரிய காரணங்கள் கனமானவையாக அல்லது நியாயமானவையாகச் செயலாற்றுபவருக்குக் காணப்பட்டால், அது உண்மையாகவே நிகழ் ஆகவுள்ளது. மற்றது, அதற்குப் புறமூல ஆதாரம் (Extrinsic Authority) இருந்தால் அதாவது அது பல (குறைந்தது 5) அங்கீகாரம் பெற்ற தரமுள்ள அறவியலாளரால் எற்றுக் கொள்ளப்பட்டால் அதுவும் உன் மையாகவே நிகழ்தகவுள்ளது.
露5磅7萨

Page 15
ஒரு உதாரணம் மூலம் இதை விளக்கலாம், செயற்கைக் கற்பத் தடை பற்றி ஒரு சாரார், எ வ் வித சந்தர்ப்பத்திலும் அது நல்லொழுக் தத்துக்கு முரணானது எனக் கூறுகின்றனர். வேறு பல இறையியலாளர் த்ரனும் அது சில குறிக்கப்பட்ட சந்தர்ப்பங்களில் பொறுப்புள்ள குடும்பக் கட்டுப்பாட்டுக்கு முரணானதன்று என்று இன்று கூறுகின்றனர். சில வேளைகளில் அது தேவையான தென்றும் வாதாடுகின்றனர்.
பின் கூறப்பட்ட அபிப்பிராயத்தின் காரணங்கள் பகுத்தறிவுக்கு எற்றவைகளாக அதாவது நியாயமானவையாக அமைந்தால் அதற்கு அகமூல ஆதாரம் உண்டென்றும், பல அறவியலாளர் அதற்குச் சாதிக மாயிருந்தால் அதற்குப் புறமூல ஆதார முண்டென்றும், எனவே அது உண்மையாகவே நிகழ்தகவுள்ள ஒரு அபிப்பிராய மென்றும் விவேகமென் னும் நற்பண்பு நமக்குப் போதிக்கிறது.
மேற் கூறப்பட்ட நல்லொழுக்க விதிகளை நாம் பின் பற்றிவாழும் போது, உண்மையில் விவேகமுள்ளவர்களாக ந ட நீ து கொள்ளுகின் றோம். அத்துடன் வேறு எல்லா நல்லொழுக்க்ப் பண்புகளும் ஒருல் கிணைந்து செயலாற்றுகின்றன. ஆகனால் அவைகள் அனைத்தையும் நல் வழிப்படுத்தும் சாரதி விவேகம் என்றால் அது மிகையாகாது.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும். ஒரு மனிதனின் உள் ள ம் எவ்வளவு தூய்மை என்பதை அம்மனிதனின் முகத்தில் காணலாம். உள் ளத்தில் உள்ளதுதான் நாவிலும் வரும் ஒரு மனிதனின் உள்ளத்தில் தூய்மை உண்டாயின் அதுவே நல்ல சொற்களாய் வெளிவரும்
மனம் பஞ்சு போன்றது அது காற்றில் அசைந்தாடும் தண்ணிரில் நனையும் (6)յ505ւնւհáï 51 հոյլի,
இப் பஞ்சு போன்ற மனத்தைக் காக்க நாம் நெருப்பாக மாறுவதா? இல்லை, காற்றாக, நீராக மாறுவதா? ஆம், மனிதர்களே மனிதர் களை மனிதர்களாய் வாழ விடுங்கள். மனித மனங்களிற்கு இனிமை யைக் கொடுங்கள், கசப்பைக் கொடாதீர்கள், அமைதியைக் கொடுங் கள், தொந்தரவு செய்யாதீர்கள், சுதந்திரமாய் வாழவிடுங்கள் சிறை வைக்காதீர்கள்,
பி, அமல்ராஜ்
方(26
 

ஞாபகம் "ஞாபகம் வந்திரிச்சு , வாடி (% - ○ வந்திரிச்சு நீ சின்னராணி" என் பது ஒரு சினிமாப்பாட
லின் ஒரு பகுதி உண்மையில்
றஞ்சு - இப் பா ட ல் நகைப்புக்குரியதாயி
லும் இது ஒரு உண்மையை, மனத்தைப் பொறுத்தளவில வெளிப்படுத்துகின்றது, மன
மானது மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது அவை நனவு மனம், நடன வி லி ம ன ம் இவ் விரண்டிற்கு இடையிலும் வேறு ப ட் டு அமைந்திருக்கும்
ஒரு மனம் நனவடிமனம் எனப்படும்,
நணவு மனத்தில் உள்ளவை இலகுவில் மறக்க முடியாதவை. நனவிலி மாத்தில் உள்ளவை ஞாபகத்திற்கு வராதவை, சாதாசன வாழ்வில் இம் மந்தின் செயற்பாட்டைத் தெளிவாகக் காணலாம். நீண்ட நாட் மருக்கு முன்பு கண்டு பேசிய நண்பர் ஒருவர் திடீரென வருகின்றார். உங்களுக்கோ ஆளை அடையாளம் காணமுடியவில்லை. பெ ய ரு ம் நல்ல ஞாபகம உடனடியாக மனதிற்கு வரவில்லை வந்தவருக்குத் தர்ம
|ங்கள் இன்னும் அ  ைட யா ள ம் காணவில்லை என்று திடீ ரென ஆ. சுரேஷா, வா! வா!' என்று உற்சாகமாக வர வேற்கிறார் வந்தவர் தன்னை அடையாளம் க ன் ட  ைத யி ட் ே குளிர்ந்து போகிறார். இந்த ஞாபகசக்தி நனவு மனமாயின் உடனடியாக வந்திருக்கும். நனவிலி மனமாயின் அறவே ஞாபகம் வராது. எனவே இரண்டுக்கும் இடைப்பட்டதாகவே இருக்க வேண்டும். இது பொது ாக நணவு மனத்திற்கு அடுத்தாற் போன்று இருக்கக் கூடும். எனவே இது நனவடிமனம் என்று அழைக்கப்படுகின்றது. స్ట్ర
2/ برای
மனிதம் பொருள் பெற வேண்டுமாயின் மனித மனங்கள் மாறவேண்டும்.
உள்ளத்தை ஆலயமாக மாற்றிவிட்டால் தேவ ஆலயம் தேவைதானா? = சூ அல்றின்

Page 16
666)
- வெ. யூஜின்
GiiT 585}T
வேலை என்பது, யாவராலும் அறியப்பட்ட சொல்லும், எல்லோ Մո9)ւն Զ.600 նմuւt-, 2 680 մ լե g கொண்டு வருகின்ற ஒரு நிலையு 10ாகும் அனைத்து மக்களையும் அ என் பத் தி ல் ஆழப்பதித்து விடு வதில் பெரும்பங்கிணுை வகிப்பது இந்தக் கவலை தான். இவ்வுலகில் இவலையால் பிடிக்கப்படாத மணி தன் எ வ னு ம் இல்லையெனத் தெளிவாகக் கூறலாம், மனிதன் வாழ்நாளில் ஏ தோ ஒரு வகைக் வேலையினால் அல்லது ஏக்கத்தி பிடிக்கப்பட்டவனாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றான்.
६ أم في
யானது பொதுவான அம்சமாகி விட்டது. மேலும் இன்றைய மக் களிடையே ஏக்கம், நடுக்கம், பதற் றம், அமுக்கம், பிதி போன்றவை யும் காணப்படுகின்றன. இவையும் கவலையை ஒத்தவையே.
இவற்றினால் மனிதனிடத்தில் பல தாக்கங்கள் உண்டாகின்றன. இவற்றினடியாக வரும் தவறுகள் பல வழிகளால் விமர்சிக்கப்படுவ துண்டு. இத்தவறுகள் மனிதனு டைய கவலைகளின் தன்மைக்கு ஏற்ப அமைகின்றன. மனித வாழ் வில் கவலையின் அனுபவமானது அவனுக்கு நிச்சயமாக பழக்கப்
பட்டதாகவே அ  ைம கி ன் ற து.
இந்தக் கவலையானது சர்வதேச சாதாரண இ யல் பா கி அமை கின்றது. கவலையால் பீடிக்கப் பட்டவன் அவனது அனுபவத்தால் பயத்திற்கும், பீதிக்கும் உள்ளாக் கப்படுகின்றான். ஒர் இழப்பினைத் தாங்க முடியாத் மனநிலை, தேவை யான ஒன்று கிடைக்காடிையால் உண்டாகும் தாக்கம், மீள முடி யாத நோய் போன்றவை மனித மனங்களில் கவலையை தோற்று
விக்கக் காரணமாய் அமைகின்றன
இன்று இந்தக் கவலையானது
அவற்றின் தன்மைக்கேற்ப இரண்டு
ஏனெனில் கவலையானது மக்களி டையே பல தாக்கங்களை உண்டு நியாயமற்றவையாக இருக்கும் அதேவேளையில், சில நேரங்களில் கவலையானது மனித னுக்கு நியாயமான தாவும் உதவி
 

அளிப்பவையாகவும் அமைந்து விடு கின்றது.
எனவே, கவலையானது ஆரோக் இயமான கவலை எனவும், ஆரோக் இயமற்ற கவலை எனவும் இரு வகைப் படுத்தப்பட்டுள்ளது.
ஆரே க் கி ய மா ன கவலை யானது பல மனிதர்கள் தங்களது அனுபவ வாயிலாக நல்லதென உணர்ந்துள்ளார்கள். இது மனித எனிடத்தில் சாதாரண தாக்கமாகவே அமைகிறது. இந்த வகைக் கவலை யினால் மனிதனுக்கு எது வித | ஈ தி ப் போ, தொந்தரவோ ஏற் படப்போவதில்லை. இ வ. ற் றிக் கு உதாரணங்களாக பரீட்சைகள், நேர் முகத் தேர்வு க ள் போன்றவை இளைக் கூறிக் கொள்ளலாம். இவ் வேளைகளில் குறிப்பிட்ட நபரிடத் தில் கவலையானது அல்லது ஏக்க மானது அதிகரித்துச் செல்வதைக் காணமுடிகிறது. குழந்தையைப் பிரசவிக்கும் தாயிடம் ஏற் படும் கவலையும் (ப யம்) இத்தகைய ஆரோக்கியமான கவலை எனக்
AssFirsinaTea) fir iħ,
ஆரோக்கியமற்ற நிலையில் கவலை யானது ஒரு தனிநபரில் எதுவித
காரணமின்றியும் குறிக்கோள் இல்
லாமலும் தோன்றுகிறது. இதனால் இது பயனற்றதாகக் காணப்படு
இறது. இந்நிலையில் அந்த தனிநபர்
இவலையினால் கெ ஸ்ளு ம் பய
ம னது நியாயமற்றவையா ஆ அமைந்து விடுகிறது. சில சமயம் பாதிப்பையும் ஏற்படுத்தி விடுஇன் 4Dğil.
மேலும் ஒருவர் கவலை தொன் கிறார் என்பதன் அடையாளமாக இவலையின் குணாதிசயங்களாக பின்வருவனவற்றை அவரிடத்தில் உணர்ந்து கொள்ளலாம்.
வியர்த்தல், நாடித்துடிப்பு அதிகரிப்பு, இதயத்துடிப்பு அதிகரிப்பு, வயிற்றுக் கோளாறுகள், வயிற்றோட்டம், தொடர்ச்சியாகச் சிறுநீர் கழித்தல் , தூக்கமின்மை,
$@tୋ}&ୋir,
(3ց: Ո՞լյլի,
வலிகள்,
வாய் உலர்தல்,
தலையிடி, இரத்த அழுத்தம் அதிகரிப்பு, நடுக்கம் முதலியன.
இவை போன்ற குறிகளை நாம் ஒரு தனி நபரிடம் காணும் போது அவர் ஏதோவகையான தாக்கத் தினால் கவலையடைந்துள்ளார் என்பதை உணர்ந்து அவற்றிற்கு தகுந்த சிகிச்சை அளிக்க முன்வர வேண்டும். இதற்கான சிகிச்சையை உடலியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பெற்றுச் சுகம் பெற gifth. ♔
24 தான்

Page 17
போர்ச்சூழலும் மனப்பாதிப்புகளும்
- ஸ்ரனி அன்ரனி
ஒரு நாட்டிலே நடைபெறுகின்ற போர் உயிர்ச்சேதங்களையும்
உடமை அழிவுகளையும் மாத்திரமல்ல மனித மனங்களில் பெரும்
சிதைவுகளையும் எற்படுத்தி விடுகின்றது. போரின் தாக்கங்கள் மனித இதயங்களில் ஏற்படுத்தும் மனோ ரீதியான பாதிப்பு அவர்களது ஆளு
மையையும் உணர்வுகளையும் சிதைதது விடுகின்றது. உடமைகளுககு.
ஏற்படும் அழிவு, சிதைவுகளைப் புனர்நிர்மாணப் ப ணரி க ள் மூலம் நிலிர்த்திசெயயலாம். ஆனால் மனங்களில் உண்டாகும் காயங்களைக் குணபபடுததுவது கடினமானதாகும்.
தொடருகின்ற போர் மனித உள்ளங்களைச் சிதைத்துச்
பின்னமாக்கி, விரக்தியின் விளிம்பிற்குத் தள்ளி வாழ்க்கையைச் சூனிய மாக்கி விடும். போர்ச் சூழலிருந்து விடுபட முடியாவிட்டாலும், அதன் தாக்கங்களை இனம் கண்டு மனத்தைப் பக்குவப்படுததி வாழ வேண் டியது இன்றைய கட்டாயத் தேவையாகும். இச் சூழ் நி ைல யில் போரின் தாக்கங்களை எம் மனங்களில் சுமந்து தான் தீர வேண்டும்
மனச்சமநிலையில் மாற்றம் و
ஒரு போர்ச் சூழல் மனித ஆளுமையில் ஏற்படுத்தும் தாக்க ம் குறிப்பாக மனச்சமநிலையையே பாதிக்கின்றது. ம னி த உள்ளங்கள்
சுயமாகச் செயறபடுதலைத் தடுபபதையே இது குறிதது நிற்கின்றது. நிதானமாகவும் சுயமாகவும் சில தீர்க்கமான முடிவுகளை மேற்கொள்
ரூவதை தடுக்க உளச்சமநிலையில் ஏற்படும் தாக்கம் காரணமாகினறது.
இதன் விளைவாக மனோ வலிமை குறைந்து மனித செயற்பாடு கள் பலவீனமடைகின்றன. போர்ச் சூழல் ஒரு மனிதனுடைய அன்றா டச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் சக்தியாக மாறுகின்றபோது
தன்னம்பிக்கையை இழந்து விடக்கூடிய நிலைக்கும் தள்ளப்படலாம்."
திட்டமிட்டு ஒரு காரியத்தைத் தொடர்ந்து செயற்படுத்த முடி யாத அளவுக்குத் தடைகள் ஏற்பட்டு மனோவலிமை குறைந்து எ தி லும்
பிடிப்பில்லாத ஒரு இயல்பு மனங்களை பற்றிக் கொள்ளுகிறது. ஆளுமை
நான் 30

சிதைவுறுகின்றது. இதனாலேயே இ ன்  ைற ய போர்ச் சூழலில் அதிக மானோர் சலிப்படைந்த மனநிலையுடன் வாழ்கின்றனர். இதனை நிவிர்த்தி செய்ய மனச்சமநிலை பேணப்படவேண்டும். இ ன றை ய போர்ச் சூழல் எம்மால் தடுக்க முடியாத கட்டுபபடுத்த முடியாத ஒரு துர்நிகழ்வு என்பதை மனதில் இருத்தி, அதற்கேற்ற விதத்தில் திட்டங் களைத் தீட்டி செயற்படுவதனால் மனதில் ஒரளவு மனோவலிமையை ஏற்படுத்த முடியும், இந்நிலையில், நாளையைபபற்றி அதிகம் சிந்திப் பதை விடுத்து அன்றாடக் கடமைகளை நிறைவேற்றுவதன் மூல ம், மனச் சமநிலையைப் பேணமுடியும், பேணவேண்டும்.
உணர்வுகளில் மாற்றம்
குறிப்பாக போர்ச் சூழல் மனித மனங்களில் ப ய ம் எ ன் னு ம் உணர்வை மேலோங்கச் செய்கின்றது. ஒகு மனிதன் த ன் னு டைய சக்தியால், ஆற்றலால் கட்டுப்படுத்த முடியாத ஒன்றுக்குப் பயப்படுகின் றான். அவனுடைய இயலாமையே இதற்குக் காரணம். சில வேளை களில் இத்தகைய பய உணர்வின் காரணமாகவே தற்காப்பு நடவடிக் கைகளில் ஈடுபடுகின்றான்.
இன்று எமது போர்ச் சூழலில் பய உணர்வு முன்னுரிமை பெறு கின்றது. இன்று இடம் பெறும் விமானத்தாக்குதல்களும், குண்டு வீச்சு ஆளும் மனித மனங்களில் பீதி உணர்வை ஏற்படுத்தி நிச்சயமற்ற தன் மையை தோற்றுவித்துள்ளன. இந்த உணர்வு மனதில் ஆழமாகின்ற போது எத்தகையதொரு செயலையும் செய்ய முடியாத தனிமையை நாடும் சூழ்நிலைக்கு ஒருவரை இட்டுச் சென்று விடும் குறிப் பாக குழந்தைகளில் இத்தகைய பய உணர்வின் தாக்கங்கள் நண வி லி மனத்தைச் சென்றடைவதனால் எதிர்காலத்தில் ஒரு ஆரோக்கியமற்ற, ஆளுமை குன்றிய சமூகத்தை தோற்றுவிக்க இது மூ ல காரணமாக
Oft to, *,
பேர்ச் சூழல் தொடர்ந்து நீடிக்குமானால் மனித மனங்களைப் பயமானது ஒரு நோய் (Fear Neu osis) வடிவத்திலேயே பீடிக்கலாம். பாதுகாப்பு அரண்களில் (பதுங்குகுழி) நிரந்தரமாகவே வாழும் வாழ்க்கை ឆ្នា – ខ-រើប្រា நோயின் உச்சக்கட்டமாகவே அமைகின்றது. இது இன்று தவிர்க்க முடியாத ஒரு நிலையாயினும், இதற்கு அடிமைப் படுவதன் மூலம் எம் ஆளுமை சிதைவுற்று எம்மைத் தாழ் வு மனப் பாங்கான ஒரு வாழ்க்கை முறைக்கு இட்டுச் செல்லும். இத்தகைய பய உணர்வுக்கு அடிமையாகாது, அன்றாட செயற்பாடுகளில் மனதை ஈடுபடுத்தி வாழ முயற்சிப்பதே இன்றைய போர்ச் சூழலில் அவசிய LIDITETSF gi
عية ET 2 3ة

Page 18
மாற்றம்
இன்றைய போர்ச் சூழல் பெரும்பாலான மனித மனங்களில் ஒரு எதிர்மறையான கண்ணோட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடரும் போர்ச்சூழல் எதிர்கால வாழ்வைப் பற்றிய ஐயப்பாடுகளை ம னி த உள்ளங்களில் தோற்றுவிப்பதால் வாழ்வின் இரு ண் ட பக்கத்தையே நோக்கத் தூண்டுகின்றது. எமது மனதில் எழும் எண்ணங்கள்தான் எம் வாழ்வை உயர்த்தவோ, வீழ்த்தவோ முடியும். எப்போதும் எதிர் மறையான எண்ணங்களை போர்ச்சூழல் பிரதிபலிப்பதால் நேரிய சிந் தனைகள் மனித உள்ளங்களில் நிலை பெறுவது கடினமாகவுள்ளது.
போர்ச்சூழல், வாழ்வில் நம்பிக்கையோடு எதிர்காலத்தை நோக்கத் தடையாகவரினும், மனங்களில் நம்பிக்கையான நல்லெண்ணங்களோடு, இன்னும் வாழ்க்கை வளமாக அமைய இடமுண்டு என்னும் சிந்தனை கள் மனங்களை ஆக்கிரமிக்கும் போதுதான், வாழ்வில் ஒரு பிடிப்பு ஏற் படும். என்ன வாழ்க்கை இது? என்று அலுத்துக் கொள்வதை அகற்ற வேண்டும். வாழ்வின் இருண்ட பக்கம்தான் நமது நியதி என்பதைத் தவிர்த்து மற்றைய பக்கம் நிறைவாக அமையலாம் என்ற நம்பிக்கை உணர்வு மேலோங்க வேண்டும்.
போர்ச் சூழல் மனித மனங்களில் ஏற்படுத்தும் நிசமான தாக்கங் களை மறைத்து, போலியான ஒரு நம்பிக்கை உணர்வில் வாழும் ஒரு நிலைக்கு இட்டுச் செல்வது நேரிய சிந்தனைக்கு உகந்ததல்ல. மாறாக எதிர்மாறான கண்ணோட்டம், தொடர்ச்சியான, எதிர்மாறான எண் ணங்கள் போன்றவற்றிலிருந்து விடுபடுவதற்கான வழிவகைகளில் நாம் முயல வேண்டும்!
عو& ନିର୍ବ
亭
兴
உள வளர்ச்சிப் பாசறை
1991 மே 4-ம், 5-ம் திகதிகளில் இரு நாட் கருத்தரங்கினை அறவழிப் போராட்டக் குழுவினர் ஒழுங்கு செய்துள்ளார்கள்,
இன்றைய சூழலும் உள வளர்ச்சியும்'
என்ற தலைப்பில், கைதடி நவீட் நிலையத்தில் நடைபெறவிருக்கும் கருத்தரங்கில் பல பாகத்திலும் இருந்து இ  ைள ஞ ர் கள் கலந்து
கொள்கின்றனர்.
鲸T酶、

நட்புறவும் , - - - - -
خهکی نقشی بتنیها بعضی نخاعی جمعیت اجتمین جاضر اترنت بمبی
ஆளுமை விருத்தியும்
மனித வாழ்க் ஸ்கியில், ஒருவர், ம் ற் பெற ரு வ ரு டன் நட்புறவு கொள்வதென்பது ஒரு நல் ல நிகழ்வாகும். நற்புறவு நம்பிக்கை பின் அடிப்படையிலேதான் உரு வாகின்றது. ந ட் புற வு மனித வாழ்க்கையில், ஒவ்வொருவரிடத தும் இடம் பெற வேண்டிய முக்கிய மான ஒரு சிறந்த பண் பா கும். இந்த நட்புறவானது மனிதனுடைய ଧୃୋy ତLD ଢ0}}}}  ெம ன் மே லு ம் வளர்ச்சியடையச் செய்வதில் பெரும் பங்கு வகிக்கிறது. உண்மையான நட்புறவு என்பது ஒருத்தரை = அவனை அவனாகவும், அவளை அவளாகவும், அவரவர்களுக்குரிய குறைகளோடும், நிறைகளோடும் ஏற்றுக் கொள்ளுதலாகும்.
சாதாரண வாழ்க்கையில் இரண்டு நெருங்கிய் நண்பர்கள், த ம து விருப்பு வெறுப்புக்களை, வெற்றி, தோல்விகளை கவலைகள், மகிழ்ச்சி களை ஒருவர்க் கொருவர் திறந்த மனதுடன் வெளிப்படுத்துவதோடு தமக்கிடையேயுள்ள இரகசியங் களையும் காப்பற்றிக் கொள்வர்.
ஒருவ்ன் ஒருத்தியைத் தன் சிநேகி தியாகக் கொண்டிருக்கிறான் என  ைவ த் து க் கொள்வோம். இரு வருக்குமிடையில் உண்மையான நட்புறவு நிலவுகின்றது என்றால்
-- 95 GMT LD5ð slöt
AMMSAMMAASAMAMMMAMMAAqSqAASSSASLSASeSeSeSMTS MSTSTS
>.--—>−
அவர்கள் ஒருவது வீ ட் டு க் கு மற் ற வ ர் சர்வசாதாரணமாக வருகை தருவதும், நீண்ட நேரம்
உரையாடுவதும், துே  ைவக 60 ெ
இனங்கண்டு அவற்றை நிறைவு செய்வதும், மற்றும் தேவையான உதவிகளைச் செய்து கொடுப்பதும் அவர்களிடையே காணப்படும் பண் பாய் இருக்கும்.
ஒரு இரகசியத்தை இருநண்பர் கன் ப கிர் ந் து கொள்கிறார்கள் என்றால், அங்கே நட்புறவின் உச்சக் கட்டமாக நம்பிக்கை என்ற சிறப்பம்சம் பா ல மா ய் அமைந் திருக்கும். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் இருவரும் நாளுக்கு நாள் எ வ் வ ள வு வளர்கின்றார் களோ, அவ்வளவுக்கு நட்புறவு தன்னிறைவு பெறுகின்றது. யாரா வது ஒருவர் இவ்வுலகில் மற்றவர் களது தொடர்பின்றித் தனித்து வாழ்கின்றார் - தனிமை நிலையில்
நிற்கின்றார் என்றால் அவருக்கு
வாழ்வில் ஏதோ பிரச்சினை என் பது நிச்சயம். அவரது உள்ளத்தில் கவலைகளும், ஏக்கங்களும் மடங்கிக்
கிடப்பதனாலும், மற்றவர்களில் நம்பிக்கையற்ற தன்மையாலும் நட்புறவுத் தன்மையை இழ ந் து
தனிமை என்னும் காரிருளில் முடங் கிக் கிடக்கின்றார். நட்பு ற வின் மகத்துவம் இங்கே ஈர்க்கப்படுகின் so šlo
33 நான்

Page 19
தனிமையில் வாழும் ஒருவருக்கு ஒர் உற்றநண்பன் இருப்பானானால் அவர், தமது ஏக்கங்களை, கவலை களைப் பகிர்ந்து கொள்ள முடியும், முதலில் மனச்சுமை குறைகின்றது. சில சமயங்களில் பிரச்சினைக்கு விடிவு ஏற்படுகின்றது. அ ல் ல து அதன் வேகம் தணிகின்றது, அதன் காரணமாகத் த னி  ைம இருளில் தத்தளித்தவர், ஒரு புதிய ஒளி பெற்று சுயாதீனமான மனிதனாக நடமாட முடிகின்றது. நடமாடுகின் றார் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கு கின்றது
நெருக்கமான நட்புறவு கொள் வோரைப் பற்றி, நம் மி ல் சிலர் பொறாமையுணர்வு காரணமாகத்
உண்டு. உண்மை நட்பு இத்தகைய த வ ற ர ன உணர்வுகளாலும், வ த த் தி க இா லும் கருகி விடு வதில்லை. அதனைத் தடுத்து விட முடியாது. தட்புறவைத் தடை போடுவது மடமைத்தினம் ஆகும்.
முழுமனித ஆளுமை விருத்திக்கு நட்புறவு இன்றியமையதேது. நல்ல நட்புறவு இருத்தால் தனி  ைம, ஏக்கம், நிம்மதியின்மை, சேரரிவு போ ன் ற பாதிப்புணர்வுகள் உரு வெடுக்க மாட்டா நாளுக்கு நாள்
படும் த ட் புறவு, ஆளுமையில் தன்னிறைவு பெற்ற மனிதராக, புதிய சிந்தனையுடன் எ ம்  ைம வெற்றிப் பாதையில் வழி நடத்
தப்பபிப்பிராயம் கொள் வ தும் திச் செல்லும்,
ஒரு பார்வை:
சமூக விஞ்ஞானச் சுடர்
சமூகவிஞ்ஞானம் என்ற சொல்லே எம்மில் பல ருக்கு விளங்குவ தில்லை. விஞ்ஞானம் வேறு கலை வேறு என்பதுதான் எ டி க் குத் தெரியுமே தவிர, எமது பெற்றோர்கள் பலருக்கு ச மூ க விஞ்ஞானம் என்பது பற்றியே தெரியாது. படிப்புப் பற்றிய சாதி அ0மப்பில் சமூக விஞ்ஞானந்தான் ஆகக் கடைசியில் வைக்கப்பட்டுள்ளது. யாழ் பல்கலைக் கழகத்திலும் இதே நிலைதான் கலைத்துறையை சமூக விஞ்ஞானமாக பார்க்கும் தன்மையில்லை. சமூகத்தை முழுமையான முறையில் சரியாக ஆராய்ந்தால் சமூகத்தினதும். சமூக நிகழ்ச்சிகள் சமூக நிறுவனங்களி னதும் தன்மையையும் எதிர்காலத்தையும் சரியாகச் சொல்லலாம். இதுவே சமூக விஞ்ஞானமாகும். சமூகத்தை ஒரு விஞ்ஞான ஆய்வு க்கு ரி ய பொருளாக எடுத்து பரிசோதனைக்குட்படுத்தினாலேயே, சமூக த் தி ல் எதை எதை எவ்விதம் மாற்றவேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். எமது மரபுகளைப் புரிந்து கொள்ளவும் எடுக்க வேண்டியதை எடுத்து விலக்கவேண்டியதை விலக்கிக் கொள்ளவும் சமூக விஞ்ஞானம்
- பேராசிரியர் கா. சிவத்தம்பி
DIT Gór 34

உனக்கு மட்டும் வாழ விரும்பினால் நீ மகிழ்ச்சியாக இருக்க முடியாது."
வெற்றி வாழ்வின் ஐந்து இரகசியங்கள்
 ിഖ ற்றியின் திறவுகோல் எது? எடுத்த முயற்சியை ஊக்கமுடன், மகிழ்ச்சியுடன், நம்பிக்கையுடன் செய்து முடிப்பதே மனித வரலாற் றில் வெற்றிகண்ட ஆண்களும் பெண்களும் பின்வரும் ஐந்து இரகசியங் களைத் தமதாக்கி வாழ்ந்திருக்கிறார்கள் வாழ்க்கை பயனுடையதாக முழுமையானதாக அமையவேண்டுமானால், நாமும் அவற்றை நமதக் இக்கொள்வோம்.
உன் உள்ளத்திற்கு மதிப்புக் கொடு.
அதாவது உன் எண்ணங்களிலும் செயல்களிலும் ஆழ்ந்த பொறுப் புணர்வு வைத்துக்கொள். உன் உள்ளத்திற்கு, உன் சொல்லுக்கு, உன் தொழிலுக்கு, உன் குடும்பத்தினருக்கு உண்மையாக இரு அதா வது நீ ஈடுபடுதலில், கடுமையாக உழைப்பதில் நம்பிக்கை வை. அதாவது உன் உள்ளத்தின் தரத்தை நிர்ணயிக்க வேண்டுமேயன்றி உன் உள் வித்தை பிறருடன் ஒப்பிடுதல் அல்ல. வேறு ஒருவனை விடத் திறமை யாக இருக்கவேண்டும் எனபதல்ல பிரச்சினை நீ எப்படி இருக்க வேண் டும் என எண்ணுகிறாயோ, அதைவிட மேலாகச் சேய் என உன் மதிப் பும் தகைமையும் உன்னைக் கோரி நிற்கின்றன.
வின்ஸ்டன் சேர்ச்சில் எதிரிகளிடத்திலும், மதிப்பும் உயர் நிலையும் பெற்றிருந்தவர். அவர் பிரிட்டன் பிரதமராக இருந்த இறுதி நாட் களில் ஒரு பொது நிகழ்ச்சியில் பங்குகொண்டு உரையாற்றினார்.
பின் வரிசையில் இருந்த இருவர் சேர்ச்சில் பற்றி மனம்போனவாறு தமக்குள் பேசிக்கொண்டனர்.
"இவர்தான் வின்ஸ்டன் சேர்ச்சில். இவருக்கு இப்பபாதி பைத்தியம். இவர் விலகி தகுதியான இளைய அரசியல்வாதி களுக்கு நாட்டை ஆள வழிவிடவேண்டும். 9 yi,
চT দুৰ্গা 35 | ۔۔

Page 20
கூட்டம் முடிந்ததும் அந்த இருவர் முன்னால் சென்ற சேர்ச்சில், "ஜென்ரில்மென், அவருக்கு காதும் கேளாதாமே" என்றாராம்.
இருவரும் சேர்ச்சிலின் அவதானியபுத் திறமையை எண்ணி வெட் கித் தலை குனிந்தனர்.
எதிரிகளுக்கும் மதிப்பளித்து, சீமான்களே என விழித்து, சூடான பதில் அளித்த சேர்ச்சில் வாழ்வில் உயர்ந்து நின்றார்.
உன்னை மற்றவர்களுக்காக ஆக்கு.
மற்றவர்களில் நம்பிக்கை வை. அவர்களின் கனவுகளை வளர்க்க நேரம் ஒதுக்கு,
'ஒரு ஆண்டுமட்டும் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால் தானியம் விருத்தி செய். ஆனால் பத்தாண்டுகள் மகிழ்ச்சியாக இருக்க விரும் பினால் ஆண்களையும் பெண்களையும் விருத்தி செய்' என்றார் ஓர் அறிஞர். -
உன் குடும்பத்தில், உன் நண்பரிடம் சக தொழிலாளிகள் பத்தி யில் உன் சக்தியையும், அவரவர் ஆர்வத்திற்கேற்ப, முதலீடு செய் உற்சாகம் என்ற பசளையிட்டு உன்னால் அதைக் கட்டியெழுப்ப முடியும்.
மிகக் குறைந்த சத்துணவைப் பெறும் ஒரு மரம் சிறிது காலம் வாழும். ஆனால் அது வளராது. தொடர்ந்து சத்துணவு கொடுத்து வந்தால், தேவைக்கு மேலும் உணவிட்டால் அது வாழும். மேலோங்கி வளரும், பூத்துக் காய்க்கும், பழம் தரும்,
ஏமாற்றங்களை தைரியமாக மாற்று.
சகிப்புத் தன்மையையும் நற்பழக்கத்தையும் விருத்திசெய்யும் வேளை சொந்த அனுபவங்கள் அன்புடைமையாகவும், உணர்ச்சி பூர்வமாகவும் இருப்பதை பலரும் சந்தித்திருப்பர் பெறுபேறுகள் பெறுமதிமிக்கவை, நினைவுகொள்ளத் தக்கவை. அவை ஏமாற்றங்களின் வடுக்களாலும் பிரயாசத்தின் குருதியினாலும் கறை படிந்த காரணத்தால்,
வரலாற்றின் பக்கங்கள், எதிர்ப்புக்களையும் இயலாமைகளையும் நேர்நின்று வெற்றிகண்ட ஆண்கள் பெண்களின் கதைகளால் நிரப்பப்
LLE_606) 1.
நான் 36
 
 
 
 
 
 
 
 
 
 

வாழ்வின் வளர்ச்சியை அனுப வி யுங் கள் வெறும் வெகுமதிகளை அல்ல.
நாம், எல்லை நிர்ணயிக்கப்பட்ட, இன்றே பிரச்சினைகள் தீர்க்கப் பட வேண்டும் என்ற சமுதாயத்தில் வாழ்கிறோம். மூன்று நிமிடத் தில் அப்பம், உடன் தோசை, ஐந்து நிமிடத்தில் கோப்பித்துள், ! உடன் தீர்வு, உடன் வெற்றி. எல்லாம் instant வாழ்க்கை.
அமைதியான வாழ்வை விரும்புவோர், வாழ்க்கையில் சொந்தக் உண்டுபிடிப்பும் தனி உழைப்பும் இணைந்த முடிவுறாப் பயணம் என் பதைப் புரிநீதுகொண்டு, சிறு வெற்றிகளையும் திருப்தியுடன் ஏற்றுக் கோள்ள வேண்டும். அதாவது உன் குழந்தைகளுடன் விளையாடவும் நேரம் ஒதுக்கிக்கொண்டு எனையவற்றை சுதந்திரமாக அணுகும் முறை தேவை.
ஒரு வெப்பமானி, ஒரு வெந்நீர்ப் போத்தல், ஒரு மழைக் கோட், ஒரு பாகுட் இவை இல்லாமல் நான் எங்கும் செல்வதில்லை என் எழுதினார் நாவலாசிரியர் டொன் ஹெரோல்ட்,
நான் வாழவேண்டுமென்றுதான் அதிகாலையில் வெறுங்காலுடன் நடந்து போகிறேன். அதிகம் விளையாடுகிறேன். முடிந்தவரை வாய்ப் புக்களைப் பயன்படுத்துகிறேன், என்றும் அவர் சொன்னார்.
உன்னைவிடப் பெரிதான ஏதாவது ஒன்றில் உன்னை ஈடுபடுத்து.
இசிக்கு மட்டும் நீ வாழ ஆயத்தமானால் நீ மகிழ்ச்சியாக இருப் 11 மி என நான் நம்பமாட்டேன். உன்னைவிடப் பெரிய முயற்சி ஒன்றைத் தெரிவுசெய்து அதனைத் திறமை உணர்வுடன் செய், அதன் எல்லைவரை, முடிவுவரை உன் வாழ்வின் ஒரு பகுதியே. நீ செய லாற்றியதிலிருந்து வெற்றியை அளவிடாதே. உன்னால் எது செய்ய முடியும் என்பதனால் அளவிடு.
|ஆதாரம் றிடேர்ஸ் டைஜெஸ்ற்
உண்ணலாம், உடுக்கலாம், உயரமாய் வளரலாம். இவைமட்டும் முழுமனித வளர்ச்சி அல்ல, உள்ளத்தில் எழும் எண்ணித்தினால் உண்டாகும் இளர்ச்சியே ஆளுமை வளர்ச்சியாகும்.
37 நான்

Page 21
நல்வாழ்விற்கு நல்விருந்து O O. O. O.
தொகுப்பு தி. வினி
இ வாழ்க்கை என்பது சலசலத்து ஒடிக் கொண்டிருக்கும் நீரோட்டம்
போன்றது. இதில் பலர் வீழ்ச்சியடைகின்றனர். சிலர் எழுச்சி பெறு
கின்றனர். இந்த வீழ்ச்சியும் எழுச்சியும் இடம் பெறக் காரணம் மனித மனங்களில் ஏற்படுகின்ற நெரிசலும் விரிசலுமாகும். பிறருடன் பழகி அவர்களின் மனங்களைக் கவர்ந்து அன்பையும் ஆதரவையும் பெறுகின்றபோது நெருக்கமான உறவையும், அதிலிருந்து விலகிக்கொள் ளுகின்ற போது பிரிவையும் உணரக் கூடியதாக இருக்கும்.
இ ஒருவர் மிகவும் நல்லவராக இருக்கலாம், பல சேவைகளைச் செய் யலாம். ஆனால் பிறருடன் பழகும் போது கொதித்து விழுந்தால் எப்படி அவர்களது நம்பிக்கையைப் பெறுவது? திறந்த மனத்தோடு
நமது அன்பை அவர்கள் உணரும்படி செய்ய வேண்டும்.
இ நல்ல உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதன் மூல ம் வாழ்க்கை யினை வளப்படுத்த முடியும் நல்ல நண்பர்களைக் கொண்டிருப் பவர்கள் இணக்கம் உடையவர்களாகவும், இனிமையாகப் பேசு பவர்களாகவும் இருப்பார்கள். உறவு இல்லாத வாழ்வு, ஊட்டம் இல் லாத உணவு போன்றது. நம்முடைய பேச்சைக் கொண்டே மற்றவர் கள் நம்மை மதிக்கிறார்கள். பிறர்மனத்தை வருத்தாமல், புண்படுத் தாமல் நடந்து கொள்வது சிறந்த பண்பாகும்.
இ ஒவ்வொருவரையும் பாராட்டுகின்ற போது நாம் அவர்களுக்கு உற் சாகத்தைக் கொடுக்கிறோம். நாம் அவர்களுக்கு மதிப்பளிக்கின் றோம். அவர்கள் முன்னேற்றத்தில் நமக்கு அக்கறை உண்டு என அவர்கள் உணரும் படி நடந்து கொள்ள வேண்டும். அப்படியானால் தான் அவர்களும் நமது உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடப்பர்.
இ நட்புக் கொள்ள விரும்புபவர்களுக்கு செஸ்ட்டர் பீல்ட் சில வழி
களைக் கூறுகிறார்.
8

罗
霹,
அடிக்கடி கண்டு அளவளாவலாம். ஆனால் ஒரே வே  ைள யில் மிகுந்த நேரம் பேசிக் கொண்டிருக்கக் கூடாது.
எ வருடன் பேசுகிறோம் என்பதைக் கவனித்து அதற்குத் தக்கவாறு பேச வேண்டும்.
கதைகள் அளக்கலாகாது. ஆனால் பொருத்தமான கதைகளாயி ருந்தால், விருப்பையும் நேரத்தையும் கவனித்துச் சுருக்கமாகச் சொல்ல வேண்டும்,
எவ ையும் இழுத்து வைத்துக் கொண்டு நீட்டிப் பேச வேண்டாம்
நண்பர்களோடு இருக்கும் பொழுது பேசுவதைக் குறைத்துக் கேட் L$4೫ಿ மிகுதிப்படுத்த வேண்டும்.
女Jó。 கூடியிருக்கும்போது விவாதத்திற்குரிய பேச்சை எ டு ப் ப து ՖԻմ մ)]:
தன்னனப்பற்றி தற்பெருமையாகப் பேசத் தொடங்க வேண்டாம். அடக்கமும், ஆழமும் நிறைந்திருக்க வேண்டும். இதயத்தினுள் ஒளிருந்து வெள்ளையாகப் பளி ச் சென்று வெளிப்படையாக பேச
வேண்டும்.
பேகம்போது எவரிடம் பேசுகிறோமோ அவர்களது முக த் தை உற்று நோக்கிக் கொண்டே பேசவேண்டும்.
0. வம்பை விலைக்கு வாங்கவும் வேண்டாம், விற்கவும் வேண்டாம்
مراجع !& عA7 7్మ*
வித்தியாசமானவர்கள் . . .
சொந்தம் ஒரு நூல்வேலி (சிறுகதைத் தொகுப்பு
EASY ENGLISH Part - V.
Tឆ្នាំ មំ ១

Page 22
சிறுவர் உடல், உள வளர்ச்சி
9 சிறுவர்கள் வளர்ச்சியுறும் பருவத் தி ல், அன்பு, ஆதரவு, அர வணைப்பு இல்லாத வாழ்க்கை அமையப் பெற்றால், நேர l க்கு ஆளாவார்களா?
& ஊட்டச் சத்து நிறைந்த உணவும், உறுதியான உடலும் வாய்க்கப்
பெற்றால் மனித வாழ்வு சிறப்படையுமா? உள்ளங்களை உணரும் உளவியலாளரிடம் கேட்கப்பட்ட கேள்வி கள் இவை,
நடை பெற்ற இர ண் டு உலகப்போர்களின் பின், ஜேர்மனியில் உள்ள ஓர் அனாதை இல்லத்தில் வாரும் குழந்தைகளின் மனோநிலை தொடர்பான ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.
அந்த அனாதை இல்லத்தில் இருந்த சிறுவர்கள் இரண்டு பிரி வாகப் பிரிக்கப்பட்டனர். முதலாவது குழுவினர் அன்புள்ளமும், இரக்க சுபாவமும் கொண்ட ஒரு விடுதிப் பராமரிப்பாளரிடமும், இரண்டாவது குழுவினர் கண்டிப்பும், கடுமைப் போக்கும் கொண்ட மற்றொரு விடுதிப் பராமரிப்பாளரிடமும் ஒப்படைக்கப் பட்டனர். ஆனால் இரு குழுவின்ருக் கும் ஒரே மாதிரியான உணவு வழங்கப்பட்டது. ஆய்வுக்குரிய கால எல்லை இரண்டு வாரங்கள் எனத் தீர்மானிக்கப்பட்டது.
முதலாவது குழுவில் இருந்த பிள்ளைகளின் வாழ்வு மகிழ்ச்சி நிறைந்ததாயும், ஆரோக்கியம் உள்ள தாயும் காணப்பட்டது. அவர் களின் உடல் நிறை ஆரம்பத்திலிருந்ததை விட அதிகரித் திருந்ததாயும் அவதானிக்கப்பட்டது. ஆனால் , இரண்டாவது குழுவில் இருந்த பிள்ளைகளின் நிறை முன்பிருந்ததை விடக் குறைந்திருந்ததுடன் அவர் களின் முகங்களில் மகிழ்ச்சியின் சாயல் குறைந்தும் காணப்பட்டது.
சtல எல்லை முடிவுற்றதும் முதலாவது குழுவின் பராமரிப்பாளர் இரண்டாவது குழுவுக்கும் இரண்டாவது குழுவின் பராமரிப்பாளர் முத லாவது குழுவுக்குமாக மாற்றிவிடப்பட்டனர். உணவில் எந்த விதமான மாற்றமும் செய்யப்படவில்லை மற்றைய வசதிகளும் முன்னர் உள்ள படியே செய்யப்பட்டன. . . .
ISTak 40
 

இப்போது, இரண்டாவது குழுவில் இருந்த பிள்ளைகளின் நிறை திடீரென அதிகரித்தது; அவர்களது முகங்களில் மகிழ்ச்சி பொங்கி வழித்தது. சுறுசுறுப்புடன் அவர்கள் நடமாடினார்கள். ஆனால், முன்பு உற்சாகமாயிருந்த முதலாவது குழுப் பிள்ளைகள், தற்போது வாடிக் சோர்ந்துபோயிருந்ததையும், அவர்களது நிறை குறைந்துள்ளதையும் இானக்கூடியதாயிருந்தது.
இந்த மாற்றம் எப்படி ஏற்பட்டது? இந்தத் தரவு எதனைக் காட்டுகின்றது?
அன்பும் ஆதரவும் நிறைந்த பராமரிப்பு குழந்தைகளின் உளவளர்ச் சியை அதிகரிக்கச் செய்கின்றது. அவர்களை மகிழ்ச்சி நிறைந்தவர் கிளாக்கி, வாழ்வைச் செழுமைப்படுத்துகின்றது.
நல்ல சதி துன் ள உணவு உடல் வளர்ச்சியை உண்டாக்க உள வளர்ச்சியும் ஏற்படுகின்றது. ஆனால், எ த் த  ைக ய சத்துள்ள உண வாயிருந்த போதிலும் அன்பு, ஆதரவு, இரக்கம் போன்ற சீரிய பண்பு கிள் அமையப் பெறாத விடத்து, அவ்வுணவினால் ஒரு பலனும் விளையா. உடல் வளர்ச்சி பெறாது. அதனால் உளவளர்ச்சி பாதிக்கப் படுகின்றது.
அன்பு, ஆதரவு, கருணை, இரக்கம் போன்ற மென்மைப் பண்பு கள் மனித வாழ்வு செழிப்புறுவதற்கு மிக அவசியமானவை. விசேட மஇேக் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும், உளவளர்ச்சிக்கும், உணவு, உடை இருப்பிடம் போன்றவற்றிலும் பார்க்க மேற் கூறப்பட்ட பண்புகளே மிக முக்கியமானவை.
ஒரு குழந்வையின் பூரணவளர்ச்சியானது பிறரால், தான் அன்பு செய்யப்படுகின்றேன்' என்னும் உணர்விலேயே தங்கியுள்ளது. தான் சமுதாயத்துக்கு வேண்டியவன் சமுதாயத்தால் தான் ஏற்றுக் கொள் ளப்பட்டவன்’ போன்ற உணர்வுகள் அவனை வளர்க்கின்றது.
குழந்தையை வளர்ப்பவர்களின் கனிவான பார்வை, அ ன் பா என வார்த்தை, மிருதுவான ஸ்பர்சம் இன்னும் பேச்சற்ற சைகைகள் மூலம், குழந்தையானது இந்த நம்பிக்கைகளைப் பெறு கி ன் ற து ஸ்பர் சம் என்று சொல்லப்படுகின்ற தொடுதல், தடவுதல், அனைத்தல் போன்ற நிகழ்வுகள் , ஒரு குழந்தையிடம் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஊட்டி தன்னம்பிக்கை கொள்ளச் செய்கிறது. அதன் உடல் நிலையில் பூரிப்பை ஏற்படுத்துகின்றது.
குளிர்மையான பார்வை, உன் ளங்களை ஊடுருவிச் சென்று அன் பினைப் பாய்ச்சுகின்றது. அதனால், அங்கிருந்தும் அன்பு பிரவகிக்கின்றது.
4 I Basir

Page 23
பெற்ற தாயிடமிருந்து மட்டுமல்ல, தந்தை, சகோதரர், நெருங்கிய உறவினர், நண்பர்கள், ஆசிரியரிடமிருந்து இத தே ன வ க  ைள க் குழ நீ  ைத உணரும் போது - பெறும்போது ஆரோக்கிய முள்ளதாக இருக்கின்றது.
இந்த அடிப்படைத் தேவைகள் பூர்தி செய்யப்படாத நிலையில் குழந்தையானது தன னையே நொந்து கொல ஞகின்றது. என்னுடைய நிலை சமுதாயத்தில் என்ன? என்பதை உணராத அதன் ஆசைகள் விருப் ங் சள் நிறைவேற்றப்படாத நிலை யில், அது ਨੇ னையே நொந்து சொல் ஞரின்றது. குழந்தை, மற்றவர் ளால் விரும்பப் படாத நிலை, மற்றவர்சலால் ஏற்றுக் கொள்ளப்படாத நிலை ஏற் படல் மன ஞ் சருங்கிச் சோர்ந்து டோசின்ாது தான் சொல்வது சரி என்று மற்றவர்சளால் ஏற்றுக் கொள்ளப்படாத நிலை யி ல் , தான் மற்றவர்சளால் ஏமாற்றப்பட்டு விட்டதாசவும், மற்றவர்களால் தா ன் பாவிக்கப் படுவதாகவும் எண்ணிப் பெரும் துயரம் கொள்ளுகிறது.
வளர்ந்து வரும் குழந்தைச்கு உடல், உள அறிவு வளர்ச்சி மிக முக்கியமானதாகும் இவ்வளர்ச்சியானது. உள்ளத் தையோ, அன்றி அறிவையோ அதாவது, தனியே ஒன்றையே முழுக் கவனம் செ லு த் தி வளர்க்காமல், எல்லாவற்றையும் ஒன்றின னத்து வளர்க்கும் பூரண வளர்ச்சியே குழந்தை வளர்ச்சிக்குச் சிறந்ததாகும்.
சிறுவயதிலே, இவ்வளர்ச்சியில்- அசிலும் குறிப்பாக உளவளர்ச்சி யில் தகுந்த கவனம் கிடைச் சாது விட்டால், அதன் வளர்ச் சிப் போக்கில் சில ஆளுமைச் சிக்கல்க ளின் தாக்சத்தைச் சந்திக்க நேரிடும். எனவே குழந்தைகளிடத்து வளர்ந்தவர்கள் செலுத்த வேண்டிய அன்பு, ஆதரவு, கருணையின் அவசியத்தை நாம் உணர வேண்டும். இவைகள் குழந்தைசளுக்கு மறுச்சப்படும் போது, பிற்காலத்தில் தாங்கள் வேண் டப்படாதவர்கள் என்ற உணர்வுக்காளாகிறார்கள் இசனால், இவர்கள் தனிமை உணர்வினால் தவித்து மற்றவர்களோடு நட்புறவை வளர்க்க இயலாது எண்றெண்ணி ஒதுங்கி இருந்து விடுகின்றனர் மற்றவரோடு உறவை உரமூட்ட முடியாதென்று உறங்கி விடுகின்றனர்.
கருத்துக் குவியல் 60
ஆரோக்கியமான LaD62Sgg fc) பாதிப்படைவதற்கு முக்கிய காரணம்
5 GOTP பிறனா?
உங்கள் கருத்துக்களைத் தொகுத்து உடனே அனுப்புங்கள் 莺厅á42

,-a . . پیم
ܐܝܕ܂ 11 :17 ܕܢ. - ܘ” ,'............:جيب
*、
இயலாமை, பாதுகாப்பின்மை, தன்னை இனங்காண முடியாத நிலை, தன்னிட்மி சிறுமை, தகுதியின்மை இருப்பதான உணர்வு குழந்தை போல் வயது வந்தவர்களின் தயவில் தங்கி இருக்கும் நினைவு தன் உரிமைகளை உறுதி செய்ய முடியாத பலவீனம், உல கைப் பார்த்தே பயங் கொள்ளும் தன்மை, மனச் சோர்வு, வாழ்வதிலும் இறந்து விட்டால் நலம் என்ற நிலை, தற்கொலை செய்து கொண் டரில் என்ன? எனும் விரக்தி நிலை, சோர்வு, களைப்பு, உடல்வலி, உடல் - உளம் சார்ந்த நோய் இவை யாவும் அன்பைப் பெறாதவர்கள், உறுதிப்படுத்தப்படாதவர்கள் அனுப விக் கும் அலங்கோலங்களாகும். இவை யாவும் மனநோய்கள் அல்ல. மாறாக அன்பு கிடைக் க ப் பெறாத உலகில் உருவாகும் மனித நோவுகளாகும்.
இவை, பொருள் இருந்தும், புகழ் இருந்தும், அதிகாரம் இருந்தும், ஆசை இருந்தும், வெற்றி இருந்தும், சுகம் இருந்தும், அன்பு ஆதரவு அக்கறை உறுதிப்படுத்தப்படாதபோது பிள்ளைகளின் வாழ்வில் எழும் மன உளைச்சல்களாகும். பிள்ளைகளின் எ தி ர் காலத்துக்கான நல் வாழ்வு, பெற்றோரால், பெரியோரால், சுற்றத்தாரால், நண்பர்களால் ஆசிரியர்களால் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
சிறுவயதில் இவை கிடைக்கும்போது நிறைவான நிம்ம தி யும் , மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு நிச்சயமாகின்றது. 彎
காலம் பொன்னானது, கடமை கண்ணானது என்ற பழமொழி நமக்கு காலத்தின் அருமையைத் தெட்டத் தெளிவாக உணர்த்துகின்றது. நாம் வாழாமல் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் காலத்தின் முக்கியத்துவத்தை, பெறுமதியை உ ைர் ந் து வாழப்பழக வேண்டும். கடந்த காலத்தைப்பற் நாம் சிந்திக்காமல், கடந்துபோன துயர நாட்களை நினைத்துக் கொண்டே இராம ல், நிகழ் காலத்தைப் பற்றியும் எதிர்காலத்தைப் பற்றியும் நமது வாழ்க்கையை பயன் உள்ள தாக அர்த்தமுள்ளதாக மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும் முக் காலமும் நமக்கு பயனுள்ளதாகவே அமைந்துள்ளது. இறந்த காலத்தை நாம் திருப்பிப் பெறாவிட்டாலும், அது நமது கடந்த கால வாழ்க்கையில் உள்ள பல சுவையான அல்லது கசப்பான அனுபவங்கள் மூலம் பலி புதிய நற்சிந்தனைகளை அறிவுரைகளைக் கூறுகின்றது மேலும் எதிர்
காலத்தில் நாம் சிறந்த முறையில் திட்டமிட்டு ஒழுகுவதற்கு நிகழ் காலம் எமக்கு உதவுகின்றது. எனவே வாழ்வின் வெற்றி தோல்வி காலத்தின் பயன் பாட்டிலேயே தங்கியுள்ளது,
s
43 [5 tଜ୍

Page 24
உள் ள த்து உணர்ச்சிக ளைக் காப்பாற்றி வெள்ள போல் ஒடவிடாமல் த டு த் து நிறுத்தினால் நோய் கெட்டு அழியும் 6. 6йт 53 гр л й
பிசிராந்தையாரின் தலை முடி நரைக்க ருடைய தோற்றம் இளமை யுடன் இருந்தது எ ப் படி என்று ஆராய்ந்தால், அல ருடைய மனநிலை பாதிக்கப்
மையை அறிய முடியும்,
அதன் காரணமாக அவ ருடைய உடல் நிலை யும் பாதிக்கப் படவில்லை என் பது தெளிவாகத் தெரியும், இந்த வரலாற்று நிகழ்ச்சி யிலிருந்து நாம் தெரிந்து வேண்டியது உடலுக்கும் உள்ளத்திற்கும் நெருங்கிய தொடர்பு ஒன்டு
நான் 44
பெற்றோர்களே,
உங்களுக்கு
உங்கள் குழந்தைகளின் முன்னிலையில் ஒரு போதும் சண்டையிடாதீர்கள். இது அவர் களுடைய மனத்திலே பாதுகாப்பற்ற தன் மையை உரு வா க்கு வ தே ( டு உங்கள் மேலுள்ள நம்பிக்கையையும் இழக்கச் செங் 40.
உங்கள் பிள்ளைகளுடன் அதிக நேரத் தைச் செலவிடுங்கள், மாலையிலோ அல்லது இரவிலோ அன்று நாள் முழுவதும் அவர் கள் என்ன செய்தார்கள் என்பதை விசாரி யுங்கள், படிப்படியாக தாங்களே தங்க ள் வேலைகளைச் செய்யப் பழக்குங்கள்.
பாடசாலை அல்லது கழகங்கள் அல்லது வேறு அமைப்புக்கள் போன்றவற்றில் உங் கள் பிள்ளைகள் அங்கம் வகித்தால் அவ் வமைப்புகள் சம்பந்தப்பட்ட காரியங்களிலும் நடவடிக்கைகளிலும் ஆர்வம் காட்டுங்கள்.
தங்கள் குடும்பத்திலும், நா ட் டி லு , நாங்கள் முக்கியமானவர்க ளென்பதையும், இவற்றிற்கு தங்களின் உதவி სექტეჭ ჭეზ}ყ; அவசியமென்பதையும் உங்கள் களை உணரச் செய்யுங்கள். நீங்கள் அவர் 5ளுக்கு என்ன சொல்கிறீர்களோ pត្sorGយ
பிள்ளைகள் மட்டிலுள்ள உங்கள் கடமை
களிலிருந்து தவறாதீர்கள். அவர்கள் மட்டில் பொறுப்புணர்ச்சியுள்ளவர்களாக இருங்கள்.
உங்கள் பிள்ளைகள் எவற்றில் ஆர்வமுடன் ருக்கிறார்களோ அவற்றைப் பற்றியே அவர் களுடன் கலந்து பேசுங்கள், அவர்களுடன் விளையாடுங்கள். நெருங் கிய உறவை வளர்த்துக் கொள்ளுங்கள். இதனால், ஆவர்
கள் முதியவர்களாகும் போது எந்த if it.

LD t”(6 tib!
- சூ ஆ பொஞ்சியன்
சினைக்கும் முகங் கொ டு க் க க் கூடியவர் களாக இருப்பார்கள்.
உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் பெற் றோராக மட்டு ம ல் ல, நண்பர்களாகவும் இருக்க முயலுங்கள் அவர்களுக்கு உங்கள் மேலுள்ள நம்பிக்கையை வளரச் செய்யும் கள். அவர்களது பிரச்சினையைப் பகிர்ந்து கொள்ளுங்கள் எந்த நேரத்திலும் சிறப் பாகப் பிரச்சினைகள் வரும் போது, அவர் கள் உங்களை அணுகிவரக் கூடிய முறையில் உங்களை வைத்துக் கொள்ளுங்கள்.
உங்கள் பிள்ளைகளின் நண்பர்களைப் பற்றியும் அவர்களது நடத்தைகள், அவர்கள் எவற்றிலே ஆர்வமுடையவர்களாக இருக் கின்றார்கள் என்பன பற்றி யும் அறிந்து வைத்திருங்கள், ஏனெனில் உங்கள் பிள்ளை களை அவர்கள் பிழையாக வழி நடத்தக் கூடும்.
பொதுவாக இன்றைய இளைஞர்களின் விருப்பு வெறுப்புகள் பற்றியும் அவர்களது பிரச்சினைகள் பற்றி யும் நன்றாக அறிந்து வைத்திருங்கள், சிறப்பாக வாலிபப் பருவத் தில் இயற்கையாக எழும் பிரச்சினைகள் தொடர்பாக உங்கள் பிள்ளைகளின் அறிவு எந்த அளவிற்கு உள்ளது என அறிந்திருதி தல் அவசியம்.
சமயக் கடமைகரை ஆங் சு ஸ் பிள்ளை இளோடு சேர்ந்து நிறைவு செய்யுங்கள் ஒன்றாகக் கோவிலுக்குப் போங்க ள் ஒன் றாகச் செபியுங்கள், சமய அறிவின்மையும் சமயக் கடமைகளில் தவறுதலும் சில வேளை
களில் அவர்களைப் பிழையான வழி க் கு
இட்டுச் செல்லலாம்.
உங்கள் பிள்ளைகளின் சிறப்பான எதிர் கால வாழ்வு உ ங் சு ஸ் கைகளிலும் தங்கி புள்ளது.
உடல் உறுதியுடன் வாழும் ஒருவரை, நீ ஏன் இப் படி இளைத்துக் துெ ண் டே போகிறாய்?" என்று பலரும் தொடர் ந் து கேட்டுத் கொண் டே இருந்தால், அவரும் இதையே உண்மை என்று நம்பி, 'இளைத்து விட்டேன் போலும்" என்று எ ண் ணி ன ல், go i நாளுக்கு நாள் மெலிந்து போய்விடுவார். இதற்கு மனத்தினைத் தவிர வேறு காரணம் இல்லை.
சத்தமான 2.6005 a 2.65. எளிய நிலையில் இருக்கும் ருேவரை, நீ ந ன் ற ர து இருக்கிறாய்; உன் 劉.巒 ஆரோக்கியமாக இருக்கிறது" என்று அ டி க்க டி பல கூறினால் அந்த எண்ணமே
அவருக்குத் தி ட ம ன ை
P__ខ្មែរិះ விடுகிறது.

Page 25
அனுபவம் $დ5 : திருப்பு முனை
நாம் ஒரு காரியத்தைச் செய்ய முற்படும் போது, அகற்கான உகி துதல் உள்ளததில் உருவான பின் னர்தான், உடல் உறுப்புக்கள் அதனைச் செயற்படுத்துகின்றன. உண்ண, உடுக்க, நடக்க, பேச, எழுத வாசிக்க என்று எதுவானா லும் முதலில் உள்ளத்தில் எழ வேண்டும். எனினும் உள் ள ம் இவற்றைத் தகுந்த வழியில் செயற் படுத்த முன்னைய அனுபவங்கள் பாடமாக அமைகின்றன. அந்த அனுபவங்கள் சில இசப்பானவையாக, சுமையானவை யாக், வேத னை நிறைந்தவை யாக இருந்த போதும் அதிலிருந்து பிறக்கின்ற மாற்றங்கள், பின்னர் எமது வாழ்க்கைக்கே திரு ப் பு முனையாகி விடுகின்றன.
சமகால நெருக்கடி நிலையைத் தாங்க முடியா த உள்ளங்கள், சலிப்படையாது, சோர்நது போ இாது எதோ வழிகளில் தம்மைக்
காப்பாற்றிக் கொள்ளவோ, அல் லது இவற்றிலிருந்து ஒதுங்குவ தற்கோ பாதுகாப்பை நாடுவதாக
எணணித் தமது உள்ளத்தின் உந் துதல்களைப் புதுவழியில் செயற் படுத்த, மு ன்  ைன வ அனுபவங் இளைப் பாடமாகக் கொண் டு இயங்க முனைகின்றன.
リTcm 46
அனுபவங்கள் ஒருவனைப் ப்யன் தரும் வழிகளில் மாற்றி அமைக் கின்றன என்று சொல்லும் போது சமயம், சமகாலச் சூ ழ லும் மாற்றத்துக்கு உள்ளாக்குகிறது எ ன லா ம், உதாரணமாக, ஒர் ஆசிரியர், மிகுந்த கடமை வோடு மாணவரின் முன்னேற்றத் தில் அதிக பங்களிப்பைச் செலுத்தி, தான் கற்பித்த பாடசாலைக்கு மட்டுமல்ல, அந்தக் கிராமத்துக் குமே பெரும் சேவை புரிந் து வந்த நிலையில், அவருக்கு வேறு பாடசாலைக்கு ஏற்பட்ட திடீர் இடமாற்றம், அங்கு கற்கும் மாண வருக்கும், பாடசாலைக்கும், அந்
(3 girTarů LITT GÖTT
"సాeంలో
தக் கிராமத்துக்குமே பெரும் இழ பாகக் கருதப்பட்டது. ஆசிரியருக் கும், அந்தப் பாடசாலை மாணவரும் அக்கிராமமும் தனது பணி யை த் தொடர்ந்து பெற முடியர் மற் போனதே என்ற கவலை அங்கு அவருக்கு இரு ந் த மிதிப்பு பி ன் விை க ஒளி லும் பெற்றாரிலு மிருந்த பாச உணர்வு அந்த இட மாறறத்தால் பாதிபடைநது அவர் மனதிலும பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. அத் து டன் புதிய இடத்துக்குப் பல மை ல் துரம் செல்ல வேண்டிய சிரமம் மேலும் துன்ப உணர்வுகளைத் தந்தாலும, அந்த இடமாற்றமே, அவரது வாழ்வில் புது வ டி வு எடுத்து உயர்பதவி கிட் ட வழி ஏற்படுத்தியது. பின் தங்கிய பகுதி யின் வழிகாட்டலுக்கும் மீண்டும்

ஓர் சந்தர்ப்பம் கிடைத்தது என அவர் உண ருபோது மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றது.
புதிய பாடசாலை மாண வரி த்தில், புதய ஆசிரியர் வாயை னது, சில * 2 வரைப் போல இவர் இவரைப் போல அவர்' என ஆசிரியர்களை ஒப்பிட்டு குழப்பநிலை அடைந்து தெளிவாகும் போது எ தை யும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என் னும் மனப்பக்குவத்தையும் அந்த
297.949 1_6টf",
தருகின்றது.
இவை போன்ற நிகழ் வு க ள், சாதாரணமாக ஏற்றுக் கொள்ளக் கg யூ சி றி ய சம்பவங்களாகவே உணரப்படுகின்றன. உதாரணமாக மிக நெருக்கமானவர்கள், வெளி நாடு செல்வது, திருமணம் செய் வது, புதிய தொழில் வாய்ப் பு இடமாற்றம், போன்ற நிகழ்வுகள் மகிழ்ச்சியளிப்பவைாயிருந்தாலும் பிரிவைத் தாங்க முடியாத நிலை ஏற்படுகின்றது. இவை அனுபவ முதிர்வு, வாழ்க்கை நலன் போன்ற ஒற்றின் அடிப்படையில், சர்வ சாதாரண நிகழ்வாகவே எற்றுக் கொள்ளப்படுகின்றன.
அந்நிய நாட்டுத் தொழி ஸ் வாய்ப்பு, அனர்த்தச் சூ ழ லின் இடப் பெயர்ச்சி காரணமாக எமது நாட்டுக் குடும்ப உறவு முறை களும் சமூகச் சூழலும் ஒன்றுடன் ஒ ன் று பின் னி ப் பி  ைண ந் த வாழ்க்கை முறைகளும் புதிய மாற் றத்தைப் பெறுகின்றன. விளைவாக, இவ ற் றை
ஏற்று
கால ம்,
இதன்
வாழும் அணு ப வ ப் பக்கு வம் எம்மிடையே உதயமாகின்றது.
இன்றைய போர்ச் குழ லி ல், தி க தி மு கா ம் க ளி ல் இடம் பெயர்ந்து வந்து அகதியாயிருப் பவர்களின் ச ந் தி ப் புகள் ஒருவ ரோடு ஒருவர் முன்பின் தொடர் பற்ற நிலை யில்தான் உருவாகின் றன. புதிய தொடர்புப்பரிமாற்றம் விட்டுக் கொடுத்தல், உதவுதல், புரிந்துணர்வு போன்ற பண்புகள் மேலோங்கி வள ரா பி ன் ன ர், சொந்த இல்லிடமோ, புதிய கிராம அமைப்போ உருவாகும் போது, வசதி வாய் புகள் வாழ்க் கை முறையிலிருந்து மாறுபட்ட சூழ லில் அமைய, முன்னரிலும் வேறு பட்ட, வ ச திகள் கு  ைற ந் த கிடைத்ததைக் கொண்டு வாழும் வாழ்வைக் கற்றுக் கொள் ள, இன்றைய போர்க்காலச் சூ ழ ல் புதிய அனுபவத்தை ஏற்படுத்து கின்றது.
எண்ணிக் கூடப்பார்க்க முடியாத வாழ்க்கை முறை மாற்றதகுைக் குறுகிய காலத்தில் கற்றுக் கொள் ளக் காரணமான ஒவ்வொரு சம் பவங்களும், எ ம து உள்ளத்தில் கா யங் களை ஏற்படுத்தினாலும் அகனால் அடைந்த அனுபவத்தி னுாடாக, ஏற்று வாழும் வாழ்க் கை முறைகளைக் இற்றுத் தந்தது எஒலTம்,
நமது பெண்கள், சிறிய தூரம் செல்ல வேண்டும் எ ன் றாலும் துணைக்காக அண்ணனோ, தம்பி யோ ஒர் ஆண்துணையைத் தேடிய
47 நான்

Page 26
*ாலம் போய், தனது சொந்தக் கடமைகளை நிறை வேற்றும் பொாட்டு பல  ைம ல் துர ர ம் சைக் கிளில் சவாரி செய்யும் போக்கு இன்று சர்வ சாதாரணம். வயது தாண்டி விட்டது; வைத்தியரை நாடவேண்டியகாலம் என்று ஒகங்கி விட்ட முதியவர்சளுக்கும் இதே கதிதான். இ ளை ஞர் களை ச் சவால் விடும் இந்த அனு வம், இன்றைய சூழலின் வி  ைள வே. இவையும் எமது வாழ்வின் திருப்பு முனைகளாகும்!,
எதையும் தாங்கும் இதயங்கள், இத்தனை டோர் முழக்கங்களை யும், கு ன் டு வெடிப்புச் சத்தங் களையும் தாங்கி நெருக்கடிகளை அனுபவித்து எமது உண வில், உடையில், பகட்டு வாழ்விலிருந்து விடுபட்ட மன நிலையின் ஜனாடாக புதுவாழ்வு எடுத்துள்ளன.
வாழ்வின் அத் தி யா வ சி ய த் தேவைகளான மி ன் சா ர ம், எரி பொருள், பொழுதுபோக்குச் சாத இனங்கள் போன்ற பலவற்றையும் பொருளாதாரத் தடையினாலேற் பட்ட தாக்கங்களையும் வெற்றி கொண்டு வாழ, உளச்சலிப்பு ஏற் பட்டாலும் இத்தாக்கங்களிலிருந்து எம்மை விடுவித்து இ ன்  ைற ய சாதாரண வாழ்  ைவ ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவச்தை ஆக் கிக் கொண்டதோடு, தடுக்கப்பட்ட வற்றை ஈடு செய்யும வழிகளில் புதியவற்றைக் கண்டுபிடித து சுய
தேவைகளைப் பூர்த்தி செய்து வாழும் இன்றைய அனுபவங்கள், வாழ்வின் திருப்பு முனைக்குச் சிறந்த எடுத்துக் காட்டுகளாகும்.
திருப்பு முனையில் ஏற் படும் நெருக்கடிகள் எ மது வாழ்வின் மு ன் னே ற் றத் துக்காகவே என உணரும் உள்ளங்கள், எதிர்காலத் தில், வாழ்வதற்கான நிரந்தரமான வழிகளைத் தேடிக் கொள்வதே மிக முக்கியமானதும் அவசியமான துமாகும். தற்காலிகமான பாது காப்பு நிலை என இருந்த பாங்கு மாறி, நிரந்தரமாகவே இனிவரும் கா லத் தை த் திட்டமிட்டு செல் நெறிப்படுத்துதல், சுய தேவை களைப் பூர்த்தி செய் த ல் எமது சொந்த முயற்சியில் பெறும் எந் தச் செயலாக்கமும் இா ட் டி ப் பு மகிழ்ச்சியை உண்டாக்க வல்லது.
இன்றைய நெருக்கடி நிலையி னின்று விடுபடத் தற்காலிக வழி முறைகளைக் கைக்கொண்டதிலி ருந்து நாம் பெற்ற அனுபவம் திருப்பு முன்னயாக அ மை நீ து எமது வாழ்வைச் செம்மைப்படுத் துவதில்தான் வெற்றி காண முடி யும், அதுவே, நிர ந் த ச உள மகிழ்ச்சியையும், உளவளர்ச்சியை யும், பூரண ஆளுமையையும் தரும் தி ரு ப் பு முனை அனுபவங்கள், நல்ல நிலத்தில் விதைத்த விதை களாக முளைத்து வளர்ந்து எமக் கும், எமது சூழலுக்கும், நாட்டுக் கும் பயன் விளைக்கும்.
வெற்றியின் இரகசியம்
யாருக்கு வெற்றி நிச்சயம்?
இறுதிவரை மன உறுதி உள்ளவனுக்கு

- (உளவியல் தேர்வு) நீர் பிறர்நல விரும்பியா? -
*3-
பீட்டால் அல்லது விரும்பாது விட்டால் பிறரை நீர் வாழ வைக்கின் ர் அன்றேல் அவர்களைக் குறைகளுடனும், நிறைகளுடனும் ஏற்றுக் காள்கின்றீர் என்பது சந்தேகத்திற்கு உரியதே. எனவே நீர் பிறர் ட்டில் எப்படிப்பட்டவர் என அலசி ஆராய, சிந்தித்துப் பா ரீ க் க, உண்மையாகவே உம் மில் மாற்றத்தை ஏற்படுத்த, ஆம், அல்லது இல்லை
 ைபதிலை இட்டு பரீச்சித்துப் பார்க்கலாம்.
நீர் மற்றவரின் துன்ப துயரங்களில் கரிசனையோடு ஆங் கெடுக் க விரும்புகின்றீர். "" ܬ பிறருக்கு உதவி செய்வதன் மூலம் பி ரதி பல  ைன இர்பார்க் கின்றீர். ܬ ܢ s உமது வயதிற்குக் குறைந்தவர்களை வற்பு றுத் தில் சில காரியங் ைேளச் செய்ய முயற்சிக்கின்றீர். y - 4. ஓடும் புளியம் பழமும் போல் பட்டும் படாமலும் மற்றவர்களுடன்
வாழ்கின்றீர். .- → நீர் படித்தவன் என்ற மமதையில் பாமர மக்களைக்,கேலி செய் கின்றீர். மற்றவர்கள் பாராட்டப்படும் போது நீர் பொறாமை கொள்கிறீர்.
பிறர் துன்புறுவதைக் கண்டு சிறிதேனும் சஞ்சலம் அடைவதில்லை ཎྜི་
நீர் பிறருடைய உணர்வுகளை, தேவைகளை அலட்சியப்படுத்து கின்றீர். චූ *
நீர் தவறு செய்தால், அத்தவறை ஏனையோரும் செய்ய வேண்டு மென் விரும்அகின்றீர். . . . உமது குறைந்த பட்ச வருமானித தைக் கொண்டு எ ழை க ஞ க்கு உதவி செய்வதில் அக்கறை கொண்டுள்ளீர்.
a, 7 , 10. ஆகியவற்றிற்கு "ஆம்" எனவும், எனையவற்றிற்கு --سس - இல்லை எனவும் பதில் அளித்தல் நீர் பிறர் நல விரும் பு என்பதற்குச் சான்றாகும். இல்லையேல் முய ச் சி த் து முன்
னோஜ், -
ܐ ܕ ܬܐ .
நீர் நீராக வாழாது விட்டால், நீர் உம்மை முதலில் எற்காது.
ܠܐܣܛܬܵܐ
P
: ;

Page 27
Fil-VUE. o.
ROR YOU
முதுமையிலும் இளமை
இளமையிலும் கவர்ச்சி
முத்துப்பில் அ
அதன் ரகசியம்
M O R
OPTICANS AND DENT 50, CLOCK TOW JAFFN.
அழகுத் தோற்றத்துக்கும், ! பரீட்சித்து அளிக்கும் リ הר ר பல் அழகுடன் சொல்லழகும் அனுபவ முத்திரை பதித்
மொற (வெலிங்டன் தியே
30 மணிக்கூ | ωσφόσσα
 

AAN° Psychology = Magazine I. Seminary, Colombuthurai
R VISIT
சிடுகிறது
ழகைத் தருகிறது
இதுதான்
A S.
AL TECHNICANS ER ROAD, A.
ார்வைத் துலக்கத்திற்கும் ண்ணாடிகள் உண்டு
巫『 5Jup『エ Li6ù 6al (51
தவர்களை நாடுங்கள்
usin)
ட்டர் முன்பாக) ,:ޖީް"a" (g 6yj υδναίο
இன்ஆ - க்ஸ் வீதி, யாழ்ப்பாணம் ,