கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நான் 2002.03-04

Page 1
|
 


Page 2
IGT Rosoň: 27 இதழ் 02 உளவியல் சஞ்சிகை பங் - சித் 2002 விலை 20/=
Irerto 0.M.I., B.A (Hons), B. Th, Dip. Ed. sarcurso O.M.I., M.Phil.
வி.பி யுடன் ஒரு நேர்காணல் தொடர்பாடல் ஒரு சமூக உளக்
-கண்னோட்ட ඉelIffජ්ර්කිඛf மனித மனம் மேம்பாடடையவும்,
வளர்ச்சியடையவும் முதன்மையா6 குற்றப்பழியுணர்வு ஒரு சோறு பதமா? நண்பத்துவம் உண்மைக்காதல் - ஓர் ஆய்வு கல்வியில் வெற்றி கன்டிட. எரிகின்ற சமூகத்தின் எரியும் இன்னோ
– ethuenth கருத்துக்குவியல் - 90 பாலியல் நெறிபிறழ்வும் அதற்கான
-காரனங்களு ♔nഞഥ
"NAAN" Tamil Psychological Magazine De Mazenod Scholasticate, Columbuthurai, Jafna, Sri Lanka. Tel 8 Fax021 - 2721

ஆசிரியர் அரும்புகள் வணக்கம். இம்மலர் பொதுத்தலைப்புகளைத் தாங்கிவரும் “சிறப்பு இதழாக” வெளிவருகிறது. ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்வை மேம்படுத்தவும், பொருள் பொதிந்ததாக மாற்றவும் அவனை சிந்திக்கத்துண்டும் பல உளவியல் சிந்தனைகளும், தத்துவங்களும், நிறைந்த ஆக்கங்கள் இம்மலரை அணி செய்கின்றன. படித்து, சிந்தித்து, தியானித்து வாசகர்களாகிய நீங்கள் பயன்பெற ஆசிக்கின்றோம். “சிறப்பு இதழில்” சில பொதுவான நோக்குகளையும்/எதிர்பார்ப்புகளையும் இனங்காட்டுவதுடன் காலத்தினதும் மக்களின் தேவைகளினதும் முக்கியத்துவம் அறிந்து மாற்றப்பட வேண்டியது பற்றியும் முன் வைக்க விரும்புகின்றோம். பல ஆற்றல்மிகு எழுத்தாளர்கள் தங்களது ஆக்கபூர்வமான படைப்புகளால் அரிய பல உளவியல் கட்டுரைகளை நமக்கு தந்துதவிக்கொண்டேயிருக் கின்றார்கள். அவர்களது ஆய்வுத்துறை சார்ந்த விவேகமும் அறிவும் உண்மையில் போற்றப்பட வேண்டியதே. இத்தகைய படைப்புகளால் பலன் பெறுவோர் ஏராளம். சுமூகவியல் துறை, உளவியல் துறை, உருவாக்கல் துறை போன்றவற்றில் சிறப்புப்பயிற்சி பெறும் மாணவர்கள், ஆசிரிய மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் எனப்பலதரப்பட்டவர்கள் தங்கள் துறை சார்ந்த அதிகப்படியான நன்மையைப் பெறுகின்றார்கள். இதைத் தமது கருத்துக்களாக வாசக நேயர் பகுதியில் தெரிவித்துமுள்ளார்கள். இருப்பினும் மறுபக்கத்தில் பெரும்பாலான “நான்” மஞ்சரி வாசகர்கள் மத்தியிலிருந்தும் தொடர்ந்து கருத்துக்கள் பகிரப்படுகின்றன. அவர்கள் நோக்கில் “நான்” சாமானிய மக்களின் தேவைகளை, பிரச்சினைகளை, எதிர்பார்ப்புக்களைப் போதியளவு நிறைவு செய்வதில்லை என்பதாகும். ஏனென்றால் கட்டுரைகள்-ஆய்வுக்கட்டுரைகள்-தத்துவம் சார்ந்த ஆக்கங்கள் அனைத்திலும் கையாளப்படும் சொற்கள் (ஆங்கில வடிவங்கள் உட்பட) அவற்றின் அமைப்புக்கள் உயர்ந்த அறிவையும், பரீட்சயமான பின்புலத்தையும் விளங்கிக் கொள்வதற்கு அவசியப்படுத்துகின்றது. ஒரு வகையில் அவர்களின் எதிர்பார்ப்புகள் நியாயமான வையாகவே காணப்படுகின்றன. "நான்” மலரின் நோக்கமும் எல்லா நிலை மக்களுக்கும் போய்ச்சேர வேண்டுமென்பதும் புரியவேண்டு மென்பதுமாகும். சாதாரண மக்கள் புரிந்துகொள்ளக்கூடிய சாதாரண சொற்பிரயோகங்களையும் இலகுவான நடையையும் கையாண்டு ஆக்கங்களைப் படைக்குமாறும் நம்மைத் துண்டுகின்றது. எனவே நமது அபிமான எழுத்தாளர்களுக்கு முன்னொரு தடைவை தெரிவித்ததை மீண்டுமொரு தடவை ஞாபகப்படுத்தி பெரும்பான்மை நேயர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளுகின்றோம். பாராட்டுக்கள் அதிகரித்து வரும் இவ்வேளையில் “நான்” வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு தொடர்ந்து நம்முடன் வேண்டுகின்றோம். வாசகர்களின் அபிலாஷை களும் எ ழ்காலத்தில் படிப்படியாக நிறைவு செய்யப்படுமென்பதையும் &n f
தோழமையுள்ள வாழ்த்துக்களுடன் ம. போல் நட்சத்திரம்-அமதி

Page 3
நான் (2) u - čoj 2002 பக்திவைத்தியம்
P.A.C. ஆனந்தராஜா B.Sc., Dip. Ed., Dip. Jour. Cert. Counsellor.
அமெரிக்காவில் லொஸ்ஏஞ்ஜல்சில் உள்ள "வைஸ் ரெம்பிள்” மருத்துவமனையில் “செயல்படும் விசுவாசம்” என்ற சொற்பதம் புதிய பரிமாணத்தைப் பெற்றது. இங்கு மருத்துவத்தில் ஈடுபட்ட சில பெண்கள் உடல் அசைவுகளோடு ' பிரார்த்தனையையும் தியானத்தையும் கலந்து புதிய அனுபவத்தை பெற்றார்கள். றொபட்டா ஸ்வைற்ஸர் என்பவர் இந்த பிரார்த்தனைகளும், உடல் அசைவுகளும் ஏற்படுத்திய அமைதியைக் கண்டு வியப்புற்றார். நிவேடா பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான இவர் ஜெபத்தின் (ஆன்மீகம்) குணப்படுத்தும் இயல்புகள் பற்றிப் பல ஆய்வுகளை நடாத்தினார்.
சமய சார்பான ஆழமான விசுவாசம் சில சந்தர்ப்பங்களில் கடுமையான நோய்களைக்கூட குணமாக்கும் என்ற நிலைப்பாடு பாரம்பரியமாக நம்மிடையே நிலவிவருகின்றதொன்றாகும். இந்த பயன்பாடுகளை விஞ்ஞான ரீதியாக ஆய்வு செய்து பார்க்கும் நிலை இப்போது எழுந்துள்ளது.
“இறைவன் குணப்படுத்துகின்றார் என்று விஞ்ஞான ரீதியாக எங்களால் நிரூபிக்கமுடியாமல் இருக்கலாம். ஆனால் இறைநம்பிக்கை பயனுள்ள விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை எம்மால் நிரூபிக்க முடியும்” என வாஷிங்டன் ஜோர்ஜ்ரவுன் மருத்துவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கலாநிதி மத்தியூஸ் கூறுகின்றார். ஆரோக்கியமான சமய நம்பிக்கைகள், வழிபாடுகள்,
பொதுவாக மனிதர்களை குணப்படுத்துகின்றன என்பதில் ஐயமில்லை.
வலுவான ஆதாரங்கள்
விசுவாசத்திற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் இடையில் உள்ள தொடர்பு பற்றிய ஆதாரங்கள் எந்தளவிற்கு உறுதி வாய்ந்தவை? ஏறக்குறைய 30 ஆய்வுகள் ஆன்மீக விசுவாசத்திற்கும் நீண்ட ஆரோக்கியமான ஆயுளுக்கும் இடையில் உள்ள தொடர்புகளை சுட்டி நிற்கின்றன.
Y கலிபோர்னியாவைச் சேர்ந்த 5286 பேரை ஆய்வுசெய்தபோது வழிபாட்டு ஸ்தலங்களுக்கு செல்லாதவர்களைவிட, போகின்றவர்கள்

நான் G) usi - dogj 2002
மட்டில் நீண்ட ஆயுள் வீதம் காணப்பட்டது. (இவற்றில் புகைத்தல், மது அருந்துதல், உடல் பருமன், உடற்பயிற்சி செய்யாமை போன்ற காரணிகள் தவிர்க்கப்பட்டன). Y ஆழமான ஆன்மீகச் சாய்வுள்ள நோயாளிகளில் செய்யப்பட்ட பின்வரும் ஆய்வுகளில் இவர்கள் குறைந்த நோய்க் குறிகளையும் விரைவாக குணம் அடைதலையும் காட்டினர்:- 08 புற்றுநோய் நோயாளிகளில் 07 பேர் குணமடைதலைக் காட்டினர். 05 குருதி அழுத்த நோயாளிகளில் 04 பேர் முன்னேற்றமடைந்தனர். 06 இருதய நோயாளிகளில் 04 பேர் முன்னேற்றத்தைக் காட்டினர்.
Y மற்றுமொரு ஆய்வில் வலுவான ஆன்மீக விசுவாசமும் பக்தியும் உடையவர்கள் மனச்சோர்வடைதல், தற்கொலை முயற்சி, மதுபோதை போன்ற பழக்கங்களில் குறைந்த ஈடுபாட்டைக் காட்டினர்.
Y பிறிதொரு ஆய்வில் இறைநம்பிக்கைக்கும் 2-L6) ஆரோக்கியத்திற்கும் உள்ள தொடர்புகள் வயது, பால், கலாசாரம், நாடு போன்ற கூறுகளைக் கடந்து எல்லோருக்கும் பொதுவானதாக அமைகின்றதைக் காட்டியது. வேர்ஜீனியா மருத்துவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜெவ்ரி லெவின் 200 ஆய்வுகளை நடாத்தினர். சமய நம்பிக்கைக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் உள்ள பொருத்தப்பாடு - பிள்ளைகள்; வயது வந்தவர்கள் மட்டிலும்; புரட்டாஸ்தாந்து மதத்தினர்; கத்தோலிக்கர்; ஜப்பானிய பெளத்தர்கள்; இஸ்ரேலிய யூதர்கள்; 1930ம் ஆண்டிலும் 1980களில் வாழ்ந்தவர்கள், கடுமையான மற்றும் நாள்பட்ட நோயாளிகள் போன்றவர்கள் மட்டில் இந்த ஆய்வு பொருத்தமுடையதாக அமைந்தது.
ஜெபம் அல்லது பிரார்த்தனை எவ்வாறு குணப்படுத்துகின்றது? விசுவாசம் எப்படி இத்தகையதொரு சக்திவாய்ந்த பாதுகாக்கும் தன்மையைப் பெற்றது? ஆய்வாளர்கள் பின்வரும் பொருத்தமான விளக்கங்களை தருகின்றனர் :-
சமய வழிபாடுகளுக்குச் செல்வது மக்களோடு உறவையும் தொடர்பையும் ஏற்படுத்துகின்றது. உடல் ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் சமூக ஆதரவின் முக்கியத்துவம் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படும் உண்மையாகும். விசுவாசம் ஒரு நம்பிக்கையையும் அழுத்தங்களை கையாளும் தன்மையையும் கொடுக்கின்றது. “ஒரு கூட்டான நம்பிக்கைகளில் அர்ப்பணிப்பான விசுவாசம் வைத்திருப்பது மனிதர்களுக்கு நெருக்கீட்டு நோய்களை, வேதனைகளை, இழப்புக்களை கையாள வலிமையளிக்கின்றது”

Page 4
நான் G) uљi – dogó 2002
என்கிறார் கலாநிதி ஹறல்ட் என்னும் “ஆன்மீக சமய உடல் ஆரோக்கிய” மருத்துவர்.
* ஜெபித்தல் உடலில் பயனுள்ள மாற்றங்களை தூண்டுகின்றது. ஹவார்ட் மருத்துவ பல்கலைக்கழகத்தின் கலாநிதி பென்சன் தனது பிரபல்யமான "சாந்த வழிமுறைகள்’ மூலம் குருதி அமுக்கம், இதயப் படபடப்பு, மூச்சு வாங்கல் போன்றவற்றை தளர்வு நிலைக்கு கொண்டு வந்தார். மனிதர்கள் ஜெபிக்கும் போதும் இதே விளைவுகளை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. உதாரணமாக மந்திர உச்சாடணம், ஜெபமாலை ஓதல் போன்ற சாந்த வழிமுறைப் படிகளை ஒத்ததாகும். அதாவது ஒரு வார்த்தையை; ஜெபத்தை அல்லது ஓர் ஒலிக்குறியீட்டை (பிற சிந்தனைகள் ஊடுருவாமல்) மீள மீள சொல்வதாகும். இந்தச் செயற்பாடு தளர்வையும் மன அமைதியையும் கொடுப்பதோடு இதைச் சொல்பவர்களுக்கு இறை விசுவாசம் இருந்திருப்பின் கூடிய பயன் அளிக்கும் என்பது கலாநிதி பென்சனின் கருத்து ஆகும்:
பிறருடைய ஜெபம் குணமளிக்குமா?
சன்பிரான்சிஸ்கோ மருத்துவ மனையின் கலாநிதி றன்டொல்ப் என்பவர் 393 இருதய நோயாளிகளை இரு குழுக்களாக பிரித்தார். ஒரு குழுவிற்காக அந்த ஊரைச் சுற்றியுள்ள கிறிஸ்தவர்கள் ஜெபித்தார்கள். மற்ற குழுவினருக்காக யாருமே ஜெபிக்கவில்லை. இந்த ஆய்வைப் பற்றி இவர்களுக்குக் கூறப்படவில்லை. ஜெபிக்கப்பட்ட நோயாளிகள் மட்டில் குறைந்தளவு இருதயக் கோளாறுகள், நோய் அறிகுறிகள் காணப்பட்டதோடு இவர்களுக்கு குறைந்தளவு மருத்துவ சிகிச்சையே தேவைப்பட்டது.
விசுவாசத்தை உடைய மருத்துவர்கள்!
வைத்திய கலாநிதி லரி டொசி என்பவர் “ஜெபித்தல் ஒரு சிறந்த மருந்து” என்னும் நூலை எழுதியுள்ளார். ஜெபித்தலில் மட்டற்ற நம்பிக்கை கொண்டுள்ள இந்த மனிதர் தன்னுடைய நோயாளிகளுக்காக இரகசியமாக ஜெபிக்கக்கூட ஆரம்பித்தார். ஆனால் “நாங்கள் விஞ்ஞானத்தின் பெயரில் சமயத்தை விற்க விரும்பவில்லை. மக்களே அதைப் பற்றி சிந்தித்து தீர்மானம் எடுக்க வேண்டும்” என்கிறார் இந்த மருத்துவர்.
சுகாதார மருத்துவ நிறுவனங்கள் ஆரோக்கியம் - விசுவாசம் என்ற கூறுகளுக்கிடையே உள்ள தொடர்புகள் பற்றி கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளன. ஹவார்ட் மருத்துவ பல்கலைக்கழகம்

நான் (3) பங் - சித் 2002
“அமெரிக்க குடும்ப மருத்துவ சங்கம்” போன்றவை இதைப்பற்றிய மகாநாடுகளையும், கருத்தரங்குகளையும் நடத்த ஆரம்பித்துள்ளன.
பிரபல்யம் வாய்ந்த ரைம், U. S. A., வீக் என்ட் போன்ற சஞ்சிகைகள், நோயாளிகள், பொதுமக்களிடையே நடாத்திய ஆய்வில் 80 வீதத்தினர் ஜெபம் அல்லது விசுவாசத்தினால் ஏற்படும் குணமடைதலை ஏற்றுக் கொண்டுள்ளனர். 60 வீதத்தினர் மருத்துவர்கள், நோயாளிகளிடம் ஆன்மீகத்தை பற்றி உரையாடுவதை வற்புறுத்தியுள்ளனர்.
மருத்துவத்துறை, மனிதம், ஆன்மீகம் ஆகியவற்றில் இருந்து விஞ்ஞான ஆய்வுகள் என்ற எல்லையை அடைந்துள்ளது. அந்த எல்லையில் இருந்து மருத்துவம் என்ற ஊசல் மனிதாபிமானம், சமயம் என்ற துறைக்குள் வந்துள்ளது.
எவ்வாறு விசுவாசம் ஏற்றம் உடையது?
விசுவாசம் உணவுக் கட்டுப்பாட்டை அனுசரிப்பது போன்று ஒரு சூத்திர முறையல்ல. ஒருவர் கடுமையான நோய்க்கோ அல்லது சத்திர சிகிச்சைக்கோ முகம் கொடுக்கவேண்டிய நிலையில் தன்னுடைய ஆழமான ஆன்மீகத்தை தொட்டுப் பார்க்கலாம். வைத்தியர்கள் உங்களோடு சேர்ந்து ஜெபிக்கவேண்டும் என்பது அல்ல. ஆனால் அவர்கள் ஒரு நோயாளிக்கு அதற்குரிய வாய்ப்புக்களை அளிப்பது நியாயமாகும். மருத்துவம் மனிதத்துவத்தில் இருந்து விலகி இயந்திர மயமாகும் இந்தக் காலத்தில் மனிதனுக்கு ஆன்மீக விசுவாசம் அவனுடைய வாழ்வின் அவலங்களை கையாள ஒரு வலிமையை அளிக்கின்றது.
நன்றி : றிடெஸ் டைஜெஸ்ட்
“பிலிஸ் மக்கின்ரொஷ்”

Page 5
நான் (G) பங் - சித் 2002
அறிவே அளவாகிறது
இந்த அறிவின் அளவுதான் ஒவ்வொருவனுக்கும் ஒவ்வொரு வகைத் தன்மையையும், ஒவ்வொரு வகைத் தனித் தன்மையையும் ஒவ்வொரு வகைக் குணத்தையும், தனித்தனிப்பழக்க வழக்கங்க ளையும் அமைத்து வேறுபடுத்தி வைக்கிறது.
இந்த நிலையிலே ஒருவன் என்ன செய்கின்றான்? தன்னோடு இசைந்து போகிறவர்களோடு தானும் எப்போதும் இசைந்து போவதற்கு முயலுகின்றான். தனக்கு மாறுபட்டு விலகிப் போகிறவர்களிடமிருந்து தானும் மாறுபட்டு விலகி ஒதுங்கி நின்றுவிடுகின்றான்.
தன்னைப் பகைப்பவர்களைத் தானும் பகைக்கின்றான். தன்னை நேசிப்பவர்களை தானும் நேசிக்கின்றான். தன்னை பழிப்பவர்களைத் தானும் பழிக்கின்றான். தன்னை போற்றுகிறவர்களைத் தானும் போற்றி வருகின்றான். இவை தாம் பொதுவான நடத்தைகள்.
சில சமயங்களில் உண்மையான நினைவுகளை மூடி மறைத்துக் கொண்டு வாழ்விலே நடிக்க வேண்டியதும் ஏற்படக்கூடும். அப்போது உள்ள உணர்வுகளை மறைத்துக் கொண்டு, பொய்யாக வேடமிட்டு நடிக்க தொடங்குகிறான். போலியான உணர்வுகளை காட்டி தன் காரியத்தை சாதிக்கவும் முயலுகிறான். இது உண்மையான அறிவல்ல. உணர்வை உறவை உண்மையாக உணரும்போது அறிவு அளவாகிறது.
கோகிலவதனி நவரட்ணராஜா உயர்தரம் 2002 வர்த்தகம், இளவாலை கன்னியர்மடம் ம. வி.
இவ்வருடத்தில் ‘நான்’ தாங்கிவந்ததும்/வருவதும்
2002 தை - மாசி - குற்றப்பழியுணர்வு 2002 பங்குனி - சித்திரை - சிறப்பிதழ் 2002 வைகாசி - ஆனி - தன்னம்பிக்கை 2002 ஆடி - ஆவணி - பொதுத்தலைப்பு 2002 புரட்டாதி - ஐப்பசி - இலக்கமைத்தல்
கார்த்திகை - மார்கழி - முன்னெடுத்தல்/முகம் கொடுத்தல்
என் எழுத்தாளங் பெருமக்களே உங்களுடைய தரமான ஆக்கங்களை நேரகாலத்துடன் எனக்கு அனுப்பிவையுங்கள்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நான் ○ uri - ang 2002
வி.பி யுடன் ஒடு நேர்காணல் .
கே - "நான்” உளவியல் சஞ்சிகையின் முன்னைய நாள் ஆசிரியர் என்ற வகையில் உங்களிடம் ஒரு கேள்வி 27 வருடங்களாக நான்” தனது பணியைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. ஆகவே, "நான்’ தொடங்கப்பட்ட குறிக்கோளை அடைந்துள்ளதா?
u - இந்த "நான்’ சஞ்சிகை தொடங்கப்பட்டதன் நோக்கம் “நான் வளர்ந்தால் நாம் வளர்வோம்”, என்ற விருது வாக்கோடு, மனிதர்களை நல்ல மனிதர்களாக உருவாக்கவேண்டுமென்பதே. அத்தோடு மதபாகுபாடின்றி மனித உள்ளங்களோடு உறவாடி, மனித நேயத்தோடு, மனித மாண்பினை, மனித மகத்துவத்தை, மனித உள்ளங்களில் நிலை நாட்டுவதுதான் நோக்கம். அந்த
வகையில் "நான்” சஞ்சிகையானது U6) மதத்தினரையும் உள்ளடக்கி தனது பணியை விரிவாக்கி தமிழ் மொழியை ஊடகமாகக் கொண்டு வெற்றிப் பாதையில் சென்று
கொண்டிருக்கின்றது என்பது உண்மை.
கே - "நான்' சஞ்சிகையை ஆரம்பித்தபோது உங்களுக்கு ஏற்பட்ட சவால்கள் என்ன? தடங்கல்கள் என்ன? அவற்றை எப்படி சமாளித்துக் கொண்டீர்கள்?
ப :- ஆரம்பத்தில் இந்த உளவியல் சஞ்சிகைக்கு “நான்” என்று பெயரிடப்பட்டமை சர்ச்சைக்குரிய விடயமாக இருந்தது. “நான்” என்றால் ஆணவம், திமிர், மமதை என்று பொருள்படுவதாக குறைபட்டுக் கொண்டார்கள். ஆனால் உண்மையில் “நான்” என்ற பதம் ஆளுமையைக் குறிக்கின்றது. ஆகவே, “நான்” உளவியல் சஞ்சிகை மனித ஆளுமை வளர்ச்சிக்கு உதவி புரிவதைப் பின்பு ஏற்றுக் கொண்டார்கள். ஆரம்பத்தில் “நான்' சஞ்சிகையை ஊர் ஊராக வீடு வீடாகச் சென்று அறிமுகப்படுத்துவதில் பல சிக்கல்கள் இருந்தன. பல இந்திய கவர்ச்சி சஞ்சிகைகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் எங்கள் சஞ்சிகை இருந்தது. அத்தோடு, பலர் இதனை பணம் கொடுத்துப் பெற்றுக் கொள்வதில் தயக்கம் காட்டினார்கள். பின்பு சஞ்சிகையின் தரத்தை மதிப்பிட்டு அதிகமானவர்கள் சந்தாக்காரர்களாக இணைந்தார்கள்.
கே - நீங்கள் "நான்' சஞ்சிகையில் பல வருடங்கள் ஆசிரியராக இருந்து இப்போது வெறும் வாசகராக மாறியுள்ளிர்கள். எனவே வாசகரான நீங்கள் "நான்” உடைய வளர்ச்சி அல்லது வீழ்ச்சிக் கட்டங்களைச் சொல்ல முடியுமா? 8 ப - ஆம். சஞ்சிகை தன் அவளது.தரத்தைப் பேணுவது சந்தோஷத்தையும், ஆர்வுத் Sisäsi ns.

Page 6
நான் uj – óf gö 2002
அதேவேளை, கடினமான ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெறுவதால் வாசிப்பதற்கு கடினமாக இருக்கின்றது. நீங்கள் கதை, கவிதைகள், அநுபவப் பகிர்வுகள், கேள்வி பதில்கள், நகைச் சுவைத் துணுக்குகள், என்பவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம். அத்தோடு அமைப்பு முறைகளில் கவர்ச்சி மாற்றத்தைக் கொண்டுவரும் என நினைக்கிறேன்.
கே : "நான்' சஞ்சிகை வெறும் சஞ்சிகையாக மட்டுமல்லாது இம்மக்களுக்கு பணிசெய்வதில் ஒரு சாதனமாகவும் அமைந்தி ருக்கின்றது. ஆகவே, எங்கள் பணி எப்படி மக்களை
அடையவேண்டுமென்று விரும்புகிறீர்கள்?
ப - எங்கள் சமுதாயம் போரினாலும், பல உளவியல் பிரச்சினைகளாலும், சிதைந்து கிடக்கின்றது. எனவே மக்களோடு கலந்து அவர்களது பிரச்சனையை அறிந்து, அவர்களது கேள்விகளுக்கு பதில்கள் “நான்” சஞ்சிகையினுடாகக் கொடுக்கலாம். பல்வேறுபட்ட மக்களைப் பேட்டி காண்பதோடு கிராமிய சூழலில், பின்தங்கியுள்ள மக்களின் உளப் பிரச்சனைகளை அறிந்து அப்பிரச்சனைகளுக்கு உளவியலினுாடு உதவி செய்ய முன்வரலாம். “மனித மனங்கள் கலங்குவது அணுகுண்டுகளால் அல்ல, மாறாக அன்பற்ற வார்த்தையாலே”. எனவே மதபிரிவினையை மறந்து மனித நேயத்தை உணர்ந்து அன்பை சஞ்சிகையினுடாக வலியுறுத்த வேண்டுமென்று ஆசிக்கிறேன்.
கே - உணர்மையில் இந்த "நான்' சஞ்சிகையை வாங்கிப் படிப்பதற்கும், இச்சஞ்சிகைக்கு ஆக்கங்களை எழுதுவதற்கும், ஏனைய மதத்தவர்கள் தயக்கம் காட்டுவதோடு, இந்த "நான்” சஞ்சிகை ஒரு மதத்தைப் பரப்பும் சாதனமாக இருக்கக்கூடும் என்று ஆரம்பத்தில் பலர் எண்ணி விடுகின்றனர். இதனை நிவர்த்தி செய்து வர்சிப்பை ஊக்குவிக்க என்ன செய்யலாம்?
ப :- உண்மையில் ஆரம்பத்தில் எமக்கும் இந்தப் பிரச்சனைகள் இருந்தன. பலர் “நான்' சஞ்சிகை மதம் பரப்பும் ஊடகமாகத் தவறாக விளங்கிக் கொண்டார்கள். BIT6) போக்கில்
தாங்களாகவே உண்மையை உணர்ந்து கொண்டு உதவி செய்யத் தொடங்கினார்கள். ஏனென்றால், “நான்’ சஞ்சிகையின் நோக்கம் மதம் மாற்றுவதல்ல, மாறாக மனம் மாற்றுவதேயாகும். அத்தோடு நல்ல மனிதர்களை உருவாக்குவதேயாகும். இதனைக் காலப்போக்கில் வாசகர்கள் உணர்ந்து கொள்வார்கள். இதுபற்றி அச்சம் கொள்ளவேண்டிய அவசியமில்லை.
கே - "சஞ்சிகையில்’ உங்களைக் கவர்ந்த விடயங்களைச் சொல்லமுடியுமா?

நான் O) un – doch 2002
ப - (புன்சிரிப்போடு).
பல்கலைக்கழகங்களிலே இருந்து எழுதப்படுகின்ற ஆய்வுக் கட்டுரைகள் சஞ்சிகையின் தரத்தைப் பேணுவதற்கு உதவியாய் இருக்கின்றன. இது பாராட்டப்படவேண்டிய விடயமாகும். அத்தோடு கருத்துக் குவியலினுாடாக Lugoff தங்கள் கருத்துக்களை முன்வைப்பதும் பாராட்டப்படவேண்டிய விடயமாகும்.
கே - முன்னைய நான் ஆசிரியர் என்ற வகையிலும், தற்போதைய "நான்’ சஞ்சிகையின் ஆர்வலர் என்ற வகையிலும், எம் வாசகர்களுக்கு ஏதாவது கூறவிரும்புகிறீர்களா?
ப - ஆம்.
“நான்” சஞ்சிகையின் அடிநாதம் அன்பு. அனைத்து சமயங்களினதும் போதனையும் அன்பே. நல்ல மனிதர்களை உருவாக்குவதே அனைத்து சமயங்களினதும் குறிக்கோள். இந்த நல்ல பண்புகளையே "நான்” சஞ்சிகையும் தன்னகத்தே கொண்டுள்ளான். ஆகவே இச்சஞ்சிகையைப் படித்து நல்ல மனிதர்களாக, அன்புள்ளவர்களாக, ஆளுமையுள்ளவர்களாக, வளர
“நான்’ சஞ்சிகையின் வாசகர்களை வாழ்த்துகிறேன்.
வாசகர் கருத்து
(HNY
iTraT!
உன் “முகப்பெறுமதி” மனச்சாட்சி உன் “உட் பெறுமதி” க்கு மண்சாட்சி உனக்குள் பொதிந்தவைக்கு விலையிடல் ஆகுமா? எம் மனங்களில் நீ மிகப் பெரிய பெறுமதி - நீ புதிய விலையுடன் வந்தபோதும் அது எமக்கு வெகுமதி நீ வளர நாம் வளர்வோம்.
ஜே. எம். ரி. றொட்றிக்கோ கொக்குவில்.

Page 7
நான் பங் - சித் 2002
தொடர்பாடல் ஒரு சமூக உளக் கண்ணோட்டம்.
விமலராணி விமலகுலேந்திரன் உளவியல் சிறப்புக்கலை, யாழ். பல்கலைக்கழகம்
இன்றைய உலகின் மிக முக்கிய பணியை வகிப்பது தொடர்பாடல் (Communication) ஆகும். இத்தொடர்பாடல் மூலமே இன்றைய உலகம் மிக துரிதமாக இயங்கிக் கொண்டு இருக்கின்றது. தொடர்பாடல் இல்லை எனின் செய்திப் பரிமாற்றம் எதுவுமே இருக்காது. அவ்வகையில் மனித வர்க்கத்தின் ஒரு முக்கிய தேவையாக தொடர்பாடல் காணப்படுகின்றது.
தொடர்பாடலின் ஆரம்பம் :
தொடர்பாடலின் ஆரம்பம் என்பது குழந்தை ஒன்று முதன்முதலில் பிறந்ததும், தாய்மை, சுவை, ஸ்பரிசம் என்பவற்றை அறியும் ஒரு நிகழ்வாக தாய்ப்பால் பருகுதல் இடம்பெறுகின்றது. இங்கு தாய்ப்பால் பருகுவதன் மூலமே தாய்க்கும் பிள்ளைக்கும் இடையில் நேரடித் தொடர்பு ஏற்படுகின்றது. இதன் மூலம் குழந்தையின் எதிர்காலத் தொடர்புகள் தீர்மானிக்கப்படுகின்றது. தாய்ப்பால் பருகும் வாய்ப்பை இழக்கும் பிள்ளைகள், பிற்காலத்தில் பாதுகாப்பு உணர்வு இன்றி வளர்கின்றன. தாழ்வு மனப்பான்மை, பயம், தனிமை நாட்டம், ஒதுங்கும் தன்மை என்பனவற்றைக் கொண்டு இருக்கின்றனர். எனவே 69(5 மனிதனின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ஒரு நிகழ்வாக “ஆரம்பகால தாய்ப்பால் ஊட்டும்” நிகழ்வு அமைகின்றது. இதுவே ஆரம்ப தொடர்பாகவும் காணப்படுகின்றது.
குடும்பத்தில் தொடர்பாடல் :
குழந்தை ஒன்று பிறந்ததும் முதலில் தனது தொடர்பை தாயிடம் ஆரம்பித்து, பின் தந்தை, சகோதரர்கள், பாட்டன், பாட்டி என்று தனது தொடர்பை குடும்ப மட்டத்தில் விஸ்தரித்துக் கொள்கின்றது. இங்கு அதன் அடுத்தகட்ட தொடர்பாடல் வளர்ச்சி அடைகின்றது. இந்தக்கட்டத்தில் குழந்தை தனது தொடர்பாடல், கருத்துப்பரி மாற்றத்தை அழுகை, சிரிப்பு மூலம் வெளிப்படுத்திக் கொள்கின்றது. சிறிது காலத்தின் பின் பொருட்களை தொட்டுக் காட்டுதல், அடையாளங்கள் மூலம் தொடர்பாடலை விருத்தி செய்கின்றது. இதனிலும் ஒரு வளர்ச்சி அடைந்த அடுத்த கட்டமாக அமைவது அதன் மழலை மொழிக் கருத்துப் பரிமாற்றம் ஆகும். இவ்வாறு தொடர்பாடல் குடும்பத்துடன் மட்டும் அல்லாது, அயலவர்கள்,

நான் (D uri - ang 2002
சமூகரீதியில் தொடர்ந்து வளர ஆரம்பகால தொடர்பு, குடும்ப தொடர்பு காரணமாக அமைகின்றது.
பாடசாலை நண்பர் இடத்து தொடர்பாடல் :
குழந்தை வளர்ந்து குடும்பத்தில் இருந்து பாடசாலை செல்லத் தொடங்கும் காலத்தில் நண்பர்களின் தொடர்பு ஏற்படுகின்றது. இங்கு சிறுவர், சிறுமியர் தமக்கு என ஒரு நண்பர் வட்டத்தை ஏற்படுத்திக் கொள்வர். இங்கு அவர்களது செயற்பாடுகள் யாவும் அவ்வுறுப்பினர்களுக்கு தெரிந்து இருக்கும். இப்பொதுவான நண்பர் வட்டத் தொடர்பும் கூட 3 வகையாக நோக்க முடிகின்றது.
1. fojouflair sayibu (35Typ60LD D-D6 (Associates or Companions) என்று கொள்ளலாம். இங்கு நண்பருடன் நேரடிச் செயலில் ஈடுபடுவது இல்லை. ஒரு குறிப்பிட்ட சிறுவனையோ அல்லது சிறுமியையோ அன்றி தனது வகுப்பு ஆசிரியையோ முன் உதாரணமாகக் கொண்டு அன்பு பொழியத் தொடங்குதல்.
2. விளையாட்டு தோழர்கள்:- இவர்கள் வீட்டைச்சுற்றிவர உள்ள நண்பர்கள், பாடசாலை நேரம் தவிர சேர்ந்து விளையாடும் நண்பர்கள். இங்கு ஒத்த வயதினரே அதிகம் இருப்பர். அத்தோடு ஆண், பெண் இருபாலாரும் இருப்பர்.
3.நண்பர்கள்:- இவ்வட்டம் மிகக்குறுகியது. மிக இரகசிய மானதும் கூட. ஒரு சிறுவன் தனக்கு நம்பிக்கையானவ ர்களையும், அனுசரணையாக நடப்பவர்களையும் மட்டுமே இவ்வட்டத்தில் சேர்த்துக் கொள்வான். இங்கு ஒருவருக்கு ஒருவர் அறிவுரை பகர்வர். திட்டம்போடல், ஆழ்ந்த உளக்கருத்து, ஒருவர் மீது ஒருவர் அதிக நம்பிக்கை என்பன காணப்படும். இங்கு பெரும்பாலும் ஒரே வயதினர், ஒரே பாலினர் மட்டுமே காணப்படுவர். இந்த நண்பர் கூட்டத்தில் உள்ளோர் எப்போதும் ஒன்றாகக் கூடி கும்மாளம் இடுவர். இப்பருவத்திலேயே, மது, புகைத்தல் பழகுவதும் இடம்பெறும். அதாவது வேறு ஒரு குழுவைத் தாக்கவேண்டும், பாதுகாப்புடன் ஓர் இடம் சென்றுவரவேண்டும் போன்ற திட்டங்களின் போது ஒருவர்க்கு ஒருவர் பேசி சேர்ந்து கொள்கின்றனர். எடுத்துக் காட்டாக அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடந்த சம்பவம் ஒன்றில் ஈடுபட்ட “தீனா குழு’ இந்த நண்பர் வட்டத்தில் மிகவும் அனுசரணையாக நடப்பவர்கள். வாழ்க்கை முழுதும் பிரியாமல் இருப்பர். இவ்வட்டத்தில் உள்ள ஒருவர் பாதிக்கப்பட்டாலும் ஏனையோர் வருந்தும் தன்மை உடையவர்கள். அத்தோடு தமது நண்பர்குழுவுக்கு மட்டும் புரியக்கூடிய “சங்கேதமொழி’ ஒன்றை உருவாக்கி அதன்மூலம் உரையாடி ஏனுையோரை விலக்குவர்.

Page 8
நான் (2) பங் - சித் 2002
எதிர்ப்பாலார் தொடர்பாடல்:
பாடசாலையில் கல்வி பயிலும்போது ஆண்களோ, பெண்களோ ஒரே பாலினர் பயிலும் பாடசாலையில் கல்வி கற்போர் எதிர்பாலாரிடம் தொடர்பு கொள்வதில் பின்நிற்பர். இங்கு இவர்கள் எதிர்ப்பாலாரிடம் தொடர்பு கொள்வது மிக அரிதாகவே இருப்பதால் இந்நிலைமை ஏற்படுகின்றது. இங்கு எதிர்பாலார் பற்றிய அறிவு குறைவாகவே காணப்படுவதால், எதிர்பாலாரிடம் கதைக்கும் சந்தர்ப்பம் வந்தாலும் ஒதுங்கிப் பின்நிற்பர். வீட்டில் உள்ள எதிர்பாலாருடன் பழகுவதும் வெளியில் உள்ள எதிர்பாலாருடன் பழகுவதும் நிறைய வேறுபாடு உண்டு என எண்ணித் தயங்குவர். அப்படி இருந்தும் முதல் தடவையாக ஒருவர் ஆணுடனோ / பெண்ணுடனோ பேசும்போது எதிர்ப்பாலார் எடுத்தெறிந்து பேசிவிட்டால் அதன்பின் ஆண் / பெண் உறவே வேண்டாம் என்று ஒதுங்கி விடுவர். இது பற்றிய தெளிவை பெற்றோர் பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டும். எதிர்ப்பாலாரிடம் பழகுவதை தடுக்க பெற்றார் அதிக கட்டுப்பாடு செய்வது நல்லதல்ல. எதிர்பாலார் பற்றிய நல்ல அபிப்பிராயம் இல்லாதவர்கள் தமது பின்னையகால குடும்ப வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்படுவர். ஆண், கணவனாகும்போது மிகக்கண்டிப்புடன் இருப்பார். சுமுகமாக பழகமாட்டார். மனைவியை அடக்கியாளுவார். பெண் மனைவியாகு ம்போது மன தைரியம் அற்றவளாகவும் சுமுகமாக பழகும் தன்மை அற்றவளாகவும் தன்னிச்சையாக எதையும் செய்ய முடியாதவளாகவும் காணப்படுவாள்.
ருமணத்தின் பின் தொடர்பாடல் :
莎 தா
திருமணத்தின் பின் கணவன், மனைவியின் தொடர்பாடல் வலுவாக அமைய, இருவரிடையேயும், பரஸ்பர தொடர்பு இருக்கவேண்டும். கணவன் மனைவியின் புத்திசாலித்தனத்தை மதிக்க வேண்டும். மனைவி~கணவனின் கடின உழைப்பை மதிக்க விேண்டும். ஒருவரையொருவர் வாழ்க்கையில் முன்னேற ஊக்குவித்துக் கொள்வதன் மூலம் தொடர்புகள் வலுவானதாக அமையும். அத்தோடு கணவன், மனைவியின் தொடர்பாடலே பிள்ளைகள் பின்பற்ற மாதிரியாக அமைவதுண்டு.
தொடர்பாடலின் சமமின்மை :
1. தொடர்பாடல் என்பது எல்லோரிடமும் சமமாக இருப்பது இல்லை. ஏனெனில் ஒவ்வொருவரும் சுமுகமாக விருப்பத்துடன் பழகும் விதம் ஆளுக்காள் வேறுபடும். இதற்கு அவர்கள் சிறுவயதில் வளர்ந்த குடும்பம், சூழல் போன்ற பல காரணங்கள் உண்டு. சிலர் “நான் யார் தெரியுமா?” என்று தன்னைத் தானே “பெரிய கர்த்தா” ஆக நினைத்துக் கொள்பவனை மற்றவர்கள்

நான் டு ui - fg 2002
மதிக்க மாட்டார்கள். இவர்கள் மற்றவர்களால் ஒதுக்கப்படுவார்கள்.
2. தொடர்பாடல் ஆனது நபருக்கு நபர் வேறுபடுவதைவிட கிராமம், நகரங்களுக்கு இடையேயும்கூட வேறுபடுகின்றது. நகரத்தில் இருப்பவரைவிட, கிராமத்தில் இருப்பவர்கள், மற்றவர்களுடன் எளிதாக பழகுவார்கள். சமூகப் பணிகளில் ஈடுபடுவார்கள். ஏனையோருக்கு இயல்பாகவே உதவுவார்கள். அன்புடன், விருப்பத்துடனனும் பழகுவார்கள். பெரும்பாலும் கிராம மட்டத்து தொடர்பாடல் அன்னியோன்னியமாக இருப்பதால், அக்கிராமத்து மக்கள் அனைவரையுமே அறிந்து இருப்பார்கள். இதற்கு மாறான நிலை நகர மட்டத்தில் உள்ளது. இங்கு பக்கத்து வீட்டில் இருப்பவரைக்கூட அறியாத ஒரு பரிதாபநிலை காணப்படுகின்றது.
நேரடித் தொடர்பாடலே சிறந்தது:
தொடர்பாடலில் எப்போதும் நேரடித் தொடர்பாடலே சிறப்பானது. ஏனெனில் இங்கு இருவருக்கு இடையில் ஏற்படும் கருத்துப் பரிமாற்றம், பரஸ்பர புரிந்துணர்வு மூலம் ஒருவரை ஒருவர் அறிந்துகொள்ள, அன்பு செய்ய வழிவகுக்கும். ஆனால் இங்கு நேரடியற்ற தொடர்பாடலில் மூன்றாவது நபர் தலையிடும்போது பல விளைவுகள் ஏற்படுகின்றன. எடுத்துக்காட்டாக காதலர்களுக்கு இடையேயான தொடர்பாடலில் நேரடித் தொடர்பாடலின்போது அதிக விட்டுக் கொடுக்கும் தன்மை காணப்படுகின்றது. ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள முடிகின்றது. இதனால் இவர்களது தொடர்பு இறுக்கமான வலுவான தொடர்பாக அமைய முடிகின்றது. இங்கு காதலர்களுக்கு இடையே தூது போகும் நண்பர் ஒருவர் இருப்பாராயின் இங்கு தொடர்பு வலுவற்றதாகிவிடும். ஏனெனில் இங்கு நேரடித் தொடர்பு இல்லை. ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முடியாது காணப்படுவர். இதனால் சில சந்தர்ப்பங்களில் “தூது போனவர் காதலியைக் கைப்பிடிக்க” காதலித்தவர் “இலவு காத்த கிளி’ போல் இருப்பதும் உண்டு.
இன்னோர் எடுத்துக்காட்டாக 69(5 குடும்பத்தில் கணவன், மனைவியினிடையே தகராறு. இருவரும் கதைப்பது இல்லை. இதன்போது சில இடங்களில் பிள்ளைகள் தொடர்பாடல் சாதனங்களாக இருவருக்கும் இடையில் விளங்குவர். இங்கு பெற்றோர் பிள்ளைகளை வழிநடத்தும் நிலை மாறி, பிள்ளைகள்
பெற்றோரை நிர்வகிப்பவர்களாக அமைகின்றனர். இதனால் பிள்ளைகளும் இதன் தாக்கத்தினால் பிற்காலத்தில் சமூகத்தில் ஒரு பிறழ்வான நிலையை Q60)LL வழிப்படுத்தப்படுவர். சில
குடும்பங்களில் கணவன், மனைவிக்கு இடையே தொடர்பாடல் செய்பவராக மூன்றாம் நபரான அடுத்த வீட்டுக்காரர் காணப்படுவார். இதனால் இங்கு பாதிப்பு மிக அதிகமாகி விடுகின்றது.

Page 9
நான் un – fs 2002
அயலவர் தாம் அவர்களை நிர்வகிக்க முன்வந்து அக்குடும்பங்கள் மேலும் பிரச்சனைகளை ஏற்படுத்திக் கொள்ள வழிவகுப்பதோடு, மணமுறிவு, தற்கொலை, கொலை என்பன வரை செல்ல இந்த “மூன்றாம் நபர் தொடர்பாடல்” வழிசமைத்துவிடும். எனவே இங்கு மூன்றாம் நபரை நுழையவிடாது இருவருக்குமிடையே என்னதான் பிரச்சனை இருப்பினும், தாமே தீர்த்துக் கொள்வது, ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது என்பன மேலதிக பிரச்சனைகள் எழாது தடுப்பதோடு ஒற்றுமையாக இருக்கவும் உதவுகின்றது.
இன்றைய தொடர்பாடலின் சிறந்த ஊடகம் :
தொடர்பாடலில் இன்றியமையாததாக விளங்குவது மொழி ஆகும். மொழி மூலமே கருத்துப் பரிமாற்றம் நிகழ்கின்றது. இம்மொழி ஆனது கலாசாரம், நாடு என்பவற்றுக்கு இடையே வேறுபட்டதாக காணப்படுகின்றது. இதனால் ஒரு மொழி அந்த கலாசாரம், நாட்டு மக்களைவிட, பிறருக்கு எளிதில் விளங்குவது இல்லை. அதாவது எல்லா மக்களுக்கும் பொதுவான மொழியாக ஆங்கிலம் இருந்தபோதும்கூட, அதுபற்றிய அறிவு உலகில் உள்ள எல்லா மக்களுக்கும் இருப்பதில்லை. இதனால் யாவரும் கருத்துப்பரி மாற்றம் செய்யக்கூடிய தொடர்பாடல் ஊடகமாக குறியீட்டுப் படங்கள், குறியீடுகள் என்பன அமைகின்றன. இவை எந்தவொரு பிரிவு மக்களும் பார்த்த உடனேயே புரிந்துகொள்ளக் கூடியதாக இருப்பதால், மக்கள் அதிகம் புழங்கும் இடங்களில் இதனை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
எனவே தொடர்பாடல் என்பது ஒரு கருத்துப் பரிமாற்ற செயற்பாடு ஆகும். இதன் ஆரம்பம் தாய்ப்பால் பருகுவதிலேயே தொடங்கி மேலும் விரிந்து செல்கின்றது. தொடர்பாடலில் நேரடித் தொடர்பாடல் சிறந்த ஒன்றாக காணப்படுகின்றது. மேலும் தொடர்பாடல் ஊடகமாக மொழி சிறப்பிடம் பெற்ற போதும், கருத்துப் பரிமாற்றத்துக்கு இலகுவான ஓர் ஊடகமாக குறியீடுகள் அமைவது சிறப்பானதொன்றாக காணப்படுகின்றது.
உசாத்துணை :
1. மனிதனுக்குள் ஒரு பயணம், உத்ரா மோகன்.

நான் டு பங் - சித் 2002 ஊர்க்கிளி ஒருவர் வைத்தியரிட்டை போனாராம். தனக்குள்ள வருத்தத்தைச் சொல்லி சிகிச்சை கேட்டாராம். நோயைக் கேட்டதம் வைத்தியரே சிந்தனையில் ஆழ்ந்தட்டாராம். ஏனெண்டா அத அவ்வளவு சுலபமாகக் குணப்படுத்தக்கூடிய வியாதி கிடையாதாம். உண்மையில் அத ஒரு வியாதியே இல்லையாம். இயற்கை நியதி. அவரு வைத்தியரிட்ட கேட்டது என்ன தெரியுமோ. தான் சாகாமல் சிரஞ்சீவியா எண்ணைக்கும் உயிர் வாழனும் என்கிறததான். வைத்தியருக்கு திடீரெண்டு ஒரு யோசனை வந்திச்சு: “அதங்கலா அத ரொம்ப சுலபம், என்ன, நீங்க கொஞ்சம் மனப்பத்தியம் படிக்கவேணும். அதைச் செய்தா இந்த மருந்து வேலை செய்யும்” எண்டு சொல்லி ஒரு மாத்திரையைக் குடுத்து அதை விழுங்கும்போது எக்காரணம் கொண்டும் குரங்கை நினைச்சுப் போடக்கூடாதது. தப்பித்தவறி நினைச்சா மருந்த வேலை செய்யாதது மாத்திரமில்ல பயங்கர எதிர்விளைவுகளைக் கொணர்ந்திடும். ரொம்ப ஜாக்கிரதையான பத்தியம் அததான் மனப்பத்தியம் இருக்கவேணும் எண்டு சொன்னாராம். அவவ்ளவுதான் வைத்தியத்திற்கு வந்தவன் எப்பப்ப எல்லாம் அந்த மருந்தைத் தொட்டானோ அப்ப எல்லாம் அவன் மனசில குரங்கு வந்த குந்திடும். அவனால சாகும்வரைக்கு அந்த மருந்த எடுக்கமுடியாம போயிற்றாம். இத தமிழ்வாணர் சொன்ன ஒரு கதை. ஓயாமல் வேலை செய்கின்ற ஓர் அபார சக்தியென்றால் அது மனோ சக்திதான். உலகில் நடைபெறுகின்ற இயற்கை தவிர்ந்த நிகழ்வுகளுக்கெல்லாம் காரணம் இந்த மனம்தான். சில இயற்கை நிகழ்வுகளுக்குக்கூட இன்று மனிதனின் செயற்பாடுகள் காரணமாகி விட்டன. மனிதனின் செயற்பாடுகள் இன்று இயற்கையைப பாதிக்குமளவிற்கு விசுவரூபம் எடுத்துள்ளன. மனிதனின் செயற்பாடு களுக்கு மனமே காரணம். ஆக மனமே இயக்கு சக்தியாக இருக்கின்றது.
இவ்வளவிற்கும் மனம் என்னும் ஒரு உறுப்பு இருக்கிறதா? இருந்தால் அது மனித உடலில் எங்கே இருக்கிறது என்பன போன்ற கேள்விகள் இன்னும் உளவியல், உடலியல் ஆய்வாளர்களை குடைந்து கொண்டே இருக்கின்றன. மூளை என்ற பாகம்தான் மனம் எனப்பலரும் கருத்துத் தெரிவிக்கின்றனர். பதிவுகளும் கட்டளை வழங்குதலும் மூளையின் செயற்பாடாக இருப்பதனால் அக்கருத்து ருசிப்படுகின்றது.
எது எப்படியோ மின்சாரத்தை கண்ணால் காணமுடியாது, காதால் கேட்கமுடியாது, மூக்கால் நுகரமுடியாது, நாக்கால் சுவைக்கமுடியாது தொட்டுப்பார்க்க முடியாது ஆயினும் அதன் வலுவடிவங்களையும் தாக்கங்களையும் பெறமுடியும், அறியமுடியும். அதேபோல மனத்தின் இருப்பை மனிதனின் சொல்லும் செயலும் உணர்ச்சிகளும் வெளிக்காட்டுகின்றன. எனவே மனசின்றி மனிதனில்லை; இருந்தால் அவன் சடப்பொருள். மனிதனின்றி மனசில்லை. இருந்தால் அது பரம்பொருள்.

Page 10
நான் பங் - சித் 2002
மனிதமனம் மேம்பாடடையவும், வளர்ச்சியடையவும் முதனிமையான “குற்றப்பழியுணர்வு”
ஜெ. தற்பரன். ஓர் அறிமுகம் “குற்றப்பழியுணர்வு’ என்பது மனதுடன் தொடர்புபட்ட ஒரு விடயமாகும். ஒரு செயலினை நாம் செய்யவேண்டுமெனின் அச்செயலினை நாமே செய்யவேண்டும் என எமது மனதினது “ஈகோ” பகுதியே உத்தரவிடுகின்றது. எனினும் அதனைச் செய்தே ஆகவேண்டும் என எமது ஆவலைத் தூண்டுவது “இத்” என்பதுவும் குறிப்பிட்ட அச்செய்கையுடன் தொடர்புபட்ட முன் அனுபவங்கள், அது குறித்த பிறவிடயங்கள் என அனைத்தையும் நினைவூட்டி எச்சரிப்பது “சுப்பர்ஈகோ’ என்பதுவுமாகும். உதாரணமாக புதுச்சைக்கிள் ஒன்றினைக் கண்டவுடன் பிறர் வாங்குவதற்கு முன்பு நானே வாங்கிவிடல் நல்லது என எண்ணுவது “ஈகோ’ எனின் அதனை வாங்கினால் இன்னதற்கு பயன்படும் என எண்ணுவது அல்லது எண்ணத் தூண்டுவது “இத்” எனின் இம்மாத செலவுகளுக்கு மத்தியில் இச்செலவு சரியா? இதனை வாங்குவதனால் ஏற்படும் செளகரியம், அசெளகரியம் போன்ற விடயங்களை அலச வைப்பது “சுப்பர்ஈகோ” என்பதுவும் ஆகும் எனக் கொள்ளலாம். ஆக, இவை மூன்றையும் நாம் சமமாக அவற்றின் பாதைவழியே வெற்றிகரமாக உணர்ந்து செயற்பட்டோமானால் எம்பக்கம் வெற்றியாகிவிடும். இங்கு, “இத்” எனப்படுகின்ற தூண்டுதல் வகை உணர்வின் அதிகப்படியான செயற்பாடு காரணமாக எமது ஆற்றல், அனுபவம், அறிவு முதலான அடிப்படைக்காரணிகளுக்கு அப்பால் சில முடிவுகளினை வெளியிட்ட / செயற்படுத்திய பின்பு அவை குறித்து நாம் மீளவும் நினைவுபடுத்திக் கொள்வோம் எனின் அதனைக் குற்றப்பழியுணர்வு எனலாம். இங்கு அடிப்படைக்காரணிகளான அதிஉயரகச் சிந்தனைகள் தோற்றுப் போவதும், மீள்நினைவூட்டலின் போது இயலாமை ஏற்படுவதும் இயல்பாகிவிடுகின்றது. இதனாலேயே பலருக்கும் குற்றப்பழியுணர்வு என்பது தாழ்வு மனப்போக்கினை வளர்த்தும், அபூர்வமாகச் சிலரில் அதிகூடிய சிந்தனைகளின் வெளிப்பாடாக மிகவும் பிரகாசமடைந்தும் விடுகின்றது. அண்மையில் வளர்ப்பு நாய்கள் மீது ஆராய்ச்சி செய்த பிரித்தானிய நிறுவனம் ஒன்று "அநேகமான நாய்கள் தாம் வளரும் வீட்டில் சாப்பிட்டுவிட்டு பிற வீடுகளுக்கு/தெருக்களுக்கு தாவிச்சென்று பின் எஜமானர் களைக் கண்டவுடன் குற்றவுணர்வினால் பாதிப்படைந்திருக்கக் காணப்பட்டன” என தமது அறிக்கையிலே குறிப்பிட்டுள்ளது. எனவே பாதிப்பு என்பது அவரவர் தேர்வுகளைப் பொறுத்தது. “மனிதமனம்”
என்பதுடன் தொடர்புறும் ஒருவிடயமாக இது உள்ளதால், இதனை தனிநபர் பிரச்சினை எனக்கொள்ள முடிந்தாலும் u6)(36 Ol

நான் () பங் - சித் 2002
வகையான அணுகுமுறைகளினுடாக இதன் தாக்கத்தினைக் கணிசமான அளவு குறைத்துக் கொள்ளலாம்.
குற்றப்பழியுணர்வு சாதாரண நம்வாழ்வு
குற்றப்பழியுணர்வினை நாம் அனைவருமே ஏதோவொரு வகையில் சம்பவங்களாக உணர்ந்து கொள்ளலாம். பிரச்சார நேரங்களில் தேர்தல் வேட்பாளர் ஒருவர் இப்பகுதிக்கு அதை, இதைச் செய்வேன் என வாக்குறுதி கொடுப்பதும் பின்பு வெற்றிபெற்றதும் (கூறியதனை ஞாபகம் வைத்திருக்கும் வேட்பாளர் எனின்) அப்பகுதி பற்றி சிந்திப்பாராயின் அவரது உணர்வுகளும்; நாட்டின் அசாதாரண நிலைமைகளினால் பெற்ற பிள்ளைக்கு உணவு கொடுக்க கஷ்டப்படும் ஒருதாய் “தமது தேவைகளின் வெளிப்பாடாக உன்னைப் படைத்ததுமல்லாமல் பட்டினிபோட்டு வாட்டுகின்றேனே! 6T60T எண்ணுவாளாயின் அவளது உணர்வுகளும் குற்றப்பழியுணர்வின் பெரிய பரிணாமங்கள். இவை சிலசமயம் மனதினுள்ளேயே அமுங்கிப் போய்விடுகின்றன. ஆனால் நாளாந்த வாழ்வில் பிறழ்வுகளினையும், முரண்பாட்டுச் சிக்கல்களினையும் உருவாக்கிவிடும். இவற்றையே சிறியளவில் நாம் நோக்குவோமாயின் பரீட்சைக் காலங்களில் கள்ளமாகச் சினிமா பார்க்கும் அல்லது விளையாடித்திரியும் சிறார் பெறுபெறுகள் வரும்போதும்; குடும்பப் பிணைப்புக்களில் ஒருவருக்கொருவர் வாக்குக் கொடுத்துவிட்டு முழிபிதுங்குவதும்; வீட்டு வாடகை கொடுக்கப்படாமலிருக்க எதிரில் வருபவர்கள் வீட்டுச் சொந்தக்காரர்போல் தென்படுவதும்; வீதியில் மின்துண்டிப்புச் செய்பவர்களினைக் கண்டபோது “கட்டாமலிருக்கும் கரண்ட் பில்ஸ்” ஞாபகம் வருவதும்கூட இதே வகையே. இவ்வாறாக சூழ்நிலைக்கு ஏற்ப மனிதனுக்கு மனிதன் இந்நிலைமை வேறுபாடு அடைகின்றது.
நிச்சயமாக இவை அனைத்துக்கும் அடிப்படைக் காரணம் நாமே. குறித்ததோர் செயலை நாம் செய்வதற்கு முன்பு அது குறித்துச் சில வினாடிகளேனும் சிந்திப்போமானால், எதுவுமே பிரச்சனையாகத் தென்படுவதற்குச் சாத்தியமே இல்லை. ஒரு செயல் தவறாகச் செய்யப்பட்டுவிட்டது என நீங்கள் மனதளவில் உணர்ந்துவிட்டீர்க ளேயானால் உடனடியாக அக்காரியத்துடன் தொடர்புபட்டவர்களுடன் குறித்த விடயம் பற்றி திறந்த மனதுடன், சரளமாக, மனம்திறந்து உரையாடுங்கள். அதனால் உங்கள் பக்கம் தோல்வி / இயலாமை வரின்கூட வருந்தவேண்டாம்; அப்போது மட்டுமே உங்களுக்கு மனவிடுதலை கிட்டும். குறிப்பிட்ட அச்சமயத்தில் உங்கள் மனதின் அதியுயரகப் பகுதி இயங்காமல் போனது உங்கள் தவறல்லவே!! இந்நிலை அனேகர் நம்புவது போன்று அறிவு அற்றது, அனுபவக் குறைவானது என்றெல்லாம் இல்லை. இவற்றினால் மிஞ்சும் ஏதோ ஒன்றினை / ஒரு விடயத்தை பாடமாகச் சிறப்பாகக் கற்றுவிட்டீர்க ளாயின் வளர்ச்சி அடைந்துவிட்ட நீங்கள் மேம்பாடடையப்

Page 11
நான் unii - éf 2002
போகின்றீர்கள் என்று அர்த்தம். ஆனாலும் இவற்றுக்கு பொறுமையும் (சற்று), பிறர் கருத்தைச் செவிமடுத்தலும் மிகவும் அவசியமாகிவிடுகின்றது. இவ்வாறான நிலையில் அனுபவம், அறிவு என அதியுயரகக் காரணிகளின் சக்தியினை உயர்த்துவதற்கு முயற்சிப்பீர்களேயானால் நீங்கள் அதியுன்னதமேம்பாடு அடைந்து விட்டீர்கள் என்று அர்த்தம்.
இந்நிலை அநேகமானவர்களது அசாதாரண வாழ்விலே மறுதலையாகவும் நிகழ்ந்துவிடுவதுண்டு. “முதல் தடவை தானே அடுத்த தடவை பார்ப்போம்” எனவும் “இந்த வருடம் தொடக்கம் செலவுவிபரம் எழுதியே செலவழிப்பது” என ஜனவரி மாதமே தயாராவதும் பின்பு இவையே வருடாவருடம் நம்வாழ்வின் எல்லைவரை தொடர்வதுவும் நாம் கண்ட நேர்வுகள். இவ்வாறாக குற்றவுணர்வு தனது எச்சரிக்கை மணியை ஓங்கி அடித்தபோதும் அசராமல் யாவையும் தள்ளிப்போட்டே “அம்போ’ என விட்டவர்கள் எம்மிடையே ஏராளம்; இவ்வாறானவர்களது புலம்பல்களும், அவலங்களும் தாராளம்.
இவ்வாறான முரண்பாட்டுச் சிக்கல்கள் தனிநபருடையது எனின் தமது மனங்களுள் புதைத்து விடுவதும் அதுவே பலரோடு தொடர்புட்ட பல்வேறு விடயங்கள் எனின் அவர்களோடு இனம்புரியாத ஒரு தொடர்பு இடைவெளியை பேணிப்பாதுகாப்பதுவும் (Communication Gaps - Maintaining) gibpugusoOTfGigoTIT6) பாதிப்படைவதற்கு அடிப்படையாக அமைந்துவிடுகின்றது. இவற்றை இல்லாமல் செய்வதற்கு நாம் அனைவருமே இதயசுத்தியுடனும் பொறுப்புக்களையும் உரிமைகளையும் உணர்ந்து கொள்வதுடன் நாம் அனைவருடனுமில்லாது போனாலும் குறிப்பிட்ட சிலருடனேனும் மிகவும் இறுக்கமான தொடர்புகளை வைத்திருத்தல் மிகமிக அவசியமாகின்றது.
இந்நிலைமை பொதுவானதே;
p53Eu JDITs மனிதமனங்கள் அனைத்துக்குமே (இப்போது நாய்களுக்கும் கூட) இக்குற்றப்பழியுணர்வு உண்டு. எனவே இது தனிநபர் குறைபாடென வருந்திடத் தேவையில்லை. ஆனாலும் அவரவர் நிலைகளுக்கு ஏற்ப, கையாளுகின்ற விதத்திற்கு 960) d6 Tes இதனை உணர்ந்து கொள்ளும் தன்மை வேறுபாடடைந்து விடுகின்றது. சிலர் அழுகையாகவும், சிலர் வீரவசனங்களாகவும் இன்னும் சிலர் அடிகளாகவும் வெளிப்ப டுத்தியும் விடுகின்றனர். ஆனால் இத்தகைய தன்மையுடையவர்கள்
தமது மனநிலையினை தளர்த்தும் தன்மையான செயற்பாடு களினைக் கைவிட்டுவிட்டு இத்தகைய கடினமான காரியங்களில் ஏன் ஈடுபடுகின்றார்கள் என அச்செயற்பாடுகளுடன் தொடர்புடைய வர்களைச் சார்ந்தவர்கள் மிகவும் துன்பத்திற்கு உள்ளாகின்றனர்

நான் பங் - சித் 2002
என்பதனை ஏனோ மறந்துவிடுகின்றனர். நாம், எமது மனதிற்கு இடும் கட்டளைப்படியே செயற்பாடுகள் யாவும் நடக்கின்றன என எண்ணி எம்மை நிர்ணயம் செய்வதுடன் அனைத்தையும் ஒரு பாடமாகக் கொள்வோமாயின் மேம்பாடு, வளர்ச்சி என யாவுமே சாதகமாக அமைந்துவிடும்.
குற்றப்பழியுணர்வு நிலைமை ஏற்படுவதற்கான காரணம் : எமது நாளாந்தச் செயற்பாடுகளில் பிழை எது? சரி எது? என்பதான வரையறை குறித்து எம்மிடையே ஒரு புரிந்துணர்வு இன்னமும் இல்லை. இது சாத்தியமான விடயமுமன்று. ஆனாலும் இசைந்து போதல், விட்டுக் கொடுத்தல் போன்ற குணாம்சங்கள் எம்முள் வளர்ந்தாலேயன்றி இவை தொடர்ந்தும் முரண்பாட்டுச் சிக்கல் நிறைந்ததாகவே காணப்படும். இவை மட்டுமன்றி எமது அனைத்துக் காரியங்களுமே பல வேளைகளில் சரியாக அமைந்துவிடுவது மில்லை. இவ்வாறான சிக்கலான சூழலிலேயே குற்றப்பழியுணர்வு ஏற்படுகின்றது. மனிதனைச் சரியாக வழிநடத்தவென சுயமதிப்பீடு / மீளாய்வு செய்யவென அமைக்கப்பட்ட இயற்கை அமைவுகளில் இதுவும் ஒன்று என்றுகூடச் சொல்லலாம்.
விடுதலை பெறவழி: தனிப்பட்ட ரீதியாக உங்களுக்கு நெருக்கமாக ஒருவர் இருப்பார் அன்றேல் முதலில் அவரை இனங்காணுங்கள். நீங்கள்
குற்றப்பழியுணர்வினால் பாதிக்கப்பட்டவராயின் அது வெளிப்படுத் தப்படல் அவசியமா என்பதனை ஆய்வு செய்யுங்கள் அத்துடன் தொடரும் அனைத்து விடயங்கள் குறித்தும் கலந்துரையாடுங்கள். பொறாமையோ, (385u(3LDT எதுவானாலும் உரியவகையில் வெளிப்படுத்துங்கள். Gou6f LugoLuistas பேசுங்கள். இது சாத்தியப்படாது என எண்ணுவீர்களேயானால் எங்கேனும் குறித்துக் கொள்ளுங்கள். பேசியவுடன் / குறித்தவுடன் அதனை மறந்தே விடுங்கள். இதே நிலை சிலருடன் அல்லது பலருடன் தொடர்புபட்ட விடயம் எனின் அனைவருடனும் நல்லதொரு தொடர்பு உறவு முறையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
எனவே சரியான முறையில், சரியான பாதையில், எமது கண்ணோட்டத்தின்படி நாம் எமக்கொரு வழியைத் தெரிவுசெய்து, யாவையும் இலகுவானதாக எடுத்து நோக்கி, அவற்றின்வழி செயற்படுவதற்கு உறுதி கொள்வோமேயானால் குற்றப்பழியுணர்வு உட்பட எமது மனதினைச் சரியான வழியில் நகர்த்திச் சென்று வெற்றிபெற்று வாழ்வை இன்புற வாழ இயலும்.
Iる。

Page 12
நான் )ெ un – éfb 2002 ஒரு சோறு பதமா?
கி.ஆ. லியோன்.
பலாலி ஆசிரியர் கலாசாலை, யாழ்ப்பாணம்.
"அவன் நல்ல கெட்டிக்காரன்” "இவன் எல்லாம் ஒரு மனுஷனா?” "அந்தப் பெடியனுட்ட எந்தத் திறமையும் இல்லை’ 'தம்பி தங்கக் கம்பி’
“அவன் கோபக்காரன்” “கோடு போட்டா அவன் ரோடே போடுவான்”
இவையனைத்தும் “எக்ஸ்’ என்னும் ஒருவரைப்பற்றிப் பலர் சொன்னகருத்துக்கள். இதில் எது உண்மை; “எக்ஸ்’ நல்லவனா? கெட்டவனா? எனக்கூறமுடியாதிருக்கின்றது. ஏனென்றால் இங்கே சொல்லப்பட்ட கருத்துக்கள் முன்னுக்குப் பின் முரண்பாடு உள்ளதாக இருக்கின்றன.
ஒருவன் தன் வாழ்க்கையில் பல்வேறு மனிதர்களை பல்வேறு சந்தர்ப்பங்களில் சந்தித்து அனுபவம் பெறுகின்றான். இரவும் பகலும் வருவதுபோல இன்பமும் துன்பமும் மாறிமாறி தலைகாட்டும். மனிதனுக்குள்ளே அவன் வெளியுலகிற்குக் காட்டும் முகம் மாறுபட்டுக் கொள்கின்றது. “எக்ஸ்’ சந்தோஷமான தூண்டியைப் பெற்றால் சந்தோஷமான துலங்கலை வெளிக்காட்டுகின்றான். அதே போலவே துக்கமான தூண்டிக்கு, துக்கமான துலங்கலைக் காட்டுகின்றான். இந்த நிகழ்வுகள் எப்போதும் அவனுள் நிரந்தரமாய் இருப்பதில்லை. இந்த வேளையிலே அவனைத் திடீரென சந்திக்கும் மற்றவர்கள் அந்த ஒரு சந்தர்ப்பத்திலேயே அவனது இயல்பு இதுதான் என எடை போடுகின்றார்கள். இது எப்படிச் சரியாகும்?
இதற்கு ஒரு உதாரணம் கூறலாம். கல்லுடைக்கும் தொழிலாளர்கள் சிலரைச் சந்தித்துக் கதைக்கும் நோக்குடன் ஒரு ஆய்வாளர் குறித்த அந்த இடத்திற்குச் சென்றிருந்தார். ஒருவரிடம் அவர் சென்று “ஐயா ஏன் கல்லைத் தட்டிக் கொண்டு இருக்கின்றீர்கள்’ எனக் கேட்டார். அதற்கு அவர் பதிலாக “சும்மா போறியா உன் வேலையைப் பார்த்திட்டு” என்றார். பின்பு அவர் மற்றவரிடம் சென்று "ஐயா ஏன் கல்லைத் தட்டிக் கொண்டு இருக்கின்றீர்கள் என கூறமுடியுமா”? என்றார். அதற்கு அவர் மிகவும் மரியாதையாக “சேர் எனக்கு இப்போது இதைப்பற்றிக் கூறுவதற்கு நேரம் இல்லை, இன்னொரு தடவை வந்தீர்கள் என்றால் விபரமாக சொல்வேன்’ என்றார். ஆய்வாளர் இன்னும் ஒருவரிடம் சென்று அதே

நான் )ெ us - dogj 2002
கேள்வியைக் கேட்டார். அதற்கு அவர் முழு விளக்கமும் கொடுத்து அவருக்கு வேண்டிய தகவல்களைக் கொடுத்து அனுப்பினார். இக்கதையில் மூன்று விதமாகப் பதிலளித்த மனிதர்களைக் காணுகின்றோம். இவர்களிடம் இருந்துவந்த பதிலுக்கும், அப்போது அவர்கள் இருந்த மனநிலைக்கும் தொடர்பு இருக்கின்றது. இதற்கு சூழல், வறுமை, மனக்குழப்பம், பசி, ஏனைய தொழிலாளர்களுடன் சண்டை, வெயில், வேறு சம்பவங்களும் அவர்கள் அவ்வாறான பதில் அளித்ததற்குக் காரணமாகின்றது. இதையே "மூட்” (M00d) என்கின்றோம். இன்னொருநாள் வந்திருந்தால், இந்த மூன்று பேரும் வேறு வேறு விதமான மனநிலையோடு பதிலளித்திருப்பார்கள். எனவே ஒருவர் கதைத்தவுடனேயே, அல்லது நடந்து கொண்ட ஒரு விடயத்தை வைத்து இதுதான் இவர் இயல்பு என முடிவெடுப்பது தவறாகும்.
முதன் முதலில் ஒருவரைப் பார்த்து கறுப்பாயிருக்கின்றான், தடியனாயிருக்கின்றான், பெரிய மீசை வைத்திருக்கின்றான், நெஞ்சை நிமிர்த்தி நடக்கின்றான். எனவே இவன் “ரெளடியாகத் தான்” இருக்க வேண்டும் எனப்பலர் நினைப்பதுண்டு. ஆனால் அவனோடு பழகிப் பார்த்தால் மிகவும் மென்மையானவனாக, நல்லவனாக இருப்பான். ஆனால் முதலில் பெற்ற மனப்பதிவு பிழையானதால் அவனைச் சந்திக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவனது செயல்கள் தவறானதாகவே மனதில் கொள்கின்றான். இன்னும் பகையாளியின் அல்லது விரோதிகளின் பேச்சைக் கேட்டு ஒருவர் நோக்கும்போது, நோக்கப்படுபவன் விரோதியாகவோ அல்லது பகைவனாகவோ தெரிகின்றான். இதற்குக் காரணம் நோக்குபவருக்கு நோக்கப்பட்டவர் பற்றிக் கூறப்பட்ட தப்பான மனப்பதிவேயாகும். நாம் பச்சைக் கண்ணாடி போட்டுப் பார்க்கும்போது எமக்கு இந்தப் பிரபஞ்சம் பச்சையாகத் தெரிவதில்லையா? சிகப்புக் கண்ணாடி போட்டுப் பார்த்தால் சிகப்பாகத் தெரிவதில்லையா? இதுவும் அவ்வாறுதான், ரெளடி எனப் பார்க்கும்போது “எக்ஸ்’ ரெளடியாகத்தான் தெரிகின்றான். நல்லவனாகப் பார்க்கும்போது நல்லவனாகத் தெரிகின்றான்.
எனவே ஒருவரைப் பார்த்தவுடன், கதைத்தவுடன் இவர் இப்படித்தான் என்று எடைபோடுவது சரியாகுமா? இல்லை. அவருடன் பல சந்தர்ப்பங்களில் நெருக்கமாகப் பழகிப்பார்க்கும்போதுதான் அவரது வெவ்வேறுவிதமான குணவியல்புகள் வெளிப்படும். பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறுவிதமான இயல்புகளைக் கண்டுபின்பு இறுதி முடிவுக்கு வரமுடியும். அது “எக்ஸ்’ திறமையானவர் என்றோ அல்லது அவனிடம் நினைத்தது போன்று ஒன்றும் இல்லை என்றோ இருக்கலாம். இப்போது நோக்கியவரின் மனப்பதிவு சரியானதாக இருக்கும். அதைவிடுத்து முதல் சந்திப்பிலேயே, மதல் சந்தர்ப்பத்திலேயே ஒருவரைப்பார்த்து எடைபோடுவது எப்படி சரியாகும். ஒரு விடயத்தில் நல்லவனாக இருப்பவன் வேறு

Page 13
நான் (2) பங் - சித் 2002
விடயத்தில் அயோக்கியனாக இருப்பதில்லையா? அல்லது கல்வியில் மந்தமாக இருப்பவன் விளையாட்டிலும் கலையிலும் சிறந்து விளங்குவதில்லையா? இப்படி இருக்க ஒரு சோறு எப்படி பதமாக இருக்கமுடியும்? இல்லை, ஒரு சோறு பதமாகாது.
நாமும் எமது சமூகத்தில், பாடசாலையில், இன்னும் வேறு இடங்களில் ஒரு சோற்றில் பதம் பார்ப்பதைவிட்டு பல சந்தர்ப்பங்களில் பழகிப் பார்த்து இறுதியாக, உறுதியான முடிவெடுப்போம்.
சில சந்தர்ப்பங்களில் நாம் முதலில் எடுத்த மனப்பதிவே சரியானதாக அமைந்துவிடுவதும் உண்டு.
Nu
<ബ
ZAN
ஆசானுக்குத் தெரியாத பாடம்
ஐந்தாம் தரத்தில் அமைதியாக நடந்தது பாடம் - விவேகம் வேகமாக வேண்டிய கட்டாய வகுப்பு - காரணம் பொல்லாத “கொலசிப்” வகுப்பு பிள்ளை ...! எமது நாட்டின் இலட்சினையின் சக்கரம் குறிப்பதென்ன?. இதுவினா சமத்துவம், சமநீதி, சமதர்மம் - இதுவிடை அடுத்தவனை நோக்கி தேசியக் கொடியின் அரசிலை குறிப்பது? பெளத்தமதம் விர்ரென விடை - அந்த அமைதியான வேளை அறிவான மாணவன் எழுந்தான்
சேர் .
சமதர்மம் என்றால் . எம்மதத்தின் குறியீடு தேசியக் கொடியில் எங்கே? என்றான் விடை தெரியா வினாவிற்காய் வியர்த்தேன், விம்மினேன் - எனக்குள் விவேகமான இவன் - நாளை பிரிவினைவாதியாய், பயங்கரவாதியாய் பெயரெடுப்பானோ?
இளவாலையூர் சிநேக - பாரதி

நான் 3ெ) uri - ang 2002
Jb6Odiliggs) b - FRIENDSHIP
செல்வி. அனித்தா செல்வராஜா, சமூகவியல் சிறப்புக்கலை, யாழ். பலகலைக்கழகம்.
சமூக உளவியலில் நண்பத்துவம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த எண்ணக்கருவாகக் காணப்படுகின்றது. மனிதன் ஒரு சமூகப் பிராணி ஆவான். இந்த வகையில் மனிதன் தனித்திருக்கமுடியாது. பல்வேறுபட்ட Զ.-D6ւ நிலையூடாக வளர்க்கப்பட்டே ஒருவன் சமூகமயமாக்கப்படுகின்றான். இந்த வகையில் மனித வாழ்வில் நண்பத்துவம் என்பதும் முக்கியம் வாய்ந்ததாகும். குறிப்பாக இளைஞர்களது சமூகமயமாக்கலில் நண்பர்கள் முக்கிய பங்கேற்பதை அவதானிக்கலாம்.
அதாவது, தனிமையில் இருக்கும் ஒருவன் பயம் உள்ளவனாகவும், பலவீனமுள்ளவனாகவும் அதே சமயம் பாதுகாப்பின்மையையும் உணர்கிறான். (Rubensten & Shaver - 1982). இந்த வகையில் கட்டிளமைப்பருவத்தினரே தனிமையில் அதிக தாக்கத்தைப் பெறுகின்றனர். சமகால சமூக உளவியலாளர்கள் இளைஞர் பண்பாடு தொடர்பான ஆய்வுகளிலும், படிப்புக்களிலும் தொடர்ச்சியாக ஆர்வம்காட்டி வருவதனை அவதானிக்கலாம்.
ஒருவனது பிள்ளைப் பராயத்திலுள்ள நண்பத்துவம் மூலமே அவனது 3iulb தொடர்பான கருத்துக்கள் அபிவிருத்தி செய்யப்படுவதைக் காணலாம். இது சம்பந்தமாக ஜி. எச். மீட்டினுடைய தொல்சீர் சிந்தனையை நோக்குமிடத்து, இவர் பிள்ளைப் பராயத்தை விளையாட்டுப் படிநிலை, போட்டி விளையாட்டுப் படிநிலை என பார்க்கிறார்.
1. 660d6 Tuum LGÚLu19660d6Md - Play Stage இந்நிலையில் ஒரு பிள்ளை தனக்குரியது அல்லாததாகிய நடிபங்குகளை ஏற்கிறது.
உ+ம் : ரீச்சர் ஆக விளையாடுவது. 2. போட்டி விளையாட்டுப் படிநிலை - Game Stage
இந்நிலைக்கே இவ்வறிஞர் ЗnlgШ முக்கியத்துவம் கொடுக்கிறார். அதாவது ஒரு பிள்ளை விளையாட்டுக்களில் ஈடுபடும்போது ஒரு பொதுமைப்படுத்தப்பட்ட உணர்வைக் கொண்டிருக்கும். இவற்றினுாடாக பிள்ளைப் பராயத்தில் ஒரு பிள்ளை சமூகத்திற்கு உரிய உயிரியாக மாறுகிறது.
உ+ம் : கிரிக்கட் விளையாட்டில் ஈடுபடும் ஒரு குழுவிலுள்ள நண்பர்களை எடுத்துக்கொண்டால் அவர்கள் தலைவர் சொல்லுக்கு

Page 14
நான் )ெ பங் - சித் 2002
கீழ்ப்படிதல், ஒவ்வொருவரும் ஒவ்வொரு பங்கை ஏற்றல், விட்டுக் கொடுத்தல், சகிப்புத்தன்மை போன்ற பண்புகளை வளர்ப்பதனூடு அவர்களது சுயம் என்ற எண்ணக்கரு அபிவிருத்தியடைவதைக் காணலாம். நான் என்ற நிலையிலிருந்து எமது என்ற நிலைக்கு இவர்கள் தம்மை வளம்படுத்துவதைக் காணலாம்.
Sullivan (1953) aF6ð6ử66ö7 676öīLu6uf6 5ëög56ugË60ɔgö (Interpersonal Theory) (ஆட்களுக்கிடையேயான செல்வாக்கு) நோக்கின், ‘ஒருவரைப் பார்த்து ஒருவர் கற்றுக் கொள்ளல் நண்பத்துவம் தொடர்பான போக்கிற்கு அடிப்படையாக இருக்கிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு பார்க்குமிடத்து, இளைஞர் நண்பத்துவம் என்பது இளைஞர்களுடைய மேம்பாட்டுக்கு அடிப்படையாக உள்ளது என இவரது கோட்பாடு குறித்து நிற்கிறது.
மேலும் கட்டிளமைப் பருவத்தினரிடையே காணப்படும் நண்பத்துவமானது அவர்களை நெருக்கமான உறவுக்குள் 6ITTšÉ6îGuid. (Buhrmester & Furman, 1987; Douva & Adelson, 1966; Kelly & Hanen, 1988). (gólůLJITE, SöÉ60p6ouî6ð எதிர்பாலாரைக் கொண்ட நண்பத்துவம் காதலாக பரிணமித்து திருமணம் எனும் பந்தத்தை நிலைநிறுத்தி நிற்பதனையும் காணலாம். இளைஞர் பல்வேறுபட்ட தேவைகளின் நிமித்தம் வேறுபட்ட நண்பர்களை வைத்திருப்பர். (La Gaipa, 1977). அதாவது விளையாடும்போது விளையாட்டில் ஈடுபாடுடையவர்களையும், கற்றலின் போதும் மற்றும் இரகசியங்களை பகிர்வதற்கும் ஒருவகையான நண்பர்களையும் கொண்டிருப்பர்.
ஒருவன், குடும்பத்திலிருந்து பெறத்தவறியவை நண்பர்கள் மூலம் நிவர்த்தி செய்யப்படுவதனைக் காணலாம்.
உ+ம் : எமது சமூகத்தைப் பொறுத்தவரை பாலியல் பற்றி குடும்பத்தில் பேசப்படுவதில்லை. முதன்முதலில் நண்பர்கள் மூலமே இவ்வகையான அறிவை எமது இளம் சமுதாயம் பெற்றுக் கொள்கின்றது. இந்நிலையிலேயே ஒருவன் குடும்பத்தை விட நண்பர்களில் அதிக நம்பிக்கை வைத்து, தனது உள்ளார்ந்த விடயங்களையும் கூறுகின்றான்.
நண்பனைக் கொண்டு ஒருவனின் நடத்தையை உணரலாம் என்பது சாதுலான்ட் (Satherland) இன் கருத்தாகும். இந்நிலையில் ஒருவனின் விலகல் நடத்தைக்கு கூட அவனது நண்பர்கள் காரணமாக அமைந்து விடுகின்றனர். இதனை பிறீட்மன் டுப் என்பவர்களின் செமூக ஒப்பீட்டுக் கோட்பாடு மூலம் எடுத்து

நான் 3ெ) unii - éP5 2002
நோக்கலாம். அதாவது, ஒருவன் தனது குணாம்சங்களுடன் ஒத்த தன்மைகள் உள்ள ஒருவருடனேயே இணைந்து கொள்கின்றான். D_+d : 9Cb umsÖu GsbstsDpG6liff6ö (Juvenile Delinquent) இன்னொரு பால்ய நெறிபிறழ்வோனின் நட்பையே விரும்புவான்.
இன்று எம்மிடையே காணப்படும் நண்பத்துவத்தை எடுத்து நோக்கினால், பெண்களைவிட ஆண்களின் நட்பே இறுக்கமாகக் காணப்படுகிறது. ஆண்களே அதிக நேரத்தை நண்பர்களுடன் கழிக்கின்றனர். இந்நடத்தைக்கு எமது சமுதாய அமைப்பு முறையும் ஒரு காரணமாக அமைகிறது. எனினும், அண்மைய காலங்களில் பெண்கள் மத்தியிலும் நண்பத்துவத்தின் ஆழம் பெருகி வருவதனைக் காணலாம். இருப்பினும், குடும்பம் என்ற அமைப்பு போன்று நண்பத்துவம் நிலையானதல்ல. இதற்கு நீண்டகால இலக்குகளும் கிடையாது.
எவ்வாறாயினும், இன்றைய காலகட்டத்தில் குடும்பத்தின் செல்வாக்கு குறைந்து வருகின்றது. இதனால் தற்போது நண்பர்கள் முக்கியத்துவம் பெறுகிறார்கள். நண்பர்கள் சமூகத்தில் சமூக 96.OF66 (Social Mobility) ஏற்படுத்துவர். அதாவது, உயர்குழாத்தைச் சேர்ந்த இளைஞர்கள் நடுத்தர / கீழ்த்தர குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்களுடன் உயிருக்குயிரான தொடர்புகளை வைத்திருப்பர்.
இதனால் அவன் உயர்குழாத்தைப் போல உயர வேண்டும் என்ற மனப்பாங்கு இயல்பாகவே ஏற்படும். மேலும், தானே தனித்து இயங்கும் தன்னம்பிக்கை, பரந்த அறிவு, அனுபவம், சமமான அந்தஸ்தையும் ஒருவன் பெறுகிறான். குடும்பத்தில் கிடைக்காத அன்பு, கணிப்பு, பாதுகாப்பு என்பன நண்பத்துவத்தினுள் கிடைக்கும்போது ஒருவன் இயல்பாகவே சமூகமயமாக்கப்ப டுகின்றான்.
உசாத்துணை நூல்கள் :-
1. Dianee - Papalia, Sally Wendkos olds; Phychology - 2" edition.
McGraw-Hill Book Company.
2. Janina M. Jolleu; Mark L. Mitchell Lifespan Development -
Atopical Approach McGraw Hill Companies, 1976.
3. John F. Longres Human Behavior in the Social environment 2"
Edition. F. E. Peacock Publishes, Inc. Itasca, Illinois 1995
4. Comer Ronald J., Abnormal Psychology, W. H. Freeman & Co.,
1992.

Page 15
நான் ெ பங் - சித் 2002
இடண்மைக்காதல் : ஓர் ஆய்வு
சி. லியோ ஆம்ஸ்ரோங் கொழும்புத்துறை.
Фраъөөрогт
காதல் பற்றி ஆளுக்காள் வேறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருப்பர். இதுபற்றி சில மயக்கங்களும், தப்பான நிலைப்பாடுகளும் சிலரிடம் இருப்பதை அவதானிக்கமுடிகின்றது. ‘காதல்’ எனும் பதம் இவர்கள் மட்டில் அதிக கவனம் செலுத்தப்படும் ஒன்றாகவுள்ளது. ஆங்கில மொழியில் அதிகம் பரிச்சயம் இல்லாதவர்கள் கூட ‘ஐ லவ் யூ” எனும் வசனத்தை சரளமாக பாவிக்க முற்படுவதைக் காணலாம். மரங்களிலும், சுவர்களிலும், பஸ்வண்டிகளின் ஆசனங்களிலும் இதயங்களை ஊடுவிச் செல்லும் அம்புகள் கீறப்பட்டிருப்பதைக் காணமுடிகின்றது. சிலர் காதலை கவர்ச்சியுடனோ, காமத்துடனோ, நட்புடனோ இணைத்து சமமாக நோக்க முயல்வர். உண்மையில் இந்நான்கும் ஒன்றுக்கொன்று வேறுபட்டவை என்பதை விளக்க முயல்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
சந்தித்தவர்களின் சிந்தனைகளிலிருந்து ‘காதல் என்றால் என்ன?’ எனும் கேள்விக்கு பின்வரும் பதில்கள் இவ்வாறு அமைந்திருந்தன.
* ‘பாலியல் ரீதியான உந்துதலே காதல்’ காதலித்து திருமணமானவர் கூறினார். * 'இருமனங்கள் பேசுவதே காதல்’ அவர் மனைவி சொன்னாள். * 'இன்று கவர்ச்சியின் அடிப்படையிலேயே காதல் ஏற்படுகின்றது. காதல் என்றால் என்னவென்று தெரியாமலேயே பல மாணவர்கள் காதலிக்கத் தொடங்கிவிட்டனர்’ உயர்தர மாணவியின் கூற்று. * 'இருமனங்கள் gd-60öï60), Du UFT85036) ஒன்றிப்பதே காதல்’ தாதியொருவரின் பார்வை. * ‘உள்ளம் கொள்ளை போதலே காதல்’ இளைஞன் ஒருவனின் 6696D. * ‘காதல் என்றால் என்னவென்று தெரியாம காதலிக்கினம். சுயநலம் தான் இண்டைக்கு அதிகம். இதில ஆண்களை நம்பக்கூடாது காதலனால் ஏமாற்றப்பட்ட ஒருத்தி. * ‘காதலும் கத்தரிக்காயும்’ ஆச்சியொருவரின் விசனம்,

நான் )ெ tuff፧ – ቇቇ &፣'፡፡፰
* ‘காதல் நல்லம்தான். ஆனா காதலிக்கிறவ சமயத்தையு. சாதியையும் கட்டாயம் பார்க்கவேணும். இல்லாட்டி பின்னுக்கு கஷ்டம் பெரியவர் ஒருவரின் பார்வை இது.
மேலே தரப்பட்ட தரவுகளும், கூற்றுக்களும் வேறுபட்டவையாய் இருப்பினும் அவையே அவர்களது எண்ணங்களும் அனுபவங்களாகவும் உள்ளன. காதலிப்போருக்கும், காதலை ஆதரிப்போருக்கும் காதல் என்றால் என்ன எனும் விளக்கமாக அமைகின்றது பின்வரும் பகுதி.
கவர்ச்சி காதலா? அது நிலையானதா?
கவர்ச்சி மனித வாழ்வில் உள்ள ஒன்றுதான். இருபாலர் சந்திக்கும் போது, பழகும்போது ஒருவர் மீது ஒருவருக்கு இயலuாக ஏற்படும ஒருவித உணர்வே கவர்ச்சியாகும். இதை உணர்வாக இங்கே நோக்குகிறேன். ஒருவரிடம் காணப்படும் பணம், செல்வாக்கு, அழகு, நடை, உடை, பார்வை, பேச்சு, போன்றன இன்னொருவரை கவரலாம். இது நிலையானதொன்றல்ல. கவரப்பட்ட ஒன்று இருக்கும் வரையோ அல்லது வேறொன்று கவரும் வரையோதான் கவர்ச்சி இருக்கும். கூடுதலாக இது தற்காலிகமானது. இது இருபாலருக்கிடையிலும் நிகழலாம். இதைக் கத81கக் கருதமுடியாது. கவர்ச்சி வேறு காதல் வேறு. சிலவேளை கலாசச் காதலாக மாறலாம். ஆனால் கவர்ச்சிதான் வாழ்வு என்:ெ3ணி நேரத்தையும், ஆற்றலையும் வீண்விரயம் செய்வதில் பயனில்%ை நிலையற்ற கவர்ச்சிக்காக அலைவதைவிட்டு கண்ணி: வாழ்வை வாழமுற்படுதல் ஆரோக்கியமானது.
காமம் பாலுணர்வா? அது காதலாகுமா?
ஒருவரது உடல்மீதோ அல்லது உடல் உறுப்புகள் மீதோ ஒருவருக்கு ஏறபடுகின்ற நாட்டமே காமம் ஆகும். < உள்ளத்தை, உணர்வை நோக்காது. பிறரை மனிதக் எண்ணுவதிலும் ஒரு பொருளாகவே - மோகப் பொருளாகவே கணிக்கமுற்படுத்தும். இங்கு சுயநலத்திற்கே முன்னுரியை கொடுக்கப்படும். அடுத்து பாலுணர்வு ஒருவருக்கு இயல்பானதும தேவையானதும் கூட. பாலுணர்வு காமம் அல்ல. குடும்பவாழ்வுக்கு பாலுணர்வு அவசியமானது. ஆனால் காமம் குடும்பவாழ்வை பாதித்து விடும். சிலவேளை ஒருவரின் உடல்மீது ஏறபடும் நா.ம பின்பு உண்மையான காதலை உருவாக்கலாம். இருப்பினும் காதலாக மாறமுடியாத காம வேட்கையுள்ளவர்கள் காதலிக்க முற்படுவதை தவிர்ப்பதே உகந்தது. காமத்தை காதல எறுை: எண்ணியவர்களின் வாழ்வு இருண்டு போயுள்ளதைக் கரிை முடிகிறது. காமத்தை முதன்மைப்படுத்தி காதலித்தல் காதலைக கொச்சைப்படுத்துகின்றது. எனவே உள்ளத்தையும், உணர்வையு. உடலையும் நோக்கும் நிலையில் காதல் மலரட்டும்.

Page 16
நான் பங் - சித் 2002
நட்பின் வெளிப்பாடா காதல்?
இளமைப் பருவத்தை அடையும் ஒருவர் பெற்றோரையும், சகோதரங்களையும் நாடுவதிலும் பார்க்க தம் வயதொத்தவரை நாடுவதிலும், அவர்களை ‘நண்பர்கள்’ என அழைப்பதிலும் அதிக ஈடுபாடு காட்டுவார். அவர்களாலேயே தம்முணர்வை அறியமுடியும் எனும் நிலையையும் கொண்டிருப்பர். இந்நண்பர்களுக்காக, அவர்களது நட்புக்காக பெற்றோரையும், சகோதரங்களையும் புறக்கணிக்கக்கூட முற்படுவர். இவை எம் இளையோரின் யதார்த்த மாகவுள்ளது அல்லது மாறிப்போயுள்ளது.
உண்மையில் நட்பு தனிமையைப் போக்க, அக்கறையுடன் செவிமடுக்க, சோர்வை நிவர்த்திசெய்ய, நிறைகளில் தட்டிக்கொடுக்க, குறைகளில் சுட்டிக்காட்ட, ஏமாற்றத்தில் எதார்த்தமாக சிந்திக்க, மன்னிக்க, தீர்மானங்களை எடுக்க, செயற்பாடுகளில் கைகொடுக்க உதவுகின்றது. F66)35 இருப்பவனே / இருப்பவளே நண்பனாக / நண்பியாக இருக்கமுடியும் என்பது சிலர் வாதமும் கூட. நட்பு மொழி, இனம், பால், மதம் போன்றவற்றை கடந்து இருக்கும். எமது கலாச்சாரப் பின்னணி பிறபாலரோடு கொள்ளும் நட்பை அதிகமாக ஆதரிப்பதில்லை. உண்மையான நட்பு உறவை வளர்க்கவும், ஆளுமையை வளப்படுத்தவும் துணையாகும். நட்பு பலரோடும் ஏற்படுவது. பிறபாலாரையும் சமமாக மதிக்கின்றது. சிலவேளை பிறபாலரோடு கொள்ளும் நட்பு ஆழமாகி ஒருசிலருக்கு காதலாகக்கூட மாறலாம். இது கலியாணமாகிவிடுவதும் உண்டு. இதுவரவேற்கத்தக்கது. நட்பின் வெளிப்பாடு காதலாக மாறவேண்டிய அவசியமில்லை. உண்மையில் நட்பின் வெளிப்பாடு வளர்ச்சியே உண்மையான நட்பை தேடிக் கண்டு கொண்டவர் பாக்கியசாலியே.
உண்மையான காதலைத் தேடி.
மேலே கூறியபடி காதல் கவர்ச்சிக்கும், காமத்துக்கும் மேலாக சென்று, உள்ளத்தைத்தேடி, உணர்வில் இணைந்து, சுயநலத்தை தாண்டி, ஒருவர்மேல் ஆர்வத்தையும், கவனத்தையும் பதிப்பதாகும். இதுவே காதல். கவர்ச்சி, காமம், நட்பு என்பன காதல் அல்ல. சிவவேளை இவை உண்மையான காதலை உருவாக்கும் வாய்க்கால்களாக இருக்கலாம்.
"காதலுக்கு கண் இல்லை" என்பார்கள். இதன் பொருள் வேறாக இருப்பினும் இன்னுமொரு கோணத்திலிருந்து நோக்கமுடியும். காதல் புறக்கண்ணால் அல்ல. ஆழமான விதத்தில் அகக்கண்ணால் உள்ளத்தாலேயே பார்க்கப்படுகின்றது. புறக்கண் உடலுறுப்புகளையும், உடல் அழகையும் பார்க்கின்றது. காதலில் உள்ளமே கண்ணாக (அகக்கண்ணாக) மாறுகின்றது. அதனால் தான் ‘காதலுக்கு கண் இல்லை’ என்றார்களோ என எண்ணத்

நான் ெ un - fb 2002
தோன்றுகின்றது. இதற்கு வலுச்சேர்ப்பதாகவே சந்தித்தவர்க ளின் சிந்தனைகள் சில அமைந்துள்ளன. "இருமனங்கள் பேசுவது,
‘உள்ளம் கொள்ளை போதல்’, ‘இருமனங்கள் உணமையாக ஒன்றிப்பது' எனும் பதில்கள் ஆழமானவையாக பார்க்கமுடிகின்றது. இதுவே உண்மையானதும் கூட, பண்பட. உள்ளம் நல்லதை
அறிந்து கொள்ளவும் தீமையை விலக்கவும் சக்தி கொண்டது. காதலிப்போர் பண்பட்ட உள்ளம் உடையோராய் இருத்தல் அவசியமானது. கண்ணை மறைக்கும் உணர்ச்சியும், அறிவை மழுங்கச்செய்யும் உணர்வின் ஆதிக்கமும் காதலுக்கு அழகல்ல. ஆனால் தேவையானது திறந்த மனமும், ஆளுமையில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வுமே என்பது என் கருத்து.
сpрөштагы
“சிலரது ‘காதல்’ கவர்ச்சியில் ஆரம்பித்து, காதலாக மாறி கலியானத்தில் முடிவதுண்டு. இன்னும் சிலரது "காதலி கவர்ச்சியில் ஆரம்பித்து களியாட்டத்தில் முடிவதுண்டு” என்றா! கத்தோலிக்க குரு ஒருவர். களியாட்டத்திற்காகவும், பொழுது போக்குக்காகவும் காதலிப்பது இன்றைய யதார்த்தமாகிவிட்ட காதல் தன் நிலையில் நிலையிழந்து, சிறகொடிந்து பரிதாபததுக குரியதாகிவிட்டது. காமத்துக்காக காதல் செய்யும்படி இன்றைய சில சினிமாப்படங்களும், பத்திரிகைகளும், தொலைக்காடசி நிறுவனங்களும், வானொலி சேவைகளும் தூண்டி வருகின்றன இதன் LDig6) இளையோர் விழிப்பாயிருப்பது e611 fullr. சினிமாப்பாடல் காட்சிகள் காட்டுவதுபோல மரத்தைச்சுற்றி ஓடுவதும், காற்றில் பறப்பதும் யதார்த்தமல்ல. பணமீட்டலுக்கான ஒருவழியே இத்துறைகளாகிவிட்டதை உணர்ந்து கொள்ளுதல் அவசியமானது. காதலிப்போரும், காதலை ஆதரிப்போரும் கவர்ச்சி, நட்பு, காமம், காதல் என்பவற்றின் வித்தியாசங்களை அறிந்து தமது ‘காதல்’ எவ்வகையினுள் இருக்கின்றது என்பதை உணர்ந்து திருத்த வேண்டியவற்றை திருத்தி செயற்படுவராயின் நன்று. அப்போது காதலும் வாழும், காதலர்களும் வாழ்வர். மனங்கள் பேசி, உள்ளங்ஸ் சந்தித்து, உறவுகள் வெளிப்படட்டும். உண்மைக் காதல் என்றும் உயிரோடிருக்கும்.
துணைநின்ற நூல்கள்
. அ. அல்போன்ஸ், வாழ்வு உன்கையில், நலம் வெளியீடு, நாகர்கோவில், 6ம் பதிப்பு, 2000. - அடைபட்ட இரகசியம், நலம் வெளியீடு, நாகர்கோவில், 2000.
இம்மானுவேல்ராஜ். இளமையில் பாலியல் கல்வி, மேய்ப்புப்பணி நி:யம், நாகர்கோவில், 1995.

Page 17
Estrazi ெ uni – ob 2002 கல்வியில் வெற்றி கண்புட.
கல்வி நமது வாழ்வை மேன்மை அடையச் செய்கிறது. கல்வியால் நாம் அறிவிலும் ஞானத்திலும் வளர்கிறோம். நமது தொழில் முயற்சிகள்கூட கல்வியால் முன்னேற்றம் பெறுகின்றன. நமது தமிழ் மக்கள் கல்வியைக் கண்ணெனப் போற்றுகின்றனர். எந்தத் துன்பங்கள், இடர்கள் நடுவிலும் கல்வியைக் கைவிடாது தொடரக் கடும்முயற்சி செய்கின்றனர், “பிச்சை புகினும் கற்கை நன்றே” என்பதற்கு ஏற்ப வாழ்கின்றனர்.
இத்தனை சிறப்புமிக்க கல்வியை நாம் உகந்த வழியிலே, குறைந்த நேர விரயத்துடன் பெறவேண்டுமானால், நல்ல கற்றல் முறைகளை நாம் பயன்படுத்த வேண்டும். ஆம், பாடசாலைகளில் நமக்குப் பலவித பாடங்கள் கற்பிக்கப் படுகின்றன; ஆனால் கற்பதற்கு முறைகள் உண்டு என்றோ, நல்ல கற்றல் முறைகளை எப்படி நடைமுறைப் படுத்துவது என்றோ பாடசாலைகளில் சொல்லித் தருவது ஏனோ மிகமிக அரிதாய் உள்ளது.
எனவே சிறந்த கல்விச் செல்வங்களை நாம் பெறவும், பெற்றதை நீண்ட காலம் மனதில் இருத்தி வைத்துப் பயன்படுத்தவும் சிறந்த கல்வி முறைகள் பற்றி நாம் அறியவேண்டும். பரீட்சைகளைத் துணிவோடு எதிர்கொண்டு உயர்ந்த பெறுபேறுகளை அடைய உகந்த வழிவகைகள் பற்றியும் நாம் தெரிந்து கொள்ளவேண்டும். இவற்றை சற்று அலசித் தொகுப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.
பகுதி 1: கற்றல் முறைகள்
கற்றலின் முழுப் பயனை நாம் அடைவதற்கு நமது நேரத்தை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். அதுமட்டுமல்ல, நாளாந்த மீட்டல் மிக முக்கியம் என்பதை உணரவேண்டும். மேலும், வெற்றி பெறும் மாணவர்கள் கடைப்பிடிக்கும் வேறு சிறந்த வழிமுறைகளையும் அறிந்து பின்பற்ற வேண்டும்.
நேரத்தைத் திட்டமிட்டுய் பயன்படுத்தல்
படித்தல் என்பது கடினமான ஒன்றாகத் தோன்றுவதற்கு ஒரு முக்கிய காரணம், நாம் கிரமமாக ஓரிடத்தில் உட்கார்ந்து படிக்காமை என்பதாக இருக்கலாம். இதை வெல்வதற்கு நாம் படிப்பதற்கென்று நமக்கே ஒரு நேர சூசிகையை வகுத்து, அதன்படி ஒழுக தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். எல்லாப் பாடங்களையும் கற்க வேண்டும்; ஆனால் கடினமான பாடங்களுக்குக் கூடிய நேரம் ஒதுக்கவேண்டும்.

நான் )ெ Un - d. 2002
படிப்பதற்கென்று ஒரு நேரசூசிகையைக் கடைப்பிடிப்பதால் நாம் நமது நேரத்தையும் சக்தியையும் சிறந்த முறையில் பயன்படுத்துவோம்; நேரத்தை வீணடிப்பதைத் தவிர்ப்போம்; கடினமான பாடங்களைப் புறக்கணிக்க மாட்டோம்; பரீட்சை நெருங்கும்போது “விழுந்து விழுந்து” படிக்கத் தேவையில்லை. எனவே பின்வரும் குறிப்புக்களை மனதில் கொண்டு, நமக்கென நேரகுசிகையை அமைத்து அதைப் பின்பற்ற வேண்டும்.
1.நீண்டகாலத் திட்டம் ஒன்றை ஆண்டு முழவதற்கும் அமைத்துக்
கொள்ளுங்கள். 2. வார நேர சூசிகையை ஒவ்வொரு வாரமும் புதிதாக அமைத்துக்
கொள்ளுங்கள். 3. வீட்டில் படிக்கத் தொடங்கும்போது, முதலில் கடினமான ஒரு பாடத்தைப் படியுங்கள். பின்பு, இலகுவான ஒரு பாடத்தையும், இவ்வாறு மாறி மாறிப் படியுங்கள். 4.ஒரு மணி நேரம் படித்த பின்பு ஐந்து நிமிடம் ஒய்வு எடுங்கள்;
பின்பு படிப்புக்குத் திரும்புங்கள். 5.இரவிரவாகப் படிக்காதீர்கள்; ஐந்து அல்லது ஆறு மணிநேரத் தூக்கம் அவசியமாகும். பொழுது சாயும் நேரமும், விடியற்காலை நேரமும் படிப்பதற்கு மிக உகந்த நேரங்களாகும். 6. செயல் திட்டங்கள், ஒப்படைகள் என்பவற்றை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்றால், நேரகாலத்தோடு வேலையைக் செய்யத் தொடங்குங்கள். 7. மற்றவர்களோடு ஏதாவது பேசவேண்டும் என்று நினைவு வந்தால், படிப்பு நேரத்தைக் குழப்பவேண்டாம்; மாறாக ஒரு தாளில் அந்த விடயத்தைக் குறித்து வைத்துவிட்டு, படிப்பு நேரம் முடிந்த பின்பு அவர்களோடு பேசுங்கள்.
நாளாந்த மீட்டலின் முக்கியத்துவம்
நாம் படிப்பதில் பெரும் பகுதியை விரைவில் மறந்து விடுகிறோம் என்பது பலரின் சாதாரண அனுபவமாகும். ஆனால் சில மாணவர்களோ தாம் படிப்பதை நீண்டகாலம் நினைவில் வைத்திருக்கிறார்கள். இதன் இரகசியம் என்ன என்று தேடும்போது, உளவியலாளர்கள் முக்கிய a 60660)LD ஒன்றைக் கண்டு கொண்டார்கள். அது என்னவென்றால், ஒரு நாளில் படித்தவற்றை அன்றைய தினமே மீட்டல் செய்பவர்களுக்கு அது மனதில் ஆழப் பதிகிறது; அது மறக்கப்படும் வீதமோ குறைகிறது.
இது ஒர் எளிமையான உண்மை. ஆனால், எளிமையானது என்பதால் அதை நாம் புறக்கணிக்கக் கூடாது. வெற்றி கண்ட பல மாணவர்களின் வெற்றியின் அத்திவாரம் இதுவாக இருக்கின்றது. எனவே பாடங்களைப் படித்த அன்றே மீட்டல் செய்யுங்கள்; எப்படியும் 24 மணி நேரத்துக்குள் மீட்டல் செய்து விடுங்கள்.

Page 18
நான் இ un - d* 2002
பயனுள்ள இன்னுமொரு குறிப்பு : அடுத்த வகுப்புக்கு நீங்கள் செல்லும் முன்பு, அதே பாடத்தின் முன்னைய வகுப்பில் நீங்கள் எழுதிய குறிப்புக்களை வாசித்து ஞாபகப் படுத்திக் கொள்ளுங்கள். அப்போது முந்திய வகுப்புடன் இந்த வகுப்புக்கு உள்ள தொடர்பு உங்களுக்குத் தெளிவாகும். மேலும் வாரம் முழுதும் படித்தவற்றை வார முடிவில் தொகுத்துப் பார்த்து ஒரு விரைவு மீட்டல் செய்பவர்கள் வெற்றி ஏணியில் மேலேறிச் செய்வர்.
SQ3R 3Sibgp6o pGoogp
வெற்றி கண்ட மாணவர்கள் பலரது கற்றல் முறைகள் பற்றி ஆராய்ந்த அமெரிக்க உளவியல் அறிஞர்கள் அவற்றைத் தொகுத்து “S03R கற்றல் முறை” என அழைப்பர். ஒரு புத்தகத்தை அல்லது ஒரு புத்தகத்தின் அத்தியாயம் ஒன்றை நாம் கற்றுக்கொள்ள வேண்டுமானால், இந்த முறையின் படிகளைப் பின்பற்றி நாம் பெரும் பயன் பெறலாம். வகுப்பறையில் நாம் எடுத்த குறிப்புக்களை ஜீரணித்து நமதாக மாற்றுவதற்கும் இதே படிகளை நாம் பயன்படுத்தலாம். இதன் படிகள் பின்வருமாறு அமைகின்றன:
S - Survey - utfisopoulu (6 Q – Question — 6îl6OTT 6TQpü R - Read - வாசித்து விளங்கு R - Recite - GaFT6õ6ôü LT R-Revise - மீண்டும் மீட்டல்செய்
S - Survey - IIITiapaufob
படிக்க வேண்டியதை விரைவாகவும் மேலோட்டமாகவும் பார்வையிடுங்கள். படிக்க வேண்டியது ஒரு புத்தகமாயின், பொருடளக்கம், முன்னுரைகள், முடிவுரைகள், பின் இணைப்புகள், துணை நூல் பட்டியல், சொற் பட்டியல் என்பவற்றைக் கவனியுங்கள். அது ஒர் அத்தியாயமாயின், தலைப்பு, துணைத் தலைப்புக்கள், அட்டவணைகள், வரைபடங்கள் என்பவற்றைக் கவனியுங்கள்.
Q – Question — 6aRTIT Grupių
நீங்கள் பார்வையிட்டதன் அடிப்படையில், “இந்தப் பகுதியில் ஆசிரியர் என்ன பிரச்சினைகளுக்குத் தீர்வு தருகிறார்? என்ன வினாக்களுக்கு விடை தருகிறார்?’ என்று சிந்தியுங்கள். இந்த வினாக்களை உங்கள் குறிப்புப் புத்தகத்தில் எழுதிக் கொள்ளுங்கள்.

நான் டு uni - d. 2002
R-Read - வாசித்து விளங்கு
உங்கள் வினாக்களுக்கு விடை தேடியபடி வாசியுங்கள். வாசிப்பதை நன்றாகப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். புரியாத சொற்கள் எதிர்ப்பட்டால், அகராதியின் உதவியை நாடுங்கள்.
R — Recite - Ghermresos6iu umri
ஒரு சிறு பகுதியை வாசித்து முடித்தபின் சற்றுத் தரியுங்கள். நீங்கள் படித்து விளங்கிக் கொண்டதை ஒழுங்காக உங்களால் திரும்பச் சொல்ல முடியுமா என்று முயற்சி செய்து பாருங்கள். நீங்கள் புரிந்து கொண்டு, சொல்லிப் பார்த்ததன் சாரத்தை உங்கள் சுருக்கக் குறிப்புப் புத்தகத்தில் எழுதிக் கொள்ளுங்கள். பொதுவாக, சொல்லுக்குச் சொல்லாகப் பாடம் ஒப்புவிக்கத் தேவையில்லை; வரைவிலக்கணங்கள், சூத்திரங்கள், திகதிகள், பெயர்கள் போன்ற ஒரு சில விடயங்களை மட்டும் சொல்லுக்குச் சொல்லாக மனனம் செய்யவேண்டியிருக்கும்.
R-Revise - மீண்டும் மீட்டல்செய்
நீங்கள் “சொல்லிப் பார்த்தல்” செய்யும்போது சில விடயங்கள் புரியாமல் அல்லது நினைவுக்கு வராமல் இருந்திருக்கலாம். வாசித்த பகுதிக்கு மீண்டும் சென்று, உங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளுங்கள். மீண்டும் அந்தப் பகுதியை உங்களால் சரியாகத் திரும்பச் சொல்ல முடியுமா என்று “சொல்லிப் பாருங்கள்”. இப்படிச் சீராக மீட்டல் செய்து வந்தால், அதிகம் மனனம் செய்யவேண்டுமே என்று பெரும் சுமை இராது. வார முடிவிலே அல்லது பாடத்தின் ஓர் அத்தியாயம் முடிவுறும்போது, இதுவரை படித்தவற்றை விரைவாக மீட்டல் செய்யுங்கள்; இதற்கு உங்கள் சுருக்கக் குறிப்புப் புத்தகத்தை (தாள்களை) பயன்படுத்துங்கள். சிலர் SQ3R+ U என்று, பின்வரும் படியையும் சேர்த்துக் கூறுவர் : (U-Use - Luugiru(65g) நீங்கள் கற்றதை உறுதி செய்து கொள்வதற்கு, அதை செயல்முறையில் பயன்படுத்துங்கள் :
1. கற்றதைப் பிறருக்குக் கற்பியுங்கள். 2. கற்றது பற்றிக் குழவாகக் கலந்துரையாடுங்கள். 3. கற்றது தொடர்பான பயிற்சிகளைச் செய்து பாருங்கள்.
தொகுத்தவர். அருட்தந்தை அ. ஜெராட் சவரிமுத்து

Page 19
நான் இ) பார் - சித் 2002
எரிகின்ற சமூகத்தின் எரியும் இன்னொரு சம்பவம்.
"நான்” உளவியல் சஞ்சிகையில் கடந்த வருடம் 2001ஆம் ஆண்டு புரட்டாசி-ஐப்பசி இதழுக்கு "ஆத்மாவின் குரல் - ஒரு தற்கொலைக் கொடுரம்” என எழுதப்பட்ட அனுபவப் பகிர்தலை வாசித்துவிட்டு, பலரும் பல கருத்துக்களை பரிமாறியிருந்தார்கள். அதிலும் தனிப்பட்ட முறையில் என்னோடு பகிர்ந்து கொண்டவர்கள் பலர்.
“வாசிக்கும் போது கண் கலங்கிவிட்டது” என்றார் என் நண்பர் (நண்பி) ஒருவர். "வாசித்துவிட்டு என்னை அறியாமலே அழுதுவிட்டேன்” என்றார் இன்னொருவர்”
“பார்த்திட்டு என்ர மனிசி அழுதிற்றா” என்றார் (905 குடும்பத்தலைவர். “இப்படியும் நடந்ததோ?” என வியப்புற்றார் ஒரு தாய். “எப்படி உங்களால் கேட்க முடிந்தது?’ என வினவினார் மற்றொருவர்.
ஒருவகையில் இவ்வினாக்களுக்கு விடைகொடுக்க வேண்டியது எனது கடமையாகிறது. முதலில், “யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்பார்கள். g(3503uiT6) நாம் அடைந்த துன்பத்தைப் போல யாரும் அனுபவிக்கக் கூடாது என்ற நோக்கினை அடிப்படையாகக் கொண்டு என் அனுபவத்தை அறியத்தந்தேன்.
அடுத்து, இவ் அனுபவப் பகிர்தலில் (புரட் - ஐப்பசி, 2001) கதைக்கோ, கற்பனைக்கோ இடமில்லை. காரணம், கற்பனை செய்யக்கூட முடியாத, இயலாத ஒரு உண்மைச் சம்பவம். கனவில் கூட யாரும் காணக்கூடாத நிகழ்வு அது!.. இப்படியான துன்பம் இனிமேல் எவருக்கும் நிகழக்கூடாது என்பதுதான் என் உள்ளத்தில் ஓங்கி ஒலித்த உணர்வாகும். அதனால்த்தான், அச்சம்பவத்தினை வெட்டாமல் - கொத்தாமல், கூட்டாமல் - குறைக்காமல், பார்த்ததை -கேட்டதை-நடந்ததை - உணர்ந்ததை - அனுபவித்ததை அப்படியே எழுதத் துணிந்தேன். (இச்சம்பவத்தினை படிக்காதவர்கள் படித்துப் பாருங்கள் உண்மை புரியும்) எனது கடந்த சில ஆண்டுகளாக நோயாளர்களுடனான தொடர்பிலும், உறவிலும் மிக மோசமாக துன்புறுகின்றவர்கள் uurf என்றால்; அது தம்மைத்தாமே எரியூட்டுபவர்களே எனலாம். மிக அவஸ்தையான மரணமடை பவர்களும் இவர்களே. “செத்து உயிர்த்தால்த்தான் சாவு என்றால்

நான் sெ) und - d. 2002
என்ன என்று தெரியும்” என்பதைப் போல் இவர்களுடைய துன்ப வேதனையை நாம் அனுபவித்து, விளங்கவைக்க முடியாது. எனினும், “எரிகின்ற சமுதாயத்தின்” “எரியும்” இன்னொரு சம்பவத்தினைத் தருகிறேன். கேட்கவே நெஞ்சம் பதறுகின்றது. பரவாயில்லை, இவ் அனுபவப் பகிர்தலால் (உயிர்) வாழ்வதன் அர்த்தத்தில் ஒருவராகிலும் உறுதிபெற்றால்; அதுவே, என் எழுத்துக்களின் வெற்றியாகும்.
“ஐயா. பாதர் எங்கட வோட்டில (ward) இன்னொரு எரிஞ்ச பேசன்ற் (Patient) இருக்கிறா. வந்து பாருங்களேன்” என்று வேண்டினாள் ஒரு தாதி. சென்று பார்த்தேன். அந்தோ பரிதாபம்!. எரிந்தவர்களுக்கு என்றே ஒதுக்கப்பட்ட ஓடை அது (யாழ். போதனா வைத்தியசாலையின் 23வது விடுதி தெரிந்தவர்களுக்கு நன்கு புரியும்)!. “என்ன நடந்தது?’ என உடனடியாகக் கேட்கக் கூடாது. அப்படிக் கேட்காமலே பட்டென்று பதில் வந்தது.
“விளக்குத் தட்டுப்பட்டதால” அல்லது “குக்கர் வெடித்ததால” அல்லது “மண்ணெண்ணை என்று பெற்றோலை ஊத்தியதால” என்று பல ஆலாவனைகள் சொல்லிச் சோடிப்பார்கள். கொஞ்சக் காலம் இப்படிப்பட்டவர்களைப் பார்த்து அனுபவமோ என்னவோ; முதலில் எல்லாவற்றையும் கவனமாகக் கேட்பேன். “பிறகு, போகப் போக எல்லாம் உனக்குப் புரியும்’ என்று என் மனம் என்னை ஆற்றுப்படுத்தும். ஆகவேதான், சுற்ற உள்ளவர்கள் முதலில் சொல்லும் ‘கதை’களுக்குக் காதுகொடுப்பேன்; ஏதோ ஒன்றும் புரியாதவன் போல “காலம் போகப் போக இவருக்கும் புரியும்” என்பதும் சம்பந்தப்பட்டவர்களுக்கு(ந்) தெரியும்.
“நாமிருவர் நமக்கிருவர்” என்கிறார்களே இப்போது. அதுபோல அக்குடும்பத்தில் கணவன், மனைவி, இரண்டு குழந்தைகள். சுமார் 28வயது மதிக்கத்தக்க அவள், குடும்பம் நடத்தத் தெரிந்தவள். அந்த அளவுக்கு அறிவும், ஆற்றலும் படைத்தவள். கணவன் குடும்பத்தைக் காப்பாற்றக் கூடியவன். பொருளாதார ரீதியல் “ஆகா ஒகோ’ என்றில்லா விட்டாலும் சுமாரான நிலையில் இருக்கிறார்கள். பின் ஏன் இப்படி நடந்துகொண்டாள்? அப்பெண்ணே கூறுகிறாள், கேளுங்களேன்.
அதற்கிடையில்; எமது உடலின் ஏறக்குறைய 40%க்கு (நாற்பது வீதம்) மேல் எரிகாயங்களுக்கு உட்பட்டால் “ஆளின்ர நிலைமை அவ்வளவு சரியில்ல” என்ற வைத்திய வட்டாரம் கூறும். அதாவது, 40%க்கு மேல் எரிந்தவர் இறந்தே போவர் என்பதல்ல. மாறாக, இந்த நிலையில் உயிர் பிழைப்பது கஸ்ரம் என்பதையே நிலைமை

Page 20
நான் ெ பங் - சித் 2002
கொஞ்சம் சரியில்ல' போன்ற வார்த்தைகள் உணர்த்தும் உண்மையாகும்.
இவளைப் பொறுத்தவரையில் எரிகாயங்கள் 100க்கு 95% என்று வைத்திய அறிக்கையைப் பார்க்காமலே கணித்துவிடலாம். எப்படி உயிர்தப்புவாள்? அப்படித் தப்பினாலும் அவளின் நிலை என்ன? என்னையே நான் கேட்டுக்கொண்டேன்.
அதனைத்தான் அப்பெண்மணியும் சொன்னாள்: "டொக்ரர். என்னை தப்பவிடாமல் கொன்றால், ஒரு உண்மையைக் கூறுவேன்.” அவளின் வார்த்தையில் அதிர்ந்துபோய் நின்றுகொண்டிருந்தவர்கள் மெளனமாகினோம். அவள் நினைத்தாள் போல, “மெளனம் சம்மதத்திற்கு அறிகுறி’ என்று!. அதனால், உண்மையைச் சொல்லத் துணிந்தாள் என எண்ணத் தோன்றுகிறது.
“என் கணவர் மிக நல்லவர். நாங்கள் சந்தோஷமாகத்தான் இருந்தோம்..” “அப்ப, ஏன் இப்படிச் செய்தாய்? உனக்கு என்ன விசரா?” என கேட்க வேண்டும்போல இருந்தது. அதற்கு நேரம் தராமல் அவள் தொடர்ந்தாள்; “நான் சீதனம் இலலாம கலியாணம் செய்ததால என்ர மாமனார் என்னை அடிக்கடி அடித்து துன்புறுத்துவார். என்னுடைய பெற்றோரும் வன்னியில. வீட்ட விட்டுட்டு ஓடுவம் என்டாலும் வெட்கம். வேறாக போவம் என்டாலும் புருஷனுக்கு மரியாதையில்ல. எனக்கு இனிமேலும், இதற்குமேலும் வாழ விருப்பமில்ல. அதனாலதான் இப்பிடி செய்தன்!...” என விம்மினாள்.
“அந்த நேரத்தில தானும் உன்ர மனிசன், பிள்ளைகள நினைகேலையா?.1.” என்று கூடநின்ற ஒருவர் குறுக்கிட, “நினைச்சிருந்தா இப்பிடி செய்திருக்க மாட்டேனே!...” என விம்மி.விம்மி. விழிநீர் சொரிந்தாள். இவ்வேளையில், உங்களிடம் ஒன்றைக் கேட்கட்டுமா?. * உங்களைத்தான் கேட்கிறன்!.
கெஞ்சிக் கேட்கிறன்!.
கும்பிட்டுக் கேட்கிறன்!.
இவள்(ன்)களை
வாழ விடுங்களேன்!.1.1.
அதேவேளை இவளைப் போன்றவர்களிடம் ஒன்றைக் கூறட்டுமா?.
* உடனடித் தீர்மானங்களால் ஏற்படும் தூண்டுதல்களுக்கு இசைவாக ஒருபோதும் செயற்படாதிருக்க மனவுறுதி கொள்வோமா?

நான் டு பங் - சித் 2002
* முரண்பாடுகளுக்கும், சிக்கல்களுக்கும் முகம்கொடுக்க முடியாத வேளையில் நம்பிக்கைக்குரிய யாருடனாவது பேசுகின்றோமா? வழிகாட்டக்கூடிய (உளவள) உதவியாளர்களை நாடுகின்றோமா? * பிரச்சனைகள் எழுகின்றபோது குறுக்கு வழிகளை நாடாமல், கோழைத்தனமாக நடந்துகொள்ளாமல், என்னவந்தாலும் ஏதுற்றாலும் துணிவோடு முன்செல்வேன் என்ற மனமுதிர்ச்சியைப் பெறுவோமா?
சுற்றத்தவர்களுக்கும், இவளைப் போன்றவர்களின் சொந்தக்காரர்க ளுக்கும் ஒன்றைச் சொல்லிவைக்கட்டுமா?
* பிரச்சனைகள் ஏற்படும்போது வெருட்டுவதற்காகவோ அல்லது விளையாட்டாகவோதானும் மண்ணெண்ணெ நெருப்புப் பற்றிப் பேசுகின்றவர்கள், அவற்றோடு சகவாசம் கொள்ள விரும்புபவர்கள் மட்டில் அக்கறையோடு செயற்படுவோம்.
‘எரியும் சமூகத்தில்’ எண்ணை வார்க்காமல் ‘எரியும் கலாசாரத்தை இல்லாது ஒழிப்போம்.
செ. அன்புராசா, அ. ம. தி.

Page 21
நான் பங் - சித் 2002
கருத்துக்குவியல் - 90
நடந்துமுடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழர்களின் வாக்கினைத் தீர்மானித்தது சுதந்திரமே (உரிமையே)
கடந்த காலங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, கடந்த வருடம் டிசெம்பர் மாதம் நடந்துமுடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழர் வாக்கினைத் தீர்மானித்தது “உரிமையே” என்பது தொனிக்கின்றது.
போரின் தீவிர பாதிப்புக்களுக்கு உள்ளான காலம் முதலாய் தமிழர் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று அவர்களின் எதிர்பார்ப்புக்கள் ஏமாற்றங்களானதே மீதி. அவற்றுடன் ஒப்பிடும்போது கடந்த வருடத் தேர்தலில் வாக்களித்த வாக்காளர் எண்ணிக்கை சற்று அதிகமானதே. ஏனெனில் ஆண்டாண்டு காலமாக எமது (தமிழர்) உரிமைகள் மறுக்கப்பட்டு, சுதந்திரம் முடக்கப்பட்டு, மனித உரிமைகள் மீறப்பட்டு அல்லல்களை அனுபவித்துவந்த மக்கள் அவற்றிக்கெல்லாம் ஒரு முற்றினைக் காணவேண்டி “அவரவர் உரிமைகள் அவரவர்க்கு வழங்கப்படவேண்டும்” அவையெல்லாம் அற்ப சலுகைகளுக்காகவும், சில அரசியல் அடிவருடிகளின் ஆதிக்கத்திற்கு பலியாகக் கூடாது என்ற எண்ணத்துடன், தமக்குள்ள வாக்குரிமையை உணர்ந்து எமது (தமிழர்) அபிலாஷைகளை, உரிமைகளை ஒரு சேர உலக சமூகத்திற்கு உணர்த்த, குரல் கொடுக்க வேண்டுமென்பதற்காய் எங்களுக்கான பிரதிநிதிகளைத் தேர்ந்து பாராளுமன்றம் அனுப்பியதை நடந்துமுடிந்த தேர்தல் நமக்கு புலப்படுத்தி நிற்கிறது. (பாராளுமன்றம் சென்றவர்கள் இதற்கு பொறுப்பானவர்களாக இருக்கிறார்களா? செயற்படுகிறார்களா என்பது ஒரு புறம்) யுத்தம், அகதி வாழ்வு, இடப்பெயர்வு, இழப்புக் (உயிர், உடைமை, உரிமை)களை அனுபவித்த நாங்கள் 6905 di(p85LDIT607, புரிந்துணர்வுள்ள வாழ்வுக்காக தங்கள் வாக்குகளை வழங்கியுள்ளனர் என்பதையே நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தல் நமக்கு சுட்டி நிற்கிறது.
ஜே. எம். ரி.றொட்றிக்கோ
யாழ். பல்கலைக்கழகம்.
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழர்களின் வாக்கினைத் தீர்மானித்தது சலுகையே’
பொதுவாக தேர்தல் என்பது நாட்டின் இறைமை அதிகாரத்தின் இருப்பிடமாக காணப்படும் மக்கள் தம்மைத்தாமே

நான் ெ un – doch 2002
ஆண்டுகொள்வதற்கு தங்களின் பிரதிநிதிகளை தெரிவுசெய்யும் ஒரு நடைமுறையாகும்.
எந்த ஒரு ஜனநாயக நாட்டை எடுத்துக்கொண்டாலும் அரசியலில் ஆட்சேர்ப்பு என்பது இத்தேர்தல் நடைமுறையினூடாகவே நிறைவேற்றப்படுகின்றது. இந்த வகையில் கடந்த பன்னிரண்டாவது பாராளுமன்றத் தேர்தலில் ஆர்வத்துடனும், விருப்புடனும் வாக்களித்ததை நாம் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. இதற்கு காரணம் தேடமுற்படுவோமாக இருந்தால் அது கட்டாயம் தமிழ் மக்கள் இத்தேர்தலில் கூடிய சலுகைகளைப் பெறக்கூடிய சூழ்நிலை இருந்தததினால்தான் எனக்கூறலாம்.
ஒரு ஜனநாயக நாட்டில் மக்கள் வாக்களிக்கும் உரிமையை பெற்றிருப்பது ஒரு சாதாரண நிகழ்வு எனலாம். ஆனால் இவ் வாக்களிக்கும் உரிமையை அவர்கள் பயன்படுத்த முன்வராதது ஒரு அசாதாரண நிகழ்வாகும். கடந்த தேர்தலுக்கு முன்நடந்த தேர்தல்களில் மக்கள் இத்தகைய ஒரு அசாதாரண போக்கையே கடைப்பிடித்தனர். இதற்கு காரணம் அத்தேர்தல்களில் தமிழ் கட்சிகளும்சரி, ஏனைய பெரும்பான்மை கட்சிகளும்சரி எந்த ஒரு சலுகையையும் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைத்து போட்டி இடவில்லை. ஆனால் பன்னிரண்டாவது பாராளுமன்றத் தேர்தலில நாம் முனைப்பாக அவதானிக்கக்கூடிய ஒரு விடயம் தமிழ் கட்சிகள் நான்கு ஒன்று சேர்ந்து தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளாகவும், அவர்களின் சலுகைகளை பெற்றுக்கொடுக்கும் வாக்குறுதிகளுடன் தேர்தல்களம் இறங்கினர். இதுதவிர வன்னிக்கான பொருளாதார தடைநீக்கம், பாதை திறப்பு, மீன்பிடித்தடை நீக்கம் என்பனவற்றை முதன்மையான தேர்தல் விஞ்ஞாபனமாக முன்வைத்தனர். இவை மக்களின் அடிப்படை தேவையை நிறைவு செய்யும் சலுகைகளாக மக்கள் இனம் கண்டு அதிக வாக்குகளை இக்கூட்டமைப்புக்கு வழங்க முற்பட்டனர்.
இதுதவிர தமிழ் பிரதேசங்களில் U. N. P. கட்சி கணிசமான வாக்குகளை பெறுவதற்கும் இக்கட்சிமுன்வைத்த சலுகைகளே காரணம்.
எனவே கடந்த தேர்தலில் வாக்குகளை தீர்மானித்தது சலுகையே ஆகும். உரிமை என்றால் ஏன் இதற்கு முன் நடந்த தேர்தலில் தமிழ் மக்கள் அதிகம் வாக்களிக்கவில்லை.
J. O. குலாஸ் கமூகவியல் இறுதிவருடம்.

Page 22
நான் ui - ang 2002
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழர்களின் வாக்கினைத் தீர்மானித்தது சுதந்திரமே (உரிமையே)
கடந்த 20 வருடங்களுக்கு மேலாக இலங்கையின் இனப்பிரச்சினையானது நீடித்து வருகின்றது. ஏதேச்சையாகக் கைது செய்தல், விசாரணை இன்றி தடுத்துவைததல், சட்டத்திற்குப் புறம்பாகப் பேச்சுத் சுதந்திரம் மறுக்கப்பட்டமை, திடீர்க்கைது, காணாமற்போதல், கற்பழிப்பு, சித்திரவதை, அநீதியான முறையில் கொலை செய்தல், சட்டத்திற்கு முன் சகலரும் சமன் எனக்கூறிக் கொண்டு சிறுபான்மை இனத்தை பயங்கரவாத முத்திரை குத்தி நீதி விசாரணை இன்றி தடுப்பு முகாம்களிலும், சோதனைச் சாவடிகளின் கேவலமான முறையில் நடாத்தப்படுதல் மற்றும் நடமாடுவதற்கு வதிவிடத்தை தெரிவு செய்வதற்கு தொழிலில் ஈடுபடுவதற்கு ஒன்று கூடுவதற்கு கருத்து வெளியிடுவதற்கு தடைகள் போன்ற பலவித மனித உரிமைமீறல் கொடுமைகள் பெருகியுள்ளன. இந்த நிலையில் மக்கள் 12வது பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் தமது வாக்கினைத் தீர்மானித்தது அவர்கள் சோற்றுக்கோ சலுகைக்கோ அல்லாமல் அவர்கள் ஒவ்வொருவருமு உரிமைகளைப் பெறுவதனூடாக 5ԼD5] சுதந்திரமான வாழ்வை இந்த தேர்தல் பெற்றுத் தரவேண்டும் என்பதற்காககேவ 5ԼD5} O6 உளத்தாக்கங்களை வெளிக்கொணர்ந்து பெரும் தொகையான வடக்கு கிழக்கு மக்கள் வாக்குகளை அள்ளி வழங்கி தேர்தலில் பெரும் பெற்றியை பெற்றனர். அது இன்று பெரு சமாதான உடன்பாட்டை கண்டுகொள்வதற்கு வழி அமைத்து கொடுத்தது. அதன் மூலம் தமிழ் Dis856 தமது நிரந்தர சமாதான சமிஞ்ஞை கிடைக்கவேண்டும் என்ற தமது மனக்குமுறல்களை வாக்கினூடாக வழங்கி தனது உரிமைகளை பெறுவதனூடாக சுதந்திரத்தை தீர்மானிக்க விரும்புகின்றனர்.
ச. தேவராஜா சமூகவியல் சிறப்புக்கலை, யாழ். பல்கலைக்கழகம்
தமிழர்கள் தமது பொருளாதார நிலைப்பாட்டிற்காக போராடி வருகிறார்கள். அதேநேரம் மலையக தமிழர்கள் வதிவிட உரிமைக்காக போராடி வருகிறார்கள். காலத்துக்குக் காலம் பொருளாதார உரிமை தொடர்பாக போராடி வரும்பொழுது நடைபெறுகின்ற தேர்தல்களிலும் இந்நோக்கை நிறைவேற்று வதற்காகவே வாக்குகளை அள்ளி வழங்குகின்றார்கள். 1956ல் தமிழர்களின் சலுகைகள் மறுக்கப்பட்ட நிலையில் உருவான உரிமைப் போராட்டமென்பது உண்மையில் பொருளாதாரப் போராட்டத்தின் வேறு வடிவமே,

நான் шљi – doži 2UO2
பொதுமக்கள் தமது அடிப்படைத் தேவைப் பூர்த்தியை கருத்திற் கொண்டு வேலைவாய்ப்பு, பொருளாதார தடை நீக்கம், மருத்துவ சுகாதார வசதி போன்றவற்றைப் பெறுவதற்காக தமது வாக்குகளை நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கையில் வழங்கினார்கள். அதே நேரம் வேட்பாளர்கள் உரிமை பற்றி கருத்திற் கொள்ளாது மக்களின் பொருளாதார நிலை பற்றியே பேசி வருகிறார்கள். எனவே தமிழ் மக்களைப் பொறுத்தவரை சோற்றை மையமாக அதாவது சலுகையை மையமாக வைத்தே வாக்களித்தார்கள். இதுவே தமிழர் வாக்கினைப் பெறக் காரணமாயிருந்தது.
சி. ககன்ஜா
சமூகவியல் சிறப்புக்கலை, யாழ். பல்கலைக்கழகம்.
நடந்துமுடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழர்களின் வாக்கினைத் தீர்மானித்தது உரிமையே.
கடந்த தேர்தலில், “தமிழர்களுக்கு தங்கள் உரிமைகளைப் பாதுகாக்கவேண்டும்’ என்ற வேட்கையே வென்றது என்பது வெற்றியினால் நிஜமாகிறது. தமிழர்வாழ் பிரதேசங்களில், கடந்த இருபது வருடங்களாக அரசாங்கமானது பாரியளவில் சலுகைகளை வழங்க முன்வரவில்லை. ஆயினும் அரசாங்கம் செய்த அற்ப, சொற்ப சலுகைகள் இவர்களிடம் திருப்தியை ஏற்படுத்தியதாகவோ அமைதியை ஏற்படுத்தியதாகவோ தெரியவில்லை. அந்தவகையில் அரசாங்க சார்புடைய கட்சிகளை காட்டிலும், உரிமைக்காக குரல் கொடுத்த கட்சிகளுக்கு அதிகமாக வாக்களித்துள்ளனர். எவ்வித சலுகைகளையும் பெற்றுத்தராத கட்சிகள் அதிகப்படியான வாக்குகளைப் பெற்றது எங்ங்ணம்? இங்கு தமிழ் மக்களின் உளப்பாங்கு நன்கு தெளிவாகின்றது.
சலுகைகள் கொடுத்து மனதுகள் மாறி, அடிமை மனப்பாங்கு வளர, உரிமை உணர்வோ உலர்ந்துபோனது. ஆயினும், சலுகைகளிற் காய் சந்தி இழப்பதா, சுயத்தை இழந்து சோறு தின்பதா, இத்துடன் குண்டுகள், ஷெல்லுகள் குடித்துச் சென்ற உயிர்களை சிறைகளில் வாடும் உறவுகளை, கனவுகளில் வரும் காணாமல் போன மனிதர்களை, கண்டபடி கைதான பொழுதுகளை, துணிவோடு செய்த வல்லுறவு வதைகளையெல்லாம் மறப்பதா போன்ற கருத்தியல்கள் உலர்ந்துபோன உரிமை உணர்வுகளை எழுச்சியுறச் செய்து அடிமை மனப்பாங்கினை மாற்றி, உரிமைக்காய் குரல் கொடுத்தவர்களுக்கு வாக்களிக்கச் செய்தது.
அடிப்படை சலுகைள் வழங்குவதன் ep6lub மக்களின் பிரச்சினைகளை தீர்க்கமுடியும். ஆனால் எத்தனை சலுகைகள் வழங்கினாலும் அவர்களின் உரிமை வேட்கை கிளர்ந்தெழுவதற்கு, நல்லதோர் உதாரணம், ஈராக்கில் ஷாமன்னன் காலததில் -

Page 23
நான் டு um -afg5 2002
ஆன்மீகத் தலைவரான அயோரோலா கோமேனி அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட மத உரிமைப் புரட்சியினால் ஆட்சி கவிழ்ந்தமை, மற்றது பிரான்சில் கியூபெக் மாநிலம் தனிநாடாக மாற்றவேண்டும் என்ற கட்சி அதிக வாக்குப் பெற்றமை ஆகும். இவை இரண்டும் உணர்த்துவது உரிமைக்காக முன்னிலைப்படுத்தியமை கண்கூடு. சலுகைகளினால் வரும்மாற்றம் நீண்டகாலத்திற்கு நிலைத்து நிற்காது என்பதை உணர்ந்த தமிழர்கள், நீண்டகால சமூக நிலைப்பிற்கும், உறுதிப்பாட்டிற்கும் உரிமையே தேவை, சலுகைகள் வேண்டாம் சரித்திரம் வேண்டும். சுயநிர்ணய உரிமைக்காய் எனத் தலைப்பட்டமையின் விளைவு - பாராளுமன்றத் தேர்தலின் முடிவு.
சண் - பத்மநேசன் சமூகவியல் சிறப்புக்கலை, யாழ். பல்கலைக்கழகம்
கருத்துக்குவியல் - 91
தண்ணம்பிக்கையால்தான் மனிதனுக்க வெற்றி கிடைக்கின்றது. வெற்றியால்தான் மனிதனுக்கு தன்னம்பிக்கை உருவாகின்றது. இறுதித் திகதி: 30.03.2002 LS
கருத்துக்குவியல் -92
மீளக்குடியமர ஆதங்கப்படுவோர் முதியோர்/இளையோர் நீங்கள் யார்?ம் .ulti6titi). இறுதித் திகதி 20.04.2002
 

நான் up - d. 2002
பாலியல் நெறிபிறழ்வும் அதற்கான காரணங்களும்
விக்னேஸ்வரி இராமலிங்கம் உளவியற் சிறப்புக்கலை, யாழ். பல்கலைக்கழகம்.
இன்றைய உலகில் விஞ்ஞானமும், தொழில் நுட்பமும், மனித நாகரிகமும் வளர்ச்சியடைந்துகொண்டு செல்லும் அதேவேளை மறுபுறத்தில் மனிதனின் சில செயற்பாடுகள் வெறுக்கத்தக் கனவாகவும், வேதனை தரக்கூடியனவாகவும் உள்ளமை மறுக்கமுடியாத உண்மையாகும். அந்தவகையில் பாலியல் நெறிபிறழ்வும் குறிப்பிடத்தக்கதாகக் காணப்படுகின்றது. நாளாந்தம் தினசரிகளைப் பார்க்கும்போது தந்தை மகளுடன் தகாத உறவு', ‘மகன் தாயுடன் பாலியல் வல்லுறவு’, ‘60 வயது மூதாட்டி வல்லுறவுக்குட்படுத்தி கொலை' என்றவாறாக பல செய்திகளைக் காணக்கூடியதாக உள்ளது. எனவே பாலியல் நெறிபிறழ்வு என்றால் என்ன? அதன் வகைப்பாடுகள் எவை? எக்காரணத்தால் அவை தோற்றம் பெறுகின்றன? என்பது தொடர்பாக ஆராய்வோமாயின் :-
உந்துதலின் இயல்பு அடிப்படையில் ஒருவரின் பாலியல் நாட்டம் மிக இயல்பானதொன்றாயினும், 69||5 கூடுதல் நாட்டம், குறைந்தளவிலான நாட்டம் என்பது சமூகம், (396, வளர்ந்தோர்களிடம் இருந்து கற்றுக் கொண்டலை என்பனவற்றைப் பொறுத்தேயமையும். சமூகம் ஏற்றுக்கொண்ட பாலியல் நிலைகள் பின்வரும் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்துகொண்டவையாக அமையும். அவை முறையே :-
1. பாலியல் ஈர்ப்பினை அடைதல் பெரும்பாலும் வளர்ந்த எதிர்ப்பாலாரிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்டதாக ՓI60)ւDպլՕ.
2. பிறப்பு உறுப்புக்களே பாலியல் விருப்பத்திற்கான
இடங்களாக அமையும்.
3. தனியாளுக்கோ பிறருக்கோ பாதிப்பு இல்லாததாக
இருக்கவேண்டும்.
4. வெட்கம், பயம், தாழ்வுச்சிக்கல், குற்றவுணர்வு, போன்றவை
இல்லாது இருக்கவேண்டும்.
5. தனியாள் அல்லது சமூகத்துக்கு பொருத்தமின்மை அல்லது பொருந்தாமை என்ற நிலைகளுக்கு இடமளிக்காதவையாக இருக்கும்.
பாலியல் ஒழுங்கு என்பது முக்கியமாக ஆண், பெண் இருபாலாரும் திருப்திப்படுவதைக் குறிக்கும். ஆனால் பாலியல் நெறிபிறழ்வு என்பது குறிப்பிட்ட சமுதாயம் அல்லது கலாசாரத்தில்

Page 24
நான் um – F 2002
ஏற்றுக்கொள்ளப்பட்ட நெறிமுறைகளில் இருந்து விலகி வேறு முறைகளைக் கையாள்வதும், அதில் ஒரு சாரார் திருப்தி காணுவதுமே பாலியல் நெறிபிறழ்வாகும். எனினும் பாலியல் நெறிபிறழ்வானது நாட்டுக்கு நாடு, கலாசாரத்துக்கு கலாசாரம் வேறுபடுவதால் அதனை வரையறை செய்வது கடினமானதாகும். உதாரணமாக ஒத்தபால் புணர்ச்சி (Homo-Sexuality) மேற்கு நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்ட LIT65us) நடத்தையாகக் காணப்படும் அதேவேளை, கீழைத்தேய நாடுகளில் பிறழ்வு நடத்தையாகக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
பாலியல் பிறழ்வுகள் பல்வேறு வடிவங்களில் காணப்படுகின்றன. அவற்றுள் முதன்மையானவை வருமாறு :-
1. சிறுவர்கள் மீதான காமம் (Pedophilia)
வளர்ந்த ஒருவர் சிறுவர், சிறுமியரை தனது பாலியல் நடத்தைக்கு தேடிக்கொள்வதைக் குறிக்கும். பிறப்பு உறுப்பை சீண்டச்
செய்வதன் வழியாகவும், பிறப்புறுக்கள் வழியாகவும், வாய்வழியாகவும் இன்பம் பெறுவர். பொதுவாக இத்தகைய பிறழ்வுகளில் ஆண்களே FGLIG61f. இத்தகையவர்கள்
சாந்தமானவர்களாக அல்லது மிச்செலவு புரிபவரா இருப்பர். சாந்தமானவர்கள் சிறார்களை அன்பாக அரவணைத்து அவர்களின் சம்மதத்தோடு பிறழ்வு நடத்தையில் ஈடுபடுவர். மிச்செலவு புரிபவர்கள் சிறார்களை தண்டித்தும், துன்பப் படுத்தியும் இத்தகைய பாலியல் நடத்தைகளில் ஈடுபடுத்துவர். இவ்வாறாகப் பாதிக்கப்படும் சிறார்கள் உடல் ரீதியாக இம்சைப்படுத்தப் படுவதோடு மட்டுமன்றி உள ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர்.
2. pairesforé Garrássoa5 (Homo Sexuality)
ஒத்த பாலினருடன் பாலியல் இன்பங்களைப் பெறுவது தன்னினச் சேர்க்கை எனப்படும். ஆண், பெண் இருபாலாரும் இத்தகைய நடத்தைகளில் ஈடுபடுகின்றனர். இங்கு பாலுறுப்புக்கு பதிலாக வாய், கழிவகற்றும் உறுப்புக்கள் பயன்படுத்தப்படும். இராணுவ சேவைகளில் ஈடுபடுவோரும், சிறைகளிலும், விடுதிகளிலும் இத்தகைய தன்னினச் சேர்க்கை அதிகமாகக் காணப்படுகின்றது.
3. துன்புறுத்தி இன்பமடைதல் (Sadism)
பாலியல் விருப்பத்துக்காக பாலியற் பங்காளியை நோவுக்கு இடமாக்கி தொடர்புகொள்ளுதல் இவ்வகையைச் சாரும். கடித்தல், நகக்குறி உண்டுபண்ணுதல், துள்ளுதல், உறுப்புக்களை முடமாக்குதல் போன்றவை இவ்வகை சார்ந்தவை. இந்த நடவடிக்கைகளின் உச்சநிலை கொலையிலும் சென்று முடியலாம்.

AF5ir hvji uri - Piż 2002
4. துன்புற்று இன்பமடைதல் (Masochism)
துன்புற்று இன்பமடைதலும் ஒருவகை பாலியல்நெறிபிறழ்வாகும். அதாவது இங்கு பாலியல் பங்காளியை துன்புறுத்தாது தன்னைத் தானே துன்புறுத்தி இன்பமடைதலையே இது குறிக்கும்.
5. CuirsSuItar agbiLib (Fetishism)
இந்த போலியான விருப்பத்தில் முழுமையாக ஓர் ஆணை அல்லது பெண்ணை விரும்பாது குறித்த நபரின் ஒரு பகுதியை அல்லது சிறு உறுப்புக்களை மட்டும் விரும்புதல் ஆகும். அதாவது குறித்த நபர் பாவிக்கும் பொருட்கள் சிலவற்றை விரும்புதல், குறித்த நபரின் பாலியல் உறுப்பை அல்லாது தொடை, பின்புறம், மார்பு, மயிர் என்பவற்றை விரும்புதல் போன்றன போலியான விருப்பத்தினுள் அடங்கும்.
6.மிருகங்களைப் புணர்ந்து மகிழ்தல். (Beastiality) பாலியல் விருப்பத்தை பூர்த்தி செய்து கொள்வதற்காக
மிருகங்களைப் பயன்படுத்துதல் என்பதும் ஒருவகையான நெறிபிறழ்வாகும். இந்நிலையில் மிருகங்களுடன் பாலியல் தொடர்பு கொள்ளுதல் அல்லது அவைகள் ep6) DfTais பாலியல்
உறுப்புக்களைச் சீண்டச் செய்தல் என்பன அடங்குகின்றன. 7. JF6lIiqGovorirěFF (Nacrophilia)
இறந்த உடல்களுடன் _Lഉ][06ഖ மேற்கொள்ளுதல் இவ்வகையினுள் அடங்கும். இதில் பெரும்பாலும் ஆண்களே ஈடுபடுகின்றனர்.
8. தகாப்புணர்ச்சி (Incest)
மிக நெருக்கமான இரத்த உருத்தினருடன் உறவு கொள்ளுதலை பொதுவாக சமூகங்கள், கலாசாரங்கள் ஏற்பது இல்லை. அண்ணன் தங்கை, தந்தை - மகள், தாய் - மகன், பேரன் - பேர்த்தி என்றவாறாக இவ்வுறவுகள் அமையும். இவ்வாறான நெருக்கமான உறவுகளுடன் ஏற்படும் பாலியல் புணர்ச்சியை தகாப்புணர்ச்சி என்பர். இதுவும் ஒருவகையான பாலியல் பிறழ்வேயாகும்.

Page 25
நான் பங் - சித் 2002
9.IIIrsổuIso e_grỉIHảsasGoerr astrừ_đPằx5ử_uQbậĐgoso (Exhibitionism)
அந்நியர், எதிர்பாலார், சிறார்கள் மத்தியில் பாலியல் உறுப்புக்களை பகிரங்கக் காட்சிக்கு உட்படுத்தலே இவ்வகைக்குள் அடங்கும். இத்தகைய நடத்தைகளில் பெண்கள் அதிகமாக ஈடுபடுகின்றனர். உதாரணமாக விளம்பரங்களில் முழுமையாகவும் அரைகுறையாகவும் காட்சிப்படுத்தலைக் குறிப்பிடலாம்.
10. LIITửGIp6nI G6išrinid (Voyeurism)
ஏனையோரது பாலியல் நடத்தைகள், பால்வினைகனைப் பார்த்தல் இதனுள் அடங்கும். இதுவும் ஒரு பாலியற் பிறழ்வாகும்.
1 1. Ghị5TbGoaBufsiðirLIůd (Frotterurism)
எதிர்பாலார்களை நெரிசலைப் பாவித்து நெருக்குதல், இடித்தல், உரசுதல் போன்றன இதனுள் அடங்கும். நெரிசலான பேரூந்துகளிலும், விழாக்களிலும் இத்தகைய நிகழ்வுகள் இடம்பெற நிறைய வாய்ப்பு உண்டு.
12. பிறர்பால் உடை அணிந்து மகிழ்தல் (Transvestism)
ஒவ்வொரு பாலாருக்கும் மிகப் பொருத்தமானது 66 ஏற்றுக்கொள்ளப்பட்ட 96.OB606 மறுபாலார் அணிதலும் 6ջ([56*1602&Այո:661 பிறழ்வு நடத்தையாகும். (Transsexualism) பிறபாலினத்தவராக LDTD விரும்புதலும் ஒருவகையான நெறிபிறழ்வேயாகும்.
மேலும் எதிர்பாலாரிடம் கொள்ளும் உறவுகளில்கூட நெறிபிறழ்வு ஏற்பட வாய்ப்பு உண்டு. எதிர்பாலாரின் பிறப்பு உறுப்புக்கள் வழியாக பால்வினை மேற்கொள்ளாது அவற்றுக்கு பதிலாக வாய், கழிவு உறுப்பு வழியாக உறவினை மேற்கொள்வது பாலியற் பிறழ்வாக உள்ளது. மேலும் கீழ்க்காணும் வகையில் :-
1. பிறப்பு உறுப்பை சீண்டச் செய்து இன்பமடைதல்.
பிறப்பு உறுப்புக்கு மாற்றீடாக வாயினைப் பாவித்தல். இத்தகைய உறவுகளை பங்காளிகள் விரும்பாதபோது அவரை வற்புறுத்தி உறவு கொள்ளுதல் என்பனவும் நெறிபிறழ்வாகவே கொள்ளப்படுகின்றன.

நான் பங் - சித் 2002
LTLLTTT TMMM LaYMMTMMLTM MTML TM
பாலியல் பிறழ்வுகள் ஏற்படுவதற்கான காரணங்களை நோக்கின் இவை பெரும்பாலும் உளவியல் சார்ந்தவையாகவே காணப்படுகின்றன. பொதுவாக வீட்டுச் சூழ்நிலையை நோக்குவோமாயின் மிகவும் வறுமைப்பட்ட குடும்பங்களிலே நெருங்கி வாழ்கின்ற தன்மையும், அடிக்கடி ஏற்படும் இடம்பெயர்வுகள் காரணமாக பல்வேறு குடும்பங்கள் ஒன்றாக வாழும் தன்மையும், பிள்ளைகளுக்கு பெற்றோரிடம் காணப்படும் ஈடுபாடின்மை,தொடர்ந்தேர்ச்சையான சச்சரவுகள், சிறுவன் அல்லது சிறுமி பெற்றோர்களினதும், மூத்தோர்களினதும் பாலியல் நடத்தைகளைக் கண்டும், கேட்டும் ரசித்தல், கணவன், மனைவி, இருவரில் ஒருவர் உறவை விரும்பாதபோது ஏற்படும் பிணக்குகளை பிள்ளைகள் பார்த்தல் என்பன பாலியல் நெறிபிறழ்வுக்கு ஒருவரை இட்டுச் செல்கின்றது.
மேலும் சிறுபராயத்திலேயே பெரியோர்களால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படல், பாலியல் குறித்த தெளிவான அறிவின்மை, தவறான விளக்கங்கள், இவற்றால் ஏற்பட்ட கூடுதல் அவாநிலைகள், ஆச்சரியங்கள், உடலுறவு பற்றிய பயம், பாலியல் பற்றிய குற்றவுணர்வு, பாலியலைச் சுற்றியுள்ள பிற விவகாரங்கள் மனவெழுச்சி நிலையிலுள்ள குறைபாடுகள், பங்காளருக்கிடையே பிடிப்பின்மை, பாலியலை அசட்டை செய்தல், g5660LD, தாழ்வுச்சிக்கல், காதலில், பாலியல் முயற்சிகளில் ஏற்படுகின்ற தொடர் தோல்விகள், போன்றனவும் ஒருவரை பாலியல் நெறிபிறழ்வுக்கு இட்டுச் செல்லுகின்றன.
இளமைக்காலத்தில் கூடுதலாக தன்பால் புணர்ச்சியில் ஈடுபடுதல், பாலியல் உணர்ச்சிகளைத் தீர்த்துக்கொள்வதற்கு ஒரு காலத்தில் தொடர்ந்தேர்ச்சியாக செயற்கை முறைகளைப் பாவித்தல், பிறழ்வு நடத்தைகள் வழி கிடைக்கும் பாலியல் வினைகள், உடனடி பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்வதாகவும், எதிர்பாலாருடன் ஏற்படும் பாலியல் தோல்விகளைத் தவிர்த்துக் கொள்வதற்காகவும், பிறழ்வான நடத்தைகள் பாதுகாப்பான, பாதகமற்றவை என தவறாக விளங்கிக் கொள்வதாலும், பாலியல் பிறழ்வுகளில் நிரந்தரமாக ஈடுபடுகின்றனர்.
சினிமா மோகத்தினால் கவர்ந்திழுக்கப்படும் இளைஞர்கள் தம்மையும் சினிமாவில் வரும் பாத்திரங்களாக கற்பனை செய்து பாலியல் நெறிபிறழ்வுகளில் ஈடுபடுகின்றனர். இவற்றைவிட நீலப்படம் பார்த்தல், சிறு பராயத்தில் கொடுக்கப்படும் பாலியல் தொடர்பான தவறான விளக்கங்கள், எமது கலாசாரத்தின் குடும்பச் சூழலில் பாலியல் தொடர்பாகக் கதைத்தல் என்பது விரும்பத்தகாத

Page 26
praxi uni - og 2002
ஒன்றாகக் காணப்படுதல் போன்றன ஏற்படுத்தும் அதீத ஆர்வமும் ஒருவரை பாலியல் நெறிபிறழ்வுக்கு இட்டுச் செல்கின்றன.
பாலியல் நெறிபிறழ்வுக்கான தீர்வுகள்
பாலியல் நெறிபிறழ்வுக்கான தீர்வுகளை நோக்கும்போது பாடசாலைகளில் பாலியல் கல்வியை போதித்தல். உதாரணமாக இன்று பாடசாலை நூல்களில் “மலர்ந்த யெளவனம்” என்ற நூலை அறிமுகப்படுத்தியுள்ளமையைக் குறிப்பிடலாம். அத்துடன் பரவலாக இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டும், பாலியல் தொடர்பான அறியாமையை நீக்கும் பொருட்டும் பாலியல் கருத்தரங்குகளை நடாத்துதல், பாலியல் நெறிபிறழ்வுகளில் ஈடுபடுவோரை நெறிப்படுத்தும் முகமாக உளவளத்துணை நிலையங்களை நிறுவி ஆலோசனை வழங்கி வழிப்படுத்தலை குறிப்பிடலாம்.
நிறைவாக மேற்படி சிந்தனைகளைத் தொகுத்து நோக்கும்போது “பாலியலானது பசி, தாகம் போன்று இயற்கையானதொன்று” என்ற சிந்தனை நோக்கத்தக்கது. எனவே இயற்கையான இவ்வுணர்வை உரிய முறையில் வெளிப்படுத்துவதன் மூலம் மேற்கூறப்பட்ட பாலியல் நெறிபிறழ்வுகளை ஒரளவு தவிர்த்துக் கொள்ளலாம்.
உசாத்துணை
1. மனநோயும் இன்றைய மருத்துவமும், - Dr. சோமசுந்தரம் 2. Understanding Psychology, - Robert S. Feldman.

நான் (49) us og 2003
ඡ;) (6) 60s) (Petsonality)
சி. தர்சினி சமூகவியல் சிறப்புக்கலை, யாழ். பல்கலைக்கழகம்.
ஆளுமையெனப்படுவது “ஒருவன் பெற்றுள்ள உடற்பண்புகள், உளப் பண்புகள், மனப்பான்மைகள், சமூக அறநெறிப்பண்புகள், ஆகியன ஒன்று சேர்வதால் எழும் கலவையைக் குறிப்பதாகும்”, இவ்வாளுமையில் உடல்தோற்றம், அனுபவங்கள், நினைவுகள், கற்பனைகள், பழக்கவழக்கங்கள், பற்றுகள், கவர்ச்சிகள், நடையுடைபாவனைகள் ஆகியன அடங்கியுள்ளன. இப்பண்புகள் ஒவ்வொருவரிடமும் ஒரு குறிப்பிட்ட அளவிலும், ஒரு குறிப்பிட்ட வகையிலும் சேர்ந்து ஒழுங்கமைந்திருக்கும். இவ்வாளுமைக்கு இதுதான் வரைவிலக்கணம் என அறுதியிட்டுக் கூறமுடியாது. உளவியலாளரும், உளப்பகுப்பாய்வாளர்களும் இவ்வாளுமை பற்றிப் பல்வேறு கோட்பாடுகளை முன்வைத்துள்ளனர். ஆளுமை என்பது நிலையான தன்மை கொண்டதெனக் கூறமுடியாது. சூழ்நிலைக்கேற்ப மாறும் தன்மைகொண்டதாகும்.
ஆளுமையானது இலத்தீன் மொழிச் சொல்லான Persona எனும் சொல்லிலிருந்தே ஆங்கிலத்தில் Personality ஆகப் பரிணமித்தது எனக் கூறப்படுகின்றது. ஆளுமையானது ஒருவனுக்குரிய தனிச்சிறப்பு என்றும், ஆளுமை ஒரே மாதிரியிருப்பதில்லை எனவும், தொடர்ந்து வளர்ச்சியடைவது என்றும், சூழலுடன் தொடர்ச்சியாக ஏற்படும் மோதல் என்றும் கூறப்படுகின்றது. ஒருவனிடம் வெளிப்படையாகக் காணப்படும் விருப்பு, வெறுப்பு, உணர்வுகள், மனவெழுச்சிகள், திறமைகள் சமூக நடத்தைகள், மனப்பான்மை என்பவற்றின் (p(p60) Du JT60T இயல்பு ஆளுமை 6T60 இன்னொருவிதமாகப் பொருள் கொள்ளப்படுகின்றது.
ஆளுமையைத் தீர்மானிக்கும் காரணிகளை நோக்கின் அவை பரம்பரை, சூழல், ஒழுக்கவியல், மனவெழுச்சி, நாளமில் சுரப்பிகள் என்பனவாகும். geb60) D வளர்ச்சியில் LDJ- நிலைக்கு முக்கியபங்குண்டு. ஒருவனது உடல் தோற்றமானது அவனது மரபுநிலையையே பெரிதும் சார்ந்ததாகும்.
உதாரணமாக - ஒத்தகரு இரட்டையர்களை வைத்து ஆய்வு நடாத்தியபோது, இவ்விருவரும் சிறுவயதில் பிரிக்கப்பட்டு ஒருவன் ஜேர்மன் நாட்டிலும், அடுத்தவன் இஸ்ரேலில் யூதகுடும்பத்திலும வளர்க்கப்பட்டான். 45 வருடங்களின்பின்பு அவர்களை ஆய்வு கூடத்திற்கு அழைத்தபோது இருவரும் ஒரேவிதமான ஆடை

Page 27
நான் இ UEń - éfoĝ5 2002
அணிந்து, மேல் மீசை வைத்தவர்களாக அங்கு வந்தனர். இவர்களுடைய பழக்கவழக்கங்கள்கூட ஒரே மாதிரிக் காணப்பட்டன இதனால் இவர்களிடம் சம ஆளுமை இருப்பதாக ஆளுமைச் சோதனைகள் எடுத்துக்காட்டின.
ஆளுமையைத் தீர்மானிப்பதில் பரம்பரைக் காரணிகள் மட்டும் முன்னணி வகித்தாலும், சூழல் காரணிகளும் அதில் செல்வாக்குச் செலுத்துகின்றன. சமூக உளவியலாளர்களான ருத்பெனடிக், மார்க்கிரட் மீட் ஆகிய இருவரும் நியூகினி தீவில் பப்புவாவில் வசிக்கும் அரபேஷ், முன்ைடுகோமூர் ஆகிய இனத்தைச் சார்ந்தோரின் வாழ்க்கை பற்றி ஆராய்ந்தனர். அரேபேஷ் மக்கள் தமது பிள்ளைகளிடம் அன்புகாட்டி வளர்த்தனர். இதனால் இப்பிள்ளைகள் அமைதியானவர்களாகவும் வன்செயல், முரட்டுத் தனம் என்பனவும் இவர்களிடம் காணப்படவில்லை. ஆனால் முண்டுகோமூர் Disas6 5ԼDՖ] பிள்ளைகளிடம் அன்பு காட்டாமையும், சிறுவயதில் பால்கொடுப்பதையும் நிறுத்தினர். இதனால் இவர்கள் எப்பொழுதும் குலச் சண்டையில் ஈடுபட்டும், முரட்டுத்தனமுடையவர்களாகவும் வளர்ந்தனர். இவ்வாறு பிள்ளை யின் வளர்ச்சியில் சூழலின் முக்கியத்துவம் இன்றியமையாததாகும். இதனைவிடஒழுக்கமுடமையும் ஆளுமை வளர்ச்சியில் முக்கியம் வகிக்கிறது. இவ் ஒழுக்கம் பற்றி ‘அயர்’, ‘முவர்' போன்ற அறிஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இதனைவிட ஒருவனது மனவெழுச்சி நிலையானது அவனது ஆளுமையின் முக்கிய ஒரு பண்பாகும். இதில் ஒருவனது உளமும், அவனது உளத்தில் தோன்றும் உணர்வுகளும் முக்கியம் பெறுகின்றன. பிள்ளை விழிப்பு நிலையிலிருத்தல், மந்த நிலையிலிருத்தல், கோபத்துடன் இருத்தல் என்பன அவனது மனவெழுச்சி நிலைகளைக் காட்டுகின்றன. நாளமில்சுரப்பிகள்ஹோர்மோன்கள் எனப்படும் சத்துநீர்கள் ஆளுமை வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. நாளமில் சுரப்பிக்கு நாளங்கள் கிடையாது. இவற்றால் சுரக்கப்படும் சுரப்புநீர் இரத்த ஓட்டத்தில் கலந்து உடலெங்கும் பரவி உடலின் எல்லாப் பிரிவுகளின் தொழிலையும் பாதிக்கிறது. மனிதனுடைய ஆளுமை நேர்வழியே வளரவேண்டுமாயின் இச்சுரப்பிகள் ஒவ்வொன்றும் குறிப்பிட்டளவு சுரக்கவேண்டும். அதிகளவிலோ, குறைந்தளவிலோ ஹோர்மோன் சுரக்கப்பட்டால் உடல் உள வளர்ச்சி பாதிக்கப்பட்டு ஆளுமை சமநிலை பிறழ்ந்துவிடும். தைரொக்சின் சுரப்பதால் உடலைச் சுறுசுறுப்புடன் செயற்படத் தூண்டுகிறது. தைரொக்சின் சுரக்க்ப்படும் அளவு மிகவும் குறைவுபட்டால் குழந்தைகளின் உடல்-உள வளர்ச்சியில் குறைபாடுகள் எழும். தைரொக்சின் அதிகளவாக சுரக்கப்படினும் வளரும் வீதம் தூண்டப்பட்டு நேர்வளர்ச்சி தடைப்படும்.
வெவ்வேறு அறிஞர்களும் ஆளுமையினைப் பல்வேறு விதமாகப் பாகுபடுத்தியுள்ளனர். ஊளவியலாளரான ஷெல்டன் என்பவர் உடலமைப்பின்படி மூன்று வகைகளாகப் பிரிக்கிறார். யுங் என்பவர்

நான் )ெ பங் - சித் 2002
அகமுகர், புறமுகர் எனப்பாகுபடுத்துகிறார். இந்தியாவில் மூன்று குணங்களின் அடிப்படையில் மனிதரை வகைப்படுத்துவர். சாத்விக குணமுடையோர் வெள்ளை நிறமாகவும், ராஜச குணமுள்ளோர் சிவப்பு நிறமானவர்களாகவும், தாமத குணமுடையோர் கறுப்பு நிறம் கொண்டவர்கள் என்றும் வகைப்படுத்தப்பட்டது. கலன் என்பவர் சிடுமூஞ்சி, அழுமூஞ்சி, தூங்குமூஞ்சி, சிரிமூஞ்சி என மனநிலைகளை நான்காக வகைப்படுத்துவார். வில்லியம் ஜேம்ஸ் என்பவர் கடின உள்ளம், மென்மை உள்ளம் எனப்பாகுபடுத்துவார். ஸ்ப்ரெஞ்ஞா ஆறு வகையாகப் பாகுபடுத்துவார். அவை கொள்கை வகை, அரசியல் வகை, சமயவகை, பொருளாதார வகை. சமூகவகை, அழகுணர்ச்சி வகை என்பனவாகும்.
ஏரிக் போர்ம் என்பவர் சமுதாயத்திற்கு முக்கியம் கொடுக்கிறார். இவரது கருத்தானது ஆளுமை அமைப்பு சமூக அமைப்பினாலே பெரிதும் தீர்மானிக்கப்படுகிறது என்கிறார். 5 அடிப்படைத் தேவைகள் மனிதனிடம் இருப்பதாக எண்ணுகிறார். தேவைகளினு டாகவே மாற்றம் ஏற்படுகிறது எனக்கூறுகிறார்.
மாற்றத்திற்கான தேவை ஏனையவற்றோடு தொடர்பு கொள்வதற்கான தேவை. வேர்விடுவதற்கான தேவை (முதல்வேர் குடும்பம்.) தன்னை அடையாளம் காணக்கூடிய நிலை வாழ்வின் அர்த்தத்தை புரிந்து கொள்வதற்கான தேவை.
இதனைவிட மனிதனிடம் சுதந்திரத்திற்கான ஆசையும், காட்புக்கான ஆசையும் காணப்படுகிறன. இவையிரண்டிலிருந்தும் மனிதன் தப்பிக் கொள்வதற்கு 4 வகையான தப்பித்தல் உத்திகள் காணப்படுகிறன.
1. பிறருடைய துன்பத்தில் மகிழ்தல். 2. இன்னொருவரை அடக்கி கொடுமைப்படுவதை ஏற்று
இன்பம் காணல், 3. தன்னைத்தானே அழித்துக் கொள்ளல். 4. முதாயம் எதிர்பார்க்கும் நடத்தைகளை உறுதிப்படுத்தல்.
அடுத்து உளப்பகுப்பாய்வாளரான சிக்மன்ட் புறொய்ட் ஆளுமைக் கட்டமைப்பை/உள அமைப்பை மூன்று பிரிவுகளாக வகுத்துள்ளர். id, ego, Super ego 676tu606 si606.just g5b. 'id' 36060T 36Tuib என்ற கோட்டில் செயற்படுவது என்று கூறலாம். சிறிய குழந்தைகளிடம்கூட இது காணப்படுகிறது. உளவியலறிஞர் இதனை “அட்றிணை மனநிலை” என்று கூறுவர். ego என்பது தன்னுணர்வு நிலையைக் குறிக்கும். id இன் மூலமாக எழுகின்ற ஊக்கல்கள் எவ்வாறு நடத்தை மூலம் வெளிப்படுத்தலாம் என்பதை ego என்பதே தீர்மானம் செய்கிறது. அதியகமானது மனித

Page 28
நான் இ ust - ég 2002
ஒழுக்கத்தை வற்புறுத்தும் ஒன்றாகும். Super egQ என்பது பிள்ளைகனின் 6 வயதிலேயே தோன்றுகின்றது. இதனைவிட புறொய்ட் வாய்வழி இன்பம், குதவழி இன்ம், பாலுறுப்புடன் தொடர்புடைய இன்பநிலை மறைபருவம், பிறப்பிக்கும் பருவம் என 5 வகையான வளர்ச்சிப் படிநிலை பற்றி கூறுகிறார். இவ் 5 படிநிலைகளிலும் ஏற்படுகின்ற குறைபாடுகள், தடங்கலே ஒருவனின் ஆளுமை வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்துகின்றன என்கிறார்.
உசாத்துணை நூல்கள்
கல்வி உளவியல், S. சந்தானம். கல்வியியல் ஓர் அறிமுகம், ச. முத்துலிங்கம். கல்வி உளவியல், திறந்த பல்கலைக்கழகம். கல்வி அளவிடுதலும் மதிப்பீடும், டாக்டர் எம். ஆர். சந்தானம். கல்வியின் உளவியற் பின்னணி, தேசிய கல்வி நிறுவகம், மகரகம.

அடுத்த"நான்’உங்களுக்குத் தருவது
翻 @ தனனமபககை
எதுவாயினும் உளவியல் சார்ந்த ஆக்கங்கனை எழுதி என்னை நிரப்புங்கள்.
அதனால் நாம் எல்லோரும் நிரய்யப்படுவோம். விரைந்து எழுதுங்கள். ஏனெனில் இது விரைவு உலகம்.
அவற்றை20.04.2002க்கு முன்னர் அஞ்சலிடுங்கள்,

Page 29
>> இரண்டு மாத
|35|-60) ର
> வருடத்திற்கு அ உங்களிடம் வந்து கெ
> என்னிலே உங்களு உளவியற் கருத்துக்கள் கு
என்னுட்ைய தனிப் U
என்னுடைய சிருணர்டுச் சந்த 으af
வெ
என்னுடைய முகவரி இதுத
J.S. Printers

ள்)
--
),
ங்களுக்கு ஒரு յtւյth,
ஆறு தடவைகளும் ாண்டிருக்கின்றேன்.
நக்குத் தேவையான
விந்து கிடக்கின்றன.
Tரது 20/=
T. . .
56 1501 = Sífujfeb 7 US
„п6óї:
"நான் ”
டி மசனட் குருமடம் , கொழும் புத் துறை, шпцU U IT Gли ић, @ ຜົນ ກໍ ຫມ ນ
TEL, O21-2721
Sillalai.
-— كــــــــــد
ག།