கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நான் 2003.01-02

Page 1


Page 2
D6oň: 28 இதழ் 01 உளவியல் சஞ்சிகை தை - மாசி, 2003 விலை 20/=
ᏳᎧ <.uts o 656Teo. (8x HITaio நட்சத்திரம் O.V., B.Th., S. ஆசிரியர் அரும்புகள் தன்னடக்கம் தன்நிலை மறந்தவரா நீங்கள் இணையாசிரியர்: நேர்காணல்
மனித மேம்பாட்டிற்கு வழியாகும் தன்னடக்கம் முதியோரும் தன்னடக்கமும் உயர்வை அடைய கருத்துக்குவியல் 95 உங்களுடைய சுய எண்ணக்கரு எதுவோ தண்னடக்கமே வாழ்வின் வெற்றி தன்னடக்கம் நோக்கி தன்னடக்கம் - ஒரு கண்ணோட்டம்
*NAAN!* Tamil Psychological Magazine De Mazeod Scholasticate, Columbthurai, jafna, Sri Lanka.
e& Fag 21 - 22
Ghurrardustr O.M., B.Th., B.A. (Hons).
ஒருங்கிணைtயாளர்: GENERGIgorrid O.M.I.
நிர்வாகக் குழு; அ.ம.தி. இறையியல் சகோதரர்கள். GERMAFEFİ VEITSIOT. ***
38526Όπενέδή ΦΦε GLL5'uxGör O.M., M.A. Lnrasfusò O.M.I., M.A. செல்வரெட்ணம் 0.M., Ph.D. N. சண்முகலிங்கன் Ph.0. Dr. R. denianisti ili.B.B.S.
Sarir H.C. Dip, in Counseling, Kent. sang rgstrato 0.M.I., B.A. (Hons), B.Th., Dip.Ed.
føDITATG4 unirsö (O.B. B., M.Phi.
 
 

། འཐང་མཚལ་ལས་རྒྱས་རྒྱ་མཚོ། /ஆசிரியர் அரும்புகன்"
“உனக்குத் தெரிந்ததையெல்லாம் சொல்லாதே
பகைமையைத் தேடிக்கொள்வாய், உன்னால் முடிந்ததையெல்லாம் செய்யாதே
சோம்பலை வளர்த்துக் கொள் வாய்; கேட்பதையெல்லாம் கொடுக்காதே
ஏழ்மையைத் தேடிக்கொள்வாய்”.
*w*#ష *"
எங்கேயோ வாசித்தவரிகள் நெஞ்சைத் தொட்ட கருத்தோவியங்கள். எதிலும் அளவும், கவனமும், பொறுப்பும், முன்னெச்சரிக்கையும் அவசிய மென்பதை மேல்வரிகள் நமக்கு உணர்த்துகின்றன. 'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சல்லவா’, '
“கண் போன போக்கிலே கால் போகலாமா” “கால் போன போக்கிலே மனம் போகலாமா” “மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா” “மனிதன் போன பாதையை மறந்து போகலாமா” கவிஞர் கண்ணதாசன் பல ஆண்டுகளுக்கு முன் வடித்த மனித வாழ்வின் உளவியல் வரிகள் இவை. பார்வை, பயணம், மனம், நடத்தை இவற்றில் பிறழ்வு நிலைகள் இருக்கக் கூடாதென்றும் எதிர்மறையான மனித செயற்பாடுகள் வாழ்வுப் பயணத்தை தடம்புரள வைப்பதுமல்லாமல் மனித வளர்ச்சியைச் சீரழித்து சமூகச் சீர்கேடு களுக்கும், ஏனையவர்களின் நடத்தைப் பிறழ்வுகளுக்கும் காரணமாக அமைகின்றதென்றும் குறிப்பிடுகின்றார்.
ஆசை, உணர்ச்சி, கோபம், பழிவாங்கும். உணர்வு, வார்த்தைப் பிர யோகம் இவற்றை இயல்பாகக் கட்டுப்படுத்தி தன்னை சுயநெறிப் படுத்தும் தனிமனிதன் மாண்புள்ளவன், பண்புள்ளவன், முதிர்ச்சியுள்ள வன்.
சுயகட்டுப்பாடு (தன்னடக்கம்) என்ற தலைப்பில் மலரும் இவ்விதழில் மனிதன் எவ்வாறு தன் வாழ்வை சரியான இலக்கை நோக்கி முன்னெடுக்கின்றான் என்பதையும், முரணாக வாழ்பவன் தன்னை சுமைகளுக்கு உட்படுத்துகின்றான் என்பதையும் புலப்படுத்தும் ஆக்கங்கள் இடம்பெறுகின்றன. தன்னைத் தெரிந்து கொள்பவன் மற்றவர்களையும் புரிந்து கொள்வான். தன்னை நெறிப்படுத்தக் கற்றுக்கொள்பவன் மற்றவர்களையும் வழிநடத்துவான். ஒழுக்கம், உறவு, பேச்சு, தீயசெயல்கள், வக்கிர உணர்வுகள் இவற்றைத் தனிமனிதன் எப்போது கட்டுப்படுத்துகின்றானோ அப்போது சமூகம் உயிர்பெறும். மனித வாழ்வு உயர்வு பெறும். புலர்ந்துள்ள புத்தாண்டு புதிய சீரிய வாழ்வின் விடியல்களை நமக்குக் காட்டுவதாக,
தோழமையுள்ள வாழ்த்துக்களுடன்
ம. போல் நட்சத்திரம் அ.மதி ノ ܢܠ

Page 3
“நான்’ தை , மாசி 2003 2
g5óróLisāsi) (self - Control)
யோ.யு.கமலானந்தன்
தன்னடக்கமானது பல்வேறு விதங்களில், பல்வேறு வகைகளில் பல்வேறுபட்டவர்களால் வரைவிலக்கணங்களுக்கு உட்படுத்தப்படுகின் றது. அந்த வகையில் தன்னடக்கமானது ஒருவரது வேண்டுகோளுக்கு அல்லது வேண்டுகோளுடன் ஒத்துப்போகும் திறமையும், சூழ்நிலை களுக்கு ஏற்றவகையில் எங்களது நடவடிக்கைகளை அல்லது நடத்தைகளை மாற்றியமைக்கும் திறமையும், எங்களது செயல்களை, செயற்பாடுகளை தள்ளிப்போடும், அல்லது தாமதப்படுத்தும் திறமையும் அத்துடன் மற்றவர்களின் தூண்டுதலில் நடக்காமல் அல்லது வெவ்வேறு சந்தர்ப்ப சூழ்நிலைகளால் தூண்டப்படாமலும் சமூகத்திற்கு ஏற்றவகையில் அல்லது சமூகங்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வழியில் எங்களது நடவடிக்கைகளை முன்னெடுப்பதும், முன்னெடுத்துக் கொள்ளும் திறமையே தன்னடக்கம் என்று அழைக்கப்படும்.
எங்களுடைய வாழ்க்கை வளர்ச்சிப்பருவங்களை நாம் பார்க்கும் போது, அங்கே பல்வேறுபட்ட பருவங்களை நாம் காணக்கூடியதாக இருக்கின்றது. ஒவ்வொரு பருவங்களிலும் எங்களடைய உணர்வுகளும், உணர்வுரீதியான நடவடிக்கைகளும், செயற்பாடுகளும் வித்தியாச மானவையாக இருக்கின்றன. அத்துடன் அவை வித்தியாசமான உணர்வு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை எங்களது வாழ்வில் கொண்டுவருகின்றன். இவ்வாறான உணர்வுகளும், உணர்வுரீதியான் பிரச்சினைகளும் வெவ்வேறு விதங்களில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தப்படுகின்றன. இவ்வாறு எம்மில் எழுகின்ற உணர்வுகள், உணர்வு சம்பந்தமான பிரச்சினைகளை எம்மை ஆள விடும்பொழுது எமது வாழ்க்கையே பிரச்சினையாக அமைந்துவிடும். எனவே எம்மில் எழுகின்ற உணர்வுகள் எம்மை ஆட்கொள்ளாது அவற்றை நாம் மேற்கொண்டு எமது வாழ்க்கையை முன்னெடுக்கும் போது தன்னடக்கமானது எம்மில் விருத்தி செய்யப்படுகின்றது.
தன்னடக்கமும் வாழ்க்கைப்பருவங்களும்
O heigO)6T'uu(56).lib (Childhood)
இரண்டு தொடக்கம் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தங்களுடைய உத்வேகங்களை, உணர்வுகளை மேலும், மேலும் மாற்றியமைக்கக் கூடியவர்களாக இருக்கின்றார்கள். அத்துடன்

"நான்’ தை , மாசி 2003 3
அவர்கள் தன்னிச்சையாகவே தங்களுடைய சில நடத்தைகளை, நடவடிக்கைகளை மாற்றியமைக்கும் திறமையும் அவர்களுக்கு இருக்கின்றது. ஏனென்றால் அவர்கள் மற்றவர்களுக்கு வருத்தத்தை, கிலேசத்தை, துயரத்தை ஏற்படுத்த விரும்பமாட்டார்கள். ஆனால் பயம், கோபம், பொறாமை, துன்பம் போன்ற சில உணர்வுகள் அவர்களிடையே காணப்படுகின்றன. இவைகள் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றபடி வெளிப்படுத்தப்படுகின்றன. எனவே உண்மையிலேயே இவர்கள் ஓர் தன்னடக்கமுள்ள குழந்தையாக இருக்க வேண்டுமானால் அல்லது தன்னடக்கத்தை தங்களுள்ளே விருத்திசெய்ய வேண்டுமானால் அவர்கள் வாழும் சூழ்நிலையும், குடும்பமும், அவர்களுடைய பெற்றோரும் அவர்களுக்கு சுமூகமான சூழ்நிலையை அமைத்துக் கொடுக்கவேண்டும். உதாரணமாக ஒரு குடும்பத்தில் இன்னொரு குழந்தை பிறக்கும் பொழுது மற்றகுழந்தை தான் எனது அம்மா, அப்பாவின் அன்பை இழந்துவிடுவேனோ என்ற பயத்தினால் கோபமும், பொறாமையும் கொள்கின்றது. எனவெ பெற்றோர் தங்களுடைய குழந்தைக்கு, அக்குழந்தை பிறந்தவுடன் காட்டிய அதே அன்பை தொடர்ந்தும் வழங்கும் போது அக்குழந்தை தனது உணர்வுகள் தன்னை ஆட்கொள்ளாது, தான் தனது உணர்வுகளை ஆழுகின்ற சந்தர்ப்பம் உருவாகின்றது.
எனவே இவ்வாறு உணர்வுகள் அவர்களை ஆழாமல் இருக்கும் சந்தர்ப்பங்களை சூழ்நிலைகளை ஏற்படுத்திக்கொடுக்கும் போது குழந்தை தன்னடக்கத்தை கற்றுக்கொள்கின்றது. -
9 காளைப்பருவம் (Adolescence)
இந்த வயதுக்கு உட்பட்டவர்களின் உணர்வுகளும், உணர்வுரீதியான எந்த விடயமும் மற்றவர்களை சார்ந்ததாக இருக்கமாட்டா. ஆனால் பெரும்பாலும் அவர்களை சார்ந்ததாகவே இருக்கும். இவர்கள் தங்களது முந்திய பழைய உணர்வுகளை அடக்க முற்படும் போது, புதிய உணர்வுகள் இவர்கள் மனதில் உதிக்கின்றன. அவை புதிய, புதிய பிரச்சினைகளை கொண்டுவருவதாக அமைகின்றது. இவ்வாறு அவர்களுள்ளே முடக்கப்பட்ட உணர்வுகள் ஒன்றன் பின் ஒன்றாக அவர்கள் மனத்திரையில் வரும் பொழுது, அவாகள் ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு தாவுகின்ற சந்தர்ப்பங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. இவ்வாறு ஒன்றன் பின் ஒன்றாக வரும் உணர்வுகள், அவர்கள் உள்ளத்தில் நெருப்பாக எரிந்து பிழையான சந்தர்ப்பங்களில், பிழையான இடத்தில் வெளிப்படுத்தப்படுகின்றன. எனவே இவ்வாறான சந்தர்ப்பங்களை பார்க்கும் பொழுது அவர்கள் உணர்வுகளே அவர்களை ஆட்கொள்ளுவது தெளிவாகின்றது. எனவே பல உளவிய

Page 4
66
ான்’ தை , மாசி 2003 4.
லாளர்களின் கருத்துப்படி, இப்படிப்பட்ட பிரச்சினைகள் உள்ளவர்கள் உளவளத்துணையாளர்களை நாடி ஆலோசனை பெற்றுஅேதன்படி வாழும் பொழுது அவர்கள் தங்களில் எழுகின்ற தீய உணர்வுகளை வெற்றி கொள்ளும் தன்னடக்கத்தை தங்களுள்ளே வளர்த்துக் கொள்வார்கள்.
9 முதிர்பருவம் (Aduthood)
இவர்களுடைய உணர்வுகள், உணர்வு சார்ந்த பிரச்சினைகள் எப்பொழுதும் இவர்களுடைய திறமைகள், தெரிவுகள் போன்றவற்றை சார்ந்திருக்கும். அத்துடன் தன்னைப்பற்றிய எண்ணம், கொள்கை போன்றவற்றை பலப்படுத்துவதிலும் சார்ந்திருக்கும். எனவே ந்நிலையில் இவர்கள் உண்மை நிலைக்கு முகம் கொடுக்கவேண்டிய தேவை ஏற்படுகின்றது. இவ்வாறு உண்மை நிலைக்கு முகம் கொடுக்கின்ற பொழுது வாழ்க்கையில் தீர்மானங்கள் எடுப்பது இவர்கள் பிரச்சினையாக அமைகின்றது. இந்நிலையில்" மற்றவர்களின் ஆலோசனைகளை நாடுவதன் மூலம், அவர்களின் ஆலோசனை, அறிவுரைகள் போன்றவற்றைக் கொண்டு எமது உணர்வுகளை சீர்ப்படுத்தி நல்லதொரு சந்தோஷமான வாழ்வை அமைக்க முடியும். எனவே இவ்வாறு மற்றவர்களின் உதவியுடன் தன்னடக்கத்தை இவர்கள் தங்களுள்ளே விருத்தி செய்து கொள்ள முடியும்.
8 நடுத்தர வயது உடையவர்கள் (Middle age)
இந்தப்பருவத்தில் உள்ளவர்கள் 35-60 வயதுக்கு இடைப்பட்டவர்களாகவே இருப்பார்கள். இவர்கள் பெரும்பாலும் உளப்பிரச்சினைகளுக்கு (Psychological crisis) உள்ளாக்கப் படுகின்றனர். இவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் சிக்கலான பல சவால்களை சந்திக்க வேண்டி நேரிடுகின்றது. ஆனால் அந்த சவால்களை சந்திப்பதற்கு அவர்கள் முழு ஆயத்த நிலையில் இருக்கமாட்டார்கள். இவர்கள் சவால்களை, பிரச்சினைகளை பார்க்கும் போது அவை அவர்கள் வேலைத்தளங்களை சார்ந்ததாகவும், குடும்ப வாழ்வு சார்ந்ததாகவும், பாலியல் உணர்வுகள் சார்ந்ததாகவுமே இருக்கின்றது. எனவே இந்த பருவத்தில் ஒரு மனிதனுடைய வாழ்க்கை பல்வகையான உணர்வுரீதியான பிரச்சினைகள் நிறைந்த ஒரு பருவமாக அமைகின்றது.
எனவே இவ்வாறான உணர்வுகள், உணர்வுரீதியான பிரச்சினைகள், உணர்வுரீதியான குழப்பங்கள் ஏன் என்பது பற்றி ஒரு அறிவுத்திறனை தங்களில் வளர்த்துக்கொள்வதன் மூலம், இவர்கள் தங்களிலே தன்னடக்கத்தை விருத்தி செய்து கொள்வார்கள்.

"நான்'தை மாசி 2003 بن نهياره
O 5pu(b6 b (Old age)
இந்த வயது போன பருவத்தில் அல்லது நிலையில் ஒருவர் தனிமை, பாதுகாப்பற்றநிலை, தான் தேவைப்படாத ஓர் நிலை போன்ற பல்வேறுபட்ட உணர்வுகளை சந்திக்கின்றார். எனவே இவர்களுடைய தன்னடக்க விருத்தியானது இவர்களுடைய ஆளுமையிலும், இவர்கள் கடந்தகால வாழ்க்கையில் தங்களிலே வளர்த்துக்கொண்ட, கட்டியெழுப்பிக்கொண்ட நடைமுறைகளிலும், நடத்தைகளிலும் தங்கியுள்ளது. எனவே தங்களுடைய கடந்தகால பருவ வாழ்க்கையில் தன்னடக்க ஒழுக்கத்தை தங்களிலே வளர்த்துக் கொண்டவர்கள் மட்டும் தான் இந்தப் பருவத்தில் நிம்மதியான வாழ்க்கைமுறை ஒன்றை நடத்தமுடியும். இவ்வாறு தன்னடக்க ஒழுக்க நெறியை தன்னிலே வளர்த்துக்கொள்ளாதவரும், உணர்வுரீதியில் முதிர்ச்சியடையாதவரும் தங்கள் வாழ்நாட்களை கோபத்திலும், தாழ்வுமனப்பான்மை அல்லது ஓர் சோர்வுற்ற நிலையிலும் தங்கள் வாழ்நாட்களை கழிப்பார்கள்.
இவ்வாறு பல்வேறு பருவங்களில் பல்வேறுபட்ட உணர்வுகளால் மனிதர்கள் தூண்டப்பட்டு, தங்கள் செயற்பாடுகளை, தங்கள் நடத்தைகளை உடனுக்குடனே கையாளுகின்ற தன்மை அவர்களில் காணப்படுகின்றது. அவ்வாறு அவர்கள் கையாளுகின்றபோது, தங்கள் செயற்பாடுகளுக்குரிய விளைவுகளை பின்னரே சந்திக்கின்றார்கள். இவ்வாறு பாரதூரமான விளைவுகளை சந்திக்கின்ற போதுதான் அவர்கள் தங்கள் நடத்தைகள், செயற்பாடுகள் போன்றவற்றை பற்றி சிந்திப்பார்கள், கவலைகொள்வரர்கள். எனவே இவ்வாறு வெவ்வேறு உணர்வுகளால் தூண்டப்படும் பொழுது, உடனடியாக செயற்படாமல், தாமதப்படுத்தி செய்வது சரியா, பிழையா என்று சிந்தித்து, தன்னடக்க ஒழுக்க நெறியைக் கடைப்பிடிக்கும் போது அல்லது கடைப்பிடித்து தங்கள் செயற்பாடுகளை முன்னெடுக்கின்ற போது உண்மையிலேயே அவர்கள் வாழ்க்கை சந்தோஷமாக அமையும் அவ்வாறு தன்னடக்க ஒழுக்க நெறியை கடைப்பிடித்து வாழுகின்ற போது எந்த சூழ்நிலையிலும், எந்த சந்தர்ப்பத்திலும் உணர்வுகள் எழுகின்ற போது, உணர்வுகளால் தூண்டப்படும் போது ஒழுக்கமுள்ள எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய செயற்பாடுகளை செய்யக்கூடியவராகவும், எந்த சூழ்நிலையிலும் வாழ்க்கையை கொண்டு செல்லக்கூடிய ஒரு மனிதனாக இருக்க முடியும், வாழமுடியும். எனவே தன்னடக்க ஒழுக்க நெறியானது ஒருவனது வாழ்வில் முக்கியமானதொன்றாக காணப் படுகின்றது.

Page 5
"நான்’ தை , மாசி 2003 (6 தன்நிலை மறந்தவரா நீங்கள்?
யோசப்பாலா
9 "பணம், பட்டம், பதவி எல்லாம் இருந்தாலும் அவருக்கு போத்தலை காட்டினால் போதும், பெட்டிப் பாம்பாய் இருந்தவர் ஆடத் தொடங்கி விடுவார்’
9 "தன்னை அடக்கத் தெரியாததால தானே எடுப்பார் கைப்பிள்ளை போல தறுதலையாத் திரியுதுகள் பார்”
9 “கண்டவனிலையும் மயங்கி ஏமாந் போட் s ଠେଁ ULIITňr
@ தி இந்தப்பிள்ளையை ஏற்கப்போகினம்’
9 “நல்ல உடுப்புக்களைக் கண்டா உடன மயங்கி ஏமாந்து பின்னால போறது தானே இதுகளின்ர வேலை”
9 “வாய்க்கு ருசியா கிட்ைச்சிட்டா, ஒரு பிடி பிடிச்சிட்டு, இப்ப வருத்தங்கள் எண்டா மருந்துக்கு அலையத்தானே வேணும்”
9 “சொன்னாக் கேட்டாத்தானே, தன்னை அடக்கத் தெரியாததால தானே, வில்லங்கத்தை விலைக்கு வேண்டிற்று மனம் குழம்பி நிற்கினம் இப்ப”
எங்கும் இந்த முணுமுணுப்புகள் அடிக்கடி கேட்கும். ஆனாலும் தன்நிலை மறந்தவருக்கு தன்னடக்கம்" என்பது பாவக்காய் போலத்தான் கசக்கும்.
(SELF CONTROL) தன்னடக்கம் உளவியல் ரீதியில் பல்வேறுபட்ட நிலைகளில் விளக்கம் தரும். தன் சுய இச்சைகளை, எதிர்பார்ப்பு களை, விருப்புகளை, ஆசைகளை முழுமையாக அடக்கிவிடாது தேவைக்கு ஏற்ப ஒழுங்குபடுத்தப்பட்டு முன்னுரிமைகளை இனம்கண்டு காலம், இடம், பொருள் கண்டு வெளிப்படுத்துவதில் நிதானித்துச் செயல்படுவதுமாகும்.

yan நான்’ தை , மாசி 2003
தன்னடக்கம் என்பது பணத்தை, ஆற்றலை, விருப்பு வெறுப்புகள், ஆசைகளை, சுயதேவைகளை அடக்கி மறைத்து விடுவது என்பது பொருளல்ல. “தன்னடக்கம் என்பது தன்னைப்பற்றிப் பொருத்தமான மதிப்பீடு கொண்டிருப்பதுதான் பொருத்தமானதிற்கும் குறைவாக மதிப்பீடு கொள்வது அல்ல” என்பார் சார்லஸ் எல்.
தன்னை அறிந்தவனே தன் சமூகத்தையும் வழிகாட்ட முடியும். தன்னடக்கம் உள்ளோர் தம் செயல்களால் உலகை ஆள்வர். தன்னடக்கம் உலகை அளக்கும் சக்தி படைத்தது. இவ்வடக்கம் இல்லாதோரை எத்திசைக்கும் ஏமாற்றி பிறர் தம் விருப்புக்கு பயன்படுத்திக் கொள்வதால் ஏமாளியாகவும், கேலிக்குள்ளாவோராயும் விடுவர். இவர்களின் செயல்களால் ஏற்படும் தாக்கம் அவர்களை மட்டுமல்ல, அவர் சூழ்ந்தவர்களையும் பாதிக்கவே செய்யும்.
வழவழத்த வார்த்தைகள் பிதற்றலாகிவிடும். தேவைக்கில்லா ச்ெயல்கள் அர்த்தமற்றதாகிவிடும். அளவுக்கு மீறிய ♔.ങ്ങഖ உடலாரோக்கியத்தை கெடுத்துவிடும். எதிலும் சுயமதிப்பு இழந்து விடாதிருக்க தன்னடக்கம் தற்காப்பு தரும். மனம் ஒரு நிலைப் படுத்தப்படவும், தன்னை மீள்பார்வை செய்யவும், ஒழுங்கமைப்புடன் செயற்படவும் தன்னடக்கம் ஒரு தாரகைமந்திரமே. "தன்னடக்கம் தானாக பிறக்குமேய்ொழிய தானாக எவரும் கற்றுத்தர முடியாது” என்பார் புல்லிவியஸ் வைரஸ். தன்னடக்கம் உள்ளவர் இடத்தில் தவறுகள் நடக்க வாய்ப்பு குறைவாகவே காணப்படும்.
குடும்பத்திலும், சமூகத்திலும் பிரச்சினைகள் என வார்த்தைக்கு முந்திய வார்த்தைகள், விளக்கமின்மையால் ஏற்படும் வில்லங்கங்கள், பொறுமைகள் இல்லா குரோத மனப்பாங்குகள், எல்லைகள் இல்லா தொல்லைகளாக தொடர்வதை எம் எதிரே பல சந்தர்ப்பங்களில் காணமுடியும். ஒருவர் மற்றவரின் உணர்வுக்கும், உரையாடலுக்கும், உற்றுக்கேட்கும் உள ஆற்றுப்படுத்தலுக்கும் தன்னடக்கமுடன் சந்தர்ப்பத்தை பயன்படுத்துபவரே தன் முயற்சிகளில் வெற்றி கான்கின்றார்.

Page 6
"நான்’ தை , மாசி 2003 8
தன்னடக்கமில்லாதவரிடத்தில் ஒரு தவறான செய்தி கிடைத்தால் போதும். இதுவே நாட்டையே சீரழிக்கும், வதந்திகளாக விசுவரூபம் எடுக்கும். இது போன்றவரிடத்தில் எதை, எப்படி, ஏன் வெளிப்படுத்த வேண்டும் என்பதை உணரமுடியாதவராக செயல்படுவதால்தான் அவர்
சொல்லுக்கும், செயலுக்கும் மதிப்பிழக்கவும் நேர்கிறது.
இவை சிறுவர், இளையோர், முதியோர் என்ற நிலைகளில் எவருக்கும் ஏற்படலாம். வார்த்தைகளை கொட்டுவதில் நிதானம் இல்லையேல் அதனால் ஏற்படும் பின்விளைவுகளை எண்ணி பின்னர் கலங்குவதைவிட எதையும் ஒழுங்குபடுத்திக் கொண்டு செயல்பட விழையும் தன்னடக்கத்தின் வெளிப்பாடுகள் காத்திரமாகவும், மதிப்புள்ளவையாகவும் சமூகம் ஏற்றுக்கொள்வதோடு தன்நிலை மீட்டு தன் தவறுகளை இனங்கண்டு தன்னம்பிக்கையுள்ளவர்களாகவும் வாழமுடியும். இவை வாழ்வின் வெற்றிக்கு தன்னடக்கமே தற்காப்பு கவசமாகும்.
நண்பர்களுக்கும் தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்
酶
உரித்தாகட்டும் சமாதானக் கதிர்க்
 

"நான்’ தை , மாசி 2003 9)
நேர்காணல்
நேர்கண்டவர்கள் : விமல், யேசுதாசன்
தமிழ், ஆங்கில இலக்கியங்களில் சென்னைப் பல்கலைக்கழக இளங்கலைமானியும், ஒலி ஒளிக் கல்வியில் கிரேக்-அவெக்ஸ்சில் (CREC-AWEX) (பிரான்ஸ்) டிப்புளோமாவும், தொடர்பியலில் சிரேக்கியூஸ் பல்கலைக்கழக முதுகலைமானியும் (வடஅமெரிக்கா) உளவியலில் இலோயோலாக் கல்லூாயில் (மெரிலண்ட்-வடஅமெரிக்கா) முதுமானியும், உளவளத்துணை உளவியலில் பொஸ்ரன் பல்கலைக் கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்றவரும், பல நாடுகளுக்குச் சென்று ஆன்மீக உளவியல் கருத்துரைகளை வழங்கி வருகின்றவரும், கரைவையூர்ச் செல்வம் என்ற புனை பெயரோடு எழுத்துத்துறையில் பிரகாசிப்பவருமான அருட்தந்தை செல்வரெட்ணம் “நான்” உளவியல் சஞ்சிகைக்கு அளித்த பேட்டி
கேள்வி ;~ எங்களுடைய சஞ்சிகையின் தலைப்பின்படி தன்னடக்கம் பற்றிய உங்கள் கருத்து என்ன?
பதில் : உளவியலைப் பொறுத்தவரையில் சொற்பிரயோகம் மிகவும் அவசியமாகும். சொற்பிரயோகத்தை நன்கு புரிந்து கொள்ளாவிட்டால் கருத்துக்களையும் நாம் தவறாக விளங்கலாம். என்னைப் பொறுத்தவரையில் “தன்னடக்கம்” எனும் பதம் வித்தியாசமான தொனியைக் கொண்டுள்ளது. ‘அடக்கம்’ என்ற சொல் வெவ்வேறு துறைகளில் வித்தியாசமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஆகவே "தற்கட்டுப்பாடு” அல்லது “சுயகட்டுப்பாடு” பொருத்தமாக இருக்கு மென நம்புகிறேன். ஏனென்றால் இது ஞநடக னளைஉனிடெைநஐ சுட்டி நிற்கின்றது. அடக்கத்திற்கும் (control) கட்டுப்பாட்டிற்கும் (in control) இடையே வித்தியாசம் இருக்கின்றது. உதாரணமாக கோபம் வருகின்றபோது அதை அடக்குகின்றேன் என்றால் அது அடக்கம் (Control). அது நல்லதல்ல. என் கோபத்தை கட்டுப்படுத்தி (in

Page 7
"நாண்" தை , மாசி 2003 O
control) பின் வெவ்வேறு வழிகளில் வெளிப்படுத்துகின்றேன். இது அடக்கமல்ல.
கேள்வி :- இன்றைய சூழ்நிலையில் தற்கட்டுப்பாடு அவசியமானதா?
பதில் - நிச்சயமாக, தற்கட்டுப்பாடு மிக அவசியமானது. இன்றைய காலகட்டத்தில் எதனையும் செய்யலாம் எப்படியும் செய்யலாம், எப்படியும் வாழலாம், எத்தனையோ அழிவுகளைப் பார்த்து விட்டோம் எது செய்தாலும் தப்பில்லை என்ற சிந்தனையோடு கூடிய சமூகம் (Permissive Society) உருவாகிக்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் நீங்கள் தற்கட்டுப்பாடு பற்றி பேசுவது மிக, மிக அவசியம், சின்ன வயதிலிருந்து பெரிய வயது வரைக்கும் எனக்கு நானே ஒரு கட்டுப்பாட்டை கொண்டு வராமல் நான் எதனையும் சாதிக்கமுடியாது. விளையாட்டை எடுத்துக்கொண்டாலோ, கல்வியை எடுத்துக்கொண்டாலோ திருமணத்தை எடுத்துக்கொண்டாலோ குருத் துவ துறவற குழுமவாழ்வை எடுத்துக்கொண்டாலோ தற்கட்டுப்பாடு மிகவும் அவசியம். இது இன்றைய சமூகத்தில் குறைந்து கொண்டு வருகின்றது. நான் மற்றவருக்கு சட்டங்களை சொல்கிறேனே தவிர, என்னை எப்படி கட்டுப்படுத்துகிறேன் என்பது கேள்விக்குறிதான்.
கேள்வி~ சிலர் ஆன்மீகம் என்பதை, தற்கட்டுப்பாடு எண்கிறார்கனே?
பதில் - தற்கட்டுப்பாடு ஆன்மீகம் அல்ல. ஒருவேளை என்னை வருத்திஇ கட்டுப்படுத்தி வாழ்வது ஆன்மீகம் என்று சிலர் சொல்கின்றார்கள். ஆனால் அது ஆன்மீகம் அல்ல. தற்கட்டுப்பாடு ஆன்மீகத்துக்கு உதவி செய்யுமே தவிர அது ஆன்மீகம் அல்ல. நான் சிலவேளை நேர அட்டவணையை (p(LR60) Dust 85 கடைப்பிடிப்பவனாக என்னை நானே பாராட்டிக்கொள்ளலாம். ஆனால் அது ஆன்மீகம் அல்ல.
கேள்வி :~ நீங்கள் உளவியல் மற்றும் ஆண்மீக கருத்துரைகள் வழங்க இதுவரை எத்தனை நாடுகளுக்கு சென்றிருக்கிறீர்கள்?
பதில் (புன்னகையோடு) இதுவரை எண்ணிப்பார்க்கவில்லை. (சற்று யோசித்து) இந்தியா, பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ், கென்னியா,

"நான்” தை , மாசி 2003
உகண்டா, ஸம்பியா, இங்கிலாந்து, அயர்லாந்து, பெல்ஜியம், ஒஸ்ரியா, அமெரிக்கா, இத்தாலி, இப்படி பல நாடுகளுக்கு, சில நாடுகளுக்கு அடிக்கடி செல்வதுண்டு.
கேள்வி :~ பல வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ளீர்கள். வெளிநாட்டு குடும்பங்களோடு எங்களுடைய தமிழ் குடும்பங்களை ஒப்பிடுகின்றபோது எங்கள் குடும்பங்களில் காணப்படுகின்ற நல்ல விடயங்கள் என்ன?
பதில் - பல விடயங்கள் உள்ளன. பிள்ளைப்பாசம், பெற்றோர் பிள்ளைகளுக்கிடையே உள்ள உறவு என்பவற்றைக் கூறலாம். அதிலும் ‘வீடு' என்கிற பதம் அன்பு அல்லது பாசம் எனும் ஆழ்ந்த நற்பண்புகளை பிரதிபலிப்பதாக இருக்கின்றது. எனக்கு மிகப்பிடித்த விடயம் என்னவென்றால் எம் வீடுகளில் பெற்றோர், பிள்ளைகளில் செலுத்துகின்ற அன்பு, பாசம், கரிசனை, தியாகம் என்பனவாகும். இவை எங்கள் பண்பாட்டில் மிக, மிக பாராட்டப்பட வேண்டிய விடயங்களாகும்.
கேள்வி 6 بحص si6),60f As குடும்பங்களிலிருந்த இன்னும் வளர்க்கப்பட வேண்டிய விடயங்கள் பற்றி .
பதில் - ஒரு பெரிய குறை என்னவென்றால் எங்களுடைய குடும்பங்களில் கணவன், மனைவிக்கு இடையே தங்களைப்பற்றிய உரையாடல் குறைவாகவே உள்ளது. அவர்கள் பிள்ளைகளைப்பற்றி, அவர்களது கல்வியைப்பற்றி, தம் செலவுகளைப்பற்றி பேசுவார்கள். ஆனால் தங்களைப்பற்றி பேசுவது மிகக்குறைவு. இதனால்த்தான் நம் குடும்பங்களில் ஒற்றுமை இல்லாமல் போகிறது. மேலை நாடுகளிலே கணவன், மனைவி தங்களைப்பற்றி, தங்களது தாக்கங்கள், ஏக்கங்கள், கனவுகள் பற்றி பேசிக்கொள்வர். அதுபோல எம்மவரும் தங்களைப்பற்றிய உரையாடலை திருமணத்தன்றே ஆரம்பித்தல் நல்லது.
21ம் நூற்றாண்டில் காலடி எடுத்துவைத்தும் பெண்களை இன்னும் இரண்டாம்தர பிரஜைகளாகப் பார்க்கின்ற தன்மை நம் சமூகத்தில்

Page 8
"நான்’ தை , மாசி 2003 12
உண்டு. பெண்களை இப்படி குறைவாக நினைப்பதனால் அவர்களின் ஆழுமை சிதைக்கப்படுகின்றது. இந்நிலை மாறவேண்டும்.
கேள்வி :~ தமிழர்களைப் பொறுத்தமட்டில் மாலியல்க்கல்வியின் (Sex education) தேவை வெளிநாட்டவரோடு ஒப்பிடுகையில் மந்தநிலையில் இருப்பதாகத் தெரிகின்றது. இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில் : உடலுறவு மட்டும்தான் பாலியல் கல்வியென நோக்குவது ஓர் குறுகிய கண்ணோட்டம். ஆண்களையும், பெண்களையும் பற்றிய முழு அறிவே பாலியல்க்கல்வி (Sexuality). அத்தோடு ஆண்மை (Masculinity), பெண்மை (Feminity) சார்ந்த முழு அறிவும் பாலியல்க்கல்வியாகும். மேல்நாட்டவர் உடலுறவு பற்றிய பாலியல்க் கல்வியையே அதிகம் பேசுகிறார்கள். இது அவர்கள் பாலியலைப் பற்றி கொண்டுள்ள குறுகிய கண்ணோட்டத்தை எடுத்துக்காட்டுகின் றது. வெவ்வேறு பாரம்பரியங்களிலும்இ சிறப்பாக தமிழர் பண்பாட்டிலும் முன்பு பாலியல்க்கல்வி அதிகம் பேசப்பட்டதாகச் சான்றுகள் உள்ளன. எப்போது கிரேக்க தத்துவம் (Greek philosophy) asidst 606.jugb& 2 L606)ub (Spirit and matter) பிரித்துப்பார்க்க தொடங்கியதோடு இருபொருள் வாதத்தை (Duelestic thinking) கொண்டு வந்ததோ அப்போதே, பாலியலை இரண்டாம் நிலையில் வைத்துப்பார்க்கும் நிலை தொடங்கிவிட்டது. ஆனால் பண்டைய தமிழ் இலக்கியங்களிலே, சிற்பங்களிலே, எழுத்துக்களிலே, ஓவியங்களிலே இதுபற்றி திறந்த மனப்பான்மை யோடு அணுகி யுள்ளமை தெரிகின்றது.
ஆகவே இன்றைய காலகட்டத்திலும் முழுமையான மனித பாலியல் அறிவை (Human sexuality) ஊட்டவேண்டிய தேவை உள்ளது. அப்போதுதான் ஓர் ஆரோக்கியவாழ்வு தோன்றும்.
கேள்வி :~ திருமணம் முடித்த தம்பதியினர் தங்களகத்தே உடலுறவு பற்றிய அதிர்ப்தியினால் சட்டவிரோத உடலுறவுகளுக்கு முனைந்து பல்வேறு சமூக உளவியல் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனர். இதபற்றி என்ன நினைக்கிறீர்கள்?

"நான்’ தை , மாசி 2003 f3 பதில் - எப்படியும் இந்த விடயத்தில் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். எனவே மிகமுக்கியமாக கணவன், மனைவி இருவருக் கிடையில் உரையாடல் அவசியம். தங்களைப்பற்றி, தங்களது ஆசைகளைப்பற் 5, தங்களது உணர்வுகள் பற்றி எவ்வளவுக் கெவ்வளவு பேசுகிறார்களோ அந்தனவுக்கு அவர்களது உடலுறவு வாழ்க்கையும், உணர்வுரீதியான வாழ்க்கையும் வெற்றி அடையும். திரும்பவும் சொல்கிறேன். பாலியலைப்பற்றிய (Sexuality) முழு அறிவு மிகவும் அவசியம்.
கேள்வி :~ குடும்பங்களில் ஆதிக்கம் செலுத்துகிற, குடும்ப பிரிவினைக்கு ஓர் முக்கிய காரணியாக இருப்பது கோபமாகும். குடும்ப வளமான வாழ்வுக்கு இக்கோபத்தை எப்படி நெறிப்படுத்தலாம்?
。
பதில் :- இது ஓர் பெரிய கேள்வி.
முதலாவதாக, உணர்வுகளை நாங்களே அது கெட்டது, இது நல்லது என்று பிரித்து வைத்திருக்கின்றோம். அதன் விளைவாக கோபத்தை ஓர் கெட்ட உணர்வாகப் பார்க்கின்றோம். அந்நிலை மாறவேண்டும். உணர்வுகள் உற்பத்தியில் நல்லவையுமல்ல, கெட்டவையுமல்ல. உணர்வுகள் உணர்வுகளே. அந்த உணர்வுகளில் இருந்து புறப்படும் நடத்தைகளைத்தான் நல்லதோ, கெட்டதோ என்று பார்க்கவேண்டும் கோபம் நல்லதுமல்ல, கெட்டதுமல்ல. உதாரண மாக ஒருவன் என்னை அடிக்கடி அடிக்கிறானென்றால் கோபம் வரவேண்டும். வந்தால்த்தான் அந்த அடியில் இருந்து என்னை மீட்டுக்கொள்ளலாம். இல்லையென்றால் நான் அடிவாங்கியே செத்துப்போவேன். ஆகவே கோபம் ஓர் அவசியமான உணர்வு. அடிப்படைத்தேவை.
இரண்டாவதாக, கோபத்துக்கு சில அடிவேர்கள் உண்டு. இது ஆரம்ப வயதிலிருந்தே ஆரம்பித்திருக்கலாம். சிறப்பாக நான் சிறுவனாக, சிறுமியாக இருந்தபோது என் பெற்றோர்கள் எப்படி என்னைப் பார்த்தார்கள், கண்டித்தார்கள், தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வளர்த்தார்கள். அவையெல்லாம் சேர்த்துத்தான் இந்த கோபத்தை உருவாக்கியது.

Page 9
"நான்’ தை , மாசி 2003 14
மூன்றாவதாக, பாடசாலைக்கு நான் சென்றபோது ஆசிரியர்கள், பெரியவர்கள், குருக்கள், துறவிகள், என்னைக் கண்டித்தும், அணுகியவிதமும் சேர்ந்து அடக்கப்பட்டு பின்பு தீமையான வெளிப்பாடாக வருகின்றது.
இப்போது என்ன செய்யலாம்?
முதலாவதாக, என் உணர்வுகளை இனம் கண்டு பெயரிடவேண்டும். சிலவேளை பயம் கோபமாகத் தோன்றலாம்.
இரண்டாவது, இது என்னுடைய உணர்வு என்று ஏற்றுக்கொள்ள வேண்டும். நான் சிலவேளை பயத்தை கோபமாக எண்ணலாம். நாம் சிலவேளை நீ என்னை கோபப்படுத்துகின்றாய் என்று சொல்கிறோம். ஒருவரும் ஒருவரை கோபப்படுத்த முடியாது. மாறாக நானாக கோபப்படுகிறேன்.
இப்போது என்னுடைய கோபத்தை எப்படி ஆக்கபூர்வமான வழிவகையில் வெளிப்படுத்தலாம்?
எனக்குள் இருக்கின்ற ஆற்றல்களைக் கண்டுபிடித்து அதனூடாக வெளிப்படுத்த வேண்டும். உதாரணமாக சிற்பக்கலை, எழுத்துத் துறை, சங்கீதம், நடனம் என்பவற்றைச் சொல்லலாம். அழிவுரீதியாக வெளிக்கொணர முயற்சிக்கக்கூடாது.' -
கேள்வி :~ சுயஇன்பம் (Masturbation) அநபவித்தல் தவறில்லை 66 f6) மத்திரிகைகள் சொல்கின்றன. ஆனால் இது குடும்பவாழ்க்கையில் மாதிப்பை ஏற்படுத்தமென சில நிறுவனங்கள் அறிவுறுத்தங்கின்றன. இத பற்றி .
பதில் - என்னதான் பத்திரிகைகள் சுயஇன்பம் அநுபவித்தல் தவறில்லை என்று சொன்னாலும் இது உளவியல் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன என்பது உண்மைதான். ஒருவர் இதனை பழக்கப்படுத்திக் கொண்டால் (habit, addiction) அந்த பழக்கமே அவர்மீது செல்வாக்குச் செலுத்தி அவரைப் பாதிப்புக்குள்ளாக்கும். ஆணானாலும், பெண்ணானாலும் பாதிப்புண்டு. பின்பு அவர்களை உளவள சிகிச்சையூடாகவே சாதாரண நிலைக்கு கொண்டுவர

"நான்’ தை , மாசி 2003 15 முடியும். அல்லாவிடில் குடும்பவாழ்க்கையிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல பிரச்சினைகளை இவர்கள் எதிர்நோக்கலாம். ஆகவே தற்கட்டுப்பாடு அவசியம்.
கேள்வி ;~ "நான்' சஞ்சிகையில் நீங்கள் பாராட்டும் நல்ல விடயங்கள்இ திருத்தப்பட வேண்டிய விடயங்கள் பற்றி .
பதில் :- நான் ஓர் சஞ்சிகையை நிர்வகித்தவன் என்ற முறையில் சொல்கிறேன் இப்படி ஒரு சஞ்சிகையை தொடர்ந்து நடத்துவது மிகக்கடினம். தொடர்ந்து ‘நான்' சஞ்சிகையை வெளியிடுவதற்காக உங்களைப் பாராட்டுகிறேன். வெளிப்படையாகப் பார்க்கின்றபோது சஞ்சிகை நல்ல கணணி ஒருங்கமைப்புடன் வெளிவருகின்றது. குறிப்பிட்ட தலைப்புக்குள் நீங்கள் சஞ்சிகை வெளியிடுவது வரவேற்கப்பட வேண்டிய விடயம். ஆனால் இன்னும் கட்டுரைகளை ஆழப்படுத்துவது நல்லதென்று நினைக்கின்றேன்.
“நான்” வாசகர்களோடு உங்கள் சிந்தனைகளை பகிர்ந்து கொண்டமைக்கு "நான்’ வாசகர்கள் சார்பாக எமது உள்ளங்கனிந்த நன்றியைத் தெரிவிக்கின்றோம்._ .كنيتشيلسنة لم يكنة قمة جيشيد بنين Tsyధ్యాన్ని
பொதுசன நூலகம் !
யாழ்ப்பாணம்
“நான்’ ஆண்டு 2003 இவ்வாண்டில் “நான்” உங்கள் முன் கொண்டுவருவன.
2003 தை - மாசி :56,orgOTLessib (Self control) 2003 பங்குனி - சித்திரை :பொதுத்தலைப்பு 2003 வைகாசி - ஆனி :ஒத்துப்போதல் (Adjustment) 2003 ஆடி - ஆவணி :Slopo (Satisfaction) 2003 புரட்டாதி - ஐப்பசி :பொதுத்தலைப்பு
2003 கார்த்திகை - மார்கழி :பழிவாங்குதல் (Revenge)

Page 10
“prašr“ Goog5 - LDrTáF 2003 16 மனித மேம்பாட்டிற்கு வழியாகும் g56060-865D
வி.அனுஷா
ஒவ்வொரு மனிதனும் தனது சுயம் (Self) பற்றிய வளர்ச்சியில் தன்னை சுற்றியுள்ள எதார்த்தங்களின் தாக்கத்தினூடாக புதிய/புதிய அணுகுமுறை வளர்ச்சியினைப் பெறுகின்றான். தன் மதிப்பு (Self - respect), தன்னம்பிக்கை (Self-confidence), தற் சுதந்திரம் என்பவை போன்று தன்னடக்கம் (Self-control) எனும் ஓர் அணுகுமுறை வளர்ச்சியினூடாக தான் வாழும் புற உலகின் பல்வேறு வரையறைகள், நடைமுறைகளை உள்வாங்கி அதற்கேற்ப தன் வாழ்க்கையை கொண்டுசெல்ல முற்படுகின்றான். தன்னடக்கம் என்பது மனிதனது நடத்தையுடன்
தொடர்புடைய ஒரு உளவியல் செயற்பாடு இதை நிர்ணயிக்கும் காரணிகளாக : -
O g5énfuño 256ITáásb (Socialization)
e ஒவ்வொருவரதும் தனித்துவம் (Individualism) o Dariuršē (Attitude) (). Fegpas féu Drissňr, 6progfassňr (Social norms & ethics) * * *
என்பன காணப்படுகின்றன. தன்னடக்கம் எப்பொழுதும் நடத்தை சார்ந்ததாக அமைந்த போதும் உணர்வு நிலைசார்ந்த வெளிப்பாட்டுடன் தொடர்புடையதாக காணப்படுகின்றது. குழந்தைத்தனமான மனித நடத்தையிலிருந்து விடுபட்டு ஒவ்வொரு மனிதனதும் உணர்வுக்குட்பட்ட ஆளுமை விருத்தியின் வெளிப்பாடாக இது புலப்படும். தன்னடக்கம் என்பதினூடாக ஒரு மனிதன் தன்னை ஒழுங்குபடுத்தவும் அவனூடாக ஒரு சமூகமே ஒழுங்குபடுத்தப்படவும் வாய்ப்பான சந்தர்ப்பங்கள் உருவாக லாம். அத்துடன் ஒவ்வொரு மனிதனதும் சுயமேம்பாடு (Selfdevelopment), அந்தஸ்து விருத்தி (Status development) என்பவற்றின் வளர்ச்சிக்குரிய முக்கிய காரணிகளுள் தன்னடக்கமும் ஒன்றாக விளங்குகின்றது.

“நான்" தை மாசி 2003 "என்னால் என்னைக் கட்டுப்பருத்த முடியவில்லை' "அந்த சந்தர்ப்பத்தில் என் உணர்வுகள் கட்டிற்குள் நிற்க மறந்துவிட்டன
போன்ற பதங்களின் வெளிச்சத்தில் சுயகட்டுப்பாடுகள் மீறப்படுகின்ற சந்தர்ப்பங்கள் உருவாகலாம். ஆனால் அவற்றின் செயல்நிலை sífils DSTT6356ňr (Consequences of action) si66"to மனிதனதும் சுயமதிப்பீட்டிற்கு களம் அமைத்துவிரும். தன்னடக்கம் எனும் நடத்தையின் ஆரம்பம் öruogio (Self-discipline) என்பதிலிருந்து உருவாக்கப்பட வேண்டியது. என்பதை கல்வியியலாளர்கள் வலியுறுத்துவர். இதை யாரும் மறுத்துவிட முடியாது. எனவே சுயகட்டுப்பாடு என்பது சுயஒழுங்கின் விளைவாக எழும் நன்னடத்தை என்றும் கூறலாம்.
ஒவ்வொரு மனிதனும் ஆரம்ப வளர்ச்சி நிலையில் தன்னைக் கட்டுப்படுத்தி வாழ்வது முடியாததாகின்றது. ஆனால் இளம் பருவ வளர்ச்சி நிலையிலிருந்து ஒவ்வொரு மனிதனும் தன் உணர்வுகளை மொத்தமாக அடக்கியாளப் பழகிக் கொள்கின்றான். தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் திறன், மனநிலை சமூகமயமாக்கலினூடாக அவனுக்கு கற்பிக்கப்படுகின்றது. தேவையானவை, அவசியமற்றவை என பகுத்தறியும் திறன், காலத்தின் தேவை, சூழலை உய்த்துணரும் மனநிலை, திட்டமிட்டுச் செயற்பரும் வாழ்க்கை முறைமை இவை அவனது தன்னடக்க
நடத்தையில் எப்பொழுதும் சமநிலையை (Equibrium) உருவாக்குகின்
தன்னடக்கத்தின் நிலைத்த தன்மை என்பது இரண்டு காரணிகளின் இடைவினையினூடாக நடைபெறலாம்.
1. uDørd (Mind)
2. அறிவு (Knowledge)
பலர் தாம் மனவுறுதி அற்றவர்கள் என்பதை காரணம் காட்டி தாம் சுயகட்டுப்பாடற்று இருப்பதை நியாயப்படுத்துவர். சிலர் தம் அறிவீனத்தைக் காரணம் காட்டி தன்னடக்கமின்மையை நியாயப்படுத்துவர். சாதாரணமாக சுயகட்டுப்பாடு மீறப்படுகின்ற சந்தர்ப்பங்களில் பல நிகழ்வுகள் வெளிப்படும். சுயகட்டுப்பாட்டை மீறவேண்டிய சந்தர்ப்பங்களில் ஒருவன் தன்னைத்தானே கட்டுப்படுத்துகின்றான், வேறொருவன் அழிவுச்

Page 11
செயல்நிலையில் அனைவரும் உய்த்துணர
“நான்’ தை , மாசி 2003
-
ി
e خسے • a e o م حص ه O pg|BI(h9S60TBIT6OT. டத்தை மாற்றங்கள் T60s D க்க முற்படுகின்றான். இந்த நடததை மாறறங்கள ஒவவொனறு
s=s( ھتے میےs = on o o കുഖபனது அறிவு, மனம்என்பவற்றின் இடைவினையின் விளைவாகவே
o O o
Dலப்பிற்கு  ി
பருகின்றன. எனவே இவை இரண்டும் தன்னடக்க நடத்தையின்
으 ‘‘ ہے۔ ۔ عہد --
ததன GOTITIT மறைபொருளாக fளககபபரு
uSuS S S S S S S SMSMS SAAAS A SA S MA AS . م. - "" D6T & L85556)
AARIA
T T to
- - - - - - - דה דרך ירד
! e
o
செயற்பாட்டிற்கு த --
காணப்படுகின்றன. ஆனால் அவற்றிற்கு
Tibori ம் தாழஊறகும வழக விடுகின்றது. மனித
. . - به
r செய்வதற்கு பதிலாக می_' ۔ ع۔ کہ اهلمے
YES T
னது சுதந்
துக்கள்
.
- .. --- لـ -
er
UIT gшт:
"
o No ra
. --------- a.aeء۔۔۔۔۔۔۔۔۔۔ م ۔۔۔ " می - ه از حسرا - - - - - ه . || || - س ه - - - - - ه எனவே தன்னடக்கம் என்பது ஒவ்வொரு மனிதனதும் வளர்ச்சிக்கான b. ܫ.ܝ.ܣ ,"" } --مليا டுச்
5.
(3
O. O. o 2. UN வாய்ப்புக்களை விரிவுபடுத்தும் நடத்தைய
o o O o
. , .
உலகசக்திகளையும்
' =
வண்டிய மனித இயற்கையையும்,
அட்க்கியாளும் போதுதான்" உலகை வென்ற,
உணர்வை வென்ற மாமனிதனாக மாறமுடியும்.
ALLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL 1 m n m
. விக் ne ருத்து குவி U6) a '\' :
 ി பங்குனி - சித்திரை 2003
கு
on a
. a ச்சிக்கு CT G ளாசசீககு அ LD
ச்சார வள ாசசககு அத
o பா / அரசியல் மைதியா
CMI arrir | ua
ി .
·
קוק "ר מקוון
= ി
o o o உங்கள் கருத்துக்களை 20.02.2003க்கு முன் அனுப்பி வையுங்கள்.
"VI Liv .ܙܝܕ
!
. ܬܐ *
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"நான்’ தை , மாசி 2003 Yያየነù”3 (ሾog}Ä!"
d e e #¢ o
முதியோரும் தன்னடக்கமும்
யாழோண்
மனித வாழ்வில் பொதுவாக முதியோரெனக் கருதப்படுபவர்கள்
குறிப்பிட்ட பருவங்களைத் தாண்டி அகவை முதிர்ச்சி அடைந்தவர்களே என்பது பொதுவான இயல்பு வழக்கு. நடைமுறை வழக்குமதுவே.
is 19
பிறப்புண்டேல் இறப்பும் உண்டென்பது நியதி. இந்த இறப்பானது எப்பருவத்திலும், எந்நேரத்திலும் வரக்கூடியதொன்று. ஆனால் மரணம் எவ்விதம் வந்து சேரும் என்பதும் கூற முடியாததொன்று. நோயினாலும் சரி; அல்லது விபத்தினாலும் g।ि ஏதோவொரு வடிவத்தில் மரணம் சம்பவிக்கலாம்.
ஆனால் மனிதனாகப் பிறந்தவரும் வேறு பிறவி எடுத்தாலும் சரி றிப்பிட்ட காலவரையறைக்குள்ளே தான் வாழ்ந்து மடியவேண்டி
ஏற்படலாம். நீண்ட ஆயுள் பெற்று வாழும் மனிதர்கள் ஒரு சிலரே இந்த வாய்ப்புக் கிடைப்பதும்
இருக்கமுடியும். எல்லோருக்கும் அருமையிலும் அருமை.
மனிதனைப் பொறுத்தமட்டில் நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்குப் பல காரணகாரியங்கள் உண்டு. அவர்கள் பிறந்த சூழல், பொருளாதார வளம், உணவுப்பழக்க வழக்கம், மனோநிலை, உடனிலை எனப் புறக்காரணிகள் பலவும் உண்டு. இவையாவும் எல்லோருக்கும், எந்நேரமும்
பொருத்தப்பாடாக வந்து அமையும் என்று சொல்வதற்கும் இல்லை.
முதுமையென்பது பழமை எனவும் பொருள் தரும். அதே நேரம் முதிர்வு நிலையையும் சுட்டி நிற்கின்றது. இந்த முதிர்வு நிலையை அகவை, கற்றறிவு, அனுபவ அறிவு (பட்ட அறிவு) என்பவற்றை உள்ளடக்கிய ஒரு பருவ நிலையாகும்.
இந்த வகையில் நோக்குமிடத்து முதியவர்களெனக் கணிப்பிடப்படுபவர்கள் பொதுவாக அகவை முதிர்ச்சி பெற்றவர்களாவர். இவர்கள் நீண்ட ஆயுள் பெற்றவர்களாகிய நிலையில் தமது வாழ்க்கை யில் பலவிதமான பிரச்சினைகளுக்கும் முகம் கொடுத்தவர்களாகவும்

Page 12
“நான்’ தை , மாசி 2003 20
இருப்பர். கல்வியறிவுடன் மட்டும் தங்கிவிடாது தொழில் ரீதியாகவும், சூழல் ரீதியாகவும், பலதரப்பட்ட அனுபவ முதிர்ச்சியுடையவர்களாகவும் காணப்படுவர்.
இந்த ரீதியில் எல்லா முதியவர்களையும் கணிப்பீடு செய்வது பொருந்தாது. ஏனெனில் அவர்களது குடும்பம், சமூகம், சமயம், மொழி, கலை, கலாசாரம், பண்பாடு எனப்பலதரப்பட்ட விழுமியங்களுக்கும் ஈடுகொடுத்தவர்களாகவும் இருக்கமுடியாது.
எனவே, சிலர் முதிர்வு நிலையில் வாழ்ந்து கெட்டவர்களாகத் தம்மைத் தாமே அழித்தவர்களாகவும் இருக்கலாம். பாரம்பரியமாக குடும்பவழக்கு,
சமூகவழக்கு என்பவற்றுக்கு ஈடுகொடுத்து வாழுகின்ற காலத்து தம் வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட வேண்டியவர்களாகவும் காணப்படுவர்.
ஆகவே, மனிதவாழ்வு பலவகைப்பட்ட 'அக, புறநிலைத் தாக்கங்களுக்கும், இயற்கை, பெளதீகவளம் என்பவற்றுக்கு இயைந்து செல்கின்ற தன்மையுடையவர்களே நீண்ட முதிர்ச்சியடையும் வரையில் வாழமுடிகின்றது. காரணம், அவர்களிடம் பொறுமை, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு, இறைநம்பிக்கை, தன்னம்பிக்கை எனபனவாகும.
இவற்றை அவன் தான் வாழ்வானானில் சரியான முறையில் கடைப்பிடிப்பதுடன், தனது மனதையும் ஒருநிலைப்படுத்த வாய்ப்பு ஏற்படுகின்றது. எனவே மனிதனிடம் தன்னடக்கம் என்ற ஆளுமை கைகூடிவருமாயின் அவன் நீண்ட ஆயுள்வரை வாழமுடிவதுடன் மற்றவர்களுக்கும் வாழ்ந்து காட்டுகின்ற பக்குவத்தை பெறமுடியும். எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும், அவற்றைத் துச்சமென எண்ணி அதற்குரிய எதிர்வை கண்டு தன்னை அதற்கு இணைய வைக்கின்றானோ, அவனே வெற்றியும் காண்பான்.
எனவே, முதியோரிடத்துத் தன்னடக்கம் என்பது எளிதில் வரமுடியாது. காரணம் அவர்கள் தாம் வாழ்ந்த, வாழ்கின்ற, வாழப்போகின்ற நிலைகளை கவனத்தில் கொள்ளவேண்டும். இதற்கு மிகவும் உறுதுணை தருவது வாழ்க்கையில் தான் கண்டும், கேட்டும், செயலிலும் பெற்ற

"நான்" தை-மாசி 20
அனுபவ அறிவாகும். கற்றறிவை விட, பட்ட அறிவு மூலம் சமூக இசைவாக்கத்துக்கும் ஈடுகொடுத்து வாழ்பவனாய் இருத்தல் வேண்டும்.
அடக்கம் என்ற பதம் பலபொருள் தந்து நிற்கும். அதாவது, பொறுமை, அமைதி, பணிவு, சமாதி, திணிவு என்று விரிவுபடும். நாம் இங்கு நோக்கும் அடக்கம் என்பது, மனிதனிடத்து அதுவும் முதியோரிடத்து காணும் தன்னடக்கமே.
தன்னடக்கம், ஐம்பொறிகளின் புலனுணர்வால் ஏற்படும் உணர்வலைகளை அடக்குவதாகும். ஏனெனில் புலன்வழிச் செல்லும்
e O గొ; I . . . . . . . . . .
உணர்வலைகள் கட்டுப்பாடின்றி കLേ போல் மோதிய வண்ணம்
s
இருக்கும். அதற்கு நிலையான கட்டுப்பாடு இரு காது. எனவேதான் புலன்வழிச் செல்லும் உணர்வுகளுக்கு எமது மனம் இணைந்து செல்வதால் அங்கு பலவிதமான இன்னல்களுக்கும் முகம் கொடுக்க வேண்டி வருகிறது, இதனால் அதன் பின் விளைவு மனவிரக்தியே. இந்த ." நிலைக்குக் காரணம் மனம் ஒருநிலைப்படாத தன்மையே.
மனக்கட்டுப்பாடு ஏற்படுமிடத்து தன்னடக்கம் தானாகவே வந்து கைகூடும். இதனால் அன்றோ மனித மனம் குரங்குக்கு ஒப்பிடப்படுகிறது. இதுவும் ஒரு அனுபவ அறிவாகும்.
ராத எத்தனைய்ோ கஷ்டங்களுக்கு ஆளாகின்றார்கள். ஏனெனில் கணவன் மனைவி உறவு, பிள்ளைகள் உறவு, பந்தபாச உறவு என்ற குடும்பப்பிணைப்பிலிருந்து விடுபடும் போது முதியோர்கள் பல மன உளைச்சல்களுக்கும்
ஆளஈகின்றார்கள்.
முதியோர் தமது பிற்கால வாழ்க்கையில் எதிர்
பிள்ளைகளின் பிரிவு, சமூகப்பிரிவு என்பனவும்
புலம்பெயர்வு, மனைவி கணவன் பிள்ளைகளி பொருளாதாரதடை எனப்பல காரணிகளை இ முதியோரின் பின்னிட்ட வி jů தருகின்றன.

Page 13
“நான்’ தை , மாசி 2003 22
எனவே, இவ்வகையான பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க முடியாத முதியவர்கள் பலர் தேடுவாரற்று, அனாதைகளாகின்றனர். இவர்களுக்குக் கைகொடுக்க சமூக அமைப்புக்கள் சில முன்வந்தாலும் அவை அவர்களுக்கு திருப்தி தருவதாகவும் இல்லை. எனவேதான், ஆச்சிரமம், முதியோரில்லம் என்று தமது பிற்கால வாழ்வுக்கு இடம்தேடி அலையவேண்டி ஏற்படுகின்றது.
முதியோரின் மனோநிலை பாதிப்பு ஏற்படாதிருக்க அவர்கள் இறைதி யானம் செய்வது, இறைபணி செய்வது என்று ஆன்மீக நெறிப்பட்டாலே அவர்களிடம் தன்னடக்கம் ஏற்பட வாய்ப்பு ஏற்படுவதுடன், பிற்கால வாழ்வில் நல்ல பேற்றை அடையமுடியும்.
முதியோரிடத்து தன்னடக்கம் ஏற்பட வேண்டுமாயின் ஆன்மீக வழிப்படுத்தலுக்குரிய நன்னூல்களை வாசித்தல், இறைத்தலங்களைத் தரிசித்தல், சமூகத்தின் நற்பணிகளில் தம்மை இணைத்து அதன் மூலம் மனஅமைதி பெறுதல் என்பன சிறந்த வழிமுறைகளாகும். தன்னடக்கம் பேண மனக்கட்டுப்பாடு அவசியம். எடுத்ததற்கெல்லாம் உணர்ச்சிவசப் படக்கூடாது. இதனால் மனத்தாக்கம், உளத்தாக்கம் ஏற்பட்டு நோயாளியாகியும் விடலாம். கோபத்தை அடக்குதல், பொறாமையைத் தவிர்த்தல், பேராசைப்படாமை என்பன மிகவும் அவசியம். “போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து” என்பது அனுபவ முதுமொழி. இதனைக் கொண்டு எமக்கு இறைவனால் தந்த வாழ்க்கையை மனத்திருப்தியுடன் ஏற்று வாழ்தலே எமது பிற்கால வயோதிப நிலையிலும் ஊன்றுகோலாய் நின்று வழித்துணை செய்யும் என்பதில் ஐயமில்லை.
நான் வாசக நண்பர்களுக்கும், அன்பர்களுக்கும்
புலர்ந்திருக்கும் புத்தாண்டு சோபனங்கள் உரித்தாகுக.
 

"நான்’ தை , மாசி 2003 23
உயர்வை அடைய
சிறுகதை :
அ.அமலராஜேஸ்வரி, நெடுந்தீவு நட்சத்திரத்தோழிகள் புடைசூழ நிலாப்பெண் வானில் உலாவந்தாள். இந்த அழகிய இயற்கையின் வர்னஜாலத்தினை வழமைபோல் ரசிக்க முடியாமல் ஜன்னலின் கம்பியைப் பற்றியபடி நின்றாள் லாவண்யா.
லாவண்யா ரகுநாத்-ஜானகி தம்பதிகளின் ஏகபுதல்வி போனமாதத் தோட 19 வயது முடிந்திருந்தது. கலகலப்பான சுபாவம் கொண்ட இவள் தற்போது கொம்பியூட்டர் படித்துக் கொண்டிருக்கிறாள். லாவண்யாவின் தந்தை ரகுநாத் வேலைதேடி வெளிநாடு போய் கிட்டத்தட்ட 5 வருடங்கள். அடிக்கடி T.P மூலம் இவர்களோடு தொடர்பு கொள்வார். தாய் ஜானகி ஆசிரிய்ராக கடமையாற்றி வருகிறார். இவளது தந்தைவழிப்பாட்டியான மரகதம் நீண்டகாலமாக இவர்களோடயே வசிக்கின்றார்.
லாவண்யாவுக்கு பாட்டியைப் பிடிப்பதே இல்லை. அவர் என்ன சொன்னாலும் அதற்கு எதிர்மாறாகத்தான் நடப்பாள். சின்னவயசில அன்பா இருந்தவள் வளர, வளர நாகரீகத்தில் ஊறி "இவைக்கு என்ன தெரியும். கிராமத்துக் கட்டுப்பெட்டி" என்று தனக்குள்ளே எண்ணிய வளாக நடந்தாள். தாய்க்கு முன்னிலையில் கெளரவமாக மதிப்பவள் மற்ற நேரங்களில் “நைன்ரி” என்று ஒதுக்கினாள். மரகதம்மாளும் பேத்தியின் அலட்சியத்தைத் தூக்கிப்பிடித்து மருமகளிடம் வத்தி வைப்பதில்லை. தான் உண்டு தன் கடமையுண்டு என்று இருப்பாள்.
இவ்வாறாக வளர்ந்து கொண்டிருந்த வாவண்யாவுக்கு அன்று காலையில் நடந்த சம்பவம் இவளின் மனதைப் பெரிதும் பாதித்து விட்டது. அதனால்தான் இயற்கையின் எழில் கோலத்தையே ரசிக்கமாட்டாமல் நின்றாள். மீண்டும் அந்த சம்பவத்தை நினைத்துப்பார்த்தாள். 3 நாட்கள் தாக்கும் ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு ஒன்றிற்கு தாய் ஜானகி நேற்றைய தினமே வெளியூர் சென்று விட்டார். இவளும் பாட்டியும் தான் வீட்டில். காலையில் நேரம்

Page 14
"நாண்" தை மாசி 2003 4
பிந்தி எழும்பிய லாவண்யா இன்று கிளாஸ் இல்லை என்பதை உணர்ந்து மீண்டும் கொஞ்சநேரம் தூங்கினாள். பின் தனக்குரிய வேலைகளை முடித்துவிட்டு சாப்பிட அமர்ந்தாள். அந்த நேரம் பார்த்து "லாவண்யா உனக்கு இன்டைக்கு லீவுதானே. நீ வீட்டப் பத்திரமாபார்த்துக் கொள்ளு. நான் ஒருக்கா கோயிலுக்குப் போய்ட்டு வாறன்’ என்றாள் மரகதம்பாள்.
பாட்டியை விழிகளாலே சுட்டெரித்த லாவண்யா "எனக்கு கிளாஸ் இல்லாட்டி நான் வெளிய போகக்கூடாதண்டு சட்டமா? நான் இந்தக்கால நவீனபெண் உங்கள மாதிரி கட்டுப்பெட்டி இல்ல” என்று பொரிந்துவிட்டு ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு வெளிய சென்று விட்டாள். லாவண்யா மீண்டும் வீட்டுக்கு வந்தபோது வீடு பூட்டியிருந்தது. தன்னிடம் இருந்த திறப்பால் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றாள். மேசைமீது சாப்பாடு மூடியிருந்தது. சாப்பிடப் பிடிக்காமல் சோபாமீது வந்தமர்ந்த போது முன் மேசையில் கடிதங்கள் கிடந்தன. ஒன்று அவளுக்கு, மற்றது தாய்க்கு வந்தது. மூன்றாவது கிடந்த கடிதத்தை தூக்கிப் பார்த்தபோது திகைத்துப் போனாள். காரணம் பிரித்துக் கிடந்ததினால் அல்ல. அது பாட்டியின் பெயருக்கு வந்திருந்ததே இவளின் திகைப்புக்கு காரணம். “பாட்டிக்கு யார் லெட்டர் போட்டிருப்பாங்க, ஒருவேளை அப்பாவோ? என்றபடி பிரிக்கப்பட்டிருந்த கடிதத்தை கடகடவென படிக்கத் தொடங்கினாள் படித்து முடித்தபோது மேலும் அதிர்ந்திருந்தாள்.
அந்த நேரம் பார்த்து பாட்டிக்காரி தன் நண்பியுடன் உள்ளே வந்தாள். பாட்டியின்ர கடிதத்தை படித்துவிட்ட குற்றவுணர்வில் கதையை மாத்துவதற்காக “பாட்டி நீங்க கதை எழுதுவீங்களா?” என்று கேட்டபோது “என்ன பிள்ள உன்ர பாட்டி எத்தன நாவல் எழுதி பரிசுவாங்கி இருக்கிறாள் தெரியுமா? நீ கதை படிச்சாத்தானே தெரியிறதுக்கு” என்று பாட்டியின் நண்பிக்காரி கூறினார். நான் “ரகுவல்லி” எழுதுற கதையைத்தான் படிக்கிறனான் என்று லாவண்யா முடிக்குமுன், “ஏண்டியம்மா அந்த ரகுவல்லி ஆரு தெரியுமா? உன்ர பாட்டியே தான்" உன்ர தாத்தாவின்ர பேரு ரகுவேல். பாட்டியின்ர முழுப்பேரு மரகதவல்லி, தாத்தாவின்ர முன்பேரையும் தன்ர பின்பேரையும் இணைச்சு "ரகுவல்லி” எண்ட பேரில கிட்டத்தட்ட 40

"நான்’ தை , மாசி 2003 25
வருசமா எழுதுறா. இவள் படிப்பில, விளையாட்டிலசுட வலுகெட்டிக் காரி. “பெட்டியைத் திறந்து பார் எத்தன சேட்டுப்பிக்கட்டுகள் இருக் கண்டு” என்று அடுக்கிக் கொண்டேபோன நண்பியை "பூரணி, என்ர பேத்தியும் எத்தின் கெட்டிக்காரி தெரியுமா? கனக்க வேணாம் நீ கூட நாடகங்களில சும்மா வெளுத்துக் கட்டுவியே" அதை எல்லாம் விட்டுட்டு என்னப் புகழுறியே என்றாள் மரகதம்மாள். “பிள்ள இவளட்ட இருக்கிற இந்த தன்னடக்கந்தான் இவளின்ர உயர்வுக்கே காரணம். ஒருநாளும் தன்னைப்பற்றி பீத்திக் கொள்ளவேமாட்டாள்” என்ற போதுதான் பாட்டியின்ர மகத்துவம் புரிபட “பாட்டி உங்களுக்கு எதுவுமே தெரியாதண்டு நினைச்சு, நான் எல்லாம் தெரிஞ்சவள் மாதிரி நடந்துகிட்டன், உங்கட மனசை வேற புண்படுத்தி இருக்கிறன். என்னை மன்னிச்சிடுங்க” என்ற பேத்தியை கட்டியனைத்து "நான் அதயெல்லாம் பெரிசுபடுத்திறல்ல நீ வா இப்ப சாப்பிட” என்றபடி சமையலறையை நோக்கி தன் நண்பியுடன் சென்றாள் பாட்டியம்மாள்.
நினைவுகளிலிருந்து விடுபட்ட லாவண்யா "நானும் என் பாட்டியைப்போல தன்னடக்கமுள்ளவளா வாழ்வன்’ என்று வாய்விட்டுக் கூறியபோது அவளது மனமோ சந்தோஷ கானம் பாடியது.
LSL LLLLL LL LLLLL S LL S LL LLL LLL LLLL LL LLL LLLL LL LLLLL S LLLLL LL LLL LLL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL S LLLLL LL LLL LLLLLL
சந்தா தாரர்களே !
O உங்கள் வருட சந்தாவைப் புதுப்பித்து உங்கள் 9 அங்கத்துவத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்.
O O
பொதுசன நூலகம் யாழ்ப்பாணம்
Milkwow

Page 15
"நான்’ தை , மாசி 2003 26 கருத்துக் குவியல் - 95
ஒருவனத இயற்கையான குணவியல்புகள் அவனது தன்னடக்க முயற்சியை பாதிக்காது
ஒருவனது இயற்கையான குணவியல்புகள் பற்றி ஆராய்வோமாயின்இ எவரும் இயற்கையான குணவியல்புகளுடன் பிறப்பதில்லை. ஒரு குழந்தை தாயின் கருவில் இருக்கும்போது, தாயினுடைய குணவியல்புகள், செயற்பாடுகள், உணர்வுகள், சிந்தனைகள் யாவும் அக்குழந்தையின் உடல், உள வளர்ச்சியிலே கணிசமான அளவு செல்வாக்கு செலுத்துகின்றன. அத்தோடு அக்குழந்தையின் சுற்றுப்புறமும், அது வாழும் சூழலும் அதன் குணவியல்புகளை நிர்ணயிக்கும் காரணிகளாக காணப்படுகின்றன, என்பதை பல உளவியலாளர்களும், சமூகவியலாளர்களும் தமது அனுபவங்களின் ஊடாக நிரூபித்துள்ளனர்.
“மனிதன் பிறக்கும்போது, ஒரு வெற்றுப் பலகையாகவே இருக்கின்றான். பின்னர்தான் மனதில் பதிவுகள் உருவாகின்றன’ என்கின்றார் அரிஸ்ரோட்டில்.
இவற்றின் அடிப்படையில் 'நாம் நோக்கும்போது, ஒருவன் குழந்தைப் பருவத்தில் தன் சூழலில் இருந்து பெற்றுக்கொள்ளும் குணவியல்புகளே காலம் செல்லச் செல்ல, ஆளுமை வளர வளர அவனுடைய இயற்கையான குணவியல்புகளாக மாறுகின்றன, அல்லது கருதப்படுகின்றன. உதாரணம் அன்பு, சகோதரத்துவம், மகிழ்ச்சி, கோபம், ஆசை, அவா, சுயநலம், கவலை, பகிர்ந்து வாழ்தல், அத்துடன் பல எதிர்பார்ப்புகள்.
இவை போன்ற, ஒருவனது இயற்கையான குணவியல்புகள் என்றும் அவனது தன்னடக்க முயற்சியை அல்லது தற்கட்டுப்பாட்டை பாதிக்காது. உதாரணமாக் அன்பு தற்கட்டுப்பாட்டை பாதிக்காது என்பதை நாம் உறுதிப்படுத்த முடியும், ஏனெனில் அன்பு பொறுமையுள்ளது, பரிவுள்ளது, உண்மையுள்ளது, விட்டுக்கொடுக் கும் மனம் உடையது. -

"நான்’ தை , மாசி 2003 2?
அதேவேளை, “கோபம்’ ஒருவனது இயற்கையான குணவியல்பு களில் ஒன்று. இது மனிதர்கள் யாவரிலும் காணப்படுகின்றது. ஆனால் நம்மில் பலர் இதனை கெட்டதாக, வேண்டப்படாத ஒன்றாக, u6)6,607LDITE கருதுகின்றோம்.
மனிதனுக்கு கோபம் இயற்கையானது அத்துடன் அவசிய மானதும் கூட. சில சந்தர்ப்பங்களில், உதாரணமாக, சமூகத்தில் அநீதி நடக்கின்றபோது, அதனை காண்பவருக்கு நிச்சயம் கோபம் வரவேண்டும். ஆனால், அக்கோபம் அழிவிற்கு இட்டுச் செல்லுதல் ஆகாது. அத்தோடு இக்கோபம் எந்நிலையிலும் தற்கட்டுப்பாட்டை பாதிக்காது. ஒருவன் கோபத்தை நெறிப்படுத்துகின்ற, அல்லது வழிப்படுத்துகின்ற முறையினை, கலையினை கற்றுக் கொள் வானாகின், தெரிந்து கொள்வானாயின், கைதேர்ந்து விடுவானாயின் எச்சந்தர்ப்பத்திலும் இது தன்னடக்க முயற்சியை பாதிக்காது.
எனவேஇ ஒருவனது இயற்கையான குணவியல்புகள் அவனது தன்னடக்கத்தை அல்லது தன்னடக்க முயற்சியை பாதிக்காது.
சகோ.ச.யேசுதாசன
'' ஒருவனத இயற்கையான குண்வியல்புகள் அவனத தன்னடக்க முயற்சியை பாதிக்கும்
மனிதனுக்குள்ளே காணப்படும் இயற்கையான குணவியல்புகள் அவனுடைய தன்னடக்கத்தை அல்லது தன்னடக்க முயற்சியை பாதிக்கும். முதலில், இங்கே தன்னடக்கம் என்ற பண்பு சார்புத தன்மை (Relativism) கொண்டமைந்த ஒன்றாகும். இது எவ்வாறெனில் ஒருவனுக்கு தன்னடக்கமாக கருதப்படுவது மற்றொரு வனுக்கு அவ்வாறாக புலப்படாது. ஒருவனுக்கு தன்னடக்கமாக புலப்படாதது மற்றொருவனுக்கு தன்னடக்கமாக புலப்படும். இதனாலே தான் உலகிலே வாழும் அனைத்து மனிதர்களும் ஒரே மாதிரியான தன்னடக்க பண்பைகொண்டு விளங்குவதில்லை. “பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்”.

Page 16
"நான்’ தை , மாசி 2003 s 28
இதற்கு என்ன காரணம் என்று ஆராய்ந்து பார்க்கின்ற பொழுது மனிதன் ஒவ்வொருவரிலும் காணப்படும் இயற்கையான குணவியல்பு (Temperance) ஆகும். ஒரு மனிதன் தாயின் கருவில் உருவாகும் போதே அவனுடைய மரபணுக் கட்டமைப்பிற்கேற்ப (Genetic code) அவனுடைய எதிர்காலத்தை முன்னறிவிக்க முடியும் என்று மரபணு அறிவியல் அறிஞர்கள் திட்டவட்டமாக கூறுகின்றார்கள். இந்த இயற்கையான குணவியல்புகள், மனிதன் தன்னைஇ தன் புலன்களை அடக்கி ஒரு இலக்கு நோக்கி செல்கின்ற பயணத்திலே பெரும் தடைக்கற்களாக அமைந்து விடுகின்றன. இயற்கையாகவே கோபம் அதிகம் கொள்ளும், இயற்கையாகவே சோம்பலாக, குறும்பாக, பதட்டமாக, கவலையாக வாழும் மனிதர்களும் இதற்கு உதாரணம். இவர்கள் எவ்வளவு தான் தங்கள் பலவீனங்களை அடக்கி, தற்கட்டுப்பாட்டை அடைய முயற்சி செய்தாலும் அம்முயற்சியிலே பெரும்பாலும் தோல்வியையே சந்திக்கின்றார்கள். ஆனால் இன்றும் சிலர் இயற்கையிலேயே சாந்தமுடையவர்களாக ஒழுங்குடையவர்க . ளாக, அமைதியானவர்களாக, அங்கலாய்ப்பு தன்மை குறைந்தவர்க ளாக காணப்படுகின்றனர். இயற்கையான 'குணவியல்புகள் ஒரு மனிதனுடைய தன்னடக்கத்தை பாதிப்பதனா லேயே கல்விச்சாலை கள், மற்றும் பிற நிறுவனங்களிலே முழுமனித உருவாக்கம் என்பது முக்கிய இடம் பெறுகின்றது. எல்லா மனிதர்களும் ஒரே தண்மையானவர்களாக இருந்தால், அங்கே தன்னடக்கத்தை வலியுறுத்த வேண்டிய அவசியமேயில்லை. அல்லாது போனால் ஒரு பாடசாலையிலே அல்லது சமூகத்திலே அல்லது நாட்டிலே ஏன் முழு உலகத்திலே அனைவரும் தன்னடக்கம் கொண்ட மகான்களாக மாறியிருப்பார்கள். உலகத்தில் தன்னடக்கத்தை பற்றியும் போதித் திருக்க மாட்டார்கள். எனவே எனது வாதமெல்லாம் மனிதனில் காணப்படும் இயற்கையான குணவியல்பு அவனுடைய தன்னடக்க முயற்சியை பாதிக்கும் என்பதே.
எஸ்.யூ.ஜெகான்

“நான்’ தை , மாசி 2003 29 உங்கள் சுய எண்ணக்கரு எதுவோ?
V.P.5GBajrgë:5uri சமூகவியல் சிறப்பக்கலை, யாழ்.பல்கலைக்கழகம்
வாழ்க்கையின் ஒவ்வொரு செயலுக்கும்-நடத்தைக்கும் காரணம் இருக்கவே செய்கின்றது. அந்த காரணம் பிறரினால் குழந்தைப் பருவத்தில் இருந்து உருவாக்கப்பட்டு இருக்கலாம், அல்லது எமது வாழ்க்கையில் ஏற்படுகின்ற வெற்றி தோல்வியினால் நாம் உருவாக்கி கொண்டதாக இருக்கலாம். இவற்றின் அடிப்படையிலேயே எமது சுய எண்ணக்கருவும் அமையப்பெறுகின்றது.
சுய எண்ணக்கரு என்பது, ஒருவர் தன்னைப்பற்றி தான் எதனை உருவாக்கிக் கொள்ளுகின்றாரோ அது தான். அது அவரினால் அவருக்கு அளிக்கப்பட்ட முழுமையான தீர்ப்பாகவும், கருதலாம். இவற்றின் அடிப்படையிலேயே அவரின் வெற்றி-தோல்விகள்நடத்தைகள் என்பனவெல்லாம் தீர்மானிக்கப்படுகின்றது. இதுவே ஒருவரின் தன்னடக்கத்திற்கு காரணமாகும்.
ஒருவரின் சுய எண்ணக்கரு நல்லதாக அமையப்பெறின், அவர் தன்னைத் தானே ஏற்றுக்கொண்டவராகவும், மற்றவரை ஏற்றுக் கொண்டு நல் உறவுகளை வளர்ப்பவராகவும், தமது ஆளுமைகளை தகுந்த முறையில் இனங்கண்டு, அவற்றை (Lp(Lp60)LDUT55 வெளிப்படுத்துகின்றவராகவும், காணப்படுவர். “ஒருவரின் சுய எண்ணக்கரு நன்றாக / திருப்தியாக / ஆரோக்கியமானதாக இருக்கு மாயின் அவர் எப்பொழுதும் நல்லவிதமாக செயற்படுவார்’ என்பார் குடும்ப உளவளத்துணையாளர் வண.பிதா S. J. இராஜநாயகம் அடிகளார். இவரின் இக்கருத்துக்கு ஏற்ப எமது சுய எண்ணக்கரு எப்பொழுதும் ஆரோக்கியமானதாக இருக்கவேண்டும்.
ஆனால் ஒருவரின் சுய எண்ணக்கரு மறையானதாக அமையப் பெறுமாயின் அவர்கள் தம்மை வெளிப்படுத்த மிகவும் சிரமப்படுவார் கள். படிப்பு-விளையாட்டு ஏனைய வேலைகளை பொறுப்பாய் செய்ய அக்கறையில்லாமல் இருப்பார்கள். இவர்கள் முழு வளர்ச்சியையும் எட்டமுடியாது. பாதுகாப்பற்ற உணர்வுடன் அன்பை பெற்றுக்கொள்ள வும், கொடுக்கவும் முடியாதவர்களாக, உறவினர்களை மதிக்காது, உறவை வளர்க்காது, தாழ்வுமனப்பான்மையுடன் கோபம், ஆணவம், பேராசை போன்றவற்றினால் தன்னடக்கம் இல்லாது, சமூகவிரோத செயல்களில் ஈடுபடுகின்றவர்களாக இருக்கின்றார்கள்.

Page 17
“நான்’ தை , மாசி 2003 v• 30
இவர்கள்தான் அளவுக்கு மீறி குடித்து, பெண்களை துன்புறுத்தி, சிறுவர் துஷ்பிரயோகம் செய்து, திருமணம் ஆகாமல் கற்பம் தரித்து, தன்னின உடல் உறவு கொண்டு, மற்றவர் பொருட்களை சிதைத்து, வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று கருதுகின்றார்கள்.
“ஒரு மனிதனுடைய எண்ணங்கள் எதை உருவாக்குகிறதோ அது தான் வாழ்க்கையாக அமைகின்றது” என்பார் மார்க்கஸ் அரேலியஸ்.
படிக்கின்ற ஒரு மாணவன் தனக்கு படிப்பு சுத்தமாய் வராது என்று சுய எண்ணக்கரு கொண்டிருப்பாரேயானால், அவரை எப்படித்தான் படிக்க தூண்டினாலும், படிக்க முயற்சி செய்தாலும் அவருக்கு படிப்பில் அக்கறை ஏற்படாது. இதனால் பரீட்சையை எதிர்நோக்க பயம்' ஏற்படுகின்றது. அதன் வெளிப்பாடாக வயிற்றுக்குத்து, வயிற்றோட்டம், தலைவலி, காய்ச்சல் போன்ற உடல் நோய்களும் ஏற்படுகின்றது.
சுய எண்ணக்கரு குறைந்து செல்வதினால் பலர் உளரீதியான கோளாறுகளும்,'அதன் பிரதிபலிப்பாக உடல் நோய்களும் ஏற்படுகின்றன. சமூகத்தில் இன்றைக்கு நடக்கின்ற பல தீமைகளுக்கு இந்த சுய எண்ணக்கரு குறைந்து செல்வதுதான் காரணம்.
தன்னடக்கத்திற்கு மனச்சலவை தேவை ;
* 'எனக்கு சோதினை எண்டாலும் படம் ஓடினால் பார்க்காமல் இருக்கேல்ாது” 'ዘ| It * 'அவர் ஒழுங்கா 69(5 வேலையும் சொல்லமாட்டார் எல்லாத்தையும் போட்டுக் குழப்பிக்கொண்டு இருப்பார்” ' * “என்னால படிக்கேலாமல் இருக்கு படிக்கிற நேரத்தில அவள் முகம் தான் தெரியுது”
* "நான் அப்பவும் சொன்னனான் கவனமாய் ... வேலை செய்யெண்டு, அவன் கேட்டால் தானே, ஏமாந்து கொண்டு வேலை செய்து, இப்ப இப்படியாய்ப் போனான்” * “எங்கையும் நிம்மதியாய் இருக்கேலாமல் இருக்குது வீட்டு பிரச்சினை மனத்தைப் போட்டு உருட்டுது'
இத்தகைய வார்த்தைகளை எமது நடைமுறை வாழ்க்கையில் நாம் பேசியும், மற்றவர்கள் பேசவும், கேட்டிருக்கின்றோம். இவையெல்லாம் தன்னடக்கம் இல்லாமையினால் ஏற்படுகின்ற நடத்தைக்கோலங்கள் ஆகும். எமது புலன்களில் பல்வேறுபட்ட எண்ணங்கள், சிந்தனைகள்

“நான்’ தை மாசி 2003 - 器懿
ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நாளும் வந்து செல்லும், இவற்றை தவிர்க்க முடியாது. ஆனால் அவற்றை நல்லவிதமாக சலவை செய்ய வேண்டியது நமது கடமை ஆகும்.
கருத்தரங்கிலோ அல்லது பாடவகுப்பிலோ ஒருவர் தன்னடக்கம் இல்லாது இருப்பின் அவர் பகிடி, சேஷ்டை செய்கின்றவராகவும், மற்றவர்களை தன்வசம் இழுக்க சிரிப்புக்காட்டுகின்றவராகவும், கல்லெறிபவராகவும், றொக்கெட் விடுபவராகவும் இருக்கின்றார். இதனால் முழுதளவிலான பாதிப்பு ஏற்படுகின்றது. இந்த நேரத்தில் கருத்தரங்கு நடத்துபவரோ அல்லது ஆசிரியரோ தன்னடக்கத்தை இழந்துபோக தூண்டுகின்றது. எனினும் அவர்கள் தமது இலக்கில் இருந்து விலகாதவர்களாக இருக்கவேண்டும்.
வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவுக்கும் தன்னடக்கம் என்பது இன்றியமையாதது, படிக்கின்ற மாணவன், விமானி, கப்பலோட்டி, வாகனசாரதி, இயந்திரங்களை இயக்குபவர் போன்ற எல்லாத்துறை யிலும் இருக்கின்றவர்கள் தமது இலக்கை அடைய தன்னடக்கமாக செயற்படவேண்டும். இன்று எமது சமூகத்தில் நடைபெறுகின்ற அநேக விபத்துக்களுக்கும்-உடல் ஊனங்களுக்கும்-சொத்திழப்புக்களுக்கும் முக்கிய காரணமாக இருப்பது தன்னடக்கம் இன்மையே ஆகும்.
மனிதனுடைய ஆளுமையை டாக்டர். பிராய்டின் கருத்துப்படி மூன்றாகப் பகுக்கப்படுகின்றது.
1 . இட் (Id) இன்பக் கொள்கை 2 - ஈகோ (Egd) . உண்மைக் கொள்கை 3 - சூப்பர் ஈகோ - (Super ego) - நீதிக் கொள்கை
இந்த மூன்றும் சமநிலையில் இயங்கவேண்டும். அப்போதுதான் மனிதன் எந்தவிதமான மனச்சிக்கலும் இல்லாமல் வாழலாம். "இட்' தான் நினைத்ததை உடனே செய்யத் தூண்டி சீர்கேட்டை விளைவிக்கும். "சூப்பர் ஈகோ மனச்சான்று போன்றது. தான் செய்கின்ற தவறுக்கு தண்டனை கொடுக்கும். இதுவும் அளவுக்கு அதிகமானால் மனநோயாக மாறும். F5 இரண்டையும் சமநிலைப்படுத்துகின்றது. எனவே இந்த மூன்றும் சமநிலையாக இயங்க வைக்க மனதில் நல்ல சுய எண்ணக்கருவை அமைத்து தன்னடக்கமாக வாழவேண்டும்.
நமது புலன்களை கட்டுப்படுத்த முடியும் என்பதை உணர்ந்து கொள்ளும் நமது நிலைமைதான் மிக, மிக முக்கியமானது. புலன்களின் ஊடாக வருகின்ற அத்தனை சிந்தனைகளுக்கும் நாம்

Page 18
"நான்’ தை , மாசி 2003 32
பொறுப்பாளிகள். எதிர்மறையான சிந்தனைகளை உடன்மறை சிந்தனைகளாக மாற்ற எமக்கு தெரிந்திருக்க வேண்டும்.
ஆரம்பகால வரலாற்றில் சித்தர்கள், துறவிகள், முனிவர்கள், சாதுக்கள் போன்ற ஆன்மீகவாதிகள் காடுகளிலும்-வனாந்தரங்களிலும் சென்று இயற்கையுடன் ஒன்றித்து, இயற்கை உணவுகளை உண்டு உடல்-உள ஆரோக்கியமாக நீண்ட காலமாக வாழ்ந்தார்கள். இதற்கு காரணம் தன்னடக்கமாக, உளத்தூய்மையாக வாழ்ந்தது ஆகும். இதனால் உயர் தத்துவங்களையும், ஆன்மீக சிந்தனை களையும் இன்றும். நாம் படித்து பயன்பெறுமளவுக்கு தந்திருக்கின்றார்
56.
இதே மாதிரி நாம் துறவறம் பூண்டு வனாந்தரங்களிலும்-காடுகளிலும் சென்று தன்னடக்கமாக வாழவேண்டும் என்பதல்ல, மாறாக நாம் இருக்கும், வாழும் சூழலில் தன்னடக்கமாக வாழ, பழகவேண்டும். அதற்கு சில வழிமுறைகளாக பின்வருவனவற்றை குறிப்பிடலாம்.
9 தியானம்
இயற்கையை இரசித்தல்
உடல் பயிற்சி
திட்டமிட்டு வேலைகளை செய்தல் ஆன்மீக காரியங்களில் ஈடுபடுதல் நல்ல வார்த்தைகளை பேசுதல் எதிர்மறையான சிந்தனைகளை உடன்மறை சிந்தனைகளாக
தினமும் நல்ல சிந்தனைகளை உருவாக்குதல்
()
* மனதில் இருக்கின்ற சிறிய குழப்பத்தையும் மற்றவரிடம் சொல்லி
ஆறுதல் பெறவேண்டும்
6 எதிர்மறையான படங்கள்-கதைகளை பார்த்து-வாசிக்காது
இருத்தல்
0. மற்றவர் சொல்லும் எதிர்மறையான கருத்துக்களை மனதில்
சுமந்துகொண்டு திரியாது உடனே மறந்து போகவேண்டும் * ஆலயங்கள் சென்று செபித்தல்
இவ்வாறு செய்வதன் மூலம் övU_1 எண்ணக்கரு நன்றாக உருவாக்கப்படும் அதுவே தன்னடக்கத்தின் வெளிப்பாடாக அமையும்.
ΟOO

33
நான்’ தை , மாசி 2003 தன்னடக்கமே வாழ்வின் வெற்றி
திருமதிநொ.யூதர்மரட்ணம் யா/புனித சாள்ஸ்.ம.வி
“அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்துவிடும்’
என்பது வள்ளுவர் வாக்கு. அடக்கம் மனிதனை வாழவைக்கும். அடங்காமை இன்பமான வாழ்க்கையை அழித்துவிடும்.
அடக்கம், அடக்குதல் இரண்டும் எதிர்மாறான பொருள் கொண்டவை. தன்னைத் தானே அடக்கிக் கொள்ளுதல் தன்னடக்கம் எனவும், பிறர் தமது செல்வாக்கினால் மற்றவர்களை அடக்குதல் கட்டுப்படுத்தல் எனவும் அழைக்கப்படுகின்றது. இவை இரண்டினுள்ளும் வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சி, அமைதி, முன்னேற்றம் போன்றவற்றைத் தருவது தன்னடக்கமே. மாறாக வெளிஅழுத்தங்கள், நெருக்கீடுகள், செல்வாக்குகள், திணிப்புகள் போன்றவற்றால் உருவாக்கப்படும் கட்டுப்பாடுகள் வாழ்க்கையில் குழப்பத்தையும், உளநெருக்கீட்டையும் ஏற்படுத்தி வாழ்க்கையை நரகமாக்கிவிடும்.
தனக்குத் தானே வகுத்துக் கொள்கின்ற நெறிமுறைகளே தன்னடக்க மாகும். மனம், உடல் இரண்டும் கட்டுப்பாட்டை மீறுமாயின் விளைவது தீமையே.
“ஒருமையுள் ஆமை போல் ஐந்தடங்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்புடைத்து”
என்பது மனித வாழ்க்கையை நெறிப்படுத்தும் திருக்குறள் வரிகளாகும். தனது உறுப்புக்களை ஆமை எவ்வாறு தனது ஒட்டினுள் இழுத்துக்கொண்டு தீமையில் இருந்து தன்னைப் பாதுகாக்கின்றதோ, அதேபோன்று மனிதனும் ஐம்புலன்களை அடக்குவதனால் எதிர்கொள்ளப்படும் சவால்கள், பிரச்சினைகள் போன்றவற்றை தவிர்க்கமுடியும். சமுதாயத்தின் பார்வையில் பெண்களுக்கே தன்னடக்கம் அதிகம் தேவை என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆண், பெண் இருபாலாரின் கூட்டுறவால் கட்டியெழுப்பப்படும் வாழ்வு சீரானதாக அமைய

Page 19
"நான்’ தை , மாசி 2003 34
வேண்டுமாயின் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் தன்னடக் கம் அவசியம்.
மனிதரிடம் காணப்படுகின்ற வேட்கைகள், ஆசைகள், அவாக்கள், அங்கலாய்ப்புக்கள் என்பன வேகம் மிகுந்தவை. இந்த வேகம் அதிகரிக்க, கூடவே வேதனைகளும் அதிகரிக்கின்றன. குதிரையை அடக்குவதற்கு எவ்வாறு கடிவாளம் அவசியமோ, அவ்வாறே மனிதன் பிரச்சினைகளில் இருந்து விடுபடுவதற்கு தன்னடக்கம் அவசியம். ஐம்புலன்களையும் அடக்கும் ஆற்றல் மனதிற்கே உண்டு. தன்னடக்கம் ஓர் ஆக்க சக்தியாகும். ஆதலால் உடல், சிந்தனை, பேச்சு ஆகியவற்றிலான தன்னடக்கம் மனித வாழ்வில் வெற்றியையே தரும். ܢ
உடல் அளவில் தன்னடக்கம் மிக அவசியமாகும். தான் விரும்பிய பொருளை அடைய முயல்வது, தீய இச்சைகளில் நாட்டம் செலுத்துவது, உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் உணவுகளை அதிகளவில் உட்கொள்ளுவது, சோம்பல் வாழ்க்கைக்கு அடிமைப்படு வது, மற்றவர் மனதைப் புண்படுத்தும் பேச்சுக்களைப் பேசுவது, மனதைக் கட்டுக்கடங்காமல் அலைபாய விடுவது போன்ற பல்வேறு செயற்பாடுகளால் தனக்கும், பிறருக்கும் தீங்கு ஏற்படுமேயன்றி நன்மை ஏற்படாது. நீரிழிவு, இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்படும்போது உணவுகளைக் கட்டுப்படுத்தி பூரணகுணம் அடைவதில்லையா? இதே போன்றுதான் ஏனைய விடயங்களிலும் தன்னடக்கத்துடன் செயற்படும்போது நன்மையே பிறக்கும்.
சிறுவயதில் இருந்தே பிள்ளைகள் தன்னடக்கம் உடையவர்களாக வளர்க்கப்பட வேண்டும். “தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை என்பார்கள். சிறுவயதில் ஏற்படும் அனுபவங்கள் வாழ்க்கையின் இறுதி எல்லைவரை நீடிக்கும். அதனால் பிள்ளை வாழும் குடும்பச்சூழல், பாடசாலைச்சூழல் என்பன பிள்ளைகளில் தன்னடக் கத்தை வளர்ப்பனவாக அமைதல் வேண்டும். அளவுக்கு அதிகமான கட்டுப்பாடு பிள்ளை நெறி பிறழ்வதற்குக் காரணமாக அமைந்து விடலாம். ஆதலால் கட்டுப்பாடுகளை விதிக்காமல், பிள்ளை சுயமான கட்டுப்பாட்டுடன், தன்னடக்கத்துடன் வாழ்வதற்கான ஆற்றல்களை அவர்களில் வளர்ப்பது நன்று. அதற்கான சூழலை பெற்றோர், ஆசிரியர், பெரியோர் உருவாக்கிக் கொடுத்தல் அவசியம்."
மாணவர்கள் தாமாகவே தன்னடக்கத்துடன் செயற்படும்போது வாழ்வில் முன்னேற்றம் காணமுடியும். மாணவர்கள் பின்பற்றக்கூடிய சில வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

"நான்’ தை , மாசி 2003 35
X>>
S.
மற்றவர்களுடன் பேச முற்படும்போது அவர்களின் மனதைத் துன்புறுத்தாத வகையில் முன்யோசித்துப் பேசுதல் நன்று. பெற்றோர் புத்திமதிகளைக் கூறும்போது அவை நன்மைக்கே
சொல்லப்படுகின்றன என்பதை உணர்ந்து அவற்றிற்கு செவிமடுத்தல். gust 8 திரைப்படங்களைப் பார்ப்பதற்கு உள்மனம்
தூண்டும்போது மனதைக் கட்டுப்படுத்தி அச்சந்தர்ப்பங்களைத் தவிர்த்தல். அளவுக்கு அதிகமாக நித்திரை செய்து சோம்பல் தனத்திற்கு அடிமைப்படாது, சோம்பல் ஏற்படும்போது உடலை அசைத்து பயன்தரும் வேலைகளைச் செய்யலாம். (உ+ம் - வீட்டுத்தோட்டம் செய்வதன் மூலம் பயன் உண்டு) வீட்டில் படிக்கும்போது மனதைப் புறச்சூழல்களில் அலைபாய விடாது, மனக்கட்டுப்பாட்டுடன் குறித்த நேரம்வரை படிக்க வேண்டும் என்ற தீர்மானத்தைக் கடைப்பிடித்தல். கோபம், வெறுப்பு போன்ற தீய மனளழுச்சிகள் ஏற்படும்போது அவற்றைக் கட்டுப்படுத்தி, அந்த நேரத்தில் சித்திரம் வரையலாம், அல்லது நீதிநூல்களை வாசிக்கலாம், அல்லது நல்ல இசையை இரசிக்கலாம். - ی வகுப்பறையில் மாணவர்களுக்கிடையில் கருத்து முரண்பாடு ஏற்படும்போது தேவையற்ற வார்த்தைப் பிரயோகங்களை தவிர்த்து பொறுமையைக் கடைப்பிடித்தல்,
வகுப்பறையில் , ஆசிரியர் எது சரி, எது தவறு எனச் சுட்டிக்.
காட்டும்போது அவற்றை ஏற்றுக்கொள்ளுதல் சகநண்பர்கள் உங்களைத் தவறான செயல்களில் ஈடுபடுத்த முனையும்போது அவர்களுக்குச் சார்பாக செயற்படாமல் அவர்களை விட்டு விலகுதல். உங்கள் திறமைகள், ஆற்றல்களை மற்றவர்கள் புகழும்போது அதனை தன்னடக்கத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். மாறாக எமக்கு மட்டும்தான் முடியும் என்று பெருமிதம் கொள்வது, சகமாணவர்களை மட்டந்தட்டுவது தவிர்க்கப்படுதல் வேண்டும்.
மேற்கூறப்பட்ட வகையில் தன்னடக்கத்துடன் செயற்படும்பொழுது பிரச்சினைகள், உளநெருக்கீடுகள், தீமைகள் என்பனவும் தவிர்க்கப்படுகின்றன.
; * ٭۔ ۔۔۔۔۔۔۔۔۔۔۔ --محم۔۔۔۔۔
ଗୈ rang୫ଈsr நூலகம்
frrri þúyrsverið s
iriങ്ങ്

Page 20
"நான்’ தை , மாசி 2003 36
தன்னடக்கம் நோக்கி
கிருபா மனிதனது வாழ்வு நிறைவை நோக்கிய ஓர் பயணமாகும். உணர்வுகள் என்னும் வாகனமேறி பயணிகளாய் நாம் சவாரி செய்யும் போது எத்தனையோ ஏற்றத்தாழ்வுகள், இன்பதுன்பங்கள் என நேரானதும் கோணலானதுமானவைகள் எம்மை குறுக்கிடும் போது தன்னடக்கம் என்னும் கடிவாளத்தை நாம் பிடிப்பது அவசியமாகின்றது. இக் கடிவாளமானது எமது வளர்ச்சிக்கு சாதகமானதாகவும் அதே நேரத்தில் பாதகமாகவும் அமையலாம். எமது உணர்வின் துள்ளலை தன்னகத்தே கட்டுப்படுத்தக்கூடிய திறன் இந்த தன்னடக்கத்திற்கு உண்டு. ஒரு நிகழ்வின் முடிவு எமக்கு சாதகமாக நாம் எதிர்பார்த்ததன்படி அமையுமாயின், எமது உணர்வு மிகவும் மகிழ்ச்சியானதாக மகிழ்வின் உச்ச வெளிப்பாட்டை காட்டுவதாக அமையலாம். உதாரணமாக நிகழ்வை திரும்பத் திரும்ப கூறுதல், விபரித்தல், கத்துதல், பெரிதாக சிரித்து தன்னைப் புகழ்தல் போன்ற செயற்பாடுகளை வெளியரங்கமாகவே செய்கின்றார்.
இதேபோல் முடிவு போதகமாக அமையின் தனது உள வேதனையை வெளிக்காட்டும் விதமான அழுதல், சண்டையிடல், குறைகூறல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்.
இவ்வாறான செயற்பாடுகளின் உணர்ச்சிக் கொந்தளிப்பை கடிவாளமிட்டு நிறுத்தி தன்னை சிந்திக்கத் தூண்டுவதும், தனது நிலைக்கு கொணருவதும் இத் தன்னடக்கத்தின் சிறப்பாகும். இதனது செயற்பாடு வெளியே தெரியாவிடினும் மனதினுள்ளே ஆழமாக வேலை செய்யும் ஒன்றாகும்.
நிகழ்வை சீர்தூக்கிப் பார்க்கவும், தன் திறமைகளை இனங்காணவும், சிறப்புக்களை சிந்திக்கவும், தவறுகளை ஆராயவும், அடுத்த நிகழ்விற்கான அடித்தளமிடவும், தன்னை ஏற்றுக்கொள்ளவும், முழு மனிதனாக வளரவும் இது உதவுகின்றது. ". எனவே இத் தன்னடக்கம்' தனக்குள்ளே ஒடுங்குதல் என்றில்லாது தனக்குள்ளே ஆராய்தல் எனப் பொருள்படும். அத்துடன் தன்னை அறியவும், தன்னை வளர்த்துக் கொள்ளவும் உதவும். இதற்கென நாம் நேரம் செலவிடுவதோடு எமது உணர்வு நிலையை நாம் அறிந்து கொள்ளவும் பழகிக்கொள்ளல் வேண்டும். அநேகமான நேரங்களில் எமது உணர்வுகள் எப்படியுள்ளதென்பதையே நாம் இனங்காணத் தவறிவிடுகின்றோம். எமது உணர்வுகளை இனங்கண்டால் மட்டுமே அவைகளை கையாளக் கூடியவர்களாகின்றோம்.
எனவே உணர்வு அனுபவமாகிய தன்னடக்கத்தினூடாக எமது வளர்ச்சிப்படிகள் உயர்த்தி நிறைவுடைய மனிதனாக உயர முயல்வோமாக.

"நான்’ தை , மாசி 2003 3?
R தனனடககம - ஒரு கண்ணோட்டம்
செ.ரஞ்சன் செல்வகுமார்,
நெளுக்குளம், வவுனியா.
தன்னடக்கம் (Self - control) என்பது ஒவ்வொரு மனிதனிடமும் இருக்க வேண்டிய ஓர் அரிய பண்பென்றால் அது மிகையல்ல. மிருகங்கள், பறவைகள் முதலிய ஜீவராசிகள் யாவும் முழுக்க முழுக்க இயல்பூக்கத்தின் (lnstinct) அடிப்படையிலேயே தமது வாழ்க்கையை நடாத்துகின்றன. அவற்றிடம் தன்னடக்கம் என்பது கிடையாது; அது அவற்றிற்கு அவசியமும் இல்லை. ஏனெனில், அவை பகுத்து ஆராய்ந்து முடிவுக்கு வரும் ஆறாம் அறிவு (Intellect) அற்றவை. உண்ணுவதும் உறங்குவதும் மட்டுமே அவற்றின் பிரதான வாழ்க்கைத் தத்துவம்.
ஆனால், மனிதனோ மிருகம் போல் உண்ணுவதும் உறங்குவதும் தான் வாழ்க்கை என இருக்க முடியாது. அவன் எண்ணவும் இரங்கவும் வேண்டியவன் ஆவான். அவ்வாறு செய்யாவிட்டால் மனிதனுக்கும் மிருகத்துக்கும் இடையே வித்தியாசம் என்பது இல்லாது போய்விடும் அன்றோ? ஆயினும், மனிதனிடமும் மிருகங்களிடையே காணப்படுவது போன்ற இயல்பூக்கங்கள் யாவும் அமைந்துள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அவ் ஊக்கங்களையும் தேவைகளையும் (Instincts & Needs) பூர்த்தி செய்வது ஒன்றையே நோக்காகக் கொண்டு மனிதன் இயங்க ஆரம்பிக்கும்போது அவனிடமுள்ள மனிதம் செத்துவிடுகிறது. அவன் மனித நேயத்தை மறக்கிறான். விளைவாக, பிறரையும் இவ் உலகையும் ஏன், தன்னைத் தானேயும் அழிக்க முற்படுகிறான். இந்நிலையைத் தவிர்க்க வேண்டுமாயின் அவன் தன்னடக்கத்தை (Self - control) தனது தாரக மந்திரமாகக் கொள்வதே சிறந்த
வழியாகும். இதைத் தான் சமயங்களும் தத்துவங்களும் தம் போதனைகளில் ஊடசரடாகக் கொண்டுள்ளன.
தன்னடக்கம் என்னும் பதம் மிகவும் ஆழமான கருத்துள்ள ஒன்றாகும். இது ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விளக்கங்களைத் தரக்கூடிய ஒரு எண்ணக்கரு (Concept) என்றும் கூறலாம். ஆயினும், இரத்தினச் சுருக்கமாக, இப் பதம் உரைப்பது போன்று தன்னை அடக்குவதே (Controlling one’s Self) தன்னடக்கம் எனலாம். தன்னை ஒருவர் ஏன் அடக்க வேண்டும்? அவ்வாறு

Page 21
“நான்’ தை. மாசி 2003 3S அடக்கவேண்டிய நிலை ஏன் ஏற்படுகிறது? எவ்வெவ் விடயங்களில் ஒருவர் தன்னை அடக்க வேண்டும்? தன்னை அடக்காவிட்டால் ஏற்படக்கூடிய விளைவுகள் யாவை? தன்னை அடக்க வழி என்ன? - போன்ற இன்னோரன்ன வினாக்கள் எல்லோர் மனதிலும் எழுவது இயற்கை.
ஒவ்வொரு மனிதனுக்கும் இயல்பாயமைந்த ஊக்கங்களும் தேவைகளும் உண்டு என்கிறது உளவியல். இவற்றை ஒரு சாரார் மனிதனது ஆசை (lust) என்றும் மறுசாரார் அவனது பலவீனம் (Weakness) என்றும் விளக்குவர். ஆசைகள் அளவுமீறி, தீங்கு பயக்கும் நிலைக்கு ஒருவரைக் கொண்டுவரும் நிலையில் அது அவரது பலவீனம் ஆகிறது என்றும் கூறமுடியும். ஆகவே, ஆக்கம் என்னும் திசையில் மனிதவாழ்வு என்னும் கப்பல் செலுத்தப்பட வேண்டுமாயின், தன்னடக்கம்' என்னும் திசைகாட்டியின் உதவி அதற்கு இன்றியமையாதது என்பது 'புலனாகும்.
தன்னடக்கம் மனிதனுக்குப் பல விடயங்களில் தேவையாக உள்ளது. சிலருக்கு நாவடக்கத்தின் தேவை அதிகமாக இருக்கும். ஏனெனில், அத்தகையோர் எப்போதும் பிறரைக் குற்றம், குறை கூறுவதும் இழிவாகப் பேசுவதுமாக இருப்பர். அதேவேளை, தம்மைப்பற்றி எப்போதும் பெருமையாக - புகழ்ந்து தள்ளிக்கொண்டே இருப்பர். புகழுவர் என்று கூறினால் மிகவும் பொருத்தமாக இருக்கும்; அரைக்கொத்து அரிசி அன்னதானம் செய்துவிட்டு, விடிய விடிய மேளதாளம் நடத்தி அதைப் பறைசாற்றுபவர்கள் தான் இவர்கள், குறை குடம் ததும்பும், நிறை குடம் ததும்பாது என்ற உண்மையை இவர்கள் அறியார் கொலைகாரன் ஒருதடவைதான் கொல்வான். ஆனால், நாவடக்கமற்றோர் தமது வன்சொற்களால் பிறரை ஆயிரம் தடவை கொன்றுவிடுவர். எலும்பில்லாத நாக்கால் வரம்பில்லாமல் பேசுவதை விடுத்து, இத்தகையோர் தமது நாவுக்குப் பூட்டுப் போடுவது நல்லது; வேறு சிலரோவென்றால், சிறிது கற்றுவிட்டு, தமது பெயர்களின் பின்னால் ஓரிரு ஆங்கில எழுத்துக்களைப் போட்டுக்கொண்டு தம்மைப் பெரிய மேதாவிகள் எனக் கருதிக்கொள்வர். இதனால் இவர்களுக்குக் கர்வம் தலைக்கு ஏறிவிடும். தலைக்கணத்தினால் யாரையும் மதித்து நடக்கமாட்டார்கள். இவர்கள் பேசுவது, நடந்துகொள்வது எல்லாமே பிறரைப் புண்படுத்துவதாகவே இருக்கும். ஆனால், அளவுக்கு மீறுவது நன்றன்று. கற்று, உணர்ந்து அடங்குவது தான் சிறப்பு என்பதை இத்தகையோர் உணர்ந்தால் நல்லது. அடக்கம் ஆயிரம் பொன் பெறும் என்பர் ஆன்றோர்.

"நான்’ தை , மாசி 2003 39
நாவடக்கம் பற்றிப் பேசும்போது நாம் 6TLDg உணவுப் பழக்கவழக்கங்களைக் கட்டுப்படுத்துவது பற்றியும் இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும். ஏனெனில், பேசுவதற்கு உதவும் அதே நாக்குத் தான் எமக்கு உண்வின் சுவையையும் அறியத் தரும் உறுப்பாக அமைந்துள்ளது. பலர், தமது நாவுக்கு அடிமையாகி, உண்பதற்காகவே இவ் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். உணவுப் பழக்கம் பற்றி ஓர் அறிஞர் பின்வருமாறு கூறியுள்ளார்: “ஒரு நாளைக்கு - ஒரு முறை உண்பவன் யோகி; இரு முறை உண்பவன் போகி; மும்முறை உண்பவன் ரோகி, நான்கு முறை உண்பவன் துரோகி;’ எமது நாவைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இக் கூற்று நன்கு விளக்குகிறது. பெருந் தீனிக்காரனாக - சாப்பாட்டு இராமனாக - மது, போதைவஸ்து முதலியவற்றுக்கு அடிமையானவனாக - புகை பிடிப்பவராக இருப்பதன் மூலம் பல்வேறு கொடிய வியாதிகளுக்கு ஆளாகி நமது ஆயுளைக் குறைத்துக் கொள்வதுடன் பிறரது உணவையும் நாம் திருடி உண்கிறோம்; நேரடியாகவோ மறைமுகமாகவோ பிறரையும் துன்புறுத்துகிறோம் என்ற உண்மையை உணர்ந்து அனைவரும் தமது நாவைக் கட்டுப்படுத்தினால் நன்மை விளையும்.
நாவடக்கம் என்பது ஒரு விதத்தில் புலனடக்கமே. ஆனால் நாவு என்பது மனிதனின் ஐந்து புலனங்கங்களில் சுவையை அறிய உதவும் அங்கமாகும். மிகுதி நான்கு பொறிகளும் கூடக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட வேண்டியவையே. அந்தவகையில், மனிதனின் ஐம் புலனங்கங்களான மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்தும் 'மனிதனின் பூரண கட்டுப்பாட்டில் வைக்கப்பட வேண்டியவை என்பதில் இரு கருத்துக்கட்கு இடமே இல்லை. ஏனெனில், அவை கட்டுப்பாட்டை மீறுகிறபோது, அணைகடந்த வெள்ளம் போல் அவை பல அழிவுகளை ஏற்படுத்திவிடுகின்றன. எடுத்துக்காட்டாக, நாம் கண்ணால் காணும் விடயங்களும், காதால் கேட்கும் விடயங்களும், வாயால் பேசும் விடயங்களும் எம்மை வெகுவாகப் பாதிக்கின்றன. இதனால் தான் மகாத்மா காந்தி தமது Littu 600D (D60) gulo) மூன்று குரங்கு பொம்மைகளை வைத்திருந்தார். காரணம் அவை அவருக்கு எப்போதும் “தீயதைப் பாராதே, தீயதைக் கேளாதே; தீயதைப் பேசாதே’ என்று போதிக்கும் வகையில் பாவனை செய்வதாய் அமைக்கப்பட்டிருந்தனவாம்.'
நம்மில் பலரிடம் ஒப்பிட்டுக் கேட்கும் பழக்கம் (Eavesdropping) உண்டு. பிறர் பேசுவதை அவர்கள் அறியாது கேட்டுவிட்டு, அவற்றைப் பலரும் அறியக் கூறித்திரிவதில் அவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. பிறருடைய இரகசியங்களைத் தேவையற்ற விதத்தில்

Page 22
"நான்’ தை , மாசி 2003 40
பகிரங்கப்படுத்துவதால் சம்பந்தப்பட்டோர் அனுபவிக்கும் தீங்கைப் பற்றி இவர்கள் கவலைப்படுவதில்லை. இத்தகையவரின் மூன்று அங்குல நாக்கு ஆறு அடி உயரமான எத்தனை மனிதர்களைக் கொல்கிறது; எலும்பில்லாத நாக்கால் எத்தனை பேருடைய எலும்புகள் நொறுக்கப்படுகின்றன; இவர்கள் தமது நா வன்மையை மேடையில் காட்டினால் பாராட்டலாம். வதந்திகளைப் பரப்புவதையும், கோள் மூட்டுவதையும், வீண் வார்த்தைகள் பேசி அலம்புவதையும் (GOSSip) இவர்கள் உடன் கைவிட்டாக வேண்டும். மறுபுறம், எம்மில் பலர் இன்று சினிமா மோகத்தில் மூழ்கிப் போயுள்ளனர். இரவு பகலாக, அடுத்தடுத்து திரைப்படங்களையும் தொ(ல்)லைக்காட்சி நாடகங்களையும் பார்த்து இவர்கள் தம் கண்களைக் கெடுத்துக் கொள்வதுடன் தமது பொன்னான நேரத்தையும் மண்ணாக்கி வருகின்றனர். கலாசாரச் சீரழிவு மறுபுறம். இன்று, மாணவரின் கல்வி அடைவுகளில் உள்ள வீழ்ச்சிக்கு திரைப்படம், தொலைக்காட்சி ஆகியவற்றின் கணிசமான பங்களிப்பு ஐயந்திரிபற நிரூபிக்கப்பட்ட ஒன்றாகும். கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம் செய்ய முடியாது என்பதை யாவரும் உணர்ந்தால் சரி.
புலனடக்கம் என்று வருகின்றபோது மனிதன் தனது பாலூக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் இங்கு சுட்டிக்காட்டியே ஆகவேண்டும். இயேசு கிறிஸ்து தமது புகழ்பெற்ற மலைப் பிரசங்கத்தில் “ஒரு பெண்ணைக் காம வெறியுடன் பார்க்கிற எவனும், தன் உள்ளத்தில் அவளுடன் கற்பு நெறி தவறி நடந்தவனாகக் கருதப்படுவான்’ என்று குறிப்பிடுவார். இன்று எண்ணற்றோர் தமது 85 TLD இச்சைகளைக் கட்டுப்படுத்தாத காரணத்தால் - இச்சையடக்கம் இன்மையால் பலவிதமான LIT6)6.60601 (35|Tuls(65&g, (Sexually Transmitted Diseases) ஆளாகி அவதியுறுகின்றனர். அதிலும் குறிப்பாக, ஆட்கொல்லி நோயான எய்ட்ஸ் (AIDS) என்னும் நோயினால் பீடிக்கப்பட்டு, தமது இறுதி நாளை எண்ணவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குப் பலர் தள்ளப்பட்டுள்ளனர். வாழவேண்டிய வயதில், மோக நோய் தந்த பரிசான எயிட்ஸ் நோய் பெற்று, அனு அணுவாய்ச் செத்துக்கொண்டு இருக்கின்றனர். மேலும் பலர் நோய்த் தொற்றுக்கு ஆளாகும் ஆபத்தில் சிக்காவிட்டாலும், தமது குடும்பத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்காமல், அதிகம் பிள்ளைகளைப் பெற்றுவிட்டு, பொருளாதார வசதிக் குறைவினால் அவதிப்பட்டுக் கொண்டு வாழ்கின்றனர். அதிக பிள்ளை - அதிக தொல்லை, சிறு குடும்பமே சிங்காரத் தோட்டம் என்ற உண்மையை உணராததால் வந்த வினை தான் இது.

"நான்’ தை , மாசி 2003 4.
தமது கோபத்தை அடக்க முடியாத பிறவிகளும் மனிதர் மத்தியில் ஏராளம். எம்மில் பலர் முற்கோபக்காரர்களாகவும், எடுத்ததற் கெல்லாம் காரணமின்றி வெகுண்டெழுகிறவர்களாகவும், எப்போதும் எரிந்து விழுபவர்களாகவும் உள்ளோம். இத்தகைய கோபம் (Anger) மற்றும் ஆவேசம் (Aggression) ஆகிய ஊக்கங்கள் அளவுக்கு அதிகமாகக் காணப்படுவதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. பரம்பரைக் குணம் அவற்றில் ஒன்று. மற்றையது உடல் நோய்கள், எடுத்துக்காட்டாக நரம்புத் தளர்ச்சி, மன அழுத்தம், இரத்தச் சோகை முதலியன. இவை உள நோய்களிலும் விளைவடையலாம். எது எப்படி இருப்பினும் கோபம் என்பது அடக்கப்பட வேண்டிய ஒன்று என்பதை எவரும் மறுக்கவோ அன்றேல் மறைக்கவோ முடியாது. ஆனால், எம்மிடையே சிலர் 'கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும்’ என்று கூறிக் கோபப்படுபவர்களைத் தட்டிக் கொடுப்பதும் உண்டு. கோபம்-பாவம்-பழி என்பதையும் ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு என்பதையும் இவர்கள் மறந்து விட்டனர். கோபப்படும்போது, முதலில் கோபப்படும் மனிதனின் உடல் நிலைதான் பாதிக்கப்படுகிறது என மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இரத்த அழுத்தம் (Blood Pressure) கூடுவது இதற்கு முக்கிய காரணமாகும். மறுபுறம், கோபத்திற்கு ஆளாக்கப்பட்டோரும் பல்வேறு மன எழுச்சி அலைகளுக்குள் ஆட்பட்டு வருந்துகின்றனர். இதன் பிரதிபலனாக மானிடத் தொடர்புகளும் உறவுகளும் சிக்கலைடைகின்றன, அறுந்து போகின்றன. இதனாலேயே சினம் சேர்ந்தோரையும் கொல்லும், சார்ந்தோரையும் கொல்லும் என்று கூறுவர். பல குடும்பங்களும், தனி நபர்களும், ஏன் நாடுகள் கூடத் தம்மிடையேயான உறவு நிலைகள் மட்டில் சீரற்றுச் சிதைந்து போயுள்ளமைக்குக் கோபத்தைக் கட்டுப்படுத்தாமையே முக்கிய காரணம் என்பதை யாவரும் ஏற்றுக்கொள்வர். ஒரு பெரும் போரின் - வன்முறையின் ஆரம்பப் பொறியாக இருப்பது எப்போதும் இந்தக் கோபம் தான். கோபம் குடியைக் கெடுக்கும் என்று சும்மாவா சொன்னார்கள்? எதற்கெடுத்தாலும் கோபப்படுபவர்களுடன் யாரும் நட்புக் கொள்ள விரும்பமாட்டார்கள். சிடுசிடுப்பும் சினமும் சிநேகிதத்துக்குப் பங்கம் "அது என் பிறவிக்குணம்’ என்று நொண்டிச் சாட்டு கூறுவதை விடுத்து, பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டியது எம் ஒவ்வொரு வரினதும் கடமையாகும். நாம் கோபத்தோடு எழுந்தால், நட்டத்தோடு உட்காரவேண்டி வரும். பொறுத்தார் அரசாள்வர், பொங்கினார் காடுறைவார் என்பது பழமொழி. கோபத்தை கோபத்தினால் வெல்ல முடியாது; கோபத்தையும் வெறுப்பையும் அன்பு ஒன்று தான் வெல்ல முடியும்.

Page 23
"நான்’தை மாசி 2003 42
அளவுக்கு மீறினால் அமுதமும் விஷமாம். மனிதன் தனது புலன் அங்கங்களைக் கட்டுப்படுத்தாவிட்டால் அவனுக்கும் மிருகங்களுக்கும் அதிகம் வித்தியாசம் இருக்காது. எந்தவொரு மிருகமும் தன் சொந்த இனத்தைக் கொன்று தின்பதில்லை; வேறு தீங்குகள் செய்வதும் இல்லை. அத்துடன் அவை பசிக்கும்போது மட்டுமே புசிக்கும். பசியாதபோது அவை ஒருபோதும் புசியாது. அவற்றின் இனச் சேர்க்கையும் ஒரு குறிப்பிட்ட கட்டுக்கோப்புக்குள் - வரையறைக்குள் தான் நடைபெறுகிறது. ஆறறிவு படைத்த மனிதனோ உலகையும் அதன் ஜீவராசிகளையும் கட்டுப்படுத்த அறிந்து கொண்டுள்ளான்.
மானைப் போல் வேகமாக ஓடவும் மீனைப் போல் நீரிலே நீந்தவும் அவனால் முடியும். பறவையைப் போல் வானில் பறக்கவும் கற்றுக்கொண்டான். ஆனால் மனிதனாக வாழ மட்டும் தெரியவில்லை எனப் புலம்புகிறார் ஓர் கவிஞர். உலகைக் கட்டுப்படுத்த அறிந்துகொண்ட மனிதன், தன்னைக் கட்டுப்படுத்த அறியவில்லை. g566.7Li,85.56i6OLDGu (Lack of Self - control) 96 gosig, அழிவுப்பாதை ஆகிறது. ஐந்தறிவு படைத்த மிருக ஜீவராசிகள் அவனைப் பார்த்துச் சிரிக்கும் நிலைக்கு அவன் இன்று வந்துவிட்டான். தனது சுய கட்டுப்பாட்டை இழந்துவிட்டதால் வந்த இழிநிலையே இதுவாகும். எனவே தான் மனிதன் தனது புலன்களைக் கட்டுப்படுத்த மறந்து அல்லது மறுத்து, தன்னைத் தானே அழித்துக்கொள்ளும் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறான்.
ஆசை வெட்கமறியாது. இதனால் பசி (அதிக ஆசை / இச்சை) வந்திடப் பத்தும் பறந்து போகிறது; மனிதனிடத்தில் அமைந்திருக்கக் கூடிய அரிய நற்பண்புகளை அவன் தன்னடக்கத்தைக் கைவிடுவதால் இழந்துவிடுகிறான்; இழிநிலைக்கு உள்ளாகிறான். தனது தவறுகளுக் காக மனம் வருந்தி, தனது தவறான வழிகளை விட்டுத் திருந்தி வாழ்வது ஒன்றே மனிதனை மனிதனாக்கும். தன்னடக்கம் தழைத்தால் மானிடம் சிறக்கும்.
மனிதன் மிருகமாகலாம்; அவன் மனிதனாகலாம்; அந்த மனிதன் (தன்னடக்கத்தால்)
இறைவனாகலாம்!"

அருத்த “நான்’ தாங்கிவருவது
பொதுத்தலைப் உங்கள் ஆக்கங்கள் எதுவாயினும்
உளவியல் சார்ந்ததாக அமையட்டும்
அவற்றை 20.02.2003 க்கு முன்னர் அஞ்சலிடுங்கள்.

Page 24
IFIT
இரண்டு மாதா 55L6O)6
வருடத்திற்கு ஆ உங்களிடம் வந்து கெ
என்னிலே உங்களு உளவியற்கருத்துக்கள் கு
என்னுடைய தனிப்பிரதி 2O
என்னுடைய ஆண்டுச்சந்தா.
உள்
ଜୋର ।
என்னுடைய முகவரி இதுதான்
J.S. Printers, P.

ଐନ୍ତୁ ဒီဇို2. ץ" イエッ- e o
- مريفة".
ീഴൂ, வகளுககு ஒரு
வயும்,
Ol தடவைகளும் ாண்டிருக்கின்றேன்.
க்குத் தேவையான தவிந்து கிடக்கின்றன.
GDງົaງ 150/=
Gifugao 7 US
SI:
*நான்” டி மசனட் குருமடம், கொழும்புத்துறை, யாழ்ப்பாணம், இலங்கை,
TEL O21-2721
IndahEruppu.