கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நான் 2004.09-10

Page 1
a.៣លើយថា சஞ்சிகை
 
 

*學 穆 © *T 95
ப்ப
, ,
ாதி - ஐ

Page 2
ISIGOT LDooir: 29
இதழ்: 05 உளவியல் சஞ்சிகை புரட்டாதி - ஐய்பசி, 2004 விலை 20/
2 Gir(86IT. ஆசிரியர்:
ஆசிரியர் அரும்புகள் மகிழ்வு தரும் நிறைவு செக்ஸ் கல்வி தேவைதானா? கவனம் சிதறினால் பழிவாங்குதல்-ஓர் உள சமூகப்பார்வை இறுதிப் பயணத்தில் தொடரும் இடர்கள் கவிச்சோலை பிள்ளைகளின் நுண்ணறிவை
வளர்ப்பதில் பெற்றோரின் பங்கு இளமையில் பாலியல் அறிவு அம்மா - சிறுகதை பழிவாங்கும் உணர்வு ஏன் பாலியல் கல்வியின் அவசியம் ஒருதலைக் காதல் பொறுமையுடன் செவிமடுப்போம் உன்னுள் உண்ணைக்கான பணிவு பூரணத்துவம் அடைவதே வாழ்க்கையின் இலக்கு தன்னம்பிக்கையே பலம்
“NAAN!” Tamil Psychological Magazine De Mazenod Scholasticate, Columbuthurai, Jafna, Sri Lanka.
Tel 021-222-5359
போல் நட்சத்திரம் 0.M., B.Th., M.A.
இணையாசிரியர்:
a IIIraráFuair O.M., B.Th., B.A. (Hons).
ஒருங்கிணைப்பாளர்:
afaÄoGh6aIeartbLiir O.M.l. STL.
நிர்வாகக் குழு அ.ம.தி. இறையியல் சகோதரர்கள். Gegrari LIETGOT.
ΦυσΘΟΙΤσΦή ΘδΦε
Luašr O.M.I., M.A.
LIrøfuso O.M.I., M.A. செல்வரெட்ணம் 0.M., Ph.D. N. சண்முகலிங்கன் Ph.D. Dr. R. Fauay rŘasử M.B.B.S. form H.C. Dip. in Counselling, Kent. garagratioO.M.I., B.A. (Hons), B.Th., Dip.E. g8an IrguIraio O.M. I., M. Phil.

ஆசிரியர் அரும்புகள்
அண்மைக்காலங்களில் பல தகுதியினரைக் கொண்ட நான்' வாசகர்களை நேரடியாகச் சந்திக்கும் தருணம் கிடைத்தது. ஆசிரியர்கள், மாணவர்கள், வைத்தியர்கள், விரிவுரையாளர்கள் பல்கலைக்கழக மாணவர்கள், மருத்துவ பீட மாணவர்கள் போன்றோர் தமது ‘நான்’ பற்றிய கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொண்டார்கள். நான் சஞ்சிகையின் துரித வளர்ச்சி பற்றியும், அது வாசகர் உலகத்துக்கு வழங்கிவரும் நற்சிந்தனைகளையும், தாங்கி வரும் தலைப்புக்களின் பயன்பாடுகள் பற்றியும் பாராட்டி மேலும் வளர ஆசித்தார்கள். நன்றியுணர்வுடன் "நான்’ அபிமானிகள் அனைவரையும் வாழ்த்துவதோடு இச்சஞ்சிகையின் உருவாக்கத்துக்கு முழுப்பொறுப்பையும் தாங்கி நிற்கின்ற நமது அருட்சகோதரர்களையும் நெஞ்சார வாழ்த்துகின்றேன். உள்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் ‘நான்' வாசகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது நமது சஞ்சிகையின் வளர்ச்சியையும், முக்கியத்துவத்தையும் உறுதிப்படுத்துகின்றது. இருப்பினும் நாம் வளர வேண்டிய இன்னும் பல அம்சங்கள் இருக்கின்றன. எல்லோருக்கும் விளங்கும் முறையில் எழுதுதல், தலைப்புத் தேர்வு போன்றவற்றில் இன்னும் கவனம் செலுத்தப்படவேண்டு மென்பதை ஏற்றுக் கொள்கின்றோம். வாசகர்கள் தங்கள் கருத்துக்களை நம்முடன் பகிர்ந்து கொள்ளும் பொழுது நாம் வளர்வதற்கு துணைபுரியும். எனவே நல்ல விமர்சனங்களைத் தொடர்ந்து அனுப்புங்கள். சிறப்பு வெளியீடாக வெளிவரும் இம் மலரில் பல கருப்பொருட்கள் வருகின்றன. வாழ்வின் நல்ல பக்கங்களை அவை உங்களுக்குக் காட்டுமென்று நம்புகின்றோம். வாசகர்களும் சில தலைப்புக்களை எழுதி அனுப்பலாம். உளவியல் ரீதியான மேம்பாடுகள் நலிந்துள்ள எங்கள் சமூகத்திற்கு நம்மாலியன்ற சிந்தனைகளைத் தொடர்ந்தும் பிரசுரிப்போம். உங்கள் விமர்சனமும் பங்களிப்பும் எங்கள் வளர்ச்சிக்கு உதவும். ஆக்கங்களைப் படைத்து அனுப்புங்கள்.
தோழமையுள்ள வாழ்த்துக்களுடன் ம. போல் நட்சத்திரம். அ.மதி
நாண் உளவியல் சஞ்சிகை புரட்டாதி. ஐப்பசி 2004

Page 3
2 -gbu LD6loff 2 g5uégbg56ir (B.A.Hons) சுகவாழ்வு நிலையம்
جليل" ஒவ்வொரு மனிதரும் தன்னிறைவு பெறுவதையே இயல்பாகக் கொண்டவன்(ள்). எனவே அவன்(ள்) தான் ஏனைய தேவைகளை படிப்படியாகப் பூர்த்தி செய்து இறுதியில் தன் திறமைகள், ஆற்றல்கள் என்பவற்றின் முழுமையான பூர்த்தியிலேயே அவனு(ளு)க்கு நிறைவு (Satistaction) ஏற்படும் என்பது ஆபிரகாம் மஸ்லோ (Abraham Maslow) வின் கருத்தாகும். எனவே நிறைவை நாம் பெறுவதற்கு நம்முடைய திறமைகள், ஆற்றல்களை அடையாளம் கண்டு வளர்ப்பதிலேயே தங்கியுள்ளது. இவற்றை அடையாளம் கண்டு நிறைவை ஏற்படுத்துவதாயின் அவ் அடையாளங்கள் மகிழ்வானதாக இருக்க வேண்டும். ஒருவன் கவிதையை இயற்றுவதன் மூலமும், ஒவியன் சித்திரம் வரைவதன் மூலமும், உச்ச மகிழ்ச்சி மூலம் நிறைவை அடைவதைக் காண முடிகிறது.
அந்த வகையில் “மகிழ்வாக இருந்தால் நிறைவாக வாழலாம்” என கூறுவது இன்றைய உலகிற்கு சாலவும் பொருந்தும். சமுதாயத்திற்கும், நிறைவிற்கும் இன்றியமையாத ஒரு பண்பாக மகிழ்ச்சியான வாழ்வையே கூறுகின்றனர். மகிழ்ச்சியாய் இருப்பதே மனிதனின் சுபாவம் எனில் இவ் மனிதன் ஒன்று சேர்ந்து தானே சமுதாயத்தை உருவாக்குகின்றான். ஆகவே சமுதாயம் மகிழ்ச்சியாய் இருப்பதற்கு தனி மனிதன் ஒவ்வொருவரதும் பங்களிப்பு முக்கியம் பெறுகிறது. மகிழ்ச்சியை கடையில் சென்று வாங்க முடியாது. அது நமக்குள்ளேயே இருப்பது. அதனை நாமே உள்ளத்தால் உணர்ந்தால் தான் அதன் ஊற்றின் ஆழத்தை அறிய முடியும். ஊற்றானது பெருகுவதும், வற்றுவதும் தனி மனிதன் ஒவ்வொருவரினதும் கைகளில் தான் உள்ளது.
மனிதன் என்றும் மகிழ்வான வாழ்வையே விரும்புகின்றான். ஆரோக்கியமான வாழ்வுப் பயணத்தில் தன்னை இணைத்து தனக்கும், பிறருக்கும் பயன்பாடுள்ள ஒருவனாக வாழவே ஆசைப்படுகின்றான். ஆனால் மனிதனின் மகிழ்வானது வாழ்ந்த காலச்சூழல், பிழையான வழிகாட்டல், உணர்ச்சி மேலாண்மை, கட்டுப்பாடின்மை போன்ற அகப்புற துாண்டுதல்களால் வலுவிழந்து போகிறது. இத்தகைய காரணிகளில் இருந்து விடுபட்டு மகிழ்வான அனுபவத்தின் மூலம் நிறைவான வாழ்வை கட்டியெழுப்ப ஆசைப்படுகிறான். குடும்பத்தில்
நான் உளவியல் சஞ்சிகை புரட்டாதி. ஐப்பசி 2004 2
 
 
 

பெற்றோர் பிள்ளைகளுக்கு இடையேயான உறவும், பாடசாலையில் அதிபர், ஆசிரியர், மாணவர்களுக்கிடையிலான உறவும், அலுவலகத்தில் நிர்வாகத்திற்கும், நிர்வாக உத்தியோகஸ்தர்களுக்கும் இடையிலான உறவும் மகிழ்வாக இருக்கும் பட்சத்திலேயே நிறைவான இலக்கை அடைய வழிவகுக்கிறது.
மகிழ்ச்சியின் நிறைவை ஒருவரின் புன்னகையில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது. “புன்முறுவல் அகத்திலே தென்படும் ஒரு வளைகோடு”. அது வாழ்க்கையின் எத்தனையோ காரியங்களை நேராக்குகிறது என ஆங்கில எழுத்தாளர் ஒருவர் கூறுவதைப் போல் புன்னகை பூத்த முகம் எப்பொழுதும் பிறர் நெஞ்சங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதுடன் அவர்கள் தமக்குள் தாமே நிறைவான ஓர் உணர்வைப் பெறுவதற்கும் வழிவகுக்கிறது.
பொருளில்லாத புன்னகை போலியானது. பொலிவில்லாத புன்னகை சோம்பலானது. அதே போல் மகிழ்வில்லாத வாழ்க்கை நிறைவற்றது. எனவே மகிழ்ச்சியான வாழ்க்கையை நிறைவாக்குவதும் குறைவாக்குவதும் அவரவர் உள்ளங்களிலேயே தங்கியுள்ளது. அண்ணல் காந்தியடிகளின் சிந்தனை மகிழ்ச்சிகரமாக இருந்ததால் தான் வாழ்க்கையின் நிறைவை அடைந்து சமுதாயத்தின் நல் வழிகாட்டிகளில் ஒருவராக திகழ்ந்தார். மகிழ்ச்சியுடன் சுமக்கும் சுமை கூட சுமையற்றதாகத்தான் இருக்கும். அந்த சுமையில் கூட ஒருவன் நிறைவை அடைவதற்கு மகிழ்ச்சியான வாழ்க்கை இன்றியமையாது விளங்குகின்றது.
கவலை வாழ்க்கையின் இருள் படிந்த நிலைக்கு கொண்டு செல்ல மகிழ்ச்சி கவலை எனும் இருளில் இருந்து மீட்டு அவனை நிறைவான வாழ்க்கைக்கு இட்டுச் செல்கிறது. அந்த வகையில் கஷ்டங்கள் துன்பங்கள், நெருக்கீடுகள் (StreSS) போன்ற அனுபவங்களைக் கடந்து ஒருவன் மகிழ்வான வாழ்வை நிறைவாக்க 1. நல்லவற்றைச் சிந்திப்பதனாலும் 11. மறைந்த நற்காரியங்களை நினைவிற்கு கொண்டு
வருவதனாலும் II. தரமானவற்றை சுவைப்பதன் மூலமும் IV. 616 fool Du T35 6 ITp6, g560TTg)b
V. ஊக்கியாக செயற்படுவதனாலும் V1. துயரத்தைக் களைவதன் மூலமும் நிறைவு எனும் இலக்கை அடைகின்றான். மகிழ்வின் மூலம் கிடைக்கும் நிறைவானது வாழ்க்கையை பூரணப்படுத்துகிறது. இதனால் அவரவர் உள்ளங்களில் பல்வேறு மாறுதல்கள் ஏற்படுகிறது.
V சந்தோசமாக இருத்தல் V மீண்டும் மீண்டும் அவ்வாறான செயற்பாடுகளை மென்
மேலும் முன்னேற்ற வேண்டும் என்ற ஆவலாக இருத்தல்.
நான் உளவியல் சஞ்சிகை புரட்டாதி - ஐப்பசி 2004 3

Page 4
V மற்றவர்களுடன் கருத்துக்களைப் பரிமாறக்கூடியதாக
இருத்தல்.
* புதுப்புது உத்திகளைக் கையாள வேண்டும் போல்
இருத்தல். V மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருத்தல். V திருப்தி நிலையை ஏற்படுத்தல்.
w சமூகத்தில் நன்மதிப்பைப் பெறும் வாய்ப்பு ஏற்படல்.
இவ் மாறுதல்கள் மகிழ்வு தரும் நிறைவால் ஏற்படுகிறது. அதே
போன்று நிறைவு ஏற்படாத பட்சத்தில் உளரீதியாகவே பாதிப்பிற்கு
இட்டுச் செல்கிறது. * KÄNNA ...
* உளரீதியான பாதிப்பு :
சோர்வு
தாழ்வு மனப்பான்மை
ஒதுங்கும் தன்மை
II ULU L.D.
கோபம்
விரக்தி
' * தன்னம்பிக்கை இன்மை W
இதனால் வாழ்க்கையானது துன்பகரமான நிறைவற்ற நிலைக்குத்
தள்ளப்படுகிறது. ஒரு சிறு பிள்ளையின் வாழ்வு கூட துன்பகரமான
நிறைவற்ற வாழ்வாகவோ, மகிழ்ச்சிகரமான நிறைவான வாழ்வாகவோ,
மலருவதும், கருகுவதும் பிள்ளை வாழும் சூழ்நிலையைப் பொறுத்தே
அமையும் என்பதை ஜீன் பியாஜே என்ற உளவியலாளர் பின்வருமாறு
KWU KWABA||1
கூறுகின்றார்.
“வளர்ந்தோருடனும் பிள்ளைகளுடனும் அதிகளவுக்கு தொடர்புகளைக் கொண்டிருக்கக் கூடிய சூழலைப் பெற்ற குழந்தை, அனுபவங்களைப் பெறுவதன் மூலம் மகிழ்வாக வாழ வழிவகுக்கிறது” எனவும் “சொற்ப அளவான அன்பும் ஆதரவும் கிடைக்கும் சூழலில் வளரும் குழந்தைகளில் உளவளர்ச்சி மிக மோசமாகப் பாதிக்கப்படுவதுடன், மகிழ்வற்ற ஒரு நிலையையே ஏற்படுத்தி விடும்” என்கிறார். இந்த மகிழ்வற்ற நிலையே காலப்போக்கில் பிள்ளையின் வாழ்க்கை நிறைவற்ற போலியான வாழ்க்கைக்கு இட்டுச் செல்கிறது.
ஆகவே தனிமனிதன் ஒவ்வொருவரும் உள்ளத்தில் உள்ள வடுக்களைக் களைந்து சிறப்பான வாழ்க்கைப் பண்புகளை இனம் கண்டு அதற்கேற்ப செயற்படுவதன் மூலம் மகிழ்ச்சி எனும் ஊற்றைத்திறந்து நிறைவு எனும் இலக்கை அடைய முயற்சிக்க வேண்டும். அவ்வாறு முயற்சித்து கிடைக்கும் இலக்கானது “மகிழ்வு தரும் நிறைவாகவே அமையும்”. W,(W,、M உசாத்துணை நூல்கள்:
1. உறவுகளின் இராகங்கள். வி.பி
2. மகிழ்ச்சியின் இரகசியம் - யோசப்பாலா (மணியோசை வெளியீடு)
நான் உளவியல் சஞ்சிகை புரட்டாதி. ஐப்பசி 2004 4

(ઉg. எம். ரி. றொட்றிக்கோ (B.A.Hons)
*செக்ஸ்” என்ற பதத்தை அறியாதவர்கள் இல்லை என்றே சொல்லலாம். ஆனால் செக்ஸ் தொடர்பான பூரண அறிவு நம்மில் எத்தனை பேருக்கு இருக்கின்றது என்பது வினாக்குறியே? ஏனெனில் "செக்ஸ்’ கல்வி நம் நாட்டில் இல்லாத காரணத்தால் செக்ஸைப் பற்றிய தெளிந்த அறிவை பெற்றுக் கொள்ள சரியான வழிகாட்டுதல் இல்லாத நிலையே நம் நாட்டைப் பொறுத்தளவில் உள்ளது. “செக்ஸ்’ என்றதும் ஏதோ உச்சரிக்கக் கூடாத கெட்ட வார்த்தை என்பது போன்ற ஒரு கருத்தே சமுதாயத்தில் நிலவி வருகின்றது. இதன் காரணமாக இளைஞர்கள் மற்றும் யுவதிகள் தரமற்ற (செக்ஸ்) புத்தகங்களைப் படித்தல், படங்கள் பார்த்தல் இவற்றின் வழி தங்கள் மனதையும் உடலையும் தவறான வழிக்குச் செலுத்திக் கெடுத்துக் கொள்ளுகின்றனர். அத்துடன் "செக்ஸ்’ தொடர்பான நோய்களைப் பற்றிய தெளிவின்மையாலும் பலர் தங்கள் வாழ்வை இழக்கும் நிலைக்குக் கூட தள்ளப்படுகின்றனர். மட்டுமன்றி இந்நிலையில் அதற்கான சரியான பரிகாரத்தை தேடுவதிலும் அச்சம் கொள்வதால் (சமூகத்திற்கு அஞ்சுதல்) மிகப் பெரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைமையும் ஏற்படுகிறது.
“மரம் தானாக ஆடாவிட்டாலும் காற்று அதை அசைக்கும்” என்னும் சீனப் பழமொழி போல் நாம் "செக்ஸ்’ தொடர்பாக தெரிந்து கொள்ள விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இன்றைய பத்திரிகைகள், சஞ்சிகைகள், தொலைக்காட்சி, திரைப்படம் என்பவற்றின் மூலம் "செக்ஸ்’ பற்றிய தரமற்ற தகவல்களே வந்தடைகின்றன. ஆனபடியால் "செக்ஸ்’ பற்றிய சரியான உண்மையினை நாம் அறிந்து கொள்வது மிக அவசியமானதே.
இதனடிப்படையில் இன்றைய சமுதாயம் 'செக்ஸ்’ தொடர்பான அறிவு/கல்வியின்மையினால் 6) பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கிறது. இந்த வகையில் பாலியல் ரீதியான தொற்று நோய்கள் "செக்ஸ்’ தொடர்பான அறிவின்மையையே வெளிப்படுத்துகின்றன. இவை இன்று தாராளமாக புழங்கும் சஞ்சிகைகள், நீலப்படங்கள், இவற்றின் உந்துதலுக்கு இடப்பெயர்வு, கூட்டுக் குடும்ப உடைவு, சூன்யப் பிரதேசங்கள், பாழடைந்த கட்டடங்கள், வீடுகள், இன்றைய பணப் புழக்கங்கள், மேலைத்தேய கலாச்சாரக் கலப்பு என்பன சார்புக் காரணிகளாக அமைந்து உணாச்சிகளுக்கு வடிகால் அமைக்க, அவை பாதுகாப்பற்ற முறைகளிலான உறவுகளுக்கு துணைபோக, இறுதியில் நோய்களுக்கு உட்படுவது மட்டுமின்றி நோய்க்காவிகளாகவும் உருவாகும் நிலைக்கு இட்டுச் செல்கிறது மட்டுமின்றி தேவையற்ற
நாண் உளவியல் சஞ்சிகை புரட்டாதி. ஐப்பசி 2004 5

Page 5
கர்ப்பத்தை உருவாக்க இதன் மூலம் பாதுகாப்பற்ற சட்டவிரோதமான முறையில் கருக்கலைப்பை மேற்கொண்டு சிசுவைக் கொல்வதுடன், பெண்ணையும் ஆபத்தான நிலைக்கு இடடுச் செல்லும் நிலையும் உருவாகின்றது. இது எனது ஆய்வின் வழி கண்ட உண்மையாகும். உலக சுகாதார நிறுவனத்தின் கணிப்பின்படி ஒவ்வொரு வருடமும் உலகில் 20 மில்லியன் பாதுகாப்பற்ற ஆபத்தான கருக்கலைப்பு ஏற்படுகிறது. இதில் 1/3 பகுதி மகப்பேறு இறப்புக்களை உண்டு பண்ணுவதாக குறிப்பிடுகிறது. இது "செக்ஸ்’ தொடர்பான சரியான ஒரு அறிவின்மையையே இது காட்டி நிற்கிறது. | ή )
இது ஒரு புறமிருக்க, மறுபுறம் பாலியல் தொடர்பான பிரச்சினைகளில் சிக்காமல் சிறுவர்களைப் பாதுகாப்பது தொடர்பாகவும் நாம் முக்கிய கவனம் செலுத்த வேண்டும். சிறுவர் மனோதத்துவ நிபுணரான டாக்டர் சவிதா மல்ஹேத்ராவின் கருத்துப்படி "பாலியல் பற்றி அறியத்துடிக்கும் ஆவல் இன்றைய சிறுவர்களிடையே காட்டுத் தீ போல் வேகமாக பரவி வருவதை
அவதானிக்க முடிவதாக” தனது ஆய்வுகளின் படி காட்டுகிறார்.
இதனால் இன்று பெற்றோரினதும், ஆசிரியர்களினதும் பொறுப்பு பாரியதாக காணப்படுகிறது. மேலும் இன்றைய சிறுவர்கள் சிறுவயதிலேயே பாலியல் பற்றி அறிவதிலும் அது பற்றி கூச்சமின்றி தங்களது கருத்துக்களை தெரிவிப்பதிலும் முதிர்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கான சரியான விளக்கம் வழங்கப்படல் அவசியம். பத்து வயது முதல் பதினாறு வயது வரையானவர்கள் பாலியல் இன்பங்ளை பரிசோதித்தறிவதில் ஆர்வம் காட்டுவதாக சிறுவர் மனோதத்தவ நிபுணர் குறிப்பிடுகிறார். அத்தோடு திருமணம் பற்றிய "செக்ஸ்’ பற்றிய அறிவின்றி வெறும் கவர்ச்சியினடிப்படையில் திருமணத்துள் செல்வதும் இக்காலகட்டத்தில் கவனிக்கப்படவேண்டியது. III
இவ்வாறு இள வயதினரை பாதித்துள்ள இப் பிரச்சினைகளை சரியான/நேர்த்தியான முறையில் கையாள வேண்டியது ஒவ்வொருவரினதும் கடமையாகிறது. பெற்றோர் - ஆசிரியர் சிறுவயதில் பிள்ளைகள் எழுப்பும் பாலியல் சம்மந்தமான கேள்விகளுக்கு சரியான முறையில் பதிலளிக்க வேண்டிய பாரிய பொறுப்பு உண்டு. அத்துடன் கல்வி முறையில் - பாலியல் கல்வி தொடர்பாக (p60), Luist60T பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டு பாடசாலைகளில் கற்பித்தல், சமூகமயமாக்கல் நிறுவனங்கள், சுகாதார
சேவை நிலையங்கள் இவற்றின் வாயிலாக *செக்ஸ்’ கல்வி போதிக்கப்படுவதுடன் செக்ஸ் தொடர்பாக எழும் பிரச்சினைகள், நோய்கள் தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை
மேற்கொள்வதன் மூலமாகவும் நமது சமூதாயத்தை ஆரோக்கியமாக கட்டியெழுப்ப முடியும். இதற்கு அனைவரது ஒத்துழைப்பும் மிக அவசியமாகும். எனவே பாலியல் கல்வி என்பது சமுதாயத்தை தவறான வழிக்கு இட்டுச் செல்லுமென்கிற தவறான எண்ணத்தை களைந்து அக்கல்வி முறை நடைமுறைக்கு வர ஒத்துழைப்போம். நமது சமுதாயத்தை ஆரோக்கியமுள்ளதாக்குவோம். இளம் சமுதாயத்தை சரியான பாதையில் வழிநடத்துவோம்.'
நான் உளவியல் சஞ்சிகை புரட்டாதி - ஐப்பசி 2004 6

(வகுப்பறையில் நடந்தவை )
எஸ். ரஞ்சன் செல்வகுமார். வவுனியா. க.பொ.த (சா/த) வகுப்புக்குக் கணித பாடம் கற்பித்துக் கொண்டு இருந்தேன். அந்நேரத்தில் அவ்வட்டாரப் பாடசாலைக்குப் பொறுப்பான கல்வி அதிகாரி சற்றும் எதிர்பாராத விதமாக நான் கற்பித்துக் கொண்டிருந்த வகுப்பினுள் நுழைந்தார். இவர் கணிதத் துறையில் சிறப்புப் பட்டம் பெற்றவர் என்பதும் எனக்குத் தெரியும். மட்டுமல்ல மிகவும் கண்டிப்பானவரும் கூட.
வகுப்பினுள் பிரவேசித்தவர் பாடத்தைத் தொடருமாறு என்னிடம் கூறிவிட்டு மாணவர்களோடு பின் வரிசையில் அமர்ந்து கொண்டு நான் கற்பிப்பதை அவதானிக்கத் தொடங்கினார்.
பரபரப்புடன் நான் பாடத்தைத் தொடர்ந்தேன். மாணவர்கள் சிலர் புதிதாகத் தாம் கண்ட அதிகாரியைத் திரும்பிப்பார்ப்பதை அவதானிக்க முடிந்தது. நான் ஒரு கணக்கைக் கரும்பலகையில் எழுதி விளக்கினேன். மூன்றாம் படிமுறையை நான் எழுதிய போது அவ்வகுப்பின் மாணவர் தலைவனாக இருந்த சிறுவன் எழுந்து “சேர் அது பிழை” என்று கூறிவிட்டான். எனக்கோ மிகவும் தர்மசங்கடமாகப் போய் விட்டது. அம் மாணவன் மீது கோபமும் வந்தது. கரும்பலகையைப் பார்த்தேன். நான் விட்டிருந்த மோசமான பிழை கரும்பலகையில் இருந்து என்னைப் பார்த்து முறைத்தது. எனக்கு வியர்த்துக் கொட்டியது.
அப்பொழுது வந்திருந்த அதிகாரி எழுந்தார். வகுப்பின் முன் வந்த அவர் மாணவர்களைப் பார்த்துப் பேகத் தொடங்கினார். “உங்கள் கணித ஆசிரியர் மிகவும் திறமை வாய்ந்தவர். நீங்கள் பாடத்தில் கவனம் செலுத்துகிறீர்களா? என்று பார்ப்பதற்காகத் தான் அவர் வேண்டுமென்றே கணக்கைப் பிழையாகச் செய்தார். ஆனால் உங்கள் மொனிட்டர் ஒருவரைத் தவிர மற்ற எல்லோரும் பாடத்தில் கவனம் செலுத்தவில்லை எனத் தெரிகிறது. இது மிகவும் கவலைக்குரிய விடயம். பாடம் நடக்கும் போது வீண் பராக்குப் பார்க்காமல் பாடத்தில் முழுக் கவனம் செலுத்த வேண்டும்” என்று கண்டிப்பான குரலில் கூறி விட்டு என்னைப் பார்த்துப் புன்னகைத்தபடியே வகுப்பை விட்டு வெளியேறினார். எனக்குப் போன உயிர் திரும்பி வந்தது. பாடத்தைத் தொடர்ந்தேன். மாணவர்கள் கவனத்தை ஒருமுகப்படுத்திக் கற்றார்கள். நானும் கூடத்தான். e
நான் உளவியல் சஞ்சிகை புரட்டாதி. ஐப்பசி 2004 7

Page 6
பழிவாங்குதல்-ஓர் உள-சமூகப் பார்வை
(REVENGE-A PSYCHO - SOCIAL PERSPECTIVE)
K.சசிகலா பேராதனைப் பல்கலைக்கழகம்
மனிதன் சிந்திக்கத் தெரிந்தவன். உணர்வு மிக்கவன். சிந்தனை, செயல், சொல் இவை மூன்றும் மனித செயற்பாட்டினடியாக மனித மேம்பாட்டிற்கு உந்து சக்தியாகின்றன. உளவியலாளர்கள், சமூகவியலாளர்கள் மேற்குறிப்பிட்டவற்றின் முக்கியத்துவம் பற்றி ஆராய்ந்து வருகின்றனர். ஏனெனில் அனுபவ ரீதியான விளைவுகளை, பண்பு ரீதியான தகவல்களை பெறுவதில் உள - சமூகவியல் ஆய்வுகள் முக்கியம் பெறுகின்றன. இக் கண்ணோட்டத்தில் "பழிவாங்குதல்” (Revenge) என்ற எண்ணக்கரு சமூகவியல் - உளவியல் நோக்கில் முக்கியம் பெறுகின்றது. மனிதனது மனத்துடன் தொடர்புபட்டது இப் பழிவாங்குதலாகும். மனம் ஒரு குரங்கு என்பார்கள். ஏனெனில் அடிக்கடி மாற்றமடையக்கூடியது. மாற்றத்தடையாக வெளிப்படும் எண்ணங்களும் மாறக்கூடியது. “நல்லவனாகத் தெரிந்த ஒருவன் மறுகணம் எதிரியாகத் தென்படுவான்’. அந்த நேரத்தில் தான் பழிவாங்கும் எண்ணம் உருவாகின்றது.
உதாரணமாக கமல், விமல் எனும் இருமாணவர்களும் மிகுந்த நட்புறவு கொண்டவர்கள். கற்கை நெறியினை ஒன்றாகத் தொடர்பவர்கள். ஒரு காலகட்டத்தில் விமலின் செயற்பாடுகள் மாற்றமடைந்து செல்வதைக் கண்ட கமல் அவனுக்கு “நாங்கள் படிப்பதற்காகவே வந்தோம். திருப்தியுடன் வீடு செல்ல வேண்டும்” என்று அறிவுரைகள் பல கூறிய போது அவையனைத்தும் விமலுக்கு பிடிக்கவில்லை. உடனே கமலை விட்டு விலகி வேறு ஓர் நண்பர் கூட்டத்தினருடன் இணைந்து கமலை பழிவாங்குகின்றான். இறுதியில் விமலின் குடும்பத்தினரும் எதிரியாகவே பார்க்கின்றனர். ஏனெனில் பெற்றோருக்கு நல்லவனாக காட்டிக் கொள்ளும் நடிபங்கு (Role) விமலிடம் நிறையவே உண்டு.
இங்கு நாம் நோக்குமிடத்து பழிவாங்குபவனும் உளரீதியாக
பாதிக்கப்படுகின்றான். பழிவாங்கப்பட்டவனும் 96.6060 விடக் கூடுதலாக பாதிப்புறுகின்றான். அதாவது “அறிவுரைகள் சொல்லப்போய் அவனுக்கு எதிரியாக மாறி விட்டேனே.” என
உளரீதியாக நொந்து போகின்றான். பழிவாங்குதல் நண்பர் குழாம் மட்டத்தில் மிகுந்த வலுப்பெறும் நிலையில், அதன் விளைவுகளும் தாங்க முடியாமல் அமைந்து விடுகின்றன.
நான் உளவியல் சஞ்சிகை புரட்டாதி. ஐப்பசி 2004 8

பழிவாங்குதலுக்கு தோற்றுவாயாக அமையும் சில காரணங்கள்.(Factors)
* ஒழுங்கான கட்டுப்பாடின்மை. பெற்றோர், பிள்ளைகள் மட்டில் அதிகளவு கண்டிப்பானவர்களாக இருத்தல். அவர்களின் முன்னேற்றத்தில் அக்கறை எடுக்காமை. * அளவுக்கு மீறிய சுதந்திரம் கொடுத்தல். * உளவியல் ரீதியான தேவைகள் நிறைவேற்றப்படாதவிடத்து ஏற்படும் மனமுறிவுகள், மனவெழுச்சிசார் நிலமைகள். தாழ்வு மனப்பான்மை. LTLFT606) கல்லுாரிகள், (பல்கலைக்கழகங்கள்) இவற்றில் பிறர் நட்பினைப் பெற முடியாத நிலையில் .”. பிறர் கணிப்பினைப் பெற முடியாத போது, பழிவாங்கும் எண்ணங்கள் உருவாகின்றன. * கல்வியில், பிற்போக்குத் தன்மை கல்வியில் ஏற்படும்
போட்டிமனப்பான்மை (பொறாமை நோக்கு) * குடும்பத்திலேற்பட்ட பிளவுகள், பிரிவுகள், சண்டை, சச்சரவுகள் குடும்பத்தில் குற்றம் புரிந்தோர் இருத்தல். உதாரணமாக தகப்பன் - குடிகாரன், வன்முறையாளன். எமது சூழலானது யுத்தம, அதனாலேற்பட்ட இடப்பெயர்வுகளுடன் பலகாலமாக பின்னிப் பிணைந்துள்ளதால் விளைவுகள் பல. பழிவாங்கும் நிலைக்கு களமாக அமைந்து விடுகிறது. “1989° ஏற்பட்ட போரினால் தன் சகோதரனை இழந்த நேசன் பழிவாங்கும் முகமாக, எதிரணியில் தன்னை இணைத்து போராடுகின்றான். இன்றும் பல எதிரிகளை பழி வாங்கி வருகின்றான்” இங்கு எதிரணி மீதான வெறிப்பார்வை வலுவடைகிறது.
2.
அடுத்து வன்முறை ரீதியான பழிவாங்கல் இன்று எமது நாட்டில் யுத்தம் கொடுத்த கொடையாக அமைகின்றன. இப்பழிவாங்கலானது, ஒரு சிறு குழுவுடன் உருவாகி, பின்னர் பெரிய அமைப்புக்களாக, விரிவடைந்து பரிணாமமடைந்து, விளைவுகள் மேலும் கிளைகளாகின்றன. இவ்வாறான அரசியல் வன்முறை gनाां பழிவாங்கலுக்கு யுத்தம் தோற்றுவாயாக அமைகின்றது.
காதலில் புண்பட்ட தோற்றுப்போன உள்ளங்கள் பழிவாங்குகின்றன.
“கமலா பல்கலைக்கழக மாணவி. தன் ஒத்த நண்பனான தனேஷ் என்பவனை காதலிக்கின்றாள். தனேஷ் படிப்பில் படு சுட்டி. பார்வைக்கு கவர்ச்சித்தன்மையுடன் கூடிய தோற்றம் உடையவன். இதனைப் பார்த்த கமலாவின் சிநேகிதி மதிக்கு பொறாமை. “கமலா ஒரு மொக்கு. அழகில் குறைந்தவள். இவளுக்கு தனேஷா? விடக்கூடாது' என ஆத்திரமடைந்து பழிவாங்க முனைகின்றாள்.
நான் உளவியல் சஞ்சிகை புரட்டாதி. ஐப்பசி 2004 9

Page 7
தனேஷினை தன்வசம் கொணரும் வழியில் கதைத்து பேசி நாள்கள் வாரமாக தனேஷ் மதி வசமாகின்றான். கமலாவின் காதல்???
காதலில் தோற்றுப்போன காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட பல உள்ளங்கள் தம்மைத்தாமே அழித்தும் கொள்ளுகின்றன. எமது சூழலைப்பொறுத்தவரையில் இருமாதங்களில் மூன்று தற்கொலைகள் நடந்தேறியுள்ளன. இதற்கான காரணம் என்ன? ஏன் இவர்கள் இவ்வாறு செய்கின்றனர்? இதற்குத் தூண்டுதலாக இருப்பது என்ன? போன்றவற்றை சமூக உளவியலாளர்கள் ஆராய்ந்து நோக்க வேண்டியது முக்கியமானது. கற்கை நெறி எவ்வளவு அவசியமோ, அந்தளவிற்கு அவற்றின் பிரயோகத்தையும் சமூகம் வேண்டி நிற்கிறது. பெற்றோரின் எதிர்ப்பு, சமூகத்தின் எதிர்ப்பு, கல்வியில் &LD6606)uigi 60LD (Ineguality), gLDuu (Spidisab. (Bond of Religion), சாதிக்கட்டமைப்பு (Caste Structure) தற்கொலைக்கு காரணங்களாகின்றன. அறிவுரை கூறல், ஆலோசனைகள் வழங்குவதற்கு அன்பான உறவுகள் இவர்களிற்கு கிடைக்காமையினால், பல உள்ளங்கள் இத்தகைய முடிவினை எடுக்கின்றனர்.
தாழ்வு மனப்பான்மை இன்னொரு காரணமாகின்றது. இளம் வயதினர் பெரிதும் புறக்கணிக்கப்பட்டவர்கள், பலமுறை தோல்வி கண்டவர்கள் பழிவாங்குதலுக்குட்படுகின்றனர். குடும்பத்தில் பெற்றோர் பிள்ளைகள் மட்டிலான அன்புறவுத் தேவை அதிகளவில் நிறைவேற்றப்பட
வேண்டும். ஆரம்ப பிள்ளைப் பருவத்தில் இத்தேவை நிறைவேற்றாவிட்டால் ஆளுமை விருத்தி பாதிக்கப்படும். இதனால் பழிவாங்கும், பழிவாங்கப்படும் சந்தர்ப்பங்கள் பெருமளவில்
சாத்தியமாகின்றது. இதனையே உளவியலாளர்கள் பொல்பி (Bowlby), öI’lọ (Suttie), புள்ளிவிபர ஆய்வுகளினடியாக நிரூபித்துள்ளனர். அன்புறவுத் தேவை இன்மையால் ஒழுக்கமற்ற நடத்தை, பழிவாங்கும் செயற்பாடுகளில் தீவிர அக்கறை கொள்கின்றனரென் ஹேவிட் ஜென்கின்ஸ் கூறுகின்றார்.
இன்றைய விஞ்ஞான தகவல் தொழில்நுட்பம் வளர்ந்த போதிலும், குழந்தை முதல் முதியோர் வரை வாழக்கை எனும் சத்திரத்தில் சிக்கிச் சுழன்று பல அழுத்தங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை. எனவே தான் அறிவு விஞ்ஞான ரீதியான பெறுபேறு நேர்வழியில் (Positive / ProgreSS) செல்லுமிடத்து அனுபவ ரீதியான பண்பு ரீதியான பெறுபேறுகள் சமூகமட்டத்தில் (Negative) எதிர்சமூகவிளைவுகளையே கூடுதலாக உண்டாக்குகின்றன.
Reference:
Educational Psychology: Open University OfSri Lanka. Gardnes Lindray and ElliotAronson: The Hand Book of Social Psychology Paul H.Landis: Sociology
நான் உளவியல் சஞ்சிகை புரட்டாதி. ஐப்பசி 2004 10

gb. p560 ppb$60s (B.A.Hons) உடுவில்.
“முதியோர் எனப்படுவோர் வயது முதுமையடைதல், மற்றும் உடல், உள ரீதியாக தளர்ச்சியுற்ற நிலையினை அடைந்தவர்களை முதியோர் எனலாம்” என்று பென்சிலவேனியா குடித்தொகைக் கல்வி நிலையத்தை சேர்ந்தவருமான Linjiang என்பவர் தெரிவித்துள்ளார். பொதுவாக சிலர் தமக்குப் பேரப்பிள்ளைகள் பிறந்ததும் இளைப்பாறும் பருவத்தை அடைந்து விட்டதாக எண்ணுவர். சிலர் விவசாயக் குடும்பங்களில் பிள்ளைகள் விவசாயம் மற்றும் கைத்தொழில் கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர், தாம் முதியோர்கள் எனக் கருதி இளைப்பாறுகின்றனர். வறிய குடும்பங்களில் முதியோர் இளைப்பாறுதல் என்பது தம்மால் எதுவித தொழில்களும் செய்ய முடியாது, உடல், உளரீதியாக தாழ்வு ஏற்படுகிற போது முதுமை அடைந்துள்ளதை கருதுகின்றனர். 1982 ஆண்டு “World Assembly on Ageing” இன் பிரகாரம் 60 வயதுக்கு மேற்பட்டோரை வயோதிபர் என வரைவிலக்கணப் படுத்தப்பட்டுள்ளது.
இன்று முதுமை என்பது பெரும் பிரச்சினையாக உருவெடுத்து வருகின்றது. ஒருவர் முதுமைப் பருவத்தை அடையும் முன்னரே முதுமைப்பருவத்திற்கான ஆயத்தங்களை செய்து வைக்க வேண்டிய தேவை இன்று உள்ளது. அதிகரித்து கொண்டு செல்லும் உள்நாட்டு, வெளிநாட்டு இடம் பெயர்வுகள், நவீனமயமாக்கத்தின் விளைவாக அதிகரித்துச் செல்லும் எதிர்பார்ப்புக்கள் என்பன காரணமாக முதியோர்கள் என்பவர்கள் ஒதுக்கப்படுகின்றனர். உடல் வலிமையை இழந்து நிற்கும் முதியவர்கள், மாறிக் கொண்டிருக்கும் மனித செயற்பாடுகளின் விளைவாக உள வலிமையையும் இழக்கும் தன்மை அதிகரித்துக் காணப்படுகிறது.
ஆரம்ப காலங்களில் கூட்டுக்குடும்ப முறை தந்தையாதிக்கம் மேலோங்கியிருந்த காலத்தில் முதியவர்களை பேணுவது குடும்பத்தின் ஒரு கடமையாக கொள்ளப்பட்டது. ஆனால் இன்று முதியோரைக் காப்பாற்றுவதிலும், பேணுவதிலும் குடும்பத்தின் பொறுப்பு குறைந்து கொண்டு வருகிறது. இளைய தலைமுறையினர் முதியதலைமுறையினருடன் ஒத்துப் போகும் போக்கும் குறைந்து வருகின்றது. இதனால் முதியோருக்கும் இளையோருக்கும் இடையே முரண்பாடு ஏற்படுகின்றது. இதன் விளைவாக இவ்விரு பிரிவினருக்கும் இடையிலான உறவு குறைக்கப்பட்டு குடும்பத்திலிருந்து முதியவர்கள்
நான் உளவியல் சஞ்சிகை புரட்டாதி. ஜப்பசி 2004 11

Page 8
  

Page 9
o e o os e o so e o os oo e o os oo e o so so oo e o so o oooo
: N
:
一
一
பல ககழ
,● e O.
ד
| e
lif a TG) மண து சிதைக்கப்ப O e e (GGOLITGOGO! o O e M00SL LS SL L SL SL SL L L L L L L L L L L SL L L L L L L L S L L L L LLLLL L LSLLLLL LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL L0L L 0L 0L 0LSLL C L L 0L L L 0L L L0L L L00L LL0L LL0L0L 0LL 0LL LLLLL LL
ിന്ധു -
SYSSL LL SLS LGGS LS SL SLS 一 انسا of =、 飞 三
நான் உளவியல் சஞ்சிகை" புரட்டாதி. ஐப்பசி 2004" । ।।।। ه | ---- - متحفgiع سه م- . ।
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிள்ளைகளின் நுண்ணறிவை வளர்ப்பதில் பெற்றோரின் பங்கு
காலத்தின் தேவைக்கிணங்க பிள்ளைகளின் நுண்ணறிவு வளர் க்கப்பட வேண்டியது அவசியமாக உள்ளது. உலகம் பல்வேறு துறைகளிலும் பரந்து விரிந்து, செல்லும் அளவுக்கு பிள்ளைகளின் நுண்ணறிவு வளர்க்கப்படாமலிருக்குமாயின் சமூக மாற்றத்திற்கேற்ப அவர்களால் ஈடுகொடுக்க முடியாதிருக்கும். ஆதலால் பிள்ளைகளில் நுண்ணறிவு
வளர்க்கப்பட வேண்டிய பொறுப்பு சமூகத்தின் 6666)IT நிலையினருக்கும் இருக்கிறது. பாடசாலைகள், ஏனைய சமூக நிறுவனங்கள் பிள்ளைகளின் நுண்ணறிவை வளர்ப்பதற்கான
சாதனமான நிலைமைகளைக் கொண்டிருந்தாலும் கூட இப்பணி அதிகளவில் பெற்றோரைச் சார்ந்ததாகவே இருக்கின்றது. காரணம் கூடியளவு நேரத்தைப் பிள்ளைகள் பெற்றோருடன் கழிப்பதனாலும், பெற்றோர் பிள்ளைகளுக்கிடையிலர்ன நெருக்கம் போன்று மற்றைய நிலையினருக்கும் - பிள்ளைகளுக்கிடையில் இல்லாதிருப்பதனாலும் பெற்றோரின் பங்கே அதிகமாக உள்ளது.
நுண்ணறிவு தொடர்பான பல்வேறு கருத்துக்கள் பல அறிஞர்களாலும் முன்வைக்கப்பட்டிருக்கின்றனது. அவற்றுள் சில குறிப்பிடத்தக்கவையாகும்.
* “நுண்ணறிவு என்பது புதுத்தேவைகளுக்குத் தக்கவாறு தனது சிந்தனையை நனவுடன் பயன்படுத்தும் பொது ஆற்றல் ஆகும்’
- ஸ்டேர்ன். * “கருத்தியல் சிந்தனைத் திறனே நுண்ணறிவாகும்”
- டெர்மன்.
*"நோக்கத்தோடும் சிந்தனை அடிப்படையிலும் சூழ்நிலைக்குத் தக்கவாறு நடப்பதற்கு உதவும் முழுமையான திறனே நுண்ணறிவு”
- வெளிலர். * “கிரகித்தல், நெறிப்படுத்தல், திறனாய்தல், கண்டுபிடித்தல் ஆகிய திறன்களே நுண்மதி”
- அல்பிரட்பினே.
* “பகுத்து தொகுத்து ஆராய்வதற்குரிய உள ஆற்றலே நுண்மதி” எபின்ஹவுஸ்.
நான் உளவியல் சஞ்சிகை புரட்டாதி. ஐப்பசி 2004 i 5

Page 10
米 “எல்லாவகையான திறன்களுக்கும் அடிப்படைப் பொதுக் காரணியாக விளங்குவது நுண்ணறிவு”
ஸ்பியர்மன்.
நுண்மதியை வளர்ப்பதில் பரம்பரை, சூழல் வளர்ப்புக் காரணிகள் செல்வாக்குச் செலுத்துகின்றன. வாட்சன் என்னும் அறிஞர் சூழற்காரணிகள் நுண்மதியை நிர்ணயிப்பதில் செல்வாக்குச் செலுத்துகின்றன எனவும், பேர்ட் என்பவர் பரம்பரையும், சூழலும் செல்வாக்குச் செலுத்துகின்றன எனவும் ஷர்டில் என்பவர் பரம்பரையும், வளர்ப்புக் காரணியும் காரணம் எனவும் கருதுகின்றனர். ஷர்டில் வேர்த்தின் ஆய்வின் படி பரம்பரைக் காரணி 64 வீதமும், சூழற்காரணி 18 வீதமும், வளர்ப்புக் காரணி 18 வீதமும் நுண்ணறிவில் செல்வாக்குச் செலுத்துகின்றன என்கிறார். எனவே பிள்ளைகளில் நுண்ணறிவை வளர்ப்பதில் சூழற்காரணி, வளர்ப்புக் காரணி என்பவற்றிற்கு குறிப்பிடத்தக்க பங்கு இருப்பதனால் இவ்விரு விடயங்களிலும் பெற்றோர் கவனம் செலுத்துவது பிள்ளைகளின் ஆளுமை வளர்ச்சிக்கு உதவியாக அமையும்.
குடும்பத்தில், குடும்பச்சூழலில் பெற்றோர் கீழ்வரும் செயற்பாடுகளில் கவனம் செலுத்தவதன் மூலம் பிள்ளைகளின் நுண்ணறிவையும், அவற்றினுடான கல்வி வளர்ச்சியையும் ஓரளவுக்கேனும் உயர்த்த முடியும்.
வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்துதல். இன்று யாழ்ப்பாண மாவட்டத்தில் வாசிப்புப் பழக்கம் அருகி வருவதாக பல கல்விமான்கள் குறிப்பிட்டுள்ளனர். கல்வித் தர வீழ்ச்சிக்கு இது ஒரு முக்கிய காரணியாகக் கருதப்படுகிறது. ஆதலால் குடும்பத்தில் வாசிப்புப் பழக்கத்தை எற்படுத்துவதில் பெற்றோர் அதிகளவு அக்கறை செலுத்துவது ஆரோக்கியமான ஆளுமை வளர்ச்சிக்கு உதவியாக அமையும். பார்த்துப் பழகும் பண்பும் சிறுவரிடையே அதிகளவு காணப்படுவதால் முதலில் பெற்றோர் வாசிப்புப் பழக்கத்தில் முன் மாதிரிகை காட்டுவது அவசியமானதாகும். சஞ்சிகை, பத்திரிகை, போன்றவற்றை வீட்டில் வாசிப்பதற்கான ஒழுங்குகளை மேற்கொள்வதும், நூலகத்திற்கு அழைத்துச் சென்று நூல்களை வாசிப்பதற்கு வழிகாட்டுவதும், வாசிப்புத்திறனை வளர்ப்பதற்குச் சாதகமாக அமையும். “வாசிப்பதனால் மனிதன் பூரணமடைகின்றான்’ ஆதலால் வாசிப்பு பழக்கத்தின் மூலம் நுண்ணறிவையும், மொழித்திறனையும் வளர்த்துக் கொள்ள முடியும்.
ஒய்வு நேரப் பயன்பாடு.
ஒய்வு நேரங்களைப் பயனுடைய விளையாட்டுக்களில் செலவிடலாம். சிந்தனையைத் தூண்டக் கூடிய விளையாட்டுக்களில் ஈடுபடுவதன் மூலம் நுண்ணறிவை வளர்க்க முடியும். சதுரங்கம் (Chess) போன்ற உள்ளக விளையாட்டுக்கள் (Indoor Games) நுண்ணறிவை
நான் உளவியல் சஞ்சிகை புரட்டாதி - ஐப்பசி 2004 16

வளர்ப்பதில் முக்கியம் பெறுகின்றன. பூந்தோட்டம் அமைத்தல், அழகியல் உணர்வுகள் ( சித்திரம் வரைதல், வாத்தியக்கருவிகளை இசைத்தல்) வளர்த்தெடுக்கப்படுவதன் மூலமும் நுண்ணறிவை வளர்க்கலாம். சிந்தனை வளர்ச்சி. உடல் இயக்கம் போன்றன ஆரோக்கியமான ஆளுமை வளர்ச்சிக்கும் தூண்டுதலாகின்றது.
பெற்றோர் - பிள்ளைகளின் மகிழ்ச்சியான உரையாடல் பெற்றோர் பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக உரையாடுவதன் மூலம் பிள்ளைகளின் பிரச்சினைகள் தீர்க்கப்படுகின்றன. பெற்றோரில் பிள்ளைகளுக்கு நம்பிக்கை பிறக்கிறது. தமக்கு நேரிடும் பிரச்சினைகளை, சிக்கல்களை பெற்றோருக்குச் சொல்ல வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படுகிறது. ஆதலால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகிறது. பெற்றோர் பிள்ளைகளுடன் உரையாடும் போது அவை பயனுடையவையாக இருப்பது நன்று. பிள்ளைகளுக்கு அருகில் இருந்து அவர்களின் சிந்தனையைத் துாண்டும் வகையிலான விடுகதைகள், துணுக்குகள், புதிர் கணக்குகள் போன்றவற்றைக் கேட்பதன் மூலம் அவர்களின் நுண்ணறிவை வளர்க்க முடியும்.
தொடர்புச்சாதன பயன்பாடு. இன்று வானொலி இல்லாத குடும்பங்கள் இல்லை என்று கூறும் அளவுக்கு வானொலியின் Lju66l LIT(6 அதிகமாக உள்ளது. தொலைக்காட்சியும் பெரும்பாலான குடும்பங்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இத் தொடர்புச்சாதனங்களும் பிள்ளைகளின் நுண்ணறிவை வளர்ப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. வெறுமனே சினிமா, தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு மட்டும் பிள்ளைகள் முக்கியத்தவம் கொடுக்காது அறிவு ரீதியான பல்வேறு விடயங்களையும் பார்த்து, கேட்டு பயனடையும் வகையில் பெற்றோர் கவனிப்பதும் இன்றைய காலத்தின் அவசியமாக உள்ளது.
பிள்ளகைளின் விருப்பு, வெறுப்புகளுக்கு மதிப்புக் கொடுத்தல். உணவு, 9-60L, பழக்கவழக்கம் போன்றவை தொடர்பாக பிள்ளைகளுக்கு பிள்ளைகள் வேறுபட்ட உணர்வுகளைக் கொண்டிருப்பார்கள். பிள்ளைகளின் விருப்பு வெறுப்புக்களை அறியாது தமது விருப்பு வெறுப்புக்களைப் பிள்ளைகளில் திணிக்கும் போது உளநெருக்குவாரத்திற்கு உள்ளாகலாம். உணவு விடயத்தில் கூட பிள்ளைகளின் விருப்பத்திற்கு மாறாக விருப்பமில்லாதவற்றைத் திணிப்பது அவர்களின் மன உளைச்சலுக்கும் உடல் ஒவ்வாமைக்கும் காரணமாகிவிடலாம். போசாக்கான உணவு நுண்ணறிவை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகிப்பதனால் பெற்றோர் இது விடயத்திலும் கவனம் செலுத்தவது பயனுடையது. தவறான அல்லது பிள்ளையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்குக் கெடுதலை ஏற்படுத்தக் கூடிய மனப்பாங்குகள் இருப்பின் புத்திமதிகளை ஆலோசனைகள் வழிகாட்டல்கள் மூலமாக களையப்பட வேண்டியதும் அவசியமாகும்.
நாண் உளவியல் சஞ்சிகை புரட்டாதி. ஐப்பசி 2004 17

Page 11
பிள்ளைகளுக்கு பாராட்டு கணிப்புகொடுத்தல் பாடசாலைகளில் அல்லது ஏனைய சமூகநிறுவனங்களில் நடைபெறும் நிகழ்வுகள் அல்லது போட்டிகளில் பங்கு பற்றும் போதும் அவற்றில் வெற்றிபெறும் போதும் அவர்களுக்குரிய பாராட்டு அல்லது கணிப்பு வழங்குவது அவர்களின் உற்சாகத்தை ஆர்வத்தை மேலும் மேலும் வளர்ப்பதாக அமையும். சமூகத்தில் அல்லது குடும்பத்தில் நல்ல செயல்களைச் செய்யும் போது கூட அவர்களைப் பாராட்டுவது நல்ல விளைவுகளை ஏற்படுத்தவதாக அமையும். அவ்வாறு பெற்றோர் செய்யும் போது அவர்களில் நம்பிக்கையும் தொடர்புகளும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படுகிறது.
கற்றலுக்கான சூழலை ஏற்படுத்திக் கொடுத்தல். நுண்மதியை வளர்பதில் கல்விக்கு முக்கிய பங்குண்டு. ஆதலால் அன்றாடம் பாடசாலைகளில் கற்றவிடயங்களை பிள்ளை வீட்டில் மீட்டல் செய்வதற்கான அமைதியான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதும், பிள்ளை இருந்து படிப்பதற்கான தளபாட வசதி, படிப்பதற்கு ஏற்ற சீரான வெளிச்சம் போன்றவற்றை அமைத்துக் கொடுப்பதும் அவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் நுண்ணறிவு வளர்ச்சிக்கும் சாதகமாக அமைகின்றன. அத்துடன் பிள்ளைக்கு அருகில் இருந்து கற்றல் செயற்பாடுகளுக்கு உதவுவதும் பயனுடையதாகும்.
எனவே குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழலை உருவாக்குவதுடன் பிள்ளைகளுடனான உரையாடல், விளையாடல், அன்பு காட்டல் ஆகிய செயற்பாடுகள் மூலம் பிள்ளைகளின் நுண்ணறிவு வளர்ச்சிக்கு பெற்றோர் பங்காற்ற முடியும். இவை ஒன்றுடன் ஒன்று நெருங்கிய தொடர்புடையதும் வேறாக்க முடியாததும் ஆகும் என்பதை பெற்றோர் உணர்வதன் மூலம் பிள்ளைகளின் வளர்ச்சிக்கு வழிகாட்டலாம்.
滕
உசாத்துணை நூல்கள் : முருகசெல்வம். ஜான். “கற்றல் குறைபாடு ஏன்' சென்னை. பெனடிக்ற் பாலன். யோ. “கல்வி உளவியல் அடிப்படைகள்” சென்னை." முருகசெல்வம். சீ. “மனவளர்ச்சிக் குறை” சென்னை.
நான் உளவியல் சஞ்சிகை புரட்டாதி. ஜப்பசி 2004 18
 

இளமையில் பாலியல் அறிவு
சாள்ஸ் கொலின்ஸ்
வாழ்வை நாம் உண்மையில் வாழ நாம் மகிழ்ச்சியாக இருக்கவும் பிறரை மகிழ்ச்சிப்படுத்தவும் இந்த வாழ்க்கை பல நிலைகளாக பிரிக்கப்படுகின்றது. வயது ரீதியாக
了、
s بے یقیجہ:""?
F_E_ஆ. ஏற்ற உணர்வும் இருக்கின்றது என்று
- s
சொல்கிறார்கள் உளவியலாளர்கள்.
“உன்னையே நீ அறிவாய்” என்றார் கிரேக்க மாமேதை சோக்கிரட்டீஸ், இன்று நாம் அனுபவிப்பதும் பார்ப்பதும் மனிதர் தமது முழுமையையும் தமது வாழ்வையும் பற்றி அதிகம் சிந்திப்பதில்லை.
* பிள்ளைப்பருவம் (Childhood) * காளைப்பருவம் (Adolescence) * முதிர்பருவம் (Adulthood) * நடுத்தரவயது (Middle Age) * கிழப்பருவம் (Old Age)
இன்று எமது சமூகத்திலுள்ள காளைப்பருவம் முதிர்பருவம் இவ்விரு பருவங்களும் தான் வாழ்வில் முக்கியமான கால கட்டங்களாகும். இப்பருவத்தில் குறிப்பாக காளைப்பருவம் (Adolescence) புதிய உணர்வுகள் இவர்கள் மனதில் உதிக்கின்றன. இந்த வயதிலே உள்ளவர்கள் தம்முடன் தாமே நடக்க வேண்டியவர்களாக உள்ளர்கள். வாழ்க்கையில் தமக்கு ஏற்படும் 6T6b6).T உணர்வுகளுடனும் வாழ்க்கையை அவர்கள் வாழ வேண்டும்.
காளைப்பருவம் அது என்ன? காளைப்பருவம் என்பது வாழ்வில் இன்னுமோர் வாழ்விற்கு காலடி எடுத்து வைப்பது போல் ஆகும். அதாவது வாழ்வில் அதிகமான மாற்றங்கள் ஏற்படும் பருவம். உடல் ரீதியாகவும் உளரீதியாகவும் என்றும் சொல்லிக்கொள்ளலாம். புதிய தொடர்புகள் ஏற்படுத்தும் காலம். தன்னை தானே பொறுப்பெடுக்கும் காலமாகும். இப்பருவத்தில் இரு முக்கிய மாற்றங்கள் அவர்கள் வாழ்வில் ஏற்படுகின்றது.
சி உடல் மாற்றம் (Physical Changes) é S 6001ff6) el6Ö6vg5! D–6n LDrogolb (Emotional Changes)
நான் உளவியல் சஞ்சிகை புரட்டாதி. ஐப்பசி 2004 19

Page 12
இப் பருவத்தில் ஆண் பெண் இருபாலாரும் பாலியல் உணர்வுகள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றது. இப்பருவத்தில் அவர்கள் பாலியல் ரீதியாக பல கட்டங்களை தாண்டவும் பாலியல் பற்றிய உண்மையான முதிர்ச்சி அடைந்து கொள்ளும் பருவம் ஆகும். இன்று விஞ்ஞானமும், தொழில்நுட்பமும, மனித நாகரீகமும் மிகவும் உச்சக் கட்டத்தை அடைந்து செல்கிறது. அதே சமயம் மனிதன் தனது மனித நிலையையும் மாண்பையும் வளர்த்துக் கொள்ளாமல், மிகவும் வெறுக்கவும் வேதனை தரக்கூடியதாகவுள்ள செயல்பாடுகள் நிகழ்வதை நாம் அறிவோம்.
இக் காளைப் பருவத்தில் பாலியல் உணர்வு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இன்று பாலியல் என்ற பதம் வெளிப்படையாக கலந்துரையாட முடியாத ஓர் பாடமாக அல்லது கருத்தரங்காக அமைந்துள்ளது. பருவத்தில் இருக்கும் ஓர் உணர்வு வயது போக எல்லாம் சரியாகிவிடும் என்ற எண்ணம் தான் பெற்றோர் மட்டத்திலும் அல்லது வழிகாட்டிகள் மட்டத்திலும் இருப்பதை உணரக்கூடியதாகவுள்ளது.
இன்று மறைமுகமாக அறிய முற்படும் ஓர் அறிவு பாலியல் அறிவாகும். தமது வயதில் ஏற்படும் உணர்வுகளை சரியான முறையில் நெறிப்படுத்த கற்றுக் கொள்வது சிலரே. உணர்வுகளை மதிப்பவர்களும் சிலரே. இன்று வெளியாகும் சினிமா எமது இளையோரின் எந்த அறிவை அல்லது பண்பை அல்லது சமூக உணர்வை வெளிப்படுத்தும் ஓர் உன்னதமான 96IL5)T5 அமைகின்றது? பாடல்கள் அல்லது கதை எல்லாம் இளம் வயதினருடைய உணர்வுகளுடன் சேர்ந்ததாக அமைந்துள்ளது. பெற்றோர் வாழ்வு, உழைப்பு, தியாகம் என்ற எந்த உண்மையும் தருவதாகவில்லை.
மாதம் ஒரு முறை மாறி வரும் உடைகள், பாடல்கள, அமைப்புகள் இவ்வாறு வாழ்க்கையை அடிக்கடி மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையேல் வாழ்வு இல்லை என்ற கருப்பொருள் தான் வந்து போகின்றது. இவை மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.
இன்று இளையோர் மத்தியில் பாலியல் அறிவு மிகவும் குறைவானதாகவுள்ளது. அதை அறிவு ரீதியாக அறிந்து கொள்ளல் மிகவும் குறைவு. அவ்வாறாக அறிவு ரீதியாக பேசப்படும் போதும் வெட்கம் அல்லது அப்படி பேசுவது தவறானது என்ற கருத்து பொதுவாக இருக்கின்றது. இதற்கு அடிப்படை காரணம் இப் பாலியல் பற்றிய அறிவில் மதிப்பில்லாத தன்மை, பாலியல் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க தெரியாமை, பாலியல் விடயங்கள் மற்றவர்களை பகிடி செய்வதற்கும், இழிவு படுத்துவதற்கும், கோபத்தை தீர்த்துக் கொள்ளவுமே பயன்படுத்தக் கற்றுக் கொள்கிறார்கள்.
நாண் உளவியல் சஞ்சிகை புரட்டாதி. ஐப்பசி 2004 20

இளையோரே உங்களையும் உங்கள் உணர்வுகளையும் மதியுங்கள். மற்றவர்களையும் (ஆண் + பெண் ) மதிக்க கற்றுக் கொள்ளுங்கள். நல்ல நடத்தையுள்ளவர்கள் வாழ்வில் வெற்றியையே சம்பாதிப்பார்கள். பெற்றோர்களே உங்கள் இளையோரை மதியுங்கள். அறிவு சொல்லுங்கள். பிழையை அவர்கள் செய்தால் மூடி மறைத்தால் நீங்கள் அவர்களை வளர விடவில்லை. நல்ல குடும்ப சூழ்நிலை, நல்ல நண்பர்களுடனான சூழ் நிலை, நல்ல அறிவு சம்மந்தமான தொலைக்காட்சி நிகழ்வுகள், வாசிக்கும் புத்தகங்கள் இவற்றை அறிவுறுத்துங்கள். பாலியல் பற்றிய படிப்படியான முதிர்ச்சியான அறிவை பெற்றுக் கொள்ள வழி சமையுங்கள்.
இன்று இளையோர் மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில் வாழ்கிறார்கள். இளமை பருவம் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கே. இன்று தமது இளமை பருவத்தை நிறைவாக மகிழ்வாக வாழும் இளம் உள்ளங்கள் இருக்கின்றார்கள். இன்று ஒவ்வொருவரும் ( ஆண் + பெண் ) தமது வாழ்வைப் பற்றி யோசிக்க வேண்டும். நான் எங்கே
போகின்றேன்? என் எதிர் காலம் என்ன? -
எம் இதய நன்றிகள்
கடந்த வருடங்களில் “நான்” சஞ்சிகை ஒருங்கிணைப்பாளராக சிறந்த சேவையாற்றி உயர்கல்விக்காக இத்தாலி சென்றுள்ள
அருட்தந்தை ஜெறோம் அடிகளையும் நிர்வாகக் குழுவில் இணைந்து “நான்” வளர்ச்சிக்கு அரும்பணியாற்றி தங்கள் கல்வியாண்டை முடித்து வெளியேறுகின்ற அருட்சகோதரர்கள் கமலானந்தன், ஜெயராஜன் கூஞ்ஞ, மற்றும் சிங்கள சகோதரர்கள் சானில், லக்சிறி என்பவர்களையும் இன்னும் கடந்த மூன்று வருட காலமாக 'நான்' சஞ்சிகை 9ig)61685 பணியாளராக பணியாற்றி வெளியேறுகின்ற சகோதரி விஷ்வாந்தினியையும் நன்றியோடு நினைக்கின்றோம். N
நான் உளவியல் சஞ்சிகை புரட்டாதி ஐப்பசி 2004 21

Page 13
திருமதி. சோ. தேவிகா) நெளுக்குளம், வவுனியா, எனக்கு அம்மா வேனும் அம்மாவைப் போல - அன்பு காட்ட
அம்மாவைப் போல சமைக்க, நோய் வரும் போது என்னை கவனிக்க இரவில நித்திரை செய்ய அருகில படுக்க அம்மாவைப் போல யாரும்
&! ாயை இழந்த சிறுமி ஒருத்தி கூறிய உண்மைச் சம்பவம். இங்கே இருக்கின்ற தாயை நோயுற்ற காலத்தில் பயன் அற்றவர் என கைவிட்ட மகன் ஒருவரின் செயலை கதையாக பார்க்கப்
LmllTTTTTTTtmm ummmmmmm S TTmLmtmTT yMyTTTTmmS yMmLLmLmmLS S S SL L
“தொண்டையெல்லாம் காயுது சோடா ஏதும் குடிச்சா நல்லாய் இருக்கும் காசு இல்லையே” என வாய்விட்டு கூறுகின்றார் அந்த வயோதிய அம்மா. நான் மெதுவாக அவரின் பக்கம் பார்க்கின்றேன்.
வயது 65 இருக்கும. ஆரோக்கியமான முதுமையை காட்டும் முகம். வெள்ளை நிற பூப்போட்ட சேலை வெள்ளை மேற்சட்டை. நரைத்த தலைமுடி சுத்தத்தின் வெளிப்பாடாக பஞ்சு போன்று மிகவும் அழகாக இருக்கிறது. எனக்குள் ஒரு பாச உணர்வு தோன்றுகின்றது. மீண்டும் அவரை அன்போடு பார்க்கின்றேன்.
முகத்திலே கவலையின் கோடுகள். கண்கள் யாரையோ தேடுவது போல அங்குமிங்கும் பார்க்கின்றது. யாரை தேடுகிறாவோ? எங்க இருக்கிறாரோ? ஆஸ்பத்திரிக்கு வந்த அம்மாவுக்கு ஒரு பத்து ரூபாய் கூட கொடுத்து அனுப்பாத பிள்ளை எனக்கும் பிறகு இப்படி தான். சிநதனை எங்கோ செல்கிறது. சிந்தனைக்கு தடையாக எனது ஆசிரியர் கோகிலா மகேந்திரன் வந்து நிற்கின்றார். பாலம் வரமுன் பாலத்தை கடக்கிறது பற்றி கவலைப்படக்கூடாது ஓம் ஓம் இப்ப எனக்கு என்ன நாற்பது வயது தானே நான் என்னுடைய அம்மாவை கவனிக்கிறதை வைத்து என்ர பிள்ளைகள் என்னை கவனிக்க மாட்டினமோ?. இது தேவையில்லாத கவலை. மீண்டும் அந்த அம்மாவை பார்க்கின்றேன். பக்கத்தில் இருந்த மாஸ்ரர் அந்த அம்மா அவரை அப்படித் தான் சொல்லி சோடா வாங்கி தரச் சொல்லி கேட்கிறார். அவர் அம்மா ஆஸ்பத்திரிக்கு வந்தா அன்பகத்திற்கு போய்தான் ஏதும் குடிக்க வேணும். இப்ப இது உங்களுக்கு புதுசு கோகப் போக தெரியும். தேவையில்லாமல் அலட்டிக் கொள்ளாமல்
நாண் உளவியல் சஞ்சிகை புரட்டாதி. ஐப்பசி 2004 22
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இருங்கோ. மருந்து எடுத்ததும் வான் வரும் போகலாம். கண்ணன் கீதை உபதேசம் செய்கின்றான் அநாதைகள் எப்படி இருக்கவேண்டும் என அம்மா அமைதியாகி விட்டார். நானும் மருந்து எடுக்க தான் நீண்ட வரிசையில் இருக்கின்றேன். நான் எழும்பினால் எனது இடம் போனாலும் போகும். சரி போகட்டும் எது தான் யாருக்கு சொந்தம். இந்த அம்மாவின் நிலை வாழ்வின் நிலையாமையை தெளிவாக்கியது. இந்த நேரத்திலாவது அவவை சந்தோஷப்படுத்த வேண்டும். கண்டீனுக்கு போய் சோடா ஒன்று வாங்கி வந்து அம்மாவுக்கு கொடுக்கின்றேன். அவர் என்னை பார்க்கின்றார். நான் அன்புடன் அவர்களோடு கலந்து நின்றேன். மெதுவாக தலை அசைத்தேன். சோடாவை மடமடவென குடிக்கிறார். நான் அவரின் பக்கத்தில் இருக்கின்றேன். கொஞ்ச நேரம் அமைதியாக இருக்கிறார். தயங்கியபடி பிள்ளை எந்த இடம்? மெதுவாக கேட்டார். நான் மகிழ்ச்சியாக நான் வவுனியா தான். ரீச்சராய் இருக்கின்றேன். மருந்து எடுக்க வந்தனான். தலையை அசைத்து உதட்டுக்குள் சிரிக்கிறார். என்ன நினைத்தாரோ? தெரியவில்லை. அவரின் உதடுகள் மெல்லப் பிரிந்து கதைக்க தொடங்குகின்றது. நான் யாழ்ப்பாணம் சுண்டுக்குளி. யாழ்ப்பான கச்சேரிக்கு பக்கத்தில் தான் (நான் தலை அசைத்து ஒத்துழைவு கொடுக்கின்றேன்). இப்ப ஒரு மாதமாய் ஆஸ்மா வருத்தம் வந்திட்டுது. முன்ன இல்ல இப்பதான். வயதும் போக சத்தம் கெட்டு போயிட்டுதானே. யாழ்ப்பாண ஆஸ்பத்திரியில மருந்து எடுத்து கொஞ்சம் சுகம். என்னால இப்ப ஒரு வேலையும் செய்யயேலாது. மகனும் மருமகளும் வேலைக்கு போறவை. அவவும் ரீச்சர் தான் மகன் கச்சேரியில் வே ல செய்கிறான். பேரப்பிள்ளைகள் இரண்டு பேர் மூத்தவன் பத்து வயது. 5ம் வகுப்பு படிக்கிறான். சின்னவன் 3ம் வகுப்பு படிக்கிது. ஒருமாதமாய் வீட்டு வேலை ஒன்றும் செய்ய முடியவில்லை.
எல்லாம் மகனும் மருமகளும்தான். எனக்கு சாப்பாட தண்ணிவெண்ணி எடுத்து வைக்க வேணும் வழமையாய் அவை 6மணிக்கு தான் எழும்பிறவை. நான் 5 மணிக்கு எழும்பிடுவன். இடியப்பம் அவிச்சு சம்பல் சொதி வைச்சு தேத்தண்ணியும் போட்டுக் கொடுப்பன். எல்லாரும் பார்சல் கட்டி கொண்டு போக 8 மணி ஆகும். சில வேளை நாய் 85.19. 6060T கடிதான். அதைக்காணேல்ல இதைக்காணேல்ல எண்டு. பிறகு நான் மெதுவாய் சந்தைக்கு போய் கறி வாங்கி கொண்டு வந்து சோறு குழம்பு வெள்ளைக் கறியெண்டு எல்லாம் வைக்க 1 மணியாகும். அதற்கு பிறகு தான் ஓய்வு எனக்கு. அப்படி செய்யிறது நல்ல சந்தோஷம். என்ர பிள்ளை சந்தோஷமாய் இருக்கிறது எனக்கும் சந்தோஷம் தானே. இந்த வருத்தம் வந்த பிறகு கைகால் எல்லாம் ஓய்ஞ்சு போச்சு. உடம்பில நடுக்கம். ஒரு மாதம் என்னால ஒன்றும் செய்யேலாமல் போச்சு. தம்பி ஒருக்கா கொழும்புக்கு போயிட்டு வந்தவன், வந்த உடனேயே கொழும்பில நல்ல ஆஸ்பத்திரியில் என்னை கொண்டே காட்ட வேணும் எண்டவன்.
நான் உளவியல் சஞ்சிகை புரட்டாதி. ஐப்பசி 2004 23

Page 14
எனக்கும் சந்தோஷம். எத்தனை நாளுக்கு இப்படி கிடக்கிறது. (ஒம் ஓம் நான் ஒத்துழைப்பு வழங்குகின்றேன்)
பிறகு ஒரு நாள் கச்சேரியடியில இருந்து 5 மணிக்கு பஸ் ஏறினம். சரியாய் பஸ் ஏறி ஏதோ எல்லாம் பதிந்து ஒரு மணிக்கு ஆஸ்பத்திரிக்கு வந்தம், தம்பி உள்ளே போய் இருக்கச் சொன்னான். நான் போய் பார்த்தன் கட்டில்கள் இருந்தது. நானும் கட்டில இருந்தேன். தம்பி வெளியில போனவன் பிறகு வரவேயில்லை. அப்ப பக்கத்தில இருந்த ஆச்சியிட்ட எப்ப டொக்ரர் வருவார் என்று கேட்டன். அப்பதான் அவ சொன்னா இது ஆஸ்பத்திரியில்ல இது அநாதைகள் இருக்கின்ற இடம். இதற்கு பெயர் அன்பகம். இது வவுனியா என்டா. அப்பதான் நான் அநாதை என்பதை அந்த ஆச்சி சொன்ன அநாதை இல்லம் என்பதில இருந்து அறிஞ்சன். (அம்மாவின் கண்கள் கண்ணிர் பெருக்கெடுத்து ஓடுகின்றது. நான் அவரை அழ விடுகின்றேன். அந்த உணர்வுக்குள் அவரை வாழ விடுகின்றேன். உங்களை அநாதை இல்லத்தில் விட்டதை நினைக்க உங்களுக்கு சரியான கவலையாக இருக்குது. அது எனக்கு விளங்குதம்மா) அழுது கொண்டே சொல்கிறார். என்ர ஒரு பிள்ளை அவன் தான். அவனை விட்டிட்டு நான் இருந்ததே இல்லை. என்ர கணவர் சாக கிடக்கேக்க அம்மாவை கவனமாக பார் தம்பி, என்று சொன்னவர். என்னால அவனை விட்டிட்டு இருக்க முடியாது. பேரப்பிள்ளைகள் என்னை சுத்தி சுத்தி வருங்கள் அதுகளுக்கு வருத்தம் வந்தா வீட்டை இருந்து யார் பார்க்கிறது?. தம்பி 1 மணிக்கு சாப்பிட வருவான். ஆர் சாப்பாடு போட்டு கொடுக்கிறது. (ஒம் ஓம் உங்கட பேரப்பிள்ளைகளையும் மகனையும் விட்டிட்டு இருக்கிறது உங்களுக்கு கஸ்ரமாய் இருக்கு. மருமகளும் வேலைக்கு போறவர். அவர்களை நீங்க கவனிச்சது போல ஆர் பார்க்கப் போகினம் என்று கவலைப்படுறிங்க) தலையசைத்தபடி மெளனமாக இருக்கிறார். (நீங்க இல்லாமல் அவையும் சரியாய் கஸ்ரப்படுவினம் உங்களை தேடி மகன் வரலாம். அப்ப நீங்க.)
அவரின் முகத்தில் சிரிப்பு. நான் போக வேணும். வன்னியில சரியான வெய்யில். யாழ்ப்பாணம் மாதிரி வருமோ? அங்கத்தைய கறிபுளி என்ன மாதிரி. நல்லுார் கோயிலுக்கு நான் நடந்து போய்விட்டு வந்திடுவன். இங்க வந்து கோயிலே காணேல்ல. (ஒம் ஓம் நான் தலை அசைக்கின்றேன்). அம்மா மருந்துக்கு போக வேண்டிய முறை வந்திட்டுது. அவ உள்ளே போய்விட்டார்.
அந்த மகனை பற்றி அவனுடைய அம்மா நோயாளி ஆகிவிட்டார். இனி அவர் தேவையில்லை. அவனுக்கு குழந்தை பருவத்தில் நோய் வரவில்லையா? அப்போது அம்மா அவனை விட்டுவிட்டாரா? இனியும் அவன் அம்மாவை தேடிவருவானா? அப்பா அமமாவை வயோதிய காலத்தில் கவனிக்க அந்த குழந்தைகளுக்கு அப்பம்மாவின் கதையை உதாரணமாக அமையுமா? காலம் தான் பதில் சொல்லும்.
நான் உளவியல் சஞ்சிகை புரட்டாதி. ஐப்பசி 2004 24

ృత్తా:
*" VP. தனேந்திரா",
•. யாழ். பல்கலைக்கழகம்." சிறுவயதில் ஏற்படுகின்ற அனுப்வ்ங்க்ளும், காண்கின்ற மறையான காட்சிகளும் தான் ஒருவர் மற்றவரை பழிவாங்கும் எண்ணத்தை உருவாக்குகின்றது. இயற்கையில் மனிதன் நல்லவன். அவன் யதாாத்த வாழ்க்கையில் எதிர் கொள்ளுகின்ற சின்னத்தனங்களினால் உளத்தாக்கமடைந்து, தாம் யாரால் பாதிக்கப்படுகின்றார்களோ அவர்களை பழிவாங்க தக்க தருணம் வரும் வரை காத்திருக்கின்ற நிலையும், அதனால் விரக்தியுற்று போகும் நிலையும் ஏற்படுகின்றது.
பழிவாங்கும் உணர்வை எமது சமூகம் சிறுவயதிலேயே ஊட்டுகின்றது. சமூக கட்டமைப்பும், குடும்ப அமைப்பும், சமய நிறுவனங்களும், நல்லதை செய்கிறோம் என்று கருதி பழிவாங்கும் உணர்வை வளர்க்கின்றது. ஏனெனில் ஒரு பிள்ளை பிறந்ததில் இருந்து, சமூக மயமாகி வளர்ந்து வருவதற்கிடையில் எத்தனையோ பிரச்சினைகளை எதிர் கொள்ளுகின்றது. அந்த பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க தீய வழிகளை கையாளுகின்றது. இதனை இவ் அமைப்புக்கள் ஊக்கப்படுத்தி தக்க முறையில் எதிர் கொள்ள வழிகாட்ட தவறுகின்றது.
கடின உழைப்பினால் முன்னேறலாம் என்ற நிலை மனித மனங்களில் அகன்று பட்டம், பதவி, பணம், அந்தஸ்து போன்ற எது வேணுமானாலும் மற்றவரை பழிவாங்கி, ஏமாற்றி, மிகவும் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம் என்ற மனப்பான்மை இன்று வளர்ந்திருக்கின்றது. இவை வெளியரங்கமாக சமூகத்தில் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்ற நடத்தைக் கோலங்களும் ஆகும்.
சுயநலப் போக்கு
தவறுகள் என்று கருதப்படுகின்றவற்றை எல்லாம் துணிந்து செய்கின்றவர்கள், பாவங்கள் என்று போதிக்கப்படுபவற்றை விழிப்புணர்ச்சியோடு கையாளுகின்றவர்கள், சின்னத்தனங்கள் எனக் குறை கூறப்படுகின்றவைகளைக் கூடாது செயல்புரிவோர், பிரமாதமாக வாழ முடிகின்றது இன்றைய சமுதாயத்திலே. ஆனால் இத்தனையும் தமது சுயநலத்திற்காக பிறரை பழிவாங்கி மேற்கொண்ட உத்திமுறைகளே.
தவறுகளையும், சின்னத்தனங்களையும், கண்டு குமுறுகின்றவர்கள் சமூகநோக்குடன் பேசுபவர்கள், உயர் நிலைக்கு வந்ததும் திரும்பவும் மற்றவர்கள் மீது அடக்கு முறைகளையும், பழிவாங்கல்களையும்
நாண் உளவியல் சஞ்சிகை புரட்டாதி. ஐப்பசி 2004 25

Page 15
ஏற்படுத்திக் கொள்கின்றார்கள். இது சமூகத்தில் ஒரு சுழற்சி முறையாக நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றது.
நீதி நியாயத்தின் படி வாழ்பவர்களின் வாழ்வு மேம்பாடு காண்பது அரிது. ஆனால் சொல்ல முடியாத பாதக செயல்களை செய்பவர்கள் தான் வாழ்வில் நல்ல வசதியாக இருக்கிறார்கள். இவர்கள் பக்கம் தான் இறைவனும் செயற்படுகின்றார். ஆகவே “நல்லவனுக்கு காலமில்லை” என்று விரக்தியுடன் கூடிய கருத்துப் பரிமாற்றம் பாதிக்கப்பட்ட மக்களின் உளக்கிடக்கையாக வெளிப்படுகின்றது.
அன்புள்ளம் இல்லாமை'
பழிவாங்கும் உ
உணர்வு மனிதர்களிடம் அதிகரிக்க காரணம் எவரையும் அன்புள்ளத்துடன் நேசிக்க கற்றுக் கொள்ளாமையே. அன்புள்ளத்தை ஒருவர் தமக்குள்ளே வளர்த்துக் கொள்ள வேண்டும். இது இல்லை என்றால் மனிதனிடம் அவநம்பிக்கையும் விரக்தியும் தோன்றும். ஆகவே எம்மை நாமே நேசிக்க, அன்பு செய்ய முதலில் கற்றுக் கொள்வோம். எம்மை நாம் நேசித்தால் தான் பிறரை நேசிக்க முடியும். ஒருவர் தன்னை நேசிக்க கற்றுக்கொள்ள வில்லை என்றால் அவர் உள்ளத்தில் மற்றவரை, தன்னை பழிவாங்கும் உணர்வு ஏற்படும். WIN.INIS W.W.I.E.S.H.I.
எமது சமூகப் புலத்தில் தற்கொலை அதிகரித்துக் காணப்படுகிறது. இது தன்னையும், மற்றவரையும் பழிவாங்கும் நோக்கிலேயே மேற்கொள்ளப்படுகிறது. அதாவது நீண்ட காலம் காதலித்து கலியாணம் வரை காத்திருக்க, காதலன் காதலியை மறுக்க, அதனை தாங்க முடியாது காதலி தற்கொலை செய்து கொள்கின்றாள். இங்கு எதிர்பார்த்தது கிடைக்கவில்லை. இனி வாழ்க்கை சூனியம் என்று கருதி தன்னையே வெறுத்து பழிவாங்கும் நிலையும், தன் காதலனை பழிவாங்கும் நோக்கிலும் தற்கொலை செய்து கொள்கின்றாள். இந்த தற்கொலைகள் மூலம் காதலனின் உள்ளத்தில் குற்றவுணர்வும், மனசாட்சியும், தினமும் உறுத்தி வேதனைப் படுத்துகின்றது. இது ஒரு வகை பழிவாங்குதல்.
அடுத்து காதலி காதலன் மீது காதல் கொள்வது போல் நடித்து, அவர்களிடம் இருக்கும் பொருட்களையெல்லாம் பெற்றுக் கொண்ட பின் காதலை மறுப்பது, இவ்வகை காதலினால் பெண்களினால் ஆண்களும், ஆண்களினால் பெண்களும் பாதிக்கப்படுகின்றார்கள். இதன் விளைவு தற்கொலை, தாடிவளர்த்தல், உடலில் காயங்களை ஏற்படுத்துதல், திருமணமே முடிக்காமல் இருத்தல் போன்ற தம்மை தாமே பழிவாங்கும் நிலை ஏற்படுகின்றது. “நஞ்சினை நெஞ்சில் வைத்து
நாவினில் அன்பு வைத்து நல்லவர் போல் நடிப்பான்”
நான் உளவியல் சஞ்சிகை புரட்டாதி. ஜய்பசி 2004 26

என்பான் கண்ணதாசன். இத்தகைய போலி வேடம் பழிவாங்கும் நோக்குடனேயே ஒருவர் தமது வாழ்வில் கைக் கொள்ளுகின்றார்.எமது சுயதேவையை பூர்த்தி செய்வதற்காக மற்றவரை ஏமாற்றிக் கொள்கின்றோம். அன்பு காட்டுவது போல சிரித்து மகிழ்கின்றோம். ஆனால் அத்தனைக்குப் பின்னாலும் ஏதோ ஒரு பழிவாங்கும் உணர்வு இருக்கிறது.
உண்மையான அன்புள்ளவர்கள், மற்றவரை பழிதீர்க்க எண்ணாது. சுயதேவையை மட்டும் பூர்த்தி செய்வதை கருத்தில் கொள்ளாது, மற்றவரையும் தம்மையும் கருத்தில் கொண்டு அதன் மேம்பாட்டிற்காக செயற்படுவார்கள். All
ஆசிரியர்கள் எதிர் நோக்கும் சவால்கள். ". வகுப்பறையில் செய்த குற்றத்திற்காக, தண்டனை பெற்ற மாணவன் தண்டனை கொடுத்த ஆசிரியரை பழிவாங்க நினைப்பது ஆரோக்கியமானது அல்ல. இன்றைய சூழிநிலையில் பாடசாலையில் ஆசிரியர்கள் எதிர் நோக்கும் பிரச்சனை இது தான். குற்றம் செய்யும் மாணவர்களை தண்டிப்பதா? அல்லது கண்டும் காணாது இருப்பதா?
ஏனெனில் மாணவர்கள் தம்மை தண்டிக்கும் ஆசிரியர்க்கு எதிராக பழிவாங்கும் உணர்வுடன், சுவரொட்டிகளையும், வீடு புகுந்து அடிப்பதும், அவர்களின் சொத்துக்கு நாசம் விளைவிப்பதும், வீதிகளில் கெட்ட வார்த்தைகளினால் தூவிப்பதும் பெருகிவருகின்றது. கல்வியை கொடுக்கும் ஆசான் தெய்வத்திற்கு சமமானவர் என்ற நிலைப்பாடு அகன்று விட்டது. முன்பு இருந்த மதிப்பு, மரியாதை இன்று கொடுக்கப்படுவதில்லை. இவை ஏன் என்று கேட்க வேண்டி இருக்கிறது? இத்தகைய உணர்வு நிலை இன்றைய மாணவர் சமூகத்திற்கு எங்கிருந்து வருகின்றது? என்பதை இனம் கண்டு அதன்
ஆணிவேரை அகற்ற இன்றைய சமூகம் முன்வரவேண்டும்.
எமது வாழ்வியலில் பழிவாங்கும் உணர்வை தூண்டும்
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும், சினிமா படக்காட்சிகளும் பெரும் பங்கு வகிக்கின்றது. எப்போதும் நாம் பார்க்கின்ற காட்சிகள் நேரான காட்சிகளாக இருக்க வேண்டும் என்பது உளவியல் சிந்தனை, ஆனால் தொலைக்காட்சியிலும், சினிமாவிலும் பழிவாங்கும் உணர்வையே அதிகம் மெருகூட்டி காட்சிப்படுத்தப்படுகின்றது. அதனை தினமும் பார்த்து நாமும் அவ்வாறே வாழ முயற்சிக்கின்றோம். இன்று மாணவர்களிடையே இதன் தாக்கம் பெருகி இருக்கின்றது. அதன் பிரதிபலிப்பு தான் போராட்டம் என்ற ரீதியில், எதையும் செய்ய உரிமை இருக்கின்றது. அதனை யாரும் தட்டிக் கேட்க கூடாது என்ற
போர்வையில் செயற்படுகின்றார்கள்.
நான் உளவியல் சஞ்சிகை புரட்டாதி ஐப்பசி 2 - 5

Page 16
தகுந்த முறையில் வழிப்படுத்தல். ஆசிரியர்கள் மாணவர்களை தகுந்த முறையில் வழிப்படுத்த தவறுகின்றதும் இத்தகைய பழிவாங்கும் உணர்வுக்கு காரணமாகும். ஆசிரியர்கள் மாணவர்களின் பின்புலத்தை அறிந்து வழிப்படுத்த முற்பட வேண்டும். வகுப்பறையில் இருக்கும் ஒவ்வொரு மாணவர்களும், பல்வேறுபட்ட பின்னணிகளை கொண்டவர்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருபிரச்சினை மனநிலை இருக்கும். இதனை அறிந்து அதற்கு ஏற்றது போல வழிப்படுத்த வேண்டும். தனியே பாடவிதானத்துடன் மட்டுப்படுத்திக் கொள்ளாது, முக்கியமாக மாணவர்களின் உள ஆற்றுப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டு அவர்களின் தவறுகளையும், குற்றங்களையும் சீர் செய்ய முயற்சிக்க வேண்டும்.
ஏனெனில் கடந்த இரண்டு தசாப்த கால யுத்தத்தினால் ஏற்பட்ட பாதிப்பு இன்னும் மாணவர்களில் பிரதிபலிக்கின்றது. தற்போது நடைபெறுகின்ற நுகர்வு கலாச்சாரத்தின் பாதிப்பும் இருக்கின்றது. குடும்ப பின்னணியை பாாத்தால், குடி போதையில் தகப்பன் ஈடுபடுவதினால், நிம்மதி இழந்த மனநிலையும், இதனால் அக்கம் பக்கத்தாருடன் சண்டை சச்சரவும் ஏற்படுகின்றது. இது அநேக மாணவரை பாதிக்கின்றது. ஆகவே இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் செயற்பட வேண்டும். ஆசிரியர்கள் எப்போது அதிகாரிகளாக அல்ல நண்பர்களாக சமநிலைத்தன்மை கொண்டு இருக்க வேண்டும்.
“காட்டாறு வெள்ளம்” போல மனதை கரைபுரண்டு ஓட விடாது
பக்குவப்படுத்த நாம் பழக வேண்டும். எம் மனதை கட்டுப்படுத்த எமக்கு முடியாத போதே பழிவாங்கும் உணர்வு எழுகின்றது. எப்போது நல்லதை நன்மைத்தனத்தை மனதில் வளர்த்து தூரநோக்குடன் எமக்கும் மற்றவருக்கும் பாதிப்பு உண்டுபண்ணாத வகையில் எமது செயல்கள் 960) DU வேண்டும். சினிமாவுக்கு 9960)LDUIT86 இருப்பதிலும் பார்க்க நாம் இயற்கையை இரசிக்க, ஆரோக்கியமான நல்ல புத்தகத்தை வாசிக்க, நல்ல நண்பர்களுடன் ஆரோக்கியமான முறையில் உரையாடி நல்லதையே சிந்திக்க வேண்டும். அப்போது
எம்மையும் பிறரையும் பழிவாங்கும் உணர்வு எப்போதும் உருவாகாது.
நான் உளவியல் சஞ்சிகை புரட்டாதி. ஐப்பசி 2004 28

பாலியல் கல்வியின் அவசியம்
காந்தரூபி கந்தசாமி உளவளத்துணையாளர்
சுகவாழ்வு நிலையம்
பெற்றோர்கள் பிள்ளைகளை தமது சுற்று வட்டத்திற்குள் நிற்க வேண்டும் என்றே எண்ணிக் கொள்கிறார்கள். தமது பிள்ளைகள் நமது கைகளில் இருந்து விலகிச் சென்று கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மை. அறிவியல், அறிவார்ந்த விஞ்ஞான பூர்வமான ரீதியில் கற்கிறார்கள். இவர்களுடைய முன்னேற்றப்பாதைக்கு நாங்கள் தடையாக இருக்கக்கூடாது. எமது உளவியல் வளர்ச்சிப் படிகளை ஆறு வகையில் அடக்கலாம்.
பிள்ளைப்பருவம் முன்பிள்ளைப்பருவம் பின்பிள்ளைப்பருவம் கட்டிளமைப்பருவம் இளமைப்பருவம் நடுத்தரபருவம் (upg|60LDULIOb6).ILD
கட்டிளமைப் பருவத்தினருடைய காலம் பற்றி நோக்கினால் 12 வயதிற்கும் 18 வயதிற்குமிடைப்பட்ட வயது வாலிப பருவத்தின் ஆரம்பம், இயக்கம், தொழிற்பாடுகளை குறிப்பாக கொள்ளும். இப்பருவத்தில் பாலியல் உணர்வு இயல்பானதே, எனினும் வாழ்வு என்பது தனித்த உணர்வுகளால் தீர்ந்து விடும் ஒன்றல்ல. அது சுய இன்பம், சுய கட்டுப்பாடு, என்பதோடு இணைந்தது என்பதை மறவாது இருப்பது நன்று. இப்பருவகாலத்தில் பாலியல் உணர்வுகள், பாலியல் ஆசைகள், சுயதேடல்கள், எதிர்பாலரின் பாலியல் போக்குகளை அறிந்து கொள்வதில் ஆர்வம், சுயமாக பாலியல் இன்பங்களை அடைந்து கொள்ளல், விளையாட்டுப் பொருட்களை பாலியல்
தேவைகளுக்குப் பயன்படுத்தல், UIT65u6) உணர்வுகளைத் துாண்டக்கூடிய நூல்களைக் கற்றல் உ + ம் ( தாம்பத்திய உறவு புத்தகம், பத்திரிகைகள், திரைப்படங்கள், LIFTL6866i,
வலைப்பின்னல்கள்) போன்றவற்றை பார்த்தல், பாலியல் இச்சைகளைத்
நான் உளவியல் சஞ்சிகை புரட்டாதி. ஐப்பசி 2004 29

Page 17
தீர்த்துக் கொள்ளல் ( அங்க சேஷ்டைகள், பலாத்காரம்) போன்றவை இப்பருவத்தினரிடையே காணப்படும் இயல்புகளாகும்.
இவர்கள் தமது பாலியல் அறிவை ஆராயும் நோக்கில் வீட்டிலும், பாடசாலைகளிலும், சகப்ாடிகளின் தொடர்பு மூலமும் பாலியல் ரீதியான அறிவுரைகளை தவறாக பெறுகின்றனர். இதனால் தவறான கருத்துக்களை பெறுகின்றார்கள். பிள்ளைகள் தம்மை அறியாமலே GLDuillust'(6 (p60pur (686061T (Somatic Comptain) a 600TfG) பூர்வமாக முறையிடுவார்கள். உ-ம் என்னால் படிக்க முடியவில்லை. ஒரே குழப்பம். இவ்முறைப்பாட்டின் பின்புலத்தில் மனச்சோர்வு, தயக்கம், பசியின்மை, குற்றஉணர்வு, கோபம், நம்பிக்கையற்றநிலை, வக்ரக உணர்வு, பயம் போன்ற நெருக்கு வாரத்திற்குள் உள்ளாவார்கள்.
இன்று பிள்ளைகளின் வளர்ச்சியில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் தான் முதன்மை தளபதிகள். பிள்ளைகள் அறிவுப் பசி கொண்டவர்கள். அப்படியானவர்களுக்கு உரிய நேரத்தில் போஷாக்கான உணவை கொடுத்தால் அறிவு, ஆளுமை தானாக ஊற்றெடுக்கம். சில பிள்ளைகள் இவ்விருவராலும் தண்டிக்கப்படுகின்றார்கள். அம்மாவிடம் பாலியல் உறுப்புக்களின் பெயரைக் கொண்டு வினாவைக் கேட்கும் போது பிள்ளைக்கு இளவயதில் அடிதான் கிடைக்கிறது. "சொன்னால் வெட்கம் சொல்லாட்டி மானம்" பிள்ளை தானாகவே சிந்திக்கத் தொடங்குகின்றது. அவை சொல்லத்தகாத சொற்பிரயோகம், ஏன் மூடிமறைக்கிறார்கள்? என தனக்குள்ளே நினைக்கத் தொடங்குகின்றது. பிள்ளைகள் பாலியல் தொடர்பான வினாக்களை கேட்கும் போது பயப்படவோ, கோபப்படவோ தேவையில்லை. நாம் சர்வ சாதாரணமாக விளக்கம் கொடுக்கலாம். முதலில் பாலியல் என்றால் என்ன? என்பதையும் பாலியல் உறுப்புக்களின் தொழிற்பாடுகள் பற்றிய கருத்துக்களை பிள்ளைகளுக்கு கொடுக்கலாம். இதற்கு மாறாக பருவம் அறியாத பிள்ளைகளுக்கு வடுக்கள் காயங்கள் ஏற்படுத்தாதீர்கள். இவை எல்லாம் உணர்வுகள் ரீதியால் நனவிலிப்பகுதியான ஆழ் மனதில் கறையாக படிந்திருக்கும் படிமமாகும். பிள்ளை காலம் காத்திருந்து எப்படியும் இதை என்ன என்று அறிய முயற்சி செய்யும் இவ்வேளையில் பிள்ளை நல்ல வழியில் சென்றால் பலர் பாராட்டுவார்கள். தவறான வழிக்குச் சென்றால் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மீது குற்றம் சாட்டுவார்கள், மாணவர்களுக்கு உரிய வேளையில் உரியவற்றைக் கற்பிப்பதே நன்று, அல்லாவிட்டால் பிள்ளையின் எதிர்காலத்திற்கு நாங்கள் தான் காரணமாக இருக்கலாம்.
இன்று பிள்ளைகளுக்கு பாலியல் கல்வி தொடர்பாக "சுகாதார அமைச்சு, தேசிய கல்வி நிறுவனம்" இணைந்து "மலர்ந்த யெளவனம்' என்ற நுாலை வெளியிட்டது. இந்நூலானது தென்பகுதி
நான் உளவியல் சஞ்சிகை புரட்டாதி. ஐப்பசி 2004 30

பாடசாலைகளில் போதிக்கப்பட்டு வருகின்றது. ஆனால் யாழ் மாவட்ட பாடசாலைகளில் இன்னும் தூசி தட்டப்படவில்லை. ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்பிக்க வெட்கப்படுகின்றார்கள். எப்படி நாம் பிள்ளைகளுக்கு இதை எடுத்துக் கூறுவது? அவர்கள் எம்மை எப்படி பார்ப்பார்கள்? என்று மாயக் கனவுகளை காண்கிறார்கள். நாம் ஒன்றை மட்டும் விளங்கிக் கொள்ள வேண்டும். இன்றைய
ம்ாணவர்கள் அப் பாலியல் சம்மந்தமான் வினாக்களில் முன்னேறி
விடுகின்றார்கள். நீங்கள் போதிக்காவிட்டால் உங்கள் மீது குற்றம் சாட்டுவார்கள். ஆயினும் "இந்த மலர்ந்த யௌவனம்" என்ற பாடநூல் யாழ் மாவட்டத்திலுள்ள அனைத்துப்பாடசாலைகளுக்கும் விநியோகிக்கப்பட்டது. இவை பற்றிய அறிவூட்டல், தொடர்பாடல், விழிப்புணர்வு கருத்தரங்குகள், பயிற்சிப்பட்டறைகளை அரச சார்பற்ற நிறுவனங்கள் ஆசிரியர்களுக்கு பயிற்சியை வழங்கி வருகிறது. அதைவிட மாணவர்களில் உளரீதியான பிரச்சனைகளை ஆசிரியர்கள் மாணவர்களுடன் எப்படி அணுகுவது என சில ஆசிரியர்களை தெரிவு செய்து இவர்களை Master Counselor என அழைக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு போதிய பயிற்சிகளை வழங்கி ஆசிரியர் கைய்ேடாகவும் G.T.Z நிறுவனத்துடன் சாந்திகம் என்ற நிறுவனமும் இணைந்து இப்பயிற்சி நெறியை திறமையாக முன்னெடுத்து வருகின்றது. இதைவிட பிரச்சனைகளை கையாள முடியாவிட்டால் பல உளவியல் துறை நிறுவனங்கள் உண்டு. அவர்களுடன் தொர்பு கொண்டால் தமது சிக்கல்களை குறைக்கலாம். இதைவிட எமக்கு வேறு என்ன
தேவை.
இன்றைய யாழ்ப்பாண குடும்பங்களில் பாலியல் ரீதியான பிரச்சனைகள், வாழ்க்கை உடைவுகள், முறிவுகள், பிள்ளைகள் மதிக்காமை, காரணத்தை அறியாமல் அடித்தல், கோபித்தல், பாலியல் ரீதியான தொந்தரவுகள், உறவு நிலையில் திருப்தியின்மை, ஆர்வமின்மை, மறைமுகமான வெளிப்பாடுகள் (பொருட்களை எறிதல், வீசல், உடைத்தல், நம்பிக்கையினம், குறைஉணர்வு) போன்ற செயற்பாடுகளை குடும்பத்தில் காணலாம். இவை எல்லாவற்றிற்கும் காரணம் பாலியல் கல்வி பற்றிய போதிய அறிவின்மையாகும்.
ஆகவே தான் இன்றைய நவீன காலகட்டத்தில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், பிள்ளைகள் சமூகமட்டத்தில் மிக முக்கியமான கல்வியாக பாலியல் கல்வி அமைகிறது. இனி வளர்ந் வரும் காலத்தில் அடிப்படைக் கல்வியாக பாலியல் கல்வி போதிக்கப்படும்
நான் உளவியல் சஞ்சிகை புரட்டாதி. ஐப்பசி 200 i 31

Page 18
ான ஒருதலைக்காதல் தொட்ர்பான
ண்ணம் இருக்கின்றன. இதோ க்கின்றோம் இவை உங்கள்
சகானா(புனைப்பெயர்) இப் பெண் பலரதும் விருப்பங்களுக்கு ஏற்ப தன்னை இசைவுபடுத்திக் கொண்டதாலேயே இவ்வாறான உளப்பிறழ்வுக்கு ஆளாகியுள்ளாள். காரணம் இங்குள்ள எமது கலாச்சாரத்தில் கணவனை பிடித்திருக்கிறதோ இல்லையோ எத்தனை வயது வேறுபாடு இருப்பினும் அவனை பெற்றோருக்கு பிடித்திருந்தால் சீதனம்சார் விடயங்கள் யாவும் சரியாக அமைந்தால் அவளையே திருமணம் நிச்சயித்து விடுவார்கள். இது சகானாவிற்கு மட்டுமல்ல அநேக பெண்களின் தலைவிதி. அந்த வகையில் பெற்றோரின் விருப்பத்தை மறுக்காத ஒரு அப்பாவி பெண் சகானா.
அடுத்து கணவன் அவள் பற்றிய விருப்புக்கள், வெறுப்புக்கள், ஆசைகள், கனவுகள் பற்றி எதுவுமே அறியாதவன். அவனது உடல் இச்சைகளை மட்டும் தீர்க்கும் ତୂ(b சாதனமாக நடமாடியிருக்கிறாள். இதில் அவளது விருப்புகளுக்கு மட்டும் பணியும் ஒரு பணிவான பெண்.
அருண் (புனைப்பெயர்) இவ்வளவு காலமும் அவள் பற்றிய எந்த வித அக்கறையும் ஆதரவும் அற்ற உறவுகளைச் சந்தித்த அவளுக்கு அன்பான பேச்சும், அவன் இவள் மீது காட்டிய அக்கறையும் மிகவும் கவர்ந்ததில் எவ்வித தவறும் இல்லை. இவ்வாறாக ஆதரவற்ற ஒரு பெண்ணை, அவளது கதையை, அவளது ஆதங்கங்களை ஒரு வருட காலத்திற்குள் அருண் கேட்காமலா இருந்திருப்பான்? அருண் இவளை இவ்வளவு காலமும் பயன்படுத்த வில்லை என்றால் ஏன் ஒரு வருட காலத்திற்கு பின்பு அவளை விலகிப் போவதையும், தவிர்ப்பதையும் செய்ய வேண்டும்? இப்பவும் தன்னை அருண் ஏன் விலக்குகிறான், தவிர்க்கிறான் என்பது பற்றி புரியாமல் “தானே ஒருதலையாக காதலித்து விட்டேன்’ என்று தன்னில் பழிபோடும் பேதைப் பெண்ணாக இருக்கிறாள் சகானா.
நான் உளவியல் சஞ்சிகை புரட்டாதி ஐப்பசி 2004 32
 
 
 
 
 

இவ்வாறு தொடர்ந்தும் தான் சந்திக்கும், உறவாடும் ஒவ்வொரு நபர்களும் தமது சுயநலம் தமது விருப்புகளுக்குக்காக இவளை பயன்படுத்தும் போது ஏமாற்றங்களை தொடராக அனுபவிக்கும் இப் பெண் உளப்பிறழ்வு அடையாமல் என்ன செய்வாள்?
வழமையான பெற்றோரும் இவள் விதிப்படியே அமைந்த கணவனுடன் அவள் தனது வாழ்கையை கொண்டு நடத்தியிருந்தாலும் கூட இவ்வாறு உளப்பிறழ்வுக்கு ஆளாகி இருக்க மாட்டாள். ஆதரவு தருபவ்ர் போன்று அக்கறை காட்டிய அருண் இவள் பற்றி முழுவதுமாக அறிந்தவுடன் விலகியிருக்க வேண்டும். அல்லது இவள் மேல் உண்மையிலேயே அக்கறை கொண்டவனாக இருந்திருந்தால், அவளை தற்கொலை முயற்ச்சிக்கு போகும் அளவிற்கு விட்டு விலகிப் போயிருக்க கூடாது. Empty chair Technique மூலம் கூட சகானா அருணுக்கே முற்றுப்புள்ளி வைத்திருக்கிறாள். எனவே ஏற்கனவே பாதிக்கப்பட்ட சகானாவுக்கு உளப்பிறழ்வைக் கொண்டு வந்தவர் அருண் என்பதில் சந்தேகமில்லை. மேலும் சகானாக்கள் போன்றவர்களை உளப்பிறழ்வுக்கு கொண்டு வரும் அருண்கள் பலர் எம்முடனும் உள்ளார்கள். ம.ஜேன் யாழ்.பல்கலைக்கழகம்.
புனைப் பெயரைத் தாங்கிய சகானா உண்மையில் வாழ வாழ்க்கைப் பட வேண்டியவள். ஒரு பெண் தனது கணவன் தன்னை நல்ல முறையில் நடாத்த வேண்டும், திருப்திகரமான உடலுறவு கொள்ள வேண்டும், பார்ப்பவர்களால், மதிக்கத்தக்க நல்ல ஜோடிகள் என்று கூறப்பட வேண்டும் எனப் பல எதிர்பார்ப்புக்களுடன் இருப்பாள்.
சகானா திருமணத்தை விரும்பியோ, விரும்பாமலோ வேறு வழியின்றிப் பதின்மூன்று வயது கூடிய பொருத்தமற்ற ஒருவரைக் கைப்பிடித்துள்ளாள். தனது கணவனுடன் உடலுறவு இன்பத்தினைச் சரிவரப் பகிர்ந்து கொள்ள முடியாதிருந்திருக்கலாம். (பருமனான உடல், சுமாரான அழகு, விருப்பமில்லாக் கணவன்) முற்று முழுதான சிற்றின்பத்தினை அனுபவிக்காத கணவன்நிலை? சகானா கட்டுப்பாடின்றி மக்கள் கூடும் பொது இடங்களிற்கு சென்றமை, அவள் தம் ஆதங்கமே ஆகும். கற்பனை கலந்த ஒரு தலைக்காதல் காமமுற்றாள்.அருணில். அவனின் உள் மனநிலை அறிந்த சகானாவால் முற்றுமுழுதான ஏமாற்றம்.
சகானாவின் கணவனோ, அன்றில் அருணோ அவளின் இன்ப ஊற்றினை உடலுறவுத் தவிப்பினை ஈடு செய்ய முடிய்வில்லை. எனவே அடங்காத உடலுறவு இச்சையினைத் தன் கணவனோ, அல்லது கனவுலக அருணோ திருப்திகரமாகத் தர மறுத்தமையினால் சகானா தன்னால் தானே உளப்பிறழ்வை ஏற்படுத்திக்கொண்டாள். ஏனோ தானோ வெனத் தாலி கட்டிய கணவனுடன் பிள்ளைகள் இல்லாது விட்டாலும் சிற்சில உடலுறவு இன்பத்தினை அனுபவித்து நல்வாழ்க்கையினை நடாத்தலாம் என்பது எனது கருத்தாகும்.
துரைச்சாமி ஜெகநாதன். கெருடாவில். ஒய்வு பெற்ற வங்கி அதிகாரி.
நான் உளவியல் சஞ்சிகை புரட்டாதி. ஐப்பசி 2004 33

Page 19
Y)
சகானாவின் உளப்பிறழ்வுக்கு அருண் காரணமல்ல. அவரது நன் நடத்தையினால் பக்குவப்படாத மனம் கொண்ட இந்த பேதை சலனப்பட்டிருக்கிறாள். ஆக இவளது உளப்பிறழ்வுக்கு அரண் காரணம் ஆகமாட்டார்.
சகானாவின் உளப்பிறழ்வுக்கு காரணம் சகானாவின் மனம். ஏனெனில் சகானா பச்சை மரமாக உலா போயிருக்கிறாள். அங்கு பார்த்த நல்ல செயல்கள் கொண்ட அருண் ஆணியாக இவள் உள்ளத்தின் ஆழத்தில் இறங்கியிருக்கிறார். பக்குவப்படாத மனதில் பதிபவை எல்லாமே பசு மரத்தில் ஆணி தான்.
ஆரம்ப மன நிலைக்கு சகானாவின் கணவன் பொறுப்பாளி அல்ல. ஆனாலும் தன்னில் பாதி சரியாக இயங்காவிட்டால் எந்த இயந்திரமும், எந்த மனிதனிலும் பலன் இருக்காது. ஆக தன்னில் பாதியான சகானாவின் நிலை தொடர இவரும் காரணமாக இருந்திருக்கலாம். ஏனெனில் "அன்பினால் பகையும் வெல்லலாம்” ஏன் ஒரு மனதை வெல்ல முடியாது? உண்மை அன்பு உலகையே வெல்லும் மனைவியின் மனதை மாற்றாதா? .. ஆக இவரில் பூரண அன்பு இருக்கவில்லை என்றே கருத வேண்டியுள்ளது.
பெற்றோர் பிள்ளையின் பாலகப் பருவமுதல் பால்யப் பருவம் வரை பாதுகாக்க வேண்டிய பொறுப்புடையவர்கள். இங்கு சகானாவின் வாழ்க்கையில் கண்டதும் காதல் கொண்டதே கோலம் என்றாக காரணமான அதி முக்கியஸ்தர்களாக இவள் பெற்றோர் இருக்கின்றனர். ஒரு பிள்ளையின் மனதை பண்புள்ளதாக, பக்குவம் நிறைந்ததாக பயன்படுத்த வேண்டியவர்கள் தவறி விட்டார்கள். நன்மை எது? தீமை எது? பண்பு எது? பாசம் எது? காதல் எது? மீறல் எது? பாலியல் எது? இப்படி முக்கியமானவற்றை முளையிலேயே அறிவிக்காமல் ஓர் உளப்பிறழ்வுக்கு முழுமூல காரணம் சகானாவை வளர்த்த இவர்கள் தாம். அவளது உளப்பிறழ்வுக்கு முழுமூல காரணம். ஆகவே சகானாவின் உளப்பிறழ்வுக்கு அவள் பெற்றோரே காரணம்.
S.A.R. 5d.6965. திருகோணமலை.
நான் உளவியல் சஞ்சிகை புரட்டாதி ஜப்பசி 2004 34
 

Elungminu|Les Elsello(Gú8umb
சசிகுமார் சுன்னாகம் தெற்கு
மனிதராகப் பிறந்த அனைவரும் பேச்சுச் சுதந்திரத்தை உடையவர்களாக இருக்கின்றார்கள். அதே போல் கேட்டல் திறனையும் இம்மக்கள் தமக்கே
உரித்துடையவர்களாகக் கொண்டுள்ளார்கள். ஆனால் இன்றைய கால
கட்டத்தில் எம்மிடையே நடமாடும் வேகம் அதிகரித்து வருகின்றது. பொறுமையென்ற வார்த்தையை நடவடிக்கைகளை மறந்து போய் இருக்கின்றோம். வயதில் மூத்தவர்களின் வார்த்தைகளை அறிவுரைகளை சிறியவர்களும் அதே நேரம் இளையோர்களின் தேவைகளை உணர்வுகளைப் பெரியவர்களும் கேட்கத் தவறிவிடுகின்றார்கள். இதன் காரணங்களால் எம்மத்தியில் முரண்பாடுகள் வளர ஏதுவாகி விட்டன. ஆரோக்கியமான வாழ்வினை ஒவ்வொருவரும் பெறுவதற்கு முதலில் செய்ய வேண்டிய வேலையாக செவிமடுத்தல் விளங்குகின்றது.
நாம் பேசுவதைவிட செவிமடுப்பதால் கூடிய வினைத்திறனைப் பெற்றுக் கொள்ள முடிகின்றது. இதன் நிமித்தம் கூறுபவரின் உணர்வுகளை (Feeling) நன்கு அவதானித்து அந்நிலமைக்குரிய சரியான கருத்தினை வெளிப்படுத்த முடிகின்றது. இதனால் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்பவர்களுக்கிடையே
சரியான உறவு ஏற்பட வழிவகுக்கின்றது.
அதே நேரம் குறித்த நபர் தன்னுடைய உணர்வுகளின் பால் உந்தப்பட்டு மற்றவரின் கருத்துக்களைப் பொறுமையுடன் செவிமடுக்காத போது அங்கே பிளவுகள் அல்லது வீண் முரண்பாடுகள் ஏற்பட வழிவகுக்கின்றது. செவிமடுத்தலானது உளவியல் பரப்பில் மிக வேண்டப்பட்டதொன்றாக உள்ளது. துணையாளர் கொண்டிருக்க வேண்டிய முக்கிய பண்பாகவும் இது உள்ளது. இதன் காரணத்தால் அல்லது தன்னுடைய வேதனைகளை களைய முடியாத உணர்வுகளை துணையாளரிடம் சொல்ல வேண்டும். அவர் பொறுமையாக என் கதையைக் கேட்பார். என்ற ஆதங்கத்தினால் தான் துணைநாடி ஆற்றுப்படுத்தலுக்கு (Counseling) வருகின்றார்.
இந்த வகையில் இத்துணைநாடியின் வார்த்தைகள் உடலசைவினால் வெளிப்படுத்தும் வார்த்தைகள் என்பவற்றையே நாம் பொறுமையுடன் செவிமடுக்க வேண்டியவர்களாவோம். பொதுவாக நல்ல குடும்பங்கள் நல்ல நண்பர்கள் என்பவர்களுக்கிடையே ஆரோக்கியமான உரையாடல்களுக்கு
அப்பால் விரும்பத்தக்க செவிமடுத்தல்களும் இடம் பெறுவதைக் கண்டு கொள்கின்றோம். அதனால் தான் அவர்கள் நிறைந்த மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றார்கள். 臀
எனவே இந்த நவீன வேகம் கொண்ட உலகத்தில் ஒவ்வொருவரும்
பொறுமையுடன் மற்றவர்களின் உணர்வுகளை ஏற்கப் பழகிக்கொள்ளல் வேண்டும். இதற்கு அடிப்படையாக மிளிர்வது ஆர்வத்துடனான செவிமடுத்தல் ஆகும். எனவே நாம் ஒவ்வொருவரும் எங்கள் வாழ்வில் பிறர் சொல்வதை செவிமடுத்த பின்னரே எங்கள் கருத்துக்களைக் கூறுவோமாக.
நான் உளவியல் சஞ்சிகை புரட்டாதி ஜப்பசி 2004 35

Page 20
ശ്ന கல. ', " யோசப்பாலா
ঠু e 昏 . ܓܠ
“தன்னகத்தே உள்ள மனிதனைப்பற்றி அறியாதவன் மற்ற
மனிதர்களைப் பற்றி ஒரு போதும் அதிகம் அறியவே முடியாது”
என்பார் நிக்கலாய் செர்னி கென்ஸ்கி எனும் அறிஞர்.
தன்னகத்தே உள்ள மனிதனைத் தேடுவது என்பது சுய தேடல் மூலமே அறிய முடியும். இன்று மற்றவர்களைப் பற்றி அறிவதிலும், அவர்கள் குறை நிறைகளை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதிலும் உள்ள ஆர்வம் தன்னுள் தன் பலம், பலவீனம், ஆற்றல், திறமைகளை தேடிக் கொள்வதில் சற்று நேரத்தைக் கூட செலவிடத் தயங்குகிறார்கள்.
தம் பெருமைபற்றி பறைசாற்ற முனையும் போது தன் தவறுகள், பலவீனங்கள் பற்றி அறிந்து கொள்வதில் நாட்டம் கொள்ளாததாலே தான் சமூகத்தில் தன்னை முன் நிறுத்த முடிவதில்லை. இவற்றுக்கு
பல காரணங்களைக் கூறலாம்.
தன் குறைகளை தானே ஏற்றுக் கொள்ள முடியாமையும், குறைகளை களைய, மறைக்க, மீண்டும் பல தவறுகளை செய்யும் நிலைகளும், சமூகம் தன்னைத் தப்பாக எடைபோட்டு விடுமோ என்ற பய உணர்வுகளும், தவறுகளைத் தாங்கி மீள முயலாமையும், தன்னுள்ளே தனக்கு எல்லைகள் போட்டுக் கொள்வதாலும், புன்னகை பூக்கவேண்டிய முகங்கள் கூட வாடிய மலர் போன்ற முகங்களாக உளக் காயத்தின் வெளிப்பாடுகளையே வார்த்தைகளாகவும், செயல்களாகவும் முரண்பட்ட நெருக்கீடுகளில் சிக்கித் தவிப்பதைக் காண்கிறோம்.
இவை சிறுவர், இளையோர், பெரியோர் என்ற வேறுபாடுகளைக் கடந்து யாவருக்கும் பொருந்தக்கூடிய செயல்களே. இதனால் தமது சூழல், குடும்பம், சமூகமும் சிக்கித் தவிக்கும் நெருக்கீடுகளில் மூழ்கி விடுகின்றது.
தம்மைப்பற்றி தாம் அறியாத போது தன்னை யாரோ ஒருவரின் சாயலாகவே உருவாக்க முனைவதால் தம் எதிரே காணும் பாத்திரங்களின் பிரதிகளாக்க முனையும் போது சூழலில் வசிப்போர், சினிமாவில் காண்போர் T.V யில் வரும் பாத்திரங்களாக மாற
நான் உளவியல் சஞ்சிகை புரட்டாதி. ஐப்பசி 2004 36
 

முனைவதாலே தான் வன்செயல், வக்கிரஉணர்வு, வல்லுறவு, போதைக்கதாநாயகர்களாகவும், போலி தலைவர்களகவும், சுரண்டி வாழும் ரெளடிகளாகவும் தம்மை மாற்றிக் கொள்கிறார்கள். இவர்கள் தமக்கான முடிவுகளை தாம் மேற்கொள்வதில் தயக்கம் காட்டுவதால் இவர்களை தவறான வழிகளில் ஈடுபட வைப்பது, பிறரின் கைப்பொம்மையாவது சுலபமாகிவிடுகிறது. இதன் விளைவுகள் நாட்டின் அமைதியற்ற சூழலைக் கூட உருவாக்கி விடும். ஆதலால் தனி மனிதனின் தன்னை அறியும் தன்மை அற்றுப் போதல் நாட்டின் சமூகச்சீர்கேட்டிற்கே வழியாகிவிடும். இவை நான் நானாக இராது தனித்துவ அடையாளத்தைத் தொலைத்து பிறரின் கைப் பொம்மையாகி தன்னை அழித்து விடுவதைக் காணலாம்.
அல்ல. உன்னைப் பற்றித்தான். நம் பகைவர்களில் மிகக்
கொடியவர்கள் நம்மகத்தேதான் உள்ளனர்”. என்பார் சார்ல்ஸ் எச். ஸ்பர்ஜன்.
எம்முன்னே இருக்கும் தீய சக்திகளைக் களையாது நல்ல செயல்களை உணரவோ, ஏற்கவோ, செயல்படவோ, அமைதியுடன் வாழவோ போராட வேண்டியுள்ளதற்கு எமக்குள் இருப்பதை நாம் இனம் காணத் தவறுவதே காரணம்.
எம்முள் எம்மைத் தேடுவதற்கு சற்று தனிமை, தியானம், உளஆற்றுப்படுத்தல், தன்னடக்கம் மிக அவசியமாகின்றது. இவற்றுக்கானதை தேட பயணங்களோ, பணங்களோ, நிவாரண உதவிகளோ தேவையில்லை. உன் அமைதிக்கான சூழலை உருவாக்கிக் கொள்ள, உன்னுள் அமைதி கண்டு சுய தேடலை தொடங்குதலே முதற் படியாகும்.
எமக்குள் தேடல் என்பது ஒரு நாளில் ஒரு கணத்தில் வந்துவிடாது. மனப்பக்குவ பயிற்சிகள் மூலம் உன்னுள் நீயாக உளம் மாறும் போது உன்னை நீ ஆள முடியும். உன் சிறப்புக்களை அடையாளம் காண முடியும் உன் மனம், உடல், ஆன்மாவின் அமைதியில் உன்னிடமுள்ள அதிவிஷேட சக்தி வெளிப்படும். இவை உனக்குமட்டுமல்ல உன் சூழலில் உள்ளோருக்கும் வழிகாட்டும், வசப்படுத்தும், வாழ்வின் அர்த்தங்களை வெளிப்படுத்தும்.
*உன்னகத்தே நோக்கு, நன்மையின் ஊற்று அகத்தே உள்ளது. நீ தோண்டினால் போதும்; அது எப்பொழுதும் கொப்பளித்துக் கொண்டு வரும்” என மார்க்கஸ் ஆரோலிஸ் என்பவரின் கூற்றின் அர்த்தம் புரியும்.
நான் உளவியல் சஞ்சிகை புரட்டாதி. ஜப்பசி 2004 37

Page 21
செல்வி. சாந்தவாணி தங்கத்துரை யாழ் மருத்துவ பீடம்
“ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்”
என்றார் தெய்வப் புலவர். அதாவது ‘நல்ல நடத்தையானது ஒருவனுக்கு மேன்மையை உண்டாக்குவதனால் நல்ல நடத்தையை உயிரைக் காட்டிலும் உயர்ந்ததாக மதித்து மிகவும் கருத்தோடு பாதுகாக்க வேண்டும்’ என்பது இதன் கருத்தாகும். ஒழுக்கம் பல்வேறு வகையாக வெளிப்படுத்திக் காட்டப்படுகிறது. மனம், வாக்கு, காயம் ஆகியவற்றால் ஒழுக்கப் பண்புகள் வெளிக்காட்டப்படுவதை நாம் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் கண்டிருக்கின்றோம். அத்தகையவற்றுள் பணிவு என்னும் பண்பு தலையானது என்றால் அதில் மிகையில்லை.
“இராச்சியம் உனக்கே” என்ற போது எவ்வாறு இராமனின் முகம் இருந்ததோ "இராச்சியம் பரதனுக்குரியது” என்ற போதும் அவ்வாறே இருந்தது. அத்துடன் இராமன் தனது சிற்றன்னையைப் பார்த்து" இதை அப்பா கட்டளையிட்டார் என்று கூற வேண்டுமா? தாங்கள் காலால் இட்டதை நான் தலையால் செய்ய மாட்டேனா? என்கின்றான். இந்தப் பணிவு என்னும் புலனடக்கம் எவ்வளவு மேம்பட்டது என்பது எவருக்கும் கூறாமலே விளங்கும்.
மனம் உள்ளவனே மனிதன் ஆவான். அந்த மனமும் இந்த உடலில் இயங்கினால்தான் மனிதன் உபயோகமுள்ளவனாவான். இந்த மனம் இயங்கும் புறவாயில்களே புலன்கள். இவை சரிவர இயக்க நிலையில் இல்லையென்றால் மனிதன் ஒரு நடைப்பிணமாகவே அலைய வேண்டி வரும். அத்துடன் மனிதனிடம் இருக்கும் மனம் வலிமையானதாக இருக்கவேண்டும். இல்லாவிடில் புண்ணியமில்லை. வலிமையான மனத்திலிருந்து தான் பயனுக்குரிய பணிவு பிறக்கும். பூனையை ஆவேசத்துடன் நாய் துரத்தினாலும் எப்போதும் தோற்றுப்போவது நாய் தான். ஏனெனில் வலிமை குறைந்த பூனையானது பணிவை மறந்து பயத்தைத் துறந்து வெகுண்டெழுந்து சிலிர்த்துச் சீறும் போது நாய் பின்வாங்கி விடுகிறது. உலகத்திலே பெரும் மகான்களாகச் சிறப்பிக்கப்பட்ட அனைவரது வாழ்க்கை வரலாற்றை எடுத்துப் பார்ப்பினும் அவர்களது வலிமையான மனங்களும் அத்தகைய மனங்களிலிருந்து பிறந்த பணிவும் தான் அவர்களது மகோன்னத நிலைக்கு ஆதாரம் என்பது கண்கூடு.
நான் உளவியல் சஞ்சிகை புரட்டாதி. ஜப்பசி 2004 38
 

மக்கா குறைஷிகளால் மக்காவை விட்டு விரட்டப்பட்ட முகம்மது நபி (6m)6)) அவர்கள் மீண்டும் மக்காவுக்குத் திரும்பியபோது பாதுகாப்பளித்த பெரியவரைக் குறைஷிகள் திட்டினர். தம்பொருட்டு அப்பெரியவர் மீது வசைமாரி பொழியப்படுவதைக் கண்டு நபியவர்கள் வருந்தி அவரைத் தம் பாதுகாப்பின் நிமித்தம் வரவேண்டாம் எனத் தடுத்தார். பின் அண்ணல் நபி அவர்கள் மக்காக் குறைஷிகள் முன்பாக நின்று மிகப் பணிவுடன் “சகோதரர்களே நான் இக்கணத்திலிருந்து அப் பெரியவரின் பாதுகாப்பில் இல்லை. பெரியோனாகிய இறைவனின் பாதுகாப்பில் இருக்கின்றேன். அவனுடைய பாதுகாப்பு எனக்குப் போதுமானது ஆதலால் என் பொருட்டு அப்பெரியவரை நீங்கள் இழித்துரைக்கவேண்டாம்” என்று மிக விநயமாக வேண்டினார்கள். நபிகளின் இந்தப் பணிவான வேண்டுகோளால் மக்காக் குறைஷிகளின் மனம் உடனடியாக மாறவில்லையாயினும் அண்ணல் நபி மீது அவர்கள் கொண்டிருந்த வெறுப்பும் கோபமும் படிப்படியாகத் தணியலாயிற்று. இது மக்காக் குறைஷிகள் பால் நபியவர்களுக்குக் கிடைத்த பணிவின் முதல் வெற்றி. “மனிதர்களை நோக்காது அகம்பாவத்துடன் முகத்தை திருப்பி விடாதே மேலும் பூமியில் கர்வத்துடன் நடவாதே நிச்சயமாக அல்லா தற்பெருமை பிடித்தவர்களை விரும்புவதில்லை” என்ற அல்குர் ஆனின் வாசகம் நபியவர்களின் வாழ்க்கயையில் நிதர்சனமாயிற்று. அத்துடன் “யார் இறைவனுக்காகப் பணிந்து நடக்கின்றாரோ அவரை இறைவன் உயர்வடையச் செய்கின்றான். இன்னும் யார் அகம்பாவத்துடன் நடக்கின்றாரோ அவரைத் தாழ்த்தி விடுகின்றான்.” என்ற அண்ணல் நபியவர்களின் கூற்றும் இங்கு சிந்திக்கத்தக்கது.
தொட்டதெல்லாம் பொன்னாகும் வள்ளல் துாயமகன் இயேசுபிரான் தனது பன்னிரண்டு சீடர்களது கால்களைக் கழுவியதன் மூலம் பணிவின் மேன்மையை இவ்வுலகிற்கு எடுத்துரைத்தார். அத்துடன் தனது சீடர்களைப் பார்த்து “நீங்கள் சமூகத்துக்குள் சென்று பணிவுடன் சேவை புரியுங்கள்” என்றார். மகான்களின் வரலாறுகளை ஒப்பிட்டு நோக்குகையில் மக்களின் பாவங்களைப் போக்கப் புகுந்து மிகக் கொடுரமாகச் சித்திரவதை செய்யப்பட்டவர்கள் இயேசு பிரானைத்தவிர வேறு எவருமிலர். சீடர்களிடையே தங்களில் பெரியவர் யார்? என்ற சர்ச்சை ஏற்பட்டபோது இயேசு பிரான் ஒரு சிறு பிள்ளையை அவர்கள் மத்தியிலே நிறுத்தி "இச் சிறு பிள்ளையைப் போல் இருப்பவன் எல்லோரிலும் பெரியவனாய் இருப்பான்’ என்று கூறினார். இங்கு இயேசு நாதர் நிறுத்திய சிறு பிள்ளை என்பது பணிவின் குறியீடாகும். கானாவூர் கலியாண வீட்டில் திராட்சை இரசம் குறைவு பட்டபோது இயேசு பிரான் தாயின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து பணிந்து தண்ணிரை இரசமாக மாற்றியதும் அன்னை மரியாள் கன்னியாக இருந்த போது கடவுளின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து இயேசுவைத் தமது திருவயிற்றில் சுமந்து உலகமாதாவாக
நான் உளவியல் சஞ்சிகை புரட்டாதி. ஐப்பசி 2004 39

Page 22
உயர்த்தப்பட்டதும் பணிவின் மேன்மையைப் பறைசாற்றும் சான்றுகளேயாகும்.
ஆசிய சோதியான புத்தர் பெருமானின் வாழ்க்கை வரலாற்றிலும் பணிவும் பணிவின் பயனும் விரவி நிற்பதைக் காணலாம். மன்னன் பிம்பிசாரனின் அரண்மனை யாகசாலையில் ஆடு ஒன்றினை வெட்டுவதற்காக தீட்சிதர் வாளை ஓங்கியபோது அதனைத் தடுத்த புத்தர் பிரான் அங்கிருந்தோரை யெல்லாம் நோக்கி உயிர்க் கொலை புரிதலின் கேடுகளைப் பணிவாக விளக்கி நின்றார்.
*கன்று பசுவை மறந்திடினும் - செய்த கருமங்கள் உம்மை விடுமோ ஜயா! கொன்று பழிதேட வேண்டாம் ஜயா - இனிக் கொல்லா விரதம் மேற்கொள்ளும் ஐயா?
என்று புத்தர் பிரான் கூறும் அறிவுரையில் அறவுரையில் கருணை மாத்திரம் தான் குவிந்துள்ளதா? அக்கருணையில் மறைந்துள்ள பணிவு பற்றி நம்மில் எத்தனை பேர் சிந்திக்கின்றோம்? “ஜயா” என்று வரும் ஒவ்வொரு சந்தர்ப்பமும் பணிவினைப் பறைசாற்றும் முரசுகளாகத் தெரியவில்லையா?
*தீட்சிதரும் வாளை விட்டெறிந்தார் - ஓமத்
தியெறி குண்டம் அழித்து விட்டார்! “மோட்சம் இவையும் தருமோ? என்றார்
மூர்த்தியின் பாதம் பணிந்து நின்றார்! “ இப்படியாக புத்தர் பெருமானின் அறப்பணிவு ஆயிரக்கணக்கான உயிர்களுக்கு நன்மையாயிற்று. புத்தர் பணிய பிம்பிசாரன் பணிந்தான். பிம்பிசாரன் பணிக்க உயிர்க்கொலை தணிந்தது.
குருசேத்திரத்தில் பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்குமிட்ையே போர் இருபக்கப் படைகளும் ஒன்றையொன்று நோக்கி ஆரவாரித்து நிற்கின்றன. அவ்வேளை தருமன் தலையில் கூப்பிய கரங்களுடன் எதிரிப் படையை நோக்கி நடக்கின்றான். பாண்டவர் படையினர் திகைக்கின்றனர். கெளரவர் படையினர் வியக்கின்றனர். "தருமன் பயந்து விட்டானா?” எனக் கிருட்டினன் கூட ஒரு கணம் மயங்கிவிட்டான். பின்னரே அது பயமல்ல பணிவு என்பது கிருட்டினனுக்கு விளங்கியது. “பெரியோர்களைப் பணிந்து ஆசிபெறாது நான் போரைத் தொடங்கி விட்டேனே' என்று ஆதங்கப்பட்டே தருமன் பெரியோர்களான வீட்டுமர் துரோணர் முதலியோரிடம் ஆசி பெறச் சென்று பணிவினைக்காட்டினான்.
ஆகவே பணிவினைப் புனிதமெனப்போற்றி பணிந்து வாழக்கற்றுக் QBIT6(36ЈТLib.
நான் உளவியல் சஞ்சிகை புரட்டாதி. ஜய்பசி 2004 40
 

பூரணத்துவம் அடைவதே வாழ்க்கையின் இலக்கு
என். என். இராமலிங்கம். Visiting Lecturer - Technical College.
இன்று கல்வி என்ற சொல்லை அர்த்தம் புரியாது பயன்படுத்துகின்றார்கள். பூரணத்துவத்தை எட்டுவதே மனித வாழ்க்கையின் இலக்காகும். எந்த ஒரு மனிதனும் ஏன் விலங்குகள் ësht. துன்பப்பட விரும்புவதில்லை. எனவே
துன்பத்திலிருந்து விடுபடுவதற்காக செயற்படுவதே வாழ்க்கைப் பணியாக அமைய வேண்டும். இதனைக்கற்பதே கல்வியாகும். மாறாகப் பிறரை அழிக்கக் கண்ணி வெடிகளையும் ஏனைய ஆயுதங்களையும் உற்பத்தி செய்வதற்காகக் கற்கும் தொழில் நுட்பங்களும் பிறருடைய அமைதியைக் குலைத்து ஆசையைத் தூண்டி பணத்தைச் சம்பாதிக்க கபட வழிகளையும் போதிக்கும் சந்தைப்படுத்தலும் முகாமைத்துவமும் எப்படிக் கல்வியாக முடியும். பாலியல் கல்வியும் இத்தகையதே.
உண்ணுவது, உறங்குவது, உடலுறவு கொள்வது, தற்காப்புத்தேடுவது என்பவை விலங்குகளின் பொதுவான இயல்புகள் ஆகும். இவற்றை மட்டும் மனிதன் செய்தால் அவனை எப்படி மனிதன் என்று கூறமுடியும், மேற்குலகின் நடவடிக்கைகள் அனைத்தும் இயல்பாகவே இருந்த அமைதியைத் துாய்மையைக் குழப்பும் செயல்களாகவே அமைந்திருக்கின்றன. பாடப் புத்தகத்தில் உள்ள சூழல் மாசடைதல் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். புலன் வழி செல்லும் தன்மையை இயல்பாகக் கொண்ட மேற்குலகம் பாலியலை மனிதனின் அடிப்படைத் தேவை என்கிறது. இயேசு நாதர் மட்டுமல்ல அண்மைக்காலத்தில் வாழ்ந்த இராம கிருஸ்ண பரம ஹம்சர், அன்னை சாரதா தேவி கூட இக் கூற்றைப் பொய்யென வாழ்ந்து காட்டியது மட்டுமல்ல உயர்ந்த போதனைகளைக் வெளிப்படுத்தும் ஆற்றலைப் பெற்று இருந்தார்கள் என்பது உலகறிந்த உண்மையாகும்.
பாலியல் சம்மந்தமான நோய்கள் மக்களின் பாலியல் சம்மந்தமான அறிவின்மையால் ஏற்படுகின்றது என்று கூறப்படுவது அறிவீனமாகும். பொதுவாக மனிதனின் செயற்பாடுகள் உணர்வுகளின் உந்தலினாலேயன்றி புத்தியின் உந்தலினாலல்ல. எந்த உணர்வு ஒருவனிடம் மேலோங்கியுள்ளதோ அல்லது ஆக்கிரமித்துள்ளதோ அந்த உணர்வினடிப்படையிலேயே அவன் செயற்படுகின்றான். எம்மை நாம் உள்நோக்கிப் பார்த்து இதைப் புரிந்து கொள்ளலாம்.
நாண் உளவியல் சஞ்சிகை புரட்டாதி. ஜப்பசி 2004 4.

Page 23
சிகரட் புகைப்பது மது அருந்துவது கேட்டை விளைவிக்கும் என்று வைத்திய அறிக்கைகள் விளம்பரங்கள் வெளிப்படுத்துகின்ற போதும் கற்றவர்கள் என்று உலகம் கூறும் பலர் (பேராசிரியர்கள் உட்பட) இவற்றின் பாதிப்பினால் மரணித்துள்ளார்கள் என்பதை அண்மைக் காலத்திலும் அறிந்துள்ளோம். அதுமட்டுமல்ல தீமை பயக்கும் இப்பொருட்களின் உற்பத்தியைக் 86L மனிதனால் 6055 விடமுடியவில்லையே. இப்பொருட்களினால் ஏற்படும் கெடுதல் பற்றிய பய உணர்வைக் காட்டிலும் அதிலுள்ள மோக உணர்வு மேலோங்கி நிற்பதே இவற்றைப் பயன்படுத்தி அழிவதற்குக் காரணமாகும். இப் பொருட்களின் பாவனையால் உலகம் அழிகிறதே என்ற இரக்க உணர்வு சிறு துளி கூட இல்லாது இவற்றின் உற்பத்தி தொடர்வது பிறர் அழிவில் கூட பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற பண வெறி உணர்வினாலேயே.
மனித வர்க்கத்தை "சிக்மன்ட் புறொயிட்' மூன்று பிரிவினராக வகுக்கின்றார். முதலாம் பிரிவினர் ஆசைகளை நிறைலேற்றுவதைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படுபவர்கள். இவர் “இட்” என்ற பிரிவுக்குள் அடங்குவர். இரண்டாம் பிரிவினர் சமூகத்தினுடைய விமர்சனங்களுக்குட்பட்டு தம்மை (Adjust) சரிபடுத்திக் கொள்பவர்கள். இவர்கள் “அகம்” என்ற பிரிவுக்குள் அடங்குவர். மூன்றாம் வகையினர் நல்லது கெட்டதைப் பகுத்தறிந்து பிறர் நலன் கருதிச் செயற்படுபவர்கள். இவர்கள் “அதியகம்” என்ற பிரிவுக்குள் அடங்குபவர். இறுதியாகக் கூறப்பட்டவர்களாலேயே உலகம் நன்மையடைந்து கொண்டிருக்கின்றது. ஏனைய பிரிவினராலேயே உலகம் பேரழிவுக்கு இட்டுச் செல்லப்பட்டுக்கொண்டிருக்கின்றது. இத்தகையவர்களின் கோரப்பிடியிலேயே இன்று அரசியல் உற்பத்தி, விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கள், ஊடகங்கள, பிறரை வஞ்சித்துப் பணம் பெற விழையும் படிப்புக்கள் கூட உள்ளன.
மனித இனம் பாலியல் கொடுமைகளிலிருந்து விடுபட தனது செயல்கள் தனக்கும் பிறருக்கும் என்ன தாக்கத்தை விளைவிக்கின்றது என்பதை அறிந்து தீமையை விலக்கி நல்லதைச் செய்கின்ற தன்மையை, விழுமியங்களை ஏற்படுத்தக் Ց6չlգԱl (gp606) அமைக்கவேண்டும்.
“ஏட்டுச் சுரக்காய் கறிக்குதவாது” என்பதை நாம் மறக்கக் கூடாது. மனித விழுமியங்களை சிரமேற் கொண்டு தமது வாழ்க்கை நெறியை அமைத்துக் கொண்டதாலேயே இறைமகன் இயேசுவும் பிறமகான்களும் தோன்றக் கூடியதாக இருந்ததேயல்லாமல் பாலியல் அறிவைப் பெற்றதாலல்ல என்பதை நாம் மனதில் கொண்டு மனதை வளப்படுத்தும் விழுமியங்களை ஏற்படுத்தும் கல்வியை மனித குலத்துக்கு அளிக்கப் பாடுபடுவோம்.
நான் உளவியல் சஞ்சிகை புரட்டாதி. ஜப்பசி 2004 42

பங்கள் குடும்ப ஆலோசகன் நான்) எனது அப்பா அவர்களின் அன்பளிப்பில் "நான்? சஞ்சிகையைப் வெற்றுக் கொள்கிறேன். வீட்டில் ஒரே களேபரம். ‘நான்’ என்கையில் தவழ அக்காமார், அண்ணா, அம்மா அப்பாவுடன் நானுக்காக அலைவார்கள். எங்கள் குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் ஆக்கிய பெருமை நானுக்கே உரியது. உளவியல் ரீதியாகப் புரிந்துணர்வுடன் வாழ வழிசமைத்த குடும்ப ஆலோசகன் ‘நான்’ என்பதில் பெருமையடைகிறேன். ‘நான்’ தொடர்ந்து பல நல்ல பணிகளைச் செய்து நீடுழி காலம் வெளிவரப் பிராத்திக்கிறேன். வாழ்க ‘நான்’. வாழ்க
‘நான்’ குடும்பம். வாழ்க ஆலோசகர் குழு.
ஜெ.வாசுதன்.
தினருக்கும் பொருத்தமானது)-
உன்னைப் படித்துப் பயன் பெறும் ஆயிரக்கணக்கானவர்களில் நானும் ஒருத்தி. ஒவ்வொரு பருவத்தினருக்கும் தகுந்த கருத்துக்களை அவர்களுடைய நண்பர்கள் எவ்வாறு போதிப்பார்களோ அதைப் போன்று சிறிது கோபமோ எரிச்சeே T வெறுப்போ ஏற்படாமல் மிகவும் நுண்ணிய முறையில் யதார்த்தமாக கருத்துச் செறிவுடன் ஆக்கபூர்வமான உயிரேடுகளை சுமந்து போதிப்பதை இட்டு மகிழ்ச்சி அடைகின்றேன். மேலும் உன் சேவை விருடச்சங்களாகி விழுதுகளைப் பிரசவிக்க இறைவனை வேண்டி வாழ்த்துக்களுடன் கூறி விடை பெறுகிறேன்.
க.கீர்த்தனா
வெளிவரும் ‘நான்’ உளவியல் சஞ்சிகை மிகுந்த வரவேற்புக்குரிய விடயமாகும். ‘நான்’ சஞ்சிகையை விரும்பி படிக்கும் ஆயிரக்கணக்கான வாசகர்களில் நானும் ஒருவன். பல்வேறு
உளவியல் விடயங்களை சுருக்கமாகவும் தெளிவாகவும் இலகுபடுத்தி தருவதில் விசேட சஞ்சிகையாக நான் விழங்குகின்றது. அதற்காக எனது மனப்பூர்வமான பாராட்டுக்கள். நான் உளவளத்துறை டிப்ளோமா பாடநெறியை படித்து வருவதால் அதற்கு இச் சஞ்சிகை மிகுந்த உதவியாக இருந்து வருகின்றது.
ச. அறிவழகன். புத்தளம்.
நாண் உளவியல் சஞ்சிகை புரட்டாதி. ஐப்பசி 2004 43

Page 24
இருமாதமொருமுறை என் கரம் தனில் இணைந்து பல பயன் தரும் அம்சங்களை முத்தாக பின்னிப் பிணைந்து ஆக்கபூர்வமான அம்சங்களுடன் தன்னகத்தே தாங்கி வருகின்றான் நான். நீ உடைந்து போன மனங்களை உருமாற்றி வாழ்வில் நம்பிக்கையையூட்டி இன்னும் 6) வினாக்களுக்கு விடையாக உளவியல் சஞ்சிகையாக உருப்பெறும் உனை நானும் வாழ்த்துகின்றேன். ஆட்டம் காணும் வாழ்வில் உறுதியான அத்திவாரமாகவும் வாழ்வில் ஏற்படுகின்ற சிக்கல்களை இனம் கண்டு இலகுவாக வெற்றி பெறவும் மனிதன் மனிதனாக வாழ நீ அருமருந்தாக அமுதமாக வருகிறாய். நீ பல மனித உள்ளங்களில் உவகையுடன் உறைந்துவிட்டாய். நீ வாழ்க, வளர்க. 36060 உருவாக்கி உருக்கொடுக்கும் அன்புசார் உள்ளங்களுடன் இறைவனின் அருட்கரம் இருப்பதாக, நீ வளர்க, உன் பணி தொடர்க.
ம. ஜெனிட்டா, இளவாலை.
நான் எனது கைகளில் மட்டுமல்ல மனதிலும் இடம்பிடித்து விட்டது. பல விழுமிய கருத்துக்களோடு வெளிவரும் நான் மனோவியல் கருத்துக்கள் மட்டுமல்லாது சமூக சீர்திருத்த கருத்துக்களை முன்வைப்பது மிகவும் நன்று. இன்றைய இலத்திரனியல் ஊடகங்களும், ஏனைய ஊடகங்களும் வெறும் சினிமாத்தனைத்தே உழறுகின்றன. எனவே அதனின்று விலகி “சிறந்த' சஞ்சிகை என வெளிவருவது போற்றற்குரியது. எனவே எம் சமூகத்திற்கு இச்சிறு "சஞ்சிகை” பெரிதும் உந்து சக்தியாக அமையும் என்பதில் ஐயமில்லை. எனவே நான் உந்தன் சிறு “வாசகனே” மாதா மாதம் எப்போது வருவாய் என எதிர்பார்க்கும் சாதாரண வாசகனே.
w ச. சீலன்
கொழும்பு - 6
நான் உளவியல் சஞ்சிகை புரட்டாதி. ஐப்பசி 2004 44
 
 
 
 

O () OD g5G0IGOTID čБGODčНБ(8UTI LIGNOLD
ല്ല - - - ----- == سے سے 7 செல்வி. குமுதினி ஜெயராமன் പ്പെ Υ
தேசிய கல்வியியற் கல்லூரி مسس سے سے :""?gلL ~ ~ ~ மனிதன் ஒவ்வொருவனின் வாழ்விலும் தன்னம்பிக்கை நிச்சயம் தேவை. இது இல்லாவிட்டால், வாழ்க்கை பாலைவனம் ஆகிவிடும். இன்பத்திலும் சரி துன்பத்திலும் சரி நாங்கள் நினைத்ததும், நினைக்காததும் நடக்கும். அதிகமாக மகிழ்ச்சியில் நிேனைக்கவும் கூடாது. அதிக கவலையிலும் மூழ்கவும் கூடாது. இரண்டுமே உங்களை அகாள பாதாளத்தில் தள்ளி விடும். எதையும் சமமாக எடுக்கின்ற தன்னம்பிக்கை வேண்டும்.
பல ஆசைகள் நம்மில் ஏற்படுவது உண்டு. அது நனவடி உள்ளதிதில் தேங்கி கிடக்கிறது. ஒரு நாளைக்கு அவை வெளிப்படும். ஆசைப்படுவது சரி. ஆனால், அளவுக்கு மீறி ஆசைப்படவும் கூடாது. “பேராசை பெருநட்டம்” இந்த பழமொழி அதிகம் ஆசைப்படுவதால் ஏற்படும் விளைவு எப்படிப்பட்டது என்று புரிய வைக்கும். ஒரு நிமிடம் சிந்திக்க இப்பொழுது அனுபவிக்கும் விடயங்கள் எல்லாம் நீங்க கண்ட ஆசை என்ற கனவுகளாக இருக்கும். இதில் ஒருவன் தன்னம்பிக்கையும் அதை செய்து முடிப்பேன் என்ற ஆர்வமும் இருந்தா, வெற்றி அடைவது உண்மை. ஆபிரகாம் லிங்கன் ஜனாதிபதியா வர ஆசைப்படவில்லையா? இன்னும் சாதித்தவர்கள் எத்தனையோ மா மனிதர்களை கூறலாம்.
ஒருவனின் வாழ்க்கையில் வாழ்க்கைக்கு தேவையான விடயம் எல்லாம் இருந்தும் அவன் தன்னம்பிக்கை இன்றி முயற்சி செய்யாவிட்டால், பலன் ஏது? உடனே இறைவனை குற்றம் சொல்வான். இறைவன் எல்லாவற்றையும் கொடுத்தும் நீங்கள் அதை நல்ல முறையில் பயன்படுத்தாமல் விட்டால் யார் குற்றம்? அதற்கு இறைவனை குற்றம் கூறுவது எந்த விதத்தில் நியாயம்?
தன்னம்பிக்கை மட்டும் இருந்தா போதாது. "எனக்கு நம்பிக்கை இருக்கிறது எதிலும் வெற்றி பெறுவேன்” என்று வாய் வார்த்தை போதுமா? அந்த முயற்சியில் உடனடியாக இறங்க வேண்டும். அப்போது தான் மேலும் மேலும் முன்னேற முடியும். “முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்” என்று முன்னோர்கள் முன்னெச்சரிக்கையாக முன் மொழிந்து விட்டார்கள். ரைட் சகோதரர்கள் முயற்சி செய்யவில்லையா? தோமஸ் அல்வா எடிசன் முயற்சி செய்யவில்லையா? பல தோல்விகளின் நடுவில் வெற்றியின்
நான் உளவியல் சஞ்சிகை புரட்டாதி. ஜப்பசி 2004 45

Page 25
எல்லையை தொடவில்லையா? தன்னம்பிக்கை மட்டும் போதாது. விடாது மயற்சியும் தேவை.
இன்று என்ன நடக்குமோ? நாளை என்ன நடக்குமோ? ஐயோ! சகுனமே சரியில்லையே என்று எத்தனை நாளைக்கு சொல்லப் போகிறீர்கள். “நல்லதே நடக்கும், நான் வெற்றி பெறுவேன், என்னால் முடியும், எதையும் செய்யும் ஆற்றல் எனக்கு உண்டு” என்று நல்ல முறையில் சிந்தித்து செயற்படுங்கள். நிச்சயமா, எல்லாமே நன்றாகவே நடக்கும். எல்லா சகுனங்களையும் ஒரம் கட்டிவிட்டு மேற்கூறிய படி கடைப்பிடித்து பாருங்க. உங்கள் வாழ்க்கையிலும் விடிவெள்ளி தோன்றும். எப்பவுமே மறை வழியாக சிந்திக்காமல் நேர் வழியில் சிந்தித்து அதன் வழி நடவுங்கள். வாழ்க்கையில் முன்னேற்றமும் அதிக சந்தோஷமும் உண்டாகும்.
அன்புக் கட்டளை
“நான்” ஆண்டு 2004 இற்கான சந்தாவைச் செலுத்த உங்கள் காசுக்கட்டளைகளை (Money Order) அனுப்பி வையுங்கள்.
பணம் பெறுபவர் - ஆசிரியர் “நான்” பணம் பெறும் அலுவலகம் - தலைமைத் தபாலகம், யாழ்ப்பாணம்.
நாண் உளவியல் சஞ்சிகை புரட்டாதி. ஜப்பசி 2004 46
 
 
 

அடுத்த “நான்’ தாங்கிவருவது
குழுவண்செயல் Mob Violence
உங்கள் ஆக்கங்கள் எதுவாயினும் உளவியல் சார்ந்ததாக அமையட்டும்
அவற்றை20.10.2004க்கு முன்னர்
அஞ்சலிடுங்கள்.

Page 26
SoyGDÖG LO 塹
வருடத்திற் உங்களிடம் வந்து
GTErreferið 2. La உளவியற் கருத்துக்
GregEDLULI
என்னுடை உள்ளூர் Glan Giffyg
என்னுடைய முகவரி:
J. S. Printers

DOOOOOOOOOOOOOOOR
தங்களுக்கு ஒரு
Oslug
த ஆறு தடவையும்
i bliallaigilitilsit]gi.
ignštejšgjEDGILITER கள் குவிந்து கிடக்கின்றன.
தனிப்பிரதி 20/=
LILI JERUriSéfef ijgjfT 1af 15O/= fld 7U$
τούτ'
மசனட் குருமடம், 5ாழுமபுததுறை, ழ்ப்பாணம், lorrigo35.
1. 021-222 5359
s
S, Pondotheruppu