கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நான் 2005.09-10

Page 1


Page 2
HIII
உளவியல் சஞ்சிகை
மலர்: 30 இதழ்! 05 புரட்டாசி-ஐப்பசி 2005 விலை 25/=
உள்ளே. ஆசிரியர் அரும்புகள் எம்மை எம்மால் வெல்ல வைக்கலாம் சிறந்த தலைவனின் சிறப்பம்சங்கள் ஆற்றுப்படுத்தலில் ஆரோக்கிய மகிழ்ச்சி கான சாய்ந்து போகலாமா வாலிப வசந்தம் என்ன செய்யலாம் வோரோடிய தழும்புகள் நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேனா? கவிச்சோலை சிநேகமுள்ள சிநேகிதனே சிநேகிதியே குடிநோயும் விடுதலையும் பிரியாவிற்கு ஓர் மடல் மொட்டாகும் பூ மன உறுதி வேண்டும் இழப்பை எதிர்கொண்டவர்களுக்கு உளவளத்துணை
“NAAN” Tamil Psychological Magazine De Mazenod Scholasticate, Columbuthurai, Jafna, Sri Lanka.
Tel 021-222-5359
ஆசிரியர்: போல் நட்சத்திரம் O.M., B.Th., M.A.
இணையாசிரியர்:
GLumt6sigÁuu6o O.M., B.Th., B.A. (Hons).
ஒருங்கிணைப்பாளர்: gfh6üGl6hu 6müöLñi O.M.i. STL.
நிர்வாகக் குழு: அ.ம.தி. இறையியல் சகோதரர்கள். ஜோசப் பாலா.
ஆலோசகர் குழு
டேமியன் O.M.I., M.A.
LIT sofusio O.M.I., M.A. செல்வரெட்ணம் O.M., Ph.D. D. சண்முகலிங்கண் Ph.D. DD, D. சிவசங்கர் M.B.B.S. g5sort H.C. Dip. in Counselling, Kent. ghtsorgs SiO.M.I., B.A. (Hons), B.Th., Dip. E. ஜீவாபோல் O.M.I., M.Phil.
உங்கள் உளவியல் சிந்தனையில் விரியும் இந்த இதழின் அட்டைப்பட விளக்கத்தை உங்கள் பேனா முனையில் மிகச் சுருக்கமாக எழுதி அனுப்புங்கள்

قة النقل
நான் சஞ்ச அபிமானிகளுக்கும் வாசகள்களுக்கும் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள். Yܝܼ
இவ்விதழ் சிறப்புமலராக வெளிவருவதால் “ஆசிரியர்” பணியிலிந்து விடைபெறும் நான், இதய நிறைவுடன் "நான்” உளவியல் மஞ்சரியின் வளர்ச்சி கண்டும் வாசக வட்டத்தின் விரிவு கண்டும் எல்லோர் மட்டத்திலும் அது ஏற்படுத்திய காத்திரமான தாக்கம் பற்றியும் எண்ணி பெருமையும் மகிழ்வும் கொள்கின்றேன்.
கடந்த ஆறு ஆண்டுகளாக இம் மஞ்சரியின் ஆசிரியராகப் பணி செய்வதற்கும் நமது குருமட மாணவர்களின் உயர்ந்த பங்களிப்புடன் திறமையாக அப்பணியை ஆற்றுவதற்கும் கிடைத்த நல்ல தருணத்திற்காக நன்றி கூறுகின்றேன்.
ஒருங்கிணைப்புப் பணியில் முதிர்ச்சியடைந்த் படைப்பாளிகளின்
*0
·
VAD
D آق قویم *ᎧᎧᏑᎬᎬ5 ! 6هجوميثيقا لأي உளவாங்கவும
பல கோணங்களில் அவர்கள் கருத்துக்கள், சிந்தனைகள்வழி மனித வாழ்வின் பல கூறுகளை பல கண்ணோட்டங்களில் தெரிந்து கொள்ளவும் கிடைத்த வாய்ப்புகளுக்காகவும் நன்றி கூறுகின்றேன்.
எனது பணிக்காலத்தில் உளவியல்த் துறையில் பல நூல்களை வாசிக்கவும் வாசித்தவற்றை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளவும் கிட்டிய சந்தர்ப்பங்களுக்காக நன்றி கூறுகின்றேன்.
‘நான்’ இன் வளர்ச்சி அண்மைக் காலங்களில் எல்லோர் மட்டத்திலும் உணரப்படுவது யாவரும் அறிந்ததே. இதற்கு முதறகாரணமாக அமைபவர்கள் நமது குருமட இறையியல் மாணவர்கள்.

Page 3
அவர்களின் தியாகமும் ஆக்கும் திறனும் இக்குறிப்பிட்ட துறையில் பணி செய்ய வேண்டுமென்ற தீவிர விருப்பமும், உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட | மக்களுக்கு அன்புப் பணி செய்ய வேண்டுமென்ற தவிப்பும் இம்மஞ்சரியின் வளர்ச்சிக்கும் பிரபல்யத்திற்கும் காரணமானது.
அத்துடன் வாசக அன்பர்கள், எழுத்தாளர்கள், விநியோகஸ்தர்கள் போன்றோரின் அயராத உழைப்பும் ஈடுபாடும் மேலும் பங்களிப்புச் செய்தது.
எனது பணிக்காலத்தில் ஒருங்கிணைப்பாளர்களாக இருந்து எல்லாவற்றையும் நெறிப்படுத்தி வழிகாட்டிய
2。 w 。冷 േ f፡] ̈ኻ f :2 هم مه egy-ejoj") "*"OU P***
۔ ༧ཉ `ဒူ’)) タ、 εθ --............. سنگھ lh ,3 , ->ل
குருக்கள் ஜெயந்தன் பச்சேக், ஜெறோம். சில்வெஸ்டர் ஆகியோரையும் இணை ஆசிரியரான அருட்தந்தை பொன்சியன் அவர்களையும் வாழ்த்திப் பாராட்டுகின்றேன். ஆலோசகள் குழாமுக்கும் கணனி வடிவமைப்பு 蘇 செய்தவர்களுக்கும், அலுவலக ஊழியர்களுக்கும் இதயபூர்வமான நன்றிகள்.
தொடர்ந்து வரும் காலங்களிலும் புதிதாக ஆசிரியர்ப்பணியை ஏற்றுக் கொள்ள இருக்கும் அருட் தந்தைக்கும் அதே பங்களிப்பையும் உதவிக்கரங்களையும் வழங்கும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் மிகுந்த ஆர்வத்துடன் வாசிக்கப்படும் “நான்”மஞ்சரி மேலும் வளர்ந்து இன்னும் பல வாசகர்களைக் கொண்டு தொடர, வளர வாழ்த்துகின்றேன்.
a محریر
 
 
 
 
 
 
 
 
 
 
 

ZZ Eging g
%
67മണ്ണമ ഐമഗ്) ബിബ്ബ് ബ്രഖ( ந்ே,%
0.
sac- * மொஹமட் அஸ்லம்)
யாராவது ஒருவர் உங்களிடம் “நீங்கள் யார்?’ என்று வினவினால் உண்மையில் உங்களுக்கும் "ஆமாம் நான் யார்?’ என்ற கேள்வி எழும்பும். இந்தக் கேள்விக்கு உங்களிடமிருந்து “நான் ஒரு மாணவன், மாணவி, பாதுகாப்பு அதிகாரி, கணனிப் பொறியியலாளர் அல்லது நிறுவனப் பணிப்பாளர்” என பலவிதமான பதில்கள் கிடைக்கும். ஆனால் இவையெல்லாம் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் ஏதோவொரு காரணத்தால் வகிக்கும் உத்தியோகத்திற்காக கிடைத்த நாமங்கள் என்பதை நினைவில் கொள்ளுதல் வேண்டும். எனவே,
"நான் யார்?’ என்ற கேள்விக்கான பதில் இன்னும் உங்களால்
எண்ணப்படாததொன்றாக, அறியப்படாததொன்றாக இருக்கலாம்.
உங்கள் பிறப்போடு “நீங்கள் யார்?’ என்ற கேள்விக்கு பதிலும் பிறந்து விடுகின்றது. மனித உயிர் தாயின் கருவறையில் உருவாகும் போது பெற்றோர் வழி வந்த
பாரம்பரிய மூலக்கூறுகளை தனதாக்கிக் (T கொண்டு g(5 தனிக்கலமாக “brī6öI ULITri?” உருப்பெறுகின்றது. இவ்வளர்ச்சிக்காலத்தின் ! எனற போது (சுமார் 9 மாதங்கள்) பெற்றோரின் கேள்விக்கான எண்ணங்கள், எதிர்பார்ப்புக்கள் என்பன பதில் இன்னும் | அவ்வுயிரினுள் இலகுவாக Ligibgs နှီ ” ဂျိ" ̈ வளர்கின்றது.இவ்வாறு 6) கலங்கள் , *'
፳• தொன்றாக, அறிய பல்கிப்பெருகி மானுட ஜீவியாய் இவ்வுலகில் கொன்
- LJ JL.f.I:5o)5fi6OIDIT s ஜனனிக்கும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் க இருக்கலாம். !! தன்னிகரில்லா தனிச்சிறப்புடன் 键 வெற்றியாளனாக மாறக்கூடிய பிரமாண்டமான h----- ཡ- ཁང་ ཁ་ ཡ་ལ་ - ཁ- -- الممر
சக்தி அவனுடைய பிறப்பில் மறைந்திருக்கின்றது.
இது இரண்டு வழிகளில் பொதிந்திருக்கின்றது.
1. மானசீக சக்தி (உளச் சக்தி) 2. உடற்தொழிலியல் சார்ந்த சக்தி
மானசீக சக்தி என்பது அவரவர் மனத்திலே அல்லது உள்ளத்திலேயே இயற்கையாகவே அமைந்து இருக்கும் நிகரற்ற சிந்தனை ஆற்றலாகும். இது சாதாரண சிந்தனை ஆற்றலைவிட வெற்றியாளனாக மேன்மையாளனாக தனிச்சிறப்புடையவனாக மாற்றக்கூடிய சக்தியாகும். கேட்பதற்கு "வியப்பானதாகவும்

Page 4
' , '* 凝 2007 at: 76777 zituzti gaztatz74 ثاني
சந்த்ேதத்துக்குரிய விடயமாக எமக்கு தெரிந்தாலும் இவை விஞ்ஞான அடிப்பட்ையில் நிறுவப்பட்டு அதிலிருந்து பல காலம் எண்ணற்ற *நன்மைகளை மேலைத்தேய நாடுகள் பெற்றுவருகின்றன. இவை குழந்தைகளின் உளவளர்ச்சி குறித்து விசேட கவனம்
"... சீசெலுத்துகின்றன. ஏனெனில் ஒவ்வொருவரும் ஏதாவதொரு துறையில்
சிறப்பானவராக ஆகக்கூடிய உள்ளார்ந்த ஆற்றல்கள் கொண்டிருக்கின்றமையினாலாகும்.
நவீன விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளிற்கமைய மனித மூளையானது சுமார் 6 மில்லியனுக்கு மேற்பட்ட நரம்புகளால் ஆக்கப்பட்டுள்ளது. அவர்களின் விளக்கப்படி 6TLDg. ep6061T ஆக்கப்பட்டுள்ள ஒரு நரம்புக்கலமானது சாதாரண ஒரு கணனியின் (Computer) சக்திக்கு அல்லது வலுவுக்கு சமமானதாகும். அதாவது எமது மூளையானது 6 மில்லியன் சாதாரண கணனியின் சக்தியைத் திரட்டாக கொண்டுள்ளது.
அத்துடன் சாதாரண கணனி முதன்முதல் நிர்மாணிக்கப்பட்டதும் அதற்குரிய திட்டங்கள் வகுக்கப்பட்டதும் இதனை நடைமுறைப்படுத்தத் தேவையான ஆலோசனைகளை பெற்றுக் கொண்டதும் சுமார் 6 மில்லியன் கணனிகளின் சக்திகளைக் கொண்ட எமது மூளையிலாகும். சாதாரண கணனி ஒன்றினால் SSSSSSSSSS SSS S Y செய்யப்படும் வியக்கத்தக்க செயல்களை காணுகின்றோம். அதே போல் 6 மில்லியன் மடங்கு சக்தியைக் கொண்ட மூளையினை
d நாம் சரியாக பயன்படுத்தினால் எம்மால் 10 சதவீதத்தினையே பிரமிக்கத்தக்க பல சாதனைகள் புரியலாம்
சாதாரணமாக நாம் ஒவ்வொருவரும் மூளையின் ஆற்றலில்
பயன்படுத்துகின்றோ என்பது புலனாகும். சாதாரணமாக நாம் ம் விஞ்ஞானிகள் கூட ஒவ்வொருவரும் மூளையின் ஆற்றலில் 10 அளவில் சதவீதத்தினையே பயன்படுத்துகின்றோம். : விஞ்ஞானிகள் கூட உச்ச அளவில் 13
சதவீதத்தினையே பயன்படுத்துகின்றனர். SSSSSSSSSSSSSS SSS S SSS SS SS SS எனவே மூளையில் உட்பொதிந்துள்ள மகத்தான சிந்தனை ஆற்றலின் சிறப்பை சொல்லி விளங்க வைக்க வேண்டியதில்லை.
மின்குமிழ், திரைப்படம் போன்றவை என்னவென்று உலகம் அறியாத காலத்தில் அவற்றைப் பற்றியதொரு எண்ணம் அதற்குரிய முதல் நீலப்பிரதி (Blue print) உருவானது எடிசனின் மூளையில்தான். எனவேதான் பெரும் சக்திப் பிளம்பான மனித மூளையானது உச்சியிலமைந்த வல்லமைக் கணனி (Nactop Super Computer) என அழைக்கப்படுகின்றது. எனினும் நாம் இந்த வல்லமை மிக்க ஆற்றலை பயன்படுத்துகின்றோமா? என்ற கேள்விக்கு பதில் 'இல்லை’ என்பது தான். அப்படியானால் இந்த பிரமிக்கத்தக்க சக்திகளை பயன்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும்?
புரட்டாசி ஐப்பசி
 
 

ه
துறவறம் பூண்டு கானகம் செல்லவோ, *jర్మీస్ట్ర్కే
சாமியார்க்ளிட்ம் சீடர்களாக சேரவோ அல்லது தியானப் பயிற்சி நிலையங்களுக்கோ செல்ல வேண்டிய அவசியமில்லை. முத்லில்
سببیہ
இதுவரை காலமும் உங்கள் "அடிமனதில்’ (Subconscious Mind)
படிவுற்றிருக்கும் ஏழ்மைநோய், தன்னம்பிக்கையின்மை, கவலை, பொறாமை போன்ற 93 f6 அல்லது எதிர்மறையான எண்ணங்களை (Nagative Thoughts) அகற்றல் வேண்டும். அதற்கு பதிலாக மகிழ்ச்சிகரமான சுபமான அல்லது நேரான (Positive Thoughts) எண்ணங்களால் மனதை நிரப்பல் வேண்டும். சென்ற காலம் முழுவதும் நாம் அசுபமாகவே எண்ணிக்கொண்டிருந்ததால் திடீரென எம்முள் மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியாது என்பது உண்மைதான். ஏனெனில் நாம் 915 jLDHéb எண்ணவும் பலகாலம் பழக்கப்பட்டிருக்கின்றோம்.
எனவே எம் வாழ்வின் வெற்றிக்காக அசுபமான அல்லது எதிர்மறையான எண்ணங்கள் தோன்றும் போது அவற்றை சுபமானதாக
அல்லது நேரானதாக மாற்றி எண்ண கடுமையாக முயற்சிக்க வேண்டும். நாளடைவில் அது எம்முடைய பழக்கமாக மாறிவிட்ட பின்
இரண்டு விதமாக வினவப்பட்டாலும் இரண்டு
அல்லது நேரானதாக
முயற்சிசெய்து எண்ண வேண்டிய அவசியம் ------------ N
- Irr II (GNMI ? இருக்காது. உதாரணமாக "நான் இம்முறை எம் வாழ்வின் பரீட்சையில் சித்தியடைவேனா?’என்பது வெற்றிக்காக தன்னம்பிக்கையின்மையின் வெளிப்பாடாகும். அசுபமான அல்லது
எதிர்மறையான o எண்ணங்கள் இதனை “நான் இம்முறை கோன்றும் ே ரீட்சையில் சித்தியடைய என்ன செய்ய தானறும போது பாடசைய த . 9ഖpങ്ങp வேண்டும்?” என்று சுபமாகவும் எண்ணலாம். čiji JLOПеOJabПč5
கேள்விகளுக்கும் ஒரே கருத்தைக் மாற்றி எண்ண
கொண்டிருப்பதை அவதானிக்கலாம். கடுமையாக இவ்வாறு நாம் முயற்சித்து எமது 4. எண்ணங்களில் மாற்றங்களை ஏற்படுத்தும் - 2
போது 6ft Dg மூளையில் உள்ள நரம்புகளின் அமைப்புக்களிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. அவை சுபமாக எண்ண பழக்கப்பட்ட பின் எமது வாழ்வும் சுபமான திசையில் திரும்பிவிடுகின்றது.
எமது உள்ளார்ந்த ஆற்றல்களை சிறந்த முறையில் பயன்படுத்துவதற்கு எமது வாழ்க்கையில் ஒரு குறிக்கோளினை அல்லது இலட்சியத்தினை தேர்ந்தெடுத்து துாய்மையான எண்ணத்துடன் அதனை வெற்றிகொள்ள முயற்சிக்க வேண்டும். குறித்த கால எல்லையின் பின் மீண்டும் புத்துயிர்ப்படையும் விசேட தன்மைகளை எமது கலங்கள் கொண்டுள்ளன. எந்நேரமும் சுபமான எண்ணங்களை எண்ணுவதாலும், எமது நடத்தைகளை DT 60
புரட்டாசி - ஐப்பசி
u i FF RRA E i IE 63 i Ri),
-- SS 5.

Page 5
ಟ್ಲಿ' 敬 (DIF F.FIt:f éóefst غُشية
ノーーー -شمس- س - - - - - - - - - - - -
പ Y திசையில் திருப்புவதாலும், D66 உங்களுடைய எதிர்கால எண்ணங்களில் மனதை நிலைப் இலட்சியங்கள் வெற்றி படுத்துவதாலும் எமது இலட்சியங்களை கொள்வதற்கு, முதலில் நிறைவேற்றிக்கொள்வது மட்டுமல்லாமல் எதிர்காலம் உங்களால் எம் வாழ்வில் எம்மை உயர்ந்த நிலைக்கு
வெற்றி கொண்டு செல்லவும் எமது மானசீக சக்தி
கொள்ளப்படுவதை வியக்கத்தக்க வகையில் உதவுகிறது
@_ இப்போது முதலே என்பதை உணரலாம். உங்களுக்கு
முடியாது என்று எண்ணியவற்றை "ஆம்,
பூரிப்படையுங்கள். என்னால் முடியும்” (Yes, I can!) என்று D60 SSSSSSSS S SSS SSSSSS 2 தைரியத்துடன் செய்ய ஆரம்பியுங்கள்.
உங்களுடைய எதிர்கால இலட்சியங்கள் வெற்றி
கொள்வதற்கு, முதலில் எதிர்காலம் உங்களால் வெற்றி கொள்ளப்படுவதை இப்போது முதலே உங்கள் மனக்கண் முன் விம்பமாக பார்த்து பூரிப்படையுங்கள்.
6alpyt/1912-13 67ozig2/2%6 (Think like a winner)
QQiyyovyyapna 9 ontoniaci (Feel like a winner)
இவ்வாறு நீங்கள் உங்கள் இலட்சியத்தினை அடைய
முன்னேற்பாடோடு தயாராகும் போது உங்கள் UUJ600iggleis(5 தேவையான சாதகமான காரணிகள், வளங்கள் உங்களைச் சுற்றியே இருப்பதையும் உங்களின் உள்ளார்ந்த சக்திகள் மெல்ல
வெளிப்படுவதையும் உங்களுக்குள் உணர்ந்து கொள்ள முடியும்.
உங்களுடைய உள்ளத்தை சுபமான எண்ணங்களால் நிரப்பும் பொழுது உடல் சார்ந்த சக்திகளும் நாளடைவில் மெருகேறி சுறுசுறுப்பான பிரியமான தன்நம்பிக்கை உடையவராக மாறிவிடுவீர்கள் என்பதில் ஐயமில்லை. “நான் யார்’, நான் தன்னிகரற்றவன்! வெற்றியாளன்! சிறப்புடையவன்!
இவ்வாறு நீங்கள் உங்களை அடையாளம் கண்டு உங்களுக்கு அன்பு செலுத்துவது போன்று, நீங்களும் உங்கள் வீட்டார், உறவினர், அயலவர்கள், நண்பர்கள் அனைவரையும் அடையாளம் கண்டு அனைவருக்கும் மனத்தால் அன்பு செலுத்துங்கள். நாட்கள் நகரும் போது நீங்கள் யார்? என்பது உங்களுக்கு மட்டுமல்ல முழுவுலகுக்கும் பிரபல்யமாகும்.
 

* హి, An *R
அருட்பணி. ஸ்ரலின் இராசேந்திரம் முதுமானிப்பட்டம் - உளவியல் ஆற்றுப்படுத்தல்
ஒரு தலைவனுடைய செயல் பலரின் வாழ்விலே மிகவும் பரந்த செல்வாக்கை செலுத்த வல்லது. ஒரு தலைமைத்துவத்தின் திறமையிலேயே ஒரு நாட்டின், நிறுவனத்தின் வெற்றி தங்கியுள்ளது. எனவே நல்ல தலைவனை அடையாளம் காண்பதும் தேர்ந்தெடுப்பதும் சமுதாயத்தின் முக்கிய பணியாகும்.
சிறந்த தலைவனின் ஆளுமைப் பண்புகள், சமூகத்தின் அம்சங்கள் எவை என்பது பற்றி உளவியலாளரிடையே ஒத்த கருத்துக்கள் கிடையாது. சில தலைவர்கள் பிறரால் அப்பதவிக்கு நியமிக்கப்படுபவர்கள். வேறு சிலர் ஒரு குழுவின் செயற்பாட்டின்
போது தலைவனாக வெளிப்படுபவர்கள். சிலர் தமக்கென ஆதரவாளர்களைச் சேர்ப்பதன் மூலம் தலைவராகின்றனர். எதிராளிகளை ஒன்றிணைப்பதன் மூலம் மற்றைய சிலர்
தலைவராகின்றனர். சிலர் பேச்சு வார்த்தையில் ஈடுபடுவதன் மூலம் தலைவராகின்றனர். வேறு சிலர் கூட்டணி ஒன்றை அமைப்பதன் மூலம் தலைவராகின்றனர். மற்றவர்கள் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதன் மூலம் தலைவர்களாகின்றனர். இன்னும் 56)f Discsófor உணர்ச்சிகளைத் துாண்டி எழுச்சி உண்டாக்குவதன் மூலம் தலைவராகின்றனர்.
வரைவிலக்கணம்
1. தனிநபர்களைக் குழுவாகச் சேர்த்து ஒரு சில இலட்சியத்தை அவர்கள் முன்னால் வைத்து, அதை நோக்கி வழிநடத்துதலே தலைமைத்துவம் எனலாம். அதாவது தலைவன் என்பவன் ஒரு குழுவினரை பொதுவான இலக்கை நோக்கி நகரச்
செய்பவன். 2. காறி எஸ். றுாமனின் (Harry S.Truman) கருத்துப்படி தலைவன் என்பவன் பிறர் விரும்பாததை செய்யவைத்து அதை விரும்பச்
செய்பவன்.
தலைமைத்துவம் கொண்டோரின் பண்புகள் பின்வருமாறு இருக்கலாம் என உளவியலாளர் எலிசபெத் பி.கேள்லொக் (Elizabeth B. Hurlock, 1972) (g5pólůĵl(6dŝipmTń.
1. சமூக பொருளாதார அந்தஸ்து 2. தன் குழுவினரைவிட உயர்வான கல்வி
புரட்டாசி - ஐப்பசி 2005 7

Page 6
யதார்த்தமான சுயகணிப்பீடு யதார்த்தமான இலட்சியம் விரக்தியை சிறப்பாகக் கையாளும் திறன் பிறர்மீதுள்ள கோபத்தை புத்திசாலித்தனமாக வெளிப்படுத்தல் வெற்றி தோல்விகளை நல்லமுறையில் ஏற்றுக்கொள்ளல் தன்மேலுள்ளவர்களின் அதிகாரத்தை நல்லதாய் ஏற்கும் மனப்பாங்கு பிறரோடு தொடர்பாடும் திறன் சுயநலமின்றித்தன் குழுவுக்காகச் செயற்படும் பண்பு
தலைவர்களில் பின்வரும் பண்புகள் இருக்கும் ஸ்ரொக்டில் என்பவரின் கருத்து (Stogdl 1974).
1. சாதிக்கும் ஆவல்
கூடுதலான பொறுப்புணர்ச்சி
என்பது
2 3. அதிகம் தன்னம்பிக்கை 4. சுமூகமாகப் பிறருடன் பழகும் திறன் 5. பிறரை வழிநடத்த வேண்டும் என்ற ஊக்கம்
தலைமைத்துவம் பற்றிய உளவியல் கொள்கைகள்
கொள்கை 1: தணவியல்பு அனுதமுறை
இந்த அணுகுமுறையானது சிலர் - - - - - - - - -- N பிறப்பிலேயே தலைமைத்துவப் பண்பு | சிலவேளைகளில் கொண்டவர்கள் எனக் கருதுகின்றது. நுண்ணறிவு, சிலவேளைகளில் நுண்ணறிவு, திறமைகள், ! திறமைகள், மனஓர்மம், தன்னம்பிக்கை, 8tep 35 மனஓரமம, தலைமைத்துவத்திற்கான பிறப்புப் பண்பு தன்னம்பிக்கை, என்பன ஒன்று சேர்ந்து LDGLI(bib தலைேைவத்திற் தலைவர்களை உருவாக்கி விடுவதுண்டு ಇಂಟ್ಲೀ அமெரிக்க கறுப்பினத்தவரின் தலைவர் என்பன ஒன்று மாட்டின் லுாதர் கிங், ரஷ்ய பிரதமராக | சேர்ந்து மாபெரும் | இருந்த லெனின், ஜேர்மனிய சர்வாதிகாரி தலைவர்களை கிட்லர், அமெரிக்க ஜனாதிபதியாக உருவாக்கி விளங்கிய பிராங்கிளின் றுாஸ்வெல்ற் விடுவதுண்டு.
N سمي"
அவர்களும் ஜோண் கென்னடி, இந்தியாவின்
தந்தை மகாத்மா காந்தி, கியூபாவின் நீண்ட கால ஜனாதிபதி பிடல் காஸ்றோ, தென்னாபிரிக்காவின் தேசியத்தலைவர் நெல்சன் மண்டேலா போன்றோர் பிறப்பிலேயே தலைமைத்துவம் கொண்டவர்கள் எனக் கருதப்படுகிறது. கென்னி, சக்காறோ (1983), வின்ரா (1987), கோகனர் குழுவினர் (1994) போன்றோரின் கருத்துப்படி பிறப்பிலேயே
தலைமைத்துவப் பண்பு கொண்டவர்கள் பின்வரும் குணாம்சங்களைக் கொண்டு விளங்குவர்.
நுண்ணறிவு
மேன்மையடையும் அவா
அதிகாரத்துக்கான ஆசை
தன்னம்பிக்கை
 
 

நாள்ள: 6. சூழலின் மாற்றத்திற்கேற்ப தன்னைச் சுதாகரிக்கும் திறன்
இயற்கையாகவே தலைமைத்துவப் பண்புள்ள தலைவர்கள் (Charismatic Le&ders) பின்வரும் பண்புகளைக் கொண்டிருப்பர்
1. மக்களின் நல்வாழ்வுக்கான சக்திமிக்க எதிர்காலக்கனவு (Vision)
2. இக்கனவை எளிமையான மொழியில் தெளிவாகப் பிறருக்கு
வெளிப்படுத்தும் ஆற்றல்
3. தன்னைப் பின்பற்றுபவர்கள் தன் கனவை பிறருக்கும் எடுத்துக்
கூறுவார்கள் என்று அவர்கள் மீது நம்பிக்கையும் நல்ல
மனப்பான்மையும்
பிறரிடம் முன்சென்று பழகும் திறன்
சக்திமிக்கவர்கள்
மனச்சாட்சியுடன் நடப்பவர்கள்
ஒத்துப் போகக் கூடியவர்கள்
உணர்ச்சி ரீதியாக நிதானம் கொண்டவர்கள்
தன்னம்பிக்கை நிறைந்தவர்கள்
இவ்வணுகுமுறையில் உருவான பல தலைவர்கள் பலர் உண்டு. அவர்களில் ஒரு வகையினரே சமூகச் சீர்திருத்தத் தலைவர்கள்
சமூக சீர்திருத்த தலைவர்கள் (Tranformational Leaders)
இவர்கள் தம் ஆதரவாளர்களை சுய தேவைகளை மறந்து பொது இலட்சியம் ஒன்றில் விருப்புக் கொள்ளச் செய்ய வல்லவர்கள். விழிப்புணர்ச்சி ஏற்படுத்தல், உணர்ச்சி ரீதியாக எழுச்சி கொள்ள வைத்தல், மக்களுக்கென ஒரு எதிர்கால கனவை முன்வைத்து அதை நோக்கி மக்களை நெறிப்படுத்தும் ஆற்றல் இவர்களிடம் உண்டு.
சமூகச் சீர்திருத்தத் தலைவர்களின் பண்புகள் (பொஸ், அவோலி, 1990)
ல் கொடை- இவர்களுக்கு இது கடவுளால் கொடுக்கப்பட்டதாகக்
கருதப்படுகின்றது. அவர்கள் மக்களின் நல்வாழ்வுக்காக ஒரு கனவைக் கொண்டிருப்பர். மக்களின் மரியாதை, நம்பிக்கை என்பவற்றைப் பெற்றிருப்பர். மக்கள் தம்மை உறுதியாகவும் விசுவாசமாகவும் பின்பற்றுவதற்கு அவர்களைத் துாண்டுவர்.
& எழுச்சிகொள்ள வைத்தல்:- சிறு சிறு உரைகள் ஆற்றுவர்,
ஆர்வத்தையும், தம் கனவில் மக்களின் நம்பிக்கையையும் அதிகரித்தல், உரைகளில் மக்களின் உணர்ச்சிகளைத் தட்டி எழுப்புவர்.
& சிந்தனைகளைத் துாண்டல்:- தற்போது கொண்டுள்ள
எண்ணங்கள் நம்பிக்கைகள் என்பவற்றை மீளாய்வு செய்யத் துாண்டுவர். ல் தனிப்பட்ட அக்கறை:- எல்லா அங்கத்தவருக்கும் தம் தனிக்
கவனத்தைக் கொடுப்பர். அவர்களின் வளர்ச்சிக்கு ஆலோசனை வழங்குவர். அவர்கள் ஏற்றுக் கொள்ளும்
புரட்டாசி - ஐப்பசி 9

Page 7
ܐܰܝܟ݂܂ .
வகையில் பின்னுாட்டல் வழங்குவர். அவர்களைப் புரிந்து அவர்களின் தனிப்பட்ட வளர்ச்சிக்கு உதவி செய்வர்.
, ஒரு குழுவும் தலைவனிலே செல்வாக்குச் செலுத்தவல்லது. சமூக மாற்றத்தலைவர் ஒரு குழுவின் பாரம்பரிய சிந்தனைக்கு எதிராக அதிகம் விலகிச் சென்றால் அக்குழுவால் நிராகரிக்கப்படுவார். திறமையுள்ள தலைவர்கள் பெரும்பான்மையினர் பக்கம் நின்று தமது செல்வாக்கை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவர். ஆனால் சில ஆற்றல் உள்ள தலைவர்கள் தனித்து நின்றே தம் செல்வாக்கை பிரயோகித்து குழுவின் சக்தியை நெறிப்படுத்துவர்.
கொள்கை - 2: r
தனிநபர் குனமும் சமூகத்தின் தண்மையும் ஒன்றோடொன்று செயலாற்றி இயங்கும் தலைமைத்துவம்
மிக அரிய சந்தர்ப்பங்களில் சரியான பண்புள்ளவர்களுக்கு பொருத்தமான சூழல் அமைவதானால் அவர்கள் வரலாறு படைக்கின்ற தலைவர்களாக மலர்ந்துள்ளனர். ஆபிரகாம் லிங்கன், மாட்டின் லூதர் கிங், சேர்ச்சில், மாகிறேட் தச்சர், காள் மாக்ஸ் போன்றவர்கள் இதற்கு நல்ல உதாரணங்கள். இக்கொள்கையின்படி, பெரும் தலைவர்கள் எனப்படுவோர் ஓரளவிற்கு அவர்கள் வாழ்ந்த n ------------ காலம், இடம், சூழல் என்பவற்றால்..........................................................................-------------............... صبر
H
Ló ಅಗೌu உருவானவர்கள். இத்தகைய தலைவர்கள் சந்தர்ப்பங்களில் வளர்ச்சி, மாற்றம், நெருக்கடி போன்ற ಆfune01 சூழல்களிலேயே பெரும்பாலும் "ల్లాகு உருவாகுபவர்கள். உ+ம் போலாந்து குழல் நாட்டின் தொழிலாளர்களின் உரிமைப் அமைவதானால் பிரச்சனையின் போது உருவான வலேசா ஓர் அவர்கள் வரலாறு நல்ல உதாரணம். | : | தலைவர்களின் பொருத்தப்பாடு | மலர்ந்துள்ளனர். என்பது சூழலைப் பொறுத்தது.(ஒரு குறிப்பிட்ட சூழலில் நல்ல தலைவனாக
SLSS LSLS SS LLLLLSSLLLLSLLLLLLGLSLSLS SSSS CLSL SLSLSLSSSLS SSLS S مجھے
* இருப்பவர் இன்னொரு சூழலுக்குப் பொருத்தமற்றவராக இருக்கக் கூடும். இதிலும் வெவ்வேறு வடிவம்
கொண்ட தலைமைத்துவம் உண்டு.
தற்செயலாக ஏற்படும் தலைவர் வடிவம்
இது தனிநபரின் குணப்பண்புகளையும் சூழலையும் ஒன்றாகக் கருத்தில் எடுக்கிறது. ஒரு வேலைக்குப் பொருத்தமான திறமை குழு அங்கத்தவர் ஒருவரிடம் இருந்தால் அவரே அந்த விடயத்தில் அக்குழுவின் தலைவராவார். எனவே வேலைக்கேற்ப திறமை கொண்டிருத்தலே தலைமைத்துவத்தை நிர்ணயிப்பதாக இக்கொள்கை குறிப்பிடுகிறது. கட்டிட விடயம் பற்றி ஒரு குழுவில் தீர்மானம் எடுக்கவேண்டிய கட்டத்தில் ஒரு கட்டடப் பொறியியலாளரே தலைமை
புரட்டரசி m
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

%*گونه
ai 3. தாங்குவார். அதே போன்று நிதி பற்றி பேசும் ,ே% (5 கணக்காளர் தலைமை தாங்குவார். ே 冕
○。 பிரைட் பிட்லர் (Fred Feder1967) என்பவரின స్టో தலைவர்களுக்கிடையே காணப்படும் முக்கியமான வேறுபாடு ਲੰ 事 ஆள்-மையமானவர்களா (தன் கீழ் பணிபுரிவோரின் i్క கருத்தில் எடுப்பர்) அல்லது வேலை மையமானவர்களா? (வேலையில் மட்டும் கவனம் செலுத்துவர்) என்பதே. ஒருவர் தன் சூழலை எவ்வளவிற்குத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுள்ளார் என்பதிலேயே மேலுள்ள இரண்டில் எது சிறப்பானது என்பது விளங்கும்.
ஆள்மைய தலைமைத்துவம் கொண்ட தலைவர்கள் சக பணியாளர்களுடன் நல்ல உறவு கொண்டு, ஆளும் திறனுள்ள பதவிநிலை, தெட்டத்தெளிவாக வரையறை செய்யப்பட்ட வேலை என்பன கொண்டிருக்கும்போது தம் சூழலைத் தம் கட்டுப்பாட்டில்
அதிகம் வைத்திருக்கக் கூடியவராக விளங்குவர். மாறாக, リ。 உத்தியோகத்தருடன் நல்லுறவைப் பேனாமை, குறைந்தளவு
அதிகாரம் கொண்ட பதவி, திட்டவட்டமாக வரையறை செய்யப்படாத வேலை என்பன கொண்ட தலைவர்கள் சூழலைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் குறைந்தவர்களாகக் காணப்படுவர்.
ஆள்மையத் தலைவர்கள் குறைந்த கட்டுப்பாடுள்ள சூழலில் குறைந்தளவு வழிநடத்தலே வழங்குவர். ஆனால் உறவுமையத்
தலைவர்கள் சராசரியான கட்டுப்பாடு _ கொண்ட சூழலில் சிறந்து விளங்குவர். (ட் ને &#Inligt கட்டுப்பாடுள்ள சூழலில் ஒரு குறித்த பணியாட்களின் விடயங்களில் மட்டுமீறித் பணிக்குப் தலையிடுவர். தெளிவற்ற சூழலில் பொருந்தாத உறவுமையத் தலைவர்கள் தம் திறந்த ஒருவரைத மனப்பான்மை, தீர்மானங்கள் எடுப்பதில் வேலையாட்களைப் பங்கேற்க வைக்கும் பாது | | பண்பு, உறவாடும் திறன் என்பனவற்றால் | வேலைசந்தமான ! (86.60)6Our '856i தங்கள் (86.606) உளஅழுத்தம், பிரச்சனைகளை புதியகோணத்தில் சிந்தித்துத் உளஅழுத்தம் தீர்க்கும் வண்ணம் அவர்களை சம்பந்தமான ஊக்கக்கூடியவர்கள். நோய்கள்,
11 வேலைக்கு வராமை வேலைமையத் தலைவர்கள் தெளிவாக 1 என்பன காணப்படும். | வரையறை செய்யப்பட்ட வேலை கொண்டிருப்பின் மிகவும் சிறந்து விளங்குவர். .
M இங்கு கட்டுப்பாட்டின் திறன் குறைவாகவோ அதிகமாகவோ இருக்கலாம். குறைந்த கட்டுப்பாடுள்ள குழுக்களுக்கு வழிநடத்தல் தேவைப்படும்போது வேலைமையத் தலைவர் செய்யயேண்டிய வேலையில் மட்டும் கவனம் செலுத்தி வழிநடத்தலைச் செய்வார். அதிக கட்டுப்பாடுள்ள சூழல்களில் அது சாதகமாக இருக்கும் போது

Page 8
藝
*
4, ' "。* ான உரம் சர்க்க
இத்தலைவர்கள் உள உடல் ஓய்வுநிலையில் அவசரமின்றி நடந்து கொள்வர்.
சிலர் வேலைசார் தலைமைத்துவத்தில் சிறந்து விளங்குவர். வேலைக்கு ஆட்களை ஒழுங்கு செய்தல், வேலையின் தரத்தைக்
கவனித்தல், வேலையின் இலக்கை அடைதல் என்பவற்றில் இவர்கள்
சிறந்த செயற்பாடு காட்டுவர். இதிலே பொருத்தமான கட்டளை கொடுக்கக்கூடிய அளவிற்கு புத்திக் கூர்மையுடையவர்கள் நல்ல தலைவர்களாவர். வேலையின் இலக்குகளில் இவர்கள் கவனமாக இருப்பதால் வேலையாட்களை செய்துமுடிக்க வேண்டிய வேலையில் கவனம் செலுத்த வைக்கும் திறன் இவர்களில் காணப்படும். குறிப்பிட்டதும் சவால் கொடுப்பதுமான இலக்குகளும், அவற்றினை அடைவதில் ஏற்படும் முன்னேற்றம் பற்றிய காலாகால அறிக்கையும் வேலையாட்கள் தம் வேலையில் ஊக்கம் பெற உதவியாக இருக்கும். ஒரு குறித்த பணிக்குப் பொருந்தாத ஒருவரைத் தலைவராக நியமிக்கின்றபோது அங்கு வேலை - - - - - - - - - - - - - - - - - - - - - - - میر
சம்பந்தமான உளஅழுத்தம், உளஅழுத்தம்
●கேள் சம்பந்தமான நோய்கள், வேலைக்கு வராமை | செய்து முக்க | என்பன காணப்படும். இதனால் அத்தலைவரின் வேண்டிய ஆக்கத்திறனும் செயற்திறனும் குறைவடையும் வேலையிலும் ( Fiedler and Garcia 1987; Fiedler et al. 1992 ). | பணியாட்களின் நல்ல தலைவர்கள் செய்து முடிக்க வேண்டிய | Dಣೂ. வேலையிலும் பணியாட்களின் நலன்களிலும்,
ဓ#ခစိအန္ifi. கவனம செலுத்துவர்.
燃 தலைவரை அதிக செயலாற்றும் திறமையுள்ளவராகவும் அவரின் கீழ் -- -- -- -- -- -- -- -- -- -- -- -- ܠ பணிபுரிபவர்கள் திறமையற்றவர்களான மந்தைகளாகவும் காண்பிப்பதனால் மேற்குறிப்பிட்ட இரு தலைமைத்துவக் கொள்கைகளும் குறையுடையன எனக் கணிக்கப்படுகின்றது. இவற்றிற்கு மாற்றீடாக கோலண்ட் (Holland 1985) அவர்கள் இருவழிப்பாதைத் தலைமைத்துவம் எனும் கொள்கையை
முன்வைத்தார்.
இருவழிப்பாதைத் தலைமைத்துவம்
கோலண்ட் அவர்கள் இன்னொரு வடிவத்தை முன்வைக்கின்றார். இதில் தலைமைத்துவமானது இருவழிப்பாதையாகக் காட்டப்படுகின்றது. திறமையான தலைவர் தன்னைப் பின்செல்பவர் அல்லது தமக்குக்கீழ் பணிபுரிவோருக்கு அவர்கள் தம் புலன்களால் அறியக்கூடிய வெகுமதிகளை அளிப்பவராகவும் தன் கீழுள்ளவர்களிற்கு செவிமடுப்பவராகவும், அவர்களிடம் எதிர்பார்க்கப்பட்டளவு வேலை செய்த பின் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்பவராகவும் விளங்குவர். இங்கே தலைவர் தன் பங்களிப்பைச் செய்யும்போது தொழிலாளரும் தம் பங்களிப்பைச் செய்கின்றனர். ஒருவரின் தலைமைத்துவப் பண்புகளுடன்
LULLIdf) - FRLð
 
 

ாதுத் ஆதரவாளர்களின் விருப்பும் பூர்த்தி செய்யப்படும்போதே ஒருவர் அவர்களின் தலைவராகிறார் என்பதே இக்கொள்கையின் கருத்து. தமக்குக் கீழுள்ளவர்கள் தம் கருத்தை வெளியிட அனுமதிக்கின்ற தலைவர்களுக்கே மக்கள் அதிக ஆதரவு வழங்குவர் என்பது ரைலர் குழுவினரின் (Tyler et al, 1985) கருத்து. வேறு சிலர் தலைமைத்துவ த்தைப் பின்வருமாறும் வகைப்படுத்துவர்.
இரு வகையான தலைமைத்துவங்கள்
1. தொடக்குதற் தலைமைத்துவம்; இதில் தலைவர் ஒரு குழுவை அமைத்தல், வழிநடத்தல், ஒழுங்குபடுத்தல் என்பனவற்றை மேற்கொள்கிறார். தாம் குழுவிடம் எதை எதிர்பார்க்கிறார் என்பதைத் தெளிவாக வெளிப்படுத்துவார். ஒரு வேலைக்கான இறுதி நாள் குறிப்பார். தரமற்ற வேலையை விமர்சிப்பார். சட்ட ஒழுங்குகளை கடுமையாகக் கடைப்பிடிப்பார். மற்றவர்களை 35(660) Dust 35 உழைக்கும்படி கட்டாயப்படுத்துவார். இது வேலை மையத் தலைமைத்துவத்தைப் போன்றது.
2. அக்கறைத் தலைமைத்துவம்: இதில் தலைவர் தன் குழுவோடு பழகும்போது நட்பு, இதம், நம்பிக்கை, ஆதரவு என்பன காட்டுவார். இவர்களில் நட்புத்தன்மை, பிறரால் அணுகக் கூடியவராக இருத்தல், செவிமடுத்துக்கேட்டல் என்னும் திறன்களையும் கொண்டிருப்பார். தன் தீர்மானங்களை விளக்குவார், தேவையேற்படும் போது சட்டம் ஒழுங்குகளையும் மாற்றிக் கொள்வார். பிறரைத் தனக்குச் சமமான ஆளாகக் கருதி நடத்துவார். இது ஆள் மைய தலைமைத்துவம் போன்றது."
மேற்கூறிய மூன்று கொள்கைகளையும் ஒப்பிடும்போது மூன்றிலுமுள்ள நல்ல அம்சங்களை உள்வாங்கிய g தலைமைத்துவமே சிறந்தது எனக் கொள்ளலாம். அதாவது ஆளுமைப் பண்புகள், சந்தர்ப்ப சூழலின் பங்களிப்பு, ஆளுக்குப் பொருத்தமான வேலை, வேலைமைய, ஆள்மையத் தலைமைத்துப் பண்பு என்பன ஒருங்கே இணைந்து சந்தர்ப்பத்துக்குப் பொருத்தமான முறையில் இயங்குபவரே சிறந்த தலைவர் எனக் கூறிக்கொள்ளலாம்.
துணை நூல்கள் 1 David G. Myers (1996) Social Psychology. 5" ed. New York;McGraw-Hill. 2 Elizabeth B. Hurlock(1982). Developmental Psychology. 5o ed. Philippine:
National Book Stores. Sharon S. Brehm (1996). Social Psychology. 3 td ed. New Jersey: Houton Mifflin. 4. Wayne Weiten, Margaret A Loyd, Robin L. Lashely(1991). Psychology applied to
modern life. 3" ed. California: Brooks \Cole.
3

Page 9
தரணி குழுமமும்
வாசகர்களும்
‘நான்’ உளவியல் சஞ்சிகை ஏறக்குறைய கடந்த ஆறு வருடங்களாக புதுப் பொலிவுடன் வெளிவந்து கொண்டிருப்பதை வாசகர்களாகிய நீங்கள் அவதானித்திருப்பீர்கள். கணனிப் பதிப்பில் பல்வேறு வகையான, சுவையான அம்சங்களைத் தன்னகத்தே உள்ளடக்கி கம்பீரத்துடன் வாசகள் பலரது இதயங்களை "நான்" கவர்ந்துள்ளது. இந்த சிறப்பின் பின்னணியில் பலரது உழைப்பு இருந்தாலும் எல்லோரினது முயற்சிகளையும் ஒன்று திரட்டியுருவாக்கியவர் அருட்தந்தை போல் நட்சத்திரம் அவர்கள். கடந்த ஆறு வருடங்களாக நான் சஞ்சிகையின் ஆசிரியராக அருட்தந்தை பணியாற்றி வந்தார்.
தனது "ஆசிரியர் அரும்புகள்’ மூலம் "நான்" வாசகர்கள் மத்தியில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்திருப்பவர் இவர். நான் சஞ்சிகையில் வெளிவரும் எல்லா ஆக்கங்களுக்கும் அறிமுகம் தருவதுபோல அவரது ஆசிரியத் தலையங்கம் அமைந்திருப்பதை அவதானித்திருப்பீர்கள்.
உயர்ந்த உளவியல் சிந்தனைகளை நற்றமிழில் குழைந்து தருவதில் அருட்தந்தை போல் நட்சத்திரத்திற்கு இணை அவராகத்தான் இருக்க முடியும். ஒழுக்கவியலில் முதுகலைமானிப் பட்டம் பெற்ற இவர்
L_If – FILIf
 
 
 
 

நான் உவசக
யாழ் சவேரியார் குருமடம் யாழ் பல்கலைக்கழகம் என்பவற்றில் விரிவுரையாளராகவும் யாழ் அமலமரித்தியாகிகள் உயர் குருமட அதிபராகவும் பணியாற்றி வந்தார். சிறந்த பிரசங்கியாகவும், ஞானக் கருத்துரை வழங்குபவராகவும் மக்களிடையே தன்னை நிலை நிறுத்திக்கொண்டவர். இவ்வாறு பன்முகச் சிறப்பினைக் கொண்ட இவரது பங்களிப்பு "நான்' சஞ்சிகைக்குக் கிடைத்தது ஒரு இறை வரமே.
நீண்ட சேவையின் பிற்பாடு பணிநிலை மாற்றத்தை எதிர் பார்த்திருக்கும் அருட்தந்தைக்கு எமது
பாராட்டுக்கள். புதிய பணியிலும் உங்கள் பன்முக ஆளுமைச்சிறப்பு பதிக்கப்பட தோழமையுடன் வாழ்த்தி நிற்கின்றோம்.
அத்தோடு, கடந்த நான்கு வருடங்களாக "நான்’ இன் வளர்ச்சிக்கு அரும்பணியாற்றி தங்கள் கல்வியாண்டை முடித்து விடைபெறுகின்ற அருட்சகோதரர்கள் விமல், ஜோய், அல்பிறட், ஜெகான், பிரவீன் மகேசன், பீஸ்மன், பெனோ, ஜோண்சன் ஆகியோரையும், மற்றும் சிங்கள சகோதரர்களான சம்பத் பெரேரா, சிறீநாத் என்போரையும், இன்னும் கடந்த சில மாதங்களாக எமது சஞ்சிகையின் அலுவலக பணியாளராக பணியாற்றி வெளியேறுகின்ற சகோதரி வேர்ஜினியையும் நன்றியோடு நினைக்கின்றோம்.
நான்" சஞ்சிகை உங்களால் மெருகூட்டப்பட்டுள்ளது. "நான்” குழுமத்தின் சார்பிலும், வாசகர்கள் சார்பிலும் உங்களுக்கு எமது இதயம் நிறைந்த நன்றிகள்.
JLLisf) - FgÚLáf

Page 10
ஆற்றுங்குத்துதலில் ஆரோக்கிங் மகிழ்ச்சி காண.
GULIITEF LEIT6NDIT
மனிதனுக்கு தேவை மகிழ்ச்சி மனித நிறைவுக்கு ஆரோக்கியமான மகிழ்ச்சிதான் முக்கியமானது. தேவைகள் பூர்த்தியாகும் போதுதான் ஆரோக்கியமான மகிழ்ச்சி பிறக்கும். என்ன தேடுகிறேன் என்பதை விட, என்ன கிடைத்துள்ளது என்பதிலும் திருப்தி காணாத போது ஆரோக்கியமான மகிழ்ச்சி கானல் நீராகவே உள்ளது.
மனித வாழ்வின் முக்கிய எதிர்பார்ப்பு ஆரோக்கியமான மகிழ்ச்சியுடன் வாழ்வதே. மகிழ்ச்சி என்பது நிறைவான பணம், பொருள், பண்டங்கள், பட்டம், பதவிகள் இருந்தால் மட்டும் நிரந்தர ஆரோக்கிய மகிழ்ச்சியாக அமைந்து விடாது. இவை எல்லாம் மனித தேடலாக இருந்தாலும், இவற்றை அனுபவிக்கும் மனநிலை, பாதுகாப்பு, நம்பிக்கை வாழ்வுக்கான சூழல், அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படாத வரை, மகிழ்ச்சியை தேடியே மனித மனம் அலைந்து திரியும்.
சிறுவர் முதல் முதியோர் வரை மகிழ்ச்சியின் தேவை மற்றவர்களிலும் தங்கியுள்ளது. அதற்காக பிறரில் முழுமையாக தங்கி இருந்தால் நாமும் சிறுவர்கள் தான். சிறுவர்களே மற்றவர்களில் தங்கி வாழ்வர். இளையோர் என்றால் நாம் எம் தேவைகளை நிறைவு செய்ய முயன்று கொண்டு இருக்க வேண்டும். இதன் நிலைகளுக்கு ஏற்ப வயதால் அல்ல, மனத்தால் நாம் சிறுவர்களா? இளையோர்களா? ஏன்பதை நாமே வகுத்துக் கொள்ள முடியும். தற்காலிக மகிழ்ச்சி காண முனிைவோர் மது, மாது, கொலை, களவுகளில் தம்மை ஈடுபடுத்தி விரைவான மகிழ்ச்சி காண விழைவர். ஒரு தவறில் இருந்து மீள மீண்டும் புதிய தவறுகளில் விழுவதற்கு முனைவர். ஆகவே தான் ஆரோக்கியமான மகிழ்ச்சிக்கு கடினமான முயற்சி தேவை. இதற்காக தன்னம்பிக்கையை ஊட்ட வேண்டியதும் முக்கியமானதே.
இயற்கைச் சீற்றத்தாலோ, போரின் தற்காலிகமகிழ்ச்சி தாக்கத்தாலோ, உறவுகள் இழப்பினாலோ கானமுனைவோமது சகலதும் இழந்தவர் பிறரிடம் தங்கி வாழும் மாதுகொலை நிலையில் எந்த பெரியவரும் சிறுவராகவே களவுகளில் தம்மை வாழும் நிலை ஏற்படுகிறது. இவர்களின்
ஈடுபடுத்திவிரைவான அடிப்படைத் தேவை பூர்த்தியாகாதவரை :ஆற்றுப்படுத்துதலும் பயன் அளிக்காது ಫ್ಲಿ:¶ போகும். வயிற்றுப் பசியும், காயங்களும் விழுவதற்கு முனைவர். உளளவருககு முதலில் தேவையை
உணர்ந்து முதல் உதவிகளை செயற்படுத்த முனையும் போது கூட வாழ்வில் நம்பிக்கை
 
 
 
 
 
 
 
 
 

நாவக
நாட்டம் ஏற்படும். இவை, “நானி உன்னுடன் அருகிருக்கிறேன். உம்மீது அக்கறை கொண்டுள்ளேன், என்பதை வெளிப்படுத்தும் செயல்களும் ஆற்றுப்படுத்தலின் ஆரம்ப வடிவங்களுமாகும்.
உடற்பசி, உடற்காயம் தீராது உளக்காயத்தை மட்டும் தீர்க்கமுனைவதில் முண்டியடிப்போர் இன்று பல்வேறு வகையில் குழப்பத்தையே விதைத்து விடுகிறார்கள். இதனால் கூட உள ஆற்றுப்படுத்துதல் என்றாலே விரக்தி இரட்டிப்பாகவும் வளர வாய்ப்பு ஏற்படுகிறது. “நாம் நமது செயல்களை தீர்மானிக்கும் அளவிற்கு நம் செயல்களும் நம்மை தீர்மானிக்கின்றன” என்பார் ஜாஜ் ஈலியட் எனும் ர். இது போலவே எமது சந்திப்புக்கள், ஆற்றுப்படுத்தல்கள் நம்பிக்கையூட்டும் நிஜத்தை உணரும் செயல்களாக அமைந்தாலே எதிலும்
சிறு ஊசி குற்றிய காயத்தை குணப்படுத்துதல் வீட்டு
வைத்தியத்தால் முடியலாம். அதற்காக பெரிய வெட்டுக்காயத்தையும் வீட்டு த்தியத்தால் சுகப்படுத்தி விடலாம் என பிடிவாதம் பிடிக்காது அதற்கேற்ற
வைத்திய வழிகளுக்காக உடன் வைத்திய நிலையத்தை நாட வைப்பது போன்றதும் உள ஆற்றுப்படுத்துபவர்களின் கடமைகளாகும். அவதான கண்காணிப்பின் மூலம் நல்வழிகளை தெரிந்தும் இருக்க வேண்டும். இல்லையேல் ஏற்பு வைத்த புண்னை மாற்ற முனையும் நிலையில் வைத்தியரிடம் அனுப்புதல் என்பது "சிகிச்சை வெற்றி அளித்தது ஆனால் நோயாளி தான் இறந்து விட்டார்” என்ற நிலை தான் முடிவாகிவிடும்.
இது போலவே உள ஆற்றுப்படுத்தலின் ஆரம்பக்கட்டத்திலே உளச் சிகிச்சை தேவையெனின் உடன் மனோ நல வைத்தியரிடம் அனுப்புதலும் நல்ல ஆற்றுப்படுத்துனரின் கடமையாகும். நெருக்கீட்டு சூழலில் சிறுவரின் மனநிலையில் தங்கி வாழும் பலருக்கு தன்னம்பிக்கை வாழ்வை கட்டி எழுப்புதல் என்பதில் கூடிய கவனம் எடுத்தல் வேண்டும். இதற்கான வழித்தேடலை அவர்கள் கண்டடைவதில் எழுந்து நடக்கும் ஊன்று கோல்களாக பலமாகவும், நிதானமாகவும் சமநிலையிலும் கூட்டிச் செல்லும் வழித்துணையாளராக ஆற்றுப்படுத்துனர் தம்மை தயார்ப் படுத்தவேண்டும்.
பல்வேறு தாக்கத்தால் தன் D6) விரக்தியில் தன்னம்பிக் அற்றோராய் கூட்டாக
வாழ்வோரிடத்தில் வெறும் ఒకరి போதனைப்பண்பினை வளர்த்துக் ఆడాడా? கொள்ளுதலும் அர்த்தமற்றதாகிவிடும். အ၈mဆႀးfrအ
"தீயை வளர்ப்பதும் காற்று தீயை எரிப்பதிலா? உதவப்
காறு தீக் கொழுந்துகளுக்கு உயிர் 88:2--< உங்கள் அணுகுமுறை ஊட்டும், பலத்த காற்று அவற்றை T தான்சுட்டிநிற்கும். அணைத்து விடும்” என்பார் அறிஞர் I ஒவிட். இது போலவே உங்கள்
அணைப்பதும் காற்றே, மெல்லிய Ο போகிறதென்பதை
7 நூலகம் யாழ்ப்பாணம்,

Page 11
சந்திப்புக்கள் மனத்தீயை அணைப்பதிலா? சுவாலையாக எரிப்பதிலா? உதவப் போகிறதென்பதை உங்கள் அணுகுமுறை தான் சுட்டி நிற்கும்.
நீங்கள் அவர்களோடு அவர்களாக சமநிலைத்தன்மையில், நம்பிக்கையூட்டுவதில் தம்மை முதலில் தயார்படுத்துதல் மிக முக்கியமானதாகும். விபரக்கோவை சேகரிப்பவர் போல், அதிகமானவருக்கு உள ஆற்றுப்படுத்துதலை விரைவாக குறிப்பிட்ட தனது நேர வசதிகளுக்கு ஏற்ப செய்து முடித்து விட்டோம் என அறிக்கை கொடுக்கும் வழிகள் சிறந்த SD 6. ஆற்றுப்படுத்துனருக்கு பொருத்தமானதாகாது. இவற்றில் குணப்படுத்தல், "ஆற்றுப்படுத்துதல் என்பதை வருவாய்க்காக செயற் படமுனைவோரால் ஆற்றுப்படுத்தும் புனிதப்பணியின் அர்த்தம் இழந்து விடும். தொகையில் அல்ல தரத்தில் குணமடைவதில் தான் மனித வாழ்வின் மகிழ்ச்சி வாழ்வின் ஆரோக்கிய சமூகம் மலரும்.
ീ00 മുത്ര, ഗ്രീ
வள்ளுவரின் திருக்கறள் மனிதனை ஆற்றுப்படுத்தும் நுால். இதன் வழி மனிதன் நடந்தால் மனிதன் மனிதனாக வாழ முடியும்.
சினமெனும் சேர்ந்தாரைக் கொல்லி சினம். கோபத்தின் பாதிப்பை மிகவும் சுருக்கமாகவும், ஆழமாகவும் விளக்குகிறது திருக்குறள். கோபம் உண்டான வரையே அது அழிக்கின்றது. உளவியல் அடிப்படையில் கோபத்தினால் பல உறுப்புக்கள் பாதிப்படைகின்றன. மனிதனுடைய நோய்களுக்கு கோபமும் ஒரு காரணம். அதனால் கோபம் உண்டாகிறவரை சிறிது சிறிதாக அழிக்கின்றது. ஒரு வகையான தேள் ஒன்றுக்கு கோபம் வந்தவுடன் அது தானே தன்னை தன் கொடுக்கினால் குத்தி இறக்கின்றது. வள்ளுவரின் சிறு எண்ணக் கருவிலிருந்து நாம் உணர்வது மனிதன் சினத்தைத் தவிர்க்க வேண்டும் என்பது.
நான் என்னும் தன்னலமுனைப்பற்ற சஞ்சிகை வாசிப்பவர்களை நான் எப்படி? எந்த நெறியில் எப்படி? வாழவேண்டுமென்று ஆற்றுப்படுத்துகின்றது. இதன் சேவை மிகவும் மகத்துவமானது.
வே. நச்சினார்க்கினியசிவம்
கொழும்பு
 
 
 
 
 

botట్టు తెల0లిగిలినీ
S. அல்பேட் றிகன்
மனித வாழ்வில் மனம் அல்லது உள்ளம் முக்கிய பங்குவகிக்கின்றது. உடலின் குறைபாடுகளைக் கண்டுபிடித்து குணப்படுத்துவதற்கு உடலியல் வைத்தியர்கள் பணியாற்றுகிறார்கள். மனித மனம் நோயுறுகின்றபோது மனோதத்துவ வைத்தியர்களின் உதவி தேவைப்படுகின்றது. மனப்பாதிப்பு / உளப்பாதிப்புகள் வாழ்க்கைப்போக்கின் மீது மிகுந்த ஆதிக்கம் கொண்டனவாக இருக்கின்றன. . 1 ܘܚܙ` ܐ
“நம்முடைய செயல்கள், நடவடிக்கைகள் அனைத்துக்கும் நம்முடைய மனமே காரணமாக இருக்கின்றது. இன்னொருவிதத்தில் நம்முடைய மன ஆரோக்கியத்தை நம்முடைய செயல்களையும் நடவடிக்கைகளையும் வைத்துத்தான் முடிவுசெய்ய வேண்டியவர்களாகவும் நாம் இருக்கின்றோம்.” நமது மனதிற்கும் நமது நடத்தைக்கும் உள்ள பரஸ்பர தொடர்பை இன்றைய உளவியல் நிபுணர்கள் குறிப்பிடுவர்.
ஆக எமது உளம் ஆரோக்கியமாக இருக்கும் போது நாம் நல்ல நடத்தையில் மிளிரலாம். உளம் ஆரோக்கியம் இழந்து நோயுறும் போது நாம் மகிழ்ச்சியை தொலைத்துவிட்டு விரக்தியுடன் போராடுகின்றோம். இன்றைய அவசரமான வாழ்க்கைச் சூழல் மனிதர்களை பல வழிகளில் தாக்குகின்றது. கல்வியில் நினைத்த இலக்கை அடைய முடியாது போதல்; சிரமப்பட்டு படித்துப்பட்டம் பெற்றும் படிப்பிற்கு ஏற்ற வேலை வாய்ப்பு இல்லாமை, தன்னையே ஈடுவைத்து நீண்ட காலம் அன்புவைத்து நம்பியிருந்தபோது காதலனால்/காதலியால் ஏமாற்றப்பட்டமை; வியாபாரத்தில் போட்ட முதல்கூடவராது நட்டம் ஏற்படல்;
நாம் எத்தகைய நெருங்கிய குடும்ப உறுப்பினரின் திடீர் தக்ன்ே மரணம்; ՑlջՋ16Հl6Ù85 உள் ప్లేறாம் முரண்பாட்டினால் வேலைநின்று என்பதை கண்டுபிடிக்க | போதல். இவ்வாறு இதயத்தில்
வேண்டும் இதுவேநாம் இடிகளை இறக்கிவைத்த பெரும்துயரம் அந்தநிலையிலிருந்து முதல் கைக்குட்டை தொலைந்து விடுதலைபெறுவதற்கு போன சிறு துயரம் வரை மனதை
முதல்படியாகும். வருத்தும் சம்பவங்களை நாம் அடுக்கிச் சொல்லலாம். இவற்றில் சில பாதிப்புக்கள், சில வேளைகளில்
எம்மனதில் நீண்டகால வடுக்களாக
ULTaf - Saud
آلۂ مقا# تلقینا ! یہ صلى الله عليه وسلم í III 6:51 íb.

Page 12
"முறிந்த கையைக்கொண்டு நாம் விழாமலே உழைக்க முடியும் ஆனால் உடைந்த பி வாழ்ந்தோம் உள்ளத்தைக் கொண்டு உழைக்க என்பதில் அல்ல. முடியாது!’ என பாரசீகப்பழமொழி ஒன்று வீழ்ந்த கூறுகின்றது. நாம் 2.60)6) பொழுதுகளிலெல் பராமரிப்பதுபோல் எமது மனத்தையும் ! லாம் எழுந்து செழிப்பூட்டி வைத்திருக்க வேண்டும். ” நிற்கின்றோம்
வாழ்ந்தோம் என்பதில் அல்ல; வீழ்ந்த TT
இருந்து எம்மை அ எமது நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் கூட ஆக்கிரமித்து சோகமயமாக்குகின்றது.
இவ்வாறு அன்றாடம் நிகழும் விரும்பத்தகாத சம்பவங்களினால் மனமுறிவு கொண்டு மனம் சாய்ந்து போகும் நிலமைகளில் பின்வரும் எதிர்விளைவுகளை நாம் காணலாம். தாழ்வுணர்ச்சி, எதிர்மறையான சிந்தனைகள், தனிமைப்படுத்தப்பட்ட உணர்வு, பாதுகாப்பின்மை, தம்மையே நிராகரித்தல், தம்மைப்பற்றி பொய்யான மதிப்பு, அடிக்கடி மனச்சோர்வு, மன்னிக்கமுடியாத நிலை போன்றவை இருக்கலாம். அத்துடன் வாழ்வினில் ஈடுபாடு குறைந்து எந்த விடயத்திலும் முயற்சி அற்ற நிலை காணப்படலாம். உறக்கம் இவர்களுக்கு நிம்மதி
தருவதில்லை. இதன் உச்ச நிலையாக தாம் வாழ்வதே தொல்லையாகக் கருதி தம்மை மாய்த்துக்கொள்ளவும் இவர்கள் துணிந்து விடலாம். நமது மனதை காயப்படுத்திய
உணர்ச்சித்தழும்புகள் யாவற்றிலிருந்தும் உடனடியாக எம்மால் மீண்டு
வெளி வர முடியாது. இருப்பினும் நாம் எத்தகைய உணர்வுத்
தாக்கத்துடன் வாழுகின்றோம் என்பதை கண்டு பிடிக்கவேண்டும். இதுவே நாம் அந்த நிலையிலிருந்து விடுதலை பெறுவதற்கு முதல்படியாகும். கடந்தகால தவறுகள், ஏமாற்றங்கள்,
தோல்விகளிலிருந்து பாடம் கற்று எதிர்காலத்தில் தம்வாழ்வை
செம்மைப்படுத்தியவர்கள் தமது உள காயத்திற்கு தகுந்த பரிகாரம் கண்டு விட்டார்கள்.
எவ்விதத்திலும் பயன் தர முடியாத என்பதில்தான் துயரங்களை நாம் எத்தனை நாட்கள் எமது பெருமை goj(8LJITIb...? நாம் விழாமலே பரT... இருக்க
வேண்டும்.
பொழுதுகளிலெல்லாம் எழுந்து நிற்கின்றோம் என்பதில் தான் எமது பெருமை இருக்க வேண்டும்.
“உங்களிடத்தில் நீங்கள் உண்மையாக இருங்கள்” என்றார் வில்லியம் ஷேக்ஸ்பியர் எம்மைப்பற்றி நாம் கொண்டிருக்கும் “சுயவிம்பத்தின் தெளிவின்மை” காரணமாக, எம்மிடத்தில் நாம் உண்மையாக நடந்து கொள்வதில்லை. இதனால் சமூகத்தில் நாம் பலியாகின்ற சம்பவங்கள் பல நிகழ்கின்றன. கோணலான சுயவிம்பம் கொண்டவர்கள் தம்மைகுறைந்த விலைக்கு விற்றுவிடுவார்கள். இத்தகைய நிலமைகள் நாளடைவில் மனமுறிவு, மனச்சோர்வை ஏற்படுத்தி பாதாளம் வரை இட்டுச் செல்கின்றன. இவை எமது மகிழ்ச்சிக்கும், முயற்சிக்கும் பெரும் தடைச் சுவராகி விடுகிறது.
சி
 
 
 
 

டாக்டர் மேக்ஸ் வெல்மால்டஸ் கூறுகிறார், சிகிச்சை நிபுணரான நான் பல தோல்விகளைக் கண்டிருக்கின்றேன்.
அப்பொழுது
“பிளாஸ்ரிக் சத்திர
ான் ஒரு நபரின் சுயவிம்பத்தின் முக்கியத்துவத்தை
நான் உணர்ந்து கொண்டேன். ஒரு மனிதனின் உருவத்தோற்றத்தை
நான் மாற்றி அமைத்தாலும்
அவன் ஆன்மா
ரீதியில்
(உளம்)
உற்சாகம் காணாதபோது எவ்வித மாற்றத்தையும் கண்டு கொள்ள அவரால் முடியாது. நமது தழும்புகள் அனைத்தும் பார்க்கக் கூடியவை இல்லை; புறத்தழும்புகளைவிட அகத்தழும்புகள் மோசமானவை, அவை நம்முள் ஆழப்பதிந்துள்ளன. நீண்ட வலிகளை ஏற்படுத்துகின்றன.”*
எமது ஆழ்மனம் (Unconscious Mind) என்பது தனியான மனிழ் 2 இல்லை; மனத்தினால் கட்டுப்படுத்தும் மூளையும், நரம்பு அமைப்புரி
கூடிய, இலக்கு நோக்கிப் பணியாற்றும் ஓர் இயந்திரம் என்பது ? சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நமக்கு இரண்டு மனங்க்ள் ?
இல்லை. நம்முடைய மனம் அல்லது பிரக்ஞை (Conscious )、
தன்னிச்சையாக இலக்கு நோக்கி பணியாற்றும் இயந்திரம். 兵 في فئة
- உள் இருக்கும் இயந்தி 説。" நமமைச சாநது 3 (U எமது ஆய d செயற்படுவதில்லை. நாம் அடைய K; 7 எ ಗಲ್ಲ விரும்பும் இலட்சியங்களை நோக்கி ܐܶܬ݂ܶܐ இல்லை. மனத்தினால் அது தானாகவே செயல்படும். கட்டுப்படுத்தும் மூளையும் அதற்கு வெற்றி இலக்குகளை நாம்
நரம்பு அமைப்பும் கூடிய, அளித்தால், அது வெற்றி | இலக்கு நோக்கிப் இயந்திரமாக ties) oilfiq fuqub.
பணியாற்றும் ஓர் எதிர்மறைச் சாத்தியங்களை நாம்
V இயந்திரம் 615 ஏற்றினால், அதுவும் தோல்வி கண்டுடுேள்ளது. இயந்திரமாக செயல்படும்.
மனம்
சாய்ந்து போகும்
தருணங்களில் தம்மைத்தேற்றிக்கொண்டு முயற்சி செய்து வாழ்வில்
வெற்றிகண்ட u6)f
பெறாமையால் விடாமுயற்சியுடன் தம்மிலும் L660ö(6ub (Repeat class)
61 LDS பாடசாலையில் சாதாரண தரப்
உயர்தரத்திற்கு
உயர்தரப்
வாய்ப்பு
சமுதாயத்தில் பரீட்சையில் கணித
வாழ்கிறார்கள். t#ff_tb ởìặ5g) இழந்தவர்கள்
வயது குறைந்தவர்களுடன் இருந்து
பரீட்சையிலும் சித்தியடைந்து
தற்போது பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று கொண்டிருப்பவர்களும்
இருக்கிறார்கள். ‘சாதிக்கத்
துடிப்பவனுக்கு
உடற்குறைபாடு
(அங்கக்குறைபாடு, புலன்குறைபாடு) ஒருபோதும் தடையல்ல என நம்பி
முயற்ச்சியுடன் விற்பனர்களும் ଔରେ) அவமானங்களையும் முயற்சிகளுக்கு
முன்னேறி
6)
சகித்துக்கொள்ளமுடியாமல் முற்றுப்புள்ளி
வைக்க
துறைகளில் எம்முடன் வாழ்கிறார்கள். சிறிய
புலமைபெற்ற ஏமாற்றங்களையும் தமது நினைப்பவர்கள்,

Page 13
இவர்களிடமிருந்து “வீழ்கின்ற பொழுதுகளில் எல்லாம் எழுதுவது எப்படி?’ என்று கற்றுக் கொள்ள முடியும்.
கடந்த கால தோல்விகளை முன்னிறுத்தி எங்களை மட்டுப்படுத்தி நிகழ்காலத்திலும் எம்மை நாமே தோல்வியடையச் செய்தால் எமக்கு நாமே விரோதிகளாகி விடுகின்றோம். எமக்கு பல நண்பர்களும் சில எதிரிகளும் இருக்கலாம்; ஆனால் எமது நேசமான முதல் நண்பனும், மோசமான முதல் எதிரியும் நாமாகத்தான் இருக்கமுடியும். வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் நிறையவே இருக்கின்றன. வேறு பாதையில் நாம் பயணம் மேற்கொள்ளலாம். வேறுதுறைகளில் எம்மால் பிரகாசிக்க முடியும். எமது கடந்த கால அனுபவங்கள் எத்தனை வேதனை தந்தாலும், நாம் சிறப்பானவர்கள்;
ஆக்கபூர்வமாக சிந்திக்கும் ஆற்றல் உள்ளவர்கள்; நாம் எவ்வளவு தாழ்ந்த நிலையில் இருந்தபோதிலும்,
பிறருக்கு தர எம்மிடம் பரிசு
பொதிகள் நிறையவே உள்ளன. கடந்த கால
எனவே கடந்த காலத்தின் தவறுகள் இ தோல்விகளை இன்றைய 6TLDg) முயற்சிகளை | முன்னிறுத்தி எங்களை (pLLDITö85T5 வகையில், எம் மட்டுப்படுத்தி மனங்கள் சாய்கின்ற பொழுதுகளில் நிகழ்காலத்திலும் மீண்டும் மீண்டும் நாம் உறுதியுடன் எம்மை நாமே எழுந்து நிற்போம். இதற்கு அடிப்படை (85II6)65uéOLLJef
செய்தால் எமக்கு நாமே விரோதிகளாகி விடுகின்றோம்.
உளப்பாங்குகளில் மாற்றங்காணுவது அவசியமாகின்றது.
*உள்ளபடி எம்மை ஏற்றுக்கொள்ளல் *பிறரை மன்னித்து ஏற்றுக்கொள்ளல் *தவறு செய்வது மனித இயல்பு தவறுகளை வெற்றியின் படிகள் என நம்புதல்
*கடந்த கால வெற்றிகளை நினைவில் கொண்டு வருதல் *எப்பொழுதாவது ஒருமுறை நாம் சோர்வை உணர்வது மோசமில்லை என ஏற்றல்
*எம்மை நாம் சிறப்பான விதத்தில் பார்த்தல்
இவை போன்ற வழிமுறைகள் எம் சாய்ந்த மனங்களை நம்பிக்கையுடன் துாக்கி நிறுத்தும் என்பதில் ஐயமில்லை.
"நம்பிக்கை என்பது ஓர் பறவை அது விடியலுக்கு முன் இருளாக இருக்கும் போதே பாடுகிறது!’
-ரவிந்திரநாத் தாகூர்
புரட்டாசி - ஐப்பசி
 
 
 

வாலிப வசந்தம்
சிரித்து வாழ வேண்டும் - பிறர் برحقے(; சிரிக்க வாழ்திடாதே. & ༄།
உலகில் வாழும் உயிரினங்கள் எல்லாவற்றிலும் மனித இனம் மட்டுமே புன்னகைக்கவும், சிரிக்கவும் கற்றுக் கொண்டது. நாகரிக வளர்ச்சியின் 55 IGSD ஓட்டத்திலேயே மனிதன் இதைக் கற்றுக்கொண்டான். புன்னகை பொன்னகையை விட சிறந்தது என்பர். புன்னகை ஒருவருக்கு அழகைக் கொடுப்பதோடு அவரைப் பார்ப்பவர்களுக்கும் மகிழ்ச்சியை கொடுக்கிறது. சிரிப்பு ஒருவரது உடலுக்கும் உள்ளத்திற்கும் ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது.
r
محم
ހ,"
つ
سمي
இவ்வளவு சிறப்புக்களையும் கொண்ட சிரிப்பை தொலைத்தவர்கள் போல் பலர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். புன்னகையோடு இருப்பவர்களை பார்த்தால் இயல்பாகவே அவர்க்ள் மேல் எமக்கு விருப்பு ஏற்படுவதுண்டு சிரித்து பேசுபவர்களைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். சிரிப்பை விரும்பும் மனிதர்களில் பலர் சிரிக்க மறந்து விடுவதேன்?
இளையோரே, பொன்னகையால் அல்ல புன்னகையால் உங்களை அலங்கரியுங்கள். சிரித்துச்சிரித்து இனிமையாகப் பேசுங்கள். மற்றவர்கள் உங்களை விரும்புவார்கள். எப்போதும் புன்னகை பூத்த முகத்தோடு இருக்கக் கற்றுக் கொள்ளுங்கள். சிலருக்கு இது இயற்கையாகவே அமைந்து விடுவதுண்டு. பலருக்கு இதை கற்றுக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது. நீங்கள் எந்த 6) JéO)55? இயற்கையிலே புன்னகைப்பவரா? cell'ILIQUIT6OITT6ò உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். இல்லையனில் புன்னகைக்க இன்றிலிருந்தே கற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்கு புன்னகையோடு கூடிய எனது வாழ்த்துக்கள்.
பிரியமுடன் இளவல்

Page 14
— amsemmamem ~
G. என்ன செய்யலாம்.)
திருமதி லோஜி இராஜரட்ணம்
O606
தீதும் நன்றும் பிறர் தர வரா’ என்பது உலகறிந்த நன்மை. வெற்றியும் தோல்வியும் ஏமாற்றமும் மன அமைதியும் நம்மிடமே உள்ளது. அவற்றை வெளியில்த் தேட வேண்டிய அவசியமில்லை. அதற்கு நமது மனமே அடிப்படைக் காரணம். ஏதாவது ஒரு விதத்தில் அல்லது 69(5 வகையில் நாம் குற்றமுடையவர்களாகவே இருக்கின்றோம். அதனாலே தான் நம்மிடையே மனச்சோர்வு, பயம், கவலை என்பன குடி கொள்கின்றன.
ஏதாவது ஒன்றிற்காகவோ அல்லது ஒருவருக்காகவோ நாம் கவலைப் படுவது மனித வாழ்வில் இயல்பாகிவிட்டது. இத் தேவையற்ற கவலையை நம் வாழ்வில் ஒரு பகுதியாக இருந்து விட்டுப் போக நாம் அனுமதிக்கலாமா? காலமெல்லாம் கவலையோடு இரு என்று யாரும் கூறமாட்டார்கள். எதற்கும் கவலைப் படாதே என்று கூறுபவர்கள் தான் அதிகம். அப்படி அனைவராலும் வெறுத்து ஒதுக்கப்பட வேண்டிய கவலை எமக்கு மட்டும் தேவை தானா?
“கவலைப்படாதே சகோதரா,” “முஸ்தப்பா முஸ்தப்பா” போன்றன சினிமாப்பாடல்களில் முதல் வரிகளாக அமைந்தமைக்கு காரணம் யாரும் கவலை இன்றி வாழ வேண்டும் என்பதற்காகத்தான். எனவே எமது அன்றாட வாழ்வில் நடந்த, நடக்கின்ற, நடக்கப் போகும் கெட்ட சம்பவங்கள் நமது கவலைக்கு அடிப்படைக் காரணமாக அமைகின்றன.
நமது மனத்தைப் பாதித்து வாழ்க்கையைப் பாழடிப்பதில் முதன் நிலையில் நிற்பது மனக்கவலையே. அந்த மனக்கவலையைப் போக்கி மகிழ்ச்சியாக வாழ நாம் பழகிக் கொள்ள வேண்டும். வெற்றிக்கு தடையாக இருக்கும் கவலையை நீக்கி காரியங்கள் ஆற்ற வேண்டும். அப்போது தான் இன்றைய நவீன யுகத்தில் வெற்றி காணலாம். அனைத்திற்கும் நமது மனம் தான் காரணம் என்று அறிந்த பின்பும் மனத்தை பண்படுத்திக் கொள்ளாமல் விடுதல் நன்றன்று. பண்பட்ட உள்ளம் இருந்தால் எது நடந்தாலும் நடக்கட்டும் என மனம் கலங்காமல் இருக்க முடியும். சோர்வும், பயமும், கவலையும் எம்மை அணுகாது. கீதை கூறும் இந்த உண்மை எமது மனங்களை ஆற்றுப்படுத்துகிறது.
2) எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது 2) எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது 2) எது நடக்குமோ அதுவும் நன்றாகவே நடக்கும் 20 உனக்கு என்ன ஆயிற்று எதன் பொருட்டு நீ அழுகிறாய்
 
 
 

நாள் உணவக
நி ைநீ எதைக் கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு 2) நீ எதைப் பெற்றெடுத்தாய் அதை நீ இழப்பதற்கு நி ைநீ எதை எடுத்துக் கொண்டாயோ அதை இங்கிருந்தே எடுத்துக்
கொண்டாய். எது இன்று உனதாக உள்ளதோ அது நேற்று வேறு ஒருவருடையதாக இருந்தது, மறு நாள் வேறு ஒருவருடையதாக மாறும். இது வாழ்க்கையின் நியமம் ஆகும்.
இந்த கீதையின் போதனையை மனதில் நிறுத்திக் கொண்டால் வாழ்க்கையைச் செம்மையாக நடத்திச் செல்லலாம். இந்த உலகம் இறைவனால் இயக்கப்படுகிறது. நாம் கவலைப்பட்டு மனம் சாய்வதால் நன்மை இல்லை என்பதையே இது நிரூபித்துக் காட்டுகிறது.
வாசகர் எதிரொலி
ஆர்வம் தற்போதுதானதே ?
"நான்' சஞ்சிகையினை பார்த்திருக்கின்றேன். ஆனால் வாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் தற்போது தான் வந்துள்ளது. என்னைக் கவர்ந்து இழுத்து விட்டது. இதில் மிகவும் பயனுள்ள விடயங்களைக் கண்டுள்ளேன். கருத்துக்கள் ஒவ்வொன்றும் ஆணி வேர்களாக
உள்ளது. என்னைத் தொட்டுள்ளது. இதன் பணி சிறக்க, தொடர்ந்தும் பல சிறப்புக்களுடன் வெளிவர என்னுடைய பிரியமான வாழ்த்துக்கள்.
sus
覆
装 ് كلي "உளவளத்துணைப் பணி தேவையில்லை” நான் அடிக்கடி ஆடி - ஆவணி 2005 சஞ்சிகையை வாசித்தேன். கனமான ஓர் காத்திரமான சஞ்சிகையாக இருப்பதைக் கண்டு மிகவும் அகமகிழ்ந்தேன். இச் சஞ்சிகையை யாழ்பகுதியில் உள்ள சகல கல்லுாரி அதிபர்களும் தம் மாணவர்களுக்கும் அறிமுகம் செய்து இது தாங்கியுள்ள முக்கிய விடயங்களை விளக்கினார்களேயானால் வருங்காலத்தில் உளவளத் துறையினரின் வேலைப்பாடுகள் குறைந்து விடும் என்று நினைக்கிறேன்.
எஸ்.எஸ் காசிப்பிள்ளை
德 AAA ፆዎ 装 سکیں
நான?நானாக வாழ | நான் நானாக வாழ உங்கள் "நான்' தரும் உளச் சிந்தனை பற்றி இங்கே பல "நான்' கள் கூறுவதை நான் கேட்டேன். தரமான நின்பணி நிற்காமற் தொடர்ந்திட உன் சிறப்பிதழ்தனுக்குச் சிறியேனின் வாழ்த்துக்கள். :
றொ. சாந்தி

Page 15
எமது மாணவர்கள் மட்டில் உளவியல் அறிவை
வளர்ப்பதற்குமென நான் உளவியல் கை எடுத்
முயற்சிகளின் பயன & 8388
உளவியர்
6,6066. . . . . .
இதயத்தில் இருக்கின்ற
இலட்சக்கணக்கான என்
எதிர்பார்ப்புக்கள் என்னவென்று
இயம்புகின்றேன் கேளுங்கள்
பாசமுடன் பாலுாட்டி பக்குவமாய் வளர்த்தெடுத்த அம்மாவின் அன்பானது அகிலம் அழிந்தாலும் அழியாது எனக்கு வேண்டும்
கண்டிப்பைக் கொஞ்சம் கலந்த - என்னை கண்ணியமாய் வளர்த்தெடுப்பதில் அப்பாவின் பங்கு அதிகமாய் கிடைக்க வேண்டும்
எனக்குக் கீழ்ப்படிந்து என் பேச்சுக் கேட்கின்ற அன்புத் தம்பி தங்கையாய் அளவளாவ வேண்டும் என்னோடு அறிவுரைகள் பல சொல்லி அன்பான பேச்சாலே அடிக்காது வழிநடத்துகின்ற ஆசிரியர்கள் எனக்கு வேண்டும் அறிவுதனை வளர்ப்பதோடு அன்றாட வாழ்க்கைக்கும் உதவுகின்ற கட்டமைப்பான கல்வி முறை கண்டிப்பாய் எனக்கு வேண்டும்
நட்புடன் கூடிப் பழகி நல்ல வழிதனைக் காட்டி - என் உணர்வுகளில் பங்கெடுக்கும் உன்னத நண்பர்கள் வேண்டும்
தடைகள் பல வரும் போதும் - என்னை தட்டிக் கொடுத்து
 
 
 
 
 
 
 

சமுதாயம் உதவ வேண்டும்
உணர்வுகளை வெளிபபடுத்தி உரிமைகளை வென்றெடுக்க
ஏதுவான சுதந்திரம் ஏப்போதும் எனக்கு வேண்டும்
இனப்பிரச்சனை இல்லாத இனிய நாடாக இயங்குகின்ற இலங்கை நாடு இப்போதே எனக்கு வேண்டும்
அழிவுகள் இல்லாத
அமைதியான உலகத்தில் அழகான ஒரு வாழ்க்கை அமைய வேண்டும் எனக்கு
இத்தனை ஆசைகளையும் இனிதாக நிறைவேற்றவல்ல கடவுளின் அருளாசி கட்டாயம் எனக்கு வேண்டும்
செல்வி. டிசானி புனித சாள்ஸ் மகாவித்தியாலயம் LAITypLIL ATGROOTLD.
ஏன் இந்த இழப்பு உயிருக்குயிராய் வளர்ந்த உயிர்கள்
அன்பை பொழிந்து வளர்த்த குழந்தைகள் துன்பத்திலும் இன்பம் தரும் நண்பர்கள்
அறிவிற்கு அத்திவாரமான ஆசான்கள்.
வந்ததே சுனாமி மலைபோல் எழுந்தது அலை
கரையெல்லாம் கடலானது
கடலினுள் மண்மேடு தென்பட்டது
மனித உயிர்களெல்லாம் பிணமானது.
இப்படியெல்லாம் மக்களை பலியாக்கினாய்
நாம் உனக்கென்ன செய்தோம்
எழுந்த உன் பேரலையால் இழுத்துச் சென்றாய் எம் சொந்தங்களை பறித்தாய்
ஊரிழந்தோர் உறவிழந்தோர் உடமையிழந்தோர்
ஏன் உடைமைகளையும் இழந்தல்லவா வந்தனர் உன் மனம் ஏன் கல்லானது கண்கள்
உறக்கமற்று மனம் அமைதியின்று கதறுகிறது
மே.பிரசாந்தலெக்ஸ் வ. இலங்கை திருச்சபை தமிழ்க் கலவன் பாடசாலை,
வவுனியா

Page 16
அழும்பிகள்” 2032 ადამსჯ لعوGAلمG**
குமுதினி வெளியே வர தாமதித்த போது “என்ன அவளை இன்னும் காணவில்லை”என தனக்குள்ளே ஒரு எதிர்பார்ப்பை உணர்ந்து கொண்டவனாய் அவனும் குசினியை நோக்கி அடியெடுத்து வைக்கிறான். அவளுடைய ஆற்றுப்படுத்தும், மனதை குணப்படுத்தும் வார்த்தைகளை அவன் தொடர்ந்தும் எதிர் பார்த்துக் காத்திருந்தான் போல.
அவன் குசினிக்குள் நுழைய முற்படும் போது அவளும் வெனியில் திடீரென வர முனைந்ததால் இருவரும் ஒருவரோடொருவர் மோதிக்கொள்வர் போல இருந்த போது, அவனிடம் “சொறி” என்று பழக்கப்பட்ட ஆங்கிலத்தில் சொன்னவள் தொடர்ந்து முற்றத்தை தேடி நடந்து கொண்டே சொன்னாள்.
*மதன் ஒன்று மட்டும் உண்மை. உன்னுடைய மாமியின்
உணர்வுகளையும், பிள்ளையை இழந்து துடிக்கின்ற கவலையையும்
நாங்க புரிந்து அவாவை ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்படி நீ அவாவை ஏற்றுக் கொள்கின்ற போது உன்னை கட்டாயம் அவாவும் புரிந்து கொண்டு உன்னையும் தன் மகனாக ஏற்றுக் கொள்ளுவா மதன். பாதிக்கப்பட்டு, உறவுகள் உடைந்து போகின்ற குடும்பங்களில் எல்லாம் இந்த புரிந்துணர்வும், ஏற்றுக் கொள்ளலும் இருக்க வேண்டும். இது தான் என்னுடைய ஆசையும் கூட மதன்’ என்று அடித்தே கூறிவிட்டாள். V
மீண்டும் அவளே தொடர்ந்தாள் " மதன் நாங்க இப்படிப்பட்ட
விஷயத்துக்காக சரியாய் கவலைப்பட்டுக் கொண்டு, சாப்பிடாம,
தொழிலுக்குப் போகாம, தனிமையாக தவித்துக் கொண்டு ...” “குமுதினி நான் போயிற்று வாறேன்’ என்று அவள் கூறி முடிப்பதற்கு முன்னமே அவன் விடை பெற்று விட்டான். -
புறப்பட்ட அவனிடம் கொஞ்சம் உயர்ந்த குரலில் 'மதன் அதெல்லாம் சரி வரும். நாளைக்கு தொழிலுக்கு கட்டாயம் நீ போக வேண்டும் என்று நான் விரும்புகின்றேன். வடிவாக யோசித்துப் பார், மாமாவிடம் நான் கதைக்கின்றேன்’ என்று சடாரென கூறி முடித்த குமுதினி அவன் கடற்கரைப்பக்கம் போவதையும் அவதானிக்க தவறவில்லை.
 
 

குமுதினி இப்போது வந்திருப்பது மதனின் மாமி வீடு. அவள் சென்ற அந்த பிற்பகல் நேரம் மதனின் மாமியும் மாமாவும் அப்போது தான் சிறு நித்திரை கொண்டுவிட்டு எழுந்து இருந்தார்கள். மாமியை அவள் இப்போது காணுகிற பொழுது அவளுடைய எண்ண அலைக்குள் மதனின் விரக்தி நிறைந்த வார்த்தைகள், அவளுடைய சிந்தனை வட்டத்திற்குள் மனம் உடைந்து வாழ்வில் சோர்வு கண்டு விட்ட அவனுடைய உடற்தோற்றம்.
"இவையனைத்திற்கும் காரணமாய் இருப்பவள் இந்த மாமி தானா?” என்று தனக்குள் எண்ணியவளாய் தனக்கே உரிய ஆற்றுப்படுத்தல் பாணியில் மாமியை கதைக்கத் துாண்டினாள். ஆரம்பத்தில் மேலோட்டமாகவே கதைத்துக் கொண்டிருந்த மாமியோடு மாமாவும் இணைந்து கதைக்கத் தொடங்கினார். குமுதினி லாவகமாக மதனோடு சம்பந்தப்பட்ட விடயங்களைக் கேட்ட போது அவர்கள் மாறி DI TAÓ மதனில் உள்ள கோப உணர்வுகளையும், தங்கள் கவலைகளையும் வார்த்தைகளாக கொட்டத் தொட்ங்கினர்.
மதன் (3D6) பற்பல மேலெழுந்த வாரியான குற்றச்சாட்டுக்களை சுமத்தி தமது கவலை உணர்வுகளை அவர்கள் வெளிப்படுத்திக் கொண்டிருந்த போது அவளும் அவர்களுடைய உணர்வுகளை புரிந்து கொள்வது போலவும், அவர்கள் இருவரையும் தான் ஏற்றுக் கொள்வது போலவும் அவர்களுக்கு உணர்த்தி நின்றாள். அவர்கள் அமைதியாகிவிட குமுதினியின் உளநலப்பணி இப்போது அவர்களையும் போய்ச் சேருகின்றது. மாமிக்கும் மாமாவுக்கும் சுனாமி அனர்த்தம் ஒரு இயற்கையின் அவலம் என்றும் மதன் எந்த விதத்திலும் வனிதாவின் இறப்புக்கு காரணம் இல்லை என்றும் மீண்டும் மீண்டுமாய் "பல ஆறுதல் வார்த்தைகளையும் ஆற்றுப்படுத்தும் வார்த்தைகளையும் கூறி அவர்கள் இருவரையும் ஆழமாக சிந்திக்க வைத்துக் கொண்டிருந்தாள்.
அந்த கடற்கரையினில் இருக்கின்ற மண்பிட்டி ஒன்றிலே மதன் இப்போது இருக்கின்றான். அந்த மண்பிட்டிக்கும் அவனுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. இந்த மண்பிட்டியில் அவனும் அவனுடைய நண்பர்கள் சிலரும் பின்னேர வேளைகளில் கூடியிருந்து தங்களுக்கே உரிய பகிடிகளை விட்டு மகிழ்வார்கள். தங்களுடைய அன்றாட தொழில் கடல் அநுபவத்தை பகிர்ந்து கொள்வார்கள். அதே நேரம் அந்த மண்பிட்டிதான் அவர்களுடைய குறும்புத் திட்டங்களுக்கும் அரங்காக இருந்திருந்தது. -
ஆனால் இப்போது அவன் மட்டுமே தனியாக அந்த அரங்கில் இருக்கின்றான். இன்று என்ன ஆயிற்றோ தெரியவில்லை அவன் நண்பர்கள் இன்னும் வந்து சேரவில்லை. தனிமையிலே இருந்து கொண்டாலும் அவனுடைய எண்ணத்தில் குமுதினி சொல்லிய ஒவ்வொரு வார்த்தைகளும் அவளுடைய அன்புக்கொடுக்கல் வாங்கல்களும் அடுத்தடுத்து வந்து போயின.
“என்ன செய்ய? அவள் கூறுவது போல் மாமியும் மாமாவும் என்னை புரிந்து கொள்வார்களா?” என்று தனக்குள்ளே ஒரு ஆதங்க
புரட்டாசி - ஐப்பசி

Page 17
உணர்வோடு கேட்டு நின்றவன், “ச்சீ. அது சரி வராது, மாமி எங்க திருந்த போறா? நாய் வாலை நிமித்திற மாதிரித்தான் கதை போகும்” என்று நம்பிக்கையில்லாத தீர்மானம் ஒன்றையும் தனக்குள் எடுத்து விட்டான்.
“சரி, அவா இருக்கிற மாதிரி இருக்கட்டும். நான் அவாவை புரிந்துதான் நடக்க வேணும்” என எண்ணியவனாய் மீண்டும் குமுதினியை ஞாபகப்படுத்திக் கொள்கிறான். இப்போது அவனுடைய எண்ணமெல்லாம் குமுதினி தான் நிறைந்திருக்கிறாள் போல.
அந்த நேரம், இந்த மண்பிட்டியும் அவனுக்கு சினிமாப்பாடல் ஒன்றின் சில வரிகளை ஞாபகப்படுத்தி நின்றது. இந்தப் பாடலைத் தான் இவனும் நண்பர்களும் சுனாமித்தாக்கத்திற்கு முந்திய நாட்களில் இந்த மண்பிட்டியில் ஜாலியாக இருக்கின்ற நேரம் விரும்பி பாடுவார்கள்.
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறது வாழ்வென்றால் போராடும் போர்க்களமே. உள்ளம் என்றும் எப்போதும் உடைந்து போகக் கூடாது என்ன இந்த வாழ்க்கை என்ற எண்ணம் தோன்றக் கூடாது. இப்பாடல் வரிகள் அவனுடைய மனதில் இசைகோர்த்து நிற்க தன்முன்னால் கிடந்த சிறிய வட்டக்கல்லை கையில் எடுத்து ஏதோ ஆராய்ச்சி செய்கின்றவன் போல சுற்றிச்சுற்றி பார்த்துக்கொண்டு இருந்தான். ஆனால், அவனுடைய மனமோ. அமைதியில் ஏதோ ஒன்றைப் பற்றி அலசிக் கொண்டிருந்தது. ஓர் தெளிவும் விடையும் பிறப்பது போல் அவன் உள்ளம் உணர்ந்தது.
“ம். இது தான் என் முடிவு என நினைக்கின்றான். அந்த இதமான மாலைக் கடற்காற்றும் அவன் இதயத்தை மெல்ல வருடிச் சென்ற போது அவனுள் விடுதலை கலந்த உணர்வையும் அவன் உணராமல் விடவில்லை. இவற்றிற்கெல்லாம் மத்தியில் அலையின் மென்மையான அந்த தொடர் அலை ஓசை அவன் இப்போது எடுத்து விட்ட அவனது வாழ்க்கையின் அந்த முக்கிய முடிவை ஆமோதிப்பது போல் இருந்தது.
மீண்டும் மீண்டுமாய் அவனுடைய மனதிற்குள் அதே பாடல் வரிகள் ஞாபகம் வர அந்த இசையை தனக்குள் ரசிக்கத் தொடங்கிய அவனை, அவனுக்குப் பின்னால் சற்று தொலைவிலிருந்து வந்த அந்த குரல் ஈர்க்கிறது. 'மதன்’ இது மாமியின் குரல் ஆயிற்றே. திடுக்கிட்டவன் போல் உடனே திரும்பியவன் அங்கே குமுதினி, மாமி, மாமா மூவரும் நின்றதை கண்டு அதிர்ந்து போனான்.
அவனால் நம்ப முடியவில்லை. ஆனால் சில வினாடிகளில் அவனுடைய முகத்தில் மலர்ந்துவிட்டன மகிழ்ச்சியின் பூக்கள். அவனும் அவர்கள் அருகே அணுகி வந்து “குமுதினி, நாளைக்கு மாமாவுடன் நான் தொழிலுக்கு போகிறேன்” என கூறிய போது
JUūčių. Taifa - gÜLJÁ
| unitial aura 2005 30
 
 

குமுதினி மட்டுமல்ல, அவனுடைய மாமி மாமாவும் ஒருவர் ஒருவரைப்பார்த்து புன்னகைத்து மகிழ்ச்சியின் ரேகைகளை தமது முகங்களிலும் குமுதினிக்கு காட்டி நின்றார்கள்.
மதன் தொடர்ந்தான், “ஆனால். மூவரும் முகம் சுழிக்க அடுத்தது என்ன சொல்லப் போகிறான் என்ற கேள்விக்குறியோடு மதனை நோக்குகின்றார்கள்.
'மதன் சொல்லும், ஏன் நிறுத்தி விட்டாய்?” என்று தயங்கி நின்ற மதனைப் பார்த்துக் கேட்டாள் குமுதினி. “குமுதினி, நான் ஒன்று கேட்பேன். குறை நினைப்பாயா?” இது மதன். “இல்ல சொல்லு’ இது குமுதினி.
“இல்ல, எனக்கு என்னென்று கேட்கிறதென்று தெரியலை. குமுதினி, நீ என்னை சரியாகப் புரிந்து எனக்கு உதவி செய்கின்றாய். உண்மையாக உனக்கு என்னென்று நன்றி சொல்கிறதென்று தெரியலை. உன்னை எனக்கு..” என்று உணர்ச்சி ததும்ப மென்மையாகக் கூறிக்கொண்டு போன மதனின் குரல் தடைப்பட்டு விட, அங்கே இதுவரையும் நின்று கொண்டிருந்த அவனின் மாமியும் மாமாவும் மெதுவாக அவ்விடத்தைவிட்டு அகல்கிறார்கள்.
*குமுதினி, நான் நாளைக்குத் தொழிலால் வந்த பின்னர் கதைக்கிறேன். வா போவோம்..” என மீண்டும் கூறியபொழுது குமுதினி உண்மையாகவே குழம்பிப் போய் விட்டாள்.
அந்த இரவு குமுதினிக்கு ஒரு கனத்த, நீண்ட இரவாகவே இருந்தது. “நான் ஏன் மதனுக்காய் இப்படியெல்லாம் செய்தேன்?
99
அவனில் எனக்கு. என்ன..? இந்த சுனாமியால்
பாதிக்கப்பட்டவர்கள் பலர் இருக்க எனக்கேன் மதனில் தனியொரு அக்கறை? பரிதாபமா..? இல்லை அது இல்லை.இது வேறொன்று. அப்ப இது..? அவள் 96 (6.560)Lui உணர்வுகளோடு போராடிக்கொண்டிருந்தாள். அவளுக்கு நித்திரை வெகு தொலைவில் தான் இருந்தது, ஆனால் ஒரு இனம்புரியா மகிழ்ச்சி அவளுடைய இதய அருகில் பிறந்தது.
இது ஒரு புறமிருக்க அன்றிரவு கடலில் தங்கு தொழில் செய்து கொண்டிருந்த மதனுக்குள் நிறைந்திருந்ததெல்லாம்
அவனுடைய குமுதினியே.
“என் குமுதினியே எனக்கு துணையானால்.’என்ற எதிர்பார்ப்போடு தொழில் முடித்து கரைவந்த மதன், தேனீர் கொண்டு வந்த தன் மாமியுடன் குமுதினியையும் கண்டு ஆச்சரியம் அடைகின்றான். தன் கனவு பொய்த்துவிடவில்லை’ என்ற உள்ளார்ந்த மகிழ்வில் மிதந்தவனாய் அவளை நோக்கி புன்னகைக்க அவளும்
அவனுடைய அந்தப் புன்சிரிப்புக்குள் தொலைந்து விடுகின்றாள்.
கற்பனையரில் கதை முற்றும்

Page 18
"நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேனா?
அல்பேட் பஸ்ரியன்
பல்லாயிரக் கணக்கான உள்ளங்களை செப்பனிட்டுக் கொண்டிருக்கும் மனோவியல் சஞ்சிகையைப் பற்றி நான் கேட்கவில்லை. அப்படியென்றால், இந்த கேள்வி புரியாமல் பலர் இருக்கலாம், அல்லது ஒவ்வொரு நாளும் இதைக் கேட்டுக் கொண்டு மனம் வருந்திக் கொண்டிருக்கலாம். அல்லது இவை இரண்டையும் விட நான் உண்மையில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றேன் என்றும் கூட சொல்லலாம். உண்மையில் இதைக் கூறுவதற்கு சற்று தெளிந்த மனம் கட்டாயம் தேவைப்படும்.
கண்கள் ஒளி வீசுகின்றன, காட்சிகள் தெளிவாகத் தெரிகின்றன, காதுகள் திறக்கப்பட்டிருக்கின்றன, சுவாசம் சீராக உள்ளது, இதயம் துடித்துக் கொண்டிருக்கிறது. இவையெல்லாம் வாழ்ந்து கொண்டிருப்பதை காட்டவில்லை. மாறாக நாம் உயிருடன் இருப்பதையே காட்டுகின்றன. “சுனாமி CD வாங்கிப் பார்த்தியா? ஒமடா நல்லா பொழுது போனது”. "அக்கா! சுனாமியால பாதிக்கப்பட்டவர்கள் பள்ளிக்கூடத்தில வந்திருக்கிறாங்களாம், ஏதாவது வாங்கிட்டுப் போய் பார்த்திட்டு வருவோமா?” “நல்ல படம் ஓடிக்கொண்டிருக்கு சும்மா இருந்து பார்க்கிறியா?” “சுனாமியால பாதிக்கப்பட்ட இடத்தை பார்க்கப் போனப்ப மூன்று பவுணில ஒரு நகையை எடுத்தன், TV வியும் டெக்கும் வாங்கிட்டு வந்துட்டன்டா! ஏன்டா என்னை விட்டிற்று பார்க்கப் போனனி.”
இது போன்ற பல உண்மைகளை ஏற்க மனம் சற்று சிரமப்படத்தான் செய்யும். இப்படிப்பட்டவர்கள் நம்மிடையே தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். தெருவின் நடுவில் கிடக்கும் மரத்தை அப்புறப்படுத்த நான்கைந்து பேர் வேண்டும. ஆனால் முட்களை எடுத்துப் போட மனமுள்ள இரண்டு விரல்கள் போதுமே! ஆனாலும் இதைப் போல இன்னும் பல வேலைகளைச் செய்ய பல பேருக்கு மனம் இடம் கொடுப்பது இல்லையே! காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அது மனிதர்களை மதிக்காத பண்பாக இருக்கலாம். வறட்டு கெளரவமாக இருக்கலாம். எனக்குப் பின்னால் வருபவனும் என்னைப் போல் இருக்க மாட்டான் என்ற எண்ணமாகக் கூட இருக்கலாம்.
ஆனால் நீ வாழ்ந்து கொண்டிருப்பது மக்களினாலான சமுதாயம் அன்றி மிருகங்களுடன் அல்ல. மிருகங்களிலிருந்து மனிதன் வந்தான் என்பதை மெய்ப்பிக்கும் விதமாக மனிதன் இன்று மிருகமாக மாறிக் கொண்டிருக்கின்றான். தெருக்களில் கூட்டமாகச் செல்லும் இளைஞர்களும் சரி, யுவதிகளும் சரி பின்னால் வரும் வாகனத்திற்கு இடையூறு விளைவிக்கின்றனர். தெருக்களில் do. LLDT35 அமர்ந்து LD95) அருந்துகின்றனர். சீட்டு விளையாடுகின்றனர். மனிதனை மனிதன்
புரட்டாசி - ஐப்பசி
 
 
 

மதிப்பதில்லை. இங்கே வயதுக்கும் வாழ்வுக்கும் கூட மரியாதை இல்லை. பக்கத்து வீட்டு குழந்தை இறந்ததுக்கு அழாமல் தொலைக்காட்சித் தொடரைப் பார்த்து அழுகின்றனர் பெண்கள். உண்மைக்கும் பொய்மைக்கும் வித்தியாசத்தை மறைக்கும் தொலைக்காட்சியின் முன் அமர்ந்து வீட்டிற்கு வரும் விருந்தாளியை எரிச்சலுடன் வரவேற்பதை காணக் கூடியதாக இருக்கின்றது. இேங்கே மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்பதை என்னால் உறுதியாக கூற முடியவில்லை.
'll சுனாமியால் பாதிக்கப்பட்டு பக்கத்து ஊர்களிலும் முகாம்களிலும் வசித்துக் கொண்டிருப்பவர்கள் நாம் கொடுக்கும் உணவிலோ பணத்திலோ மகிழ்ச்சி அடைந்து விடமாட்டார்கள். நாம் கொடுக்கும் உதவிகள் அவர்கள் உள்ளத்தில் தமக்காக உதவி செய்ய நான்கு பேர் இருக்கின்றனர். தாம் வாழ நாலு பேர் ஆசைப்படுகின்றனர்” என்ற நல்ல நம்பிக்கையை ஊட்டுவதாக மட்டுமே அமையும். அதை மனதில் கொண்டு அவர்கள் எழுந்து நடக்க தோளோடு தோள் கொடுப்போம. அதை விடுத்து புண்ணான மனதில் மண்ணை அள்ளி வீசாமல் வாழ்வோம்.
நம்பிக்கை: சுனாமியால் இடிந்து போன மக்களின் மனதையும் சரி வாழ்வையும் சரி கட்டி எழுப்பும் வல்லமை உள்ளது நம்பிக்கை
MF. T. R. F. Fur TTTTT \ என்னும் விடிவெள்ளி. t čićoIIILf
போன்றதொரு வாழ்க்கையில் நாம் எல்லோரும் | இயற்கைச் பல்வேறு கஷ்ட நஷ்டங்களை | சீற்றத்தில் நாம் அனுபவிக்கின்றோம். நம்மில் சிலர் மற்றவர்களை முற்றிலும் வி மிக அதிகமாக கஷ்டங்களை | ": ; ஆனுபவிக்கின்றோம். ஆனால் சிலர் I “සූ இவற்றிலிருந்து மீண்டு வந்து ஏதாவது சாதிக்க காலத்திலும் தயாராகி விடுகிறார்கள். வேறு சிலர் வெறுத்துப் போய் தோல்வியே கதி } سميت - "
என்ற முன் ந்து விடுகின்றனர். கணிப்புக்களை ஆனால் நாம் மீண்டு எழுந்து போராட | ஒதுக்கித் தள்ள வேண்டும். இதற்கு நேம்பிக்கை அற்ற கற்றுக் கொள்ள மனநிலையை எதிர்த்து எதிர்மறையான வேண்டும். சிந்தனைகளை இனம்கண்டு கொள்வது அவசியமாகும். திட்டவட்டமான உண்மைகள் M...","... மீது கவனத்தை ஒரு முகப்படுத்துவதும்
அவசியமானதாகும்.
சுனாமி போன்றதொரு இயற்கைச் சீற்றத்தில் நாம் முற்றிலும் தோல்வியடைந்ததாக அர்த்தப்படுத்திக் கொண்டு எதிர் காலத்திலும் தோல்வியே கதி என்ற முன் கணிப்புக்களை ஒதுக்கித் தள்ள கற்றுக் கொள்ள வேண்டும். நாம் வாழும் வாழ்க்கைக்கு முன்னுரிமை கொடுக்கத் தொடங்கும் போதுதான் நம்பிக்கையுடன் கூடிய இலக்குகளை அடைவதில் நாம் வெற்றி பெற முடியும் மனமிருந்தால் மார்க்கமுண்டு எனும் பழமொழிக்கேற்ப ஆசையும் உறுதியும் இரண்டறக் கலந்த

Page 19
ச உளவாக
மனோபலம் பெற்று வாழ்க்கை எனும் இரகசியத்தின் வெற்றிக் கனியை எட்டிப்பிடிப்போம்.
இறைவன் தந்த வாழ்க்கை மனிதன் நலமாக வாழ்வதற்கு மட்டுமே. சுய நலத்துடன் நமக்காக மட்டுமே வாழ்ந்து மற்றவர்களுக்கு பயனில்லாமல் இறப்பதை விட நான்கு பேருடன் இணைந்து நன்மையான காரியங்களைப் புரிவோம். நான்கு நாற்பதாகும், நாற்பது நானுாறாகும. சமுதாயம் ஒன்றுபடும். இணைந்து செயல்பட்டு சுனாமி இழுத்துச் சென்ற இன்பத்தை கூட்டி வருவோம். இழந்த வாழ்க்கையை புதுப் பொலிவுடன் கட்டி எழுப்புவோம். நாம் எழுந்து நின்றால் இமயம் மட்டம்!
omniejscowośĉXenieniä
1. தன்னை அறிந்து கொள்பவன் தவிர்க்க வேண்டியவை
sc
sc
sk
sc
SK
sc
X
சிறிய விடயங்களை பெரிதாக்குவது. நினைத்தவுடன் செயல் புரிவது. விரைவில் குற்ற உணர்வு கொள்வது. எளிதில் கோபமடைவது.
பொறுமையின்மை. பிறர் தன் மீது அனுதாபம் கொள்வது. அனைத்தையும் மேலோட்டமாக நோக்குவது.
Y அமைதியுடன் யோசித்து செயல்படுவது. Y எல்லா சூழ்நிலைகளிலும் சுயகட்டுப்பட்டுடன் நடந்து கொள்வது. Y எந்தநேரத்திலும் கோபத்தை ஆரோக்கியமாக வெளிப்படுத்துவது. Y அறிவுத்திறனை உபயோகித்து நியாயங் காண்பது. Y சமநிலை உணர்ச்சி பாவங்களை வெளிப்படுத்துவது.
"உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்”
LJLLIf - FRÚL3
 
 

பூமித்தாய் மடியினிலே நான் காணத்துடிப்பது அவலத்தை அல்ல பாலகர் தம் முன்னேற்றத்தை நான கறகத துடிuபது கவி வரிகளை அல்ல சிறுவர் தம் ஆக்க ஏடுகளை நான் எதிர் பார்த்திருப்பது கேளிக்கைகளை அல்ல எதிர்கால ஏற்றத்தை நான் கூற நினைப்பது அகவுரைகளை அல்ல முளைகளின் இலச்சியங்களை நான் தேடித்திரிவது
பார் போற்றும் உத்தமர்களை என் பாதங்கள் பதிப்பது புகழுக்காக அல்ல எதிர்கால சிப்பிகளை உளி கொண்டு செதுக்கி அழியாச் சுவடுகளை மண் மீது .
தடம் பதிப்பதற்காகவே.
க.கீர்த்தனா
*திருநாள்”
நிலவொளியில் மூழ்கினேன் நிம்மதியை ஆசித்து என் மதி புரிந்தது உள்ளமைதி விரிந்தது
*கிலிற்றான வளையலல்ல வாழ்க்கை நான் கிறக்காய் வாழ்வதற்கு கானல் நீராயல்ல என் வாழ்க்கை கணக்கற்றுப் போவற்கு
நாற்றுக்கள்
சிறுவர் துஸ்பிரயோகங்களையல்ல
நினைக்கின்றேன் நிஜத்தை நிம்மதி நிகழ்வதற்காய்
எந்தன் உளநிஜம் புரியவே எடுப்பாய் எனைத்தேடுகின்றேன் தேடலிலே தோன்றுகிறது தோல்வியின் சுவடுகள் ஆனால் தோற்கமாட்டேன் இன்று
ஏனெனில் நாளை வெற்றியின் நாள் என் நிம்மதியின் திருநாள்.
ஆர்கொன்
சோதனை
எதிர்பாராத விபத்தினால் நீ ஏமாற்றமடைந்தாய் உன் உள்ளத்தால் வாடிய மலரானாய் .
சுமந்தாய் அதனால் பல அவப்பெயர்களை சோதனையான பாதையிலே சுமையுடன் நடந்தாய்..!
கத்தினாய் கதறினாய் கால துாதனிடம் சென்றிடலாம் என்றெண்ணி உன் வேதனைக்கு கிடைத்தது ஓர் அரும் பெரும் பொக்கிஷம் அது தான் உளவளத்துணை.
இதனால் வழிகள் கிடைத்தது தீர்வுகள் கண்டாய் இப்போ - சுமைகளை இறக்கி சுகமாய் வாழ்கின்றாய்.
S. u(8grt

Page 20
சிநேகமுடன் விமல்
(36srLib Gastr6stsinsadstidsr?
என் அன்பான சிநேகிதமே
“எனக்கு சரியான கோபம் வருது, என்ர கோபத்தை அடக்க ஏலாம இருக்கு, நான் கோபத்தில் அப்படிச் செய்து போட்டன், கோபம் தான் என்னட்ட இருக்கிற கெட்ட குணம” என்று உங்களுக்குள் புலம்புவதை நான் உணர்கின்றேன். சிலர் இது பற்றி வெளிப்படையாக கேட்டிருக்கிறார்கள். ஆகவே கோபம் பற்றி உங்களோடு பேசலாம் என்று நினைக்கின்றேன்.
உணர்வுகள் நல்லவையோ, கெட்டவையோ அல்ல. மாறாக உணர்வுகள் உணர்வுகள்தான். சிரிப்பு ஓர் உணர்வு என்பதுபோல கோபமும் ஒருவகை உணர்வு. எம் உணர்வுகளின் வெளிப்பாடு அல்லது
விளைவுகள் அவ்வுணர்வை ஆரோக்கியமற்றதாக அல்லது ஆரோக்கியமுள்ளதாக இனங்காட்டுகின்றது. உதாரணமாக கோபத்தில் ஒருவர் இன்னொருவரைத் தாக்குதல். இதனால் கோபம்
ஆரோக்கியமற்றது அல்லது கெட்டது என்ற முடிவுக்கு வருகின்றோம்.
| ஒவ்வொரு உணர்வும் எமக்கு தேவையானதொன்றே. உதாரணமாக
என்னை ஒருவர் தாக்கி கொல்ல அல்லது துன்புறுத்த எத்தனிக்கும்போது என்னைக்காத்துக்கொள்ள தற்பாதுகாப்புக்கு கோபம்
அவசியமானது. ஆனால் அனாவசியமான கோபம் ைேவயற்றதொன்றே.
மாறாக தேவைப்படும் நேரத்தில் கோபப்பட்டு அக்கோபத்தை | ஆரோக்கியமான முறையில் வெளிப்படுத்தல் அவசியமாகும். கோபத்தை
| அடக்குதல் ஆரோக்கியமானதல்ல. ஆகவே கோபத்தை எம் சுய | கட்டுப்பாட்டுக்குள் ( in control) வைத்திருப்பது அவசியமானது. மாறாக
கோபம் எம்மைக் கட்டுப்படுத்த (control) அனுமதிக்கக்கூடாது.
?قnدمیسیڈیوlک سمتیہ on? GلGanc 1. விழிப்புணர்வு
முதலில் கோபம் என்ற உணர்வு என்னை ஆக்கிரமித்துக் | கட்டுப்படுத்துகின்றது என்ற விழிப்புணர்வுக்கு வருதல் அவசியமாகும் என் அமைதியற்ற நிலைக்கு கோபம் தான் காரணமென்றால் அதனை பெயரிட்டு அப்படியே ஏற்றுக்கொள்ளல் அவசியமாகும்.
 
 
 
 
 
 

2. கோபத்துக்கு யார் காரணம்?
எங்களுள் எழுகின்ற கோப உணர்வுக்கு பின்புலம்
t சிறுவயதில் நடந்த சம்பவங்களாக இருக்கலாம். எமது குழந்தைப்
பருவத்திலிருந்து நாம் அடக்கி வைத்திருந்த 'வெளிப்படுத்தப்படாத கோப உணர்வு, தற்போது நடக்கின்ற சம்பவங்களால் துாண்டப்பட்டு மிதமிஞ்சிய கோபம் எழலாம். அதாவது ஏற்கனவே அடக்கப்பட்ட கோப
உணர்வு இப்போது வேறொருவர் மீது செலுத்தப்படுகின்றது. ஆகவே எம் சிறு வயதுச் சம்பவங்களையும் அதனோடு தொடர்பட்ட நபர்களையும் நினைவுக்கு கொண்டு வந்து உளவளத்துணை மூலம் ད་ 曾 குணமாக்கப்பட்டால் கோப உணர்வை எம் சுய #íÑ கொண்டு வரலாம். 赛 3. கோபம் அறிவுக்கு மட்டுமல்ல. 目 ே
கோபம் மிகப் பெரிய சக்தி. இதனை நாம் நெறிப்படுத்தினால் பெரிய சாதனைகளைச் செய்யலாம். எம் கோபத்தை : ஆக்கபுர்வமான விடயங்களுக்கு எம் ஆற்றல்கள் திறமைகளை မှုံ - 李 வளர்க்க நெறிப்படுத்தினால் பெரிய சாதனையை எம்மாலும் செய்ய முடியும். பலர் இதிலே வெற்றியும் அடைந்திருக்கின்றனர். ஆகவே கோபம் வெற்றியின் திறவு கோல்.
4. தியானம்
எம் கோபத்தை சுய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தியானமும் உதவி செய்கிறது. மூச்சுப் பயிற்சிகள், ஆழ்நிலைத் தியானங்கள், மனத்தை ஒருநிலைப்படுத்தல், யோகாசனம், அவரவர் சமய வழி வருகின்ற ஆன்மீக பயிற்சிகள், மனம் திறந்து உரையாடல் என்பன கோபத்தை நாம் சுயகட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க உதவும்.
5. உளவளத்துணை
நீங்கள் நம்புகின்ற, உங்களோடு கூடப்பயணிக்கின்ற உளவளத்துணை தெரிந்த நபரோடு திறந்த மனதோடு அணுகி உங்களை மெல்லத்திறப்பதினுாடாக மிதமிஞ்சிய கோபம் என்ற உணர்வில் இருந்து உங்களைத் தற்காத்து கோபத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்து உங்கள் திறமைகளை வளர்த்தும் ஆரோக்கியமான உரையாடல்களிலும் ஈடுபட்டு நீங்கள் சுதந்திர நபராக உலாவரலாம். கோபத்தை அடக்குதல் ஆரோக்கியமானதல்ல.
6. வேலை செய்தல்
கோப உணர்வு எழுகின்றபோது கடின வேலைகள் விறகு கொத்துதல், அல்லது வேறு வேலைகளினால் கவனத்தைச் செலுத்துகின்றபோது வேலை முடிந்து போகும். அத்தோடு கோபமும் குறைய வாய்ப்புண்டு. எது எப்படியிருப்பினும் கோபத்தை யாரோடும் பகிர்வதால் அர்த்தம் இருக்கிறது. ---

Page 21
இளையநம்பி
இருபத்தியோராம் நூற்றாண்டிலும் பல நாடுகளில் யுத்தங்கள் நடை பெற்று வருகின்றன. இதனால் சாதாரண பொது மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். யுத்த அழிவுகளினாலும், பொருட்களின் நச்சுப் புகைகளினாலும், கழிவுகளினாலும் பல்வேறுபட்ட உடல் நோய்களிற்கும், அங்க இழப்புக்களிற்கும், உள்ளாகி வருகின்றனர். அத்துடன் சொத்துக்களையும், உடமைகளையும், உறவுகளையும் இழப்பதால் உளரீதியான பாதிப்புக்களிற்கும் உள்ளாகி வருகின்றனர்.
இவ்யுத்தம் நம் நாட்டையும் விட்டு வைக்கவில்லை. எம் தேசத்து சாதாரண பொது மக்கள், தமது வாழ்விடங்களை விட்டு இடம் பெயர்ந்தனர். இதன் விளைவாக, பலர் உளரீதியான பாதிப்புக்கு உள்ளாகினர். பொருளாதாரம், இருப்பிடம், தொழிலின்மை போன்ற பல பிரச்சனைகளால் அதிகளவான ஆண்கள் தமது வேதனைகளை அமுக்கி வைத்ததுடன் தவறான சமாளிப்பு முறையில் மது பாவனையை ஆரம்பித்தனர். இன்று அந்த மது அரக்கனின் கோரப் பிடியில் சிக்கி பல குடும்பங்கள் நிம்மதியிழந்து வருவதை, கண் கூடாகப் பார்க்க முடிவதுடன், மதுச்சாலைகளில் ஆண்கள் நிரம்பி வழிவதையும் பல புதிய மதுச்சாலைகள் திறக்கப்பட்டுள்ளதையும் காண முடிகின்றது.
இன்னும் பல தாய்மார்களின் வயிற்ரெரிச்சலையும், கண்ணிரையும்
துடைக்க வழி தெரியாது அல்லல்ப்பட்டு வரும் வேளை ஆண்கள் தமக்கு
ஏற்பட்டுள்ள உளரீதியான பிரச்சனைகளைக் குறைப்பதற்காக மதுவைப் பாவிக்கத் தொடங்கியதால் பிரச்சனைகள் குறைவதற்குப் பதில் அதிகரித்ததை ஒரு சில குடிகாரரினால் உணர முடிந்தது. ஆனாலும் குடியை நிறுத்த முடியாது திணறினார்கள். மது பாவனையால் பணம் செலவாகிறது, மனைவியுடன் சண்டையிடுவதால் பிள்ளைகள் மதிப்புக் கொடுப்பதில்லை, சிறு வயதில் பிள்ளைகள் திருமணம் செய்வதற்கு இதுவும் ஒரு காரணியாக இருக்கிறது, தற்கொலை முயற்சிகளை பெண்கள் மேற்கொள்கின்றனர், சிறுவர் துஷ்பிரயோகமும், பாலியல் துஷ்பிரயோகங்களும் புரியப்படுவதற்கு ஏதுவாக அமைகிறது. இக்கட்டான நிலைகளில் வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன்
உளவளத்துணை வழங்கலின் மூலம் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு
ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.
மது பாவனையால் வீட்டு வன்முறை அதிகமாகின்றது. இந்த வன்முறையானது உடல் உள பொருளாதார பாலியல் ரீதியில் இடம் பெறுகின்றது. மது பாவித்தவர்களால் விளைவிக்கப்படும் கொடுமைகளை சட்ட, நீதித்துறையினால் கூட கட்டுப்படுத்த முடியாத நிலையிருந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. மது பாவிப்பவர்களைக் கண்டால் வெறுக்கின்றனர். அவர்களின் பேச்சு, செயல், என்பன எமக்கு வெறுப்பையும் எரிச்சலையும் ஏற்படுத்துகிறது. அவர்களைச் சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைக்கின்றனர். கேலி பேசி கைகொட்டிச் சிரிக்கின்றனர். "குடி குடியைக் கெடுக்கும்” என்று குடிகாரர்களை மேலும் மேலும் பிரச்சனைக்குள்ளே தள்ளுகின்றார்கள். இவ்வாறு அவர்களை
JIJ LETTëf ali
 
 

வெறுப்பதால் பிரச்சனைகள் தீருமா? இதற்கு என்ன செய்யலாம்? என்ற கேள்விகள் எம் மனதில் எழத்தான் செய்யும். இவற்றிற்குத் தீர்வு உண்டு என்றால் நம்புவீர்களா? மதுவை அதிகமாகப் பாவிப்பவர்களை “குடி நோயாளி” என்று அமெரிக்க வைத்தியரான பொப் (BOB) என்பவர் கருதினார். இவரும் மதுவை பாவித்து வந்தவர். 1935 யூன்மாதம் அமெரிக்காவின் அக்ரான் நகரில் பில் (Bill W) என்னும் வியாபார பங்குதாரருடன் இணைந்து 'அல்கஹாலிக்ஸ் அனோனிமஸ் (ALCOHOLICS ANONYMOUS - AA) என்ற அமைப்பை 10/ 6/ 1935 அன்று ஆரம்பித்து வைத்தார்.
இன்று உலகத்தில் பல நாடுகளில் இந்த அமைப்பு வெற்றிகரமாகச் செயற்பட்டு வருகிறது. 1995ம் ஆண்டு 141 நாடுகளில் 96,000 குழுக்களில் 21,00,000 உறுப்பினர்கள் இணைந்திருந்ததாக AA யினரின் (Big Book) "பிக் புக்’கின் கணிப்பின் படி கூறப்பட்டுள்ளது. இப்போது இந்த எண்ணிக்கைகள் மேலும் அதிகரித்திருக்கலாம். இலங்கைக்கு AA அமைப்பானது சுமார் 30 வருடங்களிற்கு முன்பு வந்துவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இலங்கையில் கொழும்பு, பம்பலப்பிட்டிய, கல்கிச, நுகெகொட, மாபாகே (றாகம), வத்தளை போன்ற இடங்களிலும் மன்னார் - பேசாலையிலும், வவுனியா பசுமை இல்லத்திலும், (SHADE) மற்றும் வவுனியா நலன்புரி நிலையங்களிலும் இக் குழுக்கள் சிறப்புடன் இயங்கி வருகின்றன.
இவ் அமைப்பில் இணைந்து கொள்ள ஒரே ஒரு தகுதி மட்டுமே எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது “மது பாவித்தவராக” இருக்க வேண்டும். மது பாவிப்பதால் “தனக்குப் பிரச்சனை உண்டு’ என உணரும் பட்சத்தில் A.A இயக்கத்தினரின் உதவியை நாடலாம். எவ்வித கட்டணமும் அறவிடப்படமாட்டாது. யாரையும் வற்புறுத்தி இணைத்துக் கொள்ள மாட்டார்கள். சேவை தேவை எனின் ஆலோசனைகளும் வழிகாட்டலும் செய்யப்படும் குடிநோயில் இருந்து மீண்டவர்கள் தமது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள தயங்க மாட்டார்கள். குடிநோயில் இருப்பவர்களை மீட்டெடுத்து விடுவார்கள் என்பது நான் கண்கூடாகக் கண்ட உண்மை. இன்று வரை வவுனியாவில் அதிகளவான குடிநோயாளிகளை AA அமைப்பில் இணைந்து சிகிச்சை வழங்கி வெற்றியும் கண்டு வருகின்றனர்.
குடிகாரரை வெறுத்து ஒதுக்குவதைத் தவிர்ப்பதுடன் அவர்களின் பிரச்சனை என்ன? என்பதை காது கொடுத்துக் கேட்கும் மனோ பாவத்தை வளர்த்துக் கொள்வது மிக அவசியமாகும். தீர்வு காண்பதற்கு பல வழி முறைகள் உண்டென்பதுடன் பொருத்தமான தெரிவுகளைச் செய்ய சிரமப்படின் உளவளத்துணை (Counseling) வழங்கலுக்குச் செல்வதால் உங்கள் இரகசியம் பேணப்படுவதுடன் பிரச்சனைகளை இலகுவில் தீர்த்துக் கொள்ளவும் வழிகாட்டப்படும். வவுனியா மன்னார் வீதியில் “Ug,60)LD ജൂേ' அமைந்துள்ளது. அங்கு உளவளத்துணை வழங்கப்படுகின்றது.
'நன்றிக்கு வித்தாகும் நல் ஒழுக்கம், தீயொழுக்கம் என்றும் இடும்பைத் தரும்'

Page 22
ÚîấUUT *GiốîìgieB5 Qf UoU-Gð
பா. கிருஸ்ணாதேவி
சகியே கலங்காதே!
நான் வரைந்த மடலிற்கு நீ உன் சோதனைகள், விரக்திகள், விரிசல்கள் நிறைந்த பதில் அனுப்பியிருந்தாய். இவ்வாறு நீ மனமுடைந்து, நம்பிக்கையிழந்து, வாழ்க்கையே பறிபோயுள்ளது போன்ற மன நிலையிலுள்ள போது உனக்கு நம்பிக்கை ஒளியூட்டி, உன்னை வளப்படுத்தி, ஆற்றுப்படுத்தி சீர்படுத்த வேண்டியது நண்பியாகிய என் பாரிய பொறுப்பும், கடமையுமாகும்.
பிரியா, வாழ்க்கை வதங்கிப் போவது ஆச்சரியமல்ல. ஆனால் வதங்கிப் போன நினைவு மாத்திரம் வாடாமல், வாசமுமில்லாமல் இருக்கும் நிலை தான் பயங்கரமானது. வண்ணமிழந்து போன உன் வாழ்க்கை வலுவிழந்து போயிருப்பது என்னால் புரிய முடிகிறது. பிரியா, நாணயம் ஒசைப்படுவதற்காக அவைகளில் மட்டமான உலோகங்களைக் கலப்பது போல மனிதன் வாழ்க்கையிலும் நன்மையும், தீமையும் கலந்திருக்கின்றன. இந்தக் கலப்பினால் தான் வாழ்க்கைச் சங்கீதம் இனிமை பெறுகின்றதென்பதை மனதில் கொள். TTTT TTTTTTTTTT TTTTTTS TTTTTTT S AAA AA AA AAAA AA AA AA AA AA AA S AAS AA N பொருளில்லை. |f புதுமைப் பெண், ! புத்திசாலிப்பெண் இனிச் செய்ய வேண்டியதைப் பற்றி இன்றே சிந்தனை செய். இன்றைய தினமே நம்பிக்கையிலுள்ளது. நாளை நடப்பது 6IԼՈ5/ இறைவனிடமுள்ளதென்பது நீ அறியாததில்லை. வேலையில்லை.
எங்கே செல்கின்றோம், எதற்காகச் தொந்து வரும்
வாழ்வில் வெற்றி பெறுவது மட்டும்
செல்கின்றோம் என்ற விழிப்புணர்ச்சியோடும், అలెಕಣ್ರ
.." (Dčo!TičЕLO
ஊக்கமும் சேர்ந்து கொண்டால் வெற்றி | குறைால் ஏற்றுக் நிச்சயம் என்று கூறும் நீ இன்று கொள்வதும் கூட இதையெல்லாம் மறந்து 'சுனாமி சுழியில் நம் வேலை தான் சிக்குண்டு மனமுடைந்து போயிருப்பது எனக்கு
ஆச்சரியத்தைக் கொடுக்கும் வேளை கவலையையும் கொடுக்கின்றது.
நண்பியே, அனர்த்தத்தின் பின் எனக்குப் படிக்கப் பிடிக்கவில்லை. படிப்பதையே விடப்போகிறேன் என எழுதியிருந்தாய், சகியே காலமே உன் உயிர். அதை வீணாக்குவது உன்னையே நீ கொலை செய்வதைப் போன்றது. வாழ்வில் வெற்றி பெறுவது மட்டும் எமது வேலையில்லை. தொடர்ந்து வரும் தோல்விகளையும் உற்சாகம் குறையாமல் ஏற்றுக் கொள்வதும் கூட நம் வேலை தான் பிரியா.
 
 
 

அகதி முகாமில் நீ பல இன்னல்களையும் பிரச்சனைகளையும் எதிர்நோக்குவதாக எழுதியிருந்தாய். இதை நான் ஏற்றுக் கொள்ளாமலில்லை பிரச்சனைகளைச் சமாளிக்க உனக்குப் பிடித்தமான வழியிலே பிராத்தனை செய்து செயலாற்றல் கொண்ட ஒருத்தியாக உன்னைப் புதுப்பித்துக் கொள். தாங்கிக் கொள்ள முயன்றால் தான் அதிகமாகத் தாங்கிக் கொள்ளும் வலிமையை அளிக்கின்றான் இறைவன் என்பதை அறிந்து கொள்.
நீ முன்பு எல்லோரிடமும் அன்பாகப் பழகுவதில்லை எனவும், எரிச்சலும், சீறலுமாகத் தான் பிறருடன் பழகுவதாயும் வேதனையுடன் எழுதியிருந்தாய், இது இயற்கை அனர்த்தத்தால் உன்னுள் உண்டான மாற்றம். இழப்புக்களும், பிரிவுகளும் உன்னை பாதித்ததாலுண்டான தாக்கம். "எவனுடைய இதயம் ரோஜா மலராக இருக்கின்றதோ, 316igO)1601 UL வாய் நறுமணங்கமழும் வார்த்தைகளைப் பேசுகின்றது என்கின்றது
குறைந்த ஆசை NA
இன்ப வாழ்க்கை ரஷ்ய பழமொழி. அன்பு குறைந்த இடத்தில்
இருப்பதைக் குற்றங்கள் பெரிதாகத் தெரிகின்றன. மனிதர்கள்
கொண்டு திருப்தி நியாயமற்றவர்கள். சுயநலமிக்கவர்கள்,
6}öl!gi. முறைகேடானவர்கள். இருந்தாலும்
அவர்களை நேசித்திடு. அன்புள்ள இடத்தில் č56) Ј65)GOŠKO JLJ
போக்கு மனதை ஆண்டவன் இருப்பதை மறக்காதே.
விசாலப்படுத்தும் வசதியாக வாய்ப்புக்களோடு வாழ்ந்த o அகதிமுகாம் வாழ்க்கை அசெளகரியமாக வாழவை இருப்பது எனக்குப் புரியாமலில்லை. குறைந்த வளப்படுத்தும். 4. ஆசை இன்ப வாழ்க்கை இருப்பதைக் கொண்டு திருப்தி கொள். தீர்மானங்களால் கவலையைப் போக்கு. மனதை விசாலப்படுத்தும் நம்பிக்கையே வாழ்வை வளப்படுத்தும்,
s s தீர்மானங்களால்
நம்பிக்கையே
சுமைகளைத் தந்துள்ள கடவுளே, கூடவே தோள்களையும் தந்ததையிட்டு மகிழ்ச்சி கொள் மனிதன் தனது மனநிலைகளை மாற்றிக் கொள்வதன் மூலமாகத் தன் வாழ்க்கையை மாற்றிக் கொள்ளலாம் என்பதே எனது தலைமுறையின் மிகப்பெரிய கண்டு பிடிப்பாகும்’ என்கிறார் வில்லியம் ஜேம்ஸ். எனவே மனநிலைகளை மாற்றங்களிற்கேற்ப மாற்றிக்கொள்.
சகியே வாழ்க்கை அதற்கேயுரிய நெளிவு சுளிவுகளைக் கொண்டது. சோதனைகள், தோல்விகள் எழும் நேரத்தில் தான் விடாமுயற்சி அதிகம் தேவைப்படுகின்றது. எங்கு தன்னம்பிக்கை இல்லையோ அங்கு சாதனை இல்லை என்பதை மனதில் கொள். உடல் பலவீனத்தையோ, மனப் பலவீனத்தையோ உண்டாக்கும் எதனையும் அணுகாதே. உன்னிடத்தில் அளவற்ற நம்பிக்கையை
வளர்த்துக் கொண்டு இன்றே புது வாழ்வு படைக்க புறப்படு.
- உன் பிரியமானவள்

Page 23
ஜெஸ்லி ஜெகானந்தன்
(Baş 線 6)lա5! வந்தவர்களே! ಇಂಗ್ಹಗೆ
6 Julg5 6.Ng5g5g503bfT35 S9(gš6 TLD நம் குழந்தைப்பருவத்தின் 3 الإيطالي
స్గ్య இழப்பிற்காக அழுவோம்
நமக்குள்ளேயே நடந்த அந்த அறியா மரணத்திற்காக அழுவோம் அறிவுக் கனியை காதலித்ததால் நாம் இழந்து விட்ட அந்த நிஜ உலகிற்காக அழுவோம்
கண் மழையில் நனைந்து கிழியாத அந்தச் சிரிப்புக்கள் கவலைத் தீயில் கருகாத மொட்டிலிருந்து வந்த அந்த முதல் நாள்கள் வெளிச்சத்தாலும் இன்னிசையாலும் அலங்கரிக்கப்பட்ட அந்த திருவிழாப் பொழுதுகள் எப்படி காணாமற் போனார் பட்டியலில் போய் சேர்ந்தது? அறியாப்பருவத்தின் அந்த ஆனந்த நினைவுகள் எங்கே அறியும் பருவத்தில் நாம் அறிந்து கொண்டது பேதங்களையும் பாவங்களையும் தானே?
அன்று கன்றுக் குட்டிகளாகத் துள்ளித் திரிந்தோமே இன்று நுகத்தடி மாடுகளாய் பாரம் இழுக்கிறோமே வயதுப் பிறப்பு தந்த தண்டனையா? அன்று அரும்புகளாய் இருந்த போது எங்களிடம் தெய்வீக நறுமணம் இன்று மலர்ந்து நிற்கும் போது நாற்றம் அல்லவா பரப்புகின்றோம்? மலர்ச்சி ஒரு சாபமா?
அந்தப் பிறைப் பருவத்தில் எங்களிடம் பெளர்ணமியின் பிரகாசம் இருந்ததே வளர வளர ஒளி இழக்கும்
நிலவுகளா நாம்?
வளர்ச்சி ஒரு நோயா?
 
 

அப்போது எங்களுடைய சின்னஞ் சிறு சிணுங்கலுக்கும் ரத்தம் பாலானது இப்போது எங்கள் பார்வை பட்டதும் பால் ரத்தமாகி விடுகிறது.
அப்போது கைப்பொம்மைக்குக் கை ஒடிந்தால் கூடக் கண்களில் கார்காலம் கருத்தரிக்கும் இப்போது உயிரைக் கொன்று விளையாடுவதே எங்கள் பொழுதுபோக்காய் போய்விட்டது அப்போது கண்ணா மூச்சியில் ஒளிந்திருப்பவர்களை கண்டு பிடித்தோம் இப்போதோ வாழ்க்கை ஆட்டத்தில் எங்களையே எங்களுக்குள் தொலைத்து எங்களை விட்டு எங்கோ தேடுகின்றோம்
இறைவா! எங்களுக்கு மீண்டும் அந்த வெள்ளை வயதை வாங்கி தா அவதாரங்களையும் துாதர்களையும் அனுப்பும் சிரமம் உனக்கு இருக்காது
தெய்வீகத் தீபங்களே! உங்கள் விரல்களை இறுக பிடிக்கிறோம் எங்களையும் உங்கள் தேவ தேசத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். எங்கள் இருப்பு எங்களுக்கு வெறுப்பாகும் முன்
"வாழ்க்கை அற்புதமானது அதை நேர்த்தியாக கையாளும் போது நாமும் உடைவதில்லை. மற்றவர்களையும் சிதைப்பதில்லை. நம்முடைய அனாவசியமான உணர்ச்சிகளாலும், பக்குவம் பெறாத மனப்பான்மையாலும் நாம் மற்றவர்களுக்கு விளைவிக்கும் சேதங்களுக்கு அளவேயில்லை.
நமது மனத்தின் ஆழத்தல் வேரூன்றியிருக்கும் மென்மையான உணர்வுகளுக்கு அடிப்படையான தேவை - வசதிகளோ, படிப்போ, அதிகாரமோ கிடையாது. மாறாகத் தன்னைப் பற்றிய ஒரு நல்ல, இனிமையான உணர்வு, நல்ல மதிப்பீடுகளில் பிடிமானம், இறைவன் மீது நம்பிக்கை, மற்றவர் நலனில் அக்கறையுள்ள தாராள மனம் அவ்வளவு தான்.'
வெல்லும் உறவுகள்

Page 24
எஸ். எஸ். காசிப்பிள்ளை
இந்த வருடப் புத்தாண்டு பிறப்பதற்கு ஐந்து நாட்கள் மட்டுமே இருந்தன. அன்று தான் எவரும் கற்பனையில் கூட நினைத்துப் பார்க்காத சுனாமி வந்தது. கடற்கரையோரத்தில் வாழ்ந்தோரை அதிக அனர்த்தத்திற்கு உள்ளாக்கியது, இதனால் உயிர் தப்பியவர்கள் அப் பகுதியிலிருந்து விலகி துார இடங்களுக்குச் சென்றனர். இவர்களில் மரியம்மா குடும்பமும் ஒன்றாகும்.
சுனாமி ஒரு நாட்தான் வந்தது. சில நிமிடங்களில் அதன் வேலைப்பாடு முற்றுப் பெற்றுவிட்டது. ஆனால் அந்த நிகழ்வு மரியம்மாவின் மனதில் எத்தனை ஆயிரம் தடவைகள் வருவதும் போவதுமாகவே காட்சி கொடுத்தது. அவளுக்கு பசி இருக்கவில்லை. உறக்கமே வந்ததில்லை. சுனாமி வந்த பயங்கரச் சத்தம், அது வந்த உயரம், அதன் அலைகள் தன்னை இழுத்துச் சென்ற பயங்கரம், தன் குடும்பம் மதிலோடு ஒதுங்கிய விதம், அது போன பின் கிராமம் இருந்த காட்சி, அதன் பின் காணாமற் போன சொந்தங்கள, தொலைந்து போன சொத்துக்கள் என வரிசையாக நினைத்துப் பார்த்ததாலும், இதைப் பற்றியே கதைத்ததாலும், தன் கணவனையும் பிள்ளைகளையும் வெளியிற் போக விடாமல் தடுக்க முற்பட்டாள்.
இதைப் பார்த்த மரியம்மாவின் கணவன், “சுனாமி வந்து எத்தனை மாதங்களாகி விட்டது. அது எங்களுக்கு மட்டுமா? எத்தனை ஆயிரம் பேருக்கு துன்பமாக முடிந்து விட்டது. அதுவொரு இயற்கையின் சீற்றம் தானே. அதை நாம் எப்படி தடுக்க முடியும்? அதிலிருந்து தப்புவதற்காகவே நாம் இடம்பெயர்ந்து இருக்கின்றோம். இதன் ... பின்பும் சுனாமியைப் பற்றி கதைத்து உம்முடைய மனத்தை குழப்புவது மட்டுமல்ல என்னையும் பிள்ளைகளையும் பயமுறுத்துவது போலல்லவா இருக்கிறது. இனிமேல் உந்தக் கதை வேண்டாம். இன்றுடன் விட்டுவிடும்” என்று கண்டிப்பான குரலில் சொன்னான்.
இதைக் கேட்ட மரியம்மா தன் இதயக் குமுறலைக்கூட சொல்லி ஆறுவதற்கு ஆளில்லையே என்ற ஆதங்கம் மேலிட்டவளாய் அடுத்த வீட்டு ஆனந்தியிடம் சென்று சுனாமி பற்றிய கதையைத் தொடுத்தாள். ஆனந்தி ஒரு பட்டதாரி மாணவி. பட்டப்படிப்புடன் உளநலன் பற்றியும் நன்கறிந்திருந்தாள். சுனாமியாற் பாதிக்கப்பட்ட மன நலன் குன்றியவர்களுக்கும் ஆறுதலும் அறிவுரையும் கூறுவதற்கு பொது அமைப்புக்களுடன் இணைந்திருந்தவள்.
陋
UCLIF - Le
 
 

மரியம்மாவின் கதைகளையும் செயல்களையும் நன்கு கவனித்தாள் ஆனந்தி. சுனாமியின் தாக்கம் மரியம்மாவிற்கு மனக் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதை உணர்ந்தாள். உடனேயே அவளுக்கு ஆரம்ப சிகிச்சையாக சில ஆலோசனைகளைக் கூற முற்பட்டாள்.
“மரியம்மா என அன்போடு அழைத்தவாறே சொன்னாள். நீங்கள் எங்க ஊருக்கு வந்த புதுசிலை நல்லாய்க் கதைச்சீங்கள். நான் உங்களை ஒரு கெட்டிக்காரி என்று நினைச்சன். இப்ப பார்த்தால் சுனாமியைப் பற்றியே சதா நினைக்கின்றீர்கள், அது இனி மேல் வரமாட்டாது. அதை மறந்து வீட்டு வேலைகள் முடிந்த பின் நிறைய பேப்பர்களையும் புத்தகங்களையும் வாசியுங்கோ. வாசிக்கத் தெரியும் தானே?” ஒமோம் நான் ஒன்பதாம் வகுப்பு வரை படிச்சனான்.
"அப்ப நல்லாய் வாசிப்பீர். நான் இப்பவே ஒரு பேப்பரும் புத்தகமும் தாறன். அது வாசித்து முடிந்த பின் வேறை தருவன். நன்றாக கிரகித்து வாசியுங்கோ’ என்று சொல்லிக் கொண்டே அன்றையதின பத்திரிகையொன்றையும், வாழத் தெரிந்து கொள்ளுங்கள்’ என்றொரு புத்தகத்தையும் நீட்டினாள் ஆனந்தி.
w அவற்றை இரு கைகளாலும் வாங்கிக் -- -- -- -- ܕ -- ܕ -- -- ܕ -- -- -- -- -- 2 பயந்து பயர் கொண்ட மரியம்மா தன் வீட்டிற்குச் குே சென்றவுடன் முதலில் பேப்பரையே வாசிக்கத் ம் ஆயுள் தொடங்கினாள். “மீண்டும் யுத்தம் வரும் குறைகிறது. அபாயம்” முதற் பக்கத்தில் பெரிய எழுத்தில் இதனால் இருந்தது. இதைப் பார்த்த மரியம்மாவின் ೭.ಬೆಳ್ದಿ மனதிற்குள் பல கேள்விகள்: இது என்ன சோதனை? இது காலவரை யுத்தங்களால நிமிடத்தையும் நாங்கள் அநுபவித்தது போதாதா? எத்தனை பயப்படாமல் வாழ (P)ே இடம் பெயர்ந்தோம். எத்தனை வேண்டும். ஷெல்கள் கூவிக் கொண்டு வர பதுங்கு
குழிக்குள் ஒடினோம். இன்னும் எத்தனை இழப்புக்கள்? அத்தனையும் அவள் மனக் கண் முன் நிழலாடியன. - -
பத்திரிகையை கையில் வைத்திருந்தபடியே சிலையாக இருந்து சிந்தித்தாள் மரியம்மா. 'சுனாமி வந்த கொடுமை இன்னும் முடியவில்லை. அதற்கிடையில மீண்டும் யுத்தமும் வந்தால் இப்ப இராணுவமும் எங்களைச் சுற்றித் தான் இருக்கு. என்ரை பிள்ளைகளில் ஒன்றை அல்லது என் கணவரை இராணுவம் கொலை
செய்தால். அவள் மனம் சுனாமியில் அகப்பட்ட பேரலை போல கொந்தளித்தது.
மறுநாள் மாலைவரை Drifuub DMT இதைப் பற்றியே
யோசித்தாள். எதைப் பார்த்தாலும் பயமாகவே இருந்தது. இவ்வுணர்வு

Page 25
அவளை நடக்கவே தடுத்தது. இது என்ன வாழ்க்கை என்று சத்தமிட்டு அழ வேண்டும் போலிருந்தது. தான் நினைப்பதெல்லாம் சரியானதே, இதையெல்லாம் ஆனந்திக்குச் GeFT6)6) வேண்டும் 660 நினைத்தவளாய் ஒட்டமும் நடையுமாகச் சென்றாள். ஆனந்தியும் ஆறுதலாக அன்றைய பத்திரிகையுடன் இணைந்திருக்க மரியம்மாவும் தான் நினைத்தது முழுவதையும் கொட்டித் தீர்த்து இறுதியாக “இந்தப் பத்திரிகையைப் பார் புள்ளை. யுத்தமும் வரப் போகுதாம். இது போல சுனாமியும் வரத்தான் போகுது” என்றாள்.
“சரி. வாறது எல்லாம் வரட்டும் எங்கட வாழ்க்கை ஒரு போராட்டம் தான் அதில் வெற்றி பெறுவது தான் சந்தோஷம். இந்த வெற்றிக்காக நாம் ஆண்டவரை அணுக வேண்டும்” என்று
சொன்னதைக் கேட்ட மரியம்மா சற்று சாந்தமடைந்தாள்.
இப்படியே மேலும் சில நாட்கள் அறிவுரைகள் தொடர்ந்தன. இதிலிருந்து துணிவுள்ளவர்களுக்கு துன்பமில்லை என்பதை அறிந்து கொண்டாள். இத்துடன் ஆனந்தி கொடுத்த "வாழத் தெரிந்து கொள்ளுங்கள்' என்ற புத்தகத்தையும் வாசித்துப் பார்த்தாள். அதில் அவளைக் கவர்ந்த பகுதிகள் பல. ஓரிடத்தில் யாவருக்கும் இறப்பு வருவது உண்மை. அதற்காக ஏன் பயப்பட வேண்டும். பயந்து பயந்து வாழ்பவர்களுக்கும் ஆயுள் குறைகிறது. இதனால் உயிரோடு இருக்கும் ஒவ்வொரு நிமிடத்தையும் பயப்படாமல் வாழ வேண்டும். இன்பமும் துன்பமும் எல்லோருக்கும் வெவ்வேறு உருவத்தில் வந்து கொண்டே இருக்கும் என எழுதியிருப்பதை மீண்டுமொரு முறை வாசித்தாள்.
பின்னர் இதைப் பற்றியே சில நிமிடங்கள் சிந்தித்தாள். உண்மைதான் இரவும் பகலும் (316) இன்ப துன்பங்கள் மனிதர்களுக்கு மாறி மாறி வரலாம். இப்போது இரவையும் மின்சார வெளிச்சத்தினால் பகலாக்கி விடுகிறார்கள். இது போலவே நாமும் துன்பத்தை நம் அறிவொளியினால் விரட்டி இன்பமாக வாழலாம். "என் வாழ்வில் என்னதான் வந்தாலும் பரவாயில்லை. என் வாழ்வை வாழ்ந்துதான் பார்க்க வேண்டும்” என நினைத்த மரியம்மாவின் மனம் உறுதி பெற ஆரம்பித்தது.
மாதம் ஒன்று மறைந்தோடியது. இப்போது மரியம்மா மன வலிமையில்லாவிட்டால் மனிதர்கள் வாழமுடியாது என்ற உண்மையை உணர்ந்தவளாய் மனவலைகள் ஓய்ந்து மலர்ந்த முகத்துடன் தன் குடும்பத்தைக் கவனித்தாள்.
(ყP%ეექtà
Jit gratif
 

நான் உள்பகத்சிங்க
T 飞、二厂、rజ్ఞస్తో"
གག་ இழப்பை எதிர்கொண்டவர்களுக்கு டட உளவளத்துனை ட
ஜெயசேகரன் சுபாஜினி
扈。
* இழப்பின் துயரில் இருப்பவர்களுக்கு 2சன்மை0ை 2ணரச் செல்லது
ஒருவர் குறிப்பிட்ட நபரை இழக்கும் போது அப்படி நடந்திருக்க (plgu Tg5 என்ற உண்மையை அநேகமாக ஏற்றுக்கொள்ளுவதும் கஸ்ரமாகும். எனவே, உளவளத்துணையாளர் முதலில் இழப்பு உண்மையானது, அவர் இறந்து விட்டார், மீண்டும் வரமாட்டார் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். துணைநாடி வருபவரை அவரின் இழப்பைப் பற்றி கதைக்க விடுதல் அல்லது ஊக்குவித்தல் மூலம் செய்யலாம். இறப்பு எங்கே நடந்தது? எப்படி நடந்தது? யார் சொன்னது? செய்தி கேட்ட போது நீர் எங்கே இருந்தீர்? மரணச்சடங்கு எப்படி நடந்தது? இத்தகைய கேள்விகள் துணைநாடி வருபவரின் கதைகளை குறிப்பாகச் @g|ा606) உதவுகின்றது.
* இழப்பின் துப்ரில் இருப்புணர்கரின் உசணர்ஜகரை அமை0ாரம் கான்கு ஒலரிைப்பகுத்தச் செல்லது
இழப்பில் இருப்பவர்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் கஸ்ரப்படுவார்கள். குறிப்பாக கோபம், குற்றப்பழியுணர்வு, பதட்டம், உதவியற்றதன்மை, துக்கம் இவர்களில் மேலோங்கி நிற்கும். இந்த உணர்வுகளை துணையாளர் கண்டு பிடித்து வெளியிட வேண்டும்.
* இரத்தனர் இல்லாமல் ஒழு ஆதஜதல்
இழப்பின் துயரில் வருபவர்களை இறந்தவர்கள் இல்லாமல் வாழ சுயமாக தீர்மானம் எடுக்க வேண்டும். இதனைச் செய்வதற்கு துணையாளர் பிரச்சனை தீர்க்கும் அணுகு முறைகளைக் கையாளலாம். இழப்பில் இருப்பவர் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் யாவை? அவற்றை எப்படி தீர்க்கலாம்? என்பதைத் துணையாளர் பாதிக்கப்பட்டவரை ஆராய வைக்கலாம்.
* இரத்தலரிலிருந்து - உணர்ஜ சார்ந்த சிக்கல்கரில் இருந்து விதயங்கு ஒழு ஆதனி செல்தன்
இழப்பில் இருப்பவரை உணர்வுச் சிக்கலிலிருந்து விடுபட்டு புதிய உறவுகளை, தொடர்புகளை வளர்க்கச் செய்தல். இந்தத்

Page 26
நான் உழவன்சுக்க
தொடர்புகள் இறந்தவரின் இழப்பிற்கு முற்றாக இல்லாது விட்டாலும் ஓரளவு உதவி செய்யும்.
"துக்கத்தை தீர்க்க ஒேரம் கொருத்தல்
துக்கம் தீர நேரம் தேவைப்படும். இது தொடர்பு வளர்ச்சி பரிமாணமாகும். இழப்பில் இருப்பவருக்கு முப்பத்தோராவது நாள், இறந்தவரின் முதல் ஆண்டு தினம், கலாச்சார ரீதியான சடங்குகள் முக்கியமானவையாகும். துணையாளர் இழப்பில் இருப்பவரின் இந்தத் தினங்களை குறித்து வைப்பது, இவரோடு தொடர்பு கொண்டு மீண்டும் நெருக்கீடான நேரத்திலுஆதரவு கொடுக்க உதவும்.
" .
* இழரின் ரிஜ் ஜர் தத்தைகரை விரக்குதல்
õ°ãay யங்களில் இழப்பில் இருப்பவர்கள் தங்கள் . မိုဇုံဲ၆` த்தியாசம் இருப்பதை உணருவர்.
இன்மாறாட்டம், பித்து பிடித்த போன்ற நிலை வரலாம் இந்த
அனுப்வங்களைப்பற்றி துணையாளர் இழப்புற்றதை மீளுறுதி
செய்யலாம்.
* தாரிபைரின் ஜித்தியாசத்கரையும் மனதில் ஏகான்ரைன்
இழப்பில் இருப்பவர்கள் எல்லோரும் ஒரே விதமான அனுபவங்களை கொண்டிருப்பதில்லை. எனவே துணையாளர் இழப்பில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் அவர்களின் தேவைக்கேற்றவாறு துணை வழங்க வேண்டும்.
* ஒதாடர் ஆதரவனத்தல்
இழப்பில் இருப்பவர்களுக்கான உளவளத்துணை நன்மை பயக்க வேண்டுமெனில் தொடர் ஆதரவளிக்க வேண்டும். நெருக்கீடான வேளையிலும் குறிப்பாக இறந்தவரின் முதலாண்டு நிறைவுவரை ஆதரவு கொடுக்க வேண்டும்.
* மு20ருதிருக்கும் பிரச்சனைகைைர முடித்துக் கொண்டு பிரிவானியை சொல்லுதல்
துணையாளர் இழப்பில் இருப்பவருக்கு தான் இறந்தவருக்கு சொல்ல வேண்டியவற்றையும், உயிருடன் இருக்கும் போது சொல்ல விரும்பியும் சொல்லாத விஷயங்களையும் சொல்ல ஊக்குவித்து இறுதிப் பிரியாவிடை சொல்ல உதவல் வேண்டும்.
 
 

அமுத்த "தன்” தங்கி வருவது | | தீண்டுத் எஞவேல்ை |
உங்கள் ஆக்கங்கள் எதுவாயினும் உளவியல் சார்ந்ததாக அமையட்டும்
அவற்றை 20.10.2005 க்கு முன்னர்
அஞ்சலிடுங்கள்.

Page 27
Inlig TOUJUTGÖR
- -
茅
 

·
|-