கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நான் 2010.10-12

Page 1


Page 2
(Lufusi, O.M.I.M.A. GeF6d6)IG 600Lb O.M.I., Ph.D. விரிவுரையாளர் சண்முகலிங்கம் Ph.D வைத்தியகலாநிதி சிவசங்கர் M.B.B.S
60TT H.C Dip in Counselling ĝ660.g5T6nid O.M.I.B.A.(Hons), Dip.in.Ed. 6royo56, B.Th. (Rome), M.Sc (Manila)
6FT(3LT6) O.M.I., M.Ph.
*NAAN” Tamil Psychological Magazine De Mazenod Scholasticate, Columbuthurai, Jaffna, Sri Lanka.
Te:O21-222-5359
O உறவு தொடர்பு முறிவு
O ിഞ്ഞുങ്ങഖppഞ്ഞുണ്.
O 20 oII6fiau IsorroIII i'r 6nfihanbartresïo
தΛふ"
9 LD&F60T (5(5LDLib, கொழும்புத்துறை, u JTg. T600TLD, இலங்கை. தொ.பே: 02-222 5359
O விடியலை நோக்கி. (வெற்றிகபி)
D60 fif: 35 2Λβολ இதழ்: - 04
82üuaf) - Lorrà &5g) 2010 உளவியல் சஞ்சிகை விலை 35/=
ஆசிரியர்: உள்ளே d585f gеђ856qupјgo O.M.I., B. Th, M.A
O 2 Išl35606rú ubpól enš565šgb. O2 துணையாசிரியர்: O மனித எண்ணங்களை. O5 Tipir @JTagbTu IfSib OMH., B.Ph, B.Tħ | முகமூடி வாழ்க்கை O9 ஒருங்கிணைப்பாளர்கள்: Q ഥങ്ങഖണ് രൂങ്ങp. 12 Geg: rgb(56ÖT LIĞ&FåbOMIL,B.Ph, B.Th.STL(Rome) o 65mgốoựfiuuh 6aLiGibrassugih... 18 uigi J&Frb OM, BPh. 0 சிறுவர் உலகை ஒளிவற. 22
நிர்வாகக்குழு:- O assific&argoso 27 அம.தி இறையியல் சகோதரர்கள் O n'LİTio åráfi 29 Gujrayursor. О шпрjli mosо штibo dippицшп? 31
O Inégétifunas 6mg 34师
ஆலோசனைக்குழு: O ஆளுமை வளர்ச்சியும். 33
O வாயும் நாக்கும் 39
4
44ه
47
49

(வாசக அன்பர்களுக்கு நத்தார் புதுவருட வாழ்த்துக்கள், ) ‘நான்’ மலர் 35, இதழ் 2இல் கவலை’ பற்றி சில வரிகள் வரைய காரணங்கள் தேடியபொழுது, நான் ஏன் மகிழ்ச்சியாக இருக்க காரணம் தேடக்கூடாது? என்ற ஆவல் என்னைத் தொற்றிக்கொண்டது. எனவே, நாம் எல்லோரும் மகிழ்ச்சியாக இருப்போம் என்ற நம்பிக்கை கலந்த ஆசீருடன் “நான்”உங்கள் கைகளில் தவழுகின்றான்.
நாம் எல்லோரும் என்றும், எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கவே விரும்புகின்றோம். மகிழ்ச்சி என்பது ஆழ்ந்தநம் உள்ளநிறைவில் இருந்து பிறக்கின்ற அற்புதமான உணர்வு. மகிழ்ச்சியை தங்கள் வாழ்வில் ஆழ்ந்து அனுபவித்தவர்கள் இம்மகிழ்ச்சியை ஆன்மஉணர்வு என்று புகழ்ந்து வியப்பதுண்டு. ஏனென்றால், மகிழ்ச்சியானது விசுவாசம், நம்பிக்கை, அருள், நன்றியுணர்வு, அன்பு ஆகிய பண்புகளில் இருந்து ஊற்றெடுத்துப் பாயும் இன்ப உணர்வு.
நான் மகிழ்ச்சியாக இருக்க முடியும், அல்லது மகிழ்ச்சியற்று இருக்க முடியும் என்று தீர்மானிப்பது யார்? என்ற வினாவுக்கான விடைநான். மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பது அடிப்படையான வாழ்க்கைக் கொள்கை. மகிழ்ச்சியற்று இருப்பது என்பது நாம் இலகுவில் அடையக்கூடிய சுலபமான இலக்கு; மகிழ்ச்சியற்ற மனநிலைகளும், மகிழ்ச்சியற்ற சிந்தனைகளும், மகிழ்ச்சியற்ற மனிதநடத்தைகளும் மகிழ்ச்சியின்மையை உற்பத்தி செய்கின்றன. மேலும் நாம் நீண்டகாலம் தேக்கி வைத்திருக்கும் எரிச்சல், பகைமைகளினாலும், பயம், கவலைகளினாலும் நாம் நம்முடைய மகிழ்ச்சியை தொலைத்துவிடுகின்றோம்.
மகிழ்ச்சி என்பது நாம் சேமித்து வைத்திருக்கும் பணம், பொருள், பட்டம், பதவிகளாலோ அல்லது நமக்குள் நிரம்பியிருக்கும் இனிய உணர்வுகளினாலோ ஏற்படுவது அல்ல. மாறாக, மகிழ்ச்சி என்பது நம்முடைய மனநிலைகளைப் பொருத்தது: கூடவே சில நிபந்தனைகளையும் கொண்டமைந்தது. சுருங்கக்கூறின், இரு அடித்தளங்களைக் கொண்டது:ஒன்றுநம் ஒட்டுமொத்த வாழ்வில் இலக்கு தெளிவாகவும், தூய்மையாகவும் இருப்பது, இரண்டாவது நம் சுயநலம் சார்ந்த நடத்தைக் கோலங்களில் இருந்து நாம் விடுதலை பெறுவதன் தன்மையைப் பொறுத்தது. ஆக, மகிழ்ச்சியின் சரியான வழிமுறை என்பது அடிப்படையான சில வாழ்க்கைக்கொள்கைகளைச்சார்ந்தது: பகைமையுணர்வுகளில் இருந்து நம் இதயங்களை விடுவித்துக் கொள்வது, பொருத்தமற்ற கவலைகளில் இருந்து எம் மனத்தைவிடுவித்துக்கொள்வது, சாதாரணமான எளிமையான வாழ்க்கை முறை, குறைந்த எதிர்பார்ப்பு கொடுப்பதில் நிறைவு காண்பது; தன்னலம் துறந்து பிறர்நலம் பேணுவது; நம் வாழ்க்கையை அன்பினால் நிரப்புவதுபோன்ற இறைமனித விழுமியங்கள். இவற்றை நாம் அடிப்படை ஆன்மீகம் என்று ஆணித்தரமாக சொல்லி விடலாம். மேலும் எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது; எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது; எது நடக்கவிருக்கிறதோ அது நன்றாகவே நடக்கும் என்ற பகவத்கீதை தரும் மனநிலையும் எம் மகிழ்ச்சிக்கு அடிப்படை
நமக்குள் மகிழ்ச்சிநிறைந்து வழிந்து மற்றவர்களைச் சென்றுநனைக்கின்றபொழுது மகிழ்ச்சி அதன் நிறைவை அடைகின்றது. அப்பொழுது “என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும் உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை உங்களிடம் சொன்னேன்’ என்ற வேதவாக்கு எம்மில் நிறைவு பெறும். மேலும் யாரெல்லாம் இவ்வாக்கை தங்கள் வாழ்க்கைக்கொள்கையாக்கிவாழுகின்றார்களேஅவர்களுக்கே பூவுலகில்நல்ல உள்ளம் படைத்தவர்களுக்கு அமைதி உண்டாகுக” என்ற ஆசீரும் உரிமையாகும்* M அருட்திரு. செ. அந்தோணிமுத்து குரூஸ் அ.ம.தி)
ஐப்பசி - மார்கழி 2010 Ο ஃகன் sp2A6.

Page 3
உங்களைப் பற்றி உங்களுக்கு ஆழமாகத் தெரியுமா?
அருட் சகோதரன் அருள் சுதர்சன் அ.ம.தி.
இன்று நவீன கணனி, இயந்திரவியல் உலகத்திலே நம்மைச் சுற்றியுள்ள பலருக்கு அவர்களைப்பற்றிஆழமாகத் தெரியாது."உங்களைப்பற்றிஉங்களுக்கு ஆழமாகத் தெரியுமா?’ என்று ஒருவரிடம் வினா எழுப்பினால், சிலர் எனக்கு என்னைப் பற்றி தெரியும் என்று உடனடியாக பதில் கூறி விடுவார்கள். ஆனால் சிலர் இந்த வினாவை கேட்டவுடனேயே தன்நிலை மறந்தவர்களாக என்னைப் பற்றி எனக்கு தெரியாதா என்ன? நீர் உம்முடைய வழியை பார்த்துக்கொள்ளும் என்று சொல்வார்கள். ஆனால் உங்களுக்குள் உள்ளேநிகழும்பலவிதமான மாற்றங்களைபுரிந்துகொள்ளமுடியுமா என்று கேட்டால், எனக்குள்ளே என்ன நடைபெறுகிறது என்று தெரியவில்லை. நான் முதல் பரீட்சையில் நல்ல பெறுபேறு எடுப்பேன். ஆனால் இப்போது என்னால் படிக்க முடியாது இருக்கின்றதே. எனக்கு மட்டும் ஏன் இப்படி துன்பங்களும், துயரங்களும் நேரிடுகின்றது என்று தெரியாது. நான் ஏன் இப்படி சடப்பொருளாக, வாழ்க்கையில் விருப்பு அற்றவனாக இருக்கிறேன். என்று எனக்கே இன்னும் புரியாத புதிராக இருக்கின்றது என்று சரமாரியான பதில்கள் கிடைக்கும். எம்முடைய வாழ்க்கையில் நம்மில் பலருக்கு நம்மைப் பற்றி நிஜமான, தெளிவான, ஆன்மீகம் நிறைந்த சிந்தனைகள் இல்லாத காரணத்தினால்தான்நாம் செயல்படும் விதத்தையும் நம்மால் தெரிந்து கொள்ள முடிவதில்லை. என்னை ஏன் இவ்வளவு காலமும் எனக்குத் தெரியவில்லை என்ற கேள்விக்குச் சரியான விடைகள் சில உண்டு. உங்களுடைய வாழ்க்கையில் உங்களைப் பற்றி உங்களுக்கு ஆழமாக தெரிந்திருக்கத் தேவையானது தன்நிலை அறிதல், தன்னைப் பற்றி ஆழமாகப் புரிந்து கொள்ளுதல், தேர்ந்து தெளிந்து சுயமாக முடிவெடுக்கும் திறன் என்ற 3 படிக்கட்டுகளாகும்.
1 தன்நிலை அறிதல்
இன்றைய இளைஞர்களிடம் பரவலாகக் காணப்படக்கூடியது வாழ்க்கையில் நம்பிக்கையற்ற நிலைமை, சோம்பேறித்தனம், தோல்வி கண்டு துவஞதல் என்பனவாகும். இவை அனைத்தும் படிப்படியாக நாளடைவில் மறைய வேண்டும். ஓர் இளைஞன் தோல்வியை சந்திக்கின்ற பொழுது தனக்கு விருப்பமான வேலை கிடைக்காத பொழுது சில முரண்பாட்டுப் பிரச்சனைகள் தோன்றுகின்ற பொழுது தன்னையே ஓர் இழிவான நிலைக்கு நினைத்துக் கொள்ளுகின்றான். தாழ்வு
தன் O2 ஐப்பசி - மார்கழி 2010

ܛ மனப்பான்மை, வாழ்க்கையில் விரக்தி என்பன அவனை ஆட்கொள்ளுகின்றது. தன்னால் எதுவும் செய்யு இயலாது. தான் எடுக்கும் அனைத்து முயற்சிகள் எல்லாம் தோல்வியில் தான் முடியும் என்ற மனநிலையை தன்னுள் வளர்த்து விடுகிறான். தன்னையும், தன்னைச் சூழ்ந்துள்ள அனைத்தையும் தீயவை, தோல்வியைத் தருபவை என்று கணித்து விடுகிறான். இது முற்றிலும் தவறானவை ஆபத்தை விளைவிக்கக்கூடியவை. எனவே இவ் இளைஞர்கள் இதற்கு எதிரான சிந்தனைகளை வளர்க்க வேண்டும். நான் நல்லவன், என்னால் எதையும் சாதிக்க முடியும். என்னைச் சூழ்ந்துள்ள சுற்றமும் சூழலும் அவ்வாறே என்ற நல்ல, ஆரோக்கியமான, ஆணித்தரமான நம்பிக்கை இளைஞர்கள் மனதில் எழ வேண்டும்.
(அ) வெற்றி அல்லது தோல்வி நிலையானதல்ல மனித வாழ்க்கையில் வெற்றியும் நிரந்தரமல்ல; தோல்வியும் நிரந்தரமல்ல இரண்டும் மாறிமாறிவந்தேதீரும். வெற்றிகண்டு ஆணவம் கொள்வதும்தவறு. தோல்விகண்டு துவண்டு விடுவதும் தவறு. எனவே இளைஞனே வெற்றி அதுவும் சென்றுவிடலாம். அதனால் தேவையில்லாமல் இறுமாப்பு கொள்ளாதே. அதேநேரம் தோல்வியும் நிரந்தரமானதல்ல. நீ துவண்டு விடாதே நீ பெற்ற பெருமைகளை எண்ணிப்பார். தோல்வியே வெற்றிக்கு முதல் படிக்கட்டு என்பதையும் மறவாதே. பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் இசையுலகில் புகழின் உச்சிக்கு சென்றாலும் பெருமை கொள்ளாது “எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே” என்று கூறி உலகனைத்தையுமே வியப்புக்கு உள்ளாக்கினார். அந்த மனப்பான்மையினை எங்களிடம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
ஆ. திறந்த மனம் எனது கருத்துத்தான் ஏற்புடையது. நான் சொல்வது தான் எப்போதும் சரியானது
எல்லோரும் நான் சொல்வதன் படி தான் நடக்க வேண்டும் என்ற மனநிலை பலவி
மான விபரீதங்களை விளைவிக்கும்.
மேலும் அது ஒற்றுமைக்கு ஊறு விளைவிக் கும். பிறர் கருத்துக்களுக்கு கவனமுடன் செவிசாய்த்து அதற்குமதிப்புக் கொடுத்து அவர்களோடு இணைந்து குழுவாக செயற்பட திறந்த மனம் தேவை. மற்றவர்களின் எண்ணங்களுக்கு மதிப்புக் கொடுக்கும் பக்குவம் பண்பாடேயாகும். அதுவே உங்களை முன்னேற்றப்பாதையில் வீறு நடை போட வைக்கும். நல்லதொரு ஆளுமையை உங்களிடம் தோன்ற வழிசமைக்கும்.
gúLud - LDITñ85upl 201O 03

Page 4
2. ஆழமாகப் புரிந்து கொள்ளுதல் ‘உன்னையே நீ அறிவாய்” என்றார் கிரேக்க தத்துவஞானி சாக்கிரடீஸ், இதனையே கவிஞர் கண்ணதாசன் “உன்னையறிந்தால், நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம், உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீவாழலாம்” என்று பாடினார். இன்று இளைஞர்களிடம் ஏராளமான சக்திகள், ஆற்றல்கள், செயல்திறன், சாதனை நோக்குகள் நிறைந்து காணப்படுகின்றது. அதேவேளையில் சில குறைபாடான கண்ணோட்டங்களும், தாழ்வான மனநிலைகளும் உள்ளன. எனவே நீங்கள் உங்களை முழுமையாக அறிந்து கொள்ள முதலில் உங்களது தனிப்பட்ட நிறைகுறைகளை அறிந்து கொள்ள வேண்டும். மனிதர்நிறைகுறைகள் கொண்டவர் தான் என்பதை தெரிந்து, பல்வேறு ஆன்மீக பயிற்சிகளின் வழியாக நம் உள் மனதையும் நமது இயல்பு நிலைகளையும் புரிந்து கொள்ள வேண்டும். சில சூழ்நிலைகளில் நாம் எப்படி செயற்படுகின்றோம் என்பதையும் நமது பொதுவான இயல்பான பண்புகள் என்ன என்பதையும் ஆழ்ந்து அலசிப் பார்த்து புரிந்து கொள்வது மிகவும் அவசியம்.
3. தேர்ந்து தெளிதல் தெளிவான மனநிலைக்கு ஆராய்ச்சியும் அதனைத் தொடர்ந்து சரியான கணிப்பும் அவசியம். அன்னப் பறவையானது பாலையும் நீரையும் பிரித்து பாலை மட்டும் எடுத்துக் கொள்ளும் என்று கூறுவதுபோல் ஒவ்வொரு கழ்நிலையிலும் நல்ல விஷயங்களைப் பிரித்துப் பார்த்தல் அவசியம். எதையும் தீர விசாரிப்பதே சாலச்சிறந்தது. வருமுன் காப்பதற்கும் இந்தத் தேர்ந்து தெளிதல் அவசியம். நல்லதை செய்து தீயதை விலக்குவதன் மூலம் நாம் நம்மை நாமே ஆராய்ந்து அறிந்து தெளிவான முடிவுகளை எடுப்பதற்கு வழிசமைக்கும். தேர்ந்து தெளிவாக எதையும் எடுத்துக் கொள்வதற்கு முன்னால் இரண்டு மூன்று வழிகளையும், முடிவுகளையும் பற்றி நன்கு சிந்தித்த பிறகு எடுக்கும் முடிவு மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கும். இதற்கு மனதில் எதுவித சஞ்சலமற்ற பயம் இல்லாமல் சுதந்திரமாக முடிவுகளை எம் வாழ்க்கையில் எடுப்பதற்கு வழிவகுக்கும். இதனூடாக எம்மைப்பற்றி எமக்கே ஆழமாக தெரிந்து கொண்டவர்களாக வாழ்க்கையின் சவால்களுக்கு எதிராக எதிர் நீச்சல் போடுவோம். வாழ்வை பயனுள்ளதாக மாற்றி சந்தோஷ காற்றினை எம்மிலே சுவாசிப்போம்.
உசாத்துணை நூல்கள் 1. வெற்றி பெறச் சிந்தியுங்கள் Dr.வால்டர் டோயல் ஸ்டேபிள் 2. முன்னேற உதவும் திறமைகள் சத்தீஷ் - வீரபாலன் 3. உங்களைப் பிடிக்குமா உங்களுக்கு? தோமை-ராஜன்
O4. goûuéâ– LDITñésup) 2010
 

மனித எண்ணங்களை
குட்டிச்சுவராக்கும்
பயவுணர்வு
அருட்சகோ. றமேஸ் அ.ம.தி (சென்ற இதழின் தொடர்ச்சி)
இன்று எமது சமுதாயத்தில் வளர்ந்துவரும் மாணவர்களிடையே பல்வேறுபட்ட திறமைகளும், ஆற்றல்களும் குவிந்திருப்பது கண்கூடு. ஆனால் பெரும்பாலும் அவை அவர்களிலே முடங்கிக் காணப்படுவதற்கு அவர்களிலே உள்ள பயவுணர்வே காரணம் என்று கூறப்படுகிறது. இந்த விடயத்தில் மாணவர்களுக்கு பயவுணர்வு சம்மந்தமான அறிவூட்டல் வழங்கப்படுவதோடு, ஆசிரியர்களும் பெற்றோர்களும் அவர்களின் நிலையறிந்து செயற்படவேண்டியது அவசியமாகும்.
இளைஞர்களிடையே பயவுணர்வு
பொதுவாக இளைஞர்கள் எதையும் துணிந்து செய்யும் தன்மை உள்ளவர்கள் என்று கூறப்பட்டாலும் அவர்களையும் இந்த பயவுணர்வு தடைபோடுகின்றது. தனிப்பட்ட முறையில் தங்களில் வேரூன்றிய சிந்தனைகளை ஒரு குழுவிலோ அல்லது பொதுவான கலந்துரையாடல்களிலோ வெளிக்கொணர இளைஞர்கள் காட்டும் தயக்கத்திற்கு காரணம் அவர்களில் குடிகொண்டுள்ள பயவுணர்வே ஆகும். சிறுபராயத்தில் ஒருவரில் வளருகின்ற பயவுணர்வு அவர்களின் வாழ்க்கை முழுவதிலும் பங்கெடுக்கிறது. இதனால் இளம் பருவத்தில் கூட இளைஞர்களால் இவை உணரப்படுகின்றன. அதாவது இளைஞர்கள் தங்கள் பயத்தை வெளியே தெரியப்படுத்தாவிட்டாலும் அகத்திலே அவர்களின் செயற்பாடுகளை இது பலவழிகளிலும் பாதிக்கின்றது என்றால் மிகையாகாது. சிலர் வேலைக்குப் போவதற்கு கூட பயப்படுவர். தங்களில் உள்ள குறைபாடுகளின் நிமித்தம் தாழ்வுமனப்பான்மையால் சில இளைஞர்கள் சமூகத்தில் இருந்து விலகுவதும் அல்லது பொதுவிடங்களில் தங்களை குறைத்துக் கொள்வதும் அவர்களில் காணப்படும் ஒருவித பயத்தின் விளைவே. பெற்றோரின் எல்லைமீறிய பாசமும் அரவணைப்பும்கூட இதற்கு ஒரு காரணமாகிறது. அதுமட்டுமல்ல சிலரில் இது ஒரு பிறவிக் குறைபாடாகக்கூட அமைவதுண்டு இத்தகையவர்கள்
ஐப்பசி - மார்கழி 2010 O5

Page 5
எல்லாவற்றிகும் பயப்படும் தன்மை காணப்படும். அவர்களுக்கு சரியான உளவாற்றுப்படுத்தல் அவசியம் அல்லது இவர்களின் வாழ்வில் இவர்கள் பிறரால் ஏமாற்றப்படுவதோடு வாழ்வில் எதையும் சாதிக்கமுடியாமல் அழிந்துபோவர். கல்லூரிகளிலும், வேறு அமைப்புக்களிலும் இளைஞர் தற்துணிவை வளர்க்கும் கருத்தமர்வுகளும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட வேண்டும் அப்போதுதான் அவர்கள் தங்களின் அறியாமையை விலக்கி தங்களிலுள்ள திறமைகளையும் ஆற்றல்களையும் வளர்த்துக்கொள்ள முடியும்.
பெற்றோர்களிடையே பயவுணர்வு
பெற்றோர்களிடையே காணப்படும் பயவுணர்வு சற்று வித்தியாசமானது. இயல்பாக அவர்களில் காணப்படும் பயவுணர்வுக்கு மேலாக தங்களின் பிள்ளைகளின் சார்பில் இவர்கள் வளர்த்துக் கொள்ளும் அநாவசியமற்ற பயவுணர்வுகள் மிகவும் அதிகம். ஒரு குடும்பத்தில் வாழும் பெற்றோர் தங்களின் குடும்ட வாழ்வில் எந்நேரமும் மிக அக்கறையாக இருப்பர். ஆனால் அவர்களில் பலவிதமான அச்சவுணர்வுகளை இனங்காணமுடியும். பொதுவாக தங்களின் பிள்ளைகள் மட்டிலே அவர்கள் கொண்டிருக்கும் அளவுகடந்த பாசம் அவர்களை தேவையற்ற சிந்தனைகளுக்குள் அழைத்துச்செல்வதை அவதானிக்க முடியும். பிள்ளை குழந்தையாக இருக்கும் காலத்தில் அதன் வளர்ச்சியிலும், உடல் நலத்திலும் எந்நேரமும் ஒருவித அச்சம் அவர்களை ஆட்கொள்ளும், பாடசாலைப் பருவத்தில் அவர்களின் கல்வியில், ஒழுக்கத்தில் ஒருவித பயம், இளைஞர் நிலையை அடைந்ததும் அவர்களது வாழ்வு பற்றிய பயம் என்று பெற்றோர்கள் மாறி மாறி தங்களில் ஒருவித அச்சவுணர்வுகளுடன் வாழ்வில் போராடிக் கொண்டிருப்பர். தங்கள் பிள்ளைகள் மட்டிலான அக்கறைகள் இவ்வாறான அச்சவுணர்வினை உருவாக்கும் நிலையில் பிள்ளைகள்,மட்டிலான அவர்களின் அவதானிப்பு மற்றும் கட்டுப்பாடு என்பன சுமுகமாக செல்ல வழிகோலினாலும், தேவையற்ற முறையில் பதட்டப்பட்டு பிள்ளைகள் மட்டில் இவர்கள் வளர்த்துக் கொள்ளும் பயம் இவர்களை மட்டுமல்ல பிள்ளைகளின் இயல்பு நிலையைக்கூட குழப்பிவிடும் தன்மை காணப்படும். பெற்றோர் பிள்ளைகள் மட்டில் அதிக அக்கறையும் அவர்களது வளர்ச்சியில் பூரண பங்களிப்பும் காட்ட வேண்டும். ஆனால் தங்களில் உருவாகும் பயவுணர்வினை பிள்ளைகளில் துலங்கவிடும் பட்சத்தில் அது அவர்களின் வளர்ச்சியை பாதிக்கும் என்பதில் ஐயமில்லை. பெற்றோர் காலத்தின் நிலை உணர்ந்து, சமூகத்தின் தேவை அறிந்து, பிள்ளைகளின் திறமை கண்டு, அவர்களை சரியான வழியில் செல்ல ஊக்குவிக்க வேண்டும். மாறாக தங்களுக்குள்ள பயவுணர்வினால், ஒரு தற்துணிவுள்ள பிள்ளையின் குறிக்கோளை குழப்பி குட்டிச்சுவராக்கும் நடவெடிக்கையில் பெற்றோர்கள் ஈடுபடக்கூடாது.
O6 8üLé – LDTffehl 2O1O
 

மனித ஆளுமையும் பயவுணர்வும்
மனிதனின் ஆளுழையை கட்டியெழுப்பும் விடயத்தில் பல காரணிகள் செல்வாக்கு செலுத்துவதை நாம் காணமுடியும். பல காரணிகள் சாதகமாகவும், சில காரணிகள் பாதகமாகவும், இன்னும் சிலகாரணிகள் சாதகமாக அமைகின்ற அதேவேளையில் பாதகத்தை உண்டுபண்ணும் நிலையையும் காண முடியும். அந்த வகையில் பயம் என்ற உணர்வு மனித ஆளுமையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது? பொதுவாக பயவுணர்வு மனிதனின் ஆளுமை வளர்ச்சியை பாதிக்கின்றது என பலர் கருதினாலும், ஆழமாக நோக்கின் சில வேளைகளில் பயவுணர்வு எமது ஆளுமையை வளர்ச்சியடைச் செய்கின்றது என்பது வேறுசிலரது கருத்தாகும். எமது யதார்த்த உலகில் நாம் மனித ஆளுமையைப் பற்றி ஆமமாக சிந்திக்கின் பயத்தின் தன்மையை நாம் அறிந்து கொள்ளலாம். குழந்தையொன்று பெரியோாகள் மட்டில், பெற்றோர்கள் மட்டில் கொண்டுள்ள பயவுணர்வு அதன் எதிர்கால வாழ்வின் வளர்ச்சிக்கே என்பதனால் அத்தகைய பயவுணர்வு நிச்சயமாக தேவை என்பது உணரப்படுகிறது. ஏனெனில் எதுவித பயமுமின்றி தான் நினைத்தபடி வாழலாம் எனும் எண்ணத்தோடு வாழத்தொடங்கும் நிலை அவர்களை படுகுழிக்குள் தள்ளிவிடும், அவர்கள் வாழ்வும் சின்னாபின்மாகிவிடும். ஆனால் அதை பயவுணர்வு என்பதற்கு மேலாக மரியாதை என்று சிலர் கருதுகிறார்கள். இருப்பினும் இத்தகைய பயவுணர்வுகூட சில வேளைகளில் பிள்ளைகளின் சுய ஆற்றலை பாதிக்கும் என்பது இன்றைய உளவியலாளர்களின் கருத்தாகும். எனவே எத்தகைய பயவுணர்வை பிள்ளைகள் கொண்டிருக்கிறர்கள் என்பதில் பெற்றோர், ஆசிரியர்கள் கருத்தாக இருக்க வேண்டும். சிறுவயதில் பிள்ளைகளின் ஒழுக்க மற்றும் கல்வி விடயங்களில் கண்டிப்பாக இருக்கும் பெற்றோர் அவர்கள் வளர்ந்து வரும் காலத்தில் அவர்களுடன் நண்பராக, மனம்விட்டு பேசும் அளவிற்கு விளங்கி கொள்பவர்களாக தங்கள் உறவை வலுப்படுத்துவதே சிறந்தது எனபது இன்று பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. அவ்வாறான உறவு நிலை காணப்படின் பிள்ளைகள் பெற்றோர் பெரியோர் மீது கொண்டுள்ள மரியாதை வலுப்பெறுவதோடு தங்கள் ஆளுமையிலும் அவர்கள் நாளும் வளர்வார்கள், புதுமைகளை படைக்கும் ஆற்றல்மிக்கவர்களாக அவர்கள் மாறுவார்கள்.
பொதுவாக எமது ஆன்றோர்களின் கருத்துக்களை உற்றுநோக்கினால் “கலக்கமில்லா மனமே கவலையின்றி வாழும்” என்று கூறுவார்கள். மனத்திலே கவலையில்லா மனிதன் வாழ்விலே மகிழ்ந்திருப்பான். மகிழ்சியாக ஒருவன் தன் வாழ்வை நகர்த்துகின்ற போதே அவன் தன் ஆளுமையில் வளரமுடியும். ஒருவன் தன் ஆளுமையில் வளர பல்வேறு காரணிகள் அவனுக்கு
ஐப்பசி - மார்கழி 2010 O7

Page 6
துணைபோகின்றன. தன்னம்பிக்கை, துணிவு, விடாமுயற்சி, ஊக்குவிப்பு, வழிகாட்டல், என்பவற்றை கட்டமிட்டுக் காட்டலாம். ஆனாலும் ஒருமனிதனுடைய மனத்தில் பயம் எனும் உணர்வு இருக்கும்வரை அவன் தன் ஆளுமையை வளர்க்க முடியாது. உதாரணமாக கல்வி கற்கும் மாணவன் தன் விளக்கமின்மையை ஆசிரியருக்கு தெரியப்படுத்த பயப்படுவானானால் அவனால் தன் கல்வியில் உயரமுடியாது. ஒரு இளைஞன் தன் எண்ணத்தை பொதுவாக எடுத்துரைக்க தயங்குவானானால் அவன் சமூகத்தில் தன் இலக்கை அடைய முடியாது. இவ்வாறு பயம் ஒருவனின் ஆளுமை விருத்தியை தடுக்கும் என்பது உறுதியாகிறது.
ஒருவர் சாதாரணமாக எல்லாவற்றிற்கும் பயப்படும்போது அவரில் இருக்கும் அப்பயத்தினை அச்சநோய் என்று வரையறுக்கிறார்கள். நோயால் ஒருவர் எவ்வாறு வேதனைப்படுகிறாரோ அதேபோல பயமுள்ளவர்களும் வேதனைப்படுவர் என்பது உளமருத்துவர்களின் கருத்தாகும். பயத்தினால் அவர்களின் உடலும் உள்ளமும் அதிர்ச்சிக்குள்ளாகி வாழ்வில் பெரும் குழப்பம் அடைகின்றனர். எதைக் கண்டாலும் அவர்களுக்கு பயமாகவே இருக்கும். சாதாரணமாக நண்பர்களால் பேசப்படும் நகைச்சுவைகளை கேட்கக் கூட சிலருக்கு பயம் வரும். இத்தகைய மனிதர்கள் வாழ்வை நகர்த்துவது மிகக் கடினம். எனவே அளவுமீறிய பயமுளஸ்வர்கள் சிறந்த உளமருத்துவர்களின் உதவியை அல்லது உள ஆற்றுப்படுத்துனரின் உதவியை நாடி முழுமையான ஒரு சிகிச்சை முறையைப் பெற்றுக்கொள்வது மிகவும் அவசியம். பயத்தோடு வாழ்வது நெருப்புக்குள் நடப்பது போன்றது. எனவே அவர்கள் தங்களில் ஒரு தற்துணிவை ஏற்படுத்தி எதையும் சவாலாக ஏற்று வாழ்வில் முன்னேற பழகினால்தான் அவர்கள் தங்கள் வாழ்வின் அர்த்தத்தை புரியமுடியும். தங்கள் ஆளுமையை விருத்தி செய்ய முடியும்.
உசாத்துணை நூல்கள்
0 குமாரசுவாமி, எண்ணங்கள்(சென்னை) கண்ணதாசன் பதிப்பகம், 1979 9 நான் உளவியல் சஞ்சிகை 1997, மலர் 23, இதழ் 2
ов 2il Jé – uDmffesyst 2O1O
 

EpGEPP வாழ்க்கை
ம. பற்றிக் பிரசாந் அ.ம.தி
மனிதர்கள் கவசம் அணிவது சகயம். சில சமயங் களில் மனிதன் தன்னை மற்றவர்களிடமிருந்து அல்லது மற்ற சக்திகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டுஉடலில்,தலையில், மார்பில் கவசம் அணியவேண்டி உள்ளது. இது அவனுக்கு புறக்காரணிகளிடமிருந்து பாதுகாப்பையும், சுதந்திரமாக நடமாடக்கூடிய நிலையையும் கொடுக்கின்றது. வெளிப்புறக்காரணிகள்தன்னை
தீண்டா வண்ணம் தன்னை பாதுகாத்துக் கொள்வது தனிமனிதனுடைய கடமையும் உரிமையுைம் கூட. எனவே மனிதன் வெளிப்புறத்தில் கவசம் அணிவது தவிர்க்கமுடியாததொன்றாகவும், கட்டாயத் தேவையாகவும் இருக்கின்றது.
ஆனால் ஒரு தனிமனிதனின் உள்ளார்ந்த வாழ்வை ஆராயும்போது, ஒருவன் தன் வாழ்வின் இருவேறு சந்தர்ப்பங்களைத் தவிர மற்றக் கணப்பொழுதெல்லாம் ஒருவித முகமூடியை அணிந்து கொண்டே வாழ்கின்றான். மனிதன் தான் பிறக்கும்போதும் இறக்கும்போதும் மட்டுமே முகமூடி என்ற மாயக் கவசத்தை அகற்றி விடுகின்றான். மனிதனுடைய பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட வாழ்க்கையானது ஒரு பொய் வாழ்க்கையாகவே அமைகின்றது. அவனால் சமூகத்தில் நேர்மையாக தன்னுடைய சுய உருவத்தை வெளிப்படையாக வாழ முடிவதில்லை. தன்னுடைய உண்மையான வாழ்வை வெளிக்காட்டினால் அது அவனுடைய வாழ்வைப் பாதிக்கும் என்ற பயம் மனிதனை இப்படியான ஒரு முகமூடி அணிந்த தன்னுடைய சுய உருவத்தை வெளிக்காட்டதயங்குகின்ற வாழ்க்கைக்குள் தள்ளுகின்றது.
எந்த ஒரு மனிதனும் மற்றவருக்கு முன்னால் தன்னுடைய சுய உருவத்தை காட்டிக்கொள்ள விரும்புவதில்லை. அப்படி வெளிக்காட்டினால் அது அவனுக்குப் பல பாதிப்புக்களை கொண்டுவரும் என அவன் எண்ணுகின்றான். ஒரு தனிமனித வாழ்வில் தொடங்கி, குடும்ப வாழ்வு ஊடாக, சமுதாய வாழ்வை அடையும்போது ஒரு மனிதன் பலவகையான முகமூடிகள் கொண்டு தன்னுடைய சுய உருவத்தை மறைத்து வாழும் துற்பாக்கிய நிலைக்குத் தள்ளப்படுகின்றான்.
மனிதர்கள் எப்படிதங்களுடைய சுய உருவத்தை மாற்றி வாழ்கின்றார்கள் என்பதை எடுத்துக்காட்டுக்களுடன்பார்க்கும்போது ஒருவர் நல்லவர் போல்நாஒழுக வார்த்தை
ஐப்பசி - மார்கழி 2010 O9

Page 7
பேசிநயவஞ்சகத்தைகக்குவதும், நல்லவர் போல் நடித்து மற்றவரைவம்பில்மாட்டிவிடுவதும், உதவிசெய்வதுபோல் நெருங்கிப் பழகி தன்னுடைய காரியம் முடிந்தவுடன் நீயாரோ நான் யாரோ எனக் கைவிடுவதும், மற்றவரைப் பற்றி தப்பாக கதைத்து விட்டு யாரைப்பற்றி தப்பாக
கதைத்தாரோ அவரிடமே “உன்னைப்பற்றி மற்றவர்கள்
தப்பாக பேசுகின்றார்கள்” என்று கூறுவதும் இப்படியாக சூழ்ச்சிகரமாக வாழ்க்கைநடாத்தும் மனிதர்கள் அணிவது ஒருவகை ന്ധ്ര. ஒருவேளை நீங்களும் நானும் கூட இவ்வகை முகமூடி அணிந்த மனிதருக்குள் அடக்கப் படலாம்.
சமூகத்தை நோக்கும்போது சமூகத்தில் எத்தனை வகையான முகமூடிகளை அணியும் மனிதர்கள் வாழ்கின்றார்கள். அரசியல்வாதிகள் அணிவது ஒருவகை முகமூடி, ஆன்மீக வாதிகள் அணிவது இன்னொருவகை முகமூடி, சமூகத்தொண்டர்கள் அணிவது ஒருவகை முகமூடி, சமூகத்தை வழிநடத்துபவர்கள் அணிவது இன்னொருவகை முகமூடி தொழிலதிபர்கள் அணிவது ஒருவகை முகமூடி, தொழிலாளர்கள் அணிவது இன்னொருவகை முகமூடி. ஆசிரியர்கள் ஒருவகை முகமூடியை அணிகின்றார்கள், மாணவர்கள் ஒரு வகை முகமூடியை அணிகின்றார்கள். இப்படியாக சமூகத்தில் வாழ்கின்ற அனைத்துத் தரப்பினரும் ஏதோ ஒரு விதத்தில் தங்களுடைய சுய உருவத்தை மறைத்து, வேறோர் உருவத்தைதங்களுக்குள் வரவழைத்துக் கொண்டு, அந்தமாய உருவத்தின் நிழலில் தங்கி வாழ்கின்றவர்களாகவே இருக்கின்றார்கள்.
பலருக்கு அவர்கள் செய்கின்ற தொழில்களும், அவர்கள் வகிக்கின்ற பதவிகளும், அவர்கள் தேர்ந்து கொண்ட வாழ்க்கை முறையும் DC56åg5! Drr6or கவசத்தை கொடுத்து, அதனைக் கொண்டு வாழ்வை ஒட்டக்கூடிய விதமாக தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்கின்றார்கள். அவர்கள் சமூகத்தில் எவ்வளவு தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டாலும் அச் செயல்களை யாரும் கண்டுகொள்வதில்லை அதற்கு அவர்கள் வகிக்கின்றநிலைகள்திரைபோல்மறைப்பு கொடுக்கும். அவை அவர்களை எப்போதும் நல்லவர்களாகவே காட்டும். ஆனால் அவர்கள் நல்லவர்கள் என்ற பெயரில் அனைத்துத் தீமைகளுக்கும் துணை போகின்றார்கள்.
சமூகத்தை உருவாக்குகின்றவர்கள் மனிதர்கள். ஆனால் சமூகம் என்ற அமைப்புக்குள் வாழத் தொடங்கியவுடன் மனிதன் தன்னுடைய உண்மையான உருவத்தை மறைத்து விடுகின்றான். சமூகத்தில் இயங்குகின்ற ஒரு குழுவை எடுத்து நோக்கினால் அந்தக் குலுவிலுள்ள ஒவ்வொருவரும் தமக்குச் சாதகமானவற்றையே
O. ஐப்பசி - மார்கழி 2010
 
 

முன்வைக்க முனைகின்றார்கள். இதற்காக தங்கள் சுய உருவத்தை LD60 pg55) நல்லவர்கள் போல் தங் களை காட்டிக்கொண்டு மறைமு கமாக தங்களுடைய காரியங்களை கச்சிதமாக முடிக்கின்றார்கள். அக்கா ரியம் கைகூடியவுடன் யாரையும் பொருட்படுத்தாமல் தங்களுடைய நிலையை தக்கவைத்துக் கொள்வ
தில்லையே கண்ணும் கருத்துமாக செயற்படுகின்றார்கள்.
மனிதனுடைய சுய உருவத்தை யாராலேயுமே கண்டு கொள்ள முடிவதில்லை.
ஒருவருடைய சுய உருவத்தை நாம் எப்போது ஓரளவுக்காவது அறிய முடிகின்றது என்றால் அது அவருடைய இறப்பின் போதுதான். ஒருவருடைய மரணத்தில்தான்
அவரைப்பற்றிய பல கருத்துக்கள் பேசப்படுகின்றன. அக்கருத்துக்களிலிருந்து நாம்
அவர் எந்தளவிற்கு சமூகத்தில் உண்மையோடும் நேர்மையோடும் வாழ்ந்திருக் கின்றார் என்பதை அறிய முடிகின்றது.
மனிதன் ஏன் தன்னை மற்றவர்களிடத்தில் வெளிக்காட்ட அஞ்சுகிறான் என்றால், தன்னை மற்றவர்கள் தப்பாக புரிந்து விடுவார்கள் என்பதால், தன்னுடைய சுய உருவத்தை காட்டினால் மற்றவர்கள் தன்னை ஒரம் கட்டி விடுவார்கள். மதிக்க மாட்டார்கள், ஆகவே அப்படியான சந்தர்ப்பங்களில் தன்னால் சமூகத்தில் சுயமரியா தையுடன், சமூகத்தின் விருப்பு வெறுப்பக்களுக்கு இசைந்து போக முடியாமல் போய்விடும், தான் வாழ்வதால் எப்பயனும் இருக்காது போன்ற பல காரணங்கள் அவனை தன் சுய உருவத்தை மறைத்து இன்னொரு உருவெடுத்து வாழச் செய்கின்றது.
முகமூடி என்ற மாய திரைக்குள் மனிதன் மறைகின்ற போது அவன் செய்கின்ற எந்த விடயத்திலும் உண்மையை காண முடியாது. பேச்சில் நம்பிக்கை இருக்காது வாழ்வு சீராக இருக்காது. ஏமாற்றம் தான் வாழ்க்கையாக அமையும். ஆகவே முகமூடி என்ற மாய கவசத்தை கழற்றி எறிந்துவிட்டு சுய உருவோடு வாழ எத்தனிக்கும் போதுதான் வாழ்வில் அர்த்தத்தைக் காணமுடியும். “போலி வாழ்வை கழையாவிடின் உண்மை வாழ்வை அடைய முடியாதென்ற உண்மையை கண்டடையும் வரை போலி வாழ்வே உண்மை வாழ்வாக அமையும்.”
2gijLé – uDriffesgo 2010 11 நான்

Page 8
மணலுளர்ச்சிக் குறை ஓர் நோயல்ல அவர்களுக்கு விசேட கல்வி வழங்குவதன் மூலம் grge glastillorris
த. முறிகமலநாதன் B.Com, Dip in coun Psy (Island) ஆற்றுப்படுத்துனர்-அகவொளி ஆசிரியர் - யாமானிப்பாய் மெமோறியல் ஆங்கிலப் பாடசாலை
தொடர்ச்சி
QLlg& 2sm.6ðIlb (Autisam)
ஒட்டிசம் என்பதைத் தமிழில் தற்புனைவு ஆழ்வு என்று குறிப்பிடுவர். உண்மை நிலையில் இருந்து தங்களைத் தாமே விடுவித்துக் கொண்டு கனவுகளைப் போன்ற கற்பனைகளை உருவாக்கிக் கொண்டு அதில் வாழ்ந்து வருவதைக் குறிக்கவே BELEULER 616örL6)Ift Autisam616örgy 6ILufflcLrift.
ஒட்டிசம் உள்ள குழந்தைகள் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் சாதாரணமானவர் களைப் போலவும் இருக்கிறார்கள். இது பரம்பரை நோய் அல்ல. மனநோயும் அல்ல. இதனைக் கண்டறிய மருத்துவ சோதனைகள் உதவுவதும் இல்லை. ஒட்டிசம் பற்றி நன்கு அறிந்து, இத்துறையில் தேர்ச்சி பெற்றவர்கள், குழந்தையின் பெற்றோரிடம் பல கேள்விகளைக் கேட்டும் குழந்தையை ബൈഖേമ്പ്ര நாட்களில் நன்கு கவனித்து அறிந்த பின்பும், இதனை உறுதிசெய்து கொள்கிறார்கள்.
இவர்கள் 15 மாதம் முதல் 18 மாதங்கள் வரை சாதாரண குழந்தைகள் போலவே இருப்பார்கள். அதன் பிறகுதான் அவர்கள் நடத்தைகளில் மாற்றங்கள் ஏற்படு சின்றன. இவர்கள் ஒட்டிசம் தான் என்பதைக் கண்டறிய பின்வரும் குறிப்புக்களில் பாதி அல்லது அதற்கு மேல் ஒரு குழந்தையிடம் இருக்குமேயானால் நாம் அந்தக் குழந்தைகளை ஒட்டிசம் உள்ளவர்கள் என்று கண்டறியலாம்.
01. மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுவதில் ஆர்வமின்மை. 02. ஒரே மாதிரியான செயல்களில் ஆர்வம் இருத்தல். 03. உண்மையான அபாயங்களைப் பற்றிய பயமின்மை. 04. அர்த்தமற்ற அழுகை அல்லது சிரிப்பு. 05. நம் கண்களை நேரடியாகப் பாராமை. 06. வழக்கமான கற்பிக்கும் முறைகளைப் புரிந்து கொள்ளாமை. 07. வலி தெரியாமை.
12 ஐப்பசி - மார்கழி 2010
 

08. கிளிப்பேச்சு சொன்னதையே திருப்பிச் சொல்லுதல், எதிரொலிப்பேச்சு. 09. தனிமையை விரும்புதல். 10. பொருள்களைச் சுற்றிவேடிக்கை பார்த்தல் அல்லது, சுழலும் பொருள்களில்
96 lb. 11. வாயால் நாம் கூறுபவற்றை, தமது காதில் வாங்காதது போல் நடந்து
கொள்ளுதல். 12. கொஞ்சுதல், கட்டிப்பிடித்தல், அன்பு, பாசம் இவற்றை விரும்பாமை. 13. அதிகமான செயல்திறன் இருத்தல். 14。 காரணமற்ற அழுகையுடன் கூடிய ஆர்ப்பாட்டம். 15. மனிதர்களிடம் அன்றி, ஜடப்பொருள்களின் மேல் வேண்டாத பற்று. 16. வார்த்தைகளை வெளியிடுவதில் சிரமம், வார்த்தைக்குப்பதிலாக
செய்கைகளால் வெளியிடுதல். 17. கைவிரல்களை ஆட்டுதல், உடலை ஊஞ்சல் போல் ஆட்டுதல் போன்ற
செயற்கை நடத்தைகளைத் தொடர்ந்து செய்தல். 18. எப்போதும் ஒரே வகையான உணவை விரும்புதல்,
ஒட்டிசம் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டபின், இரண்டாவதாக அதை எதிர்நோக்கதயார்ப்படுத்திக்கொண்டு, சரியான அணுகுமுறையால் அவர்களுடைய விரும்பத்தகாத செயற்பாடுகளை நாம் விரும்புமாறு மாற்றியமைக்கலாம். அவர் களை அரவணைக்க வேண்டும். நன்கு வரையறுக்கப்பட்ட ஒழுங்கான பாடத்திட்டத் தின்மூலம், பேச்சுப் பயிற்சிஅளித்தல், சமூகத்தில் பழகக்கற்றுக்கொடுத்தல், சாலை யைக் கடப்பது, சிறு பொருட்களை வாங்கிவரவிடுதல் போன்றவற்றைக் கஷ்டப்பட்டா வது, கற்றுக்கொடுக்க வேண்டும்.
சூழ்நிலைச் சீராக்கம்
ஒட்டிசத்தாரைச் சூழ்ந்திருக்கும் சூழ்நிலை, அவர்களின் நடத்தைகளில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே சூழ்நிலையை மிகவும் ரம்மியமாக, விரும்பத்தக்க நடத்தைகளைத் தூண்டுவதாக மாற்றியமைப்பது அவசியம். தேவையற்ற பொருட்கள், படங்கள், மூக்கைத் துளைக்கும் வாசனைகள்,துர்நாற்றம், செவியை அதிரச்செய்யும் இசை, ஓசை, குளிர், வெப்பம், பசி, தாகம், வலி போன்றவை ஒட்டிசைத்தாரைப் பாதிக்கத்தக்கவாறு, பார்த்துக் கொள்வதோடு தேவைப்படும் முக்கிய காரணிகளை மட்டும் சூழ்நிலையில் வைக்க வேண்டும். ஒட்டிசம் குழந்தை உடனடியாகதன் ஒத்துழைப்பை நல்கிவிடாது. ஒட்டிசைக் குழந்தைக்கு கற்பிக்கும் பொழுது, கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய குறிப்புக்கள் சில உள்ளன. அவை:
8üLé – udmffs 2O1O 13

Page 9
O1. ஒரே நேரத்தில் ஒரு இலக்கு நடத்தையை மட்டுமே கற்பிக்க வேண்டும். 02. கற்பிக்கும் நேரத்தை, அடிக்கடி மாற்றிக் கொண்டிருக்கக் கூடாது. 03. குழந்தை விரும்பும் நேரத்தில் மட்டுமே கற்பிக்க வேண்டும். 04. இயல்பான சூழலில் கற்பிக்க வேண்டும்.
முக்கியமாக ஒட்டிசத்தை ஆரம்பத்திலேயே கண்டறிந்து பயிற்சி அளித்தால் குழந்தைநன்கு முன்னேறவாய்ப்புள்ளது. குழந்தையின் வளர்ச்சியில் பெற்றோரும், சிறப்புப் பாடசாலையின் பங்கும், மிகவும் அவசியம். இவர்களின் எதிர்காலம் இது தான் என்று கூற முடியாவிட்டாலும், ஒட்டிசத்தால் சிறுவயதில் பாதிக்கப்பட்ட குழந்தையை பயிற்சி அளிப்பதன் மூலம் ஓரளவு சுதந்திரமாக வாழவைக்க முடியும். இவர்களை ஒரே இடத்தில் வைத்திருக்காமல் அடிக்கடி சூழ்நிலையை மாற்றுதல்
நலலது.
மூளைவாதம்
மூளையில் ஏற்படும் வாதத்தை மூளைவாதம் என்பர். இது ஒரு நோயல்ல. மூளையில் ஏற்படக்கூடிய ஒரு ஊனமாகும். மூளையின் செயல்பாட்டுக் குறைவினாலோ, பாதிப்பினாலோ குழந்தைப் பருவத்திலிருந்து இயக்கம் அல்லது அமைப்புநிலையில் ஏற்படக்கூடியவளர்ச்சியற்றமாறுபாடு மூளைவாதம் எனப்படும். இது பிறவியில் இருந்தும், இடையிலும் ஏற்படலாம்.
மூளைவாதம் உடையோருக்கு ஏற்படும் குறைபாடுகள் மூளைவாதம் பொதுவாக உடல் இயக்கநிலை சார்ந்த ஊனங்களை ஏற்படுத்துவதுடன் வேறு சில குறைபாடுகளையும் ஏற்படுத்தி விடுகின்றது. அவை: * LDGOTGIGITřšéfå E6Oog) – Mental Retardation
மூளைவாதம் உடையோரில் 75% ஆனோர் மனவளர்ச்சிக்குறை உள்ளவர்களாக இருக்கின்றனர். கால், கை வலிப்பு மூளைவாதம் உடையோரில் பலருக்கு கால், கை வலிப்பு ஏற்படுகின்றது.
*
Х»
Х•
காதுகேளாமை 議 . ܬ ܢ மூளைவாதம் ஒருவகையான இயற்காற்றல் குறைபாடு உள்ளவர்களுக்கு காது கேளாமை ஏற்படும். - * வாய் பேச முடியாமை
வாய் தாடை மற்றும் நாக்கைக் கட்டுப்படுத்தும் தசைகள் பாதிக்கப்படுவதால்
மூளைவாதம் உடையோரின் பேச்சு பாதிக்கப்படுகின்றது. * பார்வைக் கோளாறு
மாறுகண் கண் விழி ஊசல், கிட்டப்பார்வை, தூரப்பார்வை போன்ற கோளாறுகளும் பொதுவாகக் காணப்படும். இவற்றைவிட கால், கை பாதிப்புக் களின் அடிப்படையில் மூளைவாதம் உடையவர்களில் பலவகையினர் இருக்கின்றனர்?
14 ஐப்பசி - மார்கழி 2010
 

Φ
Х»
ஒற்றைவாதம் இதில் ஒரு காலோ ஒரு கையோ பாதிக்கப்பட்டு இருக்கும். * பக்கவாதம்
உடலில் ஏதேனும் ஒரு பக்கத்தில் உள்ள கையும், காலும் பாதிக்கப்படுவது பக்கவாதம் எனப்படும். * கீழ்ப்பக்க வாதம்
உடலின் கீழ்ப்பக்கமான கால்கள் இரண்டும் பாதிக்கப்படுவதை இதுகுறிக்கும். * மேல்பக்க வாதம்
இந்த நிலையில் கால்கள் பாதிக்கப்படுவதுடன் கைகளும் பாதிப்புக் குள்ளாகின்றன.
மூளைவாதம் உடையோருக்கு இயல்பியல் சிகிச்சை மூலம் பயிற்சி கொடுக்கும் போது ஓரளவு முன்னேற்றத்தைக் காணலாம்: பேச்சுப் பயிற்சியும் அளிக்கலாம். இவர்களுக்கு சிறப்புக் கல்வி அளிப்பது மிகவும் இன்றி அமையாதது ஆகும்.
öldü ğidb öpğ6Coğ56it - Hyporactive Disorder
துருதுரு நிலை என்பது ஒழுங்கற்றதாறுமாறான நடத்தையைக் குறிக்கும். ஒரு குழந்தை எப்படி நடந்துகொள்கிறது என்பதைவிட அதன் நடத்தை எவ்விதம் உள்ளது என்பதைத்தான் இந்த நிலை குறிக்கின்றது. குழந்தையின் நடத்தையில் ஒருவித படபடப்பும் கவனமில்லாமையும், உணர்ச்சி எழுச்சியும் காணப்படும். அவர்களால் ஓரிடத்தில் ஒரு பொருளில் கவனம் செலுத்த முடிவதில்லை.
துருதுரு குழந்தைகளிடம் பொதுவாகக் காணப்படும் பிரச்சினைக் குரிய நடத்தைகள் 01. ஓரிடத்தில் தொடர்ந்தாற் போல குறைந்தது ஐந்து நிமிடமாவது உட்காருவ
தில்லை. 02. பிறர்முகம் பார்த்துப் பேசுவதில்லை. 03. அங்குமிங்கும் சதா ஓரிடத்தில் அலைந்து கொண்டிருத்தல். O4. தரையில் தேவையில்லாமல் தாவுதல், குதித்தல். 05. அடுக்கி வைக்கப்பட்டுள்ள பொருள்களை இழுத்துப் போடுதல். 06. எந்தச் செயலையும் கவனத்துடன் செய்வதில்லை. 07. அநாவசியமாக பிறரைக் கட்டிப்பிடித்தல், முத்தமிடுதல். 08. தனக்குத்தானே வாய்விட்டுச் சிரித்தல், 09. கையையும், காலையும், தலையையும் சதா ஆட்டிக்கொண்டிருத்தல். 10. கண்டதையும் வாயில் வைத்தல்.
ஐப்பசி - மார்கழி 2010 15

Page 10
1. கதவு பூட்டு பிற ஒலிஎழுப்பும் பொருட்கள் போன்றவற்றால் எப்பொழுதும் ஒலி
எழுப்புதல்.
12 அளவுக்கதிகமாக அழுதல்.
13. பொருள்களை எறிதல், உடைத்தல்,
14. புத்தகங்களைக் கிழித்தல். 15. பிறரை அடித்தல், கடித்தல், முடியைப் பிடித்து இழுத்தல்.
இவ்வாறான பிள்ளைகளுக்கு நடத்தைச் சீராக்கல் நுட்பங்களைச் செயற்படுத்து வதன் மூலம் எளிதில் கட்டுப்படுத்தலாம். துருதுரு நிலையைக் குறைக்கவும், கட்டுப் படுத்தவும் பல்வேறு மருந்துகள் இருந்தாலும் அவற்றால் ஏற்படும் பின்விளைவுகள் மிகவும் கொடுமையானவை. எனவேதான் மருந்தில்லாத மருத்துவமுறை ஒன்றை பின்கோல்டு என்பவர் கண்டறிந்துவெளியிட்டார். அது திட்ட உணவுச்சிகிச்சை என்று கூறப்படுகின்றது. Ꮅ
ஆப்பிள், ஆரஞ்சு, தக்காளி, வெள்ளி, பன்றிக்கறி, குளிர்சாதனப்படுத்தப்பட்ட மீன்கள், ஜெலி உணவு வகை, வாயு ஏற்றப்பட்ட பானங்கள், ஐஸ்கிறீம், கேக் வகைகள், மிட்டாய் வகைகள், செயற்கைமணங்கள் ஊட்டப்பட்ட உணவு வகைகள் போன்றவற்றை உண்ணாமல் தவிர்த்தல், போன்றவற்றால் துருதுரு நிலைகுறைந்து விடுவதாக நம்பப்படுகிறது.
sibgp6. e6topuntG 0-6(DLGunit - (Slow learners)
கற்றுக்கொள்வதில் ஏற்படும் குறைபாட்டைக்கற்றல் குறைபாடு என்பர். கற்றலுக்கு முக்கியமான ஆற்றல்களாகக் கருதப்படுபவை:
O1. சொல்லாற்றல் 02. எழுத்தாற்றல் 03. எண்ணாற்றல் என்பவையாகும்.
இந்த ஆற்றல்களில்தடங்கல்கள் ஏற்படுமாயின் அது கற்றல் குறைபாடு ஏற்படக் காரணமாக அமைந்துவிடும். கற்றல் குறைபாட்டுக்கு வெளிப்படையான அறிகுறிகள் எதுவும் கிடையாது. கற்றல் குறைபாட்டையும், மனவளர்ச்சிக் குறையையும் ஒன்றாக நினைத்துப் பலரும் குழம்பியநிலையில் இருக்கின்றனர். இவை இரண்டும் ஒன்றல்ல. நிறைய வேறுபாடுகள் உள்ளன. நுண்ணறிவுச் சோதனைகளின் வாயிலாக இவர்களை வேறுபடுத்தி அறிவது எளிது.
கற்றல் குறைபாடுடையவர்கள் கவனக்குறைவு கல்வியில் பின்தங்கல் பிறர் முகபாவங்களைப் புரிந்துகொள்ளாமை, தங்களிடம் உள்ள குறைபாட்டை உணர்வதால் ஏற்படும்தாழ்வுமனப்பான்மை, மற்றவர் இகழ்வதால் ஏற்படும் கோபம் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர்.
ஐப்பசி - மார்கழி 2010
 

கற்றல் குறைபாடு என்பது பொதுப்படையாகக் கூறப்படும் ஒரு சொல்லாகும். ஆனால் இதில் முப்பதுக்கும் அதிகமான வகைகள் உள்ளதாகக் கண்டறியப் பட்டுள்ளது. அவற்றுள் மூக்கியமாக, 01. வார்த்தைக் குழப்பம் O2 சொற்களைக் கிரகிப்பதில் குழப்பம் 03. எழுத்துக்களை எழுதுவதில் குழப்பம் 04. கணக்கிடுவதில் குழப்பம் 05. கவனத்தேர்வில் குழப்பம் 06. நோக்கமற்ற கவனம் O7. பெயர்க் குழப்பம் 08. பொருள் விளக்கக் குழப்பம் 09. எழுத்துச் சிதைவு ܝܠ ܐ ܐ 10. சரளப் பேச்சுத் தடை -
போன்றவற்றை முக்கியமாகக் குறிப்பிடலாம்.
கற்றல் குறைபாடு உள்ளவர்களை மற்றக் குழந்தைகளுடன் கலந்து பழகவிடுதல் நல்லது. திருமண வைபவம், கோயில் திருவிழாக்கள், கலைநிகழ்ச்சிகள், பொருட் காட்சி, பூங்கா, பிறந்தநாள்வைபவங்கள் போன்ற இடங்களுக்கு அழைத்துச்செல்ல வேண்டும்.தங்களால் எழுதமுடியவில்லை, வாசிக்க முடியவில்லை என்ற எண்ணங் களால் கற்றல் குறைபாடு உள்ளவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாவார்கள். அத்தகைய எண்ணங்களை அகற்ற பிறருடன் கலந்து பழகவிடுவது நல்லது. இவ்வாறு செய்யாமல் விடுவதால் பிற்காலத்தில் அவர்களைப் பராமரிப்பவர்களுக்கு மிகவும் சிரமமாக இருக்கும். கூடியளவில் இவர்களை வெளியிடங்களுக்குச் செல்லவிடவும். இவர்களை தனிமையில் விடுவதும் நீண்ட நேரம் தொலைக் காட்சி பார்க்க விடுவதும் பகல் நேரத்தில் தூங்க விடுவதும் தவிர்க்கப்படல் வேண்டும். இவர்களை வீட்டுக்குள்ளேயே வைத்திருந்தால் நாளடைவில் மனநோய்க்கு ஆளாக நேரிடலாம். அந்த நேரத்தில் தமது ஆடைகளைக் கழற்றி எறிதல், பிறரை அடித்தல், கத்துதல் போன்ற செயற்பாடுகளைச் செய்வார்கள். இதனால் இவர்களைச் சங்கிலி யால் கட்டிவைக்க வேண்டிய நிலை ஏற்படலாம். எனவே பெற்றோர்கள் மிகவும் கவன மாகச் செயற்பட வேண்டும். பராமரிப்பவர்களின் மேற்பார்வையில் இவர்களுக்கு சிறு தொழில்களை ஆரம்பித்துக் கொடுக்கலாம். மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு வீட்டில் கொடுக்க வேண்டிய பயிற்சிகள். பாடசாலைக்கோ வேறு பயிற்சி நிலையத் துக்கோ மனவளர்ச்சி குன்றிய பிள்ளை அனுப்பப்படுவதற்கு முன்னர் அக்குழந் தைக்குத் தேவையான அனைத்துப் பயிற்சிகளையும் பெற்றோர் கற்றுக்கொடுப்பது அவர்களின் கடமையாகும். அது குழந்தையின் எதிர்காலத்தை வளமாக்கும்.
ஐப்பசி - மார்கழி 2010 17.

Page 11
தொழில் புரியும் பெண்களும்
W மன அழுத்தமும்
S.Mary Tharshika 2nd year (Arts) University of Jaffna
களில் முயன்று முன்னேறி வரு கின்றார்கள். அறிவிலும் ஆற்றலி லும் ஆண்களுக்கு பெண்கள்
இளைத்தவர்களல்ல என நிரூ பித்து வருகின்றனர். இருந்தாலும் பெரும்பாலான பெண்களுடன் கூடவே மன அழுத்தமும் பயணம் செய்கிறது.
தொழில் புரிவோர் வீட்டுப் பொறுப்பையும் தொழில் பொறுப்பையும் சேர்த்து மேற்கொள்ளும் காரணத் தால்அவர்கள் இந்நிலைக்கு ஆளாகின்றனர்.
மனிதனுக்கு வரும் மனநோய்களில் 75 முதல் 90வரை நோய்கள் அழுத்தமான சூழ்நிலை காரணமாக வருபவையே என அண்மிய ஆராய்ச்சி ஒன்று அதிர்ச்சியான தகவலை வெளியிட்டிருக்கிறது. இதுவே மன அழுத்தத்தை கையாள்வதன் தேவையை நமக்கு எடுத்துக் கூறுகின்றது.
தீர்வுக்குரிய பிரச்சனை ஒன்றை எதிர்கொள்ள நேரும்போதுநமதுஉடலும் மனமும் மாற்றம் பெற்றுவரும் விளைவு தான் மன அழுத்தம். அப் பிரச்சனையை சரியான முறையில் கையாண்டு சமாளிக்க முடியாவிட்டால் மன அழுத்தம் உண்டாகிறது. (Stress is a by product of poor or Inadequate)
குறிப்பாக தொழில் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்ற பெண்கள் எப்பொழுதும் தங்களைச் சுற்றி வேலைகள் குவிந்திருப்பதாக உணர்வார்கள். “ஒரு வேலையை முடிப்பதற்குள் ஒன்பது வேலைகள்” என சலித்து கொள்வர் தொழில் நிறுனவனத்தில் இருக்கிற பொழுதும் வீட்டில் செய்ய வேண்டிய வேலைகளை நினைவுபடுத்துவர் வீட்டுக்கு சென்று ஓய்வெடுக்கும்போது, தொழில் நிறுவனத்தின் பணிகளைப்பற்றி
ஐப்பசி - மார்கழி 2010
 
 

தொலைபேசியில் பேசுவர். மொத்தத்தில் வேலைகள் தலைக்கு மேல் சூழ்ந்து தன்னை மூழ்கடிப்பதர்கவும் வேலை களால் மூச்சு முட்டுவதைப் போன்றும் உணர்வர். *
அதாவது ஒருமூடிய அறையில் தீ எரிந்து புகை மூண்டால் அறையில் புகை மூட்டம் ஏற்படுகின்றது. உள்ளே ஒருவர் அகப்பட்டால் மூச்சு விடமுடியாத நிலை" ஏற்படும் இத்தகைய நிலைதான் மனஅழுத்தம்.
அறையின் ஜன்னல்களையும், கதவுகளையும் அகலத் திறந்து வைத்தால் புகைமூட்டம் வெளியேறும். புகை குறைந்தால் உள்ளே அகப்பட்டுக் கொண்டவருக்கு எளிதாக மூச்சு விடமுடியும் விரைவில் இயல்பான நிலைக்குத் திரும்பி விடுவார்.
மன அழுத்த அறிகுறிகள்
மன அழுத்தமானது நபர்களுக்கேற்ப, சூழ்நிலைக்கேற்ப, தீவிரத்தின் அளவுக்கேற்ப மாறுபடும். இதனால் உடல்நலம் பாதிப்படைவதுடன் மனச் சோர்வும் ஏற்படும். மன அழுத்தம் அறிகுறிகள் மூன்று விதமாக பார்க்கப்படுகிறது. i. உணர்வு தொடர்பானவை
அதிகரித்த கவலை, மனக்குழப்பம், மனக்கலக்கம், மனப் போராட்டம், எளிதில் எரிச்சலுறல் Or கோபப்படல், மனதை ஓய்வாக வைத்துக் கொள்ள முடியாமை, தனிமையுணர்வு, மறதி, எதிர்மறைச் சிந்தனைகள், தவறான முடிவுகள் i. உடல் சார் இடங்கள்
தலைவலி, நெஞ்சுவலி, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், குமட்டல், அல்சர், தாம்பத்திய குறைபாடு, மூச்சு திணறல், தலை சுற்றல், அதிகரித்த இதயத்துடிப்பு, உயர் குருதி அழுத்தம், ஆஸ்மா. − i. பழக்க வழக்கம் சார்ந்தவை
மிகஅதிகமாகவோஅல்லது குறைவாகவோ உணவு உட்கொள்ளல், அதிகதூக்கம் Or தூக்கமின்னை, ஒதுங்கியிருத்தல், வேலைகளை பிற்போடல், பொறுப்புக்களி லிருந்து ஒதுங்கியிருத்தல், நகம் கடித்தல், தலை சொறிதல்
ஐப்பசி - மார்கழி 2010 19

Page 12
மன அழுத்தத்தை குறைப்பதற்கான வழிமுறைகள்
பெண்களின் வாழ்வுஉயராமல் குடும்பத்தின் நிலை உயராது. வாழ்வில் மகத்தான சாதனைகளை நிகழ்த்தி முன்னேற்றம் காணும் பெண்களுக்கு மன அழுத்தம் ஓர் தடைக்கல்லாக அமையக்கூடாது. எனவே இதனை தேகநிலை (Posture), பழக்க வழக்கம் (habits), எண்ணங்கள்(thoughts),நடத்தை (behavior) போன்றவற்றின் மாற்றத்தால் குறைக்க முடியும்.
1. சிந்தனைகளை தூய்மைப்படுத்தல்
எதிர்மறை எண்ணமே (Negative thoughts) பெரும்பாலும் மன அழுத்தத்தை அதிகரிக்கின்றன. எனவே நல்ல சிந்தனைப் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.
2. அமைதியான குடும்ப சுழல்
அலுவலகத்தின் குழப்பங்களையோ, எரிச்சல்களையோ குவிக்கும் இடமாக குடும்பம் இருக்கக் கூடாது. மாறாக அவற்றை அழிக்கும் இடமாக குடும்பம் இருக்க வேண்டும் குடும்பத்தினரோடு அன்பான வாழ்க்கை வாழல் மிகவும் முக்கியமாகும்.
3. தமது பலத்தை அறிந்து கொள்ளல்
தொழில் புரியும் பெண்கள் தமது அறிவு, ஆற்றல், திறமை, வளம், காலம் ஆகியவற்றைக் கொண்டு எவ்வளவு பொறுப்புக்களை மேற்கொள்ள முடியுமோ அவ்வளவு பொறுப்புக்களைத்தான் மேற்கொள்ள முடியும். எல்லா வேலைகளையும் இழுத்துப் போடுவார்கள் பிரச்சனைகளிலிருந்து தப்ப முடியாது.
4. சரியான திட்டமிடல்
வாழ்க்கையை முறைப்படுத்திக் கொண்டால் மனதில் குப்பை கூழங்கள் சேராது. இதற்கு நேர நிர்வாகம் (Time management) உதவும். எந்த நேரத்தில் எதைச் செய்ய வேண்டும் என நேரத்தை சரியாக பயன்படுத்த வேண்டும். −
5. எண்ணங்களை பகிர்ந்து கொள்ள நல்ல நண்பர்களை
வைத்திருத்தல்
எண்ணங்களை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்கிறபோதுமனப்பாரம் குறையும். குறிப்பாக பெண்கள் தம் பெற்றோரிடமோ, கணவரிடமோ, பிள்ளைகளிடமோ மனம்விட்டு பேசுகின்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். மனம் விட்டுச் சிரிப்பதுமனஅழுத்தத்தைகுறைக்கும். வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்களோடு 656-6Tu TLGomb. 6. பசி, தாகத்தை குறைத்தல்
பசியும் தாகமும் சோர்வுநிலையைக் கூட்டுகின்றது. ஆக்கிரமிப்பு மனோ
ænJé – uDmstæF 2O1O
 

நிலையையும், கவலையையும் தூண்டுகின்ற சக்தி பசி, தாகத்திற்கு இருப்பதாக நம்பப்படுகிறது.
7. சுவாசப் பயிற்சி
மெதுவாகவும் ஆழமாகவும் மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுவது மன அழுத்தத்தை குறைக்கும் இச் சுவாச பயிற்சியை தியானம் போல செய்யலாம்.
8. உற்சாக மேம்படுத்தல்
காலையில் எழுந்தது முதல் “இன்று புதிதாய் பிறந்தேன்’ எனும் உணர்வோடு செயல்பட வேண்டும் உள்ளத்தின் மகிழ்ச்சி, முகத்திலும் சொல்லிலும் செயலி லும் வெளிப்படவேண்டும், அதே போல அன்றையநாளின் முடிவி லும் உற்சாகம் தரக்கூடிய விடயத் தினை சிந்தித்தல் எல்லா சிந்த னைகளையும் ஒதுக்கிவிட்டு ஓய் வான குளியல், சில நிமிட அமைதியான வாசிப்பு, இசையை ரசித்தல் இதில் ஒன்றையாவது செய்ய வேண்டும். தேவையற்ற சிந்தனைகளை அந்த நிமிடங் களாவது நினைப்பதை தவிர்த்தல்.
உசாத் துணை நூல்கள்
Dr. M.P.குருசாமி, “பெண் தொழில் முனைவோருக்கான வழிகாட்டி’
இணையத்தளம்
æil Jé – LDmfesyst 2010 2

Page 13
சிறுவர் உலகை ஒளிபெற அனைவரது
கரங்களையும் வலுவூட்டுவோம்
Sắasib:-56övrupa566lrằisib-sffcio (BBA(HRSP):MA(pub Adm)Reading; H.N.dip.ACC) சிறுவர் நன்னடத்தை அலுவலர்
பிரதேச செயலகம், யாழ்ப்பாணம்
இலங்கையில் கடந்தகாலங்களில் இடம் பெற்ற யுத்த நெருக்கீடுகளாலும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற இடப்பெயர்வுகள், சமூக பொருளாதாரவறுமைநிலை மற்றும் பெற்றோரது புறக்கணிப்பு போன்ற காரணங்களாலும் தீவளாவிய ரீதியில் 514 சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் 21000க்கு மேற்பட்ட பிள்ளை கள் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதாக வும் இதில் 26 பராமரிப்பு நிலையங்கள் நன்ன டத்தை பராமரிப்பு சேவைகள்திணைக் களத்தின் 2006ம் ஆண்டில் வெளியிடப்பட்ட புள்ளிவிபர அறிக்கை வெளிப்படுத்தி நிற்கின்றது. யாழ் மாவட்டத்தை பொறுத்தவரை மட்டும் 38 சிறுவர் இல்லங்களில் 1373 சிறுவர்கள்
குடும்பத்திலிருந்து பிரிக்கப்பட்ட நிலையில் பராமரிக்கப்பட்டு வருவதாக யாழ் மாவட்ட செயலகத்தின் 2008ம் ஆண்டுக்கான புள்ளிவிபர அறிக்கையின் வாயிலாக அறியமுடிகின்றது. இதைவிட யாழ்மாவட்டத்தில் மட்டும் இவ்வனாதை ஆக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை 3769 சிறுவர்களாக உள்ளனர். இன்நிலை கடந்தகாலத்தில் ஏற்பட்ட மோசமான யுத்த அனர்த்தத்தின்போது வன்னி இடப் பெயர்வுகள் பெற்றோரை பிரிதல், அனாதைகளாக்கப்படல் என்ற நிலையில் வைத்து பார்க்கும்போது அரசாங்கத்திடம் சிறுவர் போராளிகளாக இருந்து சரணடைந்த பிள்ளைகளை வைத்து நோக்கும்போதும் இப்பிரிக்கப்பட்ட பிள்ளைகளின் எண்ணிக்கை நிச்சயமாக இன்னும் உயர்வாகவே இருக்கும் என்பது கண்கூடு; இதனை வெறும் புள்ளிவிபரமாக நோக்காது இதனால் சமூகத்துக்கு ஏற்படும் தாக்கம்பற்றி சமூகப்பணியாளர்கள் உணர்ந்து செயற்பட வேண்டும். V
欧,° æüLéå – LDriffesyst 2O1O
 

பிள்ளைப்பருவம் என்பது வேறுபட்ட சட்டங்களில் வேறுபட்ட வயது எல்லையை வைத்துவகுத்தாலும் பொதுவாக ஐக்கியநாடுகளின் சிறுவர் உரிமைகள் சமவாயத்தில் குறிப்பிட்டதன் படி eiflu சட்டதிட்டங்களுக்கு அமைவாக பராயம் அடையும் வயது குறைவாக அங்கீகரித்தால் ஒழிய பொதுவாக 18வயதுக்கு உட்பட்டவர்கள் சிறுவர்கள் என கொள்ளலாம். இச்சிறுவர்களின் இப்பருவமானது மிகவும் மகிழ்ச்சியும் எழுச்சியும் மிக்கதோர் காலமாகும். இத்தகைய பிள்ளைகள் ஏதோ ஒருவகையில் தனது குடும்பத்தில் அல்லது தான் சார்ந்த சமூகத்தில் வைத்து பராமரிக்கப்படவேண்டிய வர்கள். இவர்கள் எக்காலத்திலும் எக்காரணம் கொண்டும் அனாவசியமான வகையில் அக்குடும்ப சூழலில் இருந்து பிரித்தல் ஆகாது. அவ்வாறே இப்பிள்ளைகளின் நலன்களில் அவர்களது பெற்றோர் மற்றோர்க்கு பராதீனப்படுத்த இயலாத முழுப் பொறுப்பு மிக்கவர்கள். என்பதுடன் இச்சிறுவர்களும் ஏனைய மனிதர்களுக்குரிய அத்தனை உரிமைகளையும் அவர்கள் அனுபவிக்கின்ற சலுகைகளையும் அனுப விக்க தகுதியுடையவர்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
Seire06Ts6f 6ft வளர்ச்சிப்பெருக்கத்தை உளவியல் பாதையில் நோக்குவோமேயானால் குடும்ப சூழலில் வளரும்போது அப்பிள்ளைகள் தம் தாய், தந்தை, சகோதரர்கள், உறவினர்கள் சுற்றத்தவர்கள் என்ற பலவேறுபட்ட தரப்பினர்களின் பாதுகாப்புக்கும் ஆதரவுக்கும் உட்பட்டு வாழ்கின்றனர். எனவே இப்பிள்ளைகளின் தனிப்பட்ட ஒவ்வொரு தேவைகள் மற்றும் விருப்பு வெறுப்புக்கள் என்பன மிகவும் துல்லியமாக அடையாளம் கண்டு தீர்க்க முடிகின்றது. இதனால் பிள்ளைகளின் தன்னம்பிக்கை (Self Confidence) என்பது உறுதி பெறுகின்றது. இவை அனைத்தும் பிள்ளைகளின் சமூகமயமாதலுக்கும் பிள்ளைகளில் ஆளுமை விருத்திக்கும் உறுதுணையாக அமையும். இந்த நிலையில் பிள்ளைகள் சூழலுடன் இசைவாக்கம் பெறவேண்டியதன் அவசியம் பற்றிய கருத்தியலின் அடிப்படையில் நோக்குவோமேயானால் கோல்டன் அல்போட் (Goldon Alport (1964) என்பவர் ஆளுமை என்பதை வரையறை செய்யும்போது “ஒரு பிள்ளை தமக்கே உரிய முறையில் சூழல் சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப பொருத்தப்பாடு காணும் தன்மையை நிர்ணயிக்கும் உடல் உள அமைப்பு’ என விளக்குகின்றார். இதனையே கரிகாலோ (Harry Harlow) 6T6öTuois g56Org upplp6 (335|Turtlig6 (Attachment theory) “ஒரு பிள்ளைக்கு தனது அதே அளவுக்கு அப்பிள்ளையின் உள வளர்ச்சிக்கு அவசியமான பெற்றோரின் அன்பு, காப்பு, கணிப்பு போன்ற உளத்தேவைகள் உரிய வயதில் கிடைக்க வேண்டும் அதாவது குழந்தைகளை சிறுவயதில் தாய் தந்தையின் அன்பு பாசம் கிடைக்காதுமறுக்கப்படும்போது (Early Deprivation)அப்பிள்ளைகள் பிற்காலத்தில் சமூகத்தில் ஒதுங்கி வாழமுயல்வதுடன் சமூக விரோத செயல்களிலும் ஈடுபட உந்தப்படலாம்” என்பதை இவர் குரங்குக்குட்டிகளை வைத்து மேற்கொண்ட ஆய்வினை அடிப்படையாக கொண்டு அழகாக விளக்கியுள்ளார். இவ்வாறே உளப் பகுப்பாய்வு நிபுணரான “சிக்மன் புரைட்” (Sigmund feud) என்பவரும் தனது
ஐப்பசி - மார்கழி 2010 23

Page 14
ஆய்வினை அடிப்படையாகக் கொண்டு விளக்கும்போது “ஒரு பிள்ளை தன்னைப்பற்றியும்தன்னை பற்றியுள்ளகழலைப்பற்றியும் தனது பண்பாட்டுகலாச்சார விழுமியங்களைப்பற்றியும் தனது பெற்றோரின் ஊடாகவே கற்றுக் கொள்கின்றனர். இச்சந்தர்ப்பத்தில் அவர்களது வளர்ச்சிப் பெருக்க காலத்தில் ஏற்படுகின்ற எதிர்மறையான அனுபவங்கள் தனவிலியில் ஒடுக்கப்படும்போதும், அவர்களது உடல்உள தேவைகள் குழந்தைப்பருவத்தில் நிறைவேற்றப்படாத போதும், இயல்பூக்கங்களின் உந்தல்கள் நிறைவேற்றப்படுவதற்கு சமூகநியமங்கள்தடையாக அமையும்போதும், அவை பிற்காலத்தில் பல்வேறு பொருத்தப்பாடற்ற நடத்தைக்கு இட்டுச்செல்கின்றன. என விளக்குகின்றார். இவ்வாறே பிள்ளைகளின் நடத்தை தொடர்பாக ஆய்வுசெய்தஜோன்பொலட் (John Bolob)என்பவர் உலகின்பல்வேறு சிறைச்சாலைகளில் குற்றவியல் சட்டத்தின் கீழ் தண்டனை அனுபவிக்கின்ற இளம் நெறிபிறழ்ந்த பிள்ளைகளையும், பல்வேறு சிறுவர் பராமரிப்பு நிலையங்களிலும், அனாதை விடுதிகளிலும் வாழ்கின்ற பிள்ளைகளையும் உள்ளடக்கி மேற்கொண்ட ஆய்வின் மூலம் பெற்ற முடிவுகளின் பிரகாரம் “இப்பிள்ளைகளின் நடத்தை பிறழ்வுக்கு முக்கியமான காரணம் அப்பிள்ளைகள் குழந்தைப்பருவத்தின் முதல் ஆறுவருடங்களுக்கு மேல் பெற்றோரை விட்டுப்பிரிந்தமையே” என் கண்டறிந்தார். இவ்வாறே போல்பி (Bowlby) என்னும் உளவியலாளரும் “பிற்காலத்தில் பிள்ளைகள் நெறிபிறழ்வாக மாறுவதற்கான காரணங்களில் முக்கியமான ஒன்றாக பிள்ளைகள் தமது குழந்தைப்பருவத்தில் முதல் ஐந்து வருடங்களுக்கு மேல் பெற்றோரை பிரிந்து வாழுதல் பெற்றோரால் புறக்கணிக்கப்படுதல், பெற்றோரின் வறுமை, தொழிலின்மை, ஒழுக்கசீர்கேடுகள், நகர நோக்கிய இடப்பெயர்வுகள், சேரிப்புறங்கள் போன்ற சனநெரிசலான இடங்களில் குடியிருத்தல் போன்றவற்றால் பிள்ளைகளின் உளத்தில் ஏற்படுகின்ற நெருக்கீடுகளே”என விளக்குகிறார். மனிதத்துவ உளவியலாளரான கால் றோஜஸ் (Carl Rogers) என்பவரும் சுயம திப்பை விருத்தி செய்து சுயதிறன் இயல்பை பூர்த்தி செய்யும்போதே அப்பிள்ளையின் வாழும் சூழலானது உண்மையானதாகவும் நிபந்தனை அற்றதாகவும், பிள்ளையை ஏற்றுக் கொள்வதாகவும் மற்றவர்கள் நிலையில் வைத்து ஒட்டுணரத்தக்கதாகவும் இருத்தல் வேண்டும் என்கிறார். இதனால் தான் “உலகநாடுகள் குறிப்பாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் உரிமைகள் சமவாயமும் பிள்ளைகளின் உயரிய நலனை முன்னிட்டு அல்லாமல் (புறக்கணித்தல், துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்படல் போன்றன) எக்காரணம் கொண்டும் பெற்றோரின் பராமரிப்பிலிருந்து பிள்ளைகளை பிரித்தல் ஆகாது. அவ்வாறு பிரிக்கவேண்டிய சந்தர்ப்பங்கள் இருந்தாலும் இச்சந்தர்ப்பத்தில் பெற்றோர் இருவருடமும் அல்லது இருவரில் ஒருவரை பிரித்து வாழும் சந்தர்ப்பத்தில் இவ் இருவருடனும் தொடர்பினை வைத்திருக்கும் உரிமையை அப்பிள்ளைகள் கொண்டுள்ளனர்.” என தெரிவிக்கிறது. 1939ம் ஆண்டின் 48ம் இலக்க சிறுவர் இளம்பிராயத்தவர் கட்டளை சட்டத்தின் உறுப்புரை 21இலும்
24. goûuéâ-LDmñésup 2010
 

“பிள்ளைகள் ஏதாவது காரணத்துக்காக பெற்றோரிடமிருந்து பிரிப்பதற்கு நீதிமன்றம்தீர்மானிக்கும்போதுஅத்தீர்மானம் ஆனது பிள்ளையின் உயரிய நலனை 6DDoS கொண்டதாக இருக்க வேண்டும்” என வலியுறுத்தப்படுகின்றது. மேற்படி விடயங்களை வைத்து பகுப்பாய்வு செய்து பார்ப்போமேயானால் பிள்ளைகள் பெற்றோரிடம் இருந்து பிரிப்பதனால் ஏற்படும் விளைவுகளையும் பிள்ளைகள் கட்டாயமாக குடும்ப சூழலில் வாழவேண்டியதன் அவசியமும் புலனாகுகின்றது அல்லவா? இதனால்தான் என்னவோஎமது முன்னோர்களும்"தாயின்பாதத்திலேயே சுவர்க்கம் உண்டு என்றும்’ நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்றும் கூறிவைத்துள்ளனர் போலும்.
எனவே இத்தகைய சிறுவர்களை அவர்களது குடும்ப சூழலில் உள்வாங்கி அவர்களுக்கு உகந்த சுபீட்சமான எதிர்காலத்தை அமைத்து கொடுப்பதற்கு சிறுவர் நன்னடத்தை திணைக்களம் வேறு அக்கறையுள்ள தரப்பினரை ஒன்று திரட்டி பின்வரும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது.
1. பெற்றோர் இருவரும் அல்லது இருவரில் ஒருவர் இருக்கும் பட்சத்தில் அப்பிள்ளைகளை அடையாளம் கண்டு தகுதிகளையும் இயவுமையையும் கருத்தில்கொண்டு அவர்களுக்குகந்த குடும்பகழலில் உள்வாங்கி பராமரிப்பதற்கான ஏற்பாட்டை செய்கின்றது. (Natural Care Support)
2. பெற்றோர் இருவரும் இறந்துவிட்ட அல்லது அவர்களால் கைவிடப்பட்ட நிலையில் அப்பிள்ளைகளை வைத்து பராமரிப்பதற்குகந்த உதவிகளை அடையாளம் கண்டு அவர்களுடன் மீளிணைக்கின்றனர் (Gardiantal care Support)
3. பெற்றோரால் அல்லது பாதுகாவலரால் கைவிடப்பட்ட 16வயது வரையான பிள்ளைகளை அப்பிள்ளைகளை பொறுப்பேற்க விரும்புகின்ற நபர்களை பொருத்தமான நபராக அடையாளமிட்டு நீதிமன்ற கட்டளை ஒன்றின் பிரகாரம் அக்குடும்ப சூழலில் வாழ ஏற்பாடு செய்து கொடுக்கின்றனர். (Fit Personal Care Support)
4. ஏதேனும் காரணத்துக்காக குடும்பத் திலிருந்து பிரிக்கப்பட்டபிள்ளைகளை பொறுப்பேற்க விருப்பம் இருந்தும் பொருளாதார வறுமை காரணமாக ஏற்றுக் கொள் முடியாத நிலையில் இப்பிள்ளைகளுக்கு உதவுகின்ற பராமரிப்பு பெற்றோர் ஒருவரை சி 臀 நன்னடத்தை ஆணையாளரது அனுமதியுடன் நியமித்து அவர்களின்
agluå - LDITiestë 2010 25

Page 15
உதவியுடன் இத்தகைய குடும்ப சுழலில் வைத்து பராமரிக்க உதவுகின்றது. (Sponser
Parental Care Support)
5. பிள்ளைக்கு பெற்றோர் உறவினர் என யாரும் இல்லாத நிலையில் அப்பிள் ளையை ஏற்றுபராமரிக்க யாரும் முன்வராத நிலையில் அப்பிள்ளைக்கு உரிய மகவேற்பு கட்டளை ஒன்றினை நீதிமன்றத்தில் பெற்று மகவேற்பு வழங்கு 86örpsOTft. (Adopted Parental Care Support)
6. நீதிமன்றம் ஒன்றில் குற்றம் ஒன்றுக்காக குற்றம் சாட்டப்பட்டு பல்வேறு சிறைச்சாலைகளிலும், புணர்வாழ்வு நிலையங்களிலும், நன்னடத்தை பள்ளி களிலும் புணர்வாழ்வு நோக்கம் கருதி இணைக்கப்பட்ட பிள்ளைகளின் விடயத் தில் அவர்களின் குற்றத்தின் தன்மைகருதி நன்னடத்தை கட்டளை (Probation Order) ஒன்றினை பெற்று நன்னடத்தை அலுவலரின் மேற்பார்வையின் கீழ் (Under the Supervision of probation officer) 6hungb55LDITGOT g5Gibu sup656) வைத்து பராமரிப்பதற்கான ஏற்பாடுகளும் 1944ம் ஆண்டின் 42ம் இலக்க நன்னடத்தை குற்றவாளிகள் கட்டளை சட்டத்தின் கீழ் மேற்கொள்கின்றனர்.
7. இவ்வாறான பல்வேறு செயற்பாடுகளை மேற்கொள்வதன் மூலம் பிள்ளையின் நலனை மேற்படுத்துவதுடன் அவர்களுக்கான எதிர்கால சுபீட்சமான வாழ்வு சூழலை அமைத்து கொடுப்பதற்கும் அவர்களது உலகை ஒளி பெறவும் உதவு கின்றது. எனவே இத்தகைய பிள்ளைகளின் நீண்டகால ஏக்கங்களை செவிசாய் த்து அவர்களையும் அவர்களுக்குகந்த மகிழ்வான வாழ்வியல் சூழலினுள் உள்வாங்கி பராமரிக்க எமக்குள்ள சமூக பொறுப்புக்களை முன்வைத்து “பிள்ளைகளின் உயரியநலன்’ என்ற ஒரே இலக்குடன் ஒன்றிணைத்துபாடுபடு வதன் மூலம் சிறுவர் உலகை மகிழ்வூட்ட பாடுபடுவோமாக.
உசாத்துணைகள்
1. “வழிகாட்டலும் ஆலோசனையும்’-விமலா கிருஷ்ணபிள்ளை (2003) 2. "தமிழ் சமுதாயத்தில் உளநலம்’-தயாசோமசுந்தரம், சா.சிலயோகன் சாந்தியகம்
யாழ்ப்பாணம் (2004) 3. “சிறுவர் உளநலம்’-GTZ வெளியீடு (2005) 4. புள்ளிவிபர அறிக்கை-2006,2007, சிறுவர்நன்னடத்தை பராமரிப்பு சேவைகள்
திணைக்களம், கொழும்பு " 5. சிறுவர்நன்னடத்தை பராமரிப்புசேவைகள்திணைக்களகொள்கைகள், நிலையில்
கட்டளைகள், சுற்று நிருபங்கபள் மற்றும் பிரமாணங்கள்.
26 ஐப்பசி - மார்கழி 2010
 

கவிச்சோனை
மாற்றம் வேண்டும்
வேண்டும் வேண்டும் மாற்றம் வேண்டும் கையேந்தும் எம்நிலை மாற வேண்டும் இழப்புகள் இறப்புகள் இதயத்தில்வடுக்கள் புலம்பியழும் எம்நிலை மாறவேண்டும்
எம்நிலை எப்போது மாறும்?
நாங்கள் அனைத்தையும் இழந்தவர்கள் போர்க்காலத்தில் உறவுகளையும் சொத்துக்களையும் இழந்தோம். போருக்குப்பிந்திய இன்றைய மீள்குடியேற்ற காலத்தில் எமது எதிர்காலத்தை திட்டமிட்டு அமுலாக்கும் உரிமையையும் வலுவையும் இழந்தோம் கண்காட்சிப் பொருட்களாக்கப்பட்ட எம்நிலை எப்போது மாறும்? மனிதத்துடன் நாம் இயல்பாக வாழும் காலம் எப்போது வரும்?
காயப்பட்ட குணமாக்கிகள் நாம் அனைவரும் காயப்பட்டோர்தான் சிலருக்கு காயங்கள் உடலில் சிலருக்கு காயங்கள் மனதில். இன்னும் சிலருக்கு உடலிலும் மனதிலும் எண்ணற்ற காயங்கள். காயப்பட்ட எம்மிற்பலர் குணமாக்கிகளாக வாழ்கின்றனர்.
உடற்காயங்களுக்கும் உளக்காயங்களுக்கும் மருந்திட்டு வலுவூட்டுகின்றனர்.
eúLué - LDITñespl 2010
வாருங்கள்
திரும்பவும் திரும்பவும் காயப்படுத்தப்பட்ட/காயப்பட்ட நாம் அனைவரும்
வடுக்களுடன் குணமாக்கும் குணமாக்கிகளாக இன்று மட்டுமல்ல வரலாற்றில் என்றும் வாழ்வோம்.
وېشلإجلا
சந்தர்ப்பவாதி நானும் ஒரு சந்தர்ப்பவாதியாகிவிட்டேன். நான்நடைப்பிணமாகவாவது நடமாட உங்களை நித்தமும் போற்றுவேன் உங்களுக்கு மாலையிடுவேன் உங்களோடுகைகுலுக்குவேன் நேற்றைய இரவை பகலென்பேன் உங்கள் அனுமதியுடன், இன்றையநாளைப்பற்றி நீங்கள் சொல்வதற்கெல்லாம்தலையாட்டுவேன். அப்போதுதான் என்தலையும் வாழும். நான் சந்தர்ப்பவாதியாக்கப்பட்டுவிட்ட புத்தியுள்ள சந்தர்ப்பவாதி.
தலைமைத்துவ சமூகம் நான் மட்டும் சரி, நீதவறு. எனவே என்னை முழுமையாக பின்பற்று' எனும் தனிமுதல்போக்குடன் (EXCLUSIVISM) வழிநடத்தும் சர்வாதிகாரியாக வாழ என்னால் முடியாது.
நீசரி, ஆனால் உன்னை விடநான் முழுமையாகசரி, எனவே என்னை முழுமையாக பின்பற்று' எனும் உள்ளடக்கும்போக்குடன் (INCLUSIVISM)

Page 16
வழிநடத்தும் புன்னகைக்கும்
சர்வாதிகாரியாகநடக்க என்னால்
இயலாது.
நானும் தவறு நீயும் தவறு, வாசேர்ந்து
திருந்துவோம், ஆரோக்கியமானதை
தேடுவோம்
அல்லது
நானும் சரி நீயும் சரிவா சேர்ந்து வாழுவோம், ஆரோக்கியமானதை உறுதிசெய்ய இணைந்து உழைப்போம்’ எனும் Li6örGOLDIGLITsigsL66T (PLURALISM) வழிநடக்க மட்டும்தான் என்னால் முடியும். நான் சர்வாதிகாரியல்ல (Dictator) eggs U6060TuirtsTir (Facilitator) உங்களுக்காக பிள்ளை பெற என்னால் முடியாது. ஆனால் நீங்கள் பிள்ளை பெற உதவும் தாதியாக நிச்சயம் உடன்பயணிப்பேன். வேதனையில் வாடும் உங்கள் துன்பங்களை ஒருவின்ாடியில் அகற்ற என்னால் முடியாது. ஆனால் உங்கள் துன்பங்களை குறைக்க நீங்கள் முயற்சிக்கவும் அம்முயற்சி வெற்றியளிக்க ஊக்கியாக நிச்சயம் உடன்பயணிப்பேன், ! இந்தப்பயணத்தில் நான் உங்களுக்கு துணையாக இருப்பேன், நிச்சயம் நீங்களும் எமக்கு/எனக்கு துணையாக இருப்பீர்கள். வழிகாட்டியாகவோ வழிநடத்தியாகவோ இல்லாமல்
வழிபகிர்வு சமூகமாக வாழ என்னிடமிருப்பதை உங்களிடம் பகிர்வேன். உங்களிடம் இருப்பவற்றை என்னிடம் பகிருங்கள். நாங்கள் தொடர்ந்து சுயவிமர்சனத்துடன் வழிதேடிவழிதிருந்தி ஆரோக்கியமான நீதிநிறை சமூகம் நோக்கி 'தலைமைத்துவ சமூகமாக நித்தமும் பயணிப்போம்.
ஆக்கம்: அருட்பணிS.D.P.செல்வன், 222Aநாவலர் வீதி, பண்டாரிக்குளம், வவுனியா,
28 agüLué - LDITñ85ypl 2010
 
 
 

இனிய இளம் நண்பர்களுக்கு
பட்டாம் பூச்சி
தோழமையுள்ள தோழனே தோழியே
தோழமையுள்ள வாழ்த்துக்களோடும் வணக்கங்களோடும் ‘நான்’உளவியல் சஞ்சிகையில் பட்டாம்பூச்சி பகுதியில் மனிதவாழ்வின் இனிமையான, சுவையான, அற்புதமான, அழகான, அதிசயமான, அதீதமான, அவசரமான, பருவத்தில் பயணிக்கும் உங்களோடு தோள்கொடுக்க, உங்கள் இளமையில் மறைந்திருக்கும் உண்மை மகிழ்ச்சியை உங்களோடு சேர்ந்து கண்டுபிடிக்கும் ஓர் பயணத்தில் கலந்து கொள்வதில் 'நண்பேன்டா எனக்கு மகிழ்ச்சி.
தோழமையுள்ள உறவுகளே! 100 இளைஞர்களை தாருங்கள் இந்த பாரத தேசத்தையே மாற்றிக்காட்டுகின்றேன் என்றார் விவேகானந்தர். இளைஞர்களே நீங்கள் அனைவரும்கனவுகாணுங்கள். புதிதாக இந்தியாவைமாற்றுங்கள் என்றார், இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இதைவிட இளவல்களே உங்களுக்கு தெரியும் உங்கள் சக்தி, அது அளவிட முடியாதது என்பதும் உங்களுக்கு புரியும்.
மனிதன் எப்போது தோன்றினானோ, அப்போதே அவனோடு தோன்றிவிட்டது “சவால்கள்’. இச்சால்களை சமாளித்துச் சரிசெய்வது சிலருக்கு “கிக்கோ கிக்கு” சிலருக்கோ “சிக்கோ சிக்கு’ ஆனால் எது எப்படியாயினும் இதன் உண்மைத் தன்மை எல்லோரும் அதை எதிர்கொள்ள வேண்டும் என்பதே இன்று "சுயநலம்’ என்பது பாதகரமான சவாலாக எழுந்து நிற்பது ஓர் கவலைக்குரிய விடயம். இது இளவல்கள் உங்களையும் பாதித்திருப்பது ஓர் பாரதூரமானதே.
இந்த உலகம் சுருங்கி ஓர் கிராமமாக ஆவதைவிட வேகமாக எமது மனிதமாண் பும், மனிதவிழுமியங்களும் சுருக்கமடைந்து, இறுக்கமடைந்து வருகின்றது. துரித வளர்ச்சியில் துள்ளி நடைபோடும் எமது சமுதாயத்தில் பணமும், பொருளும், பதவியும், புகழும் தவிர மனிதனுக்கே மதிப்பில்லாதவாறு மனித மனங்களில் அன்புக்கு பதில் சுயநலம் மலிந்துள்ளது.
இந்நிலையில் இருக்கும் எமக்கு அண்மையில் வெளியான ஓர் திரைப்படத்தின் பாடல்வரிகள் எம்மை சிந்திக்க அழைக்கின்றது.
“வா. வாகட்டலாம் அன்பால் படிகட்டு’ இதன் மட்டில் இளைஞர்களாகிய எமதுநிலை என்ன? நாம் வாழும் சமுதாயத்தை அன்பின் சிகரத்திற்கு இட்டுச்செல்ல படிகள் கட்டுகின்றோமா? அன்றேல் அதனை தடுத்து நிறுத்த கற்களைப் போடுகின்றோமா? அன்று விவேகானந்தர் கூறியது போன்று இது இளைஞர் மனது வைத்தால் நிச்சயம் முயல்வதோடு, அர்த்தமுள்ள அன்பான சமுதாயத்தையும் கட்டியெழுப்பலாம். எனவே முதலில் எம்வாழ்வில் அன்புக்கு அடைக்கலம் கொடுக்கும் அன்பரசர்களாகி அன்பால் படிகட்ட அன்புடன் வாழ்த்தி நிற்கும்.
æüLé – udmfæUS 2O1O 29
طاق ناa &ol pl اول
upuu 6.

Page 17
தோழமையுள்ள “தோழன்”
தோழர்களே!
இப்பகுதியைப் பற்றிய உங்கள் எண்ணங்கள், கருத்துக்கள் வரவேற்கத்தக்கவை. அனுப்ப வேண்டிய முகவரி. ‘நான்' வசந்தகம் சுவாமியார் வீதி, கொழும்புத்துறை வீதி யாழ்ப்பாணம்.
‘நான்’ உளவியல் சஞ்சிகைக்கு பல ஆக்கங்களைப் படைத்து அனுப்பிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களுக்கு எங்களுடைய நன்றியையும் அன்பையும் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் உங்கள் முயற்சி மென்மேலும் வளர வாழ்த்துகின்றோம். இனிவரும் காலங்களிலும் உங்களுடைய ஆக்கங்களை உரிய காலத்தில் எங்களுக்கு அனுப்பி வைக்கும்பழ ‘நான்’ உங்களிடம் வேண்டிநிற்கின்றேன்
:30 ஐப்பசி - மார்கழி 2010
 

குருதினடில் தஞ்குமுஜீபுன?
அருட்பணி. டேவிற்வி.பற்றிக் அ.மதி இயக்குனர்,திருப்புமுனை, தோட்டவெளி மன்னார்.
இன்றைய காலகட்டத்தில் மனிதன் பல்வேறுபட்ட பாதிப்புக்களுக்கு உள்ளாகி வருகின்றான். என்பது உண்மை. மனவடு, மனவிரக்தி உயிரிழப்பு உடமையிழப்பு கோபம் கவலை பயம் தோல்வி என்று மனப்பாதிப்பு பல வடிவங்களை எடுக்கும் பொழுது எல்லாவற்றிற்கும் தீர்வாக மனிதன் மதுவை தேர்ந்து செயற்படுவது மனிதத்தை ஈனப்படுத்தும் ஒன்றாக மாறி விடுகின்றது. பறவையைக் கண்டு விமானம் படைத்தவன் பாயும் மீனினைக்கண்டு படகினைப் படைத்தவன் இன்று மதுவுக்கு அடிமையாகி வீழ்ந்து கிடப்பது ஏன்? சீனப் பழமொழி கூறுகின்றது. “மீனைக் கொடுப்பதை விட மீனைப் பிடிக்கக் கற்றுக் கொடுப்பதே மேல்” திருப்பு முனை கூறுகின்றது. “மதுவை அறிமுகப்படுத்துவதைவிட ஆளைக் காக்க மதுவை விடுவதே மேல்”
குடியை விடவேண்டும் என்னும் ஆசையை தூண்டுவிப்பதே சிகிச்சையின் முதற்படியாகும். ஒருவர் தாமாகவே விரும்பி குடிை விட முன்வருகின்றார் எனின் அவருக்கு சிகிச்சை வழங்கல் இலகுவாகின்றது. திருப்பு முனைப்பணி 2006ம் ஆண்டு ஐப்பசிமாதம் 10ம்திகதிமன்னார்மறைமாவட்டஆயர் மேதகு இராயப்பு யோப்ேபு ஆண்டகை அவர்களால், அருட்பணி வின்சன் பற்றிக்
அ.மதி அவர்களை இயக்குனராகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. 2009ம் ஆண்டு
மாசிமாதம் 2ம் திகதி மன்னார் ஆயருக்கும், அமலமரித்தியாகிகளின் யாழ் மாகாண முதல்வர் அருட்பணி.போல் நட்சத்திரம் அ.ம.தி அவர்களுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி இப்பணி அமல மரித்தியாகிகளின் விசேட பணியாக புதுப் பொலிவுடன் விரிவாக்கப்பட்டுள்ளது. திருப்புமுனை இரு நோக்கங்களைக் கொண்டது.
1. மதுநோயாளரைக் குணப்படுத்துவது (Healing the addicts) 2. மது போதைப்பாவனையை தடுப்பது (prerention of addiction)
மது நோயாளரைக் குணப்படுத்துவது
மதுவில்லாமல் மனிதன் மாண்புடன் மகிழ்வுடன் வாழ முடியும் என்பதை உறுதிப்படுத்துவது பாதிப்படைந்தவர்களை இனம் காணுவது இல்லத் தரிசிப்பின்
ஐப்பசி - மார்கழி 2010 31

Page 18
மூலம் குடும்ப ஆற்றுப்படுத்தலை மேற்கொள்வது இனம் காணப்பட்டவர்களை திருப்பு முனைக்கு வாழத் தூண்டுவிப்பது. சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களை மீள் சந்தித்து உற்சாகப்படுத்துவது, போன்ற பணிகளை திருப்புமுனை உளச்சமூகத் தொண்டர்கள் உற்சாகமான முறையில் முன்னெடுத்துச் செல்கின்றார்கள். திருப்பு முனையின் சிகிச்சை வழங்கல் பின்வரும் மூன்று கூறுகளை கொண்டது.
1. உடல் சார்ந்த சிகிச்சை
2. உளம் சார்ந்த சிகிச்சை
3. ஆன்மா சார்ந்த சிகிச்சை
1. உடல்சார்ந்த சிகிச்சை
திருப்புமுனைக்கு வந்தமது நோயாளர்களை முதலில் உடல்ரீதியான மருத்துவச் சிகிச்சைக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள். மருத்துவர்கள் திருப்புமுனைக்கு வரவழைக்கப்பட்டு சிகிச்சை இடம்பெறுகின்றது. அல்லது கடும் நோயாளிகள் மன்னார் வைத்தியசாலை உளநலப்பிரிவுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றார்கள். மருத்துவசிகிச்சை நிறைவுற்றதும் மீளவும் அவர்கள் திருப்புமுனையினால் உள்வாங்கப்படுகின்றார்கள்.
2. உளம் சார்ந்த சிகிச்சை
தனியாள் ஆற்றுப்படுத்தல், குடும்ப ஆற்றுப்படுத்தல், குழு ஆற்றுப்படுத்தல், குழு செயற்பாடு, குழு விளையாட்டு, அனுபவப் பகிர்தல், AA அமைப்பின் 12 படிமுறை களைக் கற்றல், கலை நிகழ்வு, இசை விருந்து, சுற்றுலா போன்ற பல்வேறுபட்ட நிகழ்வுகள் திட்டமிடப்பட்ட முறையில் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன. தாழ்மை, நேர்மை ஆகிய பண்புகளைக் கடைப்பிடித்து, மனத் தெளிவுடன் தாமாகவே குடியை விட்டு மகிழ்வுடன் வாழமுடியும் என்ற நம்பிக்கையை தோற்றுவிப்பதே எமது சிறப்புப் பணியாகும். வாழ்வினில் பிடிப்பின்றி வாழ்ந்தவர்கள் இப்பொழுது தாமும் வாழ்ந்து பிறரையும் வாழவைக்க வேண்டும் என்ற ஆசையுடன், தாமும் குடியைவிட்டு, குடித்துக்கொண்டு அவதியுறும் பலரை விடுவிக்க வேண்டும் என்ற தீவிரமான சிந்தையுடன் புதுவாழ்வு பெற்ற இவர்கள் இயங்கிவருகின்றார்கள். தம் வாழ்வுக்கு புது அர்த்தத்தைக் கண்டு பிடித்தவர்களாய் சோதனைக்கும் வேதனைக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டு சாதனை படைக்கின்றார்கள்.
3. ஆன்மீகம் சார்ந்த சிகிச்சை
மது நோயாளர்கள் பொதுவாக இறைவனை மறந்தவர்களாய் ஆலயங்களை நாடாதவர்களாய் மதச் சடங்குகளை மறுத்தவர்களால் ஆத்மீக வாஞ்சையின்றி அவதிப்படுவார்கள். எனவே இத்திட்டத்தின் முக்கிய படிமுறையாக இது அமைகின்றது. அதாவது மதுவைவிட ஆழமான சக்தி இவ்வையத்தில் உண்டு. அவர்கள் நம்புகின்ற
32 æüLé – uDmfæg 2O1O
 

இந்தசக்திதான் அவர்களுக்கு விடுதலை அளிக்கும் என்று இந்த இறைசக்தியிடம் சரணடைய அவர்கள் முன்வருவார்கள். இதற்கு ஏதுவாக திருப்பு முனையானது தியானம் பிராத்தனை போன்ற ஆக்கபூர்வமான படிமுறைகளை முன்னெடுத்துச் செல்கின்றது. இவ்வாண்டு இரு முறைகள் இந்தியாவிலிருந்து தியான ஆசான்கள் வரவழைக்கப்பட்டு "சுதர்சனக்கிரியை’ வாழும் கலை தியானம் கற்பிக்கப்பட்டது. இத்தியானங்களின் மூலம் 80ற்கும் மேற்பட்டோர் 80ற்கும் மேற்பட்டோர் ஆக்கபூர்வமான முறையில் பங்கெடுத்து மகிழ்வுற்றார்கள்.
"இறைவா மாற்றமுடியாததை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவமும் மாற்றக் கூடியதை மாற்றும் துணிவும் இவற்றினை பாகுபடுத்தி அறிய ஞானமும் தந்தருள்வாய் ஆமென்.”
என்று காலையிலும் மாலையிலும் குழுமமாக இச்செபம் சொல்லப்படுகின்றது.
2. மது போதை பாவனையை தடுத்தல்
பாடசாலை மட்டத்திலும் கிராம மட்டத்திலும் மது போதைத் தடுத்தல்தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டங்கள், கருத்தமர்வுகள், கண்காட்சிகள், நெடுங்கூற்றுக்கள் இடம்பெற்று வருகின்றன. சர்வதேச புகைத்தல் ஒழிப்புதினமாகிய வைகாசி 31ம்திகதி மன்னார் நகரத்தில் பேரணி இடம்பெற்றது. எண்ணுறிற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது ஆக்கபூர்வமான ஆதரவைநல்கினார்கள். மன்னார் மறைமாவட்ட ஆயர், மன்னார் மாவட்டநீதிபதி, மன்னார் அரசாங்க அதிபர் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி மதுபான தடுத்தலை முன்னெடுத்துச் செல்வதற்கான அவசியத்தை வலியுறுத்தினார்கள். ܗ
மேலும் சர்வதேச மதுஒழிப்பு நிகழ்வை 3நாள் திட்டமாக்கி ஆனி 24, 25,26ம் திகதிகளில் பேசாலையில் அனுஸ்டிக்கப்பட்டது. கண்காட்சி, பேரணி, பட்டிமன்றம், தெருக்கூத்து, படக்காட்சி போன்றவை சிறப்பான முறையில் இடம்பெற்றது.
திருப்பு முனையின் இன்னுமொரு சிறப்பான செயற்பாடு உள சமூக ஆற்றுப்படுத்தல் பயிற்சி நெறியாகும். மூன்று மாதத்திற்கு ஒருமுறை இளைஞர்கள், பெண்கள், உள சமூகத் தொண்டர்களுக்கான பயிற்சி நெறி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவ்வாண்டு ஐப்பசி மாதம் 3-25ம் திகதி வரை மட்டக்களப்பிலிருந்து 18 உளசமூகத்தொண்டர்கள்திருப்புமுனையில் வதிவிடப்பயிற்சிடுமதுபோதைதடுத்தலும் ஆற்றுப்படுத்தலும் பெற்றுப் பயனடைந்தனர்.
இவ்வாறு திருப்புமுனையின் பணிகள் நீண்டுசெல்கின்றன எனவே “மாறிடாமல் மாற்றமுடியுமா?” என்பது தனிப்பட்டவர்களை சார்ந்தது. மாற்றமடைய விரும்புகின்றவர்களை திருப்பு முனை மாற்றியமைக்கும்.
gi i Lé - uDriffer 2O1O 33

Page 19
66 ep up 99 முகிழ்ச்சியாக வாழ
(856)IöröITuIIh (8u IöiLIT6o6öT பலவிதமான மனிதர்களை நம் அன்றாட வாழ்வில் சந்திக்கின்றோம். சிலர் எப்பொழுதும் சந்தோஷமாக சிரித்த முகத்துடன், எல்லோருடனும் மகிழ்ச்சியாகவும், இலகுவாகவும் பழகிக் கொள்வதுடன் அனேக நண்பர்களைக் கொண்டிருப்பார்கள். அதேசமயம் இன்னும் சிலர் எப்பொழுதும் சோகமான முகத்துடன், ஏதோ பிறந்து விட்டோம் வாழ்ந்துமுடித்தே ஆகவேண்டும் என்றாற்போல் பரபரப்புடனும்,தாங்களும், தங்கள் வேலையுமாக முகத்தை சோகமாக வைத்துக்கொண்டேயிருப்பார்கள்.
சிரித்த முகத்துடன் நன்றாகப் பேசிப் பழகுவோருக்கு எந்தவித பிரச்சினையோ, கவலையோ இல்லை என்ற முடிவுக்கு வரவும்முடியாது அவ்வாறே எப்போதும் சோகமான முகத்துடன் இருப்பவர்களுக்கு பிரச்சினையும், துன்பமும் அதிகம் என்று எண்ணிவிடவும் முடியாது. இந்த உலகில் கவலைப்படாத மனிதரும் இல்லை, துன்பத்தை அனுபவிக்காத ஜீவனும் இல்லை. ஏதோவொரு விதத்தில் துன்பமும், கவலையும் மனிதனைத் தொட்டுச்செல்கின்றது. மகிழ்ச்சி என்பது ஒரு மனநிலை. கவலை, துன்பம் வரும்போது அதையே எண்ணித் துயரப்பட்டுக் கொண்டிருந்தால் மேலும் துன்பம் அதிகரிக்குமே தவிர குறையாது. சிரித்துப் பழகி சந்தோஷமாக இருந்தால் பிரச்சினையும் துன்பமும் நீங்கிவிடுமா? இல்லை. ஆனால் உண்மை என்னவென்றால், சிரிக்கும்போது மனம் அமைதியடைகின்றது. இந்த மன அமைதி துன்பங்களையும் பிரச்சினைகளையும் மனத்தெளிவுடன் எதிர்கொண்டு சமாளிப்பதற்கு வழியைக் காட்டுகின்றது.
எப்பொழுதும் சிரித்த முகத்துடன் இருப்பது எமது தோற்றத்திற்கு அழகைக் கொடுக்கின்றது. அழகை எல்லோருமே பொதுவாக விரும்புகின்றனர். அழகாக இருக்கவேண்டும் என்பதற்காக இன்று பலர் தமது முகத்திலும், உடலின் பல பாகங்களிலும் சத்திரசிகிச்சைகளைச் செய்து தமது அழகைமெருகூட்டி மற்றவர்கள் மனதில் இடம்பிடித்துக் கொள்ள விரும்புகின்றார்கள்.
உண்மையிலேயே நாம் மகிழ்ச்சியாக இருக்கும்போதும் புன்னகைக்கும்போதும் உள்ள அழகு. முற்றிலும் வித்தியாசமானது, இயற்கையானது. நாம் மகிழ்ச்சியாக, சிரித்தமுகத்துடன் இருக்கும்போதுதான் மற்றவர்களும் எம்மை விரும்புவார்கள். மனித உறவு மனிதனுக்குத்தேவை இந்த உறவுக்கு மகிழ்ச்சியான முகம்தேவை. சோகத்துடனும், வெறுப்புடனும் இருப்போருடன் உறவுகொள்ள மற்றவர்கள் விரும்புவதில்லை. -
இழப்புக்களும், தோல்விகளும் நிறைந்த மனிதவாழ்வில் எப்படி மகிழ்ச்சியாக இருக்கமுடியும் என்ற பல கேள்விகள் எம்மில் பலருக்கு தோன்றலாம். மகிழ்ச்சி என்பது எமக்குள் ஊற்றெடுப்பது. பிரச்சினையும், கவலையும் வெளியில் இருந்து மனித
محصے
ஐப்பசி - மார்கழி 2010
 

னைத்தாக்குகின்றது.
ஒரு மனிதனின் சந்தோஷத்திற்கு தடையாக அமைவது அவனது எதிர்காலம் பற்றிய பய உணர்வும், இறந்தகாலம் பற்றிய குற்ற உணர்வும்தான். சாதாரண மாக மனிதன் தன் வாழ்வில் இறந்தகாலத் திற்கும் எதிர்காலத்திற்கும் இடையில் சிக்கிக் * கொண்டவனாக வாழ்வதனால் நிகழ்காலத் தின் மகிழ்ச்சியான உணர்வுகளுக்கு அவனால் முக்கியத்துவம் கொடுக்க முடிவதில்லை. அவன் எப்பொழுதும் இறந்த காலத்தை பற்றியும், எதிர்காலத்தைப் பற்றியும் எண்ணிக் கொண்டிருப்பதில் தனது நிகழ்காலத்தைப் போக்கிவிடுகின்றான். எனவே சந்தோஷமாக நிகழ்காலத்தைக் கழிக்கவேண்டிய மனிதன் குற்ற உணர்வுகளுக்கும், பய உணர்வுகளுக்கும் ஆளாகி நிகழ்கால அமைதியை சந்தோஷத்தை இழந்துவிடுகின்றான்.
ஒருவன் தான் மகிழ்ச்சியாக இருப்பதாக எண்ணவேண்டும், எமக்குள் இருக்கும் மகிழ்ச்சியை நாம் வெளிக்கொணர வேண்டும். மகிழ்ச்சியாக இருக்கப் பழகிக் கொண்டுவிட்டால் வாழ்க்கை நிகழ்ச்சிகள் சாதாரணமாகி விடுகின்றன. மகிழ்ச்சியாக இருப்பவர்கள் முகத்தில் ஒரு கவர்ச்சி இருக்கும். மகிழ்ச்சியாக இருப்பவர்களை எல்லோரும் விரும்புவார்கள்.மகிழ்ச்சியாக இருக்கப்பழகினால் மற்றவர்களுடன்நல்ல உறவை ஏற்படுத்தமுடியும். வரும் பிரச்சினைகளுக்கு உற்சாகத்துடன் முகம் கொடுக்க சக்தி பிறக்கும். மகிழ்ச்சியாய் இருப்பவர்களை சிறு குழந்தைகளுக்கு ஒப்பிட்டுக் கூறுவார்கள். காரணம் இவர்களும் குழந்தைகளைப்போன்று சந்தோஷமாகவும், அழகாகவும், அமைதியாகவும் இருப்பார்கள்.
எதன்மீதாவது மிகுதியான பற்றுதல் கொள்வதுதான் அதிக கவலைக்குக் காரணம் உடலின் உணர்வுகள் சக்திவாய்ந்தவை. இவை மனதைப் பற்றியிழுக்கின்றன. இந்த இழுவைகள்தான் ஆசைகளைத் தோற்றுவிக்கின்றன. ஆசைகள் மனதைத் தம் போக்கில் செயல்படுமாறு இழுத்துக்கொள்ள முயல்கின்றன. ஆசையைப் பற்றிக்கொண்டு அதையே தொடர்ந்து மனம் அடிமைபோலச் செல்லும்போது பலதொல்லைகள் ஏற்படுகின்றன. ஒருவர்மீது அல்லது ஒரு பொருள்மீது அளவுக்கதிகமான பற்றுதல் வைக்கின்றோம். அவற்றில் முறிவு ஏற்படும்போது அதைத்தாங்காது மனம் சுக்குநூறாகின்றது. மூடத்தனமான பற்றுதல்களும், அளவுகடந்த மோகமும், இரத்தப்பாசப் பிணைப்புகளும் அதிகமான கவலைக்குக் காரணமாகின்றது. எனவே எம்வாழ்வில் ஆக்கபூர்வமான சிந்தனைகளை வளர்த்துக்கொள்வோம். காலம் மாறும், எமது உடல்நிலை, வயது, அழகு எல்லாமே மாறும். இவ்வாறான மாறுதல்களையும், இழப்புக்களையும், சமாளிப்பதாயின் எதிலும் அதிக பற்றுவைக்காது அளவோடு வாழ்ந்தால் மனதில் அதிகமான கவலையைத்
தாங்க முடியும்.
88ůLiéf — LDTňrës) 2O1O 35

Page 20
ஆலுநஞை உலர்த்uெே இ2ைத்து Uே0ஆ&தன்sைus
ஜே.சேகர்
இன்றைய மனித குலமானது ஓர் அமைதியற்ற, ஸ்த்திர தன்மையற்ற உலகில் வாழ்கின்றது. பெற்றோர் கல்விமான்கள் மற்றும் நலன் விரும்பிகள், எவ்வாறு இன்றைய இளம் பராயத்தினரை அவர்கள் வாழும் சூழவமைவுக்கேற்ப வாழ்வில் ஏற்படும் கலாச்சார பண்பாட்டு மாற்றங்களுக்கு அமைவாக வாழச் செய்யலாம் என அங்கலாய்க்கின்றனர் கேள்வி எழுப்புகின்றனர். அத்துடன்தங்களால் இயலவில்லை என முறையிடுகின்றனர். இவர்கள் தங்களின் கருத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் இளைஞர்களிடையே நிலவும் வாழ்க்கைக்கு ஒவ்வாத காரணிகளான ஓய்வற்ற தன்மை, போதைக்கும் மதுவுக்கும் அடிமையாக வாழும்நிலை, மற்றவர்களை மதிக்க மறுக்கும் அவர்களின் முரண்பாடான வாழ்க்கைமுறை மற்றும் சமய, சமூக, கலாச்சார விழுமியங்களின் ஒளியில் அவர்கள் தங்கள் வாழ்வினை வாழ மறுக்கும் தன்மை என்பவற்றை முன்வைக்கின்றனர். இவ்வாறான முரண்பட்ட வாழ்க்கை முறையானது இன்றைய நவீன யுகத்தில், விஞ்ஞான மற்றும் தொழில் நுட்ப்ப வளர்ச்சிக்குள் சிக்குண்டு வாழும் இன்றைய இளம் பராயத்தினரை ஓர் அழிவின் பாதையில், தங்களுடைய வாழ்வினை தாங்களே சீரழிக்கும் ஓர் விரும்பத்தகாத, வெறுக்கத்தக்க நிலையினை நோக்கி பயணிக்க வைக்கின்றது.
ஒவ்வொரு குழந்தையும் ஒரு தனித்துவமான சூழலிலே பிறக்கின்றது. இந்நிலையில் ஒரு குழந்தையானது விரும்பியோ விரும்பாமலோ தன்னுடைய வாழ்வினை தான் வாழும் சூழலில் நிலவும் வேறுபட்ட வாழ்க்கை முறைக்கும் சமுதாயத்தின் எதிர்ப்பார்ப்புக்களுக்கும் ஏற்றவகையில் வாழ வேண்டிய ஓர் கட்டாய நிலைக்கு தள்ளப்படுகின்றது. இந்நிலையில் இங்கு இசைந்து போதல் என்பது, சமூகத்தில் நிலவும் மாற்றங்களுக்கு அமைவாக வாழ்ந்து எம்முடைய ஆளுமை யினை வளர்த்துக் கொள்வதனை குறிப்பிடலாம். உலகில் எவரும் எந்தப் பண்புடனும் பிறப்பதில்லை, ஆனால் வாழ்வின் ஒவ்வொரு வளர்ச்சிப்படிமுறைகளிலும், பருவத்தி லும், உடல், உளமாற்றங்களிலும்தன்னுடைய ஆளுமையினை வளர்த்துக்கொள்ள எதிர்பார்க்கப்படுகின்றார்கள். எது எவ்வாறு இருப்பினும் ஒரு மனிதன் தன்னுடைய வாழ்வில் ஒரு முழுமையை, நிறைவினை அடைய முடியாது என்பது அவன் உணர்ந்துகொள்ளவேண்டிய ஓர்உண்மையாக அவன் வாழ்வில் காணப்படுகின்றது. இதைத்தான் புனித அகுஸ்தினார் “எங்களுடைய இதயங்கள் எம்மைய் படைத்த
36 ஐப்பசி - மார்கழி 2010
 

வனில் சரணாகதி அடையும் வரை அங்கலாய்க் கின்றது”எனகுறிப்பிடுகின்றார்.
மனிதனானவன் ஒரு சமூகப்பிராணி. எனவே அவனால் தனித்து வாழமுடியாது. ஒவ் வொரு மனிதனும் வேறுபட்ட ஆளுமையினை யும், சிந்திக்கும் தன்மையினையும் தன்னகத்தே கொண்டிருக்கிறான். தான் வாழும் சமூகத்தின் எதிர்பார்ப்புக்களுக்கு இசைவாக வாழக்கூடிய தகைமையினை ஒவ்வொரு தனி மனிதனும் தன்னகத்தே கொண்டிருக்கிறான். ஒரு குழந்தை யானது தன்னுடைய சிறுபராயத்தில் தன் தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு மற்றவர்களிலே தங்கி வாழ்கின்றது. ஆனால்,தொடர்ந்தும் அக்குழந்தை இவ்வாறு மற்றவர்களினால் உதவி செய்யப்பட்டு, அவர்களிலே தங்கி வாழுமானால் அது தன்னை சமூகத்தின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் மாற்றிக் கொள்ள தவறுகிறது என்ற உண்மை இங்கு நினைவில் கொள்ளப்பட வேண்டும். இதைத்தான் ஆங்கிலத் $6 (Spoon feeding is a bad formation) 6T6öréprlies6it. (36.6ling 616 tiréisi iLIGib
குழந்தைகள் தங்களுடைய இளம் பராயத்திலும் 'எனக்கு வேண்டியது எனக்கு வேண்டும், எனக்கு முழுமையாக வேண்டும், எனக்கு இப்போதே வேண்டும்’ என முறையிடுகின்றனர். தன் வாழ்வில் தனக்கு தேவையானவை நிறைவாக கிடைக்காத பட்சத்தில் அது விரக்திநிலையினை அடைந்து மனஅழுத்தத்தில் வாழ்கின்றது. இவ்வா றான ஓர் சூழமைவில் வளரும் பிள்ளைகள்தான் தங்களுடைய இளம்பருவத்தில் நெருக்கடிகளை, மனச்சோர்வுகளை, தோல்விகளை மற்றும் ஏமாற்றங்களை சந்திக்கும்போது அவற்றுக்கு முகங்கொடுக்க, அவற்றை எதிர்கொள்ள முடியாதவர் களாக உருவாகிறார்கள். இவர்கள், பூமியில் பிறக்கும் எவரும் தங்களுக்கு வேண்டியதை நிறைவாக, முழுமையாக பெறுவதில்லை என்ற உண்மையினை உணர்ந்து கொள்ள வேண்டும். மேலும் ஆளுமை வளர்ச்சியானது ஒரு மனிதனின் வாழ்வில் அவனது இறுதிக் கட்டம் வரை அவனுள் நடக்கும் ஓர் தொடர் மாற்றம் என்பதனை இவர்கள் உணர வேண்டும்.
ஆளுமை வளர்ச்சிக்கும், சமூக மாற்றத்துக்கும், யதார்த்த நிலைக்கும் இசைவாக வாழ்தல் ஒரு மனிதனின் முதிர்ச்சியினை வெளிக்கொணர்கின்றது. இவை இரண்டும் அவனுடைய பிறப்பிலிருந்து இறப்புவரை அவனின் வாழ்வுடன் நகர்ந்துசெல்வதுடன் அவன் வாழ்வில்தாக்கத்தையும் உண்டுபண்ணுகின்றது. உடல் மற்றும், உளரீதியான மாற்றங்களும், எதிர்பார்ப்புக்களும் குறிப்பிடத்தக்களவில் ஆளுமை வளர்ச்சியினை யும், முதிர்ச்சியினையும் ஒரு மனிதனில் படிப்படியாக உருவாக்க வேண்டும். மனித வாழ்வில் பல்வேறு படி முறைகளில் ஏற்படும் வளர்ச்சியானது பல பிரச்சினை
ஐப்பசி - மார்கழி 2010 37. φλόν

Page 21
களுக்கும், உடல், உளரீதியான மாற்றங்களுக்கு மத்தியிலே நிகழ்கின்றது. மனிதனின் ஆளுமை வாழ்வின் பல்வேறுபட்ட பரிணாமங்களில் அவனது வளர்ச்சி என்பன அவன்தன் வாழ்வில் சந்திக்கும் நபர்கள் முகங்கொடுக்கும் ஆக்கபூர்வமான மற்றும் எதிர்மறையான மாற்றங்கள் மூலம் புடமிடப்படுகின்றது.
இவ்வாறான மாற்றங்களுடன் ஒரு மனிதன் தன்னை இசைவாக்கும் பட்சத்தில் அவன்தன்னைதன்னுடைய பலவீனங்களுடன் ஏற்றுக்கொள்வதுடன் சந்தோஷமாக இருக்கவும் கற்றுக் கொள்கின்றான். மொத்தத்தில் ஆளுமை வளர்ச்சியும், சமூக சூழமைப்வுக்கு அமைவாக இசைவாக வாழ்க்கைமுறையினை மாற்றிக்கொள்வதும், நோவுகளையும், துன்பங்களையும், ஏமாற்றங்களையும், அங்கலாய்ப்புக்களையும், அவமானங்களையும், மற்றும் அசாதாரண சூழ்நிலையினை உள்ளடக்கியதாக எம்முன் காணப்படும் எம் வாழ்வினை நாம் நம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடனும் மற்றும் எதிர்ப்புக்களுடன் வாழ வேண்டியது எம்முடைய கடமையாகும். இவ்வாறான வாழ்வினை வாழவேண்டுமாயின், வாழ்வின் எம் இலக்கினை அடைய வேண்டுமாயின் நாம் பல்வேறு தியாகங்களையும், விட்டுக் கொடுப்புக்களையும் செய்ய அழைக்கப்பட்டிருக்கின்றோம் என்பதனை உணர்வோம். சமூகத்தின் மாற்றங்களுக்கும், எதிர்ப்புக்களுக்கும் இசைந்துபோகும் முறையில் எம் வாழ்வினை
வாழ்வோம், உள அமைதியினை சுவைப்போம் வாழ்வில் நிறைவு காண்போம்.
உளவியலாளர் வரிசையில். எனும் பகுதியி னுடாக"நான்’ உளவியலாளர்களின் சரித்திரங் களை நேயர்களுக்கு தந்து உதவுவேன். உங்க ளுக்கு விருப்பமான உளவியலாளர்கள் பற்றி நீங்கள் எழுதி அனுப்ப “நான்’ உங்களுக்கு
களம் அமைத்துள்ளது.
znáঠ । 38 æil lå – uDmffesus 2010

உடிைக் குலக்குக்
யே. நிறோஜன் லெம்பட் அ.ம.தி. வாயுள்ள பிள்ளை பிழைக்கும், வாய்நல்லதானால் வாழ்க்கை வளமாகும். வந்த பிரச்சனைகளும் கடந்த அனுபவங்களும் எவ்வழி வந்தது வாய்வழி வந்ததோ என சிந்திக்கையில் வாயும் நாவும் எவ்வளவு கட்டிக்காக்கப்பட வேண்டுமென்பதை ஒருமுறை சிந்திக்க தூண்டிநிற்கிறது. வாய் என்ற கோட்டைக்குள் நாக்கு அகப்பட்டு அடைக்கப்பட்டுள்ளது. ஏய் தம்பி தங்கையரே நாக்கு மிகப் பொல்லாதது அதனால் தான் அது கோட்டைக்குள் அடைபட்டுக்கிடக்கிறது. உதடுகளாகியதிண்ணிய காப்பகத் துக்குள்ளே பூட்டப்பட்டுக்கிடக்கிறது அங்கே இன்னும் ஓர் வன்னியை புது மாத் தாளனை ஏன் இன்னும் ஓர் மூன்றாம் உலகப்போரை முன்னெடுக்கக் கூடிய ஆயுத இயந்திரங்கள் உள்ளன. இதை நீ உணர்வாயா நான் உணர்கின்றேன் நீயும் உணர்ந்திட அவைகளை சொல்லிவிடவா -
வெட்டும் இயந்திரம் உண்டு குத்தும் இயந்திரம் உண்டு அரியும் இயந்திரம் உண்டு அரைக்கும் இயந்திரம் உண்டு கடிக்கும் இயந்திரம் உண்டு புடைக்கும் இயந்திரம் உண்டு நசுக்கும் இயந்திரம் உண்டு நொறுக்கும் இயந்திரம் உண்டு உடைக்கும் இயந்திரம் உண்டு பிடிக்கும் இயந்திரம் உண்டு
நவீன பெயர்களில் சொல்லவா மல்ரிபெறல் உண்டு கொத்துக்குண்டு உண்டு AK47s 6dorG
கிபிர் உண்டு
கிறனைற் உண்டு கிளேமோர் உண்டு செல் உண்டு செயின் பிளக் உண்டு இன்னும்
2il 16 – LDriffesyg 2O1O 39

Page 22
பல பல பொறிகளும் இயந்திரங்களும் நிறைந்த கோட்டைக்குள்ளே இருக்கும் இவ்வொட்டுமொத்த ஆயுதம் தான் நம்ம நாக்கு அதைத்தான் வாய் என்ற கோட்டைக்குள் உள்ளழுத்தி வைத்திருக்கின்றான் இறைவன்.
இவ்வாறு இறைவனாலேயே உயர்பாதுகாப்பு வழங்கப்பட்ட உறுப்பை (ஆயுதத்திை மனிதராகிய நாம் கட்டிக்காக்க வேண்டியது எமது தலையாகிய கடமை. ஆம் வள்ளுவர் எச்சரிப்பார்“யாகாவாராயினும்நாகாக்க, இலத்தீன் பழமொழிஒன்று கூறுகின்றது உன்நாவிற்கு விலங்கிடுஇல்லையேல்அஃது உனக்கு விலங்கிட்டுவிடும் மற்றவரையும் அழித்துவிடும். எனவே நாவைப் பற்றி எண்ணுகையில் நாவினுடைய பயன்பாட்டையும், தொழில்பாட்டையும் முறையாகப் புரிந்து கொள்ளாவிடின் நம் வாழ்விலும் பிறர் வாழ்விலும் தாக்கங்கள் அதிகரித்து மனிதம் அழிவுறும் நிலையை உருவாக்கும் எனவே எழுச்சிக்கும், வீழ்ச்சிக்கும், புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் ஏதுவாய் உள்ள (நாவை அடக்கி நம்முடைய அறிவும் மேன்மையும், குணமும், குலமும், சால்பும், ஒழுக்கமும், மனமும், சித்தமும் ஒன்றென உணர்த்த வாழ்ந்திடுவோம்)
வாயைத்திறந்தவுடனேயே கடுஞ்சொற் கூறுதல், இன்னா கூறுதல், புறங்கூறுதல், தீமை கூறுதல், பொய், கோள்குறணை, ஏசல், எள்ளல், இகழ்தல், நயப்பு நய்யாண்டி செய்தல், பிறர்மனம்தளரச்செய்தல், இவைகளெல்லாம்நாவால்நிகழக்கூடியகொடுர சம்பவங்கள். மேலும் நாவின் அறுசுவை உணர்ச்சியின் மீதுதான் விரும்பி நன்மை பயவா உண்டிகளையும் பானங்களையும் உட்கொண்டு பல்வேறு நோய்களிற்கும் துன்பங்களுக்கும் ஆளாவதும் உண்டு. தீயினால் சுட்டபுண் ஆறிவிடும் ஆனால் நாவினால் ஏற்பட்ட வடு ஆறவே ஆறாது.
காட்டுத்தீயிலேஅதற்குமூலமாகவிளங்கிய சிறியதீப்பொறிபோன்றதுதான் மனித உடலிலே நாவு அமைந்துள்ளது. எனவே தம்பி தங்கையே நாவு பற்றி எனக்குள் எழும் எண்ண அலை இறைவனை வாழ்த்துவதற்கே வாய் என்ற எண்ணம் உனக்குள்ளும் உருவானால் வாழ்க்கை வளம் பெறும். ஆண்டவர் இயேசு வாயின் வார்த்தைகளுக்கு உள்ளமே ஊற்றும் உறைவிடமுமாகத் திகழ்கின்றதென்பார். உள்ளத்தில் பொதிந்து கிடக்கின்ற எண்ணங்களே வாய்வழியாக செயலுருவம் பெறுகின்றது என்பது அவரது கருத்து.
இதனால்தான் உள்ளத்தின் நிறைவே வாய்பேசும் என்றார். இவற்றிற்கு ஒப்ப, நம் வாய்களின் வார்த்தைகள் சண்டைகளின் கழமாக அமையாது சமாதானத்தின் மேடைகளாக அமைந்து ஐக்கிய ராட்சியம் ஒன்றை உருவாக்கநம் மனமும் சித்தமும் சுத்தமாக இருக்க உழைத்திடும் பொழுது நாவடக்க சித்தம் கொள்வோம். இதனால் மனிதம் வளம்பெறும். ஆரோக்கியமான மனிதகுலம் உருவாகும். உள்ளார்ந்தகாயம் மறைந்து “நான்’ என்ற என்னில் உள்ள உளம் நலம் பெற கண்டிடலாம்.
భ48 æüLé – LDmistersgo 201O
 
 

உறவு- தொடர்பு + முறிவு
மனிதன் ஒருபோதும்தனித்துமுழுமை அடைவதில்லை. அவன் மற்றவர்களோடு தொடர்புகொண்டு உறவுகளை வளர்ப்பதன் மூலமே தனக்குள்ளே நிறைவையையும் தனது வாழ்வின் அர்த்தத்தையும் நோக்கத்தையும் அறிந்து கொள்கின்றான். தத்துவஞானி அரிஸ்ரோட்டில் சொல்லுவார் சமுதாயம் மனிதனுக்கு கட்டாயம் தேவை. சமுதாயம் இல்லாது வாழ்பவன் ஒன்றில் மிருகமாக இருக்க வேண்டும் அன்றேல் கடவுளாக இருக்கவேண்டும். இதனால்தான் மனிதன் குடும்பவமாகவும் குழுமமாகவும் வாழ்கின்றான். இப்படியான வாழ்க்கை வட்டத்திற்குள் தாய், தந்தை, பிள்ளை, உறவினர், நண்பர், அயலவர் என பல உறவுப்பிணைப்புகளை கொண்டு
அ.றொக்சன் குருஸ் அ.ம.தி
வாழ்கின்றான்.
இவ்வாறு வாழ்கின்ற மனிதனின் உறவில் முறிவும், வெறுப்பு ஏன் ஏற்படுகின்றது. அன்னியப்படுத்தலும் அன்னியமாகுதலும் என்றவாறு மனிதன் மனிதருக்குரிய பண்பில் வேறுபட்டு காணப்படுகின்றான். ஒரு உறவு வளர்க்கப்படுவதும், உறுதிப்படுத்துவதும் அவன் அல்லது அவன் ஏற்படுத்தும் தொடர்பில் இருக்கின்றது. தொடர்பு என்று சொல்லும்போது ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்வில் சொத்துக்கள் மூலம் 25 வீதமான சந்தோஷத்தை அனுபவிக்கின்றான். 75வீதமான சதவீதத்தை அவன் மற்றவர்களுடன் கொண்டுள்ள ஸ்திரமான நல்ல தொடர்புக்கேற்ப அனுபவிக்கின்றான்.
ஒரு குடும்பஸ்தர் என்னை சந்தித்தபோது கூறினார், அவருக்கும் அவருடைய மனைவிக்கும் சரியேவராது என்றார். ஏன் என்று அறிவதற்காக அவருடைய வீட்டு நிலைமைகளை வினவியபோது நான் அறிந்து கொண்டது. அவர் ஒரு மீனவர் காலையில் செல்பவர் மாலையில்தான் வீடுதிரும்புவார். மனைவி வீட்டில் காலையில் உணவை சமைத்துவிட்டு மாலையில் தொலைக்காட்சித் தொடரை பார்ப்பதில் தீவிர ரசிகையாக இருந்தாள். இங்கே கணவன், மனைவி தொலைக்காட்சி பார்க்கும் நேரத்தில் தனது பொழுதை போக்கமதுக்கடைக்கு சென்றுபோதையுடன் வீடு வருவார். வீடு வந்தவுடன் மனைவியின் நச்சரிப்பும், பேச்சும் அவருக்கு மனைவிமேல் வெறுப்பையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது.
இவ்வாறு இருக்கும் போது அங்கே எவ்வாறு நல்லதொரு உறவு ஏற்படும். இன்று மனிதன்தன்னை நுகர்வுகலாச்சாரத்துக்குள் தொலைத்தவனாக மனிதஉறவைதனது சுயலாபத்துக்கு பயன்படுத்தும் ஒரு வியாபாரப் பொருளாக எண்ணுகின்றான். ஈமெயில் இன்டநெட் போன்ற விஞ்ஞான வளர்ச்சிகளால் இன்று அகண்ட பூமியில் கிடக்கும் அத்தனை நாடுகளின் மக்களும் நெருங்கி வந்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால்
ஐப்பசி - மார்கழி 2010 4:

Page 23
அருகில் இருப்பவர்களோதொலைவில் இருப்பவர்களாக வாழ்கின்றனர். கேட்டால் நேரமில்லை என ஒதுங்கிக்கொள்ளும் தன்மையும் காணப்படுகின்றது.
இப்படியான வாழ்க்கை முறையை கொண்டிருக்கும்போது “என்னை யாருமே புரிந்து கொள்வதில்லையே” என்பதை கேட்பதில் ஆச்சரியமொன்றும் இல்லை. கருத்து முரண்பாடுகளும், தேவையற்ற சந்தேகங்களும், மன உழைச்சல்களும் என மனிதன் தனக்குதானே ஒரு வட்டத்தை போட்டு அதற்குள்ளே வாழ முற்படுகின்றான்.
மனம் விட்டு பேசினால் எம்முடைய பல பிரச்சனைகள் தீர்க்கப்படும், உறவுகள் பலப்படும். இப்போது நாம் எவை உறவில் விரிசலையும் அதேநேரத்தில் இணைப்பை யும் ஏற்படுத்தக்கூடியது என ஆராய்வோம். - 1. தப்பபிப்பிராயம் :-
ஒருவரைபற்றி முழுமையாக அறியாது, அவரை பிழையாக சில காரணங்களி னால் விளங்கிக்கொண்டு அவரைப் பிழையாக கணிப்பது.
2. புரிந்துணர்வற்ற நிலை :-
ஒரு ஆசிரியர் தன்னுடைய கேள்விகளுக்கு எதுவும் கூறாது அமர்ந்திருந்த ஒரு பிள்ளையை தண்டித்தார் அதற்கு அதன் அருகில் இருந்த பிள்ளை கூறியது "ரீச்சர் இந்த பிள்ளை பேசமாட்டா” இவ்வாறு பலர் வெவ்வேறான சந்தர்ப்பங்களில் திடீர் தீர்மானங்களை எடுப்பதனால் பலர் பாதிக்கப்படுகின்றார்கள்.
3. சுயநலம் :-
நான்தான்குடும்பத்துக்கு தேவைப்படும் வருமானத்தை சம்பாதிக்கின்றேன் என்று கணவனோ அல்லது நான் மட்டும் குறைச்சலா என்று மனைவியோ தன்னை மையப்படுத்தும்போதும்,தனது விருப்பங்களையும் கொள்கைகளையும் மற்றவர்மீது திணிக்கும்போதும் உறவு முற்றுப்பெறாது.
4. முற்சார்பு எண்ணம் :-
மற்றவர்களின் சொல்லைகேட்டு ஒருவரைப்பற்றி பிழையான கருத்தை அவரிடம் பழகுமுன்னே உருவாக்கிகொள்ளல், ஒருபோதும் மற்றவரிடம் இயல்பாக வாழவிடாது.
5. செவிசாய்த்தல்:-
தொடர்பாடலுக்கு செவிசாய்த்தல் மிகவும் அவசியம். இன்று பலர் ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள் யார்தமக்குசெவிமடுப்பர் என்று. பலஉறவுகள் முறிவது ஒருவருக்கு ஒருவர் செவிசாய்க்காததினால்தான்.
42 ஐப்பசி - மார்கழி 2010

6. அன்னியோன்யம் :-
உறவு பலமடைய இன்னொரு முக்கிய தேவை அன்னியோன்யம். அம்மா, அப்பா, சகோதரன், சகோதரி, கணவன்-மனைவி பிள்ளைகள். இவர்கள் அனைவருமே நம் பாசத் துக்கு உரியவர்கள்தான். ஆனால் பல சமயங்களில் நாம் சில விஷயங் களை இவர்களோடு பகிர்வதில்லை.
7. பாராட்டுதல்:-
ஒருவர் மற்றவரை பாராட்டுதல் ,அவசியம். ஒருவர் நன்றாக செய்யும்
போது அவரைப்பாராட்டி ஊக்கப்படுத்தல் வேண்டும். மனைவி சுவையாக சமைக்கும்போது, அல்லது பிள்ளைகள் தம் கல்வியில் சிறந்து விளங்கும்போது பாராட்டப்படவேண்டும். பாராட்டும் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். இவை நல்ல உறவை உருவாக்கும்.
8. முகமூடி அற்றநிலை :-
நாம் உண்மையின்படி வாழவேண்டும். பொய்யாக செயற்படுபவருடன் நல்ல தொடர்பை எவரும் ஏற்படுத்த விரும்புவதில்லை. நான் நானாக இருக்கவேண்டும். முகமூடிகள் எப்போதும் அணிய முடியாது அவைகள் கிழிக்கப்படும்போது பொய்மை வெளிப்படுகின்றது. இதன் விளைவாக உறவுக்கான தொடர்பு அழிக்கப்படுகின்றது.
அன்னைத்திரேசா அழகாக சொல்வாள் “மற்றவர்களை எடை போடுவதில் காலத்தை செலவழிக்காதீர்கள் ஏனெனில், அவர்களை நேசிக்க உங்களுக்கு நேரம் இல்லாமல் போகும்”. எனவே வாழ்கின்ற காலம் மிகவும் குறுகியது. இக்காலம் சிறப்பு டனும் மகிழ்வுடனும் அமைய நல்ல உறவுகள் தேவை. இவ்வுறவுகள் மேம்படுத்தப் படுவது, பயன்படுத்தப்படுவதுநல்ல தொடர்புகளால்த்தான் இத்தொடர்புகள் மேற்குறிப் பிடப்பட்ட பண்புகளை கொண்டிருக்கும் அங்கே முறிவோ பிறழ்வோ ஏற்படாது.
உசாத்துணை நூல்கள் i Gös 1. நல்ல குடும்ப வாழ்வுக்கு உறவு தேவைS. யோகராஜா qÜኳ 6. لهة المؤ 2. மனசே ரிலாக்ஸ் பிளிஸ் சுவாமி சுகபோதானந்தா tաit. R re
ஐப்பசி - மார்கழி 2010 23

Page 24
விடியலை நோக்கி . வெற்றி சுபி)
அன்றையநாள் வானத்தில் * நிலா ஒளிரவில்லை. விண்மீன் கள் மின்னவில்லை. இருட்டி
கருமுகில் கூட்டத்தினால் கும்மி ருட்டுப்போல் இருந்தாலும் நேரம் மாலை ஐந்தரையையே காட்டி யது. உமாவை தூக்கம்கூட அப் போது அணைக்கவில்லை. வன் செயலிலே அவளும் காயமுற்றி ருந்ததனால், வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு நான்கு மாதங் களைக்கடந்திருந்தது. அவள்காலிலேகாயமுற்றிருந்ததனால் எழுந்துநடக்கமுடியாத நிலையிலிருந்தாள். இப்போதுதான் மெதுவாக சில தூரங்களாவது அந்த சூழலில் நடக்க முயற்சித்துவருகிறாள். அவளுக்கென்று யாருமே அருகினில் இருக்கவில்லை. ஆறுதலுக்கு ஒரு வார்த்தைகூட சொல்லுவதற்கு உறவுகள் இருக்கவில்லை. கால்வேதனையுடன் மனவேதனையும் அவளது தூக்கத்தைநாளும் கெடுத்திருந்தது. அவளின் கண்ணிரோடு வானமும் 'சோவென அழுவதுபோன்று மழை பொழிந்து கொண்டிருந்தது. அந்த மழை உமாவிற்கு பழையநினைவுகளை நினைவுபடுத்தியது.
அவள்அண்ணா, அம்மா, அப்பாஎனநான்கு பேரைக்கொண்டசிறிய குடும்பத்துள் மிகவும் சந்தோசமாக வாழ்ந்து வந்தாள். அண்ணாவில் மிகவும் அன்புவைத்தி ருந்தாள். இருவரும்படிப்பில் மிகவும் திறமையானவர்கள். விளையாட்டில் மட்டுமல்ல பல்வேறு கலைநிகழ்வுகளிலும் இவர்களுக்கு நிகர் இவர்கள்தான் என்றே சொல்லவேண்டும். மழையென்றால் உமாவுக்கு மிகுந்த விருப்பம். எப்போதெல்லாம் மழைபொழிகின்றதோ அப்போது மழையில் நனைந்து குளித்து சந்தோஷமாக கழிப்பாள். தடிமன் காய்ச்சல் வரும்போது பெற்றோர் படும் பாடுதான் அளவிட்டு சொல்லமுடியாது. ஏனெனில் எல்லோரும் இவளை மிகவும் மிகவும் அதிகமாக நேசித்தார்கள்.
அப்பொழுது அவளுக்கு பதினைந்து வயது நடந்துகொண்டிருந்தது. மிகுந்த சந்தோஷமாக வாழ்ந்திருந்த அவர்களின் குடும்பம் என்ற அழகியகூடும் நாட்டின் யுத்தச் சூழலால் கலைக்கப்பட்டது. பெற்றோர் ஒருபுறமாகவும், உடன் பிறந்தார், சகோதரர்கள் வேறுபுறமாகவும், ஒவ்வொருவரும் வெவ்வேறு திசைகளாகவும்
ஐப்பசி - மார்கழி 2010
 
 

பிரிக்கப்பட்டார்கள். பிரிக்கப்பட்டது மாத் திரமல்ல, இவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று அவள் தேடாத இமு மில்லை, K விசாரித்துப்பார்க்காதமனிதருமில்லை. இறுதியாக மக்களோடு மக்களாக இடம் விட்டு இடம்மாறிஏதிலிஎன்றபெயரோடு, தானும் ஓர் அநாதை என்ற உணர்வை யும் தன்னுள் பதித்தவளாக தெரிந்த மக்களுடன் காலத்தை கழித்தாள். ஓரிரவுகூட அவள் நிம்மதியாய் உறங்கி னாள் என்று கூறிவிட்டால் உண்மை
யில் அது சுத்தமான பொய்யென்றே எடுத்துக்கொள்ளவேண்டும்.
அன்று மழை தூற்றலோடு தொடங்கி கண்ணை சிமிட்டி மின்னலைக் காட்டியது. வீதியோரங்களிலும், மரநிழல்களிலும் இருந்தவர்கள் எங்கேபோவதென்று தெரியாது பரிதவித்தனர். மழைக்கைகளின் நடனத்தை மெருகூட்ட மின்னலுடன் சேர்ந்து முளக்கமும் தாளத்தை போடத் தொடங்கியது. அதுவரை ஓய்வெடுத்த உயிரழித்துக் கொண்டிருந்த ஆயுதங்களும் தமது வேலையை காட்டத்தொடங்கின. இடையிடையே மக்களின் அவலக்குரல்களும், தொடர்ந்தபடியே இருந்தன. உமாவும் அந்த பெரும்கூட்டத்துள் ஒருத்தியாக ஏதுசெய்வதென்று அறியாது திகைத்தாள். “அம்மா", "அப்பா” என்ற பலரின் ஒலங்களும் அவளது பெற்றோரின் நினைவுகளை அந்த நேரத்தில் அடிக்கடி கொடுத்தது. மழையோடு சேர்ந்து நனைந்திருந்த அவளது கன்னங்களில் கண்ணீரும் உருண்டோடியது.
திடீரென அவளால் அசையமுடியவில்லை. அவள் நிலைகுலைந்து மக்களின் நெரிசலுக்குள் விழுவது அவளுக்கு தெரிந்திருந்தது. அன்று கண்மூடியவள் விழித்துப்பார்க்கையில் பக்கத்தில் அவளது சித்தப்பா தெரிந்தார். அவள் ஆவலோடு தன் கண்களை எல்லா பக்கங்களிலும் செல்லவிட்டாள். அவள் தேடியது கிடைக்கவில்லை என்ற தொனியில் மீண்டும் கண்களை மூடியவள் தன்னை ஒரு தடவை அசைத்துப் பார்த்தாள். அவளால் முடியவில்லை என்பதை அறிந்தவள் கண்களை திறந்து மீண்டும் தன்னை பார்க்கிறாள். இரண்டு கால்களிலும் பெரிய அளவில் கட்டுப் போட்டிருப்பதை கண்டு பயந்து போனாள். அவளிடம் நெருங்கி வந்திருந்த அவளது சித்தப்பாஅவளது தோள்களில்தனதுகைகளைபதித்து ஆறுதல் தருவது அவளுக்கு தெரிந்தது. “அப்பா. அம்மா. அண்ணா.” என்ற வார்த்தைகளை அவள் உச்சரிப்பதைகேட்டுதன்னைதிடப்படுத்தியவராக"அவையள் எல்லாம் இருக்கினம்..” என்று ஒரு பொய்யான வார்த்தையை கொடுத்து அவளை
agriLié-LDmirag 2010 4.

Page 25
ஆறுதல்படுத்தினார். உண்மையில் அவர்களை அவள் படமாகத்தான் பார்ப்பாள் என்று அவளுக்கு அப்போது தெரியவில்லை. எப்போது இவள் காயமுற்றாளோ, எங்கே இவள் அடியற்ற மரம்போல சாய்ந்து வீழ்ந்தாளோ அந்த இடத்தில்தான் அன்றுதான் இவளது பெற்றோரும் மடிந்தார்கள் என்பதை அறிந்துகொண்டவள், ‘என்னை பார்க்காது போய்விட்டார்களே’, ‘தெரிந்திருந்தால் நானும் அவர்களுடன்’ போயிருக்கலாமே என்று சில நேரங்களில் நினைத்து கண்ணிர் விடுவாள்.
உமாஎன்னபிளான் போடுறீர்? என்றஅந்த சினேகிதியின்வார்த்தை, பொழிகின்ற மழையிலும் தெளிவாக கேட்டபோதுதான் உமா தனது வாழ்வின் துயர பாதைகளின் மீள்நினைவுகளை கைவிட்டு, கண்ணிரை துடைத்துவிட்டு, "ஒண்டுமில்லை. சும்மா யோசிச்சனான். நில்லுங்கோ வாறன்’ என்று கூறியபடிகக்கதண்டத்தை ஊன்றியபடி வெளியில் வருகின்றாள். மழையும் ஓய்கின்றது. சினேகிதியும் இவளும் வாசல் வரை நடக்கும் நாளாந்த நடவடிக்கையை செய்வதற்கு புறப்படுகிறார்கள். 'மழைக்குள்ள போகவேண்டாம்’ என்றகினேகிதியை சிறுபுன்முறுவலுடன் பார்த்துவிட்டுதான் தனது நடையை தொடங்குகின்றாள். வாசலுக்கு சென்றவள் அங்கே உலாவித்திரிகின்ற மனிதர்களைப் பார்க்கிறாள். அங்கே தன்னைவிட நாலைந்து வயது குறைவாக மதிக்கத்தக்க ஒரு சிறுமி தன்னைப்போல நடந்துசெல்வதை கண்ட உமா, தங்கச்சி, என்று அழைத்த குரலை மறுக்காது திரும்பிப்பார்த்த சிறுமியை அன்பொழுக நோக்கினாள். பழைய தெரிந்த நபரை பார்ப்பதுபோல அந்தச் சிறுமியும், ‘ம்."அக்காவும் என்னப்போலத்தான். சரிவாங்கோநாங்கள் சேர்ந்தேநடப்போம்.' என்றபடி அவள் கைகள் தன்னோடு இணைந்ததை உமாவால் நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. ஏனெனில் அது அவளுக்குள் பல்லாயிரம் அர்த்தங்களை உதிக்கச்செய்தன. இதற்கு முன்னால் யாரென்று தெரியாத அந்த தங்கையின் பற்றுதல், அவளுக்குள் ஒரு விடியலை காட்டியது.
‘என்ன யோசனை அக்கா. சரி வாங்க என்னைப்பற்றி சொல்லுறேன். கேட்டுக்கொண்டே நடப்போம். தன்னைப்போன்ற நிலையிலுள்ளவள் தந்த தெளிவால் அவள் நடக்கிறாள். தனியேயல்ல. சோர்வாயல்ல. புதுத்தெளிவுடன்; அப்போதுவானத்தில் நட்சத்திரங்களும் கண்கள் சிமிட்டத் தொடங்கின. எட்டிப்பார்த்த நிலா தந்த ஒளியால் இவர்கள் ஒற்றைப் பாதங்களும் கக்கத்தண்டங்களும் பாதை களில் தெளிவாய் பதிந்தன. இருட்டிலும் அவர்கள் வெளிச்சத்துடன் நடக்கிறார்கள்.
(முற்றும்)
46 æil lå – LDmffesyst 2O1O
 

நினைவாற்றலை
வள்ர்த்துக்கொள்வதுஎப்படி?
படித்ததை நினைவில் வைத்திருக்க முடியவில்லை என்பது பலரது பிரச்சினை, பரீட்சைஎழுதும்போதுநன்றாகத் தெரிந்தவிடயம் ஞாபகத்தில்வராமல்திண்டாடுவதும் பலரது அனுபவம்.
ஞாபக சக்தியை அதிகரிக்க நாம் என்ன செய்லாம் என இங்கு பார்ப்போம்.
மனப்பாடம் அமைத்தல்
ஒரு கதையை அல்லது கவிதையை ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டுமானால் அந்தக் கதை உண்மை நிகழ்ச்சியாக மனதிலே கற்பனை செய்து பார்க்கின்றபோது அது மனதிலேபதிந்துவிடுகின்றது. எல்லாத்தரவுகளையும்படமாக்கிப்பார்க்கமுடியாது என்பது உண்மைதான்) எவ்வளவிற்கு அதிக விபரங்கள்ோடும், உணர்ச்சியூட்டியும் ஒரு கதையைக் கற்பனை செய்கிறோமோ அவ்வளவிற்கு அது மனதிலே ஆழப்பதிந்து, மீள நினைக்கின்றபோது மனதிலே வந்துவிடுகின்றது. ஒரு ரஷ்ய பத்திரிகையாளரிடம் எண்கள் சம்பந்தமான தகவல்கள் தெரிவிக்கப்படும்போது அந்த எண்களை தனது சொந்தக் கையெழுத்தால், ஒரு தாளில் எழுதுவதாகக் கற்பனை செய்து கொள்வாராம். ஒரு பொருட் பட்டியலை ஞாபகத்தில் வைத்திருக்க மனதிலே அத்தனை பொருட்களையும் ஒரு வரிசையில் வைத்து, அவற்றின் ஒழுங்கை கற்பனை செய்வாராம்.
தெரியாததைத் தெரிந்ததோடு சேர்த்தல்
தெரியாத ஒருதகவலை நன்கு தெரிந்த ஒருதகவலோடு சேர்த்துப்பார்க்கும்போது ஞாபகப்படுத்துவது சுலபமாகின்றது.
புதிதாக சந்தித்த ஒருவரின் பெயர் கண்ணன் என்று வைத்துக்கொள்வோம். அவர் தனது பெயரைச் சொல்லும்போது அவருடைய தலையிலே கண்ணன் இருந்து புல்லாங்குழல் வாசிப்பதாகக் கற்பனை செய்தால் அது மனதிலே பதிந்துவிடும். மறுமுறை கண்ணனைச் சந்திக்கும்போது பெயரை மறந்தாலும் புல்லாங்குழலூதும் கண்ணனின் உருவம் மனதிலே தோன்றும். பெயர் உடனே ஞாபகத்திற்கு வரும். இதிலே புல்லாங்குழல்வாசிக்கும் கண்ணனின் படம் பலருக்குத்தெரியும். இது தெரிந்த உண்மை. தெரியாத உண்மையை ஏற்கனவே நன்கு தெரிந்த உண்மையோடு சேர்க்கின்றோம்.
8til left - LDriftesyst 2O1O 47

Page 26
சரித்திரம் சம்பந்தமான வருடங்களை ஞாபகத்தில் வைத்திருக்கவும் இது பயன்படும்.
ஒழுங்குபடுத்துதல்
பல தகவல்களை ஒழுங்குபடுத்தி ஞாபகத்தில் வைத்தல், நினைவுபடுத்துவதும் சுலபமாக இருக்கும். உ-மாக ஒரு தலைப்புப்பற்றி பல்வேறு விடயங்களைப் படித்து விட்டு, மீட்டுப் பார்க்கும்போது சில மறக்கப்படலாம். ஆனால் படித்த கருத்துக்களை ஒரு குறிப்பிட்ட ஒழுங்கிலே அமைக்க வேண்டும். இதனால் முதற்கருத்து என்ன, அடுத்தது என்ன என்று நினைவுக்குக் கொண்டு வருவது சுலபமாக இருக்கும்.
தனக்கே சொல்லிக் கொள்ளுதல்
பழகிய விடயத்தைத்தனக்கேதிருப்பிச்சொல்லுவதனாலேயே ஞாபகத்தில் பதியும் தன்மை கூடும் நேர்முகப் பரீட்சைகளுக்கு இந்த முறை பெரிதும் பயன்படும். படித்ததன் வரைவிலக்கணத்தைத் தெரிந்து கொள்ளவும். என்பதைத் தெளிவுபடுத்தவும் இம்முறை உதவிபுரியும்.
மீளப்படித்தல்
தெரிந்திருக்கவேண்டிய விடயத்தைத் திரும்பத் திரும்பப் படிக்கும்போது நமது மனிதில் கூடுதலாகப் பதிகின்றது. இது நாம் அறிந்த உண்மை.
மீளப்படித்தல்
தெரிந்திருக்கவேண்டிய விடயத்தைத் திரும்பத் திரும்ப படிக்கும்போது நமது மனதில் கூடுதலாகப் பதிகின்றது. இது நாம் அறிந்த உண்மை. 1. மொத்தமாக எத்தனை புலணுணர்வுகள் உண்டு. இவை எங்ங்னம்
வகைப்படுத்தப்படுகின்றன? 幌 2. புலணுணர்வுக்கும் புலன்காட்சிக்கும் உள்ள வேறுபாடினை விளக்குக. 3. நமது புலனுறுப்புகளிலிருந்து வரும் செய்திகள் எமது நரம்புத் தொகுதியில்
எங்ங்ணம் சேர்த்து வைக்கப்படுகின்றன. 4. பவ்லோவ் எந்நாட்டு உளவியலாளர். அவரது பரிசோதனைகளின் ഡ്രസ്സുഖ ബങ്ങ? 5. கற்றலுக்குத் தேவையான காரணிகளைக் கூறி ஒன்றினை விளக்குக? 6. நினைத்தல் எத்தனை வழிகளில் நடைபெறுகிறது. அவற்றினைச் சுருக்கமாகக்
தருக. 、で son 7. மறத்தலுக்குரிய பாரம்பரிய காரணிங்)ணிகள் எத்தனை அவற்றிஒனக் கூறுக.
48 æüLé – LDriffesyg 2O1O
 

உளவியலாளர் வரிசையில்
E.L. Thorndike ஈ. எல்.தோண்டைக்
அண்மைக்கால கற்கும் விதிக் கோட்பாடுகளில் மிகவும் பிரபலமான அமெரிக்க உளவியலாளரான ஈ.எல்.தோண்டைக் முன்வைத்துள்ளார். இக் கோட்பாட்டை தோள்மன் என்றஉளவியலாளர்விமரிசைக்கையில், குழந்தையின்கற்கைநெறியாக இருந்தாலென்ன தோண்டைக்கின் கோட்பாட்டை ஆதரித்தோ அல்லது நிராகரித்தோ அல்லது அதில் ஏதேனும் சிறிய மாற்றங்களைச் செய்தோ தான் செயலாற்ற வேண்டியுள்ளது, என்கிறார். இதிலிந்து தோண்டைக்கின் கோட்பாடு எவ்வளவு ஆளமாகக் கல்வித்துறையில் பிரபலம் அடைந்துள்ளதென்பதை அறியலாம்.
1898இல் 'மிருகங்களின் கற்கைநெறி' (Animal Learning) என்றநூலில் தனது கோட்பாட்டைப் பிரசுரித்தார். ஆனால் தெளிவான முறையில் விளக்கங்களுடன் (Educational Psychology) கல்வி உளவியல் என்ற நூலில் இக்கோட்பாட்டை விபரித்துள்ளார்.
இவருடைய கோட்பாட்டை சீரான முறையில் விளங்கிக்கொள்ள, என வாதிடுகின்றார், எனவே நாம் இவைகளை ஒவ்வொன்றாக ஆராய்வோம்.
1. Surf B606) sing - Law of readiness 2. Liuilibaeis-Law of Exercise 3. 6.6061T66ág - Law of Effect
இக்கோட்பாட்டுக்கமையவே மனிதன் கற்க முனைகின்றான் என வாதிடுகின்றார், எனவே நாம் இவைகளை ஒவ்வொன்றாக ஆராய்வோம்.
1. தயார் நிலை விதி : மனிதனானவன் ஒன்றைக் கற்க முயற்சிக்கும் பொது தன்னை அதற்காகத்தயார்படுத்திக்கொள்கின்றான். புதியதைக்கற்க வேண்டுமென்ற மனப்பக்குவம்,தன்புலனை அதிலே செலுத்தமனங்கொள்ளுதல், அதற்ான சூழலை அமைத்துக்கொள்ளுதல் போன்ற செயற்பாடுகளைத் தயார் நிலை கொள்ளுதல் எனக் கூறலாம்.
ஐப்பசி - மார்கழி 2010 49.

Page 27
கற்க விரும்பியதைக் கற்றவுடன் ஒரு மனநிறைவு ஏற்படுகிறது. கற்க விருப்பமிருந்தும் அதற்குத் தடைகள் ஏற்படும்போது மனவிரக்தி ஏற்படலாம். உதாரணமாக ஒரு குழந்தைக்கு ஒரு விளையாட்டுப் பொருளைக் காட்டி, அதன் ஆசையைத் தூண்டிவிட்டு, பின் அப்பொருளைக் குழந்தையிடமிருந்து மறைத்துவிட்டால் குழந்தையின் மனம் விரக்தியடைந்துவிடும். எனவே கற்பதற்குத் தயாராகும் நிலையானது மனதில் ஏற்படுகின்ற ஆர்வத்தைக் குறிக்கின்றதே தவிர உடலியல் ரீதியான வளர்ச்சியைக் குறிக்கவில்லை. 1935இல் தோண்டைக், “தேவைகள், விருப்புக்கள், உளப் பாங்குகளின் உளவியல்” (The psychology of Wants, interests and attitudes) என்ற நூலில், “தயார் நிலை விதி'யை ஏனைய விதிகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றார். நமது தேவைகள், விருப்புக்கள், உளப்பாங்கு போன்றவற்றால் தூண்டப்படுவதனால் நாம் கற்றலில் மேம்படுகிறோம். ஒருவன் ஒரு வேலையைச் செய்யும்போது அவ் வேலையில் விருப்பம் ஏற்படவில்லையானால் அவன் அதைத் தொடர்ந்து சீராகச் செய்யமுடியாது. உதாரணமாக ஆசிரியர் ஒருவர் தன் தொழிலில் விருப்பம் கொள்ளாமல் மாணவர்களின் உள்ளத்திலே தேவையானவற்றைப் படிய வைக்க முடியாது.
2. Lujöá sfis : (Law of Exercise)
இவ்விதி, உபயோகம், உபயோகமின்மை என்பவற்றை உள்ளடக்கியது. திரும்பத்திரும்ப, அதாவது மீட்டலினால் ஒன்றைப் பயிலும்போது அது மனதில் படிந்து விடுகிறது. இவ் விதியானது ஒரு குறைபாட்டுடன் காணப்படுவதாகத் தோன்றுகின்றது. ஏனென்றால், தோண்டைக் இவ் விதி விளக்கும்போது, ஒரு விடயத்தைப் புரிந்து கொள்ளுகின்ற ஆற்றலுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளதாகத் தெரியவில்லை. உதாரணமாக ஒரு பிள்ளை ஒருகட்டுரையை அல்லது ஒருசில கவிதைகளை மனனம் செய்கின்றதென்றால் அதன் பொருள், தொடர்ச்சி, போன்றவற்றை விளங்காமல் மனனம் செய்தல், மீட்டலில் தடங்கல் ஏற்படும்போது தொடர்ந்து சீராக எழுதவோ எண்பிக்கவோ முடியாமல் போய்விடும். இந்நிலையை நாம் பல மாணவர்களிடையே காண்கின்றோம். ஆனால் பொருள் விளக்கத்துடன், அதன் தொடர்ச்சியையும் விளங் கினால் சிக்கல்கள் ஏற்படாது. தோண்டைக், மனனம் செய்வதற்கு விளக்கம் தேவை யில்லை. அச் செயற்பாடு ஒரு பொறிமுறையில் அமைந்த செயல் (Mechanical Action) என்றும் வாதிட்டார். இக்கருத்தைப் பல உளவியலாளர்கள் கடுமையான விமரிசனத்திற்குள்ளாக்கியதன் பயனாக தோண்டைக் காலப்போக்கில் தன் நிலைப் பாட்டை மாற்றி மனனம் செய்வதற்குப் பொருள் விளக்கமும் முக்கிய தேவையென்ற கருத்தை ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று.
3. விளைவு விதி : (Law of Effect)கற்றலால் ஏற்படுகின்ற விளைவை விளைவு விதி எனப்படும். கற்றலினால் நன்மையான விளைவு கிட்டுமேயானால்
5O ஐப்பசி - மார்கழி 2010
 

அதனால் மன நிறைவும், மேலும் கற்றலில் விருத்தியும் ஏற்படும். இதற்கு எதிர்மறையான விளைவு கிட்டுமேயானால் விரக்தியேற்படலாம். அல்லது மேலும் முயற்சி எடுக்கும் உளப்புாங்கு ഉത്സു.
கற்பவர் கற்றலில் மன நிறைவு அடைவாரேயானால் மேலும் கற்றலைத் தொடர முடியும். எனவே கற்கும் பிள்ளையை வாய்ச் சொற்களால் ஊக்குவிப்பதுடன் நின்றுவிடாது, பரிசு வழங்குதல், வெகுமதி கொடுத்தல் போன்ற செயற்பாடுகளாலும் ஊக்கம் அளிக்க வேண்டும்.
தோண்டக்கினால் முன் வைக்கப்பட்ட இவ் விதிகள் மிகவும் செயல்முறை ரீதியாக முக்கியத்துவம் உள்ளன. கற்பிப்போருக்கும் கற்பவருக்கும் இவ் விதிகள் மிகவும் பயன்படும். கற்பதில் ஆர்வம் உண்டாக்கினால் கற்பதும் வேகம் அடைகிறது மட்டுமல்லாமல், கற்றதை மறவாமல் வைத்திருப்பதும் அதிக அளவில் காணப்படும்.
இவர் அமெரிக்காவின் மசச்சுறஸ் மானிலத்தில் கல்வியறிவுடைய, பண்பான பெற்றோருக்குப்பிறந்தார். இவருக்கு இரண்டுசகோதரர்களும் இருந்தனர்.தந்தையார் ஒரு மெதடிஸ்ற்பாதிரியராக இருந்தால் மூன்றுவருடத்திற்குமேல் ஒரு பங்கில் இருக்க முடியவில்லை. அதனால் மூன்று பிள்ளைகளையும் பல பள்ளிகளில் படிக்க வைக்கும்நிலை ஏற்பட்டது. பிள்ளைகள் பெற்றோர்களால் சீராகக் கண்காணிக்கப்பட்டு வளர்க்கப்பட்டதால் மூவரும் ஏக காலத்தில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் வெவ்வேறு துறைகளில் பேராசிரியர்களாகக் கடமை புரிந்துள்ளனர்.
பேராசிரியர் தோண்டைக்கின் குணாதிசயங்களில் குறிப்பிடத்தக்கவை என்னவென்றால், சுயநலப்போக்கும், போட்டி மனப்பான்மையும், மற்றவர்களைத் தம்வசப்படுத்த வேண்டுமென்ற உளப்பாங்கும் இவருக்குப் பிடிக்காதவை. இப்போது அவர் உயிருடன் இருப்பாரேயானால் அவர் ஓர் “உண்மையான அமெரிக்கராய் இருக்க முடியாது)
1901இல் பேராசிரியர் தோண்டைக் எழுதிய“மிருகங்களின் விவேகம்” (Animal Intelligence) என்ற நூலில் மிகவும் பிரபல்யமானது 1904இல் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் உளவியற் கல்வித் துறையின் பேராசிரியராகி 1940இல் இளைப்பாறிய பின்பும், உளவியலில் பல ஆக்க பூர்வமான படைப்புகளைத் தந்துள்ளார். அவருடைய வாழ்நாளில் பொறுப்புவாய்ந்த பதவிகளைபல உளவியல் நிறுவனங்களிலும் வகித்துள்ளார்.
அவர் தனது 75வது பிறந்த நாளைக் கொண்டாட அண்மித்துக் கொண்டிருக்கையில் 1949 ஆவணித்திங்கள் ஒன்பதாம் நாள் மரணமானார்.
ஐப்பசி - மார்கழி 2010 5.

Page 28
N
shid بر صبے È sul sy.
f اختلال ܫܢܝܢ ரன வாசகர்களே!
“உங்கள் வாழ்வில் அமைதியை கண்டு மன மகிழ்ந்து வாழ்வில் புதுப்பொழிவு பெற, அமைதியின் வேந்தனாம் இயேசு பாலனின் நாமத்தில் நத்தார் வாழ்த்துக்களையும் மலரும் புத்தாண்டு நல்லாண்டாக உங்களுக்கு அமைய இனிய வாழ்த்துக்களையும்
நான் ஆசித்து நிற்கின்றேன். இ
- நான் -
3:52 güLud-DTao 2010
 
 
 

/ー
புதியதோர்சஞ்சிகைபற்றி.
9.
“அஞ்சலி”சஞ்சிகை இப்போதுமூன்றாவதுதீபத்தின் இரண்டாவது சுடராக வெளிக்கிளம்பிபலபுதிய கருத்தாளம்மிக்க ஆக்கங்களுடன் எல்லோர் கைகளி லும் தவழ்ந்து கொண்டிருக்கின்றது. இது ஒரு உளசமூக ஆன்மீக இலக்கிய சஞ்சிகையாக ஒவ்வொரு வருடமும் மூன்று தடவைகளில் வெளிவருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. சமூகத்தில்வாழ்கின்ற ஒவ்வொருவருக்கும் மிகவும் பிரயோசனமான பல விடயங்கள் இதிலே உள்ளடக்கப்படுகின்றது. குறிப்பாக இளையோரின் வாழ்வுக்கு வலுச்சேர்க்கும் பல்வேறு சுவைமிகு படைப்புக்கள் இதனுள்ளே காணலாம். இச்சஞ்சிகையானது யாழ்ப்பாணம்-பருத்தித்துறை யில் அமைந்துள்ள “அஞ்சலியகம்’ என்று சொல்லப்படுகின்ற உளவளத் துணை நிலையத்தில் பணிபுரியும் எல்லோராலும் முன்னெடுக்கப்பட்டு வெளிவந்துகொண்டிருக்கின்றது. எனவே இச்சஞ்சிகைக்கு சமூகத்தில் பல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது யாவரும் அறிந்ததொன்றே. அந்த வகையிலேஇச்சஞ்சிகைபற்றி இதுவரையும் அறியாத ஆர்வமுள்ள வாசகர்கள் உங்களுக்கும் ஒரு அழைப்பை விடுக்கின்றோம். விரும்பிப் படிக்கும் உங்கள் வாழ்வில் அஞ்சலி என்கின்ற இச்சஞ்சிகையும் புதுமையை படைக்கட்டும். வாழ்வின் உண்மையின் பக்கங்களை உங்களுக்கும் மற்றும் எல்லோருக்கும் காட்டிடட்டும். உங்கள் தொடர்புகளுககு கீழ்க்காணும் முகவரியிலோ அல்லது தொலைபேசி இலக்கத்திலோ தொடர்பினை மேற்கொண்டு முழுமையாக படித்து பயன்பெறலாம்.
அஞ்சலியகம் நெல்லண்டை வீதி

Page 29
શેિ
O
 

刁*