கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுவைத்திரள் 2008.06-07

Page 1
ബഖ o ഥബ്
A. A. A. 纪 . சுவைத்திரள் ஓர் உலக நகைச்சுவை, பல்கலை ஏடு, !
e
 
 
 
 

蔓
鬣》 猩 ※リ
》绯 狄霹 萎
; ; ; ; ; ; 323i 萎 薰 リ ; ; ; ; ; it is i . it is iiii i 萎 141 is 44th
it it:
擂型 薰萎 **}}}}}Iی-II 萎 құін {{#### 浔》枋 44; 334 { } {
it 3:4::iii 34 g : i: ή και και και 43 .
囊 盔萎 萎
; :
/ 3. ଜନ୍ମ 总 A. A. A. i
மட்டக்களப்பிலிருந்து வெளி வருகின்றது

Page 2
SALL LAL AASAL AA AA LAAAAL qAL LAA LSAAAA AASA AASA AAAAAA LALAL LALA AALLAA Aqq ※※※※※※※※※次次次次次※※次次次米次次次次次次次次
| 2ܠܳܐ நா அடக்கம் பற்றி 多イ எழுதிய
dig s
காப்பியம் பற்றிப்
三ー
கையடக்கத் தொலை
விரும்பினால் ட
AT SLAL LLAAAA LLLA AAA LAAA AAAA AAAA AA AAL AAA LALAA AA AALALA TL ALLLLAA AALAAA T 次次次次次次次次米次米米次次次次米米米米米次次米米次米兴
Y
Y
N
SOFTWARE HARDWARE THEORY HARDWA
i Phone Spares i Battery Vol
ii phone ĝ6ö 35m600TüLIGBLĐ IC ii Battery š5 வகைகள் iii Phone sipgið i SpareS பழுதினால் தோன்றும் -
iv Phone 560d6r
பழுதுகள
... v Phone Chal iv 1C பழுதடைவதனால் Phone இல் தோன்றும்
பழுதுகள் vi Phone mot v Trouble Shooting I Resistors
Trouble Shooting I
- Capacitors Vi IC களை நேரடியாக மாற்றுவதன்
மூலம் பழுதுகளை நிவர்த்தி செய்தல் vii IC 3560D6mo LDIT
Wi ஒரு Model இல் இருந்து இன்னொரு viii Key pad L. Model க்கு ஒத்துப் போகும் IC வகைகள் ix Spares 560DE
viii Software, Hardware M6ö w (Switch, di
ஏற்படும் பழுதுகள்
X Hot Gunu Software codes
X Service Diagram ze uuj6orUCBö5) IC
களை கண்டறிதல்
anaaui Ioni
நாடுபூராகவும் பல நூற்றுக்கணக்கா Phone திருத்துனர்களை உருவாக்கி
G156TDao Dr. Sooriyakumar safrabai
SOORYA TECHN
No.87, 2nd Floor, Jampettah Street, Color
fa a ه ماه همراه صراه ماه صره م؟lt fa af fa afa afas a? 宗米米米米米米米米米米米※米米米米米米米米米米次米米米光
e
 
 
 
 
 
 
 
 

قره صی 尔米
SS SLcS SSAASS SLLS SSAAAAS LAAS LAAS qAS LA LAAA qALASS ALA qqALA AAA AAAA ALA AAA TATA LALL 次岑次次米米尔次米岑次次岑岑、光次、次米
அறிய விரும்பினால் திருவள்ளுவர் திருக்குறளைப் படியுங்கள்!
பேச விரும்பின் கம்பனைப் படியுங்கள்.
பேசி திருத்தும் கலையில் தேர்ச்சி பெற
ாக்டர் சூரியகுமாரைச் சந்தியுங்கள்.
ARE Lupjaksas
a )؟ م fa af 米米米米米米米米米米米米※米次米米次米米米米米次米米米米
SOFTVVARE Lupgksai
tage அளவிடும் பயிற்சி Quick charge 6) prig565
றும் முறை
Service செய்யும் முறை
ging Testing
herboard E6ö össT600TŮUGBLĎ
மாற்றும் பயிற்சி
ற்றும் பயிற்சி E.D மாற்றும் பயிற்சி
ா மாற்றும் பயிற்சி splay Ribbon g(B56)
பன்படுத்தும் பயிற்சி
Vii
Viii
Software Introduction Software Installation Unlocking (Lock96DLš56) Software Updates (flashing) Un Limitted Video MP3 Player
New Various Games, Images, Songs phone க்கு போடுதல் Memory card reader / Writer Introduction Blue Tooth eupgolf Computer 65 SCB-55) Phone ig Pictires, ToneS போடும் முறை படங்கள், பாடல்களை Convert
செய்யும் பயிற்சி
(முன்கூட்டியே பதிவுகளை மேற்கொள்ளுங்கள்)
鹦 aan at SSDs பயிற்சியளிக்கப்படும்
ICAL INSTITuTE
hbo 13, Tel: 01 14932681, 0773235354
AS LAAAAL AA AAAS AAAAA LAqAAA AAAA AA AA LAqAAA LAAA AAAA LAA AA qAAA AAAA AAAA AAAA qAAA AAAA AAAA AAAA AAAA AAA ※※ ※※※※※※ ※※ ※※※※※ ※※ ※※ ※※※※R
懿
۹ ماه صره مر"ه ماه ص؟ **** 糸う。
_ఙణి

Page 3
இலங்கையில் இனப்பிரச்சனை 50 வருடங் களாக குடி கொண்டு குடிகெடுத்துக் கொண்டிருக் கின்றது. மொழிப்பிரச்சனையாக உருவெடுத்து, குடியேற்ற வாதங்களாக உருமாறி, பேரினவாதமாகப் பகிரங்கமாகி மாறி இன்று இலங்கையில் நிலவிவரும் இனப் பிரச்சனைக்கு வயது 50 ஆகும்.
சமீபத்தில் இலங்கையின் இனப்பிரச்சனை பற்றிக் கருத்து வெளியிட்ட சிங்கப்பூர்ப் பிரதமர் லீ குவான் யூ இலங்கையில் இருந்துதான் சிங்கப்பூர் பாடம் கற்று, சிங்கப்பூர் தன்னைத் திருத்திக் கொண்டது என்று கூறுகின்றார். இது பற்றி அவர் கூறுவதை இப்போது பார்ப்போம். 1959ம் ஆண்டில் பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்ற சிங்கப்பூர் 1963 இல் மலேசிய கூட்ட மைப்பில் இணைந்து இருந்தது. 1965ம் ஆண்டில் சிங்கப்பூர் அக்கூட்டமைப்பில் இருந்து பிரிந்தது. 1959முதல் 1990ம் ஆண்டுவரை சிங்கப்பூர் பிரதமராக நான் இருந்தேன்.
மலேசிய கூட்டமைப்பில் இருந்து சிங்கப்பூர் பிரிந்து சென்றபோது பிரச்சனையுள்ள அயல் நாட்டைக் கொண்டிருந்தது. அத்துடன் சிங்கப்பூர் மக்கள், சீனர்கள், மலேயர்கள், மற்றும் இந்தியாவில் இருந்து குடி பெயர்ந்தவர்களைக் கொண்டிருந்தது. நாம் சுதந்திரம் பெற்றபோது ஒரு நாட்டிற்குரிய அடிப்படை அம்சங்கள் இருக்கவில்லை. ஆனால் நாம் தாமதமாகச் சுதந்திரம் அடைந்தமை நமக்கு நன்மையாக இருந்தது.
1965ம் ஆண்டில் தோல்வி அடைந்த நாடுகள் குறித்த 20 வருடகால உதாரணங்கள் எம்மிடம் இருந்தன. எனவே எவற்றைத் தவிர்க்க வேண்டும் என நாம் அறிந்து இருந்தோம். இனப் பிரச்சனை, மொழிப்பிரச்சனை, மொழிச் சச்சரவு, மதப்பிரச்சனை என்பனவற்றைத் தவிர்க்க வேண்டும் என உணர்ந் தோம். இவற்றுக்கு உதாரணமாக நாம் இலங்கையைப் பார்த்தோம்.
།
 

* མི་དེ་ལོ་ - o e ܒܸ ܊
ཟེ་ཚོ་ཚུར་
x.{ శిశ్యజ్ల 388 ខ្ស
இந்நிலையில் கலா சாரம் மற்றும் மேன்மை குறித்த புராண காலத்தை நாம் புதுப் பிக்க முற்பட்டு இருந்தால் சபிக் கப்பட்டு இருப்போம்.
சிங்கப்பூரை நிர்வகித்த குழு சீனமொழி குறித்துக் கவனம் செலுத்தாமல் மிகுந்த பிரயத்தனத்துடன் ஆங்கிலத்தைச் செயற்பாட்டு மொழியாக்கியது.
அக்காலத்தில் சீனம், மலே மற்றும் இந்திய பாடசாலைகள் வெவ்வேறு மொழிகளில் பாடம் கற்பித்து வந்தன. பிரிட்டிஸ் ஆட்சிக்காலத்தில் இலங்கையைப் போலவே சீங்கப்பூரிலும் எழுதுவினைஞர்கள், ஆசிரியர் கள் களஞ்சியப் பொறுப்பாளர்கள் போன்ற பதவிகட்குத் தேவையானோரைப் பெறுவதற்காக ஆங்கிலப் பாடசா லைகளைப் பிரிட்டிஸ் அரசாங்கம் ஏற்படுத்தி இருந் தமை குறிப்பிடத்தக்கது. நாம் எமது பெரும் பான்மை யோரின் மொழியைத் தெரிவு செய்திருந்தால் நாம் பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அழிவுக்கு உள்ளாகி இருப்போம். இலங்கையில் ஆங்கிலமாக இருந்த அரசகரும மொழியைச் சிங்களத் துக்கு மாற்றியபோது வன்முறைகள் ஏற்பட்டதை நாம் கண்டோம்.
நாம் தெரிவு செய்த ஆங்கில மொழியை எமது தேசிய மொழியென்று நாம் சொல்லவில்லை. அதை எமது அலுவலக மொழியென்றே கூறினோம்.
பாடசாலையில் எந்த மொழியில் கற்றாலும் அனைவரும் ஆங்கிலத்தையும் கற்றனர். அதனால் எவருக்கும் ஆங்கிலத்தை மொழிபெயர்க்கும் தேவை ஏற்படவில்லை எனத் தெரிவித்து உள்ளார்.
இதே வேளை தென்கிழக்காசிய நாடுகள் அங்கம் வகிக்கும் ஆசியான் அமைப்பு 1967ம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டபோது இலங்கை அதில் இணைய விரும்பியதாகவும் ஆனால் இலங்கை ஸ்திரம் அற்ற நாடாக நோக்கப்பட்டதால் இலங்கை அதில் இணை வதற்கு சிங்கப்பூர் எதிர்ப்புத் தெரிவித்ததாக தாய்லாந்து இராசதந்திரியான சோம்பாங் சுசாரிகுல் கடந்த மாத முற்பகுதில் தெரிவித்து இருந்தமை குறிப் பிடத்தக்கது. காலம் கடந்த பிரச்சனை ஒன்றை நாம் இவ்விடம் சுட்டிக்காட்டுவது ஏனெனில் இலங்கை தனது இனப்பிரச்சனையை நியாயமாகத் தீர்த்துக்கொள்ள இன்னும் ஒரு சிறிய இடைத்தூரம் இருக்கின்றது. என்பதனைத் தொட்டுக் காட்டவே
C. C C C C C C C C C C C,

Page 4
*தபால் விலாசம்: இல.24/1, பொ
*தொ. 3.. 6
*எமது பிரதான விநியோகஸ்தர் : திரு
1Aறுபன் பீரிஸ் மாவத்தை, களுபோவிலை,
*ஆசிரியர் :இலக்கியச் சுடர்,
<>ganui:S.D.
*இலட்சியம்: துன்பப்ப
*சந்தா ஏற்:
*கணினி Golp66,
*அச்சுப் பதிப்பு:வணசிங்கா அச்சகம், இல.
சுவைத்திரள் பின்வரும் நாடுகளி
*பிரான்ஸ் *கனடா ?டென்மார்க் Gril)
விலாசங்கள் அடுத்த இ
விளறேக்கட்டணங்கள்
அட்டையின் பின் பக்கங்கள் முழு அளவு 3000.
அரைப்பக்கம் உள் அட்டை 1500.0
முழுப்பக்கம் உள் அட்டை 2000.
உட் பக்கங்கள் ஒரு பக்கம் 1000. O
இது சுவைத்திரள் 15 ஆண்டின் இதழாகும். இதன் உள்ளுராட்சி நிறுவனப் பிரதிகள் ருபா 80
சுவைத்திரள் நகைச்சுவை ஏடு இன்றளவும் வெளிவருவதற்கு
காரணம். அவர்கட்கு எமது பிரத்தி
 
 

ஒஒஒட்(சுவைத்திரள்)2
சுவைத்திரள் - 1993ம் ஆண்டில் இருந்து வெளிவரும் நகைச்சுவை
இதழ் (உலகச் சஞ்சிகை) அச்சடிக்கப் படும் பிரதிகள் ஆயிரம்
ான் தொழிலாளர் வீதி, மட்டக்களப்பு.
O779 OO4811 ந.Vநவமோகன், காயத்திரிபப்ளிக்கேசன்,
தெகிவளை. தொ.பே,இல-01-2727621. திக்கவயல்.சிதர்மகுலசிங்கம் சாமி, வத்தளை.
டுவோன் சிரித்து மகிழல்.
5 LILLDITILITg).
மைப்பு : சங்கர். T (26/1,திருமலை வீதி, மட்டக்களப்பு முரீலங்கா.
வில் விற்பனைக்காக கிடைக்கும். கிலாந்து *அவுஸ்திரேலியா *நியூசிலாந்து
தழில் அறியத்தரப்படும்.
溶>港>港※
சுவைத்திரளில் வெளிவரும் விடயங் கட்கு ஆசிரியரே முழுப் பொறுப்பு. 0 அவதானமாக எழுதுவது எழுத்தாளர் பொறுப்பு கொப்பியடித்த பக்கங்கட்கு எமது நன்றிகள்.
DO
IO
6NGO) Q) (ÖLJT 50/- þLITFG QFQD6 (STIJGODTLDTÖ, /- ஆகும். ஐரோப்பாவில் 2 யூ ரோக்கள். 港※港※
த பிரதேச சபைகளும், மாநகர சபைகளும் நகரசபைகளுமே யேக நன்றிகள் உரியவை (ஆ+ ர்)

Page 5
5廿5汇豆、
இக் க.முருகுப்பிள்ளை, முகத்துவாரம், இந: மாமியார் மருமகள் ஈண்டையைத் தீர்க்க எண்ன செய்ய 6රිගjණ්(Bö? ப: மாமியார் இறந்து விட்ட குடும்பத்தில் மாப்பிள்ளை எடுக்க வேண்டும்.
இக் ஆகலாவதி யாழ்ப்பாணம், 8:ை நணவண் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? ப; கணவனும், மனைவியும் சமபலமாகச் சண்டை செய்யும் வல்லமை கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
Bi lit.Jill IIiji, ljili). கே: ஒரு பெண்ணுக்கு தேவையானது எது? ஒரு ஆணுக்குத் SHADSBUMOTH6rg ப; ஒரு பெண்ணுக்குத் தேவை கண்ணோட்டம் உள்ள கணவன். ஆணுக்குத் தேவை தன் உயிர் மீது இழையோட்டம் மிக்க பாவை.
நேகோபால், ஏறாவூர். 85: முதலாளி, தொழிலாளிகளுக்கிடையே உள்ள 6šlotosofůb6ůU265ě5566)Jaš(Bůb? ப; முதல் உள்ள ஆழிக்குச் சொந்தமானவர், பின்னே வரும் ஆழிக்குச் சொந்தமானவரை அமிழ்த்திவிட வேண்டும் என்ற எண்ணம் இன்றித் தூக்கிவிடும் விசுவாசம் கொண்டவராக இருக்க வேண்டும்.
சே. அன்புமுருகு களுவாஞ்சிக்குடி,
கே: மனிதனுக்குப்பூரண நிம்மதிதருவது எது? ப: சரணம்.
*ே அ.எழில்முருகன், கம்பளை, 65; கற்புக்கரசி கண்ணவியா, மாதவியா? ப; கற்பெனப்படுவது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் நிற்பது என்பது காலத்தின் கருத்து சபல குணம் கொண்ட கோவலனுடன், நிறைகற்பாய் வாழ்ந்த கண்ணகி உயர்
S.
 

ਤਤC606 ਨੂੰ62 கற்பு நெறிக்குச் சொந்தம் கொண்டவள். கோவலன் பொன்னால் வாங்கப்பட்ட மாதவி, கானல்வரி பாடிய போதே உயர் கற்பில் இருந்து தாழ்ந்து விட்டாள் என்பதே கருடனின் தீர்ப்பு.
龚 நே.அன்பூபதி கல்முனை,
65 Uព្រោទ៍បំ 6បណ្តេញព្រឹក្លឆ្នាំ ១ប៉បpបំ បង្រៀលពី? ப; சம்பூரைப் பாரடா தமிழா தம்மூரில் இவர் அழும் கண்ணிரை துடையடா தமிழா அவர் வாழுமிடம் துலைந்த தடா வருந்தாயோ! எழுதமிழா; விழிதமிழா எட்டி உதை துன்பத்தை இளந்தமிழா!
:ே கயல்விழி அக்கரைப்பற்று. கே? மன்னிதனுக்கு ஏன் இறைவன் மாணத்தை வைத்தான்? ப; கவரிமான் என்ற விலங்கினம் மானத்தால் உயிர் விட்டு அழிந்ததுபோல், மனிதன் என்ற இனம் மானத்தால் இறக்கட்டும் என்ற பின் அனுபந்தச் சேர்க்கையால்!
மோ.சாந்தன், நெல்லியடி 833 எரிபொருட்களின் விலையைக் குறைக்க ஒரு வழி சொல்லுங்கள்? ப; அரசாங்கத்திடமே வழி சொல்லத் தெரியவில்லை. விலையைக் குறைக்க வழி சொல்வதற்கு என்னிடம் பல நூறு எண்ணைய்க் கிணறுகள் உள்ளதாக நினைக்கின்றீர் கள் போலும்!
நீர் அ.அன்புதாசன், கண்டி,
· ජීග: கடவுள் எங்கே இருக்கின்றார்? ப; நான் அவரை இன்னும் நேரில் கண்டேனில்லை. அது போல் நீரும் பக்குவம் பெற்ற நாளில் கடவுளை நோக்கிச் செல்வீராக!
ச்ே செஆழ்வாய்பிள்ளை, கரவெட்டி, கே: கற்பைப் பற்றிப் பெண்ணிடமே பேசுகின்றீர்கள், ஆணுக்குக் கற்பு இல்லையா? ப; கற்பு உள்ள கர்ப்பத்தை ஆண்கள் விரும்புவதால் பெண்ணிடமே அது பேசப்படும். ஆண்களிடம் கற்பும், கர்ப்பமும் தங்குவதற்கான உடலியல் பாத்திரங்கள் உண்டா உத்தமனே!
ரிேவிநாயகமூர்த்தி வாழைச்சேனை, 85; உணவு உண்ணாமல் உயிர் வாழும் சக்தி இருந்திருந்தால்? ப; வீடு பேறடைதல் இலகுவாக இருந்திருக்கும்.

Page 6
エミエ音エミ予エ முேராகவன், புத்தளம்,
83: Uசிக்குப் பணத்தை மட்டும் உணவாக உட்கொள்ள முடிந்திருந்தால்? ப; அவ்வாறான பைத்தியகார உலகம் ஒன்றை இறைவன் என்றும் படைக்கமாட்டான். பணம் உழைக்க மாட்டாத மனஉளைச்சல் இவ்வாறான கேள்வி ஒன்றைக் கேட்க உங்களைத் தூண்டியுள்ளது.
தேபுலமைவேலு, வத்தளை, 8:ை விகவிரட் பிடித்தால் எண்ண வரும்? ப; புகைவரும்; அதன் பின்னால் புற்றுவரும், காலம் போக "மகரகம கண் முன்னே வரும். மகரம் மறையத் தகனம் வரும்!
இக் க.செந்தில், கொழும்பு-06. 83: கடவுள் நேரில் வந்து ஏதாவது வரம் கேள்என்றால் என்ன ດຽອູ້ວນີ້? ப; கடவுள் நேரில் வந்தால் எனக்கு அப்பன் என்பதே சரியான கருத்து. வரம் தர முன்பே தோளில் ஏறிவிடுவேன். இனி அவராவது படுகின்ற பாடாவது.
இக் இ.கபில்தேவ், மாத்தளை, 8ரு: அர்த்தநாரீஸ்வரர்ஆனா? பெண்ணா?
& விகுலாம், மன்னார்.
கே: நீங்கள் ஆஸ்திகனா? நாஸ்திகனா? ப; மனம் என்ற கோயிலுக்குள் ஆஸ்திகன். விவாத மேடையில் நாத்திகன்.
இக் ரீசூசை, மன்னார்.
665: 5tagüULib Uritsugyo-gust g56)gor? ப; சரியா, தவறா என ஆராயும் காலம் போயிட்டுது தம்பி. வீட்டுக்குள் வந்தே பார். பார். என்ன ஓடுகிறது. ஆடுகிறது. சீ.டீ.க்குள் பூதம் போல் அடைபட்டுக் கிடக்கிறது. பார்த்துத்தள்ளுடா வாலிபா?
நீல் மு.சிவலிங்கம், சிங்களவாடி, 8க: கவிதை எழுதுவதற்கு என்ன செய்ய வேண்டும்? ப: கவிதைக்குத் தகப்பனின் பெயர் 'க'. தகப்பனின் முதல் எழுத்தான 'க'வில் விதை உள்ளதா என முதலில் உன் உள் மனதைச் சோதிக்க வேண்டும். அவ்வாறு
 
 
 
 
 
 

ஒன(சுவைத்திரள்)2
இருப்பின் கவிதை பேனையை நாடிச் செல்லும் நீராக எதுவும் செய்ய வேண்டிய கட்டாயம் இல்லைங்க.
கோபாலசிங்கம், வவுனியா, 65; ஒரு மனிதன் எப்படி இருக்க வேண்டும்? ப; சுமை தாங்கியாக வேண்டும் தப்புத்தாளமாக இருக்கக்கூடாது.
கே.சிங்கராஜா, கைதடி, 65; அரசுக்குச் சுகமானது எது?கடினமானது எது? ப; குடும்பி மலையில் குடுமியைப் பிடிப்பது சுகமானது, கீரிமலையில் கீரியைப் பிடிப்பது கடினமானது.
முே.சிவானந்தராசா, ஆலையடிவேம்பு 65; பெஷாசீர் பூட்டோவைக் கொலை பற்றி உமது ®ປໂບໍ່ປາຽແພທີ່ 6rarar? ப; குன்றிமணி கொலை செய்த பவுண்.
65; கடின உழைப்பால் மாத்திரம் ஒருவர் மூண் 6னற UppruguDIT? ப; கடின உழைப்பில் வட்டிக்குப் பணம் கொடுப்பதும் இப்போது அடங்கும். அவ்வாறு கடின உழைப்பு ஒன்றினை நீங்கள் செய்வீர்களாயின் முன் ஏற முடியும் என்பதை உறுதிப்படத் தெரிவிக்கின்றேன்.
விேதர்மலிங்கம், நாவிதன்வெளி கே: மிருகங்கள் சிறித்தால் அது சிரிப்பாகுமா? ப; பல்லுத் தெரிந்தால் அது சிரிப்பாகாது. பல்லோடு சேர்ந்து முகமும் சிரித்தால் தான் சிரிப்பு.
மே.பாஸ்கரன், சாகாமம். ●。 65; சங்க காலக் கவிதைகளை ஆராயின் பாமரன் என்ன நினைப்பான்?
ப; பாவனையில் இல்லாத கவிதைகள் என நினைப்பதுடன், ஓர் இறாத்தல் பாணுக்குப் படும் கஸ்ட காலத்தில் இதுவும் ஒரு சோதனையா என எண்ணுவான்!
முே.நவாய், புத்தளம். 635: 656frg Dafé65f.65uTurglasgirajulagapatroglu Gortor? ப; வழிபடலாம்; ஆனால் கடவுளின் படத்தை தராசின் நடு நெம்புகோலில் வைக்க வேண்டும்.

Page 7
区、 š6,Glefób8D5UHT, uHTúpilLITG1íb,
கே: தலைவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும்? 홍 ப; இலை, மறை, காய் போல் இருக்கக் கூடாது. தலைமுறை காயாக இருக்க வேண்டும்.
இக் கரங்கராஜா, மட்டக்களப்பு
கே: இப்போதும் பேய்கள் இருப்பது உண்மை என 665656OrD2 ப; நாங்கள் பேய்களாக இருக்கு மட்டும் பேய்களை நம்பித்தான் ஆக வேண்டும்.
விேசந்திரன், மட்டக்களிப்பு கே: ஜனநாயகம் எப்போது நலிவடைகின்றது? ப; முடியாட்சியை ஒழிக்கத் துப்பாக்கி ஏந்தியவர்கள், ! பேரினவாத ஆட்சிக்குச் சார்பாகக் கருத்துக்களை முன்வைக்கும் போது!
இச் சங்கர்,தாண்டவன்வெளி கே: இலங்கையில் இனப்பிரச்சனை நீராமைக்கு எண்ண காரணம்? ப; அது ஒரு விடை பிழைத்த கணக்கு, பின்னங்கள் அதிகம்; பெருக்கல்கள் தாராளம், குத்தல்கள் ஏராளம் 6T6öi G)ğFu'i (86) uITLib?
ச்ே ச.பொன்னம்பலம், அல்வாய்,
கே; அடக்கம் என்றால் எண்ணகருடா? ப; எத்தனையோ நன்மைகளைச் செய்து விட்டு, விளம்பரம் இல்லாமல் ஒதுங்கிக் கொள்ளுதல்.
நேதங்கமணி, வாழைச்சேனை. இந: அன்பு என்பதற்கு அர்த்தம் என்ன கருடா? ப; தமக்கு இடறு கட்டை போல் இருப்பவர்கட்கும் துன்பம் செய்யாத மனோநிலை
“தம்பி மனே. என்ர கண்ணாடியக் கானல்லடா கொஞ்சம் தேடிப்பார். வெறும் பேஸ் தான் கிடக்குது.” "ஹரீ. ஹரீ. ஐயோ அம்மப் பா! நீங்க கண்ணாடியக் கண்ணிலயே பொட்டுத்துத் தேடித் திரியிறீங்களே அம்மப்பா"
"ஒம்டா மனே. ஹி..ஹி..ஹி" أهم
 
 

ெேசல்வம் இருந்தால் நல்லதுதான, செல்வத்தி னால் மகிழ்ச்சியை விலை கொடுத்து வாங்க முடியாது. அதிகாரத்தால் அதைப் பெற முடியாது.
எேதிர் மறை சிந்தனை உள்ளவர்களிடம் சிநேகம் கொள்ளும் போது ஜாக்கிரதையாய் இருங்கள். இல்லையேல் அது உங்களிடம் ஒட்டிக்கொள்ளும், ஏனெனில் அதுவும் நட்புத் தேடி அலைகின்றது.
சிேல் சமயங்களில் அற்ப விசயங்களுக்காக மற்றவர்கள் உங்களைப்பற்றி என்ன குறைகள் சொன்னாலும் துடைத்தெறிந்து விடுங்கள். அல்லது ப்பூ என்று ஊதிவிடுங்கள் அதைப் பொறுத்தவரையில் உங்கள் உணர்ச்சிகள் மரத் துப் போனதாகவே இருக் கட்டும் . இப்படிப்பட்ட சூழ்நிலையை எப்படிச் சமாளிக்க வேண்டும் என்பதனை கவிஞர் கண்ணதாசன் திரைப்படத்துக்காகப் பாடியதைப் படியுங்கள்.
“உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீதான் நீதிபதி மனிதன் எதையோ பேசட்டுமே மனசைப் பார்த்துக்க நல்லபடி கதை கட்ட ஒருவன் பிறந்து விட்டால் கண்ணகி வாழ்விலும் களங்கம் உண்டு.”
சிற்சில சூழ்நிலைகளில் சூடு சுரனை அற்றவ னாக ஆகி விடுவதே மேல்.
பேரந்த மனப்பான்மையுடன் இருங்கள்" எனச் சொல்கிறார் ஒரு சமூகவியல் நிபுணர். அப்படி இருந்தால் குடல் புண், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் ஆகியவற்றை தவிர்த்து மகிழ்ச்சியான வாழ்க்கை வாழலாம்.
பேலரின் ஒத்துழைப்பில் தான் ஒரு பாடல் ஒலிக்கின்றது. பலருடைய உறவில் தான் உயர்வு வருகின்றது.
“மகிழ்ச்சி பெறும் வழிகள்’ என்ற நூலில் இருந்து

Page 8
୍ୱିଜ୍ଞା
ஒரு குழந்தை பிறந்து சில மணி நேரங்களின் பின்னர் தாய்ப்பாலைப் பருகிய நேரம் முதலே அக்குழந்தை தனது தாய் யாரென்பதனை அறிந்து கொள்கிறது. தனது தாயின் மீது அன்பு கொள்கிறது. தாயின் குரலோசைக்கு செவி சாய்க்கப் பழகும். குழந்தை அழும் போது அத்தாய் ஓடிவந்து தனது இரு கைகளாலும் தூக்கி அணைத்தெடுத்து முத்த மிடும்போது அக்குழந்தையின் அழுகை நின்றுவிடும். தனது ஒரே பாதுகாவலர் இத்தாயே தான் என அக்குழந்தை நினைக்கும். அக்குழந்தையானது தனது தாயைப் போலவே தனது தந்தைக் கும் அன்பு செலுத்தும்.
குழந்தையானது தனக்கு பெற்றோரிடமிருந்து அன்பு கிடைப்பது போலவே பாதுகாப்பும் கிடைக்க வேண்டுமென எண்ணும். விழுந்து விழுந்து நடை பயிலும், குழந்தையானது தான் விழும்போது தன்னை தனது தாய் விழாமல் பாதுகாப்பாள் ଶ ଶi id ); நம்பிக்கையோடு நடைபயில ஆரம்பிக்கும். இன்று முழு உலகமுமே பிள்ளைகளின் பாதுகாப்பு பற்றி விழிப்புடன் இருக்கின்றது. பிள்ளைகளின் விடயத்தில் தாய்மார் விடும் பிழைகளும் இருக்கவேதான் செய்கிறது. ஒரு பிள்ளை ஏதாவது தவறைச் செய்துவிட்டால் அதை மறைத்து அதற்கு எவ்விதமான அறிவுரைகளையோ அல்லது தண்டனையோ வழங்காமல் சில சமயங்களில் பிள்ளைகள் செய்யும் தவறை தந்தைமாரிடம் கூட சொல்லாமல் விடும் சந்தர்ப்பங்கள் ஏராளம், தமது பிள்ளைகள் மீது வைத்திருக்கும் அளவு கடந்த அன்பின் காரணமாக சிலதாய்மார் இவ்வாறு செய்யக் கூடும். எனினும் இதன் பின்விளைவாக இருப்பது எதிர்காலத்தில் பிள்ளைகள் முரடர்களாக மாறக் கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமாக இருப்பதாகும்.
பெற்றோரின் அன்பும் பாதுகாப்பும் பிள்ளை களின் ஆளுமை வளர்ச்சிக் கும் , மனோநிலை
 
 

λέλλάξέλλέξέλιξλλίξέλιξία
வளர்ச்சிக்கும் மிகவும் அத்தியவசியமானதாகும். பிள்ளைகளின் மனதில் நல்ல சிந்தனைகள் வளர்வ தற்கு அடித்தளம் இடவேண்டியது பெற்றோரின் கடமையாகும். ஆம் , அப்பிள்ளையின் மூலம் எதிர்காலத்தில் சமூகத்திற்கு கிடைக்க வேண்டிய பயன்கள் பற்றியும் அவர்களிடம் தன்னம்பிக்கையை எவ்வாறு வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றியும் மெல்ல மெல்ல வாழைப்பழத்தில் ஊசி யேற்றுவது போல் சொல்லிக் கொடுக்க வேண்டும். இவ்வாறு பெற்றோரும், பெரியோரும் சொல்லிக் கொடுக்கும் விடயங்கள் பிள்ளைகளின் மனதில் 'பசுமரத்தாணி’ போல் பதியும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
பிள்ளைகள் சிறுவயது முதலே தாம் வாழும் சூழலில் இருந்து பெற்றுக்கொள்ளும் அனுபவக் கல்வியைப் பின்பற்றியே தனது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும். சில பிள்ளைகள் தமது வயதினை ஒத்த ஏனைய பிள்ளைகளோடு சேர்ந்து விளையாடுவார்கள். இவ்வாறான சந்தர்ப்பங்களில் வெற்றியைப் போலவே தோல்வியையும் தழுவ வேண்டிய ஒரு நிலை ஏற்படும். இவ்வாறான சந்தர்ப்பங் களில் வாய்த்தர்க்கங்கள் ஏற்படக் கூடும். சில சமயம் இச்சம்பவம் ஒரு சிறு சண்டையாகவே முடிவடையவும் கூடும். இவ்வாறான நேரத்தில் தாயானவள் தனது பிள்ளையை மட்டும் கருத்திற் கொள்ளாது நடு நிலைமையாக நின்று எல்லோருக்கும் பொதுவான ஒரு தீர்ப்பினை பெற்றுக் கொடுக்க வேண்டும்.
பிள்ளைகள் தவறு செய்யும்போது அவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டுமா? இல்லாவிட்டால் தண்டனை வழங்காமலேயே அவர்களை திருத்த லாமா? இந்த வினாக்களுக்கு புத்திசாதுரியமான தாயானவள் இலகுவில் விடை காண்பாள். பிள்ளை களுக்கு தண்டனை வழங்கியேயாக வேண்டுமென்ற

Page 9
口寸 நிலை ஏற்படும்போது அவர்களை தனிமையான முறையில் மறைவில் தண்டிக்க வேண்டும். அதுவன்றி பகிரங்கமாகத் தண்டிக்கப் போனால் மனோநிலை ரீதியாக பாதிப்புக் குள்ளாகுவார்கள். இவ்வாறான சந்தர்ப்பங்களில் முழு சமுகத்தையுமே வெறுப்புடன் நோக்கக் கூடிய ஒரு நிலை ஏற்பட வாய்ப்பேற்படும். பிள்ளைகளுக்குத் தண்டனை வழங்கும் போது இவ்வாறு தண்டிப்பதற்கான காரணம் பற்றி எடுத்துக் கூறுங்கள். அதுவன்றி மனிதாபிமானமற்ற முறையில் தண்டிக்க வேண்டாம். ----
இன்றைய காலத்தில் சிறுவர்களைப் பாலர் பாடசாலைக்கு அனுப்பாவிட்டால் அது ஏதோவொரு குறைபோலிருக்கும் இந்நிகழ் கால சமூகத்தில் வயதுக்கு முன்னரே பாலர் பாடசாலைக்கு அனுப்புவது ஒர் ஆடம்பரமான செயற்பாடாகும். சில பெற்றோர் பிள்ளைகள் வீட்டில் இருந்தால் அடிக்கடி தாய்மாருக்குச் சிரமம் கொடுப் பார்கள் என நினைத்து பாலர் பாடசாலைக்கு அனுப்புவர். இன்னும் சிலர் போட்டி நிறைந்த பாடசாலைக்கு தமது பிள்ளையை அனுப்ப வேண்டுமென்பதற்காக பாலர் பாடசாலைக்குப் பிள்ளை களை அனுப்புகின்றனர். இன்னும் சிலர் தாய், தந்தை  ܲܡ இருவருமே வேலைக்குப் போவதால் பிள்ளைகளைப் பார்த்துப் பராமரிக்க யாருமில்லை என்பதால் பாலர் பாடசாலையில் பிள்ளைகளைச் சேர்க்கின்றனர். இவ்வாறு பாலர் பாடசாலைகளைத் தெரிவு செய்யும் போது பெற்றோர் கவனத்திற் கொள்ள வேண்டிய விடயமானது, தாங்கள் தெரிவு செய்துள்ள பாலர் பாடசாலையானது குழந்தையின் மனோநிலையை எந்தளவில் பாதுகாத்து வளர்க்கக் கூடியது. அங்கு கற்றுக்கொடுக்கும் ஆசிரியை எப்படிப்பட்டவர் அப் பாலர் பாடசாலையின் சுற்றுப்புறச் சூழல் எவ்வாறானது? என்பவற்றையெல்லாம் கருத்திற் கொண்டே ஒரு நல்ல பாலர் பாடசாலையை தெரிவு செய்ய வேண்டும். s
அடுத்து பெற்றோர் மிகவும் சந்தோஷமடையும் காலம் தமது பிள்ளையை ஒரு பெரிய பாடசாலையில் சேர்க்கும் வாய்ப்பு கிடைத்தவுடனாகும். உங்கள் பிள்ளைக்கு புதிதாக புத்தகப்பை, நீர்போத்தல், புதிய
2222222222222222222.2%
ஆசிரியர் : “உவட் (What) என்றால் என்ன?” மாணவன் : “என்ன சேர்?’ ஆசிரியர் : “உவட் என்றால் என்ன எண்டு கேக்கிறன்?’ மாணவன் : “என்ன சேர்?’ ஆசிரியர் : "ஐயோ உனக்குக் காது கேக்கிறதில்லையா? என
கேட்டுக் கொண்டிருக்கிறா?” மாணவன் : “ஐயோ சேர் என்ன என்று மறுமொழிதானே ெ - கா.சிவலி
 

ਡਤ ਤਤ ਤਤ ਤਤ ਤਤC66 69 கொப்பி, பென்சில், போன்றவற்றை வாங்கிக்கொடுத்த நாள் முதலே அப்பிள்ளை பாடசாலைக்கு செல்லும் நாளை கணக்கிட்டபடி இருக்கும். இவ்வாறு ஆசை யோடிருக்கும் பிள்ளையைப் பாடசாலைக்கு அனுமதித்த பின் தாயானவள் சற்று சிந்திப்பாள். ஐயோ தனது பிள்ளை இன்று தனது அரவணைப்பிலிருந்து ஒரு புதிய சூழலுக்குச் சென்றுவிட்டதே அது அங்கே எப்படி இருக்குமோ? என்று பதற்றமடையவும் கூடும். எனினும் இது சிந்திக்க வேண்டிய அளவு பெரியவிடயமல்ல. பாடசாலைகளில் தரம் ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியையும் ஒரு தாய்மை அடைந்தவராகவே இருப்பார். இவ் 添 வகுப்பிலுள்ள ஆசிரியைமார் மிகவும் கருணையுடை யோராகவே இருப்பார்கள். இவ்வாறான ஆசிரியை மாரின் வழி காட்டலில் வளரும் பிள்ளைகள் நல்ல பணி புடையோராகவும் , சிறந்த ஆளுமையுடை யோராகவும் வளருவார்கள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. w 爱 பிள்ளைகள் ஒரு நாளில் அதிகமான நேரத்தை பெற்றோருடனேயே கழிக்கின்றனர். இதனால் பிள்ளைகளின் சிறந்த வழிகாட்டி பெற்றோரேதான். பிள்ளைகளின் சந்தோஷமே பெற்றோரினதும் சந்தோஷம் என்பதை நாம் யாவருமே அறிவோம். இதனால பிள்ளைகளுக்காக கணி ட கணி ட விளையாட்டுப் பொருட்களை எல்லாம் வாங்கிக் கொடுத்து வீண் செலவு செய்ய வேண்டாம். மாறாக பிள்ளைப் பருவத்திலேயே அவர்களிடம் வாசிப்புப் பழக்கத்தை ஊக்கப்படுத்துங்கள். இதற்காக நல்ல சிறுவர் கதைப் புத்தகங்களையும் சிறுவர் பத்திரிகை களையும் வாங்கிக் கொடுங்கள். பிள்ளைகளின் பிறந்தநாளை வெகு விமர்சையாக நீங்கள் கொண்டாடுவீர்கள் அவ்வாறான சந்தர்ப்பங்களில் பிள்ளைகளுக்குப் பரிசாக புத்தகங்களை வாங்கிக் கொடுங்கள். வாசிப்பு ஒரு மனிதனைப் பூரணப்படுத்தும் என்பதை காலப்போக்கில் பிள்ளைகளே அறிந்து கொள்வார்கள். இவ்வாறு சீராக பிள்ளைகளை வளர்க்க முயலுங்கள் நிச்சயம் முயற்சி திருவினையாக்கும்.
றஸ்மினா றாசிக்
குருநாகலி
2...Αλλυλιέλι...
ர்ன எண்டு
> 39 FT60 (56060.
5ÉjasLD -

Page 10
-ళాశాల-కళాశాల-కళాశాల-కళాశాల-కళాశాల-శారీ
காப்புறுதி துறையில் சர்வதேச விருது சேவையை வழங்கிவரும் குழுவி
* பாதுகாப்பா? * பிள்ளை
* சேமிப்பா? * முதலீடா
* ஓய்வூதியமா? கோப்புறுதி
எவ்வாறாயினும் நல்லதோர் திட்டத்தை வடி உங்களுடன் தொடர்ந்து செய்யப்படும் திரு.
மீன் விலை கூடிவிட்டது கோழி இறைச்சியின் விலை 'ஆ' என்ன விலை வேகத்தில் சென்று விட்டது. எ பாம்பு. நாம் ஏன் சாப்பிடக்கூடாது? குறைந்த விை தருகின்றோம். மலைப்பாம்பு நாடுங்கள் தேடுங்கள்; மலைப்பாம்பு ெ
கண்பு வீதி, செ
 
 
 
 

誓エリ豆普委 ஒஒ(ெசுவைத்திரள்)2 శ్యా 5 به عی S7.1 ربعات sak^ g: * M , s YS<7 Sc፡፡ bశాశీశాక ఒజశారీశాద్ధి
è
கள் பெற்று பல ஆண்டு காலம் நல்ல னரைநாடுங்கள் உங்கள் தேவை,
செல்வத்தின் எதிர்காலக் கல்வியா?
துறையில் வேலை வாய்ப்பா?
வமைத்து அதனை வெற்றி பெறும் மட்டும்
S. பத்மநாதன் குழுவினரை அணுகுங்கள், !
TP : 0776704290
0652224.565 Fax : 065.22.24574
யூனியன் இன்சுரன்ஸ் PLC 219, திருமலை வீதி,
மட்டக்களப்பு
AeeheJe eee SeeLeAKheYeh eJ Te S eAieYeAeJk Y S eeLeAeieYe T eAieAeAeAJe T TeAeAeieie
oயும் 'கோ' என அதிகரித்துவிட்டது. ஆடு விலை ன ஏங்குகின்றீர்களா? சீனாவில் சாப்பிடுகிறார்கள் லயில் நிறைந்த சுவையில் ‘றோஸ்ற் பண்ணித் ஒடுங்கள் மலைப்பாம்பு றோஸ்ற் சாப்பிடுவதற்கு. றஸ்ரோறண்ட் -
காழும்பு - 06

Page 11
エミエ
நோயின்றி ஆரோக்கியமாக வாழ்வதற்கு மிகச் சிறந்த மருந்து எது என்றால் அது சிரிப்புத்தான் என்று உறுதிபடக் கூறப்படுகின்றது.
20 வருடங்களாக ஆராய்ச்சி நடத்திய உடற்கூறு வல்லுநர்கள் எமது மனதிற்கும் எமக்கு வருகின்ற நோய்களுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா என்று கண்டறிய முயற்சித்தார்கள்.
இவ் ஆராய்ச்சியின் மூலம் நமது எண்ணங்களுக்கும் மனநிலைக்கும் ஏற்ற மாதிரி நம் உடம்பிற்குள் இயங்குகின்ற கலங்களின் / உயிரணுவின் (செல்களின்) நோயெதிர்ப்பு சக்தி கூடுகின்றது அல்லது குறைகின்றது என்று அறிந்தார்கள். நம் உடம்பிற்குள் இருக்கின்ற நரம்புகள் ஒரு வேதிப் பொருளை வெளியிட்டுக் கொண்டே இருக்கின்றது. அதற்கு CGRP சீ.ஜி.ஆர்.பி என்று அவர்கள் பெயரிட்டிருக்கின்றார்கள். நம் நரம்புகளுக்கு அடியிலிருக்கின்ற நோய் எதிர்ப்புச் சக்தி கலங்களின் பணியை ஊக்கப்படுத்துவதும் மட்டுப்படுத்துவதும் இதுதான். நமது மனநிலைக்கு தக்கவாறு இது அதிகமாகவோ அல்லது குறைவாகவோ உற்பத்தியா கின்றது.
நாம் மனம் விட்டுச் சிரிக்கும் போது இந்த சீ.ஜி.ஆர்.பீ. அதிகமாகச் சுரக்கின்றது என்பது தான் அவர்கள் ஆராய்ச்சியில்
கண்டுபிடித்த உண்மை.
நியூயோர்க் மாநிலப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆதர்ஸ்ரோன் என்பவர் தனது ஆய்வின் மூலமாகப் பல ா உண்மைகளைக் கண்டு பிடித்திருக்கின்றார்.
உலகத்திலுள்ள மிகச் சிறந்த மருந்து மனம் விட்டு சிரிப்பது தான் என்று அவர் சொல்கின்றார். எனவே மனம் விட்டு நன்றாகச் சிரித்தால் பல வியாதிகளை நாம் விரட்டி விடலாம். இப்பொழுது வெளிநாடுகளில் பல நோயாளிகளுக்கு சிரிப்பு வீடியோப் படங்களைப் பாருங்கள் என்று டாக்டர்கள் அறிவுரை கூறுகின்றார்கள்.
வில்லியம் பிறை என்ற மருத்துவ அறிஞர் சிரிப்புப் பற்றி நிறைய ஆராய்ச்சி செய்துள்ளார். நோய் எதிர்ப்புச்சக்தியை
உடம்பில் உற்பத்தி செய்யக்கூடிய வெள்ளை அணுக்களின் பணியைச் சிரிப்பு வேகப் படுத்துகின்றது என்று அவர் கூறுகின்றார்.
சிரிப்புப் பற்றி ஆராய்ச்சி செய்கின்ற அறிஞர் களுக்கு ஜெலொகோ லொஜிஸ்ட என்று பெயரிடப்பட்டுள்ளது. இவர்கள் பல ஆராய் ச் சிகளைச் செய்து பல உண்மைகளை வெளியிட்டிருக்கின்றார்கள்.
சிரிப்பு நமது இரத்தத்தில் அதிகப்படியான பிராணவாயு இருப்பதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுக்கின்றது. சிரிப்பினால் இருதய தசைகள் வலுவடைகின்றன. அதிக இரத்த அழுத்த அளவு குறைகின்றது. நுரையீரல்கள் நன்றாக வேலை செய்கின்றன. அத்துடன் என்-சீபெலின் (ENCEPHALIN) என்கின்ற உட்சுரப்பை (HORMONE) நம் உடம்பில் சுரக்கச் செய்கின்றது. தசை வலியை நீக்க உதவுவது இந்தச் சிரிப்பு, சிரிப்பதனால் இரத்தக்குளாய் விரிவடைகின்றது, இரத்த ஓட்டம் அதிகரிக்கின்றது. அத்துடன் மன இறுக்கமும் தளருகின்றது. சிந்தனைகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் தலைமைப்பீடமாக
 
 
 
 

江エマー குவைத்திற ទr
செயற் படுகின்ற நமது மூளையினுடைய வலது பக்கப் பகுதி சிரிப்பினால் நன்றாகச் செயற்படுகின்றது. சிரிப்பு குடற்புண் (PEPTICULCER) LDTSflungo u65i 55i 5UTLD6ò தடுக்கின்றது. இதனால் தான் இறைவன் உலகிலுள்ள ஜீவராசிகளிலே மனிதர்களுக்கு சிரிப்பெனும் சிறந்த மருந்தை தந்திருக்கின்றானோ? எனவே சிரிப்போம் நோய்களை விரட்டி, ஆரோக்கிய வாழ்வு வாழ்வோம்!
உலகிலேயே குறைவாகச் சிரிப்பவர்கள் பிரித்தானியர்கள் என்றும் கூடுதலாகப் பிரஞ்சுக்காரர்கள் சிரிக்கிறார்கள் என்றும் புள்ளி விபரம் கூறுகின்றது. எமது நிலை எவ்வாறோ?
நன்றி ! இன்று ஒரு தகவல்
攀 變、鬱
حیخچتحNح
S ప్రేచి ސ .6 ܢܬܠ N
கதருக 10னமாற்றம் அடைய வேணும், மனமாற்றம் அடைய வேண்டும் எண்டு சொல்லி இந்தப் பக்கத்தில் இருந்து அந்தப் பக்கம் வரை மதமாற்றம் செய்யிறாங்கள். இவங்கள் எல்லாம் ஒரு மதத்தில் இருந்து மாத்திரம் தான் பணத்துக்குப். பொண்ணுக்கு. வீட்டுக்கு. ஏங்கி நிக்கிற LIGO வீனமான ஆக்களையெல்லாம் மனமாற்றம் அடையச் 6ខាឃុំឃfញrសំយ. ភ្ញាសាសំយ (Buru (BFញញ மதங்கள *6ញ60 போய்ச் சேர்ந்தாப் பொறகு தான் விளங்கும். அதுக்குப் பிறகு மனமாற்றம் அடைய முடியாது எண்டு. அரோகரா.
أمر

Page 12
சத்தியவான் சாவித்திரி தமி
(சென்ற மாத இன்றைய இளம் சந்ததிக் ( இதழ் தொடர்ச்சி.) புரியவில்லை. சிறுவர்கட்கு ஆறாம் அங்கத்தைச் சுவைத்
காட்டினுள் வெகுதூரம் சென்றனர். ஒரு மரம் கூட விறகுக் குத் தேவையான வண்ணம் பட்டுப்போய் இருக்கவில்லை. சாவித்திரிக்குக் கனிகள் சேகரிக்கும் உற்சாகமில்லாததால் பல பனி மரங்களில் ஏராளமாகக் கனிகள் பழுத்துத் தொங்கியதைக் கண்டும் அவன் கணவனைப் பின் தொடர்வதிலேயே மனத்தைச் செலுத்தி னாள்.
உச்சிவேளைக்கு மேலாகியும் ஒரு மரம் கூடக்கிடைக்காததால் இருவரும் சோர்வடைந்தனர். விறகு வெட்டிச் செல்லாவிட்டால் அன்று உணவு கிடைக்காது. இதை உணர்ந்து இருவரும் காட்டில் மேலும் சிறிது தூரம் சென்றனர், ஒரு நெட்டையான பட்டுப்போன மரம் நின்று கொண்டிருந்தது. அதை அடியில் வெட்டிச்சாய்த்தால், இரண்டு மூன்று நாள் களுக் குத் தேவையான விறகு கிடைக் கும் . சத்தியவான் உற்சாகமாக சாவித்திரியிடம் “ஓர் ஒரமாக உட்கார்; இதோ இதை வெட்டிச் சாய்க்கிறேன்’ என்று தோளிலிருந்த கோடாலியை எடுத்துக் கொண்டு மரத்தை நெருங்கினான். கோடாலியை மரத்தின் அடிப்பாகத்தை நோக்கி உயர்த்தி பலம் கொண்ட மட்டும் கீழே இறக்கப் போகும் சமயம் கைநழுவி கோடாலி தூரம் போய் விழுந்தது. அன்றுவரை அவனுக்குக் கோடாலி கை நழுவியதே இல்லை. 美
சாவித்திரிக்கும் இது தெரியும். சத்தியவான் கோடாலியை எடுத்து மீண்டும் மரத்தை வெட்ட உயர்த்தும் சமயம் சாவித்திரி தடுக்க எண்ணி எழுந்திருந்தாள். அதற்குள் கோடாலி மரத்தின் அடிபாகத்தைப் பலமாகத் தாக்கிற்று. மறுகணமே மரம் பலத்த சத்தத்துடன் சத்தியவான் மீதே சாய்ந்து விட்டது.
 
 

ழ்ப் பாரம்பரியக் கதையாகும்.
கு இக்கதைகள் பற்றி எதுவும் کیمبر ப் புரியும்படியாக இக்கதையின் ébořisťujší ந்திரள் வெளியிடுகின்றது.
சாவித்திரி தேவியின் மூல மந்திரத்தின் வலி மையால் சாவித்திரியின் கண்களுக்கு யமதர்ம ராஜன், சத்தியவானின் உயிரைப் பறித்துச் செல்வது தெரிந்தது. உடனே அவள் அவனு டைய தலையை எடுத் துக் கீழே வைத்தாள். தழைகள் இலைகளை எடுத்துக் கணவனின் Զ L- 600 67) நன்ற கா &XXX: மறைத்தாள். விலங்குகள், பறவைகள் கணவனின் உடலைச் சேதப்படுத்திவிடாமல் பத்திரப்படுத்தினாள். பிறகு வேகமாகயமதர்மனைத் தொடர்ந்தாள். 들 பின்னால் யாரோ தொடர்ந்து வருவதை உணர்ந்த யமதர்மன் திரும்பிப் பார்த்தான். சாவித்திரி அவனை நிழலைப்போல் தொடர்வதைக் கண்டதும் ஆச்சரியமடைந்தான். “சாவித்திரி ஏன் பின் தொடர்ந்து வருகிறாய். உன் கணவனுடைய ஆயுள் இன்றுடன் முடிந்துவிட்டது! அவன் செய்த கர்மவினைப் பயனை அனுபவிக்கப் போகிறான். எல்லா உயிர்களும் கர்மவினையினால் பிறந்து, கர்மவினைப் பயனாலேயே இறக்கின்றன. இன்பம், துன்பம், மகிழ்ச்சி, வருத்தம் ஆகிய அனைத்தும் கர்மத்தினாலேயே ஏற்படுகின்றன. எவன் ஒருவன் ஜம்புலன்களையும் அடக்கி ஈஸ்வரனைச் சரண் அடைகிறானோ அவன் பிறவித் துன்பத்திலிருந்து விடுபடுகிறான்.”
யமதர்மன் கூறியதைக் கேட்டு சாவித்திரி அவனை வணங்கினாள்.
“சாவித்திரி என்னைப் பின் தொடராதே, திரும்பிப்போ’ என்று சொல்லிக்கொண்டே யமதர்மன் தென்திசையில் நடக்கத் தொடங்கினான். குறுக்கே பெரிய கொதிக்கும் நீர் நதி வேகமாகப் பாய்ந்து கொண்டிருந்தது. சாவித்திரி தேவியின் மூலமந்திரத்தை உச்சரித்துக்கொண்டே அந்தக் கொதிக்கும் ஆற்றில் இறங்கி நடந்தாள். வெள்ளம் அவளைத் தடுக்க வில்லை. கொதிக்கும் தண்ணிர் அவளுக்கு குளிர்ந்த

Page 13
நீராகிவிட்டது. சாவித்திரி கரை ஏறி யமதர்மனைத் தொடர்ந்தாள்.
பின்னால் காலடிச் சப்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தான் யமதர்மன். வேகமாக சாவித்திரி பின்னால் நடந்து வரமுடிந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டான். “சாவித்திரி வீணான முயற்சியில் இறங்காதே. என் உலகத்திற்கு பூமியில் பிறந்த உடலோடு வரமுடியாது. போ. திரும்பிப்போ’ என்று எச்சரித்தான்.
சாவித்திரி அவனை வணங்கி “தர்ம நீதி தவறாத தர்மராஜனே ஞானக்கடலான தங்களையும் என் உயிரினும் மேலாக கணவனையும் எப்படிப் பிரிந்து செல்வேன்?’ என்றாள்.
“கற்புக்கரசியே! சாவித்திரியே! உன்னுடைய பதிபக்தியை மெச்சுகிறேன், அஸ்வபதி மகாராஜனும் மாலதிராணியும் செய்த தவத்தாலும் பூசைகளாலும் தேவி சாவித்திரியின் அருளால் பிறந்தவள் நீ, அதனாலேயே என்னைப் பின் தொடர்ந்து இவ்வளவு தூரம் வந்திக்கிறாய். உன்னுடைய மனவலிமையும் சாவித்திரி தேவியிடம் உள்ள உன் பக்தியும் எதற்கும் அஞ்சாதவளாக்கி விட்டன. கணவன் உயிரைத் தவிர வேறு ஏதாவது வரம் கேள், தருகிறேன்’
“காலம் தவறாது கடமையைச் செய்யும் நீதிமானே! பொட்டும் பூவும் இல்லாத பெண் வாழ்க்கை ஒரு வாழ்க்கையா? தர்மராஜனே. தாங்கள் சொன்னவிதம் வரம் கேட்பதற்கு முன் சில சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ள விரும்புகிறேன். தயவு செய்து சொல்லவும். கர்ம வேதங்கள் எத்தனை வகைப்பட்டவை? எத்தகைய கர்மங்களைச் செய்பவன் எப்படிப்பட்ட பலன்களை அனுபவிக்கிறோன்?’ என்று பணிவுடன் கேட்டாள்.
“மாதரசே! நல்லவை கெட்டவை என்ற இரண்டே பிரிவுகளுடையவை கர்மங்கள். நற் கர்மங்களைச் செய்பவ்ன் நல்ல பதவியை அடைகிறான். தீய கர்மங் களைச் செய்பவன் நரகம் முதலான தண்டனைகளை அடைகிறான். நற் கர்மங்களைச் செய்பவன் எதை வேண்டிச் செய்கிறானோ அந்தப் பதவி கிடைக்கிறது. சொர்க்கத்தை வேண்டி யாகம், தான தர்மம் முதலான வற்றைச் செய்பவன் சொர்க்க லோகத்தை அடைகிறான். அவன் செய்த நற்பயன் காரணமாக அவ்வளவு காலம் சொர்க்கபோகத்தை அனுபவிக்கிறான். அந்தக் காலம் முடிந்ததும் அவன் பூமியில் மீண்டும் பிறவி எடுக்கிறான். தீய காரியங்களைச் செய்பவன் அதன் பயனாக நரகத்தில் உழல்கிறான். அவன் செய்த தீமைக்கான தண்டனை காலம் முடிந்ததும் பூமியில் மனிதனாகவோ, வேறு உயிரினமாகவோ பிறக்கிறான்.
ஒருவன் செய்யும் கர்மங்களுக்கேற்ப சொர்க்கத் தையும் நரகத்தையும் மாறிமாறி அனுபவிக்கிறான். எந்தப் பலனையுமே விரும்பாது எல்லாமே ஈசன் செயல் என்று சர்வ பரித்தியாகம் செய்பவனே பிறவித் துன் பத்தை அறுத்தவன். அவன் பூமியில் வாழுங்காலத்தில் தன்னலங்கருதாது பிறருக்குத் தொண்டு செய்வதிலேயே

ஈடுபட்டிருப்பான். யாகம் தான தர்மம் போன்றவற்றையும் தன் சுய நலத்திற்காகச் செய்ய மாட்டான்.
“தீய காரியங்கள் செய்பவனோ சுயநலம் ஒன்றைத்தவிர வேறு எதையும் நினைக்கமாட்டான். பூலோகத்தில் வாழும் காலத்தில் யாகமோ, தான தர்மமோ செய்தாலும் அதில் சுயநலம் இருக்கும். அவன் தவத்தைக்கூட ஒரு காரணமாகவும் சுயநலத்துக் காகவுமே செய்வான். பிறர் வாழ்வது அவனுக்குப் பிடிக்காது. பிறரைத் துன்புறுத்திப் பார்ப்பதில்தான் அவனுக்கு இன்பம் இருக்கும். பசி தாகம் என்று அவனிடம் யாராவது வந்தால் ஒன்று அவர்களுக்கு ஒன்றும் கொடுக்காமல் விரட்டி அடிப்பான். அல்லது தன் சுய நலத்துக்கு அவர்களைப் பயன்படுத்துவான். இப்படிப்பட்டவன் பிறந்து பிறந்து துன்பத்தை அனுபவிப் பான், நரகத்தில் வீழ்ந்து உழல்வான். இவனுக்கு விடுதலையே கிடையாது.
எந்த விதப்பலனையும் எதிர்பாராமல் எதையும் தன் கடமையாகச் செய்பவன் பற்றற்றவன். அவன் ஆயுள் முடிந்ததும் யாதொரு துன்பமுமினி றி உடலைவிட்டு உயிர்பிரிந்து விடும். அவன் எத்தகைய துன்பத்தையும் அடையமாட்டான். அவனுக்குப் பிறவித் துன்பமே கிடையாது. அவனுடைய ஆத்மா பிரம்மத் துடன் கலந்து விடுகிறது சாவித்திரி நான் முன்பு கூறிய படி ஒரு வரத்தைக் கேள், தருகிறேன்’ என்றான் யமதர்மன்.சாவித்திரி சிறிது சிந்தித்தாள். பிறகு சொன் னாள் “என் மாமனார் மாமியாருக்குப் பார்வை வர வேண்டும் அவர்கள் இழந்த அரசைப் பெறவேண்டும்.” என்றாள்.
“உன் விருப்பப் படியே உன் மாமனார் துயுமத்சேனனும் மாமியார் பத்மாட்சியும் மீண்டும் பார்வை யைப் பெறுவார்கள். அவர்களுடைய காலவபுரி ராஜ்யம் திரும்பக் கிடைக்கும். நல்லது சாவித்திரி, திரும்பிப் போய் மகிழ்ச்சியுடன் வாழ்ந்திடு” என்று சொல்லிக் கொண்டே யமதர்மன் வேகமாக நடந்தான். மாமனார் மாமியார் இருவருக்கும் பார்வை மீண்டும் ஏற்படுவதுடன் அவர்களுடைய ராஜ்யமும் திரும்பக் கிடைக்கப் பெற்றதை எண்ணி மகிழ்ந்து கண நேரம் மெய்மறந்து நின்றாள். மறுகணம் தன் உணர்வு பெற்று பார்த்த போது யமதர்மன் வெகு தூரம்
சின்னத்தம்பி : “பெண்களைத் தையல் எண்டு
சொல்றாங்களே”
செய்யிறபடியா.”
ன்னத்தம்பி : “வீட்டில சமையல் வேலையுஞ்
செய்யிறாங்க தானே. அப்ப அவங்கள சமையல் எண்டும்
சொல்லலாமா?”
.கா.சிவலிங்கம்.

Page 14
区、豆誓誓云重5、豆汇豆重亏、
சென்றுவிட்டான். சாவித்திரி வேக வேகமாக அவனைப் பின் தொடர ஓடினாள். வழியில் குறுக்கே ஆறு ஒன்று குறுக்கிட்டது. அதில் முதலைகள் நிறைந் திருந்தன. கால் வைத்தால் முதலைகள் அப்படியே பற்றி விழுங்கிவிடும். சாவித்திரி கலங்கவில்லை. சாவித்திரி தேவியின் மூல மந்திரத்தை உச்சரித்தக வண்ணம் நதியில் இறங்கினாள். முதலைகள் விழி விட்டு விலகிச் சென்றன. நதியில் அவள் நடந்து செல்வதற்காகத் தண்ணீர் பிரிந்துகொண்டது. சாவித்திரி மளமளவென்று நடந்து ஆற்றைக்கடந்தனள், 氢
கரை ஏறியதும் யமதர்மன் அருகிலேயே சென்றுவிட்டாள். அவன் வந்ததை அறிந்து யமதர்மன் கோபமாக அவளை நோக்கினான். “பெண்ணே! சொன்னால் திரும் பிப் போக மாட் டாயா? என் உலகத்திற்கு உலகத்தில் பிறவியெடுத்த உடலோடு மாத்திரமல்ல. ஆயுள்காலம் முடிவதற்கு முன்பும் யாரும் வரமுடியாது. பேசாமல் திரும்பிப் போ’ என்றதும் சாவித்திரி அவன் பாதங்களை வணங்கி எழுந்து கரங்குவித்து நின்றாள். “எனக்கு மேலும் சில சந்தேகங்கள் தோன்றியிருக்கின்றன. அவற்றைக் கூறுகிறேன். தெளிவு படுத்துங்கள்’ என்றாள்.
“கற்புக்கரசிகளின் சந்தேகங்களைத் தீர்த்து வைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். கேள் சொல்கிறேன்” என்றான் யமதர்மன். .
“என்னென்ன தானங்கள் செய்தால் என்னென்ன பலன் கிடைக்கும்? சிலர் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக உயிர் வாழவும், சிலர் சிறு வயதிலேயே இறப்பதற்கும் காரணம் என்ன?” சாவித்திரி கேட்டாள். யமதர்மன் சொல்லத் தொடங்கினான். பயன் கருதிச் செய்யும் தானங்களின் பலனைக் கூறுகிறேன். 教 ஓர் ஏழை பிரம்மசாரிக்கு மணம் செய்துகொள்ள ஆசை இருந்தும் அவனால் ஒரு பெண்ணை மணக்கவசதி இல்லை. அத்தகையவனைப் போல் ஒரு பெண் பருவத்தை அடைந்தும் அவளைத் திருமணம் செய்து கொடுக்க வசதி இல்லை. இவர்களுக்குத் திருமணம் செய்து வைத்தால் கோடி பசுதானம் செய்த பலன் கிட்டும். ஒரு பிரம்மச்சாரிக்குத் தம் பெண்ணைக் கன்னிகாதானம் செய்து கொடுப்பவர் இந்திர லோகத்தை அடைவார். ஏழைக்குப்பசு, பொன் போன்ற வற்றைத் தானம் செய்பவர் நோய் நொடியின்றி வாழ்ந்து சொர்க்கம் சென்று நூறு ஆண்டுகள் சுகபோகத்தை அனுபவிப்பார். எந்த தேவதையின் நிமித்தமாக நிலம், ! வீடு போன்றவற்றைத் தானம் செய்பவர், அந்த தேவதையின் லோகங்களை அடைந்து சுகமாக நூறு ஆண்டுகள் வாழ்வார். ஓர் ஏழைக்கு தன் கன்னிகையை தானம் செய்தவனுக்கு பத்து குளங்கள் வெட்டிய புண்ணியம் கிடைக்கும். புதிதாகக் குளம் வெட்டுபவன் நினைத்த காரியம் கை வரப் பெறுவான். நந்தவனத் தைத் தோற்றுவித்து அதை ஆலயத்திற்குத் தானமாகக் கொடுப்பவர் துருவ லோகத்தை அடைந்து பல
 
 
 
 
 
 
 
 

ལས་ 匡、
苓誓誓吞誓菸哲誓安誓云誓 ୪୮? *R୪ ஒன(சுவைத்திரள்)2 ஆண்டுகள் நலமாக வாழ்வார். லயங்களுக்கு விமானம் அல்லது ராஜ கோபுரம் கட்டுபவர் நூறு ஆண்டு காலம் பிரம்ம லோகத்தில் வாழ்வார்.
“முற்பிறவிப் பயனாலேயே ஒருவர் நூறு ஆண்டு காலம் உயிர் வாழ்கிறார். அவர் மூற்பிறவியில் நற் கர்மங்கள் அதிகமாகச் செய்திருந்தால் இன்பமான வாழ்க்கை அமைகிறது. நல்லது கெட்டதுமான காரியங் களைச் செய்தவருக்கு நல்லதும் கெட்டதுமான பலனே கிடைக்கும்.
“முற்பிறவியில் நற்காரியங்கள் செய்திருந்தாலும் சில அடாத காரியங்கள் செய்ததன் காரணமாக சிறு பிராயத்திலேயே மரணமடைகிறார்.
“எல்லாமே அவரவர் செய்த கர்மத்தின்படி பலன் கிடைக்கிறது; பிறவியும் எடுக்கிறார்கள். செய்த கர்மங்களுக்கான பலனை அனுபவித்தபிறகு மரணமும், அதன்பின் பிறவியுமாகத் துன்பப்படுகிறார்கள்.” எனக் கூறினான், யமதர்மன்.
“சூரியன் தவம் செய்து பெற்ற தர்மராஜனே சொர்க்கம் எத்தனை வகைப்பட்டது? நரகம் எத்தனை விதமானது? தயை கூர்ந்து சொல்லவும்’ என்று கரங்குவித்துக் கேட்டாள், சாவித்திரி.
யமதர்மன் சொன்னான். “பெண்ணே, மனிதர் செய்யும் பாவ புண்ணியங்கள் பலவகைப்பட்டவை. அதற்கேற்ப சொர்க்கமும் நரகமும் பலவகைப்பட்டவை. புண் ணியங்கள் பலவகையானவை. அதேபோல் பாவங்களும் பலதரப்பட்டவை. சொர்க்கானுபவத்தைப் போலவே நகரத்தின் துன்பங்களும் இருக்கின்றன. புண்ணியம் செய்தவர்கள் நரகத்தைப் பார்க்கவும் மாட்டார்கள். பாவம் செய்தவர்கள் புண்ணிய லோகத்தை நினைக்கவும் முடியாது. புண்ணியத்தையும் பாவத்தை யும் செய்தவர்கள் சொர்க்க லோகத்தையும் நரக வேதனையையும் அனுபவிப்பார்கள்.
“முற்பிறவியில் செய்த கர்மங்கள் காரணமாகச் சிலர் பிறந்தது முதல் சாகும் வரை துன்பத்தையே அனுபவிப்பார் சிலர் முதலில் சுகத்தையும் பிறகு துன்பத் தையும் அனுவிப்பார்கள். சிலரோ முதலில் துன்பத் தையும் பிறகு சுகத்தையும் அனுபவிப்பார்கள்.
சுகமும் துக்கமும் இரட்டைப் பிறவிகள். இரண்டும் மனிதன் அனுபவிக்க வேண்டியவை.
உலகத்தில் ஊர்வன, பறப்பன, நீந்துவன என்று மூவகை உண்டு. இவற்றின் செயலைப் போலவே உடல மைப்புகளிலும் வேறுபாடுகள் இருக்கின்றன. உடல் உருவ வேறு பாட்டைப் போலவே இவை அனுபவிக்கும் சுக துக்கங்களும் மாறுபட்டவை. தானங்களிலும் உயிரினங்களுக்குப் பயன் படக் கூடியவையும் உயிரினங்களுக்குத் துன்பம் விளைவிப்பவையும் இருக் கின்றன. இவை அனைத்தும் மனிதனுக்கு மரணத்திற்குப் பிறகு இன்ப துன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்பதை உணர்த்துகின்றன.
நரகங்களில் பலவகை உண்டு. அவற்றில்

Page 15
முக்கியமான வற்றைக் கூறுகிறேன். தீ குண்டம், உப்புக் குண்டம், மல மூத்திரக் குண்டங்கள், நஞ்சுக்குண்டம், ரத்தக்குண்டம், இறைச்சிக் குண்டம், அன்னக் குண்டம், நஞ்சு நீர் ஆறு, கொதி தண்ணீர்க் குளம், உருகிய இரும்புக் குண்டம், மற்றும் உலக்கை அடி, கத்தி, வாள் குத்து வெட்டு, சவுக்கடி, முதலைகள் வாழும் நீர் நிலைகள், பழுக்கக் காய்ச்சிய, இரும்புத் தூண் களைத் தழுவுதல், கொடிய நோயாளியைத் தழுவுதல், புழுக்கள் நெளியும் பள்ளத்தாக்குகளில் தள்ளுதல் தேள் பாம்பு நிறைந்த குகைகளில் வசிக்கச் செய்தல், உணவுக்குப் பதில் மலத்தை உண்ணச் செய்தல் இன்னும் இது போன்ற ஆயிரக்கணக்கான தண்டனை கள் இருக்கின்றன.
இந்தத் தண் டனைகளை நிறைவேற்றப் பதினாயிரக் கணக்காண தூதர்கள் நியமிக்கப்பட்டிருக் கிறார்கள். பாடம் செய்தவர்கள் கதாயுதத்தாலும் வாள், குத் துவா ளர் , கதாயுதம் , போன்றவற் றாலும் துன்புறுத்தப்படுகிறார்கள். தண்டனையை நிறைவேற்றும் யமகிங்கரர்கள் தயை தாட்சண்யம் இல்லாதவர்கள். அவர்களுக்குச் சொன்னபடி செய்வார்கள். மகா பாவிகளும், காமாந்தகாரர்களும், சிறிதும் இரக்கமின்றி தண்டிக்கப்படுவார்கள். யம புரியில் வேண்டியவர் வேண்டாதவர் என்று பாகுபாடே கிடையாது. அவரவர் செய்த நன்மை தீமைகளுக்கான கணக்குகள் இருக்கின் றன. அவற்றிற்கேற்பவே தண்டனை அளிக்கப்படும்.
தொடரும்
cLSLLSLqLALSLLALSLLALLALSLALALqLALSLqLASLLALAqALqLALqLMLqLALAqAALLALALLAqALALAqALALAqAqALALASLLAqALAAAAALLAA LAAAAALLAAAAALAAAAAAAAqAAAAAqALALLTALAALALALLAAAAA S sOeOsOeOeOLOeOLOsLOsOeOLOLOLOSeOeO
&剂 9 奎 彦 冢 ነኦmኽልል/ }###! குறுத்துத்து
16 வயதுக்குக் கீழ்ப்பட்டவர் களுக்கு சிகரெட் விற்க முடியாது எனச் சட்டம் வந்துட்டுது.
 
 
 
 
 
 

专访 芝、孪* சுவைத்திரள்>
ZOOOLOOOOOLOOLOLOLOOOOOOOOLOOOOO O OOOOOOLOLLOLLMLMOLe పల్లి
影
இப்போதெல்லாம் ஆம்புளைங்க போடுகிற றவுசரை பொம்புளைங்க போடுறது சகஜமாகப் போயிட்டுது. ஆனால் ஆம்புளைங்க போடுற சேட் போலை போட வேணுமெண்டா ஒரு மாற்றம் தேவை. சேட் பொக்கற்றிலை மேற்பக்கம் காசு வைப்பதற்குப் பொருத்தமாகப் பெண்களுக்கு இல்லை. அதனாலை கீழ்ப்பக்கமாகப் பொக்கற் வைப்பதே சரியான வழி. இதனையும்
நவநாகரீகம் கருத்தில் எடுக்க வேண்டும்
பாருங்கோ.
স্বাস
AAeeAeAALALALALeAeLeAeALeALeALSLALLSAALeeAeALLSLLLLSLLSLLSLSLLSLLLLLLSLLLLLSLS sSesesOSOLOeOeOsOeOeOsOsOsOsOsesOsOkeOeOeOeOsOeOseOsOSLesOeOeOeOeOsOLOsOeOsOsOsOeOe
ര്
gத்த!
சிகரெட் விற்கிற பொடியனுக்கு வயது பத்தாக இருக்கிறதே? சிரிப்பாக இல்லை?
லை சட்டம்
ழ தான

Page 16
-தவவை-  ெகரு G காலை எழும்பியவுடன் கண்ணில் வருத்தம் தென்ப என்றும் லென்சுடன் ரூபா 65000/- வைத்தியச் செலவ
G முக்கியமான ஒரு விடயமாக மோட்டார் சைக்கிளி மாடு குறுக்கே ஓடி வரா விட்டால்.
 ெதலையிடிக்கும் நேரத்தில் அதிர்ஷ்ட வசமாக டெ
நிறுவனங்களிடம் கடன்பட்டு வட்டி வீதம் தெரியாம6 ے
G சுகயினமாக இருந்த ஒருவர் சுனாமியில் சிக்காம
C ஒருவருக்கும் தெரியாமல் அறாவட்டிக்கு பணம்
G வாகரைத் தேன் என நினைத்துத் தேன் வாங்கி
R
丽邸邸圆爵鄞僵圆
பாம்பு செட்டை உரிக்கும் போது நாணம் அடைகிறது. ஆனால் மானிடம் குட்டைச் சட்டை போடும் போது நாணம் அடைவதில்லை.
 
 
 
 
 
 
 
 
 
 
 

ப்படம் செய்யாத வியாபாரி.
மிசன் வாங்காத கல்யாணப் புரோக்கர். னகை புரியும் சாராயத் தவறனை உரிமையாளர். ரியனை மதிக்கும் மாணவன். ம்ப விவகாரத்தில் கணவனின் அறிவுரையைக் கோரும்|
}னவி.
டி வாங்காது பணம் கொடுக்கும் நண்பன். வி ஒன்றைச் செய்துவிட்டு அந்த உதவியைச் சம்பந்தப்படா
ரிடம் சொல்லிக்காட்டாத உத்தமர்கள்.
娄
圈 圈
ல் நீர் கலக்காத பண்ணையாளர். ப, தந்தையரை அகதி முகாமுடன் சம்மந்தப்படுத்தாத
வில் திரு வாய்த்த குழந்தை. படுகின்றது. டாக்டரிடம் காட்டினால் கண்ணில் ‘கற்றாக்”
ாகும் எனச் சொல்லாவிட்டால்.
ல் சென்று கொண்டிருந்தபோது மேய்ந்து கொண்டிருந்த
ாக்கட்டில் பனடோல் இருந்தால்.
ல் காசைப் பெற்ற பின்பு தலையிடி வராமல் இருந்தால்.
ல் ஒரு கிழமைக்கு முன்பு இறந்து இருந்தால்.
கொடுக்கும் ஒருவர் திடீரெனக் காலமாகி இருந்தால்.
பின்பு அது போலித்தேன் என ஏமாறாமல் இருந்தால்.
赛
蚤鬣
பாம்பு செட்டை உரிக்கும் போது ஒழிந்திருந்து உரித்து விட்டுப் போகிறது. மானிடம் பல பேர் முன்னிலையில் உரிக்கிறதே.

Page 17
:=OOOCOSE---
i
鬣
"உங்கள் உள்6ே
எவ்வாறு நீ தேடும் அப்பொருள் உங்கள் உள்ளேயே இருக்கிறது. அது தான் உண்மையிலேயே மிகவும் எளிமையான ஒன்று.
வெகுகாலத்திற்கு முன்பு ஒருவர் சொர்க்கத்தின் ராஜ்யத்தைப் பற்றி பேசினார். அதன் விலாசம் உங்களுக் குத் தெரியுமா? அது “உங்கள் உள்ளே” என்பது தான். இது ஒர் அற்புதமான விலாசம். அது உண்மையி லேயே பெரும் மதிப்புக்குரியது. அந்த விலாசத்திற்கு சென்று திரும்பிய எவரும் அங்கு எதையும் கண்டு கொள்ள வில்லை என்று சொன்னதில்லை. 裘
மக்கள் அமைதியைப் பற்றி பேசியுள்ளனர். அவர்கள் அமைதிக்கு கொடுத்த விலாசம் என்ன? “உங்கள் உள்ளே” என்பது தான். பலர் சொர்க்கத்தின் ராஜ்யத்தைப் பற்றி பேசியுள்ளனர். அவர்கள் கொடுத்த விலாசம் என்ன? “உங்கள் உள்ளே” என்பதுதான். பலர் அன்பைப்பற்றி பேசியுள்ளனர். அது எங்கிருப்பதாக அவர்கள் கூறினார்கள், “உங்கள் உள்ளே” என்று கூறினார்கள். ஆனால் மக்கள் எங்கே தேடினார்கள், ! தங்களுக்குள்ளே தேடுவதைவிடுத்து மற்ற எல்லா இடங்களிலும் தேடினார்கள். எல்லையற்ற ஆனந்தம் தங்கள் உள்ளேயே இருக்கும் பொழுது மற்ற எல்லா இடங்களிலும் தேடினார்கள்.
இது மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளது. உங்கள் உள்ளே எல்லையற்ற ஆனந்தம் இருக்கிறது. ஆனால் மக்கள் தங்கள் உள்ளே எதுவுமேயில்லை என்று விவாதிக்கிறார்கள். ஒருவரின் உடம்பை அறுவைச் சிகிச்சை செய்து பார்த்தால் நீங்கள் எதையுமே கண்டு கொள்ளப் போவதில்லை. நீங்கள் உங்கள் மூளையை அறுவைச்
fr
ஒருவர் : “வெளிநாட்டில் வாழும்புலம்பெயர்தமிழர்கள்தாய் நாட்டுப் பற்றை மறக்கவில்லை.” மற்றவர் : "தாய் நாட்டுப் பற்றை மறக்காமல் தானே சாதிப் பிரச்சனை சொல்லிகுறுப் சண்டைபோடுறாங்கள்.” ஒருவர் : “?
99
-கபிலன்
 
 
 

ா என்றழைக்கப்பரும் விலாசத்தை
● 酸 顧 JJ iங்கள் கண்டு கொள்வீர்கள்?
சிகிச்சை செய்து பார்த்தால் அதனுள் எண்ணங்களைக்
காண முடியுமென எண்ணுகிறீர்களா, ஒரு காகிதத்தில்
எழுதப்பட்ட செய்தியை அங்கு காண முடியுமா?
ஆனால் “உங்கள் உள்ளே” என்றழைக்கப்படும்
விலாசத்தை எவ்வாறு நீங்கள் கண்டுகொள்வீர்கள்? எப்படி
நீங்கள் அதனைக் கண்டு கொள்ளப்போகிறீர்கள்? எந்த
வண்டியை எடுப்பீர்கள்? நான் உங்களுக்கு ஓர் உதவிக்
குறிப்பைத் தருகிறேன். மற்ற எல்லாவற்றையும் பார்ப்பதை
நீங்கள் நிறுத்தும் போது உங்களையே காணத்
தொடங்குவீர்கள். நீங்கள் நிசப்தமாக இருக்கும்போது
உங்களையே செவிமடுக்க தொடங்குவீர்கள். எப்பொழுது ஆனந்தத்தின் ஊற்றாக இந்த உலகத்தைப் பார்ப்பதை
நிறுத்துகிறீர்களோ, அப்பொழுதுதான் உள்ளத்தை ஆனந் தத்தின் ஊற்றாக பார்க்கத் தொடங்குவீர்கள்.
பயணம் செய்வதை நீங்கள் நிறுத்தி விடுங்கள்.
அப்பொழுது உங்கள் இல்லத்தில் இருப்பீர்கள். எப்பேர்ப் பட்ட விலாசம் நீங்கள் வண்டி ஒட்டுனரிடம் “எங்கும் போக வேண்டாம்” என்று சொல்லுங்கள். நீங்கள் உங்கள் இல்லத்தில் இருப்பீர்கள். -
"சொர்க்கத்தின் ராஜ்யம் உங்கள் உள்ளே
இருக்கிறது’ என்ற வாக்கியத்தை கேட்பதோடு இருந்து
விடாதீர்கள். அதனைக் கண்டுகொள்ளுங்கள். அதனை அறிந்து கொள்ளுங்கள். அதன் தொடர்பில் இருங்கள். இந்த உள்ளத்தை நிறைவு செய்யுங்கள்.
- பிரேம் ராவட்
“என்னுடைய கிளினிக் நட்டத்தில் போகிறதே. முகப்பரு X
ஒருதருக்கும்வாறதாத் தெரியல்லே.”
“என்ன கிளினிக்வைச்சிருக்கே” “முகப்பருகிளினிக்”

Page 18
妾 كانت تتمت تشتت திருஅப்துல்கலாம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு அதன்பின்பு தமிழிற்கு மொழிெ வரிகள் எமக்கும் பிழத்து உள்ளது. நாங்கள் ரசித்தபடியேசு
கவிதைகளை இங்கு பிரசுரித்து இருக்கின்றோம்.
ஆகாய விமானத்தைக் கண்டு பிடித்தவர்கள் ரைட் சகோதரர்கள் விமானக் கண்டு பிடிப்பு நிறைவேறாது என்ற தோரணையில் ஜான் ட்ரோபிரிட்ஜ் 1896ல் எழுதிய கவிதை இது.
மெழுகு சுத்தி இடுப்புக் கச்சை பக்கிள்' திருகாணி இப்படிப்பட்ட பொருள்களையே மேதைகள் பயன்படுத்துகிறார்கள். வடிவத்திற்கு இரண்டு வெளவால்கள் அதிசயமான மனிதர்கள் அதிசயமான மனிதர்கள் ஒரு கரிச்சட்டி இரண்டு துருத்திகள்.
く><><> உனது எல்லா நாள்களிலும் фштитѣ இரு எவரையும் சமவுணர்வோடு சந்தி. 酸 பட்டறைக் கல்லானால் அடி தாங்கு நீ சுட்டியலானால் அடி
19ம் நாற்றாண்டில் பிரபல்யமாகாத ஒரு கவிஞன்.
<><><>
கருவின் படைப்பிற்கும் இடையில்
உணர்ச்சிக்கும் எதிர்வினைக்கும் இடையில் விழுகிறது நிழல்.
~ ஹர்ல்லோமென் ~
స్లో <><><>
கவலைப்படாதே, முணுமுணுக்காதே, மனம் தளராதே இப்போது தான் வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளன. சிறப்புப் பணி இன்னும் ஆரம்பமாகவில்லை.
சிறந்த பணி இன்னும் முடிக்கப்படவில்லை:
~ பள்ளியில் படித்த கவிதை ~
 
 
 
 
 
 
 

ஒஒஒ(ெசுவைத்திரள்)2
Mñ. 965GaoLiú சுயசரிதை பயர்க்கப்பட்டு உள்ளது. அவர் மேற்கோள்காட்டிய சில கவி
காலத்தின் மணல் பரப்பில் உன் காலடிச் சுவடுகளைப் பதிக்க விரும்பினால் உனது கால்களை
இழுத்து, இழுத்து நடக்காதே.
~ ஒரு நாட் குறிப்பில் அப்தல்கலாம் எழுதிய கவிதை ~
<><><>
இனிய எண்ணங்களே, போய் விடுங்கள் கவலை கொண்ட நெஞ்சமும் இனி வேண்டாம். விழித்திருக்கும் இரவுகட்கு வேலை காத்திருக்கிறது. பகற் பொழுதுகள் பரபரப்பாக இருப்பினும் எனது நினைவுகள் 6т6b6uотцѣ இராமேஸ்வரம் கடற்கரையில்
நிலை குத்தி நிற்கின்றன.
குறியnகுை மரியாதைக்குரிய விருந்தினரை பூமி மண் வரவேற்றுக் கொண்டது. யேட்ஸ் ஒய்வு கொள்ளக் கிடத்தப்பட்டார் அவரது சிறை நாள்களில் எவ்வாறு புகழ்வது என்பதை அந்தச் சுதந்திர மனிதனுக்கு அது கற்றுக் கொடுத்தது.

Page 19
வெட்டுகிறவன் தான் வெட்டுவதாக நினைத்தால்
வெட்டப்படுகிறவன் தான் வெட்டப்படுவதாக
நினைத்தால்
நான் போகிறேன் மீண்டும் திரும்பி வருகிறேன்.
를 ~ எமர்ஸன்
அசைதிஸ்ருத்தல்
திறமை பேராசை, தீயளண்ணம் சிந்தனையில் இரவில் கரையட்டும் ബ് பலமாய் மாறும் வரை இருள் ஒளியாய் மாறும் வரை
శ్లో
று சரியாய் மாறும் வரை.
~ லூயி கரல் -
திய சகுனங்கள்
தீச்சகுனங்களைத் தடுத்து நிறுத்த மேல் நோக்கிச் செல்லும் அம்சமாகவோ உனது பேராற் றலை வெளிப் படுத்தச் செலுத்தப்படுவதாகவோ அக்கினியைப் பார்க்காதே அது நெருப்பு இந்தியனின் இதய நெருப்பு அது வெறும் ஏவுகணையன்று. இந்த நாட்டின் எரியும் பெருமை அதனால் தான் அதற்கு
~ அப்துல்கலாம் அக்னி ஏவுகணை
ஜபற்றி எழுதிய கவிதை
t
 
 
 
 
 
 
 
 

நீண்ட நாள் முழுவதும்
ணத்திற்குக் கணம்
リ
நேர்மையாய் துணிவாய் உண்மையாய் உழைக்கிறவன்
கரங்களேஅழகிய கரங்கள்.
பீறச்சனை
என்றும் வானம்
நீலமாக இருக்குமன்றோ வாழ்க்கைப் பாதை நிறைய பூக்களே பூத்திருக்கும் என்றோ கடவுள் வாக்களிக்கவில்லை.
<><><>
மழையில்லாத G)6)JußG6UT
கவலையில்லாத மகிழ்ச்சியோ வேதனையற்ற சமாதாமோ உண்டாகும் என்றும் கடவுள் வாக்களிக்கவில்லை.
o <><><> ஆனால
கடவுள் உறுதியளித்தது ஒரு நாளைக்கான சக்தியை உழைப்பிற்கான ஒய்வை பாதைக்கான ஒளியை.
~ யாரோ ஒரு கவிஞர்
சோழ மண்டலக் கடற்கரையில் சங்குகள் முழங்கும் மணல் வெளியில் சில மகாத்மாக்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.
* <><><> ஒரு பருத்தி நூல் ‘லுங்கி அரைவாசி மெழுகுவர்த்தி கைப்பிடி இல்லாத பழைய
குவளை,
இவை தாம் கரை மணலில் வாழ்ந்த
அந்த மாமன்னர்களின்
~ அப்துல்கலாம் எழுதியது

Page 20
エSー丐5丐寸、s
மாவினை மைதா மா என்று சொல்லுவிற ஊரிலை என்னுடைய இளையவன்
அகதியாக இருக்கிறான்.
4, 3 ஜ 3.
- *్క
W3isRq لهم
པ། དམ་ M, مجم%لأيت
Fgf சீமையிலை ஒரு பொடியன் சொல்லுங்க “ஒப்பின் விசாவிலை போய்
அறிை’
என்ன பிச்சைக்காற உலகம்டா கொடுத்தானுக. இப்ப 45 ( பிச்சைதாறாங்களே. இவனுகள் போய் இதைப் போடட்டும்.
எப்ப பார்த்தாலும் ஒருத்தரு பவு கொடுக்கப் பாக்கிறாரு. என்ன நாணயசாமி எனப் பெயரும் வை
நோகிறதோ? ஒண்டுமா விளங்கள்
 
 
 
 
 

ult.... 660 uppugbbsflug 6060 D656ir அகறியாக இருக்கிறாள்.
பிறகென்ன. அடுத்தவன் பிறந்த ஊரிலேயே அகறியாக இருக்கிறான்.
%, لیبرN_ے سربر /(e)y.)
இது 5 ரூபா பாண் வித்தபோதும் 50 சதம் பிச்சை ! நபாப் பாணி விக்கிற நேரத்தையும் 50 சதம் எல்லாம் சிவன் கோயிலடி உண்டியலிலை கொண்டு
-s-s-s-s-s-
ண் பல்லைக் கட்டிட்டு பித்தளைக் காசிலை பிச்சை
ன தான் எழவோ என்னைப் பெத்தவனும் எனக்கு |ச்சிட்டாரு தாறவனை நோகிறதோ? பெத்தவனை

Page 21
1) Μλάντήλαίν Αλ Αλαίν Λινναντήλαίν ΑνήN கிறாள் என்ற இந்தச் சிரிப்பு நவீனம் ல் எழுதப்பட்டது. புதிய ந்தத் தொடர் கதையை வெளியிடு
அது ஒரு சிங்கள வீடு. அந்த வீடு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்தது. பல்கலைக் கழகத்தில் வேலை செய்பவர்களுக்காகக் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகளில் ஒன்று.
இரண்டு அறைகள், ஒரு குசினி, ஒரு சிறு ஹோல், ஒரு விறாந்தை. அங்கு வாழ்பவர்கள் எழுவர். நால்வர் அவ்வீட்டிற்கு உரிமையானவர்கள். மூவர் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவிகள்.
ஒருத்தி செல்வி,
“இந்தச் சிறிய அறைக்குள்ளையே மூன்று பேர் இருக்கிறியள், பிள்ளை?’ என்று வியப்பைக் காட்டினாள் ஆச்சி.
“என்னசெய்யிறது, மாமி! பல்கலைக்கழக மாணவர்களுக்கு விடுதி வசதி போதாமல் போனதும், வெளியே வீடுகளில் இருப்பவர்களுக்குப் பெரும் அதிர்ஷ்டம் அடித்தது. குசினிக்குள்ளை இருந்துக் கொண்டு வீடு முழுவதையும் மாணவர்களால் நிரப்பியுமுள்ளனர். மாணவர்களும் என்ன செய்யிறது? எங்காவது இருந்து ஆக வேண்டுமே? சாப்பாடு எல்லாம் கொடுத்த மாதத்திற்கு நானுாறு ரூபாவும் உழைப்
"கட்டிலில் இருந்து படித்தால்.’
பவர்கள் இருக்கிறார்கள். இப் பல்கலைக்கழகத்தில் வேலை செய்பவர்கள் பெரிய லெக்சரர்மாரும் தரம் ஹோட்டல்தானே நடத்துகினம்! நல்ல உழைப்பு.! மாணவர்களுக்குத்தான் கஷ்டம்.”
“இந்த ஒரு பக்கீசுப் பெட்டி மேசை மூண்டு பேருக்கும் காணுமே?”
 
 
 
 
 
 

திக ஆண்டுகட்கு முன்பு பிரபல்யமான கர்கட்காக சுவைத்திரள் அவரின்
“க ஷ டம் தானி , LD IT Lr6 ! சமாளிக்கிறோம். கட்டிலில் இருந்து கொண்டு படிப்பம்.”
“கட்டிலில் இருந்து கொண்டு படித்தால் நித்திரை தான் வரும். இப்படி ஒரு மூன்று மேசையைப் 1 (3UITL-6.)T (BLD?”
“இந்த அறைக்கே கட்டில் மூன்று போடவே இடம் சரி. மேசை எங்கை போடுகிறது? சில வீடுகளில் சாக்குக் கட்டிலும் போட்டிருக்கினம், LDTLólo
“சரியான, சூடு.” “சில சிறிய அறையஞக்கை நாலு பேரும் இருக்கினம்.”
“மூச்சுமுட்டிச் சாகவெல்லோ போகுதுகள். இப்படிப் சீரழிந்த படிப்புப் படிக்க வேணுமே? இடம் காணாட்டி ஏன் இப்படிப் பிள்ளை யளைப் படிக்க எடுக்கிறவன்கள். அளவா எடுத் துத் தெலைக் க லாமே? இல்லாட்டி இப்படிப் பள்ளிக் கூடத்தை வேறை வேறை இடத்தி லும் கட்டுகிறது. தமிழ்ப் பிள்ளையஸ் படிச்சுப் போட்டு வேலையில்லாமல் தானே இருக்குதுகள். நாலாயிரம் ஐயாயிரம் என்று செலவழிச்சுப் பலன் என்ன? இந்த யாழ்ப்பாணத்துச் சாதி எளிய சாதி. காணியை வித்து, பூமியை வித்து பட்டினி கிடந்து பிள்ளையளைப் படிக்க வைக்கி றாங்கள். படிப்பு முடிஞ்சதும் வேலை கிடைச்சால் தானே. இஞ்சை கொணர் டு வந்து செலவழிக் கிற காசை, யாழ்ப்பாணத்திலும் இப்பிடி ஒரு கல்லூரி இருந்தால் மிச்சம் தானே?
செல்வி குறுக்கிட்டாள். “இங்கை படிக்கிற தமிழ்ப் பிள்ளைகளை யெல்லாம் கொழும் புக் குக் கொண்டு போகப் Lind, gélóðILb...'
“ஏன் அங்கை நரர் காணாதாமோ?” “இல்லை ஆச்சி. இஞ்சை படிப்பிக்கிறவயின்ரை வீடுகளெல்லாம் அங்கைத்தான் இருக்கு. சுகந்தானே?” "படிக்கிற பிள்ளைகளின்ரை வீடுகளெல்லாம் யாழ்ப்பாணத்தில் அல்லோ இருக்கு.”
“உதை ஆரும் யோசித்தால் இப்படியே

Page 22
区、豆汇豆寸、豆重亏汇、豆重亏重习 இருப்பம்.”
அறையைத் திறந்து கொண்டு, ஒரு சிறுமி உள்ளே வந்தாள். வந்தவள் இருவரையும் மிரள மிரளப் பார்த்தாள். 妾
“உதார் பிள்ளை?” “இந்த வீட்டுக் காறற்றை மகள்! நல்ல குழந்தை.”
இஞ்சை வா மோனை!” என்று ஆச்சி கூப்பிட்டாள்.
“அதுக்கு தமிழ் விளங்காது, மாமி ரேணுகா எண்டகோ.’ என அழைத்தாள் செல்வி.
ரேணு ‘குடு குடு வென ஒடிச் செல்வியின் மடியில் அமர்ந்தாள். அமர்ந்த ரேணு ஏதேதோ சிங்களத்தில் செல்வியிடம் கூறினாள். 墨
“என்னவாம்.” “இனிமேல் விடுதலைக்கு இங்கை இருந்து போக வேண்டாமாம். தன்னோடு இருக்கட்டாம். விடுதலைக் குத் தான் எங் கையோ எலி லாம் போனவவாம்.”
ஆச்சியின் கண்கள் அறையிலிருந்த மேசையில் நிலைத்தன.
“இந்த மேசை என்ன விலையிருக்கும் பிள்ளை?” “மலிவு, மாமி ஐஞ்சு ரூபா இருக்கும்.” “பக்கீசுப் பெட்டி மேசை என்றாலும் கனமா இருக்கு. யாழ்ப்பாணத்தான் உப்பிடி மலிவான விலை மேசை செய்யமாட்டான். வாங்கினால் திறம்தான் வாங்குவான். இல்லாட்டி சும்மா கிடப்பான். இப்பிடி பக்கீசுப் பெட்டி மேசைகளை வாங்கிப் போட்டால் படிக்க பிள்ளையஞக்கு நல்லது. எங்கை ராசாவை இன்னும் காணேல்லை. கெதியாய் வாறன் என்று போனான்.” “வருவார், மாமி போனவர் சினேகிதர்மாரைச்
ཡོད༽
/
N- ரேணுகா. எண்டகோ.”
 
 
 
 

ਡਤ ਤਤ ਤਤ ਤਤ ਤਤਤC662 சந்தித்து விட்டுதானே வருவார்.” வெளியே சப்பாத்துச் சத்தம் எழுந்தது. “அவர் வந்திட்டார் மாமி!”
“இப்ப எங்கை போறது.” “பேராதனைப் பூந்தோட்டத்திற்கு மாமி!. வானளாவி பல்வகை மரங்கள் வளர்ந்து நிழல் பரப்பி இருந்தன. மூவரும் பேராதனைப் பூந்தோட்டத்தின் பாதையொன்றில் மெல்ல நடந்தார்கள்.
“அப்பாடா. எவ்வளவு பெரிய மரங்கள். என்ன மாதிரி வளர்ந்திருக்கிறது.” என்று வியந்தாள் ஆச்சி.
“உங்களைப் போல. சிவராசாவிடம் செல்வி.
“இதுதான் ஆச்சி பொற்றணிக்கல் காடின். எல்லாவிதமான மரங்களும் இங்கை நிக்குது.”
“இதாலை என்ன புண்ணியம்?” “தாவரவியல் படிப்பவர்களுக்கு உதவியாக இருக்கும் ஆச்சி. பார்வையாளருக்கும் நல்லது தானே.”
“எங்களைப்போல ஆக்களுக்கும் உதவும்” என முணு முணுத்தாள் செல்வி.
“என்ன பிள்ளை..?” “ஒன்றுமில்லை, மாமி! அங்கை பாருங்கோ. நந்தவனப் பக்கத்தை. என்னமாதிரி வெட்டி விட்டிருக்கிறார்கள்.”
பேராதனைப் பூந்தோட்டம் பரந்ததோர் பரப்பில் அமைந்திருக்கின்றது; பெரிதும் பாரிய மரங்கள் நிறைந்த எழிற் சோலை அது. உலகின் அழகெல்லாவற்றையும் பேராதனைப் பூந்தோட்டத்தின் சிறிய ஒரு பரப்பில் திரட்டித் தந்திருக்கிறார்கள். விதம்விதமான மரங்களும், செடி கொடிகளும் பல்வேறு வர்ணஜாலங்களில் சிந்தையை அள்ளி நிற்கின்றன.
“நல்லா இருக்கு.’ என்றாள், ஆச்சி: “இந்தப் புல்லைத் தான் எப்படி வெட்டியிருக்கிறார்கள்.
“இந்தப் பூந்தோட்டத்தை நல்லாச் சுற்றிப் பார்க்கின்றதென்றால் ஒரு நாள் வேணும், மாமி! இதைச் சுற்றி மகாவலி கங்கை முழங்கை வளைவாக ஒடுகி றது. அந்த முழங்கை வளையினுள்தான் இத்தோட்டம் அமைக்கப்பட்டிருக்குது.”
“செல்விக்கும் புவியியல் விளங்குது’ என்று கேலி செய்தான் சிவராசா.
“இஞ்சை பார் பிள்ளை, இந்த மரத்தை நீத்துப் பெட்டிபோல வெட்டிவிட்டிருக்கிறாங்கள்.”
“உந்த மரங்கள் இப்படித்தான் வளரும், ஆச்சி’ “மூவரும் மகாவலி கங்கைக் கரையோரமாக நடக்கத் தொடங்கினர். சிவராசாவிற்குப் பழயை நினைவுகள் மனதில் தோன் றின. செல்வியைப்பார்த்தான். அவளும் அவனைப் பார்த்தாள். எத்தனை மாலைகள் இதே பாதையில் இருவரும் நடந்திருக்கிறார்கள். வாலிப உள்ளங்களின் உணர்வுப் பெருக்கை தனிமை வழங்க, அவன் கதை
93
99
என்று கிசு கிசுத்தாள்,

Page 23
ཡོད༽
l "தலைகீழாக இருந்து தவம்’ ノ
பேசுவான், அவள் 'உம்' கொட்டுவாள்.
“என்ன இரண்டு பேரும் பேசாமல் வாறியள்.”
象ー
இருவருக்கும் சுயநினைவு வந்தது. “என்ன
ஆச்சி?”
“இந்த மாடுகளின்ரை கொம்பைப்பார். பாம்பு போல வளைந்து போய்க் கிடக்கு. அதுகளின்ரை கொழுப்பு.’
“இதுக்குள்ளை மாடுகளும் இருக்கணை, ஆச்சி வளர்க்கினம்.”
“உது பலாமரம். காயும் இருக்கு.” “பழத்துக்குக் கூடாது, மாமி?” “ஏன்?.” “ஈரலிப்பான பகுதிப் பழங்கள் சுவையில்லை.” “இது என்ன பிள்ளை, சத்தம் போடுதுகள்.” “வெளவால்கள், ஆச்சி! உங்கை பாரணை. இந்த மரத்திலைதான். கறுப்புக் கறுப்பா காய்ச்சுத் தொங்குதுகள் வெளவால்கள்.”
“இவ்வளவு தொகையோ? இங்கினேக்கை இருந்து தான் எங்கடை பக்கமும் வாறது போல. மரம் முழுவதும் வெளவால்.”
“வெளவால் இறைச்சி சாப்பிடுகிறவை, என்ன **!\LibחLD
“சாப்படுகிறவைதான். ஆனால் பாவம். உதெல்லாம் முனிவர்கள் தானே? ஒரு சாபத்தாலைதான் இப்பிடித்தலைகீழா இருந்து தவம் செய்யினம்..” என்றாள், ஆச்சி.
"குடும்பமும் நடத்துகினம்’ என்றான், சிவராசா, செல்வி முறைத்துப் பார்த்தாள்.
“உதென்ன வீடே தம்பி?” “உது சமமர்கவுஸ்.” "666,60TLITILIT?' “தங்கிற இடம் ஆச்சி “கொஞ்சம் போய், இருப்பமே?” “அதுக்குள்ளை ஆராவது இருப்பினம் மாமி!’
ללן
 
 
 
 

ーマー●o魂エ “இருந்தா என்ன..? நாங்களும் ஒரு பக்கத்தில் இருக்கிறது?’ “இல்லை, ஆச்சி. அவயஞக்கு இடைஞ்சலாக இருக்கும்?” ஆச்சி வியப்போடு நோக்கினாள். “ஆராவது களவா வந்து இருப்பினமே?” *@(3DTb.* “உங்கடை யூனிவேசிற்றி பிள்ளையளே?.” “இருக்கும். நீ வா, ஆச்சி ‘ஹாங்கிங் பிறிச்சுக்குப் (3 L/ T 6): Լճ . . . தொங்கு L] [T 6ù Lổ , ஆச்சி! மகாவலிகங்கைக்குக் குறுக்கே போட்டிருக்கினம். நடக்கேக்கை ஆடும்.” தொங்கு பாலத்தில் நடக்கும் போது அது ஆடிய ஆட்டத்தில் அவள் பயந்து போனாள்.
“இந்தப் பலகையள், உடையாதே?” “உடைஞ்சால் கங்கைக்குள்ளைதான்.” “போனது போதும். திரும்பு பிள்ளை. எனக்குப் பயமாக இருக்கு. கீழே தண்ணியைப் பார்க்க தலையைச் சுத்துது.”
ஆச்சி விரைவாக முன்னே பார்த்துக்கொண்டு நடந்தார். பின்னால் சிவராசாவும், செல்வியும் வந்தனர்.
“செல்வி.’ என முதுகில் இடித்தான். “மாறியிட்டை சொல்லவே.?”
"LDITLÓl!...” ஆச்சி திரும்பிப் பார்த்தாள்.
“என்ன பிள்ளை?” “செல்விக்கு தண்ணிவிடாய்க்குதாம், ஆச்சி’ “இஞ்சை பார். எங் கடை பனையள். வரிசையாக நட்டிருக்கினம்.” நேரம் பன்னிரண்டாகிவிட்டது.
“போவம் ஆச்சி! கண்டிக் குச் சாப்பிடப் போகவேனும்.”
“போவம். எனக்கும் காலுளையுது” பூந்தோட்டத்திற்கு வெளியே வந்தபோது ஆச்சி கூறினாள்.
“உது யாழ்ப்பாணத்தில் இருந்தால் நல்லா இருக்கும். எல்லா மரமும் இருக்கு என்றாய். எங்கடை கறி முருங்கையை இங்கினேக்கை காணன்.”
霞蓋 தொடரும்
ஒருவர் : 'ഥെയ്തെ தபால் பார்சல் ஒன்று அனுப்ப
வேண்டியுள்ளது.” தபால் அதிபர் : “எந்த நாட்டுக்கு?’ ஒருவர் : “நாட்டுக்குள் இருக்கும் ஒருநாட்டுக்கு.” தபால் அதிபர் : “அது எந்த நாடு?’ ར་ ஒருவர் : "யாழ்ப்பாணத்துக்குத்தான்.'() தபால் அதிபர் : “?’
கனிமதுரம்

Page 24
動エミリエ普エ勤歪勤歪誓エ誓エ普エ普三帝龍エ普エ勤エリエ勤委龍エ普エリエリー
சென்ற இதழ் எப்படியும் இரண்டாயிரமாவது இருந்தால் மட்டுமே மனைவி சொன்னபடி அவளுக் கும் மாமியார் மற்றும் மகளுக்கும் சேலைகள் வாங்க முடியும். ஆனால் அந்தளவு தொகையான பணத்தை கொடுக்கக் கூடிய இளிச் சவாயன் எவனாவது மாட்டுவானா? சிங்காரம் சிக்கலான சிந்தனைகளுடன் வீதி யையே பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது காரியாலயமருகில் ஒரு ஒட்டோ வந்து நிற்கவும் ஒரு இளைஞன் வேஸ்ட்டி சட்டையுடன் காரியாலயத்தை நோக்கி வேகமாக வந்தான். சிங்காரத் துக்கு இன்று சில்லரை தான் என் எண்ணியவாறு பணியாள் நமட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டான்.
அந்த இளைஞன் சிங்காரத்தி னருகில் வந்தான். “சேர் எனக்கு ஒரு உதவி தேவைப்படுவது.” “என்ன உதவி..? “என்னோட பேரு கார்த்திகேசு. நான் ஒரு பெண்ணை பதிவு திருமணம் ^ செய்யனும் அதுக்கு நீங்க தான் உதவி செய்யனும். “என்னப்பா நீ பதிவு திருமணம் செய்ய நான் என்ன உதவி செய்ய வேண்டியிருக்கு.” “எனக்கு இங்கே யாரையும் தெரியாது.” “அதுக்கு நான் உதவி செய்யனுமா. போ. போ. அதெல்லாம் முடியாது.” “நீங்க அப்படி சொல்லக் கூடாது. இதுல ரெண்டா யிரத்திநூறு இருக்கு. தயவு செஞ்சி.”
இரண்டாயிரத்தி நூறு ரூபாய் பணம் என்றவு டனேயே சிங்காரம் வாயெல்லாம் பல்லாகி விட்டது. பெருந்தொகைப் பணம் கிடைக்கும் போது அதை விட்டு விடுவதாவது. அன்னக்கிளியிடம் சுளையாக இந்த பணத்தை கொடுத்து விட்டால் போதும் அப்புறம் அவருக்கு ராஜமரியாதை தான். பணம் எப்படி வருகிறதென்பதெல்லாம் அவருக்கு தேவையில்லை.
う
 
 

தொடர்ச்சி.
பணம் கிடைத்தாலே போதும். ஒரே நாளில் இவ்வளவு
உங்களால் வர
தொகைப் பணம் அல்வா போல கிடைக்கும் போது அந்த பணத்துக் காக வெளவாலாக மரத்தில் தலை கீழாக தொங்கவும் அவர் தயார். ஆனாலும் உடனடியாக சம்மதம் தெரிவித்து தன்னுடைய தன்மானத்தை இழந்து விட அவர் தயாரில்லை. அதிகளவு பணம் கிடைக்கப் போகிற தென்பது தெரிந்தவுடனேயே அவர் வாயிலிருந்து வார்த்தைகள் மரியாதை யாக வந்தன. “தம்பி. எனக்கு நிறைய வேலை இருக்குது. இருந்தாலும் நான் வாரேன். ஆமா வீட்டோட சம்மதத் தோட செய்ய வேண்டியதுதானே.” “அதெல்லாம் நடக்கிற காரியம் இல் லிங்க.’ "ஆமா அந்த பொண்ணு எப்புடி இருக்கு சம் மதிச் சி உன்னோட வந்தா.’ “அதெல்லாம் உங்களுக்கு எதுக்கு. முடியாட்டி சொல்லிடுங்க. நான் வேற
ஆளு பார்த்துக்கறேன்.”
“சே. அப்படியில்ல நாய் குப்பை மேட்டில இருந்தா லென்ன பேய் புளியமரத்துல இருந்தாலென்ன எனக்கு பணம் கிடைச்சா சரி தான். அப்போ போலாமா.” அவர்கள் திருமண பதிவாளர் காரியால யத்தை அடைந்தார்கள். மணப் பெண் மறுபுறம் திரும்பி நின்றிருந்தாள். சிங்காரத்துக்கு அதைப் பற்றியெல்லாம் கவலையில்லை. அவருக்கு தேவை பணம் அவ்வளவு தான். காரியம் யாவும் பிரச்சனை யில்லாமல் நல்ல படியாக நடந்து முடிந்தது. சிங்காரம் சுளையாக பணத்தை எண்ணியவாறு மகிழ்ச்சியுடன் காரியாலம் போனார். அங்கே யாரோ அவருக்காக காத்திருந்தார். “ஐயா என்னோட பிராவிடன்ட்பண்ட் பணம் இன்னமும்
எனக்கு வந்து
சேரல்ல. இந்தாங்க இதுல ஐம்பது

Page 25
3F 滝エ普エ普エ ரூபா இருக்கு. கடுதாசியொன்று அடிச்சி தந்தா உதவியா இருக்கும்.’
“இங்க பாருய்யா ஐம்பது நூறுக்கெல்லாம் இந்த வேலை செய்யமுடியாது. அதுக்கு எனக்கு நேரமும் இல்லை. உனக்கு லட்சம் வரை பணம் கிடைக்கப் போவுது. ஆனா அலட்சியமா நீ போடுற பிச்சைக் காசுக்கெல்லாம் எனக்கு வேலை செய்ய ஏலாது. ஐநூறு கொண்டா இல்லாட்டி வேற யார் கிட்டயாவது போ.” “நேற்று ஐம்பது கொண்டு வரச் சொன்னிங்க.” “அது நேற்று. இது இன்றைக்கு. இப்ப என்னோட நிலமையே வேற. அஞ்சு, பத்துக்கெல்லாம் என்னால சேவை செய்ய முடியாது. அதனால நீ போய் ஐந்நூறோட வா. இல்லன்னா வரவே வராதே.”
சிங்காரம் - பெருமிதத்துடன் நாற்காலியில் நிமிர்ந்து உட்கார்ந்தார். “அன்னக்கிளி பணத்தைப் பார்த்தாலென்றாள் பசுவாக மாறிவிடுவாள். நாட்டுக் கோழியடித்து சோறு போடுவாள்.”
அவர் பல்வேறு சிந்தனைகளுடன் மாலையில் தன் லயத்தை நோக்கி நடந்தார். அவர் லயத்தினை அடைந்தபோது ஆறு மணியாகிவிட்டிருந்தது. காம்பறா வினுள் நுழைந்தார். அன்னக்கிளி சந்தோஷ மில்லாத முகத்துடன் அங்குமிங்கும் உலாவிக் கொண்டிருந்தாள். “அன்னம். இந்தா பணம். நீ நினைச்சபடி எல்லாம் வாங்கிக்க.’
“ஆமா கேட்கிறப்ப கேட்காத மாதிரி போவே. இப்போ சிக்கலோட நான் என்ன செய்யிற துன்னு நிற்கிறப்போ நீ சில்லறையை கொண்டு வந்து தர்றே.”
“என்ன அன்னம் என்ன சிக்கல்.’ “உன் அருமை மகள் மல்லிகா. டியூஷன் போறேன்னு காலையில போனவ. இன்னும் வீ திரும்பல்ல. மனசு பக் பக்கன்னு அடிச்சிக்குது.”
“அட அவ வந்திடுவா. கை நிறைய பணம் தந்திருக்கேன் முதல்ல சூடா டீ ஊத்து.”
“நான் இடி விழுந்த மாதிரி நிற்கிறேன். உனக்கு டீ வேணுமா. வயசுக்கு வந்தவளுக்கு வரன் பாருன்னு பாடி பாடி சொன்னேன். நீ வேலை வேலைன்னு ஓடி ஒடிப் போனே. இந்த ராத்திரியில எங்கேன்னு அவளை தேடிப்போவேன்.” அப்போது தூரத்தில் எங்கேயோ ஒரு ஒட்டோ வந்து நிற்கும் சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் சிங்காரம் இருந்த லயக்காம்பறாவை நோக்கி இரண்டு பேர் வருவதைப் போல இருந்தது. அன்னக்கிளி சட்டென வெளியே எட்டிப் பார்த்தாள்.
அங்கே, அவள் மகள் மல்லிகா மாலையும் கழுத்துமாக ஒரு வாலிபனுடன் வந்து கொண்டிருந் தாள். சத்தம் கேட்ட சிங்காரமும் வெளியே எட்டிப் பார்த்தார். அவ்வளவு தான் அவருக்கு தலை சுற்றியது.

Duu LLLLLL LLLLLLLLLLLLLLL LLL LLLLL LL u ieS TTMTTTTS S மயக்கம் வருவதைப் போல இருந்தது. காரணம் அவர் மகளுடன் மாலையும் கழுத்துமாக வந்து கொண்டிருந்த வனிடம் தான் அவர் சுளையாக பணம் வாங்கியிருந்தார். அப்படியானால் அவர் பதிவுத் திருமணம் செய்து வைத்து பணமும் வாங்கியது தன் சொந்த மகளின் திருமணத்தில் தானா. ஐயோ இந்த விஷயம் அன்னத்துக்கு தெரிந்தால் அவருக்கு அன்னம் தண்ணீர் கொடுக்க மாட்டாளே. அன்னக்கிளி கத்தத் தொடங்கி விட்டாள்.
“அடிப்பாவி. எங்களை மோசம் பண்ணிட்டு எங்கேடி வாரே. இந்த துப்புக் கெட்ட மனுஷனை நம்பி பிரயோசனம் இல்லைன்னுதான் நீயா கல்யாணம் பண்ணிக்கிட்டியா. நீ என் மகளே இல்லை. உள்ளே வந் தியோ கோப்பிக் கத்தியினால காலை வெட்டிடுவேன். போ. போ.”
線
W. சிங்காரம் பார்த்தார் அவர் தன்னை காப்பாற் றிக் கொள்ள வேண்டுமானால் அவர்களை பேச விடக் கூடாது எனவே அவரும் சத்தம் போட தொடங்கினார். “எங்களை மதிக்காம உங்க இஷ்டத்துக்கு மணம் முடிச்ச. நீ எங்களுக்கு தேவையில்லை. உள்ளே வராதே. வெளியே போ.”
அவர்கள் திரும்பி வந்த வழியே நடக்க அப்பாடா பிழைத்தேன். என பெருமூச்சினை விட்டவாறு தொப்பென கட்டிலில் அமர்ந்தார் சிங்காரம்.
(யாவும் கற்பனை)
/ | ஆசிரியர் : “இலங்கைப்பிரச்சனை போல ஒன்றுகப்பல்
ஏறுவதைக் கனவு கண்டேன்.” மாணவண் : “மலேஷியா சேர்.” ஆசிரியர் : “வெறி குட். சிற்டவுன்”
-கனியமுதம்

Page 26
நாட்டுக்கொரு {}6 வீட்டினுள் இட்டது காத்திருக்கின்றே (DĽ, SOL 氢
தடுக்க முடியவில்லை என்னிடம் சீதனம்
இல்லை எனக்கே தெரியும்
 

委載
ஒஒஒஒஒஒ(சுவைத்திரள்)-9
盗 Ꮥ
வீடுதந்தாள், கரணிதந்தாள் 60ោះប៉ា កៃ ១០ហ្វ្រងំ
தந்தாள் 象 அவளே என்னைச் செய்கிறாள் ஆட்சி! భ றான ஆனாட்சி வீழ்ந்தது
நடப்படுத7 0ெண்ணாட்சி
-വൈ07
மூன்று - Σ - . . அகதி முகாமில் குழந்தைகள் 3 ஒரே சூலில் மாளிகை இருக்குது மனைவியும் உண்டு
பிள்ளைகள் இல்லை. * ကြီးဂျီး -വൈസ്ள அகதிகளின்
அவலம்
. മൃത്ഖി (1.
சிறகொடித்த வெண்புறாவே
இந்த அகதிகளின் அவல நிலை அகற்ற 9) எப்போது நீ வருவாய்?
டுக்க அன்னை எங்கே?
ஆஜர்

Page 27
デ グリ
多 攻列 Sكلاعتخاعتقاق இலங்கையில் சனத்தொை மில்லியன் நாய்கள் என ஆ
இலங்கையில் இப்போது ந
ஆபீஸ் பையன் கூற்று: அவ்வாறு ஆயினர் நாய்க் இலங்கையில் தமிழர்கள் வி
ܢܠ --------------------
-
பாணுக்கு எதிர்பாராதபடி விலை கூடியுள்ளது. | மக்களை திருப்தியடையச் செய்வதற்கு பின் வரும் உபாயங்களைக் கையாளலாம் என ஒருவர் கூறுகின்றார். 를
美 |იხიფცb இறாத்தல் பாணில் கையால் பிரிக்கும்
i (3LJITg5I 9 துண்டு விழும்படி செய்யலாம்.
།
t ਉ06 எவரும் 100 கிறாம் துண்டுகட்கு
மேல் பாணன் போடக் கூடாது எனத் தடை செய்யலாம். 100 கிறாம் பாண் போடும் போது
ஆசிரியர் : “எல்லாரும் பாருங்க (--) இது தான் அரணை இதுதான் தரை(X).”
மாணவன் : “ஐயையோ சேர். அரணை கடிச்சுப்போட்டுதுசேர்’ மற்ற மாணவர்கள் : “அந்தா ஓடுது சேர் அரணை.” ஆசிரியர் : “எங்கேடா ஓடுது.”
மற்ற மாணவர்கள் : “தரையில சார்’
கவிஞர் சிவலிங்கம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

幸エcmしー
ད།
க 8 மில்லியனாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 2.5
ய்வுகள் தெரிவிக்கின்றன.
(செய்தி)
ாலு வீதமே தமிழர்கள் வாழ்கின்றனர்.
(ஒர் அமைச்சர்)
களை விடவும் குறைந்த சனத்தொகையில் தான் ாழ்கின்றார்களா? எனக் கேட்கின்றான்.
(சுவைத்திரளின் அலுவலகப் பையன்)
ఆ
zܐܡܔ
இ200 கிறாம் பொங்கச் செய்து 150 கிறாம்
இருக்குமாறு சட்டம் போடலாம்.
டிக்கடி பாண் சாப்பிடாதீர் ஆபத்து என ணைச் சுற்றி ஒரு லேபல் ஒட்டலாம்.
து 25 குடும்பங்கட்கு ஒரு பேக்கரி மக்க அறிவித்தல் கொடுக்கலாம். வங்கி வியும் வழங்கலாம்.
ய்காய் ஒன்றைக் கொடுத்து 1 இறாத்தல் ഞ്ഞ് வாங்குங்கள் எனப் Li600TL-LDITs) (D)
TLD.
றை ஒன்றைக் கொண்டு வ
கோதுமை மா இலங்கையில் பயிரிட ஆவன செய்தல், 를 簽二岔
நாய் : “லொள். லொள். லொள்.' வீட்டுக்காரர் : "உஞ்சு, உஞ்சு. விறவுணி விறவுணி. விருந்தாளி : “அடி, அடி, அடி, அடி. இந்த நாயப் புடியுங்கப்பா. காலக்கடிச்சாப் பறவால்ல. அத்தாப்பத்தி
o s e. த9 காற்சட்டையை பிய்க்கப் போகுது.
கவிஞர் சிவலிங்கம்

Page 28
ஜீது விடிய விடிய பூரீலங்காக் கதை, S. ஒடியப் போகிறது வடகிழக்கு.
இ : குறைந்து வருகுது வாழ்க்கைப்படி, N நிறையப் போகுது செருப்படி,
ஜீது சிறுபான்மைக் கர்ப்பங்கள்,
பெரும்பான்மை அச்சங்கள்.
ஜீ டிங்கிரி பண்டா சுதந்திரம்: 颐
பண்டார வன்னி காவலில்,
து ஒட்டாத உறவுகள் ஒட்டிப் * பிறந்த இரட்டையர்கள்.
2து Aid எனக் கூவுங்கள், Aids வர முன்பு.
2து வடக்கு கிழக்கு இணைப்பு;
பூரீலங்கா பிணைப்பு.
ভক্ত
2து உடலால் இணைவதல்ல உறவு,
உள்ளத்தால் இணைவதே இன உறவு.
Ꮤ
த
தமிழ் மகனின் கண்ணிர், டெல்லியின் பன்னீர்
ஒது அனுராதபுரம் தும்மினால், ளிநொச்சி நடுங்குமா?
கி
 
 

e
2து
።”
பாட்டுக்கு பாட்டு தலைநகரில், றோட்டில் சடலம் உள்ளூரில்!
மீற்றர் இல்லா ஒட்டோவில், சக்கரவர்த்தி சாரதி.
உயிருக்கு பயந்தாள், கற்புக்கு விடுதலை.
வடக்கில் சுடு ஒசை, தெற்கில் தோசை விலை.
பாலுக்குக் காவல் இந்தியா, பூனைக்குத் தோழன் அமெரிக்கர்.
விருப்பமானது சமஷ்டி, கர்ப்பமானது ஒற்றையாட்சி.
இரண்டு பட்டால் என்றும் தாழ்வு,
ஒன்று பட்டால் இரண்டும் வாழ்வு.
உயிர் தமிழுக்கென்றோம் ஒவ்வொரு நாளும் காணாமல் போகிறோம்.
விடிய விடிய இனக் கைது. விடிந்து விட்டால் பயங்கரவாதம்.
பசியும் பட்டினியும் மலையகத்தில் பார்த்து ரசிப்போர் அரசகத்தில்,
இரைப்பை இருப்பதால் கர்ப்பப்பை வாடகைக்கு.
பெரும்பான்மை அதீதி, சிறுபான்மை அகதி
ஒடு உடைந்தவனுக்கு 1 லட்சம், வீடு உடைந்தவனுக்கு பூச்சியம்.
வந்து கொண்டிருக்கிறது மிதிவெடி,
வீட்டுக்கு வீடு வாசல்படி,
கண்டுபிடிப்புக் குறையுது, குண்டு வெடிப்புக் கூடுது.

Page 29
達エリー
மட்டக்களப்பிலே ஊரறிய உலகறிய சமையல் செய்து உபசரிப்பிலே வல்லவர்கள் நளபாகம் உணவகம்
அது எங்கிருக்கிறது
காலை மலர் மத்தியானம் வந்தால் உணவு. அதுமட்டும உங்களுக்கு அறு
* இறால் கொத் * கணவாய்க் கொத்த
எது இல்லை மறு இடப் 6)1/0
நீங்கள் மட்டக்களப்புக்கு வரும்போது வாருங்கள்.
அறுசுவை உணவளி பூத்திருப்போம். வழிமேல்
م<چہ e<چهھ<جہ م<چھe<چہ م<چہ ھ<یخچہ م<چہ م<چمم<یخچہ م<یخچہ م<چہ e<یہ e<چہ e<چہ م<چہ م<چہ
நளபாகம் உணவகம் இல 28, லொயிட் அவனியு மட்டக்களப்பு தொ.பே 065-4920753 ෆිට්ට්‍රෙට්‍රෙට්‍රෙට්‍රෙට්‍රෙට්‍රෙට්‍රෙට්‍රෙට්‍රෙට්‍ර
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒன(சுவைத்திரள்>
)}( تتخذ تنها میتوانستان تابسته است است.
அது லொயிட்ஸ் அவனியு, இல, 28ல் அமைந்திருக்கின்றது.
ந்தால் காலை உணவு. b சோற்றுடன் சேர்த்து அறுசுவை ா? ஒடருக்கும்/ஒடர் இல்லாமலும் சுவை உணவு அளித்து நாம் ரவிக்கின்றோம்.
விலை நிறைந்த சுவை. ட்டிறைச்சிக்கொத்துரொட்டி ந்துரொட்டி* இழயய்யக் கொத்துரொட்டி
ரொட்ழ* முட்டைக் கொத்துரொட்டி
ம்? அது உண்டு எம்மிடம். வாருங்கள், எம்மிடம் வேற்கக் காத்திருக்கின்றோம்.
க்க நாங்கள் காத்திருப்போம்! கண் ) விழி வைத்து அன்பாக உபசரிப்போம். நாங்கள் -Yo-Yo-Yoses-os-os-os-ossessessesoe)oses)o
Nalapagam
Restaurant
No. 28 Loyd is avenue Batticaloa TP 065.4920753 (D&ހ&<&ހ&<&ހ<ް&ހ<ް&ހلް<&ހ<ް&ހ<ް&_&&<&_<ް& C&>X
s

Page 30
660TUT) 65T606), (BLIT60 ബഖങ്ങീ' ]Tഞഖ് (Alg 6T60i 6)III65IIIf
56ODDIILII T6oli ĠġSIQ 613SIT6OOL JBL JBITIjllLII T6OrġSI ġDIT6of II5ljjrjrIib! காலந்தவறிக் கூவும் சேவலைப் பார்த்துச் சிலர் விடிந்து விட்டதென (8ഖഖgii) (8LITEഖg|Tൺ 6)shıQ 6l6OI6t6influLȚIĎ வெட்கிக் கொண்டது. மூச்சLக்கத் தெரியாதவர்கள் முத்துக் குளிக்கச் செல்வதால் U).ួTTPDរឿ5(36T @16560060. கீரி பிடித்த கோழியTப் 2) InfrS6i ID60ii) TL கூற்றுவன ஆட்சியில் 1600 150115(36T புத்துக் குலுங்குகின்றன.
“எதிரவாறநம்ம சின்னையாக்கு என்னடா மீசைந குசன் : “அட. நீ ஒண்டு. அவன் அக்சிடென்ற்பட்டவன்டா
மேலுதட்டில பிளாஸ்ரர் பொட்டிருக்கு.”
-கா.சிவலிங்கம்
 
 
 

幸ー<エつ
ஆணிலமாகும் எதிர்காலம்
இறக்குமதி மோகத்தால் மூத்த குறுக்கு முதலுதவி s அவசரத் தேவை.
கLை கட்டிய பரதேசிகளை விருந்துக்கு அழைப்பதால்
மூட்டை முடிச்சுக்
கட்டிக் கொண்டது நம் முதுசம் விட்டில்களுக்கும் வீரம் வந்து விளக்கணைக்கும் கலியுகத்தில் துறுத்துப் பச்சையில் மயங்குவதால் ċā6OfllIIIIDITJSIDJSI IblabbBITODI ib! அடிமைத் தளத்துக்கு ஆணியடித்து அடையாளத்தை மீட்காதவரை எதிர்காலத்தில் பிறப்பு
பிழை ஏற்படுவது தவிர்க்க முடியாதது.
அரசியல்வாதி
தேன் ஒழுகப் பேசியவர் வாய் கழுவிய குளத்தில் செத்து மறுந்தன மீன்கள்.
கானா முனா உடப்பு

Page 31
/Y•b口‘命氏 丽到 _融娜娜心, 郭 徐%3圈郵叫鄭的 觀 확 후 驯鹰 珊吸和홍鸣雁Ë区仍) 5)圆弧隐雅础册娜娜雕 邝吓)函脚脚踝仙阳g 加献丽 |一$ $ $ $ $ $ $ į : No*b {娜娜舞蹟 }断壮概鹰品娜·訂山홍 후 활 5岛� {雕塑舞舞舞蹈R心“B甄 圆圆麟隱斑*歸總 헬) 홍 홍3 후 홍5 콜~:•• N:•_j邮999如泗项G9외혁 "..----• •■ : 制冷闵 ā的U丽研研珊研 静罗融 劈岁劈日马丽吧홍와"E過 s Q 打猛4 ·行劉 대酶雅和丽莎研 "R EJ홍 4阿 해 홍 院城 知흑 3 距홍 ·』 홍闲、山爆福愈捆 数 $ o|}脚}剑即例 创闲口 鸦项印夏 \_'"%%%密必必
 
 
 
 
 
 
 

குட்டி மூட்டை: “அம்மா. மனிசருக்கும் எமக்கும் என்ன
ஒற்றுமை?” தாய் மூட்டை : “மணிசருக்கு ஆட்டுரத்தம் விருப்பம்.
நமக்கு மனிதரத்தம் விருப்பம்.”
ܢܠ
/ ཡོད༽
குட்டி மூட்டை: “விதி என்றால் என்ன அம்மா” தாய் மூட்டை : “எம்மை போன்ற அப்பாவிகளைநசித்து
நசித்துக் கொல்லும் மனிசராலை
எல்லாத் தடையும் மீறிகொடிய கொடிய
நோய்களை பரப்பும் நுளம்புகளை
أر ”.கொல்ல முடிவதில்லை ܢܠ
/エ ه حسیر یا g g : جے^\ 1ம் மூட்டைப் பூச்சி : “இந்த மனிசங்க எம்மினத்தை
இழிவாய் பேசினம்’ 2ம் மூட்டைப் பூச்சி : “எப்படி’
1ம் மூட்டைப் பூச்சி : “நாங்களும் அரசியல் வாதிக
ளும் ஒன்றாம். அவர்களும் சனங்கட ரத்தத்தை உறிஞ்சினமாம். நாமும் சனங்கட ரத்தத்தை உறிஞ்சிறமாம்.
} /ر ܢܠ
- கானா போனா
அவ்வளவு மடத்தனம் வாழ்வில் நமக்குக் கிடைக்கும்
இன்பங்களைக் கண்டு நாம் மகிழ்ச்சி அடைவ திலும் இருக்கிறது.
அப்படியானால் நாம் கடவுளை நோக்கி ‘இறைவா’ எனக்கு மேலும் மேலும் இன்பங்களைத் தந்து கொண்டிரு என வேண்டிக் கொள்கின்றோமே
அது எவ்வளவு பேதமைச் செயல்.

Page 32
്@ഌ
: கடல் கண்ணிகளுக்கு வேலி அடைக்க
முழயாகு பிரதேசம்.
*மனித உரிமை மீறல் : முதலாம் இடத்துக்கு எப்போது
வருவோம் என எதிர்பாக்கப்படும் விஸ்தரிப்பு.
*யுத்த நிறுத்தம் : பழகிப்போன சொல் இதன் மூலம் சமாதா
*மீனினம்
ঈ6@m•x¢
*குரங்கு
*முட்டை -
*திருவள்ளுவர்
னம் வராது என்பதைப் பாமரரும் அறியச் செய்த பாசாங்குச் சொல்.
: இனப் பிரச்சனையால் அதிகநாட்கள் வாழ
வரம் பெற்ற உயிரினம். 들
: பாய் விரித்துப் படுக்க விரும்புவர்கட்கும் ‘றும் ஒன்று எடுக்குமாறு சுட்ழக்காட்டப் படும் பாதுகாப்புப் பிரதேசம்.
; தோட்டத் தொழிலாளர்களை வேதனக் குறையால் எதிர்காலத்தில் தேயிலை கொய்யநிர்ப்பந்திக்கப்படப் போகும்
តាវិសាg.
: இதுவரை கலப்படம் செய்யாகு ஒரேயொரு
பொருள்.
: கசாய்புக் கடைக்குப் பெயர்வைக்க
முழயாகு பழந்தமிழ்ச் சிந்தனையாளர்.
முதலாளி : “நீங்க என்னென்ன எடுத்தீங்க.”
கடைக்கு வந்தவர் : “வடை-1, பற்றிஸ் -1, றோள்-1, ரீ-1”
முதலாளி : “ஆ. வடை-20, பற்றீஸ் -20”
கடைக்கு வந்தவர் : “என்ன வட 20 ரூபாவா? 5 ரூபாதானே
முதலாளி : “அது அந்தக்காலம். இது இந்தக்காலம் பெரியவர்நீா
இருக்கிறீங்க’
-கா.சிவலிங்கம்
 
 

*கமறா
*தேங்காய்
്ഞുങ്ക്
: மொழிப்போராட்டகாலத்தில் மேற்கோள்
காட்டப்பட்ட கவிஞர். இப்போது மலிவுப் புதியில் உறங்கிக்கொண்டிருக்கின்றார்.
; மய்யும் மந்தாரமுமான வானத்தில் தோன் றும் ஒருநட்சத்திரங்கள் போல் விளம்பரப் பலகைகளில் எங்காவது தோன்றும் 5យាg.
: சிறுபான்மையினரால் பாவிக்கப்பட்டால்
விரும்பய்யாத இயந்திரம்.
: குடும்பத்தலைவியர் கனவில் காணும்
இரத்தினக்கல்.
எந்த ஒருநாடும் இந்த வழவத்தில் உட்பட்டால், பிரச்சனைதீரவாய்யில்லை என்பதை உணர்த்தும் புளிப்பண்டம்.
广
வீட்டுக்காரர் :
99
பிச்சைக்காரர் :
வீட்டுக்காரர் :
“உன்ரபாத்திரம் சரியில்லப்பா.”
“ஓம் ஐயா, பாத்திரம் கொஞ்சம் நெளிஞ்சி
போச்சி’
“நான் அதச் சொல்லலப்பா. இந்தப்
பிச்சைக்காரவேடத்தத்தான் சொல்லுறன்.”
-கா.சிவலிங்கம்

Page 33
  

Page 34
-வினோதன்
(UTழ்ப்பாணத்துக்கு ரயில் சேவை பிரிட்டிஸ் ஆட்சியினால் அமைக்கப்பட்டது. முதலாம், இரண்டாம் வகுப்புப் பெட்டிகள் பெரும்பாலும் அரசசேவையில் உள்ளவர்கட்கும், வெள்ளை இன மக்களுக்கும் ஒதுக்கப்பட்டது. மூன்றாம் வகுப்பிலேயே பிரயாணிகள் முண்டியடித்துப் பிரயாணம் செய்தனர். கொழும்பில் இருந்து பிரயாணம் செய்த ஒரு மனிதர் இரண்டாம் வகுப்பு ரயில் பெட்டியில் பிரயாணம் செய்து வந்தார். இதனை அவதானித்த வெள்ளையண் ஒருவர் அவரை மூன்றாம் வகுப்புப் பெட்டிக்கு நகர்த்த யோசித்து ஆங்கிலத்தில் கதைத்தார். மனிதனுக்கோ ஆங்கிலம் விளங்கவில்லை. வெள்ளைக்காறன் ஆத்திரத்தில் அமர்ந்திருந்
தான,
 
 
 
 

ரயில் கொக்குவிலை அடைந்தது. அந்த மனிதர் தான் இறங்குமிடமான கொக்குவிலில் இறங்கினார். இதைத் தருணமாகப் பாவித்த வெள்ளையண் அந்த மனிதரின் பிடரியில் ஒரு குத்து விட்டார். அந்த மனிதர் இறங்கிச் சென்றுவிட்டார்.
· · · வீடு சென்ற மனிதர் தன்னுடைய மனைவியால் வரவேற்கப் பட்டார். ரயில் பிரயாணம் எப்படி என மனைவி வினாவினார். அதற்குப் பின் வருமாறு பதில் கிடைத்தது. “பிரயாணம் நல்ல படியே அமைந்தது. வெள்ளையனின் விஞ்ஞான முன்னேற்றம் இது இறங்கும் போது ரயில் பிடரியில் குட்டுகிறது, இதுவே சகிக்க முடியாது உள்ளது.”
தடபுடலான வரவேற்பு, நாங்கள் ஒண்ணும் பிழை சொல்லலை. சரியண்ணும் சொல்லல்ல. அவருக்கு தாஜ்மகாலைக் காட்டவும் துடியாய். துடிக்கிறாங்க. அவங்க தங்கடை நாட்டிலை இருக்கிறதை யாரு கண்டாலும் காட்டிட்டேன் ஆட்சேபனை இல்லை.
இந்தியா, தமிழ் நாட்டிலை இருக்கிற ஆயிரக்கணக்கான தமிழ் அகதிகளையும் இராணுவத் தளபதிக்குக் காட்டி இவங்களும், உங்க நாட்டுப் பிரசைகள் எண்டு சொல்லி. தாய் நாட்டைக் காட்ட இந்தியா நடவடிக்கை எடுக்க வேணும். இதை வுட்டுட்டு. தாஜ்மகாலையும் அப்பாலை இருக்கிற இமயதலையையும் காட்டி என்ன செய்யப் போறாங்க.

Page 35
  

Page 36
கவிஞர்.
妙 \ایه چI الوصف vN( ہے r یه &٦ly \\( ای/ wall \N( ایهg/ Wð ※奖签全奖签※妾奖签※妾※蚤圣※妾 ج&حage=zےبرابر مجڑی 终濠冬濠冬溶器冬疹器冬濠签※※濠
இடம் :- கடற்கரை
(ழ்த்த தம்பி மீண்பிடி உபகரணங்களுடன் வந்து அவற்றைக் கீே
அவிழ்த்து அதனுள் இருந்து குட்டானை எடுத்துத் தட்டித் தி உபகரணங்களுடன் வருதல்)
eԱighցմiմ:- (வெற்றிலை போட்டுக் கொண்டு) ஆ.
beចាស់សាប់um = ஒய். (மீன்பிடி உபகரணங்களைத் தோடவந்துத்தா.
eԱthsհմiմ:- ஓம் செல்லப்பாண்ண, பொழுது பட்ட
thöFEúsuúult :- ஒ. ஒ. (நிலத்திலிருந்து குட்டானைத்
கானல்ல.
eւրghցմiմ:- இம். அந்தாவாறன்ன நூறு வயது டாட மீன்பிடி உபகரணங்களை இறக்கிவை
តែរារាំឆ្នាំឆ្នាំ៥៩ - ஆண்டவனே முருகா. சித்திரவருச கண்ணமுழிச்சிப் பாரப்பா. புள்ள குட்
ରଥFଦ୍ଦntium :-) । ஒ. உனக்கு மட்டுந்தான் புள்ள குட்
கார்த்திகேசு :- அட. குட்டானையும் வச்சிற்று வந்து
beចសំលាប់um = உனக்குச் சுருட்டுத்தானே வேணும், !
(சுருட்டைக் கொடுத்தல்)
5រារាំឆ្នាំឆ្នាំងថា ៖- பாத்தயாடா மூத்தம்பி, குடுத்தாருக்கு (சுருட்டைப் பற்றவைத்துக் கொண்டு)
eԱishSiմiմ:- என்ன காந்தியண்ண, பெரிய இழுபறி
(கணபதிப்பிள்ளை வருதல்)
கார்த்திகேசு :- கணயப்புள்ள அத்தானும் வந்துத்தார்
கணபதிப்பிள்ளை - (நின்றவாறு) என்ன இளுபறி மூத்தத
stրձsհմiմ:- அது நம்மட புள்ளட விசயந்தான் கை
கணபதிப்பிள்ளை - என்ன. கிட்ணப்புள்ள வாத்தியாரும்
sԱightդհմl:- ஒம் கணயப்புள்ளண்ண, பொடியனெண்
beឆ្នាំ២លាប់ប = புள்ளயுங் கெட்டிக்காரிதான்டா, படிச்
எடுத்துத்தாளே.
கணபதிப்பிள்ளை - இம். இம். அடேதம்பி. அந்த சி.சி.
மூத்தம்பி ;- ஓம், ஒம்.
கணபதிப்பிள்ளை - அந்தாள் கிட்ணப்புள்ள வாத்தியாரோ
eԱֆչհմմ:- ஓம். அதுக்கென்ன இப்ப,
 
 

கா.சிவலிங்கம் Gasun
!, \ یlly ᏔᎨ4Ꮺ vی لم%/ \N۵ ی \ 7% ہےlly ھ سے ہے/للہ! بھلا الأول/ YhTTAeSeiei LKh hMTATYeqL LSLKhTAYeSqL LAKhJATTAeSLeLeqLqL LKTJhTTALSLeq LqLKE hTALSeeALqLJTJETAeeAqLqLALAShE hMTASzTE hTTATS སྟོང་ཐོཛོ་ཚོ་ཕྱི་ཌ་རྐྱེ་ 烹妾※旁※※妾旁祭溶器祭濠ངོ་ཐོ་ཐོ་རྡོ་དང་༤་ཐོ་
ழ வைத்துவிட்டு நிலத்தில் உட்காருதல். பின் தலைப்பாகையை றந்து வெற்றிலை போடுதல். அப்போது செல்லப்பா மீன்பிடி
. செல்லப்பாண்ண.
தோழிலிருந்து இறக்கிவைத்தல்) என்னடாம்பி நேரத்
ாப் பெரிய கரச்சல் செக்கினும், அதுவும் இதுவம்.
திறந்து சுருட்டை எடுத்துப் பற்றவைத்தல்) எங்க காத்தியக்
பா அந்தாளுக்கு (கார்த்திகேசு தனது பையனுடன் வந்து பத்துவிட்டு நிலத்தைச் சீய்த்து உட்காருதல்)
மும் எட்டி எட்டிப்பாக்குது. இனியென்டான கொஞ்சங் டிக்காரன்.
9.
த்தன்டாப்பா.
இந்தாபுடி.
க் குறைவில்லடா.
அதுருக்க. உன்ட மகள் விசயம் எப்பிடிடா?
யாத்தானிரிக்கு.
bil
ணயப்புள்ளண்ண.
மிச்சம் இறுக்க மாத்தான் இருக்கார் போல
டா ஒத்தக்காலில நிக்கானாம். புள்ளயத்தான் முடிக்கிறண்டு.
சி சேதின எல்லாம் பாஸ்பண்ணி கச்சேரியில வேலையும்
ரெட்ண சிங்கத்தார் இருக்கார்தானே.
ட நல்ல நெருக்கம்டா தம்பி.

Page 37
Għerf sù suüum :- உன்னப் போய்க் கதச்சிப்பாக்கச் ெ
eԱighճեմ):- எனக்கேலாப்பா,
கார்த்திகேசு :- கணயப்புள்ளத்தான்! சி.சி ரெட்ண
கொஞ்சம் அவரோட கதச்சிப்பாருங்
கணபதிப்பிள்ளை - இம். சரி, நான் கதச்சிப்பாக்கிறன், !
கார்த்திகேசு :- ஓம்டா தம்பி. சித்திரவருடமும் வருகுது
என்ன நாமென்ன வட்டமேச மாநாடு
போகுது. எழும்புங்கடாப்பா.
beឆ្នាំសាប់um= (எழுந்து) ஒ.ஓ. கொடுவாக் கடிக்கிற
கணபதிப்பிள்ளை;- இம். இம். சிலாவலுக்க போய் இரை
இம் :- காரியாலயச் சிற்றுண்டிச்சாலை.
(ரஞ்சனும் மஞ்சுளாவும் மதிய போசன இடைவேை சாப்பிட்டுக் கொண்டே உரையாடுதல்)
gesë arsi :- மஞ்சு இத்தாங்க முட்டைப் பொரியல்
UnusēINSTIT :- ஆ. நல்ல மனமா இருக்கு. ப
விருப்பந்தானே உங்களுக்கு
:- ஒ. நல்ல விருப்பம்
Unusiĥerĥ5TTT :- ஆ. அப்ப இந்தாங்க மீன்சினை.
[jusiଞ୍f :- எனக்கு மணலtன் குளம் பெண்டா நல்
மற்றது மரக்கறி எண்டா, வாழக்கா ெ ராயப் க் சுண்டல் , முருங்க இை
இதுகளுக்குள்ள கொஞ்சம் றாலக்கிள்
போட்டா எப்பிடி இருக்கும்.
UntsistirT:- சொல்லி வேலல்ல. எங்கட அம்மா நல்ல கறி, சொதி அதுகளில ஒரு சொட்டு அ உப்பு, புளி, உறைப்பு எல்லாம் கணக் அம்மா எப்படி?
|])\$ଞ୍f :- பறவால்ல மஞ்சு.
Un añENGTTTT:- ரஞ்சன்! உங்களுக்கு “எக்ஸ்ரேனல் டி
|titlgäଥF୍f :- படிப்பா? முதல் நம்மட கலியாணம் ந
நம்மட விசயத்தில அம்மாக்கும் விருப் செய்யிற? இம். ரெண்டு பேரும் சேந்து
UDSENSITIT :- சச்ச. அதெல்லாம் சரியில்ல.
|])\siଣr quit' :- அப்ப?
UnsñER GITT :- நீங்க ஒண்டுக்கும் கவலப்படாதீங்க. மு
កុំតវ៉ា = அட, என்ன மஞ்சு அவ்வளவு அளுத்த
UnsēIRGITT :- அப்பிடித்தான். நான் பிடிக்கிற கந்தசவ
ரஞ்சலர் :- தற்சேலா நடக்காம (மஞ்சுளா ரஞ்சனி
 
 

Fால்லுறாருடா.
|ங்கத்தார் உங்களோடயும் நல்ல நெருக்கந்தானே. நீங்க 66.
அப்பநம்மளக் கவனிக்க வேணும்.
. அந்தாளுக்கு போத்தலக் கீத்தல எடுத்துவைடா. (எழுந்து) போடவந்ததா? அல்லாட்டி மீன்வீச வந்ததா? கருக்கலாப்
சத்தமெல்லாம் கேக்குது.
யக்கிரையப் புடிச்சித்து வந்து கயிறெறிஞ்சி பாப்பம்.
uffio dung
ரீன் சினை ே
ல விருப்பம். வள்ளக்கறி, லச் சொதி, ளி மணப்புப்
)T&SF60) DLT. அகப்பையில எடுத்து உள்ளங்கையில் வச்சி நக்கிப்பாத்து கா இருந்தாத்தான் அடுப்பில இருந்து இறக்குவா. உங்கட
க்கிறி செய்யிற ஐடியா இல்லையா?
டக்கவேணும், அதுக்குப் பிறகுதான்படிப்பு, என்ன மஞ்சு?
பமில்லை, அப்பாக்கும் விருப்பமில்லாம இருக்கே. என்ன
எங்கண்டான ஒடிப்போயிரலமா?
ருகன் நம்மள கைவிடமாட்டார்.
ந் திருத்தமாகச் சொல்லுறீங்க.
டி விரதத்திற்கு நிச்சயம் பலன் கிடைக்கும் ரஞ்சன்.
ன் வாயைக் கையால் பொத்துதல்)

Page 38
5ー籠エ龍エリぶ予リぶ予誕ぶ予薬ふ。 豆酒巧汇豆誓云誓亏型区、云誓云莺云重、安誓云誓云重亏、 Unlishsmm:ー ஏன் அப்பிடிச் சொல்லுறீங்க?
ylgäfli :- சரி. சரி. அது இருக்க உங்கட வீட்ட
ញញើe = அங்க. அம்மாவுக்கும், அப்புச்சி, தங்
வீட்டுப் பிரச்சினைகளால தான் அவங்க
|titlgäfli :- (பெருமூச்சு விட்டுக் கொண்டு) சரி, சரி நம்மட கலியாணம் இந்தச் சித்திரவருக வருசத்த திராய்மடு முருகன் கோயிலில
Uns ER GITT :- இம், சரி.
இடம் :- இளைப்பாறிய அதிபர் கிருஷ்ண பிள்ளையின் (கிருஷ்ணய் பிள்ளையின் மனைவி பார்பதி போன்ற வற்றைப் பொறுக்கிக் கொண்டிருந்த
uছাট্টগ্রুদ্ধঘাঁ :- அம்மா! தேத்தண்ணி இருக்கா?
urrňug:- ஒம். போட்டுத்தாறன் (சிறிது நேரத்த சொல்லியிருக்கன் அவன் மூத்த தம்பிர
ছটফ্রজী :- (நினைப்பு) "என்ன இது வந்ததும் வரா: அம்மா! நானும் அவளும் ஒரேகந்தோரி புளங்காம, கதைக்காம எப்பிடி அம்மா
urriñugin:- அடேய், அவளோ குமர்ப்புள்ள, நீயும்
ព្វគ្រឿងតវ៉ា = ஒண்டும் நடக்காம்மா. அப்பாவும் நீங்களு
இருக்காது.
uTñu:- நீ இப்ப நல்லா வாய்க்குவாய் கதைக்க
খাদ্ধট্রক্রিছাত্রী :- என்னம்மா? நியாயத்தக் கதைக்கப்போ6
பார்பதி:- நீ இப்ப நியாயத்தத்தானா கதைக்கிறா
குடும்ப அந்தஸ்த்து எப்பிடிடா? அவ:ே பிரின்சிபிள்ற மகன்.
ហ្គ្រាភ្នំក្រវ៉ា = (எழுந்து) அவளில் என்ன மீனா ஒட்டித்
urrňug:- அடேய், நீ அவசரப்படாம சொல்லுக்கே உனக்குக் கலியாணத்த முடிச்சிவைப்பட
ভিটািঞ্জট্ৰী :- சீதனம் குடுக்க வழியில்லாத புள்ளைகள்
கலியாணங்கட்டுற.
பார்பதி:- அப்ப நீ அந்தக் குப்பையில கொண்டு
ព្រួញភ្នំត្រពាំ ~ அம்மா! அவள் குப்பையில கிடந்தாலு
9 bLDT.
Unfusill:- ஆ. குண்டு மணியும் செந்தாமரையும் (
கதிரையில் இடறிவிழுந்து ஓடுதல், கிரு
கிருஷ்ணபிள்ளை - என்ன பெரிய சத்தமாயிருக்கு. ஆ.
பார்பதி:- அது ஒண்டு மில்ல.
கிருஷ்ணபிள்ளை - என்ன ஒண்டு மில்ல எண்டு சொல்லுறா? மாப்பிள ஒடியிருக்கார், அப்பிடித்தானே'
 
 
 
 

ബtlിg?
கச்சிமார் எல்லாருக்கும் விருப்பந்தான் ஆனா. உங்கட 3ளுக்கும் யோசினையா இருக்கு.
umüLub. ஈத்துக்கிடையில நடந்துதெண்டா நம்மட தலைச்சித்திரை யே கொண்டுவமே.
ர் வீடு.
நிலத்திலிருந்து கொண்டு சுளகில் அரிசைச் சீய்த்து நெல், கல் ல், அப்போது மகன் ரஞ்சன் வந்து கதிரையில் இருத்தன்)
நின்பின்) அடேய் மனே! உன்னட்ட எத்தின தரம்டா
மகளோட நெருங்கிப்புளங்காத, கதையாத எண்டு.
ததுமா ஆரோ வந்து நல்லா அண்டி இருக்காங்கபோல”) லதான் வேலை செய்யிறம். அப்பிடி எண்டா நெருங்காமப், இருக்கிற?
இளந்தாரிப் புள்ள. நெருங்கிப் புளங்கினா?
ம் ஓம் எண்டு ஒருவார்த்த சொல்லுங்க. ஒரு பிரச்சினையும்
கத் தொடங்கிற்றா.
னா வாய்க்குவாய் கதைக்கிறன் எண்டுறீங்க.
? அடேய், அந்தப் பொட்டடகுடும்பம் எப்பிடிடா? நம்மட ளா ஒரு மீன்பிடி காரண்டமகள். நீயோ ஒரு ரிட்டயர்ட்
து இருக்கு? விசரக்கிளப்பாதீங்க எனக்கு.
8 இருந்தா ஒரு நல்ல இடம் பாத்து நல்ல சீதத்தோட
கலியாணங் கட்டுறல்லயா? நான் சீதனம் வாங்காமத்தான்
போய் விழத்தானாபோறா?
ம் குண்டுமணி அம்மா, சேத்தில பூத்தாலும் செந்தாமரை
(செருமும் சத்தம்) அந்தா அப்பாவும் வந்துத்தார். (ரஞ்சன் ஷண பிள்ளை வருதல்)
மாப்பிளயோட சத்தம் போட்டிருக்கா, நான் வாறதக்கண்டு

Page 39
リエ普エリエリエ電 uវារ៉ាបg- ஒமப்பா, இவன் என்ன மடப்பிள்ளயா
கிருஷ்ணபிள்ளை - (கதிரையில் இருந்து கொண்டு) அதத் ஒரு நல்ல இடம் பாத்துவச்சிருக்கன் ஆள். புதுவீடு, வீட்டுக்குரிய சாமான் தாறாங்களாம். நான் ஓம் எண்டுத்தன
uវារ៉ាបg- நீங்க ஒமெண்டு என்னப்பா செய்யிற? நிக்கான் மூத்ததம்பிர பிள்ளையத்தா
கிருஷ்ணபிள்ளை - (கதிரையைவிட்டு கோபத்தோடு எழு மாப்பிள எடுக்கப் பாக்கிறாங்க என் அந்த மீன்பிடிக்கிற கூட்டத்தோட நம
uកំបg- அவங்களுக்கு ஏசி என்னப்பா பிரயே அங்க போகப்பாக்கிறான். இந்த மடை ஏசுறீங்களே.
கிருஷ்ணபிள்ளை - (கதிரையில் இருந்தல்) சரி, சரி. அ6
ufuട്ടി :- என்ன செய்யப் போறிங்க நீங்க?
கிருஷ்ணபிள்ளை - அந்தப் பொட்டய ரான்ஸ்பரில அனு
UITñus:- ஏனப்பா அந்த அநியாயத்தச் செய்ய
கிருஷ்ணபிள்ளை - அப்ப வேறென்னத்தச் செய்யச் சொ6
குடுக்கவா? (சி.சி ரெட்ணசிங்கத்தார் சுங்கான் ப
சி.சி.ரெட்ண சிங்கம்:- என்னடாப்பா? ஆர றான்ஸ்பரில அணு
கிருஷ்ணபிள்ளை - ஆ. வா ரெட்ண சிங்கம்.
unពុំបាg— வாங்கண்ண. இருங்க.
(சி.சி. ரெட்ண சிங்கம் கதிரையில் இ
சி.சி.ரெட்ண சிங்கம;~ என்ன? நான் வரக்குள்ள பெரிய கி
கானல்ல?
unflug- அது இவர் சும்மா சத்தம்போட்டவர்
சிகிவரட்ணசிங்கம்:- சும்மா சத்தம் போட்டவனெண்டா இ6
கிருஷ்ணபிள்ளை- இல்ல ரெட்ண சிங்கம். நம்ம பைய6 நான் ஒரு வடிவான ரீச்சர் புள்ளயக் காசெல்லாம் தர்ராங்களாம். இவன் எண்டுத்து நிக்கான்டா. இவனுக்கு எ6
சி.சி.ரெட்ணசிங்கம்:-நீ ஒண்டுஞ் செய்யத்தேவல்ல. பேசா
கிருஷ்ணபிள்ளை;- எந்தப் பொட்டய?
சி.சி.ரெட்னசிங்கம்:-அந்த லவ்பண்ற பொட்டயத்தான்.
கிருஷ்ணபிள்ளை - (எழுந்து) இவ்.இவ்.இவ்.இவ் எனக்கு
បណ៍បg— (தேநீரைக் கொண்டுவந்து வைத்தல் நீங்க என்ன வந்ததும் வராததுமா அ
கிருஷ்ணபிள்ளை - இஞ்ச நீ பேசாமப் போபாப்பம், கதை
சிகி.ரெட்னசிங்கம்:-நீ போ பார்பதி. இல்லாட்டி உன்னை
(பார்பதி போதல்)
 

இருக்கான் ஒரு சொல்லு கேக்கிறானில் லையே.
தான் சொல்லுற வயதுக் கோளாறு எண்டு. நான் அவனுக்கு பிள்ளை ஒரு ரீச்சர். கிளிப்பிள்ளமாதிரி நல்ல வடிவான 5ள், நகை ஆறேளுபவுண் காசு அஞ்சி லெட்சம் எல்லாம் .
அவனல்லோ ஒமெண்ணவேனும், அவனோ ஒத்தக்காலில ன் முடிக்கப்போறன் எண்டு.
து) ஆ. முடிச்சுடுவன் நான். அவங்களும் நல்லா ஒசியில ன? ஆக்களப்பார் ஆக்கள செத்தக் குடிலும் ஆக்களும் க் கென்ன சம்பந்தம்?
ாசனம்? அவங்களா இவனக்க்ேககிறாங்க? இவன் தானே யனுக்குக்குப் புத்தி சொல்லுறத்தவிட்டுத்து அவங்களுக்கு
பங்களுக்கு நான் செய்யிறன் வேலை.
ப்பப் போறன்.
ப்போறிங்க,
ல்லுறா? அப்ப நம்ம மாப்பிள்ளைக்கு ரான்ஸ்பர் எடுத்துக்
த்திக்கொண்டு வருதல்)
றுப்பப் போறா?
இருத்தல், சிறிது நேரம் நிசப்தம்)
Iடுகிடுப்பாக் கிடந்தது. இப்ப ஒரு சத்தத்தையுங்
அண்ண. (பார்பதி தேநீர் எடுக்கச் செல்லுதல்)
வனுக்குப் பயித்திய மல்லோ பிடிச்சிருக்க வேணும்?
ன் இருக்கானே. அவன் ஒரு பொட்டய லவ்பண்ணுறான்டா.
கட்டிக்குடுக்க ஒமெண்டுத்து வந்திருக்கன். வீடு, நகை, ஒரு வெங்காயம் கீழ்சாதிப் பொட்டயக் கட்டப் போறன் ன்ன செய்யவேணும்?
ம அந்தப் பொட்டயையே அவனுக்கு கட்டிக்குடு,
விசரக்கிளப்பாத ரெட்ணசிங்கம். உனக் கென்ன பயித்தியமா?
) எடுங்கண்ண ரீய, (கிருஷ்ணப்பிள்ளையைப் பார்த்து) |ந்தாளுக்கு ஏசுறீங்க?
நக்கிறாவு.
ாயும் ரான்ஸ்பரில அனுப்பிப் போடுவான்.

Page 40
சிகிரெட்லாசிங்கம்:-
ចាំក្រូនយោធាពុំបាសាណា -
சி.சி.ரெட்ண சிங்கம்:-
subalisuruneisoneIT :-
சி.சி.ரெட்னசிங்கம்:-
së jenistrTullsisunet :-
afar.engueUTeFriesth:-
៩គ្រួសាយោធារាំងជាង -
uកំបg
শ্ৰীশ্ৰী, দ্বীng"দ্ধ্যাঞ্জFilঞth :-
ਧ:-
சி.சி.ரெட்னசிங்கம்:-
uTřug:-
எனக்கு இப்ப வாயக் கிளப்பாதீங்க. (சிறிது நேரம் நிசப்தம். சி.சி.ரெட்ண
இப்ப என்ன? ஆத்திரமெல்லாம் அட உங்கட கலியாணம் எப்பிடி மூடிஞ்ச யோசிச்சிப்பார்.
எங்கட கலியாணத்துக்கு என்ன? ந6
ஆ. நீ என்ன? சீதனம் வாங்கியா இடத்திலெல்லாம் இருந்து நல்ல சீத இல்லையா? அதுக்கெல்லாம் நீ சம் பார்பதியத்தான் முடிக்கப்போறன் என
இஞ்ச, எனக்கு இந்த விசர்க் கை நடந்த தெல்லாத்தையும் என்னத்துக்
ஏணிப்ப ஆத்திரப்படுறா? ஏன் ஆத்திர
சரி, சரி. சொல்லுபாப்பம். (பார்பதிவருதல்)
நான் சொல்லுறனென்டு ஒருத்தரும் கு அதென்ன அப்பனுக்கு ஒரு நியாயம் மகன் லவ் பண்ணப்படாதா? அப்ட கூட்டிற்றுப்போகலாம், கடற்கரைக் ெ செய்யப் படாதா? அப்பன் சீதனத்தே சொல்லலாம். மகன் சொல்லப்படாத முந்தநாள் பளகின ஆக்களில்ல. நா! திரிஞ்சநாம. அதனால எனக்கு உ6 தெரியாத விசயங்கள் ஒண்டுமில்ல. பி இப்பிடியெல்லாம் செய்யப்படாது. அே எண்டுறத்துக்காக பார்பதிர வீட்டுக் ே களற்றிவிட்டிருப்பா? எத்தினதரம் சை காத்தக் களற்றிவிட்டுத்து உருட்டிற்று காத்தடிச்சிருப்பா? சொல்லுபாப்பம். இ (பார்பதி சிரித்துவிட்டுக் குனிதல். கிரு கீழ போட்டுத்து நில், அவர் காதப் உனக்கு ஏன்டா இந்தக் குணம். அதுகளும் ஆளை ஆள் காதலிக்கு வைரா. அதுகள் வயது வந்த பிள்ை குடிச்சித்துகள் எண்டா என்னடா செய் எண்டா நீங்க என்ன செய்யப்போ உங்களைப்பற்றி என்ன கதைப்பாங்க. கதச்சிப்போட்டுச் சந்தோசமாக கலிய அதுக்கிடையில கலியாணத்தக் க சந்தோசமாகக் கொண்டாடுங்க ளே
சரி ரெட்ணசிங்கம் நீ சொன்ன தெ6
ஓம் ரெட்ணசிங்க அண்ண நீங்க ெ அப்ப நீங்களே ஒரு நல்ல நாளாப்ட
அப்பாடா, கல்லில நாருரிச்சமாதிரி சொல்லுறன். இல்லல்ல, இப்பவே L (பார்பதி உள்ளே செல்லுதல்)
என்ன கிட்ணா இனியென்டான சிரிர (பார்பதி பஞ்சாங்கத்தைக் கொண்டு
(பஞ்சாங்கத்தைப் புரட்டிப்பார்த்து விட்(
நேரம் என்ன, காலையிலயா, பின்ே
 
 

எனக்கு ஆத்திரமாத்திரமாவருகுது.
சிங்கம் தேநீரைக் குடித்தல்)
ங்கித்தா? கிட்ணா நான் சொல்லுறன் எண்டு கோபிக்காத, தெண்டு உனக்கு ஞாபகமிருக்கா? டெக ஞ’ ச ம’
ல்லாத்தான் நடந்தது.
கலியாணம் முடிச்சா? உனக்கு எத்தினயோ நனத்தோட கலியானங் கேட்டு வந்தாங்க. மதிச்சயா? நீயும் ஒத்தக் காலிலதான் நிண்டா 1ண்டு.
தயெல்லாம் கதைக்காத ரெட்ணசிங்கம். அந்த நாளில கு இப்ப கதைக்கிறா?
ப்படுறா? நான் கதைக்கிறத்தக் கொஞ்சம் கேளன்டாப்பா.
றை நினைக்கா தீங்க. நான் நியாயத்தத்தான் சொல்லுறன். , மகனுக்கு ஒரு நியாயம். ஆ. அப்பன் லவ்பண்ணல்லாம் பன் காதலியோட சந்திச்சிக்கதைக்கலாம், படத்துக்குக் கல்லாம் கூட்டிற்றுப்போகலாம். மகன் அப்பிடி யெல்லாம் நாட வந்த கலியானங்களையெல்லாம் வேணாம் எண்டு ா? இதென்ன நியாயம் டாப்பா? கிருஷ்ணா. நாம நேற்று ம அஞ்சாறு வயதில இருந்தே ஒருமிக்கக் கூடி விளையாடி ன்னைப்பற்றியோ அல்லது உனக்கு என்னைப் பற்றியோ பிள்ளைகளில கண்டிப்பு இருக்கத்தான் வேணும். அதுக்காக டேய் நீ நல்லா யோசிச்சிப்பார். நீ பார்பதிய பாக்கவேணும் கற்றடியில வச்சி நீ எத்தின தரம் சைக்கிள் பெல் மூடியக் க்கிள் செயினக்களற்றி விட்டிருப்பா? ஆ. சைக்கிளுக்குக் வந்து பார்பதிர வீட்ட பம்ம வாங்கித்துவந்து எத்தினதரம் தெல்லாம் பார்பதிர வீட்டடியில வச்சித்தானா நடக்கவேனும் நஷ்ணப்பிள்ளை காதைப்பொத்துதல்) நீ சிரிச்சிற்று தலயக் பொத்தித்து இருக்கட்டும். கைய எடு கிட்ணா கையளடு. பாவம்டா, அதுகள் இளசுகள். உங்களப் போலத்தான் துகள். பேசாம ரெண்டு பேருக்கும் கலியாணத்தச் செய்து ளகள். நாம கட்டுப்படுத்த ஏலாதுரா. பிறகு நஞ்சக்கிஞ்சக் |வா. இல்லாட்டி கல்லடிப்பாலத்தில இருந்து குதிச்சித்துகள் ரீங்க. அப்பிடி எதுவும் நடந்துது தெண்டா, ஊராக்கள்
ஆ. அதனாடி கிட்ணா, அவன் மூத்த தம்பியையுங்கூப்பிட்டு ாணத்தைக் கட்டிக் குடுடா, சித்திர வருசமும் வரப்போகுது. ட்டிக் குடுத்தயென்டா அதுகள் தலைச் சித்திரவருசத்த
TLLT.
ல்லாம் சரிதான்.
சான்ன தெல்லாத்தையும் நானும் ஒத்துக் கொள்ளுறன். ாத்துச் சொல்லுங்களன்.
அப்ப நான் பொயிற்றுவாரன். நாளைக்குவந்து ஒரு நாள் ாத்திருவமே. பார்பதி பஞ்சாங்கத்த கொண்டுவாபாப்பம்.
ாப்பா. வந்து கொடுத்தல்)
G) இந்த பங்குனி மாதம் 25ந் திகதி ஒரு நல்லநாளவருகுது.
FOTUL DIT?

Page 41
சி.சி.ரெட்னசிங்கம்:- முற்பகல் 10.17இல இருந்து 10.5 செய்யுங்க. நான் மூத்த தம்பியையு செய்யச் சொல்லுறன். அப்ப வந்த வரட்டுமா.
கிருஷ்ணபிள்ளை;- ஓம் ரெட்ணசிங்கம் நல்லது பொ
நடப்பிக்கவேணும்,
சிசிரெட்ணசிங்கம்:- ஒ. அதுக்கென்ன. ஆனாக் காசக்
(மூவரும் சிரித்தல்)
பார்பதி:- அப்ப, அண்ண, றிங்ஸ் என்னவும்
சி.சி.ரெட்னசிங்கம்:- இல்ல பார்பதி, நான் இனிப்போய்
umňug:- அப்ப சரியண்ண, பொயிற்று வாங்
(அதன்படி கல்யாணம் நடத்து ரஞ்சனு தலைச் சித்திரை வருஷத்தைக் கு
அம்மா: “அம்மம்மா போகப் போறா வாம் வந்து வாய்காட்டுபிள்ளை’
வாய் காட்டப்படாதெண்டு அப்பா
திS சொல்லியிருக்கார்’
கா.சிவலிங்கம்
"நானும் தான் பார்க்கிறேன் அண்ணே. மகரவரிசையில் விலை ஏற்றம் நடக்குது."
 
 
 
 
 
 
 

ਡੁਡੁਤ ਤਤ ਤਤCap662 வரை சுபநேரம். நீங்க அதுக்கேத்தமாதிரி ஒழுங்குகளச் ம் கண்டு சந்திச்சி கதைச்சி இதுக்கேத்தமாதிரி ஒழுங்குகளச் காரியம் கடவுள் புண்ணியமா இனிதே நிறைவேறிற்று. நான்
யிற்றுவா, ஆனா ஒண்டு, நிதான் நிண்டு கலியாணத்த
சேக்கேட்டிராத,
குடிச்சித்துப் போங்களன்
ச் சாப்பிடுறதானே
岳。 றும் மஞ்சுளாவும் திராய்மடு முருகனைத் தரிசித்து விட்டுவந்து தூகலமாகக் கொண்டாடினார்கள்.)
விருந்தாளி : “உளியும், சுத்தியலும் இருக்கா பிள்ளை’
வீட்டுக்காரி : “என்ன அங்கிள் வருசத்துக்கு வந்தீங்க சுத்தியல், உளிஎல்லாம் கேக்கிறீங்க” விருந்தாளி : “இந்த தொதோள் து
籃
-கா.சிவலிங்கம்

Page 42
స్ట్ 6දී
N Жh 7
接 இஸ்லாமிய புத்தகா δί3 e 妻 இல்லாம் அல்லாத அவசியமான அறி QiG 囊 பார்வைக்காகவும் கொள்வன
32 அத்துடன் தமிழ், ஆங்கில மொழிகளி 妻 அச்சிடப்பட்டு நேரடியாக இறக்குமதி செய்ய 妻 மனோயியல், மனையியல், நூல்கள் நூறு எதிர்பார்த்து நிற்கின்றன. நூலக
பள்ளிக்கூடங்களுக்கும், வாடிக்
கொள்வனவுகளுக்கேற்ற கபூ
நேரில் வருகை தருமாறு அல்லது O1268 器 இலக்கங்களிளோ அல்லது O12688 கொள்ளுமாறு தயவன்புடன்
کےN
6 - மருதானை =ޚްށަލަ
பதினைந்த பளிங்குப் ப
参 e ● e புதர் மாடிக கடடடம எனப
@@@@@&&@@@@@@ ஜி 3, 缪奖 ဒွိဒ္ဓိန္ဓိုမ္ဗိဒ္ဒိဒ္ဒိ၊ g 22 Ον ဒွိ ဒွိန္ဓိုမ္ဗိဒ္ဓိ (2):G) 22 ஜி ΌνΌνΌνΌνΌνΌνΌνΌΝΟΜΟΥ ΟΝΟΜΟΝΟΜΟΝΟΜΟΝΟΜΟΥ ΟΝΟΜΟνΌνΌνΌ) G\'Gତ୍ତନୀତ 'G', @୪gତn'G'@'@'@'gong',
#
༦|
 
 
 
 

s 参,半 ーエミー、リDQ就リi直
Geu Geu Geu. G
কেেশ #-בא־ST-יס> ]y-t> ] ツ 9.G.G.GGGGGG. Gy 99999999999
'G': 'G', 'G'G'G',
cLOLrrOcTOrOGrOrOTOOLOOTOTOLGO ষ্ট্ৰ
ཕྱི་
懿
வழக்கின்றது இர்ர்ேஇர்ர்ே
ங்களை மட்டுமல்ல
ெ
ಫ್ಲಿ?
懿 ဒို့၌
|வு நூல்கள் அனைத்தையும் உங்கள் விற்காகவும் வைத்துள்ளது.
லான பல நூல்களும் சென்னையில் பப்பட்ட தரமான கதை, கவிதை, மருத்துவ, ଖୁଁ ற்றுக் கணக்கில் உங்கள் வருகையினை 義 ங்களுக்கும், வியாபாரிகளுக்கும், 妻 கையாளர்களுக்கும் அவரவர் 妻 றிவுகள் காத்து நிற்கின்றன. 妻
34851,012669197 எனும் தொலைபேசி 102 என்ற தொலைநகலிலோ தொடர்பு 妻
வேண்டிக் கொள்கின்றோம்.
காட றோட்டி ਲੇ கொழும்பு - 09 ། டிகள் ஏறிவரவேண்டிய
தனை மறந்து விடாதீர்கள்.
MBSLMMkskLSTLTkTkTkSLkLkTTkTkTTTTTSTTLSLLLSTLTTTLTTTTTTTLTTTTTeTTTe0TTTTTTKKKTK00TA0000A00kTT0TA0ATTATLTTTzTAKATATS OcOGOLGLGGGGLGLGLGO OeaeOeLeLeTeTeTeOeLGLrLrLrLrLrLrLrLcLcLOLOeLeLeOeBeBeBcBccL Bcc cBcBLcBDBDBLBDBLBD
ཕྱི་

Page 43
சென்ற இதழில் வெளியான பாலாசங்குப பிள்ளையின் அலட்டல் அன்னக்கிளி என்ற சிரிகதை மிகவும் நன்று. பாலா சங்குப்பிள்ளைக்கு சிறுகதை மாத்திரம் அல்ல சிரிகதையும் எழுதத் தெரியும் என்பதையும் அவர் தெளிவாக வெளிக்காட்டியுள்ளார். ஆனாலும் ஒன்று. பாலாசங்குப்பிள்ளையை விட்டால் வேறு எழுத்தா ளர்கள் உமது சஞ்சிகையில் எழுதுவதில்லை. இது ஏனோ விளங்கவில்லை.
Tமஞ்சுளா,ஏறாவூர்.
ஒரு இருபது ஒற்றை கொண்ட அப்பியாசக் கொப்பியே 50-ரூபா விற்கும் காலத்தில் 44 பக்கம் கொண்ட நகைச்சுவைச் சஞ்சிகையை 30/- ரூபாவுக்கு மட்டக்களப்பில் விற்றுத்தள்ளும் சுவைத்திரளே. நீ ஒரு முட்டாள் என அழைக்கலாமா?
அன்புள்ளான்,களுவாஞ்சிக்குடி,
சுவைத்திரளில் வெளிவரும் கொழும்பு டயறியைப் பாராட்டுகின்றேன். தமிழ்நாட்டுச் சஞ்சிகையில் கூட இவ்வளவு லாவகமாக ஒரு விடயத்தைச் சொல்வது கிடையாது. இதனை ஆசிரியர் தான் எழுதுகிறாரா? வேறு யாரோ எழுதுகிறார்களோ புரியவில்லை. எவர் எழுதினாலும் அவர் ஜீனியஸ்.
வா.இளந்தளிர்,பண்டாரவளை,
சிறுவர்கட்காகப் பாரம்பரியக் கதைகளை வெளியிட்டு வரும் சுவைத்திரளே. எனது வாழ்நாளில் சத்தியவான் சாவித்திரி தரிசனம் இப்போது தான் கிடைத்தது. நான் சிறுவன் அல்ல கிழவன். எனது பேரப் பிள்ளை களுக்கு எவ்வளவு சொன்னாலும் கேட்கமாட்டார்கள். ஆனால் சுவைத்திரளில் உள்ள சத்தியவான் சாவித்திரி
 
 

கதையை மிக அவதானமாக படிக்கிறார்கள். வாழ்க சுவைத்திரள்.
மு.அன்பழகன்,கல்முனை. சுவைத்திரள் 2 மாதங்கட்கு ஒரு முறைதான் வெளி இறங்குகின்றது. மாதா மாதம் வெளிவரச் செய்க இன்றேல் மூடு இழுத்து! ஒரு #ဧ၈###၈၈)# | சஞ்சிகை நடத்துமாறு, தமிழ் சஞ்சிகை நடத்துமாறு தமிழ் உமக்கு ஆணையிட்டதா? கஸ்டமடைந்து நஷ்டமடைந்து வாழப் போகிறீர்! அவதானம்.
ஆதமிழ்தாசன்,கல்லாறு.
சுவைத்திரள் ரசிக்கக் கூடியதாக இருந்தது நோர் வேயில் உங்கள் பத்திரிகை கிடைத்தது. நான் ஒஸ்லோவில் இருந்து 600 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து வாசித்தே இதனை எழுதுகிறேன்.
பொண்ணரசிகோபாலரத்தினம், நோர்வே,
நீவசதியாக வாழ்கிறதா நினைக்கிறாயா வாழ்வது மரப் பொந்து போன்ற ஒரு ல தான் அறிவாயா?
ஆ.
D

Page 44
重亏誓岳、云誓誓亏誓、誓安誓亏誓云誓议
இதசிரியர் : “புவி தன்னைத் தானே சுற்றிவர 24 மணி
汇、
நேரம் எடுக்கும்’ மாணவண் : “பிழை சேர், 23 மணித்தியாலமும் 56 நிமிடமுமே எடுகிக்கிறது.”
ஆசிரியர் : “பூமி வட்டமானது” மாணவன் : “முழு வட்டம் இல்லை சேர். கொஞ்சம்
குறைவான வட்டம் தான்.” ஆசிரியர் : “அதைத்தான் சொல்ல வந்தனான்.
சிற்பவுண்.’ لم -அம்பலத்தடிகள்- _ܢܠ
= == == == == = == == == == -
امة மதுர்ஜன் போதனைகள்
சுனாமிக்குப் பொறகு எத்தனையோ என்.ஜி.ஓ. வந்து வீடு கட்டி, மாடி கட்டிப் பல பல தொண்டுகள் செய்திருக்கி றாங்க. மனசாரப் பாராட்டுகி
禽 த் *றேன்.
భ அப் புறம் வங்கிப் ! 72 *புத்தகம் போலை அடிச்சு |
ஒரு தொகை பணத்தை Կ՞*: வைப்பில் இடச் சொல்லி *ತ್ತಿತ್ತ್ கடனும் கொடுத்து வட்டியும்
போட்டு உழைக் கவும் தொடங்கி விட்டானுங்க. கடன் எடுக் கிற துக்கு முந்திக் கூட்டம் போட்டு வைப்பிலை காசு ஐயாயிரம் போடச் சொல்லுறானுங்க. கடன் கொடுக்கிறதெண்டா
இரண்டாயிரம் ரூபா அன் 를 பளிப்பும் பெற்றுக் கொள்ளு றாங்க. பிறகு மாதா மாதம் حمي
காசு வசூலித்து என்.ஜி.ஒ | வின் சேவையைக் கூட்டுறானுங்க அப்படிக் கூட்டுற காசுகள் । ତ୯୬ அபிவிருத்திக்காக வெளிநாட்டுத் தொண்டு நிறுவனங் | အံဝါ၊ அன்பளிப்பாகக் கொடுக்கிற காசுகள் தான் இவங்க வங்கி போலை இயங்க முடியாது கடன் கொடுத்துத் திரும்பி வாற காசுக்கு 90% என்.ஜி.ஒக்கள் :! காட்டத் தேவையில்லாத நிலை ஒரு வருடத்தின் ஏற்படுகின்றது. இதனை பயன்படுத்தி பல உள்ளுர் ஏஜன்சிகள் தமக்குச் சொந்த வீடே கட்டுறாங்க. இந்தக் கொள்ளையைக் கேட்கிறதுக்கு யார் தான் இருக்கிறாங் களோ. இதுகளைச் செக் பண்ண ஓடிற்றும் ஒண்டும் ! இருக்காமே. என்ன கிழிஞ்ச ஒடிற்றோ?
!= == === == == == == == ==
 
 
 
 

ரோஜாவில் முள் இருப்பது மரத்தின்
பாதுகாப்புக் கருதியே ரோஜாவைப் புடுங்கும் போது முள் குத்துவது இல்லை. இதனைப் பலர் புரிந்து கொள்வது இல்லை.
சேற்றில் வளர்வது செந்தாமரை அது அதற்குப் பாதுகாப்பு, சேற்றைப் பாதுகாப்பாகக்கடந்தால் கிடைப்பது தாமரைப்
பூ. எனக் கஸ் டங்களைக் கடப்பின் கிடைப்பது மகிழ்ச்சிப்பூ இதனை அறியாதவ னுக்கு கிடைப்பது துன்பப்பூ
 ܼܲܢܠ
* இறைவனைப் பெறுத்தது
அதற்கு ஆத்த தருவது

Page 45
  

Page 46
[、汇五汇云汇ā亨、 중 T3
தூது போகிறது மிக மிக ஆபத்தான விஷயம்! அந்த ஆபத்து எதுவாயிருந்தாலும் ஏற்றுக் கொள்ளும் மனத்திறமும், சமயோசித மாகக் கிருஸ்ணனைப் போல் பதிலடி கொடுக்கின்ற பக்கு வமும் பெறாதவர்கள் தூது 窦 போவதற்கு லாயக்கற்றவர்கள். இ
இலக்கியத்தில் அரசி யல் 鑒 s தூது, காதல் தூது என்றெல்லாம் * AAM பல்வேறு நிலைகளில் தூது
யான தோழன் ஆவான்.
தலைவியின் மீது தனியாக்:
தலைவன்தன் தோழனைநாடித்தன்: விருப்பத்தைக் கூறுவான், அது கேட்ட W தோழன் தலைவனைத் தேற்றிவிட்டு தோழியைத் தேடிப் போவான். k、
அப்படிச்சென்றதோழனுக்கு இ கிடைக்கும் பரிசுகள் o/ அதிருஷ்டம் இருக்கும் தோழர்கள் 苓 ഥമേ இதில் தப்பித்துக் கொள்வார் 龛
கள. இதோ ஒருநாடகம்! "I ܫܘܩܐ
தலைவனுடைய எண்ணத் தைத் தோழி வாயிலாகத் தலைவிக் 懿 இ குத் தெரியப்படுத்த விரும்புகிறான் స్లే இந்தத் தோழன். Ir I N Ai i Ji :-r:
ஈட்டு புகழ் நந்திபான! நீ எந்தையர்தம் வீட்டிலிருந்து பாட விடிவளவும் - காட்டிலழும் பேயென்றாள் அன்னைபிறர் நரியென்றார் தோழி நாயென்றாள் நீயென்றேன் நான்.
அதற்குத் தோழி சொல்கிறாள்
ஆசிரியர் : “கடற்கரையில இலவசமா எதை வாங்கலாம். என்
மாணவண் : "சேர், அங்க கடலை, ஐஸ்கிறீம், கச்சான்கொட்ை எல்லாம் கொண்டு வந்திருப்பாங்க. அது எல்லாத தானே வாங்கலாம்.”
ஆசிரியர் : “அடே காத்துவாங்கலாம்டா, அதுக்குக் காசு தேை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

“பெரும் புகழ்மிக்க நந்தியின்) தலைவனின் தோழனான வந்த பாணனே!
நீ என் தங்கையர் வீட்டிலி ருந்து நேற்றிரவு முழுவதும்
2 (விடியும் வரையும்) பாடிக் 醬 கொண் டிருந்தாய்! அப் డ్ట్ Wiki: பொழுது எங்கள் வீட்டில் தலைவியும் 觸 தாயும் மற்றவர் களும் இருந்தோம். N) உனது இனிய இசை வெள்ளம் வந்த \ திக் கைப் பார்த்து ஏதோ குரல் கேட்கிறது என்று சொன்னார்கள்.
எங்கள் கதை நின்றது.” , அந்தக் குரல்?
தலைவியின் தாய் “ஏதோ பேய்
கத்துகிறது’ என்றாள். “இல்லை.
இஇஇல்லை. அந்தச் சத்தம் நரி
ஊளையிடுகிற மாதிரி இருக்கிறது. இது நரிதான்’ என்றார்கள் மற்றவர்
பொய். நாய் தான் குரைக்கிறது. இபேயுமில்லை, நரியுமில்லை’ என்று. 53 “ஆனால் நான் உன்னுடைய န္တိဖို့ குரலைநன்கு அறிந்தவள் அல்லவா? ஜீநீ பேசுவது போலவே பாடுவாய் / என்றும் தெரியும். உடனே
s
நரியுமில்லை, சாட்சாத் நீ தான் பாடுகிறாய்’ என்றேன். தோழனுக்கு கிடைத்த அடி இது தூது போன தற்குக் கிடைத்த பரிசு.
கரு 7ேAஜி, 2.கு : சசிவிஜி
கள். தலைவி சொன்னாள் “எல்லாம்
ன பேசாம இருக்கிறீங்க’ ட மிக்சர், போஞ்சி, சீவல் தையும் காசு கொடுத்துத்
வயில்ல.”
-கா.சிவலிங்கம்

Page 47
ர் : “சீமையில் நம் ஆட்டளெல்லாம் குடியேறு றாங்க வெள்ளைக்காரனும் முடிஞ்சான்.” 8 மற்றவர் : “ஏன்’
ஒருவர் : “வெள்ளைக்காரனுக்கும் சீதனம் வாங்கும்
பழக்கத்தைப் பழக்கப் போறாங்க”
சுவைத்திரள் வாசகர்களே. இம் மாதம் பகிடி விடுங்கள் என்ற பகுதிக்குரிய படம் ஒன்றினைப் பிரசுரம் செய்து இருக்கிறோம் இந்தப் படத்துக்கு ஏற்ற தரமான பகிடி விடுபவர் மூவருக்குத் தலா 60 வீதம் பரிசளிக்கச் சுவைத்திரள் காத்திருக்கின்றது. கீழேயுள்ள கூப்பனை வெட்டி அனுப்புங்கள் அதனையும் சேர்த்து அனுப்பாத பகிடிகள் போட்டியில் இருந்து நிராகரிக்கப்படும்.
- - - - - - - - - - - - - - - - -
பகிழ விடுங்கள் இலக்கம்-03
சுவைத்திரள் 241 பொன் தொழிலாளர் வீதி,
 
 
 
 

প্ঠত
பெண் : “ஒருசோடிவளையல் செய்ய என் கணவனை ஃ
வளைத்துப் பார்த்தன். வளையிறாரில்லை.”* புலவர் : “வளையாபதி’
C
CC.
C
CCΟΣC エCCC

Page 48
『エ輩委部委勤歪龍ーリエ 龍歪普エリエ。
இன்று திரைப்படங்களுக்கு அடுத்தப்படியாக மக்களை மிகவும் கவர்ந்ததொரு விடயமாக தொலைக்காட்சி நாடகங்களாகவே இருக்கின்றன. தென்னகத்திலிருந்து ஏராளமான மெகா நாடகங்கள் இலங்கை ரசிகர்களுக்காக இறக்குமதி செய்யப் படுகின்றது. அப்படியானால் உள்ளூரில் தரமான தொலைக்காட்சி நாடகங்கள் தயாரிக்க முடியாதா? திறமையான கலைஞர்கள் இல்லையா?
ஏன் இல்லை. இதோ இருக்கிறோம் என அடையாளம் காட்டத்தான் வெகுவிரைவில் வெளிவர இருக்கிறது 'நேகா மலையகத்தில் உருவாக்கப்பட்ட
. . . . . . " ஆஸ்திரியாவுக்குத்தடிமன் பிடித்தால் ஐரோப்பாவுக் குச் சளிச்சுரம் பிடிக்கும் என்று மெற்றர்ணிச் என்ற
வரலாற்று ஆய்வாளர் கூறுகின்றார்.
கொழும்புக்குக் காய்ந்நல் எடுத்தால்
கிளிநொச்சிக்குச் சுளிச்சுரம் பிடிக்க வேண்டும்.
என்ற நோக்கில் தான் வேலைகள் நடக்குதோ
தெரியல்லை.
*C.
 
 

“சூரியன் பிலிம்ஸ்’ மூலமாக முதல் முதலாக தயாரிக்கப்பட்ட ஐந்து அங்கங்களைக் கொண்ட தொலைக்காட்சி நாடகம்தான் “ரேகா’
மலையகத்தில் பிரபல நாடகக் கலைஞராக திகழும் ஜெ. சுகுமாரனின் கதை, வசனம், நடிப்பு மற்றும் இயக்கத்தில் தயாரிக்கப்பட்ட இந்த தொலைக் காட்சி நாடகத்தில் பிரதான பாத்திரங்களில் 'பாலா சங்குபிள்ளை, ஜெ. சுகுமாரன், வி. முகுந்தா, ராஜேந்திரகுமார் மற்றும் ஏராளமானோர் பங்குபற்ற எதிர்வரும் மார்ச் மாதமளவில் தொலைக்காட்சியில் காணக்கூடியதாக இருக்கும். பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் சுமார் 2 1/2 லட்சம் செலவில் தயாரிக்கப் பட்ட இந்நாடகம் உருவாக பலர் பின்னணியிலிருந்து உதவி புரிந்திருக்கிறார்கள். 'ரேகா'வைத் தொடர்ந்து “சூரியத்தீ’ என்ற இரண்டாவது தொலைக்காட்சி நாடகம் வெகுவிரைவில் தொடங்கவிருக்கிறது. மெகா நாடகமான இதற்கு நல்லிதயத்துடன் ஒத்துழைக்க விரும்புபவர்களை 'சூரியன் பிலிம்ஸ் சார்பில் அதன் இயக்குனர் அன்புடன் வரவேற்கக்காத்திருக்கிறார்.
-பாலா. சங்குபிள்ளை
A ༄།
ரவி : “இவன் என்னடா தலையிழுக்காம வந்திருக்கான். வரக்குள்ள இவன் கண்ணாடியப்பாக்கிறல்லயா?” குமார் : “உனக்கு ஒண்டுந் தெரியாதுடா. அவன் கண்ணாடியப் பாத்துதலையக் குளப்புறவண்டா’
-கா.சிவலிங்கம்

Page 49
ரோசம், சூடு,சொரணை ஏதாச்சும் இருக்கா, கூரையைத் தொடுற மாதிரி இவ வளர்ந்து நிற்கிற, நீ என்ன டான்னா விடிஞ்சி இவ்வளவு நேரமாவுது நாலு லயத்துக்கும் கேட்கிற மாதிரி குறட்டை விட்டு தூங் குறே. சே. ஒண்ணுக் குமே லாயக்கில்லாத உன்னை கட்டிக்கிட்டு மாரடிக்கிறதுக்கு பதிலா கால மெல்லாம் கன்னி யாகவே இருந்திருக்க லாம்.’ - 姜
“அடி அன்னக்கிளி. என் செல்லக்கிளி, விடிஞ் சதும் விடியாததுமா ஏண்டி கத்துரே. நம்ம பொண் ணுக்கு கல்யாண வயசு வந்திருக்குதுன்னு எனக்கும் தெரியாமலா இருக்கு. எவனும் இளிச் சவாயான் LDTL, L60) 6) (3 uu 6T6ŭ) 6) TT Liu Ig)JLĐ GJITLô Li 6nĵLJ JLDIT யிட்டானுங்க. அட்டக்கருப்பா, அவலட் சணமாயிருந் தாலும் அஞ்சிபவுண் நகையும், அம்பதாயிரம் பணமும் கேட்கிறானுங்க.’
"ஆமா பேச்சுல ஒண்ணும் கொரச்சல் இல்ல. எதிர் லயத்துல இருக்கிற இவளோட கூட்டாளிக்குக் கூட கல்யாணம் முடிஞ்சி கையில ஒண்ணும் வயித்துல ஒண்ணுமா இருக்கு. இவளுக்கு அப்பன் சரியில்லா ததால ஒண்ணுமே நடக்க மாட்டேன்னுது.”
“என்ன பேசுற நீ. ஒட்டைக் குச்சிமாதிரி உயரமும் ரெட்டை நாடி உடம்பும், லேசா லூசா இருக்கிற இவளை பெண் பார்க்க வர்றவன் எல்லாரும் இருபது பவுண் ரொக்கமும் ரெண்டு மூணு கறவை மாடும் கேட்கிறானுங்க. நான் என்ன செய்யிறது. ஏதோ ஐனங்களை ஏமாற்றி பூசாரி தொழில் செஞ்சிக் கிட்டிருக்கேன்.” “இந்த வெட்டிப் பேச்செல்லாம் வேணாம். வர்ற தையில - - - - - - - - - இவள் கழுத்துல தாலி ஏறனும் இல்லன்னா 呜1 தூங்குறப்போது இவளை விட்டு உன் தலையில கல்லை தூக்கி போட்டுட சொல்லிடுவேன் ஆமா. அணி னக் கிளி uւսւ வென கதி திவிட் டு செல லவே பூசாரி நல்லுசாமி என்கின்ற நல்லு கம்பளிப்போர் வையை தூக்கி வீசி விட்டு துள்ளி யெழுந் தார். அப்போது அவரின்
 
 
 
 
 
 
 
 

కొకె కె కె కె కె కె కె కె కె కెవెన్ -Հ
வலது கை யான கொடுக்குப்புளி கோவிந்தன் அவசர
அவசரமாக வந்தான்.
“பூசாரி ஐயா பக்கத்து தோட்டத்துல ஒரு
பொண்ணுக்கு பேய் புடிச்சிடுச் சாம். உங் களை
கையோட கூட்டிட்டு வரச் சொன்னாங்க.”
“என்ன கைநிறைய காசு தேறுமா? “காசு மட்டுமா. கொளு கொளுன்னு ரெண்டு
ஆடு வளர்க்கிறாங்க.”
“பொண்ணுக்கு என்ன வயசு? அடிக்கடி இப்புடி
លប្រយោT. 6 girfigu T'
"விசாரிக்காமலா. பொண்ணு யாரோ பக்கத்து
லயத்துல ஒருத்தனை காதலிக்குதாம். ஆனா வீட்ல
வேற மாப்பிள்ளை முடிவு செஞ்சிட்டாங்களாம். வீட்ல
உள்ளவங்களை ஏமாத்துறதுக்காக இப்புடி நடிக்கு
55
தாம்.
- “அட இதையெல்லாம் உனக்கு யார் சொன்ன | STið?"
“அந்த பொண்னேதான் சொல்லிச்சி. அந்த பொண்ணு விரும்புறவனையே கட்டி வைக்கணுமாம். இதுக்காக முன் பணமா முன்னூறு குடுத்திருக்கு.” “பணத்தை அன்னகிளிக்கிட்ட குடு, பணம் மட்டும் போதாது. ஒரு ஆட்டையும் காலி பண்ணிடணும். மூணு நாலு நாள்ல தீபாவளி வேற வரப் போவுது ஆட்டிறைச்சிக்கு என்னடா செய்யிறதுன்னு யோசிச் சேன். நல்லவேளை. அது சரி வீட்ல பார்த்திருக்கிற மாப்பிள்ளை லட்ச ணமா இருப்பானா..?
"அட அதெல்லாம் நமக்கெதுக்கு. போ னமா வேலையைப் பாத்தமா காசை வாங்கினமோன்னு வர SSSSSSLS SSSSSSS SSS வேண்டியதுதானே.”
“நானி வேறொரு திட்டம் வச்சிருக்கேன். ஒரே கல்லுல ரெண்டு LDTIB15st.” “நீங்க ரெணி டு மாங்கா அடிச்சாலும் சரி மூணு மாங்கா அடிச் சாலும் g; fl. எனக் கும் தீபாவளி செலவு இருக்கு கொஞ்சம் அதிகமா |பார்த்துக்குங்க."
إر

Page 50
リエ
“சரி.சரி. இந்தா உடுக்கு, சாட்டையெல்லாம் இந்த பையில இருக்கு. எடுத்துக்க. வா போலாம்.” அவர்கள் பஸ்ஸில் புறப்பட்டார்கள். நல்லு - தோட்டத்தில் வேலை செய்யும் நேரம் போக மற்ற நேரங்களில் பூசாரி வேலை செய்தார். ஆரம்பத்தில் தோட்டவேலை முதன்மையாகவும் பூசாரி வேலை சைடாகவும் இருந்தது. ஆனால் இப்போது பூசாரி வேலைதான் அவருக்கு முதன்மையாகிவிட்டது. கங்காணி, கிளார்க், டீமேக்கரிலிருந்து சின்னதுரை வரை இவரின் பூசாரி வேலைக்கு மவுசு ஏற்பட்டுவிட்டது. சின்னதுரையின் சம்சாரத்துக்கு ஒரு சின்னம்மை வந்து விட்டது. அதற்கு இவர்தான் வேப்பிலையால் பேயோட் டினார். யார் செய்த புண்ணியமோ மூன்றே நாளில் சின்னம்மை இறங்கி விட இவரின் புகழ் ஏறத் தொடங் கியது. அப்புறம் என்ன. அந்த தோட்டத்தில் அவர் வைத்ததுதான் சட்டம். வேலைக்கு போகா விட்டாலும் அவருக்கு பேர் விழுந்தது. காக்கை உட்கார பணம் பழம் விழுந்த கதையாக அவர் புகழ் எல்லா இடமும் பரவியது. பூசாரி நல்லு உடுக்கை கையில் எடுத்து விட்டால் பேய் பிசாசெல்லாம் சொல்லாமல் கொள்ளா மல் ஒடியே விடும் என்பது மக்களின் நம்பிக்கை.
ஆனால் உண்மையில் நடப்பது என்ன? அவரின் வலது கையாக செயல்படும் கோவிந்தன் எங்கு எதற்காக உடுக்கையடிக்கப் போகிறார்களோ அங்கேயுள்ள எல்லா விஷயத்தையும் சரியாக நல்லுவிடம் சொல்லி விடுவான். இவரும் போகுமிடத் திலுள்ள வசதி வாய்ப்புகளுக்கேற்றவாறு பொய்களை தூண்டிலாக போட்டு அள்ள வேண்டியதை அள்ளி விடுவார். இவர் இதுவரை எத்தனையோ பொய்களை தன் பிழைப்புக்காக சொல்லியிருக்கிறார். ஆனால் இப்போது அவர் சொல்லப்போகும் 40வது பொய் அவர் ஒரே மகள் பட்டம்மாளின் எதிர்காலத்துக்காகத்தான். அவர்கள் பஸ்ஸை விட்டு இறங்கி குறிப்பிட்ட தோட்டலயத்தை நோக்கி நடந்தார்கள். அது கருப்பையா கங் காணியின் வீடு. அவர் மகள் மைனாவதிக்குதான் பேய் பிடித்திருக்கிறதாம்.
அப்பா : “ஏன்டா இந்தக் காக்காயப் புடிச்சிற்றுவாறா?”
| மகன் : “இல்லப்பா நேற்று வந்த அங்கிளிட்ட காக்கா புடிச்சாத்தான் இந்தக் காலத்தில நல்லா இருக்கலாம் எண்டு நீங்கதானேயப்பா சொன்னீங்க.”
கா.சிவலிங்கம்.
 

ਤਤ ਤਤ ਤਤ ਤਤ ਡਤCo662 அவர்கள் பூசாரி நல்லுவை பணிவுடன் வரவேற் றார்கள். அந்த காம்பறாவின் நடுவில் பாய் போடப் பட்டது. நடுவில் குத்துவிளக்கேற்றப்பட்டிருந்தது. ஏற்கனவே கோவிந்தன் சொன்னபடி பலகாரம், பழம், பூவெல்லாம் தட்டில் வைக்கப்பட்டிருந்தது.
மைனாவதி தலைவிரிக்கோலமாக இருந்தாள். அவள் பெற்றோர் பயந்து இருந்தார்கள். அவளை பாயில் உட்கார வைத்தார்கள். நல்லு வேட்டியைமட்டும் உடுத்திக் கொண்டு நெற்றி மற்றும் வெற்றுடம்பில் விபூதியை அள்ளி பூசியிருந்தார். கையில் உடுக்கையி ருந்தது. பக்கத்தில் கோவிந்தன் சாட்டையுடன் அமர்ந் திருந்தான். இப்போது நல்லு தலையையும் உடம்பையும் சுழற்றியவாறு சத்தம் போடத்துவங்கினார்.
“ஓடாத பேய்களை ஒட்டி வந்தவன் நான்.” சுடுகாட்டு முண்டை ஓடிப் போ. து. ஊ. சாக்குப் போக்குச் சொன்னா சாட்டைக் கம்பு வச்சிருக்கேன்.” இப்போது மைனாவதி கத்தத் தொடங்கினாள்.
'ஏய். நான் ஒத்தக்கடை ஒய்யாரி ஆவி. ஆசையா புடிச்சிட்டேன். அசையவே மாட்டேன்.
எண் ன ஆசையை நிறைவேத் துனா ஒடியே போயிடுவேன்.
இப்போது பூசாரி ஆடியவாறே கோவிந்தனைப் பார்க்க அவன் பட்டும் படாமலும் சாட்டையால் பூசாரியை அடிக்க பூசாரி விஷயத்துக்கு வந்தார்.
'ஏய். இந்த பொண்ணை புடிச்சியிருக்கிற பேய் நிபந்தனை போடுது.”
“என்ன நிபந்தனை சாமி.? "இவளுக்கு நீ பார்த்திருக்கிற மாப்பிள்ளைக்கு தோசம் இருக்கு. அவனை இவளுக்கு கட்டி வச்சா இவளை விட்டு பேய் போகாது.”
‘சாமி. சம்பந்தம் முடியப் போவுதே.” "அப்படின்னா இவளோட ஆயுசு முடிஞ்சிடும். இந்த பொண்ணுக்கு பொருத்தமானவன் பக்கத்து லயத்துவ இருக்கான். அவனை கட்டிவை. அதோட நீ சம்பந்தம் பேசுணவனுக்கு வேறொரு சம்பந்தம் வரும். அதை தடுக்காதே. தடுத்தா. தலை உருளும்.” “யார் தலை சாமி.” “உன் தலைதான்.” “சரி சாமி உங்க விருப்பப்படியே செஞ்சிடுறேன். “இரு. இன்னும் இருக்கு. இனி உன் பொண்ணை பேய் அண்டாம இருக்க பலி கொடுக்கணும்.” “ஓ! கோழிதானே. ஏற்கனவே ரெடி பண்ணிட்டேன்.” 'ஏய். கோழி போறாது. ஆடு பலி கொடுக் கணும்.”
“ஐயையோ என் பொண்டாட்டி ஆசையா வளர்க்கிறா.”

Page 51
శిక్షి ತೌ೬ststsistsissistsiststsiststsistsk
“புலுக்கைப் போடும் ஆடுக்காக உன் மகள் தலையில் அழுக்கைக் கொட்டி அலங்கோலமாக்கப் போகிறாயா.”
“நான் என்னதான் சாமி செய்யிறது.” “ஆட்டை வெட்டு. பேயை ஒட்டு. உன் பெண்ணுக்கு நல்வழியைக் காட்டு. சாந்தி. சாந்தி. “பக்கத்து வீட்டு கந்தையாவோட பொண்டாட்டி சாந்தியை ஏன் சாமி கூப்பிடுறீங்க. அவ வேலைக்கு (3L_uITuihlʼL[T...ʼ “அமைதி. அமைதி என்றேனடா மானிடனே.
நல்லு உடுக் கை கீழே வைத்து விட்டு உள்ளங்கை முழுவதும் விபூதியை அள்ளி மைனா வதியின் முகத்தை நோக்கி வீச. அவள் ஆட்டத்தை நிறுத்தி அப்படியே கீழே சாய்ந்தாள்.
ஆயிற்று - மைனாவதி சரியாகி விட்டாள். ஏற்கனவே பேசியபடி யாருக்கும் தெரியாமல் மிகுதிப் பணத்தையும் அவள் பூசாரி நல்லுவிடம் கொடுக்க கைநிறைய பணம் யூரியா பை நிறைய பலி போடப்பட்ட ஆட்டு மாமிசத்துடன் புறப்பட தயாரான பூசாமி நல்லு மைனாவதிக்கு பேசிய மாப்பிள்ளைப் பற்றிய விபரம் கேட்டறிந்தார்.
மாப்பிள்ளை பெயர் சந்தானமாம். ஒட்டகம் போல உயர்ந்தவனாம், டீமேக்கராம் ஆம் பட்டம் மாளுக்கு ஏத்தவன் சந்தானம்தான்.
அவர்கள் பஸ் நிலையத்தை நோக்கி சந்தோ ஷமாக நடையைப் போட்டார்கள். அப்போது ஒருவன் ஓடிவந்தான். “டேய் கோவிந்தா நீ இங்கேயா இருக்கே. பூசாரியும் இருக்காரா ரொம்ப நல்லதா போயிடுச்சி. பூசாரி அடையாள அட்டை வச்சிருக்கீங்களா?”
ஆமா எதுக்கு.? “ஒரு பதிவுத் திருமணம். சாட்சிக்கு ஆள் தேவை. ஐந்நூறு கிடைக்கும்.”
“ஐந்நூறா. இன்னைக்கி நரி மூஞ்சிலத்தான் முழிச் சேனா. பணம் கொட்டுது. தீபாவளியை பிரமாதமா கொண்டாடிட வேண்டியதுதான்.”
9 9
“அந்தக் காலத்திலை ஆத்திலை போட்டு குளத்திலை எடுத்ததைப் புராணக் கதை எண்டு சொன்னாங்க.” “இப்ப கொழும்பு வங்கியிலை போட்டு யாழ்ப்பாண வங்கியிலை “CATCARD’போட்டு எடுக்கிறாங்க. புராணக் கதையிலை స్టోప్లే நடந்தது இப்ப நிஜமாகவே நடக்குது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அவர்கள் அந்த வீட்டையடைந்தார்கள். மிகவும் சிறிய வீடு. பூசாரி ஆச்சரியத்துடன் உள்ளே நுழைந் தார்.
“பொண்ணு மாப்பிள்ளை எங்கே.” “இது கொஞ்சம் விவகாரமான கல்யாணம் பொண்ணு வீட் ல விருப்பமில்லை. மாப்பிள்ளை வீட்லதான் எல்லாம் செய்யிறாங்க. பொண்ணு உள்ளே அறையில இருக்கு. நீங்க கையெழுத்தைப் போட்டுட்டு பணத்தை வாங்கிக்கங்க.’
“பூசாரி - கையெழுத்துப் போட்டார். அவர் யாரையும் - பார்க்கவில்லை. எதையும் வாசிக்க வில்லை. முழுசாக பணம் கிடைக்கும் போது அதெல் லாம் அவருக்கு எதற்காம். கோவிந்தனுக்கும் கை நிறைய பணம் கிடைத்தது.
பூசாரி - சந்தோஷத்தில் கொஞ்சம் மது அருந்தியிருந்தார்.
ஆனந்தமாக தன் லயத்தை நோக்கி நடந்தார். அவர் தன் காம் பறாவை அடைந்தார். கதவைத் தட்டினார். கதவைத் திறந்த அன்னக்கிளி காளியைப் போல தலைவிரி கோலமாக இருந்தார். அவர் தன் வாழ்க்கையில் எத்தனையோ பேய்களையெல்லாம் அடக்கி ஒடுக்கியுள்ளார். ஆனால் - அன்னக்கிளியை மட்டும் அவரால் எதுவுமே செய்ய முடியவில்லை.
“வாய்யா. காலையிலேயே போய் இப்பதான்
“என்ன அன்னக்கிளி. வந்ததும் வராததுமா சத்தம் போடுறே. இங்கப் பாரு. கைநிறைய காசு, தீபாவளிக்கு அதிகமாகவே ஆட்டிறைச்சி உனக்கும் மகளுக்கும் புதுத்துணி..”
“எல்லாத்தையும் கொண்டு போய் குப்பையில கொட்டு இங்க குடியே முழுகி போயிடுச்சி. நீ நல்லா குடிச்சிட்டு சவடால் பேசுறியோ.”
“என்ன சொல்லுற அன்னக்கிளி.? "அவ பாசமா வளர்த்தோமே பட்டம்மா. அவ லெட்டர் எழுதி வச்சிட்டு யாரோ சந்தானமாம் அவ னோட ஓடிட்டா.”
“ஐயையோ ஒடிட்டாளா..? “என்ன ஓடிட்டாளேன்னு அதிர்ச்சியாயிருக்கா.” “இல்ல அதனால இல்ல. இவளையும் ஒருத் தன் இழுத்து ஓடியிருக்கானேன்னுற அதிர்ச்சி.”
“இப்போ என்னய்யா செய்யிறது.?” “என்ன செய்யிறது தலை முழுகிட வேண்டியது தான்.”
"அவ ஒரே பொண்ணு. எப்புடியெல்லாம் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நினைச்சேன்.” "ஆமா இழுத்துப் போனவன் பேரு எண் னன்னு சொன்னே.”

Page 52
“என்னமோ சந்தானமாம்?
6 é
ஒ. அவனோ.” “என்னது அவனை உனக்கு தெரியுமோ.” “இல்லையில்லை. தெரியாது.”
அவருக்கு அப்போதுதான் - இலேசாக விஷயம் புறியத் தொடங்கியது. அவர் தன் மகளின் பதவித் திருமணத்துக்குத்தான் சாட்சி கையெழுத்திட்டி ருக்கிறார். பணம் கிடைக்கிறதேயென்ற ஆசையில் அவர் எதையும் பார்க்கவில்லை. எதுவும் சிந்திக்கவும்
懿 懿
eeLALALALALALJLALASALALALALALALAALLLLLALALALALALALLS
* ஒருவர் : “பட்டணத்தில் பூதம் என்ற படம்
கொழும்பிலிருந்து ஓடுகிறதே.” மற்றவர் : “என்ன முழிக்கிறீங்க காஸ்சிலிண்டரைத்தான்
சொல்றன்.”
; “அவனுக்கு கைரேகை பாக்க முடியாதண்டு கைகழுவி ஜ் விட்டிட்டீங்க.”
“சீனிவிலையேறினதால நக்கிநக்கித் தேநீர் குடித்தான். கைரேகை அழிந்க போச்சு’
శన్లో
鷺 s 贸 :ඉ:
萎
懿簇
 
 
 
 
 
 
 
 
 
 
 

ukLLLLLL LL LL LL LL LLLLLLLLL LL LL LL LLL LLLLLLLLei SAS ielTMTTTTTYhS இல்லை. இதை யெல்லாம் தர்மப்பத்தினியிடம் சொன்னால் தர்ம அடிதான் விழும் . அதைவிட எல்லாவற்றையும் மூட்டைக் கட்டி தூக்கி வைத்து விட்டு வரப்போகும் தீபாவளியை சந்தோஷமாக கொண்டாடு வதுதான் புத்திசாலித்தனம்.
(அனைத்தும் கற்பனை)
鬣
翻」
விட்டுட்டானே’ - “தண்ணீரில் விளக்கெரியாது என நினைத்து வராமலே : வுட்டுட்டான்”
পুঁজি
a.
சே. இலகுவாகத் தூக்கக் கூடிய பொருளாக விலை is:
LLeALALALALALALALALJLALALJALAJLALJLALALALALLSAJASALALASLYLALALALALALALALLSLLLAALALALALALALALALAJLALALAAAAALLAAAAALALeLqALALAAAAALLAAAAALLALSLASLSASLLASLLALSLS
éé
கூடிச்சா. காஸ் சிலிண்டராப் பார்த்து விலையைக்
e 99 கூட்டிட்டாங்களே.
懿

Page 53
ஹலோ உங்க 9ILIT(36) iT60)L(3u86)TLDIT?
(BLIgGorIDIT?/L1. ● e-LD brief
இல்லை மார்க்கட்டுக்கு.
N
அக்காவோடை
(35F6OTGE DIT?
நீங்க யார் பேசிறீங்க?
உங்களைப் பார்க்கத்தான்
அக்கா வாறாநேரிலை
பார்த்துக்குங்க,
தொழில் வழங்குபவர்களே. உங்கள் விளம்பரங்களை சமுதாய நலன்கருதி இலவசமாக எம்மால் பிரசுரிக்க முடியும், அதனால் வேலை வாய்ப்பு விளம்பரங்களை சுவைத்திரள் தனது பிரசுரத்துக்காக இலவசமாக பிரசுரிக்கும் எண்பதனைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
(ஆ+ர்)
蔷
ED250
z===
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆஆஆஆத்திஆதிஆஆஆஆஆ
ஒவ்வொரு கூந்தலுக்குள்ளும்
ஓராயிரம் சிக்கல்கள்
சீப்பாக ஆண் இருந்தால்
சிரிக்கும் நம் கூந்தல்கள்
பள்ளிக்குப் போகையிலே
பல் இளிக்கும் பல சிக்கல்
வேலைக்குப் போறவளுக்கு
ாளைக்கு ஒரு சிக்கல்
ந
ള ஆளான நாள் முதலே ர ஆரம்பிக்கும் அவள் சிக்கல்
do
ஏழைக்கு வாரிசானால்
எடுபடாது அவள் சிக்கல்
麒
முதிர் கண்ணிக்கு
திருமணம் ஒரு சிக்கல்
இளம் விதவைக்கு
மறுமணம் ஒரு சிக்கல்
தாயாகாப் பெண்ணுக்கு
தாங்கொணாச் சிக்கல்கள்
தாயான பெண்ணுக்கோ
துங்கேலா சிக்கல்கள்
ஒவ்வொரு கூந்தலுக்குள்ளும்
ஓராயிரம் சிக்கல்கள்
சீப்பாக ஆண் இருந்தால் S.வசந்தன்,
04
சிரிக்கும் நம் கூந்தல்கள். ஏறாவூா
፶
“உங்கவீட்டுக்குச் சுனாமிவந்ததா?” “வரவே இல்லை.” “அப்படீன்னா அதிகக்காசு எடுத்திருக்கீங்களே’ “அகதிக் காசுவந்த காலத்திலை வந்ததுதான்’
-கனிமதுரம்

Page 54
SSSSSSS: SSSSSSSSSSSSSSS SİSSİSSİSSİS
எத்திறமான நூல்களாயினும் அத்திறமான நூ
11թՆ. genreՏÿ
யாழ்ப்ப
*வகட்க அறிஞர்கட்காக நாம் கடை திறந்திருக் வரலாம். ஆனால், வியக்கத்தக்க, சுவைக்கத்தக்கத் பாடசா முடிவு பூபாலசிங்கம் புத்தகசாலையில் தான் முடிவடைகின்
杀、 பலா, வாழை என்பன முக்கனிகள். முக்கனிகள் தொட்டு இன்று வரை தமிழ் நூல்களின் பெட்டகமாக விள
*நாங்கள் உங்களுக்காகப் பின்வரும் இடங்களில் பல்சு
' ့မှ ဇာလံဇာဖဓံါazJလ%ဇံ (ါလံတိံ႔၈/1ဂသံáဇာဍမှ /ஆப்ப 340,202,செட்டியார்தெரு : 309A, 2/3, காலிவீதி, 4A,ஆஸ்பத் 를 கொழும்பு-11 கொழும்பு- 06 பஸ் நிை
TP και ຂ4ຂຂອຂ T.P.: 4-55775 LLirrjbiu II II
250426@
Fax 232,733
இத்தனை புதுமையானபூபாலசிங்கம் புத்தக சாலை வெளிவராது மட்டக்களப்புத் தமிழகத்தில் இருந் உலக நகைச்சுவை ஏடாம் சுவைத்திரளும் விற்ப
震 காத் 4:4451. AAAAAAAAAAACAA ACACACACACA
/
பொலிஸ் : "பயங்கரமான குண்டுகள் பதுக்கி வைத்திருக்காயாமே றுமைத்திற.”
-அம்பலத்தடிகள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

C56ਉ62
கிறோம். ஞாபகம் வைத்திருங்கள்? நீங்கள் எங்கும் போகலாம் லை மாணவர்கள் சம்பந்தமாக ஆய்வுக்குத் தக்க நூல்களின்
105l.
போன்று மூன்று இடங்களில் நாம் இருக்கின்றோம். அன்று ாங்கும் எம்மை மூன்றிடங்களில் தேடுங்கள்.
வை நூல்கள் வழங்கக் காத்திருக்கின்றோம்.
காட்டின் ராஜா சிங்கமே, நல்ல நூல்களின் ராஜா பூபாலசிங்கம்
யில் தலைநகரில் து வெளிவரும்
பனைக்காகக்
சுனாமி பிறக்குது. மூன்று கண்கள் உள்ள குழந்தை புறக்குது. தலை ஒட்டிப் புறக்குது. கையில்லாத குழந்தை புறக்குது. இனி என்ன தான் புறக்கப் போகுதோ
விளங்கல்லே.

Page 55
கற்பனைகள் -
நாய்க்கும் காவல் எம் தாய்க்கும் பாதுகாவல்
ஒருவர் தேவை. விண்ணப்பிக்குக.
W.W.W. BITUI.COM
★女女女女★
எமது குழந்தைக்கு எழுந்து நடக்கும் வரை நுளம்பு வலையில் படுக்கவைக்கவும்.
பாதுகாப்பான முறை யில் கரண்டியில் பால் ஊட்டவும், குடும்பப் பொறுப் பில்லாத ஒரு பெண் தேவை. சம்பளம் பேசித்தீர்மானிக்கலாம்.
W.W.W. SJ600TL9.COM
★责★★★★
மண் பானை சட்டியில் பழங்காலச் சமையல் |செய்யத்தக்க ஒருவர் தேவை மொட்டைக் கறுப் பணி அரிசியும், ஆட் டிறைச்சியும் பக்குவமாகச் செய்யத் தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விபரங்கள் 繳 W.W.W.LJT606013, 19.COM
★女★★责玄
G.C.B. படிக்கும் அழகான எங்கள் பிள்ளைக்கு
பாடசாலைக்குப் போடக்கூடிய வெள்ளை றவுசர் தைக்கக் கூடிய வயதானவர் ஒருவர் தேவை. எனது வீட்டில் இருக்கும் சிக்-சாக் மெசினை இயக்கக் கூடியவர் விரும்பத்தக்கது. W.W.W.G.616irg06Tsp6Frf.COM
சல்வி : "தூக்கி எறிஞ்சி பேசப்படாது எண்டு என்ர
பையனிட்டச் சொன்னது தப்பாப்போச்சுடி” & “ஏண்டி என்னடி செய்தான்.” : “என்னோட கதைக்கக்குள்ள தூக்கி எறிஞ்சி
-கா.சிவலிங்கம்
 
 
 
 
 
 
 

幸普奪誓エ普エ龍奪普エ電歪普ーリミ汁リ釜 G626
கனகன்.
கங்காரு மிருகம் வாழும் நாட்டில் கால்நடைகள் பராமரிக்க ஒருவர் தேவை.
தகவல் கங்காரு WWW COM
★女★★★★
சீதனம் வாங்காது திருமணம் செய்யக் கூடிய படித்த வாலிபர்கள் எம்மிடம் உண்டு. இந்தப் பெருந் தன்மையான வாலிபர்களைப் பற்றிய விபரம் அறிய வேண்டின் ரூபா 2000/- கொண்ட முத்திரைகளை முதலில் அனுப்பவும் தபால்பெட்டி 010 கொழும்பு.
★★★★★★
எத்தனையாம் ஆண்டு, எத்தனையாம் திகதி பொருட்கள் விலை கூடும். என்பதை ஒரு மாதத் துக்கு முன்பே கணிக்கக் கூடிய சோதிடர் ஒருவர் தேவை விபரங்கள் வெளிக் காட்டப்பட LDITL LIIgl.
Glg5/TL Li L II : W. W. W. LIFT ġ5T6ITL b.COM
★女★★★★
15 கிராமில் பிட்டும் 5 கிராமில் இடியப்பமும் அவிக்கக்கூடிய ஒருவர் தேவை.தங்குமிட வசதி உண்டு விண்ணப்பிகுக. WWWஇடியப்பம்.COM
★★★★★★
மூத்ததம்பி : "கஞ்சா குடிக்கிறா” இளையதம்பி : “கஞ்சா குடிச்சிக்கல்லடா, கஞ்சுதான்
குடிக்கன்.” மூத்ததம்பி : “அதத்தானேடா கேட்டனான். நீகுடிக்கிறது.
கஞ்சா? எண்டு.”
-கா.சிவலிங்கம்

Page 56
-k ASAAA ASAAASAAAA KYLuS0YeSJL Su0SH uSuSS uSSu0SJuSJSuSLLLLS S LLLL S SSJJSJSSLLLLS S LSL ツーフ、エーフ公一/N一ー/N一ープN一/ u ui ySMM MM M S S
幸、エリエ
శాకా
سے لائے
N حی کلاسے
سے ملادے WAN - جلادے ZAN
Nع=Nع=Nع=
محلی
N/
এ
* சேமமடு புத்தகசாலை * ஜிே 9 ஜெயா புக் செண்டர்
* பிறைற் சென்ரர் 8ே
* யாவும் மட்டக்களப்பில் ஒரே குடையின் பெறவும் நாட கேரம் UTT giğ ,
ہے یم N
لئے
( , , , , 響し、韓し、し 、讐/ 、『し 、『/ 、唇/ 、『/ 、韓/ 、"/ 、豊/ 、豊/ 、"/ 、"/ 、豊
సe=% N'a محیلات عیلاح = میلاح عیلام ==X-X או "Zא%־אל" א "Zאו "Zא "Z־אל-"אל־"א/ר"א" אל "אל" אל אל־"א/Nא", "א/־־
ஜனரஞ்சக எழுத்தாளர் L காலமெல்லாம் புதிய ெ அடுத்த இதழில்
S
 
 
 

ஒ(ெசுவைத்திரள்)-9
し_N!/_N!--N!/_N/_、豊 N'/--N"ZN'/N/142-N"Z *示ー示ー示ー {-Xe S S S S S SLS
:
த்தின் சிகரம் அகரம் எது வேண்டுமோ
து கிடைப்பது அகரம் புத்தகசாலை,
நாம் மட்டக்களப்பு பார் வீதியில் அமைந்து இருக்கின்றோம்!
புத்தகம், புத்தகம் எனக் கொழும்பு ஓடும் வாசகர்களே நீங்கள்
தேடி ஓடும் புத்தகங்கள் L6) 6TLDL5LLD 9) 600r(B.
வேண்டிய இடம்.
த்தகசாலை மட்டக்களப்பு \
JSASASAS SSASASASASA SSASASASA SAS S SASASA S SASASASASASS دے لمحے سے لمحےسےالحے لحے سے لےے لمحےسےیاد
不下傘下不下不下不下不下介下介
---------------
Ke
a)
N
(
M .3ܡ>Keܒ>ہے یم
: Nܒ݁»
---
ாலா சங்குப்பிள்ளை எழுதிய * *
காத்திருப்பேன்’ ' தாடர்கதை
ஆரம்பமாகின்றது.
Wسے

Page 57
圓ーリエ勤エリミ帝龍エリエ
ミエリミ予普ーミ
R AR R
ஒரு பிச்சைக்காரண் : வாழ்க்கைச் சுட்டெண் என்று
சொல்றாங்களே அது என்னண்ணே. மற்ற பிச்சைக்காரன் : வாழ்க்கையில் எத்தனையாவது
வயதிலை சுடுபடுறாங்களோ அந்த 6)]u g5 TLD......
-அதிமதுரா
ஒரு பிச்சைக்காரன் : நாங்க.பிச்சைக்காரனாக அதுவும்
தமிழனாகப் பிறந்தது தப்பாப் போச்சண்ணே. மற்ற பிச்சைக்காரன் : ஏனோ? ஒரு பிச்சைக்காரன் : வங்கிக் கணக்கிலை இருக்கிற
காசுக்குக் கணக்குக் காட்டட்டாம்.
-விவேகா
i.
---- حملے۔
བྷི་
ஒரு பிச்சைக்காரன் : என்ன கொழும்பை விட்டு ஒடுறே. மற்ற பிச்சைக்காரன் : தமிழ்ப் பிச்சைக்காரங்க கணக்குக் காட்டமுடியாம இருக்கு. கணக்குடுற காலம் போயிட்டுது.
பிச்சைக்காரன் : அம்மா பென்சக்காரி தடுமாறாதையுங்க. #ಣೂಕಿಅಃ தான் பென்சன் யார் யாருக்கு எத்தனையாம்
திகதி பென்சன் என்று அறியுறண்டா சீமாட்டி என்கிட்டை கேளுங்க
R حملے۔ حملے۔
༈ ལྟ # త్ర பிச்சைக்காரன் : சில்லறைக் காசு பிச்சை தாறதை பூ # ಹೌBUTL6à: மதிப்போடை வாழ்றதெண்டா 10 ரூபாவுக்குக் Wy
குறையாமல் பிச்சை கொடுங்கோ. W}
三彦圣多圣多圣登圣登圣登圣登茎圣多圣圣三菱三参三爱三参荃
 
 
 
 
 

பிச்சைக்காரன் * அரை இறாத்தல் பானை கிள்ளிக் கிள்ளித் தின்றேன் காசு மிச்சமில்லை.
ཕ}> -->
༈ ஒரு பிச்சைக்காரன் :ஊட்டுக்கு ஊடு வாசல்படின்னா என்ன
அர்த்தம்? மற்ற பிச்சைக்காரன் : தாயும் பிள்ளைகளும் தகப்பனிடம்
பிச்சை எடுக்கிறதாம்.
ஒரு பிச்சைக்காரன் : என்ன தொறே.நம்ம சேட்டைப் பார்க்கிறீங்க. நீங்க, கழிவு வாய்க்காலுக்கை விட்டெறிஞ்ச சேட்டுத்தான். அப்புறம். ஒன்றும் கழுவி எடுத்த சேட்டுன்னு நினைச்சுப் புடாதியுங்க.
ஒரு பிச்சைக்காரன் : என்ன கொழும்பை விட்டு ஒடுறே. மற்ற பிச்சைக்காரன் ; பின்னை என்னவாம் கொழும்பிலை வங்கிக் கணக்கு வச்சால் குடி எழுப்பிப் போடுறாங்களே.
யோவ் ஐயரு. வேற மதக்கோயில்களிளே 5% பிச்சைக்காறங்களுக்கு ஒதுங்கிறாங்க. நீங்களும் உண்மையான ஐயருன்னா சமயப்புரட்சி செய்யனும், 16ம் நூற்றாண்டிலை மாட்டின் லூதர் சமயப் புரட்சி செஞ்ச தகவல் எங்கே உங்களுக்குத் தெரியப்போகுது.
பொலிஸ் : என்ன. வர்த்தகம் செய்யுறதா அடையாள அட்டை
காட்டுது. எடுக்கிற பிச்சையா? பிச்சைக்காரன் : பிச்சை எடுக்கிறது வேற என்னயாம்.
-கொண்டோடி
参三参圣参圣圣三登圣三登茎三登圣三参圣登圣圣三登圣多妾
is
f

Page 58
அரச அலுவலகங்களில் எழுதுவினைஞர் உத்தியோகம் என்றாலே ஒரு சந்தோசம் தான் அன்று கல்குலேட்டர், கம்பியுட்டர் எதுவும் இல்லாமல் மூளையைக் கிளறிய காலம் அது. இக்காலத்தில் (1967ம் ஆண்டுப்பகுதி) சிரித்திரனில் நகைச்சுவைக் சிரிகதைகளை எழுதிப் புகழ் வாய்ந்தவர் பொ.சண்முக நாதன் அவர்கள் "குடிப்பேன் பொலிடோல்" என்ற நாடகம் தொடங்கி அவர் எழுதிய பல சிரிப்புக்கதைகள் சிரித்திரனில் வெளிவந்தன. இதோ பொ.சண்முகநாதன் எழுதிய மறதிக்கிளாக்கர் மயில்வாகனம் என்ற கதை
Բ)
மறதிக் கிளாக்கர் மயில்வாகனம்
பொ.சண்முகநாதன்
ஒருமுறை சர் ஐசாக் நியூட்டண் என்ற விஞ்ஞானியின் உணவை வேறு யாரோ சாப்பிட்டு விட்டார்களாம். சாப்பாட்டு நேரத்தின் போது சாப்பாட்டுட் பெட்டியைத் திறந்த நியூட்டன் அவர்கள் அதற்குள் உணவு இல்லாதிருக்கவே, "ஓகோ நான் முன்டே சாப்பிட்டுவிட்டேன் போலிருக்கிறது" என எண்ணி அமைதியடைந்து விட்டாராம். அவ்வளவு மறதிக்கார அவர்
இது போலவே நமது கிளாக்கர் மயில வாகனத்தையும் அடிக்கடி மறதி ஆட்கொண்டுவிடுப் ஆனால் அதற்காக அவரை 'ஈழத்து நியூட்டன் என்றே அல்லது நிகழ்கால நியூட்டன் என்றோ நான் சொல்லி வரவில்லை. தவிர இவர் உணவு நேரத்தையுப
 

C66 69
உணவையும் இதுவரை மறந்த நிகழ்ச்சியை மட்டும் நான் கண்டதுமில்லை கேள்விப்பட்டதுமில்லை.
மயில்வாகனம் கந்தோரில் கொப்பியுைப் புரட்டிப் புரட்டி ஏதாவது எழுதிக் கொண்டிருப்பார். பின்பு அந்தக் கொப்பியை மூடிவிட்டு இன்னொரு கொப்பியைப் புரட்டிப் புரட்டி எதையோ பார்த்தெழுதிக் கொள்வார். இதன் பின்பு மூன்றாவது கொப்பி ஒன்றை விரித்துக்
கணக்குகளை வாய்விட்டுக்கூட்டிக் கொண்டிருப்பார். இந்த நேரத்தில் முதலாவது கொப்பி சம்மந்தமாக இவருக்கு "மறதி வந்துவிடும் . "கொப்பியில் எழுதினேனா? அப்படி எழுதியிருந்தால் அது சரியாக எழுதப்பட்டிருக்குமா?" என்று எண்ணிக்கொண்டு அந்தக் கொப்பியை மீண்டும் புரட்டுவார். அதைத் தொடர்ந்து இரண்டாவது கொப்பியிலிருந்து பார்த்தெழுதியது சரியாயிருக்கிறதா என்பதில் மறதி ஏற்பட்டு அந்தக் கொப்பியும் புரட்டப்படும். இதனைத் தொடர்ந்து மூன்றாவது கொப்பிக்கும் இந்தக் கதி நடக்கும்.
இப்படி மயில்வாகனம் எத்தனை தடவைகள் கொப்பிகளைப் புரட்டிச் சரிபார்த்துக் கொண்டாலும் கடைசியில் மறதி காரணமாக அவரது சந்தேகம் சந்தேகமாகத்தான் இருக்கும். ஆண்டவா, நீ தான் துணை' என்று முணுமுணுத்துக் கொள்வார் இவர் கொப்பிகளை அடிக்கடி புரட்டிக் கொள்வதால் அவைகள்
எல்லாம் விரைவில் பழுதாகி வருகிறது என்று சக ஊழியர்கள் எல்லோரும் மேலதிகாரிக்கு அடிக்கடி முறையிடுவார்கள். r “எட்டும் நாலும் பன்னிரண்டு; பன்னிரண்டும் ஆறும் பதினெட் டுப் பத் தொன் பது இருபது இருபத் தொன்று இருபத் திரணி டு.” என்று

Page 59
誌エリー達委輩エリ -చే
மயில்வாகனம் வாய்விட்டு எண்ணிக் கொண்டிருக் கும் போது சுவர்கடிகாரம் அடித்துக் கொண்டால் கூட, இவர், தான் எண்ணிக் கொண்டு வந்ததை மறந்துவிடுவார். மீண்டும் "எட்டும் நாலும்." பாட ஆரம்பித்து விடுவார். ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வேலை களை செய்வது சிலருக்கு முடியாமல் இருக்கும். ஆனால் நமது மறதி மயில்வாகனத்துக்கோ மறதி காரணமாக ஒரு வேலை செய்வது கூட மிகவும் தொல்லையாக இருக்கிறது. ஒரு வேலைக்காக ஓர் ஆளே இவருக்கு முன் வந்து நின்றாலும் கூட "பொறும் தம்பி, பொருத்தார் பூமி ஆள்வார். ஒன்றொன்றாக முடிக்கிறன். ஒருவர் ஒருவராகக் கவனிக்கிறன்." 66_T.
யாராவது பத்து ரூபாவை இவரிடம் நீட்டி "இந்தாரும் வரிக்காக மூன்று தொன்ைனுறையும் லைட் காசு ஐந்து முப்பதையும் எடுத்துக் கொண்டு மிகுதியைத் தாரும்” என்பார்கள்.
உடனே மயில்வாகனத்துக்குப் பொல்லாத கோபம் வந்துவிடும். "எல்லாத்தையும் ஒண்டடி மண்டடியாகக் குழப்பாதையும் தம்பி முதலில் வரிக்காசு மூன்று தொண்ணுாறையும் எடுத்துக் கொண்டு மிகுதி ஆறு பத்தைத் தருகிறேன். பிறகு லையிட் காசைத் தாரும்” என்பார்.
, மயில்வானகம் எவ்வளவுதான் கந்தோருக்கு நேரத்துக்கு வந்தாலும் மிகவும் காலங்கடந்துதான் ※ வீட்டுக்குப் போவார். காரணம் நான் முன்பு குறிப்பிட்டது போல மறதி காரணமாகக் கொட்பிகளையும் பைல்களை யும் சதா திறந்து மூடிக்கொண்டிருந்தான்.
இப்படியாக இவர் மேலதிக ஊதியமின்றியே கூடுதலான நேரம் வேலை செய்தும் இவருக்குப் பதிவி உயர்வுகள் கிடைத்த பாடில்லை. மாறாக மேலதிகாரி யின் 'பேச்சு உயர்வுகள் தான் கிடைத்து வருகிறது.
மயில்வாகனம் வேலை முடிந்து அலமாரிகள் = லாச்சிக்களைப் பூட்டிவிட்டு வெளியே வந்தால் கூட மறதி காரணமாக மீண்டும் அலைக்கழிவுகள் ஏற்படும். வெளியே வந்துவிட்டு மீண்டும் "சரியாகப் பூட்டியிருக்கி 雞 றதா’ என்று பார்ப்பதற்குக் கந்தோருக்கு வந்துவிடுவார். சில வேளைகளில் பஸ்ஸில் ஏறியலர் இடையில் இறங்கி வருவதுமுண்டு. ஏன் எத்தனையோ தடவைகள் வீட்டுக்குப் போன பின் கூட திரும்பிப் கந்தோருக்கு வந்து பார்த்திருக்கிறார் என்றால் பாருங்களேன்.
நேற்றைய தினம் கந்தோரிலிருந்து வீடு புறட்படும் போது மயில்வாகனம் அலமாரியின் சாவித் துவாரத்தில் சாவியைப் போட்டுத் திறந்து கொண்டிருந்தார். 繳
"ஏன் அப்பா பிறகும் அலமாரியைத் திறந்து
 
 
 
 
 
 

烹寸 கொண்டிருக்கிறாய்?" என்று ஒரு சக ஊழியர் கேட்டதற்கு மயில்வாகனம் என்ன சொன்னார் தெரியுமா?
"ஒரு வேளை அலமாரிச் சாவியை அலமாரிக் குள்ளேயே வைத்துப் பூட்டிவிட்டேனோ என்னவோ? அதுதான் பார்க்கப் போகிறேன்” என்றார்.
- நன்றி சிரித்திரன் 1967
)്രീയ്കുമ ബ്ലൂല്പു് ( ൃീഴ്ക് ജൂല്ക്ക്
?.ഒ്ജുബ്ധമീ. (ޖިންޗް ހޕިހީ&eޕޯޗުހޯޗަކޓީޗިތްޗުގީ ޚިޒޫވޯ2ޒި2ޤ2/(ހ) | }
മുീázളുമ،ފޮލިފޯރޖް റ്റൂ.
குடிகாரன் : பாரதியார் மனிதனை குடிகாரன் என்று உணர்ந்து
தான் இந்தப்பாடலைப் பாடியிருக்க வேண்டும்.
ஒரு: எந்தப் பாடலை?
குழகாரன் : பத்துப் பன்னிரண்டு தென்னமரம் வேண்டும் என்ற
TL60)6).

Page 60
நாட்டின் பொருளாதார உயர்ச்சிக்கு உழைக் காது பொருளை அனுபவிப்பதற்கு உனக்கு எவ்வித உரிமையும் கிடையாது. மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத் தாது நீ மட்டும் மகிழ்ந்திருப்பதற்கு உனக்கு எவ்வித உரிமையும் கிடையாது.
-பெர்னாட்சா
(பழைய சிரித்திரனில் இருந்து)
பொ.சண்முகநாதன் போல் காலத்துக்கு ஏற்ற நகைச்சுவை தந்தவர்கள் சித்திசிகாமணி, குகன் என்போரின் பங்களிப்பும் முக்கியமானது. சித்திசிகாமணி எழுதிய கருணாகர பயின்ட் குகன் எழுதிய நிமிடக்கதை என்பனவும் இக்கால கட்டத்தில் வெளிவந்தன. அவை இங்கு பிரசுரமாகி உள்ளன.
ரன் இவை ވަޒީމޫގ02ޖޔޭ/ފޒޭޒަى މގ މަގ7/ތގެ {
్కూ محمحترتی தைத்
ترچھے برتر رچیج ہے تربیتھ کچھے , مہبربر چڑھ2 یتیم نجیبZZZ تحترم/2 نZ تریر ހޯހބޖހަވށ “ށ,7ގގ ...7ޤނޗުޖ7/މޞފިމަށީ ފިޒިޒާމަކީ ޕޯޖޒަމގم ށޠީ/ތ2//43 യമില്ലേ ഉബേബ് ജീല്ലല്ക്ക്. ബല്ല മൈല്ല'/ހޫޒާރޒިޖ/ބީއި%އ
 
 
 

ஆனைக்கால் சுப்பிரமணியமும் பூனைக்கண் நடராசாவும் நெருங்கிய நண்பர்கள். ஆனைக்காலுக்கு சகுனம் பார்ப்பதில் நிரம்பிய நம்பிக்கையுண்டு. ஒரு சமயம் நானும் பூனைக்கண்ணரும் ஆனைக்காலர் வீட்டு வழியாகச் சென்றுகொண்டிருந்தோம். ஆனைக்காலர் வீட்டைத் தாண்டும்போது அவர் எங்கோ செல்வதற்குப் புறப்பட்டு வந்து கொண்டிருந்தார்.
* துலைக்கோ ஆனை?” என்றார் பூனைக் கன்ைனனார்.
"அட, பூனை குறுக்கே வருகிறதே! சகுனம் எப்படியோ?” என்றார் ஆனை சிரித்துக்கொண்டே,
Zബീ 77ޤޫޔާތްޕ///ޅ2×ފހމހމްގg//ޡަބޒީފުޗި
డ27
瓮
/ 2 /2
列考ジ تھے برچسے بربربر برصے ترے مرقعے
/s.
ക്ലബ് ക്ലബ്ബ് മമ്മzá ടൈ தி െീ. * *ഴ്ചല്ലയ ހޓޢީ ރޫބދީ ހޙަތޯ> ލެޞލަޙަޒަގްގެގޏޒިބޮޢުނޗް ޒޫރޯބޖިޖީ4 ഥലമ (ബ് 2ൈ
Sí í 0ހ/ޙހޫއިޖަ/42

Page 61
"பயப்படாதேயும், போற இடத்தில் காரியம் சட்டென்று முடிந்துவிடும்.” என்றார் பூனை.
உடனே ஆனையின் முகம் பயங்கரமாக மாறிவிட்டது. பேயறைந்தவர் போலக் காணப்பட்டார். (பேயறைந்தால் எப்படியிருக்கும் என்று தெரியாதவர்கள், ஆனையை அப்பொழுது பார்த்துத் தெரிந்து கொண்டி ருக்கலாம்.) பூனையை ஏறிட்டுப் பார்த்துவிட்டு ஒன்றும் பேசாது திரும்பி விட்டார். பூனைக்கு என்னடா ஏதோவென்று போய்விட்டது. மெல்லவும் முடியவில்லை, விழுங்கவும் முடியவில்லை. பாவம், மனிதர் மிகவும் கஷ்டப்பட்டு போய்விட்டார். அவரின் (பூனையின்) நச்சரிப் புப் பொறுக்க முடியாது விஷயத்தை அறிவதற்காக, அன்று மாலை ஆனை வீட்டுக்குப் போயிருந்தேன். நைசா”கப் பேசி விஷயத்தைக் கறந்தேன். அவரையே கக்க வைத்தேன். அவர் சொன்னது இதுதான்; தன்னு டைய நெருங்கின உறவினர் ஒருவருக்குச் சுகமில்லை யாம், அவரைப் பார்ப்பதற்காகத்தான் புறப்பட்டுக் கொண்டிருந்தாராம். அதனாற்றான் "போற இடத்தில்
襲ーリ
சத்தித்தக்து மரக்கன் தன்வசம் ജലമഗ്ലൂ -
މޮޒޯ>ހީމޮލިޒިޒާއިހި22/> ン އެބާޒޮތޫފުޙޫލޫޖޭ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ਤਤ ਤਤਕੁਤ エリエX。
காரியம் சட்டென்று முடியும்" என்று பூனை சொன்னதும் இவருக்கு "சொக்" (Shock) அடித்துவிட்டது. எப்படி 656 gub?
கருணாகரா பயிண்ட்.
-சித்தி சிகாமணி
நண்பன் கருணாகரன் கொழும்புக்கு மிகவும் புதியவன். நேர்முகப் பரீட்சை ஒன்றுக்காக வந்திருந்தான். கொள்ளுப்பிட்டியில் (கொழும்பு-3) தான் அவனர் பரீட்சை நாம் தங்கியிருந்தது வெள்ளவத்தையில், பரீட்சையன்று காலை 3.00 மணியளவில் கொள்ளுப் பிட்டிக்கு பஸ்சில் பிரயாணமானோம். எனக்கு அருகில் தான் கருணாகரக் அமர்ந்திருந்தான். பட்டணத்திற்குப் புதியவனல்லவா? ஒவ்வொன் றையும் கூர்ந்து கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். "பஸ் கொண்டக்டர்” ஒவ்வொரு "பஸ் ஸ்டாப்" பிலும் “பயின்ட பயின்டl" (இறங்குங்கள்
െ ബ്ലേബല്ല )غین മ്ലമല്ല ജയ്പൂീ
ല്ല് ഗ്ലേ ലീ ട്രജ്ഞ=
ޝަހޗުޗފޯޓހ

Page 62
、云誓豆、云重亏哲豆汇亏誓三 இறங்குங்கள்!!) என்று சொல்வதையும் பிரயாணிகள் இறங்குவதையும் கவனித்துவந்தான். பயின்ட கன்றால் என்ன என்றும் என்னைக் கேட்டுக்கொண்டான். பம்பலப்பிட்டி மெயின் பஸ் ஹோல்ற்” தாண்டியிருக்கும். எங்கோ பராக்குப் பார்த்துக் கொண்டிருந்த நான் திரும்பிப் பார்த்தேன். கருணாகரனைக் காணவில்லை. என்ன செய்வதென்றே எனக்குத் தெரியவில்லை. நெஞ்சு படக் படக் கென்று அடித்துக்கொள்ளத் தொடங்கியது. பையனோ கொழும்புக்கு முற்றிலும் புதிது. பெற்றோர் என்னை நம்பித்தான் கொழும்புக்கு யாழ்ப்பாணத்திலி ருந்து அனுப்பியிருந்தனர். நேர்முகப் பரீட்சையோ இன்னும் அரை மணித்தியாலத்தில், மணியை அடித்து அடுத்த "பஸ் ஹோல்ற்றிலேயே இறங்கிக்கொண்டான். “கருணாகர பயின்ட் என்று கண்டக்டர் சொன்னதே" இதற்குக் காரணம்.
1966 - 1967 ஆம் ஆண்டுக் கால கட்டத்தில் சிரித்திரனில் நகைச் சுவைகள் போதிய அளவு இல்லாமையால் வீரகேசரியில் அதன் ஆசிரியர் கீறிய சவாரித் தம்பர் என்ற பகுதியும் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் வெளி வந்தது. உதாரணத்துக்காக ஒரு
இலஅடது
ன்மையும் பெய்யும்
மட்டக்களப்பில் அச்சுக் கன் சந்தேகமில்லை அவர்கள் எவகிறீன் அச்சகத்தில் நாலு வர்ண அட்டைக செய்யும் வல்லமை, சிறந்த முறையில் பைண்டிங் யாவற்றுக்கும் IBTLGou
A.
தொ.பே 06:52, கை.தொ.பே
ᎬᏪᏪᏪᏪᏪ Ꮂ Ꮺ ᏪᏪᏪᏪ Ꮂ Ꮺ ᎲᏪᏪ Ꮂ Ꮺ ᎲᏪᏪᏪ Ꮂ Ꮺ Ꮂ Ꮺ ᎲᎲ ᏪᏪᎲ Ꮺ ᎲᏪᏪᏪᏪᎲ ᏪᏪ ᏪᏪᎲ Ꮺ .
懿
ご
 
 
 

காட்டுனை இப்பக்கங்களில் மீள்பிரசுரம் செய்து இருக்கின்றேன்.
இக்கால கட்டங்களில் வரையப்பட்ட காட்டுனும்
நகைச்சுவைத் தன்மையில் தனித்தன்மை காப்பவை யாகவும் மிளிர்கின்றன.
வாலிபன் : ஷா. நல்ல வடிவான நாய்க்குட்டி.
பெண் சரியா உம்மைப்போல என்ன மிஸ்ரர்.?
(தொடரும்)
ருதுதிருது
அத்தலையல்நிலை
லையின் முன்னோடிகள் யார்?
ன் அச்சகத்தினரே! அழகான ஆப்செட்
ளைச் சிறந்த முறையில் வடிவமைப்புச்
நிறைந்த புத்தகப்பிரசுர வலிமை, பத்தக
ண்ைடிய, தேடவேண்டிய ஒரே அச்சகம்.
స్టో
க்களப்பு. 222607, O65-2657177.
O77-14 1444. 1ᏈᏈᏈᏈᏈᏈᏈᏈ ᏈᏈᏈᏈᏈᏈᏈᏈ ᏈᏈᏈᏈᏈᏈᏈᏈ ᏈᏈᏈᏈᏈᏈᏈ ᏈᏈᏈᏈᏈᏈᏈ ᏈᏈᏈᏈᏈᏈᏈᏈᏈᏈ
C

Page 63
x பலசாலியார் என்று கேட்கின் அன்னவர்கள்
விலைவாசி வென்றவர்கள் அறி.
x கொசாவாவுக்குப் பிள்ளை பிறந்த செய்தி கொழும்பார்க்குப் பாம்மாழயாம் டோய்.
28 கிளிநொச்சி, பூநகரி, செஞ்சோலை அழித்தவர்கள்
விழி இழந்து வீழ்வரே வீண்.
1993ம் ஆண்டினிலே சிரித்திரன் ஆரம்பிக்கப் பட்டது என்பதைக் கடந்த இதழிலே கண்டோம். இந்த ஆண்டிலே பத்திரிகைத்துறை ஈழத்தில் வளர்ச்சி யடைந்திருக்கவில்லை. அங்கொன்றும், இங்கொன்றுமாகச் சிற்றிதழ்கள் வெளிவந்தன. கதம்பம் என்றொரு சிற்றிதழ் கொழும்பில் வெளிவந்தது. தமிழ் நாட்டுச் சஞ்சிகைகளின் பெரும் பொற்காலம் அது அந்தச் சஞ்சிகைகளை நிற்பாட்டி னால் தான் ஈழத்தில் இலக்கியம் வளரும் எனப் பலர் கொக்கரித்தார்கள். இந்தக் கால கட்டத்தில் சிரித்திரன் ஆரம்பிக்கப்பட்டது. அதனை ஆரம்பித்தவர் சி. சிவஞான சுந்தரம் எனப் புகழ்பெற்ற காட்டுனிஸ்ட் அவர் யாழ்ப்பாணம் கரவெட்டியைச் சேர்ந்தவர். கட்டிடக் கலைஞனாகப் பம்பாய்குப் படிக்கச் சென்று கார்ட்டூனிஸ்டாகத் திரும்பி வந்தவர். இந்தியாவின் பிரபல்யமான “கொஞ்ச்’ ‘பிளிட்ஸ்’ ஆகிய ஆங்கிலச் சஞ்சிகைகளில் கார்ட்டுனிஸ்டாக இருந்தவர்.
அவர் இலங்கை திரும்பிய போதே இலங்கையில் ஒரு கார்ட்டுன் பத்திரிகையை ஆரம்பிக்கவில்லை. ஆரம் | பத்தில் தினகரனிலும் பின்பு வீரகேசரியிலும் கார்ட்டூனிஸ்ட் ஆக இருந்த அவர் சவாரித்தம்பர், மைனர் மச்சான், பூரீதான்
 
 
 
 
 

豆エミリマーエ○ズリのQ鳴演cm xー
AYAYAYAYAYAYAYAYAYAA AYAYS කුංක්‍රෝණු>^<>^ද්‍ය
குதுது
28 மண்டபத்தில் விட்ட கண்ணீர் அது ஒன்றே கூரிய வாளாகக் கொருங்கோலைச் சுடும்.
x எந்த வாகனத்தில் ஏறினாலும் விதிமாறில்
எருமை வாகனமே தான் முந்துறும்!
26 அகர முதல எழுத்தெல்லாம் A,B,C றோமனே அலகு.
2 ஏட்டிக்குப் போட்டியாக விலை உயர்த்தல்
போட்டியால் வந்த வினை.
2 பிட்டுக்கு மண் சுமந்த அழகளெல்லாம் இப்போது
றோட்டுக்கு வந்திருக்கு கூட்டு. yyyyyyyyyyyyyyyyyyyyyyyyS
செல்லக்கிளி, வளவளா சியாமளா என்ற கார்ட்டுன்களைக் கிறித்தள்ளினார். இதன் மூலம் மக்கள் இதயங்களில் இடம்பிடித்த அவர் அதன்பின்பே சிரித்திரனைத் தொடக்கி னார். தமிழ் நாட்டு ஏடுகள் இவ்விடம் வராது ஒழியின் தம் தம் பத்திரிகைகள் விலையாகும் என்ற நோக்கத்துக்கு அவர் அப்பாற்பட்டவராக விளங்கினார். அவரால் வெளியிடப் பட்ட ஆரம்ப இதழ்கள் பல வேகமாக விற்பனையாகி விட்டன. அதனைத் தொடர்ந்து சிரித்திரன் சஞ்சிகை ஈழத்தில் மிகவும் பிரபல்யமானது. அச்சுக்கலை

Page 64
SSSSSSSSS 以干下、=萤 N 達エ普エ அதிகளவு விருத்தியடையாத அந்தக் காலத்தில் தமிழ் நாட்டுச் சஞ்சிகைகளுடன் போட்டியிட்டு வெற்றியடைந்த சஞ்சிகை யாகச் சிரித்திரன் கணிக்கப்பட்டது. சுமார் 320 இதழ்களை சிரித்திரன் நகைச்சுவைக்காக வெளியிட்டது. சிரித்திரன் சிவஞானசுந்தரம் மிகவும் பலமான சிருஷ்டி கர்த்தா அவருடன் தோளோடு தோளாக நான் இணைந்து செயல் பட்டதாக பிரபல்யமான எழுத்தாளர் திரு.செங்கை ஆழியான் தான் எழுதிய ‘கார்ட்டூன் ஓவிய உலகில் நான்’ என்ற நூலில் குறிப்பிட்டுப் பெருமைப்படுத்தி உள்ளார். பிறந்த தினத்திலேயே இறந்து போன இக்கலைஞரின் சிரார்த்த தினம் 03.03.2008ல் நினைவு கூறப்பட்டது. திறமை மிக்க இந்த மாமனிதருக்கு சுவைத்திரள் 15வது சிரார்த்த தினத்தில் தனது அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின் றது. ஒரு ஆணின் சாதனைக்கு உள்ளே பெண் மறைந்து இருக்கிறாள் என்று ஆங்கிலப் பழமொழி ஒன்று கூறுகின் றது. சிந்தனையாளர் சிவஞானசுந்தரம் அவர்களின் சிரித்திரன் பத்திரிகைக்கு மாபெரும் வெற்றியை ஈட்டித் தந்த பெண்மணி அவரது பாரியாரே ‘திருமதி.கோகிலம் சிவஞானசுந்தரம் அவர்கள் தற்துணிவு மிகுந்தவர் சிரித்திரனை 30வருடங்களாக வெளியிட்ட பெருமையில் சரிபாதிப் பெருமை திருமதி கோகிலம் சிவஞானசுந்தரம் அவர்கட்கே உரியது. கடந்த 50 வருடங்களில் சிரித்திரன் மூலம் 50க்கு மேற்பட்ட எழுத்தாளர்கள் உருவாக்கப்பட்டு
5 RSSSR- 运亨运蚤宁誓亏誓亏誓
இருந்தார்கள் அவர்களை எல்லாம் எழுத்தாளர் வரிசையில் மதித்து போற்றி, மதிப்பளித்து சிரித்திரனில் தரம் பதித்துச் சிரித்திரனை வளர்த்த பெருமை திருமதி கோகிலம் சிவஞானசுந்தரம் அவர்கட்கே உரியது. அன்னார் தனது கணவரின் மரணத்தின் பின் இலண்டனில் அமரராகிவிட்டார். அவரின் சிரார்த்ததினம் 13.01.2008 ஆகும். எம்மைப் போன்ற எழுத்தாளர்களைச் சிறு வயதில் இருந்தே வளர்த்தெடுத்து எழுத்தாளராக்கிய பெருமை திருமதி கோகிலம் சிவஞான சுந்தரத்துக்கே உரியது. இந்த இலட்சியப் N பெண்மணிக்கும் சுவைத்திரள் தனது ஆழ்ந்த அனுதாபத்தை இந்த சிரார்த்த தினத்தில் தெரிவித்துக் கொள்கின்றது.
அவர்ளால் நடத்தப்பெற்ற நகைச் சுவைச் சஞ்சிகையின் தொடர்ச்சியே சுவைத்திரள். ஈழத்தில் ஒரு நகைச்சுவைச் சஞ்சிகை இல்லாத குறையினையே சுவைத்திரள் நிவிர்த்திக்க முயல்கின்றது. அதனைத் தொடர்ந்து செய்வதற்கு சபதம் ஏற்றுள்ளது. சுவைத் திரள் ஈழத்துச் சஞ்சிகை மாத்திரம் அல்ல; அது ஒரு உலகச் சஞ்சிகையும் கூட.
(ஆ + ர்)
ܡܸ܊
 
 
 
 
 

சுனாமிவந்ததெண்டுப் பொய்க்காசு எடுத்துக்
கொண்டு போறே. ஆண்டவன் புண்ணியமா
ஒரு அம்பது எறிஞ்சு போட்டுப் போடாய்யா,
சுட்ட மின்குமிழ் (பல்ப்) எனத் துர எறியாதீர்! எந்த ரக ‘எனர்ஜி பல்ப் என்றாலும் மீண்டும் புனரமைப்புச் செள்து எரியச் செய்கிறோம்.
S கிரைண்டரைத் திருத்தித் தருகின்றோம்.
S அவ்வாறே மின்விசிறி மிக்ஸி என்பனவற்றை திருத்தி ஓடச் செய்கின்றோம். * அது மட்டுமா - }
Šé6ř26ULIT LILůLíhgůL.
NX Y
ஒரே குபையின் கீழ் இயங்கிச் சேவ்ை
兼
Sភាឬក្លាយបំLLIយ6.
சய்கின்றோம். நாடி வாடுங்கள் எம்மிடம்!
நாம்
豪毅శొ3న్దే
திருத்தித் தடுகின்றோம் உங்களிடம்!!
リ

Page 65
ॐ ΝΑ Ž3S
జో జో گسمجھه இவர்கவுைப் பர் அப்படி என்ன பேச்சு கம்பியூட்டர் பற் சகல விதமான கம்பியூட்டர்களும், கட விற்கும் மாபெரும் விற்பை
பிரிண்டரா, எல்கானரா, சி.டி.ரைட்டரா அது உண்டு இவர்களிடம்!! நீங்கள் சகலவித பாகங்களும் இவர்க
கம்பியூட்டர் தூரத்தில் இருக்கிறது. அ பொருத்தித் தாருங்கள் எனச் சொன் சொல்வி
செல்வீர்கள் இவர்களிட
S
qSAqS AAALAA AAAAASL AAALLSAAAAAALLLSAAAqSqSiSASALAqA SAqSAqAASSqAiHALLSAAAAAAAAqAAAAAAAASqSAeLSeqASAeSSqSSAAALSLSSqSLSLSAeSeSASLSAAAAAALA 杰的 ====
Va
.qS AAAAA ALSAASAA LSLALA MALSAiAMAASA AiSASA AAASiSMAAASAAAAASASMAASA ASAAASAAASAAAA V گسسته -؛ بورس سحس لاگی ー、に*ー。ーrーかーすー、にマートーマー。ーマーかーマー、にマー、和ーマー、エーエーエーエー
- - - - - - - - - - | சிங்கர் விற்பனை நிலையத்திற்கு
அருகில் உள்ள மேல்மாழ.
Net Works / Engineering Services, 89/1
È திருகோணமலை வீதி, மட்டக்களப்பு. x4 தொலைபேசி 0652226864.
0777482011. O60265 1318. இ காத்தான்குடி - 03 இ தொலைபேசி 10652247121.
E mail : mac
 
 
 
 
 

エ載エ龍二 ஆஓஒஒஒஒ(ெசுவைத்திரள் 2
ချွံချွံချွံချွံချွံချွံချွံချွံချွံချွံချွံချွံချွံချွံချွံချွံချွံချွံချွံနွှဲ
参见 ള് ഴ്സ് عليه O る* ഴ്സ് 1றியே (சட்டத்தவுப்பில் 204* றி எல்லாம் அறிந்தவர்கள் இவர்கள்!!! ம்பியூட்டர் பாகங்களும் மட்டுகநரில் னையாளர்கள் இவர்கள்!!!
1. எத ஆவண்டும் உங்களுக்கு?
நாடிச் சென்றால் கம்பியூட்டருடன் ண் இணைத்துத் தருவார்கள்.
அதற்குரிய பாகங்களை வீட்டில் வந்து னால் அதந்கும் "Yes" என இவர்கள்
Ta,6t
ல் வைத்தருங்கள்
ம் அள்ளித்தருவார்கள்
گاه
SAAA LSAALSAAAA SSALASS SAAAA LLSAALSAAAA SSAAAqSAAA LS AqASAAA SLS AqLSAAAASLLS AALL SAAAAA محسسه ما محاسبه ما گسسته سه SSSL SSL SSLLLS SJSLSL JSSSLL SJSLLS JSSSLLL SJSSie u SYSSieLSJSJikuLSSJLiLL SSSASLL S LSLSASSSLS LSSSSiS
ဒွါက္ကံပြိုးနွှဲပြိုးနွှဲပြိုးနွှဲပြိုးချွံချွံချွံနွှဲပြိုးနွှဲ8နွှဲ8နွှဲ8နွှဲ{3ညွှ8နွှဲနှဲ8နွှဲ

Page 66
SPOKEN SINHRLA - Guia filiath bus INESS ENGLISH - alurung Giánh
METHOD OF COMPUTERIZED BOOK - KEEPING & Account ANCY (McBA). 繳
கணக்குப்பதிவியலும் கணக்கீடும் (MCBA)
NURSERY TEACHER TRAINING course (NTTc) பாலர் முன்பள்ளி ஆசிரியர் பயிற்சி நெறி (NTTC) FAMILY LIFE EDUCATION (FLE) குடும்ப வாழ்க்கை/நலக் கல்வி (ELE) ART OF YOGASANAM (AOY) யோகாசனக் கலை (AOY) EFFECTIVE ENGLISH WITH GRAMMAR AND SPOKEN ENGLISH 怒爵 செயற்திறனுடன் கூடிய ஆங்கில இலக்கணமும் பேச்சு ஆங்கிலமும்
தபால் மூலக் கல்வி நெறி போதிப்பதில் பதினைந்து வருடகால அனுபவமுள்ள நிறுவனம் rேightஆகும். B.B.C (PVT) LTD INCORPORATED UNDER THE COMPANIES ACT NO - 17 OF 1982 AND THAT THE COMPANY ISLIMITED NO OF COMPANY. NO (PAS) 12372.
cens BRIGHTBOOKCENTER(PVT) LTD.
艾鲑 S-27 FIRST FLOOR, P.O.BOX No. 162, COLOMBO CENTR&IL SUPER MÄRKET COMPLEX, COLOMBO - 1 1. TELE: 434,770
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ 

Page 67
យោសិកា សិសrb
76B, Kings Street, Kandy. ᎢᎫᏢ : 081-222Ꮞ187 .
15 வருடங்களாக மட்டக்களப்பில் நாம் சேவை -> 15 வருடங்களாகச் சேவை செய்யும் சுவைத்திரள் -> கோட்டைமுனைப் பாலத்தருகே ஆற்றங்கரையில் அங்கு, இங்கு என அலையாது எம்மிடம் வ காத்திருக்கின்றோம்.
: ഗുമ്ലീ,
* வெளிநாட்டுக்கு பொதிகள் அனுப்பும் ၆#6%g
ெேரலிபோன் வசதி ளூது
ላ
 
 

या எசன்ஸ் (Sல்ல Dனையாகிறது சுவை மிதந்த
D65
வ செய்கின்றோம்.
நகைச்சுவை ஏட்டினை வாழ்த்தி வரவேற்கிறோம்.
) எமது முகவர் தபால் நிலையம் அமைந்துள்ளது
பாருங்கள் அரிய பெரிய சேவை செய்ய நாம்

Page 68
TMMLL T S sO Og T e OO OTOM SSTS වැරැුලූ ඉංග්‍රෑෆි බ්‍රණීUGO බ_ණ්ණන(OUnශ ഒെ Oെ ഉന്ധിജു ഒ@@(കൃ.കൃഴ്സ
(39-KOOCL GUAg
கொழும்பில் தலைசிறந்த பொத்தகசாலை எது?
பாலர் தொடங்கிப் பல்கலைக்கழகம் வரையான
செய்பவர்கள் ബEL# : O III-2,472.36 தொலைநகல் : 0直直~244862 இலங்கையில் நூல்கள் வினியோகம், விற்பனை ஏற்று சகாப்தம் அன்புடன்
* CFIEMAM UG, 49/50,
தமிழ் நாட்டில் பதிப்புத்துறை விற் இவர்களின் மு
ܡܘܼܵ
க.சச்சிதானந்தன் - காந்தளகம், சென்னை 02, கோ. இளவழகன் - தமிழ்மணன் பதிப்பகம், சென் போலர் தொடங்கிப் பல்கலைக்கழகம் வ *சமீபத்தில் யாழ்ப்பாண அகராதியைப் ப துணிவு மிக்கவர்கள் இவர்கள். உங்களுக் மொத்தமாகக் கிடைக்கும் ஒரே இடம்!
சேமமடு ெ
U.I.G.49, 5o, ifiliúlaig
S0S0S0S0S0S0S0S
 
 
 
 
 
 
 
 
 
 
 

அலு எல்லியூர், ஆபேலும் அ9ை டி விரு. ഉളUn1 ജൂെ കെീഴ്ത്ത
இன்பம் அளில் இம் Uெnத்929/லை , 9,99/ഞ്ചരി,
GDDG பொத்தகசாலை UC52 பீப்பிள்ஸ்பார்க்
கொழும்பு-iருநீலங்கா
நூல்களை ஏற்றுமதியும், இறக்குமதியும் இவர்கள்!
2。QII〜232重905
4 மதி, இறக்குமதி, பதிப்புத்துறையில் புதியதோர் அழைக்கிறது!
பனைத் துறை முன்னோடிகள் முகவர்கள்
தொலைபேசி 044 28414505 തങ്ങ~17, ിക്രങ്ങബ് 044 24339030
ரை நூல்கள் விற்பவர்கள் இவர்கள். திப்பித்துத் தமிழ் உலகிற்கு வழங்கிய
குத் தேவையான அத்தனை நூல்களும்