கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலைமுகம் 2005.07-12

Page 1


Page 2
Ostä sitä söä
 

திருமறைக் கலாமன்றம் கடந்து வந்த பாதையில் பல்வேறு பத்திரிகை களிலும், சஞ்சிகைகளிலும் அதன் செயற்பாடுகள் பற்றி வெளிவந்த கட்டுரைகள், தகவல்களில் 905 பகுதியையும் மற்றும் ஏனைய பல விடயங்களையும் உள்ளடக்கி இவ்விரு நூல்களும் தமிழிலும்
சிங்களத்திலும் வெளிவந்துள்ளன.
விரைவில் வெளிவரவுன்விை
கொல் ஈனுங் கொற்றம் (فالعسك{/0 لمن رفيع) :
எழுத்துருவாக்கC
யோயோன்சன் ராஜ்குமார்
நீதித் தலைவர்கள் இருவர்
(فيها موونه – وفيد) எழுத்துருவாக்க.ே
ம.யேசுதாசன்

Page 3
/ O Ο ● ༄༽ காலாண்டுச் சஞ்சிகை
கலை, இலக்கிய, சமூக இதழ்
560)6O 16 cup85lb O3
ஜூலை - டிசெம்பர் 2005
பிரதம ஆசிரியர் நீ, மரியசேவியர் அடிகள்
பொறுப்பாசிரியர் கி. செல்மர் எமில்
உதவி ஆசிரியர் வி. பி. தனேந்திரா
அட்டை ஓவியமும் வடிவமைப்பும் அ. ஜூட்சன்
உட்பக்க ஒவியங்கள் ம. டொமினிக் ஜீவா
ஒப்புநோக்கு உதவி சா. கெலன் மேரி
இதழ் வடிவமைப்பு கி. செல்மர் எமில்
கணினிசார்ந்த சேவைகள் ஜெயந்த் சென்ரர் 28, மாட்டின் வீதி, யாழ்ப்பாணம்.
அச்சுப்பதிப்பு ஏ. சி. எம். அச்சகம் 464, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்.
தொடர்புகளுக்கு திருமறைக் கலாமன்றம் 238 பிரதான வீதி, யாழ்ப்பாணம், இலங்கை, Tel.021-2222393 E-Mail: cpajaffna(asltnet.lk
Centre for Performing Arts 19-5/6, Milagiriya Avenue, Colombo-4, Sri Lanka. Tel 01 12-597245 Fax: 01 12-556712 E-Mail: Saveri(a)dynanet.lk
 
 

க. வேல்தஞ்சன் மனோன்மணி சண்முகதாஸ் செளஜன்ய ஷாகர் ராஜேஸ்வரன் அ. யேசுராசா செ. திருநாவுக்கரசு சா. பி. கிருபானந்தன்
Gu Te T6
சி. மோகன் சி. சண்முகராசா த. சுலக்சனா அ. அமிர்தா நா. திருச்செல்வம் இ. திலகரட்ணம் தார்மிகி யோ, யோண்சன் ராஜ்குமார்
கவிதைகள்
சோ. பத்மநாதன் சூரியநிலா தாட்சாயணி அ. லுமென்டா ந. சத்தியபாலன் மாரி மகேந்திரன் டொ, பற்றீசியா எ. மருதம் கேதீஸ் தமிழ்நேசன் த. ஜெயசீலன்
அந்தோன் சேகவ் செ. யோகநாதன்
ঢাgéh ஜோ. ஜெஸ்ரின்
மதுரா
魏酸 @ LOODlo...
தலையங்கம் அஞ்சலிகள் நிகழ்வுகள், பதிவுகள்,
பார்வைகள்.
இதழ் 42

Page 4
ఉతణఎaంగీణి
வணக்கம்! சென்ற கார்த்திகைத் திங்கள் 29, 30 இல் கண்டி மாநகரில் திருமறைக் கலாமன்றத்தின் நாற்பதாவது ஆண்டு நிறைவுவிழா அதன் சிங்களப் பிரிவினரால் நடத்தப்பட்டது. மல்வத்தைப் பீடத்தில் உயர் பதவி வகிக்கும் தம்மானந்த தேரர் அவர்களும், தம்மே றதிக்கித்தா விமி தேரர் அவர்களும் அவ்விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். தம்மானந்த தேரர் கூறியது:
"கலைகள் உள்ளத்தைக் குணமாக்குகின்றன. சில பாரம்பரிய நடனங்கள் மூலம் தீய சக்திகளின் ஆக்கிரமிப்பு அடக்கப்படுகின்றது. இந்நாட்டில் கலைகள் மூலம் நல லினக் கததையும், அமைதியையும் அடைய முடியுமென நம்புகின்றேன். இன்றைய காலகட்டத்தில் திருமறைக் கலாமன்றத்தின் செயற்பாடுகள் மிகவும் முக்கியமானவை. திருமறைக் கலாமன்ற கலைப் பணிக்கு எகர்களால எதை எதை சி செய்ய முடியுமோ அவைகளைச் செய்ய நாம் முன்வருவோம்!” தம்மே றதிக்கித்தா தேரர் கூறியது:
"கலைகளினூடாக சமாதானதி தை நிலை நாட்டுவதற்கு உழைக்கும் திருமறைக் கலாமன்றத்தைப் பாராட்டுகின்றேன். இத்தகைய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தமைக்கும் பெருமையடை கின்றேன்.”
தேரர்கள் இருவரும் இணைந்து திருமறைக் கலாமன்றத்தின் செயற்பாடுகளுக்காக ஆன்மீக வழிபாடு செய்தனர்.
இது ஒரு அண்மைக்காலத்து வரலாற்றுப் பதிவு. கலையுலக வரலாற்றில் கலைஞர்கள் மத்தியில் விவாதத்திற்குரிய ஒரு பொருளாக இருப்பது கலை கலைக்காகவா? அன்றேல் கலையின் வட்டத்திற்கு அப்பாலுள்ள வேறோரு நோக்கையடைய அதை ஓர் ஊடகமாக பயன்படுத்த முடியுமா? “றொபின்சன் என்னும் அறிஞனின் கருத்துப் படி கலை தவிர்ந்த வேறு நோக்கத்தை கலைக்குள் புகுத்தும் பொழுது அந்நோக்கம் கலையை சீரழித்துவிடுகின்றது. இருந்தும் கலை தனக்குப் புறத்தேயுள்ள வேறு குறிக்கோள்களை எட்டு கினி றது என்பது உணர் மை” (பெஞ சமினி கொன் ஸ்ரன்றி 1767/1834), ‘சமயம் சமயத்துக்காக இருப்பது போல், ஒழுக்கம் ஒழுக்கத்துக்காக இருப்பது போல், கலையும் கலைக்காகவே இருக்கவேண்டும். அழகுப்பொருள் பயனுள்ள அல்லது நல்ல அல்லது துய்மையான குறிக்கோளுக்கு இட்டுச்செல்ல முடியாது; அழகுப் பொருள் தனி னிடம் மட்டு பம் இட்டுச்செல்ல முடியும்.” (விக்ரர் கசின் 1792/ 1867) இத்தகைய கருத்து நிலைக் கு எதிர்மாறான போக்குடனேதான் திருமறைக் கலாமன்றம் கடந்த 40 ஆண்டுகளாக இயங்கி வந்துள்ளது. கலை - அது எக்கலையாக இருப்பினும் - சமுதாய மேம்பாட்டு க்கு வழிவகுக்கவேண்டும். சமூக நலன் என்னும் இக்குறிக்கோள் திருமறைக் கலாமன்றத்தின் “கலை வழி இறை பணி” ւ rf) սկ Լճ செயற்பாடுகளுக்கு முனைப்புக் கொடுத்து வந்துள்ளது.
கடந்த பதின்மூன்று ஆண்டுகளுக்கு மேலாக திருமறைக் கலா மன்றத் திணி
2 ஜூலை - டி
 

இறை பணி, சமூக மேமி பாட்டுக் குவிமையம் , பல்லினங்கள் நடுவில் அமைதிக்காக வித்திடுவது என்ற எண்ணக்கருவால் வரையறை செய்யப்பட்டிருந்தது. கலைகள் மூலம் நீதியுடன் கூடிய அமைதிக்கு அடிகோல முடியும் என்பதை ஏற்றுக்கொள்ளாத பலர் உள்ளனர். கலைக ளா ல மட்டு Lம் நாட் டி லி அமைதியை உருவாக கி விட முடியும் என பது திருமறைக் கலாமன்றத்தின் கருத்தன்று. நடுநிலை தவறா அரசியல் தீர் வினதும் பொருளாதார சீர் முறையினதும் இனி றியமையாத தனி  ைம எ ல லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதே! ஆனால் அமைதிக்கு அடிப்படையான மனப் பக்குவத்தை படிப்படியாகவும், ஆணித்தரமாகவும், மக்கள் உள்ளத்தில் வேரூன்றச் செய்யும் ஆற்றல் கலைகளுக்கு உண்டு. அரசியல் துறையில் அமைதியைச் சாதிப்பதற்கு கலைகளின் ஆன்மீக சக்தி உறுதுணை புரிகின்றது என்பதே திருமறைக் கலாமன்றத்தின் நிலைப்பாடு.
திருமறைக் கலாமன்றம், தனது சிறப்பு இலக்காக இனங்களுக் கிடையிலான இணக் கப்பாட்டையும் , நல்லெண்ணத்தையும் நல உறவையும், நிரந்தர அமைதியையும் நிலைநாட்டுவதற்கு எப்போது முனைந்ததோ, அன்றிலிருந்து இன்றுவரையும் மற்றைய கலை அமைப்புகளால் செய்ய முடியா தவறி றை சாதித்துள்ளது. முன்பு தமிழ் மணமே ஊடுருவாத ஒரு சில சிங் களக் கிராமங்களுக்குள் புகுந்து அங்கு செயறி தளங்களை அமைத்துள்ளது. பேரினவாத அமைப்புக்களின் உறுப்பினர்களாய் இருந்த ஒரு சிலரை வடக்கிற்கு அழைத்து வந்து அவர்களில் மனமாற்றத்தை உருவாக கி அவர் களின் அரசியல போக் கை மாற்றியுள்ளது. தெற் கிலே திருமறைக் கலா மன்ற இணைப்பாளர்களுள் ஒருவராகப் பணிபுரியும் ஓர் இளம் விதவையினுடைய வரலாறு கலையின் ஆற்றலுக்கு ஒர் எடுத்துக் காட்டு, இரண்டு பிள்ளைகளின் தாயாகிய அப்பெண்ணின் கணவண் இலங்கை இராணுவத்தில் சேர் நீ து வவுனியா வில கடமை யாறி றிக் கொண்டிருந்தபோது கொல்லப்பட்டார். அன்றிலிருந்து தமிழ் மக்கள் மீது வெறுப் புடம் , அவர் களைத் தொலைத்துவிட வேண்டும் என்ற ஆத்திரமும் அவளில் தலைதூக்கி இருந்தன. அவ் விளம் பெண் ணுக்கு திருமறைக் கலாமன்றத்தின் தொடர்பு கிடைத்தது. அதன் விளைவாக அவளது உள் ளத் தில ஆழமாக கி குடிகொண்டிருந்த தமிழ் வெறுப்புணர்ச்சி நீங்கியது. திருமறைக் கலாமன்ற பெண்கள் அணியில் உள்ள பலரின் பரிவும், உறவும் கிடைத்தது. தமிழர்கள் எனது உறவினர்கள் எனக் கூறும் அவள் , தானி வாழும் பிரதேசத் தில் திருமறைக் கலாமன்ற இணைப்பாளராக கலைகள் மூலம் அமைதிக்கான பணியில் இன்று தன்னை அர்ப்பணித்துள்ளாள்.
அரசியல் தீர்வு எதுவாக இருப்பினும் இத்தீர்வில் அனைத்து இனங்களும் நல் உறவுகளுடன், தமக்குரிய உரிமைகளுடன் வாழ்வது இன்றியமையாதது. அதற்குக் கலைகள் கரங்கொடுக்கும்! அதற்காகத் தூய உள்ளத்துடன் உழைப்பின் பயன் கிட்டும். 繼線 நீ, மரியசேவியர் அடிகள் செம்பர் 2005 aggai

Page 5
என்னதான் பெற்றோர் கள் தங்கள் குழந்தைகளின் உடல், மன அறிவு வளர்ச்சிக்காக விதம்விதமான அணுகுமுறைக ளில் வழிநடத்தினாலும், அது குழந்தைகளுக்கு எதிர்மறைச் சிந்தனையையே கொடுக்கிறது. குழந்தைகளுக்கும், பெற்றோர் களுக்கும் உறவு நெருக்கம் அதிகமிருந்தாலும் அதில்கூட வெளியில் சொல்லிக் கொள்ள முடியாத ஈர்ப்புத்தன்மை என்பது. பெற்றோர்களைவிட தொலைக்காட்சிகளுக்குத்தான் அதிகம் இருப்பதாகப் பல அறிஞர்களின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
குறிப்பாக குழந்தைகள் ஏன் தொலைக்காட்சியை விரும்பிப் பார்க்கிறார்கள்? எனும் கேள்விக்கு குழந்தைகளின் பதில் பலவித கோணங்களில் அமைந்திருக்கிறது.
பல விடயங்களை தெரிந்து கொள்வதற்காக, அது பழக்கமாகிவிட்டது. தொலைக்காட்சி எனக்கு மிகச் சிறந்த தோழன் உணர்ச்சிகரப்படுத்துகிறது புத்துணர்வளிக்கிறது தப்பிப்பதற்காக பொழுதுபோக்காக
என அவரவர் நோக்கங்களைக் கூறுகிறார்கள். ஆனால் குழந்தைகள் கூறும் இந்தக் காரணங்களில் எந்த அளவுக்கு உண்மைகள் இருக்கின்றன என்பதைத்தான் பெற்றோர்கள் ஆய்வு செய்யவேண்டும்.
இத்தகைய ஆய்வுகளை நாம் மேற்கொள்வதன் மூலம் நம்குழந்தைகளை நம்மால் புரிந்துகொள்ள மிகவும் வசதியாக இருக்கும். மேலும் தொலைக்காட்சிகள் நமக்கும், நம் குழந்தைகளுக்கும் ஏற்படுத்தும் பாதிப்புகளையும் எண்ணிப்பார்த்து, நம்மையும் நாம் மாற்றிக் கொள்ளவும் வாய்ப்பாக அமையும். இதைப்பற்றி பிராட்லி கிரீன்பர்க் மற்றும் ஆலன்ரூபின் ஆகியோர்கள் ஆய்வு செய்திருக்கிறார்கள். அவர்கள் ஆய்வின் படி தொலைக்காட்சியை குழந்தைகள் பார்ப்பதற்காக கூறும் காரணங்களை ஆராய்வோம்.
(அ) பல விசயங்களை தெரிந்து கொள்வதற்காக:
தொலைக்காட்சிகளில் பல விதமான அலைவரிசைகள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. நாட்டு நடப்பை அறிந்து கொள்ள செய்திகள், கலந்துரையாடல்கள், விமர்சனங்கள், உலக அதிசயங்கள், நேர்காணல்கள், அறிவியல் சார்ந்த - விலங்கியல் சார்ந்த ஆவண அலைவரிசைகள், கேலிச்சித்திரப் படங்கள் எனப் பல்வேறு நிகழ்ச்சிகளைப் பல்வேறு அலைவரிசைகளின் உதவியால் அறிந்துகொள்ள முடிகிறது; கற்றுக்கொள்ள வாய்ப்பாகவும் இருக்கிறது என்பது குழந்தைகள் கூறும் கூற்றுகள்தான். இவைகளில் எந்த அளவிற்கு உண்மைகள் அடங்கி இருக்கின்றன என்பதை "பெய்னி.பணி டு" என்னும் இங்கிலாந்துக்காரர் மேற்கொண்ட ஆய்வில்;
O குழந்தைகள் சொல்வதில் உண்மைகள் இருக்கின்றன.
面卿西血 ஜூலை - பு
 

O தொலைக்காட்சியின் மூலம் கற்றலின் எளிமைத் தன்மை இருக்கிறது. டு காட்சித் தகவலியல் அடிப்படையில் அதற்கான உருவாக்கங்கள் மிகவும்
陵 缀签 &*& 66600TBB 605uT6 ககா-சிகளு படுகிறது என்கிறார்.
மேலும் அவர் கூறுகையில். இவ்வாறு கற்றலுக்காகத் தொலைக் ா காட்சிகளை விரும்பிப் பார்க்கும் குழந்தைகளுக்குத் திரைப்படங்கள், திரைப்படப் பாடல்கள், சண்டைக் காட்சிகள், கொமெடிகள், நடனங்கள், தொடர் நாடகங்கள், கேளிக்கை தொடர்பான நிகழ்ச்சிகளும் இவர்களுக்குப் பிடிக்காது. அதை அவர்கள் பார்ப்பதைத் தவிர்ப்பார்கள். ஆனால் இவைகளை மிகவும் விளக்கத்தோடு தொடர்ந்து பார்க்கும் குழந்தை கள். தொலைக்காட்சிகள் மூலம் அதிகம் கற்றுக்கொள்கிறேன் என்றால், அவர்கள் அதற்காகப் பார்ப்பவர்களாக இருக்கமாட்டார்கள். இதை பெற்றோர்கள் மிகவும் அக்கறையுடன் கவனமாகக் கண்காணித்து குழந்தைகளை புரிந்துகொள்ள முயலவேண்டும்.
(ஆ) தொலைக்காட்சிபார்ப்பது ஒரு பழக்கமாகிவிட்டது: பல குழந்தைகளுக்கு தொலைகாட்சியைக் காரணமேயில்லாமல் பார்த்துக்கொண்டேயிருப்பது என்பது பழகிப்போன ஒன்றாகவே இருக்கிறது. இதைத்தான் ஆய்வாளர் "ராபர்ட் மைக்கில்" என்பவர் "தொலைக் காட்சிகளை போதைப்பொருளுக்கு சமமாக பாவிக்கப்படுகிறது. இவைகளைத் தொடர்ந்து பார்ப்பவர்கள் அதற்கு அடிமைகளாக மாறி விடுகிறார்கள்" என்கிறார்.
இதையே இன்னும் சற்று ஆழமாக ஆய்வு செய்த ஆய்வாளர் "ராபின்ஸ்மித்" என்பவர், தொடர்ந்து தொலைக் காட்சிகளை பார்த்துக்கொண்டேயிருப்பவர்கள் (AddictBehavior) அடிமை நடத்தையுடையவர்கள் என்கிறார்.
குறிப்பாக இத்தகைய நிலையிலுள்ள பெண்களும் க..பினா என்னும் கோப்பியில் கலந்திருக்கும் போதைப் பொருளுக் கும் சொக்லேட்டுகளில் கலந்திருக்கும் "கொகை" எனும் போதைப் பொருளுக்கும் மிக எளிதில் அடிமையாகி விடுகிறார்கள் என்றார். இதேபோன்ற மனநிலையிலுள்ள ஆண்களும் புகை, மது,
அதிகமாக அடிமையாகி விடுகிறார்கள்.
தொலைக்காட்சிகளைப் பார்ப்பதற்கான காரணங்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கூறும் இந்த ஆய்வின் உண்மைகளைக் கருத்தில்கொண்டு பெற்றோர்களாகிய நாம் எந்த அளவுக்குத் தொலைக்காட்சி தொடர்பான நமது கவன ஈர்ப்பு வேலைகளைச் செய்யப்போகிறோம்?
தொலைக்காட்சிதானே எனக் கவனக்குறைவாகப் பெற்றோர்கள் நடந்துகொண்டால் குழந்தைகளின் இத்தகைய பாதிப்புகளுக்கு யார் பொறுப்பாவது? எனவே பெற்றோர்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டியது எவ்வளவு முக்கியம் பார்த்தீர்களா?
"அமெரிக்காவில் ஆயிரம் கல்லூரி மாணவ மாணவியரிடம் ஆய்வு செய்ததில் ஏறத்தாழ 40 விழுக்காடு மாணவர்கள்
டிசெம்பர் 2005 3.

Page 6
தொலைக்காட்சிக்கு அடிமையாகி விட்டோம் என ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்" என்பது ஆலன்ரூபின் அவர்களின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இத்தகைய அடிமைப் பழக்கமுள்ளவர்கள் Boredom Syndrome எனும் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். அதாவது இத்தகையவர்களுக்கு
O எதன்மீதும் நாட்டம் இருக்காது. O எதிலும் முழு ஈடுபாடு காட்டமாட்டார்கள்.
உதாரணமாக, புத்தகம் படிப்பவர்களாகத் தெரிவார்கள். ஆனால் அதில் அவர்களின் கவனமோ ஈடுபாடோ இருக்காது. விளையாட்டு, நண்பர்கள், மற்றும் பெற்றோர்கள் என யார் மீதும் சலிப்புக் காட்டுவார்கள். இப்படிப்பட்ட குழந்தைகள் தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பார்களேயானால் இவர்கள் Introvert களாக மாறிவிடுவார்கள். இத்தகைய நிலையை வளரவிட்டோமெனில் அது உச்சகட்டமான மனநலப் பாதிப்புகளை Introvert ஏற்படுத்திவிடும். எனவே இந்நிலை ஏற்படாதவாறு குழந்தைகளைப் பெற்றோர்கள் பாதுகாக்க வேண்டியது அவசியம். அதேபோலி மற்றொரு ஆயப் வில் தெரிவது என்னவென்றால், இவ்வளவு ஆழமாகப் போகவில்லை என்றாலும், தொலைக்காட்சிகளின்மீது அதிகமான சார்புநிலை ஏற்பட்டுவிடும். உதாரணமாக, ஒருவேலையை குழந்தைகளிடம் ஒப்படைத்தால், அதற்குக் குழந்தைகள் கூறும் பதில் என்ன தெரியுமா? தொலைக்காட்சியைப் பார்த்துவிட்டு செய்துவிடுகிறேன் என்பார்கள். இதற்குப் பெற்றோர்கள் அனுமதிக்கவில்லை என்றால் கொடுக்கப்பட்ட வேலையை குழந்தைகள் செய்யமாட்டார்கள்.
ஆக, தொலைக் காட்சியைப் பார்ப்பது ஒரு பழக்கமாகிவிட்டது என்று சொன்னால் அது சாதாரண பழக்கமாக இருக்கமுடியாது. எனவே குழந்தைகள் தொலைக்காட்சி பார்ப்பதைக் கவனத் தல எடுத் துக் கொள்ள வேணி டியது மிக முக்கியமானவைகளில் ஒன்றாகும்.
(இ) தொலைக்காட்சி என்பது தோழமையைக்
கொருக்கிறது:
இப்படிச் சொல்லும் குழந்தைகளை ஆய்வு செய்தபோது தனிமையிலிருந்து என்னை விடுவிக்கிறது. மற்றவர்களோடு உறவு கொள்ளும் வாய்ப்பினை ஏற்படுத்தும் கருவியாக உள்ளது என்கிறார்கள்.
இவர்களின் இத்தகைய கூற்றுகளை ஆய்வு செய்து önMéWirff Brain Reives Bliford Nass 6I6öIL16)iss.
9 தமக்கு நண்பர்களே இல்லாதவர்கள். O பெற்றோர்களே, உறவினர்களோ மற்றும் பெரியோர்களின்
ஆதரவும், அனுசரணையும் கிடைக்காதவர்கள். 9 ஒரே குழந்தையாக இருப்பவர்கள். G) பாலின நெருக்கமில்லாதவர்கள். அதாவது அண்ணன், அக்கா, தம்பி என உறவு முறைக்கு நேரடி வாய்ப்பில்லாத 656T.
இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படும் உளவியல் பாதிப்புகள் என்பது மிகவும் கொடுமையானதாகும். இத்தகையவர்கள் ஊடக பிம்பத்திற்கும், உண்மையான பிம்பத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது எனும் உணர்வே இல்லாதவர்களாக இருப்பார்கள். இதை Media Equation எனும் புத்தகத்தில் எழுதியுள்ளார்.
4 ஜூலை - டி

9 நிழல் மனிதனுக்கும், நிஜமனிதனுக்கும் வித்தியாசம்
தெரியாதவர்களாயிருப்பார்கள். G) நிழல் மனிதர்கள் இவர்களின் அருகில் அமர்ந்து எல்லாச் செயல்களையும் செய்வதாக உணர்வார்கள். நிழல் மனிதர்களின் உணர்வுகளிலும் (Emotional களில்) இவர்களும் பங்குகொள்வார்கள். இதன்விளைவு தாம் பெரிதும் நேசிக்கும் கதாநாயகன், கதாநாயகிக்கு எது நேர்ந்தாலும் இவர்களால் தாங்கிக்கொள்ள முடியாது. இதைத்தான் எலிசபெத் பெர்சே மற்றும் ரெபேக்கே ரூபின் எனும் ஆய்வாளர்கள் Para-Social-Relationship என்கிறார்கள்.
இப்படிப்பட்டவர்கள், யதார்த்தங்களை யதார்த்தமாக பார்க்கமாட்டார்கள். தனக்குப் பிடித்த பிம்பங்கள் கூறினால்தான் நம்புவார்கள். தன்னால் முடியாததை பிம்பங்கள் முடித்துக் கொடுக்கும் என நம்புவார்கள். அநீதிகள், கொடுமைகளை எதிர்க்க; ஹிரோக்கள் வருவார்கள் என்றும் அவர்களின் பிம்பம் சார்ந்த வெற்றிகளை தம் வெற்றிகளாகக் கொண்டாடுவார்கள். இத்தகைய பிம்பக் கலாசாரம் தன்னம்பிக்கை இழந்து பிம்பங்களைச் சார்ந்து வாழ ஊக்குவிக்கும். எனவே தங்கள் குழந்தை கூறும் தோழமை எனும் இந்தக் காரணம் எவ்வளவு ஆபத்தானது என்பதைப் பெற்றோர்கள் உணரவேண்டுமல்லவா?
(ஈ) தொலைக்காட்சியைப் பார்ப்பதால் புத்துணர்வு
பெறுகிறேன்: G) தொலைக்காட்சியைப் பார்ப்பதால் புத்துணர்வு பெறுகிறேன். G என்னை வசீகரப்படுத்துகிறது. G) என்னை உணர்ச்சிவசப்படுத்துகிறது.
எனக் கூறுகின்றவர்களும் உண்டு. இப்படிப்பட்டவர் களுக்கு உளவியல் ரீதியாக ஏற்படும் பாதிப்புகள் ஒருபக்கமிருந்தாலும் உடல் ரீதியாக ஏற்படும் பாதிப்புகளும் மிக அதிகமே. குறிப்பாக,
அதிவேக இதயத்துடிப்பு இரத்த அழுத்தம் அதிக வியர்வை சுரத்தல் அதிகமான மூச்சு வேகம்
:
போன்ற உடற்கோளாறுகள் மிக அதிகமாக ஏற்படுவதாக டொனால்டுஹெப் எனும் ஆய்வாளர் தெரிவிக்கிறார். தொலைக்காட்சி பார்ப்பதால் புத்துணர்வு பெறுவதாகக் கூறும் இவர்கள் சாதாரண நிலையைவிட மிகை நிலைக்கு ஆளாகிறார்கள் என்பதே உண்மை. உதாரணமாக:
1) சாதாரண நிலை என்பது
O சைக்கிள் ஒட்டுவது O நீச்சலடிப்பது G) நடப்பது O ஓடுவது
இப்படி அன்றாட செயற்பாடுகளைக் கூறலாம்.
2) உயர்நிலை மிகை நிலை என்பது
மிக அதிகமான உணர்ச்சிகரமான உக்கிரத்துடன் இயங்குபவர்களக இருப்பார்கள். எந்தச் செயலிலும் மிக அதிகமான
G) முரட்டுத்தனமும்
செம்பர் 2005 面眶西酶

Page 7
கடினத்தன்மையும் மூர்க்கமான செயற்பாட்டையும் கொண்டவர்களாக இருப்பார்கள்.
அதேபோல தொலைக்காட்சி பார்ப்பதிலும் இப்படித்தான் அணுகுவார்கள்.
இவைகளுக்கான காரணம் என்ன என ஆராய்ந்து பார்த்தோமெனில்; தொலைக்காட்சியில் வரும் காட்சிகளில் மிகமுக்கியமானதாக பயம் தரக்கூடிய பேய், மந்திரம், மாயா ஜாலம், முரட்டுத்தனமான சண்டைக் காட்சிகள், இரத்தக் கொப்பளிப்புகள், தீவிரவாதத் தன்மையிலான காட்சிகள், வன்முறைகள், மிகக் கடுமையான விளையாட்டுப் போட்டிகள், கார்ட்டுன் படங்களில் வரும் அடிதடிக் காட்சிகள்
ஆகியவைகளின் பங்கு மிக அதிகமானதாக இருக்கின்றன.
இப் படிப் பட்ட உயர் நிலை அல்லது மரிகை நிலையிலிருக்கும் குழந்தைகள் புத்தகங்களைப் படிக்கவே மாட்டார்கள். பாடங்களில் கவனம் இருக்காது. பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் அன்பும், பாசமும் இருப்பதாகக் காட்டிக் கொண்டாலும், அவர்களிடம் அதிகம் முரட்டுச் சுபாவங்கள்தான் வலுப்பெற்றிருக்கும்.
இத்தகைய நிலையில் உள்ள குழந்தைகளை எப்படி புரிந்து கொள்ளப்போகிறோம்? எத்தகைய வழிமுறைகளைக் கையாண்டு குழந்தைகளைக் கண்காணிக்கப் போகிறோம்? என்பதில் பெற்றோர்கள் கவனமாக இருக்கவேண்டும் என்பது மிக முக்கியமானதாகிறது.
(உ) தொலைக் காட்சியை ஒரு மன அமைதிக்காக
பார்க்கிறேன்:
இப்படிப்பட்ட காரணங்கள் கூறும் பெற்றோர்களும், குழந்தைகளும் அதிகம் பேர் இருக்கிறார்கள். குறிப்பாகக் குழந்தைகள் இப்படிக் கூறிக்கொண்டே தொலைக்காட்சியை அதிகம் பார்க்கிறார்கள் என்றால், அதற்கான சூழல், பின்னணி ஆகியவற்றை நாம் சற்று கூர்ந்து கவனிக்கவேண்டும்.
பொதுவாகக் குழந்தைகளோ. பெற்றோர்களோ நாள்முழுவதும் வீட்டிலிருந்து கொண்டு தொலைக்காட்சி பார்ப்பதென்பது இயலாத காரியம். காரணம், குழந்தைகள் நாள் முழுவதும் பள்ளியிலேயே அதிக நேரத்தைச் செலவிடுகிறார்கள். அதேபோல பெற்றோர்களும் நாள் முழுவதும் பெரும்பாலும் அலுவலகங்களிலோ அல்லது பிற வேலைகளிலோ அதிக நேரத்தை எடுத்துக்கொள்கிறார்கள். இவர்களுக்கான ஒய்வு நேரம் அல்லது மன அமைதிக்கான நேரம் என்பது கூடுமானவரை மாலை நேரமாகத்தானிருக்கும். குறிப்பாக மாலை 5 மணிமுதல் 7மணி வரையிலான நேரத்தைத்தான் கூறமுடியும். இந்த நேரத்தில் கணவன், மனைவி, குழந்தைகள் என மகிழ்வுக்காக ஒதுக்குவது என்பது அவ்வளவு சாதாரண காரியமல்ல. இந்தச் சூழ்நிலையில் கணவனும், மனைவியும் தொலைக்காட்சி பார்ப்பதென்பது சற்றுச் சலிப்பை ஏற்படுத்தும். எனவே மனைவி சமைப்பது அல்லது வேறு வேலையில் கவனம் செலுத்துவது, கணவர் குளிப்பது அல்லது வேறுவேலையில் ஈடுபடுவது, இவ்வேளையில் குழந்தைகள் இவர்களுக்கு தொந்தரவு தரக்கூடியவர்களாகிறார்கள். எனவே குழந்தைகளின் தொல்லைகளிலிருந்து விடுபட குழந்தைகளை தொலைக்காட்சியைப் பார்க்க அனுப்பிவிடுகிறார்கள். பொதுவாக 面御鲇御 ஜூலை - டி

கவிதைக்குள் உயிரொன்றிவாழ் - உன் கனவுக்கும் நனவுக்கும் உறவுண்டுகாண் சுவைகண்டு சுவைகண்டு போ - அதன் சுழிவுக்குள் நெளிவுக்குள் அழகுண்டு பார் செவிகொண்டு தரங்கண்டு தேர் - உன் சிதறுண்ட எண்ணங்கள் வண்ணங்கள்கோர் புவிமுற்றும் அரசாளலாம் - நீ புகழென்ற மலையுச்சி மிசையேறலாம்!
Y
ஒரு மின்னற் பொறிதோன்றினால் - அதை உரசிக்கொள், கலைஞானம் தரிசிக்கலாம் சிரமத்தைப்பாராது வா - உயர் சிகரத்தின் மிசைதாவு தளராதுபோ! ஒருமித்த மனம் வேண்டுமாம் - நம் உணர்வுக்குள் ஒருவித்து விழவேண்டுமாம் உரிமைக்குப் போராடடா - உன் உயிர்நச்சி விலைபோதல் கூடாதடா!
4
வலிமிக்க சொல்தேர்ந்தெடு - அதை வறுமைக்கும் கொடுமைக்கும் வாளாக்கிடு நலிவுற்ற தொழிலாளர்கள் - என்றும் நமதுற்ற துணையாகும் விவசாயிகள் கலைஞர் கை வினையாளர்கள் - தம்மைக் கலியாலே அடபிஷேகம் புரிவாயடா நிலவுக்கு நீபோகினும் - மன நிறைவுக்கிந் நிலமன்றிவேறேதடா?
முனருற்ற புகழுக்குள்போய் - நீ முழுகிக்கொண் டேமாறுதல் வீணடா எனதென்று எனதென்றுதான் - தமிழ் இனமின்று விடிவின்றி அலைகின்றது எமதென்ற உணர்வோங்கினால் - நாம் எவருக்கும் குனியாத இனமாகலாம்! அனைவர்க்கும் பொதுவாகலாம் - கவி அகிலத்தின் விடிவுக்கு வழி கோலலாம்!
சுமையுன்றன் தோளேற்றுவார் - வரும் சுகமுற்றும் தமதாக்கி ஏமாற்றுவார் தமை வெல்லும் வகை குழுவாய் - நீ தனியல்ல முழநாடும் உன்பின்னடா யமனுக்கும் அஞ்சாது செல் - எதிர் யார்வந்த போதும் நிகுன்றாக நில் இமயத்தில் கொடி நாட்டுதல் - விட்டு) இணையத்தில் உன்பேரை நிலைநாட்டடா!
சோ. பத்மநாதன்
(கடந்த 18.09.2005 இல் கவிஞர் இ.முருகையனுக்கு தேசிய 線 கலை இலக்கியப் பேரவை நடத்திய பாராட்டுவிழாவில் அரங்கேறியது)
Ghego-LbLuñr 2005 5

Page 8
தொலைக் காட்சிகளில் மாலை நேரங்களைத் தான் குழந்தைகளுக்கான நேரமாக ஒதுக்கி, அவர்களுக்கான நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறார்கள். இத்தகைய நிகழ்ச்சிகளில் குழந்தைகளின் அறிவுக்கு சற்றும் பொருத்தமில்லாத குழந்தை மனநிலையுடன் ஒத்துப்போகக் கூடிய, பெரியவர்களின் அணுகுமுறைகளுடன் கூடிய நிகழ்ச்சிகளை வெளியிடுகிறார்கள். கேலிச்சித்திர (Cartoon) படங்கள், சினிமா சார்ந்த நிகழ்ச்சிகள் அவைகளோடு பெரியவர்களுக்கான நிகழ்ச்சிகள், அதுசார்ந்த விளம்பரங்கள் என குழந்தைகளை குழந்தைகளாக பார்க்காமல் பெரியவர்கள் தனமான நிகழ்ச்சிகளைப் பார்க்கவைக்க நேர்கிறது.
இத்தகைய காட்சிகளையோ அல்லது சூழ்நிலை களையோ பெரியவர்கள் கவனிக்க தவறுகிறார்கள். இதன்விளைவு குழந்தைகள் புகைப்பழக்கம், குடி, மற்றும் ஆபாசம் தொடர்பான வக்கிர சிந்தனை வளர்ச்சிக்கும் ஆளாகிவிடுகிறார்கள். இது குழந்தைகள் கெடுவதற்கு பெற்றோர்கள் செய்யும் மறைமுகமான ஆதரவு அல்லவா?
எனவே பெற்றோர்கள் தங்களது உடல் மற்றும் மனக் களைப்பின் காரணமாகவோ வேறு பல வேலைகள் காரணமாகவோ குழந்தைகளை ஒதுக்கிவைத்து, தொலைக்காட்சிப் பெட்டிகள்தான் சரியான நண்பன் என விட்டுவிடுவதால், அதன் விளைவுகளை நாம் கற்பனையாகக் கூட கணிக்கமுடியாத அளவிற்கு மோசமாக்கிவிடுகிறது. எனவே மனநிம்மதிக்காக (Relaxation) என குழந்தைகள் தொலைக்காட்சி பார்ப்பதன் விளைவு இப்படித்தான் இருக்கிறது.
(ஊ) தப்பித்தல் அல்லது தவிர்த்தல் ஒதுக்குதல்:
குழந்தைகள் எல்லோருமே ஏதோ ஒரு வகையில் பாதிப்புக்களை அனுபவித்துக் கொண்டுதானிக்கிறார்கள். அந்த பாதிப்புகள் அனைத்துமே தற்காலிகமானதாகவும் இருக்கலாம். அல்லது நிரந்தரமானதாகவும் இருக்கலாம்; எனவே குழந்தைகளுக்கான பாதிப்புகள் என்ன என்பதை கண்டறிய பெற்றோர்கள் முன்வரவேண்டும்.
தங்கள் கடமைகளிலிருந்து தப்பிக்க. கசப்பான நிஜ வாழ்க்கையிலிருந்து ஒதுங்கிக்கொள்ள. தங்களின் இயலாமையை மறைத்துக்கொள்ள, நிஜ வாழ்க்கையிலிருந்து பிம்ப வாழ்க்கைக்குள் ஒளிந்துகொள்ள.
:
தங்களுக்கு ஏற்பட்டுள்ள மன உளைச்சல், மன அழுத்தம் ஆகியவற்றிலிருந்து தப்பிக்க குழந்தைகள் தொலைக்காட்சியை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
இது தொடர்பான ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளர் டிப்வான்வியுரன் மற்றும் பல உளவியலாளர்களின் கூற்றுப்படி பார்த்தால் மேற்கண்ட காரணங்களுக்காகவோ அல்லது வேறு பல காரணங்களுக்காகவோ தங்களைத் தப்பிக்கச் செய்யும் அல்லது விலகிச் செல்லும் குழந்தைகள் கீழ்க்காணும் மனநிலைக்கு ஆளாகிறார்கள்.
இருந்தால் சாப்பிடுவோம். இல்லையேல் இருப்போம். கிடைத்தால் என்ன கிடைக்கவில்லையென்றால் என்ன? எதைச் சாதிக்கப்போறோம்? வந்தால் வரட்டும். வரவில்லையென்றால் போகட்டும் போன்ற ஏனோதானோ மனநிலைக்கு ஆளாகிறார்கள். இவர்களைத்தான் 'கலாசி' மக்கள் என்றும், எடுபிடி வகுப்பின
6 ஜூலை - டிெ

ரென்றும், வாழ்க்கைப் பிடிப்பற்றவர்கள் என்றும் அடையாளப் படுத்துகிறார்கள்.
எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எப்படிப்பட்ட குழந்தைகளாக வளர்த்தெடுக்கப்போகிறோம் என்பதில் மிகுந்த அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. பிரச்சினைகளை எதிர் கொள்ளும் மனப் பக்குவத்தோடு குழந்தைகளை வளர்த்தோம் எனில். அவர்கள் எந்த நிலையிலிருந்தும் தப்பித்துக்கொள்ளவோ, ஒதுங்கிக் கொள்ளவோ தயாராக மாட்டார்கள்.
இதற்கான மாற்று நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறோமா?
(எ) பொழுதுபோக்கிற்காகத் தொலைக் காட்சி
LIrrfriushifrassir:
பொதுவாக இன்றைய இயந்திரமயமான உலகத்தில்,
எல்லாம் வேகமாக இயங்கவேண்டும் என்றும், நமது காரியங்கள்
எதுவும் தடைப்படாமல் போனவுடனே நடந்து முடிந்துவிட வேண்டும்
என்றுதான் எல்லோருமே விரும்புகிறோம். ஆனால் சந்தர்ப்ப
சூழ்நிலைகள் காரணமாக நாம் நினைத்தபடி எதுவும் நடந்து
விடுவதில்லை. பெரும்பாலும் எல்லாமுமே எதிர்மறையாகத்தான்
நடக்கிறது.
இத்தகைய நேரங்களில் நமக்கு சலிப்பு ஏற்படாத
வகையில் நம்மை சமாதானப்படுத்துவதாகவோ அல்லது
கவனத்தைத் திசை திருப்புவதாகவோ பலவிதமான யுக்திகளை;
பல இடங்களில் பயன்படுத்துவதை பார்த்திருக்கலாம். உதாரணமாக,
மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த, நெரிசலை தவிர்க்க, வேலைகளை
சுலபமாக்க நீண்ட வரிசையில் மக்கள் இயங்குவதைப்
பார்த்திருப்போம்.
வங்கிகள்
பயணச்சீட்டு அலுவலகங்கள்
பேருந்து நிலையங்கள்
சலூன்
சூப்பர் மார்க்கெட்
மருத்துவமனைகள்
இன்னும் பல இடங்களில் மக்கள் காத்துக்கிடப்பதை
பார்த்திருப்போம். சில இடங்களில் நீண்ட வரிசையாகவும், சில இடங்களில் தங்கள் விளம்பரத்திற்காகவும், அல்லது அந்தந்த நேரத்திற்காகவும் கூடும் இடங்களில் தொலைக்காட்சிப் பெட்டிகள் இயங்கிக் கொண்டிருக்கும். இவைகள் எல்லாம் எதற்காக வைத்திருக்கிறார்கள் என்றால் வாடிக்கையாளர்களின் காத்திருக்கும் நேரத்தைப் பொழுதுபோக்கும் விதமாகத்தானே தவிர, வேறு என்னவாக இருந்துவிடப்போகிறது? இதைப் போலத்தான் வீட்டில் குழந்தைகள்
டு பள்ளிக்கும் போகும் நேரம் வருவதற்குள்
Ο அப்பா வரும்வரை
Ο ஆசிரியர் வரும்வரை
எனப் பலவித சந்தர்ப்பச் சூழ்நிலைகளில் காத்திருக்கும் நேரத்தை குழந்தைகள் தொலைக்காட்சிப் பெட்டிமுன் செலவிடுகிறார்கள்.
இப்படி நேரத்தைக் கழிப்பவர்களை Conditional Behaviots எனும் உளவியல் தாக்கத்திற்கு ஆளானவர்கள் என்று குறிப்பிடுகிறார்கள்.
subuñr 2005 íjssPös)

Page 9
இவர்கள் பொழுது போக்காக பார்த்துக் கொண்டிருக்கும் எத்தகைய பிம்பங்களும் இவர்களுக்கு எந்தவிதமான சுகத்தையோ, பொழுதுபோக் கையோ வேறு எந்தவிதமான கற்றல் அனுபவத்தையோ கொடுத்துவிடப்போவதில்லை. மாறாக இவைகள் பின்னணி இசை போல தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே படிப்பது, பேசுவது, சாப்பிடுவது, எழுதுவது, ஏன் தூங்கும்போதுகூட இவர்களுக்குத் தொலைக்காட்சி ஒடிக் கொண்டிருக்க வேண்டும் என அடம்பிடிப்பார்கள்.
@60Dg5ğ5g5T6őT Conditional Behavior 6T6ÖTEẾmBTÍT SJ16) UTGITT ஏகார்டன் ஹன்ட்போர்டு என்பவர். இதன் விளைவுகளைப் பார்த்தோமெனில்:
)ே குழந்தைகளின் எண்ணங்களும், ஏக்கங்களும் தொலைக்
காட்சி ஒன்றுதான். பெற்றோர், உறவினர்களைப் பற்றி எந்த அக்கறையும் இருக்காது. நாம் எதற்காக இதைச் செய்கிறோம் என்ற இலக்கே தெரியாது. யாரைப் பற்றியும் எந்தக் கவலையும் படமாட்டார்கள். குறிப்பாகத் தன்னைப் பற்றியே இவர்களுக்கு அக்கறை இருக்காது. இத்தகைய நிலையில்தான் உங்கள் குழந்தைகளை உருவாக்கப் போகிறீர்களா? இதற்கான மாற்று நடவடிக்கையாக நாம் என்ன செய்யப்போகிறோம்?
(ஏ) இடம் பெயர்தல்:
குழந்தைகளைப் பற்றி கவலைப்படும் நாம் அனைவரும் நம்முடைய வாழ்நாளை சற்றுப் பின்நோக்கிப் பார்க்கலாமே. அதாவது இது மீடியா யுகம் என்று கூடச் சொல்லலாம். அந்த அளவுக்கு நமக்கும், நம் குழந்தைகளுக்கும் மீடியாவின் உறவு என்பது மிகமிக அதிகமாகி இருக்கிறது. ஆனால், இத்தகைய மீடியாக்களே வராதபோது அல்லது குறைந்தபட்சம் தொலைக் காட்சியே இல்லாதபோது இந்தக் குழந்தைகள் அவர்களுக்கான நேரத்தை எதற்காகப் பயன்படுத்தியிருப்பார்கள்? இன்று
酶 ஜூலை - டிெ
 

தொலைக்காட்சிகளும், மற்ற மீடியா கருவிகளும் பெருகிவிட்ட இக்காலத்தில் எந்த நேரத்தை தொலைக்காட்சி பார்க்க ஒதுக்கி அல்லது எந்த வேலைகளுக்கான நேரத்தை தொலைக்காட்சி பார்ப்பதற்காகச் செலவிடுகிறார்கள் என்று நாம் கூர்ந்து கவனித்தோமெனில்.
குழந்தைகள் படிக்கின்ற நேரம்
விளையாடுகின்ற நேரம்
துங்குகின்ற நேரம்
ஓய்வு நேரம்
இப்படிப்பட்ட நேரங்களைத்தான் தொலைக்காட்சி பார்க்க ஒதுக்கி படிப்பில் கவனம் திரும்பாமல் வீணாகிப் போகிறார்கள் என்று நாமும் இன்னும் பல பெற்றோர்களும் எண்ணிக் கொண்டிருக்கிறோம். இவைகள்தான் முக்கிய பாதிப்புக்கள் என கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மை அதுவல்ல என்று தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த ஆய்வாளர்களான டையானாமூட்ஸ் மற்றும் டொனால்டுராபர்ட்ஸ் ஆகியோர் 1974ஆம் ஆண்டு தென் ஆபிரிக்காவின் ஒரு கிராமத்தைத் தேர்ந்தெடுத்து அங்கு தங்களுடைய ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்கள்.
Θ அந்தக் கிராமம் மிகவும் வளமான கிராமம். Ο மக்களுக்கான அடிப்படைத் தேவைகள் நிறைவாக
இருந்தது. Θ வசதிகளும் வாய்ப்புக்களும் எல்லோருக்கும் இருந்தது.
இந்தக் காலகட்டத்தில் அந்த மக்களுக்கு தொலைக்காட்சி என்றால் என்ன என்றுகூடத் தெரியாது. காரணம் அந்தக் கிராமத்திற்கு தொலைக்காட்சியே அறிமுகமாகவில்லை. தென் ஆபிரிக்காவிற்கு 1976 இல் தான் தொலைக்காட்சியே அறிமுகமாகிறது. இத்தகைய கிராமத்தில்தான் இரண்டாயிரம் குழந்தைகளை தேர்வு செய்து 8 ஆண்டுகளாக ஆய்வை மேற்கொண்டார்கள். இவர்களது ஆய்வு தொலைக்காட்சியே வராதபோது இந்தக் குழந்தைகள் எதன் மீது அதிகம் கவனம் செலுத்தினார்கள்? தொலைக்காட்சி வந்தபோது எப்படி
ឆ្នា
3.5L 2005 7

Page 10
செயற்படுகிறார்கள் என்பதுதான். தொலைக்காட்சி இல்லாதபோது இவர்களின் நேரம் பலவகையாக பயன்பட்டிருந்தாலும், தொலைக்காட்சி வந்தபோது இவர்களின் நேரம் மீடியாவுக்காக, தொலைக்காட்சி பார்ப்பதற்காக ஒதுக்கும் நேரம் அதிகரித்துக் கொண்டே வந்திருக்கிறது.
இதே போல கனடா நாட்டிலும் இத்தகைய நோக்கத்திற்கான ஆய்வு நடைபெற்றிருக்கிறது. இந்த ஆய்வை மேற்கொண்டவர் டானிஸ் மேக்பத் வில்லியம்ஸ் என்பவருடன் விகோர்டான் ஊரான் என்பவரும் இணைந்து நோட்டல் என்னும் கிராமத்தை தேர்வு செய்து அங்கு ஆயிரம் குழந்தைகளை 4 ஆண்டுகளாக ஆய்வுக்கு பயன்படுத்தியிருக்கிறார்கள். அவர்களின் ஆய்வுப்படி தொலைக்காட்சியை பயன்படுத்தும் குழந்தைகள், தொலைக்காட்சியை பயன்படுத்தாத குழந்தைகள் என இரு கூறுகளாக பிரித்து ஆராய்ந்திருகிறார்கள். இந்த இரண்டு விதமான குழந்தைகளுக்கிடையே ஏராளமான வித்தியாசங்கள் நிகழ்ந்திருப்பதாக இவர்களது ஆய்வில் வெளிப்பட்டிருக்கிறது.
தென் ஆபிரிக்கா மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளிலும் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகளை கீழ்காணும் 2 பிரிவுகளாக பிரித்துப் பார்க்கின்றனர்.
1. நம்மால் புரிந்து கொள்ளக்கூடிய மேலோட்டமான
பாதிப்புக்கள். 2. நம்மால் புரிந்து கொள்ளமுடியாததாகவும் நாம் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டியதுமான சமூகம் சார்ந்த பாதிப்புக்கள் ஆகும். இதில் முதல் பாதிப்பாக பார்க்கின்ற பிரச்சினைகள் குழந்தைகள். O அவர்களின் படிப்பு நேரம் குறைகிறது O விளையாட்டு நேரம் இல்லை O தூக்க நேரம் குறைகிறது. O இறைபக்தியில் நாட்டம் வரவில்லை. (தென் ஆபிரிக்கா வில் இறைபக்தி என்பது மிகவும் முக்கியமானதாக மதிக்கப்படும் ஒரு நிகழ்வு.) இதற்கான நேரங்களை தொலைக்காட்சி பார்ப்பதற்காக எடுத்துக்கொள்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மைகள்தான். என்றாலும், இவர்களின் குழந்தைகளுக்கு மிக மோசமான பாதிப்புகள் ஏதும் வந்துவிடப் போவதில்லை. காரணம் படிப்பு நேரம் என்பது தொலைக்காட்சியில் கூட ஒளிபரப்பி அதை அவர்கள் படிப்பதற்கும் தேர்வு எழுதவும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
9 விளையாட்டைக்கூட தொலைக்காட்சிக்கு தகுந்தாற்போல்
அமைத்துக்கொள்ளலாம். O பக்தி முயற்சிகளைக்கூட தொலைக்காட்சியில் இன்னும்
கூட ஆழமாக இடம்பெறச் செய்யலாம்.
எனவே இந்த முதல் நிலை பாதிப்புக்கள் என்பது அவ்வளவு மோசமானதாக பார்க்க வேண்டியதோ, பயப்பட வேண்டியதோ தேவையில்லை. ஆனால் இரண்டாம் நிலையிலுள்ள பாதிப்புக்கள் என்பதுதான் மிகவும் ஆபத்தானது. மாற்றுவழிக்கே வாய்ப்பில்லாதது. குறிப்பாக குழந்தைப்பருவம் என்பது மிகவும் சுறுசுறுப்புமிக்க பருவம். இந்த பருவத்தில் குழந்தைகள் தங்கள் பெற்றோர்களையும், உற்றார் உறவினர்களையும், நண்பர்களையும், சக குழந்தைகளையும் மற்ற பிற மனிதர்களையும் அறிந்து கொள்வதென்பது மிக மிக முக்கியமானதாகும்.
O 360555T6ir dep35i usi(35il (Social interaction)
8 ஜசலை tņi

என்கிறார்கள். பெற்றோர்களுடன் மனம்விட்டு பேசுவது பெற்றோர்களை புரிந்து கொள்வது பெற்றோர்களுடன் விளையாடுவது, அன்பு, பாசம், கோபம், பரிவு, எதிர்ப்பு, எதிர்பார்ப்பு என பலநிலைகளில் பெற்றோரின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது.
O குழந்தைகளின் சகோதர, சகோதரிகளுடனான உறவுநிலைகள், தேவைகள், தேடல்கள், போட்டிமனம், விட்டுக்கொடுத்தல். அடம்பிடித்தல், அழுதல், சண்டைபோடுதல், சமரசம் கொள்ளுதல், சமாதானமாக வாழ்தல், உறவுகளை புரிந்து கொள்ளுதல் போன்ற அனுபவங்கள் மிகவும் முக்கியமானது.
G) குடும்பத்தின் பிற உறவினர்கள், மூத்தோர்களான தாத்தா, பாட்டி, அத்தை, மாமா, சித்தப்பா, சித்தி அவர்களின் வாரிசுகள் இப்படியானவர்களின் மனநிலைகள், உறவுநிலைகள், அவர்களைப்பற்றி அணுகுமுறைகள் ஆசாபாசங்கள், அன்பின் பரிமாற்றங்கள் உறவு நெருக்கங்களும் அத்தியாவசியமானதே.
O பள்ளிச் சூழ்நிலையில் ஆசிரியர்கள், சக மாணவ, மாணவிகள்,நண்பர்கள், எதிரிகள், பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள். கண்டு கொள்ளாதவர்கள் என அங்குள்ளவர்களின் வாழ்க்கை முறைகள், பின்னணிகள், ஏழ்மை, வறுமை, செல்வச் செழிப்பு, சிக்கனம், கஞ்சத்தனம், விட்டுக்கொடுத்தல், விதண்டாவாதம் செய்தல், விளையாடுதல், போட்டிமனம், கல்வி நிலையுணர்தல் அவர்களின் குடும்பச் சூழல்களை புரிந்து கொள்ளுதல், இணைந்து விளையாடுதல், ஏற்றுக் கொள்ளாமை, ஒதுக்குதல், ஒதுங்குதல், திறன் வெளிப்பாட்டு அனுபவங்கள், புதிய புதிய கண்டுபிடிப்பு போன்ற பள்ளி சம்பந்தப்பட்ட சமூக உறவின் பரிமாணங்கள் குறித்த அறிவும் அனுபவங்களும் அவசியம்.
O பிற மனிதர்களோடு நெருங்கிப்பழகுதல், பயம், தைரியம், துணிச்சல், பாவம், இரக்கம், நன்மை, தீமைகள் மற்றும் அவரவர்களின் மத ஆச்சாரங்கள், கடவுள் நம்பிக்கைகள், நாத்திக அணுகுமுறைகள், வாழும் பகுதியின் மக்கள் நிலவரங்கள், ஏற்றத்தாழ்வுகள், இனம், மதம், பணம் மற்றும் கலாசார வித்தியாசங்கள் உணவு, உடை வாழ்வியல் தன்மைகள் இவைகள் குறித்ததான தேடல்கள், புரிதல்கள், கேள்விகள், பதில் கூறும் தன்மைகள் போன்ற பங்களிப்புகளும் - விழாக்கள், கொண்டாட்டங்கள், கேளிக்கை மையங்கள், விளையாட்டு தளங்கள், வியாபார நிறுவனங்களை ஏமாற்றுதல், பொய் சொல்லுதல், பகை வெல்லுதல், போட்டி பந்தயங்கள், நியாயம் பேசுதல், தீர்ப்பு வழங்குதல், கூட்டு சேருதல், கோஷ்டிஅமைத்தல், நட்பு கொள்ளுதல், நல்லுறவை கண்டுபிடித்தல், நலம் பேணுதல், குதுகலங்கள், வாழ்த்துக்கள், வசை மொழிகள், அக்கறை கொள்ளுதல், ஆறுதல் சொல்லுதல், அரவணைத்தல், பாதுகாத்தல், பக்குவமாக பழகுதல், பகிர்ந்தளித்தல், பங்கேற்பது, பாடம் பெறுவது, கொடுப்பது, வாங்குவது, ஏற்பது, இகழ்வது என இன்னும் எத்தனையோ அனுபவங்கள் பெறவேண்டிய தேவைகள் குழந்தைகளுக்கு மிக முக்கியமானதாகும்.
இப்படிபட்ட அனுபவங்கள் மற்றும் பங்கேற்புக்கான
நேரங்களைத்தான் தொடர்புச் சாதனங்கள் குறிப்பாக, தொலைக்காட்சிகள் அபகரித்துக்கொள்கின்றன. இந்த நேரங்களை தொலைக்காட்சிகள் சூறையாடுவதன் வாயிலாக. குழந்தைகள் இழப்பதின் வாயிலாக எதிர்காலத்தில் எப்படி ஆகிறார்கள், என்பதை உளவியலாளர் டேவிட் மேயர்ஸ் என்பவர் கீழ்காணும் பாதிப்புகளை கூறுகிறார்.
செம்பர் 2005 as Gyps

Page 11
சமூக அக்கறையற்றவர்களாக சமூகத்தோடு எந்தவிதத் தொடர்பும் இல்லாதவர்களாக சமூக அறிவும், ஞானமும் அற்றவர்களாக பெற்றவர்களையும், மற்றவர்களையும் புரிந்து கொள்ளாதவர்களாக குடும்பம், பாசம், உறவுகளுக்கு முக்கியத்துவம் தராதவர்களாக குடும்ப நிகழ்ச்சிகளான சாவு, வாழ்வு போன்ற நிகழ்வுகளில் பங்கேற்க மனமில்லாதவர்களாக. பொழுதுபோக்கு அம்சங்களில் அதிக நாட்டம் அற்றவர்களாக வெளியுலகில் நிகழும் நாடகம், நடனம், விழாக்கள் கொண்டாட்டங்களில் நாட்டமற்றவர்களாக நண்பர்கள், காதலி போன்ற எந்த உறவுக்கும் லாயக்கற்றவர்களாக சமூகசேவை, மற்றும் பிற சமூக நிகழ்வுகளில் பங்கேற்க விருப்பமில்லாதவர்களாக பொது நிகழ்ச்சிகள், கலைகள், திறன்வெளிப்பாட்டிற்கான வாய்ப்புகளில் Social Network இல் ஆர்வமற்றவர்களாக தன்வயது ஒத்தவர்கள், சகோதர உறவுகள் மற்றும் சக குழந்தைகளோடு விளையாட மறுப்பவர்களாக நான், எனது என்கிற சுய நலப்போக்கு உள்ளவராக என்ன என்றால், என்ன என்று கேட்பதும், நீ பேசினால் நான் பேசுவேன் என்கிற மனநிலையோடும் உள்ளவராக எதிர்காலத்தில் குடும்பம், மனைவி, குழந்தைகள் என்கிற அக் கறையற்றவர் களாக நிகழ் காலத்தில் பெற்றோர்களுக்குத் தன்னைப்பற்றி வெளிப்படுத்தாததின் விளைவால் பெற்றோருக்கும் தனக்கும் உள்ள உறவுவிரிசல் ஏற்படுத்துவதாக. G) நன்மை, தீமைகளை அலசிப் பார்க்கும் தன்மையற்ற
வர்களாக Ο வலி, துன்பம், பாதுகாப்பு, அரவணைப்பு அற்றவர்களா கவும் என இன்னும் பல்வேறு நிலைகளில் இந்தச் சமூகத்தால் புறக்கணிக்கக் கூடியவராக அல்லது இந்தச் சமூகத்தைப் புறக்கணிக்கும் நபராகவே மாறிவிடும் அபாயத்தைத் தொலைக்காட்சி பார்க்கும் நேரங்கள் உருவாக்கிவிடுகின்றன. இத்தகையவர்கள் குறித்து உளவியல் நிபுணர்களான டாம் வேண்டடோவும் மற்றும் பேக்டி வெல்கன்பர்க் என்பவரும் என்ன கூறுகிறார்கள் என்றால், குழந்தைகள் இயல்பாக வளர்வதற்கும், ஆற்றல்களைப் பெறுவதற்கும் அவர்களாகவே எதையும் புரிந்துகொண்டு உருவாவதற்கும் அடிப்படையாகத் தேடல் தன்மை வேண்டும்.
குழந்தைகளுக்கு (fantasy) சுய கற்பனைத்திறன் வரவேண்டும் என்கிறார்கள். குறிப்பாக தாத்தா, பாட்டி கூறும் கதைகளைக் கேட்கும்போது; அதை குழந்தைகளின் கற்பனைத் திறனோடு கிரகிப்பதற்கும் அதை நாமாக நமது பார்வையில் சொல்லிப் புரியவைப்பதற்கும் அடிப்படைப் புரிதலில் சிக்கல்கள் இருக்க வாய்ப்புண்டு.
உதாரணமாக, ஒரு ஊரில் ஒரு சிங்கம் இருந்தது என்று நாம் கதை சொல்வோமானால் ஒரு ஊரில் என்ற சொல்லுக்கு குழந்தைகள் புரிந்துகொண்ட அளவில், அவர்களது பார்வையில், கற்பனையில் ஒரு ஊர் தோன்றும். அப்படித் தோன்றும் ஊர்
面瞰鲇血 ஜசலை - டிே

இந்தக் குழந்தைகள் பார்த்தவை, கேட்டவை, அறிந்தவை இவற்றோடு அவர்களுக்கான சந்தேகங்கள், புரிதல்கள், இவற்றோடு ஒப்பிடும் அல்லது ஒப்பிட முடியாத கற்பனையிலும் இன்னும் எப்படியெல்லாமோ அந்த ஊரை குழந்தை காட்சிப்படுத்திக் கொள்ளும், குழந்தையின் இந்தக் கற்பனை உலகத்திற்கும், பெரியவர்கள் கூறும் கதைத் தாக்கத்திற்கும் புரிதல்கள் அல்லது உணர்ந்து கொஸ்ளுதல் வித்தியாசப்படும்.
அதேபோல ஒரு சிங்கம் இருந்தது என்று நாம் சொல்லும்போது நமக்கு அந்தக் கதைப்படி சிங்கம் என்ன செய்தது என்று கதையோடு போய்க்கொண்டிருப்போம். ஆனால் சிங்கம் பற்றிய குழந்தைகளின் பார்வையில் உணரும்போது உருவம், பல், கோபம், நடை, சத்தம், சிங்கத்தின் சிந்தனை இப்படிக் குழந்தைகளின் கற்பனைத் தன்மைக்கேற்ப அது செல்லப்பிராணியா? அல்லது முரட்டுத் தனமானதா? அப்படியென்றால் அதன் குணநலன்கள். இன்னும் எப்படியெல்லாமோ சிங்கம் உருவகம் பெறும். எனவே இத்தகைய கற்பனை ஆற்றல்கள், சமூக அனுபவங்களுடனும் கூடிய புரிதல்களுடன்தான் குழந்தைகளின் இயல்பு வளர்ச்சி அமையவேண்டும்.
இத்தகைய அனுபவத்துடன் கூடிய இயல்பு வாழ்வின் யதார்த்த புரிதல்களை எந்த வகையிலும் தொலைக்காட்சிகளால் கொடுக்கமுடியாது. மாறாக, இத்தகைய கற்பனைத் திறன்களையும், (Creativity), உருவாக்கத்தையும் தொலைக்காட்சிகளால் அழிக்கத்தான் முடியும்.
இது குறித்து ஆய்வாளர் W.Porter என்பவர் ஆய்வு செய்து பின்வருமாறு கூறுகிறார்.
 ெதொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டிருக்கும் குழந்தைகள் பாடப்புத்தகங்களை எடுத்து
O அப்படியே படிப்பதாக நமக்குத் தோன்றினாலும் அவர்
களின் சிந்தனை, கவனம், எதுவும் புத்தகத்தில் இருக்காது. O ஒரு வாரத்திற்கு குறைந்தது 10 மணி நேரத்திற்கும் குறைவாகத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கும் குழந்தைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுவதில்லை.
வாரத்தில் 10 மணி நேரத்திற்கும் கூடுதலாகத் தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகளுக்கு மிக அதிகமான பாதிப்புகள் உண்டு என்கிறார்கள்.
இதையே இந்தியச் சூழலில் குறிப்பாக தமிழகச் சூழலில் பொருத்திப் பார்க்கும்போது ஒரு நாளைக்கு 2% மணிமுதல் 3 மணி நேரம் வரை தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகளுக்கு 3 நிமிடம்கூட தொடர்ந்தாற்போல படிப்பின் மீது அக்கறையோ கவனமோ ஏற்பட வாய்ப்பில்லையாம்.
இத்தகைய குழந்தைகளுக்குப் பெற்றோர் வற்புறுத்தலால் கட்டாயப்படுத்தி புத்தகங்களைப் படிக்கச் செய்தாலும் வீட்டுப்பாடம், மற்றும் பொதுக் கற்றலில் ஈடுபடச் செய்தாலும், குழந்தைகள் நம்மை வெறுப்பதை, அவர்களின் அணுகுமுறையில் அல்லது செயற்பாடுகளில் புரிந்துகொள்ளலாம். இதைக் குழந்தைகள் வேண்டுமென்றே வெளிப்படுத்துவார்கள். இதைத்தான் Threshold effect என்கிறார்கள்.
ஆய்வுத் தொகுப்பு க. வேல்தல்கன்
gLibur 2005 9

Page 12
क्षं
क्षे
क्षं
徽
雛
戀
雛
 

േ 2005 52DGUgői

Page 13
போலீஸ் இன்ஸ்பெக்டர் அச்சுமேலவ்* புதிய மேல் கோட்டு அணிந்து கையில் ஒரு காகிதக்கட்டுடன் சந்தையின் குறுக்கே சென்றார். செம்பட்டைத் தலைப் போலீஸ்காரர் பறிமுதல் செய்யப்பட்ட நாவப்பழக் கூடையைத் தூக்கிக்கொண்டு அவர் பின்னால் நடந்தார். சுற்றிலும் நிசப்தமாயிருந்தது. சந்தையில் எந்த ஆத்மாவும் இல்லை. கடைகள், மதுவிடுதிகள் இவற்றின் திறந்த வாயில்கள் பசியால் வாடி விரியப்பிளந்த வாய்களைப்போல் சோகமாய் ஆண்டவன் உலகை நோக்கின. இவற்றின் அருகே பிச்சைக் காரர்களையுங்கூட யாரையும் காண முடியவில்லை. திடுமென எழுந்த கூக்குரல் அச்சுமேலவின் காதில் விழுந்தது. "கடிக்கவா செய்கிறாய்! அசட்டு நாயே! பசங்களே, விடாதீங்க! பிடியுங்கள்! இந்தக் காலத்தில் கடிக்க அனுமதி இல்லை. பிடியுங்கள் அதை ஊய்!"
நாய் ஊளையிடும் சப்தம் கேட்டது. அச்சுமேலவ் அந்தச் சப்தம் எழுந்த திசையில் திரும்பிப்பார்த்தார். அவர் கண்ணுற்றது இதுதான்: வணிகர் பிச்சூகினது மரவாடியிலிருந்து மூன்று கால்களில் ஒரு நாய் வெளியே ஒடி வந்தது. கஞ்சிபோட்ட பூச் சட்டையும் பொத்தான் மாட்டப்படாத அரைக் கோட்டும் அணிந்தவள் அதை விரட்டிக்கொண்டு வந்தார். ----- முன்பக்கமாய் முழு உடலையும் கவிழ்த்துக் கொண்டு ஓடி அவர், அந்த நாயரின் பின் னங் கால்களைப் பிடித்துக்கொண்டு விட்டார். மீண்டும் ஊளையிடும் சப்தம் , திரும்பவும் "பிடி, விடாதே" என்ற கூக்குரல். தூக்கம் கலையாத முகங்கள் கடைகளிலிருந்து 6T L டிப் பார்த்தன. தரைக் கடியி லிருந்து உதித்தெழுந்ததுபோல் நொடிப் பொழுதுக் குள் மரவாடிக்கு முன்னால் கூட்டம் கூடிவிட்டது. - 3
"மாண்புடையீர், கலவரம் மாதிரி அல்லவா இருக்கிறது என்றார் போலீஸ்காரர்.
அச்சுமேலவ உடனே திரும்பி அந்தக் கூட்டத்திடம் நடந்தார். மரவாடியின் வாயிலுக்கு எதிரே வந்ததும், பொத்தான் மாட்டப்படாத அரைக்கோட்டு அணிந்த மேற்கூறிய ஆள் வலக் கையை உயர்த்தி இரத்தம் கசியும் தனது விரலைக் கூட்டத்தினருக்குக் காட்டியவாறு நிற்கக் கண்டார்.
"சனியனே, உன்னை என்ன செய்கிறேன், பார்!" இந்த வாசகம் குடி மயக்கம் தெளியாத அந்த ஆளின்
உயர்த்திக்காட்டிய விரல் வெற்றிக்கொடி போல் காட்சியளித்தது. அவர் பொற்கொல்லர் ஹரியூக்கின்* என்பது அச்சுமேலவுக்குத் தெரிந்தது. கூட்டத்தின் நடுமையத் தில் அந்தக் குற்றவாளி நாய் முன்னங்கால்களை அகலவிரித்து, அங்கமெலாம் வெலவெலத்து நடுங்கிய வண்ணம் உட்கார்ந்திருந்தது. கூரிய மூக்கும் முதுகில் மஞசள் புள்ளியும் கொண்ட வெண்ணிற பர்சோய் நாய்க்குட்டி அது கலங்கிய அதன் கண்களில் சோகமும் பீதியும் குடி கொண்டிருந்தன.
"என்ன இதெல்லாம்?” என்று கேட்டுக்
酶 ஜூலை - டிெ
 
 

கூட்டத்தை இடித்து விலக்கிக்கொண்டு அச்சுமேலவ உள்ளே நுழைந்தார். "இங்கே என்ன செய்கிறீர்கள்? நீ ஏன் விரலை உயர்த்திக் காட்டுகிறாய்? கூக்குரலிட்டது யார்?"
"மாண்புடையீர், எந்த வம்புமின்றி நடந்து வந்து கொண்டிருந்தேன்" என்று, மூடிய கைக்குள் இருமியபடி ஹரியூக்கின் பதில் கூற முற்பட்டான். "இங்கே மீத்ரி மீத்ரிச்சிடம் மரம் சம்பந்தமாய் எனக்குக் கொஞ்சம் வேலை இருந்தது. எக்காரணமுமின்றித் திடீரென என் விரலைக் கடித்து விட்டது இந்த எழவு என்னை மன்னிக்கணும். நான் வேலை செய்கிறவன். என்னுடைய வேலை நுட்பநயம் வாய்ந்தது. இன்னும் ஒரு வாரத்துக்கு என்னால் இந்த விரலை அசைக்க முடியாது போலிருக்கு. எனக்கு இவர்கள் இழப்பீடு தரும்படிச் செய்யனும் நீங்கள். மாண்புடையீர், மூர்க்கப் பிராணிகள் புரியும் கொடுமைகளைச் சகித்துக்கொண்டு வாழவேண்டுமென எந்தச் சட்டமும் கூறவில்லை. இவையெல்லாம் கடிக்க ஆரம்பித்தால் வாழ்க்கை நரக வேதனையாகிவிடும்."
"ஊம். சரிதான், சரிதான்" என்று கனைத்துக்கொண்டு புருவங்களை நெளித்தவாறு கடுமையான குரலில் பேசினார் அச்சுமேலவ. "சரிதான், சரிதான். யாருடைய நாய் இது? இந்த விவகாரத்தை நான் சும்மா விடப் போவதில்லை. நாய்களை ஒடித் திரியும்படி விடுவோருக்குச் சரியானபடி பாடம் கற்பிக்கக் போ கலிறேன் . ஒழுங்கு விதிகளுக்குப் பணிந்து நடக்க விரும்பாதோர் குறித்து இனி சும் மாயிருக்கக் கூடாது, நடவடிக்கை எடுத்தாக வேண்டும்! போக்கிரிப் பசங்கள், சரியானபடி அபராதம் விதிக் கப்படும் இவர்களுக்கு. நாய்களையும் மாடுகளையும் சுற் றரிதி திரியவிட்டால் என்ன கிடைக்கும் என்று நான் தெரியப்படுத்தப் போகிறேன்! எது என்னவென்பதைப் புரிய வைக்கப்போகிறேன்! எல்தீரின்" என்று கூப்பிட்டு போலீஸ்காரரின் பக்கம் திரும்பினார். "இந்த நாய் யாருடையது என்று கண்டுபிடித்து அறிக்கை ஒன்று தயார் செய். உடனே இந்த நாயை ஒழித்துக் கட்டியாகவேண்டும். பைத்தியம் பிடித்த நாயாகத்தான் இருக்கும். யாருடையது இது? "ஜெனரல் Nகாலவினுடைய நாயென்று நினைக்கிறேன்" என்று கூட்டத்திலிருந்து ஒரு குரல் எழுந்தது.
"ஜெனரல் பூழிகாலவ்! ஒகோ! எல்தீரின், என்னுடைய கோட்டைக் கொஞ்சம் கழற்றிவிடு. உஸ், வெக்கை தாங்க முடியவில்லையே! மழை பெய்யப்போகிறது, அதனால்தான் புழுங்குகிறது." பிறகு அவர் ஹரியூக்கின் பக்கம் திரும்பினார். "எனக்கு இது புரியவில்லை - உன்னை இது கடிக்க நேர்ந்தது எப்படி? உன் விரல் எப்படி அதன் வாய்க்கு எட்டிற்று? இது சின்னங்சிறு நாய், நீ வாட்டசாட்டமான ஆள் ஆணியில் விரலைக் கீறிக்கொண்டிருப்பாய், பிறகு இழப்பீடு கேட்டு வாங் கலாமென் று உனக் கு எண் ண பற் தோன் றியிருக்கிறது. உன் னைப் போன்ற ஆட்களை எனக்குத தெரியுமே! எமகாரர்கள் ஆயிற்றே" BFL biLust 2005 11

Page 14
"மாண் புடையர் , புகையும் சிகரெட்டை அதன் மூக்கு நுனியில் வைத்துச்சுட்டு வேடிக்கை பார்த்தார், உடனே அது விழுந்து பிடுங்கிற்று, அது ஒன்றும் அசட் டுப் பிறவியல் லவே! இந்த ஹரியூக்கின் எப்பொழுதுமே இப்படித்தான், சேஷடை செய்யாமல் இருக்க முடியாது அவரால்"
"ஒன்றரைக் கண்ணா! உன் புழுகு மூட்டையை அவிழ்க்காதே, நிறுத்து! நீ ஒன்றும் நேரில் பார்க்கவில்லை, பிறகு ஏன்
இன்ஸ்பெக்டர் விவரம் அறியாதவரல்ல; | பொய் பேசுகிறவர் யார், உண்மையைச் சொல்கிறவர் யார் என்று அவருக்குத் தெரியும். நான் சொல்வது பொய்யானால் நீதிபதி என்னை விசாரணை செய்யட்டும்! சட்டத்தில் குறிக்கப்பட்டிருக்கிறது. இன்று எல்லாரும் சரிநிகள் சமானம் - உனக்கு இதைச் சொல்கிறேன் நான், போலீஸில் எனக்கு யாரும் இல்லாமற் போய்விடவில்லை. சகோதரர் ஒருவர் இருக்கிறார்."
"போதும், நிறுத்து!"
"இல்லை, இது ஜெனரலுடைய நாயல்ல" என்றார் போலீஸ்காரர், அழுத்தம் திருத்தமாய் "ஜெனரலிடம் இம்மாதிரியான நாய் எதுவும் இல்லை அவரிடம் இருப்பவை யாவும் மோப்ப நாய்கள்."
"நிச்சயம்தானா?"
"சந்தேகமில்லை, மாண்புடையீர்."
விலை உயர்ந்தவை, ஜாதி நாய்கள். ஆனால் இதைப் பாரேன்! பார்க்க சகிக்கவில்லை, தெருச் சனியன்! இம்மாதிரியான நாயை யாரும் வீட்டில் வைத்திருப்பார்களா? பித்து பிடித்துவிட்டதா உனக்கு? இம்மாதிரி நாய் மாஸ்கோவிலோ, பீட்டர்ஸ்பர்கிலோ தென்படுமானால், அதன் கதி என்னவாகும் தெரியுமா? சட்டத்தைப் பற்றியாரும் கவலைப்பட மாட்டார்கள், அதே நிமிடத்தில் அதற்கு முடிவு ஏற்பட்டுவிடும். ஹரியூக்கின் கடிபட்டு இழப்புக்கு உள்ளா னவன். இந்த விவகாரத்தை நீ இதோடு விட்டுவிடக்கூடாது. தக்கபடி பாடம் கற்பித்தாக வேண்டும் ஆம், உடனே செய்தாக வேண்டும்."
"ஒருவேளை ஜெனரலுடைய நாய்தானோ என்னமோ" என்று போலீஸ்காரர் வாய்விட்டுச் சிந்திக்கலானார். "யாருடையது என்று அதன் மூஞ்சியிலா எழுதி ஒட்டியிருக்கிறது? அன்று நான் இம்மாதிரியான ஒரு நாய் அவருடைய வீட்டு வெளிமுற்றத்தில் இருக்கக்கண்டேன்."
"ஜெனரலுடைய நாய்தான், சந்தேகமே வேண்டாம்" என்று கூட்டத்தினரிடமிருந்து அந்தக் குரல் மீண்டும் ஒலித்தது.
"ஓ! கோட்டை என் மீது மாட்டு, எல்தீரின். ஜில் காற்று வீசுகிறது, குளிராயிருக்கு. இதை ஜெனரலுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்று அங்கே அவர்களைக் கேட்டுப் பார். நான் இதைக் கண்டதாகவும், அனுப்பி வைத்திருப்பதாகவும் சொல்லு, தெருவிலே விடவேண்டாமென்று அவர்களிடம் கூறிவிட்டு வா. இது விலை உயர்ந்த நாயாய் இருக்கும். ஊரிலுள்ள முரடர்கள் எல்லாம் இதன் மூக்கிலே சிகரெட்டைத் திணிக்க முற்பட்டால்
12 ஜூலை - டி
 

உருப்படாமல் அல்லவா போய்விடும். நாய் மென்மையான பிராணி!. முட்டாளே! கையைக் கீழே இறக்கு நீ அசிங்கம் பிடித்த அந்த விரலை எல்லோருக்கும் காட்டிகிட்டு நிற்காதே. எல்லாம் நீ செய்ததுதான், குற்றம் உன்னுடையதுதான்."
"ஜெனரலுடைய சமையற்காரர் இதோ வருகிறாரே, அவரைக் கேட் டால் தெரிந்துவிடுகிறது. உம்மைத்தானே, புரோஹர் கிழவரே, இங்கே வா! இந்த நாயைப் பார். உங்கள் வீட்டு நாயா இது? "நல்லாயிருக்கே இம்மாதிரி ஒரு நாய் எங்களிடம் எந்நாளும் இருந்ததில்லை!"
"இனி யாரையும் விசாரிக்கத் தேவையில்லை" என்றார் அச்சுமேலவ் "தெரு நாய்தான் இங்கே பேசிக்கொண்டு நின்று L u] ഞി സെഞ സെ. தெரு நாயென்று சொல்லிவிட்டார்கள், ஆகவே இது தெரு நாயேதான் இழுத்துச் சென்று ஒழித்துக்கட்டு விவகாரம் தீர்ந்து போகட்டும்." "இது எங்களுடைய நாயல்ல" என்று புரோஹள் தொடர்ந்து சொன்னார். "ஜெனரலுடைய சகோதரர் சில நாட்களுக்கு முன்பு வந்தாரே, அவருடையது இது. எங்கள் ஜெனரலுக்கு பர்சோய் நாய்கள் பிடிக்காது. ஆனால் அவர் சகோதரர் இருக்கிறாரே, அவருக்கு உயிர்தான்."
"என்ன, ஜெனரலுடைய சகோதரர் வந்து விட்டாரா? விளதமிர் இவானிச் வந்துவிட்டாரா?” என்று வியந்து கூவினார் அச்சுமேலவ; ஆனந்தத்தால் அவர் முகம் பூரித்து விட்டது "மகிழ்ச்சிக்குரிய செய்தி ஆயிற்றே! எனக்குத் தெரியாதே இது. இங்கேயே தங்கிவிடப் போகிறாரா?”
"இங்கேதான் இருக்கப் போகிறார்." "எதிர்பாராத நல்ல செய்தி! தமது சகோதரரைப் பார்ப்பதற்காக வந்திருக்கிறாரா? செய்தி தெரியாதவனாய் இருந்திருக்கிறேன். அவருடைய நாயா இது? மட்டற்ற மகிழ்ச்சி! வீட்டுக்கு அழைத்துச் செல். அற்புதமான நாய்க்குட்டி! அந்த ஆளின் விரலைக் கடித்தாயா நீ? ஹ-ஹ-ஹா பரவாயில்லை, நீ நடுங்காதே உள்-உள்-ர். பொல்லாத குட்டி, கோபம் பொத்துக் கொண்டு வருகிறது அருமையான நாய்க்குட்டி"
புரோஹர் அந்த நாயை அழைத்துக் கொண்டு மரவாடியிலிருந்து போய்ச் சேர்ந்தார். கூட்டத்தினர் ஹரியூக்கினைப் பார்த்துச் சிரித்தனர்.
"இரு செம்மையாய்த் தருகிறேன் உனக்கு!’ என்று அச்சுமேலவ அவனை மிரட்டினார். பிறகு மேல்கோட்டை நன்றாய் இழுத்துவிட்டுக் கொண்டு சந்தையின் குறுக்கே நடந்தார். ே
* பைத்தியமெனப் பொருள்படும் அச்சுமேலி என்னும் ருஷ்யச் சொல்லிலிருந்து புனையப்பட்டிருக்கும் பெயர். * ஹரியூ - ஹரியூ - பன்றியின் உறுமல்,
(மொழிபெயர்ப்பாளர்) நன்றி அந்தோன் சேகவ் (சிறுகதைகளும், குறுநாவல்களும் 1975)
செம்பர் 2005 5OGYI95Ó

Page 15
കconf88 |oങ്ങേon(o
சிலப்பதிகாரம் என்பது செந்தமிழால் இயற்றப்பட்ட பேரிலக்கியங்களில் தொன்மையும் சிறப்பும் வாய்ந்தது. பண்டைத்தமிழர் வாழ்வியலை விளக்குவது. தமிழின் முப்பெரும் பிரிவுகளான இயல், இசை, நாடகம் என்பனபற்றி விரிவாகப் பேசுவது தமிழ் வேந்தரின் ஆட்சி நலனையும், தமிழ் மகளிர் கற்பு நலனையும் உணர்த்துவது. தமிழ் மக்களின் வாழ்வியலையும் தொழில் வளத்தையும் கலை உணர்வையும் தெளிவாக உரைப்பது. தமிழ் நிலத்தின் செழுமையையும் வளத்தையும் காட்டுவது. இந்நூலில் முத்தமிழும் விரவி வருதலால் இயலிசை நாடகத் தொடர்நிலைச் செய்யுள் என்றும் நாடகக் காப்பியம் என்றும் அழைக்கப்படுகிறது. இதனைச் சான்றோர் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்விலக்கியத்தை இயற்றியவர் இளங்கோவடிகள் என்னும் இளம் துறவி. சேரநாட்டில் பிறந்தவர். தந்தை - ஆராத்திருவின் சேரலாதன், தாய் - நற்சோனை, இவர் மூத்தோன் பெயர் செங்குட்டுவன் இவர் வாழ்ந்தகாலம் கி.பி.இரண்டாம் நூற்றாண்டு எனக்கொள்ளப்படுகிறது. சிலர் சிலப்பதிகாரம் எழுதப்பட்ட காலம் மூன்றாம் நூற்றாண்டு என்றும், வேறுசிலர் ஆறாம் நூற்றாண்டு என்றும் கருதுகின்றனர். தமிழ் நாட்டில் இக்காலத்தில் வைதிகசமயமும் புத்தசமண சமயமும் பரவியிருந்தன. இளங்கோவடிகளைச் சமணர் என்றும் வைதிகசமயத்தவர் என்றும் கூறுவர். துறவு பூண்டு குணவாயிற் கோட்டம் என்னும் தவவிடுதியில் இவர் வாழ்ந்து வந்தார். அச்சமயம் தண்டமிழ் ஆசானாகிய சாத்தனார் குறவர் தம்மிடம் கூறிய கண்ணகியின் வரலாற்றை இளங்கோவடிகளுக்குக் கூறினார். அதனையே சிலப்பதிகாரமாகப் பாடியதாகக் கருதப்படுகிறது. சிலப்பதிகாரத்தில் பதிகத்தில் அமைந்துள்ள பின்வரும் அடிகள் இதற்குச் சான்றாக அமைந்துள்ளன.
"அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதுTஉம்
ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதுTஉம் சூழ்வினைச் சிலம்பு காரணமாகச்
புகார்க்காண்டம் மதுரைக் மங்கல வாழ்த்துப்பாடல் காடுகாண்க மனையறம் படுத்தகாதை வேட்டுவவரி அரங்கேற்று காதை புறஞ்சேரியி அந்திமாலை சிறப்புச் செய்காதை ஊர்காண்க இந்திரவிழவுரெடுத்தகாதை அடைக்கல கடலாடு காதை கொலைக்க கானல்வரி ஆய்ச்சியர்கு வேனிற்காதை துன்பமா6ை கனாத்திற முரைத்தகாதை ஊர் சூழ்வா நாடுகாண்காதை வழக்குரைக
வஞ்சினமா6
அழற்படுகா
கட்டுரைகா6
酶 ஜூலை - டிெ
 

சிலப்பதிகாரம்
собl ево (ра»endo
சிலப்பதிகாரம் என்னும் பெயரால் நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள்"
(சிலம்பு பதிகம்: 55 - 60)
சிலப்பதிகாரம் மூன்று நாடுகளின் கதை கூறுவது சோழ, பாண்டிய, சேரநாட்டுத் தலைநகரங்களான புகார், மதுரை, வஞ்சி என்பவற்றைப் பெயராகக் கொண்டு புகார்க் காண்டம் , மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம் என மூன்று காண்டங்களாகப்
மூவருடைய வாழ்வைப் பாடியது, கோவலன் கலையரசனாகவும், கண்ணகி கற்பரசியாகவும், மாதவி கலையரசியாகவும் படைக்கப்பட்டுள்ளனர். சிலப்பதிகாரத்தின் பெயர் அதன் மையத்தைச் சுட்டுகிறது. கண்ணகி "சிலம்பின் வென்ற சேயிழை" எனக்குறிக்கப்படுதலால் அவளது வெற்றியும் அதற்கு ஏதுவான சிலம்புமே காப்பியத்தின் மையமாகியுள்ளன.
இக்காப்பியத்தின் கதை தனியொரு சிலரின் கதையன்று ஒரு சமுதாயத்தின் கதை. செல்வத்தால் சிறந்து அறநிலையால் தாழ்ந்த சமுதாயத்தின் கதையாகும். கதைமாந்தர் தெரிவிலும் கதைப்பின்னலிலும் இச்சமுதாயத்தை இளங்கோவடிகள் இயங்க வைத்துள்ளார். வணிகள் குல கோவலன் கண்ணகியின் கதையோடு ஒருங்கிணைந்து சமுதாயம் காப்பியம் முழுமையும் செறிந்து நிற்கிறது. இதனைக் குறிக்கவே காப்பியத்தின் பெரும்பிரிவுகள் கதை நிகழ்வாலன்றி நகரங்களால் பெயர் பெற்றுள்ளன. சமுதாயத்தின் குலப்பிரிவுகளில் பாத்திரங்கள் படைக்கப்பட்டுள்ளன. கணிகையர், வணிகள், வேட்டுவர், ஆயர், குறவர் என்பவற்றை எடுத்துக்காட்டாகக் கூறலாம். இன்னும் உழவர், பாணர், கூத்தர், பரதவர் ஆகியோரும் குயிலுவமாக்கள், காவலர், சாரணர் ஆகியோரும் வந்துள்ளனர். வேட்டுவர், ஆயர், குறவர், சிறப்பிடம் பெறுவதால் அவர்களின் பெயர் கொண்ட வேட்டுவவரி, ஆய்ச்சியர் குரவை, குன்றக்குரவை என்னும் காதைகள் அமைந்துள்ளன. மனை, ஊர், நாடு என்பன முக்கியப்படுத்தப்பட்டு மனையறம்படுத்த காதை, ஊள்சூழ்வரி, நாடுகாண் காதை என்னும் பிரிவுகள் அமைந்துள்ளன. முழுநூல் பகுப்பமைப்பு வருமாறு அமைந்துள்ளது.
காண்டம் வஞ்சிக்காண்டம்
ாதை குன்றக்குரவை காட்சிக்காதை
றுத்தகாதை கால்கோட்காதை
ாதை நீர்ப்படைக்காதை
க்காதை நடுகற்காதை
ளக்காதை வாழ்த்துக்காதை
தரவை வரந்தருகாதை
ᏓᎧ
时
ாதை
Ծ)67)
தை
தை
சம்பர் 2005 13

Page 16
சிலப்பதிகாரத்தில் மக்களின் வழிபாட்டிற்குரிய தெய்வங்களும் பாத்திரங்களாகியுள்ளன. பாசாண்டச்சாத்தன், வனசாரிணி, அழற்கடவுள், நாளங்காடிப்பூதம், மதுராபதித்தெய்வம் என்பவற்றை எடுத்துக்காட்டாகக் கூறலாம். குலமாதர், கணிகையர் என இருவேறுபட்ட பெண்கள் பற்றி சிலப்பதிகாரம் பேசுகிறது. குலமாதர் சார்பாக கண்ணகியும் கணிகையர் சார்பாக மாதவியும் படைக்கப்பட்டுள்ளனர். கண்ணகி கணவனைப் பிரிந்து துன்புற்றாலும் பண்பான வாழ்க்கையால் உயர்ந்தவள். மாதவி கணிகையர் குலச்சூழலை மாற்றியவள். கோவலன் இறந்ததும் கலையையும், அழகையும், குலத்தையும் துறந்து உயர்ந்தவள். இதுவே இருவரதும் சிறப்பாகும். அக்கால சமுதாயம் இருவருக்கும் வாழ்க்கையில் பெரும் சிக்கலை உருவாக்கியது. அதனால் அவர்கள் துன்புற்றனர். வாழ்வின் இன்பத்தையும் பயனையும் இழந்தனர். கண்ணகியின் சிக்கல் சமுதாயத்தில் பல பெண்டிர்க்கு இருந்தது. குலமாதர் வாழ்வு கணிகையரால் கெடும் நிலை இருந்தது. இளங்கோ கண்ணகியின் துயரக்கதையுடன் குலமாதர் அனைவருடைய கண்ணிரையும் காட்டுகிறார். அவர்களின் கண்ணிருக்குக் காரணமான கணவர்மாரின் பரத்தமை ஒழுக்கத்தைக் கோவலனுடைய பரத்தமை ஒழுக்கத்தின் மூலம் காட்டுகிறார்.
கணிகையரிடம் கலைகள் இணைக்கப்பட்டிருந்தன. கணிகையரின் அழகும் இசைத்திறனும் பயிற்சியால் சிறந்திருந்தன. இதனை மாதவியின் பயிற்சிநிலை தெளிவுபடுத்துகின்றது.
"சிறப்பிற் குன்றாச் செய்கையொடு பொருந்திய பிறப்பிற் குன்றாப் பெருந்தோள் மடந்தை தாதவிழ் புரிகுழல் மாதவி தன்னை ஆடலும் பாடலும் அழகும் என்றிக் கூறிய முன்றினொன்று குறை படாமல் ஏழாண்டியற்றியோர் ஈராறாண்டில் சூழ்கழல் மன்னற்குக் காட்டல்வேண்டி.."
(சிலம்பு: அரங்கேற்று: 5 -11)
கலையையும் காமத்தையும் அனுபவிக்க விரும்பிய ஆடவர் கணிகையரை நாடிச்சென்றனர். புகார் நகரிலே கொண்டாடப்படும் இந்திரவிழா ஆடவர்களின் விருப்பை நிறைவேற்ற நல்வாய்ப்பு நல்கியது. ஊர்காண் காதை மதுரையில் ஆடவர் கணிகையுடன் பருவந்தோறும் களியாட்டவரும் செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. கணிகையருள் சிறந்தவர்களுக்கு அரசன் தலைக்கோல்பட்டம் அளித்து பரிசுத்தொகையும் கொடுக்கின்ற மரபு மதுரையிலும், புகாரிலும் நிலவியது. இது கணிகையர்க்கு அரசு அளித்த இசைவாகி மக்களின் ஒழுக்கக்கேட்டிற்கும் வழிவகுப்பதாயிற்று. கலையில் ஆர்வம் உடைய கோவலன் மாதவியின் ஆடற்கலையால் ஈர்க்கப்பட்டு அவள்பால் 'விடுதல் அறியா விருப்பினன் ஆகி' 'வடு நீங்குசிறப்பின் மனையகம் மறந்து வாழ்ந்தான். இதனால் கண்ணகி இன்பப் பயனையும் அறப் பயனையும் இழந்து வாழநேர்ந்தது. கணிகையர் வாழ்வு சிலப்பதிகாரத்தில் இருவகையாகச் செயற்பட்டுள்ளது. ஒன்று, அது கோவலனுடைய வீட்டுவாழ்வை அழித்தது. மற்றது, மதுரைநகரக் கணிகையரின் ஆடலும் தோற்றமும் பாண்டியனின் மனதை மயக்க அதுகண்டு பாண்டிமாதேவி ஊடல்கொள்ள மன்னன் மேலும் மயங்கித் தீரவிசாரியாமல் பொற்கொல்லன் சொற்கேட்டு கோவலனைக் கொல்ல ஏவியமை கணிகையர் நிலை மறைமுகமாக கோவலன் கொலைக்குக் காரணமாயிற்று.
14 ஜசலை - டிே

இளங்கோவடிகள் தமது காப்பியத்தில் நகரவாழ்வையும் நாட்டுப்புறத்து வாழ்வையும் சுட்டி அவற்றின் வேறுபட்ட தன்மையை விளக்கியுள்ளார். வணிகரும் விழாவெடுப்போரும், ஆடல் பாடல்களால் மகிழ்வோரும், பரத்தரும், பல்வேறு தொழில் செய்வோரும் என நகரவாழ்வு ஒரு புறம் நடக்கிறது. வேட்டுவர், ஆயர், குறவர் வாழும் நாட்டுப்புற வாழ்வு இன்னொரு புறம் நடக்கிறது. பண்பாலும் பணிகளாலும் அணிகளாலும் வாழ்க்கை முறையாலும் செயற்பாடுகளாலும் நகரமும் நாட்டுப்புறமும் வேறுபட்டிருப்பதை இளங்கோ துல்லியமாகவே காட்டியுள்ளார். ஆடம்பரவாழ்வும், ஆரவாரமும் ஒழுக்கச்சீர்கேடும் நகரத்திலிருந்தது. வழிபாடும், ஒழுக்கமும், அமைதியும் நாட்டுப்புறத்திலிருந்தன. நகரமாந்தருக்கு வழிபாடு ஒரு ஆடம்பரத் திருவிழாவாக அமைய நாட்டுப்புறமாந்தருக்கு அது வாழ்வுடன் இணைந்த அமைதியான செயற்பாடாக அமைந்திருந்தது.
பாத்திரப்படைப்பில் கண்ணகியை சொல்லறம் பேணும் பீடுகெழு நங்கையாகப் பத்தினித் தெய்வமாகப் படைத்த இளங்கோ அத்துடன் தனது நூலை நிறைவு செய்யவில்லை. நாட்டுமாந்தரால் அவள் பெருமை நகரமாந்தர்க்கும் அறிவுறுத்தப்பட்டு மன்னர் பலர் அவளைத் தெய்வமாகக் கொண்டு வழிபடும் மரபைத்தொடக்கி வைத்து காப்பியத்தை முடிக்கின்றார். செங்குட்டுவன் பத்தினிக்கல் தேர்வுசெய்வதற்கு இமயம் செல்கிறான். கனகவிசயரை வென்று இமயத்தின் கல் கொணர்ந்து கங்கையில் நீராட்டி கனகவிசயர் தலையில் ஏற்றிக் கொணர்ந்தமையால் நாடுமுழுவதும் பத்தினித் தெய்வத்தை அறிந்து கொண்டது. அவன் வஞ்சி மாநகரில் பத்தினிக்கோட்டம் அமைத்து மன்னரை அழைத்து விழாமங்கலம் செய்தமையால் பத்தினி வழிபாடு பிறநாடுகளில் பரவிற்று. நாட்டுப்புறம் கண்ணகியைத் தெய்வமாகக்கொண்டு வழிபட்டநிலை நகரப்புறங்களிலும் பரவிற்று. வழிபாடு நாட்டுப்புறத்தையும் நகரப்புறத்தையும் பக்தி உணர்வு கொண்டு இணைய வைத்தது. இதன் மூலம் பத்தினி வழிபாடே சிலம்பின் மையக்கருத்தாயிற்று. கண்ணகியின் காற்சிலம்பால் காப்பியம் பெயர் பெற்றது. சிலப்பதிகாரத்தில் காணப்படும் இசைநாடகக்குறிப்புகள் ஆசிரியரின் புலமைச்சிறப்பை அணி செய்கின்றன. மங்கல வாழ்த்துப்பாடல், கானல்வரி, வேட்டுவவரி, ஆய்ச்சியர்குரவை, ஊர் சூழ்வரி, குன்றக்குரவை, வாழ்த்து என்னும் பகுதிகளில் இசையும்- நாடகமும் பயின்று வருகின்றன. துன்பமாலையும் - வஞ்சினமாலையும் இசைவிரவி அழுகைச்சுவை மிகுந்தவையாகும். அரங்கேற்றுகாதை, வேனிற்காதை என்பவற்றில் பண்டைய இசைநாடகக் குறிப்புகளுள. மேலும் காண்டந்தோறும் இறுதியில் நிற்கும் கட்டுரைகள் இசைநாடகக் குறிப்புகள் பற்றிய சில சுருக்க விளக்கங்களைத் தருகின்றன. சிலப்பதிகாரத்திற்கு உரைசெய்த அரும்பதவுரைகாரரும் அடியார்க்கு நல்லாரும் இக்குறிப்புகளை இணைத்துள்ளனர். இந்நூலின் உரைப்பாயிரத்தில் இசைநுணுக்கம், இந்திரகாளியம், பஞ்சமரபு, பரதசேனாபதியம், மதிவாணர் நாடகத்தமிழ் என்னும் ஐந்து நூல்களையும் அடியாருக்கு நல்லார் குறிப்பிடுகிறார்.
ஆடல், பாடல் என்ற இரண்டினுள் ஆடல் நாடகத்திற்கும், பாடல் இசைக்கும் உரியவாகும். ஆடல் வேத்தியல், பொதுவியல் என்றும் அகம், புறம் என்றும் அமைந்துள்ளது. வேத்தியல் வேந்தள் முன் ஆடுவது. பொதுவியல் ஏனையோர் முன் ஆடுவது. ஆடல் 11 வகைப்படும் அரங்கேற்றுகாதையிலும் கடலாடுகாதையும் இவ்வாடல் வகை விளக்கப்பட்டுள்ளது. ஆடல் வகையுள் சில கூத்து என வழங்கப்பட்டன. கூத்து பல தரப்படும் அவற்றுள் வரிக்கூத்து- கண்கூடு வரி, காண்வரி, உள்வரி, புறவரி, கிளர்வரி,
g-Lbuff 2005 面仰腹面通

Page 17
தேர்ச்சிவரி, காட்சிவரி, எடுகோள்வரி என எட்டுவகைப்படும். வேனிற்காதையில் (வரி: 74 - 108) இவைபற்றிய விளக்கம் கூறப்பட்டுள்ளது, ஆடல் கொடுகொட்டி, பாண்டரங்கம், அல்லியம், மல், துடி, குடை, குடக்கூத்து, பேடு, மரக்கால், பாவை, கடையம் எனபெயர் பெற்றது. கடலாடுகாதையில் (43 - 66) இவை பற்றிய விரிவான விளக்கம் உண்டு. இசைக்கருவிகளில் மத்தளம், தண்ணுமை, இடக்கை, சல்லியம் என்ற நான்கும் சிறப்புடையன. பேரியாழ், மகரயாழ், சகோடயாழ், செங்கோட்டியாழ் என்ற நால்வகையான யாழ்பற்றிய குறிப்புகள் உண்டு. இவை முறையே 21,19,14,7 நரம்புகளைக் கொண்டிருந்தன.
பண்டைய சங்கநூல் கூறும் திருமணமரபு சிலப்பதிகார காலத்தில் மாற்றமடைந்துள்ளது. "இருபெருங் குரவரும் ஒரு பெருநாளால் மணவணிகாண மகிழ்தலும்" "மாமுத பார்ப்பான் மறைவழி காட்டிடத் தீவலம் செய்வதும்" முறைமையாக உள்ளன. மகளிர் தம் கணவரோடு கூடி அறவோர்க்கு அளித்தல், அந்தணரோம்பல், துறவோர்க்கெதிர்தல், விருந்துபுறந்தருதல் முதலிய அறங்களைச் செய்தனர். இந்நடைமுறை கண்ணகி கூற்றாக கொலைக்களக்காதையில் (71 - 74) அமைந்துள்ளது. மக்கள் கொண்டாடும் சிறப்பான விழாக்கள் பற்றிய குறிப்புகளும் உண்டு. அவற்றுள் இந்திரவிழா சிலப்பதிகாரக் கதையில் முக்கிய விழாவாக அமைந்துள்ளது. இவ்விழா காவிரிப்பூம் பட்டினத்தில் சித்திரைத்திங்கள் சித்திரை நாள் தொடங்கி இருபத்தெட்டுநாள் நடைபெற்றது. இந்திரவிழவூர் எடுத்தகாதை இவ்விழாபற்றிய செய்திகளைக் கூறுகிறது. விழா சிறப்புற நடைபெறுவதற்கு காவற்பூதத்துப் பலி பீடிகைக்கு மறக்குடிமகளிர் சென்று வழிபாடு செய்தமை கூறப்பட்டுள்ளது.
"காவற் பூதத்துக் கடைகெழு பீடிகைப் புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும் பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து துணங்கையர் குரவைய ரணங்கெழந்தாடிப் பெருநில மன்னன் இருநில மடங்கலும் பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும் வளனும் சுரக்கென வாழ்த்தி மாதர்க்கோலத்து வலவயினுரைக்கும் முதிர்ப் பெண்டி ரோதையில் பெயர"
(சிலம்பு: இந்திரவிழவு 67 - 75) பின்பு பூத சதுக்கம் முதலாகவுள்ள ஐவகை மன்றங்கட்கும் அரும்பலியூட்டுவர். மங்கலக் கொடிகளும் தோரணங்களும், பூரணகும்பங்களும், பொற்பாலிகைகளும் கொண்டு நகரையும் கோவில்களையும் அழகுபடுத்துவர். ஐம்பெருங்குழுவும், எண்பேராயமும், அரசகுமரரும், பரதகுமரரும், தேர் முதலிய நால்வகைப் படைவீரரும், பிறரும் ஒன்றுகூடி காவிரிக்குச் சென்று நீர் கொணர்ந்து விண்ணவர் தலைவனை விழுநீராட்டி’ பிறவாயாக்கைப் பெரியோன் முதலாகவுள்ள கோயிகள் பலவற்றிலும் வழிபாடாற்றுவர். இசைப் புலவர்கள் பாட நாடகமகளிர் ஆடலும் பாடலும் காட்டி மக்களை மகிழ்விப்பர். விழாவின் இறுதியில் உலாநாள் வருகிறது. மக்கள் விடியல் பொழுதில் கடலாடி கடற்கானச் சோலையில் தங்கி மகிழ்கின்றனர். அங்கு அறவோரும், புலவரும் பிறரும் மக்களுக்கு அறம் உரைக்கின்றனர்.
நாட்டு மக்களிடையே நிலவிய நம்பிக்கைகளையும் சிலப்பதிகாரம் பதிவு செய்துள்ளது. நிமித்தம் காண்பதும் நாள் பார்த்தலும் கனாப்பயன் கருதலும் வழக்கமாக உள்ளது. இதனை இளங்கோ முதலில்;
西御卵圆面的 ஜைைல - டிே

"உள்ளகம் நறுந்தா துறைப்பமீதழிந்து கள்ளுக நடுங்குங் கழுநீர் போலக் கண்ணகி கருங்கனும் மாதவி செங்கனும் உண்ணிறை கரந்தகத் தொளித்து நீருகத்தன எண்ணுமுறை இடத்தினும் வலத்தினுந்துடித்தன விண்ணவர் கோமான் விழவுநாளகத்தென"
(இந்திரவிழவு: 235 - 240)
இந்திரவிழவுரெடுத்த காதையில் குறிப்பிட்டுள்ளார். மகளிர்க்கு கண்முதலியன இடம் துடித்தல் நன்மையெனவும் வலம் துடித்தல் தீமையெனவும் கருதப்பட்டது. கண்ணகி மீண்டும் கோவலனுடன் சேர்வது உண்மையென்பதையும், மாதவி கோவலனைப் பிரிவது உண்மையென்பதையும் இந் நம்பிக்கை மூலம் இளங்கோவடிகள் உணர்த்த முற்பட்டுள்ளார். அக்காலத்துப் பெண்களின் ஆடை, அணிகள் பற்றிய செய்திகளையும் சிலப்பதிகாரம் தருகிறது. மாதவியின் கோலப்புனைவைப் பற்றிக் குறிப்பிடுமிடத்து இச் செய்தி கூறப்பட்டுள்ளது. காலணிகள், பரியம், நூபுரம், பாடகம், சதங்கை, அரியகம் என்பன. தொடைக்கு குறங்கு செறியும். முப்பத்திரண்டு வடங்கொண்ட மேகலை இடையில் அணியப்படும். தோளுக்கு தோள்வளையும் கண்டிகையும் கைக்கு மணியிழைத்த சூடகம், பொன்வளை, பரியகம், வால்வளை, பவழவளை என்பன அமைந்தன. கைவிரலில் மோதிரமும் வயிரத்தாளும் அணியப்பட்டன. கழுத்தில் சங்கிலியும், நுண்சரடும், பொற்கயிறும், ஆரமும் பின்தாலி கோத்த மணிமாலையும் விளங்கின. காதில்தோடு, குழை, நீலக்குதம்பை முதலியன அணியப்பட்டன. தலைக்குத் தெய்வவுத்தி, வலம்புரி, தொய்யகம், புல்லகம் முதலியன அணிந்தனர். மூக்கணிபற்றிய குறிப்பு இடம்பெறாமை இங்கு குறிப்பிடத்தக்கது.
சிலப்பதிகாரக் காப்பியத்தில் கண்ணகிதான் முழுக்காப்பியத்திலும் நடமாடும் பாத்திரமாகும். புகார் நகரில் அடக்கமான குலப்பெண்ணாக இருந்த கண்ணகி மதுரையில் அரசனை எதிர்த்து வழக்காடுகிறாள். அவளது அவலவாழ்வே அவளுக்கு ஆற்றலையும் தந்தது. கணவன் மீது கொண்ட அன்பும், அவனை இழந்த அவலமும் அவளை வழக்குரைக்க வைக்கின்றது. சிலப்பதிகாரம் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐவகை நிலங்களையும் காட்டுகிறது. நெய்தல் நிலத்தில் பிறந்த கண்ணகி நால்வகை நிலத்தும் நடந்து குறிஞ்சி நிலத்தில் தெய்வமாகிறாள். கணவனைப் பிரிந்த கண்ணகி மானுடநிலையில் உயர்ந்து நின்றாள். கணவனை இழந்தபோது தெய்வநிலைக்கு உயர்ந்தாள். சிலப்பதிகாரம் குடிமக்கள் காப்பியமாக, புரட்சிக் காவியமாகப் போற்றப்பட கண்ணகியே காரணமாகிறாள். அவளுடைய குணநலன்கள் கற்புநிலையை விளக்குகின்றன.
இளங்கோ தமிழ் மக்களைக் கருதியே தம் காப்பியத்தை இயற்றினார். நாடகச்சுவைகொண்ட சிலப்பதிகாரம் பாமரரும் கேட்டு இன்புறும் கதை. தமிழ்நாட்டையும் தமிழ் அரசர் ஆட்சியையும் தமிழையும் தமிழ் வாழ்வையும் மறக்கத் துணிந்து அறத்தின் பெயரால் புதியதோர் இனமாக உருமாறி அழியவிருந்த தமிழரைக்காக்க எண்ணி இயற்றிய காப்பியமே சிலப்பதிகாரம். மொழிப்பண்பையும் வாழ்க்கைப் பண்பையும் அதனுள் பொதிந்து வைத்துள்ளார். தம்கால வழக்குச் செந்தமிழ் உரைநடையையும் செய்யுள் நடைகளையும் கையாண்டுள்ளார். பழங்கவிதையின் பண்பைக் குன்றாது காத்தவர்.தமிழ்மொழியை நிலை பெற வைத்தவர்.
செம்பர் 2005 15

Page 18
இனிUnவருே.
எழுத்துக்களில் உருவம் கொடுக்க முடியாதவற்றை எண்ணங்களில் விதைத்து மனதில் புதைத்து நாளைய விடியலை நோக்கி இன்று எத்தனை எதிர்பார்ப்புக்கள்.
ஏனோ தெரியவில்லை நம்பிக்கைச் சிகரங்கள் கட்டியெழுப்பப்பட முடியாமல் தாங்கு தூண்கள் இன்றி சரிந்து கொண்டே இருக்கின்றன. இன்று இனிக்கின்ற ஒவ்வொரு நிமிடங்களும் நாளை கசப்பையும் பகிர்ந்தளிக்க சந்தர்ப்பம் தேடிக் கொண்டிருக்கின்றன.
இதயத்தின் இடுக்குகளில் செதுக்கப்பட்ட அந்த அனர்த்தங்களின் அபாயத் தணலை ஊதி ஊதி மீண்டும் அனலாய் எரிய விடுவதற்காய் வெறும் புன்னகையை உதட்டில் ஏந்தி கடும் புகைச்சலை உள்ளத்தில் தாங்கி சதி செய்யும் மனிதரின் மதியை என்னவென்று சொல்வது?
கடந்தகால எண்ணப் பறவைகள் விண்ணில் பறந்து வட்டமிட உயிரின் ஆழத்தில் உறைந்து கிடக்கும் நினைவலைகள் மனப்பாறைகளில் மோதித் திரும்பும் போது இதய ரணங்களிலிருந்து புறப்படும் உணர்வுகளுக்கு வெறும் வார்த்தைகளால் தூபம் காட்டும்
மாயா ஜாலம் போதும் அ. 6
டை இதழாக வெளிவருகின்றது. அதாவது செப்ரெம்பர் காலாண்டுக்குரிய இதழும் ஒக்ரோபர் - *செம்பர் காலாண்டுக்குரிய இதழும் இணைந்து ஜூலை =
‘့ၾဓ#ရJ#D#@r jñā၈ရ)ဓ၈#Dမ္ဘာ့ဓါး။ நீங்கி வாழ்வும் சூழலும் எம் மண்ணில் நிலைபெற் இறைஞ்சுகின்றோம்.
 
 
 

காயங்களையும் கஷ்டங்களையும் உணராத எவருக்கும் வேதனையின் சாதனைகள் புரிவதில்லை சுதந்திரப் பறவையின் சிறகுகளைப் பறித்து எங்கே பதுக்கி வைத்திருக்கிறீர்கள்? அது பறப்பதற்காய்த் தேடுகிறது தன் இறகுகளை.
நினைவுகளின் கடிவாளத்தை எப்படி இழுத்து நிறுத்த முடியும்? ஆனாலும் முற்றாக நம்பிக்கை வேர்கள் அறுந்துவிடாத நிலையில் தொடர்கிறது ஓர் புனிதப் பயணம் புதுயுக வெற்றிப் பாதையை நோக்கி.
காலங்கள் நகர்ந்து செல்கின்றன விவாத மேடைகளில் வினாக்களுக்கு இன்னும் விடைகிடைப்பதாய் தெரியவில்லை விடியல்கள் பல விடிந்தும் கூட இன்னும் இருளுக்குள்.
சிலவற்றை நினைக்கும் போது மனமே மரத்துப் போகிறது இதயப் பாறைகளில் துருப்பிடித்த நினைவின் ஆணிகளைக் கழற்ற முயற்சித்துக் கொண்டிருக்கும் போது அவை மேலும் மேலும் அறையப்படுவதற்காய் சுத்தியல்களுக்கு விலைபேசி கொல்லன் தெருவில் ஒரே கூட்டம்
ஆறாத ரணங்கள் மனதில் மாறாத வடுக்கள் உடலில் இதற்காகவா இவ்வாழ்வு? வேண்டாம் இந்த இனத்தாழ்வு இனியாது ஓர் சுதந்திர தேசத்துள்
gബipരILIT பிரவேசிக்க விடைகொடுங்கள்.
R
26, 12.2OO4
சுனாமி ஆழிப்பேரலையால் காவு கொள்ளப்பட அனைத்து மனித உயிர்களுக்கும் ஒராண்டு நினைவு அஞ்சலிகள்.
26.12.2OO 5
டிசெம்பர் 2005 酶

Page 19
8ெளஜன்ய ஷாகர்
படைப்பிலக்கிய வகைகளில் கவிதையின் தனித்துவம் மேலும் மேலும் தெளிவாகி வருகின்ற காலம் இது எனலாம். காலங்காலமாய் கவிதையின் மரபு வழிச்சிறப்புகளென அடையாளம் காட்டப்பட்ட பண்புகளைத்தாண்டி உள்ளடக்கம் சொல்முறை பதிவாகி இருக்கும் அனுபவம், வாசகனிடத்திற் கிளர்த்தப்படும் அனுபவம், கவிதைக்குள் - கவிதையைத் தாண்டிப் புலனாகும் மெளன அர்த்தம், கவிதையின் பல் பரிமாணப்பண்பு எனப் பல சிறப்புகள் உணரப்பட வேண்டியவையாகவும் சில சமயம் உணர்த்தப்பட வேண்டியவையாகவும் அமைகின்றன.
ஆழ்ந்த ரசனையோடு கவிதையைத் தேடிப்படிக்கிறவர்களுக்கு - கவிதைமீது அத்யந்தநேசம் கொண்டவர்களுக்கு மேற்சொன்ன விஷயம் ஆழப்புலப்படும்.
மிகவும் கனதியான - எதிர்ப்படும் எவரையும் உலுப்பிவிடக்கூடிய ஆழமான விஷயங்கள் மட்டுமே கவிதைக்கான பாடுபொருளாய் அமையுமென்பதில்லை. எதுவுமே - எத்தகைய நிகழ்வுமே - அசைவுமே ஒரு கவிதைக்கான மையப்பொருள் ஆகலாம்.
அண்மையில் படிக்க நேர்ந்த ஒரு கவிதை என்னைப் பலவிதங்களிலும் பாதித்தது. படித்து முடித்த அனுபவத்தோடு நீண்ட நேரம் உட்காரவைத்தது. யோசிக்கவைத்தது. இவ்வாறு என்னைப் பாதிக்கின்ற கவிதைகள் தருகின்ற அனுபவப் பகிர்தலாகவே 'சுவைத்தேன் கட்டுரைகள் அமையவிருக்கின்றன.
வெகு சாதாரணமாக சொற்கள் - படிப்பவர்களை இலகுவாகச் சென்றடையக்கூடிய அர்த்தம் கொண்டசொற்கள் - ஒரு நிகழ்வு பற்றியபதிவு - கவிஞனின் பார்வையிற் பட்டுப்பதிவாகும். ஒரு தொலைதுார அர்த்தம் - அது ஏற்கும் பல் பரிமாணப்பண்பு. இதனிடையே இழையோடுகின்ற மிக மெல்லிய சோகம். இவையனைத்தும் இந்த கவிதையின் பன்னிரண்டு வரிகளுக்குள் குடியிருப்பதுதான் வியக்கவைக்கும் ஒரு அழகாய்ப் பதிவாகிறது.
தேடல் அவனுக்கு தன் வெறுப்பைப் போக்குவது எப்படி என்று தெரியவேயில்லை. தன்கைக்குக் கிடைத்த செடியின் இலையைக்கிள்ளி தூள் தூளாய் எறிந்தான் தன் உறுப்புகளை எப்படிப் பொருத்திக்கொள்வது என்பது அந்த இலைக்குத் தெரியவேயில்லை. அதன் நிழல்கள் மட்டும் தரையில் இலையைத் தேடியபடி அங்கும் இங்கும் அலைந்து திரிகின்றன.
ராணி திலக் நன்றி. திராநதி - 2004 - ஆகஸ்ட் 酶 ஜூலை - டிசெ
 
 
 

சாதாரண வாழ்வின் நடையில் எதிர்ப்படக்கூடிய சம்பவம் ஒன்று முதல் ஆறுவரிகளில்,
நாமும் கூட இப்படி ஒரு காரியத்தைச் செய்து விடுவது சாத்தியம்தான்.
அவ்வாறு செய்கையில் அந்த இலையின் வலிபற்றி, செடியின் வலிபற்றி நாம் சிந்திப்பதில்லை. செடி ஒரு உயிர் என்பதையோ அதற்கும் உணர்வுகள் உண்டு என்பதையோ நாம் நினைவிற் கொள்வதில்லை.
ஜீவகாருண்யம் என்கிற பேருணர்வு எத்தகைய மகத்துவம் மிக்கது என்பது நாம் அறியாததல்ல. "வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் நான் வாடினேன்" எனப்பாடிய அருட்சுடர் வள்ளலாரின் வரிகளையும் நாம் சிலாகித்ததுண்டு.
தன் உறுப்புக்களை எப்படிப் பொருத்திக்கொள்வது' என்பது அந்த இலைக்குத் தெரியவேயில்லை. இந்த வரிகளில் பதிவாகிற சோகம் உங்களுக்குப் புலனாகிறதா?
வெறுப்புக்கு இரையான மனிதன் ஒரு கணம் குருடாகி இரக்கமற்றுப் புரிந்துவிட்ட செயலின் கொடுரம். அப்பாவியான அந்த இலைக்கு நேரிட்டுவிட்ட, நேர்
TT தே
செய்யமுடியாத அநீதி புரிகிறதா.?
சரி இது இலையொன்றின் துயரைத்தான் பேசுகிறதா? - இந்தப்படிமத்தினூடாக உங்களுக்கு வேறு நிலைமைகள் - நிகழ்வுகள் நினைவூட்டப்படவில்லையா?
பொறுமையிழந்த நிலையில் குழந்தையொன்றின் மனதைச் சிதைத்துவிட்ட ஒரு தாயை - அதிகார மமதையில் அப்பாவி மக்களின் உயிரை பறித்துவிட்ட ஒரு அராஜக அதிகாரத்தை ஏனென்றறியாது சினத்தோடு உயிர்களை - உடமைகளை சிதைத்துவிட்ட ஒரு சூறாவளியை, ஒரு சுனாமிப் பேரலையை. இதையெல்லாம் மேற்சொன்ன படிமம் எம் புலனுக்குத் தெளிவுபடுத்தவில்லையா. -இனிப்பாருங்கள் அதன் நிழல்கள் மட்டும் தரையில் இலையைத் தேடியபடி அங்குமிங்கும் அலைந்து திரிகின்றன.
எனச் சொல்லும் வரிகள் எம்முள்கிளர்த்தும் உணர்வுகளைப் பாருங்கள் இலை சிதைக்கப்பட்டபின்னும் அசையும் நிழல்கள். இதயத்துக்கு நெருக்கமானவர்களைப் பறி கொடுத்தபிறகும் உள்ளிருந்து வாட்டும் ஞாபக நிழல்கள். அவற்றின் தோற்கும் தேடல்கள் அவைபதிக்கும் சோகம்
இவையெல்லாம் ராணிதிலக் தரும் "தேடலில் எமக்குத் தரிசனமாகின்றன அல்லவா.
இதுதான் நவீன கவிதையின் உள்ளடங்கிக் கிடக்கும் பேரழகு ஆழ்ந்த அர்த்தம். - தேடுங்கள் கண்டடைவீர்கள். ே ibur 2005 17

Page 20
சென்ற தொடரில் நாடகத்தில் குறியீட்டைப் பாவித்தல் தொடர்பான விடயத்தைப் பார்த்தோம். இத்தொடரில் ஒரு குறியீட்டு நாடகத்தைப் பற்றி ஆராயவிருந்தோம். ஆனால் சில தகவல்களை, தரவுகளைத் திரட்டுவதில் காலதாமதம் ஏற்பட்டமையால் அது பற்றி இந்தக் கட்டுரையில் எழுத முடியவில்லை. அடுத்ததொடரில் அதை எழுதலாம் என்பதால் மீண்டும் தேசிய இனப்பிரச்சனை பற்றிய இன்னுமொரு குறியீட்டை இங்கு பார்க்கலாம்.
குறியீடு பற்றிய தெளிவான அறிவு இருந்தால் மட்டுமே நாடகத்தில் அதைப்பிரயோகிப்பதை அல்லது ஒரு குறியீட்டு நாடகத்தைத் தெளிவான முறையில் எழுதுவதைச் சாத்தியமாக்கலாம்.
விவிலியத்தில் "எசேக்கியேல் என்ற ஒரு நூல் இருக்கிறது. இந்தநூல் எசேக்கியேல் என்ற தீர்க்கதரிசி முனிவரின் போதனைகளை உள்ளடக்கியுள்ளது. இந்நூலில் புத்திக்குப் புரியாத பல புதிர்கள் இருக்கின்றன. காட்சிகள், கற்பனைகள், குறியீடுகள் முதலியவற்றின் புதையலாகவும் இது இருக்கின்றது. பார்க்கப்படாத மற்றும் பார்க்கவியலாத ஒன்றின் பார்வைக்குரிய உவமைகளை, உருவகங்களை வகைதொகையாகக் கொண்டுள்ள நூல் இது.
எசேக்கியேல் என்ற இந்த நூலின் வரலாற்றுப் பின்னணியைப் புரிந்துகொண்டால்தான் இங்கு ஆராயப்படவிருக்கும் குறியீட்டியலைத் தெளிவாகப் புரிந்துகொள்ளமுடியும்.
பபிலோனிய அரசன் நபுக்கோதனசார், கி.மு 598ஆம் ஆண்டில் யூதேயா நாட்டின் மீது படையெடுத் தான். பணியமறுத்த யூதர்களைத் தன் நாட்டிற்கு அடிமைகளாக நாடுகடத்தினான். யூத மன்னன் செதேசியாசை அரியணையில் அமர்த்தினான். சில ஆண்டுகளுக்குப்பின் இவன் (செதேசியாஸ்) எகிப்துடன் கூட்டுச் சேர்ந்து பபிலோனியாவை அதாவது நபுக்கோதனசாரை எதிர்த்துப்போரிடத் தொடங்கினான். இதைக் கேள்வியற்ற நபுக்கோதனசார் தன்னுடைய படைகளை அனுப்பி யூதேயா நாட்டை அழித்து, யெருசலேம் நகரைத் தீக்கிரையாக்கி, யூதமக்களை அடிமைகளாக பபிலோனியாவிற்கு நாடுகடத்தினான். செதேசியாஸ் சிறைப்பிடிக்கப்பட்டு பபிலோனுக்கு கைதியாக அனுப்பப்பட்டான். அவனது மக்கள் அவன் முன்னிலையில் கொல்லப்பட்டனர். அவனும் அவனது கண்கள் பிடுங்கப்பட்டு பபிலோனியாவிலேயே இறந்தான். யெருசலேமின் முதல் முற்றுகையின் போது தன்னுடைய மனைவியை இழந்த எசேக்கியேல் தீர்க்க முனிவர் பபிலோனியர்களால் சிறைபிடிக்கப்பட்டுப் பபிலோனியாவிற்குக் கொண்டு செல்லப்பட்டார். எனினும் பபிலோனியாவில் எசேக்கியேல் பகைவர்களால் மிகவும் கண்ணியமாக நடத்தப்பட்டார். இவர் கி.மு 598ஆம் ஆண்டிலேயே குடியமர்த்தப்பட்டார்.
அந்நிய நாடான பபிலோனியாவில் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் தங்கியிருந்து, அடிமைப்பட்டுக்கிடந்த தனது மக்களுக்கு நீதிநெறியையும், ஆத்மீகத்தையும், தேசிய உணர்வையும் ஊட்டினார். இவர் ஆழ்ந்த
18
ஜரலை - டிே

ക്രീg eg:ക്ര
ராஜேஸ்வரன்
புலமைமிக்கவராகவும், கற்பனை வளம் நிறைந்தவராகவும், உறுதியான கடவுள் நம்பிக்கையுடையவராகவும் விளங்கினார். இவருடைய சமூகநோக்கு ஆழ்ந்த கருத்தியல் கொண்டதாகவும், உண்மையான சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்டதாகவும் இருந்தது.
தனது மக்கள் அடிமைகளாக நாடு கடத்தப்பட்டபோதிலும், அவர்களிடத்தில் தேசிய இன உணர்ச்சியையும், உண்மையான சமத் துவ சகோதரத்துவத்தையும் அது தொடர்பான உளப்பாங்கையும் கட்டி எழுப்புவதில் தீவிரகவனம் செலுத்தினார். பபிலோனில் யூதர்கள் குடியமர்த்தப்பட்ட இடங்களுக்குச் சென்று அவர்களோடு பேசி, அளவளாவி, ஆறுதல் அளித்து, நம்பிக்கையூட்டி விடுதலைக்காக இறைவனை இடையாறாது பிரார்த்திக்கும்படியும் அறிவு புகட்டிக் கொண்டிருந்தார். பபிலோனின் அடிமைத்தனத்திலிருந்து தங்களைக் காப்பாற்றும்படி மக்கள் அவரிடம் இரந்து வேண்டிக்கொண்டனர்.
தேசிய இன விடுதலைபற்றி சென்றதொடரில் அரசு, அரசன் பற்றிய அவரது நோக்கை அவர் எடுத்தாண்ட குறியீட்டின் மூலம் விளக்கியிருந்தேன். "நல்ல ஆயன் நானே" என்ற குறியீட்டின் மூலம் அனுதின உணவை அனைவரும் பெறவும், அதற்கான அனுமதியுள்ள சமூகத்தைப் படைக்கவும் அதாவது எல்லோரும் இன்புற்றிருப்பதற்கான ஒரு சமூக சூழலை அரசு அல்லது அரசன் மக்களுக்கு உத்தரவாதம் செய்யவேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக, ஆணித்தரமாக எடுத்துரைத்த எசேக்கியேல் தேசிய விடுதலை பற்றிய இன்னும் ஒரு குறியீட்டை நமது சிந்தனைக்கு முன்வைக்கின்றார்.
ஒரு நாள் பபிலோனில் எசேக்கியேல் இறைவனை நோக்கி ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். அந்த வேளையில் அவர் ஓர் அகக்காட்சியைக் கண்டார். அந்தக் காட்சியில், கடவுளின் ஆவி அவரைத் தூக்கிச்சென்று ஒரு பள்ளத்தாக்கின் நடுவில் நிறுத்தியது. அங்கே எண்ணற்ற மனித எலும்புச் சிதைவுகள் சிதறிக்கிடந்தன. அப்பொழுது கடவுளுடைய ஆவிக்கும், எசேக்கியேலுக்குமிடையில் நடந்த உரையாடலைப் படித்துப் பாருங்கள்.
கடவுளின் ஆவி:
"மானிடா! இந்த எலும்புகள் உயிர்பெற முடியுமா?" எசேக்கியேல்:
"தலைவராகிய ஆண்டவரே! உமக்குத்தான் தெரியுமே" கடவுளின் ஆவி:
"நீ இந்த எலும்புகளுக்கு இறைவாக்குரை! உலர்ந்த எலும்புகளே! ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள். நான் உங்களுக்குள் உயிர் மூச்சுப்புகச் செய்வேன். நீங்களும் உயிர் பெறுவீர்கள். நான் உங்களை நரம்புகளால் தொடுப்பேன். உங்கள்மேல் தசையைப் பரப்புவேன். உங்களைத் தோலால் மூடுவேன். பின் உங்களுக்குள் உயிர் மூச்சுப்புகச் செய்வேன். நீங்களும் உயிர் பெறுவீர்கள். அப்போது நானே ஆண்டவர் என அறிந்து கொள்வீர்கள் என்று அவர்களிடம் சொல்." கடவுளுடைய ஆவி கட்டளையிட்டபடி எசேக்கியேல் எலும்புகளுக்கு இறைவாக்குரைத்தார். அவர் இறைவாக்கு
சம்பர் 2005 而呜确

Page 21
உரைக்கையில் உராயும் எலும்புகளின் ஓசை கேட்டது. ஒவ்வொரு எலும்பும் தனக்குரிய எலும்புடன் சேர்ந்துகொண்டது. எசேக்கியேல் பார்த்துக்கொண்டிருக்கையிலேயே அவற்றில் நரம்புகள் ஏற்பட்டு, தசைதோன்றி, தோல் அவற்றின்மேல் மூடியது. ஆனால் அவற்றில் இன்னும் உயிர் வரவில்லை. பின்னர் கடவுளின் ஆவி எசேக்கியேலிடம் கூறியது:
"மானிடா இறைவாக்குரைத்து உயிர் மூச்சிடம் சொல். தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே. நான்கு காற்றுக்களிலிருந்தும் உயிர் மூச்சே வா, நீ வந்து கொலையுண்ட இவர்களுக்குள் புகு, அப்பொழுது இவர்கள் உயிர்பெறுவர்"
கடவுள் ஆணையிட்டபடி எசேக்கியேல் இறைவாக்கு உரைத்தார். உடனே அவர்களுக்கு உயிர்மூச்சுப் புகுந்தது. அவர்கள் உயிர் பெற்று, காலூன்றி மாபெரும் படைத்திரள்போல் நின்றனர். கடவுள் எசேக்கியேலிடம் மீண்டும் கூறினார்.
"மானிடா! இந்த எலும்புகள் இஸ்ராயேல் வீட்டார் அனைவரையும் குறிக்கும். அவர்களோ "எங்கள் எலும்புகள் உலர்ந்துபோயின. எங்கள் நம்பிக்கை அற்றுப்போய் விட்டது. நாங்கள் துண்டிக்கப்பட்டு விட்டோம்’ எனச் சொல்கிறார்கள். எனவே இறைவாக்குரைத்து அவர்களிடம் சொல். தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: என் மக்களே! இதோ நான் உங்கள் கல்லறைகளைத் திறக்கப் போகிறேன். உங்களை உங்கள் கல்லறை களினின்று மேலே கொண்டுவருவேன். உங்களுக்கு இஸ்ராயேல் நாட்டைத் திருப்பிக் கொடுப்பேன். அப்போது என் மக்களே! நான் உங்கள் கல்லறைகளைத் திறந்து உங்களை அவற்றிலிருந்து வெளிக்கொணர்கையில், நானே ஆண்டவர் என்பதை அறிந்து கொள்வீர்கள். என் ஆவியை உங்கள் மீது பொழிவேன். நீங்களும் உயிர் பெறுவீர்கள் நானும் உங்களை உங்கள் சொந்த நாட்டில் குடியமர்த்துவேன்" உலர்ந்த எலும்புகள் - கல்லறைகள் (அடிமைத்தனம்) மரணம் - உயிர்ப்பு (விடுதலை) என்பன குறியீடுகளாகக் குறிப்பிடப்பட்டள்ளன.
> உலர்ந்த எலும்புகள் - பபிலோனிய அடிமைத்
தனத்தில் உலர்ந்துபோன இஸ்ராயேல் மக்கள். > கல்லறைகள் - அடிமைத்தனம் (மரணம்). >உயிர்ப்பு - விடுதலை.
எனவே, பபிலோனில் உலர்ந்த எலும்புகள்போல், எதிர்காலம் பற்றிய நம்பிக்கையே உலர்ந்துபோய், கல்லறையாகிய அடிமைத்தனத்தில் மரணித்துப்போயிருந்த இஸ்ராயேல் மக்கள் செழுமை வாழ்வுக்குள் உயிர்பெறுவார்கள், அதாவது விடுதலை பெறுவார்கள் என்று இந்தக் குறியீடுகளின் மூலம் எசேக்கியேல் எடுத்துரைக்கிறார்.
இங்கு மரணம் நேரடியாகச் சொல்லப்படவில்லை யாயினும் கல்லறை என்பதை அடிமைத்தனத்திற்கும், மரணத்துக்கும் உருவகப்படுத்துகிறார் எசேக்கியேல். பாவத்தின் சம்பளம் மரணம் என்று விவிலியம் கூறும் அர்த்தத்தில் இது சுட்டப்படவில்லை. ஒருவேளை, அந்த அடிமைத்தனத்திற்கு 酶 ஜூலை - டிசெ

fie కెరీ 5Ron amr *」 ཚོཌི་ ༈ ༈ ༼་་༔ ད་ و ؛ في بلد نور * "تية
r
இஸ்ராயேல் அரசியல் தலைமையின் தவறானபோக்கும், அநீதியான நடைமுறையும், நெறிபிறழ்ந்த வாழ்க்கையும் காரணிகளாக இருக்கலாம். மேலும் உயிர்ப்பு என்பதை இம்மை வாழ்வுக்கு அப்பாலான ஒரு மறுமையை அடைதல் என்ற அர்த்தத்தில் அதாவது மோட்சத்தை அடைதல் என்ற அர்த்தத்தில் குறிப்பிடவில்லை. அது இந்த உலகத்தில் ஒரு செழுமையான வாழ்வுக்குள் பிறப்பெடுத்தல் என்பதையே குறிக்கிறது.
இன்னும் சிறப்பாகச் சொல்ல வேண்டுமானால், உலகம் ஒரு மாயை அல்ல. அது மனித சமுதாயத்தின் மெய்யான வாழ்விடம் இதிலுள்ள அவலங்கள், அழுக்குகளான அடிமைத்தனம், ஏற்றத்தாழ்வு, ஒடுக்குமுறை, ஒழுக்கக்கேடு, மனக்கட்டுக்குள் மனிதத்தன்மைக்கு ஒத்துவராத பண்பாட்டுத்தளைகள், சிந்தனைகளிலிருந்து இந்த உலகம் விடுதலை பெறுதலை இதே உயிர்ப்பு என்ற குறியீடு சுட்டி நிற்கிறது. ஆத்மீகம் என்பது இந்த விடுதலைச் செயற்பாடுகளின் நிறைவேற்றத்தில், வெற்றியில் இனங்காணப்படவேண்டும். அப்போதுதான் அது முழுநிறைவான ஆத்மீக செயற்பாடானதாக இருக்கும். பிரச்சனைகளுக்கு அஞ்சி, சிலுவைகளைச் சுமப்பதற்குத் திராணியற்று, பிரச்சனைகளிலிருந்து ஒதுங்கி, ஒளித்து மனத்தளவில் மனப்பால் குடிப்பது ஆத்மீகத்தை இழிவுபடுத்துவதாகும்.
இஸ்ராயேலர்களை அவர்களது கல்லறை வாழ்வான அடிமைத்தனத்திலிருந்து, மரணத்திற்கு ஒப்பான அடிமைத் தனத்திலிருந்து, தேசிய ஒடுக்கு முறையிலிருந்து விடுதலை பெறச்செய்து அவர்களது சொந்த நாட்டில் குடியமரச்செய்வதை இந்தக் குறியீட்டின் மூலம் உணர்த்துகிறார் எசேக்கியேல்.
தேசிய இன விடுதலை என்பது ஒருபக்கச்சார்பாக, ஒரு ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் ஆளும் அதிகார வர்க்கம் பெற்றுக்கொள்ளும் உரிமைகள், சலுகைகளுடன் வரையறுக்கப் படுவதில்லை. அரசன்தொட்டு ஆண்டிவரை, பண்டிதன்தொட்டுப் பாமரன் வரை தனது ஆரோக்கியமான வாழ்வுக் கான வாழ்வாதாரங்களைப்பெற்று வாழ்தல் என்ற அர்த்தத்தில்தான் எசேக்கியேல் இதைக்குறிப்பிடுகின்றார்.
குறியீடுகளின் இந்தப் பூடகமான தன்மைகளைப் பற்றி தெளிவான அறிவு நமக்கு இருந்தால்தான் நாடகத்தில் குறியீட்டைப் பொருத்தமான முறையில் பிரயோகிக்கமுடியும். குறியீட்டை நாடகத்தில் மிகவும் பொருத்தமானதாகப் பிரயோகிப்பதால், நாடகத்தின் அழகியல் தன்மை அதிகரிக்கிறது. நாடகத்தின் உள்ளடக்கத்தைச் சுருக்கமாகவும், சுவையாகவும், சூடாகவும், தெளிவாகவும் புரியவைப்பதில் குறியீடுகள் மிகுந்த பயனுள்ளதாக அமைகின்றன. குறியீட்டை மையமாகவைத்து நாடகத்தைப் படைக்காமல், நாடகத்தை மையமாகவைத்து குறியீடு அமைக்கப்பெறவேண்டும். குறியீடு அந்த நாடகச்சூழலில் தெளிவானதாகச் சிக்கலின்றி இருக்கவேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.
(தொடரும்.)
தவறு திருத்தம் கலைமுகம் கடந்த ஏப்பிரல் ஜூன் 2005 இதழின் முன்பக்க உள் அட்டையில் இடம்பெற்ற வரலாற்றில் பதிவாகிய முக்கியநிகழ்வுகள் என்ற தகவலில் மறைந்த திருத்தத்தை இரண்டாம் அருளப்பர் சின்னப்பரின் இறுதி நல்லடக்க நிகழ்வு தினம் 03.04.2005 என்பதற்குப் பதிலாக 03.07.2005 என தவறாக இடம்பெற்றுவிட்டது தவறைத் திருத்தி வாசிக்குமாறு வாசகர்களை வேண்டுகின்றோம்.
bLust 2005 19

Page 22
இறந்துவிடும் எல்லா எழுத்தாளரும் அஞ்சலிக்குரியவரென நான் கருதவில்லை. முதலில் எழுத்தாளனின் வாழ்வு மதிப்பிற்குரியதாக அமைந்திருக்கவேண்டும்; அதன்பிறகு அவனது எழுத்துத்துறைப் பங்களிப்பின் முக்கியத்துவம் பார்க்கப்படவேண்டும்.
சுந்தர ராமசாமி 15.10.2005 இல் 35T6)LDT60Tsrit.
அவரது மறைவு ஏற்படுத்திய தாக்கம் பரந்த அளவில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. செய்தித்தாள்கள், சஞ்சிகைகள், பல்வேறு தரத்து எழுத்தாளர்களால் அவர் பற்றிய மதிப்பார்ந்த உணர்வலைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
சு. ரா வின் நம் பரிக் கைகளிற் கும் வாழ்விற்குமிடையே இருந்த ‘இசைவு முக்கியமானது; மலையாளக் கவிஞர் ஆற்றுார் ரவிவர் மாவின் பின் வரும்
கூற்றிலும் அது தெரிகிறது. e(
“... ஜே. ஜே. சில நவீன தமிழ் இலக்கியத்தில் குறிப்புகளில் வரும் ஜே ஜே தமிழகத்தைச் சேர்ந்த சுந்த வைப் பே ால 西 ான 乐 卧 தர தமிழகத்தில் மட்டுமல்லாமல் : ராமசாமியும் என்று எனக்குத் 0SS LaaqS S SCS LqSLS S 0S0S L L தோன்றியதுண்டு. சிந்தனை, இலக்கியத்தில் அக்கறை 6ᏁéᎦ5 வாக்கு, செயல் ஆகியவற்றை இழப்பாக உ இணைப் பதற்கான தவிர நாவல், சிறுகதை, கட்டுரை, முயற்சி. தன் குழப்பமான ஆரோக்கியமான Li6OLL காலகட்டத்திலும் கூட எதையும் அவர்களுக்ககு அஞ்சலியா மிகைப் படுததுவ தரி லி லை, பிரசுரி
இனிப்புச் சேர்ப்பதில்லை.”
கேரளத்தின் பிரபல நாளேடான 'மாத்ருபூமி’ ஆசிரியர் தலையங்கம் எழுதி (17.10.2005) கெளரவித்துள்ளது. “இதயபூர்வமான உறவிருந்தது சுந்தர ராமசாமிக்கும் மலையாள மொழிக்குமிடையில், நவீனத்துவத்தின் முன்மொழிதலையும் மொழியின் புதிய வகைப்பாடுகளையும் தமிழுக்கு அறிமுகம்செய்த சுந் தர ராமசாமி, மலையாளிகளிடையே மலையாளப் படைப்பாளிகளைப் போலவே அறிமுகம் பெற்றிருந்தார்’ என்று தொடங்கிய அத் தலையங் கம் , ". அவரது மறைவு மலையாளிகளைப் பொறுத்தவரை பக்கத்து வீட்டில் நிகழ்ந்த சோகமல்ல, தங்கள் வீட்டில் நிகழ்ந்த சோகம்” என்று முடிவடைகிறது. பல்வேறு நோக்குநிலைகொண்ட எழுத்தாளர்களுடனும், வளர்ந்தோர் - இளைஞர் என்ற வேறுபாடு காட்டாது மதிப்புடன் தொடர்புகளைப் பேணிவந்தவள் அவள்; மற்றவரின் கருத்துக்களிற்கு அக்கறையுடன் செவிகொடுத்து ஊடாட்டம் நிகழ்த்துவார். அவரது எளிமையும் வெளிப்படைத்தன்மையும் உபசரிக்கும் பண்பும் எல்லோரையும் ஆகள்வழித்ததில் வியப்பேதுமில்லை.
நண்பர் நுட்மான் தனது கலாநிதிப் பட்ட ஆய்விற்காக 1984 இல், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்குச் செல்லவிருந்தார். திருவனந்தபுரம் வழியாக அவர் செல்வதால், நாகர்கோவிலில் சுராவுடன் சில நாள்கள் தங்கிச்செல்லுமாறு முதல்நாள் கொழும்பில் சந்திக்கையில் அவரிடம் தெரிவித்தேன்; அவ்வாறே சில நாள்கள் அங்கு தங்கினார். சில கிழமைகளின் பின் அவர் எனக்கு எழுதிய கடிதத்தில், "...உண்மையில் அவர் ஓர் அபூர்வ மனிதர்தான் என்று சுராவைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார்; முதற் சந்திப் பே நு. மானில் அத்தகைய பதிவினை 2O ஜூலை - பு
 
 
 
 
 
 
 
 

உருவாக்கிவிட்டது!
ஆயினும், எதிர்மறையான அபிப்பிராயங்களைச் சிலர் சு.ரா. பற்றித் தெரிவிக்கின்றனர்; பிராமணியச் சார்பானவர், கொம்யூனிச எதிர்ப்பாளர் என அவர்மீது குற்றஞ்சாட்டுகின்றனர். “பிள்ளை கெடுத்தாள் விளை’ என்ற அவரது அண்மைக்காலச் சிறுகதை தலித்துகளிற்கு எதிரானது என்ற விமர்சனத்தையும் முன் வைக்கின்றனர். ஆனால் சாதி, மத அடையாளங்கள் - உணர்வுகளிற்கு அப்பாற்பட்டவர் சு.ரா. எனப் பலர் தமது அனுபவங்களின் ஊடாகத் தெரிவிக்கின்றனர். ‘தலித்’ இயக்கத்தின் முக்கிய புத்திஜீவிகளில் ஒருவரான ரவிக்குமாரும், சுரா. சாதி உணர்வுகொண்டவரல்லரெனத் தெரிவிக்கிறார்.
இளமைக் காலத்தில் பொதுவுடைமைக் O கொள் கையில் ஈடுபாடு கொண்ட சுரா, தமிழ் நாட்டின் @@@ பொதுவுடைமைத் தலைவரான
ப. ஜீவானந்தத்துடனும் (ஜீவா), கட்சியுடனும் நெருக்கமான
U6) nes
முக்கியமான இடத்தை வகித்த ராமசாமி அவர்களின் மறைவு உலகில் பரந்து வாழும் சீரியதமிழ்
தொடர்பு வைத்திருந்தார். பொது வுடைமைக் கொள்கை மீதான ஈடுபாடும் மதிப்பும்
ாண்ட தமிழர் மத்தியிலும் பெரும் அவரிடம் இறுதி வரை ணரப்பட்டுள்ளது. இருந்துவந்தன. ஆனால், 1956 கவிதை என சகல துறைகளிலும் இல் ஹங்கேரியில் நிகழ்ந்த க்களைத் தந்த சுந்தர ராமசாமி கொடுர ஒடுக்குமுறைகள், க'கலைமுகம் இக் கட்டுரையை ஸ்ராலினால் ட்ரொட் ஸ்கி |க்கின்றது. கொலை செய்யப்பட்டமை
போன் றன Ֆ| 6)] 60) Մ
மனநெருக்கடிக்குள் தள்ளின. பொதுவுடைமைக் கட்சிகளின் 'இறுகிய தன்மை - நடைமுறைப் பிறழ்வுகள் - இடதுசாரி கலை, இலக்கிய அமைப்புகளைச் சேர்ந்தவர்களின் கொள் கைகளும் நடைமுறைகளும் எண் பன பற்றி சுதந்திரத்தன்மையுடன் அவர் கேள்வி எழுப்பி விசாரணை புரிந்தார்; அவற்றை வெளிப்படுத்தினார்; இவற்றாலேயே அவர் "கொம்யூனிச எதிரி’ எனத் தவறாக குற்றஞ்சாட்டப்படுகிறார். இலங்கையிலும் ‘புதிய பூமி’ பத்திரிகையாலும், 'மல்லிகை"யில் டொமினிக் ஜீவாவினாலும் முன்பு தெரிவிக்கப்பட்ட அவதூறுக் குறிப்புகள் பொருட்படுத்தத்தக்கவை அல்ல.
அவரது பங்களிப்புகளாக நாவல், சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, விமர்சனக் கட்டுரைகள், ஆரம்பகால காலச்சுவடு இதழ்கள் என்பன உள்ளன. சு.ரா. நவீனத்துவத்தை ஆழமாகப் பிரதிபலித்துள்ளார்; அவர் காட்டிய பல்துறை அக்கறைகளிலும், படைப்புகளிலும், மொழிநடையிலும் இதனைக் காணலாம்.
ஒரு மரத்தை மையமாக வைத்து சமூகமாறுதல்களை வெளிப்படுத்துவதாக ஒரு புளியமரத்தின் கதை நாவல் உள்ளது. தமிழ்க் கலாசாரச் சூழல் - அதுபற்றிய கோபமும் எள்ளலுங்கொண்ட விமர்சனம் என்பவற்றை, மலையாளச் சூழலை முன்வைத்து வெளிப்படுத்துவதாக 'ஜே. ஜே. சில குறிப்புகள்’ நாவல் உள்ளது. இரண்டு படைப்புகளுமே நவீனத் தமிழ் இலக்கியத்தில் முக்கியமானவை.
அவரது மொழிநடை இறுக்கமும் கூர்மையும் நிறைந்தது; எள்ளல் விசேடப் பண்பாக அதில் இணைந்து வருவதும் டிசெம்பர் 2005 DUS

Page 23
சுவாரசியத்தைத் தூண்டும். உதாரணத்திற்கு, "ஜே. ஜே. சில குறிப்புகள்’ நாவலில் அடிக்குறிப்பாகத் தரப்படும் பகுதி :
*திருச்சூர் கோபாலன் நாயர்: அலெக்சாண்டர் டுமாவின் மூன்று போர்வீரர்’களை அடியொற்றி எழுதப்பட்ட முதல் சரித்திர நாவலின் ஆசிரியர். குதிரையில் கதாநாயகன் பம்பா நதிக்கரையோரம் மாலை மஞ்சள் வெயிலில் சிட்டாய்ப் பறந்து செல்லும் வர்ணனைக்குப் பெயர்போனது. பம்பா நதியில் முதலைகள் வாய் பிளந்து நிற்க, மேலே பலா மரத்தின் உச்சங்கிளையில் தொங்கிக்கொண்டிருக்கும் இளவரசி உம் மிணிக் குட்டியை, அவளைக் காதலித்துத் துரத்திக்கொண்டு வரும் நூற்றுக்கணக்கான சிற்றரசர்களை - இதில் மூன்று பேர் பாண்டியர்கள் - கொன்று குவித்துவிட்டு, கதாநாயகன் மரத்தில் தாவியேறி அணைத்துக்கொள்ள, மலை வாயிலில் சூரியனும் விழ, தென்றலும் தவழ, நாவலும் முடிகிறது.’ - பக். 20
அவரது படைப்பாற்றலைப் பற்றிக் கதைக்கையில், இரண்டு பிறமொழிப் படைப்புக்களைத் தொடர்புறுத்த விரும்புகிறேன். எஸ். கே. பொற்றெக்காட் என்ற புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர், 'அவளுடைய கேரளம்' என்ற சிறுகதையை எழுதியுள்ளார் (சங்கமம் தொகுதி - பக். 220). அதில் மலேயாவில் நீண்டகாலம் வாழும் ஒரு மலையாளியின் வளர்ப்பு மகள், கேரளம் பற்றிய கனவுகளுடன் அங்கு செல்லத் தவிப்பதே மையமாக உள்ளது. சுந்தர ராமசாமி 'அக்கரைச் சீமையில்' என்ற சிறுகதையை எழுதியுள்ளார்; அதில் ஆபிரிக்காவில் - றொடீசியா நாட்டில் நீண்டகாலம் வாழும் ஒரு தமிழன், தான் பிறந்த திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஊரிற்குச் செல்லத் தவிக்கும் உணர்வுகளே மையம். இரண்டையும் படிக்கும்போது சுந்தர ராமசாமியின் எழுத்துத்திறன் மிகுந்த பாதிப்பைத் தருகிறது.
'ஒரு புளியமரத்தின் கதை நாவலில் தாமோதர ஆசான்' முக்கியபாத்திரம், இளைஞர்கள் சூழ்ந்திருக்க அவர் பல கதைகளை செய்திகளைக் கூறியபடி இருப்பார். ஹிந்தி மொழியில் புகழ்பெற்ற எழுத்தாளரான தர்மவீர் பாரதி” எழுதிய நாவலில் ஒன்று 'ஏழாவது குதிரை’; இதில் வரும் 'மாணிக் முல்லா' என்ற பாத்திரமும் இளைஞர் களிற்குக் கதைகூறுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டு பாத்திரங்களினதும் உருவாக்கத்தில் - சுந்தர ராமசாமியின் மேலாண்மை ஓங்கியிருப்பதாகவே, ஒரு வாசகனாக உணர்கிறேன்.
தகழியின் 'செம்மீன்', ‘தோட்டியின் மகன்' ஆகிய மலையாள நாவல்களின் நேரடி மொழிபெயர்ப்புகள் உயிர்ப்பு நிறைந்தவை. பல்வேறு மொழிக் கவிதைகளை ஆங்கிலம் வழியாக மொழிபெயர்த்தார். பொருள், தொனி, வடிவ வேறுபாடுகளைத் தமிழ் வாசகரிற்குப் பரிச்சயப்படுத்துபவை அவை; கவிஞர்களைப் பற்றிய விரிவான குறிப்புகளும் வாசகரின் புரிதல் தளத்தை அகலிப்பவை.
கலைஞன்பெற்ற பாதிப்புகள், அவற்றின் தேர்வுஒழுங்கு, பார்வை என்பவற்றின் வெளிப்பாடாகவே படைப்பு உருவாகும் என்று கருதியவர் சுரா, அதனைப்போல, வாசகனாக ஒரு படைப்பு ஏற்படுத்தும் பாதிப்பு - இரசனையுடன் இணைந்து - அவனது பார்வையுடன் விமர்சனமாக வெளிப்படவேண்டுமென்றும் கருதினார். அவரது விமர்சனக் கட்டுரைகள் இத்தன்மையில் அமைந்தவை; படைப்புத்திறனும் அவற்றில் இசைந்திருக்கும். புதுமைப்பித்தனின் மனக்குகை ஓவியங்கள', 'காற்றில் கலந்த பேரோசை’ முதலியவற்றில் இப்பண்புகளைச் சிறப்பாய்க் காணமுடிகிறது.
'காலச்சுவடு காலாண்டு இதழை 1988 ஜனவரி - 1989 ஒக்ரோபர் வரை நடாத்தி, எட்டு இதழ்களை வெளியிட்டார்; 1991 ஒக்ரோபரில் விரிவான சிறப்புமலரும் வெளிவந்தது. 'காலச்சுவடு
面御则邸 ஜூலை - டிே

தமிழ் ச் சிந்தனையை ஆழப் படுத் தும் நோக்க தி தை முதன்மையாகக்கொண்ட ஒரு காலாண்டிதழ். படைப்பு, சமூக விமர்சனம், சரித்திரம், தத்துவம், கலைகள் ஆகிய துறைகளைச் சார்ந்த எழுத்துகளை இதன் வளர்ச்சிப்போக்கில் இயன்றவரை தரமாகத் தர இது முயலும். தமிழ்நாடு, இந்தியா, உலக நாடுகள் ஆகியவற்றின் கலாசாரத் தளங்களைச் சார்ந்த மேலான சிந்தனைகளையும், படைப்புகளையும் தமிழாக்கித் தருவதில் இது கவனம் எடுத்துக்கொள்ளும்.” என முதலிதழில் குறிப்பெழுதினார். மலையாள மார்க்சியச் சிந்தனையாளரும் இலக்கியவாதியுமான எம். கோவிந்தன், லெனின் மதிப்பளித்த மார்க்சியவாதியும் வங்காளியுமான எம். என். ராய், மற்றும் கோசாம்பி முதலிய முக்கிய இந்திய ஆய்வறிவாளரை - அவர்களின் ஆக்கங்கள் சிலவற்றுடனும் - காலச்சுவட்டில் அறிமுகப்படுத்தினார். ரி. எஸ். எலியட், சதாத் ஹசன் மன்ரோ, கா.'வ்கா, பைஸ் அகமத் பைஸ், பை ஜுயி முதலிய புகழ்பெற்ற இலக்கிய ஆளுமைகளும் இடம்பெற்றனர்.
ஈழம் பற்றிய அக்கறை கொண்டவராக சு.ரா. இருந்துவந்துள்ளார்; ஈழத்தைச் சேர்ந்த இலக்கியவாதிகள் பலருடன் தொடர்புகளைப் பேணிவந்தார்; அவர்களில் இ. பத்மநாப ஐயர் முக்கியமானவர். ஈழத்துப் படைப்பாளிகளில் மு. தளையசிங்கத்தின் மீது உயர்வான மதிப்புக் கொண்டுள்ளார். 1983 இல் இங்கு தமிழர்மீது பாரிய வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டபோது, அதனைக் கண்டித்து, கலை - இலக்கியவாதிகள் இணைந்து மதுரையில் கூட்டமொன்றை நடாத்தினர்; அதில், சு.ரா. முக்கிய பங்காற்றினார். "இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்த காலத்தில் - அந்த நெருக்கடிச் சூழலில் ஒரு எழுத்தாளனின் மனப்பதிவுகளைக் 'காலச்சுவடு இதழில் வெளியிட விரும்பினார். அவ்வாறு இங்கிருந்து அனுப்பப்பட்ட, நா. அமுதசாகரன் எழுதிய ‘சிங்கத்தின் நகங்களும் அசோகச் சக்கரமும்' என்ற விரிவான கட்டுரையை - இரண்டாவது இதழில் - வெளியிட்டார்; அக்கட்டுரையின் மொழிபெயர்ப்பு "ஜெயகேரளம் என்ற மலையாளப் பத்திரிகையிலும் வெளியானது. ஒவியர் மாற்குவைக் கெளரவித்து யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட "தேடலும் படைப்புலகமும் என்ற நூலைப்பற்றி, தமிழக நவீன ஓவியர் எஸ். என். வெங்கட்ராமன் எழுதிய விரிவான கட்டுரையொன்றையும் வெளியிட்டு முக்கியத்துவப்படுத்தினார்.
கனடாவிற்கும் இலண்டனிற்கும் பயணித்தபின், 1993 இல், தாழ்ந்து பறக்கும் தமிழ்க் கொடி' என்ற கட்டுரையினை ‘சுபமங்களா' இதழில் எழுதினார்; அதில் ஈழத் தமிழர் மீதான கரிசனையும் மதிப்புக்கலந்த வியப்பும் வெளிப்படுகின்றன. அதிலிருந்து ஒரு பகுதி !
“ஈழத்தில் நடக்கும் வீரம்செறிந்த போராட்டங்களின் வீடியோ படங்களின் பகுதிகள் எனக்குப் பார்க்கக்கிடைத்தன. பி.பி.சி. தயாரித்திருந்த செய்திப் படங்களின் பகுதிகளையும் பார்த்தேன். ஈழத்துத் தமிழ் வாழ்க்கை குன்றி அங்கு வெறுமை பரவிக் கிடக்கும் என்ற என் கற்பனைக்கு மாறாக, ஜீவகளை துடிக்கும் வாழ்க்கை இப்போதும் அங்கு இருந்துகொண்டிருப்பது தெரிந்தது. தமிழ் விழாக்கள் கோலாகலமாக நடைபெறுகின்றன. கர்னாடக ராகங்களை அடிப்படையாகக்கொண்ட மெல்லிசைகளில் மனத்தைத்தொடும் கவிதைகளைப் பெண்கள் அற்புதமாகப் பாடுகிறார்கள். இளைஞர்கள் அற்புதமாகப் பாடுகிறார்கள். இப்பாடல்களுக்கு இசையமைத்தவர் மனத்தை அள்ளும் மெட்டுகளைப் புனைவதில் வல்லவர் என்பதில் சந்தேகமேயில்லை.”
ஈழத்தவரின் இலக்கியங்கள் தொடர்பாகத் தமிழகத்தில் உடன் செய்யவேண்டிய ‘மூன்று காரியங்கள்’ பற்றிய Libiff 2005 2

Page 24
குறிப்புகளையும் அதில் முன்வைத்துள்ளார்.
1982 பங்குனியில், திருவனந்தபுரம் விமான நிலையத்தி முதல்முறையாக அவரைச் சந்தித்தேன்; பிந்திய ஆண்டுகளிலு பல தடவைகள் சந்திக்கவும் - அவரது வீட்டில் தங்கவும் வாய்ப்புக கிட்டின; கடிதத் தொடர்பும் இருந்தது. படைப்பாற்றல், வீச்சுநிறைந் சுயமான கருத்துகள் என்பவை அவர் மீது மதிப் ை ஏற்படுத்துகின்றனதான்; ஆனாலும் பந்தா அற்ற எளிமையுட மனந் திறந்த உரையாடலும், மாற்றுக் கருத்துகளிற்கு அக்கறையுடன் செவிகொடுத்தலும் போன்ற அவரது மேன்மையா? ஆளுமைப்பண்புகள் - மதிப்புடன் நேசத்தையும் உருவாக்குகின்றன 1980 இல் பத்மநாப ஐயரிற்கு எழுதிய கடிதமொன்றில் “.அடுத்த சந்தோஷ அதிர்ச்சி இந்த வருட ஆரம் மாதங்களில் கிடைத்தது. அலை ஒரு வருட பையின்ட் வால்யூ ஒரே வாரத்தில் ஆணி அடித்து உட்கார்ந்துகொண்டு படித்தே6 ஆத்மார்த்தமான பதிப்பு நிதானமும் நுட்பமும்.”
என்று குறிப்பிட்டுள்ள வரிகள் - 'அலை’யுட6 சம்பந்தப்பட்டவன் என்பதனால் - இன்றும் எனக்கு உற்சாகத்தை தருவனவாய் உள்ளன!
அவர் இறப்பதற்குச் சில நாள்களின் முன்னர் இலண்டனிலிருந்து தொலைபேசியில் கதைத்த பத்மநாப ஐய சுந்தர ராமசாமியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்தபோது அதிர்ச்சியாக இருந்தது. 15 ஆம் திகதி பின்னேரட ஏ. ஜே. கனகரத்தினா அவர்கள் ஐயர் தெரிவித்ததாக சுராவி மரணச்செய்தியைத் தொலைபேசியில் சொன்னார்.
அது நடந்துவிட்டதில் ஒருவித வெறுமை; தொடர்ந் இழப்புணர்வு. அவர்பற்றிக் கிளர்ந்த நினைவுகள்.
அன்றிரவு ஐயர் தொடர்புகொண்டு மேலதிக விபரங்கள் தந்தார். மறுநாள், தயாரிப்பிலிருந்த ‘தெரிதல்' இதழில் ஏற்கென:ே சேர்த்திருந்த ஒரு விடயத்தை நீக்கிவிட்டு, சுராவிற்கான அஞ்சலி குறிப்பை எழுதிச் சேர்த்தேன்.
எப்படியாயினும், இயற்கையின் நியதியை மானுடர் நா ஏற்பதைத் தவிர வேறு வழியில்லையே!
(யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை, "சுந்தர ராமசா நினைவுகள்' என்ற தலைப்பில், 7.12.2005 இல் நடத்திய அஞ்சலி கூட்டத்தில் ஆற்றிய உரையின் விரிவுபடுத்தப்பட்ட வடிவம்) ே
நேர்மையாய் வாழவேண்டுமாயின் வதைபடுதலும், குழம்பிக் கலங்குதலும், முட்டி மோதுவதும், பிழை புரிதலும், தொடங்குதலும் துTக் கியெறிதலும், மறுபடியும் தொடங்குதலும் மறுபடியும் தூக்கியெறிதலும், எந்நேரமும் போராடுதலும் , இழப்புக் கு உள் ளாதலும் இன்றியமையாதவை. மன நிம்மதி அது ஆன்மாவின் இழிநிலை.
வேல்தல் ஸ்தோஸ்
நல்ல மனிதன்
G. ந்தெடுக்கும்
 
 
 
 
 
 
 
 

5)
நன்றாகத் தான் வளர்த்திருக்கிறார்கள் பெண்ணை
܊
அவர்கள் பாராட்டினார்கள்
அவளது மைத்துனிகள் போல அதி நாகரிகமோ அதிக பேச்சோ இல்லை அவளிடம் மூத்தவர்கள் திருப்தியுடன் தலையசைத்தனர் பெற்றோர் பார்த்தவனையே
மணம் செய்து கொண்டாள். அவள் கடும் முற்போக்குமில்லை
2
சுத்தப் பட்டிக்காடுமில்லை ஒரு தாயான பிறகும் கூட மிகுந்த விவேகத்துடனுமில்லை படுமுட்டாள் தனமாகவுமில்லை
வீட்டை நன்கு நிர்வகித்தாள் கணவனை முறையாகப் போஷித்தாள்
ன்
அவனது உடுப்புக்களை 药 மினுக்கிவைத்தாள்
அவனுக்குத் தேனீர் தயாரித்தாள் சுதர்மா மிகவும் அடக்கமானவள் மிகவும் நல்லவள் திருமணங்கள் மரணச்சடங்குகள் தானம் கொடுத்தல்கள் எல்லாவற்றுக்கும் பொருத்தமான முறையில் றி தேவையான அலங்காரத்தோடு | -_. சென்று வந்தாள் தன் மார்பகத்தில் அந்தக் கட்டியை அவள் அவதானித்த போது அது பற்றி வெளியே பேச வெட்கப்பட்டாள் அரை வருட காலத்துள் அவள் இறந்து போனாள் அவளது அடக்கம்
மேலான நற்குணங்கள்
எல்லாமுமே.
ДITG) – A God'e Person and other Poems
ஈற்றில் கிடைத்தது
ខ្សត្រូភ្យូ
டிசெம்பர் 2005 酶

Page 25
ஒ_டுமலை
േണ്ണ്)
கவிமலை
கலாநிதி பண்டிதர் 8ெ. திருநாவுக்கரசு
31.10.1931 இல் திரைப்படம் தமிழில் பேசத் தொடங்கியது. முதல் இந்தியப் பேசும் படத்தினை இந்தி மொழியில் தயாரித்தளித்த வடநாட்டவரான அர்தேஷ் இரானி என்பவரே முதல் தமிழ்த் திரைப்படமான 'காளிதாஸ்' தயாரிப்பாளராவர். எச். எம். ரெட்டியின் இயக்கத்தில், நாடகமேடைகளில் பிரபல்யம் பெற்ற டி.பி. ராஜலஷ்மி கதாநாயகியாகவும், ஜி.பி.வெங்கடேசன், எல்.வி பிரசாத் ஆகியோர் பிரதான பாத்திரங்களிலும் அத்திரைப்படத்தில் நடித்திருந்தனர். நாடகமேடைப் பாடல்கள், தேசபக்திப்பாடல்கள் ஆகியவற்றுடன் தியாகராச சுவாமிகளின் தெலுங்குக் கீர்த்தனைகளுமாக 6 பாடல்கள் 'காளிதாஸ்' படத்தில் இடம் பெற்றிருந்தன. தமிழ்த் திரைப்படவுலகின் முதலாவது பாடலாசிரியராக மதுர பாஸ்கரதாஸ் வரலாறு படைத்தார். தமிழ்ச் சினிமாவின் தொடக்க காலத்தில் இதிகாச, புராண மேடை நாடகங்களே படம் பிடிக்கப்பட்டன. பாடல்களின் எண்ணிக்கையும் 50 முதல் 60 வரை காணப்பட்டது. முப்பதுகளின் பிற்பகுதியில் இவ்வெண்ணிக்கை சற்றுக் குறைந்தாலும் நாற்பதுகளின் இறுதிவரை குறைந்தது 25 பாடல்களாவது சிறியதும் பெரியதுமாகத் தமிழ்த் திரைப்படங்களில் இடம்பெற்றன. சொந்தக் குரலிலேயே நடிகர்கள் அனைவரும் பாடிவந்தனராயினும், நாற்பதுகளின் பிற்பகுதியிலிருந்து பின்னணிப் பாடகள், பாடகிகள் பயன்படுத்தப்பட்டனர். ஏ.வி. மெய்யப்பன் அவர்கள் தமது 'ரீவள்ளி' படத்தில் கதாநாயகியாக நடித்த குமாரி ருக்மணி பாடும் பாடல்களை, பி.ஏ. பெரியநாயகியைப் பாடச்செய்ததன் மூலம் பின்னணிக் குரலை முதன் முதலில் சேர்த்துக் கொண்டார். 1934 ஆம் ஆண்டு வெளியான "ரீ கிரஷ்ணலீலா" 60 பாடல்களையும், பவளக்கொடி 60 பாடல்களையும், 1949 இல் வெளியான "பவளக்கொடி" 28 பாடல்களையும், 1951 இல் வெளிவந்த "வேலைக்காரி" 28 பாடல்களையும் கொண்டிருந்தனவெனில் அக்காலத் தமிழ்த் திரைப்படங்களில் பாடல்களுக்கிருந்த முக்கியத்துவத்தினைப் புரிந்து கொள்ளவியலும், 1950களிலிருந்து பின்னணிப்பாடல் முறையே அதிகம் பின்பற்றப்பட்டமையால் திரைப்படங்களில் பாடல்களின் எண்ணிக்கையும் படிப்படியாகக் குறைவடையத் தொடங்கியதுடன், வசனம் பிரதான இடத்தைப் பெற்றுக்கொண்டது. 1960களில் பத்துக்கும் குறைவான பாடல்களே பொதுவாகத் திரைப்படங்களில் இடம் பிடித்தன. இன்று கமராமூலம் காட்சிகள் நகர்த் தப் பட்டுக் கதை கூறப் படும் தொழில் நுட்ப வளர்ச்சிக்காலத்திலும்கூட இசையும், பாடல்களும் இந்திய சினிமாவிலும், குறிப்பாகத் தமிழ்ச் சினிமாவிலும் முக்கியத்துவத்தை இழந்து விடவில்லை. சராசரியாக 6 பாடல்கள் வரையில் படங்களில்
酶 ஜூலை - டிசெ
 

இடம்பெறுகின்றன. 75 வருடத் தமிழ்த்திரைப்பட வரலாற்றில் விரல்விட்டு எண்ணக்கூடிய திரைப்படங்களே (அந்த நாள், பேசும் படம் முதலானவை) பாடல்கள் இல்லாமல் வெளிவந்துள்ளன. இசைப் பாடல்களின் ஈர்ப்பினால் இந்திய சினிமா இரசிகர்கள் கட்டுப்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.
நாட்டார் பாடல்கள், கர்நாடக இசைப்பாடல்கள், இந்துஸ்தானி இசைப்பாடல்கள், மெல்லிசைப்பாடல்கள், மெலடிப்பாடல்க்ள் என்றவாறு தமிழ்த்திரையிசைப் பாடல்கள் மக்களைச் சென்றடைந்த காலம் மாறி, இன்று "பொப் பாடல்கள் 'கானாப் பாடல்கள் எனத் தடம்பதிக்கத் தொடங்கியுள்ளன. பொருண்மையும், கலைத்துவமும், எளிமையும் நிரம்பிய பாடல்கள் பல மென்மையான இசைக்கோர்வைகளுடன் மனதைத்தாலாட்டிய நிலைமை மாறிவிட்டது. துள்ளலாட்டம் போடவைக்கும் இரைச்சல் மிகுந்த இசைச் சேர்க்கையானது பாடல்களின் சொற்களை விளங்கிக் கொள்ள முடியாதவாறு செய்து விடுகின்றது. நின்று நிலைக்கத்தக்க பாடல்களைவிட - வணிகரீதியாகச் சமகாலத்தில் வென்றுதரத்தக்க பாடல்களே வேண்டப்பட்டவையாக மாற்றம் கண்டுள்ளது. மாற்றம் என்பது காலத்தையொட்டி வரவேற்கப்பட வேண்டியதாயினும், ஒரு சமுதாயத்தின் பண்பாட்டுத்தளத்தினை அசைக்கக்கூடிய ஊடுருவல்களை எந்தளவுக்கு அனுமதிக்க முடியும் என்ற வினாவையும் எழுப்பிப்பார்ப்பது அவசியமானதாகும். தொழில்நுட்பத்துறையில் அபாரமாக முன்னேற்றங்கண்டுள்ள தமிழ்த்திரைப்படவுலகமானது கதை, பாடல், இசை ஆகிய அம்சங்களில் இழப்புக்களைச் சந்தித்துள்ளதாகக் கூறப்படும் கருத்துக்கள் புறக்கணிக்கத் தக்கனவல்ல.
இத்தகு சூழ்நிலையில் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்களின் பிதாமகராகத் திகழ்ந்த உடுமலை நாராயணகவியின் (1899-1981) பாடல்களையும், அவர் தம் கவிச்சிறப்பையும் இன்றைய இளைய தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டுவதே இக்கட்டுரையின் சிறப்பான பணியாக அமைகிறது. தமிழ்த்திரையுலகம் இதுவரை 670க்கு மேற்பட்ட கவிஞர்களைக் கண்டுள்ளது. ஒரு சில பாடல்களை எழுதியவர்கள் தொடங்கி பல ஆயிரம் பாடல்கள் தந்த வாலி, கண்ணதாசன், மருதகாசி, வைரமுத்து வரையிலான திரைக் கவிஞர்கள் இதிலடங்குவர். குறிப்பிட்ட சில காலம் பாடல்கள் எழுதிவிட்டுக் காணாமற்போனவர்களும், இடைக்கிடை குறிஞ்சிமலராகக் குலுங்கியவர்களும் பல தசாப்தங்களாகத் திரைப்படக் கவிதையுலகில் நின்று நிலைத்தவர்களும் இவர்களில் காணப்படுகின்றனர்.
உடுமலை நாராயணகவி 1931-1976 காலப்பகுதியில் தமிழ்த் திரைப்படவுலகோடு தனது கவிதைத் தொடர்பினை வைத்துக்கொண்டவர். சில காலகட்டங்களில் தொடர்ச்சியாகவும், மற்றும் சில காலப்பகுதிகளில் மேலோட்டமாகவும் அல்லது இடைக்கிடையேயும் அவரது கவிதைப் பணி தமிழ்த் திரையுலகில் தொடர்ந்திருக்கிறது. மேடைநாடகப்பாடல்கள், தனிப்பாடல்கள், திரைப்பாடல்கள் என அவர் இயற்றியவை பத்தாயிரம் பாடல்களுக்கும் அதிகம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும் காலவெள்ளத்தில் கரைந்தவைபோக எஞ்சியிருப்பவை மிகக் குறைந்த எண்ணிக்கையினவேயாகும். பாதுகாத்துவைக்காமையும், பல திரைப்படங்களுக்கு இயற்றிய பாடல்கள் கிடைக்காமையும் காரணமாக இன்று சுமார் 500 பாடல்கள் வரையிலேயே கிடைக்கக் கூடியதாகவுள்ளது. உடுமலைக் கவிஞர் திரைப்படங்களுக்கு மட்டும் எழுதிய பாடல்கள் குறைந்தது ஆயிரமாவது இருக்குமெனக்
FLibu 2005 23

Page 26
கணிப்பிடமுடிகிறது. அவர் பாடல்கள் எழுதிய தமிழ்த் திரைப்படங்களின் எண்ணிக்கையும் ஏறத்தாழ நூறாகும். 1934 இல் வெளிவந்த "பூரீ கிருஷ்ணலீலா" திரைப்படத்துக்கான வசனம், பாடல்களை அவர் எழுதியுள்ளார். பாபநாசம் சிவனும் அப்படத்திற்கான பாடல்களை இயற்றுவதில் பங்கு பற்றியுள்ளார். எனவே இத்திரைப்படப் பாடல்களே இன்று கிடைப்பவற்றுள் உடுமலையின் முதல் திரையுலகப் பாடல்களாக அமைந்துள்ளன. திரெளபதி வஸ்திராபஹரணம் (1934), சந்திரமோகனா அல்லது சமூகத்தொண்டு (1936), தூக்குத்துக்கி (1935), இந்திரசபா (1936), விப்ரநாராயணா (1938), சதிஅநுசூயா (1937), திருநீலகண்டர் (1939), சகுந்தலை (1940) முதலான திரைப்படங்களுக்கு ஆரம்பகாலத்தில் உடுமலை பாடல்கள் இயற்றியுள்ளார். தூக்குத் தூக்கி, விப்ரநாராயணா ஆகிய படங்களின் முழுப்பாடல்களும் அவரது படைப்புக்களேயாகும். திரெளபதி வஸ்திராபஹரணம், தூக்குத்தூக்கி, உத்தமி ஆகிய படங்களுக்கு வசனமும் எழுதியுள்ளார். நாற்பதுகளின் தொடக்கத்திலிருந்து ஐம்பதுகளின் இறுதிவரை குறிப்பிட்ட சில படக்கம்பனிகளின் படங்களுக்கு அதிகளவில் பாடல்கள் இயற்றினார். ஜிபிடர், அருணா பிலிம்ஸ், அன்னபூர்ணா பிக்சர்ஸ், விநோதாபிக்சர்ஸ் ஆகியவை உடுமலையைக் கூடியஅளவில் பயன்படுத்திக்கொண்டன.
பல திரைப்படங்கள் இன்று கிடைக்காமற் போனபடியால் பாடல்களும் கிடைக்கவில்லை. அத்துடன் 1938 ஆம் ஆண்டிற்குப் பின்பே இசைத்தட்டுகளில் திரையிசைப் பாடல்களைப் பதிவு செய்யும் நிலையேற்பட்டது. தமிழ்த் திரைப்பட வரலாற்றின் முதற் சகாப்தத்தில் பாடலாசிரியர்களின் பெயர்களை டைட்டிலில் (திரையில்) காட்டுவதும் அரிது. ஒரு திரைப்படத்தின் பாடல்களைப் பலர் இயற்றியபோது, இன்னாரியற்றிய பாடல்கள் இவைதாம் என்பதை அறிவதும் சிரமமானது. காலங்கடந்த நிலையில் ஒருவர் இயற்றிய பாடலை இன்னொருவர் இயற்றியதாகக் கருதுவதும், அதனைப் பிழையான முறையில் நூல்களினுTடான ஆவணப்படுத்துவதும், அந்தத் தரவுகளை அடிப்படையாக ஏனையோர் பின்பற்றுவதும் நீண்டகாலமாகத் தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது. சினிமாசார்ந்த பலநூல்களும், கட்டுரைகளும் இக்குறைபாட்டினைக் கொண்டுள்ளன. சரியானதேடல் முயற்சிகளின் மூலமே இத்தவறுகள் திருத்தப்படுதல் வேண்டும். இதனால் ஆரோக்கியமான ஆய்வு முயற்சிகளுக்கு வழிகாட்டப்படலாம்.
பராசக்தி (1953) திரைப்படத்தில் இடம்பெற்ற "கா-கா. கா" பாடலைப் பலரும் கலைஞர் கருணாநிதி எழுதியதாகவே
aginiagaiépplib.
24 ஜூலை - டி
 

கருதிவந்தனர். ஆனால் ஏ.வி. மெய்யப்பன் அவர்கள் தமது வர
லாற்று நூலில் அப்பாடலையும் "தேசம் ஞானம் கல்வி" பாடலையும்
உடுமலை நாராயணகவியே எழுதினார் என்பதை உறுதிப்படுத்தினார்.
"எச்சிலை தனிலே எறியும் சோத்துக்குப் பிச்சைக்காரர் சண்டை ரோட்டிலே! இளைத்தவன் வலுத்தவன் இனச்சண்டை பணச்சண்டை எத்தனையோ உண்டு இந்த நாட்டிலே! பட்சிஜாதி நீங்க எங்க பகுத்தறிவாளரைப் பாக்காதீங்க! பட்சமாயிருங்க! பகிர்ந்துண்டு வாழுங்க! பழக்கத்தை மாத்தாதீங்க" (கா-கா-கா)
எத்தனை பெரிய விடயங்களை எளிமையான
வார்த்தைகளினூடாக இப்பாடல் புரியவைத்துள்ளது என்பதை நாமுணரமுடியும் . இந்திய நாட்டின் அவலத்தையும் , பகுத் தறிவாளரான மனிதகுலத்தின் கீழ் மை யையும் காக்கையினத்தின் ஒற்றுமையோடு ஒப்பிட்டு நோக்கும் கவிப்புலமை சாதாரணமானதன்று. பராசக்தியில் இடம் பெற்ற உடுமலையின் அடுத்த பாடலானது,
"தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை எல்லாம்
காசுமுன் செல்லாதடி - குதம்பாய்
காசுமுன் செல்லாதடி!"
எனச் சித்தர் பாடற்பாணியில் அமைந்தாலும் அதன் உள்ளுறைப் பொருள் உயர்வானது.
"நல்லவரானாலும் இல்லாதவரை நாடுமதிக்காது - இந்த நாடு மதிக்காது - கல்வி இல்லாதபேர்களைக் கற்றோர் கொண்டாடுதல் வெள்ளிப் பணமடியே! - குதம்பாய் வெள்ளிப்பணமடியே!"
"முட்டாப் பயலையெல்லாம் தாண்டவக்கோனே - காசு முதலாளி யாக்குதடா தாண்டவக்கோனே! - பிணத்தைக் கட்டியழும் போதிலும் தாண்டவக்கோனே! - பணப் பெட்டிமேலே கண்வையடா தாண்டவக்கோனே!"
இவ்வாறான பாடல்வரிகளினூடாகச் சமகாலவுலகில் நல்லவற்றிற்கும், பணத்துக்கும் இடையிலான இடைத் தொடர்பினை விளக்குவதற்குப் புலவர் முயன்று வெற்றி கண்டுள்ளமை புலனாகிறது.
ருத்துக்களையும்
திருமறைக் கலாமன்றம் 238 பிரதான வீதி usumptičji umr6UOTiib
öGÖGygöli 2005 امام

Page 27
உடுமலை நாராணயகவி திரையுலகச் செல்வாக்கைப் பயன்படுத்தி அதிகமான பாடல்களை எழுதமுயலவில்லை தன்னை மதித்து வரவேற்கும் நிறுவனத்தாருக்கே அவர் பாடல்கள் எழுதித் தந்தார். கர்வமும், கண் ணியமும், கம்பீரமும் கவிஞர்களுக்குரியவை என்பதைத் தமிழ்த் திரையுலகில் முதன் முறையாக நிரூபித்துக் காட்டினார்.
உடுமலை நாராயணகவியின் கவிதைகள் பகுத்தறிவுச் சிந்தனைகளை மக்களிடையே ஏற்படுத்தக்கூடியவை. பிராமணிய ஆதிக்கத்தினாலும், சாதி, சமய ஏற்றத்தாழ்வுகளினாலும் பிளவுபட்டுக்கிடந்த தமிழ்ச்சமுதாயம் விழிப்புணர்வு பெறுவதற்காகத் தூரநோக்கோடு எழுதப்பட்டவை. மதத்தின் பேராலும், மரபுகளின் பேராலும் மக்களின் மீது சுமத்திவைக்கப்பட்ட நுகத்தடிகளை நொறுக்குந்தன்மை வாய்ந்தவை. தமிழர் சாதியினரிடையே புரையோடிப்போயிருக்கும் மூடப்பழக்க வழக்கங்களை இல்லாதொழிக்கவும், மடமை நீங்கி உரிமைபெறவும் சமூகமாற்றத்தை ஏற்படுத்தும் உந்துதலை அளிக்கக்கூடியவை. பெண் ணடிமை கி கொள் கைகளைக் கை விட் டுப் பெண்விடுதலைக்காகவும், பெண்களுக்கும் ஆண்களோடு சரிநிகர் சமான வாழ்வைப் பெற்றுக் கொடுப்பதற்காகவும் படைக்கப்பட்டவை. திரைப்படங்களில் அவ்வப்போது இடம்பெறும் கதாபாத்திரங்களின் சூழ்நிலைகளுக்கேற்ப அமைந்த பாடல்கள் பலவிருந்த போதிலும், அந்தக் கருத்துக்கள் யாவும் கவிஞருக்கு உடன்பாடானவையல்ல. இருப்பினும் தன்னால் முடிந்த அளவுக்குச் சமூக சீர்திருத்தக் கருத்துக்களைத் திரைப்படப் பாடல்களினுடாக உடுமலைக் கவிஞர் தந்துள்ளதில் வியப்பில்லை.
“பொன்னைக் கொண்டு மணம் தன்னைப்பெற முடியாது பொருளே பெரிதாய் புகழ்ந்து சொல்வது பொருத்தம் ஆகாது மண்ணுக்குள் ஆண் பெண் மனமொத்த சிநேகம் மாசற்றகாதல் மலர்ந்த விவாகம்"
(குபேரகுசேலா - 1943) என்று காதலர் இருவர் கருத்தொருமித்த திருமணத்தை வலியுறுத்துங்கவிஞர்,
"சின்னஞ்சிறு வயது முதல் சேர்ந்து நாம் பழகிவந்தோம் இனியொரு பிரிவுமுண்டோ இன்பம் பெறத்தடையுமுண்டோ! கன்னியுந்தன் மழலையிலே கற்பனைக்கும் வடிவுகண்டேன் கண்டதொரு வடிவமெல்லாம் காதலரின் உடைமையின்றோ!" (தாய்மகளுக்குக் கட்டியதாலி - 1959) எனக் காதல் கீதமிசைக்கிறார்.
"சின்னச் சின்ன வீடுகட்டி சிங்கார வீடுகட்டி ஒண்ணாக ஆடினோம் முன்னாலே நமது சொந்தம் இன்னாளில் போவதோ பொன்னாலே"
எனக்கேட்பதுடன் நில்லாது; "மண்வீட்டைக் கட்டியபோது மனக்கோட்டை கட்டியவாழ்வு அறிவூட்டும் பெற்றோர் வார்த்தையினால் ஆகலாமோ தாழ்வு" (மருமகள் -1954)
எனக் கூறுவதனுடாகச் சிறிய வயதிலிருந்தே வளர்ச்சிபெற்ற அன்பின் நிலைப்பாட்டைப் புரியவைக்கிறார். ஏற்றத்தாழ்வுகளினால் மனமொத்த காதல் நிறைவேறாது போவதிலுள்ள துயரத்தினை உடுமலையவர்கள் உணர்ச்சிததும்ப வெளிக்காட்டும் விதம் நயம் வாய்ந்தது.
硕顺地破 ஜரலை - டி

"இன்பலோகஜோதி ரூபம் போலே" (தூயஉள்ளம்) "கோடைமறைந்தால் இன்பம் வரும்" (மஞ்சள் மகிமை) "ஆகாயவீதியில் அழகான வெண்ணிலா" (மஞ்சள் மகிமை) "ஆடிப்பாடி வேலை செய்தால் அலுப்பிருக்காது" (எங்கள் வீட்டு மகாலஷ்மி), "மஞ்சள் வெய்யில் மாலையிலே' (காவேரி), "மாவைத் தழுவும் மலர்க்கொடிபோலே" (சொர்க்க வாசல்), "சிங்காரப் பைங்கிளியே பேசு" (மனோஹரா), "வெண்ணிலா குடைபிடிக்க வெள்ளி மீன் தலையசைக்க" (அபலை அஞ்சுகம்), "காதல் எந்தன் மீதில் என்றால்" (விவசாயி), "பொன்னாள் இதுபோலே வருமா இனிமேலே" (பூம்புகார்), "அன்பாலே தேடிய என் அறிவுச்செல்வம்" (தெய்வப்பிறவி) போன்ற கருத்தாழம் மிக்க காதற்பாடல்கள் பலவற்றை திரைப்படங்களில் உடுமலை தந்துள்ளார்.
"மின்னும் சொக்க வெள்ளிப்பொட்டு வேலைதான் - செய்த மேகநீல வர்ணப்பட்டுச் சேலைதான் . சுற்றி வெண்ணெய்க் குன்றம் என்னும் பெண்மைக் கோலந்தான். பெற்ற சந்திரிகா வந்தாய் அன்பாய் ஆடவே!" (தூயஉள்ளம்)
சந்திரனின் எழிலை வருணனை செய்யும் கவிதா உள்ள மேன்மை இப்பாடலடிகளால் விளங்குகிறது. திரையுலகைத்தாண்டி நிற்கும் இலக் கியச் செம்மை இப் பாடலுக் குண்டு. இதுபோன்றதாகவே,
"மஞ்சள் வெய்யில் மாலையிலே வண்ணப்பூங்காவிலே பஞ்சவர்ணக்கிளிகள் கொஞ்சும் பரவசம் பார்! அஞ்சுகத்தின் பாஷையிலே ஆணும் பெண்ணும் பேசையிலே ஆனந்தக் காட்சியங்கே தோணுது பார்!" (காவேரி)
என்னும் பாடலடிகள் இனிமை பயக்கின்றன. இப்பாடலிலேயே
"நினைத்தாலும் பார்த்தாலும் இனிக்கும் அன்பே நிஜமாகவே மனத்தாலே நான்!"
என்ற அடிகளும் அமைந்து காதலின் வீரியத்தையும் மனவுணர்ச்சியையும் காட்டிநிற்கின்றன.
"இனிநீ என் வசமே! இன்பம் நான் உன் வசமே! இணையாய் நாம் காணும் ஆனந்தம் நேசமே" (அபலை அஞ்சுகம்) ബങ്ങഖlp, "உடல் நான் அதில் உரம் நீ என உறவு கொண்டோம் (EbróOLDuJIT6) கடல் நிலவாய் காட்சியிலே கலந்து நின்றோம் பிரேமையால்" (தெய்வப்பிறவி)
எனவும் கவிஞர் தீட்டும் கவிதைகள் காதலுள்ளங்களின் உறவுநிலைகளையேயாகும். எளிமைசார்ந்த உவமைகளும், உருவகங்களும் உடுமலைக் கவிஞரின் காதற்பாடல்களில் நிறைந்து கிடக்கின்றன. அவரது பிற்காலப் பாடலொன்றில்
"காதல் எந்தன் மீதில் என்றால் காதில் இனிக்கிறது -
தாலி கட்டிக்கொள்ளத் தட்டிக்கழித்தால் கவலைப்படுகிறது -
LD6015) கவலைப்படுகிறது"
Nslbur 2005 25

Page 28
ހަހި
LT6 (3 gon GLI 8g Gg (Paulo freire) а фт и за 5 5 бро што விழிப்புணர்வை உயர்த்தல் (C ation) 66-ison aggs (Bairsport (Pedagogy of the oppressed) (6 is slui (3LT fair
16666566x TTMLSmT0t0000T TTTmmmLS0 S mm mm t tmLL SYYS MS 0m00 mLS ഞ 6 கலவிமுறைகள் ஒடுக் குமுறையை அமைப்புமுறை க តាវ៉ៅង៉ាត្សឹស៊ី នៅឆាំ្ន ឆ្នាr ខ្សត្វម្រឹត្យ ភ្ញាក្រ្តខ្សត្រូ86 616 @ន្ត្រuួន៦ ថ្លា ឈ្មោះខែ ថ្លា ប្រេតឈ្មោះ L a Lmmuu S S LmamaaGt m m m S S S S S S mu m M aaS S La TLLu tt ttt 0 SS S 0 S u S S T S uuT mmyMmLmLLL S LL rlmmmmLLtmammOmlmmMT S lmLLLmlmltm m l uS u S S S eMmmtu 0 uSuSy u LLL அரசியல் சமூக பிரஞைக்கு தூண்டியது ருத்துநிலையுடன் ஒடுக்குவேர் தமது கருத்துக்களை மாணவர் பார்ப்பர் 3 TTmTmlTmltTt S rmtTm S S l l l mmtT S um my mm m M LT YLLY LL L L S S S S T S S TT0 TYS AY AA uu முடக்கப்படுகின்ற தன்மை தொடர்வதைக் மாணவர் எந்த
ஒடுக்குமுறைக்கு ១.66, B556 ------ ஒடுக்கும் சக்தியைபற்றிய பிரக்ஞையை இரு இழப்பதோடு அதனை வெளிப்படுத்தும்
ខ្វាក្យគ្រឿងអ្វី ម្ល៉ោះ
66ਚiD6iਸੁD66 @ព្រោយ ខ្ស ខ្ស 5ោះ ព្រោង ត្រៀមក្រំថ្ងៃ ឆ្នា ឆ្នា ត្រូវនោះ គ្រូហ្សែ (Culture of Silence) 666 குறிப்பிடுகின்றார்.
mmtlmMM Mm m L m mm rrl l mltt S a a u u uT u S p់នៅថ្ងៃ ព្រះតាត -66060 855
ിജ്ഞ ਨੂੰ பற்றபோதிலும் 20
என எளிமை ததும்பப் பாடியுள்ளார்.
உடுமலை நாராயணகவி அவர்கள், தாம் வாழ்ந்த காலத்துச் சமுதாயப் பிரச்சினைகளைக் கூர்மையாக அவதானித் தவர்; அவற்றின் தாக்கங்களைப் புரிந்துகொண்டு தனது கவிதை களில் அவற்றைப் பிரதிபலித்தவர்; அவற்றுக்கான பொருத்தமான தீர்வுகளையும் பாடல்களில் முன்வைத்தவர். இதனாற்றான்
"கூடுதலாக உழைத்துக் குறைவாக ஊதியம் பெறுகின்ற ஏழைக்கூலித் தொழிலாளர்களின் குரலினை ஓங்கி ஒலித்த பாட்டாளிக் கவிஞர் உடுமலை" .
எனப் பேரறிஞர் அண்ணா பாராட்டியுள்ளார். “பட்டுக்கோட்டைகள் வருவதற்கு முன்னமே எமது அப்பனுக்கும் அப்பனான உடுமலை போன்ற பாட்டுக்கோட்டைகளின் சாம் ராஜ்ஜியமே தமிழ்த் திரையுலகில் நடைபெற்றது" என்று புலவர் புலமைப் பித்தனும் குறிப்பிட்டுள்ளார். உடுமலையின் திரைப்பாடல்களை ஆய்வுசெய்து பார்க்கையில் உடுமலை பற்றியும் அவரது கவிதைகள் பற்றியும் பின்வரும் முடிவுகளுக்கு எம்மால் வர முடிகிறது. அவையாவன:
26 ஜூலை =
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சர்வாக்கம் பெரேரெ
ாணப்படுகின்றது. இது I G51D idst 6006) sto6st 66 BuiB
ਰੀ 60
(p60LDILIG55 LILT5 [6006)]],[[ପିକ୍ସ୍ ଥ୍d 6006 till: 16),
ត្រួតពិតក្អេ ថ្រាញ់
1 B6, 5360}
|IDD
: ഞേ jective) Bc55 LIGoir. ព្រូហ្សែត្រ ਮul6
ଔର୍ବ୍ବା அமெரிக்க நாடுகள்
ខ្សឆ្នា
1. வெறும் சொல் லலங்காரங்களாகவும் ,
(grrrrrrumuru Birr (Bas6f6ÖTg5ítið af Bilbid Täb ខ្សឆ្នា6 @Bupgsញុំ ត្រួ
666 மட்டுபடுததப் பட்டு அறிவின் மை យួ ឬ វ្យាសាស្តាំ ឆ្នាសា பெரேரெயின் கருத்தாக்கம் புதிய எழுச்சிக்கு ១ឆ្នាតាg, @jg Đôប្រាយ @g, p665@gy 6,6}); 6.56 301666 ਉ55.8656
பிறந்த இவர் 1963 இல் பிரேசில் நாட்டு 66Bਉਸੁ5566ਠੀ ਸੁ6 កាហ្វ្រិយខ្សព្វថ្ងៃ ត្រួត ព្រោg. 1964
ம் இல் ஏற்பட்ட இராணுவக்
[': 'g5': 'g66) 5.68)pឬឃ្លា 86 4695@
ਸੁੰ56
ன்னர் உலக திருச்சபைகள் ១៦ឆ្នាំថ្ងៃ ប្រព្រួចស្ដាំ !
மையாற்றிய 96f 2000
விய இறையியல் சிந்தனைக்கு សាស្រ្តឹត ភ្ញាគ្រូព្រៃព្រឹត្តិ យម្បិយតិស្សែ ប្រាសា សា្វយលើ ព្រះសារ៉ាហ្វ្រ ឆ្លាតឃ្លាយ
ឆ្នាត្រាស់ ភ្លាត ខ្សp 566 உரையாடலுக்கு பின்புலமாக அமைந்தது 3
8. பி. கிருபானந்தன்
LD 6OOfLʼi
பிரவாளமாகவும் விளங்கிய தமிழ்த்திரையிசைப் பாடல்களுக்கு இயன்றளவு தூயதமிழ்ச் சொல்வளமும் பொருள்வளமும் தந்து புதிய செல்நெறியைத் தொடக்கி வைத்தவர்.
2. திருக்குறட் கருத்துக்களைத் திரைப்பாடல்களில்
அதிகளவுக்கு எடுத்துச் சொன்னவர். அந்தளவு வேறு எவரும் பயன்படுத்தவில்லை.
3. தமிழ்த்திரைப்படப் பாடல்கள் மீது பகுத்தறிவுப் பால் வார்த்தவர். சமூகத்தின் பால் புரையோடிப் போயிருக்கும் மூடத்தனங்களைச் சாடியும் அறிவுரை கூறியும், அவர் சாதித்தவைக்கு நிகராக இதுவரை எவரையும் கண்டுகொள்ள (!plറ്റu ഖിബ്ലെ,
4. தானியற் றிய நாடக மே டைப் பாடல் களை மாற்றங்களுடனும், மாற்றமின்றியும் திரைப்படங்களிலும் குறிப்பிட்ட அளவுக்குப் பயன்படுத்தியவர்.
5. சாதிய ஏற்றத்தாழ்வுகள், சமூக உயர்வு தாழ்வுகள், சமயத்தின் பேரிலான கொடுமைகள், பெண்ணடிமை, சமுதாய
酶
டிசெம்பர் 2005

Page 29
அடக் குமுறைகளும் ஒடுக் குமுறைகளும் , மூடப் பழக்க வழக்கங்களும், தவறான நம்பிக்கைகளும் ஆகியவற்றுக்கு எதிரான ஆவேசமான கருத்துக்களையும்; சமூகமாற்றம், பெண்விடுதலை, சமூகசமத்துவம், தேசப்பற்று, தமிழ்ப்பற்று, காந்தீயம், சுயமரியாதைச் சிந்தனைகள், உழைப்பின் உயர்வு, கூட்டுறவு, திராவிட எழுச்சி முதலானவற்றுக்கான ஆதரவுக் கருத்துக்களையும் பாடல்களின் பாடுபொருள்களாகக் கொண்டவர்.
6. சிரிப்பினுடான சிந்தனைகளைத் தமது பாடல்களில் தந்தவர்.
7. சிறு சிறு வேடங்களில் நடித்துவந்த எம்.ஜி. இராமச்சந்திரன் தனது 16 ஆவது திரைப்படமான ஜிபிடரின் "ராஜகுமாரி"யில் முதன் முதலில் கதாநாயகனாக நடித்தபோது, அப்படத்தின் பாடல்கள் அனைத்தையும் இயற்றியவர். அதேபோன்று சிவாஜி கணேசனின் முதற்படமான "பராசக்தி"யிலும் இரண்டு புகழ்பெற்ற பாடல்களை எழுதியவர். இவ்விரண்டு படங்களும் வெற்றிப்படங்களாகும்.
8. கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனின் கருத்துக்களுக்குச் சுமார் பதினைந்து ஆண்டுகளாகப் பாடல் வடிவங்கொடுத்து, திரைப்படங்களில் பகுத்தறிவுச் சிந்தனை கலந்த சிரிப்புப்பாடல்கள் விளங்க வழிசமைத்தவர்.
9. பேரறிஞர் அண்ணாவின் கதை - வசனத்திலுருவான நல்லதம்பி', 'வேலைக்காரி', 'சொர்க்க வாசல்' மற்றும் அண்ணாவின் கதைப்படங்களான ரங்கோன்ராதா', 'தாய்மகளுக்குக் கட்டியதாலி ஆகிய படங்களில் அதிகமான பாடல்களைத் தந்தவர்.
10. தமிழ்த்திரையுலகில் முதன் முதல் வசனத்தால் எழுச்சியேற்படுத்திய (இளங்கோவன்) ஜிபிடரின் "கண்ணகி" படத்திற்கான அத்தனை பாடல்களையும் எழுதிப் புகழ்பெறச் செய்தவர்.
11. திராவிட இயக்கத்தினரின் ஊக்கப்படுத்தல்களினால் அண்ணா, கலைஞர், கே.ஆர்.ராமசாமி, என்.எஸ். கிருஷ்ணன் ஆகியோர் சம்பந்தப்பட்ட படங்களிலும், நாடகங்களிலும் கவிதைகளினால் வரலாறு படைத்தவர்.
12. முதன் முதலில் "சொர்க்க வாசல்" திரைப்படத்திற்காக ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தை (1954) ஊதியமாகப் பெற்றுக்கொண்டவர்.
13. மூன்று நிமிடப்பாடலாயின் மூவாயிரம் ரூபாயும், ஆறு நிமிடப்பாடலாயின் ஆறாயிரம் ரூபாயும் பெற்றுக் கவிஞர்களின் தரத்தையுயர்த்தியவர். எந்தப்பட முதலாளியும் காத்திருந்து பாடல் பெறத் தக் கதான கெளரவத் தைத் திரையுலகIல் ஏற்படுத்திக்கொண்டவள்.
14. தனக்குக் கிடைத்த வாய்ப்புக்களையே அ. மருதகாசி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகியோருக்கு அளித்து அவர்களை உயர்த்திவைத்த பண்பாளர். அவர்காலத்துத் திரைப்படக் கவிஞர்களுடன் நட்பைப் பேணியவர்.
15. செல்லமுத்து, கே.எஸ். கோபாலகிருஷ்ணன், ஏ.எல்.நாராயணன் ஆகியோரை உதவியாளர்களாக வைத்திருந்தவர். அறுபதுகளுக்குப் பின்னர் கே.எஸ். கோபாலகிருஷ்ணனின் பேரன்பின் நிமித்தம் அவரது சில படங்களுக்கு மட்டும் ஒரு சில பாடல்களெழுதியவள்.
16. எம்.ஜி.ஆருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரது படங்களுக்குப் பலவாண்டுகள் பாடல்களியற்றாத போதிலும் சின்னப்பாதேவரின் விருப்பத்துக்கேற்ப 1967 இல் ‘விவசாயி’ படத்துக்கு 4 பாடல்கள் எழுதியவர்.
面眶 ஜூலை - டி

17. சில படமுதலாளிகள் பணத்துக்கப் பதிலாக கோவை, நீலகிரி, சேலம் முதலான விடயங்களிலுள்ள ஏரியாக்களை எழுதிக் கொடுக்கப்பெற்றவர்.
இவற்றைவிட இன்னும் பல கோணங்களில் உடுமலையையும் அவரது பாடல்களையும் நோக்கமுடியும்,
"வெறும் வார்த்தைகளுக்கு இடையில் வாழ்ந்து கொண்டிருந்த திரைப்படப் பாடல்களை வாழ்க்கைக்கு இடையில் நகர்த்திய வரலாற்றுக் கவிஞர். கலைவாணரின் கணிப்பில் அவர் ஒரு திரையுலகப்பாரதி. அண்ணாவின் அகத்தில் அவர் பாட்டாளிகளின் எழுச்சிக்காகக் கொட்டும் பகுத்தறிவு முரசு. கலைஞரின் கருத்தில் ஆயிரம் ஆயிரம் எழுச்சிப் பாடல்களைத் தந்த அரிமாக்கவிஞர். எம்.ஜி.ஆரின் எண்ணத்தில் அவர் ஒரு திரைப்பட உலகத்திருப்பம். அவர்தான் திரைப்படப்பாடல்களில் சங்கீதச் சாயங்களைப் பிழிந்துவிட்டு, கருத்துமைபூசி உறையவைத்த உடுமலைக் கவிஞர்"
இவ்வாறு நெல்லை ஜெயந்தா என்பவள் வர்ணித்துள்ள வார்த்தைகளைக் கொண்டே உடுமலையின் திரையுலகப் பங்களிப்பினை மதிப்பீடு செய்யவியலும், சமகாலப் பிரச்சினைகளில் மையங்கொள்ளாத எந்தவொரு கவிஞனின் உள்ளமும் ஆக்கமும், உயிரோட்டமும் குன்றியதாகும். இதனை நன்குணர்ந்த உடுமலை, எரியும் பிரச்சினைகளுக்கே எழில் கவிதை வடிவங்கொடுத்தார்.
"காலையிலே எழுந்திரிச்சுக் கஞ்சித் தண்ணியில்லாமே கஷடப்படுகிறேனே கடவுளே! ஆத்திலே தூண்டிபோட்டு அதிலே ரெண்டு மீன் கிடைச்சா அரைவயத்துக் கஞ்சிக்காகும் கடவுளே! குடும்பம் ஆலாப் பறக்குதடா கடவுளே!"
இப்பாடலடிகள் சகுந்தலை (1940) படத்தில் வருவது. கடலை நம்பி வாழும் மீனவர் நிலையினைப் படம்பிடித்துக் காட்டுவது.
"சும்மா இருந்தால் சோத்துக்கு நஷ்டம் சோம்பல் வளர்ந்தால் ஏற்படும் கஷ்டம் உண்மையோடு உழைக்கோணும் மச்சான் ஒன்று சேர்ந்து வாழோணும்" எனத்தொடங்கும் மதுரைவிரன் (1956) படப்பாடல் உழைப்பின் மேன்மையை விளக்ககிறது. "பொதுவுடைமை கேட்பது எதனாலே? - தொழில் புரிந்தும் புசிப்பதும் அற்றுப் போனதாலே"
என்று பொதுவுடைமையின் காரணத்தை மணமகள் (1950) படத்தின் பாடல் வரிகள் உணர்த்துகின்றன. எங்கவீட்டுமகாலஷமி (1957) திரைப்படப்பாடலொன்றில் கூட்டுறவின் உயர்வு பேசப்படுகிறது.
"நாட்டுக்குப் பொருத்தம் நாமே நடத்தும் கூட்டுப்பண்ணை விவசாயம் - பட்ட பாட்டுக்குத் தகுந்த ஆதாயம் உண்டு பழைய கொள்கைகளை விடுவது நியாயம்"
மணமகள் படத்தின் பெரும்பாலான பாடல்கள்
சீர்திருத்தக்கருத்துக்கள் நிறைந்தவை. "பேயிருக்குது கிணத்திலே
oglbLust 2005 27

Page 30
பிசாசிருக்குது மரத்திலே பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுத்தது அம்பது ஆயுங்கலைஞன் ஏட்டிலே அமைந்த நீதிப்பாட்டிலே அறிவிருக்கு புடிச்சுக் கோங்குது அறுபது"
'மணமகளில் வருகின்ற "அம்பதும் அறுபதும்" என்னும் நாடகப்பாடல் பிரசித்தமானது. அதில் வரும் சில வரிகள் இவையாகும். பிற்காலத்தில் பட்டுக்கோட்டையார் 'சின்னப்பயலே" பாடலை எழுத ஊக்கங்கொடுத்த பாடலிதுவாகும்.
"நல்ல பெண்மணி மிக நல்ல பெண்மணி - தாய் நாட்டு நாகரீகம் பேணி நடப்பவள் எவளோ அவளே நல்ல பெண்மணி"
எனப்பாடிய கவிஞர், "குடும்பத்தின் விளக்கு நல்ல குடும்பத்தின் விளக்கு" என்ற பணம்' படப்பாடலிலும் தமிழகப் பெண்ணின் பெருமையைப் பேசுகின்றார். மாறாக,
'கெட்ட பெண்மணி புத்தி கெட்டபெண்மணி! தன் இஷ்டம்போல அலைந்து வாழ்வை இழப்பவள் எவளோ அவளே கெட்ட பெண்மணி"
என "மங்கையர்திலகம்" திரைப்படத்தில் வரும் 'அடங்காப்பிடாரி' நாடகத்தில் கூறுவதனூடாகச் சமூகசீர்திருத்தக் கருத்தை முன்வைத்துள்ளார்.
நகைச்சுவை மன்னர் என்.எஸ்.கிருஷ்ணனும் அவரது துணைவியார் மதுரமும் திரைப்படங்களில் பாடியுள்ள பாடல்களில் மிகப் பெரும்பான்மையானவை உடுமலையின் கவிவண்ணங் களாகும். கிருஷ்ணனின் பகுத்தறிவுக் கருத்துக்களின் பேனாவாக உடுமலை விளங்கியதுடன் இருவரும் ஒருவரையொருவர் மிகவும் நேசித்தனர். என்.எஸ். கேயினால் உடுமலை திரையுலக வாய்ப்புகளை அதிகம் பெற்றார். அதேபோன்று உடுமலையின் அர்த்தமுள்ள பாடல்களைப் பாடியதன் மூலம் கிருஷ்ணனும் மதுரமும் மக்களிடையே மாபெரும் செல்வாக்கைப் பெற்றனர். இருவராலும் தமிழ்த் திரைப்படவுலகம் ஆரோக்கியமான வளர்ச்சியைக் கண்டது.
"ஒண்ணுல இருந்து இருபதுவரைக்கும் கொண்டாட்டம் - இருபத் தொண்ணுலே இருந்து முப்பது வரைக்கும் திண்டாட்டம்"
நடுத்தரவர்க்கத்தினரின் பொருளாதார நிலைமையை
இந்தளவுக்குப் படம் பிடித்துக்காட்டும் இந்தப் பாடல்போன்று எந்தப்பாடலும் தமிழ்த்திரையுலகில் அமையவில்லை எனப் பலரும் கூறுகின்றனர்.
"நாட்டுக்குச் சேவைசெய்ய
நாகரீகக் கோமாளி வந்தானuய்யா"
"கலைமுதலாகத் தொழில் முறையாகவும்
காத்துவளர்ப்பது தமிழ்நாடு"
"குடிகெடுத்த குடியொழிஞ்சுது
அடிதடி சண்டையதுங் குறைஞ்சது"
"கிந்தன் சரித்திரமே கிண்டல் அல்லவே அல்ல"
28 ஜூலை - டி

தண்டிக்கப்பட்ட என் மன நினைவுகளுடன் உன்னைப்பற்றிய நினைவுகள் என்னில் கொதிப்பெடுத்தபடி இருக்கின்றது.
உன் அன்பான காதலை மறுத்து உன்னை ஏமாற்றிய ஒர் நாளில் நான் சவமாகி போனதுதான் மிச்சம்.
வீரத்துடனும் துணிவுடனும் வாழ்வை எதிர்கொள்ள முடியாது போகச் செய்தது எது!
எல்லா விதமான
என் வாழ்வு முழுவதுமே வலிக்கிறது
f அங்கு எப்படி மெளனமாக இருக்கிறாய்...!
சாளரங்கள் முடிவில் உன் கண்ணிரில் வெப்ப ஊற்றில் நான் இன்னும் தன்னிலை தொலைத்து அலைந்து திரிகின்றேன் காற்றின் புதிர்பேசும் வாழ்வின் வண்ணம் இழந்த ஒற்றைச் சிறகாய்
அடக்கு முறைகளுக்கும் வசிக்க மறந்த
அச்சுறுத்தலுக்கும் தன்
நான் தன்னுடைய
பணிந்துபோய் அறைகளில்...!
பிணமானதுதான்
மிகுதியானது. tpחff மகேந்திரன்
செம்பர் 2005
面暱面酶

Page 31
முதலான பல இனிய பாடல்கள் "நல்லதம்பி" படத்தில் அமைந்துள்ளன. அதில்;
"மனுசனை மனுசன் ஏச்சுப் பொழைச்சது - அது அந்தக்காலம் மடமைநிங்கி பொதுவுடைமை கோருவது - இந்தக்காலம் மழைவரும் என்றே மந்திரம் ஜெபிச்சது அந்தக்காலம் - அது அந்தக்காலம் மழையைப் பொழியவைக்கவே எந்திரம் வந்தது இந்தக்காலம் திரெளபதை தன்னைத் துகில் உரிஞ்சது அந்தக்காலம் - பெண்ணை தொட்டுப்பாத்தா சுட்டுப்புடுவான் இந்தக்காலம்"
இப்படிக் காலமாற்றத்தையும், கருத்து மாற்றத்தையும் கலந்து தந்துள்ள உடுமலையின் கவிதைகள் யதார்த்தத்தைப் பிரதிபலிப்பன.
"காசிக்குப் போனாக் கருவுண்டாகுமென்ற காலம் மாறிப்போச்சு - இப்போ ஊசியைப்போட்டா உண்டாகுமென்கின்ற உண்மை தெரிஞ்சு போச்சு"
என டாக்டர் சாவித்திரியில் அறிவியல் தீர்க்கதரிசனக் கவிதை தந்த உடுமலை,
"எளியோர் மனம் படும் பாட்டிலே எழும் ஒசையாம் தாலாட்டிலே ஆண்டவன் ஆகாசமதில் தூங்குகின்றாரே - தினம் மாந்தரெல்லாம் மாநிலமேல் ஏங்குகின்றாரே” (பெண்)
எனப் பகுத்தறிவுச் சிந்தனையை முன்வைத்துள்ளார். இதேபோன்று 'இரத்தக்கண்ணிர்’ படத்தில் இடம்பெற்ற பாடலொன்றில் பெண்களின் துயரை வடித்துத் தந்துள்ளார்.
"பெண்களே உலகப் பெண்களே பிழைகள் செய்பவர் ஆண்களன்றோ அழிவை அடைபவர் நீங்களன்றோ"
என அப்பாடல் தொடங்குகிறது. "குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்", "பெண்களை நம்பாதே கண்களே பெண்களை நம்பாதே" முதலான பாடல்கள் சிவாஜி நடித்த தூக்குத் தூக்கி (1954) படத்தில் இடம்பெற்றவை. டி.எம்.செளந்தரராசனுக்கு புதுவாழ்வு தந்தபாடல்கள் இப்படத்திலமைந்துள்ளன. சிவாஜிக்குப் பின்னணி பாடும் தொடர்ச்சியும் இதிலிருந்தே அவருக்கு ஆரம்பமானது.
"மணிகலம் போல மற்றவர் தொட்டால் மாசுறும் பெண்மை - என்று பேசிடும் உண்மை - கெட்டி வெண்கலம்போல எவர்தொட்டாலும் விளக்கி எடுத்து விரும்பும் தன்மை (பெண்களை நம்பாதே)"
இவ்வரிகளினுடாகக் காட்டப்படும் உவமை தனிச்சிறப்பு வாய்ந்ததாகும்.
"நாராயணகவியின் பலகவிதைகள் கீர்த்தனை அமைப்புகளுடன் கருத்துக்களுக்கும் இசைக்கும் முக்கியத்துவம் அளித்துள்ளன. மரபு வழியில் பாடுபொருளுக்கு ஏற்றநிலையில், மெட்டமைப்பு நிலையில், இசைப்புலமையும் வெளிப்படும் பாங்கில்
面御例地邸 ஜசலை - டிே

இவர்தம் கீர்த்தனைகள் அமைந்துள்ளன. கர்னாடக இசையில் மரபுவழிநின்று மக்களைக் கவரத்தக்க முறையில் புதிய மெட்டுக்களில் கீர்த்தனைகளைப் படைத்தவர் உடுமலை நாராயணகவி"
இவ்வாறு இரா.வசந்தமாலை என்பவர் கூறுவதற்கேற்ப எளிமையான கீர்த்தனைகள், கண்ணிகள், தெம்மாங்குகள், குறத்திப்பாடல்கள், காவடிச்சிந்துகள் போன்றவற்றைத் தமிழ்ச் சினிமாப்பாடல்க்ள் மூலம் அறிமுகப்படுத்திய முன்னோடியும் கவிராயரேயாவர்.
"போர்வேந்தர்கள் போற்றும் புனித ஏர் வேந்தர்கள் நாடு கார் வேந்தன் ஐந்தருவும் போல கருணையாளர் நாடு"
என்று ஈரடிக் கண்ணியாலும் (கண்ணகி), "கண்டால் கொல்லும் விஷமாம் கட்டழகு மங்கையரை - நான் கொண்டாடித் திரியாமல் குருடாவது எக்காலம்"
என கீர்த்தனையின் உறுப்பான தொகையறாவாலும் (தூக்குத்தூக்கி) இயற்றிய பாடல்கள் உதாரணங்களாகும்.
"எல்லாம் இன்பமயம் புவிமேல் இயற்கையினாலே இலங்கும் எழில்வளம்" (மணமகள்) "உலகேமாயம் வாழ்வேமாயம் நிலையேது நாம் காணும் சுகமே மாயம்" (தேவதாஸ்) "தன்னைத் தானே நம்பாதது சந்தேகம்" (தெய்வப்பிறவி) "எங்கே சொர்க்கம்? எங்கே சொர்க்கம் என்றே தேடுவீர்?" (சொர்க்கவாசல்) "ஆகும் நெறி எது? ஆகா நெறி எது? அறிந்து சொல்வீரே!" (சொர்க்கவாசல்) "மானமெல்லாம் போனபின்னே வாழ்வது தான் ஒரு வாழ்வா? (கண்ணகி) "பட்டணந்தான் போகலாமடி பொம்பிளே" (எங்கவீட்டு மகாலஷமி) "இப்படித்தான் இருக்கவேண்டும் பொம்பளே இங்கிலீசு படிச்சாலும் இன்பத்தமிழ் நாட்டிலே" (விவசாயி) "ஒழவன் முன்னாலேதான் - இந்த ஒலகம் சுத்தணுமவன் பின்னாலேதான்" (பாட்டாளியின் வெற்றி) "முன்னறியும் தெய்வமடா அண்னைபிதா - அவர் மொழிந்ததெல்லாம் நமக்கு வேதமடா!" (நல்லதீர்ப்பு) “காரிலே சவாரி செய்யும் கன்னம் சிவந்த பொன்னம்மா" (எங்கவீட்டு மகாலஷமி) நாடோடிக் கூட்டம் நாங்க தில்லேலேலோ" (அமரதீபம்) "நமஸ்தே - நமஸ்தே நல்ல நாளிதே" (வனசுந்தரி)
இவையனைத்தும் உடுமலையின் பாடல்களுக்குச் சில சான்றுகளாகும். தமது பெரியார் வழிவந்த சுயமரியாதைக் கருத்துக்களுக்கு மாறானபோதிலும் திரைப்படங்களின் கதைக்கருவுக்கு இசைந்த முறையிலும், அன்பர்களின் வேண்டுதலுக்காவும் பக்திப்பாடல்கள் பலவற்றையும் உடுமலை இயற்றியுள்ளார்.
"பாற்கடல் அலைமேலே பாம்பணையின்மேலே பள்ளி கொண்டாய் ரங்கநாதா" எனத்தொடங்கும் தசாவதாரச் சிறப்பினை இராகமாலிகையாகச் சித்திரிக்கும் "ராஜாதேசிங்கு" படப்பாடல்
სფეხu# 2005 29

Page 32
எம்.எல்.வசந்தகுமாரி பாடியது. இன்றுங்கூடப் பரதநாட்டிய மேடைகளில் பயன்படுத்தப்படுகிறது.
"ஆடல் காணிரோ! திருவிளையாடல் காணிரோ" நடனப்பாடலும் (மதுரைவிரன்) எம்.எல்.வி.பாட பத்மினி நடனமாடிச் சிறப்புப் பெற்றது. "ஆதிபராசக்தி"யில் இடம்பெற்ற "ஓம் ஆதிபராசக்தி" எனத் தொடங்கும் பாடல் பொருள் பொதிந்தது; சந்தம் கமழ்வது
"வளர் திங்கள் நதி கங்கை மலர் கொன்றை அணிகின்ற சிவசம்புமகிழ் சுந்தரி நிரந்தரி கலை தந்த மகள் இந்திரமுக பிம்ப எழில் சிந்தும் அரவிந்த பத அந்தரி புரந்தரி"
எனவரும் சந்தத் தமிழ் மாலை அதுவாகும். அதேபோன்றதாக "மாலையிட்ட மங்கையாரோ? என்னபேரோ? அந்த மானினியாள் எந்த ஊரோ?" எனத்தொடங்கும் லெளகீகப் பாடலினைக் காவடிச் சிந்தில் உடுமலை இரத்தக்கண்ணிருக்காகப் படைத்திருந்தார்.
"ஓராயிரம் கண்கள் வேண்டும் கோலாகலக் குமரனைக்காண" "ஆவினன்குடி மேவும் குமரா அகிலலோக ஜீவாதாரா"
போன்ற பக்திரசம் ததும்பும் தனிப்பாடல்களையும் சீர்காழிகோவிந்தராஜன் முதலானோர் பாடுவதற்காக உடுமலை எழுதிக் கொடுத்தார்.
உடுமலைநாராயணகவி, கோயமுத்துார் மாவட்டத்தின் உடுமலைப் பேட்டை வட்டத்தின் பூளவாடிக் கிராமத்தைச் சேர்ந்தவர். நான்காம் வகுப்போடு திண்ணைப்பள்ளிப் படிப்பை முடித்தவர். தமது குருநாதர் உடுமலை முத்துச்சாமிக் கவிராயரிடம் 15 ஆண்டுகள் தமிழ் கற்றவர். தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளிடம் நாடகத்தையும், தமிழ் இலக்கணத்தையும் கற்றவர். கரிகேசநல்லூர் முத்தையா பாகவதரிடம் கதாகாலட்சேபம் கற்றுக்கொண்டவர். நாடகசபாக்களில் நடிகராக, இயக்குநராக, எழுத்தாளாராக, கவிஞராகப் பணியாற்றியவர். தேசிய இயக்கத்தையும், சுயமரியாதை இயக்கத்தையும் தழுவி நின்றவர். குடியரசு, சமதர்மம், விடுதலை முதலான ஏடுகளில் பகுத்தறிவுப் பாடல்களை எழுதியவர். ஈ.வே.ரா.பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, என்.எஸ்.கிருஷ்ணன், கே.ஆர்.ராமசாமி, கிருஷ்ணாவிக்சர்ஸ் அதிபர் லேனாசெட்டியார் முதலான பலரது அன்புக்கும், மதிப்புக்கும் பாத்திரமானவர். தனது இறுதிக்காலம்வரை நாத்திகக் கோட்பாட்டாளராக வாழ்ந்தவர். காந்தியத்தில் நம்பிக்கை கொண்டவர். அண்ணாவின் ஓர் இரவு, வேலைக்காரி ஆகிய நாடகங்களின் பாடலாசிரியர். பாரதிதாசனின் "தமிழச்சியின் கத்தி" காவியத்திற்குப் பாடலாக்கஞ்செய்து நாடகமாக்கியவர். வள்ளி திருமணம், பவளக்கொடி, நந்தனார், கோவலன் கண்ணகி முதலான மேடைநாடகங்களின் ஆசிரியர். இச்சை நிறைந்த பச்சைப் பாடல்களின் ஆசிரியராகவும் ஒரு காலத்தில் விளங்கியவர். டாசோ, ஓடியன், எச்.எம்.வி முதலான இசைத்தட்டுக் கம்பனிகளின் பாடலாசிரியர் . நான்கு ஆண்டுகள் எச்.எம். வியரின் உடன்படிக்கைக்காரர் 1972 ஆம் ஆண்டுவரை திரைப்படப்பாடல் பணிக்காகச் சென்னையில் வாழ்ந்தவள். நான்கு ஆண் மக்களின் தந்தை. 1972 ஆம் ஆணடின் பின்னர் தனது சொந்த ஊரில் வாழ்ந்து 23.05.1981 ஆம் ஆண்டு மரணமானவர். வாழ்க்கையைக் குதுாகலமாகக் கழித்த இப்பெரியார் கலையுலகத்தவர் பலரைப்போன்று திரைப்படம் தயாரிப்பதில் ஈடுபட்டுக் கஷ்டப்படாது, பொருளாதார தரத்துடன் வாழ்க்கையைப் பேணியவர்.
30 ஜூலை - டிே

பதினைந்து வயதில் மகாகவி பாரதியாரைச் சந்தித்து உரையாடியவள். பாரதிதாசன், கவிமணி, டி.கே.சி உட்படப்பலரதும் அன்பையும், நட்பையும் பெற்றவர். சமகாலக் கவிஞரான பாபநாசம் சிவனுடன் பேரன்பு பேணியவர். சுரதா, அ.மருதகாசி, தஞ்சை ராமையாதாஸ், கு.சா.கிருஷ்ணமூர்த்தி கே.டி.சந்தானம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன் முதலான அவர் காலக் கவிஞர்களுடன் நட்பையும், மதிப்பையும் காட்டியவர். "எங்களுடன் இருக்கவேண்டியவள் உங்களுடன் வந்துவிட்டார்" என உடுமலையின் பாடல்களைப் படித்துவிட்டுக் கலைவாணரிடம் கவிமணி கூறி வியந்துள்ளார். திரையுலகிற்கு வந்திராவிட்டால் பாரதிதாசனையே மிஞ்சியிருப்பாரெனக் கவிஞர் சுரதாவும் பாராட்டியுள்ளார். பி.யூ சின்னப்பா கதாநாயகனாக நடித்த திரைப்படங்களுக்கு உடுமலையே பாடல்கள் அதிகம் எழுதினார். அதேபோன்று கே.ஆர்.ராமசாமி நாயகனாக நடித்த படங்களுக்கும் பாடலியற்றினார். 1967 இல் உடுமலைக்கு தமிழ் நாடு இயல்இசை நாடகமன்றம் "கலைமாமணி" விருது அளித்தது. உடுமலையின் கவிவீச்சும், கற்பனைச் சாதுரியமும் கொண்ட தனிப்பாடல்கள் பலவுள. அவைபற்றி இக்கட்டுரையில் ஆராயப்படவில்லை. திரையிசைப் பாடல்களே இங்கு கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன.
"அலையும் நீர்மேவும் குமிழாதல்போலே ஆவதும் பொய்யாவதெல்லாம் ஆசையினாலே அரச போகமும் வைபோகமும் தன்னாலே அழியும் நாம் காணும் சுகமே மாயம்" என்ற நிலையாமை வரிகளும், "ஓரிடந்தனிலே நிலை நில்லாதுலகினிலே உருண்டோடிடும் பணம் காசெனும் உருவமான பொருளே"
என்னும் பணத்தின் பெருமை பேசும் வரிகளும், "யோக்கியன் என்பவன் உலகத்திலே ஒருத்தனும் கிடையாது - ஏதோ உண்டுன்னு சொன்னா அவனுக்கு மூணும் இருக்காது மண், பொன், பெண் ஆசை மூணுமிருக்காது" என்னும் யதார்த்த வார்த்தைகளும் உடுமலைக்கே சொந்தமானவைகளாகும்.
"கனியில் மேவு(ம்) ரச இனிமைபோல - இந்த வனிதை வாழ்வில் நீர் அல்லவா?" "ஆனந்தம் அது எங்கே பிறந்தது அமைந்த ஆண் பெண் அன்பால் வளர்ந்தது ஊனும் உயிரும் ஒன்றாய்க்கலந்தது உண்மைக் காதல் உறவே பெரிது" "வாதி புளுகன் வைத்தியன் மாந்திரிகன் சோதிடன் என்பானோ ஞானத்தங்கமே சுத்தபுளுகனடி!" "ஜாதி பேதத்தைத் தட்டி எறிக்கணும் தன்னலங்களை வெட்டிமுறிக்கணும் தீதில்லாமலே தேகம் உழைக்கனும் தேசகெளரவம் நாளும் உயர்த்தணும்"
இவை உடுமலையின் பன்முகப்பரிமாணங்களைக் கவிதையில் காட்டுவன. தஞ்சை ராமையாதாஸ் தனது இறுதிக்காலத்தின்போது அவரைப் பார்க்க வந்த உடுமலையாரிடம் "நான்தான் உழைப்பிற்காக டப்பாப் பாடல்களையெல்லாம் எழுதிவிட்டேன். நீங்களாவது நீண்டகாலம் வாழ்ந்து தமிழ்ப்
gbr 2005 面御毗吸西的

Page 33
gւննir3:6) முனையில்
i ៣unឆ្នា ரயாடப்படுகின்றது. 8 அடுத்த நொடிக்கே ஆதாரமற்ற எங்கள் பொழுதுகள் உதிரங்களில் தோய்ந்தே 3 உதயமாகின்றது. இடது கரத்தில் வடியும்
வலது கரத்தால் கவிதை வடிக்கிறோம். மரணபயத்தை sligulug. பாதைகளில் எங்கள் பயணங்கள் கற்றதனால் ஆன பயன் கண்களை குற்றும் கம்பிகளும் நெஞ்சைத்துழைக்கும் குண்டுகளுமே, சப்பாத்துக் கால்களுக்குள் எங்கள் ប្រសិល៍u பெண்களின் கற்பும்
១. ស៊ួង Geng@ទាំprង சொந்த மண்ணில் சுதந்திரத்தை இழந்த
fu់អ៊u១៨១ ឆ្នាr
று செதுக்கிவிடு
தெருக்களில் உயிர்கள் வீசப்படும் அவலம்
O வாழ்க்கை நமக்குப் பலநேரங்களில் நல்லவைகளுக்
கிடையே தேர்ந்தெடுக்கும் வாய்ப்பைத் தருவதைவிட தீமை
களுக்கிடையே தேர்ந்தெடுக்கும் வாய்ப்பையே தருகின்றது.
- சி.சி. கால்டன்
)ே தோற்றுவிடுவேனோ என்று ஒருவன் தயங்கிக்
கொண்டிருக்கும்போதே நிறையத் தோல்விகளைக் கண்ட
ஒருவன் வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறான்.
- ஹென்றி சி. லிங்க்
Dail
ஜூலை - டிெ
 
 
 
 
 
 
 
 
 
 

፴Bጭgjrfነ *ड, २१, ஆ75 ல் மாநகராட்ஓ மின்மூழ்
ழ்ப்பான"
பாடல்களைச் சினிமாவில் வாழவைக்கவேண்டும்" என்று கேட்டுக்கொண்டாராம். ஆனால் 1961 இல் தமிழ்த்திரையுலகில் ஏற்பட்ட மாறுதல்களின் காரணமாக உடுமலை பாடல்கள் இயற்றுவதைத் தவிர்த்துவந்தார். கண்ணதாசன், வாலி போன்றவர்கள் அப்போது பல படங்களுக்கும் பாடல்கள் இயற்றினர். ஒவ்வொரு வரும் தமக் கென ஒரு வட்டத் தைச் சிருஷ்டித்துக்கொண்டனர். செம்மறியாட்டுத்தனம் மிக்க தமிழ்ச்சினிமாவுலகில் அறுபதுகளில் 90 வீதமான படங்களுக்குக் கண்ணதாசன் பாடல்கள் இயற்றிக் கொடிகட்டிப்பறந்தார். 'பந்தபாசம்' படத்திற்காகப் பாடலெழுதித் தருமாறு எம்.எஸ்.விஸ்வநாதன் உடுமலையைக் கேட்டபோது "நான் கற்ற தமிழைக் கொஞ்சமாவது காப்பாற்ற விரும்புகிறேன். வேறு யாரையும் வைத்து உனது தேவையை நிறைவேற்றிக்கொள்" என உடுமலை குறிப்பிட்டாராம் . இருந்தும் தனது சீடரான கே.எஸ். கோபாலகிருஷ்ணனின் விருப்பப் படி சித் தி (1966) கண்கண்டதெய்வம் (1967), ஆதிபராசக்தி (1971), குறத்திமகன் (1972), வாழையடிவாழை (1972) ஆகிய படங்களுக்கும் தேவரின் விவசாயிக்கும் (1967) சில பாடல்கள் எமுதினார். உடுமலையின் 77வது வயதில் கே.எஸ்.ஜியின் "தசாவதாரம்" படத்திற்குப் பாடல்கள் எழுதக்கிடைத்த வாய்ப்பைத் தமது அன்புக்குரிய சீடரான மருதகாசிக்கு அளித்தார். இருந்தும் அப்படப்பாடல்களில் உடுமலையின் பங்களிப்பும் இருந்தது. டைட்டிலில் பாடலாசிரியர் வரிசையில் உடுமலையின் பெயர் முதலிடத் தில் காண்பிக்கப்பட்டது. இத்துடன் திரைக்கவிதைத் தொடர்பின்றியே உடுமலையின் வாழ்வு கழிந்தது.
"சினிமாப் பாட்டு என்னும் போதினிலே - செந் தேள்வந்து பாயுது காதினிலே
எனப் பிற்காலத்தில் சலித்துக்கொண்ட உடுமலை "பாட்டு ஒரே பாட்டு அது பாரதிபாட்டு" என்ற இறுதிக் கவிதையையும் தமிழுலகிற்குப் படைத்தளித்தார். 1982 இல் தமிழ்நாடு இயல் இசை நாடகமன்றத்தில் உடுமலைக்கவிஞர் உருவப்படம் திறந்துவைக்கப்பட்டது. அதேபோல பூளவாடி அரசினர் மேல் நிலைப்பள்ளியில் கவிராயர் பெயரால் 1992 இல் கலையரங்கம் திறக்கப்பட்டது. உடுமலைப்பேட்டையில் அமைக்கப்பட்ட உடுமலை நாராயண கவியின் மணிமண்டபத்தை 23.02.2001 இல் முதலமைச்சராயிருந்த கலைஞர் கருணாநிதி திறந்துவைத்தார். அவரே அதனைக் கட்டுவித்ததுடன் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான சமூக நலத்திட்டங்களையும் கவிஞர் பேரால் செயற்படுத்தினார்.
உடுமலையின் திரைப் படக் கவிதைகளில்
தமிழ்த்தேசியத்தை வலியுறுத்துபவை அநேகம். "கல்வியைப் போலொரு செல்வம் உளதோ" என்னும் (தமிழறியும் பெருமாள் 1942) LITL656),
"பரணி முதலாய் தூது காதலுடன் அந்தமாதிரி
திருவாயிர மணிமாலை புராணம்
குறவர் வஞ்சி கலம்பகமும்
என்று வந்து பண்பாடும்"
எனத் தமிழிலக்கியங்களின் பெருமையினைப் பறைசாற்றுகிறார். "சகுந்தலை" (1940) படத்தில் எம்.எஸ். பாடிய "எங்கள் தந்தை தாயின் நாடு சங்கத்தமிழ்த் திருநாடே"யும் தமிழகப் பெருமை கூறுவதாகும்.
Flbur 2005 31

Page 34
"ஒன்றல்ல இரண்டல்ல தம்பி - சொல்ல ஒப்புமை இல்லாத அற்புதத் தமிழ்நாட்டில் (ஒன்றல்ல)"
எனத்தொடங்கும் (தாய் மகளுக்குக் கட்டியதாலி 1959)
LILLILITL656).
"பகைவென்று திறம்பாடும் பரணிவகை - செழும் பரிபாடல் கலம்பகங்கள் எட்டுத்தொகை - வான் புகழ்கொண்ட குறளோடு அகம் புறமும் - செம் பொருள் கண்ட தமிழ்ச்சங்க இலக்கியப்பெருஞ்செல்வம் (ஒன்றல்ல)"
எனக்காட்டுவதையும் காணமுடிகிறது மேலும், "வண்ணத்தமிழ் சொர்ணக்கிளி வாய்திறந்தாள் வள்ளுவன் சொல் தெள்ளமுதை மெல்ல மொழிந்தாள் கண்னலகு பாகுமலர்க் கள்ளை வெறுத்தேன் - அவள் கானரசத் தேனை உண்டு ஞானம் படைத்தேன்"
(காவேரியின் கணவன் 1959). எனவும். "மொழிமேலே விழிவைத்தே முடிமன்னர் ஆண்டதமிழ் நாடு - வட மொழியான ஆரியத்தால் அழியாத கலை வாழும் தமிழ்நாடு" (சொர்க்கவாசல் 1954)
என்றும் "கன்னித் தமிழ்ச் சாலையோரம் சோலையிலே கவிதைக் கனிகள் உண்ணும் பறவைகளே தென்னவர் மூவேந்தராம் தமிழ்வளர்த்த சேர சோழ பாண்டியரைப் பாடுங்களே" (சொர்க்கவாசல்)
எனவெல் லாம் பாடியவர் உடுமலையவர்கள்.
அப்பாடல்கள் தமிழர் தொன்மை, வீரம், பண்பாடு ஆகியவற்றின் வெளிச்சங்களாகும். தமிழினப்பற்றுடன் நில்லாது பள்ளத்தில் வீழ்ந்துள்ள தமிழ்ச்சாதி விழிப்புப்பெற்றுப் பயனுறப்பாடிய பகுத்தறிவுப்பாக்களும் பலவாகும்.
"சின்ன வயதிலே கன்னித்தமிழிலே சொன்னான் ஒருபாட்டு என்று போடுறாயேவேட்டு"
எனச் சம்பந்தர் வரலாற்றைத் தொட்டுக்காட்டவும்
உடுமலை தவறவில்லை.
"பணக்காரர் தேடுகின்ற இன்பம் - ஏழைப் பாட்டாளி மக்கள் படுந்துன்பம்"
என்பதையும் அவர் எடுத்துக் கூறத்தயங்கவில்லை. "கூழையுண்ணும் ஏழை மணிக்கு ஏழு மைல் நடப்பான் கொண்ட செல்வன் வண்டியேற ரெண்டு பேரை அழைப்பான் வேலை செய்யும் கூலி ஒரு நாளில் அன்னம் புசிப்பான் ஆளை ஏய்க்கும் கோழை முதலாளி சோற்றை வெறுப்பான் நாட்டைக்காக்கும் ஏழை வீட்டுக்காரி உடம்பு கட்டுமஸ்தும் கல்லுப்போலிருக்கும் அது இரும்பு வீட்டைக் காக்கும் செல்வனின் பெண்டாட்டி உடம்பு அது வெளியே சொல்லும் விஷயமல்ல மெலிந்த துரும்பு"
நகைச்சுவையும் பொருட்சுவையும் மிக்க பாடல்வரிகள்
இவை.
32
ஜூலை - டிெ

"மோட்சலோகம் பாத்ததற்குச் சாட்சியுமுண்டோ - உங்க மூளையைக் கொளப்பிவிட்ட ஆளையுங்கொண்டா"
என வினாவெழுப்பும் கவிராயர். "பாம்போடு பழகலாம் கண்மணி பண்பில்லா மாந்தருடன் பழகினால் அடாது என் கண்மணி"
எனவும் எச்சரிக்கிறார். மேலும், "அன்பு நிலந்தனிலே இன்ப ஆனந்தமாகிய நீர்பாய்ந்து அம்புவிமேல் அவதாரம் கொண்டாய் அமுதே தாலேலோ தாலேலோ"
எனத் தாலாட்டும் இசைக்கிறார். உடுமலையார் பாடிய தாலாட்டுப் பாடல்கள் குறைவுதான், என்றாலும் பாடியவை அனைத்தும் பயன்மிக்கவை.
"காவியமாகிய கவிப்பொருள் மாட்சி கண்விழி காட்டும் சித்திரக் காட்சி ஓவிய ஞான சிற்பநூல் முறை ஆராய்ச்சி ஓங்கிடவே கலைஞன் செய்வான் ஆட்சி
எனத் தீர்க்கதரிசனம் கூறியவள் கவிராயர். "வாத்தியார்" என்பது இவரது செல்லப்பெயர். "கவிராயர்" பட்டப்பெயர்.
"நாடோடி நடனமாது ராஜாங்கத்தைக் கெடுத்திட்டா நாட்டுக்காகப் பாடுபட்ட தியாகி விழுந்து படுத்திட்டான்" "உழுதுவெதைச்ச உழைப்பாளி உணவில்லேங்குறா கையிலே பணமில்லேங்குறா பணங்கொழுத்த மனுசென் கிடைத்த அரிசி குணமில்லேங்குறா - சோறு மணமில்லேங்குறா"
“பாட்டாளியை மதிக்கணும் படிப்பாளியை மதிக்கனும் பண்டம் மாற்றிப் புசிக்க ஜனங்கள் பகைமை நீங்கி வாழவேணும்"
இவை மர்மயோகி' படப்பாடல் வரிகள். எளிய தமிழில்
மனிதப் பிரச்சினைகளை அலசும் கவியுள்ளத்தை இங்கு காணலாம்.
"சுதந்திரம் வந்ததுண்ணு சொல்லாதீங்க - சொல்லிச்
சும்மா சும்மா வெறும் வாயை மெல்லாதீங்க நீங்க"
"வில்லம்பு பட்டபுண் வேதனைதராது என்றும்
சொல்லம்பு சுட்டதுன்பம் மாறாது"
"கதவைச் சாத்தடி
கையில் காசில்லாதவன் கடவுளானாலும்
கதவைச்சாத்தடி"
"சும்மா இருக்காதுங்கா - அது சும்மா இருக்காதுங்க"
"வாதம் வம்பு பண்ணக்கூடாது"
"சரியில்லே மெத்தச்சரியில்லே"
"சிந்தை அறிந்துவாடி"
"டேஞ்சரு அய்யா டேஞ்சரு"
"நாலுகால் குதிரை"
"ஒன்றே மாந்தர்குலம் ஒருவனே கடவுள்"
இப்படியான பலநூறு பாடல்களைத் தமிழ்த்திரையில் தந்தவர் உடுமலை. காலத்தால் அழியாத கவித்துவம் அவருடையது. அது என்றும் நிலைத்து வாழக்கூடியது.
lgbur 2005 砷邸的

Page 35
ஜோண்சன் பிறேமானந்த்
@ggpÜ62i ()42)at6
கடந்த 13 வருடங்கள் திருமறைக் கலாமன்றத்தின் பணிகளில் தன்னை ஈடுபடுத்தியதுடன் - சிறப்பாக கடந்த 10 வருடங்களாகத் திருப்பாடு களின் காட்சிகளில் பிரதான பாத்திரமாகிய இயேசுவின் பாத்திரத்தைத் தாங்கி நடித்து அப்பாத்திரத்திற்கு தன் உடலாலும் உள்ளத்தாலும் நடிப்பாற்றலாலும் உருக்கொடுத்த கலைஞனான ஸ்ரீபன் ஜோண்சன் பிறேமானந்த் (வயது 35) 26.08.2005இல் பிரான்ஸில் எதிர்பாராத வகையில் ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தமையானது திருமறைக் கலாமன்றத்திற்கு ஏற்பட்ட துயரம்மிகுந்த இழப்பாக அமைகின்றது. ஜோண்சன் பிறேமானந்த் திருமறைக் கலாமன்ற வரலாற்றில் நிராகரிக்கப்பட முடியாத கலைப்பதிவை ஏற்படுத்திச் சென்ற கலைஞன். மன்றத்தின் அதியுயர் கலைச் செயற்பாடென்று கூறத்தக்கதான மன்றத்தால் வருடந்தோறும் மேடையேற்றப்படும் திருப்பாடுகளின் நாடகங்களில் பிரதான பாத்திரமாகிய இயேசு பாத்திரத்தை ஏற்று கடந்த ஒரு தசாப்தத்திற்கு மேலாக அப் பாத்திரமாகவே வாழ்ந்து பல்லாயிரக்கணக்கானோரின் மனதில் பதிந்தவர். இயேசுவின் பாடுகளின் துன்பியலை யதார்த்தமாகப் பார்ப்போரின் மனதில் பதிகை செய்தவர் பாதி வயதில் இழப்பெனும் துன்பியல்' அனுபவத்தைத் தந்து சென்று 6'LITFr.
1992 இல் திருமறைக் கலாமன்றத்தால் நாடகப் பயிலகம் ஆரம்பிக்கப்பட்டபோது அதில் பயிற்சி மாணவனாக இணைந்து கொண்டதுடன் ஆரம்பமாகிய இவரது கலைப்பணி இறுதி வரை தொடர்ந்தது. உயர்ந்த மெல்லிய
பயிலகத்தால் தயாரிக் நாடகமான 'நெஞ்சக்
ஜோண்சனின் முதல் நாடகத்தில் குறியீட்டு இயேசு பாத்திரத்தை
அதனைத் தொடர்ந்து நடித்தாலும் 1995 இல் மேடையேற்றிய 'அன் அமரகாவியம்' என்னு நாடகத்தில் இயேசுவ தொடங்கியதில் இருந் தனித்துவம் மிக்க ஆ தொடங்கியது. அதன் இல்லாத திருப்பாடுகள் இல்லையென்று சொ6 அளவிற்கு இவர் தனி விளங்கினார். பலிக்க சுவடுகள், சிலுவைச்
கழுவிய குவலயம், க கல்வாரி யாகம் எனத் நாடகங்கள் அனைத்தி நடிப்பு சிறந்து விளங் திருப்பாடுகளின் நாடக இயேசுவாக நடிப்பதெ இலகுவானதொன்றல் மக்கள் நம்பும் படியா
திருப்பாடுகளின் நா ‘இயே 'வாக ே
 
 

தோற்றமும், வசீகரம் மிக்க முகச்சாயலும் வாய்க்கப்பெற்ற ஜோண்சனின் தோற்றம் இயேசு பாத்திரத்திற்கேற்ற தென்று ஆரம்பத்திலேயே தீமானிக்கக்கூடியதாக இருந்தது. நாடகப் கப்பட்ட முதல் கனகலே நாடகம். அந்த
பாத்திரமாகிய ஏற்று நடித்தார்.
பல நாடகங்களில் b மன்றம் பில் மலர்ந்த ம் திருபாடுகளின் ாக நடிக்கத் து ஜோண்சனின் ற்றல் வெளிப்படத்
பின் ஜோண்சன் ரின் காட்சி ல்லக் கூடிய த்துவம் மிக்கவராக ளம், கல்வாரிச் சுவடுகள், குருதி ாவிய நாயகன்,
திருப்பாடுகளின் நிலும் இவரது கியது.
5ங்களில்
ன்பது ல. 'இறைமகனை க மேடையில்
வாழவைக்க வேண்டுமானால் ஸ்ரனிஸ்லவ்ஸ்கி என்னும் நாடக நெறியாளர் கூறுவது போல பாத்திரமாக வாழ வேண்டும், இதனை ஜோண்சன் மிகவும் நேர்த்தியாக மேற்கொண்ட ஒருவர். கிறிஸ்தவர்களின் தவக்காலம் ஆரம்பமாகும் விபூதிப் புதனன்று திருப்பாடுகளின் காட்சிக்கான பிரதி வழங்கும் நிகழ்வும் இடம்பெறும். அன்றிலிருந்து தன்னை ஒறுத்து உபவாசங்களை மேற்கொண்டு தன்னை அப்பாத்திரத்திற்குத் தகுதியுடையவன் ஆக்கிக்கொண்டே நடிப்புச் செயற்பாட்டை மேற்கொள்வார். அதுமட்டுமன்றி மேடையில் கிறிஸ்துவின் பாடுகளின் துன்பங்களை மேற்கொள்ளும் காட்சிகளில் அவற்றை ஆழ்ந்து அனுபவித்து தன்னைப் பல வகையில் வருத்தி நின்றவாறே மேடையில் "இயேசு பாத்திரத்தைச் சித்தரிப்பார்.
ஒரு குழந்தைக்குத் தந்தையான ஜோண்சன் இறுதியாக இவ்வாண்டு மார்ச் மாதம் 14ஆம் திகதி முதல் 20ஆம் திகதிவரை ஆறு நாட்களுக்கு மன்றம் மேடையேற்றிய குருதி கழுவிய குவலயம் திருப்பாடுகளின் காட்சியிலும் இயேசுவின் பாத்திரமேற்று நடித்திருந்தார். அதன் பின்னர் தொழில் நிமித்தம் பிரான்ஸ் நாடு போவதாகக் கூறி 'இனி வேறு ஒருவரை நடிக்க ஆயத்தப்படுத்துங்கள் என்று கூறினார். அந்த வார்த்தை ஜோண்சனை நிரந்தரமாகப் பிரிவதற்கானதொன்றாக அமையும் என யாருமே நினைக்கவில்லை. பிரான்ஸ் சென்றாலும் அங்கு இயங்கும் திருமறைக் கலாமன்றத்தில் இணைந்து
பணியாற்றுவார் என்பதே எல்லோரதும் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால்.
இயேசுவின் திருவுருவத்தை தனது உடலில் நிழலாய் நடமாடவிட்டுப் பாடுகளின் கலை சிறக்க வைத்த ஜோண்சனின் இழப்பு திருமறைக் கலாமன்றத்திற்குப் பேரிழப்பே ஜோண்சனின் நினைவுகளைச் சுமந்தபடியே திருப்பாடுகளின் நாடகக் காலங்கள் இனி இருக்கப்போகிறது என்பதே S. 606T60)LD.
யோவான்
gbust 2005
55丁

Page 36
தளம்புதலும் பின் வேண்டும் என்றே சிந்தி பரவுதலும் அருவருப்பைத் தருவதில்லையா அவ்வப்போது..?
சீரற்ற வார்த்தைகள் எல்லா இடங்களிலிருந்தும் தானே கிளம்புகின்றன பெறுமதியற்றுப் போகின்றவேளை ஊசி முனைகளைக் காவியபடி கரங்கள் கூட இல்லாது ஒரிரு விரல்கள் மட்டும் அலைகின்றன ஏன்.?
米
நிலாக் காணாத வேளையிலா மரணம் பற்றியும் மரணத்தோடு வாழ்நிலை அமைந்தது நினைத்தும் பயம் கொள்வது பட்டப்பகல் உணர்த்தி
நிற்கிறதே சாவை நெருங்குதல் பற்றிய சத்தியத்தின் தெளிவை திரைச்சீலை எதற்கு
இப்போ
உனக்கும் எனக்கும்.?
லோருள்ே
உன் நினைவுகளில்லாத சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். காலம் அதை தந்துவிடுமென்றால்
34 ஜூலை - டி
 

தம் கேதீஸ் விதைகள்
நான்
எனக்கேயான வாழ்வில் துளிரிடுவேன்..! புரிதல்களற்ற மெளனங்கள் நிலைத்திருக்கும் போதே வெளியேறி விட்டோம் காற்றும், மழையும், வெயிலும், இடியும், பெரும் சுருள் அலையும் இன்னும் அத்தனையும் தாண்டி நம்பிக்கை கொள்கிறது ஓர் அசாதாரண இணைவு எம்மிடையான வெளிகளை அதிகப்படுத்திக் கொண்டிருக்கிறேன் அதீத
நெருக்கங்கள் உண்டான பொழுதுகளைப் பற்றி சுயம் வரைகின்றன கோடுகள்...!
04தைகளினூடே.
எனது பயணத்தை
ஓர்
இலக்கோடும் பல்வேறு புரிதல்களோடும் தொடங்கியிருக்கிறேன் போக்கின் புகழிடத்தை தெரிவுசெய்யும் என்
சிறு நகர்வும்.! பயணத்தில் இணைதல் உன் பிரியமே எந்த நெருக்குவாரங்களும் இரா. கை கோர்த்து
துணையாய் நெருங்கி உரையாடி களை போக்க நீ விரும்பலாம் தவறேயல்ல உனக்கே பிடித்தமான திருப்பங்களில் நிறுத்தி உனக்கான திசைகளையும்
grblur 2005

Page 37
முன் நிறுத்தக்கூடும்; அல்லது கூடவே முட்களையும் புதர்களையும் சுமந்தும் வந்திருப்பாய் நீ.! இவற்றுக்கும் அப்பால் தொடங்கப்பட்டிருக்கிறது பயணம் தெரிவு செய்யப்பட்ட பாதைகளினூடே.1
நூற்காலி
எனது
நாற்காலியில்
யாரோ ஒருவன் அமர்ந்திருக்கிறான்
அவன்
அப்படியே இருக்கட்டும். யாரும் அவனை தள்ளி விடவோ வேறொன்றுக்கோ முயற்சிக்க வேண்டாம்
அது என்னையும் உங்களையும் பாதிக்கக் கூடும் . அவன் போக்கில் விட்டுவிடுங்கள் களுத்துச் சுளுக்கு வந்து; நாரி கடுத்து; கால் விறைத்து; அழுது புலம்பி;
இரண்டு நாய் தேடிக் கடித்து; ஊழையிட்டு குரைத்து . குரைத்து செத்துப்போவான் அவன் . அதுவரை அது என்
நாற்காலி எனும் நம்பிக்கை யோடிருப்பேன்
நான்..! N
酶
ஜூலை - டிசெL
 
 
 
 
 
 
 
 
 
 

សំ ប្រាជ្ញាឆ្នា 8 pg55 Lorrairs (361 ံးဂို့‡ ಟ್ರೇನ್ತಾಟ
線 கரையில்லாக் ຂຶng ಔಟ್ಲಿ ಹಷ್ರ#áಿ್àಿತ್ರ
ប្រះ
@g.
. -- அகராதிக் கருத்தை நஞ்சங்கள் 2, då ខ្សទ្រព្រោយ ហ្វ្រោះ ចំនាត្រាប់ 魏橡 雛 உருகிவிடுமே ೩ರ್ಿಟಿಂ#© ಫ್ಲಾಟ್ತು
ឆ្នា ឆ្នា ບໍ່ ມ. \ ឆ្នា ឃ្លោះ &: क्षं வத்து அழகு பார்த்த ஆனால் நீயோ ថ្ងៃ១រោជ្ជៈប្រយ காயப்பட்ட மானிடத்தை கையில் ஏந்தவே முந்தி நின்றாய்
அன்னையே g ឆ្នា ឧក្រិចថា ត្រា ឆ្នា
1666
தமிழ் நேசன்
அன்னை திரேசா மறைந்து ஈப்ரெம்பர் 05, 2005 உடன் எட்டு ஆண்டுகள்
நிறைவடைகின்றது.
J前2005 35

Page 38
மினுங்கி மினுங்கி எரிகிறது மெழுகுதிரி தனது உடலை உருக்கி, எரி
பொருளாக்கி
தனது பிறப்பர்த்தம் தனை ஒளியாய் வெளிப்படுத்தி தனது மரணத்தைத் தானே நெறிப்படுத்தி தனது நரம்பினிலே தனைஎடுக்கத் தீமூட்டி, மினுங்கி மினுங்கி
எரிகிறது மெழுகுதிரி. இங்கிருந்து பார்க்க சுவாலைத் தலையசைத்து அவயம் இழந்த
கம்பீர உடல் நிமிர்ந்து வெளிச்சத்தை. இசையின் வெள்ளமென நாற்திசைக்கும்
வழங்கி. சற்றுத் தொலைவயலில் வாலாட்டி வாயால். பனி நீர் வடிய நா தொங்கவிட்டு அமர்ந்த படியிருக்கும் கறுப்பு நாயாம் இரவை முழுதாய்த் துரத்த முடியா இயலாமை வளைய வர. தீப்பூ மலர்ந்திடுது மெழுகுசெடி! அதனுடைய சோகம் அதன் ஒளியை நனைத்தபடி கசியுதெனத் தோன்றிற்று இதை அணைக்க இரவு நாயும்; சிறகடித்து வருகின்ற காற்றென்னும் ஆந்தையதும்; குளிரூளை இடும் நரியும் கொண்டிருக்கும் ஒற்றுமையை. எவ்வாறு இந்தச் சுடரெதிர்த்துக் கடைசிவரை
வாழ்ந்தெரிந்து. தன் பிறப்பை அர்த்தமாக்கப் போகிறது. த. ெ
3 6 ஜூலை
 

எங்கும் ஒரு அமைதி! இறந்த சடலமென எந்தன் அயலில் இறைந்துளது ஒரு அமைதி! மின்சாரமும் செத்து
மிரட்டும் பணியிரவு. இன்று காலை நடந்த இரண்டு வெடிமுழக்கின் பின்சிலரிறந்து
பிரச்சனை கிளம்பி. என்ன “நடக்கும் அடுத்து’ என அறியாப் பதட்டத்தில் எங்கும் ஒரு அமைதி!
இரவு நத்தையாய் நகர்ந்து!! எத்தனை இதயங்கள் இப்போது நேர்ந்தபடி இத்திசையில் உள்ளனவோ?
எவரின் உயிர் பிடுங்க இங்கின்னும் திட்டம் தீட்டப்பட்டுள்ளதுவோ? அடுத்துப் பழிவாங்கும்
வேட்டைக்கு ஆராரைக் குறிவைத்துத் துவக்கில் தோட்டா நிரப்பினதோ? இந்த அமைதி.
இதயம் கலங்கவைக்க; எப்போ வெடி முழங்கும் எனக்காது கூர்ந்துகேட்க கோவிலுக்குச் சென்று குனிந்தெழுந்து, நேர்த்திவைக்க ஏலா அகாலத்தில். இதயத்தைக் கோவிலாக்கி எத்தனை உயிர்களிப்போ இறைஞ்சி உள்ளனவோ? எத்தனை நேர்த்திகளைச் செய்தும்
இறந்தகாலம் பரிதாபம் பராமல் பலியெடுத்துக் கொண்டதுபோல் இனியும் தொடர்ந்திடுமோ? என்மனமும் நேர்கிறது! “என்னுறவைக் காப்பாய் இறைவா’ என ஒவ்வொருவர் தங்களுள் நேர்வதென வீணாய் உயிர்எதுவும்
போகக்கூடா தென்றென் உளமிப்போ நேர்கிறது. میر
レイ
တ္ထu်ဒိဓလåဝံf
டிசெம்பர் 2005 -

Page 39
ஈழத்தின் கலை இலக்கியப் புலத்தில் அஞ் கடந்த அரை நூற்றாண்டு காலத்திற்கும் அதிகமாக பணிசெய்த கலாநிதி காரை செ. சுந்தரம்பிள்ளை என்ற ஆளுமைமிக்க மனிதனின் மறைவு மனதினை வருத்துகின்றது. காரை என்ற சொல்லுக்குள் காரை நகரையும், கலையையும் அடையாளப்படுத்தி நின்ற இந்த கலை இலக்கியவாதியின் மறைவு, இலையுதிர்காலம் போல் இவ்வருட கலையுதிர் இழப் புக் களின் கன தனி யை மேலும் அதிகரித்துவிட்டது.
கவிஞனாய், பேச்சாளனாய், நடிகனாய், நெறியாளனாய், ஆய்வாளனாய், ஆசிரியனாய், நிர்வாகியாய் பல பாத்திரங் களை வாழ்வியலில் தாங்கி, தன் பன்முக ஆளுமை வீச்சை öITEDIJ. lf. ஈழத் திற்குப் பயன் தரும் வகையில் வழங்கிச் சென்ற
. - - - - மறைவு
அமரர் காரை. சுந்தரம்பிள்ளை வரலாற்றில் படைப்புக்களாலும் பணியாலும் காலம் கடந்தும் வாழப்போகின்றவர்.
குறிப்பாக, நாட்டார் இலக்கியத்திற்கும், கூத்துக் கலைக்கும் அவர் ஆற்றிய பணி அளவிடற்கரியது. "வடபுல நாட்டார் அரங்கு', 'ஈழத்து இசைநாடக வரலாறு', 'நடிகமணி வைரமுத்துவின் வாழ்வும் அரங்கும் போன்ற அவரது ஆய்வு !
நூல்களும், நூற்றுக்கணக்கான கட்டுரைகளும் எமது பாரம்பரிய அரங்க வடிவங்களின் வேர்களை அடையாளப்படுத்தியது மட்டுமன்றி எமது தொன்மைகளுக்குச் சான்று கூறிநிற்கின்ற ஆதாரங்களாகவும் ( திகழ்கின்றன. இவற்றின் நீட்சியாக அவர் எழுதிய 'சிங்கள பாரம்பரிய அரங்கு', 'மலையகக் கூத்துக்கள் போன்றதான நூல்களும் தமிழ் அரங்கிற்கு வளம்சேர்த்து நிற்கின்றன. (
இவை மட்டுமன்றி 'கூத்துக் கலையை' வளர்த்தெடுப்பதற்கும், அதன் வடிவ சாஸ்திரியத்தை மீள் ( கண்டுபிடிப்புச் செய்வதற்கும் அவர் எடுத்த முயற்சிகள் ஒரு பரந்த செயற்களங்களின் தொடக்கங்களாக நிற்கின்றன.
இவற்றிற்கப்பால் ஈழத்தின் கவியரங்கப் பாரம்பரியத்தில் மரபுக் கவிஞனாய் மேடைகளை அலங்கரித்து ஆர்வலர்களை ( வசீகரித்துக்கொண்ட இவரின் கவிதைகளும், 'சங்கிலியம்', ! 'காவேரி. போன்ற காவியங்களும் எமது மரபுவழிக் கவிதை 1 இலக்கியத்தில் பெறுமதி மிக்கவையாகத் திகழ்கின்றன. கல்லூரிகளிலும், ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையிலும், பல்கலைக்கழகத்திலும் இவரிடம் பயின்ற பலர் இன்று 'ஆளுமை
O புகழ்பூத்த தமிழ் அறிஞனாகவும், சொற்பொழிவாள னாகவும் விளங்கியதுடன் ஆசிரியராக, உப அதிபராக பணியாற்றி தலைமுறைகள் பலவற்றால் அறியப்பட்ட ! பேராசானும், அகில இலங்கை கம்பன் கழகத்தை ஸ்தாபித்து வழிநடத்தியவருமான சைவத் தமிழ் வித்தகர் கணபதிப்பிள்ளை சிவராமலிங்கப்பிள்ளை 25.08.2005 இல் : அமரத்துவம் அடைந்தார்.
தம் வாழ்வாலும் பணிகளாலும் இம் மண் "கலைமுகம் தனது அஞ்சலி
砷 ஜூலை - டிசெ|
 

லி நிறைந்தவர்களாக பணியாற்றிக் கொண்டி
ருக்கின்றனர். இந்துசமய தத்துவங்களை
ஆழக்கற்று அதனை அவர் அடுத்த சந்ததிக்கு
அளித்த வகை மறக்கக்கூடியதல்ல.
இந்த செயல் வெளிப்பாடுகளின் ஒரு அங்கமாக
இறுதிக்காலம் வரை மன்றத்தின் செயற்பாடுகளுக்கு அர்ப்பணிப்புடன் ஊக்கமளித்து வந்தார். குறிப்பாக பாரம் பரியக் 8Ꮟ 60Ꭷ 6Ꮣ0 O O வடிவங்களான நாட்டுக்கூத்து, 5glyshireDGT இசை நாடகம் , கிராமிய ட நடனங்கள் போன்றவற்றை 21.09.2005 பேணவும் புத் தாக்கம் செய்யவும் திருமறைக் கலாமன்றம் முற்பட்டபோது மன்றத்திற்கு தனது முழுமையான ஆதரவையும், ஆலோசனைகளையும் தந்து நின்றார். மன்றம் நடத்திய, கருத்தரங்குகள், ஆய்வரங்குகள், பயிலரங்குகள் போன்ற பலவற்றிற்கும் வந்து கருத்துக்களை வழங்கியதுடன் மன்றம் நடத்திய, முத்தமிழ் விழாக்கள், நாட்டுக்கூத்து விழாக்கள், இசைநாடக விழாக்கள், நாட்டுக்கூத்துப் போட்டிகள் போன்ற பலவற்றிற்கும் தனது பங்களிப்புக்களை வழங்கினார். அவரது பாஞ்சாலி சபதம்' நாட்டுக்கூத்து மன்றம் நடத்திய கூத்துவிழா ஒன்றில் மேடையேற்றப்பட்டு பலரின் பாராட்டுக்களைப் பெற்றது. அதுமட்டுமன்றி மன்றத்தின் வெளியீடுகளான 'கலைமுகம்', ஆற்றுகை போன்ற சஞ்சிகைகளுக்கு அவர் வழங்கிய ஆக்கங்கள் பெறுமதிமிக்கவை. "கலைமுகம் ஆடி - புரட்டாதி 1994, 13 ஆவது இதழில் அவரது நேர்காணல் இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், கத்தோலிக்க கூத்துமரபின் ஆடல்களை மீள் 5ண்டுபிடிப்புச் செய்வதற்கு மன்றம் முயன்றவேளை, அவர் அளித்த ஆலோசனைகளும், அதற்காக அவர் வழங்கிய வளமூலங்களும் பெறுமதிமிக்கவை. மொத்தத்தில் திருமறைக் கலாமன்றத்தின் இரசிகனாய், ஆதரவாளனாய், வள ஆளுனனாய் பல தளங்களில் பின்னணியில் நின்ற அமரர் காரை சுந்தரம்பிள்ளை ஈழத்தின் கலை இலக்கிய புலத்திலும், மன்ற வரலாற்றிலும் >றக்கப்படமுடியாத ஒருவராவார். €
யோவான்
ஒரு காலத்தில் பரபரப்புடன் பார்க்கப்பட்ட ‘தீப்பொறி’, ஒரு தீப்பொறி” ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராகவும், தமிழில் உள்ள புலமையால் இறுதிக் காலம் வரை கவனத்தை ர்க்கதக்க ஆய்வுக் கட்டுரைகள் பலவற்றை எழுதியவருமான சொல்லேருழவர் ம.க.அ. அந்தனிசில் 09.07.2005இல் ாலமானார். சிறந்த கதகளி நாட்டியக் கலைஞராகவும், டிகராகவும்கூட விளங்கியவர் இவர்.
Eற்கு வளம் சேர்த்த இவர்களுக்கும் களை செலுத்துகின்றது.
山前2005 37
அவர் திருமறைக் கலாமன்றத்திற்கு ஆற்றிய ஐ
பணிகளும் அமைகின்றன. 1989க்குப் பின்
திருமறைக் கலாமன்றம் தன்னை ஒரு பண்பாட்டு C. .
நிறுவனமாக மாற்றிக்கொண்டு செயற்பட்டகாலம் E
முதல் அவர் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த - -
5
གྱི་
ܝܓ
ے
ܘܼ
جی۔

Page 40
mü山mi?
éil. Gionada
"படைப்பு மந்திரத்தின் கதகதப்பில் தன்னை இருத்திக்கொள்ள விழையும் சிறந்த வாசகன் ஒரு படைப்பு மேதையின் புத்தகத்தைத் தன் இதயத்தால் வாசிப்பதில்லை; முளையால்கூடப் பெரிதும் வாசிப்பதில்லை; மாறாக, தன் முதுகுத் தண்டின் முலமே வாசிக்கிறான்"
விளாதிமிர் நபக்கோவ்
தன்னையும் செழுமைப் படுத்திக்கொண்டு இலக்கியத்துக்கும் வளம்சேர்க்கும் அந்த நல்ல வாசகன் யார்? மேலான படைப்பு என்பது முழு முற்றான சுதந்திரத்துடன் இயங்கும் ஒரு தனி உலகம் என்ற பிரக்ஞையும், புதிய அனுபவங்களை ஏற்க விழையும் திறந்த மனமும் படைப்பினுாடான பயணத்தில் படைப்பாளியின் கற்பனை வெளியோடு தன் கற்பனை வெளியையும் ஊடாட விட்டுத் திளைக்கும் முனைப்பும் படைப்பு மனோபாவமும் கொண்ட வாசகனே அவன்.
எந்த ஒரு சிறந்த படைப்பும் தனக்கான பிரத்தியேக நியதிகளைக் கொண்டியங்கும் தனி உலகம் என்பதால் இதுவரை நாம் அறிந்திராத ஒரு பிரதேசத்துக்குள் நாம் பயணப்பட இருக்கிறோம் என்ற உணர்வும் அதற்கான அணுகலும் ஒரு சிறந்த வாசகனுக்கு அவசியம் தேவை.
தன்னையோ, தான் அறிந்த முகங்களையோ, தெரிந்த நிகழ்வுகளையோ, எண்ணங்களையோ ஒரு படைப்பில் காண முற்படும் மனோபாவமும் அணுகுமுறையும் மகத்தான படைப்புக்களின் முன் செல்லுபடியாகாது. படைப்பின் மந்திரச் சுழிப்பு இத்தகைய அணுகுமுறையாளனை விசிறியடித்து வெளித்தள்ளிவிடும். இதனால் இழப்பு நமக்குத்தானே தவிர படைப்புக்கேதுமில்லை.
கலையின் சிறந்த எழுத்தாளரும் நபக்கோவ் ஒரு நாட் சொல்லியதை சற்றே கதை மூலம் முன்ை புலி வருது அலறும் ஆடு மேய்க் உண்மையிலேயே பு அடித்துக்கொன்று சr இலக்கியம் பிறக்கவு நீதிதான் கற்பிக்கப்ப புலியே வந்திராதபே புலி வருது' என்று சி கற்பனையில் புலிை அலறிய நாள்தான் இ நாள். அவன் அடிக்க ஏமாற்றியதால் அவ6 சாப்பிட்டதென்பது த ஆனால், கலையின் அவன் தன் கற்பனை உருவாக்கிய புலியி தங்கியிருக்கிறது. அ அவனுடைய கனவில் ஒரு மந்திரவாதி; ஒரு எனவே, அவன் ஒரு அவனிடமிருந்தே கை எந்த ஒரு பு படைப்புமே, படைப்ட பிரதானமாகச் செயல் மந்திராம்சத்தின் மூ6 தேவதைக் கதையா மகத்தான நாவல் எ கட்டத்தில் ஒரு மகத கதையே.
ஒரு சாதார ஏற்கெனவே வரைய கட்டுமான வடிவங்க ஏற்கெனவே அறிந்த நிகழ்வுகளையும் இட தயாரிப்பில் இருக்கி சமயங்களில் விபரீத கதை' என்று பெருை போய்விடுகிறது, ஒரு உண்மைக் கதை எ கலையையும், உண் சேர அவமதிப்பதாகு சாதாரண வாசகனுப அறிந்தவற்றின் சாய காண்பதன் மூலம் தீ கண்ட நெகிழ்ச்சிtை மகிழ்ச்சியையும் அ நாம் அறிந்தவற்றை காண்பதற்காகவா ந
38
ஜூலை - டி
 
 
 

பிறப்புப் பற்றி மிகச் பேராசிரியருமான -ார் கதை மூலம் தழுவி நம்மூர்க்
வக்கிறேன்: , புலி வருது' என்று கும் சிறுவனை லி வந்து ப்பிட்ட நாளில் ல்லை. ஒரு ட்டது. மாறாக, து, புலி வருது, றுவன் தன் ப உருவாக்கி இலக்கியம் பிறந்த டி பொய் சொல்லி னைப் புலி அடித்துச் ற்செயலானது. மந்திரமென்பது, ாயில் திட்டமிட்டு ன் நிழலில் து, புலி பற்றிய மிருக்கிறது. அவன்
கண்டுபிடிப்பாளன். கலைஞன். லை பிறக்கிறது. oகோன்னதமான மேதையிடம் >படும் ஒரு Uம் ஒரு அற்புதத் கிவிடுகிறது. ஒரு ன்பது, இக்கால ந்தான தேவதைக்
ண எழுத்தாளன் துக்கப்பட்ட ரில் நாம்
முகங்களையும், டு நிரப்பும் றான். அது மாக "உண்மைக் மப்படுமளவுக்குப்
கதையை ன்று சொல்வது மையையும் ஒரு ம். அதற்கேற்ப
தான் ஏற்கனவே ல்களை அதில் ன் முகத்தைக் Iպլb, டைகிறான். ஆனால்
அடையாளம் ாம் ஒரு
புத்தகத்தைத் திறக்கவேண்டும்.
அடிப்படையில், ஒரு படைப்புமேதை தன் காலத்துக்கென்றே படைப்புகளை உருவாக்குகிறான். அது தான் வாழும் காலத்தில் வாசிக்கப்படுவதையே விரும்புகிறான். அது, காலம் கடந்து நிற்பதும் வாசிக்கப்படுவதும் அதன் வேறு பரிமாணங்கள். அவனுடைய நோக்கமல்ல அது. நம் வாழ்வுக்காக அளிக்கப்படும் இக்கொடைகளை அனுபவிக்க நாம் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
ஒரு சிறந்த படைப்பாளியான ஹென்ரி மில்லர், தாஸ் தாயெவ்ஸ்கியின் படைப்போடு கொண்ட முதல் உறவில் அவருக்குள் ஏற்பட்ட விளைவுகளை, நிகழ்ந்த மாறுதல்களை வெகு அழகாகப் பதிவு செய்திருக்கிறார்.
"தாஸ்தாயெவ்ஸ்கியை முதன் முறையாகப் படிக்க அமர்ந்த அந்த இரவு, என் வாழ்வின் மிக முக்கியமான ஒரு நிகழ்வு; என் முதல் காதலை விடவும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. அதுதான் விரிவான பிரக்ஞைபூர்வமான என் முதற் செயல். அது என்னிடம் நிகழ்த்திய பாதிப்பு குறிப்பிடத்தகுந்தது. உலகின் முகத்தையே அது முற்றாக மாற்றிவிட்டது. ஒரு ஆழமான, நீண்ட முதலாவது வாசிப்புக்குப் பின் நான் நிமிர்ந்து பார்த்த அந்தத் தருணத்தில் காலமுள் நின்று விட்டதென்பது உண்மையா இல்லையா என்பது பற்றி எனக்கு எதுவும் சரிவரத் தெரியவில்லை. அந்த கணத்தில் உலகம் இறந்து விட்டிருந்தது என்பது எனக்குத் தெரியும். ஒரு மனிதனின் ஆத்மாவிற்குள் முதன் முறையாக என் பார்வை விழுந்தது அப்போதுதான். அல்லது இதையே வேறுவிதமாகச் சொல்வதென்றால் தன் ஆத்மாவை என்னிடம் வெளிப்படுத்திய முதல் மனிதன் தாஸ்தாயெவ்ஸ்கிதான். நான் அதற்கு முன்னரும் கூட சற்றே வித்தியாசமானவனாக - அவ்வுணர்வு இல்லாமலேயே இருந்திருக்கலாம். ஆனால் தாஸ்தாயெவ்ஸ்கியிடம் ஆழமாக முழ்கிய அந்தத் தருணத்திலிருந்து நான் நிச்சயமாக ஒரு வித்தியாசமானவனாக ஆனேன். அசைக்க முடியாதபடியும் மன நிறைவோடும் இந்நிகழ்வு அமைந்தது. விழிப்பதும், அன்றாட காரியங்களுமான
sibL 2005
而暱卯

Page 41
தினசரி உலகம் என்னைப் பொறுத்தவரை மடிந்துவிட்டது. எழுதுவது குறித்து நான் கொண்டிருந்த ஆசை விருப்பமெல்லாம் நீண்டதொரு காலம் வரைக்குமாக அழிந்துபோயின. பதுங்கு குழிகளுக்குள் நீண்ட காலமாக வாழும் மனிதர்களைப் போல நான் நெருப்பினுள் வாழ்பவனானேன். என்னைப் பொறுத்தவரை மனிதனின் சாதாரண துயரங்கள் போட்டி பொறாமைகள் ஆசாபாசங்கள் அனைத்தும் உதவாக்கரை விஷயங்கள் குப்பை கூளங்கள் என்றாகின.'
இத்தகைய விளைவுகளுக்கு நம்மை ஆட்படுத்துவதுதான் ஒரு சிறந்த படைப்பு. இத்தகைய பாதிப்புகளை ஏற்க நாமும் முயற்சி மேற்கொள்ளவேண்டும். இத்தகைய முயற்சிகளின் மூலம்தான் நம் காலமும், வாழ்வும் விகாசமடையும். ஒரு சிறந்த படைப்புலகோடு வாசகன் மேற்கொள்ளும் பயணத்தினூடாக அவனுடைய மனவெளி பரந்து
விரிகிறது. அந்தப் பய அந்த வாசிப்புக்கு முன் மனிதனில்லை அவன். மலர்ந்திருக்கிற புது ம செழுமையான அனுபவ சேர்மானங்களில்தான் 6 பெறுகிறது.
இன்றைய கா இரண்டு வகையான இ6 காணப்படுகின்றன என்று கொள்ளலாம். ஒன்று ே இவை படிப்பதற்கு அரு படிக்க சகிக்காதவை. : வேடிக்கை என்னவென்ற பரவலாகப் பெரிதும் வாசிக்கப்படுகின்றன. ம சிறந்தவை. வாசிக்க அ ஆனால் இவை படிக்கட் இந்நிலை நம் காலத்து சமூகத்துக்கும் கேடு வி சிறந்த இலக்கியங்கள் வாசிக்கப்படுவதன் தேை
மனிதன் மகத்தான பல சாதனைகளையும்
அபூர்வ திறமைகளையும் கொண்டிருந்தபோதும் ! மனிதனால் வெல்ல முடியாது மனிதனை வெல்லும்
நிகழ்வாக மரணம் அமைகின்றமை யதார்த்த மாகின்றது.
பிரதிமைக்கலை மாமணி கலாபூஷணம்
கணபதி - இராசரத்தினம் மிகச் சிறந்த ஓவியர்களில் ஒருவர். மிக நீண்ட காலமாக ஒவியத்துறைக்கு பல வழிகளில் பங்காற்றியவர்களில் குறிப்பிடத்தக்கவர். ஒவியத் துறை சார்பாக பல வேறு தளங்களில் இயங்கி வந்த ஓவியர். அரை நூற்றாண்டிற்கு மேலாகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துச் செயலாற்றியவர். ஒவிய விரிவுரையாளர் என்பதற்கப்பால் மிகத் திறமையான பிரதிமைக்கலை ஓவியராக இவர் விளங்கினார். இவரது இழப்பு இத்துறையில் பாரிய இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது.
மற் றைய ஓவியர் களுடன்
மறைவு
ஒப்பிடும்போது இவரது பாணி வித்தியாசமானது. தனித்துவமான சிறப்புப் பெற்றது. பொறுமை, நிதானம், வர்ணச்சேர்க்கை போன்ற
ஆளுமையுள்ள அபூர்வ கலைஞன்.
இவரது கருத்துக்களில் இருந்து சிலர் முரண்பட்டு நின்றாலும் எந்தவொரு விடயத்தையும் ஆதார பூர்வமாக அதன்
உண்மைத் தன்மையை தெளிவுபடுத்தி வந்தவர்.
நவீன
இலத்திரனியல் புகைப்படக் கருவிகளின் அதீத பாவனையும், நவீன ஓவியங்களின் மேலோங்கலும் அதிகரித்த இக்காலத்தில்
ÚJABAJO
E GJITETIJ
C
ஜூலை = டிசெம்
 
 
 
 

பிணத்தின் முடிவில், உணர்ந்தாக வேண்டும். நம்
சமூகத்துக்கு எப்படியாவது
புதிதாய் உணர்த்தியாக வேண்டும். விதன் வாழ்வு, இலக்கியமில்லாமல் உலகம் ங்களின் சிறப்பாக இயங்க முடியாதா என்று
பிரிவும் அர்த்தமும் ஒருவர் கேட்கக்கூடும். நிச்சயம்
- முடியுமாக இருக்கும். மீன் - பால் -
லகட்டத்தில் சார்த்தர் வார்த்தைகளில்
0க்கியங்கள் சொல்வதென்றால் 'அது மனிதனே
பொதுவாகக் இல்லாமல் இன்னும் சிறப்பாக
DITEFԼՈIT60|60)6)]. இயங்கக்கூடும்'
5ങ്ങguffങ്ങഖ. இதுவரை நாம்
ஆனால் உரையாடியவற்றின் பின்னணியில்,
3ால் இவைதாம் நவீன தமிழ்ப் படைப்புலகம் என்னவாக
இருக்கிறது, நம் படைப்பாளிகள்
ற்றொன்று காலத்தையும் கலையையும் எவ்விதம்
வசியமானவை. எதிர்கொண்டிருக்கிறார்கள் என்பதை இனி
படுவதில்லை. அறிய முற்படலாம். €
5கும,
ளைவிப்பது. நன்றி காலம் கலை கலைஞன் (2003)
வையை நாம்
பிரதிமைக் கலையின் அருமை பெருமைகளை நுணுக்கங்களை நன்குணர்ந்த, கைதேர்ந்த ஓவியர் இன்று நம்மிடமில்லை.
தன் மீது கொண்ட நம்பிக்கையாலும் ஒவியத்தின்மீது கொண்ட பெருவிருப்பினாலுமே இதுவரை காலமும் தன் துறையுடன் இரண்டறக் கலந்து இயங்கியவர் இவர்.
பிரதிமை ஒவியங்கள் பலவற்றை வரைந்துள்ள ஒவியர்; பல நிலக்காட்சி ஓவியங்களையும் வரைந்துள்ளார். இவற்றுடன் ஒவியத்துறை சார்பாக பிரதிமைக்கலை, ஓவிய அறநெறி, வர்ணஜாலம் (அச் சில்) ஆகிய மூன்று நூல்களையும்
எழுதியுள்ளார்.
ஓவியர் க. இராசரத்தினத்திற்கு நாம் செய்ய வேண்டிய கடப்பாடு ஒன்றுள்ளது. அவரின் பெயரில் கலைக்கூடம் அமைத்து அவரது ஓவியங்களையும் துறைசார்ந்த 6.09.2005 நூல்களையும் ஆவணப்படுத்தவேண்டும். இது ஓவியரின் நினைவழியா நிகழ்வாக ருப்பதுடன் எதிர்கால ஓவியத்துறை சார்பானவர்களிற்கும் பனுள்ளதாக அமையும்.
ஓவியனாக வளர்ந்து, ஒவியனாக வாழ்ந்து ஓவியனாக றந்து இன்று எம் மத்தியில் ஒவியமாகவுள்ளார் க. இராசரத்தினம். භී. ඊණ්තගුණි.0mén வருகை விரிவுரையாளர், சித்திரமும் வடிவமைப்புத்துறை, யாழ் பல்கலைக்கழகம்,
J前2005 39

Page 42
உ விரெஞ்சுத் திரைப்பட விழா =
யாழ். பிரெஞ்சு நட்புறவுக் கழகத்தின் ஏற்பாட்டில் பிரெஞ்சுத் திரைப்பட விழா ஜூன் மாதம் 18ஆம் திகதி ஆரம்பித்து ஜீலை மாதம் 02ஆம் திகதி வரை ஒவ்வொரு புதன், சனி, ஆகிய தினங்களில் யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் 5 நாட்களுக்கு ஒழுங்கு செய்யப்பட்டு நடத்தப்பட்டது.
மிகக் குறைந்த அளவிலான பார்வையாளர்களே இ திரைப்பட விழாவிற்கு வருகை தந்திருந்தாலும் - தரமான பல திரைப்படங்களைப் பார்க்கக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்ததாக இ திரைப்பட விழாவில் பங்கு பற்றிய பலரும் கருத்துத் தெரிவித்தார்கள்.
குறிக்கப்பட்ட நாட்களில் தினமும் மாலை 4 மண முதல் 7 மணி வரை இடம்பெற்ற இத் திரைப்பட விழாவில் ஆங்கில உப தலைப்புக்களுடனான.
The Children of Paradise (1944) Cinema Paradise (1985) The Migratory People (2001) Dialogues of the Carmelite Nuns (1999) The son (2002)
ஆகிய ஐந்து திரைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. பிரெஞ்சு நட்புறவுக் கழகம் - இல. 03, பலாலி வீதி, கந்தர்மடத்தில் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துரைகளும் கலந்துரையாடல்களும்
3 "சேது காண்பியப் பண்பாட்டிற்கான கற்கைப் புலம் அமைப்பின் ஏற்பாட்டில் 08.09.2005 இல் "சினிமாவும் தமிழ் பண்பாடும்' என்ற தலைப்பில் யாழ். நாவலர் கலாசா மண்டபத்தில் கருத்துரை இடம்பெற்றது. இதன்போது கருத்துரையை பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் வழங்கினார். இந் நிகழ்வுக்கு குழந்தை ம. சண்முகலிங்க அவர்கள் தலைமை தாங்கினார்.
3 இவ் அமைப்பின் ஏற்பாட்டில் 29.10.2005 இல் இடம்பெற் கருத்துரை நிகழ்வில், "தமிழர் காண்பியக் கலைகளி: நடனமும் பால் நிலை இடைவெளியும்" என்ற தலைப்பி பேராசிரியர் பொ. இரகுபதி அவர்கள் கருத்துரை வழங்கினா யாழ். தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தினால், யாழ் ஆரியகுள சந்திக்கு சமீபமாக அமைந்துள்ள ஒன்றிய மண்டபத்தி
40 ஜூலை
 

கலை, இலக்கிய
ஒன்றுகவடல்
ஈழத்தின் மூத்த தமிழறிஞரும், தேசிய கலை, இலக்கியப் பேரவையின் தலைவரும், கவிஞருமாகிய கலாநிதி இ. முருகையன் அவர் களின் எழுபதாவது அகவை நிறைவினை சிறப்பிக்கும் முகமாக தேசிய கலை, இலக்கியப் பேரவையினால் ஒழுங்கு செய்யப்பட்ட கலை, இலக்கிய ஒன்று கூடல் கடந்த 18.09.2005 ஞாயிறு மாலையில் திருநெல்வேலியில் அமைந்துள்ள இந்து வாலிபர் சங்க மண்டபத்தில் தேசிய கலை, இலக்கியப் பேரவையைச் சேர்ந்தவரும் 'தாயகம்' சஞ்சிகையின் பிரதம ஆசிரியருமான திரு க. தணிகாசலம் தலைமையில் இடம்பெற்றது. வரவேற்புரையை சட்டத்தரணி சோ. தேவராஜா அவர்கள் வழங்கினார்கள்.
ஆரம்பத்தில் கவிஞர் இ. முருகையன் அவர்கள் பொன்னாடை போர்த் தி, மாலை அணிவித்து விழா ஏற்பாட்டாளர்களால் கெளரவிக்கப்பட்டார். தொடர்ந்து ஒன்றுகூடல் நிகழ்வுகள் மதிப்புரைகள், வாழ்த்துரைகள், கவியுரைகள் என முப்பிரிவுகளாக இடம்பெற்றது. இதன் போது மதிப்புரைகளை 'முருகையனின் கட்டுரைகள் என்ற தலைப்பில் பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்களும், 'முருகையனின் கவிதைகள்' என்ற தலைப்பில் பேராசிரியர் சி. சிவசேகரம் அவர்களும், முருகையனின் நாடகங்கள்' என்ற தலைப்பில் தே. தேவானந்த் அவர்களும் வழங்கினார்கள் வாழ்த்துரைகளை ஏ. ஜே. கனகரட்னா, க. குணராசா, குழந்தை ம. சண்முகலிங்கம், பகீரதி கணேசதுரை, செ. திருநாவுக்கரசு, ஈஸ்வரி தர்மலிங்கம், சி. கா. செந்திவேல் ஆகியோர் வழங்கினார்கள். நிறைவு நிகழ்வாக 'கவிதைக்குள் உயிர் ஒன்றி வாழ்' என்ற தலைப்பில் கவிஞர் சோ. பத்மநாதன் தலைமையில் கவியரங்கு இடம்பெற்றது. இதில் க. வேல்தஞ்சன், ரி. திருக்குமரன், த. ஜெயசீலன், அழ, பகீரதன் ஆகியோர் கவியுரைத்தார்கள். தொடர்ந்து கவிஞர் இ. முருகையன் ஏற்புரை வழங்கினார்.
இந் நிகழவில் தேசிய கலை, இலக்கியப் பேரவையைச் சேர்ந்தவர்கள், கலை, இலக்கிய ஆர்வலர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து சிறப்பித்தார்கள்.
அண்மைக்காலங்களாகத் தொடர்ந்து மாதாந்த நிறைநிலா நாட் கருத் தரங்குகள் நடத்தப் பட்டு வருகின்றது. இதன் தொடர்ச்சியில்.
3 1908-2005 இல் "பெண் படைப்பிலக்கியவாதிகளின் ஆளுமை" (80 களுக்கு பிற்பட்ட நவீன கவிதைகை முன்வைத்து) என்ற பொருளில் திரு. சி. ரமேஷ் கருத்துரையாற்றினார். 3ே 17.09.2005 இல் 'தற்கால இலக்கியப் போக்குகள் என்ற பொருளில் திரு. செங்கை ஆழியான் கருத்துரை வழங்கினார்.
இக் கருத்துரைகளைத் தொடர்ந்து கலந்துரையாடல்களும் இடம்பெறுகின்றது. இவை சிறப்பானதாக அமைகின்ற போதிலும் சில வேளைகளில் கருத்துரையாளர்கள் மையப் பொருளைத் தொடாமலும் அல்லது அவற்றில் இருந்து விலகிச் சென்றும் கருத்துரையாற்ற முனைவது எதிர்காலத்தில் தவிர்க்கப்படல் வேண்டும்.
டிசெம்பர் 2005 aSOGUESS)

Page 43
உலகின் பல பாகங் 4ািঞ্ছ களிலும் சமாதானத்தின் தேவை 6 என்றுமில்லாதவாறு "" பாவோசி நிறுவனத்தின் படுகின்ற இக் கால கட்டத்தில் - - 2 இனங்கள், மதங்கள் மொழி களுக்கிடையே உன்னதமான உறவுப் பரிமாற்றங்கள் தேவைப் படுகின்றது. அது கலாசார பரிமாற்றமாகவும் அமைந்து ஒருவரை ஒருவர் புரிந்து அறிந்து பழகிட நிகழ்வுகள் பல தேவைப்படுகின்றன. இதனை நிறைவு செய்வதில் கலை என்னும் ஊடகம் கணிசமான பங்கை வகிக்கின்றது. அதேபோல் விளையாட்டும் இதற்கான சிறந்த ஊடகமாக விளங்குகின்றது. இதன் ஓர் அங்கமாகத்தான் | விளையாட்டின் மூலம் சமாதானம்' என்ற நிகழ்வினை பசலோசி' என்ற சிறுவர் 8865 , ᏚᎩᏨᏕᏯᏚX நிறுவனம் சுவிஸ்லாந்தின் ஒரு சிறிய கிராமத்தில் அதன் பயிற்சி வி நிலையத்தில் 20 நாடுகளிலிருந்து 220 சிறுவர், சிறுமிகளை அழைத்து மிகச் சிறப்பாக நடத்தியிருந்தது.
இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்கு இலங்கையின்
பிரதிநிதிகளாக மட்டக்களப்பு திருமறைக் கலாமன்றத்திலிருந்து 10 சிறுவர்களும் 2 மேற்பார்வையாளர்களும் தெரிவு செய்யப்பட்டு அழைக்கப்பட்டிருந்தார்கள். இலங்கையில் வாழ்கின்ற தமிழ், சிங்கள, முஸ்லிம், பறங்கியர் இனங்களிலிருந்து பன்மொழி பேசுகின்ற பல கலாசார, சமய பண்புகளைக் கொண்ட சிறுவர்கள் இந்த நிகழ்வில் திருமறைக் கலாமன்றம் சார்பாக கலந்து கொண்டார்கள். இவர்களுக்கு மேற்பார்வையாளர்களாக மட்டக்களப்பு திருமறைக் கலாமன்ற இணைப்பாளர் திரு. வள்ளுவன் சுவாமிநாதனும், அதே மன்றத்தைச் சேர்ந்த செல்வி சுலக்சனா தங்கவேலும் சென்றார்கள். இவ்வாண்டு ஓகஸ்ட் மாதம் 13ஆம் திகதியிலிருந்து 27ஆம் திகதி வரை 15 நாட்களுக்கு சுவிஸ்லாந்தின் "சூரிச்" நகரத்திற்கு அருகில் இருக்கும் 'ட்ராகன் என்னும் இடத்தில் அமைந்திருக்கின்ற "பசலோசி" சிறுவர் கிராமத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது. அமைதியான சூழலும் பச்சைப் பசேல் எனத் தெரிகின்ற மலைப்பாங்கான கிராமமும் இந் நிகழ்வுக்கு ஒர் அமைதியான சூழலைக் கொடுத்தது.
ஒரு மனிதன் மற்ற மனிதனோடு உறவாடும் போதுதான் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முடிகின்றது. அதிலும் சிறுவர்கள் இணைந்து கொள்ளும்போது ஒரு படி மேலே சென்று ஒரு சமாதான உதயமே விடிகின்றது எனலாம்.
சிரித்த முகத்துடன் அன்புடன் பழகிய பசலோசி" நிறுவனத்தின் பணியாளர்கள் பாதிக்கப்பட்ட மனங்களைக்கொண்ட சிறுவர்களுக்கு மத்தியில் அன்புடன் உறவாடி பயிற்சிகளை வழங்கினார்கள். தினமும், காலையில் உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் பல பயிற்சிகள் வழங்கப்பட்டன. குறிப்பாக நான் யார்? அவன் யார்? அவனுக்கும் எனக்கும் உள்ள உறவு என்ன? அவன் விருப்பு, வெறுப்பு எது? அவனது சமூகத்துடன் நான் இணைந்து கொள்கிறேனா? போன்ற கேள்விகளுக்கு விடையளிக்கக் கூடிய உறவாடும் பயிற்சியும், உளநல பயிற்சிகளும் வழங்கப்பட்டன. மாலை நேரத்தில் விளையாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டன. இதன்மூலம் இன, மத, மொழிகளைக் கடந்து ஒரு குழுவாகச் செயற்படும் பயிற்சி స్టళ్లజి 8 酶 ஜூலை - டிசெம்
قگ
 
 
 
 
 

வழங்கப்பட்டது. அதன்மூலம்
G 7.--- து வாழ்வை மற்றவனோடு பகிர்ந்து Gillian IIILEDIT AJUTEREDZOT கொள்வது, வெற்றி தோல்வி
ĪGI PITIT LIEifilii களை ஏற் றுகொள்ளும் ay மனப்பான்மை, தனிமனிதனாக
அல்லது ஒரு சமுதாயக் குழுவாக உறவாடும் தன்மை, ஒருவர் மற்றவருக்கு விட்டுகொடுக்கும் மனப்பான்மை, மற்றவனும் நானும் சேர்ந்து உறவாடுவதன் மூலம் நான் ஒரு இலக்கை அடைய முடியும் என்ற மனப்பான்மை என நல்ல பல சிந்தனைகளை வளர்க்கக்கூடிய பயிற்சிகளும் வழங்கப்பட்டன. இதன்மூலம் ஒருவன் தனி மனிதன் அல்ல. அவன் ஒரு சமுதாயத்துடன் தான் வாழவேண்டும் என்கின்ற பண்பையும் சமாதான வாழ்வின் மகிழ்வையும் புரிந்துணர்ந்து வாழும் பழிகாட்டல்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
இரவுகளில் கலை, கலாசார நிகழ்வுகள் இடம் பெற்றன. உலகின் பல பாகங்களிலும் இருந்து பல தரப்பட்ட சிறுவர்கள் லந்து கொண்ட இந்நிகழ்வில் தத்தம் கலை, கலாசார கழ்வுகளை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்து அதில் உள்ள விடயங்களை அழகிய முறையில் மேடை நிகழ்வுகளாக ட்த்தியிருந்தனர். மற்றவரின் அபிலாஷைகளை அவனுக்குரிய ண்பிலே அறிந்து அவனை புரிந்துகொள்ளக்கூடிய வகையில் இந்நிகழ்வு அமைந்திருந்தது. அதே வேளை அவர்களுக்கு உரித்தான பாரம்பரிய உணவு வகைகளும் பரிமாறி ஓர் உறவின் ாலமாக இந்நிகழ்வு இடம்பெற்றிருந்தது. இடைக்கிடையே விஸ்லாந்தின் முக்கிய இடங்களை சுற்றிப்பார்ப்பதற்கான ந்தர்ப்பங்களும் கிடைத்தன. உறவுகள் மலர்ந்தன. இனம், மொழி, தம், இவற்றிற்கு அப்பால் ஓர் புதிய உலகு தன் சின்னஞ்சிறிய லர்களினூடே சமாதானப் பயணம் பயணித்தது. இந்த 15 ாட்களும் உலகில் ஓர் கனாக்காலம் போல் கரைந்துபோனது, உலக அமைதி உலக சமாதானம் அங்குதான் உலாவியது. அழகிய இயற்கையின் வனப்புக்கள் மத்தியில் சிறுவர்களுக்கான உரிமைகள் என்ன என்பதை அறிந்தார்கள். உலகத்தில் வாழும் வ்வொரு சிறுவனும் அவனுக்குரிய உரிமையோடு வாழ ழிசமைக்கும் பணிக்கு தம்மை அர்ப்பணித்தார்கள். அதை தம் ாழ்வின் இலட்சியமாக்கினார்கள். நீயும் வாழு மற்றவனையும் ாழ விடு என அன்போடும் புரிந்துணர்வோடும் இந் நிகழ்வில் ங்குபற்றிய சின்னஞ் சிறுசுகள் சமாதானப் புறாக்களாகத் தமது ாடுகளுக்கு மீண்டும் பறந்தன. இது இலங்கையில் சமாதானத்தின் தவை உணர்ந்து இன, மத, மொழிகளுக்கு அப்பால் மனிதத்தைத் தடிப் பயணிக்கும் திருமறைக் கலாமன்றத்திற்கு கிடைத்த ங்கீகாரம். இதன் மூலம் மனிதத்தை தேடும் மனங்களின் இடையே புதிய புத்தாக்கத்துடன் சேவையாற்ற இப் புதிய புறாக்களும் இணைந்து கொள்கின்றன. தாமம் பெற்ற அனுபவங் களையும் பயிற்சிகளையும் வாழ்வாக்கி வழிகாட்ட, உரிமை மறுத்து அல்லல்படும் சிறுவர்களை நோக்கி இளைஞர்களை நோக்கி, கரம் விரிக்கின்றார்கள். €
8ெல்வி கலக்கnை தங்கவேல் மட்டக்களப்பு
血2005 41

Page 44
கடந்த காலமும் கழிவிறக்கமும்
யாழ். பல்கலைக்கழக துறையின் கலைவட்டம் த நிகழ்ச்சித் தொடரின் பத் நிகழ்வாக கடந்த காலமும் ச என்ற தலைப்பில் மூத்த கனகசபையின் ஓவியங்கை கண்காட்சியை ஒக்ரோபர் ப திகதி முதல் 30ஆம் திகதி நாட்களுக்கு யாழ். பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் இக்கண்காட்சிக்கான அங்குரார்ப்பண நிகழ்வு 27.10.2005 இடம்பெற்றது. இதன்போது பிரதம விருந்தினராக யாழ். பல் துணைவேந்தர் பேராசிரியர் சு. மோகனதாஸ் அவர்களும், சிறப்பு யாழ். பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி இரா. சிவச்சந்திரன் கலந்து கொண்டார்கள்.
கலைவட்டத்தின் 'முதுசம் தொடரின் பத்தாவது ( கடந்த ஆண்டு (2004) ஜூலை 19 முதல் ஒகஸ்ட் 18 வை காலமாக 13 யாழ்ப்பாணத்து ஓவியர்களின் ஓவியக்காட்சி யாழ் நடத்தப்பட்டபோது அதிலும் ஒவியர் மு. கனகசபையின்
இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது ----------------
ఖ விபவி ஓவிய திருமறைக் கt விபவி நுண் கலை ( நிறுவனத்தைச் சேர்ந்த சி செப்ரெம்பர் மாதம் 23 றக்கா வீதி, யாழ்ப்பா6 கலாமன்ற கலாமுற்ற வ ஒவியர்களின் 25 வை வைக்கப்பட்டிருந்தன. இ அறிமுகமான ஒவியர்கே ஒவியங்கள் அடங்கியிரு இதன் தொடர்ச்சியில் 25 யாழ் வந்திருந்த சிங்கள கலாமுற்றத்தில் நடத்தட் கொண்டார்கள் 。 பேசும் தூரிகை யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் சித்திரத்துறையின் ஏற்பாட்டில் பேதம் தூரிகை என்ற ஓவியக் கண்காட்சி ஒக்ரோபர் மாதம் 7ஆம் திகதி முதல் 9ஆம் திகதிவரை தேசிய கல்வியியற் கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது. கண்காட்சி ஆரம்ப நாளில் "துகிலிகை என்ற ஒவியத்துக்கான காலாண்டு சஞ்சிகையும் வெளியிடப்பட்டது. கண்காட்சியில் பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த முகிழ்நிலை ஆசிரியர்களால் வரையப்பட்ட பல ஒவியங்கள் காட்சிப படுத்தப்பட்டிருந்தன.
42 ஜூலை
 
 
 
 
 
 
 

நுண்கலைத் னது முதுசம் தினொராவது 5ழிவிரக்கமும் ஒவியர் மு. ளக் கொண்ட மாதம் 27ஆம் வரை நான்கு ல் நடத்தியது. LDIT60)6Oule)
கலைக்கழக விருந்தினராக அவர்களும்
செயற்பாடாக
DU Q(5 LDIT95 pப்பாணத்தில் ஒவியங்கள்
பர்களின் கண்காட்சி
லாமன்றத்தின் ஏற்பாட்டில், கொழும்பு Vibhavi Academy of fine Arts) |ங்கள ஓவியர்களின் ஓவியக் கண்காட்சி ஆம், 24ஆம் திகதிகளில் இல 15, ணத்தில் அமைந்துள்ள திருமறைக் |ளாகத்தில் இடம்பெற்றது. இதில் 13 ரையிலான ஒவியங்கள் காட்சிக்கு வற்றில் ஏற்கனவே ஒவியத்துறையில் ளதும், புதிய இளம் ஒவியர்களதும் bg560T. 09.2005 முழுநாளும் கண்காட்சிக்காக
ஒவியர்களால் ஓவியப் பயிலரங்கும் 3. 「 பட்டது. இதில் ஒவிய மாணவர்கள், ஆர்வலர்கள் எனப் பலர் கலந்து
கடல் வரைந்த ஓவியம் திருமறைக் கலாமன்ற ஓவியக் கலைவட்ட வளர்ந்து வரும் இளம் ஒவியர்களால் ஆழிப்பேரலை அனர்த்தத்தை வெளிப்படுத்தும் வகையில் வரையப்பட்ட ஒவியங்களைக் கொண்டு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் திருமறைக் கலாமன்றத்தால் நடத்தப்பட்ட கடல் வரைந்த ஓவியம் என்ற கண்காட்சி மீளவும் செப்ரெம்பர் மாதம் 16ஆம், 17ஆம் திகதிகளில் பருத்தித்துறை புனித தோமையார் ஆலய மண்டபத்தில் இடம்பெற்றது.
சுனாமியால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் இக் கண்காட்சி இடம்பெற்றதால் பாதிப்பிற்குள்ளான மக்கள் பலரும் இதனைப் பார்வையிட்டார்கள். - IgGs bust 2005

Page 45
குறம்பட விழா லண்டனில் இயங்கும் விம்பம் அமைப்பு கடந்த ல் நடத்திய குறும் திரைப்பட தயாரிப்புக்கான
666 ខ្សត្វ ព្រោង កាហ្វ្រពៃផ្សៃ ហ្រ្វ 00 S Tm m mtm m ll mm mm mm ll m L S S l m u S m tll m mL S T SS B666 --- 缀 L. Lip வட த்தினதும் இணைந்த ஒழுங்கமைப்பில் 0 08:2005 Lma t y yt um m uu u Tm m Tutm TtLS இடம்பெற்றது. 雛 ថ្ងៃភ្លៅខ្ស ឆ្នាួ ឆ្នា ធ្ឫg ਸੰB666 Փայլույլ ֆ563 ՓարունաT61UT61 166 66 ] குழந்தை நட்சத்திரத் தெரிவில் இதே படத்தில் ព្រោយ៍ ដើម្បីញ៉ា ព្រោ8656 56
毅 ខ្ស ឆ្នា 17082005@)
விம்பம் அமைப்பினதும் கட்
it 66 616 ਨੂੰ 66DDbi
ខ្សព្វេ វិញ្ច្រា ឆ្នា
ខ្ស
புகைப்படக் கண்காட்சி
சேது காண்பியப் பண்பாட்டிற்கான கற்கைப்புலம் அமைப்பின் ஏற்பாட்டில் தொல்லியல் துறையைச் சேர்ந்தவரும், புகைப்படக் கலைஞருமான .ே பேசிலின் புகைப்படக்கண்காட்சி செப்ரெம்பர் 18ஆம்
- ஆ திகதி முதல் 20ஆம் திகதிவரை
யாழ், நாவலர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. கலைஞர் ஜெயதிஸ் இந்தியாவில் வாழ்ந்த காலத்தில் தன் புகைப்படக் கருவிக்குள் அகப்படுத்திக்கொண்ட தத்ரூபமான 45 வரையிலான புகைப்படங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன. கண்காட்சிக்கான ஆரம்ப வைபவம் 17ஆம் திகதி மாலையில் இடம்பெற்றது.
ΚΑΚΑΧΧΧΧ.
酶 ஜூலை - டிசெம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

s O e O
கலைவநாவிைத்தகர் படிடம்
திருமறைக் கலாமன்றத்தின் நாற்பதாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, ஐக்கிய இராச்சிய திருமறைக் கலாமன்றத்தால் ஐக்கிய இராச்சியம் 'புறோம் லி நகரின் 'கிளின்போட்ரவுண்' மண்டபத்தில் 11.12.2005 இல் நடத்தப்பட்ட 'கலைப் பொங்கல்' விழாவில் திருமறைக் கலாமன்ற இயக்குநர் பேராசிரியர் நீ மரிய
(35 6) fu ri அடிகளாருக்கு 946)|J 5) கலைச் சேவையைப் பாராட்டி ஐரோப்பிய ஒன்றியத்தின் ாடாளுமன்றப் பிரதிநிதி றொபேட் லிவான் அவர்களால் கலைஞான வித் தகர்' என்னும் பட்டம் வழங்கிக் களரவிக்கப்பட்டது.
m{8FDTDD1_fibrb(Tiếfì =
திருமறைக் கலாமன்றமும், 'தெரிதல்' வட்டமும் இணைந்து மாதாந்த திரைப்படக் காட்சியை ஆரம்பித்துள்ளன. இத் தொடரின் முதலாவது காட்சி கடந்த 08.10.2005 மாலை 00 மணியளவில் யாழ் மன்ற அரங்கில் காண்பிக்கப்பட்டது. இதன் போது 'லரீஷா என்னும் ரஷ்யத் திரைப்படம் தமிழ்த் துணைத் தலைப்புக்களுடன் புறொஜெக்ரர் மூலம் அகன்ற திரையில் காண்பிக்கப்பட்டது.
s y
திரைப் படம்
ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து கனடாவில் வாழும் இளைஞர்களின் மத்தியில் தற்போது நிலவி வரும் பல்வேறுபட்ட நிலைகளையும், மூத்தோர் - இளையோர் மத்தியில் நிலவும் தலைமுறை இடைவெளிகளையும் வெளிப்படுத்தும் உண்மைச் சம்பவங்களை கதையாக்கி திவ்வியராஜனின் கதை, இசை, பாடல் இயக்கத்தில் அமைந்த சகா' திரைப்படம் யாழ். மத்திய கல்லூரி கேட்போர் கூடத்தில் நண்பர்கள் வட்டத்தின் ஏற்பாட்டில் 14.03.2005இல் காண்பிக்கப்பட்டது. திரைப்படத்தின் நிறைவில் பார்வையாளர்களுடனான கருத்துப்பரிமாறலும் இடம்பெற்றது. இதன்போது திரைப்பட ஆர்வலர்கள் பலரும் தமது ஆக்கபூர்வமான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.
புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் ஈழத்தைச் சேர்ந்த பலரும் - வாழ்வுச் சூழல் நெருக்கடிகள் மத்தியிலும் பல ஆரோக்கியமான செயற்பாடுகளிலும் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றார்கள். சஞ்சிகை வெளியீடுகள், நூல் வெளியீடுகள், கலை, இலக்கிய சந்திப்புக்கள், ஒலி நாடா - இறுவட்டு வெளியீடுகள், குறும்பட - திரைப்பட தயாரிப்புகள் எனப் பலவாறாகத் தொடர்கிறது அவர்களது பணி. இதன் ஒரு வெளிப்பாடாக அமையும் 'சகா' திரைப்பட இயக்குநர் திவ்வியராஜனின் இம் முயற்சி குறிப்பிடத்தக்கதாக அமைந்து மாற்று சினிமாவுக்கான நம்பிக்கையின் வாசலைத் திறக்கின்றது. யாழ்ப்பாணம், வரணியைச் சேர்ந்த திவ்வியராஜன் இங்கிருக்கும்போதே கலைஞராக பல தளங்களிலும் செயற்பட்டவர். 1994 ஆம் ஆண்டு முதல் புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்கின்றார்.
சகா' திரைப்படம் இலங்கையில் கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும் பரவலாகக் காண்பிக்கப்பட்டு மிகுந்த வரவேற்பைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. L前2005 43

Page 46
திருமறைக் sessmoro கலைஞர் குழுவின்
Giuntur Gunbulü UIUUGNUTIUputih, baus SS sunt:
R
இவ்வாண்டு ஒகஸ்ற் 17ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை ஜேர்மனி நாட்டின் 'கோலான் நகரில் இடம் பெற்ற 20ஆவது உலக கத்தோலிக்க இளைஞர் தின நிகழ்வுகளில் பங்கேற்பதற்கான சந்தர்ப்பம் திருமறைக் கலாமன்ற கலைஞர் குழுவுக்கு கிடைத்தது. இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி திருமறைக் கலாமன்றக் கலைஞர்கள் ஐவர், மன்ற இயக்குநர் நீ மரியசேவியர் அடிகளாருடன் 10.08.2005 இல் இலங்கையிலிருந்து புறப்பட்டு, ஜேர்மனி சென்று 23.08.2005 இல் மீண்டும் தாயகம் திரும்பி வந்தார்கள். ஜேர்மனி நோக்கிய இக் கலைப்பயணத்தினை மன்ற இயக்குநருடன் இணைந்து, யாழ். திருமறைக் கலாமன்றத்திலிருந்து கு.அற்புதன், பீ. சே. கலீஸ், அ. அன்று யூலியஸ் ஆகிய தமிழ்க் கலைஞர்களும், கண்டி, பாணந்துறை திருமறைக் கலாமன்றங்களிலிருந்து
接毅
స్ట్రేళ
றவழிக்க, நு கலைஞர்களும் ே (āg கலைஞர்கள் கால்
இயங்கும் (5(p660 JT6) LITL கேக்கினா6 அணிவிக்கப் வழங்கப்பட்டு மிக அவர்க (ஹல்ஸ்டே கடந்த 2003ஆம் கலாமன்றத்தின் வந்து கொழும்பு
போன்ற இ அரங்க நிகழ்வு
என்பது அதனைத் ெ குழுவினரா அவர்கள கலைஞர்கள் அ தங்க வைக்க
----
44
ஜூலை :
 
 
 

வான் ஆகிய சிங்களக் மற்கொண்டிருந்தார்கள். ஜர்மனி நாட்டில் மன்றக் பதித்த போது, அங்கு ஹல்ஸ்பேர்க் அரங்கக் உல்கள் இசைக்கப்பட்டு, 0 (olguju JULILL LDT6060 பட்டு, சூரியகாந்தி மலர் கச் சிறப்பான வரவேற்பு ளுக்கு வழங்கப்பட்டது. ர்க்' அரங்கக் குழவினர் ம் ஆண்டில் திருமறைக் அழைப்பில் இலங்கை யாழ்ப்பாணம், வவுனியா உங்களில் பல்வேறுபட்ட 8ளை நிகழ்த்தியவர்கள் இங்கு குறிபிடத்தக்கது) தாடர்ந்து இவ் அரங்கக் ல் ஹல்ஸ்பேர்க் என்ற து கிராமத்திற்கு மன்றக் ழைத்துச் செல்லப்பட்டு ப்பட்டார்கள். தொடர்ந்து
டிசெம்பர் 2005
அ. அமிர்தn
14ஆம் திகதி வரை 'ஹல்ஸ்பேர்க்' அரங்கக் குழுவினருடன் இணைந்து திருமறைக் கலாமன்றக் கலைஞர்கள் பல்வேறுபட்ட கலை நிகழ்வுகளை ஜேர்மனியில் நிகழ்த்தினார்கள். இவற்றில் ஹல்ஸ்பேர்க் அரங்கில் நிகழ்த்திய சுனாமி பற்றிய புத்தாக்க நடனம், சூரிய அஸ்தமனம்', 'நெருப்பு போன்ற நடன நிகழ்வுகளும், நாடக அளிக்கைகளும் மிகுந்த வரவேற்புக்களையும், பாராட்டுக்களையும் பெற்றன. மன்றக் கலைஞர்களின் ஜேர்மனி வருகை, கலை நிகழ்ச்சிகள் பற்றிய செய்திகளை ஜேர்மனியில் உள்ள இலத்திரனியல், அச்சு ஊடகங்கள் பலவும் முக்கியத்துவம் கொடுத்த படங்களாகவும், தகவல்களாகவும், நேர்காணல்களாகவும் வெளியிட்டன. தொடர்ந்து 15 ஆம் திகதி உலக இளைஞர் தின நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக பசாவு என்ற இடத்திற்கு மன்றக் கலைக்குழுவினர் சென்றார்கள். இச் சந்தர்ப்பத்தில் இனளஞர் தின நிகழ்வுகளுக்காக பல நாடுகளில் இருந்தும் வந்திருந்த இளையோருடன் உறவாடும் வாய்ப்பு மன்றக் கலைஞர்களுக்கு கிடைத்தது. ஜேர்மனியின் 'கோலான் நகரத்தில் இடம்பெற்ற உலக இளைஞர் தின நிகழ்வுகளுக்காக ஜேர்மனி தேசம் முழுவதுமே விழாக்கோலம் பூன்டிருந்தது என்று கூறினால் மிகையாகாது. திரும்பும் இடங்கள் எங்குமே இளைஞர் தின சின்னம் பொறிக்கப்பட்ட பனர்கள், விளம்பரங்கள் காட்சியளித்தன. இளைஞர் தின நிகழ்வுகளுக்காக உலகில் 200 நாடுகளிலிருந்து 8 லட்சம் வரையிலான இளைஞர்களும், யுவதிகளும் ஜேர்மனிக்கு வருகை தந்திருந்தார்கள். இவர்கள் உலகின் 7

Page 47
கண்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி அவர்கள் ஆ
நின்றார்கள். உலக இளைஞர் தின நடத்தியது நிகழ்வுகளுக்காக புதிய திருத்தந்தை தூரம்வரை 3 ப 16ஆம் பெனடிக்ற் அவர்கள் 18ஆம் கப்பலில் பயணம்ெ திகதி ஜேர்மனிக்கு வருகை தந்தார். இக் கண்கொள்ளாக பாப்பரசராக கடந்த ஏப்பிரலில் நதியின் இருபக்கமு பதவியேற்ற திருத்தந்தை 16ஆம் திரண்டு நின் பெனடிக்ற் அவர்கள் தனது சொந்த பாப்பரசரைத் தரிசி நாடான ஜேர்மனிக்கு பாப்பரசரானதன் ஓகஸ்ற் 21 ஆம் த
பின்னர் மேற்கொண்ட முதலாவது ஜேர்மனியில் தரித்து பயணமாகவும், முதலாவது வெளிநாட்டுப் அவர்கள், இளைஞ பயணமாகவும் அவரது ஜேர்மனி வருகை உட்பட பல்வேறுL அமைந்தது. பாப்பரசர் அவர்களின் மாநாடுகளில் பங்கு ப வருகையைத் தொடர்ந்து இளைஞர் தின தின நிகழ்வுகளின்
நிகழ்வுகள் உச்சத்தை அடைந்தன. இளையோருக்காக வி பாப்பரசருக்கு ஜேர்மனி அரசால் திருத்தந்தை அவர்கள்
மாபெரும் வரவேற்பு வழங்கப்பட்டது. திருத்தந்தை அ
18ஆம் திகதி மாலையில் நைல் தினத்தை நதியில் 200 நாடுகளின் இளைஞர் பலவற்றிலும் ஆ பிரதிநிதிகள், கத்தோலிக்க குருமார்கள், பல்வேறுபட்ட ஆழமா இசைக்கலைஞர்கள், பாடகர்கள் என முன்வைத்தார். பல்லாயிரக்கணக்கானவர்களுடன் தரித்து அமைதி, சுதந்திர
நின்ற கப்பலில் ஏறிய திருத்தந்தை ിഞ്ഞേ
லாமன்றம் இலங்கையிலும் (S விநாடுக 撃 1666 96.ਪੀ. 66 & --- ----- କ୍ଷୋ; #ಣ್ರ
STT 0 l TT myym m uT uammM uTT MM M u T m m kukmm u நிறுவி செயற்பட்டு வருகின்றது.
EJõ ஜூலை - டிசெப்
 
 
 

ராதனை நிகழ்வை -ன் 5 கிலோமீற்றர் ணித்தியாலம் இக் சய்து திரும்பினார். காட்சியை நைல் ) லட்சக்கணக்கில் ற மக்கள் பார்த்து, து மகிழ்ந்தார்கள். கதி ஞாயிறுவரை நின்ற திருத்தந்தை ர் தின நிகழ்வுகள் |''L ഞഖLഖB5ങ!, ற்றினார். இளைஞர்
நிறைவில் உலக சேட திருப்பலியை நிறைவேற்றினார். அவர்கள் இளைஞர் ஒட்டிய நிகழ்வுகள் ற்றிய உரைகளில் “ன கருத்துக்களை குறிப்பாக, உலக ம், சகோதரத்துவம் பறவும், போர்கள்,
6. 3.656,or 60060)
ாந்து திருமறைக்
ម្ល៉ោះថា (D) big bolt B360.
1507 2005 ப பணியகத்தை
Éá tofsi gS5ð fá
வன்முறைகள், நிறபேதங்கள், மதம், சாதி, இனம், மொழி போன்ற வேறுபாடுகள் நீங்கவும் உலக மக்கள் அனைவரும் பாடுபடவேண்டும் என்ற கருத்துக்கள் அதில் முக்கியத்துவம் பெற்றிருந்தன. இளைஞர் தின நிகழ்வுகளுக்காக வருகை தந்த இலட்சக்கணக்கான வர்களின் அத்தியாவசிய தேவைகளான பாதுகாப்பு, போக்குவரத்து, சுகாதாரம், உணவு என அனைத்தையும் மிகத் திறமையாக ஜேர்மனி அரசு மேற்கொண்டிருந்தது. உலக இளைஞர் தின நிறைவு நிகழ்வுகளின் போதும் மன்றக் கலைக்குழவினர் கலை நிகழ்வுகள் சிலவற்றை நிகழ்த்தியிருந்தார்கள். மொத்தத்தில், புதிய அனுபவங்கள், ஆச்சரியங்களுடன் ஜேர்மனியின் புகழ்மிக்க இடங்கள் சிலவற்றை பார்வையிட்ட மகிழ்வுடனும் மன்றக் கலைஞர்களின் ஜேர்மனி நோக்கிய பயணம் நிறைவு பெற்றது.9
(ប្រីថ្ងៃ கட்டடத்தின் தோற்றம்
அஞ்சலி நிகழ்வு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தமிழ்த் துறையின் ஏற்பாட்டில் தமிழில் மிகச் சிறந்த படைப்பாளிகளில் ஒருவராக விளங்கி அண்மையில் மறைந்த சுந்தர ராமசாமி பற்றிய நினைவஞ்சலி நிகழ்வு 07.12.2005 இல், பல்கலைக்கழக புவியியல்த் துறை மண்டபத்தில் இடம் பெற்றது.
தமிழ்த்துறை தலைவர் பேராசிரி யர் எஸ். சிவலிங்கராசா தலைமையில் நடைபெற்ற இவ் அஞ்சலி நிகழ்வில் கலாநிதி ம. இரகுநாதன், அ. யேசுராசா, க. சட்டநாதன் ஆகியோர் சுந்தர ராமசாமி பற்றி நினைவுரைகளை வழங்கினார்கள்.
_前2005
45

Page 48
euഗ്ഗr രlത്രൻ
12 /ጠ
வைரவநாதக் குருக்கள் பூக்களைத் தொடுத்து மாலை கட்டிக்கொண்டிருந்த போதிலும் அவரது மனம் ஒரு நிலையில் இல்லை. மீண்டும் மீண்டும் மனதினை ஒரு நிலைக்குக் கொண்டு வர முயன்றபோதிலும் அது அவரால் முடியவில்லை. தன்னை அறியாமல் பெருமூச்சு விட்டவராகக் கோவில் சுவரிலே திட்டப்பட்டிருந்த பிள்ளையார் ஒவியங்களையே அவர் பார்த்தார். இந்த ஒவியங்களின் அருகே நின்றுகொண்டு விநாயகமூர்த்தி தன்னைப் பார்த்து ஏதோ சொல்வது போன்று அவர் உணர்ந்தார். அந்த வேளையிலேயே கண்களில் சட்டென்று கண்ணி பெருகிற்று. அவரை அறியாமலேயே நெஞ்சினுள் அழுகை விம்மிற்று.
விநாயகமூர்த்தி அமைதியான இளைஞன். யாரோடும் அதிகம் பேசமாட்டான். எப்போதும் புத்தகங்களையே படித்துக் கொண்டிருப்பான். அதைவிட தனியாக உட்கார்ந்து இருக்கிறபோது இனிமையான குரலிலே தன் னை அறியாமலே பாடிக்கொண்டிருப்பான். அவனது குரலின் இனிமை வைரவநாதக் குருக்களுக்கு மிகவும் பிரியமானது. நெஞ்சையே உருக்கும் விதத்தில் அவன் பாடிக் கொண்டிருக்கும்போது அவரது கண்களிலே அவரை அறியாமலேயே கண்ணிர் சொரியும். அவனது குரலைக் கேட்பவர்கள் எல்லாம் அவனுக்குச் சங்கீதம் கற்றுக்கொடுக்கும்படி வைரவநாதக் குருக்களிடம் சொல்வார்கள். அப்போது அவன் முகத்திலே தன்னையறியாத பெருமையும் பரவசமும் பளபளக்கும். வைரவநாதக் குருக்களின் கண்கள் கலங்கின. வேதனையோடு கண்களைத் துடைத்துக் கொண்டார். விநாயகமூர்த்தி இப்போது எங்கே இருப்பான்? அவனைக் கூட்டிச் சென்றவர்கள் அவனை என்ன செய்தார்கள்? என்ற கேள்வி அவரை ஓயாமல் வதைத்துக்கொண்டிருந்தது.
திடீரென கோவிலுக்கு வெளியே கேட்ட சத்தம் அவரைத் திடுக்கிடவைத்தது. பூமாலையை கையில் எடுத்தபடியே எழுந்து கோயில் வாசற்புறமாக அவர் சென்றார்.
கோயில் வாசற்புறத்திலே ஒரு ஜீப் வண்டி நின்றது. ஜப் வண்டியிலிருந்து இறங்கியவர், புன்னகையோடு வைரவநாதக் குருக்களைப் பார்த்தார். அருகே வந்தவர் கைகளைக் கூப்பியவாறு “வண்க்கம் குருக்கள் ஐயா” என்றார்.
வைரவநாதக் குருக்களின் கண்களிலே அவரை அறியாத கேள்வி பரபரத்தது. வந்தவர் கண்ணியமான தோற்றத்தில் காட்சியளித்தார். தன்னைத்தானே அறிமுகம் செய்துகொண்டார். "குருக்கள் ஐயா, நான் ஒரு வரலாற்று ஆராய்ச்சியாளன். மறைத்து வைக்கப்பட்டிருக்கும் பல வரலாற்று நிகழ்வுகளை வெளியே கொண்டுவர வேண்டும் என்பதற்காக நான் முயற்சி செய்து வருகின்றேன். எனக்கு யுனெஸ்கோ நிறுவனமும் உதவி செய்கிறது. நீங்கள் வாழும் இந்தக் கிராமம் மிகவும் வரலாற்று பெருமையுள்ளது. இங்கே சிறந்த நாகரீகம் நிலவியது என்பதை பலரும் மறைத்துவிட்டார்கள். இதனை நன்கு ஆராய்ந்து கண்டறிவதற்காகவே நான் இங்கே வந்திருக்கிறேன். இதற்கு கோயில் குருக்களாகிய நீங்கள் எனக்கு உதவியும் ஒத்துழைப்பும் தரவேண்டும்"
குருக்களின் முகம் அவரையறியாத சந்தோஷத்தில் மலர்ந்தது.
"என்னாலான எல்லா உதவிகளையும் நான் செய்வேன் அது என் கடமை."
46 ஜசலை - டி
 

செ. யோகநாதன்
ஆராய்ச்சியாளர் குருக்களோடு சென்று அந்தக் கோவிலை சுற்றிவந்து பலகோணங்களிலே படம் பிடித்தார்.
"இது மிகப் பழமைவாய்ந்த கோவில் சோழர்கால கட்டடம், இங்கெல்லாம் நமது மக்கள் சிறப்பாக வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. இங்குள்ள சிலைகள் யாவும் ஐம்பொன்னால் செய்யப்பட்டவை. விலை உயர்ந்தவை. இங்கே நிலத்தை அகழ்ந்தால் இன்னும் நிறைய விஷயங்களை அறியலாம். இதுபற்றி நான் பத்திரிகைகளுக்கும் எழுதப்போகிறேன்' வந்தவர் சொன்னதில் பலவிஷயங்களை அவர்கள் புரிந்துகொள்ளாதபோதிலும் ஊர் மக்கள் மிகவும் பரவசம் அடைந்தனர். குளக்கரையில் தாங்கள் இதுவரை துணிதோய்க்கப் பயன்படுத்திய பல தூண்களிலுள்ள சிற்பங்கள் அற்புதமானவை என்று அவர் சொன்னபோது ஒருவரை ஒருவர் ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டனர்.
எந்த வாகன இரைச்சலுமற்ற அந்தக் கிராமத்தினுள்ளே ஜீப் வண்டிகளும், பெரிய லொரிகளும் வந்து சூழ்ந்தன. தூசி எங்கும் பறந்தது. ஜீப், லொறிகளிலிருந்து வந்தவர்களைக் கண்டதும் மக்கள் திக்பிரமையுற்றனர். அச்சத்தில் உறைந்துபோய் நின்றனர். உச்சிக்காலப்பூசையை முடித்துவிட்டு கோயிலுக்கு வெளியே வந்த வைரவநாதக் குருக்கள் வரிசையாக நின்ற ஜீப்வண்டிகளைக் கண்டு திடுக்கிட்டார்.
ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னே விநாயக மூர்த்தியும் இப்படியொரு ஜீப்பில் வந்தவர்களால் தானே கூட்டிச் செல்லப்பட்டான். சிலவேளை அவனை இங்கே மீண்டும் கூட்டி வந்திருக்கிறார்களோ.
“பிள்ளையார் அப்பனே.” அவர் கண்கள் பிள்ளையாரைப் பார்த்துக் கலங்கியது. அந்த இடத்திலே நிறையப் பேர் கூடிநின்றனர். காக்கிச்சட்டை அணிந்து துப்பாக்கியும் விறைந்த முகமுமாய்த் தோன்றியவர்களை அந்த ஊரிலே உள்ள மக்கள் இப்போதுதான் முதன் முறையாய்ப் பார்க்கிறார்கள்.
காக்கிச் சட்டை அணிந்த ஒருவர் முன்னே வந்தார். கொச்சைத்தமிழிலே கூறத்தொடங்கினார்.
"நான் சொல்றதை எல்லாருங் கவனமாகக் கேட்கவேணும். இந்த ஊரைப் பாதுகாப்புப் பிரதேசமா 'கவன்மென்ட் ஆக்கியிருக்கு. இன்னும் மூன்று நாளிலை நீங்கள் எல்லாரும் இந்த ஊரைவிட்டு வெளியே போயிடனும், நாங்க இந்த ஊரைப்பாதுகாக்க வந்திருக்கிறம். நீங்கள் எல்லாரும் போயிடனும்"
"ஐயோ பிள்ளையாரே" ஒரேவேளையில் எல்லாக் குரல்களும் கலங்கி நொந்து அதிர்ந்தன.
"பிள்ளையாரே நாங்கள் இந்த மண்ணை விட்டு எங்கே போவோம். இது நாங்க பிறந்தமண்"
"நாங்க எந்தக் குற்றமும் செய்யவில்லையே" "எங்களினுடைய வீடுவாசலை விட்டிட்டு நாங்க எங்கே (3in (36 Tib."
திகைப்போடு எழுந்த கேள்விகள் காற்றினுள் பெருகி நிறைந்தன.
"வாயை மூடுங்க. நாங்க இந்த இடத்தைப் பாதுகாக்க வந்திருக்கிறோம்" இடிபோல முழங்கிற்று ஒருகுரல் வாட்டசாட்டமான முரட்டுத்தோற்றமுள்ள அந்தக் காக்கிச் சட்டைக்காரனின் அதட்டற் குரல் எல்லாரது மனத்திலும், முகத்திலும் அச்சத்தினை விதைத்தது. இதுபோல அவர்கள் யாரது அதட்டுதலுக்கும் உட்பட்டதில்லை. மெளனத்தோடு தலையைக் கவிழ்ந்தபடி நின்றனர். கொஞ்சத்தூரம் தள்ளி நின்ற வேப்பமரத்தின் கிளையில் இருந்து ஒற்றையாகக் கூவிக்கொண்டிருந்த குயிலின் ஒசை மட்டும் அங்கே ஒலித்தது.
"யாரும் பேசக்கூடாது. மூணுநாளிலை இங்கிருந்து போயிடணும். இல்லேன்னா இங்கேயே சுட்டுத்தள்ளிடுவோம்"
Gabur 2005 而御邸

Page 49
சொல்லியவாறே தோளிலிருந்த துப்பாக்கியைக் கையால் சரி செய்தான். பிறகு அவர்களின் முகத்தை உறுத்துப்பாத்தான். அந்தப்பார்வை தமது மனதினுள் குடைந்து குடைந்து தேடுகின்றது போல அவர்கள் அவதிப்பட்டு குலைந்து, அச்சத்தோடு தமதுகாலடிகளைப் பார்த்துக்கொண்டு நின்றனர்.
யாருமே எதிர்பாராத விதத்தில் வைரவநாதக் குருக்கள் முன்னேவந்து காக்கிச்சட்டைக்காரரின் அருகே போனார். காக்கிச்சட்டைக்காரரின் முகத்தில் வினோதமும், மெல்ல அரும்புகின்ற கோபமும் வைரவநாதக் குருக்களை பார்வையால் முறைத்தது.
"என்ன? அதிகாரக்குரல் அதட்டியது. வைரவநாதக் குருக்கள் முகத்தின் அரும்பிய வியர்வையைத்துடைத்துக் கொண்டே காக்கிச்சட்டையை ஏறிட்டார். -
"நீ யாரு?" அந்தக்குரல் அவரது பிடரியைத்தொட்டு உலுப்ப முனைந்தபோதும் வைரவநாதக் குருக்கள் வெகுசாதாரணமாக நின்றார்.
"சொல்லு? அமைதியாகப் பார்த்தார் குருக்கள். சாவதானமாகச் சொன்னார்.
"பிள்ளையார் கோவில் பூசகர் நான்" காக்கிச்சட்டைக்காரரின் அருகே, அங்கு வந்து இன்னொருவர் சென்று மெல்லிய குரலில் ஏதோ கூறினார்.
"ஆ. அதுக்கென்ன? "நான் பிள்ளையாருக்கு ஐந்து காலமும் பூசை செய்யவேணும். தினசரி அபிஷேகம் செய்யவேணும். இதுக்காக இங்கேயே நான் இருக்கவேணும் பிள்ளையாரப்பனை விட்டுப்பிரிந்து என்னாலை இருக்கவே முடியாது."
வைரவநாதக் குருக்கள் சொன்னவற்றை காக்கிச்சட்டை அதிகாரியால் தெளிவாகப் புரிந்து கொள்ளமுடியவில்லை. அருகே நின்றவரைக் கேள்வி தொனிக்கப் பார்த்தார். அவர் அருகே வந்து வைரவநாதக் குருக்கள் என்ன சொன்னாரென்பதை விளக்கமாகச் சொல்லத் தொடங்கினார். அவரைத் தொடரவிடாமல் காக்கிச்சட்டை அதிகாரி சத்தமிட்டார்.
"அந்தச் சாமியைப் பார்க்க யாரும் இங்கே இருக்கத் தேவையில்லை. நாங்களே சாமியைப் பார்த்துக் கொள்ளுவோம். இந்த இடத்திலை நாங்க பாதுகாப்பாகத் தங்குறதுக்கு கோயில்தான் நல்ல இடம். அப்படித்தானே சொன்னாங்க റ്റ് பேப்பரிலையும் இந்தக் கோவிலைப் பற்றி سمي எழுதியிருந்தாங்களே. நான் படிச்சேனே."
அதிகாரியின் கண்கள் மின்னின. குருக்களை நெருங்கியவாறே "கோயில் சாவியைக் கொண்டு வா' என்று கேட்ட குரலிலே எரிச்சலையூட்டுகின்ற குரூரம். "பிள்ளையாரப்பனே" வேதனையரில தோய் நீ த குருக்களின் குரலைக் கேளாதவனேபோல அருகில் நின்றவனைப் பார்த்த அதிகாரி சொன்னான்;
"எனக்கு சாவி வேணும்." அந்த ஆள் குருக்களின் அருகே வந்தான். அவரின் இடுப்பிலே செருகித் தெரிந்த சாவிக் கொத்தினை சடக்கென்று இழுத்தெடுத்தான். குருக்கள் அதிர்ச்சியில் வெலவெலத்துப்போனார். கண்களில் கண்ணீர் பெருகிற்று. கண்ணை மூடிக்கொண்டார்.
堡
jší ஜூலை - டிசெம்
 

இன்னும் இரண்டு தினங்களிலே விநாயகசதுர்த்தி. ஆறு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமது கிராமத்திற்குச் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டபோது வைரவநாதக் குருக்கள் திக்பிரமையாகிப் பேசாமலே சில நிமிடங்களுக்கு நின்றார். கண்ணீர் பெருகிற்று. கிராமத்தைவிட்டு வெளியேறி எங்கெங்கோ வீடுவாசலும் வேளா வேலைக்கு உணவில்லாமல் அவதிப்பட்டவர்களிலே இப்போது எத்தனைபேர் உயிரோடு இருப்பார்களோ என்ற கேள்வி )னதினுள்ளே எழுந்தபோது நெஞ்சுவலித்தது.
இந்த ஆறாண்டுகளாக விநாயகமூர்த்தியைத் தேடி அலைந்து மனமும், உடலும் அலுத்துக் களைத்துப் போய்விட்டார் வைரவநாதக் குருக்கள். இந்த ஆண்டுகளின் ஒவ்வொரு விநாயகசதுர்த்தியின் போதும் மெளனமாக ஒரு மூலையில் இருந்து கண்ணீர் விட்டவாறே விம்மி விம்மி அழுது கொண்டிருப்பார் அவர், குராகத்துக் கோவிலிலே கருணை பொழியும் முகத்தோடு டட்காந்திருக்கும் விநாயகப் பெருமானுக்கு ஐந்துகாலப் பூஜையை பார் செய்வார்களோ என்ற கேள்வி வழமையைவிட அன்றைக்கு நெஞ்சைக் கொத்திக் குதறிக்கொண்டிருக்கும். அத்தோடு விநாயகமூர்த்தியின் பிஞ்சு முகம் மனதிலே தோன்றிய வண்ணமே இருக்கும்.
கிராமத்தின் வாசற்புறத்தோற்றமே நெஞ்சினை 9திரவைத்தது. கிராமத்தின் முன்புறத்திலே அழகிய தென்னஞ்சோலை. பச்சைப்பசேலென விரிந்த பசுந்தரையில் அங்கும் இங்குமாய் பூத்துக் குலுங்கிநிற்கும் பூவரசமரங்களும், ந்தியாவட்டை, செவ்வலரிச் செடிகளும், பிள்ளையார் கோயில் பூந்தோட்ட மல்லிகைக் செடிகளில் சிலவற்றையும் விநாயகமூர்த்தி இங்கே நட்டு வளர்த்திருக்கிறான்.
குருக்கள் இப்போது கண்களைக் கசக்கியவாறு எதிரே ார்த்தார். நெஞ்சினிலே காஞ்சரங்காய் முட்கள் அழுத்திக் நத்தியதுபோல் உணர்வு கொண்டார்.
கால்கள் தள்ளாடின. அருகே நின்ற சுப்பையாவை ட்டென்று பற்றிக்கொண்டார். சுப்பையா கண்ணிரைத் துடைத்துக்கொண்டே பரிதாபமாகக் குருக்களைப் பார்த்தார்.
"குருக்கள் ஐயா" தன்னை ஆதரவோடு தொட்ட வார்த்தைகள் இப்படிக் ன ணfரைப் பெருக வைக் குமென் று குருக கள் ண்ணியிருக்கவில்லை. விம்மி விம்மி அழத்தொடங்கினார்.
சுப்பையா கலங்கியகுரலில் முணுமுணுத்தார்.
"இந்தத் தென்னை மரங்களும் பூமரங்களும் யாருக்கு என்ன தீங்கு செய்தன? ஒரு தென்னை மரத்திலை கூட பச்சை ஓலை இல்லையே! எல்லா மரமுமே எரிஞ்சு கருகிப்போயிருக்குதே. உயிருள்ள மனிதன் ஒருதனை நெருப்பிலே போட்டு எரிச்சுக் கொன்றதுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்? பிள்ளையார் அப்பனே இதையெல்லாம் நீர் LIsl sf & 85 sI LD 6Ó கண் ணை மூடிக்கொண்டிருக்கிறீரா. கடவுளே கடவுளே." தலைதலையாக அடித்துக்கொண்டார் சுப்பையா. எதிரே முற்றிலும் கருகிப் போயிருக்கின்ற மரங்களைப் பார்த்தபடியே கந்தசாமி கொதிப்பும் கோபமுமாய்ச் சொன்னார். "இந்த இடம் முழுதுமே குண்டு வீசியிருக்கிறார்கள்." அதனாலைதான் இந்த அழிவு உள்ளுக்குள்ளே எங்களினுடைய வீடு வாசல் எப்படி இருக்குமோ?"
குருக்கள் கண் ணிரைத் துடைத்துக்கொண்டே "வாருங்க சீக்கிரமாக
山首2005 47

Page 50
ஊருக்குள்ளை போகலாம்" என்றார்.
எல்லோரும் நடந்தனர். இருபுறமும் செடிகொடிகள் மண்டிக் கிடந்தன. பாதையெங்கும் நெருஞ்சிமுட்கள். அடையாளமே காணமுடியாமல் வீடுகள் இடிந்து நொருங்கிச் சிதைந்து காட்டுச் செடிகளால் மூடுண்டு போய்க் கிடந்தன. செடிகளிடையே பாம்புகள் நடமாட்டம் காணப்பட்டது.
இதுவரை அந்த ஊருக்குள்ளேயே காணப்படாத கழுகுகள் உயர்ந்த வேப்பமரத்தைவிட்டு கடகடவென்று சிறகுகளை அடித்துக்கொண்டு உயரப்பறந்தன.
எல்லாரது முகத்திலும் அச்சமும், துயரமும் உறைந்து போயிருந்தன. அவர்களோடு வந்த குழந்தைகள் அழத்தொடங்கின. வைரவநாதக் குருக்கள் பிள்ளையார் கோவிலை நோக்கி ஓடினார்.
கோயிலைச் சுற்றி இப்போது வேலி ஒன்று கட்டப்பட்டிருந்தது.
வேலியைத்தாண்டி மூர்க்கமாக உள்ளே ஓடினார் குருக்கள். பிரிந்திருந்த குழந்தையைத்தேடிச் செல்கின்ற தாயினைப்போல அப்படியொரு ஆவேசமும், துடிப்பும் அவரை வேகமாக இயக்கிற்று. மூச்சிரைக்க இரைக்க கோயிலின் கொடிக்கம்பத்திற்கு அருகே நின்றார். கொடிக்கம்பத்தில் ஒரு கயிறு கட்டப்பட்டு, அதன் மறுமுனை சமாந்தரமாக இருந்த தூணோடு பொருத்தியிருந்தது. அந்தக்கயிற்றிலே இரண்டு பழைய துணிகள் காயப்போடப்பட்டிருந்தன.
குருக்களுக்கு உடல் பதறிற்று. "பாவிகளே. கோயிலுக்குள்ளை துணியா காயப்போட்டீர்கள்?" என்றவாறே கட்டியிருந்த கயிற்றை மூர்க்கத்தோடும் வேகத்தோடும் இழுத்து அறுத்தெறிந்தார். நெஞ்சுக்குள் சுள்சுள்ளென்று அப்போது வலியொன்று கோடு இழுத்து நடுங்கிற்று. அவர் அதைப் பொருட்படுத்தாமல் சுவர்ப் பக்கமாகப் பார்த்தார். சுவரிலே கரிபடிந்திருந்தது. சுவருக்கு எதிரே புற்தரையில் சிதறிக்கிடக்கும் எலும்புகள்.
"பிள்ளையாராப்பனே இந்த இடத்திலைதான் இறைச்சி சமைச்சுச் சாப்பிட்டிருக்கிறான்கள். அப்பனே இதையெல்லாம் நீர் பார்த்துக்கொண்டோ இருந்தனி?”
தலை தலையாக அடித்துக்கொண்டார் குருக்கள் கண்ணி பெருகியோடிற்று. குருக்களின் இருதயமும், நரம்புகளும் தசைநாரும் காயம்பட்டாற்போல் துடிதுடித்தன. நெஞ்சை வருடியவாறு கோயில் மூலஸ்தானத்துள் குருக்கள் நுழைந்தார். கால்கள் வலியெடுத்துத் தள்ளாடுவதையும் அவர் பொருட்படுத்தவில்லை. மூலஸ்தானத்துள் நுழைந்ததும் வெளவால்கள் சடசடவென்று சிறகடித்து வெளியே பறந்தன. அவர் தலையைக் குனிந்தபோது தோளோடு உரசிச் சென்ற வெளவால் ஒன்றின் கூரான நகங்கள் காயத்தைக்கீறி இரத்தத்தைச் சீறவைத்தன. தோளில் கசகசத்த ரத்தத்தை வேதனையோடு விரலால் துடைத்தவாறு குனிந்தபடி சுவர் உள்ளே சென்றார் . துளசியம் , புஷ பங்களும் , பன்னிரும் , வாசனைத்திரவியங்களும், பாலும் இனிய மணங்கமழும் மூலஸ்தானத்துள் தலையை வலித்து மனதை அருவருக்க வைக்கும் நாற்றம் விசிற்று.
குனிந்தபடியே சென்ற வைரவநாதக் குருக்கள், விக்கிரகங்கள் இருந்த பீடங்களை நோக்கிச் சென்றார். மூலஸ்தானத்தினுள் மையிருள் படர்ந்திருந்தது. கால்களில் நெளிந்த பூச்சிகளை உதறியபடியே பீடத்தினடியில் கையைவைத்து மெல்ல மெல்ல மேலே கொண்டு சென்றார். பீடத்தின் தளத்தின் மேலே வெறுமை அவரது கைகளினுள் சிக்கியது. பரபரப்போடு கைகள் இரண்டாலும் வெறுமையை அலசி அலசித் தேடினார்.
48 ஜூலை - டிே

பீடங்களிலிருந்த ஐம்பொன் சிலைகள் எதுவுமே இல்லை. மூலவிக்கிரகத்தையும் காணவில்லை.
குருக்களின் உடல் நடுங்கிற்று. நரம்புகள் ஒவ்வொன்றும் விண்விண்ணென்று இழுபட்டாற்போல வலித்தன. கழுத்தோரச் சதைகள் விம்பி விறைந்தன.
எத்தனை ஆண்டுகாலமாக இந்தப் பீடங்களிலே அமர்ந்திருந்து கருணையும், அழகும், அருளும் பொலிந்திருந்த ஐம்பொன் விக்கிரங்கள். இந்த ஊர் மக்கள் ஒவ்வொருவரின் வாழ்வோடும் ஏதோ ஒரு விதத்தில் தொடர்புகொண்டு அவர்களின் இன்ப துன்பங்களோடு பின்னிப்பிணைந்திருந்த விக்கிரங்கள். ஐந்து காலமும் பூஜைக்காக கோயில்மணி நாதமாய் ஒலித்தபோது இந்தக் கிராம மக்களின் முன்னே அவர்களின் தாயாய், தந்தையாய் மானசீகத்திலே உயிரோடு உலவி உறவுகலந்து வருகின்ற விக்கிரகங்கள்.
குருக்கள் ஆவேசமாக வெளியே ஓடி வந்தார். தற்செயலாகக் கோயில் கிணற்றுப் பக்கமாகப்போனார். விரக்தியோடு எட்டிப் பார்த்தவர் உடல் நடுங்கிக் கதறினார்
"பிள்ளையார் அப்பனே நீர் கிணற்றுக்குள்ளையோ கிடக்கிறீர்.”
அவரது கதறல் எங்கும் எதிரொலித்தது. பாசி படர்ந்த தீர்த்தக் கிணற்றினுள் கருங்கற் பிள்ளையார் தலைக்குக்கீழே மூழ்கியபடி கிடந்தார். குருக்களின் நெஞ்சிலே இரத்தம் பீறிட்டது. "பிள்ளையார் அப்பனே." ஊர்ச்சனங்களைக் கூப்பிட்டு உம்மை இப்பவே வெளியில் எடுத்து விடுவேன். அப்பனே கோயில் மணியை அடிக்கிறேன்."
கோயில்மணி இருந்த இடத்தை நோக்கி நொண்டி நொண்டி ஓடினார் குருக்கள்.
இந்தக்கோயில் மணியின் ஓசைதான் ஊரையே அதிகாலையில் எழவைக்கும். அந்திய காலப்பூஜை என்று தொடங்கி உதயகாலம், உச்சிக்காலம், சாயங்காலம், அர்த்த ஜாமப்பூஜைகள் என்று அவர்களுக்கு நேர ஒழுங்கை அமைத்துக் கொடுக்கிற கோயில்மணி இது. பழைய காலத்திலே தமிழ் நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட இந்த ஆலயமணியைப் பற்றி எத்தனையோ கதைகள் உண்டு தாயின் கனிவோடு நம்மோடு பேசுகின்ற உயிராக இந்தக்கிராம மக்கள் இந்த மணியை உணர்ந்து வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.
குருக்கள் மணியை அடிப்பதற்காக நீண்டு தொங்கிய அதன் சங்கிலியைப் பிடித்துப் பலமாக இழுத்தார். அதன் மணியோசை நாதம்கேட்டால் ஊரே அங்கு திரண்டு வந்துவிடும். ஆனால் இப்போது மணியோசை கேட்கவில்லை. இரண்டாம் முறை, மூன்றாம் முறை சங்கிலியை இழுத்தார். சத்தமே வரவில்லை வெறுப்போடு நிமிர்ந்து பார்த்தார். மேலே ஆலயமணி இருந்த இடம் வெறுமையாய்க் கிடந்தது.
வைரவநாதக் குருக்கள் எல்லாவற்றையும் இழந்தவர் போல் தளர்ந்து சரிந்தார். அந்தக் கோவிலுக்கு வந்து தன்னோடு பயபக்தியாக பேசிய ஆராய்ச்சியாளரின் முகம் அவரையறியாம லேயே கண்களில் வந்து நின்றது. பூத்துக்குலுங்கிய பூஞ்சோலை ஒன்றினுள் கட்டாக்காலி மாடுகள் நுழைந்து நாசப்படுத்தியதுபோல் அவர் மனதுள் வருத்தம் பொங்கியது. ஆகாயத்தைப் பார்த்துக்கொண்டே அவர் தலைதலையாய் அடித்துக் கொண்டார். இந்த சுற்றுப்புறம் யாவையும் பெரும்புயல் அடித்து நாசப்படுத்தியது போல அவர் மனம் உணர்ந்து வருந்தியது.
மீண்டும் கண்களைத் துடைத்துக்கொண்டு அவர் நிமிர்ந்து வானத்தைப் பார்த்தார். அந்த ஊரையே வழிநடத்துகின்ற கோயில் மணி இருந்த இடம் இப்போது பாழ்வெளியாகி அவரது நெஞ்சை உதைத்துத் தள்ளிற்று. எதற்குமே கலங்காத அவர் தன்னையறியாத வேதனையோடு நிலத்தில் சரிந்து வீழ்ந்தார்.
செம்பர் 2005 砾暱西的

Page 51
ஈழத்தின் பல்வேறு பிரதேசக் கூத்து மரபுகளையும் இணைத்து புதிய பாணியில் யோ, யோண்சன் ராஜ்குமாரின் எழுத்துரு, நெறியாள்கையில் திருமறைக் கலாமன்றத்தால் தயாரிக்கப்பட்ட கொல் ஈனுங் கொற்றம்’ என்ற கூத்துருவ நாடகம் மேடையேற்றப்பட்ட இடங்களிலெல்லாம் வரவேற்புக்களையும், பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.
தேசிய நாடகவிழா - 2004 இல் முதற்தடவையாக கொழும்பில் மேடையேற்றப்பட்ட இந்நாடகம், யாழ்ப்பாணம், ( வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை, மன்னார் எனப் பல மாவட்டங்களிலும் மேடையேறி இவ்வாண்டு ஒக்ரோபர் மாதம்வரை 12 மேடையேற்றங்களைக் கண்டுள்ளது. இந்நாடகம் பற்றிய ஒரு திறனாய்வுப் பார்வையாக இக் கட்டுரை அமைகின்றது.
"நீதியே தவறிடும் கோண்மையால் - பூமியே புழுதியாய் மாறிடும் மாயம் நாதியே இல்லா நல்லுயிரெல்லாம்
நலிந்துமே சாகிடும் சோகம்'
என்ற பாயிரத்துடன் ஆரம்பித்த, திருமறைக் 'க கலாமன்றத்தினால் தயாரிக்கப்பட்ட 'கொல் ஈனுங் கொற்றம்' ഖ് என்னும் கூத்துருவ நாடகத்தை இரு தடவைகள் பார்க்கின்ற 29گى சந்தர்ப்பம் கிட்டியது. இதன் உருவநிலையிலும், உள்ளடக்க ö நிலையிலும் சமகால அரங்கப்போக்கில் குறிப்பிடத்தக்க L முக்கியத்துவத்தைக்கொண்டு காணப்படுகின்றமையை (U. உணரமுடிகின்றது. விமர்சனத்துக்குரிய நல்ல நாடகம் என்ற ெ
வகையில் இதனைப்பற்றி எழுத முற்படுகின்றேன். Ls 'கூத்துருவ நாடகம்’ என்ற பெயர்ப்பதம் இந்த நாடக 29گى வகைக்குப் புதிதாக இடப்பட்டிருந்தது. நாட்டிய நாடகம், நா 'இசை நாடகம்', என்று பல்வேறு முதன்மைக் கலைகளின் 5 அடிப்படையில் பெயர் வழங்கப்படுதல் புதிதல்ல. ஆனால் (8. கூத்துமரபை அடிப்படையாகக் கொண்ட ஒரு பரீட்சார்த்த நீ முயற்சி என்ற வகையில் இவ்வாறான பெயர் வழங்கல் ტfü). வரவேற்கப்படக்கூடியதே. காரணம், இதில் பல கூத்து மரபுகள் இணைக்கப்பட்டிருந்ததுடன் தனியே கூத்து என்றால் (3L
மரபுசார்ந்தோரின் எதிர்ப்பையும், நாடகம் என்றால் அதன் கூத்து வடிவப் பண்பையும் நிராகரிக்கவேண்டி இருந்திருக்கும். எனவே நெறியாளர் இரண்டுக்கும் பொதுவான பதத்தை இணைத்துப் பயன்படுத்தியுள்ளார். கூத்தினை பரீட்சார்த்த முயற்சியாக அனுக முற்படுபவர்கள் இப்பெயர் பதத்தினை கையாள முடியும்.
'கொல் ஈனுங் கொற்றம்' நாடகம் பின்வரும் வகையில் முக்கியத்துவப்படுத்தக்கூடியது. 1. கூத்துப் புத்தாக்க முயற்சியின் ஒரு நீட்சியாகப் பல கூத்துமரபுகளை ஒன்றிணைத்தமை. 2. கூத்தின் சட்டகத்துக்குள் நின்று நவீன அரங்கச் சிந்தனைகளை நோக்கிய ஒரு பாச்சலாய் அமைந்தமை. 酶 ஜூலை - டிசெம்
 
 
 
 
 

※ நா. திருச்செல்வம் வவுனியா
காவியப் பொருளை சமகாலப் பிரச்சினைகளுக்குப் புதிய lளக்கமாக அளித்தமை.
த்துப் புத்தாக்க முயற்சியின் நீட்சி
தமிழர்களின் மரபுவழிப்பட்ட தேசிய வடிவம் வத்துத்தான் என்பதை உணர்ந்து கொண்ட பேராசிரியர் த்தியானந்தன் அதன் புத்தாக்கத்திற்கு வழி சமைத்தார். வரால் கிராமத்தில் இருந்து பல்கலைக்கழக அரங்கிற்கு த்து கொண்டு செல்லப்பட்டு பல்வேறு வகையிலும் த்தாக்கம் செய்யப்பட்டு மேடையேற்றப்பட்டது. இது முதல் யற்சி, அதன் பின் அவரின் மாணவர்களான பேராசிரியர் மளனகுரு போன்றோர் கூத்தின் வடிவத்துக்குள் சமகாலப் டுபொருளை இணைத்தனர். இது இரண்டாவது முயற்சி, தற்குபின் மூன்றாவதாக கூத்தின் கூறுகளை நவீன ாடகங்களுக்குப் பயன்படுத்தினர், அதன் பின் நான்காவதாக த்தை பரதத்துடன் இணைக்கும் சில பரீட்சார்த்தங்கள் மற்கொள்ளப்பட்டன. இந்த வரன்முறைப் பாரம்பரியத்தில் ஒரு ட்சியாக 'கொல் ஈனுங் கொற்றம்' இன்னொரு தளத்திற்கு த்தினை நகர்த்தியுள்ளது.
அதாவது 'ஒரு தேசியம்' பற்றி பலரும் பலவாறாக பசுகின்ற இக்கால கட்டத்தில் பல பிரதேச கூத்து புகளையும் பரீட்சார்த்தமாக ஒன்றிணைக்க ஆசிரியர் ற்பட்டுள்ளார். அந்த முயற்சியில் அவர் கணிசமான அளவில் ன்னேறியுள்ளார் என்பதற்கு இப்படைப்பு சான்று பகர்கின்றது.
யாழ்ப்பாணத்தின் தென்மோடியை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், சிந்து நடை, வடமோடி, மட்டக்களப்பு வடமோடி, மன்னார் தென்பாங்கு, முல்லைத்தீவு கோவலன் கூத்து, மலையக காமன் கூத்துப் போன்ற பல வடிவங்களையும் நெறியாளர் வலிந்து கொண்டுவந்து இணைக்காமல் சம்பவங்களின் பொருத்தப்பாட்டுடன் இடங்கண்டு இணைத்துள்ளார். இந்த இணைப்பு, துருத்திக் கொண்டும், தனிமைப்பட்டும் நிற்காமல் 血2005 49

Page 52
பலவறக்கலந்துள்ளது. பேராசிரியர் கூறும் 'சுவைபடவந்தன வெல்லாம் ஓரிடத்தே வந்தனவாகக் தொகுத்துக் கூறல்' இங்கு நடந்துள்ளது. கூத்துக்களின் இணைப்புப்பற்றி விரும்பாதவர்கள் கூட இந்த ஒருங்கிணைப்பைக் குறை சொல்லமுடியாதவாறு இணைப்பு வலிமை பெற்றுள்ளது. உதாரணமாக நோக்குகையில், இராவணனின் வரவு தென்மோடி மரபில் அமைய, இராமர் கொலு வடமோடியில் அமைகிறது. கும்பகர்ணன் - விபீஷணன் சந்திப்பு சிந்து நடையில் அமைகிறது. 'விருத்தங்கள் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் ஒவ்வொரு மரபின் தன்மையில் பாடப்படுகிறது, தென்மோடி 'கொச்சகம்’ பாடப்பட அதன் தருவாக சிந்துநடை இணைகின்றது.இவ்வாறு பலவற்றை ஒன்றிணைத்தமைக் கூடாக கூத்துக்கள் பிரதேச வழக்குகளால் வேறுபட்டு நின்றாலும், அதன் அளிக்கைப்பண்பு ஓரிடத்தில் ஒன்றுபடுகின்றது என்ற யதார்த்தத்தை நிரூபித்து தேசிய வடிவமாக கூத்து ஆக்கப்படலாம் என்ற முயற்சிக்கு ஒரு முதற்கல்லாக இந்நாடகம் அமைந்துள்ளது.
கூத்தின் சட்டகத்துக்குள் நின்று நவீன அரங்கச் சிந்தனைகளை நோக்கிய ஒரு பாச்சலாய் அமைந்தமை
மற்றைய சிறப்பம்சம் யாதெனில் 'கூத்து' என்ற மரபுவடிவத்தின் கதைப்பின்னலுக்குள் நின்று நவீன சிந்தனைகள், ஐரோப்பிய அரங்கின் தாக்கங்கள் போன்றவற்ை பொருத்தம் கருதி இணைப்புச் செய்தமை பாராட்டப்பட வேண்டியது. கூத்தின் யாப்பு என்று கூறத்தக்க காப்பு, கட்டியமுரைத்தல், பாத்திரவரவுகள், படர்க்கையிலான அறிமுகம், சபையோரின் பங்களிப்பு, மங்களம் என்று விரியும் கதைப்பின்னலை நாடகத்தில் அவ்வாறே கையாண்டதுடன் கட்டியகாரனை சூத்திரதாரிபோல நாடகத்தின் கதையை நகள்த்தும் எடுத்துரைஞனாகவும், கிரேக்கத்தின் கோரசைபோல, அக்காலப் பாத்திரங்களுடன் காலங்கடந்து உரையாடும் பண்போடும் படைத்திருந்தமை மிகச்சிறந்த உத்திமாத்திரமல்ல எமது நாடக மரபுக்கும் புதிது. அதேபோல் கிரேக்கத்தின் கோரஸ் எவ்வாறு அக்கால அவலச்சுவை நாடகங்களின் அளிக்கையுடன், உரையாடி, உறவாடி, விவாதித்து, ஆறுதல் கூறி, பாடல்பாடி, ஆடல் நிகழ்த்தி பல கோணங்களில் செயற்பட்டதோ அதேபோல் இங்கும் ஒரே மாதிரியான வேட உடை அணிந்த பாடற்குழுவினர் பயன்படுத்தப்பட்டனர். இது கிரேக்கத்தை நினைவுபடுத்தினாலும், எமது மரபு வழிக் கூத்தி சபையோர் ஆற்றிய பணியாகவுமுள்ளது.
அது மட்டுமன்றி இசையில் ஏற்படுத்திய மாற்றங்களும் குறிப்பிடத்தக்கவை. ட்றம், மிருதங்கம், சங்கு, ஜெண்டை, ஒர்கன், உடுக்கு என பல இசைக்கருவிகளை தேவைகருதி பயன்படுத்திய விதம் கேள்விப்புலத்தில் ஒரு படிம உருவாக்கத்தை ஏற்படுத்தி நின்றது. அதுமட்டுமன்றி வேடஉடை விதானிப்பானது, எமது பகட்டாரவார உடையில்
50 ஜ0லை
 

நின்றும், யதார்த்தப்பண்பில் நின்றும் வேறுபட்ட ஒரு எளிமை உள்ளிட்ட கலாபூர்வமான தெரிவாக இருந்தது. கோரஸ் குழுவினரின் ஒரே பண்பான உடைகள், ஏனைய பாத்திரங்களின் உடைகள் போன்றவற்றை குறிப்பிட்டாலும், இராவணன், கும்பகள்ணனின் வேட உடை விதானிப்பு எமது மரபுக்குரிய உடையின் தேடல் தயாரிப்பு போல தெருக்கூத்தினை ஒத்த கிரீடமுடி, புஜக்கிரிடம், இடுப்பில் சிறிய கரப்பு உடை, காலில் பார்ஸிய மரபு 'தார்பாச்சு என பலவும் பொருத்தமுற இணைந்து நின்றதுடன், தெருக்கூத்தின் சில ஒப்பனைக் குறிகளுடன் மேற்கொண்ட ஒப்பனை ஈறாக சிறப்பான முத்திரையை பதித்து நின்றது.
அவ்வாறே காட்சி விதானிப்பில் பயன்பட்ட குறியீட்டுப் படிமம், நாடகத்தின் பாடுபொருளை வெளிப்படுத்தி நின்றது. யுத்தத்தின் குறியீடான முரசினை பெரிய அளவில் வைத்ததுடன் பக்கங்களில் இராணுவ வேலியும் இருபுறமும் XX வடிவத்தில் ஈட்டிகளின் அமைவும் யுத்தம் தவறு என்று சுட்டுமாப்போல் காட்சிதந்தது.
இவ்வாறு பல பழமையான விடயங்களையும், புதுமையான விடயங்களையும் நவீன சிந்தனையுடன் முன்வைத்த விதம் நாடகத்தின் வெற்றிக்கான முக்கிய காரணம் ஆகும்.
காவியப் பொருளை சமகாலத்துக்குரிய பாடுபொருளாக்கியமை
வடிவ நிலையில் மட்டுமன்றி உள்ளடக்க நிலையிலும் இந்நாடகம் வரவேற்கப்படுவதற்குக் காரணம் சமகாலத்துக்குரிய செய்தியை நாடகம் பேசியது ஆகும். அன்றைய பாரதத்தின் இழிநிலையை விளக்க பாரதி, மகாபாரத்தின் பாஞ்சாலிசபதத்தை முன்வைத்ததுபோல இராமாயாணத்தின் கும்பகள்ணன் வதைப்படலத்தை ஆசிரியர் கையாளுகின்றார். 'அறம் பிறழ்ந்த யுத்தம் வென்றதில்லை என்ற உண்மையை இந்த நாடகத்துக்கூடாக சொல்லியது மட்டுமன்றி. அறமற்ற யுத்தம் தொடர்ந்தால் கும்பகர்ணன் போன்ற பெறுமதி வாய்ந்த மனித உயிர்கள் அழிக்கப்படும் என்ற பேருண்மையை புதிய வகையில் ஆசிரியர் முன்வைக்கின்றார். 'இலங்கை வேந்தன் கொலையை ஈன்றெடுக்கும் கொற்றமாக ஆசிரியர் அவனை சித்தரித்து கதையின் நகள்வனைத்துக்குள்ளும், உரையாடல்களுக்குள்ளும் எமது சமகால அரசியல் சூழல் நிழலிடச் செய்கிறார். 'அறம் பிறழ்ந்து போர் நயந்து ஆளுகை செய் கொற்றம் திறன்கள் நிறை இன்னுயிர்கள் கொன்றொழிக்கும் கூற்றம்' என்ற ஆசிரியரின் பாடு பொருள் பற்றிய குறள் அவரின் நோக்கத்தை தெளிவாக எடுத்தியம்புகின்றது.
இராவணனை ஆசிரியர் நோக்கிடும் விதம் வேறுபாடானது. கம்பனை ஒத்த வகையில் நோக்கியது மட்டுமல்ல, அதன் இன்னொரு படி முன்சென்று "அதர்ம யுத்தம் செய்யும் சுயநலவாதியாக சித்தரிக்கின்றார். மண்டோதரி
- LQGgLbLuft 2005 酶

Page 53
செய்யும் உரையாடலில் அவரின் ஆதங்கம் அதிகம் வெளிப்படுகின்றது. “மன்னா அவர்கள் செய்வது தர்ம யுத்தம், நீங்கள் செய்வது அதர்ம யுத்தம். மாற்றான் மனைவியை கவர்ந்து வைத்திருப்பது நீங்கள். அதனை மீட்க வருவது அவர்கள். அவர்களுக்குரியவளைக் கொடுத்து விட்டால் அவர்கள் ஏன் யுத்தம் செய்யப் போகிறார்கள்.’ என்ற வரிகள் ஆயிரம் அர்த்தம் பொருந்தியவை. ஈழத் தமிழரின் ஆதங்கத்தின் வெளிப்பாடுகள்.
போதும் மன்னா போதுமே மன்னா போர் வேண்டாம் மன்னT போதும் மன்னா போதுமே மன்ன7. யுத்தம் தந்த மிச்சம் உடன் பிறப்புகளின் இழப்பு மட்டும்தான் என்பதனை கும்பகர்ணனின் அவல இறப்புக்கூடாக ஆசிரியர் சித்தரிக்கின்றார். எனவே சமாதானத்தை தேடுங்காலத்தில் இக்கூத்தில் அதற்கான வழியை நாடக ஆசிரியன் சிறப்பாக எடுத்துரைக்கின்றார்.
@
பாத்திரப் பொருத்தமும் நடிப்பும்
நாடக வெற்றியின் உயிர் நாடி எனக் கொள்ளத்தக்கது இந் நாடகப் பாத்திரங்களும், அவற்றைத் தாங்கிய நடிகர்களும் ஆகும். இலக்கிய நிலையில் படித்த பாத்திரங்களை யதார்த்த பூர்வமாக கண்முன் கொண்டு வருவதில் ஆசிரியர் வெற்றிபெற்றுள்ளார். திருமறைக் கலாமன்றம் என்ற பெரும் நிறுவனத்தின் வளம் அவருக்குக் கை கொடுத்திருக்கிறது. இராவணன் என்றால் இவ்வாறு தான் இருப்பான் என்று சொல்லத்தக்க வகையிலும், கும்பகர்ணன் இவன்தான் என்று உரைக்கும் வகையிலும் இராவணன், கும்பகர்ணன், இராமன், விபிஷணன், சுக்கிரீவன், மண்டோதரி என ஒவ்வொரு பாத்திரங்களும் பெளதீக நிலையில் செதுக்கிப்படைத்தது போல பொருத்தப்பாட்டோடு தெரிவு செய்யப்பட்டது மட்டுமன்றி பயிற்றுவிக்கப்பட்டுமிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
நடிகர்கள் அனைவரும் நன்கு பாடக்கூடியவர்களாகவும், நடிக்கக்கூடியவர்களாகவும், ஆடக்கூடியவர்களாகவும் இருந்தமையே நாடகத்தை பார்ப்போரின் மனங்களைக் கவர்ந்து வைத்திருந்தமைக்கான அடிப்படைக் காரணமாகும். திருமறைக் கலாமன்றத்தின் கலைஞர்கள் வளம், பாரம்பரியமான உருவாக்க முயற்சிகள் போன்ற பலவற்றுடும் நகர்ந்து வந்த மன்றத்தின் நடிப்பு சார்ந்த வளர்ச்சியை, இந்நாடகத்தின் பாத்திரங்கள் ஒவ்வொன்றினதும் நடிப்பாக்கச் சிறப்பில் இருந்து அறிந்து கொள்ளமுடியும்.
கூத்தின் எதிர்காலத் தேவையை நோக்கி.
மற்றொரு முக்கிய அம்சம் யாதெனில், கூத்தினைப் பார்த்து பார்வையாளர்கள் எல்லோரும் கூத்துடன் ஒன்றித்திருந்தமையை அவதானிக்க முடிந்தது. குறிப்பாக இளைஞர்கள், சிறுவர்கள் முதலாக அவ்வாறு ஒன்றித்திருந்தனர். இது 酶 ஜூலை - டிசெம்
 

இந்தக் கூத்தின் மற்றொரு வெற்றிகரமான செயற்பாடு ஆகும். ாட்டுக்கூத்தினை விரும்பிப் பார்க்கின்ற இளைஞர் சமுகம் இன்று பெருமளவில் அருகிவிட்டது. கிராமங்களிலேயே இன்று அவ்வாறான சூழலே காணப்படுகின்றது. எனவே கூத்தை இளைய சந்ததியினரும் சுவைக்கத்தக்க வகையில் )ாற்றியமைக்க வேண்டியது காலத்தின் கட்டாயத் தவையாகும். 'கொல் ஈனுங் கொற்றம் அந்த இலக்கை ைெறவேற்றி இருக்கின்றது. ஒவ்வொரு விடயங்களும் செம்மையாக்கப்பட்டு சிறந்த நெறியாக்க வன்மையுடன் வளிப்பட்ட நாடகம் பார்வையாளரை இரண்டு மணிநேரமும் 5ட்டிவைத்திருந்தது. நாடகம் முடிந்ததும் நிறைவோடு உரையாடிச் சென்றோரையே அவதானிக்க முடிந்தது. அந்த பகையில் இந்நாடகம் கூத்தின் எதிர்காலத்திற்கு நல்லதொரு குனமாக முன்வைக்கப்பட்டிருக்கின்றது.
எனவே ஒட்டுமொத்தமாக நோக்குகையில் ஒரு இளைய தலைமுறை நெறியாளனால் எழுதி நறிப்படுத்தப்பட்ட 'கூத்துருவ நாடகம்' என்ற புதிய வடிவம் மது நாடக வரலாற்றில் நல்லதொரு வரவு. எமது மரபு வழிக் லைகளின் வேர் கெடாது, பார்ப்போரின் இரசனை நறைவுபடாது, பிரதேசவாதங்களை உடைத்து, பரும்பாலானவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய பொதுமையாய் அளிக்கை வன்மையுடன் முன்வைக்கப்பட்ட இந்நாடகம் ாராட்டப்பட வேண்டியது மட்டுமன்றி, தொடர்ந்து தொடரப்பட வண்டிய ஒரு முயற்சியுமாகும்.
நிறைவாக, சில குறைபாடுகளையும் சுட்டிக்காட்டுதல் திர்கால வளர்ச்சிக்குத் தூண்டுதலாக அமையக்கூடியது. Nசையானது நாடகத்துடன் வன்மையாக
ணைக்கப்பட்டிருந்தாலும் சிலவேளைகளில் அதிக Nரைச்சலைத் தந்தது. அது மட்டுமன்றி நாடகத்தின் வளர்ச்சி, க்கலோடு இசையும் நகர்ந்து இசையும் தனக்கான ஒரு டச்சத்தை கொண்டிருத்தல் அவசிமானது. ஆனால் இங்கு அந்த உச்சம் இரண்டு மூன்று இடங்களில் வருவதால் னித்துவம் இழக்கப்பட்டுக் காணப்பட்டது. அத்தோடு போர்க் ாட்சியில் வந்த இரு போர் வீரர்கள், சுக்கிரிவன் போன்றோரின் 5ரல் ஒட்டு மொத்த நடிகர்களில் இருந்து சற்று பலவீனமுற்று இருந்தது. உரைஞர்களின் இருத்தலும் அவர்களின் வேட உடையும் சரச்சந்திராவின் "மனமே" நாடகத்தை னைவுபடுத்தியது. அத்தோடு பாத்திரங்களுக்கான ஆடல்கள், ர்மானம், தீர்த்தல்கள் போன்றவை செம்மைப்பாட்டோடு
இருந்தது போல கூத்துக்குரிய சில முத்திரை பாவங்களையும் இனங்கண்டு இணைந்திருப்பின் நாடகம் இன்னுமொரு படி சாஸ்திரியத்தில் செழுமையடைந்திருக்கும். முடிவாக, நல்லதொரு நாடகத்தை தந்த திருமறைக் கலாமன்றத்திற்கும், இதன் நெறியாளருக்கும் கலை உலகு கடமைப்பட்டுள்ளது, தொடர்ந்தும் இம்முயற்சி ஊக்கம் பெற ஒவ்வொருவரும் ஒத்துழைப்பு நல்குதல் வேண்டும்.
丐不飞
}L前2005

Page 54
கட்டுரையாசிரியரால் எழுதப்பட்ட 'பாரம்பரியம் ஒரு மீள்பார்வை’ எ6 தை - பங்குனி 1999 - 28 ஆவது இதழிலும், பின்னர் 31 ஆவது 34
அறியத் தருகின்றோம். அந்த வகையில், இக்கட்டுரை
ஈழத்தமிழர் பாரம்பரியம் - அறிமுகம்
பிரித்தானியர் ஆட்சிக்காலம் வரை
"பாரம்பரியம்' என்ற சொல் பொதுவாக உணர்ச்சிகளைத் தூண்டும் ஒரு விடயமாகவே இருந்து வந்திருக்கின்றது. இலங்கையின் விடயத்தில் இது மேலும் அதிகளவில் பொருந்திச் செல்கின்றது, எமது பொருளாதாரம். சமூகம், அரசியல் என்பவற்றில் முக்கியமான தாக்கங்களை எடுத்துவரும் ஒரம்சமாகவும் அது இருக்கின்றது. இன்றைய உலகில் இனம், மதம் என்பவற்றுடன் சேர்ந்து பாரம்பரியமும் திடீரென வெடித்துக்கிளம்பக் கூடிய பிரச்சினையொன்றாக உருவெடுத்து வந்துள்ளது" 1990ஆம் ஆண்டு மே மாத பொருளியல் நோக்கு - "பொருளாதாரமும் கலாசாரமும் தேசிய சிந்தனை விவாதம்" என்ற இதழின் கண்ணோட்டம் இவ்வாறு ஆரம்பிக்கின்றது. 1983ஆம் ஆண்டு இனக்கலவரத்தைத் தொடர்ந்து பாரம்பரியம் தொடர்பான அம்சங்களில் பெருமளவு ஆர்வம் காட்டத்தொடங்கிய புத்திஜீவி சமூகம் 1984ஆம் ஆண்டு "ஜாதிக சிந்தனய" (தேசிய சிந்தனை) என்ற பொருளில் "திவயின" பத்திரிகை ஒரு விவாதத்தை முன்னெடுத்தது. விவாதத்தில் பங்கெடுத்தவர்கள் "பலாத்காரமாக திணிக்கப்பட்ட பாரம்பரியம்", "பொதுப் பாரம்பரியம்", "உயர் பாரம்பரியம்", "நடுத்தர பாரம்பரியம்", "பிற்போக்குச் சக்திகள் பாரம்பரியத்தை தமது சொந்த நோக்கங்களுக்காக பயன்படுத்தியமை" என்பன போன்ற வடிவங்களை இனங்காட்டி பாரம்பரியம் மீள்பார்வையை முன்மொழிந்தனர். தமிழோசையில் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் பிறிதொரு தளத்தில் (B.B.C) வானொலியில் 1984ஆம் ஆண்டு நிகழ்த்திய உரைத்தொடரில் தமிழர் பண்பாட்டின் வரலாற்று ரீதியான உருவாக்கம், அதன் பிரதான கூறுகள் மற்றும் அது எதிர் கொண்ட புதிய அறைகூவல்கள் என்பவற்றை ஆராய்ந்து, தமிழ் பண்பாட்டு பிரக்ஞையின், உணர்வின் வரலாறு யாது? இன்று நாம் தமிழர் பண்பாடு என்று சொல்லும் இதே அம்சங்களை முன்னரும் தமிழர் கொண்டிருந்தார்களா? என்ற போக்கில் மீள்பார்வையை தொடர்ந்தார்.
ஈழத்தமிழர் பாரம்பரியம் தமிழர் பாரம்பரியமாகக் கொள்ளத்தக்கதாயினும் தென் இந்தியத் தமிழரின் பாரம்பரியத்தை ஈழத்தமிழரும் கொண்டிருக்கின்றனரா? ஈழத்தமிழர் பாரம்பரியம் என்று நோக்கும் போது யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, வன்னி, முல்லைத்தீவு, மன்னார், மலைநாடு தமிழ் முஸ்லீம் பாரம்பரியம் தமிழ் கிறிஸ்தவ பாரம்பரியம் என்று செருக்குடன் கையாளபப்படுவதும் கண்கூடு. உண்மையில் தமிழ் மொழி பேச்சு வழக்கு, வாழ்வியல் நடைமுறைகள், வழக்குகளி, சம்பிரதாயங்கள் பாட்டு, கூத்து, நடனப்பாங்கு எடுத்தாளப்படுபொருள்,
52 ஜசலை - டி
 

ன்ற இக் கட்டுரையின் ஆரம்பப் பகுதிகள் ஏற்கனவே "கலைமுகம் ஆவது இதழ்களிலும் வெளிவந்துள்ளன என்பதை வாசகர்களுக்கு
இத்தொடரின் நான்காவது பகுதியாக அமைகின்றது.
இசைக்கருவிகளி, ஒப்பனைகள் என்பன பிரதேச சூழல் அழுத்தங்களுக்கு உட்படுவது இயல்பானதே. எனவே ஈழத்தமிழர்பாரம்பரியம் என்ற ஒரு பொதுப்பாரம்பரிய வடிவம் ஒரு கருத்தியல் வடிவமாகவே கொள்ளத்தக்கது. இக்கருத்து ஈழத்தமிழர் ஒரு பாரம்பரியத்துக்கு உரியவர்கள் அல்ல என்று கருதுவதற்கு ஒப்பாகாது. மாறாக ஈழத்தமிழர் கொண்டிருக்கும் பாரம்பரியம் மொழி இலக்கண அடிப்படையில் ஒற்றுமைப்பட்டு, பேச்சு வழக்கிலும் வாழ்வியல் அடிப்படையிலும் வேறுபாடுகளைக் கொண்டிருக்கின்றது என்பதாகும்.
ஐரோப்பியர் வருகைக்கு முற்Uட்டகாலம்
ஈழத்தமிழர் பாரம்பரியம் விஜயனின் வருகையைத் தொடர்ந்து வருகைதந்த பாண்டிய இளவரசி தோழிகளுடன் தொடர்புபடுத்தியும், விஜயனின் வருகைக்கு முன் பூர்வீகக் குடிகளான நாகர் உடன் தொடர்புபடுத்தியும் நோக்குவது ஆய்வாளர்களின் துணிவு. அதாவது கி.மு மூன்றாம் நூற்றாண்டு தொட்டும் அதற்கும் முன்பிருந்தும் ஈழத்தமிழர் இருப்புப்பற்றிக் கூறுகின்றனர். இலங்கையின் புத்தளம, கற்பிட்டி, மன்னார், யாழ்ப்பாணம், வன்னி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு என்ற கரையோரச் சமவெளிப் பகுதிகள் ஈழத்தமிழரின் வாழ்விடங்களாகும். ஈழத்தமிழரின் வரலாறு என்று ஆரம்பகாலம் முதல் வரிசைப்படுத்தக் கூடிய சாசனங்கள் நூல்கள் இல்லை. ஆனால் சங்ககாலம் முதலான தமிழ் இலக்கியங்களிலும், மகாவம்சம், சூளவம்சம் நூல்களிலும், குலசேகர மாறவர்மன் பாண்டியர் காலத்து சாசனங்களிலும் யாழ்ப்பாண வைபவமாலை, செகராசசேகரமாலை, கைலாயமாலை போன்ற நூல்களில் இருந்தும் கிராமிய நாட்டார் பாடல்களில் இருந்தும் தேசவழமைச் சட்டத்திலிருந்தும் தமிழ் மன்னர்கள், மக்கள் வாழ்வுமுறை பற்றிய விபரங்களை அறிய முடிகின்றது. இவர்கள் காலத்திற்குக் காலம் தென்இந்திய படையெடுப்புக்களுக்கும் தென்இலங்கை அரசர்களின் ஆட்சிக்கும் உட்பட்டிருந்தாலும் யாழ்ப்பாண இராச்சியம் வன்னி இராச்சியம் என தனி ஆட்சிப் பிரிவுகளைக் கொண்டிருந்தனர். இவர்கள் ஈழத்தமிழ்கள் என விழிக்கப்பட்டாலும் பிரதேச, கிராம, குடும்ப வழமைகளுக்கு முதன்மை கொடுத்தனர். இதனாலேயே பிற்பட்ட கால ஒல்லாந்தரின் குடியியல் சட்டவாக்க முன்னெடுப்புக்களில் யாழ்ப்பாண தேசவழமைகள், புத்தளம, கற்பிட்டி வழமைகள், திருகோணமலைத் தமிழர் வழமைகள், முக்குவர் சட்டம், பரதவர் சாதி வழமை என்பன போன்ற பிரதேச வழமைகள் கருத்திலெடுக்க வேண்டியதாயிற்று.
பாரம்பரியம் நிலைநிறுத்தப்படும் அடிப்படைச் சமூக
AgLibur 2005 酶侧胞面御

Page 55
நிறுவன அலகு குடும்பங்களாகும். பொதுவாக ஈழத்தமிழர் குடும்பங்கள் திராவிட நாகரீகத்திற்குட்பட்டு சங்ககாலம் தொடக்கம் தமிழ் இலக்கியங்கள் காட்டிய அகநெறிகளை, வாழ்வியல் விழுமியங்களை ஏற்றுக்கொண்டு கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் வழக்குகள் சம்பிரதாயங்கள் என்று நோக்கும்போது தென் இந்திய மகளுக்கு தாய்வழி மாமனைத் திருமணம் செய்தல், சிறுவர் திருமணம், உடன்கட்டையேறுதல், பெண்சிசுக் கொலை, மலடிகள் , வரிதவைகள் ஒழுங்கு என்பவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை. தவிர குடும்ப நிகழ்வுகளான திருமணம், கருத்தரித்தல், பூப்படைதல், மரண சம்பிரதாயங்கள், புதுமனைப் புகுவிழா என்பவற்றில் கையாளப்படும் வழக்குகள் முறைகள் பிரதேச வேறுபாடுகளுக்கு ஏற்ப வேறுபட்டும் இருந்தது. குடும்பசொத்துக்கள் பெண்பிள்ளை வழியில் சீதனமாக கொடுக்கப்பட்டு பேணப்பட்டது. சிறப்பாக வீடுகள், தோட்டங்களின் எல்லை "வேலி" போடப்பட்டு நிலைநிறுத்தப்பட்டன. இந்த "வேலி" பாதுகாப்பு என்பதற்கு அப்பால் பிரத்தியேகங்கள் மற்றவர்களுக்குப் பகிரப்படாது பேணப்படுவதன் "மனப்பாங்கின் அடையாளமாகவும்" கொள்ளத்தக்கது.
கிராமங்கள் குலத்தொழில் வழிக் குழுமங்களாக, அளவில் சிறியதாக காணப்பட்டது. விவசாயத்தைத் தொழிலாக கொண்டவர்கள் பெரும்பான்மையினராகக் காணப்பட்டபோதும் தென் இந்திய "பண்ணையார்" முறைமைகள் காணப்படவில்லை. ஆனால் குடிமை முறைமை காணப்படுகின்றது. கிராமத்தில் குடும்பத் தலைவர்களுள் ஒருவன் கிராமத்தின் பதியாக அழைக்கப்பட்டான். கிராமம் குளங்களை உள்ளடக்கிய நிலையில் தலைவன் "குளக்கோட்டன்" என்று அழைக்கப்பட்டான். கிராமம் பொது விடயங்களுக்காக கூடும் இடம் "அம்பலம்" அல்லது "சத்திரம்" எனப்பட்டது. கிராமம் கோவில்களையும் பொதுக் கிணறுகளையும் சத்திரங்களையும் உள்ளடக்கியிருந்து. மக்கள் அனைவரும் சைவ சமயத்தவர்களாகவே இருந்தனா. தென்இந்திய ஜயனார் வழிபாடுகளோ, அல்லது ஆஞ்சனேயர் வழிபாடுகளோ காணப்படவில்லை. குறிப்பாக சிவ, முருக வழிபாட்டாளர்களாகவே காணப்பட்டனர். ஆனால் பிராமணர்கள் கோவில்களில் ஆதிக்கம் செலுத்தவில்லை. குளம் வெட்டுதல், அணைகட்டுதல், கோவில்கட்டுதல், யுத்தம் என்பன போன்ற காரணங்களுக்காக அரசனால் கிராமங்கள் தொடர்பு கொள்ளப்பட்டனவே ஒழிய, கிராமங்கள் பொது வழக்கிற்கு உட்படுத்தப்படவில்லை. கிராமங்களுக்கிடையில் பெரிய அளவில் தொடர்பாடல்கள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் கிராமங்கள் தமது பிரத்தியேகங்களை தொடரக்கூடியதாக இருந்தது. இதனாலேயே கிராமத் தலைவர்கள் 'அடப்பனார் ‘அதிகாரி', 'உடையார்', தலையாரி, முல்லைக்காரன் 'வன்னியனார்', 'பனிக்கள்', 'போடியார்', முதலியார்', 'பட்டங்கட்டி', 'பண்டாரப்பிள்ளை' என்ற பிரத்தியேகப் பெயர்களில் அழைக்கப்பட்டு பிரதேச முன்னிலைப்படுத்தலை போற்றினர்.
ஈழத்தமிழர் அரசு என்ற நோக்கில் போர்த்துக்கேயரின் வருகையின்போது யாழ்ப்பாண இராச்சியம் என விழிக்கப்பட்ட பிரதேசம், வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி, பச்சிலைப்பள்ளி அடங்கிய யாழ் குடாநாட்டையும், பதின்மூன்று தீவுகளையும், அதற்கு அப்பால் மன்னார் பக்கம் முதலாக திருகோணமலை வரை பரந்துள்ளதான வன்னிப்பிரதேசம் என்பனவற்றில் தமிழர் அரசுகள் நிறுவப்பட்டிருந்தன. நல்லூரை தலைநகராகக் கொண்டு சங்கிலி என்பவன் ஆட்சி செலுத்தியிருந்தான முற்பட்ட
面御卵腹面的 ஜசலை - டிெ

காலங்களில் "எல்லாளன்" போன்ற தமிழ் அரசர்கள் இலங்கை முழுவதையும் ஆட்சி புரிந்துள்ளனர். தொல்பொருளாராட்சியின் போது வண்ணார்பண்னை, பூநகரி, முல்லைத்தீவு, தம்பலகாமம் என்பன போன்ற நகரங்களுக்கான சில ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், கதிர்காமம் போன்ற இடங்களில் ஸ்தாபிக்கப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் ஈழத்தமிழரின் இருப்புக்களுக்கான அடையாளங்களாகும். ஆனாலும் இக்காலப் பகுதியில் பாரம்பரியம் சார்ந்த அழுத்தம் இருந்ததாகக் கருதமுடியாது. அதாவது மக்கள் குறிப்பாக, கிராமங்கள் பாரம்பரியம் சார்ந்த பொதுவான சிந்தனையையோ அல்லது காட்பாற்ற வேண்டும் என்ற முனைப்பையோ கொண்டிருக்கவில்லை. உண்மையில் அரசியல் மாற்றங்கள் அரண்மனை சார்ந்ததாக கோவில்கட்டடங்கள் சார்ந்ததாக இருந்தனவே தவிர மக்களுக்குள் அல்லது கிராமங்களுக்குள் ஊடுருவவில்லை. அதாவது மக்கள் ஏற்றுக்கொண்ட பழக்க வழக்கங்களை அல்லது விழுமியங்களை கைவிடாது காலத்திற்கு ஏற்புடையதாக்கி வாழ்ந்தார்கள். இக்காலப் பகுதியில் ஈழத்தமிழரின் பாரம்பரியம் (வாழ்க்கையோட்டம்) தென்இந்திய படையெடுப்புக்களுக்கும், தென் இலங்கை சிங்கள ஆட்சிக்கு உட்படுவதும, திருமண உறவில் கலப்பதும் வாழ்க்கையோட்டத்தில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தியது என்பதை பிரித்து அறியக்கூடியதாக இருக்கவில்லை. இங்கு வியாபாரத்தின் பொருட்டு கிராமங்களுக்குள் ஊடுருவிய அராபியர் அல்லது தென்இந்திய முஸ்லீம்கள், ஈழத்தமிழ் முஸ்லீம்கள் என்ற பாரம்பரியத்தை தோற்றுவிக்கும் அளவுக்கு பாரம்பரியம் பற்றிய கருத்துக்கள் ஈழத்தமிழரிடையே தாராளத்தன்மை கொண்டதாகவே இருந்திருக்கின்றது. எனவே ஐரோப்பியருக்கு முற்பட்டகால ஈழத்தமிழர் பாரம்பரியம் பெளத்த சிங்களப் பாரம்பரியத்துடன் முரண்படவோ ஒப்புநோக்கப்படவோ இல்லை. ஈழத்தமிழருக்கான தென்இந்திய தொடர்புகள் பெளதீக ரீதியிலும் பாரம்பரிய ரீதியிலும் இலகுவானதாக இருந்ததாலோ அல்லது இலங்கையின் பெளதீக காலநிலைத் தன்மைகள் தெற்கு, தென்மேற்கு பகுதிகளில் வளம்மிக்கதாக இருந்ததாலோ சிங்கள பெளத்த பாரம்பரியம் தெற்கு, தென்மேற்கு, மத்திய பகுதிகளில் நிலைபெற ஈழத்தமிழர் வடக்கு, கிழக்குக் கரையோரச் சமவெளிகளில் தமது பாரம்பரியங்களை நிலைநிறுத்தியிருந்தனர். குறிப்பாக சங்கம் கொண்டு பெளத்த சமயம் இலங்கையில் நிலைபெற்றிருந்த போதிலும் ஈழத்தமிழரின் பாரம்பரியங்களுக்குள் ஊடுருவ முற்படவில்லை. அல்லது முடியவில்லை. அல்லது எட்டவில்லை. எனவே ஐரோப்பியரின் வருகைமட்டும் ஈழத்தமிழர் பாரம்பரியம் மொழிவழித் தொடர்நிலை கொண்டதாக பிரதேச சூழலுக்கு உட்பட்டு உயிர்ப்புப்பெற்றுக் கொண்டிருந்தது என்று மட்டும் துணியலாம்.
போர்த்துக்கேய ஒல்லாந்தர் காலம்
போர்த்துக்கேயர், ஒல்லாந்தள் ஒன்றன் பின் ஒன்றாக மூன்று நூற்றாண்டுகளாக (1505 - 1815) இலங்கையில் செல்வாக்குச் செலுத்தினர். இவர்கள் ஆட்சிபுரிந்த காலங்கள், இடப்பரப்புக்கள் ஆட்சியமைப்பு முறைகள் மாறுபட்டிருந்தாலும் பாரம்பரியம் தொடர்பான சமூக அசைப்புக்களில் ஒத்தபாங்கினைக் கொண்டிருந்ததினால் போர்த்துக்கேய ஒல்லாந்த காலம் எனப் பார்ப்பது தவறாகாது. ஏனெனில் இன்றைய எமது ஈழத்தமிழர் பாரம்பரிய வடிவங்களில் போர்த்துக்கேய ஒல்லாந்த வடிவங்களாக போர்த்துக்கேயரின் "தமிழ் கத்தோலிக்கள்" ஒல்லாந்தரின் "தமிழ்
subL 2005 53

Page 56
புரட்டஸ்தாந்து கிறிஸ்தவர்" என்ற பாரம்பரிய வடிவங்கள், ஈழத்தமிழர் பாரம்பரிய வடிவங்களாகவே பார்க்கப்படுகின்றன.
சமுகப் பாரம்பரியங்கள் இறையியல் பின்னணிகளைக் கொண்டன. உணவு, உடை, வாழ்க்கை முறைமைகள் விழுமியங்கள், நியமங்கள் என்ற வாழ்க்கைக் கோலங்களும், கட்டடக்கலை இயல், இசை, நடன, நாடக பாங்குகளும் சமூகக் கட்டமைப்பும் இறையியல் பின்னணிகளைக் கொண்டவையாகவே இருக்கின்றன. எனவே போர்த்துக்கேயர் ஒல்லாந்தரின் வருகை புதிய இறையியல் கருத்துக்களின் வருகையாக அமைந்து, புதுப் பாரம்பரியத்தை அறிமுகப் படுத்தியதுடன் சமூகக்கட்டமைப்பில் அசைப்புக்களையும் உருவாக்கியது எனலாம்.
1505ஆம் ஆண்டு டொன் லோறன்சோ டீ அல்மெய்டா என்ற போர்த்துக்கேய மாலுமி காலித் துறைமுகத்தை புயல் காரணமாக வந்தடைந்த காலம் முதல் போர்த்துக்கேய காலம் ஆரம்பமாயிற்று. போர்த்துக்கேயரின் எழுச்சி ஐரோப்பிய மறுமலர்ச்சியின் விளைவு என்பது வரலாற்று ஆசிரியர்களின் துணிவு. 1453ஆம் ஆண்டு கிழக்கு ஐரோப்பிய தலைநகரான கொன்ஸ்தாந்திநோபிள் துருக்கியரின் கையில் வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து ஐரோப்பியர் தமது சொத்துக்களுடன் மேற்கு நோக்கி புலம்பெயர வேண்டியதாயிற்று. இப்புலப்பெயர்வை ஐரோப்பிய மறுமலர்சிக்கான புலப்பெயர்வு என்பர். இப்புலப்பெயர்வு சமூகக் கட்டமைப்பை அசைத்தது. குறிப்பாக, இறையியல் பற்றிய கருத்துக்களை அசைத்தது. மறுவுலக நித்திய வாழ்வு கருத்து பின்தள்ளப்பட்டு, இவ்வுலக வாழ்வு முதன்மை பெற்றது. சமுகக்கட்டமைப்பில் அரசர், பிரபுக்கள், குருக்கள், குடியானவர்கள், அடிமைகள் எனக்கொள்ளப்பட்ட வடிவம் கேள்விக்குரிய தாக்கப்பட்டது. ஐரோப்பியர் இருண்ட காலத்திலிருந்து புலம்பெயர்ந்தனர் என வரலாற்று ஆசிரியர்கள் கூறுவா. கத்தோலிக்க திருச்சபையும் சவால்களுக்கு முகம்கொடுக்கும் புதிய யுக்திகளைக் கையாளத் தொடங்கியிருந்தது. எனவே போர்த்துக்கேயரின் வருகை என்பது இத்தகைய கருத்துக்களின் வருகைகயாகவும் கொள்ளத்தக்கதே. 1520இல் ஜேர்மனியரான மாட்டீன் லூதர் என்ற அகஸ்தீனார் கத்தோலிக்க சன்னியாசி பாப்பாண்டவருக்கு தொடுத்த கேள்விகளைத் தொடர்ந்து (Protectant) புரட்டஸ்தாந்து என்ற கிறிஸ்தவ, பிரிவினர் செயற்படத் தொடங்கினர். கத்தோலிக்க திருச்சபையுடன் சேர்ந்து கொண்ட போர்த்துக்கேயர் கத்தோலிக்க சமயத்தின் காவலராக செயற்பட்டனர். போர்த்துக்கேயர் இலங்கையில் காலடி வைத்ததும் "கிறிஸ்தவர்களையும் கறுவாவையுமே தேடிவந்தோம்" என்று குறிப்பிட்டதிலிருந்து அவர்கள் நோக்கம் புலப்படலாம். இதனால் போர்த்துக்கேயர் தாம் கைப்பற்றிய இலங்கையின் கரையோரம் எல்லாம் கத்தோலிக்க குருபிடத்தை நிறுவி பராமரிக்க முற்பட்டனர். 1658இல் இலங்கையைக் கைப்பற்றிய ஒல்லாந்தர் புரட்டஸ்தாந்து மதத்தவர்களாக இருந்ததால் கத்தோலிக்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளைக் கொண்டிருந்தாலும் சுதேசிய மக்களை நீதி, நிர்வாகம், சமத்துவம் என்ற வழிமுறைகளில் அனுகினர். எனவே போர்த்துக்கேயரின் கிறிஸ்தவ இறையியல் பற்றும் ஒல்லாந்தரின் நீதி, நிர்வாக, சமத்துவ நடப்பும் குறிப்பாக கரையோர சமுகங்களின் அத்திபாரங்களில் அசைப்புக்களை ஏற்படுத்திற்று. பல கரையோரக் கிராமங்கள் கிறிஸ்தவ மயமாக்கப்பட்டது. ஈழத்தமிழர் என்ற தேசியத்தினுள் கிறிஸ்தவ ஈழத்தமிழர் என்ற வகுப்பு தோற்றம் பெற்றது. இவர்கள் ஐரோப்பிய மயமாக்கலுக்குள்
54 ஜூலை - டி

உள்வாங்கப்படாமல் தமிழ்மயப்படுத்தப்பட்ட கிறிஸ்தவ பாரம்பரியத்தை அறிமுகப்படுத்தி ஈழத்தமிழர் பாரம்பரியங்களுக்கு பங்களித்துள்ளனர். அதாவது ஈழத்தமிழர் வாழ்வாதாரங்கள் அலசப்பட்டு மீள் உறுதிப்படுதலுக்கு உட்பட்டது என்றால் பிழையாகாது. அதாவது ஈழத்தமிழர் பாரம்பரிய விழுமியங்கள் புடம்போடப்பட்டன எனலாம்.
முதலாவதாக ஈழத்தமிழர் வாழ்வியல் விழுமியங்களில் காத்திரமான தாக்கத்தை கிறிஸ்தவ இறையியல் அறிமுகப்படுத்தியது, கிறிஸ்தவ இறையியல் "உன்னைப்போல் உன் அயலானை நேசி" என்ற மனித நேயத்தை முன்னிலைப்படுத்தி முன்னெடுக்கப்பட்ட நிலையில் ஈழத்தமிழரிடையே வேரூன்றியிருந்த சாதி (வர்க்க) அமைப்புக்கள் அசைக்கப்பட்டன. தமிழரிடையே காணப்பட்ட சாதி முறையானது சமூக, பொருளாதார, அரசியல், சமூகவியல் மூலங்களைக்கொண்டு வகுப்பு வேறுபாட்டை வலியுறுத்தியது. சாதி என்பதை வர்ணம் என்றும் கூறிவதுண்டு. இந்து சமயமானது இந்து மக்களை நான்கு முக்கியவர்ணமாக பிரித்து பார்த்தது. இப்பிறப்பின் தன்மை முற்பிறப்பில் செய்த கருமத்தின் விளைவே என்றும், ஒருவன் இப்பிறப்பில் தன்னுடைய சாதி அந்தஸ்தை உயர்த்திக்கொள்ள முடியாது என்றும் நம்பப்பட்டது. இதனால் வாழ்வுரிமை, தரிசனவுரிமை, கருத்துரிமை, வழிபாட்டுரிமை என்பன மறுக்கப்பட்ட சமூக வகுப்பினரும் காணப்பட்டனர். சமூக அரங்கு இவற்றை பாரம்பரிய விழுமியங்களாக ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், வாழ்வியலில் கணிசமான பின்பற்றல்கள் காணப்பட்டு சமூக முரண்பாட்டைக் காட்டிநின்றன. இந்த நிலையில் போர்த்துக்கேய ஒல்லாந்தர் அறிமுகப்படுத்திய கிறிஸ்தவ இறையியல் செல்வாக்கு, கிறிஸ்தவ ஈழத்தமிழர் பாரம்பரியங்களின் ஊடாக, ஈழத்தமிழர் பாரம்பரியத்தில் செல்வாக்கு செலுத்திற்று.
போர்த்துக்கேயன் ஒல்லாந்தரின் செல்வாக்கால் தாக்கப்பட்ட ஈழத்தமிழரின் மற்றுமொரு வடிவம் மக்களின் உழைப்பாகும். பிரதேச புவியியல் காலநிலைச் சூழலுக்கும் அரசியல் ஆட்சி முறைகளுக்கும் ஏற்புடையதாக கிராமிய அடிப்படைகளில் நிறுவப்பட்டிருந்த உழைப்பு இவர்கள் வருகையுடன் அசைப்புக்குள்ளாகின. போர்த்துக்கேயரும், ஒல்லாந்தரும் முறையே கோட்டை அரசனுடனும் கண்டியரசனுடனும் செய்து கொண்ட உடன்பாட்டிற்கு அமைய கறுவா, ஏலம் பொருட்களை திறையாக பெற்றுக்கொண்டு பதிலாக கரையோரங்களைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டனர். இவர்கள் பாதுகாப்பிற்காக கட்டிய கோட்டைகளை, இல்லங்களை வழிபாட்டிற்காக கோவில்களைக் கட்டுவதற்கும் பராமரிப்பதற்கும், இராணுவ சேவைக்கும், அலுவலக சேவைகளுக்கும் கணிசமாக உழைப்பினர் நிரந்தரமாக உள்ளிளுக்கப்பட்டனர். குறிப்பாகக் கக்குஸ், விறாந்தை என்பவற்றை உள்ளடக்கிய அலவாங்கு, பிக் காஸ் பயன்படுத்தக்கூடிய கட்டடத்தொழில்; யன்னல், மேசை, லாச்சி, வாங்கு, அலுமாரி போன்றவற்றைச் செய்யக்கூடிய தச்சுத்தொழில்; கழுசான், றவுக்கை, ரேந்தை என்பவற்றை தயாரிக்கும் தையல் தொழில்; சப்பாத்து, மேஸ் தைக்கும் தோல்தொழில்; பீங்கான் .பீரிஸ் கையாளக்கூடிய சமையல் தொழில்; துப்பரவுத்தொழில்; குமாஸ்தாவாக செயற்படக்கூடிய அலுவலக தொழில் என்ற வகையில் கூடிய வருமானத்தை வாராந்தம் நிரந்தரமாகத் தரக்கூடிய உழைப்பை நோக்கி மக்கள் ஈர்க்கப்பட்டனர். இந்த ஈர்ப்பு தொழில் சார் சூழல்களில், ஒழுக்கங்களில், ஒழுங்காற்றுக்களில், மனப்பாங்குகளில் மாற்றங்களை உட்புகுத்தியது. இது வாழ்வியல்
S\subUT 2005 面眶邱

Page 57
சார்ந்த, பாரம்பரியம் சார்ந்த வடிவங்களில் அசைப்புக்களை ஏற்படுத்தின. இவ்வாறான அசைப் புக் கள் தவிர்க்க முடியாதவையுமாகும்.
அசைப்புப் பெற்ற இன்னுமொரு வாழ்வியல் வடிமாக "அரசியல் வாழ்வு" கருதப்படலாமி. ஐரோப்பியருக்கு முற்பட்ட காலத்தில் சாதாரண ஈழத்தமிழ் மக்கள் அரசியல் வாழ்வில் பொதுவான ஈடுபாடு காட்டியதாக அறியப்படவில்லை. தமக்குள் பாரம்பரியமாக கொண்டிருந்த வழமைகளை பின்பற்றினர். இந்த வழமைகள் பிரதேச அடிப்படையிலும் சாதி அடிப்படையிலும் வேறுபட்டிருந்தன. தமக் கிடையிலான முரண்பாடுகளை, பிணக்குகளை இவ்வழமைகளின் அடிப்படையில் கையாண்டனர். ஆட்சியில் இருந்தவர்கள் இவ்வேறுபாடுகளைக் கருத்திலெடுக்காது வழமைகளை ஏற்றுக்கொண்டனர். ஆனால், குறிப்பாக ஒல்லாந்தர் கண்டி அரசனுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்திற்கு அமைய பாதுகாப்பு என்ற காரணத்தை முன்னிறுத்தி கண்டி தவிர்ந்த கரையோர பிரதேசங்களில் ஒரு ஆட்சி முறையை நிர்மானித்ததுடன், பாதுகாப்பு செலவீனங்களை ஈடுசெய்யும் நோக்கில் வரி அறவிட முற்பட்டனர். வரி அறவிடுவது தொடர்பான நடைமுறைகளைக் கையாளும் வடிவில் குடியியல் நிர்வாக அலகுகளை ஏற்படுத்தினர். இவை தொடர்பான பிணக்குகளை விசாரிக்க நீதிமன்றங்களை நிறுவினர். இவை தொடர்பான ஒழுக்காற்றுக்களை உள்ளடக்கிய உரோம டச் சட்டங்களை அறிமுகப்படுத்தியதுடன் மக்களின் "அரசியல் உரிமைகள்" மதிக்கப்படவேண்டும் என்ற நோக்கில் அவர்கள் கையாண்ட வழமைகளைத் தொகுத்து யாழ்ப்பாண தேச வழமை, புத்தளம் கற்பிட்டி வழமைகள், திருகோணமலைத் தமிழரின் வழமைகள், முக்குவர் சட்டம், இஸ்லாமியரின் சட்டம், பரதவர் சாதி வழமை என்பவற்றையும் சட்டங்களாகக் கையாண்டனர்.
போர்த்துக்கேயரும், ஒல்லாந்தரும் இலங்கையை வியாபார நோக்கில் அணுகிய நிலையில் சாம, பேத, தான, தண்ட வழிமுறைகளைக் கையாண்ட போதிலும் அவர்கள் உருவாக்கிய கோவில் பற்றுக்கள், சாதாரண மக்கள் முதலாக கையாண்ட சமத்துவம், சகோதரத்துவம், மதிப்பளித்தல், ஒப்புரவாதல் வழிமுறைகள் மக்களின் மனப்பாங்குகளை அசைத்தன. தவிர அறிமுகப்படுத்திய சட்டங்கள் "நீதியின் முன் அனைவரும் சமம்’ என்ற கருப்பொருள் மக்களின் மனப்பாங்குகளில் ஊடுருவின. இவை ஈழத்தமிழ் மக்களுக்கு "அரசியல் வாழ்வு" பற்றிய குடியியல் உரிமை சார்ந்த வழிமுறைகளில், பாரம்பரியம் சார்ந்த கோலங்களில் அசைப்புக்களை ஏற்படுத்தின.
போர்த்துக்கேய ஒல்லாந்த செல்வாக்குகள் ஈழத்தமிழ் பாரம்பரியங்ளை அசைத்தாலும், தமிழர் பாரம்பரிய செழுமைகளுடன் ஒப்புநோக்கும்போது இவ் அசைப்புக்கள் புதுமையானவையாக கொள்ளத்தக்கதல்ல என்ற வாதம் அல்லது நம்பிக்கை பாரம்பரியம் சார்ந்த நோக்கில் நன்மை அனுபவித்த தொகுதியினரால் முன்வைக்கப்பட்டது. இதற்கு பக்கபலமாக இக்காலத்தில் ஆட்சியுரிமை கொண்டு நிலைத்த சுதேசிய இராட்சியங்கள் இப் பாரம்பரியங்களை தொடர்ந்தமையால் இவர்களால் அவை மீட்கப்படலாம் என்ற நம்பிக்கையும் இருந்தது. இதனால் போர்த்துக்கேய ஒல்லாந்த செல்வாக்கினால் ஈள்க்கப்பட்ட கிறிஸ்தவ தமிழர் பாரம்பரியங்களுக்கு எதிரான கருத்துக்கள் தோற்றம் பெற்றதுடன் பாரம்பரியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கருத்துக்களுக்கு சார்பான மனப்பாங்கும் செயற்பாடுகளும் வலுப்பெற்றதால் குறைவான சதவீதத்தினரையே கிறிஸ்தவ
硕地唔的 ஜூலை - டிெ

தமிழ்ர்களாக மாற்றமுடிந்தது. தவிர போர்த்துக்கேய ஒல்லாந்த செல்வாக்குகளால் பரவலாக ஈழத்தமிழர் மத்தியில் பாரம்பரியம் சார்பாக ஏற்பட்ட மனப்பாங்கு மாற்றங்கள் கூட தமிழர் பாரம்பரியம் சார் மீள் உறுதிப்படலே. உதாரணமாக, சாதிமுறை ஆரியரால் புகுத்தப்பட்டதே ஒழிய திராவிட பாரம்பரியத்தில் காணப்படவில்லை என்பன போன்ற கருத்துக்களால் நியாயப்படுத்தி "தூய ஈழத்தமிழர் பாரம்பரியம்" என்ற கருத்து வடிவம் செல்வாக்குப் பெற்று அழுத்தம் பெற முன்னைய் அதே தொகுதியை சார்ந்தே கடுமையாக உழைத்தனர். இதனால் ஈழத்தமிழர் வாழ்வில் தூய தமிழில் பாரம்பரியம் என்ற வடிவமும் தோன்றலாயிற்று. எவ்வாறாயினும் பாரம்பரியம் என்பது வாழப்பட்டு போசிக்கப்படவேண்டியதே. இக் கருத்தில் புகுத் தப்பட்டதாகவோ அல்லது மீள் உறுதிப்படுத்தலாகவோ அமைந்தாலும் மேற்பார்த்து அசைப்புக்கள் ஈழத்தமிழர் பாரம்பரியத்தில் வெளிப்படவே செய்கின்றது.
ஆங்கிலேயர் காலம்
ஈழத்தமிழர் பாரம்பரியம் தொடர்பாக ஆங்கிலேய செல்வாக்கு குறிப்பிடக் கூடியதே. இதற்கு இலங்கைக்கு வருவதற்கு முன்னர் இவர்கள் பெற்றிருந்த சமுக அசைப்புக்கள் பற்றிய அனுபவம் முக்கிய காரணமாகலாம். ஆங்கிலப் புரட்சி (1688), கைத்தொழில் புரட்சி (1760), அமெரிக்க சுதந்திரப்போர் (1775) போன்ற நிகழ்வுகளும் மொன்டெஸ்கியு வொல்டயர், லொக் போன்றவர்களின் கருத்துக்களாலும் ஆங்கிலேய சமூகம் சமுக மீள் உறுதிப்படுதலுக்கு உட்பட்டிருந்தது. இம்மாற்றத்தின் காரணமாக சமய சகிப்புத்தன்மை, அடிமைப்படுத்தலுக்கு எதிரான கருத்து, மனிதம், ஒப்பரவு என்ற கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப் பட்டிருந்தன. தவிர உற்பத்தியாளர்கள், வியாபாரிகளை உள்ளடக்கிய மத்திய வர்க்கம் முதன்மை பெற்றிருந்தது. மனித உழைப்புக்குப் பதிலீடாக இயந்திரங்களின் பயன்பாடு வாழ்க்கைப்போக்கினை அசைத்து எங்கும் சிறப்புத் தேர்ச்சி குவிவுபெறத் தொடங்கிற்று. தொழில்தருனர், தொழிலாளர் என்ற வடிவில் பாரம்பரியம் வகைப்படவும் தொடர்பாடல், முகாமை, சமூகவியல் என்ற அறிவியல் முன்னிலைப்படவும், முதலாளித்துவம் சமுகத்தை வழிநடத்துவதாகவும் மாற்றமடைந்திருந்தது. எனவே ஆங்கிலேயரின் வருகை பாரம்பரிய ஊடுருவலாக மட்டுமல்ல சமூக மீள் உறுதிப்படுத்தலாகவும் கொள்ளத்தக்கதே.
ஆங்கிலேயரின் வருகை அக் கால அரசியல் நிலைப்பாடுகளுக்கு ஏற்ப தமது உற்பத்திப் பொருட்களுக்கு சந்தையை விரிவுபடுத்துவதையும் பொருளாதார மூலவளங்களைப் பெற்றுக்கொள்வதையும், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் நிறுவிய குடியேற்றங்களைப் பாதுகாக்க திருகோணமலைத் துறைமுகத்தைக் கைப்பற்றுவதையும் நோக்கமாக கொண்டிருந்தாலும், ஏனைய குடியேற்றங்களுடன் ஒப்புநோக்குகையில் அவர்கள் இலங்கையில் மேற்கொண்ட நடவடிக்கைகள் வேறுபட்டதாகவே காணப்படுகின்றது. (க.சி குலசேகரம் 'நோர்த் முதல் கோப்பலாவா வரை பார்க்க)
1795ஆம் ஆண்டு பிரான்சியருக்கு எதிராக ஆங்கிலேயர் ஒல்லாந்தருடன் செய்துகொண்ட உடன்படிக்கையின்படி ஒல்லாந்தரின் காவலராகவே ஆங்கிலேயர் திருகோணமலையை அடைந்தனர். ஆனால் இலங்கையிலிருந்த ஒல்லாந்தத் தளபதி வான் ஏஞ்சல் பிக் உடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக 26.08.1795இல் ஆங்கிலேயத் தளபதி ஸ்ருவாட்டினால் திருகோணமலைத் துறைமுகம் ஒல்லாந்தரிடமிருந்து கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து 1796க்கு இடையில் மட்டக்களப்பு,
|gthLIf 2005 55

Page 58
யாழ்ப்பாணம், மன்னார், வன்னி, கற்பிட்டி, களுத்துறை, கொழும்பு ஆகிய இலங்கைக் கரையோர ஒல்லாந்த கோட்டைகள் கைப்பற்றப்பட்டு ஆங்கிலேயர் ஆட்சி நிறுவப்பட்டது. ஆங்கிலேயர் ஒல்லாந்தரைப் போரில் வென்றாலும் அவர்களுக்கு கெளரவமான நிபந்தனைகளை அளித்து ஆட்சியைப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
1. ஒல்லாந்த உத்தியோகத்தர் ஆங்கிலேய அரசாங்கத்தில் கெளரவமாக வாழவும் அல்லது சுயமரியாதையுடன் வெளியேறவும். 2. ஒல்லாந்த சமய பரிபாலன குருமார் கெளரவத்துடன்
தம் பணியைத் தொடரவும். 3. திணைக்கள உத்தியோகத்தர் புதிய அரசாங்கத்தில்
சம்பளம் பெறவும். 4. வழக்குகள் யாவும் அவர்களுடைய சட்டப் பிரமாணங்களுக்கு அமைய விசாரித்து தீர்ப்பளிக்கவும். 5. ஒல்லாந்த அரசாங்கம் அச்சிட்ட 6.50,000 ரூபா
பெறுமதியான பணத்தாள் பெறுமதியை கொடுக்கவும் உடன்பட்டனர். இவ்வுடன்பாடு ஆங்கிலேயர் இலங்கை தொடர்பாகக் கொண்டிருந்த அணுகுமுறையை வெளிப்படுத்துகின்றது.
தொடர்ந்து 1815 பிரித்தானியர் கண்டியைக் கைப்பற்றி இலங்கை முழுவதையும் ஒரு ஆட்சியின் கீழ் கொண்டுவந்தனர். இவர்கள் இதுவரை இலங்கையில் நிலவி வந்த அடிமை நிலைப்பாட்டை (கட்டாய அரசசேவை) அகற்றி சமூக கட்டமைப்பில் மீள் உறுதிப்படுத்தலை முன்னெடுத்தனர். 1833ஆம் ஆண்டு கோல்புறுக் சீர்திருத்தம் ஊடாக "சட்ட சபை" வடிவத்தில் சட்டம், நிர்வாகம், நீதி என்ற வலுவேறாக்க குடியாட்சி சிந்தனைகளை அறிமுகப்படுத்தினர். குடியியல் நிர்வாகம் (Civil Services) என்ற தொழில் முறைமைகள் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், வீதிகள், பாலங்கள் என்பவற்றின் ஊடாக பிரதேச இடைவெளிகள் சுருக்கப்பட்டன. 1931ஆம் ஆண்டு டொனமூர் சீர்திருத்தத்தின் ஊடாக சர்வசன வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்டு நீதியின் முன் மக்கள் அனைவரும் சமம் என்ற கருத்துநிலையில் மக்களாட்சி வடிவங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இவ்வாறாக, சமூக அடித்தளங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் இன்று ஈழத்தமிழர் பாரம்பரியங்கள் என்று அடையாளப்படுத்தக் கூடியனவாக காணப்படுகின்றன. இவை பாரம்பரிய மீள் உறுதிப்படுத்தலா அல்லது பாரம்பரிய ஊடுருவலா என்பது பாரம்பரிய மீள்பார்வையில் அடங்கும்.
இக்கருத்தில் முதலாவதாக பிரித்தானியர் பின்பற்றிய கல்விக்கொள்கை முதலில் கருத்தில் எடுக்கவேண்டியதாகும். பிரித்தானியர் தமது ஆட்சியை நிலை நிறுத்துகின்ற நோக்கில் அல்லது அவள்கள் பெற்றுக்கொண்ட சமூகவிழிப்பு நிலைப்பாட்டில் பாடசாலைக் கல்வியை ஊக்குவிக்க முன்வந்தனர். சமய, சகிப்பு கொள்கையைக் கடைப்பிடித்த இவர்கள் எல்லா மிஷனரியினரும் (மத பீடங்களும்) கல்விச் செயற்பாட்டில் சுதந்திரமாக ஈடுபட அனுமதித்தனர். இந்த ஊக்குவிப்பால் கவரப்பட்டு பரவலாக பாடசாலைகள் நிறுவப்பட்டன. அவசியமான பிரதேசங்களில் அரச பாடசாலைகளும் நிறுவப்பட்டன. தனியார் பாடசாலைகளை அமைக்க தூண்டப்பட்டனர். இதனால் 1830ஆம் ஆண்டில் 236 மிஷனரிப் பாடசாலைகளும், 97 அரச பாடசாலைகளும், 640 தனியார் பாடசாலைகளும் அமைக்கப்பட்டிருந்தன. 1834ஆம் ஆண்டு
56 ஜூலை - Lņi

"பாடசாலை ஆணைக்குழு" அமைக்கப்பட்டு பாடசாலைக் கல்வி அரசால் மேற்பார்வை செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஒப்பு நோக்கில் கூடிய பாடசாலைகள் வடக்குக் கிழக்கு கரையோரப் பிரதேசங்களில் அமைக்கப்பட்டிருந்தமையால், கூடிய கல்வி வாய்ப்பு தமிழருக்கு கிடைக்கப்பெற்றது. இவர்கள் கூடிய அளவில் பிரித் தானிய குடியியல் நிர்வாகத் தில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். 3.4.1875இல் இலங்கை 6 youtsió(6)(3u (pg56T (upg56 TaB C.C.S. (Ceylon Civil Services) பரீட்சையில் சித்தியடைந்து பதவியில் அமர்ந்தவர் சேர் பொன்னம்பலம் அருணாசலம் ஆவார். தமிழர் குடியில் ஊழியராக (Civil Servent) பொது எழுது வினைஞர் சேவை, புகையிரத, தபால், சுங்கசேவை மின்சார, பெருஞ்சாலை, கட்டட பொறியியல் சேவை, மருத்துவசேவை என பிரித்தானிய ஆட்சியில் குடியியல் சேவையில் அமர்ந்து ஆங்கிலத் தமிழர், கிறிஸ்தவ தமிழர் என்ற பாரம்பரிய வடிவங்களுக்கு மேலதிகமாக சிவில் உத்தியோகத்தர் என்ற ஒரு பாரம்பரிய வடிவத்தை உள்வாங்கினர். சட்டங்களுக்கு கட்டுப்படுதல், நேரம் தவறாமை, விசுவாசம், இறுக்கமான ஒழுக்காற்று என்பன போன்ற விழுமியங்கள் உள்ளவாங்கப்பட்டன. அரச உத்தியோகமே புருஷ இலட்சணம் என்று ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு மாற்றங்கள் ஊடுருவின. அரச உத்தியோகம் நோக்கிய முனைப்புக்கள், வெள்ளை அங்கி நோக்கிய முனைப்புக்கள் கிராமிய பூர்வீக தொழில் திறன்கள் கைவிடப்படவும், பின்தள்ளப்படவும் வழிவகுத்தன. மக்கள் கிராமங்களைவிட்டு வெளியேறவும் நகரங்களில் குடியேறவும் முற்பட்டமை சமூக கட்டமைப்பின் அத்திபாரங்களை அசைத்தமையால் மக்களின் நடத்தைக் கோலங்கள், பழக்கங்கள், விழுமியங்கள், பொழுதுபோக்குகள் இரசனைகள் என்பன புதிய பரிமானம் கண்டன. பாரம்பரியம் தொடர்ச்சிகொண்டு மீள் உறுதிப்படுதலடைந்து வாழப்படுவது என்ற கருத்தில் இம்மாற்றங்கள் இசைவானது இயல்பானது என்பதும் பாரம்பரிய மீள்பார்வையில் அடங்கும்.
அடுத்தாக பிரித்தானியர் அறிமுகப்படுத்திய பெருந்தோட்டப் பயிர்ச் செய்கை இரு வழிமுறைகளில் ஈழத்தமிழர் பாரம்பரியத்தில் செல்வாக்கு செலுத்துவதைக் காணலாம். ஒரு பார்வையில் மலைநாட்டுத் தோட்டங்களில் கூலிகளாக குடியேற்றிய தென் இந்தியத் தமிழராலும், அக்கூலித் தொழிலாளர்களை மேற்பார்வை செய்வதற்கு உத்தியோகத்தில் அமர்த்தப்பட்ட கங்காணி, எழுதுவினைஞர், தோட்டப் பாடசாலை ஆசிரியர் என்ற வகையில் குடியேறிய ஏனைய தமிழரும் இணைந்து மலைநாட்டுத் தமிழர் என்ற ஒரு பாரம்பரிய வடிவத்தை அடைந்தனர். இவர்கள் தமிழ்மொழிப் பேச்சு வழக்கிலும், பழக்கங்கள், விழுமியங்கள், சமய வழிபாட்டு முறைகள் என்பவற்றில் ஈழத் தமிழர் பாரம்பரியங்களுடன் முழுமையாக ஒத்துப்போவதில்லை. பிரித்தானியர் ஆட்சிக்குப்பின் சுதந்திர இலங்கையில் இவர்கள் அரசியல் அநாதைகள் ஆக்கப்பட்டு, குடியுரிமை பறிக்கப்பட்டு, பின் சிறீமா - சாஸ்திரி ஒப்பந்தத்திற்கு அமைய குடியுரிமை பெற்று, மலைநாட்டுத் தமிழர் என தம்மை அடையாளப் படுத்துகின்றனர். இவர்கள் ஈழத்தமிழர் என்ற பாரம்பரிய அடையாளப்படுத்தலில் வகிக்கும் பங்கு ஈழத்தமிழர் பாரம்பரிய மீள்பார்வையில் அடங்கும்.
மறுபார்வையில் பிரித்தானியர் வகுத்த சந்தைப் பொருளாதார முறைமையின் செல்வாக்கைப் பார்க்கலாம். பிரித்தானியரின் வருகை பொருளாதாரக் கட்டமைப்பை உற்பத்தி
gbr 2005 邱卵腹西的

Page 59
ஒப்பீட்டுச் செலவுக் கோட்பாட்டிற்கு அமைவாக பெருந்தோட்ட உற்பத்திகளை ஏற்றுமதி செய்து தேவையான பொருட்களை இறக்குமதி செய்கின்றதான ஒரு பொருளாதார முறைமைக்குள் கொண்டுவரப்பட்டது. இதனால் உற்பத்திச் செலவுகள் ஒப்புநோக்கக் கூடியதான பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன. இந்த நிலைப்பாடு உள்ளுர் சுதேசிய உற்பத்திகளில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தின. நுகள்வோர் கலாசாரம் வளர்க்கப்பட்டது. சுதேசிய உற்பத்திகள் தரம் குறைந்தவை. இறக்குமதிப் பொருட்கள் தரம் கூடியவை என்ற மனப்பாங்குகள் வளர்ந்தன. இதனால் நுகர்வோள் நடத்தை மாற்றங்கள் உணவு, உடை, கட்டடம் உள்ளடங்கிய வாழ்வு முறையில், பழக்கங்களில், கவின் கலைகளில், தொழில் நுட்பங்களில், இரசனைகளில் செல்வாக்குச் செலுத்தத் தொடங்கின. இவை பாரம்பரிய ஊடுருவலா அல்லது
மீள் உறுதிப்படலா என்பதும் மீள் பார்வையில் அடங்கும்.
பிரித்தானியர் கால பாரம்பரிய செல்வாக்குகள் என்ற நோகக்கில் குறிப்பிடக்கூடிய இன்னுமொரு வடிவம் இலங்கையர் என்ற பொதுப் பாரம்பரியமாகும். அதாவது இன, மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் சுதேசிகள் என்ற ஒருமைப்பாட்டில் ஆங்கிலக் கல்வியால் தொடர்பாடல் வாய்ப்பையும் குடியியல் சேவையால் அரச ஊழியர் என்ற பொது அடையாளப் படுத்தல்களையும் முன்னிறுத்தி ஒரு பொதுப்பாரம்பரியம் வடிவமைக்கப்பட்டது. அதே வேளையில் ஆங்கிலக்கல்விப் பலம் சார்ந்த நிலையில் இனம், மொழி, சமய அடிப்படைகளில் பாரம்பரிய தனித்துவங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற முன்மொழிவும் சுதேசிகளால் பரவலாக ஏற்கப்பட்டது. குறிப்பாக, பிரித்தானியருக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டி அரசியல் சுதந்திரத்தை வென்றெடுக்க இந்த முன்மொழிவு இன, மொழி, சமய வேறுபாடுகளுக்கு அப்பால் சுதேசிகள் என்ற ஒருமைப்பாட்டுடன் எடுக்கப்பட்டது. இவர்கள் பாரம்பரிய காவலர்களாக போற்றப்பட்டனர். இவர்கள் அன்னியரால் பலாத்காரமாக திணிக்கப்பட்ட பாரம்பரியங்களுக்கு எதிராக சுதேசிய பாரம்பரியங்களை உயர் பாரம்பரியங்களாக அடையாளப்படுத்தினர். போலிக் கவர்ச்சிகொண்ட வெகுசனப் பாரம்பரியங்களை கடுமையாக விமர்சித்து, பாரம்பரிய சீர்குலைவுகளை இனங்காட்டி நிராகரிக்க வேண்டியதன் அவசியத்தை, தேவையை வலியுறுத்தினர். சமூக - வசதி, வாய்ப்புக்கள் பகிர்வில் பின்தள்ளப்பட்ட பொதுமக்கள், ஆங்கிலக் கல்வி பெற்றிருந்த பிரித்தானிய குடியியற் சேவையில் உயர் பதவிகளிலிருந்த, சமூகக் கட்டமைப்பில் மேன்மக்களாக கருதப்பட்டவர்கள் முன்மொழிந்த பாரம்பரியம் என்ற கோஷம் மனித நாகரீகப்படுதலுடன் தொடர்புபட்ட பொது விடயங்களா? அல்லது தனித்துவங்களை அடையாளப்படுத்த கையாண்ட பாதுகாப்புக்களா? அல்லது காப்பாற்றபடவேண்டிய முன்னைய சந்ததியால் கையளிக்கப்பட்ட பொக்கிசங்களா? அல்லது இறுக்கமாக கடைப்பிடிக்கவேண்டிய கட்டளைகளா? அல்லது வாழ்வோட்டத்தில் கலந்த வசதிகளா? என வாதிடாமலேயே வழிமொழிந்து வரவேற்றனர். இவ்வாறு வழிமொழிந்ததும் பாரம்பரியம் சார்ந்த அம்சமே. இந்த எதிர்பார்புக்கு மத்தியில் 1948ஆம் ஆண்டு சோல்பரி சீர்திருத்தமாக இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது. அக்கால அரசியலில் பங்குகொண்ட அனைவரினதும்
அபிலாசையாக பாரம்பரியம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.
(பார்வை தொடரும்)
面御例他西的 ஜரலை - டிெ

விருந்து யாடுக்கு?
ஒரு நாடக ஆசிரியர் உலகப் புகழ் பெற்று விளங்கினர். அவரைப் பாராட்டி ஒரு பெரிய விருந்தளிக்க அந்த நாட்டு மன்னர் ஆசைப்பட்டார். நாடக ஆசிரியரும் மகிழ்ச்சியோடு ஒத்துக் கொண்டார்.
விருந்து நாள் வந்தது. எல்லோரும் வந்து சேர்ந்தனர். நாடக ஆசிரியரும் தன் வேலையை முடித்துக்கொண்டு வந்து சேர்ந்தார். ஆனால் வரவேற்பாளர்கள் அவரை வாசலிலேயே தடுத்து நிறுத்தினர். அவர் அரசு விருந்துக்குரிய உடையை அணிந்து வரவில்லை. அதனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அவரும் சிரித்தபடியே மீண்டும் வருவதாகக் கூறிச் சென்றார். உரிய ஆடை அணிந்து வந்தார். அனைவரும் வரவேற்றனர்.
விருந்து தொடங்கியது. அனைவரும் மதுக்கோப்பையை எடுத்து வாழ்த்தினர். மது அருந்தத் தொடங்கினர்.
நாடக ஆசிரியர் மது அருந்தவில்லை. தன் விருந்துக்குரிய ஆடையைக் கழற்றி அதை மதுக்கிண்ணத்தில் தோய்த்தார்.
எல்லோரும் வியந்து அவரைப் பார்த்தனர். அவர் சொன்னார்: “இங்கே நான் வரவேற்கப்படவில்லை. என் திறமையும் பண்பும் வரவேற்கப்படவில்லை. இந்த ஆடைக்குத்தான் வரவேற்பு. எனவே இந்த ஆடையே விருந்தில் பங்கெடுத்துக் கொள்ளட்டும்.”
நாம் வாழ்வில் எதற்கு மதிப்பளிக்கிறோம்? திறமைக்கா? ஆடம்பரத்துக்கா?
ஒருவரது நற்பண்புகள், திறமையை வைத்தே அவரை மதிக்க வேண்டும் - தோற்றத்தை அன்று.
நன்றி : உறவென்னும் பூஞ்சோலை
மரியாதை, தயாளகுணம், நேர்மை, அக்கறை, உழைப்பு, இரக்கம் இந்த ஆறு பண்புகள் இணைந்துதான் ஒரு நல்ல மனிதனை உருவாக்குகின்றன. மரியாதையுடன் பழகுவதால் மற்றவர்களை அவமதிப்பது தவிர்க்கப்படுகிறது. தயாளகுணம் எல்லோரையும் எளிதில் வெல்ல உதவுகிறது. நேர்மையான செயல்கள் நல்லது நடக்கும் என்பதில் அசைக்கமுடியாத தன்னம்பிக்கையை ஏற்படுத்தித் தருகின்றது. அக்கறையான உழைப்பும், பிறரிடத்தில் காட்டும் இரக்கமும் வெற்றியை விரைந்து பெற்றுத்தருகின்றது.
ஜே. வி. செர்னே
GeyLibLur 2005 57

Page 60
நூல் உளவளத் துணை ஆசிரியர் : எஸ். டேமியன் (அ.மதி) வெளியீடு: அ.மதி வெளியீடு
தொடர்பகம், 657, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம் பதிப்பு யூலை 2005 (இரண்டாம் பதிப்பு) 6f7606) : 150.00
உளவளத்துணை என்பது மனிதன் தோன்றிய காலத்திலேயே உருவாகிய ஒன்று. ஆனால் இது துறை நிலையில் வளர்ச்சி பெறவில்லை. பெற்றோர், ஆசிரியர், நண்பர், முதியோர் என்ற தன்மையில் பிறருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது; இது ஆற்றுப்படுத்தலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது; ஏனெனில் மன அழுத்தத்தினை நீக்கி சாந்தம் அளித்தபடியால் இவ்வாறு அழைக்கப்பட்டது.
19ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே உளவளத்துணை வளர்ச்சியுற்றது. சிறப்பாக சிக்மன்ட் புரொய்டு இத்துறையை விஞ்ஞான பூர்வமாக ஆரம்பித்து வைத்தார். இவர் உருவாக்கிய சிகிச்சை முறையானது 'உளப் பகுப் பாய் வு' என அழைக்கப்படுகின்றது.
இதன் பின்னர் 1940களில் காள் றொஜர்ஸ் அமெரிக்காவில் உளவளத்துறையின் சிறந்த முன்னோடியாக விளங்குகின்றார் இவரின் கருத்துப்படி துணைநாடி வருபவர்கள் தங்களுடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் போதிய ஆற்றல் இருப்பதால்
தங்களைப் புரிந்து கொண்டு தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு
காணலாம் என்பதை எடுத்துரைத்தார். எனவே அவர் "ஆள் மைய
உளவளச் சிகிச்சை முறையை" அறிமுகம் செய்தார்.
இவ்வாறு காலத்திற்குக் காலம் உளவளத்துறை வளர்ந்து சென்றாலும், எமது ஈழவள நாட்டில் அறிமுகமாகி 3 தசாப்தங்களே ஆகும். கடந்த கால யுத்த அனர்த்தங்களின் கொடுரத்தன்மையே உளவளத்துறையின் முக்கியத்துவத்தை உணர்த்தியது.
அந்த வகையில் எமது பிரதேசத்தில் உளவளத்துணை
நூல் : உயிரோடிருத்தல்
(கவிதைத்தொகுதி) ஆசிரியர் : யாத்திரீகன் வெளியீடு: மீளுகை 2
இமையானன் கிழக்கு, உடுப்பிட்டி. பதிப்பு ; ஆனி 2005 விலை 8000
“யுத்தத்தின் இராட்சத காலங்களின் தடங்கள் என்மீது தொடர்ச்சியாக அழுத்திச் செல்கையில், அப்போது எனக்குள் இருந்த உணர்வுகளாகவே இந்த எழுத்துக்களை நான் காண்கிறேன் 'உண்மைகளே என்றும் கவிதைகளாக முடியும்' என்கின்ற யதார்த்தத்தை நம்புகிறவன் நான்.” என உயிரோடிருத்தலி தொகுதியில் யாத்திரீகன் குறிப்பிடுகின்றார். அது உண்மையுங்கூட எங்கெல்லாம் நன்மை நலிந்து தீமை செழிக்கின்றதோ அங்கெல்லாட் 58 ஜூலை -
 
 
 

நிறுவனமாக 1980களில் சாந்திகம் ஆரம்பிக்கப்பட்டது. பின்பு சுகவாழ்வு, அகவொளி, வளர்பிறை என இத்துறைக்குப் பேர்போன நிறுவனங்கள் ஆற்றும் பணிகள் இன்றும் நீளும்,
இந்த உளவளத்துணையை மேலும் விருத்தியாக்க வேண்டிய தேவையை அரசு, அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு ஊட்டியது, 2004 டிசெம்பர் 26 இல் ஏற்பட்ட ஆழிப்பேர் அடுக்கு அலைகளின் கோரத்தாண்டவம் ஆகும்.
யதார்த்த சூழலில் ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, உளவளத்துணையினை மேற்கொள்ள பல தொண்டு நிறுவனங்களும் முன்வந்துள்ளது. இதற்குப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது. இப்பயிற்சிகளுக்குச் சிறந்த வழிகாட்டியாக எஸ். டேமியன் (அ.ம.தி.) அடிகளாரின் “உளவளத்துணை’ என்னும் நூல் காணப்படுகின்றது.
காலத்தின் தேவை உணர்ந்து இந்நூலை இரண்டாம் பதிப்பாக வெளியிட்ட நூலாசிரியர் எஸ். டேமியன் (அ.ம.தி.) அடிகளாரின் முயற்சி பாராட்டத்தக்கது. இந்நூலுக்கு தகவுரையை பேராசிரியர் த. ஜெ. சோமசுந்தரம் எழுதியுள்ளார்.
தமிழ் மொழியில் ஈழத்தில் மிகவும் அரிதாகவே உளவியல் சார்ந்த நூல்கள் தோற்றம் பெற்றுள்ளது. இந்த அரிதலுக்குள் வெளியான தரமுடைய நூல்களில் "உளவளத்துணை' என்ற நூலும் காணப்படுகின்றது.
இந்நூலில் உளவளத்துணையாளருக்கு இருக்கவேண்டிய திறன்கள்; மற்றும் உளவளத்துணையினை மேற்கொள்ளும்போது மேற்கொள்ள வேண்டிய படிமுறைகள்; என்பவற்றை மிகவும் எளிய முறையிலேயே ஆசிரியர் எஸ். டேமியன் (அ.ம.தி) விளக்கியுள்ளார். மேலும் இந்நூலில் ஆசிரியர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவர்கள், மதுவுக்கு அடிமையானவர்கள், இழப்பின் துயரில் இருந்து மீளாதவர்கள், இளைஞர் பிரச்சினைகள் போன்ற பல்வேறு உளவியல் தாக்கத்திற்கு உள்ளானவர்களுக்கு எப்படி உளவளத்துணை சிகிச்சையினை மேற்கொள்ளலாம் என்பதையும் அழகாகக் கூறுகின்றார்.
ஆக, இந்நூல் உளவளத்துணை பயிற்சியினைப் பெறுபவர்கள் மட்டும் கற்கவேண்டிய நூல் அல்ல. மாறாக அனைவரும் படிக்க வேண்டிய நூல். இதனைக் கற்கின்ற போது எமது சகபாடிகள், உறவுகள் நெருக்கீடுகளைச் சந்திக்கின்றபோது
அவர்களுக்கு உதவமுடியும் என்பது உறுதி.
- On 8
D
கவிதை அவதாரம் கொள்கின்றது. அந்த வகையில் யாத்திரீகனின் 'உயிரோடிருத்தல் கவிதைத் தொகுதியானது கொடுமையை எதிர்த்துக் குரல் கொடுக்கும் அனுபவங்களைச் சுமந்துவருகின்றது. வெளிப்படையாக பேசுகின்றது. நிலத்திற்கடியில் வேர்களின் ஆழம்போல இந்த இளங் கவிஞனுக்குள் இருந்த நம்பிக்கைகள்தான், உண்மைகள்தான், தேடல்கள் தான் உயிரோடிருத்தலாக சிருஷ்டிக்கப்பட்டுள்ளது. இந்நூலில் யாத்திரீகனால் சிருஷ்டிகப்படாத இன்னுமொரு சிறப்பாக, கவிதைத்துறையில் யாத்திரீகம் செய்வோருக்காக கவிஞர் சு. வில்வரத்தினம் இந்நூலுக்கு எழுதிய முன்னுரை வரிகள் அமைகின்றன.
யாத்திரீகனின் இத் தொகுப்பில் வெளிச்சம், நிலம், அம்பலம், ஏகலைவன், களத்தில், மாருதம், தவிர, நமது ஈழநாடு, எரிமலை ஆகிய ஏடுகளில் வெளியாகிய அவரது 22 கவிதைகள் வெளிவந்துள்ளன. இவற்றில் உவமை, குறியீடு, தொன்மம், படிமம், அங்கதம், அறிவியல், இலக்கியம், கதைகூறல், நாட்டுப்புறவியலின் தாக்கம் ஆங்காங்கே சிறப்பாக வெளிப்படுகின்றது. ஒவியர்
டிசெம்பர் 2005 Misi

Page 61
புகழேந்தியின் அட்டைப்படத்துடன் 60 பக்கங்களில் வெளிவந்திருக்கின்றது. உயிரோடிருத்தல்
எங்கள் வாசல்
வாசமிழந்து கிடந்தது
யாருமில்லை
கோலம் போட
நாளும் பொழுதும்
நரிகளின் ஒலங்கள்
பேய்களின் கூக்குரல்கள்
இவ்வாறு நர்த்தனம்’ என்ற கவிதை நகர்கின்றது. மூதாட்டியின் விழிகளுக்குள் ஒளிர்வுறும் கனவு’ என்ற கவிதை,
காவு கொள்ளப்பட்ட
நூல் : சூரியக்குளியல் (கவிதைத் தொகுதி) ஆசிரியர் : கவிஞர் சூரியநிலா வெளியீடு அன்சன் கலையகம்,
உசன், மிருசுவில், பதிப்பு : மே 2005 67606) : 150.00
அண்மைக் காலங்களில் எமது ஈழத்துக் கவிதைப் புலத்தில் ஏராளமான புதியவர்கள் கவிதைகளைப் படைத்துக் கொண்டிருக்கிறார்கள். நாவல், சிறுகதை, நாடகம் என ஏனைய கலை, இலக்கியத் துறைகளில் படைப்பாக்க முயற்சிகளில் ஈடுபடுபவர் களிலும் பார்க்க, கவிதைக் களத்தில் காலூன்றியவர்களின் அல்லது காலூன்ற முனைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்லுகின்றது. குறிப்பாக, புதுக்கவிதையின் தோற்றத்திற்குப் பின்னர் ஏராளமானவர்கள் கவிதையில் கால்பதித்து வருகிறார்கள் எனலாம். எனினும் கவிதை படைப்பவர்கள் எல்லோருமே படைப்பாக்கச் செழுமையுடன் கவிதை புனைந்து, தமக்கென்றதொரு தனித்துவத்தை நிலை நிறுத்துகிறார்களா என்பது கேள்விக்குரிய விடயமாகவே இருந்து வருகின்றது. இது ஒருபுறம் என்றால், மறுபுறத்தில் ஈழத்துக் கவிதைத் துறையின் வளர்ச்சிப் போக்கில் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் புதியவர்கள் கண்டு கொள்ளப்படாமல், குறிப்பிடப்பட்ட சில கவிஞர்களும், அவர்களது கவிதைகளுமே அடையாளப்படுத்தப்பட்டு வருவதும் எமது சூழலின் ஆரோக்கியமற்ற வெளிப்பாடே.
இத்தகைய பின்னணியில் தான் 'சூரியக் குளியல்' கவிதைத் தொகுதியை வெளியிட்டுள்ள ஆ ஜென்சன் றொனால்ட் என்ற இயற் பெயரைக்கொண்ட கவிஞர் சூரிய நிலாவின்
(
g
நூல் தூர விலகும் சொந்தங்கள்
(சிறுகதைகள்)
ஆசிரியர் : நீர்கொழும்பு ந. தருமலிங்கம்
வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம்,
சென்னை
பதிப்பு : 2004
6)f7606) : 140.00
கவிதைத்துறையில் மிகவும் பரீட்சயமான நீர்கொழும்பு ந. தருமலிங்கம் ஆறு கவிதை நூல்களை வெளியிட்டு இருக்கின்றார்.
面眶 ஜூலை - டிசெப்
 
 

நகரத்தின் சாட்சியாய்
வாடிக்கிடந்தன பூக்கள். இவ்வாறு பயணிக்கின்றது.
'அழிவுகாலத் தேவதையின் தாண்டவம்' என்ற கவிதைவரிகள் இவ்வாறு முடிகின்றது.
அவளால்
பரத நாட்டியம்
நிர்வாணப்பட்டுக் கொண்டேயிருக்கிறது.
யாத்திரீகனுடைய எழுது கோல்கள் புகைப்படக் கருவியாக மாறி கடந்த காலத்தைப் படம்பிடித்துக் காட்டுகின்றன. இந்த முயற்சி போலவே யாத்ரீகனின் கவிதை யாத்திரீகம் தொடரவேண்டி தமிழ் கூறும் நல்லுலகம் எதிர்பார்த்து நிற்கின்றது.
- CSsRn. GgadẫofieÖa
கவிதைகளைப் பார்க்க வேண்டும். கவிதைத் தளத்தில் இன்னொரு படி நிலையை நோக்கி அவரது கவிதைகள் செல்லவேண்டியது தேவையாக உள்ள போதிலும், அண்மைக் காலங்களில் மிக அதிக அளவில் தொடர்ந்து கவிதைகளைப் படைத்துவரும் இளங் கவிஞர்களின் வரிசையில் இவரும் கவனத்திற்குரியவராகின்றார். தேவைக்கேற்ப மரபுக் கவிதைகளாகவும், புதுக்கவிதைகளாகவும் கவிதைகளை எழுதிவரும் இக்கவிஞர் தன்னால் படைக்கப்பட்டு பல்வேறு ஊடகங்களிலும் வெளிவந்த கவிதைகளில் தேர்ந்தெடுத் தவற்றையும், இன்னும் புதிதாக எழுதிய கவிதைகளுமாக 62 கவிதைகளையும், எண்ணத்தின் மின்னல்களாக தனது 14 கைக்கூ கவிதைகளையும் இணைந்து 78 பக்கங்களில் சூரியக்குளியலை தன் சுய முயற்சியில் வெளிக்கொணர்ந்துள்ளார். சூரிய நிலாவின் கவிதைகள் அந் தந்தக் 5ாலங்களுக்கேற்ற சமூகச் சூழலை அப்பட்டமாக வெளிப்படுத்தி, உள்ளத்து உணர்வுகளை முன்வைக்கின்றது. கவிஞர் தன் நூலில் - தன்னுரையில், குறிப்பிட்டுள்ளதைப்போல் போரின் வடுக்கள், Dனித மாண்பு மறுப்புக்கள், இடப்பெயர்வுகள், காதல், அடக்குமுறைகள் என எல்லா நிலைகளையும் அவர் தன் 5விதைகளில் வடித்துள்ளார். இவரது கவிதைகளில் காணப்படும் 2ற்றுமோர் சிறப்பு எதுகை மோனையும், சந்தம் வழுவாத தன்மையும் சிறப்பாக அமைவதாகும். இந் நூலுக்கான முன்னுரையை மூத்த கவிஞரான இ. முருகையன் வழங்கியுள்ளமை நூலுக்கு வலுச் சேர்க்கின்றது. வரும் காலங்களில் இன்னும் இன்னும் பல நல்ல கவிதைகள் கவிஞர் சூரியநிலாவிடம் இருந்து வெளிவரக்கூடிய ாத்தியக்கள் நிறையவே தென்படுகின்றன.
சூரியக் குளியல்' நூலில் வடிவமைப்பிலும், குறிப்பாக கவிதைகள் அமைந்துள்ள எழுத்துத் தெரிவிலும் கவனம் செலுத்தப்பட்டிருந்தால் இந்நூல் இன்னும் அழகாக அமைந்திருக்கும்.
— KO 8. On
இவர் கவிதைத் துறைக்குள் மட்டும் தன்னை இணைத்துக் கொள்ளாது, சிறுகதை இலக்கிய வடிவத்திலும் தனது ஆளுமையை தடம்பதித்துள்ளார். 1965 இருந்து 1970 வரை ஜெயந்தன் என்ற பெயரில் சிறுகதை எழுதி வந்த இவர், 1997 5ளிலிருந்துதான் அதிதீவிரமாக சிறுகதைத் துறையில் ஈடுபட்டு வருகின்றார்.
"ஒவ்வொரு மனிதனது வாழ்க்கையும் பல நாவல்களை அடக்கிக் கொண்டுள்ளது. வாழ்க்கையின் ஒவ்வொரு நாட்களும் பல சிறுகதைகளைச் சந்தித்துக்கொண்டுதான் இருக்கின்றன. பின்.கற்பனை என்ற பொய்மைகள் எதற்கு.? என் வாழ்க்கையில்
but 2005 59

Page 62
சந்தித்த - அறிந்த சம்பவங்களையே கதைகளின் கருப்பொருளாக்க மிக மிகச் சொற்பமான கற்பனைகளைக் கலந்திருக்கிறேன்.” என்று முன்னுரையில் கூறுகின்றார் நீர்கொழும்பு ந. தருமலிங்கப இத்தன்மைகள் தூரம் விலகும் சொந்தங்கள். என்ற சிறுகை நூலில் மெய்யாகின்றன.
இலங்கையில் இருந்து வெளிவரும் பிரதா6 பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் ஆசிரியர் எழுதி வந் சிறுகதைகளின் தொகுப்பாகக் காணப்படும் "தூர விலகும் சொந்த கள்.” என்னும் இந்நூலுக்கு தமிழ்மாமணி நா. சோமகாந்த6 அணிந்துரை எழுதியுள்ளார். மணிமேகலைப் பிரசுரமாக வெளிவந் இந்நூலில், 12 சிறுகதைகள் 158 பக்கங்களில் வெளிவந்துள்ளது நீர்கொழும்பு ந. தருமலிங்கத்தின் சிறுகதைகளில், எமது நாட்டில் கடந்த தசாப்தங்களில் ஏற்பட்ட விளைவுகள்; இளைஞர்கே பலர் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்தமை; அதனால் உறவுகள் பிரிந்தமை என்பவற்றை மிகத் தெளிவாகத் தத்துரூபமாக கூறுகின் விதம், அவருக்கே உரிய தனித்தும் ஆகும்.
இவ்வாறு ஒட்டுமொத்த சமூகப் பிரச்சினையை படம்பிடித்துக் காட்டுவதோடு, தனிமனிதப் பிரச்சினைகள் மனப்போராட்டங்கள், மற்றும் அதற்குத் தீவுகள் கொடுப்பதனையு
நூல் : சிந்தனையைக் கிளறும் சிரித்திரன் மகுடி
(கேள்வி - பதில்)
ஆசிரியர் : மாமனிதர் சிரித்திரன் சுந்தர்
தொகுப்பாசிரியர் : திக்கவயல்
சி தர்மகுலசிங்கம்
வெளியீடு: சுவைத்திரள் நகைச்சுவை ஏடு
மட்டக்களப்பு
பதிப்பு : ஜூன் 2005
விலை 15OOO
தமிழகத்திலிருந்து வெளிவரும் குமுதம் குங்குமம், ஆனந்த விகடன்வாரஇதழ்களினது முன்னர் கொழும்பிலிருந்து வெளிவந்து நின்று போன தாய்மொழி, இலங்கை விகட6 சஞ்சிகைகளினதும் பாணியில் யாழ்ப்பாணத் 鬆 லிருந்து வெளிவர ஆரம்பித்துள்ளது வேடிக்கை 07.03.2005இல் தன்முதற் பயணத்தை இரு வார இதழாக ஆரம்பித் இச்சஞ்சிகை நவம்பர் 2005ஆறாவது இதழிலிருந்து மாத இதழா மாற்றம் பெற்று வெளிவருகின்றது. முதல் இதழை விட பின்வந் இதழ்கள் வளர்ச்சியை நோக்கிச் செல்வதை அவதானிக் முடிகிறது.
முகவரி : 717, கே. கே. எஸ். வீதி, யாழ்ப்பாணம்.
இலங்கையின் பல்சுவை மாத இதழ் எ6 தனக்கான அடையாளப்படுத்தலுட6 அறுவடையின் முதல் இதழ் டிசம்பர் 2005 இ6 வெளிவந்துள்ளது. தமிழ் செய்தி தகவ6 மையத்தின் படையல் ஆக வெளிவந்துள் இவ்விதழ் அதன் போஷகர்களாக உள்ளவர்களில்
ஜசலை -
 
 
 
 

s
காணலாம். இது உளவியல் ரீதியாக நோக்கியிருப்பதைக்
று காட்டுகிறது. எடுத்துக்காட்டாக "தாம்பத்யம் ஒரு தவம்’ என்னும் ம், சிறுகதையில் இளைஞனாகிய சபேஸ்சின் மனதில் ஒரே போராட்டம். த நல்ல அழகான பெண் தனக்கு வாழ்க்கைத் துணையாக வரவேண்டும், அவ்வாறு கிடைத்தால் மட்டுமே வாழ்வு செழிக்கும் ன என்ற தப்பான சிந்தனையினால் மனம் குழம்பிப் போய், ஒரு த முதியவரிடம் தனது பிரச்சினையை ஒப்புக் கொடுத்து, அதற்குத் ங் தீர்வுகாண முற்படுகின்றான். அம்முதியவர் கூறும் அனுபவ ன் வார்த்தைகள் 'என்ர மனிசி உருவத்தால. எந்த விதத்திலயும் த எனக்குப் பொருத்தமில்லாதவள் தான். ஆனாலும் ராசா. அவளோட நு. நான் வாழ்ந்த வாழ்க்கை ஒரு தவம் மாதிரியடா. அப்பிடியொரு து வாழ்க்கை எல்லோருக்கும் கிடைக்கிறதில்லை.” என அமைகின்றது. iT 'காலத்தின் கண்ணாடி இலக்கியம்’, இவ்வாறு ள் கூறுவதற்கு ஏற்ப நீர்கொழும்பு ந. தருமலிங்கம், தனது 'தூர ற விலகும் சொந்தங்கள்.” என்னும் சிறுகதைத் தொகுதியில் கடந்த காலத்தை அப்படியே பதிவாக்கியுள்ளதோடு; மனித வர்க்கத்திற்கு ப் எல்லாக் காலத்திற்கும் பொருந்தக்கூடிய சிறுகதைகளைப் ா, படைத்துள்ளமையை இனங்காணமுடிகிறது.
D
- ராதி
நூல் நாட்டுக் கருடன் பதில்கள்
(கேள்வி - பதில்) ஆசிரியர் : திக்கவயல் சி தர்மகுலசிங்கம் வெளியீடு சுவைத்திரள் நகைச்சுவை ஏடு
மட்டக்களப்பு பதிப்பு : மே 2005 விலை 20000
தரத்திற்கேற்ப இதழின் உள்ளடக்கத்தில் கவனம் செலுத்தாதது
போல் தெரிகிறது. இனி வரும் இதழ்கள் இக்குறையை நீக்கி
வெளிவரும் என நம்புகின்றோம்.
முகவரி : 180, பருத்தித்துறை வீதி, யாழ்ப்பாணம்.
உரிமை நோக்கு
சமாதான மனித உரிமைப் பண்பாட்டு பணியகத்தின் (செப்பாக்) வெளியீடாக ‘உரிமை நோக்கு பங்குனி 2005 முதல் மாத இதழாக வெளிவருகின்றது. உரிமைகள் பற்றிய அறிவை வளர்ப்பதற்கு உதவியாக இவ்விதழை வெளியிடுகின்றோம். இவ்வாறு இதன் முதல் இதழின் ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விதழ் பரவலாகும் போது பலரது கவனத்தையும் ஈர்க்கும்.
முகவரி : 843, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்,
துகிலிகை
ஒவியத்துறைக்காக அண்மைக்காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் மூன்றாவது சஞ்சிகையாக துகிலிகை, காலாண்டிதழ் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் வெளியீடாக வெளிவர ஆரம்பித்துள்ளது. ஏற்கனவே
டிசெம்பர் 2005 酶

Page 63
வெளிவந்த ஒவியா. ஒவியத்தளிர்இதழ்களின் வடிவத்தை ஒத்ததாக துகிலிகையும் அமைந்துள்ளது. ஒவியத்துறை மாணவர்கள், ஆசிரியர்கள், ஆர்வலர்களுக்கு பயன்தரத்தக்க வகையில் ஒவியத் தகவல்களையும், கட்டுரைகளையும், ஏராளமான நிழற்படங்களையும் தாங்கி "துகிலிகை வெளிவந்துள்ளது.
முகவரி: சித்திரக் கலைத்துறை, யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லுாரி, கோப்பாய்.
ஆகவே பத்து ஆண்டுகளுக்கு முன்னர் கிழக்கிலிருந்து வெளிவந்து நான்கு இதழ்களுடன் நின்ற ஆகவே கலை இலக்கிய மாத இதழின் 5ஆவது இதழ் செப்ரெம்பர் 2005இல் வடக்கிலிருந்து ( வெளிவந்துள்ளது. இதழின் உள்ளடக்க ( விடயங்கள் பெரும்பாலும் LDM)/ é
பிரசுரங்களாகவே இருந்தாலும், கலை ( இலக்கியம் சார்ந்த ஆக்கபூர்வமான விடயங்களாக அவை அமைந்துள்ளன.
முகவரி: 309, துவாளி வீதி, இமையாணன் மேற்கு,
உடுப்பிட்டி, வல்வெட்டித்துறை.
‘அனைத்துச் சாத்தியப்பாடுகளுக்குமான திறவு கோல். புதிய உடைப்புகளுக்கும், புதிய வடிவங் களுக்கும், உள்ளடக்கங்களுக்குமான முயற்சி யாக திகழம்' என்ற ஆசிரியர் குழுவின் கருத்து டன் ஆவணி 2005இல் ‘கா முதலாவது இதழ் வெளிவந்துள்ளது. கவிதைகள், கட்டுரைகள், அ
சிறுகதை என்பவற்றைத் தாங்கி அட்டையுடன்
< அறிமு அறிமுகம் பகுதியில் நூல்கள், சஞ்சிகைகள், ஒலி நா
வசய்து வைக்கப்படும். இப் பகுதியில் தங்கள் படைப்
anasit merai sub Lusto úpäsassifiesör @rsöarGB SM)
அனுப்பினால் அது தொடர்பான சிறிய அறிமுக
ក្លអ៊ែនាបណ្ណ
ॐ
முயலிவோலே காத்திருப்போலே
ஒரு நல்ல வணிகர் திருக்குறளின் சிறப்பை உணர்ந்தவர்.
64
ஒரு நல்ல பேராசிரியரை அமர்த்தி மாலை நேரத்தில் இலவசமாகத் திருக்குறள் வகுப்புகளை நடத்தினார். வாரம் ஒரு முறை முப்பது பேர் ஆர்வத்தோடு வந்துகொண்டிருந்தனர்.
“இவ்வளவு பயனுள்ள வகுப்புக்கு முப்பது பேர்தானா” என்று வணிகருக்கு வருத்தம். ஒரு நூறு பேராவது வரவேண்டும் : என்று ஆசைப்பட்டார். “வருபவர்களுக்கு எல்லாம் பொங்கலும் எலுமிச்சை சாதமும் தரப்படும்” என்று அறிவித்தார்.
அடுத்த வாரம் முந்நூறு பேர் வந்தார்கள். ஆனால் பேராசிரியர் உரையை யாரும் கவனிக்கவில்லை.
“திருக்குறளில் எத்தனை அதிகாரம்?”
ஜூலை - டிசெம்
 
 
 
 
 
 
 
 
 

சேர்த்து20 பக்கங்களில் சிறிய அளவில் 'கா' வெளிவந்துள்ளது. முகவரி: நவரட்ணராஜா வித்தியாலய விதி,
ஆரையம்பதி - 02, மட்டக்களப்பு.
அகசலனம் நவீனகவிதைக்களமாக"அகசலனம் டிசெம்பர்
ಶಿಶ್ನ ಚಿನ್ತಿ
2005-பெப்ரவரி 2006 காலாண்டிற்குரிய இதழாக வெளிவந்துள்ளது. மலையகத்திலிருந்தும் இது போன்ற இதழ்களை வெளியிடமுடியும்
என்பதற்கு எடுத்துக்காட்டாக "அகசலனம் அமைந்துள்ளது. பல்வேறு வசதி குறைபாடுகள் -டே மத்தியிலும் இவ்விதழை வெளியிட முனைந்துள்ள வெளியீட்டாளர்கள் பாராட்டுதற்குரியவர்கள்.
மொழி பெயர்ப்புக் கவிதைகள் உட்பட பல கவிதைகளையும் கவிதை தொடர்பான கட்டுரையையும் தாங்கி 'அகசலனம்’ முதலாவது இதழ் வெளிவந்துள்ளது.
முகவரி: 151, பிரதான விதி,
பொகவந்தலாவ, இலங்கை.
மறுகா
புதிய தலைமுறைக்கான உடைப்பு எனக் கூறிக்கொண்டு 'மறுகா’ வின் 2ஆவது இதழ் கார்த்திகை - மார்கழி 2005 காலப்பகுதிக்குரிய இதழாக வெளிவந்துள்ளது. அட்டையுடன் இணைந்து 20 பக்கங்களில் காத்திரமான பல
விடயங்களை உள்ளடக்கி வெளிவந்துள்ள
மறுகாவின் இவ்விதழ் அதன்முதலாவது இதழின் அமைப்பில் இருந்து மாறுபட்டு வெளிவந்துள்ளது.
முகவரி 3 ஆரையம்பதி 03, மட்டக்களப்பு.
கம்
rimäessir மற்றும் இறுவட்டுக்கள் என்பன அறிமுகம்
Llm TTmLmmL S ATMLrlCTmtTm OmlmLmaamamLmLmekTlT TTmmLmmLLLL
TmO OMTOS sTTtLt TTTmmOLOmOTmLS L BrL ltTT LlLLSL0L ib Der GBG3D SD üb6Jugoib. 9 gólpass 5 gólů.
T. 15.
“ஒர் அதிகாரத்தில் எத்தனை பாடல்கள்?” இந்தச் சொற்பொழிவு முடிய எவ்வளவு நேரமாகும்?”
“பொங்கல் வாசம் அடிக்கிறதே! சூடாகச் சாப்பிட்டுவிட்டுக்
கட்கிறோமே.”
இப்படித் தொடர்ந்து தொல்லைகள் ஒரு வழியாக உணவு வழங்கப்பட்டது உணவு முடிந்ததுமே கூட்டமும் லைந்தது. போகும் போது ஒருவர் கேட்டார். ஒரு வேண்டுகோள்! அடுத்த வாரம் கொஞ்சம் சுண்டலும் சேர்த்துப் போடுவீர்களா?” நல்ல முயற்சிகளுக்கு வரவேற்பு குறைவாகத்தான் ருக்கும். அது மெல்ல மெல்லத்தான் வேரூன்றி வளரும் தவையற்ற கவர்ச்சிகள், அநீத முயற்சியையே விழ்த்துவிடும்.
நன்றி : உறவென்னும் பூஞ்சோலை Lirr 2005 百丁

Page 64
196う ളn. ഒ്
திருமறைக் கலாமன்றம் ஆரம்பிக்கப்பட் இவ்வாண்டுடன் 40 ஆண்டுகள் நிறைவு பெறுவதை சிறப்பிக்கும் முகமாக நாடு தழுவிய வகையி இலங்கையிலும், வெளிநாடுகளிலும் இயங்கும் அனைத்து திருமறைக் கலாமன்றங்களாலும் சிறியதும், பெரியதுமா பல்வேறுபட்ட நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது இந்த நிகழ்வுகளில் மிகப் பெரும் நிகழ்வுகளாக அமைந்த ஜூலை மாதத்தின் ஆரம்பத்திலும், இறுதியிலும் கொழும்பிலு யாழ்ப்பாணத்திலும் இலங்கையில் தமிழ், சிங்கள பிராந்தியங்களில் இயங்கும் 20 திருமறைக் கலாமன்றங்களு பல்லினச் சமூகங்களையும் இணைத்து நடத்திய கலை
சங்கமம்' நிகழ்வுகள் ஆகு ஜூலை மாதம் 01 ஆம், 02 ஆம் திகதிகளி கொழும்பில், பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தி மாலைப் பொழுதுகளில் கலைப் பாலமாக நிகழ்வுகள் ப அரங்கேறின்
முதல் நாள் நிகழ்வுகள் இருபது திருமறை கலாமன்றங்களும் வழங்கிய பல்வேறு வகைகளில் அமைந் நடனங்களாலும், குறு நாடக நிகழ்வுகளாலும் சிறப்பு பெற்றிருந்தது. முதல் நாள் நிகழ்வுகளுக்கு பிரதம அதீதியா திருந்தந்தையின் இலங்கைக்கான பிரதிநிதி பேராயர் மரியே செனாரி கலந்து சிறப்பித்தா இரண்டாம் நாள் நிகழ்வுகள் யாழ். திருமறை கலாமன்றத்தின் அரங்க நிகழ்வுகளைக் கொண்டதாக நாட மாலை யாக அமைந்தது. இதன்போது யாழ். திருமறை கலாமன்றத்தால் "ஞானசெளந்தரி (இசை நாடகம்), மீளவு எழுவோம்' (நவீன நாடகம்), 'கொல் ஈனுங் கொற்றL (கூத்துருவ நாடகம்) என்பன மேடையேற்றப்பட்டன. இரண்டா நாள் நிகழ்வுகளுக்கு பிரதம விருந்தினராக திருகோணம6ை மாவட்ட நீதிபதியும், மேலதிக மாவட்ட நீதிபதியுமான திரு மாணிக்கவாசகள் கணேசராஜாவும், சிறப்பு விருந்தினர்களா டாக்டர்களான ஏ. எம். செபஸ்ரியாம்பிள்ளை, அல்போன்சலி அத்னாசியார் ஆகியோரும் கலந்து சிறப்பித்தார்கள் ஆயிரக்கணக்கான பலதரப்பட்ட நிலைகளிலும் அமைந் பார்வையாளர்களின் சங்கமிப்பில் இரு நாள் நிகழ்வுகளு சிறப்பாக நடைபெற்றன
62 ஜூலை =
 

a
(B
在
இதன் தொடர்ச்சியில் இரண்டாவது 'கலைச் சங்கமம்' நிகழ்வுகள் ஜூலை மாதம் 29, 30, 31 ஆகிய திகதிகளில் யாழ்ப்பாணத்தில் திருமறைக் கலாமன்ற அரங்கில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றன.
இதன் போது 3 நாட்களிலும் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை திருமறைக் கலாமன்றத்தின் நாற்பதாண்டு கால வரலாற்றைச் சித்தரிக்கும் கண்காட்சி இல. 15, றக்கா வீதி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்றத்தின் கலாமுற்ற வளாகத்தில் இடம்பெற்றது. இக் கண்காட்சியை திருமறைக் கலாமன்றத்தின் நாற்பதாண்டு வரலாற்றில் அதன் முதல் அங்கத்தவராக தன்னைப் பதிவு செய்து கொண்டவரும், இன்று வரை அதனோடு இணைந்து நிற்கும் ஈழத்தின் புகழ்பெற்ற சிற்பக் கலைஞர்களில் ஒருவருமான திரு. ஏ. வி. ஆனந்தன் ஆரம்பித்து வைத்தார். கண்காட்சியில் திருமறைக் கலாமன்றத்தின் 40 ஆண்டுகால கலைப் பயணத்தில் தடம் பதித்த முக்கிய நிகழ்வுகளின் புகைப்படங்கள், பிரசுரங்கள், சுவரொட்டிகள், மன்ற வெளியீடுகளான நூல்கள், சஞ்சிகைகள், இசைத் தட்டுக்கள் எனப் பல்வேறுபட்ட ஆவணங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இவற்றுடன் சிற்பக் கலைஞர் ஏ. வி. ஆனந்தனின் கைவண்ணத்தில் உருவான சிற்பங்கள் பலவும், மன்ற ஒவியக் கலைவட்ட ஒவியர்கள் சிலரினால் வரையப்பட்ட மன்றச் செயற்பாடுகளை வெளிப்படுத்தும் ஒவியங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இக் கண்காட்சியை மூன்று நாட்களிலும் பெருமளவானோர் பார்வையிட்டார்கள்.
இரண்டாவது, மூன்றாவது நாட்களின் மாலைப் பொழுதுகள் கலை நிகழ்வுகளாலும், கலைப் பணியில் துணை நின்றோருக்கான கெளரவிப்புக்களாலும் சிறந்தோங்கியது. இந் நிகழ்வுகளுக்காக யாழ். திருமறைக் கலாமன்றமும், அதன் சூழலும் என்றுமில்லாத வகையில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. 40 ஆண்டு நிறைவைக் குறிக்கும் பிரமாண்டமான ‘அலங்கார வளைவு மன்றத்திற்கு முன்பாக, பிரதான வீதியில் அமைக்கப்பட்டிருந்தது. 20 திருமறைக் கலாமன்றங்களினதும் பல்வேறு வர்ணங்களில் அமைந்த கொடிகள் மன்ற முன்புற வீதியிலும், உள்ளே அரங்கின் முன்பாகவும் கண்ணைக் கவரும் வண்ணம் பறந்து கொண்டிருந்தன. வாழை,
டிசெம்பர் 2005

Page 65
தோரணங்கள் மன்ற பிரதான வாயிலை அலங்கரித்திருந்தன. இலங்கையில் யாழ்ப்பாணம் உட்பட கண்டி, புத்தளம், அனுராதபுரம், திருகோணமலை, காலி, வவுனியா, பொலநறுவை, ஹப்புத்தளை, மாத்தறை, மட்டக்களப்பு, அப்பாந்தோட்டை, இளவாலை, இரத்தினபுரி, முல்லைத்தீவு, பாணந்துறை, மன்னார், அவிசாவளை, கொழும்பு, மொனராகல என 20 பிரதேசங்களில் இருந்தும் வருகை தந்த மன்றத்தின் பல்லினங்களையும் சேர்ந்த கலைஞர்கள் சூழ்ந்திருக்க மாலை 5.50 மணியளவில் மன்ற இயக்குநர் நீ மரியசேவியர் அடிகளாரால் மன்றக் கொடி ஏற்றி வைக்கப்பட்ட வைபவத்துடன் மாலை நிகழ்வுகள் ஆரம்பமாகின. ஆரம்ப நிகழ்வாக 20 திருமறைக் கலாமன்றங்களில் இருந்தும் வருகை தந்த மன்ற இணைப்பாளர்கள், நிகழ்வுகளுக்கு அழைக்கப்பட்டிருந்த விருந்தினர்கள் ஆகியோர் மன்ற கலைத்துாது மணி மண்டபத்திற்கு முன்பாக இருந்து நாதஸ்வர, தவில் இசைகள் முழங்க; காவடி, கோலாட்டம், கரகம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் எனப் பாரம்பரியமான பல்வேறு கலாசார நடனங்களுடன் மன்ற பிரதான வாயில் ஊடாக அரங்கிற்கு அழைத்துவரப்பட்டார்கள். இதன் போது பிரதான வாயிலில் வைத்து விருந்தினர்கள் மாலை அணிவித்துக் கெளரவிக்கப்பட்டார்கள் தொடர்ந்து மங்கல விளக்கேற்றும் நிகழ்வு இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து அனைத்துத் திருமறைக் கலாமன்ற இணைப்பாளர்களும் தத்தமது மன்றக் கொடிகளுக்கு முன்பாக நின்று ஒரே நேரத்தில் தீபங்களை ஏற்றி வைத்தார்கள். தொடர்ந்து இறைவணக்கமும் அதன் பின் யுத்தம், சுனாமி இயற்கை அனர்த்தம் மற்றும் மன்றத்தில் பணியாற்றி மறைந்த கலைஞர்களுக்குமாக மெளன அஞ்சலியும் இடம்பெற்றது. தொடர்ந்து மன்றக் கீதமான 'கலைத் தாயை கரம் கூப்பித் தொழுவோம்' என்னும் பாடல் தமிழிலும் சிங்களத்திலும் உணர்வுபூர்வமாகப் பாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து அனைத்து மன்ற இணைப்பாளர்களும் மாலை அணிவிக்கப்பட்டுக் கெளரவிக்கப்பட்டார்கள். இதன் போது அரங்கின் பின் புறமாக இருந்து கண்டியன் நடனம் ஆடியபடி நடனக் குழுவினர் வர, அவர்கள் முன்பாக அணிவகுத்து வந்த சிறுவர்களால் நினைவுச் சின்னம் அனைத்து மன்ற இணைப்பாளர்களுக்கும் வழங்கப்பட்டது. இந் நிகழ்வுகளைத் தொடர்ந்து அரங்கில் நிகழ்வுகள் ஆரம்பமாகியது. முதல் நாள் நிகழ்வுகளுக்கு தலைமை தாங்க யாழ். மறைமாவட்ட ஆயர் மேதகு தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகையும், பிரதம விருந்தினராக யாழ். மாவட்ட நீதிபதி திரு. இ. த. விக்னராஜாவும் அழைக்கப்பட்டிருந்தார்கள். ஆசியுரைகளை வழங்க நல்லை ஆதின முதல்வர் பூரீலழரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், திருமறைக் கலாமன்ற மேலதிகப் பிரதி இயக்குநர்களில் ஒருவரான திரு. ஜனாப் முகமட் சாபீர், அநுராதபுரம் திருமறைக் கலாமன்ற ஆலோசகரான வண. மில்லவே தர்மகிர்த்தி தேரோ ஆகியோர் வருகைதந்திருந்தார்கள். யாழ் ஆயரின் தலைமை யுரையைத் தொடர்ந்து ஆசியுரைகளும் அதனைத் தொடர்ந்து பிரதம விருந்தினர் உரையும் இடம்பெற்றது. முன்னதாக வரவேற்புரை தமிழ், சிங்கள இரண்டு மொழிகளிலும் இடம்பெற்றது. இதன்போது தமிழில் திருமறைக் கலாமன்ற ஆலோசகரான திரு. பி. எஸ். அல்பிரட்டும், சிங்களத்தில்
而御卵凹面前 ஜூலை - டிெ

திருமறைக் கலாமன்ற மேலதிகப் பிரதி இயக்குநர்களில் ஒருவரான திருமதி செபாலி ரணசிங்கவும் வரவேற்புரையை வழங்கினார்கள்.
உரைகளைத் தொடர்ந்து கலை நிகழ்வுகளை 20 திருமறைக் கலாமன்றங்களும் பரத நடனம், கண்டியன் நடனம், பாரம்பரிய நடனம், கீழைத்தேச நடனம், புத்தாக்க நடனம், 'காமன் கிராமிய நடனம், சப்பிரகமுவ கலாசார நடனம், மெளன நடனம் எனப் பல்வேறுபட்ட நடனங்களை வழங்கி பார்வையாளரை பரவசத்தில் ஆழ்த்தின. ஒரே அரங்கில் பல்வேறுபட்ட கலாசார பின்னணிகளைக்கொண்ட நடனங்களை பார்வையிட முடிந்தமை நிகழ்வின் பெறுமானத்தை வெளிப்படுத்தியதுடன் பார்வையாளரை நிகழ்வுகளுடன் இரண்டறக் கலக்கவும் வைத்தது. கலை நிகழ்வுகளுக்கு இடையில் அம்பாந்தோட்டை திருமறைக் கலாமன்ற பிராந்திய இணைப்பாளர் திருமதி லலனி பிரதீபிகா குமாரசிறியின் சொற்பொழிவும், பாணந்துறை திருமறைக் கலாமன்றத்தைச் சேர்ந்த சட்டத்தரணி சுத் அந்துன்கேயின் பாடலும் இடம்பெற்றது.
நள்ளிரவை அண்மிக்கும் நேரம் வரை முதல் நாள் நிகழ்ச்சிகள் நடைபெற்று முடிந்தன.
கலைச் சங்கமத்தின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் திருமறைக் கலாமன்றத்தின் நாற்பதாண்டுகால வரலாற்றில் அதன் வளர்ச்சிக்கு தங்கள் உழைப்பால் உரமிட்ட கலைஞர்களில் சேவை மூப்பு, வயது மூப்பு, அர்ப்பணம், பற்றுறுதி, விசுவாசத்துடன் தொடர்ந்து பங்களிப்பு நல்கி வரும் கலைஞர்களில் ஒரு தொகுதியினரை கெளரவிக்கும் நிகழ்வினை பிரதானமாகக் கொண்டமைந்திருந்தது.
மூன்றாம் நாள் நிகழ்வுகளுக்கு மன்றப் பிரதி இயக்குநர் யோ, யோண்சன் ராஜ்குமார் தலைமை தாங்கினார். பிரதம விருந்தினராக யாழ். பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி நிலைய இணைப்பாளர் பேராசிரியர் அ. சண்முகதாஸ"ம், சிறப்பு விருந்தினர்களாக யாழ். பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் எஸ். சிவலிங்கராசாவும், யாழ். மாநகர ஆணையாளர் கலாநிதி க. குணராசாவும் வருகை தந்திருந்தார்கள்.
மூன்றாம் நாள் நிகழ்வுகளின் போதும், இரண்டாம் நாள் நிகழ்வுகளைப்போல் விருந்தினர்களும், கெளரவிக்கப்படும் கலைஞர்களும் பாரம்பரிய இசை மற்றும் கலைவடிவங்களுடன் பவனியாக மன்ற அரங்கிற்கு அழைத்து வரப்பட்டார்கள். தொடர்ந்து, மங்கல விளக்கேற்றல், இறைவணக்கம், மெளன அஞ்சலி என்பவற்றுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. திருமறைக் கலாமன்றத்தின் மூத்த கலைஞர் திரு. சி. எம். நெல்சனின் வரவேற்புரையைத் தொடர்ந்து, தலைமையுரை, விருந்தினர்கள் உரை, நடன நிகழ்வுகள் என்பன இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து திருமறைக் கலாமன்றத்தின் நாற்பதாண்டு நிறைவை முன்னிட்டு தயாரிக்கப்பட்ட கலைச்சுவடுகள்’ என்னும் மலர் வெளியிட்டு வைக்கப்பட்டது. நூலை பிரதம விருந்தினராக வருகை தந்திருந்த பேராசிரியர் அ. சண்முகதாஸ் வழங்க, யாழ். பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத் தலைவரான சூ சொலமன் சிறில் அதனைப் பெற்றுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து இரண்டாம் நாள் நிகழ்வுகளின் பிரதான நிகழ்வான கலைஞர் கெளரவிப்பு இடம்பெற்றது. மிகவும் உணர்வு பூர்வமானதாக, திட்டமிடப்பட்ட வகையில்
சம்பர் 2005 63

Page 66
இக் கெளரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. கலைஞர் கெளரவிப்பு இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக கெளரவிப்பு அமைந்தது. கெளரவிக்கப்படும் ஒவ்வொரு கலைஞர்களும் மன்றத்திற்கு ஆற்றிய பணிகள் வாசிக்கப்பட, அற்புதமான இசை ஓசைகள் அரங்கை நிறைக்க, கண்கவர் வானவேடிக்கைகள் வானில் தோன்ற, வெடிச் சத்தங்கள் முழங்க இக் கெளரவிப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன்போது 20 கலைஞர்கள் பொன்னாடை போர்த்தப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டுக் கெளரவிக்கப்பட்டார்கள். இக் கெளரவிப்பை பிரதம விருந்தினரும், சிறப்பு விருந்தினர்களும் கலைஞர்களுக்கு வழங்கினார்கள். இது தவிர, தமது நடிப்புத் திறமையால் மன்றத்திற்கு வளம் சேர்த்த இரு இளங்கலைஞர்கள் 'கலை ஞானச் செல்வன்' என்னும் பட்டம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டார்கள். இந் நிகழ்வுகளின் இன்னுமொரு சிறப்பம்சமாகக் குறிப்பிட வேண்டியதாக கலைஞர்கள் கெளரவிப்பு நிகழ்வுகளுக்கு முன்பாக இடம்பெற்ற நிகழ்வு அமைகின்றது. மன்ற இயக்குநர் நீ. மரியசேவியர் அடிகளாருக்கு, கெளரவிக்கப்படும் கலைஞர்கள் இணைந்து மாலை அணிவித்து கெளரவித்த நிகழ்ச்சிதான் அது. மெய்சிலிர்க்க வைத்த நிகழ்வாக இது அமைந்தது. கலைஞர் கெளரவிப்பு நிகழ்வைத் தொடர்ந்து மன்ற இயக்குநர் நீ மரியசேவியர் அடிகளாரின் நாற்பதாண்டு நிறைவு சிறப்புரை இடம்பெற்றது. அதில் அவர், மன்றத்தின் நாற்பதாண்டு காலப் பணி, எதிர்கொண்ட சவால்கள், வளர்ச்சி நிலைகள், கலைஞர்களின் அர்ப்பணம் மிகுந்த பங்களிப்பு என்பனபற்றி தெளிவாக விளக்கமளித்தார். தொடர்ந்து 'கலைச் சங்கமம் நிகழ்வுகளுக்கான நன்றியுரையை திருமறைக் கலாமன்ற ஊடக இணைப்பாளர் திரு. கி. செல்மர் எமில் வழங்கினார். நிறைவாக, சிறப்புக் கலை நிகழ்வாக திருமறைக் கலாமன்றத்தின் நாற்பதாண்டு நிறைவை முன்னிட்டு விசேடமாக தயாரிக்கப்பட்ட "கொல் ஈனுங் கொற்றம்' என்னும் கூத்துருவ நாடகம் இடம்பெற்றது. 'கலைச் சங்கமம்' நிகழ்வுகள் மன்ற வரலாற்றில் தடம் பதித்த முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக அமைந்து நிறைவு பெற்றது. ே நகைச்சுவை திருத்துை
தாகூர் ஒருமுறை ஒரு விருந்துக்குப் போயிருந்தார். உலகம் போற்றும் அந்தக் கவிஞருக்கு மாம்பழத்தின்மீது மிகுந்த பிரியம்.
விருந்து வைத்தவருக்கு இது தெரியும். ஒரு தட்டு நிறைய மாம்பழங்களை அடுக்கி வைத்திருந்தார். கவிஞருக்குக் கொள்ளை இன்பம். பளபளப்பான மாம்பழங்கள் கவர்ந்து இழுத்தன.
ஆசையோடு ஒன்றை எடுத்துக் கடித்தார். ஒரே ஏமாற்றம். மாம்பழத்தில் ஒரே நார்!
கவிஞர் உண்மையைச் சொல்ல நினைத்தார். ஆனால்
விருந்து வைத்த நண்பரின் மனம் புண்படாமல் அதைச் சொல்ல வேண்டும்.
ஒரு மாம்பழத்தைச் சுவைத்துவிட்டு நார் நிறைந்த 64 ஜூலை - டி

“கலைச் சங்கமம்’ நிகழ்வில்
கெளரவிக்கப்பட்ட கலைஞர்கள்
திரு. ஏ. வி. ஆனந்தன் திரு. ஜி. எட்வேட் திரு. வி. ஜெகநாதன் திரு. ம. தைரியநாதன் திரு. ம. யேசுதாசன் திரு. என். எஸ். ஜெயசிங்கம் திரு. ஏ. பிரான்சீஸ் ஜெனம் திரு. ஜி.பி. பேர்மினஸ் திரு. பெ. இம்மனுவேல் திரு. வி. ஜே. கொன்ஸ்ரன்ரைன் திரு. சி. எம். நெல்சன் திரு. அ. யோசப் திரு. ஏ.வி. டேமியன் சூரி திரு. அ. பாலதாஸ் திரு. சேவியர் நவநீதன் திருமதி. நிர்மலா சுகந்தநாதன் திரு. அ. பேக்மன் ஜெயராஜா திரு. பி. எஸ். அல்பிரட் திருமதி. ஜெனோவா அற்புதம்
திரு. அம்புறோஸ் பீற்றர் 03.12.2005 திருமறைக் கலாமன்ற தின நிகழ்வில்
கெளரவிக்கப்பட்டவர்கள்.
திரு. சு. சின்னராஜா
திரு. மு. தனபாலசிங்கம் கலைஞானச் செல்வன்’ விருது பெற்றோர்
திரு. எவ். யூல்ஸ் கொலின்
திரு. ஏ. ஆர். விஜயகுமார் (ر ----ܠ
அந்தக் கொட்டையைக் கையில் வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.
“ஏன் கொட்டையைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?
இன்னும் நிறையப் பழங்கள் இருக்கின்றன. சாப்பிடுங்கள் என்றார் நண்பர்.
“இல்லை என் தாடி வளர எவ்வளவோ நாட்கள் பிடித்தன. இந்தக் கொட்டைக்கு எப்படிச் சுலபமாக இவ்வளவு தாடி முளைத்தது?’ என்னு யோசித்தபடியே கேட்டார் கவிஞர். உண்மையை உணர்ந்து கொண்ட நண்பர் உடனே சிரித்துவிட்டார். உணிமையான குறைகளை நகைச் சுவையோடு இனிமையாகவும் விளங்க வைக்க நிறைய வழிகள் இருக்கின்றன.
நன்றி : உறவென்னும் பூஞ்சோலை
செம்பர் 2005 御卿西的

Page 67
GuUn. Gungdonedč Oné8 tonň
லுடலிக்கஉத்தரின் ஐரோப்பி00 பயணம்.
பயணத்திற்கான விசா கிடைத்த செய்தி அறிந்ததும் மிகவும் வேகமாக அனைத் துச் செயற்பாடுகளும் துரிதப்படுத்தப்பட்டன. 1997 செப்ரெம்பர் 10 ஆம் திகதி இரவு 700 மணிக்கு கலைஞர்கள் தங்கிநின்ற பற்றிமா விடுதியில் நன்றி வழிபாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. கொழும்பு மன்றத்தின் பிரதிநிதிகளும் அதில் கலந்து கொண்டனர். எல்லோர் மனங்களிலும் மகிழ்வும், நன்றியும் நிறைந்திருந்தது. இயக்குநர் மரியசேவியர் அடிகளின் கண்களில் பெரும் சாதனைச் சுவடாய் நீர்த்துளி படர்ந்திருந்தது. கொழும்பு மன்றத்தினரின் நட்புரிமையுடனான வழி அனுப்புதலுடன் கலைஞர்களைச் சுமந்த இருவாகனங்களும் கட்டுநாயக்கா விமான நிலையத்தை நோக்கிப் புறப்பட்டன. இரவு 10 மணியளவில் அனைவரும் விமான நிலையத்தினுள் நுழைந்தனர்.
கட்டுநாயக்கா விமான நிலையம் ஐரோப்பிய நாடொன்றின் வாயரில் என்று நினைக் கத் தோன் றுமளவிற்கு நவீனத்துவப்பட்டிருந்தது. அதற்குள் நுழைந்த கலைஞர்களின் கடவுச்சீட்டுக்கள், விமானச் சீட்டுக்கள் பரிசீலிக்கப்பட்டன. குடிவரவு குடியகல்வுப் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன. அதனைத்தொடர்ந்து பொருட்கள் பரீசீலிக்கப்பட்டன. 14 கலைஞர்களின் பொதிகள் மட்டுமன்றி, கண்காட்சிக்கென கொண்டுசெல்லப்படும் 30 மரச் செதுக்கற் சிலைகளும் தமது பொதிகளை விட்டு வெளியெடுக்கப்பட்டன. அனைவருக்கும் ஆச்சரியம் பரிசோதகள்கள்
酶 t ஜூலை - டிசெம்
 

சூழ்ந்து கொண்டனர். மரச்சிற்பங்களை புலனாய்வு செய்தனர். பயணிகளும் குழுமிநின்று வேடிக்கை பார்த்தனர். ஒருவகையில் முதற் சிற்ப கண் காட் சியே விமானநிலையத்துள் வைக் கப் பட்டது எனலாம் , எ ல் லாப் பரிசோதனைகளும் முடிவடைய பொதிகள், நகரும் நாடாக்களால் அனுப்பப்பட்டன. கலைஞர்களும் விமானத்தை நோக்கி நகர்ந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோரைச் சுமந்து செல்லும் வசதியுடைய A.O.M. விமானத்தின் சொகுசான ஆசனங்கள் கலைஞர்களை வரித்துக்கொண்டன. அப்போது இயக்குநர் மரியசேவியர் அடிகள் மூத்தகலைஞர் ஜி. பி. பேர்மினஸ்; அருகே வந்து "பார்த்தாயா பேர்மினஸ் நான் அன்றொருநாள் சொன்னேன் உங்களை ஜரோப்பாவுக்கு அழைத்துச் செல்வேன் என்று. இன்று நிறைவேறிவிட்டது.’ என்று பூரிப்புடன் கூறினார் . அவரின் மனதில் எழுந்த ஆனந்தத்துடன் AO.M. விமானமும் 11.9.1997 அதிகாலை 1.00 மணிக்கு வானில் எழுந்தது.
28ரப்பிய முன்னில்.
10 மணித்தியாலங்கள் விமானத்தில் பயணம். ஆகாய வெளியில் விமானம் மிதந்தாலும் கலைஞர்களின் மனங்களோ திருமறைக் கலாமன்றத்தின் வரலாற்றோடு மிதந்தன. 121097 அதிகாலைப் பாழுதில் AOM பிரான்ஸ் நாட்டின் ஓர்லி விமான நிலையத்தில் ரை இறங்கியது. போரின் சூழலுக்குள் மின்சாரம் கூட இல்லாது மற்றுகையிடப்பட்ட பிரதேசத்தில் வாழ்ந்த கலைஞர்கள் 21 ஆம் ாற்றாண்டின் நவீன உலக மனித வளர்ச்சியைக் கண்டு பிரமித்து ன்றனர். அதிகாலையிலும் காணிவேல் போலக் காட்சி தந்த Tரீஸ் நகரத்தில் AO.M. தரை இறங்கும்போது சுற்றிக் காட்டியபடி ரை இறங்கியது. கட்டுநாயக்கா விமானநிலையத்தை விட மிகவும் பரிதான ‘ஓர்லி விமான நிலையத்தில் கலைஞர்கள் ால்பதித்தனர். அதிகாலையின் இளங்குளிரும் வளர்ச்சியடைந்த |ந்நிய தேசத்தில் கால்வைக்கும் நினைவும் உடலை குளிரச் சய்தன.
வழக்கம் போல் கடவுச்சீட்டுகள் முதல், பொதிகள் ஈறாக |மான நிலைய அதிகாரிகளால் பரிசீலிக்கப்பட்டன. சிலைகளையும் Tடகப் பொருட்களையும் தமது இலத்திரனியல் கருவிகளால் ரிசோதனை செய்தனர். இயக்குநர் மரியசேவியர் அடிகள் வர்களுடன் மிகவும் சரளமாக பிரஞ்ச்" மொழியில் விளக்கம் காடுத்துக்கொண்டிருந்தார். உறையிடப்படாது வீட்டில் தயாரித்து லைஞர் ஒருவரால் எடுத்துவரப்பட்ட 'ஊறுகாய்ப் போத்தல் காண்டுசெல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. காரணம், சுகாதாரம் ருதியாம். தமது நாட்டின் ஆரோக்கியத்துடன் அந்த நாடு மிகவும் வனமாக இருந்தது. அனைத்துப் பரிசோதனைகளையும் டித்துக்கொண்டு விமான நிலையத்தின் வெளிவாயிலுக்கு ந்ததும் கலைஞர்களை வரவேற்க பிரான்ஸ் திருமறைக் லாமன்றக் கலைஞர்கள் காத்திருந்தனர். போர்க்காலப் லப்பெயர்வுடன் பிரான்சிற்கு வந்த மூத்த கலைஞர்கள் பலரும் |ங்கு காத்திருந்தனர்.
J前2005 65

Page 68
60 களில் இருந்து மன்றத்துடன் இணைந்து நின்றவரு பிரான்ஸ் திருமறைக் கலாமன்றத்தின் தலைவருமான பெஞ்சமி இம்மனுவேல், 70 களில் இருந்து மன்றத்துடன் இணைந் செயற்படுபவரும் பிரான்ஸ் திருமறைக் கலாமன்றத்தி செயலாளருமான டேமியன் சூரி, இருவரின் தலைமையில் ப இளங்கலைஞர்களும், சில கலைஞர்களின் உறவினர்களும் என பலர் காத்துநின்றனர். தமது தேசத்தில் இருந்து அதுவும் யுத்தத்தி சூழலுக்குள் இருந்து வருகின்றனர் என்ற ஆதங்கத்துட கலைஞர்களை ஆரத்தழுவி அன்பினைப் பகிர்ந்தனர். அந்த தேசத்தின் குளிரைத் தாங்கக் கூடிய மேலாடைகை ஒவ்வொருவருக்கும் கொடுத்து தமது வாகனத்தில் ஏற்றிச் சென்றன யாழ்ப்பாணக் கலைஞர்களைச் சுமந்தபடி வாகனங்கள் பாரீ நகரத்தின் தாவீதிகளில் விரைந்துகொண்டிருந்தன. பாரீஸ் புறநக பகுதியிலுள்ள 'ஒபவில்லியர்ஸ்' என்ற இடத்தில் கலைஞர்க தங்குவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு இருந்த ஒபவில்லியர்சில் மன்றத்தின் மூத்த கலைஞர்களில் ஒருவரா நாவாந்துறையைச் சேர்ந்த றெமீசியசின் இல்லத்தில் தங்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. கலைஞர்கள் தங்குவதற்கா ஏற்பாட்டை செய்துவிட்டு திரு. றெமீசியஸ் காத்திருந்தா அனைவரையும் ஆரத்தழுவி வரவேற்றார். அங்கு அனைவரு நட்புடன் உறவாடினர். மூத்த கலைஞர்கள் பழைய நாட நினைவுகளை மீட்டுக்கொண்டனர். 'எமது மண்ணில் இருந் வந்திருக்கிறீர்கள். அங்கு எப்படி?. போக்குவரத்துக்கள் எப்படி இராணுவப் பயம் எப்படி?. அகதி முகாம்கள் எப்படி இருக்கின்றன என்றவாறான தேக்கிவைக்கப்பட்ட ஏக்கங்கள் பல பரிமாறப்பட்ட அவற்றின்பின் இயக்குநர், பயணத்திட்டங்களை விபரித்தா திட்டத்தின்படி, முதலில் ஜேர்மனியிலும் பின்னர், ஹெலன் அதன்பின் இறுதியாக பாரீஸ் எனப் பயண ஒழுங்ககளை விபரித் தந்தையவர்கள் அன்று மாலையே ஜேர்மனிக்குச் செல்லவேண்டு என்றும் விபரித்தார். எனவே ஒய்விற்குப் பின் ஜேர்மனிக்கா தரைவழிப்பயணம் ஆரம்பமானது.
இரவு முழுவதும் ஜேர்மனிக்கான பயணம். பிரான் திருமறைக் கலாமன்ற இளைஞர்களே சாரதிகள், பயண பெல்ஜியத்தினூடாக மேற்கொள்ளப்பட்டது. 14 கலைஞர்களைய தாங்கிய 3 வாகனங்கள் புயல் வேகத்தில் நகர்ந்துகொண்டிருந்த ஆயிரக்கணக்கான மைல்களை காற்றுப்போல் கடந் கொண்டிருந்தன வாகனங்கள். அகன்ற வீதிகள், வீதியி வலப்புறத்தே ஒடும் வாகனங்கள், பல தெருக்களின் சந்திப் பல வீதித் தொகுதிகள், திருப்பங்கள், வீதிகளில் தானியங்கி கருவிகளில் செலுத்தப்படும் வரி, என்று அதிசயமா
66 ஜூலை
 

5ம் ன்
5/
60
|6Ն)
I']
ଭୌt
ன் த்
6IT
亦
6া
50.
60
நோக்குமளவிற்கு அந்த வளர்ச்சியடைந்த நாட்டின் போக்குவரத்து நடைமுறையை காணக் கூடியதாக இருந்தது. இதில் ஆச்சரியப்படத்தக்கதாக இருந்த விடயம் இத்தனை நுட்பமும், இயந்திரமயமும், வேகமும் மிக்க உலகோடு எம்மவர்கள் எப்படிப் பழக்கப்பட்டார்கள் என்பதே.
கலைஞர்களைச் சுமந்து சென்ற வாகனங்கள் ஜேர்மனியில் டட்லின் நகரில் கொண்டுவந்து இறக்கின. இயற்கை எழிலும், ரம்மியமான சூழலும் நிறைந்த ஜேர்மனி தேசத்தில் கலைஞர்கள் தங்களின் கால்களைப் பதித்தனர். டட்லின் நகர நிகழ்வுக்குப் பொறுப்பு வகித்த திரு சிங்கராஜா கலைஞர்களைப் பொறுப்பேற்றார்.
32(சனியில் ஆலை நிக்ழ்வுகள்
ஜேர்மனியில் மூன்று இடங்களில் நிகழ்வுகள் நடைபெறுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. டட்லின்', 'டோட்மூன்ட்', 'யூலிச் ஆகியனவே அந்த நகர்கள். பரந்து விரிந்த ஜேர்மனி தேசத்தின் ஒவ்வொரு இடங்களும் பல மைல் இடைவெளிகளைக் கொண்டவை. எனவே வெவ்வேறான இம்மூன்று நகள்களிலும் நிகழ்வுகள் ஒழுங்குபடுத்தப்பட்டன. முதல் நிகழ்வு டட்லின் நகரில் கலை ஆர்வலரான எஸ். எஸ். சிங்கராஜர் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பல மைல் தூரங்களில் இருந்து இந்த நிகழ்வுக்கு மக்கள் வருகை தந்தனர். டட்லின் நகர மண்டபத்தில் நடைபெற்ற 'வடலிக்கூத்தரின் முதலாவது அரங்கேற்றத்தைக் கண்டு கழிக்க புலம்பெயர்ந்த மண்ணின் உறவுகள் பலரும் வருகைதந்திருந்தனர். இந்நிகழ்வில் ஜேர்மனியில் வசிப்பவரான அருள்திரு எஸ்.ஜே. இம்மனுவேல் அடிகள் சிறப்புரை ஆற்றினார். திருமறைக் கலாமன்றத்தின் வளர்ச்சி பற்றியும், ஈழத்தமிழர் வாழ்வுப் புலத்தோடு கொண்ட உறவு பற்றியும், புலம்பெயர்ந்த வாழ்வு வரை நீட்சி பெறும் அதன் கலைத்தூதுப் பணிவரை விபரித்தார். அதனைத் தொடர்ந்து மரியசேவியர் அடிகள் வடலிக்கூத்தரின் ஐரோப்பியக் கலைப்பயணத்தின் நோக்கம் பற்றியும் எதிர்கொண்ட சவால்கள் பற்றியும் விபரித்தார்.
தொடர்ந்து "ஜெனோவா நாடகமும், "சத்தியவேள்வி நாடகமும் அங்கு அரங்கேறின. நாடக நிகழ்வுகள் பார்ப்போரைக் கட்டிவைத்திருந்தன என்று கூறும் அளவுக்கு அவர்களைக் கவர்ந்தன. ஒவ்வொரு எழுச்சிகளிலும் எழுந்த கைதட்டும், உணர்ச்சி வெளிப்பாடும், நிகழ்வுகளின் நிறைவில் அனைவரும் ஓடிவந்து கலைஞரை ஆரத்தழுவி அன்பை வெளிப்படுத்திய விதமும் ஆற்றுகையின் வெற்றிக்குச் சான்றாக அமைந்தன. மனநிறைவோடு நிகழ்வுகளை நிறைவு செய்த கலைஞர்களை அடுத்த நாள் நிகழ்வுக்கு 'டோட்மூண்ட் நகரம் அழைத்தது.
'டோட்மூண்ட் நகரில் தமிழர் கலாசாலை நிகழ்வுக்கான ஒழுங்குகளை மேற்கொண்டிருந்தது. புலம்பெயர்ந்த மக்களின் உறவுப்பாலமாக தமிழையும், தமிழர்தம் கலாசாரத்தையும் போதித்துக்கொண்டிருந்த பெருமை தமிழர் கலாசாலையையே சாரும் சிறுவர்களுக்கான தமிழ் வகுப்புக்களுடன் நடனம், சங்கீதம் என்று எமது கலைகளையும் கற்றுக்கொடுக்கும் நிலையமாகவும், பல்வேறு வெளியீடுகளை வெளியிட்டுக் கொண்டிருக்கும் நிலையமாகவும் அது செயற்பட்டு வந்தது. 90களின் ஆரம்பத்தில் யாழ். மன்றத்தில் நடன ஆசிரியையாக பணியாற்றிய திருமதி s! D6DT ராஜ்குமார் உட்பட பலர் அங்கு பணியாற்றினர். வடலிக்கூத்தரின் கலைப்பயணத்தினை அறிந்த அவர்களே தாமாக முன்வந்து மிகக் குறுகியகால ஆயத்தத்தில் டோட்மூண்ட் நிகழ்வை ஒழுங்குசெய்திருந்தனர். டோட் மூண்ட் தமிழர் கலாசாலை
- டிசெம்பர் 2005 酶

Page 69
நிர்வாகியாகிய திரு. குமார் அவர்கள் இந்நிகழ்வுக்கான ஒழுங்குகளை மேற்கொண்டிருந்தார். காலையில் ஏ.வி. ஆனந்தன் அவர்களின் சிற்பக் கண்காட்சியும், மாலையில் 'சகாதமனிதம். நாடகமும் நிகழ்த்தப்பட்டன.
ஜேர்மனியர் உட்பட புலம்பெயர்ந்த எம்மவர் ஈறாகப் பலரும் வந்து சிற்பக்கண்காட்சியைப் பார்வையிட்டனர். கணிசமானவர்கள் சிற்பங்களின் தரம்பற்றிச் சிலாகித்துப் பேசினர். சில ஜேர்மனியர், ஒருசில சிற்பங்களை விலைக்கு வாங்குவதற்கு ஆவல்ட்பட்டனர். ஏ.வி. ஆனந்தன் அதனை விரும்பாத காரணத்தால் பல்வேறு கோணங்களிலும் போட்டோ எடுத்துச் சென்றனர். யாழ்ப்பாணப் பண்பாட்டின் வெளிப்பாடாகவும் அதேவேளை யுத்த அவலங்களைச் சித்தரித்ததாகவும் இருந்த சிற்பங்கள் அதிகம் பாராட்டப்பட்டன.
கண்காட்சியைத்தொடர்ந்து தமிழர் கலாசாலை மண்டபத்தில் 'சாகாத மனிதம்' நாடகம் மேடையேற்றப்பட்டது. 95ஆம் ஆண்டின் இடப்பெயர்வைச் சித்தரித்த அந்நாடகத்தை பார்த்தோர் உறைந்துபோயிருந்தனர். தாங்கள் காணாத அந்தச்சோகத்தின் சுவடுகளை மேடையில் கண்டவர்கள் முகங்களில் கண்ணிர்த்துளிகள். தமது உறவினர்களின் சோகங்களுடன் அவர்களை அந்த நாடகம் சங்கமிக்க வைத்ததென்ற பெருமை கலைஞர்களுக்கு, 'சாகாத மனிதம்' இரண்டாம் காட்சியாகவும் மீளவும் நிகழ்த்தப்பட்டது. நிகழ்வுகளின் நிறைவில் நிர்வாகிகள் கலைஞர்களைப் பாராட்டி அன்பளிப்புக்களை வழங்கினர். “மீளவும் எமது மண்ணை தரிசிக்கச் செய்தீர்கள் வருடந்தோறும் வாருங்கள்’ என்று வரவேற்று உரைதந்து வழியனுப்பி வைத்தனர் 'தமிழர் கலாசாலை' உறவுகள்.
பல்வேறு இடங்கவுைத்தத்ேதசை
மறுநாள் ஜேர்மனி ஆன்மீகப் பணியகம் கலைஞர்களை பொறுப்பேற்றது. அருட்தந்தை அ.பெ. ஜெயசேகரம் அடிகள் அதன் இயக்குநராக இருந்தார். அவர் முதலில் கலைஞர்கள் முக்கிய இடங்களைப் பார்வையிடுவதற்கு வசதியாக தமது வாகனத்தையும், அதன் சாரதியாக அவரது உதவியாளராக செயற்பட்ட நூபன் அவர்களையும் அனுப்பி வைத்தார். ஜேர்மனியில் குறிப்பாக டட்லின், டோட்மூண்ட் பிரதேசங்கள் உள்ளிட்ட பல முக்கிய இடங்களை றுபன் சுற்றிக்காட்டினார். ஜேர்மனியின் இயற்கை எழில்சிந்துகின்ற பல்வேறு இடங்களையும் பார்வையிடக்கூடியதாக இருந்தது. வைற் சேச்’ என அழைக்கப்படும், மிகப்பெரிய பளிங்குக்கல் தேவாலயத்தையும் அதில் அமைந்திருந்த கலைத்திறன் வாய்ந்த கண்ணாடி ஓவியங்கள், அழகிய வேலைப்பாடுகள் உடைய தூண்கள் எனப் பலவற்றையும் கலைஞர்கள் பார்த்து வியந்தனர். அதனைத் தொடர்ந்து Cologne என்னும் பிரசித்திபெற்ற பிரமாண்டமான கதிற்றலை பார்வையிட்டனர். அதன்பின் பேராயர் அவர்களின் பாரம்பரியப் பண்போடு அமைக்கப்பட்ட இல்லத்தை தரிசித்தனர். அங்கு திருச்சபை இயங்குகின்ற முறைமை, அங்குள்ள நிர்வாகக்கட்டமைப்பு போன்ற பலவற்றையும் அங்கு உரையாடித் தெரிந்து கொண்டனர்.
பின்பு கலைஞர்கள் Aldenhajan என்ற இடத்திற்கு அழைத்துவரப்பட்டனர். அங்கு நின்று மறுநாள் 16ஆம் திகதி மீளவும் பல இடங்களைப் பார்வை இடுவதற்கு அனுப்பப்பட்டனர். திரு. ஏ.வி. ஆனந்தன் அவர்களும், திரு. ஜிபி பேர்மினஸ் அவர்களும் "ஸ்ருட்காட்' என்ற இடத்திற்குச் சென்றனர். அங்கு நடைபெற்ற கண்காட்சியொன்றில் மன்றத்தின் வெளியீடுகள் சிலவற்றை காட்சிப்படுத்தியும் விற்பனை செய்தும் திரும்பினர். ஏனையவர்கள்
6.
LJt
அ
appa ஜூலை - டிசெம்
 

Teoofigorgo முன்
பூஜென் என்னும் இடத்தில் இருந்த சாள்ஸ் மன்னனின் ாதனசாலைக்கும் அதனைத் தொடர்ந்து கொலனி' ன்னுமிடத்திலுள்ள நூதனசாலைக்கும் சென்று பார்வையிட்டனர். சாள்ஸ் மன்னனின் நூதனசாலை, மிகுந்த லைத்திறனுடன் அமைக்கப்பட்டிருந்தது மட்டுமன்றி, மன்னனால் யன்படுத்தப்பட்ட கதிரைபோன்ற தளபாடங்கள் உட்பட பல பாருட்களை அரிதலாகத் தன்னகத்தே கொண்டிருந்தது. இதனைப் ார்ப்பதற்கான நுழைவுக் கட்டணம்கூட இலங்கைப் பணத்தின் பறுமதியில் பல நூறு ரூபாய்கள். பல மணிநேரம் சாள்ஸ் ன்னனின் அரண்மனை வளாகத்தை கலைஞர்கள் பார்வையிட்டனர். :த்தனை வளர்ச்சியடைந்த நாட்டிலும் தமது பாரம்பரியங்களைக் ட்டிக்காப்பதில் அந்த நாடு எடுத்துவரும் முயற்சி ஆச்சரியத்தையே தாற்றுவித்தது. சாள்ஸ் மன்னனின் மாளிகையைத் தொடர்ந்து கொலனி என்னும் நூதனசாலையை பார்வையிடும் சந்தர்ப்பம் டைத்தது. ஜேர்மனிய வரலாற்றோடு தொடர்புடைய பல விடயங்கள் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக ரண்டாம் உலகமாக யுத்தத்தின் குறியீடாய் பல விடயங்கள் ாட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. ஜேர்மனிய வரலாற்றினைச் த்தரிக்கும் ஓவியங்கள் தொடராக வரையப்பட்டிருந்தன. பல்வேறு ரலாற்றுப் பொருட்களும் பாதுகாக்கப்பட்டிருந்தன. அந்த ரலாற்றின் சுவடுகளுக்குள் மனம் மூழ்கி வெளி எழுந்துவந்தனர் டலிக்கூத்தர்கள். அதன்பின்னர் ஜேர்மனிய தெருக்கள், பட்டணச் துக்கங்கள், இயற்கை எழில் சூழ்ந்த பூங்காக்கள் என லவற்றையும் தரிசத்துவிட்டு தங்குமிடத்திற்குத் திரும்பினர்.
லிச் நகரில் நிக்ழ்வு
ஜேர்மனிய ஆன்மீகப் பணியகம், ஜேர்மனி திருமறைக் லாமன்ற இணைப்பாளர் திரு. திருச்செல்வம் அவர்களிடம் லைஞர்களை ஒப்படைத்தது. இளவாலையைச் சேர்ந்த திருவாளர் ருச்செல்வம் ஜேர்மனியில் திருமறைக் கலாமன்றத்தினை யக்கிவந்ததுடன் அங்கு பல நிகழ்ச்சிகளையும் நடத்திக் காண்டிருந்தார். அவரும் அவரது குடும்பத்தினரும் இன்முகத்துடன் லைஞர்களை வரவேற்று நாட்டுச்சூழல் பற்றி பரஸ்பரம் புரிமையுடன் உரையாடினார். தொடர்ந்து பெரிய அளவில் யூலிச் கரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வுபற்றி விபரித்தனர். மிகப் பரிய அளவில் அந்நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. துண்டுப் ரசுரங்களும் அச்சிடப்பட்டிருந்தன. “முதல் முதலாக தமிழீழக் லைஞர்கள் ஜேர்மனியில் வழங்கும் அற்புதக் கலை நிகழ்ச்சிகள்', எமது புரதான கலை வளத்தினை நினைவுக்கெடுத்து மகிழ ஓர்
320 KK
ரியவாய்ப்பு.”, “உங்கள் மாலைப்பொழுதை மகிழ்ச்சியிலும்
J前2005 67

Page 70
தாயக உணர்விலும் நிரம்பவைத்து சிந்தனைக்குப் பெருவிருந்து படைத்துத் தரவிருக்கும் இவ்வரிய நிகழ்ச்சியில் பங்குகொள்ள தயங்காதீர்கள்.”, “தமிழீழக் கலைஞரை ஊக்குவிப்போம். என்றவாறான பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டிருந்தன. அதுமட்டுமன்றி TRT போன்ற தமிழ் வானொலிகளிலும் இந்நிகழ்வுகள் பற்றிய முன்விளம்பரங்கள் செய்யப்பட்டுக் கொண்டிருந்தன.
'கலைத்துது கெவுரவிசி
நாடகமாலை' எனப் பெயரிடப்பட்ட அந்த நிகழ்வு யூலிச்நகரில் Stadthale இல் நிகழ்வதற்கு ஏற்பாடாகி இருந்தது 18ஆம் திகதி மாலை 6மணிக்கு நிகழ்வு ஆரம்பமாகியது. மண்டபட நிறைந்த மக்கள் அந்நிகழ்வுகளைப் பார்வையிட வந்திருந்தனர் மண்டபத்தின் முன் அரங்கில் சிற்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன சிற்பங்களைப் பார்வையிட்டபடி நிகழ்வுகளின் மண்டபத்தில் மக்கள் கால்பதித்தனர். அங்கு நிகழ்வுகளின் தொடக்கத்தில் திரு திருச்செல்வம் அவர்களின் வரவேற்புரையும், அருட்கலாநித ஜெயசேகரம் அவர்களின் சிறப்புரையும் இடம்பெற்றது. அதில் அவர் ஈழத் தமிழரின் இன்னலுற்ற வாழ்வு பற்றியும், இவ்வாறான கலைப் பயணங்களின் தேவைபற்றியும் எடுத்துரைத்தார். தொடர்ந்து ஜேர்மன் திருமறைக்கலாமன்ற இளைஞர்களின் நடன நிகழ்வு நடைபெற்றது. அதன்பின்னர் வடலிக்கூத்தரின் 'சத்திய கேள்வி இசைநாடகமும், ஜெனோவா நாடகமும் மேடையேற்றப்பட்டன. நாடகங்கள் பார்ப்போரை அதிகமாகக் கவர்ந்தன. அவர்கள் காட்டிய எதிர்வினைகள், கலைஞர்களையும் அதிகளவில உற்சாகப்படுத்தியது. நிகழ்வுகளின் நிறைவில் மன்றத்திற்கும் இயக்குநருக்கும் பெருமைசேர்க்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு நிகழ்வினை அரங்கினில் மேற்கொண்டனர். கலைஞர்கள் அனைவரையும் ஒருங்குசேர்த்து மேடையில் அழைத்து கெளரவித்ததுடன், ஜேர்மனி ஆன்மீகப் பணியகம்', இயக்குந மரியசேவியர் அடிகளாருக்கு 'கலைத்தூது’ என்ற பட்டத்தை வழங்கிக் கெளரவித்தது. இதனை வழங்கிய அருட்கலாநித ஜெயசேகரம் அடிகள் “தமிழுக்குத் தொண்டாற்றிய தனிநாயL அடிகளுக்கு தமிழ்த்துது என்ற பட்டம் வழங்கப்பட்டது. இப்போது கலைக்குத் தொண்டாற்றும் மரியசேவியர் அடிகளுக்கு 'கலைத்தூது என்ற பட்டம் வழங்கிக் கெளரவிப்பதில் ஜேர்மனி ஆன்மீக பணியகம் பேருவகை அடைகிறது.’ என உரையாற்றி, பொன்னாடை போர்த்தி கெளரவித்தார். மண்டபமே கரகோஷங்களால் அதிர்ந்தது
68 ஜூலை =
 

d.
கலைஞர்களின் கண்களும் ஆனந்தத்தால் நீள்மல்கின. கடந்த 35வருடங்களுக்கு மேலாகத் தன்னைக் கரைத்துக் கொண்டவருக்கு காலத்தால் நிலைக்கும் கெளரவத்தை ஆன்மீகப்பணியகம், பொருத்தங்கண்டு வழங்கியது. அது திருமறைக் கலாமன்றத்தின் கலைச்சேவைக்கு வழங்கப்பட்ட அங்கீகாரமாகவே எல்லோராலும் கருதப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிற்பக்கலைஞன் ஏ.வி. ஆனந்தனுக்கு அருங்கலைச் சுவடுகளின் காவலன்' என்ற பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன் எல்லாக் கலைஞர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
நிகழ்வுகளின் நிறைவில் வந்திருந்த மக்கள் கலைஞர்களை அகமகிழ்வுடன் பாராட்டியதுடன் சொந்த மண்ணின் நிலைமைகள் பற்றிக் கலந்துரையாடினர். "எங்கட கிராமத்து மண்ணில குந்தியிருந்து கூத்துப் பார்த்ததுபோல இருந்தது." என்றும் "நாட்டுக்கூத்தை இவ்வளவு கவர்ச்சியாக செய்வீங்களென்று நான் எதிர்பார்க்க இல்லை.", "இனி எங்க கூத்துப் பார்க்கப் போறனென்டு நினைச்சனான். அற்புதமாகச் செய்து காட்டிப் போட்டியள் இனிச்செத்தாலும் பரவாயில்லை" (வயோதிபர்) என பலவாறான உணர்வலைகளை அந்த மக்கள் எழுப்பிநின்றனர். இந்நிகழ்வைப் பார்வையிட வருகைதந்த ஐரோப்பியரையும் நாட்டுக்கூத்து கவர்ந்ததாக அவர்கள் வந்து பாராட்டிச் சென்றனர். எனவே ஜேர்மனியில் செய்த மிகுந்த நிறைவைத்தந்த நிகழ்வாக இந்த நாடகமாலை நிகழ்வு அமைந்தது. நிறைவில் வேசங்கலைத்த கலைஞர்கள் அடுத்த நாள் நிகழ்வுக்குத் தயாரானார்கள்.
மீளவும் மறுநாள் ஆன்மீகப்பணியகத்தின் ஏற்பாட்டில் 'டோட்மூண்டில் காலையில் சிற்பக்கண்காட்சியும், மாலையில் கலை நிகழ்வுகளும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. கண்காட்சியைப் பார்வையிட பல ஜேர்மனியர் வருகை தந்தனர். ஆனந்தனின் சிற்பங்கள் அவர்களை வெகுவாகக் கவர்ந்தன. அவர்கள் எடுத்த புகைப்படங்கள் பின்னர் ஜேர்மனிய பத்திரிகைகளில் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.
கண்காட்சியைத் தொடர்ந்து 'சாகாத மனிதம் நாடகமும் 'ஜெனோவா நாடகமும் மேடையேற்றப்பட்டன. ஏகோபித்த பாராட்டுக்கள் கிடைத்தன. 'சாகாத மனிதம் பலரையும் தமது சொந்த தேசத்துக்கு அழைத்துச்சென்று கண்ணிாவிட வைத்தது என்று பலரும் குறிப்பிட்டனர். அவ்வாறே ஜெனோவா, கூத்து, இசை, நவீனமென்ற முப்பிரிவுகளைக் கொண்டிருந்ததனால் அந்த நாடகமும் பலரையும் கவர்ந்தது. அந்நாடகங்களை பார்வையிட வந்த, 80களில் ஈழத்து அரங்கில் தீவிரமாக செய்ற்பட்ட நெறியாளர்களில் ஒருவரான திரு. றேமன் அவர்கள் நாடகங்களைப் பாராட்டியதுடன், தான் நாடகத் துறையில் இருந்து விடுபட்டு பலகாலம் என்றும், தொடர்ந்தும் ஈடுபடவேண்டுமென்ற முனைப்பை இந்நாடகங்கள் தருவதாகக் கூறினார். அவரோடு முன்னைய காலங்களில் இணைந்து நடித்தவர்களான பேர்மினஸ், விஜயன் போன்றோர் அதிகமாக உரையாடி அன்பினைப் பரிமாறிக் கொண்டனர். அவ்வாறே கலைஞர்களின் நிகழ்வினை அறிந்து நோர்வேயிலிருந்து ஜேர்மனிக்கு வந்தார் அருள்திரு இருதயம் அடிகள். அவரும் தமது பாராட்டுகளை தெரிவித்து கலைஞர்களுடன் அளவளாவிச் சென்றார்.
இந்நிகழ்வுகளை பார்வையிட வந்த வடலிக்கூத்தரின் உறவினர்கள் பலரும் கலைஞர்களை சந்தித்து அன்பினைப் பரிமாறிக் கொண்டனர். சிலர் தமது உறவினர் வீடுகளுக்குச் சென்று வரவும் அனுமதிக்கப்பட்டனர்.
(பயணங்கள் தொடரும்.)
டிசெம்பர் 2005

Page 71
தொடர்ந்தும் நான்காவது ஆண்டாக இவ்வாண்டு
மாதம் முழுவதும் இலங்கையில் இயங்கும் திருமறைக் கலாமன்றங்கள் ஊடாகவும் அவ்வ களில் அனுஷ்டிக்கப்பட்டது. స్త్రజ్ఞప్తి
ஆரம்பத்தில் ஒரு வாரத்தைக் கொண்டதாக இத்தினம் - பின்னர் ஒரு மாதமாக மாற்றப்பட்டு அது
பட்டு வருகின்றது. முதலாவது கொடி வாரம் 28 03 டிசெம்பர் 2002 வரை அனுஷ்டிக்கப்பட்டது ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தி இ முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இன, மத, மொழி பேதமற்ற கலைக் உருவாக்கல். கலை வழிப்பணியில் மானிட இளந்தலைமுறைக்கு கலைத்தளம் அம்ை మఐTijgభు. - -- அமைதிக்காக கலைப் பணிபுரிதல். இளைஞர்களையும், சிறுவர்களையும் , ஆளுமையும் மிக்கவர்களாக உருவா P) எமது கலை மரபுகளை பேணிப் பாதுகாத் சந்ததிக்கு கையளித்தல், - எனப் பலவாறான நோக்கங்களை முன் மாதம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. களை அடைவதற்காகவே இதன் மூலம் கிடைக்கு பயன்படுத்தப்படுகின்றது.
கொடி மாதம் அனுஷ்டிக்கப்படும் காலத்தில் கலாமன்ற அங்கத்தவர்கள் சிறுவர்கள், இளைஞர்கள் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவருமே ஒன் கொடி விற்பனையில் ஈடுபடுவது சிறப்பானதாகும். கலாமன்றத்தின் செயற்பாடுகளை அனைவரிடமும் வும் இந் நாட்கள் பயன்படுகின்றன.
இதற்கான ஆதரவும் மக்களிடம் இருந்து அளவில் கிடைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்க
 

கணிசமான தாகும்.

Page 72
ANVERSARY
 

Design & Print. Judeson. 077.7 446973