கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கமத்தொழில் விளக்கம் 1970.04-06

Page 1
يخهم سمي :
ܦ݁ܽܘܗܝ ܊
கமத்தொழில்
இலங்கை கமத்தொழிற் பகுதிய
விவசாயிகளின் முத்தி
ஆரம்பம் : 190
ஆசிரியர் : க. சிறீ பத்மநாதன்
ஆலோசகர் : டெறிக் ஷொக்மன்
உதவி ஆசிரியர் : செ. சுந்தரலிங்கம்,
ஒளிப்பட ஓவியர்கள் : ரி. பி. மகிந்தரத்ன, டபிள்யூ. ராமனுயக.
密
ஒவியர்
எச். ஏ. பொன்சேகா
விநியோக உதவியாளர் சி. பரமநாதர்
தி
பிரதி தயாரிப்பாளர்
செ. ந. நவரத்தினசிங்கம்
சித்திரை-ஆனி, 1970
藥
கமத்தொழில் விரிவாக்க உதவிகட்
இலங்கை அரசாங்க அழுத்தகர் திணைக்க 8--------J 11771-25,008 (2/70)
 
 
 

) விளக்கம்
பினரால் வெளியிடப்பெறும்
|ங்கள் வெளியீடு
பொதுசன நூலகம்
6, ஜனவரி 藝 韌 翻
ATypIUKUTSEPTILO.
அட்டைப்பட விளக்கம்
எம்நாட்டில் விருத்தி செய்த பிஜி-11-11 என்னும் கெப் புதிய நெல் வருக்கத்தின் வயற் தோற்றத்தையும், புந்நெல் வருக்கத்தை விருத்தி செய்து உதவிய விவசாய ஆராய்ச்சியாளர் திரு. ந. விக்னராசா அவர்களையும் இவ்விதழ் அட்டையில் பிரசுரித்து மகிழ்கிருேம். அதிசய நல் என உலகப் பிரசித்தி பெற்ற அய்யார்-8" நெல் பருக்கத்தையும் வென்று அதிக விளைவைத் தந்துளது ஜி-11-11 என்னும் இப்புதிய நெல். எச்-4 என்னும் நல்ல வழங்கிய, குருணுகலை மாவட்டத்திலுள்ள பத்தல காடை அரசினர் நெல் ஆராய்ச்சிப் பண்ணையிலேயே ஜி-11-11 நெல்லும் விருத்தி செய்யப்பட்டது. இந்நெல் ~ ற்றிய அறிமுகக் கட்டுரையை திரு. விக்னராசா அவர்களே மத்தொழில் விளக்கம் 1970 தை-பங்குனி இதழில் ழுதியிருந்தார்.
மலர் 14, இதழ் 1 (புதிய தொகுதி)
பிரிவினுல் 5 ழங்கப்பெற்றது.
ஊத்திற் பதிப்பிக்கப்பெற்றது. ്

Page 2
(பெனிட்ருேதயோன்
இந்தப் பெயரை மறவாதீர்கள் எந்தப் பயிருக்கும் ஏற்ற பாதுகாப்பு நெல்லைப் பாதிக்கும் நெற் சந்துக்கு
கொப்புள ஈ,
நெல் ஈ, பனிப்பூ
மூட்டுப் பூச்சி, இலேயரிப்புழுக்களையு
&as:
கீகே ஆப்டி ஒரு ஆசக  ை மர
leége
58 ஒக் அடிதeை
ஆல்மறக்கும் ஒரு ஆடி வக ஆக்
ఇతడు "
0bb 4 arates é: 2 alna. A Wong
عصرفهٔ متوسعه یع میوه هایی در صدمه های
அன்னுசியைப்
புகையிலே, க பாதிக்கும் எல் லது பொலித்தி பொலித்தியோ தது. மிகவும்
2 esa. Gu:G550
4 அவு. பொலித்தி 9 அவு, பொலித்தி
பொலித்தியோ யான விஷயமற
இலவச அறிவு
கொள்ளுங்கள்
பயிர்களைக் காத் பேயர் பீடை நா
மூலப் பொருட் ச உற்பத்தியாளர் : பேயர், ஜெர்மன்
 
 
 
 
 
 
 
 
 

1004)
இதுவே! த்தி, தத்துக்கிளி, ச்சி, ஐங்கோண üb,
பாதிக்கும் மீலியக்ஸ் புழுவையும் ாய்கறி, வெங்காயம், பருத்தியைப் லாப் பூச்சி புழுக்களையும் அழிக்க வல் யோன், 渕 二 ன் ஈ.சி.100% அதி வன்மை வாய்ந்
சிக்கனமானது.
யான் ஈ.சி. 100% = 4 அவு. பெனிட்றே
தயோன் 50% Buffasis f. č. 100% = 8
If yo 露易
LLUITGÖT Fé. 100% = l6 , 翡
ன் ஒரு பேயர் தயாரிப்பு, நம்பிக்கை இந்த விநியோகஸ்தரிடம் கிடைக்கும். ரைச் சேவைக்கு எம்முடன் தொடர்பு 鰲 。
துப் பணலாபம் பெறப் பாவியுங்கள் == 1976ািীg56ীr.
த்து இலங்கையில் தயாரிப்போர்:
ஹேக்கெம் லிமிட்டெட் 枋。 400, டீன்ஸ் வீதி, கொழும்பு 10,

Page 3
R s * முதல் மழையுடன் தொடங்கலாம் X இலகுவாக நிலத்தைப் பண்படுத்தலாம் * பத்து நாட்களில் வின * மண்வெட்டியினுலோ, ஏராலோ அல்லது உழவு இ பார்க்க இருமடங்கு நிலம் பண்படுத்தலாம் * உங்க
'இராமக்சோன்" ஒரு சாதாரண களை கொ பாவிக்கப்படும் முறையான ஓர் இரசாயன
மேலும் விபரங்களுக்கு கீழ்க்க கெமிக்கல் இண்ட்ஸ் தபால் பெட்டி
 
 
 
 
 
 
 

ப்புமுறையைபின்பற்றி DAAD
பெறக்கூடாது?
ாதுசன நூலகம்
யாழ்ப்பாணம்.
o sogeo a se sea
இe s ைஇை
நிலத்தைப் பண்படுத்தலாம் * ஒரே முறையில் த விதைக்கலாம x களைகள் இல் ல | த பயிர் யந்திரத்தினுலோ பண்படுத்தப்படும் நிலத்திலும் ா நேரம், பணம், கூலி சேமிக்கப்படும்
ல்லிமடடும் அல்ல தற்தாலத்தில் நெற்பயிரி விளைச்சலில் 2. PGAாணும் விலாசத்திற்கு எழுதுக
நீஸ் (கொழும்பு) லிமிடெட்
இலக்கம் 352, கொழும்பு.

Page 4
இதோ! சொகுசான 855.
நகரங்களில் குழாய் நீர் வச மல கூட வசதிகளை அனு குளமோ, பாசன இயந்திர உபயோகிக்கக் கூடிய சொகு மட்பாண்டக் கூட்டுத்தாபனம் போன்ற குந்து கலம்.
உறுதி வாயந்த, | பளிங்கு போன்ற
குந்து கலம் ஒன் றின் விலை ஆக
96.5/-
சொகுசான வாழ்க்ை இலங்கை மட்பாண்டச்
GLID 63 விபரங்களுக்கு இலங்கை மட்பா
பாண்ஸ் பிளேஸ், கொழும்
 

தார சாதனம் !
நியுள்ளவர்கள் மட்டுமே சொகுசான விக்கலாமென்பதில்லை. கிணருே, மோ எந்த வாய்ப்புள்ளவர்களும் சான சுகாதார சாதனம், இலங்கை தயாரிக்கும் தரமுயர்ந்த, பளிங்கு
கைக்குச் gAğÈGEGOOIT DITriggED
5 கூட்டுத்தாபனத்தின் குந்து
ண்டக் கூட்டுத்தாபனம் 7. - தொலைபேசி ; 92649,

Page 5
அறவே களைகளை அழிக்குமென நிரூபி சேர்கோப்பூர் 36%, 3.4 டீ.பீ.ஏ. கொண் முதல் 75% வரை அது விளைச்சலப் பெ நெல் விதைத்து 7-21 ட்களுள் அன் பாவிக்க வேண்டும். ይጣ‛
இக் களைகொல்லியைத் தெளிப்பது
இது சுலபம்; மிகச் சிக்கினம். சேர்கோப்பூர், பேயர் விவசாய
ரசாயனப் பொருள். பேயர்
பாருள்கள், ஜெர்மனியில் 100 வருட தொழில் நுட்ப ஆராய்ச்சியின் ஆதாரம் கொண்டவை.
இக்கனமாக, சிறப்பாகப் பயிர்களைக் காப்பது  ைசேர்கோப்பூர், அது, களவு செய்ய முடியாத போத்தலிற் வேடக்கும்.
852GITEKSTĖS GESI
உற்பத்தியாளர்: (ểuuff
மேற்கு ஜெர்மனி
 
 
 
 

& 5 LJUD டது. 35%
இலங்கையில் விநியோகஸ்தர்: ஹேக்கெம் லிமிட்டெட்
400, டீன்ஸ் வீதி, கொழும்பு 10

Page 6
அமோகமான விளைச்சலை உறுதிப்படு கலவை அளவு கொண்ட சீ சீ சீ
தோட்டங்களில் உபயோகியுங்கள். தனித்தனி ரகமான உரக் கலவைக
எங்கள் 60 வருட நில ஆராய்ச்சிப் களோ புதிய பண்ணைகளோ, எவ
உதவும். நாம் வழங்கும் இலவச விளைச்சலையும் வருவாயையும் பெரு
நிகரற்ற நிறைந்த
鲇@
உடனடி விநியோகம் உத்தரவாதம்
国国园
கொழும்பு கொமர்ஷல் உரப்பிரிவு
த. பெ. எண் : 433
கொழும்பு 2.
தொலைபேசி 295 51
 
 

த்தி அதிக வருவாயைப் பெற, சரியான உரக் கலவைகளை உங்கள் காய்கறித்
வெவ்வேறு காய்கறிகளுக்கும் ஏற்ற i உண்டு.
பரிசோதனை அனுபவம், பழைய வயல் றின் மண்ணச் செழிக்கச் செய்யவும் நில வள ஆராய்ச்சி உங்கள் காய்கறி க்கட்டும்.
விளைச்சலும்
வருவாயும்
//

Page 7
ஆஹா இ உலர்வலயத் கலிக்கொத் தென்னையே யப்பானில் வாசகர் அர
LD)) !(Up5önpu; குடியேற்றத் வானுெலி வி
66 guild 6
எங்கள் பதி அணிற்பிள்? கோனல் 5ே
மாணவர் சோ
卫星。
15.
16.
17.
S.
19.
20.
Lr TSITSI i E
ΕΕΙΟΣ ΣΙ ΣΙ ΣΙ ΣΤ விவசாயப் பூ மண்ணில்கத்தரிக்குடும் கோழி வளர் 56gu (
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சித்திரை-ஆனி 1970 இதழ் 1
பக்கம் விக்கும்! ஆசிரியர் கருத்துரை 9 தில் திராட்சைச் செய்கை சி. ஜோன் 10 தொகுப்பு 17 ாடான விடுகதைகள் மு. இராமலிங்கம் 18 நான் கண்ட விவசாயம் சி. நடேசன் 22 ங்கம் ஐ. இராமசாமி 30 ம் வழங்கினர் வே. ஆறுமுகம் 32 திட்டங்கள் இரண்டு (p. 5 LUTFIT 36 விவசாயக் கருத்தரங்கு படத்தொகுப்பு 38
வளர்த்த விஞ்ஞானிகள் 43
5) சி. கந்தையா 47 எளயும் மாதுளையும் தா. ந. மாணிக்கவாசகர் 48 ETសាr 5Tüល மா. அனந்தசயனன் 50
2s)
ளே பிடுங்குவதேன் G) + Le LosÜzu Tssyrio 56 L2 ந. சண்முகம் 58 பூச்சியியல்-4 GLUT. DIT sofiassau TGFassi 61 一直李 சி. கந்தையா 64 Duru u unij-Gguisbas சி. அருள்ராசா 67 ill-14 ந. சண்முகம் 69 கசிபன் 75
Z Z
1.
இவ்விதழில் வெளியாகும் கட்டுரைகளி லுள்ள கருத்துகட்கு அவற்றை எழுதிய வர்களே பொறுப்புடையவர்கள். இச்சஞ்சிகை யில் வெளியாகும் விடயங்களை மறுபிரசுரஞ் செய்ய விரும்புவோர் எம்மிடம் முன் உத்தரவு பெறவேண்டும். -

Page 8
sᎭᏩᏓᏃéᎨᏃéᎨᏃéᏓZéᎨᏃᏩᎨZée4ᏤéᎨZéᎨZéᎨZéᎨᏪéᎨZéᏓZéᎨZé
அதிகம் பயிரிட
மணித்தியாலத்திற்கு
酯 Ěg56íT விரும்
*மணித்தியாலத்திற்கு 10,000 !
இந்த பம்பில் ஏற்படக்கூடிய பழுது
அளிக்கப்படும் என
LLELSLLALASLcLLT ALLLAALLLLLAALLLLLAALLLLLALALLLL AALLLLLSAcLT ALLA LALS
 
 

LcL0LccLcLccLccL0LcLLcccLccL0LLc LTcLc LLcLcLccLLY
அதிக தண்ணீர் !
10,000 கலன் தண்ணீரை பும் இடத்திலிருந்து
"ILI T3F6OT LILD"
மூலம் பெறலாம்
(2’ பெற்றேல் ;
மண்ணெண்ணெய் பம்ப்)
பிரசித்தி பெற்ற நம்பிக்கையான வாக்கர், வூல்ஸ்லி நீர்ப்பாசனம் மற்றும் சகலநீர் இறைப்பு வேலை களுக்குமான பெற்றேல்/மண் ணெண்ணெய் எஞ்ஜின் உள்ள பம்ப். இப்பொழுது இலங்கையில் வாக்கர் இன்டஸ்ட்ரீஸ் (சிலோன்) லிமிட்டெட்டில் தயாரிக்கப் படுகிறது.
கலன்கள் *இயக்கச் செலவுகுறைவு ான பராமரிப்பு
இன்டஸ்ட்ரீஸ் தயாரிப்பு
துகள் செப்பனிட்டு பாதுகாப்பு சேவைகளும் ா உத்தரவாதம் பெற்றது.
அன் கம்பனி லிமிட்.
Lcc Lcc0ccccL0 zL00LccLSLLLYYYYLL S TzJLLSLLAcLLcLLcLLc LLcLLz
然

Page 9
ஆஹா,
கதை, பாலர் படிக்கும் கதை. * சி, சி,
திராட்சை புளிக்கும் !" என திருவாளர் நரி யனுர் கூறிய கதை. எட்டாத பழம் புளிக்கும் என்னும் பாடம் புகட்டும் உளவியற் கதை
இது.
இன்னுமொரு கதை. அண்மையில் இலங் கையில் உருவான நவீன கதை. அதுவும் திராட்சைப் பழம் புளிக்கும் என்ற கதைதான். ஆணுல், 6 TLDg5! 5 FIL-Gij 3FTG5 LI LUI TG5 ibi திராட்சை புளிக்கும் என்ற விபரத்தில் மாத் திரம் ஒரு முக்கியமான வேறுபாடு. இதில் எமது
நாட்டுத் திராட்சைச் செய்கையாளரும் பாவ
னையாளருமே கதாபாத்திரங்கள்.
நவீன திராட்சைக் கதையிலும் எட்டாத
பழம் புளிக்கும் ' என்னும் உளவியல் உண்டு.
சித்திரை-ஆனி, 1970
 
 

னிக்கும் !
nursessor sit"
ாழ்ப்பாணம். இங்கு உற்பத்தியான திராட்சைப் பழம் இறத் தலொன்று எட்டு ரூபா விலையானுல் பெரும் பாலோருக்கு * எட்டாத பழம் என்ற பொருளில் புளிக்கும். பிறிதொரு முக் கிய காரணமும் உண்டு. புளிப்பான திராட் சையை நாட்டியதால் புளிப்பான பழங்களைப் பெற்றிருக்கலாம் என்பதே அது.
இனிப்பான திராட்சை வருக்கங்களைப் பயி
ரிட்டு இனிப்பான பழங்களைப் பெற்ருல் பாவ னையாளரின் ஆதரவு பெருகும் ; செய்கை யாளருக்கு இலாபம் அதிகரிக்கும் , திராட்சைச் செய்கையில் அநேகர் ஈடுபடுவர். விளைவு: எட்டாத விலையிலிருக்கும் திராட்சை எட்டிய விலைக்கு இறங்கும். 'ஆஹா, இனிக்கும்! எமது திராட்சை ' என்ற நிலை அப்போது உருவாகிவிடும்.

Page 10
உலர்வலயத்தில் தி
திராட்சையின் வரலாறு
ஆதியில் இருந்து பயிரிடப்பட்டு வந்த பயிர் களுள் திராட்சையும் ஒன்று. இது பற்றிய குறிப்புகள் கிறிஸ்த்துவிற்கு முன் 4,000 வரு டத்திய பதிவேடுகளிலும் காணப்படுகின்றன. ஆரம்பத்தில் திராட்சை உவைன் தயாரிப் பதற்கு உபயோகப்படுத்தப்பட்டது. இலங்கை யிலும் நீண்ட காலமாகத் திராட்சை செய்கை பண்ணப்பட்டு வருகின்றபோதிலும் உறுதிப் படுத்தும் பதிவுகள் எதுவுமில்லை. பதினெட் டாம் நூற்றண்டின் இறுதியில் மேஜர் பன 6)Jéru$)6ÖT G3 éELIQUG) (Major Panavasine du Capel) என்பவரால் கல்மிட்டிக்கு கொண்டு வரப்பட்டது. பின்பு சிறிஸ்தவ தூதுக் குழுக்கள் தங்கள் கோயில் வளவுகளில் பயிரிட ஆரம்பித்
தனா.
(அ) திராட்சையின் தாவரவியல்
திராட்சை அம்பலிடே (Ampelidae) என்னும் குடும்பத்தில் விற்ரிஸ் (Vitis) என்னும் சாதியைச் சேர்ந்தது. வினிபெரு (Winitera) என்னும் ஐரோப்பிய இனமும் லப்றஸ்கா (abrusca) என்னும் அமெரிக்க இனமும் முறையே விற் ரிஸ்வினிபெரு, விற்ரிஸ்லபுறஸ்கா எனப் பெய ரிடப்பட்டன. இவ்விரு இனங்களையும் சேர்ந்த 8,000 க்கு மேற்பட்ட வருக்கங்கள் செய்கை பண்ணப்படுகின்றன. காட்டில், திராட்சைச்செடி வளர்வது காணப்பட்டது. உயர்ந்த மரங்க ளின் நுனிவரை படர்ந்து அதிக பரப்பை மூடி வளர்வதெனினும் குறைவாகவே காய்த் தன. திராட்சை வளர்க்கப்படும் பொழுது இதன் வளர்ச்சி கட்டுப்படுத்தப்பட்டு வாழ்க்கைக் காலம் அதிக அளவு குறைக்கப்படுகின்றது. இங்ங்ணம் வாழ்க்கைக்காலம் குறைவுபடுவதை விளைச்சலில் ஏற்படும் பெரு உயர்வு நிறைவு படுத்துகின்றது. இலங்கையில் காணப்படும்
O

சி. ஜோன் அரசினர் ஆராய்ச்சிப் பணணை மகாவிலுபபள்ளம.
ராட்சைச் செய்கை
விரிஸ் இன்டிக்கா என்னும் உள்நாட்டுக் காட்டு வருக்கம் பயன்மிகக் குறைவானது.
(ஆ) தாவரவியலும் வளர்ச்சியுருவவியலும்
மூலவேர், பக்கவேர்கள் எனத் திராட்சை யில் வேர்கள் இரு வகைப்படும். துண்டத்தில் வளர்ந்த கன்றி லும் பார்க்க நாற்
@l அமெரிக்க இனத் தின் வேர்ப்பட்டை மிகவும் தடித்த தாக விருக்கும். இதல்ை அமெ ரிக்க இனம் பை லெக்செருப் பூச்சியின் (Phylexera insect) தாக்கத்தைத் தாங்க வல்லதாகவிருக்கின்றது. இப்பூச்சி உலகில் திராட்சை பயிரிடும் இடங்களில் மிகவும் சேதம் விளைவிப்பதொன்றகும்.
முற்றிய அங்குரம் கபில நிறமாகவும் முற் ருத அங்குரம் பச்சை நிறமுடையதாகவும் இருக்கும். இன்று காணப்படுவனவற்றின் அங் குரம் நீளமாகவும் வசையும் தன்மையின தாகவும் கணுக்கள் சம இடைவெளியினை உடை யனவாகவும் இருக்கின்றன. ஒன்றுவிட்ட இலே ஒழுங்கும் கணுவுக்கொரு இலையும் கொண்டன. இலக்கெதிராக வளரும் பற்றிகள் கொடி படருவதற்கு உதவும் விற்ரிஸ் வினிபெருவில் பற்றிகள் தொடர்பில்லாமல் அதாவது ஒவ் வொரு மூன்றவது இலையிலும் இருக்கும்.
கமத்தொழில் விளக்கம்

Page 11
ஆனல் விற்ரிஸ்-லப்றஸ்காவில் பற்றிகள் தொ டர்பாக அதாவது ஒவ்வொரு இலைக்கெதிராக வும் ஒரு பற்றியோ அல்லது குலையோ இருக் கும். ஒவ்வொரு இலை அடியிலும் ஒரு முக் கிய அரும்பும் பல துணை அரும்புகளும் காணப்படும். துணை அரும்புகள் பக்கக் சிளை களாகும். பிரதான அரும்பு காயமுறின் இர ண்டாவது அரும்பு வளர்ச்சி பெறும். சில வேளைகளில் இரண்டு மூன்று அரும்புகள் ஒரே கணுவில் வளருவதைக் காணமுடியும். வினிபெருவின் இலைகள் பெரிதாகவும் அதிக மாக ஐந்து சோணைகளையுடையதாகவுமிருக்கும். விற்ரிஸ் லப்றஸ்காவின் இலை விற்ரிஸ் வினி பெருவிலும் பார்க்க பெரியதும் கரடுமுரடான துமாகும். கரடுமுரடாக விருப்பதனுல் பங்கசு நோய்களைத் தாங்கவல்லனவாகவும் இருக்கின் றன. இலைக்கெதிரான நுனி வளர்முறையான பூந்துணரில் சிறிய பூக்கள் காணப்படும். பூக் கள் இருபாலினவாகும். பூக்கள் தன்மகரந் தச் சேர்க்கையோ அயன்மகரந்தச் சேர்க்கை யோ அடைகின்றன. பழம் சதையம். இது மிகுந்த பொருளாதார முக்கியத்துவமுடையது.
திராட்சையின் பல்வேறு வகைகள்
திராட்சையைக் கீழ்க்காணும் வகுப்புக்களாகப் பிரிக்கலாம்.
உண்பதற்கு உவைன் தயாரிப்பதற்கு புட்டியிலடைத்தலிற்கு வற்றல் தயாரிப்பதற்கு சாறு எடுப்பதற்கு அலங்காரம் செய்வதற்கு
உணவுக்கான திராட்சையில் குலைகள் நடுத் தரமானவையாகவும் பழங்கள் நெருக்கமின் றியும் இருக்கும். அத்துடன் பழங்கள் பெரியன வாகவும் அதிக இனிமையும், குறைந்த அமி லத்தன்மையும் உடையன. உவைன் தயாரிப் பதற்கான முந்திரிகையில் குலைகள் பெரியன. ஆணுல் பழங்கள் நெருக்கமாகவிருக்கும். பழங்கள் சிறிதாகவும், இனிமை குறைவாக
6յԼԻ, g) LULJff அமிலத்தன்மையுடையனவுமா கும். இவ்வருக்கங்கள் பொதுவாக உயர் விளைச் சல் தருவன. புட்டியில் அடைப்பதற்கும் சாறு எடுப்பதற்குமான திராட்சை உணவுக்கான திராட்சையை ஒத்தது. ஆனல் பதனிடலுக் கான நல்ல சதைப்பற்றுடையது. அலங்காரத் திராட்சையில் குவைகள் கவர்ச்சியாக இருக்கும்.
சித்திரை-ஆனி 1970
t
(

இவை அலங்கரிப்பதற்கு உபயோகிக்கப்படும். பற்றல் திராட்சையில் குலைகள் சிறியன, இனி 1)ԼԸեւ IIT6ÕT6006).1, விதையற்றவை. வற்றல் நிராட்சைப் பழங்கள் அதிகமாக செந்நிறமு
泷LULjā了。
Ljuffrö GlgFusióOng
அ) சுவாத்தியமும் மண்ணும்
திராட்சை உப அயனமண்டலப் பயிராகை ால் குளிர்பிரதேசங்களில் இது இலையுதிர் நன்மையுடையது. இங்கு ஒரு போகத்தில் மாத்திரம் காய்த்து தொடர்ந்து மாரியில் உறங்கு நிலையில் இருக்கும். வருடத்தில் ஒரு முறை மாத்திரம் பூத்துக் காய்க்கும். இலங் கையைப் போன்ற அயனமண்டலச் சூழ்நிலை பில் இது வருடம் முழுவதும் பசுமையாக விருக்கும். திராட்சைச் செய்கையில் மழை வீழ்ச்சி முக்கியமானது. பெருமழை பெய்யும் இடங்களுக்கு இது உகப்பற்றது. பெருமழை பில் இது மேலதிக வீரியம் பெற்று பதிய வளர்ச்சி அதிகரிப்பதனுல் விளைவு பாதிக் ப்ெபடும். மழை காலத்தில் உள்ள உயர் ஈரப் தனினுல் திராட்சை தூள்பூஞ்சணம் முத லிய பூஞ்சன நோய்களுக்கு இலகுவில் உட் படுகின்றது. இப்பூஞ்சன நோய்கள் வளர்ச்சி யைத் தாக்கி விளைவைப் பாதிக்கும். அத்துடன் மழை காலத்தில் உற்பத்தியாகும் பழங்கள் புளிப்பாகவும் சுவையற்றும் இருக்கும். வர்த் தக ரீதியான செய்கைக்கு குறைவான மழை வீழ்ச்சி பெறும் இடங்களே உகந்தன. உயர்ந்த பாயுமண்டல ஈரப்பதன், மழை, மப்பு மந் தாரமான காலநிலை போன்றன. பழுக்கும் ாலத்தில் இருப்பின் பழங்களில் வெல்லம் உற்பத்தியாவதைக் குறைக்கும்.
பலரக மண்வகைகளில் திராட்சையைப் பயிரி டலாம். எனினும் ஆழமான நீர் வடிப்புள்ள ாரம் குறைவான மண் சிறப்பானது. இம் ண்ணில் நீர்ப்பாசனத்தை ஒழுங்குபடுத்து பதன் மூலம் பயிரைக் குறை உறங்கு நிலைக்கு ட்படுத்தி அதன் வீரியத்தையும் செளக் யத்தையும் குறிப்பிடத்தகுந்த நீண்ட
o೨೮ நிலை நிறுத்தலாம்.
ஆ) நிலம் பண்படுத்தலும் நடுகையும்
பெருமளவில் பயிரிடும் பொழுது முன்னைய
யிர் நன்கு அகற்றப்பட்டு அடிக்கட்டைகளும்
கற்றப்பட வேண்டும். பின்பு நிலம் பண்

Page 12
படுத்தப்பட்டு மண்அரிமானத்தைத் தடுப்பு தற்காக மண் பாதுகாப்பு முறைகள் கையாளட் படவேண்டும். வீட்டுத் தோட்டத்தில் இவை அவசியமில்லை. மணல் இருவாட்டித் தரையில் மூன்றடிச் சதுர மூன்றடி ஆழக் குழிகளில் திராட்சை தனித்தனி நாட்டப்படும். இக்குழி கள் மேல்மண்ணும் நன்கு உக்கிய மாட்டெரு வும் சம அளவில் கலந்த கலவையால் நிரப் பப்படும். களி இருவாட்டி மண்ணுயின் கலவை யில் மணலும் சேர்க்கப்படும். நடுகைக் குழி கள் நடுகைக்கு முன் ஒன்றரை மாத காலத் திற்கு ஆறவிடப்பட வேண்டும். நடுகையின் போது குழிக்கு ஒரு இருத்தல் வீதம் சுப்பர் பொசுபேற்று சேர்ப்பதுவும் அறிவுக்கிசைந்த தாகும். ܒܢܝ
(இ) நடுகைமுறைகளும் நடுகைத் தூரமும்
திராட்சையின் நடுகைத் தூரம் மண்ணின் வளம், வருக்கத்தின் வீரியம், நடுகை முறை ஆதியனவற்றில் தங்கியுள்ளது. வளம் மிகக் கூடிய மண்ணிலும் வீரியம் பொருந்திய வருக் கங்களுக்கும் நடுகைத்தூரம் கூடுதலாக இருத் தல் வேண்டும். மகாஇலுப்பள்ளம, றகங்கலை ஆகிய இடங்களில் உள்ள ஆராய்ச்சி நிலையங் களில் நிலைக்குத்து வேலிமுறை அல்லது நிபின்முறை, பந்தல் அல்லது ஆர்பர் முறை, செடிமுறை அல்லது குமிழ்முறை ஆதியநடுகை முறைகள் பரீட்சித்துப் பார்க்கப்பட்டன.
இம்மூன்று நடுகை முறைகளுக்குமான நடு கைத் தூரங்களாவன :
வேலிமுறை-வரிசையில் 12 அடி வரிசை
களுக்கிடையில் 8 அடி. ܡܢ பந்தல் முறை-வரிசையில் 12 அடி வரிசை களுக்கிடையில் 24 அடி. செடி முறை-5 அடிச் சதுரம்.
(ஈ) நடுகைப் பொருள்கள்
திராட்சை, விதைகள் மூலமோ துண்டங்கள் மூலமோ இனம் பெருக்கப்படும். விதையில் இருந்து வளரும் செடி பயன்தர அதிககாலப் ஆவதுடன் பண்புகளில் பெற்றேரை முற்றக் ஒத்திராதாகையால் பொதுவாக விதைமூலம் இனம் பெருக்கப்படுவதில்லை. விருத்தித்திட்டங் களுக்கு மாத்திரம் விதை உபயோகிக்கப்படும் பத்து அங்குல நீளமான அல்லது 3-4 கணுக்க ளுள்ள துண்டங்கள் பதியம் வைக்கப்படும்
12

துண்டங்கள் பொலித்தீன் உறைகளிலோ அன்றி வயலில் நேராகவோ நாட்டப்படும். பொலித்தீன் உறைமுறை அதிகம் கையாளப் பட்டு வருகின்றது. கத்தரிக்கும் காலத்தில் துண்டங்கள் பெற்றுக்கொள்ளலாம். பொலித் தீன் உறைகளில் உண்டுபண்ணப்பட்டவை மழை கால ஆரம்பத்துடன் வயலில் நாட்டப் படும். ஆனுல் கோடையில் நீர்ப்பாசனத்தின் கீழ் நிலைபெறவைப்பின் நன்று. இங்ங்னம் செய்வது பூஞ்சன நோய் இடர்ப்பாடுகளைக் குறைக்கும்.
நடுகைக்கு முன்பு வேர் சேதப்படாதவாறு பொலித்தின் உறை அகற்றப்பட வேண்டும். நடுகையின் பொழுது புதிதாக ஏற்பட்ட வளர் ச்சி முற்றியிருத்தல் வேண்டும். முன்னைய பிரதான கிளையை இரு அரும்புகள் தவிர்த்து நீக்கிவிடுவதால் செடி வீரியமாக வளர்ச்சி அடையும். பழைய துண்டத்தில் இருந்து வள ரும் நலிந்த கிளைகள் அனைத்தும் கூரிய கத்தரியினுல் அகற்றப்படவேண்டும்.
(உ) வருக்கங்கள்
மகாஇலுப்பள்ளம, றகங்கலை ஆகிய இடங் களில் உள்ள ஆராய்ச்சி நிலையங்களில் பின் வரும் வருக்கங்கள் நம்பிக்கையூட்டுவனவாக இருக்கின்றன.
(1) செமில்லோன் (Semilon) (2) அபூஸ்-அலி (Afuz-ali) (3) ரைரா-கப்பிறியோ (Tita-Caprio) (4) 5CO3 56) Jáš (Kara-Kaltak) 鑿 (5) அனுப்-ஈ-ஷாகி (Anab-E-Shahie) (6) GAOL SpÓ6ổT Gia) (Red-Prince) (7) 3)(mbo) (Shiraz) (S) ଓ (୩g ଏFର୍ତt #ତି) (Kara-Dzanzal) (9) LS) figf - f5ULI@CMO (Feteasea-Neagra)
யாழ்ப்பாணத்தில் தனியாரால் வளர்க்கப் படும் கீழ்க்காணும் வருக்கங்களும் நம்பிக்கை யூட்டுவனவாக இருக்கின்றன.
(1) G),5ITGö7G35i5ITLʻ (Concord)
(2) 3560) FILI (Danube)
(3) Lm6iii)25L (muscat)
(4) đ5_{ổ) (Kabul)
(5) 3FGổi): S26OTL (Sulfinnite)
கமத்தொழில்

Page 13
(ஊ) இளம் கொடிகளைப் படருவதற்குப் பழக்
குதல்
GojaSlapoop (Trellis or Knifin) ; ujë,36) (Ln60p) (Pandal or Arbor), Gly-LQG p60p) (Bush or Globlet) ஆகிய மூன்று முறைகளும் மகாஇலுப் பள்ளமாவில் பரீட்சிக்கப்பட்டனவாகும். கொடி களைப் பழக்குதல் கீழ்க்காணும் முறைகளிலா (5Ls).
(1) வேலிமுறை அல்லது நிபின்முறை
திராட்சைக் கொடியைப் படருவதற்குப் பழக் குவதற்கு இலகுவானதும் மலிவானதும் இம் முறையே, வேலிகள் எப்பொழுதும் வடக்கி லிருந்து தெற்கு நோக்கி அமைதல் வேண் டும். இது அதிக சூரிய வெளிச்சத்தைப் பெறு வதற்காகும். இம்முறையில் வேர் கொண்ட துண்டங்கள் 12 அடிக்கொன்றன வரிசையில் 8 அடிக்கொன்ருக நாட்டப்படும். மரத்துரண் களோ கொங்கிறீட் துண்களோ வரிசையில் இரு துண்டங்களுக்கு மத்தியில் நாட்டப்படும். வேர் கொண்ட துண்டங்கள் அருகே ஊன்றப் பட்ட தடிகளின் உதவியால் நிமிர்ந்து நேராக வளர விடப்படும். நாகம் பூசிய உறுதியான கம்பி 18 அங்குலங்களுக்கொன்றன வரிசையில் தூண்களுக்கிடையில் இறுக்கமாக இணைக் கப்படும். தரையில் இருந்து 2 அடி உயரத்தில்
இறுதி வரி இருத்தல் வேண்டும். உச்சிக்
கம்பியின் உயரத்திற்குக் கொடி வளர்ந்ததும் கம்பியில் இருந்து 2-3 அங்குல உயரத்தில் நுனி கத்தரிக்கப்படும். 6 L运云去G&汀三a行 கம்பிகளில் படர விடப்படும். ஏனேயவை பிரதான தண்டில் இருந்து அகற்றப்படும். இப்பக்கக் கிளைகள் தூண்கள் வரை வளர்ச்சி பெற்றதும் நுனி கத்தரிக்கப்படுவதனல் இவற்றில் இருந்து (laterals) பக்கக் கிளைகள் வளர ஏதுவாகும். 6-8 அங்குலத்திற் கொன்ருக இப்பக்கக் கிளைகள் வளரவிடப்படும். முதலாவது பக்கக் கிளை பிரதான தண்டில் இருந்து 12 அங்குலங்களுக்கு அப்பால் வளர விடப்படும். இப்பக்கக் கிளைகள் 4-6 அரும்புகள் தவிர்த்துக் கத்தரிக்கப்படுவதால் பூக்கும் அங்குரம் பெறப்படும்.
(2) பந்தல்முறை அல்லது ஆபர் முறை
வீட்டுத் தோட்டத்திராட்சைச் செய்கையில்
இம்முறை பிரபல்யமானது. எனைய முறை
களிலும் பார்க்க இம்முறையில் படருவதற்கு
சித்திரை-ஆனி 1970

அஇை
பெரிய பரப்பு இருப்பதால் வீரியமான வருக் கங்களுக்கு இம்முறை உகப்பானது. இம்முறை யில் கொடிகள் 24 அடிக்கொன்றன வரிசை யில் 12 அடி இடைத்தூரத்தில் நாட்டப்படும். கொங்கிறீட் அல்லது மரத்தூண்கள் நான்கு தூண்களுக்கு மத்தியில் ஒரு கொடி வரக் கூடியதாக நிறுத்தப்படும். துண்களின் உய ரம் 5; அல்லது 6 அடியாக இருக்கலாம். பின்பு கைம்மரங்கள் போடப்பட்டுப் பந்தலாக் கப்படும். கொடி பந்தலுக்கு இரண்டு அடி மேலாக வளர்ந்ததும் மூன்று பக்கக் கிளைகள் தவிர்த்துக் கத்தரிக்கப்படும். ஏனைய கிளைகள் பிரதான தண்டில் இருந்து அகற்றப்படும். இக்கிளைகள் பந்தலில் படர விடப்படும். சில மாதங்களின் பின்னர் இரு செழிப்பான கிளை களை மாத்திரம் தவிர்த்து எனைய நலிந்த கிளைகள் அகற்றப்படும். இக்கிளைகளில் இருந்து இரண்டடிக் கொன்றன பக்கக் சிளைகள் மீன் முள் வடிவத்தில் பந்தலில் படரப் பழக்கப் படும். இப்பக்கக் கிளைகள் (laterals) முதிர்ச்சி யடைந்ததும் “ கேன் ’ (Cane) எனப்படும். இவை பூக்கும் அங்குர வளர்ச்சிக்காகக் கத்தரிக்கப்படும். ܡ
” اس حصے
(3) செடிமுறை அல்லது குமிழ்முறை
இம்முறையில் கொடிகள் 5 அடிச் சதுர முறையில் நாட்டப்பட்டு தடிகளல் தனித்தனி நிமிர்ந்து வளர விடப்படும். கொடி 4 அடி உயரத்திற்கு வளர்ந்ததும் 4 இரண்டாவது கிளைகள் தவிர்த்து ஏனையவை கத்தரிக்கப்படும். இதுவே செடிமுறை பழக்குதலின் அமைப் பாகும். இரண்டாம் கிளைகள் 2-3 அரும்புகள் தவிர்த்துக் கத்தரிக்கப்படும். இவ்வமைப்பைப் பெற்றதும் நெருக்கம் ஏற்படாதவாறு கத்தரித் தல்களை ஒழுங்கு செய்து கொள்ளல் வேண் (BլԻ.
(எ) கத்தரித்தல்
(1) கத்தரித்தல் முறை
விளைவுடன் முக்கிய தொடர்பு உடையதாகை யால் கத்தரித்தல் திராட்சைச் செய்கையில் முக்சிய செயலாகும். திராட்சையில் அதே போகத்தில் விருத்தியான புதிய அங்குரத்தி லேயே பூக்கள் உற்பத்தியாவதால், போதிய புது அங்குர வளர்ச்சியைப் பயிரின் வீரியத் தைப் பாதிக்காவண்ணம் பெறுதலே கத்தரித்
13

Page 14
வேலி முறையிற்
செடி முறையி
真4
 
 

படரவைத்தல்
ல் வளர்த்தல்
கமத்தொழில் விளக்கம்

Page 15
தலின் நோக்கமாகும். கேன் எனப்படும் இர ண்டாம் கிளைகள் 2-5 அரும்புகள் தவிர்த்து கத்தரிக்கப்படலாம். இம்முறை முளைக் கத் தரிப்பு எனப்படும். 6-9 அரும்புகளைத் தவிர்த் துக் கத்தரிக்கப்படுவது கொடிக்கத்தரிப்பு என ப்படும். அமைப்பின் வீரியத்கையும் சக்தியை யும் உயர்த்துவதற்காக வழமையில் இளம் கொடிகளையோ வீரியம் குன்றிய கொடிகளையோ இரு அரும்புகள் மாத்திரம் தவிர்த்துக் கத் தரித்தலை அடிப்படை முளைக்கத்தரிப்பு எனப் படும். அதிக வீரியமான கொடிகளின் பதிய வளர்ச்சிக்காகச் செலவாகுவதை உயர் விளைச் சலிற்கு உபயோகிப்பதற்காக இக்கொடிகள் 6-8 அரும்புகள் தவிர்த்துக் கத்தரிக்கப்படும்.
அமைப்பைப் பெற்றதும் முதலில் முளைக் கத்தரித்தல் செய்யலாம். ஒரு வருடத்தில் இருமுறை விளைவு எதிர்பார்ப்பின் முன்னுேக் (55 555 fig36) (Forward pruning) (Ln60s)60L இரண்டாவதாகக் கையாளுதல் வேண்டும். கொடியின் வீரியத்தைப் பேணுவதற்காகச் சமச்சீர்க் கத்தரிப்பும் செய்யப்படும். காய்ப்ப தற்காக முன்னுேக்குக் கத்தரிப்புச் செய்யப்பட்ட இரண்டாம் பக்கக் கிளைகள் இருமுளைகள் விட்டுக் கத்தரிக்கப்படும் கொடிகளின் வீரியத்திற்கேற்ப எல்லா மூன்றம் காய்க்கும் கிளைகளையும் திரும்பவும் கத்தரித்தல் அறிவுக்கிசைந்த தாகும். இக்குறுகிய அடிப்படை முளைகள் கொடுக்கும் இரு “ கேன்’கள் தொடர் போகத்தில் “ கேன்' அல்லது முளே பெறுவதற்காக முன்னுேக்குக் கத்தரித்தல் செய்யப்படும். வருடத்திற்கு ஒரு பயிர் மாத்திரம் பெறும் செய்கை முறைகளின் கீழ், இந்தியாவில் பருவப் பெயர்ச்சிக் காற்று மாரிப் பயிரைச் சேதப்படுத்தும் சில இடங்களில் கையாளப்படுவது போன்று மாரியில் அடிப் படை முளைக் கத்தரித்தலும் கோடையில் முன் னுேக்குக் கத்தரித்தலும் கையாளப்படலாம்.
(2) கத்தரித்தற்காலம்
இடை வெப்பப் பிரதேசங்களில் கோடையில் மாத்திரம் விளைவு பெறுவதற்காக வருடத்தில் ஒரு முறை மாத்திரம் திராட்சை கத்தரிக்கப் படும். மாரியில் கொடி உறங்கு நிலையிலிருக் கும். எங்கள் சூழ்நிலையில் திராட்சையை இரு முறை கத்தரிப்பதனுல் இரு முறை விளைவு பெறமுடியும். கத்தரித்து 4-5 வாரங்களில் காய்கள் பருக்கும். மழைகாலத்தில் கத்தரிப்
சித்திரை-ஆனி 1970

பது அதிக காய்கள் தோன்றுவதைப் பாதிக்கு மென்பது மிகவும் முக்கியமாகும். பழுக்கும காலத்தில் மழையோ கடும் நீர்ப்பாசனமோ இருப்பின் பழங்கள் புளிப்பாக மாறுவதுடன் இலகுவில் பங்கசு நோய்க்கும் உட்படுகின்றது. எனவே, இதனை மனதிற்கொண்டு பயிரிடப் படும் இடத்தின் கால நிலைகளுக்கேற்ப கத்தரித் தலை ஒழுங்குபடுத்திக் கொள்ளல் அவசியம். கத்தரித்தல் நேரத்தை எவ்வளவுதான் ஒழுங்குபடுத்தினும் இலங்கை காலநிலையில் ஆரம்பத்திலோ அல்லது முடிவிலோ பயிர் போக மழைக்குள் அகப்படுகின்றது. மகாஇலுப் பள்ளம ஆராய்ச்சி நிலையத்தில் கத்தரித்தல் இருமுறை செய்யப்பட்டது. முதலாவது கத் தரித்தல் மார்கழி முற்பகுதியிலும் இரண்டா வது கத்தரித்தல் வைகாசி இறுதிப் பகுதியில் அல்லது ஆனி முற்பகுதியிலும் செய்யப்படும். ஆனி தொடக்கம் புரட்டாதி வரை நீண்ட வரட்சி நிலவுவதால் வழமையில் இரண்டா வது கத்தரிப்பின் பின்பு சிறந்த பயிரைப் பெறமுடிகிறது.
(3) பராமரிப்பும் கத்தரித்தலும்
நீர்ப்பாசனத்தின் கீழ் உள்ள பயிர்களாயின் கத்தரிப்புக் காயங்களுடாக வடிதவேக் கட்டுப் படுத்துவதற்காகக் கத்தரித்தலுக்கு மூன்று நாட்கள் முன்பும் பின்பும் பாசனத்தை நிறுத்தி வைத்தல் வேண்டும். கத்தரித்தவுடன் நோய்க் கிருமிகள் உட்செல்லாது தடுப்பதற்கான பூஞ்சன நாசினியொன்று விசிறுதல் வேண் (ԹԼԻ.
(4) நீர்ப்பாசனம்
நீர்ப்பாசனம் மிக ஒழுங்காகச் செய்யப்பட வேண்டும். அறுவடைக்கு ஒன்றே இரண்டு கிழமைகளுக்கு முன்பு நீர்ப்பாசனம் நிறுத்தப் படவேண்டும். இலங்கையில் வெற்றிகரமாக செய்கைபண்ணப்படுமிடங்களில் மேலதிக நீர்ப் LJ IT56 OTLro (6)3FLÈJULI LULJL (36) J 6öOTGBLîo.
(ஏ) உரப்பசளையிடல்
திராட்சையின் உரப்பசளைத் தேவைபற்றி குறைவான விளக்கங்களே இருக்கின்றன. இது பற்றி மகாஇலுப்பள்ளமவில் மேலும் ஆராய்ச் சிகள் நடைபெறுகின்றன. மெல்லய மணற்ற ரைகளுக்கு அதிக மாட்டெரு உபயோகிக்கப்பட வேண்டும். கொடியொன்றுக்கு 200 இருத்தல் வரை உபயோகிக்கப்படலாம். மகாஇலுப்பள்
15

Page 16
ளமவில் உள்ளது போன்று உலர்வலயத்தில் அதிகம் இப்பயிர் காணப்படும்செந்நிறக்கபிலத் தரைகளுக்கு, கீழ்க்காணும்விகிதங்களைக்கொடி யொன்றுக்கு உபயோகிக்கலாம்.
நடுகையின் போது-ஒவ்வொரு நடுகைக் குழிக்கும் 4 கூடை மாட்டெருவுடன் ஒரு இருத்தல் சுப்பர் பொசுபேட்டு. முதலாம் மாத முடிவிலிருந்து 3 ம் மாதம் வரை- இறத்தல் யூரியா அல்லது இறத்தல் அமோனியம் சல்பேட்டு. ஆறு மாதத்தின் பின்பு- இறத்தல் யூரியா அல்லது 1 இருத்தல் அமோ
ஒரியம் சல்பேட்டு.
முதலாவது வருடத்தில்- இறத்தல் யூரி யா அல்லது 1 இருத்தல் அமோனி யம் சல்பேட்டு, 1 இருத்தல் சுப்பர் பொசுபேட்டு, இறத்தல் பொட்டா சியம் சல்பேட்டு.
முதலாவது வருடத்திலிருந்து 6 மாதத்திற் கொருதரம் மேற்கூறிய அளவு உரப்பசளையை 50 இறத்தல் மாட்டெருவுடன் சிறுபோகத்தில் இடுதல் விரும்பத்தக்கது. கத்தரித்தல் ஒழுங் குடன் பசளையிடல் இணங்குதல் வேண்டும்.
(1) அறுவடை
பழுக்கமுன்பு முந்திரிகை அறுவடை செய் யப்படுவதில்லையாதலால் பழங்கள் நன்குபழுத் ததுமே அறுவடை செய்தல் வேண்டும். பொது வாகக் குலையின் அடியில் உள்ள பழங்களைக் கொண்டு குலையில் உள்ள அனைத்தும் பழுத்து விட்டனவா என்பதை அறியலாம். அறுவடை யின்போது குலைகளைக் காம்பில் பிடித்துத் தூக்குதல் வேண்டும். பழங்களைக் கையளை வதால் பழத்திலுள்ள மெழுகுத்தன்மை அற்றுப்போய்ப் பழங்களை நீண்ட காலத்துக்குப் பாதுகாத்து வைத்திருக்க முடியாமற்போகின் றது.
(ஐ) பூச்சி புழுவும் நோயும்
(1) திராட்சையை கடுமையாகத் தாக்கும் பூச்சி புழுக்கள், நோய்கள் இலங்கையில்இன்று வரை இல்லை. மழை காலத்தில் இரவில் இலை களைத் தாக்கும் அலக்கோ போரு வண்டை கடுமையான தொகுதிப் பூச்சிநாசினியை உய
6

யோகித்து அடக்கலாம். இவற்றைக் கட்டுப்படுத் துவதற்கு ஒளிப்பொறிகளையும் உபயோகிக்க லாம். பழுக்கும் காலத்தில் பறவைகளை விரட் டுபவர்களை வைத்தல் வேண்டும். அல்லது பயி ரிடுவோர் விளைச்சலின் பெரும் பகுதியை இழப் LIRT. -
(2) நோய்கள்
ஈரலிப்பான காலங்களில் பெரநோஸ்பெரு விற்ரிக் கோபா என்னும் பங்கசு வில்ை தோன் றும் (downy Midew) தூள்ப் பூஞ்சன நோய் மாத்திரம் இன்று வரை காணப்பட்டுள்ளது. ஈரவலையத்தில் திராட்சை செய்கை பண்ண முடியாமலிருப்பதற்கு இதுவுமொரு காரண மாகும். இவைகளில் ஒளியூடுருவலான தொட் டங்கள் முதலில் ஏற்படும். இவை பின்பு மஞ்சள் நிறமாகி இறுதியில் கபில நிறமாக மாறி அழிந்து விடுகின்றன. இறுதியில் இலைகளின் அடியில் (fruiting bodies) கனிகொள்ளும் பகு தித் தொட்டங்ளைக் காணலாம். இப்பங்கசு பயி ரின் எல்லாப் பாகங்களையும் தாக்கும். பழங்களை யும் தாக்கும். வீரியத்தைக் குன்றச் செய்யும். கடுமையாகத் தாக்கின் பயிர்பட்டுப் போகும். எனவே, நேரகாலத்துடன் இந்நோயைக் கட்டுப் படுத்தல் முக்கியம். இது கடுயைமான நோயான பொழுதிலும் கட்டுப்படுத்தல் கடினமல்ல. அந் திராக்கோல் ஒரு அவுன்ஸ்சை இரு கலன் நீரில் கலந்து விசிறலாம். கூடிய தாக்கம் தேவை யாயின் போடோக் கலவையை உபயோகிக்க லாம். ஈரலிப்பான கால நிலை ஆரம்பத்துடன் ஒழுங்காக நாசினி விசிறல் முக்கியம். போடோக் கலவையின் செறிவு கொடியின் வயதிற்கேற்ப மாறுபடும்.
இளம் தளிர் இலைகள்-3-3-50 கலவை முதிர்ந்த இலைகள்-5-5-50 கலவை
3-3-50 கலவையை, 3 இருத்தல் செப்புச்
சல்பேட்டுப் பொடியை 25 கலன் நீரிலும்,
3 இறத்தல் நீறிய சுண்ணும்பை 25 கலன் நீரிலும் வெவ்வேருகக் கரைத்து செப்புச் சல்பேட்டுக் கரைசலை ஒர் மரப்பாத்திரத்தில் சுண்ணும்புக் கரைசலிற்குள் ஊற்றித் தயாரிக் கலாம். உபயோகிக்கமுன் கலவை நன்கு கலக் கப்படவேண்டும். இக்கரைசலை அடுத்த நாள் வரை வைத்திருக்க முடியாதாகையால் உப யோகிப்பதற்குமுன் உடனடியாகத் தயாரிக்கப் படவேண்டும்.
(தமிழாக்கம் : செசு)
கமத்தொழில் விளக்கம்

Page 17
கவி க்டு காத்து
உழவன் திருக்கரம் ஏர் கொண்டு உழுது விதைத்துக் களையகற்றி முற்றிய சென்நெல் மணியென்ற மூட்டைகளுடனே அகமேகி தீட்டிய சென்நெல் அரிசியுடன் தீம்பால் பெய்துசெய்த பொங்கல்.
உழுதுண்டு வாழ்வோரே வாழ்வாரென்ற பழுதற்ற வள்ளுவன் வாய்மொழியை உலகோர்க் கெடுத்தோதும் வண்ணம்
உழவுத் தொழிலை மேற்கொண்டு ܓ
கிடைக்கு மவ்வருவாய் யீட்டித்தன் கிருகந்தனிலே செய்த பொங்கல்.
களிப்புடன் படைத்துத்
கருணைப் பெருநாள்
உழவ
பொத்துவில்
பார் வாழச் செய்கின்ற பாட்டாளி என்றென்னைப் பேர் சூட்டுவார்கள் பெரிதுவப்பேன்-கார்அறுத்து உண்ண உணவளித்து ஊர் பாதுகாப்பதுவே எண்ணமென வாழ்வேன்
இனி ܡ ܛܪܣܛܝܵܢܹܐ
வெள்ளை உடையை மினுக்கி உடலணிந்து புள்ளியெனச் செல்லல் புகழாமோ-நல்ல இரு முள்ளத்தைக்கட்டி ஏரதனை ஏற்றல் பெருமை எனக்கதுவே
பேறு
சித்திரை-ஆனி 1970 3-J 1177 (2170)
 

உழவன் திருநாள்
قفقت کھلخT6آقاsar یعنی start
ாழ்ப்பாணம் *நாவற்குழியூரான்’
சுழ்ன்று மேர்ப் பின்னதுலகம் உழன்று தலையதுவோ வெனவுணர்ந்து பொழுது முழுதும் உழன்றுழன்று புலங்கசை சீர்திருத்தி நித்தம் நெற்றி வியர்வை நிலத்தில் விழ நீடு உழைத்த உழவர் குழாம்.
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய ஒப்பற்ற உழவர்கள் தாம்சேர்ந்து பாசிப் பயற்றுடன் சர்க்கரையும் முந்திரி கசுக்கொட்டை இவையுடனே
நெல்லரிசிதனே யிட்டுப் புதுப்பானையினிலே செய்த பொங்கல்,
துதி செய்யும்
தைப்பொங்கல்.
குரல்
கவிவாணன்
ஏர் ஏந்தும் ā氏国áT எனவே இகம் போற்றும் தேர்மீது செல்லல் சிறப்பாமோ-சீர்பெருக நாளும் உழைத்திந்த நாட்டை உயர்த்துவதே
பாழும் உலகில்
பணி
பச்சை சிவப்பு பலநிறத்து நோட்டுகளில்
இச்சையுடனே
- இருக்காதே-உச்சிதனில் வியர்வையைக்கொட்டி விளைவிக்கும் நெல்லால் அயராது வாழ்வாய்
அறி,
基罗

Page 18
தென்னையோடு தொ விடுகதைகள்
18
i.
2.
0.
தொகுத்து உதவியவர் வட்டுக்கோட்டை மு. இராமலிங்க
வருடமுழுதுங் கனி கொடுக்கும் மரமென்ன மரஞ் சொல் ?
ஆழக் குழிவெட்டி அதிலேயொரு முட்டையிட்டு அண்ணுந்து பார்த்தால் தொண்ணுறு முட்டை
ஒகோ இராசா உயர்ந்த இராசா தோளிலென்ன தொண்ணுறு முடிச்சு ?
ஓகோ தடியா உயர்ந்த தயாளா உடம்பைச் சுற்றி ஏன்நூறு தழும்பு ? (தழும்பு தென்னுேலைகள் விழவிழ மரத்தில் ஏற்படு
எண்ணற்ற பழுவுகள் பண்ணுத ஏணி எட்டாத உயரத்தில் கட்டாத கோட்டை சாயாத செம்புக்குள் பேயாத தண்ணீர் (தென்னுேலைகள் விழவிழ மரத்தில் ஏற்படும் பழுக்கள்
ளுக்கு உவமை கூறப்படுகின்றன)
நாலிலே ஒரு கால் பந்தலடா தோழா மொள்ளா நீர் மொண்டுதடி தோழி அள்ளாமல் குறைந்ததடா தோழா (நாலிலை-பல என்னும் பொருளில் வருகின்றது)
தரித்து நிற்பாள் பூமியிலே நடக்கமாட்டாள் தயவான குருக்களுக்கும் பிரதியாவாள் கருத்தரிக்கப் பிள்ளையுண்டு கணவனில்லை காசினியோர் சினந்தடித்தால் நெய் பால்
(கணவனில்லை-தென்னையில் ஆண் தென்னே இல்லை
G66īr
ஆகாயமட்டு மளாவி வளர்ந்திடுவார் காகாவென்பா ரதன்மேல் காத்திருப்பார்-சோகாமல் வந்தவர்க்குத் தண்ணீர் வகையாகத் தந்திடுவார் சொந்தமோ டிவர் பேரைச் சொல்
வானத்தைப் பார்த்தால் சிறகை விரித்தாள் மாசத்திற்குத் தொண்ணுறு முட்டையிடுவாள் வானத்தைப் பார்ப்பதும் சிறகை விரிப்பதும் வெளவாலாய்க் குஞ்சு பொரிப்பதும் நீரு மதற்குள்ளே நிலமு மதற்குள்ளே நீராழி மண்டபந் தானு மதற்குள்ளே காராம்பசுவைக் கட்டுங் கயிறு மதற்குள்ளே
(நீருமதற்குள்ளே நிலவுமதற்குள்ளே, நீருமதற்
 

ம் மறுக்கள்)
ஏணிப்பழுக்க
நெய் பால்-கள்)
ாளே நிழலுமதற்குள்ளே என்னும் பாடல்கள் உண்டு)
கமத்தொழில் விளக்கம்

Page 19
2.
13.
14。
15.
16.
17.
8.
19.
20.
2量。
22,
23.
24。
நீருமதற்குள்ளே நிலமுமதற்குள்ளே காளைகட்டக் கயிறுமதற்குள்ளே கானம்கண்ட விறகுமதற்குள்ளே (செக்கு, பாவிப்புக்கு வருமுன்னர் மாவாக இடித்து குறிப்பிடப்படுகின்றது)
அடிபெருத்தேன் குந்தாணியானேன் தலைவிரித்தேன் சடைச்சியானேன் முத்துக்கோர்த்தேன் செட்டிச்சியானேன் குடுக்கைதூக்கினேன் குறத்தியானேன் (தென்னையின் அடிக்கொட்டுக்கொண்டு உரல் செய்த
அடிபெருத்தேன் மத்தளமல்ல தலைவிரித்தேன் சடைச்சியல்ல முத்துக்கோர்த்தேன் செட்டிச்சியல்ல குடுக்கைத்தூக்கினேன் குறத்தியல்ல.
சின்னக் கிணற்றில் கிண்ணந் தண்ணீர்
குடிக்கத் தண்ணிருண்டு குளிக்கத் தண்ணீரில்லை.
குளம் நிறையத் தண்ணீருண்டு குருவி குடிக்க முடியவில்லை.
அந்தரத்தில் தொங்குகிறது செம்புந் தண்ணீரும்.
கட்டாமல் கறக்காமல் காடேறி மேயாமல் நின்ற இடத்தில் ஒரு வள்ளம் பால்.
தேங்க தாடிக்காரன் மீசைக்காரன் கோயிலுக்குப்போனுல் வெள்ளைக்காரன்.
சுற்றிலும் கல்கட்டு நடுவில் வெள்ளைக்கட்டு.
திருப்பதி மலையிலே இருப்பது குரங்கு அதுஅது தலையிலே பிடிபிடி மயிர்.
(திருப்பதி மலைமேலே இருப்பது குரங்கு என்னும்
வேலியை வெட்டக் கள்ளன் வந்தான் கள்ளளை வெட்ட வெள்ளம் வந்தது.
காட்டை வெட்டினேன் கள்ளன் இருந்தான் கள்ளனை வெட்டினேன் வெள்ளன் இருந்தான் வெள்ளனை வெட்டினேன் வெள்ளம் பரந்தது.
குயவன் பண்ணுத பாண்டம் வண்ணுன் வெளுக்காத வெள்ளை மழை பெய்யாத தண்ணீர்.
(மழைபடாத் தண்ணீர் என்றும் பாடல் உண்டு)
சித்திரை-ஆனி 1970

அவித்து ஊற்றுப் பெட்டியில் எண்ணெய் வடித்தகாலம்
ல் பழைய மரபு)
SITui
பாடல் உண்டு)
19

Page 20
20
26.
27.
28.
29.
30
32.
சூரியன் காணுத் தண்ணீர் சுண்ணம் தோற்கும் வெள்ளை மண்ணிற் பண்ணுப் பாண்டம்.
(சூரியன் காணுத கங்கை என்றும் பாடல் உண்டு)
G)gsklæsið gl“ LLüb அதற்குள்ளே பொன்கட்டடம் அதற்குள்ளே வெள்ளிக் கட்டடம் அதற்குள்ளே திருக்குளம்.
(செங்கல்-தேங்காய்மட்டையின் நிறத்தைக் குறிக்
அரைப் பணத்துக்குப் பெண்டாட்டி கட்டி அடிக்கப்போனுல் சிரிக்கவருகிருள்.
கனகனத்தாளைக் கடையிலே கண்டேன் கண்டவுடனே கொண்டேன் கொண்டவுடனே அடிச்சேன் அடிச்சவுடனே சிரிச்சாள் சிரிச்சவுடனே கடிச்சேன் கடிச்சவுடனே இனிச்சாள்.
(கனதனத்தாளை என்றும் பாடல் உண்டு)
சின்னத்தம்பி சீமானும் சிப்பிலிச்சந்தைக்குப் போனுணும் அங்கேயொருத்தியைக் கண்டானும் கண்டவுடனே கொண்டானும் கொண்டவுடனே அடிச்சானும் அடிச்சவுடனே சிரிச்சாளாம் சிரிச்சவுடனே கடிச்சானும் கடிச்சவுடனே இனிச்சாளாம்.
(சின்னத்தம்பி சீமானும் எனத்தொடங்கும் வேருெ
கடைக்குப் போனேன் கனக?னக் கண்டேன் கண்டவுடனே கொண்டேன் கொண்டவுடனே அடிச்சேன் அடிச்சவுடனே சிரிச்சான் சிரிச்சவுடனே கடிச்சேன் ܣ̣ܨ கடிச்சவுடனே இனிச்சான்.
(கனகன்-பொன்னிறமுடையோன்)
கண்ணுமோ மூன்றுடையான் சிவனுமல்ல வெட்டினுல் நீர்தோன்றும் வாய்க்காலல்ல மேலெல்லாம் மயிருண்டு மிருகமல்ல தலையிலே முடியுண்டு இராசாவல்ல !
உருண்டை வடிவாயிருக்கும் உலகமல்ல உடல் முழுதும் ரோமமுண்டு குரங்குமல்ல உச்சியினிற் குடுமியுண்டு அந்தணனல்ல உருள்விழிகள் மூன்றுண்டு சிவனுமல்ல உண்மையுட னிக்கதையை உரைத்திடீரே !
 

ம் பொன்-சிரட்டையின் நிறத்தைக் குறிக்கும்)
ரு சிறுபிள்ளைப் பாடலும் உண்டு)
கமத்தொழில் விளக்கம்

Page 21
உற்பத்தி செய்
 
 

300մլն. 96guliquff6 5 கலன்கள் தெளிக்கிறது
300 பி, டி, துருபிடித்து அழி யாத பித்தளை கொள்கலன் கொண்டது. அகன்று பரவ கத்தெளிக்க ஏதுவாக ஒரே
இடது அலலது வலது கைப்
ரூபா 34500
ஹேஸ்ப்றே உதிரிப்பாதங்கள் எப்போதும் கிடைக்கும்
கொழும்பு-10 தொல பேசி 96336
VISION 2 is

Page 22
uIILIT6oil63 நான் கல்
சென்ற ஒக்டோபர் மாதத்தில் குறுகிய காலக் கல்விச் சுற்றுலா ஒன்றில் யப்பானிற்குச் செல் லும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. நான் அங்கு செலவிட்ட ஒன்றரை மாத காலத்தில் அங்கு விவசாயம் செய்யப்படும் சில பகுதிகளைப் பார் வையிடவும் அந்நாட்டு விவசாயிகளையும் உத்தி யோகத்தர்களையும் மற்றவர்களையும் சந்தித்து விவசாயம் சம்பந்தமான கருத்துக்களைப் பரி மாறிக் கொள்ளவும் முடிந்தது.
யப்பானிய உயர் நெற்செய்கைத்தரம் பற்றி நம்மில் பலர் அறிந்திருக்கிருேம். எனவே, அங்கு நான் கண்ட மைல்க்கணக் கான நெல் வயல்களும் ஆங்கே விளைந்து முதிர்ந்திருந்த நெல் மணிகளும் (அப்பொழுது அங்கு அறுவடைக்காலம்) எனக்கு சற்றும் வியப்பைத் தரவில்லை. பல இடங்களில் பயிர் களை நான் அண்மையிற் சென்று பார்வை யிட்டேன். அவை அனைத்தும் வரிசையில்நாற்று நடுகை செய்யப்பட்டிருந்தன. (யப்பானில் முழு
22
 

சி. நடேசன், B.Sc. (Cey.), B.Sc. Agric., M.S.A. (Toronto)
உதவிக் கமத்தொழில் நெறியாளர், கமத்தொழிற் திணைக்களம்
TIL 66 GFTITULID
நெற்பரப்பும் நாற்று நடப்படுகின்றது.) அத்து டன் அனைவருக்கும் ஏக்கருக்கு 125 புசல் விளைவு மிக இலகுவாகக் கிடைக்கின்றது. யப் பானில் இன்று சராசரி விளைவு ஏறத்தாழ எக்கருக்கு 150 புசலாகும்.
களைகள் என்பது காணப்படவேயில்லை. நோ ய்களும் பூச்சிகளுங்கூட மிகக் குறைவாகவே இருந்தன. சில இடங்களில் பயிர் வளர்ச்சி
குன்றியும் சில இடங்களில் செழிப்பாகவுமில்
லாமல் பயிர்கள் அனைத்தும் எங்கும் ஒரே யளவாக எகரூபமாக வளர்ந்திருந்தன. எங் கள் நாட்டிலும் இத்தகைய சில வயல்கள் காணப்படுகின்றன. ஆனல் அநேகமானவை களைகள் நிறைந்ததும் வளர்ச்சி சீரில்லாம லும் நோய் பீடைகள் நிறைந்தனவாகவுமே காட்சிதருகின்றன. இந்நிலைமை சில சந்தர்ப் பங்களில் விளைவை 50 சதவீதம் தாழ்த்து கின்றது.
விவசாயிகள் தமது வயல்களை அறுவடை செய்வதில் பெரிதும் ஈடுபட்டிருந்தார்கள். இரண்டு மணித்தியாலங்களில் 3 ஏக்கர் வரை அறுவடை செய்து குடுமிதித்து, சுத்தம் செய் யக்கூடிய சிறிய உபகரணங்கள் இன்று இருக் கின்றபோதிலும் வழக்கத்தில் அநேகமான வயல்கள் கையாலேயே அறுவடை செய்யப் படுகின்றன. யப்பானில் இவ்வியந்திரங்களின் விலை 8,000 ரூபாவாகும். அறுவடை செய் ததும் ஆண்களும் பெண்களும் கதிர்களைக் கட்டுக் கட்டாகக் கட்டி, கட்டிய இக்கட்டுகளை வயல்களில் ஊன்றப்பட்ட மூங்கில்களிலோ அல் லது வேறு கம்பங்களிலோ தொங்கவிடுவார் கள் கதிர் காய்வதற்காக நாலு ஐந்து நாட் களுக்கு இங்ங்ணம் தொங்கவிடப்படும். இதன் பின்பு ஒவ்வொரு விவசாயியும் தனது நெல்லை இரு சில்லு திருக்டர்களினுல் இயங்கும் சூட டிக்கும் உபகரணங்களினல் சூடடிப்பர். இவ் வுபகரணத்தை இவர்கள் தத்தம் பகுதி கூட்டு
றவுச் சங்கங்களில் இருந்து வாடகைக்கு பெற்
றுக் கொள்ளக்கூடியதாகவும் இருக்கின்றது.
கமத்தொழில் விளக்கம்

Page 23
இங்கு என்னைப் பெரிதும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது மேட்டு நிலப்பயிர்ச் செய்கையா கும். மேட்டு நிலங்களும் வயல்களும் அரு கருகே பெரும்பரப்பில் செய்கைபண்ணப்பட்டி ருந்தன. ஆனல் இவை நெல் வயல்களிலும் பார்க்க சற்று உயரத்தில் இருந்தன. மேட்டு நிலங்களும் நெல் வயல்களைப் போன்று வேலி யிட்டு பிரிக்கப்படாமலேயே இருந்தன. மேட்டு நிலத்தில் பலதரப்பட்ட பல்வேறு பயிர்கள் பயிரிடப்பட்டிருந்ததைக் கண்டேன். நிலக்கடலை சோயா அவரை, மரக்கறிவகை, வத்தாளே, மேட்டுநில நெல் ஆதியன ஒன்றுக்குப் பக்கத் தில் ஒன்ருகப் பயிரிடப்பட்டிருந்தன. இவற்றில் ஒரு சிலவே 1/8 எக்கருக்குக் கூடிய பரப்பில் செய்கை பண்ணப்பட்டிருந்தன. இது யப்பா னில் உள்ள மேட்டு நிலப் பயிர்ச் செய்கையின் மாதிரி ஒன்றகும்.
பெண்கள் நிலக்கடலை, வத்தாளை ஆகிய வற்றை அறுவடை செய்வதிலும் மரக்கறித் தோட்டத்தில் களை கட்டுவதிலும் சிலர் அடுத்த பயிர் நாட்டுவதற்காக வயலுக்கு பசளையிடுவதி லும் ஈடுபட்டிருந்தார்கள். உபயோகத்திற் குள்ளாகாத வெறும் மேட்டு நிலங்கள் காணப் படவேயில்லை. அனேகமான தோட்டங்களுக்கு கிணற்றில் இருந்தோ, வாய்க்கால்களிலிருந்தோ ஆறுகளிலிருந்தோ நீர்ப்பாய்ச்சப்படுகின்றன. நிலத்திற்கு இவர்கள் ஆறுதல் கொடுப்பதில்லை. ஒரு பயிர் அறுவடையானதும் தரையை உழுது பசளேயிட்டு அடுத்த பயிரை விதைக்கின்றர்கள். இதனுல் இவர்கள் பெறும் வருமானம் மிக உயர்ந்ததாகும். ஆகவே, யப்பானிய விவ சாயி ஒருவன் வருடமொன்றுக்கு 15,000 ரூபா சராசரி வருமானம் பெறுகிறன் என்று கூறியபோது நான் ஆச்சரியப்படவில்லை. யப்பானிய விவசாயின் தோட்டம் அநேகமாக ஏறத்தாழ 34 ஏக்கர் விஸ்தீரணமுள்ளதாகவே இருக்கும்.
இதை நாம் சற்று விரிவாகக் கவனிப்போம். யப்பானிய மத்திய வகுப்பு விவசாயி ஒருவன் ஏறத்தாழ 33 ஏக்கர் நிலத்துக்கே சொந்தக் காரணுயிருக்கிறன். தனது நிலத்தில் இவன் ஒருமுறை நெல்லைப் பயிரிடுவான். அதிக குளிர் இல்லாமல் இருப்பின் நெல்லை இரு முறை பயிரிடுவான். இங்ங்னம் பயிரிட்டு ஏக்கருக்கு 150 புசல் வரை விளைவுபெறு வான். அரசினர் விவசாயிகளிடமிருந்து முத
சித்திரை-ஆனி 1970

லாம் தர அரிசியை இறத்தல் ஒன்று 95 சத வீதம் கொள்வனவு செய்கிறர்கள். இலங்கை யிற்போன்று இவர்கள் நெல்லாகக் கொள் வனவு செய்வதில்லை. இப்படி விவசாயியிட மிருந்து வாங்கிய அரிசியை அரசாங்கம் பொது மக்களுக்கு உணவுக்காக 90 சதமாக திரும்ப விற்பனை செய்கின்றது. அரிசியின் இந்த உயர்ந்த விலை அரிசி உற்பத்திக்கு ஒர் துண்டு கோலாக விளங்குகின்றது. இன்று யப்பானில் தேவைக்கதிகமான நெல் உற்பத்தியாகின்றது.
மேட்டு நிலத்தில் வருடமொன்றில் நிலக் கடலை, காய்கறி வகை, சோயா அவரை, வத்தாளை என பல்வேறு பயிர்களை யப்பானிய @១ugTu பயிரிடுகிறன். இப்பயிர்களின் விளைவுகளும் மிக உயர்வாகும். நிலக்கடலை எக்கருக்கு 25 அந்தர் வரை விளைவு கொடுக் கும். அதிக பசளே இடுவதும் விளைவு அதிகம் கொடுக்கக் கூடிய வருக்கங்களைப் பயிரிடுவ துமே இதற்குக் காரணமாகும்.
இந்த வகையான பயிர்ச் செய்கை செய்யப் படும் பொழுது நான் சில பண்ணைகஃப் பார்வையிடச் சென்றேன். கல்வி கட்டாயமான தொன்றகையால் விவசாயிகள் அனைவரும் கற்றவர்களாகவே இருந்தார்கள். மிகக் குறைவாகவே இவர்கள் ஆங்கிலத்தில் பேசினர்கள். இவர்கள் விவசாய சஞ்சிகை களை வாசிக்கின்றர்கள். அத்துடன் அண்மை யில் உள்ள ஆராய்ச்சி நிலையங்களுக்குச்சென்று புதிய வருக்கங்கள், இயந்திரங்கள், பயிர்ப் பாதுகாப்பு முறைகள் முதலானவற்றைப்பார் வையிடுகின்றனர்.
நான் சந்தித்த விவசாயிகளில் அனேகர் இருசில்லு நடை உழவு யந்திரங்களுக்குச் சொந் தக்காரராய் இருந்தனர். சிலரிடமே இரண்டு யந்திரங்களும் இருந்தன. அத்துடன் ரில்லர், பாரப்பெட்டி, நீர் இறைக்கும் பம்பி, வலுவி சிறி, கை உபகரணங்கள் முதலானவும் இவர் களிடம் இருந்தன. சில விவசாயிகள் சூடு மிதிக்கும் இயந்திரம், ஈரம் உலர்த்தி, (சூடு மிதித்ததும் நெல்லை உலர்த்துவது), தமது விளைபொருட்களைச் சந்தைக்கு எடுத்துச் செல்வ தற்கு சிறிய வண்டி, போன்றனவும் சொந்த மாக வைத்திருந்தனர். வீடுகளில் தெலிவி சன், சலவை இயந்திரம், மோட்டார். சைக்கிள் முதலான நவீன வாழ்க்கைக்கு
23

Page 24
வேண்டிய ஏதுக்கள் அனைத்தும் பெற்றவர்க ளாக இவர்கள் இருக்கின்றர்கள். ஆறு விவசாயிகளில் ஒருவர் மோட்டார் காருக்கும் சொந்தக்காரராக இருக்கின்றனர். இவ்விவ சாயிகள் நிலத்தை இடைவிடாது உபயோ இத்ததும் நவீன உற்பத்தி முறைகளைக் கையாண்டுமிருக்காவிடின் இவர்களுக்கு இந்த உயர்ந்த வாழ்க்கைத்தரம் ஒரு பொழுதும் கிட்டியிருக்கமாட்டாது. யப்பானிய விவசாயி தனது சிறிய வயலில் இருந்து எப்பொழுதும் உச்ச விளைச்சலையே பெற எத்தனிப்பான். இவர் கள், உயர்விளைச்சல்தரும் வருக்கம், உரப் பசளைகள் முதலானவற்றை உபயோகிப்ப துடன், நோய், பூச்சி புழுக்களால் ஏற்படும் சேதத்தையும் கட்டுப்படுத்துகிறர்கள். நிலத்தை அவர்கள் என்றும் வெறுமனே தரி சாக இருக்க விடுவதேயில்லை. இவர்களுக்கு இலங்கையிற் போன்று உரப்பசளைகளும் விதை நெல்லும் மலிவான விலையில் கிடைப்ப தில்லை. நீர்ப்பாய்ச்சுவதற்கும் இவர்கள் _65TLD செலவிடவேண்டி இருக்கின்றது. இவர்கள், நீரை மிகவும் சிக்கனமாக உபயோ கித்து ஆகக்கூடிய உச்ச விளைச்சலை பெற முய லுவார்கள். கூலியாட்களே வேலைக்கு அமர்த் துவது அங்கு செலவு அதிகமானதாகையால் இவர்கள் இயந்திரங்களையும் உபகரணங்களை யுமே பெரிதும் உபயோகிக்கின்றனர். யப்பா னிய விவசாயி ஒரு உழவு இயந்திரத்தை வாங்குவானகில் அதை அவன் வருடம் முழு வதும் உபயோகிக்கிறன். இவர்கள் கூட்டுற வுச் சங்கத்தில் அங்கத்தவராய் இருப்பதன் நன்மையைப் பெரிதும் அறிந்திருக்கிறர்கள். கூட்டுறவுச் சங்கம் விவசாயிக்கு தேவையான விதை, உரப்பசளே கடன் முதலானவற்றை வழங்குகிறது. அத்துடன் விளைபொருட்களை வாங்குவதுடன் அவர்களது வங்கியாகவும் விளங்குகின்றது. இக்கூட்டுறவுச் சங்கம்,உழவு இயந்திரம், வண்டி, சூட்டிக்கும் இயந்திரம் முதலானவற்றை விவசாயிக்கு வாடகைக்கு வழங்குவதுடன் தேவையானபொழுது விவ சாயியின் இயந்திரங்களைப் பழுதுபார்த்து திருத்திக் கொடுக்கக் கூடிய வசதிகளும் கொண்டதாய் இருக்கின்றது. இவைகளே யப்பானிய விவசாயத்தின் பொதுவான அம் சங்களாகும்.
24

ஆனல், யப்பானில் உயர் உற்பத்திக்கு ஏது வான வேறு பல அம்சங்களும் இருக்கின்றன. -9||60)6) եւ III6:1601 :
1. இரண்டாவது உலக மகாயுத்தத்தின் பின்னர் யப்பானிய அரசினர் கைக்கொண்ட கடுமையான நிலச் சீர்திருத்த முறைகள். யுத்தத்திற்கு முன்பு 53 சதவீதமானவயல் களும் 40 சதவீதமான மேட்டு நிலமும் குத்த கைக்காரராலேயே செய்கை பண்ணப்பட்டு வந்தது. யுத்தத்தின் பின்னர் நடைமுறைக்கு வந்த ஒரு சட்டத்தின் மூலம் நிலங்கள் குடி யானவர்களுக்கு மாற்றப்பட்டன.
நிலத்தை செய்கைபண்ணுமல் உரிமை பாராட்டல் குறைக்கப்பட்டது. பயிர்ச் செய்கை பண்ணுத ஒருவர் இரண்டு எக்கர் வரைக்கு மேல் சொந்தமாகக் காணி வைத் திருக்க முடியாது. பணக்குத்தகையும், நிலமாற்ற மும் கட்டுப்படுத்தப்பட்டது. குத்தகையைப் பொருட்களாகக் கொடுத்தல் தவிர்க்கப் பட்டது. நிலச் சீர்திருத்தம் நிலச் சொந்தக் காரரை மாற்றுவதுடன் முடிந்துவிடாமல் விவசாய முன்னேற்றத்தையும் ஊக்குவித் தல் வேண்டும்.
2. கூட்டுறவுச் சங்கங்களைப் பெலப்படுத் தல்-முன்னைய குத்தகைக்காரர் சொந் தக்காரராக மாறினர். தங்கள் உற்பத்திப் பொருட்களை தங்களுக்கு வேண்டியவாறு,முன் னைய சொந்தக்காரரின் தலையீடுகள் இல்லா மல், விற்கக்கூடியதாக இருந்தது. விவசாயி களுக்குத் தேவையானவற்றை மலிவான விலையில் பெற்றுக் கொள்ளவும் அவர்கள் உற்பத்திப் பொருட்களை உயர்விலையில் விற்க Gಾ|ದಿ உதவவேண்டியிருந்தது. ஒவ்வொரு கிராமத்திலும் பெலம் வாய்ந்த கூட்டுறவுச் சங்கங்களை நிறுவியதுமூலம் இது சாத்திய
மானது. இன்று யப்பானில் 14,000 கூட்டுற
வுச் சங்கங்கள் உள. ஒவ்வொரு விவசாயி யும் அங்கத்தவரே. விவசாயியின் உற்பத்திப் பொருளை ஆகக்கூடிய சிறந்த விலையில் விற்பதற்கு இக்கூட்டுறவுச் சங்கம் உதவுகின் றது. சில கூட்டுறவுச் சங்கங்களில் பதப்படுத்து வது, பக்கட்டுகளில் அடைப்பது போன்ற வசதிகளும் இருந்தன. கூட்டுறவுச் சங்கம் விதை, உரப்பசளே, ஆதியனவற்றை முடிந்த வரை குறைந்த விலைக்குப் பெற்று விவசாயி களுக்கு கடனுகக் கொடுக்கின்றது. விவ
கமத்தொழில் விளக்கம்

Page 25
சாயிகள் தங்கள் பணத்தை கூட்டுறவுச் சங்கத் தில் போட்டு வைக்கின்றர்கள். கூட்டுறவுச் சங்கம் கிராம வங்கியாக விவசாயிக்கு உதவு கின்றது. கூட்டுறவுச் சங்கம் தனது சொந்தத் தில் உழவு இயந்திரங்கள், தெளிகருவி கள், வண்டிகள் ஆதியனவற்றை வைத் திருந்து விவசாயிகளுக்கு தேவையான பொழுது வாடகைக்குக் கொடுக்கின்றது. சிறிய விவசாயிகளால் இத்தகைய உபகர ணங்களைச் சொந்தமாக வைத்திருத்தல் சாத்தியமாகாது. விவசாயிகள் தமதுசேமிப் புப்பணத்தை இக்கூட்டுறவுச் சங்கத்தில்போட்டு வைப்பதால் விவசாயிகளுக்குப் Lju Shij: செய்கைக்கு கடன் வழங்குவதற்கு கூட்டுறவுச் சங்கம் அரசாங்கத்திடமிருந்து பணம் பெறுவ தில்லை.
3. நவீன தொழில்நுட்பம்.-முன்பு விவ சாயிகள் கோடையில் நெல்லும், மாரியில் கோதுமையும் பயிரிட்டனர். போகம் தப்பின் பூச்சி புழுக்களினதும் நோயினதும் தாக்கம் கடுமையாகவிருப்பதே இதற்குக் காரணம், (அதாவது விதைத்தல் தாமதமாயின்) இன்று பல இரசாயனப் பொருட்களைக் கண்டு பிடித்த பின்பு இது அவர்களுக்கு ஒரு பிரச் சனையாக இல்லை. இன்று நெல்லை வருடத்தின் எந்தப் பகுதியிலும் விதைக்ககூடியவர்க ளாக இருக்கின்றர்கள். தற்பொழுது நெல் சாகுபடி முடிந்ததும் உருளைக்கிழங்கு அல் லது புகையிலையைப் பயிரிடுகின்றனர்.பின்பு தொடர்ந்து கோதுமை செய்கை பண்ணுகிரு Far. அதாவது, வருடத்தில் இரு பயிர் களுக்கு பதிலாக மூன்று பயிர்களைச் சாகுபடி செய்கின்றனர். சிறந்த விளைச்சல் திறனு டைய நெல், மரக்கறி மற்றும் பயிர் வகை களை ஆ உபயோகிப்பதால் இங்கு விவசாயம் பெரும் இலாபகரமானதாக விளங்குகின் றது. முன்பு விவசாயிகள் தங்கள் கால் நடைகளுக்கு காட்டுப்புல் கொடுத்து வளர்த்து ஒரு கறவை காலத்தில் 1000 பைந்துக்கும் குறைவான பாலையே பெற்றர்கள். இன்று சிறந்த கால்நடைகளாலும் பயிரிடப்பட்ட சிறந்த வெட்டுப்புற்களாலும் ஒரு கறவை காலத்தில் 4000 பைந்துக்கு மேல் பெறுகின் ருர்கள்.
சித்திரை-ஆனி 1970
鳕

பொதுசன நூலகம் யாழ்ப்பாணம்.
4. பயனுள்ள நிலச்சீர்திருத்தற் திட்டம்இத்திட்டம், LITUGOT வசதி செய்தல், டிகால் வசதி செய்தல், சேற்றுச்சகதி நிலங் ளைத் திருத்துதல், பாதைகள் அமைத்தல் போன்றனவற்றைக் கொண்டது. நீர்ப்பாசனத் திட்டங்களை அரசாங்கம் மேற்கொண்டு அங்கு விவசாயிகள் குடியேற்றப்படுகின்றர்கள்.இலங் கையிற்போல் அல்லாது இவர்கள் சில நிபந் தனைகளுக்குக் கட்டுப்பட வேண்டும். நீர்ப் பாசனத் திட்டத்தின் முதலீட்டுச் செலவில் 5 சதவீதத்தை இவர்கள் அரசாங்கத் திற்கு 20-25 வருடங்களிற்குள் திருப்பிக் கொடுத்தல் வேண்டும். உதாரணமாக, ஒரு திட்டத்திற்கு 10 இலட்ச ரூபா செலவா ல்ை விவசாயிகள் 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவைத் திருப்பிக் கொடுத்தல் வேண்டும். குடியேற்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டவர் கள் குடியேற்றத்திட்டத்தைத் தவிர்ந்த வேறு இடங்களில் காணிக்குச் சொந்தக்கார ராக இருக்க முடியாது. அப்படியானல் அவற்றை விற்றுவிடுதல் வேண்டும். இவர் கள் குறிப்பிட்ட காலத்துக்குத் திருந்திய விவசாயத் தொழில்நுட்பப் பயிற்சிக்குச் செல்லுதல் வேண்டும். அத்துடன் அத் திட்டத்திற்கு என வகுக்கப்பட்ட பயிரிடல் ஒழுங்கிற்கு அமையப் பயிரிடுவதற்கு இசை தலும் வேண்டும். புதிய குடியேற்றத்திட் உங்களில் ஒவ்வொருவருக்கும் 12 தொடக் கம் 22 ஏக்கர் வரை காணி பரீட்சார்த்தமாக வழங்கப்படும். ஒவ்வொரு விவசாயியும்வரும் பொழுது தம்முடன் ஒரு குறிப்பிட்ட குறைந்த தொகைப் பணம் கொண்டுவருதல் வேண்டும். இப்பணம் பயிர்ச் செய்கையை ஆரம்பிப்பதற்கு வேண்டிய இயந்திரங்கள், உபகரணங்கள் வாங்குவதற்காகும். ஆணுல் அரசாங்கமும் மற்றைய உபகரணங்களைப் பெறுவதற்கு மேலும் கடன் வழங்கு கின்றது.
5. விவசாய உற்பத்திப் பொருள்களுக்கு உயர் விலை-அரிசிக்குள்ள பெரிய விலையைப் பற்றி நான் ஏற்கனவே கூறிவிட்டேன். இதே போல் அனேகமாக மற்றைய பொருட்களுக் கும் அரசாங்கம் உயர்ந்த விலையைக் கொடுத்து உதவுகின்றது. முதற்தரப் பொருட்களை உற் பத்தி செய்ய விவசாயிகள் தூண்டப்படுகின் றர்கள். முதற்தரப் பொருட்களின் விலை மிக அதிகமாகும்.
25

Page 26
6. உயர் கல்வித் தராதரம்.-யப்பானில் கல்வி கட்டாயமானதாகும். இளைஞர்களுக்கு நூற்றுக்கு மேற்பட்ட கல்லூரிகளில் விவசாயம் போதிக்கப்படுகின்றது. ஒருவருடப் பயிற்சி தொ தொடக்கம் 4 வருடப் பயிற்சி வரை பல்வேறு கால அளவுப் பயிற்சிகள் உண்டு. இப்பயிற்சி நிலையங்கள் அனேகமானவை தனியாரால், நடாத்தப்படுபவை. இவை நல்ல செயல்முறைப் பயிற்சியை அளிக்கின்றன. இத்தகைய தனி யார் கல்லூரிகள் மூன்றுக்கு நான் சென் றேன். இப்பயிற்சிக்கு ஏற்படும் செலவுகளை மாணவர்களே செலுத்துதல் வேண்டும். அர சாங்கக் கல்லூரிகளிலும் அவ்வாறே. பயிற்சி முடிந்ததும் இவர்கள் தத்தமது பண்ணை களுக்குச் செல்வர்.
விவசாயிகள் பலதரப்பட்ட விவசாய சஞ்சி கைகளையும் வாசிக்கின்றர்கள். சில சஞ்சிகை கள் கூட்டுறவுச் சங்கங்களாலும் சில சஞ்சிகை கள் தனியார் ஸ்தாபனங்களினுலும் வெளி யிடப்படுகின்றன. செய்கைப் போகங்களில் ஆராய்ச்சி நிலையங்கள், வயல் விழாக்களை எற் பாடு செய்து விவசாயிகளை அழைத்து சுற்றிக் காண்பிப்பார்கள். கோதுமை, பழங்கள், நெல் போன்றனவற்றின் செய்கைக்கான அகில யப் பான் போட்டிகள் ஒவ்வொரு வருடமும் நடாத் தப்ப்டுகின்றன. இப்போட்டியில் வெற்றிபெறும் விவசாயிகள் பொதுமக்களுக்குடன் அளவளா வுவர். -
விவசாயிகள், ஆராய்ச்சி நிலையங்களிலும் விரிவாக்க நிலையங்களிலும் நடாத்தப்படும் ஒரு நாட் பயிற்சி வகுப்புக்களுக்கும் செல்வார்கள்.
விவசாயம் (பழ உற்பத்தி, மரக்கறிச்செய்கை பாற்பண்ணை முதலியன) வரவர மிகவும், நவீனமாகுவதால் விவசாயிகள் இரண்டொரு வாரங்களுக்கு நடைபெறும் விசேட பயிற்சி களைப் பெறவும் விரும்புகின்றர்கள். இப்பயிற்சி வகுப்புக்கள் விசேட பயிற்சி நிலையங்களில் நடாத்தப்படுகின்றன. இப்பயிற்சிச் செலவை அனேகமாக 6ភាgTugGr பொறுப் பதில்லை. கூட்டுறவுச் சங்கம், செலவில் ஒரு பகுதியை கொடுக்கின்றது. இயந்திரங்கள், விவ சாய இரசாயனங்கள், விதை முதலான உற் பத்தி செய்யும் பண்ணைகளும் இப்பயிற்சிக் கான செலவில் ஒரு பகுதியைக் கொடுக்கின்
றன.
26

7. இயந்திரமயமாக்கலில் வளர்ச்சி-யுத் தத்தின் பின்பு யப்பானில் விவசாயத்தில் இயந்திரங்களை உபயோகித்தல் வெகு விரை வாக வளர்ச்சியுற்றுள்ளது. விவசாயிகள் தம் மிடமுள்ள 38 எக்கர் காணியில் ஆகக்கூடிய அளவை உற்பத்தி செய்ய வேண்டியிருந்தது. தனித்து மனித பலத்தினுல் இதைச் சாதிக்க முடியவில்லை. மிகத் துரிதமாக வளர்ச்சி பெற்றுக்கொண்டிருந்த கைத்தொழிலில் மனித பலம் உபயோகிக்கப்பட்டது. அத்துடன் யுத்த காலத்தில் ஆயுதங்களை உற்பத்திசெய்த தொழிற்சாலைகள் யுத்தத்தின் பின்பு விவ சாய உபகரணங்களையும் இயந்திரங்களையும் உற் பத்தி செய்ய ஆரம்பித்தன. சிறிய விவசாயி களுக்குகந்த புதியன ஏற்பட்டன. அத்துடன் புதியவைகள் கண்டும் பிடிக்கப்பட்டன. தேவை யும் அதிகரித்தது. இயந்திரங்களும் தேவை யான அளவு கிடைத்தது. எனவே, இயந்திர ԼՈԱյլի துரிதமாக ஏற்பட்டது.
இன்று யப்பானில் மேட்டுநிலப் பயிர்களும் நெல்லும் சாகுபடி செய்யும் அதிகமான கமக்
காரர் ஒவ்வொரு நடை உழவு இயந்திரத் திற்கு சொந்தக்காரராகவே இருக்கின்றர்கள்.
அதிகமானேர் நீர் இறைக்கும் இயந்திரங்கள்,
சிறிய குடுமிதிக்கும் இயந்திரம் முதலான வற்றையும் சொந்தமாக வைத்திருக்கின்றர் ᏯᏣiᎢ .
இந்த உபகரணங்களை உற்பத்தி செய்யும் தனியார் துறைகளும், கூட்டுறவுச் சங்கங்களும், சிறந்த விற்பனை நிலையங்களையும் பழுதுபார்க் கும் வசதிகளையும் கொண்டனவாய் இருக் கின்றன.
8. விநியோகத்திலும் விற்பனையிலும் முன் னேற்றம்.-இலகுவில் பழுதடையக்கூடிய
பொருட்களை (பழங்களும் காய்கறிகளும்) விரை
வில் விநியோகிப்பதிலும் விற்பனை செய்வ திலும் திருத்தங்கள் ஏற்பட்டன. இதஞல் பூங்கனியியல் துரித வளர்ச்சியடைந்தது. அதிக உள்ளூர் சில்லறை விற்பனை நிலையங்களும் மொத்த விற்பனை நிலையங்களும், மத்திய சில்லறை விற்பனை நிலையமும், மொத்த விற் பனை நிலையமும் திறக்கப்பட்டன. பழங்களும் காய்கறிகளும் உற்பத்தி செய்யப்ப்டும் இடங் களில் பதனிடும் நிலையங்களும் எற்படுத்தப்
பட்டன. இத்தகைய உபகரணங்களையும் இயந்
திரங்களையும் நிறுவுவதற்கு கடன்கள் வழங்கப்
கமத்தொழில் விளக்கம்

Page 27
பட்டன. சிறந்த விற்பனைத் தகவல் சேவைகள் உற்சாகப்படுத்தப்பட்டன. இன்று அநேக கூட் டுறவுச் சங்கங்கள், விற்பனை சம்பந்தமான தகவல்கள் வெளியிடும் வேலையை மிகத்திற மையாகச் செய்கின்றன. அறுவடைக் காலங் களில், இக்கூட்டுறவுச் சங்கங்கள், பல்வேறு இடங்களிலும் அப்பொருளுக்குரிய விலைகளை அறிந்து தனது அங்கத்தவர்களுக்கு தினமும் விஷேட முறைகள் மூலம் அறிவிக்கின்றன, எனவே, சிறந்த விலையைப் பெறக்கூடிய, இடத்திற்கு இப்பொருட்கள் எடுத்துச் செல்லப் படுகின்றன. விவசாயிகளின் நலனுக்காக சிற ந்த தந்தித் தபாற் போக்குவரத்துச் சேவை கள் இன்று கிராமப்புறங்களில் வசதிப்படுகின் நிறன.
யுத்தத்தின் பின்பு பெரும் கடனளியான நிலையில் இருந்து இன்று தேவைக்குமதிக மான வருவாய் உள்ள நிலைக்கு யப்பானிய விவசாயம் மாறுவதற்குரிய காரணங்களில், இவை சில, யப்பானிற்கு தேவையான விவ சாய உற்பத்திப் பொருட்களையும் மேலதிக அரிசியையும் அங்குள்ள 10 கோடியே 5 இலட் சம் மக்களில் 95 இலட்சம் விவசாயிகளே உற்பத்தி செய்கின்றனர்.
இந்த அனுபவங்களைக் கொண்டு நாம் பல விசயங்களைக் கற்றுக்கொள்ளலாம். முதலாவ தாக, நீர்ப்பாசனத் திட்டங்களிற் போன்று நீர் நிச்சயமாகப் பெறக்கூடிய இடங்களில், நாங்களும், நாம் ஏற்கனவே அறிந்திருக்கும் முறைகளை உபயோகித்து (புதிய வருக்கங்கள், உரப்பசளை, இரசாயனங்கள், செய்கை முறை கள்) பெருவிளைவைப் பெறமுடியும். நிலம் உகந்ததாயின், பாசன நீரைச் சிக்கனமாக உபயோகித்து சிறுபோகத்திலும் அனேக எமது விவசாயிகள், இரண்டு பயிர் செய்தல் முடியும். இரண்டாவது பயிராகப் பாசிப்பயறு, நிலக்கடலை, சோயா அவரை முதலியவற்றைப் பயிரிடலாம்.
மேட்டு நிலத்தில் நீர்ப்பாசன வசதியிருப் பின் யப்பானியர் போன்று நாமும் ஒன்றன் பின் ஒன்ருக பல பயிர்களைச் (பாசிப்பயறு, உழுந்து, நிலக்கடலை, சோயா அவரை, மிள காய், வெங்காயம்) செய்கை பண்ணமுடியும் இங்ங்னம் செய்வதால் ஒரு விவசாயி வருட மொன்றிற்கு ஒரு ஏக்கரில் 1,000 ரூபாவிற்கு மேல் வருமானம் பெறமுடியும்.
சித்திரை-ஆனி 1970

பாற்பண்ணைத் தொழிலுக்கும், பழமரச் செய்கைக்கும் நம் நாட்டில் நல்ல எதிர்காலம் உண்டு. உள் நாட்டிலும் ஏற்றுமதிக்கும் இவை பெரிதும் தேவைப்படுகின்றன.
எங்கள் கூட்டுறவுச் சங்கங்கள் எங்கள் விவ சாயிகளுக்கு மேலும் பல உபயோகமான வழி களில் பெரிதும் உதவலாம். சிறிய விவசாயி களுக்கு இவர்கள் உதவுவதற்குப் பல வழிகள் உள. யப்பானில் கூட்டுறவுச் சங்கம் எவ்வெவ் வழிகளில் விவசாயிகளுக்கு உதவி செய்கின் றன என்று நான் எற்கனவே கூறிவிட்டேன்.
சிறிய வயல்கள் மிகவும் செறிவாகச்செய்கை பண்ணப்படும் பொழுது மேலும் அதிக பயன் தரும் என்பதை நாம் உணருதல் வேண்டும். சில வேளைகளில் பெரிய வயல்களில் இச்செயல் முறைகளின் போது கிடைப்பதிலும் பார்க்க சிறிய வயல்களில் அதிகமாகவும் பெறமுடி யும். இலங்கையில் நீர்ப்பாசனத்தின் கீழ் 5 ஏக்கர் நிலம் உள்ள ஒரு விவசாயி நவீன முறையில் பல பயிரிட்டு, 5,000 ரூபாவிற்கு மேல் இலாபம் பெற முடியாமல் இருக்கின்றது என்பதற்குக் காரணமே இல்லை.
விவசாயத்தை வர்த்தக ரீதியில் செய்வ தற்கு நாம் எண்ணுதல் வேண்டும். வேலை யில்லாதோர் அதிகரிப்பதால் மண்ணை நம்பு வோர் அதிகரிக்கின்றனர். புதிய காணிகளை உண்டாக்குவது செலவுள்ளதொன்றகும். (காடழித்தல், மட்டப்படுத்தல், பாதைகள் அமைத்தல், பாசன வசதிகள் செய்தல் முத லியன). எனவே, ஏற்கனவே உள்ள காணி களில் நவீன விஞ்ஞானத் தொழில் நுட்பங் களை உபயோகித்து உயர்விளைச்சலைப் பெற நாம் முனையவேண்டும். எம்மிடம் உள்ள காணி களில் இருந்து நாம் பெறவல்ல கூடிய விளைச்சலை இன்னும் பெற முடியாமல் இருக் கும் பொழுது புதிய நிலங்களைத் திருத்து வதற்கும் நீர்ப்பாசனம் அமைப்பதற்கும் முற் படுவது எம்மிடமுள்ள சிறிய வசதிகளையும் (விஷேடமாகப் பணத்தை) விரையமாக்குவதா (g5 LfA.
இது ஒர் முக்கிய கேள்வியைக் கிளப்புகின் றது. உயர் வருமானம் தரக்கூடிய ஏதாவது புதிய தொழில்நுட்பம் இருக்கின்றதா? அப்படி யாயின் அப்புதிய தொழில் நுட்பத்தை விவ சாயிகள் எப்படிப் பெறுவது? புதிய தொழில்
27

Page 28
நுட்ப முறைகள் எம்மிடம் இருக்கின்றன என் பதில் ஐயமில்லை. அதாவது பெருவிளைவுதர வல்ல நெல், சோளம், நிலக்கடலை, பாசிப் பயறு வருக்கங்கள், மற்றும் இவற்றிற்கு உப யோகிப்பதற்கான உரப்பசளை, புதிய இயந்திரங் கள் முதலியன. எல்லாப் பிரச்சினைகளுக்கும் எம்மிடம் எல்லா விடைகளும் இல்லை. ஆனல் தனது எல்லாப் பிரச்சினைகளையும் தீர்த்த ஒரு நாடும் உலகில் இல்லை. எனவே, எமக்குத் தெரிந்த தொழில் நுட்பத்தைக் கொண்டு பயன்பெற முயலுவதே உசிதம்.
இன்று எமது விவசாயிகளில் அனேகர் புதிய வருக்கங்களையும் புதிய இரசாயனங்களை யும், புதிய பயிர்களையும் பெரும் இலாபம் பெறும் வழிகளையும் அறியப் பெரும் ஆவ லுள்ளவர்களாக இருக்கிறர்கள். இந்த விவ சாயிகள் ஆராய்ச்சி நிலையங்களுக்குச் சென்று பார்வையிடுதலும், ஆராய்ச்சியாளர்களையும் விரிவாக்க உத்தியோகத்தர்களையும் கண்டு உரை யாடுதலும், தங்கள் மாவட்டத்திலோவெளி மாவட்டங்களிலோ உள்ள முன்னேற்றமான கமங்களுக்குச் சென்று பார்வையிடல், இந்த நாட்டில் அன்றி வெளிநாடுகளிலும் வெளி யிடப்படும் விவசாயப் புத்தகங்களையும் சஞ்சிகை களையும் வாசித்தல், முதலானவை பெரிதும் உபயோகமுள்ளனவாகும்.
காரணம் என்6
சோறு தின்னுமலே இங்கிருந்தா நம்ம
துக்க மொழிந்திடுமா?-மச்சான்
மாறுதல் யாருக்கும் உண்டுமச்சான்-அன்றி
வையத்தில் யாருமுண்டா?
ஒன்றுக்கு நூறக உன்னுேடு ஒத்தவன் ஓங்கும் விளைவு கண்டான் ! - மச்சான்
கந்தண்ணன் அங்ங்ணம் விளைவினைக் கண்டிடக்
காரணம் என்ன மச்சான்?
2S

கோழிப்பண்ணை, நெல் உற்பத்தி, காய்கறி, உற்பத்தி, இயந்திரங்களை உபயோகித்தல் ஆகிய விசேஷ விடயங்களில் விஷேச பயிற்சி (1-2 வாரங்களுக்கு) வெகு விரைவில் நடாத்து தற்கு கமத்தொழிற்றிணைக்களம் ஆலோசித்து வருகின்றது. எனவே, உற்சாகமுள்ள கமக் காரர்சள் நவீன முறைகளைக் கற்றுக்கொள்ள 6) ITL).
தற்பொழுது நெல் உற்பத்தி பற்றி செய் கைப் போகங்களின்போது ஒருநாட் பயிற்சி வகுப்புக்கள் எல்லா மாவட்டங்களிலும் பல இடங்களில் நடாத்தப்பட்டு வருகின்றது.
எமது விவசாயிகளிடையே கொள்கை மாற் றத்தைத் தற்பொழுது நாம் எல்லோரும், காணக்கூடியதாக இருக்கின்றது. இது நல்ல அறிகுறியாகும். எல்லாக் கமக்காரரும் விவ சாயத்தை ஒர் வியாபாரமாக எண்ணி இதி லிருந்து பெரு இலாபம் பெறமுடியுமென் பதை உணரும்பொழுது நாம் உண்மையி லேயே ஒர் பலம் வாய்ந்த விவசாய நாடாகத் திகழ்வோம்.
(தமிழாக்கம் : செசு)
T Logg|T65T 2
“கல்லூரன்'
காடு கெடுத்துநீ பாடுபட்டாய் மச்சான்
காவல் படுத்து வந்தாய்!-இன்று
வாடியே உன்மனம் சோருகிருய்-உந்தன்
வயலின் விளைவு கண்டா?
களை கொல்லி, பசளைகள் என்பன இட்டுத்தன்
காணியைச் செய்தவனும்-இந்த s நவீன முறைப்படி நாமும் செய் தாலென்ன
நல்ல விளைவு மச்சான்!
毫
கமத்தொழில் விளக்கம்

Page 29
இலங்கைப் புகையிலைக்
 

盘
ފަރިހަހަ ఫ్లక్షఢ
リ器 蕊 ་་་་་་་་་་་ kā
خبے
ንቖ
恕
蕊
器
靈
事
محےسےیہ
3.
雪
-<స్సె డ్పై
SGS GG g

Page 30
மேலைத் தேசமுறையில் விவசாயம்
மேலை நாடுகளைப் போல் ஈழநாட்டிலும் விஞ்ஞான ரீதியில் விவசாயத்தைப் பெருக்க
29
* கமத்தொழில் விளக்கம் ' பெரிதும் உதவி புரிகின்றது. மேன் மேலும் இந்நூல் வளர்க வென வாழ்த்துகிறேன்.
---- இராமசாமி, புன்னுலைக்கட்டுவன்.
தனக்கென ஒரு பாதை வகுத்துளது
" கமத்தொழில் விளக்கத்தை ”த் தவருது படித்து வரும் வாசகர்களில் நானும் ஒருவன். என்னைப் பொறுத்த வரையில் கமத்தொழில் விளக்கம் தனக்கென ஒரு பாதையை வகுத் துக் கொண்டுளது. கமத்தொழில் விளக்கம் மேலும் வளர எனது நெடுங்கேணிப் பகுதி வாசகர்களின் வாழ்த்துக்கள் என்றென்றும் உரித்தாகட்டும்.
-இ. தர்மபாலன், நெடுங்கேணி.
30
 

உள்ளதை உள்ளவாறு இயம்புகின்றது
உள்ளதை உள்ளவாறு எடுத்தியம்பி எல் லோருள்ளங்களிலும் நீங்காத நல் நினைவினை ஏற்படுத்திக் கொண்டிருக்கும், தங்களினது
வீர முரசு கொட்டும் உன்னத ஏடான "
கமத் தொழில் விளக்கத்தை ’ உவகையுடன் மன முவந்து வரவேற்கும் வாசகர்களில் யானும் ஒருவன்.
--கா. அழகரத்தினம், வவுனியா.
சஞ்சிகையுலகிற் சிறந்தது
தங்களின் முத்திங்கள் ஏடான “ கமத் தொழில் விளக்கத் 'திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இச்சஞ்சிகை இலங்கைச் சஞ் சிகையாக தலை நிமிரும் என்பது வெள்ளிடை மலை, வாழ்க கமத்தொழில் விளக்கம் ! வளர்க அதன் சேவை !
-ஏ. எம். ஏ. நவSர், காரைதீவு.
கமத்தொழில் விளக்கம்

Page 31
() எஸ்-ே
665T 60 d" is ig
கடலோரப் பாவனைக்
துருப்பிடிக்காத6ை
நச்சுத்தன்மையற்ற
நீடித்துழைப்பவை
பொருத்தச் சுலப
இக்கணம் மிச்
ឃ្ល
54, பாங்சால்
கொழும்பு 1
தொலைபேசி 3603, 3634, 5107-8
 

5ub T6 குழாய்கள்
குச் சிறந்தவை
Y
106ᏡᏱ 6Ꮒ]
| Որք 6ծT 6ծ) 6) I
bகவை
(56th N.
សិទ្ធ,

Page 32
மறுமு றையும் வழங்
நியூசிலாந்து கால்நடை அபிவிருத்தியில் உலக நாடுகளில் முதன்மை வாய்ந்தது. அதே போன்று அது வள்ளல் தன்மையிலும் தலை சிறந்தது. நம் நாட்டின் பாற்பொருட் பஞ்சத் தினை நன்குணர்ந்த நியூசிலாந்து மக்கள், 1965 ம் ஆண்டு ஆனி மாதம் 1 ம் திகதி 475 ஆறு மாத வயது நிறைந்த ஜேர்சி நாகு கன்றுகளையும், 25 காளைக் கன்றுகளையும் நமக்கு நன்கொடையாக அளித்து நம்நாட்டில் கால்நடை வளர்ப்பினை அபிவிருத்தி செய்ய முன் வந்தது யாவரும் அறிந்ததே. இக் கால்நடைகள் அம்பவலைக் கிராமத்தில் இரண் டாயிரம் ஏக்கர் வரை விஸ்தீரணம் உள்ள இடத்தில் இரண்டாவது பால்பண்ணை ஒன்றை அமைப்பதற்கு ஏதுவாக அமைந்தன. நியூ சிலாந்து மக்களது உதார குணத்தின் பயன கக் கிடைத்த இக்கால்நடைகளைக் கொண்டுள்ள இப்பாற்பண்ணை நியூசிலாந்து கால்நடைப் பண்ணை ’ என்று அழைக்கப்படுகின்றது. அம் பவலைச் சீதோஷ்ண அமைப்பு, நாட்டு வளப் பம், இயற்கைக் காட்சி முதலியன நியூசிலா ந்தை ஒத்திருந்தமையின், கால்நடைகளின் நல்வளர்ச்சிக்கு இவை சாதகமாக அமைந் திருந்தன. நியூசிலாந்தில் மற்றைய மேற் கத்திய நாடுகளைப் போன்று கால்நடைகளி டையே தொற்றுநோய்களோ, உண்ணிகள் மூல மாகப் பரவக்கூடிய நோய்களோ இல்லை. இருந் தும் அம்பவலைச் சூழ்நிலையில் அவை எவ்வித நோய்களையும் பற்றமலிருக்க வேண்டிய பாது காப்பும், நோய் தடுப்பு மருந்துகளும் ஊசி மூலம் உட்புகுத்தி மூன்று மாத காலம் வரை தொற்று நோய் பாதுகாப்புக் காவலில் வைத்து வளர்க்கப்பட்டன. 1966 ம் ஆண்டில் இப்பசுக் கன்றுகள் 15-18 மாத வயதுடைய காளைப்புணர்ச்சி மூலமாகக் கருவடைந்து 1967 ம் ஆண்டில் கன்றுகள் ஈனத் தொடங்கின. தற்போது இவற்றின் சந்ததியான பசுக்கன்று களிற் சிலவும் கன்றுகளை ஈன்று பாற்கறவை களாகிவிட்டன. நியூசிலாந்து கால்நடைப் பண் ணையில் உள்ள கறவைப் பசுக்கள் முதலிற் றில் தினசரி 16 இறத்தலும், அடுத்தடுத்த ஈற்றுகளில் சராசரி தினம் 20 இறத்தல் பாலும் இதுவரை கொடுத்துள்ளன. இவற் றுள் முதலிற்றில் நாளொன்றிற்குக் கூடிய
32

a. O வே. ஆறுமுகம் இனர் உதவிப் பொது முகாமையாளர்,
கால்நடைப் பண்ணைகள்
அளவை 60 இருத்தல் பால் கொடுத்த பசு ஒன்றும், 45 இறத்தல் பால் கொடுத்த
பசுக்கள் பலவும் உண்டு. பொதுவாக இங்
குள்ள பசுக்கள் யாவும் முதல் ஈற்றுப் பால் சுரப்பிக் காலத்துள் சராசரி 5,000 * இருத்தல் பாலினைக் கொடுத்துள்ளன. இக் கால்நடை நிலயத்தின் தற்போதைய தினசரி ܨ ܢ
பால் உற்பத்தியின் தொகை 6,500 இருத்தல் களாகும்.
இதைத் தவிர, கடந்த சில வருடங்களுக்குள் பெருந்தொகையான பொலிக் காளைகளை அர சாங்க பண்ணைகட்கும், செயற்கைச் சினையுறு த்து ஸ்தாபனங்கட்கும், தனியாரின் தேவை கட்கும் விநியோகஞ் செய்வதற்கு நியூசிலாந்து கால்நடைப் பண்ணை ஏதுவாக இருந்தது. இங்கிருந்து விநியோகிக்கப்பட்ட காளைகளின், மூலம் நாட்டின் பல பாகங்களில் கால்நடை அபிவிருத்தி துரிதப்படுமென எதிர்பார்க்கப் படுகின்றது. எதிர்காலத்தில் வருடா வருடம் முன்னுற்றுக்கு மேற்பட்ட பொலிக்காளைகளை இக்கால்நடைப்பண்ணை பிரத்தியேக உபயோக த்திற்கு விற்க முடியும் என்பது நிர்வாகத் தாரின் மதிப்பீடு.
நியூசிலாந்துக் கால்நடைப் பண்ணையின் முன்னேற்றம் காலத்திற்குக் காலம் நியூசி லாந்து அரசாங்கத்தால் அனுப்பப்பட்ட கால் நடை நிபுணர்களாலும், ஆலோசகர்களாலும் நன்கு மதிப்பிடப்பட்டு பாராட்டப்பட்டது. இவர் களது சிபார்சின் காரணமாக, இலங்கை அர சாங்க கால்நடைப் பண்ணைகளின் தேவை களைத் துரிதமாகப் பூர்த்தி செய்து, மிகுதிப் பாற் பசுக்களையும், பசுக் கன்றுகளையும் பொலி க்காளைகளையும், பொது சனங்கட்கு விற்று, நாட் டின் கால்நடை அபிவிருத்தியில் அவர்களே யும் முக்கிய பங்கு எடுக்குமாறு தூண்டுவத ற்கு ஏதுவாக, நியூசிலாந்து அரசாங்கம் மீண் டும் இரண்டாவது முறையாக 1969 ம் ஆண்டு மார்கழி மாதம் 21 ந் திகதி 488 பதினைந்து மாத வயது ஜேர்சிப் பசுக் கன்றுகளையும், 16 காளைக் கன்றுகளையும் பரிசாக அளித் துள்ளது பாராட்டப்படத் தக்கதே. பிரத்தி யேகமாக ஒழுங்கு செய்யப்பட்ட “ சிம்றியா ’ என்ற கால்நடை ஏற்றுமதி, இறக்குமதிக்
s கமத்தரொழில் விளக்கம்

Page 33
கப்பல் கார்த்திகை மாதம் 28 ந் திகதி 504 கால்நடைகளுடன் நியூசிலாந்துக் கரையைவிட்டு கடல் மார்க்கமாக இலங்கை நோக்கிப் புறப் பட்டது. இக்கப்பலில் கால்நடைகளின் பாது காப்பிற்காக நியூசிலாந்து விவசாய இலாகா வில் கடமை ஆற்றும் கால்நடை மருத்துவர் திரு. யோன் கொம்டனும், நியூசிலாந்து அர சாங்கத்தின் வேண்டுகோளிற்கிணங்கி இக்கால் நடைகளைத் தனியார் பண்ணைகளிலிருந்து வாங்கி, ஒன்று சேர்த்து, பாதுகாத்து ஏற்று மதி செய்து உதவிய டால்கெற்றி ' என்னும் தனியார் கால்நடை ஏற்றுமதி இறக்குமதி ஸ்தாபனத்தின் அதிகாரி ஒருவரும் பிரயாணஞ் செய்தனர். இருபத்தைந்து நாட்கள் வரை கடல் பிரயாஞ்ை செய்து, இக்கால்நடைகள் நல்ல செளகரியத்துடன் இலங்கைக் கரை வந் தடைந்ததும், கொழும்புத் துறைமுகத்திலு லுள்ள ' குமார விஜய கீ’ என்னும் சரக்கு இறக்கும் கப்பற்றுறையில், 21 ம் திகதி காலை 10 மணி வரையில் இறக்குமதி செய்யப்
சித்திரை-ஆனி 1970
4一J壹1771(2/70)
· · · · PEA
 

பட்டன. காலை 10.15 வரையில் விவசாய, உணவு அமைச்சர் திரு. எம். உ. பண்டா அவர்களையும், நியூசிலாந்தின் அரசாங்கப் பிரதி நிதி உயர் திரு. பி. எஸ். லென்ட்றம் அவர் களையும் விவசாய இலாகா, கால்நடை உற்பத்தி செளக்கியப் பகுதி உத்தியோகத்தர்கள், பல பிரமுகர்கள் மத்தியில் மாலையிட்டு, கண்டி நடன அலங்காரத்துடன் வரவேற்று அங்கு நன்கலங்கரிக்கப்பட்ட மேடையொன்றில் அமரச் செய்தார்கள். அதன் பின் உத்தியோக பூர்வ மாக நியூசிலாந்துப் பிரதிநிதி, இலங்கை விவ சாய உணவு அமைச்சரிடம், அங்கு இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கோடி ரூபா பெறுமதி வாய்ந்த 504 ஜேர்சி கால்நடைகளையும் நன் கொடையாக ஒப்படைத்தார். இக்கால்நடைக ளுடன் அனுப்பப்பட்ட மற்றைய பண்ணை உய கரணங்களும், மருந்து வகைகளும், மற்றும் பொருட்களும் ஒப்படைக்கப்பட்டன. நன்கொ டையை ஏற்றுக் கொண்ட விவசாய உணவு அமைச்சரும், விவசாய இலாகா அதிபரும்,
(77 ம் பக்கம் பார்க்க)
33

Page 34
துறைமுகத்தில் பசுக்க
34
 
 
 
 

ளேக் கையேற்ற
தொழில் விள
கமத

Page 35

Lises b e al 9 d.
P6eg 蠶 * சொந்தக்காரர்களின் திருப்தியைப் பெற்றுள் பிரவுண்ஸ் ஸ்தாபனத் நில்சாயப் பகுதி. து முக்கிய இடங்களில் Dáštatútu (Seter sig G s Fn. A பூங்களின் மூலம், தங்கள் மையென எதிர்பார்க்கும்
னத்தையும், கண்காணிப் பயும் அவர்கள் கே  ைவுே,
ஆகியவற்றின் மூலம் உடனடியூகேம் பெறு ன்ேறனர்.

Page 36
குடியேற்றத் திட்டங்க
விஸ்வமடு படித்த வாலி
1965-66 ஆம் ஆண்டு வடமாகாணத்தில் உள்ள மேற்படி வவுனிக்குளத் தூக்கண நீர்ப்பாசனத் திட்டம் முன்னேடியாக ஆரம்
பிக்கப்பட்டது. பின்வரும் அட்டவணையைக் கொண்டு அதன் முன்னேற்றத்தை அறிய (ԼՈԼԳ-ն-|ւՈ:
வருடம் 65-66 66-67 67-68 மிளகாய்ச் செய்கையின் கீழ்
கொண்டுவரப்பட்ட நிலம் 10 . 65 - 160
@了リff ஏக்கர் @r巫5庁 செய்கை uଗion ଘofilliରjit isୋff;
தொகை ... 10 .. 42 - 272 உபயோகித்த நீர் இறைக்கும்
யந்திரம் 4...3...3.ء
எனினும் இதைவிட இன்னும் மிக உயர்
வான அபிவிருத்தியடைவதில் சாதகமாக
அமையாத காரணங்கள் வருமாறு :
(அ) பாசன வாய்க்கால்கள் முன்கூட்டியே
அமைக்கப்படாதிருந்து உடனுக்குடன் ޝަހރި தயார் செய்து நீர் விநியோகம் செய்தமை.
36
 

(P. 1ᏏᎿ ᎫᎫfᎢᎦfᎢ , மேலதிக மாவட்ட விவசாய விரிவாக்க அலுவலர், யாழ்ப்பாணம்.
ள் இரண்டு
பர் குடியேற்றத் திட்டம்
(ஆ) பெரும்பாலான குடியேற்றவாசிகள் தமது இல்லங்களில் வசியாமை. மேற்படி குறைபாடுகளிருந்தும், காணி இலா காவினதும் நீர்ப்பாசன இலாகாவினதும் ஒத் துழைப்பே உற்பத்தியில் பெருமளவு முன் னேற்றத்திற்கு உதவியாய் இருந்தது.
1967-68 அறுவடை விவரம் :
திட்டம் 150 ஏக்கர்
のエリ5庁 செய்கைபண்ணிய விசாலம் - வலது கரை - - 9. இடது கரை 69
160
மொத்த விளைச்சல்-1563 அந்தர் செத்தல். எக்கர் சராசரி விளைவு-9.75 அந்தர் செத்தல். எக்கருக்கு ஆகக்கூடிய விளைவு-12 அந்தர் செத்தல்,
வெளிச்சந்தையில் மிளகாய்ச் செத்தல் விலை கட்டுப்பாட்டு விலையிலும் பார்க்கக் கூடுதலாக இருந்ததால் உற்பத்தியாளர் தமது மிளகாய்ச் செத்தல்களை வெளிச்சந்தையிலேயே விற்றனர். இருந்தும் 1015 இறத்தல் மிளகாய்ச் செத் தல் 11 உற்பத்தியாளர்களிடமிருந்து விதைக்
காக வாங்கப்பட்டது.
விஸ்வமடு படித்த வாலிபர் குடியேற்றத் திட்டம்
மேற்படி திட்டம் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் அடைந்து வருகிறது. 1.7.66 ல் நூறு படித்த வாலிபர்களுடன் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 24.6.67 ல் எழுபத்திரண்டு வாலிபர்களும் 1968 யூன் மாதத்தில் ஐம்பது வாலிபர்களும் இத்திட்டத்தில் மேலும் சேர்த்
துக்கொள்ளப்பட்டனர்.
வாலிபர் திட்டத்தின் தற்போதைய நிலை
1 ம் பகுதி a 6. 2 ம் பகுதி - a . 59 3 ம் பகுதி - 36
கமத்தொழில் விலக்கம்

Page 37
ஒவ்வொருவருக்கும் 3 ஏக்கர் காணி மொத் தமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. (1 ஏக்கர் குபி
6.შ. யிருப்புக்கும் தென்னை வாழை போன்ற பழ மர நடுகைக்கும்) ஆனல் சில வாலிபர்கள் இதனை தனி வாழைச் செய்கைக்கே பயன் படுத்தி வருடம் 3,500 தொடக்கம் 4,000 ரூபா L வரை மொத்த வருமானமாய் பெறுகின்றனர். 6)
இனம் பயிர்க்ரெப்
விசால
1. Lტ)Girქiნ Fruit .. . 27 ஏக்கர்
2. டுெ ஒண்ஆரயம் o 14 ஏக்கர்
3. நிலக்கடலை 0 65
4. լյլԻլյTԱյ G)6չյլեյտրալի , 1 ஏக்கர்
5. காய்கறி . - , , 3 ஏக்கர்
மொத்த வருமானமாக மேற்படி காய்கறிச் செய்கையில் 2,00
இனம் பயிர்ச்முெய்கை
JTULI ஏக்கர்
LÁNGITās uiu - - 170
GDG) jõõõTE TILLřb 4
நிலக்கடலை . . 27
காய்கறி 10
மிளகாய்ச் செய்கையில் ஏக்கருக்கு 20 அந் தர் செத்தல் வரை அதிகக்கூடிய விளைவைச் சிலர் பெற்றர்கள். சில வாலிபர்கள் 3 ஏக்க ரையும் தனியாக மிளகாய்ச் செய்கைக்கே, பயன்படுத்தி மொத்த வருமானமாக 15,000/- ரூபா வரை பெற்றுள்ளார்கள். மேற்படி வரு மானத்திலிருந்து ஒரு வாலிபர் புதிய உழவு யந்திரமொன்றை வாங்கியிருப்பது குறிப்பிடற் குரியது.
1968 மே மாத கடுமழை காரணமாக ஒரு சில வாலிபர்களின் பயிர்ச் செய்கை பாதிக்கப் பட்டும் இருக்கிறது. வரும் ஆண்டில் இவ்வித சேதம் ஏற்படுவதைத் தடைசெய்ய நீர்ப்பாசன
சித்திரை-ஆனி 1970
鲜

எஞ்சிய இரண்டு ஏக்கரும் மிளகாய்ச் செய் கக்கெனவே ஒதுக்கப்பட்ட நிலமாகும். 1967 னவரியில் முதன்முதலாக மிளகாய்ச் செய் கயும் உப உணவுற்பத்தியும் ஆரம்பிக்கப் டது. 1967 காலபோக அறுவடை விவரம் ருமாறு :-
கை பெற்ற அறுவடை ஏக்கர் சராசரி
விளைவு
210 அந்தர் செத்தல் . 1.5 அந்தர்
29 அந்தர் பச்சை
709 அந்தர் ao 50 அந்தர் (1967 மே மாத கடுமழையால் பாதிக்கப்பட்டு விளைவு குறைவுற்றுள்ளது)
80 அந்தர் - - 8 அந்தர்
20 அந்தர் . 20 அந்தர்
I01– êEሠሇ° * டுள்ளது.
மொத்த அறு ஏக்கர் சராசரி 6) J 3DL- விளைவு
அந்தர் 蠱 அந்தர்
1,960 11.5
360 75
25 - 8
ாய்க்கால்களைச் சிமேந்தால் கட்டுதலும் பிர ான கழிவு வாய்க்கால்களை வெட்டுதலும் ர்ப்பாசன இலாகாவால் முன்கூட்டியே செய் ப்பட வேண்டும். ஏனைய கழிவு வாய்க்கால் ளே ஒவ்வொரு துண்டிலும் அவரவர்களே வட்டவேண்டும். இத்திட்டம் 400 பேர்களைக் கொண்டதாய் ருக்கச் செய்வதே எமது நோக்கம். குளத்தி ருெந்து இயற்கை ஒட்டத்திலேயே இங்கு நீர் ாய்ச்சப்படுகிறது. இத்திட்டத்தில் வேலை செய் தற்கென ‘ நொவிக் ’ ஸ்தாபனத்தாரால்
உழவுயந்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. த்திட்டத்தில் ப. நோ. கூ. சங்கம் ஒன்றும் ள்ளது.
3.

Page 38
38
வானுெ 4.
கருத்
விவசாய அறிவை வளர்த்து வருவதி இத்துறையில் இலங்கை ஒலிபரப்புக் போற்றற்குரியது. இத்தகைய சே6 சிறப்பாக உபயோகிக்கலாமென்பது மு நற்போதனையாகும் எனவே, வாெ களுக்கு சிறப்புற உபயே கிக்கக்கூடிய தமிழ் மாவட்டங்களிற் பணிபுரியும் வழைத்து, இலங்கை ஒலிபரப்புக் சு ஒரு கருத்தரங்கும் பயிற்சி வகுப்பு ஆரம்பத்தில் நடைபெற்ற இக்கருத் த$பன ஒலிபரப்பாளர் பலர் தங்கள விவசாய விரிவாக்க அலுவலர்களு தரங்கை நன்கு ஒழுங்குசெய்து, அய வைத்த இலங்கை ஒலிப்பரப்புக் பதில் தலைவர் திரு. சி. இராசசுந்
பாராட்டுக்களும் ந
 

தரங்கு
ஸ் வானுெலியின் பங்கு வானளாவியது. கூட்டுத்தாபனம் ஆற்றிவரும் சேவை வையை விவசாய விரிவாக்கத்திற்கும் முன்னேறிய நாடுகள் எமக்குப் புகட்டும் லிையை விவசாய விரிவாக்க அலுவல் வழிமுறைகளை ஆராயும் நோக்குடன் விவசாய அலுவலர்கள் பலரை வர பட்டுத்தாபனத்தின் பயிற்சி நிலையத்தில் ம் நடாத்தப்பெற்றது. 1970 ஜனவரி நரங்கில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் து கலை அறிவையும் அனுபவத்தையும் ன் பகிர்ந்து கொண்டனர். இக்கருத் nது உழைத்து, சிறப்புற நிறைவேற்றி கூட்டுத்தாபனத்தின் பயிற்சி நிலையப் தரம் அவர்களுக்கு எமது
ன்றியும் உரித்தாகுக.
கமத்தொழில் விளக்கம்

Page 39
வானுெலி விவசாயப் பிரச்சினைகள் தவிடுபொடியாகின் மா அதிகாரி திரு. நெவில் ஜயவீர அவர்களின் கவன
சித்திரை-ஆனி 1970
 
 

றன இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ம் பெற்று.
ாட்டாத கவனம்.
39

Page 40
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தேசிய அவர்கள் விவசாய அலுவலர்கள் மத்தியில் கிரா
விவசாய அதிபர்
德拉
 
 
 

சேவை மேலதிக அத்தியட்சர் திரு. க. செ. நடராசா ாமிய வானுெலி பற்றி உரையாடுகின்றர்.

Page 41
எம் நாட்டின் விவசாய விரிவாக்கத்திற்கு உறுதுணையா கலாநிதி அபயரத்ன அவர்களின் அறிவுரை.
கருத்தரங்கின் இறுதியில் விவசாய அலுவலர்கள் ©ត្រាពិន្ទ្រ தமக்கே உரிய பாணியில் அள்ளி வீசுகின்ருர் ஒலிபரப்பு அகமும் முகமும் மலர வாய்விட்டுச் சிரிப்பவர் டாக்டர் 9 சிரிப்பவர் திரு. டெறிக் ஷொக்மன்,
சித்திரை-ஆனி 1970
 
 
 

த்த விருத்தில் ஏதோ குஷியான செய்தியைத் மா அதிகாரி திரு. நெவில் ஜயவீர இடது புறத்தில் புபயரத்ன. வலது புறத்தில் குனிந்து அடக்கமாகச்

Page 42
யாழ்ப்பாண
DI 55 s 6S)
சேமவைப்பு
தினமும் பணம் போடுவதற்கும் எடு சேமிப்பில் மாதாமாதம் இருக்கும் குறைந்த கொடுக்கப்படும்.
மாதாந்த தொடர் சேமவைப்பு
ரூபா 1 தொடக்கம், அதன் எத்தனை மாதங்களுக்கும், 81 மாதங்களுக்கும், 120 ட சேமிக்கலாம்.
நிலைச் சேமவைப்பு
இச்சேமவைப்பில் எவ்வளவு தொகை 48% வீதம்வட்டி கொடுக்கப்படும். 60 மாத சேப 120 மாத சேமவைப்புக்கு 64% வீதம் வட்டி மேலும் விபரங்களுக்கு அண்மையிலுள் தலைமைக்காரியாலயம் :
59, பிரதான வீதி, யாழ்ப்பாணம்,
Lö) 613EITuin 32 ற்பத்
வீரர் தங்கராசா
1970 தை-பங்குனி இதழில் “மிளகாய் உற்பத்தி வீரர் இருவ
பட்ட படங்கள் இரண்டையும் மீண்டும் இவ்விதழில் பிரசுரிக்கின்
திரு. தங்கராஜாவின் படத்தின்கீழ் சதாசிவம் என்றும் திரு. லாக மாறிப் பிரசுரிக்கப்பட்டுள்ளன. இவ்விதழில் சரியான ெ
42
 

D கூட்டுறவு
வங்கி
ப்பதற்கும் வசதியுள்ள சேமவைப்பு. இச் மிகுதிப்பணத்திற்கு 44% வீதம் வட்டி
மடங்குகளும் இச்சேமிப்பு முறையில் 60 ாதங்களுக்கும் மாதவீதம் பணம் போட்டுச்
பும் போடலாம். 12 மாத சேமவைப்புக்கு வைப்புக்கு 54% வீதம் வட்டி கொடுக்கப்படும். கொடுக்கப்படும்.
ா கிளை வங்கிகளுடன் தொடர்பு கொள்ளவும்
தொ. பே. எண். 633.
தி வீரர் இருவர்
வீரர் சதாசிவம்
’ என்ற தலைப்பில் வெளியாய கட்டுரையுடன் பிரசுரிக்கப் ருேம். சென்ற இதழில் படங்களின் கீழ் தரப்பட்ட பெயர்கள் தாசிவத்தின் படத்தின் கீழ் தங்கராஜா என்றும் தவறுத பயர்களுடன் படங்களைப் பிரசுரிக்கிருேம். -ஆசிரியர்
கமத்தொழில் விளக்கம்

Page 43
விவசாயம் வளர்த்த விஞ்ஞானிகள் -
கறவைக் காய்ச்சல் க
தியபோல்ட் சிமித்
அமெரிக்காவின் @_6T நாட்டுக் கலகம் முடிந்து சில வருடங்களில் மந்தை வளர்ப் புத் தொழில் மிக வளர்ந்து, தென் பகுதிகளில் செல்வம் கொழித்தது. டெக்சாஸ் (Texas) என்னும் பிரதேசத் தில் மந்தை வளம் பெரிதும் பெருகி வளர்ந்தது. இம் மந்தைகளை வடக்குப் பகுதி களுக்கு ஏராளமாக விரட்டிச் சென்று விற்பது வழமை. இப்படி மந்தை வியாபாரம் விரிவடைந்துவரும் தறுவா யில் கொடூர நோயொன்று தோன்றி, மந்தைகளை ஆயிரக் கணக்கில் அழித்தது. வட பகுதி மந்தைகளே இந்நோ யால் பெரிதும் பாதிக்கப்பட்டன. இங்கே விசேட மாகக் கவனிக்கப்பட்டது என்னவெனில், தென் பகுதிகளிலிருந்து விற்பனைக்கென வடபகுதிகளுக்கு வரும் மந்தைகளுடன்சேரும் போது மாத்திரமே வட பகுதி மந்தைகள் இந்நோயால் பெரிதும் பாதிக்கப்பட்டன என்பதே. 107 பாகை வரை காய்ச்சல், முதுகுகூனி, மயிர் சிலிர்த்து, தலை தொங்க விட்டு நிற்றல், உணவு கொள்ளாமை, சில நாட்களில் மரணம் ஆகியனவே இந்நோய் கொண்ட மாடுகளின் அறிகுறிகளாகும்.
டெக்சாஸ் பகுதியிலேயே இந்நோய் பெரி தும் பாதித்ததினுல் இதற்கு டெக்சாஸ் காய்ச்சல் என ஆரம்பத்தில் அழைத்தனர். இப் போது இதை உண்ணிக்காய்ச்சல் அல்லது. ரிக் SGJf (Tick Fever) GTGOT gy60LOLLG5, GlypGOLD. அமெரிக்க அரசாங்கமும் விவசாயப்பகுதி யினரும் இந்நோயின் காரணிகளை ஆராய்ந்து
சித்திரை-ஆனி 1970
 

திருமதி சி. வாலாம்பிகை, வேம்படி மகளிர் கல்லூரி,
லைத்த விஞ்ஞானி
கண்டுபிடிக்க முடியாது போக வே, ஏறக்குறைய 50 கோடி ரூபா பெறுமதியான மந்தை கள் அழிந்துபோயின. பிற நாட்டு மிருக வைத்திய வல்லுநர்கள் பலர் ஆராய்ந் தும் பலன் காணமுடியாது போயிற்று. இச் சந்தர்ப்பத் திலே தான் அமெரிக்க மிருக வளர்ப்புத்தொழில் சங்கத்தி னரை இந்நோய் பற்றி ஆராயும்படி அரசாங்கம் பணித்தது. எனவே, அச்சங் கம் ஒரு விசேஷ ஆராய்ச்சி யாளரை நியமனஞ் செய்ய முயன்று, கோனெல் சர்வ கலாசாலையின் சிபார்சின்படி தியபோல்ட் சிமித் என்னும் இளைஞரை 1884 ம் ஆண்டில் அச்சங்கத்தின் நோயியல் ஆய்கூடத்தின் இயக்குநராக நியமித்தது. இருபத்தைந்து வயது நிரம்பிய தியபோல்ட் சிமித் ஆராய்ச்சிகள் செய்வதற்கு வேண்டிய சகல வசதிகளும் தரப்
தியபோல்ட் சிமித் ஒன்பது வருடங்களாக இடையருது ஆராய்ச்சிகளை நடாத்தி, இறுதி பில் உன்னிைந்தாய்ந்துவின் உண்மைக் காரணி களையும், சிகிச்சை முறைகளையும் கண்டு பிடித்து, உண்ணிக் காய்ச்ச8ல. அழித் தொழித்தார். அதுமாத்திரமல்ல, நோய்த் தொற்றை ஒரு மிருகத்திலிருந்து இன்னுெரு மிருகத்திற்கு இடையீடான நோய்காவி உயி ரினமொன்று (intermediate carrier) கொண்டு செல்லலாமென்பதை எதுவித ஐயப்பாடுமின்றி முதன் முதலாக ஆராய்ந்து உறுதிப்படுத்தியவர் இவரே. இவ்விதம்
43

Page 44
வைத்திய அறிவியலிலும் ஒரு புதிய ஆராய் வுத்துறையை ஆரம்பித்துவைத்தார். இத் துறையின் ஆராய்வுகளால் நுளம்பு, தெள்ளு, பேன் போன்ற ஒட்டுயிர்கள் எங்ங்னம் மனிதரிடையே நோய்களைப் பரப்புகின்றன என்று அறியமுடிந்தது. இவ்விதம் பொது ஜன சுகாதாரச் சேவைக்கும் அவரது கண்டு பிடிப்பு அடிப்படையாக அமைந்தது.
சிமித் 1859 ம் ஆண்டு யூலை 31 ம் தேதி யன்று நியூயோர்க்கில் அல்பனி என்னும் ஊரில் பிறந்தார். இளமையிலேயே படிப்ப தில் பேரார்வம் கொண்டு வாசித்து வந்தார். அவரது பெற்றேர் ஒன்பது வருடங்களுக்கு முன் ஜெர்மனியிலிருந்து அமெரிக்காவிற்கு வந்து குடியேறினர். அமெரிக்காவைத் தாயக மாகக் கொண்டு, விசுவாசமான நாட்டுப் பற்றுடன் தங்களது பெயர்களையும் ஆங் கிலப் பெயர்களாக மாற்றினர். தியபோல்ட் மழலை பேச ஆரம்பித்ததுமே ஆங்கிலம், ஜெர் மன் ஆகிய இரு மொழிகளையும் எழுதப் படிக்கப் பழக்கினர்.
சிமித்தின் தகப்பனரினது தச்சுத்தொழி லில் போதிய ஊதியம் இல்லாததினுல் கல் லூரிப் படிப்பிற்கு வசதியில்லாமலிருந்தது எனினும், தியபோல்ட் மிகக் கவனமாகப் படித்து, கோனெல் இராச்சிய உபகாரச் சம்பளப் போட்டியொன்றில் வெற்றி பெற்று, கல்லூரி யில் படிக்கச் சென்றர். கோனெலிலுள்ள தேவாலயத்தில் தேவாரம் பாடியும், வேறு பயிற்சியான எந்திர வேலைகள் செய்தும்பணம் சம்பாதித்து படிப்புச் செலவுகளைச் சமாளித் தார். 1881 ம் ஆண்டில் மெய்யியல் பட்டம் (Bachelor of Philosophy) (6)Lupi) (mgŤ. 576ÖT அல்பனி வைத்தியக் கல்லூரியில்சேர்ந்து இரு வருடங்கள் படித்து டாக்டர் பட்டமும் பெற்றர். தியபோல்ட் உண்ணிக் காய்ச்சல் ஆராய்வு வேலையைப் பெறும்போது அவருக்கு பக்றீறிய வியலிலோ (Bacteriology) நோயியலிலோ (Pathology) எதுவித பயிற்சியும்கிடையாது. ஆனல், அத்துறைகளில் பிரான்சின் லூயி பாஸ்டர், ஜெர்மனியின் ருெபட் கொக் ஆகியோர் வெளியிட்ட நூல்களை நன்கு படித்து, தமது அறிவை விரைவில் வளர்த்தார் சிமித், பின் கொலம்பியா சர்வகலாசாலையில் சேர்ந்து பக்றீறியவியல் துறையொன்றை அமெரிக்கா விலேயே திறமானதாக அமைத்து, ஒன்பது வருடங்களாகப் பக்றீறிய இயல் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
44

இவர் மேற்கொண்ட ஆராய்வுகளெல்லாம் மிகவும் கவனமாகத் திட்டமிடப்பட்டு, விரிவாக நடைபெற்றவையாகும். உண்ணிக் காய்ச்சல் ஆராய்வுகளின் போது நூற்றுக்கணக்கான மாட்டுச் சடலங்களை வெட்டிப் பரிசோதித்தார். நோய் கொண்டு இறந்த மாடுகளின் இரத்தச் சிவப்பணுக்கள் சிதைவுண்டிருப்பதை அவதா னித்தார். மாடு வளர்ப்போர் மாட்டிலுள்ள உண்ணிகளை அழித்தால் காய்ச்சல் தீர்ந்துவிடும் எனக்கூறிய கருத்தை ஏற்று, புதிய ஆராய்வு களை ஆரம்பித்தார். இதற்கென ஒரு புதிய ஆய்கூடத்தையும் மாட்டு அடைப்புகளையும் அமைத்தார். முதலாவது அடைப்பொன்றில் தென் பகுதியின் நோய் கொண்டு ஆயிரக் கணக்கில் உண்ணிகள் கொண்ட பசுக்கள் நான்கையும் வடபகுதியின் ஆரோக்கியமான பசுக்கள் ஆறையும் சேர்த்து அடைத்து வளர்த் தார். இரண்டாவது அடைப்பில் தென்பகுதி மாடுகளில் மூன்றை அவற்றிலுள்ள உண்ணி கள் ஒன்றும் தவறது பொறுக்கியபின், வட பகுதியின் ஆரோக்கியமான பசுக்கள் நான் குடன் சேர்த்து அடைத்து வளர்த்தார்.
இவ்விதம் பரீட்சைகள் நடைபெறும்போது சிமித்தும் உதவியாளர்களும் மாட்டு உண்ணி களின் வாழ்க்கை முறைகளை ஆராய்ந்தனர். உண்ணிக் குஞ்சுகள் மாடுகளின் கால் வழி யாக எறி தோலில் ஒ டி உயிர் வாழ்கின்றன வெனவும், வளர்ந்து பருத்த பெண் உண்ணி கள் நிலத்தில் விழுந்து 2,000 முட்டைகள் வரையில் இட்டதும் இறக்கின்றன வெனவும், குஞ்சுகள் வளர்ந்து முட்டையிட்டு இறக்கும் முழு வாழ்க்கை வட்டமும் இருபது நாட் களுக்குள்ளேயே நிகழ்கின்ற தெனவும் ஆராய்ந்து அறிந்தார் சிமித்,
சில கிழமைகளானதும் முதல் அடைப்பில் வடபகுதி மாடுகளில் ஏராளமான உண்ணிகள் குடிகொண்டிருந்தன ; அவற்றின் இரத்தம் நீராக மாறியிருந்தது ; அவைகள் எலும்பும் தோலுமாக மெலிந்து இறந்தன. இரண்டா வது அடைப்பில் உண்ணிகள் அகற்றப்பட்ட தென் பகுதி மாடுகளுடன் விடப்பட்ட வட பகுதி மாடுகள் பருத்துக் கொழுத்து வழமை போல் வளர்ந்தன. மேலும் திடமான முடிபு கள் பெற எண்ணிய சிமித், இரண்டாவது அடைப்பில் நின்ற ஆரோக்கியமான வடபகுதி மாடுகளை உண்ணிகள் நிறைந்த முதலாவது அடைப்பிற்கு மாற்றினர். பதினறு நாட்களில் இம்மாடுகள் நோய்கொண்டு இறந்தன மீண்
கமத்தொழில் விளக்கம்

Page 45
டும் மூன்றவதொரு அடைப்பில் நல்ல ஆரோக்கியமான மாடுகளைவிட்டு, பிறிதோரிடத் திலிருந்து கொண்டுவரப்பட்ட உண்ணிகள் நிறைந்த புல்லை அடைப்பில் வீசிப் பரவி விட்டார். இப்போதும் மாடுகள் சில கிழமை ផ្លែត្រពាំឆ្នាំ) நோய்கொள்ளக்கண்டார். வேறு ஆராய்வாளர் மாடுகள் உண்ணிகளைப் புல்லு டன் உண்பதினுலேயே நோய் பரவுகின்றது எனக்கூறினர். இதைப் பரீட்சிக்குமுகமாக தவிடு, புண்ணுக்குடனும் எராளமான உண்ணி களைக் கலந்து ஊட்டினர். ஆனல் அம்மாடுகள் நோய் கொள்ளவில்லை.
பின் சிமித் நோய்கொண்ட மாடுகளின் இரத்தத்தை நுணுக்குக்காட்டியில் (microscope) நன்கு ஆராயந்தார். இரத்தத்தில் ஒருவகை நுண்ணுயிர்கள் பெருமளவில் பெருகி சிவப் பணுக்களைச் சிதைத்து நீராக்குகின்றன எனக் கண்டார். டெக்ஸாஸ் காய்ச்சலுக்கு உண்ணி களே காரணிகளென 1881 ம் ஆண்டில் திட மாகக் கண்டறிந்தபோதிலும் 1893 ம் ஆண் டிலேயே உண்மையான காரணியை அவர் கண்டறிந்து விளக்கினுர், கண்ணுக்குப் புலப் படாத முதற் கலவுரு (Protozoa) ஒட்டுயி ரொன்று (parasite) மாட்டின் இரத்தச் சிவப்பணுக்களில் வாழ்ந்து அவற்றைச் சிதைப் பதினுலேயே உண்ணிக் காய்ச்சல் உண்டாகின்ற தெனக் கூறிஞர். நோய்வாய்பபட்ட மாட்டிலி ருந்து விலங்கின் இரத்தத்தை பூடளேஸ் என் னும் உண்ணி உறிஞ்ச, இரத்தத்துடன் இம் முதற் கலவுருவும் சென்று மாறுபட்டு, பின்பு இவ்வுண்ணி வேறுமாடுகளின் இரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும்போது முதற்கலவுருவும் உட்புகுந்து காய்ச்சலை உண்டாக்குகிறது என சிமித் விளக்கம் கூறி, இந்த நோயின் மர்மத் தைத் தீர்த்து வைத்தார்.
டாக்டர் சிமித்தினுடைய இந்தக் கண்டுபிடிப் பினுலே மந்தைகளினுடைய உண்ணிக் காய்ச் சல் பிரச்சினை தீர்ந்தது மாத்திரமல்ல மனித ருக்கு வரும் முறைக்காய்ச்சல் (malaria), சோகைநோய் (sleeping sickness),மஞ்சள் காய்ச் 36) (Yellow fever), Ibádraisittidiggi) (typhus), மூளை அழற்சிச் சன்னிநோய் (spoted fever) அக்குள்கட்டு கொள்ளை நோய் (bubonic plague), போன்ற கொடிய தொற்று நோய்களுக்கு எதுவான கிருமிகளை எவ்விதம் வேறு சிற் பூச்சிகள் காவிச் சென்று பரப்புகின்றன என கண்டுபிடிக்கவும் முடிந்தது. எனவே, அவரு
சித்திரை-ஆனி 1970

டைய சேவையின் பெருமை அளப்பிடற்கரிய தெனலாம்.
தியபோல்ட் சிமித் இத்தனை முயற்சியுடன் கண்டுபிடித்த உண்ணிக்காய்ச்சலை கட்டுப்படுத்த அரசினர் முன்வந்து, மாடுகளே உண்ணிகொல்லி நச்சுத்திரவமொன்றில் குளிப்பாட்டுவது அவ சியமென பரிசோதகர்களை பண்ணைகளுக்கு அனுப்பியபோது இம்முயற்சிகளுக்கு மாருக எத்தனையோ அசம்பாவிதங்கள் நடந்ததை இன்று நம்பவும் முடியவில்லை. பரிசோதகர் களை எத்தனையோ பண்ணையாளர் அடித்து விரட்டியதுமல்லாமல் சிலவிடங்களில் பரிசோத கர்களைக் கொன்றும் விட்டார்கள். மாடுகளைக் குளிபபாட்டும் தொட்டிகளை இரவோடிாவாகச் சுரங்கவெடி வைத்துச் சுக்குநூருக்கினர். பலர் நீதி மன்றங்களில் முறையிட்டு வழக்கு பேசினர். சாதாரண மக்களிடையே திடீரென புதிய மாற்றங்களைக் கொண்டு வரும்போது அம்மாற்றங்கள் அவர்களுக்கு நன்மை பயப் பனவாயினும், ஆரம்பத்தில் இயற்கையான, மனித எதிர்ப்புக்கள் எவ்வளவு பலமாயிருக்கு மென்பதை இச்சம்பவங்களிலிருந்து நாம் ஒரளவு அறியலாமல்லவா !
பின், பன்றி நோய்கள், வான்கோழி நோய் கள் பலவற்றை ஆராய்ந்து சிகிச்சைகள் கண்டு Lill:9.55Ti. LT&Li éFLOGöT (Dr. Salmon) 676öT னும் விஞ்ஞானியுடன் சேர்ந்து தொற்று நோய்கள் வராது பாதுகாப்பளிக்கும் ஊசி மருந்து முறையொன்றைக் கண்டுபிடித்தார். இவர் ஒட்டுயிரியல் (Parasitism) பற்றி 56 ஆராய்ச்சிக்கட்டுரைகளையும், ஒரு நூலேயும் வெளியிட்டதுடன் வைத்திய ஆராய்ச்சிகள்பற்றி 224 ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் வெளியிட் டார். உலகின் பல பாகங்களிலிருந்தும் இவருக் குப் பேரும் புகழும் வந்து சேர்ந்தன. இவர் 1934 ம் ஆண்டு டிசெம்பர் 10 ம் தேதியன்று, அவரது 75 வது வயதில் இறைவனடி சேர்ந் ២TT.
* விவசாயம் வளர்த்த விஞ்ஞானிகள் வரிசையில் இதுவே இறுதிக் கட்டுரையாகும். இவ்வரிசையில் இதுவரை யில் 14 கட்டுரைகளை எழுதி எதுவித சன்மானமும் வேண்டா மெனத் தாமே மனமுவந்து அன்பளிப்பாக வழங்கியுள் ளார் இக்கட்டுரையாசிரியர். இவரது கட்டுரைகளைப் பாராட்டி நேயர்கள் எமக்கு எழுதிய கடிதங்கள் பல. நேயர்களுடன் சேர்ந்து எமது நன்றிகளையும் கட்டுரையாசிரியருக்குத் தெரிவித்துக் கொள்கிருேம். -ஆசிரியர்
45

Page 46
கமத் தொழில்
சந்தா வி
இதழ் ஒன்று
வருட சந்தா R5 LIP
வெளிநாடுகளில் :-
தனிப் பிரதி வருட சந்தா {
சந்தா அனுப்பவேண்டிய விலாசம் :-
கமத்தொழில் உ (விசாலிப்பு உ தபால் பெட்டி
கொழு கவனிப்பு:-
(முத்திரைகளாகவோ காசாகவோ மணியோடர் அல்லது போஸ்ரல் ஒ
ஏஜண்டுகள் கமத்தொழில்
விவசாய இலாகாவினுல் வெளியி
நாடெங்கிலும் மேற்படி சஞ்சிகைை
தேவைப்படுகின்றர்கள். நல்
விபரங்களுக்கு விண்ணப்பிக்கவும்.
கமத்தொழில் உத்தியோகத்த த. பெ. எண் 63

} 6on 6m d5 35 D
பரம்
30 சதம்
1/-மட்டுமே
ருபா 1/- ருபா 4/-
த்தியோகத்தர் தவிகள்) எண் 636,
ம்பு.
தபாலில் அனுப்பக்கூடாது. டராகவே அனுப்பவேண்டும்)
தேவை
O O y 66T, gED
டப்படும் மும்மாதச் சஞ்சிகை
விற்பனை செய்ய ஏஜண்டுகள்
கமிஷன் வழங்கப்படும்.
ர் (விசாலிப்பு உதவிகள்)
கொழும்பு.

Page 47
கேள்வி :
பதில் :
கேள்வி :
பதில் :
பதில் :
கேள்வி :
பதில் :
கேள்வி :
பதில் :
பதில் தருபவர் : எஸ். கந்தையா, இ?
என்ன பயிருக்கு என்ன பயிருணவு அதிமுக்கியமென்ப பொதுவாகப் பயிர்களை மூன்று பெரும் பிரிவுகளாக போல் இலைக்காகவும், மரவள்ளி, வத்தாளையைப் பே காகவும் அவை பயிரிடப்படுகின்றன. இலை வகைகளுக்கு விதை வகைகளுக்குப் பொசுபரசும் முக்கியமாகும். கருதலாகாது. உரக்கலவையில் அவை முக்கிய பாகத் விலக்காக தென்னைக்கும், வாழைக்கும் பொற்றசு மு எரிக்கும் போது, சரசரவென வெடிக்கும் சத்தத்தை பல பயிர் மஞ்சள் அடையும் காரணத்தை அறிய விரும்புகிே பயிர்கள் மஞ்சள் நிறமடைவதற்குப் பல காரணங்களு குறைவு, நிலத்தில் நைதரசப்பஞ்சம் முதலானவைே கெந்தகச் சத்து போதியளவில் இல்லாமையும், மஞ்சு காரணங்களையும் இலகுவில் அறிந்து கொள்ள முடி பெரும்பாலும் கருதவேண்டும், யூறியா, அமோனியம் அமோனியம் சல்பேற்றில், கெந்தகமும் ஒரளவில் இருக் ஈரவலயத்தில் சப்போசையும், உலர்வலயத்தில் சுப்ப செய்து விளக்கவும். சப்போசு பொசுபேற்றிலுள்ள பொசுவேற்று நீரிற் கம் மண்ணிலுள்ள அமிலத்தன்மை பொசுபேற்றை மெ செய்யும். உலர்வலய மண்ணில் அமிலத்தாக்கம் குறை அதற்குமாருகச் சுப்பர் பொசுபேற்றிலுள்ள பொசுபேற் அதை ஈரவலயத்திலிடும்போது, அங்கு நிலவும் கடும் அலுமினியம் போன்றவற்றுடன் பொசுபேற்றுச் சேர், பயன்படாது போகிறது. அதனுல் கூடிய செலவும் வி மிகுந்திருப்பதால், இலகுவிற் பயன்படக் கூடிய கல்சி பலன் அளிக்கிறது. சேதனப்பசளையை உபயோகிப்பது, செய்யும். அமோனியம் சல்பேற்றைக் கரையோரங்களிலுள்ள வ கூடாது ? நீரால் மூடப்பட்டிருக்கும் வயல்களிலும் சதுப்பு நி சல்பேற்றிலுள்ள கெந்தகம் தாழ்நிலையடைந்து, ஐ பயிருக்கு ஒரு கொடிய நஞ்சு, இரும்புச்சத்துள்ள வய மாறுவதால், தீமை ஏற்பட வழியில்லை. மேற்கூறப்பட்ட பதால் அங்கு தீமை ஏற்பட இடமுண்டாகிறது. பொ, நிலங்களும் இரும்புச்சத்து குறைந்தனவாகும். அவ்வை மரத்தைச் சுற்றி வரைந்து பட்டையை நீக்கினுல், மரம் 1 மரத்தின் இலைகள் சூரிய வெப்பத்தின் உதவியைக் .ெ லுள்ள நீரிற் கரைந்துள்ள பொருள்களை நீருடன் சேர்த் உணவையும், மரங்கள் ஈட்டுகின்றன. இலைகள் கிரகித்த வேர்கள் கிரகித்த உணவைத் தண்டின் மூலம் அத6 மரப்பட்டையைச் சுற்றி வரைந்து நீக்கும்போது, பட்டைமூ போய் அடைய முடியாது. எனவே, அவை இறந்துபோக மரம் அடையும் பயனும் அற்றுப்போகும். எனவே, க வொரு இடத்தில் மற்றைய மரங்களுக்குச் சேதம் வி% இம்முறையைச் சுலபமாகக் கையாளலாம்.
சித்திரை-ஆனி 1970
 

ாப்பாறிய மண்ணியல் வல்லுநர்
ಕೌತ್ತಿ5 வேண்டுகிறேன். வகுக்கலாம். புகையிலை, வெற்றிலை, கீரை வகைகளைப் ல் கிழங்குக்காகவும், தானிய வகைகளைப்போல் விதைக் நைதரசனும், கிழங்கு வகைகளுக்குப் பொற்ருசியமும், அதற்காக அவற்றை மாத்திரம் உபயோகிக்கலாமெனக் தை வகிக்க வேண்டுமென்றே கொள்ள வேண்டும். விதி மக்கியமெனக் கண்டறியப்பட்டுளது. அவற்றின் இலைகளே ரும் கேட்டிருக்கலாம்.
றன். ண்டு. வறட்சி, நீர்த்தேக்கத்தால் ஏற்படும் காற்றேட்டக் ய முக்கிய காரணங்கள். சில சமயங்களில் மண்ணில் :ள் நிறம் அடையச் செய்யலாம். முதற்கூறிய இரண்டு , பும். அவற்றை நீக்கியபின், நைதரசக் குறைவென்றே சல்பேற்றுப் போன்ற நைதரசப் பயளையை இடல் நன்று. கிறதென்பதை ஞாபகத்திற்கொள்ள வேண்டும். பொசுபேற்றையும் உபயோகிக்கும் காரணத்தைத் தயவு
ரையமாட்டாது. அதனுல் மலிவானது. ஆனல் ஈரவலய ல்ல மெல்லக் கரைத்து அதைப் பயிருக்குப் பயன்படச் வானபடியால், அங்கு அது அவ்விதம் கரைய இடமில்லை.
கரையும் நிலையிலிருப்பதால், அது விலை கூடியது. அமிலத்தாக்கங் காரணமாய் மிகுந்திருக்கும் இரும்பு, ந்து, கரைபடாநிலையை அடைவதால், அது பயிருக்குப் ணுகிறது. உலர்வலய மண்ணில், கல்சியம், மகனீசியம் யம் பொசுபேற்று, மகனீசியம் பொசுபேற்றக மாறிப் எந்நிலையிலும் பொசுபேற்றைக் கூடியளவில் பயன்படச்
|யல்களிலும் சதுப்பு நிலங்களிலும் ஏன் உபயோகிக்கக்
லங்களிலும், காற்றேட்டமில்லாமையால் அமோனியம் தரசன் சல்பைட்டு ஆக மாறும். ஐதரசன் சல்பைட்டு ல்களில் அது இரும்புடன் சேர்ந்து இரும்பு சல்பைட்டாக இருவகை நிலங்களிலும் இரும்புச் சத்துக் குறைவாயிருப் துவாக நரை அல்லது வெண்ணிற மண்களும் சதுப்பு க நிலங்களுக்கு ஏற்ற நைதரசப் பயளே யூறியாவாகும். டுவதேன் ? காண்டு, காற்றிலிருந்து ஒருவகை உணவையும், மண்ணி து வேர்கள் உறுஞ்சி எடுப்பதன் மூலம் இன்னுெருவகை உணவைப் பட்டைமூலம் மரத்தின் மற்றைய பாகங்களும், ன் இதர பாகங்களும் பெற்று மரம் உயிர் வாழ்கிறது. லம் கொண்டு செல்லப்படும் உணவு கீழுள்ள பாகங்களைப் நேரிடும். அவ்விதம் வேர்கள் அழியும் போது, அவற்ருல் ாலகதியில் மரம் படுகிறது. பல மரங்கள் அடர்ந்துள்ள 1க்காமல் குறித்த ஒரு மரத்தை நீக்க வேண்டுமாகில்
47

Page 48
9. ணிைற்பிள் ளையும்
மாதுளே இருக்கும் இடங்களில் அணில்களும் 50 சத வீதத்துக்குமேல் பழங்கள் அழிவ6 கட்டுவது வழக்கம். அப்படி இருந்தும் அழில்
எந்த வீட்டிலும் தேங்காய் உடைத்துத் துரு ஆனுல் இந்த தேங்காய்ச் சிரட்டைகளினுல் க ணுல் அணில்கள் சிரட்டைகளை வெட்ட மு விதத்தைக் கீழ்ப்படங்களின் மூலம் செய்துபார்
48 ܓܟܠ
 
 

தா. ந. மாணிக்கவாசகர், கமத்தொழில் அலுவலர்.
மாதுளையும்
உள்ளன. இந்தப் பிராணிகளினுல் ஏறக்குறைய டைகின்றன. சில சமிக்காரர்கள் கடதாசி, தகரம் | குறைவது இல்லை.
விய பின் சிரட்டைகளை விறகாகப் பாவிப்பது இயல்பு. ாய்களை மூடிக்கட்டிவிடலாம். இந்தமாதிரிச் செய்வதி டியாது. பழங்களைப் பாதுகாக்க முடியும். கட்டும் க்க முடியும். -
1. 4 அங்குலத்திற்கு இரும்பு அறுக்கும் வாளால் # ೨¥É(5) தாழ்வுக்கு இரு வெட்டுப் G. பவும். பின் வெட்டப்பட்ட துண்டை குறட்டால் முறிக்க முடியும்.
2. மற்றப்பாதியில் இருக்கும் மூன்று கண்களில் பெரிய கண்ணே ஒரு தடியாற் குத்தி முறிக்க முடியும்,
3. බ්‍රිෂ් குச்சியில் sts நூலே மடித்துக் கட்டி விடவும்,
4. இரு பாதிகளையும் ஒன்ருக அமத்திப் பிடித்துக் கொண்டு, நூல்களால் சிரட்டைப் பாதிகளே கட்டி விடவும்,

Page 49
சிறு தோட்டக்காரர் தங்கள் பயிர்களுக்கு ம கருவிகளே வாங்குவதில்லை, அநேகமாக கையா பொட்டணம் கட்டி தெளிப்பதுண்டு. இப்படிச் செய் படிவதில்லை.
தற்காலத்தில் அநேகமான வீடுகளில் குழிக் தற்கு கார்பிக் (Harpic) அல்லது அதைப்பே பொட்டணங்களில் வாங்குவதுண்டு. இந்த மருந்து வீசுவதுண்டு. ஆணுல் இப்பொட்டணங்களை மருந்து
கீழ்க்கண்ட படத்தில் காட்டியவாறு இப்பொட்ட சிறு துவாரங்களை அமைக்க வேண்டும். இத்துவ வாய் அளவிற்கு இருக்கவேண்டும். இத்துவார பூட்டு ஊசியை நெருப்பில் காய்ச்சிக் குத்தித் து களைக் கொண்டு நெருப்பு எறும்பு இருக்கும் இட பூாவிக்கலாம்.
சித்திரை-ஆனி 1970
5-1771 (2170)
 
 
 

ருந்துத்துள் விசிறுவதற்கு விசிறு ற் தெளிப்பதுண்டு அல்லது சீலேப் வதனுல் விசுறும் தன்மை சரியாகப்
க்கூசுக் கோப்பை துப்பரவு செய்வ ால் மருந்துகள் சிறிய பிளாஸ்ரிக் -
முடிந்தவுடன் இப்பொட்டணங்களை விசிறுவதற்கு பாவிக்க முடியும்.
ணங்களின் மூடிகளை களற்றி அதில் ாரங்கள் பொட்டணத்தில் இருக்கும் ங்களை அமைப்பதற்கு ஒரு பெரிய வாரம் செய்யலாம். இப்பொட்டணங் ங்களில் தூள் மருந்துகளை விசிறவும்
பாதுசன இலகு

Page 50
அளிப்பவர்: மா.அனந்தசயனன், 셀
虏 28ശ്ര&കെസ്ട BരീബBഗuര
ULA Gങ്ങള
zരu
བ་དང་།། Κ/ς ()
oತ್ಲೆ *学愛?湾* обд7ćр г7.gъ Аѣ Ø/zދެވި ދީޖީ6% މީ ♔ഫ്ര 90 ! இருந்தது. ഷ്ട്രക്ര *愛 A7 ചക്ര ഗ്ര ബ/7ം് ബട്ട772 a7റ്റ% 22ܗܲܬ̣ ம7 புனி ♔/ീതz ( 2るのらっz ത7 , 4' 6% 9ളുട്ധത7 :ே 92يe?7/7/007ފު,ޔޮ
இ2 ് 6', ' 2இ/ ളും. ്. 鷺*匆 2ழ்பிேன் படித்2ெ62 ്യ9ഥ757%), ഭു %夢/ー イ
 
 
 
 
 

r,42NR2
வசாயப்பகுதி பல்கஜலக்கழகம், பேராத2ன.
/நல்ல தமி0 മിച്ച υστευε έλου 

Page 51
9ം്ഞു %ജീബ
 
 
 
 

 ൃ2 കേ2 ്വീ> | (cീഠ), 6′ീട്
ടൂ ക്ല': ( 2.
乙るノ ീ മൃച %ാ? ഭീരമൃ/ 空%* リーウ *。。 缀
努z多 தில் >ފޮޢީލް//%ފޯ 68 C2/2, ζαχΑγαζυ "ε 07:57് ഇിട്ടു94%് | C%Bക്ക72 ജൂ7
%ളര് را تح / اثر മ7ഗുട്ഥര് 6:37
يعد مروح قيصري2 كيع صيرويك
്7 മCേരള ബ്രക്രള്ള. 勿 الرسل
-± ല-40ള്ളീയദ്ര മഠ് ബBE%E ടൂ,"ഠ്74-7 SN 12ിളര Ν வனத்கதேவனங்க!ே 蕊 ላw\\ அப்படி:ே மார்ஜத் விஞ்ஞானப்
U7Lr', 8? ദ്രൂക്
இன்றுக் (?:

Page 52
ufrւ փպն ஆசிரியர் < ნთა ნაჭაtōu]თანი და თქცნე. μσυrroό3) 85ortos *雾
് എ7
රඌර/ණ
c
ഭീഷ് (/(. (':'">x රූපාත්‍රී තිණි -
ൈമ, ബി 2 \ ീപ്, ക്ലീഷ്,
SOiL Technology ༼དེ། ། Ο
?! ପିଞ୍ଛ
רח
ஆராய்ச்சி
イ 7
県。 分
勿
() منابع
蘇。 2.
tpન્ટનન્ટ્રીgોડો
oscius 鼎
○エ
 
 
 

ஆறதுமுகமும்
ஆம்பி ఆర్తిరీక్య
од 5 sl.- / . . ਠ
9% ε, ο σύ2, 22
്/ 12ബ,
7ര്ബ72-7 ജു % മീഞ്ചBA ?多●7ーア家
திறைபின் 22 / 433 یحیی 7/27/ گیری விக்காகத் தே リーラeタ മഠ7
காலகதியில் கல"
ஐ
பெற்றா ماهیها معاله ایتالیایی لی

Page 53
கர83த் ایع بالایی قریه
ஆஓடுகிம் ஆறிெபூஜஅறிமுகப்படு:
:தம்பி"நான் இக்ே
ീകൃ9 ഞ%ധീ', "//7.ހ20 69 ވުގަތީ ފުވަ ധിത്ത് ലംog() 2.7 9% ജ് ധ്തുക 197ദ്ര7 മൃ7 %*エー?- クのらんど葬っびア 功/宰。 07സ്ത്രി ്. s
టి_్య్మూ-8 %9്) സച്ച ഗ്രീ മ ഗ്ര/, '1 %のム"(?る 6 മക്ര 多a u06 %റ്റ് 6?ില് അ/ 6% ശ്ര ക്ര ー/2雰/ oュ/??%多77。
 

7877ംസ്ക് ിധ709 മ ”级 ീ.) 锣
多* بحریر / نتیجہ / نتیجے /z Zدیجئیم گھبربر 2بر
'97లోరాల్ట్? లyL-రాక7
C7ഴ്ച 77േ7്
KS KÜS KI> K > K7. Ke <> < eeeSAAMS eAeSLSMSSSLLAASLLLLSLLSASeMSAeAAS SASAeSLASMALSASMSLSASeiuiL

Page 54
கட்டுரைகளுக்கு
பணம் தரு
பொதுக்கட்டுரைகள் : 2,000 சொற்களுக்கு பக்கத்தில் மாத்திரம் தெளிவாக எழுதி அனு பக்கமொன்றுக்கு ரூபா 7.50 சதம் வீதம் சன்
தொழில் நுட்பக் கட்டுரைகள் : வல்லுநர்கள் னம்பெறும். பிரசுரமாகும் சஞ்சிகைப்பக்க டெ பியதாகின் ரூபா 10/- வீதமும், தமிழ் பெ வீதமும் சன்மானம் வழங்கப்படும். கட்டுரை படங்களுக்கும் பிரத்தியேகமாகப் பணம் தரப்
புகைப்படம் : (5"x4" குறைந்த பட்ச அள
வரைபடம் : ரூபா 2.50 வீதம்,
கருத்துப்படம் : கூடியபட்சம் ரூபா 20/-
சித்திரக்கதை : நான்கு பக்கங்களுக்கு கூடி
பாடல்கள் : கூடியபட்சம் ரூபா 15/-
றுகதைகள், விவசாய நாடகங்கள் ஆகியன உத்தியோகத்தரின் தீர்மானத்திற்கமைய சன்ம
கட்டுரைகள், படங்கள் ஆகியவற்றின் தகுதி சன்மானத்தொகைகள் பற்றியும் கமத்தொழி கள்) அவர்களினது தீர்மானமே இறுதியான மானதும் சன்மானம் வழங்கப்படும். பிரசுரம் கென போதிய முத்திரைகள் ஒட்டப்பட்டு, தம தபால் உறைகளை எழுத்தாளர் அனுப்பவேண்டு களுக்கு கமத்தொழில் உத்தியோகத்தர் (விசா
பிரசுரத்திற்கு எற்கப்பட்டவைகளுக்குரிய சக: உரித்தாகும். கட்டுரையாளர் மறுபிரசுரஞ் யோகத்தர் (விசாலிப்பு உதவிகள்) அவர்க (36չյ6301ֆւb.
தபால் பெட்டி இல. 636, இல. 6, எச்செலன் சதுக்கம், தபாற்பெட்டி 3ே6, கொழும்பு 1.

அதிகமாகாது, கடுதாசியின் ஒற்றைப் ப்பவேண்டும். பிரசுரமாகும் சஞ்சிகைப் மானம் வழங்கப்படும்.
எழுதுவன சற்று நீளமாயினும் கவ மான்றுக்கு ஆங்கில மொழியில் அனுப் ாழியில் அனுப்பியதாகின் ரூபா 15/- களுக்கான புகைப்படங்களுக்கும் வரை படும்.
அ) ரூபா 51 வீதம்.
பபட்சம் ரூபா 100/-
ாவும் எற்றுக்கொள்ளப்படும். விவசாய எனம் வழங்கப்படும்.
பற்றியும் எழுத்தாளர் பெறவேண்டிய ல் உத்தியோகத்தர் (விசாலிப்பு உதவி து. விடயங்கள் ஏற்கப்பட்டுப் பிரசுர மாகாதவற்றைத் திருப்பி அனுப்புவதற் து விலாசமும் தெளிவாக எழுதப்பட்ட ம்ே. தபாலில் தவறிப்போகும் கட்டுரை லிப்பு உதவிகள்) பொறுப்பாகமாட்டார்.
உரிமைகளும் விவசாய இலாகாவிற்கு செய்யவிரும்பின் கமத்தொழில் உத்தி வின் அனுமதியை எழுத்தில் பெற
டெறிக் ஷொக்மன்,
கமத்தொழில் உத்தியோகத்தர்,
(விசாலிப்பு உதவிகள்)

Page 55
சித்திரை-ஆனி, 1970
 

1. மாணவர் களை பிடுங்குவதேன்
--Gs. Dussiarrass to
2. கறவை வளர்ப்பு -ந. சண்முகம்
3. விவசாயப் பூச்சியியல் -பொ, மாணிக்கவாசகர்
4. மண்ணியல் -சி. கந்தையா 5. கத்தரிக் குடும்பப்பயிர்ச் செய்கை ཚོའི་
-த. அருள்ராசா
6. கோழி வளர்ப்பு -ந. சண்முகம்
7. விலசாய விவேகம் உகசிபன்
f 8 علي مصر في -
ikke sNa

Page 56
மாணவர் களை பிடு
அரசாங்கம் உணவுற்பத்திக்கு முக்கியத்து வங்கொடுத்து அதை வளர்த்து வருகின்றது அதிற் பாடசாலை மாணவர்களையும் பங்கு கொள்ளச் செய்கின்றது. அகில இலங்கையிலு முள்ள பாடசாலை மாணவர்கள் தவணையில் ஐந்து நாட்களுக்கு வயல் வெளிகளுக்குச் சென்று களை பிடுங்குதலில் ஈடுபட்டு வரு கின்றனர்.
இவர்கள் வயல்களுக்குச் சென்று களை பிடுங் குவதேன் ? அதனுல் உண்மையான பலன் ஏதும் ஏற்படுகின்றதா ? அல்லது வெறுங் காட்சிக்குரிய பொழுதுபோக்கான ஒரு செய லாகவே முடிகின்றதா ? இப்படியான வினக் கள் பலருடைய உள்ளத்திலும் எழக்கூடும். எழவேண்டியதும் தான். இதைப்பற்றி இங்கு
ஆராய்வோம்.
செய்து கற்குஞ்சிறப்பு
மாணவர்கள் விவசாயத்தைப் பற்றியோ நெற் செய்கையைப் பற்றியோ வகுப்பறையி லிருந்து உபந்நியாச மூலம் அல்லது புத்தகங் கள் மூலம் பெறும் அறிவு பூரணமான அறி வாகமாட்டாது. பெற்ற அறிவை உபயோகி கும் போதும் செய்து கற்கும் போதுமே அறிவு பூரணமடைகின்றது, பிரயோசனப்படுகின்றது.
மாணவர்கள் வயல் வெளிக்குச் சென்று களை பிடுங்குவதால் அவ்வழியில் அவர்கள் பூரணமான அறிவைப் பெறுகின்றனர். நெற் பயிரின் சரிதை, அதற்கேற்படும் நோய்கள் வயல்களில் உண்டாகும் புல்லினங்கள் அவற்றை நெல்லினின்றும் பிரித்தறியக்கூடிய நுட்பங்கள் ஆகியவற்றை மாணவர் அங்கே தெரிந்து கொள்ளுகின்றனர். விவேகமுள்ள ஆசிரியர்களும், கமத்தொழிற் பகுதி உத்தி யோகத்தர்களும், வயற் சொந்தக்காரராகிய விவசாயிகளும் மாணவர்களுக்கு இவ்வறிவை வழங்குவதிற் பெருந்துணை புரிகின்றனர்.
56

செ. மயில்வாகனம், தலைமை ஆசிரியர், மல்லாவி அ.த.க. பாடசாலை.
|ங்குவதேன் ?
அனுபவம் மிக்க விவசாயக் குடும்பத்தி லிருந்து வந்த மாணவர்களும் இம்மாணவர் களுக்கிடையில் இருப்பர். அவர்களும் ஏனைய சக மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பல விஷயங்களை அங்கே தெரிவிக்கும் ஆசான்க ளாக விளங்குவர். இலகுவிலே பிடுங்கமுடி யாத கோழிச்சூடன், நெறசப்பி, குளச்சாமை போன்ற புல்லினங்களைப் பிடுங்குவதில் இவ் விதமான அனுபவமுள்ள தொழில் நுட்பங்களே எமது பாடசாலையின் ஏனைய மாணவர்கள் பார்த்துப் பினபற்றிப் பயன் பெற்றுள்ளனர் என்பதை இங்கு குறிப் பிடுவது பிரதானமானது.
சந்தோஷமான பொழுது போக்கு
வகுப்பறைகளில் ஆசிரியர்களின் கட்டுப்பாட் டின் கீழே அதிகமான நேரத்தைச் செலவிடும் Loួ6 @6 @_ភ្នំg@fiឆ្នាំ) உலாவவும் வேலை செய்யவும் சுதந்திரமாக நடமாடவும் ஆசைப்படுவது இயற்கை மாணவர்களின் இந் நோக்கம் நிறைவேறுவதற்குக் களைபிடுங்கும் இயக்கம் உதவி புரிகின்றது. திறந்த வயல் வெளிகளிலே பசுமையான பயிர்களின் இடை யிலே சுதந்திரமாக உலாவவும், சந்தோஷ மாக உரையாடவும், தூய்மையான காற்றைச் சுவாசிக்கவும் வயற்சொந்தக்காரரின் அன் பான உபசரணைகளைப் பெற்று மகிழவும் இட மளிக்கும் இக்களே பிடுங்கல் மாணவர்களுக் குச் சந்தோஷமான ஒரு பொழுது போக்காக அமைவதை உடனிருந்து அனுபவிப்பவரே உணர முடியும்.
சமுதாய ஒருமைப்பாடு
வேறுபாடு கொண்ட சமுதாய அமைப்பு, பொருளாதார உயர்வு தாழ்வு, பெற்றேரின் வித்தியாசமான தொழில்கள் ஆகியவற்றல் வேறுபட்ட சூழ்நிலைகளில் வளர்ந்து வரும்
கமத்தொழில் விளக்கம்

Page 57
இளஞ் சிறர்கள் அவற்றை மறந்து ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் போலச் சம உணர்வு டன் பழகவும், ஒருமைப்பாட்டின் உயர்வை யறிந்து மகிழவும், ஒருவருக்கொருவர் உதவி செய்யவும் இவ்வியக்கம் மாணவர்களுக்குப் பெருந்தொண்டு புரிகின்றது. -
தேசிய உணர்ச்சியை வளர்க்கும் சிரமதானம் களைபிடுங்கும் LDTனவர்கள் தமக்குச் சொந்தமல்லாத ஒருவருடைய வயலிலே செய் யும் இந்தச் சிரமதானம் அவர்களிடம் தேசிய உணர்ச்சியை வளர்க்கவும் உதவிசெய்கின்றது. " நாம் வேலைசெய்யும் வயல் எமக்குச் சொந்த மற்றதாயினும் அது எங்கள் நாட்டுக்குச் சொந் மானது. அதன் சொந்தக்காரர் எமது ஊரவர், எமது நாட்டவர். அவருக்குக் கிடைக்கும் நன்மை எமது நாட்டுக்குக் கிடைக் கும் நன்மையாகும். ஆதலால், நாம் எமது நாட்டுக்கு, எமது நாட்டவருக்குத் தொண்டு புரிகின்ருேம் ’ என்ற தேசிய உணர்ச்சி மான வரின் பிஞ்சு உள்ளங்களிலே மலர்கின்றது. தமக்காக மாத்திரம் வாழவேண்டுமென்ற குறுகிய நோக்கம் அகலுகின்றது.
உணவுற்பத்திப் பெருக்கம்
சமுதாயத்துக்குக் கேடுவிளைவிக்கும் கொலைஞ ராகிய கொடியாருக்குக் கொலைத் தண்டனை யளித்து அரசு நல்லவர்களைக் காப்பதுபோல் நெல்லுக்குத் தீமைதரும் களைகளையழித்துவிடு தல் நெல் வளர்ச்சியையும் நெல் விளைவையும் கூட்டுகிறது இதைச் செய்வதற்கு எல்லா உழ வருக்கும் வசதி கிடைப்பதில்லை. கூலியாட்கள் கிடைக்காமை, பணக்கஷ்டம் ஆதியன தடையா யமைந்துவிடுகின்றன. களை பிடுங்காமையால் விளைவுங் குன்றுகின்றது. மாணவர்களது இச் சிரமதானம் ஒவ்வோரிடத்திலும் சிறிதுபோலத் தோன்றினுலும் அகில இலங்கையையும் நோக் கும்போது பல்லாயிரக்கணக்கான ஏக்கர் வயல்
சித்திரை-ஆனி 1970

நிலத்தில் அது களையை நீக்கி விடுகின்றது. அதனுல் நெல் உற்பத்தியும் வருடந்தோறும் பல்லாயிரக்கணக்கான புசலால் அதிகரிக்கின் றது. இது தேசிய உற்பத்தியையும் தேசிய உணவுற்பத்தியையும் வளர்க்கும் சீரிய சிரம தானத் தொண்டாயமைகின்றதன்றே?
உழவின் உயர்வை உணர்த்தும்
எழுதுகோலன்றி உழவுகோல் பிடிக்க மன மில்லாத மக்கள் பலர் உழவு தொழிலைக் கீழானதாக மதிக்கின்றநிலை எமது நாட்டில் இன்னும் இருக்கின்றது. இவர்கள் உழவரை யும் உழுதொழிலையும் பரிகசிக்கின்றநிலை இன் னும் மாறவில்லை. பாடசாலைக்குச் செல்லும் இவர்களது சந்ததிகளின் மனப்பாங்கும் இத் தகையதே. காலிலிருந்து சப்பாத்தைக் கழற்றி விட்டால் தம்மால் நடக்கமுடியுமா என்று சந்தேகப்படுகின்ற இப்பிள்ளைகளும் வயல் வெளிக்குச் செல்வதுங் களேபிடுங்குவதும் அவ சியமானதே.
நாட்டுக்கு உணவூட்டுபவன் உழவன். அவ னது உழுதொழில் உயர்வானது, கஷ்டமானது. அது உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற பேத மின்றி யாவராலும் பேணி வளர்க்கப்படவேண் டியது என்ற உணர்வு அவர்களுக்கும் மற்றை யோருக்கும் ஏற்படவேண்டும். அதற்கு இவ் வியக்கம் இன்றியமையாததாகும்.
செய்து கற்க வாய்ப்பளிக்கின்றதும், சந் தோஷமான பொழுது போக்கானதும், சமு தாய ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதும், தேசிய உணர்ச்சியையும் உற்பத்தியையும் வளர்ப்பதும், உழவு தொழிலின் உயர்வை உணர்த்துவதும், பல திணைக்களங்களின் உதவியுடன் நடத்தப் படுவதுமான மாணவர்களின் களேபிடுங்கும், இந்தச் சிரமதானவியக்கம் ஆண்டுதோறும் வளர்ந்து நம் ஈழ மாதாவுக்கு இன்பத் தையுஞ் சிறப்பையும் ஈவதாகுக.
57

Page 58
கறவை வளர்ப்பு-2
O O சுததமான LI fᎢ 6Ꮜ gᏏ Ꭻ
e எவ்வாறு ?
நாங்கள் உற்பத்தி செய்யும் பாலை பெரும் பாலும் பாற் சபைக்கே கொடுக்கிருேம். இலங்கையில் உள்ள பல பட்டணங்களில் பாலை மக்கட்கு கூடியளவு விநியோகஞ் செய்பவர் களும் பாற்சபையோரே. பாற்சபை விருத்தி யடைய, பெரும்பாலும் இலங்கையின் பால் விநியோகம் பாற் சபையினராலேயே நடாத்தப் u(BLh.
இதை முன்னிட்டுப் பாற்சபைக்கு எற்றவாறு நாங்கள் தரமான பாலை உற்பத்தி செய்ய வேண்டும். இலங்கையின் சட்டத்தின்படி மக் கட்கு விநியோகிக்கும் பாலில் குறைந்த
இனம்
பிறீசியன்
ஐசயர்
பிரவுண் சுவிஸ்
கேண்டு
ஜேர்சி
ரோட்கோன்
சிந்தி
எருமை மக்கட்கு விற்கக்கூடிய பால்
பாற்கொழுப்பு
1. இனம்-இனத்திற்கு இனம் பாற் கொழுப்பின் விகிதம் வேறுபடும்.
பாற்பசு இனங்களில் ஜேர்சி இனம் 52% பாற்கொழுபபடைய பாலைக் கொடுக்கிறது. எங்கள் நாட்டுப் பசுவும் இதேயளவு பாற் கொழுப்பைக் கொடுக்கிறது. எருமை 66% பாற் கொழுப்புடைய பாலைக் கொடுக்கிறது. சில எருமை இனங்களில் 85% பாற்கொழுப் பும் கிடைக்கக்கூடும்.
எங்கள் பாற்பண்ணையில் பாலின் கொழுப் பின் தரம் குறையுமாகில் வளர்க்கும் இனங்
களை அதற்குத் தகுந்தவாறு வளர்ப்போமா
58

ந. சண்முகம்,
கமத்தொழில் அலுவலர் (அரசினர் பண்ணைகள்).
ம் குறைவது
பட்சம் 35 சத வீத பாற் கொழுப்பும், 8.5 சத வீத கொழுப்பற்ற பாற் கட்டிகளும் இருக்க வேண்டும். பாற்சபையும் இதற்குக் குறைந்த பாலை ஏற்க மறுக்கும்
நாங்கள் எவ்வளவு கவனமாகப் பாலை உற் பத்தி செய்தாலும், சில சமயம் பால் தர மற்றது என கூறி பால்சபை அதனை ஏற்க மறுக்கிறது. எனவே நாங்கள் தரக்குறைவை ஏற்படுத்தும் காரணங்களையும் அதனை எவ் வாறு தடுக்கலாம் என்பதையும் ஆராய்வோம். ஒவ்வொரு இனப்பசுவும் கொடுக்கும் பாலின் தரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது :
பாற்கொழுப்பு கொழுப் கூட்டுத்
விகிதம் பற்ற பாற் தொகை கட்டி விகிதம்
36 8:5 , 2. 4·0 8-7 . . .27 4:1 . . 9:0 . . 13:1 4·8 9.2 14•0
5-2 ... 9- 6 48 3.8 ... 8:8 . 12.6 4·6 , 9- 0 3-6 6-6 ... 9-9 ... 16-5 3-5 8-5 12-0
கில் இக்குறைவை நிவர்த்தி செய்யலாம். ஜேசி, சிந்தி இனங்களின் தொகையைக் கூட்ட வும் அல்லது ஜேசி கலப்பினக் கன்றுகளை உற்பத்தி செய்யவும்.
2. தனிப்பட்ட பசுக்கள்.-ஒரே இனத்தின் சில குடும்பங்கள் பாற் கொழுப்பு கூடுதலாகக் கொடுக்கும். தனிப்பட்ட இப் பசுக்களும் இக் குணத்தைக் காட்டும். இக்குனம் சந்ததிக்குச் சந்ததி தொடரும் தன்மை உடையது ஆன படியால் நாம் வளர்க்கும் பசுக்கள் தெரியும் பொழுது கூடுதலாகப் பால் கொடுக்கக் கூடிய தும் அப்பாலில் கூடிய பாற் கொழுப்பு உடை யதுமான பசுக்களையே தெரிந்து வளர்க்க வேண்டும்
கமத்தொழில் விளக்கம்

Page 59
3. கன்று ஈன்றபின் பால் கறக்கும் கால எல்லை.--கன்று ஈன்ற இரு கிழமை வரை பசுக்கள் கூடிய பாற் கொழுப்புடைய பாலைக் கொடுக்கும். பின்பு கூடிய பால் கறக்கும் நாள் அடையும் வரை கொழுப்புக் குறைந்து கொண்டு செல்லும். இக்காலம் கன்று ஈன்று 2-3 மாதத்திற்குள்ளாக இருக்கும். அதன் பின் சராசரியாக நின்று, திடீரென 6 மாத மளவில் கொழுப்பின் விகிதம் குறையும். பின்பு பால் குறையத் தொடங்கியதும்கொழுப்பு படிப்படியாகக் கூடத் தொடங்கும்.
இதைத் தடுப்பதற்கு மாதமொன்றிற்கு பட்டியில் உள்ள பசுக்களில் பங்கு பசுக்கள் கன்று ஈன வேண்டும். இது நடைமுறையில் சாத்தியமாவது மிகவும் கஷ்டம். ஆனல் இந்நோக்குடன் பசுக்களைக் கட்டுப்பாட்டுடன்
காளையுடன் சேர்ப்பின் சித்தியடைவோம்.
4. பருவகாலம்.-வெப்பமான காலங்க
ளில் பாற்கொழுப்பு குறைவதாக அவ
தானிக்கப்பட்டுள்ளது.
5. உணர்ச்சி வசப்படுத்தலும் காளையைத் தேடுதலும்.-பசு உணர்ச்சிவசப்படும் பொழுது, வெருட்சியடையும் பொழுது, சத்தத்தால் கலக் கமுறும் பொழுது, பால் கறப்பவர் வேறு படின் பாற்கொழுப்பு குறையும். பசு காளை யைத் தேடும்பொழுது சாதாரணமாகக் கொழுப் பின் விகிதத்தில் மாற்றமில்லை. ஆனுல் சில பசுக்களின் பாற்கொழுப்புக் கூடுவதாக அவ தானிக்கப்பட்டிருக்கிறது.
6. பால்கறக்கும் திறன்.-பாலே முற்ருகக் கெதியாகக் கறந்து விடல் வேண்டும். கடைசிப் பாற் சொட்டையும் கறந்து விடல் வேண்டும். கடைசிப் பாலில்தான் கொழுப்பு கூடுதலாக இருக்கிறது. கன்றைத் தாயுடன் வளர்பபோர் கனறிற்குப் போதியளவு பால் கறக்குமுன் குடிக்க விட வேண்டும். கறந்தபின் கன்றை ஊட்ட விடுவதைத் தவிர்ப்பது நன்று அல்லது பாலைக் கறந்தபின் கன்றிற்குப் பிறிம்பாக வாளியில் பால் கொடுக்கவும். கூடிய கொழுப் புடைய பாலைக் கன்றை ஊட்டவிடுவது கன் றிற்கு நன்றன்று.
கடைசியாகக் கறக்கும் பாலில் கொழுப்பு, முதற் கறந்த பாலிலும் பார்க்க இருமடங்கு
சித்திரை-ஆனி 1970
5药
r
赛

டுதலாக இருக்கும். பாலை நன்றக ஒட்டக் வாதுவிட்டால், பசு கெதியில் பால் வற்றி டும். அத்துடன் கறக்கும் பால் பழுதடை மல் அதிக நேரம் வைத்திருக்க முடியாது.
7. பால்கறக்கும் இடைவெளி-12 மணித் பாலத்திற்கொரு முறை பால் கறப்பின், லின் கறவை அளவும், பாலின் கொழுப் ம் சம அளவாகவே இருக்கும். கூடிய இடை வளி இருப்பின கூடியளவு பாலும், குறைந்த காழுப்பு முடையதாக இருக்கும். இடைவெளி றையின் குறைந்த அளவு பாலும், கொழுப் க் கூடிய பாலாகவும் இருக்கும். அதிகமாகப் ன்னேரப்பால் எப்பொழுதும் கொழுப்புக் டியதாக இருக்கும். ஏனெனில் காலைப்பால் றப்பிற்கும் மாலைப்பால் கறப்பிற்கும் இடை நரம் மிகவும் குறைவு. கூடியளவு இவ்விடை வளியை நடைமுறையில் குறைக்கவும். சில மயம் காலைப்பாலில் கொழுப்பு வீதம் 35 க் குறைவாக இருக்கும். மாலைப்பால் 45 க் கூடியதாக இருக்கும். காலைப்பாலை 1ற்சபை ஏற்க மறுக்கும், ஆணுல் மாலைப் ாலைத் திறம்பாலென ஏற்கும். காலைப்பாலைக் காடாமல் கறந்தவுடன் குளிர வைத்து ாலைப்பாலுடன் கலந்து கொடுப்பின் இப்பால் ல்லதென்று ஏற்பார்கள். இக்குறைபாட்டைத் தடுப்பதற்கு கூடியளவு ல்கறக்கும் இடைவேளையைக் குறைக்கவும். ற்றுப்பால் மாடுகள் ஒரு நேரம் கறப்பின் லையில் கறக்கவும்.
8. தேக ஆரோக்கியம்-தேகாரோக்கியம் றைந்து மாடு நோய்வாய்ப்பட்டிருப்பின் காழுப்பின் விகிதத்தைப் பாதிக்கும்.
9. தேக அப்பியாசம்-ஒரே கட்டில் இருக் ம் மாடுகளின் பாலில் கொழுப்புக் குறை ாகக் காணப்படும். ஒடி ஆடி உலவவிடும் ாடுகளில் கொழுப்புச் சிறிதளவு கூடுதலாகக் ணப்படும். பாலில் கொழுப்புக் குறையின் ாடுகளை அவிட்டு உலவ விடுதலால் ஓர் அள ற்குக் கொழுப்பைக் கூட்டலாம். (வரண்ட ரதேசங்களில் மாலில் நின்று உணவு உண் ம் மாடுகள், உலவி மேய்ந்து வரும் மாடு ரிலும் பார்க்க இருமடங்கு கூடுதலாகப் பால் காடுக்கிறதையும் அவதானித்துள்ளோம்.)
59

Page 60
10. பசுவின் வயது.-3-5 வயது வை பசுவின் பாலில் கொழுப்பு சிறிதளவு கூ வரும். 5 வயதிற்குப் பின் கொழுப்புக் குன யத தொடங்கும். மாடு 8 வயதடையு பொழுது கூடிய பால் கொடுப்பதாக அவத னிக்கப்பட்டுள்ளது.
11. கொடுக்கும் தீவனம்.-பச்சைப்பு
அல்லது வேறு பச்சிலை உணவுகள் கொடு கும் பொழுது பால் கூடியும் கொழுப்பு குறைந்தும் காணப்படும். காய்ந்த தீவன கொடுக்கும் பொழுது பால் குறைந்து கொழுப்புக் கூடியும் காணப்படும். தொடர்ந் மாடுகளுக்குப் போதியளவு தீன் கொடுக் விடின் பாலின் கொழுபடக் குறையும்.
12. பசுவின் பால் கறக்கும் தன்மை. கூடிய பால் கறக்கும் பசுக்கள் பொதுவாக கொழுப்புக் குறைந்த பாலைக் கொடுக்கு குறைந்த அளவு பால் கொடுக்கும் பசுக்க கூடிய கொழுப்புடைய பாலைக் கொடுக்கும்.
பாற்கட்டி 1. இனம்-பாலில் ஜேசி, சிந்தி, த. பாகர் போன்ற இனங்களும் எருமை இன களும் கொழுப்பற்ற பாற்கட்டி கூடிய ப6ே கொடுக்கும்.
ஜேசி 9.6% சிந்தி 9" (9% எருமை 9.9%
பாற்கட்டி குறையுமாகில் இவ்வினங்கை பட்டியில் கூட்டவும்.
2. கன்று ஈன்றபின் பால் கறக்கும் கா எல்லே.-கடும்புப் பாலில் பாற்கட்டி கூடி தாக இருக்கும். அதன்பின் கன்று ஈன் 5-10 கிழமைகளிற்குள் பாற்கட்டி சாதார நிலையை அடைந்து விடும். அதன் பின் ம கன்றுபட்டுச் சில மாதத்திற்குப் பின் ப
60

Tf
TIEI
பூக்
TIL U
வறறும் வரை பாற்கட்டி கூடிக் கொண்டு வரும். கன்றுபடா மாடுகளில் பாற்கட்டி கூடு வது மிகவும் சொற்பம்.
கன்று ஈன்று 2-5 மாதம் வரை பாலில் பாற்கட்டி மிகவும் குறைவு. இக்காலங்களில் தகுந்த உணவு கொடுப்பின் இக்குறை பாட்டைக் கட்டுப்படுத்தலாம்.
3. பசுவின் வயது-பசுவின் முதல் ஈற் றுப்பாலில் அதிக கூடிய பாற்கட்டி இருக்கும். அதன்பின் 5 ஆம் ஈற்று வரை, ஈற்றுக்கு 0.01% வரை குறைந்து வரும். முதலாம் ஈற்றி லும் பார்க்க ஐந்தாம் ஈற்றில் பாற்கட்டி 04% குறைவாக இருக்கும். ஐந்தாம் ஈற்றுக் குப் பின் பாற்கட்டி தொடர்ந்து குறைந்து கொண்டு வரும். ஆனுல் குறையும் விகிதம் குறைவாக இருக்கும். வயது சென்ற மாட்டுப் பால் சுத்தட்பாலாய் இருந்தாலும் அதன் பாற் கட்டி விகிதம் குறைந்தவுடன் தரம் குறை வாகவே கணிக்கப்படும்.
4. சீதோஷ்ண நிலை-வெப்பம் கூடக் கூட பாற்கட்டியின் விகிதம் குறைவதாக அவ தானிக்கப்பட்டுள்ளது. இக்காலங்களில் பசுக் களைக் குளிர்ந்த இடங்களில் கட்டிப் போதிய தீன் கொடுக்க வேண்டும்.
5. உணவின் தரம்-பிசிதம் கூடிய உணவு கொடுப்பினும், பாலில் உள்ள பிசி தத்தையோ அல்லது பாற்கட்டியின் விகிதத் தையோ கூட்ட இயலாது. ஆணுல் மாச் சத்தைக் கூட்டுவதால் பாலின் பாற் கட்டி விகிதத்தைக் கூட்டலாம். உணவில் 1 இருத்தல் மாச் சத்துக் கூட்டின் பாற்கட்டி விகிதத்தை 0.068 வீதம் கூட்டலாமெனக் கணக்கிட்டிருக்கிறர் கள். கொழும்பில் பாலிற்கு வைத்திருந்த எருமைகளுக்கும் பசுக்களுக்கும் கஞ்சி காய்ச்சி
வைத்திருப்பதை அவதானித்திருப்பீர்கள்.
-வளரும்.
கமத்தொழில் விளக்கம்

Page 61
விவசாயப் பூச்சியியல் -4
பூச்சிகளின் புதுமைப்
பூச்சிகளின் வாழ்க்கையை உற்று ஆராய் வோமானுல் பல்வேறு அற்புதங்களைக் காண லாம். அவற்றின் பயணுக மனிதன் தன் வாழ்க்கையைத் திருத்தி அமைக்கலாம். கமத் தொழில் விளக்கம் 1967 சித்திரை-ஆனி, மலர் 11, இதழ் 1, பக்கம் 58 ல் பூச்சி உலகில் நிமிடத்துக்கு நிமிடம் பூச்சிகளின் தொகை குன்றவும், கூடவும் இயலும் என் றும், நமது பார்வைக்கு பூச்சிகள் புலப்படுவன வும், புலப்படாதனவும் உண்டென்றும், பூச்சி களின் இனங்கள் எத்தனை, அவற்றின்தொகை எவ்வளவு என எக்காலத்திலும் கணிக்க முடி யாதென்றும் அறிந்தோம். கமத்தொழில், விளக்கம் 1968 தை-பங்குனி, மலர் 11, இதழ் 4, பக்கம் 273 ல் இயற்கையின் அற்புத நுட்பங்களை ஒட்டிய விஞ்ஞானத்தில், பூச்சி களின் பங்கைப் பற்றியும், வெகு காலங் களுக்கு முன்பே பூச்சிகளில் தோன்றி மறை பொருளாயிருந்த, அதிசயிக்கக்கூடிய, சித்தி வாய்ந்த, பிரத்தியேக பொறிமுறைகளே மனி தன் தன் பொறியியற் தத்துவங்களுக்கு உப யோகிப்பதற்காக காலத்திற்குக் காலம் அலசி ஆராய்ந்து வருகிறன் என்பதையும் அறிந் தோம். கமத்தொழில் விளக்கம் 1969 தைபங்குனி, மலர் 12, இதழ் 4, பக்கம் 276 ல், இறைவன் தான் படைத்த மனிதன், விலங்கு, பறவைகளிடையே மட்டும் மன்மத லீலைகளே ஏற்படுத்துவதுடன் நில்லாது, பூச்சிகளிடையே யும் இனப்பெருக்கத்திற்கு முன் காதல்லிலே நிலவ ஏற்பாடுகள் செய்துள்ளார் என்பதை யும் அறிந்தோம்.
மனிதர் கூடியளவு காதல் லீலைகளையும், புணர்ச்சிகளையும், பிறர் காணுத இடங்களில் புரிவர். ஆளுல்ை மருகங்களும், பறவைகளும், பூச்சிகளும், வெட்டவெளிகளில் இச் செயல் களைப் புரிகின்றன. மனித உலகில் காதலில் அல்லது விவாகத்தில் ஈடுபடுவதற்கு முன்ன
சித்திரை-ஆனி 1970

திரு. பொ. மாணிக்கவாசகர்,
மாவட்ட விவசாய விரிவாக்க அதிபர், யாழ்ப்பாணம்.
க்ககம்
ாக ஆணுே பெண்ணுே தமக்கொரு மனை யார் செய்வது வழக்கம். இம்மனை புதிதாக புமைக்கப்படலாம் அல்லது முதிசமாகப் பெற ாம் அல்லது வாடகைக்குப் பெறலாம். ாதல் முற்றி விவாகமாய் முடிந்த பின் இல்வாழ்வு ஆரம்பமாகும். ஆனல் பூச்சிக ளில் அவ்வாறன்று. புணர்ச்சி முடிந்தபின் நான் பிரதானமாக சமூக வாழ்க்கையை அடிப் டையாகக் கொண்ட பூச்சிகள் மனை அமைத் துப் புகுவன.
ஆதியில் மனிதன் அலைந்து திரிந்த காலத் தில் மரத்தடியில் சீவித்தான். அதன்பின் குகைகளில் வாழ்ந்தான் படிப்படியாக பச் நிலைக் கூடாரங்கள் மாறி மண் வீடுகளாகி, நல்வீடுகளாகி, கூடகோபுரங்களாகின. துருவப் பகுதிகளில் பனிக்கட்டிகளாலாகிய “ இக்குளுக் 5ளும் (Igtoo) கனடா போன்ற அடர்ந்த EITLGIJ பிரதேசங்களில் மரத்தினுலாய Gand 5.535, (Log Cabin) 565th, Un 26) வனத்தில் “ சிலைக் கூடாரங்’ (Tent) களும் Fனநெருக்கள்ள நியூயோர்க் போன்ற நகரங் களில் “ ஸ்கைஸ் ஸ்கிறேப்பேஸ் ’ (Sky Scrapers) களும், நீர்ப்பரப்பு அதிகமாகவுள்ள 2)LĚJasińîổi), “ GJIT,i) áRGJIGI) ” (Boat House) களும், சொந்தக்காணி அற்றவர்கள் "காவலன்' Caravan) களும், அமைத்தனர். இவற்றின் அமைப்புக்களும் காலத்திற்குக் காலம் மாற்ற மடைந்து வருகின்றன. மனிதன் இத்துடன் நில்லாமல் சமுதத்திரத்தின் அடியிலும், விண் னிலும், சந்திர மண்டலத்திலும், வாசஸ்தா னங்கள் அமைப்பதில் ஆர்வம் கொண்டுள் ளான். இப்படியாகக் காலத்திற்குக் காலம் பல வசதிகளுடன் சுகவாழ்வு வாழ்வதற்காக, மனித சமுதாயத்திடையே கட்டிடக் கலை நிபுணர்கள், சிற்பாசாரியர், தச்சர், கொற்றர், குயவர், நெசவாளரும், வேறு பலரும் ஒன்று சேர்ந்து மனை அமைப்பர். பூச்சி
61.

Page 62
களிடையேயும் இப்படிப்பட்ட பல நிபுண களுமுண்டு. அதிகமாக பூச்சிகள் தனிடை யாக மனை அமைப்பன. வேறு சில ஒத்து ழைப்பால் மாடமாளிகைகளும், கூடகோபுர களும், அமைப்பன. மனிதரால் இயலாத அதி சயமொன்று பூச்சிகளில் காணலாம். பூச் களின் மனை அமைப்புக்குத் தேவையான நூல், வச்சிரம், கடுதாசி, மெழுகு முதலிய வற்றைத் தம் உடம்பிலேயே தயார் செ. கின்றன. பூச்சிகளும் சந்தர்ப்பம் சூழ்நிலை கேற்ப தம் மனைகளை அமைக்கின்றன. ஆனல் அம்மனைகளின் அமைப்பு சதாகாலத்திலும் ஒரே மாதிரியாகவே இருக்கும். இதற்குக் கா ணம் பூச்சிகளின் மூளை சிறியது. பகுத்தற வில்லாதது. பூச்சிகள் தம் தொழிலை இயர் கைச் சுபாவத்தாற் செய்கின்றன. அதனுள் தான் அவர்களின் வாழ்க்கைச் சுழல், உணவு மனை முதலியவற்றில் அதிக வேறுபாடுகள் ஏற்படுவதில்லை. இயற்கைச் சுபாவத்தாற்றன் ஓர் இனப் பூச்சி பறவைகளின் இறக்கை: காம்பினுள் வசிப்பன. இன்னுமொன்று மாட்டு ஈயின் நாக்கில் வசிப்பன. வேறு ஒன்று கடல்சிங்கத்தின் நுரையீரலில் வசிப்பன. உவ நீரிலும் எண்ணெய்க் குழிகளிலும், மண்ண ணுள்ளும், மனிதரிலும், மிருகங்களிலும், பழ வைகளிலும், தாவரங்களிலும், சீலைகளிலும் பல்வேறு பூச்சிகள் வசிப்பதை நாம் அறி வோம்.
விவசாயத்துறையில் சற்று ஆராய்வோம ணுல் மயனுமறியா மாளிகைகளோவென அதி சயிக்கக் கூடிய மாடமாளிகைகளையும், கூ கோபுரங்களையும், காணலாம். நெற்பயிை எடுத்துக்கொள்ளுங்கள். அறக்கொட்டியான் (Rice-Swarming Caterpillar =Spodopter mauritia Boisd) L-Up (LfS) fŤ Jöggi) Lib GJUJUG அண்மையில் உள்ள மேட்டுநிலங்களில் அை அமைத்து, அவ்வறையில் கூண்டுப்புழுவா மாறுகின்றது. வெள்ளப்பெருக்குக் காலங் ளில் வெள்ளம் அடங்கியவுடன் நெல் உை g, TijSL Licup (Rice Case Bearer=Nymphul depunctalis Yuen, nymphula fluctuosalis L. நெற்பயிரைத் தாக்குகின்றது. இப்புழு நெ இலையை வெட்டி குழாயாக்கி அக்குழாயி இருந்துகொண்டுதான் பயிரைத்தாக்கும் இ புழு நாளொரு மேனியும் பொழுதொரு வன் ணமுமாக வளர்வதால் தம் பருமனுக்கு, தக்கதாய் பழைய இலைக் குழாய்களை அகற்
62

புதியனவற்றைத் தயாரித்துக் கொள்ளும். பழைய இலைக்குழாய்கள் நீரில் மிதந்து வயல் மூலைகளில் அடைவதை நீங்கள் அவதானித் திருக்கக்கூடும். நெற் பயிர்களில் மட்டம் வெடிக்கு முன் குருத்துக்கள் வெள்ளிநிறக்
بھیجیAلگی خمارچ 8؟لدہ (فکہ کا ل686a
gypITtll35GT tS (Rice Silver Shoot) (2C5C பதையும் சிலர் அவதானித்திருக்கக்கூடும். இவ் வெள்ளிக் குழாய், ஓர் கபில நுளம்பைப் GLITGöip FF (Gall Fly=Pachydiplosis oryzae) வர்க்கத்தினுல் அமைக்கப்பட்ட கோபுரமாகும். இக் கோபுரத்தில் தன் வாழ்க்கைச் சுழலை பூர்த்தி செய்வதால் தாக்கப்பட்ட பயிரில் நெற்கதிர் பெறமுடியாது.
இலகுவில் மழையும் பனிநீரும் உட்செல் லாது, சூரிய வெப்பததினுல் தாக்கப்படாது, உள்ளிருந்து பயிரின் பச்சயத்தை உண்பதற் காக " காவோலைப்புழு " " மடிச்சுக்கட்டி", (Leaf Roller Marasmia bilinealis) 6T607 அழைக்கப்படும் புழு நெல் இலைகளை ஒன்று சேர்த்து அல்லது ஒற்றை இலைகளை மடித்துக்கட்டி பச்திலேககூடாரங்கள் அமைக் கின்றது. பச்சயம் உண்ணப்பட்டதின் பின் சூரியவெளிச்சத்தின் காரணமாக, உண்ணப்
கமத்தொழில் விளக்கம்

Page 63
s البلا 萝
戮
ترقی؟&3ے
s- جميع eOiii iiMTStBtiiAASJAuAJSJJYJuJS 家
Brjú ta
29 অক্টোছ-Sী গুচ ইিঞ্চগু& €9 読エ柔
a
சித்திரை-ஆனி 1970
 
 
 
 
 

பட்ட பாகங்கள் வெளிறி ஊடுருவிப் பார்வை யிடத்தக்க மெல்லிய கடுதாசி போல் காட்சி யளிகளும். இப்படிப்பட்ட பச்சையும் வெண் ணிறமும் கலந்த கூடாரங்களையே " மடிச்சுக் கட்டி' அல்லது " காவோலைப்புழு ’ என்பர். நெற் கதிர் தோன்றுங்காலத்தில் கதிருக்குக் கீழ் உள்ள இலையும், அதன் கீழ் அடுத்தா யுள்ள இரு இலைகளும் கூடார அமைபபுக்கு உபயோகப்படுமாகில் நெல் விளைவு எக்கருக்கு இருபது சத வீதமாகக் குன்றும் என்று ஜப்பானிய விவசாய விஞ்ஞானிகள் கணித் திருக்கிறர்கள். -
நெல் விவசாயியின் வயிறு கொதிக்கவும், மனம் சோரவும் செய்வது இரண்டாம் சந்ததி “ SF iš 3575559) LÜ (up ” (Rice Stem Borer -Try poryza-incertulas) - 650aö7 Glas TL"602LL. அமைப்பாகும். இரு வாரம் தொடக்கம் கதிர் கக்கும் வரை தான் விவசாயியை ஏமாற்றி வெற்றி பெற்றுவிட்டோமென ஏற்றி வைக்கும் வெண்கதிர்க் கொடி தென்கிழக்காசியாவில் உள்ள நெல் விவசாயிகளுக்கு விசனத்தை எற்படுத்துகிறது. விவசாய விஞ்ஞானிகளும் சும்மா இருந்திலர் விவசாயிகட்கு உதவுமுக மாக இச் சந்துகுத்தியின் சவாலை எற்றுப் பல வித நாசினிகளை, தூள், குறுணல, நீரில் கரையும் எண்ணெய்களாக்கிச் சந்து குத்தி கோட்டை கட்டாமல் தடுக்கவும், கோட்டை கட்டினுலும் அதனைக் கோட்டை யிலேயே சங்காரம் செய்யவும், விவசாயிகட்கு, கணைகளாகவும், கவசங்களாகவும், ஊடுருவி களாகவும் அளித்துள்ளார்கள் முற்போக்கான ஜப்பானிய நெல் விவசாயிகள் இடபடியான பலவித நாசினிகளைக் கொண்டு, நவீன முறை யில் கூட்டுறவு அடிப்படையில் இச் சத்திராதி களின் கோட்டைகளைத் தகர்த்து, அவர்களை விரட்டி அழித்துள்ளார்கள். நெல் இலைகள் மேல் மஞ்சள் நிற விட்டில்களால் இடப்பட்ட முட்டைகளில் இருந்து உற்பத்தியாகும் சின் னஞ் சிறிய இச் சந்துக்குச்திப மு, நூல் திரிப்பதிலும், காற்றிலும் நீரிலும் மிதப்பதி லும், வல்லமை வாய்ந்தது. இளம் பராயத் தில் நெற் பயிர் வயலில் மிக ஐதாக இருக் கும். அண்டையில் உள்ள நெற்பயிருக்குச் செல்வதற்கு இப் புழுக்கள் வாயினுடாக நூல் தயாரித்து நூல் மாாக்கமாகக் காற்றில் மிதக் கும். தவறிக் கீழே விழுந்தால் நீரில் மிதந்து (64 ம் பக்கம் பர்ாக்க)
63

Page 64
இலங்கை மண்வை
செம்மஞ்சள் இலற்றசொல் (Red Yellow
Latasols)
மண்களிற் காணப்படும் சிலிக்கா செஸ்குயி ஒட்சைட்டின் விகிதத்திற்கேற்ப இலத்தெரித் Slåg (Silica Sesquioxide) GT60T (LOGör607ff குறிக்கப்பட்ட மண்வகைகளே தற்போது இலற்றசொல் (Lataritic) என வழங்கப்படு கின்றன. புத்தளத்தில் தொடங்கி வடக்குப் பக்கமாய் விந்து குறுக்கே சென்று முல்லைத் தீவை அடுத்துள்ள பாகங்களிற் காணப்படும் இச்செம்மஞ்சள் இலற்றசொல் தொகுதியே, இலங்கையில் மிகப் பழமை வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. ஆபிரிக்காவின் அயனமண் டலத்திற் காணப்படும் மிகப் பழைமைவாய்ந்த வொரு தொகுதியைக் " கெலக்கு ' என்பவர் இலற்றசொல் என அழைப்பதற்கிணங்கவே, இத்தொகுதிக்கு இங்கு இப்பெயரிடப்பட்டுளது.
இத்தொகுதி மண் மிக ஆழமாயும், மணல் சார்ந்ததாயும் இருக்கிறது. மேற்படை மண் னில் 14 சதவிகிதம் வரையுள்ள களிக்கூறு கீழ்ப்படைகளில் 20 சதவிகிதம் வரை உயரு கிறது. மண் மணிகள் வலுக்குறைந்தவை. மண்ணின் ஈரத்தன்மை எவ்விதமிருப்பினும்
பூச்சிகளின்
(63 ம் பக்க
நெற்பயிரை அடையும். சிறு பராயத்தில் பல நெல் நாற்றைத் தாக்கி நன்கு வெட்டப்பட்ட வட்டத் துவாரங்கள் ஊடாக வெளியேறுவர். தாக்கப்பட்ட பயிரின் குருத்து மஞ்சள் நிறமாகி கபில நிறமாய் மாறி இறுதியில் அப் பயிர் பயனற்றதாகும். இப்படியாகப் பல பயிர்களை விவசாயிக்குப் புலப்படாமல் அழித்து விட்டு இறுதியில் கோட்டையின் ਜੇ ਨੂੰ தில் வெண் கொடியேற்றி வைக்கிறது. என்னே இப் பூச்சி யின் விவேகம், (வளரும்)
 
 

சி. கந்தையா,
இளைப்பாறிய மண்ணியல் வல்லுநர்.
5,556
அதன் திண்மை அதிகம் வித்தியாசப்படுவ தாகத் தெரியவில்லை. pH பெறுமானம் 68 ஆகையால், தாக்கம் நடுநிலையை அடுத்துளது. எனினும் கல்சியம், மகனசியம் மிகக் குறைவா கும். மறு போசனப் பதார்த்தங்களும் குறைவே. அதன் உப்பு மூலமுதல் மொத்தக் கணிப்பு 15 மி.கி./100 கிரும் ஆகக் குறைந் திருப்பதோடு, அதன் உப்பு மூலமுதல் மாற் றக் கொள்ளளவும் 43 மி. கி. மாத்திரமே. ஆகையால் அதைப் பொதுவாக வளங்குறைந்த வொரு மண் தொகுதியாகவே கொள்ள வேண்டும். அம்பாறை மாவட்ட வகை சம் பந்தமாகக் கூறப்பட்டவை இங்கும் நன்கு -9||60ԼԸպլԻ.
கல்சியச் செம்மஞ்சள் இலற்றசொல் (Calcic Red-Yellow Latasols)
முன்னர் செங்கட்டி நிறச் செம்மண் (Brick Red Loom) எனக் குறிக்கப்பட்ட தொகுதியே இப்போது செம்மஞ்சள் இலற்றசொல் எனப் பெயர் பெறுகிறது. இத்தொகுதி மண் யாழ்ப் பாணக் குடாநாட்டின் பெரும்பாகத்திலும், அதை அடுத்துள்ள சில தீவுகளிலும் காணப்
புதுமைப்.
த் (தொடர்ச்சி)
நன்றி.
கட்டுரையில் காணப்படும் படங்களை வரைந்து தந்துத்வியமைக்கு திரு. மா. அனந்தசயனன், விவசாயப் பிரிவு, பல்கலைக் கழகம், பேராதனை அவர்களுக்குக் கட்டுரையாசிரியர் தமது நன்றி யைச் செலுத்துவதில் பெருமையடைகிருர், அவர் இப் படங்களைப் பல விவசாய நூல் களிலும் இருந்து எடுத்துக் கொண்டார். கட் டுரையாசிரியரின் அனுமதியின்றி மறு பிர சுரஞ் செய்யலாகாது.
கமத்தொழில் விளக்கம்

Page 65
படும். மேட்டு நிலங்களில் செம்மை நிறமாயும், தாழ்ந்த இடங்களில் மஞ்சட் சார்புடையதாயும் மண்ணிருக்கும். “ B ’ படை என வழங்கப் படும் ' கொள்ளும்படை' இத்தொகுதியிற் EJT6505 TL LJL JL IT6O), Lir) குறிப்பிட வேண்டிய ஒர் அமிச மாகும். மண்ணின் ஆழம் பெரும்பாலும் குறைந்து 4-5 அடிகள் வரை இருக்கும். மேற்படையில் 35 சதவிகிதம் வரையுள்ள, களிக்கூறு கீழே சற்றுக் கூடியிருக்கும். மண் மணிகள் வலுவுள்ளனவாகையால், திண்மை பலகாலும் மெதுமையாயிருக்கும், மண்ணரிட் பும் அதிகம் ஏற்படுவதில்லை.
மண்ணின் pH பெறுமானம் 81 ஆகவிருப்பு தால், தாக்கம் சிறிது காரத்தன்மையுடைய தாகும். அங்கு நிலவும் சீதோஷ்ணம், காற் ருேட்டம், தாக்கம் முதலானவை நுண் கிருமிகளின் தொழிற்பாட்டிற்கு மிகவும் சாதக மாய் அமைந்திருப்பதால், சேதனப்பொருள் கள் மிக எளிதில் அழிவடைகின்றன. எனவே, சேதனப்பொருளும் அத்தோடு நெருங்கிய சம் பந்தமுடைய நைதரசனும் மிகக்குறைவு. கல் சியம், மகனீசியம் அதிகமாயும், பொற்ற சியம் பொசுபரசு கணிசமாயுண்டு. மூலமுதல் மொத்தக் கணிப்பு 51 மி. கி. வரையிருந்து அதன் மாற்றக்கொள்ளளவு, 30 மி. கி. மாகையால் இடப்படும் செயற்கைப் பசளேகளை நீரிற் கரைத்து அவம் போகாது தடுத்து அவற்றை பயிருக்குப் பயன்படும்வகை உதவவல்லது. இலங்கையில் வேறு எங்கே னும் நடைபெருவகையில் தோட்டச் சிறுபயிர் கள் இங்கு நாட்டப்படுகின்றன. கிணறுகள் மூலமே நீர்ப்பாசனம் நடைபெறும். கமக்கார ரும் தங்கள் மண்ணின் சேதனப் பொருட் குறைவை உணர்ந்து, மாட்டெரு தழைப்பசளே போன்றவற்றை மிகப் பெரும் செலவில் இடத் தவறுவதில்லை.
Gig is as Qalibo Gla Tsi) (Reddish Brown
Latasols) (U୦Göt ଓq] if; ಟ್ವಿಟ್ಜCiaು இலத்திரித்திக்கு மண் (Lateritic Soils) i GTGOT GJOJËJá5ÜLJEL GOTIC3'ej, அவற்றின் இலத்திரைற்றுச் சிறிதுங் காணப் படாமையால், நவீன முறையில் செங்கபில
(23)j)/06)g Tổ) (Reddish brown LataSOl).
எனக் குறிக்கப்படுகின்றன. மாத்தளேக்கு
வடக்கேயுள்ள தோம்புவலை, கேகாலை, கண்டி
ஆகிய மூன்றையும் உச்சிகளாகக்கொண்
சித்திரை-ஆனி 1970
i-J 1771 (21.70
リ@Y
 

1ள ஒரு முக்கோண வடிவில் அமைந்த ப் பரப்பிலேயே இத்தொகுதி பெரும் லும் காணப்படுகிறது. இங்கு மண் வெகு ழமாயும், நீர் நன்கு வடிவதாயும் இருக h. 35 சதவிகிதம் வரை களியுள்ளது. தன் மண்மணிகள் சற்று வலுவுள்ளவை. ம் அதிகமாயிருந்தால் மாத்திரம் மண் சப்பிடிப்புள்ளதாயிருக்கும். மற்றைய லகளில், திண்மை மென்மையாகவேயிருக் 2. மண்ணின் ' B படையில் சில இடங் ரில் பளிங்கு, இரும்புக்குளிகை போன்ற ல்கள் ஒரு படையாகத் தோன்றக்கூடும்.
சேதனப்பொருளோ, நைதரசனே அதிக ாது. பொற்றசியம், கல்சிய மகனீசியம் ரிசமாயுண்டு. பொசுபரசு குறைவு. அதன் றுமானம் 64 வரையிலிருப்பதால் தாக் சற்று அமிலத்தன்மையுடையது. இவ் கைத் தாக்கமே பெரும்பாலான பயிர்களுக்கு ந்ததென்பதை இங்கு குறிப்பிடவேண்டும். த்தொகுதி மண்ணின் உப்பு மூலமுதல் ற்றக் கணிப்பு 198 மி. கி. வரை உயர்ந் ாளது. அதன் நிரப்பற் கொள்கை 61 வீதமாகையால், இடப்படும் செயற்கைப் ளேகள் வீண்போகாது பயன்படக்கூடிய நிலை ண்டு. பலவகைப் பல்லாண்டுப் பயிர்களையும் ருவாரியாக நாட்டும் முயற்சி இங்கு சிறந்து ளங்கும். கொக்கோ, வாழை போன்ற பயிர் ள அவற்றுள் முக்கியமானவை. வருவாய் றைந்த தேயிலையை அழித்து, அந்நிலங் ரில் பழவகைகளை நாட்டுதல் பயன் விளைப்ப (35Ls).
5555if (Tropical Black Clay Soils-Grumusols) கரும் பருத்திக் களிமண் (Black Cotton is) என முன் வழங்கப்பட்ட தொகுதி, போதைய முறையில் கருங்களியெனக் றிக்கப்படுகிறது. இதிலும் " B ன்னும் ' கொள்ளும்படை கிடையாது. ாங்குளத்துக்கு மேற்கேயுள்ள துணுக்காயி ம், முருங்கனிலும் மிகுந்தும், வேறு சில கங்களில் குறைந்தும் காணப்படுகிறது. மண் யநிறக் களியாகும். ஈரம் இருக்கும்போது, சைத் தன்மை வெகுவாக மிகுந்தும், காயும் பாது மிக வயிரமாயும் இருக்கும். கோடை லத்தில், நிலத்தில் கீலங்கிலமாக வெடிப்பு ள் தோன்றும்
܂ ܐ ܪ 6

Page 66
மண்ணின் pH பெறுமானம் 64 ஆகையா தாக்கம் சற்றே அமிலத்தன்மையாயிருக்கு சேதனப்பொருள், நைதரசன், பொற்றசு கன் சமாயும், கல்சியம் மகனீசியம் அதிகமா முண்டு. பொசுபரசு மிகக் குறைவு. உட் மூலமுதல் மாற்றக்கணிப்பு, 40 மி. கி. வை மிகுந்திருக்கும். அதன் மொத்த அளவு ஏற குறைய 60 மி. கி. வரையுண்டு. எனே பெரும்பாலான பயிர்ப்போசனத்தில் மி சிறந்ததாகவே கொள்ள வேண்டும். செய கைப் பசளேயாய் இலகுவிற் பயன்படும் அட சுப்பர் பொசுபேற்றை உபயோகிக்க வேண்டு அது பொசுபரசுக் குறையை நிவிர்த்திப்பதே அக்கருங்களியில் பயிர் வேர்கள் நிலத்தி பரவுவதையும் தூண்ட உதவும்.
எப்படியாயினும், அங்கு காணப்படும் க யின் தன்மை நீரை வடியவிடாது. எனவே நெற்செய்கைக்கு மாத்திரம் இம்மண் பொரு தமானது. கரும்பருத்திக்களியென மு: குறித்ததையொட்டி, இது பருத்திச் செய்கைக் உகந்ததெனப் பலர் கருதுவது பிை யான விளக்கமாகும். இலங்கையில் மற்றை இடங்களிற் காணப்படும் களியிலிருந்து இங் காணப்படும் களி உற்பத்தியில் வித்தியாக படுவதாகும். அதன் பசைத்தன்மைக்குட போசனத் சத்துச் செழிப்புக்கும் அதுே காரணமாகும்.
6n 6oor L5 Ld6ðiðIT (Alluvial Soils)
வண்டல் மண் அதன் பெயருக்கிணங்க ஆ றுப் படுக்கைகளிலும், அவற்றை அடுத்துள் நிலங்களிலும் ஆங்காங்கு காணப்படுகின்ற இம்மண் தொகுதி அண்மையில் உண்ட தால், மண்படைகள் விருத்தியாவதற்கு வே6 டிய காலம் போதாது. எனவே, மேற்படையி ஒரளவு சேதனப்பொருள் படிந்திருக்கிறதெ பதற்கு மேல், மண்படைகளைப் பற்றி விே மாய்க் குறிப்பதற்கு ஏதுமில்லை. இத்தொகு மண்வகைகள் நிறத்திலும், ஆழத்திலு துணுக்கைப் பருமனிலும் நீர்வடியும் இய பிலும் ஒன்றுக்கொன்று பெரிதும் வித் யாசப்படுவதோடு, இலங்கையின் பல பாக களிலும் பல்வேறு தேச சுவாத்தியங்களிலு
 

b), காணப்படுகின்றன. நெல்லே பெரும்பாலும்
இந்நிலங்களிற் பயிரிடப்படுகிறது.
நெல் ஒர் அற்புதமான பயிர். அதைக் குறித்து மேல் நாட்டு அறிஞர் கிறிஸ்று ’ தமது “ நெற்செய்கை ’ என்னும் நூலிற் கூறியதின் தமிழாக்கம் கீழ்த்தரப்படுகிறது. " மனிதன் செய்கை பண்ணும் உணவுப் LuffigGr எல்லாவற்றுள்ளும், எவ்வகைச் சூழலிலும் பயிரிடப்படக்கூடியது நெல்லே. D விளையும்வரை போதிய நீர் இருக்குமாயின், எந்த வளமற்ற மண்ணிலும், சொற்ப விளை வையாகிலும் அது கொடுக்கவல்லது. ஒருவிதப் பசளேயுமின்றி பல நூற்றண்டுகளுக்கு அதைப் ற பயிரிட்டுக் கணிசமான விளைவைப்பெற முடியு மெனின், அத்தோடு ஒப்பிடத்தக்க வேறும் ஒரு பயிர் உலகில் உண்டா!’
எவ்வித பசளையுமின்றிக் கணிசமான விளை வைப் பெறக்கூடுமெனின், நன்கு பசளையிட்டு விளைவைப் பலபடி பெருக்க முடியுமென்பது Gg|T6)6OTLn(36) அமையும். இக்காரணங் கொண்டே இலங்கை நெல்வயல்களின் இர சாயனப் பண்புகள் மற்ற எந்தவகை மண் வகையினதிலும் பார்க்க மிக விரிவாய் ஆரா யப்பட்டுள்ளன. இவ்வாராய்ச்சியின் பேரு 5, ஒவ்வொரு மாவட்ட மண்வகையின் போது ணைச் சத்தும் கணிக்கப்பட்டு அதிலுள்ள குறையை நிவிர்த்திக்கும் முறையில் பொருத் தமான உரப்பசளை சிபாரிசு செய்யப்பட்டுளது. விபரம் வேண்டுவோர் கமத்தொழிற் சஞ்சிகை gyri Sal) U.S. 60LJE (Tropical Agriculturist Vol. CXX, No. 1, 1964) Tigoln.
3.
ର
熊
இலங்கை மண்களுள் முதல் தொகுதியாய் விபரிக்கப்பட்டுள்ள செங்கபில மண்களே மிகச் சிறந்த விளைவைக் கொடுக்கின்றனவென்பதும், அதற்கடுக்கப் பெருவிளைவைக் கொடுப்பவை செங்கபில இலற்றசொல் தொகுதியென்பதும் அங்கு காட்டப்பட்டுள்ளன. அம்பாறை மாவட் டத்தைச் சேர்ந்த சுண்ணும்பற்ற கபிலநிற மண்களே மிகக் குறைந்த விளைவைக் கொடுக் கின்றன. முறையாகப் பசளேயிட்டால் அவை யும் சிறந்த விளைவைக் கொடுக்கக்கூடுமென் பது பின் நடத்திய பரிசோதனைகள் மூலம் வெளிவந்துள்ளது. 三
கமத்தொழில் விளக்கம்

Page 67
கத்தரிக் குடும்பப் பயி
கத்தரி (சொலனம் மெலொன்ஜினு) (Solanum
Melongena) கத்தரியை முட்டைத்தாவரமென்றும் (Egg plant) Goofi oivojoj Toi (Guinea squash) Godirnuh சொல்லப்படும். இலங்கையிலே கடல் மட்டத் திலிருந்து 3,000 அடி உயரமுள்ள சூடான கால நிலையுள்ள இடங்களிலே வளர்க்கப்படு கிறது. இலங்கையின் சாதாரண மரக்கறிகளில் இது ஒன்றகும்.
கத்தரிச் செய்கைக்கேற்ற தரையும் கால நிலையும் தக்காளிப் பயிர்ச் செய்கைக்குரிய தைப் போன்றது. ஆனல் வளர்ச்சிக்காலம் கூடியது. கத்தரித்துவிட்ட அடிக்கட்டையிலி ருந்தும் முளேக்கக் கூடியது. குளிரான கால நிலையில் நன்கு வளரமாட்டாது. இலங்கை யிலே மணல் தரையிலும் வளரக்கூடியது.
வரலாறும் வகையிடும்
கத்தரியின் பிறப்பிடம் இந்தியாவாகும். அங்கு அதிககாலமாகச் செய்யப்பட்டுவருகிறது. ஐந்தாம் நூற்றண்டிலிருந்தே அறியப்பட்டது. இது சொலனேசியக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் தாவரவியற் பெயர் ○写7@aörth G) LAGON@ITGÖTgĝGD) (Solanum Melongena). QLY பயிர் அடர்த்தியாக 2-4 அடி உயரத்துக்கு வளரும். இவைகள் பெரியது. தண்டிலே ஒன்றுவிட்ட ஒழுங்கில் இருக்கும். பூக்கள் பெரியன. 2GT 35T நிறமானவை. சில வேளையில் நிறம் குறைந்தும் இருக்கும். இலை களுக்கு எதிர்ப்பக்கமாக தனிப்பூக்களாகத் தோன்றும். நீண்ட, மெலிந்த 1 அங்குலத்து க்குக் குறைந்த விட்டமுடைய 12-15 அங்குல நீளமுடையகாய்கள் காய்க்கும். செஸ்பென் ரினம் (Sespentinum) என்னும் இனம் இருப்பதாகச் சான்றுகள் கூறுகின்றன. குள்ள முட்டைத் தாவர இனம் (Dwarf Egg Plant) தரத்தில் குறைந்தது, இவ்வினப்
சித்திரை-ஆணி 1970

த அருள்ராசா, B.Sc. (Agric) ஆராய்ச்சி உத்தியோகத்தர்,
மகாஇலுப்பள்ளம.
siji (GNGFU GÖDIGE
பயிர்கள் சிறியவை. சிறிய இலைகளையும்
பூக்களையும் உடையது. காய்கள் கூரான வட்டமானவை. (Pear Shape) இவ்வினம் இலங்கையிலும் உண்டு.
கத்தரி வளர்க்கும் முறை தக்காளி வளர்க் கும் முறையைப் போன்றது. விதைகளை நாற்று மேடையில் போட்டு, நாற்றுக்கள் 3-4 கிழமைப பருவமாக இருக்கும் போது நடப்படும். நடும் போது நாற்றுக்கள் பாதிக்கப்படாமலும், மண் ணின் செறிவுக்கேற்பவும் இனத்துக்கேற்பவும் இடைவெளிவிட்டும் கவனமாக நடவேண்டும். சாதாரணமாக வரிகளுக்கிடையில் 3-4 அடி இடைவெளியும் பயிர்களுக்கிடையில் 2-3 அடி இடைவெளியும் விடப்படும். தக்காளிக்கு குறிப் பிட்ட பசளேயளவு போடப்பட வேண்டும். ஆணுல் சிறந்த விளைவைப் பெறுவதற்கு கூடுதலான பசளைகள் உபயோகிப்பது சிறந்தது.
இனங்கள்
எங்கள் நாட்டின் பல பாகங்களிலும் பல விதமான இனங்கள் வளர்க்கப்படுகிறது. சிபா ரிசு செய்யப்பட்ட இனமான எஸ். எம். 164 அதிகமாகச் செய்யப்படுகிறது. இவ்வினம் பக்ரீ றியா வாடல் நோயை எதிர்க்கும் தன்மை யுடையதும், ஈரவலயத்தில் வளரக் கூடியது மாகும். இவ்வினத்தைவிட யாழ்ப்பாணத் திலே தெரிந்தெடுக்கப்பட்ட உள்ளூர் இன மொன்று உண்டு. பரிசோதனையின் படி இவ் உள்ளூர் இனம் எஸ். எம். 164 லும் பார்க்கக் குறைய விளைவைத் தந்தாலும் யாழ்ப்பான மக்கள் கூடிய உருசி உள்ளபடியால் அவ் வினத் தையே விரும்பிச் செய்கிறர்கள். மட்டக்களப் பிலும் ஒரு பிரபலமான உள்ளூர் இனமுண்டு. இவ் வினத்துக் காய்கள் மிகவும் பெரியது. ஈரவலயப் பிரதேசங்களில் லினேறி (Lenaeri என்னும் கத்தரி இனம் வளர்க்கப்படுகிறது.
ଶ୍ଚି?

Page 68
இக்காய்கள் வரியையுடைய பெரிய காய்கள். வரண்ட நிலையில் காய்களின் அளவு படிப்படி யாக சிறுப்பதாக ஆராய்ச்சி முடிவுகளினுல் அறியப்படுகிறது.
இப்போது, மகாஇலுப்பள்ளம ஆராய்ச்சிநிலை யத்தில் ஒரு சிறந்த இனம் தெரிவு செய்யப் பட்டுள்ளது. இது விரைவில் பயிர்ச் செய்கை யாளருக்கு கொடுபடும். காய்கள் கடும் செந் நீல நிறமானது (Violet) சிறந்த தோற்றத்தை யுடையது. பல புதிய இனங்கள் பரீட்சிக்கப் படுகின்றன.
நோய்களும் பூச்சி புழுக்களும்
udili bluЛ битLб) (3,5 тi (Bacillus Solanacearum), 5TLù 9/(pa56ò (Pheimopsis Nelaus), இவ் இரண்டுமே அதிகமாகத் தோன்றும் நோய்களாகும். பக்ரீறியா வாடல் நோயைத் தவிர்ப்பதற்கு எதிர்க்கும் சக்தியுள்ள இனங் களைப் பயிரிட வேண்டும்.
சாதாரணமாக மருந்துகள் தூவியும், தெளித்துமே காய் அழுகலைக் கட்டுப்படுத்த 6) frլ Ի.
காய் துளைக்கும் புழுக்களும், தண்டு துளைக் கும் புழுக்களும் சாதாரணமாகக் கத்தரியைத் தாக்கும் புழுக்களாகும். இதற்கு இடை மிடையே என்றின், மலதியன அல்லது பொலி டோல் தெளிக்கும்படி சிபாரிசு செய்யப்பட் டுள்ளது. தண்டு துளைக்கும் புழுக்களில்ை தண்டு பாதிக்கப்பட்டிருந்தால் அதை அவ தானித்து வெட்டிவிடவேண்டும்.
அறுவடை
காய் பகுதி வளர்ந்த நாட்தொடங்கி கத்தரியை உணவுக்கு உபயோகிக்கலாம். முற் ருக வளர்ந்து நிறமாக வந்தபின்னும் சில நாட்களுக்கு உணவுக்கு உபயோகிக்கலாம். நன்கு முற்ற முன்பு காய்களைப் பறித்தால் கூடின காய்களைப் பெறலாம். ஆனல் காய்கள் நல்ல நிறமுடையதாகவும், பெரிதாகவும் விற் கக்கூடியதாகவும் இருக்கவேண்டும். காய்கள் பறிக்கத் தொடங்கியபின் 5 நாட்களுக்கொரு முறை பறிக்க வேண்டும். ஒரு பயிரிலிருந்து 15-20 முறைகள் காய்களைப் பறிக்கலாம். பின் பயிரைக் கத்தரித்துவிடலாம். விளைவு இனத் துக்கேற்ப வேறுபடும்.
68
 
 

35 góluôGmT35 Tulli (Capsicum Annum)
இலங்கையிலே கறிமிளகாய்க்கு அதிகம் LOSÌ L'IL JGỒTGB. QBEI GELČI@a5 Lin (Capsicum) என்று சொல்லப்படும். இதன் கூடிய விலை காரணமாக அதிகம் உபயோகிக்கப்படுவதில்லை. ஆனல் மரக்கறி கூடுதலாக இருக்கும் காலத் தில் விலை படிப்படியாகக் குறையும். எங்கள் நாளாந்த உணவு முறையிலேயே கறிமிள காய் ஒரு மாற்றத்தைக் கொடுக்கும். பலவித மாக உணவுக்கு உபயோகிக்கப்படுகிறது.
கறிமிளகாய்ச் செய்கைமுறை கத்தரிச் செய்கை முறையைப் போன்றதே. இப்பயிர் குறைந்த வெப்பத்தைத் தாங்கக்கூடியது. சூடான காலநிலையிலேயே இது கூடிய விளை வைத் தரும்.
வரலாறும் வகையீடும்
தென் ஆசியாப் பகுதியைச் சேர்ந்த பல இனங்கள் இருந்தாலும் கறிமிளகாயின் பிறப் பிடம் அமெரிக்காவின் அயனவலயப் பிரதேச மாகும்.
கறிமிளகாய் சொலனேசியக் குடும்பத் திலே கப்சிகம் இனத்தைச் (Genus) சேர்ந் தது. கறிமிளகாய்ச் செடி, மிளகாய்ச் செடி யைப் போன்றதே. ஆனுல் இதன் காய்கள் பெரியது. இனத்துக்குத் தக்கவாறு வித்தி
uUITF1p g2 6öOPGB.
Luig Gatsongs
கறிமிளகாய்ச் செய்கையும் கத்தரிச் செய்கை போன்றே செய்யப்படுகிறது. நாற்று மேடை யிலே விதைகளைப் போட்டு தக்காளிச் செய்கை செய்யும் முறைபோல செய்யப்படவேண்டும். கத்தரியுடனும், தக்காளியுடனும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது இப்பயிர்களுக்கு இடையே யுள்ள இடைத்துரம் குறைவாகும். வரிகளுக் கிடையே 2-3 அடியும் பயிர்களுக்கிடையே 18 அங்குலமும் போதுமானது. கறிமிளகாய்ச் செய்கை முறை கத்தரி அல்லது தக்காளியின் செய்கை முறை போன்றதே. கறிமிளகாய் சிறந்த விளைவைத் தருவதற்கு 3 மாத வளர்ச்சிக்காலம் தேவைப்படும்.
இனங்கள்
இலங்கையில் அதிகம் வளர்க்கப்படும் இனம் விவசாய இலாகாவால் சிபாரிசு செய்யப்பட்ட சி. ஏ. 8 என்ற இனமாகும். இவ் இனத்தை (69 u šištio u rritiķis)
கமத்தொழில் விளக்கம்

Page 69
கோழிவளர்ப்பு - 14
(33E ாழிவளர்ப்பி ன் பெ
கோழி வளர்ப்பில் நாம் ஆதாயம் அடைய 6ே கூடுதலாக இருக்க வேண்டும். பெரும்பாலும் பராமரிப்பவரின் கூலியும் வருமானத்தில் 70 சத
வருமானத்திலும் பார்க்கச் செலவு கூடாமல் இ வைத்திருப்பது அத்தியாவசியமாகும்.
1. கோழிகள் முட்டையிடும் சராசரி-இங்கிலா
ஒரு ே
g|GII
3 T35 TEJ Gö07 '-- வளர்க்கும் முறை முட்டையிடும் 安T酉
&T6):9|GT6ւլ கிழமைகளில் 山厅亡L歳 - - - 50
5@TF_GTh 48 - -
திறந்த வெளி . - - 5. - -
கத்தரிக் கு(
(68 பக்கத்
LI TT26ÖTu66ÖT JUS) šGO)5 (Elephant Trunk) என்று கூறப்படும். இவ்வினமே உள்நாட்டுத் தேவைக்கேற்றது. இதைவிட எங்கள் நாட் டிலே கங்கேறியன் மஞ்சள் வக்ஸ் (Hungarian Yellow Wax), 5GÚNG UITGOfuJT GG) JITGổTLIŤ (California Wonder) GT66TD 930Tiab Giblin வளர்க்கப்படுகிறது. கங்கேறியன் மஞ்சள் இனம் இப்போ பிரபல்யமாகி வருகிறது.
இவ்வினங்களைவிட நிரப்பி (Stuted) உண வாக உபயோகிக்க வேறு இனங்களும் வளர்க் கப்படுகின்றன. கறிமிளகாய் சலட் (Salad), அச் சாறு (pickle) போன்றவற்றுக்கும் உபயோ கப்படுகிறது. நோய்கள்
அன்திருக்நோஸ் அல்லது அழுகல் (Anthracnose or Rot), 926. It joiroi (Leaf Spot), பன்நிறப்படும் நோய் (Mosaic) போன்ற நோய்கள் கறிமிளகாயைத் தாக்கும். ஆனுல் இந்நோய்களால் அவ்வளவு கடுமை யாகப் பாதிக்கப்படுவதில்லை. அன்திருக்நோஸ் அதிகமாக வரும். இது விளைவைக் குறைக் கும். கறிமிளகாயில் வரும் பன்நிறப்படும் நோய் தக்காளியில் வரும் பன்நிறப்படும்
சித்திரை-ஆனி 1970

ந. சண்முகம், கமத்தொழில் அலுவலர், (அரசினர் பண்ணைகள்).
ாருளாதாரம்
பண்டுமாகில், செலவிலும் பார்க்க வருமானம் கோழியின் உணவின் செலவும் அதைப் வீதமாகும்.
ருப்பதற்கு ஒர் கட்டுப்பாடாகச் சில கணக்குகள்
ந்தில்
காழியின் முட்டையிடும்
வு வருடமொன்றிற்கு முட்டையிடும் சதவிகிதம்
بنیادی بنابرای دستهاست. این انسان متهمتنی به سمت جنسیت= سن-میان - سانس دمسصسلسله سختېنسياست ----------
JõõÕTL) சாதாரனத் சாதாரணம் சாதாரணத்
திற்குக் திற்குக்
கூடியது Ցռ-ԼԳ-Աlֆl
00 - 20 - - 57 60
86. 195 55 58
54 - - 162 - - 53 45
டும்.
தொடர்ச்சி)
நோய் போன்றது. இலைப்புள்ளி நோயால் பாதிக்கப்பட்ட இலைகளில் வெளிறிய கபில நிறப் புள்ளிகள் காணப்படும். பக்ரீறிய வாடல் நோயும் இப்பயிரைப் பாதிக்கும். அன் திருக் நோசைக் கட்டுப்படுத்துவதற்கு செப்பு பங்கசு கொல்லி விசிறவேண்டும்.
பூச்சிகள்
கறிமிளகாய் பூச்சிகளினல் பெருமளவில் பாதிக்கப்படுவதில்லை. சில வேளைகளில் வண்டு 56ITT (Flea, Beetle) 6) in GT San FFLIT (Aphis லும் தாக்கப்படும்.
9 (916) 16
கறிமிளகாய் பறிக்கும் நேரம், வளர்க்கும தேவையைப் பொறுத்தும், சந்தைமானத் தைப் பொறுத்தும் வேறுபடும். BITTEត្រ பச்சை நிறமாக இருக்கும் போதே பறிக்க வேண்டும். காய்கள் முதிர்ந்தபின்னும் சில காலத்துக்கு தரம் கெடாமல் மரத்தில் இருக் கும். காய்களை தண்டிலிருந்து திடீரெனப் பறித்தல் வேண்டும். காய்களே 4-5 நாட்கள் இடைவெளிவிட்டுப் பறிக்கலாம்.
(தமிழாக்கம் மா. ஜெயராணி)
69

Page 70
2
*
ஷோ வலஸ்
363, கொள்ளு டெலி
 
 
 

அன்ட் ஹெட்ஜஸ் லிமிட்
ப்பிட்டி ருேட், கொழும்பு  ை3,
போன் 2 20671 - 7
鱷{受尊-魯拿蠱了雪羲

Page 71
தின்னவேலிப் பண்ணையில் கணகூள முறையில் வ
நிதி வருடம் சராசரி கோழியின் முட்டையிட்ட .ெ
தொகை
1963-64 - - 509 88,62
1964-65 79 1,48,804 1965-66 1005 ; 60,34
1966-67 1.015 1,80, 109
1967-68 - 979 - - li, 60, 347
g, Uffig ff? - - 860 - - 1,47,604
குறிப்பு-கன்னிக் கோழி கூடுதலாக இருந்த வருடம் முட்டை 12 மாத வயதிற்கு மேற்பட்ட கோழிகள் கூடுதலாக இருப்பின்)
2. முட்டையிடும் இலாப நட்டத்தை அறி வதற்குப் பின் கூறப்படுவனவற்றை அத்தியா t வசியமாகக் கணக்கிட்டு வைத்திருக்க வேண் (6ւԸ. t
(அ) வருடத் தொடக்கத்தில் அல்லது குறிப் பிட்ட காலத்தில், முட்டையிடும் கோழிகளின் தோகையும் அவைகளின் பெறுமானமும்,
(ஆ) அவ்வருடத்துள் வாங்கிச் சேர்த்த முட் டையிடும் கோழிகளின் தொகையும், பெறுமதி யும் அல்லது வளர் பொறியில் இருந்து முட்டையிடும் கூட்டிற்கு மாற்றிய கன்னிப் பேடுகளின் தொகையும் அவைகளின் பெறு மதியும்.
(இ) (1) விற்ற முட்டையிடும் கோழிகளின் தொகையும் அவைகளின் பெறுமானமும் (விற்றுப் பெற்ற பணம்-நல்ல கோழிகளாக வும் இருக்கலாம் அல்லது கழித்த கோழி களாகவும் இருக்கலாம்). (
(2) இறந்த கோழிகளின் தொகை.
(ஈ) வருட முடிவில் அல்லது குறிப்பிட்ட கால எல்லையில் இருககும் முட்டையிடும் கோழி களும் அவைகளின் பெறுமதியும்.
(உ) (1) விற்ற முட்டைகளின் தொகையும் பெறுமதியும்.
(2) குடும்பத்தார் உபயோகித்த முட்டையின் தொகையும் அதன் பெறுமதியும்.
(ஊ) (1) கோழிகட்குக் கொடுத்த உணவின் நிறையும் அதன் பெறுமதியும்.
(2) கோழிகளுக்குக் கொடுத்த மருந்துக்ளின் რა)26).
சித்திரை-ஆனி 1970
 

ளர்க்கப்பட்ட கோழிகள் முட்டையிட்ட சராசரி
5ாகை கோழி ஒன்றின் முட்டை முட்டையிட்ட
u$):L gUfféFrfl சதவிகிதம்
14 4?
8 - - 5.
59 生3
77 - 48
69 - - 44
73 - 48
கூடுதலாக இட்டிருக்கும், குறைந்த காலம் (அதாவது முட்டையிடும் சராசரி குறையும்.
(எ) (1) கூலி கொடுத்த தொகையும் வேலை செய்த நாட்கணக்கும்
(2) கோழிக்குச் சிகிச்சை செய்திருப்பின் அச் செலவின் தொகை
முற் கூறப்பட்டதிலிருந்து பின் கூறப்படு
வனவற்றைக் கணக்கிடலாம்
(அ) கோழி ஒன்று இடும் முட்டையின் Flfisgs).
(ஆ) கோழி ஒன்றிற்கு வருடமொன்றிற்குத்
தேவையான உணவின் அளவு.
(இ) 100 முட்டையிடுவதற்குத் தேவையான உணவு அல்லது 1 முட்டை இடுவதற்குத் தேவையான சராசரி உணவு.
(ஈ) 100 முட்டையின் விலைக்கும் இடக் கொடுத்த உணவின் விலைக்கும் உள்ள வித்தி
ITTF L p).
(உ) உணவும் கூலியும்-100 முட்டைக்கு.
(ஊ) ஒரு முட்டையின் உற்பத்தி விலை.
3. 100 கோழிகள் உண்ணும் சராசரி உணவு.
6}} Ամg}} உணவின் நிறை கிழமைகள் அந்தரில்
0-8 - - 5 -6
0-12 . . 8 -
(ட46 . 14-17 }2.5- 21 - 20:تصي{0}
.ே?4 28 - 8 ਹੈ
7.

Page 72
4. கோழித்தீனின் சராசரி விலை
சராசரி இரு தல் விலைதொன் சதம் லொறி ஒன்றிற்கு கலி
35ԼIIT சதம் குஞ்சுத்தீன் ,,街丑5。 25 வளர்பருவக் குஞ்சுத்தின் 476 23 முட்டையிடும் கோழித்தீன் 、440 、。 22
5. முட்டையிடும் பருவம் வரை (5 மாதப் கோழி ஒன்று வளர்ப்பதற்கு எற்படும் செல
(1) 120 ஒரு நாள் பேட்டுக் குஞ்சுகள் ரூபா வீதம் -120.00
(2) குஞ்சுகள் 0-8 கிழமை வரை
୧୭, உணவு சராசரி 115 குஞ்சுகளுக்கு 5.6 ரு-251
சதம் (குஞ்சொன்றிற்கு 1.40 ரூபா வீதம்) 。直6】 நோய் எதிரித் தீன், விட்டமின்ஸ், குடற்புழு அகற்
றும் மருந்து, வேறு மருந்துகள் 。8翡 மின்சாரம் அல்லது மன்னென்இஒ 。6(
175
வளர்பருவம் 9-20 கிழமை வரை
e5.
(3) உணவு-108 கோழிகட்கு 18 ருத்தல் வீதம் x
23 சதம் (கோழி ஒன்றிற்கு ரூபா-414 சதம்) 447 )
ஊட்ட உணவு மருந்து வகைகள் 220 வேறு செலவுகள் - - 。丑4 领
483 4
கூலி அல்லது 5 மாதம் முடியும் வரை ஏற்பட்ட செலவு -
@,子、
(l) ... 120 00 (2) 75 50 (3) | 483 44
778 94.
கோழி ஒன்றிற்கு ஒரு நாட் தொடக்க 5 மாதம் முடியும் வரை ஏற்படும் செலவு ரூபா 779 சதம்.
சாதாரணமாக நிரந்தரமாக வேலைபார் கும் ஒரு தொழிலாளி ஒரு நாளிற்கு ரூபா 8.27 சதம் வேதனமாக அரசாங்கப் பண்ணை ளிகல் பெறுகிறர். 150 நாட்களுக்கு ஒரு தொழிலாளி ரூபா 124050 சதம் வேதன.
72
 

菇
பெருகிறர் சாதாரணமாக ஒருவர் 2,000 கோழிக்குஞ்சுகளைப் பராமரிக்கலாம். ஆதா வது ஒரு கோழிக் குஞ்சிக்ற்கு 5 மாத பருவ மடையும் வரையும் 62 சதம் பராமரிப்பு வேதணத்திற்காகச் செலவாகிறது.
ஆதலினல் முட்டையிடும் கூட்டிற்கு மாற் றும்பொழுது ஒரு கன்னிப்பேடு ரூபா 8.41 சதம் பெறுமதியெனக் கணக்கிடலா.
6, 6 மாதம் தொடக்கம் 18 மாதம் வரை ற்படும் செலவு
15: ಜಿ(1) 100, 5 மாதக் கன்னிப்பேடுகளின் ଭ୭, 84.1 00 (2) உணவு கோழி ஒன்றிற்கு 100 இருத்தல்
ਪੰ. 100 X22 ਪੰ 2,200 00 (3) நோய் எதிரி உணவுகள் 60 00 டி) உயிர்ச்சத்துக்கள் (விட்டமின்ஸ்) 15 00 (5) குடற்புழு அகற்றும் மருந்து - 12 00 (6) வேறு செலவுகள் . 50 00
3,238 00
7. 100 கோழி வளர்க்கக் கூடிய நிரந்தர மான கண்கூள வீடொன்று அமைப்பதற்கு ரூபா 900 வரை செலவாகும். கவனமாக உபயோகித்தால் 20 வருடம் வரை உபயோகிக் கலாம். நாங்கள் 10 வருடம் கணக்கிட்டால் வருடமொன்றிற்கு ரூபா : 90 ஐ பெறுமானத் தேய்வாகக் கருதி அதனை வளர்ப்பின் செல வில் சேர்த்தல் வேண்டும். 孪,
8. 390 நாட்கட்கு பராமரிப்பவரின் வேத GŪT LO :
ரூபா 8.27 சதம்x 390= ரூபா ! 3,225.30 சதம் ខ្សត្វតា មីក្រrg 1,000 கோழிகள் வரை பராமரிக்கலாம். 100 கோழிகள் பராமரிப்பதற்கு வேதனம்-ரூபா :
3,225.30 ------ × 100="517 : 322.53.
1,000
9. 100 முட்டையிடும் கோழிகளின் செலவு: 5 மாதம் தொடக்கம் 18 மாதம் வரை
ரூ. சி. 6 . 3,238 00 கோழியின் பெறுமதியும், செலவும் 7 . . 90 00 கட்டிடத்தின் 1/10 பங்கு பெறு 8 . . 322 53 மானம், பராமரிப்பவரின் வேதனம்.
3,650 53
கமத்தொழில் விளக்கம்

Page 73
10. ஒரு முட்டை உற்பத்தி செய்வதற்கு ஏற்படும் செலவு-100 கோழிகள் வளர்த்தால் 18 மாத முடிவில் 75 சத விகிதமே இறப்பு விகிதம் 13ம், முட்டையிடாக் கோழிகள் கழித்து விற்பது 12 விகிதமும் மொத்தம் 25 விகிதமாகும்.
இடையிற் கழித்து விற்ற கோழி 12, ரூபா 3
வீதம் 。,36 0
18 மாத முடிவில் கழித்து விற்ற கோழி 73,
ரூபா : 4.50 வீதம் - - . . - 337 50
爵7350
கோழி விற்றுவரும் வருமானம்-ரூபா 373.50 சதம்
மொத்தச் செலவு ரூபா 3,650.03 ல் இருந்து ரூபா 373.50 சதத்தைக் கழிப்பின்-ரூபா 327.03 சதம்.
தின்னவேலிப் பண்ணேயின் 5 வருட முட் டையிடும் சராசரியைப் பார்க்கும் பொழுதுகோழி ஒன்று 173 முட்டை வருட மொன்றிற்கு இடு கின்றது. 100 கோழிகள் இடும் முட்டையின் தொகை
100x173= 17,300 முட்டைகள்
ஒரு முட்டையின் உற்பத்திச் செலவு :
3,277.03 ,[f U; Lfل () 1 --- -ــــــــــ
17.300 *三LC
லெகோன் முட்டையின் சராசரி உற்பத்திக் செலவு 19 சதமென்பதை அவதானிக்கவும். நாங்கள் எல்லா இனங்களினின்றும் சராசரி யாகப் பெற்றது 173 முட்டைகள். ஆதலினுல் லெகோன் இனம் 173 முட்டைக்குக் கூட இடுமென்பதை அவதானிக்கவும்.
தற்சமயம் முட்டைகள் 22 சதம் தொடக்கம்
30 சதம் வரை விற்கப்படுகிறது. 字方厅子) விலையை 23 சதமெனக் கணக்கிடலாம். ஒரு முட்டைக்கு 4 சதம் இலாபம் இருக்கிறது. ஒரு கோழி 173 முட்டை இடுமாகில், கோழி ஒன்றிற்கு ரூபா 86.92 ச. இலாபம் ஏற்படு கிறது. 100 கோழிகட்கு ரூபா 692 இலாப மாகும். ரூபா 692 இலாபமடைய 18 மாதம் செல்கிறது. மாதமொன்றிற்கு 100 கோழியில் இருந்து ரூபா 38.44 சதம் இலாபம் கிடைக் கிறது.
சித்திரை-ஆனி 1970

ஒருவர் 1,000 கோழிகளைக் கூல கொடுத்துப் பராமரிப்பாராகில் மாதமொன்றிற்கு ரூபா 384, 40 аға, шй, வருமானமாகும். ஒரு லிகிதர் அரசாங்க சேவையில் சேரும்பொழுது அவர் வேதனமாக ரூபா 231.10 சதம் பெறுகிறர். 1000 கோழி வளர்ப்பின் ஒரு அரசாங்க லிகித ருக்குக் கிடைக்கும் மாத வருமானத்திலும் LIITfiliáji; &ւ6:56ÙIId; ରା ( 5 || Q୮{60;[ li) ARGÕDL, iš கிறது.
நீங்களே 1,000 கோழிகளைப் பராமரிப்பின், தொழிலாளிக்கு நாளொன்றிற்கு வேதன மாகக் கொடுக்கும் ரூபா 8.27 சதம் உங் களுக்கே கிடைக்கும். இதில் ரூபா 248.10 சதம் கிடைக்கிறது. இத்த்துடன் மாத லாபத் தைக் கூட்டின் வருவாய் ரூபர் 632.50 சத மாகும். -
'கோழி மேய்த்தாலும் கொர்னமேந்தில் பார்க்க வேண்டும் ' என்ற பழமொழி இத ல்ை பொய்ப்பிக்கப்படுகிறது.
11. தொகுப்பு (១) 1 ET ត្រូវ தொடக்கம் 5 மாதம் வரை கன் னிப்பேடு ஒன்று வாங்கி வளர்ப்பதன் செலவு
இருபா 8.41 சதம் (ஆ) 1 நாள் தொடக்கம் 18 மாதம் வரை ஒரு
பேட்டிற்குச் செல்லும் செலவு ரூ. 3238 சதம் (இ) ஒரு கோழி சராசரியாக இடும் முட்டைகள் . 17.3 (ஈ) ஒரு முட்டை உற்பத்தி செய்வதற்கு ஏற்
படும் செலவு - - 19 சதம்
12. நிறை கூடிய இனங்களே வளர்ப்பதற்கு செலவு அதிகம் எனச் சிலர் கருதலாம்.
0-2 கிழமை வரை-6.16 @。 கூடுதலாக ரூ. ச.
உண்ணக்குடும் 48
6 மாதம்-18 மாதம் வரை-14 ரூ. ஆகக்
Յո-ԼԳ.Ա.151 . . 308
456
@} (51.0 (Tଠି011 () :
@·安。 கோழி விற்கும்பொழுது குறைந்த பட்சம் ரூபா
6.75 சத விலைக்காவது விற்கலாம் 2 2
கனங்கூடிய இனங்களின் முட்டைகள் பெரும்பா லும் நிறக்கோதுடைய முட்டைகள், இவைக்கு எப்பொழுதும் சந்தைமானம் உண்டு.லெகோன் முட்டை விற்கமுடியாத காலத்திலும் இம்முட் டைகளே விற்கலாம். இம்முட்டைகளைப் பெரும் பாலும் 2 சதம் கூட விற்கலாம் ,34链
57.

Page 74
எவ்வினத்தை வளர்த்தாலும் வருமானம் சராசரியாக இருக்கும் என்பதை அவதானிக்க 6.|ԼԻ.
13. கூடுதலாக முட்டையிடக் கூடிய கோழி கள் உண்டா ?
இனம்
வெள்ளே லெகோன்
ஷெ
டிெ ஒஸ்றலொப் ரோட்திவுச் சிவப்பு லயிற் சசெக்ச் ஒஸ்ரலொப் பேடுX வெள்ளை லெகோன் சேவல் - ஒஸ்ரலொப் பேடுX வெள்ளை லெகோன் சேவல் x லமி
துடு:த்க் வேல்
* இவ்வடையாளமிட்டவையை சராசரி என அவதானிக்கவு!
முட்டைகள்
(அ) வெள்ளை லெகோன் 。178·3 (ஆ) ஒஸ்ரலொப் 67 (இ) அX ஆ ,,186·4 (ஈ) இx லயிற்சசெக்ச் 2012
கலப்பினச் சேவல் குஞ்சுகள் மிக விரைவில் வளர்ந்து கூடிய வருமானத்தைத் தரும். அத்து ன் பேடுகளும் கூடிய முட்டையிட்டு, கழிக்கும்போது கூடிய நிறை உடையதாகவும்
பிழை 堡 1970 தை-பங்குனி கமத்தொழில் விளக்கத் ஈரலிப்பு உயர் பிரதேசத்தின் மழை வீழ்ச்சி ! 907-100" என்பதே சரியானதாகும். தவறு
74

பின்வருவனவற்றை அவதானித்து, கலப்
பினங்களின் முட்டையிடும் தொகையை லெகோன் இனத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க 6) foi
தஞ்சு பொரித்த 5-18 மாதம் வரை 18 மாதம் முடியும்
திகதி இறந்ததும் முட்டை வரை எஞ்சிய கோழி
யிடாக் கோழிகள் கள் ஒன்றின் இட்ட
கழித்து விற்றதும் முட்டைகளின்
தொகை
22 7.64 178 26 ܀• శీ
2 9.64 - 37 92.0
27, 1.67 . . 45 ݂ ݂ 93. 6.
5, 7.67 - - 27 ܵ ܼ 67-7
22 7.64 a 4] - 66-6
翼卫。]。岱7 奎姆 70. 6.
4。5、6蕾 - - 27 - 覆86·4°
30. . 68 - - 23 - - 20} -2*
ஒஸ்ரலொப் பேடுX வெள்ளை லெகோன் சேவல் கலப்பினம் (ஒஸ்ரலொப் பேடுX வெள்ளே லெகோன் சேவல்
x லயிற் சசெக்ச் சேவல்)
அதன் இறைச்சியைப் பலர் விரும்பத்தக்க தாகவும் இருக்கும். கலப்பினத்தில் இறப்பு மிகவும் குறைவு.
(வளரும்)
திருத்தம்
தில் 180 ம் பக்கம், 2 ம் கலம்,2 ம் பந்தியில் 2007 - 1000" என உள்ளது தவறனதாகும். தலுக்கு வருந்துகிருேம்.
-ஆசிரியர்
கமத்தொழில் விளக்கம்

Page 75
-- gE(gPlL6
இப்பகுதி ஒவ்வொரு இதழிலும் ஐம்பது
கேள்விகளை மாணவர்கள் மாத்திரமல்லாது பெரியே களுக்குரிய விடைகளைக் குறித்து வைத்துக் கொ6 விடைகளுடன் ஒப்பிட்டுச் சரியிழை பார்க்கலாம்.
O.
i.
12で
13.
நெற்பயிரை இளம் நாற்றுப் பருவத்தில் தாக்கு பாசன வசதி உள்ள இடங்களில் வயல்களில் விட்டுக் கட்ட வேண்டும் ? 3, 4 டிபிஏ வயலில் அடித்தபின் எத்தனை மன களை நாசினி உபயோகித்து எத்தனை நாட்களால் நெல் வயலில் சுழல் களைகட்டும் கருவி உபே இடைவெளி வேண்டும் ? நெல் வயலில் களைநாசினி உபயோகிப்பதானும் வேண்டும்?
வரியில் விதைப்பதானுல் ஒரு ஏக்கருக்கு ar: வீச்சு முறையில் விதைப்பதானுல் ஒரு ஏக்கருக் நிரையில் குளி விதைப்பதற்கு நெல்லின் முளை விதை நெல் தொற்று நீக்குவதற்கு エチ @写方。 கட்டிப்பால் தயாரிபபதற்கு உள்நாட்டில் ஒரு ந 1969, 1970 ஆம் ஆண்டுகளில் இலங்கையில் எ பால்மாத் தொழிற்சாலைக்கு நாளாந்தம் தேை
14. பால்மா உற்பத்தியினுல் அந்நியச் செலாவணி
5.
எங்கள் நாட்டின் தேவையைப் பூர்த்தி செய்வ
16. 1970 ம் ஆண்டு பாற்ச்சபையினுல் பால் இருக்கிறது ?
.
கட்டிப்பால் தொழிற்சாலை எங்கே நிறுவப்பட்டு
18. 1966 ம் ஆண்டு ஒரு தொன் அரிசி இறக்கு
9.
வானது ?
1968 ம் ஆண்டு ஒரு தொன் அரிசி இறக்குமதி
சித்திரை-ஆனி 1970
 

கேள்விகளைக் கொண்டு வெளிவரும், இக் ார்களும் படித்துப் பயன் பெறலாம். கேள்வி ண்டால் வேருெரு பக்கத்தில் வெளியாகும்
ம் இரண்டு பூச்சிகள் கூறுக. ? செய்கைக்கு எத்தனை நாட்களுக்குமுன் நீர்
னித்தியாலத்துள் மழை பெய்யக்கூடாது ?
வயலில் திரும்ப நீர் விட்டுக் கட்டவேண்டும் ? யாகிப்பதானுல் வரிகளுக்கிடையில் எவ்வளவு
ல் வரிகளுக்கிடையில் எவ்வளவு இடைவெளி
1ளவு விதை நெல் தேவை ? கு எவ்வளவு விதை நெல் தேவை ? எவ்வளவாக இருக்கவேண்டும் ? *ன் எவ்வளவு உபயோகிக்கவேண்டும் ? ளேக்குக் கிடைக்கும் பால் எவ்வளவு ? திர்பார்க்கப்படும் நெல் விளைவு எவ்வளவு ? வப்படும் பால் எவ்வளவு ? எவ்வளவு மிச்சமாகிறது ? தற்கு வேண்டிய பால்மா எவ்வளவாகும் ?
சேகரிக்கும் நிலையங்கள் எங்கு நிறுவப்பட
நமதி செய்வதற்கு எவ்வளவு பணம் செல
செய்வதற்கு எவ்வளவு பணம் செலவானது?
75

Page 76
2.
22.
23.
24,
25.
26.
27.
28.
29.
30.
3.
路
2
50.
76
1968 ம் ஆண்டு பசளே இறக்குமதி நெற்செய்கைக்குச் செலவானது ? நெற் செய்கையில் உபயோகிக்கும் கூறுக ? நெல் வயலுக்கு எப்போது 3, 4 டிபிஏ நெற்செய்கையில் ஒரு ஏக்கருக்கு உபே நெற்செய்கையில் ஒரு ஏக்கருக்கு ய வேண்டிய 3, 4 டிபிஏ எவ்வளவு ? நெல் விதைத்த வயலில் எப்போது எ நெல் நாற்று நட்ட வயலில் எப்போது அய்யார் 8 நெல் விதைத்து அல்லது பகளே போடவேண்டும் ? அய்யார் 8 நெற் செய்கையில் எந்தப் அம்யார் எட்டு நெற்செய்கையில் முத
அய்யார் 8 நெறசெய்கையில் இரண் வேண்டும் ? இரண்டாம் முறை நெற்செய்கையில் உ கும் அளவும் என்ன ? உபயோகிக்கும் இன்னுமொரு பூச்சிநாே இலங்கையில் முதலாவது கோப்பி மரம் எந்த நோயால் இலங்கையில் கோப்பிச் பேராதனைப் பூங்கா எப்போ ஆரம்பிக்க சீனுவிலிருந்து தேயிலை விதை எப்போது ஆசாமிலிருந்து (ASSam) தேயிலை வி முதல் முதலாக றம்பொடை பகுதியில் இலங்கையிலிருந்து இங்கிலாந்துக்கு எப் இலங்கைக்கு றபர் விதை யாரால், எப்ே றபர் மரத்தின் தாவரவியற் பெயரென் அய்யார் 8 நெற்செய்கையில் மூன் வேண்டும் ? விதைத்த வயலுக்கு இரண்டாம் முறை
நாற்று நட்ட வயலுக்கு எப்போது மூன்
அய்யார் 8 நெற்செய்கைக்கு 2 ம் முறை இரண்டாம் முறையாக அய்யார் 8 நெற் இரண்டாம் முறை அய்யார் 8 நெற்செ அய்யார் 8 நெற்செய்கையில் எப்படிட்
அய்யார் 8 நெற்செய்கையில் மணல் பொட்டாஷ்போட வேண்டும் ? நெல் பாற்பருவத்திலிருக்கும்போது கூ

Gang, log கோடி ரூபாவில் எவ்வளவு
பூச்சிநாசினியொன்றும் உபயோகிக்கும் அளவையும்
களேநாசினி உபயோகிக்க வேண்டும் ? பாகிக்க வேண்டிய 3, 4 டிபிஏ எவ்வளவு ? ந்திர தெளிகருவி உபயோகிப்பதானுல் உபயோகிக்க
h. இ. பி. ஏ. உபயோகிக்கவேண்டும் 2
Tம். இ. பி. ஏ. உபயோஇக்கவேண்டும் ?
நாற்று நட்டபின் எப்போது முதலாவது மேற்கட்டுப்
ச2ளயை மேற்கட்டாகப் போடவேண்டும் ?
ல் முறை மேற்கட்டுப் பசளேயாக எவ்வளவு போட
டாம் முறை எப்போது பூச்சி நாசினி உபயோகிக்க
பயோகிக்கும் பூச்சி நாசினியின் பெயரும் உபயோகிக்
சினியின் பெயரையும் அளவையும் கூறுக ? யாரால், எப்போது, எங்கே நாட்டப்பட்டது ? செய்கை பாதிக்கப்பட்டது ?
ப்பட்டது ?
து இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டது ? தை எப்போது இலங்கைக்குக் கொண்டுவரப் பட்டது? எப்போது தேயிலைத் தோட்டம் உண்டாக்கப்பட்டது ? தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டது ? பாது கொண்டுவரப்பட்டது ?
2 דמן றம் முறை எப்போது பூச்சிநாசினி உபயோகிக்க
மேற்கட்டுப்பசளே எப்போது போட வேண்டும் ? றம் முறை
மேற்கட்டாக என்ன உரம் போடவேண்டும் ? செய்கைக்கு போடவேண்டிய நைதரசன் எவ்வளவு ? ப்கைக்குப் போட வேண்டிய பொட்டாஷ் எவ்வளவு ?
பட்ட தரைக்கு 2 ம் முறை கூடுதலாக பொட்டாஷ்
நரையாக இருந்தால் இரண்டாம் முறை எவ்வளவு
Bதலாகத் தாக்கும் பூச்சி எது ?
கமத்தொழில் விளக்கம்

Page 77
66. gFTu 6(363
1. காய்ப்பு ஈ (Gal fly). தண்டு கோதி 3。 குறைந்தது 6 மணித்தியாலம் 4, 3 நாட்களால் 7. 14 புசல், 8, 2 புசல், 9. ’. 10, 1 அவுன்சை தொற்று நீக்கலாம். 11, 25,000 பைந்து 12, 1 புசல் 13, 2,00,000 பைந்து 14, 24 கோடி ரூபா பிட்டி, வாழைச்சேனை, திருகோணமலை, கந்தளாய், நறுவையில் 18, 539 ரூபா 19, 1001 ரூபா, 20 குறுணல், எக்கருக்கு 15 இருத்தல் 22, 12-20 நா 24. 5-6 பைந்து, 10 கலன் நீரில், 25 21-28 நாட்களுள் 28, யூறியா அல்லது அமோனியம் ச6 சல்பேற்று அல்லது 168 இறத்தல் யூறியா. 30 11. GIF, ಈ. 6% குறுணல், 32, 20 இறத்தல் ட 1824 [h sạ}6ÖöT(B (32,ạTĩg2 (3LI (George Bird). GIGỐI (Hemilia, Vastatrix). 35. 1821 Lh sạ46ÖLạ6), 36. 182: ஆண்டு. 39. 1873 அல்லது 1874 ம் ஆண்டு. 40. ே
(Sir Henry Wickham). 41. Gas.35uJIT LSDSallurgöTáoil) 43. 70. நாட்களில் 44. 50 நாட்களில், 45. அமோன
ஒப் பொட்டாஷ், 46, 224 இறத்தல் அமோனியம் 47, 56 இறத்தல் மியூறியேட் ஒப் பொட்டாஷ், 48. ப இவை நுனி எரிவு இருந்தால். 49, 84 இறத்தல். 50.
DQO IQP 5ðINOUL
(33 ம் பக்கத் ெ
நியூசிலாந்து மக்களது உதார குணத்தை மெக்சிச் சொற்பொழிவுகள் ஆற்றினர்கள். I இங்குற்ற நிகழ்ச்சிகள் பல பத்திராசிரியர்களின தும், புகைப் படப்பிடிப்பாளர்களினதும் கவ ( னத்தைக் கவர்ந்தன. பின் சிற்றுண்டி ஆரா தனையுடன் கால்நடை பொறுப்பேற்று நிகழ்ச்சி கள் முடிவடைந்தன. 22 ம் திகதி காலே இக்கால்நடைகள் யாவும் விசேஷ அலங்காரங் கள் செய்யப்பட்ட இரு புகையிரத வண்டி
களில் தலவாக்கலை புகையிரத நிலையத்தை வந்தடைந்தன. அங்கிருந்து இருபது மோட் டார் லொறிகளில், லொறி ஒன்றில் எட்டுக் ( கால்நடைகள் வீதம் இருபத்தைந்து மைல் கட்கு அப்பாலுள்ள இரண்டாயிரம் ஏக்கர் l விஸ்தீரணமுள்ள 'ரேபட் கால்நடை நிலையத் ( திற்குக் கொண்டு செல்லப்பட்டுத் தொற்று நோய்கள் பற்றவண்ணம் பாதுகாப்பு ஒழுங்கு
சித்திரை-ஆனி 1970
 

ம்- விடைகள்
(Stem borer). 2. 14 நாட்களுக்குமுன் 5. 8-10, 6 வரியில் நடத்தேவையில்லை. 1 கலன் நீரில் கலந்து 2 புசல் நெல்லைத் 169, 7.13 கோடி புசல், 1970-7.49 கோடி 15. 1.25 கோடி இருத்தல், 16. மன்னம் கிங்குருகொடை, அனுராதபுரம், 17.
2.75 கோடி ரூபா. 21. பி. எச். சி. 6% ட்களுள் 23, 4-6 பைந்து, 40 கலன் நீரில் நாட்களுள் 26, 15 நாட்களில் 27, 21-24 பேற்று. 29, 336 இறத்தல் அமோனியம் 42-50 நாட்களில் 31, 33 இருத்தல் யசினேன் 10% குறுனல், 33. கம்பளையில் பவரால், 34. கெமிலியா வஸ்ராரிக்ஸ்சினல் 1 ம் ஆண்டு. 37. 1839 ம் ஆண்டு. 38. 1867 ம் சர். கென்றி விக்கம்மால் 1876 ம் ஆண்டு (Hevea brassilienis). 42. 70-80 JE5 TTLEG 5GT, ீரியம் சல்பேற் அல்லது யூறியா, மியூறியேட் சல்பேட் அல்லது 112 இருத்தல் யூறியா. மணல் தரைக்கு, பக்ரீறியல் வாடல் நோய்க்கு,
நெல் மூட்டுப் பூச்சி.
| LD e 2 e
தாடர்ச்சி)
5ளுடன் வைக்கப்பட்டுள்ளன. தொற்று நோய் பாதுகாப்புக் கால வரையறை கழிந்தவுடன் இப்பகக்கன்றுகள் காளைகள் மூலம் கர்ப்ப முறச் செய்யப்படும். 1971 ம் ஆண்டு முன் னரையில், ரேபட் கால்நடை நிலையம் 7,500 இருத்தல் பால் உற்பத்தி செய்வதுடன், கால் டைப் பெருக்கமும் இரண்டு மடங்காகும். இதன் மூலம் விவசாய அமைச்சின் ஐந் 5ாண்டு பாற்பண்ணை அபிவிருத்திற் திட்டமும் விசேட முக்கியத்துவம் பெறுகின்றது. பாற் பாருள் இறக்குமதியைக் குறைத்து, அந்நிய சலாவணியைக் குறைப்பதுமன்றி நாட்டு மக் ளே அதிகளவு பால் அருந்தச் செய்து ஒர் லம் வாய்ந்த சமுதாயத்தை உருவாக்கச் சய்வதற்கு நமக்கு உதவி செய்யும் நியூ லாந்து மக்களிடம் என்றும் நன்றிகுன்ற ருப்போமாக,
77

Page 78
உங்கள் பயிர்கள் UGUATGIU EST GUT LOLI விஞ்ஞான நிபுணர்களால் நுg செய்யப்பட்டு தயாரிக்கப்பட் இரசாயனங்கள். இவை சரி கரமோ நீண்டகாலம் நிலத்தி தாவர மருந்து வகைகள், செ பொல்லாத நோய்ப்பூச்சிகளே கட்டுகின்றன.
ஏகப்பட்ட விளேச்சலுக்கு 0 பொருள்கள் 0 பவர்ஸ் பசளே இலவச ஆலோசனைகளுக் விபரங்களுக்கும் பவர்ஸ்
GI. UGUT SIGI
किल्के த.பெ. 11, கொழும்பு வாழ்ப்பான த்தில் ைேட 8 (38 gebe (BAB 48 als a das
 
 
 

LITEJETËS THJES GITT
ணுக்கமாக ஆராய்ச்சி டது  ைபவர்ஸ் தாவர பான காரம் நிறைந்தவை.
ருக்கும். இந்த பவர்ஸ் டிகளில் உள்ள மிகப் ஒன்று விட இது ஒழித்துக்
பவர் ஸ் தாவர இரசாயனப் கள் 0 ய வ ஸ் தெளி கருவிகல் கும் முழு விவசாயச் சேவைக்கு எழுதுக,
| ÖLDUGU GÜLTELL
தொலேபேசி 20581 (8 வழிகள்) க்குtட ம்
ஜிமீடே ட் இலே கட்டிடில் பே சில கடை,

Page 79
கமத்தொழில்
1970 ம் ஆண்டிற்குரிய
மின் அட்டை வெளிப்பக்கம்
பின் அட்டை உட்பக்கம்
முன் அட்டை உட்பக்கம் முன் அட்டை உட்பக்கத்தின் எதிர்ப்பக்கம் பின் அட்டை உட்பக்கத்தின் எதிர்ப்பக்கம் கீழ்க்காணும் குறிப்பிடப்பட்ட பக்கங்கள் ஒவ்ே
(அ) உள்ளடக்கத்திற்கு எதிராகவுள்ள ப (ஆ) ஆசிரியர் கருத்துரைக்கு எதிராகவுள் (இ) வாசகர் அரங்கத்திற்கு எதிராகவுள்ள (ஈ) எங்கள் பதிலுக்கு எதிராகவுள்ள பச் (உ) மாதர் மன்றத்திற்கு எதிராகவுள்ள (ஊ) மாணவர் சோலைக்கு எதிராகவுள்ள
(எ) சிறுவர் உலகிற்கு எதிராகவுள்ள பக் கட்டுரைகளுக்கிடையே குறிப்பிடப்படாத முழு கட்டுரைகளுக்கிடையே குறிப்பிடாத அரைப்ப கட்டுரைகளுக்கு வெளியே (இதழ் ஆரம்பத்தி கட்டுரைகளுக்கு வெளியே அரைப்பக்கம்
விளம்பரம் சேகரித்துத்தரும் பதிவு செ
வழங்கப்படும். விளம்பரம் சேகரிப்போராக விண்ணப்பிக்கவும்.
விபரங்களுக்கு எழுதுக :
கமத்தொழில் உ (விசாலிப்பு உ தபால் பெட்டி
 
 

is 676mT35-36. D
ப விளம்பர விகிதம்
ஒரு இதழில் மாத்திரம்
ரூ. 4. 250 ()
200 O
200 0
200 0
200 O
வொன்றும் . 200 O
55th
Gī ēš5
T I lišati to
க்கம்
பக்கம்
பக்கம்
5ag51b
'It Isis to a st 50 0
ಓ5b ss is 蔷 ● 5 O
லும் முடிவிலும்) முழுப்பக்கம் 00 0 50 0
ய்யப்பட்ட ஏஜண்டுகளுக்கு நல்ல கமிஷன் ப் பதிவு செய்ய விரும்புவோர் உடனே
டத்தியோகத்தர் உதவிகள்)
இல. 636,

Page 80
கமக்காரர்களுக்கு ஏகப்பட்ட தருவது பவர்ஸ் பசளே. அது அதனேக் கொஞ்சமாக பாவித் பழமரம், மரக்கறி, புகையிலே, தென்னே மற்றும் பயிர்களுக்கு ரகங்களில் கிடைப்பது பவர்ள் உங்கள் வீட்டுத் தோட்டங்கள் கச்சிதமான அளவிலான பைச
ஏகப்பட்ட விளே
0 பவர்ஸ் தாவர 0 பவர்ஸ் தெளிக இலவச ஆலோ விபரங்களுக்கு சேவைக்கு எழு
GT. UGlls 9.
த.பெ. 11, கொ இண தொலைபேசி: 2 யூ0ழ்ப்பானத்தில் கிடைக்குமிடம் ேேலன் ஜேச்ே சண்ட்ஸ் ஜிழிடே.
 
 

இலாபத்தை தேடித் விலை குறைந்தது மட்டுமல்ல, காலே போதுமானது.
கோப்பி, தேயிலே, றப்பர், த் தேவையான பல்வேறு
பசளே. இப்பசளை வகைகள் ரில் பாவிக்கக் கூடிய *ளிலும் கிடைக்கின்றன, சலுக்கு
இரசாயனப் பொருள்கள் கருவிகள் (சிவிறி)
சனைகளுக்கும் முழு b u 6)Jiř6ño 6(6).J & Tuj
ශ්‍රී]හී, Gür ALDUGU GÜLTELÜ, 醬6 வழிகள்)
s
ஹலே கட்டிடம் பூெசிங்க,ை

Page 81
விநியோகத்தர் :
ரூரம்ருெட், களைகளே 4 - 6 வாரங்கள வை தால,களே பிடுங்கும் செலவே ஏற்படாது. ெ பச்ளையினைக் களைகள் கவரவும் முடியாது. மதாளித்துப் பெரிதாய் வளர்கின்றது.
ரும்ருெட், நனைத்துக் கரைக்கக்கூடிய கரைத்துச் சிவிறியடிக்கலாம். அது, மணிய
களைகளின் விதைகள் முளைக்கும்போதே ரு தால், அவற்றின் வளர்ச்சி தடைப்பட்டு பம்பாய் வெங்காயம் சோளம், இறுங்கு பருப்பு வகைகளுக்குமட்டுமன்றி, நட்ட தலிச தாய்கறிப்பமிர்களுக்கும் எவ்வித 8
ஐம்மூெட் உபயூே
இலாபமும் மெ
இர்த்தகக் குறி  ெ
மக்வூட்ஸ் லிமிட்டெட், டீ. ஆர். விஜேவர்த்
 
 
 
 

பயோகியுங்கள்
வளராதபடி தடுத்து வைப்ப வங்காயத்துக்கு இடப்படும் உரம் எனவே, வெங் கா யப் பூடு
தூள். தண்ணீரில் இலகுவீரகக் புருவிலும் கிடைக்கும்.
ம்ருெட்டினை உறிஞ்கிக்கொள்வ விடுகிறது. சிறிய வெங்காயம், , நிலக்கடலை, சோயா அவரை,
ளெகாய்க் கன்று முதலாக (பசவி *#முேம் ஏற்படாது.
பெருக்க - ge 69 ** ஆகும்.
மான்சநீதேன் கம்பணி.
தன மாவத்தை, கொழும்பு - 10

Page 82
அய்ய
(g சி-நெல் தரக்கூடி உச்ச விளைச்சலைப் ெ
பின்வரும் உரப்பச
பிரயோகிக்குக
uufilL முன்னர் அடி , ܥ݂ܳ
224 இரு செறிவுச் 112 இரு முயூறியே 112 இரு அமோன 56 இரு, யூறியா
S S S S s S S
S
S ★ முதலாம் மேற்கட்டு (நாற்று நடுகைக்கு அல்லது விதை - 336 இற. அமோன
168 ਉ੭ யூறியா ★ இரண்டாம் G மற்கட்( (விதைத்து 70 நாட்களுக்குப் பின் அல் 224 இற. அமோன
S S S
S S S S S S
112 இரு. யூறியா
56 இரு அல்லது
அய்யார்-8 பயிரிடுவதற்கு பலநோக்குக்
ரூபா 370/-(இதில் ரூபா 160/- உ
இலங்கை பச
746, கல்டிே
తాళ అత్రేతాస్వాత్తలో
محصصه
జ్యైప్రణాళ
آصف عقید$
ஒ
له ٦٤تنه
xதில்
A="محققینی
*"سمیه
హాకీ
A”عتحکیم
لجماعتمہیں$
1లో**
کو حصےی
፮o t..
 
 
 
 
 

se
i. . حيحة
ബ
ܢܡ به حصبه محصیه محصه تحصیه محصه تحصیه محصه حصه و حصه حصه قح۔۔۔۔۔۔۔۔۔۔
ܕ ܢ
議
Tri-8
Ul - % * பற்றுக்கொள்ள
ளைக் கலவைகளைப்
டிக்கட்டாக:
சுப்பர் பொசுபேற்று
பற்றுப் பொற்றசு சியம் சல்பேற்று அல்லது
-
ப்பிற்கு 21-24 நாட்களுக்குப்பின்) ரியம் சல்பேற்று அல்லது
ତ୍ର :-
லது நாற்றுநட்டு 50 நாட்களுக்குப் பின்) ரியம் சல்பேற்று அல்லது
து அதிலும் கூடிய மூறியேற்றுப் பொற்றசு
கூட்டுறவுச் சங்கங்களிலிருந்து ஏக்கருக்கு டரப்பசளேக்கு என) கடன்பெறலாம்.
ளேக் கூட்டுத்தாபனம் கொட் கட்டிடம், காலி ரோட்
கொழும்பு-4
போன்: 83 3 3 6 - 7
LeeLALA LLSAAAAASS LLLLAAAASLSLALASLLALLLLALLSASLSSASLL LALA LALSL LMALLA LAAAAALLALALA LALALALALS
از محصیه
Α
༄།
三ー