கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கமத்தொழில் விளக்கம் 1975 (1)

Page 1


Page 2
f
//
{" |
s Wii
di
-_{ ܢ
y
s 雯锣荃
*( \_L_f ငှါ 0 $بر al g SA 魏為線 (86gir κN る。 363, கொன் ఫ్ల్యాప్త டெ
 

அன்ட் ஹெட்ஜஸ் லிமிட் 天 ஞப்பிட்டி ருேட், கொழும்பு - 3
Guarcir : 2067 - 7
尋W轉鸚@-@窮一禽為零丁醫事篡。

Page 3
esseusisoo; cups
ஆரம்பம் 1906 ஜனவரி
ஆலோசகர் :
டெறிக் ஷொக்மன்
ஆசிரியர் :
செ. சுந்தரலிங்கம்
ஒளிப்பட ஓவியர்கள் :
ரி. பி. மகிந்தரத்ன டபிள்யூ. ராமனுவக
ஒவியர் :
எச். ஏ. பொன்சேகா
எச். எம். தர்மசிறி
மலர் 19-இதழ் 1
கமத்தொழில் தகவற் பிரிவி
இலங்கை அரசாங்க அச்சுத் திணைக்கி |-డా 13888 - 28,010 (4/75)
 
 
 
 

B66 ១១សាយ
O O. 96.16ttl-desia,
பொதுசன நூலகம்
யாழ்ப்பாணம் JA AI2,
ஆசிரியர் கருத்துரை
2. цт-3 செய்யப்புறப்படுவர் 2 3. உயர் ஜலசின் 4 4. நெற் தத்துக்கிளி 7 5. மத்திய மலை நாட்டில் tjĞð - 1. 6. ஆமணக்கு 。。 7 7. எங்கள் பதில் 8. விவசாயச் செய்திகள் . 23. 9. நெடுங்கேணியில் வாழைச் செய்கை 26 10. ԼԸTտi ԼՈ6ծigth - 28 11. பூங்கனியியல் 31 12. கறவை வளர்ப்பு-15 . 34
13 மாணவர் வினவிடை - 38 14. குறுக்கெழுத்துப் போட்டி விடை 45
இவ்விதழில் வெளியாகும் கட்டுரைகளிலுள்ள கருத்துகட்கு அவற்றை எழுதியவர்களே பொறுப் புடையவர்கள். இச்சஞ்சிகையில் வெளியாகும் விட யங்களை மறு பிரசுரஞ்செய்ய விரும்புவோர் எம்மிடம் முன் உத்தரவு பெறவேண்டும்.
1975 முதலாவது இதழ்
னல் வழங்கப்பெற்றது.
5ளத்திற் பதிப்பிக்கப்பெற்றது.

Page 4
கட்டுரைகளுக்கு
6 D
பொதுக் கட்டுரைகள் : 2,000 சொ பக்கத்தில் மாத்திரம் தெளிவாக எழு பக்கமொன்றுக்கு ரூபா 7.50 சதம் வி
தொழில் நுட்பக் கட்டுரைகள் : வ கவனம்பெறும். பிரசுரமாகும் சஞ் அனுப்பியதாகின் ரூபா 10/- வீதமும், வீதமும் சன்மானம் வழங்கப்படும். படங்களுக்கும் பிரத்தியேகமாகப் பண
புகைப்படம் : (5"X4" குறைந்த ப ຄອມ ரூபா 2.50 வீதம்.
கருத்துப்படம் கூடியபட்சம் ரூபா
சித்திரக்கதை : நான்கு பக்கங்களு
பாடல்கள் : கூடியபட்சம் ரூபா 15
சிறுகதைகள், விவசாய நாடகங்கள்
உத்தியோகத்தரின் தீர்மானத்திற்கமை
கட்டுரைகள், படங்கள் ஆகியவற்றின் சன்மானத் தொகைகள் பற்றியும் அவர்களினது தீர்மானமே இறுதியா சன்மானம் வழங்கப்படும். பிரசுரமா போதிய முத்திரைகள் ஒட்டப்பட்டு, த உறைகளை எழுத்தாளர் அனுப்பவேண் கமத்தொழிற் தகவற் பிரிவுத் தலைவ
பிரசுரத்திற்கு ஏற்கப்பட்டவைகளுக்கு உரித்தாகும். கட்டுரையாளர் மறுபி தகவற் பகுதித் தலைவர் அவர்களின்
102, யூனியன் பிளேஸ், தபாற்பெட்டி இல. 636, கொழும்பு 1.
 

தருவோம்
களுக்கு அதிகமாகாது. கடுதாசியின் ஒற்றைப் தி அனுப்பவேண்டும். பிரசுரமாகும் சஞ்சிகைப் தம் சன்மானம் வழங்கப்படும்.
ல்லுநர்கள் எழுதுவன சற்று நீளமாயினும் சிகைப் பக்கமொன்றுக்கு ஆங்கில மொழியில் தமிழ் மொழியில் அனுப்பியதாகின் ரூபா 15/- கட்டுரைகளுக்கான புகைப்படங்களுக்கும் வரை Tம் தரப்படும்.
ட்ச அளவு) ரூபா 5/- வீதம்.
20/-.
க்குக் கூடியபட்சம் ரூபா 100/-
|-.
ஆகியனவும் வற்றுக்கொள்ளப்படும். விவசாய 2ய சன்மானம் வழங்கப்படும்.
தகுதிபற்றியும் எழுத்தாளர் பெறவேண்டிய கமத்தொழில் தகவற் பிரிவுத் தலைவர் னது. விடயங்கள் ஏற்கப்பட்டு பிரசுரமானதும் காதவற்றைத் திருப்பி அனுப்புவதற் கெனப் மது விலாசமும் தெளிவாக எழுதப்பட்ட தபால் டும். தபாலில் தவறிப்போகும் கட்டுரைகளுக்கு ர் பொறுப்பாகமாட்டார்.
ரிய சகல உரிமைகளும் விவசாய இலாகாவிற்கு ரசுரஞ் செய்ய விரும்பின் கமத்தொழில் அனுமதியை எழுத்தில் பெறவேண்டும்.
டெறிக் ஷொக்மன், தலைவர், கமத்தொழில் தகவற் பிரிவு,

Page 5
el
நெல், மிளகாய், மரக்கறி,ப
ஆகியவற்றில்
அசொட்ரின் 60
 
 

ட்ரின்
ருத்தி, புகையிலை ாணப்படும்
பாவியுங்கள்.
சாய சேவை ம் கிடைக்கு

Page 6
அறவே களைகளை அழிக்கு மென நி சேர்கோப்பூர் 36%, 3.4 டீ.பீ.ஏ. (sinte முதல் 75% வரை அது விளைச்சலைப் ே நெல் விதைத்து 7-21 நாட்களுள்
பாவிக்க வேண்டும்.
இக் களைகொல்லியைத் தெளிப்பது
மிகச் சுலபம்; மிகச் சிக்கனம் சேர்கோப்பூர், பேயர் விவசாய இரசாயனப் பொருள். பேயர் பொருள்கள், ஜெர்மனியில் 100 வருட தொழில் நுட்ப ஆராய்ச்சியின் ஆதாரம் கொண்டவை.
சிக்கனமாக, சிறப்பாகப் பயிர்களைக் காப்பது  ைசேர்கோப்பூர், அது, களவு செய்ய முடியாத போத்தலிற் கிடைக்கும். -
உற்பத்தியாளர்: - GểLưufi
லீவர்கூசன் மேற்கு ஜெர்மனி
sealist's G.
爵
 
 
 
 

நபிக்கப்பட்ட ண்டது. 35% பெருக்கும்.
Ο ால்கிறது இ
E R
இலங்கையில் விநியோகஸ்தர்:
ஹேக்கெம் லிமிட்டெட் 400, டீன்ஸ் வீதி, கொழும்பு 10
al

Page 7
சீரகம், பெருஞ்சீரகம், கொ ஆகியவற்றை எமது நாட்டி இயலுமா ?
சீரகம், பெருஞ்சீரகம், கொத்தமல்லி, Օհմից ամ, ஆகிய கறிச்சரக்கு வகைகளை எமது Dölalo AG OG 프 பத்தி செய்வதன் மூலம் இவற்றின் இறக்குமதிகளைத் தடைசெய்யக்கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றனவா ஆராய்ச்சியில் விவசாயக் காணி அமைச்சு தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளது. சிரகம், பொருஞ்சீரகம், கொத்த மல்லி, வெந்தயம் ஆகிய பயிர்கள் கமத்தொழிற்றிணைக் கள ஆராய்ச்சிப் பண்ணைகளில் வெற்றிகரமாகப் பயிரிடப் பட்டுள்ளன. ஆரம்பத்தில் குளிர்ந்த மலை நாட்டு உலர் வலயத்தில் அதாவது இரஹாங்கலை அரசினர் ஆராய்ச்சிப் பண்ணையிலும், பின்பு உலர் வலயத்தில் தின்னவேலி அரசினர் ஆராய்ச்சிப் பண்ணையிலும் இப்பயிர்கள் நன்கு வளர்ந்து நல்ல விளைவைத்தந்துள்ளன. உற்சாகமுள்ள சில ಇಂತ57@@ಣ್ರ த் துெ தோட்டங்களில் பயிரிட்டு வெற்றி :"്. ଢିଣ୍ଡ ଅଛି। ராவையில் உள்ள ராஜரட்டைத் திராட்சைத் தோட்டத்தில்
சீரகம் வெற்றிகரமாகப் பயிரிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் தென்னந் தோட்டங்களில் இஞ்சி, மஞ்சு ளுடன் கொத்தமல்லியும் வெந்தயமும் இடைப்பயிராகப் பயிரிடப்பட்டு வருகின்றன. இந்தியாவில் இவற்றைப் பயிரி டுவதில் அவர்களுக்கு எவ்விதப் பிரச்சினேகளும் @@%). இவற்றைப் பயிரிடுதல் சுலபமானதாகும். அத்துடன் நோய், பூச்சி, புழுக்களால் சேதப்படுவதும் குறைவாகும்.
இப்பயிர்க்ளேப் பயிரிடுவதில் பிரச்சினைகள் குறைவு என் பது உண்மையென்ற பொழுதிலும் இவற்றைப் பயிரிடுதல் இலாபகரமானதா என்ற கேள்வி எழுகின்றது. இப்பயிர்
மலர் 19 - இதழ் 1, 1975
 

ாத்தமல்லி, வெந்தயம், ல் உற்பத்தி செய்ய
リ@汗 முதிர்ச்சியடைவதற்கு jFTél. F. J. Gioi LGITI, 4-5 மாதங்கள் எடுக்கின்றன. இரகம், வெந்தயம் ஆகிய ஏக்கர் ஒன்றில் சராசரி 400 இருத்தல் வரையே விளைவு தருகின் றன. கொத்தமல்லி 800-1,000 இறத்தல் வரை வி?ளவு தருகின்றது.
இக் கறிச்சரக்கு வகைகளேத் தற்பொழுது ൂ SH GIT6շր மலிவாக இறக்குமதி செய்து வருகின்ருேம். இவ்வாறு மலிவாக இறக்குமதி செயத் Ժո-ԼԳ-Ամ ഖഞT @ഥg விவசாயிகள் இப்பயிர்களைச் செய்கை பண்ண முன் வருவார்களா ? இப் பொருட்களின் இறக்குமதி தடை செய்யப்பட்டு இவற்றிற்கு எமது சந்தையில் நல்ல விலே யைப் பெற இயலும் என்ற நம்பிக்கை ஏற்பட்ட பின்பு விவசாயிகள் தாமாகவே இப்பயிற்களைப் பயிரிட முன் வருவார்கள்.
ஆகவே இப்பயிர்களின் விதைகளே இறக்குமதி து விவசாயிகளுக்கு விநியோகிப்பதற்குக் ട്ടു. ாழிற்
திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது சிறுபோகத்தில் இப்பயிர்களின் செய்கை விவசாயிகளின் வயல்களுக்கு விஸ்தரிக்கப்படவிருக்கின்றது. இதன் பின்பே இவற்றின் இறக்குமதியைத் தடைசெய்வது பற்றி அர
சாங்கம் ஆலோசனை செய்யும்.
இப்பயிர்களின் பயிர்ச் செய்கை முறைகளே எமது அடுத்த இதழில் பிரசுரிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்
Gair IIլn.

Page 8
புரட்சி |(o), gFU ULI LL
முத்தமிழால் முது தமிழால் செந்தமிழால் உம்மை
சிரந் தாழ்த்தி வணங்குகிறேன்.
கவுந்தில் இளைஞர் கழக விழாவி வருகை தந்தோரையும் வாழ்த்
படித்த இளைஞர்களே ! புறப்படுவீர் துடித்த தோளோடு தொடங்குவே படித்து விட்டு நீங்கள் பதவிக்காய்
எடுத்து வைத்த காலடிகள் ஒய்ந்
காலம் தமக்கள்த்த காடெல்லாம் ே காலம் பொன்னுனதென கருத்தி
விசுவமடு என்னும் விவசாயத்திட்ட முத்தையன் கட்டுடெனும் முத்து வி எத்தனையோ கை நீட்டி எமையெ பத்திரண்டு வயதுடைய இளைஞர்கே
வேலையில்லாத் திண்டாட்டம் விரை நாளையே நம் நாடு தன்னிறைவு கா எல்லாத் தலைமுறைக்கும் இப்போே சால வழி வகுக்க சபதமிட்டுப் புறப்பு
பசியால் திருட்டு வரும் பகை வள( பசியால் உறவினிலே படுகொலைகள் பசியால் புரட்சிவரும் பாமரர்கள்
அசையாத மணிமுடியும் ஆடிப் பெ
எரோட்டம் இல்லையென்றல் எந்தக் தேரோட்டம் எது? செல்வந்தர் வீட் காரோட்டம் இல்லைக் காண்பீர் இளே
கைகொடுத்த நாடெல்லாம் கைவிரி கைகொடுக்க நாம் துணிந்தால் க அரிசிக்கும், பருப்புக்கும், ஆடைக்கு அயல் நாட்டில் இரப்பதென்றல் இ
அன்னை ஈழத்தாய் அயல்நாட்டை ந இன்னும் இருப்பதென்றல் நாம் 6 என்ன இளைஞர்களே ! இவை உமக் என்ன இளைஞர்களே ! இதிலுமக்கு
இளைஞர்கள் உங்களால் உண்டெடு
பசுமைப் புரட்சியென்பேன் புற

ப்படுவீர்
ற்கு துகிறேன், வணங்குகிறேன்.
புறப்படுவீர்! TLh b J5JFLh LJUL`ʻG? ! படியேறி து இடப்பதுமேன் ?
பொன் விளையும் ருத்திச் செயல் புரிவீர்.
ங்களும் விளை மணியூரும் ல்லாம் அழைக்கிறது ள புறப்படுவீர் !
வில் ஒழிவதற்கும் 6ծiւ:5ն(5ԼԻ த சேர்ப்பதற்கும் JBG !
நம் பொய் விளையும், if Լ16Ù 155Աքլի. சேர்ந்தெழுவார், ாடியாகும்.
கோயிலிலும் டுக் ஞர்களே
த்து விட்டதென்றல் Tடு ல்லாம் தடுTணிகளே ! ம், பாலுக்கும் ளைஞர் எம்மால் வது பலன் ?
ம்பி நம்பி ரன் பிறந்திருப்பான் ? குச் சம்மதமா ?
j: JEFÈJJEL Lin T ?
ன்றல் புரட்சியொன்று ܢܓܝܒ ப்படுவீர் 1 புறப்படுவீர்
கமத்தொழில் விளக்கம்

Page 9
வாழ்த்து
வாழை0 ଓ2) gFFTL !
வற்ருத நதி பாய
மேழி பிடித்தவனின்
வயற் காட்டில் நெல் சாய
நாளை வரும் உலகம்
நமக்காக விழா வெடுக்க
நாளை வரும் புத்தாண்டும்
நம்மையெல்லாம் வாழ்த்தட்டும்
66ÕÕT 35 ES
(கவுந்தில் இளம் விவசாயி 14 வது ஆண்டு நிறைவுெ
அட்டைப்பட
வானம் பொய்த்தாலும் பூமி பொய்க்கவில் யையும் அளவாகக் கொடுக்கும் பொழுது : வளரச் செய்கின்றள் அன்னை பூமி. மன்னுர் ப பெரும் வரட்சி நிலவியது. ஆணுல் இலுப்பை தான் தனது வயலில் அமைத்துக்கொண்ட டாக நீர்ப்பாய்ச்சி இதன் மூலம் செழித்து தனது பீஜி 34-6 வருக்க நெற்பயிை மடைகிறர்.
மலர் 19-இதழ் 1, 1975

リ* mm"ጫ”” 蠶 ണ്ണം
கள் கழகத்தினரால் கழகத்தின் விழாவில் LI TL LI" பெற்றது.)
66Tg535D
லை. தனக்கு வேண்டிய நீரையும் பசளே தன்மேல் வளரும் பயிர்களைச் செழித்து மாவட்டத்தில் 1974/75 பெரும் போகத்தில் க்குளம் விவசாயி ஆர். வினுயகமூர்த்தி
குழாய்க் கிணற்றின் மூலம் கட்டுப்பா வளர்ந்து பெருகி விளைந்து நிற்கும் ரப் பார்த்து பெருமிதமும் மகிழ்ச்சியு

Page 10
பெருமளவு லைசின் (High Lysine Maize)
போஷாக்குக் குறைவான உணவை உண்ணு தல் அளவில் குறைவான உணவை உண்ணு வதைக் காட்டிலும் பெரும் பிரச்சினையான தும், ஆபத்துக் கூடியதொன்ற குமெனவும் உலக உணவு விவசாயத் தாபனத்தினரால் தென் கிழக்கு ஆசியாவில் நடாத்தப் பெற்ற மதிப்பீடு ஒன்று தெரிவிக்கின்றது. உணவில் காணப்படும் புரதச் சத்துக் குறைபாடே முக் கியமான போஷாக்குக் குறைபாடாகும். வளர்ச் சிக்கும் உடல் இழையங்கள் புதுப்பிக்கப்படு வதற்கும் புரதம் அவசியமாகும். ஆனல் புரத மூலங்களான இறைச்சி, முட்டை, பால், மீன் போன்றன மிகக் குறைவாகவே கிடைக் கின்றன. ஆகவே தென் கிழக்கு ஆசியாவில் உள்ளவர்களிற் பெரும்பாலானுேர் மாச்சத்து
4
 

கொண்ட சோளம்
டெறிக் ஷொக்மன்
கமத்தொழில் தகவற் பிரிவு
உணவான அரிசி, சோளம், இறுங்கு, சிறு
தானியங்கள் போன்ற தானிய வகைகளையே
உணவாகக் கொண்டுள்ளார்கள். இத் தானி
யங்களில் உயர்தரமான புரதச் சத்து மிகவும் குறைவாகும்.
இதனுல் ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர் களில் எழுபது சத வீதமானுேர் போஷாக்குக் குறைவான உணவே ஊட்டப்படுகின்றர்கள். இதில் மிக முக்கியமான விடயம் என்ன வெனில் இவர்களுடைய மூளை நிரந்தரமான பாதிப்புக்குட்படுகின்றது. இதனுல் ஏற்படும், சேதத்தை வயது வந்த பின்பு, குறைநிரப்பி யாகப் போதிய அளவு புரதத்தைக் கொடுத் தும் திருத்தமுடியாது.
குவாஷியோக்கா (Kwashionkor) எனப் படும் போஷனைக் குறைபாட்டு நோயால் பீடிக் கப்பட்ட சகல குழந்தைகளும், பேத்தைவயிறு, குன்றிய வளர்ச்சி, கடுமையான வயிற்றேட் டம், அசாதாரண மயிர் நிறம் போன்ற கடுமை யான குறைபாட்டு அறிகுறிகளைக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. இந் நோயின் இறுதிக் காலத்திலேயே இந்த அறிகுறிகள் தென்படும். இந்த நோயால் வாடும் சிறுவர் களில் 5% சத வீதமானவர்களிலேயே இவ் வறிகுறிகளை வெளிப்படையாகக் காணக்கூடிய தாக இருக்கும். இந் நோயால் வாடும் அநேக ரில் எவ்வித அறிகுறிகளும் வெளிப்படை யாகத் தெரிவதில்லை. இத்தகைய காரணத் தினுல் இந் நோய் வைத்தியர்களுக்கும், சுகா தார உத்தியோகத்தர்களுக்கும் கலக்கம் தருவ தாக இருக்கின்றது.
இதற்குத் தீர்வு காணக்கூடிய ஒரே ஒரு பயன்மிகு வழியாகிய, மக்களின் பிரதான உண வின் புரதக் கொள்ளளவையும் புரதத்தரத் தையும் உயர்த்துவதற்குக் கடந்த 50 வருடங் களுக்கு மேலாக விஞ்ஞானிகள் முயன்று வருகின்றர்கள். உதாரணமாக தாய்லாந்தி லுள்ள கசற்சாட் பல்கலைக் கழகத்திலும் (Kasetsart University) I SINGÓLÝGDL GÖTGi) G3,55fgj
கமத்தொழில் விளக்கம்

Page 11
திலுள்ள சர்வதேச நெல்லாராய்ச்சிக் கழகத்திலும் அரிசியின் புரதத்தை உயர்த்து வது சம்பந்தமான ஆராய்ச்சிகள் நடாத்தப் பட்டு வருகின்றன. இவ்விரண்டு ஆராய்ச்சி வேலைகளுக்கும் ருெக்பெலர் தாபனத்தின், உதவிகள் கிடைத்துள்ளன. அரிசியையே பிரதான உணவாகக் கொண்டுள்ளவர்களில் நாளாந்த குறைந்தபட்சப் புரதத் தேவை யைப் பூர்த்தி செய்யவல்ல வருக்கங்களை, பயிர்ப் பிறப்பாக்கவியலாளர்களால் மிக விரை வில் தோற்றுவிக்க முடியுமென்று, இதுவரை பெறப்பட்ட ஆராய்ச்சிப் பெறுபேறுகள் தெரி விப்பதாக இல்லை.
ஆனுல் சோளனைப் பொறுத்த வரையில் சிறந்த பெறுபேறுகள் கிடைத்துள்ளன. ஐக் கிய அமெரிக்காவில் உள்ள பேர்டியூ பல்கலைக் 35p355Ssi (Purdue University) (96.16. It ராய்ச்சியில் பெற்ற வெற்றிக்காக நாங் கள் அவர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டவர்களாவோம். திருந்திய புரதத்தை யுடைய சோளம் வருக்கங்களை அங்குள்ள பயி ர்ப் பிறப்பாக்கவியலாளர்களால் பிறப்பாக்க முடிந்தது.
நீங்கள் உண்ணும் புரதத்தின் அளவிலும் பார்க்க நீங்கள் உண்ணும் புரதத்தின் தரம் முக்கியமானதாகும். ஒரு புரதத்தின் தரம் அதிற் காணப்படும் அமினுே அமிலங்களின் (Amino Acids) தன்மையிலேயே குறிப் பாகத் தங்கியுள்ளது. இதுவரை கண்டு பிடிக்கப்பட்ட 20 வகையான அமினே அமிலங் களில் ஏழு அல்லது எட்டு அமினுே அமிலங் களே மனித ஆரோக்கியத்திற்கு முக்கிய மானது. இந்த ஏழு அல்லது எட்டு அமினே அமிலங்களையும் ஈரலில் தொகுக்க முடியாமல் இருப்பதஞல் இவ்வமினே அமிலங்களை உண வில் சேர்த்தல் அவசியமாகின்றது. இவ்வவசிய அமினுே அமிலங்களில் “ லைசின் ” (Lysine) எனப்படுவதும் ஒன்றகும். ஏனைய தானியங் களிற் போன்று சோளத்திலும் இவ்வமினே அமிலம் குறைவாகவே காணப்படுகின்றது.
எனினும், சாதாரண சோளத்தில் காணப் படும் லேசீன் அளவைக் காட்டிலும் இரு மடங்கு லைசின் கொண்ட “ ஒப்பேக் 2 ” (OPAQUE 2 ) எனப்படும் ஒர் சோளம் விகாரி வருக்கம் 1963 ம் ஆண்டில்,
மலர் 19-இதழ் 1, 1975

பேர்டியூ பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானிகளால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒழுங்கு முறையில் அமைந்த கலப்புப் பிறப்பாக்கம் மூலம் லைசின் உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் பின்னடைகின்ற சந்ததிச் சுவட்டை வேறு வருக்கங்களுக்கு மாற்ற முடியும் என்றும் கண்டு பிடித்துள்ளார்கள். இத்தகைய கலப்பு வருக்கங்களிற் சிறந்தவற்றைத் தற்பொழுது வியாபார ரீதியிலான பயிர்ச் செய்கைக்குப் பெற்றுக் கொள்ளலாம். இவ்வருக்கங்களில் அதிக லைசின் காணப்படுவத ால் இவை * ஹை லேசீன் மெயிஸ் ' என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்றன.
மலிவான உயர்தரமான புரதத்தை அளிக்க வல்ல இப்புதிய சோளம் வருக்கம் போஷாக் குக் குறைபாட்டை நிவிர்த்தி செய்வதில் பெரி தும் உதவவல்லது கொலம்பிய மக்களின் பிரதான உணவு சோளமாகும். இங்கு போஷா க்குக் குறைபாட்டால் கடுமையாகப் பிடிக்கப் பட்ட சிறுவர்களுக்கு இப் புதிய லைசின் கொண்ட சோளம் உணவை வழங்கியதன் மூலம் இக் குறைபாட்டு நோய் மூன்று மாதத் துள் முற்றக அகற்றப்பட்டது. இது வைத்தி யத் துறையினரால் நிரூபிக்கப்பட்டதொன்ற கும். வைத்தியப் பகுதியினர் இச் சிறுவர் களின் மாப்பொருள் உணவுகள் தவிர்ந்த உணவுகளை இரட்டிப்புச் செய்தனர். மாப்பொரு ளுக்குப் பதிலாக உயர் லைசின் கொண்ட சோளம் மா கொடுக்கப்பட்டது. இவ்வாறு Lரிகரிக்கப்பட்ட சிறுவர்கள் மூன்று மாதங் களுக்குள் நிறை கூடியதுடன் எலும்பு வளர் ச்சியையும் மீளப் பெற்றர்கள்.
அதிஷ்டவசமாக இத்தகைய உயர் லேசீன் கொண்ட சோளம் சில இலங்கையிலும் இருக் கின்றன. பள்ளக்கலையிலுள்ள திரித்துவக் கல் லூரிப் பண்ணையிலும், கன்னுெறுவையிலு ள்ள சேவைக் காலப் பயிற்சி நிலையத்திலும் மகா இலுப்பல்லமை விவசாய ஆராய்ச்சி நிலை யத்திலும் சிறு அளவில் இவை பரீட்சிக்கப்
L55 r.
பயிர்ச் செய்கையில் எவ்வித வேறுபாடும் இல்லை. விதை விகிதம், நடுகைத் தூரம், உரப் பசளைச் சிபாரிசு போன்றவை சாதாரண சோளத்துக்குப் போலவே, விளைவும் ஒப்பிடக் கூடியது. திரித்துவக் கல்லூரிப் பண்ணை எக் கர் ஒன்றுக்கு 4,000 இருத்தல் உலர்ந்த
5

Page 12
ーエo/リー
விதையை வெற்றிகரமான விளைவாகப் பெற் றுள்ளதாக அறிவித்துள்ளது. மகா இலுப் பள்ளமையிலும் இதே போன்ற விளைவு பெறப் பட்டுள்ளது. கடந்த போகத்தில் கன்னுெறுவை சேவைக் காலப் பயிற்சி நிலையத்தில் ஆகக் கூடுதலான விளைவாக 5,000 இருத்தல் பெறப் பட்டுள்ளது.
இவை அனைத்தும் மிகவும் உற்சாகம் தரு பவையாகும். ஆணுல் இந்த உயர் லைசின் சோளத்தை உற்பத்தி செய்யும் அவசரத் திட் டம் ஒன்றை நாம் உடனடியாக மேற்கொண் டுள்ளோம் என்பதல்ல இதன் அர்த்தம். இதே வேளையில் இதனை எல்லைப்படுத்தும் சில காரணிகளும் இருக்கின்றன.
சாதாரண சோளனிலும் பார்க்க உயர் லேசீன் சோளம் மென்மையானது. இதனுல் களஞ்சியப்படுத்தலில் பிரச்சினை ஏற்படுகின்றது. Sதாவது வண்டுகளின் சேதம் கடுமை யாக இருக்கலாம்.
அடுத்து, அயன் மகரந்தச் சேர்க்கை ஏற் படக் கூடிய பிரச்சினையும் இருக்கின்றது. இப் புதிய வருக்கத்தை உள்நாட்டுச் சோள வருக் கத்திற்கு அண்மையில் பயிரிடும் பொழுது, பெருமளவில் அயன் மகரந்தச் சேர்க்கை வற் பட்டு, இறுதியில் இதன் விரும்பத் தகுந்த சகல இயல்புகளும் அற்றுப் போகலாம்.
6
 

இறுதியாக இதனைப் பதப்படுத்துவதிலும் பிரச்சினை உண்டு. மாவைத் தமது உற்பத்திப் பொருட்களில் உபயோகிப்பதற்காக இதனை வியாபார ரீதியில் பதனிடுபவர்களின் திறமை யிலேயே இப்புதிய “ உயர் லேசீன் சோளனின்’ எதிர் காலம் பெருமளவில் தங்கியுள்ளது.
இத்தகைய எல்லைப்படுத்தும் காரணிகள் இருப்பதால் இன்று நாம் செய்யக் கூடிய அதிகப்பட்சச் சிபாரிசு, இதனை வீட்டுத் தோட் டங்களில் பயிரிடச் சொல்வதாகும். இவ்வாறு வீட்டுத் தோட்டங்களில் பயிரிடுவதன் மூலம், பொத்தியை நேரடியாக உணவாகக் கொள்ள முடியும். இவ்வாறு பொத்தியாக உண்ணப் படின் களஞ்சியப்படுத்துவதிலும் பதனிடுவதி லும் ஏற்படும் பிரச்சினைகள் தோன்ற மாட் டாது. ஆகவே பொத்தியாக உண்ணுவதே இதனைப் பதப்படுத்துவதற்கு உகந்த வழி யாகும். தானியம் முற்ருக உண்ணப்படும் பொழுதே அதனிலுள்ள திருத்தமுற்ற புரத மாகிய உயர் லைசின் முற்றக உபயோகப் படுத்தப்படுகின்றது. சுற்றுக் கனியத்திலும், மூலவுருவிலுமே பிரதானமாக லைசின் காணப் படுகின்றது. அரைக்கும் பொழுது இப் பகுதி கள் வழமையில் அகற்றப்படுவதனுல் இறுதி யில் எமக்குக் கிடைப்பது மாப்பொருள் மாத் திரமாகும்.
(தமிழாக்கம் : அ. சி. செ. சு.)
மத்தான் நாங்கள் தாடி
පිරිරහීහ් (ද්‍රි-rriබී. நிளகாய்க்கன்று 5295彦 ாஜம் முதலாளிகள் அழகிஇருக்கல்ாம்
கமத்தொழில் விளக்கம்

Page 13
முதலாவது பொது தத்துக்கிளியைக் கட்
கடந்த வருடம் அம்பாறை மாவட்டத்தில் ெ கடுமையான நெற் திங்கிழைப்பானுகிய பயிர்த் இலங்கையின் ஏனைய பகுதிகளுக்கும் தற்பெ வீழ்ச்சி, வரட்சி போன்ற சூழ்நிலைகளில் மின்பு நெற் பயிர் முதிர ஆரம்பிக்கும் டெ வேளையில் இதனைக் கட்டுப்படுத்துதல் கடின பகுதியில் உணவு கொள்ளும் இப்பூச்சி தம வென தமது வயலை 7 -10 நாட்களுக்கொருமு எச்சரிக்கை செய்யப்படுதல் வேண்டும். இப் பூ காணப்படுவதாகத் தெரிகின்றது. தண்டின் காணப்படின் பயிரில் நெற் தத்துக்கிளிகளே யித்துக் கொள்ளலாம். இதே வேளையில் இன தகுந்ததோர் பூச்சி நாசினியைத் தெளித்து மேற்கொள்ளப்படுதல் வேண்டும். இப் பூச்சி இது மட்டுமே நிச்சயமான வழியாகும். பின் __Bត្រក្រោT60.
இரசாயனப் பொருள் GJig5.5
(கூடிய பயனுள்ளவை)
(1) புருேப்பொக்சர் 20 செ. கு. உண்டெ (2) காபோபுருன் 3% குறுனல் புரூடான குறேற்ர
(3) பி. பி. எம். சி. 50 செ. கு. பஸ்சா? குறைவான LILLg16T6TGo6)
(4) எம். ஐ. பி. சி. 50% கரைதுள் என்ருே (5) எம். பி. எம். சி. 30 செ. கு. மியோப (6) டயசினுேன் 10 குறுணல் பசுடின் (குறைவான பயனுள்ளவை)
(7) காபற்றில் 85 கரைதுள் டு தவின் (8) மெத்தாமிடிபொஸ் 60 செ.கு. ரமருே (9) லெப்ரோபொஸ் 50% செ. கு. பொஸ்ே (10) பென்தோவற் 50% செ. கு. சிடியல் பப்தியே எல்சான் (11) டைஎத்குவினுல்பியோன் 25
செ. கு. பேருகில் *கையால் இயக்கும் தெளிகருவியாயின் கலன் நீரில் (ஒரு அவுன்ஸ் 3 கலன் விசிறியாயின் 10-15 கலன் நீரில் (2 அவும் *ழ்-1 இருத்தல் நீரிற் கரையக் கூடிய *குறுணலை நீரில் கையால் துவிவிடவும்.
மலர் 19-இதழ் 1, 1975

எதிரி நெற் டுப்படுத்துங்கள்
டெறிக் ஷொக்மன், கமத்தொழிற் தகவற் பிரிவு. நற்செய்கைக்குப் பெருஞ்சேதம் @ါ%;1.2.2,
தத்துக்கிளி (நிலபாவட்டா லூஜென்ஸ்)
ாழுது பரவியுள்ளது. குறைவான மழை இப்பூச்சி எண்ணிக்கையில் அதிகரித்துப் ாழுது தீடீரெனப் பரவுகின்றது. இந்த னம். ஆகவே பயிரின் அடித்தண்டுப் து நெற்பயிரிலும் காணப்படுகின்றனவா றை சோதனை செய்யுமாறு விவசாயிகள் ச்சி மாத்திரமே பயிரின் அடிப்பாகத்தில்
அடிப்பாகத்தில் பெருமளவு பூச்சிகள்
காணப்படுகின்றனவென நீங்கள் நிச்ச வை மேலும் பெருகாமல் உடனடியாகத் க் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கைகள்
பிடமிருந்து பயிரைக் காப்பாற்றுவதற்கு வரும் பூச்சிநாசினிகள் சிபாரிசு செய்யப்
ផ្ល*()L fi பிரமாணம்|ஏக்கர்
গোপীর্ণ 20-30 நீர்ம அவுன்ஸ்
方 20-30 இருத்தல்
20-30 நீர்ம அவுன்ஸ்
போலான்* -1 இருத்தல்
* 20-30 நீர்ம அவுன்ஸ்
密米 。20–30 இருத்தல்
※ 20-30 நீர்ம அவுன்ஸ் 峦* 20-30 நீர்ம அவுன்ஸ்
20-30 நீர்ம அவுன்ஸ்
TT6ÖT -
青* - 20-30 நீர்ம அவுன்ஸ்
20-30 நீர்ம அவுன்ஸ்
(அதிக கரைசல் தெளிப்பு) 60-90 நீரில்) கலக்கப்படுதல் வேண்டும். வலு ன்ஸ் 1 கலன் நீரில்) கலத்தல் வேண்டும். தூளை 60-90 கலன் நீரில் கரைக்கவும்.
፴uff﷽®ማ ፬ምጫም
gits. 539.75 llif).
蔓

Page 14
குறிப்பு-அம்பாறை மாவட்டத்தில் கட்டுப்படுத்துவதற்கு பி. எச். சி. 10 அம்பாறை மாவட்டத்தில் இப் பூச்சிகள் யைப் பெற்றுள்ளதால் பி. எச். சி. 1 காணப்பட்டுள்ள போதிலும் முதன் முன் மேலே குறிப்பிடப்பட்ட குறுணல்களும்,
தூள்களும் கிடைக்காத சந்தர்ப்பங்களி
உபயோகித்துப் பார்க்கலாம். ஏக்கர் ஒன் இம். இயந்திரத் துவுகருவியைக் கொள்
அணங்குப் புழுக்கள்
அணங்குப் புழுக்கள் வெள்ளே நிற முதிர் பூச்சிகள் கபில நிறமானவை. இ திற்குப் பரவும் சந்தர்ப்பங்களில் இறகுக
நெற் பயிரின் அடித்தண்டுப் பகுதியி உணவு உண்டு வாழுகின்றன. இதனுல்
விரைவாகப் பெருகக் கூடியதாக இருக் பயிர்கள் மஞ்சள் நிறமடைவதும் தெர
தெரியத் தொடங்கிய பின்பு இதனைச் ஆகவேதான் இப்பூச்சி காணப்படுகின்றத சோதனை செய்தல் அவசியம். பயிரைச் பகுதியை மட்டும் சோதனை செய்தால் சோதனையை மேற்கொள்ளவும். ஏனென் கொள்ளும் இயல்புடையது. என்வே தொட்டம் தொட்டமாகக் காணப்படுகின் புருடான் 3 குறுணல், டயசினேன் 1 நேரடியாக யூறியா பிரயோகிப்பது ே எரிந்துவிடாமல் பாதுகாப்பதற்காக பொ முக்கியம். குறுணல் நீரில் கரைந்து உறிஞ்சப்படுகின்றது. இதன் பின்பு பட
8
 

டந்த 3-4 வருடங்களாக நெற்தத்துக்கிளியை வர்த்தகத் தூளை உபயோகித்து வந்ததால் இப்பூச்சி நாசினியைத் தாங்கக்கூடிய சக்தி 0% வர்த்தகத் தூள் பயன் இல்லாததாகக் றயாக இப்பூச்சி பிரச்சினை தரும் இடங்களில் செறிவுக்குழம்புகளும், நீரிற் கரையக்கூடிய
ல் பி. எச். சி. 10% வர்த்தகத் துளை றுக்கு 20-30 இருத்தலை உபயோகிக்க வேண் னடு 50 எக்கருக்கு ஒரு நாளைக்குத் தூவலாம்
¬¢ ጳጀ≤
முதிர்ந்த ஆண் பூச்சி முதிர்ந்த பெண் பூச்சி
மானவை. இவற்றிற்கு இறகுகள் இல்லை. இவற்றிற்கும் இறகுகள் இல்லை. வேறு இடத் *ளயுடைய பூச்சிகள் தோன்றும்.
ல் அணங்குப் புழுக்களும் முதிர் பூச்சிகளும் விவசாயிக்கு தெரியாமல் மறைவில் இவை கின்றன. பயிர்ச் சேத அறிகுறிகள் அதாவது ாட்டம் தொட்டமாகப் பயிர்கள் பட்டிருப்பதும் சிறந்த முறையில் கட்டுப்படுத்துதல் இயலாது. ாவென 7-10 நாட்களுக்கொருமுறை பயிரைத் சோதனை செய்யும் பொழுது வயலின் ஒரு போதாது. வயலின் பல்வேறு புள்ளிகளில் ரில் இப்பூச்சி வயலில் இங்குமங்குமாக உணவு தான் வயல்களில் 'தத்துக்கிளி எரிவு ? 9து .
0 குறுணல் போன்ற குறுணல்களை வயலுக்கு போன்று பிரயோகிக்கலாம். ஆனல் தோல் லித்தீன் கையுறையை அணிந்து கொள்ளுதல் சில மணி நேரத்துள் நஞ்சு பயிரினல் பிரில் உணவு கொள்ளும் பூச்சிகளுக்கு இது
கமத்தொழில் விளக்கம்

Page 15
ஆபத்தாக அமைகின்றது. குறுணல்கள் 6 யால் குறுணல்களைக் காற்றுப்புகாத கொள் வைக்கவும்.
ஏனைய பூச்சி நாசினிகள் நீருடன் கலக் கப்படும். கூடிய பயனைப் பெறுவதற்கு தெ அடையும் வண்ணம் தெளிகருவியின் தெளித்தல் வேண்டும். பயிரின் மேற்பரப் இல்லை.
குறிப்பு-ரமருேன், பொஸ்வெல், பே போன்ற சேதன-பொசுபரஸ் பூச்சி நாசி கிப்பவர் கை நீளமான சேட், நீளமான கூடிய வகையில் சாரம், முகத்தை மூடு உடலைப் பாதுகாத்துக் கொள்ளுதல் அவ காப்புச் செய்யாவிட்டால் இப்பூச்சி நாசினி நரம்புத் தளர்ச்சியை ஏற்படுத்தலாம்.
പ്രെ கண்டத்தில் | Hội, அனைத்தும்
வயல்கள் யாவற்றையும் ஒரே வேளையி: விவசாயிகளை அறிவுறுத்துதல் அவசியம பெருமளவில் பெருகுவதையும், பரவுவ,ை யும் தடை செய்யும்.
என்ன தம்பி உங்களே రofర్ధమే @moাতোষ্ট্র கிடைக்குது இல்ல்ே P
மலர் 19-இதழ் 1, 1975
 
 
 
 
 
 

ளிதில் ஆவியாகும் தன்மையுடையதாகை கலன்களில் உபயோகிக்கும் வரை சேமித்து
கப்பட்டு தெளிகருவிகள் மூலம் பிரயோகிக் விகரைசல் அடித்தண்டில் உள்ள பூச்சியை பீச்சு முனையை பயிருக்குள் செலுத்தித் பில் தெளிப்பதில் பிரயோசனம் எதுவும்
ருசில், எல்சான், பப்தியோன், சிடியல் னிகளை உபயோகிக்கும் பொழுது பிரயோ காற்சட்டை அல்லது கால் குதிவரை மூடக் பதற்கு கைலேஞ்சி போன்றவை அணிந்து சியமாகும். ஏனெனில் இவ்வாறு பாது
இலகுவில் தோலினுடாக உறிஞ்சப்பட்டு
ஏககாலத்தில் முதிரக் கூடிய வகையில் விதைக்கும்படி அல்லது நாட்டும்படி ாகும். இவ்வாறு செய்வது இப்பூச்சிகள் தயும் வருடம் முழுவதும் காணப்படுவதை
(தமிழில் : அ. சி. செ. சு.)
- ன்பு நான் பள்ளிக்கூட பை. கருேககுய
குேலே திரிஞ்சேன். ஒரு லாபமும் கிடைக்கல்லே. இப்போ வeடைக் கோழிகளுக்குப் பின்குலே திரிகிறேன் இராங் வருமானநீ கிடைக்குரூரே'

Page 16
வன்மைப்
தொழில்துறையில் விவசாயத்துறைய | கட்டிடத்துறையில்
 
 
 


Page 17
இலங்கையில் மத்திய மல்ை
உலகம் முழுவதும் தற்போது நிலவிவரு மிருக உற்பத்தியில் பெரும் மாற்றத்தை ஏ சாதாரணமாக ஒரு மனிதனின் நிறையுணவி புரதமும் இதில் குறைந்தது 20 கிரும் மி மிருகப் புரதமாக பால், முட்டை, இறைச்சி இவற்றில் பன்றி, கோழி போன்ற மிருக இவை ஒர் வயிறுள்ள (Monogastric) இவைகளுக்குக் கூடிய மொத்தப் போச Nutrients) உள்ள உணவுகள் தேவைப் ரணமாக சோளம், இறுங்கு போன்றவற்றை இவ்வுணவு வகைகளைக் கொடுத்து முட்டை
* ど>
போன்றவற்றின் உற்பத்தியைக் கூட்டுதல் இ
பிடக் கூடியளவு உயர்ந்தாலன்றி பொருள
வேளையில் மாடு, ஆடு போன்ற மிருகங்களின்
இம்மிருகங்கள் நான்கு வித வயிற்றைக்
இதன் முதலாவது வயிறன் அசையூன் வய
囊 扈
பற்றரை
மலர் 19-இதழ் 1, 1975
 
 
 
 
 
 

நாட்டில் புல் உற்பத்தி
பி. சுந்தரானந்தன்,
விவசாயப் போதனுசிரியர்,
மிருக வைத்திய ஆராய்ச்சி நிலையம்,
பேராதனை. நம் தானிய உற்பத்திப் பற்ருக்குறை ற்படுத்தும் என்று ஊகிக்க இடமுண்டு. நாளொன்றுக்கு 60 கிரும் மொத்தப் ருகப் புரதமாகவும் இருக்க வேண்டும், மீன் போன்றவற்றைக் குறிப்பிடலாம். களின் உற்பத்தியை நோக்கும்போது,
பிராணிகளாகக் காணப்படுவதனுல், GOOTLÜ GÒLJITGTGLIEGT (Total Digestible படுகின்றன. இவ்வுணவுகளுக்கு உதா க் குறிப்பிடலாம். இன்றைய நிலையில் கோழி இறைச்சி, பன்றி இறைச்சி வ்வுற்பத்திப் பொருட்களின் விலை குறிப் ாதார ரீதியில் இயலாததாகும். இதே உணவுத் தேவையை நோக்கும்போது,
(Polygastric) (3):576ổòTLạ(15[]Lg TQ) Th, பிற்றில் (Rumen) போதியளவு பற்றிரி

Page 18
யாக்கள் காணப்படுவதாலும், இப்பற்றி தப் போசணைப் பொருட்கள் கொண்ட இலிக்கின்) சிதைத்துச் சீரணிக்கச் செய் கொடுத்து இறைச்சி, பால், போன்றவற்
சராசரியாக இறைச்சி, போன்றவ முழுச் செலவில் 70% உணவுக்காகச் குறிப்பிடக்கூடியது தேங்காய்ப் பிண்ண வைக்கோல் போன்றவை. இவ்வளவு க தரம் குறைந்தவையாகக் காணப்பட்டத எள்ளுப் பிண்ணுக்கு, தேங்காய்ப் பி. உணவு வகைகளை கொடுக்க வேண்டிய புல் வருக்கங்களும், அவற்றை வளர்க் உணவு வகைகளின் அளவைக் குறை <9%g புல்லை மாத்திரம் கொடுத்து, கிறது. இதனுல் உற்பத்திப் பொருட்க
தகுந்தளவு குறைக்க முடிகிறது.
மத்திய மலைப்பிரதேசம்
மத்திய மலைப் பிரதேசம் என்னும்
அடிக்கும் 4,000 அடிக்கும் இடைப்பட்ட
குறிப்பாக பின்வரும் இடங்களைக் குறிப்
(1) நாலந்தை (2) 56ծ01ԼԳ.
(4) தெல்தெனிய (5) உறுக3
(T) வட்டவளை (8) பலாங்( (10) இறக்குவானே (ll) G356ofi (13) மொனறகலை (14) பதுளை
காலநிலை
இங்கு நிலவும் காலநிலை இடத்திற கடல் மட்டத்திலிருந்து இருக்கும் உய அமைந்திருக்கும் இடத்துக்கு ஏற்பவும் பாகை பரனேட்டுக்கு இடைப்பட்டதாகவும், காலநிலையில் மிகவும் குறிப்பிடக்கூடிய மழை வீழ்ச்சி இடத்துக்கிடம் பரந்து ே வீழ்ச்சிக்கு ஏற்ப இப்பகுதியை மத்திய மலைநாட்டு ஈரவலயம் என்றும் பிரிக்கல உள்ள இடங்கள் மத்திய மலைநாட்டு மேற்பட்ட மழைவீழ்ச்சி பெறும் இ அடங்கும்.
பின்வரும் இடங்களை அவை பெறும் 1
50" - 75" - குண்டசாலை, நாலந்ை 75" - 100" - அறனுயக, பதுளை, ! கலை, மதுகலை, ட 100" - 150" - பலாங்கொடை, தென்
150" - 200" - கலகா, நாவலப்பிட்டி
12

ரியாக்கள் குறைந்த செமிக்கக்கூடிய மொத்
உணவுப் பொருட்களையும் (செலியூலோஸ், வதால் தரம் குறைந்த உணவு வகைகளையும் றின் உற்பத்தியை இலகுவாகக் கூட்டலாம்.
ற்றின் உற்பத்திச் செலவை நோக்கும்போது செலவிடப்படுகிறது. இவற்றின் உணவில் றக்கு, எள்ளுப் பிண்ணுக்கு, தவிடு, புல்,
ாலமும் மாடுகளுக்கு ஊட்டப்பட்டு Glbತು புல் ால், கூடிய பால் உற்பத்திக்கு, கூடியளவு
ண்ணுக்கு, போன்ற தரம் கூடிய செறிவு நிலை இருந்தது. தற்போது தரம் கூடிய கும் முறைகளும் தெரிந்திருப்பதால் செறிவு த்து கூடிய அளவில் புல்லைக் கொடுத்து உற்பத்தியைப் பெருக்கக் கூடியதாக இருக் ளின் உற்பத்திச் செலவையும் குறிப்பிடத்
A.
போது இது கடல் மட்டத்திலிருந்து 1,000 பிரதேசத்தைக் குறிக்கிறது. இப்பிரதேசத்தில் பிடலாம் :
(3) குண்டசாலை )ெ (6) நாவலப்பிட்டி G). HEIT) - (9) கலாவனை
2
(12) மித்தெனிய
கிடம் வேறுபடுகின்றது. அதாவது, அவை ரத்துக்கு (Elevation) ஏற்பவும், அவை வேறுபடுகின்றது. இங்கு வெப்பநிலை 65-80 ஈரப்பதன் 60-80% ஆகவும் காணப்படுகிறது. து மழை வீழ்ச்சியாகும். இப்பிரதேசத்தில் வறுபட்டதாகக் காணப்படுகிறது. இம்மழை. மலைநாட்டு உலர்வலயமென்றும், மத்திய ாம். சாதாரணமாக 50"-75' மழைவீழ்ச்சி உலர்வலயத்துள் அடங்கும். 75" துக்கு டங்கள் மத்திய மலைநாட்டு ஈரவலயத்துள்
மழை வீழ்ச்சிக்கு ஏற்ப கூறுபடுத்தலாம் - த, தெல்தெனிய, ம்பளை, கண்டி, கொஸ்லாந்தை, மொனரு சறை, பேராதனை, உறுகலை. ரியாய, கம்மடுவ. , கலாவனை, புசல்லாவ, றங்கலை.
கமத்தொழில் ຄກລ)

Page 19
புல் உற்பத்தியில் மலைநாட்டுப் பகுதிகளின் மத்திய மலைப் பிரதேசத்தின் காலநில கிறது. பெரும்பாலும் எல்லா, அயன, இங்கு நன்ருக வளருகின்றன. உலர் வலய கள் இங்கு இன்னும் நன்ருக விளைவைக் போதியளவு புல் வர்க்கங்கள் காணப்படுகி பாலான இடங்கள் வருடம் முழுவதும் ப முழுவதும் பசும்புல் காணப்படுகிறது. ஆன இடங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில், மேலதிக புல்லை, மழை குறைந்த நேர வேண்டிய அவசியம் இல்லை. பரந்து கா சேர்த்துப் பாவிப்பதால், புல் உற்பத்தியை உற்பத்தி செய்ய முடியும். அத்தோடு மத் உற்பத்தியைக் கொடுக்கக்கூடிய ஐரோப்பிய உகந்ததாகக் காணப்படுகிறது.
மத்திய மலைநாட்டில் காணப்படும் தேயி: கரமற்றதாகக் காணப்படுகிறது. இப்படியான பயிர்ச் செய்கைத் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 5,200 ஏக்கர்க உற்பத்திக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதனுல் பால் உற்பத்தியைக் கட்டுப்படுத்தாது.
இவ்வலயத்துக்கு ஏற்ற புல் வருக்கங்கள்
புல் வர்க்கங்களை இரு பெரும் பிரிவுகளா (அ) மேய்ச்சல் புல்-சாதாரணமாகக் குட் (ஆ) வெட்டுப்புல்-சாதாரணமாக உயர்ந்து
புல் என்னும்போது அது தனிப் புல் பயிராகவோ அல்லது புல்லும் அவரையி இருக்கலாம். புல், அவரை இனப் பயிர் ஆ ஈராண்டுப் பயிராகவோ அல்லது பல்லான் முறைப் பயிர்ச் செய்கையின்போது ஒராண் புல் வருக்கம் சிறந்ததாகும். மத்திய மலைந டுப் புல் வருக்கங்கள் சிறந்ததாகும்.
பொதுவான புல் வருக்கங்கள்
பின்வரும் புல் வருக்கங்கள், மத்திய காக பல வருடங்களாகப் பயிரிடப்பட்டு வந்
1. பனிக்கம் மக்சிமம் (கினி-பி.) Pamic மலைநாட்டுக்கு மிகவும் உகந்ததாகக் இனத்துடன் ஒப்பிடும்போது, ஒடுங்கிய இ:ை பூக்கும் தன்மை கொண்டதாகவும், அ நார்த்தன்மை கொண்டதாகவும் காணப்படு புல் வர்கக்மாகும். இதே நேரத்தில் கில்
மலர் 19-இதழ் 1, 1975
 
 

pக்கியத்துவம்
புல் உற்பத்திக்கு ஏற்றதாகக் காணப்ப்டு டய அயன மண்டல புல் வருக்கங்களும் பகளில் பயிரிடப்படக்கூடிய புல் வருக்கங் கொடுக்கின்றன. இதனுல் பயிரிடுவதறகு ன்றன. மத்திய மலைநாட்டின் பெரும் ந்து மழையைப் பெறுவதால், வருடம் கயால் 50"-70' மழைவீழ்ச்சி பெறும் மழை கூடிய நேரத்தில் காணப்படும் த்தில் பாவிப்பதற்கு சேமித்து வைக்கக் ணப்படும் மழையுடன், உரப்பசளைகளும் அதிகரிப்பதுடன் தரமான புல்லையும் திய மலைநாட்டுக் காலநிலை, கூடிய பால் இனக் கறவை இனங்களை வளர்ப்பதற்கும்
வ, இறப்பர் தோட்டங்களில் சில இலாப நிலத்தில் 92,000 ஏக்கர்கள் மாற்றுப் (Crop. Diversification Programme) ள் ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் புல் மத்திய மலைநாட்டில் இடப்பற்றக்குறை
கப் பிரிக்கலாம் :- டை இனப் புல் வருக்கங்கள்.
வளரும் புல் வருக்கங்கள்.
லாகவோ, அல்லது தனி அவரையினப் னப் பயிர்கள் கலந்த கலவையாகவோ கியவை ஒராண்டுப் பயிராகவோ அல்லது எடுப் பயிராகவோ இருக்கலாம். சுழற்சி டுப் புல் வருக்கம் அல்லது ஈராண்டுப் ாட்டில் நிரந்தரப் புற்றரைக்குப் பல்லாண்
லைநாட்டில் பாற்பசுக்களுக்கு ஊட்டுவதற்
565)6) J.
Im malaimum இப்புல் வர்க்கம் மத்திய காணப்படுகிறது. இவ்வர்க்கம், கினி-ஏ களை உடையதாகவும் குறைந் தளவில் க உயரம் வளராததாயும், குறைந்த கிறது. கினி-பி, பயிர் செய்யப்படும் ஒரு ரி-ஏ இயற்கையாகவே கவனிக்கப்படாத
13

Page 20
வேலியோரங்களிலும், பயிர் செய்யப்படா வருக்கத்தை விதை மூலமோ, மட்டங்கு மிகவும் நிழலைத் தாங்கி வளரக் கூடிய
தென்னை மரங்களுக்கிடையிலோ, கிறிலி போன்ற அவரையின மரங்களுடன் கலந்
பயிரிடுவதனல், இதை திருப்திகரமாக ப
தீனியில் 20% வரை கிறிலிசிடியாவை: அவரையினக் கலவை சாதாரண ஒரு கு шПСа5Lo.
2. பெனிசீரம் பேழறியம் (நேப்பியர் முதலாக ஆபிரிக்க அயனமண்டலப் பகு போன்ற குணுதிசயங்களையுடையதாகவும், கவும் இருக்கிறது. மத்திய மலைநாட்டில் புல்லாகப் பாவிக்கப்படுகிறது. இதனை இனம் பெருக்கலாம். இதன் விதையிலி குணுதிசயங்கள் கொண்டதாகக் காணப்படு செய்யப்பட்ட கப்றிக்கோன் என்னும் இன
3. பிறக்கேறியா பிறிசாந்தா (சிக் வர்க்கமும் ஆபிரிக்க அயன மண்டலப் ப வேர்த்தண்டுக்கிழங்கைக் கொண்ட ஒரு அடி உயரமும் வாட்சியைத் தாங்கி வரண்ட பகுதிகளுக்கு உகந்த இனமா முளேத்திறன் குறைவாகக் காணப்படுவதா படுகிறது. இது ஒரளவு தரமுடைய புல் ெ களில் 30 நாட்களுக்கு ஒரு முறையும், 6 ஒரு முறையும் மேய்ச்சலுக்குப் பாவிக் மிகவும் தரமுள்ள புல் வர்க்கங்கள் அ மலைநாட்டு உலர் வலையப் (50"-75" மை செய்யப்பட்டுள்ளது.
4. றிப்சிகம் லேக்சம் (கெளதமலாப்பு என்னும் இடத்தில் முதன் முதலா தோட்டங்களில் மண்ணைத் திருத்தி அை பயிரிடுகிறர்கள். இது அகலமான இலை பல்லாண்டுப் புல் வர்க்கமாகவும் காணப் காணப்படுவதால் மண்ணைக் கெட்டியாகச் இது தரம் குறைந்த புல் வர்க்கமாக குணுதிசயத்தைக் கொண்டுள்ளதால், இ படும் போது 3 கிழமை இடைவெளியிே வெட்டி உபயோகிக்கலாம். உணவுக்காக பாதிக்கப்படுவதால் இதனை ஒரே நேர உணவாகவும் இதனை உபயோகிக்க முடிய
14.
 

த நிலங்களிலும் காணப்படுகிறது. கினி-பி, 1ள் மூலமோ இனம் பெருக்கலாம். இது து. இதனுல் இதை மத்திய மலைநாட்டில் BL9-LLIT Ind:Sugal)TijUIT (Grilicidia maculata) து பயிரிடலாம். கிறிலிசிடியாவுடன் கலந்து பிர் செய்யக்கூடியதாக இருப்பதுடன் அதன் சேர்த்துக் கொள்ள முடியும். இப்புல் மக்காரனுல் கொடுக்கக்கூடிய ஒரு கலவை
) Pennisetum purpureum QUI CUfog, GÖ7 குதியில் காணப்பட்டது. இது கரும்பைப் அதற்கேற்ற காலநிலையில் வளரக் கூடியதா இப்புல் வர்க்கம் சாதாரணமாக வெட்டுப் மட்டங்கள் மூலமோ, துண்டங்கள் மூலமோ நந்து பெற்படும் நாற்றுக்கள், வெவ்வேறு கிறது. இவற்றுள் குயீன்லாந்தில் விருத்தி ம் சிறந்ததாகக் காணப்படுகிறது.
#6). Lø) Brachiariabrizantha, இப்புல் குதியைப் பிறப்பிடமாகக் கொண்டது. இது பல்லாண்டுப் புல் வர்க்கமாகவும், 2-4 வளரக்கூடியதாகவும் இருப்பதால் இது கக் காணப்படுகிறது. இதன் விதையின் ல் இது துண்டங்களினுல் இனம் பெருக்கப் பர்க்கமாகக் காணப்படுவதால் மழைக் காலங் வரட்சியான காலங்களில் 40-50 நாட்களுக்கு கலாம். மத்திய மலைநாட்டில் தற்போது றிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் இது மத்திய ழ வீழ்ச்சி) பகுதிகளுக்கு மட்டும் சிபாரிசு
ó) Tripsacum laxum Qg, Gas GTAELOTG)T கக் காணப்பட்டது. இதைத் தேயிலைத் மப்பதற்காக சுழற்சி முறைச் செய்கையில் யைக் கொண்டதாகவும், பிந்திப் பூக்கும் படுவதோடு பரந்த அளவில் நார் வேர்கள் சுற்றிப் பிடிக்கவும் உதவியாக இருக்கிறது. க் காணப்படுவதோடு கெதியில் முற்றும் வற்றைக் கால்நடைத் தீனியாகப் பாவிக்கப் லா அல்லது 2 அடி உயரப் பருவத்திலோ அடிக்கடி வெட்டும்போது வேரின் பெருக்கம் த்தில் மண்ணைத் திருத்தவும், கால்நடை
Tது.
கமத்தொழில் விளக்கம்

Page 21
மத்திய மலைநாட்டுக்கு சிபார்சு செய்யப்பட்ட புல்
1. கலப்பின நேப்பியர் என். பி. 21 ( இந்தியாவிலுள்ள லுடிகன என்னும் இடத்தி கலாசாலையில் பெனிசிரம் பேடறியம் (நேப்பியா தையும் பெனிசிரம் ரைபொயிட்ஸ் (கம்பு-ஆ6 தையும் கலந்து பெறப்பட்டது. இது கெல்மின்ே என்னும் பங்கஸ் நோயைத் தாங்கி வளரும் அத்தோடு, விளைவிலும் தரத்திலும் நேப்பியரி காணப்படுகிறது. இது கடல் மட்டத்திலிருந்து கூடியதாக இருக்கிறது. வரண்ட பிரதேசங்களி வரட்சியான காலங்களில் நீர்ப்பாசனம் செய்ய தாங்காதபடியால் பயிரிடப்படும் இடங்கள் ந6 (36)յ6ՃՃ16Լի. @g 28 ព្រឹក្សាតាព្រើតាត្រត្រា (Som 14 நிறவுருவுள்ள கம்பையும் கலந்து பெறப்பு நேப்பியர் மலட்டுத்தன்மை வாய்ந்த விதை இப்பல் வர்க்கத்தைப் பதிய முறை இனப்பெருக இதற்கு இரு கணுத் துண்டங்களேயோ அல்லது இடைவெளியில் மட்டமான தரையிலும், 3 அடி தரையிலும் மண்ணரிப்பைத் தடுப்பதற்கு சம : நடப்பட்ட துண்டங்களிலிருந்து நடப்பட்டு 3-4 அறுவடை செய்யலாம். அதன்பின் காலநி3 4-5 கிழமை இடைவெளியிலும், வரட்சியான ஒரு தடவையும் அறுவடை செய்யலாம். நடு இவற்றை 5-6 மாதங்கள் வெட்டாமல் விடப்பு உபயோகிக்கலாம். இதன் விளைவு மற்றைய மேலதிக விளைச்சலைக் கொடுப்பதால், இதற்கு செயற்கைப் பசளேகளும் தேவைப்படுகிறது. இ லாண்டுப் பயிராக இருந்தாலும் கம்பு ஓரா செல்லச் செல்ல இதன் கலப்புப் பிறப்பு இதனை 3 வருடங்களுக்கு ஒரு முறை திரும்பவு
2. பிறக்கேறியா றுசியன்சிஸ் (றுசிப்புல்) Br G5TĚ|(35T (Belgian Congo) 5TLGOL 6)) செழிப்புள்ள, நன்கு நீர் வடியும் தை பிறிசாந்தா புல் வர்க்கத்துடன் ஒப்பிடும்போது பஞ்சு போன்ற மென்மையாகவும், அதிகம் தரமுள்ள புல் வர்க்கமாகவும் கானப்பு( நீர்ப்பிடிப்புக் கொண்டதுமான தரையில் பிறக் வளருகிறது. இது மத்திய மலைநாட்டுக்கு மிக கிறது. தொடர்ச்சியாகச் சிறந்த விளைவைப் ே தூண்டற் பேறு உடையதாகக் காணப்படுவதால் இன்றியமையாததாகும். இதன் விதைகள் முலை மத்திய மலைநாட்டுக் காலநிலையில் விதை உற் இதனைத் துண்டங்கள் மூலமோ, மட்டங்கள் இதைநடும்போது 13 அடி x 1 அடி இ.ை
மலர் 19 - இதழ் 1, 1975
 
 

6
Hybrid Napier N B 21). 35. ல் உள்ள பஞ்ஞாப் விவசாய சர்வ -பெண்மரம்) என்னும் புல் வருக்கத் னமரம்) என்னும் தானிய வர்க்கத் 5 Tត្រ) போறியம் (Helminthosporium) புல் வர்க்கமாகக் காணப்படுகிறது. லும் கம்பிலும் பார்க்க சிறந்ததாகக் 3,000 அடிவரை சிறப்பாக வளரக் இதனைப் பயிரிடுவதாக இருந்தால் வேண்டும். இது நீர்த் தேக்கத்தைத் ன்கு நீர் வடியும் தரையாக இருக்க tic Chromosomes) நேப்பியரையும், ட்ட் 21 நிறவுரு கொண்ட கலப்பின ளேயே இது கொடுக்கிறது. இதனுல் கத்தின் மூலம் இனம் பெருக்கலாம். மட்டங்களையோ 2 அடி x 2 அடி x 2 அடி இடைவெளியில் சாய்வான உயரக் கோட்டிலும் நடலாம். புதிதாக மாதங்களின் பின் முதலாவது லக்கேற்ப மழை கூடிய நாட்களில் காலங்களில் 6-7 கிழமைகளுக்கு கைக்கு துண்டங்கள் பெறுவதாயின் ட்டு முற்றிய துண்டங்களே நடுகைக்கு புல் வர்க்கங்களுடன் ஒப்பிடும்போது கூடியளவு இயற்கைப் பசளைகளும், தன் தாயாரான நேபியர் ஒரு பல் ண்டுப் பயிராக இருப்பதால், வயது JGÖT (Hybrid Vigour) (5602fOG) USTTG), ம் நாட்டப்பட வேண்டியுள்ளது.
tchiaria Ruziziensis இது பெல்ஜியன் ப்பிடமாகக் கொண்டது. ஆழமான, களுக்கு உகந்தது. பிறக்கேறியா
இதன் இலைகள் அகலமாகவும்,
பரந்து வளராததாகவும், நல்ல கிறது. கூடிய செழிப்புள்ளதும் கேறியா பிறிசாந்தாவிலும் சிறப்பாக வும் உகந்த வர்க்கமாகக் காணப்படு பறுவதற்கு இலை மிகவும் பசளேத் போதுமானளவு பசளைப் பிரயோகம் க்கும் திறனைக் கொண்டிருந்தாலும், பத்தி குறைவாகக் காணப்படுவதால்,
மூலமோ இனம் பெருக்கலாம். வெளியில் மட்டமான தரையிலும்
15

Page 22
2 அடி x 1 அடி இடைவெளியில் சாய்வ வீதம் நாட்டலாம். இதனை மேய்ச்சல் இக்கலாம்.
3. பனிக்கம் மக்சிமம் (கினி-வி. ஆ வளர்ச்சியில் கினி-பி. ஐப் போன்றத இது நிழலை நன்கு தாங்கி வளரக் நாட்டில் தென்னை மரங்களுக்கு இடை
4. டிஜிரேறியா சிமற்சி (Digit காத் தேசத்துப் புல்லாகும். மிகவு 2 அடி உயரம் வரை வளரும். இலை கூடியது. இதனை விதை மூலமோ, ! கூடியளவில் விதையை உற்பத்தி ெ படுவதால், மட்டங்கள் மூலம் இனம் (
5. பஸ்பலம் பிளிகற்றுலம் ( டிஜிரேறியா சிமற்சி போன்றது. இத இனம் பெருக்கலாம். இது விதையை
ஏரினும் நன்றல் நீரினும் நன்ற
(ஏர் உழுதலேவிட எரு இடுதல் நல்ல நீர் பாய்ச்சுதலைவி
16
 

ான தரையிலும் நிலையத்துக்கு 2-3 துண்டங்கள் புல்லாகவோ, வெட்டுப்புல்லாகவோ உபயோ
ஆர். ஐ 435) Panicum maximum இவ்வர்க்கம் ாயினும், விளைவில் கினி-பி. யிலும் கூடியது. கூடியதாக இருப்பதால், இதனை மத்திய மலை யில் நடுவதற்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
aria Smutzi) இது ஒரு தென் ஆபிரிக் ம் அடர்த்தியாக வளரக்கூடியது. பூக்குமுன் த்தண்டு விகிதம் (Leat Stem ratio) மிகவும் மட்டங்கள் மூலமோ இனம் பெருக்கலாம். இது செய்தாலும் குறைந்த ரகமுள்ளதாகக் காணப் பெருக்கம் செய்தல் விரும்பத்தக்கது.
Paspallum plicatulum). இது வளர்ச்சியில்
னையும் விதை மூலமோ, மட்டங்கள் மூலமோ
பெருமளவில் உற்பத்தி செய்கிறது.
(வளரும்)
எரு இடுதல் கட்டபின் றதன் காப்பு-குறள்.
து, இந்த இரண்டும் செய்து களை நீக்கிய பிறகு,
காவல் காத்தல் நல்லது.)
கமத்தொழில் விளக்கம்

Page 23
ஆமணக்கு
மூன்று பெண்கள், முக்காட்டுக்காரர்,
வெய்யிலைக் கண்டால் வெவ்வேறவர்
எண்ணெய்க்காகப் பல்வேறு விதமான
தாவரங்கள் பயிர் செய்யப்படுகின்றன. இவற் றினுள் ஆமணக்கு (றசினசு கொமியூனிஸ்) வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்தது. இத் தாவரம் அயன மண்டலத்திற்கு மிகப் பொருத் தL0ானது. இதன் எண்ணெய் பல்வேறு
வகையான பயன்களைக் கொண்டது. ஆமண
க்கு எண்ணெய் உள்நாட்டுக் கைத்தொழில் களிலே பாவிக்க முடியும். அதே வேளையில் உலகச் சந்தையில் இதன் கேள்வி அதிகமாக இருப்பதால் ஏற்றுமதியும் செய்யப்படலாம். பிரேசிலும், இந்தியாவுமே முக்கிய உற்பத்தி நாடுகளாகும். இவற்றுள் பிரேசிலே உலக வர்த்தகத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. இலங் கையில் தற்போது சிறிதளவு பரப்பில் மட்டுமே ஆமணக்குப் பயிர் செய்யப்படினும், உற்பத் தியை மேலும் அதிகரிப்பதற்குச் சாத்தியக்
கூறுகள் காணப்படுகின்றன.
மண்ணும் சுவாத்தியமும்
ஆமணக்கு பரந்த கால நிலை வீச்சுக்களிலே பயிர் செய்யப்படக் கூடியது. ஆமணக்கு சூடான காலநிலையிலே வளர்ந்து பயன் தர வல்லது. எனவே, இலங்கையின் உலர் வலயத் திற்குப் பொருத்தமானது. அவற்றின் நன்கு விருத்தியுற்ற ஆழமான வேர்த் தொகுதி காரணமாக ஆமணக்கு வரட்சியைத் தாங்கி வளரக்கூடிய பயிராகக் கருதப்படுகிறது. இதன் வளர்ச்சிக்குச் சுமார் 30 அங்குல மழை வீழ்ச்சி போது மானது. எனவே, இது உலர் வலயத் தின் பாசன வசதியற்ற மேட்டு நிலங்களில் மானு
0 mmTS Tm m L L L L T S T TtLa Ta 0L LL S 0BJTTS
னும், புதிய இனப் பெருக்க அவத்தைகளின் போது போதுமானளவு ஈரலிப்பு இருப்பது அவசியமானதால், மழை வீழ்ச்சி பரவலாக இருப்பது முக்கியமானதாகிறது. ஆனல் பூத் தலின் போது கடும் மழையும், மந்தாரமான
மலர் 19-இதழ் 1, 1975
6.s

ाम्कल gाछाङstn
வீ. ஏ. வஸ்தியன் பிள்ளை,
馨 蕾 囊
臀。 “ PLATTI விரிவுரையாளர், பயிரியல் பகுதி,
விவசாயப் பீடம், பல்கலைக் கழகம், பேராதனை.
வானிலையும் இருக்குமாயின், அது குறைவான 5ாய்த்தல், நோய்த் தாக்கம், குறைவுற்ற விளைச் ல் என்பவற்றிற்கு வழி கோலுகின்றது.
ஆமணக்கு பொதுவாக கடும் மழைகள் பெய்து ஒய்ந்த பின்னர் நடப்படுகிறது. இலங் கையைப் பொறுத்த மட்டில் கார்த்திகை, மார்கழி பொருத்தமான நடுகை நேரமாகும். நடுகையின்போது கடும் மழை பெய்யின் பங்கசு நோய்களின் தாக்கம் அதிகரிக்கப்படுவ துடன் முளைத்தலும் பாதிக்கப்படும்.
ஆமணக்கு எவ்வகையான மண்ணிலும் வளரவல்லதாயினும் நன்கு நீர் வடியும் மணற்பாங்கான நன் மண்களில் சிறப்பாக வளருகிறது. நீர்த் தேக்கத்தை இது சகிக்காது. எனவே, நல்ல நீர் வடிப்பு மிக முக்கியமானது.
உருவவியல்
தண்டு நிமிர்ந்தது, வட்ட வடிவமானது. நன்கு வரையறுக்கப்பட்ட கணுக்களைக் கொண் து. தாவரத்தின் உயரம் 1-4 மீற்றர் வரை வேறுபடலாம். பிரதான பக்கக் கிளைகளின் முனைகளிலே பூந்துனர் உருவாகின்றது. பூக் 5ள் ஒரில்லமானவை. பூந்துணர் கீழ்ப் பகுதி பில் ஆண் பூக்களையும் மேற் பகுதியில் பெண் பூக்களையும் கொண்டுள்ளது. குட்டையான வரு கங்கள் 2-3 கிளைகளை மட்டுமே உற்பத்தி பாக்குகின்றன. இந்த ஒவ்வொரு கிளையும் ஒரு பூந்துணரிலே முடிவுறுகின்றன.
வருக்கங்கள்
வெளிநாடுகளில் இருந்து புகுத்தப்பட்ட சில முக்கிய வருக்கங்களாவன :-ஹசீற இல. (Hazeera, No. 1, (960U36)Jổ), Suá,5ï 56ùûL 415 (Baker Hybrid 415) பி. எச். 55, பி. எச். 72, 157-பி (இந்தியா), Hale, Lymin. ஆமணக்கு பொது வாக ஓராண்டுப் பயிராகவே பயிர் செய்யப் படுகிறது. குறுகிய வயதுள்ள குட்டையான வருக்கங்களே வழக்கமாக விரும்பப்படுகின்

Page 24
றன. வருக்கங்களைத் தெரிகையில் கவனிக்க பட வேண்டிய சில முக்கிய சிறப்பியல் களாவன :-(1) குட்டைத் தன்மை, (2) சீரான முற்றுதல், (3) உயர்ந்த எண்ணெய்ச் சத்து (4) காய் உதிராத் தன்மை, (5) நோய் பீை க்கு எதிர்ப்பு.
பயிர்ச் செய்கை
கடும் மழை ஒய்ந்த பின் நிலையத்திற்கு 3-4 விதைகள் என்ற வீதத்தில் விதைகள் நடப்படுகின்றன. இவை பின்னர் நிலையத்திற் 2 நாற்றுக்கள் வீதம் ஐதாக்கப்படுகின்றன நோய் பீடைத் தொற்றல்களேக் குறைக்குமு. மாக நடமுன் விதைகளைப் பரிகரிப்பது நல்லது கப்ரான் (பங்கசு நாசினி) அல்றின் (பூச் நாசினி) என்பன இதற்காக உபயோகிக்கப்ப
5GB60035 ji eSAT JILħ (Spacing) 6, JCBjaġjsir கட்கும், வயதுக்குமேற்ப வேறுபடலாம் பொதுவாக உபயோகிக்கப்படும் இடை வெளி 45@T១៨ –90 F. L. 100 F fl. X 12 g f : 125 チ f ×125 cm、リ。○○字○ 96). 1 (Hazeera, No. 1) GIC is . 125 ச. மீ x 125 ச. மீ. (4" x4) இடை துரத்தில் நாட்டப்பட்டபோது நல்ல விள6 களைத் தந்துள்ளது. விதைகள் முளைக்க 1 நாட்கள் எடுக்கின்றன. வளர்ச்சியின் ஆரம் நிலைகளிலே களைகளின் போட்டியை ஆமணக்கு தாங்கமாட்டாததால், இவ் வேளைகளில் கை களைக் கட்டுப்படுத்தல் அத்தியாவசியமானது அத்துடன் அகன்ற இடைவெளி களை வளர் சியை ஊக்குவிக்கின்றது. பொதுவாக ஆமண கில் பொறி முறைக் களை கட்டலே கையாள படுகிறது. ஆனல் களை நாசினிகளும் உ
போஇக்கப்படலாம்.
உயர் விளைச்சலுக்குத் தேவையான அள களில் உரப் பசுளைகள் (N, E, K) சேர்க்க படுதல் வேண்டும். ஆமணக்கிற்கான வ6 மாக்கி வீதங்கள் நாட்டுக்கு நாடு வேறுப கிறது. எனினும், நைதரசன் 60 கி. கி. ஹெக்டர், பொசுபரசு 60 கி. கி./ஹெக்டர் பொட்டாஸ் 40 கி. கி./ஹெக்டர் என்னு விகிதத்தில் உபயோகிக்கப்படலாம். பொசுப சும், பொட்டர்சும் அரைவாசி நைதரசனு (30 இ. கி./ஹெக்டர்) நட்டு ஒரு மாதத்தின் பின் மேற்கட்டுப் பசளேயாக இடப்படுகின்றன மேலதிக நைதரசன் அதிகமான பதிய வளர்
8.

*
சிக்கும், பிந்திய பூத்தலிற்கும் வழி கோலக் கூடும். மெல்லிய விதையுறையின் காரண மாக, வளமாக்கிகள் விதையில் படின் விதை இலகுவாக ஊறுபடுத்தப்படுகிறது. எனவே, அடிக்கட்டுப் பசளேயை இடுகையில் கவனம் எடுக்கப்படல் வுேண்டும்.
பாசனம் தேவைப்படுமாயின் குறுகிய இடை வெளிகளில் மெல்லிய பாசனங்கள் செய்வதி லும் பார்க்க நீண்ட இடைவெளிகளில் கடுமை யான பாசனங்கள் செய்வதே சிறந்தது. முன் னையது மேற்பரப்பு வேர் கொள்ளலை ஊக்கு விப்பதே இதற்கான காரணமாகும்.
9 O6) 60.L.
பயிர் செய்யப்படும் பெரும்பாலான வருக்கங் கள் நட்டு 40-50 நாட்களின் பின் பூக்கத் தொடங்கி 140-160 நாட்களில் முதிர்ச்சியுறு கின்றன. எல்லாவற்றிலும் பெரிதான முத GDF615 LigaOOTir (Primary Raceme) தான் முதலில் முதிர்ச்சியுறுகிறது. ஆமணக்கு பொதுவாக ஒரு விரிவாக்கப்பட்ட காலத்துக்கு பூக்கிறது. இந்தியாவில் அறுவடை 5-10 கிழமைகட்குச் செய்யப்படுகிறது. 4-6 முறை கள் கொய்தல் வேண்டும். அறுவடை சரியான முதிர்ச்சி நிலையிலே செய்யப்படுதல் வேண்டும். முதிராத விதைகளை அறுவடை செய்வது ; கிடைக்கும் எண்ணெயின் அளவையும், தரத் தையும் குறைக்கிறது. வில்லையங்கள் உலர்ந்து மண்ணிறமாக இருக்கும் நிலையே அறுவடைக் குச் சரியான நிலையாகும்.
அறுவடை கடினமானது. அத்துடன் அதிக நேரமும் தேவைப்படுகிறது. இது கையினுலே அல்லது இயந்திரங்களாலோ செய்யப்படலாம். அறுவடை பின் போடப்படுமாயின் காய்கள் உதிரக் கூடும். சில நாடுகளில் பெரும்பான்மை யான வில்லையங்கள் முற்றியிருக்கும் பூந் துணர்கள் தெரியப்பட்டு அறுவடை செய்யப் படுகின்றன. வில்லையங்கள் பூந்துணரில் இரு ந்து வெட்டப்பட்டு, முற்ருக உலர விடப்படு கின்றன. தொடர்ந்து விதைகளே வேருக்கு வதற்காகக் கோது அகற்றல் கையினலோ அல்லது பொறிமுறையாகவோ செய்யப்படுகி றது. எண்ணெய் பிரித்தெடுக்கு முன் விதை கள் துப்பரவாக்கப்படுகின்றன. எண்ணெய்(1) கரைப்பான் பிரித்தெடுப்பு முறையினலோ, (2) பொறி முறை முறைகளினுலோ பிரித் தெடுக்கப்படலாம்.
கமத்தொழில் விளக்கம்

Page 25
விளைவு
விளைச்சல் 700-2500 கி. கி. ஹெக்டர்
(Kgha) வரை வேறுபடலாம். எண்ணெய் யின் அளவு நிறையடிப்படையில் 40%-60%
வரை வேறுபடலாம். எண்ணெய் சிறப்பியல்
பான மணத்தையும், மெல்லிய மஞ்சள் நிற த்தையும் கொண்டது. இதன் சேமிப்புப் பெறு மதி மிக உயர்ந்தது.
பூச்சிகள்
இலையுண்ணும் புழுக்கள், சந்துக்குத்திகள், வெட்டுப் புழுக்கள் போன்றன பொதுவான சில பூச்சிகளாகும்.
நோய்கள்
ஆமணக்கிலே அவதானிக்கப்பட்டுள்ள சில
பொதுவான நோய்கள் பின்வருமாறு :-
(1) இலக் கறள், (2) இலேப் புள்ளி, (3) தண்டு, வேர் அழுகல்கள், (4) வில்லையப் பூஞ்சணங்
567.
இந் நோய்களில் பெரும்பாலானவற்றிற்குப் பங்கசுக்களே காரணமாகும். இவை தகுந்த பங்கசு நாசினிகளைச் சிவுறுவதாலும், விதை களே தொற்று நீக்குவதாலும் கட்டுப்படுத்த G) TL).
Juu 6õTG5iT
ஆமணக்குத் தாவரமும், அதன் விதையும் பல்வேறு பயன்களைக் கொண்டுள்ளன. ஆனுல், எண்ணெய்யே மிக முக்கிய பயன்களைக் கொண்டுள்ளது. இதற்கு நூற்றுக்கணக்கான கைத்தொழிற் பயன்கள் இருப்பது மட்டுமல் லாது புதிய பயன்கள் இன்றும் தொடர்ந்து கண்டு பிடிக்கப்பட்டும் வருகின்றன.
மலர் 19-இதழ் 1, 1975
 
 

GOLu.5650,7 GB5Gir, GIT62loñégoria:Gir (Paints, Varinies) golfi).5ITTLn, f,g).Jai S56ir (Polishes), ாசனைத் திரவியங்கள், அச்சு மைகள் ன்பவற்றின் உற்பத்தியில் இது பரந்தளவில் ாவிக்கப்படுகிறது. மேலும் இது ஒரு மசமசக்கி Taojin (Lubricant) Brake and Embalming uids இன் கூருகவும் உபயோகிக்கப்படு றது. றயரின் பதனிடுதலிலும் இது உபயோ க்கப்படுகிறது.
இந்தப் பல்வேறு விதமான பயன்களே ந்த எண்ணெயின் அதிகரிக்கும் உலகக்
ராக்கிக்கு முக்கிய காரணமாகும்.
பூமணக்கு விதை உணவு
எண்ணெய் பிரித்தெடுத்த பின்னே எஞ்சி ருெக்கும் சக்கை ஆமணக்குப் பிண்ணுக்கு எனப்படுகிறது. இது நச்சு (toxic) பதார்த் ங்களைக் கொண்டு இருப்பதால் கால் நடை ணவாக உபயோகிக்க முடியாது. எனினும் இதன் உயர் நைதரசன் வீதம் (4%-6%) ாரணமாக, இது ஒர் வளமாக்கியாகப் பல ாடுகளில் பரந்தளவில் பாவிக்கப்படுகிறது. 000 கி. கி. பிண்ணுக்கு 63 கி. கி. அமோனி Lin 3Fĝi)ĜLIL` (NHA) eSO) 34 ĝi. ĝ. 3FLÜLIÍÎ LITGioGJL. (Super Po,) 59 8. G. யூறேட் ஒப் பொட்டஸ் (KC) என்பனவற் ற்குச் சமமானது.
Chemical Industries (Colombo) Ltd.
ஆமணக்கு விதைகளே இருத்தல் ஒன்று ரூபா 50 சதம் என்ற விலையில் வாங்குகிறதாக
அறிகிருேம்.
19

Page 26
giungossoniąon ŋotɔɔɓasgũ ourostoso@jho ouro@asĠ | Nos sae
qøgnsfire usouondonuosố sỹfiĉ ugovogo
%壽彭9In999她lég 參劑
|歴*參鱷*
*總
 
 
 

역T혀「원的對T터읽T혀 터RT터
ITOJŲo(n)s(t)apspī£$%$§$0 saequo, hungos, o, mae wosoɛtɔ
劑疆\劑
***********@n *a*

Page 27
வினு :-(அ) மாடுகளுக்குப் புரதச் சத்துக் குை
கொடுக்கலாம் என்று அறிந்தேன்.
மாடுகளுக்கும், ஆடுகளுக்கும் எவ்வள (ஆ) கால்நடைகளின் நிறையைக் கூட்டு கப்பட்ட வைக்கோலைக் கால்நடைகளுக் படும் கால் நடைகளுக்கு உகந்த, கொண்ட தனி கலவை தயாரிப்பதெட்
ລວມ :-(அ) அசையூண் வயிறுடைய மிருகங்க
புரதத்திற்குப் பதிலாக உணவாக உ மல்லாதபோதும், அசையூண் வயி நைதரசப் பொருட்களைப் புரதமாக
அசையூண் வயிறுடைய மிருகங்கள் வையாக இருக்கின்றன. இந்த மாற்ற கின்றது. அசையூண் வயிற்றில் உள்ள அமோனியா வாக்குகின்றன. இது களுடன் சேர்ந்து பக்ரீரியாப் புரதம பாட்டுக்கு விரைவில் பயன்படக் கூடி கூடிய காபோவைதரேட் மூலம் வழா பில் சக்தியை அளிக்கக் கூடிய காபோ அல்லது அதிக அளவு புரதம் கான நடைபெறமாட்டாது. பொதுவாகக்
சத வீதத்திற்கு மேற்படாமல் யூறியா யூறியாவைக் கால்நடைகள் உள்ளெ யூறியாவை உணவுக் கலவையுடன்
மாகும். யூறியா நன்கு பயன்பட வே6 நிறையைப்போல் 7-8 மடங்கு அதிக தானியங்களை உணவில் சேர்த்தல் அளவுக்கு யூறியா செம்மறியாடுகளுக்
(ஆ) யூறியாவைப் புரதமாக மாற்றுவத் படாத காரணத்தினுல் யூறியா தெ களுக்கு ஊட்டுதல் சிபாரிசு செய்ய வைக்கோவில் நார்ச் சத்தும் லிக்னு செமிபாடடைவது மிகக் குறைவாகுப் படக் கூடிய காபோவைதரேட்டும் ஆகவே இத்துடன் சக்தியளிக்கக் கூ சேர்த்து ஊட்டினுல் மட்டுமே இது உ எதுவித உபயோகமும ஏற்படமாட்டா
D6)f 19-இதழ் 1, 1975
 

றநிரப்பியாக யூறியாவைத் தீனுடன் இது உண்மையா ? அப்படியானுல் வு யூறியாவைக் கொடுக்க வேண்டும்? வதற்காக யூறியாக் கரைசல் தெளிக் கு ஊட்டலாமா ? கொழுக்க வைக்கப் யூறியா, குறைந்தளவு தானியம் li LI Lq ? ளேப் பொறுத்த வரையில் யூறியா ஊட்டப்படக் கூடியது. யூறியா புரத றுடைய பிராணிகள் புரதமல்லாத மாற்றும் சக்தியுடையவையாகையால் யூறியாவை உபயோகப்படுத்தக்கூடிய 0ம் அசையூண் வயிற்றில் நடைபெறு பக்ரீரியாக்கள் முதலில் பூறியாவை பின்பு நைதரசனல்லாத சேர்வை ாக மாறுகின்றன. இந்தத் தொழிற் டய சக்தி, இலகுவில் செமிபாடடையக் ங்கப்பட வேண்டும். ஒரு தீன் கலவை வைதவேட் குறைவாகக் காணப்படின் ணப்படின் இம் மாற்றம் திறமையாக கால்நடைச் செறிவுணவில் 2-3% வைச் சேர்க்கலாம். அளவுக்கு மேல் டுக்காமற் பார்த்துக் கொள்வதற்காக நன்கு சேரும்படி கலத்தல் முக்கிய ண்டுமானுல் சேர்க்கப்படும் யூறியாவின் மாக காபோவைதரேட்டை அதாவது வேண்டும். மாடுகளிற்குப் பயன்படும் குப் பயன்பட மாட்டாது. - தற்கான தேவைகள் பூர்த்தி 6) քվյալն தளிக்கப்பட்ட வைக்கோலே கால்நடை |ப்படக் கூடியதல்ல. முதலாவதாக, ம் அதிகமாகக் காணப்படுவதால் இது இரண்டாவதாக, விரைவில் பயன் மிகக் குறைவாகவே இருக்கின்றது. டிய ஏதாவது தானிய வகைகளைச் பயோகப்படும். அல்லாவிடின் இதல்ை வைக்கோலுக்கு யூறியாக் கரை
2.

Page 28
-്ഞു. தெளித்துக் கால்நடை
தகுந்த ஆராய்ச்சி முடிவுகளு துண்டுகளாக வெட்டி யூறியா என்ற விகிதத்தில் கலந்து,
விகிதத்திற்கு இக்கலவையை
(ஆதாரம்
வினு :-மாட்டுக்கு தொடர்ந்து 6O6) Idi
பதைப்பற்றித்தங்கள் கருத்து
விடை உநெற்பயிரில் நெல் மணிகள்
உணவுப் பொருட்களிற் ே
அவற்றில் சேமித்து வைக் முற்றியதன் பின்பு தண்டு, னேப் பதார்த்தங்கள் மிகக் கோலில் காபோவைதரேட்டு புக்கள் ஆகியவை மிகச் வைக்கோலில் நாரின் அள கும் தன்மையும் (Digestibi அதிகளவு சிலிக்கேற்றுக் (Oxalate) {20}I’ll 1.5G)ổ), உணவாகவூட்டினுல் ஒக்ச ஏற்படவும் இடமுண்டு. வை. போட்டு வைத்தலினுல் இந் இதனைக் காயவைத்து உன் செய்யும் பொழுது போஷனை கோலை மாடுகட்கு நிறைய கும் சேர்த்துக் கொள்ளுதல் JITGg5&š EEGODTG2G) (Molasse: இதனை விரும்பி உண்ணும்.
(ஆதார
22

களுக்கு ஊட்டுவது சம்பந்தமாக எதுவித நம்பத் நம் இல்லை. எனினும், வைக்கோலைச் சிறு சிறு வுடனும் தானியத்துடனும் முறையே 30, 2, 18 வழமையில் ஊட்டப்படும் செறிவுனவில் 10 சத
உபயோகிப்பது நன்மை பயக்கலாம்.
Animal Production and Health Bulletin)
கோலைப் பெருமளவில் உண்ணக் கொடுப்
தோன்றி முதிர்ச்சியடையும்போது பயிரிலுள்ள பருமளவு நெல்மணிகளுக்குக் கடத்தப்பட்டு கப்படுகின்றன. ஆகையினுல் நெல் மணிகள் இலைகள் போன்ற பிற பயிர்ப்பகுதிகளில் போச அளவிலேயே இருக்கும். வைக் க்கள், புரதங்கள், உயிர்ச்சத்துக்கள்,கொழுப் சிறிதளவாகவே காணப்படுகின்றன. மேலும், வு கூடுதலாகவிருப்பதனுல் இதனுடைய செமிக் ity) மிகக் குறைவானதாகும். வைக்கோலில் களும் (Silicates) ஒக்சலேற்றுக்களும் தொடர்ந்து இவற்றை கால்நடைகட்கு Boon) Big5 560730, Lin (Oxalate Toxicity) க்கோலே நீர்த் தொட்டிக்குள் ஒரு நாளைக்கு த ஒக்சலேட்டுக்கள் கழுவப்பட்டுவிடும். பின்பு னவாக உபயோகிக்கலாம். ஆனல், இவ்விதம் ப் பதார்த்தங்களும் கழுவப்பட இடமுண்டு வைக் அளிப்பதானுல் போதுமான அளவு பிண்ணுக் அவசியம். மேலும், ஐதான கரும்பு வெல்லப் :) வைக்கோலின் மேல் தெளித்தால் மாடுகள்
ம் : “ ஊற்று '-விவசாய சிறப்பு மலர்)
கமத்தொழில் விளக்கம்

Page 29
பசுப் பால் : எருமைப் பால் :
பசு, எருமை, ஆடு ஆகியவற்றின் பாலுக வேறுபாடு இவற்றிலே காணப்படும் புரதம், தங்கியுள்ளது. எருமைப் பாலில் அதிகள6 பால்களின் இரசாயனப் பாகுபாடு ഭൂ 冯 ഞഖൈ', கல்லூரியைச் சேர்ந்த உயிரியல் g
藍首 សា83yTលែ |
எருமைப் பால் 822 4 • 8
87.1. 4-S
ஆட்டுப் பால் 87-0 4-S
கறவைகளினுல் உட்கொள்ளப்படும் உண புரத, கொழுப்பு அளவுகள் வேறுபடும். ஒவ் அவற்றின் தரத்திலும் வேறுபடும்.
(sigliĝiE fTJ Lio : An.
நைதரசன் பொஸ்பரஸ்
(N. P.
தாவரங்கட்குத் தேவையான போசணைக என்பன தவிர மிக முக்கிய பெரும்பாக பொட்டாசியம் என்பனவாகும். இப் ே (Inorganic) பசளைகள் மூலமே நாம் தற்கா இத்தகைய அசேதனப் பசுளைகள் கிடைக்கா பாவித்து வந்த சேதனப் பசளேகள் மூலமும் முடியும். கீழேயுள்ள அட்டவணையில் உள் பொருட்களின் போசணைத் தன்மை தரப்
மலர் 19-இதழ் 1, 1975
 
 

ளுக்கிடையே உள்ள இரசாயன ரீதியான கொழுப்பு ஆகியவற்றின் அளவிலேயே புரதமும், கொழுப்பும் உண்டு. இப்
ரப்பட்டுள்ளது. இத்தரவுகள் பேராதனை
இரசாயனப் பேராசிரியரால் வழங்கப்பட்டது
புரதம் கொழுப்பு கல்சியம் பொஸ்பேட்
43 7·5 -
3-4 37 1-6 On 2
3-3 4·2 0-2 0.32
வின் வகையைப் பொறுத்து பால்களின் வொரு பாலிலும் காணப்படும் புரதங்கள்
imal Production and Health Bulletin)
) : GITL LLIT GALLID
Κ.)
வில் கார்பன், ஐதரசன், பிராணவாயு போதுஜனகள் நைதரசன், பொசுபரசு, பாசனைகளைப் பொதுவாக அசேதனப் லத்திற் பயிர்களுக்கு அளிக்கின்ருேம். தபோது, நாம் தொன்று தொட்டுப் இப் போசணைகளை ஒரளவிற்கு அளிக்க நாட்டிற் கிடைக்கக்கூடிய சில சேதனப் பட்டுள்ளது. இவ்வாறு போசணைகளின்
23.

Page 30
அளவைக் குறிப்பிடும்போது, நைதரசனை எனவும், பொட்டாசியத்தை K0% என சேதனப் பொருள்
மாட்டுச் சாணம் (உடன்) மாட்டுச் சாணம் (உலர்ந்து) மாட்டுச் சிறுநீர்
ஆட்டுச் சாணம் செம்மறி ஆட்டு எரு பட்டுப்புழு எரு கோழி எரு பன்றிச் சாணம் (உடன்) குதிரை எரு
安GöTö)
L字985)。 リエ○活
கடற்பாசி சீமைக்கிழுவை ஆடாதோடை காட்டு இலைகள் கூட்டெரு சல்வீனியாக்களை (உடன்) நிலக்கடலைப் பிண்ணுக்கு ஆமணக்குப் பிண்ணுக்கு எள்ளுப் பிண்ணுக்கு இலுப்பைப் பிண்ணுக்கு மீன் கழிவு/உலர்த்திய மீன் էԸՄg: Επιρρίου தென்னம் பொச்சுச்சாம்பல் நெல் உமிச் சாம்பல்
இதே வேளையில் அசேதனப் பசளைகளே 20:5%, அமோனியம் குளோரைட்டில் அமோனியம் சல்பேற்-நைற்றேற்றில் 26 9) 600:TGólói) (Blood Meal) i 15%, Llí), பொசுபேற்றில் 27%, சாதாரண சுட்பர் பேற்றில் 46% P,0; உண்டு. பொற்ருசிய 50% 60%, பொற்றசியம் சல்பேற் உள்ளது. மேற்கூறியவற்றைப் பார் பிடும்போது அசேதனப் பசளைகள் வரையில் எவ்வளவு செறிவானவை பெரும்பாலும் விவசாய விஞ்ஞானிகள் ,
(ஆதாரம் :
g
பயிர்களும் நில தாவரங்களின் வளர்ச்சியைக் கட்டுப்படு | La G7ë (pH) OPGÖTICINOGULO. GGJ GGJ TOTS
V
24
 

N%- எனவும், பொசுபரசை P.05% ாவும் குறிப்பிடுவார்கள்.
N P K
L0SS0 000SS0 S 000 S S0S0S0SKS 00SSS
0SS0SSSSS0SSS S0 S000S0S0S00S00S S
நுண்பாகம் - - 5 y
2 -3 0°4-07 . . L = 5 1.98 1.30 . - 2. ვ0 ·
维·5L 。,丑·32 3.81 11.5 0.8-1. != '';
0·55 . 0-55 。。{}.4
O-70 ... 0-69 ... 0-83
2·30 0'5. . . '79
0-80 ... 0-30 。,0·20 1.10 0.82 · ვ. 20
2-90 。,0·50 2-80
250,060 , , 29() 1.20 0-60 (40)
0-60 ... 03-06 02-0S 0 * 13 நுண்பாகம் 0.28 7-60 180 - 5:30 I-68 _
50 1-40 . . .
270 90 . . . 2-4 |- நுண்பாகம்
% జ- , , - ,,3
- ,,2 。,20-30
m-— ,丑 ... 2
எடுப்போமாயின் அமோனியம் சல்பேற்றில் 240%, அமானியம் நைற்றேற்றில் 33% 0%, சோடியம் நைற்றேற்றில் 16%, இரத்த பாவில் 42% நைதரசன் உண்டு சபோஸ் பொசுபேற்றில் 18%, செறி சுப்பர் பொசு h (g(3G) TGmfösólóð (Muriate of Potash) 1626) (Sulphate of Potash) 50% KO கையில் சேதனப் பொருட்களோடு ஒப் N. P. K. பெறுமானத்தைப் பொறுத்த ன்பது புலனுகின்றது. இதன் காரணமாகவே அசேதனப் பசளைகளைச் சிபார்சு செய்கின்றனர். ஊற்று ’-விவசாயச் சிறப்பு மலர்)
LG 6T3 (pH) விச்சும் த்தும் வெவ்வேறு காரணிகளில் மண்ணின் பயிரும் ஒரு குறிப்பிட்ட pH இலோ
கமத்தொழில் விளக்கம்

Page 31
அல்லது pH வீச்கிலோதான் நன்கு வலி
பயிர்கட்குத் தேவையான pH வீச்சுத் தரப்
நெல்
கோது
தோடு
கரும்
է|605 եւ
உருளை
@ FTÓ!
தக்கா வென்
உள்ளி
வென்
பீட்ரூ
கோவ
கெக்க
எலுமி (ஆதாரம் : “ ஊற்று
உயர் புரத High Prote
எத்தனையோ வருட ஆராய்ச்சியின் பலரு சதவீதத்தினுல் உயர்த்த முடியும் என வி யில் முழு வெற்றி பெற்றல், எவ்விதக் முக்கிய உணவாகக் கொள்ளும் ஆசிய மக் வீதத்தால் உயரும். சர்வதேச நெல் ஆராய இனத்தின் விளைச்சலை ஒத்த ஆணுல், அதே புரதம் கொண்டுள்ள அரிசியைத் (ஐ.ஆர்-8 தருகின்ற ஒரு நெல்லினத்தை கலப்பினட் கின்றனர். உடற்ருெ ழிலியல் அடிப்படையில்
வருக்கங்களுக்கும் இடையிற் சில வித்திய
தமது இலைகளிலிருந்து கூடியளவு நைத செய்கின்றன. இவற்றின் மணிகளிற் சுயாதீ6 இருக்கின்றன. அத்துடன் மணிகளுள்ளே
பெறுகின்றது. இத்தகைய உயர் புரத இன பிரச்சினை என்னவெனில், இவற்றின் உயர் சேர்த்துக் கொள்வதாகும். இவ் வருடம் ( இன் விளேச்சலையும் அதே வேளை உயர் புரத இனங்களே (Test Line) விஞ்ஞானிகள்
சில நோய், பீடை போன்றவற்றின் தாக்க ஒரு இனத்தின் புரத அளவு, நோய் பீன (மழைவீழ்ச்சி, சூரிய ஒளி, வெப்பம்) வ6
அநேக சூழ்நிலைக் காரணிகளால் நிர்ணயிக்க
எனவே இச் சூழ்நிலைக் காரணிகள் தகு மேற்கூறிய பரிசோதனைகளில் தொடர்ந்து இ
விளேச்சலும்) அளிக்குமாயின், இவற்றிற் சின
விவசாயிகளுக்கு விரைவில் வழங்கப்படும்.
(ஆதாரம் 1
மலர் 19-இதழ் 1, 1975

ரும். கீழேயுள்ள அட்டவணையில் சில T(BGr@g.
uíño - சிறப்பு
pHsisg,
- - - - 5-6.5 30 in ,6·5–7.5
լի - .. 5・5-7・5
- - - 6-8 iଥିର) .. .,5、5–7·5 க் கிழங்கு - - 5-5.5 [) .. as .. - - 6–7,5 მიჩ , 5.5-7.5
1755 fTLJE) - - 5-8-7
.. - - ,5-5-8
TLς. - - 6–7·5 - - 6-7-4.
PT. . .. 6-7.5
- - 5.5-7.0 |ழ்டுரை - 6-7-5
'-விவசாயச் சிறப்பு மலர்)
அரிசி ডাঃ ফ্লাহুগু-ভঙ্গ দৃঢ়ােগাষ্ঠী” in Rice பாழ்ப்பாணம்.
கை அரிசியின் புரத அளவை 25-30 தஞானிகள் கண்டுள்ளனர். இம் முயற்சி கூடுதலான செலவுமின்றி, அரிசியை 5ளின் புரத உட்கொள்ளல் 10-20 சத பச்சி நிலைய விஞ்ஞானிகள் " ஐஆர்-8' வேளையில், 2 சத வீதம் கூடுதலான இன் சராசரி புரத அளவு 7 சத வீதம்) பிறப்பு மூலம் பெறுவதற்கு முயல் உயர் புரத வருக்கங்களுக்கும் சாதாரண பாசங்களுண்டு. உயர் புரத பேதங்கள் ரசனை நெல் மணிகளுக்கு இடமாற்றம் னமான அமினே அமிலங்கள் கூடுதலாக புரதத் தொகுப்பு விரைவாக நடை ங்களே உற்பத்தி செய்வதில் ஒரு முக்கிய புரதத் தன்மையோடு உயர் விளைச்சலையும் முதன் முறையாக, கிட்டத்தட்ட ஐஆர்-8 நத்தையும் தரவல்ல அநேக பரிசோதனை இனங்கண்டுள்ளனர். இவ்வினங்களிற் 52ல எதிர்க்கும் சக்தியும் வாய்ந்தவை. ட போன்றவற்றின் தாக்கம், காலநிலை ாட்ாக்கிப் பிரயோகம் என்பன போன்ற ப்படும் என்பது விஞ்ஞானிகளின் கருத்து. இந்த அளவிற் கொடுக்கப்படும் போது, இவ்வித நற்பயனை (உயர் புரதமும், உயர் இனங்கள் செய்கை பண்ணும் பொருட்டு
RRI Reporter 373) 15657n) * pation)|)
25

Page 32
A.
நெடுங்கேணி வாழைச் ெ
நெடுங்கேணி வாழைச் செய்கை அபிவிரு தித் திட்டம் 1972 ம் ஆண்டு மாசி Ոng இரண்டாம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இ. திட்டமானது, நெடுங்கேணி முல்லைத்தீவு பி தான பாதையில் நெடுங்கேணி காரியாதிகா பணி மனையில் இருந்து ஒரு மைல் தூரத்தி Litaoa,Guirginia, உள்ளது. மொத்தம் List னெரு எக்கரைக் கொண்ட இத்திட்டம் ୫{ பக்கம் ஏழு ஏக்கரையும், மறு பக்கம் நான்கு ஏக்கரையும் கொண்டதாகவும் நடுவில் ଔଷ୍ଠ୍ଯ பாதையைக் கொண்டதாகவும் அமைந்துெ
Koř1951.
வவுனியா வடக்குப் பிரதேச அபிவிருத்தி g@_juួfiឆ្នាំ) ஆரம்பிக்கப்பட்ட இத்திட்ட தால் பதினுெரு Liga, GŞj TGSD jiff gGST (ఇదిలి வாய்ப்பைப் பெற்றுள்ளார்கள். இவர்களு குத் தலா ஒவ்வோர் ஏக்கர் காணி வழங்கப்ப
டுள்ளது. வாழைக்குகந்த மண் என கம,
26
 

சய்கை அபிவிருத்தித்திட்டம்
嘉
主 岳飞
荡
安
ஊக்கமும் அளிக்கப்பட்டது.
தரத் தொடங்கின. இப்போ ஒவ்வொரு அங்
த. ம. தெய்வேந்திரன்,
@g Uប្រាr@T,
வாழைச்செய்கை அபிவிருத்தித் திட்டச் சபை,
நெடுங்கேணி, தொழில் திணைக்களத்தைச் சேர்ந்த மன்
சோதனை நிபுணர்களால் சிபார்சு செய்யப்பட்ட
பின்னரே மேற் கூறப்பட்ட இடம் தெரிவு
செய்யப்பட்டது. வாழைத் தோட்டத்தைச் சுற்றி
யடைப்பதற்கு அரசினரால் இனமாக முட்
கம்பி வழங்கப்பட்டது. அத்துடன், இனமாக
வும், கடனுகவும் பணமும் வழங்கி உதவியும்,
தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியை பதினுெரு
வாலிபர்களும் காடு வெட்டி, அடிக்கட்டை
பிடுங்கிக் காணியைத் துப்பரவு செய்தனர். (சிலர் புல்டோசர் மூலமும் துப்பரவு செய்த னர்). காணியில் நாட்டுவதற்கு முத்தையன்
கட்டில் இருந்து வாழை இனங்கள் பெறப்
பட்டன. ஐம்பது வீதம் கதலி இனமும்,
இருபத்தைந்து வீதம் மொந்தன் இனமும், மிகுதி கப்பல், இதரை, செவ்வாழை, பன்றி
வாழை, போன்ற இனங்களும் நாட்டப்பட்டன. ஆணுல் நாட்டப்பட்ட காலம் மாரி காலமாகை யால் இருபத்தைந்து விதமளவான வாழைக் குட்டிகள் அழுகிப் போயின. வாழை நட்ட
வுடனேயே இடைப் பயிராக கட்டையினத்
துவரை ' நாட்டப்படலாம் என கமத்தொழில் திணைக்கனத்தினர் செய்த சிபார்சின்பேரில்
துவரை பயிரிட்டோம் ஆனுல் காய் துளைப் புழுவின் அதிதீவிர தாக்கத்தால்
L厅ā’
அதிக வருமானம் எடுக்க முடியாமல் போய்
விட்டது. ஆயினும் அத்திட்டத்தை ஈடு செய் யும் வண்ணம் வாழைகள் எமக்குப் பலன்
கத்தவரும் மாத வருமானமாகச் சராசரி
நூற்றியம்பது ரூபா தொடக்கம் இருநூறு
ரூபாய் வரை வருமானமாகப் பெறுகின்றேம்.
கமத்தொழில் விளக்கம்

Page 33
ൂ Gräi தோட்டத்திற்கும் G வில் ஐந்து கிணறுகள் தோண்டிக் 座LLLL ଔର୍ତTତTଓ୪t. இவை ஒவ்வோர் அங்கத்தினாலும் காணியின் p@ எல்லேயில் சரி பாதியாக 乌6@星G யும் a இரு மிதிகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளன. ஆனல் ତ୍ରି (B) இண்று Lin (Dh ep6 ji(USE LJEETdS அமைக்கப்பட் டுள்ளது. இக்கினறுகளின் விட்டம் பதினேந்து 9, 19.LIT56)|| ഴ്ച് நிலைக்கேற்ப இருபது அடி
தொடக்கம் முப்பது அடி ஆழம் வரையிலும்
@ក្លា*___Böក្រភ្ញា.
நீர் இறைப்பதற்கு நீர் இறைக்கும் இயந்தி
ரங்கள் மூன்று (பெரிய சென்றிக்) தரப்பட் (ତ୍tତ[Tତ୪t. Gallison திட்ட அங்கத்தினர்கள் நால்வருக்கு ஒன்றக இரு இயந்திரங்களேயும் ஒரு இயந்திரத்தை மூவருமாகப் பாவிக்கின் 6(ը)լԻ. நீர் இறைக்கும் இயந்திரங்களில் திருத்த வேலைகள் செய்யும்போது கூட்டுறவு ൈ കെൂ.
@
மலர் 19-இதழ் 1, 1975
2-A1 36SS (4.175)

அறுவடை செய்யும் வாழைக் குலேகளே ରା முறையிலேயே விற்பனவு செய்தி நம் அதிக ខ្សត្រ அறுவடை செய்யும் (၂စ္ဆား#ားနှေဂူကြီး @11-05-3) உள்ளூர்களில் விற்க முடி து போகிறது. இதனுல் வவுனியா, அநு தபுரம், முல்லைத் தீவு ஆகிய இடங்களுக் விற்பனை செய்வதுண்டு. இதற்கான ஏற் டுகளே எமது வாழைச் செய்கை அபிவிருத்தி *ன்றம் கவனித்து வருகிறது. இந்த மன் த்தின் போஷகராக வவுனியா வடக்கு காரி திகாரி திரு. அ. 氨 பத்மனுதனும் a೧ ருத்தி உதவியாளராகத் திரு. சிதம்பரநாத பம் இருக்கின்றர்கள் நிர்வாகம், அங்கத்தி
ர்களைக் கொண்டதாகும்.
படித்துவிட்டு வேலையற்றிருந்த எமக்கு இவ் பிவிருத்தித் திட்டத்தால் வேலே வாய்ப்பு டைத்ததுமல்லாமல் வருமானமும் பெறுகின் றும். கமத்தொழில் திணைக்களத்தினரின் லோசனைகள் எமக்குத் தகுந்த நேரங்களில் டைப்பதால் 6F LD5I 5J 5 SNITTGHULI ၈r# ബ]
திகமாகவே பெறுகின்ருேம்.
27.

Page 34
மரமுந்திரிகைப் பழத்தில் உயிர்ச்சத்து கெதியில் பழுதுபடுவதாலும், அதில் பற்றன் பைத் தவிர பழத்திற்குச் சந்தைமானமில்2 ஆல்ை, 20 ம் நூற்றண்டில் இவ்வளவு நாகரீக மோகத்தில் ஈடுபடும் ក្រៅ 95T இருந்து (கசுப் பழத்திலிருந்து) எடுக்கக் கூ ஆல்ை, தற்பொழுது கிருஷிகப் பகுதி உத பல வகையான உணவுப் பதார்த்தங்களே ! தயாரித்துக் காண்பிப்பதற்கு ஏற்ற நடவடிக்
 
 
 

} ട്ടീ
ー。
நீகக் கூடிய உணவுப் பொருட்கள்
செல்வி நடேஸ்வரி நடராசா, மாட்ட விவசாய அலுவலகம், மட்டக்களப்பு
நம் நாட்டில் மரமுந்திரிகை ஒரு முக்கிய அகவளர் விருட்சமாக இருக்கின்றது. இம் மரத் gడ్రా 56 бајта, பாகங்களிலிருந்தும் நாம் பலவிதமான பிரயோசனங்களேப் பெறுகிருேம்.
சிற்றுண்டிகள் தயாரிப்பதற்கு முந்திரிகைப்
பருப்புப் பெரிதும் பயன்படுவது மட்டுமன்றி
இதன் சுவை, ஊட்ட மதிப்பு, முதலிய தன் மைகளில் ஆதாம் பருப்புக்குச் சமமானதாகும். இதில் 21:5% புரதமும், 22% காபோவை தரேட்டும், 50-52% கொழுப்பும் உளது.
இதைவிட பொஸ்பரசும், கல்சியமும், இரும்
பும், அத்தோடு உயிர்ச்சத்து ஏ, பி, பி ஆகி யனவும் உண்டு பருப்பின் மெல்லிய செந்
நிற உறையும், பருப்புச் சிறு துண்டங்களும்
கோழிகளுக்கும் பன்றிகளுக்கும் சிறந்த உண
б) ЈгТСъLia.
சி’யும் கறற்றினும் உண்டு. ஆனுல் இப் பழம் அதிகம் உண்டாகையாலும் முந்திரிகைப்பருப்
ல என்றே முன்பு ஒரு காலம் கூறினுர்கள்.
உணவுப் பற்றக் குறையுள்ள காலத்தில் கூட
பெண் மணிகள் இம் முந்திரிகைப் பழத்தில் டிய பிரயோசனங்களே உதாசீனம் செய்கிருேம். தியோகஸ்த்தர்கள் இளம் கமக்காரர் கழகங்களில் Bill பழம், கசுப் பருப்பு முதலியவற்றில் இருந்து கைகளே எடுக்கின்றர்கள்.
கமத்தொழில் விளக்கம்

Page 35
மரமுந்திரிகை
தேவையான பொருட்கள் :
மரமுந்திரியம் பழம் 30. பச்சையரிசி 1 சுண்டு. சீனி அல்லது வேறு ஏதாவது சமனுன இளம் தேங்காய் பாதி முந்திரியம் பருப்பு, திராட்சை வற்றல். உப்பு, வனிலா, விரும்பிய நிறம்.
செய் முறை :
பழங்களைச் சிறு சிறு துண்டுகளாக பழத்துண்டுகள் எதுவும் இல்லாதவாறு , காய்ச்சும் பொழுது எழும் நுரையினைத் @', நுரை இல்லாது இருக்கும் போது அடுப்பில கரைக்குக. பின்பு இக்கரைசலே நன்றக
தேங்காய்த்துருவலேயும் மாறி மாறி இட்டு
நறுக்கிய பருப்புகள், வனிலா, உப்பு, நிறமூட் நல்ல இறுக்கம்ான கழியாகத் தோன்றும். ஆவியில் அவிக்கவும். நன்கு அவித்ததும் வெட்டிப் பரிமாறலாம். இதைக் குளிர்சாதன Զ-633163016մIIԼԻ. :
இது மரக்கறி வகைக் கேக்கைச் சார்ந்தது பலவித அலங்காரங்களுடன் அழகாக
, ,
விருப்பத்தையும் பொறுத்து ' புடிங் அ
பாணி (உள்ளூர்
தேவையான பொருட்கள் :
மரமுந்திரிகைப் பழம் பழப்புளி მე-16უჩვე)|fir . . .
செய்முறை :
பழங்களிலிருந்து சாற்றினை நன்கு பிழிந்து இல்லாதபடி நன்கு வடித்தெடுத்த பின் பானைக்குள் இச் சாற்றை ஊற்றிக் காய்ச்சு நுரையை முற்றுகக் கரண்டியால் அகற்றிய பழப்புளியை வடித்து இக்கலவைக்குள் நேரத்தின் பின் கரைசலானது நன்கு இ
விரும்பிய பதத்தில் வாசனைக்காக வனின்
போத்தலில் அடைத்து வைத்திருப்பின் ே வேறு உணவுகளுடன் பூசிச் சாப்பிடலாம்
இந்த முந்திரிப் பாணியானது தற்போை
சிக்கனமான சுவையுள்ள நீண்ட காலம் 6ை யான பொருளாகும்.
மலர் 19-இதழ் 1, 1975

பழக் கேக்
அவற்றை நன்கு பிழிந்து சற்றினைப் நன்கு வடித்தெடுத்து நன்கு காய்ச்சுக தாடர்ச்சியாக ஒரு கரண்டியால் அகற்ML)Jğ5. ருந்து இறக்கிச் சினியை இட்டு நன்ருகக் ஆறியதும் இடித்த அரிசிமாவையும் கிண்டவும். பின்பு திராட்சை வற்றல், யாவற்றையும் அளவிற்குக் கலந்ததும் ன்னர் இட்லி அவிப்பது போல் ஊற்றி இறக்கவும், பின்பு நன்றக ஆறியதும் ப் பெட்டியில் வைத்துக் குளிர்ப்படுத்தியும்
பிறந்த தினக் கொண்டாட்டத்திற்குப் @@i5)ಗ್ರ: ೭ié(T தேவையையும் விப்பது போல் அவித்து அலங்கரித்தும்
த் தயாரிப்பு)
200
2 அவுன்ஸ் 2 தேக்கரண்டி
அச்சாற்றினுள் பழத்துண்டுகள் jón அடியில் நீறிய சுண்ணும்பு பூசிய ஒரு க. இவ்வாறு காய்ச்சும்போது எழும் பின் நன்றகக் கரைத்து வைத்திருக்கும் விட்டுத் தொடர்ந்து காய்ச்சுக சிறிது றுகிப் பாணியாக வரும்போது எமக்கு ாவும் சேர்த்து இறக்கி ஆறவைத்துப் வையான நேரத்தில் பானுடன் அல்லது
தய சினித் தட்டுப்பாட்டுக்கு ஏற்ற 9() பத்து உபயோகிக்கக் கூடிய ஒரு இனிமை
29

Page 36
தேவையான பொருட்கள் :
மரமுந்திரிகைப் LI LOLIħ இனி
தேசிக்காய் ஊறுகாய்
செத்தல் மிளகாய்த்து ரள் விஞகிரி ● இஞ்சியும் வெள்ளேப்பூடும் சிறித
செய்முறை :
உறுகாயை நன்ருக நறுக்கி அரிந்து முந்திரிகைப் பழத்தை நன்றக நறுக்கி | լճ1661ւ சிறிது நேரத்தால் எடுத்துச் சுத்த மிளகாயத்துரள், விகிைரி, சினி, அ6 முழுவதையும் ஒன்ருக அதற்குள் இட்டு பதம் வரும்வரை காய்ச்சுக. விரும்பின இடலாம். ஆறிய பின்பு பாத்திரத்துள் காலம் பழுதாகாது @iigi:
பழச்சாறு
தேவையான பொருட்கள் :
ണ്ണ . எலுமிச்சம் பழம் வனிலா
சோடியம் மெற்ற இரு #႕ခဲ့ၾ၈၇ j'၊
பழங்களேச் சிறு சிறு துண்டுகளாக வெட சிறு பழத்துண்டேனும் இல்லாதவாறு
பாத்திரம் ஒன்றினுள் ஊற்றிக் காய் நுரையை முற்றக நீக்கிய பின் 2 இரு நிலையை அடையும் வரை காய்ச்சுக பின் இட்டு அத்தோடு வனிலா, சோடியம் மெ. இவ்விரண்டு தேக்கரண்டி இடுக. அத்ே துளி கலந்து நன்றக ஆறிய பின்பு
போத்தல் நிரம்பும் வரை ஊற்றது போ மிருக்குமாறு ஊற்றி, தக்கையினுல் மூடி, வாய்ப்பகுதியை அமிழ்த்தி எடுப்பதால்
பழுதாகாதவாறு இறுக்கமாக LLI'll கலந்து சுவையான குளிர்பானம் தயாரிக்
இவற்றைத் தவிர முந்திரிகைப் பழத்தி மிகுதியாகவுள்ள கழிவை மாட்டுத் தீவன
30
 

இறத்தல்
இருத்தல் 1/8 இருத்தல் 1 அவுன்சு
போத்தல்
BIO).
து ஒரு எனுமல் பாத்திரத்தில் போடுக. முதலில் உப்புக் கரைசலுள் ஊறவைத்துப் மான நீரில் கழுவி அதற்குள் இடுக. பின் ரைத்த இஞ்சி, அரிந்த வெள்ளைப் பூடு அடுப்பில் வைத்து பாணில் பூசக் கூடிய ல் முந்திரிப்பருப்பும், திராட்சை வற்றலும்
போட்டு இறுக்கமாக மூடிவைத்தால் நீண்ட
அல்லது பழரசம்
OO
2 இறத்தல் 5. 2 தேக்கரண்டி
2 தேக்கரண்டி
படி அவற்றை நன்கு பிழிந்து அச்சாற்றிற்குள் நன்கு வடித்தெடுத்து செழும்பு பிடிக்காத ச்சுக. இவ்வாறு காய்ச்சும்போது எழும் த்தல் சினியையும் இதற்குள் இட்டுப் பாகு ன்னர் எலுமிச்சம் பழச்சாற்றையும் அதனுள் ற்ற இரு சல்பைட்டு இரண்டையும் அளவிற்கு தோடு விரும்பிய நிமூட்டும் பொருளில் ஒரு கிருமிநீக்கம் செய்யப்பட்ட போத்தலினுள், த்தல் வாய்க்கு 3 அங்குலம் கீழே திரவமட்ட உருக்கிய முத்திரை மெழுகினுள் போத்தலின் பழரசமானது நீண்ட காலம் பாவிப்பதற்குப் Լւգ-(15ժ5(5ԼԻ. தேவையானபோது நீருடன் 1560/Tլի,
லிருந்து உவைனும் (மதுசரம்) தயாரிக்கலாம்.
Tமாக உபயோகப்படுத்தலாம்.
கமத்தொழில் விளக்கம்

Page 37
பூங்கனியியல் (முன்தொடர்)
இலங்கையில் விவசாயக் க
ஏற்ப பழப் பயிர்களின் பரவ
இலங்கையில் பல்வேறுபட்ட சுவாத்தியமும் மண்ணும் காணப்படுவதால் அயன்மண்டல, உப அயனமண்டல, மத்தித்தரைக்கடற் பிரதே சங்களின் பல்வேறுவகையான பழப்பியிர்களை மட்டுமன்றி இடைவெப்பப் பிரதேசப் பயிர் களைக் கூட இலங்கையின் பல்வேறு பகுதி களிலும் வெற்றிகரமாகப் பயிரிடக்கூடியதாக இருக்கின்றது. இலங்கையில் சுவாத்சியத்தினதும் மண்ணினதும் நிலைகளுக் கேற்ப இலங்கை நாலு விவசாயக்கால நிலை வலயங்களாகப் பிரிக்கப்படுள்ளது. ஒவ் வொரு வலயங்களிலும் அவ்வவ் வலயங் களுக்குப் பொருத்தமான பழப் பயிர்கள் காணப்படுகின்றன.
ஆகவே, மேலே கூறப்பட்டது போல், பழப் பயிர்களுக்கு உகந்த மண் ஆழமாகவும், காற் ருேட்டமுடையதாகவும் நல்ல நீர்வடிப்புடைய தாகவும் இருக்க வேண்டும். பழப் பயிர் களுக்குரிய மண் நீர்த்தேக்கமுடையதாகவும், சேருகவும், உவராகவும், அமிலமாகவும் இருக் கக்கூடாது. அத்துடன் நீர்மட்டத்திலிருந்து 6 அடிக்குள் பரலோ இறுக்கமான படையோ காணப்படக்கூடாது. ஒவ்வொரு வலயத் துக்கும் உகந்த பயிர்களை மண்ணுக்கும் சுவாத் தியத்திற்கும் ஏற்ப, பொதுவாக வகுக்கப்பட்ட போதிலும்சில வலயங்களில் வேறுபாடுகள் காணப்படலாம் என்பதும் இங்கு கவனிக் கப்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட சிறு பகு
மலர் 19-இதழ் 1, 1975
3一A13688(4/75)
 
 

ால நிலை வலயங்களுக்கு
6ձ9
எஸ். ஆர். அரசசிங்கம், விவசாய அலுவலர் (பூங்கனியியல்) பேராதனை.
யில் கூட மண்ணில் வேறுபாடுகல் காணப்
-- ୋ} |#" : {}, இதனுல் அ வ் வலயத்துக்குச்

Page 38
சிபாரிசு செய்யப்பட்ட பயிரை அவ்விடத் குப் பொருத்தமில்லாமற் போகல எனவேதான் ஒருவர் பழத்தோட்டத் ஆரம்பிக்கு முன்பு அந்தத் தரையில் இடங்களில் மண்ணை வெட்டி எடுத்து அ பெளதிக இயற்புகளையும் இரசாயன இ புகளையும் அறிதல் வேண்டும்.
இலங்கையிற் சில விவசாயக் கால ந வலயங்களுக்கு உகந்த பல்வேறு பழ வ கங்களை கீழே உள்ள அட்டவணையில் கா
ܚ- 60ITTh
32
1. ஈரவலயப் பள்ளநாடுவருடாந்தச் சராசரி மழை வீழ்ச்சி ; 80
அங்குலம். கூடிய மழை பெறும் மாதங்களின் எ
னிக்கை 9-11 மாதங்கள். சராசரி வருடாந்த வெப்பம் 75-80 பா:
LU 2007 . உயரம் : 0 - 3,000 அடி. பிரதான மண்வகை : சிவப்புத் தொ கம் மஞ்சள் வரையான பொட்சோ6 மண்கள், லற்ரறைட்ஸ், செங்கபில லற்ே சோலிக் மண்கள், முதிராதகபில இ வாட்டி, பரவல் கொழும்பு, களுத்தறை, கா மாத்தறை, கேகாலை, நுவரேலியாவி சில பகுதிகள், கண்டியின் சில பகு கள், குருநாக்கல், இரத்தினபுரி, ம தளை, புத்தளம் ஆகிய மாவட்டங்கள். பழ வருக்கங்கள் கொடித்தோடை, அ னுசி, வில்வை, டூறியன், மா ( வருக்கங்கள்), றம்புட்டான், மங்குஸ்தா வாழை, பப்பாசி, கொய்யா, அன வுன்ன, சப்பதில்லா, ஆனைக் கொய் அம்பறல்லா.
2. மலேநாடு(அ) அரை உலர் மலைநாடுகள் : வருடாந்தச் சராசரி மழை வீழ்ச்சி : 45
அங்குலம். உயரம் 1,000 அடிக்கு மேல். கூடிய மழை பெறும் மாதங்களின் 6
ணிைக்கை : 4-5 மாதங்கள்.

b வருடாந்தச் சராசரி வெப்பம் : 79-76 3. பாகை பரனேட்
冢 விரதான மண்வருக்கங்கள் : செங்கவில் வித் 油 ரோசோல், சிகப்புத் தொடக்கம் மஞ்சள் 沉 வரையான பொட்சோலிக் மண்கள்.
范)
பரவல் : கண்டியின் சில பகுதிகள், மாத் தளை, நுவரேலியா, இரத்தினபுரி, மொன ராகலை, பதுளை ஆகிய மாவட்டங்கள்.
பழ வருக்கங்கள் ; பப்பாசி, கொய்யா,
507 தோடை, எலுமிச்சை, கிறேப்புறுட், மண்
டறின், லெமன், அன்னசி, கொடித்
தோடை, சப்பதில்லா, ஆனைக்கொய்யா,
அப்பிள், பெயர்ஸ், திராட்சை, அன்ன
O வுன்னு,
(ஆ) ஈரமலைநாடுகள்:-
வருடாந்த சராசரி மழை வீழ்ச்சி ; 85-135
அங்குலம். கூடிய மழை பெறும் மாதங்களின் எண்
ணிக்கை : 7-10 மாதங்கள். வருடாந்தச் சராசரி வெப்பம் : 60-68 பாகை உக் பரனேட்.
體 உயரம் : 3,000-5,000 அடி. இரு பிரதான மண்வகைகள் : சிகப்புத் தொடக் கம் மஞ்சள் வரையான பொட்சோலிக் ബി மண்கள். கூடிய உயரத்தில் கியூமிக் மண்.
s କଅଁt பரவல் : கண்டியின் சில பகுதிகள், மாத்
ததி தளை, நுவரெலியா, பதுளை, கேகால, இரத்தினபுரி மாத்தறை மாவட்டங்கள்.
Πά
岛 பழ வருக்கங்கள் : ஸ்ரோபொறி, அப்பிள், 6T பெயர்ஸ், பீச்சஸ், திராட்சை, கிச்சிலி, சில றஸ்பெறி, கிறனதில்லா,
-:வடக்கு உலர் வலயம் و آ20 蠶 வருடாந்தச் சராசரி மழை வீழ்ச்சி : 45-80
அங்குலங்கள். கூடிய மழை பெறும் மாதங்களின் எண்
ணிக்கை : 2-5; மாதங்கள். வருடாந்தச் சராசரி வெப்பம் : 72-82
JIFT60pas L JU, 2aOOT. 85 உயரம் : 0-1,000 அடி.
பிரதான மண்வகைகள் : செங்கபில மண் கள், குறைந்த கியூம் கிளேய்ஸ், மணல், ருேகோசோல், முதிராத கபில இரு
வாட்டி
கமத்தொழில்

Page 39
சிபாரிசு செய்யப்பட்ட பயிரை அவ்விடத் குப் பொருத்தமில்லாமற் போகல எனவேதான் ஒருவர் பழத்தோட்டத் ஆரம்பிக்கு முன்பு அந்தத் தரையில் இடங்களில் மண்ணை வெட்டி எடுத்து அ பெளதிக இயற்புகளையும் இரசாயன இ புகளையும் அறிதல் வேண்டும்.
இலங்கையிற் சில விவசாயக் கால ந வலயங்களுக்கு உகந்த பல்வேறு பழ வ கங்களை கீழே உள்ள அட்டவணையில் கா GDITth :-
1. ஈரவலயப் பள்ளநாடுவருடாந்தச் சராசரி மழை வீழ்ச்சி ; 80
அங்குலம். கூடிய மழை பெறும் மாதங்களின் எ
ணிக்கை 9-11 மாதங்கள். சராசரி வருடாந்த வெப்பம் 75-80 பா
LU23007. உயரம் : 0 - 3,000 அடி. பிரதான மண்வகை : சிவப்புத் தொ கம் மஞ்சள் வரையான பொட்சோ மண்கள், லற்ரறைட்ஸ், செங்கபில லற்ே சோலிக் மண்கள், முதிராதகபில ( வாட்டி, பரவல் கொழும்பு, களுத்தறை, கா மாத்தறை, கேகாலை, நுவரேலியாவி சில பகுதிகள், கண்டியின் சில ப கள், குருநாக்கல், இரத்தினபுரி, ம தளை, புத்தளம் ஆகிய மாவட்டங்கள். பழ வருக்கங்கள் கொடித்தோடை, ! சிை, வில்வை, டூறியன், மா ( வருக்கங்கள்), றம்புட்டான், மங்குஸ்தா வாழை, பப்பாசி, கொய்யா, அன வுன்ன, சப்பதில்லா, ஆனைக் கொய் அம்பறல்லா.
2. மலைநாடு(அ) அரை உலர் மலைநாடுகள் : வருடாந்தச் சராசரி மழை வீழ்ச்சி : 48
அங்குலம். உயரம் 1,000 அடிக்கு மேல். கூடிய மழை பெறும் மாதங்களின் (
ணிைக்கை : 4-5 மாதங்கள்.
32

LdŠ பிக் វិទ្យា இரு
ன்ெ
ததி ாத்
yedit G)
T60T
LfT
வருடாந்தச் சராசரி வெப்பம் : 79-76
பாதுை பரனேட்
விரதான மண்வருக்கங்கள் : செங்கமில வித் ரோசோல், சிகப்புத் தொடக்கம் மஞ்சள் வரையான பொட்சோலிக் மண்கள், !
பரவல் : கண்டியின் சில பகுதிகள், மாத் தளை, நுவரேலியா, இரத்தினபுரி, மொன ராகலை, பதுளை ஆகிய மாவட்டங்கள்.
பழ வருக்கங்கள் ; பப்பாசி, கொய்யா, தோடை, எலுமிச்சை, கிறேப்புறுட், மண் டறின், லெமன், அன்னசி, கொடித் தோடை, சப்பதில்லா, ஆனைக்கொய்யா, அப்பிள், பெயர்ஸ், திராட்சை, அன்ன வுன்னு,
(ஆ) ஈரமலைநாடுகள்:-
வருடாந்த சராசரி மழை வீழ்ச்சி ; 85-135
அங்குலம். கூடிய மழை பெறும் மாதங்களின் எண்
ணிக்கை : 7-10 மாதங்கள். வருடாந்தச் சராசரி வெப்பம் : 60-68 பாகை பரனேட், உயரம் : 3,000-5,000 அடி. பிரதான மண்வகைகள் : சிகப்புத் தொடக் கம் மஞ்சள் வரையான பொட்சோலிக் மண்கள். கூடிய உயரத்தில் கியூமிக் மண். பரவல் : கண்டியின் சில பகுதிகள், மாத் தளை, நுவரெலியா, பதுளை, கேகால, இரத்தினபுரி மாத்தறை மாவட்டங்கள். பழ வருக்கங்கள் : ஸ்ரோபொறி, அப்பிள், பெயர்ஸ், பீச்சஸ், திராட்சை, இச்சிலி, றஸ்பெறி, கிறன.தில்லா,
3. வடக்கு உலர் வலயம்:-
வருடாந்தச் சராசரி மழை வீழ்ச்சி : 45-80
அங்குலங்கள்.
கூடிய மழை பெறும் மாதங்களின் எண்
ணிக்கை : 26-5; மாதங்கள்.
வருடாந்தச் சராசரி வெப்பம் : 72-82
JITGODS LJU 26OOT".
உயரம் : 0-1,000 அடி.
பிரதான மண்வகைகள் : செங்கபில மண் கள், குறைந்த கியூம் கிளேய்ஸ், மணல், ருேகோசோல், முதிராத கபில இரு வாட்டி
கமத்தொழில் விளக்கம்

Page 40
பரவல் : யாழ்ப்பாணம், வவுனியா, மண் னர், அனுராதபுரம், திருகோணமலை, பொலனறுவை, குருநாக்கலின் ഉഓf பகுதிகள், புத்தளம், மாத்தளை மாவட் Liggit.
பழ வருக்கங்கள் வமா, ராழை, பப்பாசி, தோடை, எலுமிச்சை, கிறேப் புறுட், மண்டறின், கொடித்தோடை, திராட்சை, பலா, விளாத்தி, மரமுந்திரிகை, சப்ப தில்லா, வில்வை, மாதுளை, நெல்லி.
4. தென் கிழக்கு உலர் வலயம்
வருடாந்தச் சராசரி மழை விழ்ச்சி :
45-80 அங்குலங்கள். கூடிய மழை பெறும் மாதங்களின் எண்
ணிைக்கை 3-5 மாதங்கள்.
F6.
அரிசி சோளம், இறுங்கு ஆகியவற்றைக் காட்டிலும் சாமை சாமை ஒர் சிறந்த சமச்சீர் உணவாக விளங்குகின்றது.
புரதம்
தீட்டிய அரிசி - - 6.3
நாட்டரிசி - - 7.44
Gig First - - - 7.2
இறுங்கு .. - - 7.75
said 丑1,4、
(ஆதாரம்: இரசாயனவியற்பகு
மலர் 19-இதழ் 1, 1975
4—A13688(4/75)

வருடாந்தச் சராசரி வெப்பம் 78-82
μπσ0).5 LIU2οOOIL'.
உயரம் : 0-1,000 அடி.
பிரதான மண்வகைகள் : செங்கபில மண், முதிராத கபில இருவாட்டி, கல்சியம் அற்ற கபில மண்கள்.
பரவல் : மட்டக்களப்பு, அம்பாறை, மொன TTEdតាល அம்பாந்தோட்டை மாவட்டங் கள், இரத்தினபுரி, பதுளை, கண்டி நுவரெலியா, மாவட்டங்களின் பகுதி 856Ո:
பழவருக்கங்கள் : மா, வாழை, பப்பாசி, தோடை, எலுமிச்சை, மண்டறின், கிறேப் புறுட், பலா, திராட்சை, விளாத்தி, மர முந்திரிகை, வில்வை, மாதுளை, நெல்லி, சப்பதில்லா, கொடித்தோடை,
SQLD)
யில் அதிக புரதமும், கணிப்பொருட்களும் காணப்படுவதால்
B
காபோகைட்றேட் கொழுப்பு கணிப்பொருள்
78.4 . ().38 . . . 6 ().
77.28. {},苏沅 0.9S
73.76 - - 3.99 - - 1.04.
74,93 3. ე:2 - . 2.89
59.75 。 器,{}8, 4 98,
தி கமத்தெ
33
霧

Page 41
கறவை வளர்ப்பு-15
பயன்தரும் அனுபவங்கள்
கருப்பை
1. கன்று ஈன்றதும் சில மணித்தியால நேரங்களில், நஞ்சுக்கொடி வெளியேறும். நஞ்சுக்கொடியென்பது கன்று வயிற்றுக்குள் இருந்த பையாகும். வழமையாக ஒரு நஞ்சுக் கொடியைத்தான் எதிர்பார்க்கவும். கஷ்டப் ιδπ6) 19ELρπα, இருந்தால், நஞ்சுக்கொடி அறுந்து துண்டுகளாக வெளிவரக்கூடும் இரண்டு கன்றுகள் ஈன்றல் சில வேளைகளில் இரு நஞ்சுக் கொடிகளை எதிர்பார்க்கவும் பிறந்த கன்றுகள் ஒரே நிறம், ஒரே குறிகளை யுடையதாகப் பிறந்தால் ஒரே நஞ்சுக்கொடியை எதிர்பார்க்கவும். கன்றுகள் வெவ்வேறு நிறங்களுடனும், குறிகளுடனும் பிறந்தால் இரண்டு நஞ்சுக் கொடிகளை எதிர்பார்க்கவும். முதலிற் குறிப்பிட்ட இரணைக் கன்றுகள், ஒரு முட்டை இரண்டாகப் பிரிவடைவதால் ஏற் படுவதாகும். பின்பு கூறிய இரணைக் கன்று கள், இரு முட்டைகளில் தனித்தனி உற் யத்தியானவையாகும்.
2. நஞ்சுக் கொடி விழவில்லை என்று கலி வரமடையாதீர்கள். நஞ்சுக் கொடி விழாவிட் டாலும் மாடு சாகமாட்டாது.
3. நஞ்சுக்கொடி கெதியாக வெளிவருவ தற்கு, கன்று ஈன்றதும், மாட்டிற்கு போதி யளவு முள்முருக்கம் இலை அல்லது எள்ளுச் கிளாய் உண்ணக் கொடுக்கவும். மாட்டுக்கு இவ்வுணவுகள் பழக்கமில்லை என்று கவலைட் படாதீர்கள் இந் நேரத்தில் பசு எதைக் கொடுத்தாலும் உண்ணத் தயாராக இருக கும். இவ்விரு பச்சிலை உணவுகளும் இல்லாத விடத்து பசுவிற்கு உடன் வெட்டிய பச்சைட் புல் கொடுக்கவும். மேற்கூறிய முறைகளில் ஒன்றைக் கையாண்டாலும் நஞ்சுக் கொடி விழும். நஞ்சுக் கொடி விழுந்தவுடன் எஞ்சிய பச்சிலைகளை அகற்றி விடவும்.
34

சில (முன் தொடர்ச்சி)
ந. சண்முகம், மாவட்ட விவசாய அலுவலர், மட்டக்களப்பு.
4. நஞ்சுக் கொடி விழாவிட்டால் இரண் டாம் நாட் தொடக்கம் பெண் குறியின் வாயில் ஊடாக துர்நாற்றம் வெளிப்படும். நஞ்சுக் கொடித் துண்டுகள் தப்பித் தவறி வெளி வராமல் பழுதடைவதால் இத் துர்நாற்றம் ஏற்படும். கன்று ஈன்றதும் நஞ்சுக் கொடிக்கு வேறு தொழில் இல்லை. வெளியேற்றப்பட வேண்டிய தொன்றகும். இல்லாவிட்டால் கருப்பைக்குள் துர்நாற்றம் ஏற்பட்டு கிருமி கள் பெருகி, பசுவின் கருப்பையும் பாதிக்கப் படும். அடுத்த ஈற்றில் கருப்பை வெளிவரக் கூடும். சில சமயங்களில் நஞ்சுக் கொடி கொஞ்சம் வெளி வந்தபடி இருக்கும். இதற்கு ஒரு சிறு பாரம் கட்ட வேண்டும். பாரம் கட்டுவது நஞ்சுக் கொடியைப் பாரத்தின் மூலம் வெளியேற்றுவதற்கல்ல. வெளியே தோன்றுவதை உட்செல்லாமல் வைத்திருப்ப தற்கேயாகும். கூடிய பாரம் கட்டினல் கருப் பையும் சேர்த்து வெளியேறக்கூடும். பாரம் கட்டுவதில் மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும். நஞ்சுக்கொடி கருப்பையுடன் பல
கமத்தொழில் விளக்கம்

Page 42
மணிகள் மூலம் இணைக்கப்பட்டிருக்கும். ஒவ் வொரு மணியும் கருப்பையிலிருந்து விடுபட்ட பின்பே, நஞ்சுக் கொடி வெளியேறும்.
5. நஞ்சுக்கொடி வெளியேறவிட்டால் ஒவ் வொரு நாளும் கருப்பையை தொற்றுநீக்கியி னற் சுத்தம் செய்து நஞ்சுக் கொடியைப் படிப்படியாக வெளியேற்றலாம். ஒவ்வொரு நாளும் கருப்பையைக் கழுவிய பின்பு (Douch) தொற்று நீக்கிய கையினுல் “ நோய்த் தடை வில்லை ’ ஒன்றை கருப்பையின் அடிப்பாகம் வரை செலுத்த வேண்டும். இதற்கென்று பெரிய வில்லைகள் தயார் செய்து விற்கப்படு கின்றன.
6. கால்நடை வைத்தியர் அண்மையில் இருப்பாராகின் அவரைக் கொண்டு கைவிட்டு நஞ்சுக்கொடியை எடுத்து விடவும். கருப்பை யைத் தொடுத்து இருக்கும் மணிகளை பெரு விரலாலும் சுட்டுவிரலாலும் சாடையாக அழுத் தும் பொழுது மணிகள் விட்டுக்கொடுக்கும். எல்லா மணிகளையும் விடுவித்த பின்பு, நஞ்சுக் கொடி அவர் கையுடன் வெளியேறும். நஞ்சுக் கொடியை அகற்றிய பின்பு, நோய்த்தடை வில்லையொன்றை உட்செலுத்த வேண்டும்.
7. மாட்டிற்கு பிண்ணுக்கு வைத்தால் தீட் டடிக்கும் என்று பிண்ணுக்கு வைப்பதில்லை. மாடு என்ன தீன் வழமையாக உண்டு வந் ததோ அதைக் கருப்ப காலத்திலும் கொடுக்க வும். கன்று ஈன்ற அடுத்த நாட் தொடக்கம் கொடுக்கலாம். தீட்டு வெளியேறுவது கருட்பை சுத்தி செய்யப்படுகிறது என்று கருதுங்கள். தீட்டு வெளியேறுவது நல்லது. வெளியேற விட்டால் கருப்பைக்குள் அது இருந்து அதை அசுத்தப்படுத்தி, கருப்பை நோய்களை ஏற்படுத் Ց1ԼԸ.
8. கருப்பையிலிருந்து வெளியேறும் தீட்டு மணத்துடன் வெளியேறினுல் உடனே கால் நடை வைத்தியரை வரவழைத்து பசுவிற்குச் சியச்சை செய்யுங்கள்.
9. பசு கர்ப்பமுற்றிராத ESITGI)TÉSI EB5@fổi) வெண் தீட்டுப் படுமாகில் கால்நடை வைத்தி யரை வரவழைத்து பசுவிற்குச் சிகிச்சை செய் யுங்கள்.
மலர் 19-இதழ் 1, 1975

10. பெண் குறியின் வாய் வீங்கி, சிவந்து உள்வாயில் சிவந்த பருக்கள் காணப்பட்டால் ால்நடை வைத்தியரை வரவழைத்துச் இச்சை செய்யுங்கள்.
11. வெள்ளை படுதலும், சலவாயில் வீங்கிப் ருக்களுடன் காணப்படுதலும் தொற்று நாய்க்கு அறிகுறியாகும். இந் நோயை ஒரு ாளை பல பசுக்களுக்கு பரப்பக்கூடும். உடனே ால்நடை வைத்தியரை வரவழைத்து இக்குறி ாணும் பசுக்களுக்கு சிகிச்சை அளிக்கவும். புத்துடன் பட்டிக் காளைகளைப் பரிசோதித்து நாய் காணப்படின் நோயுற்ற காளைகளை இறைச்சிக்கு விற்று நோயற்ற காளைகளைப் ாதுகாக்கவும். பசுக்களைச் செயற்கை முறை ல் சினைப்படுத்தினுல் கர்ப்ப நோய்கள் வரா ல் தடுக்கலாம்.
12. நஞ்சுக் கொடி விழாமல் கருப்பைக் 5ள் இருந்து, அழுகுமாயின், பசுவில் நாற் ம் ஏற்படும். அத்துடன் மாடுகளுக்கு மூட் க்களிலும், உடம்பிலும் புண்கள் மனத் டன் வற்படும். இப்படி நேரும் காலத்தில் சுவிற்கு பின்வரும் பச்சிலையை வெட்டி உண் 0க் கொடுக்கவும். இந்தத் தாவரத்தின் பெயர் ள் பின்வருமாறு :
லத்தீன்-கிஹலியா திவிஐபோலியா வால் சிங்களப் பெயர்-தமணியா.
தமிழ்ப் பெயர்-சடைச்சி.
இந்தத் தாவரத்தின் காய்ந்த இலையிலுள்ள ணவுச் சத்துக்கள் பின்வருமாறு :-
சாம்பல் 911, பிசிதம் 17:20, தும்பு 18:33,
கொழுப்பு 323, மாச்சத்து 5208.
பசு உண்ணக்கூடிய கசரும் இலைகளில் ருப்பையைச் சுத்தி செய்யும் குணமிருக்கு மன்பது எனது அபிப்பிராயம். பெண்கள் ல காலங்களில் கசரும் காய்களை விரும்பி -ண்ணுகிறர்கள். இக்காய்களின் மரங்களின் இலை பசுக்கட்கு பயன் தரும்.
13. கன்று ஈன்று நஞ்சுக்கொடி விழுந்த பின்பு, பெண் குறியின் வாயிலுக்கு வேப் பெண்ணை நன்ருகப் பூசி விடவும். பூசி விட் ால் ஈ, மொய்க்காது. காகம் வந்து கொத் நிக் காயமேற்படுத்தாது. சில சமயங்களில் ன்று ஈன்ற பின்பு கருப்பையால் வெளி
35

Page 43
யேறும் தீட்டால் நாய் போன்ற மிருகங்க கவரப்படும். இம் மிருகங்கள் பசுவின் பென குறியில் காயமேற்படுத்தக் கூடும். இக்கவர்ச் மனத்தை மறைப்பதற்கும் வேப்பெண்ணே உதவியளிக்கும். தமிழ் விவசாயிகள் தலைமுறை, தலைமுறையாக வேப்பெண்ணைை உபயோகித்து வருகின்றர்கள்.
14. கன்று ஈன்று நஞ்சுக்கொடி விழுந் பின்பு, கருப்பை சிறிது வெளியேறிக் காண படின், சுத்தம் செய்து தொற்று நீக்கி கையினுல் கருப்பையை உட்செலுத்தி, வில்? ஒன்றையும் உட்செலுத்தி சல வாயிலில் இ தையல் போட்டால் கருப்பை வெளியேறு தைத் தடுக்கலாம்.
15. கருப்பை முற்றும் வெளியேறிவிட்டா கால்நடை வைத்தியரின் உதவியை நாடுங்கள் கால்நடை வைத்தியர் வரும்வரையும் கரு பையை அழுக்கடையாமல், TELh, நாய்கள் தீண்டாமல் பார்த்துக் கொள்ளவும். கா நடை வைத்தியரின் சிகிச்சைக்குப் பின்பு இ பசுவைக் காளையுடன் சேர விடக்கூடாது. பா. வற்றியதும் இறைச்சிக்கு விற்று விடவும்.
16. கருப்பை சில வேளை கைமுட்டிப் ப மனளவு வெளிறிய தோற்றத்துடன் வெளி தோன்றும். இந்நேரம் பசு கற்ப முற்றிருக் லாம். பசு படுத்திருக்கும் போது வழமையா இப்படித் தோன்றுவது உண்டு. இதை அ தானித்தவுடன் பசுவை எழுப்பி விட்டு பென குறிவாயிலூடாக 2 அவுன்ஸ் மீனென் ணெயை இரண்டு நாட்களுக்கொருமுறை உ செலுத்தி விடவும். உட்செலுத்தும் போ, பசுவின் உள் உறுப்பிற்கு நமச்சல் எற்படா வாறு பார்த்துக் கொள்ளவும். இதற். போத்தல் ஒன்றை எடுத்து அதன் கழுத்தி மீன் எண்ணையைத் தடவி அப் போத்தலை பெண்குறி வாயிலூடாக சிறிது உட்செலுத் மீன் எண்ணையை உட்செலுத்தி விடலா இச் சிகிச்சையைச் சில காலத்துக்கு தொடர்ந் செய்துவரின் சிலி காலத்தின் பின் வெளி தோன்றது. இப்படிச் சிகிச்சை கொடாவிடி கன்று ஈனும் பொழுது முழுக்கருப்பையு வெளியேறக்கூடும்.
பெண் குறி வாயிலை இடைக்கிடை சிறி சினக்காரம் கரைத்த நீரினுல் கழுவிவிட்டா
36

F
பெரும்பாலும் பெண்குறி நோய்களைத் தடை செய்யலாம் என்பது என் கருத்து.
இப்படிப்பட்ட பசுக்களுக்கு வயிறு நிறையத் தீன் கொடுக்கக் கூடாது. மலமிழக்கும் தீன் கள் வாரமிரு முறை பயன்தரும். இதற்கு லின்-சிட் பிண்ணுக்கு உகந்த பலனளிக்கும். உழுத்தம் கஞ்சியும் இதற்கு உகந்தது. உழுத் தம் கோதை உழுத்தம் குருனலுடன் தீனில் வழமையாக இப்படிப்பட்ட பசுக்களுக்குக் கொடுத்து வரின் நன்மை பயக்கும். மேற் கூறிய பசுக்களை காளைக்கு விடப்படும் இடத் தைப் பார்க்கக் கூடியவாறு பட்டியில் கட்டு வதைத் தவிருங்கள்.
17. சில பசுக்கள் குறை மாதத்தில் கன்று
ஈனும். இது சில வேளைகளில் நாங்கள் பசு
விற்கு நோய் காரணமாகப் பாவித்த மருந்துக ளால் ஏற்பட்டிருக்கலாம். ஆனல் கரை கன்று ஈனுவதற்குப் பல நோய்கள் காரணமாக இருக் கலாம். ஆனல் எங்கள் ஊரில் கரை கன்று ஈனும் நோய் ஏற்படுவதை ஆங்கிலத்தில் கொன்டேசியஸ் அயோசன் அல்லது புருசலோ னிஸ் என்றழைப்பர்.
இந் நோயைக் கட்டுப்படுத்துவதற்கு சால் நடை வைத்தியரைக் கொண்டு இரத்தப் ப சோதனை செய்யவும். இரத்தப் பரிசோதனை யில் நோயுண்டு என்று கருதப்படும் பசுக்களை இறைச்சிக்கு விற்கவும். பட்டிக் காளை களேயும் இரத்தப் பரிசோதனைக்கு உட்படுத்த வும். இந் நோய்க்கு இன்று வரை சிகிச்சை கண்டு பிடிக்கப்படவில்லை. ஆனல் தடுப்பூசி உண்டு. “ ஸ்டெயின்-19 ’ என்னும் மருந் தைப் பாவிக்கவும். பசுக்கன்றுகளுக்கு 3-6 மாத வயதளவில் இத்தடுப்பு ஊசியைப் போட வும். தடுப்பூசி ஏற்றிய இக்கன்றுகளை வய தடைந்ததும், இரத்தப் பரிசோதனைக்குட்படுத் தினுல் இந்நோயினுல் பாதிக்கப்பட்டிருப்பதா கக் காட்டும். எமாருதீர்கள்.
இந் நோயால் பாதிக்கப்பட்ட பசுக்கள் இரண்டு மூன்று கரை கன்று ஈன்ற பின்பு முழுக்கன்றக ஈனும், இப் பசுக்கள் கன்று ஈனும் போது கருப்பையால் வெளியேறும் நஞ்சுக்கொடி, தீட்டுப் போன்ற நோயைப் பரப்பும். படுக்கைக்குப் பாவித்த வைக்கோலை ச் சுட்டெரிக்கவும். கன்று ஈன்ற இடத்தையும் தொற்று நீக்கவும்.
கமத்தொழில் விளக்கம்

Page 44
இந் நோய்ப்பட்ட பசுக்களால் கிடைக்கும் பால் மனிதருக்கு அண்டியுலன்ஸ் காய்ச்சலை
உண்டாக்கும். பிள்ளைகளுக்கு இந் நோய்ப்
பட்ட பசுக்களின் பாலைக் கொடாதீர்கள். எங் கள் முறையில் பாலை வற்றக் காய்ச்சி பெரி யோர் குடிப்பதனுல் பெரியோர் இப்பாலால் பாதிக்கப்பட்டதை நான் காணவில்லை. பாச்சர் முறையில் பதம் படுத்தும் பாலிற்கு இந் நோய்ப்பட்ட பசுக்களின் பால் உகந்ததல்ல. கிருமியழிக்கப்பட்ட பால் (கொதிக்கும் தண் ணிைரில் கூடிய சூடு கொடுத்த பால்) இந் நோயைப் பரப்பாது.
கால்நடைப் பகுதியினர், மாட்டுடன் ஆட்டை வளர்க்காதீர்கள் என எச்சரிப்பார்கள். ஏனெ னில் மாடுகள் ஆடுகளுக்கு நோய் பரப்பும் என்று கூறுகின்றர்கள். ஆனல் மாடுகளுடன் ஆட்டுக் கடாக்கள் வளர்க்கப்படும் பண்ணை களில் இந் நோய் தோன்றுவது அரிது. ஆட்டு மொச்சை (கடா மொச்சை) நன்ருக வீசு மிடத்து இந் நோய் காத தூரம் பறந்து போகுமென்பது என் அபிப்பிராயம். கருப் பைத் தொற்று நோய்களும் கடா மொச்சை வீசும் பண்ணைகளில் தோன்றுவது அரிது. என்பது எனது அபிப்பிராயம்.
ஆட்டு மொச்சை வீசுமிடங்களில் பசுக்களுக்கு எற்படும் காயங்கள் உடனுக்குடன் ஆறிவிடு மெனக் கருதுகிறேன்.
18. கர்ப்ப முற்றிருக்கும் பசுக்களுக்கு குடற் புழுக்களுக்காக மருந்து கொடுப்பதைத் தவிர்க்கவும். எனெனில் பசுவிற்கு கருச் சிதைவு ஏற்படக்கூடும்.
19. நஞ்சுக் கொடியை ஒரு பாலுள்ள மரத்தில் கட்டித் தூக்கி விட்டால் பசு நன்றக பால் கொடுக்கும் என்று அபிப்பிராயப்படு கிறர்கள். இதில் உண்மையில்லை. பால் மரத் திற்கு அருகில் பசுக்கள், நாய்கள் செல்வது அரிது. ஏனெனில் கொப்பில் இருக்கும் பால்
மலர் 19-இதழ் 1, 1975

வைகளின் மேனியில் பட்டால் புண் ஏற் ம் என்று இயற்கை அவர்கட்கு எச்ச கை கொடுக்கிறது. பால் மரம் என்று ன்னேர் கூறுவது கள்ளி மரத்தை. இம் ாத்தில் கட்டித் துக்கிய நஞ்சுக் கொடியை ஈக்களோ அல்லது நாய்களோ அணுகாது. தனுல் நஞ்சுக் கொடி மூலம் பரவும் நோய் 1 தண்டப்படுகிறது என்பது எனது அபிப் ராயம். எங்கள் ஊரில் கூறுவது போல ஈப் பால் கூடக் கொடுக்கும் என்பது தவறு. படிச்செய்வதால் பால் கொடுக்குமென்பது ம்ப வைத்து பல்லாயிரக்கணக்கான வருடங் ாாக நஞ்சுக் கொடியை மரத்தில் கட்டி ஆசுக் கொடியினுல் ஏற்படும் நோய்கள்ளைத் டைப்படுத்தி வருகிறர்கள் போலும்.
20. பசுக்கள் நஞ்சுக் கொடியை உண்டால் ாப்பால் கொடாதென அபிப்பிராயப்படுகிறர் ள். இதில் உண்மையில்லை. பசு நஞ்சுக் காடியை உண்டால் இலகுவில் ஜீரணிப்ப ல்லை. சிறு துண்டுகளாக உண்டால் ஜீர ரித்து விடும். ஆனல் புல்லை உண்பது போல் ழு நஞ்சுக் கொடியை உண்டால் ஜீரணிப்பது ஷ்டம், நஞ்சுக் கொடியை உண்ண விடாமல் டுப்பது நன்று. அதனுல் கருப்பை நோய்கள் வாது தடுக்கலாம்.
21. நஞ்சுக் கொடியை நாய் இழுத்துக் காண்டு போக விடக்கூடாது என்று கூறு ார்கள். இதில் உண்மை உண்டு. நாய் நஞ் க் கொடியைக் கொண்டு செல்லுமாகில் பல ாய்களோடு சண்டையிட்டு இந் நஞ்சுக் காடியை துண்டுகளாக்கிக் கொண்டு செல் |ம். இதனுல் கருப்பை நோய்கள் பரவ டமுண்டு. அடுத்த இதழில் கன்று சம்பந்த ானவற்றைப் பார்ப்போம்.
(தொடரும்)
37

Page 45
(இப்பகுதியில் மாணவர்களின் விவசாயம் :
விவசாய விற்பன்னர்களும் கமத்தொழிற்றி மாணவர்கள் தங்கள் பிரச்சினைகளை எமக்கு சாலையின் பெயரையும் குறிப்பிட்டு எழு ஆசிரியர், கமத்தொழில் விளக்கம். த. பெ.
மிருக பரிபாலனம்
பதில் தருப
ஒவ்வொரு வினவுக்கும் கீழ்த் தரப்பட்டு ஆராய்ந்து சரியானதா அல்லது பிழைய * ச ’ என்ற எழுத்தை வட்டமிடவும் வட்டமிடவும் (பி). பின்பு இறுதியில் தர
(1) நல்ல தரமான குழிகாப்புத் தீனியில் (அ) பியூற்றிக்கமிலம் (Butric Acid) (ஆ) அசற்றிக்கமிலம் (Acetic Acid) (இ) பென்சோயிக்கமிலம் (Benzoic (FF) 6)äffié55LñloùLň (Lactic Acid)
(2) மரவள்ளியில் காணப்படும் நச்சுப் ப (e) sigra)äIslain (Oxalie Acid) (ஆ) ஆசனிக் (Arsenic) (இ) மேர்குரிக் ஒக்சைட் (Mercuric C (FF) 60).ELGCng JUGöflé5 (Hydrocyani
(3) “ இன்சுலின் ’ ஐச் சுரக்கும் சுரப்பி (9) Lig55L60LJ (Gall Bladder) (ạp) (ởg5[Tổ) (Skin) (3) F605LLILh (Pancreas)
(FF) GrpJG5Lff) éFULILS)5GiT (Intestina
38
 

சம்பந்மான பிரச்சினைகளுக்கு கல்வித்திணைக்கள
ணைக்கள விற்பன்னர்களும் பதில் தருவார்கள்.
எழுதும் பொழுது தங்கள் வகுப்பையும் பாட
2துதல் வேண்டும். எழுதவேண்டிய முகவரி;
எண். 636 கொழும்பு)
D
வர் : பீ. குலசேகரம்,
கால்நடை வைத்திய ஆராய்ச்சி அலுவலர். பேராதனை.
அனைத்தையும் ஒவ்வொன்றக
ானதா எனக் கண்டுபிடிக்கவும். சரியாயின்
(ச) பிழையாயின் ' பி ’ என்ற எழுத்தை
ப்பட்டுள்ள விடைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கவும்.
காணப்படும் சேதன அமிலங்களாவன :-
S)
3 LS)
Acid) LS)
.F Sلیم
தார்த்தங்களாவன -
巴开 | %)
夺 L 3)
xide) 夺 LS)
с) LS)
LS)
IS)
Ko e பி
al glands) e: F ES)
கமத்தொழில் விளக்கம்

Page 46
(4)
(5)
(6)
(7)
(8)
(9)
பசுவின் கன்று ஒன்று இரைமீட்கத் ெ (அ) 10 நாட்களில் (ஆ) 21 நாட்களில் (இ) 3 மாதத்தில்
(ஈ) 9 மாதத்தில்
கடும்புப்பாலில் பின்வருவன சாதா
பார்க்கக்கூடுதலாக இருக்கின்றன
(அ) கொழுப்பு
(ஆ) வெல்லம்
(@) ផឺរី
(ஈ) மொத்தப் புரதம்
உயர் வெப்பத்திலும் குறைந்த நேரத் யின் பொழுது குளிராக்கப்படுமுன் ப
( 2i) 140° F
(g) 152° IF
(2) 163° F
(FF) 175° F பன்றியின் கருப்ப காலம் :- (அ) 100 நாட்கள் . (ஆ) 115 நாட்கள்
(இ) 130 நாட்கள்
(ஈ) 150 நாட்கள்
புருெயிலர் கோழிகளின் தீனில் இருக் () 16%
(ஆ) 18%
@)20%
(FF) 22%
பசுப்பால் உற்பத்திச் செலவில் உண வீதம் -
(அ) 30%
(ஆ) 70%
(இ) 50%
(10) உலர் வலயத்துக்குகந்த கறவையின
(அ) சிவப்புச் சிந்தி . (ஆ) பிறீசியன் (இ) ஹேயர் போட் (Hareford) (ஈ) முரு
மலர் 19-இதழ் 1, 1975

தாடங்குவது :-
I
S)
ண பாலிலும்
திலும் வழங்கப்படும் “ பாச்சர் ' முறை ால் சூடாக்கப்பட வேண்டிய வெப்பம் :-
is a
க வேண்டிய முழுப் புரதவீதம் :-
5
=
go
a
ாவுக்காகச் செலவிடப்படும் தொகையின்
39

Page 47
(11) இரைமீட்கும் மிருகத்தின் உண்மையா? (g) LIGITITg JLn (Proventriculous) (ஆ) சமிக்குமிரைப்பை (Abomasum)
(3) J55Lh (Omasum) (ஈ) சிறுவலைவயிறு (Reticulum)
(12) பசுவொன்றைப் பால் கறப்பதிலிருந்து (அ) கன்று பத்துமாத வயதாகியதும் . (ஆ) 305 நாட்களின் பின்பு ܓ݂ܖܳ ܼܲ ܼܲ ܵ ܼ ܼ (இ) கன்று ஈனுவதற்கு 2 மாதத்திற்கு (ஈ) கருப்ப காலத்தின் இறுதிக் கட்டத்
(13) பன்றிப் பாலில் காணப்படும் குறைபாடு
(அ) உயிர்ச்சத்துக்கள் (ஆ) கல்சியம் (இ) இரும்பு
(ஈ) மொத்த வெல்லங்கள்
(14) இலங்கையில் வருடமொன்றிற்கு ஒரு
சராசரி அளவு -
(அ) 25 இரு.
(ஆ) 20 இரு.
(Q) 15 ឆ្នាព្រ.
(ஈ) 5 இரு.
(15) இலங்கையில் ஆட்டு வளர்ப்புக்கு உக
(அ) மலை நாடு (ஆ) மத்திய மலை நாடு (இ) உலர் வலயம்
(ஈ) ஈரவலயம்
(16) கோழிகள் ஒன்றையொன்று கொத்துவ
(அ) காற்றேட்டக் குறைவினல்
(ஆ) புரதக் குறைவுபாட்டினுல் (இ) சல்பர் அமினுே அமிலக் குறைபாட்
(17) கனகூளத்தில் காணப்படும் “ Litter
பொருள் :- (அ) உயிர்ச்சத்து ஏ ’ (Vitamin A) (ஆ) கல்சியம் O es (இ) றைபோபிளேவின் (Ribotlavin) (FF) DluŚlĩjgfjg5—LS2 (Vitamin B ) (18) புறெயிலர் உற்பத்திச் செலவு அதிகரி
(அ) உணவின் உயர் விலை (ஆ) தரம் குறைந்த உணவு (இ) கூலியாட் செலவு கூடுதல்
(ஈ) உணவு குறைவாக வசதிப்படல் .
全0

冗 வயிறு 2 اسسسس
bUTLL Gវិសាស្រ័យ QL 5/T@h —
LS
முன்பு
தில்
வர் உண்ணும் மாட்டு இறைச்சியின்
ந்த பகுதி ;-
பது :-
巴丹
巴丹
Iς-(σ96υ 巴P
factor ’ எனப்படும் போசனைப்
孕圣 LS)
巴F LS) LS) S.
த்துள்ளமைக்குக் காரணம் :-
F LS)
巴F LS)
巴F LS)
莎 LS)
கமத்தொழில் விளக்கம்

Page 48
விவசாயப் பொறியியல்
பதில் தருபவ
(19) தெளிகருவியைப் பராமரிக்கும் சிறந்த
(அ) உபயோகித்த பின்பு நீரில் கழுவி வை (ஆ) உபயோகித்த பின்பு பீச்சு முனை
(Grease) பூசி வைத்தல் (இ) பீச்சு முனைப் பகுதிகளைக் கழுவிய
உபயோகிக்கும் வரை ஒரு போத்த6
வைத்தல் - - ” (ஈ) உபயோகிக்காத வேளைகளில் தெளிக
நிறைத்து வைத்தல்
(20) ஒரு சோடி எருமைகளால் நாளொன்று
(அ) இரண்டு எக்கர் (ஆ) அரை ஏக்கர் (இ) கால் ஏக்கர் (ஈ) மூன்றில் ஒரு ஏக்கர்
(21) Flg. gloGon3 (Disc Harrow) 9 GuJITS (அ) கரும்பு நடுகைக்காகப் “ பார்சால்
தரையைத்தயார் செய்வதற்கு (ஆ) நெல் நாற்றங்கால் அமைப்பதற்கான
தயாரிப்பதற்கு (இ) உழுத பின்பு மண் கட்டிகளை உடைத்து
வதற்கு - (ஈ) மேற்கூறிய எந்த வேலைக்குமல்ல
(22) பொறியில்ை இயக்கப்படும் விதையிடு செய்யும் :-
(அ) வரிசைகளுக்கிடையில் உள்ள தூரத்ை
வைத்திருக்கும் ༈ (ஆ) வரிசையில் பயிர்களுக்கிடையில் உள்ள
சீராக வைத்திருக்கும் (இ) வரிசையில் விதையிடும் ஆழத்தை
வைத்திருக்கும் (ஈ) சிறந்த வேலைத் திறனுடையதாக இரு
(23) பின்வருவன ஆரம்பப் பண்படுத்தலுக்க
(9) FL'LqLáiš 5GOLÜGODLJ (Disc Plough) (ஆ) சுழல் பண்படுத்தி (Rotary Tiller) (9) of) LIGO.g.).5 g) DGO (Spring Tooth HC (ஈ) மோல்ட் போட் கலப்பை (Mould Board
மலர் 19-இதழ் 1, 1975

ர் எம். ஜி. பிள்ளைநாயகம்,
பொறிஞர், பண்ணை எந்திர ஆராய்ச்சி நிலையம், மகாஇலுப்பள்ளமை. முறை :- : த்தல் .. BF LS) "Անւոaուն: எக்கு கிறீஸ்
- 巴P ES ன்பு மீண்டும் நீரில் இட்டு
LS) - நவியில் நீரை
巴F LS)
வக்கு உழக் கூடிய பரப்பு :-
BF LS) S)
乐 LS) LS)
க்கப்படுவது :-
முறையில்
5 LS விதை மேடை
乐 LS) 1த் துகளாக்கு
| $)
巴F S.
ம் கருவி பின்வரும் தொழில்களைச்
த ஒரே சீராக
S. ா தூரத்தைச்
.. 巴F LS) gọGổg gFJ ITA5
巴F | $) க்கும் .. 巴F LS)
ான சில உபகரணங்களாகும் :-
ö LS) F S.
}rroW) - - LS) Plough) L 3)
4.

Page 49
மாணவர் பிரச்சனை
வின :-(1) பண்ணைப் பசளே மண்ணி
660) :-
42
வழங்குவதுடன் மண்ணின் பண்ணைப் பசளேவழங்கும் குறிப்பிட்டுத் தாவர வளர். காட்டுக 2 மண்ணின் பெரு இசீர்படுத்துகின்றது, எனக்
பண்ணைப் பசளையானது, ை உப்புப்போசணைப் பொருள் போரோன் மங்கனிசு, இரு பண்ணைப் பசளை வழங்குகி ஒன்றன நைதரசனை இங்கு
நைதரசன், பயிர்களின் கின்றது. தண்டினதும், நைதரசன் குறைவாகக் கிை அல்லது வெளிறிய பச்.ை வுபடும். மேலதிக நை வளர்ச்சியும், நீண்ட கணு ஏற்படுத்தும். அத்தோடு ( குறைத்து நோய்த் தாக்கங் பண்ணைப் பச2ள, மக் படுகின்றபோது அஃது செய்கின்றது. பின்வருகின் கின்றது :-
(அ) மண்ணின் இள குறைத்து பண் நுகைவு பெறுகி (ஆ) மண்ணின் மணி வேர்கள் செறிந்: (இ) நீர் கூடிய அ பெரிதும் பயன்ப (ஈ) மண்ணரி மானத சாரப் பொருள்க (உ) காற்றேட்டத்தை வசதி ஏற்படுகின் செயலாற்ற வசதி

பதில் தருபவர் : ஏ. சுந்தரலிங்கம், - விரிவுரையாளர்,
ஆசிரிய பயிற்சிக் கலாசாலை, மட்டக்களப்பு. ற்கு கணிச உப்புப் போசணைப் பொருட்களை 1 பெளதீக இயல்புகளையும் சீர்ப்படுத்துகின்றது. ஒரு கணிச உப்புப் போசணைப் பொருளைக் ச்சிக்கு அதன் முக்கியத்துவத்தையும் எடுத்துக் ளதீக இயல்புகளைப் பண்ணைப் பசளே எவ்வாறு கூறுக ?
சி. விவேகானந்தமூர்த்தி, கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி,
ĠgSITL jilli jfTuij.
நதரசன், பொஸ்பரசு, பொட்டாசு, ஆகிய கணிச களை வழங்குவதுடன் மிகச் சிறிதளவு செம்பு, ம்பு ஆகிய மூலக உப்புக்களையும் கொண்டுள்ளது. ன்ேற கணிச உப்புப் போசனைப் பொருள்களில் த குறிப்பாக எடுத்து ஆராய்வோம்.
இலைகளுக்குக் கரும்பச்சை நிறத்தைக்கொடுக் இலைகளினதும் வளர்ச்சிக்கு உதவுகின்றது. டக்குமிடத்து பயிர்கள் குட்டையாகவும், மஞ்சள் சயாகவும் தோற்றமளிக்கும். விளைவும் குறை தரசன் கிடைக்குமானுல் நலிந்த தண்டு விடை வெளிகளும், முதிர்ச்சித்தாமதத்தையும் மேலதிக நைதரசன் தாவரத்தின் உறுதியைக்
களுக்கும் இடமளிக்கும். ܦ கை உண்டாக்குவதனல் மண்ணில் சேர்க்கப் மண்ணின் பெளதீக இயல்பினைச் சிறப்புறச் ன்ற இயல்புகளை அது மண்ணிற்கு ஏற்படுத்து
குந் தன்மை, பிணைவு போன்றனவற்றைக் படுத்தலை எளிதாக்கின்றது. இதனுல் மண் என்றது. புருவாக்கலைத் தூண்டுகின்றது. இதன் பயனுய் து வளர்ந்து நிலை கொள்ள உதவுகின்றது. ளவில் மண்ணில் தங்கி, தாவரங்களுக்குப் ட உதவுகின்றது. ந்தைத் தடுக்கின்றது. இதன் பயனுய் மண்ணின் 1ள் கழுவுப்பட்டுச் செல்வது குறைவுபடுகின்றது. ப் பெருக்கி, வேர்கள் சுவாசித்துச் செயலாளற்ற 1றது. மண் வாழ் நுண்ணுயிர்கள் திறம்படச் தி உண்டாகின்றது.
கமத்தொழில் விளக்கம்

Page 50
வினு :-(2) வித்துக்களின் உறங்கு நிலைக்குப் வித்துக்களின் முளைக்கும் சதவீத செய்யும் ஒரு பரிசோதனையை வி
விடை - வித்துக்களின் உறங்கு நிலைக்குரிய
(1) நீர் உட்புகவிடாத விதை
(2) தடித்த விதை வெளியுை
(3) ஒட்சிசன் உட் செல்வதை
(4) முளைத்தலைத் தடுக்கும் இ
(5) முதிர்ச்சியடையாத முளை
மேற்கூறப்பட்ட ஏதாவதொன்
வித்துக்கள் உறங்கு நிலையில் இ
வித்துக்களின் முளைக்கும் தன்ன வழமையான ஒர் முறையாகும். அல்லது 200 விதைகளை நீரில்
போட்டு வைத்தல் வேண்டும். ஒர் வேண்டிய துஅவசியம். ஒவ்வோ என்ணுதல் வேண்டும். இவ்வ சதவீதத்தைக் கணக்கிட்டு அறிதல்
மேற்கூறப்பட்ட பரிசோதனை உ பொருந்தாது. எனவே, உறங்கு மூபினையில் தெத்திராசோலியம் Tetrazolium Chloride) GT6576.) In செய்யும் பரிசோதனை ஒன்றின் பிரிசோதிக்கும் வித்துக்களை நீரி நெடுக்காக வெட்டி அந்நெடுக் தெத்திராசோலியம் குளோறைட் நேரத்திற்கு இருட்டில் வைத்தல் ஆராயும் போது முளையம் செந்நி முளைதிறனைக் கொண்டவை எ முளைதிறன் இழந்தவை என்றும்
மலர் 19-இதழ் 1, 1975

பிரதானமான காரணங்கள் எவை ? த்தை அறிந்து கொள்வதற்காக நீர்
ரமாகக் கூறுக ?
எஸ். அரசரெத்தினம், தம்புலுவில் மகாவித்தியாலயம், திருக்கோயில்.
பிரதானமான காரணங்கள்.
வெளியுறை.
ற.
த் தடுக்கும் விதை வெளியுறை.
ரசாயனப் பொருட்கள்.
போன்றன.
று அல்லது எல்லாக்காரணங்களாலும்
நத்தல் & (BLԻ.
மையை முளைக்கப் போட்டு பார்த்தறிவது இஃது செய்து அறிதற் பொருட்டு 100
நனைத்து ஒற்றுத்தாளின் மடிப்பிற்குள்
1றுத்தாள் தொடர்ந்து ஈரமாக இருக்க
ர் தினமும் முளைக்கும் நாற்றுக்களை
ாறு செய்வதன் மூலம் முளைக்கும்
வேண்டும்.
பறங்கு நிலையிலுள்ள வித்துக்களுக்குப் நிலையிலுள்ள வித்துக்களை 2, 3, 5 குளோறைட்டு (2, 3, 5 Triphenyl இரசாயனப் பொருள் உபயோகித்துச் மூலம் முளைதிறன் கண்டறிதல் கூடும். ல் ஊறவைத்து, முளையத்தினூடாக குத் துண்டுகளை 0.1% மூபினையில் டுக் கரைசலில் அமிழ்த்தி சில மணி வேண்டும். பின்பு வெட்டு முகங்களை றமாக நிறமூட்டப்பட்டுள்ள வித்துக்கள் ன்றும், நிறமூட்டப்படாத வித்துக்கள்
துணிதல் கூடும்.
43

Page 51
வின :-(3)
(அ) கோழிகள் இடுகின்ற
இருப்பதற்குக்காரணம்ெ என்பதனையும் கூறுக ?
(ஆ) கோழிகள் முதன் முத
அளவிலும் பார்க்கச் சி பெரிய முட்டைகள் வேண்டும் ?
விடை :-(அ) கோழிகள் இடுகின்ற மு.
44
(ஆ)
இருப்பதற்கு கோழிகளின் காரணமாகும். கொடுக்க
புத்தூள் மற்றும் கணிப்ெ
ஊட்டப்படுதல் வேண்டும். உண்டு.
சில கோழிகள் முட்டை இ இடத் தொடங்குகின்றன.
வதனலேயே முதன் முதலி போதியளவு உணவு கொ தவிர்க்கலாம். உதாரணம பருவத்திற்குரிய உணவைக் சிறிய முட்டைகள் இடத் ெ குஞ்சுத்தீனையும், அதையடு பருவத்தீனையும் கொடுத்துவ முட்டைகள் கிடைத்தல் சாத்

மட்டைகளின் மேற்கோது தோல் போன்று ன்ன ? இதனை எவ்வாறு தவிர்க்க முடியும்
நில் இடுகின்ற முட்டைகள் சாதாரண முட்டை றியனவாய் இருப்பதற்குக் காரணமென்ன ? தொடர்ந்து பெறுவதற்கு என்ன செய்ய
செல்வி மேரி அன்றணிமோசஸ்,
* மேரி இல்லம் ”
மன்னர். படைகளின் மேற்கோது தோல் போன்று
உடம்பில் கல்சியம் குறைவாக இருப்பதே
படுகின்ற உணவில் சிப்பித்தூள், எலும் ாருட்கலவை போன்றன கலந்து தினமும் இவ்வகை உணவுகள் யாவற்றிலும் கல்சியம்
வேண்டிய பருவத்திற்கு முந்தியே முட்டை
இவ்வாறு பருவம் முந்தி முட்டையிடு ல் சிறிய முட்டைகளை கோழிகள் இடுகின்றன. டுக்கப்படுவதனுல் இவ்வாருண் குறைகளைத் ாக குஞ்சுக் கோழிகளுக்கு முட்டை இடும் கொடுத்துவரின் அவை கெதியில் பெருத்து தாடங்கும். ஆகவே குறிப்பிட்ட காலத்திற்கு த்து வளர்பருவத்தீனையும் ஈற்றில் முட்டைப் பரின் தொடர்ந்து ஒரே அளவினதான பெரிய தியமாகும். -
கமத்தொழில் விளக்கம்

Page 52
மானவர் வி
விடைகள்
(1) அ 岑文 ( ) ஆ (5) | ရှ်} இ - 莎为 (LS) F. - (寺): լS) (?) മൃ (பி) ஆ - 安主 (LS) @ - (5): S. 序 - 子为 (பி) (5) அ ܒ (): LS) 을 - 互河 (LS) இ - 孪 (5) F. - (5): LS
(1) அ - 安 (5) ஆ - (5)、 | %) இ SAS 安 (LS)) FF 安全 (5)
(9) அ - gع : ( S) 号筠 - () LS) இ 安芸 (பி)
( 1 ) gy - ö (பி)
ஆ - (安): LS), இ - 芋三( (LS)) FF - 母三为 (LS))
(13) அ - தி: (5) ஆ - ஆE (LS) இ (JF) i.S. 屁 3 (5) (15) அ — (LS) ஆ - அF: (பி) இ -- (a): S. 莒 - E (LS) )பி( : مون - /gتي (17) ஆ - ー二 (ി) இ - (பி) Fi: - () | မှဲ့)
(19) அ - (ச): LS) ஆ - (பி) இ (5) քի: - 2 تزعم (பி) (2) அ - (பி) ஆ - (பி) இ (9)、 பி 序 — F; ( S) (23) அ - (5): | } ஆ - (5): S. இ 邸源 (15) 莎 (5:) S.
மலர் 19-இதழ் 1, 1975

பினு விடை
酶
(2) அ - ச (பி) ஆ - ச (பி) இ - (பி) 互= -- (g) S.
(4) அ - سہی : )LS[( ஆ - (பி) இ - (5): LS) 尹 字主 (பி)
(6) அ -- g: (LS) ஆ - 孪 () இ - (5): LS) F - డ్రోకి (பி)
(8) அ -- 3E (5) ஆ - (g): LS) இ BF 3 (பி) FF -- 乐为 (பி)
(10) g/ - (a): S. ஆ - gー。 (பி) இ - F. ( S) FF - (5): S.
(12) ஆ - ச: (பி) ஆ - (பி) இ (g): S. FE - 孪 (LS)
(14) அ -- (5) 을 n— 8ބޮ (பி) இ — (S) 1. FF (g) S)
(16) - gy - (ச): பி ஆ - () LS) இ (F): பி
g:) ES( - پرتي (18) 을 ംn- (g:) LS) இ 乐为 (பி) 莎 — 安 (பி)
(20) அ - نہقع (பி)
இ - (பி) FF - (ச:) பி
(22) அ - () S. ஆ — శ్రీకి (பி) இ -- (LS) 莎 -- 夺 (LS)
45

Page 53
குறுக்கெழுத்துப்
1 & |{ہوچ
ਨੂੰ ਰ u' last air 6) g slairlin U"
62) TT
ऊँ
ଈ)
乐
Llifîg, Go,
1 வது பரிசு செல்வி ஜெயலெட்சுமி 6
மண் கும்பான் மேற்கு,
2
6.13 பரிசு ஏ. எச். அபுல் வேபா,
அறபா மகா வித்தியாலி
3. வது பரிசு செல்வன் டானியல் ஆர். 42/3 சின்சபா வீதி, கெ
46

u u 65
O 6.
霹下丞 卵 压 刃
5 s ଐF | ଇମ୍ଫ) || !ul) | (0 th ல்
பற்றேர்
TU LOL |
(ബൈT.
ஸ்யம், வெலிகம.
இராஜசூரியர், ாழும்பு-6,
கமத்தொழில் விளக்கம்

Page 54
நெற்பயிரைப் பாதுகா பெருக்கப் பாவியுங்கள்
இரசாயனப் ெ D9F
முளைக்கு முன் களைக் களைகளையும் கட்டுப்படுத்த 5 நாட்களில் களைகள் மு
மசீற் 5% குறுணல் ஆ
மசிற் 5% குறுனல்மசீற் 50% செறிகுழ
புறடான் 3 கு
காபபுருன் அடங்கிய குறு கபில நிறத்தத்துக்கிளி, கட்டுப்படுத்தும். 10-15
ஹொப்சின் 50
பி. பி. எம். சி. அடங்
தத்துக்கிளி, இலைத்தத்து ஏக்கருக்கு 20-30 தி
பொஸ்வெல் 35
நெல் கபில நிறத் தத் வதுடன் நெல் எரி வந்: 20-30 தி-அவுன்ஸ் 4 மரக்கரி ஆகிய மற்றும்
வேறு விபரங்களுக்கும், இலவச அறிவுரைச் ே
இலங்கைப் பெற்றேலி
113, காலி வீதி,
தொலைபேசி : 252
 

த்து 6) I (56) IT 60) U ILI iT 6u ÉlJET 6ýN6)igTUI
பாருட்கள்
கொல்ல நெல்வயலில் எவ்விதமான த வல்லது. நெல்விதைத்தோ நாட்டியோ
ளைக்கமுன் பாவித்தல் வேண்டும்.
கவும் 50% செறிகுழம்பாகவும் உண்டு.
-20-30 இருத்தல் வக்கருக்கு ம்பு 1-1 லீற்றர் ஏக்கருக்கு
புனல் கிருமிநாசினி, நெல்லேப்பாதிக்கும் சந்துகுத்தி ஆகிய பூச்சி புழுக்களைக் இருத்தல் ஏக்கருக்கு.
கிய கிருமிநாசினி. நெல் கபிலநிறத் பக்கிளி ஆகிய பூச்சிகளைக் கட்டுப்படுத்தும். -அவுன்ஸ் 40-50 கலன் நீரில்.
துக்கிளி போன்ற பூச்சிகளைக் கட்டுப்படுத்து த நோயையும் கட்டுப்படுத்தும். ஏக்கருக்கு 0-50 கலன் நீரில், (கோவா, மிளகாய்,
பயிர்களுக்கும் பாவிக்கலாம்)
சேவைக்கும் தொடர்பு கொள்ளுங்கள்.
unds கூட்டுத்தாபனம்
கொழும்பு 3.
23 1, 32,828

Page 55
6535
வெற்றிகரமான ஆராய்ச்சிகளின் பிடிக்கப்பட்ட சகல உரப் பச2ள இலங்கை உரப் பசளேக் கூட்டுத் உள்ள மிகப் பெரிய நூதன 星 உதவியினல் ரோன பயிர் உணவு கொண்டனவாகத் தயார் செய்ய
இலங்கை உரக்க தயாரிக்கும் உரப்
ΦΣ ΠΕ
நெல் வயல்களுக்கும் தென்னந் தோட்டங்களுக்கும் தேயிலை, றப்பர்த் தோட்டங்களு சகல உய உணவுப் பயிர்களுக்கு
வீட்டுத் தோட்டத்தில் உள்ள ச
பிரயோகித்து உச்ச
இன்றுள்ள பசளை வகைக
685
இலங்கை உரச் (சந்தைப்படுத்தும் பகுதி) த. பெ.
ராமநாய கொழு
தொலைபேசி 35823

உரம்
மூலம் கண்டு
வகைகளும் தாபனத்தில் ந்திரங்களின் 陛 சத்துக்கள் ப்படுகின்றன.
வட்டுத்தாபனத்தினர் jafffortå ଅ5ରେd ଭିନ୍ଦ ଶng 35%YT
画压6缸
நக்கும்
5ւն
கல பயிர்களுக்கும்
விளைவைப் பெறுங்கள்
ளூள் மிகப் பிரபல்யமானது
鬱 OD ULAD
5கூட்டுத் தாபனம்
21, இல. 35, டபிள்யூ. ஏ. டீ.
க்கா வீதி, ம்பு 2.