கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கமத்தொழில் விளக்கம் 1992

Page 1


Page 2
கமத்தொழி
ஆரம்பம் 1906 ஜனவரி
ஆலோசனைக்குழு
ஓவியங்கள் :
ஆசிரியர் :
தொடர்பு கொள்ளும் முகவரி:
ஆசிரியர், கமத்தொழில் வி தோழில்நுட்ப த. பெ. இல . பேராதனை,
கமத்தொழில் திணைக்கள தொழ விவசாய அபிவிருத்தி

ல் விளக்கம்
1992 - மலர்:33
ழ கலாநிதி என். விக்னராஜா
கலாநிதி. சி. ஞானச்சந்திரன் திரு. கே. நாகதாசன்
விவசாயத் திணைக்கள
ஒளி, ஒலி நிலையம்.
ப. வாசுதேவா
பிளக்கம், ரேச்சாரப் பிரிவு,
8,
நில்நுட்ப பிரச்சாரப்பிரிவின் வெளியீடு.
ஆராய்ச்சி அமைச்சு, -

Page 3
கருத்து
எமது நாட்டு அபிவிருத்திக்காக தசம் தொடர்ச்சியாக வேளிநாட்டு உதவிகளில் தங்கியி ருக்க முடியாது. ஆயினும், அபிவிருத்திக்கு முன்னேற்றமான வெளிநாட்டு தொழில்நுட்பசி களும், மூலப் பொருட்களும் அவசியமானவை, இவற்றைப் பெற்றுக் கொள்வதற்கு, போதியளவு வெளிநாட்டு செலாவணியை நாம் தேடிக் கொள்ள வேண்டும். இதற்கான ஒரே வழி எமது ஏற்றுமதியை அதிகரிப்பதேயாகும், ۔-
கடந்த காலங்களில் ஒரு சில பொருட்களை மட்டுமே ஏற்றுமதி செய்தபோது, அவற்றின் ( விலைகள் குறைவடைந்த சந்தர்ப்பன்களில் எமக்குக் கிடைக்கும் வெளிநாட்டுச் செலாவணி அளவு குறைந்தது. இதனால் எமது ஏற்றுமதிப் போருட்கள் பன்முகப்படுத்தப்பட்டன. புதிய வெளிநாட்டுச் சந்தை வாய்ப்புக்கள் தேடப்
į ES , -
எமது அரசாதிகம் ஏற்றுமதியை அதிகரிக்கும் ஆண்டு வரை:ன காலத்தை ஏற்றுமதித் தசாப்த உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்பவர்களை ஊக்கு ஆள்ளது. முன்பு கொழும்பு பெரும்பாக பொருளா வழங்கப்பட்ட இச்சலுகைகள் தற்போது ក្តr - ஈடுபடுவோருக்கும் வழங்கப்படுகின்றன. flagrយ ន 5 முதல் 15 வருட காலத்திற்கு வரிச்சலுகை, உற். யின்றி இறக்குமதி சேய்வதற்கான வசதி, ஒரு மே செய்வதற்கான வசதி, வங்கிக் கணக்குகளை வ்ெனி வசதி, அபிவிருத்தி நிதிக் கடன் கூட்டுத்தாபனம், கடன், நிதி பெற்றுக் கொள்வதற்கான வசதி ஆகி
1990, 1991 ம் ஆண்டுகளிலும், 1992 ம் ஆண் 39.9, 17.4 மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான லிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன.
ஏற்றுமதியை அதிகரிப்பதன் மூலம் எமது அபி ணிையைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக உள்ளது. பெற்றுக் கொடுக்கக் கூடியதாக உள்ளது; இதன்
a:rմ:3եմ Հ-6ն en ête --۔
இச் சஞ்சிகை விவசாய உற்பத்திப் ப்ெர்குட் ஆலோசனைகளை இழக்கும் ஒரு சில் கட்டுரைகை தகவல்களை விவசாயத் திணைக்களம், மகாவலி இ அபிவிருத்திச் சபை, இலங்கை முதலீட்டுச் ச்பை
జ్ఞానే ఫ్రదేశ్ జీ క్రిక్ట్ల ஆகவிருந்தது) ஆகிய நிறுவனங்க உற்பத்திப்ேேசருட்கள் போருட்களின் ஏற்றுமதியில்
விளக்கம் சஞ் எதிர்பார்க்கின்றது.
 
 
 

நோக்குடன் 1992 ம் ஆண்டிலிருந்து 2001 ம் மாக பிரகடனப்படுத்தியுள்ளதுடன், பொருட்களை விக்கும் நோக்குடன் பல சலுகைகளையும் வழங்கி "தார ஆணைக்குழுப் பிரதேசத்தினுள் மட்டும் ஏனைய பிரதேசதிகளிலிருந்தும் ஏற்றுமதியில் உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்வோருக்கு பத்திக்குத் தேவையான உபகரணங்களை தீர்வை ாட்டார் வண்டியை தீர்வையின்றி இறக்குமதி நாட்டு நாணயங்களில் வைத்திருப்பதற்கான தேசிய அபிவிருத்தி வங்கி என்பவற்றிலிருந்து |ய சலுகைகள் வழங்கப்படுகின்றன. -
ஈடின் ஜனவரி மாதத்திலும், முறையே 368.8
{
மரக்கறி வகைகளும், பழவகைகளும் இலங்கையி
விருத்திக்கு அவசியமான வெளிநாட்டுச் G-ឆ្នា
உன், விவசாயிகளுக்கும், கூடிய வருமானத்தைப்
மூலம் தரமான உற்பத்திகைளை அதிகரிக்கக் கூடிய
களின் ஏற்றுமதியில் ஈடுபட விரும்புவோருக்கு ளக் கொண்டுள்ளது. இவ்விடயம் பற்றிய மேலதிக விவசாய கிராம அபிவிருத்தித் திட்டம், ஏற்றுமதி (முன்பு கொழுக்ட பெரும்பாக பொருளாதார 1ளிலிருந்து பெற்றுக் கொள்ளலாம். 636 gifte ஈடுபட பலர் முன்வருவார்கள் என கமத்தொழில்

Page 4
கமத்தொழில்
இலங்கை கமத்தொழில் திணைக் விவசாயிகளுக்கா
பூச்சிப் பீடைகளின் வாழ்க்கை வட்டங்க
தெரிந்திருப்பதன் முக்கியத்துவம் பெரிய வெங்காய விதைகளை நாமே உற் பயறிலிருந்து நூடில்ஸ், τη, οι μη. பீடைநாசினி விசிறுபவர்களுக்கு பாதுகா வர்த்தக ரீதியில் ஒட்டு மாங்கன்று உற்பத் சின்ன வெங்காயப் பயிரில் களைக்கட்டுப் விவசாயச் செய்திகள் . ஒக்கிற் தாவரங்களை வளர்த்தல் வெண் ஈ. -
இாதர் மன்றம் - பழரசம் தயாரிப்போம் உயர் விளைவு தரும் புதிய நெல் வர்க்கம் திராட்சையில் கராவல் தோற்றத் தாக்கமு அலங்காரத் தாவரங்களை வளர்த்தல் அதிக பயன் தரும் முருங்கை ஏற்றுமதிக்காக மரக்கறி வகைகளும் பழம்
இவ்விதழில் வெளியாகும் கட்டுரைகளிலுள்ள பொறுப்புடையவர்களாவர். இச் சஞ்சிகைய - செய்ய விரும்புவோர் எம்மிடமிரு
விவசாயத் தினைக்கள தொழில்நு

களத்தினால் பதிப்பிக்கப்படும்
一 二・ ー 萄 $ኽ፣ பொதுகண நூலகம
参见 uанtg'нятаятчб.
ମୁଁ ସଁ ସଁt
பத்தி செய்வோம்
ப்பான் ஆடைகள்
தி Լյոն,
பீஜி 352 . *李-* Dம் கட்டுப்படுத்தும் வழிகளும்
శ్లో
த
கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே ல் வெளியாகும் விடயங்களை நிறுபிரசுரம்
ந்து அனுமதி பெற வேண்டும். .
置

Page 5


Page 6
- பூச்சிப் பீடைகளின் எ தெரிந்திருப்பதன்
********* 43443.434333443.4:39.
கலாநிதி. சி.
உதவி விவசாயப் பணிப்பாளர் தொழில் நு
பயிர்களுக்கு தீங்கு விளை விக்கு ம் பூச்சிகளைக் கட்டுப்படுத்த விவசாயிகள் பீடை நாசினிகளையும், வேறு வழிமுறைகளையும் (கைகளால் பிடித்து அழித்தல், நிலப்பண்படுத்தல் போன்றவை) பயன்படுத்தி, பூச்சிகளின் மேல் போர் தொடுத்து, அவற்றை அழிக்க முற்படுகின் றார்கள். இதனை நாம் பீடைப்போர் (Pest War) என்று குறிப்பிடலாம்.
ஒரு போரில், தவீன ஆயுதங்களை வைத்தி ருந்தால் மட்டும் போதாது. எதிரியின் படைப்பு லம் (பூச்சிகளின் வாழ்க்கை | 6.1 iä, உருமாற் றம்), எதிரியின் நடவடிக்கை (பூச்சிகளின் பழக்கவழக்கம்), எதிரியின் ஆயுதங்களின் sait 30lf (பூச்சிநாசினிகளுக்கு பூச்சிகள் காட்டும் எதிர்ப்புத் தன்மை), பிரயோகிக்கப்படும் ஆயுதங்களின் தன்மை (பூச்சிநாசினிகளின் இரசாயனத் தன்மை), ஆயுதங்களை கையாடலில் நிபுணத்து வம் (பூச்சிநாசினிகளை சரியான முறையில் பிரயோகித்தல்), ஆயுதங்களை சரியான சந்தர்ப் பங்களில் பிரயோகித்தல் (பூச்சிநாசினிகளை பொருத்தமான காலநிலை, பயிரின் வளர்ச்சிப் பருவம் பூச்சிகளின் எண்ணிக்கை என்பவற்றிற்கு ஏற்ப பிரயோகித்தல்) போன்ற பல காரணிக ளில் ஒரு போரின் வெற்றி தங்கியிருப்பது போல, பீடைப்போரில் நாம் வெத்றியீட்ட மேலே அடைப்புக் குறிகளுக்குள் குறிப்பிட்டுள்ள க்ாரணங்களை நாம் நன்கு உணர்ந்து, அவற்றிற்கு ஏற்ப செயற்பட வேண்டும்.
இக்கட்டுரையில் பயிர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் பூச்சிகளின் உறுமாற்றங்களைப்
pទាff 8, 1992 (A-1)
 

ങു கட்டுரை 3 பாழ்க்கை வட்டங்களை ன் முக்கியத்துவம்
ஞானச்சந்திரன், ܗܝ
ட்ப பிரச்சாரப் பிரிவு, விவசாயத் திணைக்களம்
பற்றி முதலில் ஆராய்வோம். ஏனைய அம்சங்க ளைப் பற்றிய கட்டுரைகள் தொடர்ந்து வரும் கமத்தொழில் விளக்கம் சஞ்சிகைகளில் இடம்
GiÎgth.
உருமாற்றம் :
ஒரு பூச்சி இளம் பருவத்திலிருந்து முதிர் பருவத்தை அடையும் போது, பருமனில் அதிகரிப்ப தைத் தவிர, அப்பூச்சி அடையும் மாற்றங்கள் திட்டவட்டமாக, தெளிவாக இருந்தால் அம்மாற்றம் உருமாற்றம் (Metamorphosis) எனப்படும். பூச்சிகள் அடையும் உருமாற்றங்களை 4 வகைகளாகப் பிரிக்கலாம்.
1. உருமாற்றம் அற்றவை (Without Metamor
phosis) -
2. படிப்படியான உருமாற்றம் (Gradual
Metamorphosis) 3. முற்றுப்பெறாத உருமாற்றம் (Incomplete
Metamorphosis)
4. பூரண உரு மாற்றம் (Complete Metamor
phosis)
1. உருமாற்றம் அற்றவை :
சில பூச்சிகள் உருமாற்றம் இல்லாமலேயே விருத்தி அடைகின்றன. உ. ம்: புத்தகங்களை அரிக்கும் வெண்மீன் பூச்சி (Silver Fish).

Page 7
படம் 1 வெண் மீன் பூச்சி
இப்பூச்சியின் வளர்ச்சி தொடர்ச்சியான தோல் கழற்றல் மூலம் நடைபெறுகின்றது. ஒவ்வொரு தோல் கழற்றலின் பின்புக் பூச்சி முன்பு இருந்தது போலவேயிருக்கும் ஆனால் பருமனில் அதிகரித்திருக்கும். இரண்டு தோல் கழற்றல்களுக்கு g68) - it ill- ஒவ்வொரு பருவமும் ஆகிரு g) (Instar) GraaTai'r LluGuħ.
இளம் பருவத்திற்கும் முதிர்ந்த பகுவத்திற் கும் இட்ையே உணவு உட்கொள்ளும் தன்மை, பழக்கவழக்கங்கள் என்பவற்றில் ஒற்றுமை
காணப்படும். இவற்றிற்கிடையே காணப்படும்
ஒரேயொரு வித்தியாசம், முதிர்ந்த பூச்சியில் இனப்பெருக்க உறுப்புக்கள் விருத்தி அடைந்திருப்ப தாகும். இவ்விதமான மாற்றத்தைக் கொண்ட
பூச்சிகள் பயிர்களுக்கு தீங்கு விளைவிப்பதாக
அறியப்படவில்லை.
2. படிப்படியான உருமாற்றம் :
இவ்விதமான உருமாற்றத்தினைக் கொண்ட பூச்சிகள் விவசாயத்தில் முக்கியமானவை. இவற்றில் அனேகமானவை தீமைகளையே
விளைவிக்கின்றன,
இப்பூச்சிகளின் உருமாற்றம் மூன்று முக்கிய பருவங்களைக் கொண்டுள்ளது :
(அ) முட்டை
(ஆ.) அணங்கு
இப்பகுவத்தில் பல ஆகிருதி நிலைகள்
ST637 u hi ta Gabfraħ,
 

அதாவது அணங்குகள் தோல் கழற்றுவதன் மூலம் பருமனில் அதிகரிக்கின்றன. இந்த ஆகிருதிகள் ஒரே மாதிரியான உருவத்தையே
கொண்டுள்ளன:
முடடை
படம் 2, நெல் மூட்டுப் பூச்சியின் வாழ்க்கை வட்டம் (படிப்படியான உருமாற்றம்)
(இ) நிறையுடலி
சாதாரண உருவ அமைப்பில் அணங்குகள்,
தோற்றத்திலும், உணவு உட்கொள்ளும் தன்மையிலும், பழக்க வழக்கங்களிலும் நிறை யுடலியை ஒத்திருக்கின்றன. ஆனால் அணங்கிற்கும் நிறையுடலியிற்கும் உள்ள வித்தியாசம், நிறையுடலியில் சிறகுகளும், இனப்பெருக்க உறுப்புக்களும் முற்றாக விருத்தியடைந்து காணப்படுவதாகும். மூட்டுப் பூச்சிகள், செதில் பூச்சிகள், வெண் மூட்டுப் பூச்சிகள், வெட்டுக்கிளிகள், கறை யான்கள், பனிப்பூச்சிகள் என்பன இவ்வகை யான உருமாற்றத்தைக் கொண்ட, விவசா யத்தில் முக்கியமான பூச்சிகளாகும்.
கமத்தொழில் விளக்கம்

Page 8
மூட்டுப்பூச்சி கை
படம் 3, படிப்படியான உருமாற்.
3. முற்றுப் பெறாத உருமாற்றம் :
பூச்சியின் உடலில் ஏற்படும் மாற்றங்கள், படிப்படியான உருமாற்றத்தைவிட கூடுதலாக வும், பூரணமான உருமாற்றத்தை விட குறைவாக வுமே காணப்படுகின்றன. இங்கு இளம் பருவங்கள் நையட்ஸ் (Nalads) எனப்படும்.
இளம் பருவங்கள் நிறையுடலியிலிருந்து வேறுtட்ட உருவத்தை, வசிப்பிடத்தைக் கொண் டுள்ளன. இளம் பருவங்கன் நீரில் வாழுகின்றன. நிறையுடலிகள் I géas é gi, Lus. நிலத் திலேயே வாழ்கின்றன. விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் பூச்சியான தும்பி, இவ்வகையான
உருமாற்றத்தினைக் கொண்டுள்ளநு.
4. பூரணமான உருமாற்றம் :
விவசாயத்தில் தீமை விளைவிக்கும் பூச் சிகளும், நன்மை விளைவிக்கும் பூச்சிகளும் இவ்வகையான உருமாற்றத்தைக் கொண்
டுள்ளன. -
பூரணமான உருமாற்றத்தில் தி ப்ருவங்கள் காணப் படுகின்றன. அவையாவன:
(அ) முட்டை
(ஆ) குடம்பி
(இ) கூட்டுப்புழு
(ஈ) நிறையுடலி
இங்கு இளம் பருவங்கள் வேறுபட்ட உருவங் களையும், வசிப்பீடங்களையும் கொண்டுள்ளன.
LD6)si 33, 1992
 

போதுசன நூ லகம் μπυδιά πειετιέ.
றயான் வெட்டுக்கிளி
றத்தைக் கொண்ட பூச்சிகள் சில
படம் 5 பூரண உருமாற்றத்தைக் காட்டும் இலைச்
சுருட்டியின் வாழ்க்கை வட்டம்
முட்டையிலிருந்து வெளிவரும் குடம்பி (புழு) பல ஆகிருதி நிலைகளூடாகப் பெரிதாகி கூட்டுப்புழுவாக மாறுகின்றது. குடம்பிகள் பயிர்கள், பயிர்களின் பூக்கள், தானியங்கள் இலைகள், தண்டுகள், வேர்கள், என்பவற்றை சேதப்படுத்துவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். கூட்டுப்புழு பருவம் ஒர் ஆறுதல் நிலையாகும். இது உணவு உட்கொள்வதில்லை. கூட்டுப்புழு விலிருந்து நிறையுடலி உருவாகின்றது.
@@ பூச்சிகளின் நிறையுடலிகள் விவசாயத் தில் தீமை விளைவிக்கின்றன. வேறு சிஐ நேரடியான சேதங்களை ஏற்படுத்துவதில்லை. ஆனால் முட்டைகளை பயிர்களின் மேல் இடுவத னால் மறைமுகமான சேதத்தையே விளைவிக்

Page 9
ਪ7 அந்து
படம் 5, பூரண உருமாற்றத்
விவசாயிகளே ! உங்கள் தோட்டங்களில் தீங்கு விளைவிக்கும் பூச்சிகள் ݂ ݂ ݂ ݂
- எவ்வகையான உருமாற்றத்தைக் கொண்
- பூச்சியின் எவ்வாழ்க்கைப் பருவம் பயிர்க
ளைத் தாக்குகின்றன. -
-z
کمرہ ඉන්‍ද .< * ܐܪ ܠ . - பூச்சியின் எவ்வாழ்க்கைப் பருவங்கள் பயிர்க
ளைத் தாக்குவதில்லை. --
 

எறும்பு தேனி
தைக் காட்டும் பூச்சிகள் சில
- பூச்சியின் வெவ்வேறு பருவங்கள் LJufìẩìả}, பயிர்ச்சுற்றாடலில் எந்தெந்த இடங்களில் காணப்படுகின்றன.
என்பவற்றை அறிய முயலுங்கள். இத் தகவல்கள் பூச்சிகளைக் கட்டுப்படுத்த இரசாயனங்களைப் பயன்படுத்தாமல் வேறு என்ன வழிவகைகளில் ஈடுபடலாம், என்பதைத் தீர்மானிக்க உதவும். மேலும் இரசாயனங்களைப் பயன்படுத்துவதாயின் எவ்வகையான தொழிற்பாடுடைய பீடைநாசினி
களைப் பயன்படுத்த வேண்டும், எப்பொழுது
பயன்படுத்த வேண்டும் என்பதை தீர்மானிக்க
உதவும், இவற்றைப் பற்றி அடுத்துவரும் கட்டுரைகளில் விரிவாக ஆராய்வோம்.
கமத்தொழில்

Page 10
பெரிய வெங்காய
மேலதிக பிரதி விவசாயப் பணிப்பு
எமது நாட்டு விவசாயிகளுக்கு அதிக வகுமானம் தேடித்தரும் பயிர்களுள் பெரிய வெங்காயமும் ஒன்றாகும். இலங்கை மக்களுக்கு ஒரு வருடத்தில் 40,000-30,000 மெற்றிக் தொன் பெரிய வெங்காயம் தேவைப்படுகின்றது. ஆயினும் தற்போது 10,000-15,000 மெற்றிக் தொன் அளவு பெரிய வெங்காயம் மட்டுமே உள் நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றது. எனவே ஒவ்வொரு வருடமும் பெரிய வெங்காயத்தை வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. இதன் காரணமாக உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளில் விவசாயத் திணைக்களம் ஈடுபட்டுள்ளது.
பெரிய வெங்காயத்தை உற்பத்தி செய்வதற்குத் தேவையான விதைகள், பிரதானமாக, இறக்குமதி செய்யம்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன. சென்ற வருட சிறுபோகத்திற்காக விவசாயத் திணைக்களத்தினால் 28,000 கி. கிராம் விதைகளும், தனியார் துறையினால் 5000 கி. இவிதைகளும் இறக்குமதி
ܡ
பெரிய வெங்காயச் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் எதிர்நோக்குகின்ற பிரதான பிரச்சினை சிறந்த ՖՄLDIF6մ விதைகளைப் பெற்றுக் கொள்ள ஆழ்டியாமல் இருப்பதே ஆகும். இறக்குமதி செய்யப்படுகின்ற விதைகள் சிறந்த தரமுடையவையாக இருக்கும் என உறுதியாகக் கூறமுடியாது. விவசாயிகள் - தங்களுக்குத் தேவையான விதைகளை தாங்களே உற்பத்தி செய்து கொள்ளுவதே இப்பிரச்சனை யைத் தீர்ப்பதற்கான சிறந்த வழியாகும். இதன்
ܓܒܠ
 

,拳 பாதுசன நூலகம்
ܗ யாழ்ப்பாணம்.
விை தகளை நாமே செய்வோம்
த்நாயக்க, ாளர் தொழில்நுட்ப பிரச்சாரம்
மூலம் விவசாயிகள் விரும்புகின்ற பெரியவெங்காய வர்க்கத்தின் சிறந்த, தரமான விதைகளை
உற்பத்தி செய்து கொள்ளலாம்:
வெங்காயங்களைத் தெரிவு செய்தல்;
இதற்காக விவசாயிகள் தங்களது சிறுபோக பயிரிலிருந்து,தங்களுக்கு விருப்பமான வர்க்கத் தைச் சேர்ந்த, நன்கு முற்றிய வெங்காயக் குமிழ்களை (வெங்காயங்கள்) தெரிவு செய்து கொள்ள வேண்டும். இவை 'தாய்க்குமிழ்கன்' ன்ன அழைக்கப்படும். தெரிவு செய்யப்படும் குமிழ்கள் நோய்களால் தாக்கமடையாததாகவும், தெரிவு செய்யப்படும் வர்க்கத்தின் இயல்புகளைக் கொண்டிருக்கவும் வேண்டும். தெரிவு செய்யப் படும் குமிழ்கள் ஒவ்வொன்றும் 40-50 கிராம் நிறையுடையவையாக இருக்க வேண்டும். ஒரு ஏக்கருக்குத் தேவையான பெரிய வெங்காய விதைகளை உற்பத்தி செய்வதற்கு இவ்வாறான வெங்காயக் குமிழ்கள் 300-500 தேவைப்படும்.
சேமித்தல்:
தெரிவு செய்த வெங்காயக் குமிழ்களை நொவெம்பர் மாத இறுதி வரை விசேட வெங்காயச் சேமிப்புக் களஞ்சியங்களில் சேமிக்க வேண்டும் அல்லது வெங்காய இலைகளினாலேயே பிடிகளாகக் கட்டி, காற்றோட்டமுள்ள உலர்வான இடங்களில் தொங்கவிட வேண்டும். இதனைத் தொடர்ந்து டிசெம்பர் மாதத்தில் 4 வாரகாலம், இவ்வெங்காயக் குமிழ்களை குளிரான கால நிலையுள்ள பிரதேசங்களில் சேமித்து வைக்க வேண்டும். இவ்வாறு சேமித்தல் வசந்தகால நிலைப்படுத்தல் ଗt ଜଙ୍ଘ அழைக்கப்படும்,
V

Page 11
இவ்வாறு குளிரான பிரதேசங்களில் சேமிக் கப்பட்டு வசந்தகால நிலைப்படுத்தலுக்கு உட் படுத்தப்பட்ட வெங்காயக் குமிழ்கள் விரைவில் பூக்களை உற்பத்தி செய்கின்றன. ஒரு வெங்காயத் திலிருந்து அதிக பூக்களும், ஒவ்வொரு பூவிலிருந் தும் அதிகளவு விதைகளும் உருவாகின்றன. தற்போது எமது நாட்டில் விதை உற்பத்தியில் பயன்படுத்தப்படுகின்ற'கல்பிட்டி'வர்க்க Gւյfիս 1 வெங்காயக் குமிழ்களை குளிரான பிரதேசங்களில் சேமித்து வசந்தகால நிலைப்படுத்தலுக்கு உட்ப -டுத்திய போது கூடிய விதைகள் பெறப்பட்டது.
நடுகைக் காலம்:
வெங்காயக் குமிழ்களை நட்டு 4-5 வாரங் களின் பின்பு பூக்கள். தோன்ற ஆரம்பிக்கும். இக்காலத்தில் உலர்வான காலநிலை அவசியம், எனவே பூக்கின்ற காலங்களில் உலர்வான காலநிலை இருக்கத்தக்கவாறு நடுகைக் காலத்தை தீர்மானித்துக் வேண்டும். தம்புல்லைப் பிரதேசத்தில் ஜனவரி மாதத்தில் வெங்காயல் களை நடுவதனால் உலர்காலத்தில் பூக்கள் தோன்றுவது அவதானிக்கப்பட்டுள்ளது.
நடுகை இடைவெளி: -
வெங்காயங்களை பாத்திகளில் நடுவது நல்லது. 30 ச். மீ (1 அடி) இடைவெளியிலுள்ள திரைகளில் 15 ச. மீ (8 அங்.) இடைவெளியில், 2-3 அங். ஆழத்தில் வெங்காயங்களை நடுக.
பராமரிப்பு:
நட்ட காலத்திலிருந்து விதைகளை அறுவடை செய்யும் காலம் வரை ஒழுங்காக, போதியளவு நீர்ப்பாசனம் செய்யக் கூடியதாகவிருக்க வேண்டும்.
இப்பயிருக்கும், வெங்காயத்தைப் பெறுவதற் கான பயிருக்கு இடுவதைப் போன்றே பசளை இடுவது நல்லது. -
பல முறை களைகளை அகற்றி பாத்திகளில் களைகள் இல்லாது பராமரிக்க வேண்டும்:
6

பயிர் பூப்பதற்கு முன்பேயே, நோய்களால் திக்கப்பட்ட தாவரங்களையும், பயிரிடப்பட்ட வர்க்கத்தின் இயல்புகளை யல்லாது, வேறு இயல் புகளைக் காட்டும் தாவரங்களையும் பிடுங்கி தோட்டத்தைவிட்டு அகற்ற வேண்டும்.
தோன்றும்
படம் 1, ஒரு வெங்காயக் குமிழிலிருந்து பல பூக்கள்
நட்டு 4-5 வாரங்களின் பின்பு பயிர் பூக்கவாரம்பிக்கும். பூக்களை உற்பத்தி துள்ள தாவரங்களை கடும் மழையிலிருந்து பாதுகாப்பதற்கு தடிப்பான வெண்ணிறப் பொலித்தினால் பாத்திகளின் மேல் கூரை போன்று அமைத்துவிட வேண்டும். மழையில்லாத நேரங் களில் இப்பொலித்தீனை அகற்றிவிடலாம்.
படம் 3, வெங்காபப் பாத்திகளை பொலித்தினால்
@p@莒命
நீர் ஊற்றும் போது பூக்காம்பு உடைந்து விடாத விதத்தில் நீர் ஊற்ற வேண்டும். தேவை யாயின் தாவரங்களுக்கு அருகில் சிறிய தடிகளை நட்டு அவற்றுடன் சேர்த்து பூக்காம்புகளைக் கட்டி அவை வளைந்து விழுவதைத் தடுத்துக் கொள் ளலாம். பூக்களில் மகரந்தச் சேர்க்கை பிரதான மாக ஈக்களின் மூலம் நடைபெறுகின்றது.
கமத்தொழில் விளக்கம்

Page 12
பூக்கத் தொடங்கியதும் பயிருக்கு அருகில் தேனீப் பெட்டிகளை வைப்பதன் மூலம் மகரந்தச் சேர்க்கையை அதிகரித்துக் கொள்ளலாம். ஒரு ஏக்கரில் 3-4 தேனிக் குடிகள் வைக்கப்படுவது நல்லது.
பயிர் பூப்பதற்கு முன்னரேயே பயிரில் நோய்களையும், பூச்சிப்பீடைகளையும் நன்கு கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில் பயிர் பூத்ததற்குப் பின்னர் பூச்சிநாசினிகள்ோ, பங்கசு நாசினிகளோ விசிறுவதை இயன்ற அளவிற்குக் குறைத்துக் கொள்ள வேண்டும். இரசாயனங்களை விசிறும் போது மகரந்தச் சேர்க்கையை ஏற்படுத்தும் பூச்சிகளும் இறப்ப தனால் விதை உற்பத்தி குறையக் கூடும்.
விதைகளை அறுவடை செ ய்தல்:
படம் 8 வின்தகள் தோன்றிய பூ ஒன்றின்தோற்றம்
ஒரு பயிரில் சகல பூக்களும் ஒரே நேரத்தில் முதிர்ச்சியடையாது. இதனால் பல தடவைகள் அறுவடை செய்ய வேண்டியேற்படும். விதைகள் கறுப்பு நிறமடைந்ததும் 10-15 ச. மீ (4-6 அங்.) நீளக் காம்புடன் பூவை வெட்டி எடுக்கலாம். வெட்டி எடுக்கும் போது விதைகளைக் கொண் 3ள்ள சிறிய காய்கள் வெடித்து விதைகள் உதிரக் கூடும். எனவே பூவின் கீழ் விரல்கள் இருக்கக் கூடியவாறு பிடித்துக் கொண்டு வெட்டி அகற்ற வேண்டும். அப்போது உதிரும் விதைகள் கையிலேயே விழும். வெட்டி எடுத்த பூக்களை சாக்குகளின் மேல் பரப்பி 2-3 நாட்கள் வெயிலில் நன்கு காய வைத்துக் கொள்ளுக.
 

படம் 4, பூக்களை, விதைகள் நிலக்கில் விழாது
வெட்டுதல் ܘ
பூக்களை இறப்பர் மேற்பரப்பு ஒன்றில் தேய்த்து விதைகளைப் பிரித்து எடுக்கலாம். அவற்றை நன்கு புடைத்து வேறு பொருட்களை அகற்றிச் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். சுத்தம் செய்த விதைகளை பொலித்தீன் பைகளில் அல்லது அலுமீனியக் கடதாசிகளில் சுற்றி குளிர்ந்த, உலர்வான இடங்களில் சேமித்து வைக்கலாம். - -
- ஜனவரி மாதத்தில் வெங்காயக் குமிழ்களை நட்டால், மார்ச்சு, ஏப்ரல் 2ாதங்களில் விதை களைப் பெறலாம். இவ்விதைகளை நீண்ட காலம் சேமிக்க வேண்டியதில்லை. ஏப்ரல், மே, மாதங்களில் அவற்றை நாற்று மேடைகளில் நட்டு சிறுபோகப் பயிராக தோட்டங்களில் நடலாம்.
விவசாயிகள் தங்களுக்குத் தேவையான பெரிய வெங்காய விதைகளை தாங்களே உற்பத்தி செய்து கொள்வதன் முக்கியத்துவத்தை அறிந்து கொண்டிருப்பார்கள் என எதிர்பார்க்கின்றோம். இதன் மூலம் விதைகள் கிடைக்காததால் அல்லது தரங் குறைந்த விதைகளினால் ஏற்படும் பிரச் சனைகளைத் தவிர்த்துக் கொள்ளலாம்.
தமிழில் வாசு
7

Page 13
பயறிலிருந்து
LulSuuyu y ySyy y s uu yyuluyyyuyy yyyyyyuuS
ー3 。
Lo, gLIT LUI si ஆராய்ச்சி அலுவலர், சோயா அவஜர உணவு
இலங்கை மக்கள் மத்தியில் பயறு ஆதி காலம் முதல் பிரபல்யமான உணவு வகையாக திகழ்ந்து வருகின்றது. பயறில் ஏறக்குறைய 20-25% புரதமும், 1.1 . 3% கொழுப்பும், 56-64% காபோவைதரேற்றும், குறிப்பிடத் தக்க அளவு விற்றமின் வகைகளும், தாதுப்பொருட்களும் உள்ளன.
* எமது நாட்டில் கறியாகச் சமைத்து அல்லது அவித்து தேங்காய் சீனியுடன் கலந்து அல்லது மாவாக அரைத்து பலகாரங்களாகத் தயாரித்தே பயறு உணவாகக் கொள்ளப் படுகின்றது. சில வேளைகளில் பயற்றை ஊறவிட்டு முளை வந்தவுடன் 'தப்’ ஆக அல்லது கிச்சடி ஆகத் தய்சரித்தும் உண்ணப் படுகின்றது.
தாய்லாந்து, பிலிப்பீன், இந்தோனீசியா போன்ற தென்கிழக்காசிய நாடுகளில் முளை விட்ட பயறிலிருந்து உணவு தயாரித்தல் மிகவும் பிரபல்யமானதாகும். அதேபோல், பயறிலிருந்து தயாரிக்கப்படும் நூடில்ஸ் ரீ. வீ.பி என்பனவும் இந்நாடுகளில் பிரவல்யமானவையாகவுள்ளன. இந்நாடுகளில் பயறிலிருந்து தயாரிக்கப்படுகின்ற *ួT ធ្នូ ឆ្នាំ៨) மிகவும் விலை கூடியது ஆகும்,
பயறிலிருந்து மாப்பொருளையும், LјТg5;ä தையும் தனித்தனியாகப் பிரித்து எடுத்து
அவற்றிலிருந்து முறையே "நூறு டில்ஸ்’ ***.鳄,垒”” என்பவற்றைத் தயாரிக்கும்
முறைகளை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும். இம்முறைகளை குடிசைக் கைத்தொழிலாகவும், வியாபார ரீதியில் மேற் கொள்ளுகின்ற தொழிலாகவும் கைக்கொள் ளலாம். -
8
 

நூடில்ஸ், ரீவீபீ
ySyy y S u uu yyyyGyyylyy yuLy S ui LL Ku yyyyl LL luLu Lu yLLLLyLLL LLL SLLL LLLL கடவத்தஆராச்சி,
ஆராய்ச்சி நிலையம், கண்ணோறுவ, பேராதனை
。
பயறிலிருந்து மாப்பொருளையும்,
புரதத்தையும் பிரித்து எடுத்தல்:
வீடுகளில் சாதாரணமாக கிடைக்கக்கூடிய
உபகரணங்களைப் பயன்படுத்தி மாப்பொரு
ளையும், புரதத்தையும் பிரித்தெடுக்கும் முறை இங்கு விபரிக்கப்படுகின்றது.
முதலில் கல், மண் வேறு தூசிகளை அகற்றிய பின்பு, பயறைக் குற்றி அவற்றின் தோலை அகற்றிக் கொள்ளுக. பின்பு குறைந் தது 3 மணி நேரம் குளிர் நீரில் பயறை நன்கு ஊற விட்டு, அம்மி, குளவி மூலம் அல்லது இயந்திரங்கள் மூலம், நீருடன் சேர் த்து, நன்கு அரைத்துக் கொன் ஞக. அரைக்கும்
கமத் தொழில் விளக்கம்

Page 14
போது நிறையடிப்படையில் ஒரு பங்கு பயறிற்கு 3 பங்கு நீர் சேர்க்கப்பட்ட வேண்டும், மெதுமையாக அரைக்கப்பட்ட பயறு நீர்க் கலவையை மெல்லிய துணி ஒன்றினூடாக வடித்துக் கொள்ளுக. வடிக்கும் போது கிடைக் கின்ற சக்கையை மீண்டும் ஒரு தடவை நீரில் கரைத்து வடித்துக் கொள்ளலாம்.
வடித்துப் பெறப்பட்ட திரவம் மாப் பொருளையும், புரதத்தையும் கொண்டுள்ளது. இதனை 30 நிமிட நேரம், குழப்பாது வைத் திருக்கும் போது மாப்பொருள் அடியில் மண்
டியாகப் படியும், புரதம் மேலேயுள்ள நீரில்
கரைந்து காணப்படும். இதனைக் கவனமாக
r
ஊற்றி மாப்பொருளை வேறாக்கிக் கொள்
ளலாம். இவ்வெண்ணிற மா ம்பொருளை
நூடில்ஸ் தயாரிப்பதற்கு உடனடியாகப் பயன் படுத்தலாம். அல்லது @aນ. நன்கு. காயவைத்து, காற்றுப் புகாத பொலித்தீன்
பைகளில் அல்லது ரின்கனில் சேமித்து வைத்
துப் பின்னர் பயன்படுத்தலாம்.
முன்புகூறியவாறு பிரித்து எடுத்த புரதத் தைக் கொண்ட திரவத்தை, சூடாக்குக. சூடாக்கும் போது நன்கு க்லக்க வேண்டும். திரவம் நன்கு கொதிக்கும் போது, சிறிதளவு வினாக்கிரியைச் சேர்க்கும் போது (ஒரு கிலோ பயறிற்கு 3 தேக்கரண்டி அல்இது 15 மி.லீ வினாக்கிரி) புரதம் கட்டியாக மாறும். கட்
டியான புரதத்தை வடித்து, வேறாக்கி
வெயிலில் காய வைத்துக் கொள்ளுக. இவ் 6մn g}} கிடைக்கின்ற கபில நிறமான புரதக் கட்டிகளை ஊறவைத்து ரீ. வீ.பி போன்று - பயன்படுத்தலாம். .
இப்புரதத்தைக் காய வைத்து இடித்து அல்லது அரைத்துத் தூளாக்கி, இறிகள் அல்லது சூப் தயாரிக்கும். போதும் அவற்றிற்குச் சேர் த்து, அவற்றின் சுவையையும், தரத்தையும் அதிகரித்துக் கொள்ளலாம். இதில் 58% புரதம் உள்ளதனால், இது மிக முக்கியமான போஷ ணைப் பொருளாகும்.
ஒரு கிலோ பயறிலிருந்து ஏறக்குறைய 300 கிராம் உலர்த்திய மாப்பொருளையும்,
240 கிராம் உலர்த்திய புரதத்தையும், 300
கிராம் உலர்த்திய சக்கையையும் பெறலாம்.
மலர் 33, 199 (A-2)

- ܦ 葵
பொதுசன நூலக்கி ມ.
இச் சக்கையை, கோதுமை மா அல்லது அரிசி மாவுடன் சேர்த்து பிட்டு, நொட்டி போன்ற உணவு வகைகளைத் தயாரித்துக் கொள்ளலாம்.
'நூடில்ஸ்' தயாரிக்கும் முறை
ஒரு பங்கு நிறை மாப்பொருளுக்கு 6 பங்கு நிறை என்ற விகிதத்தில் நீர் சேர்த்து மாப்பொருளை நன்கு கரைத்துக் கொள்ளுக. இதனை 5 நிமிட நேரமளவு, கரண்டி ஒன் றால் நன்கு கலக்கிக் கொண்டு சூடாக்க வேண்டும். அதன் பின்பு மாப்பொருள் கலவையி ன் சூடு ஆறுவதற்கு முன்பாக, இடியப்ப உரஜினில் இட்டு, நூடில்ஸ் வடிவில், குளிர் ந்த சுத்தமான நீரைக் கொண்டுள்ள பாத் திரம் ஒன்றினுள், பிழிந்து கொள்ளுக. அப் போது நூல் போன்ற, ஒளி புகலிடுகின்ற
வடியவிட்டு உலர்த்திச் சேமிக்கலாம. 1.கி. கி பயறு மாப்பொருளிலிருந்து 850 கிர்ாம நூடில்ஸ் தயாரித்துக் கொள்ளலாம்.
சுவையான பயறு "நூடில்ஸ்' இற்கு சந்தையில் அதிக கேள்வி உள்ளது. எனவே பயறிலிருந்து நூடில்ஸ் தயாரிப்பதை சுயதொழில் ஒன்றாக வீடுகளிலே மேற்கொள்ளலாம்.
தமிழில்: 6.
9 -

Page 15
பீடைநாசினிகளை
பாதுகாப்பா6 1.4.4.4.4.4.4.st: 1:4. h: fe ef> 

Page 16
*
நீளக் ܀ காற்சடடை
-
جستارهای سیاسی
சப்பாத்து
އަކީ 2 ܔܓ
மலர் 33, 1992
 
 
 

S
"சேன நூலகம்
***ー。
நீளக் கையுள்ள சடடை
ν

Page 17
3. சேர்ட்:
பருத்தித் அணியினால் ஸ்தக்கப்பட்ட, நீள
கைகள்ள சேர்ட். இதற்காக நீளக் கையுள்ள
பருத்தித் துணியினால் தைக்கப்பட்ட பழைய சேர்ட் ஒன்றையும் பயன்படுத்தலாம்.
4. கையுறைகள்:
35.ச.மீ நீளமான இரப்பரினால் ஆன
கையுறைகள் இவற்றை வீதியோரக் கடைகளில் குறைந்த விலையில் வாங்கிக் கொள்ளலாம்.
5, நீளக் காற்சட்டை:
ரூத்தித் துணியினால் தைக்கப்பட்டது இதற்காக பழைய நீளக் காற்சட்டை ஒன்றையு! பயன்படுத்தலாம்.
6. சப்பாத்து:
இதற்காக இரப்பர் "பூட்ஸ்' களை பயன்படுத்தலாம். நெற்பயிருக்கு பீkை நாசிை களை விசிறும் போது இவற்றைப் பயன்படுத் முடியாது. ஆனால் மேட்டுநிலப் பயிர்களுக் பீடை நாசினிகளை விசிறும் போது பயன்படு:
*
56ಳಿÏå :
இப்பாதுகாப்பு ஆடைத் தொகுதியில் சப்பாத்து தவிர்ந்த ஏனைய பகுதிகளை த
போதய விலையில் ரூபா 300/- செலவி
தயாரித்துக் கொள்ளலாம்.
: &

ଅଁଟଁ
e
பீடைநரசினிகளை விசிறும் போது இப்பாது
காப்பு ஆடையை அணிவதுடன் பின்வரும் முன்னெச்சரிக் கை நடவடிக்கைகளையும் பின்பற்றினால், பீடை நாசினிகளினால் ஏற்படும்
ஆபத்துக்களை குறைத்துக் கொள்ளலாம்.
பாதுகாப்பான ஆடைகளை அணியாமல், பீடைநாசினிப் போத்தல்களை திறக்கவோ, பீடைநாசினிகளைக் கலக்கவோ கூடாது.
* ஒரு நாளில் அதிக நேரம் தொடர்ச்சியாக பீடைநாசினி விசிறுவதைத் தவிர்க்க
வேண்டும்.
* பீடைநாசினிகளை விசிறும் போது, வெற் றிலை சாப்பிடுவதையோ, உணவு உண்ப
தையோ, நீராகாரம் அருந்துவதையோ தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
* காற்று வீசும் திசைக்கு செங்குத்தாக விசிறு
வதன் மூலம், பீடை நாசினிகள் உடலில் தெறிப்பதைத் தவிர்த்துக் கொள்ள வேண்
கோள்ள வேண்டும்.
* ஒவ்வொரு தடவையும் பீடைநாசினி விசிறிய பின்பு பாதுகாப்பு ஆடைகளை, நன்கு
கழுவிச் சுத்தம் செய்து உலர்த்திக் கொள்ள வேண்டும்.
தமிழில்: வாசு
கமத்தொழில் விளக்கம்
ஒழுகுகின்ற, பிழையான விசிறும் இயந்தி ரங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துக்

Page 18
வர்த்தக ரீதியில் ஒட்டு
Y eu ysuyyyyyLygYsLyLyyeyyyySySykyyyss శ్మీక్కీ
கே. பத்
விரிவுரையாளர், விவசா
மான்கன்றுகளை விதைகளிலிருந்தும், ஒட் டுதல், பதிவைத்தல் போன்ற முறைகளாலும் உற்பத்தி செய்ய முடியும்.
விதைகள் மூலம் அதிக எண்ணிக்கையான கன்றுகளை, குறைந்த செலவில் பெற முடியும். ஆனால் அவை அனைத்தும், விதைகளைப் பெறும் தாய் மரங்களின் சிறந்த இயல்புகளைக் கொண்டிருக்கும் என்று கூற முடியாது. அத் துடன் அவை காய்ப்பதற்குக் கூடிய காலம்
செல்கின்றது.
பதிவைத்தல் மூலம் நல்ல இனக் கன் றுகளை பெற முடியும். ஆனால் அதிக எண் ணிைக்கையான கன்றுகளைப் பெறுவதற்கு, - <936ទេវតា தாய் மரங்கள் தேவை.
ஒட்டுதல் மூலம், சிறந்த இயல்புகளையு டைய அதிக எண்ணிக்கையான மாங்கன் றுகளை, குறுகிய காலத்தில், குறைந்த செலவில் உற்பத்தி செய்து கொள்ளலாம். குறிப்பாக
படம் 1 மாவிதைகளை நடுவதற்கா
ລ 3 3 1999
 
 

- s
༽ 穆 ● - ཐ་ ܓܹܗ மாங்கன்று உற்பத்தி yYJAl rylLSYSKeYYeLSSSy AeAA L yy YYeueeSyySySySgL L eyeyueee மநாதன், யக் கல்லூரி, குண்டசாலை
"கிளை ஒட்டுதல் முறை ஒட்டு மாங்கள் றுகளைப் பெற சிறப்பான முறையாகும்.
விதைகளிலிருந்து பெறப்பட்ட கன்றுகளில் நர்ம் விரும்பும் இயல்புகளைக் கொண்ட மாமரங்களின் (தாய் மரங்கள்) கிளைகளை ஒட் டுவதன் மூலம் ஒட்டு மாங்கன்றுகள் பெறப் படுகின்றன, வர்த்தக ரீதியில் ஒட்டு மாங் கன்றுகளைப் பெறுவதற்கான வழிவகைகளை இக் கட்டுரை விளக்குகின்றது. . . .
நாற்று மேடை
முதலில் DIT GÉGI) 3525 GOD SIT, நட்டு, ஒட் டுவதற்குத் தேவையான மாங்கன்றுகளை வளர் த்துக் கொள்ள வேண்டும். இக்கன்றுகள் ஒட்டுக் கட்டைகள் எனப்படும். நாற்று மேடைக்கு, ஓரளவு நிழல் உள்ள, போதியளவு நீர் கிடைக் கின்ற, இடம் ஒன்றை தெரிவு செய்து கொள்ள வேண்டும். வெப்பம் கூடிய இடத்தில் மாகேன் றுகளின் வளர்ச்சி பாதிக்கப்படுகின்றது.

Page 19
淇、 إن ستة
ܐ ܩ_1 ܣ, ܝܲܩܝ̈ܡ ”ܝܵܢ¬...-ܡܚܕ
படம் 2: நாற்று மேடைகள், வலது புறத்தி
இவ்விடத்தில் நீர் தேங்கி நிற்காமல், நன்கு வடிந்து செல்ல வேண்டும். நிழல் போதியளவு கிடைக்காத இடமாயின், படம் 1 Qಖಿ காட்டப்பட்டுள்ளது போன்று, உள் ளூர் மூலப்பொருட்களைப் பயன்படுத்தி கொட் டில் ஒன்றை அமைத்துக் கொள்ளலாம்.
நிழலுள்ள இடத்தில் அல்லது கொட்டிலி னுள் 6-8 உயரமும் 3' அகலமும், தேவைக்கேற்ப நீளமும் கொண்ட, தொட்டி போன்ற (படம் 2 இல் காட்டப்பட்டுள்ளது போன்ற), மேடை களை அமைத்துக் கொள்ளுக. இத்தொட் டிகளை பெருமணல் (ஆற்று மணல்) கொண்டு
நிரப்புக,
ஒட்டுக் கட்டைக்கான விதைகள்:
புளிமா, நார்மா ஆகிய வர்க்கங்களின் விதைகள் ஒட்டுக்கட்டைக்கான கன்றுகளை உற்பத்தி செய்வதற்குச் சிறந்தவை GT3 j GLIT ரிசு செய்யப்பட்டுள்ளன. இவ்வர்க்கங்கள் வரட் சியைத் தாங்கி வளர்வதனாலும், நோய் பீடைகளுக்கான எதிர்ப்புச் சக்தியைக் கொண் டிருப்பதனாலும் விரும்பப்படுகின்றன. ஆயினும் தோட்டத்தில் நட்ட பின்பு, சிறந்த முறையில் பராமரிக்க முடியுமாயின், வேறு வர்க்க ခါရလော့ငှာ, ၅၄ களையும் ஒட்டுக் கட்டைக் கன்றுகளை உற்பத்தி செய்யப் பயன்படுத்தலாம்.
4
 
 

ܝܚܝܝܝܝܝܝܝܝܝ -سیسم-سستیت- یوجی
லுள்ளது ஆற்று மணலால் நிரப்பப்பட்டுள்ளது .
புளி, giri வர்க்க 'மா விதைகளை காடுக விலிருந்து அதி எண்ணிக்கையில் பெறக் கூடிய தாக இருப்பதனால், இதற்கான செலவும் குறைவாகும். பழங்களைத் தகரத்தில் அடைக்கும் தொழிற்சாலைகளிலிருந்தும் மா விதைகளை இலகுவாக பெற்றுக் கொள்ளலாம். ܦ
விதைகளைப் பிரித்தெடுத்தல்:
நன்கு முற்றிய காய்களைச் சேகரித்து, அவை பழுத்த பின்பு, 2-3 நாட்களுக்கு அழுக விடப்பட வேண்டும். அழுகிய பழங்களை 2-3 நாட்களுக்கு ஓரளவு வெயிலில் காயவிட வேண்டும். பின்பு விதைகளைப் பிரித்து எடுத்து, அவற்றின் வன்கோதுகளை அகற்றி வெண்ணிறSான வித்து சேகரிக்கப்பட வேண்டும். இவை விரைவில் முளைக்கின்றன. அத்துடன், நீள் மூஞ்சி வண்டின் தாக்கத்தினால் சேதமடைந்த வித்துக்களையும் அகற்றலாம். நீள் மூஞ்சி வண்டு, வித்துக்கனின் முளையங்களை தாக்காது இருந்தால், அவ்வித்துக் ... හී, ග්‍රිඩ් ග්‍රි# , ஐதான பூச்சி நாசினிக் கரைசல் ஒன்றில்
சிறிது நேரம் ஊறவிட்ட பின்பு, நடலாம்.
LITT U LDT 53r, திரட்சியான வித்துக்களை தெரிவு செய்து நட வேண்டும். அவற்றிலிருந்து முளைக்கின்ற க்ன்றுகள் வீரியமாக வளர்கின்றன:
கமத்தொழில் விளக்கம்

Page 20
விதைகளை நடுதல்:
வித்துக்களின் உருள்ையான பக்கம் மணல் மேற்பரப்பு மட்டத்தில் இருக்கத்தக்கதாக ஏற் தயாரித்த மனில் மேடைகளில் விதைகளை வரிசைகளில் நடுக (படம் 3). ஒவ் வொரு வரிசைக்கும் இடையில் 4-6 அங் குல இடைவெளியும், வரிசையில் விதைகளுக்கு இடையே 3-1 அங்குல இடைவெளியும் இருக் இத்தக்க விதத்தில் விதைகளை அடுக்கி மணலால் மூட வேண்டும். பின்பு வைக்கோல் அல்லது காய்ந்த புற்களினால் மேடைகளை மூடி நன்கு நீர் ஊற்றுக.
本 ○ ○ ○ ー ○
| • ల නූට් , රටා (යූ ,
ඉදං? 조 as : زر) , ඊට نئی حصے نیم
*قع ہے.4ے
L一á 9占TC@ மேடைகளில்
|E-ւնt46ւծ զո2,0 .
மேடை உலர்ந்து விடாத விதத்தில், தினசரி காலையும் மாலையும் நீர் ஊற்ற வேண்டும். இரண்டு கிழமைகளில் விதைகள் முளைக்க ஆரம்பிக்கும். முளைத்து இரண்டு கிழமைகளின் பின்பு, மாங்கின்றுகளை பொலித்தீன் பைகளில் 。西L●T醛。 -
பொலித்தீன் பைகளை நிரப்பும் கலவை:
பொலித்தின் பைகளை நிரப்பும் கலவை, மாங்கன்றுகளின் வளர்ச்சிக்குத் நீரை பிடித்து வைத்திருக்கக் கூடியதாகவும், அதே நேரம் 3 Tឆ្នាtu៩៣៣ காற்றிடைவெளிக
ளையும் கொண்டிருக்கவும் வேண்டும்.
இக்கலவை கடினமானதாக இருந்தால், . " நீர் வடிப்பு பாதிக்கப்பட்டு பொலித்தின் பைகளில் நீர் நிரம்பி வேர் வளர்ச்சி குறையும். சிஐந்த இயல்புகள்ை க் Θεπείς 8 ഞഖഞ13 தயாரிப்பதற்கு 50-75% நன்கு உக்கிய சேதனப்
பொருட்களை, அல்லது கூட்டெருவை,25-50%
nఖగ శిశి, 1992 ,
 

பெரு மணலுடன் (ஆற்று மணலுடன்) கலக்க வ்ேண்டும். இவற்றுடன் சிறிதளவு செறிந்த சுப்பர் பொசுபேற்று சேர்ப்பதனால் மாங்கன்
றுகளின் வேர் வளர்ச்சியைத் துரிதப்படுத்தலாம்.
சுட்டெருவும் 18ண ஆம் நன்கு கலக்கப்பட்டு, சிறிது சிறிதாக நீர் சேர்க்க வேண்டும். இக் கலவை கையினால், இலகுவாக உதிரக் கூடிய உருண்டையாகப் பிடிக்கக்கூடிய பதத்தை அடையும்வரை நீர் சேர்க்க ன்ேண்டும். பின்பு அதனை பொலித்தீன் பைகளை நிரப்புவதற்குப்
பயன்படு த்தலாம்.
பொலித்தீன் பைகளில் மாங்கன்றுகளை நடுதல்:
12 அங்குல உயரமும், 8 அங், விட்டமும் கொண்ட பொலித்தீன் பைகளில் மாங்கன்றுகள்
5. i. Gib. பெர்லித்தின் பைகளின் மேற்புறத்
தை படத்தில் காட்டியுள்ளது போன்று வெளிப் புறமாக 2 அங்குலம் மடித்து விடுக. இதன் ୧lp ନ୍) ଓଁ பொலித்தின் பை கிழிந்து விடுவதைத் தடுக்கலாம். முதலில் பொலித்தின் பையின் மூன்றில் ஒரு பங்கு உயரத்திற்கு, மேற் கூறப் பட்ட கலவை இடப்படும். பின் பொலித்
தீன் பையின் அடியிலும், பக்கங்களிலும் கூரான
தடியால் சிறிய துளைகள் இடப்படும். இத்
ஆவாரங்கள் மூலம் மேலதிக நீர் வடிந்து
செல்லும். (படம் 4).
- 4 , வெளிப்புறமாக, மேல் ஒரம் மடித்து - விடப்பட்ட பொலிக்கின் ட்ைகளில், மூன்றில் ஒரு
பங்கு உயரத்திற்கு கலவை நிரப்பப்பட்டு
துளைகள் இடப்பட்டுள்ளது
-
.܀ ܗ݂ܵܐ

Page 21
இதன் பின்பு மணல் மேடையிலிருந்து கவன்ம்ாகப் பிடுக்கி எடுக்கப்பட்ட លោភខឹងវិនា ឆ្នា கலவை இடப்பட்ட பொலித்தின் பையின் மத்தி யில் வைத்து சுற்றிவர இறிது சிறிதாக &&ନ୍ଧ୍ର ଚିତି)। ଦ! யை இட்டு, நன்கு அழுத்துக (படம் 3). பொலித் தீன் பையின் விளிம்பிலிருந்து அங்குலத்திற்குக் கீழாக மண் மட்டம் வரும் வரை கலவையை
படம் 5, நாற்று பகுதியாக நிரப்பப்பட்ட பொலித்தீன் ட்ையினுள் வைக்கப்பட்டு, கலவைப்பினுல் நிரப்பப்பட்டுள்ளது
இட்டு இறுக்க வேண்டும். போலித்தீன் பைகளினுள் வைக்க முடியாத அளவிற்கு, மாங் கன்றுகளின் ஆணி வேர்கள் நீளமாகக் காணப் LILL-nr 6ão S65) GA1 ĝIJ GIT Gy ஆத்தரிக்கப்படலாம். மாங்கன்றுகள் நடப்பட்ட பொலித்தீன் பைகளுக் கு அவற்றை நிரப்பியுள்ள கலவை முழுவதும் நனையும் ଉ}ତ it is é È è if ஊற்றுக. அவற்றை 2 வார காலமளவு நிழலுள்ள இடத் தில் நெருக்கமாக அடுக்கி வைக்க வேண்டும். அடுத்த 2 வாரங்களுக்கு, காலையிலும் மாலையிலும் மட்டும் தரித ஒளி படுகின்ற இடம் ஒன்றில் அடுக்கி வைக்க வேண்டும். இதன் பின்பு, நாள் முழுவதும் தரிய ஒளி
ஐ படுகின்ற இடம் ஒன்றிற்கு மாற்றலாம்,
|6
 
 

பொலித்தீன் பைகளை நெருக்கமாக அடுக்கி வைப்பதன் மூலம், அவற்றை நிரப் பியுள்ள கலவையிலிருந்து நீர் இழப்பதனைக் குறைக்கலாம். வேர்கள் நிலத்தினுள் ஊடுருவு வதைத் தடுப்பதற்காக அவற்றை ஒவ்வொரு மாதமும் நகர்த்தி வைக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு பொலித்தின் பைக்கும் ஒரு தேக்கரண்டி யூறியா இட்டு, பொலித்தீன் பைகளை நிரப்பியுள்ள கலவையுடன் கலந்து விடுவதன் மூலம் மாங்கன்றுகளின் வளர்ச்சியைத் தூண்டலாம். பொலித்தின் பைகளில், மண் கலவையின் மட்டம் குறைந்து காணப்பட்டால்,
சிறிதளவு மேல் மண் இடலாம்.
பொலித்தின் பைகளில் நட்டு நான்கு மாதங்களின் பின்பு, அவற்றில் கிளைகளை
ஒட்டலாம்,
ஒட்டுக் கிளைகளைப் பெறுவதற்கான தாய் மரங்களைத் தெரிவு செய்தல்:
பின் ஒரும் இயல்புகளைக் கொண்ட மரன் களிலிருந்து ஒட்டுக் கிளைகளைப் பெறுவது நல்லது.
அ. பத்து அல்லது அதிலும் கூடிய வயதுடைய
பிரஜ்கள், ... . . . .
அதே வர்க்க, ஏனைக் மரங்களிலும் பார்க்க
கூடிய விளைவு தருகின்ற மரங்கள்.
இ. ஒரு வருடத்தில் கூடுதலாகவும், அடுத்த வருடத்தில் குறைவாகவும் காய்க்காமல், தொடர்ச்சியாக கூடுதலான விளைவு தருகின்ற மரங்கள்.
ஈ. அவ்வர்க்கத்திற்கான சகல குணாதிசயங்க
ளையும் கொண்டுள்ள ஐரங்கள்.
உ. நோய்களாலும், பீடைகளாலும் பாதிக்கப்
பட்டிருக்காத மரங்களாக இருத்தல் நல்லது.
கமத்தொழில் விளக்கம்

Page 22
ஒட்டும் காலம்:
உலர் காலத்தில் கிளைகளை ஒட்டும் போது ஒட்டு பொருந்தும் வீதம் கூடுதலாக இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. arcGಎr ஜூன் ஜூலை, ஒகஸ்த்து மாதங்கள் மாங்கன்றுகளை ஒட்டுவதற்கு மிகவும் பொருத்தமான காலடிாகும். இக்காலத்தில் ஒட்டப்படும் கன்றுகள் பெரும்போக மழைக் காலத்தில் நடுவதற்கு தயார் நிலையில் இருக்கும். -
ஒட்டுக் கிளையைத் தயார் செய்தல்:
மரத்தில் நன்கு தரிய ஒளி கிடுகின்ற பகுதி களில் காணப்படுகின்ற, நன்கு திரட்சியடைந்த அதாவது சிறிது காலத்தில் துளிர்க்கக் கூடிய முனை அரும்புகளைக் கொண்ட கிளைகளை ஒட்டுவதற்குத் தெரிவு செய்ய வேண்டும். நீண்ட காலமாக உறங்கு நிலையிலுள்ள அரும்புகளைச் கொண்ட கிளைகளையும், துளிர்க்க ஆரம்பித் துள்ள கிளைகளையும் ஒட்டுவதற்காகத் தெரிவு
செய்யக் கூடாது.
திரட்சியான முனையரும்பைக் @T6_ கிளைகளைத் தெரிவு செய்து, ஒட்டுவதற்கு 7-8 நாட்களுக்கு முன் அவற்றில் உள்ள இலைகளை இலைக் காம்புகளை விட்டு, வெட்டியகற்ற வேண்டும். அக்கிளையின் கீழ்ப் பகுதியில் பட்டையை வளையமாக வெட்டியகற்றுவ தனால் ஒட்டியதன்பின்பு ஒட்டுப் பொருந்தும் அளவைக் கூட்டலாம் (படம் )ே.
À
স্থােষ্ট্র
படம் 6, திரட்சியான இலைகள் மேற்பட்டை முளையரும்பு அகற்றப் வளையமாக கொண்ட பட்டுள்ளது வெட்டி ( ' அகற்றப்
ட்டுள்ளது
* tnᎧfi 38 , 1992 (Ꭺ-3)
 
 
 

நீர் ஊற்றுவதன் மூலம், ஒட்டு பொருந்துவதை
ஒட்டுதல்:
மாங்கன்றுகளை ஒட்டுவதற்கு ஆப்பு ஒட்டு செய்வதே சிறந்ததாகும். தெரிவு செய்யப்பட்டு, தயார் செய்யப்பட்ட கிளைகளை வெட்டி ஒட்டும்
இடத்திற்கு கொண்டுவர வேண்டும். இத்தருணத்
தில் அக்கிளையின் இலைக் காம்புகள் உதிர்ந்து இருக்கும். தூர இடத்திலிருந்து இக்கிளைகளைக்
கொண்டு வர வேண்டி இருந்தால் அவற்றை
ஈரச் சாக்கினால் அல்லது ஈரத் துணியால் சுற்றி காயாத விதத்தில், ஒட்டும் இடத்திற்குக் கொண்டுவர வேண்டும்.
4-5 பக்க அரும்புகளைக் கொண்டதும் , ஒட்டுக் கட்டைக்கு (பொலித்தீன் பையிலுள்ள மாங்கன்று) சமமான தடிப்புள்ளதுமான கிளை களை ஒட்டுவதற்கு பயன்படுத்தலாம்:
ஒட்டுக் கிளைகளில் இலைகளை அகற்றுகின்ற * காலத்தில் (அதாவது ஒட்டுவதற்கு 7-8 நாட் ளுக்கு முன்பு) பொலித்தின் பைகளிலுள்ள மாங்கன்றுகளுக்கு யூறியா பசளை இட்இ, நன்கு
ஊக்குவிக்கலாம்.
ஒட்டுதல்:
பொலித்தீன் பைகளில் உள்ள மாங்கன்
றுகளை, மண் கலவை மட்டத்தில் இருந்து 6-8
அங்குல உயரத்தில் குறுக்காக வெட்டுக, வெட் டிய பரப்பிலிருந்து 1-1 அங். ஆழத்திற்கு
தண்டை இடுவே பிளக்க வேண்டும் (படம் 7),
ஒட்டும் கிளையின் அடிப்பாகத்தை, 1-1} அங். நீளமுள்ளதாக, ஆப்பு போன்று வெட்டிக்
கொள்ளுக (t-ft-à 8): இதன்ன ஒட்டுக் கட்டை,
யின் பிளவினுள் செலுத்தி, இப்பொருத்தை
பொலித்தீன் பட்டி ஒன்றினால்
கீழிருந்து மேலாக, நன்று இனுக்கமாகச்
சுற்றிக் கட்டி விட வேண்டும் (படம் 9).
7

Page 23
tit-th
参
母
 
 

கமத்தொழில் விளக்கம்

Page 24
ஒட்டுக் ត្រា៣១ காய்வதைத் தடுப்பதற்காக, நுனி அரும் பை விட்டு ஏனைய பகுதிகளை பொலித்தினால் சுற்றிவிடலாம். அல்லது ♔ ഞഖ ចា៣T மடித்துக் கட்டுவதனால் நிழல் வழங்கலாம் அல்லது ஒட்டுப்பொருத்தையும், ஒட்டுக்கிளை யையும் பொலித்தீன் பையொன்றினால் மூடிக்
கட்டி விடலாம்.
ஒட்டிய மாங்கன்றுகளுக்கு நன்கு நீர் ஊற்றி, நிழலுள்ள இடங்களில் வைத்திருக்க வேண்டும். தினசரி நீர் ஊற்ற வேண்டும். ஒட்டு நன்கு பொருந்தியிருந்தால் 14 நாட்களில் ஒட்டுக் கிளையின் முனையரும்பு துளிர்ப்பதைக் கான லாம். துளிர்க்கத் தொடங்கியதும், ஒட்டு மாங்க ன்றுகளுக்கு தரிய ஒளிபடும் அளவை அதிகரிக்க வேண்டும். இதற்காக நிழலை படிப்படியாக அsற்றலாம். துளிர்க்க ஆரம்பித்து ஒரு மாத காலத்தினுள் கன்றுகள் தோட்டங்களில் நடுவதற் குத் தயாராக இருக்கும். ۔۔۔۔۔
LEậoff 33, 1992
 

இம்முறையில் ஒட்டு மாங்கன்று ஒன்றை தோட்டத்தில் நடுவதற்கு ஏற்றதாக தயாரித்துக் கொள்ள 6 மாதங்களே எடுக்கின்றது. ஆனால் விதைகளை நாற்று மேடைகளில் நட்டு, அவற் றிலேயே ஒட்டிய பின்பு பொலித்தீன் பைகளில் நடும் முறைக்கு ஏறக்குறைய 2 வருடங்கள் எடுக்கும்.
பொலித்தீன் பை முறையினால் கிடைக்கின்ற நன்மைகள்:
1. ஏனைய முறைகளைவிட இம் முறையில் ஒட்டு நன்கு பொருந்தும். இதற்குக் காரணம் ஒட்டுக் கட்டை இளமையானதாகக் காணப்
படுவதாகும்.
2. தோட்டங்க்ளில் இம் முறையாக ஒட்டிய மாங்கன்றுகள் இறப்பது குறைவாகக் காணப் படுகின்றது; இக்கன்றுகள் இளம் கன்றுக ளாகக் காணப்படுவதனால் அவை வீரியமாக
வளர்கின்றன,
3. வேர்களை வெட்ட வேண்டிய அவசியம்
இல்லை. -
4. நாற்று மேடையில் கன்றுகள் இறப்பது குறைவு. -
5, வேறொரு நாற்று மேடைக்கு மாற்றி நட
வேண்டிய அவசியம் இல்லை.
6. குறுகிய காலத்தில் ஒட்டு மாங்கன்றுகளைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருப்பத னால், உரம், பீடைநாசினிகள், பராமரிப் பிற்கான கூலியாட் தேவை போன்றவற்றிற் - கான செலவு குை றவாகவே ஏற்படுகின்றது.
தற்போது ஒட்டு மாங்கன்று ஒன்றின் ÉEiji; குறைந்த விலை ரூபா 35/ ஆகும். கிளை ஒட்டு முறையில் ஒட்டப்பட்ட மாங்கன்றுகளை விவசாயி கள் அதிகளவு விரும்புகின்றனர். எனவே ஒட்டு மாங்கன்று உற்பத்தி ஒரு சிலருக்கு சுயதொழில் முயற்சியாக ஈடுபடுவதற்கான சிறந்த மார்க்கமாக
அமையும்,

Page 25
சின்னவெங்காயப் பயிரி
2。主主。キ。史史、史。
இ. மா. பாலசுப் ஆராய்ச்சி உத்தியோகத்தர், பிராந்திய விவச
c
s
6
&
星
s
s
C
இலங்கை முழுவதிலும் பெரும்போகத்திலும் (
சிறுபோகத்திலும் ஏறத்தாள 11,200 ஹெக்டயர் (
நிலப்பரப்பில் சின்ன வெங்காயம் செய்கை (
பண்ணப்படுகிறது. இதில் 65 சதவீதமான
நிலப்பரப்பு உலர் வலயமான வடக்கு கிழக்கு
பிரதேசத்திலேயே காணப்படுகின்றது. சின்ன
வெங்காயத்தின் வளர்ச்சிக்கு உகந்த காலநிலை
இங்கு காணப்படுவதே இதற்கு ಆpಹಿ©u ತTraಷ್
மாகும் இப்பிரதேசத்தில் வாழும் விவசாயி
களுக்கு அதிக வருமானம் தேடித்தரும் பயிர்களில்
சின்ன வெங்காயம் முக்கிய ஒரு - இடத்தைப்
பெறுகின்றது. சில இடங்களில் இப்பயிர்ச்
செய்கை, பெரும் போகத்தில், முற்றிலும் கால
போக மழை வீழ்ச்சியிலேயே தங்கியுள்ளது.
பெரும்போகத்தில் உவர் நிலங்களில் கூட
2.
 
 

ல் களைக் கட்டுப்பாடு
4.4.4.4.4.4.4.4.4.4.4.4.4.4.4.4.4. 36 4
பிரமணியம்
ru sgUTiläs நிலையம், கிளிநொச்சி
விவசாயிகள், உயர் பாத்திகளில் செய்கை பண்ணி கூடிய வருவாயைப் பெற்றுக் கொள்கிறார்கள். இப்பயிர் குறுகிய காலத்தில், விவசாயிகளுக்கு கூடிய வருமானத்தைப் பெற்றுக் கொடுக்கின்றது.
சின்ன வெங்காயத்தில் 60 நாட்களில் அறுவடை செய்யக்கூடிய யாழ்ப்பாண உள்ளூர்
விர்க்கம், 60 நாள் வல்லாரை ஆகிய வர்க்கங்
ளுேம், 90 நாட்களில் அறுவடை செய்யக்கூடிய
பல்லாரை, வேதாளம் ஆகிய வர்க்கங்களும் உண்டு. 60 நாட்களில் அறுவடை செய்யக்கூடிய குறைந்த வயதுடைய யாழ்ப்பாண உள்ளூர்
Sர்க்கமே பெரும்போகத்தில் கூடியளவு பயிரிடப்
படுகின்றது. நீர்ப்பாய்ச்சுவதற்கு வசதியுள்ள இடங்களில், பெரும்போகத்திலும், சிறுபோகத் திலும் 90 நாட்களில் அறுவடை செய்யக்கூடிய பல்லாரை, வேதாளம் ஆகிய வர்க்கன்கள் செய்கை பண்ணப்படுகின்றன.
இப்பயிர்ச் செய்கையில் ஏற்படும் செலவின் பெரும்பகுதியை விதை வெங்காயத்திற்கான முதலீடும் நிலப் பண்படுத்தலுக்கான செலவுமே கொண்டிருக்கின்றன.
ஆயினும் பயிர் நட்ட பின்பு மனித சக்தி யைக் கொண்டு களை அகற்றுவதற்கான (கைக 1ால் க்ளைகளைப் பிடுங்குதல்) செலவும், பெரும் g33ogi உள்ளடக்குகின்றது: இப்பயிரைச் சிறந்த முறையில் பராமரித்து கூடிய விளைச் லைப் பெறுவதற்கும், இப்பயிருக்கு இடப்படு நின்ற பசளையிலிருந்து கூடிய பயனைப் பெற்றுக் கொள்வதற்கும், பயிரின் ஆரம்ப வளர்ச்சிக்
ாலத்திலேயே களைகளைக் கட்டுப்படுத்துதல்
ஒன்றியமையாததாகும். இது ஒரு சிறிய
பிராகக் காணப்படுவதாலும், இதன் தாள்கள்
கமத்தொழில் விளக்கக்

Page 26
நேராக வளர்வதனாலும் தரியஒளி நேரடியாக
நிலத்தைச் சென்றடைவதனால், சுளைகள் மிக
விரைவாக வெங்காயப் பயிரோடு போட்டி
போட்டு வளர்கின்றன. எனவே களைகளை
முன்கூட்டியே கட்டுப்ப்டுத்த வேண்டியுள்ளது.
களை கட்திப்படுத்துவதனால் 40%-50% அதிக விளைச்சல்ைப் பெற முடியும் என ஆராய்ச்சி
முடிவுகள் தெரிவிக்கின்றன.
வெங்காயம் நட்டதில் இருந்து பயிர்
அறுவடை செய்யும் வரை மேற்கொள்ளப்படும்
பயிர்ப் பராமரிப்புச் சேயல் முறைகளுள், (களை பிடுங்குவதற்கே) மனித் சக்தியைக் கொண்டு
களை கட்டுப்படுத்துவதற்கே அதிக செலவு
ஏற்படுகின்றது. பயிர்நட்டு அறுவடை செய்யும்
காலத்திற்குள் ஒக்கியமாக இரு ශ්‍රීt-62) ශාuéග්r
களைகளை அகற்ற வேண்டியுள்ளது. முதலா
வதாக பயிர் முளைத்து 28 நாட்களின் பின்பும், இரண்டாவதாக 42 நாட்களின் பின்பும் களை * 63} &ir அகற்ற வேண்டும். முதலாவது களை அடக்கலுக்கு ஒரு ஹெக்டயருக்கு ஏறக்குறைய 90க100 பேரும் இரண்டாவது களை அடக்கலுக்கு 40-50 பேரும்தேவை. இதற்காக ஒரு ஹெக்ட பகுக்கு ஏறக்குறைய 6500-7500 ரூபா
வரையில் செலவு செய்ய வேண்டியுள்ளது. மேலும்
ஆரம்பத்திலே களைகள் சிறியனவாக இருக்கும் போது கைகளால் களைகளைப் பிடுங்குவது
மிகவும் கடினமானதொன்றாகும். ஆனால்
ஆனைகளை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தாமல்
விடுவதால், பயிருக்கு இடப்படும் பசளையைக்
களைகள் உறிஞ்சிவிடும். இதனால் பயிர் வீரியம் குன்றி, வளர்ச்சி பாதிக்கப்பட்டு விளைவு
குறைவடைகிறது.
மனித சக்திக்குப் பதிலாக, களை நாசினி
இளைப் பயன்படுத்தி களைகளைக் கட்டுப்ப
டுத்துவதனால் கமக்காரர்களுக்கு பல நன்மைகள்
கிடைக்கின்றன. .
களைகளை ஆரம்புத்திலேயே நன்கு கட்டுப்படுத்தலாம்.
ഥ91 38, 1992
 

பொதுசன நூலகம்
ਅFr.
இதனால் இடப்படும் அடிக்கட்டுப் பசவையை பயிர் நன்கு உறிஞ்சக்கடியதாக இருக்கும். . மிகவும் சுலபமாக, குறைந்த நேரத்தில், கூடிய நிலப்பரப்பில் களைகளைக் கட்டுப் Լ(6.55 (Մ գ պth.
மிகவும் சிக்கனமானதும், Lü* 豆豆岳 கதுமாகும்.
க்ளை கட்டுப்படுத்தப் பாவிக்கப்படும் மனித சக்தியை வேறு முக்கியமான வேலை களுக்குப் பயன்படுத்தலாம். -
அநேக விவசாயிகள் இப்பயிரை ஒரே நேரத்தில் நடுவதால் உரிய நேரத்தில் மனித சக்தி ைேடக்காது போவதால் ஏற்படும்
பிரச்சனையை தவிர்த்துக் கொள்ளலாம்.
இந்நன்மைகளைக் கருத்திற் கொண்டு ாதுவாக சந்தையில் இடைக்கக் ఊt t} வளநாசினிகளை, எப்போது, எந்த அளவில் யோகிக்க வேண்டும் என்பதனை அறிய, #நொச்சி பிராந்திய விவசாய ஆராய்ச்சி லையத்தில், ஆராய்ச்சிகள் பெரும்போகத்திலும் போகத்திலும் நடாத்தப்பட்டன. இவ்வா ய்ச்சிகளில் கோல் 2 ஈ (Goal 2 E) (Oxytluorfen), air (Lasso- Alachlor) ஆகிய களை நாசினிகள் i6.jւք சிறப்பான இலாபகரமான பெறுபேறு }ளத் தந்தன.
ஒரு ஹெக்டயர் சின்ன வெங்காயத்தில் மனித தியைக் கொண்டு களைகட்ட ஏறக்குறைய 臀了 6500-7500/- வரை செலவு செய்யப்படும் களை நாசினியைப் பயன்படுத்தி ளகட்டுப்படுத்த் ஏற்படும் ೧೯೫೩ ரூபா 1200. 10/- ஆகும். களை நாசினியை உபயோகித்தும், த சக்தியைக் கொண்டு களை கட்டுவத லும் (களைபிடுங்குதல்), களை அகற்ற பும் பெறப்பட்ட விளைவுகளையும், களை േ முறைகளினால் ஏற்படுகின்ற செலவு ளயும் கீழே தரப்பட்ட அட்டவஜன 1 வும் தெளிவாகக் காட்டுகிறது.
21

Page 27
அட்டவனை 1
களை அகற்றும் ஆறை பிரயே 956/G
களைநாசினி (முளைக்கமுன்) 0.75-I. G5m âi) 2 FF (Oxy fluorfen) (0.18-0 களைநாசினி (முளைக்கமுன்) 40-4.5 a)C3aFIT (Alachlor) - . (I. 8-2. ( மனித சக்தி 130-15 (கைகளால் களை பிடுங்குதல்) நாட்கள் களை அகற்றாது விடுதல் |-
மேற்கூறப்பட்ட தகவல்கள், ! இவ்வ களைதாசினிகளையும் பாவிப்பதால் ਸੇ ਰੰ
வெங்காயத்தில் களைகட்டல் எவ்வளவு சிக்க மாகவும், சுலபமாகவும் அமைகின்றது என்ப.ை காட்டுகின்றன. இவற்றைப் பாவிப்பத Liu?qjägi எவ்வித தாக்கமும் ஏற்படுவதில்ை இருத்தும் இக்களை நாசினிகளைப் பயன்படுத்து போது பின்வரும் விடயங்களில் அதிக கவன செலுத்த வேண்டும். அவையாவன:
* பாவிக்க வேண்டிய களைநாசினியி சரியான அளவும், அதன் சரியான பிரயே
象 கமும் . * குறிப்பாகச் சிபார்சு செய்யப்பட்ட அள நாசினியை பிரயோகித்தல் மிக முக்3 மானதாகும் .
பிரயோகிக்கப்பட வேண்டிய அளவு:
4.6-4.5 லீற் லசோ (Alachlor) ö 4 5 500லிற். நீரில் கலந்து அல்லது 0.75-1.0லி Gst i. 2 F (Oxyfluorfer) a 450-500 as நீரில் கலந்து, ஒரு ஹெக்டயார் நிலப்பரப்பிற விசிற வேண்டும். . . .
பிரயோகிக்கும் முறை:
1. பயிர் நட்டு 7 நாட்களுக்குள் களை முளை முன் ஒரு முறை விசிறினால் போதுமான
22.

f茎。 அதனால் ஏற்படும் பெறப்பட்ட விளைவு
செலவு/ஹெக். மெ.தொ/ஹெக். - பெரும் சிறு
GLIFI45 tot போகம்
0 லிற்
24 கி.கி.) ரூ. 1000-1200 1 . 4 19.2
லீற்
கி.கி.) ਨੂੰ 100-1ਹੋ00 112 17.0
Ꮼ5 . 6 5 9 0- 7 5 6 0 1 1 . 0 1 7 .2
. - 7.1 7. 8
விரு 2. களை நாசினி விசிறும் போது நிலம்
ଈପ୍ସି - போதியளவு ஈரமானதாக இருத்தல்
ன வேண்டும்.
3. களை நாசினியை தெளிகருவியில் களை
του - -
நாசினி விசிறுவதற்காகச் சிபாரிசு செய்யப்
LIL", L = “ “GLAT 6:5ĵGreg pö°° - (Poly Jet Nozzle) பீச்சு முனையைப் பொருத்தி பயிர்ச் *憩 - έ
செய்கை நிலம் பூராவும் சீராகப் படும்படி யாக விசிறுதல் முக்கியமானது.
ன்
! HT
[@}} கிய
0 -
. زن (
1 பொலிஜெட் பீச்சு முனையினூடாக விசிறும்
திரவம் வெளிவரும் விதம், 3. பொலிஜெட் பீச்சு முனை,
க்க தெளிகருவி ஒழுக்கின்றிச் சீராக விசிறக்
கூடிய நிலையில் இருக்க வேண்டும்.
கமத் தொழில் விளக்கம்

Page 28
1. புதிய தாவர அமைப்பைக்
கடந்த 25 வருட காலத்தில் நெல் ៩៨៦ ថា ஏறக்குறைய இரு மடக்காக அதிகரித்துள்ளது. ஆயினும், நீர்ப்பாசன வசதியுள்ள வயல்களிலிருந்து கிடைக்கும் விளைவு ஒரு உச்ச அளவை அடைந்துள்ளது. இதனால் தற்போது செய்கை பண்ணப்படுகின்ற நெல் வர்க்கங்களிலிருந்து விளைவை மேலும் அதிகரிக்க முடியாத நிலை
புதிய தொரு தாவர அமைப்பைக் கொண்ட நெல் வர்க்கங்களை உருவாக்கினால் தற்போது நீர்ப்பாசன வசதியுள்ள வயல்களில் வளர்க்கப் படும் ஓரளவு உயரமான தேல் வர்க்கங்களிலிருந்து கிடைக்கும் விளைவை 20-30% இனால் அதிகரிக்க முடியும் என, சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த பிரதான தாவர விருத்தியாளரான கலாநிதி குர்தேவ் குஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். இவ்வகையான தாவர அமைப்பை உருவாக்குவதில் இந்நிறுவனம் தற்போது ஈடுபட்டுள்ளது.
இப்புதிய தாவர அமைப்பு பின்வரும் இயல்புகளைக் கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவ தாக குர்தேவ் குஷ் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்: - -
uនាf 33, 1999
 

சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்க முயற்சிக்கின்ற நெற் தாவர அமைப்பு
23

Page 29
ւյ6ւ տոհմՄ Բ|3616ւնւ ܝܢ மட்டங்களையே கொண்டிருக்கும். ਫ਼ னைத்தும் பிரயோசனமான கதிர்களை జె{8}} 90-100 στις ο αι உடையதாக స్త్ర*@ప్ - 100-130 [6ff & 1 & !!! விளைவைப் பெறலாம். இது நேரடிய விதைப்பதற்கே சிறந்ததாயினும், நாற்று ந( தற்கும் பொருத்தமானது, இப்புதிய தr அமைப்பு நன்கு வளருகின்ற வீரியான வே ளைக் கொண்டிருக்கும். இதனால் தரையிலிரு. வினைத்திறனால் தாவர போஷனைப் οι ιπο i. உறிஞ்சப்படும். நெல் மணிகை கொண்டிருக்கும். இவற்றை குற்றும் போது அ உடைவது குறைவாகவேயிருக்கும். விதை நன்கு முளைத் து . ܫ வீரியமான நாற்றுக்க உருவாக்கும். r . . .
2. புதிய பயிர் வர்க்க
a ត្រារពិភាក្វាឌ័ 3 ៣ ការកំរៃق کی۔
Uਤ
சோள மாவை உற்பத்தி செய்வத
வெண்ணிற அவசியமாகும். ஆன இலங்கையில் பயிரிடப்படுகின்ற சோள் வர்ச் கள் மஞ்சள் ប្រសិល្បៈ கபில நிறமான ជាមិន ளையே கொண்டுள்ளன. இதனால்,
கோவிலுள்ள சர்வதேச சோள கோது
அபிவிருத்தி நிலையத்திலிருந்து வெள்ளை விதைகளைக் கொண்ட வர்க்கம் ஒ: (ஏகுறொஸ் 7929) இலங்கைக்கு கொண்டு: பட்டு, மகா இலுப்பள்ளம ஆராய்ச்சி நிலையத் பரிசோதிக்கப்பட்ட பின்பு *முத்து' என்
ட்டுள்ளது.
சிறந்த பயிர்ப் பரிபாலனத்தின் கீழ் ஹெக்டயரில் இவ்வர்க்கம் 5000 கி.கி. வி. வைத் தரக்கூடியது. முதிர்வதற்கு எடுக் இாலம் 110-115 நாட்கன் (3 மாதம்) ஆ 93 ம் ஆண்டு சிறுபோகத்தில் இவ் வர்க்கத் விதைகள், ஒரு குறிப்பிட்ட அளவில், விவசா ளுக்கு வழங்கப்படவிருக்கின்றது.
24
 

இப்புதிய தாவர அமைப்பை உருவாக்கு இதில் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்இைச் និងភ្លឺថ្លា பயிராக்கவியலாளர்க ଛଁt, தர்வுர விருத்தியாளர்கள், தாவர உடற்தொழிலியலா ளர்கள் ஆஇயோர் ஒன்றாக ஈடுபட்டுள்ளனர்.
இவ்விதமான புதிய தாவர அமைப்பைக் கொண்ட உயர் விளைவு தரும் நெற் தாவரங் கள் 5-8 வருட காலத்தில் உருவாக்கப்பட்டு விடும் என்பது குர்தேவ் குஷ் அவர்களின்
கருத்தாகும். - ܢ,
சோளம் போன்று ஒரு தண்டையும் ஒரு கதிரையும் கொண்ட நெற் தாவரங்கள் எதிர் காலத்தில் உருவாக்கப்படலாம் என்பதும் கலாநிதி குர்தேவ் குஷ் அவர்களின் அபிப்பிரா யமாகும்.
35T Tút: IRR Reporter GigiúGJúDLuar 1991 .
தம்
தின்
ஆ. குறைந்த வயது சோள வர்க்கம்
*>ញភា**
பொதுவாக சோளம் பெரும்போகத்தில் மானாவாரியாகவே செய்கை பண்ணப்படுகின்
றது. மழை பெய்வது பிந்தும் காலத்தில், கூடிய
வயதுடைய சோள வர்க்கங்களிலிருந்து திரும்தி கரமான விள்ைவைப் பெற்றுக் கொள்ள முடிவதில்லை. இதனால் குறைந்த வயதுடைய
*அருண' என்னும் சோள வர்க்கம் ஒன்றை cai SFnruugš திணைக்களம் சிபாரிசு செய்துள்ளது. இவ் வர்க்கம் 90-100 நாட்களில் முதிரும். பச்சைப் பொத்திகளையும் இலகுவாகப் பெற்றுக்
கொள்ளலாம். சாதாரண பயிர்ப் பரிபாலனத்தின்
கீழ் ஒரு ஹெக்டயரிலிருந்து 4000 கிலோ கிராம் விளைவைப் பெறலாம். மகா இலுப்பள்ளம விவசாய ஆராய்ச்சி நிலையத்திலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ள, இவ்வர்க்கத்தின் விதைகள் சிறிய அளவுகளில் 1993ம் ஆண்டு சிறு போகத்தில் விவசாயிகளுக்கு விநியோகிக்
கப்படவுள்ளது.
கடித்தொழில் விளக்கம்

Page 30
இ. புதிய குரக்கன் வர்க்கம் 'ரவி' (ஜே. என். ஆர். 3பீ-1008)
99-100 நாட்களில் விளைவு தருகின்ற, பெரும்போகம், சிறுபோகம் இரண்டிற்கும் பொருத்தமான குரக்கன் வர்க்கம் ஒன்றை மகா இலுப்பள்ளம ஆராய்ச்சி நிலையம் அறிமுகம் செய்துள்ளது. ரவி எனப் பெயரிடப்பட்டுள்ள இவ்வர்க்கம் ஒரு ஹெக்டரிலிருந்து 2500கி. கி. விளைவு தரக்கூடியது. எரிபந்தம் நோய்க்கு எதிர்ப்புத் தன்மையுடையது. சரித்து விழும் தன்மை குறைவாக இருப்பது இவ்வர்க்கத்தின் சிறப்பு இயல்பு ஆகும். 1993ம் ஆண்டு சிறுபோ கத்தில் சிறிய அளவுகளில் இவ்வர்க்க விதைகள் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளது.
ஈ. இலங்கையின் பெரிய வெங்காய
வர்க்கம் 'கல்பிட்டி’
பெரிய வெங்காய விதைகளின் உயர் விலையும், நேரத்திற்கு கி டைக்காமல் இருப்பதும் ஈடுபடுகின்ற விவசாயிகள் எதிர் நோக்குகின்ற பாரதூரமான பிரச்சனைகளாகும். இப்பிரச்சனைகளை தவிர்த் துக் கொள்வதற்காக இலங்கையில் பெரியவெங் காய வர்க்கம் ஒன்று அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இது 'கல்பிட்டி' என்னும் , பெயரில் அழைக்கப்படும். இவ்வர்க்கத்திலிருந்து உண்மை. விதைகளை உற்பத்தி செய்து கொள்ளக் கூடியதாக இருப்பதும், கூடிய விளைவு தருவதும் இவ்வர்க்கத்தின் விசேட இயல்புகளாகும். மாக்கந்துறை பிரதேச விவசாய ஆராய்ச்சி நிலையத்துடன் சம்பந்தப்பட்ட, கல்பிட்டி விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் இவ்வர்க்கம் தெரிவு செய்யப்பட்டு, விருத்தி செய்யப்பட்டது,
உ. கலப்புப் பிற்ப்பு உருளைக்கிழங்கு விதைகளைப் பெறுவதற்காக தாய் வர்க்கங்கள் இரண்டு-லக்ஸ்மி, மெனிக்கே
உருளைக் கிழங்குச் செய்கையில், விதை உருளைக் கிழங்குகளைப் பெற்றுக் கொள்வதற்கு
அதிக விலை கொடுக்க வேண்டியுள்ளது.
unavi 33, 1992 (A-4)
 

உருளைக் கிழக்கின் உற்பத்திச் செலவின் ஏர்த் இறைய 40 வீதம் விதை உருளைக் கிழங்கு களுக்காகவே செலவிடப்படுகின்றது. விதை உருளைக் கிழங்குகள் மூலம் பல நோய்களும் பரவுகின்றன. இதற்குப் பரிகாரமாக உருளைக் கிழங்கின் உண்ஜை விதைகளை உற்பத்தி செய்வது பற்றிய விவசாயத் திணைக்கள ஆராய்ச்சிகள் வெற்றியளித்துள்ளன. இதன் மூலம் உற்பத்திச் செலவைக் குறைத்துக் கொள்ளக்கூடியதாக இருப்பதுடன், நோய்கள் பரவுவதையும் கட்டுப்படுத்தக் கூடியதாகவுள்ளது.
உண்மை விதைகளைப் பெற்றுக் GETఫోహ தற்காக கலப்பு செய்வதற்குத் தேவையான வர்க்கங்களை விவசாயத் திணைக்களம் கண்டு பிடித்துள்ளது. உருளைக் கிழங்கில் காய்கள். தோன்றும் தன்மை, காய்களில் விதைகள் உருவாகும் தன்மை, அவ்விதைத் தாவரங்களில் இருந்து பெறப்படும் கிழங்குகள் ஒரே மாதிரியாக விருத்தல் என்னும் காரணங்களின் அடிப்படையில் இவ்வர்க்கங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ள வர்க்கங்கள் " -
1. (ஓபி 260 x சித்தா)- லக்ஸ்மி 2. (ஓபி 260 x அற்றிசிம்பா) - மெனிக்கே
இவற்றுன் ஒபி. 260 எப்போதும் மகரந்த மணிகளைப் பெறுவதற்குப் பயன்படுத்தப்பட வேண்டும். இதனைப் பற்றிய மேலதிக தகவல்களை சீதா எலியா விவசாய ஆராய்ச்சி நிலையத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
ஊ. சுகர் பேபி - வத்தகை வர்க்கம்
வத்தகைப் பழம் இலங்கையின் .g_} வலையத்தில் பரவலாகச் செய்கைபண்ணப்பட்டு வருகின்றது. விவசாயிக்ள் தங்களிடமுள்ள உள்ளூர் வர்க்கங்களையே செய்கை பண்ணி வருகின்றனர், இவற்றிலிருந்து கிடைக்கும் விளைவும் பழங்களின் இனிப்புச் சுவையும் குறைவாகவே இருக்கின்றது. இதனால் வெளிநாடுகளிலிருந்து தருவிக்கப்பட்ட பல வத் தகை வர்க்கங்களை விவசாயத் திணைக்களம்
25

Page 31
பரிசேசதித்து, சிறந்ததொரு வர்க்கத்தை செய்கை
பண்ணுவதற்காக சிபாரிசு செய்து வெளியிட்டுள்
ளது. இது அமெரிக்காவிலிருந்து தருவிக்கப்பட்ட
'3-3-ff (Bul S” (Sugar Baby) Gr Gör6911b. வர்க்கமாகும்.
இவ்வர்க்கம் பின்வரும் சிறப்பியல்புகளையு
டையது
26
உள்ளூர் வர்க்கங்களை விட உயர் விளைவு தருகின்றது. ஒரு ஏக்கரிலிருந்து 90001000 கி.கி. விளைவைப் பெறலாம்.
கவர்ச்சிகரமான தோற்றத்தைக் கொண்
ه التي تحتسبة
மத்திய பருமனுடைய பழங்கள்.
உருளை வடிவான, கடும்பச்சை நிறமுடைய
பழங்கள்.
~)
 
 

* பழங்களின் உண்ணப்டும் மத்திய பகுதி சிவப்பு நிறமூடையது. இனிப்புச் சுவை
до 1ф. Ш31.
* வெளித்தோல் தடிப்பானது, வன்மையா
னது. இதனால் பழங்களுக்குச் சேத மின்றி தூர இடங்களுக்குக் கொண்டு செல்லலாம்.
நட்டு 75 நாட்களிலிருந்து 100 நாட்கள் வரை அறுவடை செய்யலாம்.
* வரட்சியைத் தாங்கி வளரும்.
* இவ்வர்க்கம் பூச்சிப் பீடைகளாலும், நோய் களாழும் பாதிக்கப்படுவதில்லையாதலால், விவசாய இரசாயனங்களைப் பாவிக்கத் தேவையில்லை.
அதிக இனிப்பான பழங்கள்ை சிறுபோகத்தில்
பெற்றுக் கொள்ளக்கூடியதாகவிருப்பதனால், சிறுபோகத்திற்கும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
கமத்தொழில் விளக்கம்

Page 32
ற் தாவரங்க
St. ge e a = م؟s*as*ag
을) ே
ஆராய்ச்சி உதவியாளர், பேராத
உல்லாசப் பிரயாணிகளுக்கான ஹோட்டல் களை அலங்கரிப்பதற்கும், வீடுகளில் உள்ளக அலங்காரத்திற்கும், திருமணம் போன்ற கொண் டாட்ட மண்டபங்களை அலங்கரிக்கவும், மற்றும் வேறு அலங்காரத் தேவைகள் பலவற்றித்கும் ஒக்கிற்றுகள், அந்தூரியம் போன்ற வெட்டுப் பூக்கள் இலங்கையில் பயன்படுத்தப்படுகின்றன: உள்நாட்டில் வெட்டுப் பூக்களுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளதுடன், ஏற்றுமதி வாய்ப்பும் அதிக ரித்துள்ளது. இதன் காரணமாக பலர் பூ உற்பத்தி யில் ஈடுபட்டுள்ள்துடன், ஒரு சிலர், ஒரு சுயதொ ழில் முயற்சியாகவே இதனைக் கைக்கொண் டுள்ளனர்.
ஒக்கிற் பூக்களை உற்பத்தி செய்து விற்பனை செய்பவர்கள் உள்நாட்டிலும் வெளி நாடுகளிலி ருந்தும் அதிக வருவாயைப் பெறுகின்றனர். ஒக்கிற் செய்கையில் புதிதாக ஈடுபட விரும்புபவர்களுக்கு ஒரு சில தகவல்களை வழங்குவதே இக்கட்டுரை யின் நோக்கமாகும். -
ஒக்கிற் குடும்பத்தில் ஏறக்குறைய 1800024000 தாவர இனங்கள் உள்ளன. இவை வடது ருவம் முதல் தென்துருவம் வரை பரந்து காணப் படுகின்றன. இவை வளரும் இடங்களின் கால நிலை, நிலத்தின் அமைப்பு என்பவற்றிற்கு ஏற்ப, இவ்வினங்களில் பல சாதிகள் உள்ளன. பல ஒக்கிற் இனங்கள் காணப்பட்டாலும் அவற்றுள் ஒரு சில இனங்களே சிறந்த இயல்புகள் உள்ளன வாகவும், செயற்கையாக வளர்ப்பதற்கு ஏற்றவை ஆகவும் உள்ளன. கண்ணைக் கவரும் நிறங்களைக் கொண்ட, நீண்ட காலம் வாடாதி குக்கின்ற பூக்களை உருவாக்குகின்ற சாதிகளும் இனக்கலப்பு மூலம் உருவாக்கப்பட்டுள்ளன. ஒக்கிற் குடும்பத் தாவரங்களுள் டென்றோபியம், ஒன்சிடியம், கற்றலியா, பல்னொப்சிஸ், 6 6-T என்பன சந்தை வாய்ப்புள்ள தாவரங்களாகும்.
tradi 33, 1992
 

ளை வளர்த்தல்
. .
ாகராசா னைப் பூந்தோட்டம், பேராதனை
வர்த்தக நோக்கத்திற்காக பூ உற்பத்தியில் பயன்படுத்தப்படுகின்ற ஒக்கிற் இனங்கள் பின் வரும் இயல்புகளைக் கொண்டிருக்க வேண்டும்.
தாவர வளர்ச்சி:
வீரியமாக, விரைவாக வளர்ச்சி அடைகின்ற, அகலம் குறைந்த பக்கக் கிளைகள் அதிகம் தோன். றாத தாவரங்கள் விரும்பப்படுகின்றன.
பூந்துணர்:
நீண்ட காம்பையும், அதிக எண்ணிக்கை யான, அடியிலிருந்து நுனி நோக்கி ஒழுங்காக மலருகின்ற, கவர்ச்சியான நிறம் கொண்ட, நீண்ட காலம் வாடாதிருக்கின்ற பூக்களையும் கொண்ட பூந்துணர்களை உருவாக்குகின்ற தாவ ரங்கள் விரும்பப்படுகின்றன. -
பூ உற்பத்தி:
ஒரு தாவரம் தனது வாழ்க்கைக் காலத்தில் ஆகக் குறைந்தது ஆறு பூந்துணர்களையாவது உற்பத்தி செய்ய வேண்டும்.
ஒக்கிற் தாவரங்களின் si i5mrfréG:
ஒக்கிற் தாவரங்கள், அவை வாழும் இடத் தைப் பொறுத்து, வெவ்வேறு விதமாக வளர்கின் றன. பல இனங்கள் வேறு தாவரங்களில் ஒட்டி வளர்கின்றன. ஒரு சில சுதந்திரமாக வளர்கின் றன. தாவர ஒட்டி இனங்கள் மரப்பட்டைகளில் ஒட்டி வளர்கின்றன. வெப்பமான பகுதிகளில் வன்டா இனமும், மழை கூடிய பகுதிகளில் பலனொப்சிஸ், அறகினிஸ் இனங்களும் நன்கு வளர்கின்றன.
27

Page 33
படம் 1 : 1. புலனோப்சிஸ் வகை டென்றோபியம்
2. பிரம்பு வகை டென்றோபியம்
வன்டா இனத்தைச் சேர்ந்த சாதிகளுக்கு தொடர்ச்சியாக நீர் வழங்க வேண்டும். கற்ற லியா, டென்றோபியம் ஆகிய இனங்களைச் சேர்ந்த தாவரங்கள் நீரற்ற வரட்சியான காலங் களில் உறங்கு நிலையில் இருந்து, நீர் கிடைத்தவு டன் வளர ஆரம்பிக்கும். .
தாவரங்களில் ஒட்டி வாழும் ஒரு சில ஒக்கிற் றுகள் தரையிலும் வேர்விட்டு வளரக்கூடியவை.
பொதுவாக சகல ஒக்கிற்று இனங்களும் வ்ெப்ப மான இடங்களில் வளரக் கூடியன. காடுகளில் நிழலான, சிதைவடைகின்ற இலை குழைகள் டிள்ள் இடங்களில் ஒக்கிற்றுகள் நன்கு வளர்கின் றன. இவ்விடங்களில் வருடத்தின் எக்காலத்தி லும் ஒக்கிற்றுத் தாவரங்களின் வளர்ச்சி ஒரே
மாதிரியாகவே இருக்கும். .
28
 

ஒக்கிற் வளர்ச்சிக்கு அவசியமான காலநிலைக் காரணிகள்:
. வெப்பநிலை: ஒவ்வொரு இன ஒக்கிற். தாவரமும் சிறப்பான வெப்பநிலைகளி லேயே நன்கு வளரும். சில கடல் மட்டத் திலுள்ள மிகச் சூடான இடங்களிலும், வேறு சில மிகக் குளிரான மலைச்சாரல்களிலும், வளருகின்றன. ஒக்கிற் தாவரங்கள் சடுதி யான வெப்பநிலை மாற்றங்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றன.
பகல் வெப்பநிலைக்கும், இரவு வெப்ப நிலைக்கும் இடையே 10 - 20 பாக்க சென்ரி கிறேட் வித்தியாசம் உள்ள இடங்களில் ஒக்கிற்றுகள் செழித்து வளரும்.
கடித்தொழில் விளக்கம்

Page 34
ருகின்ற ஒக்கிற்றுகள், கூடிய ஈரப்பதனும் வளி அமுக்கமும் உள்ள இடங்களில் நன்கு வளர்கின்ஜன.
2. ஈரப்பதன்: வெப்பமான பகுதிகளில் வள்
3. ஒளி: இயற்கையில் ஒக்கிற் இனங்கள் காடு களில் மரநிழல்களில் வளர்கின்றன. எனினும் ஒக்கிற்றுகளுக்கு ஒளி அவசியம். காலை நேர ஒளி படும்போது ஒக்கிற் தாவரங்கள் செழித்து வளரும் தேவையான ஒளியின் அளவு இனத்திக்கு ஏற்பவும், வித்தியாசப்ப டும். சில நாற்றுக்கள் நிழலில் வளர்ந்தாலும்,
ஓரளவு ஒளி கிடைப்பது அவசியம். குறைந்த ஒளியுள்ள இடங்களில் வளருகின்ற தாவரங் கள் நலிந்த தோற்றத்தைக் கொண்டிருக்
கும், குறைந்த எண்ணிக்கையான பூக்க ளையே உருவாக்கும்.
ஒக்கிற்றுகளை வளர்த்தல்:
சட்டிகள்: ஒக்கிற்றுகள் சட்டிகளில் வளர்க்கப்
படலாம். இச் சட்டிகளின் அடியிலும், பக்கங்
களிலும் மேலதிக நீர் வடிந்து செல்வதற்காக
துளைகள் இருக்க வேண்டும். இதனால் ஒக்கிற் தாவர வேர்களுக்குப் போதியளவு காற்றோட்டம் இருக்கும். ஒக்கிற்றுகளை வளர்ப்பதற்கு களி அல்லது சீமேந்துச் சட்டிகள் பயன்படுத்தப் படலாம். வாயகன்ற 5-9" விட்டத்தையும்,
4-" ஆழத்தையும், உடைய சட்டிகள் முதிர்ந்த
கன்றுகளுக்குச் சிறந்தது. 5" வாய் விட்டத்தையும்,
2" ஆழ்த் தயும், உடைய சட்டிகள் நாற்றுக்களுக்
குச் சிறந்தது.
வன்டா, அஸ்கோ, கென்டா, கற்றலியா,
போன்ற இனங்கள் மரச்சலாகைகளால் உருவாக் கப்பட்ட கூடைகள் போன்ற பெட்டிகளிலும்,
நடப்படலாம். இப்பெட்டிகள் 4" அகலம், 7
நீளம், 4" ஆழத்தையும் கொண்டிருக்க வேண்டும்.
நடுகை ஊடகம்:
-
சட்டிகள் நடுகை ஊடகத்தினால் jiġu Li L u li
படுகின்றன. செங்கற் துண்டுகள், அல்லது ஒட்டுத்
துண்டுகள், மரக்கரித் துண்டுகள், வைரமான
மர்த் துண்டுகள் என்பன ஒக்கிற்றுகளின் நடுகை
மலர் 33, 1992
3.
经

பயன்படுத்தப்படுகின்றன. சட்டியின் டியில் செங்கற் துண்டுகள், அல்லது ஒட்டுத் |ண்டுகள் இடப்படும். பின்பு கரித்துண்டுகள், ! ரத் துண்டுகள் என்பவற்றைச் சமனாகக் கலந்து பெறப்பட்ட கலவையினால் சட்டி நிரப்பப்படும். இவ்வூடகத்தில் இடைவெளி அதிகம் இருப்பதால் க்கிற் வேர்களுக்குப் போதியளவு காற்றும் டைக்கின்றது.
క్లెస్తో
: & ژ#ILL
செங்கல் அல்லது ஒட்டுத் துண்டுகள் கரித்துண்டுகள் .
நார்க் தன்மையுடைய மரத்துண்டுகள் -
துளைகள் கொண்ட சட்டி
கொடிகளாக வளரும் போன்ற ஒக்கிற் இனங்களை நார்த்தன்மையான, - Ως: 1 μ : Ε.Π. 65)" மரத்துண்டுகளுடன் சேர்த்துக் ட்டிவிடலாம். இதற்குப் பனை, கித்துள் மரத்துண்டுகள் பயன்படுத்தப்படலாம்.
566ಠಾತ5
சட்டிகளின் உட்புறத்தையும், வேளிப்புறத் தயும் நன்கு சுத்தம் செய்க. சட்டிகளின் டியில் செங்கல் அல்லது ஒட்டுத் துண்டுகளை இட்டுச் சட்டியின் நடுவில் ஒக்கிற் தாவரத்தை வத்து, மரத்துண்டுகள், கரித் துண்டுகள் ன்பவற்றின் கலவையால் சட்டியை நிரப்புக, ஈவரம் நேராக இருப்பதற்காகத் தாவரத்தின் ருகில் சிறிய தடி ஒன்றை நட்டு, அதனுடன் ாவரத்தை இணைத்து விடலாம்.
29 ".

Page 35
படம் 8 : 1. சட்டியொன்றில் நடப்பட்ட வண்ட 3. மரச்சலாகைக் கூடையில் நடப்பட்டு 3. நார்த்தன்மையான மரத்துடன் இை
மீள் நடுகை
இரண்டு காரணங்களுக்காக ஒக்கிற் தாவரங்களை மீள்நடுகை செய்ய வேண்டும் , முதலாவதாகத் தாவர வேர்கள் சட்டிக்கு வெளியே வளர்வதுடன், வேர்கள் சேதமடைந் இருக்கலாம்.
இரண்டாவதாக நடுகை ஊடகத்திலிருந்து போஷ்னைப் பொருட்கள் அகற்றப்படுவதனால், அதன் தரம் குறைந்து தாவர் வளர்ச்சி பாதிக்கப்படும். புதிய ஊடகத்தில் நடுவதினால் தாவரங்கள் விரைவில் வளருகின்றன. -
தாவர வளர்ச்சி வீதத்தைப் பொறுத்து வருடாவருடம் தாவரங்களை மாற்றி நட வேண்டும். நிலக் கீழ்த் தண்டைக் கொண்ட ஒக்கிற் இனங்களில் 3 துண்டங்களைக் கொண்டுள்ள தண்டை பிரித்து எடுத்துப் புதிய தாவரமாக வளர்க்கலாம். மாற்றி நடும் போது பாதிக் கப்பட்ட, இறந்த வேர்களை அகற்றுக பின்பு புதிய நதிகை ஊடகத்தைக் கொண்டுள்ள சட்டிகளில் நடுக.
30
 
 

方,
ள்ள கற்றலியா ணக்கப்பட்டுள்ள பலனொப்சிஸ்
நீர் ஊற்றுதல்
ஒக்கிற்றுகளுக்கு நீர் மிகவும் முக்கியமான்து. }థ6 வரட்சியைத் தாங்காது. ஆனாலும், வேர்களுக்குச் சேதத்தை விளைவிக்கும். எனவே போதியளவு நீர் ஊற்றுதல் வேண்டும். வரட் சியான காலங்களில் தாவரம் முழுவதையும், நீரால் நனைக்கலாம். அத்துடன் தாவரம் இருக்கும் சுற்றாடலிலும், நீர் ஊற்றிச் சுற்றா டலின் ஈரப்பதனை அதிகரிக்க வேண்டும். இதன் மூலம் ஒக்கிற்றுகள் செழிப்பாக வளருகின்றன.
பசளைப் பிரயோகம்
நடுகை ஊடகத்திலிருந்து போஷனைப் பொருட்கள் அகற்றப்படும் போது, அதன் வளம் குறைந்து தாவர வளர்ச்சி, பாதிக்கப்படும். அப்போது பசளை இடவேண்டும். மேலதிக நீர் ஊற்றுதல், நிழல் வழங்குதலில் ஏற்படும் பிழைகள் என்பனவும் ஊடகத்தின் வளத்தைக் குறைக்க - லாம். எனவே இவற்றையிட்டும் கவனம் செலுத்த வேண்டும். ·
கமத்தொழில் விளக்கம்
--,

Page 36
திரவப் பசளைகளைத் தாவரங்களுக்கு விசிறலாம். தற்போது கடைகளில் விற்பனை
செய்யப்படுகின்ற திரவப் பசளைகளை வாரம்
இரு தடவைகள் தாவரங்களுக்குப் பிரயோகிக் கலாம். திரவப் பசளைகளை உற்பத்தியாளர்
களின் அறிவுறுத்தல்களின்படி பயன்படுத்த வேண்டும்.
நோய் பீடைகளைக் கட்டுப்படுத்துதல்
நோய் பீடைகளால் பாதிக்க்ப்பட்ட தாவரங்களைப் பிடுங்கி அகற்றுவதனால் அவை
ஏனைய தாவரங்களுக்குப் பரவாது தடுக்கலாம்.
சூழலிலுள்ள பூச்சி பீடைகளும், நோய்களும்,
ஒக்கிற் தாவரங்களுக்குப் பரவலாம். இதனைத்
தடுப்பதற்கு ஒக்கிற் தாவரங்களை வளர்க்கும் சூழல் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும்.
நோய் பீடைகளைக் கட்டுப்படுத்த நாசினி
66 பயன்படுத்தப்படலாம். நோய் பீடைகளைச் சரியாக அடையாளம் கண்டு அவற்றிற்குப் பொருத்தமான நாசினிகளைச் சரியான அளவி லும், நேரத்திலும் பயன்படுத்த வேண்டும்.
- பூக்களை அறுவடை செய்தல்
ஒக்கிற்றைப் பொறுத்தவரை சாதிக்குச்
சாதி இவற்றின் அறுவடைக்காலம் வேறுபடும். டென்தோபியம், வன்டா என்பனவற்றில் பூந்து னர் வெளித்தோன்றிப் பூக்கள் விரிய ஆரம்ப மானவுடன் அறுவடையைத் தொடங்கலாம்.
மலர் 33, 1992
g

' : ' Sturgy-suf நூலகம்
பாம்ப்பாணம்,
بحیر
இருந்தும் இப்பூந்துணரில் காணப்படும் பூக்களின் எண்ணிக்கையைப் பொறுத்து இவற்றின் காலம் கணக்கிடப்படல் வேண்டும். ஏனெவில் ஒக்கிற். பூக்கள் எப்போதும் பூந்துணரின் அடியில் இருந்தே விரிய ஆரம்பிக்கும். பூந்துனரின் நுனிப் பகுதியில் இரண்டு, மூன்று பூக்கள் விரியாமல் இருக்கும் போது அறுவடை செய்வது உகந்தது. *。
பொதி செய்தல்
பூந்துணரை மிகவும் அவதானமாக வெட்டி எடுத்து, ஒவ்வொரு பூந்துணரையும் தனித்தனி பாக ஈரமாக்கிய பஞ்சினால் சுற்றி அவற்றை பூந்துணரின் அளவான பொலித்தீன் பைகளினுள் இடவேண்டும். இவ்வாறான ஆறு பைகளை பெரிய ஒரு பொலித்தீன் பையினுள் இடுதல் வேண்டும். அவற்றை 22"x8"x4" என்ற அளவுடைய பெட்டியினுள் கிடையாக வைத்துப் பொதி செய்யலாம். இப்படியான 10 பெட்டிகள் ஒன்றாக்கி ஒரு பண்டல் (Bundle) எனப்படும். இப்படியான 10 பண்ட ல் க ஒளப் பெரிய உட்பக்கம் ரெஜியோமினால் பாதுகாக்கப்பட்ட பெட்டியினுள் இட்டு ஏற்றுமதி செய்யலாம். இங்கு பூந்துணரில் உள்ள பூக்களின் எண்ணிக் கையையும், பூக்களின் அளவையும் போறுத்துப் பெட்டிகளில் இடப்படும் பூந்துணர்களின் எண்ணிக்கை வேறுபடும்.
3F

Page 37
' ~~~ ਨੂੰ ਹੁੰਹ ਨੂੰ ਹੁੰਹ ਹਨ:
зг. За. பர்டவிதான அலுவலர் (
மட்டக்களப்பு மாவட்டத்தில் பயிர்களுக்கு அதிக சேதம் விளைவிக்கும் பூச்சிப் பீடைகள் நெல்லில் கபில நிறத் தண்டுத் தத்திகளும் மாவில் @amజశ్రీ தத்திகளும் ஆகும். ஆயினும் அண்மைக் எனப்படும் (White fly) 55 a 30 a 3 u.33. Loa). கொய்யா மரங்களில் அதிக சேதத்தை உண் பண்ணுவது அவதானிக்கப்பட்டுள்ளது. தென்ன கன்றுகளும் இப்பீடையினால் ஒரளவு பாதி: கப்படுகின்றன.
இப்பீடைப் பூச்சியின் தாக்கம் இம்மா வட்டத்தில் LÉ735" (3aj 35 i finrégioi பரவி வருகின்றது இப் பீடைப் பூச்சியையும் அதனால் ஏற்படு: தப்படும் சேதங்களையும், அதனைக் கட்டுப்படுத்து வதற்கான তেন্তে சில வழிவகைகளையும் இ கட்டுரை விளக்குகின்றது. ܕ ' .
32.
 

ண் ஈ
LuLulyylLLL lyLLLLyyyyGy uuu uu Luyyy uyySyyulLlyyyyyyyLLuukuLKS
வபாக்கியராசா s
பயிர்ப்பாதுகாப்பு), மட்டக்களப்பு
புறக்கே சேதத்தின் ஆரம்பம்
1989ம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் கொழும்பு மாவட்டத்திலும், அதன் அருகாமைப் பிரதேசங்களிலும் கொய்ய்ா மரங்களில் அதிக சேதத்தை உண்டு பண்ணிய வெண் ஈ எனப்படும் பீடைப் பூச்சி பற்றி முதல் முதலில் அறிவிக்கப் பட்டது. தொடர்ந்து 1990ம் ஆண்டின் ஆரம்பத்திலேயே இப்பீடைப் பூச்சியின் சேதங்கள் பற்றி, இலங்கையின் ஈரவலையத்தை சேர்ந்த பல மாவட்டங்களிலிருந்து தகவல்கள் வெளியாகின. இவ் வேண் ஈ அலியுறோடிக்கஸ் Guអំgលៃ .
(Aleurcdicus dispersus) என அடையாளம் கானப்
பட்டுள்ளது. மத்திய, தென் அமெரிக்
காவிலிருந்து இப் பீடைப் பூச்சி உலகின் ஏனைய
பகுதிகளுக்குப் பரவியிருக்கலாம் என நம்பப்
படுகின்றது. தற்போது இப்பீடைப் பூச்சி உலர் வலையத்திற்கும் பரவி அங்கும் தாவரங்களுக்குச் சேதத்தை விளைவிக்கின்றது.
கம்த்தொ ல் விளக்கம்

Page 38
வெண் ஈயின் வாழ்க்கை வட்டம்
இப்பூச்சியின் நிறையுடலி 2-3 மி. மீ. நீளமுடையது. பால் போன்ற வெண்ணிற மானது. அந்து போன்ற தோற்றம் உடையது. இதன் உடல் மீது மெழுகுத் தன்மையான, மா போன்ற வெண்ணிறப் பதார்த்தம் படிந்து காணப்படும். நிறையுடலி அந்து சாதாரணமாக 2 வார காலம் உயிர் வாழும்:
இலைகளின் கீழ்ப்பக்கங்களில், அதிக எண் ணிக்கையில், கூட்டமாகச் சீவிக்கும் இப்பீடைப் பூச்சிகள், காலை வேளையில் மிகவும் சுறுசுறுப் பாகக் காணப்படும். இவை இலைகளிலிருந்து சாற்றை குத்தி உறிஞ்சுவதன் மூலம் சேதம் விளைவிக் கின்றன.
நிறையுட
Z? 11W
3ம் ஆணங்குப் பருவம்
படம் 8 : வெண் ஈ யின் வாழ்க்கை வட்
un Gorî 33; 1992 (A-5)
 
 
 

பெண் பூச்சிகள் தமது வாழ்க்கைக் காலத்
தில் 4-26 முட்டைகளை இடுகின்றன. இம்முட்
டைகள் மிகச் சிறியவை. வெற்றுக் கண்ணுக்குப்
புலப்படாதவை. இவை மெழுகுப் பவுடர் போன்ற வெண் பதார்த்தத்தினால் மூடப்பட்டுக் காணப்படும். இம் முட்டைகள் இலைகளின் கீழ்ப்புறத்தே கைவிரல் அடையாளங்கள் போன்ற வெண்ணிறப்புள்ளிகளின் மேல் இடப்படுகின்றன.
இம்முட்டைகளிலிருந்து வெளிவரும் அணே குகள், மெழுகுப் பதார்த்தத்தினுள்ளேயே இருந்து
இலைகளின் சாற்றை உறிஞ்சுகின்றன. 5-9
நாட்களில் தோல்கழற்றி இரண்டாவது அணங் குநிலை உருவாகும். இப்பருவத்திலிருந்து இவற் றின் உடல் மீது மெழுகு போன்ற வெண்ணிறப் பதார்த்தம் படியத் தொடங்கும். இரண்டாவது
1ழ் அணங்குப்
_{ន្ធទិយ៍
2ம அணங்குப் பருவம்
ls
33

Page 39
அனக்குப் பருவத்திலிருந்து δ. Ι. Φί Կagմ பருவத் தை பிரித் தறிவது கடினமாகும். இச்சந்தர்ப்பத் தில்
பகுதிகள் யாவு ങു វិញ្ញោ ញត្វ பதார்த் தத்தினால் மூடப்பட்டிருக்கும். 5-6 நாட்களில் இப்பருவத்திலிருந் 氢 நிறையுடலிகள் ே தான்றுகின்
வெண் ஏற்படுத்தும் சேதம்
இப்பீடைப் பூச்சி இலைகளின் கீழ்ப் புறத் தே, ញ្ញា នៅ ឆ្នាថា អ្វីខ្ចៅ ஏற்படுத்துகின்ற கைவிரல் அடையாளம் போன்ற, வெண்ணிறப்
புள்ளிகளிலிருந்து இப் பீடையின் தாக்கத்தை இலகுவில் அறிந்து கொள்ளலாம்.
கட்டமாகக் காணப்படும் நிறையுடலிகளும், அணங்குகளும் இலைகளிலிருந்து சாற்றை குத்தி உறிஞ்சுவதன் மூலம் சேதத்தை விளைவிக்கின் றன. தாக்கமடைந்த இலைகள் சுருங்கி, உலரும். இப்பீடைப் பூச்சிகள் வெளிவிடுகின்ற சீனிபோன்ற பதார்த்தம் இலை மீது பரவுகின்றது.
giáo 55 ji'ity iš jo t'i i tålƏ, G. (Sooty Mould) வளருவதைக் காணலாம். இதன் மூலம் இலை கனின் ஒளித்தொகுப்பு பாதிக்கப்படுகின்றது. இத்தாக்கங்கள் அனைத்தின்தும் விளைவாக, தாக்கமடைந்த இலைகள் முதிர்வடைவதற்கு, முன்பே உதிருகின்றன.
இத்தாக்கத்தைவிட, இப்பூச்சிகள் இவரசுக் களை தாவரங்களுக்குக் கடத்தும் காவிகளாகவும்
三了 -
தொழிற்படுகின்றன. விசேடமாக இலங்கையில் தென்னை மரங்களில் இதுவரை காணப்படாத பயங்கர நோயான 'மஞ்சள் வைரசு நோய்' ஐ கடத்தும் காவியாகவுள்ளது இப்பீடைப் பூச்சியே
Far சந்தேகிக்கப்படுகின்றது.
தாக்கப்படும் தாவரங்கள்
ஏறக்குறைய 30 தாவர இனங்களிலிருந்து இப்பூச்சிப்பீடை உணவு பெறுகின்றது. கொய்யா,
மரவள்ளி, மிளகாய், தக்காளி, கத்தரி, பயற்றை,
 
 
 
 
 

கட்டுப்பாட்டு முறைகள்
உணவாகக் கொள்ளும் கோக்சினெல்லா வண்டி
தாக்கத்தைக் கண்டவுடன், உடனடியாக
பெளதீக கட்டுப்பாட்டு முறைகள்
போன்ற அலங்காரத் தாவரங்களும், காட்டு இரப்பர் நிழல் மரவள்ளி போன்றவையும் இப்பீடையால் தாக்கப்படுகின்றன.
என முன்பு குறிப்பிடப்பட்டுள்ள பயிர்களை நன்கு அவதானித்து, இதன் தாக்கத்தை
ܘ ஆனைக்கொய்யா, பப்பாசி, வாழை ஆகிய
பயிர் வகைகளும், மணி வாழை, குரோட்டன்
இப்பீடையை உயிரியல், பௌதிக, இரசா 也1G亨 முறைகளால் கட்டுப்படுத்தலாம். .
உயிரியல் முறைக் கட்டுப்பாடு
இப்பூச்சிப் ਵਜੇ முட்டைகளை
637 ih 62.5TDI (Axinoscymnu HS, putiarudriahi) త4}{L .
யாளம் காணப்பட்டுள்ளது. எனவே வெண்
பீடைநாசினிகளைப் பயன்படுத்தாது, இயற்கை யாகக் காணப்படுகின்ற இரைகெளவிகள் பெருகி, இப்பீடையைக் கட்டுப்படுத்துவதற்கு இடமளிக்க வேண்டும். is ,
இப்பீடைகளால் தாக்கப்படக் கூடியவை
ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டு கொள்ளுக.
இலைகளின் கீழ்ப்புறத்தில் கை விரல்
அடையாளங்கள் போன்ற புள்ளிகள் தோன்றுவதே
தர்க்கங்களின் ஆரம்ப அறிகுறிகளாகும். இவ்வறி
குறிகள் காணப்படும் இலைகளை ஒடித்து எரித்து
அம்மரத்தின் கிளைகள் அனைத்தையும் வெட்டி
எரித்துவிடலாம்.
குழைகளை புகை தோன்றக் கூடியவாறு
விடலாம். தாக்கம் அதிகமாகக் காணப்பட்டால் பாதிக்கப்பட்ட தாவரக் கிளைகளை வெட்டி ,
எரித்து விடலாம். பிரயோசனமற்ற மரங்களாயின்
பாதிக்கப்பட்ட மரங்களுக்குக் கீழ், இலை
எரிப்பதன் மூலமும், வலு தெளி கரு റ്റ ஒன்றினால் நீகரப் பலமாக இப்பீடைகளின் மேல் விசிறுவதன்
மூலமும் இப்பீடைகளைக் கட்டுப்படுத்தலாம்.
கமத்தொழில் விளக்கம்

Page 40
பழமரங்களின் கன்றுகளையும், அலங்காரத் தாவரங்களையும் ஒர் இடத்திலிருந்து இன்னுமோர் இடத்திற்கு நடுவதற்கு கொண்டு செல்வதற்கு முன்னர், அவற்றில் இப்பீடைப் பூச்சியின் தாக்கம் உள்ளதா என்பதைக் கவனித்து, இல்லாதவற்றை மட்டும் கொண்டு செல்ல வேண்டும். இதன் மூலம் இப்பீடை வேறு இடங்களுக்குப் பரவுவதை தவிர்த்துக் கொள்ள
հծrTւծ
இரசாயனக் கட்டுப்பாட்டு முறைகள்
இப்பீடையினால் ஏற்படும் சேதம் மிக அதிகளவாக இருக்கும் போது மட்டுமே பீடை நாசினிகளைப் பயன்படுத்த வேண்டும்.
தற்போது, இப்பிடைண்யக் கட்டுப்படுத்து வதற்கு விவசாயத் திணைக்களம் இரண்டு
பீடைநாசினிகளைச் சிபாரிசு செய்துள்ளது.
=
| ::aրի 33, 1992

率
டைமீதோ யோற்று 孪% செறிகுளம்பில் (மக்தோயேற்று, ஹாக்குறொஸ் டெக்றோ, பேர்டெக்தியோன், ஹெட்ஸ்ரார்-டிமி
ரொக்ஸ், றோகோர்-40, டைமீதோயேற்று 40) ஒரு திரவ அவுண்ஸ்ஸை 2 கலன் நீரில் (1 மி. லிற்றர் ஐ வீற்றர் நீரில்) கரைத்துப் பெற்ற கலவையை
அல்லது அப்லோட்துரள் (புப்ரோபெசின் 25% நீரில்
கரையும் த்ரள்) ஒரு அண்ைஸ்ை 2 கலன்
நீரில் (3.2 கிராம் துளை வீற்றர் நீரில்
கரைத்து விசிறலாம்.
விசிறலாம்.
இப்பிடைநாசினிகளை, வலு தெரிகருவி
ஒன்றினால், வெண் ஈக்கள் ஓய்வாக இருக்கும் மத்தியான வேளைகளில் விசிறுவதன் மூலம் வெண் ஈக்களை நன்கு :ൂട്ടു്.
உணவாகப் பயன்படுத்தும் பயிர்களுக்கு . இப்பீடைநாசினிகளை விசிறினால், 2 வாரங்களுக்குப் பின்னர்ே அவற்றைப் பிடுங்கிச் சழைக்க (శిక్షణ (s. பழமரங்களின்
நாற்றுக்களுக்கும் இப்பீடைநரசினிகளை

Page 41
: : : : : : : : : : శీ
திருமதி. என்
பயிற்சி அலுவலர், சேவைக்கால ப
பொதுவான இலஇகையில் பழங்கள் குறிப் பிட்ட காலங்களிலேயே உற்பத்தி ஆகின்றன. இதனால் உற்பத்தி ஆகின்ற காலங்களில் சந்தையில் கூடுதலாக காணப்படுவதுடன்,
ஏனைய காலங்களில் கிஒட் க்காமலும் போகின்
36
 
 
 

பாரிப்போம்
தநாயக்க SLS S SS L LSSS SLL SS SS L S SLSLS SLSLS SLSLSLS SLSLSLS
யிற்சி நிலையம், கண்ணோறுவை
றன. உற்பத்திக் காலங்களில் பெருமளவு பழங்கள் விற்பனை செய்யப்பட முடியாமல் அழுகி வீணாகின்றன. அத்துடன் பழங்களை உற்
பத்தி செய்கின்றவர்களுக்கு மிக குறைந்த விலை
களே உற்பத்திக் காலங்களில் கிடைக்கின்றன.
இமத்தொழில் விலக்கம்

Page 42
பழங்கள் உற்பத்தியாகும் காலங்களில், அவற்றை நல்ல முறையில் பிரயோசனப்படுத்தி னால், இக்காலங்களில் பழங்கள் வீணாவதைத் தடுத்துக் கொள்ளலாம். அத்துடன் பழங்கள் கிடைக்காத காலத்தில் பயன்படுத்தத் தக்கதாக ஜாம், பழரசம், மாக்லேட், சட்னி, தோசி, ஜெலி :3ܡܫܵܡܸ போன்றவற்றைத் தயாரித்துக் கொள்ளலாம். இதனால் கடைகளில் அதிக விலை கொடுத்து வாங்குவதைத் தவிர்த்துக் கொள்ளலாம். பலருக்கு இது அதிக வருமானம் தேடித்தருகின்ற சுயதொழில் முயற்சி ஆகவும் அமையும், * ... -
இக்கட்டுரையின் நோக்கம், பழரசம் தயாரிக்கும் முறைகளை வாசகர்களுக்கு வழங் குவதாகும். இக்கட்டுரையில் விளக்கப்படும் பழச்சாறு தயாரிக்கும் முறைகள் tாவும், செய்து பார்த்து பரீட்சிக்கப்பட்டவை ஆகும். எனவே இம்முறைகளை யாவரும் இலகுவாகப் பின்பற் றலாம்:
அ) கொடித்தோடை பழரசம்
தேவையான பொருட்கள்
25 கொடித்தோடை பழங்களின் பழச்சாறு வெள்ளைச் சீனி 459 கிராம் தேசிப் புளி 1 மேசைக் கரண்டி பொட்டாசியம் மெற்றாபைசல்பைட்டு த் கிராம் (இரண்டு விரல்களுக்கிடையே பிடிபடும் அளவு);
தயாரிக்கும் முறை
* நன்கு பழுத்த கொடித்தோடைப் பழங்களை நன்கு கழுவி, துருப் பிடிக்காத கத்தியொன் றினால் வெட்டி பழச்சாற்றை தனியாகப் பிரித்து எடுத்துக் கொள்ளுக. * இப்பழச்சாற்றிற்கு சீனி, தேசிப் புளி என்பவற்றைச் சேர்த்து மரக் கரண்டி ஒன்றினால் (அகப்பை) நன்கு கலக்குக. இக்கலவையை வடி தட்டு ஒன்றினூடாக
வடித்துக் கொள்ளுக.
மலர் ச3, 1992

பழரசத்தை நீண்ட கானம் சேமித்து
வைப்பதாயின், இரண்டு விரல்களுக்கு இடையே பிடிபடும் அளவு சோடியம்
மெற்றாபைசல்பைட்டை கொதித்து ஆறிய
ஒரு தேக்கரண்டி நீரில் கரைத்து, வடித்
தெடுத்த பழச் சாற்றுடன் நன்கு கலந்து
கொள்ளுக.
இப்பழரசத்தை, கொதி நீரில் அவித்தெடுத்து காய வைத்த போத்தல்களில் இட்டு, சில்
செய்து சேமிக்கலாம்:
ஆ) அன்னாசி I PTJJFLb
தேவையான கொருட்கள்
ஒரு அன்னாசிப் பழித்திலிருந்து பெறப்பட்ட சாறு (3/4 லீற்றர்) - வெள்ளைச் சீனி 500 கிராம் தேசிப் புளி ஒரு மேஐசக் கரண்டி பொட்டாசியம் மெற்றாபைசல்பைட்டு கிராம் (இரண்டு விரல்களுக்கிடையே பிடிபடும் அளவு).
தயாரிக்கும் முறை
அன்னாசிப் பழத்தின் தோலை, துருப்பிடிக்
காத கத்தி ஒன்றால் வெட்டி அகற்றுக:
தோல் அகற்றிய அன்னாசிப் ԼԱքքե6ծ) *, மிகச்சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளுக.
இத்துண்டுகளை வடிதட்டு ஒன்றில் வைத்து
நசித்து பழச்சாற்றைப் பிரித்து எடுத்துக்
கொள்ளுக.
இச்சாற்றிற்கு சீனி, தேசிப் புளி என்பவற் றைச் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுக. இப்பழச் சாற்றை சுத்தமான மெல்லிய துணி (கொதி நீரில் அவித்து எடுத்து துணியை பயன்படுத்துக) ஒன்றினூடாக
மீண்டும் வடித்துக் கொள்ளுக.
37

Page 43
பழரசத்தை நீண்ட கர்லம் சேமிப்பதாயின்,
இரண்டு விரல்களுக்குள் பிடிபடும் அளவு பொட்டாசியம் மெற்றாஜபசல்பைட்டை,
ஒரு தேக்கரண்டி கொதித்தாறிய நீரில்
கரைத்து பழச்சாற்றுடன் நன்கு கலந்து
கொள்ளுக.
இவ்வாறு தயாரித்த பழரசத்தை, கொதி நீரில் அவித்துக் காயவைத்த போத்தல்களில்
இட்டு, சீல் செய்து சேமிக்கலாம்.
இ)
புளியம் பழ பழரசம்
தேவையான GLIT(5355ir புளியம் பழம் 450 கிராம் (நன்கு பழுத்த,
சுத்தமான பழங்கள்) சீனி ஒரு கிலோ கிராம்
தேசிப் புளி ஒரு மேசைக்கரண்டி
சுத்தமான நீர் 2: கோப்ப்ை.
率
தயாரிக்கும் முறை
புளியம் பழத்திற்கு நீரைச் சேர்த்து, மரக்
கரண்டி ஒன்றினால் நன்கு கரைத்து 05 நிமிட நேரத்திற்கு கொதிக்க வைத்துக்
கொள்ளுசு
கொதிக்க வைத்த புளியம் பழச்சாற்றிற்கு
சீனி, தேசிப்புளி என்பவற்றைச் சேர்த்து
நன்கு கலக்குக. சீனி முழுவதும் கரையும்
வரை 10 நிமிடமளவு கலக்க வேண்டும் ,
38
இக்கலவையை மீண்டும் 15 நிமிடம்
கொதிக்க வைத்துக் கொள்ளுக. கொதிக்கும் போது திரவத்தின் மேற்பரப் பிற்கு வரும் புளியம் விதைகளை சுத்தமான கரண்டி ஒன்றினால் அகற்றுக
கொதிக்க வைத்த பழச்சாற்றை, சுத்தமான
வடிதட்டு ஒன்றினூடாக வடித்துக் கொள்ளுக. . . . .
இதனை கொதி நீரில் அஜித்துக் காயவைத்த
போத்தல்களில் இட்டு, சீல் செய்து சேமிக்
&ରuitub

இப் பழரசத்தை நீண்ட காலம் சேமிக்க வேண்டுமாயின், இரண்டு விரல்களுக்கு இடையில் அகப்படும் அளவு, பொட்டாசியம்
மெற்றாபைசல்பைட்டை ஒரு தேக்கரண்டி
கொதித்தாறிய நீரில் கரைத்து, இதற்குச்
சேர்க்க வேண்டும்.
நெல்லி பழரசம்
தேவையான பொருட்கள்
நெல்லிப் பழங்கள் வெள்ளைச் சீனி 450 கிராம்
கொதிக்கும் நீர் 4 கோப்பை
Gլ էր է: i-frgԴԱյլք மெற்ற பைசல்பைட்டு
கிராம்
தேசிப்புளி 01 Gingo) grai சுரண்டி
தயாரிக்கும் முறை
※下
நெல்லிப் பழங்களைக் கழுவி, உரல் ஒன்றில் இட்டு ஓரளவு இடித்து, விதைகளை
வேறாக்கிக் கொள்ளுக.
விதைகளை வேறாக்கிய நெல்லிப் பழங்
களை மீண்டும் உரலில் இட்டு நன்கு இடித்துக் கொள்ளுக. . . . . . -
நன்கு இடிபட்ட பழங்களுக்கு கொதிக்கின்ற . நீரைச் சேர்த்து, நீர் ஆறும் வரை மூடி
வைத்துக் கொள்ளுக்,
இதன் பின்பு நன்கு பிழிந்து சாற்றை, சுத்தமான துணி ஒன்றினூடாக வடித்துக் கொள் ஆக - - - .
இரண்டு விரல்களுக்கு இடையில் அகப்படும்
ଏହାଛୋf ସ୍ତ୍ மெற்றாபைசல் ல் பட்டை, கொதித்தாறிய ஒரு தேக்கரண்டி
நீரில் கரைத்து, பழச்சாற்றுடன் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளுக.
இதன் பின்பு இச்சாற்றை போத்தல்களில் இட்டு நன்கு மூடி 21 நாட்கள் செல்லும் வரை ஒரு புறத்தே வைத்துக் கொள்ளுக.
கமத்தொழில் விளக்கம்

Page 44
21 நாட்களின் பீன்பு மண்டி சேராதவாறு,
பழச்சாற்றை தனியாக ஊற்றியெடுத்து சீனி, தேசிப்புளி என்பவற்றைச் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளுக. இச்சாற்றை, கொதி நீரில் அவித்துக் காய விட்ட போத்தல்களில் ஊற்றிச் சீல் வைத்துச்
தேசிப் பழ்ரசம்
தேவையான பொருட்கள் - . நன்கு பழுத்த தேசிக் காய்கள் 25 இன்
சாறு ( லீற்றர் ଅତୀ:ରା) சீனி ஒரு கிலோ இராம்
来
பொட்டாசியம் மெற்றாபைசல்பைட்டு
វិrir
தயாரிக்கும் முறை
நன்கு பழுத்த தேசிப் பழங்களை கழுவி,
துருப்பிடிக்காத கத்தி ஒன்றினால் வெட்டி, சாற்றைப் பிழிந்து கொள்ளுக.
சாற்றை துருப்பிடிக்காத பாத்திரம் ஒன்றில்
பிழிந்து கொள்ளுவது மிகவும் அவசியம். இதனை கொதிக்கின்ற நீரில் அமிழ்த்தி எடுத்த துணி ஒன்றினூடாக வடித்துக் கொள்ளுக. -
இச்சாற்றிற்கு ஒரு பகுதி பொட்டாசியம் மெற்றாபைசல்பைட்டைச்சேர்த்து, கொதிக்
கும் நீரில் அவித்துக் காயவைத்த போத்தல்களில் ஊற்றி நன்கு மூடி இரண்டு வார காலம் வைத்திருக்க வேண்டும்.
ក្រឡៅ ឪ3, 1992

பின்பு மண் டி சேராதவாறு சாற்றை ஊற்றி
எடுத்து, அதற்கு சீன்னியையும், Life, S. பொட்டாசில்ம் மெற்ற பைசல்பைட்
டையும் சேர்த்துக் கலக்குக.
இச்சாற்றை மீண்டும் சுத்தமான துணி
ஒன்றினூடாக வடித்து, கொதிக்கின்ற நீரில்
அவித்துக் காயவைத்த போத்தல்களில் இட்டு, சீல் செய்து செமிக்கலாம்.
பழரசங்களை மேற்கூறிய முறையில்
தயாரிக்கின்ற வேளைகளில் பின்வரும் காரணங்கள் பற்றிக் கவனம் செலுத்துவது முக்கியமாகும்.
.
3
ம்ெற்றா பைசல்பட்டு
பின்பே பழரசத்தை அருந்த வேண்டும்.
பழச்சாற்றின் ஒரு பகுதிக்கு 0.5 பங்கு நீர்
சேர்த்து பானமாக அருந்தலாம்.
போத்தல்கள், வடிக்கும் துணி என்பவற்றை
பின்வருமாறு அவித்துக் கொள்ளுக. இவற் றை பாத்திரம் ஒன்றினுள் இட்டு அவை
அமிழும் அளவிற்கு நீர் ஊற்றி 20 நிமிட
நேரம் கொதிக்க வைக்க வேண்டும்.
இவ்வாறு அவித்த பொருட்களை நீர் உலருமட்டும் காய விட்டுப் பயன்படுத்
56a)Iriħ. " -
வீடுகளில் போத்தல்களை மூடிச் சீல் செய்வதற்கு, அவித்து காய வைத்த தக்கை மூடிகளைப் பயன்படுத்தலாம். போத்தலை இறுக்கமாக, மூடிய பின்பு, சீல் மெழுகு அல்லது பரபின் மெழுகு கொண்டு சீல்
தமிழில்: 羲蚤
39

Page 45
உயர் விளைவு தரு
sk :ți faši 4.4.4.4.4.4.4.4.4.4.4.4.
6 (
இலங்கையின் நெல் செய்கை பண்ணப்படு கின்ற வயல் நிலங்களில் 68% ஆனவையே பெரிய குளங்களிலிருந்தும், சிறிய குளங்களிலி ருந்தும் நீர்ப்பாசனம் செய்யப்படுகின்றன, 33% ஆன வயல் நிலங்கள் மழையை நம்பிய மானா வாரி நிலங்களாகும்.
மானாவாரிச் செய்கையிலும், நீர் கிடைப் பதில் ஏற்படுகின்ற தடைகள் காரணமாக நீர்ப்பாசன வசதியுள்ள வயல்களிலும் கூட குறுகிய கால நெல் வர்க்கங்களையே விவசாயிகள் விரும்பிப் பயிரிடுவது அவதானிக்கப்பட்டுள்ளது. மொத்த நெல் வயல்களில் 70% ஆன நிலப்ட ரப்பில் 3, 3 மாத நெல் வர்க்கங்க்ளே பயிரிடப்படுவதாகவே விவசாயத் திணைக்கள
புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
இக் காரணங்களினால், விவசாயத் திணைக்கள்
நெல் அபிவிருத்தித் திட்டங்களில், குறுகிய கால
'40
.4 1
 
 
 

ம் புதிய நெல் வர்க்கம்
நெல் வர்க்கங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப் பட்டு வந்துள்ளது. இவ்வளர்ச்சி நடவடிக்கை களின் மூலம் பல 3, 3 மாத வர்க்கல்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. இந்நெல் அபிவிருத்தித் திட்ட்த்தின் மற்றுமொரு சாதனை யாக அண்மையில் பீ. ஜி 352 என்னும் பெயருடன் உயர் விளைவு தருகின்ற, 3 மாத, வெள்ளை நிற அரிசியைக் கொண்ட வர்க்கம் ஒன்றை விவசாயத் திணைக்களம் இலங்கை விவசாயிகளுக்கு வழங்கியுள்ளது. பீ. ஜி 367-4, பீ. ஜீ 380 ஆகிய வர்க்கங்களைக் கலந்து
இவ்வர்க்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
தற்போது பரவலாகப் பயிரிடப்பட்டு வருகின்ற 3 மாத நெல் வர்க்கமான பீ. ஜீ 94-1 வர்க்கத்தை விட கூடிய விளைவு தருகின்ற இவ்வர்க்கம், இலங்கையின் நெற்பயிரிரைப் பாதிக்கின்ற பிரதான பீடைகளான கபிலநிற தத்துக்கிளி, பச்சை இலைத்தத்தி என்பவற்றிற் கும், எரிபந்தம் நோய்க்கும் எதிர்ப்புத் தன்மை யுடையது.
கமத்தொழில் விளக்கம்

Page 46
ஆ * శ్రోక్కె
இவ்வர்க்கத்தின் சிறப்பியல்புகள்
பின்வருமாறு: 喜 穹三下
100 நாட்களுக்குள் முதிர்ச்சியடைவதனால் வரட்சியினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து தப்பி உயர்விளைவு தரக்க டியதாகவுள்ளது.
குறுகிய பருமனுடைய அரிசியைக் கொண்
டிருப்பதனால், குற்றும் போது உடைகாத
முழு அரிசி, அதிகளவு (68.5%) பெறப்பட் இக்காரணத்தினால் இவ்வர்க்கம் ، على سا விவசாயிகளிடையே அதிக பிரபல்யம்
அடைந்:
ফুট চূড় =
இவ் குற்றும் போது
ஏறக்குதைய 80% தீட்டாத அரிசியையும், 75% திட்டிய அரிசியையும் பெறலாம்.
தாற்றுக்கள் வீரியமாக வளரும் தன்மையு
穹一匹金亨。
பீ. ஜி 9 &-1 வர்க்கத்துடன் ஒப்பிடும் போது,
* ឆ្នាទាំងអៃ គ្មាវិមិតៅ ឆ្នាំ சமைப்பதற்கு
குறைந்தளவு நீர் தேவைப்படுகின்றது.
சோறு சிறந்த தோற்றத்தையும், மணத்
தையும், கொண்டிருப்பதுடன், மெது:
யானதாகவும் கா ஜப்பூட்டது.
ஆதாரம்: பத்தஐகொட நெல் அபிவிருத்தி
காரியதரிசிக்கு வழங்கப்பட்ட அறிக்
øf:
தொகுப்பு: வாதி
pari, 33, 1992 (A-6)
南
 
 

பொதுசன நூலகம்
象三毒 拳 tt {r፣ ነod ধ্ৰুং চুম্ব টুক্লোই 2=
ఇక్షత్ర క్షేక్ జజీ శ్రీ ! ప్రక్స్పనీస్టోస్, ఆప**
பராமரிப்பின் కొట్ట செய்கை --ನೆ: ojyotபோது பீ. ஜீ 94-1 வர்க்கத்தை விட ஏக்கருக்கு 20 புசல் கூடுதல் விளைவைத்
தந்துள்ளது. ܡ
7. மத்திமமான அளவு நைதரசன் - ឧិ ឆ្នា
புடன் கூடுதலான விளைவைத் தருகின்றது.
8. கபில நிறத் தண்துத் தத்திகளுக்கும், எரிபத் தம் நோய்க்கு எதிர்ப்புத் தன்மையைக்
چججي
கொண்டுள்ள
தத்திகளுக்கும் ஓரளவு எதிர்ப்புத் தன்மை
శ్రేణిక ܒ
துைக் கொண்டுள்ளது.
ஜீவசாயிகளின் பராமரிப்பின் கீழ் ஏக்கருக்கு 型20 H子。空?67 சராசரி விளைவாதத் தரக்கூடிய இவ்வர்க்கம், 1992ம் ஆண்டு சிறுபோகத்தின் ଝୁର୍କୁଞ୍ଜ
போது சிறிய அளவுகளில் விவச7:சி விநியோகிக்கப்படவுள்ளது.
விவசாயிகள் இவ்வர்க்கத்தை பயிர் செய்து கூடிய பயனைப் பெறுவார்கள் என்று எதிர்
பார்க்கின்றோர்.
*றுவனத்திலிருந்து வர்க்க வெளியிட்டுக் குழுக்
霞弱。

Page 47
திராட்சையில் கராவ6 கட்டுப்படுத்து 3344444444444444444444443.4343.4343
பாடவிதான உத்தியோகத்தர்,
யாழ்ப்பாண மாவட்டத்திலே திராட்சை உற்பத்தி தற்போது பல்வேறு காரணங்களால் வீழ்ச்சியடைந்துள்ளது. இவற்றுள், உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளமை, உற்பத்தி செய்யப்படும் திராட்சைப் பழங்களை வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்வதில் உள்ள சிரமங்கள், கராவல் தோற்றத் தாக்கம் என்பன முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவை ஆகும். கடந்த சில போகங்களில் கராவல் தோற்றத் தாக்கம் தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டு வந்துள் ளது. ஆயினும் இதற்கான காரணத்தை அறிந்திருக்காத காரணத்தினால், இதனைக் கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வந்துள்ளனர். இத்தோற் றம் காரணமாக பாதிக்கப் பட்ட பழங்கள். குறைந்த விலைக்கு விற்கப்பட்டன அல்லது வெட்டி எறியப்பட்டன. யாழ் மாவட்டத்தின் 3500 மெற்றிக் தொன் வருட திராட்சை உற்பத்தியில் 5-10 சதவீதம் இத்தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது. சில தோட்டங்களில் 30.50 சதவீதமான உற்பத்தி பாதிக்கப்பட் டுள்ளது. இத்தாக்கத்தினால் வருடம் தோறும் யாழ் மாவட்ட விவசாயிகள் பல இலட்சம் ரூபாய்களை இழக்கின்றனர். இவ்விழப்பு தவிர்க்கப்படக் கூடியதும், தவிர்க்கப்பட வேண்டி
பதும் ஆகும்.
கராவல் தாக்கம்
பூந்துணர்களில் அல்லது மிகச் சிறிய காய்களில் கராவல் தாக்கம் ஏற்பட்டால் அவை காய்ந்து உதிர்கின்றன. ஓரளவு பெரிதான காய்களில் இந்தாக்கம் ஏற்பட்டால், அவற்றின் மினு மினுப்புத் தன்மை அகன்று, கரடுமுரடான, சொரசொரப் பான தோல் உடையனவாகக் (Corky skin type) காட்சியளிச்கும்,
42.

தோற்ற தாக்கமும் ம் வழிகளும்
s)
s
ன்பநாதன், பூங்கனியியல், யாழ் மாவட்டம்
அதிக பாதிப்பிற்கு உட்படும் காய்களின் மேற் தோலில் ஏற்படும் வடுக்கள், பழ வளர்ச் சிக்கு ஈடுகொடுக்க முடியாது வெடிப்பதனால், உள்ளிருக்கும் விதைகள் கூட வெளித்தெரியும். இக்காயங்களினூடாக பங்கசுக்கள் உட்செல் வதனால், அவை அழுகுகின்றன.
இத்தாக்கத்தினால் பாதிக்கப்படும் குருத்தி லைகள் சிறியனவாகவும், வளைந்தும், விளிம்பு களிலும், நரம்பிற்கு இடைப்பட்ட பகுதிகளிலும் எரிந்தது போன்றும் காணப்படும்.
தாக்கம் குறைவாக ஏற்படும் சந்தர்ப்பங் களில், காய்களின் மேற்பரப்பில் இரும்புக் கறள் படிந்தது போன்று தோற்றமளிப்பதைக் காண லாம். இவற்றில் வலை போன்ற கபில நிறக் கோடுகளை அல்லது மான்தோல் போன்ற அலங்கார அமைப்புகளைக் காணலாம்.
பழங்களில், காயம் ஏற்பட்டு மாறியது போன்ற வடுக்களும், கபில நிற அடையாளங்களும் காணப்படுவதே கராவல் தாக்கத்தின் அறிகுறிகளாகும்.
கராவல் தோற்றத்திற்கான காரணம்
பனிப் பூச்சிகளால் (Thips) ஏற்படுத்தப்படும் தாக்கத்தினாலேயே கராவல் தோற்றம் ஏற்படு கின்றது. இப் பூச்சிகள் மிகச் சிறியவை. குருத்து இலைகள், பூங்கொத்துக்கள், என்பனவற்றிலிருந்து இப்பூச்சிகள் சாற்றை உறிஞ்சுகின்றன. இதனால் அவை வாடி, கருகி உதிர்கின்றன. சிறிய பிஞ்சுக் காய்களின் மேலுள்ள மெழுகுப் படிவை யும், தோலையும் சுரண்டி, அப்போது உண்டாகும் காயங்களினூடாக பீறிட்டு வரும் சாற்றை உறிஞ்சுகின்றன. இதனால் ஏற்படும் வடுக்கள் காரணமாக, பழங்களின் மினு மினுப்புத் தன்மை அற்றுப் போய் கராவல் தோற்றம் ஏற்படுகின்றது.
இத்தொழில்

Page 48
பழங்கள் தாக்கத்திற்கு உட்படும் பருவத் தையும், தாக்கத்தின் அளவையும் பொறுத்து இராவல் தோற்தம் வேறுபட்டுக் காணப்படும்.
பொதுவாக, கராவல் தோற்றம் வெளித் தெரிகின்ற போது பனிப்பூச்சிகள் கொடிகளில் காணப்படாத காரணத்தினால், கராவல் தோற் றத்திற்கான காரணியை அறிந்து, அதனைக் கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் தடுமாறிக் கொண்டிருந்தனர். ஆயினும் தற்போது, இதற் கான காரணம் பனிப்பூச்சிகளின் தாக்கம்தான் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பனிப்பூச்சிகள், வெங்காயம், றோசாச் செடிகள், பல்வகையான புல் பூண்டுகள் போன்ற தாவரங்களிலும் சீவிக்கக் கூடியவை. கோடைக் காலங்களில் வெயிலினால் புல் பூண்டுகள், இறக்கும் போது, இவை திராட்சைத் தாவரங் களை அதிகளவில் தாக்குகின்றன.
பனிப் பூச்சிகளைக் கட்டுப்படுத்துதல்
திராட்சைத் தோட்டத்தையும், சுற்றாட லையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். நிலத்தைக் கொத்திப் புரட்டி புற்களை அகற்று வதுடன், பழுத்து விழுந்த இலைகளையும், கத்தரிக்கும் போது நிலத்தில் விழும் இலைக ளையும், தண்டுகளையும் தோட்டத்தை வீட்டு அகற்றி எரித்து அல்லது புதைத்துவிட வேண்டும். செடிகளைத் தினமும் அவதானிப்பதன் மூலம்
மலர் 33, 1982
 

பணிப்பூச்சிகளின் தாக்கத்தை ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டு கட்டுப்பாட்டு முறைகளைப் பின்பற்றக் கூடியதாக இருப்பதுடன், வேறு நோய் பீடைத் தாக்கங்களையும் கண்டு கொள்ளலாம்.
இரசாயனக் கட்டுப்பாடு
பனிப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த விவசாயத் திணைக்களம் சிபாரிசு செய் துள்ள பென்தியோன் 50% செறிகுளம்பில் (பேடேக்ஸ் ஈ. சி. 500, லெபசிட் 500 ஈ. சி) ஒரு அவுண் ஸ்சை 3 கலன் நீரில் கலந்து, செடிகளைக் கத்தரித்து 5 நாட்களிலிருந்து விசிறத் தொடங்க வேண்டும். பொதுவாக, கத்தரித்து 55 நாட்களுக்குள் பனிப்பூச்சிகள் பொருளாதார சேதத்தை ஏற்படுத்துகின்றன. எனவே, கொடிகளை அவதானித்து பனிப்பூச்சிகளின் தாக்கத்திற்கு ஏற்ப விசிற வெண்டும்.
திராட்சைக் கொடிகளைக் கத்தரித்து 55 நாட்களுக்குள் ஏற்படும் பணிப்பூச்சித் தாக்கத் தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் கராவல் தோற்றம் ஏற்படாமல் தடுக்கலாம் என விவசாயத் திணைக்களத்தின் ஆராய்ச்சிப் பிரிவினரும், விஸ்த ரிப்புப் பிரிவினரும் பல செயல்முறை விளக்கங்கள் மூலம் எடுத்துக் காட்டியுள்ளனர். திராட்சைச் செய்கையாளர், தோட்டங்களை சுத்தமாகப் பேணுவதால் இரசாயன மிகுந்துகளுக்குச் செலவு செய்யும் தொகையைச் சேமித்து இலாபத்தை அதிகரிக்கலாம்.
李3

Page 49
அலங்காரத் தாவர
リ
霊。、等、劉 :೬*.
ய்ச்சி அலுவலர், தாவ,
எமது நாடு ஆதி காலத்தொட்டே அழகிய, விசித்திரமான பூக்களுக்கும், அரிதான அலங் காரத் தாவரங்களுக்கும் உலகப் புகழ் பெற்து விளங்கி வந்துள்ளது. எனினும் அண்மைக் காலம் வரை ஒரு பொழுது போக்காகவே பூ மரங்கள் வீடுகளில் வளர்க்கப்பட்டு வந்தன. 夏97{芷 ஆண்டு முதற் கொண்டே வர்த்தக ரீதியாக, இலாபம் தரக்கூடிய கைத்தொழிலாக பூச்செய்கை மேற்கோள்ளப்பட்டு வருகின்றது. தற்போது எமது நாட்டின் அந்நிய செலவாணியின் ஒரு பகுதி இக் கைத்தொழிலின் மூலம் பெறப்படு கின்றது. அத்துரசியம், ஒக்கிட் போன்ற பூக்கள், , , தாவரங்கள், தாவரப் பாகங்கள் அதாவது இலைகள் கிளைகள், கிழங்குகள், குமிழ்கள் :ற மேலைத்தே நாடுகளுக்கும், ம் ஏற்று மீதி செய்ததன் மூலம் ண்டு 191.48 கோடி ரூபாய் அந்நியச்
இவ்வாறு பெறப்பட்ட அந்நியச் செலா வணியில் 52% அதாவது 98.56 கோடி ரூபாய், agf@リ 。エリ 写了agräggのGrérógytp象
செய்வதன் மூலமே பெறப்பட்டது, அலங்காரத்
அவற்றின் அரிய இர்ண, அழகிய இலைகளுக்காகவே வளர்க்கப்படுகின்றன. இவை, LெTதுக்கள் நடமாடுகின்ற இடங்கள், அலுவல கல்கள், வீடுகள் போன்ற சூழல்களில் கவர்ச்சிக் காகவும், குளிர்மையான சூழ்நிலையை ஏற்படுத் தவும் பயன்படுத்தப்படுகின்றன. அலங்காரத் தாவரங்கள் என்று குறிப்பிடும் போது அவற்றுள் பின்வரும் தாவரங்கள் அடங்குகின்றன.
(அ) நிழலை விரும்பும் செடிகளான அக்லோனிமா {Agleinema), e.g. Gallicæ; y gâi&gur (Diffenbachia), Gurgi3.jrt iPolysia), íg-J8'ső n t Draceana), கோடிலைன் (Cordylie) ஆகிய ஏற்றுமதிக் வஐச்க்கப்படுத் தாவரங்களும்,
 
 
 
 
 
 
 
 
 

ங்களை வளர்த்தல்
c 3: 323:5ki đe $ 3ạđề đã đ:
T. கிருஷ்ணராசா,
ரவியல் பூங்கா, பேராதனை
涤
Gul Gigi Lóli (Peperomia) Gstaafurt (Begonia) போன்ற உள்நாட்டில் வளர்க்கப் படும் தா வரங்களும், is
(-2) alig) is uit 16 (Fan palum), GassifultiTub (Cane pain), மற்றும் பாமே குடும்பத்தைச் சேர்ந்து ஏனைய பன்னங்களும்,
633 i-išis, S. Miężggiể57 (Ficus benjamina), பைக்கசு டிரையங்குலாரிஸ் (F triangularis) போன்ற பைக்கசு இனங்கள், ஏனைய
(স্ট্র さ
s
கவர்ச்சியான காட்டு மரங்கள் என்பவை.
தற்போது உலக சந்தையில் பன்னங்களுக்கும், அழகிய காட்டுமரங்களுக்குமே இராக்கி கூடியுள் ளது. நிழலை விரும்பும் செடிகள் கணிசமான அளவில் ஏற்றுமதி செய்யப்பட்ட போதிலும், அவற்றிற்கான மேலதிக சந்தை வாய்ப்பு குறைத்துள்ளது.
இக்கைத்தொழிலைப் பொறுத்தமட்டில் கிாங்குவோரின் விருப்பத்திற்கமைய, ஏற்றுமதி செய்யப்படும் தாவரங்களும் காலத்திற்கு காலம் மாறுபடுகின்றன. இதனால், எமது ஏற்றுமதிப் பொருட்களுக்கு கீராக்கியை ஏற்டுபத்தி நாம் பெறும் இலாபத்தைக் கூட்டவேண்டுமாயின், வாங்குபவர்களின் கவனத்தை ஈர்க்கக்கூடிய வகையில், போருத்தமான தாவர வகைகளை ஏற்றுமதி செய்ய வேண்டும். இதனால் புதிய, அரிய தாவரங்களை வளர்த்து ஏற்றுமதி செய்தல் ஒரு முக்கிய அம்சமாகியுள்ளது.
புதிய இனங்களைக் பெறுவதற்கு பல வழிமுறைகளைக் கையான முடியும், அணுக் கதிர்வீச்சுக்கள், இரசாயனப் பத்ார்த்தங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி நிறமூர்த்தங்களில் :றல்களை உண்டு பண்ணி, விகாரங்களைத்
- கமத்தொழில் விளக்கம்

Page 50
தோற்றுவித்தல். இவ் &ாறு பெறப்படும் விகாரங் களில் நிறத்தில் அல்லது தோற்றத்தில் சிறந்தவற் றைத் தெரிவு செய்தல், மழைக் காடுகள், இயற் தாவரச் சாகியங்கள் போன்றவற்றை ஆராய்ந்து கவர்ச்சியான தாவரங்களை அறிமுகப் படுத்தல் என்பன புதிய இனங்களைப் பெறக்கூடிய ஒரு சில வழிமுறைகள் ஆகும்.
ஏற்துமதி செய்யும் போது கருத்திற் கொள்ள வேண்டிய மற்றுமொரு முக்கிய அம்சம், ஒரு இனத் தாவரங்கள் அனைத்தும் ஒரே பிறப்புரிஜமயியல் அமைப்பையும், ஒரே விதமான இயல்புகளையும் கொண்டவையாக இருக்க
வேண்டும் என்பதாகும். இதனால் ஏற்றுமதி
செய்யும் தாவரங்களை, இலிங்க முறை இனப்பெருக்கம் செய்யாது, பதியமுறை இனப் பெருக்கம் செய்வதே மிகவும் பொருத்தமானது. அலங்காரத் தாவரங்களைப் பொறுத்த பட்டில்
பதியமுறை இனப்பெருக்கமே மிகச் சிறந்தது.
ஏனெனில் வெட்டுத்துண்டங்கள் மூலம் மிக இலகுவில், குறுகிய கால இடைவெளியில் தாவரங்களைப் பெற முடியும் பதிய முறை இனப்பெருககம் செய்ய முடியாத நிலையில், g33) pullig, "Lig. Ga tilagirai (Tissue culture) பல்லாயிரக்கணக்கான தாவரங்களை ஒரே நேரத்தில், பிறப்புரிமை அமைப்பில் மாற்றங்கள் இன்றி இலகுவாகப் பெற முடியும். -
ミ三
அநேகமான அலங்காரத் தாவரங்கள், வாங்குபவரின் விருப்பத்திற்க:ை, 2 தொடக்கம்
* இலைகளைக் கொண்ட வெட்டுத்துண்டங்களாக
தாய்த்தாவரங்களிலிருந்து வெட்டப்படுகின்றன. இவை வேரூன்றும் பொருட்டு ஏறக்குறைய 4.6 கிழமைகளுக்கு, தென்னந்தும்பை ஊடக மாகக் கொண்ட துவாரங்களுடைய, சிறிய சாடிகளில் நடப்படுகின்றன. குறிப்பிட்ட கால
இடைவெளியின் பின் வேரூன்றிய இத்தண்டுக்
துண்டங்கன் நோய்கள், பீடைகள் அற்றநிலையில்
பெட்டிகளில் அடைக்கப்பட்டு, விமானம் மூலம் பிறநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன -
பன்னங்கள் விதைகள் மூலமாகவே இனப்பெருக்
கப்படுகின்றன. சிறிய சாடிகளில் வளர்க்கப்பட்ட 4-5 இலைகளைக் கொண்ட பன்னத் தாவரங்கள் 勁寓」也r然 @gè臺jó一列莒g@弱」芭ü
琵、。丑奥登蟹
 
 

உள்நாட்டில் வீடுகளை அலங்கரிப்பதற்குத் தேவையான அலகேசரத் தாவரங்கள், குரோட் டன்கள் என்பவற்றை பதியமுறை இனப்பெருக்கம் சேய்யலாம்.
நடுவதற்கான வெட்டுத் துண்டுகளை ខ្សថ្រា முறைகளில் தயாரித்துக் கொள்ளலாம் (படம் # ر{ +
(அ) வெட்டுத் துண்டத்தின் கீழ்ப்பகுதியில் அதாவது மண்ணினுள் է 65 5**ւնլ:Gիմ: பகுதியில் മഃ அகற்றி விடலாம் (வெட்டுத் துண்டின் அண்ணளைவாக | 1.|3
பகுதி)
(ஆ) ஆளைக்கும் தாவரம்
விட்டதாகக் காணப்பட வேண்டுமஐ பின், கீழ்ப்பகுதியில் 1/3 Líši 3G i 35 ĝis av 550) GIT
அகற்றியபின் வளரும் நுனியரும்பையும்,
அதன் அருகிலுள்ள இளம் இலைகளையும் கிள்ளி அகற்றி விடல் வேண்டும். ப்ேபோது கக்க அரும்புகள் தூண்டப்பட்டு வளரக் தொடங்குகின்றன.
இ) நாம் பயிரிடும் வெட்டுத் துண்டுகன் பெசிய இல்ைகளை கொண்டிருந்து, அவற்றிலிருந்து அடர்ந்த கிளை கொண்ட தாவரங்களைப் பெற விரும்பினால், முதலில் கீழ்ப்பகுதியில் 1/3 பகுதிக்கு இலைகளையும், நுனியிலுள்ள விரும்பையும், அதன் இரு புறங்களிலுமுள * ប្រីយ៍ Զ936)» օanպմ: அகற்திய பின்னர், மிகுதியான இலைகளை அரைவாசியாக வெட்டிவிடல் சிறந்தது.
வெட்டுத்துண்டுகளை பெறும் Guirgi ஊடகத்தினுள் புத்தைக்கப்படும் பகுதி (அதாவது ழ்ப்பகுதி) கூரான கத்தியால் சரிவாக ଔଜ୍ଜit', L- វិញ្ញា ឆ្នា2. அப்போது தண்டிலிருந்து வர் விடும் பகுதியின் பரப்பளவைக் తీష్ L. శ్రీ పు
ഖ് ♔ 'ൈ ഓട്ടു கேப்படுத்தலாம்.
வட்டுத்துண்டங்களை பின்வரும் து
1) கி-6 அங்குல நீளமுடைய, 2-3 அரும்புக ଗ୍ରନ୍ଥି ଛାtଞ) L;} வெட்டுத்துண்டுகளை வளர்ப்பூ டகத்தில் தடுது,
45

Page 51
ܢܠ
ܓܠ
";
|محیمیہ
ܓܔ¬
3 பகுதியில் இலகள் ஆக )றபபடடுள்ளது
படம் 1 : மூன்று முறைகளில் தய
(2) அதிக ஈரப்பதனைப் பேணுவதற்கும், ஆவியுயிர்ப்பால் இழக்கப்படும் நீரைக் குறைப்பதற்கும் நடப்பட்ட வெட்டுத் துண் டங்களை பொலித்தீன் ஒபகளினால் மூடி வைக்க வேண்டும். 霹了
(3) வெட்டுத்துண்டத்தின் கீழ்ப்பகுதியிலுள்ள ஒரு அரும்பு வளர்ப்பூடகத்தினுள் புதைந்தும், ஏனைய இது அரும்புகளும் ஊடகத்திற்கு வெளியேயும் இருக்கும்படி நடுக.
துவாரத்தை அடைக்கும ஒடடுத் துண்டு
படம் 23 சரியான முறையில் தயாரிக்கப்பட
46
 
 

நுனியரும்பு அகற்றபபடடுள்ளது
ހ
அரைப்பகுதி அகற்றப்
பட்டுள்ளது
ހޯކި
(Z-స్నా
رعتلامر
红
சரிவாக வெடடபபட கீழ் நுனி
ாரிக்கப்பட்ட வேடடுத் துண்டங்கள்
(4) தாவரத் துண்டங்களுக்கு போதியளவு நீர் கிடைக்கு மாறு தினசரி நீரூற்றல் அவசியம். வேரூன்றித் துளிர் விட்ட சில நாட்களில் பொலித்தீன் உறைகளை நீக்கி விடுக.
வெட்டுத்துண்டுகள் வேரூன்ற 4-6 வாரங்கள் சேல்லும். இக்கால இடைவெளியின் பின் வேரூன்றி வளர்ந்த தாவரங்களை பூச்சாடிகளுக்கு மாற்ற முடியும். பூச்சாடிகள் பின்வரும் முறை தயாரிக்கப்படல் வேண்டும் (படம் 2).
மண்ணுடன் நடப்படும் வேர்விட்ட தண்டுத் துண்டம்
ட சட்டியில் நடப்படுள்ள வேர்விட்ட துண்டம்
க3த்தொழில் விக்கம்

Page 52
(அ) பூச்சாடியீன் அடிப்பகுதியிலுள்ள նմ: செல்லும் தாவரத்தை மூதலில் ஒரு சிறிய ஒட்டுத்துண்டு ஒன்றினால் மூடி விடுக.
ளையே பயன்படுத்தல் சிறந்தது. ஏனெனில்
மேலதிக நீர் வடிந்து செல்லும்)
(ஆ) அதன் மேல் ஒரு படை காய்ந்த இஒலச்
சரகுகளை இடுக.
உயரத்திற்கு சட்டிக்
கலவையை இடுக.
(ஈ) வேரூன்றிய வெற்றுத் துண்டங்களை வேரைச் சுற்றியுள்ள மண்ணுடனேயே கவனமாக பூச்சாடியினுள் வைக்க வேண்டும். (மண்னை
அகற்ற முற்பட்டால் வேர் மயிர்களுக்குச் ČSF3; ih GT fih i arriħ)
(உ) பின்பு பூச்சாடியை சட்டிக்கலவையால்
நிரப்பி நன்கு அழுத்தி விடுக.
சட்டிக் கல்வி வ ை: தயாரித்துக் கொள்ளுக. - --
4 பங்கு (கணிப்பொருள் நிறைந்த, தோட்ட
2. சேதனப்பசனை
2 Ljig; -
唔。亭frā了ü
l Lio)
4. Lោះ ឆ្នាំ
I Lig
இச்சட்டிக் கலவை சாதாரணமாக சகல வகையான அலங்காரத் தாவரங்களை நடூஇதற் கும் பயன்படுத்தப்படலாம்.
அலங்காரத் தாவரங்களின் வளர்ச் சிக்குத் தேவையான காலநிலை வெப்பநிலை
சிறந்த தாவர வளர்ச்சிக்கு பகல், இரவு வெப்பநிலைகளுக்கிடையே வேறுபாடுகள் காணப் படல் சாதகமானது. அதாவது பகல் வேப்பநி லையிலும் பார்க்க இரவு நேர வெப்பநிலை

ஒரளவு குறைவாக இருக்க வேண்டும். பதிய மூறை இனப்பெருக்கத்தின் போது துண்டங்கள் நன்கு வேரூன்றுவதற்கு பகல் நேர ஊடக 穹一?岳°等 ஆகவும், இரஜில் 22° சி ஆகவும் இருத்தல் சிதந்தது. அலங்காரத் தாவ ரங்களுக்கும் தேவையான மிகச் சிறந்த வெப் பநிலை தாவர இனங்களுக்கேற்ப வேறுபடும். வீடுகளில் வளர்க்கப்படும் தாவரங்களை அவ்வி டங்களில் கானப்படும் வெப்பநிலைக்கேற்ப சீராக்க முடியும். பொதுவாக எமது நாட்டில் நிலவும் சுழல் வெப்பநிலை (28-82° சி) அலங் காரத் தாவரங்களின் வளர்ச்சிக்குப் பொருத்த
ĒfTG5Tā.
ܡ .
ஒளித் தேவையும் தாவரத்திற்கு தாவரம் மாறுபடுகின்றது. சில அலங்காரத் தாவரங் களுக்கு வழங்கப்பட வேண்டிய நிழல் வீதங்கள்
ទី៨ លg Ty. .ܓ
அக்லொனிமா (Agtonema) இனங்கள் -
* - 80% நிழல்
! Gi isi (3): 13, Gulli (Dieffenbachia)
-
- 63 - 73% நிழல்
பைக்கசு பென்ஜமீனா (Ficus benja Hinina)
- 47 63% நிழல்
பிலோடென்ரோன் (Philodendron)
. = 1 ? = リ% நிழல்
g3 TT 35;#uit (Aurocaria excela) ܗ
݂ ݂ تقة ميلوز " 30 - 47 مت
எனவே அநேக அலங்காரத் தாவரங்களை பசிய வீடுகளில் (Green house) அல்லது நிழல் தரும் மரங்களின் கீழ் அல்லது தாவரம் பெறும் ஒளியை கட்டுப்படுத்தக்கூடிய சூழலில் வளர்க்க வேண்டும். நேரடியான தசிய ஒளி தாவரங்களில் ாம்முறையிலேனும் படுவதை முற்றாகத் தடை
... ' ۔۔۔۔
47

Page 53
:
அலங்காரத் தாவரங்களுக்கு போதியளவு ஈரப்பதன் கிடைக்க வழிசெய்தல் வேண்டும், வர்த்தக ரீதியில் வளர்ப்டோர் 60% அல்லது அதற்கு மேற்பட்ட ஈரப்பதனை பசிய வீடுகளில் (Green house) பேணுவது வழக்கம், வீடுகளில் தாவரங்களை வளர்க்கும் போது ஒரளவு ஈரலிப் பான இடங்களில் வளர்க்களாம் அல்லது வளர்க்கும் இடங்களுக்கு அடிக்கடி நீரூற்றி (56իri ժուռը: - զուգ պth. - ܨ ܕ ܢ ܥ
நீரூற்றுதல் :
தாவரங்களுக்கு அதிகளவு நீரூற்றுதல் அல்லது குறைந்த அளவு நீரூற்றுதல் அவற்றின் வளர்ச்சிக் குப் பாதகமாக அமைகின்றது. சிறப்பான வளர்ச்சிக்கு தாவரம் வளர்க்கப்படும் ஊடகம் எப்போதும் ஒரளவு ஈரப்பற்றுள்ள நிலையிலே பேனப்படல் ஆேண்டும்.
பசனையிடல் :
சாதாரணமாக தாம் வீடுகளில் வளர்க்கும் தாவரங்களுக்கு Liggs artist- வேண்டிய அவசிய táæà8, ஏஜெனில் ஊடகத்தை தயாரிக்கும் போதே சேதன கலவைகள் சேர்க்கப்படுகின்றன எனினும் 1 - 1 மாதங்களுக்கொரு முறை சந்தை இளில் விற்கப்படுகின்ற திரவப் பசளைகளை, உற்பத்தியாளரின் அறிவுறுத்தல் அணின்படி விசிற லாம். வர்த்தக ரீதியில் ஏற்றுமதிக்கென்று பயிர் சேய்யும் போது, இரசாதனப் பசளையிடல் முக்கிய இானது,
இவ்வாறாக நாம் பசிய தாவரங்களை எமது
வீடுகளில் பொழுதுபோக்காக வளர்க்கலாம்,
அன்றேல் உள்நாட்டில் சந்தைப்படுத்தும் நோக்
இத்துடன் வளர்க்கலாம். இந்நோக்கங்கள் இரண்
டையும் தவிர, ஏற்றுமதி செய்யும் முகமாக
48

வர்த்த ரீதியாக சுவே சில வாய்ப்புத் தரும் கைத்தொழிலாகவும் வளர்க்க முடியும். எனினும் ஏற்றுமதி செய்வதற்காக அலங்காரத் தாவரங் களை வளர்ப்பதற்கு முன்பு கிராக்கி கூடிய தாவரங்களையும், அவற்றை வாங்குகின்ற நபர் - களை அல்லது வர்த்தக ஸ்தாபனங்களை அறிந்தி ருந்தல் அவசியம். அப்போதே கூடிய இலாபம் பெறலாம். அலங்காரத் தாவரங்களை ஏற்றுமதி செய்யும் போது நாம் எதிர் நோக்கக்கூடிய சில
1. எமது ஏற்றுமதிப் பொருட்களுக்கு அவற்றை இறக்குமதி செய்யும் நாடுகளில் வரிப்பணம் அறவிடப்படுவதனால் ஏற்றுமதி பொருட் களின் விலை கூடுகின்றது. இதனை அர சாங்கக்களுக்கிடையான வர்த்தக ஒப்பந்தே
ទ្រខ្សា ព្រឹទ្ធា អ៊ុំ GFaffi.
2. விமானங்களில் இடப்பற்றாக்குறை, தாவ
ரங்கள், தாவரப்பாகங்கள் போன்றவை இலகுவில் வாடிப் பழுதடைந்து விடுகின்றன . எனவே அவற்றை நாம் உடனடியாக ஏற்று மதி செய்யாவிடில் வளர்ப்பவர்களுக்கு பேரும் நஸ்டம் விளையலாம். எமது நாட்டில் ஒரே ஒரு லிமான ஸ்தாபனமே இருப்பதனால்
விமானங்களில் இடநெருக்கடி இலகுவில்
GT fih Ly -- Gift this
3. அதிக அளவிலான மூலப்:ொருட்கள் பெற
முடியாமை, மாதாந்தம் இலட்சக்கணக்கில் தாவர வெட்டுத்துண்டங்களை ஏற்றுமதி சேய்வதற்கு பல்லாயிரக்கணக்கான தாய்த் தாவரங்களை பசிய வீடுகளில் வளர்க்க வேண்டும். அதிக எண்ணிக் ஐககளில் தாவ ரங்களைப் பெறுதல் கடினமானது இனப்
பெருக்கத்தை துரிதப்படுத்தும் வேறு செய்மு
றைகளைக் கையாண்டு இவற்றை நாம் நிவர்த்தி செய்ய முற்படல் வேண்டும்.

Page 54
அதிக liussia,
*ょょょ44。
35. 3650 fa விவசாய விரிவாக்க உதவிப் ப6
முருங்கை பலரும் அறிந்த தாவரம். క్తిత్తar தாவரவியற் பெயர் மொநிங்கா ஒலெய் பெரா Viforinga oleifera) என்பதாகும். முருங்கை இலங்கை, இந்தியா பிலிப்பீன்ஸ், வட ஆபிரிக்க நாடுகள் பலவற்றிலும் செய்: ஜினப் படுகின்றது. இத்தாவரத்தின் இலைகள், காய்கள்,
வேர், பட்டை, பிசின் என்பன பல தேவைகளுக் காகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்திச்சவில்
முருவிகை பற்றிய பல ஆராய்ச்சிகள் மேற்கொள் டப்பட்டு, புதிய உயர் விளைவு தரும் வர்க்கங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. முருங்கையில் செடி முருஇகை, மர முருங்கை என இரு பிரிவுகள் உண்டு.
முருங்கையின் உபயோகங்கள்
1. இலைகள், காய்கள், பூக்கள் என்ன மனித உணவாகப் பயன்படுத்தப்படுகின்றன.
முருங்கை விதைகளிலிருந்து பிரித்து எடுக்கப் படும் எண்ணெய் உணவாகவும், இயந்திரங் sarfi á 2. TTT từ Gay få år (Lubricant) gasaja,
படுகின்றது.
3. முருங்கை விதைகளிலிருந்து பெறப்படும் பென் (BEN) எனப்படும் எண்ணெய்ப் பதார்த்தம் ஓவியக் கலையில் பயன்படுத்
தபேடுகின்றது.
4. தூளாக்கப்பட்ட விதைகள் நீரிலுள்ள அசுத்தங்களையும், பக்ரீறியாக்களை ஆம்
அகற்றிச் சுத்திகரிக்கப் பயன்படுத்தப் படுகின்றன.
5. வேலிக் கட்டைகளாகவும், வெற்றிலைத் தோட்டங்களில் திழல் மரமாகவும், காற்றுத் தடைகளாகவும் பயன்படுத்தப்படுகின்றது.
- tesor? 33, 1992

ہے۔ جیسے لے گی۔ ہے۔ ہے ۔ جس *. یہ
$560 னிப்பாளர், திருகோணமலை
6. பூக்கள் தேனீக்களுக்கு அமுதத்தை வழங்
ਓਹੈ।
* வேர், இலை, பட்டை, மரப் பிசின் என்பன சுதேச மருத்துவத் துறையில்
●落aリ至奇。リ守 arリエ 努エリ
-
கப் பயன்படுத்தப்படுகின்றன:
8. விவசாய வன திரைப்பரோக
நடுவதற்கு முருங்கை சிறந்தது.
வைத்தியத்தில் முருங்கை
முருங்கை மர வேர்களில் காணப்படுகின்ற மொறிஞ்ஜின், மொறிஞ்ஜைனின் ஆகிய இரண்டு வகை அல்கலோய்ட்டுக்கள். குழந்தைகளுக்கு ஏற்படுகின்ற பேதி, இருமல், சளி, காய்ச்சல், தொண்டைக் கட்டு போன்ற நோய்களுக்கு மருந்தாக அமைகின்றது. முதுங்ஐகப் பட்டையி லிருந்து கிடைக்கும் சாறு, பிசின் என்பவற்றிலி ருந்து தாது புஷ்டி லேகியங்கள் தயாரிக்கப் படுகின்றன. -
முருங்கை இலையில் விற்றமின்கள் ஏ. பீ. சி என்பன நிறைந்துள்ளன. முருங்கை இலை ஒரு சிறந்த மலமிளக்கியாகும். முருங்கைப் பூக்களில் இாணப்படும் குவார்சிடின், மஃப்பேரால் ஆகிய ஆல் இலுெFtட்கள் தாது விருத்தியைiம், மகப்பேற்றையும் ஊக்குவிக்கின்றன. முருங்கைப் பிஞ்சும் தாது விருத்தியை ஊக்குவீக்கின்றது.
முருங்கைக் காயில் புரோல மீன், குளோபுலீன் ஆகிய இரண்டு இன்றியமையாத அமினே" அமிலங்கன் உண்டு. முருங்கை விதை எண்ணெய் வாத நோய்க்கு மருந்தாகப் பயன்படுகின்றது. முருங்கை இலையிலும், அாயிலும் இரும்புச் சத்து நிறையவுண்டு. இதனால் இவை இரத்தச் சோகைக்கு மருந்தாக அமைகின்றன.
A9

Page 55
முருங்கை வர்க்கங்கள்
முருங்கையில் பலவிதமான வர்க்கங்கள் காணப்படுகின்ற போதிலும், இவ்வர்க்கங்களின் ទ្រឹត្តិទាំងៀវ வேறுபடுத்தி அறிவதற்கான ஆராய்ச்சிகள் எமது நாட்டில் குறைவாகவே நடாத்தப்பட்டுள்ளன. இ&ங்கையில் காணப்படும் ஒரு சில முருங்கை வர்க்கங்கள் கீழே விபரிக்கப்
பட்டுள்ளன. ܦ ܘ ܢ
} ឆ្នាស ព្រះត្រូធំ ទឺប៊ឹ இலங்கையிலு
蔷写ü方、 ព្រូហ្សែ ថ្ងៃ - ខ្មែរ
12ானது. இவ்வர்க்கத்தின் சுவையான, TT 0Tmm m mTtS Te emTu mee S S S S T TmmmG uOO காய்கள் 2-3 அடி நீளமானவை,
ஆ} சாவகச்சேரி முருக்கை : இவ்வர்க்கம் வீட்
டுத் தேஈட்டங்கனில் ୱିଣ୍ଡିଂ ୱିଥ୍}ଞ୍ଜି ! ମୁଁ ସଁ ଶ୍ରେ) ପନ୍ତି । தற்கு மிகவும் உபயோகமானது. காய்கள் 3 - 3 அடி நீளமானவை, சுவையானவை.
இ) புனல் முருங்கை மரம் நேராக வளரும் ឆ្នាយ ឡី ១.៤g பந்தல்கள் తి}} !! தற்கும், வேலிகளில் நடுவ்தற்கும் உகந்தது. இலைகள் உருசியானவை. நீளம் குறைந்த କଟି !--gré. -
声) பால் முருங்கை 鲸佥,莓二镜一 யான வர்க்கம் ஆகும். இதன் இலை உருசி குறைந்தவை. ஆனால் உருசியான காய்கள் மிகவும் சிறியவை.
இவற்றைத் தவிர வாகரை முருங்கை, கப்பல் முருங்கை, நாட்டு முருங்கை எனப் ஐ 莓受宣蚤 gāég。 事
விதை முருங்கை:
இந்தியாவில் மிகப் பிரபல்லுமான விதை முருங்கை எனப்படும் வர்க்கம், காய்களுக்காகவும், விதைகளுக்காகவும் செய்கை பண்ணப்படுகின்றது. பெரும்பாலும் விதைகள் மூலமே இவ்வர்க்கம் இனப்பெருக்கப்படுகின்றது. இவ்இச்க்கக் தட்டு 6 Prុទ្ធ ម៉ីខាអ៊ិស្ឋិ காய்க்கத்தொடங்கும். Efi iii பறித்த பின்பு செடியை 3 ஆடி உயரத்தில்
50
 

இெட்டிவிட்டால் தி மாத காலத்தின் பின்பு மீண்டும் காய்க்கத் தொடங்கும் இவ்வாறு : வருடங்களுக்குத் தொடர்ச்சியாகப் {{1}}ಇ# பெறலாம்.
முருங்கை வளர்வதற்குத் தேவையான நிபந்தனைகள்
கடினமான களிமண் தரை தவிர்ந்த, ଶ୍ରୀ ଡଃ ଶଶful!! சகலவிதமான தரைகளிலும் முருங்கை வளரக் கூடியது. நன்கு நீர் மணல் 惠命弱马町爱 இருவாட்டி ਹੰਡ ਪਸੁ ਸੰਨ செய்கைக்கு វិទ្យុ @Tខ្សត្រូវg.
காலநிலை
வெப்ப மண்டலக் காலநிலை ஆதருங்கைக்கு மிகவும் உகந்தது. மழை குறைவான இடங்களில்
pਨੁਸੰ8 ,
செடி முருங்கை விதைகள் மூலமும், மர முருங்கை தண்டுத் துண்டங்கள் மூலமும் இனம் பெருக்கப்படுகின்றன.
ஒர் ஆண்டை விட வயது கூடிய ஆனால் 2 ஆண்டுகளுக்குக் குறைந்த வளர்ச்சியுடைய
தண்டுகள் நடுவதற்குப் பயன்படுத்தப்படலாம்.
இவை 5 x 5 மீற்றர் இடைவெளி
படுகின்றன. தண்டுத் துண்டங்களை, ! இலைகுலைகள் அல்லது கூட்டெரு
நிரம் 35 குழிகளில் நடலாம்.
இரசாயனப் பச8ளகளையீடுவதனால் கூடிய பயன் கிடைக்கும். ஆனால் எமது நாட்டில் முருங்கைப் பயிருக்கு சளைச் சிபாரிசுகள்
எதுவும் இதுவரை வழக்கப்படவில்லை,
கமத்தொழில் விளக்கம்

Page 56
காங்கள் முற்று முன்பு அறுவடை செய்யப்பட வேண்டும். பொதுவாக ஒரு ஏக்கரிலிருந்து 10 மெற்றிக் தொன் விளைவு பெறலாம்.
எமது நாட்டில் பெரிய பரப்புகளில் முருங்கை செய்கை பண்ணப்படுவதில்லை. வீட்டுத் தோட்டங்களிலும், வேலிகளிலும் முருங்கை மரங்களை நட்டு வருடம் முழுவதும் முருங்கைத் கீரையை பெறலாம்.
பூச்சிப் பீடைகளும் நோய்களும்
ஒருங்கை மரம் நோய்களால் தாக்கப்படுவது மிகவும் குறைவு. அத்துடன் ஒரு சில பூச்சிப்
உங்களுக்குத் தெரியுமா?
* ஒரு ஏக்கருக்குத் தேவையான
பெறுவதற்குத் தேவையான வெ அகலமான பாத்திகள் 4 இல் * இப்பாத்திகளை மூடுவதற்கு
போதுமானது. 率下 ஒரு வெங்காயத்திலிருந்து ஆ
அவற்றிலிருந்து 10 கிராம் நின பெறலாம். -
பலர் 1992
 

பீடைகளே இதனைத் தாக்குகின்றன. நூர்டா பிவிடியேலிஸ் என்னும் பூச்சிப் பீடை இலைக ஓலுேள்ள பச்சையங்களை உண்பதனால் இலை களை உதிரச் செய்கின்றது. uů g(Šgií.
மொல்லிஃபெரே எனப்படும் கம்பளிப் பூச்சி
இலைகளை உண்ணுகின்றது. இதன் தாக்கம் அதிகமானால் மரத்திலுள்ள சகல இலைகளும் பாதிக்கப்படும். பழ ஈ காய்களைச் சேதம் செய்கின்றது. -
முருங்கை வெட்டவெட்டத் தழைக்கும் ஒரு ԼDց ԼԸn (5th. 333 է 160 பலன்களைத் இருகின்றது. வீட்டுத் தோட்டங்களிலும், வேலிகளிலும் முருங் ឆ្នាគ្រឹទ្ធL = @__ឆ្នា៨ பெறலாம்.
பெரிய வெங்காய விதைகளைப் ங்காயங்களை அடி நீளம் 3 அடி நடலாம். -
கி. கி நிறையுள்ள பொலித்தீன்
கக் குறைந்தது 4 பூக்களையும், றயுடைய 2400 விதைகளையும்
5 :
《།

Page 57
ஏற் றுமதிக்காக D. பழங்
圭雯空壶史斐壶壶
三星、斐
ாட்டுச் சந்தைகளுக்காக மரக்கறி
இளையும், பழங்கனையும் உற்பத்தி செய்யும் போது, நால் அவற்றின் தரங்களையிட்டு அதிக - ដើម្ពូទ្វិ செலுத்துவதில்லை. ఆడాడో ఫ్రూక్రీgభిక్షిత கான பழங்கள், மரக்கறி வகைகள் அவற்றை வாங்குகின்ற நாடுகள் விதிக்கும் தரங்களுக்கு ஏற்புடையனவாக உற்பத்தி செய்யப்பட வேண் டியது அவசியமாகும். 霹了
ஏற்றுமதிக்கு உகந்த தரமுடையனவாக ஒரு
ਓt
శ్రీఆకితః |
உற்பத்தி செய்து இோள்வதற்கான ஒரு சில
ஆலோசனைகளை இங்கே தருகின்றோம்.
நீளம் 7.5 ச.மீ. (3 அங்) இற்குக் லும், 10 ச. மீ (4 ஆங்) இற்குக் இருக்க வேண்டும். காய்களை
صحي تم ترقيع
தினச லுவடை செய்வதன் மூலம், இவ்வாதஈன நீளத்தையுடைய காய்களைப்
2. காய்களை கிதங்களில் முற்றவிடக்கூடாது
முற்றவிட்டால் தொடர்ந்து தரமான
பெற முடியாது.
ல குறைவாகவுள்ள காலையில் அல்லது Eலையில் காய்களை அறுவடை செ: வேண்டும்.
பெய்துள்ள போது அல்லது அதிகளவு
நீர்த்தன்மையுள்ள போது காய்களை ఆga6 = Gజొ#1 కిలే 1ண்டாம். இவ்வா றான நேரங்களில் அறுவடை சேய்யப்படும் இாய்கள் இலகுவில் அழக இடமுண்டு.
శ్, శ్రీ వీక్ష క్లే శ్రీ స్త్రీ శ్ జెజ్జా త్యి பின்சல் ஒழுங்கள்
வெட்டி அலுவடை செய்ய வேண்டும்.
52.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரக்கறி வகைகளும்
களும்
శ్లేష్టి క్షీడ్లే
வத்தகைப் பழம்
.
ရွီး မစ္ဆိတ္ထီဒ္ဓန္တီး နုိင္ငံ ႏွင့္အမ္ယန္တီး၊ ဆွံ့၊ ဆွံ့၊ ရွှီး
ဖြီး မ္ယန္တီးမှ ဖွံ့ီ ဦင်္း ဖ္ရစ္ဆိဒ္ဒန္တီး ဆွီဇီး၊ ဆွီဒီး ရွှီး ခြီးမ္ဟုန္ဒီမုိင္ငံမ္ယီဒ္ဒန္တီး ဇီ
வெட்டிய காய்களை நிழலான இடத்தில் வைக்க வேண்டும். வெயிலில் வைக்கவே கூடாது. வெட்டிய காய்களை பொதி செய்யும் இடத்திற்கு விரைவில் கொண்டு செல்லு வேண்டும். h
வெட்டி: காய்களை இறுக்கமாகப் பிடிக்கக்
ចំប៉ា- ម៉ី »
காய்களை பெட்டிகளில் இறுக்கமற்றதாக
(ஐதாக) அடுக்க வேண்டும். சாக்குகளில் அடைக்கக் கூடாது, வெண்டிக்காய்கள் மெதுமையான ஒவயாதலால், அவற்றில் காயங்கள் ஏற்படாமலும், அவை நசியா மலும் இருக்கத் தக்கதாக அடுக்க வேண்டும்:
அழுக்கான காய்களை, இரசாயனப் பொருட்கள் மேற்பரப்பில் காணப்படும்
காய்கTை, தசித்த காய்களை போதி செய்யும் இடத்திற்குக் கொண்டு செல்லக்
孪—每茎、
பழக்காம்பின் அடிப்பகுதி காய்ந்து சுருக்க மடையத் தொடங்கியதும், பழங்களை அறுவடை செய்ய வேண்டும்.
வெப்பம் குறைந்த காலையில் அல்லது மாலையில் அறுவடை செய்க.
ல் வைக்கக் கூடாது,
தாங்களில் காயங்கள் ஏற்படாதவாறும், நசியாதவாறும் கவனமாக அவற்றைக் கொண்டு செல்ல வேண்டும் , -
காய்களை நிலத்தில் வைக்கக்கூடாது,
விழவிடக் கூடாது.
கமத்தொழில் விளக்கம்

Page 58
காய்களை விரைவில் பொதி செய்யப்படும் இடத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும்.
காயம் பட்ட பழங்கள், துப்பரவில்லாத
பழங்கள், விசிறப்பட்ட பீடைநாசினிகள்
மேற்பரப்பில் காணப்படும் பழங்கள் என்பவற்றை பொதி செய்ய வேண்டாம்.
ஒழுங்கான வடிவமுள்ள பழங்களை பெட் டிகளில் ஐதாக அடுக்க வேண்டும், அவை
நசியக் கூடாது.
பழங்களை விரைவி ல் குளிரூட்டப்பட்ட
களஞ்சியங்களுக்குக் கொண்டு சென்று
ஒப்படைக்க வேண்டும்.
கத்தரி
சரியான பருமனுள்ள கத்தரிக் காய்கள்ை அறுவடை செய்ய வேண்டும்.
ஏற்றுமதிக்கு அழகான தோற்றம் உள்ள காய்களை மட்டுமே தெரிவு
வேண்டும். பழுதடைந்த காயமடைந்த,
புள்ளிகள் கொண்ட, இரசாயனப் பொருட்
கள் மேற்பரப்பில் காணப்படுகின்ற காய்க
ளைத் தெரிவு செய்ய வேண்டாம்.
மழை நாட்களில் காய்களை அறுவடை
seg iiüiT (3F i Gisri FF 12.
வெப்பம் குறைவாகவுள்ள காலை அல்லது மாலை வேளையில் அறுவடை செய்ய வேண்டும்.
கூரிய கத்தி ஒன்றினால் காம்பை வெட்ட இேண்டும். காம்பை உடைத்து அறுவடை செய்யக் கூடாது.
வெட்டி எடுத்த காய்களை உடனடியாக பொதி செய்யும் இடத்திற்குக் கொண்டு செல்லுக, அவற்றை துெயிலில் வைக்கக்
3.LTTge /
மலர் 3, 1992

8.
பட்டர் நட்
கத்தரிக் காய்களில் இலகுவில் காயம் ஏற்படுமாகையால், அவற்றை பேட்டிகளில் மட்டுமே இறுக்க இல்லாமல் பொதி செய்ய வேண்டும். சாக்குகளில் பொதி செய்யக் al-frgil. ...މި " . . .................................... -
வீரைவில் அவற்றை குளிரூட்டப்பட்ட அறைகளில் வைக்க வேண்டும்.
சரியான அளவுள்ள காய்களை தெரிவு
செய்ய வேண்டும். ஒரு காயின் ஆகக் குறைத்த நிறை 250 கிராம் ஆக இருக்க வேண்டும். *
அழகான தோற்றமுள்ள காய்களை மட்டுமே தெரிவு செய்க. பழுதடைந்த காயம்பட்ட, இரசாயனப் பொருட்கள் மேற்பரப்பில் காணப்படுகின்ற காய்களை ஏற்றுமதி செய்ய முடியாது.
காய்சளின் காம்புகளை கத்தியினால்
வெட்டி எடுக்க வேண்டும். காம்புகளை
முறுக்கிப் பிடுங்கக் கூடாது.
அறுவடை செய்த காய்களை நிலத்தில் விழவிடக் கூடாது. கவனமாகக் கையாள வேண்டும். -
மாலை அல்லது காலை வேளையில் அறுவடை செய்து விரையில் செதி செய்யும் இடத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். அவற்றை வெயிலில் வைக்கக் ಲಿàL-F§ s
பெட்டிகளில், நசுங்காத விதத்தில் பொதி செய்ய வேண்டும்.
விரைவில் குளிரூட்டப்பட்ட களஞ்சியத்
களுக்குக் கொண்டு செல்ல வேண்டு.
ஆதாரம்
'மார்ட் நிறுவனப் பிரசுரங்கள்
53

Page 59
மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி ே
மரக்கறி/பழம்
tDfrtbt. P th
அன்னாசி
பப்பாகிப்பழம்
è rep
ஆனைக்கிோய்யா
மதிகுஸ்தான்.
தம்புட்டரீன்
இரவன்வி
tiễt_frẻ
E iffs a
纥了彦座重醇
பச்சை மிளகாம்
Litiri ga IT
aggi Rigif
கிரி அலு
பின்வரும் இயல்புகளைக்
பருமன்நிறை -
1 கி. கி. இல் -ே8
பழங்கள்
ஒரு பெட்டியின் நிறே புடைய, வட்டவடிஆான பழங்கள்
750-1000 கி. நிறை
யுடைய, வட்டவடிவானே பழங்கள்
6 அங். தீனமுடைய, கி. கி. ஒன்றில் 8-10 பழங்கள்
200 கிராம் நிறையுடைய
பழங்கள். ஒரு பெட்டியின்
நிறை 5 கி. கி.
ஒரு கி. கிராமில் 10
பழங்கள்
ஒரு கி. கிராமில் 20-25 பழங்கள்
ஒரூ கி. கி. இல் 5
கிழங்குகள் ஒரு பெட்டியில் 玺=岳马摩拉西g
5 颚萤。 நீளமானவை ஒரு கி. கி. இல் 10-15, 享エ茎eir
3-4 அங். நீளம்
250-300 கிராம் நிறை
புடைய காய்கள்
600-700 கிராம் நிறை
யுடைய காய்கள்
5-6 அங். நீளம்
தகவல் :

செய்யும் போது, மரக்கறிகளும், பழங்களும் கொண்டிருக்க வேண்டும்.
பச்சை திறம்
மென்சிவப்பு நிறம்
நிறம் வர்க்கம்
மஞ்சளும், ஒரளவு சிவப்பும் ស៊ar: 75% மஞ்சள் GlLößtpft நன்கு முற்றிய பச்சை முருசி நிறப் பழங்கள்
35% மஞசள் நிறம் உள்ளூர்
குளிர்காலத்தில் 100% ஆதலி மஞ்சள், த டான காலத்
தில் 50% மஞ்சள்
தாய் வர்க்கம்
ஆடும் சிவப்பு மலேசிய
ஆர்த்தம்
உள்தோல் சிவப்பு
நிறம்
ତ!! !! !!! !!.!! ହଁ କୃଷ୍ଣ ଓ நீளவர்க்கம்
கடும் சிவப்பு •ოტო-ურა
கடும் பச்சை ---
t_శ్రీ థ్రోజ్ எம். ஐ.
கடும்பச்சை aa
தெ ஆபத் ஒச 2ܪ
事拿ü季、 உள்தோல்
நிறம்
மேல் மாகாண விவசாயப் பணிப்ாளர்
భక్తే نهائيifپھرهاظر طt &
# ఉత్తb

Page 60
elšanurmessaaneerissae
நீங்களும் பங்
பின்வரும் பகுதிகளுக்கு வாச
இரத்தினச் சுருக்கமாக எழுத வேண்
மிக மகிழ்வுடன் வரவேற்கின்ருேம்
அஞ்சற்பெட்டி
இப்பகுதியில் கமத்தொழி விடயங்கள் பற்றி வாசகர்களின் வெளியிடுவோம்,
எங்கள் பதில் :
இப்பகுதியில் வாசகர்களின்
பிரச்சனைகளுக்கும் அனுபவம் நிர்
களும், ஆராய்ச்சியாளர்களும் பதி
மாதர் மன்றம் :
இப்பகுதியில் சமையற் பா
மனையாட்சி, முதலுதவி, சுகாதார
இடம்பெறும்.
விவசாயச் செய்திகள் :
இப்பகுதியில் விவசாயிகளின் வெளியூர் விவசாய முன்னேற்றச்
- அனுப்பும் விடயங்களுடன் விபரங்களும் தெரிவிக்கப்பட்டிருக்க ஆர்வம் காட்டி, எம்மை எமது இச்சஞ்சிகையின் தரத்தை உயர்த்
களே வரவேற்கின்றுேம் தொடர்
ஆசிரியர், கமத்தொழில் வி ܦ
தொழில் நுட்பப் த, பெ, இல, 18
பேராதனே,

S EE
பகுப ற்றலாம்
கர்களும் எழுதிப் பங்கு பற்றலாம். எடுகின்ருேம். உங்கள் கருத்துக்களே
ல் விளக்கத்தில் வெளியாகும், கருத்துக்களையும் திறனுய்வுகளையும்
விவசாயக் கேள்விகளுக்கும், றைந்த விவசாய உத்தியோகத்த ர்
கம், தையற்கலை, கைப்பணிகள், ம் போன்ற மனையியல் அம்சங்கள்
கவனத்தை ஈர்க்கவல்ல உள்ளூர், செய்திகள் இடம் பெறும்.
உங்கள் பெயர், முகவரி ஆகிய வேண்டும். இச்சஞ்சிகையின்பால் பணிகளே திறம்பட நடாத்தி துவதற்கு உதவும் உங்கள் கருத்துக் பு கொள்ளும் முகவரி
ளக்கம், பிரச்சாரப் பிரிவு,

Page 61
|-
 
 
 
 
 
 
 
 
 
 


Page 62
விவசாய தி
கண்ணோ
92 =
விலை

பதிப்பு :
னைக்கள அச்சகம்
றுவ - பேராதனை
82 (4,000)
ரூ. 5,00
ܨܬܐ