கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மலர் 1970.02

Page 1

2 N
Qu
ப்ரவரி 1970
சதம் /50

Page 2
-
CsCl
ΟΙ al UOLIL requirement
1P)]RIIN^)T`]IN(G &.
Dlea
(0,1,..l. (ßa,
THE ONLY
EQIPPED WI AUTOMAT
NEAT AND Qui
Jelephone 3()4。
 
 
 
 
 

PRESS IN THE EAST
TH THE LATEST HC MACHINES.
CK JOBS ASSUREO.
Central Road, ticaloa.
エ

Page 3
கட்டிட வேலைகளுக்குப் பொருத்த
ஒரு பொறு
விஷயமறிந்தவர்கள் எங்
கட்டிட வேலைகளுக்குத் தேவையான
ஒரே விலையில் நீங்கள் குறிய்
நீண்டகாலமாக ந
ஒரே வி க. வே. சிதம்பரப்
37, LI IT fi GI JITI
“山而沉”山而前施 அஸ்பெஸ்டாஸ் கூரைத் தகடுகள், சீலிங் தகடுகள், காங்கேசன் சிமெந்து, இரும்பு உருக்குக் கூட்டுத்தாபனத்தின் தயாரிப்புகள், இரும்பு வலைகள், நெளிவு கூரைத்தகடுகள், கூட்டுறவு மொத்த ஸ்தா பனத்தின் கட்டிட விற்பனே பொருட்கள், அறுவை மரங்கள் இயந்திர வாளால் அறுவை
செய்த சலாகைகள், !
பீடிங் மோல்டிங்,
இ6ை
எம்முடன் தொ
| K. V. SITHAMPA
BUILDING & ENGIN Dealers in B
37, BAR ROAD Stores: 79, 136, 140 & 142 Bar R
 
 
 

மான பொருட்களைத் தேர்ந்தெடுப்பது
|ப்பான பணி
களையே நாடிவருகிருர்கள்.
கலவிதமான பொருட்களையும் நியாயமான பிட்ட இடங்களில் விநியோகித்து, ற்பெயரை ஈட்டியுள்ள
ஸ்தாபனம்
பிள்ளை அன்ட் சன்ஸ்
| - DL Léi50IIIIII.
*ELEPHANT BRAND’
Asbestos, Masconite Corrugated Sheets, Coloured Ceiling Sheets, Kankesan Cement, Steel Corporation's Products, B. R. C. Galvanised Corrugated Roofing Sheets, Dealers for C. W. E. Hardware Department, Sawn Timbers, Reepers Beading Molding Manufactured by our own Machine shop. Other Building Materials.
களுக்கு டர்பு கொள்ளுங்கள்.
RAPLLA 8 SONS
ERING CONTRACTORS. (ilding Materials.
— BATTICALOA.
ad, Batticaloa.

Page 4
உபத்திரவம் தரும் மூட்
/ീ/
* နို့ရွိေ {
இவற்றை , a. J 65T LI
سے قہقے
முக்கியமான எல்லா மருந்துக் தயாரிப்பா
9ÜJIâ)6) IF 6ÖTL6Nofah) 196ÖT 72, பாபர் வீதி, !
உத்தரவாதமுள்ள த
FGT5 T 2.
நம்பிக்கை
நாணயம்
உத்த
இவையே எங்க
இன்றே விஜயம்
சண்முக ஐ
35, பிரதான வி
 
 
 
 
 
 
 
 
 
 
 

டைப்பூச்சி, எலிகள்
erی ஒழிப்பதற்கு
ܗ
●
அப்துல்லா இன்டஸ் 1 ܚܝ
ேேலுக்கிண்ட்.கொழும்பு டி
கடைகளிலும்கிேடைக்கும் at rig, 6t:
ĈI GLIĤILIf I T 35 año LBg)ILIöJnf கொழும்பு - 13.
ங்க நகைகளுக்கு "QJ6)G)Ťaň)
ரவாதம் ள் மூலதனம்
GEFÜLL JIŘ66îT
"வல்லர்ஸ்
தி, கல்முனை.

Page 5
சிழக்கிழங்கையிலேழே புகழ் பெ.
- மதியூஸ்
மரத்தளபாடங்கள் குறிப்பிட்ட நேரத்தில் உத்தரவ அருணு பே
அழகும் உறுதியுமு தளபாடங்கள் எ
விபரங்களுக்கு:-
Djų,6ñ TÍ இல, 2. வ
9|(56) 6LIÍ
மதியூஸ் ருேட்
bIGITüÎL (MOSQUIT 616ύ (RAT) .
இவற்றை ஒழித்தால் நீங்கள் களிடம் கிடைக்குல் வீட்டுப்பூச்சிக் கொ உபயோகியுங்கள்.
உங்கள் தோட்டத்தில், முற். மரம் மற்றும் பயிர்களுக்கு சிறிய கோழி, ஆடு, மாடு, உணவு (LIVES உபகரணங்கள், விவசாய இரசாழன களுக்கு வேண்டிய பல பொருள்களும்
>
உங்களுக்குத் தேவையான ( செய்துக் கொள்ளுங்கள்.
ITLD 3006) 34. பஜார் வீதி, மட்டக்களப்பு தொலைபேசி இல 332
திருமலை Branch : Trinco
 
 
 
 
 

ற்ற மரக்காலையும் தளபாட நிலையமும்
fம்பர் டிப்போ
மற்றும் அரிவை மரங்கள் ாதத்துடன் செய்து கொடுக்கப்படும்
ர்ணிச்சர் லஸ்
ள்ள நவீன போஸ்தர் ப்போதும் கிடைக்கும்
ÖLIŤ IQÍNG LITT ாவிக்கரை வீதி, க்களப்பு.
"6]]fögÎ IJ6)ộü)
- மட்டக்களப்பு.
D) (UpŬIGÜL , ĝi ĴA (BUG) F, G5 TJ (FLY)
ஆரோக்கியமாக வாழலாம். அதற்கு எங் b6gat (HOUSEHOLDINSECTICIDES)
றத்தில், வளவில் வளரும் செடி கொடி НајзL Lj Gv Lug 26 такођLћ (FERTILISERS) TOCK FOOD) LIT53 Tig6ir 69a13 Tu பகள் ஸ்பிறேயர், டஸ்டர் மற்றும் பண்ணை
உண்டு.
கோழிக் குஞ்சுகளுக்கு எங்களிடம் பதிவு
TRAIRIMI THICOUSTE
34, Bazaar Street. Batticaloa. Telephone No. 332. வீதி, ஒட்டமாவடி, Road, Oddamavadi.

Page 6
PFG) ( Tór GIG
நாடெங்கும் தெரிந்த பெயர்! நயமான சேவைப் பெயர்!
* மின்சார இணைப்புகள் * ஒலி * மின்சார திருத்தவேலைகள்
* ஒலிபெருக்கி வாடை
பொதுக்கூட்டமா? நாடகமேை புதுமனை புகுதலா? பரிசளிப்பு விழ எ துவ T (
கண்ணியமான சேவைக்கும்,
எங்களே ந
EASTERN EL
ENGINEERS & C
83/A. Trinco Roa (Prop:- J. A. Nagarajah 9.
எந்தவிதமான வைபவம்
|6ର)$ଐର୍ଗ।
பார்வைக்கும், பாவனைக்கு
சிறந்தவை. தேர்ச்சி பெற்ற சிற்பிகளால் செ
நகைகள் பவுண்தங்க M. A. S. நி
21 பிரதான வீதி,
 
 
 
 
 

Difficial)
நம்பிக்கை நிறைந்த பெயர் நல்லவர்கள் நாடும் பெயர்!
ஒளி அமைப்புகள்
பட்டரி சார்ஜிங்
L LIFT 2 திருமண வைபவமா? ?r? umrli gFTIT Ża) GOOGILI JGJL DITחDFrou
ணு லும்
கணிசமான சார்ஜுக்கும்
டுங்கள்
ECTRICALS
ONTRACTORS
d, Batticaloa. Dias Lane, Batticaloa.)
மானுலும் நீங்கள் அழகு ராணியாகத்
திகழவேண்டுமென்ருல், இன்றே
M. A. S. 560-552T
அணியுங்கள்.
ய்யப்பட்ட, உத்தரவாதமுள்ள M. A. S. நகைகளே!
) h IDT 6sa)
மட்டக்களப்பு.

Page 7
figirgi
ஈழத்துர விசும் டு
கதைகள் கருத்துகளுக்கு அ6
 
 

தில் உண்மையொளி யுண்டாயின் லே ஒளியுண்டாகும்-பாரதியார்.
பெப்ரவரி, 1970 Dadi: 2
மகரந்தம்
பக்கம்
* பெருமை.இரா. சரசுவதி . 13
Tடம். செங்கை ஆழியான் . 14
பூ.வ. அ. இராசரெத்தினம் . 19
கள் பாரமா?.அருள் சுப்பிரமணியம் . 24
ட்டின் புதியகதை.செ. யோகநாதன் . 32
மஹாகவி . 12 bலா இறந்தகாலம் எம். ஏ. நுஃமான் . 42
-●●● ****** ●●●*-சர்வானந்தன் . 41 கடலினிலே. கருணை யோகன் . 44 பாடாமல். செ. குணரெத்தினம் . 47 எழுந்த மலரே.வே, ஐயாத்துரை . 23
ற்காகப் போராடுக.பி. மரியதாஸ் . 43 ப் பிடித்தது.மு, ஹ. சேகு இஸ்ஸபதின் . 30
வளியீட்டுவிழா .மனி . 8
T AtCtLLtStAAS 8
9.
1. 1 محم த்தினங்கள் . 。。。。45 ;56 sp60.....................................o es se o es
பாவும் கற்பனை, கட்டுரை கவிதைகளில் உள்ள வற்றின் படைப்பாளிகளே உரிமையாளர்.
-ஆசிரியர்.
琴
夔

Page 8
'Di' all
UTரம்பரியக் கலைகளின் இருப்பிடமான மட்டுநகர் மண்ணில் புதிய இ லக் கி ய ஏடான 'மலர்' மலர்கிறது என்ற செய்தி வெளிவந்த நாளிலிருந்து, மக்கள் அந்த நிகழ்ச்சியை மிக ஆவ லோ டு எதிர்பார்த் திருந்தனர். எங்கும் 'மலர்' என்பதே பேச்சு. மட்டுநகர் மாதா விழாக்கோலம் பூணுவதுபோல் ஒரு பிரமை.
மக்கள் இவவளவு ஆர்வத்தோடு எதிர் நோக்கிய ஒரு விழாவை இருமுறை ஒத்திப் போடவேண்டிய துர் ப் பா க் கி ய த் தை இயற்கை ஏற்படுத்திவிட்டது. ஆம்; 1970ம் ஆண்டு தை மாதம் 3ம் திகதி "மலர்' வெளியீட்டு விழா நடைபெறவேண்டுமெ னத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனல் அந்த நாளில் மட்டுநகர் மாரிகால வெள்ளத்தில் மூழ்கிக்கொண்டிருந்தது. எ ன வே விழா தை மாதம் 12ம் திகதிக்கு ஒத்திப்போடப் LIL Ligi).
வெள்ளம் வடிந்து, க தி ர வ ன் ஒளி படர்ந்து மகிழ்ச்சி நிரம்பிய ஒரு சூழ்நிலை
- 'மலர் வெளியீடு
 
 

fuŝiŭi (8 விழா
எங்கும் நிலவியிருந்தது. ஆணுல் திடீரென்று 12ம் திகதி காலை முதல் மாலை வரை ஓயாத பேய்மழை வி டா ம ல் கொட்டிக்கொண் டிருந்தது. வேறு வழியின்றி விழா வை மீண்டும் ஒத்திப்போடவேண்டியதாயிற்று.
24-1-70ல் விழா நடந்தது.
மக்கள் இத்தனை நாள் பொறுமையுடன் காத்திருந்ததற்கும், 'மலர்' வெளிவருவது தாமதித்ததற்கும் பிரதி செய்யும் வரையில் விழா அமைந்திருந்தது. தொடர்ந்த மழை யினல் மட்டுநகர் மண்ணைக் கவ்வியிருந்த மூட்டம் மறைந்து, பகலவன் ஒளி பட்டுப் பிரகாசித்ததுபோல், மக்கள் வதனமும் இவ் விழாவில் மலர்ந்திருந்ததைக் காணமுடிந் திது.
கிழக்குப்பிராந்தியக் கல்விப்பணியாளர் திரு.வெ. சங்கரலிங்கம் மங்கலவிளக்கேற்றி விழாவைத் தொடங்கிவைக்க சங்கீதபூஷ
மான தமிழ் வாழ்த் துடன் விழா ஆரம்ப மாகியது.
வெளி யீ ட் டு விழாக் குழு வி ன் அமைப்பாளர் திரு. ஏ. ஜே. மங்களில் ராஜ், சம்பிரதாயப் படி வரவேற்புரை நிகழ்த் தி னு லும் . மணியான ஒரு கருத் தைத் தன் உரையி (867) Ga)յ6իա:Պլ է որri . ,
ஈழநாடு சுதந்திரம் அடைந்த பின்னர், எமது சுயதேவையை நாமே பூர்த்திசெய்ய வேண்டும் என்ற லட் சியக்குரல் உணவுத் துறை முதல் கைத் தொழில்துறை வரை

Page 9
ஒலித்துக் கொண்டிருக்கிறது. அந்த வகை யில் வானெலிப் ப்ெட்டியைக்கூட் இன்று நாமே சுயமாகச் செய்யக்கூடிய நிலையில் இருக்கிறுேம். ஆ ஞ ல் இலக்கியத் துறை யைப் பொறுத்தமட்டில் இந்த உணர்வு நமக்கு ஏற்படாதது விசித்திரம்தான்.'
தலைமையுரை நிகழ்த்திய, மாவட்ட அரசாங்க அதிபரும் மட்டக்களப்புப் பிர தேச கலாமன்றத் த லே வருமான திரு. தேவநேசன் நேசையா அவர்கள், ஈழத்து இலக்கிய முயற்சிகளை, ஈழத்து வாசகர்கள் ஆதரிக்கவேண்டிய அவசியம்பற்றி அழுத் திக் கூறினர்.
அறிமுகஉரை நிகழ்த்தும் பொறுப்பான பணி மட்டக்களப்புத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவரும், மட்டக்களப்புப் பிரதேச கலாமன்றச் செயலாளருமான திரு. ரீ. பாக்கியநாயகம் அவர்கள் தலையில் சுமத்தப் பட்டிருந்தது. அவர் அப்பணியை மிகவும் பொருத்தமாகச் செய்தார்.
ஈழத்திலே இலக்கியப்படைப்பாளி தற் போது அனுபவிக்கவேண்டியுள்ள 9)ւfrւն பாடுகளையிட்டு மிகவும் குத்தலான நகைச் சுவையோடு பேசிய அவர், 'மலர்' முதல் ஏட்டிலிருந்து மிக முக்கியமான பகுதிகளை எடுத்து வாசித்துக்காட்டினர். இது உங் கள் பத்திரிகை. உங் களுக்காகவே இது ஆரம்பிக் கப்பட்டி ருக்கிறது. ஆணு ல் ஒன்று வாசகர்கள் விரும்புவதைக் கொ டுப்பது வியாபாரம் வாசகர்கள் எதை விரும்ப வேண்டும் என்று இ லக் கி ய கர்த்தா விரும்புகிரு
னுே அதைக் கொடுப்
سہ
பதுதான் சேவை என்ற பகு தி யை அவர் வாசித்துக்காட் டியபோது சபை கல கலப்படைந்தது.
அறிமுக உரையின் பின்னர் கெளர வ ஆசிரியர், மலர்' முதல் ஏட்டின் தலை - விழாவிற்
 
 
 

யங்கத்தை வாசித் து சஞ்சி கை யை வெளியிட்டு வைத் தார். ச ஞ் சி கை யின் முதல் பிரதி யை மாநகர முதல் வர் திரு. ஜே.எல். தி ச வீ ர சிங்கம் வாங்கி விற்பனை யை ஆரம்பித்து வைத்தார்.
சிறப்பு ரை நிகழ்த்திய, பிரதம கல்வி அதி காரி ಇನಿಯಾಗಿಲ್ಲ್ಲಿ ಆಸ್ಟ್
': திரு. ஏ. ஜே. மங்களராஜ். கவி' கவிஞர் திமிலைத்துமிலன்' ஆகி யோர் ஈழத்தில் இலக்கிய சஞ்சிகை ஒன்று பெறமுடியாமல் போனதற்கான கார ணங்களை வெவ்வேறு கோணங்களில் நின்று ஆராய்ந்தனர். (இவர்களது பேச்சுக்கள் தனிக்கட்டுரைகளாக மலர்' ஏ ட் டி ல் இடம்பெறும்).
வெளியீட்டு விழாவின் இறுதியில் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
- D6
கலந்துகொண்ட பிரமுகர்கள் ட

Page 10
கொடுத்து உதவினுல் இ ~முடியும் என்பதில் சந்:ே
-變繁
“ID6Ds முதல் ஏ கிடைத்துள்ளன.
'மலர்' சஞ்சிகை பற்றியும், தரமான பை லும் தபால் மூலமும் த திருக்கிருர்கள். " மலர் கான ஆலோசனைகளையு
துள்ளார்கள்.
இவை அனைத்திற்கு
பத்திரிகைத் துறை மலரை இவ்வளவு கவ தில் நிறையச் சிரமங் அபிப்பிராயம் தெரிவித்
உண்மைதான். ஈழ ஒரு சஞ்சிகை வெளியி வேண்டிஇருக்கிறது. இ. வெளிவருவதென்ருல், நிறைய உழைப்பும் மிகு வும் இருக்கவேண்டும் தெரிந்து கொள்ளலாம்.
ஆணுல் நாம் அ.ை பஈடுகளையும் பற்றி ஒப்பு அது அவசியமும் இல்லை. மலர்' சத்தியமான டும் வாசகர்கள் புரிந்து
நிறைய எண்ணங்க எல்லாவற்றையும் உட வில் இல மலரி' ன் வ நிறைவேற்ற முடியும் ஈ ழ த் து வாசகTகளு
ஆண்
______________ که
 
 
 
 
 
 
 
 
 
 

பின் கவர்ச்சியான அமைப்புப் டப்புகள் பற்றியும், பலர் நேரி ங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித் மேலும் வளர்ச்சியுறுவதற் ம் பலர் அன்புடன் தெரிவித்
ம் எம் உளம் நிறைந்த நன்றி. D யில் அனுபவப்பட்டவர்கள், ர்ச்சியாக வெளிக் கொணர்ந்த கள் ஏற்பட்டிருக்குமே என்று தார்கள். மத்தில் சாதாரண அமைப்பில் டுவதற்கே நிறையச் சிரமப்பட ந்தனை சிறப்புடன் ஒரு சஞ்சிகை நிச் ச யம் அதன் பின்னுல் ந்த சிரமழும், பெருத்த செல என்பதைச் சொல்லாமலே
டந்த இன்னல்களையும் இடர்ப்
ாரி வைப்பதில் அர்த்தமில்லை. ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு பணி ஆற்றும் என்பதை மட்
கொண்டால் போதுமானது.
ள் இருக்கின்றன. ஆனுல் அவை எடியாகச் செயல்படுத்த முடிய ளர்ச்சிப் பாதையில் அவற்றை என்ற நம்பிக்கை இருக்கிறது. ம், எழுத்தாளர்களும் தோள் ப்பணியைச் சிறப்பாகச் செய்ய
கம் என்ன ?

Page 11
釜
உேள்ளத்தில் உண்ை வாக்கினிலே ஒளி உன்
s
செடி autno
alElsää
—
தமிழகத்திலிருந்து இலங்கை க்கு வரும் சஞ்சிகைகளையும் நூல்களையும் தடை செய்ய வேண்டும் என்ற ஒரு குரல் சமீப காலமாக ஈழத்து இலக்கிய உலகில் பரவ லாக ஒலிக்கிறது.
தமிழகத்திலிருந்து இறக்குமதியாகும் சஞ்சிகைகளையும் நூல்களையும் தடைசெய்து விட்டால், ஈழத்தில் சஞ்சிகைகளும் நூல் களும் பெருகிவிடும் என்று எதிர்பார்ப்பது விவேகமானதல்ல. அப்படிச் செய்வது பிரச் சினையைத் தீர்க்கவும் தீர்க்காது.
உண்மையில், ஈழத்துப் படைப்புகளை ஆதரிக்கவேண்டும் - ஈழத்து இலக்கியத்தை வளர்க்கவேண்டும் என்ற தேசிய உணர்ச்சி -யையும், அபிமானத்தையும் ஈழத்து இலக் கிய அன்பர்கள் மத்தியில் உருவாக்குவது ஒ ன் று தா ன் இப் பிரச்சினையைத் தீர்க் «Մուգ պմ:
சஞ்சிகைகள் ஒரு புறம் இருக்கட்டும். நூல்களை எடுத்துக்கொள்வோம்.
ஈழத்தில் இன்று நூல்கள் வெளியிட முடியாமலும், வெளியிடும் நூல்களை விற் பனை செய்ய முடியாமலும் இருப்பதற்குக் காரணம் என்ன ? ஈழத்திலுள்ளவர்களே அவற்றை ஆதரிக்காமல் இருப்பதுதான். இந்த நிலையை முதலில் மாற்ற வேண்டும்.
இதற்கு என்ன வழிவகைகளை மேற்
காள்ளலாம் ?
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மயொளி யுண்டாயின் ண்டாகும்-பாரதியார்.
f 1970一 uno Goff : 2
க்கு வழி
ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு உதவும் பணியில் பெரும் பங்கு இந்த நாட்டின் படித்தவர்கள் மேல் சார்ந்துள்ளது.
பாடசாலை ஆசிரியர்களும், அலுவலகத் தில் பணிபுரியும் அன்பர்களும், கலை கலாச் சார மன்ற அங்கத்தவர்களும், ஈழத்தில் வெளியாகும் தமிழ் நூல்கள் ஒவ்வொன்றி லும் ஒவ்வொரு பிரதி கட்டாயமாக வாங்கு வதென்ற ஒரு பிரதிக்கினை எடுத்துக்கொள்ள வேண்டும். குறைந்த பட்சம் மாதம் பத்து ரூபாயாவது இதற்கு ஒதுக்க வேண்டும். குப் பைப் பத்திரிகைகளுக்கு மாதாமாதம் செல விடும் பணத்தை இ த ற்கு ஒதுக்கினுல், காலக்கிரமத்தில் நிலையான ஒரு நூல் நிலை யத்தையே வீட்டில் உண்டாக்கி விடலாம் அல்லவா ?
ஈழத்தில் பெருந்தொகையான தமிழ்ப் பாடசாலைகளும் உள்ளூராட்சி ம ன் ற ங் களும் உள்ளன. இவை ஒவ்வொன்றும் தத் தம் நூல் நிலையங்களுக்கு ஈழத்து நூல்களில் ஒவ்வொரு பிரதி கட்டாயமாக வாங் வைக்க வேண்டும். அந்த வகையில் ஒரு சில ஆயிரம் பிரதிகள் விநியோகமாக முடியும்.
பாடசாலைப் பரிசளிப்பு விழாக்களில் ஆண்டுதோறும் கணக்கற்ற நூல்கள் விநி யோகமாகின்றன. இவற்றில் குறைந்த பட் சம் ஐம்பது சதவிகிதமாவது ஈழத்து நூல் களாக இருந்தாலும் ஆயிரக்கணக்கான

Page 12
O
நூல்கள் ஆண்டுதோறும் விற் பனை யாக முடியுமே ?
சில வர்த்தக ஸ்தாபனங்களும், பத்திரி கைகளும் அவ்வப்போது பல்வேறு வகை யான போட்டிகளை நடத்தி ஆயிரக்கணக் கான ரூபாய்களைப் பரிசில்களாக வழங்கு கின்றன. இப்பரிசுத் தொகையில் ஒரு மிகச் சிறு பங்கை ஈழத்து நூல்களக வழங்கி ணுல். ? அந்த வகையில் ஒரு சில நூறு பிர திகள் விநியோகமாகமுடியும் அல்லவா ?
அவ்வளவு ஏன் ? ஈழத் தி ல் வளரும் எழுத்தாளர்களும், கவிஞர்களும், நாடகா சிரியர்களுமாகக் குறைந்த பட்சம் ஆயிரம் பேர் தேறமாட்டார்களா ? இவர்கள் ஒவ் வொருவரும், ஒவ்வொரு பிரதி கட்டாய மாக வாங்குவதாக இருந்தாலும் ஈழத்தில் வெளியாகும் நூல்களில் கணிசமான அளவு பிரதிகள் விற்பனையாகிவிடுமே.
பிறந்த நாள் பரிசு, திருமணப் பரிசு, பொங்கல் பரிசு, முதலிய பரிசு வகையருக் களில், ஒரு கணிசமான பகுதியை ஈழத்து நூல்களுக்கு ஒதுக்குவதன் மூலம், மேலும் சில பிரதிகளைச் செலவாக்க முடியும். இப்ப டியே ஆராய்ந்துகொண்டுபோனுல், புத்தக விநியோகத்துக்கான புதுவழிகள் மேலும் |ւյ6Խւնւյւ6)rrԼԻ.
ஆக புத்தகம் வெளி யா ன வுடன் குறைந்த பட்சம் ஒரு 3000 பிரதிகளாவது
ஆறுதல் த
பாரதத்தில் சிறந்த நூலுக்கு ஒரு லட்ச மற்றும் ஜனதிபதி பரிசு, சாகி த் தி ய அகட வாயூருத ஈழத்து எழுத்தாளர்கள் இருக்கமும் இருக்கமுடியாதா என்று ஆதங்கப்பட்டவர் அே தல் தரும் வகையில் சமீபத்தில் பத்திரிகைகளில் யும் கலேயையும் வளர்ப்பதற்காக இலங்கை = பரிசளிக்கப்போகிறது என்பதுதான் அச்செய்தி. பரிசு கால் லட்சம் வழங்கப்படுமாம். இதுத6 முதலிய பத்து இலக்கிய சிருஷ்டிகளுக்கும், த ஐந்து இலக்கிய சிருஷ்டிகளுக்கும் விசேட பரிசுக பரிசுக்குரிய இலக்கிய சிருஷ்டிகளேத் தொ பத்துப்பேர் கொண்ட ஒரு சலபயை நியமித்தி தமிழில் வழங்குவதற்காக ஏற்கனவே அமைந்து போன்றவற்றின் தெரிவுகள்பற்றி இலக்கிய வ சதா கேட்டவண்ணமிருக்கின்றன.
அப்படியான முணுமுணுப்புகள் இந்த இ லுள்ள தமிழ் உறுப்பினர்கள் பொறுப்புணர்ச் Լյոtré66(07ւb.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விநியோகமாக முடியும் என்ற உத்தரவாதம் இருந்தால் ஈழத்தில் எந்த எழுத்தாளனும் துணிந்து புத்தகங்களை வெளியிட முன்வரு வான். ஈழத்து எழுத்தாளர்களின் நூல்களை வெளியிடுவதற்கு வெளியீட்டகங்களும் போட்டி போட்டுக்கொண்டு முன்வரும். இந்த உற்சாகம் ஒன்றே எழுத்தாளனின் படைப்பாற்றலைத் தூண்டிவிடவும், பெரு மளவில் புதிய படைப்புகளை உருவாக்கவும் வழிகோலும்.
இது ஒன்றும் நடக்கமுடியாத கற்பனைக் கனவு அல்ல. இன்று சிங்களத்திலும், மலே யாளத்திலும் பெருமளவில் நூல்கள் பெருகி, அந்த மொழி இலக்கியங்கள் பெரும் வள மும், வளர்ச்சியும் பெற்றிருப்பதற்கு முக் கிய காரணமே இந்தத் தேசிய உணர்வு தான்.
இதைச் செய்ய முடியாத நாம் ஈழத்து இலக்கிய வளர்ச்சி பற்றி வரட்டுக் கூச்சல் போடுவதும், வெளிநாட்டு நூ ல் க ளே த் தடை செய்யுங்கள் என்று கதாநாயக வேஷம் போடுவதும் அர்த்தமற்ற செயல்க ளாகும். நம் நாட்டு நூல்களே நாம் ஆதரிக்க மு ன் வந்தால் வெளிநாட்டு நூல்களைத் தடைசெய்க என்ற கூச்சல் இல்லாமலே காரியம் ஆகிவிடும் அல்லவா?
-ஆசிரியர்.
நம் செய்தி
ரூபா பரிசு கொடுக்கும் பாரதீய ஞானபீடம், மி பரிசு என்றெல்லாம் கேள்விப்படும்போது டியாது. இப்படியான திட்டங்கள் ஈழத்திலும் நகர். இப்படி அங்கலாய்த்தவர்களுக்கு, ஆறு ஒரு செய்தி வந்திருக்கிறது. இலக்கியத்தை அரசாங்கம் ஆண்டுதோறும் ஒரு லட்ச ரூபா அதில் சிறந்த இலக்கிய சிருஷ்டிக்கு பிரதமர் பிர சிங்களத்தில் சிறுகதை, நாவல், நாடகம் மிழில் நாவல், சிறுகதை, கவிதை முதலிய ளும் வழங்கப்படவிருக்கின்றன.
ரிவு செய்வதற்காக, கல்வி கலாச்சார இலாகா நக்கிறது. இப்படியான இலக்கியப் பரிசுகளைத் ள்ள சாகித்திய மண்டலம், க லே க் கழக ம் ட்டாரத்திலே பரவலான முணுமுணுப்புக்கள்
லக்கியத் தெரிவிலும் கேட்காதவாறு, சபையி சியுடன் கடமையாற்றுவார்கள் என்று எதிர்
|-
۔۔۔۔۔

Page 13
ரீங்காரம்
வாழு மிலக்கியத்தின் கீழைத் தமிழ்மணந்தா துன்ன மலரொன்று ே தன்னை தமிழுக் கணி.
தங்களின் எழில்மிகு மலர் ஈழத்து இலக்கிய ரசிகர்களுக்குப் புதி வதாக 'மலர்' முதல் இதழ் அை
மலரை நான் விரும்பிப் பா அமைப்பு, தோற்றம், எழுத்து, வில் மற்றப் பத்திரிகைகளில் நான் தே6ை சினிமா, அரசியல், அக்கப்போர் இத் ஒதுக்கப்பட்டிருப்பதே
o)gr6)-س மலர்' கண்டேன். மகிழ்வுற்ே மல்ல பேராதரவு தரவேண்டியதும்கூ மையான ஓர் அமைப்பில் 'மலர்'
ஈழத்தில், அதுவும் கிழக்கு மா எழ, அதன் விளைவாக, முழுக்க மு கமழ மலர்' மலர்ந்திருப்பது கண்
ஈழத்தில் இலக்கிய முயற்சிகளு மலர் வெளிவருவது வரவேற்கத்தக் யாகக் கூறுவர். மங்கலமாகி, இன் கொள மெல்கிப் பொழுதின் முகமல மனம் நிறைந்த மலர் மக்களால் வ நெடுந்தூரத்திலுள்ள வண்டுகளையும் வண்ண மலரை மக்கள் நாடுவது இ
அத்தகைய மணமும், வண்ண முடைய மலர், கலேயின் இருப்பிடம
கின்றது. மணம் வீசும் நன்மலர் நாட நல்லறிஞரின் பல இலக்கியப் படைப் நல்ல இலக்கியப் பணிக்கு வழிகா
என்றும் பொலிவுடன் இலக்கிய மன
 
 
 
 

மாசிகையா யிழத்தின் ன் தேசத்தில் - நாளும், தான்றிக் கமழ்கின்ற
-அல்ஹாஜ் ஆ. மு. ஷரிபுத்தீன், கன்டு மட்டிலா மகிழ்ச்சியுற்றேன். பதோர் இலக்கியப் பாதையைக் காட்டு
மந்துள்ளது.
-அ. க. ஜூனே தீன், வெலிமடை,
9
ராட்டுவதற்கான கா ர ன ம், அதன் ஐயங்கள் முதலியவற்றின் சிறப்போடு, பயற்றவை என்று வெறுத்து ஒதுக்கும், தியாதி. யாவும் ஒட்டுமொத்தமாக
வி. செளமினி பஞ்சாட்சர சர்மா, கோப்பாய். றேன். பாராட்டத்தக்க முயற்சி மட்டு ட ஈழத்துப் பத்திரிகை உலகில் புது அமைந்துள்ளது.
-ஐ எம். தாஹிர் - கிண்ணியா. காணத்தில், இலக்கிய தாகம் விஞ்சி ழுக்க இலக்கியச் சுவையுடன் மணம் டு மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.
-செல்வி, நோ. இராசம்மா. கல்முனே.
க்குத் துணைசெய்யும் பெருநோக்குடன் கது. மலரை நல்லாசிரியனுக்கு உவமை றியமையாது, யாவரும் மகிழ்ந்து மேற் ர்வுடையது பூவே' என்பது நன்னூல். ரவேற்கப்படுகின்றது; அதன் மணம் தன்னிடம் ஈர்க்கின்றது மணமுள்ள u JGJ GBL u .
மும், மகிழ்ச்சிக்கு உள்ளதொரு நிலையு ாகிய மட்டக்களப்பிலிருந்து வெளிவரு டு மக்களுக்கு நலம் காட்டுவதுபோல, புக்களைக்கொண்ட இச்சொல் மலரும் ட்டுமென்ற துணிவுடையோம். மலர் ாம் வீச எமது வாழ்த்துக்கள்.
கலாநிதி சு. வித்தியானந்தன்.

Page 14
கருநாடக இசை அமைத்து இராக மாலிகையாகப் பாடுதற்காக எழுதப்பட்டது.
 
 

விை DI
'மஹாகவி'
கண்மணியே நின்னுடைய கருத்துள்ள விழிவீச்சுக் கிடைக்கப்பெற்றேன். பெண்ணழகு முழுதும் ஒரே கணப்பொழுதிற் தாக்கியது: பிய்ந்துபோனேன். உண்ணுதற்குமனமில்லை; உறங்குதற்கு வழியில்லை; உலகின்றேன் நான். எண்ணமென்ன? எவ்வேளை எவ்விடத்தே?
இங்ஙனம் ஓர் சுழலும் தேனி'
" Giff
ண் ணவரே, தங்களது விளங்காத கடிதத்தை விளங்கிக்கொண்டேன். மண்ணிலத்தே என் கால்கள் படியவில்லை; மிதக்கின்றேன் வானமீது - வெண்ணிலவு வரும் வேளே பின்வளவு வேம்பின்கீழ் வேலிஒரம்1. -
திண்ணம், உங்கள் திறன் அனைத்தும் தெரியட்டும் -இங்ஙனம் ஒர் மலர்ந்த முல்லை."
கவிஞர் மஹாகவி ஈழத்துக் கவிதை உலகில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியவர். புகழ் பெற்ற குறும்பா, 'கண்மணியாள் காதை முதலி யன அச்சில் வெளிவந்துள்ள இவரது கவிதை நூல்கள். கோடை என்ற இவரது கவிதை நாடகம் பலதடவை மேடையேறி நிலைத்த புகழை ஈட்டியுள்ளது. புதுமை நோக்குக் கொண்டவர். உயர்ந்த பதவியில் இருந்தா லும் பழகுவதற்கு இனியவர். பண்பாளர்
-ஆசிரியர்,

Page 15
உருவகக் கதை അത്ത=
திருமண விழா வீடு. ஒரே அமர்க்களம்: இTரம் திரைப்படப் பாட்ல்கள் ஒலி பெருக் இபில் அலறிக்கொண்டிருந்தன. ஆனல் இரு உள்ளங்கள் மட்டும் இவற்றைப் பொருட்படுத் அTது வாழ்வைப்பற்றி வாதிட்டுக்கொண்டிருந் தன. ஆம்! அது ஒர் மண்பானை, மண்ணெ டுத்துக் குடங்கள் செய்வீரே! என்ற பாரதி | լgl657 வாக்கிற்கினங்க குயவனின் கைவண்ணத் தால் அழகுற வனயப்பெற்றிருந்த, அந்தப் பான தன் அழகிய செவ்விளி மேனியை 9805 முறை கண்ணுேட்டமிட்டது. அதற்கு ஆனந்தம் தாங்குவில்லை. தன்னை உருவாக்கிய தந்தையான குயவனை வாழ்த்தி வணங்கியது. 'மண்ணையும் படைத்து, அதில் ம ணி த னை யும் இறைவன் படைத்தது இதற்குத்தானே?' என்று மண் பானே சிந்தித்த
எங்கிருந்தோ வந்த நகைப்பொலி அதன் இந்
தனையைச் சிதறடித்தது. ம்ே. யாரது?' என்று சற்று அதட்டலாதிக் கேட்டது மண்பான | . 'ஒகோ! நேற்று வந்த நீ அதட்டிக் கேட்கு மளவிற்கு வந்துவிட்டாயா? என்று கேட்டது அக்குரல்.
மட்பாண்டம் மென்னகை பூத்தது. இதென் னடா, பெரும் வம்பாயிருக்கிறது. தன்னை யார் என்று கூருமலேயே என்னுேடு சண்டைக்கு வரு வது யார்?' என்றது மண்பான
என்ன, என்னைத் தெரியவில்லையா உனக்கு? உன் பெருமை உன் கண்களை மறைத்துவிட்டது போலும் இங்கே பார் என்னழகைப் பார்' என்று இறுமாப்புடன் இயம்பியது அக்குரல்.
குரல் வந்த திக்கை நோக்கியது மட்பாண்டம் ஆங்கே அழகே உருவான ஒரு வெள்ளிப்பானை மின்னிக்கொண்டிருந்தது. ஓ! நீதானு இவ்வளவு நேரமும் பேசிஞய்? உன் திடீர் ஆத்திரத்திற்குக் காரணம் என்னவோ? என்று இதமுடன் கேட் டது மட்பாண்டம்
F_ ܓ .
-
'ஏ மண் பிண்டமே! நீ இன்றிருப்பாய் நாளை
இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிடும் தன்மை படைத்த உனக்கு, இத் திருமண விழா வி ல் அளிக்கப்பட்டிருக்கும் கெளரவத்தை நினைக் கையில் என் நெஞ்ச முறும் வேதனையைச் சொல்ல வார்த்தை
கள் இல்லை”
மலையகப் பெண் எழுத்த றிலும் அவ்வப்போது, கதை கட் நோக்கு, சத்திய வேட்கை இத்த சிறந்த பேச்சாளரும் பாடசாலை டக்கம் மிகுந்தவர்.
 
 
 
 

”崖3
செல்வி இரா சரசுவதி.
மட்பாண்டம் தனக்குள் சிரித்துக்கொண்டது. சகோதரி உன் உள்ளம் இன்னும் பண்படவில்லை. மனிதருக்குள்தான் ஆற்ருமை, வேதனை, மனக் குமுறல் எல்லாம் அமைந்துள்ளன என்ருல், எம் மிடமும் இருக்கத்தான் வேண்டுமா? சே கூடவே கூடாது' என்றது
*ம். உன் பெ ரு மை யின் அகம்பாவத்தில் என்னிடம் தத்துவமா பேசுகிருய்?' என்று சீறிச் சினந்தது, வெள்ளிப்பான
சோதரி நான் தத்துவம் பேசவில்லை. உண் மையைத் தான் உரைக்கிறேன். நீ வெள்ளியால் ஆக்கப்பட்டவள்; நான் மண்ணுல் ஆக்கப்பட்ட வள். மனித வாழ்விற்கு யாம் இருவருமே பயன் படுகிருேம் உண்மையான மகிழ்ச்சியும் பெருமை யும் விண் ஆரவாரத்திலில்லை. பிறர்க்கு யாம் எந்த வகையில் பயன்படுகிருேம்? என்பதில்தான் தங்கியுள்ளது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க் கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் என்பதை மறவாதே சோதரி' என்றது LD - Ls TGOG – LD.
மட்பாண்டத்தின் பேச்சைக் கேட்ட வெள்
ளிப்பான மோனத்தில் மூழ்கிவிட்டது. இவ்வாறு
இருக்கையில், நங்கையொருத்தி, பசு ப் பா லே க் கொண்டுவந்து, வெள்ளிப்பானையில் ஊற்றி மூடி
விட்டுச் சென்ருள். மண்பானே வெள்ளிப்பானையை
ஏறிட்டுப் பார்த்தது. வெள்ளிப்பான ஆற்றமை யின் செந்தணலிலிருந்து மீட்சிபெற்று மண்பானை யைப் பார்த்துக் கனிவாகச் சிரித்தது.
ாளர் இரா. சரஸ்வதி, இலங்கைப் பத்திரிகைகள் எல்லாவற் டுரை எழுதிவருகிருர் கலைநயம் மிகுந்த நடை, ஆழ்ந்த னேயும் அவர் எழுத்துக்களில் பிரதிபலிப்பதைக் காணலாம். ஆசிரியையுமான இவர் நிறைய எழுதியிருந்தாலும், தன்ன
-ஆசிரியர்,

Page 16
னெத்தின் உச்சியிலிருந்து விண்மீன் ஒன்று ஓயாமல் நடுங்கிக்கொண்டிருந்தது. ஒருகணம் ஒளி வீசுவதும், மறுகணம் அணைவதுமாக இருந்த அந் நட்சத்திரம் கண்சிமிட்டுவதாக எனக்குப் பட வில்லை; அது முதிர்ந்த வயோதிபத் தளர்ச்சியால் நடுங்குவதாக எனக்குப்பட்டது.
என்மனதின் இயக்கம் அப்படி அசைகின்ற எதனைக்கண்டாலும் தளர்ச்சியால் நடுங்குவதா கவே எனக்குப்படும். கடந்த ஐந்தாண்டுகளாகத் தான் எனக்கு இந்தப்பிரமை.
என் குழ ல் அப்படி தளர்ச்சிகளிடையே வாழ்பவன், நான் வாழ்க்கையின் நீண்டபயணத் தை முடித்துக்கொண்டு இறுதியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் கிழங்களிடையே என் வாழ்க்கை கழிகின்றது; அதுதான் என்கடமை.
வயோதியமடம் ஒன்றின் மேற்பார்வையாள ணுக என்று பொறுப்பேற்றேனே. அன்றே எனக்கு வாழ்க்கையின் தத்துவம் புரிந்து சின்னத்தன மான உலகத்தினரின் உள்ளங்களும் புரிந்தன. உடல் தளர்ந்த வயோதிபர்களும் உள்ளந்தளர்ந்த
புவியியற் சிறப்புப் பட்ட போதே கதைப்பூங்கா', "எ முதலிய நூல்களைத் தொகுத்து இதழ்களின் ஆசிரியராக இருந் நாவல்களும் இதுவரை எழுதியு போட்டிகளில் முதற்பரிசுகளைப் பயணம் போகிருள்', 'சுரு வட்டம் வெளியிட்டுள்ளது. யா இணைச் செயலாளராகவும் இரு இருந்து இலக்கியப்பணி புரிகி
 
 
 
 
 

வயோதிபர்களும் அம்மடத்தில் இறுதியை எதிர் பார்த்துப் பொழுதைக் கழித்தார்கள். அவர்களைத் தினமும் காண்கிறேன். அவர்களின் இன்ப துன்பங் களில் தினமும் பங்குகொள்கிறேன்.
வானத்தின் உச்சியிலிருந்து நடுங்கிக்கொண் டிருக்கிறதே, நட்சத்திரம் அது ஏனுே இன்று எனக்குச் சாம்பசிவத்தாத்தாவை நினைவு படுத்து கின்றது.
சாம்புத்தாத்தா எவ்வளவு இனிமையானவர். இவ்வயோதிபமடத்திற்கு அவரால் எவ்வளவு களே? சாம்புத்தாத்தா அவ்வயோதிப மடத்திற்கு வந்த வேளேயும், நான் மேற்பார்வையானனுகப் பதவி யேற்ற வேளையும் ஒருநாளே. நான் முதன்முதல் வயோதிபமடத்தில் சேர்த்த முதல் வயோதிபர் அவர்தான். அந்த நாள் இன்றும் எ ன க் கு ப் பசுமை மாருது இருக்கிறது.
மழைபெய்து ஒய்ந்திருந்த ஒரு மாலை வேளை, என் அறை வாசலின் முன் யாரோ வந்து நிற்பது போன்ற பிரமை ஏற்படவே தலைநிமிர்ந்து பார்த் தேன் ஒரு வயோதிபர் நின்றிருந்தார். -l. பால்போல வெண்மைநிறம்; உடலில் சுருக்" கங்கள் விழுந்து தளர்ந்திருந்தன. துல்லியமான வேட்டி சால்வை வழுக்கைவிழுந்த பளபளப் பானதலே. மழையில் நனைந்திருக்கிருர்போலிருக் கிறது.
தாரியான செங்கை ஆழியான் பல்கலைக்கழகத்திலிருந்த ண்ணும் மண்ணும்', 'காலத்தின் குரல்கள், யுகம்
வெளியிட்டிருக்கிருர், புவியியல்", "விவேகி' என்னும் திருக்கிருர், நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளும் ஏழு ஸ்ளார். "சுதந்திரன்', 'ஈழநாடு நடாத்திய சிறுகதைப் பெற்றிருக்கிருர். இவர் எழுதிய 'நந்திக்கடல்", "ஆச்சி ட்டுக் கைத்தொழில்' ஆகிய நூல்களை யாழ் இலக்கிய ம் இலக்கிய வட்டத்தை உருவாக்க உதவியதுடன் அதன் து பணியாற்றியிருக்கிருர், இன்று அதன் உபதலைவராக f。 -ஆசிரியர்.

Page 17
உடலில் மெதுவான நடுக்கம். வலதுகையால் தடியொன்றை இறு க ப் பற்றி ஊன்றியபடி இடதுகையால் கதவு நிலையைப்பற்றியபடி, அவர் நின்றிருந்தார். வானத்தின் உச்சியிலிருந்து நடுங் கிக்கொண்டிருக்கிறதே இந்த நட்சத்திரம். அதைப் போலத்தான் அன்று அவர் நின்றிருந்தார்.
அவர் விழிகளை என் கண்கள் சந்தித்தன
எவ்வளவு பரிதாபகரமானது!
'வாருங்கள், தாத்தா! உங்களுக்கு என்ன வேண்டும்?"
தயங்கியபடி உள்ளே நுழைந்த அவர், என் முன் இருந்த கதிரையில் அமர்ந்தார்; நிம்மதியான நெடுமூச்சு எடுத்தது. சால்வையால் தலையையும் முகத்தையும் ஒத்திக்கொண்டார்,
'ஏன்தாத்தா, அறையைவிட்டு மழைக்கை வந்தீர்கள்?"
என் கேள்வி அவருக்கு விளங்கவில்லை என் பதை உடன் நான் கண்டுகொண்டேன். நான்தான் தவருண கேள்வியைக் கேட்டுவிட்டேன். அவர் இந்த வயோதிபமடத்தில் இருப்பவர்களில் ஒருவர் என நான் தவருகக் கருதிவிட்டேன். அவர் இந்த மடத்தில் புதிதாகச்சேருவதற்காக வந்திருக்கிருர்
"என் பெயர் சாம்பசிவம், தம்பி . என்னையும் இம்மடத்தில் சேர்த்துக்கொள்ளுவீர்களா?.'
'அணு தை களு க் காகத் தா ன் இந்தமடம், தாத்தா! அனுதை என்ருல் எவரையும் சேர்த்துக் கொள்வோம். உங்களுக்குப் பிள்ளைகள் இல்லையா?”
பிள்ளைகள் இருக்கிறவர்கள் அனுதைகளாவ தில்லையா?" -
அவருடைய கேள்விக்கு என்னுல் உடனடியாகப் பதில் கூற முடியவில்லை. வயோதிபமடத்தில் இருப் பவர்கள் எல்லாரும் அனுதைகளல்லர் பிள்ளைகளா லும் உற்றராலும் புறக்கணிக்கப்பட்டு இங்கு வந்து ஒதுங்கிய சீவன்கள் இங்கு அதிகம்தான்.
வயோதிபமடம் இந்நாட்டிற்கு ஒருவகையில் அவமானம்' என்று நான்சிலவேளைகளில் நினைப்ப துண்டு பெற்றுவளர்த்து, சீராட்டிப்பாராட்டி, பாலூட்டி ஆளாக்கிய பெற்றுேரை, நன்றிமறந்து, தங்களுக்கு இடைஞ்சல் என்று கருதி, வயோதிப மடத்தில் பெரிய இடங்களின் சிபார்சுகளோடு கொண்டுவந்து தள்ளிவிடும் புண்ணியவான்களை நான் கண்டிருக்கிறேன். நாளைக்கு இவர்களுக்கு
இந்நிலைவராது என்பது என்னநிச்சயம்?
உண்மையிலேயே, எவரும் பார்ப்பதற்கு இல் லாத அனுதைக்கிழவர்கள் இங்கு இருக்கிறர்கள் தான்.
சாம்புத்தாத்தாவின் கே ள் வி யி ல் நியாயம் இருக்கவே செய்தது. அவர் தொடர்ந்தார்; அவர்
விழிகள் நீரைச் சொரிந்தன:
2 'தம்பி. உண்மையில் நான் அணுதை. எனக்கு நான்கு பிள்ளைகள் இருக்கிருர்கள். நல்ல
 
 
 
 

5
நிலேயில் இருக்கிருர்கள். அவர்களுக்கு நான் இப் போது உதவாதவன் என்னுல் எனக்குத் தேவை யானவற்றைத் தேடிக்கொன்ளவும் உடம்பில் பல மில்லை. நான் அனுதை தான்.'
பரிதாபத்துக்குரிய மனிதர்தான். இவரைப் போல எத்தனைபேர்?
உங்களை இங்கு சேர்த்துக்கொள்ளச்சட்டம் இடம் கொடுக்காதே, தாத்தா?."
அவர் சிரித்தார். "அதுக்காகத்தான் தம்பி, விதானேயிட்டையும், டி. ஆர். ஒ விட்டையுமிருந்து காகிதம் வாங்கி வந்திருக்கிறன் .'
அவ்வாருயின் அவர் அனுதைதான்.
சீம்புத்தாத்தா வயோதிபர்மடத்திற்கு வந்து ஐந்தாண்டுகள் கழிந்துவிட்டன. அவர் நேற்று வந் ததுபோலத்தான் இருக்கிறது. அவர் வந்தபிறகு இம்மடத்தில் எத்தனை மாற்றங்கள்?
மடத்தைச் சுற்றி வரண்ட கட்டாந்தரையே விரிந்துகிடந்தது. இன்று அத்தரையில் குலேகளைத் தள்ளி குட்டிகள் ஈன்று செழித்து வாழைமரங்கள் வளர்ந்திருக்கின்றன. கிணற்றங்கரையை அடுத்துக் காய்கறித்தோட்டம். எல்லாம் சாம்புத்தாத்தா வின் முயற்சிதான். சோம்பிக்கிடந்த கிழடுகள் எல்லாம் இன்று சாம்புத்தாத்தாவோடு ஏதோ தம்மாலியன்றளவு வேலை செய்கின்றன. கிடைக் கின்ற பயனில் இங்குள்ள நூற்றியிருபது கிழவர் களுக்கும் பங்குண்டு.
சாம்புத்தாத்தா அல்வயோதிபர்களின் தலை மைப்பொறுப்பை எவருமே வழங்காமல் வகித்தார். எல்லா வயோதிபர்களும் அவரின் வார்த்தைகளுக் குக்கட்டுப்படுவதை நான் கண்டிருக்கிறேன். சாம் புத்தாத்தா ஒருவகையில் அவ்வயோதிபமடத்தைப் பராமரிப்பதில் எனக்குப் பெருந்துணையாக இருந் தார் என்றே கூறவேண்டும்.
அவர் அடிக்கடி என்னேநாடி வருவார். அவர் வருகையை நானும் விரும்பினேன்.
தம்பி, நமது மடத்திற்குப் பத்திரிகைகள் ஒழுங்காக வருவதில்லை. ஒருக்காக் கவனியும் .'
கவனித்தால் உண்மை புலனுகும்; வாசிக சாலைக்குப் பொறுப்பாயுள்ளவர் தமது அறையில் பேப்பர்களைப் பூட்டிவைத்திருக்கும் மர்மம்.
'தம்பி. என்று ஒருநாள் தயங்கினர், சாம் புத்தாத்தா.
“என்ன, தாத்தா..? 'வெள்ளிக்கிழமைகளில் எங்களுக்குப் பாயா
சமும் தர ஒழுங்கு செய்துத இனம்.'

Page 18
எனக்குக் கண்கள் கலங்கின. எவ்வளவு ஆசை களைத்தான் இந்த வயோதிபர்கள் வைத்திருக் கிருர்கள்?
"செய்து தர ச் சொல் லு கிறேன் தாத்தா. வேறும் ஏதாவது தேவையென்ருல் தயங்காமல் கேளுங்கள்.”
அவ்வயோதிபமடத்தில் ஒருவித மலர்ச்சியும் மகிழ்ச்சியும் குடிகொள்ளத்தொடங்குவதை நான் அவதானித்தேன். தங்களுக்குச்சொந்தமான வீட் டில் ஒடிஆடிப் பழகுவதைப்போல அங்கு எல்லாரும் திரிந்தார்கள்.
வயோதிபமடத்து வேலைக்காரிகளுக்கும் வேலை கள் குறைந்தன. ஒரு வயோதிபருக்குச்சுகமில்லை என்ருல், மற்றவர்கள் அவரைப்பரிவோடு கவனித் தார்கள். சாம்புத்தாத்தா சாகக்கிடக்கும் வயோதி பர்களின் மலசலத்துணிகளைக் காவிச்செல்வதைப் பலதடவைகள் நான் கண்டிருக்கிறேன்.
“உங்களுக்கு ஏன் தாத்தா, இது . வேலைக்கா ரர்கள் கவனிப்பார்களே?.'
'இல்லை, தம்பி! இதிலே என்ன குறை. தாய் தேப்பனுக்குக் கடைசி காலத்திலே பிள்ளையன் செய்யவேண்டிய வேலைஇது பிள்ளைகள் இல்லாத வர்களுக்கு நான் செய்கிறேன். அவ்வேளைகளில் அவர் விழிகள் கலங்கும். எதை எண்ணிக்கலங்கு வாரோ?
நான்கு பிள்ளைகளின் தந்தை அவர் இன்று.?
சாம்புத்தாத்தாவைத்தேடி எந்தஒரு பிள்ளை யும் இதுவரை காலமும் இங்கு வந்ததை நான் காணவில்லை. ஆணுல், சாம்புத்தாத்தாவின் பிள்ளை கள் நல்லநிலையில் இருக்கிருர்கள் என்பதை நான் பலதடவை அறியநேர்ந்திருக்கிறது.
மாலைவேளைகளில் மடத்தின் மாமரநிழலில் கும்பல்கும்பலாக அமர்ந்து வயோதிபர்கள் பலதை யும் பேசிக்கொள்வார்கள் அங்கு அடிபடாத விஷயமே கிடையாது.
வாழ்ந்த வாழ்க்கை சீரழிந்து போனகதை. பிள்ளைகளின் தறுதலைத்தனம். அரசியல். எல் லாம் அவர்கள் பேச்சில் இடம்பெறும்,
*நீ உன்ரை தாய்தேப்பனை வடிவாக் கவனிச் சிருந்தால், உன்னை இண்டைக்கு உன்ரை பிள்ளை கள் கைவிட்டிருக்குமோ? .' என்பார் ஒரு கிழவர்,
"விசர்க்கதை கதைக்கிருய்? அது என்ரை விதி. அளந்த அளவு அவ்வளவுதான். நீ என்ன திறமோ?
*நான் மலடன்'
சாம்புத்தாத்தா வந்தால் அங்கு ஒருவகை அமைதிநிலவும்.
உங்களுக்கு உந்தக்கதைகளை விட்டால் வேறு பேச் இல்லை. ஏதோ, எப்படியோ இங்கை வந்திட்
இனி அதைப்பேசிக் கவலைப்பட்டு என்ன
 
 
 
 
 

பயன்?. இங்கையாவது சந்தோஷமாக இருக்கப் பாருங்கோ.' என்பார், அவர்,
"இண்டைக்கு இரவு என்னசாப்பாடு?.' என்று சாம்புத்தாத்தாவைக் கேட்பார்கள்.
* களி.’ என்பார் அவர் ஒவ்வொருநாளும் என்னவென்ன சாப்பாடு என்று அவருக்குத்தான் தெரியும்.
னெத்தின் உச்சியிலிருந்து அந்த நட்சத் திரம் இன்னமும் நடுங்கிக்கொண்டுதான் இருக்

Page 19
கிறது. கடந்த இருதினங்களாக வயோதிபமடத் தில் என்றுமேயில்லாத சோகம் குடி கொண்டு விட்டது. எல்லா வயோதிபர்களும் எதையோ பறி கொடுத்தவர்கள் போல உலவினர்கள்.
சாம்புத்தாத்தா படுத்த படுக்கையாகி விட் டார் வைத்தியர்களும் கைவிரித்து விட்டார்கள். என்னைப் பெற்ற தந்தையைப் பறிகொடுப்பது போல என்னுள்ளம் வருந்துகின்றது. வயோதிய மடத்தில் எத்தனையோபேர் இறக்கிருர்கள், என்ரு லும், சாம்புத்தாத்தாவை இழக்க மடம் தயாராக
இல்லை.
மாபெரும் தலைவர் ஒருவரை இழப்பதா? எட்டு நாட்களுக்குமுன் அவர் நல்ல ஆரோக்
கியத்தோடுதான் இருந்தார். என்னை அன்று மாலை
சந்தித்தகாட்சி மறக்கக்கூடியதா?
'தம்பி. நாளைக்கு சிவராத்திரி.”
'அதுக்கு என்ன, தாத்தா? ஏதாவது விசேஷ உணவு தேவையா?”
அவர் சிரித்தார்.
 
 
 
 

"அப்படியில்லைத் தம்பி. நாங்க நித்திரை முழிக்க விரும்புகின்ருேம்.'
'உடம்புக்கு ஒத்துவருமா, தாத்தா?”
"அதிலென்ன. வருடத்தில் ஒருநாள்தானே?"
"அதுக்கு நான் என்ன செய்யவேண்டும்?.
"இங்கு கதாப்பிரசங்கம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்துதாரும், தம்பி.”
அவருடைய வேண்டுகோள் நியாயமானதாகவே பட்டது. கதாப்பிரசங்கங்களும் பஜனைகளும் வயோ திபர்களுக்கு நிம்மதியைத் தரக்கூடியனவே. சாம் புத்தாத்தா நியாயமல்லாதவற்றை ஒருபோதும் கேட்கமாட்டார்.
ஒழுங்கு செய்து கொடுத்தேன். வயோதிபர் கள் மிகுந்த மகிழ்வோடு சிவராத்திரி விரதத்தை அனுட்டித்தார்கள்.
மறுநாள் சாம்புத்தாத்தாவை நான் கண்ட போது, அவர் சோர்ந்து காணப்பட்டார்.
'என்னதாத்தா, நித்திரைத் தூக்கக்களைப்பா?
'இல்லை, தம்பி. நேற்றுக் காதாப்பிரசங்கம் செய்தவர் கூறிய ஒரு விஷயம் மனதைக் குழப்பு கிறது.'
சாம்புத்தாத்தாவை நான் நிமிர்ந்து பார்த் தேன். அந்த முகத்தில் கருணை பொழியுமே? ஒரு வகை வைராக்கியம் எப்படிக்குடிவந்தது? அவர் தொடர்ந்தார்.
முனிவர்களும் அசுரர்களும் யாகம் செய் தார்கள். முனிவர்கள் யாககுண்டத்தில் நெய்யை யும் பாலையும் பொரியையும் அவியாக இட்டார் கள். அக்குண்டத்திலிருந்து தேவன் ஒருவன் தோன்றினன். அசுரர்கள் இரத்தத்தையும் ஊனே யும் அவியாக இட்டார்கள்! அவர்களது குண்டத் தில் இருந்து பூதம்தான் தோன்றியது.'
நான் அவரை வியப்போடு பார்த்துக்கொண் டிருந்தேன். அவர் நெற்றிவியர்வையை ஒத்திக் கொண்டு ஆவேசத்தோடு பேசினுர்:
“எங்கள் இதயமும் ஒரு யாககுண்டம்தான், தம்பி1.'
அவருக்குப் பெருமூச்சு வாங்கியது. நான் அவரை ஆசுவாசப்படுத்தினேன். உண்மைதான். இன்று நினைத்துப்பார்க்கும்போது உண்மை புலணு கத்தான் செய்கிறது. பிள்ளைகளால் நன்கு பரா மரிக்கப்படாது கைவிடப்பட்ட வயோதிபத் தந்தை தாய்களின் இதயங்கள் யாககுண்டங்கள்தாம். பிள்ளைகள் அக்குண்டத்தில் சொரிந்தஅவி தேவ ணுக நிச்சயம் உருவாகாது; பூதந்தான் தோன்
DI L0.
சாம்புத்தாத்தாவின் இதய குண்டத்திலிருந்து தேவனு, பூதமா தோன்றியது என என்னுல் நிச் சயம் கூற இயலவில்லை. முந்தநாள் சாம்புத்தாத்தா

Page 20
18
a76i, 25örL. பார்க்கவிரும்புவதாக அறிந்துபோனேன். வெட்டிச்சரிந்த வாழைமரமாக அவர் படுக்கை யில் கிடந்தார்.
'தம்பி அவர் குரல் இதய அடிவாரத் திலிருந்து எழும் ஒடுங்கிய குரலாகக் கேட்டது: "என்பிள்ளைகளை ஒருக்கா நான் பார்க்கவேணும். அறிவித்துவிடுகிருயா, தம்பி! "
நான் மறுக்கவில்லை; மறுக்கும் அ தி கா ர ம் எனக்கு இல்லை.
சாம்புத்தாத்தாவைத் தந்தையாகப் பெற்ற அப்புண்ணியவான்களை நான் ஒருதடவை காணத் தான்வேண்டும்; இனிய ஒரு தந்தையை இறுதி காலத்தில் பராமரிக்கக் கொடுத்துவைக்காத அந் குத் துரதிர்ஷ்டசாலிகளை நான் ஒருதடவை காணத் தான் வேண்டும்.
நான்கு பேருக்கும் நான் செய்தி அனுப்பி (36უr 6ზ7 . இரண்டுநாட்களுக்குப்பின் இருவர் ஒடோடி வந்தார்கள்.
சொந்தக் கார்; பளபளப்பான ஆடை நல்ல வசதியோடுதான் அவர்கள் இருந்தார்கள்.
அவர்கள் முதலில் என்னிடம் வந்து என்னைச் சந்தித்தார்கள்.
"சாம்பசிவம் என்பவர் பிள்ளைகள் நாங்கள்.'
"ஓ அப்படியா? உட்காருங்கள். அவர்களைக் காணும்போது என் இதயம் கடலாகக் குமுறியது.
"அவருக்கு எப்படி?..'
"கடுமைதான் இன்றையோ நாளே யோ..?'
"அப்படியா? பிணத்தை எங்களிட்டை தந் திடுங்கோ அவருடைய இறுதியாத்திரையைப் பெரிசாச் செய்ய வேணும் கட்டாயம் செய்ய வேணும் எங்க கடமை அது..?
கடமைக்கு எவ்வளவு அற்புதமாக இந்தப் பிள்ளைகள் விளக்கம் தருகிறர்கள்?
'ஏன், இப்பவே கொண்டு போங்களேன்
"சீச்சி உசிரோடை வேண்டாம் உமக்குத் தெரியாததே? கிழடுகளைப் பராமரிப்பது மிகக் கஷ் டம். சீவன் போனவுடன் அறிவியுங்கோ. இப்ப அவரை ஒருக்காப் பார்க்கலாமே? ?
என்னுல் பொறுக்கமுடியவில்லை.
'இப்ப என்னத்துக்கு? சீவன் போனவுடன் பாருங்கோ
அவர்கள் என்னை வெறுப்போடு பார்த்தார் கள். என் குரலிலிருந்த வெறுப்பையும், அதனுல் அவர்களுக்கு ஏற்பட்ட கோபத்தையும் உணர்ந்து கொண்டேன்
எங்கடை பாதரைப் பார்க்க நீர் தடை செய்ய முடியாது . .
'இவ்வளவு காலமும் நீங்களே பாத்தனிங் கள்?. சும்மா, போங்கள் . நாளைக்கு உங்கடை
 
 
 
 
 
 
 
 
 
 

பிள்ளைகள் உங்களை இங்கை கொண்டு வந்து தள்ளி விடாமலா போகப்போகுதுகள் . செத்த பிறகு அறிவிக்கிறேன், விரும்பினல் வந்து பிணத்தைக் கொண்டுபோய் ஊருக்குக் காட்டுங்கள். '
அவர்கள் போனபிறகு, நான் சற்றுக் கடுமை யாக நடந்து கொண்டதாக உணர்ந்தேன். நான் வயோதிபமட மேற்பார்வையாளன். உணர்ச்சி வசப்பட எனக்கு இவ்விஷயத்தில் உரிமையில்லை.
6 Teorija நட்சத்திரம் ஒயாமல் நடுங்கிக் கொண்டுதான் இருக்கின்றது. எனக்குத் தூக்கம் வர மறுக்கிறது. சாம்புத்தாத்தா இப்போது எப்படி இருக்கிருரோ?
அறையை விட்டு வெளியேவந்தேன். என் கால் கள் அவரிருந்த அறையை நோக்கி நடந்தன.
மங்கலான விளக்கு ஒளியில் சாம்புத்தாத்தா வாங்கில் கிடக்கிருர், அவரைச் சுற்றி அவரது தோழர்கள் விழிநீரைச் சுமந்து இருக்கிறர்கள்.
"தாத்தாவின் பக்கத்தில் போய் நான் அமர் கின்றேன். நான் ஏன் அழுகின்றேன்? என் கண்கள் ஏன் நீரைச் சொரிகின்றன?
"தாத்தா சாம்புத்தாத்தா .
அவர் மெதுவாக விழித்து என்னைப் பார்க் கிருர்,
ஏதோ கூற அவர் உதடுகள் துடிக்கின்றன. குனிந்து அவர் உ த ட் டோ டு வலது காதைப் பொருத்துகின்றேன்.
'தம்பி என் பிணத்தை இங்கேயே எரித்து ଗମ୍ଫ୍ (ତ) .. ' '
சாம்புத்தாத்தா போ ய் வி ட் டார். எல்லா வயோதிபர்களும் கதறி அழுகின்ருர் கள்.
நான் வெளியே எழுந்து வருகின்றேன். சாம் புத்தாத்தாவின் யாக குண்டத்திலிருந்து வெளி வந்தது பூதந்தான்.
ܠܐ ܢܓܗܬ¬.
କୋଷ
அனைவரும் படிக்கவேண்டிய ஈழத்து இலக்கிய நூல் யா ழ் வா ன ரிை ன்
9 DJ JJ G LD (சிறுகதைத் தொகுதி) வெளியீடு: யாழ் இலக்கிய வட்டம். கிடைக்குமிடம்: தனலக்குமி புத்தகசாலை. சுன்னுகம்.
2-50

Page 21
கனக்கா?
ஆரம்பப் பாடசாலையில் ஐந்து வகுப்புக்களை வைத்துக்கொண்டு மாரடிக்கும் நான், கரும்பலகை யிற் கணக்குகளை எழுதி முடித்து, அடுத்த வகுப் பிற்குப் பாடத்தைத் தொடங்க முன் அவள் அத் தனை கணக்குகளையுமே செய்து முடித்து விடுவாள்.
எழுத்தா?
குண்டு குண்டாகத் தூக்கி நிறுத்தினுற்போல ஒவ்வொரு எழுத்துமே என்னைப்பார் என் அழ கைப்பார்' என்று சொல்வதுபோலப் பளிச்சென்று அட்சர சுத்தமாய் . .
ஐந்தாம் வகுப்புப் பாடப்புத்தகமான தமிழ் மலர் அவள் அசுரவேகத்தைத் தாக்குப்பிடிப்பதாக இல்லை. பாடசாலை தொடங்கிச் சில நாட்களுக் குள்ளே அவள் அப்புத்தகத்தை வாசித்து முடித்து விட்டாள். அவள் வேகத்திற்கு ஈடு செய்ய நான் எங்கெங்கெல்லாமோ தேடிக்கொண்டுவந்து கொடுக் கும் அத்தனை புத்தகங்களையுமே அவள் வாசித்து முடித்துவிட்டாள்.
என் இருபது வருட ஆசிரிய அனுபவத்தில் அத்தனை விவேகமுள்ள மாணவியை நான் சந்தித்த தேயில்லை. சரோஜா என்ற அச் சின்னஞ்சிறுமி எதிர்காலத்தில் ஒரு சரோஜினி தேவியாகவோ, அல்லது தனக்குத்தானே நிகரான ஒரு சரோஜா வாகவோ திகழ்வாள் என நான் எண்ணிக் கொள் வேன். ஆரம்ப ஆசிரிய ஞ க இருக்க எனக்குக் கிடைத்த வாய்ப்பை எண்ணிப் பெருமைப் பட் டுக் கொள்வேன்.
ஆயினும் அந்தக் குக் கிராமத்தில் எவருமே - அதிலும் பெண்கள் - ஐந்தாம் வகுப்பிற்கு மேற் படிக்க எவரும் அனுமதிக்க மாட்டார்களே என்ற எண்ணம் எனக்குக் க வ லே  ைய க் கொடுத்துக் கொண்டேயிருந்தது!
ஆமாம் ஊருக்குக் கிழக்கே கூப்பிடு நூரத் தில் மாவலித்தேவி சலசலத்து ஒடிக் கொண்டிருக் கிருள் . தைப்பூசத்தின் பின்னு ற் பெரும் போக அறுவடை முடிந்ததும், ஊரவர்கள் எல்லாருமே கங்கைக்கரையில் மிளகாய்த்தோட் _டம் செய்யப் போய்விடுவார்கள். ஏற்றம் இறைத்தல், பாத்தி கட் டல், களை பிடுங்கள், காப்பறித்தல், அதைச் ச ந் தை க் கு க் கொண்டு சென்று விற்றல் என்று அடுத்த ஆறு ஏழு மாதங்கட்கு ஆண் பெண் குழந்தைகள் எல்லாருக்குமே வேலை யிருக்கும். மேற்படிப்பைப்பற்றி அவர்கள் எக்காலத்துமே கவலைப் படவில்லை. வேலையில்லாத் திண் டாட்டம் என்பது அவர்கள் அறிந் திராத ஒரு சங்கதி!
ஆயினும் நான் நாளும் பொழு இ) தும் சரோஜாவின் தந்தையிடம் DGS பேசி, அவர் மனதைக் கரைத்து
 
 
 
 
 
 

அந்த ஆண்டுப் பரீட் சை முடிந்தவுடன் பக் கத்தூரிலுள்ள மஹா வித் தி யாலயத்திற்கு அவளை அனுப்பிவைத் தேன். கிராமத்திலி ருந்து செல்லும் ஒரிரு சிறு வ ர் க ளோ டு சரோஜா மஹா வித் தியாலயம் சென் று கொண் டி ருக்கிருள். அவளது விவேகத்தை யும், கெட்டித்தனத் தையும் மஹா வித்தி
யாலய அதிபர் வாயி
லாகக் கேட்டு நான் பெ ரு மி த மடைந்து கொண்டிருந்தேன்.
-~~~~ ~~~~
19
=
ஈழத்தின் மற்ருெரு முது பெரும் எழுத்தாளர் வ. அ. இராசரெத்தினம். 1947 ம் ஆண்டுமுதல் எழுதிவருகிருர், கொழு கொம்பு' (நாவல்) தோணி (சிறுகதைத் தொ குப்பு) இதுவரை வெளிவந் துள்ள இவரது நூல் கள். தோணி 1963ல் சாகித்திய பூண்டலப் பரிசுபெற்றுள்ளது. யதார்த்தமும் மனிதாபிமான மும் இவரது கதைகளில் Lua fმჭ: சிடும். தற்போது மூதூர் பாட சாலை ஒன்றில் தலைமையாசிரிய ராகக் கடமை ஆற்றி வருகிருர்
இவர்.
-ஆசிரியர் ,
ஆயினும் என் மன தில் உள் ளு ர ஒரு கவலே இருந்துகொண்டேயிருக்கின்றது. சரோஜா பெரியவளான பின் பாடசாலைக்குச் செல்ல அவள் தந்தை அனுமதிக்கமாட்டார்.
இந்தக் கவலையோடு பட்டினத்துப் பெண்கள் விடுதிப்பாடசாலை ஒன்றிலே நான் சரோஜாவிற்கு இடம் தேடிக் கொண்டேயிருந்தேன்.
"என்னத்திற்கையா பெண் ண அதிகம்
படிக்க வைப்பது? இன்னும் நாலு ஐந்து
வருடம் போனுல் குடியும் குடித்தனமுமாக
வாழவேண்டியவள். அது வ  ைர தாய்க்
குதவியாக வீட்டிலிருந்து கொண்டு தொழி
லுக்குச் செல்லும் அண்ணன்மாருக்கும்
எனக்கும் ஆக்கிப்படைத்தால் அந்தப் படிப்பே அவளுக்குப் போதும்,
=ആ
என வாதம் பண்ணிய அவள் தந்தையை மிகுந்த சிரமப்பட்டுப் பட்டினத்துப் பாடசாலைக் குச் சரோஜாவை அனுப்பிவைக்க ஒப்புக் டு குTள்
ளச் செய்தேன். அடுத்த தைமாதம் வரைக்கும்
அதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன்.

Page 22
சரோஜா பக்கத்தூரிலுள்ள மஹா வித்தியால
யத்திற்கு ஒழுங்காகச் சென்று கொண்டிருக்கிருள்.
வள்ளேச் சட்டையும் நீலக் கழுத்துப்பட்டியும், காலிலே வெள்ளைச் சப்பாத்துமாக அவள் பாட சாலைக்குச் செல்வதைக் காணும் போதெல்லாம், நான் ஓர் எதிர்காலச் சரோஜினிதேவியைச் சிருஷ் டித்துக் கொண்டிருக்கிறேன் என , என் மனத்துட் புளகாங்கித மடைந்து கொண்டிருந்தேன்.
米 米 米
ஒரு நாள் நடுநிசி. ஆடி மாதத்துக் கச்சான் காற்று ஹோய் என்ற சப்தத்துடன் உறுமிக் கொண் டிருந்தது. அப்பேய்க்காற்றின் உறுமலுக்கு மேலாக எங்கிருந்தோ அவலக்குரல் கேட்டது. கனவிலே கேட்பது போன்ற அவ்வோலத்தைக் கேட்டுக் கண் விழித்த நான் சத்தம் வந்த தி  ைச யி ற் காது கொடுத்து உன்னிப்பாகக் கேட்டேன். அந்த ஒலம் சரோஜாவின் வீட்டிலிருந்துதான் வருவதாக எனக் குப் பட்டது. நான் மின் விளக்கைக் கையில் எடுத் துக்கொண்டு ஒட்டம்ஒட்டமாக அங்கே சென்றேன்.
அந்த அர்த்த இராத்திரியிலே சரோஜாவின் வீட்டிலே கிராமம் முழுமையுமே திரண்டிருந்தது. வீ ட் டி னு ள் ளே கிராமத்துப் பெண் கள் எ ல் லா ருமே கூடி ஒப்பாரி வைத் துக் கொண்டிருந் தார்கள். வெளியே கூடியிருந்த ஆண் கள் எ ல் லா ரு ம் வாழ்க்கை நிலையா மை பற்றி வாய் ஓயாமற் பே சி க் கொண் டிருந்தார் கள். ஆஹா இழவு விட்டிலேதான் தத் துவங்கள் பிற க் க முடியும்!
நே ற் று வரை சுகதேகியாக இரு ந்த டிரோஜாவின் தாயார், ஏழு பிள் இளகளைப் பெற்ெ டுத்திருந்த அப்ே ரிளம் பெண் , த6 எட்டாவது குழி தையைத் தரித் ருக்கையிற் செ  ேத வி ட் டா ள் நேற்று மி ள கா தோ ட்டத்திற்கு சென்று காய் பறி தாளாம். எ ந் நோயுமே இல் լյուի, ց) to GU.
 
 
 
 

ஒரு வலிப்பாம், வலிப்பிலே 'அம்மா' என்று அலறி னுளாம்! அவ்வளவுதான், பின்னர் பேரை நீக்கிப் பிணம் என்று பேரிட்ட திருமூலர் கதையாகிவிட் டது. விடிந்தாற் சூரையங் காட்டிலே கொண்டு போய்ச் சுட்மட்டும் ஞானத்திற்குக் குறைச்சலே யிராது.
நான் இடிந்துபோனேன், தாளலயத்தோடு ஒப்பாரி இசைக்கும் கிராமப் பெண்களின் குரலுக்கு மேலாக அம்மா அம்மா எனத் தலையிலடித்துக் கதறும் பிள்ளைகளினது ஒலம் என்னைச் சித்திரவதை செய்தது. s ஒரு பாட்டம் அழுது ஒய்ந்து முடங்கிக் கிடந்த சரோஜாவின் தந்தை என் தலைக் கறுப்பைக் கண் டதும் மீண்டும் தலையிலடித்துக் கொண்டு கதறி ஞர், சற்றுத் தணிந்ததும்
ஆக்கிப் படைப்பேனு - நான் அருகிருந்து ஊட்டுவனு? தூக்கித் துடைப்பேனு - குஞ்சைவிட்டுத்
துரந் தொலை போவேனு? என்று இராகத்தோடு ஒப்பாரி பாடத் தொடங் கினர், நான் சிலையாக நின்ருலும் என் கண்கள் கண்ணிரை வழிந்தோட விட்டன.
விடிந்தது!
பதிற் பாடசாலையை இன்னுெருநாளைக்கு வைத் துத் தொலைக்கலாம் என்று எண்ணிக் கொண்டு நான் அன்று பாடசாலைக்கே போகவில்லை.
மனம் ஒடிந்து கடைசிக் குழந்தையைக் கையிற் பிடித்தவண்ணம் மூலையிலே முடங்கிக் கிடந்தார் சரோஜாவின் தந்தை. ஆயினும் ஈமக்கிரியைகளுக் கான வேலைகள் மளமளவென்று நடைபெற்றுக் கொண்டேயிருந்தன, பாடை கட்டுபவர்கட்கும், வேறு சில்லறை வேலைகளைச் செய்து கொண்டிருப்ப வர்கட்கும் பெரிய மனுஷியாக இருந்து , கேட்ப வைகளை வீட்டினுள் இருந்து எடுத்துக் கொடுத் துப் படம் பரமா க ச் சுழன்று கொண்டிருந்தாள் சரோஜா.
米 米 米 -
ஈமச் சடங்குகள் நடைபெற்று முடிந்து விட் டன. அதன் பின்னுல் எத்தனே எத்தனையோ சடங்கு கள் கிரியைகள் . எல்லாமே இயந்திரகதியில் நடைபெற்று முடிந்து விட்டன. முப்பத்தொன்று கூட முடிந்து விட்டது. வீட்டினுள் நிறைந்திருந்த இனத்தவர்கள் எம்லாருமே வீட்டை விட்டுப் போய் விட்டார்கள்
ஆயினும் சரோஜா இன்னமும் பாடசாலைக் குப் போகவில்லை, இன்னும் சில நாட்களில் பா சாலை இரண்டாந்தவணைக்காக மூடப்பட்டு விடும். ஆவணி விடுதலை கழித்து மூண்றந்தவணை தொடங் கியதும் அவளைப் பாடசாலைக்கு அனுப்பலாம் என்று எண்ணிக் கொண்டே நான் என் வேலைகளைக் கவ னிக்கத் தொடங்கினேன்.

Page 23
ஆனல் அதற்குள் எனக்கு அவ்வூரைவிட்டு மாற்றம் வந்து விட்டது. பதிற் தலைமை ஆசிரிய ராகக் கடமையாற்றிக் கொண்டிருந்த நான், பதவி உயர்த்தப்பட்டு தொலைதூரத்துக்கு மாற்றப் பட் டேன்.
米 来源
மூன்றுந்தவணைத் தொடக்கத்திற் புதிய பாட சாலையிற் பதவியைக் கையேற்ற நான் என் வேலை களில் மூழ்கி விட்டாலும் சரோஜாவை மறக்க வில்லை, எதிர்காலத்தில் அவள் எப்படி எப்படி யெல் லாமோ விகசிப்பாள் என்று என் மனம் கற்பனை பண்ணிக் கொண்டிருந்தது.
தொலைவில் இருந்து கொண்டு சரோஜாவை மீண்டும் பாடசாலைக்கு அனுப்பவேண்டியதன் அவ சியம் பற்றி சரோஜாவின் தந்தைக்குக் கடிதங்கள் எழுதிக் கொண்டேயிருந்தேன. ஆணுல் எந்தக் கடி தத்துக்கும் எனக்குப் பதில் வரவேயில்லை. எதிர் காலத்திலே இந்நாட்டிலே பெரிய மேதையாகப் பிரகாசிக்க வேண்டிய ஒருத்தியை இழந்து விட்ட சோகம் என்னைப்பற்றிக் கொண்டது. காட்டிலே கணக்கற்ற மலர்கள் மலர்கின்றன. அவைகளின் மணத்தை நுகர்வாரின்றி அவை மாய்ந்து மடிகின் றன என்ற கவிவாக்கு சரோஜாவைப் பொறுத்த வரை உண்மையாகி விட்டது என்ற நினைவு என் மனத்தை அரித்துக் கொண்டேயிருந்தது. வெள் ளைச் சட்டையும் நீலக் கழுத்துப்பட்டையுமாக சரோஜா பாடசாலைக்குச் செல்வது என் மனக் கண்முன் எ ப் போது மே நிழலாடிக் கொண் டிருந்தது. அவ்வுருவத்தை என் நினைவிலே வளர்த்து பெரியவளாக்கி, ஒரு சரோஜினி நாயுடுவாக உரு வாக்கிக் கொண்டேயிருந்தேன். அடுத்த விடுதலை யில், மீண்டும் அவ்வூருக்குச் சென்று சரோஜாவைப் பாடசாலையிற் சேர்ப்பிக்க வேண்டும் என்று எண் ணிைக் கொண்டேயிருந்தேன்.
米 米 米
மார்கழி விடுதலையில் மீண்டும் நான் சரோஜா வின் ஊருக்கு வந்தேன், இரவு முழுக்கப் பெய்த பெருமழையிற் தலைமுழுகியிருந்த தகரைப்பற்றை கள் காலை இளவெயிலிற் குளிர் காய்ந்து கொண் டிருந்தன. அச்செடிகளின் மஞ்சள் நிற மலரிலே நாவற்பழ நிறமான வண்டுகள் ரிங்கரித்து மொய்த் துக் கொண்டிருந்தன. தகரைப் பற்றைகளின் கீழே தரைமட்டத்தில் வெள்ளே வெளேரெனப் பூத் திருந்த தும்பைப் பூக்களில் வண்ணுத்திப் பூச்சி கள் மொய்த்துத் தம் பகட்டான சிறகுகளைக் காலை வெயிலில் உலர்த்திக் கொண்டிருந்தன. மஞ் சளும் வெள்ளையுமாகப் பூத்துக்கிடந்த அச்செடி களிடையே பின்னிப்படர்ந்த கார்த்திகைக் கொடி கள் தீக்கொழுந்தன்ன தம் சென்னிற மலர் களோடு பகட்டிக் கொண்டிருந்தன. இரவு முழு வதும் பிரயாண அலுப்பினுற் கனத்துக் கிடந்த என் கண்களுக்கு அவை இரம்மியமாகக் காட்சி துளித்தன. நான் என் கைப்பையோடு மாவலித்
 
 
 
 

திட்டில் அமைந்திருந்த அக்கிராமத்தின் ஒற்றை யடிப்பாதையில் நடந்து கொண்டிருந்தேன். தக ரைப்பற்றைகட்கும் மேலால் மாவலித் தேவி காட் டிற் பெய்த மழையைத் தன்னேடு சேர்த்துக் கொண்டு நுங்கும் நுரையுமாய்க் கரை ததும்ப ஒடிக்கொண்டிருந்தாள்.
ஒற்றையடிப்பாதையைத் தாண்டி கிராமத்து மாட்டு வண்டிகள் செல்லும் மணல் ஒழுங்கைக்கு வந்து விட்டேன். இரு கரையிலும் நிரைத்து நின்ற ஆமணக்கு வேலிகட்குப் பின்னுல், ஆற்றிடை மேட்டு வெண்மணலிற் பசுமையாய்ப் படர்ந்து நின்ற நிலக்கடலைப் பயிர்களிலே தேங்கி நின்ற மழை முத்துக்களில், காலைச் சூரியனின் இளங்கதிர்கள் வர்ணஜாலம் புரிந்து கொண்டிருந்தன. வேலியிலே உயர்ந்து நின்ற முருக்க மரங்களில் தோரணங் கட்டியது போல நீளமான “சுரைக்காய்கள் தொங் கிக் கொண்டிருந்தன. இதோ சரோஜாவின் வீடு வந்து விட்டது.
'வாருங்கள் ஐயா!' சரோஜா என்னை வர வேற்ருள்.

Page 24
22
வெள்ளைச் சட்டையும், நீலநிறக் கழுத்துப் பட் டையும், வெள்ளைச் சப்பாத்துமாக நான் கற்பனை கண்டு கொண்டிருந்த அவள், நீல நிறப் பாவாடை யும், கார்த்திகைப்பூ என்று தற்போது சொல் லும் செங்காந்தள் நிறத்தில் மேற்சட்டையும் அணிந்தவளாக நின்று என்ன வரவேற்ருள்.
நான் வீட்டுக்குட் சென்றேன். மண் சுவரால் ஆன இரண்டறை வீடும் முன் மண்டபமும், தளங் கூட மண்ணுற்தான் மெழுகப்பட்டிருந்தது. ஏற் கனவே எனக்குப் பரிச்சயமான வீடுதான். ஆணுல் இப்போது எத்தனை பரிசுத்தமாக இருக்கிறது? சுவர் கள் சாணத்தால் மெழுகப்பெற்றிருந்தன. மாவலி கங்கைக் கரையிற் கிடைக்கும் சில்லுக்காய்களினல் அவை மினுக்கப்பெற்றிருந்தன. மண்டபத்துள்ளி ருந்த மேசையில் சில புத்தகங்கள் ஒழுங் கா க அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. வலது மூலையில் நான்கு நெல்மூடைகள் ஒன்ற ன் மே ல் ஒன்முக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
என் முன்னுல் வீட்டுக்குட் சென்ற சரோஜா, அறைக்குள்ளிருந்து மட்டக்களப்புக் கற்பன்பாயை எடுத்து மண்டபத்துள் விரித்து என்னை அமரும் படி செய்துவிட்டு மீண்டும் அடுக்களைப்பக்கம் சென் ருள்.
பாயில் அமர்ந்து கொண்ட நான் வீட்டை நோட்டம் விட்டேன் வீட்டினுள்ளே பூசி மினுக்கி அடுக்கிவைக்கப்பட்டிருத்த பழங்காலத்து வெண் கலப்பாத்திரங்களில் என் முகம் பிரதிபலித்தது.
சில நிமிடங்களிற் சரோஜா பாற்குவளேயும் கையுமாக என்னிடம் வந்தாள்.
பாலைப் பருகியபடியே விட்டிலே எவரையும் காணுேமே" என்றேன் நான்.
'அப்பாவும் அண்ணன் மாரும் வயலுக்குப் பசளை எறியப் போய் விட்டார்கள் ஐயா, நீங்கள் இப்போதுதான் வருகிறீர்களா? என்றுள் சரோஜா.
ஆமாம், நேற்றுத்தான் ரெயில் ஏறி இப் போதுதான் வருகிறேன். பாலைக்குடித்து விட்டு வயலுக்குப் போய் அப்பாவைப் பார்க்கலாம் என் றிருக்கிறேன்' என்றேன் நான், "வேண்டாம் ஐயா, நான் அப்பாவைக் கூட்டிவரும்படி தம் பியை அனுப்பியிருக்கிறேன். இன்னுங் கொஞ்ச நேரத்தில் அப்பா வந்து விடுவார். நீங்கள் பாலைக் குடித்து விட்டுச் சற்று இளைப்பாறுங்கள்' என்று பெரிய மனு ஷி போலப் பேசினுள் சரோஜா.
பிரயாண அலுப்பினுல் நானும் அவள் சொல் வதை ஆமோதித்தபடியே தலையணையிற் சாய்ந் தேன்.
米 米 米
கூப்பிடு தூரத்திலிருந்த வயலிலிருந்து சற்று நேரத்திற்கெல்லாம் சரோஜாவின் தந்தையார் வந்தேவிட்டார். படலையைத் தாண்டி என்னைக் கண் டதுமே,
 

"சரோஜா ஐயாவுக்குத் தண்ணி வென்னி கொடுத்தியா?” எனக் கேட்டுக்கொண்டே,
'வயல் எல்லாம் குடலைப் பருவம், இன்றைக் குத்தான் 'யூறியா'ப் பசளை எறிந்தோம். நீங்கள் வந்திருப்பதாகச் சரோஜா சொல்லி அனுப்பினுள். உடனே வந்துவிட்டேன்' என மன்னிப்புக் கோருந் தோரணையில் அவர் என்னிடம் பேசினர்.
བའི་
தொடர்ந்து நாங்கள் இருவரும் நீண்டநேரம் பேசிக்கொண்டே இருந்தோம் மாண்டுபோன தன் மனைவியைப்பற்றி நாத்தழுதழுக்கப் பேசிய அவர் சற்றுச் சுதாரித்துக் கொண்டு
சரோஜா - என்மகள் இல்லாவிட்டால் நானும் என் பிள்ளைகளும் நேரக் கஞ்சியே குடிக்க மாட்டோம். நானும் மூத்த ஆண் பிள்ளைகள் மூவரும் விடிந்து எழுந்தால் வயல், தோட்டம், எனக் கிளம் விடு கிருேம். இங்கே வீட்டை அவள்தான் பார்த்துக் கொள்கிருள். எங்களுக்கும் நேரத்துக்குச் சாப்பாடும் படைக்கிருள். சரோஜா மட்டும் இல்லாவிட்டால் ஈச்சங் கொத்தைத் தரையில் அடித்ததுபோல என் குடும்பமே சிறறிப்போயிருக்கும் ,...” எனப் பேசிக்கொண்டேயிருந்தார் அத்தந்தை,
நீங்கள்
செய்திப் பத்திரிகை படிக்கிறவர்களா? அப்படியானுல்
உங்களுக்கு மாதம் ஒன்றுக்கு சராசரி ரூ. 5/- செலவாகும்!
செய்திகளைப்பற்றி அறிந்துகொள்
வதற்கு மாதம் 5/- ரூபா செலவிடும் நீங்கள் ஈழத்து இலக்கியத்தைப்பற்றி அறிந்துகொள்வதற்கு மாதம் 50 சதம் செலவிடமுடியாதா?
நிச்சயமாக முடியும்!
இன்றே 'மலர்’ சந்தாதாரர்களாகச் சேருங்கள்.
ஆண்டுச்சந்தா ரூ. 6/- மட்டுமே.
விபரங்களுக்கு:- 'G' இல, 21 , மத்திய வீதி,
மட்டக்களப்பு.

Page 25
அவர் பேச்சை அவதானித்த எனக்கு சரோ ஜாவைப் பாடசாலைக்கு அனுப்ப வேண்டிய அவ சியத்தைப் பற்றிய பேச்சை எடுக்கமுடியாமலே இருந்தது.
இதற்குள் மதியமாகிவிடவே, சரோஜா எங் கள் இருவரையும் சாப்பிட அமரும்படி கேட்டுக் கொண்டாள். பூசி மினுக்கிய வெண்கலச் செம்பிலே தண்ணீர் வந்தது. குமரிவாழையின் குருத்தும் விரித் தாயிற்று.
கையைக் கழுவிக்கொண்டு இலைகளின் முன் னுல் நாங்கள் அமர்ந்ததும், சரோஜாவின் சின்னஞ் சிறு கைகள் எங்கட்கு அன்னம் படைக்கத் தொடங்கின, விதம்விதமான கறிகளோடு பெரு விருந்தே ஏற்பாடகியிருந்தது. இத்தனையும் அந்தச் சிறுமியின் கைவரிசை தானு என எனக்கு ஆச்சரிய மாகவே இருந்தது.
கோளிப்பாகற் கொடுங்கனித்திரள் காய் வாள் வரிக் கொடுங்காய் மாதுளம் பசுங்காய் மாவின்கனியொடு வாழைத்தீங்கனி
சாலியரிசி தம்பாற் பயன்'
ܥܬܵܐ --
எல்லாமேயுளதாய், தன் மென்விரல் சிவப்ப ஆயர்பாடியிலே கோவலனுக்கு அமுது படைத்த கண்ணகியின் திறமையைக் கூறும் சிலப்பதிகார அடிகள் தான் என் ஞாபகத்திற்கு வந்தன. நான் இரசித்துச் சாப்பிட்டேன்.
சாப்பிட்டானதும் 'பட்டினத்துக் கல்விக் கந் தோரிலே என் உத்தியோ கம் சம்பந்தமான சில குறிப்புக்களைச் சேகரிக்க வந்தேன். இத்தனை தூரம் வந்த நான் உங்களையும் பார்த்துக் கொண்டுபோக இங்கேயும் வந்தேன். ' என்று நெஞ்சறியப் பொய் சொல்லி விட்டு நான் வி  ைட பெற்ற போது, சரோஜா எனக்கு ஒரு பசு நெய்ப் போத்தலை அன் பளிப்பாகக் கட்டிக் கொடுத்தாள்.
அதையும் வாங்கிக் கொண்டு வரும் வழியில், என் மனம் எனக்குச் சொல்லிக் கொண்டது.
ஒரு பெண் எதைப்படிக்கவேண்டுமோ அதை யெல்லாம் சரோஜா படித்துக் கொண்டாள். பட் டினத்துப்படிப்பால் அவள் பட்டம் பெறலாம். ஆணுல் அப் படிப்பால் ஓர் குடும்பமே சீர் குலேந்து விடும். நாவுக்கு உருசியாக அவள் தந்தையும் தமையன்மாரும் சாப்பிடமுடியாது படித்துப் பட் டம் பெற்ருலும் அது அக்குடும்பத்துக்கு மேலும் மேலும் தொல்லையையே கொடுத்துக் கொண் டிருக்கும். ஆமாம் காட்டிலே மலரும் எந்தப்பூவும் தம் மணத்தை வீணுகச் சிந்துவதே இல்லை; வண் டு களைக் கவரவும் அதன் மூலம் தம் வம்சத்தை விருத்தி பண்ணவும் அவை இயல்பாகவே வலிமை யுள்ளதாக இருக்கின்றன. முட்டாள் கவிஞர்கட்கு இது தெரிவதில்லை. அதுவரை சரோஜா என்ற மொக்கும் தன் தந்தையின் பூஜைக்குச் சார்த்தப் படும் ஆரத்திற்குப் பயன்படட்டும்.
8
 
 
 
 
 
 
 

23
அருந்துசுவை தேனினே அளியினம் பருகியே அறிவிழந் தாங் கலையுமே! பொருந்திமிளிர் புத்தகப் புதுமலர் தேனினே புசித்திடிற் புத்தி எழுமே!
சருகாகு மலர்மீது தவழ்கின்ற இன்பமோ தழையாது நெடிது நாளே! கருவாகு காகிதக் கவினு ைமலரேடு காட்டிடும் நீ டின்பமே
மடிவுற்ற போதிலே மணமதும் போய்விடும் மலரினுல் மகிழ்ச்சி சிறிதே வடிவுற்ற ஒவியம் வண்மைசேர் கதை கவிதை
மலரேடு மகிழ்ச்சி நெடிதே'
ஆண்களொடு பெண்களும் அகஅழகு பேணியே அணிவதற் கேற்ற மலரே! ஈண்டுமெய் கூறிடும் இலக்கியப் பேரேடு ஈழமதில் எழுந்த மலரே!
அரியாலையூர், வே ஐயாத்துரை.

Page 26
அருள் சுப்
Éé
i, or, அம்மா. பிள்ளையஞக்கு கோப்பி ,[9گ குடுத்தனியே, ஒண்டும் இன்னும் நிந்திரைப் பாயால எழும்பேல்லைப் போல"
'அதையேன் கேட்கிருய், அதுகளும் தாயைப் போல கோப்பி, தேத்தண்ணி ஒண்டும் வாயில கூட வைக்கிறேல்லை" அம்மா பதிலளித்தாள்.
பிள்ளைகளின் பள்ளியறைக்கு ஆவலோடு நடை யைக் கட்டுகிறேன். தாய் தந்தையரின் அரவணைப் பிலே சயனிக்க வேண்டிய என் குலக் குழந்தைகள் தலையணே பாய் இவைகளை விட்டு விட்டு அங் கொன்றும் இங்கொன்றுமாக படுத்திருந்தன. மூத் தவளின் வயிற்றைத் தன் பிஞ்சுக் கால்களால் உதைத்துக் கொண்டு படுத்திருக்கிருள் ஐந்தாவது, கடைக்குட்டி ராதை வாய்க்குள் பெருவிரலை வைத் துச் சூப்பிக் கொண்டு சின்னச் சின்ன மூச்சுகள் விட்டுக்கொண்டே படுத்திருக்கிருள்.
கவலையை மறந்த நிலையில் சிரித்துக் கொள் கிறேன் நான் ' என்ர ராசா' என் குழந்தையின் பிஞ்சுக் கன்னத்திலே கொஞ்சிக் கொள்கிறேன்.
ஆக, இதுகளுக்காக வாழ்கின்ற வாழ்க்கை எனக்குக் கிடைத்திருக்கிறது. நான் அதிஷ்டக் காரன்தான் என்னேயே நான் தேற்றிக்கொள்கி றேன்.
அன்று முழுவதும் எனக்கு ஒய்வில்லை. ஒய்வு எடுக்கவும் விருப்பமில்லை. லிவு எடுத்து வந்திருந்த அந்த ஆறு நாட்களுக்குள் எல்லாம் செய்து விட வேண்டுமென்ற ஆசை என்னுள்ளே விரவிக் கிடந் தது. ஏதாவது வேலையில் ஈடுபட்டிருக்கும் போது கூட பிள்ளைகள் மாமா, மாமாவென்று என்ணுேடு ஒட்டிக் கொண்டன.
தகுந்த பாதுகாப்பில்லாவிட்டால் பின்னுக்கு இதுகளுக்கும் அக்காவின் நிலை தானுே.
இரவு ஒன்றரை மணியிருக்கும். நித்திரை. நித்திரை, அது ஏன் வரவில்லை. எனக்கே தெரிய வில்லை. படலையில் முட்டுக்கு வைத்திருந்த உரலை யாரோ தள்ளி உருட்டிவிட்ட அரவம் பலமாகக் கேட்டது. அத்தான்தான் வந்துகொண்டிருந்தார். தள்ளாடித் தள்ளாடி வந்துகொண்டிருந்தார்.
 
 
 
 
 
 
 
 
 
 

(சென்ற இதழ் தொடர்ச்சி)
பிரமணியம்.
அக்காவின் அறைக்குள்ளே தட்டுத் தடுமாறிச் சென்று வேட்டியைக் களைந்து வைத்துவிட்டுச் சாரனை மாற்றிக்கொண்டார்.
நித்திரை செய்பவனைப்போல் இருந்துகொண்டு எல்லாவற்றையும் வெகு உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தேன் நான்.
அறைக் கதவு சாத்தப்பட்டது. எந்தவிதமான சப்தமுமில்லை. நான் இருக்கிறேன் என்பதனுல் ஏற்பட்ட பயம்போலும். என்னிலேயே எனக்கு அன்பு பிறந்தது.
உருண்டு உருண்டு வந் து எனது காலடியில் முடங்கிக் கொண்டிருந்தாள் கடைக் குட்டி ராதா, அக் குழந்தையின் முகத்தில், கன்னத்தில் இப்போ துதான் கறந்தெடுத்த பசும்பால் வடிந்துகொண் டிருந்தது. இரண்டுகைளாலும் என் உயிரை அள்ளி எடுத்து, கன்னத்தில் வழிந்துகொண்டிருந்து பாற் சொட்டுகளை ஆசையுடன் பருகிக்கொண்டேன்.
ஏதோ அரவம் கேட்கிறதே ஆ. அக்காவின் அறைக்குள்தான் கேட்கிறது, காதுகளைத் தீட்டிக் கொண்டு ஜாக்கிரதையானேன்.
'டியேய் என்னத்துக்கடி உன்ர தம்பியை வரச் சொல்லிஎழுதினனி?இவர் பெரிய ஆளோடி எனக்கு? இப்ப நினைச் சாலும் எழும்பி மிரிச்சுப்போடுவன் எல்லாரும் சேர்ந்து என்னைப் பயமுறுத்தப் பாக்கி றியள் என்ன? அடியேய், நான் உங்களை எல்லாரை யும் வெண்ட கள்ளனடி. வேசை, இண்டைக்கு என்ன செய்யிறன் பார். **
கணவன் மனைவி தாம்பத்ய உறவை ஒரள விற்குப் புத்தகங்களில் படித்திருக்கிறேன். அவர் களுக்குள் எதுவென்றலும் இருக்கும்; வேற்று ஒரு வர் அதில் தலையிடுதல் முறையல்ல என்பதை அறிந் திருக்கிறேன். ஆனுல் எ ன் னே டு கூடப்பிறந்த பிறப்பல்லவா அ ங் கு அடிவாங்கிக்கொண்டிருக் கிறது. பாயை விட்டெழும்பி, எழுந்த வேகத்தி : ஒடிப்போய் கதவை காலால் எட்டி உதைத்
Ꭶ560Ꭲ . শহর ।

Page 27
அங்கு கண்ட காட்சி.என் கால் கைகளில் ஒடிக்கொண்டிருந்த இரத்தம் நெஞ்சிற்கும் மூளைக் கும் எகிறிப்பாய்ந்து விறைத்தது.
'டேய் அக் காட கழுத்தையாடா நெரிக்கிருய், இர்ரா டேய், இண்டைக்குத்தான்டா உனக்குக் கடைசி. பக்கத்திலிருந்த தும்புக் கட்டையால் அடி அடி என்று ஆத்திரந் தீருமட்டும் அடித்தேன். காலுக்கு ஒரு உதைகொடுத்து ஆளை நிலத்தில் வீழ்த்தினேன். ஆத்திரம் தீரவில்லை.
se 'டேய், இத்தக் கையாடா கழுத்தை நெறிச்
சது?. மடையா, என்னடா நினைச்சுக்கொண்டாய்? ராஸ்கல்' ஆத்திரத்தில் என்ன செய்தேன் என்ன பேசினேன் என்பதே தெரியவில்லை. இரண்டு கால் களும் நிலத்தில் நிற்க முடியவில்லை. பதறியது.
வேணுந்தம்பி, வேணும், அவனுக்கு ஒன்டெண் டாலும் எங்களுக்குத்தான் துக்கம். நாளைக்கு உனக் கொண்டு ஆயிற்றெண்டால் உன்னையே நம்பியிருக் கிற இதுகளை யாரடா பாக்கிறது?’ அம்மா அடித் தொண்டையில் கத்தினுள்.
ஆமாம், அவனுக்கென்ன குடிகாரன், மானம் ம ரியா தை யைப் பற்றிக் கவலைப்படாதவன். நானும் அப்படி மரியாதைக்குப் பயப்படாமல்
இருக்க முடியுமா? என் நடத்தையில் காணப்படும் தூய்மையில்தானே தங்கியிருக்கிறது, என் குழந் தைகளின் எதிர்கால வாழ்க்கை.
அத்தானின் தலைக்கு தலையணையொன்று வைத்
துப் படுக்கவைத்தாள் அக்கா பே ச க் கூடாத தமிழை, அன்னை மொழியை வாய்க்கு வந்தவண் ணம் பேசி அரற்றியவாறே கால்கைகளை அங்குமிங் கும் சாடிக்கொண்டிருந்தார் அத்தான், நல்ல நிறை தண்ணி.
அக்காளுடைய முகத்தைப் பார்க்கவே பயந் தேன். எங்கே-சினிமாப் படங்களில் வருகின்ற கதா நாயகிகள் மாதிரி, தனது கணவன் அடிபட்டதும் அடித்தவரை நோக்கிப் பேசுவதுபோல-அக்காவும் என்னேடு வசனம் பேசிவிடுவாளோ என்று பயந் தேன். வாய்மூடி மெளனியாகி அழுதுகொண்டே என்னைப் பார்த்தாள் அக்கா எதை நினைத்து என் னைப் பார்த்தாளோ தெரியவில்லை. தொண்டையை சரி செய்துகொண்டே நானும் அக்காவைப் பார்க்கி றேன்.
'அக்கா இனி இது சரிவராது, இன்னம் நீ இந்த வீட்டில் இருந்தால் - அடுத்த முறை உனக்குக் கொள்ளி வைக்கத்தான் கொழும் பி ல இருந்து நான் வரோணும், நாளைக்கே வேற வீடு பார்த்துக் கொண்டு போயிடுவம், அவர் தனிய இருந்து ஆள ட்டும்.'
அக்காவின் அறைக்குள்ளே மெளனம் குடி கொண்டது. நான் எனது பாய்க்குச் சென்று என்ன விழுத்திக்கொண்டேன். எனது அறையிலும் மெள னம் ஆட்சிபுரியத் தொடங்கியது.
 
 

காலை நேரம், சுவர்க் கடிகாரம் ஏழு தடவை அடித்து ஓய்ந்தது. வீட்டிலே மயான அமைதி என்று மில்லாதவாறு குடிகொண்டிருந்தது.
பக்கத்துவிட்டுப் பொன்னம்மாக்கிழவி வந்தா, குசலம் விசாரிக்க ஆறுதல் கூறத்தான் வந்தாள், ஆணுலும் கிழவியின் இயல்பு எங்கே போகும் ஆத்தி ரத்தை ஏற்படுத்திவிட்டு தன் வழியோடு போய் விட்டது, அந்தக் கிழம்.
அத்தான் இன்னும் நிலத்திலிருந்து எழுந்திருக் கவில்லை. அவரின் பக்கத்திலே காப்பிக் கோப்பை தொடுவாரற்று ஆறிப்போய்க் கிடக்கிறது.
திடீரென்று ஏதோ நினைத்துக் கொண்டவன், கிணற்றடிக்குச் சென்று அவசரக் கழுவல் ஒன்று கழுவி உடம் பை ச் சுத்தப்படுத்திக் கொண்டு, ஸ்டாண்டிலே மா ட் டி யிருந் த ட்ரெள சருக்குள் புகுந்துகொண்டேன். வெளியே போய்விட்டு உடனே வருவதாகக் கூறிவிட்டுக் கிளம்பினேன்.
எனது சைக்கிள் பெரிய கடையை நோக்கிப் போயிற்று. வழிநெடுக, சில வீடுகள் மாற்றங்களி ணுல் ஏற்பட்ட புது மெருகுடன் கண்களுக்கு இத மாக இருந்தனபோல் தோன்றிற்று. அதோ அந்தக் கோடியிலே தென்படுகிற நண்பன் சிவராசாவின் வீடும் மாறிப்போய்விட்டதே. வீட்டோடு சேர்த்து தன் நல்ல குணத்தையும் மாற்றிக்கொண்டிருப் பானுே?
என்னைக் கண்டதும் ஒடி வந்து வரவேற்ருன். அவன் அப்படி நடந்து கொண்டது, என் வரையில் எனக்கு அவன் செய்த பெரிய உத விபோ ல த் தோன்றியது.
என் நண்பர்களிலே உண்மையானவன் அவன்.
“எப்ப மச்சான் வந்தனி? கடிதம் ஒண்டும் போடாமத் திடீரென்று வந்திருக்கிருய் என்ன விச யம்? சாய்மனக் கதிரையை இழுத்துப் போட்டுக் கொண்டே கேட்டான்.
“என்னத்தடாப்பா கடிதம் போடுறது. உனக் குத் தெரியும் எண்டு நினைக்கிறன், அதுதான் எங் கட அக்காட விசயம். அதாலதான் வந்தனுன், இப் பவும் உன்னிட்டை அந்த விசயமாத்தான் ஒரு உதவி கேட்டு வந்திருக்கிறன். எனக்கு உதவி கேட் கிறதுக்கு உன்னைத் தவிர வேருெருவரும் இல்லை மச் சான். செய்வியா?” கண்களை கண்ணிர்த்திரை மறைக்கவே, தலையைக் குனிந்துகொள்கிறேன்.
“டேய், என்னடாது, சின்னப்பிள்ளையன் மாதிரி அழுகிருய்? இந்தா கொஞ்சம் ஆறுதலாய் இருந்து என்னெண்டு சொல்லு, எதண்டாலும் நான் செய்து தாறன் யோசிக்காதை."
உறுதிமொழிகளையளித்துக்கொண்டே உள்ளுக் குள் போகிருன், திரும்ப வரும்போது இரண்டு கிளாசில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து கொண்டு வருகிருன், “இந்தா மிச்சம் சூடாயிருக்கிருய்

Page 28
26
இதைக் குடி, தணியும். சாய்மனக் கதிரையில் விரித்திருந்த சால்வையால் கண்களைத் துடைத்துக் கொண்டே தொண்டையைக் கனைத்துக் கரகரப் பைக் குறைத்துக் கொள்கிறேன்.
"வடிவாக்கேள், இனி அக்கா அவனுேட வாழே லாது. நல்லா யோசிச்சுப் போட்டுத்தான் பேசி றன். அதால நீ குறுக்க பேசாதை’ உச்சஸ்தாயி யில் என் குரல் உயர்ந்து கொண்டு போகிறது.
'சாகிறதுக்கு ரெடியெண்டால் அவ அவனுேட அந்த வீட்டில இருக்கலாம். சுருங்கச் சொல்லி விளக்கினேன் விசயத்தை
"எனக்கு இப்ப அவசரமா; ஏன் இண்டைக் கெண்டாலும், ஒரு வீடு வேணும். நான் இந்த நேரத்தில எங்க போறது கையில காசுமில்ல', தொடர்ந்தேன் நான்.
“உங்கட அப்பாட்டைச் சொல்லி அந்தப் பின் வளவுக்குள்ள இருக்கிற உங்க தகர வீட்டை வாட கைக்குத் தருவியா? ஒருவாறு வந்த விசயத்தை முடித்துக் கொண்டேன்.
"அப்பா ஆருக்கோ போன கிழமை அந்த வீட்டை ஒம் எண்டு சொன்னவர், நல்ல காலம் இன்னம் குடுக்கேல்லை. நான் அப்பாட்டை எல் லாம் சொல்லிக்கொள்ளுறன். நீ வாடகையொண் டுந் தர வேண்டாம்; எப்பவாருய் . . ?” என்பதிலே எ தி ர் பார்த் து வாயைப் பார்த்துக் கொண்டு நின்றன் அவன்
* மச்சான் இதுக்கு நான் என்ன செய்யப் போறன். இப்ப என்னுல கொஞ்சம் சந்தோஷமா அழத்தான் முடியும். அதுதான் நான் உனக்குச் செய்யக்கூடிய கைமாறு',
குரல் கம்மியது எனக்கு என் கண்களிலே விழுவதற்குத் தயாராக இருந்த இரண்டு கண்ணிர்ப் பாட்டைக் கை க ளா ல் மறைத்துச் சிரித்துக் கொண்டே துடைத்து விட்டுக்கொண்டான் சிவ JTIT gfIT 3
*卤。, மறந்து போயிட்டன், இதுதான் முக் கியம், இன்னம் நாலு நாளோடை எனக்கு லீவு முடியுது. நீ பக்கத்தில இருக்கிருய் எண்ட நம் பிக்கையிலதான் போறன்; நான் போனுப் பிறகு அவன் ஏதும் கரச்சலுக்குவருவான், நீ தான் எல் லாத்தையும் பார்த்துக் கொள்ளோணும்'
எனக்குத்தெரியும் இது ஒரு பாரதூரமான கேள்வியென்று. என்ன செய்வது? வேறுவழி?
*எப்பிடிடா? அந்தாள் தன்ரை பெண்சாதி பிள் ளை க ளே ப் பார்க்க வந்தா நான் எப்பத்தி தடுக்கிறது?"
நியாயமான ஒரு கேள்வியைக் கேட்டுவிட் டானே சமாளித்துக் கொண்டேன் நான்.
 

"அப்படியெண்டா அவ அங்க இருக்கிறதும் ஒண்டுதான் இங்க இருக்கிறதும் ஒண்டுதான். இங்க அக்காவைக் கொண்டந்து விடப்போறதே அவன்ர கரச்சல் இருக்கக் கூடாதெண்டுதானே. எப்படியென்டாலும் ஆரிடை கால்ல விழுந்தாவது இரண்டு மூன்று மாசத்திலே மாறி இங்க வந்திடு வன். அதுமட்டும் நீதாண்டா, உன்னைத்தான் நம்பியிருக்கிறன்' அழவில்லை நான் அது ஒன்று தான் குறை.
“சரி கணக்க யோசிக்காதை, எல்லா நாளும் கடவுள் இப்பிடியே விட்டிட மாட்டார். நீ ஒண் டுக்கும் பயப்பிடாதை எதெண்டாலும் நான்பார்த் துக்கொள்ளுறன். சந்தோசமாப் போயிற்றுவா',
நண்பனுடைய நம்பிக்கை தரும் தோற்றம் மாடிப்படிகளாயின, அப்படிகளினூடே நடந்து வந்து அவன் கூறிய வார்த்தைகள் என் இதயத் த்தைத் தொட்டன.
இவனுக்கு நான் என்ன செய்துவிட்டேன்? இப் படியொரு பொறுப்பை ஏற்றுக்கொண்டானே. நண்பன மனங்குளிர வாழ்த்திவிட்டு நம்பிக்கை துளிர்விட வீட்டுக்குத் திரும்பினேன்.
தகரத்தால் வேயப்பட்ட சிறிய வீடு அது. ஆணுல் அங்கு நிம்மதி நிலவியது.
"நான் அவனைக் கொல்லாம விடுறேல்லை. அவங்க எல்லாருக்கும் கொள்ளிவைக்கிறது நான் நான்'. இவையெல்லாம் எனது அன்புக்குரிய அத் தான் அந்த நான்கு நாட்களாக குடிபோதையில் மற்றவரிடம் பிதற்றித் திரிந்த மணிமொழிகள்.
எதெது செய்யவேண்டுமோ, அ வை க ளே ச் செய்தேன். துணைக்குச் சிவராசா பக்கத்திலேயே இருந்தான் கடவுள்மாதிரி என்னைப் பொறுத்த மட்டில் அவன் கடவுள்தான்,
கொழும்புக்கு வெளிக்கிடும் அன்று இரவு அக்கா எனக்கு கட்டித்தருவதற்காகப் புட்டு அவித் துக்கொண்டிருந்தாள். அம்மா உடுப்புப் பெட் டியை சரிபண்ணிக்கொண்டிருந்தாள்.
'வாறண்டெல்லாம் கவனமா எடுத்து வைச் சிருக்கிறியே?' அம்மா கேட்டாள். ஒமென்று தலையை அசைத்துவிட்டு ஒரு குட்டி லெக்சருக்கு என்னை ஆயத்தப்படுத்திக்கொண்டேன்.
'அம்மா, இனி இந்தப்பிள்ளையளைப் பொறுத்த வரையில் நல்ல பழக்கம், படிப்பு, குணம், நடை இ வை க ளே ச் சொல்லிக் குடுக் கிற துக் கு தகப்பனில்லை. நான் மாறி இங்க வருமட்டும் குழந்தையளை நல்லாப் பாருங்கோ. பொம்பிளேப் பிள்ளையன் நல்ல பழக்கம் பழகவேணும். ஒழுங் காப் பள்ளிக்குப் போகோனும் குணம், நடை எல் லாம் பழகவேணும். வெளியில் கண்டமாதிரி விடப்படாது. இந்தப் பிள்ளையளை வளர்த்து, பெரி யாளாக்கி, படிப்பித்து நல்ல நிலையில் வைக்கவேண் டியது என்ர பொறுப்பு. அதால ஒருவரும் கவி

Page 29
லேப்படத் தேவையில்லே, அம்மா, நீ மட்டும் நல் லாச் சாப்பிட்டு இந்த உடம்பைக் கொஞ்சம் கவனிச்சுக்கொள்ளம்மா. அக்காவை யோசிக்க வேணுமென்டு சொல்லு என்ன?. .
'ம்.மற்றது மாசாமாசம் சிவராசாட பேருக்கு 150 ரூபா அனுப்புறன். எல்லா விசய மும் சிவராசாட்டை சொல்லியிருக்கிறன் ஏது மெண்டால் அவனிட்ட வெட்கப்படாமல் கேளுங் கோ, என்ன..?
ܓ ܬܐ
நண்பன் வந்தான். பெ ட் டி யை த் தூக்கிக் கொண்டான். எல்லாரையும் பிரிய மனமில்லாமல் பிரிந்தேன்:
- 'அம்மா, போயிட்டுவாறன். அக்கா போயிட்டு
வாறன்.'
 
 

27
பெரிய மனிதத் தோரணையில் ஆறுதல் கூறி விட்டு வந்துவிட்டேன். ஆனல் என் மனம் சொல்ல முடியாத அவஸ்தைக் குள்ளாகியிருந்தது.
நண்பனுக்கு நன்றியும் வணக்கமும் செலுத்தி விட்டு மெயில் ரெயிலில் தொங்கல் சீ ற் ரு கப் பார்த்து உட்கார்ந்து கொண்டேன்.
ஏழும் பொம்பிளைப் பிள்ளையன். இவ்வளவு போதும் அக்காவுக்கு. இதுகளை எப்படி முன்னுக்குக் கொண்டுவாறது. அக்காவுக்கு வயது இப்ப இருபத் தேழுதான். இளமையும் குறையவில்லை. இதற் குள்ளே கணவன் இரு க் கை யி லே யே விதவை யாவதா ? என்ன கொடுமையப்பா.. எ ன் ன கொடுமை. முருகா,
சரி அத்தானைப் பார்ப்பம்.
கணவன் என்ற புனிதமான பதத்திற்கே களங் கத்தை யுண்டுபண்ணியவனல்லவா அவன், அவ

Page 30
23
னுேடு அக்காவை மீண்டும் வாழச்சொன்னல் மிஞ் சுவது. அடியும், உதையும், இன்னும் இரண்டொரு குழந்தைகளுந்தான். ஐயோ, இரண்டொரு குழந் g"A列リGTT.....。 இன்னுமா. . வேண்டாம் வேண் டவே வேண்டாம். இப்ப இருக்கிற ஏழையும் காப் பாற்றவே நான் இர ட்டை மனிதனுக மாறி உழைக்கவேணடியுள்ளதே. இன்னமும் பெற்று εθι Σι Πτου... ... அப்பப்பா. வேண்டாம், அக்கா அவனுேடு வாழவே வேண்டாம்.
திரும்பத் திரும்ப சிந்தனை வயப்பட்டு உழன் றேன். என் அக் கா விற் காக வாழப்போகின்ற வாழ்க்கையின் புனிதமான நினைவுகள் என் நெஞ்ச கத்தே நீள வியாபித்திருந்தாலும், அவ்வாழ்க்கை யில் ஏற்படப்போகும் நடைமுறைக் கஷ்டங்களின் பயங்கரத் தோற்றங்கள் என்னைப் பயமுறுத்தத் தவறவில்லை.
கனத்த இதயத்துடன் கொழும்புக் கோட்டை ஸ்டேஷனை அடைந்தேன். ஸ்டேஷனில் வழமையான நெரிசலைக் காணமுடியவில்லை. என் ம ன தை ப் போன்று ஸ்டேஷனும் தூங்கிவிட்டதா, டிக்கட் டைக் கொடுத்துவிட்டு வெளியே வந்தேன்.
b...... அந்தா 123 ம் நம்பர் பஸ் வருகிறது. கையில் பெட்டி க ன த் தது. ஆனல் இதயத் திற்கு ஈடாகக் கணக்க முடியவில்லையே அதனுல். உள்ளமும் உடலும் பாரத்தினுல் நோக பஸ்ஸினுள் ஏறிக்கொண்டேன்.
இனிமேல் காலையில் ஐந்து மணிக்கு எழுந்து விடுவேன். படிக்காமல் கவனிக்காமல்விட்ட சிங்க ளத்தை இனிக் கண்ணும் கருத்துமாகப் படித்தாக வேண்டும். இல்லாவிட்டால் சம்பள உயர்வு இல்லை. சம்பள உயர்வு இல்லாவிட்டால் சங்கடந்தான். எட்டு, அல்லது ஒன்பது நேவிக்கட் சிகரட் அல் லவா நாளொன்றுக்குப் புகைத்து வருகிறேன். இனி ஒன்றுமே புகைப்பதில்லை. சினிமாப் படங்களைப் பார்ப்பதை அடியோடு நிறுத்திவிட வேண்டியது தான். என் மனதின் அடிமட்டத்தே யொட்டிக் கொண்டு எப்பொழுதாவது வெளிக்காட்டி நானும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன் என்று கூறிக்கொண் டிருக்கும் ஒரு நங்கை நல்லாளைப் பற்றிய காதல் உணர்ச்சிகள். அவைகளையும் பிய்த்து எறிந்துவிட வேண்டியதுதான்.
எனது எதிர்கால நேரகுசியை வழிநெடுதிலும் பஸ்ஸிலிருந்து கொண்டே போட்டுக் கொண்டேன்.
ஒரு உலுக்கல் உலுக்கி நின்றது பஸ் என் மனப் படத்திற்கும் ஒரு இடைவேளை. இடைவேளை நேரத்தில் "சிகரட்' புகைக்காவிட்டால் எப்படி? சட்டைப் பைக்குள்ளிருந்த கப்ஸ்ரனை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டேன்.
குலுக்கலுடன் நின்ற பஸ் அதே குலுக்கலுடன் ஆரம்பமாகி சென்று கொண்டிருந்தது. வீடு வந் தது. இறங்கிக் கொண்டேன். அறையைத் திறந்து படாரென்று கட்டிலில் விழுந்தேன்.
 

நிரம்பி வழிந்தது. ஏதோ ஒரு மோன நிலையி லிருந்துகொண்டு எ ல் லா வ ற் றை யும் கிளியர் பண்ணினேன். இப்படியே மூன்று மாதம் கடந் தது. இடமாற்றமோ கிடைத்தபாடில்லை. இடை யிடையே சிவராசாவிடமிருந்து வீட்டுச் சங்கதிகள் கடித மூலம் வந்து கொண்டிருந்தன். அவனுடைய எழுத்துகளிலிருந்து அவன் எ ன் னி டமி ரு ந் து எதையோ மறைக்கிருன் என்றும் அதை எழுது : வதால் என்னைத் துன்பத்திலாழ்த்தக் கூடாதே என்ற உணர்ச்சி அவன் எழுத்தில் இருந்தது போல வும் அறிந்து கொண்டேன்.
ஆறு நாள் லீவுக்குப் பின்னர் ஆபிசில் "ட்ரே'
ܕܐ மொத்தத்தில் வீட்டு நிலை பிழையில்லை. மாதா மாதம் பணம் அனுப்பிக் கொண்டிருந்தேன். என்ன கஷ்டம் வந்தாலும் ஏற்றுக்கொள்வது என்ற மனப் பான்மையை வளர்த்துக் கொண்டேன்.
இந்த மூன்று மாத காலமும் அலுவலக நண் பர்களிடையே உண்மையான சிரிப்புச் சிரிக்க என் ணுல் முடியவில்லை. நண்பர்களின் சிரிப்புக் கதை
உங்களுடைய மாத வருமானம் என்ன ?
ஆசிரியரானுல் (குறைந்தபட்சம்)
5. 220-00 இலிகிதரானுல் (குறைந்தபட்சம்)
গুচি . . 250-00
கூட்டுத்தாபன ஊழியரானுல்
(குறைந்தபட்சம்) ரூ. 272-00 வங்கி ஊழியரானுல்
(குறைந்தபட்சம் ரூ. 258-00 ஃ சராசரி வருமானம் ரூ. 250-00 அப்படியானுல் அதன் 翡 பங்கு = சதம் - 50. இந்த அற்பத் தொகையை நீங்கள் ஈழத்து இலக்கியத்திற்காகச் செலவிடமுடியாதா? நிச்சயமாக முடியும்! இன்றே 'மலர்' சந்தாதாரர்களாகச் சேருங்கள். ஆண்டுச்சந்தா ரூ. 6/- மட்டுமே.
21, மத்திய வீதி, மட்டக்களப்பு.

Page 31
E}|h 95)IllalÍ
一崇一
புதிய சஞ்சிகை ஒன்று ஈழத்தில் வெளி வருகிற தென் ரு ல், பெரும் பாலோர் உதிர்க்கும்கருத்து, 'இவங் கட பேப்பரைத் தெரியாதா? இந்தி யாப் பத்திரிகைகளோட போட்டி போட இவங்களால முடியுமா? - பலர் தெரிவிப்பது, 'வீண் முயற்சி எத்தனையோபேர் தொடங்கி அறுந்து போனுங்க. இவங்களும் அதே கதை தான்". சிலர், 'பாராட்டத்தக்க முயற்சி. நம்மவர் முயற்சியை நாமே ஆதரிக்கவேண்டும்' மிக ச் சில ர் சொல்வது, 'உங்கள் பத்திரிகை நன்ருக இருக்கிறது. இதோ எனது ஒருவருடச் சந்தா!'
இந்தப் பின்னணியில், மட்டுநக ரில் இருந்து 'மலர்' என்ற இலக் கியப் பத் திரிகை வெளிவருகிறது என்ற செய்தியை மட்டும் கொண்டு பத்திரிகையைப் பார்க்காமலே, பத் திரிகை வெளிவருமுன்பே, மன்னுரில் உள்ள இ லக் கி ய அன்பர்களிட மிருந்து 25 ஆண்டுச்சந்தா சேர்த்து, அதற்கான பணத்தையும் கூடவே செக்காக அனுப்பியிருந்தார் ஒரு அன்பர்.
நெஞ்சை நெகிழச்செய்யும் இந்த அனுபவம் 'மலர்' வெளியீட்டுக் குழுவினருக்கு ஏற்பட்டது.
Gurud GigFGoa (Lip Service) மட்டுமே செய்கிற இன்றைய இலக் கியஉலகில், தேவையான - உருப்படி யான பணி இதைப்போல் வேறில்லை யென நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.
- சேது'
 
 
 

29
களுக்கு சிரித்து ஈடுகொடுக்க முடியாமல் எனக் குள்ளேயே வருத்தப்பட்டுக் கொண்டேன்.
அன்று வெள்ளிக்கிழமை. வழக்கத்திற்கு விரோ
தமாக அதிகாலையில் எழுந்துவிட்டேன். அலுவல கத்திற்கு சிறிது நேரத்திற்கு முன்னரே சென்று
இருக்கையில் அமர்ந்து கொண்டேன்.
'இந்தாங்க, உங்களுக்கு இண்டைக்கு ஒரு கடிதம் வந்திருக்கு கடிதத்தைத் தந்துவிட்டுப்
போய்க் கொண்டிருந்தான் அலுவலக வேலையாள். நல்ல விஷயமாத்தான் இருக்கும், வெள்ளிக்கிழமை யும் நாத்துமா கடவுளைக் கும்பிட்டதுக்கு நல்ல பலன். அப்பாடி . . தந்தியைப் பிரிக்கும் பர பரப்புடன் கடிதத்தைப் பிரித்தேன். அன்புள்ள தம்பி,
நீ இங்கிருந்து போனுப் பிறகு நான் உனக்குக் கடிதம் எதுவும் எழுவில்லை. சிவராசா இரண்டொரு முறை உனக்கு எழு தி யதா க ச் சொனனுர், இண்டைக்குத்தான் கடிதம் எழுதுவதற்குரிய முக் கியத்துவம் வந்திருக்கிறது. அத்தான் கொஞ்ச நாளா நல்லாய் நடப்பதாக அக்கம் பக்கத்தா ரெல்லாம் வந்து என்னிடஞ் சொன்ஞர்கள். ஒரு நாள் அவர் சிவராசாவிடம் வந்து ஏதோ கதைத்து விட்டுச் சென்ருர் சிவராசா அண்டு பின்னேரம் வீட்ட வந்து 'அவர் இப்ப திருந்தி விட்டார் போல இருக்கு உங்களோட சந்தோஷமா இருக்கப் போருராம்', ஒரு சந்தர்ப்பம் கொடுத்துப் பாருங் கோ என்று சொன்னுர் அம்மாவும் ஒம் எண்டு சொன்னு உனக்கும் அறிவிக்கவா என்டு சிவராசா கேட்டார். நான் தான் இப்போதைக்கு வேண்டாம் என்டு சொன்னேன்.
நானும் அம்மாவும் பிள்ளைகளும் நம்பிக்கை யோடு அத்தானுடைய வீட்டுக்குப் போனுேம், அத் தான் நல்ல தனமாக எல்லோரோடும் பழகி ஞர் இரண்டே இரண்டு கிழமைக்குள் திரும்பவும் குணத்தை மாற்றிக்கொண்டார். அடி உதை முன்னில் பார்க்கக் கூடியது.
சிவராசாவிற்கு ஆள் சொல்லி அனுப்பிவிட்டு திரும்பவும் அவ்வளவு பேரும் தகர வீட்டைத் தஞ்சமடைந்தோம்.
தம்பி, எனக்குச் சொல்லப் பயமாயிருக்கிறது. நான் மீண்டும் கர்ப்பமாயிருக்கிறேன். என்ன
அத்தானுக்குச் சந்தர்ப்பத்தைக் கொடுக்கப் போய், உனக்கும் எனக்கும், எல்லோருக்கும் சங் கடத்தைத் தேடிக்கொண்டுவந்து விட்டேன். என் னேடு கூடப்பிறந்தவன் நீ. . . நீ என்னை மன் னிக்காவிட்டால் வேறுயார் மன்னிக்கப்போகிருர் தள்?
இப்படிக்கு உனது அன்புள்ள அக்கா,
அருள்மணி.
(முற்றும்)

Page 32
'மலர் கன்னி இதழின் வெற்றிக்கு உறுதுணைத் தது இதுதான் என்று எந்த ஒன்றையும் எடுத்த எடுப்பில் குத்துமதிப்பாகக் கூற் இயலாமல் இருப் பதற்கு விமர்சகனின் கையாலாகாத்தனம் காரண மல்ல; எல்லாமே சராசரியாக ரசனையின் பீடத் தைத் தொடத்தான் செய்தன. நிஜமலரின் வெற் றிக்கு அதன் வண்ணமும், அமைப்பும், நறுமண மும் காரணங்களாகி விடுவதைப்ப்ோல் சென்ற இலக்கிய மலரின் எடுப்புக்கு கட்டுரையும் கவிதை யும் சிறுகதையும் ஒருங்கே ஒத்துழைத்திருக்கின் றன. மலரின் வண்ணமா, அமைப்பா மணமா சிறந்தது என்ற மனத்தை லாகிரிப்பது என்ற சிக்கலான பிரச்னைக்கு பிறிதுபட்ட ரசனேக்காரர் sଜft ஒவ்வொன்றைக் காரணமாக்கலாம். எனக்கு மலரின் நினைவுப் பீடத்தை வசீகரிக்கும் நறுமணத் தில்தான் ரசனையும் ஈடுபாடும் என்பதனுல் இலக் கிய உலகில் அந்த இடத்தை என்னளவில் சிறு கதை பெறும்பட்சத்தில் அதுபற்றியே என் விமர் சனத்தை எழுதுகிறேன்.
பிரசுரமாகியிருந்த சிறு க தை களி ல் ஒன்று முடிவுபெறவில்லை என்பதஞல் அதுஜன விமர்சனத் தில் சேர்த்துக்கொள்ள இயலவில்லை. எ ஞ் சிய மூன்று க  ைத க ளி ல் அருள் செல்வநாயகத் தின் கடல் தந்த காவ லன் சரித்திரத்திடம் விமர்சனக் கட்டு
கருவைப் பெற்ற து -- எ ன் ப த னு ல் அதுவும்
பரிசுபெற்ற தை
போட்டிக்கு நிற்கவில்லை. ஆக கவிதா வின் யுகங் 6|60|8 கள் கணக்கல்ல வும் ஆனுஸாணுவின் வர்ண பேதமும் தான் போட் டிக்கு நிற்கின்றன. கவி Liqë தாவின் யுகங்கள் கணக்
கல்ல ஒரு காதல் கதை: GIT தன் கதைக் శ్లో g2005 FIT5ET (p. 20. ரண பெண்ணின் குடும்ப வாழ்வின் பின்னணியில் பெற்றிருக்கிருர், ஏன் ஒன்றில் மற்றது சிறந்திருக்கிறது என்று ஒப்பிடுத லில் விமர்சிப்பதுவும் கரு அளவில் பிடித்த @ೇ ಗ್ರ! ஏன் தன்னில் நன்முக அமைந்துள்ளது என்று விமர் சிப்பதும் சாத்தியமானதே. பின் கூறிய முறையில் எனக்குப் பிடித்த சிறுகதையை விமர்சிக்கும் நிலை யையே நான் கைக்கொள்ளுகிறேன்:
வாழ்க்கையோடு நேரடியாக ஆழ்ந்த ಆ.೧! பைக் கருவளவில்-என்று தற்சமயத்துக்கு எடுத்துக் கொள்ளலாம்-கொண்டிருப்பதனுல் ஆனுஸாணுவின் வர்ணபேதம் தான் எனக்குப் பிடித்த சிறுகதை. பிடித்துவிட்ட சிறு கதை என்பதனல் அதனில் குறைகளே இல்லை என்று ஒருபக்க நியாயம் கதைகக யாரில்லே. விமர்சனத்தில் நிறைகளை விடக்
 
 
 
 
 

குறைகளே கூடுதலாய்க் கூறப்பட்டாலும் அது பிடித்த கதை' என்ற முத்திரையை விழுங்கிவிடாது.
கதையை வாசிக்குமுன் தலைப்பே அறியப்படுவ
தனுல் கதைத் தலைப்பின் பிடித்தமும் விமர்சக னிடம் ஒரு பரிவைப் பெற்றுவிடுகிறது. வர்ணபே தம் என்ற தலைப்பு மிக அருமையான ஒரு சொற்
கட்டே வானவில்லின் வர்ணங்கள் ஒனருே டொன்று முயங்கியதாய்த் தென்படினும் பேதம்
காட்டாது விடவில்லை. இதையே தலைப்பு நினைக்கச்
செய்வதிலும் சொற்கூட்டு ஒர் இசைவைக் கொண் டிருப்பதிலும் ஆனஸாணுவிற்கு ஒரு வெற்றியே. அதேநேரம் கதையின் கருவின் தன்மையையும்
தலைப்பு தாங்கி நிற்கவே செய்வது ஆசிரியரின் ரசனு ஞானத்திற்கு ஒரு மதிப்பீடாகும்.
கருவைப் பொறுத்தமட்டில் வர்ணபேதம்
வாழ்க்கையை மிக ஒட்டியே நிற்கிறது. கருவைப் பிரதிபலிக்கும் பாத்திரம் சுபைதா அப்படி ஓர் அசாதாரண படைப்பு இல்லாவிட்டாலும் பாத்திர தர்மம் கெட்டுவிடாதவாறு ஆக்கப்பட்டிருக்கும் முயற்ச்சி பாராட்டத்தக்கதே நாகரிகத்தின் சுவடு
6.
氹D厚。
க்குப் த்து
சேகு இஸ்ஸதீன்.
யும் அவள் திரட்டி வைத்திருப்பதாயும் காண்பிக்
கப்படுகிருள்.
களையும், முன்னேற்றத் தின், வாழ்வின் ஆடம் பரத்தின் வெளிப்பான நிறங்களையும் விரும்பிய ஒரு பெண் எப்படித் தன் குடும்ப வாழ்வில் தன் உணர்ச்சிகட்கு மதிப்ப ளித்தாள் என்பதையும் தன் எண்ணங்களை பிற பாத்திரங்களின் சேர்க் கையால் எங்ஙனம் பிரதி பலித்தாள் என்பதையும் ஆனஸான அணு கி இருக்கும் முறை எழுத் துலகில் அவருக்குள்ள முதிர்வை எடைபோட் டுக் காட்டத்தான் செய் கின்றன. தனது இச்சைக் குரிய வாழ் க் கை க் கு வே ண் டி யிருந்த முற் போக்குக் கருத்துகளை
மெளலவியோடு சுபைதாவின் வாழ்க்கை ஒரு வருத்த நாடகம். மெளலவியின் ஞானுேபதேசங் கள் அவள் தேவையைப் பூர்த்தி செய்யாத போதில் தனக்குள் அவள் குமுறிக்கொள்ளும் ஆரம்ப கட் டம் அவள் மனநிலையைச் சித்தரிக்கப் போதுமா னதே. மலரின் பக்கத்தில் வட்டமிடும் வண்டுகளுக்
குத் தேன் தேவையா? சுவைகளின் அநித்தியமான உணர்வுகள் பற்றிய இதோபதேசம் தேவையா? என்று தேவைத்தத்துவம் கதைக்கும் போதெல்
லாம் அவள் பாத்திரதர்மம் சிதைவுருமலேயே பின்
னப் பட்டிருக்கிருள். மெளலவி தன் இச்சைக்குப்
_| 1

Page 33
போதுமான தரவு அல்ல என்பதை அவள் நன்றுகச் கண்டு கொண்டதும் விவாகரத்தின் மூலம் முடிவு தேடும் வன்மை அவள் தன்மையே. இந்த விவகா ரத்தின் பின்னணியில் அவளுக்கிருந்த தன்னம்பிக் கையும், தன் அழகிலிருந்து சரியான கணிப்பும் அவள் கிளியோபாத்திராவின் கூற்றை மேற்கோள் காட்டுவதிலிருந்து புலனுக்கப்படுகின்றது. மெளலவி என்னும் வர்ணம் அவள் வாழ்க்கையில் அப்பி விட் டிருந்தாலும் அதை மாற்ற முடியாமல் தனக்குப் பொருத்தமான வர்ணத்தை ரபீக் மூலம் பெற்றுக் கொள்ளுவது சரியான கைகாரத்தனமே யதார்த்த நிலையில் சுபைதா போன்ற ஒரு பாத்திரத்தின் நட
மாட்டம் அபூர்வமல்ல.
ரபீக்கோடு அவள் வாழ்வு சோபிக்கத்தான் சோபித்தது. அது நியாயமான அணுகுதலே. பாத் திரத்தின் தன்மைக்குப் பகட்டுக் காட்ட பொய்யான வர்ணங்கள் தீட்டிக்காட்ட ஆசிரியர் விரும்பவில்லை. இது ஒர் உன்னத நிலையே. இருப்பினும் ஆனுஸாணு தாமாகவே தம் வழி விட்டுப்போய் பாத்திர தர் மத்தை வலிந்து கறைப்படுத்துவது - ஒர் அபநோக் கில் - இங்கு ஒரு படிந்துவிட்ட மாசுதான். அவர் ஏன் அதனை ஆதாயப்படுத்தக்கூடாது என்ற வக்ர மான கேள்வி ஆபாச உணர்வை எழுப்புவது பாத் திரக் கணிப்பை தவருக்க வழிகோலுகிறது. இப் பொழுதோ நான் நாக்கு ருசி தெரியாதவனிடம் அமுத கலசமாக நின்றேன்’ என்று பொருமும் சுபை தாவின் மனுேநிலை வேறு, முன்கூற்றைக் கூறும் பரத்தை மனுேநிலை வேறு. இங்கு ஆசிரியர் அளந்து கொடுப்பதை மறந்து அள்ளிக் கொடுத்திருப்பது சரியல்ல. அவளின் மேல் வீணுன அபவாதத்தைக் கிளப்பச் செய்த முயற்சி போல் தெரிகிறது.
ரபீக்கின் கொலைக்கு ஆசிரியர் அதிக விளக்கம் கொடுக்காமல் நழுவும் முயற்சி ஏன் என்று சரியாக விளங்கவில்லை. சுபைதாவை - கவர்ச்சிமையமாக வைக்க ஆசிரியர் விரும்பியிருந்தால் ர பீ க் கி ன் கொலைக்கு அழுத்தம் கொடுக்காமல் வி ட் ட து சரியே. ஆனல் பின்னுல் கதையில் வரும் அக்கிராச னர் சின்ன மரக்காயருக்கு ஏன் அதிக விளக்கம்
"என் புரியவில்லை.
அக்கிராசனர் சி ன் ன ம  ைர க் கா ய ரி ன்
தொடர்பை சுபைதா மூலம் விளக்க வருவதுதான் முறை அதை விட்டு கருவுக்குத் துணையாக இன்னு
மொரு புதுக்கருவை இணைக்க முயலும் போது பிர தான கருவில் தளர்வு ஏற்பட்டுவிடுகிறது. சின்ன மரக்காயர் பாத்திரம் ஆசிரியர் மனதில் உருவாகி வளர்ந்தபோதில் ஆசிரியருக்கு தன் பாத்திரத்தில் ஒர் அவநம்பிக்கையும் மதிப்பின்மையும் விஷ விரு க்ஷமாய் எழுந்ததில் அதை வஞ்சம் தீர்த்துக்கொள் ளும் மனப்பாங்கில் நடந்துகொண்டிருப்பது முறை யல்ல. இருப்பினும் கின்னமரைக்காயரின் அறிமுகம் சுபைதாவின் உள்ள எச்சங்களைப் புரிந்து கொள்ள
 
 
 
 
 
 
 
 

3
ஏதுவாயிருக்கிறது. சுபைதாவுக்கு எத்தனையோடு எத்தனையைச் சேர்த்தால் ஐந்தாகும் என்பது புரிகி கிறது என்ற விஷயத்தைத் தெளிவாக்குவது சின்ன மரைக்காயரின் பாத்திரம்தான். அவள் தன் அலு வல்களை முடித்துக்கொள்ள அவரை 15 TG) th J. LIT வம் அவளுக்கு உரிய ஒன்றே. சின்னமரைக்காயரின் ஆழ நீளங்களை புகை வண்டியில் அவள் புரிந்து கொள்ளும் திறமை அவளுக்கு ஆண்களின் குணங் களில் உள்ள ஈடுபாட்டைத்தான் காட்டுகின்றது. அப்படியான அவளின் குணங்களை அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தெளித்து வாசகர்களுக்கும் வேலை வைத்திருப்பது ஆனுஸாணுவிற்கு இந்தக் கதை மூலம் ஏற்பட்டிருக்கும் ஒரு புதுத்திறமை என்றே நம்பவேண்டும்.
கதையின் உருவம் அப்படி ஒன்றும் விமர்சிக்கக் கூடிய புதுமையைக் கொண்டிருக்கவில்லை. முடிவுக்கு முன் தொடங்கி ஆரம்பத்திற்குத் தாவிக் கதையை நடத்திச்செல்லும் உத்தி சாதாரணமானதே. விறு விறுப்பைப் பொறுத்தமட்டில் ச ரா ச ரி யை த் தாண்டிவிட்டிருப்பது குறிப்பிடத்தக்க வெற்றியே.
மெளலவியின் வர்ணங்களும், ரபீக்கின் வர்ணங் களும் தனித்தனியானவை. இடையில் ஏற்படும் வர் ணக் கலப்பு வர்னபேதத்தை மறைக்கவே இல்லை. பின் வந்த சின்னமரைக்காயரின் வர்ணங்கள் ரபீக் கின் வர்ணங்களோடு கலந்து கலப்பும் மயக்கமும் காட்டினுலும் பேதத்தையே பெரிதாக்குகின்றன. ஒவ்வொரு வர்ணமும் தன் இயல்பில் பேதமாகுவ தும் வர்னபேதம்தான், ரபீக் வாங்கி மாட்டிய புருக்களின் ம ணி க் கண் க ளே ப் பார்க்கக் கூசும் சுபைதாவின் தடுமாற்றமும் வர்ணபேதம்தான்.
கடைசியாக, ஒவ்வொரு பாகத்திற்கும் இடப் பட்ட தலைப்பையிட்டு ஒரு வார்த்தை நிறங்களுக்கு தனித்துவம் உண்டு. ஒவ்வொரு நிறமும் ஒவ்வொரு இனித கு ன ங் க ளே க் காட்டும் அர்த்தத்தைக் கொண்டுள்ளன. ஆணுல் இந்த ஆராய்ச்சியை ஆணு ஸானு அறிந்துகொண்டிருப்பதாய் படவில்லை. பகுதி களுக்குத் தலைப்பு வேண்டுமே என்பதற்காக அதிர்ஷ் டச் சீட்டிழுத்துப் போட்டதுபோல் இருக்கிறது. சுபைதாவின் வாழ்க்கை மெளலவியோடு இருண்டி ருந்ததென்முல் அதன் தலைப்பு கறுப்பு என்றும், ரபீக்கோடு பசுமையாய் இருந்ததென்ருல் பச்சை' என்றும் மற்றவையும் இப் படி யே பொருத்தம் பார்த்து அமைக்கப்பட்டிருக்கவேண்டும். இது கவ னிக்கப்படவேண்டியதொன்றே.
மொத்தத்தில் வ ர் ண பே த ம் சிறந்த படைப்பே, சுபைதாவின் கதை, வாழ்வை விட்டு ஒதுங்கிவிட்ட கதாபாத்திரம் சாலியாவைப் போன் றிருப்பது துரதிர்ஷ்டம்தானென்ருலும் வர்ண பேதம் மலரின் வெளியீடாகிச் சிறந்துவிட்டது என்றே கூறுகின்றேன்.

Page 34
வ்ெவளவு மகிழ்ச் றன. வண்ணுத்திப் பூச் சந்தோஷமாயிருந்து ெ சிவப்பாய், பச்சையும் களின் பூக்களிலிருந்து களைக் கண் இமைக்காது இயற்கையின் பசு மை ( அலுத்துச் சிலுப்பிக்கெ
மனதினுள்ளே குை கும் அந்த வீட்டின் இ சந்தர்ப்பமும் அவளுக்கு
 
 
 
 
 
 

சியாக இந்த வண்ணுத்திப்பூச்சிகள் பறந்து திரிகின் சிகளாய்ப் பிறந்திருந்தால்கூடக் கவலை இல்லாமல் Fத்துப்போயிருக்கலாம்' - பச்சையாய், நீலமாய், நீலமும் சிவப்பும் கோடிட்டதாய் காவிழாச் செடி தேன் குடித்துப் பறந்துதிரியும் வண்ணுத்திப் பூச்சி பார்த்துக்கொண்டிருந்த இராசம்மாவின் மனம், யென்ற குளிர்மையினுள் தோய்ந்த மறுகணமே Tண்டது.
மயும் துன்பங்களேயெல்லாம் ஓரளவு மறக்கவைக் |ந்த இனிமையைக்கூடக் கவலையின்றிப் பார்க்கும் இனி இல்லாமற் போய்விடப்போகின்றது. வரண்
அ வ ளி ன் நெஞ்சிலே பசுமையின் சிறுதலே நீள வேளையிலே வரவிருக்கும் அந்த இழப்பினை, அந்த இழப்பதினை அவள் எப்படியும் தவிர்த்துக்கொள்ள மென்பதில் முழுமூச்சாயிருக்கிருள். எ ப் படி யும் வீடு அவளுக்கில்லாமற்போவதை அவள் அனுமதிக் வதில்லை.
விழாச் செடிகளும், காட்டுச் செவ்வந்திகளுமே த மூடி அடர்ந்திருந்த நாளிலிருந்து, இக்காணியில் கால்கள் பதிந்து, விளையாடி, அலுத்துக் களித்துத் நக்கின்ருள். இளவயதின் பல நினைவுகள் சேமிக்கப் நெஞ்சினுள் அக்காணியைப்பற்றிய செய்திகளும், ங்களுந்தான் மிகுதியாகக் கிடந்தன. அவளது குடும். ஆசை, நிம்மதி, இரத்தம், உழைப்பு யாவையும் , அவற் றை யே அத்திவாரமாயும், உரமாயும் டு அக்காணியில் எழுந்த வீட்டை இராசம்மா மன வாடு பார்த்துக் களித்திருக்கின்ருள். அந்தக் களிப் அளவிடமுடியாத சோகம் ஒரு இழையெனப் பின்னி ாலும், அது அவளுக்கேயுரிய வீடென்ற நினைப்பில் பறியாததோர் பூரிப்பு இராசம்மாவின் இதயத்தி அடர்ந்து செறிந்துதான் இருக்கின்றது. அந்த இத ரிப்பிற்குக்கூட முடிவு வந்தாற்போல.
ழைத்தூறல் ஒய்ந்து மணித்தியாலம் கழிந்த பின் பொழுதில் - என்றும் அவள் வீட்டின் பின்புறத்தி மாமரத்தின் அருகேயுள்ள முதுகுவளைந்த தென்னை டியில் இருந்தவண்ணம் எதையாவது யோசித்துக் டோ அல்லது மெதுவான குரலில் தன்னை மறந்து வண்ணமோ இருப்பாள். சிந்தனைகள் அவையவை
s
ம்போல எங்கெல்லாமோ போய் வழிதெரியாதன
-
ܠܐ
உழன்று குழம் பும் தருணங்கள்தான் அனேகம்.
|

Page 35
தன்னை மறந்த இசை ல யி ப் பி ல் மூழ்கியிருக்கை யில்தான் அவள் மனம் சஞ்சலமேயற்ற அமைதி யினை எய்தும், அந்தக்கான உலகின் சஞ்சரிப்பு முடிந்து மனம் மண்ணுக்கு மீள்கையிலோ, துன்ப நினைவுகள் இறகுகள் சடசடத்துவத்து உட்காரும் பட்டிப்பறவைகளாய் நெஞ்சினுள் உட்கார்ந்து, தமது கூரிய அலகுகளால் இதயத்தைக் கொத்திக் கொண்டிருக்கும். -
-
அவளுக்கு மிகவிருப்பமான பாடல், இரவின் துயிலிலும் அவள் நெஞ்சினுள் துல்லியமாக ஒலித் துக்கொண்டிருப்பதாய் அவளுக்கோர் பிரமை. 'வேலவரே உமைத்தேடி ஒரு மடந்தை விடியுமள வும் காத்திருக்கிற வகையென்ன? என்பது அப் பாடல், அப்பைரவிராகப்பாடல், நெஞ்சையே மயக் கித்தாபத்தைப் பிரவகிக்கும் அந்தக்கீதம் அவள் நெஞ்சோடு ஒன்ருகி, இரத்தம் சதையோடு கலந் ததுபோல ஒன்றிப்போய்விட்டது.
அவள், தான்பயின்ற கீதங்களுக்குத்தான் இது
வரை மயங்கியிருந்தாள். ஆனுல் ஒருமாதகாலத்
துக்கு முன்னிருந்து அவள் தற்செயலாக ஒரு நாள் அவன் மெல்லப்பாடிக்கொண்டுபோன பாட் டினைக்கேட்டதிலிருந்து, கேட்கவிரும்பும் இனியகீத மாக அவனது கீதமே அவளுக்கு மாறிப்போயிற்று. அவள், தனிமையில், மெளனம் சரிந்திருந்த மாலை யின் மையல் வேளைதனில் கேட்ட அவனுடைய பாடல், அந்த வெறும் சினிமாப்பாடல் அவள் நெஞ்சினுள்ளேயே அவளே வியக்கும் புதிய தெம் பினையும் எதிர்பார்ப்பினையும் கொடுத்துவிட்டது.
அவன் பாடிக்கொண்டுபோனதின்பின் மூன்று நாட்கள் கழிய அவனைக் காணவேண்டுமென்று பர பரப்புற்றிருந்த இராசம்மா அவனைக்கண்டாள். அவனுக்கு, பார்த்தவுடன் மனதில் பதியாத தோற் றமாயினும், அந்தக்கட்டுமஸ்தான ஆகிருதியும், ஒட்டவெட்டி முன்புறம் சற்றுக்கும்பலாக விடப் பட்டிருந்த தலைமயிரின் கடுமையும் அவள் கண் களிலே நிறைந்துவிட்டது. அன்று இராசம்மா அறைக்குள்ளிருந்து தன்னை மீறியதோர் வெறி யுணர்ச்சியோடு தான் விரும்பும் அந்தப் பாடலைப் பாடிக்கொண்டிருந்தாள். அப் பை ரவி ராக ப் பனடலின் ஒவ்வொரு சொல்லும் அன்றுதான் பூரண அர்த்தம் பெற்றனபோல நெஞ்சினுள்ளே உணர்வு நெருடிக்கனத்து, அவள் பாடுகையில் நிறைந்த பரிபூரண உணர்வினைப் பெற்ருள். C
乌 (G G
G.
星 G 2
上
(༦)
6
C.
ஈழத்துச் சிறுகதையுலகில் குறுகிய காலத்தில் நிை வர் இளைஞர் செ. யோகநாதன், யோகநாதன் கதைகள்' வருஷங்களும் மூன்று ஆசைகளும் (குறுநாவற் தொகுதி) இவரது நூல்கள். 'சோளகம்' என்ற இவரது சிறுகதை தமி 'அக்கரை இலக்கியம்' என்ற தொகுப்பு நூலில் வெளிவந்து
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

33
மறுநாள் அவனுக்காக அவள் காத்திருந்து, ஒரக்கண்களாலே போலித்தனமாகப் பார்த்து, அவ னுடைய பூ மலர்ந்தாற்போன்ற புன்னகையைக் கண்டு பெருமகிழ்வோடு தன்னை மறந்து பாடுகை பிலே ஏற்படும் பிரகாசமான பரவசம் அவளின் கண்களிலும், கன்னங்களிலும், களிக்கும் உடலிலும் அலையாய் எறிந்தது.
அன்றிரவு, தன் உணர்வுக்குத்தானே அதிசயப் பட்டு உறக்கத்திற்கும் விழிப்பிற்குமாளாகி உறங் கிய பின்னிரவின் போதினிலே இராசம்மா ஒரு கனவு கண்டாள்.
. அவள் ஒயாது வணங்கும் இளமுருகன், அவ ரின் பாட்டைக்கேட்டு மனமிளகி இரங்கி மண் ணிைற்குவந்து தன்னை ஆட்கொள்ளவேண்டும் என்று பாடிக்கொண்டிருக்கின்ருள். வேலவரே உமைத் தேடி ஒரு மடந்தை விடியுமளவும் காத்திருக்கிற வகையென்ன” என்ற அப்பைரவிராகப்பாடல் ஏக்க மாய், இதயத்தின் ஜீவகீதமாய் வீணையின் ஒசை யோடு சேர்ந்து எழுகையில் அவள் நின்ற இடத் தைச்சுற்றி நூருய் ஆயிரமாய் நிறமற்ற மலர்கள் மலர்ந்து விரிந்தன. அவள் மிக விரும்பும் பெரிய போடர் உள்ள சாறியை அணிந்து நெற்றியில், டச்சி தொடங்கும் இடத்திலும், நடு நெற்றியிலு ாய்க் குங்கும திலகங்கள் அணிந்திருந்தாள். அந் தத் திலகங்களைப் பார்த்துவிட்டு அவளுக்குமுன் றல் அவளின் சில சக ஆசிரியைகள் தலைகுனிந்து காண்டு போனதையும் அவள் கண்டாள். பிறகு ார்த்தால் அவள் அந்த மாமரத்தை அடுத்த தன்னை மரவடியில் இருந்தாள். அவள் தேடிய முருகன், அவளின் வீட்டுச் சுவரிலுள்ளது போல ன்னகை சிந்தும் முருகன் தொலைவிலே வந்து கொண்டிருந்தான். அவள் கண்களைத்துழாவி அவ னப் பார்க்கின்ருள். அந்தக்கட்டுமஸ்தான ஆகிருதி ம், ஒட்டவெட்டப்பட்டு முன்புறம் சற்றுக்கும் லாக விடப்பட்ட தலைமயிர்க்கற்றையுமுள்ள அவ ஏக அந்த முருகனின் தோற்றம் மாறுகின்றது. வன்தான். இராசம்மாவின் உள்ளமெல்லாம் காற் பக்கு ஆடிச் சிலிர்க்கும் பூங்கொத்தாயிற்று, அவன் தையுமே கவனியாமல் சிருங்காரம் ததும்பும் மகத்தோடு அவளின் அருகே வந்து . . அவள் டல்திமிறித் திடுக்கிட்டு விழித்தாள்.
என்ன கனவு இது?
அவள் பாடிப் பரவச ாகிப் பக்தியால் தேடும் வலவன் இவன்தானு?
யப் பெருமை தேடிக்கொண்ட சிறுகதைத் தொகுதி) "இருபது ஆகியவை அச்சில் வெளிவந்த க, வாசகர்வட்ட வெளியீடான
பாராட்டுப்பெற்றுள்ளது.
-ஆசிரியர்.

Page 36
அவளுக்கு தனது நெஞ்சின் சிந்தனைகள் பாவ மாய், தீயதாய்ப்பட்டன; பெருமூச்செறிந்தாள்.
பிறகு அவளுக்கு உறக்கமே வரவில்லை. புரண்டு உழன்றவள் கட்டிவில் இருந்து எழுந்து உட்கார்ந்து, துடிக்கின்ற கண்களோடு எவ்வித அர்த்தமுமின்றி இருளைத்துழாவினுள். எல்லாவற்றையும் மீறி அந் தக்கனவுதான் அவளின் நெஞ்சிலும், கண்களிலும் அழியாத ஒவியங்களென வந்து தோன்றிக் கொண் டிருந்தது. வெகு தொலைவில் மழைக் குருவி யொன்று கிறிச்சிட்டுப் பறந்தது. ஏகாந்தமும் நிசப் தமும் கலந்த அந்த நேரத்தில் மெளனத்தைக் கீறிக்கிழித்து அழித்தது போலிருந்தது அந்தக் கீச் சிடல், அதுவே ஒர் சோகத்தின் இழையென அவள் நெஞ்சினுள் எதிரொலித்து விம்மியது.
அவளுக்கு அவ்வீட்டில் உள்ள ஒரே ஆறுத லான மனித உயிரான தாய், அந்தக் குடியிருக் கும் காணியின் எதிர்காலம்பற்றிய விபரத்தை இறுதியாக அறிந்து கொள்வதற்காக, அந்தக்
95 916)ILIGID 一★一
* மலர்' விற்பனைக்காக கல்முனை நோக்கிச் சென்றுகொண்டிருந்தோம். நாங்கள் சென்ற வாடகைக்காரின் பின் பக்கம் கட்டுக்கட்டாக 'மலர்' பிரதி கள் இருந்தன. காரில் வந்த பிரயாணி களில் ஒருவர் அக்கட்டுகளில் இருந்து ஒரு "மலர்' பிரதியை உருவி எடுத் தார். சிறிது அதைப் புரட்டி ஒரு கண்ணுேட்டம் விட்டார். பிறகு, 'என் னேயும் ஒரு சந்தாதாரராகச் சேர்த்துக் கொள்ள முடியுமா? இதோ பணம்' என்று ஒரு பத்து ரூபா நோட்டை நீட்டினுர், எங்களுக்கு ஒரே வியப்பு அவர் இலங்கைச் சர்வகலாசாலையில் ஒரு உதவி விரிவுரையாளர் என்பது தெரிந்ததும் எங்கள் வியப்பு நீங்கிவிட் L-5
தரமான இலக்கிய ஏடென்ருல் விஷயமறிந்தவர்கள் நிச்சயம் விரும்பத் தான் செய்வார்கள் என்பதை இந்தச் சம்பவம் நிரூபித்துவிடுகிறது அல்லவா?
- Garg,
 

காணியை ஈடுபிடித்த தாமோதிரம்பிள்ளையின் வீட் டிற்குப் போயிருந்தாள். இராசம்மா பள்ளிக்கூடத் தாற் திரும்பி வீட்டிற்கு வந்தபோது போனவள் இன்னமும்தான் வந்து சேரவில்லை.
כן
வீட்டின் முன் விருந்தையில் அவளின் ஆசைக் குரிய பூனைக்குட்டி லில்லி, மூலைப்புறமாக தலையை மு ன்ன ங் கா லினுள் சேர்த்துவைத்துக்குறங்கிக் கொண்டு கிடக்கும்.
அடைக்கலம் குருவிகள் இரண்டு ஓயாமல் அறையன்னலில் வந்திருந்து கீச்சிடுவதால், அவை வந்திருக்கட்டுமே என்று ஒரு கடுதாசிப் பெட்டி யை யன்னல் கம்பியில் கட்டிவிட்டாள் இராசம்மா. அந்த வீட்டில் இப்போது அக்குருவிகள் ஒன்றின் அலகினை மற்றென்று கோதிக்கொண்டிருக்கும்.
நான்கு அறைகளும், சமையலறையும் முன் விருந்தையுமுள்ள அந்த வீட்டின் நித்தியவாழ்வு, சில வருஷங்களிலிருந்து இதுவாகவே போய்விட்டது.
வெளிவிருந்தையின் வெண்சுவரிலே, உயரத் தில் முருகனின் பெரியபடம் மாட்டப்பட்டிருந் , தது. சிரித்தமுகத்துடன் அபயங்காட்டிய முரு கனின் கீழே, வேண்டுவார் வேண்டுவதை ஈவான் கண்டாய்' எனப் பெரிய எருத்தில் அச்சிடப்பட்டி ருந்தது. அந்தப்பெரியபடத்தின் கீழே, காலஞ் சென்ற அவளின் தகப்பன் திருநாவுக்கரசரின்படம் தூங்கியது. படத்திற்கு குங்குமசந்தனம் பூசப் பட்டிருந்தது.
தகப்பனின் படத்தையும், முருகனையும் பார்த்து விட்டுத்தான் கதவோரமாக உள்ள செருப்பை மாட்டிக்கொண்டு அவள் பாடசாலைக்குப் புறப்படு வாள். அவரின் புகைப்படத்தின் முகத்தையே அவள் உற்றுப்பார்த்துவிட்டு அடிக்கடி பெருமூச் செ றி வா ள். அந்த முகத்திலேதான் எத்தனை நிறைவேழுத ஆசைகள் புதைந்து மறைந்து கிடக்கின்றன!
இந்தியாவிற்குப் போய்ச்சங்கீதம் படித்துவிட்டு சங்கீதபூஷணமாக அவள் வீட்டிற்குத்திரும்பிய போது, திருநாவுக்கரசர் கண்களில் துளிர்த்த கண்ணிரை அடக்கமுடியாத தளதளப்போடு மகளை நெஞ்சார இறுகத்தழுவி மகிழ்ந்த புள காங்கிதத்தை இராசம்மா அவர் முகத்தின் பொலிவிலே மாவ சீகமாகக் கண்டாள். அவளின் ஒரேயொரு திரவியம் இராசம்மா என்று அவர் அடிக்கடி சொல் வார்.
இராசம்மாவின் வட்டமான முகம் அப்போது பூரிப்பினல் பொலிந்திருந்தது. என்றும் நெற்றி யில் பளிச்சிட்டுத்துலங்கும் கறுப்புத்திலகம் அவள் முகத்தினை வெட்டியடிக்கும் மின்னலென காணும் எவரின் நெஞ் சிலும் பதியவைக்குமளவிற்குக் கவர்ச்சிகரமாயிருந்தது தகப்பனைப்போலவே தான் பெரியவிழிகள் இராசம்மாவிற்கு அந்த விழிகள்ே இராசம்மாவின் எல்லா அழகிற்குமான அந்தரங் கம் என்று அவளைக்காண்பவர்களும், அவளோடு பயின்றவர்களும் சொன்னதுண்டு. அவள் கதைக் கும்போது கண் களை ச் சிமி ட் டி ச் சிமிட்டித்தான்
_|| '

Page 37
கதைப்பாள். அந்த வசீகரமான கண்சிமிட்டலும் அவளின் சொற்களாயிருந்தன.
s ஆனுல் இவ்வேளையில், எட்டு ஆண்டுகள் கழிந்து போன இந்த வேளையில் அவள் முகத்தில் எத்தனை மாற்றங்கள்! அதே வட்ட முகம் கண்கள் சிமிட்டல்,
ஆனல் அந்த முகத்திலிருந்த மோகனமோ,
பூவிலிருந்து போன மணம் போல எப்படியோ திருட் டுப்போய் விட்டது. எவ்வளவுதான் அவள் முயன்ற போதும் கண்களைச் சுற்றிவிழும் கருவட்டங்கள் ஆழக்கோடு கீறிக்கொண்டிருப்பதை அவளால் நிறுத்த முடியவே இல்லை. உடம்பு கூட முன்னை விடச் சற்றுப் பெருத்து, அவளைக் குள்ளமாக்கிக் காட்டியது.
அவளின் த கப்பனுர்திருநாவுக்கரசரின் பெயரை நாகரிகமாகச் சுருக்கி திருமனை' என்ற நாமத் தில் தான் அந்த வீடு அழைக்கப்பட்டது. அந்த விட்டுக் கேற்றுப் பொருத்தப்பட்டிருந்த தூணிலே திருமனை' என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. கேற்றை இழுத்துப்பூட்டும் மறு தூணிலே ஒன்றுமே பொறிக்கப்படாது, ஒரு விழியிழந்த முகத்தைப் போல வெறுமையான நீள் சதுரமே இருந்தது. பள்ளிக்கூடத்திலிருந்து களைப்போடு, குடையைச் சுருக்கியபடி அவள் வருகையில், அதனை - அந்தப் பெயர் பொறிக்கப்படாத தூணிலுள்ள வெறும் நீள் சதுரத்தைப் பார்க்கவே விரும்பாது கேற்றை அவசரமாய்த் திறப்பாள்.
கேற் திறக்கும் சிறீச்சிடலோடு, தகப்பனின் குரலும் அவளுக்குக் கேட்பது போல பிரமை,
'தங்கச்சி, உனக்குக் கலியாணம் முடிச்சுக் கொடுத்தாப் பிறகு, இந்தத் துரணிலை என்ரை மருமகனின்ரை பெயரைப் போடுறதுக்காகத்தான் அதை வெறுமையாய் விட்டிருக்கிறன்.'
மூன்று வருஷங்களின் முன்பு அவளின் தகப்ப ஞர் மாரடைப்பால் இறந்த போது அவள் அவர்
சொன்னவற்றை நினைந்து நினைந்து கலங்கினுள்.
அவரின் பிரேதம் வைக்கப்பட்டிருந்த வாங்கின் அருகே நின்று, கண்கள் மூடி, தான் இறந்ததே பொய்யென்ற நினைவை அவளுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கும் தகப்பனின் உயிரற்ற சடலத்தை அவள் பார்த்துக்கொண்டே நின்ருள். அதே கோலத் தில், கலக்கமற்ற முகத்தோடு தூயவெள்ளை நாஷ னலும் வேட்டியும் அணிந்து, மடித்துக் கையை ஒன்றின் மேலொன்று வைத்து, நீறும் பொட்டு மணிந்த நெற்றியோடு அவள் இன்று தான் அவ ரைப் பார்த்திருக்கின்ருள். அவள் உடலே துய ராகிக் குலுங்கிற்று.
அவள் மனதிலே நிறைந்த சுமை கணத்துக்குக் கணம் அதிகரித்தது; இதயம் வெடிக்க, செய்வ தறியாத ஏக்க நிலையோடு உதட்டைக் கடித்து விம்மியவள் தன்னை மறந்து ஒவென்று கதறினுள்.
ஐயோ, ஐயா போயிட்டீங்களே, என்னை இவறுமையாய் விட்டிட்டுப் போயிட்டீங்களே.'
 

அவள் அழுகையின் துயரம், அவள் அழுகை யைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களின் கண்களி லும் கண்ணிராய் வழிந்தோடிற்று. ஒவ்வொரு வரும் இரக்கப்பட்டார்கள் பெருமூச்செறிந்தார் கள்; அவளை ஆறுதற்படுத்தினர்கள். அங்கு வந் திருந்த தாமோதரம்பிள்ளையும் மனைவியும் கூட

Page 38
36
இராசம்மாவையும் தாயையும் அறுதல் படுத்தி விட்டேசென்ருர்கள்.
இராசம்மா அன்று அழுத அந்த நெஞ்சினைக் கரைக்கும் அழுகை, அனுபவித்த அந்த வேதனை ஆகிய யாவுமே, இன்றும் அந்தத்தூணின் பெய ரிடப்படாத குருட்டு நீள்சதுரத்தைக் காணும் போதிலெல்லாம் துயரோடு விக்கலாய் வெளிவரு கின்றன.
அந்த நீள்சதுரம் இன்றுவரை வெறுமைதான்! ஆனல் அந்த வெறுமையும், விரைவில் நிரம்பிவிடும்
அவளின் த க ப் பனு ம், அவளும் நிரப்பி வைக்கத் துடித்த அந்த வெறுமையேயான நீள் சதுரத்தை யாரோ ஒருவன், அது தாமோதரம் பிள்ளையோ அல்லது வேறு யாரோ ஒருவன் எவ் விதமான மனத்தாங்கலோ கஷ்டமோ இன்றி விரைவில் மாற்றிவிடுவான். சில வேளை க ளி ல் திருமனை' எனற பெயரினைக்கூட அவன் தூக்கி யெறிந்துவிட்டு அவ்வீட்டிற்கு வேறு பெயர் குட்டிக்கொள்ளலாம்!
அவளுக்கு நெஞ்சைப்பிய்த்துக்கொண்டு கண் னிர் வந்தது.
அவள் விம்மி விம்மி அழுதாள்.
அந்த ஆசைக்குரிய அவளின் பூனைக்குட்டி வில்லி தன் வாலினுல் அவளின் கால்களை வருடி மியாவிட்டது.
அவள் கண்களைத் துடைத்துவிட்டு எழுந்தாள்
அடைக்கலம் குருவிகள் இரண்டும் எங்கோ வெளியில் பறந்துபோய் விட்டன. கூட்டின் வாச வில் இரண்டொருவைக்கோற்துண்டுகள் சிதறி வெளியே துருத்தியிருந்தன.
இராசம்மா, மேசையில் இருமுழங்கைகளையும் ஊன்றிக் கைகளால் நாடிக்கு ஆதாரம் கொடுத்த படியே தனக்குச் சிறிது தள்ளி வைக்கப்பட்டிருந்த தம்புராவையே பார்த்துக்கொண்டிருந்தாள். அண் ணுமலைப் பல்கலைக்கழகத்தில் சங்கீதம் பயின்று கொண்டிருந்த நினைவுகள் மேலோங்கி ஆரோஹண கிராமத்தில் நெஞ்சினுள் சுழன்றன: நேற்றைய நிகழ்ச்சிகளாய் மனதை அவை தொட்டன.
இளவயதிலிருந்தே எதற்கும் மெளனமான அமசடக்குப்பேர்வழி இராசம்மா. யாராவது கதைகேட்டால் ஒருமுறுவல் இன்னும் மிஞ்சிட் போனுல் இரண்டொருசொற்கள். ஆண்களோடு தலைநிமிர்ந்து பேசியதெல்லாம் மிகவும்குறைவு பெண்களிலே அவளுக்கென்ருேர் சினேகிதி எந்த காலத்திலுமில்லாதிருந்த போதும், அ வ ளு க் கு அதைப்பற்றிக்கவலையே முகத்திலோ, நெஞ்சிலோ வார்த்தைகளில்தானுே தொனித்ததில்லை. அவள் மீது அனுதாபங்கொண்டு பழகிய திருச்சிமாணவி இராசம்மாவை ஒருநாள் நேருக்கு நேராகவே
 
 

இதைப்பற்றிக் கேட்டபோது பாடமாக்கி வைத் திருந்ததுபோல இராசம்மா பதில் சொன்னுள்:
"சுருதிதான் எனது தாய், லயம் தான் எனது தகப்பன். கானத்திற்கு எது தாய், தகப்பன், சுற் றமோ அவைதான் எனக்கும் தாயும் தகப்பனும் சுற்றமும்’
அந்தத் திருச்சி மாணவி, இராசம்மாவின் 2 கிறுக்குத்தனத்தினை நினைத்துச் சிரித்துக் கொண்டு போப் விட்டாள்.
திருநாவுக்கரசருக்குத் தனது மகிழ்வின் பெரும் , பகுதி மகளாலே தான் ஏற்பட்டிருக்கின்றது என் பதில் பெரும் பூரிப்பு.
அவள் என்றும் ஆடம்பரமாய் உடுத்தியதில்லை. தகப்பனின் கண்டிப்பும், தன்னையே கூர்ந்து கவ னித்திருக்கும் கண்களும் இராசம்மாவின் ஒவ்வொரு செயலின் போக்கிலும் அவளே மிக எச்சரிக்கை யோடு இருக்கவைத்தது.
அவளுக்கேயுரிய அந்தக்காணியை, தாமோ தரம்பிள்ளையிடம் முதலில் சிறுபணத்தொகைக்கு திருநாவுக்கரசர் ஈட்டில் வைத்துத்தான் அவளைச் சங்கீதம் படிக்க இந் தி யாவு க் கு அனுப்பினுர், நகரத்திலுள்ள பலசரக்குக் கடையில் கணக்குப் பிள்ளையாக விருந்த திருநாவுக்கரசருக்கு தன்னு டைய அந்த ஆசை தகுதி மீறியதாகத் தெரிய வில்லை. மகள் படித்துவிட்டு வருவதற்கிடையில் கொட்டிலாக, ஒரு சிறு குடிசையாக உள்ள தன் வீட்டை, நாலு அறைகளும், முன் விருந்தையும் சமையலறையுமுள்ள ஒரு கல்வீடாகக் கட்டிவிடுவ தென்று அவர் மனதினுள்ளேயே சபதம் பூண்டி ருந்தார். அந்தச் சபதத்தையும் தாமோதரம்பிள்ளை யிடம் மேலும் பெற்றுக்கொண்ட கடனுல் நிறை வேற்றிக் கொண்டார் அவர்.
ஒலை வீட்டிலிருந்து இந்தியாவிற்குப் போன இராசம்மா சங்கீத பூஷணமாகத் திரும்பி வந்த போது கல்விட்டிலே காலடி எடுத்து உள்ளே வந் தாள். பூரித்த முகத்தோடும், பொலிந்த புன்னகை யோடும் அவளைப் பார்த்துக் கொண்டிருந்த தகப் பனை அவள் கண்கள் பனிக்க நோக்கினுள் உட லேக் கவனியாது மகளிற்காக எல்லா உழைப்பை யும் கொடுத்துத் தோல் மூடிய எலும்புக் கூடாய் நிற்கும் தன் தகப்பணுருக்கு, அந்தத் தெய்வது திற்கு எதனைத் தன்னுல் திருப்பிக்கொடுக்க வல் லமையுள்ளது என அவள் தன்னுள்ளேயே குமைந் தாள்.
தகப்பனுே சிறுவனின் களிப்பில் பரபரத்தார். 'இராசு இஞ்சை வந்து பாரம்மா . அவர் காட்டியதை அவள் பார்த்தாள். கேற்றின் இருபுறத் தூண்களிலும் பெயர் பொறிப்பதற்காக இரு நீள் சதுரங்கள் வெட்டப் பட்டிருந்தன.
அவர் அந்த வெறுமையைக்காட்டிச் சொன் ஞர்.

Page 39
'தங்கச்சி, இந்தப்பக்கத்திலை வீட்டின்ரைபேர், மற்றப்பக்கத்திலே வீ ட் டு ச் சொந்தக்காரரின்ரை பேர் போடவேணும்"
இராசம்மா வழமைபோலப் புன்முறுவல் செய் தாள்.
உங்கடை பேரை ச் சுருக் கி , வீட்டுக்குத் திருமனை எண்டு பேர்வைப்பம், வீட்டுச் சொந் தக்காரரும் நீங்கதானே. அதிலே உங்கடை பேரைப் போடுவம்'
இயல்பாகவே சிரிக்கும் திருநாவுக்கரசர் இப் போது தன்னைமீறி ஒவென்று சிரித்து அடங்கி விட்டுச் சொன்னர்.
'வீட்டுக்கு வேணுமெண்டால் நீ விரும்புகிற மாதிரிப் பேரை வை. ஆனல் வீட்டுச் சொந்தக் காரர் ஆரெண்டு உனக்குத் தெரியுமே? தங்கச்சி, உனக்குக் கலியாணம் செய்துகொடுத்தாப்பிறகு, இந் தத் தூணிலே என்ரை மருமகனின்ரை பேரைப் போடுறத்துக்காகத்தான் அதை வெறுமையாய் விட்டிருக்கிறன்'
தகப்பன் அடங்கிய குரலிற் சொன்னபோது இராசம்மா நாணத்தோடு உள்ளே போனவள், விருந்தைச்சுவரை நிமிர்ந்துபார்த்தாள், அந்த அபயகரமுருகனின் கீழே வேண்டுவார் வேண்டு வதை ஈவான் கண்டாய்' என எழுதியிருந்ததை வாய்க்குள் வாசித்து முணுமுணுத்துவிட்டு அவனை வணங்கினுள் பக்தியும் ஒருவித சுயநலம்தான் என மனம் எண்ணிற்று.
"ஒருநாள் ராகங்களில் சிறந்த ஸாவேரிராகத் தில் அவள் பாட்டுப்படித்துக்கொண்டிருந்தாள். யாருமே மயங்கும் கானத்தில் அப்போதுதான் அங்கு வந்துநின்ற தகப்பன் மெய்மறந்து போனுர். மகளின் திறனிலே நெஞ்சுபூரித்தது அவருக்கு. வீட்டுவேலைகளே கடமை, கணவன் சொல்வதே மந்திரம் என ஒழுகிவரும் மனைவியையும் அழைத் துக்கொண்டுவந்து, அவள் பாடிப் பரவசமாயிருந்த தோற்றத்தைக் காண்பித்தார். சங்கீதமென்ற பாஷையில் அவர்கள் கட்டுண்டார்கள்.
தாய்க்கு இப்போது அவள் சங்கீதத்தை அனு பவிப்பதல்ல இன்பம் வருஷங்களோடு ஏறிவரும் மகளின் வயதை அவள் நினைத்துக்கொண்டாள். அவள் சங்கீதபூஷணமாக வந்துவிட்டாள். ஆணுல் ஆசிரிய பதவியோ கிடைக்கவில்லை. அவள் உழைப் பதுஎப்போது, கடன்தீர்வது எந்நாளில், திருமணஞ் செய்து பிள்ளைகுட்டிகளோடு கலகலப்பாய் உலவு வது எவ்வேளை என்ற கேள்விகள் தாயின் யோசனை ஆயின. அதுவே மனக்குழப்பமாய், பிரார்த்தனைக் குரல்கள் ஆயின தாய்க்கு வீடுகட்டி மகளைப் படிப்பிப்பதற்காக தானும் கணவனும் வெறும் சோறுதின்ற நாட்களின் வேதனைக்கு ஆனந்தமயமான அறுவடைவரும் என மிக நம்
பிக்கையோடு எதிர்பார்த்திருந்தாள்.
அந்த வீடு, தன் கணவனின் வாழ்வின் நாட் களைக்குறைத்து வருகிறது என்பதை மனைவி அறி வாள். நித்திரையின் பிதற்றலிலும் மகளும், வீடும்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கடனும்தான் அவரின் சொற்களாயிருந்ததை நெடு நேரம்வரை உறக்கம் வராது புரளும் மனைவியே அறிவாள்.
ஒருநாள் திருநாவுக்கரசர், இசைக்கல்லூரி ஆசிரியர் ஒருவரைத் தன்னுடைய வீட்டிற்குக் கூட்டிக்கொண்டு வந்தார்.
வீட்டின் மூடிவைத்த கஷ்டங்களெல்லாம் மெல்ல மெல்லத் தன் முன் அனுங்குவதைக் கண்ட
ஒரு வாரமாய் அவள் பாடவில்லை.
இருபத்தெட்டு வயதான தன் வாழ்வை அவ் வாரத்திலேதான் அவள் ஆழமாகச் சிந்தித்தாள். அனேக விஷயங்களை இழந்துவிட்டது போன்றதோர் ஏக்கம் நெஞ்சிலிருந்து சீறிற்று.
தன்னுேடு படித்தவர்கள், தெரிந்தவர்கள் பலர் தன்னுடைய திருமணம் எப்போது என்று விசாரித் ததையெல்லாம் முன்பு அவள் கேட்டால் சின மடைவாள். ஆணுல் அந்தச் சினமோ இப்போது பலவீனமடைந்து விட்டது.
அவளறிந்த பலர், அவள் வயதான பலர், அவள் படித்து விட்டு வந்து வீட்டினுள்ளிருக்கும் ஒராண்டுக்காலத்தினுள் திருமணமாகி, பிள்ளை களோடு போனதை அவள் கண்டாள். அப்போ தெல்லாம் அவளின் நெஞ்சம் உடைந்தாற் போல அவள் உணர்ந்தாளாயினும் அதை வெளிக்காட் டிக் கொள்ளவே இல்லை.
மகள் யோசித்திருப்பதைக் காணும்போது, பாம்பின் கால் பாம்பறிந்த மனநிலையில் தாய் கவலையுற்ருள். ஒரிரு நாட்கள் திருநாவுக்கரசரிடமும் இதனைச் சொன்னுள். தன் பெரிய கண்களால் மனே வியைப்பார்த்துச் சிரித்துக் கொண்டு சொன்னுர் திருநாவுக்கரசர்.
* நீ இராசுவைப் பெத்தனியே தவிர அவ ளின்ரை மனம் உனக்குத் தெரியாது. அவளுக்கா கலியாணத்திலே ஆசையெண்டு நீ நினைக்கிருய் உனக்கென்ன தெரியும் அவளைப்பற்றி? அவளுக்கு சங்கீதத்தைப்பற்றித்தான் ஒரே எண்ணம். எப்ப தனக்கு வேலை கிடைக்கும், தன்ரை ஞானத்தைப் பிறருக்கு ஊட்டலாம் என்டதுதான் அவளின்ரை ஒரே யோசனை. அந்த யோசனையையும் அவளுக்கு இனி இல்லாமல் செய்துபோடுவன் . உனக்கு இதொண்டும் விளங்காது. போய் உன்ரை வேலை யைப்பார். அவளுக்குத் தான் அடிபட்டுக் கொண்டு மாப்பிளைமார் வந்து நிக்கப்போருங்கள்'
வெளியே நின்ற மனைவியோடு, உள்ளே நின்ற மகளும் அவர் சொன்னவற்றைக் கேட்டாள்.
மனைவி கணவனுக்கெதிராக எதிர்ச்சொல் பேசி அறியாதவள்; மகளோ இதைப்பற்றிப் பேசவே முடியாதவள்.

Page 40
38
அந்த இசைக்கல்லூரி ஆசிரியர் வீட்டிற்குவந்து
அவளோடு நிறையக் கதைத்தார். அவளோ ஒப் புக்கு இரண்டொரு சொற்களைக் கதைத்துவிட்டுப் பேசாதிருந்தாள். லில்லி அவள் காலினுக்குக் கீழே வந்து வாலால் உரஞ்சிக்கொண்டிருந்தது.
அவள் ஒரு வாரமாய்ப் பாடா திருக்கிருள் என்று திருநாவுக்கரசர் அந்த இசையாசிரியரிடம் சொன்னபோது அவருக்குக் கண்களில் தீட்சண்யம் பொங்க அவளுக்குப்புத்திசொன்னர்.
'அடிக்கடி பாடிக்கொண்டு வந்தால்தான் குரலுக்கு நல்ல மெருகும், பிரகாசமும், பண்பும் ஏற்படும்; அழகாகவும், மதுரமாகவும் பாடவரும் பாடப்பாடத்தானே ராகம்வரும்!"
இராசம்மா ஒன்றுமே பேசாதிருந்தாள்.
குரலுக்கு மெருகும் பிரகாசமும் வந்துதான் என்ன, மனதுக்கு நிம்மதியே இல்லாது இருக்கும் போது!
இரண்டு வாரங்கள் கழிந்தபின், ஒரு திங்கட் கிழமை மிகவும் உற்சாகத்தோடு திருநாவுக்கரசர் மகளிடம் வந்தார்.
'இன்னும் ஒரு மாதத்துக்குள்ளே தங்கச்சிக்கு வேலே வந்திடும். நான் அதுக்குரிய எல்லா வேலே யையும் இந்த ஒரு கிழமைக்குள்ளே பார்த்து முடிச்சுப்போட்டன்.
அந்த வேலைமுடிய அவருக்கு மூவ யிரம் ரூபா வரை செலவாயிற்று என்பதை அவருக்குப்பணம் கொடுத்த தாமோதரம்பிள்ளையே அறிவார். எல் லாமாக இருபதினுயிரம் ரூபா காசும், வட்டிப் பணமாக நாலாயிரம் ரூபாவும் திருநாவுக்கரசரின் பெயரில், தாமோதரம்பிள்ளை வீட்டுக் கணக்குப் புத்த கத்தில் எழுதிவைக்கப்பட்டிருந்தது.
அவள் படிப்பிக்கப்போன பதின்மூன்ரும்மாதத் தில் திருநாவுக்கரசர் திடீரென்று இறந்துபோனுர், அது நடந்துநோய் ஆறேழு மாதங்கள் கழியத் தாமோதரம்பிள்ளை அங்கே வந்தார். மெதுவாகக் கதையைத் தொடங்கிய அவர் தன்னுடைய இரு பத்தி நாலாயிரத்துச் சொச்சரூபா வையும் தரும் படியும், அல்லது அவ் வீட்டையும் காணியையும் தன் பேருக்கு எழுதினுல், தான் ஆருயிரம் ரூபாதருவ தாகவும், எதற்கும் ஒரு மாதத்திற்குள் வந்து தனக்குப்பதில் சொல்லும்படியும் சொல்லிவிட்டுப் போனுர், பிறகு மனமிரங்குபவர்போல ஒன்றரை வருஷங்களாய் அதைப்பற்றி எதுவுமே பேசாதிருந் தார்.
பலர் அவளிடம் அந்த வீட்டினைப்பற்றிக் கேட்டபோது கொஞ்சங்கூட மனதிலே பசை இல் லாமல் அவள் வெற்றுச்சிரிப்புச் சிரித்தாள்:
என்ன இருந்தென்ன? போயென்ன?"
அவர்கள் போன பின் வீடு வந்து, தன் அறைக் குள் நுழைந்தவள் அடைக் கலம் குருவிகள் கீச்
 

விமர்சனக் கட்டுரைக்குப் பரிசு
இம்மாத மலர்' சஞ்சிகையில் இடம் பெற்றுள்ள, கதை, கவிதை, கட்டுரை முதலியவற்றைப் படித்து மு டி த் த பின் இவற்றுள் சிறந்த படைப்பு எது என்று நீங்கள் கருது கிறீர்களோ, அதையிட்டு ஒரு விமர் சனம் எழுதுங்கள். உங்கள் கட்டுரை 'மலர்' சஞ்சிகையின் இரண்டு பக்கங் களுக்கு மேற்படக்கூடாது. (பூல்ஸ்காப் தாளில் 4 பக்கம்) கட்டுரை இம்மாதம் 28ம் திகதிக்கு முன்னர் எங்களுக்குக் கிடைக்கவேண்டும். தெரிவு செய்யப் படும் சிறந்த கட்டுரைக்குப் பரிசு ரூபா 25/- வழங்கப்படும்.
கட்டுரை அனுப்பப்படவேண்டிய முகவரி: ஆசிரியர் மலர்: 21, மத்திய வீதி, மட்டக்களப்பு.
சிட்டுப்பறந்து கொண்டிருப்பதைக் கண்டு மனதிற் குள் ஏதோ தோன்றியவளாய் ஒரு கடுதாசிப் பெட்டியை எடுத்து, முன்புறம் சதுரமாக வாசல் வெட்டி யன்னற்கம்பிகளில் கட்டிவிட்டாள்.
அந்தக் குருவிகள் பிறகு சந்தோஷமாக அவ் வீட்டிற்குள் குடியிருந்து கீச்சிட்டு ஒழுங்கோடு வாழ்ந்தன.
நான்தான் சந்தோஷமாய் இந்த வீட்டிலை இருக்கமுடியவில்லை. நீங்களெண்டாலும் சந்தோஷ மாயிருங்கோ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்ட அவள் முணுமுணுத்தாள்.
நான் ஒரு வெறும் மடைச்சி. முப்பத்திநாலு வயதாப் போச்சு, லயமும் சுருதியுந்தான் எனக்கு எல்லா மெண்டு பொய் சொல்லிக் கொண்டு, என் னேயே ஏமாற்றி, கடைசியிலே எல்லாத்தையும் இழந்துபோய், இப்ப கருகின மரக்கொப்பாய் நிக் கிறன்'
சரியாக ஆறு மாதங்களின் பின்பு, இப்போதும் அதே போல இராசம்மா மேசையில் இரு முழங் கைகளையும் ஊன்றிக் கைகளால் நாடிக்கு ஆதாரம் கொடுத்தபடியே தனக்குச் சிறிது தள்ளிவைக்கப் பட்டிருந்த தம்புராவையே பார்த்துக் கொண்டிருந் தாள்.வேலவரே உமைத்தேடி ஒரு மடந்தை விடிக
-

Page 41
மளவும் காத்திருக்கிற வகையென்ன? என்ற பாட்டு நெஞ்சினுள்ளே தாள சுத்தம் தவழுது கேட்டுச் கொண்டிருந்தது. -
அவள் மேசையிலிருந்த கைக்கடிகாரத்தைப் பார்த்தாள். அவன் வரும் நேரம் ஐந்தரைமணி.
வீட்டின் பின்புறமாகப் போனுள். அவள் வரு வதற்கென்றே காத்திருந்தவன் போல ஒழுங்கை யில் நின்ற அவன் அவளைப் பார்த்துப் புன்னகை செய்தான் கறுப்பும், சிவப்புமான கோட்டுச் சட்டை போட்டிருந்த அவன் மீசையைச் சற்று மொத்தமாக விட்டிருந்தான்.
அவளே வெட்கமின்றி, உடல் முழுவதும் கண்க
ளால் அவன் த ட வி ப் பார் க் கி ரு ன் என்பதை
உணர்ந்த அவள், தன்னை மீறிய வெட்கத்தினுல் தலே குனிந்தாள்,
பள்ளிக்கூடத்திற்குப்போன அவளிற்கு ஒரு எதிர்பாராத அதிர்ச்சி காத்திருந்தது.
ஒரு மாத காலம் முடிய அவளிற்குக் கொழும் புப் பாடசாலைக்கு மாற்றம் வந்திருக்கிறது.
அவள் முற்ருய் மனம் ஒடிந்து போனுள். அவ னுடைய புன்னகை பொலிந்த முகம் கண்களுக்குள் வந்து நின்றது. அந்த வாகான தேகம். முன் கவிந்த தலைமயிர் புன்னகை கூசும் கண்கள். முப்பது வய திற்குள்தான் அவனுக்கு இருக்க வேண்டும். அவன் அவளே ஒவ்வொரு நாளும் பார்த்துப் புன்னகை செய்திருக்கிருன் பட்டுப்போயிருந்த அவளுடைய மனதினேப் பசுமைபெற, துளிர்ப்புற வைத்தவை அவனது புன்னகையும், வசீகரம் பொதிந்த பார்வை களுந்தான். அவளது நெஞ்சம் ஓயாது சஞ்சலம் கொண்டு தவித்தது. ஒப்பிற்குப் படிப்பித்தாள், கதைத்தாள், நடமாடித்திரிந்தாள்.
எட்டாம் வகுப்பிற்குள் போனவள், தலையிடி பொறுக் காது மேசையில் சாய்ந்திருந்ததை கண்ட அவளது மிகப்பிரியமான மாணவி ஒருத்தி அவள் அருகே வந்து, தன் பிளாஸ்கைத்திறந்து தேனி ைெரக் கோப்பைக்குள் ஊற்றினுள்.
அந்த சத்தத்தில் தலைநிமிர்ந்தாள்,இராசம்மா.
மனம் அலுத்திருந்ததாயினும், அவ்வேளையி லே அந்தப் பிஞ்சுச் சிறுமியின் வாத்சல்யத்தைக் கண்ட இராசம்மாவின் கண்கள் பனித்தன. அவள் தளதளத்துக்கதைத்தாள்.
* கடவுளே என்னிலை இரங்கவில்லை. நீ இரங்
கித்தான் என்ன பிரயோசனம்: '
விரக்தி பட்டென்று சொற்களாய்த் தெறித் 卤g。
அவள் அந்தப்பள்ளிக்கூடத்தில் வந்து சேர்ந்த
போதே அவளை எல்லோரும் ஒருமாதிரியாகத்தான்
 
 
 
 
 
 
 
 

பார்த்தார்கள். அவளது மெளனமான, யாரோடும் ஒட்டிப்பழகாத போக்கு, அவளைப்பற்றி அங்கே பல கதைகளையே கிளப்பியது அவளுக்கு ஒரு காதலன் இருந்து அவளை ஏமாற்றிவிட்டானும் அதனல் தான் அவள் இப்படிஒரே விரக்தியாயிருக்கிருளாம்" இராசம்மா அவைகளைக்கேட்டு மனதார வெ தும்பினுள்.
ஒருநாள் அவளைவிட வயது குறைந்த ஆணுல் திருமணமாகி கர்ப்பவதியான ஆசிரியை றேந்தை பின்னிக்கொண்டிருந்ததை இராசம்மா தன்னை மறந்த கவனத்துடன் கூர்ந்து பார்த்துக் கொண் டிருந்தாள். அவள் பார்த்துக்கொண்டிருந்ததைக் கண்ட ஆசிரியை சொன்னுள்:
நீங்க இதைப்பார்த்து என்ன பிரயோசனம் மிஸ், குழந்தை இருக்கிறவை பார்த்தாலும் பய னிருக்கு
அந்த ஆசிரியை கையில் வைத்திருந்தறேந்தை ஊசியைப் பழுக்கக்காய்ச்சி தன் இதயத்தில் ஆழக் குத்தியது போல இ ரா சம்மா துன் பத்தால் நெகிழ்ந்து நாக்கைக்கடித்துக்கொண்டு அன்று லிவு எடுத்து மத்தியானத்தோடு வீட்டிற்குப் போய்
6.
முப்பத்திநாலு வயதான எனக்கா இனித் திருமணமாகிக் குழந்தை பிறக்கப்போகிறது?
சோகந் ததும்பும் முகத்தோடு இராசம்மா பூட்டிய அறையினுள் நின்று நிலக்கண்ணுடிமுன் தன் உருவத்தையே பார்த்துக்கொண்டு மனம் பொருமினுள்.
அந்த வட்டமான முகம் காய்ந்து கருகியிருந் தது. கண்களைச்சுற்றி, அவளின் அழகிற்கு அந் தரங்கமான கண்களைச்சுற்றிக் கருவளையம் பூரண மாய் விழுந்துவிட்டது. மாநிறத்தோலும் இலே சாகச் சுருங்கி வதங்கிய மாம்பழத் தோலெனத் தெரிகிறது. தன்னையறியாது, அந்தக் கண்ணுடிமுன் நின்று அவள் ஒவ்வொரு உடையாகக் களைந்தாள்.
படிக்கும் வேளையில் கண்ணுடி முன் நின்று தன் பொங்கும் இளமையின் அழகை மிக ரகசியமாக அவள் பார்த்து ரசித்து பெருமிதமும், கர்வமும் அடைந்திருக்கிருள் இன்று அதே உடலே, அதே கண் களால் பார்க்கிருள் வாசமும், வண்ணமும், பசு மையுமிழந்த பூவென அவள் உடல் வாடிப்போய் அவள் கண்முன்னே தெரிகிறது.
அவள் கண்களில் நீர் முட்டிற்று அவளின் இளமை, அழகு, வாழ்வு யாவுமே போய்விட்டதா? அவள் கிழவியாகவே போய்விட் டாளா? இந்த உடலை, நாற்பது வயதுக் கோலத்தை யார்தான் இனி விரும்பப்போகிருர்கள்?
இந்தச் சம்பவம் நடந்து ஐந்து மாதங்களின் பின்னர்தான் அவனே இராசம்மா கண்டாள். அந் தப் பசுமை தலையெடுக்க முன் அவள் வாழ்விலே ஆசிரிய இடமாற்றம் என்று இன்னுெரு சோத 2627 t777-2

Page 42
அதிபர் அந்த மாற்றத்தைத்தான் ஒருவாறு தடுத்து நிறுத்துவதாய் அவளுக்கு ஆறுதல் சொன் Ꮆ9ᎱᎢ .
இராசம்மாவின் மனதிலே அன்று ஒர் புதிய துணிவு பிறந்தது. அன்று மாலை அவனிடம் எப்ப டியும் முழு விஷயமும் கதைத்து, தன் திருமண விஷயமாக அவ னி டம் ஒரு முடிவு கேட்டுவிட வேண்டுமென்ற தீர்மானத்திற்கு வந்தாள்.
மாலையில் அவள் மிக்க நிம்மதியோடு வீட்டிற் குச் சென்ருள். அந்த வெறுமையான நீள்சதுரத் தைப் பார்த்து மனதாரச் சிரித்தாள்.
*உன்னுடைய இடம் விரைவில் நிரம்பிவிடும்
வாசற்படியில் வேண்டுவார் வேண்டுவதை ஈவான் கண்டாய் என்ற முருகனின் கீழே, தலையிற் கைவைத்தபடி தாய் இருந்தாள், சோகவே உரு Qs、。
- இராசம்மாவின் நெஞ்சிலே முள் செருகிற்று.
 
 

"என்னம்மா, இது?"
"தாமோதரம்பிள்ளை வந்தது. மூன்று நாளைக் குள்ளே ஒரு வழி செய்யட்டாம். அல்லது கா ஏலத்திலை போடுமாம்” தாயின் கண்கள் நீர் சொரிந் தன திடீரென விம்மினுள்.
ܕ .
இராசம்மா ஒன்றுமே பேசாதபோதும் கலக்க - முறவில்லை. மீண்டும் இந்தக் காணியை ஈடுவைத்து விட்டுத் தாமோதரம்பிள்ளையின் முகத்தில் காசை வீசி எறிந்து விட முடியாதா?
அறைக்குள் நுழைந்தவள் மேசையில் குடை
ܐ ܝܠ
யையும், புத்தகங்களையும் தொப்பென்று போட்டு விட்டு, யன்னற் கம்பிகளைப் பார்த்தாள் கம்பியில் கட்டப்பட்ட பெட்டிக்குள் அடைக்கலம் குருவிகள் கீச்சிட்டுக் கொண்டிருந்தன. --
அவள் அவைகளைச் சந்தோஷமாகப் பார்த் தாள். பிறகு தூசு படிந்திருந்த தம்புராவை துண் டினுல் தட்டி, துப்புரவாக்கி அறையை ஒழுங்காக் கினுள். வாய்க்குள் பைரவி மெல்லக் கீதமாய் எழுந்தது.
அவள் மாலை நேரத்திற்காகக் காத்திருந்தாள். ஒவ்வொரு நிமிஷமும், யுகமெனத்தேய்ந்து அந்த ஐந்தரை மணி வரவே, அவள் பின்புறமாகப் போனுள். சொல்லிவைத்தாற்போல அவன் வந்து நின்றன். அந்த வாகான தேகம். நீலமும் பச்சை யும் கோடிட்ட சட்டை, கருமீசை முன்குவிந்த மயிர். அவன் வடிவம் எவ்வளவோ ஆண்டுகளாய் அவளுக்குப் பழக்கமானுற்போல ஒரு உணர்வு அவ ளுக்கு. அவனுேடு நீண்ட நெடுநாளாய்பழகி உணர்ந் தவள் போல அவள் மனதிலே அவனுேடு பழகு வதற்கு கூச்சமே இல்லாது போயிற்று.
ஒருத்தி நெற்றியின் நடுவிலும், உச்சித் தொடக் கத்திலும் குங்குமதிலகங்கள் அணிந்திருந்ததை இராசம்மா ஆசையோடு நோக்க அவள் ஏளன மாய் இராசம்மாவைப்பார்த்துச் சிரித்தாள். இனி அவள் சிரிக்க ஒரு சந்தர்ப்பந்தான் வருமா? அவள் மனம் துணிந்து வேலியோரமாய் நடந்தாள்.
அவனும் அவளுக்காக எதையோ சொல்லக் காத்திருப்பவன் போல துடிக்கும் கண்களோடு நின் முன்.
இருவரும் மெளனமாய் எதிர்கொண்டனர்.
மூச்சுகள் தகித்தன.
-
ܕ ܓܘ
அவனே செருமினுன் அவள் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
ஒரன் இர ???
அவன் உதடுகளை நாவினுல் தடவிஞன். அவள் பேசாது, சொல்லவந்ததை மறந்து நின்ருள். கண்கள் சிமிட்டிப் படபடத்தன. அவன் அவள் கைகளைப் பற்றுகையில் அவள்
உடல் நடுங்கிற்று. அவன் விரலை இராசம்மட்

Page 43
பார்த்தாள். இரு மோதிரங்களை அணிந்திருந்தான். அவளுக்கு நெஞ்சு பகீரென்றது. இதென்ன அடை u jfr GTL)?
அவன் அவளைக் கண்களுள் பார்த்தபடி சொன் னுன்
"நாளைக்கு ஊருக்குப் போறன். இரவைக்கு மட்டும், இன்றைக்கு மட்டும் வரட்டுமே? பிறகு ລງ ພ.”
கெஞ்சிய குரலில் அயோக்கியத்தனம் முக் காடிட்டு நின்றது. அவள் அவன் கைகளை நெருப் புப்பட்டாற்போல உதறிவிட்டுப் பின்வாங்கி ஓடி ஞள். நெஞ்சு துடித்துக் கலங்கிப் படபடத்தது. உயிரே தடுமாறிச் சோர கட்டிலில் வந்து குப்புறப் படுத்துக்கிடந்தபடி விசும்பி விம்மி வாயைப் பொத் திக்கொண்டு அழுதாள். விடியும் வரை அவள் அழுகை ஓயவேயில்லை . .
4
வீங்கிய கண்களுடன் முக த் தை க் கழு வி க் கொண்டு அறைக்குள் நுழைந்தவள் அந்த அடைக் கலங்குருவிகளையும், தம்புராவையும், மேசையை யும் பார்த்தாள். வெளியே வந்தவள் சுவரை நிமிர்ந்து பார்க்க விரும்பாது நடுஅறைக்குள்ளால் பின்புறம் போனுள்.
13
அங்கே தாய் நின்ருள். இராசம்மா முகத்தைத் திருப்பிக்கொண்டு சொன்னுள்:
'அம்மா, தாமோதரம்பிள்ளையரிட்டை இந்த வீட்டையும் காணியையும் எடுத்து எங்கடை கடனே முடிச்சுக்கொண்டு மிச்சக் காசைத் தரச் சொல்லு அடுத்தகிழமையே கொழும்புக்குப் போய் வீடு எடுக்கவேணும். அங்கைதான் நான் படிப்பிக்கப்போறன்.
உறுதியாகச் சொன்ன மகளே ஒன்றுமே விளங் கTத, தாய் கண்கள் கலங்கப்பார்த்துக்கொண்டு நின்ருள்.
அடைக்கலம் குருவிகள் கீச்சிட்டுக்கேட்டது.
விரைவில் 'மலர்' ஏட்டில் ஆரம்பமாகவிருக்கும் தொடர் அம்சங்கள்.
(1) மகாவம்சக் கட்டுரைகள் (சரித்திரம்) (i) முத்தமிழ் ஓவியம் (இலக்கியம்) (i) விருத்தாந்த சித்திரம் (நகைச்சுவை) - (ix) கைத்தொழில் கட்டுரைகள்
(பொருளாதாரம்)
முழுவிபரங்களும் அடுத்த இதழில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சமநீதி
சர்வானந்தன்.
மரத்தில் இலைக்குச் சமமாக மலர்கள் நிறைய மலர்ந்தன; சிரத்தை நிமிர்த்தி மரமது சிறகு கட்டிப் பறந்தது.
மலர்கள் நிறைந்த பெருமிதம் மரத்துக்(கு) இருக்கும் ஆணுலும் அலர்ந்த பூக்கள் அதனுலே அதுவும் பித்தம் கொண்டதுமேன்.
பூவின் வாசப் புளகத்தால் புதிய இளமை கொண்டது ஓவென்(று) உளமும் பொங்கிட உலகை மரமும் மறந்தது.
ஆயின் உலக இயற்கைதான் அதற்கு மட்டும் வேருமோ? காயும் கதிரோன் வீச்சினுல் கருகும் மலர்கள் பலதாகும்.
தேவன் பாதம் பூசிக்க தெரிந்து எடுத்த மலராக தேவை என்றே பண்டாரம் தெரிந்து கொய்தான் மலர்களே.
மலரின் அழகு மறைந்ததனுல் மரத்தின் அகந்தை மாண்டது; சிலரின் உண்மை தெளயாமை சின்னுள் வாழ்ந்து அழிந்துவிடும்.
一责一

Page 44
இறப்பில்லா இறந்
வீதியிற் போகும் போதுன் விழிகளைப் பார்த்தேன் என்றன் காதலி, நீயோ என்னைக் காணுது போற் செல்கின்ருய் மாதங்கள் சில முன் அன்பால் மகிழ்ந்து நாம் கலந்திருந்தோம், பேதங்கள் அற்றுேம் என்று பேசினுேம் பிணைந்து நின்ருேம்.
புன்னகை ஒன்று செய்தேன், பூவை நீ வருதல் கண்டு. என்னகை மலரைக் கண்டாய் எனினும் நீ திரும்பிச் சென்ருய். முன்னெல்லாம் அன்பில் நாங்கள் மூழ்கினுேம், நினைக்கும் போதே இன்புற்ருேம் முறுவல் பூத்தோம் இதயத்தில் மலர்ச்சி கொண்டோம்.
இன்று நீ அவற்றை எல்லாம் ஏன் அழிக் கின்ருய்?
நாங்கள் சென்றநாள் வாழ்ந்ததெல்லாம் செயற்கையா? பொய்யா? என்றே இன்றென திதயத்துள்ளே எழுந்தன வினுக்கள் உண்மை ஒன்று பின் பொய்யாய் மாறில் ஓ! அது பெரிய துன்பம்!
புதுக் கவிதை'யில் மிகவும் பற்று காலாண்டு இதழின் கெளரவ ஆசிரியரா டுரைகள் பலவும் எழுதியுள்ளார். கல்முை ரான இவர் ஈழத்தின் கவியரங்குகள் ப மதிப்பையும் சம்பாதித்துள்ளார். அவ்வ வருகிருர்,
 
 
 
 
 
 

தகாலம்
6Tij. 6).
வெறுப்புற்று வாழ்தல்; அன்பே இயற்கைக்கு விரோதமாகும் வெறுப்புறும் போதே நாங்கள் s
துன்பத்தில் வீழு கின்ருேம் விருப்புறல் அன்பு செய்தல் இயல்பான வேட்கை யாகும் விருப்பினை அன்பைக் கொன்ருல் துன்பமே மிகுந்து போகும்.
என்விழி களினைக் காண இயலாது திரும்பு மாறும் என் முறு வலினை ஏந்த இயலாது குனியு மாறும் உன் உளம் பலம்குன்றிற்ரு? உண்மையில் அன்பு செய்த முன்னைய நிலையை மூட முனைந்தனையா இப்போது?
இறப்புற்ற கணங்க ளெல்லாம் உண்மையில் இறப்பதில்லை. பிறப்புற்றெம் வாழ்க்கை ஏட்டின் பின்புறம் தொடர்ந்து நிற்கும் மறப்புற்று வாழ்தல் பொய், அம் மணித்துகள் களினை - நாங்கள் இறப்புற்ற போதும் அந்தக் கணங்களோ இறப்ப தில்லை
கொண்ட கவிஞர் நுஃமான் 'கவிஞன் என்னும் இருப்பதுடன் கவிதைபற்றி மிகச் சிறப்பான கட் தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் முக்கிய உறுப்பின வற்றில் பங்குபற்றி, நியாயமான பெருமையையும் பாது இலக்கிய விமர்சனக் கட்டுரைகளும் எழுதி -ஆசிரியர்.

Page 45
தர்மத்திற்காகப் போராடுக
பி. மரியதாஸ்,
கஜல - இலக்கியம் பற்றித் தமிழ் நாட்டைவிட ஈழத்தில் ஓரளவிற்குத் தெளிவான கண்ணுேட்டம் இருந்த போதும் அடிக்கடி தடம் புரட்டும் முயற்சி களைக் காண்கிருேம் பரவலான வகையில் சரியான நோக்கம் பிரதிபலிக்க முடியாமைக்கு குரலை நசுக் கும் பனநாயகத்தின் முரட்டுப் பிடிதான் காரணம் என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்றி ல்லை. இருட்டடிப்பு, பூரணமாகச் சி தை த் த ல் போன்ற நானுவித தகிடு தத்தங்களால் கலை-இலக் கியம் பற்றிய விஞ்ஞான பூர்வமான கருத்துக்கள் நசுக்கப்படுகின்றன. இந்தத் தீமையை சகல உபா யங்களைக் கொண்டும் எதிர்க்க வேண்டியது இத் துறையில் ஈடுபாடுள்ளவர்கள் சகலரின் கடமை யாகும்.
கலை-இலக்கியத்தை வளர்க்கவும், இத்துறைக் குத் தொண்டாற்றவும் புதிய பத்திரிகை ஒன்று துளிர்க்கும்போது சரியான கருத்துக்களே அதன் வாயிலாக வெளியிடுவது அதன் ஆரோக்கியத்திற் கும், அது வரித்துக்கொண்ட பணிக்கும் உரமிடுவ தாக அமையும். இந்த நாட்டில் எல்லாம் உண்டுசகல விதமான சுதந்திரங்களும் தாராளமாகக் கிடைக்கும் சந்நிதானம்-என்றெல்லாம் இந்நாட்டு பத்திரிகைகள் உரக்க ஒலமிடுவதுண்டு. ஆணு ல் உண்மையில் இவை நச்சுக் குரல்கள். இந்த நாட் டின் சனத்தொகையில் மிக்ச் சிறுபான்மையானஅதுவும் நாட்டின் உருவாக்கத்திற்கும், வளர்ச்சிக் கும் காத்திரமான எதுவித பங்கையும் நல்காத-மிக மிகச் சிறுபான்மையோரின் நலனுக்காகவே இவை ஒலமிடுகின்றன. இதனுல்தான் நடைமுறைப் பாட போதனையாகக் கொண்டு முரண்பாடுகளின் முடிச் சவிழ்க்கும் வழிகளின் அனுசரணையோடு, வரலாற் றின் போக்கிற்கேற்ப ச ரி யா ன கருத்துக்களைக் கூறும்போது இச்சுதந்திரச் சங்குகள் அவைகளின் குரல்களே நசுக்கிவிடுகின்றன.
---- இது சுமார் இரண்டு நூற்றுண்டுகளாக உலகின் பொது நியதியாயிருந்தது. இந்நூற்ருண்டின் இரண் டாம் தசாப்தத்திலிருந்து சிறிது சிறிதாக மாறிக் கொண்டு வரும் ஒரு போக்கு பொய்மையை-நடை முறையில் இல்லாததை - வாழ்க்கையில் மருந்துக்
 
 
 
 

43
கும் கிடைக்காதவைகளை - தத்துவமாக மாற்றி உலகின் ஜீவகளைக்குப் போராடும் மக்களை ஏமாற் றும் போக்கு இது, எழுத்தில் எல்லாம் இருப்பதும் நடைமுறையில் பெரும்பான்மை மக்களிடம் அதில் எதுவுமே இல்லாதிருப்பதுமே இதன் சாராம்சம். இந்த உண்மையை சமுதாய வளர்ச்சியிலும், மாற் றத்திலும் முக்கிய பங்கு வகிக்கும் கலை - இலக்கிய வாதிகள் சரியான முறையில் புரிந்து கொண்டிருக்க வேண்டும். இன்று நம் நாட்டில் வெளிவரும் சிறு கதைகளும், கவிதைகளும், பிறவும் தொகையில் பெரிதாக இருந்தபோதும்இலக்கியத்துறைவளமாக வளரவில்லை என்ற கணிப்பு உண்டு. இதற்கு முக்கிய காரணம் மேற்கூறிய பொய்மை வாதப் பேயின் மாயவலையில் இ லக்கி ய கர்த்தாக்கள் சிக்கிக் கொள்வதுதான். எழுத்தார்வம் துளிர் க் கி ன் ற போதே வாலிபத் துடிப்பையும் பணமாக்கிக் கொள் ளச் சதிராடும் விலைமகளைப் போல இப் பொய்மைத் தத்துவத்தின் ஊது குழல்களே அந்த ஆர்வத்தை வீணடித்து, வழிதவறக் செய்கின்றன. நான் பள்ளி மாணவனுக எழுதப் பழகுபவனுக வளரிளம் பருவ த்தின் வாயிலில் நிற்போனுக இருந்தபோது இவ் வூது குழல்கள் கடிதமெழுதிக் கதைகள், கட்டுரை கள் கேட்டதுண்டு. நானும் தெரியாத்தனமாகச் சில எழுதியதுண்டு. அவைகளைப் பிரசுரித்து இவை உற்சாக மூட்டின. ஆணுல் உலகையும் என்னையும் புரிந்துகொண்டவகை நான் வளர்ச்சியடைந்த போது - என்னில் இருந்த கோணல்களைத் திருத்திக் கொண்டபோது இவை எனக்குப் பெப்பே காட்டின முகஞ்சுளித்தன. இது இந்த நாட்டில் தமிழில் எழு தும் ஒவ்வொரு இளம் எழுத்தாளனுக்கும் ஏற்பட் டிருக்கக் கூடிய - ஏற்படவிருக்கும் கசப்பான அனு பவம். இந்தச் சதியைப் புரிந்து கொள்வது ஒவ் வொரு கலே - இலக்கியவாதியின் வளர்ச்சியாகும். இதனைப் புரியாமலிருப்பவர்கள் எழுதிக் குவிக்க லாம். எல்லா பத்திரிகைக ைலும் எழுத்தாளர் களாக மினிங்கலாம். தன்னை யறியாமலே பொய் மைத் தத்துவத்தின் - கேவலத்தின் - மனிதாபி மானத்தின் புதை குழியின்-மடியில் வீழ்வதுதான் இவர்களின் கதி!
நல்லவைகளையும், சரியானவைகளையும் சிதைக் கும் இக்கைங்கரியம் திட்டமிட்டுச் செய்யப்படு கின்றது. எழுத்தாளன் துரதிஷ்டவசமாகவும், எதிர் பாராதவாறும் இதில் சிக்கிக் கொள்கிருன் இத னுல் என்னதான் உரக்க உரக்க இவை சுதந்திரம் பற்றி பம்மாத்து பாடினுலும் உண்மையில் எழுத் தாளனின் ஆத்மாவின் குரல் நசுக்கப்படுகிறது. இலக்கியத்தின் உயிர் சிதறடிக்கப்படுகின்றது.
ஹட்டன் உயர்கல்விநிலையத்தில் கடமையாற்றும் பீ. மரியதாஸ் அவர்கள் ஆழ்ந்தநோக்குள்ள இலக்கியவிமர்சனக் கட்டுரைகளை எழுதிப்புகழ் பெற்றுள்ளார். சிறுகதை கவிதை முதலியனவும் எழுதிவருகிருர் அடக்கி ஒடுக்கப்பட்ட மக் களின் விடுதலைக்கு கலேயும், இலக்கியமும் உதவவேண் டும் என்ற திட்டவட்டமான கொள்கையுடையவன் நான் என்று பெருமையுடன் கூறுகிருர் இவர்
-ஆசிரியர்.

Page 46
பரிசு பெறும் விமர்சனக் கட்டுரை
ஜனவரி 'மலர்' விமர்சனக் கட் டுரைப் போட்டியில், ரூ. 25/- பரிசு பெறும் கட்டுரை
'எனக்குப் பிடித்தது' எழுதியவர்: மு. ஹ. சேகு இஸ்ஸதீன்
மட்/காத்தாங்குடி இல, 5 அ. த. க. பாடசாலை காத்தாங்குடி.
புதிதாகத் துளிர்க்கும் பத்திரிகைகள் இத் தகைய திட்டமிட்ட மாபெருஞ் சதியை முறியடிக்க வேண்டிய பணியைக் க ட  ைம ய ர க வரித்துச் கொள்ள வேண்டியது மிகமிக அவசியம். இலச் கியத்தின் ஆரோக்கியத்திற்கான விளைநிலத்திற்காக மட்டுமல்ல இந்த நாட்டு மனிதனின் சுதந்திர மூச் சுக்காகவும் இது அவசியமாகின்றது. தெளிவான தும், விஞ்ஞான பூர்வமானதுமான கண்ணுேட் டத்தை வளர்த்து விடுவது இத்தீமையை எதிர்ச் கும் ஆயுதமாக இருக்கும். நசுக்கப்படும் மாணிதத் தின் மீட்சிக்காகவும், மனித தர்மத்தின் உயர்ச் சிக்காகவும் உரக்கக் குரல் எழுப்புவது இன்றைய நியாயத்தின் உடனடித் தேவை. பிற நாடுகளில் எழுத்தாளர்கள் தீமைகளைக் களையப் பேனையை மாத் திரமன்றி துப்பாக்கியையும் ஏந்தியதற்கு உதார ணங்கள் பல உண்டு எழுத்தாளன் சமுதாயத்தின் நிர்மாண கர்த்தா புணருத்தாரணம் செய்பவன் ஆகவே கண்மு ன்னுல் திட்டமிட்டுத் தனக்கும் தான் வரித்துக்கொண்ட பணிக்கும் தீமை செய் வதை முறியடிப்பதிலும், அம்பலப்படுத்துவதிலும் தன் பங்கைச் செலுத்துவது இன்றியமையாதது
மக்களின் வாழ்க்கையை - முரண்பாடுகளே பிரச்னைகளை - போராட்டங்களை நுணுக்கமாகக் கிர கித்து, கலையாக்கி, மக்கள் வாழ்க்கையை உயர்ந்: மட்டத்திற்கு உயர்த்தும் இலக்கியத்தைக் கையாள் பவன் எழுத்தாளன். இத்தகைய ஒருவன் உலகின் ஜீவகளைக்குப் போராடுபவர்களினதும், உரமிடு பவர்களினதும் பக்கத்திற்குச் செய்யப்படும் அநீதி யைக் கண்டு வாளாவிருக்க முடியாது. அ:ே போன்று மனித தர்மத்தின் குரலே நசுக்கும் வகு சகத்தையும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது இலக்கியவாதி மானிதத்தின் மீட்சிக்காகவும் உயர்ச்சிக்காகவும் பாடுபடுபவன். அதில் ஆத்ம வின் பெருமிதம் உண்டென்று கருதுபவனென்ரு உடனடியாக இந்தக் கடமையைச் செய்து முடிக் வேண்டும். பேணு யுகவாக்கத்தை ஏற்படுத்தும் வ லமையுள்ளதென்றல் மானிதத்திற்காகவும், மணி தர்மத்திற்காகவுமான இப்போராட்டம் நிச்சயமா வெற்றி பெற்றே தீரும். இத்தகைய நன்நோ கோடும், திடசித்தத்தோடும் மனித தர்மத்தி காகக் குரலெழுப்புவதோடு, அதனை நசுக்கும் ச திகளை அம்பலப்படுத்தி அகற்றும் தீரத்தோடு மலர்' வெற்றி நடைபோட வேண்டுமென்
ாழ்த்த விரும்புகிறேன்.
 
 

AI TÜ0||5 Gof (6)
---
ஆயிர மாயிரம் வலைகள்! அந்தோ! வாழ்வுக் கடலில்.
அன்னை வீசும் பாசவலை அன்புக் கரைக்கு இழுக்கிறது!
கன்னி வீசும் அழகுவலை காதற் துறைக்கு அழைக்கிறது!
உற்ருர்வீசும் உரிமைவலே உறவுக் கரைக்கு இழுக்கிறது!
தோழர் வீசும் நட்புவலை துணிவுத் துறைக்கு அழைக்கிறது!
2. *୪୯
அந்தோ! வாழ்வுக் கடலில் ஆயிர மாயிரம் வலைகள் .
ஆசை வீசும் அதிக தூரம் அலைக்கிறது!
gra)th の7cmb ○gra)の」あu கட்டழ கைக்கவர்ந் தெடுக்கிறது!
காலன் வீசும் மரணமலை
கழுத்தை மெல்ல இறுக்கிறது!
உடலைக் கெளவும் நோய் வலையோ ஓர்கோடி வேதனை அளிக்கிறது!
米
ஆயிர மாயிரம் வலைகள்! அந்தோ! வாழ்வுக் கடலில்.
-கருணை யோகன்

Page 47
ஈழத்து ரத்தினங்க
அமைதியை விழுங்கிய காற்றினூடாக நடுநிசியிலும், மினுமினுக்கும் கைவிளக்குகளின்
(செ.யோகநாதன் - சோளகம்.)
米
அவரது சடலம் கிடத்தப்பட்டு, வெ பக்கத்திலே ஒரு குத்துவிளக்கு, கால்பக்கத்திே சிவபாக்கியம். ஒன்று எரிந்துகொண்டிருந்தது - உறவுமுறை??)
米
-
மருமகள் கொண்டுவந்து வைத்த கே துக்குள் கூழாங்கற்களை வீசுவதுபோல, வாய் மீசையும், ஒழுங்கு இல்லாமல் நெளிந்து வளைந்த
米
கனகம் எங்கள் கிராமத்துப் பெண் கொடியைப்போல எப்போதும் மென்மையாக
இராசரெத்தினம் - தோணி),
米
கண் பார்த்த திக்கில் ஆகாயத்தின் இ கள் மின்னின பெரிய விளேயாட்டு மைதானத் (தெளிவத்தை ஜோசப் - 'அது').
米
இரவின் அமைதியில் நிலையிழந்து Զ 6): யாக, நினைவில் விரித்த வலையில் என்னை C)
மொட்டை").
米
அந்தப் பெண் தன் கையில் இருந்த எடுத்துத் தன் கண்களை லேசாக ஒற்றிக்கொ பட்ட இடங்களில் அவள் முகத்தில் பூசியிருந் கோன் - அணு தை')
ஈழத்து எழுத்தாளர் வெளியிடும்
ஈழத்து எழுத்தாளர்கள், தனிப்பட களுக்கு "மலர்' சஞ்சிகையில் இலவச வாறு விளம்பரம் பெற விரும்பும் எழுத ஒரு பிரதியுடன் விண்ணப்பிக்கவேண்டும் மட்டுமே இத்திட்டம் அமைவதாகும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

6T
墓5
அந்தக் கிராமத்தின் இருதயக்குரல் இருண்ட அசைவினில் அ டி நா த மா கத் தெரிகிறது
米
|ள்ளேத் துணியால் மூடப்பட்டிருந்தது. தலைப்
லே கண்ணிரும் கம்பலையுமாக அவர் மனைவி 丁 மற்றது புகைந்தபடி இருந்தது (சொக்கன்
Fாற்றைப் பிசைந்து உருட்டி உருட்டி, பொந்
க்குள் போட்டுக் குதப்பும்போது, தாடையும் ன (என். எஸ். எம். இராமையா -சிவேட்கை??)
米
நான். நீரின் இடைமட்டத்தில் ஆடும் பாசிக் ஆடிக்கொண்டுதான் அவள் நடப்பாள். (வ. அ.
来源
இருண்ட நீலத்தில், இரண்டொரு நட்சத்திரங் தில் நாலைந்து பள்ளிச் சிறுவர்கள் நிற்பதுபோல .
料 米
கம் கட்டுண்டிருக்கும் வேளை தனித்த ஒருத்தி சிறையிட்டுக்கொள்ளுகிறேன் (யாழ்வாணன்
米 来
பையிலிருந்து ஒரு சாணளவு கைக்குட்டையை ண்டு நாற்காலியில் உட்கார்ந்தாள். கண்ணிர் த வாசனை மா அழிந்திருந்தது! (இலங்கையர்
நூல்களுக்கு இலவச விளம்பரம் 馨一
பட முறையில் ஈழத்தில் வெளியிடும் நூல் மாக விளம்பரம் வெளியிடப்படும். இவ் தாளர்கள், தாங்கள் வெளியிடும் நூலின் 1-1-70 முதல் வெளிவரும் நூல்களுக்கு
-ஆசிரியர்.

Page 48
46
ஒரு அனுபவம்
கலைக்கதம்ப நிகழ்ச்சி ஒன்றுக்கு ரூபா 5/- டிக்கட் எடுத்துக்கொண்டு சென்றிருந்தேன். அங்கே பற்பல இசை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. நிகழ்ச்சி போரடித்ததால் வெகுநேரம் இருக்க முடியவில்லை வெளியே வந்து
டேன்.
பஸ் ஸ்டான்டில் சிறிது நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. அங்கே பூவரசமரம் ஒன்றின்கீழ் ஒரு சிறு கும் பல் கூடியிருந்தது. ஏதோ வாத்திய இசையும் கேட்டது. மெல்ல அக்கூட் டத்தில் கலந்தேன். ஒருபிச்சைக்காரப் பையன்அனுயாசமாக ஹார்மோனியம் வாசித்துக்கொண்டிருந்தான். சினிமாப் பாட்டுகள்தான். என்ருலும் ஹார் மோனியத்தில் இவ்வளவு இனிமை யான இசையை இதற்குமுன் நான் கேட்டதில்லை. இசைத் த ட் டு களி ல், பாட்டுக்களின் இடையேவரும் இசை யைக்கூட சிறிதும் மாற்றமில்லாமல் அப்படியே வாசித்தான் பையன். மெய் மறந்து நின்றேன் நான் இசையை ரசித்த கும்பல் மெல்ல, மெல்ல நழு வியது. என்னிடம் சில்லறை இல்லாத தால் ஒரு ரூபா நாணயத்தை அந்தப் பிச்சைக்காரனுக்கு போட்டுவிட்டு வந் தேன். கூட்டத்தினர் என்னை வியப் பாகப்பார்க்கின்றனர். - சேது'
'மலர்' சந்தா விபரம்
ஒருவருடம் ரூ. 6-00. தனிப்பிரதி சதம் =/50.
விளம்பர விகிதம் பின்புற அட்டை - 25, 200|- உட்புற அட்டை - I5. 150/- முழுப் பக்கம் ரூ. 125/- விபரங்களுக்கு LOR)si
21, மத்திய வீதி, மட்டக்களப்பு.
 
 

GLILTBEGI
ஈழத்திலே, மிகச் சிறப்பான முறையில் வெளிவரும் சஞ்சிகை
で
* மலர்.' நிறைந்த விளம்பரப் பல னைப் பெற, நாடெங்கும் விநியோக மாகும் 'மலர்' சஞ்சிகையில் விளம் ܐܓ
பரம் செய்யுங்கள். ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு உங்கள் பங்கைச் செய் யுங்கள்.
- 'மலர்' வெளியீட்டுக் குழுவினர்
一★一
ஈழத்து ரத்தீனங்கள் 一演一
ஈழத்து எழுத்தா ளர்கள் பலரது படைப்புகளில், கருத்துச் செறிவுள்ள உவமை, கச்சிதமான வர்ணனை, கலையழகு மிக்க சிந்தனை நிறைய விரவிக்கிடப்பதை வா சக ர் கள் அவதானித்திருப்பார்கள். எத்தனையோ சந்தர்ப்பங்களில் அவை உங்கள் நெ ஞ் சைத் தொட்டிருக்கும். உங்கள் கருத்தில் பதிந்துவிட்ட அப்படி யான பகுதிகளை எழுதி அனுப்பி வைத் தால், 'ஈழத்து ரத்தினங்கள்' என்ற பகுதியில் அவற்றை மகிழ்ச்சியோடு வர வேற்றுப் பிரசுரிப்போம். நீங்கள் அனுப் பும் பகுதி எந்த நூலிலிருந்து எடுக்கப் பட்டது என்ற விபரத்தையும் (உரிய பக் கத்துடன்) குறித்து அனுப்பவேண்டும்.
பத்திரிகை, சஞ்சிகைகள் முதலிய வற்றில் வெளிவந்த கதை கட்டுரைகளி லிருந்து பொறுக்கி எடுத்த ரத்தினங்க ளாக இருந்தால் குறித்த கதை, கட்டுரை, பிரசுரமான பத்திரிகைப் பெயர், திகதி ஆகியவற்றைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். ஈழத்து ரத் தி ன ங் க ள் > அனுப்பவேண்டிய முகவரி:
ஆசிரியர், 'மலர்' 21. மத்திய வீதி, மட்டக்களப்பு.

Page 49
கவிதை ILIā SpGI
-இஇஇஇஇ
திருமணம் முடிந்தொரு
திங்கள் கழிந்த பின்
அருகோடிக் கவிதைப்பெண் வந்தாள் - எ6 வெறுப்போடு விழிவிசி நின் முள்,
ஏனிந்தப் பார்வையோ ?
என் மீதேன் கோபமோ ?
நானென்ன கொடுமைதான் செய்தேன்?- வாபெண்ணே கவிபாட என்றேன்.
புதுப்பெண்ணைப் பார்த்த நீ போடாதே புதிரென
நெருப்பாகக் கவிதைப்பெண் சொன்னுள்:- செருக்கோடு நான் பார்த்து நின்றேன்.
கலியாணம் முடிந்தபின்
கவிபாட விரும்பாத
காரணம் ஏனென்று கேட்டாள் - தன்னை பாராததேனென்றும் கேட்டாள்.
கோல எழில் பெண்ணுள் கொஞ்சும் கிளி இல்லாள்
நீலவிழிப் பார்வை முன்னுல் - கவி நூறு பிறக்குமே தன்னுல்
காலம் மறைந்தாலும்
கவலை யிருந்தாலும்
நானுன்னே மறப்பேணு பெண்ணே - கவிை பாடாமல் இறப்பேணு என்றேன்.
-செ குணரத்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மேல்
9; LibLDrr
அனுபவம் புதுமை !
இம்மாத 'மலர்' சஞ்சிகை யில் " ஒரு அனுபவம்' என்ற தலைப்பில் மூன்று து ணு க் கு க ள் வெளிவந்துள்ளன. இவைபோன்ற, நெஞ்சைத்தொட்ட அனுபவங்கள் உங்கள் வாழ்க்கையிலும் ஏற்பட் டிருக்கலாம் அ ல் ல வா? அப்படி யான அனுபவங்களைச் சுவைபட எழுதி அனு ப் பி னு ல் 'மலர்' மகிழ்ச்சியோடு அவற்றை வரவேற் றுப் பிரசுரிக்கும் 'மலர்' சஞ்சி கைக்கு அனுப்பப்படும் 'ஒரு அனு பவம்' , சுவையுள்ளதாக, கருத் துள்ளதாக, பூல்ஸ்காப்தாளில் ஒரு பக்கத்தில் அடங்குவதாக இருக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் பிரசுரமாகும் அனுபவத் துணுக்கு களுள் சிறந்ததெனத் தெரிவுசெய் யப்படும் அனு பவ த் துணுக்கி னுக்கு ஈழத்து ல க் கி ய நூல் ஒன்று அன்பளிப்புச் செய்யப்படும்.
துணுக்குகளை அனுப்பவேண்டிய முகவரி: ஆசிரியர் மலர்:
21, மத்திய வீதி, மட்டக்களப்பு.
மன்னிக்கவேண்டுகிருேம்
மட்டுநகரில் எதிர்பாராதவகை யில் ஏற்பட்ட வெள்ள நிலைமை காரணமாக 'மலர்' பெப்ரவரி ஏடு உரியகாலத்தில் உங்கள் கரங் களில் தவழமுடியாமல் தாமத மேற்பட்டுவிட்டது. ம ன் னி க் க வேண்டுகிருேம்.
மார்ச் முதல், ஒழுங்காக முதல் திகதியன்றே மலர்' வெளிவரும் என்பதைச் சொல்லிவைக்கிருேம்.
-:மலர்' வெளியீட்டுக்குழுவினர்.

Page 50
யாழ்வாணனின் 'அமரத்துவம்' 一举一 நா. சண்முகநாதன் (யாழ்வாணன்) எழுதிய "அமரத்துவம்' என்னும் சிறுகதைத் தொகுப் பின் வெளியீட்டுவிழா 31-1-70 மாலை யாழ் இலக் கிய வட்டத்தினரால் அலங்கரிக்கப்பட்ட யாழ் நகரமண்டபத்தில் கவிஞர் வி. கந்தவனம் அவர் கள் தலைமையில் ந  ைட பெற்ற து கவிஞர் இ. நாகராஜன் பாடிய தமிழ்வாழ்த்துடன் ஆரம்ப மான இவ்விழாவிற்கு, வந்திருந்த அனைவரையும் கவி ஞர் காரை செ. சுந்தரம்பிள்ளை வரவேற்ருர், விழாவினைத் தொடக்கிவைத்த மாநகரமுதல்வர் திரு. சி. நாகராசா பேசுகையில் ஈழத்து எழுத் தாளர்களிடையே ஒற்றுமையின்மை நிலவுகின்ற தென்றும் அது அகலவேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். அடுத்து 'சிற்பி வெளியீட்டுரை நிகழ்த்த முதற்பிரதியை முடிக்குரிய வழக்கறிஞர் திரு. எஸ். கனகரத்தினம் ). P. L. M. பெற்றுக் கொண்டார். அதையடுத்து 'அமரத்துவம்' ஆசிரி யர் யாழ்வாணனுக்கு மாநகரசபை ஆனையாளர் யாழ்சின்னம் பொறித்த கணையாளியொன்றைப் பரிசளித்தார். இரசிகமணி கனக, செந்திநாதன் குறமகள் திரு. சு. வேலுப்பிள்ளை ஆகியோர் பாராட்டுரை வழங்கினர். விழாவிற்கு ஏராளமான எழுத்தாளர்களும், ரசிகர்களும் சமூகமளித்தனர்.
'மலர்' வெளியீட்டு விழாக் கலே நிகழ்ச்சிகள் 一举一
சென்றமாதம் மட்டுநகர் நகரமண்டபத்தில் நடைபெற்ற 'மலர்' வெளியீட்டுவிழாவை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலை நிகழ்ச்சிகளைக் கான ஏராளமான ரசிகப் பெருமக்கள் திரண்டு வந்திருந்தனர் நிகழ்ச்சியின் சிகரமாக பல்லிசைக் குரிசில் ஜீவம் சகோதரர்களின் இசைநிகழ்ச்சி அமைந்திருந்தது. செவிக்கு விருந்தான இசை நிகழ்ச்சியைத்தொடர்ந்து கண்களுக்கு விருந்தான நடன நிகழ்ச்சி இடம் பெற்றது. யெல்வி பரம் சிங்கராஜாவின் இந்த நடன நிகழ்ச்சியை திருமதி செல்வி நாகராஜா தயாரித்தளித்தார். இறுதியில் கருத்துக்கு விருந்தாக கல்வி இலாகா கலைக்குழு வினர் அளித்த எனக்கு வேண்டாம்” என்ற நகைச் சுவை நாடகம் இடம் பெற்றது.
—
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

6ÍJiÍb 656ÖID6)
'நெஞ்சுக்குத் தெரியும்' 一★一
யாழினி புரொடக்ஷன்ஸ் அளித்த நல்லூர் சங்கிலியன் நாடக மன்றத்தின் கலைக்கதம்பவிழா 1-2-70ல் திருநெல்வேலி கலங்காவற் பிள்ளையார் கோயில் நல்லூர் கி ரா மச் ச பைத் தலைவர் பொ. இராசகுலசிங்கம் தலைமையில் நடை பெற் றது. விழாவில் பி. எஸ். பிச்சையப்பாபிள்ளையின் முகவீணைக்கச்சேரியும் செல்வி தர்மபூஷணி அப்புத் துரையின் நடனமும் தாளவாத்தியக் கச்சேரியும் இடம் பெற்றன. ஈற்றில் நடைபெற்ற 'நெஞ்சுக் குத் தெரியும் என்னும் சமூகநாடகத்தில் வீ. கே. பத்மநாதன், செல்வி அமுதா, டி. ஜி. ராஜா, மகேஸ்வரன், செல்வி ராஜா. சிலோன் நாகேஸ், டாக்டர் S. சுந்தரலிங்கம் ஆகியோர் சிறப்புற நடித்தனர். கே. என். கே. சர்மா நாடகத்தை நெறிப்படுத்தியிருந்தார். சினி மா ப் பாடல்களைத் தவிர்த்திருந்தால் நாடகம் இன்னும் நன்றுக அமைந்திருக்கும்.
புதுமையான கலேக்கண் காட்சி 一★一
கிழக்குப் பிராந்தியக் கல்வித் திணைக்களத் தினுல் புதுமையான கலைக்கண்காட்சி ஒன்று ஏற் பாடு செய்யப்பட்டுள்ளது. இம்மாதம் 22ந் திகதி முதல் மார்ச் 14ந் திகதி முடிய மட்டக்களப்பு, வாழைச்சேனை, கல்முனை, அக்கரைப்பற்று, திரு கோணமலை, மூதூர் ஆகிய இடங்களில் நடைபெற விருக்கும் இக் கலைக்கண்காட்சியில், ஒவியம் வரை யும் முறை, அலங்கார உருவங்கள் செய்யும் முறை, சீலேயில் அச்சுப்பதித்தல் போன்ற பல்வேறு ஒவிய
முறைகள்பற்றி காட்சி மண்டபத்தில் செய்முறை
விளக்கம் தரப்படும் பார்வையாளர்களும் இதில் கலந்துகொள்ளலாம். பார்வையாளர்கள் வேடிக்கை பார்ப்பதுடன் மட்டும் முடிந்துவிடாமல் விஷயங்களே நேரிடையாக விளங்கிக்கொள்ளவும் உதவும் இம் மாதிரியான கலைக்கண்காட்சி இதுவரை இலங்கை யில் நடைபெறவில்லை எனச் சொல்லப்படுகிறது. இப்புதுமாதிரியான கலைக்கண்காட்சியை கிழக்குப் பிராந்திய சித்திரவகுப்பு ஆசிரியர்கள், சித்திரப் பரிசோதகர் ஜனுப் எம். எஸ். எம். ஹசைன் அவர் களின் மேற்பார்வையில் ஏற்பாடு செய்துவருகின் றனர்.