கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மீட்டாத வீணை

Page 1

s. |(1 + | - =* ( ` / ¬|- |- (* ----
+ = : ( ( ( ()
| __, -

Page 2
”敬
உள்ளே , , , , ,
“மரத்தைப் பாரடி வள ருது, பூக்குது காய்க்குது. என் னையும் பாரடி எனக்கு அன்பு காட்ட ஒருத்தன் வேண்டாமடி இந்த ஊர் வாயை epl. 6rarä கும் ஒருவன் இருக்கிருனெண்டு | சொல்ல காலம் வருமே?" * ፩ ; ...
- தேவி
"தேவி, உனக்கு வெட்கம், Gipurnir Fuh Gauo surros? அவன் இளம் பெடியன். இன்னும் கொஞ்ச நாளையிலே எங்கடை வயசை நீ எட்டிப் பிடிச்சிடு வாய். அவனேட உனக்கு என் ண்டி கதை? உனக்கு இனி என்
னடி வாழ்க்கை?
- மீனுட்சி
"'உங்களுக்கு நேரமிருக்கு, உங்கள் கற்பனைக்கு வேஆல யிருக்கு நாலு பெண்கள் சேர்த் தால் நாற்பது பெண்களின்
Runridd 60 samduláš கெடுத்திடுவியள் ayut DinT, இது ஞாயமே.???
- செல்லம்
-

மீட்டாத வீணை
எழுதியவர்:
ஏ. ரி. நித்தியகீர்த்தி
(எ. ரி. நிதி.)
கமலா வெளியீடு:

Page 3
முதற் பதிப்பு: - மார்கழி 1974.
பதிப்புரிமை ஆசிரியருக்கு
கமலா வெளியீடு காக்கியவளவு, புலோலி கிழக்கு, பருத்தித்துறை.
fíla
நீ லங்கா அச்சகம்,
turt blunta orth.

அன்னைக்கு இது என் அன்புக் காணிக்கை

Page 4
பதிப் புரை
இளம் எழுத்தாளர் ஏ. ரி. நித்தியகீர்த்தி அவர்களின் முதல் நாவலை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிருேம். வளரும் எழுத்தாளர், வாசகர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறு வார் என்பதில் ஐயமில்லை.
அவருக்கும், இந்நாவலை வெளியிட உதவிய பூரீ லங்கா புத்தகசாலை, அச்சக உரிமையாளர் திரு. என். தெய்வேந்திரம், திரு. என். கந்தசாமி அவர்களுக்கும், அச்சகத்தில் பணியாற்றிய திரு. சி. கனகசபை, திரு. ஆர். இராஜேந்திரராஜா, திரு. ச. சின்னேயா, மற்றும் அச்சக ஊழியருக்கும், அட் டைப் படத்தை வரைந்துதவிய திரு. டி. சி. இராஜ நாயகம் அவர்களுக்கும் எங்கள் நன்றியைத் தெரி விக்கின்ருேம்.
கமலா வெளியீட்டார்

மீட்டாத කෝපිං001 !
ஓங்கி வளர்ந்த பனைமரங்கள் ஒலைகளால் திரை போட, அதனுாடே தனது ஒளிக்கற்றை நீட்டி தரை யைப் பார்க்கத் துடிக்கிறது பொங்கிவரும் பெரு நிலவு. அந் நிலவுக்கு இளங்காற்று தோழன் போலும். அதனல் தான் அந்த ஒலைத் திரையை விலக்கி, நிலவின் ஒளி முகத்தைத் தரைக்குக் காட்டுகிறது. வாழ்க்கைப் பய ணம் முடிந்து, பாதி வழியில் தொங்கிக் கொண்டிருக் கும் ஒரு காய்ந்த ஒலைக்குக் காற்றின் செய்கை பிடிக்க வில்லை. அது பனையோடு மோதி, மோதி, பலத்த ஓசை யுடன், தனது ஆட்சேபனையைத் தெரிவிக்கிறது. காற் றின் குறும்பு கவிஞருக்கு விருந்தாகலாம். ஆனல், பாவம், இளங்கோ என்ன தவறு செய்தான் ? அவன் குடிசைக்குள் தவழ்வது போதாதென்று, அவன் விளக் கோடுமா அதற்கு விளையாட்டு?
மெழுகப்பட்ட தரையில் தாயின் சேலையை விரித்து, குழந்தையைப் போல் குப்புறப்படுத்தபடி புத்தகமொன் றைப் படிக்க முயன்று கொண்டிருந் தான், அவன் இளங்கோ தன்னை மறந்து புத்தகத்தில் மூழ்கிவிடக் கூடா தென்று பயந்த தென்றலாள், மண்ணெண்ணெய் விளக்கின் சுடரோடு விளையாடி, அவனைத் தன் பக்கம் ஈர்க்க முயன்ருள். அசைகின்ற விளக்கின் சுடருக்கேற்ப தன் புத்தகத்தையும் அசைத்து நற்கருத்துக்களை அசை போட் டுக் கொண்டிருந்தான், அவன். அவன் கவனத்தை ஈர்க்க தென்றலாள் மட்டுமா முயல்கிமுள் ? இளங்கோவின் தா யும் பல முறை முயன்றுவிட்டாள்.

Page 5
2 மீட்டாத வினை
* தம்பி, சாப்பிட இல்லையே? " ஐந்தாவது தட வையாக அவள் கேட்டாள்.
மெதுவாக விழிகளை உயர்த்தினன், இளங்கோ, குடி சை வாசலில் இருந்தபடி அவள் ஒடியல் முறிக்கிருள். அதை முறிக்கும் வேகத்திலிருந்து, பொறுமையை அவள் இழந்து கொண்டிருக்கிருள் என்பது புரிகிறது. அவன் முறுவலித்தான்.
** என்னம்மா, திருவிழாவுக்கு நேரமாச்சுதே ? ' அவன் கே லியாக க் கேட்பது அவளுக்குப் புரிகிறது.
" உங்களைப் போல நாங்களென்ன பட்த்துக்கே போறம் ? வா, , வா. கையைக் கழுவிக்கொண்டு ?? அவள் பட பட வென்று பேசியபடி ஓடியலை அப்புறப் படுத்துகிருள்.
நாதஸ்வர ஓசை காற்றில் தவழ்கிறது. புத்தகத்தை ஒதுக்கி, குடிசைக்கு வெளியே இருக்கும் குடத்து நீரில் தன் கைகளைக் கழுவிக்கொள்ள இளங்கோ விரைகிருன். வெண்ணிலவின் தண்ணுெளி அவன் பொன்னிற மேனியை மெருகேற்றுகிறது. தென்றலாள் ஓடிவந்து அவனை அனைத் துக் கொள்கிருள் அந்த வேகத்தில் அவன் சுருண்ட கேசம நெற்றியில் புரள்கிறது. இல்லையேல், அழகாக அரும்பியிருக்கும் அவன் மீசையைப் பார்த்து, அது அழ குப் போட்டிக்கு அழைக்கிறதோ ? கைகளைக் கழுவித் தாயருகில் வந்த மர்ந்தான். வெந்தயக் குழம்பின் வாசம் மூக்கைத் துளைக்கின்றது. குழம்புச் சட்டிக்குள் சோற் றைப்போட்டு. தாய் அதைக் குழைக்கிருள். சிறிது தயிரும் ஊற்றிச் சோற்றைப் பிசைந்தாள். நாவில் நீர் ஊறுகி றது. இளங்கோ, இரு கைகளையும், விரித்து நீட்டினன். விரல்களிடையே தயிரும், குழம்பும் வழிந்தோட, அவன் கரங்களில் திரட்டிய சோற்றைக் கொடுத்தாள் தாய்.
'தம்பி, இன்னும் கொஞ்சம் சாப்பிடன் '
'எனக்குப் போதும் நீ சாப்பிடு' வழக்கமாக அவன் சொல்லும் பொய்யது.

மீட்டாத வினை 3
அவள் கடைசிப் பிடியைச் சாப்பிட்டு, சட்டியைக் கழுவினுள். கழுவவும் வேண்டுமா ? சில வினடிகளில் பல வேலைகளை முடித்து இளங்கோவின் தாய் திருவிழாவிற் குச் செல்லத் தயாராகி விட்டாள். அவனும் தன் வேட் டியைச் சுற்றிக் கட்டிக் கொண்டான், ஒரு கையில் சுருட் டிய பாயும், மறுகையில் அரிக்கன் விளக்குமாகத் தாய் முன்னே நடக்க, ஒலைக் கதவை இறுகக் கட்டிவிட்டு அவன் பின்தொடர்ந்தான். -
"தங்கமக்கை, நில், நாங்களும் வாறம், ' பக்கத்து வீட்டு மீனட்சியின் குரலது,
இளங்கோவின் இதயத்தில் ஒர் இனந் தெரியாத இன்ப உணர்ச்சி பரவியது. அது மீனுட்சியின் குரல் தந்த உணர் வல்ல. அதைத் தொடர்ந்து காற்று சுமந்துவந்த மல்லி கையின் மணம் தந்த மகிழ்ச்சியா? அதுவுமல்ல. அந்த மல்லிகையைச் சுமந்து வரும் இளமங்கை செய்யும் இன்பக் இளர்ச்சி
' கெதியாக வா பிள்ளை ' இளங்கோவின் தாய் சொல்கிருள். அவனும் சொல்லத் துடிக் கிருன் நிலவு மேகத்தில் மறைந்திருக்கிறது. மேகத்தினூடே அதன் ஒளி சிறிது தெரிகிறது. மீனுட்சியின் பின்ஞல் பட்டுப்பாவாடை சர சரக்கிறது. மேகம் கலைகிறது. இளங்கோவுக்குப் பூவாடையும், பாவாடையும் வாடைக் காற்றுத் தரும் மயக்கத்தைத் தருகின்றன. பளிச் சென்று நிலவு தெரிகிறது5 வெண்ணிலவா ? இல்,ை அது பெண்ணிலவு அடிமேல் அடி வைத்து மீரூட்சியின் மகள் செல்லம் வருகிருள் " பருவ நிலா பவனிவரு கிறது"
நீல நிறத்தில் கால்வரை நீண்ட பாவாடையும், அதே நிறத்தில் சட்டையும் அவள் அணிந்திருந்தாள்: நிலவின் ஒளி, அவள் சிறிய பாதங்களில் பட்டுத் தெறிக் கும்போது, பாவாடையின் மஞ்சள் வர்ணக் கரை ஒளி

Page 6
4 மீட்டாத விணை
யிழந்தது கருவிழிகள் அங்குமிங்கும் ஒடும்போது அவன் இதயமும் சேர்ந்து ஓடியது.
** இளங்கோ நீ இப்பதானே கோயிலுக்குப் போருய்
என்ரை மோன், இண்டு முழுக்க அங்கதானே. சாப்பிடக்
கூட வர இல்லை. பெடியள் திருவிழா இல்லே? நீயேன் போகல்லை ? ? மீனுட்சி கேட்டாள்
*" என்ரை இவனுக்கு உதுகள் பிடிக்காது, பிள்ளை. உது, மற்றதுகள் மாதிரியில்லை. எத்தனை தடவை சொன் னனுன் போகச் சொல்லி " தாய் தங்கம் அங்கலாய்த் தாள்.
*" உவன் தம்பிக்கும் பொல்லாத கோவம் எல்லாப் பொடியளும் சேரக்குள்ள இவனேன் சேரல்லை ? ? மீனுட்சி வினவினள்.
செல்லத்தின் விழிகளும் அதையே கேட்டன. அவன் பதில் ஒரு புன்னகைதான் மேளக் கச்சேரி இப்பொழுது தெளிவாகக் கேட்டது. அவர்கள் கோயிலை நெருங்கிக் கொண்டிருந்தார்கள். 'பாதையின் இரு பக்கங்களிலும் மனிதர்கள் நடந்தனர். சிரித்த முகங்கள் - கல கலப் பான பேச்சுக்கள் - வாழ்க்கை க்கு நம்பிக்கையூட்டும் காட்சி; செல்லத்தின் விழிகள் துரு துருவென அங்கு மிங்கும் ஒடி அலைந்தன. கூண்டுக்குள்ளேயே அடைபட் டிருக்கும் அந்தப் பைங்கிளி வெளியே வந்ததால் ஏற்பட்ட களிப்புணர்ச்சி, அவள் கண்களிலே பளபளத்தது. அலங் காரச் சிகரங்கள், வண்ணவண்ண விளக்குகள், வாழையும் சவுக்க மரங்களும் - அப்பப்பா, என்ன காட்சி! அதை விட, துள்ளியோடும் குழந்தைகளின் கல, கல சிரிப் பொலி, பல்லில்லாக் கிழவிகளின் பொக்கை வாய்ச் சிரிப்பு, பருவக் குமரிகளின் மந்தகாசப் புன்னகை - செல்லத்தின் இதயம் மட்டுமா, எல்லா நல்ல உள்ளங் களும் இன்பத்தில் தவழ்ந்தன. கன்னியர் கூட்டத்தை நோக்கிக் கண்களைச் சுழல விடும் காளையர், கடைக்கண்

மீட்டாத வினை 5
ணுேரத்தால் கள்ளமாகப் பார்த்துத் தங்களுக்குள் "குசு குசுக்கும் " மங்கையர் கூட்டம், விழிகளால் பேசும் காத லர், அதை விமர்சனம் செய்யும் தாய்மார்கள்- இவை களை மறந்து, தவில் வித்துவான்கள் இருவர் சவால் விடு வதுபோல் முழங்கித் தள்ளுகிருர்கள். அதை இரசிப்பது போல் ஒருவர் தலையசைத்து, அந்த இரசிப்பை யாராவது இரசிக்க மாட்டார்களா என்று அங்கு மிங்கும் நோட்டம் விடுகிறர். வெண் மணற் பரப்பின் நடுவே அமைக்கப் பட்ட அலங்கார மேடையில் மேளக் கச்சேரி நடந்து கொண்டிருக்கிறது. பெரிய மேளந்தான், அதனல் பெரிய வர்கள்தான் அங்கு அதிகம். சின்ன மேளத்தை எதிர் பார்த்து மற்றவர்கள் காத்திருந்தார்கள்.
** கலாவரை மணலை நீ போட்டிருந்தால் கதை வேறை ** கோயில் மடத்தில் நடந்து கொண்டிருந்த சீட்டுக் கச்சேரியிலிருந்து வரும் குரலது.
** டேய், துரையன்தான் மூக்குத்துாள். போட்டவன்’ தூங்கும் போது மூக்குத்தூளைப் போட்டு ஓடியவனைப் பழிவாங்கத் துடிக்கும் நண்பனுக்கு உதவுகிருன், ஒரு சிறுவன். துரையலைத் தேடி இருவரும் ஒடுகின்றனர்.
"அவனைக் கோயிலுக்கை விடக்கூடாது' சாதி வெறியர் ஒருவர் குடிவெறியில் கத்துகிறர். இருவர் அவரைச் சாந்தப் படுத்துகின்றனர்.
கோயிலை நெருங்கியதும் தங்கம் தன் சேலை முடிச்சை அவிழ்த்து அவன் கரங்களில் பத்துச் சதத்தைத் திணிக் கிருள்.
** கடலை வாங்கிச் சாப்பிடு **
பத்து வயதிலும் அவள் அவனுக்குப் பத்துச் சதந் தான் கொடுத்தாள். இன்று இருபது வயதுக் காளைக் கும் அதைத்தான் கொடுக்கிருள். செல்லம் பார்க்கிருள். வெட்கத்தால் அவன் முகம் சிவக்கிறது. அவள் புன்

Page 7
6 மீட்டாத வீண
னகை பூத்தாள். அவள் அதரங்களிலிருந்து முத்துதிர ஆரம்பிக்கிறது.
** அம்மா, அண்ணன் அங்க நிற்கிருர் " அதற்குள் மகாதேவன் தன் தாயையும், தங்கையை யும் காண்கிருன், மல்யுத்த வீரனின் உருவத்தைப் போன் றது அவன் உடலமைப்பு. கரிய உருண்டு, திரண்ட அவனது தோளும், பரந்த மார்பும் பாவையரின் விழி அம்புகட்கு விருந்தாகிக் கொண்டிருந்தன.
*" கந்தசாமி மேளக்காரருக்கு சோடாவை உடைச்சுக் குடு' என்று தன் சகாவிற்கு உத்தரவைக் கொடுத்து தாயை நோக்கி மகாதேவன் வந்தான். தாயின் முகத் தில் பெருமிதம் பொங்குகிறது.
*" ஏன், வர நேரஞ் செண்டது ? இந் தாங்கோ, கோயிற் பிரசாதம். " மகாதேவன் இலையில் சுற்றப்பட்ட திருநீற்றையும், பூவையும் நீட்டுகிறன். இளங்கோவைத் தவிர மற்றவர்கள் பூசிக் கொள்கிருர்கள்.
** பெரியவர் பூசமாட்டார் போலை' மகாதேவன் சிறிது குத்தலாகச் சொன்னன்.
* அவன் அப்பிடித்தான் மேனை. உதெல்லாம் மினைக் கெட்ட வேலையாம். நீங்கள் சினேகிதரென்டு இருக்கிற னிங்கள், சொல்லித் திருத்த வேண்டாமே ? ?? தங்கம் பெருமூச்சு விட்டாள்.
*" உது கெட்ட பழக்கம் தம்பி’ மீனுட்சி ஒத்துப் பாடினுள். செல்லத்தின் விழிகளிலும் அதிருப்தி தெரி கிறது.
** டேய் இளங்கோ, கோயில் விசயத்திலை நீ விலகி நடந்தது. பெடியளெல்லாருக்கும் பெரிய கோவம் கொஞ் சம் விட்டுக் கொடுத்து நட "" என்று அவன் தோளில் தட்டி மகாதேவன் சொன்னன் 'மாமி பாயைத்

மீட்டாத வினை
தாங்கோ " என்று பாயையும் வாங்கிக் கொண்டு அவன் கூட்டத்தை விலக்கி முன்வரிசையை நோக்கி நடந்தான். மக்கள் அவனைக் கண்ட மாத்திரத்தில் வழிவிட்டனர். பெண்கள் மூவரும் மகாதேவனைப் பின்தொடர இளங்கோ விழிகளால் அந் நால் லரிட மிருந்து விடை பெற்றுக் கொண்டு, வாலிபர்கள் கூடியிருந்த மரத்தடியை நோக்கி நடந்தான். மகாதேவன் பெண்களை முன் வரிசையில் இருத்தி, தன் சால்வையில் கடலை வாங்கி அவர்களுக்குக் கொடுத்தான். பின்னர் அவர்களிடமிருந்து அவனும் விடைபெற்ருன்.
அமைதியும், அழகும் கொண்ட அந்த இனிய கிரா மத்தில் இணைபிரியாத நண்பர்கள் இளங்கோவும் மகா. தேவனும், ஆண்டுக் கொருமுறை வரும் கோயிற் திரு விழாவின் அன்றைய நிகழ்ச்சி அவ்வூர் இளைஞர்களால் நடாத்தப்படுகிறது, கட்டுக் கடங்காக் களிப்போடு காளையர்கள் கலந்து அதை நடாத்துகையில், இளங்கோ மட்டும் விலகிக் கொண்டது அவர்கட்கு கசப்பைத் தரு வது வியப்பல்ல. அவனது செய்கைக்குக் கண்டனந் தெரி விக்க, அவர்கள் அங்கு காத்திருந்தார்கள். அவர்களில் மணியன் சிறிது முன்கோபி. முரடனுங் கூட, இளங்கோ, அவர்களை நெருங்கியதும் அவன்தான் முதலில் பேசினன்.
' வரவேண்டும். வரவேண்டும் எங்கே ஐயா வரவில்லை யென்ருல் திருவிழா நின்று விடுமோ என்று பயந்தோம்" நாடக பாணியில் அவன் பேசியதும் மற்றவர்கள் வாய்விட்டுச் சிரித்தனர்.
" தங்கள் திருவுளங் கனிய அன்பன் வருகை தந்துள் ளேன் " அதே பாணியில் இளங்கோ பதிலளித்தான்.
* கடவுள் இருப்பிடம். மூடக் கொள்கைகளின் பிறப் பிடம், எனப் பரப்பிடுந் தாங்கள், வருகையின் காரணத் தைப் புகல்விரோ. ' மணியன் தொடர்ந்தான்.

Page 8
8 மீட்டாத விணை
* மடைமை இருளகற்றி, அறிவு ஒளிபரப்ப திருவுளங் கனிந்து தங்கள் முன் எழுந்தருளினேன். ' இளங்கோ வும் விடவில்லை,
* 'இருள் இங்கில்லை நண்பரே. பாவம். பட்டப்பக லில் விளக்கோடு புறப்பட்டாய். கண்களைக் கொஞ்சம் திறந்து பார். இருள் போயிடும். இளங்கோ, அந்த இளங் கலைஞனின் இனிய இசையிலே இந்தச் சனமெல்லாம் கட் டுண்டிருக்கிறதைப் பார். சிரிப்பும், சிங்காரமும் நிறைஞ் சிருக்கிறதைப் பார். இவையெல்லாம் நாம் நடாத்தும் திருவிழா நமக்களிக்கும் பேரின்பம். இதில் நீ கலந்து கொள்ளக் கூடாதோ ? அதை நடாத்தும் நாங்கள் மடையன்களோ ?
மணியனின் கேள்வி நண்பர்கட்கு மகிழ்வூட்டியது.
** மணியா, இசைக்கும் இன்பத்துக்கும் நான் எதிரி யில்லை அது ஆண்டவன் பேரிலை தான் நடக்க வேணுமே? மொழியாலை, இனத்தாலே, மதத்தாலை சிதறிக்கிடக்கிற, இந்தச் சமுதாயத்தை ஒன்ருக்க வேண்டிய நாங்கள் சிந்தனைக் குச் சிறை போடுற மதத்தை வளர்க்கவே விழா எடுக்க வேணும் ? கலைவிழா எண்டால் நான் கலந்து கொள்ளத் தவற மாட்டேன். இது கடவுள் விழா இளங்கோ சிறிது ஆவேசமாகப் பேசினன்.
*" கடவுளும், மதமுந் தான் எங்கடை சமுதாயத்தி ன்ரை கட்டுக் கோப்பையும், ஒழுங்கையும் கட்டிக் காக் கிது. இது உனக்குத் தெரியாதே? ?? மணியனுக்குப் பதில் மனேகரனெனும் மற்ருெருவன் கேட்டான்.
* இல்லை. அன்பைப் பரப்பிறதாகச் சொல்லி, அழி வைப் பரப்பினது மதந்தான். கடவுள் பெயராலை கணக் கில்லாத மக்கள் மடிஞ்சிருக்குதுகள். LDGoig, வரலாற்றி லேயே கறை படிஆசிருக்கு. முகமதியப் போர், சிலுவை யுத்தங்கள் இதுக் கெல்லாம் மதங் காரணமில்லையோ ? இன்றைக்கும் இந்து, முஸ்லீம் கலகம் நடக்குது எதாலை ?

மீட்டாத வீணை
வெளிநாட்டான் எங்களை ஆள விரும்பினதுக்கு மதமும் ஒரு காரணந்தானே? தங்கடை பக்தர்கள் கடவுளுக்கா கப் போராடி உயிரிழந்த நேரத்திலை இந்தக் கடவுள் வந்து அவர்களைக் காப்பாத்தி ன வ ரே?' இளங்கோ தொடர்ந்திருப்பான் அவன் தோளில் முரட்டுக் கர மொன்று விழுந்தது. அது மணியனின் தந்தை வேலுப் பிள்ளையரின் கரம்.
** டேய் கழுதை, நல்ல பெடியளையும் கெடுக்க வந்த னியே? எலும்பு முறிச்சுப் போடுவன் போடா வீட்டை' அவர் சீறினர். அவனே சிரித்தான்.
என்னடா சிரிப்பு ?" பளாரென்று ஒர் அறை அவன் கன்னத்தில் விழுந்தது. ஆவேசத்தால் இளங்கோ வின் கரங்கள் துடித்தன. அவன் ஆத்திரத்தோடு அவ ரைப் பார்த்தான்.
** என்னடா பார்க்கிருய்? தகப்பன் பேர் தெரியாத தரித்திரமே. ' வேலுப்பிள்ளையர் வார்த்தையை முடிக்க வில்லை. மனிதனின் சிந்தனை எவ்வளவுதான் விரிந்திருந் தாலும், சில சமயங்களில் அவன் தன் கட்டுப்பாட்டை இழந்து விடுகிருன், உணர்ச்சிக்குப் பின்னர்தானே அறிவு வேலை செய்கிறது. வேலுப்பிள்ளையரின் வார்த்தைகள் இளங்கோவின் இதயத்தைச் சுண்டி இழுத்தன. அவன் தன்னை மறந்தான். அவனது மூடிய கரங்கள் அவரது முன்வரிசைப் பற்களை மிக மோசமான முறையில் முத்த மிட ஆரம்பித்தன. அதுவும், சில வின டி கள் தான். தந்தை தாக்கப்படுவதைப் பார்த்து மணியன் சும்மா நிற்கவில்லை. இளங்கோவின் வயிற்றில் ஒங்கி உதைத் தான். இளங்கோ நிலத்தில் விழுந்தான். தொடர்ந்து மணியனின் கால்களுக்குப் பந்தானன். "சண்டை, சண்டை" எனுங் குரல் எங்கும் பரவியது. மக்கள் இசையை மறந் தார்கள். கூட்டம் சண்டை நடக்கும் இடத்தைச் சூழ்ந்து கொண்டது. நண்பர்கள் மணியனைப் பிடித்துக் கொண்ட னர். நால்வர் அவன்தந்தை வேலுப்பிள்ளையரைப் பிடித் திருந்தனர்.
மீ. வீ. -2

Page 9
10 மீட்டாத விணை
அவர் உறுமினர். எங்கிருந்தோ வந்த மகாதேவன் நிலத்தில் விழுந்திருந்த இளங்கோவைத் தூக்கி நிறுத்தி ணுன், அவன் நெற்றியில் வழிந்த இரத்தத்தில் வெண் மணல் ஒட்டியிருந்தது.
கூட்டத்தை விலக்கித் தன் மகனைப் பார்க்கத் துடிக் கிருள், தங்கம். அவளோடு ஒட்டிக் கொண்டு செல்லமும் மீனுட்சியும் நிற்கின்றனர். யாரோ ஒரு பெரியவர் கூட் டத்தை விலக்குகிருர். மணியனையும், வேலுப்பிள்ளையை யும் மற்றவர்கள் இழுத்துச் செல்கிமுர்கள். இளங்கோ வின் கரத்தைப் பிடித்திருக்கிருன், மகாதேவன்.
"" தம்பி " என் கிருள் பதறிய தங்கம். வெறுப்போடும், ஆத்திரத்தோடு: இளங்கோ அவளைப் பார்க்கிருன். மருண்டு, கலங்கிய விழிகளோடு செல்லமும் அவனைப் பார்க்கிருள்.
* தகப்பன் பேர் தெரியாத தரித்திரமே **
இளங்கோஃவ் இதயத்தில் அக்குரல் கேட்கிறது. பைத்தியம் பிடித்தவன் போல் அவன் ஓடுகிருன். தாய் அவனைப் பின் தொடர் கிருள்.
** தம்பி இளங்கோ. ' என்று அவள் கத்துகிருள். அவன் திரும்பியும் பாராது ஓடுகிருன். வெறிச்சிட்ட தெருவில் இருவரும் ஓடினர். கல்லொன்று தடக்கித் தாய் நிலத்தில் விழுகிருள். அவன் திரும்பிப் பார்க்கிருன். ஆனல், அவல கால்கள் நிற்கவில்லை. ' தகப்பன் பேர் தெரியாத தரித்திரமே ‘’ அந்தக் குரல்ொன்றுதான் அவ னுக்குக் கேட்கிறது. அது ஒன்றுதான் அவனைத் தொடர் கிறது. அவன் வேகமாக ஓடுகிருன்

இயற்கை அழகுதான். ஆனல் இதயங்கள் ஏங்கும் போது, அதை இரசிக்கும் கண்களும் தூங்கி விடுகின்றன. கடலன்ன விரித்த வெண் மணற் பரப்பில் வீழ்ந்து கிடந்த இளங்கோவின் இதயம், தரையில் தள்ளப்பட்ட மீனைப் போல் துடித்தது. உயர்ந்து, உயர்ந்து பொங்கிவரும் பேர லைகள் சு. கரைக்கு வந்ததும் அடங்கி விடுகின்றன. அவன் இதயத்தில் மோதுகின்ற துன்ப அலைகளோ ஆர்ப்பரிக் கின்றன. மேலும், மேலும் பொங்குகின்றன. இதயச் சுவர்களோடு மோதி அதனை உடைக்கப் பார்க்கின்றன; ஊடுருவத் துடிக்கின்றன. அந்தப் போராட்டத்தின் விள்ை வுதான் அவன் கண்களில் பாயும் நீரோட்டம். அவன் இதயத்தின் ஒலம், கடலின் பேரிரைச்சலை அடக்கிவிடு கிறது,
" எனக்கு அப்பா இல்லையா ? அவன் குழந்தையாக் இருந்த நாள் முதல் குமுறிக் கொண்டிருந்த அந்தக் கேள்வி இன்று அவன் குரல் வளையைப் போட்டு நெரிக்கிறது. நீண்ட அந்த இரவிடமிருந்து நிலவு விடைபெறும் வரை, அவன் தன் நினைவிழந்தே இருந்தான். அவன் எழுந்தி ருக்க முயன்றன். அவன் விழிகளிரண்டிலும் செவ்வானம் தெரிந்தது. கால்கள் தள்ளாடின. கட்டுடல் கனலெனக் கொதித்தது. அவன் தள்ளாடித் தள்ளாடி நடந்தான்.
தங்கம் குடிசைக் கதவில் தன்னுடலைச் சாய்த்தபடி இருந்தாள். அவள் முழங்காலிற் சிந்திய இரத்தத்தோடு

Page 10
2 − மீட்டாத விணை
அவள் சேலை ஒட்டிக் கொண்டிருந்தது. அவள் விழிகளோ அவ ளது இரத்த உறவைத் தேடிக் கொண்டிருந்தன. அவன் ஏன் ஓடினன்? அவள் விழுந்த போதும் பாராமல் ஏனப்படி ஒடினன்? அவர்கள், அவனை ஏனடித்தார்கள்? இப்படி ஓராயிரங் கேள்விகள் அவள் இதயத்தில்; தூரத்தில் தள் ளாடித் தள்ளாடி வரும் இளங்கோவின் உருவம் அவளுக் குத் தெரிகிறது. எழுந்திருக்க முயல்கிருள். முழங்கா வின் வேதனை தடுக்கிறதா காலோடு ஒட்டியிருந்த சேலையை விடுவிக்க முயல்கிருள். இரத்தத்தால் இறுகிவிட்ட அந்த உறவைப் பிரிப்பது மிகவும் சிரமமாக இருக்கிறது. பற் களை இறுகக் கடித்தபடி சேலையை இழுக்கிருள். வேதனை அவளைப் பிடித்துத் தின்கிறது. சேலை விடுபடுகிறது, ஆனல் இரத்தம் குபு, குபு எனப் பெருகுகிறது.
** தம்பி, என்னடா இது? " தாய் மகனை நோக்கி ஒடுகிருள்.
குடிசையின் கதவருகில் இளங்கோ வந்தான். அவன் தள்ளாடிய உடலுக்கு எங்கிருந்துதான் அவ்வளவு பலம் வந்ததென்று அவனுக்கே தெரியவில்லை. தன்னை அணைக்க வந்த கரங்களைத் தன் பலங்கொண்ட மட்டும் தள்ளினன். தடுமாறிய தாய் ' தம்பி " என்றபடி நிலத்தில் வீழ்ந் தாள். குருதி வடிந்து கொண்டிருந்த அவள் முழங்காற் புண்ணில், தரையிலிருந்த சிறிய கற்கள் குத்தி மேலும் வேதனையைக் கொடுத்தன. அவள் இதயப் புண்ணிற்கு ?
அவளுடல் பதை பதைக்கிறது. உள்ளம் துடி துடிக்கி நது. உதடுகள் நடு நடுங்க கண்களில்வடியும் நீர் புழுதியிற் படிகிறது. புழுவைப் பார்ப்பதுபோல் இளங்கோ அவளைப் பார்க்கிருன் . அவனுடலும் நடுங்குகிறது. குடிசையின் கதவில் சாய்ந்த வாறு அவன் நிற்கிருன். அவன் கால் கள் வலுவிழந்து கொண்டிருக்கின்றன. அவன் தன் உட லின் சக்தி யாவற்றையும் திரட்டிக் கேட்கிருன்.
** என்ரை, அப்பன் ஆர்? '

மீட்டாத வினை 19
சுளிரென சவுக்கால் அடித்தது போன்ற உணர்ச்சி தங்கத்தின் உடலில் பரவுகிறது.
* கடவுளே, ஐயோ என்ரை கடவுளே " அவள் புழு தியிற் புரண்டு புரண்டு, அழுகிருள். வெண்மையும், கருமையும் கலந் திருந்த அவள் கூந்தலில் புழுதியின் செம்மை படர்கிறது. அழுகித் துர்நாற்றமடித்து, ஈர்கள் மொய்த்துக் கொண்டிருக்கும் ஒரு மாமிச பிண்டத்தைப் பார்ப்பது போல், இளங்கோ அவளைப் பார்க்கிருன். அவன் கண்கள் இருளடைகின்றன. இதயம் எப்பொழுதோ இருண்டு விட்டதே. அவன் தரையில் மெதுவாகச் சாய் கிருன்.
தங்கமோ, தன் மகன் தரையில் சாய்ந்ததைக் கான வில்லை. அவள் கன்னத்தில் பாயும் கண்ணிரில் ஒட்டிக் கொள்ளும் புழுதியை அவள் தன் கண்ணிரால் கழுவுகி ருள். மீண்டும் அது ஒட்டிக் கொள்ளும். அவள் விழி நீரும் விடாது அதைக் கழுவும்.
* மாமி, என்ன மாமி இது ?" அதிர்ச்சியும், அன் பும் கலந்த குரல். மெல்லிய இரு கரங்கள் அவள் முது கில் பட்டன.
** செல்லம், என்ரை மோனை, செல்லத்தைக் கட்டிக் கொண்டு தங்கம் கதறினள். அவள் இதயமே வெடித்தது போல் அவள் குமுறிஞள்.
** மாமி, மாமி அழாதேங்கோ மாமி " செல்லம் அவளை அனைத்தபடி சொன்னுள். அந்தக் குரலில்தான் எத்தனை கனிவு ? ஆனல் தங்கமோ வாய்விட்டு அழ ஆரம் பித்தாள். -
செல்லம் செய்வதறியாது திகைத்து நிற்கையில்,
தங்கம் அவளை அனைத்தபடி அழுதாள். எவ்வளவு நேரம் அழுதாளென்று அவளுக்கே தெரியாது. கண்ணிர் நின்று

Page 11
l4 மீட்டாத வீண்
விடலாம். ஆனல் வேதனை ? செல்லம் மெதுவாகத் தன்னை விடுவித்துக் கொள்கிருள். அவளருகில் அவள் கொண்டு வந்த கைப்பெட்டி இருந்தது. பனங்காணியில் நுங்கு பொறுக்கிக் கொண்டிருந்தவள், தங்கத்தின் அழு குரல் கேட்டுத் தா ன் ஓடி வந்தாள். கைப்பெட்டியில் அவள் பொறுக்கிய நுங்குகள் இருந்தன. அவையெல் லாம் அணில் கோதியவை. அதிலொன்று மிகச் சிறியது.
ஒரே ஒரு கண்தான் அதிலிருக்கும். அதையும் அணில் கோதிவிட்டது. தங்கம் அதையே வெறித்துப் பார்த்தாள்.
அது சொல்லுமா அவள் கதையை?
* கா. லெ ல் லாம் இரத்தம். விழுந்தனீங்களே?" முழங்காலைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தாள் செல்லம். தங்கம் எழுந்திருக்க முயன்ருள்.
** அப்பிடியே இருங்கோ மாமி’ செல்லம் சொல்லி விட்டு குடிசை வாசலிலிருந்த தண்ணிர்க் குடத்தை நோக்கி ஓடினள். சிரட்டை நிறையத் தண்ணிரை எடுத்தாள்.
பட்ட மரம் போல் குடிசைத் தரையில் வீழ்ந்திருந்த இளங்கோவை அவள் விழிகள் வியப்போடு பார்க்கின் றன. திருவிழா "நித் திரை போலை அவள் மனம் எண்ண மிடுகிறது. இரவில் நடந்ததெல்லாம் கனவுபோல் தெரி கின்றது. கூரையில் செருகியிருந்த ஒரு பழஞ் சேலையை யும், சிரட்டையில் தண்ணிரையும் எடுத்துக்கொண்டு அவள் தங்கத்தை நோக்கி நடந்தாள்.
* வேண்டாம் பிள்ளை. நான் கழுவிறன்' தன் காற் புண்ணைக் கழுவ வந்த செல்லத்தைப் பார்த்து தங்கம் அன்போடு சொன்னுள்.
** சும்மா, இருங்கோ மாமி’ கண்டிப்பான ஓர் அன் புக் கட்டளையைப் போட்டு, செல்லம் தானே புண்ணைக் கழுவினுள். தங்கம் நன்றியோடு அவளை நோக்கினள்,

மீட்டாத வீணை i5
** அவன் என்ன செய்கிருன் ? ' தங்கம் கேட்டாள். **காலைக் கொஞ்சம் நீட்டுங்கோ, 'அது' படுத்திருக்கு. எங்க விழுந்தனிங்கள்?' உங்களுக்க சண்டையே ? ? செல் லம் கேட்டாள். 'அது' என்பது இளங்கோவைத்தான்.
* ஊ . ஊ . மெதுவா நோகுதுபிள்ளை. அவனுக்கு என்னைப் பிடிக்கல்லை நான் செய்த பாவம் தங்கத்தின் குரல் தழதழத்தது.
**மருந்து ஒண்டுமில்ஃலயே? மருந்து போட்டால்தானே, புண் மாறும். ’’ செல்லம் குறிப்பிட்டது முழங்காற் புண்ணைத்தான்.
*" வீட்டுக்க இருக்கு. இடது பக்கச் சுவருக்கு மேல் பரியாரியாரின்ரை மருந்து வைச்சனன் ' தங்கம் சொன் ஞள். செல்லம், அதை எடுத்து வர எழுந்தவள் தயங் கினள்,
** ஏன் பிள்ளை தங்கம் கேட்டாள் ”*
* அது . அது . படுத்திருக்கு ’’ தங்கத்தின் முழங் காலிற் பாய்ந்த இரத்தம் செல்லத்தின் கன்னங்களில் பிரதிபலிக்கிறது. அந்த நேரத்தில் கூட தங்கத்தின் முகத் தில் புன்னகை பரவியது.
*" போ. செல்லம் " "
செல்லம் போகிருள். நீண்ட அவள் பாவாடை, கால் களைத் தடுக்கிறது. குடிசை வாசலில் அவன் படுத்திருந் தான். அவன் முகம் அவளுக்குத் தெரியவில்லை. அவனைத் தாண்டித்தான் அவள் போக வேண்டும். இதயம் பட படத்தது. அவன் எழுந்துவிடக்கூடாது என அவள் ஏங்கினள். தயக்கம் அவளுக்கு மட்டும் உரியதல்ல. அங்கு வாழும் இளமங்கையர் பலருக்கு இத்தயக்கம் இருப்பது அவளுக்குத் தெரியும். அதுவும், அவர்கள் கிராமமோ, உயர்ந்த வேலிகளைப் போட்டு இளம் உள்ளங்களைப் பழக

Page 12
16 மீட்டாத விணை
விடாது பார்க்கவிடாது தடுக்கும் தாழ்ந்த உள்ளங்கள் நிறைந்தது. இதனுல் தனிமையில் அவர்கள் சந்திக்க நேர்ந்தால், ஏற்படும் பயத்தாலும், படபடப்பாலும் தங் களையே இழந்து விடுவார்கள். அவளும் இதற்கு விதிவிலக் கல்ல. பருவம் வருமுன் அவள் இளங்கோவோடு கிட்டியடித் திருக்கிருள். கிளித்தட்டுவாள். கெந்திப் பிடிப்பாள். இட, ஒளித்து விளையாடுவார்கள். அவையெல்லாம் பழைய இன்ப நினைவுகள். காலம் தன் di L-60) 6o செய்யும்போது, அவர் ஊராரும் கடமையென எண்ணித் தங்கள் LOGO-GOtto யைச் செய்வார்கள். வேலிகள் எட்டடிக்கு o-CE5tb. gyouei நடை, உடை, பாவனை அனைத்திலும் குறை காணத் துடிக்கும் ஒரு கூட்டம்; Lழைய நண்பர்கன் பார்க்கக் கூடாது; பேசினலும் தலை நிமிரக் சீ.-ாது. அவள் சிரிப்பது குற்றம். சிங்காரிப்பது சிறுமை.
அவளுக்கு இன்று பதிஞறு வயது; காலம் அவள் கால் களுக்கு விலங்கிட்டது, இரண்டு வருடங்களுக்கு முன்னரே. அது வரை பட்டாம் பூச்சிபோல் அவள் பறந்து திரிந்தாள். சிறுவர், சிறுமியர் கூடுமிடமெல்லாம் அவள் நிற்பாள். அவர்கள் போடும் கும்மாளம், விளையாட்டு, சிரிப்பு, வேடிக்கை கணக் கிலடங்கா. அந்தக் ' குண்டான் ? கோபாலனிடம் அவ%னப் பட்டஞ் சொல்லியே எத்தனை முறை குட்டுவாங்கினுள். மாங்கொட்டை மணியன் அவளே ஒட, ஒட விரட்டியிருக்கிருன்; ஏன் இளங்கோ கூட அவனை அவிச்ச இருல் என்று அழைத்ததற்காக எத்தனை முறை அவளை அடித்திருப்பான் . ஆனல், அவள், மஞே, கமலா, மாலா எல்லோருஞ் சேர்ந்து அந்தச் சிறுவர்களைப் பட்டஞ் சொல்லியே அழவைத்திருப்பார்கள். அவர்கள் பாடசாலை நடத்தியிருக்கிருரர்கள். விளையாட்டுப் போட்டி நிகழ்த்தியிருக்கிருர்கள். சமைத்து விளையாடி இருக்கிருர்கள். கல்யாணங்கூட நடத்திப் பார்த்திருக் கிருர் கள். அப்பொழுதெல்லாம் !!றந்து செல்லும் பைங் கிளியவள். கூண்டுக்கிளியாக அவள் மாறிய போது,
கதையே மாறியது.

மீட்டாத வினை ty
அவள் பெயரளவில் பெரிய மனுசியாகிவிட்டாள். ஏனவள் அப்படியானுள்? அவளுக்குப் புரியவில்லை. அவள் பெரிய மனுசிதான ? அவளால் ஒத்துக் கொள்ள முடிய வில்லை. உடலில் ஏற்படும் சிறுமாற்றம் உள்ளத்தில் எவ் வளவு மாறுதலை ஏற்படுத்த முடியும் ? அவளால் மாற முடியவில்லை. ஆனல் ஊரும், உற்ருரும், பெற்றவளும் அவளை மாற்றினர்கள். அவளால் வீட்டைவிட்டு வெளியே போக முடியவில்லை. அன்று முதல் இன்றுவரை பெண்கள்மீது தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தி வரும் ஆண் வர்க்கமும், அவர்களால் பேதைகளாகவே உருவாக்கப்பட்ட மற்றைய பெண்களும் சேர்ந்து, அந்த இளங்கன்னியின் இன்பச் சிறகை ஒடித்தனர். பண்பாடு, கலாச்சாரம் என்ற பெய ரில் அவள் சுதந்திரம் அழிக்கப்பட்டது. இன்பம் பறிக் கப்பட்டது. அறிவு ஒடுக்கப்பட்டது. எதிர்காலத்தைப் பற்றிய ஏக்கத்தையும், பயத்தையும் ஊட்டினர்கள். தன் னேடு, ஒடி, ஆடித்திரிந்தவர்களுக்கே பயந்து அவள் ஒளித் தாள். சிந்திக்கவும் பயந்தாள். சிறகொடிந்த பறவை யானள். அவள் மட்டுமா அப்படி வளர்க்கப்படுகிருள்?
செல்லம், மெதுவாக அடிமேல் அடிவைத்து நடந் தாள். ஒருவாறு அவனைத் தாண்டி மருந்துக் குப்பியை எடுத்தாள். அவன் பின்னலிருந்து தன்னைப் பார்ப்பது போன்ற உணர்ச்சி அவளுக்கு ஏற்பட்டது. அவள் கரங் கள் நடுங்கின. அவள் பருவமடைந்த பின்னர், முதன் முறையாக ஒரு வாலிபன் இருக்கும் இடத்தில் தனித்து நிற்கிருள். யாரோ, தன்னைத் தொடுவது போன்ற உணர்ச்சி அவளுடலெங்கும் பரவுகிறது. அவள் கையி லிருந்த மருந்துக் குப்பி நழுவி நிலத்தில் விழுந்தது5 அவள் நடுங்கியவாறு திரும்பினுள். ஆனல், இளங்கோ எழுந்திருக்கவில்லை. இரு கரங்களுக்கும் இடையே, முகத் தைப் புதைத்தவாறு குப்புறப் படுத்திருந்தான். அவள் எண்ணமெல்லாம் வெறும் பிரமையா ? இல்லை, அவள் அடிமனத்திலெழுந்த சில உணர்ச்சிகளின் விளைவா? கையிலிருந்து நழுவிய குப்பி, உருண்டு சென்று, இளங்கோ வின் மார்புக்கருகில் அடைக்கலம் புகுந்தது. அவள்
மீ. வீ. - 3

Page 13
மீட்டாத வினை
தன்னை அறியாது விரலைக் கடித்துக் கொண்டாள். நன்ரு கவே கடித்து விட்டாள். விரல் வலித்தது. குப்பியை எப்படி எடுப்பது? அவனைத் தாண்டி வரவே பயந்தவள், அவன் மார்புக்கடியில் இருக்கும் குப்பியை எடுப்பதென் ருல் நடக்குமா ?
ஏதோ ஒர் அசட்டுத் துணிச்சல், அவள் குனிந்து குப்பியை எடுக்க முயன்ருள். அவள் கூந்தலில் ஒரு கரம் விழுந்தது. செல்லத்தின் உடல் பயத்தால் நடுங்கியது. அவள் நிமிர முயன்ருள். அதற்கு முன்னர். அந்தக் கரமே அவள் தலையை நிமிர்த்தியது. பளாரென அவள் கன்னத்தில் விழுந்த அறை, செல்லத்தை நிலைதடுமாறச் செய்தது
* அம்மா " என்றபடி அதிர்ச்சியோடு அவள் பார்த் தாள். அங்கே அவளன்னை பத்திரகாளியாகக் காட்சி யளித்தாள்.
* கழுதை எ கையடி வந்தாய் ? ? மீனுட்சி சீறிஞள். *" போடி, வீட்டை ‘’ அவளைத் தள்ளியவள் " "எங்கே அந்த நாய் தங்கம் ? ’’ என்று கத்தினுள். செல்லம். அழுதவாறே ஓடினள்.
பனங்காணியில் மகளைத் தேடி வந்த மீனுட்சி குடி சையின் பின் பக்கத்தால் வந்ததால், தங்கத்தைக் காண வில்லை. ஆனல் தங்கம் அவளைக் கண்டாள்.
" ஏன் மீனுட்சி, ஏணிப்படி சினக்கிருய்? ' தங்கம் கேட்டாள்.
** நாயே, உன்ரை பழக்கத்தை, என்ரை மோளுக் கும் பழக்கிறியே ? அவளை வீட்டுக்க விட்டிட்டு நீ வெளி யிலை காவலே ரோசங்கெட்ட நாயஸ் . நாயன். அயலுக்க வந்தியல் இல்லே, உள்ள குமரை யெல்லாங் செடுக்க. தகப்பன் தெரியாத பிள்ளைகளைப் பெத்து . மீனுட்சி வசை மாரிபொழிந்தாள்.

LBL 5 au 19
செல்லமோ, அழுதவாறு ஓடிவிட்டாள். ஓடமுடியாத ஒருத்தி கண்ணிரில் நனைந்து கொண்டிருந்தாள். அவள் காற் புண்ணுக்கு மருந்து கிடைக்கவில்லை. இதயப் புண் ணுக்கோ மேலும் வேதனை கிடைத்தது. இளங்கோ", நித்திரையானல் எழுந்திருப்பான், நல்ல காலம் அவன் மயக்கமுற்றிருந்தான். மீனுட்சி பொரிந்து தள்ளிவிட்டுப் போய்விட்டாள். தங்கம் நொண்டியவாறே குடிசைக்குள் வந்தாள். தன் மகனைத் தொட்டதும் அவள் பதறிஞள். அவனுடல் கனலெனச் சுட்டது.
** தம்பி, தம்பி எழும்படா. என்னடா உனக்கு ? ? ? பதறியபடி அவன் முகத்தில் நீர் தெளித்தாள். அவனே எழவில்லை. அவள் பதறினுள். விழி நீரை உகுத்தாள். செய்வதறியாது தவித்தாள். உதவிக்கு வர உறவென்று ஒன்று அவளுக்கு இல்லை. வைத்தியரிடம் போகலாம். அவனைத் தனியாக விட்டுச் செல்ல அவளுக்கு மனமில்லை. வைத்தியருக்குக் கொடுக்க அவளிடம் பணமுமில்லை. கண் ணிர் பெருகியது. மீனுட்சி ஒருத்திதான் அவள் மீது சிறிதாவது அநுதாபம் கொண்டவள். அவளும் கோபங் கொண்ட பின் தங்கம் எங்கே போவாள்? ? ? முருகா, முருகா " எனப் புலம்பினள். பக்தர்கள் பாடுவது போல், அவன் இதயம் உருகி வரவில்லை. அவளைப் போலவே, எலும்பாலும் சதையாலும் உருவான எத்தனையோ மணி தர்களுக்கு ஏற்படாத கருணையா அவர்களால் உருவாக் கப்பட்ட கற்சிலைகளுக்குத் தோன்றப்போகிறது ?
தங்கத்துக்குப் பொறுக்கவில்லை. குடிசையை விட்டு வெளியே வந்தாள். இதயத்தை இளங்கோவிடம் விட்டுத் திரும்பித் திரும்பிப் பார்த்தவாறே, அவள் நொண்டி, நொண்டி நடந்தாள். ' கடவுளே, கடவுளே பரியாரி யார் கோவிக்காமல் பிள்ளையை வந்து பாக்க வேணும் உன்னனை, உனக்கு நான் கற்பூரம் கொளுத்துவேன் ' அவள் வாய்விட்டுச் சொல்லிக் கொண்டு போனள்,

Page 14
s
இதயம் எங்கோ, எங்கோ பறக்கிறது. வெம்மை யான ஏக்கப் பெருமூச் சொன்று அவளையும் மீறி வரு கிறது. வாளிப்பான தன்னுடலில் வாளி நீரை அள்ளி வார்க்கிருள், தேவி. அந்த ஏக்கத்தின் வெம்மையைத் தகிக்க முடியவில்லை; அவள் வாளிக் கயிற்றைப் பற்றி இழுக்கும் போது, அவளை முத்தமிட வருவது போல் வேகமாக ஓடி வரும் துலா, வாளியில் நீர் நிரம்பியதும் மெதுவாகப் போய்விடுகிறது. எத்தனை வாலிபர்கள் கமும் அவர்களுக்குப் புரிந்திருக்குமே ! ஆனல், தேவி யாருக்கும் தேவியாக முடியவில்லை. சுற்றிவர கிடுகு வேலி போடப்பட்ட கிணற்றடி அது. ஒலைக் கிடுகின் ஊடாக ஒளித்திருந்து, ஒட்டிய சேலையினூடே ஒளிவிடும் அவள் உடலழகைப் பார்த்து இரசிக்க வாலிபர்கள் இருந்தார் கள். ஆனல் அவள் வாழ்வுக்கு வறுமை கட்டிய சுவரைக் கடந்து, அவளுக்குத் தாலி கட்ட யாரும் இருக்கவில்லை. உருண்டு, திரண்டிருந்த அவள் மார்பகங்களில் இன்று காணும் தளர்வு, அவள் முப்பத்திரண்டு வயதைத் தாண் டுகிருள் என்பதை அவளுக்கு உணர்த்துகின்றது.
ஆழமான அந்தக் கிணற்றின் அடித்தளத்திலிருக்கும் நீரை அவளால் அள்ளி வார்க்க முடிகிறது. அவள் இத யத்தில் ஆழ்ந்து கிடக்கும் ஆசைக் கனவுகள், ஏக்கங்கள் யாருக்குத் தெரியப் போகின்றன? அந்தக் கிணற்றில் தான் அவள் ஆவி பிரியுமென தேவி அடிக்கடி எண்ணுவ

மீம்டாத விணை 2.
துண்டு. அள்ளிய நீரை அருகிலிருந்த வாளியில் ஊற்று கிருள்.
* கல கல வெனும் ஒசை கேட்கிறது. நீரை நிலத் தில் ஊற்றும் ஒசையா? இல்லை. செல்லத்தின் சிரிப்பொலி lتنگه
** என்ன அக்கா ஒட்டை வாளியிலை தண்ணியை ஊத் திறியள் செல்லம் சிரித்தாள். ' தண்ணீர் வெளியே ஓடுது'
தேவி வாளி ஒட்டை என்பதை அப்பொழுதுதான் உணர்ந்தாள். அவளும் ஒர் ஒட்டை வாளிதான்; அவள் பருவமும் ஒட்டை வாளியில் ஊற்றிய நீராகத்தான் மாறு கின்றது.
** அதனலை என்ன செல்லம்? வெளியிலை ஊற்றிய நீர் வாய்க்காலிலைதானே பாயும். உங்கடை வாழையளுக்குத் தானே நல்லது ' தேவி குளிப்பது செல்லம் வீட்டுக் கிணற்றில்தான். f
'வாழைக்கு இந்தத் தண்ணி போகாது. அதோடை போதாது, தேவையில்லாத புல்லுக்கும் பூண்டுக்கும் தான் இது உதவும் * செல்லத்தின் வார்த்தைகளில் கள்ளமில்லை. ஆனல் அவை தேவியின் உள்ளத்தை ஊடுருவத்தா ன் செய்தன. பாழாகி வரும் அவள் பருவம், எந்தப் பயிரை வளர்க்கப் பயன்படுமோ ?
** என்னக்கா யோசிக்கிறியள் ? ??
தேவி கன்னத்தில் வடிந்த தண்ணீரோடு தன் கண் ணிரையும் சேர்த்துத் துடைத்தாள். செல்லத்தோடு எவ் வளவுதான் அன்பாக அவள் பழகினலும், செல்லத்தின் இளமை அவளது பொருமையைத் தூண்டுவதுண்டு. மலர் களெல்லாம் ஏன் வாட வேண்டும்? அப்படியே வாடாது இருந்துவிட்டால் . . ം ?

Page 15
2 மீட்டாத விணை
*" செல்லம் நீ குளிக்க இல்லையே. நாலு வாளி அள்ளி வாக்கட்டே? ' தேவி கேட்டாள்.
*" குளிக்கத்தானே அக்கா வந்தனன். இரண்டு பேரு மாகக் குளிப்பம் ' செல்லம் சொன்னுள். அவள் உடை களைக் களைய ஆரம்பிப்பதற்குள், தேவி ஒரு வாளி நீரை அப்படியே செல்லத்தின் மேனியில் ஊற்றி, கலகலவென நகைத்தாள்.
*" போங்கோ அக்கா " என்று போலிக் கோபத்து டன் கூறியபடியே செல்லம் குளிப்பதற்குத் தயாராளுள்
இரு பெண்களின் கேலிப் பேச்சும், சிரிப்பொலியும் கிணற்றடியைக் கலகலப்பாக்கின. ஊர் வம்பெல்லாவற் றையும் அவர்கள் கதைத்தார்கள். சிறிது நேரத்தில் இளங்கோவைப் பற்றிப் பேச்சுத் திரும்பியது. ஒரு வாரத் திற்கு முன்னர் திருவிழாவில் நடந்த சம்பவம் முதல், தனக்குத் தாயார் அடித்தது வரை ஒன்றுவிடாது செல்லம் சொன்னுள்.
* அது பாவம், சரியான காய்ச்சலாம். ஆசுபத்திரி யிலை மூன்று நாள் இருந்ததாம் இப்ப எப்பிடியோ தெரி யாது ' செல்லம் சொன்னுள்.
** அவன் பாவந்தான். அவன் ரை தகப்பன் ஆரோ தெரியல்லை. எங்கடை அம்மம்மாக்கு ஏதாவது தெரிஞ்சிருக் கும். அவ பழைய காலத்து மனுசி. தங்கம் மனுசியும் ஒண்டும் சொல்லாதாம் ' தேவியும் பரிந்து பேசினள். ** அது சரி உனக்கேன் அவனிலை இவ்வளவு பரிவு ??? தேவி கிண்டலாகத்தான் கேட்டாள்.
ஆனல் செல்லத்தின் கள்ளங் கபடமில்லாத உள்ளத் தில் அது ஏதோ செய்தது. நிமிர்ந்த அவள் விழிகளி ரண்டும் கண்ணிரால் நிரம்பியிருந்தன. தேவி, செல்லத் தின் கைகளைப் பற்றிக் கொண்டாள்.

மீட்டாத வீண 23
" செல்லம் ஏனடி, நான் என்ன சொல்லிப் போட் டன் ? ?*
** இல்லையக்கா எனக்கு இது விளங்க இல்லையக்கா: தங்கம் மாமிக்கு நான் மருந்தெடுக்கப் போனது பெரிய குற்றமே ? பாவம் மனுசி, காலெல்லாம் இரத்தத்தோடை கதறுது. இதுக்கு . " செல்லம் விம்மினுள் " அம்மா, அதுக்கு இப்பிடி என்னை அடிச்சிருக்கக் கூடாது. " பொல பொலவென அவள் கன்னங்களில் கண்ணிர் லடிய ஆரம் பித்தது.
தேவி, செல்லத்தின் தலையை அன் போ டு தடவி,
அவளது முகத்தை நிமிர்த்தினுள். கண்ணிரைத் துடைத் தாள்.
*" செல்லம், இப்ப தான் உனக்கு வயசு பதிஞறு. இதைப்போல ஆயிரம் பேச்சைக் கேட்டுக் கேட்டு நான் அழாத நாளேயில்லை. இப்பதானே இது உனக்கு ஆரம் பம். செல்லம் அழாதை "'
** அக்கா ஊரார் என்னைப் பற்றி என்னவும் பேசட்
*" போடி பேச்சி, உனக்கு உலகம் தெரிய ல் லை. கொம்மா, உன்னிலை கோவத்திலையே அடிச்சவ P ஊர் வாய்க்கு ஏற்பட்ட பயத்திலை. உன்னை அப்பிடிப் பார்த்த உடன் ஏற்பட்ட அதிர்ச்சியிலை உனக்கு அடிச்சிட்டா'
* ஊருக்குப் பயப்பிடுற அம்மா தன்ரை மகள் மன சைப் பற்றி யோசிக்க இல்லையே. அக்கா என்ரை மனம் பட்டபாடு. நான் விட்ட கண்ணிர் - அது அவவுக்குத் தெரிய இல்லையே "
*செல்லம் நீ இன்றைக்கு வடிக்கிற கண்ணீரைப் பற்றி யோசிக்கிருய், ஊர் வாயைத் திறந்தால் இண் டைக்கு மட்டுமில்லை நீ எண்டைக்குமே கண்ணிர் வடிக்க வேணுமே ! இதைத்தான் கொம்மா யோசிக்கிரு '

Page 16
岑4 மீட்டாத விணை " அக்கா, நீங்கள் எப்பவுமே அம்மாமாரின்ரை பக்கந் தானே ? ?
** பிள்ளையில்லையே தவிர, எனக்கும் அம்மாமாரின்ரை வயசு தானேடி ?? தேவி சொன்னுள். * : ५
** அக்கா, அப்பிடிச் சொல்லாதையிங்கோ. «55IT 6) b வரும்
“இல்லையடி. அதுக்கு முன்னலை காலன் தா னடி வருவான் ??
அக்கா s
"மரத்தைப் பாரடி வளருது. பூக்குது காய்க்குது. என்னையும் பாரடி . செல்லம். செல்லம் என்னைப் போ% ஒரு வாழ்க்கை எந்தப் பெண்ணுக்கும் வேண்டாம டி. கட் டழகன், கைநிறையக் காசோடை இருப்பவன் - எண் டெல்லாம் நான் கண்ட கனவுகளைக் கண்ணிராலேயே கலைச்சிட்டன். எனக்கு அன்பு காட்ட ஒருத்தன் வேண்டா மடி இந்த ஊர் வாயை மூட, எனக்கும் ஒருவன் இருக் கிருனெண்டு சொல்ல ஒரு காலம் வருமோ? "'
தேவியின் வேதனை, அவளேயும் மீறிவிட்டது. அவள் விம்மி, விம்மி அழலானள். செல்லத்தின் マ塾 ósTalmaor வார்த்தைகளால் அவள் துயரத்தை அடக்க முடியவில்லை. செல்லத்தின் கண்களிலும் கண்ணிர் பெருகியது தான் மிச்சம். அவர்கள் கண்ணிரில் குளித்தார்கள். இன்னும் எத்தனைபேர் இப்படியோ .. ?
தேவியின் விடும், தங்கத்தின் குடிசையும் மீனுட்சியின் வீட்டின் இருபக்கங்களிலும் உள்ளவை. மீனுட்சி வீட்டுக் கிணற்றைத்தான் அவர்கள் எல்லோரும் உபயோகித்தார் கள். தேவி, இடையில் நீர் நிறைந்த கு-த்துடனும், தோளில் ஈரச் சேலையையும் போட்டுக் கொண்டு வீடு நோக்கி நடந்தாள், குடத்தை விட அவள் இதயந்தான்

மீட்டாத வீணை 2s
கனத்தது. குடத்தை நிலத்தில் வைத்து சேலையைப் பிழிந்து காய வைத்தாள். சேலையிலிருந்து நீர் சொட் டுச் சொட்டாக நிலத்தில் விழுந்தது. கனலென எரிக் கும் கதிரவனின் வெப்பத்தில் அது காய்ந்துவிடும். ஆனல், அவள் கண்களில் கசியும் நீரை நிறுத்துவதற்கு யார் வரப்போகிறர்கள்?
பிள்ளை, பிள்ளை முருங்கைக்காய் வேணுமே ' கை யில் நான்கு முருங்கைக் காயுடன் தங்கம் நொண்டி, நொண்டி வந்தாள்.
* வாங்கோ தங்கமக்கை, எப்பிடி இப்ப இளங் கோக்கு ??? தேவி தன் ஈரக் கூந்தலை உலர வைத்தபடி கேட்டாள்.
** யாரது தங்கமே . கண் தெரியிது இல்லை. வா பிள்ளை இஞ்சாலை ' தேவியின் பாட்டிக்கு யாராவது மணி தர்களைக் கண்டால் போதும். சிறு வயதிலே தாய், தந்தையை இழந்த தேவியையும், அவள் தம்பி கோபாலை யும் வள ர் த் த வ ள், அந்தக் கிழவிதான். ஒடியாடி உழைத்த அவள் இன்று ஒய்ந்து விட்டாள் நரை விழுந்த தலை, இருக்கையை விட்டு அதிகம் நகர முடியாத நிலை - கால தேவன் அவள் கதைக்கு முடிவுரை எழுதிக் கொண் டிருந்தான். ஆணுல், அவளோ இன்னும் தன் கதையின் முகவுரையைக் கேட்க இரசிகர்களைத் தேடிக் கொண்டிருந் தாள்.
* பிள்ளை அந்த நாளிலே. உவள் தேவிக்கு பத்து வயது . நல்ல காய்ச்சல், அவள் ஆரம்பித்தாள்.
*" தங்கமக்கை எனக்குப் பெடியள் படிக்க வரப்போ குதுகள். முருங்கைக் காய் என்ன விலை ? ?? தேவி கேட் டாள். தேவி சொல்லிக் கொடுக்கும் "டியூசனில்தான்" அவர்கள் வயிறு நிரம்ப வழியிருந்தது.
"நீ தாரதைத் தா பிள்ளை ' தங்கம் சொன்னுள். தேவி முருங்கைக்காயை வாங்கி, பணம் எடுப்பதற்கு
4 سته آ6 : Lf

Page 17
A6 மீட்டாத வினை
உள்ளே சென்ருல் தங்கத்தின் எண்ணம் மகனைச் சுற்றிக் கொண்டிருந்தது,
*? நேற்றுத்தானே இவ்வளவு நாளைக்குப் பிறகு சோறு சாப்பிட்டவன். ஒரு நல்ல கறியோடை சாப்பாடு கூட அவனுக்குச் சரியாகக் குடுக்க முடியல்லை. பாவம், எழும் பக்கூட எவ்வளவு கஷ்டப்படுகிருன்? என்ன செய்யிறது? எல்லாம் என்ரை தலை எழுத்து செய்த பாவம் ‘’ தங்கத் தின் சிந்தனை திடீரெனத் தடைபட்டது. அவள் விழிகள் திண்ணையிலே விழுந்திருந்த ஒர் இரண்டு ரூபாய்த் தாளில் நிலைத்தன. மடித்தபடி இருந்தது அந்த நோட்டு3 அவள் தன் வெறும் மடியைத் தடவிக் கொண்டாள். * இரண்டு முட்டை - ஒரு தோடம்பழம் - அரிசிக்கும் போதும் " அவள் இதயம் கணக்குப் போட்டது. அடி மனதில் காசை எடுக்க வேண்டு மென் ற எண்ணம் மேலோங்குகிறது. அதற்கு எதிர்க்கட்சியும் இல்லாமலில்லை. ஒரு வினுடிக்குள் அவள் இதயத்தில் நடக்கும் போராட்டம், உடலெங்கும் வியர்வையைப் பெருகச் செய்கிறது. எடுப்பதானுல் தேவி வருமுன் எடுக்க வேணடுமே; தேவியின் காலடி ஓசை கேட் கிறது. தங்கம் ஒரு கணம் சிலையாக நின்ருள். இரு தயம் மிக வேகமாகத் துடிக்கிறது. கண்மூடி கண் திறக் கும் நேரத்தில், அந்த இரண்டு ரூபாயை அவள் தன் மடியில் செருகிக் கொண்டாள்.
அவள் இதயத்தின் படபடப்பு - அவள் உடலில், பேச்சில், இதழ்களில் மலர்ந்த சிரிப்பில் - எல்லாந் தெரிந் தது, தேவி பார்த்திருப்பாளா?
" ஏன் தங்கமக்கை உந்தக் காலுக்கு மருந்து போடு றதில்லையே? ' தேவி கேட்டவாறு ஐம்பது சதத்தைக் கொடுத்தாள்.
* ஒம், பிள்ளை போடோணம் ‘’ தங்கம் திண்ணையி லிருந்து எழுந்தாள். தேவியை நிமிர்ந்து பார்ப்பதற்கு அவளால் முடியாதிருந்தது. அங்கிருந்து வேகமாகப் போக

மீட்டாத வினை 盛*_
நினைத்தாள். நெற்றி வியர்வையைச் சேலைத் தலைப்பால் துடைத்தாள்.
"நான் வாறன் பிள்ளை ' தங்கம் நடந்தாள் தலை குனிந்தவாறு நடந்தாள். இதயம் படபடத்தது. "ஐயோ அதையேன் எடுத்தன்?" என்று சஞ்சலத்துடன் அவள் நடந்தாள். இதயத்தில் புயல் வீசியது.
*" மேனை, தேவி இஞ்சவா மேனை " " கிழவி தேவி யைக் கூப்பிட்டாள். ' உவள் தங்கம் எனக்கொரு சொல் லும் சொல்லாமல் போயிட்டாள். வரட்டும் "
*" என்ன அம்மம்மா எனக்கில்லே வேலையிருக்கு ?? தேவி வந்தாள்.
*" என்னடி பெரிய வேலை ? அந்த நாளிலை உவள் தங்கம் செய்ற வேலை உனக்குத் தெரியுமோடி? பாவ மவள் தனிச்சுப் போனுள். அப்ப, அவளுக்குச் செய்த பாவத்துக்குத் தானே, இப்ப நாங்கள் அனுபவிக்கிறம்) எடியே, உவள் விட்ட கண்ணிர்; என்ர காலைப் பிடிச் சுக் கொண்டு உவள் கதறின கதறல்; கலியாணஞ் செய் யாமல் அவள் பிள்ளைத்தாச்சி எண்ட உடன், நாங்கூட சிரிச்சனன். எடியே, உவள் ஆருக்காவது சொன்னுளே, உவன்ரை தகப்பன் ஆரெண்டு எனக்கு மட்டுந் தெரியும் பார் அவளை இண்டைக்குவரை ஒரு பொடிப் பிள்ளைக் குஞ்சொல்ல இல்லை. எடியே தேவி, அவளின்ரை அரிசி தண்ணியிலை வேகிறதில்லையடி. அவள் விட்ட கண்ணீரிலை வெந்ததடி ** கிழவி பேசிக் கொண்டே இருந்தாள். தேவி யோ தன் வேலயைக் கவனிக்கச் சென்று விட்டாள்; அதையே இளங்கோ கேட்டிருந்தால், இந்நேரம் அந்தக் கிழவியின் காலைப் பிடித்தாவது உண்மையை அறிந்திருக்க மாட்டாஞ ?

Page 18
اعے
பட்டப் பகலென எறித்தது வெயில். இளங்கோ இன்னும் இருளில்தான் இருந்தான். ஆதவனின் ஒளி அகிலத்தின் இருளை அகற்றுகிறது. பேரறிஞர் அள்ளித் தந்த அரும் பெருங் கருத்துக்களெல்லாம் அவ்விளைஞனின் இதய இருளையகற்றவில்லையே! ஒருவன் சிந்தனை தெளிந் தென்ன ? உலகில், மனித உணர்வுகளை உணராத ஒரு மனிதன் இருந்தாலும், இங்கு கண்ணிர் பெருகத்தான் செய்யும் உள்ளங்கள் உருகத்தான் செய்யும்! தன் தந்தை யாரென்று அறிந்து விட்டால் இளங்கோவின் சிந்தை சாந்தி பெறுமா ? உண்மையை அறிய வேண்டுமென்ற உணர்வை விட, உலகத்தில் தலைநிமிர்ந்து வாழ வேண்டு மென்ற வேதனைதான் அவனைக் கொன்றது. இகழ்ச்சியை - அதுவும் குறுகிய நோக்குடையோரின் நச்சு நாவில் தோன்றும் இகழ்ச்சியை, தாங்கிக் கொள்ளும் இதயம் எங்கே இருக்கிறது ? இகழ்ந்தவர்கள் இளங்கோவை இன் னும் மறந்து விடவில்லை. அவனுேடு மோதிய வேலுப் பிள்ளையும் அவர் மகனும் இன்னமும் வஞ்சந் தீர்க்கக் காத்திருந்தனர்.
கன்னத்தில் ஊன்றிய இரு கரங்கள் - வெறித்த பார்வை - ஆண்டிகளுக்குத் தேவையான அந்த அமைப்பு அவனுக்கு ஏன்?
* டேய், இளங்கோ என்னடா யோசிக்கிருய்? உரிமை யோடு அழைக்கும் இப்படியான உறவுக்காக எத்தனை உள்ளங்கள் ஏங்குகின்றன.

மீட்டாத வினை 29
** கோபால் எப்படா வந்தனி ? ??
** அப்பப்பா என்னடா வெயில் ? உன்ரை உடம்பிலை அடிச்சவெயில் முடிஞ்சுதே மச்சான்? என்னடா ஒரு கிழ மையா படுத்திட்டாய். தியேட்டரிலை இரண்டு படம் வந்து போயிட்டிது ’’ *
** இளங்கோ, புன்னகை புரிந்தான்.
** நீ போக இல்லையேடா ? ??
கோபால் கல, கலவெனச் சிரித்தான். இளங்கோவுக்கு ஒன்றும் புரியவில்லை. அவன் கேள்வியில் என்ன தப்பு?
* டேய் எல்லாருந்தான் பகிடி விடுவினம். எண்டா லும் நீதான் ஒருத்தன் சுத்தி வளைச்சுவிடுவாய்? '
** என்னடா இப்ப பெரிய பகிடி விட்டிட்ட ள்? **
** நொண்டி, நானில்லாமல் எப்பிடியடா படத் துக்கு போவாய் எண்டதை என்ன மாதிரி கேட்டிட் டாய்? ' கோபால் விழுந்து விழுந்து சிரித்தான். அவன் கை வாடிப் போன தனது வலது காலைத் தடவியது. இளம் வயதில் வந்த போவியோ அவன் வலது காலில் தனது ஞாபகச் சின்னத்தை விட்டுப் போயிற்று.
இளங்கோ தன்னை நொந்து கொண்டான். உடலின் ஊனம் உள்ளத்திலும் ஒரு வடுவை ஏற்படுத்தும்; மற்ற வர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் அதைச் சுற்றித் தான் இருக்குமோவென பேதையுள்ளம் எண்ணமிடும்; இவ்வாறெல்லாம் இளங்கோ நினைக்க வில்லையே. வேதனையை வேடிக்கையாக்கும் கோடால் ஒரு விசித்திரப் பிறவிதான்.
** கோபால், இப்படிப் பேய்ப்பகிடி உன்னேடை விடு வனே ? மச்சான், டேய் எப்ப படத்துக்குப் போவம் ? '

Page 19
மீட்டாத வீண்
"படம் இருக்கட்டும். உன்ரை உடம்பு எப்பிடி? டேய், இந்தாடா, உனக்கு தோடம்பழமும், முட்டையும் வாங்கிக் கொண்டு வந்தனுன் "
படஃயைத் திறந்த தங்கம் தன்  ைகயிலெடுத் த இரண்டு ரூபாயைக் கசக்கியபடி நின்றுள்.
"டேய், கோபால், உனக் கேனடா இந்த வேலை ? கொக்கா அங்க பாவம் - " டியூசன் சொல்லிக் குடுத்து ஏதோ இரண்டு, மூண்டு ரூபாயை உழைக்குது. அதையும் நீ . ' இளங்கோ கேட்டான். கோபால் சிரித்தான்"
" மனடயா, உனக்குக் காய்ச்சலெண்டால் மெத்தை வீட்டுக் காரரும், காரிலே போறவையுமே முட்டை வாங் கித் தரப்போகினம் ? வெயிற் சூடு அதிலே வந்தவனுக்குத் தான் தெரியும். கொம்மா நிற்கிரு கேள். அவவுக்கு விளங்கும். வெயிலில் வராத உனக்கு விளங்குமே ?"
தங்கத்தின் கையிலிருந்த காசு கனலெனச் சுட்டது. தனக்கு வெயிற் சுடுவதை மட்டுந்தான் அவள் நிஃனத் தாள். அது தேவிக்கும் சுடும் என்பதை ஏன் நினக்சு
* உங்கடை வீட்டைதான் தம்பி போயிட்டு வாறன்." தங்கம் சொல்லியவாறு அவர்களேக்கடந்து உள்ளே சென் ருள். கால்கள் சிறிது தடுமாறின.
" தங்கமக்கை இந்த முட்டையைத் தோடம்பழத்திலே கரைச்சுக் குடுங்கோ. இவனுக்கு நல்லது "
உள்ளே சென்ற தங்கம் ஓடிவந்தாள். "" தம்பி, மேனே, ஒரு பிழையில்லோ நடந்து போச்சு. உங்கடை வீட்டு முத்தத்திலே ஒரு இரண்டு ரூபாய் விழுந்துகிடந்திது. என்ரை மடியாலேதான் விழுந்தது எண்டு, நான் எடுத் துக் கொண்டு வந்திட்டன், இஞ்ச வந்து பார்த்தால் என்ரை காசில்லோ கைப்பெட்டிக்க கிடக்குது; மோனே,

மீட்டாத வீண் 31
உதைக் கொக்காட்டை குடுத்து விடுறியே? " தங்கத் தின் இதய பாரம் சிறிது குறைந்தது.
" அடி சக்கை. டேய் படத்துக்குக் காசு வந்திட்டிது" கோபால் இளங்கோவின் முதுகில் மகிழ்ச்சியுடன் அடித் தான்.
"மோனே, மெதுவா அடியன். அவன் சுகமில்லாதவ னில்லே படங்கிடம் பாராமல் அதைக் கொக்காட்டைக் குடுத்துப்போடு நான் சொல்லிப்போட்டன் " தங்கம் சொன்னுள்.
சம் குடின் ' இளங்கோ தாயிடம் சொன்னுன்.
" தம்பி, உந்த மாங் கா ன ய வெட்டு கருப்பணி கொண்டு வாறன். "" தங்கமக்கை ஒரு மாங்காயையும், முத்தகக் கத்தியையும் கோபாலிடம் கொடுத்து உள்ளே சென்ருள். கோபால் மாங்காயை வெட்ட ஆரம்பித்தான்.
" டேய், எத்தனை நாளேக்கடா நாங்கள் மற்றவை பின்னர உழைப்பிலே சீவிக்கிறது. எஸ். எஸ். சி. பாஸ் பண்ணி மூன்று வருசமப் போச்சு. ஒரு வேலே, வெட்டி செய்யிறமே? பார். கொக்கான்ரை காசிலே படத்துக்குப் போறம் ' இளங்கோ சொன்னுன்,
"" அதிலே என்னட பிழை? மண்ணே நம்பித்தானேடா மரமிருக்கு எண்டாலும், மரஞ்செடி ஒண்டுமே இல்லே பெண்டால் இந்த மண்ணுக்கு என்னடா மதிப்பு ?
*" கோபால், இப்பிடிச் சொல்றதாலே உன்ரை மனச் சாட்சியை உன்னுலே ஏமாத்த முடியுமோ? வேலேபில்லா மல் இருக்கிறம் எண்ட கவலே உனக்கில்லேயோ ?
'இரண்டு கால் மனுசருக்கே இஞ்ச வேலேயில்லேயாம்.
நானென்னடா ஒரு காலிலே நிற்கிறவன்தானே எனக்கார்
வேலே தருவினம் '

Page 20
2. மீட்டாத விணே
"இந்தா தம்பி, கருப்பணியைக் குடிச்சுக் குடிச்சு கதையுங்கோ “ தங்கம் க ருப்ப நீரைக் கோபாலிடம் கொடுத்தாள். அவன் வாங்கிப் !ருக ஆரம்பித்தான்.
“ தம்பியவையல், தானும் உந்த வேலை விசயமாக கொஞ்சம் கதைக்க வேணும். உவர், கணவதிப்பிள்ளை யண்ணன் இருக்கிருரில்லோ, என்ன சொன்னலும், மனு சன் எங்களுக்குப் பெரிய உதவி, அவரின்ரை தியே சிலை. என்ன தம்பி அதுக்குப் பேர் 29
** மகாலட்சுமி தியேட்டர் "" கோபால், திங்கத்துக்கு உதவினுன்.
" ஓம். அதுதான். அங்க ஒரு சின்ன வேலை கேட் டால் தரமாட்டாரே? இளங்கோ, மோனை 2.- GOTáig விருப்பமெண்டால் நான் கேட்டுப் பாக்கிறன்
* அடி சக்கையெண்டானம். அப்ப, ஒசிப்படமில்லே. உடன் போய்க் கேளுங்கோவன் ’’ கோபால், இளங்கோ
வின் முதுகில் இன்னுமோர் அடி கொடுத்திருப்பான்: தங்கத்தைப் பார்த்துவிட்டு கையை மடக்கிக் கொண்டான்.
** போய்க் கேட்டுப் பாரம்மா. ஏதாவது வேலை தந் தால் பெரிய காரியம்' இளங்கோ சொன்னன்,
* இளங்கோ இளங்கோ "
"படலேக்க ஆரே ! கூப்பிடினம், ஆரது? உள்ள வாங்கோவன் ‘* தங்கம் அழைத் தாள்.
* அது நான்தான் மாமி. எப்பிடி மோனுக்கு ?
அட மகாதேவனே வா மோனை வா' தங்கம் வாயார வரவேற்ருள். 'கொம்மா, அண்டைக்குப் பேசின பேச்சிலை, எங்களைத் திரும்பியும் பார்க்கமாட்டியள் எண் டில்லே நினைச்சனன். பாவம் அந்தப் பெட்டை வேற வீணுக..”*

மீட்டாத வீணை 33
'அவள் தங்கைச்சி-விசயத்தைப் பிறகுதானே சொன் னவள் எண்டாலும் பாருங்கோ. அவளுக்கும் அது வேணும். பொம்பிளைப் பிள்ளையஸ் கொஞ்சம் புத்தியா நடக்க வேண்டாமே ? அட, கோபால் நீயும் நிற்கிறியே? '
* வா ம்ச்சான். நல்ல நேரம் கருப்பணி நேரம். இரன் ' கோபால், மகாதேவனின் கரத்தைப் பிடித்து நிலத்தில் அமர்த்தினன்.
** அம்மா, மகாதேவனுக்கும் கருப்பணி கொண்டு வாவன் ' இளங்கோ தாயை வேண்டி ஞன். தங்கம் உள்ளே சென்ருள். " மகாதேவா தோட்டமெல்லாம் எப்பிடி ? ??
** இப்பத்தானடா தண்ணி இறைச்சிட்டு வாறன் ?? மகாதேவனின் மேனியில் ஒடிய வியர்வை அதைத் தெளி வாகச் சொல்லிற்று. ஒரு பெரிய பானையில் தங்கம் கருப்ப நீரைக் கொண்டுவந்து வைத்தாள். கோபால் இன்னெரு மாங்காயை வெட்டிக் கிண்ணத்துள் போட்டான். இரு வரும் கருப்பநிரைக் குடிக்க ஆரம்பித்தனர்.
" திருவிழாச் சண்டையைப் பற்றி பெடியள் என்ன கதைக்கிதுகள் ?' இளங்கோ கேட்டான்
** வேலுப்பிள்ளை மாமா, உன்னை ஒரு கை பார்க்கிற னெண்டுதான் நிக்கிருர், மணியனும், முறுகிக் கொண்டு தான் நிக்கிருன். நீ அதைப் பற்றிக் கவலைப்படாதை "' "நானெண்டும் சண்டித்தனத்துக்குப் பயந்தவனில்லை" இளங்கோ ரோசத்தோடு சொன்னன்.
** மச்சான் நான் நிக்கிறன். நீ விடாதை கோபால் தோள் கொடுத்தான்.
ஏனடா, நானெருத்தன் இல்லையே? நாங்கள் படிச்ச பெடியள். அவர் அந்தக் காலத்து ஆள். கொஞ்சம்

Page 21
34 மீட்டாத வீண
நாங்கள்தானே பணிஞ்சு போக வேணும் மகாதேவன் கூறினன்டு
** தம்பி, மகாதேவன், உண்மையிலே மோனை. நாவூறு படக் கூடாது. நீ ஒரு விசயம் தெரிஞ்சபிள்ளை, ஊரோட ஒத்தோடத் தெரிஞ்ச நல்லபிள்ளை ' தங்கத்தின் குரல் உள்ளேயிருந்து கேட்டது.
* அம்மா, உந்த விசயத்திலை நீ தலைப்போட்டால், வீண் தொந்தரவுதான் வரும் ‘* இளங்கோ எச்சரித்தான்.
*" கேட்டியே தம்பி ? ? மகா தேவனைப் பார்த்துச் சொன்ன தங்கம் முணுமுணுத்தாள். ஏதோ நல்லதுக் குச் சொன்னுல். '
** மகாதேவா, வேலுப்பிள்ளையர் உனக்கு மாமாவா இருக்கலாம். அவர் என்ரை பொறுமையைச் சோதிக்க நான் இடங்குடுக்கமாட்டன் ' இளங்கோவின் அந்த வார்த்தைகளால் ப 11 தேவனின் முகம் வாடியது.
" ஆறிற நெருப்பை ஏன் வீணுகக் கிளறுருய் இளங்கோ, ஒண்டு சொல் றன், மா மாவோ, மச்சானே . ஆராயிருந் தாலும், எங்கடை அடுப்பு : ரிஞ்சால்தான் எங்களைச் சுத்தி வருவினம் டசியாலே வயிறு எரிகிற நேரத்திலை, ஆர் வருகினம் ? நாங்களும் கஷ்டப்பட்ட நாங்கள்தான். எங்கடை கையை நம்பி வாழுற நாங்கள். இஞ்ச வந்து, மாமாக்கு அப்புக்காத்து வேலை, நான் பார்க்கத் தேவை யில்லை ? ? . --
* நீ வீணுகக் கோவிக்கிருய் மச்சான். இளங்கோ ம ன மு ைடஞ்சு போயிருக்கிருன் நாங்கள்தானே ?? கோபால் முடிக்கு முன்னர் மகாதேவன் குறுக்கிட்டான்.
* அதுக்குத் தானேடா நான் வந்தன ன். உந்த விசயத்தை என்னுேடை விடுங்கோவன். அவையா ஏதும் கிளறினுல் நாங்களும் பார்ப்பம். இல்லையெண்டால் ,

மீட்டாத வினை 35
ஏன் வீண் மனக் கசப்பு ? இளங்கோ நீ சிநேகிதன். மணி யனே மச்சான். மாமா, மாமி வேறை **
'உனக்கும் ஒரு தங்கைச்சி அங்க வயக வந்து நிக்குது' கோபால் குறுக்கிட்டான்.
'உந்தக் கதையை விடுதம்பி, உவன் குடிகாரனுக்கு என்ரை செல்லத்தைக் குடுப்பனே ? அதுக்கில்லை மச்சான். ஒரு நல்லது கெட்டதுக்கு, நாலு பேர் வீடு தேடி வர வேணுமே. தனிச்சு வாழுற காலம் போயிட்டிது. இது சமுதாயம். பல இனம் - பல மொழி பேசிற மக்களே ஒருவரை ஒருவர் நம்பி வாழ வேண்டிய காலம். நீ செத் தாக் கூட, உன்னைத் தாக்க நாலு பேர் வேணுமோ, இல்லையோ???
** மகாதேவா, நீயேன் கவலைப்படுருய் ? இந்த விச யம் என்னைப் பொறுத்தவரை முடிஞ்சு போனதுதான். கோயில் கூடாதென்ருல் அதை இடிக்கச் சொல்லி பக் தர்களுக்குத்தான் சொல்ல வேணும். ஆனல், அதை, அவர்கள் பக்தியிலே இருக்க்ைக்கச் சொன்னல், இடி எங்க விழும் ? நாங்கள் இன்னும் இளம்பெடியள் கான். இடத் தைக், காலத்தைப் பார்த்துக் கதைக்கத் தெரியல்லை ? ? இளங்கோ சொன்னன்.
- இவர்கள் பேச்சைக் கேளாதவள் போல் தங்கம், குடத்திலிருந்த தண்ணிரை எடுப்பதற்கு வெளியே வந்தாள். ஆனல் தண்ணிரை எடுக்காமலே பதறியபடி ஓடிவந்தாள்.
* ஐயோ, பெடியள் அங்கேயல்லோ வேலுப்பிள்ளை யரும் மோனும் வருகினம். ஐயோ பிள்ளையாரே, கம்பு, தடியே டை நாலைஞ்சு பேருமில்லோ வருகினம் ' மகா தேவன் துள்ளியெழுந்தான். கோபால் தடுமாறியவாறு எழுந்தான். இளங்கோ அசையவில்லை.
* ஒடுங்கோடா, பெடியள் நான் அ வை யோடை கதைக்கிறன்' தங்கம் பதறிஞள்

Page 22
96 மீட்டாத வினை
* பார்த்தியேடா எங்கடை வீரத்தாயை "" கோபால் அந்தச் சமயத்திலும் சிரித்தான். மகாதேவனின் முகம் மிகவும் கடுமையாக இருந்தது.
"மாமி உள்ள போங்கோ. இஞ்ச கொலை நடந்தா லும் நீங்கள் வெளியிலை வரக்கூடாது. ’’
குேம்பிட்டன் பெடியள், உங்க, உங்க பாட்டிலை போங்கோடா “ தங்கம் அவசரப்படுத்தினுள்.
அம்மா, உள்ளே போ ** இளங்கோவின் குரலில் ஒரு தலைவனின் உரம் இருந்தது. தங்கம் ' என்ரை பிள்ளையாரே " என்றபடி உள்ளே போனுள்.
டேய், கோபால் நீ இளங்கோவோடை நிண்டு கொள். நான் போய் அவையச் சந்திக்கிறன் . ஒரு தம்பி இஞ்ச கதைக்கக் கூடாது; உங்க பாட்டிலை இருக்க வேணும் '
சி? மகாதேவா, நீ போ என்ரை விசயத்தை நான் பார்க்கிறன்; ' இளங்கோ சொல்லுமுன் படலையருகில் சத்தம் கேட்டது.
* ஒரு தம்பி இஞ்சை கதைக்கக் கூடாது எண்டில்லே சொன்னனன். இளங்கோ நான் சொல்றதை நீ கேள். ? ? சத்தம் போட்ட மகாதேவன் படலையை நோக்கினன்.
* யாரடா அங்கை, உள்ள இருக்கிறவன், சண்டிய னென்ருல் வெளியிலை வாடா வேலுப்பிள்ளையரின் குரல் கர்ச்சித்தது.
கோபால் இளங்கோவை அசையாமல் பிடித்துக் கொண்டான் தங்கம் அங்குமிங்குமாகப் பதறியபடி நின் முள். மகாதேவன் படலையை நோக்கி நடந்தான். நிமிர்ந்த அவனது நெஞ்சும் நேரான அவனது நடையும் ஒரு மல்யுத்த வீரனை நினைவூட்டின.

மீட்டாத வினை 97
** டேய், வெக்கம் கெட்டவனே, வீரமிருந்தால் வெளி u Gano enur L nr. “ '
* எடியே தங்கம் உன்ரை மோனை வரச் சொல்லு LuTrijuub. ’ ”
** இண்டைக்கு இரண்டிலை ஒண்டு. உவன் நேற்றுப் பிறந்தவன். எங்கடை வேலுப்பிள்ளையருக்கு கை வைக்கவோ ? ?"
பல குரல்கள் மாறி, மாறிக் கேட்டன. மகாதேவன் படலையைத் திறந்தான். கம்பும் சையுமாக ஐந்தாறு மணி தர்கள் அங்கு நின்றர்கள். அவனைக் கண்டதும் அவர்க ளிடையே ஒரு சல் சலப்பு ஏற்பட்டது. வேலுப்பிள்ளை முன்னுல் வந்தார்.
** மகாதேவா, உனக்கு இஞ்ச என்னடா வேலை ? ?? அவர் கேட்டார்.
*"மாமா, ஒருத்தனுக்கு அடிக்கிறதுக்கு இவ்வளவு பேர் என்னத்துக்கு ?" மகாதேவன் நிதானமாகக் கேட் டான்.வேலுப்பிள்ளையின் கரம் அவனது தோளில் விழுந்தது.
"நீ உதுக்குள்ள தலையைப் போட்டால் சொல்லிப் போட்டன். கிள்ளி எறிஞ்சு போடுவன் பிறகு கோவிக் காதை ’’
** மாமா, நீங்கள் பெரிய மனுசர் இது என்ன சின்னத்தனமான வேலை ? அவன் இளம்பெடியன் ஏதோ சொன்னன். அதுக்குள்ள நீங்களேன் தலையைப் போட்டி யள்? பெடியள் விசயத்தைப் பெடியளோட விடுங்கோ வன்' மகாதேவன் அமைதியாகச் சொன்னன்.
'மடையா, எனக்குப் புத்தி சொல்ல வாறியே? விட்டனெண்டால் பல்லுப் பறக்க ** வேலுப்பிள்ளையர் கையை ஓங்கினர். யாரோ ஒருவன் அதைப் பிடித்துக் கொண்டான் ,

Page 23
է B மீட்டாத வினே
"" அயலிலுள்ள வேளிகளினூடே பல தஃலகள் எட்டிப் பார்க்க ஆரம்பித்தன. மீனுட்சி சேஃலத் தஃலப்பை, மடியில் செருகியபடி ஓடிவந்தாள். செல்லம் படகில வாசலில் நின்று ஒழுங்கையில் நடப்பதைப் பார்த்தாள். தேவியும் அவள் அருகில் நின்றுள்,
தகப்பனே விலக்கிக் கொண்டு முன்னுல் வந்தான், மணியன்.
" மகாதேவா, உன்னுேடை எங்களுக்குக் கதையில்லே. எங்கேடா அவன் ?
"அண்னே, அண்ணே என்ன அண்ணே இது? என்ரை மோனுேட என்ன செய்பிறியள் ? டேய் மணியா போடா அங்கா லே' மீனுட்சி மணியஃன அப்பால் தள்ளினுள்.
"" தங்கைச்சி நீ வீட்டை போ. இது ஆம்பிளேபள். சபம் "" வேலுப்பிள்ஃள கட்டளோபிட்டார்.
" வெக்கங் கெட்ட வேலேயில்லே செய்யிறியல். மாம ணும், ம ருமோ னு ம் சண்டையே? அண்ணே, அவன் சின்னப் பெடியன், உனக்குப் புத்தி எங்க போச்சு? ' மீனுட்சி சத்தமிட்டாள். வேலுப்பிள்ஃளயின் மடியில் பிடித் துத் தள்ளிக் கொண்டு போனுள். வேலுப்பின்ளேயர் தனித் ததும் மெதுவாக, ஆணுல் கோபத்தோடு பேசினுள்.
" உனக்கு மூளேயிருக்கே அண்ணே. இளங்கோவோடை சண்டை போட இப்பவோ வரவேணும்? என்னர மகனிஃப் ஆராவது தொட்டியலோ சொல்விப் போட்டன். உன்னர செத்தவீட்டுக்கும் நாணில்லே. உங்கடை கவியானத்துக்கு Liolin ჭკს ""
வேலுப்பிள்ஃள குறிதவறுவதை உணர்ந்தார். இளங் கோவோ வெளியே வரவில்லை. மகாதேவணுே உறுதி பாசு அங்கு நின்றன். யாரு மற்ற இளங்கோவோடு மோதலாம். ஆனுல் மகாதேவஜேடு மோதினுல் விளேவு நல்லதாக இருக்சாதே.

மீட்டாத விணே 品晶
இச் சமயத்தில் எங்கிருந்தோ வந்த தேவியின் IIntl II-, தன் பொல்லேயும் ஓங்கியவாறு ஓடிவந்தான்.
" டேய், வேலுப்பிள்ளே என்னடா செய்ருய், உவள் திங்கத்தின் ரை வள வுக்க: வேக மின்னக்கெட்டதுகள், போங்கோடா, எல்லாரும் அவ, அவயின்ரை வீட்டுக்கு. அங்க பெண்டுகள் பிள்ளேயக்ளப்பற்றிக் க வ லேயில் ஃ. அவேக்குச் சண்டித்தனமும், சண்டையும். டேய் வேலுப் பிள்ஃள கூட்டிக்கொண்டு போடா உவங்களே. உங்கடை கதையெல்லாம் கிழிச்சனெண்டால் . சந்தி சிரிக்கும் அவையும். அவையின்றை #ண்டித்தனமும் "
கிழவிதான் அவன். ஆணுல் அவள் வார்த்தைக்கு திடு சத்தியிருந்தது. நாலு விசயந் தெ ரிஞ் சவன் அவள் . "திாரணமான விசயங்கள் மட்டுமல்ல, பலரது வாழ்க்கை இரகசியங்களேயே அவள் அறிந்திருந்தாள்.
" படக்:யைக் கட்டடி தங்கம். உன்னது பெபு. &னக் கொஞ்சம் அடக்கி வையன், போங்கோடா எல்லாரும் "
முதலில் நடந்தவர் வேலுப்பிள்ஃாதா ள். மற்றவர் கள் பின்தொடர்ந்தார்கள். மணியன் ஏதே بنتا "T TP331/ Pனுத்தவாறு நடந்தான். தேவி, தன் பாட்டியை ஆச் சரியத்தோடு பார்த்தாள். அந்தக் கிழவிக்குப் பிறகு பிறந்தவர்கள் தானே. அந்த விதர்கள் எ ல்வோரும்.

Page 24
s'
காலம் காதலரைப் பொறுத்தவரையில் கொடி யதுதான் அவர்கள் பிரிந்திருக்கும் போது விரிந்தே செல்லும். பிரிந்தவர் கூடினல் அது விரைந்தே ஓடிவிடும். எப்படியிருந்தாலும் கவலைகளை, கசப்பு நிகழ்ச்சி களை மறப்பதற்குக் காலம் ஒரு மருந்துதான். மாதங் கள் சில கடந்துவிட்டன. கஞ்சியில் உப்பை விட்டுக் கரைத்துக் கொண்டிருந்தாள் மீனுட்சி. தங்கம் மீது, அவஸ் கொண்ட கசப்புணர்ச்சி எப்பொழுதோ கரைந்து போய்விட்டது. அவள் எண்ணங்கள் மகளின் எதிர் காலத்தை எண்ணிக் கனவு காண்கின்றன. செல்லம் தேங்காய் துருவுகிருள். அவள் இதயமோ தேனென அவள் காதுகளில் பாயும் tit-git-Gir கலந்துவிடுகிறது. அதற்கு இணையாகப் பாட இதழ்கள் துடிக்கின்றன. கன்னம் இரண்டும் மாம்பழமெனச் சிவக்கின்றன. கரு விழிகளோ, அத்தப் பாடல் வந்த பாதையில் பறந்து செல்கின்றன. கண்களைக் கூசர் செய்வது அந்தக் கதிர வளு இல்லை - அவன் கதிர்கள் வியர்வையில் மோதத் தீப்பிழம்பென ஒளிவிடும் அக்கா%ளயின் சிவந்த மேனியா? ஒரு கையில் கயிற்றுடன் துலா ஓடிக் கொண்டிருந்தான், இளங்கோ. ஒடும்துலா மீது தன் தங்கையின் இதயமும் ஒடுகிறது என்பதை அறியாமல், மகாதேவன் தண் னிரை இறைத்துக் கொண்டிருந்தான். தன்பாதையில் தனித்து நடக்கக் கஷ்ட படும் கோபால், - Guru) désir லில் பாய்ந்து வரும் நீருக்கு அதன் பாதையைக் காட்டிக் கொண்டிருந்தான்.

மீட்டாத வீணை 41
** கோபால் வெங்காய்த்துக்குத் தண்ணி காணும். தக்காளிக்குத் திருப்பிவிடு " மகாதேவனின் இடையீட் டால் இளங்கோவின் பாடல் தடைப்படவில்லை.
* மச்சான், மேலை அவன் பாடுருன். இஞ்ச வயிறு தாளம் போடுது " கோபால் தந்திரமாகத் தன் பசியைத் தெரிவித்தான்.
இளங்கோ தன் பாட்டை இடையில் நிறுத்தி *ரிகார்டை மாற்றினன்.
* பசியாலே வாடும் ஏழை முகத்தைப் பார்ப்போ ரில்லையா? அடுக்களையில் வெண்கலப் பாத்திரத்தின் ஒசை யுடன் செல்லத்தின் கிண்கிணிச் சிரிப்பொலி கேட்கிறது.
** அம்மா, பாட்டு கேட்டுதே, கஞ்சியைக் கொண்டு போ " செல்லம் தாயைப் பார்த்துச் சிரித்தாள்.
பாரடி, அவங்களிண்டை பாட்டை ' மீளுறட்சி புன் சிரிப்போடு கஞ்சிக் கலயத்தைத் தூக்கினுள். பச்சைப் பசேலென்ற வெங்காயத்தோட்ட மும், அதில் பாய்ந்து செல்லும் தண்ணிரும் அவள் உள்ளத்தைக் குளிரச் செய்கின்றன. ஒருபுறம் பழுத்துத் தொங்கும் தக்காளிப் பழங்களும், கத்தரிக்காய்களும் அவள் மகனின் உழைப்புக்கு நன்றி செலுத்துகின்றன.
** இளங்கோ, இறங்கு போதுமடா கஞ்சியும் வந் திட்டிது " மகாதேவன் சொல்லிய வாறு கிணற்றுக் கயிற்றை விட்டு கோபாலை கோக்கி நடந்தான். 'போடா மண்வெட்டியைத் தந்திட்டுப் போய் முகத்தைக் கழுவு'
மாமி, கஞ்சியை ஊத்துங்கோ. வந்திட்டன்' கோபால் நொண்டி, நொண்டி கிணற்றடியை நோக்கி நடந்தான். இல்லை. ஒடினன். மகாதேவன் வாய்க்கால் களைச் சரிப்படுத்தினன்.
மீ. வீ.-6

Page 25
4屠 மீட்டாத விணை
'தம்பிமாரே, வாங்கோ, வாங்கோ. கஞ்சி ஆறப் போகுது " மீனுட்சி மரநிழலில் நின்றவாறு குரல் கொடுத் தாள்.
தோட்டம் அவர்கள் வீட்டின் பின்புறம் இருந்தது. அடுக்களையிலிருந்த செல்லத்துக்கு அங்கு நடப்பதெல்லாம் நன்கு தெரியும். திருவிழா நிகழ்ச்சியின் பின் அவள் இத யம் புதுக் கோலங் கொண்டது. எண்ணங்கள் ஏனே இளங்கோவையே வட்டமிட்டன. அவனைப்பற்றிய அவளது கள்ளத்தனமான எண்ணங்களினல் அவள் உள்ளத் திவே ஒரு கிளுகிளுப்பு உண்டாயிற்று. அடிக்கடி தன்னைக் கண்ணுடியில் பார்த்துக் கொண்டாள். தலையை வாரிக் கொள்வாள். உடைகளையும் மாற்றிக் கொள்வாள். அவன் விழிகள் தன் மீது படவேண்டுமென ஏங்குவாள். ஏதோ நினைத்துப் புன்னகை புரிவாள்.
** உனக்கு ஏன் அவனிலை இவ்வளவு பரிவு? தேவியின் கேள்வி, அவள் காதுகளில் ரீங்காரஞ் செய்யும். அவள் "கிளுக்கெனச் சிரிப்பாள். அது. அது. அதுதான். அந்த உறவுக் குப் பெயரை அவள் இதயம் தேடும். "காதல்" என மனதுக்குள் சொல்வாள். வேறு யாருக்கும் கேட்டு விட்டதோ என்று பயத் துடன் அங்குமிங்கும் பார்த்துக் கொள்வாள்.
* பாருங்கோ மாமி. நான் இரண்டு கோப்பை குடிக்க இல்லை. இளங்கோ நாலாவது கோப்பைக்கு நீட்டினன். டேய் போதுமடா "'
** கோபாலண்ணன் எப்பவும் பகிடி தான். பாவம் அதுக்குப் பசியாக்கும். அதின்ரை கோப்பை சின்னன் தானே. நல்லாக் களைச்சுப் போச்சு செல்லம் தன்னேடு பேசிக் கொண்டாள். அவள் விழிகள் அடுக்களை யன்னலி னுடே இளங்கோவையே விழுங்கிக் கொண்டிருந்தன.

மீட்டாத வீண 43
*" குடியுங்கோடா, பெடியள். நல்லாக் குடியுங்கோ களைச்சுப் போனியள். பசிக்காதே ? ? மீனுட்சி சொல் லியவாறு கோப்பைகளில் கஞ்சியை ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தாள். மூன்று நண்பர்களும் அவள் முன்ன லிருந்து கஞ்சியைப் பருகினர்.
** எண்டாலும் மாமி, உங்கடை கைபட்டால் கஞ்சி ஒரு தனிச் சுவைதான். '
** ஏனடா கோபால் வேண்டியளவு கஞ்சி இருக்கிதே, பிறகு ஏன் அம்மாக்கு ஐஸ் வைக்கிருய்?' மகாதேவன் கேட்டான். ܫ V
* பார்த்தீங்களே மாமி, ஒரு சொல்லு உங்களைப் பற்றி நல்லாச் சொல்ல விடமாட்டான்'
கோபால் கஞ்சிக்குக் கோப்பையை நீட்டினன்.
** ஒமடா மேனை, உவனுக்கு என்ன தெரியும் ? அப்ப அவர் இருக்கைக்க என்றை கஞ்சியெண்டால் போதும்: மனுசன் சோறும் சாப்பிடாது. அவ்வளவு ஆசை ""
** அம்மான்ரை சோறு அவ்வளவு திறம். அதுதான்' மகாதேவன் சொன்னன்.
* ஊத்துங்கோ மாமி" கோபால், மகாதேவனைப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டினன்கு
** இளங்கோ என்னடா வெட்கப்படுகிருய். இந்தா பிடி ** மீனட்சி கஞ்சியை ஊற்றினள். கஞ்சியைப் பரு கும் நிலையில் அவனில்லை. அவன் கண்களோ யன்னலி னுாடே நடமாடும் இளவஞ்சியின் அழகைப் பருகின.
* அது பார்க்குது அவள் விழிகள் படபடத்தன. முகமோ மேலும் சிவந்தது. அவள் விழிகளைத் தாழ்த்திக் கொண்டாள். “ பாரடி, பாரடி " என்றது ஓர் உள்ளம். ம். ஹ"ம் "அது பார்க்குது " என்றது மறு உள்ளம் ,

Page 26
44 மீட்டாத விணை
ஆசையும், நாணமும் போட்டியிட்டன. இதுதியில் இரண் டுக்குமே பாதித்தோல்விதான்; அவள் கடிைக்கண்ணுல் அவனைப்பார்த்தாள். * குபுகுபு" வென கறி கொதித்து அடுப்பை அணைத்தது. அவள் தன்னிலை அடைந்தாள். நேரம் நகர்ந்தது. மாலையில் கூடுவதாகக் கூறி நண்பர் கள் பிரிந்தனர்.
சுருண்ட தன் கேசத்தைச் சீப்பின் பின்பக்கத்தால் அழுத்தி மேலும் அழகுபடுத்தினுள். இளங்கோ வெடித்தி ருந்த சிறிய கண்ணுடியில் அவனுருவம் இரண்டாகத் தெரிந் தது. அவனிதழ்கள் காலையில் பாடிய பாடலை அசை போட்டுக் கொண்டிருந்தன. மறைந்து கொண்டிருந்த கதிரவனின் ஒளி மங்கிய செந்நிறத்தை எங்கும் பரப்பி யது. ** தியேட்டர்கார கணபதிப்பிள்ளையரோட கதைச்ச னன். உன்னை வந்து தன்னைக் காணட்டுமாம். சொல்லு றது கேட்டிதே. "" தங்கம் மாட்டுக்கு நுங்கைச் சீவிய வாறு மகனுக்குக் கதையைச் சொன்னுள் " அவருக்கும் என்னலே ஒரு அலுவல் நடக்க வேண்டுமாம். சொன்ன வர். மனுசன், என்ன விசயம் என்று தான் சொல்ல வில்லை. நீ போய் அவரைப் பார்க்கிறியே ? ?
" ஓம். ஓம் படத்துக்குத்தானே போறம், தியேட் டரிலே அவரோட கதைக்கிறன். தேத்தண்ணி இல்லையே??? இளங்கோ கேட்டாள்.
* கொஞ்சம் பொறடா மேனை தண்ணி கொதிக்க இல்லை. " " " எனக்கு நேரஞ் சென்று போச்சு ** இளங்கோ புறப்பட்டான் வெள்ளை வேட்டியும், தவிட்டு நிறச்சேர்ட் டும் அவனை அழகுபடுத்தின.
*" அட இதைக் குடிச்சிட்டுப் போவனடா "" எல்லாத்துக்கும் பிறகு வாரன்.
** தம்பி டேய், பெரிய மனுசர் கொஞ்சம் கவன மாகக் கதையடா எல்லாம் பிள்ளையார் செய்வார் "

மீட்டாத வினை 45
* சரி சரி நான் வாரன் ??
இளங்கோ மகாதேவனது வீட்டை நோக்கி நடந்தான். அடுத்த வீடுதான் ஆனலும் இருவீட்டிற்கும் இடையில் பல பனைமரங்கள் இருந்தன. இனந்தெரியாத ஒர் இன்ப உணர்ச்சி அவனிதயத்தில் பரவியது. புதியதொரு நற் கருத்தை படிப்பது போன்ற ஓர் உணர்ச்சியது. ‘செல்லம்" புத்தம் புதியதொரு கவிதைதான். அவன் இதயவீணை. யில் அந்த இன்பக் கவிதை இசையாகப் பிறந்து எங்கோ அவனை அழைத்துச் சென்றது.
* சட சட வென வேலியைப் பிரித்துக் கொண்டு துள்ளி விழுந்தது ஒர் ஆட்டுக்குட்டி, இளங்கோ ஆட்டுக் குட்டியை நோக்கினன். வேலிக்கு அப்பால் தன் விழி களைத் திருப்பினள். கைகளை உதறியவாறு நின்ருள் செல்லம். " பட பட ‘ வென அவள் விழிகள் துடித்தன. முத்தான அவள் மேல்வாய்ப் பற்கள், கீழ் அதரத்தைக் கடித்தன. இயற்கையிலேயே சிவந்த அவள் இதழ்கள் இரத்தம் சிந்தும் நிலையில் இருந்தன. மலரைச் சுற்றும் வண்டென அவன் விழிகள் அவளது அழகுமுக த்தை சுற்றின அவள் ஒரு பனையை அணைத்தபடி பைங்கொடி யென நின்ருள். பச்சைக் கொடியல்ல அது பவளக் கொடி. சில கணங்கள் தான் கண்கள் பேசின. ஆனல் பலயுகங்கள் பேசவேண்டியதைப் பேசின.
செல்லம் ஏதோ சொல்லத்துடித்தாள். ம். வாதம் முடியவேயில்லை. கையை நீட்டி ஆட்டுக்குட்டியைக் காட்டி னள். இளங்கோவிற்கு உணர்வு வந்தது. துள்ளும் ஆட்டுக்குட்டியை மார்போடு அணைத்துத் தூக்கின ன். வேலிக்கு அருகில் அவள் வந்தாள். ஆட்டுக்குட்டியை அவள் கரங்களில் கொடுத்தான். அவனது இதயத்தை...? குட்டியை அணைத்தபடி அவன் ஓடினள். ஆனல் அவள் உள்ளம்..?

Page 27
A-6 மீட்டர்த வினை
*" செல்லம் ' துணிந்து அவன் அழைத்தான் ஓடிய கால்கள் நின்றன. அவளிதயம் "படபட" வெனத் துடிக் கிறது; யாராவது பார்த்தால் .? மெல்ல அவள் திரும் பினள்.
‘என்னலே எல்லாருக்கும் கரைச்சல் கொம்மா உனக்கு அடிச்சும் போட்டாவாம். ' இளங்கோ விக்கி, விக்கிச் சொன்னன். முதன்முறை மேடையில் பேசுபவனுக்கும் கூட அத்தனை தயக்கம் வராது.
'இல்லை" என்பது போல் அவள் தலையை அசைத் தாள். குறுநகை ஒன்று அவள் இதழ்களில் நெளிந்தது; கன்னத்தில் தெரிந்த சிகப்பு செவ்வானத்தின் பிரதி பலிப்பா ? இல்லை வானம்தான் அவள் சிவந்த வண்ணத் தைப் பிரதிபலிக்கிறதா ? ? டக் கென ஒரு ஒசை. ‘படக்" கென்றன இதயங்கள் இரண்டு. இரண்டா? விளாமரத்தி லிருந்து விழுந்த பழமொன்று அவள் காலடியில் உருண் டது. அவள் அதை எடுத்தாள். அவனை நோக்கி எறிந் தாள். அவன் இரு கரங்களாலும் ஏந்திக் கொண்டான். புன்னகை சிரிப்பொலியாக மாறியது. அவள் துள்ளி ஓடி மறைந்தாள். அவன் கரங்களில் அந்தப் பழமிருந்தது.
** டேய் கெதியாக வாவனடா நேரமாச்சுது இல்லே?" ஏதுமறியாத மகாதேவன் படலையருகிலிருந்து கத்தினன். இளங்கோ அவனை நோக்கி விரைந்தான். ** சைக்கிலுக்கு காத்து காணுமே ' இளங்கோ சைக்கிளின் டயரை அழுத் தியபடி கேட்டான்.
** அது காணுமடாப்பா எங்கே உவன் கோபால் ? ??
** நான் ரெடி வாங்கோவன்டாப்பா ' கோபால் தங்களது வீட்டுப் படலையில் இருந்து கத்தினன்.
** நாங்கள் படத்துக்குப் போறம், செல்லம் அம்மாட் டச் சொல்லு " மகாதேவன் சொல்லியவாறு சைக்கிளை
கோபாலை நோக்கி உருட்டினன். இளங்கோ பின் தொடர்ந் தான்,

மீட்டாத வினை 4.
அவர்களது 'அரசடி” கிராமத்திலிருந்து இரண்டு மைல் தொலைவிலிருந்தது அவர்கள் படம் பார்க்கச் செல் லூம் தியேட்டர், மாதம் ஒருமுறையோ இரு முறையோ படம்பார்க்க அக்கிராமத்து வாலிபர்கள் தவறுவதில்லை, பயிர்கள் நன்கு பலன் கொடுக்கும் நாட்களில் வாரம் ஒரு படங்கூடப் பார்ப்பார்கள். சைக்கிள் முன்பக்கத்தில் (பாரில்) கோபால் இருந்தான். பின்பக்க * கரியரில் இளங்கோ இருக்க மகாதேவன் வெகுவேகமாக சயிக்கி ளைச் செலுத்தினன். கோபாலின் வேடிக்கைப் பேச்சில் சிரித்து மகிழ்ந்தவாறு அவர்கள் சென்றனர். தியேட்டர் நெருங்கினதும் இளங்கோ குதித்தோடிச் சென்று கலரி கியூவில் நின்றன். கோபால் இறங்கி வேடிக்கை பார்த் தான். மகாதேவனே சயிக்கிளைப் "பார்க் " பண்ணுவதற் குச் சென்றன். கோபால் கரிய மெல்லிய உருவம் கொண் டவன். ஆனல் கண்களோ மிகுந்த ஒளி வீசுபவை. அங்கு மிங்கும் ஓடிய அவன் விழிகள், ஓர் சிசிகு மங்கையிடம் அடைக்கலம் கொண்டன.
அரைப்பாவாடை, அழகாக வாரிய கேசம் காதில் இரண்டு பெரிய வளையங்கள். அதனே ரத்தில் சுருண்டு தூங்கும் மயிரிழைகள். அதுவரை நீண்டிருக்கும் அழகிய கண்கள்; கோபால் அவளை யே பார்த்தவாறு நின்றன் : ** என்ன மச்சான் கணபதியரின்றை மகஜர் பார்த்துக் கொட்டாவி விடுகிருய்??? மகாதேவன் தோளில் தட்டிக் கேட்டான். " கணபதிப்பிள்ளையரின்றை தியேட்டரிலே ஒடுறபடம் பார்க்கத்தான். டிக்கட் எடுக்கவேணும். வாச லிலே நடமாடும் இவளைப் பார்க்கிறதுக்கு.
* டேய் கொஞ்சம் பண்பாடு வேணுமட. அக்கா, தங்கையளோட பிறந்தநாங்கள் எங்கள் பார்வையிலாவது கொஞ்சம் பண்பு வேணுமடா"
* அழகு இரசிக்கத்தானே மச்சான்'

Page 28
48 மீட்டாத விணை
* மலரை இரசிக்கிறமாதிரி ரசியடா, மதுவைச் சுவைக் கிற மாதிரியில்லை' " " மதுவுக்காகத்தானேடா வண்டு மலரைச் சுத்துது '
* வண்டு எல்லா மலரையும் சுத்தும். நாங்களும் அப்படிச் செய்தால். . "
" என்ரை கண் அந்த மலரை மாத்திரந்தானேடா நாடுது'
** கோபால் நீ கொம்புத்தேனுக்கு ஆசைப்படலா மேடா ? ? கோபால் சிரித்தான்.
** மச்சான் எல்லாரும் மனம் புண்படக்கே அழுவீனம் நீ சிரிக்கிருய். உள்ளத்திலே நீ அழுகிறதை உலகுக்கு மறைக்கலாம். ஆனல் உயிர் நண்பர்களுக்கு நீ மறைக்க முடியாத டா "
கோபால் பலமாகச் சிரித்தான் ,
" உன் கற்பனை அருமையடா. எதுக்காக நான் அழ வேணும் ' ?
** என் நாவாலேயே உன்னை நான் சுட்டதற்காக மச் சான், வேதனையாக இருந்தாலும் இந்த ஆசையை உன் னிதயத்திலிருந்து முளையிலே கிள்ளிவிட நான் விரும்பு கிறேன். அடையமுடியாத ஆசைகள் உன்னிதயத்தையே பிரித்துக் கொண்டு விருட்சமாகி விடக்கூடாது பார் ??
எது எப்பிடியோ, ஒன்றை நீ சரியாகப் பிடிச்சிட் டாய்" மகாதேவா, உணர்ச்சிகள் சாதாரணமான மனிதனை விட குறைகள் நிறைந்த மனிதன் தான் அதிகம். என்ரை உடல் தானடா ஊனம். ஆனல் உள்ளம் உயரத்திலே தான் எப்பவும் தாவும். அது அவளிடந்தானே தாவிட் டுது. ' அவன் அவளைச் சுட்டிக்காட்டினன். தியேட்டர் வாசலில் நின்ற அவளும் திரும்பிப்பார்த்தாள். அவன்

மீட்டாத விணை 9
வேடிக்கையாக ஆந்தைபோல தன்விழிகளே உருட்டினன்; அவள் அவனது குறும்பைப்பார்த்துச் சிரித்தாள் கோபா லின் முகத்தில் வெற்றிப்புன்னகை படர்ந்தது.
** தோழரே, பார்த்தீரா, என் சிந்தைதனைக் கொள்ளை கொண்ட சிங்காரப் பைங்கிளியின் சிரிப்பழகை??? கோபால் ராஜபாட் நடிகனைப் போல் பேவினன்.
** டிக்கட் எடுத்தாச்சு வாங்கோ " இளங்கோ அழைத் தான். ܓ
ஒன்று அங்கொடைக்கே " மகாதேவன் கேட்டான் ஆனல் படம் முடிந்து அவர்கள் வெளியே வந்தபோது மகாதேவனுக்குப் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. தியேட் டர் ஊழியன் ஒருவன் வந்து கோபர்லைச் சுட்டிக்காட்டி முதலாளி அழைப்பதாகக் கூறினன். கோபாலின் குறும்பு வம்பை விலைக்கு வாங்கிவிட்டதோ என்று அவன் நினைத் தான். கோபாலோ சிரித்தவாறு ஊழியனைப் பின்தொடர்ந் தான். முதலாளியின் அறையை அவன் நெருங்கியபோது அவனது இதயத்தரசியின் இனிய குரல்தான் அவனை வர வேற்றது.
** அப்பா வசிக்குது வாங்கோவன் வீட்டை போவம் ??
* பொறு அமுதா. ஒரு சின்ன வேலை. முடிச்சிட்டு போவம் ' கணபதிப்பிள்ளையர் மகளை அமைதிப்படுத்தி னர். ஐம்பதை அவர் நெருங்கிக் கொண்டிருந்தாலும், அவரைப் பார்ப்பவர்கள் வயதைக் குறைத்தே மதிப்பார் கள். அழகான "பிரேம் போட்ட கண்ணுடி அணிந்திருந் தார். தேசிய உடையில் அவர் தோற்றம் அவரது பெரிய உருவத்தை அழகாகக் காட்டியது.
**வாதம்பி உள்ளே; ஏதோவேலை கேட்டியாம்? கண பதிப்பிள்ளையர் அப்படி அழைத்தபோது, கோபால், யாரு டைய கண்பார்வை படாவிட்டாலும் அதிஷ்டத் தேவதை யின் ஓர்விழி தன் மீது விழுவதை உணர்ந்தான்,
மீ. வீ.-7

Page 29
50 மீட்டாத வீண்
ருலும் ஏதாவது செய்வன் உங்களுக்கு =塾ff சொன்னது? எனக்கு வேலை வேணுமென்று?
"கொம்மாதான்
கோபால் மனதுக்குள் சிரித்துக்கொண்டான். அதிஷ்ட தேவதையானது தன்னைப் பார்ப்பதாவது. இந்த ஆழ்குத் தேவதையாவது கொஞ்சம் சிரிக்கட்டுமென நி3னத்தான். இளங்கோ நிற்கவேண்டிய இடத்தில் தான் நிற்பது அவ இணுக்குப் புரிந்தது.
'அம்மாவோ சொன்னவ? வயர்லசிலேயே கதைச் சனீங்கள்? கோபால் கேட்டுவிட்டுத் தலையைச் சொறிந்த வாறு அவளைப் பார்த்தான். அவள் "கிளுக் கெனச் சிரித் தாள். அவனது மெலிந்த தோற்றமும், அசட்டுச் சிரிப்பும்
* * ଢtଜfirଜr சொல்லுருய்? 参龄
** கோவியா தேங்கோ !ே எங்கடையம் மேலே போய் கனகாலம்.
" அப்ப. நீ. ?
"" நான் தங்கத்தின் ரை மகனில்&ல. அவன் வெளி யிலே நிற்கிருன் ?? ஓகோ. அவனை வரச்சொல்லு :
" அப்ப எனக்கு வேலை 2 , , கோபால் நீட்டினன்.
"ஒய் வாரவனுக்கெல்லாம் வேல் குடுக்கவே தியேட் டர் வைச்சிருக்கிறம். போங்காணும் வெளியிலே 7
கணபதிப்பிள்ளையர் சத்தமிட்டார்.
* முதலாளி கோவியாதையிங்கோ ബകൂUTഥബേ, சீட்டைக் கிழிக்காமல், வா, லிலே சீட்டுக்கிழிக்கிற் லேலை யென்றலும் தாங்கே, 7' பால் முதளர்ளியைக் கேட் -ாகு ? இல்லை * முதி 7 வைக் கேட்டாகு * திடீரென கணபதிப்பிள்ளையின் ᎶbᏝᎢ Ꭷi) மாறியது.

மீட்டாத வினை - 与及
tổ அரசடியே " ஓம், ஓம் நாங்களெல்லாரும் ஒரு ஊர்தான், நீங் கள் பட்டணம் வந்திட்டியல்: தியேட்டர் நல்ல தியேட் டர், சோக்கானபடம். ' அவன் ஏதேதோ சொன்னன். * அமுதா " அவன் நெஞ்சை ஆக்கிரமித்துக் கொண்டிருந் தாள் ** உனக்கு தேவியவை சொந்தமே ? "
கணபதிப்பிள்ளையரின் கேள்வி கோபாலைத் திகைக்க வைக்கவில்லை. டியூசன் டீச்சர் தேவியக்கா பிரசித்தமான வள்தான். "அவள் எனக்கு அக்கா'
'நீ அவவின்ரை தம்பியே" கணபதிப்பிள்ளையர் ஆச்சரியத்தோடு கேட்டார்.
"அவ அக்கா என்ருல் நான் தம்பி தானே?" துணிவோடு அவன் அளித்த பதில் அமுதாவை மீண்டும் நகைக்க வைத்தது.
* இளங்கோ இஞசவா. உன்னைத்தான் தேடுகினம்" வாசலில் காத்திருந்த இளங்கோவை கோபால் கூப்பிட் டான்.
"இவன் தான் தங்கத்தின்ரை மோன்' கோபால் அறிமுகப்படுத்தினன்,
**கொம்மா உன்னைப்பற்றிச் சொன்னவ வேலை இல் லாமல் பெடியள் படுகிறபாடு உனக்குத் தெரியும் தானே? வேலை தந்தால் ஒழுங்காக செய்வியே?" கணபதிப்பிள்ளையர் இளங்கோவைக் கேட்டார். இளங்கோ தலையசைத்தான்.
**இப்ப உனக்கு டிக்கட் கிழிக்கிற வேலைதான் . ஒழுங் காக இருந்தால் பிறகு பார்த்துச் செய்வன். சம்பளவிச யம் முதல் மாத வேலையைப் பார்த்துத் தான் தருவன் gFrf)(3u. ** í
ஓம்' இளங்கோ தலையையும் அசைத்தான்.
"மனேஜரோட நாளைகசூ வந்து கதை. எத்தனை மணிக்கு வரவேண்டு மென்றெல்லாம் அவர் சொல்லுவார். கவனமாக அவர் சொல்லுறபடியெல்லாம் நடக்கவேணும்'

Page 30
52 மீட்டாத வீணை
« eff;}" *அப்ப போயிட்டுநாளைக்குவா' இளங்கோ நடந்தான். "அப்ப நான். கோபால் இழுத்தான். 'sp......... - Got ہمه-م. ممه قت’’ கணபதிப்பிள்ளையர் அவனை உற்று நோக்கினர். 'எதுக்கும் நீ நாளைக்கு எங் கடை வீட்டை வா நான் சொல்றன்" கோபாலும் விடை பெற்றுக் கொண்டான். விருப்பமின்றித்தான்.
வீடு நோக்கி நண்பர்கள் சென்றனர். வழியெல்லாம் கோபால் அமுதாவின் அழகைப்பற்றியே பேசினன். இளங்கோவோ வேலை கிடைத்த மகிழ்ச்சியிலிருந்தான். மகாதேவன் மனமோ தோட்டத்திலிருந்தது. இரண்டு நாட்களுக்கு முன்னர் கூட அவன் தோட்ட த்தில் சில தக் காளிப் பழங்கள் களவாடப்பட்டிருந்தன. "யாராக இருக் கும்? மணியனும் அவன்ரை ஆட்களுமோ? மகாதேவனின் கேள்விக்கு அன்றிரவு பதில் கிடைத்தது. ஆனல் பதிலோ அவனை அதிர்ச்சியடையச் செய்தது. தங்கையின் கையால் சோறு வாங்கிச் சாப்பிட்டு, வெளியே சிறிது உலாவ அவன் வந்த பொழுது இரவு பதினெரு மணி இருக்கும்.

es'||
மையிருட்டு எங்கும் பரவியிருந்த வேளை மகாதே வனின் மனமோ இருட்டில் இல்லை; உலகம் இருளில் இருந் தாலும் அவனிதயத்தில் ஒளியிருந்தது. தன்னம்பிக்கை, தளராத உழைப்பு இவையிரண்டும் அவனிதயத்தை என் றுமே இருளில் விடவில்லை. "மிளகாய்க்கு நாளை மருந் தடிக்க வேண்டுமென்று எண்ணியவாறு மெதுவாக அங்கும் இங்கும் உலாவினன். " சர சர " வென ஒரு சத்தம் கேட்டது. அவன் காதுகள் கூர்மையாகின. யாரோ வேலியைப் பிரிப்பது போன்ற ஒசை; மகாதேவன் கூரை யில் செருகியிருந்த 'டார்ச்சைக் " கையிலெடுத்தான். மறுகையில் நீண்ட கம்பொன்றை எடுத்தான். மெதுவா கத் தோட்டத்தை நோக்கி நடந்தான். அந்த இருட்டி லும் வெகுவேகம்ாக ஓர் உருவம் தோட்டத்தில் நடப் பது அவனுக்குத் தெரிந்தது. அவனும் பதுங்கிப் பதுங்கி அதை நெருங்கிஞன்.
யாரது? கையிலிருந்த டார்ச்சை அழுத்தினன்.
ஆனல் என்ன கோளாருே அது ஒளிதரவில்லை. அதற் குள் உருவம் ஓட ஆரம்பித்தது. மகாதேவன் பின்னல் துரத்தினன். சில வினடிகள் இருவரும் ஓடினர். ஆனல் இருவருக்கும் இடைவெளி குறுகியது. மகாதேவன் எட் டிப்பிடித்திருப்பான், அதற்குள் வாழைக்கு வெட்டிவைத்த குழியொன்றில் உருவம் விழுந்தது. மகாதேவன் தன் கையிலிருந்த கம்பத்தால் ஓங்கியடித்தான். 'ஆ. அம்மா ?" என்று உருவம் முனகியது,

Page 31
54 மீல்டாத வினை
மகாதேவனின் உடல் புல்லரித்தது; காரணம் அது ஒரு பெண்குரல். மகாதேவன் செய்வதறியாது ஒருகணம் திகைத்தான். அவன் பலமாக அடித்திருந்தான். தன்னை ஒருவாறு சமாதானப் படுத்திக்கொண்டு அவன் ‘யாரது? என்று அதட்டினன்.
பேச்சு வரவில்லை; கருமுகில்கள் மெல்ல, மெல்ல வில கின. பிறை நிலா சிறிது ஒளி கொடுத்தது. மகாதேவன் குழியருகில் குனிந்து பார்த்தான். "அடி எக்கச் சக்கமாக எங்கேயும் பட்டிட்டுதோ? அவன் மனது பதை பதைத்தது.
'அடிச்சுக் கொன்று போடுவன் ஆரது?"
அவன் மீண்டும் கேட்டான் பதிவில்லை. அவன் சந்தேகம் வலுத்தது. அவன் கையால் குழியைத் தடவினன். அவன் கையில் நடுங்கும் ஒரு கரம் சிக்கியது. ஆ. அம்மா அவள் அழ ஆரம்பித்தாள். நிலவின் ஒளியில் அவளை அவன் பார்த்தான். அவனுல் அந்த அதிர்ச்சியைத் தாங்கமுடிய வில்லை. கையிலிருந்த டார்ச்சும், தடியும் கீழே விழுந்தன. பாம்பைத் தொட்டது போல் அவளைப் பற்றியிருந்த தன் கரத்தை இழுத்துக்கொண்டான் ** சீ. இப்படிக் கள வெடுக்க உனக்கு வெட்கமாக இல்லையே' வெறுப்போடு அவன் கேட்டான். அவள் விம்பினுள். ' தேவி, நீ கோபாலிட்டை சொல்லியிருந்தால் உனக்குத் தேவையான அளவு தந்திருப்பேனே. "
** அம்மா " அவள் அழுதாள், விக்கி, விக்கி அழு தாள், இருகரங்களாலும் முகத்தை மூடியவாறு அழுதாள். அவனுள்ளத்தை ஏதோ அரித்தது.
** இதுக்குள்ளேயே இருக்கப்போறியே வெளியிலே ஏறிவா
அவன் குழியைக் காட்டிச் சொன்னன். அவள் நிலத் தில் கையை அழுத்தி ஏற முயன்ருள் இருட்டில் தெரி யாது அவன் கால்களை அவள் கை அழுத்தியது அவன்

மீட்டாத வீண '. 55
கால்களில் "பிசு பிசு' வென ஏதோ திட்டியது ‘‘கையிலே என்ன? .. ஆ. இரத்தம். அவள் நெற்றியிலிருந்து இரத் தம் வடிந்தது. அவள் கண்களை மறைத்தது. அவள் தள்ளாடித் தள்ளாடி நடந்தாள்.
"தேவி " அவள் நின்முள்,
* டேய், ஒருத்தருக்கும் சொல்லாதேடா. கோபாலுக் குத் தெரிஞ்சால் என்னைக் கொன்று போடுவான்'
தேவி
அவன் ஏதோ சொல்லத் துடித்தான்.
* உன்னைக் கேட்டால் நீ தருவாய் தானடா . எப்பவுமே கைநீட்டி வாங்கிறதை விட களவெடுக்கிறது கொஞ்சம் மானத்தைக் காக்குமென்று நினைச்சிட்டேனடா'
அவள் விம்மினுள்.
‘'தேவி' அவனுள்ளம் ஏணுே வருந்தியது. சரி யாக இரத்தம் வருகுது'
இதயம் சிந்துகிற இரத்தம் யாருக்கும் தெரிய இல்லையே.
* மகாதேவா, டீச்சர் வேலைக்கு ஒரு சோதனையிருக் காம், அதுக்குக் கொஞ்சக் காசு கட்டவேணும், சேர்த்த காசு போதாது. அதுதான் . . உன்ரை உழைப்பைக் களவாடி அதை வித்து எனக்கொரு உழைப்பைத் தேடப் பார்த்தேன்."
* தேவி கேட்டால் நாங்கள் 5ՄԼ0ո՞ւ.ւ-(3լք • •
* எத்தனை தடவையடா கேட்கிறது ? எந்த முகத் தோட கேட்கிறது. கொம்மாக்கு முப்பத்தாறு ரூபா இருபத்தெட்டுச் சதம் இல்லும் கடனுக இருக்கு. டேய் உன்னைக் கும்பிட்டன் ஆருக்கும் சொல்லிப் போடாதே. *

Page 32
占ö மீட்டாத வீண
அவள் போய்விட்டாள். வேலிக்கு மறுபுறத்தில் இன் ஞெரு உருவமும் அசைந்தது.
அவன் தனியே நின்ருன், எங்கும் இரவின் அமைதி: ஆழ்ந்த உறக்கத்தில் எல்லோரும் வீழ்ந்திருக்கும் நேரம். எத்தனே உள்ளங்கள் தூங்கும்? எத்தனே உள்ளங்கள் ஏங்கும்? அவனைத் தோளில் தூக்கி விளேயாடிய தேவி! அவன் காதுகளேத் திருகி கணக்குச் சொல்லிக் கொடுத்த தேவி அவனேக் குளிப்பாட்டியவள். பள்ளிக்கூடம் கூட்டிச் சென்றவள். அவளுக்கு தோள் கொடுக்க யாருமில்லே, அவள் கணக்கைச் செய்வதற்கு வழிகின்டக்கவில்லே. இன்று அவள் கண்ணிரில் குளிக்கிருள். அவளுக்குப் பாதை காட்ட பாருமே இன்றி பரிதவிக்கிருள். வயதில் அவர்க விடையே எட்டு ஆண்டுகள் பேதம் இருந்தது. வாழ் வில். மகாதேவன் இடிந்தவன் போலானுன் அவன் கண்கள் என்றுமே யில்லாமல் ஏனுே அன்று கலங்கின. அவளோ என்றும் போல் அன்றும் அழுதாள் இல்லை. அன்று அதிகமாகவே அழுதாள்.
蠶
"இந்த சேர்ட்டையில்லே தைச்சு வைக்கச் சொன்ன ஞன். அம்மா உவள் செல்லம் எங்கே? அவளுக்கு வர வர விளையாட்டுக் கூடிப் போச்சு. சேர்ட்டு கிழிஞ்சு ஒரு கிழமையாகுது அதைத் தைச்சு வைக்க அவரைக்கு நேர மில்லே ' மகாதேவன் அடுத்தநாள் மாலே கோபத்தோடு சத்தமிட்டான். மr அரித்துக்கொண்டிருந்தாள் மீனுட்சி செல்லம் மா இடித்துக்கொண்டிருந்தாள்.
" என்னடி கொண்ணன் இன்றைக்கு ஒருமாதிரி நிற் கிருன்சி மெதுவாக செல்லத்திடம் தாய் கேட்டாள்.
" ஓமம்மா படம் பார்த்திட்டு வரேக்க நல்லா இருந் தவர் காலேயிலே இருந்து ஒரு மாதிரித்தான்' செல்லம் நெற்றியின் முன்னே விழுந்த தலைமயிரை விலக்கிவிட்டு தொடர்ந்து மா இடித்தாள்.

LBLITrstaáfawr 岳潭
"நான் கேட்கிறது ஒருத்தருக்கும் கேட்க இல்லையோ? அவன் மீண்டும் கத்தினுன்
"ஏனடா சத்தம் போடுகிருய்? அவளில்லே மா இடிக்கிருள்' தாய் சொன்னுள். அவன் சேர்ட்டையும் தூக்கிக்கொண்டு அவர்கள் முன்னே வந்தான்.
'நீங்கள் இப்ப பெரிய உத்தியோகம். இதெல்லாம் தைக்க உங்களுக்கு நேரமிருக்காது' அவன் பெரிதாகச் சத்தமிட்டான்.
'நூல் வாங்கித் தரச் சொல்வி எப்ப சொன்னனுன்? நீ வாங்கித் தந்தால் தானே தைக்கிறதுக்கு" செல்லம் சொல்லியவாறே தொடர்ந்து இடித்தாள். மாவைத்தான் அவன் மனதையல்ல; " பொத்தடி வாய் ஒருக்கால் சொன் ணுல் போதுமே, நீ சொன்னவுடனே நான் போய் வாாங்கி வரவேணும்." அவர் சொன்ன உடனே நாங்கள் தைக்க வேணும்' அவள் முணுமுணுத்தாள்.
"என்னடியங்க முணுமுணுக்கிருய் ?
சேர்ட் அவள் முகத்தில் வந்து விழுந்தது, செல்லம் சிணுங்க ஆரம்பித்தாள்.
'எனக்குத் தெரியாது நீ மாவை இடி" அவள் சேர்ட்டையும் எடுத்துக் கொண்டு வீட்டுக்குள்போனுள்
"ஐயோ மோனே, மோனே பார்த்தியேடா உன்ரை
வேலேயை அவள் போய்ப் படுத்தாளோ .? அட் சண்டை பிடிக்கிற நீ, மா இடிச்சாப்போல போடக் கூடாதோ ?
மீனுட்சி அங்கலாய்த்தாள். தங்கையின் வே3லநிறுத் தத்தின் விளேவு அவனுக்குப் புரிந்தது; தானே மர இடிக்க வேண்டி வரும் என்பதை நிஃனத்ததும் தலேயை என்னமோ
செய்தது,
'அம்மா நூலே வாங்கித் தரச் சொல்லு" Lds. --8

Page 33
மோடு" என்று முணுமுணுத்தான்.
g
- , ° அண்ணனின் நேரடித் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
ff Garriz, இப்ப தேவையில்ல வந்து மா சொல்லு" மகாதேவனும் தாயிடந்தான் சொன்ஞன்.
C 규L고 தைச்சாப்போலதான் இடிப்பேனென்று சொல்லு" அவள் பதில் கொடுத்தாள்.
"அட உங்கடை சண்டையைக் குப்பையிலே போடுங் கோடா எனக்கில்லே கோயிலுக்கு நேரமாச்சுது,
செல்லும் கொண்ணனுக்கு தேத்தண்ணி குடுத்தனியே
"அதெல்லாம் துடிச்சுப்போட்டுத் தானே சித்திது" "எப்பயடி தேத்தண்ணி தந்த நீ?"
அவன் கேட்டான். அவள் சேர்ட்டோடு "விடு விடு: என வெளியே வந்தாள்
"இரண்டு கோப்பை தேத்தண்ணியும், இரண்டு எஸ் ஞருண்டையும் சாப்பிட்டுப் போட்டு இப்ப சொல்லுற பொய்யைப் பார்"
on 3r பTபி எள்ளுருண்டை எடுத்துச் Gogfrair
இது?" செல்லம் விரலைக் கடித்தாள். மகாதேவன் "மோடு
" காலேயில் இல்லே ஒவ்வொண்டு リösir arā, லாத்தையும் ஒரே நாளிஐ முடிச்சிப்போடவேணும்:
திாய் தன் பல்லவியைத் தொடங்கினுள்.
"இவளும் சாப்பிட்டவள்"
தாஜ் தன்னேயிலும் தங்கைக்குப் பங்குகொடு,
'நிதானே கூடச் சாப்பிட்டநீ"
 
 
 
 
 
 
 
 
 
 
 

、 மீட்டாத வினே
கூடிய பங்கை அவனுக்குக் கொடுக்க அவள் முயன் ருள்.
" வாடி நீ வந்து மாவை இடி போடா தேவியிட்ட கொடுத்து சேர்ட்டை தை, போவனடா."
தாய் சீறிஞள். தங்கை சேர்ட்டை அவனிடம் கொடுத்து ஓடிவந்து உலக்கையை எடுத்தாள். 'அவன் தேவி வீடு நோக்கி நடந்தான். பக்கத்து வீடுதானே.
"அன்பின் வழியது உயிர்நில அஃதிலாரிக்கு
என்புதோல் போர்த்த உடம்பு"
" அதாவது அன்பின் வழியில் இயங்கும் உடம்புதான் உயிருள்ள் உடம்பு, அன்பில்லாதவர்களுக்கு உள்ள உடம்பு எலும்பைத் தோல் போர்த்த வெறும் உடலே "
மகாதேவன் தேவியின் வீட்டை நெருங்கிய பொழுது அவள் பிள்ளைகளுக்கு அன்புடைமை படிப்பித்துக் கொண்டு இருந்தாள்g அவன் சிறிது நின்று கவனித்தான். அவனும் படிக்க வேண்டிய பாடந்தான். தேவி தலையில் பெரிய சுட்டொன்று போட்டிருந்தாள். அவள் முகம் வெளிறி, வாடிப்போய் இருந்தது.
தேவி' அவன் அழைத்தான் மின்சாரத் தடை யால் திடீரென வாஞெலி நிற்குமே, அது போல் அவள் குரல் நின்றது; அவள் அவனேப்பார்க்க முடியாது தல் குனிந்தாள். அவன் மீண்டும் நிமிர்ந்த போது அவள் விழியோரங்கள் நீரால் நிறைந்திருந்தன: மகாதேவன் கண் களே தாழ்த்திக் கொண்டான்.
* சேர்ட் தைக்க.
அவன் குரல் அடைத்தது. இதற்குள் வானெலியில் பல நிலயங்கள் ஒரே நேரத்தில் வேலை செய்வது போல் படிக்க வந்த பிள்ளைகள் சத்தமிட ஆரம்பித்தார்கள்

Page 34
60 மீட்டாத விணை
* பிள்ளைகளே திருக்குறளைப் பாடமாக்குங்கோ. இந்த மாமாக்கு இதைத் தைச்சுக் குடுத்திட்டு வாரன்'
தேவி வீட்டின் மறுபுறம் போனுள். மகாதேவன் பின் தொடர்ந்தான். அவள் எதுவும் பேசவில்லை. அவனல் எதுவும் பேசமுடியவில்லை. அவள் தனது கைமெசினல் சேர்ட்டை தைக்க ஆரம்பித்தாள்; ஒவ்வொரு முறையும் தையல் ஊசி சேர்ட்டை தொடும்போது அது அவனி தயத்தைத் துளைப்பது போலிருந்தது. அவள் சேர்ட்டைத் தைத்து அவனிடம் நீட்டினள்.
தேவி
அவள் தலை குனிந்தே இருந்தது:
* காயம் பலமா ??? பதிலில்லை;
* நீயென்று தெரிஞ்சிருந்தால் அடிச்சிருக்கமாட்டன்"
அவள் பேசவில்லை.
** தேவி, என்னுேட பேசமாட்டியா ?? ?
அவன் கண்கள் கலங்கியவாறே கேட்டான்.
** தேவா ? ? மடைதிறந்த வெள்ளம் போல், அவள் கண்களில் கண்ணிர் பெருகியது மகாதேவனின் கண்களும் நீரைக் கொட்டின ஏன் ? வெளியே பிள்ளைகள் சத்தமிட்டுப் படித்தனர்.
** அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ் "
சில கணங்கள் கண்ணிரில் மறைந்தன. அவன் சேர்ட்
டால் தன் கண்ணிரைத் துடைத்தான்.
தேவி, அழாதே டீச்சர் வேலைக்கு அப்ளை பண்ணின னியே? அவன் கேட்டான் அவள் இல்லையெனத் தல்ை யசைத்தாள் مر

மீட்டாத விண 6.
"இன்னும் எவ்வளவு காசு வேணும் ? **
அவள் பேச வில் லை. அவனிரண்டு பத்து ரூபாய் நோட்டுக்களை நீட்டினன்.
** இது போதுமா ?
" தேவா ? அவள் விம்மினுள். ?? வேண்டாமடா,
' ஆராவது பார்த்தால். '
** தேவி இது போதுமோ ? ? அவன் கேட்டான்.
** தேவா. " அவள் கரங்கள் நடுங்கின. அவன் அக்கரங்களைப் பற்றி, காசைத் திணித்தான், அவளுடலே இப்பொழுது நடுங்கியது. அவன் அவள் கரத்தை இறுகப் பற்றினன். அவன் கண்கள் அவளை அன்போடு பார்த் தன. அவள் அவன் விழிகளைப் பார்த்தாள். ஆயிரம் ஆடவர்கள் ஆசையோடு அவளைப் பார்த்திருக்கிறர்கள். அன்போடு பார்த்த முதல் ஆடவன் அவன் தான் தன் பெற்றேர்களை இழந்த பின்னர் முதலாவது முறையாகக் கருணை பொங்கும் அக்கண்களை அவள் கண்டாள். அந்த உணர்ச்சிப் பெருக்கு அவளை மெய்மறக்கச் செய்தது. மொழிப்பிரச்சினை அங்கு எழவில்லை. அவர்கள் வார்த் தைகளை அள்ளிக் கொட்டவில்லை. அவர்கள் கண்கள் பேசிய மொழி, இணைந்த கரங்கள், பேசிய மொழி அவை அவர்கள் இதயங்கள் பேசிய மொழி!
16 தேவி அழாதே
? இல்லைத் தேவா, ஒரு நெஞ்சின் வேதனையை இன் னெரு நெஞ்சு அறியும் போது, ஆறுதல் தரும்போது வரும் உணர்ச்சிப் பெருக்கு இது '
அவள் முந்தானையால் விழிகளைத் துடைத்தாள்
தேவா, தெய்வம் d'hlo-rox ans 1.

Page 35
62 மீட்டாத
" தேவி, சே. இதென்ன பேச்சு. போ, பிள்ளே கள் காத்திருக்குது.முகத்தைத் துடைச்சுக் கொண்டு போ'
"தேவா" அவளால் தன்னேக் கட்டுப்படுத்த முடிய வில்லை. அவள் மீண்டும் விம்மினுள். அவள் இரு கரங்களே யூம் கூப்பி அவனே வனங்கிஞள். அவன் நடந்தான். திரும்பிப் பார்த்தான். அவள் சிலையென அப்படியே நின்ருள்; அவள், அவன் சேர்ட்டிலிருந்த கிழிசலேத் தைத்து விட்டாள்; அவன், அவனிதயத்திலிருந்த . 冀 (,卒 "டேப் இளங்கோ இவ்வளவு புத்தகம் படிக்கிருயடா. இந்தக் கேள்விக்கு மறுமொழி சொல்லன்டா'
it. " என்ன மகாதேவா கேளன் பார்ப்பம்"
'உன்கையிலே காயம்பட்டால் உனக்கெப்படியடா தெரியும்,
' கண்ணுல் பார்த்தால் தெரியும்." 'முதுகிலே பட்டால்..?
"என்ரை உடலிலே எங்கேபட்டாலும் என்ஞல் DIGITT முடியும் தானேடா ? '
' வெளியிலே உள்ள காயத்தை எங்கள்ால் பார்க் கவோ இல்லே உணரவோ முடியுது. பயங்கரமான மிகவும் சின்னக் கிருமிகளாலே ஏற்படுகிற நோய்களே எப்படியடா அறிகிறது ? அதுக்கு விசேடமாகப் படிக்க வேணும். அந்த நோய்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்கப்பட்ட உண்மைகளே நாம் அறிய வேணும். அதுக்குத் தானே டொக்டர்மார் இருக்கின்ம்'
" உடலுக்கு மட்டுந்தான் நோய் வருகுதா?
" இல்லே உள்ளங்களேப் பீடிக்கிற நோய்தான் பயங் கரமானது உடல் நோய்களுக்குக் கூட உள நோயே பல சமயங்களில் காரணமாக இருக்கிறது. "
"அதை எப்படியடா கண்டு பிடிக்கிறது?"
 
 

மீட்டாத வீண் ùù፻
இளங்கோ நண்பனே வியப்போடு பார் திதான் அவ
அக்கு இது சந்தேகம். தனது காதல் நோய் ம: னுக்குத் தெரிந்து விட்டதோ என்று.
"என்னடா அப்பிடிப் பார்க்கிருய்? மகாதேவன் கேட்டான்.
"ஓர் உள்ளத்தில் உள்ளதை எப்படி அறிந்து கொள் ճն: P மகாதேவன் தன் கேள்வியைக் 品 டார். இளங்கோ சிரித்தான்.
இந்தக் கேள்விக்குச் சரியான பதில் 3,7537 LFF Tai Lau பிரச்சின்களேத் தீர்க்கலாம். க்குத் இதரிந்தவழி ஒன்றே ஒன்றுதான் மகாதேவா, இரண்டு இதயங்கள் பேசுகிற மொழி அன்புதர்ன். அந்த மொழியால்தான் உள்ளங்கள் உறவாட முடியும். "
இளங்கோ, உதடுகள் சிரிக்கும்போது ாேத்துரே உள்ளங்கள் அழுகுதடா, ஏன் இந்தக் ெ டுமை'
"தனித்தனி உள்ளங்களை இத் துப் பார்த்தால் அதிற்குப் பல காரணம் ருக்கும். ஆஞல், பொதுப் படையாக நோக்கினுல் பெரிது: விளங்கும். நாம் வாழுகிற - இல்லே குக்கின்ற இந்த முேதாயத்திதுே உன் உணவோ இருக்க இடமோ எல்லாருக்கும் கிடைப் பதில்லை." ஆகுல் உள்ளத்தில் அமைதியே ஒருவருக்கும் கிடைப்பதில்லை. இதற்குக் காரம் இயற்கையின் பிலுே இரு மனிதர்களுக்கு இடையே இருக்கும் பேதம், இதே மனிதர்கள்) உருவாக்கிப் சமுதாயத்தில் இருக்கும் ஏற்றத் தாழ்வுகள்; இந்த சமுதாயம் மனி: மதிப்பிடும் முறை அதன் கண்களில் உயர்ந்ததாக சிறந்ததாக மதிப்பிடப் படுபவை இவைகளால் உந்தப்பட்ட" இரு மனிதன் இயற் கையாக அவனுக்குள்ள தேவைகள் ஆசைகள் எண் களோடு மோதுகிருன் அந்த மோதலின் விளேவுதான் அவன் கண்களில் வடியும் நன்: '
"இளங்கோ பெரிய விெக்ரரே அடிச்சிட்டாப் ஆயிர மாயிரம் அறிஞரெல்லாம் எவ்வளே சொன்னுரிகள்: ஆனுலும் வாழ்க்கை வர வர ாண்டுதான் தெரிவிருது: இளங்கோ ஒருபுத்தகத்தை எடுத்து பக்கங்களைப் புரட் புளுன் ஒரு பெரியவர் சொல்லியிருக்கிருச்

Page 36
64 மீட்டாத விணை
இதைக் கேள் மகாதேவா எவ்வளவுதான் மழை பெய் தாலும் அது கடலிலே பெய்தால் பயனென்ன? கண்களை மூடியிருக்கிருேம் நாம். முன்னல் அழகோவியம் இருந்தா லென்ன ? அலங்கோலம் இருந்தால் என்ன? ஏட்டில் எழுதியென்ன? மேடைகளில் பேசியெ ன்ன ? நாட்டில் நடக்க வேண்டுமே மாற்றம். சமுதாயம் என்பது எது? நாங்கள் தான். திடமான உனது தோள், இச்சமுதாயத் தின் ஒரு பகுதியெனத் துணிவு கொள் ! காளையரும், கன்னி யரும் கட்டியெழுப்ப வேண்டியதுதான்; எங்கள் புதிய வாழ்க்கையென நிமிர்ந்து சொல் பகுத்தறிவற்ற பழைய நம்பிக்கைகளைத் தகர்த்தெறி! சாதி, மதம் வேண்டாம் ! பேசும் மொழியிலே பேதம் காணவேண்டாம் ! பாடுபடு வோம் ! பகிர்ந்து உண்போம்! ஏங்கும் ஏழையில்லை ! ஏப்பமிடப் பணக்காரர் இல்லை ! சீதனம், சீர்வரிசை வேண்டாம் சிங்காரக் கன்னியர் வாழ்க்கை சிதைவுற வேண்டாம் !
இளங்கோ உணர்ச்சி வசப்பட்டு வாக்கியங்களை உரக் கப் படித்துக் கொண்டிருந்தான். அவர்கள் வீட்டு வாச லில் காரொன்று வந்து நின்றது; தங்கம் சேலைத் தலைப்பை இழுத்துச் செருகிக் கொண்டு வர்சலுக்கு ஒடிஞள். இளங் கோவும் மகாதேவனும் ஆச்சரியத்துடன் அவளைத் தொடர்ந்தனர். கணபதிப்பிள்ளையர் காரில் இருந்தார். அவர் கண்கள் கோபத்தாலோ, மதுவெறியாலோ சிவந் திருந்தன.
* எடியே தங்கம், உன்ரை மோன் கோயில் விசயத் திலேயெல்லாம் தலைப்போடுகிருளும். அவனுக்கு வேலை யும் கிடையாது. ஒரு மண்ணுங்கட்டியும் கிடையாது, கவனமாக இருக்கச் சொல். '
அவள் விறைத்துப் போய் நின்ருள். கார் ?விர்" "ரென புறப்பட்டுச் சென்றது. இளங்கோ வின் காதுகளில் கணபதிப்பிள்ளையரின் வார்த்தை கள் கேட்கவில்லை, காரில், அவருக்கு அருகிலிருந்த வேலுப்பிள்ளையரின் வெற் றிப் புன்னகைதான் அவன் கண்களில் தெரிந்தது. திரு விழாவோடு அவன் வாழ்க்கையின் போர் விழாவும் ஆரம் பமாகிவிட்டதை அப்பொழுதுதான் அவன் உணர்ந்தான்.

ァ|
உணர்வுகளின் வேகத்தோடு உடல் இயங்குவதில்லை. தன்னுல் முடிந்தவரை வேகமாக அவன் சைக்கிளைச் செலுத் தினன். அவனது ஒரேயொரு தவிட்டு நிறச் சேர்ட் காற் றில் பறந்து கொண்டிருந்தது. வியர்வை சிந்தும் அவன் மார்பைக் காற்று துடைத்துக் கொண்டிருந்தது, நெற்றி யில் பெருகிய வியர்வை முத்து முத்தாக நிலத்தில் விழுந்தது. எட்டி எட்டி அவன் சைக்கிளை உதைத்தான். எண்ணங்களோ கணபதிப்பிள்ளையரைச் சுற்றியிருந்தன. மகாலட்சுமி தியேட்டர் நெருங்கியது. அடுத்ததுதான் * மகாலட்சுமி பவனம் ‘’ கணபதிப்பிள்ளையரின் மாடிவீடு. அவன் சைக்கிளைச் சுவரோடு சாத்தினுன். கார் போகக் கூடிய பெரிய வாசற் கதவுகள் ஆவெனத் திறந்திருந் தன. அவன் உள்ளே நுழைந்தான். அவன் வாசற்படியிற் காலெடுத்து வைத்ததும், உள்ளேயிருந்து கொடூரமான வார்த்தைகள் வெளி வந்தன.
** எடடா காலை, என்ன துணிச் சலோ டய டா நீ என்ரை வீட்டு வாசலை மிதிப்பாய்? நீ எந்தச் சாதியென்று தெரியுமோடா ? எந்தச் சாதிக்காரனுக்குப் பிற ந் த து என்று தெரியுமோடா? '' வாசற்படி நெருப்புக் கண்டங்க ளால் கட்டப்பட்டது போல் அவன் கால்களை இழுத்துக் கொண்டான்.
“፰፵፫ ஒரு மனுஷனுடைய வார்த்தையைக் கேட்டு என்னை”ஏன் வேலைக்குச் சேர்த்துக்கொள்ள மறுத்தனிங்
و است. نامه ,گ
8

Page 37
66 மீட்டாத விணை
கள்? வறுமையோட நாள்தோறும் போராடுற ஒரு தாயின் பசியைத்தீர்க்க நீங்கள் உதவக்கூடாதா? நாலு நாள் என்ரை வேலையைப் பார்த்திட்டு வேண்டாமென்ருல் நிற் பாட்டுங்கோ. இதைக் கேட்கத்தானே அவன் வந்தான்; அவன் காதுகள் இப்பொழுது கேட்பதென்ன? அவன் காதுகளில் விழுந்த அவ்வார்த்தையை விட அவன் கண்களில் விரிந்த காட்சி அவனிதயத்தைச் சுக்குநூருக உடைத்தது. அவன் உற்ற நண்பன் கோபால், உணர்ச் சியற்ற விழிகளால் இளங்கே வைப் பார்த்தான். ஏளனப் புன்னகையுடன் அவனை எச்சிலிலை நாயைப் பார்ப்பது போல் பார்ச் கும் வேலுப்பிள்ளையரின் கண்கள் அவனைக் கொல்லவில்லை. ஆணவத்தோடு ஆலகால விசத்தைக் கலந்து வரும் கணபதிப்பிள்ளையரின் வார்த்தைகள் அவனை அசைக்கவில்லை. ஆனல் அங்கு அசையாமல் நிற்கும் கோபால், ஆருயிர் நண்பனுக்குக் கிடைத்த அலங்கோல வரவேற்பைக் கண்டு கலங்காமல் நிற்கும் கோபால், இளங்கோவைத் தடுமாற வைத்தான்.
** கோபால், கோபால் ' அவன் குரல் தழதழத்தது. * நீ. . நீ . . கோபால் நீயாடா ? ?? ԱՔ
பெரியவர் சொன்னது கேட்க இல்லையே? போடா வெளியிலே ** அவன் வெளியிலேதான் நின்ருன், ஆணுலும் வேலுப்பிள்ளையர் தன்ரை செல்வாக்கைக் காட்டினர்.
துடிக்கும் நண்பனின் துயரம் கலந்த குரல் கோபா லின் காதுகளில் விழவில்லையா ? துன்பம் வரும்போதெல் லாம் துணை நிற்ரும் நண்பன் ! தன் மகிழ்வை அவனுடன் பரிமாறிக் கொள்ளும் நண்பன்! அவன் தான அது ?
? டேய் யாரடா உள்ளே யிருக்கிறது. வாசலிலே நிற்கிற நாயைப் பிடிச்சு வெளியிலை தள்ளு ' கணபதிப் பிள்ளையர் வேலையாளுக்குக் கட்டளையிட்டார்.
* இளங்கோ, ஏன் நிக் கிரு ய் ? போ, போடா " , கோபால் தான் பேசினன், ,

மீட்டாத வினை 67
** கோபால். * ஏதோ கேட்க முயன்ற இளங்கோ வார்த்தைகள் வராது தவித்தான், சைக்கிளை நோக்கிக் கால்கன் சென்றன. அதை உருட்டிக் கொண்டு அவன் நடந்தான். தளர்ந்த நடை, தொங்கும் தலை; இளங்கோ வின் இதயம் இரும்பெனக் கனத்தது. இதுதான் வாழ்வா? இரக்கமின்றி அவனிதயத்தில் ஈட்டியைப் பாய்ச்சும் இவர் கள்தான் மனிதர்களா ? இணைந்தவன் இதயம் உடையும் போது, தன் வழி செல்பவன்தான் இவ்வுலகில் நண்பன? இளங்கோ இனியதொரு சமுதாயத்தை உருவாக்க இளை ஞரையும் இள நங்கையரையும் தேடினயே, உன் இனிய நண்பனே உன்னுடன் இன்று இல்லையே! மழைத்துளி விழுவதால் கடலின் உவர்ப்பு மாறிவிடாது! கடலோடு நீயும் கலந்துவிடு ! கண்மூடிக் கொள்கைக்குக் கை தட்டு! பணத்தைக் கட்டிவைத்துக் காப்போருக்கு வாழ்த்துப் பாடு ! நீ வாழலாம் ! "
** சே. எது சமுதாயம் ? இரண்டு மனிதர்கள்தான் சமுதாயமா? வசதியுள்ளோர் சொல்வதுதான் அதன் சட்டதிட்டமா ? நாங்கள்தான் சமுதாயம் ! நாம் வாழத் தான் இங்கு சட்டமோ ? சம்பிரதாயமோ ? நம்மை வாழ விடாமல் தடுக்கவல்ல ! ஒரு சிலர் தம் வாழ்வை வளப் படுத்திக் கொள்ளவல்ல ! போராடு! இதயமற்றேர் செய் கையால் வேரோடு சாய்ந்த குடும்பங்களோடு சேர்ந்து போராடு ! ஏழைகள் தோழனய், எத்தர்களின் காலனய் தோளோடு தோள் சேர்த்துப் போராடு !
இளங்கோவின் இதயம் போராடுகிறது. என்ன தவறு அவன் செய்தான் ? தந்தையை அறியாதது அவன் தவ றல்லவே! தவறு அவனுடையது அல்ல. தண்டனை அவ னுக்கா ? தவருக இருந்தாலும் தண்டனை கொடுக்க அவர் கள் யார்? வசதியுள்ளவர்கள் தங்கள் வாயசைவால் ஒரு வன் வாழ்வை அழிக்கவோ, அளிக்கவோ வல்லவர்கள் ஒரு சிலர்தான். பலரை விலைக்கு வாங்கக் கூடியவர்கள் சட்டங்கள், சம்பிரதாயங்களைத் தங்கள் வசதிக்கேற்ற வாறு வளைத்துக் கொள்ளக் கூடியவர்கள் இல்லாதவரி

Page 38
份& மீட்டாத வினை
களை இணையவிடாது தங்கள் பொல்லாத ஆட்சியை நடத்துபவர்கள் பணத்தைப் பாதுகாக்கக் குலம், கோத் திரம் என்பார். சாதி மதம் என்பார், இனம், மொழி யென்பார். இன்னும் ஆயிரம் பேதம் சொல்வார். சமு தாயம் இவர்களின் கைப்பொம்மையா? இல்லாதவர்கள் இவர்களுக்கு அடிமைகளா ? இல்லை, இல்லை இரு கர மிருக்கு. இதயத்தில் உரமிருக்கு உழைத்துவாழ என்னல் முடியும்; நிலம் இருக்குதா ? அதில் போட உன்னிடம் முதல் இருக்குதா ? உழைப்புதான் எனது முதல்; உள் உணர்ச்சி பேசுகிறது. அறிவு தூங்குகிறது.
"" என்ன தம்பி இளங்கோ, சைக்கிளுக்குக் காத்துப் போட்டுதோ ? ஏன் உருட்டிருய் ?' மேசன் கோவிந்தர் கேட்டார். அவர் வாயில் கள்ளின் மணம் வீசியது.
** இல்லை யண்ணை. சும்மா தெரியாதே ’
** இஞ்சனைக்க நல்ல சாமான் தம்பி. இவன் இரத்தி னத்தின்ரை ஒன்றுதான் போட்டன் வலு கலாதி. ஒன் றைப் போட்டிட்டு வாவன் இரண்டு பேருமாய் போவம்."
*" இல்லை யண்ணை நான் உது பாவிக்கிறதில்லை"
** என்ன தம்பி இன்னும் தொடங்க இல்லையே? இப் பத்தைப் பெடியள் பத்து பன்னிரண்டு வயசிலே தொடங் கிருங்கள் **
" எனக்குப் பழக்கமில்லை " இளங்கோ குடிக்க மாட்டான் என்பது தெளிவாகத்
தெரிந்ததும் கோவிந்தர் துணிந்து கேட்டார்.
* தம்பி என்ரை கணக்கிலே ஒன்று குடியன்."
இல்லை யண்ணை. "
* சரி பின்னே இந்த பீடியை என்ருலும் பத்து. " "உதுகளும் பாவிக்கிற இல்லே "

மீட்டாத வீன 69
**நல்ல பழக்கம் தம்பி அப்ப சைக்கிளிலே ஏறன் Gurr Guib ” ”
இளங்கோ சைக்கிளில் தாவி ஏறினன். கோவிந்தர் பின்னல் ஏறிக்கொண்டார். தலையில் தலைப்பா  ைக. காதில் ஒரு பீடி, சவரம் செய்யாத முகம். சீமேந்து படிந்த கால்கள். இவைகள் கொண்ட கோவிந்தருக்கு வயது நாற்பது இருக்கும். சைக்கிள் நகர்ந்தது.
* தம்பி, வேலுப்பிள்ளையவையோட கொளுவலாம் உண்மையே ? ?' இளங்கோ பேசவில்லை.
* தம்பி நல்லதுக்குச் சொல்லுறன். பெரியாக்க, ளோட கொஞ்சம் கவனமாக இருக்கவேணும். வயித்தைப் பார்க்க வேணும் இல்லையோ ? ??
* அண்ணே ஒரு வேலையுமில்லாமல் பெரிய கஷ்டமா இருக்கு ' இளங்கோ சொன்னன்.
** என்ன கதையிது? வேலையோ இல்லை? 7ங்கடை பொடியளுக்கு உடம்பைக் கொஞ்சம் வளைக்க விருப்ப மில்லை. ”*
** அப்பிடிச் சொல்லாதேங்கோ அண்ணே, கமஞ் செய்ய எனக்கு விருப்பம்தான். இப்ப காடு வெட்டவும் கட்சிமாற வேணுமே. கையிலை நாலு காசு வேண் டாமே ? ??
*"அது உண்மைதான். சொல்லுரன் என்று கோவிக் கக்கூடாது. தம்பி கூலிவேலை செய்தால் என்ன குறைஞ்சே : போயிடுவம்??? "அது உங்கடை வாயாலே வரவேணு மென்றுதான் கதையே தொடங்கினனன். அண்ணே உங் கடை மேசன் பாட்டியிலே எனக்கும் ஒருவேலை தாங் கோவன், **
'அட தம்பி நீயோ? என்ரை சிவ சிவா. உந்த உடம்பு என்ன ஆகும்? நானெரு கதைக்குச் சொன்னல்" ?

Page 39
7 ) மீட்டாத வீன
"அண்னே அப்பிடிச் சொல்லாதேங்கோ. அழகு பாக்கிறதுக்கு இல்லே இந்த உடம்பு, தன்ஃனத்தானே பார்க்க முடியலில்லே பென்ருல். .'
"தம்பி நீ வெற்றிக்குத்தான் கதைக்கிறியே"
"அண்ணே ஒரு வேலே தரமாட்டிங்களே"?
'தம்பி சைக்கிளே நிற்பாட்டு, " கோவிந்தர் சைக் கிளால் குதித்து இளங்கோவின் இரு கைகளையும் பிடித்
岛r斤。
'தப் பி உனக்கு நல்ல காலம் காத்திருக்கு. உன்
கையை நம்புரூப். உன்னே யாருமே நம்பலாம். நான் வெறியிலே சொல்ல இல்ல. நாளேக்குக் காலமை வெள் ளன அரசடிச் சந்திக்கு வா. வேலே காத்திருக்கும். உதுக் குள்ளே ஒரு கொட்டில் இருக்கு. ஒன்று போட்டிட்டு
வாரன். நீ போ" கோவிந்தர் போய்விட்டார். இளங்
கோவின் இதயத்தில் ஒருவிதத் திருப்தி.
宽 冀 翼
இளங்கோ வீட்டிற்கு வந்த பொழுது அவன் தாய் அவனேயே பார்த்துக் கொண்டிருந்தாள்
'தம்பி கணபதிப்பிள்ஃளயரோட கதைச்சனீபே? " .
"நான் கதைக்க இல்லே. என்னுலே கதைக்க முடிய வில்லே. அம்மா, நானும் மனுஷன் தானே நானும் மற் றவையைப் போல தலே நிமிர்ந்து வாழக்கூடாதா? எந் தச் சாதிக் காரணுக்கு நான் பிறந்தனுன் என்று கேட் டார்." அவன் குரல் த ழுத முத்தது. சொல்லம்மா உனக்குத் தெரியாமல் இருக்காதே. பாரம்மா என்ரை அப்பன். "
இளங்கோ தன் முதுகைத் தாய்க்குக் காட்டியவாறே பேசினுன், தங்கம் அவனருகில் வந்து அவன் முதுகில் கையை வைத்தாள்,
 

மீட்டாத வீண்
"மோனே உன்ரை இதயம் துடிக்கிற மாதிரி என்ரை வயிறும் எரியுதடா. ஆணுல் என்னுலே எப்படி இதைச் சொல்லுறது என்று தானடா. தெரிய இல்ல், !
"அம்மா' இளங்கோ தாயின் கைகளைப் பற்றினுன். நான்கு கண்களும் குளமாயின.
'அம்மா, நீ கலியாணமே கட்ட இல் வே யாமே. உனக்கு எப்படியம்மா நான் பிறந்தேன்! "
"டேய், டேய் உன்ஃனக் கும்பிட்டனடா. என்னேக் கேளாதேயடா" அவள் கெஞ்சினுள்.
"அம்மா கசப்பான உண்மைகள் வேதினே யாகத்தான் இருக்கும். அதை மறைக்கிறது அ 0ெ தி விட வேதஃன அம்மா? சொல் வம் மா. சொல்லம்மா ஆவன்
கஞ்சினுன்.
"இல்லே இல்லை என்னேக் கேட்கா தேயடா. அதை ான்னுவே சொல் முடியாத டா" "
"அம்மா, பயப்படாதே. இனி எந்து உண்மையுமே என்ரை இதயத்தை இதுக்குபேலே சித்திரவதை செப் 'Tது. உன்னே விட்டு தான் போகமாட்டேன். بقي ـ عظام البلاي " تا 'அலும் உன்னுேடையே இருப்பன் சொல்லம்மா - வேன் மீண்டும் மீண்டும் கெஞ்சினுள்.
வேதனேயும் வெட்கமும் கொண்டு தங்கம் ஜீவன் முகத்தைப் பார்க்க முடியாது தவித்தாள். ஒரு நீரா பிடம் ஒரு மகன் இப்படியும் கேட்க நேர்ந்ததே தங்கம் ፵ûሄ; முலேயில் போய் நின்று 'P3ாள். இளங்கோவி: இத மத்தை அது ஏதோ செய்தது. தனது துயரை விடத் "என் தாய் படும் வேத: பதி , அதிகமென அவன் மினத்தான். அந்த வேதயை அவளோடு அசூேலுல் பகிர்த்து கொள்ள 'ா? ஒருவருக்காக ஒருவர் அங்கு கண்ணர் வடித்தனர்.

Page 40
அவன் கண்களால் சாடை காட்டினன். அவள் அருகில் சென்ருள். அவன் அவள் கரங்களைப் பற்றினுன் "உன்னே நான் காதலிக்கிறேன் என்ருன் அவன்.
செல்வம் விரலேக் கடித்துக் கொண்டாள். அவன் மருண்ட விழிகள் அங்குமிங்கும் பயத்துடன் பார்த்தன. புத்தகம் மார்பில் சாய்ந்தது. "சே புத் த கம் வ சிக்கும் போதும் இவ்வள்வு பயமா? என்றது உள்ளம், இந்த கதையிலே வருகிற மாதிரிதான் வாழ்க்கையிலும் நடக் குமா? அவன் வரு வா குறு? அப்படிச் சொல்வானு? "அது அப்படிச் சொல்லாது? வெக்கமில்லேயே அப்படிச் சொல்ல. அதுக்கும் என்னிலே விருப்பமே? ஏன் பின்னே அப்படிப் பார்த்ததாம்? அன்றைக்குப் I. (IIIéli Gurt LDi GrsšI னுேட கதைச்சுப்போட்டி து? அது என்னே க் காதலிக்கயில்3ல பென்ருல் என்ன செய்யிறது? செல்லம் ஏக் கத்தோடு கன்னத்தில் கையை வேத்தாள்.
"இன்னும் கொஞ்சம் கறி போடட்டே? '
----LLL it = உள்ளே மீனுட்சி மகாதேவனே க் கேட்டான்
"இவன் இளங்கோக்கு இறைச்சி அணு ட்ப இன்ஃயே?" மகாதேவன் கேட்டான்.
"அண்ணனுக்கு "அதிலே நல்ல பிடிப்பு அவள் நின்னத் தாள்.
அதுகளோட ஈம்மா, சும்மா கொண்டாட்டம் வேண்டாம். உன்னது மாமாவை பகைக்க ஏலுமே?
 
 
 
 
 
 
 
 
 

மீட்டாத வினே "ت
தாய் கேட்டாள். செல்லத்துக்கு துக்கமாக இருந்தது:
"நல்ல மாமா மார் பாவம் அவன்னர வேலேயையும் கெடுத்து உங்கடையாக்கள் எ ல் லாரும் இப்படித்தான் ஏனிந்த எரிச்சல் தாங்கள் வாழ்ந்தால் போதுமே? மற் றவை மனுசரில்ஃயே?' மகாதேவன் கேட்டான்.
"இப்ப நீ சாப்பிட வந்தனியோ? உந்த பேய்க் கதை கள் கதைக்க வந்தனியோ?"
மீனுட்சி சிறிது கோபமாகக் கேட்டாள்
"இப்ப என்ன சொல்லிப்போட்டன்? சோறு போ டக்க என்றுலும் சந்தோஷமாகப் போடமாட்டியள். மனுஷன் மாடாக உழைக்கிறதுதான் மிச்சம்" மகாதே வன் பதிலுக்குச் சத்தம் போட்டான், செல்லம் எழுந்து அடுக்களேக்குள் போனுள்.
"நீ போ அம்மா. நான் சாப்பாடு போடுறன்: என்ன அண்ணே வேணும்? கொஞ்சம் இறைச்சி போடட்டே? அவள் கேட்டாள்.
"நியும் கொண்ணனும் பட்டபாடு. நாங்கள் ஏதா வது சொன்னுல் அவருக்குப் பெரிய கோவம். நான் எங்கேயாவது போரன்" தாய் சே ஃi யைச் செருகிக் கொண்டு தன் ஒப்பாரியை வைக்க தேவி வீட்டை நோக் கிப் போனுள். போகுமுன்னர் செல்லத்தின் காதில் ஏதோ முணுமுணுத்து விட்டுப் போனுள்.
"என்னடி சொன்னவ மகாதேவன் கேட்டான்.
"நீ கோபத்திலே சரியா க சாப்பிடமாட்டியாம். வடிவாக சாப்பாட்டைப் போட்டுக் குடுக்கட்டாம். செல் லம் சொன்னுள் மகாதேவன் சிரித்துக் கொண்டான்.
t
器”懿 விசரடி வேலுப்பிள்ளே மாமா செப் ခွို႔ကြီး, ? இஞ்சர். செல்லம். கொஞ்சம்
மீது வீ-10

Page 41
74 மீட்டாத விணை
இறைச்சிக்கறி கொண்டுபோய் தங்கம் மாமியிட்ட குடுத் துவிடு. மனுசி நான் போற நேரமெல்லாம் கருப்பணிக் கஞ்சியும் அதுவும், இதுவும் தரும்.
'நீ இப்ப சாப்பிடு நான் குடுக்கிறன்' அவள் சோற் றைப் போட்டாள்.
**போதும், பேர்தும் நீ போடுறதைப் பார்த்தால் அம்மா பிழையில்லைப் போல இருக்கு.
மகாதேவன் ஒருவாறு சாப்பிட்டு எழுந்தான். செல்லம் ஒரு கோப்பையில் கறியும் கொண்டு, வேலியை நோக்கி நடந்தாள்.
* தங்கம் மாமி . தங்கம் மாமி” **ஆர்.பிள்ளை? செல்லமே. என்ன மோனை, இந்த வெயிலுக்க'? தங்கம் கேட்டாள்.
'இறைச்சி காய்ச்சினநாங்கள் இந்தாங்கோ' தங்கம் வேலியை நெருங்கினுள்.
"உங்களுக்குப் பிள்ளை வேற வேலையில்லை ஏன் உதெல் லாம்? மாமி, எங்கே? உங்கடை மோனைக் காண இல்லை? "அதை ஏன் பிள்ளை கேட்கிருய்? அவனில்லே மேசன் வேலைக்குப் போட்டான்.
**ஒ. அண்ணன் சொன்னவர். பாவம். Լյւգ* சுப்போட்டு உந்த வெயிலுக்குள்ள என்ன செய்யப்போகுது.
**உன்னுணை மேனை மெய், நானுஞ் சொல் லிச், சொல்லிப் பார்த்தன். அவன் கேட்டால்தானே. எல் லாம் மேனை என் ரை பாவத்துக்குத்தான்.
'மத்தியானம் சாப்பிட வருமே?” இல்லை பிள்ளை கொண்டு போய் கொடுக்கவேணும்; பிள்ளை ஒரு வாழையிலை வெட்டித் தாவன். . . . .

மீட்டாத வினை • 75
**இந்தாங்கோ கறியைப் பிடியுங்கோ. கத்தியைக் கொண்டு வாங்கோ வெட்டித்தாரன்.
**நேரஞ் சென்று போச்சு நானும்.” தங்கம் கறியை வைத்துவிட்டுக் கத்தியைக் கொண்டு வந்தாள் செல்லம் வாழை இலையை வெட்டிக் கொடுத்தாள்.
"நீயே பிள்ளை இறைச்சி காய்ச்சினனி' "
'ஓம்.அம்மா உதுகள் தொடமாட்டா இல்லே?"
'ஓம்.ஓம்."
*நேரமில்லை சென்று போச்சு அது வேலை செய்து களைச்சுப்போயிருக்கும்.
"ஒம் யிள்ளை நான் பிறகு வந்து கதைக்கிறன்; தான் சமைத்ததை அவன் உண்ணப் போகிருன். என்பதில் செல்லத்துக்கு ஒரு மகிழ்ச்சி.
** என்ன அங்கே வேலிக்க செய்யிருய்? வயசு வந்த பெட்டையஞக்கு என்னடி அடுத்த வீட் டி லே வேலை? செல்லம் கரடுமுரடான அக்குரல் வந்த திக்கை நோக்கி ஞள்; சாம்பல் நிறத் தலைமயிர், ஹிட்லர் மீசை, கரிய மேனியில் தொங்கும் வெண்ணிறச் சால்வை வேலுப் பிள்ளையர் நின்ருர், தன்னைச் சுதாகரித்துக் கொண்டு செல்லம் வரவேற்ருள்.
** வாங்கோ மாமா. அம்மா அடுத்த வீட்டுக்குப் போயிருக்கிரு வந்து இருங்கோவன்' மகாதேவன் அப் பொழுது வெளியே வந்தான். அவர் முகத்தைப் பார்க்க அவனல் முடியவில்லை. தலை குனிந்திருந்தான்.
** என்னடா மருமகனே சண்டைக்கு வந்திடாதே நான் அதுக்கு வரஇல்லை. கொம்மாவைக் கூப்பிடன், பிள்ளை தம்பியவை, உங்களுக்கு உலகம் தெரியஇல்லை, சொந்த மாமன் தேவையில்லை. மச்சான் தேவையில்லை. யாருக்குப்

Page 42
76. மீட்டாத விணை
பிறந்தது என்று தெரியாததுகளோட கொண்டாட்டம். "சிமாமா ஏன் பழைய குப்பைகளைக் கிளறு ரீங்கள்? இதாலே இப்ப என்ன நன்மை வரப்போகுது? மாமி சுகமாக இருக் கிருவே" **அவளுக்கு என்ன குறை? அந்தப் பக்கம் வந்து பார்த்தாலென்ன?"
*தோட்டமும், வேலையும். நேரமென்ருல் ... , '
**அண்ணே எப்ப வந்த நீ. எடி செல்லம், மாமாக்கு தேத்தண்ணி குடுத்தனியே’ மீனுட்சி வேகமாக வந்த படியே பேசினள். வேலுப்பிள்ளையர் கதிரையில் இருந் தார். மகாதேவன் கப்போடு சாய்ந்தவாறு நின்னூன். மீனுட்சி தரையில் உட்கார்ந்தாள்.
**சாப்பிட்டியோ? சோறுகிடக்கு. இன்றைக்கு இறைச் சியும் காய்ச்சினனங்கள்' மீனுட்சி இழுத்தாள்.
"நான் சாப்பிட்டுத்தான் வந்தனன். மணியனுக்கு வேலை ஒன்று கிடைச்சிட்டுது.
"எங்கடை மணியனுக்கோ? அவன் பிள்ளை இராசா மாதிரி எங்கேயண்ணை வேலே?"
மகாதேவனின் கண்களில் ஆவல் தெரிந்தது.
"சும்மாவே, கவன்மேந்து வேலையில்லே, கிராமச் சபையிலே கிளார்க்வேலை.
"பிள்ளையாரே, பிறகென்ன? அவன் கெட்டிக்காரன் என்ரை மோனும் இருக்கிருன். காற்சட்டை போடுவம், நாலு இங்கிலீசு பேசுவம். அதுகள் கிடையாது. தோட் டம் செய்யத்தான் தெரியும். "அம்மா, மற்றவன் வாழ்க் கையிலே முன்னேறுகிருன் என்ருல் அதுக்கு சந்தோஷப் படு. ஏலாது என்ருல் பேசாமல் இரு. ஏன் உன்ரை மோனை ஒப்பிட்டுப்பார்த்து உன் மனசைக் கஷ்டப்படுத்து கிருய்? மகாதேவன் கேட்டான்டு

LBLITg5 assor 77
'எது அண்ணே முன்னேற்றம்? காற்சட்டை போட் டால் முன்னேற்றமே? அப்படியென்ருல் எங்கடை நாடு எப்பவோ முன்னேறியிருக்குமே. உந்தக் காற்சட்டை போட்டதுகளுக்கும் சேர்த்துத்தானே உன்னை ப் போல உள்ளவை உழைக்க வேண்டியிருக்கு. " செல்லம் இப்படிப் பேசுவது வெகுகுறைவு. ஆனலும் தாயின் வளர்த்தை களால் அண்ணன் மனம் நோ கக்கூடாதே என்ற எண்ணத்தோடு வேலுப்பிள்ளையர் மீது அவளுக்கு இயற் கையாக உள்ள வெறுப்பையும் அவள் அப்படிக் , கொட்டினுள்.
**போடி உள்ளே. அவவின்ரை வாயைப்பார். வர வர உங்களுக்கு வாய் பெருக்கிது. மாமாக்கு முன்னுலே பேசுகிற பேச்சே இது? மீனட்சி சீறினள்
**அவள் சின்னப்பெட்டை. அவளை ஏன் திட்டிருப்? செல்லம் நீ போய் தேத்தண்ணியைப் போடு பிள்ளை. மீனுட்சி உன்னேட கொஞ்ச விசயம் கதைக்க இருக்கு" வேலுப்பிள்ளையர் அங்குமிங்கும் பார்த்தார். மீனட்சி புரிந்து கொண்டாள்.
**மகாதேவா வெற்றிலை முடிஞ்சுது வாங்கிக் கொண்டு வாறியே?’ எப்படி அங்கிருந்து போவதென தடுமாறிக் கொண்டிருந்த மகாதேவன் மெல்ல வெளியேறினன். செல்லம் அந்தப்புரத்துக்குப் போனள். அதாவது அடுக் களைக்கு, வேலுப்பிள்ளையரும், மீனுட்சியும் குசு, குசுவெனக் கதைத்தார்கள். மிகவும் முக்கியமான விஷயத்தை அவர் கள் கலந்தாலோசிக்கிருர்கள் என்பது முகபாவனையில் தெரிந்தது. செல்லத்தின் மனதில் இனந் தெரியாத ஒர் சஞ்சலம் ஏற்பட்டது.
'ஏன் இந்த மனுஷன் இப்ப இஞ்ச வந்தது?" மகா தேவன் மனதிலும் பெரிய கேள்விதான். கடைசியாக மலர்ந்த முகத்துடன் வேலுப்பிள்ளையர் எழுந்தார்

Page 43
7& மீட்டாத விணே
"அப்ப மீனுட்சி உன்ரை கையிலேதான் விசயமிருக்கு:
நாங்கள் ஒன்றுக்க ஒன்று. ஏதோ ஒன்ருக இருக்கவேணும்
என்றதுதான் என் ஆசை.'
"நீயேன் கவலைப்படுகிருய்? அப்பு அம்மாவே இருந் தால் இப்ப எவ்வளவு சந்தோஷப்படுவினம். அண்னே" எல்லாம் நல்லா நடக்கும். நான் நாளே க்கு வீட்டுப் பக்கம் வாரன்' மீனுட்சி சொன்னுள்,
"இஞ்சபார் என்ரை மறதியை. . செல்லம். செல்லம். " மாமா கூப்பிட்டார்.
"என்ன மாமா' செல்லம் வந்தான்.
"மாமி உனக்குக் குடுக்கச் சொன்னவன்" ஒரு பார் சலே அவர் நீட்டினுர்,
" அடசிஃலயே. அம்மா இஞ்ச பாரன். மாமி சீலே அனுப்பியிருக்கிரு: நாணின்னும் போடக்கூடத் தொடங்க வில்ஃல' "நீ இன்னும் சின்னப்பிள்ளேயே. அது, அது அந்தந்த வயசிலே நடக்கும். மாமி உன்னிலே எவ்வளவு அன்பு பார்த்தியே" தாய் கேட்டாள்.
"அப்ப நான் வரட்டே" வேலுப்பிள்ளேயர் கேட்டார்: "செல்லம் அந்த மாம்பரும் கொஞ்சம் இருக்குது இல்லே' மீனுட்சி வினவினுள்.
"கொஞ்சம் நில்லுங்கோ , மாமா கொண்டுவாரன்" செல்லம் உள்னே foሻ] éir .
ஒனு
"கொத்தானுக்கும் சேர்த்து நல்ல பழமாக எடு பிள்ளே' மீனுட்சி சொன்னுள், செல்லத்தின் மனதில் மீண்டும் அந்தப்பயம் எழுந்தது. "யாருக்கோ நல்ல பழத் தைத் தெரிந்து எடுக்கச் சொல்லுறியே அம்மா, எனக் குத் தேவையானதை நானே தெரிந்தெடுக்க விடுவாயா?" அவளிதயம் கேட்டது. வேலுப்பிள்ளேயர் மனநிறைவுடன் விடைபெற்றுக் கொண்டார்.
 

மீட்டாத வீன 7
"செல்வம்"தாய் இவ்வளவு அன்பாக அவ& என்றுமே அழைத்ததில்ஃவ.
"வா உனக்குத் தலே இழுத்து விடுகிறன்' அன்பான அந்த அழைப்பு செல்வத்துக்கு அதிசயமானது தான். செல்லம் சீப்பும் கேயுமாகத் தாயின் அருகில் ரே அமர்ந்தாள். தாய் தலேயை வார ஆரம்பித்தாள்.
"செல்லம் தோட்டத்தைப் பார்த்தியே. மிளகாய் எல்லாம் பழுத்திட்டுது,
"ஒமம்மா இனி எல்லாம் பிடுங்கிக் காயவைத்து விற்க வேண்டியதுதான்"
"என்னேதான் தோட்டத்திலே பாடுபட்டாலும் அது. அது அந்தந்தக் காலத்திலே போகவேண்டிய இடத்துக் குப் போக வேண்டியதுதான்.
'பார்த்தியே அம்மா ஆட்டுக்குட்டி துள்ளுகிற துள் ÇTT & Tri ""
'துள்ளுகிற வயசிலே துள்ளுது இன்னும் கொஞ்ச நாளிலே யார் கையுக்குப் போகுதேர்"
"எதுதானம்மா நில்லயானது பாஆடு வாடிவிடும் என்று காலேயிலே பூத்த மலரைப் பார்த்து கவஃபப்பட லாமா? பூத்திருக்கிற நேரம் அழகாக இருந்தால் அதைப் பார்த்து பூசிக்கிறது தானம்மா இன்பம், நாளே, என்ன நடக்குமென்று இன்றைய அமைதியை ஏனம்மா கெடுக்க வேணும்'
வாழ்க்கை நீண்டகால, நீண்டதாரப் GOJ LI LJ. அதின் ரை ஒவ்வொரு பகுதியையும், திட்டம்போட்டு எதிர்பார்த்து நடக்க இல்லையென்முல் ஏமாற்றம் தி படி கிடக்கும்"

Page 44
է: Ա மீட்டாத வி?ன
"அம்மா காலம் மாறுது என்னத்தை நாங்கள் திட்ட மிட்டாலும் இடையிலே ஏற்படுகிற மாற்றங்கள் எங்கள் மனக் கோட்டைகளையெல்லாம் அரைமட்டம் ஆக்கிடுதே. எதிர்பாராதவை எத்தனேயோ நீ-க்குது, எங்கள் வாழ்க்கை கனவு காண்கிறதிலேயே கழித்திடுது. நாங்கள் வாழவே பில்லேயே என்று கடைசி நேரம் மட்டும் கவலேப்படுகிறம்"
'பிள்ளைகளேப் பெத்து வைக்கு என்ன செல்லம் கவலை? தன்ரை பிள்ளே தல்ல, "துகாப்பான இடத்திலே சத் தோஷமாக வாழவேணுகே என்று தானே நினேக்கிறம்,
"அன்பு பாசம் வாழ்க்கையி3 அத்தியாவசியமா னவை. அவைகளே அடையாதவன், ஆ , (Pபாதவன் மனிதனுக வாழவே முடிகிறதில்: ஆனுள் அன்பும், பா மும் மட்டும் இருந்தால் போதாதம்மா. ஒரளவுக்கு அறி வும் வேணும் கண்மூடித்தனமான அன்பும், பாசமும் కెల్స్ குப் பாத்திரமானவனின் வாழ்க்கையையே பதி கொண்டு விடும். அதுக்குப்பிறகு எங்கேயும் கண்rைர் GT GJIT FLO FT மிச்சம். "அறிவு, அனுபவத்திலே அான கிடைக்குது வயசு போனுல் அது நீTணுக வருகுது.
"அப்படியென்ருல் வயசுபோ ஆட்களென்லாமே அறிவாளிகளே? இளம் வயசினரென் முட்டாள்களோ?
+ + + + :ມh, இதையெல்லாம் எங்கே படிச்சரி: g கடை காலத்திலே தா ைபப் பார்த்து இப்படிக் கேட்பமே
"அம்மா காலம் மாறு து அதோட தாங்களும் மாற இல்லேயென்ருல் வாழ்க்  ை வேம்பாகத்தானிருக்கும். உங்கடை காலத்திலே அறிவுச் சுதந்திரடு, இருந்ததில் ஆல; அதுவும் பெண்களுக்குச் சுதந்திர ஆ.
"நான் உடுக்கிறது. உண்ணுறது எது என்றதையே அப்புதான் நீர் மானி ப்ப . ਕੇ நான் சட்டம் அவர் நீர்மானிச்சது தான் , ஆணுல் அதை விரும்பி நாங்களும் ஏற்றுக் கொண்டோம்
 
 
 
 

மீட்டாத விணே si
"ஆணுல் பயந்து பயந்து வாழ்ந்தியன். உங்கடை உணர்ச்சிகளே கட்டுப்படுத்தினியல், ஆசைகளே அடக்கினி பள். மரியாதை என்ற பெயரில் உங்கள் வாய்களுக்குப் பூட்டுக்கன் போடப்பட்டன. "
""-3) is GTsirs:TELDT உண்மைதானடி. ஆசையிருந்தால் அதை வெளியிட அச்சம் இருந்தது.'
"இன்னுெரு பிறவி உனக்கு கிடைச்சால் நீ அப்படித் நான் வாழ ஆசைப்படுவியா?"
"இதென்னடி கதை? இதையெல்லாம் பெண்டுகள் கதைக்கிறதே. நாலு இளம் பெட்டைளேப் பற்றிக் கதைக்கவேண்டும், சீஃல், சட்டையைப் பற்றிக் கதைக்க வேண்டும் இல்லேயென்முல் ஆளர் வம்பை, அரிசி, மீன் விலேயைக் கதைக்க வேணும் நீ ஏதோ பெரிய ஆக்கள் மாதிரிக் கதைக்கிருய்."
'அம்மா, பொன்னுள் நேரம் எங்களுக்கும் கிடைச்ச மாதிரி ஆண்களுக்கு கிடைக்கிறதில்லே. அதை எங்கள் நன்மைக்கு நாங்கள் பாவிக்கிறதில்லே. நேற்று நீ சின்னவ ளாக இருந்தபோது நார்பேச்சைக் கேட்டு நீயே மனம் நொந்திருப்பாய். ஆனூல் இன்றைக்கு நீயே இனம் பெண் களேப்பற்றி எத்தனே வம்பு பேசுகிருப்? என்னைப் பற்றி நாலுபேர் பேசினுல் உனக்கெப்படியிருக்கும்?"
'காலாகாலத்திலே நடக்க வேண்டியது நடந்தால் பேச இடமில்லேயே"
"என் வாழ்க்கை என் கையிலே இல்லேயே. நீ தேடி 60 வச்ச சொத்து அண்ணன் தேடுகிற சீதனம், இது கனே நம்பித்தானே ஒருவன் எனக்கு மாவே போடுவான். இது எல்லோருக்கும் இருக்கு தேர் பொருள் இல்லாதவர் களுக்கு காலாகாலத்திலே என்னதான் நடக்குது? உங்க ருக்கு நேரமிருக்கு உங்கள் கற்பனேக்கு வேலையிருக்கு: நாலு பெண்கள் சேர்ந்தால் நாற்பது பெண்களின் வாழ்க் கையைக் கெடுத்திடுவியள். அம்மா இது ஞாயமே?"
Lt. Gi-II

Page 45
8. மீட்டாத வீணை
உதெல்லாம் தேவி சொல்லித் தந்தவளே? வெதும்பிப்போன இதயங்கள், வேதனையில் வெந்து
போன பேதைகள் வாய்திறந்து சொல்லாததை நான்
சொல்லுறன்'
'உன்னைப்பற்றி நினையன். உனக்கு ஏன் உந்த வம்பு?*
"இது வம்பு இல்லையம் மா. இளம் பெண்களுக்கு இழைக்கப்படுகிற அநீதி. நாளே எனக்கும் நடக்கலாம்.'
"அந்தக் கவலை உனக்கு வேண்டாம். மாமா ஏன் வந்தவரென்று தெரியுமே?”
"மகளுக்கு எவ்வளவு நகை போடுவாய், காசாக எவ்வளவு வைச்சிருக்கிருய்? வீடு காணியெல்லாம் எழுதித் தருவியே என்று கேட்க வந்திருப்பார்: '
"என்ரை பழக்கம் உன்னை விட்டுப் போகாது ஒட்டிக் கேட்டணியே???
கேட்க என்னம்மா இருக்கு? இதைவிட்டால் வேற என்னத்தை மாமா கேட்பார்?
'மணியன் நல்ல பெடியன்'
"வேலை கிடைக்கமுன்னம், பச்சைக் குடிகாரனென்டு நீ தானே பேசுறணி?
"குடிகாரனெல்லாம் கூடாதவனே?"
கூடாதவன் குடிகாரணுகவும் இருந்திட்டால் அது கூடாது தானே?
"குடும்பப் பெண் நினைச்சால் குடிகாரனையும் திருத்த (Մ)ւգԱպւDւգ''
அவரைத் திருத்த நான் அவருக்கு மாலை போட வேணுமே? நீ அவருக்கு சீதனம் கொடுக்கவேணுமே?”

மீட்டாத வினை
"எடியே, பேய்க்கதை கதைக்காதே, என்ரை அண்ணன் மகன்”*
அவன் உன்ரை அண்ணன் மகன் தான் நான் உன்ரை மகளம்மா"
**அதுதானடி உன்ரை வாய் இவ்வளவு நீளம்'
மீனுட்சி தலை இழுத்து முடிந்ததால் எழுந்தாள்.
'உன்னேடை என்னடி கதை? கொண்ணணுக்கும் விருப்பமென்ருல் சரிதான்.""
"அண்ணனுக்கும், மணயனுக்குமே கலியாணம்?"
'பல்லுக் கொட்டிப் போடுவன் கதையாதே'
செல்லத்தின் தலையிலொரு குட்டு விழுந்தது.
** என்ரை விருப்ப மில் லா மல் உது நடக்காது.”* செல்லம் பிடிவாதமாகச் சொன்னுள். கோபமும், வேதனை யும் அவள் கண்களில் நீரை வரவழைத்தன.
*"நானென்ன ஆட்டுக்குட்டியே. வாரவனுக்கு வித்துப் போட, அவனை எனக்குப் பிடிக்கவில்லை. அவன் எனக் குத் தேவையில்லை."
"நீ தோளுக்கு மேலே வளர்ந்திட்டாய் எடியே வாயைப் பொத்தடி. உனக்கென்ன நாங்கள் நஞ்சே தரப் போறம் '
"அதையாவது தாங்கோவன் ஒருத்தருக்கும் கரைச்ச வில்லை.”*
**நான் அண்ணனுக்கு ஒமென்று சொல்லிப்போட் டேன்?"
என்னைக் கேட்காமல் ஏன் சொல்லவேணும்?"

Page 46
34 v மீட்டாத வீணை
'ஒ. நீ பெரிய ஆளில்லே உன்னைக் கேட்கிறதுக்கு எனக்கு ஏறிச்சிது என்ருல். தான் பின்னிவிட்ட செல் லத்தின் பின்னலைப் பிடித்து இழுத்தாள்
'அம்மா நீ பின்னிவிட்டதை நீயே குலைக்காதே’’ செல்லம் சொன்னுள்.
**அது என்ரை விருப்பப்படி'
பின்னினது நீதான் தலை என்ரைதானே?"
"பெத்ததை மறந்து போனியே உரிமை எனக்குத் தானe."
*"நானென்ன காணியோ, பூமியோ? உறுதி காட்டி உரிமை பாராட்ட?"
"அப்ப உனக்கு நான் தேவையில்லை."
"மற்றவர்களை நாங்கள் நம்பி வாழவேண்டி இருக்கிற படியால்தானே எங்கள் வாழ்க்கையை இப்படிப் பாழாக்
கிறியள்.
'ஏனடி அப்படிச் சொல்லுகிருய்? நீ நல்லாயிருக்கிற தற்குத்தானே எல்லாம் செய்யிரன். அவன் கவன்மேந்து வேலை. வடிவான பொடியன். சொந்த மச்சான், கரும்பு தின்ன என்னடிகூலியே வேணும்?"
"கரும்போ, வேம்போ என்று உனக்குத் தெரியுமே? அவர்களது பாதி உரையாடலின் போதே வந்த மகா தேவன் இப்பொழுது உள்ளே வந்தான்.
** அம்மா அவன் கரும்பு இல்லை. கருந்தேள். கூலியும் குடுத்து எங்கடை கரும்பையும் நாங்கள் குடுக்கப்போறம். அவன் குதப்பி எறிய ஏனம்மா உனக்கு இந்த எண்ணம்?"
'பார்த்தியே அண்ணே எனக்குக் க லியாண மும் வேண்டாம். அம்மாவை பேசாமல் இருக்கச் சொல்லு"

மீட்டாத வீண 8莎
'இரண்டு பேரும் ஒரு கட்சியே. டேய் இவள் பொம் பிளையின்ரை பேச்சைக் கேட்டு நீ.?'
'நீ என்ன ஆம்பிளையே??? செல்லம் கேட்டாள்.
'பார் பார் அவளின்ரை வாயைப்பார், நெருப்புக் கொள்ளி வைக்கணும். எல்லாம் நீ கொடுக்கிற இடமடா. என்ரை ஒரு சொல்லுக்கு மதிப்பில்லை. தாய் பொலிந்து கொண்டு இருந்தாள். செல்லம் வீட்டு வேலைகளை கவனிக் கச் சென்றுவிட்டாள். மகாதேவன் கிணற்றடியை நோக்கி நடந்தான். அவன் ஒரு வாளி நீரை அள்ளித்திரும்பிய பொழுது தேவி அவன் முன்னே நின்ருள். அவன் முறு வலித்தான். அவளும் பதிலுக்கு நகைத்தாள். அவன் அவள் வாளியில் தண்ணிரை அள்ளி ஊற்றினன்"
டீச்சர் சோதனைக்கு அப்பிளை பண்ணினனன். உன்ரை காசு இரண்டு மாதத்திலே தந்துபோடுவன்.”*
"அதைப்பற்றிக் கவலைப்படாதே முதலில் வேலை கிடைக்கவேணுமே?*
**தேவா கேட்கிறேனென்று கோவிக்காதே. எதை எதிர் பார்த்து எனக்கு நீ உதவி செய்கிருய்?' தேவன் அவளை வெறித்துப் பார்த்தான் எதுவும் பேசாமல் அவன் நடந்தான்.
"தேவா." அவன் நின்ருன்,
"என்ன?' அவன் குரல் கடுமையாக இருந்தது.
'நீ கோவிச்சிட்டாயே?? அவள் குரல் பரிதாபமாக இருந்தது;
'நீ அப்பிடிக் கேட்டிருக்கக்கூடாது."
"இன்னும் கனபேர் இப்ப எனக்கு உதவி செய்ய வருகினம்."

Page 47
86 மீட்டாத வினை
"அப்ப என்ரை உதவி தேவைப்படாது." * அவை எதையோ எதிர் பார்க்கினம்" "அது தானே அப்பிடிக் கேட்டனி??? "இன்னும் கோவமே?"
* தேவி நீ எனக்கு அ, ஆ சொல்லித் தந்தனி. என் தலையிலே குட்டி கணக்குச் சொல்லித் தந்திருக்கிருய் நான் அம்மா, அம்மா என்று கத்தக் கத்த முகமெல்லாம் சவுக் காரம் போட்டுக் குளிப்பாட்டிருக்கிருய்?" அப்ப எல்லாம் என்னத்தை எதிர்பார்த்தாய்?"
**தேவா" அவள் குரல் கம்மியிருந்தது:
**கள்ளங்கபடமில்லாத அந்த வயசிலே எவ்வளவைக் கொடுத்தாய். எவ்வளவை எடுத்தாய் என்று இலாப நட்டக் கணக்குப் பார்க்கத் தெரியா தடா. இந்த வயசு இலாபம் பார்க்கிற வயசு, கொடுக்கிற கைகூட எடுக் கிறதை கணக்குப் பார்த்துத் தானடா கொடுக்குது.'
** தேவி உந்தக் கணக்கை நீ எனக்குச் சொல்லித்தர இல்லையே??
‘'தேவா என்னுடைய இதயமோ, அன்பு, பாசம், இரக்கம் இதையெல்லாம் இழந்து கொண்டிருக்கிறது. அவை உள்ள இதயங்கள் உலகில் இல்லையென்ற முடி வுக்கு வந்து எவ்வளவோ நாளாச்சு என் கனக்கே தவ றிப் போச்சு.'
"தேவி உன் வாழ்க்கை ஒரு நாள் மலரத் தா ன் போகுது நீயும் கலகலப்பாக எல்லாரையும் போலச் சிரிக் கத்தான் போருய். மனதைத் தளரவிடாதே.
"தேவா "உனக்கு இனி என்னடி வாழ்க்கை" என்ற கேள்வியைத்தான் எ ல் லாரும் என் னைக் கேட்கிறவை. உன்னைப்போல நல்ல வார்த்தை நாலைச் சொல்லியிருந் தாலே நான் இவ்வளவு கண்ணிர் வடிச்சிருக்கவே மாட் டேன்," அவள் பேசி முடிக்கவில்லை. அவள் கண்ணிருக்கு வேல் மீண்டும் வந்தது

மீட்டாத விணை 87
'நானும் நெடுக, நெடுக பார்க்கிறன் இப்பவும் அங்கே இருந்து பார்த்துக் கொண்டுதான் நின்றனன். எவ்வளவு நேரமாக கிணற்றடியிலே உங்களுக்கு கதை! தேவி உனக்கு வெட்கம், ரோசம் கிடையாதே அவன் இளம் பெடியன் இன்னும் கொஞ்ச நாளையிலே எங்கடை வயசை நீ எட்டிப் பிடிச்சிடுவாய். அவனுேட உனக்கு என்னடி கதை? உனக்கு இனி என்ன டி வாழ்க்கை? சின்னஞ் சிறுசுகளையாவது வாழவிடன். ' மீனட்சி வார்த் தைகளால் மலரை நெருப்பினல் பொசுக்கினுள் தேவி வேதனை தாங்காது ஓடினள். ஆனல் வேதனையும் அவ ளோடுதான் ஓடியது அவள் கை யிலிருந்த வாளிநீர் சேலையை நனைத்தது. அவள் கன்னங்கள் எப்படி நனை கின்றன?

Page 48
sil
வானம் ஏணுே 'புதிது. சி நீாட்களில், சில நேரங்
களில் அது அழும். சிலர் கண்களுக்கு என்றுமே மாசி
காலம் தானுே? தேவி 'சிற்படியில் இருந்து விம்மி, விம்மி அழுதாள். வானம் அவளோடு போட்டியிட (i) ilயாது நின்றுவிட்ட آیا =
"தேவி தேவி ஏன் பேஐ. அழுகிருப்
"தேவியின் வயது சென்ற பாட்டி கனிவோடு .ே டாள். தேவியோ எதுவும் பேசாது அழுதாள். கிழவி தினது பொல்லே ளேன்றியவாறு தேவியின் அருகில் தள் ளாடித் தள்ளாடி வந்தாள். அவள் விக்கள் தேவியின் தஃயை வருடின.
"மோனே விளக்கும் வைக் ஏன்மேனே அழுதி முய் காசு இல்ஃழே ? :
"அம்மம்மா' தேவி கிழவியைத் நின்ளுேடு அஃணத்த ப, அழுதாள்.
'அழாதே மோண். காசில்லாவிட்டால் அழுகிறதே? நான் எவ்வளவு கஷ்டப்பட்டு , வளர்த்தனுன் , ஒரு நாளாவது அழுதணுனே? ஒ. கெட்ட பழக் கம். எழும்பு பிள்ளை, போய் விளக்கை வை
"அம்மம்மா . எந்து: ஏசிம்மம்மா வளர்த்துரித கிழவி அழும் தேவியின் கண்ணிரைத் துடைத்தாள்.
 
 

மீட்டாத வீன !)
"எனக்கில்லே கண் சீராகத் தெரியாதாம். இல்லே யென்ருல் நானே விளக்கு கொழுத்திப்போடுவன். மோனே, பண்ணெண்ணெய் வாங்கக் காசில்லேயே இஞ்சபாரன் மோனே என்ரை தோடு இரண்டு கிடக்குது இல்லே . "
"அம்மம்மா' தேவி தன் தலையைக் கிழவியின் மடியில் வைத்துக் குழந்தையைப் போல் அழுதாள்.
'மீனுட்சியக் கையவை வேலியை அடைச்சுப்போட் 1உணம் அங்க தண்ணியள்ள வரக்கூடாதாம்.""
"என்னடி கதையிது? உவள் மீனுட்சி எப்ப வந்த வள் வேவியடைக்க? எடியே மீனுட்சி, மீனுட்சி' கிழவி பின் குரலில் எங்கிருந்து அவ்வளவு சக்தி வந்ததோ தெரியவில்லை.
"வேண்டாம் அம்மம்மா"
"எடி என்னே விடடி' கிழவி தேவியை உதறிவிட்டு வேலியை நோக்கி நடந்தாள்.
"எடியே மீனுட்சி' கிழவி தத்தினுள்.
"யாரங்க சத்தம்' மீனுட்சி வெளியில் வந்து பதி லுக்குச் சத்தமிட்டாள். கிழவிக்குக் கண்ணும் நன்முகத் தேரியாது. இருட்டு வேறு. அவள் வேலியைப் பிடித் துக் கொண்டு கத்தினுன் ,
"ஆரைக் கேட்டடி வேவி அடைச்சனி மரியாதை
யாக எங்ாண்ட பாதையை விட்டிடு இல்லே .?"
"என்ன கிழவி பயப்படுத்திருய் என்ரை வேலியை அடைக்க உன்னேக் கேட்க வேணுமோ?" மீனுட்சி கேட் டாள்.
எடியே உந்தக் கிணறு என்ரை அவரும் உன் ரைக் கொப்பனும் சேர்ந்து வெட்டினதடி நீ யாரடி எங்களேத் தடுக்க?"
மீ.வீ.-12

Page 49
Աt) மீட்டாத வின
"தண்ணி எடுக்க வாரனிங்களோ" இல்லே இஞ்சை மாப்பிள்ளே தேடுறியலோ, உன்ரை பேத்தியைக் கொஞ் சம் அடக்கி வை."
"அடியே என்ரை பேத்தியையும் தெரியும் உன்னர ஆட்டமும் தெரியும். சொன் னு ல் உன்ரை பெடியள் கிணத்துக்க விழுந்திடுங்கள். " மாறி, மாறி இருவரும் வசைமாரி பொழிந்தனர். சில நிமிடங்களின் பின் கிழவி தன் கைப்பொல்லால் வேலியை அடிக்க ஆரம்பித்தாள் மட்டைகள் கீழே விழுந்தன. வேலி வழிவிட ஆரம்பித் தது. கிழவியின் கையிலிருந்த பொல்லுக்கும், அதைவிட வலிமையான அவளது நாவுக்கும் பயந்து மீனுட்சி தூரவே நின்று சத்தமிட்டாள்; கிழவியைத் தடுக்க வழியின்றித் தேவி நின்றன். செல்லமோ ”அம்மாக்கு உதுவும் வேணும் இன்னும் வேணும் என்று எண்ணியவாறு அடுக்களே யில் வேலேயாக இருந்தாள் வேலியைப் பிரித்த கிழவி சும்மா இருக்கவில்ஃ.
"எடியே உந்தக் கிணற்றிலே நானும் தண்ணியள்ளு கிறதுதான் ஏலுமென்ருல் நிற்பாட்டிப்பார் பார்ப்பம் கிழவி கைத்தடியை அங்குமிங்கும் சுழற்றியவாறு நடக்க ஆரம் பித்தாள். கிழவியைத் தடுக்கத் தேவி வேலியைத் தாண்டி வர வேண்டியிருந்தது
"விடு மேஃக என்னே' என்று சொல்வியபடி கிழவி நடக்க ஆரம்பித்தாள். மீனுட்சிக்கோ ஆத்திரம் தாங்க முடியவில்ஃப்.
"குறுக்கால போ க. நீங்கள் நாசமாகப் போக' என்று மண்ணே வாரி தேவிமீது அவள் வீசினுள் தேவி யின் உடலெங்கும் மண், அவள் கண்களேத் திறக்க முடி பாது தவித்தாள். கிழவியோ கண்டவாறு பேசியபடி கிணற்றடியை நெருங்கி விட்டாள்.
'மீனுட்சியக்கை சும்மாயிருங்கோ, அம்மம்மா இல்லே கிணற்றடிக்குப் போகிரு. ' தேவி கண்களேத் துடைத்த தவாறு தவித்தாள். மீனுட் சிக்கு அவள் தவிப்பு மேலும் உற்சாகத்தை அளித்தது.
 

மீட்டாத விணே 9.
"நாய்கள். நாய்கள், பொதுக்கி நாய்கள் தொலேஞ்சு போங்கோ " அவள் கற்களாலும் வீச ஆரம்பித்தாள் அடுக்களேயிலிருந்த செல்லம் விசயம் விபரீத மாவதை உனர்ந்து தாயைத் தடுக்க ஓடி வந்த f ன். இதற்குள் கிழவியோ துவாக்கயிற்றை ஒருவாறு தேடிப் பிடித்தாள்.
"வரச் சொல்லடி பார்ப்பம் அவளே வந்து தடுக்கச் சொல்லடி இது நெல்லுக் குத் தின கையடி, என்ன நினேச் சாள் உவள். ' கிழவியின் குரலும் வாளியின் ஒசையும் தேவியின் காதுகளில் விழுந்தன.
"அம்மம்மா நீங்கள் அள்ளாதேங்கோ. நான் வாரன்" தேவி கத்தியவாறு கிணற்றடியை நோக்கி ஓடினுள். அதற் குள் கிழவி துல வைத் தாழ்த்தினுள் வாளி ஆழமான கிணற்றுநீரில் முட்டியது. அந்த ஒசை கிழவியின் போராட் டத்தின் வெற்றியை அவளுக்கு அறிவுறித்தின. அவள் வஃளந்த முதுகை நிமிர்த்தினுள் வெற்றிக்களிப்பு அவள் கண்களில் வின் பாடியது.
'எடியே பின்ளே வாளியைக் கொண்டுவா தண்ணி 3ார்க்க" அவள் தேவியை அழைத் தான்
நீர் நிரம்பிய வாளி கிணற்றின் விளிம்பை அடைத் குது கிழவி குனிந்து வாளியைத்துக்க முயன்றுள் முடிய வில்லே. அது விளிம்போடு மோதியபடி நின்றது. கிழவிக்கோ தோல்வியை ஒத்துக்கொள்ள முடியவில்லே, நன்ரு கக் குனிந்தாள். வாளியை இழுத்தாள். வாளி வேமாக வெளியே வந்தது துலா படாரென மரத்தோடு மோதி து. கிழவி தடு மாறினுள், கிணற்றின் விளிம்பை நோக்கி அவள் கால்கள் வழுவிச் சென்றன. மறுகணம் அவள் ஆழமான அக்கிணற்றின் அடித்தளத்தில் கிடத் தாள். தேவி விலென அலறினுள் அவனே த் தொடர்ந்து ரெஸ்லம் "ஐயோ" எனக் கத்தினுள் ஒரு கணம் சிலேயாக நின்ற மீனுட்சியும் "கடவுளே எனக் கூக்குரலிட்டாள்,

Page 50
92 மீட்டாத வினே "என்ன, என்ன நடந்தது’* பதறியபடி நொண்டி, நொண்டி அப்பொழுது தான் வீட்டிற்கு வந்த கோபால் அங்கு வேகமாக வந்தான். கிணற் ைறச்சுற்றி நின்ற மூன்று பெண்களும் கத்தினர்கள்.
'அம்மம்மா கிணத்துக்கையடா .. ' தேவி அலறி ஞள். கோபாலின் உடல் துடித்தது. கிணற்றின் விளிம் புவரை அவன் சென்றன். அவனுடல் நடுங்கியது. "அம்மம்மா அம்மம்மா' 'ஐயையே" என்னலே இரங்க வும் ஏலாதே அவன் பதறினன். இயற்கையின் கொடுமை அன்றுதான் அவனிதயத்தை ஆழமாகக் கூறுபோட்டது.
**டேய் சும்மா நிற்காதேடா. யாரையாவது கூப் பிடடா" தேவி அழுதழுது வேண்டினள்.
"ஐயோ அண்ணணும் எங்கேயோ போட்டுதே' செல்லம் பதை பதைத்தாள்.
**கோபால் கண்களில் கண்ணீர் பெருக வலது காலை இழுத்து, இழுத்து வெளியே ஒடினன். தூரத்தில் இளங்கோ வந்துகொண்டிருந்தான். கோபாலின் கண்களில் ஒரு நம் பிக்கை ஒளி தெரிந்தது."
"இளங்கோ, இளங்கோ...'
நடந்து வந்த இளங்கோ கோபாலின் குரல் கேட்டு ஒரு கணம் நின்முன். அவளுல் நடக்க முடியவில்லை. அவள் கண்களில் வெறுப்பும், அருவருப்பும், வியர்த்தி ருந்த முகத்தை இன்னும் கோரமாக்கின3 "இந்த நன்றி கெட்டவனுேட எனக்கென்ன கதை. கதைச்சாலும் கை வைக்க வேண்டித்தான் வரும். பேசாமல் எங்கேயாவது போயிட்டு பிறகு வருவம் இளங்கோ இந்த முடிவோடு திரும்பி நடந்தான். கோபால் திகைத்தான்.
'இளங்கோ, இளங்கோ நில்லடா, டேய், டேய் இஞ்ச வாடா" இளங்கோ வேகமாக நடந்தான். கோபால் கால்களே இழுத்தபடி பின்னல் ஓடினன்,

மீட்டாத வீணை 93
'டேய், டேய் அம்மம்ா கிணத்துக்க விழுந்திட்டாடா வாடா" கோபால் கத்தினன். தெருவில் ஒடிய "டிராக்டர்’ சத்தத்தில் அவன் குரல் அமிழ்ந்தது. அதற்குள் இளங்கோ அடுத்த தெருவில் திரும்பிப் போய்விட்டான். கோபால் ஒழுங்கை மணலில் விழுந்து, விழுந்து அழுதான், என்றுமே சிரித்துக் கொண்டிருக்கும் கோபால் அன்று அழுதான்.
இளங்கோ கோயிற் கிணற்றில் நன்கு குளித்தான். நாளெல்லாம் உழைத்த களைப்பு உடலைவிட்டு மறைந்து விட்டது. ஆனல் உள்ளத்தில் ஒரு சோர்வு, அவன் மன தில் மகிழ்ச்சியில்லை, இளங்கோ, இளங்கோ’ கோபா லின் கீச்சுக் குரல் - அதுவும் அவலமான ஒரு குரலாக அவன் காதில் ரீங்காரமிட்டது ஏன் அப்பிடி அவன் கூப் பிட்டவன்? மனதை ஏதோ அரித்தது. அவன் வீட்டை நோக்கி நடந்தான். தூரத்தே பெற்ருேமாக்ஸ் விளக் கோடு சைக்கிளில் யாரோ வந்தார்கள்.
டேய் இளங்கோ எங்கேயடா’ போனனீ? ஒரு கை யில் விளக்கோடு. மறுகையால் பிரேக்கை அமுத்தினன். மகாதேவன்;
'என்ன மச்சர்ன் விளக்கோட??? இளங்கோ கேட்
டான்.
"உனக்கு விசயம் தெரியா ே த? கோபாலின்ரை அம்மம்மா இல்லே கிணத்துக்க விழுந்து போச்சு."
"என்னடா!' இளங்கோவின் காதில் கோபாலின் குரல் மீண்டும் ஒலித்தது. அவன் இதயத்தை யாரோ இரு கைகளால் பிசைவதுபோல் இருந்தது.
"ஏறி விளக்கை பிடியனடா' மகாதேவன் அவசரப் படுத்தினன்? இளங்கோ சைக்கிள் பாரில் ஏறியமர்ந்தான்; வழியில் மகாதேவன் தனக்குத் தெரிந்ததை விளக்கினுன்

Page 51
94 N மீட்டாத விணை
'நானும் வீட்டை நிற்க இல்லை மச்சான் நல்ல காலத்துக்கு, பெண்டுகளின் ரை சத்தங் கேட்டு அயலுக்க இருந்த நாலைஞ்சு பேர் வந்தவையாம் அது களில் லை யென்ருல் அந்தப் பெண்கள் என்ன செய்யும்? பாவம். கோபால் காலும் ஏலாது கிழவியிலே சரியான பாசமடா. மனுசிதானே வளர்த்து ஆளாக்கினது. கதறிக் கொண் டிருக்கிருன். பார்க்க ஏலாமலிருக்கடா'
அழுகுரல் இப்பொழுது நன்கு கேட்டது. பெண்களின் அழுகுரலையும் மீறிக் கொண்டு அந்த ஆண் குரல் நெஞ் சைப் பிளந்தது.
"அம்மம்மா. என்ரை அம்மம்மா ... என்னைத் தூக்கி வளர்த்தியே, உன்னைத் தூக்கக்கூட ஏலாமல் நின் றேனே. என்ரை அம்மம்மா என்னைவிட்டுப் போனியே.
விளையாட்டு, வேடிக் கையெ ன்று நாளெல்லாம், பொழுதெல்லாம்ஊரெல்லாம் கிரிக்க வைக்கும் கோபால அப்படிக் கதறுகிருன்? கூவும் குயிலோசை நமக்கு இனிதே. அது சோகக் கீதமா? இல்லை இன்பச் சங்கீதமா என்பது குயிலுக்குத்தானே தெரியும். பெண்கள் பலர் ஒருவரை யொருவர் கட்டிப்பிடித்தவாறு ஒப்பாரி வைத்தனர். தங் கமும் அங்கிருந்தாள் ஏன்? மீனுட்சிகூட சேர்ந்தழுதாள் செல்லமும் கண்ணிர் வடித்தாள். ஆனல் தேவி அழவில்லே . அவள் கண்கள் அந்த மனிதர்களையே பார்த்தன. ஏன் அவர்கள் அழுகிருர்கள்?
கிழவியின் மறைவு அவ்விதயங்களை நெகிழ வைத்ததா? கன்னி இவள், இனித்தனிய என்ன செய்வாளென எண்ணி மனம் நொந்தார்களா? உயிரோடு இருக்கையில் வாழ்க் கையிலே உதவாத இம்மனிதர்கள் உணர்ச்சியற்ற உடலைப் பார்த்துஎன் அழுகிருர்கள்? அவள் துயரத்தில் என்றுமே பங்குகொள்ளாத இவர்கள் இன்றுமட்டும் ஏன் ஓடி வந்தார் கள்? உதடுகளில் ஒப்பாரி உள் ளங்களோ உறியில் வைத்த கறியில், பெட்டகத்தில் பூட்டி வைத்த பணத்தில் மற்றவா

மீட்டாத வீணை 96.
வாழ்வை நினைத்துப் பொருமைத் தீயில்! சாவீடு கல்யா ணம் பேசும் சந்தையாகும், நரம்பில்லா நாக்குகள் அங்கு பல கூடும், கன்னியர் வாழ்வைக் கெடுக்க பல கதைகள் தேடும் சுடுகாட்டில் கிழவியின் உடல் எரியும்! சாவீட் டில் உயிரோடு உள்ளவர்களின் வாழ்வு
இதற்குத்தான் இங்கு கூடுகிறர்களா? நாளை தங்கள் வீட்டுக்கு நாலு மனிதர்கள் வரவேண்டும் என்று கூறுகி முர்கள், அவர்கள் கண்ணிரெல்லாம் பொய்யா? கடந்து போன தங்கள் வாழ்வில், கவலை நிறைந்த காலங்களை நினைத்தும் கண்ணிர் வடிக்கிருர்கள். "ஐயோ நாளை நானும் இறந்து விடுவேனே என்று பயந்து கண்ணிர் வடிக்கிறர் கள். தேவி - அவளுக்காக இங்கு எத்தனை பேர் அழுகிருர்
56it?
அவர்கள் அழுகிருர்கள். ஏன் அவள் அழவில்லை? ஏன் அவள் அழவேண்டும்? கிழவிதான் செத்தவீட்டுச் செல வுக்குத் தன் தோட்டை விட்டுப் போனுளே’
Χ Χ Χ எட்டு வீடும் முடிந்துவிட்டது. இனி எட்டிக்கூட அங்கு பார்க்க யாரும் இல்லை. தேர்தல் முடிந்தபின் வாக்காளருக்கு ஏற்படும் நிலைதான் அவள் வீட்டிற்கு இருந்த ஒரே சட்டையும் கிழிந்து விட்டது. தேவி சேலை யைப் போர்த்திக்கொண்டு தன் கிழிந்த சட்டையைத் தைத்துக் கொண்டிருந்தாள் அவள்தையல் மெசின் ஒசை யைத் தவிர வேறு ஒசை அங்கில்லை. குனிந்த தலை நிமி ராது அவள் தைத்துக் கொண் டி ரு ந் தாள். அவள் சட்டையில்லா மேனியழகை இரு விழிகள் பருகுவதை அவள் காணவில்லை. அவள் தலையை நிமிர்த்திய போது தான். அவரும் தொண்டையைச் செருமினர். துள்ளி எழுந்த தேவி கதவுக்குள் ஒளிந்தாள்.
ஏன் தேவி பயப்படுகிருய்? நல்ல காரியமாகத்தான் வந்தனன்’’.

Page 52
96 மீட்டாத விணை
தேவி அவசர, அவசரமாகச் சட்டையை மாட்டிக் கொண்டாள் அவள் வெளியி ல் வராமலே பதிலைத் சொன்னுள்.
'தம்பி தியேட்டருக்குப் போயிட்டான்
"ஓ தெரியும். அம்மம்மா செத்தது உனக்குப் பெரிய கவலைதான் நடக்கிறது நடந்துதானே தீரும். அவள் தன் கழுத்தைத் தடவிக் கொண்டாள் "நடக்க வேண்டியவை நடப்பதில்லையே" என்றது மனம்
"நான் வருவேனென்று நீ நினைச்சிருக்க மாட்டாய் என்னமோ மனம் கேட்கவில்லை. பாவம் நீயும் ஒரு பெண் பேதை என்ன செய்வாய்?
மற்றவர்களின் அனுதாபம் சில சமயங்களில்தான் உள்ளங்களுக்கு ஆறுதலேத் தருகின்றன. தேவிக்கு ஏனே அந்தச் சமயத்தில் அது எரிச்சலைத்தான் தந்தது. இந்த மனிதருக்கு ஏன் இந்தக் கவலையெல்லாம்? அவள் நினைத் தாள். அவரோ கதிரையை இழுத்துப்போட்டு அமர்ந் தாா.
தேவி உன்னை நான் தேர்த்திருவிழா அன்றுபார்த்த னன்; வேலுப்பிள்ளையர்தான் உன்னைப்பற்றிச் சொன்னர்g எனக்கென்னமோ உன்னிலே ஒரு பரிவு வந்திட்டுது அது தான் உன்ரை தம்பிக்கும் என்ரை தியேட்டரிலே வேலை கொடுத்தனன்." கணபதிப்பிள்ளையார் கணிவோடு சொன்
ஞா.
"இப்ப ஒருத்தரும் வீட்டிலே இல்லை. நீங்கள் தம்பி இருக்கைக்க வாங்கோவன்.' 68 متيقاً( சொல் லி விட்டு நாக்கைக் கடித்தாள்.
'இல்லை உன்னேட தனியாகப் பேசத்தானே வந்த ஞன் இது விசயமாகத் தங்கத்தை உன்னட்டை அனுப்பி வைக்கப் பார்த்தனன். அவளின் ரை பெடியனைப் பற்றி

மீட்டாத வீணை g7
ஊரிலே நல்ல கதையில்லை. பிறகு அது எனக்கும் கூடா தென்றுதான் அவனுக்கு வேலையும் கொடுக்கவில்லை " அவரது சுற்றி வளைந்த பேச்சு அவளுக்குப் புரியவில்லை;
‘'தேவி உனக்கும் ஆரும் இல்லை. எனக்கும் ஒரு துணையில்லை. **
**தயவு செய்து நீங்கள் போறிங்களே" அவள் கேட் டாள்
"'நான் சொன்னது விளங்கிச்சே???
**இதுக்கு மிஞ்சி விளக்கம் வேண்டாம் ** அவள் கதவுக்கு வெளியே வந்தாள்’ எரியிற வீட்டிலே பிடுங் கிறது லாபமென்று பார்க்கிறியள்' அவரோ, நிதானம் தவறவில்லை. மெல்லச் சிரித்தார்.
"தேவி, வலிய வார சீதேவி - எனக்கொன்றும் அவ் வளவு வயசாக இல்லை. நிரந்தரமாக ஒரு துணையைத் தேடி கனகாலமாக நானும் திரியிறன் உனக்கோ இனி என்ன வாழ்க்கை' தேவிக்குத் தலையில் சம்மட்டியால் அடிப்பது போலிருந்தது.
"என்னைப் போல ஆராவது கிடைச்சால் சரி. இல்லை யென்ருல் குளமோ. குட்டையோ.." அவர் தொடர்ந் 35Tri.
"நிற்பாட்டுங்கோ. ஆறுதல் சொல்ல வந்தனிங் களோ? ஆசையைத் தீர்க்க வந்தனிங்களோ? ஆசையைத் தீர்க்க வந்தனீங்களோ? இப்ப வாங்க வந்தது நீங்கள் விற்க நான் தயாரில்லை. அந்த விலை உங்களால் தர முடியாது’’ حر
தேவி கார், பங்களா, காசு பணம் எனக்கு இருக் கிறமாதிரி இந்த ஊரிலே ஆருக்கும் இல்லை."
6. a.-13

Page 53
மீட்டாத stał
"இதயம், பாசம், பண்பு - இது இருக்கிறவன் ஏை யில்லே. என்பது வயதைத் தாண்டினுலும் எனக்குத் துணை யாக இருக்கலாம். ஆனுள் நீங்கள். சி . போங்கோ' கணபதிப்பிள்ஃாபர் புன்னகையோடு எழுந்தார்.
"இலாபமும், நட்டமும் வாழ்க்கையிலே இயற்கை இப்ப எனக்கு மாத்திரம் நட்டமில்லே. உனக்கும் தான் மனம் மாறினுல் சொல்வி அனுப்பு. காரை அஆப்புறன். இல்லே ஒரு முழக்கயிறுதான் வேணுமென்ருல். அது உன் ரை தஃவிதி" அவர் எழுந்து நடந்தார். அவ படலேயருகில் சென்றதுதான் திாமதம், தேவி சத்து Ls), "TGŷr.
"நில்லுங்கோ "
"தேவி" ஆசையோடு அவர் திரும்பிஞர். அதே சமயம் மீனுட்சியின் கண்கள் வேலியினூடே அக்காட்சிை இரசித்தன. ஆனுல் அதற்குள் மகாதேவன் வந்தான் படத்தின் கிளேமாக்ஸ்" காட்சியில் ரீல்ஸ் அறுந்த கை போலாயிற்று மீனுட்சிக்கு படக்கதை புரியாவிட்டாலும் ஒரு புதுக்கதையை மீளுரட்சியால் உருவாக்க (UPI).ШТАТ, т? அவள் மனமின்றி வேலியைப் பிரிந்து சென்ருள். இந்த வேலிகள்தான் எங்கள் பெண்களின் பொழுதுபோக்குச் சாதனம்,
"இந்தக் காரை ஏன் விவச்சிட்டுப் போரியல்" தேவி தையல் மெசின் மேசையி விருந்த பணத்தைக் காட்டினுள்.
'ஒ. அது உனக்குத்தான்'
"வியாபாரமே நடக்க இல் லேயே அட்வான் எதுக்கு அவள் கேட்டாள்
அது அந்த வியாபாரத்துக்கு இல்.ே எனக்கு காட்சியளித்ததற்கு, கதைத்ததற்கு
 
 

மீட்டாத வினே
"ஓ அப்படியென்ருல், உங்கடை இயேட்டரிலே கட னுக்கு படம் காட்டிரியலோ" அவருக்குப் புரியவில்லே அவர் விழிகளே உருட்டினூர் மடித்த நூறுரூபாய் தோட்டு அவர் முகத்தில் வந்து விழுந்தது.
"உங்கண்ட மகள், என்ரை தம்பிக்கு அடிக்கடி காட்சி தாராளிாம். அவன் ஏழை வீனுக நட்டப்படாதேங்கோ' கணபதிப்பின்ாேயாரின் கண்கள் கோபத்தால் சிவந்தன. அவர் ஓங்கிப்படலேயை சாத்திவிட்டு நடந்தார். அடுத் தடுத்த வீட்டு வாசல்களில் பல உருவங்கள் அவரை
வியப்போடு நோக்கின

Page 54
lo
இருள் சூழும் நேரம். அமைதி, பயங்கரமான அமைதி. கிழவியின் இருமல் ஒலியோ, முனகல் ஒலியோ, முணுமுணுப்போ இப்பொழுது இல்லையே. இனந்தெரி யாதவயம் தேவியின் இதயத்தில் பரவுகிறது தனிமை. மிக, மிகப் பயங்கரமானது. பள்ளிக்கூட விடுமுறை. பிள்ளைகள் கூட படிக்க வருவதில்லை. செல்லம், தேவி யோடு பேசுவதும் தடை செய்யப்பட்டது. ஊரெல்லாம் அவளைப்பார்க்கும் பார்வை, பார்த்தபின் தமக்குள் அவர் கள் பேசும் பேச்சு - செய்யாத தவறுக்கு அவள் தண்டனை அனுபவித்தாள். வீட்டுக்குள் அவளால் இருக்கமுடியவில்லை. கோபால், இரண்டு நாட்களாக வீட்டுக்கு வரவேயில்லை. படலையருகில் அவள் நின்ருள். வேலை முடிந்து, கோயிற் கிணற்றில் குளித்துவிட்டு இளங்கோ ஏதோ ஒரு பாட்டை முணுமுணுத்துக் கொண்டு வந்தான்.
'தம்பி, இளங்கோ இஞ்ச ஒரு விஷயம் வந்திட்டுப் போறியே’’ தேவி அவனை அழைத்தாள்.
'தம்பி இவன் கோபால் தியேட்டருக்குப் போனவன் இரண்டு நாளாக வரவில்லை"
அவள் குரலில் பயம் தொனித்தது இளங்கோவின் முகம் மாறியது.
"அவனேட நான் கதைக்கிற இல்லை'
"எனக்குத் தெரியும் தம்பி எனக்காக, அவனை ஒருக் காப் போய் பார்க்கமாட்டியே?

மீட்டாத வினை
அவள் ஏக்கத்தோட கேட்டாள். அவன் பேசவில்லை. அவள் கண்களில் கண்ணிர் நிரம்பியது. வேறு யாரோ தெருவோரம் போனர்கள். அவள், கூப்பிட்டாள்.
**கந்தசாமி அண்ணையே இஞ்ச ஒருக்கால் வந்திட்டுப் போங்கேர்.
"என்ன பிள்ளை**? அவர் கேட்டார்.
அண்ணே எங்கடை கோபாலைக் கண்டனீங்களே?*
"இல்லை பிள்ளை" அவர் வேகமாக நடந்தார். அவ ளோடு பேசவே ஆண்கள் பயந்தார்கள். காரணம் பெண் கள்தான். இளங்கோ இன்னும் நின்ருன்.
தம்பி தனிய நான் இரவிலே எப்படி.. அவன். அவன் கொஞ்சம்கூட யோசனையில்லை"
அவள் விசித்து, விசித்து அழுதவாறே உள்ளே போனுள் இளங்கோவின் மனதை ஏதோ அரித்தது. கோபாலைத் தேடி அவன் போவதா? அதுவும் கணபதிப்பிள்ளையார் வீட்டிற்கா? அவன் தன்மானம் மனிதத் தன்மையை மறைத்தது.
கப்போடு சாய்ந்தவாறே அவள் நிலத்திலிருந்தாள் கன்னத்தில் அவள் கைகளிரண்டும் பதிந்திருந்தன. விரல் களினிடையே அவள் விழி, நீர் ஓடியோடி இப்பொழுது காய்ந்து விட்டது. எரியாத அடுப்பொன்று அருகே, எரிகின்ற உள்ளமோ அவளிடத்தே இருட்டு. இதுதான் அவளுக்குப் பழக்கமானது. கண்களை மூடினுள் அப்பொழுதும் இருட் டுத்தான் மூடிய கண்கள் மூடியே இருந்துவிட்டால் ..?
குளமோ குட்டையோ, ஒரு மு"மக் கயிருே. ? சே . அவளுக்கென்று யாரும் வேண்டாம் அவளுக்காக பேசக் கூட ஒருவரும் இல்லையா? பனையோலைகள் பயங்கரமான ஓர் ஓசையை ஏற்படுத்தின காற்றினுல் புழுதி அவள்

Page 55
02 மீட்டாத வினை
உடலெங்கும் வாரி இறைக்கப்பட்டது. அவள் அந்த அர சடியைப் பொறுத்தவரையில் புழுதியில் விழுந்த பூமாலை தானே!
சே. என்ன வாழ்க்கை? என்ன மனிதர்கள்? என்ன செய்ய முடியும்? விரக்தியும், வெறுப்பும் சேரும்போது ஒருவித வெறி ஏற்படுகிறது. இளம் உள்ளங்களைக் கவர என்னுல் முடியும். ஏன் நான் அழவேணும்? என்னைப் பற்றி இல்லாத பொல்லாததைக் கதைக்கிற இந்த மணி தர்களை பழிவாங்க வேணும். அழைவைக்கவேணும் அவள் போராடினள் "சொந்தத் தம்பியே வரஇல்லையே இனி எனக்கு ஆர்? என்ரை வாழ்க்கை என்னமாதிரி இருக்கப் போகுது? அவள் முன்னுல் இருட்டுத்தான் இருந்தது.
**தேவி, தேவி!" மெல்லிய அந்தக் குரல் மெதுவாக அவளை அழைத்தது. தேவியின் உள்ளத்தில் ஒரு புத்து ணர்ச்சி. உடலிலே ஒரு பட, படப்பு அவள் எழுந்தாள்.
**விளக்கைக் கொளுத்த நெருப்புப் பெட்டியும் இல்லை" அவள் சொன்னுள்.
*" விளக்கு வேண்டாம்"
"தேவா,"
**தேவி அம்மாக்குத் தெரியாமல் வந்தனன். பலத் துக் கதைக்காதே' அவன் அவளுக்கு மிக அருகில் நின் முன்
**தேவா ஏன் அப்படி வந்தனி?
**தேவி இன்று முழுக்க நீ தண்ணி அள்ள இல்லை. அடுப்படியாலே புகையே வர இல்லை. விளக்கு எரிய இல்லை
நீ இருக்கிறீயோ இல்லை செத்துப்போனியே என்று பார்க்க வந்தனுன்' அவன் குரல் தழதழத்தது.
"தேவா நீ ஒருத்தணுவது என் நினைவோட இருக் 8g)9u” Jy6u6r Jy(psmair.

மீட்டாத வீண 63
"சும்மா அழாதே தேவி எவ்வளவு நாளேக்கு இப்படி அழுகுறது? அடுப்படிக்க போ சொல்றன்."
இருவரும் அடுக்களைக்குள் நுழைந்தார்கள்.
தேவி உனக்கு இடியப்பம் கொண்டு வந்தனன் சாப்பிடு' தேவியின் உடல் சிலிர்த்தது அவளுக்கா அன்பு காட்டயாருமில்லை? உலகத்திலுள்ள உள்ளங்கள் எல்லாம் ஒன்ருகச் சேர்ந்தால்கூட, அவனுடைய அன்பைச் செலுத்த முடியாதே. ஆயிரம் உறவுகள் இருந்தென்ன? உண்மை அன்பிலே உருவாகும் ஓர் உறவுக்கு அவை FFL – T@gjuDnto?
"தேவா தேவா" நன்றிப் பெருக்காலும் கண்ணி பெருகலாம் அவன் அவள் கண்ணிரைத் துடைத்தாள். அவள் தடுக்கவில்லை அது அவளுக்கு தேவைப்பட்டது. கண்ணி ரைத் துடைக்கக் கரமிருந்தால் அது பெருகினலும் இன்பமே ,
* சாப்பிடு தேவி " அவன் உரிமையோடு சொன்னன் இருட்டில், அவள் இடியப்பத்தையும் கறியையும் கலந்தாள். ஒன்ருேடு ஒன்று இணையும் போது சுவைதான்.
"நீயும் சாப்பிடு'
அவன் மறுக்கவில்லை அவள் குழைத்துக் கொடுத்தாள் இருவரும் சுவைத்து உண்டனர்.
தேவி இன்றைக்கு உன் கண்ணிரை தான் துடைக் கிறேன் எப்பவுமே கண்ணீர் வராமல் பார்க்க. .
"எனக்கு ஆர் இருக்கினம்? தேவா இது கிடைச்சதே நான் செய்த புண்ணியம்’ ’
'தேவி ஊரெல்லாம் உன்னைப்பற்றி ஏணிப்படி கதைக் கிறது?
‘அதைத் தட்டிக் கேட்க யாராவது தாலி கட்டி யிருக்க வேணுமே?

Page 56
104. மீட்டாத வினை
* தேவி கோபால் எங்கே?
"எனக்குத்தான் நிம்மதியில்லை என்னலே அவன் ஏன் கஷ்டப்படவேண்டும்.
**தேவி அப்படிச் சொல்லாதே உன்னேடு பேசுற ஒவ்வொரு நிமிசமும் எனக்கு இன்பமாக இருக்கு. இந்த இன்பம் நிலைக்காதா என்று ஏக்கமாகவும் இருக்கு,"
"தேவா"
‘'தேவி எங்களிருவருக்கும் இடையிலே ஒரு அன்புப் பாலத்தை நாங்கள் எப்பவோ அமைச்சிட்டம் அது நிரந் தரமானது. தேவி என்னை மன்னிச்சிடு, களங்கம் இல்லா மல் ஆரம்பிச்ச இந்த அன்பு இப்ப."
அவன் அவள் கரங்களைப் பற்றினன். அவனையறி யாது கரங்கள் நகர்ந்த ன அவள் தோள்களைப்பற்றி மார் போடு அணைத்துக் கொண்டன. அவள் நடுங்கிள்ை. வார்த்தைகள் வரவில்லை. தாக்கு அசைய மறுத்தது. உதடு களோ துடித்தன. அவன் அவள் காதோடு சொன்னுன் இல்லை நெஞ்சோடு பேசினன்.
* தேவி நானுன்னைக் காதலிக்கிறேன் அப்படித்தான் சொல்ல வேணும் அவலுடலெங்கும் மின்சாரம் பாய்ந் தது. இதமான அவன் அணைப்பை இழக்க அவளால் முடியவில்லை. ஆனல் இதயமோ "தவறு "தவறு" என்று அவளைக் குத்தியது.
* "தேவா, தேவா. நான். நா. .ன் ." அவள் நடுங்கினள் அவன் மேலும் அனைத்துக் கொண்டான்.
தேவி நீ சொல்லத் துடிக்கிறது எனக்குத் தெரியும். என்னைவிட வயசில் கூடின உன்னை நான் எப்படி மனைவி யாக்க முடியும். என்று நீ ஏங்கிருய். தேவி, உன்னைவிட இளையவனே உன்னலே ஏற்றுக் கொள்ள முடியுமென்ருல்.

மீட்டாத விணை tos
"முடியாது தேவா முடியாது" அவள் தன்னை விலக்கிக் கொண்டாள்
"தேவா குழந்தையாக நீ இருக்கைக்க கன்னமெல்லாம் கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்திருக்கிறனடா. உன்னைக் கணவனுக நான் கனவு கூடிக் கண்டதில்லையே. டேய் நீ குழந்தையடா. இன்னும் என் குழந்தையடா.
'தேவி. தேவி. அவன் அழுதான்.
** டேய் என்னிடம் பாசமுள்ள வங்கள் இல்லையடா இருக்கிற நீயும், பாசம் வைச்ச ஒரே காரணத்தாலே வாழ்நாள் முழுக்க என்னேடு கஷ்டப்பட வேணுமே?
* தேவி என்னேடு வாழுறது கஷ்டமென்று நினைக் கிறியா?
'டேய், தேவா எ எனைவிட இளமையான எத்தனை யோ அழகான பெண்கள். உனக்காகக் காத்திருக்குதுகள்'
* நீ யாருக்காகக் காத்திருக்கிருய்???
காலனுக்காகத் தேவா. அன்புக்காக நான் ஏங்கின ஞன் அதை உன் ஒவ்வொரு சொல்லிலேயும், செயலிலேயும் அள்ளி, அள்ளித் தந்திட்டாய். அது போதுமடா; அதை விட அதிகமாக எதிர்பார்த்தால் நான் அன்பில்லாதவள் ஆயிடுவன்.
"தேவி நானுனக்குத் தகுதியில்லையா? வயசிலே, வசதியிலே நான்தான் உனக்குத் தகுதியில்லை. "நானே விரும்பேக்க . .? l a 'குழந்தை விரும்பிற தெல்லாம் கொடுத்தால்...??? "நான் இன்னும் குழந்தைய்ே.?
14-سالاد if a

Page 57
O6 மீட்டாத விணை
*எனக்கு எப்பவுமே நீ குழந்தைதானடா' "உன்ரை மனசை மாத்த மாட்டியே’ "என்ர வயசு மாறவேணுமே? "தேவி நான் ஏமாந்திட்டன்"
'இல்லை என்னை ஏமாத்திடாதே. இது ஒரு சபல மடாடு தேவா, உன்மேலே எனக்கு இருக்கிற அன்போ, மதிப்போ அணுவளவு கூடக் குறையவில்லை.
"தேவி எனக்கோ அது ஆயிரம் மடங்கு கூடியிருக்கு; நான் தவருகக் கேட்டிருந்தால் என்னை மன்னிச்சிடு??
"அப்பிடிச் சொல்லாதே??
அவள் அவன் தோளில் தட்டினள். அவன் தலையை கோதிவிட்டாள். ܫ
*"தேவி ஆனல் என்ன உருவத்திலே உனக்கு வேணுமோ அந்த உருவிலேயே உன் பின்னலே வர நான் எப்பவும் தயாராக இருக்கிறன்.
"தேவா" என்றுமில்லாத ஓர் ஆறுதல் அந்த வினுடி அவளிதயத்திற்கு ஏற்பட்டது.
ஆறுதல் அமைதி இவையெல்லாம் அவள் வாழ்வில் மின்னலெனத் தோன்றி மறைவன. வறுமையும் வற்ருத கண்ணிரும்தான் அவள் வாழ்வில் நிலையானவை. பிரகாச மான "டார்ச்சின்" ஒளி அவர்கள் மீது விழுந்தபோது அவள் நிலைகுலைந்தாள். தேவன் தலைகுனிந்தான். அவர் கள் இருவரையும் விட இதயம் ஒடிந்த வள் கையில் **டார்ச்சுடன்" நின்ற மீனட்சிதான். இவ்வளவு தூரம் இரவு நேரத்தில் இருவரும் தனித்து நிற்கும் அளவிற்கு போய்விட்டதே! வழக்கமாக அவள் வாயாடிதான், ஆனல் அன்றே வார்த்தைகள் வர மறுத்தன.

மீட்டாத வினை 107
"டேய். .டேய். பெடியன் நீயும். கடவுளே. ' தான் கட்டிய கோட்டைகள் தரை மட்டமாகும் போது ஒரு தாய் மனம் தவிக்குந்தானே.
'அடப்பாவி. இன்னும் ib6,t)Gurt Lr. GuntLrt 6մլ:-Gւ- ''
அவள் கத்தினுள்.
மகாதேவன் நடந்தான். கண்களைக் கூ ச வைக்கும் ஒளியை அவள் முகத்தில் பாய்ச்சியவாறே மீனட்சி தேவியை நெருங்கினுள். கண்களைக் கூசச் செய்தது. டார்ச்சின் ஒளி மட்டுமல்ல. கோபக்கனல் வீசும் மீனட்சி யின் கண்களும்தான். பற்களைக் கடித்தவாறே பயங்கர மான பெண் வேங்கையென அவள் தேவி மீது பாய்ந் தாள். ஒரு கரம் அவள் கூந்தலைப் பற்றியிழுத்தது.
**நாயே பேயே' என பல்லோடுபல்லைக் கடித்தவாறே மீனுட்சியின் வாயிலிருந்து வந்த நெருப்புத் துண்டுகள் மறக்கமுடியாதவை. திருப்பிச் சொல்ல முடியாதவை. தன் மகன் சம்பந்தப்பட்ட விடயமாதலால் அவள் பலத்த சத்தமிடவில்லை. ஆனல் அவை தேவியின் நெஞ்சைப் பலம் கொண்ட மட்டும் தாக்கத் தவறவில்லை. 'டார்ச்' விளக்கு தேவியின் முகத்தோடு ஒரு முறை மோதியது. அடுத்து கீழே விழுந்ததும் பளார், பளாரென கன்ன மிரண்டிலும் இரக்கமின்றி மீனட்சி அடித்தாள். தேவியின் கண்கள் இருண்டன. அவளைப் பிடித்துத் தள்ளிவிட்டாள் மீனுட்சி. அடுக்களையின் ஒரு மூலையில் போய் அவள் விழுந்தாள். அணைக்கத் தெரியாத கரங்களுக்கு அவளை அடிக்க உரிமை இருந்தன. மீனட்சி போய்விட்டாள் ஆனல் தேவியின் உயிர் போகலில்லையே. அவள் இன்னும் அந்த மூலையில்தான் கிடந்தாள். இன்னும் இருளில்தான் இருந்தாள். இரவும், பகலும் மாறி, மாறித்தான் வரும்3 அவள் வாழ்வில் பகல் வரவில்லையே.
^
X R

Page 58
108 மீட்டாத வினை
பாவம் தேவியக்கா மற்றவன்? எப்படி நடந்தாலென்ன நான் மனிசத்தன்மையோட நடக்க வேணும். இளங்கோ மகாலக்சுமி தியேட்டர் வாசலில் எண்ணமிட்டவாறு நின்றன். படம் ஓடிக்கொண்டிருந்தது. அவன் கண்கள் கோபாலைத் தேடிக்கொண்டிருந்தன. கோபால் வெளியே வந்தான். இளங்கோவைப் பார்த்தான். அங்குமிங்கும் பார்த்தான். ஒரு ஒதுக்குப் புறத்தை நோக்கி நடந்தான். அங்கிருந்து இளங்கோவை வருமாறு சைகை செய்தான். இளங்கோவுக்கு எரிச்சலாக இருந்தது. ஒருவனுேட கதைக் கக் கூட பயமா? ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு கோபாலை நோக்கி நடந்தான.
"இளங்கோ ஆராவது வரமாட்டினமே என்று ஏங்கிக் கொண்டிருந்தனன் . அக்கா எப்பிடி இருக்கிருள்? கோபால் முற்ருக மாறிவிட்டாள் சிரிப்பு, வேடிக்கை எதுவுமே இல்லை. கவலை அவன் கண்ணில் குடிகொண்டிருந்தது.
அந்த நினைவு உனக்கு இருக்குதே'? இளங்கோ கேட்டான்g
"இளங்கோ. என்னி லே உனக்குச் சரியான கோவம்' இளங்கோ முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
"உன்னேட உறவுகொண்டாட வரயில்லை? கொக்கா அங்க அழுது கொண்டிருக்கிருள்.
கோபால் இளங்கோவின் தோள்களைப் பிடித்தான். அவன் கண்கள் கலங்கின.
"இளங்கோ உன்னை வேண்டாமென்ற இடத்திலே நான் ஒட்டிக்கொண்டிருக்கிறேன் என்று உனக்குக் கோவம் டேய், இளங்கோ என்னைப் பாரடா'' இளங்கோ பார்க்க
edibly
"இளங்கோ, டேய் என்னைப் பாரடா மச்சான்; கோபாலின் கண்களில் கண்ணிர் வழிந்தது. அவன் பார்க்க வேயில்லை,

மீட்டாத வினை 0.
"இளங்கோ உனக்குத் தெரியாதடா எங்கள் pä??
"என்னடா தெரியாது? தொண்டை கத்திக் கத்தி உன்ரை கொக்கா படிப்பிக்கிறது தெரியாதே? தையல் மெசினைச் சுத்திச் சுத்தி அவள் சாகிறது தெரியாதே? அவள் அப்படிக் கஷ்டப்பட, நானும் நீயும் அந்தக் காசிலே படம் பார்த்தது தெரியாதே? டேய், உனக்கு வேலை கிடைச்சதாலே நீ என்னை மறக்கலாமடா. என்னுலேயே முடிய இல்லையேடா. கூடப்பிறந்த அவளை உன்னலே எப்படி மறக்க முடிஞ்சுது?"
'இவ்வளவு தானடா உனக்குத் தெரியும். இவ்வளவு தானடா எனக்குத் தெரிஞ்சிருந்திது. டேய், இது மாத்திர மில்லையடா நானும், நீயும் தண்ணி வார்க்கிற தோட்டத் திலேயே அவள் கள்ளக் களவாகக் காய்கறி பிடுங்கிறது. உனக்குத் தெரியாதடா, அப்படிப் பிடுங்கப் போய் மகா தேவனிட்டை அடி வாங்கினது உனக்குத் தெரியாத டா. அவள் இரத்தஞ் சிந்தச், சிந்த நான் கண்ணிர் சிந்தினது உனக்குத் தெரியாதடா'
GIT It di)''
இளங்கோ நண்பனைப் பார்த்தான்.
* டேய் அந்தக் காட்சியைப் பார்த்தபிறகுதான் உன்னை அப்பிடிப் பேசினவங்களின் ரை காலைப்பிடிச்சுக் கொண்டு வேலை செய்யிரன். டேய், அதுமட்டுமில்லையடா, என் அக்காமேலே தவருண ஆசையோட என் முதலாளி இருக்கிருன் என்று தெரிஞ்சும் கை நீட்டி நான் அவ னிட்டை காசு வாங்கிறன். என்னடா பார்க்கிருய்? மானம் கெட்டவனே என்று பேசப் போறியா? ஏழை க்கு எதுக்கடா மானம்? எழுத்திவே வைச்சுக் கொள்ளடா அதை. உடலை மறைக்கவே ஒரு துணியில்லை மானமா? இருட்டிலே வாழ்கிற நமக்கு நேர்மையா?
**கோபால் கவலைப்படாதேயடா அமைதியாயிரு' அடக்கி வைத்த துயரமெல்லாம் அணைகடந்தது. கோபால் பொருமினன்,

Page 59
10 மீட்டாத வீண
**டேய், வறுமை என் அக்காவைக் கன்னியாகத்தான் காலத்தைக் கழிக்கவிட்டிது. கால் வயிற்றைத்தான் நிரப்ப விட்டிது போகட்டும். அவளை களவெடுக்கிற அளவுக்கு விரட்டிச்சிதேடா. டேய். டேய். என்ன கொடு மையடா’ கோபாலின் உடல் குலுங்கியது. இளங்கோ
வார்த்தைகள் வராது தவித்தான்.
"டேய் உன் உடம்பிலே உரம் இருக்கடா. உன் கை யிலே வலுவிருக்கடா. உனக்கு இரண்டு காலிருக்கடா நீ உழைக்கலாம். உன் காலிலே நிற்கலாம். நான். நான். . காவில்லாதவனடா. மற்றவன் காலைப் பிடிச் சுத்தாண்டா வாழவேணும்."
'கோபால், கோபால். சிரிக்க மாத்திரந்தானடா சிநேகிதம்? அழுகிற நேரத்திலே என்னை ஏனடா மறந் தாய்? உனக்கு வேலையும் வேண்டாம். ஒன்றும் வேண் டாம் நாங்கள் எல்லோரும் ஒன்ருக இருப்பமடா. ஒன் முகச் சாப்பிடுவமடா.
"இளங்கோ. . டேய். டேய் . . அவனுல் பேச முடியவில்லை. கண்களைத் துடைத்துக் கொண்டான். சில வினுடிகள் இருவரும் எதுவுமே பேசவில்லை. இளங்கோவின் கை நண்பனின் தோள்மீது இருந்தது. ‘வாடா வீட்டை போவம்' இளங்கோ தான் கேட்டான்.
"நான் வரயில்லை. இந்தக் கிழட்டு முதலாளி என்ன? என்ன கேட்டான் தெரியுமே? அக்காவைத் தனக்குக் கட்டித் தரட்டுமாம். எனக்கு ஐயாயிரம் தாராளும். அடிச்சுக் கொன்றிருப்போன். வீட்டுக்கு வந்த உனக்கு அன்றைக்கு என்ன சொனவன்? டேய் உயிர் போனலும் இவனுக்கு ஒரு பாடம் படிப்பிக்கிறதுதான். இஞ்சதான் நான் வேலை செய்யப் போறன்: இவனுக்குத்தான் வேலை செய்யப் போறன்' இளங்கோ எவ்வளவோ சொல்லிப் பார்க் தான். கோபால் வர மறுத்துவிட்டான்.

மீட்டாத வீண ill
'இளங்கோ கோவிக்காதே இந்தக் காசை அக்காட்டை குடு கொம்மாவிைக் கொஞ்ச நாளைக்கு அவளோட இருக் கச் சொல்லடா. என்னை இஞ்சயே இருக்கச் சொல்லி முதலாளியின்ரை "ஒடர்”* நீ கவலைப்படாதை. இந்தப் பக்கம் வந்தால் என்னைச் சந்தியாமல் போகாதை. அக் காவைப் பார்த்துக் கொள்ளடா பாவம் அது"
இளங்கோ விடைபெற்றன் கோபால் அவன் சென்ற பாதையையே பார்த்துக் கொண்டு நின்முள். கைகள் கண் களைத் துடைத்துக் கொண்டன.

Page 60
கொஞ்சம் எழும்பு பிள்ளை மெதுவா. மெதுவா.
வாயைக் கொஞ்சம் திற. ஆ. ஆ. இன்னெரு கரண்டிதானே இதையும் குடிபிள்ளை."
ஒரு கரத்தால் தேவியை அணைத்தவாது, மறுமரத் தால் தங்கம் மருந்தைப் பருக்கினள். அந்த அணைப்பு, அன்பான வார்த்தைகள் அவை இருக்கும் போது தேவிக்கு ஏனந்த மருந்து?
'இப்ப என்ன செய்யிது பிள்ஜா? இன்னும் கிறுதி இருக்கிறதே?
"இப்ப எனக்கு ஒன்றுமில்லை" தேவி சிரிக்க முயன் ருள். மயக்கம் வந்து அடுக்களையில் விழுந்ததாகத்தான் அவள் செரல்லியிருந்தாள். அவள் கன்னங்கள் வீங்கியிருந் தன. வலது கன்னம் வீங்கியதால் அவள் அகன்ற விழிகள் சிறிதாகக் காட்சியளித்தன. நெற்றியில் ஆங்காங்கே பஞ் கில் மருந்தைத் தோய்த்துத் தங்கம் ஒட்டியிருந்தாள்.'
"அம்மா' இளங்கோ வந்தான். “எப்படி இப்ப அக்காக்கு?
"காய்ச்சல் விட்டிட்டுது, இன்றைக்குச் சரக்குத் தண் ணியோட சோறு கொடுப்பம்’
"இளங்கோ உங்களுக்கு என்னலே பெரிய கஷ்டம்?" தேவி மெதுவாகப் பேசினுள்.

மீட்டாத விண it 3
"என்ன கதை இது? பிள்ளை நாங்களென்ன பிறத் தியே? நீ ஒரு சொல்லுச் சொல்லியிருந்தால் நான் வந் திருக்க மாட்டேனே..? தம்பி, வந்து சொல்லாட்டால் நீ அந்த அடுப்படிக்க தனிய கிடந்து செத்திருப்பாய். 'இருந்தும் என்னத்துக்கு .?' தேவி முணுமுணுத் தாள். V
** அப்படிச் சொல்லாதே மேனை. ' தேவி படுத்திருந்த பாயில் அமர்ந்து தங்கம் அவள் தலையை வருடினுள். இளங் கோவிற்கே அது பொருமையாக இருந்தது.
நான்கைந்து நாட்களாகத் தங்கம் தேவி வீட்டில் தான் இருக்கிருள், சமையல் கூட அங்குதான். அங் கேயே அவள் படுத்துக் கொள்வாள். இளங்கோ மட்டும் தான் தங்கள் வீட்டில் படுத்தான்.
"மேனை நான் சொன்ன சாமான் வாங்கினனியே??? 'ஓமம்மா இஞ்ச பையுக்க கிடக்கு அக் காக் குத் தோடம்பழமும் வாங்கினநர்ன்' அவன் சொன்னன்.
**ள்ங்கே அது 12 தாய் கேட்டாள். **தைக்க வேணு மில்லே?" "அவள் எழும்பித்தானே தைக்கவேணும்' தங்கம் சொன்னுள். s
"என்ன தங்கமக்கையது?' தேவி கேட்டாள்; இளங்கோவின் கையில் சட்டைத் துணியிருந்தது.
"சட்டைத் துணி பிள்ளை' *நாளைக்கு நான் தைச்சுத் தாரன்.' தேவி சொன் ணுள். தங்கம் சிரித்தாள்.
'உந்தத் துணியிலே சட்டை, தைக்க நானென்ன குமரியோ இது உனக்குப் பிள்ளை'
மீ, af-15

Page 61
14 மீட்டாத வீணை
தேவியின் உடல் சிலிர்த்தது; மனிதர்கள் இன்னும் இவ்வுலகில் இருக்கத்தான் செய்கிறர்கள். அவள் கன் களில் நன்றி பெருகியது.
"நான் கடைக்குப் போறன்’ அம்மா ஏதும் வாங்க இருக்கிறதே' இளங்கோ கேட்டான்.
"கறுவாடு வாங்கிக் கொண்டு வர இளங்கோ வெழியே வந்தவன். சிறிது தயங்கினன். தேவியின் வாயில் அவன் பெயர் அடிபட்டதே அவனைத் தயங்க வைத்தது.
"தங்கமக்கை இளங்கோவைப்பற்றி ஒன்று கேட்கிறன் சொல்லுவீங்களோ ? ?
"என்ன பிள்ளை' தங்கம் கேட்டாள்.
* தம்பி கோபாலன் அடிக்கடி சொல்லு வா இளங்கோ மனசிலே பெரிய ஒரு கவலை இருக்கு
“தேவி நீ என்ன கேட்கப் போகிருய் என்று எனக்கு விளங்குகிறது. ஆனல் . f
"ஏன் அதை மறைக்கிறியள் தன்ரை தகப்பனைத் தெரிய இல்லையென்ருல் ஒரு பிள்ளை எவ்வளவு கவலைப் படும்???
‘'தேவி அவன் எவ்வளவு வேதனைப்படுகிறன் என்று எனக்குத் தெரியும்’ தங்கம் சொன்னுள்,
"தங்கமக்கை, அந்தப்பிள்ளையை இந்த ஆஊரெல்லாம் என்னமாய்ப் பழிக்கிறது? ஏனிந்தக் கொடுமை? அவன் என்ன பாவஞ் செய்தான், ஆருக்கும்? நல்லதோ கெட டதோ அதைச் சொல்லி விடுங்கோவன் .
"தேவி என்னிதயத்துக்குள்ளேயே அடங்கியிருக்கிற அந்த உண்மையை யாருக்குச் சொல்லி அழுவன்?

மீட்டாத வினை 15
"ஏன் தங்கமக்கை அவனுக்கே சொல்ல முடியாத ..."
"அவனுக்குத்தான் சொல்லமுடியாது. அவன் அதை அறிஞ்சிட்டால். தேவி. ஒருதாய் தன் மகனிடம் என்னத்தை எதிர்பார்க்கிருள்?"
'அவன் பெரிய மனுசனுகவேணும். நாலுபேர் அவனைப் பற்றி நல்லாச் சொல்ல வேணும். படிக்க வேணும். பட் டம் பெறவேணும். நாலு காசு சம்பாதிக்க வேணும்"
'இது எல்லாம் இருந்தும் எத்தனையோ தாய்மார்கள் கடைசி நேரத்திலே கவலைப்படுகீனம். அது ஏன்?
தேவிக்குப் பதில் தெரியவில்லை. அவள் தங்கத்தை கேள்விக் குறியோடு நோக்கினுள்.
‘'தேவி உனக்கு இப்ப இது விளங்காது. தேவி உட லுக்கும், உள்ளத்துக்கும் நெருங்கின தொடர்பு இருக்கிற தென்று படிச்சவை சொல்லுவினம். உடலிலே சக்தி இருந்தால் மாத்திரம் மனுசன் வாழுருனே? உள்ளத்திலே யும் சக்தி வேணும், சாப்பாடு உடம்புக்குச் சக்தி கொடுக் கும் மனசுக்கு அன்புதானே சக்தியைக் கொடுக்கும்."
'உண்மைதான் தங்கமக்கை அன்பையே அறியாத குழந்தைகள் மனக்கட்டுப்பாட்டை இழக்கின்றன. பயந்து வாழ்கின்றன. தாழ்வு மனப்பான்மையும், தன்னம்பிக்கை இல்லாத தன்மையும் வளருது.
"ஆல்ை. .." தேவி தங்கமக்கையைப் பேசவிடவில்லை.
"அளவுக்கு மீறின அன்பும் குழந்தையைக் கெடுக்கும். தாயையே எல்லாத்துக்கும் நம்பியிருக்கிற குழந்தை தன் கால்களிலே நிற்க முடியிறநில்லை. சில சமயங்களில் கட்டுக் கடங்காமல் போய்விடும். இதையெல்லாம் நான் தெரிஞ்சு என்ன பிரயோசனம்?"

Page 62
6 B5 sa
'அன்பு குழந்தைகளுக்கு எவ்வளவு தேவையோ அதைவிட அதிகமாக ஒரு தாயும் அன்பை எதிரி பார்க் கிருள் தேவி, ஒரு தாய் தன்ரை மகன் பெரிய வேலையில் இருந்தாலும் இல்லை இழிஞ்ச நிலையில் இருந்தாலும் எதிர் பார்க்கிறது அவனுடைய அன்பைத்தான். அன்பாக அம்மா என்று அவன் கூப்பிடைக்க. தேவி அந்த சந் தோசத்தை எந்தத் தாய்தான் இழக்க விரும்புவாள்??
'தங்கமக்கை எதையோ தொடங்கி எதையோ கதைக்கிறம்,’’
മൃഭá1 தேவி. அதையேதான் கதைக்கிறம், இஞ்ச பார் இளங்கோ என் னே ட இருக்க வேணுமென்ருல், அவன் தகப்பன் யாரென்பதை எப்பவுமே அவனுக்குச் சொல்ல முடியாது. சொல்லக் கூடாது.
வெளியே நின்ற இளங்கோ "அம்மா சொல்ல மாட் டியா? என்று ஏங்கினுன்.
"அவன்ரை அன்பிலே உங்களுக்கு அவ்வளவு சந்தே கமே? ஏன் பயப்படுறியல்??? தேவி கேட்டாள்.
"அன்பு அதிகமாக, அதிகமாக அதை இழந்திடுவோ மோஎன்ற பயமும் கூடுது. தேவி இந்த உண்மையைச் சொல்லி எங்கடை உறவை அழிக்க என்னலே ஏலாது. நான் சரியாக பயந்தனன். இந்த உண்மையை மறைக்க என்ரை உயிரையும் நான் குடுப்பன்.""
*தங்கமக்கை எனக்காவது சொல்லக்கூடாதே சத்திய மாகச் சொல்லுறன். நான் ஒரு த் தருக்கும் சொல்ல
Bnr. *GL Gör.””
"என்னை அணு வணு வாகத் தின்று கொண்டி ருக்கிற இந்த இரகசியத்தை ஆருக்காவது சொல்லத்தான்
வேணும் தேவி, ஆனல் ஒன்று நான் செத்தபிறகுதான் அது அவனுக்குத் தெரிய வேணும்."
சொல்லுங்கோ தங்கமக்கை."

மீட்டாத வினே 17
இளங்கோ தன் காதுகளை கூர்மையாக்கிக் கொண் டான் இதயம் வேகமாகத் துடித்தது. பரீட்சை முடி வைப் பார்க்கத் துடிக்கும் மாணவனைப் போல் அவன்
நின்றன்.
வைச்சிட்டு வந்தனன். அடுப்பிலே கொதிக் ש (60ע%-9** குது. தங்கமக்கை அவர்களை ' சஸ்பென்சில் விட்டு அடுக்களைக்குள் சென்ருள்.
**டேய் இன்னும் நீ கடைக்குப் போக இல்லையே இஞ்ச என்னடா செய்யிருய்?" தாயின் கேள்வி இளங் கோவை அங்கிருந்து அனுப்பியது. அவன் வேண்டா வெறுப்பாக நடந்தான். சோற்றடுப்பைப் பார்த்துவிட்டு அவள் மீனைக் கழுவ ஆரம்பித்தாள். அவள் எண்ண மெல் லாம் கடந்துபோன காலத்தைச் சுற்றியது தங்சம் சொன்ன கதை தேவியின் கண்களை குளமாக்கியது. "தங் கமக்கை உங்கடை நெஞ்சு கல்லு. இல்லையென்ருல் இதை எப்பவோ சொல்லியிருப்பியல். ஒன்று சொல்லுறன் எங்களுக்காக நீங்கள் எவ்வளவோ செய்திட்டியல். என்ரை உயிர் இருக்குமட்டும், இளங்கோக்காக நான் எதையும் செய்வன்.' தேவி சொன்னள். தங்கம் அழுதாள். அந் தக் கண்ணிரில் சோகமில்லை. ஓர் ஆறுதல் இருந்தது. அவள் இதய பாரம் குறைந்தது.
文 区
அரிசியில் கல்லுப் பொறுக்கிக் கொண்டு இருந்தாள் மீனட்சி. "கொம்மான் இப்பவருவார் அவருக்கு இரண் டிலே ஒன்று சொல்ல வேணும்."
"அவனைக் கட்ட என்னலே ஏலாது. வேற யாரை யும் பார்க்கச் சொல்லு" செல்லம் புகையும் அடுப்போடு போராடிக் கொண்டிருந்தாள்.
**அடியே உனக்கு விசரே? என்னைத் தின்னுறதுக்குத் தானே எல்லாம் பிறந்திருக்கு அவன் மீசை முளைச்சு

Page 63
118 மீட்டாத விணை
கொஞ்சநாள் ஆகவில்லை. அதுக்குள்ள குறுக்கால போருன். இவள் என்னடா என்ருல் அவ நினைச்சதுதான் சட்டமாம்.
"அம்மா எனக்கு அவனைப் பிடிக்கவில்லையென்றல் என்ன செய்யச் சொல்லுருப்?"
**என்னடி அது பிடிக்கிறது? நாங்களெல்லாம் என்ன அவரைப் பார்த்து, இவரைப் பார்த்தே கலியாணம் கட் டினனங்கள். அம்மா, அப்பு சொன்னல் அதுக்குப் பிறகு என்னடிப் பேச்சு???
'அம்மா அது அந்தக்காலம்.
"அப்ப நீ போய்த் தேடி ஒரு த்த னை பிடிக்கப் போறியே??? h
என்னடி நீ தேவடியாளுக்குப் பிறந்ததாக நினைப்பே? காலடிச்சு முறிச்சுப்போடுவன் கணக்கக் கதைச்சியென் (O? Gi) --- ...”"
'அடிச்சுக் கொல்லுங்கோவன் விருப்பமில்லையென் * * ... مع (106)
* சனியனே இரண்டாங்கதை கதையாதே உனக்கும் மணியனுக்கும் கலியாணம் நடக்கத்தான் போகுது மூத்த வன் அங்கே ஆருக்கோ பின்னலே திரியிறன். நான் எவ் வளவு நாளைக்கு நெருப்பைக் கட்டிக் கொண்டு இருக்கி றது? கொம்மானுக்கு நான் ஒமென்று சொல்லப் போறன். நாளைக் குறிச்சு சட்டு, புட்டென்று விசயத்தை முடிக்க வேண்டியதுதான்.""
செல்லத்தின் கண்களில் கண்ணிர் வந்தது. அடுப்பின் புகையா? இல்லை இதயத்தில் இட்ட நெருப்பாலா?
"ஏனிப்ப கண்ணை கசக்கிருய்???
துவரை வெளியே இருந்து அவர்கள் உரையாடலைக் கவனித்த மகாதேவன் உள்ளே வந்தான்.

மீட்டாத விணை il 19
**ஏனம்மா அவளைச் சும்மா அழவைக்கிருய்?" மகா தேவன் கேட்டான்.
புத்திக்கெட்டவனே. அவளுக்குப்புத்தி சொல்ல வேண் டிய நீ நடக்கிற நடையைப் பார். ரோஷமில்லையேடா உங்களுக்கு? என்ரை மோளே என்னுேட விடு நான் அவ ளுக்குக் கட்டிவைப்பன். நீ உன்ரை வேலையைப் பார்"
வேதனையோடு மகாதேவன் தன் தங்கையைப் பார்த் தான். தனது செயல் தவறென எண்ணும் ஒருவன் தலை நிமிர்ந்து பேசும் சக்தியை இழந்து விடுகிருன். தேவியின் தொடர்பு அவன் குடும்பத்தில் புயலை உருவாக்கி விட்டது. அவன் வார்த்தைகள் மதிப்பிழந்தன. இல்லை அவனல் பேசவே முடியவில்லையே. தங்கைக்காக அவன் வருந்தி ணுன் ஆணுல் அவன் என்ன செய்யமுடியும்?
'எடியே கொம்மான் வருகுதில்லே கண்ணைத் துடை
யடி’ வேலுப்பிள்ளையர் வாய் நிறைய சிரிப்புடன் ல ந்தார்.
"வா அண்ணே. ஏன் நிற்கிருய்? இரன்' மகாதேவன் கதிரையை இழுத்துப் போட்டான். *மேனை போய் ஒரு சோடா வாங்கிக் கொண்டு
வாவ: ' மகாதேவனைத், தாய் வெளியேற்றினுள். செல்லம் உள்ளே போய் கதவிடுக்கில் மறைந்துக் கொண்டாள்.
"என்ன் மீனுட்சி நான் செர்ன்ன விசயம் . ??? வேலுப்பிள்ளையர் கேட்டார்.
**அண்ணே உனக்குத் தெரியும் தானே எங்கடை நிலைமை வீடும், தோட்டமும் அவளுக்குத்தானே இருக்கிற நகையோட இன்னும் கொஞ்சம் செய்யலாம்"
"அப்ப எல்லாம் சரியென்று சொல்லு." வேலுப் பிள்ளையர் சொன்னர்

Page 64
120 மீட்டாத விணை
**எனக்கு இவன் மூத்தவனிலேயும் நம்பிக்கை இல்லை8 நீ அவனுக்கும், எங்கேயும் ஒன்றைப் பேசன்’
'அவனுக்கே பொம்பிளையில்லை? நீ பயப்படாதே. அவனுக்கு நல்ல இடம் நான் பார்க்கிறன், இவள் செல்லத் தின் ரையை எப்ப செய்வம்?"
"வாரமாசம் ஒரு நல்ல நாளிருக்கு தப்பினல் மூன்று மாசம் போகவேணும்."
'இந்தா அவளின்ரை குறிப்பு. அதுகளுக்கு அருமை யான பொருத்தமாம், நீங்கள் சரியென்ருல் வாற மாசமே வைக்கலாம். *
"எனக்கு ஒன்றுமில்லை இவன் மகாதேவனிட்டையும் ஒரு சொல்லு சொல்லுவம்.”*
கதவிடுக்கில் செல்லம் கண்ணீர் வடித்துக் கொண் டிருந்தாள். "அப்ப எனக்கு மணியன் தானே புருசன்? கடவுளே இது என்ன அநியாயம்? ஐயோ எங்கே போவன்? ஆர் எனக்கு இருக்கீனம்? அண்ணனும் பேசாமல்தானே நிற்குது. அம்மாதான் நினைச்ச மாதிரி எல்லாம் செய்து போடுவா.”* ஒன்றும் செய்ய முடியாது அவள் தவித்தாள்.
* இளங்கோ . ஏன் என்ரை மனம் எப்பவும் அதை நினைக்கிறது? எனக்கும், அதுக்கும் என்ன உறவு? அது என்னைக் கட்டுமே ...? கதைக்கிறதேயில்லையே. அதுக்கு என்னைப் பிடிக்க இல்லையாக்கும், அவள் ஏதேதோ எண்ணி ஏங்கிக் கொண்டிருந்தாள். மகாதேவன் சோடாவோடு வந்தான்.
"மேனை, இவள் செல்லத்திதின் ரை விசயம் . .
வாற மாசம் நல்ல நாளொன்று இருக்குதாம். செய்யலா மென்று நாங்கள் நினைக்கிறம்." மீனுட்சி சொன்னுள்.
**இதிலே நானென்னத்தைச் சொல்லுறது. அவள் தங்கச்சியை கேட்டுப்போட்டு செய்யுங்கோவன்' மகா தேவன் சொன்னுன் ,
**அவனும் சரியென்றிட்டால் அப்ப அண்ணே நீ வேண்டியதைக் கவனி"

மீட்டாத வீணை vn 121
மகாதேவன் வெறுப்போடு அறைக்குள் சென்றன்; தங்கையின் கண்ணீர் ததும்பும் முகத்தைப் பார்த்தான்
*செல்லம் உனக்கு விருப்பமில்லையென்றல் சொல்லன் ஏன் பயப்படுகிருய்?" மகாதேவன் கேட்டான்.
** என்னைப் பார்த்தால் தெரிய இல்லையே. அண்ணே எனக்காக நீ சொல்லன் .'
"'என்ரை சொல்லுக்கு இஞ்ச மதிப்பில்லையே. தங் கைச்சி, மனமுடைஞ்சுபோய் நான் நிற்கிறேன் அம்மாக்கு என்னைக் கண்டாலே பிடிக்க இல்லை."
"அண்ணே எப்பவுமே என்ரை சொல்லுக்கு இஞ்ச மதிப்பில்லைத்தானே. நான் பெட்டைதானே எல்லோருக் கும் பேய் ச் சிதானே. என்ரை சொல்லை அம்மா கேட்பாவே???
**செல்லம் உனக்கு வேற யாரிலேயும் விருப்பமே??? மகாதேவன் தங்கையின் முகத்தைப் பார்த்தான். அவள் கண்கள் படபடத்தன. எப்படி அவள் அதைச் சொல் வாள்? அவனுக்கு விருப்பமோ என்று அவளுக்குத் தெரி யாதே? ஒரு தலைக் காதலா அது? அவள் தவித்தாள்; இல்லை என்பது போல் தலையசைத் தாள். அதற்குள், வேலுப்பிள்ளையர் விடைபெற்ருர், வீடு அமைதியில் ஆழ்ந்தது. அவள் யாரோடு வாழவேண்டும், அந்த வாழ்க் கை என்று ஆரம்பமாக வேண்டும் என்பதெல்லாம் தீர் மானிக்கப்பட்டு விட்டன.
இரவு மணி பத்து இருக்கும், செல்லம் தூக்கம் வராது புரண்டு கொண்டிருந்தாள். தாயோ நாட்டுக் கூத்து பார்க்கப் போய்விட்டாள். மகாதேவன் வாசலில் தூக்கத் தில் ஆழ்ந்திருந்தான் ஆட்டுக்குட்டி கத்தியது. விடாது தொடர்ந்து கத்தியது. அவள் எழுத்து பாயில் சிறிது நேரம் அமர்ந்தாள். ஆட்டுக்குட்டியின் கத்தல் அடங்க வில்லை. அவள் எழுந்து அதைப்பார்க்கச் சென்ருள். ஆட்
8 695 -- 16
·y

Page 65
12ê மீட்டாத விணே
டுக்குட்டியோ தன்ஆனக் கட்டியிருந்த கயிற்றில் தன் கால் களை மாட்டிக் கொண்டு அசைய முடியாது தவித்தது. "டார்ச்சை நிலத்தில் வைத்து அதன் சிக்கை அவிழ்க்க முயன்ருள் அவள். தாயின் வார்த்தையை மீற முடியாமல் அவள் மாட்டிக் கொண்டாள். இங்கே ஆட்டுக்குட்டி மாட்டியிருக்கிறது. அவள் அதை அனைத்தவாறு சிக்கை அவிழ்த்தாள். அதன் மெல்லிய உடலை கன்னங்களில் பதித்தவாறு எண்ணங்களை எங்கோ ஒட விட்டாள்.
“‘弓...... ’ ஓசை வந்த ஒழுங்கையை நோக்கினுள் அவள் ஒரு கணம் அவள் உடல் சிலிர்த்தது, பால் வெள்ளம்போல் பாயும் நிலவொளியில் ஒரு காலைக் கை யில் பிடித்தவாறு நின்றது இளங்கோவேதான் ஆட்டுக் குட்டி அவள் கையில் இருந்து தாவியது. அவள் உள்ள மும்தான். நிலவின் ஒளியில் வெள்ளிக் கிண்ணம் போல் மின்னும் கன்னத்தையும், சுருண்டு இருபக்கங்களிலும் திரண்டு அவ்வழகை மறைத்துத் தன்னழகைக் காட்ட முயலும் கருங் கூந்தலையும் பார்த்தவாறு இளங்கோ நின்றன் -
“செல்லம் காலிலே ஏதோ குத்திப்போட்டுது. உந்த டார்ச்சைக் கொண்டு வாவன்' அவன் மிக மித மெது வாகப் பேசினன். ஒருகணம் அவள் தயங்கினுள். பின் னர் அவர்களைப் பிரிக்கும் வேலியை நோக்கி நடந்தாள். அவன் வானத்தைப் பார்த்தான். நிலவு அக்கே தானே நிற்கிறது. எப்படி அவனருகில் வந்தது? அவன் கரங்கள் வேலியில், கண்களோ அவள் வேல்விழியில், நிலவு, நில வில் குளிக்கிறதே. மயக் கும் அவன் பார்வையைத் தாங்காது அவள் தன் பாதத்தை நோக்கினுள்
"செல்லம்' அமுதென இனிக்கும் அச்சொல்ல அன் பெனும் தேனில் குழைத்து அவன் அழைத்தான். மல்லிகை மலரின் மணம் அவனை மயக்கியது. தென்றலாள் அதைச் சுமந்து வந்தாள், பந்தலில் இருந்தது மல்லிகை மலர், பக்கத்தில் நிற்பது.?

மீட்டாத வினை 13
"செல்லம்' மீண்டும் குழலின் நாதமென அவள் காதில் விழுந்தது அந்தக் குரல்,
fo o Trioj: * * அவள் நீட்டினள்.
"காலிலே ஒன்றும் குத்த இல்லை. ' இளங்கோ சொன் ஞன்
"என்ரை இதயத்திலே தான்.
*சரியான கள்ளன்" அவள் மனதுக்குள் சிரித்துக் கொண்டாள். −
'மாமி கூத்துக்குப் போயிட்டாவே?"
அவள் ஆமெனத் தலையசைத்தாள்.
*கோண்னன்...??? அவள் வீட்டைக் கையால் சுட்டிக் காட்டினுள்.
"நித்திரையே???
அவள் அதற்கும் தலையசைத்தாள். ஒரு கணம் அவன் பேசவில்லை. பின்னர் கேட்டான்.
"கிணற்றடியில் போயிருந்து கதைப்பமே??"
அவள் நெஞ்சு பட, படவெனத் துடித்தது. மின்னர் லென மறைந்து விடுமா இந்த இன்பம்?
*அதுக்கும் என்னிலே. அவள் உள்ளம் துள்ளியது. "நெஞ்சுக்குள்ள இருக்கிறதெல்லாம் சொல்லிப் போட வேணும். அவள் அவனைப் பார்த்துப் புன்னகை புரிந் தாள். "கொஞ்சமும் பயமில்லை இதுக்கு அவள் மெல்லத் திரும்பி வீட்டை நோக்கி டந்தாள். இளங்கோ ஏமாற் றத்தோடு அவள் பின்னழகில் தன்னை இழந்து நின்முன். செல்லம் வீட்டினுள் எட்டிப் பார்த்தாள். மகாதேவனின் குறட்டை ஒலி நன்முகக் கேட்டது. அவள் திரும்பி இளங்

Page 66
24 மீட்டாத வினை
கோவைப் பார்த்தாள். பின்னர் கால்கள் பின்னலிட கிணற்றடியை நோக்கி நடந்தாள். இளங்கோ இன்ப மிகு தியில் தன்னை மறந்தான். ஒரே தாவலில் வேலியைத் தாண்டி அவளைப் பின் தொடர்ந்தான். கிணற்றடியை இருவரும் அடைந்தனர். அவள் இருதயம் பலமாக அடித் தது. நிலவின் இனிமை! அவர்கள் தேடித் தவித்த தனிமை! அவன் அவளுக்கு மிக அருகில் நின்றன். இளந் தென் றலாள் அவர்களோடு விளையாடினுள், காற்றில் தவழ்ந்த அவள் கருங்கூந்தல் அவன் கன்னத்தைத் தீண்டியது. அந்த இதமான சுகத்தில் இமைக்கவும் மறந்து அவள் அழகைப் பரு கி ஞ ன். கரத்தை உயர்த்தி கூந்தலை அவள் ஒதுக்கினள். பாய்ந்து கொண்டிருந்த மின்சாரமோ தடைபடவில்லை. "கல கலவென்ற கண்ணுடி வளையலின் ஒசையை அவள் சிரிப் பொ லியென எண்ணி அவன் ஏமாந்தான்.
செல்லம்' அவள் கருவிழிகள் அவன் விழிகளைச் சந்தித்தன
*செல்லம். எனக்கு உன்னிலே. உனக்கு ...??
அவள் "கிளுக்" கெனச் சிரித்தாள். இது சொல்லித் தெரிய வேண்டுமா? அவனுக்கும் வெட்கமாக இருந்தது. அவள், மெல்லிய கரத்தில் தன் கரத்தை வைத்தான். அவள் நடுங் கும் தன் கரத்தை இழுத்துக் கொண்டாள். இருவரும் சிறிது நேரம் அமைதியாக இருந்தனர். அதாவது வார்த் தைகள் வரவில்லையே தவிர இதயங்கள் பேசின. 'நான் அவசரப்பட்டு விட்டேனு?' அவன் நினைத்தான்.
*கையை இழுத்துப் போட்டன் அதுக்கு கோவமோ தெரியாது, நானென்ன செய்ய ஆசையிருந்தாலும் வெட் கம் விடுகுதே? அவள் நினைத்தாள்.
**செல்லம்' அவன் எச்சிலை விழுங்கினன். நெஞ்சில்
நீண்டகாலமாக அரித்துக் கொண்டிருந்த கேள்வியை அவன் கேட்டான். "என்னை நீ கலியாணம் கட்டுவியே?"

மீல்டாத வினை 盈罗战
அவள் பளபளக்கும் விழிகள் மீண்டும் உயர்ந்தன: இம்முறை அதன் ஓரங்களில் பணித்துளியென இரு துளி நீர் திரண்டிருந்தது. அவனுக்கு என்னமோ செய்தது.
"நான் பிழையாக ஏதும் கேட்டுப் போட்டனே?" அவன் கேட்டான்.
'இல்லையென அவள் தலையசைத்தாள். இரு துளி நீரும் அவன் கையில் பட்டுத் தெறித்தது.
**ஏன் செல்லம்?' அவன் மீண்டும் அவள் கரத்தைப் பற்றினுன். அவள் தடுக்கவில்லை.
'பேசு செல்லம், ஏன் பயப்பிடுருய்?
அவள் கண்களில் கண்ணிர் பெருகியது. அவள் முதன் முதலாகப் பேசினள்.
'எனக்கும் மணியனுக்கும் கலியாணமாம். நீங்கள் என் னைக் கட்டாட்டால் நான் செத்துப் போவன்.' சிறு குழந் தைபோல் அவள் பேசினள். அவனுடல் சிலிர்த்தது. அவனை நம்பி ஒர் உயிர். அதுவும் அவனில்லையென்ருல் அவள் செத்துப் போவாளாம். அவள் இதயத்தில் அவனுக்கு ஓர் இடம். அதுவும் மிக உயர்ந்த இடம்,
**செல்லம்' அவன், அவள் கரத்தை எடுத்து ஒரு முத்தம் கொடுத்தான். 'நீ இல்லையென்றல், எனக்கும் வாழ்க்கையில்லை. உன்னைத்தான் நாளெல்லாம் நினைச்சுக் கொண்டிருக்கிறன்'
"நினேச்சுக் கொண்டிருந்தால் போதுமே? கலியாணத் துக்கு நாளும் குறிச்சுப் போட்டினம்"
“ “ĝi விருப்பமில்லையென்று சொல்லுறதுதானே?"
"நான் சொன்னனுன், அவே கேட்கமாட்டினம்"

Page 67
16 மீட்டாத விணை
"உனக் குத் தெரியுந்தானே செல்லம். கொம்மா என்னைத் தன்ரை மருமகனக ஒரு நாளும் ஏற்க மாட்டா'
"அப்ப, என்ன செய்யிரது?*
**செல்லம், இஞ்ச நாங்கள் ஒண்டாக வாழ ஏலாது"
"அப்பிடியென்ருல் ..?? "ஓம் . நாங்கள் எங்கேயாவது ஒடிப் போகத்தான் வேணும்"
"ஐயோ, எனக்குச் சரியான பயம்?" '6T6577 நம்புறியே?" "வேற ஆரை நான் நம்புரது?"
"நம்பிக்கை இருந்தால் என்னுேட வாரதுக்கு ஏன் பயப்படுருய்?"
அவள் அவனைப் பார்த்தாள். அவள் குரல் தழதழத் தது. "என்னைக் கைவிட மாட்டியலே?"
**செல்லம், நீ என்ரை உயிரில்லே?"
"அது ஒரு நாள் போயிடும். அப்பிடிப் போனலும் என்னைக் கூட்டிக் கொண்டு போவியலே.”*
"செல்லம்' அவன் அவளை வாரியணைத்துக் கொண் டான். **செல்லம், செல்லம்"
"விடுங்கோ’ விழிகள் நான்கும் மிக, மிக அருகில் நின்றன. அடக்கி வைத்த " அன்பையெல்லாம் அவை பரி மாறிக் கொண்டன.
'செல்லம், உன்னை நான் எப்பவுமே விடமாட்டன்' எந்தஇளம் பெண்ணும் தன் அன்புக்குரியவனிடம் இருந்து

மீட்டாத வீன
எதிர் பார்க்கும் அந்த வார்த்தைகள், செல்லத்தின் உட லெங்கும் ஓர் இன்பப் புயல் வீசுகிறது. அவள் அதரங் களின் துடிப்பில் என்ன வார்த்தையோ?
*ம். நான் போகவேணும். அண்ணன் எழும் பினல் ... ?" 戀
"செல்லம். வார கிழமை சந்திப்பம். அப்ப நான் என்ரை திட்டத்தை சொல்ரன். எங்கேயாவது போய் இரண்டு பேருமாக இருப்பம்."
**உங்களை நம்பி நான் எங்கேயும் வருவன். எப்பிடிச் சந்திக்கிறது' பேசாத செல்லம், என்ன வெல்லாம் பேசு கிருள். அவளுக்கே வெட்கமாக இருந்தது.
“Quito திங்களும் கூத்திருக்கு கொம்மா, தப்பவிட, மாட்டா, நாங்களும் சந்தர்ப்பத்தை விடக்கூடாது?*
"நான் போகட்டே? அண்ணன் எழும்பி வந்தாலும் ?? அவள் அவன் அணைப்பை விட்டு விலகினுள்.
"செல்லம்' அவன் கண்களால் மீண்டும் அவளை அரு கில் அழைத்தான். அவள் அருகில் வந்தாள். அவள் சிறு விரல்கள் அவன் கன்னத்தைத் தடவின. அவன் எங்கோ, எங்கோ பறந் தான். அவன் எதிர்பாராத போது கன்னத்தில் கிள்ளிவிட்டு அவள் துள்ளி ஓடி மறைந் தாள். அவன் இதழ்களில் இன்பப் புன்னகை மலர்ந்தது. அவள் கிள்ளிய, அந்த இன்ப வேதனை அப்படியே நிலைக் காதா என அவன் ஏங்கினன். இமைகள் மூடாத ஓர் இரவு அவர்களை விட்டு மறைந்து விடலாம். ஆளுல்ை அந்த இது இரவு அவர்கள் இதயங்களில் என்றுமே மறைய வில்லை.

Page 68
வெறுந் தரையில் படுத்திருந்தான் மகாதேவன் அவன் விழிகள் கூரையை நோக்கிக் கொண்டிருந்தன. ஆணுல் கூரை அவனுக்குத் தெரியவில்லே. மனதை ஏதோ அரித்துக் கொண்டிருந்தது.
எதையோ இழந்தவன் போலல்ல, எல்லாவற்றையுமே இழந்தது போன்ற நினைப்பு-வெறுமை-எல்லாமே வெறு மையாக இருந்தது.
"அண்னே' அவன் அசைய வில்லே,
அண்னே" செல்லம் மீண்டும் சுப்பிட்டாள்.
..."
"என்ன அண்ணே, எழும்பி இரன், ஏணிப்படி இருக் கிருய்? தேத்தண்ணியைக் குடி'
அவன் எழுந்து தேத்தண்ணியையும், ஒரு கையில் பனங் கட்டியையும் வாங்கிக் கொண்டான்' தெல் தரையில் இருந்தாள். முழந்நாள் இரண்டையும் ஒ களால் கட்டிக் கொண்டு செல்லும் அவனேப் பார்த்தான் அவன் தன் விழிகளேத் திருப்பிக் கொண்டான்.
"உனக்குச் சுகமில்ஃயே' செல்லம் கேட்டாள்
"சும்மா, கரைச்சல் தராமல், போ' அவன் எரிந்து விழுந்தான். அவள் சிறிது நேரம் ஒன்றும் பேசவில் தன் கால் விரல்களேப் பார்த்துக் கொண்டிருந்நாள். அவன் தங்கையைப் பார்த்தான். ட
(også silh"
 
 
 
 
 
 
 
 
 

மீட்டாத விணே
செல்லத்தின் விழிகள் மலர்ந்தன. அண்ணன் அன்பா கீத்தான் அழைக்கிருன்,
" "th... ""
'உனக்கு மணியனைப் பிடிக்க இல்லையே?? அவன் கேட்டான்.
'உனக்குப் பிடிப்பே?" அவள் திருப்பிக் கேட்டாள்
"எனக்கு விருப்பமில்லே." அவள் சொன்ஞன்.
"அம்மாக்குச் சொல்வன்
மகாதேவன் முகத்தில் இருள் பரவியது. ஏன், தாயை எதிர்த்து அவனுல் பேச முடியாமலிருக்கிறது? இதுவரை காலமும் அவன் வார்த்தைக்கு அங்கு மதிப்பிருந்தது. ஆஜல் இன்று .? தேவியின் தொடர்பு தவருனதா..? அவனுல் அதைத் தீர்மானிக்க முடியவில்லே. தான் செப் வது சரியானது என்று அவனுல் அடித்துச் சொல்ல முடிய வில்லே. அது அவனது கோழைத்தனமா? அல்லது தேவியின் துணிவின்மையா?
உலகம் ஆயிரம் சொன்னுலும்தான் செய்வது சரியா னது என்று ஒரு தீர்க்கமான முடிவுக்கு அவன் வந்திருந் தால் அவனை அசைத்து விட முடியாது
'என்ன் பேசாமல் இருக்கிருப்?" செல்லம் டு. "செல்லம். எனக்கொரு ஆசை. எவ்வளவே ஆசைகள், அதையெல்லாம் அம்மாக்காக, இந்த உணருக் காகவிட்டுக் குடுத்திருக்கிறன். ஏன் தெரியுமோ? என்னலே உன்னா வாழ்க்கை பாழாகிக் கூடாது. நீ நல்ல ஒருவனேக் கட்டி நல்லா இருக்க வேணும் கேட்டிதே."
i "GagFô5yga b i r r b F P கொட்டினுள்,
மீ வி-17

Page 69
130 மீட்டாத வீணை
'நான் ஒரு முடிவுக்கு வந்திட்டன். உனக்குப் பிடிச் சால் சொல்லு." அவன் அவள் முகத்தைப் பார்த்தான். அவளும் ஆவலோடு அவனைப் பார்த்தாள். அவன் குரலைச் செருமிக் கொண்டான். தேத்தண்ணியின் கடைசி மண்டி யையும் எடுத்து வாயில் விட்டுக் கொண்டான்.
* உனக்கு உவன் இளங்கோவைப் பிடிச்சிருக்கே?"
செல்லத்துக்கு எங்கோ, இன்ப வானத்திலே தவழ்வது போன்ற உணர்ச்சி. கண்கள் மலர்ந்தன. ܗܝ
"அண்ணே' அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லே. அவன் கால்களைத் தன் கண்களில் ஒற்றிக் கொள்ள வேண்டும் போலிருந்தது. தன் தங்கையின் முகத்தில் தோன்றிய வண்ணக் கோலங்களை மகாதேவன் பார்த்துக் கொண்டிருந்தான்.
"அவனை நான் இன்னும் கேட்க இல்லை.”* "அதுக்கும்' என்னிலே விருப்பம்’ செல்லம் சொல்லி விட்டு முகத்தை மூடிக் கோண்டாள்.
'மகாதேவன் முகத்தில் புன்னகை பரவியது' *அப்படியென்றல். ?"
அவள் முகத்தை மூடிக் கொண்டு கதவிடுக்கில் மறைந் தாள்
"அப்ப நான் அவனேட கதைக்கட்டே . ?' மகா தேவன் கேட்டான்.
'அம்மாதான். *" செல்லம் இழுத்தாள். ?அதைப் பற்றிப் பயப்பிடாதே. அதுகள் பழசுகள் ஒரு நாளும் மாருது அதுகளைப் பார்த்தால் நாங்கள் வாழ முடியாது'
'இல்லை யண்ணை. அம்மா அழும். அதுவும் எங்களுக் காக எவ்வளவு கஷ்டப்பட்டது"

மீட்டாத வினை 91
"கொஞ்ச நாளிலே எல்லாஞ் சரியாய்ப் போயிடும்? எங்களை விட்டால் அவவுக்கும் ஆர் இருக்கீனம்,? நான் இளங்கோ வீட்டை போயிட்டு வாரன்.""
'முதுகெல்லாம் புழுதி” செல்லம் சொன்னஸ்: அவன் முதுகைக் கையால் தட்டினன். அவள் கொடியிலிருந்த துவாயை எடுத்துத் தட்டி விட்டாள்.
மகாதேவன் இளங்கோ வீடு நோக்கி நடந்தான். அது அவனது நிமிர்ந்த நடைதான் செல்லத்தின் மனதில் ஒரு வித அமைதி நிலவியது.
X w ΣΚ.
மகாதேவன் இளங்கோ வீட்டிற்குப் போனபோது தங்கமும் அங்கிருந்தாள்.
*வா தம்பி. வா. இப்ப எல்லாம் உங்களைக் காணக் கிடைக்குதில்லை" தங்கம் வரவேற்ருள்.
* மாமி இளங்கோ gaba Gu?' மகா தேவன்
கேட்டான்.
**வந்திட்டனடாப்பா' உள்ளே இருந்து இளங்கோ குரல் கொடுத்தவாறு வெளியே வந்தான். முன்பு போல் மகாதேவனை ஏறிட்டுப் பார்க்க அவனல் முடியவில்லை. தன் காதலை நண்பன் ஏற்றுக் கொள்வான என்ற தயக் கம் அவனுக்கு இருந்தது. அவனைக் கலந்து கொள்ளா மலே பல விடயங்களைத்தான் தீர்மானித்ததும் ஒரு குற்ற வாளியின் மனநிலையை அவனுக்குக் கொடுத்தன.
*வாறியே, இப்பிடி ஒரு நடை போயிட்டு வருவம்" மகாதேவன் நண்பனின் தோளில் கை போட்டவாறு கேட்டான்.
"கொஞ்சம் இருக்கோவன்ரா தேத்தண்ணி போட்டுத் தாரன்'

Page 70
32 மீட்டாத வினை
இநீங்கள் போடுங்கோ மாமி நாங்கள் வந்திட்டம்" மகாதேவனும், இளங்கோவும் ஒழுங்கையில் இறங்கி நடக்க ஆரம்பித்தார்கள். திருவிழா ஒலி பெருக்கி சினி மாப் பாடலொன்றை ஒலி பரப்பிக் கொண்டிருந்தது. நண் பர்கள் இருவரும் சிறிது நேரம் ஏதேதோ கதைக்க முயன் முர்கள். ஆனல் இருவர் மனமும் அதில் ஒன்றவில்லை. முடிவில் மகாதேவனே ஆரம்பித்தான்
*மச்சான். ஒரு விசயம் எனக்கு நீ மறைச் சுப் போட்டாய்',
இளங்கோவின் இதயம் 'பட, பட வென அடித்துக் கொண்டது. ‘செல்லம், சொல்லிப் போட்டாளோ? அவன் மனம் எண்ணமிட்டது.
?என்னடாப்பா, நீ சொல்லுருய்?"
இளங்கோவின் நா தடுமாறியது. இருவரும் தாங்கள் வழக்கமாக இருந்து கதைக் கும் புளிய மரத்தின் கீழ் அமர்ந்தனர். இளங்கோ ஒரு கிளையை ஒடித்து நிலத்தில் போட்டுக் கொண்டிருந்தான், மாலை நேரம் பறவைகள் எல்லாம் கூடுகளை நோக்கி ஓடிக் கொண்டிருந்தன. மரத் தின் மேலும் குருவிகளின் சத்தம் கேட்டது.
'அதை நானே சொல்ல வேணுமே? மகாதேவன் கேட்டவாறு தொடர்ந்தான்* 'இளங்கோ, செல்லம் . எங்கடை செல்லம்.
"மகாதேவா கோவிக்காதே எங்களுக்கு ஒருவரை ஒருவர் பிடிச்சிருக்கு."
* மச்சான். எனக்குப் பெரிய சந்தோசமடாப்பா??
"மகாதேவா ? இளங்கோவின் உடல் சில்லிட்டது. அவன் அதை எதிர்பார்க்க வில்லை. நண்பனின் எதிர்ப் பைத்தான் அவன் எதிர்பார்த்தான். இளங்கோவின் கண் களில் நன்றி பெருகியது. அவன் தன் நண்பனின் கை யைப் பற்றினன். V.

BČLMrs assar 133
'மகாதேவா உனக்கு . உனக்கு என்னை." இளங் கோ பேச்சை முடிக்கவில்லை. அவன் கண்கள் கலங்கின. அவன் அந்திவானத்தைப் பார்த்தான்.
**இந்தத் தகப்பன் பேர் தெரியாத தரித்திரத்தை உன்ரை தங்கைச்சிக்கு."
மகாதேவன் அவனைப் பேசவிடவில்லை.
"பேய்க் கதை கதையாதே . நாங்களென்ன நேற்று, முந்தனுள் பழக்கமே . ஒன்ருப் படிச்சு, ஒன்ருய் விளையாடி திண்டு குடிச்சனங்கள். செல்லம் உனக்குத் தெரியாத வளே? இல்லை அவளுக்குத்தான் உன்னைத் தெரியாதோ? மச்சான். எனக்கு ஒரு விசயம் விளங்குது; அன்பு, பாசம் காதல் இதெல்லாம் எங்கே எப்பிடி உருவாகுது என்று தெரியாது. உருவாகிட்டால் அந்தச் சக்தி மகத்தான சக்திதான். அது தூய்மையாக இருந்தால் இந்த ஊரை மாத்திரமில்லை. இந்த உலகத்தையே எதிர்த்துப் போரா டும்." மகாதேவன் எதையோ நினைத்து அப்படிப் பேசினன்;
"மச்சான், நான் கவலைப்பட்டது ஊருக்காக இல்லை. நீ விரும்ப இல்லை யென்ருல் அது எனக்குப் பெரிய கவலை யாக இருந்திருக்கும். ஊரிலே எனக்கு இருக்கிற மானக் கேடு உனக்குத் தெரியும். அதுதான் நான் செல்லத்தை யும் கூட்டிக் கொண்டு எங்கேயாவது போகலாம் என்று பார்க்கிறன். கொம்மா கடைசிமட்டும் ஒத்துக் கொள்ளா
* ஒடிப் போகப் போறியளே?' மகாதேவன் கேட் டான்" டேய் நான் என்ன மண்ணுங்கட்டிக்கே இருக்கி றன்" மச்சான் நீ கவலைப்படாதே . வார வெள்ளிக்
கிழமை உனக்கும் அவளுக்கும் பிள்ளையார் கோவிலிலே தாலிகட்டு, தடுக்கிறவன் தடுத்துப் பார்க்கட்டும்.'
ஏன் வம்பை விலைக்கு வாங்குவான்? வேலுப்பிள்ளை யர், மணியன் சும்மா இருப்பீனமோ? கட்டாயம் ஏதும் கலாதி வரும். பிறகு எங்களுக்குத்தானே மரியாதை இல்லை?" இளங்கோ கேட்டான்

Page 71
罩34 மீட்டாத விணை
**அடக் கோபால் வாரான், வா மச்சான் வா' மகாதேவன் அழைத்தான். கோபால் முகத்தில் வடிந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டான். அவனது இருள் படிந்த முகம் சிறிது மலர்ந்தது.
"என்னடாப்பா, புளியடியிலே புரட்சிச் சதியோ?" கேட்டவாறு அவர்கள் அருகில் வந்து அமர்ந்தான் . மூவ ரும் கலந்து கதைக்க ஆரம்பித்தார்கள்.
"மச்சான், கல்யாணம் முடிஞ்சிட்டால். இஞ்ச ஒரு தம்பியும் ஒண்டும் செய்ய ஏலாது. ஏன் நாங்கள் இஞ்ச கல்யாணத்தை வைப்பான். சந்நிதியிலே வைச்சுத் தாலி யைக் கட்டிக் கூட்டிக் கொண்டு வருவம்.
*கோபால் வழி சொன்னன்."
"அது நல்ல "ஐடியா செல்லத்தை கோயிலுக்கு என்று அம்மாட்ட சொல்லி நான் கூட்டிக் கொண்டு வாரன்' மகாதேவன் தன் பங்கை விளக்கினன்,
*நானும், அக்காவும் கோயிலுக்கு வாரம் இன்னும் நாலைஞ்சு பெடியளை விசயத்தைச் சொல்லாமல் கூட்டிக் கொண்டு போகலாம். ஆக்களும் வேணுமில்லே?" கோபால் பேசினன்கு
* கொம்மாவைக் கேட்டணியே? " மகாதேவன் கேட்டான்.
"இல்லையடாப்பா. அவவுக்குத் தெரிய வேண் டாம். தாலியைக் கட்டி வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு போவம். எல்லாத்துக்கும் காசும் வேணுமே. ' இளங்கோ பதிலளித்தான்.
**அதைப்பற்றிக் கவலைப்படாதே எங்கடை செல்லத் துக்கு சிலவழிக்க இல்லையென்றல் ஆருக்குச் சிலவழிக் கிறது?” மகாதேவன் தன் கடமையை நினைவூட்டினன், பல மணிநேரம் நண்பர்கள் கதைத்து இறுதி முடிவோடு வீடு திரும்பினர். பெரியதொரு சாதனையை ஏற்படுத்தத் தயா ராகும் வீரர்கள் போலிருந்தது அவர்கள் மனேநிலை. இந்தத் துணிவும், மனே திடமும் ஏன் தேவியின் விடயத்தில்

மீட்டாத வீண் 135
தனக்கு இல்லையென மகாதேவன் நினைக்காமல் இல்லை; நண்பர்களின் இத்தனை ஒத்துழைப்பு இருந்த போதும் தன் பிறப்பின் இரகசியம் இளங்கோவின் இதயத்தை அன்று அதிகமாக அரித்தது.
Χ
தேவியக்கா, தேவியக்கா’* மெதுவாகச் செல்லம் வேலியருகில் நின்று அழைத்தாள். நிலவின் ஒளி வெள்ளத் திலே அவளும் ஒன்றிப் போய் நின்ருள்.
*செல்லம் கொம்மா, திருவிழாவுக்குப் போயிட்டாப் போலை' தேவி சிரித்துக் கொண்டே வந்தாள். இருவரும் அலம்பல் வேலி அருகே இருக்கின்றனர்.
"ஒமக்கா. எப்பிடி இப்ப உங்களுக்கு.?"
'நல்ல சுகமடி. தம்பி பிறகும் தியேட்டருக்குப் போயிட்டான். துணைக்கு தங்கமக்கை வாரனெண்டவ. இன்னும் காண இல்லை"
*"தங்கம் மாமியோ..? அதுக்குச் சாப்பாடு போட் டிட்டுத்தானே வருவா"
'எதுக்கு.? ஒகோ. அவருக்கோ?*
"சும்மா பகிடிதான் போங்கோ அக்கா"
"எடியே. உனக்கு அவன் மணியனைப் பேசியாச்சு , நீ இன்னும் இளங்கோவை நினைச்சுக் கொண்டிருக்கிறியே???
** மணியன் அவன் பழைய காலத்து ஆள். அந்த ஆக்கள் மாதிரியேதான் அக்கா, சமுதாயத்துக்குப் புதிய பூக்கள் வேணும். பழைய குருட்டு நம்பிக்கைகளையும் கண்மூடித்தனமான கட்டுப்பாடுகளையும் தகர்த்து எறிகிற உறுதியுள்ளவை வேணும்'
'அதெல்லாம் உன்ரை இளங்கோட்ட இருக்காக்கும்'

Page 72
136 மீட்டாத விணே
**ஏனக்கா மணியனைப் போல "அது சீதனங் கேட்டே வந்தது.? அன்பு உள்ளம் இருந்தால் நல்ல பண்பெல்லாம் தானுக வருகுது, "அதுக்கு’ என்னிலே விருப்பம். எனக்
’’ ممه (G36(5پgjb e
கொள்ளை ஆசை' தேவி சிரித்தாள், செல்லம் கன்னஞ் சிவந்தாள்
**செல்லம், எங்கடை ஊரிலே ஆம்பிளையளே தாங்கள் விரும்பினவளைக் கட்ட முடியாமல் போயிடுது நீ ஒரு பொம்பிளை. அதுவும் இளங்கோ. ஊர் சும்மா இருக் காதே’’
அதை நினைச்சால்தான் பயமாயிருக்கு. வேலுப்பிள்ளை மாமா சும்மா இருக்க மாட்டார். என்ரை நல்ல காலம். அம்மா கோவிச்சாலும் அண்ணனுக்கு விருப்பம். அண்ணன் என்னைக் கைவிடாது.'
தேவியின் மனதில் சிறு சலனம் ஏற்பட்டது. தேவன்கைவிடமாட்டான். அவள் எண்ணங்கள் அவனது கடை சிச் சந்திப்பில் மிதந்தன. செல்லம் ஏதேதோ சொன்னுள், தேவியோ "ம்" கொட்டிக் கொண்டிருந்தாள்.
** அக்கா, என்ன அக்கா, நான் பேசுரன் நீங்கள் யோசிச்சுக் கொண்டு." செல்லம் கேட்டாள்.
தேவி, பூவரசம் இலையொன்றை ஒடித்துக் கடித்துத் துப்பிக் கொண்டிருந்தாள். செல்லம் மணப் பெண்ணுவாள். இளங்கே வோடு கரங் கோத்துத் திரிவாள். கணவனுக்கு உணவாக்கி அவனேடு உண்பாள். குழந்தை பிறக்கும். அதை மார்போடு அணைத்து மகிழ்வாள். தன்னைக் காட்டி இந்த மாமியைப் பாரென்பாள். குழந்தை சிரிக்கும்.
**செல்லம் . எனக்குப் பொருமையாக இருக்கடி' தேவியின் கண்கள் கலங்கின.
"அக்கா..." செல்லம் தடுமாறிப் போனள்,

மீட்டாத வீண் 137
"எடிய்ே நீ நல்லா இருக்க வேணுமடி செல்லம் உன் னிலே எனக்கு எவ்வளவு அன்பிருந்தாலும் குழந்தை, குட்டி, புருசன். என்று யாரை நினைச்சாலும் எனக்கு . எனக்கு. என்நிலைதானடி தெரியிது, கடவுளே. எனக்கு ஏனிந்தக் கூடாத மனம்?"
** அக்கா அழாதேங்கோ. நான்தான் உங்களை -9էՔ வைச்சிட்டன்' R
* 'இல்லையடி நான் அழவென்றே பிறந்தனன்’’ எப் பொழுதுமே அவர்கள் உரையாடல் தேவியின் கண்ணிரில் தான் முடியும், தேவி தன்னுள்ளத்தைத் திறந்து சொல்லி அழுவது செல்லத்திடந்தான்.
"நீ போய்ப் படு செல்லம்' *"தங்கம் மாமி இன்னும் வர இல்லை.?" "இன்னுங் கொஞ்சத்திலே வருவா
"நீ போய்ப் படு’ தேவியும் செல்லமும் பிரிந்து சென்றனர். செல்லம் வீட்டுக்குள் சென்ற போது மகா தேவன் தூக்கம் வராது தரையில் புரண்டு கொண்டிருந் தான். நிலவு அவனைச் சுட்டெரித்தது. அவன் எழுந்து வெளியே வந்தான். அவன் கண்கள் வேலியினுரடே சென்று தேவியைத் தேடின. வீட்டின் விளக்கொளியில் அவள் நிற்பது நிழலாகத் தெரிந்தது, அந்தக் கடைசிச் சந்திப்பு நிழலாக அவன் நெஞ்சில் ஓடியது அவளை அவன் அணைத் தபோது. அவள் கரங்கள் அவன் தலையைக் கோதிய போது. -
தேவன் தன் தலை மயிரைக் கைகளால் குழப்பிக் கொண்டான். வீட்டினுள் நுழைந்து செல்லத்தை நோக் இனன். புன்னகை மலர அவள் தாங்கிக் கொண்டிருந்தாள். வெளியே வந்தவன் இளங்கோ வீட்டை ஆராய்ந்தான். தங்கத்தின் குரல் அவனுக்குக் கேட்டது. விரைவாக அவன் தேவியின் வீடு நோக்கி நடந்தான்.

Page 73
88 மீட்டாத விணே
தேவி தூணுேடு சாய்ந்தவாறு கற்பனையுலகில் நின்ருள். தேவன் மிக அருகில் வந்த பின்னர்தான் அவள் அவனைக் கண்டாள். ஒரு கணம் திகைத்தாள். தேவன் சில வினுடி கள் தலை குனிந்து நின்றன். அவன் அகன்ற மார்பு பொங்கித் தணிந்து கொண்டிருந்தது. நிலவு அவ% அணைத் துத் தன் ஆசையைத் தணித்துக் கொண்டிருந்தது. தேவி யின் விழிகளும் போட்டியிட்டன.
‘'தேவி' அவன் அருகில் வந்தான்.
"தேவா தங்கம் மாமி வருவா" அவன் அவள் கரங் களைப் பற்றினன். தேவி வேகமாக மூச்செறிய ஆரம்பித் தாள். அவள் கண்களில் ஒரு மயக்கம்.
"தேவா" அவள் உதடுகள் அசைந்தன. வார்த்தைகள் வரவில்லை. அவள் மீண்டும் முயன்ற போது அவன் உதடு கள் அந்த அசைவையும் தடுத்தன. அவள், அவன் மார் பில் சாய்ந்து கொண்டாள், இதயங்கள் இரண்டும் ஒன்ற கத் துடித்தன. அந்தத் துடிப்பின் ஒசையிலே உலகத்தின் சத்தங்கள் கேட்கவில்லை, தேவி கண்களை மூடிக் கொண் டாள்
தங்கத்தின் கண்கள் அந்தக் காட்சியை நம்ப மறுத் தன. இளங்கோ தலையைக் குனிந்து கொண்டான். ᏕᎦᏰ Ꭷf னும் அதை எதிர்பார்க்கவில்லை அவர்கள் வரவை அறிந்து கொள்ளாமலே அன்பின் அணைப்பில் கட்டுண்டு இருந்தார் கள் தேவியும், தேவனும்,
'தேவி தங்கத்தின் குரல் நடுங்கியது. தங்கம் நிலத் தில் அப்படியே இருந்து விட்டாள். திடுக் குற்ற தேவி பாம்பை மிதித்தவள் போல் பதறி, விலகிக் கொண்டாள். தேவன் செய்வதறியாது கைகளைப் பிசைந்தவாறு நின்றன்.
யாருமே பேசவில்லை. தேவி தூணுேடு முகத்தைப் புதைத்துக் கொண்டாள். தேவன் தலை குனிந்தவாறு கரங் களைப் பிசைந்தான். இளங்கோ, வானத்தை வெறித்துப் பார்த்தான். அவன் சிந்தனையில் பல கேள்விகள் மோதின.

மீட்டாத asassaw 139
தேவி- அவன் இதயத்தில் அன்பையும் ஒரு தூய்மை யான இடத்தையும் பெற்றிருந்தாள். அவளா அந்த நிலை யில். ? அவனல் நம்பவும் முடியவில்லை. ஆனல் உண்மைமறுக்க முடியவில்லை. அடக்கம், அன்பு, இன்முகம் இவை யெல்லாம் தேவியின் அணிகலன்கள் என அவன் எண்ணி யது உண்டு. அந்த ஊரிலேயே விரிந்த சிந்தையும் முதிர்ந்த அறிவும் கொண்டவள் அவள்தானென அவன் கருதினன். அவளா இப்படி..? தனக்கு இளையவன் ஒருவனுடன், தன்னை மறந்து இந்த நிலையிலா?
தேவன் எதையுமே நின்று, நிதானித்துச் செய்பவன். வாழ்வுக்கெனச் சில விதி முறைகளை அமைத்து அதன்படி நடப்பவன் அவனு அப்படி..? அக்கா, தம்பி போல் பழகியவர்கள்; அவர்களா இந்த நிலையில் . ? காதலிப் பது தவறென்று இளங்கோ நினைத்ததில்லை. இளங்கோ செல்லம் உறவுக்குப் பெயர் காதல்தான். ஆனல் இது காதலா..? வெறும் உடல் இச்சையின் விளைவா ? இந்த உறவிலும் ஓர் உண்மை அன்பு-காதல்-உருவாக முடியுமா..?
நால்வரின் நாக்குகளும் அசையவில்லை. இதயத்துக்குள் தான் எத்தனை போராட்டம்? அமைதியான அந்தப் போராட்டத்திற்கு ஈடு கொடுக்க முடியாது, முதலில் அசைந்தவன் தேவன்தான். தலை குனிந்தவாறு மெது வாக அவன் படலையை நோக்கி நடந்தான். அவன் மூன் றடி கூட வைத்திருக்க மாட்டான். தங்கத்தின் குரலால் அவன் உடல் சிலிர்த்தது.
* நில்லடா'
அவன் மட்டு மல்ல இளங்கோவும் திடுக்குற்றன். தேவியின் விழிகள் மருண்டன. அது சாதாரணமான தங் கத்தின் குரலல்ல. அவள் இதயத்தின் உணர்ச்சிகள் எல் லாம் ஒன்று திரண்டு வந்த குரல்.
"போவியே? நீ போவியேடா? அவளை இப் பிடியே விட்டிட்டுப் போவியேடா?"

Page 74
40 Elgs saw
இருந்த தங்கம் ஆவேசம் வந்தது போல் எழுந்து கத்தினுள். தேவன் ஆடியே போய்விட்டான். தேவி திகைப் போடு தங்கத்தை நோக்கினுள். இளங்கோ தாயை இந்தக் கோலத்தில் என்றுமே கண்டதில்லை.
软
எ சாரம் மட்டுமே தேவன் அணிந்திருந்தான், அவன் மேனியிலிருந்து வியர்வை பெருகி ஓடியது; அவன் அசை யாது நின்றன். தங்கம் ஒடிச் சென்று அவன் மடியைப் பிடித்து உலுக்கினுள்.
"டேய் டேய். உன்னை நல்ல பெடியனின்று நெச்ச னடா, படலைக்கு அங்காலே காலெடுத்து வைச்சாய் . முறிச்சுப் போடுவனடா. முறிச்சு.'
இதுவரை பேசாது நின்ற இளங்கோவுக்குத் தாயின் செய்கை அதிகப்பிரசங்கித்தனமாகத் தோன்றியது. தவறு தேவனுடையது மாத்திரமல்லவே. தேவி விரும்பாவிட்டால் இது நடக்குமா? அதுவும் அங்கு, அப்படி விபரீதமாக ஏதும் நடந்துவிடவில்லை; அவன் தாயை நெருங்கி அவள் கைகளைப் பற்றிய வாறு 'அம்மா’’ என்ருன். அவன் கைகளைத் தள்ளிவிட்டு 'என்னடி தூணுக்க ஒளியிருய் இஞ்சாலே வாடி’ என்று தேவியைப் பார்த்து அவள் சீறினள். தேவி நடுங்கியவாறு வெளியே வந்தாள். வேங் கையைப் போல் பாய்ந்து அவள் கூந்தலைப் பற்றித் தன் முகத்திற்கு அருகே இழுத்தவாறு தங்கம் பேசினள்.
'எடியே, உனக்குத் தெரியுந் தானடி நாளெல்லாம் நான் ஏன் அழுகிறனென்று உனக்குத் தெரியாதே? நான் பெத்த பிள்ளைக்குத் தகப்பன் இல்லையென்று ஊரெல்லாம் சிரிக்குதே உனக்கும் தெரியுந்தானேடி. எடியே. எடியே." தங்கம் அழுதாள்.
* உன்க்குத் தானேடி சொன்னனன் உன்ரை கொப்
பன் செய்த வினையாலே நான் என்ரை மோனைக்கூட நிமிர்ந்து பார்க்க ஏலாமல் இருக்கிறனெண்டு."

மீட்டாத வினை 41
தேவியும் அழ ஆரம்பித்தாள். இளங்கோவின் உள்ளம் எதையோ கேட்கத் துடித்தது. வார்த்தைகள் வரவில்லை. மகாதேவன் செய்வதறியாது தடுமாறினன்
“ 'GL_tዕ தேவா, கேட்டியேடா இவன் ரை ஆப்பன்
ஆரென்று" சொல்லுறனடா கேள். டேய் அறிவு கெட்டு
நிக்கிருளேடா இந்தப் பேச்சி, இவனைப் போல தானடா அண்டைக்கு நானும் நின்றன். பெடியள், ஆசை, பாசங் கள் பெண்டுகளுக்கு இல்லையே? ஏழையளுக்குக் கிடை யாதே? வயசாகியும் வாழ வழியில்லாமல் நான் ஏங்கிக் கொண்டிருந்தனடா டேய், தடி மாடு மாதிரி நிக்கிறி யேடா. உன்னைப் போலதான்டா அன்றைக்கு அவரும் வந்தார். டேய் அந்தப் பழியைப் பாவத்தைத் தானடா இன்டைக்கு அவனும், நானும் இன்னும் சுமக்கிறம், அடிப் பாவிப் பெண்ணே ஏனடி நீயும் குறுக்கால போருய்?" அப்பன் செய்த பாவம் போதா தேடி'?
தேவியும் தங்கமும் அழுதார்கள். தேவனின் கண் களும் கலங்கின. அவன் மிக மெல்லிய குரலில் பேசினன்.
'மாமி, பிழை என்னிலைதான். நான்தான். மாமி. ஆனல் நான் அவளைக் கைவிட மாட்டன். அவளுக்கு நான்தான் தாலி கட்டுவன்" மகாதேவன் குரல் மெதுவாக ஒலித்தாலும் அதில் உறுதியிருந்தது.
, 'தம்பி டேய், உன்னைக் கும்பிட்டனடா. இப்ப சொன்னியே அந்தச் சொல்லைக் காப்பாத்திடு இவள் எனக் குப் பிள்ளையடா. அவன்ரை தமக்கை. கோபால் வயித் திலே இருக்கிற நேரத்திலேதான் ஒரு நாள், இவளின் ரை தகப்பன் என்னை." .-
இளங்கோ ஒன்றும் பேசாது வெளியே நடந்தான். அதற்கு மேல் அவனல் அங்கு நிற்க முடியவில்லை. அவனை யாரும் தடுக்கவில்லை. தடுக்கும் நிலையில் அங்கு யாரும் இல்லை.
カ

Page 75
13|
Lருவ நிலவுதான். அன்று அதன் ஒளிவெள்ளம் வழமையை விட பல மடங்காக இருந்தது. துள்ளும் தேவி யின் உள்ளத்தைப் போல், பூரித்து நிற்கும் செல்லத்தைப் போல், நிலவுக்கும் மகிழ்ச்சியா? அதுதான் என்றுமில் லாத வகையில் முக மலர்ந்து ஒளி கொட்டுகிறது. தேவி வீட்டு மல்லிகைப் பக்தல் கூட அன்று முற்ருக மலர்ந்து மணம் வீசியது. தென்றலில் தவழ்ந்து வரும் இனிய நாதஸ் வர ஒசை வேறு அவர்கள் உள்ளத்தை அலை பாய வைத் தது. தேவியின் இதயத்தில் இன்று கேட்கும் இன்ப நாதம் இதுவரை காலமும் ஏன் கேட்கவில்லை?
செல்லத்தின் கூந்தலில் மல்லிகைச் சரத்தைச் செருகி அதன் அழகை இரசித்தாள் தேவி. செல்லமோ தன் கூந்தலை அழகுபடுத்தும் அந்தக் கரங்களின் மென்மையை யும் அது அசையும் வேகத்தையும் பார்த்து இரசித்தாள்.
"கொஞ்சம் திரும்பு செல்லம்' செல்லத்தின் முகவா யைப் பற்றி நிமிர்த்திய தேவி, அவள் நெற்றியில் தில்க மிட்டாள். நான்கு விழிகளும் சிரித்தன,
** அக்கா" என்று சொல்லியவாறு செல்லம் தேவியின் கழுத்தைக் கட்டிக் கொண்டாள்.
"அடியே, கழுத்தை விடடி பொட்டில்லே அழியப் போகுது' தேவி செல்லமாகக் கடிந்து கொண்டாள். ஆனல் செல்லமா விடுவாள்?

மீட்டாத வீகன 143 "அக்கா, எத்தனை மணிக்கு நாங்கள் போறது?"
** என்னடி அவசரம், இரவோட இரவா சந்நிதியிலே தாலிகட்டு, அப்பிடியே விடியக் கச்சேரிக்குப் போய் கல்யாண எழுத்து. எத்தனை தடவை சொல்லிப் போட் டன்? இன்னும் கொஞ்சத்திலே கார் வந்திடும், கெதியாச் சிலையைக் கட்டு'
*கட்டி விடுங்கோவன்'
'சீலை கட்டத் தெரியாது. கல்யாணம் கட்ட வெளிக் கிட்டிட்டாள்" வாடி இஞ்சாலே,'
கேலி, சிரிப்பு, போலிக் கோபம் இவைகளோடு அவர் கள் இருவரும் தங்களை அலங்கரித்துக் கொண்டனர்.
ஊரெல்லாம் கோவில் திருவிழாவுக்குக் கூடியிருக்கும் நேரம்- அதைத்தான் தங்கள் மணவிழாவுக்குத் தகுந்த நேரமாக நண்பர்கள் தேர்ந்தெடுத்தனர். பட்டு வேட்டி சர சரக்க இளங்கோவின் வீட்டை நோக்கி நடக்கும் தேவனின் இதயத்தில், எல்லாம் நல்லபடி நடக்க வேண்டுமே, என்ற கவலை இருந்தது. தாங்கள் செய்யப் போகும் புரட்சித் திருமணத்தின் விளைவை எண்ணிப் பார்க்கும் போது ஒரு வித பயமும் அவனுக்கு இருந்தது. தாய் மீனுட்சி கோயி லுக்குப் போய்விட்டாள். தங்கை செல்லத்துக்கும் தேவி வீட்டில்தான் அலங்காரம் நடக்கிறது. தேவன் வரு முன் னரே இளங்கோ தயாராகி விட்டான். கைகளைக் கட்டிய வாறு நில வொளியில் அவன் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தான். அவன் இதயமும் ஒரு நிலையில் இல்லை;
* நீ ரெடி மச்சான்?' தேவன்(கேட்டுக் கொண்டே வந்தான்.
"நான் ரெடி மற்றவை.?
"கொம்மா, அவேயை இஞ்ச கூட்டிக் கொண்டு வரத் தான் போரு, இஞ்சதானே கலியாணச் சாப்பாடு" மகா

Page 76
i44 மீட்டாத வீணை
தேவன் சிரித்தான், இளங்கோவும் புன்னகைத்தான். அந் தப் புன்னகையில் சிறிது கவலையும் இருந்தது. இப்படித் தான அவர்கள் திருமண விருந்து நடக்க வேண்டும்? நண் பர்கள் இருவரும் இருந்து நடக்க வேண்டிய விடயங்களைப் பற்றி மீண்டும் ஒரு முறை கதைத்துக் கொண்டார்கள். எங்கிருந்தோ கோபாலும் அங்கு வந்து சேர்ந்தான்.
**கார் சரியாகப் பத்து மணிக்கு வரும் மேசன் கோவிந்தரும் வாரார் "டிரைவர்' ஒரு சாட்சிக்குக் கை யெழுத்துப் போடுவார். வேற ஒரு தம்பிக்கும் விசயம் தெரியாது, நாளைக்கு எல்லாம் முடிஞ்சு ஊருக்கு வந்தாப் போலைதான் பிரச்சனை இருக்கு' கோபால் மிக வேகமா கப் பேசினன். .
* விசயம் முடியட்டும். நடந்து முடிஞ்சாப்போலே ஆரும் அசைக்க ஏலாது. அம்மாக்கு நாங்கள் பயப் பிடலாந்தான். வேற ஆருக்கும் ஏன் பயப்பிட வேணும்,? நாங்களென்ன கொலையோ செய்யப் போறம்.? மனசுக் குப் பிடிச்சவையைக் கலியாணங் கட்டுறது பெரிய பிழையே? எங்கடை ரிஜிஸ்ரேசனைச் செய்வம். செல்லம் மைனர் இளங்கோ தாலியைக் கட்டினல் சரி. 'மகா தேவன் சொன்னன்.
*அதுகள் வரு குதுகள்' இளங்கோ சொன்னன். அவனுக்கு வெட்கமாக இருந்தது. தங்கம், தேவியையும் செல்லத்தையும் அழைத்துக் கொண்டு வந்தாள்.
தங்கத்தின் முகத்தில்தான், எவ்வளவு பெருமிதம்? கோபால் கூட பழைய கோபாலாக மாறிவிட்டான், என்று மில்லாத இன்பம் அவன் இதயத்தில் பொங்குகிறது. தேவியின் கைகளைப் பிடித்தவாறு செல்லம் வருகிருள். எத்தனை விதமான உணர்ச்சி அவர்களுக்கு. மகிழ்ச்சிதான்அது தொண்டைக் குழிக்குள் சிக்கி விட்டது போன்ற ஒரு வித தடுமாற்றம். கால்கள் பின்னுகின்றன. கண்களோ நிலத்தில்-மகிழ்ச்சி, பயம், தயக்கம், வெட்கம்- இவை கள் முள்னே வர அவர்கள் பின்னே வந்தார்கள்

மீட்டாத வினை 14Ᏸ
நாணம்-பெண்களுக்குத்தான் சொந்தமா? இளங்கோ வின் சன்னங்களும் சிவக்கின்றனவே! மகாதேவனும் நிலத் தைத்தான் பார்த்தான். . .
குடிசையின் வாசலை அவர்கள் நெருங்கு கிருர் கள், மணப் பெண்களுக்கு வானம் பணித்துளியால் பன்னீர் தெளித்து வரவேற்கிறது. நிலவோ வெண்பட்டுக் கம்பளம் விரிக்கிறது. - பனை மரத்தால் விழும் நுங்குகளின் ஓசை பட்டாசுகளாகின்றது. கோவிலிலிருந்து மேளத்தையும், நாதஸ்வரத்தையும், தோழி, தென்றலாள் அழைத்து வரு கிருள். தங்கம் வளர்த்த வாழைகள் கூட குலை போட்டு அவர்கள் வாசலில் காத்து நின்றன.
நில்லுங்கோடி பிள்ளையஸ், கடவுளே நாவூறுபடப் போகுது தங்கம் வாசலில் அவர்களை நிற்க வைத்து உள்ளே ஒடிஞள். தயாராகத் தான் வைத்துச் சென்ற தட்டத்தை ஏந்தி வந்தாள். வாழைப் பழத்தின் மீது திரிவைத்து எரிந்து கொண்டிருந்த அதனே, மணப் பெண்களின் முகத்தை மூன்று முறை சுற்றி எடுத்தாள். பெண்கள் குடிசைக்குள் ஓடி மறைந்தனர்.
நண்பர்கள் நடக்க வேண்டியவைகளை மீண்டும், மீண்டும் கதைத்தனர். கடைசியாகக் கோபால் நேரம் போவதைச் கட்டிக் காட்டினன்.
வாருங்கோடா பெடியள், இலை போடுறன்' தங்கம் உணவருந்த அழைத்தாள்.
அம்மா, நீ குழைச்சுத்தா அம்மா. நாங்கள் கையிலே சாப்பிடுறம்' இளங்கோ சொன்னன்.
"போடா, கல்யாண விருந்து கையிலேயே சாப்பிடு றது? இலை போட்டாச்சு வாங்கோ'
இல்லை மாமி, நீங்கள் குழைச்சுத் தார மாதிரி வருமே? உங்கடை கையாலே எல்லாருக்கும் தாங்கோ' மகாதேவன் கேட்டுக் கொண்டான்.
மீ. வீ.-19

Page 77
46 மீட்டாத வீணை
'இவங்கள் விடாங்கள்; கையைக் கழுவிக் கொண்டு வாங்கோடா. மோனை தேவி, செல்லத்தையும் கூட்டிக் கொண்டுவா. எல்லாரும் ஒன்ருச் சாப்பிடுங்கோ'
தங்கம் ஒரு பெரிய சட்டியில் சோற்றைப் போட் டாள். பல கறிகளையும் அதற்குள் போட்டாள். இளங் கோவுக்குப் பிடித்தமான தயிரும், வெந்தயக் குழம்பும் சேர்க்கப்பட்டிருந்தன.
**நல்லாச் சாப்பிடுங்கே i டா, 19 Girat unt ti துணையிருந்தால், கடவுளே உங்களுக்கு ஒவ்வொரு நாளும் இப்பிடிக் குழைச்சுத் தர மாட்டனே? பிள்ளையள், ஏதோ உங்கடை விருப்பப்படி நடக்கிறியள். ஒன்ருக, ஒற்றுமையா இருங்கோ, கடவுள் கைவிடார். கையை வடிவா நீட் டன் செல்லம்"
செல்லம் தன் அலங்காரம் கெடாத வகையில் சோற் றைச் சாப்பிட்டாள். தங்கத்தின் சுவையான சமையலை விட, அந்தச் சூழல் அவளது அன்பு வார்த்தைகள் அதற்கு இன்னும் சுவையூட்டின. விரல்களிடையே தயிரும், குழம்பும் வழிந்தோட ஆண்கள் மூவரும் அதை நக்கி" நக்கிச் சாப்பிடுவதைப் பார்க்கத் தேவிக்கு வெட்கமாக இருந்தது.
தம்மை மறந்து உணவருந்திக் கொண்டிருந்த அவர் களுக்குக் காரின் ஓசை உணர்வையூட்டியது.
'கார், வந்திட்டிது’ செல்லந்தான் தன்னையறியாமல் சொல்லிவிட்டு உதட்டைக் கடித்துக் கொண்டாள். எல்லோரும் அவசர, அவசரமாக எழுந்தனர்.
குடிசைக்கு வெளியே வந்த கோபால் தெருவை எட்டிப் பார்த்த ள். அவள் முகம் வெளிறியது.
'வாடைக் காரில்லை. அது கணவதிப்பிள்ளையரின்ரை கார். இந்த மனுசன் ஏன் இப்ப வருகுது??? அவன்

மீட்டாத வினை 147
மெதுவாக உள்ளே வந்து சொன்னன். எல்லோர் முகத்தி லும் திகில் பரவியது தங்கம் "பிள்ளையாரே, பிள்ளையாரே' என்று முணுமுணுத்தாள். சில நிமிடங்கள் அங்கு அமைதி நிலவியது,
"மனுசன் என்னட்டைதான் வந்திருக்க வேணும். தியேட்டருக்கு நான் போகல்லை. அதுதான் போலை. நான் பார்த்துக் கொண்டு வாரன். நீங்கள். ஒருவரும் வெளியிலே வாாதேங்கோ" கோபால் அவசர, அவசரமாகக் காரை நோக்கி நடந்தான்.
'ஏதும், தொந்தர வென்ருல் கூப்பிடு கோபால்" மகாதேவன் சொன்னன். எல்லோரது கண்களும் அவன் செல்லும் வழியையே பார்த்துக் கொண்டு நின்றன. நிமி டங்கள் யுகங்களாகக் கடந்தன.
叉
கோபால் காரை நெருங்கினன் கணபதிப்பிள்ளையர் அவன் வருவதைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
**கோபால், நீயேன் தியேட்டருக்கு வரயில்லை???
'அக்காக்குச் சுகமில்லை .. ' கோபால் தலையைச் சொறிந்தான்.
"என்ன, தேவிக்குச் சுகமில்லையோ? பாவம். நீதானே அவளைப் பாக்க வேணும். காரிலே ஏறு, உன்னுேட கொஞ் சம் கதைக்க வேணும்.”*
கோபால் முதலில் தயங்கினன். பின்னர் காரிலேறி அவர் பக்கத்தில் அமர்ந்தான். கணபதிப்பிள்ளையரின் நெற்றி வியர்த்திருந்தது. அவர் மெதுவாகப் பேச ஆரம் பித்தார்.
*கோபால், நீங்கள் இரண்டு பேரும் எவ்வளவு கஷ்டப் படுறியள்? வாரெல்லாம் திருவிழாக் கொண்டாடுது; நீங்கள்

Page 78
48 மீட்டாத வினை
இரண்டுபேரும் மாத்திரம் இஞ்ச தனிய இருக்கிறியள் , நீ நினைக்கிறியே, கொக்காக்கு ஒரு மாப்பிள்ளை கிடைப் பானென்று???
கோபால் ஒன்றும் பேசாது அவரைப் பார்த்தான். அவர் தொடர்ந்தார்;
"கோபால், உ ங் கடை துன்பத்தைப் பார்த்தால் எனக்கு மனங் கேட்க இல்லை. நானுெரு முடிவுக்கு வந் திட்டன். கோபால், கொக்காவை நானே கட்டுறன். உனக்கு வேணுமான நேரமெல்லாம் காசு நான் தருவன். காலேலாத நீ கஷ்டப்படத் தேவையில்லை."
கோபால் அவரையே வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தான். அவர் தன் பையில் கையை விட்டுச் சில நூறு ரூபாய் நோட்டுக்களை எடுத்து அவன் கைகளில் திணித்தார். தூரத்தே வாடகைக் காரின் விளக்கொளி கோபாலின் முகத்தில் விழுந்தது.
அக்கா வைக் கட்ட அவர் முடிவு செய்துவிட்டாராம்.
யார், யாருக்காக முடிவு செய்கிருர்கள்? எத்தனை மனிதர்களின் வாழ்வை, எதிர்காலத்தை எல்லாம் எவ ரெவரோ ஏன் முடிவு செய்கிருர்கள்? இந்தக் காணி உனக் குச் சொந்த மென்று நிலத்தைப் பிரித்த மனிதன், லட் சக் கணக்கான மனிதர்களின் தாய் நாட்டைக் கூடத் தானே தீர்மானிக்கிறன். நீ பேச வேண்டிய மொழி, உடுக்க வேண்டிய உடை, உண்ணவேண்டிய உணவு-இவை யெல்லாவற்றையும் இன்று யார் யாரோ நமக்காகத் தீர் மானித்து விடுகிருர்களே! கோபாலுக்குச் சிந்திக்க நேர மிருக்கவில்லை. வாடகைக் கார் அவர்களைக் கடந்து தங்கம் வீட்டு வாசலில் நின்றது:
"காசைப் பிடி கோபால். கார், ஏன் இந்த நேரத் திலே?" கணபதிப்பிள்ளையர் கேட்டார்,

மீட்டாத விணை 149
கோபால் காசை வாங்கிச் சிசேர்ட் பையில் போட் டுக் கொண்டான்.
* தங்கம் மாமிக்குச் சுகமில்லைப் போல. அதுதான் கார் வருகுது நீங்கள் போங்கோ. அக்காவோட கதைச் சுப் போட்டு நான் சொல்ரன்'
*கோபால், இன்னும் அரை மணித்தியாலத்திலே வாரன். நல்ல முடிவாச் சொல்லு. முதலிலே கொக்கா பஞ்சிப்படுவாள். எல்லாம் உன்ரை கையிலே கிடக்கு. நீ நினைச்சால் இந்தக் காரிலே ராசா மாதிரி இருக்க ஏலாதே?"
கோபால் காரை விட்டு இறங்கினன். கணபதிப்பிள்ளை யர் மீண்டும் பையில் கையை விட்டு இன்னெரு நூறு ரூபாயை எடுத்துக் கோபாலிடம் - கொடுத்தார். அவர் கார் மெதுவாக நகர்ந்தது; அவர் முகத்தில் புன்னக்ை விரிந்திருந்தது,
X
**கெதியாக ஏறுங்கோ காரிலே' கோபால் அவசரப் படுத்தினன்.
முன் "சீட்டில் மேசன் கோவிந்தர் இருந்தார். அவர் பக்கத்தில் இளங்கோ ஏறிக் கொண்டான். மகாதேவன், தங்கம், செல்லம், தேவி நால் வரும் பின்னல் ஏறிக் கொண்டனர்.
இகோபால் ஏறன்' இளங்கோ துரிதப்படுத்தினன். *இல்லை, நான் வரயில்லை" "ஏன்? என்ன?" காரிலிருந்து பல குரல்கள் கேட்டன. 'இல்லை. இன்னுங் கொஞ்சத்திலே கணவதிப்பிள்ளை
யர் வருவார். இஞ்ச ஒராள் இருந்தால்தான் ஏதும் நடக் arruo ai ufTrfi656Tub, ''

Page 79
O மீட்டாத வினே
"என்ன மண்ணுங்கட்டி நடக்கப் போகுது? பேய்க் கதை கதையாமல் ஏறு" மகாதேவன் சத்தம் போட் ListGT.
"கதைக்க நேரமில்லே. நீங்கள் போங்கோ எலு மென்ருல் நான் பஸ்ஸிலே வாரன். கனவதிப்பிள்ளேயர் இப்ப வருவார்' கோபால் கைகளைப் பிசைந்தான்.
"அவர் வரட்டும். அவருக்கு ஏன் நாங்கள் பயப்பிட வேணும்? நீ ஏறு மச்சான்"
மகாதேவன் வற்புறுத் தினு ன். ஆனுல் கோபால் மறுத்து விட்டான்.
'இல்லே மச்சான் நான் இஞ்சை இருந்தாலும் என்ரை நெஞ்சு உங்களோடைதான் இருக்கு. நீங்கள் திரும்பி வரேக்க இஞ்சையும் ஆள் வேண்டாமே?"
இளங்கோவும், மகாதேவனும் கோபாலின் கரங்களேப் பற்றினர். கார் மெதுவாக நகர ஆரம்பித்தது.
"அக்கா" கோபால், தேவியைப் பார்த்தான்
"கோபால்" அவள் கண்களில் கண்ணிர் திரண்டிருந் தது. 'தம்பி வரமாட்டாயா?" என்று கண்கள் கெஞ்சின. அமைதியாக அவன் புன்னகைத்தான். அவன் உள்ளத் தின் உவகையெல்லாம் அந்தப் புன்னகைபில் மலர்ந்தது. கார் மறையும் வரை அவன் கைகளே ஆட்டிக் கொண்டே நின்ருன், "அம்மம்மா, இன்றைக்கு நீ உயிரோடை இருந் தால். அவனிதயம் எண்ணமிட்டது. கோபால் நீண்ட பெருமூச்சோடு கோவிலே நோக்கி நடந்தான்.
置 蠶
அலங்கார ஊர்தியில் ஆண்டவனின் பயனம், கோபி இலச் சுற்றிச் செல்ல ஆரம்பித்து விட்டது;
 

மீட்டாத வீண்
"கட்டாடி பந்தத்துக்கு எண்ணெயை ஊத்தி நல்லா எரியன் வழி விடுங்கோ, வழிவிடுங்கேர வேலுப்பிள்கள் யரின் கம்பீரமான குரல் மேள, நாதஸ்வர ஓசைகளைக் கடந்து நன்ருகக் கேட்கிறது.
கோயில் ஒளி வெள்ளத்தில் மிதக்கிறது. வண்ண வண்ண விளக்குகள் கண் சிமிட்டுகின்றன. வாணவேடிக்கை கள் என்ன இதயத்தை இழுக்கும் இசை வெள்ளந்தான் என்ன அழகு, இனிமை, மகிழ்ச்சி-பொங்கி வழிகிறது ஊரெல்லாங் கூடி என்ன செய்கிறது? வெண்க சிலேக்கு விழா எடுக்கிறது. காசு மாலேகள், க ப்புகள், சங்கிலிகள் போட்டு அந்தச் சிலேக்கு அழகு, பார்க்கிருர்கள், பொருள் அள்ளிக் கொடுத்துப் போற்றுகிறர்கள். இந்த விழா நடத்த இத்தனை மனிதர்கள் இருக்கிருர்கள். யாருமில்லாத இடத்தைத் தேடித் திருமணஞ் செய்ய அந்தக் காதலர் கள் போகிருர்கள். ஒ , மனிதர்களே து: ஒருத் திக்கு வாழ்வளித்து விழா நடத்த உங்களால் (LLL LI வில்லேயே? இந்தச் சிலேக்கு விழா எடுக்க வெட்கமில்லையா?
ஒரு மூலையில் நின்றவாறு கோபால் சிந்தித்தான் இளங்கோவின் வார்த்தைகள் அவன் காதில் விழுந்தன.
"நாங்கள் எவ்வளவோ எதிர்ப்பை எதிர்பார்த்து இந்தக் கலியாணம் செய்யப் போறம். ஏன் இந்த ஊருக்கு இது பிடிக்க இல்ஃவ? உழைக்கிற கை எங்க நாங்கள் தாவி கட்டினுல் எங்கடை பெண் சாதி பிள்ளைய3 இவே பார்க்கப் போற இல்லே. இன்பமே துன்பமோ அது எங்களோபைதான். ஒரு திருவிழாவை நடத்து இவ்வளவு பேர்கூடினமே ஒரு நல்ல காரியத்தைச் ெ நாலுபேர் கூடக் கூடாதோ? திருவிழா நடத்திருது தெய்வத்துக்காக இல்லே. இந்த வீரிலே தங்களே பெரி மனிதர்களTதுத் காட்டிக் கொள் தங்கடை செல்வாக்கைப் பெருக்கித் தாங்கள் நினச் நடக்க இன்றைக்குப் பொது விசயம் என்று செதுஇ முக்காவாசியும் தனி ெ
டைய சுயநலத்திலேதான் உருவாகுது. கோபால், எந்து

Page 80
152 மீட்டாத வீணை
கலியானத்தைக் கோயிலிலே வைச்சு அந்தச் சிலைகளுக்கு மதிப்புக் கொடுத்து இன்னும் பல போலி மனிதர்களை உருவாக்க நான் விரும்ப இல்லை. என்ருலும் உங்களுக் காக, என் கொள்கைகளை ஒதுக்கி வைச்சு வாரன்.""
இளங்கோ சொன்னதிலே எவ்வளவு உண்மையிருக்கு? பண்பும் அன்பும் இல்லாதவைக்கும் ஒரு மதிப்பைத் தேடு றதுக்கு கோயில் பயன்படுகுது. கணபதிப்பிள்ளையர், வேலுப் பிள்ளையர் போல ஆட்கள்தான் திரு விழா நடத்தீனம். எவ்வளவு சின்ன மனிதர்கள் இவர்கள்? ஒர் இதயத்தின் உணர்ச்சிகளை இவர்களால் புரிந்து கொள்ள முடியுமா? தங்கள் சுயநலம் ஒன்றையே கருத்தில் கொண்டு வாழும் இவர்கள் ஊரின் பெரிய மனிதர்களானது எப்படி? இவர் களின் குரல்தான் சமூகத்தின் குரலானது எப்படி?
"அதுகள் தாலியைக் கட்டிக் கொண்டு ஊருக்கு வரேக்க இந்த மனிதர்கள்தானே முன்னுக்கு நின்று பேசப் போகினம். ஆட்களை வைச்சு அடிப்பீனம், வீட்டுக்கு நெருப்பு வைப்பீனம், தோட்டத்துக்க மாட்டை அவிழ்த்து விடுவீனம். ஊரைவிட்டே துரத்துவீனம். தங்கடை எண் ணங்கள் நிறைவேரு த படியால் பழி தீர்த்துக் கொள்ளு a 607 b. ''
கோபாலின் எண்ணங்கள் ஒடிக் கொண்டிருந்தன. இன்னும் கொஞ்ச நேரத்திலே கண திப்பிள்ளையர் அவ னைத் தேடி வருவார். தேவியின் முடிவைக் கேட்க வரு வார், வேலுப்பிள்ளையர் கூட்டத்தை விலக்கிக் கொண்டு வெகு வேகமாக யாரையோ தேடுகிறர்.
"மீனட்சி இஞ்ச வா ஒரு கதை",
"என்ன அண்ணே' மீனட்சியும் انگه-öoمره விலக் கிக்கொண்டு வேலுப்பிள்ளையரை நோக்கி வருகிருள். இரு வரும் கோபால் ஒதுங்கி நின்ற மருத மரத்திற்கு அருகில் வருகிறர்கள். கோபால் மரத்துக்குப் பின்னல் மறைகிருன்ஐ

மீட்டாத வீண் 103
'மீனட்சி; செல்லமும் மகாதேவனும் வீட்டிலேயே??? "ஒமண்ணை" மீனுட்சி சொன்னுள்:
*"பேய்க் கதை கதையாதை அதுகள் இரத்தினனின்ரை காரிலே எங்கேயோ போகினமாம். படத்துக்குப் போன பெடியள் கண்டு சொல்லு துகள்' வேலுப்பிள்ளையர் சொன்னர்.
"என்ரை பெடியளோ? எந்த வம்புக் குட்டியள் சொன் னது? பல்லுக் கொட்டிப் போடுவன்' மீனுட்சி சீறினுள்.
"அதுகள் சும்மா சொல்லாதுகள் நீ வீட்டை போய்ப் பார். நானும் கெதியா வாரன்." வேலுப்பிள்ளையர் சொன்னுர், •
* பொறு, பொறு நான் வந்து கதைக்கிறன்' மீனுட்சி சேலையைச் செருகிக் கொண்டு நடந்தாள். வேலுப்பிள்ள்ை யர் கோவிலை நோக்கிச் சென்ருர், கோபால் மரத்தின் பின்னலிருந்து வந்தான்.
"கோபால்' மீனட்சியின் குரல் அவனை ஏதோ செய்தது.
*கோபால் வீட்டை போக வேண்டியிருக்கு வாரியோ துணைக்கு?' மீனுட்சி கேட்டாள்,
'வாரன் மாமி’ கோபால் அவளை நோக்கி நடற் தான். இருவரும் நடக்க ஆரம்பித்தார்கள்,
Glpaor தேவனக் கண்டனீயே?’ மீனுட்சி கேட்டாள்:
'இல்லை" அவன் தடுமாறினன். அவள் வழி நெடுகத் தன் பிள்ளைகளின் அருமை பெருமைகளைப் பேசிக் கொண்டு நடந்தாள். வீட்டை அவர்கள் நெருங்கிக் கொண்டிருந் தார்கள். அதற்குள் கணபதிப்பிள்ளையரின் கார் அவர்கள் அருகில் வந்து நின்றது,
6 69-20

Page 81
154 மீட்டாத வீணை
"கோபால், தேவி வீட்டிலே இல்லையோ?" அவர் கேட்டார்;
கோடால் தன் பையில் கையை விட்டு அவர் கொடுத்த பணத்தை எடுத்துக் கொடுத்தான்.
* கோபால்' அவர் கோபத்தோடு கத்தினர்.
* முதலாளி விசயம் முடிஞ்சு போச்சு. வீணுக மினைக் கெடாதேங்கோ" கோபால் சொன்னன்.
"என்ன விசயம்? என்ன நடந்தது? எங்கே தேவி? செல்லம், செல்லம். தேவா . . தேவா டேய் தேவா" மீனட்சி திறந்திருந்த படலையைக் கடந்து வீட்டுக்குள் ஓடினள். கத்தினள்
ஐயோ, என்ரை பிள்ளையள்.எடே கோபால் எங்கே யுடா இவங்கள்?
அவள் கேட்ட கேள்வியைத்தான் கணபதிப்பிள்ளைய ரும் கேட்டுக் கொண்டிருந்தார். அவர் கைகளில் கோபா லின் "சேர்ட் காலர் இருந்தது,
என்ரை அக்காவைப் பற்றிக் கேட்க நீங்கள் ஆர்?" கோபால் கோபமாகவே கேட்டான்
*சொல்லப் போறியோ இல்லையோ, எலும்பு முறிச்சுப் போடுவன்'
கோபால் முகத்தைத் திருப்பிக் கொண்டான்; அவன் கன்னத்தில் ஓர் அறை விழுந்தது. அவன் திமிறினன்.
**சொல்லடா" கணபதிப்பிள்ளையர் கத்தினர். ஓங்கி மீண்டும் ஓர் அறை - கோபாலின் வலுவிழந்த கால்கள் அவனைத் தாங்கிக் கொள்ள மறுத்தன. திருவிழாவை மறந்து தெருவிழாவைப் பார்ப்பதற்கு சனங் கூட ஆரம் பித்தது. பண பலம், உடற்பலம் உள்ளவன் ஒருவனல்,

மீட்டாத வினை
ஓர் ஏழை நொண்டி எட்டி உதைக்கப்படுகிறன் கதை பரவுகிறது. வேலுப்பிளளையர், அவர் மகன் மணியன் எல்லோரும் அங்கு வருகிருர்கள். மீனுட்சியோ வயிற்றி லடித்தபடி கதறுகிருள். கோபாலின் இதழோரத்தில் படிந்த புழுதியை, கடைவாயில் வடிந்த இரத்தம் கழுவு கிறது. அவன் தலையை நிமிர்த்தினுல் எங்கே அடி விழுமோ என்ற எண்ணத்தில் நிலத்தையே பார்த்தபடி இருக்கிருன்,
மணல் ஒழுங்கை- அந்த மணலில் விழுந்திருக்கும் கோபால், சுற்றி ஒரு-கூட்டம் வேலுப்பிள்ளையர் நடுவிற்கு வருகிருர்,
"ஐயோ அண்ணே என்ரை பெடியளைக் காணயில்லை”* மீனுட்சி அழுகிருள்.
சீதேவியில்லே இளங்கோ இல்லை; செல்லமும் இல்லை.
எங்கே தங்கம்?" கணபதிப்பிள்ளையர் கேட்டார்." "விச யம் விளங்க இல்லையே?
வேலுப்பிள்ளையரும் மணியமும் விளங்கிக் கொண் டார்கள்
*"ஐயோ அவளோடை என்ரை மகன் ஓடிப் போயிட் டான்' மீனுட்சி கத்தினுள்
**செல்லம்..?" வேலுப்பிள்ளையர் கேட்டார்.
இளங்கோவோட." மணியன் காறித் துப்பிவிட்டு நடந்தான்
'சீ. சீ . அந்தத் தகப்பனில்லாதவனேட." வேலுப் பிள்ளையரும் நடந்தார்,
"அண்ணே, அண்ணே நில்லண்ணே, எனக்கொரு வழி சொல்லு' மீனுட்சியின் குரல் அவர் காதில் விழவில்லை" கூட்டத்தின் கண்கள் கணபதிப்பிள்ளையரையே நோக்கின

Page 82
156 மீட்டாத வீணை
நோயஸ், நாயஸ் எக்கேடும் கெட்டுப் போங்கோ மானம், ரோசம் கிடையாது. ஊரின்ரை பேரைக் கெடுக்க வந்ததுகள்" அந்த நல்ல மனிதரும் பேசிவிட்டு நடந் தார். திருவிழா முடிந்தது கூட்டம் கலைந்ததுE

14
மீனுட்சி சேலைத் தலைப்பை நிலத்தில் விரித்துக் குடி சையின் தரையில் படுக்கிருள். அவளால் அழுகையை இன்னும் அடக்க முடியவில்லை
"என்ரை பெடியள் இப்பிடிச் செய்யுங்களோ? அவள் வாய் முணு முணுக்கிறது: w "ஐயோ கடவுளே எனக்கு இனி ஆர்?"
வெறிச் சோடிக் கிடந்தது வீடு. பொழுது விடிந்து விட்டது. தேத்தண்ணி போட்டுத் தரச் செல்லமில்லை. கிணற்றடியிலே தேவன் தண்ணீர் இறைக்கும் சத்தமில்லை. ஆடு மட்டும் கத்துகிறது. தனிமை. பயங்கரமான தனிமை.
"எடியே அதை வையடி இதை எடடி இப்படி மீனட்சி இனி யாருக்குச் சொல்ல முடியும்.?
'அம்மா, தேத்தண்ணியைக் குடியன்' மீனட்சி எழுந்து பார்க்கிருள். அவள் இல்லை. செல்லம் இல்லை. வெறும் பிரமைதான்
**கொண்ணனுக்குத் தேத் தண்ணி குடுத்தனியே??? கேட்கத் துடிக்கிறது நாக்கு அவனும் அங்கில்லை. அவ ளும் அங்கில்லையே. மீனுட்சிக்குத் தன் தலையை நிலத் தோடு மோத வேண்டும் போலிருக்கிறது. அவள் எழுந்து கிணற்றடியை நோக்கி நடக்கிருள். வாளியில் தண்ணீர் இல்லை. அவனிருந்தால் வாளி நிறையத் தண்ணிர் இருக் குமே, மீனுட்கி கிணற்றுக் கட்டில் இருந்து விடுகிமுள்

Page 83
8 மீட்டாத விணே
ஆடு அவிழ்த்துக் கொண்டு ஓடி மிளகாய்ச் செடிகளைக் க்டிக்கிறது; துள்ளி எழுகிருள்.
"கு. கு. அடி செல்லம் ஆட்டைப் பிடிச்சுக் கட் டடி இஞ்ச மிளகாயெல்லாம் கடிக்குது. கொண்ணன்."
அவள் வார்த்தைகள் பாதியில் நிற்கின்றன. மீதி கண்ணிராக வடிகிறது, செல்லம் வரவில்லை.
ஆட்டை இழுத்துக் கட்டிய கோபால் மீனுட்சியின் அருகில் போய் நின்றன்.
மாமி’
"மோனை' அவனைப் பிடித்துக் கொண்டு அவள் அழுதாள். "மோனை. மோனை. அதுகள் இல்லாமல் என்னுலே இருக்க ஏலாது."
'மாமி இன்னுங் கொஞ்சத்திலே அதுகள் வந்திடும், நீங்கள் விரும்பினல், அதுகள் இஞ்சையே இருக்கும். மாமி, ஆசைப்பட்டதுகள் கலியாணம் கட்டினுல் என்ன பிழை??" கோபால் கேட்டான்.
'மாமி நீங்கள் கோபப்பட்டால் ஞாயம். ஏன் மற்ற வைக்கு இவ்வளவு வருத்தம்? உங்களுக்கு ஆறுதல் சொல்ல வேண்டியவை எல்லாம் இப்ப எங்கே???
"ஒமடா, மோனே எனக்கும் விளங்குது. நானும் என்ரை எண்ணப்படி நடக்க வேணுமென்று பார்த்தன். அது கள் கெட்டிக்காரர்கள் என்ரை பிள்ளையளில்லே? கோபால் அதுகள் எப்ப வரும்?" மீனுட்சி கேட்டாள்.
"இவ்வளவும் கலியாணம் முடிஞ்சிருக்கும். வழியிலே வந்து கொண்டிருப்பீனம்" கோபால் சொன்னன்.
"மோனை. அதுகள் புதுக்கப் புதுக்க மாப்பிளை பொம் பிளையாவரப் போகுதுகள் நான் ஒன்றும் செய்ய இல்ல: கொஞ்சம் உதவி செய்யிரியே. ஒரு சோறு காய்ச்சிப் Curranusir”'”

மீட்டாத விண்ண is 9
மீனட்சி பழைய மீனட்சியானள். பம்பரமானள் வீட்டைக் கூட்டிப் பெருக்கின ன். வீட்டு வாசலில் கோபாலைக் கொண்டு இரண்டு வாழைகள் நட்டு வைத் தாள். அக்கம் பக்கத்தவர்களும் ஒரு சிலர் வந்து உதவ ஆரம்பித்தார்கள். தடயுடலாகச் சமையல் நடக்க ஆரம் பித்தது. மீனட்சியின் மனதின் ஓர் ஒரத்திலே சிறிது வெட்கமும் வேதனையுமிருந்தாலும் அவள் முகத்தில் அது தெரியவில்லை. நேரங் கடந்து கொண்டிருந்தது. தனக்குப் பயந்து பிள்ளைகள் அங்கு வரமாட்டார்களோ என்ற பயம் அவளுக்கு ஏற்பட ஆரம்பித்தது. அவர்கள் வர வேண்டுமென அவள் பிரார்த்திக்க ஆரம்பித்தாள். எல் லோரும் மணமக்களை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண் டிருந்தனர்.
'பெடியள், வெடியைக் கொளுத்துங்கோடா, கார் வருகுது’’ மீளுறட்சி சத்தமிட்டாள். படபடவென சீன வெடிகள் வெடித்தன. கார் மணல் ஒழுங்கையில் திரும்பியது. திகைப்போடு மணமக்கள் காரைவிட்டு இறங் கினர். குத்து விளக்கும் கும்பமும் அவர்களை வரவேற்றன; கோபால் புன்னகையோடு நின்றன். மீனுட்சி புதுச் சேலை அணிந்து மலர்ந்த முகத்தோடு காணப்பட்டாள். வாசலில் அவர்களை ஆராத்தி எடுக்க இரு பெண்கள் காத்திருந்தனர். அவர்களால் தங்கள் கண்களையே நம்ப முடியவில்கல. ஒடிப் போனவர்களுக்கா இக்த வரவேற்பு? இப்படியும் நடக்க முடியுமா? தேவன் தன் தாயைப் பார்த்தான். 'அம்மா, எங்களை மன்னித்து விடு" என்று அவன் கண்கள் கெஞ்சினg
ஆனல் மீனட்சியின் கண்களிலோ பூரிப்புப் பொங்கி யது. அப்பப்பா, தேவிதான் என்ன அழகாக இருக்கிருள்? முகமோ மலர் போலிருக்க, கூந்தலிலும் மல்லிகை மலர் களை அழகாகச் செருகியிருந்தாள். கழுத்திலும் அழகிய தொரு மலர் மாலே -கன்னம் இரண்டிலும் மகிழ்வும், நாணமும் செங்குழம்பைப் பூசிக்கொண்டிருந்தன. ஆனல் கண்கள் மட்டும் மருட்சியோடு மீனுட்சியைப் பார்த்தன

Page 84
160 மீட்டாத வீணை
அந்தப் பார்வை மீனட்சியின் இதயத்தை ஏதோ செய்தது. தேவிக்குத் தான் பல கொடுமைகளைச் செய்து விட்டதைப் போன்ற உணர்வு-ஒரு கணம் அவள் அம்மம்மாவுக்கு ஏற்பட்ட கதி நினைவுக்கு வருகிறது; அடுக்களையில் வைத்து அவளை அடி த் த து-பாவம் பெண் பேதை மீனட்சி மீண்டும் தேவியைப் பார்த்தாள். தேவியின் விழி யோரங்களில் நீர் திரள ஆரம்பிக்கின்றது. மீனட்சிக்கு அது என்னமோ செய்கிறது,
மருமோளே வா' மீனட்சி ஒடிச் சென்று அவள் கரங்களைப் பிடிக்கிருள். தேவியின் கரங்கள் நடுங்குகின்றன, இதழ்கள் படபடக்கின்றன. அவள் பேச முடியாது தவிக் கிருள். தேவனின் இதயத்தில் இடம் கிடைத்தது பெரி தல்ல. மீனுட்சியே அவளே ஏற்றுக் கொண்டால்..? தேவி அப்படியே குனிந்து அவள் கால்களைக் கட்டிக் கொண் டாள். மீனட்சியின் உடலெங்கும் ஒரு புல்லரிப்பு. ஒரு பெண்ணுக்கு அவளுக்கு உரிய இடத்தைக் கொடுத்தாள். இத்தனை இன்பமா? அவள் கரங்கள் தன் மருமகளின் கூந்தலைத் தடவுகின்றன. கண்கள் ஏனே இன்பத்தால் பனிக்கின் றன. அவள் கண்கள் மட்டுமா? தங்கம் சேலத் தலைப்பால் தன் கண்களைத் துடைத்துக் கொள்கிருள். கோபால் தன் கண்களில் வடியும் கண்ணீரை மறந்து அந்த இன்பக் காட்சியைப் பார்த்து நிற்கிருன். இளங் கோவோ அந்த இன்பத்தில் செல்லத்தின் கரங்களை அழுத் துகிறன். செல்லமோ தன் தாயை எண்ணிப் பெருமை கொள்கிருள்,
‘என்னடா பார்த்துக் கொண்டு நிக்கிருய்? பெரிய மனுசர் மாதிரி செய்றதையும் சேய்து போட்டு. அது கள் வெயிலுக்க நிக்குதுகள் கூட்டிக் கொண்டு வாவெ னடா உள்ளே' மீனுட்சி தேவனைப் பார்த்து உரிமை யோடு பேசுகிருள். தேவன் புன்னகையோடு எல்லோரை யும் வீட்டுக்குள் அழைத்து வருகிருன்,

மீட்டாத வினை 61
* கலியாண வீடு களை தட்டுகிறது; ஆண், பெண்க ளெல்லாம் எங்கிருந்தோ வந்து சேருகிருர்கள். மீனுட்சி மகா ராணி போல் அங்குமிங்கும் கட்டளையிட்டவாறு திரிகிருள்,
"இலையைப் போடு இலையைப் போடு" என்று அவள் குரல் கேட்கும்.
*"தங்கம், இந்த இலையைப் பார்த்து கறியைப்போடு" என்பாள்.
* இளங்கோ மோனை, நெய் விடட்டோ?" என்று கேட்பாள்.
"அடக் கோபால் சாப்பிடனடா. சோறு அப் பிடியே இருக்கு" என்று கடிந்து கொள்வாள்.
Χ ΣΚ. XK
கல கலப்பாக அன்றையப் பொழுது அங்கே மறைந்து கொண்டிருந்தது. கணபதப்பிள்ளையர் மதுப்புட்டிகளைக் காலி செய்து கொண்டிருந்தார். அந்த ஏமாற்ற த தை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில் கல. மதுப்புட்டிகள் காலியாகக், காலியாக மனதில் குரோதமும், கோபமும், நிறம்புகின்றன.
'இதயம், பாசம், பண்பு-இது இருக்கிறவன் ஏழை யில்லை, எனபது வயதைத் தாண்டினலும் எனக்குத் துணை யாக இருக்கலாம். ஆனல். நீங்கள். சீ . போங்கோ'
தேவியின் வார்த்தைகள் அவர் இதயத்தில் இன்னும் இருந்தன. ஆண்களால் எதையும் தாங்கிக் கொள்ளலாம். ஆனல் ஒரு பெண்ணுல் அவன் புறக்கணிக்கப்பட்டால் அது தாங்க முடியாத வேதனைதான். அதுவும் கணபதிப் பிள்ளையர் பணத்தால் வெற்றிகளையே கண்டு வந்தவர், அவரால் அதைத் தாங்க முடியுமா?

Page 85
மீட்டாத விக்ன
"விசயம் முடிஞ்சு போச்சு வினுக மினேக்கெடாதேங் கோ" கோபால் சொன்னவை அவர் காதில் விழுகின் றது. அவர் மேசையில் ஓங்கி அறை கிருர் மதுப்புட்டிகள் நடுங்குகின்றன. அவர் கதவை ஓங்கிச் சாத்திவிட்டு நடக்கிருர், எதிரே வந்த மகளையும் சட்டை செய் யாது ஏதோ ஒரு வெறியுடன் அவர் காரை ஓட்ட ஆரம் பிக்கிருர், அவருடைய கார் அவரது கையாள் வீட்டிற் குச் செல்கிறது. அவருக்கு வேண்டாதவர்களே அடிப்ப தற்கும், அழிப்பதற்கும் என்று இருப்பவன்தான் நடரா சன். அவன் கையில் காசை வைத்து "காரியத்தை முடி" என்கிருர் கணபதிப்பிள்ளேயர்.
முதலாளி கவலைப்படாதேங்கோ' என்கிருன் அவன். அவர் முகத்தில் வெற்றிப் புன்னகை மலர்கிறது.
திண்னேயில் இருந்த வாறு கோபால், இளங்கோ தேவன் ஆகியோர் கல கலப்பாகப் பேசிக் கொண்டிருக் கிருர்கள். கதிரவன் விரைவாக மறைந்து கொண்டிருக்கி ரூன், புதுத் தம்பதிகள் இரவைக் காத்துக் கொண்டிருக் திருர்கள் என்று அவனுக்குத் தெரியும் போலும், இளங்கோ, தேவனின் கண்கள் அடிக்கடி வீட்டினுள்ளே சுழலுகின்றன.
தேவியின் தஐலயை மீனுட்சி வாசிக் கொண்டிருக்கிருள் தன் மருமகளின் நீண்ட, நெளிந்த கூந்தலத் தடவும் போது அவளுக்கு ஒரு மகிழ்ச்சி தன் மகனின் குறைகள் நிறைவுகளையும், விருப்பு வெறுப்புகளையும அலுள் சொல் விக்" ல் காண்டிருக்கிருள். அவர்களுக்கு எதிரே தங்கம் செல்வத்தின 'கூந்தல் அலங்கரிக்கிருள் கிழ விகள் இடை பிடையே கேலிப்பும் செய்கிருர்கள். இளகர்கள் வெட்கத் தால் இதழைக் கடித்துக் கொள்கிருர்கள்.
"தங்கம் பொழுது படப்போகுது. பொழுதுபட்டால் தலே இழுக்கக்கூடாது. கெதியா இழுத்து விடு' மீனுடசி
சொல்கிருள் தேவியின் தல பின்னியாயிற்று. அவள்
எழுகிருள்.
 

மீட்டாத விணே I ዘ 8
"இஞ்ச திரும்பு பிள்ளே பார்ப்பம்' மீனுட்சி தேவி யைப் பார்க்கிருள்." கடவுளே நா ஆறுபடக் கூடாது. என்றை கண்ணே பட்டிடும் போலயிருக்கு."
"மாமி, நீங்கள் தேத்தண்ணியும் குடிக்க இல்லே. போட்டுக் கொண்டு வரட்டே?" தேவி கேட்டாள்.
இன்றைக்கு உனக்க வேற வேலே கனக்க இருக்கு, போய் முகத்தைக் கழுவிக் கொண்டு வா. செல்லம் நீயும் போவனடி" மீனுட்சி சொன்னுள்.
"கொஞ்சம் பொறு மீனுட்சி. இன்னும் முடியூஇல்லே தலையைக் கொஞ்சம் குனி பின்ளே" தங்கம் சிெ ဂါ့(ချွံချွံ1း
தேவி அறைக்குள் சென்றுள் ag ,a,i,li,o. இ. வந்துவிட்ட தேவன், அவள் கரத்தைப் பற்றிக் கிெள் டான். அவள் அவன் விழிகளே ஆசையோடு பார்த்தாள். திருமணத்தின் பின் அவர்கள் இப்பொழுதுதான் தனி மையில் சந்திக்கின்றனர்.
"தேவி' அவன் கரங்கள் அவள் கன்னத்தைத் தடவு கின்றன. அவள் அவன் திறந்த மார்பில் தன் முகத் தைப் பதித்துக் கொள்கிருள் அவள் செவ்விதழ்கள் அங்கே முத்திரையைப் பதிக்கின்றன. அவள் மெதுவா கப் பேசுகிருள்.
"இன்னும் கொஞ்சம் பொறுங்கோ " 'ம் ஹ"ம்" அவன் அவளே இறுகக் கட்டிக் கொள் கிருன்.
"விடுங்கோ, ஆரும் வரப் போகினம் . விடுங்கோ வன் மாமியைக் கூப்பிடுவன்' தேவி சொல்கிருள். Cg,
"எனக்குப் பயமில்லே" ஆ 미 ! L1 THह-सािई li: dolf " ... חחם ש" "
in

Page 86
64 மீட்டாத வீணை
'டேய் அங்க என்னடா சத்தம்.? தேவி, இன்னும் முகங் கழுவ இல்லையே?' மீனுட்சியின் குரல் கேட்கிறது.
தேவி தேவனின் கன்னத்தில் கிள்ளி விட்டுத் துள்ளி ஒடுகிருள். அதை ஜன்னலினூடே பார்த்த செல்லம் "கிளுக்கெனச் சிரிக்கிருள்.
*"என்னடி சிரிப்பு??? மீனட்சி, கேட்க த், தங்கம் பார்க்கச் செல்லம் ஒன்றும் சொல்ல முடியாது தவிக்கிருள்.
'செல்லம் நான் கிணத்தடிக்குப் போறன். நீ வா " தேவி கிணற்றடியை நோக்கிப் போ கிருள். அவள் நடை யில் ஒரு துள்ளல் உள்ளத்தின் எதிரொலியது. முகத்திலே மின்னுகிறது ஒரு புண்ணகை. அவள் கதை குளத்திலோ, குட்டையிலோ முடியவில்லை. அவள் - ஏங்கிக் கிடந்த வாழ்வு கிடைத்து விட்டது. அவள். அவள். இன்று ஒருவ னுக்கு . அவள் ஆசைக்குரியவனுக்கு மனைவி நம்ப முடிய வில்லை. அவளுக்குக் கலியாணம் முடிந்து விட்டது. அவள் தாலியைத் தடவிக் கொள்கிருள். அவள் இதயமே மகிழ்ச் சியில் வெடித்துவிடும் போலிருக்கிறது தக்காளிப் பழங்களைக் கைகளால் தட்டியவாறு அவள் குழந்தைபோல் துள்ளித் துள்ளி ஒடுகிருள். இனி அவளை யாரும் கேலி செய்ய முடியாது.
இந்த உலகம் முழுவதும் கேட்கும் வகையில் "எனக் கும் கலியாணம் ஆகிவிட்டது" என்று அவள் கத்த விரும் பினள். வானத்துப் பறவைகளைப் ப ர்த்துக் கைகளை வீசினள். வாழை இலைகளை வருடிள்ை ஆட்டுக் குட்டியை அணைத்து முத்தங் கொடுத்தாள் நிலவைப் பார்த்துச் சிரித்தாள். இன்னுஞ் சில மணி நேரங்களின் பின், அவள் தன் கணவனின் மார்பில் சாய்ந்திருப்பாள். அந்த இணைப் பிலே அவள் வாழ்வின் இனிய நாதம் கேட்கப் போகி றது. அந்த இன்ப நாதம் எழுந்து அவளுடலெங்கும் ஒடு கிறது. கிணற்றடியை அடைந்த தேவி வாய்விட்டுச் சிரித்
தTள்

மீட்டாத வீணை 65
அவள் கண்களில் ஒட்டை வாளிதான் முதலில் பட் ஒரு சேலைத் துண்டால அவள் அந்த ஒட்டையை .5 ـه அடைத்தாள் அவள் இனி ஒட்டை வாளியில்லை. அந்த நீர் வீணுகப் போய்விடாது.
**எடி செல்லம், செல்லம். கெதியாக வாவனடி' அவள் கிணற்றடியில் நின்று கத்தினுள்.
"வந்திட்டனக்கா. போக விடுக்கோவன்" தன் வழியை மறித்துக் கொண்டு நின்ற இளங்கோவைச் செல்லம் கெஞ்சினுள். அவளுக்கு ஒர் ஆசை-தேவி அக்கா வைப் போல் தானும் அவன் கன்னத்தில் கிள்ளி விட்டு ஒடவேண்டு மென்று அவள், அவன் கன்னத்தைக் கிள்ள நெருங்கினுள், கை நடுங்கியது. அவன் சிரித்தான். அவள் வெட்கத்தோடு ஓடினள்.
தேவி தண்ணிர் அள்ள ஆரம்பித்தாள் கிணற்று விளிம்பில் நின்றவாறு துலாக் கயிற்றை இழுத்தாள் யாரோ பின்னுல் அசைவது போன்ற உணர்வு. செல்லமா? அவள் திரும்பினுள். அதற்குள் நடராசன் காரியத்தை முடித்து விட்டான். அவன் கை பலங் கொண்ட மட்டும் அவளைத் தள்ளியது.
"ஐயோ, அம்மா' அவள் வீரிட்டாள். கிணற்றின் பாதாளத்தை நோக்கி அவளுடல் போய்க் கொண்டிருந் தது. கணபதிப்பிள்ளையரின் கையாள் நடராசன் வேலி யால் பாய்ந்து மறைந்து விட்டான்.
செல்லம் "வீல்" என்று அலறிஞள்.
தேவனுக்கு எந்தக் குரலும் கேட்கவில்லை. ஆனல் தேவியின் குரல் தெளிவாகக் கேட்டது. எல்லோரும் கிணற்றடியை நோக்கி ஓடினர்கள். தங்கமும், மீனட்சி யும் ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விட்டார்கள். செல்லம் விம்மினுள். தேவனைத் தொடர்ந்து. இளங்கோவும் கிணற் றுக்குள் இறங்கினன். கோபாலோ கற்சிலைபோல் நின்றன்,

Page 87
66 மீட்டாத விணை
நிலவு மறையவில்லை; அந்த வேதனைக் காட்சியைக் காண்பதில் அதற்கும் மகிழ்ச்சியா? இல்லை . தேவியின் முகத்தைத் தேவன் பார்க்க வேண்டுமென்று ஒளி கெடுக் கிறதா? கிணற்று நீர்-அதற்குள் அமிழ்ந்து கொண்டிருக் கிறது அந்த இன்ப நாதம். தேவன் தேவியைத் தன் கரங்களில் அள்ளிக் கொண்டான். அவள் நெற்றியில் இப் பொழுது கரைவது குங்குமமல்ல. இரத்தம் . அந்த இரத் தத்தைக் கரைப்பது தண்ணிர் மட்டுமல்ல அவன் கண்ணி ரும் கூட. தேவி தன் விழிகளால் ஏதோ சொல்லத் துடிக் கிருள். அந்தப் பார்வை, "ஓ. தேவா என்னை வாழ வைச்சிட்டாய்" என்கிறதா? இல்லை, தேவா, இந்த உலகம் ஏன், என்னை வாழவிடவில்லை?" என்று ஏக்கத் தோடு கேட்கிறதா? தேவனின் கண்களில் திகில் பரவு கிறது. அவன் முடியும் வரை அவளைத் தன் மார் போடு சேர்த்துக் கொள்கிருன். 'தேவி, என்னைப் பிரிந்து போய் விடாதே’ எனும் அவன் இதயத்தின் ஒலி அவளுக்கும் கேட்கட்டும் என்ரு? இல்லை அவன் இதயத் துடிப்பாவது அவள் இருதயத்தை இயங்க வைக்காதா என்ற ஏக்கத் திலா? தேவி அவனையே பார்க்கிருள். அந்தப் பார்வை. அந்தப் பார்வை. அப்படியே நிலைத்து விடுகிறது.
**தே O 6...... ... ~ •r• ... ...’”
தேவனின் குரல் கிணற்றுச் சுவரெங்கும் மோதி எதிரொலிக்கிறது. பல இதயச் சுவர்களிலே மோதிப் பரிதாபமாக ஒலிக்கிறது. கிணற்றின் மேலிருந்து கண்ணிர்த் துளிகள் அவன் மேனியில் விழுந்து நனைக்கின்றன. அதைச் சகிக்க முடியாது நிலவு கருமேகங்களிடையே மறைந்து கொண்டது.
முற்றும்.


Page 88
நீ லங்கா அச்சகப, யாழ்ப்பாணம்.


Page 89


Page 90
っ*づ
a?
இதோ இன்னுமோர் ஈழத் @島山醯醚 皂體
கமலா வெ
இரண்டாெ
"* 45 in
காலக் காட்டாற்றி
எதிர்த்துக் கர்
ஒரு கன்ன
கரங் கொடுக்கத் து
அவள் கண்ணி
உங்கள் கர
விரைவில்
ஏ. ரி. நீத்தி
¢፵፱ [

து நாவல் 1 த்தில் பதியும் அற்புத நாவல் 1
1ளியீட்டாரின்
து வெளியீடு!
6 O’’
p வெள்ளத்தை ரையேறத் துடிக்கும்
ரியின் கதை!
துடிக்கும் ஒரு காளே !
சில் களிப்புறும்
ஒரு கூட்டம் !
ங்களில் தவழ
வருகிருள்
பகீர்த்தி எழுதிய,
ல ம் "