கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பெண்ணின் குரல் 2000.12

Page 1
áluai
டிசம்பர் 2000 இதழ் 22
பெண்களின் உரி
 

zsťat g5áš
0ISSN 1391-0914 0 விலை ரூபா 20/=
மைக்கான இலங்கைச் சஞ்சிகை

Page 2
பக்கம்
1. பெண்களும் படைப்பிலக்கியமும் O2
2. “கண்ணாடி" (சிறுகதை) O5
3. கோகிலா மகேந்திரன் (நேர்காணல்) 08
4. "நான் பெண்" (கவிதை) 10
5. தாமரைச் செல்வி (நேர்காணல்) 12
6. "உன்னைத்தான்" (உரைச்சித்திரம்) 14
7. திருப்பலி பூசை வழிபாட்டில் 17
8. கனவுகளேயாகி (சிறுகதை) 19
9. அவள் அழுது (கவிதை) 24
|10. ஏன் முடிவதில்லை (அபிப்பிராயம்) 26
11. ராஜம் கிருஷ்ணன் 29
12. எருமை மாடும் (சிறுகதை) 31 13. மாதுவுக் கேது ஓய்வு(கவிதை) స్.
ஆசிரியர் :
பத்மா சோமகாந்தன்
முகப்புச் சித்திரம் :
சம்பத்நாணயக்கார
அச்சுப் பதிவு :
ஹைடெக் பிரின்ட்ஸ்
ஆதரவளிப்பு : SIDA
டிசம்பர் 2000
இதழ் 22
ISSN 139 - O914
/
வெளியீடு
பெண்ணின் குரல்
21/25 பொல்ஹேன்கொட கார்டின்ஸ், கொழும்பு - 05. தொலைபேசி 074 - 407879/816585
ஈ-மெயில் : voicewom Gosltnet.lk
N
ク
 
 

V
வணக்கம் !
ggs
பெண்களின் எழுத்துக்கள்” இதழாக இவவிதழ் மலர்ந்துள்ளது. எழுத்துத்துறையில் பெண்கள் படும் அவஸ்தைகள் போலவே இவ் விதழுக்
குரிய படைப்புக்களைப் பெறுவதில் நாமும் பல சிரமங்களை எதிர்நோக்க வேண்டியிருந்தது.
இச்சிறு இதழிலே இலங்கையில் தமிழிலக்கியத்துறை யில் ஈடுபட்டுள்ள பெண்கள் அனைவரினதும் படைப்பு களைச் சேர்க்க முடியாமற் போனதுக்கு வருந்துகிறோம்.
எனினும் இதனை முதற்படிக் கல்லாக வைத்து எதிர்காலத்தில் எல்லோருடைய படைப்புக்களையும் வெளிக் கொணர முயற்சிகள் மேற்கொள்ளலாம் என எதிர்பார்க் கின்றோம்.
படைப்பிலக்கியத்துறையில் ஈடுபட்டுள்ள பெண்கள் பலருடன் தொடர்பு கொண்ட போதிலும் முழுப்பலனும் கிடைக்கவில்லை. தமிழ்ப்பிரதேசங்களில் நிலவும் போக்கு வரத்து மற்றும் இடர்களுக்கு மத்தியில் மிகச் சிரமப்பட்டே இதிலடங்கியுள்ளவற்றைப் பெற்றுக்கொள்ள முடிந்தது.
தமது படைப்புகளை நல்கி உதவிய சகோதரிகளுக்கு எமது நன்றிகள்.
"தமிழ்மகள்” என்ற பெயரில் சஞ்சிகை நடாத்திய மங்களம்மாளை நாம் மறக்கவில்லை.
சாந்தினை, பவானி, சசிதேவி, நயிமா சித்தீக், பாலேஸ்வரி, குறமகள் யோகா பாலச்சந்திரன் என விரியும் பட்டியலில் இன்னும்பல பெண்களின் ஆழமும் கருத்துச் செறிவும் மிக்க ஆக்கங்கள் எமது மனதைவிட்டு அகல வில்லை. எனினும் எல்லோருடைய ஆக்கங்களையும் சிறிய இதழில் அடக்குவதென்பது இயலாத காரியம்.
க்குறை எமது மனதில் தைக்காமலில்லை.
அன்றைய நிலையினின்றுப் வேகமாகப் பல படிகள் ஏறிச் செல்லும் சிந்தனையும் வீச்சும் இன்றைய பெண் படைப்பாளிகள் பேனாவில் பட்டுத் தெறிக்கிறது. எனினும் ாட்டின் சீரற்ற சூழ்நிலைகளால் பாதிப்பும் இடம்பெயர்வும் ஏற்பட்டிருப்பதனால் பலர்தம் கருத்துக்களை அழுத்தமாக எழுதமுடியாமலுள்ளதை மறைக்க முடியாது.
இந்நிலை விரைவில் மாறிப் பெண்கள் திட்பமும் நுட்பமும் மிக்க பல ஆக்கங்களைப் படைத்து அளிப்பார் களென எதிர்பார்க்கின்றோம்.

Page 3
பெண்க
படைப்
பெண்கள் இன்று பல்வேறு துறைகளிலும் தமது அறிவாற்றல், திறமை, ஆளுமையுடனான கவனத்தைச் செலுத்துகின்றனர்.இத்தகைய விழிப்பும் வீறும் பாரா ட்டுக்குரியதே. ஆனால் திடீரெனச் சிலதுறைகளில் கால் மிதித்து அங்கே வெற்றிக் கொடி நாட்டி விடவில்லையேயெனச் சிலர் விரக்தி கொள்ளலாம். ஆனால் படைப்பிலக்கியம் என்பது ஏதோ எடுத்த எடுப்பிலேயே "எடுத்தோம் முடித்தோம்" என எழுதி முடிக்கும் தகவல் களஞ்சியமல்ல. எழுத்து என்பது ஒரு ஆயுதம் போன்றது . அதனால் ஏற்படும் தாக்கம் பாரிய விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. ஆகவே அது நீண்ட காலம் திட்டமிடப்பட்டுத் தீர்மானிக் கப்பட்டு வடிவமைக்கப்பட்டு உண்மை இழையோட செதுக்கப்பட வேண்டிய ஒரு கலைச் சித்திரம், இத்தகைய எழுத்து ஓவியங்கள் மனித மனதைக் கவர்ந்து அதிலே உண்மையின் தத்துவத்தைப் பதிய வைத்துச் சிந்திக்கவோ செயலாற்றவோ கூடிய பாங்கினை உத்வேகத்தை ஊட்டல் அதன் நோக்கமாக அமைதல் சிறப்பாகும். மனித உணர்வின் அருட்டலை ஏற்படுத்தாத எழுத்துக்கள் வெற்றிபெற்றன என்று கொள்ள முடியாது. எழுத்தின் தாக்கம் அத்தகைய ஆற்றலும் வலிமையும் கொண்டதனாலன்றோ,
"பேனா வாளினை விடக் கூரியது
Pen is mighter than the sword
என்ற கருத்துப் பரம்பரை பரம்பரையாகக்
கையாளப்பட்டு வருகிறது
சமுதாயத்திலே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய இந்தப் பேனாவின் வலிமைக்கு ஆழ்ந்த அறிவும், சிறந்த கலைநுட்பமும், தேர்ந்த எழுத்தாற்றலும் கற்பனை நயமும் போதிய அனுபவமும் மெருகூட்டும் என்பதில் ஐயமில்லை. இவற்றோடு தனக்குள் முகிழ்க்கும் கருத்துக்களை இச் சமூகத்துக்குச் சொல்லி வைக்க வேண்டுமென்ற ஒரு உந்துதல் ஆர்வமும் மேலோங்கி நிற்க வேண்டும். தான் பெற்ற அனுபவத்தை
உணர்வை வாசிப்போர் மனதிலும் பதிக்க வேண்டும்.
இந்த நவீன இலக்கியவளம் இலங்கையைப்
பொறுத்தளவில் சுமார் 1930, 1935களில் முளை
 

ளும
இலக்கியமும்
பத்மா சோமகாந்தன்
விட்டது அங்கொன்றும் இங்கொன்றுமாக மங்களநாயகி தம்பையா போன்றோாபெண்களைப் பொறுத்தளவில் இத்துறையில் கால்பதித்தாலும், இவற்றை ஊக்கப் படுத்தவும் அலசி ஆராய்ந்து முக்கியத்துவப்படுத்தவும் கூடிய வசதி வாய்ப்புகள் அதிகமாக இருக்கவில்லை. ஒன்றிரண்டு அச்சகங் களே இயங்கிக் கொண்டிருந்த காலம். பத்திரிகைகள், சஞ்சிகைகள், நூல்கள் என்பன அதிகம் வெளிவராத,காலம் அப்படி வெளிவருப வையும் பரவலாக விநியோகமடையாத வாசிக்கும் ஆர்வமும் முகிழ்க்காத காலம். பெண்களும் இயல்பான அறிவு சிந்தனைகளோடு சம்பிரதாயம், சடங்கு களுக்கு உட்படுத்தப்பட்டு அவைபற்றிய அறிவோடு சிறந்த முறையில் இல்லறக் கடமைகளை ஆற்றித் துணையாக வாழ்வதே பிறந்த பயனை எய்தற்குரிய வழியாகக் கருதப்பட்டிருந்த காலம். பெண் கல்வி அறிமுகப் படுத்தப்பட்டாலும் அவற்றை எல்லா மட்டங்களிலும் உள்ள பெண்களும் மேற்கொள்ளக் கூடிய வகையில்
நடைமுறைப் படுத்தப்படாத காலம்.
பொதுவாகக் குறிப்பிடுவதனால் பெண் அழகுப் பெட்டகமாக மென்மையாய், பொறுமை யாய் பணிவாக அமைதியாக அடக்கமாக இருப்பதே போற்றுதலுக் குரியது என எதிர்பார்க்கப் பட்டகாலம். எத்தகைய உணர்வுகள், கிளர்ச்சிகள், எதிர்ப்புகள், உளத்தாக்கங்கள் ஏற்பட்டாலும் அவற்றையடக்கித்தலைகுனிந்து மெளனித் திருத்தலே சிறப்பாகக் கொள்ளப்பட்டதனால் பெண்மக்கள் காலங்காலமாக இத்தகையதொரு மெளனத்தையே தமது வாழ்வின் உயர்ந்த இலக் காகக் கைக்கொண்டு வாழ வேண்டுமென எதிர் பார்க்கப்பட்டது.
"பெண்ணுக்கு அழகு எதிர் பேசாதிருத்தல்" என்று கூறிய ஆணாதிக்கம் பெண்ணின் கால் களுக்கு மட்டுமல்ல கைகளுக்கும் வாய்க்கும் சிந்தனைக்குமே சேர்த்து விலங்கிட்டு வைத்தது.
பெண்ணின் அழகு இப்படியும் பேசப்பட்டது.
"பெண்டிர்க்கு அழகு உண்டி சுருங்குதல்” என அறிவுப்பசியை மட்டுமல்ல வயிற்றுப் பசியையும் அடக்கி அதுவும் ஒரு அழகுக் கோலமாகக் காட்டப்பட்டது.
محصہ
2 பெண்ணின்குரல் 0 டிசம்பர் 2000

Page 4
பாலின் வேறுபாடு ஒன்றையே காரணமாக்கிப் பெண்ணின் வாழ்வு, தன்மை, இலட்சியம் எல்லா
வற்றிலும் மேலாதிக்கம் செலுத்திய ஆண்கள், பெண்களை
"அச்சமும் நாணமும் மடனும் முந்துறுதல்
நிச்சமும் பெண்பாற்குரிய என்ப"
தொல்காப்பியம்
என்று இலக்கணம் கற்பித்துள்ளனர். அதாவது பெண்களுக்கு இயல்பாகவே உள்ள பண்புகளாவன அச்சம், மடம், நாணம்,என்ற கட்டினுள் பெண்ணை அடக்கி அவளைச் சுற்றி வேலி போடப்பட்டுள்ளதால் அவளுடைய எண்ணங்கள், கருத்துக்கள், சிந்தனைகள், உணர் வுகள் அடக்கப்பட்டுப் கட்டுப்படுத்தப்பட்டு மட்டுப்படுத்தப்பட்டன. சிந்தனை, உணர்வு, அறிவு வெளிப்பாட்டுடன் கூடிய படைப்பிலக்கியத் துறையைச் கைக்கொள்ள எடுத்த எடுப்பிலேயே சிந்திப்பதென்பது
இலகுவான காரியமில்லையே !
கடந்த நூற்றாண்டு தொடக்கம் தான் பெண் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது.ஆனால் சங்க காலத் துப் பெண்டிர் கல்வியின் உச்சநிலையில் நின்று பல ஆக்கங்களை வெளிப்படுத்தியுள்ளதை அவர்களுடைய படைப்புக்கள் இன்றும் பேசு கின்றன. அத்தனை காத்திரமும் வீச்சும் கொண்ட படைப்புக்களை முன் வைத்த பெண்களின் நிலை மங்கி மறைந்து நவீன இலக்கியப் படைப்போடு உயிர் பெற்றுத்தழைப்பதை நாம் அவதானிக்கலாம். ஆனால் அன்றும் இலக்கிய ஈடுபாட்டில் ஆண்களோடு ஒப்பிடும்போது பெண் களுடைய தொகை குறைவாக இருந்தாலும், கனதியான காத்திரமான ஆக்கங்களை அவர்கள் தோற்றுவித்தனர் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
ஏன் இன்றும் கூட பெண்கள் படைப் பிலக்கியத் துறையில் கணிசமான அளவினரே ஈடுபடுகின்றனர் ஏன்? என்றொரு கேள்வி பரவ லாகவே எங்கும்
நிலவுகிறது.
காலங்காலமாகப் பெண்கள் தியாகத்தின் சின்னங்களாக தம் உயிரை,உடலை, உணர்வை, உணவை ஏன் வாழ்வின் சகல அம்சங்களையுமே தம் குடும்பத்துக்காக அர்ப்பணிப்பதான ஒரு போக்கே பெண்களிடம் திணிக்கப்பட்டது. அப்பண்பையே பெண்களும் தம் வாழ்வின் நோக்கமாகக் கொண்டு வாழ்ந்தனர். ஆனால் இந்நிலையில் இருந்-து இன்னும் பெண்ணினம் விழித்தெழுந்து தானும் வாழும் ஒரு உயிரினம் தனக்கென்றும் சொந்தமான சில விருப்பு வெறுப்புக்கள் உணர் வுகள் அபிலாசைகள் சிந்தனைகள்
உரிமைகள் உண்டென்பதை உணர்ந்து வாழ்வதனால்
M

ר பெண்ணினம் மட்டுமல்ல, சமூகமுமே உன்னதம்
பெறும் என்ற உண்மை புரட்சிக் கவிஞர் பாரதி, வ.வே.சு.ஐயர், வ.ரா. மாயூரம் வேதநாயகம்பிள்ளை மகாத்மா காந்தி போன்ற தீட்சண்யமும் தீவிரமும் மிக்க தலைவர்களால் உணர்த்தப்பட்டுப் பெண் களும் தமது நிலைமையை மெதுமெதுவாக உணரத் தலைப்பட்டுள்ளனர். அறியாமை இருளைப் போக்கி அறிவொளியைப் பாய்ச்சக் கல்விச் சுடரை பெண்கள் மத்தியிலும் ஏற்றினர். எனினும் அறியாமை, மூடக்கொள்கை, பகுத்தறிவற்ற பழக்க வழக்கங்கள் என்பன ஓர் இரவுப் பொழுதோடு திடீரென அழிந்து விடாதே. அததற்குரிய காலம் எடுக்கவே செய்யும்.
கல்வியை மேற்கொண்டால் மாத்திரம் கலைத் துறையில் ஆக்க இலக்கிய உலகில் சிறகு கட்டிப் பறந்துவிடலாமென்று கருதுதல் தவறு. அறிவு விரிவுக்கு எழுத்து நடைக்கு மொழிப் புலமைக்குக் கல்வி துணைபோகலாம். ஆனால் படைப்புத்துறைக்கு தனியான ஒரு சிந்தனை, ஆர்வம் தன்னையறியாத ஒரு உந்துதல், கற்பனைச் செறிவு புதுமையும் நுட்பமுமான ஒரு சிந்தனை ஒழுக்கம், நிறைந்த வாசிப்புப் பயிற்சி போதிய அனுபவம் என்பன துணை செய்கின்றன. இத்தனை அணிகளோடு ஒரு படைப்பை அது ஒரு நாவ லாகவோ சிறுகதையாகவோ, நாடகமாகவோ கவிதையாகவோ புதுக்கவிதையாகவோ எந்த இலக்கிய வடிவமாக வடித்து இருப்பினும் அதனை வெளிக்கொணர ஏற்ற தளம் வேண்டும். இலங்கையைப் பொறுத்தளவில் வீரகேசரி, தினகரன், தினக்குரல், சுடரொளி, சரிநிகர் போன்ற பத்திரிகைகளும் மல்லிகை, ஞானம் போன்ற மாசிகைகள் சஞ்சிகைகள் சிலவும், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்கள் மூலம் வெகுசில இலக்கிய முயற்சிகளும் படைப் பிலக்கியப் பரப்பில் மேற்கொள்ளப்படுகின்றன. இவற்றில் அருமை பெருமையாகப் பெண்களுடைய ஆக்கங்கள் இடம் பெற்றாலும் அவர்களுடைய ஆக்க வெளிப்பாடடிற்கான பயிற்சித்தளங்களாக எதுவுமே யில்லை ஆக்க இலக்கிய வளர்ச்சிக்கு அத்துறை பற்றிய அறிவும் ஆற்றலும் மட்டுமன்றிப் போதிய பயிற்சியும் அவர்களுடைய எழுத்துக்களை மேலெழச் செய்கின்றது.
ஆண்களைப் போலன்றி, வீட்டுவேலைகள் நாள் முழுவதுமே நேரத்தைக் கொள்ளை கொள்ள அவற்றோடு தற்காலத்தில் தொழில் பார்க்கும் பெண்கள் இரட்டைச் சுமையைச் சுமந்து கொண்டு, மனமும் உடலும் அமைதிபெற்று ஆறியிருந்து இலக்கிய விடயங்களில் தம்மை ஈடுபடுத்தப் போதிய அவகாசமேயின்றித் தவிக்கின்றனர். இலக்கியம் சம்பந்தமான மாநாடுகள்
விழாக்கள், கருத்தரங்கு கள், பட்டிமன்றங்கள், உரைகள்,
الص
பெண்ணின்குரல் 0 டிசம்பர் 2000

Page 5
நூல் வெளியீடுகள் ஆகியவற்றைப் பார்த்துத் தமது அறிவை வளர்ப் பதற்கும், தெளிவு பெறுவதற்கும் விமர்சிப்பதற்கும் போதிய சந்தர்ப்பங்கள் நம் நாட்டைப் பொறுத் தளவில் வெகு அரிதாகவே கிடைக்கின்றன. இலக்கியம் சம்பந்தமான விஷயங்களை அதோடு இணைவுள்ள வர்களைச் சந்தித்துப் பேச அளவளாவ,
கலந்துரை யாடப் போதிய வசதிகள் இல்லை.
பெண்கள் தனிமையில் பிரயாணம் செய்யவும், வீட்டு வேலைகளிலிருந்து விலகி இன்று இத்தகைய இலக்கிய முயற்சிகளில் தன்னைக் கரைத்துக் கொள்ளக் கூடிய சூழ்நிலை வெகுகுறைவாகவே இருக்கிறது. இதனால் குடும்ப பாரத்தைச் சுமந்து கொள்ளத் தொடங்குமுன் பேனா பிடித்த பெண்கள் குடும்பம், குழந்தைகள், வீட்டுப்பராமரிப்பு என்று பொறுப்புக்கள் தோளில் சுமையாகக் கணக்கக் பேனாவை மூடித் தொலைத்து விடுகின்றனர்.
நாட்டின் வன்செயல்களால் பாதிக்கப்பட்ட பேனா பிடித்த பெண்கள் சிலர் உடலும் மனமும் நலிந்து வாழ்வின் தொல்லைகளில் சிக்குண்டு பல சம்பவங்களும் கருத்துக்களும் இலக்கியமாக ஊற் றெடுக்கத் தோன்றினும் மன அவசங்களும் அகதி வாழ்வில் அவலங்களும் எழுதுவதற்கு ஏற்ற மனநிலை யைப் பறித்தெறிந்துவிட்டன. சிலர் இடம் பெயர்ந்து வெளிநாடுகளுக்குச் சென்று புதிய சூழலில் வாழ் வதனால் படைப்பிலக்கியத்தை கைகழுவிவிட்டனர். ஒரிருவர் அங்கிருந்தும் தொடர்ந்து எழுத்து முயற்சி களில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் தமது எழுத்துக்களைக் கூர்மைப் படுத்துவதற்கும் புதிய புதிய உத்திகளைக் கையாண்டு உருவமைப்பைத் திறம்பட ஆக்குவதற்கும் பல்வேறு நூல்களைத் தொடர்ந்து வாசிக்கும் பழக்கமும் அத்தியாவசிய தேவையாகும். அவ்வக் காலங்களில் வெளிவரும் சமகால இலக்கியங்களைத் தவறாமல் பெற்று வாசித்துத் தம் எழுத்திற்கு வளம் சேர்க்க வேண்டும். நம் நாட்டில் யுத்தநிலை காரணமாகப் போக்குவரத்தில் பல கஷ்டங்கள் இருப்பதனால் அவ்வப் போது வெளியாகும் நூல்களைப் பெற்றுக் கொள்வ தென்பதே பெரும் துர்லபம். அதோடு பல வேலைப் பழுவின் மத்தியில் அவற்றை ஆழமாக வாசிப்ப தென்பதும் பெண் களைப் பொறுத்தளவில் சிறு
கடினமான காரியம் தான்.
இத்தகைய சுமைகளெல்லாம் அழுத்திய போதிலும் இன்னும் சில பெணிகள் வெகு அற்புத
மான கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள், கட்டுரை

கள், நாடங்கள் என எழுதவும் செய்கின்றனர். வறுமை, ஒழுக்கம், ஒற்றுமை, குடியின் கொடுமை, உண்மை பேசுதல், சீதனக்கொடுமை போன்ற சமூக சீர் திருத்தக் கருத்துக்களையே மையமாகக் கொணர்டு திரும்பத்திரும்ப இவற்றையே அழுத்தும் கருத்துக் களிலிருந்து இன்றைய படைப்பாளரின் சிந்தனை சூழலுக்கேற்பவும் சமூக கலாசார வளர்ச்சியில் சில படிகளை விளக்குவதாகவும், விஞ்ஞான தொழில் நுட்ப அறிவுகளை உள்ளடக்கியதாகவும் அமைந் திருப்பதை அவதானிக்கலாம். பெண்களுடைய கல்வி யறிவு மேலோங்கி வரு வதையும் சிந்தனை வளம் பெறுவதையும், பெணி தன் காலில் நிற்கவும் வரு வாயைத்தேடவும் சுதந்திரமாகவும் பொருளாதார வசதியுடன் வாழும் வாழ்வுமுறைகளும் சுட்டப்படு கின்றன. "கல்லா னாலும் கணவன் புல்லானாலும் புருஷன்"என்ற நிலையினின்று மாறி பெண்அடிமையல்ல சுதந்திரப் பிறவி, அவளுக்கும் சொந்தமான கருத்துக்கள், ஆசைகள், திட்டங்கள் கற்பனைகள் உண்டு. அவள் அடிமை விலங்கை உடைத்துவெளியே உலாவி சுதந்திர க்காற்றை சுவாசித்தால் தான் குடும்பம் சிறப்புறும் சமூகம் சீருறும் என்ற கருத்துக்களோடு பெண்களுக் குள்ள பிரச்சினைகள் பாலியல் தொல்லைகள், அசமத்துவநிலைகள் என்பவற்றை யெல்லாம் பிட்டு வைக்கும் கருத்துக்கள் இன்றைய இலக்கியத்தின் கருவாக அநேகமான பெண்களால் எடுத்தாளப் படுகின்றன. இன்று பெண்கள் தாமே தமது பிரச் சனைகளை எடுத்துச் சொல்லித் தீர்வுகாண விழை கின்றனர். இந்நிலை இன்றைய படைப்பு இலக்கியப்
போக்கில் நல்ல தொரு திருப்பமெனக் கொள்ளலாம்.
இன்றும் இளம் யுவதிகள் மத்தியிலே வீரிட்டு க்கிளம்பும் சிந்தனை வீச்சைக்கொண்ட படைப்புக்கள், கலைநயத்தோடு வெளிவருவதை நாம் அவதானிக் கலாம். சிறுகதை, கவிதை ஆக்கங்கள் பற்றி இன் றைய 11ம், 12ம் ஆண்டுப் பாடத்திட்டத்திலும் இணைக்கப் பெற்று கற்பிக்கப்படுகிறது. பெண்கள் அமைப்புக்கள் சில எழுத்துப் பயிற்சிக்கான பட்டறைகளையும் நிகழ்த்திப் பெணிகளை இத்துறைக்கு இட்டுச் செல்ல பயிற்சியும் வழிகாட்டலும் செய்கின்றன. எத்தனை பயிற்சிகளில் பட்டறைகளில் பங்குபற்றினாலும், எழுத்து என்பது ஒரு தவம் அதனை நாம் நன்கு உணர்ந்துகொண்டு மனப்பக்குவத்துடன் தொடர்ந்து அதனை அணுகினால் எழுத்தை ஆளுவதில் வெற்றியடையலாம் என்பது நிச்சயம். எழுத்து என்பது அளவில் அல்ல அதன் தரத்திலேயே அதன் கனதி கணிக்கப்படுகின்றது.
أص
பெண்ணின்குரல் 0 டிசம்பர் 2000

Page 6

சிறுகதை
கோகிலா மகேந்திரன்
அது ஒரு பழைய கண்ணாடி பழைய பிளாஸ்டிக் பிரேமுடன் இருந்தது. அண்மை யில்தான் நான் அதற்கு இந்தத் தங்கப் பிரேம் போட்டுக் கொண்டேன். "புதுக்கண்ணாடியா
மிஸ் ?" என்று எல்லோரும் கேட்கிறார்கள்.
"றி ஃபிறேமிங்"(Reliaming)என்று சொன்னேன்,
புரிந்து கொள்பவர்கள் புரிந்து கொள்ளட்டும் புரியாதவர்கள் புரிந்து கொள்வதற்கான தேடலைத்
தொடங்கட்டும்.
எனது இளமைப்பருவத்தின் காதல்நினைவுகளும் திருமண வாழ்வு பற்றிய கனவுகளும், எதிர்பார்ப்பு களும் எல்லாம் கானலைப் போலத் துரத்து மாயையாய் ஆடி மறைந்து விட்ட காலம். ஆம். காலம் பல வருடங்களை விழுங்கி ஏப்பம் விட்டு
விட்டது.
அந்தப் பெண்கள் விடுதி, திருமணமாகாத பெண்களுக்காகவே நடத்தப்பட்டாலும், அதில்
நான் ஒருவாறு சேர்ந்து கொண்டேன்.
அது துறவிகளுக்கா சுத் திறக்கப் படா விட்டாலும், மனத்தளவில் நானும் ஒரு துறவி
என்றே எல்லோரும் பேசிக்கொள்கிறார்கள்.
மற்றவர்களைப் போல நானும் ஏதோ பெயருக்கு உடுத்திக் கொள்கிறேன். அலங்காரம் எதுவும் செய்து கொள்ளாமலே இயல்பான அமைவுடன் கல்லூரிக்குப் போய் வருகிறேன்
அந்தவகையில் நான் ஒரு துறவி என்பது சரிதான்!
ஆனால் எனது மனம் .? உணர்வுகள் .? "அந்த கேள்ஸ் கொலீஜ் பிரின்சிப்பல் சரியான ஸ்டிரிக்ற் பள்ளிக் கூடத்திலை ஒரு பிள்ளை ஒழுக்கத்திலை ஒரு சின்னத் தவறு விட்டாலும், அப்பிடியே தோலை உரிச்சுப் போடும், மனுஷி "
என்று மாணவர்கள் கதைப்பது என் காதிலும்
பலமுறை விழுந்திருக்கிறது.
الد
பெண்ணின்குரல் 0 டிசம்பர் 2000

Page 7
நான் ஏன் அப்படிக் கடுமையாக இருக்கிறேன்? "அவவுக்கு ஆம்பிளையஸ் ஒருத்தரையும் பிடிக்காது. ஹஸ்பண்ட் செத்திட்டாராம். அதாலை நாங்கள் போய்ஸ் ஓடை கதைச்சால், அவவுக்கு ஒரு எரிச்சல் அவவுக்கு ஹஸ்பண்ட இல்லாட்டில்
அதுக்கு நாங்கள் என்ன செய்யிறது ?”
என்று அவர்கள் குசுகுசுப்பதும் எனக்குத்
தெரியும் ஆனால் .. ?
இவர்கள் எல்லாம் நினைப்பது போல நான்
மனத்தளவில் துறவி இல்லை அல்லவா?
அப்படியானால் நான் யார் ?
இது கட்டிளமைப் பருவத்துக் கேள்விதான் 1பரவாயில்லை எனக்கு நானே இதுவரை காலமும் போட்டுக் கொண்டிருந்த சுய கட்டுப் பாடுகள் எல்லாவற்றையும் பிய்த்துக் கொண்டு வெளியே வர முயலும் ஒரு பறவை! அப்படி முயன்ற ஒரு படியில்தான், என்னுடைய சைவ உணவுப் பழக் கத்தை உடைத்து, அன்று அந்த ஆட்டிறைச்சியை வாங்கி, றுாமில் வைத்துச் சிறிதளவு எணர்ணெய் விட்டு வதக்கினேன்.
அதன் பின் ..?
என்ன . ?
என் தான் நடந்தது .?
திடீரென்று நெஞ்சை யாரோ பிசைவது போல இருந்தது. சடுதியாக வியர்த்தது. இருட்டிக் கொண்டு வந்தது எதற்கென்று தெரியாமல் கடும் பயமாக இருந்தது. ஒடிப் போய்க் கட்டிலில் விழுந்து படுத்துத் தலையை மூடிக் கொண்டேன். ஐந்தாறு மணிநேரம் அந்தப் பயம் நீடித்திருந்தது. பிறகு மெதுவாக எழுந்தேன்.
அந்த இறைச்சிக் கறியை நான் சாப்பிட
வில்லை.
எனக்கு என்ன நடந்தது ?
வெட்ட வெளியில் சுதந்திரமாய் வந்து நிற்க விரும்பினேன். மனதில் இருந்த நரைச்சல் எல்லாம் போய் சகலதும் வெளித்துவிட வேண்டும் என்று விரும்பினேன். சிலந்தி மாதிரி என்னாலேயே உருவாக்கப்பட்ட நூலில், அமிழ்ந்து போயிருந்த நான், நூல்க்ள் அனைத்தையும் அறுத்துக் கொண்டு
வர விரு ம்பினேன்.

ஆனால் .
எனக்கு அடிக்கடி பயம் பயமாக வருகிறது. ஏன் என்னையே எனக்குப் பிடிக்கவில்லை.
ஏன்.?
இடிஇடியாய்ச் சத்தங்கள் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்த ஒரு பகல் போதில், எனது கணவர் "ஷெல்" விழுந்து சிதறிப்போன பிறகு,
நான் எனது ஆசைகள் எல்லாவற்றையும் அடக்கிவிட முனைந்தேன். ஆனால், நிச்சயமாக நான் துறவி இல்லை. மகிழ்வுகளை அடக்குவது, ஆசைகளைத் துறப்பது, பொறிகளை ஒடுக்குவது, புலன்களை மூடுவது எல்லாம் பெரிய கஷ்டமான
விடயங்கள் !
என்னுடைய தலையில் இவ்வளவு காலமும் நானே போட்டுக் கொண்ட அநாவசியச் சுமைகளை
இறக்கிவிடலாம் என்றால்,
"ஐயோ, ஏன் இப்படிப் பயமாக இருக் கிறது ? "மாணவிகள் சொல்வது போல, எனக்கு ஆண்களின் தொடர்பு மட்டும் அல்ல, அவர்களின் நினைவு கூடப் பிடிக்காது தான் எனக்குக் கீழே “மென்ஸ்ராவ்" வேலை செய்யவே முடியா தென்று மற்றவர்கள் அபிப்பிராயப்படும் அள விற்கு நான் கொலீஜ் இல் ஆண்களுடன் "சிடுசிடு” என்று இருப்பேன்.
ஆசிரியைகள் பாடசாலைக்கு ஐந்து, பத்து நிமிடங்கள் "லேட்” ஆக வந்தால், கண்டும் காணாதது போல இருந்து விடும் நான், ஆணி ஆசிரியர்கள் அப்படி வந்தால், “எக்ஸ்பிளனேசன் லெட்டர்" தரவேண்டும் என்று கடு கடுக்கிறேன்.
"அந்த மனுஷிக்கு வேலை இல்லையடாப்பா காலமை ஏழு மணிக்கு ஸ்கூலுக்கு வந்திடும் எங்களையும் அப்பிடி வா எண்டால் , நாங்கள் என்ன செய்யிறது?’ என்றும், நான் சொல்லட்டே, மனுஷி புருஷனோடை வாழ்ந்த அந்த ஒரு வருஷம் நல்லாக் கஷ்டப்பட்டுப் போட்டுது. மனுஷிக்கு இன்னொரு கலியாணம் அவவின்ரை படிப்புக்கும், அறிவுக்கும் பொருத்தமா, செய்து வைச்சாத்தான் உது சரிவரும் .”என்றும் அவர்கள் தமக்குள் கதைத்துக் கொள்கிறார்களாம்.
எண்பத்தேழாம் ஆண்டில் ஒரு உள்ளம்| எரியும் நாள் நிழல் சொரியும் மரங்களெல்லாம்
لهس
பெண்ணின்குரல் 0 டிசம்பர் 2000

Page 8
நெருப்பை அள்ளிச்சொரிந்து கொண்டிருந்த வேளை !
அங்குலம் தவறாமல் ஷெல் விழுகுது ! ஒருத்தரும் அசைய இயலாது. இந்திய அமைதி (?) காக்கும் படை ஊரடங்கு போட்டிருக்கு ! அவற்றை தலையிலை நேரா அந்த ஷெல் விழேக்கையும் மனுஷன் என்னைத் திட்டிக் கொண்டுதான் இருந்தது. அவர் என்னதான் பொல்லாத மனுஷனா (மனுஷன் எண்டு சொல்ல ஏலாது மிருகந்தான்!) இருந்தாலும், அவர் செத்தபிறகு, அந்த உடலுக்கு மரியாதை செய்திருக்க வேணும் நான்! செய்ய முடியாமல் போனது எனக்குப் பெரிய தாக்கந்தான் என்ன செய்யிறது ? நேரம் அப்பிடி எல்லாரும் ஓடிக் கொண்டிருந்த அவசர வேளை . கால தாமதம் செய்ய முடியாது.
வீட்டுப் பின் வளவில் தான் போட்டு எரித்து விட்டு அவசரமாய் ஓடினோம் !
உயிரைக் கையில் பிடிக்கும் ஓட்டம் !
அம்மா . ஆ. s2, ....... நெஞ்சுக்கை ஏதோ பயமாக்கிடக்கு . கொஞ்சம் பொறுங்கோ வாறன்.
இது இப்போது அடிக்கடி வருகிறது ! நெஞ்சை யாரோ பிசைவது போல இருக்கும். சடுதியாக வியர்க்கும். இருட்டிக் கொண்டு வரும்.
நேரத்தோடு அங்கே போய்ச் சேர்ந்து விட்டேன் இங்கிலாந்தில் இருந்து அந்த உள வைத்திய நிபுணர் வந்திருப்பது பற்றிக் காலைப் பத்திரிகை அறிவித்திருந்தது.
எனக்கு இந்தப் பய உணர்வு வந்த முதல் அனுபவத்தைக் கேட்டார். சொல்லிக் கொணர் டிருந்தேன். அது ஒரு படம் போல என்மனதிலும், தனது மனதிலும் ஓடும் வரை விபரமாகக் கேட்டார்.
"அன்று பாடசாலையில் இருந்து திரும்பி வந்தேன். நேரம் இரவு ஆறுமணி இருக்கும். உடுப்பை மாற்றிவிட்டுத் தேநீர் தயாரித்தேன். குடித்தேன் பிறகு அந்த இறைச்சியை எண்ணெய் விட்டு வதக்கினேன்.?
"அப்போது என்ன மணம் வந்தது..?
66
ஆ . எனது கணவரின் உடல் பின் வளவில் எரிக்கப்பட்ட போது வந்த அதே மணம்
ஆனால் அப்போது அது என் நினைவுக்கு
ܥ

ܕܐ
வரவில்லை .”
" சரி . இப்போது தெரிகிறது அதே மணம் . இல்லையா ? "
“ஆம். நெஞ்சை யாரோ பிசைது போல இருக்கிறது. ”
* சரி . கணவரின் உடல் எரிக்கப்பட்டது தொடர்பான அந்த உணர்வு. அந்தக் கவலை .?
"நான் பயப்படுகிறேன். நான் கூடாதவள்
நான் பாவி . y9
"நீங்கள் பாவி என்கிறீர்கள் எதனால் ?”
எனது கணவரை. அவர் என்னைத் துன்புறுத்தியது உண்மையாயினும். நான் நல்ல முறையில் தகனம் செய்யவில்லை. yy
"அவர் உயிரோடு இருந்த போது நீங்கள் அவரை வெறுத்தீர்கள்."
அவர் என்னை மோசமாகக் கொடுமைப் படுத்தினார் அடித்தார் . yy
“அதனால் வெறுத்தீர்கள் . "
“கடுமையாக . yy
ஆயினும் இறந்த பிறகாவது, மதிப்புத் தர வில்லை என நினைப்பது, குற்ற உணர்வைத் தரு
கிறது. ”
A.
"இருக்கலாம் . 外
" உங்களைப் பற்றி மிக மோசமான அபிப்பிர
ாயமே உங்களுக்கு இருக்கிறது . Sy
A 000 k h
"சரி. இதைப் பாருங்கள். உங்களைக் கொடுமைப்படுத்திய கணவரைக் கூட நல்ல முறையில் தகனம் செய்ய உங்கள் உள் மனம் விரும்புகிறது. நீங்கள் அளவுக்கு மென்மையான உள்ளம் கொண்டவர் அந்த அளவுக்கு நல்லவர்."
உண்மையாகவா ? என்னிடமும் சில நல்ல பணிபுகள் உள்ளனவா ?
நான் முதல் முறையாக எனது மனக் கண்ணா டியில் என்னைத் தெளிவாகப் பார்க் கிறேன். என்னிடமும் நல்ல பக்கங்கள் பல இருக்கக்கூடும்.
நான் ஏன் பயப்பட வேண்டும் ?
(நன்றி - வலம்புரி 20.12.2000)
لهم.
பெண்ணின்குரல் 0 டிசம்பர் 2000

Page 9
L கோகிலா LD(335ibb
சிறுகதை என்றால் என்ன ?
சிறுகதைக்கு வரைவிலக்கணம் கூறுவது கடினம் நல்ல சிறுகதை ஒன்று புதிய அனுபவம் ஒன்றை வாசகருக்குத் தொற்ற வைக்கக்கூடிய மின்வெட்டுப் பார்வையாக இருக்க வேண்டும்
என்று கூறலாம்.
சிறுகதை நூறு மீற்றர் ஓட்டம் போன்றது என்பர் சிலர். அதன் வினைத்திறன் ஆரம்பத்தி லிருந்த இறுதிவரை ஒரே சீராக இருக்கும்.
சிறு கதை ஒரு யன்னல் பார்வை என்பர் வேறு சிலர். வாழ்வின் ஒரு குறிப்பிட்ட பகுதியைக் கூர்ந்து நோக்கும் அது.
"சிறுகதை என்பது அரை மணியிலோ, ஒரு மணியிலோ அல்லது இரண்டு மணியிலோ ஒரே மூச்சில் படித்து முடிக்கக் கூடியதாய் இருக்க வேண்டும் அது தன்னளவில் முழுமை பெற்றிருக்க வேண்டும். கதையைப் படித்து முடிப்பதற்குள், புறத்தேயிருந்து எவ்விதக் குறுக்கீடுகளும் பாதிக் காமல் வாசகனின் புலன் முழுவதும் கதை ஆசிரியரின் ஆதிக்கத்தில் கட்டுப்பட்டதாய் இருக்க வேண்டும் gy
GT 6öTu Tsi 6TL 5Ts 9Jap6öt (3Lust (Edgar Allan Poe)
"சிறுகதை என்பது ஒரே ஒரு பாத்திரத்தின் நடவடிக்கைகள் பற்றியோ ஒரு தனிச் சம்பவம் பற்றியோ, அல்லது ஒரு தனி உணர்ச்சி தரும் விளைவையோ எடுத்துக் கூறும் இலக்கிய வடிவம்"
என்பது பிரான்டர் மத்தியூனின் கருத்து (Brander Mathewg)
உங்களைச் சிறுகதை எழுதத் தூண்டியது எது ?
ஒருவரது நடத்தையை தீர்மானிப்பது பாரம் பரியக் காரணிகளும் சூழலின் இயல்புகளுமே.
 

தெல்லிப்பழை தென்மேற்கில் அமைந்த, வாழையும் கமுகும் வெற்றிலையும் நிறைந்த, விழிசிட்டி என்ற அழகிய கிராமம் எனது பிறந்த ஊர். இன்று அது அதி உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் மனிதர் இன்றிக் காடு பற்றிக்
கிடக்கிறது) மழைகால அருணோதயம் போல் இனிமையான வாழ்வு.
உறவினர் அநேகர், மென்மையான கலை உள்ளம் கொண்ட சைவ உணவுக்காரர். தேவாரங் களைப் பண்ணோடு இசைப்பதில் புகழ் பெற்ற வர்கள். எனது தந்தையார் பாரம்பரிய இலக்கியங் களிலும், புராணங் களிலும் அறிவு மிகுந்தவர். அதிபராக இருந்தும் சத்தியவான் சாவித்திரி இசை நாடகத்தில் சாவித்திரியாக நடித்தவர். மனித மனத்திற்கு அமைதி தேடும் வழியாகக் கலையைப் பாவித்த பாரம்பரிய, சூழல் முறையை நானும் பழகிக் கொண்டிருக்க வேண்டும்.
உணர்வுகள் கொந்தளித்த போது எழுதத் தொடங்கினேன். ۔
உங்களை வழி நடத்தியவர்கள் பற்றி ?
சிறு வயதில் நாள் தோறும் தந்தையாருடன் காலையில் கிணற்றடியில் குளிக்கும் போது எனக்கு "திருக்குறள்" பாடம் நடக்கும். துலா மிதித்து இறைக்கும் போது தந்தையாரும் சிறிய தந்தையாரும் பாடும் தேவாரங்களும் இசை நாடகப் பாடல்களும் காதில் விழும்.
நீங்கள் இப்போது சிறுகதை ஆசிரியர் என்ற நிலைக்கு வந்திருக்கிறீர்கள். மற்றவர்களுக்கு எவ்வகையில் உதவுகிறீர்கள்
பேராசிரியர் நா. சுப்பிரமணியன் அவர்களைத் தலைவராகக் கொண்ட கலை இலக்கியக் களம் என்ற அமைப்பில் நான் செயலாளராகப் பணியாற்று கிறேன் இந்த அமைப்பு சிறுகதை தொடர்பான
ஆய்வரங்கு களையும், பட்டறைகளையும் நடத்தி
பெண்ணின்குரல் 0 டிசம்பர் 2000

Page 10
புள்ளது. இதன் மூலம் இளம் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தி உள்ளோம்.
தமிழ் மொழித் தினப் போட்டிகளின் ஊடாகப் பல மாணவர்களைச் சிறுகதைத்துறையில் உற்சாகப்படுத்தி எழுதத்தூண்டி உள்ளேன்.
இளம் எழுத்தாளர்களின் படைப்புகள் பிரசுர மாகும் போது அவற்றைப் படித்துப், பாராட்டி வருகிறேன் எனது சமூக ஈடுபாடு கல்வி, நாடகம், உளவியல், சமயம் என்று பரந்து விட்டதால் சிறு கதைத் துறையில் இவ்வளவுதான் செய்ய முடிகிறது. ஒருவர் சிறுகதை எழுதுவதற்கு அவசியமானவை
எவை ?
Vigorous reading 65 (yp3 fluid 5aopu 5 கேட்கிற பிள்ளைதான் கதைக்கும். நிறைய வாசிக்கிற பிள்ளை தான் எழுதும். மிக ஏராளமாய் வாசிக்க வேண்டும். பயனுள்ளவற்றைத் தெரிந்தும் வாசிக்க வேண்டும். வாசிப்பவற்றில் எதிர்காலத்தில் பயன் தரக்கூடிய வற்றை குறித்து வைக்க வேண்டும்.
சமகாலத்தில் சமூக நடவடிக்கைகளை கூர்ந்து அவதானிக்க வேண்டும். அவை பற்றி ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். இவை எல்லா வற்றுடனும் ஒரு படைப்பாற்றல் திறனும் வந்து அமைய வேண்டும்.
சிறுகதை எழுத கல்வி உதவும் ஆனால் கல்வி கற்றவரெல்லாம் சிறுகதை எழுதிவிட (Լpւգ-աո Ցi].
சிறுகதைத்துறையில் கணிசமான அளவு பெண்கள் ஈடுபடவில்லை என்பதை ஏற்றுக் கொள்வீர்களா? இதை எப்படி நிவர்த்தி செய்யலாம் ?
உண்மை தான் ஆண்களோடு ஒப்பிடுகையில் எழுத்தாளர்களாக உள்ள பெண்களின் எண்ணிக்கை மிகக்குறைவு. கலை இலக்கிய முயற்சிகளில் முனைப் புடன் ஈடுபடும் பல கன்னிப் பெண்கள் திருமணத்தின் பின்னர் எல்லாவற்றையும் "பொத்” என்று கைவிட்டு விடுவதையும் கண்கூடாகப் பார்க்கலாம். அண்டத்தின் சரி பாதியாக இருக்கும் பெண்கள் ஆண்கள் அள வுக்குப் பல விடயங்களிலும் தொழிற்படவில்லை என்றால் அந்தப் பிரச்சினை பெண்ணியம் சார்பானது
என்பது வெள்ளிடை மலை.
வேலைத் தலத்தில் இருந்து கணவன் களைத்து வருவதை எதிர்பார்த்துக் கையில் மணம் மிகுந்த
݂

கோப்பியும், தலையில் பூவுமாகக் காத்திருக்கும் பெண்ணைத்தான் இலட்சியக் கதாநாயகியாக ஆண்கள் மட்டுமில்லைப் பெண்களும் காட்டினார்கள். கணவனைத் திருப்திப்படுத்துவதும். அவன் சொற்படி நடப்பதும், அவன் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பதுமே ஒரு பெண்ணின் கடமை என்று பெண்ணும் நம்புகிறாள். அதனால் தனது சொந்தத் திறமைகளையும் ஆளுமையையும் "தியாகம்” என்ற குழியில் போட்டு மூடி விடுகிறாள் பல நூற்றாண்டு காலமாக எமது இலக்கியங்களும், பாரம்பரியப் பாதைகளும் அழுத்தி வந்த விடயம் இது இலகுவில் மாறிவிடாது.
உலகத்தில் பெண்களே அதிக அளவு மனச் சோர்வு (Depression) நோய்க்கு உட்படுகிறார்கள் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். அதைப் பற்றிய விழிப்புணர்வும் பெண்களிடம் இல்லை.
இயல்பாக வந்த இந்த வழி நடத்தலுக்கு "மகாஜனக் கல்லூரி " உரம் போட்டு வளர்த்தது. கவிஞர் செ.கதிரேசர் பிள்ளையிடம் தமிழ் படித்த போது ஒரு சிறப்பான வழிகாட்டல் வந்தது. அவரது நாடகங்களில் நடித்து அகில இலங்கை மட்டத்தில் முதற் பரிசுகளைப் பெற்ற போது கலை ஈடுபாட்டின் மகிழ்வு பிடிபட்டது.
எழுதத் தொடங்கிய பிறகு பி. எஸ். பெருமாள், டொமினிக்ஜீவா, பேராசிரியர். நா. சுப்பிரமணியன், புலவர். ம. பார்வதி நாதசிவம், பண்டிதர். க. உமாம கேஸ்வரன், கவிஞர். சோ. பத்மநாதன் என்று பலர் வழிகாட்டி அழைத்துச் சென்றனர் பட்டியல் நீளமானது எல்லாரையும் குறிப்பிடுவது கஷ்டம்.
இந்தக் கருத்துக்களை மையப்படுத்தி "இருட்டுக்குள் சுருட்டி" என்ற ஒரு நாடகத்தை நாங்கள் தயாரித்தோம். முதலில் விழிப்புணர்வு வர வேண்டும்.
பெண்களது பிரச்சினையைப் பெண்களால் தான் எழுத முடியும் என்று கூறுகிறார்கள் உங்கள் கருத்து எப்படி ?
பாம்பின் கால் பாம்பறியும் என்பது பழமொழி எந்த ஒரு விடயத்தையும் உள்ளிருந்து உணர்வு பூர்வமாக அனுபவித்தவர்கள் தான் அதனை மற்ற வர்களும் உணரக் கூடிய வகையில் விளக்க
முடியும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லையே!
المصـ
பெண்ணின்குரல் 0 டிசம்பர் 2000

Page 11
கவிதை
压 婴 品 Š
*办 없
+s!! 瓯 步 R 活 한 Ĥ 压 없 口 口 副 Ệ 丐 |- 厅 口 sɔ
 
 

60
நான் பெண்
சிற்று நிலவொளியில்
TGITT OG GLUTET "GTIGT SF3 STAT"
தேடியபடி . தனியாக ! சகதி நிறைந்த அப்பாதை என்னால் விரைந்து நடக்க முடியாமல் கற்களும் முட்களும் நிறைந்தது. !
நான் பெண்.
பிறந்த போதே .
தந்தைக்கு எரிச்சல்
தாய்க்குச் சங்கடம்.
வளர்ந்த போது . தந்தைக்கும் தமையனுக்கும் கட்டுப்பட்டும் குட்டுப்பட்டும் !
பூப்பெய்த பின் அடிவயிற்றுக்குள் நெருப்பெரிவதாய் அம்மா அடிக்கடி அங்கலாய்த்தாள். ஓ. எல் படிப்போடு அடுப்படிப் " பிரமோஷன்"
i " "। அப்பா அலைந்துதிரிந்தார். அண்னன் எப்போதும் போல்}
அதட்டிக் கொண்டிருந்தான் !
நான் பெண்
அதனாலேயே என் சின்னஞ்சிறு உலகம் எப்போதும் இருட்டுக்குள் ! என் இரவுகள் நிலவையும் நட்சத்திரங்களையும் தொலைத்துவிட்டன்,
எனது பகல்கள் ஆதவனையும் (குளிர்த்) தென்றவையும் i இழந்துவிட்டன. : எனவேதான் . சிற்று நிலவொளியில் தொலைந்த " சுயத்தை" தேடியலைகிறேன்.
O பென்னின்குரல் 0 டிசம்பர் 2000

Page 12
திரை அரங்குகளில் பெண்மையின் துகில் உருவப்பட்டு . பருத்த முலைகளும் தொப்புள், தொடைகளுமாய் கண்கூசும் வெளிச்சத்தில் பெண்ணின் அவயவங்கள் ஏலம் விடப்பட்டபோது . அண்ணன் விசிலடித்தான் "அற்புதமான கலை "- என்று
அப்பா சிலாகித்தார்.
நான் பெண் எனவே தான்
என்னைக் கேளாமலேயே
எனக்குத் திருமணமானது !
நான் பெண்
அதனால் . பொறுத்துப் போவதற்காகவே வளர்க்கப்பட்டவள்.
சுயத்தை . சுய சிந்தனையை . தன்மானத்தை . தாலிச்சரட்டுக்கு விலையாகக் கொடுத்தவள்.
நான் பெண். ஆகவே . சரியென நினைப்பதை சொல்லவும் எழுதவும்
கணவனின் " லைசன்ஸ்"
கட்டாயமானது ! "அவர்” விரும்பும் போது மட்டும் அழவும் சிரிக்கவும் அணைக்கவும் விலகவும்
பழகிப் போய் விட்டவள் !
நான் விரும்பாத பொழுதுகளில் . எனக்கு
இயலாத இரவுகளில் . (பலவந்தமாய்)
என்னவரே என்னை மாறிமாறிக் குதறுகையில் பெண்மையின் ஆத்மா உரத்துக் கதறிய குரல் எவருக்கும் கேட்கவில்லை !
நான் பெண் அன்பையும் பரிவையும் யாசித்தபோதெல்லாம் புறக்கணிப்புக்கள் பல்லிளித்தன !

கருணை விழைந்து கரம் நீளும் பொழுதெல்லாம்
அவர்கள் .
சிங்கப்பல் தெரிய - கைகொட்டி
சிரித்தார்கள் !
வருத்தும் இதயத்திலிருந்து பெருமூச்சு எழுகிறது ! ஒளித்து வைத்திட இடந் தெரியாததால் கண்ணிர்த் துளிகள் கன்னத்தில் வழிகின்றன !
என் பூவும் என் பொட்டும் கூட
என்னவர்
உயிர்க்கும் வரை மட்டும் உரிமையுடையதாகின்றன என்னுடல். என் உயிர் என் உணர்வுகள் யாவுமே சந்ததமும் - போலிச் சம்பிரதாயங்களுக்குள்
சிறைப்பட்டு முடங்கிப்போய் !
நான் பெண்
அதனால் தான் எனக்காகவென்று நான் ஒரு நாளும் வாழ்ந்ததில்லை உள்வாங்கும் சுவாசத்தை (யும்)
சுதந்திரமாய் உணர்ந்ததில்லை.
நான் பெண்ணாக இருப்பதால்தான் கீற்று நிலவொளியில் இழந்துவிட்ட சுயத்தை . புதியதொரு விடியலை. தேடியபடி தனியாக ... ! சகதி நிறைந்த அப்பாதை பெண்களை உயிருடன் புதைத்த பல குழிகளோடு . கற்களும் முட்களும் நிறைந்து . கண்ணுக்குத் தெரியாத விலங்குகள் பிணித்த
என் கால்கள் தள்ளாடித் தடுமாற நான் விடியலைத் தேடி மெல்ல நடக்கிறேன் ! கீற்று நிலா முகிலுக்குள் புக . எங்கும்
அந்தகாரம் சூழ்கிறது !
أص
பெண்ணின்குரல் 0 டிசம்பர் 2000

Page 13
நேர்காணல்
தாமரைச்
தாங்கள் இப்போது என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்?
நாவலா, சிறுகதையா ?
& LJ Lip 327 LID போல சிறுகதை ஒன்று எழுதிக் கொண்டிருக்கிறேன்.
தங்களை எழுத்துலகிற்கு இட்டுச் சென்ற காரணிகள்
6TE0}Élu ?
சிறுவயதிலிருந்து எனது இயல்பாக படிந்து போய் விட்ட வாசிப்புப் பழக்கம் முக்கிய காரனம், நிறைய புத்தகங்களைத் தேடிப்படிப்பேன். இந்த வாசிப்புத் தளம் எனக்குள் மிக ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது எழுத வேண்டும் என்ற ஆவலை வளர்த்தது தவிரவும் என்னைச் சுற்றியுள்ள
சமூகத்தின் பிரச்சினைகள் அதனால் மனிதர்களுக்கு
ஏற்பட்ட அவலங்கள் . இவைகள் என் மனதில் ஏற்படுத்திய பாதிப்புக்கள் . இவை தான்
என்னை எழுத வைத்தன.
இலங்கையில் பெண் எழுத்தாளர்களைப் பற்றிய தங்கள் எண்ணங்கள் 7 அவர்களின் எழுத்துக்கள் சிந்தனை
களில் வளர்ச்சி வேறுபாடு காணப்படுகிறதா ?
எந்தக் காலத்திலும் பெண் எழுத்தாளர்கள் படைப் புலகத்திற்கு தங்களால் முடிந்த அளவு பங்களிப்பை வழங்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள். மிகச் சிறந்த படைப்புக்கள் என்று இலங்கையில் குறிப் பிடப்படும் எழுத்துக்களையும் இவர்கள் படைத்திருக் கிறார்கள். அந்த நாட்களில் எழுதப்பட்ட பவானியின் படைப்புக்கள் இன்றும் பேசப்படுகின்றன. இதே போல் இன்றைய பெண் எழுத்தாளர்களின் படைப்புக்கள் நாளையும் பேசப்படலாம். அன்று இருந்த சமூகப் பிரச்சனைகள் அன்றைய கதைகளின்
சுருக்களாகின. சீதனப்பிரச்சனை, சாதிப்பிரச்சனை,
வேலைவாய்ப்பின்மை, பசிபட்டினி, குடும்ப உற
ܐ
 

செல்வி
நேர்கண்டவர் மங்கை
வுச் சிக்கல்கள் .இவைகளை அன்றைய படைப்புக்கள் பிரதிபலித்தன. இப்போது ஏற்பட்ட கால மாற்றம் படைப்புக்களை இன்னொரு தளத்துக்கு இட்டுச் சென்றது. போரும் இடம் பெயர்வும் மக்களின் மனங்களை அதிகம் பாதித்தது. இந்த பாரிய துயரங்களையே இன்றைய படைப் புக்கள் பிரதிபலிக்கின்றன. சமுகத்தின் மாற்றங்களை உள்வாங்கிய படைப்பாளியும் அதையே இலக்கிய மாக்கும் தேவை ஏற்பட்டு விடுகிறது. சமூகத்தின் மாற்றம் அதற்குள் அடங்கியிருக்கும் பெண்களின் பிரச்சினைகள் என்று இப்போதுள்ள படைப்புக்கள் கொஞ்சம் ஆழமாகவே எழுதப்பட்டு வெளிவரு கின்றது. ஆண் படைப்பாளிகளுடன் ஒப்பிடும் போது பெண் படைப்பாளிகள் எழுதுவது குறைவு என்பதை ஒப்புக் கொள்ள வேண்டித்தான்
இருக்கிறது.
தாங்கள் இதுவரை எழுதிய படைப்புக்களின் விபரங்கள்?
சரியான எண்ணிக்கை தெரியவில்லை. ஆனாலும் நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகள் எழுதியிருக்கிறேன். நாவல்கள் 2 குறுநாவல்கள் எழுதியிருக்கிறேன். இவற்றில் புத்தக வடிவில் வந்தவை தவிர படைப் புக்கள் வெளிவந்த அநேகமான பத்திரிகைப்
பிரதிகள் சஞ்சிகைகள் 1987ம் ஆண்டிலும் 1990ம் ஆண்டிலும் இராணுவ முன்னெடுப்பின் போது எரிந்து போய் விட்டன. இவைகளை மறுபடி என்னால் தேடிக் கொள்ள முடியாமல் இருப்பது
மிகவும் கவலையான விடயம்.
படைப்பிலக்கியம் மூலம் தாங்கள் சாதிக்க விரும்பும் இலக்குகளென்ன?
இலக்கு என்று குறிப்பிடும் அளவுக்கு என்னால் எதுவும்
சொல்ல முடியவில்லை. ஆனால் என் மனதைப்
گئی۔
12 பெண்ணின்குரல் 0 டிசம்பர் 2000

Page 14
பாதிக்கும் விடயங்களை எழுதிக் கொண்டி ருப்பதில் ஒரு சந்தோஷம் இருக்கிறது. அவ்வளவு தான்.
பெண்ணியம் பற்றிய தங்கள் கருத்தென்ன ?
பெண்ணியம் பற்றிய பேச்சு தற்போது எங்கும் எதிலும் முன் வைக்கப்படுகிறது. இந்த சமூகம் பெண்களுக்கு பலவித பிரச்சனைகளைத்தருகிறது. பெண் தன் கல்வியூடாக பெறும் அனுபவத்தாலும் தன் சுய சிந்தனையாலும் இந்தப் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ள முயற்சிக்கிறாளா என்பதே பெரும் கேள்வியாக மிஞ்சுகிறது. நடுத்தர உயர்மட்ட பெண் கள் ஒரளவு சுய சிந்தனை மூலம் தம்மைத்தாமே உணர முடிகிறது. இதற்கு அவர்கள்
பெறும் கல்வியறிவும் பொருளாதார வசதியும் பெரிதும் உதவுகிறது. ஆனால் சமூகத்தின் அடிமட்டத்தில் வாழும் ஒரு சிறு பகுதியினர் தவிர மற்றைய பெண்களின் நிலமை பரிதாபமானது.
தமது பெறுமதியே தெரியாது அதைப்பற்றிய சிந்தனையே இல்லாத வாழ்வை வாழ அவர்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். அடுத்த நாள் தேவை
பற்றிய ஏக்கத்துடனேயே அதிகமானவர்களின் வாழ்வு கடந்து போய்விடுகிறது. யாராவது ஒருவரை சார்ந்து வாழ்தலே இவர்களுக்கு சாத்தியமாகி விடுகிறது. இந்த விதமான சிந்தனை எத்தனை
அபத்தமானது அவலமானது என்பதை அவர்கள் உணர்வதில்லை. ஒரு நபரை சார்ந்து நிற்கும் நிலையிலிருந்து பெண் விடுபடுதலே முக்கிய மானதும் முதன்மையானதுமான விடயம் என்பதை பெண்கள் உணர்வது அவசியமாகிறது. தனக்குத் தானே சுய அறிவும் ஆளுமையும் பொருளாதார வளமும் கொண்டவளாக ஒரு பெண் இருப்பா ளேயானால் சமூகத்தில் அவள் நிமிர்ந்த வாழ்வை
பெற்றுக் கொண்டவளாய் இருப்பாள்.
பெண்கள் எழுத்துத்துறையில் மிகக்குறைவாக காணப் படுகின்றனரே . . . . . . காரணங்கள் என்ன வெனக்
குறிப்பிட முடியுமா ?
இது அவரவரைப் பொறுத்த விடயமாகவே
எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து நிறையப்பெண்கள் எழுதிக் கொண்டிருந்தார்கள். இப்போதெல்லாம் அவர்கள் எழுதுவது குறைந்து விட்டது அல்லது இல்லா மலேயே போய்விட்டது. அவர்கள் எழுதாதது

y
மட்டுமின்றி புதிதாக தோற்றம் பெறுபவர்களும் குறைந்து விட்டார்கள். இதற்கு தற்போதுள்ள நிலமைகள் காரணமாக அமைந்திருக்கலாம். தவிரவும் பெண்களுக்கு வீட்டிலும் சரி வெளியே உத்தியோக ரீதியிலும் சரி வேலைப்பளு அதிக | மாகவே உள்ளது. இத்தனை நெருக்கடிகளுக்கு மத்தியில்தான் அவள் எழுத வேண்டியிருக்கிறது. இதற்கு மற்றவர்களிடமிருந்து முக்கியமாக அவள் குடும்பத்தவரிடமிருந்து தூண்டுதலும் ஆதரவும் அவளுக்கு கிடைத்தாக வேண்டும். அது கிடைக்
காதவர்கள் பேனாவை வைத்துவிட்டு சராசரி வாழ்வுக்குள் தம்மை கரைத்துக் கொள்ள வேண்டி நேரிடுகிறது. இங்கே மிகவும் நன்றாக எழுதிக் கொண்டிருந்த பல பெண்கள் புலம் பெயர்ந்து வேறு நாடுகளுக்கு சென்ற பின்பு எழுதுவதையே
நிறுத்திக் கொண்டுவிட்டார்கள். மிகச் சிலரே தொடர்ந்தும் எழுதுகிறார்கள். வன்னியைப் பொறுத் தவரை நம்பிக்கை தரும் விதமாக புதுவீச்சுடன் பல புதிய பெண் படைப்பாளிகள் தமது எழுத்தை
பதிவு செய்கிறார்கள்.
எத்தகைய எழுத்துக்களை நீங்கள் விரும்பிப் படிக்கிறீர்கள்?
வன்னிக்குள் புத்தகங்கள் வருவதில் நிறைய சிரமங்கள் இருக்கின்றன. தடை தாண்டி பல நல்ல புத்தகங்கள் வருகின்றன. அதனால் இந்த இடப்பெயர்வு வாழ்வின் சிரமங்களுக்கு மத்தியிலும் நல்ல புத்தகங்களை
வாசிக்க முடிகிறது. காலத்தை அடையாளம் காட்டும்,
சமூகத்துக்கு நல் லன சொல்லும் சகல
புத்தகங்களையும் வாசிக்கும் ஆர்வம் இருக்கிறது.
இன்னும் தங்கள் எதிர்காலத்திட்டம் பற்றி . . . ?
எமது கிளிநொச்சிப் பிரதேசம் எத்தனையோ
மக்களை வாழ வைத்த பிரதேசம். காடுகள் அழித்து களனிகளாக்கி நகரமைத்து தமது உழைப்பைக் கொட்டிய மக்கள் பற்றியும் இந்த மண் எப்படி அவர்களை வாழ வைத்தது என்பது பற்றியும் ஒரு நாவல் எழுத வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. இந்த உழைக்கும் மக்கள் கூட்டத்தின் நடுவேதான் எனது வாழ்க்கையும் இருந்திருக்கின்றது. அதனால் இந்த மக்களின் எழுச்சியான வரலாற்றையும் பின்னர் இந்த போரின் நடுவே அந்த வாழ்வு எப்படி சிதைந்து தரை மட்டமாய் போனது என்பதையும் பதிவு செய்து
கொள்ள விரும்புகிறேன்.
لهس
பெண்ணின்குரல் 0 டிசம்பர் 2000

Page 15
“பெண்* /
உலகின் ஜீவ மூச்சு. கருவை உருவாக்கித் தரும்
அற்புத படைப்பு
உலகின் இயக்கமே பெண் தான்.
ஆனால் இந்தப் பரந்த உலகில் அவளது நிலை
மிகக் கவலைக்கு இடமானது.
சுதந்திர வானில் எழுந்திடத் துடிக்கும் அவளது பட்டுச் சிறகுகள் வெட்டிச் சாய்க்கப்படுகின்றன.
கலாச்சாரம், பண்பாடு என்று தலைப்புகள்
இடப்பட்டு அவளது கால்களில் தளைகள் பூட்டப்
படுகின்றன.
அவளது ஜனனமே துக்ககரமாகக் கருதப் பட்டுத்
தெருவிலே
உள்ள குப்பைத் தொட்டிகளில் அவளது
தன்மானம் தூக்கி
எறியப்படுகின்றது. அவளைத் தாங்குவதற்கென்றே
தெருவோரம் தொட்டில்கள் முகாரி இசைக்கின்றன.
அவள் இவ்வுலகிற்கு வருகை தரும் போது
அவளை
வரவேற்க வேண்டிய கரங்கள் இருண்ட மூலையில்
தள்ளிப் பூட்டுகின்றன. தாயே அவளை தனித்துவமற்றவள் ஆக்குகின்றாள்.
தந்தை
அவளது எண்ண எழுச்சிகட்கு சாவு மணி
அடிக்கின்றார்.
அவள் அடிமைத்தனத்திற்குப் பழக்கப்பட்டுப்
போகின்றாள்
வழிவழியாக வந்த பண்பாடு என வரலாறு
சொல்லி மகிழ்கையில்
சிந்தனையால் அவள் எழமுடியாது தவிக்கின்றாள்.
14
 

உடலின் உயிர்க்கலங்கள் பல்கிப் பெருகி,
ஓமோன்களின்
ஒழுங்காக்கம் நடக்க அவள் புஷ்பித்துப் போகின்றாள். வசந்த காலத்தின் வர்ணஜாலங்களே அவளது
வனப்பைப் பட்டை
தீட்டுகின்றது. தாய்மையை ஏற்க அவள் தயாரா
கிறாள். அவளது
கனவுகள் விரிகின்றன.
சமூகமோ ஊரை உரக்கக் கூவி அவளுக்கு
சின்னதாய் ஓர்
சுயம்வரம் நடத்துகின்றது. அழைப்பிதழ் அச்சாக்கி,
உண்டி கொடுத்து
உபசாரம் செய்து அலங்கரிக்கப்பட்ட தேவதையாய்
அவள்
உற்றாரின் முன்னே காட்சிப்படுத்தப்படுகின்றாள். கம்யூட்டர் வந்தாலென்ன செவ்வாயில் மனிதன்
கால் பதித்தால் என்ன
பெண்ணின் இக்காட்சிப்படுத்தல் காலம் காலமாய்
தொடர்கிறது.
ஆண்கள் பருவமடைதல் இரகசிய நிகழ்வாக
மூடி மறைக்கப்பட
பெண்கள் பருவமடைதல் ஊரைக்கூட்டிப் பகி
ரங்கப் படுத்தப்படுவதேன்.
பெண்ணே நீயே பகிரங்கச் சந்தையில் ஏலமிடப்
படும் பொருளாகலாமா ?
படித்தாலும் பட்டம் பெற்றாலும் திருமணம்
என்றொன்று
வரும்போது அவள் பெற்ற பட்டங்களும் பதவி
களும் செல்லாக் காசாகின்றன.
சீதனம் என்ற இராட்சசம் பெண்களை விழுங்கி
ஏப்பமிடுகின்றது.
பெண்ணின்குரல் 0 டிசம்பர் 2000

Page 16
சீதனம் கேட்பவனே பெண்கள் பிரதிநிதியாய்
இருப்பது தான் பெரும்பாவம் பணம், நகை, பாத்திரம், பண்டம் வீடுகாணி என இவள் சீர்கொடுத்து
வாங்கிய மணமகனிடமே அவள் அடிமையாய்
போகிறாள்.
அவன் சிரித்தால் சிரிக்கிறாள், அவனடித்தால்
பொறுக்கிறாள்,
அவனுக்காக அலங்கரித்து, அவனே சகலமுமெனப் பொட்டிட்டுப் பூவைத்து
அவளிற்கென்று எதுவுமில்லாமல் போகிறாள்.
அவளது தனித்துவம் அங்கே தாரை வாக்கப்பட்டு அழிந்துபோகிறது
இந்திராணி புஷ்பராஜ &#i
ஆக்கங்களை
 
 
 
 
 

ஆண்களைப் போல் பொன்னைப் பொருளைத்
தேடி வரும்
பெண் ஏன் அடிமைப்பட்டுப் போக வேண்டும்? ஏன் சீர் வரிசை தரவேண்டும் ? இந்தச் சமூகம் சிந்திப்பதில்லை.
அடிமையாய் வாழப் பழகிப் போன பெண்கள் அடிமைத்தனத்தையே மோட்சமாய் கருதி வழிவழியே வந்ததொரு பண்பாடு என்கிறார்கள் பண்பாடு தேவைதான் ஆனால் அதில் ஆண் பெண் என்ற பிரிவினைகள் தேவையில்லை. "கற்பு நிலையென்று சொல்லவந்தால் இரு
கட்சிக்கும் அதனைப்பொதுவில் வைப்போம்”
أصـ
5 பெண்ணின்குரல் 0 டிசம்பர் 2000

Page 17
r
என்றது அன்றைய பாரதி
ஆனால்
கற்பு என்றால் அது காரிகையின் சொத்து
என்றுதான் கருதப்படுகின்றது. கற்பு என்பதற்கு
பெண்ணைப் பொறுத்தவரை சமூகம்
முன்வைக்கும் கருத்து ஏற்புடையது தானா ? இரு
கைகள் சேர்ந்து தட்டினால்
தானே ஒலி பிறக்கும் ஒரு கை கற்பிழந்து போக
பாலியல் வன்முறைகள் மலிந்து வரும் இக்கால
கட்டத்தில் தந்தை
மகள் என்ற சொந்தம் கூடப் பொய்த்துப்
போகின்றது.
ஏன் இந்நிலை எனில், சமூகத்தினால் பலவீனப்
பட்டவள்
என்ற முத்திரை குத்தப்பட்ட பெண் சிந்தனையால்
பலவீனப்பட்டு
விடுகின்றாள் அதனால் அவளால் எந்த நிலை
யிலும் எதிர்த்து நிற்றல் இயலாமல் போகின்றது. பெண்கள் எழுச்சி பெற வேண்டிய காலம் வந்து
விட்டது.
ஒவ்வொரு ஆணுக்கும் எத்தனை சுதந்திரம்
உண்டோ அத்தனை
சுதந்திரம் ஒவ்வொரு பெண்ணிற்கும் உண்டு.
பெண் வெறும் போகப் பொருளாகக் கருதப்படும்
சிந்தனைகள்
இல்லாது போகவேண்டும். அவளது உணர்வுகள்
மதிக்கப்பட வேண்டும்.
தாயோ சகோதரியோ தாரமோ மகளோ ஒவ்
வொரு பெண்ணும்
சமூகத்தில் சரியாகக் கணிக்கப்பட வேண்டும்.
அந்த நாட்கள்
அதிக தூரத்தில் இல்லை.
பெண்ணொருத்தி பேசினால் பெரும் பூமி தான்
அதிரும் பெண்ணிருவர் பேசினால் விழும் விண்மீன்கள்
பெண் மூவர் பேசினால் அலை சுவறும் என்ற
ܢ
16

பண்டைய நிலை இன்றும் மீண்டும் ஏற்பட
வேண்டும்.
பண்டைக்காலப் பெண்கள் பெரும் சக்தி உடை யவர்களாக இருந்தனர்.
கண்ணகியின் நாவுக்கு மதுரையை எரிக்கக்கூடிய சக்தி இருந்தது.
காந்தாரியின் கட்டப்பட்டிருந்த கண்களுக்கு மா பெரும் சக்தி இருந்தது.
என்றெல்லாம் இலக்கியம் காட்டியது ஏன் ?
அன்றையப் பெண்களின்
ஆற்றலை உணர்த்தத்தான்.
எனவே சமத்துவம் என்பது வாயளவில் என்
றில்லாமல்
செயலில் காட்டப்பட வேண்டும். இன்று செய்
தொழில் கள் அனைத்திலும்
சிந்தனைத் திறனே பயன்படுத்தப்படுகின்றது
எனவே உடல் வலிமை
தேவை இல்லை என்றாகி விட்டது. இதில் ஆணென்ன பெண்ணென்ன எனவே உலகப் பெண்கள் அனைவரும் ஒன்று
சேர்ந்து
பெண்களின் நிலையை உயர்த்தப்பாடுபட
வேண்டும். இதில்
பழைய தலைமுறையினரின் பொருத்தப் பாடற்ற
கொள்கைகள்
தூக்கி எறியப்பட்டு நியாயமான புரட்சிச்
சிந்தனைகள்
முன்வைக்கப்பட வேண்டும். பெண்ணினம் தலை
நிமிர வேண்டும்.
அழகுராணிப் போட்டியென்றும், விளம்பர
மென்றும் பெண்ணின் உடலிற்கு
விலை பேசும் பகிரங்க ஏலங்கள் நிறுத்தப்பட
வேண்டும்.
உன்னைத் தான் பெண்ணே ! ஒரு நிமிடம் நின்று
நிதானமாய்
சிந்தித்து ஒரு முடிவிற்கு வா.
لهم.
பெண்ணின்குரல் 0 டிசம்பர் 2000

Page 18
கத்தோலிக்க திருச்சபையின் வளர்ச்சி வரலா
ற்றில் பெண்களின் பங்களிப்பும் கணிசமானதென்பது கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய முக்கிய அம்சங் களுள் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கதாகும். இயேசுக் கிறிஸ்துவின் காலத்திலேயே அவரது பணிகளுக்குச் சாட்சிகளாகவும் அவரது செய்தியைப்பரப்பும் தூதுவர்களாகவும் பெண்களும் பணியாற்றியிருக் கின்றனர். இவற்றிற்கு உதாரணமாக மார்த்தாள், அவளது சகோதரி மரியாள், மனந்திருந்திய மதலேன் மரியாள், கிறிஸ்துவின் தாயான மரியாள் போன்ற
பலரைக் கூற முடியும்.
கிறிஸ்துவிற்குப் பின் முதல் நூற்றாண்டு காலத்திற் பணியாற்றிய பெண் திருப்பணியாளர் களைப்பற்றிய குறிப்புகளை புனித. சின்னப்பர் உரோமருக்கு எழுதிய திருமுகத்திற் (மடல்) காண லாம். பெபேயாள் என்னும் பெண் திருப்பணியாள ரைப் பற்றிக் குறிப்பிடும் புனித. சின்னப்பர், கெஸ்கிரேயாவிலிருக்கும் சபைக்குத் திருப்பணி புரியும் இப் பெண்ணிற்கு அவரது பணிகளில் ஒத்துழைப்பு வழங்குமாறு மக்களைக் கேட்டுக் கொண்டு மிருக்கின்றார் (உரோமர் : 16 = 1 2) அத்துடன் ஆக்கிலா, மரியாள், யூலியாள், திரிபேனாள். திரிபோசாள், பெர்சியாள் முதலிய பெண் பணியாளர் களைப் பற்றிய செய்திகளும்
அதிலுள்ளன.
திருச்சபையின் அங்கத்தவர்களாக இருக்கும் அதே வேளை திருப்பணியாளர்களாக, போதகர் களாக உபதேசிமார்களாக, மறையாசிரியர் களாக, நற்கருணைப் பணியாளர்களாக பீடப்பரிசாரகர் களாக (பீடப்பணியாளர்கள்) எனப் பல்வேறுபட்ட தளங்களில் பெண்கள் இன்று பணியாற்றி
வருகின்றனர்.
ܢܠ
 

இக்கட்டுரை, கத்தோலிக்க திருச்சபையில்
இடம் பெறும் முக்கிய வழிபாடுகளில் ஒன்றாகிய "திருப்பலிப் பூசையில் பெண்களின் பங்களிப்பு" குறித்து சமகாலப் பின்னணியில் நோக்கிய சில
அறிமுகக் குறிப்புக்களைத் தொட்டுச் செல்வதாக
அமைகின்றது.
மனுக்குலத்தை பாவ இருளிலிருந்து மீட்டு ஈடேற்றம் அடையச் செய்வதற்காக, மனுவுரு எடுத்து தன்னையே சிலுவையில் பலியாக்கிய இயேசுக் கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு என்பனவற்றை மீள நினைவுறுத்தும் திருப்பலிப் பூசை வழிபாட்டினை "குருத்துவம்” என்னும் விசேட அருட்சாதனத்தின் மூலம் திருநிலைப் படுத்தப்பட்ட குருக்களே (அருட் தந்தையர்கள்) நிறைவேற்றுவது மரபாகும். கிறிஸ்துவின் பிரதிநிதியாக கிறிஸ்துவாக அவ்வேளை அவர் கருதப்படுவதும் இறை மக்களது விசுவாசங்களுள் ஒன்றாகும்.
இவ்வழிபாட்டில் குருவிற்கு உதவுபவர் களாகவும் மற்றும் முக்கிய நடவடிக்கைகளிலும் முன்னர் ஆண்கள் மட்டுமே பணியாற்றி வந்தனர். ஆலய வழிபாட்டு ஒழுங்கு நடைமுறைகள், ஆலய மணியினை ஒலிக்கச் செய்தல், பீட ஒழுங்கமைப்பு, நற்கருணைப் பகிர்வு, பீடப் பணியாளர்களாகப் பணியாற்றுதல் உட்பட அனைத்து நடவடிக்கை களிலும் இந் நிலைமையே முன்னர் இருந்தது. போதகர்களாகவும் உபதேசிமார் களாகவும் கூட ஆண்களே பணியாற்றி வந்தனர். பெண்கள் வழி பாட்டில் பக்தர்களாக இறை விசுவாசிகளாக
பங்கு கொண்டனர்.
இத்தகைய நிலைமைகளில் தற்போது
மாற்றங்கள் ஏற்பட்டு வருவதனை அவதானிக்
பெண்ணின்குரல் 0 டிசம்பர் 2000

Page 19
- கலாம். 2ம் வத்திக்கான் சங்கத்தின் (1968)
பின்னரான எழுச்சி, புதிய சிந்தனைகளின் உள் வாங்கல்கள், மாறி வரும் சமூக, பண்பாட்டு அம்சங்களையும், அதே வேளை பிரதேசங்களுக் கேற்ப பாரம்பரிய தனித்துவமான மரபுகளையும் பேணும் திருச்சபையின் அக்கறை போன்ற பல இன்னோரன்ன காரணிகள் கத்தோலிக்க திருச் சபையின் வழிபாட்டு ஒழுங்கு நடைமுறை களிலும் சிற்சில மாற்றங்களை உருவாக்கியுள்ளன. திருப்பலி வழிபாட்டிலும் பெண் களின் பங்களிப்பு கணிசமானளவு வரவேற்கப்பட்டிருக்கின்ற தென்றே கூறவேண்டும். திருப்பலிப் பூசைக்கான வழிபாட்டு ஒழுங்குகளை மேற்கொள்ளுதல், பாடல்கள் இசைத்தல், வாசகங்களை வாசித்தல், மன்றாட்டுக்களைக் கூறுதல் காணிக்கைப் பவனியிற் பங்குகொள்ளுதல் என்பவற்றிலும் பெண்கள் பங்கு
கொள்கின்றனர்.அத்துடன் தற்போது நற்கருணைப்
பணியாற்றுவதிலும் (Altar Servers) பெண்கள் ஈடுபட்டு வருகின்றமை விதந்துரைக் கத்தக்கது.
திருப்பலிப் பூசையில்" கிறிஸ்துவின் திரு உடலாகக் கருதப்படும் திவ்விய நற்கருணையை இறை விசுவாசிகளுக்குப் பகிர்ந்தளிக்கும் பணி யினைக் குருக்களே முன்னர் செய்து வந்தனர். தற்போது அருட்சகோதரி களும் இப்பணியினுக்குத் திருப்பலி வேளையில் உதவி வருகின்றனர்.
மிக அண்மைக் காலத்தில் ஏற்பட்ட மாற்றங் களுள் ஒன்றே பீடப்பணியாளர்களாகப் பெண்களும் பணி யாற்றும் நடைமுறை. திருப்பலிப் பூசையில் ஆண்கள் குறிப்பாக ஆண் சிறுவர்களே காலாகா லமாக இப்பணிக்கு நியமிக்கப்பட்டு வந்தனர் (Altar Boys). என்ற பதமே இன்றும் வழக்கிலுள்ள மையையும் இங்கு குறிப்பிடுவது இன்றியமையாத தாகும். தற்போது பெண்களும் (சிறுமியர்) இப் பணியில் ஈடுபடுகின்றனர் (Altar Girls). அருட் சகோதரிகளால் நிர்வகிக்கப்படும் கத்தோலிக்கப் பெண்கள் பாடசாலைகள் சிலவற்றிலும், சில
Lu Jišu (g5 saavuLu iš 55 Gaf)Jüd (Parish Churches) sjö [560)
ܥ
பகிர்விலும் மிக விசேடமாகப் பீடப் பரிசாரகராகப்

முறை பின்பற்றப்பட்டு வருவதனை இங்கு குறிப்பிடலாம். பங்கு ஆலயங்களைப் பொறுத் தவரை திருமலை மட்டுநகர் மறை மாவட்டத்தில் சின்னக்கடை, குவாடலூபே, உவர்மலை மற்றும் தேற்றாத்தீவு, சொறிக்கல்முனை, வீச்சுக்கல்முனை முதலிய பங்கு ஆலயங் களில் பெண் பீடப்பரிசாரகர்கள் பணி யாற்றுவது குறிப்பிடத் தக்கது.
கத்தோலிக்கப் பாடசாலைகளில் வெள்ளிக்
கிழமைகளிலும் மற்றும் மத அனுஷ்டான விசேட
தினங்களிலும் இடம்பெறும் திருப்பலிப் பூசையின் போது சில இடங்களில் அவ்வப் பாடநூலைச் சிறுமியரே இப்பணிக்கு நியமிக்கப் பட்டுப் பணியாற்றுவது அவதானிக்கத் தக்கது. முன்னர் இத்தகைய அனுஷ்டானங்களுக்கு ஆண் சிறுவர்களையே வெளி யிலிருந்து அழைப்பிப்பது வழக்கம். இதில் சிரமங் களிருப்பின் போதகர் (ஆண்) பணியாற்றுவார். அல்லது விசேட ஒழுங்கு கள் செய்யப்படும் இத்தகைய நிலை மைகளின் காரணமாக அவ்வப் பாடசாலை மாணவியரைப் பயன்படுத்தும் பரீட்சார்த்த முயற்சிகள் சில பாடசாலைகளில் மேற் கொள்ளப்பட்டமை
சுவாரசிய மான அனுபவமாகும்.
உதாரணமாக - திருமலை புனித மரியாள் பெண்கள் பாடசாலையில் 1995 இலிருந்தும், மட்டுநகர் புனித சிசிலியா பெண்கள் பாடசாலை யில் 1996 இலிருந்தும் இந் நடைமுறை பின்பற்றப் பட்டு வருகின்றமையைக் காணலாம். இவ்விரு பாடசாலை களிலும் அமைந்துள்ள உள்ளக ஆலயங் களில் (Chapal) அவ்வப் பாடசாலைச் சிறுமியர்
(10-12 வயதிற்குட் பட்டோர்) பணியாற்றுகின்றனர்.
இவ்வாறு, பெண்களின் பங்களிப்பு திருப் பலிப்பூசை வழிபாட்டில் மட்டுமன்றி, கத்தோலிக்க திருச்சபையின் வளர்ச்சியிலும் கணிசமானளவு
இணைந்திருப்பதனை அவதானிக்க முடியும்.
لـ
பெண்ணின்குரல் 0 டிசம்பர் 2000

Page 20
சிறுகதை
கனவுகளே
அவனுடைய அம்மா இப்படி அழகாய் இருந் ததை அவன் ஒருநாளும் கண்டதே இல்லை. எப் பொழுது பார்த்தாலும் சாயம் போய் கிழிந்துவிடும் நிலைக்கு வந்துவிட்ட ஒரு வொயில் சாறி, அதற்குச் சற்றும் பொருத்தமில்லாத ஒரு சாம்பல் நிறச் சட்டை, காலையில் இழுத்துக் கொண்டை போட்டாலும் கலைந்து, பறந்து கிடக்கின்ற தலைமயிர், நெற்றியில் மட்டும் காலையில் சுவாமி படத்துக்குப் பூ வைக்கும் போது பூசிய திருநீறு லேசாய் அழிந்தும் அழியாமலும் இருக்கும்.
அவள் கழுத்தில், கையில் என்று நகை போட்ட தையும் அவன் கண்டதில்லை அவனுடைய சின்னக் காவின் திருமணத்தில் அன்றும் கூட அவள் அப்படியே தான் இருந்தாள். சேலை மட்டும்தான் புதிதாய் உடுத்திருந்தாள். பச்சைக் கலரில் மஞ்சள் மஞ்சளாய்ப் பூப்போட்ட சேலையும் பச்சைச் சட்டை ஒன்றும் போட்டு குங்குமப் பொட்டும் வைத்து அவள் அழகாய் இருந்ததை அவன் ஆசையோடு பார்த்துக் கொண்டு நின்றிருக்கிறான். அவள் சாதாரண நாட்களில் குங்குமம் வைப்பதே இல்லை. நெற்றியில் திருநீறு மட்டும் பளிச்சிடும்.
"அண்டைக்கு என்னமாய் ஓடிஓடி வேலை யெல்லாம் செய்து திரிஞ்சவ, அதுதான் ஆற்றையும் கண்பட்டுப் போச் சுதோ தெரியாது . " அவன்
இப்படி எண்ணிக் கொண்டான்.
இப்பொழுது அவள் அழகாகப் படுத்துக் கிடக்கிறாள். இளைய மகள் கொண்டுவந்து உடுத்திவிட்ட சிவப்புச் சேலையும் சட்டையும் நெற்றி நிறைந்த குங்குமமும், மூத்த மகள் போட்டுவிட்ட மாலையும் காப்புமாய் என்றுமில்லாத பொலிவோடு . கால் மாட்டிலும் தலை மாட்டிலும் எரியும் குத்து விளக்குப் போல. ஆனால் கூப்பியவாறு கட்டப்பட்ட கைகளில் திணித்து விட்ட பூச் செண்டும் ஊதுவத் திப்புகையும் அவனுக்கு அம்மா இப்போது உயிரோடு இல்லை என்பதை உணர்த்த அழுகை அழுகையாய்
வருகின்றது.
"மூத்தவன்தான் ஒண்டையும் யோசியாம

யாகி.
IpGior (5 ft egy G33FIT az IT
எங்கையோ ஒடிப் போயிற்றான். எண்ட ரெண்டு குஞ்சுகளும் தான் எனக்கு . கைகால் ஆடாமக்
கிடக்கக்குள்ள தண்ணி ஊத்துறதுக் கெண்டாலும்.”
அவனுடைய அம்மா அடிக்கடி சொல்லும் வார்த்தைகள் இவை. அவனுடைய சின்னண்ணன் மீதும் அவன் மீதும் அவளுக்குச் சரியான நம்பிக்கை. சின்னக்காவும் பெரியக்காவும் பாடசாலைக்குப் போய் அவன் பார்த்திருக்க மாட்டான். பெரியக்கா எப்போதும் அடுப்படியில் கிடப்பாள். சின்னக்கா வீடுவாசல் துப்பரவாக்கி, வாச்லில் பூச்செடிகள் நட்டு அழகு படுத்துவாள். அவனுடைய வீடுவாசல் ஒன்றும் அப் படிப் பெரிய மாளிகையல்ல. நீளத்துக்கு ஒரு பத்துப் பன்னிரண்டு அடி அறையும் அதற்கு முன்னால் ஒரு சின்ன மண்டபமும் கிணற்றடிப் பக்கமாய் சமைப்பதற்கு
ஒரு சின்னக் குசினியும். இவ்வளவு தான்.
அவனுடைய அப்பா குடித்துவிட்டு வந்து வீட்டுக்குள் இருக்கும் பொருட்களில் அகப்பட்டதை எடுத்து வீசுவார். அவனும் அவனுடைய சின்னண்ண னும் போட்டுக் கழற்றிய உடுப்புக்கள் அங்கும் இங்கும் கிடக்கும். பாடசாலைக்குப் போய்வந்த பின் புத்தகங் களும் சிதறிக் கிடக்கும். அவற்றையெல்லாம் ஒழுங்கு
படுத்தி வைப்பது சின்னக்காவின் வேலை.
இதையெல்லாம் செய்யும் போது முணுமுணு வென்று யாருக்கோ பேசிக் கொண்டுதான் செய்வாள். யாருக்குப் பேசுகிறாள், என்ன சொல்லிப் பேசுகிறாள் என்று ஒன்றும் விளங்காது. அதைப் பற்றி யாரும் கவலைப்பட்டதும் கிடையாது. கொஞ்ச நாட்களுக்கு முன் அவளுக்கும் திருமணமாகி, அவனுடைய அப்பா கொடுத்த காணித் துண்டில் ஒரு சின்ன வீட்டைக்
கட்டிக் கொண்டு அவளும் போய்விட்டாள்.
அவனுடைய அப்பா காலையில் எழுந்து அவன் அம்மா கொடுக்கும் பழஞ்சோற்றைச் சாப்பிட்டுவிட்டு
மேசன் வேலுப்பிள்ளையோடு கூலியாகப் போவார்.
அவருக்கு ஒரு நாளைக்கு நூற்றைம்பது ரூபா கொடுப்பதாக வேலுப்பிள்ளை ஒருநாள் அம்மாவிடம்
சொன்னதை அவன் கேட்டிருக்கிறான்.
اسسسس
பெண்ணின்குரல் 0 டிசம்பர் 2000

Page 21
அந்தப் பணத்தில் சில வேளைகளில் ஐம்பது அறுபது ரூபா என்று கொண்டு வந்து அவன் அம்மாவிடம் கொடுப்பார். மீதியெல்லாம் குடிக்குப் போய்விடும். சாராயம் விற்கும் வீடுகளில் போய்க்கிடந்து குடித்துவிட்டு நல்ல வெறியில் வீட்டுக்கு வருவார்.
எவ்வளவு வெறியில் வந்தாலும் அம்மா அவ ரைத் திட்டிக் குழறமாட்டாள். நடக்கமாட்டாமல் வரும் அவரைப் பிடித்து வந்து இருத்தி எதாவது சாப்பாடு கொடுத்துப் படுக்கவைப்பாள்.
"இப்பிடிக் குடிச்சுப் போட்டு வாறவருக்கு என்னத்துக்கம்மா சோறு ? நீ குடுக்கிற இடத்தால்தான் அவர் கண்மண் தெரியாமக் குடிக்கிறார். " என்று
சின்னண்ணன் அவன் அம்மாவைக் கோபிப்பான்.
“போடா, உனக்கென்ன தெரியும் ? அறிவில்லாமக் குடிச்சுப் போட்டு வாறவரோட சேர்ந்து என்னையும் மல்லுக்கட்டச் சொல்லுறீயா ? முப்பது வருசமாச் சொல்லிச் சொல்லி அலுத்துப் போய்க்கிடக்கிறன். இவளவு காலத்திலையும் திருந்தாத மனுசன் இனியா திருந்தப் போறார் ? என்று கேட்பாள்.
அவன் மீதும் அவனுடைய சின்னண்ணன் மீதும் அவன் தாய்க்குப் பெரிய நம்பிக்கை "நீங்க ரெண்டு பேருமாவது நல்லாப் படிச்சு முன்னேற வேணும். குடிகாரண்ட புள்ளையஸ் என்ற பெயரை மாற்றவேணும். என்று அடிக்கடி சொல்வாள். அப் போதுதான், அப்பா குடிப்பதையிட்டு அவள் மனதில் எவ்வளவு வேதனை இருக்கிறதென்பதை அவன்
உணர்வான்.
அம்மா சொல்வது போல படிக்க வேண்டும் என்று அவன் மனதில் உறுதி பூண்டிருந்தான். ஆனால்,அவர்கள் படிப்பதையோ, முன்னேறுவதையோ
பார்க்க அவளுக்குக் கொடுத்து வைக்கவில்லை.
இவ்வளவு விரைவில் அவளுக்கு இப்படி யொரு முடிவு வரும் என்று யார்தான் எண்ணியிருந்
தார்கள் ?
அம்மா இறந்துவிட்டாள் என்பதைக் கேள்விப் பட்டு ஓடி வந்த அவனுடைய சகோதரிகள் அவனையும் அவன் சின்னண்ணனையும் கட்டிப் பிடித்துக் கதறிய கதறலில் கூடியிருந்த சனங்களும் அழத் தொடங்கி
விட்டனர்.
இப்போதும் அவர்கள் இரண்டு பேரும் தாயின்
2

ན༽ தலைமாட்டில் இருந்து அழுவதைப் பார்க்க அவ னாலும் அழுகையை அடக்க முடியவில்லை. அவனுடைய சின்னண்ணன் எங்கோ ஒரு மூலையில் போயிருந்து அழுகின்றான். இனி எனக்கும் சின்னண்ண னுக்கும் ஆதரவுக்கு ஆர் இருக்கிறாங்க ? இப்ப ஆஸ்பத்திரியில கிடக்கிற அப்பா சுகமாகி வந்தாலும் திருப்பியும் குடிச்சுப் போட்டு வருவார். அவரா எங்களுக்கு ஆதரவு ?" அவன் தனக்குள்ளே விம்முகிறான்.
நேற்று இந்த நேரமெல்லாம் அவன் அம்மா வீட்டில் இருக்கிறாள். தேநீர்க்கடை வேலுவின் வீட்டுக்கு மாவிடித்துக் கொடுக்கப் போகும் அவள் கடந்த
இரண்டு நாட்களாய்ப் போகவில்லை.
"ஏனம்மா, மாவிடிக்கப் போகல்லையா?” என்று அவன் கேட்டதற்கு “காய்ச்சல் போலக்கிடக்கு, உடம் மெல்லாம் குத்தி வலிக்குது . நான் போகல்ல
என்று சொல்லிச் சுருண்டு படுத்தாள்.
பரீட்சைக் காசு கட்ட என்று அவள் கொடுத்த பதினைந்து ரூபா அவனிடம் இருந்தது. வகுப்பாசிரியை இரண்டு நாட்களாய்ப் பாடசாலைக்கு வராததால்
அந்தக் காசு அப்படியே இருந்தது.
"அம்மா உழைச்ச காசுதானே நான் சோதினை எழுதாட்டியும் அம்மாட வருத்தத்துக் அது உதவ ட்டும்" என்று ஓடிப்போய் இரண்டு பனடோல் வாங்கி
வந்து கொடுத்தான்.
“ஏதுடா காசு ?" என்று கேட்டாள். ஏதென்று அறிந்ததும் கோவித்தாள் “போம்மா, ரெண்டு ரூபா தானே எடுத்தன். நான் ரீச்சரிட்டச் சொல்லுவன் அவ கோபிக்கமாட்டா" என்று அவன் சொன்ன
பின்தான் அந்தப் பனடோலை விழுங்கி நீரும் குடித்தாள்.
சிறிது நேரத்தில் எழுந்து சோறு சமைத்து, மரவள்ளிக் கிழங்குக் கறிவைத்து மக்கள் இருவருக்கும் கொடுத்தாள். அவள் சாப்பிடவில்லை. "பசிக்கல்லடா என்று சொல்லிப் படுத்தாள். தள்ளாடிக் கொண்டுவந்த கணவரைப் பிடித்து வந்து சோறு கொடுத்தாள். அவளின் உடற்சூட்டை உணர்ந்து "என்னடி, காய்ச்சலா ?” என்று கேட்டார் அவர். "ஓம்" என்று
சொல்லிச் சுருண்டு படுத்தாள் அவள்.
அவள் ஒடியாடி வேலை செய்யாமல் படுத்து அவன் பார்த்ததில்லை. எப்போதும் சுறுசுறுப்பாய்த்
தான் இருப்பாள். ஒவ்வொரு நாளும் வேணுவின்
محصہ
பெண்ணின்குரல் 0 டிசம்பர் 2000

Page 22
r தேநீர்க்கடைக்கு ஒரு மரைக்கால் அரிசி இடித்து வறுத்துக் கொடுத்துவிட்டு வருவாள். வரும் போதே அந்தக் கூலிக்கு அரிசியும் கறியும் வாங்கி வந்து சமைத்து மக்களுக்குக் கொடுத்துவிட்டுக் கணவனுக் காகக் காத்திருப்பாள்.
சிறுகதை, இசையும் கதையும், பாவையர் பாம நிறைய எழுதினேன். இந்த வகையில் வானொலி நி:
களம், மலர் சுடர், தினக்குரல் போன்றவற்றில் பல நாடகங்கள் வில்லுப்பாட்டுக்கள்
போன்றவையும்
ஆண்கள் என்ன கொடுமை .ெ பாழடிப்பது தான் என் மனதைச் ச பெண்களிடமும் இத்தகைய அடி
21
 
 
 
 
 
 
 
 
 

ויר
தாய் படும் துன்பங்களைப் பார்த்துச் சகிக்க முடியாமலிருக்கும் அவனுக்கு "நீ மாவிடிக்கப் போக வேணாம் அம்மா" என்று அவன் சின்னண்ணனும் கெஞ்சுவான். "நான் மாவிடிக்கப் போனாத்தாண்டா
உங்கட வயிற்றப்பட்டினி போடாமக் காப்பாத்தலாம்.
مہ
பெண்ணின்குரல் 0 டிசம்பர் 2000

Page 23
உங்கப்பன்ர உழைப்பு ஒழுங்கா வீட்டுக்கு வந்தா நான் ஏன் இந்தப்பாடு படப்போறன் ?என்று நொந்து
கொள்வாள்.
சில வேளைகளில் இரவில் படுக்கும் போது அம்மா அவன் முதுகை வருடிக் கொடுப்பாள். சொர சொரவென்று மரக்கட்டையால் உரசுவது போலி ருக்கும். அவன் அம்மாவின் கையைப் பிடித்துத் தன் கையால் தடவிப் பார்ப்பான். "என்னடா பாக்கிறாய், உலக்கை புடிச்சிப் புடிச்சி என்ர கையும் மரம் மாதிரியே மாறிப்போயிற்று" என்று சொல்லும் அவளைக் கட்டிப் பிடித்து அழவேண்டும் போலிருக்கும் அவனுக்கு. ஆனால் அப்படிச் செய்ய முடியாததால் மெளனமாய்க் கண்ணிர் விடுவான்.
எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அம்மா அழுததை அவன் கண்டிருக்க மாட்டான். ஆனால் அவனுடைய மூத்தமகன் வீட்டை விட்டு ஓடிய அன்று தான் அவள் ஒப்பாரி வைத்து அழுதாள்.
அவனுக்குப் பதினெட்டு வயது. கணவன் குடித்தாலும் மூத்த மகன் இருக்கிறான் என்று நம்பியிருந்தவள் அவள். அவனும் தகப்பனுடன் மேசன் கூலியாகப் போனவன்தான். ஒழுங்காகச் சம்பளக் காசெல்லாம் கொண்டுவந்து கொடுப்பான். ஆனால் ஒரு நாள் வேலைக்குப் போனவன் திரும்பி
வரவேயில்லை.
"தலையிடிக்குது, வீட்ட போறன் என்று தகப்பனிடம் சொல்லிவிட்டுத் திரும்பியவன் எங்கே போனான் என்றே தெரியவில்லை. அன்றுதான் அம்மா அழுததை அவன் பார்த்தான். அவனை எங்கெல் லாமோ தேடினார்கள். இரண்டு மூன்று பையன்களுடன் சேர்ந்து அவன் போனதைக் கண்டதாக யாரோ சொன்னதைக் கேட்டு அவன் எங்கே போயிருப்பான் என்பதை ஊகித்து அழுது ஓய்ந்து போனாள் அவன்
அம்மா.
அவன் போனபின் தான் அவள் மாவிடிக்கிற
வேலைக்குப் போகத் தொடங்கினாள்.
"அப்பு, எழும்புடா, கொஞ்சம் தேத்தண்ணி யெண்டாலும் குடிச்சிற்று வா” பக்கத்து வீட்டு லெட்சுமியக்கா அவனைக் கூப்பிடுகிறாள். அம்மா செத்துப் போய்க் கிடக்கக்குள்ள எனக்கென்னத்துக்குத் தேத் தண்ணி? அவன் வேண்டாமென்று தலை யாட்டுகிறான்.
"நேற்றையில் இருந்து ஒண்டும் கடியாமக்கிடக்

கிறயேடா, நீதானே அம்மாவுக்குக் கடமை செய்ய
வேண்டும். எழும்பு, நடக்கிறதுக்கும் பெலனில்லாமப் போயிரும் . " அவள் அவனுடைய கையைப் பிடித்து இழுக்கிறாள். அவன் அவளுடைய கையில் சாய்ந்து அழுகிறான். அவனால் அழுகையை அடக்க முடிய வில்லை.
“கைகால் ஏலாமக் கிடக்கக்குள்ள தண்ணி ஊத்துறதுக் கெண்டாலும் .எண்டு சொல்லி எங்கள வளர்த்த நீ. இப்ப உனக்குக் கொள்ளி குடம் தூக்கப் போறனேயம்மா .” அவன் அழ, லெட்சுமியும் அவன் தலையைத் தடவி அழுகிறாள். நாசமாப் போவானுகள் . சும்மா கிடக்கிற அப்பாவியள் என்ன குற்றம் செய்ததெண்டு இப்பிடிக்கண்மண் தெரியாமச் சுட்டுத்தள்ளுறானுகள் இதெல்லாம் கேக்கப் பார்க்க
கடவுள் தான் இல்லையா ?”
அவனுக்கு அம்மாவைக் கொன்றவர்களை விட அப்பா மீது தான் ஆத்திரம் ஆத்திரமாக வருகின்றது. நேற்று அவர் குடிவெறியில்லாமல் வீட்டுக்கு வந்திருந் தால் காய்ச்சலென்று அறிந்த உடனேயே ஆஸ்பத்திரி க்குக் கூட்டிக் கொண்டு போயிருக்கலாம். பொழு தோடேயே போயிருந்தால் இந்த அநியாயம் நடந் திருக்குமா ?
நேற்று இரவு சாப்பிட்டபின் எல்லோரும் அவரவர் படுக்கைகளில் சுருண்டு கொண்டனர். அவன் தந்தை வெறி தணியாமல் புலம்பிக் கொண்டு கிடந்தார். அவன், தான் படுத்த இடத்திலிருந்து உருண்டு புரண்டு அம்மா படுத்துக்கிடந்த இடத்தில் போய்ப்படுத்துக் கொண்டான். "எல்லாருக்கும் சமைத்துக் கொடுத்துப் போட்டுத் தான் ஒண்டும் சாப்பிடாமக் கிடக்கிறாவே" என்று அவன் தாய்க்காக இரங்கினான். அவனுக்குத் தூக்கம் வரவில்லை. நேரம் செல்லச் செல்ல அவள் அனுங்குவது கேட்டது. மெல்ல அவளுடைய கழுத்தில் தன் புறங்கையை வைத்துப் பார்த்தான். திகிரென்றிருந்தது. நெருப்புக் கூட இப்பிடிச்சுடுமோ ?
"அம்மா, அம்மா என்று கூப்பிட்டுப் பார்த்தான். முனகல் ஒலி மாத்திரம்தான் பதிலாய்க் கிடைத்தது. வாரிச் சுருட்டி எழுந்து கொண்டவன் பீதியுடன் அவளைப் பிடித்து அசைத்து “அம்மா” என்று கேவினான் அந்தச் சத்தத்தைக் கேட்டு அரண்ட அவன் தந்தை " என்னடா அது ?" என்று கேட்டுக் கொண்டு எழுந்தார். “அம்மாவுக்குக் காய்ச்சல் உரமாயிருக்கு . கதைக்கிறாவில்ல . ” என்று அழுதான் அவன்.
لهم
பெண்ணின்குரல் 0 டிசம்பர் 2000

Page 24
தட்டுத் தடுமாறித் தீப்பெட்டியை எடுத்துத்தட்டி, |அந்த வெளிச்சத்தில் விளக்கைத் தேடி எடுத்து கொழுத்திக் கொண்டு வந்தான் அவன் சின்னண்ணன்.
நீ போய் லெச்சுமியக்காவையும் புருசனையும் கூட்டிற்று வா, ஆஸ்பத்திரிக்குக் கூட்டிற்றுப் போவம்" போதை முழுதாய்த் தெளியாத குரலில் தந்தை சொன்னதைக் கேட்க அவனுக்கு ஆத்திரமாய் வந்தது. "இந்த நேரத்தில எப்பிடி ?"அது எனக்குத் தெரியுண்டா, நீ போய் நான் சொன்னதைச் செய்"
அவன் வேலியால் எட்டி, லெட்சுமியையும் கணவனையும் எழுப்பி அழைத்துக் கொண்டு வந்தான்.
அவன் தாய் அப்போதும் அனுங்கிக் கொண்டிருந்தாள்.
“முருகேசு, இவள எப்பிடியெண்டாலும் ஆஸ் பத்திரிக்குக் கொண்டு போகோணும் . உன்ர வண்டிலக் கட்டு "இந்த நேரத்தில எப்பிடியண்ண, சென்றியில விடுவானுகளா ? பத்துமணிக்கும் மேல 8 o « aX « 4 0 w «v " முருகேசு தயங்கினான். "அதை நான் பார் ப்பன். உனக்கு விருப்பமெண்டா வண்டிலத்தா, இல்லாட்டிச் சொல்லு, நான் தூக்கிற்றெண்டாலும் போறன். அவர் அரைகுறைப் போதையில் பிடிவாதமாய் நின்றார். அதற்குமேல் எது சொன்னாலும் எடுபடா தென்று முருகேசுவுக்குத் தெரியும். காய்ச்சல் வேகத்தில் துடிப்பவளை வீட்டில் வைத்திருப்பதும் ஆபத்து என்பதால் அவன் போய்த் தன் மாட்டை அவிழ்த்து
வண்டியிற் பூட்டிக் கொண்டு வந்தான்.
அவர்கள் இருப்பது அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லாத ஒரு குடியேற்றக்கிராமம். வைத்திய சாலை, பாடசாலை, சந்தை, கடை, தபாலகம் எதுவென் றாலும் ஏறக்குறைய இரண்டு கிலோமீற்றர் தூரம் சென்றாக வேண்டும். இடையில் இரண்டு சோதனைச் சாவடிகளைத் தாண்டிச் செல்ல வேண்டும். பிரயாண வசதிகள் கூட எதுவும் இல்லை. மாட்டு வண்டியும் மோட்டார்ச் சைக்கிள்களும், துவிசக்கர வண்டியும் தான் அவர்களுடைய வாகனங்கள். இரவுப் பயணம் என்பது அப்பகுதியில் வாழும் மக்களைப் பொறுத்த லரையில் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றுதான்.
கேற்றடியில் வண்டியை நிறுத்தி விட்டு மனைவியைத் தூக்கி வந்து வண்டியில் ஏற்றினார். லெட்சுமியும் முருகேசுவும் "நாங்களும் வாறமண்ண" என்று சொல்லியும் கேளாமல் அரிக்கன் இலாம்பு தொங்கவிடப்பட்ட வண்டியை ஒட்டிக் கொண்டு அவர் சென்று ஒரு பத்து நிமிடங்கள் கூட ஆகியிருக்க
மாட்டாது.
ܥ

ག
படபடவென்று கேட்ட நான்கு வெடிச்சத்தங்கள் அனைவரையும் கூடியிருந்தவர் களையும் அதிர வைத்தன. என்ன நடந்திருக்கும் என்பதை எவராலும்
ஊகிக்க முடியாதிருந்தது.
அதிகாலையில் போய்ப்பார்த்து வந்தவர்கள் சொன்ன அந்தச் செய்தி அவனையும் அவன் சின்னண்ணனையும் உலுக்கியது. வெடிபட்டு அவனுடைய தாய் வண்டியிலேயே சுருண்டு கிடக்க, காலில் பட்ட வெடியோடு அவனுடைய தந்தை மயங்கிப் போய்க்கிடந்ததாகவும் அவரை இராணுவத் தினரே வைத்தியசாலைக்குக் கொண்டு போனதாகவும்
பேசிக் கொண்டார்கள்.
அவனுடைய தாயோடு அவனுக்கு எல்லாமே போய்விட்டது. அவனுடைய சுகம், துக்கம், அன்பு, பாசம், அரவணைப்பு எல்லாமே அம்மாதான். இப்போ அம்மா இந்த உலகில் இல்லை என்பதை நினைக்க அவனுக்கு எதுவுமே இல்லாத ஒரு வெறுமையே நெஞ்சில் கல்லாய்ப்படிந்தது.
அவன் அம்மாவைக் கொண்டு போகும் நேரம் நெருங்கிவிட்டது. வீட்டில் தந்தை இல்லை, மூத்த அண்ணன் இல்லை. "பாவி, அம்மா சரியான பாவி
பாடையில் அவளைத் தூக்கி வைக்க கூடியிருந்த எல்லோருமே ஒப்பாரி வைத்து அழுகிறார்கள். அவன் நெஞ்சுக்குள் ஏறிய துயரம் பாறாங்கல்லாய்க் கணக்கிறது. தாயின் அந்தப் பாச முகத்தைப் பார்க்கப் பார்க்க உலகத்தில் அவனுக்கு இனிமேல் ஒன்றுமே இல்லாமல் அவனுடைய சந்தோஷம் எல்லாவற்றையும் தானே கொண்டு போவது போல அவளின் முகம் மலர்ந்திருப் பதாய்த் தெரிகிறது,
பறையோசையும் ஒப்பாரியும் அவன் செவிப் பறையை அதிரவைக்கின்றன. அவன் அம்மாவை வளர்த்திய பாடையை யாரோவெல்லாம் தூக்கு கின்றார்கள். கடைக்கார வேலு கொள்ளி குடத்தைத் தூக்கி அவனுடைய தலையில் வைக்கிறார்.
அவனை யாரோ முன்னால் நடத்த, அவனைப் பெற்றவள் அவன் பின்னால் கடைசிப் பயணம்
புறப்படுகிறாள்.
ا
பெண்ணின்குரல் 0 டிசம்பர் 2000

Page 25
سر//
-ܓܠܠ
அவள். அழுதெ
ஊரடங்கிப் போய்விட்ட அர்த்த ஜாமத்தில். ஆந்தையின் அலறல்மட்டும் ஏதிரொலிக்கும் பொழுதில். அந்தச் சுடுகாட்டு மருங்கிலே வெள்ளை ஆடையுடன் தலைவாரிக்கோலமாய் ஒரு பெண் அழுதுகொண்டிருந்தாள்.
அவள். கட்டிய கணவனவன் கணிகையின் வீடு செல்ல கூடையில் சுமந்துசென்ற பேதை நளாயினியா?
L க்கனிச் இன்னொரு பெண்ணுடன் முயங்குவதை அறிந்தும் மெளனித்து இல்லம் காத்துநின்று. எல்லாம் இழந்து வந்த
*சிலம்புள கொளும்' என்ற (இன்று தாலிச்சரடு) அப்பாவிக் கண்ணகியா?
அன்றேல். துணைவன் இருக்குமிடம் தனக்கும் அயோத்தியே என்றுரைத்து கானகத்தில் உடனுறைந்துப் பின்
கற்பில் களங்கம் என்ற ஐயம் நீங்க வென்று
கனலில் குளித்தெழுந்த இன்டர்நெட் யுகத்தினிலோ வெர்ஜினிட்டி டெஸ்ட்டாக்கும்) கோதை ஜானகியோ? அல்லது.
களவில் வந்துற்ற கயவன் சூழ்ச்சியினால் கல்லாகிப்போன - அந்த காரிகை அகலிகையோ?
22

காண்டிருக்கிறாள் -།ཛོད། V எழுதியவர் : സെ.ബ്ര
கணவரென ஐந்துபேர்கள் கல்போல் அமர்ந்திருக்க. சபை முன் மானங்காக்க கதறிய திரெளபதியோ? அடடா, நெருங்கிவிட்டேன்
இவள்.
ஜானகியாய் அகலிகையாய் திரெளபதியாய் ம்டடுமின்றி, உணர்வற்ற இயந்திரமாய் உரிமையற்ற சிறுபுழுவாய் மதிப்பற்ற வெறுஞ்சரக்காய் LDäĥ60DLDu figmo @C5 eg I DTuiu சுரண்டலுக்கும் உட்படுத்தி சீரழிந்து போயிருக்கும் பெண்மையின் பிரதிநிதி! لااللږی இவள் நவீன பெண்மையின் பிரதிநிதி!
இவளுக்கு. பாரதி கண்ட அந்த
பேசிப்பேசிப் பரிபவர்கள் பெறும்பாலும் ஆடவர்தாம்

Page 26
என்னே அவர்தாம்! அளப்பரும் கருணை! நன்றி உரைப்பதுவும் எங்களின் பெருங்கடமை
சரிதான்! பெண்ணுக்கு உரிமைகளும் பூரண சுதந்திரமும் தரப்படத்தான் வேண்டும்!
ஆனால். அனேகமானவர்கள்
மற்றதை மறந்துவிட்டு
ஆடைச் சுதந்திரத்தை அடிக்கடி வலியுறுத்தல் ஏனென்று புரியவில்லை! ஆடையில் பூரண சுதந்திரம் (1) பெறுதல் மட்டுமா எங்களின் தலையாய பிரச்சினை சீதனமென்றும் கீழுழைப்பென்றும் சீரழியும் நிலை சீர்பெற்றுவிட்டதா? விளம்பரந்- தோறும் கவர்ச்சியின் பெயரால் கடைச்சரக்காக்கிடும் கயமைக்கு முடிவு(ம்) கட்டியாய் விட்டதா? வீட்டில் வெளியில்
பார்வையால் வார்த்தையால் பாலியல் வதையால் உணர்வுகள் மிதித்திடும் இழிவுக்கு முற்றுப்புள்ளி இடப்பட்டு விட்டதா? பெறும்பாலும் ஆடவர்தாம்! ஓ! மறந்துவிட்டேன்! வாகன நெரிசலில் தள்ளாடித் தவிக்கையில் லொத்தர் சீட்டென்று எண்ணியோ என்ன பெண்களை சுரண்டிப் பார்க்கின்ற ஈனச் செயலுக்கு முடிவு கண்டாயிற்றா?
என்ன, சிரிப்பு வருகின்றதா?
25

நன்றாகச் சிரியுங்கள்! மேடைகள் தோறும்
பெண்மை துகிலுரியப்படும் போதெல்லாம்
பதராய். நெடுமரமாய் பார்த்துக்கொண்டிருப்பது பழகிப்போய் விட்டதன்றோ? அதனால். நெருப்பெழச் சீறாமல் சிரிப்பாய்ச் சிரித்திருங்கள் ᎧᏁᎠᏉ . . . . . . b பெண்மை வாழ்கவென்றும் பெண்மை வெல்கவென்றும் பாடிய புலவனின்று பார்விட்டுப் போய்விட்டான்! இன்றோ. உயிரும் உணர்வுங்கொண்ட உன்னதப் பெருமைகொண்ட பிறவிதான் பொண்ணுமென்ற
பிரக்ஞையைத் தொலைத்துவிட்டு.
அற்பமாய்...அடிமையுமாய் வளைவுகளை நெளிவுகளை நளினமாய்க் காட்டிநிற்கும் என்பினைப் போர்த்துவிட்ட வெறும் தசைகொண்ட பிண்டமுமாய் பெண்மையைக் கருதுகின்ற கொடுமையினை கண்டு-அவள் அழுதுகொண்டிருக்கின்றாள்!
வேதனையில;. இதயங் கருகிவாட விழிகளிலே. உதிரம் பெருகியோட
அவள் இன்னும் இடைவிடாமல் அழுதுகொண்டிருக்கிறாள்!
ஆம்!
நீங்கள் விழித்துக்கொள்ளும் வரை! மனித நேயம் இவ்வுலகத்தில் என்றேனும் விழித்துக் கொள்ளும் வரை. அவள் அழுதுகொண்டேயிருப்பாள்!

Page 27
r
அபிப்பிராயம்
gл6ӧї спрц26
9 பிறதுறைகளில் சாதிக்க முடிகிற அளவுக்கு எ
முடிவ தில்லை ? இக்கேள்விக்கு பிரபல
அமைந்திருந்தது.
சிவசங்கரி
ராஜம் கிருஷ்ணன்
திலகவதி
அனுராதா ரமணன்
இந்துமதி
“1940 களில் பெண்கள் பட்டிருந்தது. வீட்டு வே இளம் பருவத்தில் இரு அவள் புத்தகம் படிட் தடைவிதித்தனர். எனே
பெண்கள் எழுத்தாளர்
"இதை நான் வாழ்வில் பெண்கள் எழுது வதற் படிப்பதையும் எழுதுவ நம்வீட்டு பெண்கள் ெ
"நான் கதை எழுதும்பே நடப்பாள்" என்று பிரட பெண் எழுத்தாளர்களில் கவனிப்பது, கணவனை
ஒரு பெண், எழுத்தாள
"எந்தக்கணவனும் தன விரும்புவதில்லை. அவ விரும்புவார்கள். கணவ
பெண்ணின் குறிக்கோள
ஒரு பெண் சிறந்த எழு செய்ய வேண்டும். அட் இருக்க வேண்டியுள்ளது தனது "கரக்ரரை” அ வேண்டும். அப்படி அ இருக்கிறதோ என்று ர

வதில்லை ??
ழத்துத்துறையில் ஏன் நிறையப் பெண்களால் சாதிக்க பெண் எழுத்தாளர்கள் பதில் சொன்னது இப்படி
அதிகம் பேசுவதற்குக்கூட வீடுகளில் தடை விதிக்கப் லை செய்வதுதான் பெண்களின் கடமை என்ற கருத்தை ந்தே பெண்களின் மூளைகளில் ஏற்றிய பெரியவர்கள் பதை எதிர்த்தனர். அதிகம் வெளியில் செல்லக்கூடத் வதான் இந்த நூற்றாண்டின் இடைக் காலத்தில் அதிக
களாக மிளிர முடியவில்லை.
நேரிடையாக அனுபவித்தவள் நடுத்தரக் குடும்பத்துப் கு மிகவும் சிரமப்பட்டார்கள். என் குடும்பத்தினர் நான் தையும் ஊக்குவித்த தேயில்லை. புத்தகங் களைப்படித்து
கட்டுவிடுவார்களே என்ற பயம் அவர்களுக்கு.
ாது தன் காலடி ஓசை கூடக் கேட்காதபடி என் மனைவி 1ல எழுத்தாளர் ஒருவர் கூறியுள்ளார். ஆனால் எத்தனை ன் கணவர்கள் இப்படி இருக்கிறார்கள் ? குழந்தைகளைக் க் கவனிப்பது போன்ற வேலைகளைச் செய்த பிறகுதான்
ராக முயற்சி செய்ய வேண்டியுள்ளது.
ா மனைவி தன்னைவிட புத்திசாலியாக இருப்பதை ள் தன் பணிகளை கவனிக்க வேண்டும். என்றுதான் னையும் குடும்பத்தையும் சந்தோஷப் படுத்துவதே ஒரு ாக இருப்பதால் அவள் எழுத்தை விட்டுக் கொடுக்கிறாள்.)
த்தாளராக வேண்டு மானால் பல இடங்களுக்குப் பயணம் படிப் போகும் போது அவள் மிகவும் எச்சரிக்கையுடன் 1. நூறு ஆண்களோடு ஒரு பெண் நட்பாகப் பழகும்போது | வள் வெள்ளை வேட்டி மாதிரி பாதுகாத்துக் கொள்ள வள் பாதுகாத்துக் கொண்டாலும் அந்த வேட்டியில் கறை
ம்மையே சந்தேகப்பட வைப்பவர்கள் இருக்கிறார்கள்.
w 一
26 பெண்ணின்குரல் 0 டிசம்பர் 2000

Page 28
அனுராதா ரமணன்
பத்மா
கெளரி பழனியப்பன்.
சோமகாந்தன்.
“ஒரு ஆண், பெண்ணின் சந்தேகப்பட மாட்டார்கள். எழுதினால் உனக்கு இத்ெ
பார்வை பார்ப்பார்கள்.
ஒரு ஆண் எழுத்தாளராகு ஆனால் பெண்ணுக்கு அட் எனவே எழுதித்தான் பிழை
வருவதில்லை. அதனால்
எழுத்து என்பது ஒரு தவம் பயிற்சியும் அனுபவமும் விளங்கியும் புரிந்தும் இரு முன் வைத்துக் கோணல்
ஆனால் காலங்காலமாக வாழ்ந்த பெண்ணினம் க ள்ளது. கற்றோர் எல்லோ
கற்பனை ஊற்றோடும் கன
சிறப்பு மேலிடும். கல்வியில்
சுமை, நேரப்பிரச்சினை எ
எழுத்துலகப் பாதைக்குத்
அல்லாமலும் இலங்கை.ை
ஒரு சங்கதி பயிற்சிக் கான இந்தக்கலை, இத்தகைய கு காதிருப்பது விந்தையில்ை
இலங்கையில் பெண் எழுத்த
கூறமுடியும். எடுத்த எடுப்
திறம்பட எழுதுவதற்கு ஆ மட்டத் திலேயே, நாம் கல்
பத்திரிகையை உருவாக்கி துணுக்குகள் சம்பாஷ6ை தரத்துக்குமேற்றபடி ஆக்
எழுதிப் பழகவும் பயிற்சிெ பெண்களைப் பொறுத்
எழுத்தாக்கங்களில் மனன அத்தோடு அவர்களையும் ( இல்லை.கிடைக்கும் அற்ப ஆகியவற்றோடு கழிந்துவி
27

அந்தரங்கத்தைப் பற்றி எழுதினால் அதுபற்றி யாரும் ஆனால் அதே ஒரு பெண், ஆணின் அந்தரங்கத்தைப்பற்றி
நல்லாம் எப்படித் தெரியும்? என்று ஒரு வித ஏளனப்
ம் போது அதுவே அவன் தொழிலாகவும் ஆகிவிடுகிறது. படியில்லை. அவள் கணவனைச் சார்ந்து இருக்கிறாள்.
முக்க வேண்டும் என்ற கட்டாயமும் தேடலும் அவளுக்கு வெற்றி பெற வேண்டுமென்ற வெறியும் இல்லை
. அதில் ஆழ்ந்து மூழ்கி வெற்றி பெற நிறைய வாசிப்பும் தேவை. பல நூறு மடங்கு விஷயங்களைத் தெரிந்தும்
ந்தால் தான் ஓரிரு விடயங்களையாவது வாசகனுக்கு
களைத் திருத்தி மனப்பண்பாட்டை விரிக்க முடியும்.
க் கல்வி வாசனை யின்றி அடக்கியொடுக்கப்பட்டு
டந்த நூற்றாண்டில் தான் கல்விப் பிரவேசம் செய்து
ரும் படைப்பாளிகளா கிவிடலாமென்றில்லை. ஆனால் லை உணர்வோடும் கல்வியறிவும் சேர்ந்தால் எழுத்தின் ல் பின்தங்கியமை, குறுகிய வட்டத்துள் வாழ்வு, குடும்பச் *னப் பல்வேறு முள்ளுகளும் பற்றைகளும் பெண்ணின்
தடை போட்டுள்ளன.
யப் பொறுத்தளவில் எழுத்துத்துறை வருவாய் தராத ா களங்களும் மிகமிகக் குறைவு. ஆத்ம திருப்திக்கான
சூழலில் சிக்கிக்கிடக்கும் பெண்களை அதிகம் அணைக்
லயே !
நாளர்கள் அதிகம் தோன்றாததற்குப் பல காரணங்களைக்
பிலேயே திறமான படைப்புகளை உருவாக்க முடியாது.
ரம்பத்தி லிருந்தே ஊக்குவிக்க வேண்டும். பாடசாலை
வி கற்கும் போதெல்லாம் மாணவர்கள் கையெழுத்துப்
அதில் பலரும் தமது கவிதைகள், கதைகள் கட்டுரைகள், ணகள், விபரணங்கள் எனத் தத்தம் சுவைக்கும்
கங்களைப் படைக்கத் தூண்டப்பட்டோம். அப்படியே பறவும் போதிய அவகாசம் கொடுக்கப்பட வேண்டும். தளவில் வீட்டு வேலைகளோடு சிரமப் படுவதால் தைச் செலுத்தப் போதிய அவகாசம் கிடைப்பதரிது. இத்துறையில் ஆர்வத்தைத் தூண்டிவிடக்கூடிய ஏதுக்களும் சொற்ப நேரங்களும் வானொலி, தொலைக்காட்சி
விடும். இவ்வூடகங்களுக்கு எழுதுவதற்கும் நியாயமான
ھے۔
p பெண்ணின்குரல் 0 டிசம்பர் 2000

Page 29
அறிவும் எழுத்துப்பயிற்சி இலகுவான காரியமில்லை
பெண்கள் எழுத்துத்துறை
கற்பனை வளம், எழுதும் நிறைய உண்டு. ஆனால் எழுத்துலகில் நடமாடவி
அதற்கும் சரியான பதில்
கிடப்பதால் ஆண்களை
அன்னலட்சுமி தெரிந்துகொள்ள பயணி
இராஜதுரை
விடயங்களையும் ஆராய அவள் இல்லை. அவளுை சிந்தனை மட்டுப்படுத்தட
மேற்கொள்ளக் கூடிய
படைப்பாளி யாகப் டே
பெண்களுக்கு அந்தந்த கு அவர் களுடைய வாழ்வு முரண்பாடுகள் என்பவற்ை
இலக்கியம் படைக்க முடி
இப்பொழுது பல தடைகள் தகர்ந்திருப்பதா என்ற நம்பிக்கையை இத்தகைய கருத்துக்களைப் உறவுமுறை, சமுதாய விமர்சனங்கள் என்பன விளைவிக்கின்றன. என்பது தெரிய வருகிறது. உணர்ந்து கொள்ள வேண்டும். எழுத்துத்துறை தொழிலோ அல்ல. ஒவ்வொரு கணமும் எழுத்தி வேண்டியுள்ளது.
அந்த சிந்தனை சிறந்த ஆளுமையுடன் ஆ பெண்ணுக்கு வரையறுக்கப்பட்டதாக இருக்கும் போ 2அப்படியே எழுத்துத்துறையில் இறங்கினாலும் எத்தனை படிமுறையில் தணிக்கை செய்ய வேண்
சமூகத்தில் தன் இருத்தல் பற்றி வேலைசெய தன் நிலைபற்றி குடும்பத்தில் குடும்பத்தவரின் , காணிக்கை களுக்கு உட்பட்டு ஏதேதோ எழுத (Քկ պւն ?
ஆனாலும் கூட போராட்டக் குணமுள்ள ெ
புலம்பெயர் நம் பெண்கள் பலர் இதை நிரூபித்து 6
2

ר
யும் தேடலும் அவசியம். இவற்றைப் பெற்றுக் கொள்வது . தூண்டுதலும் வழிநடத்தவும் கூடிய வாய்ப்புக்களின்மையும்
யில் ஈடுபடத் தயக்கம் காட்டுகின்றனர் எனக் குறிப்பிடலாம்.
ஆற்றல் படைப்புத்திறன் யாவுமே பெண்களுக்கு நிறைய
பெண்கள் ஆண்களைப் போல அதிக தொகையினராக ல்லையே ஏன் ? இது ஒரு நியாயமான கேள்விதான் உண்டு. பெண்கள் வீட்டோடு வேலையோடு அடைந்து ப் போல பத்தும் பலதுமான விடயங்களை அறிய, க்க வசதிகளும் வாய்ப்புகளும் மிகமிகக் குறைவு. பல்வேறு சிந்திக்க, கலந்துரையாட, விவாதிக்கக் கூடிய சூழ்நிலையில் டய கைகள் கட்டப்பட்டுள்ளன. கால்கள் கட்டப்பட்டுள்ளன. பட்டுள்ளது. தான் விரும்பும் நேரத்தில் விரும்பியவற்றை வகையில் போதிய சுதந்திரம் இல்லை. மிகச் சிறந்த சப்படுகின்ற ராஜம் கிருஷ்ணனைப் போல எத்தனை சூழலில் அம் மக்களோடு சேர்ந்து சிலமாதங்கள் வாழ்ந்து முறைகள், உரையாடல்கள், பிரச்சினை கள் நம்பிக்கைகள், றயெல்லாம் அந்தந்தப் பகுதிமக்களோடு சேர்ந்து அனுபவித்து պւD ?
ல் இனி பெண் எழுத்துக்கள் புத்துணர்ச்சி பெறும் பார்க்கும் போது, சமுதாய அமைப்புமுறை, குடும்ப எவ்வாறு பெண்ணின் எழுத்துத்துறையில் தாக்கம்
இதன்மூலம் நாம் முக்கியமான ஒரு விடயத்தை என்பது ஒரு குறிப்பிட்ட கால, நேர, வேலையோ, ன்ெ ஆக்கப்பாடுகள் கருவுற்ற வண்ணமே இருக்க
க்கப்பாடாக வெளிவருகிறது. இந்த சிந்தனையே து அவளால் எப்படி எழுத்துத்துறையில் மிளிரமுடியும் ஒரு எழுத்தை அவள் வெளிக்கொணரும் போது டியுள்ளது ?
ப்யும் பணியகத்தில் சக ஊழியர்களின் எண்ணத்தில் நிலைபற்றி எல்லாம் கவனிக்க வேண்டியவர்களாக
வேண்டியுள்ளது இது எப்படி சிறந்த இலக்கியமாக
பெண் களால் இதையும் வெற்றி கொள்ள முடியும். பருவது குறிப்பிடத்தக்கது.
தேவகெளரி
أص
8 பெண்ணின்குரல் 0 டிசம்பர் 2000

Page 30
பவள விழாக்கண்ட முற்போக்குப் படைப்பாளி ராஜம் கிருஷ்ணன் பல்லாண்டு வாழ்க !
படைப்பிலக்கியத்துறையில் ஆண்களது என் கர்த்தாக்கள் தோன்றாவிடினும், கணிசமான எண்ணி இன்று மூத்தவராகவும் முன்னிலையில் வைத்து எண்ண திருமதி ராஜம் கிருஷ்ணன் விளங்குகின்றார்.
நவம்பர் 5ஆம் நாள் அவருடைய 75ஆவ ராஜம் கிருஷ்ணன் நவீன இலக்கியத்தில் சிறுகதை, துறைகளில் பல தடங்கள் பதித்திருப்பினும், அவர் குறிப்பிடலாம். M
தமிழ் இலக்கிய உலகில் பலராலும் போற் ஆண்டு இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் எழுத்தாளர் புகைப்படக் கண்காட்சி முதலிய நிக
இலக்கியக் கலந்துரையாடல் செய்தமை பசுமையா
இவர் முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநாட் பாரதியின் தாக்கம்" என்ற தலைப்பில் சமர்ப்பி
கொழும்பிலே கலை இலக்கிய மாதர் குழுவொன்ன
"உண்மை வடிவங்களைத் தரிசித்த பின்ன மீட்டிவிட்ட சுரங்களைக் கொண்டு நான் இசைக்கு எனத் தனது நாவல்களைப் பற்றிக் கூறும் ராஜ ரஷ்யாவிற்குப் பரிசு பெறவும் நேபாளம், செக்கோள் மகளிர் சங்க சார்பில் விஜயம் செய்து, பல்வேறு
போக்குகளையும், பண்பாடுகளையும் நன்கு அவதா
பெண் கல்வி, பெண்கள் மேம்பாடு, சிந்தனைகளைத் தன் எழுத்துக்கள் மூலம் அழுத்த என்ற இடத்தில் 1925ஆம் ஆண்டு நவம்பர் மாதம்
இவருடைய தாயார் மீனாட்சி அம்மாள், தந் கணித ஆசிரியர். தந்தையார் ஆசிரியராகப் பணி வைப்பதில் ஆர்வம் காட்டினார். அக்கறையும் து வடமொழி ஆகியவற்றைக்கற்று இலக்கியத்தை அணு
இளமையில் குடும்ப வாழ்வில் புகுந்துவிட்ட திரு. முத்துக்கிருஷ்ணனோடு அவரது தொழில் நி வாழவேண்டியிருந்தது.
l

ணணிக்கைக்குச் சமமாகப் பெண் படைப்பிலக்கியக் ணக்கையினராக விளங்கும் பெண் பிரம்மாக்களுள்
ாக் கூடியவராகவும் நவீன இலக்கியப்படைப்பாளியான
து பிறந்த நாளாகும். இன்று பவளவிழாக்காணும் கட்டுரை, நாவல், குறுநாவல், ஆய்வு எனப் பல
சிறப்புற்றுப் பிரகாசிப்பது நாவல் துறையென்றே
றப்படும் சிறந்த நாவலாசிரியரான இவர் 1982ஆம் நடத்திய எழுத்தாளர் மாநாடு, நூல் கண்காட்சி, ழ்ச்சிகளில் கலந்து கொள்ள இலங்கை வந்தபோ க இன்றும் நினைவில் நிற்கின்றது.
டில் பங்குகொண்டு, "படைப்பிலக்கியப் புதினங்களில் த்த கட்டுரை யாவராலும் பாராட்டப் பெற்றது. றயும் இவர் தொடக்கி வைத்தார்.
னர் அந்த அனுபவங்கள் எனது இதயவீணையில் ம் புதிய வடிவையே நாவல் என்று கருதுகிறேன்" ம் கிருஷ்ணன், எழுத்தின் பயணமாக சோவியத் ஸ்லவேக்கியா ஆகிய நாடுகளுக்கும் இந்திய தேசிய நாட்டு மக்களுடைய வாழ்க்கை முறைகளையும் னித்துள்ளார்.
ஆண் பெண் சமத்துவம் எனப் பெண்ணியச் ம் கொடுக்கும் இவர் திருச்சிமாவட்டத்திலே முசிறி
5ஆம் திகதி பிறந்தார். தையார் யக்ஞநாராயணன், உயர், நிலைப்பள்ளியில் யாற்றிய காரணத்தால், மகளையும் நன்கு படிக்க டிப்பும் மிக்க ராஜம் இளமையிலேயே ஆங்கிலம்,
றுபவித்துச் சுவைப்பதிலும் ஈடுபாடுகொண்டார்.
நால் பொறியியல் வல்லுனரான இவரது துணைவர்
மித்தம் கோவா, நீலகிரி முதலிய பல இடங்களில்
أصـ
9. பெண்ணின்குரல் 0 டிசம்பர் 2000

Page 31
அங்கே மாலையானதும் படர்ந்து மூடிக்( தனிமையும் துணைவரின் உற்சாகமும் தன்னை எனக்கூறும் இப்பெண் பிரம்மா நாடகம், சிறுக கட்டுரைகள் முதலியவற்றை ஆங்கிலத்திலும் வெளி எழுத்துலகப் பின்னணியோ பாரம்பரியப் பற்றுக் எழுதுவதற்கே சிறிது பயந்து கொண்டிருந்தார் "போனஸ்” என்ற சிறுகதையொன்றை ஆங்கிலத் ஆக்ஸிலறி கார்ப்ஸ் ஜர்னல்" என்ற ஆங்கில சஞ்ச இந்துஸ்தான் டைம்ஸ் என்ற ஆங்கில இதழுக்கும் " |கட்டுரைகளும் எழுதினார்.
எந்த இயக்கத்தையோ கட்சியையோ அை விஷயத்தையும் கூர்மையாக அவதானித்து, உள்வ தனது முயற்சியால் வளர்த்துக்கொண்டு எழுத்தி
இவருடைய பேனா ஏனைய சில படைப் படம் பிடித்துச் சித்திரித்துக்காட்டி நிறுத்திக் கொ பின்வருமாறு அழுத்திக் கூறியுள்ளார்.
"தமிழ்ப்புதின உலகில் சமுதாய உண உணர்ந்து எழுதும் புதின ஆசிரியர்களுள் ராஜம் கி காட்டும் "உழைக்கும் குழந்தைகள்” என்ற ஆய்வு
30க்கும் கூடுதலான நாவல்களையும் சில தந்த இவரது "ஊசியும் உணர்வும்" என்ற கல்கியி ஹெரால்ட் றிபியூன் நடத்திய உலகச் சிறுகதைப் 1953இல் நடத்திய நாராயணசாமி நினைவு நாவ
பெண் குரல் என்ற இவரது நாவல் முதல் 1955இல் ஆனந்த விகடன் நடத்திய போட்டியில்
"வேருக்கு நீர்" என்ற நாவல் 1973இல் இ பல பரிசில்களையும் பாராட்டுதல்களையும் அள்ளி தமிழ்நாடு தேசிய மகளிர் கழகம், தேசிய மாதர் இந்திய அக்கடமி போன்ற நிறுவனங்களில் பல ஆற்றியுள்ளார்.
"மனித நாகரிகம் கண்டுபிடித்த ஆற்றல்மிக் ஜே.ஹர்ஸ்ஷேல் என்ற அறிஞர் கூற்றுக்கு இலக் கின்றன என்றால் மிகையில்லை.
பெண்ணின வளர்ச்சிக்காகவும் சமுதாய ம |பெண்ணியச் சிந்தனையாளரும் புகழ் பூத்த
பவளவிழாக் கண்டுள்ள இவ்வேளையிலே மேன்(
பங்குகொண்டு மகிழ்வோம் !

N
காள்ளும் பனியும், வெளியே சென்று உலவ முடியாத எழுத்துத்துறையில் ஆழமாகக் காலூன்ற உதவியது தை, குறுநாவல், நாவல் எனத் தமிழிசம் சிறுகதை க் கொணர்ந்து தன்னை அடையாளம் காட்டியுள்ளார். கோடோ இல்லாத காரணத்தால் இவர் ஆரம்பத்தில் முதன் முதல் "லேகினி" என்ற புனை பெயரில் தில் எழுதினார். இவருடைய கதை "இந்தியன் விமன் கையில் முதலில் வெளிவந்தது. அதனைத்தொடர்ந்து
காவேரி” “மித்ரா" என்ற புனைபெயர்களில் கதைகளும்
மப்பையோ சாராமல் தனித்து நின்று, ஒவ்வொரு சிறு ாங்கிச் சிந்தித்துப் போதிய இலக்கியப் பயிற்சியையும் லக்கியத் தாகத்தைத் தீர்த்துக்கொண்டார்.
பாளர்களைப் போல வெறுமனே சிக்கல்களை மட்டும்
ள்வதில்லை. இதனை திருதா.வே. வீராசாமி அவர்கள்
னர்வோடு எழுதுபவர்கள் மிகக்குறைவு. அவ்வாறு ருஷ்ணன் குறிப்பிடத்தக்கவர்." என ராஜம் கிருஷ்ணன் க் கோவையில் குறிப்பிட்டுள்ளார்.
சிறுகதை கட்டுரைத் தொகுதிகளையும் தமிழுலகிற்குத் ல் வெளியான சிறுகதை 1950- 1951 களில் நியூயோர்க் போட்டியில் முதற்பரிசினைப் பெற்றது. கலைமகள் ல் போட்டியில்,
பரிசைத் தட்டிக் கொண்டது. 'மலர்கள்" என்ற நாவல் முதற்பரிசு பெற்றது. m
ந்திய சாகித்திய அக்கடமி பரிசு பெற்றது. இப்படியே க்குவித்த இவர் இந்திய - சோவியத் கலாசாரக்கழகம், சம்மேளனம், தமிழ் எழுத்தாளர் சங்கம், புதுடில்லி பதவிகளில் இணைந்து குறிப்பிடத்தக்க சேவைகளை
க எந்திரங்களுள் ஒன்றாக நாவலைக் குறிப்பிடுவார்கள்."
கணமாக ராஜம் கிருஷ்ணனின் நாவல்கள் விளங்கு
றுமலர்ச்சிக்காகவும் தனது பேனாவைப் பயன்படுத்திய முற்போக்கு எழுத்தாளருமான ராஜம் கிருஷ்ணன்
மேலும் வாழ்க 1 என இவரை வாழ்த்துவதில் நாமும்
பத்மா சோமகாந்தன்
الص
30 பெண்ணின்குரல் 10 டிசம்பர் 2000

Page 32
றுகதை எருமை மாடும்
N
நகரின் சந்தடியிலிருந்து தனித்து ஒதுங்கிய வசதியான சிறுவீடு. வீட்டைச் சுற்றிலும் வேலி. வீட்டுக்கொல்லையில் கிணற்றுக்கட்டுக்குச் சற்று அப்பால்
காய்கறிச் செடிகளுடன் வீட்டு எஜமானி பரிவுடன் வளர்க்கும் துளசிச் செடி மெல்லத் துளிர் விட்டு, ஓரிரண்டு இலைகளுடன் அமைதியாய் நின்றிருந்தது. இடையிடையே சிலுசிலுத்த தென்றலோடு சேர்ந்து, நளினமாய்த் தலையசைத்துக் கொண்டிருந்தது.
நேரம் நண்பகலை நெருங்கிக் கொண்டிருந்தது. துளசி கிணற்றடியில் துணிதுவைத்துக் கொண்டிருந்தாள். பதின்மூன்று வயதிருக்கும் அவளுக்கு வயதினை மீறிய வளர்ச்சி அவளில் தெரிந்தது. பரட்டைத்தலை காற்றில் அலைபாய்ந்தது. முத்து முத்தாய் அரும்பிய வியர்வை காதோரம் ஆறாய் வழிந்தது. மூச்சிறைக்க கல்லில் துணியை அடித்துத் துவைத்தபடி செய்யவேண்டிய வேலைகளை மனதுக்குள் அடுக்கினாள் துணிதுவைத்துக் குளித்த பின், நோனா சமைத்து வைத்து விட்டுப்போன உணவைச் சூடு பணி னி, ஜயாவுக்கு மேசையில் எடுத்து வைக்கவெண்டும், சமையலறையை ஒழுங்குபடுத்த வேண்டும் உடைகளுக்கு இஸ்திரி போடவேண்டும். என்று எண்ணமிட்டபடி வேலையைத் துரிதமாக்கினாள்.
அந்த வீட்டுக்குத் துளசி வரும் போது, அவளுக்குப் பத்து வயதிருக்கும் வடக்கில் போர் உக்கிரமடைந்தபோது, போட்டது போட்டபடி, கட்டிய துணியோடு ஓடி வந்த குடும்பங்களுள் அவளுடையதும் ஒன்று. அன்பான அம்மாஅப்பா. துளசி அவர்களின் ஒரே மகள் தான, வளைய வந்த அழகான ஒட்டுவீடு, மாம்பிஞ்சு பொறுக்கி எடுத்து உப்புத்துாவி உண்டு, ஆலமர விழுதுபிடித்து ஊஞ்சலாடி தென்றல் போல் உலவி வந்த தன் அபிமானத்துக்குரிய வளவு தனதே வயதொத்த சகாக்களுடன் கிளித்தட்டு விளையாடி மகிழ்ந்த, பனை நிற்கும் முற்றம். இவை அனைத்தையும் விட்டுவிட்டு வரநேர்ந்தமை, அந்தப் பிஞ்சு மனதுக்கும் வலி தரத்தவறவில்லை.
சராசரியாகக் காட்டு வழியே வரும்போது, உணவும் நீருமின்றிப் பசியாலும் தாகத்தாலும்தவித்து, ஒவ்வோர் ஆத்மாவும் உயிருக்காகப் போராடி வழியெங்கும் செத்துச் செத்து விழுந்த காட்சியும், எங்கும் எழுந்த வியாபித்த அழுகுரல் ஒலியின் அவலமும் துளசியின் பிஞ்சு மனதில் அழுத்தமாகப் பதியத்தவறவில்லை.
காலில் வெடிப்புக்களும் கொப்புளங்களுமாக நடக்க
முடியாமல் அழுதழுது கூட்டத்தைத் தொடர்ந்து போய்க்கொண்டிருந்த சிறுவர் குழுவில் அவளும் எங்கோ

S தளசிச் செடியும்.
லறீனா. ஏ. ஹக்
N
முன்பின் அறிமுகமற்ற ஊரின் பாழடைந்த கோயிலில் தஞ்சமடைய எண்ணி, இடம்பிடிக்கவென்று அந்தரப்பட்டு, கூட்டத்தை நெட்டித் தள்ளிக்கொண்டு ஓடிய சிலரில் துளசியின் பெற்றோரும் ஓடிய சனம் உள்ளே நுழைந்தது தான் தாமதம் சிவப்புப் பந்தென நெருப்புப் பொறி பறக்க, காதைச் செவிடாக்கும் பேரொலி எங்கும் எதிரொலித்தது. கால் வீங்கிப் போய், நடக்க முடியாமல் அழுதுகொண்டு மரத்தடியொன்றில் அமர்ந்திருந்த துளசியின்கண்முன் தாயும் தந்தையும் இன்னும் பலரும் எரிந்து கரிக்கட்டைகளாய்ப் போன கொடுரம் அவளை ஊமையாக்கிவிட்டது.
செஞ்சிலுவைச் சங்கத்தினர் வாகனங்களில் ஏற்றி அகதி முகாமுக்குக் கொண்டுவந்து இறக்கிய கூட்டத்தில் ஏற்றி அகதி முகாமுக்குள் கொண்டுவந்து இறக்கிய கூட்டத்தில், கொடிய போரினால் அனாதைகளாகிப்போன பல்லாயிரம் சிறாருள் ஒருத்தியாக துளசியும் இறங்கினாள். ஒருவாரம் கடந்து சென்றிருக்கும். ஊரில் தமது வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் இருந்த மாமா ஒருவர் அடிக்கடி அவளைப் பார்த்துப் பேசினார். ஏனோ தெரியாது. அவரைப் பார்க்கும் போதெல்லாம் தங்கள் வீட்டு முற்றத்தில் ஓடிய அணில் குஞ்சைக் கொத்திக் கொத்தித் தின்ற காகத்தின் ஞாபகம் தான் அவளுக்கு மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. முகாமிலிருந்து அவள் அவருடன் புறப்பட்டுப் போனபோது, யாரும் அதைப் பொருட்படுத்தியதாகத்
தெரியவில்லை. அவரவர் கவலை அவரவர்க்கு
இந்த வீட்டைக் கண்டபோது, அவளுக்குத் தமது பழைய வீடுதான் நினைவுக்கு வந்தது. ஆனால், அது. அவள் எதிர்பார்த்து வந்த சங்கள் சித்தாவின் வீடல்ல என்பதை சற்றைக்கெல்லாம் உணர்ந்து, அவள் அந்த மாமாவைப் பார்த்தபோது அது அவளது அப்பாவின் சொந்தக்காரர் வீடுதான் என்று சொல்லிச் சிரித்தார். விடைபெறும்போது, வீட்டு ஜயாவிடம் ஒரு கற்றைப் பணத்தை, ஒரு கூழைக்கும்பிடு போட்டபடி பல்லிளித்து அவர் வாங்குவதைப் புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தாள் துளசி. மனித வியாபாரம் வேற்று உருவில் இன்றும் நடைபெறுவது பற்றியெல்லாம். பாவம் அவளுக்கு என்ன தெரியும்?
உறவினர் வீடு என்று அந்த மாமா சொன்னாரே! அப்படியென்றால், ஏன் இப்படி வேலைக்காரிபோல் நடத்துகிறார்கள்? சாமான் அறையில் தூங்கச்சொல்வதும், பழையதும் மீந்தமாக உண்ணச் சொல்வதும் ஏனென்று துளசிக்குப் புரியவில்லை. காலப்போக்கில் அவை அவளுக்குப் பழகிப்போயின. இங்கு வந்த மூன்று

Page 33
வருடங்களில் தனது எஜமானி ஒரு வைத்தியர், எஜமான் பிரபல வர்த்தகப் பிரமுகர், இருவரும் சமூக சேவையில் பிரசித்தி பெற்றவர்கள், ஆணும் பெண்ணுமாய் இரு பிள்ளைகள் நகரில் ஹொஸ்டலில் தங்கிப் படிக்கிறார்கள். போன்ற விபரங்களை அவள் அறிந்துவைத்திருந்தாள்.
சில நாட்களில் இரவுவேளைகளிலே தன் பெற்றோரின் நினைவு எழுவதுணி டு. அவர்கள் உயிருடன் இருந்திருந்தால். என்ற ஏக்கம் அடிக்கடி எழுந்து தொண்டையை அடைக்கும் அப்போ தெல்லாம் மெளனமாகக் கண்ணீர் விடுவாள். தன் சோகம் சொல்லியழ வாயின்றி, ஊமையாய் அந்தப் பிஞ்சு தனக்குள்ளேயே மருகிக்கொண்டிருந்தது.
வேலிக் கருகில் தாம்புக் கயிற்றை அறுத்துக்கொண்டு எங்கிருந்தோ எருமை மாடொன்று நின்றிருந்தது. வேலியோரம் செழிப்பாக வளர்ந்திருந்த ‘எல்பீசியா செடிகளை சவாரஸ்யமாய்க் கழுத்தை நீட்டி நீட்டித்தின்ன, அதன் கழுத்தில் கட்டியிருந்த மணி “கலீர் கலி ரென தொடர்ந்து ஒலி யெழுப்பிக் கொண்டிருந்தது.
துணிகளைக் கழுவிமுடிக்கும் தருவாயில் 'பேசினில்’ இருந்த தண்ணிர் தீர்ந்துவிட்டது.மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்கியபடி, கிணற்றில் வாளியை விட்டு நீரள்ளி பேசினில்’ நீர் நிரப்புகையில், இடுப்பில் அணிந்திருந்த கிழிந்த பாவாடை தொப்பலாய் நனைந்திருந்தது. அடுத்த வாளி நீருக்காய் நிமிர்ந்தபோது ஜயா அழைப்பது கேட்டது. உடனே போட்டது போட்டபடி இருக்க, வீட்டுக்குள் ஓடினாள்.
உள்ளே. ஜயா ரீவி. முன் அமர்ந்திருந்தார். திரையில் ஒரு பெண் அரைகுறை ஆடையுடன் விரசமாய் ஆடிக்கொண்டிருந்தாள். ஜயாவுக்கு முன்னால் "ரீப்போ’வில் போத்தல்கள் அணிவகு த்திருந்தன. ஒரு போத்தல் ஏற்கனவே காலியாகி யிருந்தது. ஜயா கேட்ட "ஜஸ்’ கட்டிகளை ஒரு தட்டில் போட்டுக்கொண்டுபோய் ரீப்போவில் வைத்துவிட்டு நிமிர்ந்தபோது, ஜயா விகாரமாய் இளித்தபடி தன்னை வெறித்துநோக்குவதைப் பார்த்தாள். துளசிக்கு முள்ளந்தண்டில் சில்லிவிட்டது. அவர் தள்ளாடியபடி எழுந்து அவளின் தோளைஇறுகப் பற்ற, அவள் அச்சத்தில்நனைந்த புறாவாய் வெடவெடத்தாள்
?@
* பெண் பற்றிய படிமத்தின் (Image) இன்றைய பெரும்பான்மையான பெண் ப சமுதாய நிலைக்கேற்ப இவற்றிலும் ம

எருமைமாடு வேலியின் ஒரு பகுதியை முறித் துக்கொண்டு தோட்டத்துக்குள்ளேயே நுழைந்து விட்டிருந்தது. காய்கறிச்செடிகளை மிதித்துத் துவம்சம் செய்தபடி தன்னிச்சையாய்அது முன்னேறியது. வரவிருக்கும் ஆபத்தை உணராமல் , காற்றில் சிலுசிலுத்துத் தலையசைத்துக் கொண்டிருந்த துளசிச்செடியை நெருங்கி, அச் செடியின் சின்னஞ்சிறு தளிர்களைத் தன் எச்சில் கடைவாயில் ஒழுகுமாறு அது கபளிகரம் செய்ய நறுக் நறுக் என்ற சத்தம் கழுத்து மணியோசையுடன் இணைந்து ஒலித்தது. அலறவோ எதிர்க்கவோ சக்தியற்ற அந்தச்சின்னஞ்சிறு செடி முற்றாக அழிந்து போனது. ஆது தலையை அசைத்து செடியைத் தின்ற வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல், அச்செடி வேரோடு கழன்று தரையில் கிடக்க, எதுவுமே நடைபெறாதது போல் அது வேலிதாண்டி வெளியேறிப்போனது.
டொக்டர் நோனாவுக்கு துளசியைப் பார்க்கப் பயமாகவும் கவலையாகவும் இருந்தது. சதாவும் சுவரில் நிலைகுத்திய வெறித்த பார்வையுடன் இருந்த அவளை, மனநல மருத்துவமனைக்கு அனுப்புவதெனத் தீர்மானித்தார்.
சர்வதேச சிறுவர் தினம் என்ற பெனர் தங்கநிறத்தில் பளபளத்துக் கொண்டிருந்தது. மேடைக்கு முன் பெருந்திரளான மக்கள் குழுமியிருந்தனர். தேசிய சிறுவர் தினப்போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டிய சிறார்களுக்குப் பரிசளித்து மகிழ்ந்த டொக்டரும் அவரது கணவரான பிரமுகரும் துளசியின் பக்கத்து வீட்டு மாமாவால் பொன்னாடை போத்தி கெளரவிக்கப்பட்டனர்.
வீட்டுக்கு வந்தபின் கொல்லைக்குச் சென்ற டொக்டர், தன் துளசிச்செடி காய்ந்து கருகாகித் தரையில் கிடப்பதை அப்போதுதான் கண்டு பதறினார்
என்னங்க இஞ்ச பாருங்களேன்! இந்த துளசிச்செடி அழிஞ்சிபோய்க் கிடக்குது. வேலிகூட பிரிஞ்சிருக்கு ஐயோ, கண்ணுக்குக் கண்ணா வளர்த்த செடி, இப்படியாச்சுதே
அதுக்கேன் இப்படி அலட்டிக்கிறே? நமக்கு| இன்னைக்கி பொன்னாடை போர்த்தினானே, அவனிட்டச் சொல்லி வேறொரு செடிய அதே இடத்துல நடச் சொல்லு டியர். பிரமுகரின் குரல் பெகு சாவதானமாய் ஒலித்தது. டொக்டர் அறியாமல் நாளை அந்தச் செடியும்.
(யாவும் கற்பனை)
கருத்த
மரபுவழி மதிப்புகளின் பிரதிநிதிகளாகவே ாத்திரங்கள் படைக்கப்படுகின்றன. மாறிவரும் ாற்றம் அமைய வேண்டியது அவசியம். ”
32

Page 34
பெண்ணின்
臀
AS டிசம்பர் 2000 இதழ் 22
s
வேலைக் களைப்பு
சோர்ந்து மாலை மங்கி இரு
மாதுவுக்
5 ITTF 535 குழந்தை வீடோ இ பேசவும் சிரிக்கவும்
ஓடினாள்
தேனீர் ஆனது சி
LT5 lbf
ஏன்னீர் தாமதம்? :
மாதுவுக்
வீட்டைப் பெருக்க
சட்டை இட்டமாய் அனை எட்டிப் பி
யாவர்க்கும் உன ஏவலும் ே நித்திரைகொள்ள கு பத்திரம் ட
ஒருவராய் இரவு 2 பலவாறாய் பதியுட மறுநாள் சமையல்
தூக்கக் கிறுத்தத்தி
தப்பாமல் கண்களு GaILLIGI plaud,5ü துக்கமா மாது? ப திடுக்கிட்டாள் மா
 

குரல்
9ISSN 1391-0914 0 விலை ரூபா 20/=
கேது ஓய்வு 2 ''.
பிரயான இழைப்பு வருகிறாள் மாது ளும் சூழ்ந்தது கேது ஓய்வு
கள் கனவனார் று. ஸ்ளே ரண்டுபட் டமர்க்களம் !
ஏது நேரமோ? குசினிக்கு நேரே!
ற்றுண்டி ஆனது தேனீர் பருகிமகிழ்ந்தனர் Eனவர் வினவினர்
கிருக்கலாமா சோர்வு
னொள் விளக்கை ஏற்றினாள் துணிகள் துவைத்து போட்டாள் வர்க்கும் உணவு செய்தனள்
ள்ளைகள் படிப்பையும் பார்த்தனள்
வு பரிமாறி வைத்தனள் செய்தனள் சேவையும் புரிந்தனள் குழந்தைகளுக் குதவினள் ார்த்து பொருட்களை வைத்தனள்
உணவையும் முடித்து
ன் கதைகளும் பேசி ஆயத்தம் பண்ணி
நில் படுக்கைத் தேகிளாள் மாது
ம் தூக்கத்தை தழுவ மிதக்குமல் வேளை தியின் கிசுகிசுப்பு
து இயந்திரமா இந்த மாது?
அன்னலட்சுமி இராஜதுரை