கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: திருவருள் 1980.11-12

Page 1
அவனருளாலே அவன்தா
&حیے محمد
மலர் 1) ரெளத்திரி, கார்த்
产
திருவு கருணை பருவ
பெருகு
 
 

1ள் வணங்கி வாழ்வோம் *
திகை - மார்கழி (இதழ் 1
محمحیح بحیرہعہ خیبرے ہوئی۔
N-rays
ங் கல்வியுஞ் சீரும் தழைக்கவும் ா பூக்கவும் தீமையைக் காய்க்கவும்
மாய் நம துள்ளம் பழுக்கவும் நம் ஆழத்துப்பிள்ளையைப் பேணுவாம்
விருத்தாசல புராணம்
F - Degember - 1980

Page 2
P. Pulamadan Chetty & Sons Ltd.
Meenambikai Oil Mills KELANIYA
Telegrams : AREMPIE Telephone Nos 075=321
 
 
 
 
 

திருவருள்
so அவனருளாலே அவன்தாள் வணங்கி வாழ்வோம் -
மலர் 1 ரெளத்திரி - கார்த்திகை/மார்கழி இதழ் 1
பொருளடக்கம்
இலக்கம் Tháh
1. திருவருள்? இதழின் நோக்கங்கள் 2. ஆசி உரைகள்:
பூரீலபூரீ ஸ்வாமிநாத ஞானசம்பந்த பரமா சார்யஸ்வாமிகள் 2943 会 ஆத்மயோக ஞானசபா தலைவர் - ஸ்தாபகர் 3. பிரார்த்தனை உரை:
பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் . 6 4. சரஸ்வதி : ஞானதேவதை : சுவாமி சின்மயானந்தரி . 7 5. யோகசுவாமிகள் ●-●、 9 6. கோதுசுவாமிகள்
நல்லூர்க் கந்தன்மேல் பாடிய பாட்டு see 12 7. நம்மைப்பற்றி ΘκO Φ 13 8. சைவம் - சிவஞானவாரிதி கு. குருசாமி 15 در بیمه 9. செயலாற்றுவோம் €ስ Ô Ö 岛0 10. நல்லைக்கத்தன் கருணை க. இ. 24 11. சிங்கப்பூர்க் கடிதம் வை. சி. e-ga 26 12. சரஸ்வதி வணக்கம் ●-●● 28 13. பிரான இரகசியம் - பூரீ காயத்ரீசித்தர் asse 岑9
obe 33
திருவாசகமனி ஒன்று

Page 3
திருவருள்
-sés
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
ஆசிரியர் குழு? திரு. V. சதாசிவம்
திரு. கு. குருசுவாமி gSq5. A. V. FjLDAT திரு. 1. P. சாமி திரு. து. சிவசுந்தரம் திரு. ம. இரத்தினசபாபதி திருமதி ம. யோகநாதன்
பதிப்பாளர்: திரு. R. வைத்திமா நிதி
நிருவாகம்: திரு. S. யோகநாதன்
திரு. ம. கனகசபாபதி திரு, K, செல்லையா
விளம்பரம்: திரு. T. M. ஆவுடையப்பன்
திரு. P. பாலசுந்தரம் திரு. K. குமாரசுவாமி திரு. P. K. சந்திரசேகரம்
விநியோகம்: திரு. 8. பத்மநாதன்
திரு. D, சுப்பிரமணியம் திரு. க. இளையதம்பி
திரு. R. திருலோகசுந்தரம்
தங்களது காசுக்கட்டளை, தபாற்கட்டளே, 35 g (3 ft2) ஆகியவற்றை &. வைத்திமா நிதி என்ற பெயருக்கே அனுப்பி வையுங்கள். கடிதங்கள், கட்டுரை, கவிதை மற் றும் விஷயதானங்கள் ஆகியவற்றை இல. 5, gអ្វី ரைத்தெரு, கொழும்பு-13 என விலாசமிட்டு அனுப் புங்கள்.

* திருவருள் ? இதழின் நோக்கங்கள்
se/*ne/*\ /*ne / ❤ سمسیح محمے
" உருவேறத் திருவேறும் ” என்பது பொய்யாத பழைய மொழி. எதுபற்றி நாம் சதா சிந்திக்கிருேமோ அதனை அனு பவிக்கும் பாக்கியம் பெறுகிருேம், எனைத்தானும் நல்லவை நினைப்பதும் கேட்பதும் நல்லது. நன்மை தருவதாயுள்ள ஒன்றினை மந்திரம் போலச் சதா தியானித்துச் செபித்தால் நன்மை விளைவது சாத்தியமாகிறது. உண்மையுமாகிறது. இரு மாதங்களுக்கு ஒரு முறையென ஆரம்பிக்கும் இத் * திருவருள் மலரின் பெயர்ப் பொருத்தமும் அவ்வாருனதே.
* திருவருள் எங்கே? திருவருள் வந்ததா? " திருவருள்
எப்போ வரும்? என்ற கேள்விகள் ஒவ்வொரு இல்லத்திலும் சிறியவர் தொடக்கம் முதியவர் வரை உள்ள எல்லோரும் பலதடவை அருட் தாகத்துடன் கேட்டால், சிந்தித்தால் அப் பெயர்ப் புனிதத்தால் திருவருள் தானே வந்திறங்கும் சாத் தியக் கூறுகள் புலப்படும். அது வீட்டினை அலங்கரிக்கும், அன்பு பரிமளிக்கும், அருள் சுரக்கும், நறுமணம் பரப்பும், தித் திக்கும் தேன் சொ ரி யும். என்றும் நின்று நிலவுவதாய் உண்மை, அழகு, செம்மை என்பன வாய்ந்த அருள் விருந் தினை அளிக்கும். அன்று அலர்ந்த மாமலராக மக்கள் மத்தி யில் நல்ல மலராக நிலவுவதை விரும்புகிருேம்.
* பாவி மனக் குரங்காட்டம் பார்க்க முடியாது’ என்பது பட்டினத்தடிகள் கூற்று. ஒருவருடைய வாழ்வுக்கும் தாழ்வுக் கும், மகிழ்ச்சிக்கும் துன்பத்துக்கும் குரங்குபோல ஒன்றை விட்டு ஒன்று பற்றும் மனமேதான் காரணம். ஐம்புலன்வழிச் செயற்படும் மனத்தைப் புத்திகொண்டு அடக்கு; மனம் போன போக்கெல்லாம் போகவேண்டாம் ' என்பது ஒளவைப்
பிராட்டியின் புத்திமதி. ஆருவது அறிவாகிய புத்தி அல்லது

Page 4
= 2 =
உரன்" என்ற தோட்டியால் ஒரைந்தையும் (ஐந்து புலன்களை யும்) காக்கவேண்டும் என்பர் திருவள்ளுவர். இவ்வாறு செய் தால் மனிதன் மனிதனுக, மகிழ்ச்சிப் பிரவாகத்துடன் எப் பொழுதும் வாழலாம். இது எப்படி என ஆராய்வதும் திரு வருள் நோக்கமாகும். இவ்வாராய்ச்சிக்கு அனுசரணையாக, சாதகமாகவுள்ள தேவார திருவாசகங்கள், திருவாய்மொழி, திருக்குறள் போன்ற நூல்களை அறிமுகஞ் செய்தும், உலக மதத் தலைவர்களின் அருளுரைகளை மேற்கோள் காட்டியும் சாதி சமய பேதங்களின்றி, தமிழ் கூறும் நல்லுலக மக்கள் யாவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் தித்திக்கும் தேன் தமிழில் எடுத்துக் கூறி மக்களை வாழ்வாங்கு வாழ் வதைப் பெரிதும் விரும்புகிறது * திருவருள்.
ஜனநாயக முறையில் தொன்று தொட்டுக் கட்டவிழ்ந்த வாருனதொரு தோற்றத்துடன் இலங்கும் இந்து மதத்தி லுள்ள தத்துவங்களை, அதன் சிறப்பியல்புகளை சமயாசார அனுட்டானங்களை, அதன் திருச்சின்னங்களை அறியாத பலர்அறிந்திருந்தும் தக்க கருத்தும் காரணமும் புரியாத பலர் ' கண்மூடிப் பழக்கவழக்கங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு மதம் " என்று இகழ, இவ்விகழ்ச்சியைத் தடுத்து வீழ்த்த வகையறியாது பாதிக்கப்பட்ட விரக்தியடைந்த பல இளைஞர் கள் ஏன் மற்றவர்களுங் கூட - தாம் இந்து சமயத்தின ரெனச் சொல்லிக் கொள்ளக் கூடக் கூசும் அளவுக்கு மதம் மாறும் மனப்பான்மையையும், மதத்தைப்பற்றிய அறியாமை யின் விளைவாக வந்த தாழ்வு மனப்பான்மையையும் களைந்து, வளம் பெற்ற ஒரு சமய வாழ்வினுக்கு இந்து சமயத்தின் உயிர்நாடித் தன்மையினை விளக்கிக் கூறித் தமது பாரம்பரி யச் சொத்தில் ஆசை கொள்ளும் வகையில் இளைஞர்களை யும் ஏனைய பிறரையும் தட்டி எழுப்புவதும் திருவருள் நோக்க மாகும்.
* ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு . ஒற்றுமை நீங்கில் அனே வருக்கும் தாழ்வு’ என்பது பாரதியின் அறிவுரை. மனிதனை

ബ, 3 -
மனிதனுக வாழவைப்பதனையே மையநோக்கமாகக் கொள்ள வேண்டிய இந்துமதச் சங்கங்கள் அருள்வழிச் செல்வதாகக் கூறிக்கொண்டு, பெரிது சிறிது எனப் பாராட்டி, பொருள் வழியும் பதவிவழியும் பிரிந்து, முன்னேற்றம் யாது மின்றி, கரும்பிருக்க இரும்பினை மென்றும், குளிர் பூஞ்சோலை வழி யிருக்கச் சேறு பாய்கின்ற அவலநிலையில் செயற்படுகின்றன. கானலை நீரெனக் கருதும் மயக்க மனப் பான்மையைத் தெளியவைத்து, உயர்வு தாழ்வு நிலைமையை அகற்றி அன்புவழிச் சென்று, எல்லாச் சங்கங்களும் திருவருளால் ஒன்று சேர்ந்து கலந்துறவாடி மக்களுக்காகச் செயற்படு வதனையே விரும்புகிறது திருவருள். சமூகத்திலுள்ள ஒவ்வொரு தனிமனிதனும் மனிதருள் மனிதனுக வாழ்வ தையே விரும்புகிருன், மனிதன் என்ற உணர்வினைக் கிளறி, உணர்வென்னும் இப்பெரும்பதத்தினை திருவருளால் பெருக்கி மக்கள் மத்தியில் நறுங்கனி தரும் பழமரம் போல, நீதி நெறியில் நின்று பிறருக்கு உதவும் நேர்மையராக உரு வாவதையே உள் நோக்கமாகக்கொண்டு செயற்பட விரும்பு கிறது திருவருள், !
காகம் தனித்து உண்பதில்லை. உறவு கலந்துண்பதையே காண்கிருேம், 'நாமின்புற்றிட சிவயோக வெள்ளம் ஏக வுருவாய்க் கிடக்கிறது. நமது தேகம் விழுமுன் புசிப்பதற் குச் சேரவாரும் ஜெகத்தீரே " என்று அழைப்பார் தாயு மானவர் ,
திருவருள் மக்களுக்காகத் தோன்றுகிறது. இது மக் களுடையது. மக்களினல் ஆரம்பிக்கப்படுகிறது. திருவருள் மலரின் தெய்வீக நறுமணம் காலப்போக்கில் பல மக்களைத் தன்டால் ஈர்த்து, அதனிலுள்ள ஆழ்ந்த கருத்துக்களை பருகவைத்து, முத்திநெறி காட்டும் பலநெறிகள் வாயிலாக ஆல்போல் தழைத்து, அறுகுபோல் வேர் ஊன்ற இறைவனின் திருவருளையும், கருவிலே திருவுள்ள மக்களின் ஆதரவினை யும் இம்மலர் அமைப்புக்குழு வேண்டி நிற்கிறது.
* யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் '
بص...............--محمحمس ہستی =

Page 5
********堂
矮。
6.
குருபாதம் திருவருள் ஆசிரியர் குழு
སྤྱི་
அன்புடையீர்,
* திருவருள் " என்ற திவ்ய நாமத்தோடு ஒரு சைவசமய சஞ்சிகை வெளிவருவது அறிந்து பெரு மகிழ்ச்சி. இன்றைய உலகில் இந்து இளைஞர் மத்தி யிலே இறை நம்பிக்கையையும், பக்தியையும் விழிப்
புணர்ச்சியோடு பரவச் செய்வது சைவப்பெரியோ ரின் கடமை,
ஆரம்பத்தில் ஆரவாரத்தோடு தொடங்கி பின் னர் தளர் நடை அடைந்து மறைந்து போக விடா மல் தேஜஸ் சோடு வளர்பிறை போல வளர்ந்துவரச் செய்வது உங்கள் கடமை.
மேலும் உங்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அருள எல்லாம் வல்ல இறைவனை வேண்டி ஆசீர்வதிக்கி ருேம், 婷
盔
பூநீலறுநீ ஸ்வாமிநாத ஞானசம்பந்த ဎန္တီဇုံ t_1ữ troff ở # ĩ Lu Sửu)6N4 + Lfìg,6ir ಫೈಟ್
நல்லே ஞானசம்பந்தர் ஆதீனம் 喙
பருத்தித்துறை வீதி * நல்லூர், யாழ்ப்பாணம் 3-10-80 *
န္ဒုန္တိန္၊
※※※*發*
، بابریا

* ஆசிரியர், ※ ※
கொழும்பு, స్థ ※ O ※ x அமராத்மாவே ! ※ ஆதி சணுதன தேவி தேவதா தர்மமாகிய நம்* * இந்து மதத்தின் சமயக் கருத்துக்களை மக்கள் மத்திx
பரப்பும் நோக்குடன், திருவருள் என்ற மாத తాప్రా x சிகை நடத்த முன்வந்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்; "திருவருள்' சஞ்சிகை மூலம் இந்துக்கள் மட்டு: x மல்லாது, பிறமதத்தவர்களும், இந்து தர்மத்தின் விலை x * மதிக்க முடியாத இரத்தினங்கள் போன்ற பல ஆன்மx x இ ரகசியங்களை யும், மனித அறிவுக் கெட்டாத x *சிந்தனைக்கு அப்பாற்பட்ட, விஞ்ஞானிகளும் புரிந்து x 2கொள்ளமுடியாத, மறைமுக தத்துவங்களை, புரிந்து ? x கொண்டு அதன்படி நடந்து, ஒவ்வொருவர் உள்ளத்தி X x லும், உறை நிலையில் அடங்கி, ஒடுங்கி, செயலற்றுக்* * கிடக்கும், உயராத்ம சக்தியை தட்டியெழுப்பி, ஒப்புயர் Xவற்ற உயர்பேரின் பாம் இறையின் பத்தைத் தொட்டு X *அனுபவித்து அமைதி, ஆனந்தம் நிறைந்த அருள் x வாழ்வாம் பெருவாழ்வு வாழ எல்லாம் வல்ல பரம் x x பொருளின் பரிபூர்ண அனுக்ரகக் கடா கூடிம் கிட்டப்
பிரார்த்தனே,
※
*திருவருள்', அழிவுப் பாதையை நோக்கி வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் மக்களின் அறியாமை இருளை அகற்றும் அருளொளியாகப் பிரகாசிக்கட்டும். ஓம் சாந்தி,
இங்ங்ணம் ஆத்ம யோக ஞான சபா ஆர். கே. முருகேசு ※ நுவரேலியா தல்வர் - ஸ்தாபகர் ※
※ ※ ※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※

Page 6
പ്പെട്രൂ~~~
பிரார்த்தனை ഉ_6]്
தன்னிலைமை மன்னுயிர்கள் சாரத் தருஞ்சத்தி பின்னமிலா னெங்கள் பிரான் - திருவருட்மேன்
责 சிவத்தைப் பிரியாமலிருப்பது சிவசத்தி, அது திரு வருள். காந்தத்துக்கு இரும்பை இழுக்காமலிருக்க மாட் டாமை இயற்கை. திருவருளுக்கு உயிர்களுக் கிரங்கா மலிருக்க மாட்டாமை இயற்கை,
★ 责 ... ' : திருவருளிரக்கத்தின் பெறுபேறே இந்தச் சரீரம். பார்வை குறைவுபட்ட கண்ணுக்கு, கண்ணுடி கண்ணை ஒளியோடு தொடர்பு படுத்தற் குபகரிக்கின்றது.
Xமலபந்தர்களாகிய உயிர்களுக்கு உயிரைத் திரு வருளோடு தொடர்பு படுத்தற்குக் கிடைத்தது இந்தச் சரீரம்,
★ சரீரத்தைப் பேணுகிற முறையிற்பேணித் திருவரு ளுக்குப் பாத்திரமாதல் வேண்டும்.
责 திருவருளுக்குப் பாத்திரமாதற்கு உடகரிக்கு முறை யில் உபகரிக்க வெளிவரும்,
'திருவருள்" பரமோபகாரம் புரிவதாக என்று திருவருளைப் பிரார்த்திப்போமாக.
உயற்கை தரும்பொற்கை உடையவர்போ லுண்பைப்பின் நிற்க அருளார் நிலை, ஊ திருவருட்பயன்
கலாசாலை வீதி பண்டிதமணி, சி. கணபதிப்பிள்ளை திருநெல்வேலி, யாழ்ப்பாணம் 6-10-80
.(

I gld சரஸ்வதி - ஞானதேவதை
gray Lif சின்மயானந்தா ,
பெண்ணுக்கு மிக உயர்ந்த இடம் தந்து வழிபாட்டுக் குரியவளாகக் கருதுவது இந்திய கலாச்சாரம்! அது ஒர் இந்துவின் வளர்ச்சிக்கு அறிகுறி உண்மையை விளக்கும் மறைநூல்களுக்கு பெண்மைக் குணம் சாற்றி வழிபடுவது இந்து மதத்தின் சிறப்பு வாழ்வின், உலகின், சாரமாக விளங்குவது ஞானம். அதுவும் தன்னைப் பற்றிய ( ஸ்வ) ஞானம், எல்லா ஞானங்களிலும் சிறந்தது! அவசியமானது! அதைத்தன் பக்தர்களுக்குத்தரும் தேவதையை "சரஸ்வதி' என்று அழைக்கின் ருேம்!
புராண விளக்கப்படி, இந்த 18 அன்னை சுருதி ' தாமரை மேல் உட்கார்ந்திருக்கிருள்! முற்ருக மலர்ந்த தாமரை ஒரு வளர்ச்சிக்கு அறிகுறி! அதேபோல் தன் சிந்தனையாலும், மறைநூல் தந்த சத்தியத்தை முழுமையாகவும் உணர்ந்து, அதிலே இலயித்த ஒரு குருவின் நிலையே, தாமரைமீது அமர்ந்திருக்கும் சரஸ்வதியின் நிலை. இந்த ஞான விநியோ கத்திற்கு சீடர்களின் மீதான கருணையும், அன்பும் ஒரு குருவுக்கு அவசியமானது! அன்பு, கருணை போன்ற மென் மையான இதய உணர்வுகள் பெண்களிடத்தில் காணப் படும் சிறப்பியல்புகள்! ஆகவே, இந்த குரு பெண்ணுக *சரஸ்வதி,” என்று நமக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிருள்! சத்தியம் என்னும் தாமரைமீது வீற்றிருக்கும் இத்தேவதை ஒரு கையில் * மன ' மென்னும் சங்கையும், மற்றெரு கையில் ' புத்தி ' என்னும் சக்கரத்தையும் தாங்கியிருக் கிருள்! அதோடு நில்லாது தன்னிடத்தில் உள்ள வீணையைத் துணையாகக்கொண்டு சதா சத்யகீதம் பாடிக்கொண்டேயிருப் பாள் கற்றலும், அதில் நிற்றலும், அதைப் பிறருக்கு எடுத்

Page 7
ജ, 8 -
துக் கூறுதலும் ஒரு உண்மையான குருவின் இலட்சணங் களாகும்! இத்தேவதை அத்தொழில்களனைத்தையும் தான் வைத்திருக்கும் நூலாலும், மனம், புத்தியென்னும் கரணங் களாலும், வீணையென்னும் கருவியாலும் செய்துகொண் டிருக்கிருள் என்பதை உணர்த்தும் !
பிரம்மனுக்குத் துணைவி சரஸ்வதி பிரம்மா படைப்பவர்! எவர் எதைப் படைக்கிருரோ அவருக்கு அதுபற்றிய ஞானம் அவசியம்! ஆகவே சரஸ்வதி துணை நிற்கவேண்டிய இடம் படைப்பைத் தொழிலாகக்கொண்ட பிரம்மாவிடமே! இது ஓர் உயர்ந்த தத்துவம் ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது! ஞான மற்ற சிருஷ்டி - விபரீத சிருஷ்டி ஆணுல் நாம் வாழும் சிருஷ்டியில் சரஸ்வதியின் பிரசன்னம் தெளிவாகிறது! படைக்கப்பட்டோம் காக்கவும் படுகின் ருேம் படைப்பின் நோக்கத்தை உணர்த்தவும் படுகின்ருேம் ஒவ்வொரு நிலை யிலும், ஞானத்தின் பிரசன்னம், சரஸ்வதியின் அருள்
பரிபூரணமாய்க் காணக்கிடக்கிறது! இதை மையமாகக் கொண்டுதான் - நவராத்திரி விழாவின்போது முதல் சக்தி வடிவான காளியையும், செல்வத்தின் ஸ்வரூபமாகிய
இலட்சுமியை இரண்டாவதாகவும், முடிவில் முழுமைப்படுத்தும் தேவதையாக சரஸ்வதியையும் வணங்குகிருேம் காளி என் னும் மஹாசக்தியின் துணையைக்கொண்டு, ஒவ்வொரு பக்த னிடத்தில் உள்ள தாழ்ந்த குணங்களை அழித்து, இலட்சுமி என்னும் செல்வத்தின் துணைகொண்டும், அன்பு, அறம் என் னும் பொருட்களை ஒருவருடைய இதயத்தில் உருவாக்கி, முடிவில் ஞானத்தின் பலத்தால், வாழ்க்கையின் குறிக்கோள் உணர்ந்து - அந்த ஞானமே முடிவான நிலையாக சரஸ் வதியிடம் (ஞானத்திடம்) சரண் புகுந்து விடுகிருேம்! இதுவே அவள் கையில் இருக்கும் மற்றெரு தாமரையாகும் ! இது சீடன் பெற்ற முழுநிலை !
நவராத்திரிக் காலத்தில், இந்த ஞான கங்கை நம் இத யத்தை ஈரப்படுத்திப் பண்படுத்தட்டும் ! அன்னையின் அருள் அனைவருக்கும் கிட்டட்டும் !

* யோக சுவாமிகள் :
அண்மை க் காலத்தில் வாழ் ந் த ஞானியர்களுள் யாழ்ப்பாணம் யோகசுவாமிகள் நம்மிற் பலரும் அறிந்த ஒரு வர் ஆவர். அவர் முக்காலமும் உணர்ந்த முனிவர். எங்கும் வியாபிக்கும் தன்மையுள்ள தவ சீலர். எனினும் துறவிக்கோலம் பூணுது சாதாரண மனிதராக, தாமரை இலைத் தண்ணிர் போல வாழ்ந்து வந்தார். அவ ரது அருள் நோக்கை எதிர் பார்த்து ஏங்கியவாறு அன்பர் பலரும் அவரைச் சூழ்ந்த வண்ணம் இருப்பர், அவர் களுள் சிறந்த கல்விமான்கள், தொழிலதிபர்கள், பெரியோர், சிறியோர் ஆதிய பலவகை யினரும் இருப்பர். இவர் களின் பொறுமையைச் சோதிப் பதற்கென்ருே என்ன வோ சுவாமிகள் இவர்களை ஏக வச
னத்திலும் விளிப்பதுண்டு.
சு வா மிக ள் அடிக்கடி கூறும் சொற்ருெடர் "இது எல் லாம் எப்பவோ முடிந்த காரி யம்' என்பதாகும்.
ஆன் மாக் களின் தர்ம பலன்களுக்கு ஏற்ப பற்பல நிகழ்ச்சிகள் அவரவர் வாழ்க் கையில் நிகழ்வது இயல்பு.
அந் நிகழ்ச் சிகளை முன்ன தாகவே அறியும் சக்தியைப்
oż சுவாமிகள் ஏனைய ஞா ரிங்பேருலவே, அவற்றில்
இல்லை. தமது அருளை IQநிற்கும் அன்பர்களுக்கு சிற் சில குறிப்புக்களால் அவற்றை உணர்த்துவதுண்டு. அவற்றில் நாமறிந்த சிலவற்றைக் கீழே தருகின்ருேம்.
* ஒரு முறை சுவாமிகள் ஒரு கடையில் ஏதோ பொருள்
ஒன்றை வாங்கிக் கொண்டி ருந்தார். அப்பொழுது ஒருவர் ஓடிவந்து, அங்கிருந்த நிலை மையைச் சற்றேனும் அவதானி யாது, "அண்ணே, எனக்குக் கெதியாகத்தா நான் உடனே போக வேண்டும்" என்று அவ சரப்பட்டு தனது தேவையைக்
கேட்டார். க  ைடக் கா ர ர் சுவாமியை நிற்க வைத்து விட்டு உடன் வந்தவரைக்
கவனிப்பதா என்று யோசிக் கும் வேளையில், சுவாமி, தம்பி அவரைக் கெதியாகக் εξέδ6), I னித்து விடு. அவர் போக அவசரப்படுகிறர்" என்ருர், கடைக்காரரும் அவ்வாறே செய்தார். பொருளைப் பெற்றுக் கொண்ட அன்பர், அவசர
అడ్లే/

Page 8
UlrS HOI).
கா யங் களுடன்,
ܩܗ 70 ܫܡܗ
மாக வீதி ஒழுங்கைக் கவனி ஒரு விபத்தில் சிக்குண்டு மரணமடைந்தார். நிலைமையைப் பற்றிச் சிந்தி யாது தமது தேவையைப்பற்றி அவசரப்படும் அன்பர்கள் அவ தானிக்க!
* யாழ்ப்பாணத்தில் தங்கி யிருந்த சுவாமி யவர்களின் நேர்முக தரிசனம் பெற ஓர் அன்பர் சா வக ச் சே ரி யிலிருந்து அடிக்கடி வருவ துண்டு. ஒரு முறை அவர் ஏதோ அலுவலின் நிமித்தம் விரைந்து திரும்பத் திட்டமிட்டு வ ந் திருந்தார். எனவே, சுவாமியிடம் 'நான் ஏழு மணி பஸ்ஸில் திரும்பி வருவதாக வீட்டில் கூறிவந்தேன். விடை தாருங்கள்' என்ருர், “ஏன், பிரளவோ போகிறீர்?’ என்ற சுவாமியின் கேள்வியால் சிறிது தி கை ப் படைந்து வாளா விருந்து விட்டார். அதன் பின் னர், வழமையாகத் திரும்பும் நேரத்தில் சென்று, பஸ்ஸில் பிரயாணஞ் செய்தார். அப் பொழுதுதான், ஏழு மணி பஸ் ஒரு விபத்தில் அகப்பட்டு குடை சாய்ந்து இருப்பதை வீதியிற் கண்டார். அதிற் பிர யாணஞ் செய்த பலர் மிகுந்த அருகில் மருத்துவமனைக்கு செல்லப்பட்டிருப்
உள் ள எடுத்துச்
பதைக் கேள்வியுற்றர். சுவாமி யின் குறிப்பினுலே தமது பய ணம் ஏழு மணி பஸ்ஸில் நிக ழாதது நன்மைக்கே என்பதை
உணர்ந்து நன்றி கலந்த மகிழ்ச்சியடைந்தார்.
* தெய்வ த ம் பி க்  ைக
குறைந்த ஒருவர் கோவிலுக் குப் போவதால் தமக்கு ஒரு நன்மையும் ஏற்படப் போவ தில்லை எனப் பிடிவாதமாகச் சு வா மி களிடம் கூறினர். அதற்கு அவர், நல்லூர் கந்த Si au T 6 கோவிலைக்காட்டி, * சுமீமா அதாலே போய்வா ' எனப் புத்திமதி கூறி அனுப்பி ஞர். அதன்படி கோவிற்பக்கம் சென்று வந்த அந்த அன்பர், நாளடைவில் இறைவன் திரு
வருள் வெள்ளத்தில் திளைக்க லாஞர்.
* அதிகமாகக் கல்விகற்ற
ஓர் அன்பருக்கு சமய விஷ யங்களைப் பற்றி ஒரு தெளிவு ஏற்படவில்லை. சுவாமி அவருக் குக் கூறிய அறிவுரை 'மெள னமாக இரு" என்பதாம்.
* வாழ்க்கையின் பல்வேறு துறைகளிலும் முயன்றும் , பொருளாதார முன்னேற்றம் காணுத அன்பர் ஒருவர் சுவாமிகளை அணுகினர். அவ ரது இயல்பை ஞானக் கண்
 

- 11 -
ணுல் ஆராய்ந்து தெளிந்த சுவாமிகள் * உன் முயற்சி வீண் போகாது, மெல்ல மெல்ல முன்னேறுவாய் " என்று கூறி குர் அவ்வன்பரும் படிப்படி யாக வெற்றியடைந்து இன்று நல்ல நிலையில் சுவாமியை மற வாது வாழ்ந்து வருகிறர்.
* வெளியூர் சென்று உத்தி யோகம் பார்க்கும் தனது ஒரே மகனிடமிருந்து நீண்ட கால மாக ஒருவிதச் செய்தியும் இல்லையே என மனம் நொந்து சுவாமியிடம் வந்து வருந்திய விதவையான ஓர் அபலைத் தாய் கடிதங்கள், தந்திகள் அனுப்பியும் பதில் இல்லையே என்று புலம்பினர். அந்தப் பக்தையின் துயர் துடைக்கச் சுவாமி திருவுளங்கொண்டார். " இரண்டு நாட்கள் கழித்து என்னிடம் வாருங்கள். தங்கள் மகனைப் பற்றிய செய்தியை அறிந்து கூறுகிறேன்” எனக் சமாதானஞ் சொல்லி அனுப் பினுர், இரண்டு நாட்கள்
கழித்து தம்மைக் காணவந்த அம்மையாரிடம் * தங்கள் மகன் தனது நண்பர்கள் இரு வருடன் ஒரு தீவில் இருந்து இன்னெரு தீவிற்கு சென்றுள் ளார். நான் போன பொழுது ஒரு ஹோட்டல் அறையில் மூவரும் இருந்தனர். "தங்கள் மகன் சுகம். ஆனல் மற்றைய இருவரும் ஏதோ மயக்கத்தில் இருந்தனர் ” என்ருர், சுவாமி தனக்காக சித்து செய்வதில்
ஈடுபட்டிருந்தார் என்பதை அவ்வம்மையார் உணர்ந்தார். ஆச்சரியத்துடன் மகனுக்கு
திகதி, செய்தி விபரம் ஆகிய
வற்றை σταρ 5 g) Rp) ay உண்மையா எனக் கேட்டிருந்
தார். நடந்த விபரங்கள் அப்
படியே இருப்பதை வாசித் தறிந்த மகன், உடனேயே தாயாருக்கு மறுமொழி எழு தியதுடன், தனது பெரு மகிழ்ச்சியைச் சுவாமிக்கும் தெரியப்படுத்தக் கூறி இருந் தார்.
—ෆෙඩ්‍රද්ෆණ
S SSSeSzSMzSzSMSMSMLMLeLeLeLLALA MAMAAAALAL
நேற்று என்பது ஒரு கனவே நாளை என்பது ஒரு காட்சியே ஆனல் நன்கு வாழப்பட்ட இன்று ஒவ்வொரு நேற்றையும் இன்பக்கனவாக்கும் ஒவ்வொரு நாளையையும் நம்பிக்கை நிறைந்த காட்சியாக்கும்.
- காளிதாசன்
Mua -----

Page 9
-<--- 空三る。エる豪エ 3xokackxask to kiss s 感
நல்லூர்க் கந்தன்மேல் பாடிய
-------------------ཀྱི་མ་ཕྱི་ཚུལ་ཛ------------ཡབ་
நல்லூரான் திருவடியை நான்
நினைத்த மாத்திரத்தில்
எல்லாம் மறப்பேனடி கிளியே இரவுபகல் காணேனடி
எத்தொழிலைச் செய்தாலென்ன ஏதவத்தைப்
1 u ʼ. Lmr i GQ6n)6öT 60T கந்தன் திருவடிகள் கிளியே
காவல் அறிந்திடெடி பஞ்சம் படை வந்தாலும்
பாரெல்லாம் வெந்தாலும் அஞ்சோம் நாங்களடி கிளியே
ஆறுமுகன் தஞ்சமடி சங்கோசை கேட்குதடி கிளியே
தாளமேள முழங்குதடி எங்கெங்கும் வெளிச்சமடி கிளியே
ஏந்திழாய் நடந்து வாடி
விரைவாய் நடந்து வாடி - கிளியே
வீணர்தங் கூட்டமடி மாரிக்கால மானதினுல் - கிளியே
மாகவன மாய் நடடி ஓடாதே வழுக்குதடி கிளியே
உரைத்திட டி ஐந்தெழுத்தை வாடாதே வீட்டுவாசல் - கிளியே வந்தோமே திறந்திடடி
مسسسسسسسسه وحضيس مستسحتلك
இஇை
BDLSTLSeJLDLSSTAeBBLSSMTMTSTLTeHBLTLeBrLTMMTLeLBLBLLSLSLeeSLSLeYYLTLY eeLS LMTAAYzY
பாட்டு
-డా
Kissed Sox
akek
Za
 

cs நம்மைப்பற்றி s
1971-ம் ஆண்டு எடுக்கப்பெற்ற இலங்கையின் சனத் தொகைக் கணிப்பின்படி மொத்தச் சனத் தொகையாகிய 126 கோடியில் இந்துக்கள் 22 கோடியினராவர். நூற்று வீதக்கணக்கின்படி இது 176 நூற்று வீதம் ஆகும்.
நூற்றுக்கு இருபது அளவில் இலங்கையில் வாழும் இந்துசமயத்தினர் நாட்டின் சமயவாழ்வில் தமது தாக் கத்தை ஏற்படுத்தத் தவறிவிட்டனர் என்றே கூறவேண்டும்.
தொன் மையம் சிறப்புங் கொண்ட கோவில்களில் திரு விழாக்கள் நடைபெறும் பொழுதுதான் இந்துக்களும் இந் நாட்டில் வாழ்கின்றனர் என்ற உணர்வு ஏற்படும். மேலும் இந்து சமயக் கொ ண்டாட்டங்கள் பல்வேறு கருத்துக் களைக் கூறிய வண்ணம் நடைபெறும், அத்துடன் சரி.
பொருளாதாரத் துறையில் ஓரளவுக்கு நன் முன்னேற் றம் கண்டுள்ள இந்துக்கள் மத்தியில் ஒர் உறுதியான பொது அமைப்பு இல்லை. பல தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சர்ச்சைகள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் இந்துக் கள் ஒரு மனதுடன் கருத்துக்கள் வெளியிடுவது மிகக் குறைவு. உண்மையில் ஒரு சில தலைவர்கள் தமது சொந்தக் கருத்துக்களையே இந்து மக்களின் கருத்து என வாதிடும் நிலைதான் உண்டு. மேலும் பிரதான நகரங்களிற் கூட இந்துக்கலாச்சார மண்டபங்கள் இல்லை. இந்து வாசிக சாலைகள் இல்லை. இந்து சமய நூல்கள் கட்டுக்கோப்பாகச் சேகரித்து வைக்கப்பட்டுள்ள ஓர் அமைப்பு இல்லை.
இந்துமக்களில் வசதி குறைந்தவர்களுக்கு கல்வி, தொழில், மருத்துவம், திருமணங்கள் ஆகியவற்றிற்கு பொரு ளுதவி செய்யும் நிறுவனங்கள் இல்லை.

Page 10
a l4 m
இக்குறைபாடுகளை நீக்க வேண்டியது மிக அவசியம். மிக அவசரமுங் கூட. 1971-ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி அந்தந்த மாவட்டங்களிலுள்ள சனத்தொகையில் இந்துக் களின் விகிதாச்சாரங்கள் கீழே தரப்பட்டுள்ளன. இதி லிருந்து நமது சமய நிகழ்ச்சிகள், அமைப்புகள் எங்கெங்கு கூடிய முறையில் அமையவேண்டும் என்பது நன்கு புலணு கும்.
சனத்தொகையில் மாவட்டமி இந்துக்களின் நூற்றுவீதம்
யாழ்ப்பாணக் 85.2 வவுனியா 659 மட்டக்களப்பு 65.3 நுவரெலியா 525 பதுளை 35・3 திருகோணமலே 翡2·7 மன்னுரி 29 6
கண்டி 258 அமீபாறை 2 . () இரத்தினபுரி 6' 9 கேகாலை 10 • Ꮧ மொனருகலை 7 - O
கொழும்பு 5* 4
களுத்துறை 5 e 4
மற்றும் மாவட்டங்களில் இந்துக்கள் மிகக்குறைவாகவே வாழ்கின்றனர்.
கொழும்பு, நாட்டின் தலைநகராக இருப்பதாலும், அதிகமான வெளிமாவட்ட இந்துக்கள் இங்கு வாழ்வதாலும், ஓர் இந்துக் கலாச்சார மண்டபம் கொழும்பில் அமைய வேண்டியது அவசியமாகிறது. இது ஒரு கெளரவப் பிரச் சனையும் ஆகும். சென்ற பல ஆண்டுகளாக அத்திவார நிலை யிலேயே உள்ள கலாச்சார மண்டபம், விரைவில் கட்டப்பட வேண்டும் எனப் பல இந்துக்கள் கவலையுடனும் வேதனையுட னும் பிரார்த்தனை செய்கிருர்கள். பலன் கிடைக்கும் நாள் மிக அண்மையில் உள்ளது என நம்புவோமாக !
p-sn-as
 

*  ைச வம் *
சைவம் சிவசம்பந்தமுடையது. சைவநெறி வாழ்வோர் சைவர். சிவனை வழிபடுவோரும் சைவர் எனப்படுவர். 9 sp நெறிப்பட்ட வாழ்க்கையுடையவர் அனைவரும் சைவர் என் னும் பெருநெறி நிற்பவராவர். மக்கள் வாழ்வில் ஆண்ட வன் சந்நிதியில் அனைவரும் சமம் என்று கூறுவது சைவம். தூய்மையான உணவுக்கும் சைவம் என்ற பெயர் வழங்கி வருகிறது. தவ வாழ்வை மேற்கொள்ள வேண்டிய அத்தியா வசியத்தை வலியுறுத்துவது சைவம். வையத்து வாழ்வாங்கு வாழ வேண்டிய தன் இன்றியமையாத தன்மையை எல்லோ ருக்கும் எடுத்துக் கூறுவது சைவம்.
இந்து என்னும் சொல் இடைப்பிறவரலாக நுழைந்தது என்றே ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். இந்தியாவிலுள்ள மதங்கள் எல்லாவற்றையும் ஒருசேரத் தழுவிய பொதுச் சொல்லாக அமைந்ததே இந்து என்னும் சொல்லாகும். வைணவம், பெளத்தம், ஆருகதம், இவற்றுடன் சைவமும் சேர்க்கப்பட்டு ஒரு சாம்பார் மதமாக அமைந்ததைக் குறிப் பிட உகந்த சொல்லாக இந்து என்னும் பதம் உபயோகப் படுத்தப்பட்டது. எனினும், பெளத்கர் தம்மை இந்துக்கள் என்று கூறிக்கொள்ள விரும்புவதில்லை. இதே விதமாக ஆருகதமதத்தைச் சார்ந்தவர்களும் தம்மை இந்துக்கள் என்று கூறிக்கொள்ள விரும்புவதில்லை. எனவே, இறுதியில் சைவர் களும் வைணவர்களும் தமக்குள்ளே பலவிதமான கருத்து வேறுபாடு இருந் கவந்ததைத் தவிர்க்கும் பொருட்டு இந்து என்னும் பொதுச்சொல்லைப் பரவலாகக் கையாளத் தொடங் கினர்.
பாரத நாட்டிலும் ஈழவள நாட்டிலும் சைவசமயமே வணக்கமுறை செம்மைப்படுத்தப்பட்டதாக அமைந்து காணப்படுவதாயிற்று. இந்துக்கடவுள் யார் என்ற கேள் விக்கு நாளது வரை நிறைவான கருத்தை எவருமே தெளிவு

Page 11
- 16 -
படுத்தவில்லை என்பது கவலைக்குரிய தொன்ருகும். ஆனல் இந்து என்னும் சொல்லைப் பெருவிருப்புடன் சைவக் கோவில்களைக் குறிப்பதற்கும், சைவசமயப் பாடத்திட்டத் தைக் குறிப்பதற்கும் சைவசமய அலுவல்களைக் குறிப்பதற் கும் எல்லோரும் உபயோகித்து வரும்போது, சொற்பொருள் தெரியாத நிலையில் சைவர்கள் தம்மை இந்துக்கள் என்று மயக்கமாக அழைத்து வருவதை எண்ணி இரக்கப்படாதிருக்க Cup 19-Lungilo
எமது ஈழ நாட்டிலே சைவர்களே வாழ்ந்து வருகிறர் கள். விஷ்ணு வழிபாட்டில் அவர்களுக்கு வெறுப்பில்லை. சிவன் கோவிலில் - முருகன் கோவிலில் - அம்மன் கோவிலில் விஷ்ணு சந்நிதானம் வைத்து வழிபாடாற்றி வருவதில் மகிழ்ச்சியடைகிறர்கள். தனியாக விஷ்ணு ஆலயங்கள் அமைத்தும் வழிபடுவதில் கருத்து வேற்றுமை இன்றி வாழும் பெருமை ஈழ நாட்டின் சமய வாழ்வுத் தனித்துவத் திற்கு ஒரு எடுத்துக்காட்டாகும். சைவம், என்னும் சிவ வழிபாடும், சாக்தம் என்னும் அம்பாள் வழிபாடும், காண பத்தியம் என்னும் விநாயகர் வழிபாடும், பைரவம் என்னும் பைரவர் வழிபாடும், கெளரம் என்னும் சூரியவழிபாடும் ஈழநாட்டிலே தம்முள் எவ்வித போட்டியும் பூசலும் இன்றி நல்லெண்ணத்துடனும் அன்புடனும் மக்கள் வாழ்வில் ஒன்றி விட்ட தன்மையை நன்கு அவதானிக்கக் கூடியதாயிருக் கிறது. எல்லோரும் தம்மைச் சைவசமயிகள் என்று அழைத்துக் கொள்கின்றனரேயன்றி கெளமாரர், சாக்தர், பைரவர், காணபத்திரர், கெளரர் என அழைத்துக் கொள்வ தில்லை. சூரியனை ஈழத்திலே தனிக்கோவிலாக அமைத்து வழிபடாதிருந்த போதிலும், சிவன் கோவில்களில், சூரிய னுக்குக் கோபுரவாயில் இடப்புறமாக ஒரு சந்நிதானம் அமைத்து சூரிய பூசையுடன் வழிபாடு தொடங்குவதை நாம் காண்கிருேம்.
இந்த வழிபாட்டு முறையினை நன்கு ஆராய்ந்து பார்க் கும்போது மக்கள் வாழ்வில் அமைந்த சமரச மனப்பாங்கினை நன்ருக உலகிற்கு எடுத்துக்காட்டுவதாக வழிபாட்டு முறையை ஒழுங்குபடுத்தியிருப்பது காணுந் தோறும் இறும்பூ
 

- 17 -
தெய்துவதாகும். எத்தன்மை வாய்ந்த கடவுட் கொள்கை உடையவராயிருந்தாலும் அவரை வெறுத்து ஒதுக்கும் தன் மையோ, இகழ்ந்து கூறும் இயல்போ, குறைவாக மதிக்கும் தாழ்வு மனப்பான் மையே ஈழநாட்டில் இருக்கவில்லை, இருக்கப்போவதும் இல்லை என்பதையும் எல்லோருக்கும் அறிவுறுத்தும் வகையில் எமது வழிபாட்டு முறை அமைந் திருந்தது என்பதை நினைவிற்கொள்ளும் போது, உலகனைத் திற்கும் முன்மாதிரி காட்டியாக வாழ்ந்த, வாழும் பெருமை ஈழநாட்டுத் தமிழ் மகனுடைய சொந்தப் பண்பு என்று கூறிக்கொள்வது பொருத்தமுடையதே.
அறுசமயக் கோட்பாடுகளையும் ஏற்று, அறுமதக் கடவுட் கோட்பாட்டையும் அணைத்து, சிவனை வழிபடும் நெறியி லிருந்தும் மாறுபடாத, தமது தனித்தன்மையையும் பேணிக் காத்த பெருமையை நாம் மறந்துவிடக் கூடாது.
விஷ்ணுவை வழிபடுவதில் தயக்கம் காட்டாத போதும், தன்னை வைணவன் என்று நாமம் இட்டுக்கொள்ளாது சைவ வைணவ சமரசவழிபாட்டு முறையை உலகில் வேறு எங்கணும் காண முடியாதவாறு சமாதானமாக ஏற்றுக் கொண்ட நிலை சமயவாழ்வின் சமரசநிலையை எடுத்துக் காட்டுவதாயமைந்த போதும், தன்னைச் சைவன் என்று கூறிக்கொள்ளும் சிவசின்னங்களை அணிவதில் ஒரு போதும் பின்னிற்காத சிறப்புடன், இயல்பான அடக்கத்துடன் ஈழ நாட்டின் தனிப்பண்பினை உலகறியச் செய்வதில் நாம் பெருமைப்பட வேண்டும்.
சைவனக வாழ்ந்து-சிவனை நினைந்து-உண்மை அறிந்துஇன்பம் சிறந்து - அன்பு மலர்ந்து - அறிவு ஒளிர்ந்து - எங்கும் நிறைந்து - உணர்வில் உறைந்து - வாழ்வில் வளர்ந்து இகபர சுகம் தருவது சிவனருள்; அதுவே திருவருள்.
அத்திருவருளைத் தருபவன் சிவன், சித்தமலம் அறு வித்துச் சிவமாக்கி எனையாண்ட அத்தன் என்று சிவனை மாணிக்கவாசகசுவாமிகள் குறிப்பிடுகின்றர். சிவுன் சிவ

Page 12
- 18 -
மயமானவன். சிவம் என்ருல் இன்பம், நன்மை, சுகம், பெருமை முதலான பல பொருள்களையும் தரும். உலகில் வாழுங் காலத்து எல்லாவிதமான சுகத்தையும் அனுபவித்து என்றும் குறைவில்லாத பேரின்பப் பெருவாழ்விலே திளைக்க வைப்பவன் சிவன். அவனது அருள் திரு அருள். அது கிடைப் பதற்கு அவன் தாள்பணிதல் வேண்டும். அவன் அருளாலே அவன்தாள் பணியும்போது தானே வந்து எம்மைத் தலை யளித்து ஆட்கொண்டருளுவான்.
சிவன் தன்னை வழிபடுமாறு யாரையும் கேட்டதில்லை. நாம் அவனை வழிபட்டால் அவன் அருளைப் பெறும் se; CE5 கதை உடையவர்களாவோம், அவனை வழிபடாவிட்டால், அவ னருளைப் பெற அருகதையுடையவர்களாக அமையமாட் டோம். வழிபட்டால் விருப்போ, வழிபடாததால் வெறுப்போ கொள்ளாதவன் சிவன்.
* நலமிலன் கண்ணுர்க்கு கண்ணினுர்க்கு நல்லன்
சலமிலன் பேர் சங்கரன்" - திருவருட்பயன்
என்று உமாபதி சிவாச்சாரியார் கூறுகின்றர். ஆன்மாக்க ளுக்கு என்றும் அருள் பொழியக் காத்திருப்பவன் சிவன் ’ எனும் நாமம் தனக்கேயுடைய செம்மேனி எம்மான், அவன் ஒன்ருய், உடனுய், வேருய், முதலாய் உலகை இயக்கி நிற் பவன், 68 விறகிற் றியினன், பாலில்புரை நெய்போல் மறைய நின்றுளான் மாமணிச் சோதியான்" நாம் தூய்மையின்மை காரணமாக அவனை உணர முடியாதவர்களாயிருக்கிருேம். எம்மைப் பாசம் மறைத்துக் கொண்டிருக்கிறது. பாசவினை பற். றறுப்பவன் அவனே. அவன் பிறப்பிறப்பு அற்றவன். மாதா உதரத்துப் புகாதவன். வேண்டிய தோற்றத்தை வேண்டிய காலத்து எடுத்துக் கொள்ளும் வரம்பில் ஆற்றலுடையவன். ஆன்மாக்களுக்கு அருள்புரிவதற்குப் பல தோற்றங்களை எடுத் துள்ளான். ஆனல் எந்தத் தோற்றத்திற்காவது யாராவது ஒரு தந்தையையோ தாயையோ நாடிச் செல்லாதவன். * தாயுமிலித் தந்தையிலித் தான் தனியன் காணேடி" எனத் திருவாசகத்தில் மணிவாசகனுர் விதந்துரைக்கின்ருர்,

ー I 9 ー
தன்னிகரில்லாத் தனி முதலாக சிவன் எனும் நாமம் தனக்கே உரியவனை வழிபடும் நாம் சைவர். எமது மதம் சைவம், எம்மைச் சைவசமயிகள் என்று சொல்லிக் கொள்வ தில் நாம் பெருமையடைகிருேம். போலிக் கெளரவத்தையும் போலி வாழ்க்கையையும் நாம் விரும்புவதில்லை. போலியால் எமக்குறு பயன் யாதும் இல்லை. போலியால் எம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிருேம். எம்மை நல்வழிப்படுத்துவதற்கு ஒரே வழி " நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் என்றும் சிவன்தாள் நினை" என்று சிவஞான சித்தியார் என்னும் சைவ சித்தாந்த நூல் கூறும் உண்மை வழி நின்று, சிவனை வழிபட்டு உரிமைச் சைவர்களாக வாழ்ந்து மெய்நெறி பெற்று உய்திபெற “ திருவருள்” கூட்டிவைக்கட்டும்,
சிவஞானவாரிதி கு. குருசாமி.
saaaaaaan
ச0க சமரசம் என்பது இந்துமதத்தோடு இணைந்த ஒரு கோட்பாடு. எவன் ஒருவன் எம்மதத்தை அனுட் டிக்கிழுஞே அவன் அம்மதத்தை முறையாக அனுட் டிக்க வாய்ப்பு அளிப்பதே இந்து மதக் கொள்கை.
- இராஜாஜி
★
' கீழே விழுவது மீண்டும் எழுவதற்காகவே"
- மணிவண்ணன்
MM SAMAMMAMMMMSMSAMMMSAMMASMMSMMSASASASMLSMAeS LSLASLSLSqLqMMAeSMLASMASLLASLLALSeSqeSMqeqeSMASeqSAALA

Page 13
உஜ செயலாற்றுவோம் 3
உலகிற் பிறந்த ஒவ்வொரு பிராணியும் உயிருள்ளவரை செயலாற்றிக் கொண்டே இருப்பதைக் காண்கிருேம். செயல் இல்லை எனில் உயிர் இல்லை என்று கூறுமளவிற்குச் செயல் முக்கியத்துவம் அடைகிறது. பிறந்த குழந்தை தனது உறுப்புக்களை அசைப்பதுடன் அழவுஞ் செய்கிறது. தாவரங் கள் வளர்ச்சியடைய உதவும் நீர், சூரியவெப்பம் உணவு ஆகியவற்றை அடைய முயற்சிகளை மேற்கொள்ளுகின்றன. மிருகங்களும் இரைதேடுதல், பாதுகாப்பு இனவிருத்தி ஆகிய வற்றையிட்டுச் செய்கைகளில் ஈடுபடுகின்றன. பதுங்கும் புலி யும், உறுமீன் வருமளவும் காத்திருக்கும் கொக்கும் செயல் நிலை யில் உள்ளன என்றே கூறவேண்டும். 6 சும்மா இருக்கும் திறம் அரிது " எனக் கூறப்படுவது மனதிற் கொள்ளத் தக்கது.
மனிதனுக்கு மட்டுந்தான் ஆற்றும் செயல் நல்லதா கெட்டதா என ஆராய்ந்து உணரும் பகுத்தறிவு உள்ளது. இது இறைவனின் அருட்கொடையே.
மனிதரை அவர்தம் செயல்முறைகளைக்கொண்டு பின் வருமாறு மூவகைப்படுத்துவர் புராதன முனிவர்.
1. கூலிக்கு வேலை செய்யுந் தன்மையினர்.
2. சமுதாய நன்மைக்கு உழைக்குந் தொண்டர்.
3. மேற்கொண்ட இலட்சியங்கள் நிறைவேறச் செய
லாற்றும் அவதார புருடர்.
உடலால் வேலை செய்யும் தொழிலாளிகள் மட்டுமன்றி, கண்ணியமான பல தொழில்களைச் செய்வோரும், தமது ஊதியத்துக்கென்றே வேலை செய்யும் பொழுது கூலி யாட்களே,

ܚ- 7 2 ܐ ܣܗ
கலை, அரசியல், சமயம், கல்வி, மருத்துவம் ஆகிய துறை களில் தன்னலத்தையே பெரிதாகக் கொள்ளாது சமுதாய நன்மாற்றங்களுக்கும், மகிழ்ச்சிக்கும் உழைப்போர் தொண் டர்கள்,
தமது இலட்சியங்கள் நிறைவேறுவதால் சொந்த நன்மையையோ அல்லது தாம் வாழும் சமூகங்களின் நன்மையையோ மட்டும் கருத்திற்கொள்ளாது மனித இனத்தின் நன்மைக்கு ஏற்ற இலட்சியங்களைத் தந்து, அவற்றைப்பெற இடையருது முயற்சி செய்யும் பெருமை வாய்ந்தோர் அவதார புருடர், எதிர்ப்புக்கள் பலதோன்றினும் பயந்துவிட மாட்டார்கள் இவர்கள். மலர்ந்த முகத்துடனும் மன்னிக்கும் இதயத்துடனும் அவற்றை ஏற்பர். இவர்களது எண்ணத் தூய்மையும் இலட்சியங்களின் பெருமையும் ஆண்டு கள் செல்லச் செல்லப் புது மெருகை அடைகின்றன.
செயல்வீரர்கள் தமது கருமத்திலேயே கண்ணுக இருப் பர். அவர்கள் நித்திரை, பசி, உடற்சுகம் ஆகியவற்றைக் கூடப் பெரிதென மதிப்பதில்லை.
எல்லோருக்கும் செயலாற்ற உள்ள காலவரையறை ஒன்றே - ஒவ்வொரு நாளிலும் 24 மணி நேரங்களே - ஒவ்வொரு ஆண்டிலும் 365 நாட்களே. பெருமையைத் தேடிக்கொள்ளும் ஒரு சிலருக்கும் கிடைக்கும் நேர ஒழுங் கும் இதுவே தான். அப்படியாயின் அவர்கள் பெருமை யைத் தேடிக்கொள்வது எவ்வாறு ?
செயலாற்றும் காலமோ அல்லது சூழ்நிலையோ செய லுக்கும் செயலாற்றுபவனுக்கும் பெருமையைத் தருவ தில்லை, செயலை என்ன நோக்குடன் செய்கிருன் என்பதாலேயே செய்பவனுக்குப் பெருமை கிட்டுகிறது. சிற்பி தீட்டிய சிலை வெறுங்கல் என்ற நிலையில் இல்லாது சிற்பியின் உணர்வைப் புலப்படுத்தி நிற்கிறது. புகழ் பெற்ற ஓவியம், மை, தூரிகை ஆகியவற்றின் கலப்பு என்ற நிலையைக் கடந்து ஓவியனின் உள்ளக் கிடக்கையை உணர்த்தி நிற்கிறது.

Page 14
س 2 و مسسيس
எனவே குறிப்பிட்ட செயலைச் செய்யும்பொழுது காட் டப்படும் உண்மை, இதய ஆர்வம், இலட்சியம் என்பனவே அச்செயலுக்கும் செய்பவனுக்கும் மதிப்பைக் கூட்டுகின் நன. இத்தன்மை ஏன் எல்லோருக்கும் ஒன்றுபோல அமை வதில்லை. வெளியுலக நிகழ்ச்சிகள் எமது புலன்களைத் தாக்கும்பொழுது ஒவ்வொருவரது மனமும் அதனை ஏற்று புத்திக்குத் தெரியப்படுத்துகிறது.
புத்தி, செய்வது என்ன என்பதைத் தீர்மானிக்கிறது. பழைய அனுபவமும், பெற்றுக்கொண்ட அறிவும் தீர்மானம் செய்வதற்கு வழிகாட்டிகளாக நின்று உதவுகின்றன. ஒவ் வாருவரது தீர்மானமும் வெவ்வேருக இருப்பதற்கு அவரவ ரது பழைய அனுபவம் பலவாருக இருப்பதே காரணமாகும்.
சிலரது அனுபவம் நீதி, நேர்மை ஆகிய வற்றின் சிறப்பை வலியுறுத்தும், வேறு சிலரது அனுபவம் அவற் றைப் பெரிதெனக்கொள்வதில்லை. உதாரணமாக, சம்பள நாளில் ஒரு மனிதன் தனது பணப்பையை நழுவவிடு வதை ஒருவர் கவனிக்கிருர், அவர் நேர்மைக்கு மதிப்புக் கொடுப்பவராயின் பணத்தை இழந்தவன் படப்போகும் துய ரத்தை நினைத்து, அவனின் குடும்பம் வேதனையுறுவதைக் கற்பனை செய்து, பணப்பையை அவனை அழைத்துத் திருப் பிக் கொடுத்துவிடுவார். நீதிக்கு மதிப்புக் கொடுக்காத ஒரு வராக அவர் இருப்பாராயின் அந்தப் பணப்பையை அவரே எடுத்து செல்லுவதுடன் அச்செய்கைக்குச் சாதகமாகச் சில காரணங்களையுங் கூறுவார்.
தருமத்திற்குப் பயந்து நடக்கும்பொழுது மனதில் ஒரு மகிழ்ச்சி ஏற்படுகிறது. அது மேலும் மேலும் நன் மையைச் செய்யத் தூண்டுகிறது. ஆனல் தருமத்தை மதிக்காத பொழுது நாம் துயர், பயம் ஆகியவற்றை அடை கிருேம். இத்தன்மைகள் நமது முன்னேற்றத்தைத் தடை செய்கின்றன. இதனுலேயே பெரியோர்கள் தர்மவழியைப் பின்பற்ற ஆலோசனைகள் கூறுகின்றனர்.

சில நேரங்களில், ஒரு குறிப்பிட்ட செயலுக்கென அதிக நேரத்தையும் முயற்சியையும் செலவிடும் ஒருவர் தோல்வியை அடைகிறர். ஆஞல் அதே செயலுக்கு சிறிது நேரத்தைச் செலவிடும் இன்னுெருவர் வேற்றியீட்டுகிறர். உதாரணமாகப் பாடசாலேப் பரீட்சைகளை எடுத்துக் காட் டலாம். இவ்விதமான தோல்விகள் நமது சக்தியைப் பின் வரும் வழிகளில் வீணுக்கி விடுவதால் ஏற்படுகின்றன.
1. இறந்தகால நிகழ்ச்சிகள் வெற்றியடையாது இருந்
திருப்பின் அது பற்றிய நினைப்பும், கவலையும்;
2. நிகழ்காலத்தில் செயலை நிறைவேற்றுவதில் பதட்டமும்
அமைதியின்மையும்;
3. எதிர்காலத்தில் நமது முயற்சிகளால் L6)66).
வோமோ என்ற ஐயம்.
இறந்த காலத்தில் தோல்வியடைந்திருந்தாலும் அதே நிலைமை மீண்டும் இருக்கும் என நம்பத் தேவையில்லை. பொறுமையாகவும், நம்பிக்கையுடனும் கா ரிய மாற்றும் பொழுது வெற்றி தானுகவே கிடைக்கும்.
நாம் இனிமையான மாம்பழங்களை இன்று சாப்பிடு கிருேம். ஆனல் அப்பழமரங்களை நாமே நடவில்லை. அவற்றை நடும்பொழுது நமது முன்னுேர் ஆற்றிய பலன் கருதாத செயல்களின் பயணுக நாம் இன்பம் அடைகிருேம். எனவே, பலனைக் கருதாது செய்யும் நல்ல காரியங்கள் நல்ல பயனை நல்கும்.
இக்கருத்தையே, பகவத் கீதையில்
* கருமம் ஆற்றுவது உன் கடமை
பலனைப்பற்றிச் சிந்திப்பது அல்ல'
என்று கூறப்படுகிறது.
ஆதலால் நாம் எல்லோரும் நல்ல வழியிற் சென்று, பலன் கருதாது செயலாற்றுவோமாக,
(சுவாமி சின்மயாநந்தா அவர்களது கட்டுரையைத் தழுவியது.)
--------------------

Page 15
ஆk நல்லைக் கந்தன் கருணை >3
ஆண்டு தோறும் நடைபெறும் நல்லூர்க்கந்தன் திருவிழா இவ் வருடமும் மிகச்சிறந்த முறையில் நடைபெற்றது. தேரி, தீர்த்தம் ஆதியன செப்ரெம்பர் 8, 9 திகதிகளில் நடைபெற்றன. காவடிகள பல. இவற்றுள் என்னைத் திகைப்பில் ஆழ்த்தியது கொழும்பு நண்பர் ஒருவர் எடுத்து வந்த பாற்காவடியே ஆகும்.
அந்த நண்பரின் மைத்துனர் சில நாட்களுக்கு முன் 6.Tšir&ồGT fè சந்தித்து உரையாடிச் சென்ருர், மச்சானுக்கு மிகுந்த சுகயினம், டாக்டர்கள் யாவரும் இனி இறைவன் செயல்தான் எனக்கூறி விட்டனர்" எனப் பேச்சுக்கிடையில் சொன்னது எனக்கு மிகுந்த மனவருத்தத் தைத் தந்தது.
பல காலமாக நான் அறிந்த இந்த நண்பர் முதலில் ஒரு பலி சரக்குக் கடையில் வேலை பார்த்து வந்தார். மிகச் சாதாரண குடும் வாழ்க்கை. குழந்தைகள் இல்லையே என்ற கவலை ஒரு புறம். சில ஆண்டுகளுக்கு முன்னர் அவரது வாழ்க்கையில் பல நன்மாற்றங்கள் ஏற்பட்டன. இரு குழந்தைகள் பிறந்தன. சொந்தத்தில் கடையொன் றையும் எடுத்து நடத்தினூர். நல்ல வருமானம். ஆனல் மதி மிதமிஞ் சிய மகிழ்ச்சியில் வேண்டாத காரியங்களில் அவர் ஈடுபட்டாரி" அவர் நடாத்திய கடை பிறநாட்டுக் குடிவகைகள் விற்ப?ன செய்யு மிடம் என்பதும் இதற்கு ஒரு காரணமாகும். முதலில் இலேசாக பிறகு மாதிரிக்கு வரும் சரக்குகள் மட்டும்; பின்னர் விற்பனைக்குரியவை என குடிக்கத் தொடங்கி விட்டார். எந்த நாளும், எந்நேரமும் குடி, வயிற்றில் கோளாறுகள், -
கொழும்பில் பிரபலமான டாக்டர்களை அணுகினர். சத்திர சிகிச் சைகள் நடைபெற்றன. டாக்டர்கள் குடியை நிறுத்தச் சொன்னர்கள். அதிகம் வேலை செய்யக்கூடாது என்றனர். அவர்களுக்கும் "ஓம்" தனது பழக்கங்களுக்கும் மறைமுக அடிமைமுடிவு. முடிவின் எல்லை யில் கடைசி யாகச் சில தினங்களுக்கு பிரபல டாக்டரின் நேரடிக் கண்காணிப்பு படுக்கையை விட்டு அசையக் கூடாது என்ற கடுமையான கட்டுப்பாடு.
அவ்வேளையிலே தான் சுகம் பார்க்கச் சென்ற உறவினர் ஒருவர் நல்லூர்க் கந்தா! நீயே துணை. இவர் இவ்வருடம் உனது திருவிழாவில் காவடி எடுப்பார்?' எனக்கூறி ஒரு சிறு துணியில் காணிக்கைப் பணம் வைத்து கட்டிலின் ஓரத்தில் முடிந்து விட்டாரி.
 

நோயினுல் பீடிக்கப்பட்ட நண்பருக்கு வேலவன் மது நம்பிக்கை பிறந்தது. அது நல்ல வேலைகளைச் செய்யத் தொடங்கியது. அறிந்தோ அறியாமலோ செய்த குற்றங்களை மன்னித்து அருளும் வண்ணம் ஆண் டவனை வேண்டத் தொடங்கினர். அது அவனது பரிவைத் தேடித் தந்தது. கழிவிரக்கம் கொண்டு கனிவுடன் கடவுளை வேண்டக் கவலை கள் கதிரவன் ஒளியில் பணித்துளிகள் போல மாயத்தொடங்கின.
நேர்த்தி வைத்த நேரம் நல்ல நேரம் போலும் ! நண்பர் சுக மடையத் தொடங்கினர். நல்வாழ்க்கை வாழ்வது எனத் திடசங்கீற் பங்கொண்டார்.
கந்தன் ஆலயத்தில் இவ்வாண்டுத் திருவிழாவிலேயே பாற்காவடி எடுத்தார். மனம் நெகிழ்ந்து பரமன் புகழைப் பாடிப் பரவி, இண் ணிரி சொரிந்து பரவசமடைந்தார்.
அன்பர்களே கூறுங்கள் நண்பரின் நோயை மாற்றியது எது? காணிக்கை வைத்த பணமா? முடிந்த துணியா? இல்லவே இல்லை. பாவஞ் செய்த என்னையுந் தன் பெருங்கருணையால் பாதுகாத்து, திருத்தி வாழ வைப்பான் என்ற நம்பிக்கையே அல்லவா? இறைவனே முழுமனதுடன் நம்புங்கள். அவன் ஒரு பேரருட்கடல் . நம்பி யோரை நல்வழிப்படுத்தும் கலங்கரை விளக்கம்.
நல்லூரி - க. இ.
*براع بحشعمحصحصی
عصبیحہ۔
"பூமி சிவன் உய்யக் கொள்வது "
- மாணிக்கவாசகர்
"நன்மைக்காகச் செங்த காரியம் ஒருபோதும் பாழடையாது' - சுபாஷ்
AAAAAqAAAAAAAAqAqAqAqAAAAAAAAqAAAqALAqAAAAAAAASLLLLLAALLLLLAALLLLLSSLALAMLMMMLAMSMSMMLSMLMSMLMALASAMeSMLMASLASLLAMLLLMSLALLSALASLLALALASALALAMALAqALAeqLqSqSLqeSSSLSLMSqqSLLSqSqqSSqSSqS

Page 16
** சிங்கப்பூர்க் கடிதம் **
அன்புள்ள யோகா!
நாங்கள் சுகமாக சிங்கப்பூர் வந்து சேர்ந்தோம், நாங் கள் இலங்கையில் தங்கியிருந்த பொழுது எங்களுக்குத் தங்கள் குடும்பத்தினர் காட்டிய அன்பிற்கும், உபசாரத் திற்கும் மிகவும் கடமைப் பட்டுள்ளோம்.
நாங்கள் பலகாலமாக சிங்கப்பூரில் வாழ்ந்து வந்தாலும் எமது தாய்நாடாம் இலங்கையை மறக்கவில்லை. தாய் மொழி யாம் தமிழை மறக்கவில்லை. எமது சமயத்தையும் பண் பாட்டுச் சிறப்புக்களையும் மறக்கவில்லை.
இதனுலேயோ என்னவோ ஆண்டுக்கு அல்லது இரண் டாண்டுகளுக்கு ஒருமுறை இலங்கை வந்து திரும்பும் பாக்கியத்தைப் பெறுகின்ருேம்.
ஒவ்வொரு முறையும் நாங்கள் வரும் பொழுதும் தைப் பொங்கல், வருடப்பிறப்பு, தீபாவளி ஆதியாம் பண்டிகைகளில் ஏதோ ஒன்று நடைபெறுகிறது. மக்கள் தத்தம் தகுதிக் கேற்ப இவற்றைக் கொண்டாடுகின்றர்கள். கோவில்களில் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. சுவாமியை அலங்காரஞ் செய்யப்பட்ட வாகனங்களிலும், சப்பரம், தேர் என்ப வற்றிலும் வீதிவலமாகக் கொண்டு செல்கின்றனர். மேளக் கச்சேரிகள், ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. கூட்டமாக மக்கள் வந்து இவற்றைக் கண்டு களித்துச் செல்கின்றனர். இவற்றுடன் எமது சமய வாழ்க்கை சிே வடைந்து விடுகிறது போலத் தோன்றுகிறது.
சமயம் என்பது இந்தக் கொண்டாட்டங்கள் மட்டுந் தான? இல்லவே இல்லை. எமது சமயத்தைப் பற்றிய விளக் கத்தையும் தெளிவையும் எம் சமயத்தவர் அனைவரும் ஐயந் திரிபற அறிந்து யார் எக்கேள்வியை எப்பொழுது கேட் டாலும் தகுந்த விடை கொடுக்கும் நிலையில் இருக்கவேண் டும். அந்த உண்மைகளை வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும். காலத்துக்குக் காலம் மாறுந் தன்மையுடைய சிறு விடயங்களை மட்டும் பெரிதெனக் கொண்டு சமய வாழ்க்கையைப் பாழடிக்கக் கூடாது.

எமது சமய உண்மைகளைக் கூறும் எத்தனையோ நூல் கள் உள்ளன. அவற்றின் பெயர்கள் தானும் நன்கு படித் தறிந்த பண்டிதர்களுக்கே தெரியாது. பாமரரைப் பற்றிக் கூறவும் வேண்டுமா ?
சமய நூல்களின் பெயர்த் தொகுப்பு ஒன்று வெளியிட வேண்டும். அவற்றின் கருத்துக்களை நன்கு விரித்துக் கூறும் கலைக்களஞ்சியத் தொகுப்பு ஒன்றை உருவாக்க வேண்டும். அத்துடன் எமது சமயக் கோட்பாடுகளைக் கொண்ட நூல் ஒன்று இலகு மொழியில் உடனடியாகத் தொகுக்கப்படல் வேண்டும். இப்படி எல்லாம் செய்வதால் உலகில் நிலவும் ஏனைய சமயத்தவரைப் போல நம்மவரும் சமய ஞானத்தை எளிதில் பெற்று வாழ்வது திண்ணம்,
மேலும் எம்சமயத்தவர் மத்தியில் ஒர் ஒற்றுமை உணர்வு ஏற்படவேண்டும். ஏழைகள் தாம் சமயத்தை நன்கு பேணுபவர்கள். அவர்களைத் தகுந்த முறையிற் கவனியாது விடுவதால் அவர்கள் நாளடைவில் பிற சமயிகளாக மாற்றப் பட்டு விடுகிறர்கள். இதனைத் தடுப்பதற்கு சிறந்தவழி எம் சமய ஏழைகளின் பொருளாதார முன்னேற்றம் கல்விநிலை, சமய வாழ்க்கை ஆகியவற்றில் வசதி படைத்தோர் ஒரு கண்ணுேட்டங் கொண்டு தேவையானவற்றை உடனுக்குடன் செய்வதே ஆகும். எம்சமயத்தவர் ஒன்ருகக் கூடுவதற்கு ஏற்ற கலாச்சார மண்டபங்கள் பிரதான இடங்களில் அமைக்கப்பெறல் வேண்டும்.
இவற்றிற் கெல்லாம் நிறையப் பணம் வேண்டும் என் பீர் கள். தகுந்த முறையில் நடவடிக்கை எடுக்கப்படின் சிங்கப் பூரில் உள்ள எம்சமயத்தவரை அணுகிப் பணம் சேர்ப் பதில் கஷ்டமிராது. ஆனல் முயற்சிகள் உண்மையாக வும், குறிக்கோளை விரைவாகவும் நல்வழியில் அடையும் நோக்குடனும் அமைதல் அவசியம்.
அடிக்கடி கடிதம் எழுதுங்கள்,
இங்ங்னம் உமது அன்புள்ள
வை. சி=

Page 17
சரஸ்வதி வணக்கம்
வஷா
ஆயக லைகள் அறுபத்து நான்கினையும் ஏய உணர்விக்கும் என் அம்மை - தூய உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தி னுள்ளே இருப்பளிங்கு வாரா திடர்.
வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பணிபூண்டு வெள்ளைக் கமலத்து வீற்றிருப்பாள் - வெள்ளை அரியா சனத்து அரசரோ டென்னைச் சரியா சனம் வைத்த தாய்,
வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள் கொள்ளை யின்பம் குலவு கவிதை
கூறு பாவலர் உள்ளத் திருப்பாள் உள்ளதாம் பொருள் தேடி யுணர்ந்தே
ஒதும் வேதத்தின் உள்நின் ருெளிர் வாள் கள்ள மற்றமுனி வர்கள் கூறும்
கருணை வாசகத் துட்பொரு ளாவாள்.
வஞ்ச மற்ற தொழில்புரிந் துண்டு
வாழும் மாந்தர் குலதெய்வ மாவாள் வெஞ்ச மர்க் குயிராகிய கொல்லர்
வித்தை யோர்ந்திடு சிற்பியர் தச்சர் மிஞ்ச நற்பொருள் வாணிகஞ் செய்வோர்
வீர மன்னர் பின் வேதியர் யாரும் தஞ்ச மென்று வணங்கிடுந் தெய்வம்
தரணி மீதறி வாகிய தெய்வம்.
தாவறு முலகெலாந் தந்த நான்முகத் தேவுதன் துணைவியாய் செறிந்த பல்லுயிர் நாவுதோ றிருந்திடு நலங்கொள் வாணிதன் பூவடி முடிமிசை புனைந்து போற்றுவாம்.
-she
 

அல் பிராண இரகசியம் ?? கை பூரீ காயத்திரீசித்தர் கண
உயிர் அல்லது பிராணன் இருக்கும்வரை தான் மணி தனின் ஆட்டபாட்டம், விஞ்ஞான, மெய்ஞ்ஞான ஆராய்ச்சிக ளெல்லாம். இப்படியிருந்தும் 'பிராணன்' என்பதென்ன என் பதைப் பெரும்பாலானவர்கள் புரிந்துகொள்ளவேயில்லை. யோக சாதனை போன்ற சாதனைகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு இந்தச்சொல் தெரியும். இதன்றி உபநயனச்சடங்கு செய்யப் படும் போது 'பிராணுயாமம்’ சொல்லித்தரப்படுவதால் 'பிரா ணன்' என்ற சொல்லே அறிந்திருப்பார்கள். இன்று உலகெங் கும் பரவி வரும் யோகாசனக்கலேயுடன் பிராணுயாமம் சொல்லித் தரப்படுவதால், உலகம் முழுவதுமே இன்று 'பிரா ணன்" என்ற சொல்லை அறிந்திருக்கும். இவ்வளவிருந்தும் உண்மையில் "பிராணன்’ என்பதென்னவென்று மிகச்சிலரே அறிந்திருப்பார்கள்.
பெரும்பாலும் யோகசாதனை, யோகாசனக்கலைகளைப் பயிற்றுவிப்பபவர்களும், பயில்பவர்களும் 'பிராணன்' என் பது சுவாசத்தின் வழி உள்ளிழுக்கப்படும் காற்றே எனக் கருதி வருகிருர்கள். 'சுவாசமே உயிர்' என்று ஒருவர் புத் தகம் தீட்டியிருக்கிருர், பிராணுயாமம் சுவாசப்பயிற்சியின் மூலம் செய்யப்படுவதால் சுவாசத்தையே பிராணன் எனப்ப லர் கருதி வருகிறர்கள். இத்தகையவர்களில் ஒருவருக்காவது ஒரு சிறு நியாயம் புலப்படவேயில்லே, பிராணன் காற்றுத் தான் என்றல் ஒருவரும் சாகவேண்டியதில்லையே, டயர்களுக் குக் காற்றடிப்பது போல் இறந்தவனின் மூக்கில் குழலை வைத்து காற்றடித்தால் அவன் பிழைத்துக்கொள்ள வேண் டுமே. அதிகளவு காற்றை உள்ளிழுக்க முடியாதவர்களுக்குச் செயற்கை வழி காற்றைச் செலுத்தலாமே? அன்றி காற்றில் கலந்திருக்கும் பிராணவாயுத சன் உயிரானுல் இதையும் செயற்கையில் வேண்டிய அளவு எப்போதும் செலுத்திக் கொண்டிருக்கலாமே. காற்றே, பிராணவாயுவோதான் பிரா ணன் ஆணுல் இம்மண்ணுலகில் மரணம் இருக்கவே இருக்

Page 18
- 30 -
காதே. இந்த சிறிய விஷயத்தை யாருமே சிந்திக்கவில்லை. பிரணுயாமத்தைக் கூறும் எல்லா நூல்களும் சுவாசப்பயிற் சியையே கூறுவதால் காற்றையே பிராணன் எனக்கருதி விட்டார்கள். பாதஞ்சலயோகத்திலும் 'உஸ்வாஸ் நிஸ்வாஸ் கதி விஷேட பிராணுயாம” “ரே சக பூரகங்களேக் கட்டுப்படுத் துதல் பிராணுயாமம்" எனக் கூறப்பட்டுள்ளதால் பெரும் பாலும் அனைவருமே பிராணனை சுவாசம் எனக்கொண்டு விட்டனர். ஆனல் மேலே சொன்னபடி காற்றுத்தான் உயி ராணுல் ஒரு மனிதனும் சாகவேண்டியிருக்காதே. அப்படி யானுல் உண்மைப் பிராணன் எது?
முதலில் நுரையீரல் சுருங்குவதும், விரிவதும் காற்றை இழுத்து விடுவதால் நடைபெறுகிறது என்ற தவறன கருத் தைத் திருத்திக்கொள்ள வேண்டும். காற்றை இழுத்து விடு வதால் நுரையீரல் சுருங்கி விரிவதில்லை. நுரையீரல் சுருங்கி விரிவதால் காற்றை இழுத்து விடுகிருேமென்பதுதான் உண்மை. எந்த சக்தி இருதயத்தை இயக்குகிறதோ,எந்த சக்தி இரைப்பை முதலியவைகளை இயக்குகிறதோ, எந்த சக்தி கண்ணை இமைக்கச் செய்கிறதோ, எந்தசக்தி, உடலின் அணு அணுதோறும் இருந்து உயிர்ப்பிக்கின்றதோ, அந்த சக்திதான் நுரையீரலை விரியவும், சுருங்கவும் செய்கிறது. அதனுல்தான் நாம் காற்றை இழுத்துவிட வேண்டியிருக்கிறது.
காற்றில் பிராணவாயு கலந்திருக்கிறது. இரத்தத்துக்கு இது இன்றியமையாதது. பிராணவாயுவை உடலுக்குள் சேர்ப்பிப்பதற்காகத்தான் அந்தச் சக்தி நுரையீரலை சுருங் கவும் விரியவும் செய்கிறது. சுவாசப்பயிற்சியால் அதிக அளவு பிராணவாயு இரத்தத்துக்குக் கிடைப்பதுதான் சுவா சப்பயிற்சியின் முடிபு. ஆனல் இதுமட்டும் பிராணுயாம மல்ல.
பிராணன் பிரபஞ்சத்தின் மூல இயக்கச்சக்தி, உப நிடதத்தில் கடவுள் முதலில் 'பிராணம் சயிம்ச' பிராண சக்தியையும் ஜடமூலத்தையும் உண்டாக்கினர் எனக்காணப் படுகிறது. பிரபஞ்சமுழுதும் எந்த சக்தி பொருள்களை இயக் குகிறதோ, சூரியன் வழி எந்த சக்தி கோளங்களை
 

- 31 -ܣܗ
எல்லாம் சுழலச்செய்கிறதோ, தாவரங்களே வளர்க்கி றதோ அதுதான் பிராணன், அதுதான் காற்றை வீசச்செய் கிறது. சூரியனை எரியச்செய்கிறது. கிரகங்களைச் சுற்றச் செய்கிறது. இயக்கமிருக்குமிடமெல்லாம் பிராணன் இருக் கிறது மின்சாரம், காந்தம், அணுசக்தி மூதலியவையும் பிராணனின் திரிபுகளே. காயத்ரீ" பிராண சக்தியின் விளக்கமே. இத்தகைய மஹா சக்தி காற்றுத்தான?
இந்தப்பிராணசக்தி (Cosmic Energy) எப்போதும் பிர பஞ்ச முழுதும் அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது. வெவ் வேறு அலை வேகமாகத்திரிந்து பிரபஞ்சத்தின் அணு முதல் எல்லாப்பொருள்களிலும் செயல் பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த சக்தி மனிதனின் தலை உச்சி வழியாக மூளையில் பாய்ந்து, அதன் வழி நரம்புகளில் பரவி, உடல் முழுவதை யும் உயிர்ப்பித்து இயக்கிக் கொண்டிருக்கிறது. காற்றில்லாதது சாவல்ல இந்தப்பிராணன் செயல்படாமல் போவதுதான். சாக்காடு. இப்படித் தலைவழிபுகும் பிராணன் கீழ்முகப்பட்டு உடலெல்லாம் பரவிக் கொண்டிருக்கிறதாகையால் அது மனி தனில் வசப்படாமல் தன்னிச்சையாக உடலை இயக்கிக் கொண்டிருக்கிறது. இதைத் தன்வசத்துக்குட் படுத்துவதன் மூலம் உடலியக்கமனைத்தையும் தம்கட்டுக்குள் கொண் டுவரும் வழியை யோகிகள் கண்டறிந்தார்கள். அதுதான் பிராணுயாமம். யம என்ருல் அடக்குதல் பிராணுயாமம் என்ருல் பிராணசக்தியைக் கட்டுப்படுத்துவதன் மூலம் உடலி யக்கமனைத்தையும் தம்வசப்படுத்துதல் என்று பொருள்.
பிராண சக்தியை எப்படிக் கட்டுப்படுத்துவது? மின் சாரம் கம்பியின் வழிப் பாய்வதைத் தடைசெய்ய வேண்டு மானுல் அதற்கு ஒர் எதிர்ப்பைக் கொடுக்க வேண்டும். கண் டன்சர்கள், ரெசிஷ்டர்கள் மின்சாரம் பாய்வதைத் தடைசெய் யும் சாதனங்கள். இதேபோல் பிராணனைத்தடை செய்யும் சாதனைதான் பெ ா து வாக ப் பிராணுயாமமென்று சொல்லப்படும் சுவாசப்பயிற்சி நுரையீரலை பிராணன் விரி யச்செய்யும்போது காற்று உட்புகுகிறது. சுருங்கச் செய்யும் போது வெளிச்செல்கிறது. பிராணன் விரியச்செய்யும்போது நுரையீரலை விரிய விடாமலும், சுருங்கச்செய்யும்போது சுருங்க விடாமலும் தடுத்தால் பிராண இயக்கத்துக்கு

Page 19
எதிர்ப்புக் கிடைக்கும். நுரையீரலில் கிடைக்கும் இந்த எதிர்ப்பு நரம்புகள் வழி பிராணசஞ்சாரம் முழுவதற்கும் கிடைக்குமாகையால் பிராண இயக்கம் மனிதனின் கட்டுக்கு அடங்குகிறது. இதுதான் பிராணுயாமத்தின் தத்துவம்.
உண்மையான பிராணுயாமம் மூச்சை வெளிவிடுவதாலோ உள்ளிழுப்பதாலோ இல்லே, அதை அடக்குவதில்தான். கும்பகத்தில்தான் இருக்கிறது. கும்பகம்தான் உண்மைப் பிரா ணுயாமம், காற்றை சாதாரணமாக நடக்கவிடாமல் ஆழ்ந்த மூச்சாக விடப்பழகும் போதே, பிராண இயக்கத்துக்கு லேசாக எதிர்ப்புக் கிடைக்கத் தொடங்குகிறது . உள், வெளி கும்பகப்பயிற்சிகளின்போது பிராண இயக்கத்துக்கு பலத்தி | எதிர்ப்புக் கிடைக்கிறது. மாத்ரிகப் பிராணுயாமம் (Rythmical brething) செய்யும்போது பிராண இயக்கத்தை ஒரு அலை வேகத்தில் இயக்கச்செய்கிருேம், இதேபோல் மற்றப் பிராணு யாமங்களின் குறிக்கோளையும் அறிந்து கொள்ளலாம்.
பிராணன் பிரபஞ்சத்தின் மூலசக்தி, பிராணுயாமம் உட லில் பாயும் அந்தச் சக்தியைக் கட்டுப்படுத்துதல். சுவாசப் பயிற்சி அந்தப்பிராணனைக் கட்டுப்படுத்தக் கொடுக்கும் எதிர்ப்பு. பிராணுயாமத்தில் பிராணன் கட்டுப்படுவதால் உடலியக்கமனைத்தும் கட்டுப்படுகின்றது. இதுவே பிரான யாமத்தின் குறிக்கோள்.
so-son
'உண்மை நல்லது ஆனல் இன்பம் அதைவிட நல்லது
எனினும் உண்மை இன்றி இன்பம் இல்லை."
- இரஷ்ய புலவர் ஒருவர்
 
 

திருவாசக மணி ஒன்று
* அழுதபிள்ளை பால் குடிக்கும் " எ ன் பது உலகத் தோர் கூறும் ஒரு பழமொழியாகும். சில தாய்மார் பிள்ளை அழும்பொழுதுதான் தாழ்டு டிருந்த வேலைகளை விடுத்து ஓடிவந்து பிள்ளைக்கு உண 歷 சீரீட்டித்தாலூட்டி விடு வார்கள். குழந்தை # ேேல்லுேனர் இத்தகைய தாய்மாரை இரண்டாம் நிலையிலேயே வைப்பர். முதன் நிலைத் தாய்மார் குழந்தைக்கு உரிய நேரத்தில் உணவு ஊட்டுவது டன் மற்றும் தேவைகளைத் தாமே ஊகித்தறிந்து செய்வர். பொதுவாக குழந்தை அழுதுதான் தனது தேவைகளைப் பெற்றுக் கொள்ளவேண்டும் என்ற நியதியை அவர்கள் கடைப்பிடிப்பதில்லை.
இவ்வாறு பால்நினைந்தூ&டும் உயர் குணங்கொண்ட தாய்மாரைவிடப் பன்மடங்கு பரிவு காட்டுபவராம் இறைவன். தாய் கள்ளங்கபடமற்ற குழந்தையிடத்து அன்பு செலுத்து கிருள். இரங்குகிருள். அதே பரிவை, குற்றமுடைய ஒருவர் மீது காட்டுவாளா என்பது ஐயுற வேண்டிய ஒன்ருகும். ஆணுல் இறைவன் பாவிகளுக்கும் இரங்கும் பரமதயாளன். அவரவர் தேவையை அறிந்து அவற்றை அளிப்பவன் அவன்.
பாவிகளிடத்து இரக்கம் கொள்ளும் இறைவன் அவரது உடலை நெக்குருகச் செய்து, மெய்யறிவாம் ஒளியை நிறையக் கொடுக்கிருன், அத்துடன் மட்டுமா ? ஆனந்தம் என்னும் தேனைச் சொரிகிறன், நாம் பொதுவாக உண்ணும் காட்டுத் தேன் இனிமை உடைத்தாயினும் சிறிதளவு உண்டவுடன் திகட்டுந்தன்மை உடையது, ஆனல் இறைவன் கொடுக்கும் ஆனந்தத்தேன் தெவிட்டுந்தன்மை உடையது அல்ல. எவ் வளவு வேண்டுமானுலும் பருகலாம். மீண்டும் மீண்டும் இன் பத்தை விளைவிக்க வல்லது.

Page 20
== 34 سے
இவ்வண்ணம் குற்றம் செய்தாரையும் தடுத்தாட் கொண்டு
இன்பமூட்டும் இறைவனைப் போற்றுவதும் அவன் கழல்களைச்
சரண் அடைவதும் நமது கடமையாகும். மேலும் இறைவன் அருள் எப்பொழுது, எங்கு கிடைக்கும் என ஏங்கிவாழும் தன்மையை நாம் பெற்றிருத்தலும் நன்றே.
இக்கருத்துக்களை உள்ளடக்கிப் பக்திபரவசத்துடன் மணிவாசகப்பெருமான் பாடியுள்ள செய்யுள் பின்வருமாறு:
பால்நினைந் தூட்டும் தாயினுஞ் சாலப்
பரிந்து நீபாவியே னுடைய ஊனினை யுருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்தமாய தேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த
செல்வமே சிவபெருமானே யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவ தினிய்ே.
பருகப்பருகத் தெவிட்டாத இறைவனின் ஆனந்தத்தேன் போன்று படிக்கப்படிக்க இன்பமூட்டும் இனிய பாடல்களைக் கொண்டது திருவாசகம், இதனுல் அன்ருே
"....... நற்கருப்பஞ் சாற்றினிலே
தேன் கலந்து பால்கலந்து
செழுங்கனித் தீஞ்சுவை கலந்து . '
என இராமலிங்க சுவாமிகள் திருவாசக இயல்பை விதந்து பாடியுள்ளார்.
அச்சுப்பதிப்பு: விபுலாநந்த அச்சகம், 248/5, காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம்,
 

隸*堂
*毅 * V * 霹 ** அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு." 喙 − - திருக்குறள் 蠶 發... 喙 喙、 哆 婷
9 翡 戟 திருவருள்
என்றும் நன்மை பாலிக்க
நல்லாசிகள் வழங்குபவர்கள் .
ܡܝ
༣༽
క్లీ
O 霹 i. Davees Enterprise 畫 No. 83, Mihindu Mawatha 蠶 COLOMEBO- 12 隸
ଖୁଁ୫
哥*****事

Page 21
-----------------------------
அன்பளிப்பு: ဓမ္ဘိဒ္ဓိဇံ
A
v நியூ சி ற் றி றே டர் ஸ் 4, ஆதமலி பில்டிங் - கொழும் பு - 13
S-KS-KI>Kred>K>Koord- >3)--a-ka) 3
Мау ' Divine Grace.' Bless us all.
Каиtle Stokes
218, Bankshall Street (శ్లో 35712 COLOMB0-11.
“རྩིས “རྩི་༦༠རྩིས་རྩིས “སྙིས “རྩིས “རྩིས “རྩི༠༠ལྕི༠༠སྙི༠༠ལྷོ་མ་ “རྩོམ་རྩིས་རྩིས་རྩིས་རྩི “སྙི༠༠་རྩིས༠རྩི༠༠ལྕི་ *争争、
ခန္တိဇံ
篡
 
 

விற்பனையாளர்களே ! பாவனையாளர்களே !!
உங்களுக்குத் தேவையான பலசரக்கு சாய்ப்புச் சாமான்கள் தரமானதாகவும் சகாயவிலைகளிலும் பெற்றுக்கொள்ள
தலைநகரில் தரமான ஸ்தாபனம்
K. P. LEORIS APPUHAMY & SONS
No. 153, 5th Cross Street,
COLOMBO - 1 1. Phone : 2267及
eSLqGSqLeGJSTLGJJLGL00SeCeLTLeLeeLLLTLALLSSLJLqTSLSLeLYJLqL0eJLqLqLqLeLLGLeLqeqLeLeYYLLSLSLL0e ekeqeqesYJTeLeLL
Aarmstrong Transporters :
(Sales)
விற்பனையாளர்களே !
எம்மிட்ம் உங்களுக்குத் தேவையான உள்ளூர்த் தயாரிப்புகளும், வெளியூர்த் தயாரிப்புகளும் இலங்கையில் எந்த இடத்திலும் மலிவான விலையில் பெற்றுக்கொள்ளலாம்:
ஆம்ஸ்ரோங் விற்பனையாளர் 157, 5-ம் குறுக்குத் தெரு,
கொழும்பு-11. Cable : " GEEOEES' Phone 21785
寨
采※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※
米
※

Page 22
New Kalyani Stores :
189, 5th Cross Street, COLOMBO, 1 1,
எங்களிடம் உள்ளூர் விளைபொருட்கள் குறைந்த விலையில் விற்பனைக்கு உண்டு
நியூ கல்யாணி ஸ்ரோர்ஸ்
189, 5-ம் குறுக்குத் தெரு, கொழும்பு - 11.
N
Telephone: 20331
LLLLLJLSLSLSLLLqGqLYYLLqTALLJLLSLGJLLL
KENNEDIANN’S
IMPORTERS & GENERAL MERCHANTS
※ 絮 ※
※ ※ ※ ※ ※ 米 ※ 豪 ※ 怒 ※ ※ ※ ※
※ ※
N
*அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது." -
47, Fifth Cross Street, COLOMBO. I 1.
※
※
※
※
※
※
※ ※
※
※ ※
※
※
米
※
※
※
Telephone : 21396
※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※
 

*%ఖల్ల్కు
※※
※
※※
※
※
※
※
※
※
※
※
※※
※
※
※
※
※
※
※
※
※※
※
※※
※
※
汤
நஇது கடமைகளே க்
கண்ணியமாகவும்
உண்மையாகவும்
நிறைவேற்றித்
திருவருள் நலத்தினேப்
பெறுவோமாக,
நியூ கிருபா ஸ்ரோர்ஸ் 23, கபோஸ் லேன்
கொழும்பு-11. Telephone: 27900

Page 23
'கற்றதனு லாய பயனென் கொல் வரலறிவன்
நந்றள் தொழாஅ ரெனின்.' - திருக்குறள்
Palletiείας
6οιοίρες
82 = 1 / 101, Sri Ramanathan Mawatha COLOMBO-13,
ଝୁମ୍ପୁର୍ଣ୍ଣ ୫୫୫୫୫
*
激。
 
 
 

49, 5th Cross Stآنهوییهای واب
COLOMBO-I. E.
N
Joins in the Prayer For Well-being of all.
eeLS SLALLSeLJSLLL eGSJLsTeLG eJLeAeYYSTASLYYSqTALSLGYSALALeYLLLLLLLJLLLLLLLLAL0YLeAeSYeTTkeeJeueS
நல்ல சிந்தனை
நல்ல பேச்சு
நல்ல செயல்
எம் எல்லோ ரினதும்
குறிக்கோள்களாம்
米
PREMAWARDANA & CD 3
பிரேமவர்த்தன அன் கோ. ፖWኣç
No. 6, St. John's Road, COLOMBO-1 .
Telephone; 31354
※

Page 24
୫୫୫ର୍ଣ୍ଣ
விவசாயி ஆளே !
ក្លា កំសាត្រាr -
விவசாயப் பொருட்களை
நிதான விலையில்
கமிஷன் அடிப்படையில்
விற்பனை செய்ய 婷 - * தலைநகரில் சிறந்த ஸ்தாபனம்
鲁 O இ 婷 பெட்டா-டிரேட் கம்பணி :
90, 4-ம் குறுக்குத் தெரு, கொழும்பு-11.
Şთუთითელი ტურ இல்Nை2 SA AASA A ASAYYATSTTSASASLMS SSY YS SMSAYY AAASSAeSeSeSTTSe eLeLeSSLzTSkzSSzkSASSSq SeSezSzSSqLz 2.SeamsSeX s====js eeLLTLqeGJLequLqe YLTLSYGSLLAeSJeLeLSSSeSL0JeLSLMTquSeS0eGYJATASe eJJLTeSLS
எங்கள் வழமையான வியாபாரிகளுக்கு முக்கிய அறிவிப்பு,
எங்களிடம் நியாயமான விலையில் பாடசாலைப் பொருட்கள், லக்ஷபான பற்றரி
மற்றும் பல மணிப் பொருட்களை சகாயமான விலைக்குப் பெற்றுக்கொள்ளலாம்.
ནི། 4 - 6), MINIH)AΗ H6NI
No. 85, 5th Cross Street,
COLOMBO 1 , 蠶 Phone 22 163 N .ܘܬܼܵܐ
ଏହୁଁ 發*發※發*

பரித்திரணுய ஸாதூனும் 恩 விகாஸாயச துஷ்கிருதாம் தர்ம ஸ்தாபஞர்த்தாய சம்பவாமி யுகேயுகே -
|-
நல்லவர்களேக் காப்பதற்கும், துஷ்ட்ர்களே அழித்துத் தருமத்தை நிலைபெறச் செய்யவும் நான் காலத்துக்குக் காலம் என்னைப் படைத்துக் கொள்கிறேன்."
312 நீர்கொழும்பு வீதி,
பேலியாகொை

Page 25
'dور [[سے سر
ܘܿܢ ܦ .
氢匾曼委
* அருளென்னும் அன்பீன்
செல்வச் செவிலியால் :
அன்பினுல் பெறப்பட்ட அ குழந்தை பொருள் என்று செல்வத்தாயால் வளர்வதா,
பூாநீநிவாசன்ஸ்
- ஏற்றுமதி 102, குமார வீதி,
தபாற்Mெட்டி என் 7ே3
●a-Qcmásá : 2Ig44
* திருவருள் யாழ்ப்பா எண் 9/18, பெரிய கடை
Printed at Vipulananda Press,
Published by Mr. R. Vaithinani
Colombo. 13, for and behalf Chief Editor a Mr. W.

函曼曼霍哥盔爵墨曼
குழவி பொருளென்னும் உண்டு ••
- திருக்குறள்
நள் என்று கூறப்படும்,
கூறப்படும் செல்வமுள்ள கும்.
கோ., லிமிறெற்.
யாளர்கள் -
-
கொழும்பு - 11
தொலைபேசி: 24843
g 269
ணத்தில் கிடைக்குமிடம் : த் தெரு, யாழ்ப்பாணம்.
248/5, K. K. S. Road, Jaffna & hy of No. 5, Brassfounder’s Street, f Thiruvarul Association. Sathasivam M. A.