கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கிராமத்து வாசம்

Page 1
戀 溶 %%灣 -%
·
----
 

() 密
·
參 多
·
彩
---- 參· 缪
S
২
S
S
/ 淞

Page 2


Page 3

கிராவூத்து வாசல்
குழந்தைப் பாடல்கள்)
மயிலன் சிண்னத்தம்பி நினைவு வெளியீடு "இராசமணி இல்லம்’, கெருடாவில் தெற்கு, தொண்டைமனாறு. 2008

Page 4
நால் - கிராமத்து வாசம் (குழந்தைப் பாடல்கள்)
தொகுப்பாசிரியர் :- சு. குணேஸ்வரன்
பதிப்பு :- 13-12-2008
மீள் அச்சு :- 25.12.2008.
வெளியீட்டாளர் - திரு திருமதி சாந்தரூபன் ஞானகலை
அச்சிட்டோர் - மதுரன் கிராடுபிக்ஸ், அல்வாய்.
s முன் அட்டை - இளம் ஒவியர் வாசனின் கலையாக்க
வழிகாட்டலில் மூன்றாவது கண் உள்ளுர் அறிவு திறன் செயற்பாட்டுக் குழுவினரால் உருவாக்கப்ட்ட 'வெருட்டிகளில் இருந்து ‘விரும்பிகள்
நன்றி :- WWW. Thirdeye.com

உழைப்பால் உயர்ந்த எங்கள் ஐயாவூே!
உன்னஹளும் உன்னோடு கூட உழைத்தாள் புட்டதித்து, கறிசமைத்து மூடற் பெட்டிக்குள் வைத்து கேணித்தோட்ட ஆரம்பால் நடந்து உந்தாள் அப்போதும். நீஉன் தோட்டத்துள் நின்றாய்!
திரைகடல் ஒடித் தீர்தியம் தேடிய மைந்தரால் நீநன்றாய் இருந்தாய் பாதிவழியில் பறிகொடுத்த பொருளைப்போலி. நாம் உன்னைப் பறிகொடுத்தோமே!
நீளும் உன் நினைவுடன். இந்நூல் உனக்கு சமர்ப்பணம்,

Page 5
உள்ளே
i. தொகுப்பாசிரியரின் எண்ணத்திலிருந்து. i. வெளியீட்டாளரின் எண்ணத்திலிருந்து.
SHồ omrGśladňr 69 Gorų ø-fröúlu- GUm
eitblomr ceilium UmrignJb தாத்தா பாட்டி அழுகிறாள் கோழிக்குஞ்சு பட்டணம் போன பூனை பச்சைக்கிளி பட்டாம் பூச்சி ugTG്
பட்டம்
. தவளைக் கூத்து
©ງgououນmfied Gນີ້ງ . புக்கு புக்கு \ . ஏண்டி குட்டி . சிங்கிலி நோனா
கடலை வாங்குவோம்
. எலியும் முயலும் செய்த தோட்டம்
கத்தரி வெருளி
. தில்லை நடனம் . ஒன்று பட்டால்
- க. வேந்தனார் - சாரனா கய்யூம் - ச. வே பஞ்சாட்சரம் - குறமகள் - கனக செந்திநாதன் - ந. கிருஷ்ணராசா - க. சச்சிதானந்தன் - ஆடலிறை - மனோ பற்குணம் - க. வீரகத்தி
- வேலு - திமிலைத்துமிலன்
சேந்தன்
கசச்சிதானந்தன் - ஈழத்து நாட்டார் பாடல் - ஈழத்து நாட்டார் பாடல் - ஆடலிறை - கசச்சிதானந்தன் - சோமசுந்தரப் புலவர் - மு. பொன்னம்பலம் - மு. பொன்னம்பலம்

LTTuuBOOTTTTT mOLOLOL OOMm
தொகுப்பாசிரியர் எனினத்திலிருந்து
கிராமத்து வாசம் எனும் மகுடத்தில் அமைந்துள்ள குழந்தைப் பாடல்கள் அமரர் ம. சின்னத்தம்பி அவர்களின் நினைவு வெளியீடாக அவரது குடும்பத்தினரின் வேண்டுகோளுக்கு ஏற்ப தொகுக்கப்பட்டு நூலாக வெளிவருகின்றது.
ஈழத்தில் முதல் முதலாக 1935 இல் வடமாநில கல்வி அதிகாரியாக இருந்த க. அருள்நந்தி அவர்களின் பெருமுயற்சியில் குழந்தைப்பாடல்கள் தொகுக்கப்பட்டு “பிள்ளைப்பாட்டு’ என்ற தொகுதியாக வெளிவந்தது. இன்றுவரையும் குழந்தை இலக்கியத்தின்பால் ஆர்வமும் ஈடுபாடும் கொண்டவர்களால் இவ்வாறான பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.
மிகக் குறுகிய கால இடைவெளியில் இம் முயற்சி மேற் கொள்ளப் பட்டுள்ளதால் குறிப்பிட்ட சில பாடல்களே சேர்க்கப்பட்டுள்ளன. தொகுப்பின்போது பாடல்களின் ஒசைநயமும், எளிமையும், சிறுவர்களுக்கான மகிழ்ச்சியுமே கருத்திற் கொள்ளப்பட்டன. இது ஒரு சிறு முயற்சிதான். இதுபோன்ற பயனுள்ள பணிகள் தொடரவேண்டும்.
பாடல்களை எழுதியிருந்த கவிஞர்களுக்கும் அவற்றை வெளியிட்ட வெளியீட்டாளர்களுக்கும் முன் அட்டைக்கான படத்தினைப் பெற உதவிய 'மூன்றாவது கண் இணைய இதழின் ஆசிரியர் அவர்களுக்கும் அழகாக அச்சிட்ட மதுரன் கிறாபிக்ஸ் நிறுவனத்தினருக்கும் எம் நன்றி.
“கிராமத்து வாசம்” பிள்ளைகளின் மகிழ்ச்சிக்கும் அவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் பயன்படும் என்று நம்புகிறேன்.
'தினைப்புனம்' சு. குணேஸ்வரன் மயிலிட்டி, Lô657607(6586) :- mskwaranca)yahoo.com அல்வாய்.
10.12.2008

Page 6
கிராயத்து வாசம் - குழந்தைப் பாடல்கள்
வெளியீட்டாளர் எண்னத்திலிருந்து
மெது குடும்ப விளக்கு ஜயா ம. சின்னத்தம்பி அவர்களின் மறைவின் நினைவாக இந்நூலை வெளியிடுகின்றோம். அன்னாரின் நினைவினை முன்னிறுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் இத்தொகுப்பு பாடசாலைப் பிள்ளைகளுக்குப் பயன்படும் என்று நினைக்கின்றோம்.
நாம் கேட்டவுடன் குறுகிய சில நாட்களில் இத்தொகுப்பு வேலையினைப் பெறுப்பேற்றுச் செய்து தந்த ஆசிரியர் திரு சு. குணேஸ்வரன் (யா/அம்பன் அ. மி. த. க. பாடசாலை) அவர்களுக்கும் கவிதைகளை எழுதியிருந்த கவிஞர்களுக்கும் எம் உள்ளம் நிறைந்த நன்றியைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
மிக அழகாக அச்சிட்ட மதுரன் கிறாபிக்ஸ் சு. மகேஸ்வரன்
அவர்களுக்கும் இவ்வாறான தொகுப்பினைச் செய்ய வேண்டும் என ஊக்கப்படுத்திய திரு வே. பரமானந்தம் அவர்களுக்கும் இம்முயற்சியில் பங்கெடுத்த அனைவருக்கும் வெளியீட்டாளர் என்ற வகையில் எம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
பாடசாலைப் பிள்ளைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் இதன் அருமை பெருமைகளை உணர்ந்து கொள்வார்கள் என்று எண்ணுகிறோம்.
‘இராசமணி இல்லம்’, திரு திருமதி சாந்தரூபன் ஞானகலை கெருடாவில் தெற்கு,
தொண்டைமனாறு.
10.12.2008
ii

UniefstřGUTgisthůh sunsern Rhenusfluňu
அம்மாவின் அன்பு
காலைத் தாக்கிக் கண்ணில் ஒற்றிக் கட்டிக் கொஞ்சும் அம்மா பாலைக் காய்ச்சிச் சீனி போட்டுப் பருகத் தந்த அம்மா
புழுதி துடைத்து நீரும் ஆட்டிப் பூவுஞ் சூட்டும் அம்மா அழுது விழுந்த போதும் என்னை அனைத்துத் தாங்கும் அம்மா
அள்ளிப் பொருளைக் கொட்டிச் சிந்தி அழிவு செய்த போதும் பிள்ளைக் குணத்தில் செய்தாண் எண்று பொறுத்துக் கொள்ளும் அம்மா
பள்ளிக் கூடம் விட்ட நேரம் பாதி வழிக்கு வந்து துள்ளிக் குதிக்கும் எண்னைத் தூக்கி தோளிற் போரும் அம்மா
பாப்பா மலர்ப் பாட்டை நானும் பாடி ஆகும் போது வாப்பா இங்கே வாடா என்று வாரித் தாக்கும் அம்மா.

Page 7
கிராமத்து வாசம் - குழந்தைப் பாடல்கள்
aFrůůLam
சிண்னக் கண்னே சாப்பிடவா
சிங்காரக் கண்னே சாப்பிடவா
வண்ணக் கிளியே சாப்பிடவா
வான வில்லே சாப்பிடவா
கிண்ணம் நிறையச் சோறுண்டு கிள்ளை மொழியே சாப்பிடவா
எண்ணம் நிறைய ஆசையுண்டு இனிய அமுதைச் சாப்பிடவா
பவளம் போன்ற வாயாலே பேசிப் பேசிச் சாப்பிடவா
தவழும் உண்றண் கால்களினால் தத்தி வந்து சாப்பிடவா.
 

tmdRüsửsưTśāśāhữì tầsusưTsự bìshisĩìưẩh
அம்மா அப்பா பாவம்
é9ůUMT é9ồLom LurrebLJřGL அன்பாய் அனைத்தும் தருகிறார் அப்பா அம்மா பாவம் முதுமை அதிலும் அண்பாய்ப் பேணுவோம்
அப்பா அம்மா சுமந்து உலைந்தே அல்லல், நோய்கள் தீர்க்கிறார் அப்பா அம்மா பாவம் முதுமை அதிலும் அன்பாய்ப் பேணுவோம்
அப்பா அம்மா படிப்புத் தந்தும் அடையத் தொழிலும் வைக்கிறார் அப்பா அம்மா பாவம் முதுமை அதிலும் அண்பாய்ப் பேணுவோம்
அப்பா அம்மா எம்மைக் காக்க அரிய உயிரும் விட அஞ்சார் அப்பா அம்மா பாவம் முதுமை அதிலும் அண்பாய்ப் பேணுவோம்
ராகம் :- நாட்டைக்குறிஞ்சி
தாளம் :- ஆதி

Page 8
តំខ្សឆ្នាំg sue — ឆ្នាយត្រៃ ឬរបាំឆៃយ៍
@ தாததா தாத்தா என்தன் ஆசைத் தாத்தா தங்கமான நேசத் தாத்தா
பார்த்தாற் பொக்கை வாய்க்குள்ளேதானி
பாக்கு வெற்றிலை குதப்பும் தாத்தா
பல்லுக் கழன்ற பொக்கை வாயாற்
பலமுத்தங்கள் கொருக்குந்தாத்தா
பொல்லுப் பிடித்துக் குருகு டென்னப்
போயிலை வாங்கப் போகும் தாத்தா
கட்டி அனைத்து மூத்த மிட்டுக்
கதைகள் பலவுஞ் சொல்லுந் தாத்தா விட்டி டாமல் எங்கள் பழைய
வீர மெல்லாஞ் சொல்லுந் தாத்தா
முறுக்குச் சீடை திண்ன மாட்டார்
முற்றத்திலே விடவும் மாட்டார்
தறுகுறும்பு செய்த போதுந்
தழயால் எம்மை அடிக்க மாட்டார்
ஆசைத் தாத்தா எங்கள் தாத்தா
அருமையான நேசத் தாத்தா
பாச மெல்லாம் எங்கள் மீதே
பதித்து எம்மை வளர்க்குந்தாத்தா.
4.
 

Un eftirft Gristihů fiHUNGUMTSa GNGAIGMfuẩuh
பாய்டி அழுகின்றாள்
சிறிய பூச்சி பிழக்கவே பெரிய பல்லி ஊர்ந்தது
பெரிய பல்லி பிறக்கவே கரிய பூனை பதுங்கிற்று
கரிய பூனை பிடிக்கவே வெள்ளை நாயும் பாய்ந்தது
வெள்ளை நாயைத் துரத்தவே மெள்ளப் பாட்டி எறிந்தனள்
பாட்டி எறிந்த தடியினால் பானை சட்டி உடைந்ததே
காட்டிக் காட்டி அழுகிறாள் கவலை தீர்ப்பார் இல்லையே.

Page 9
கிராமத்து வாசம் - குழந்தைப் பாடல்கள்
கோழிக்குஞ்சு
கத்திக் கத்தி எங்கள் கோழி பத்து முட்டை இட்டது.
பொத்திப் பொத்தி பாதுகாத்து எட்டுக் குஞ்சு பொரித்தது.
பஞ்சுப்பந்து போலக் குஞ்சு கொஞ்ச ஆசை வந்தது.
பெட்டிக்குள்ளே கையை வைத்தேன் எட்டிக் கொத்தி விட்டது.
எட்ட நின்று பார்த்தால் போதும் என்ற புத்தி வந்தது.
 

Un efstňrtingissöhön fisnSUITE GASAIGífuẩuh
பட்டணம் போன பூனை
பட்டணம் போன பூனையாரே
பார்த்து வந்த காட்சி யென்ன
ஏழுநிலை மாடிகளில்
எதற்குமே கூரையில்லை
வாழுமெலி ஒன்றில்லை
வயிறொட்டி வந்தே னையா.
அடுக்களையிற் பாலில்லை
அங்காங்கே போத்திலிலே
அடைத்திருப்பார் நக்கவுமோர்
அரைச் சொட்டுக் கிடைக்கவில்லை.
சட்டியிலே மீனில்லை
சாத்தி வைப்பார் குளிரூட்டும்
பெட்டியிலே பிறகெண்ன
பிடிக்கவில்லை பட்டனந்தான்.
அரனாகக் கோட்டைகளாம்
அதற்குள்ளே விசிறிகளாம்
பரனொன்று கிடைக்கவில்லை
பாழ்பட்ட பட்டனத்தில்
பையனிகளும் துரத்துகிறார்
பாழ்பட்ட பட்டனத்தில்
பையவே ஒழவந்தேனி
பருத்திருந்த பரனுக்கே

Page 10
கிராமத்து வாசம் - குழந்தைப் பாடல்கள்
பச்சைக் கிளி
பச்சைக் கிளிதான் பறந்து வந்து"
பாட்டுப் பாருது இச்சைக் கினிய கதைகள் கூறி
இதயம் கவருது அச்சு மின்றித் தோளில் அமர்ந்து
மழலை கூறுது மிச்ச மின்றிக் கோவைப்பழங்கள்
திண்று தீர்க்குது తి உச்சிக் கொப்பில் பறந்தே ஏறித்
தாங்கிக் கிடக்கிது.
 
 

Um&Festiftsungguhů fisunsunrisa Ghautafuluh
பட்டாம் பூச்சி
பட்டாம் பூச்சிபற பற பாடிப் பாடிபற பற சிட்டாய் நீபற பற சிறகடித்துப் பறபற
பூமேலே பறபற பூரிப்போடு பறபற காலைத் தேடிப் பறபற கல கலப்பாய்ப் பற பற
நிறம் கற்க பறபற
நீலம் மஞ்சள் சிகப்பு ஊதா
கறுப்பு வெள்ளை நாவலென காட்டித் தரப் பறபற
ஒன்றாய்ச் சேர்ந்து பறபற ஒற்றுமையாய்ப் பறு பற நன்றாய்ப் பார்க்கப் L) Us) நாம் பழக்கப் பறபற

Page 11
கிராமத்து வாசம் - குழந்தைப் பாடல்கள்
பலூன்
வண்ண வண்ணப் பலுாண்கள் வழவு கொண்ட பலுாண்கள் கண்ணை அள்ளும் பலுளண்கள் கடைகள் எங்கும் பாரீர்
சிவப்பு நீலம் மஞ்சள் சிறுவர்க்கான பச்சை உவப்பு ஒங்கும் ஊதா ஊத நிறம் ஊதும் - வண்ண
பாம்பு போலே சிலது பறவை போலே சிலது தேம்பி அழும் குழந்தை திகைப் படையும் பலுாண்கள் - வண்ண
பலுாண்காரணி வருவான் பாட்டி வாங்கித் தருவாள் பள்ளித் தோழரோடு நான் பறக்க விட்டுப் பாருவேன் - வண்ண
வாயில் வைத்து ஊதி வான வெளியில் விட்டால் பாயும் அங்கு மிங்கும் பந்து போலே அழப்பேண் - வண்ண
அளவு மிஞ்சி ஊதினேன் அது வெழுத்துப் போச்சுதே அழகில் மிக்க ஆசை அடடா அதுவே தீமை, - வண்ண
O
 

ព.ិទបាំងភ្នំភ្លhប៉ា បាទ ទេវាវិស្ណុ
பட்டம்
சின்னச் சிண்ணப் பட்டமாம்
சிங்காரப் பட்டமாம்
அண்ணன் செய்த பட்டமாம்
அருமையான பட்டமாம்
வட்டமான பட்டமாம்
வாலிருக்கும் பட்டமாம் கிட்டவராப் பட்டமாம்
穆 像 இ e காற்றிலாரும் பட்டமாம்
பச்சை வண்ணப் பட்டமாம்
பறக்கும் நல்ல பட்டமாம்
அச்சமின்றிக் காற்றிலே
ஆகும் நல்ல பட்டமாம்
உயரப் போகும் பட்டமாம்
ஊசலாரும் பட்டமாம்
துயரமின்றி ஆடுமாம்
துள்ளி வானில் ஒருமாம்.
1.

Page 12
கிராமத்து வாசம் - குழந்தைப் பாடல்கள்
தவளைக் கூத்து
டும் டும் மழை மழை டும் கும் கும் கும் தவளைகள் கும் கும்
சல்லரி நான்கு மத்தள மேழு தவிலும் சேர்ந்தே கும் கும் மெல்லென வீங்கும் புல்லாங்குழலும்
வீணையும் சேர்ந்தே கும் கும் கும்
குப்பை மிதந்திரும் பள்ளத்திலேயொரு கூத்து நடக்குது தெய்தெய்தெய் செப்பு நெருஞ்சியும் வட்டத்தகரையும் சீலை விரிக்குது மெய் மெய் மெய்
பச்சைத் தேரை பிடில் வாசிக்க
பனைமரத் தேரை குழலூத மொட்டைத் தவளை நாட்டிய மாட
மோசங்கு கேட்குது ஞொய் ஞொய் ஞொய்
கொட்டும் மழையும் தாளம் போடக் குளிரும் காற்றும் கவிபாட பொட்டல் தரையில் தவளைகள் சேர்ந்தே போருது கூத்து தெய்தெய்
12
 
 

யசின்னத்தம்பி நினைவு வெளியீடு
ஆமையாரின் வீடு
வீடு நல்ல வீடு
மெல்ல அசையும் வீடு
ஒரு போட்ட வீடு
உடையா தந்த வீடு
நாலு காலில் வீடு
நதியில் நீந்தும் வீடு
வாலுந் தலையும் நாலு
காலும் உள்ள வீடு
கதவு யன்னல் இல்லை
காற்று ஒளியும் இல்லை
உறவு பேசி யாரும்
உள்ளே வருவதில்லை
பெருமை பேசி உள்ளே
ஒருவர் வாழுகின்றார்
அருமையான வீடு
ஆமையாரின் வீடு
13

Page 13
கிராமத்து வாசம் - குழந்தைப் பாடல்கள்
புகைவண்டி
புக்குப் புக்குப் புகையைக் கக்கி முக்கித் தக்கி மூசிச் செல்வன் கூ கூ கூ
நீரைக் குழப்பண் நெருப்பைத் திண்பன் சேரக் கரியைத் தேடித்தின்பண் கூ கூ கூ
மனிதர் விழுங்கி வயிறு கொண்டு மனிதர் கக்கும் வலிமை யாளன் கூ கூ கூ
இட்ட நேர்மை
இரும்புப் பாதை விட்டிறங்கா மேண்மையாளன் கூ கூ கூ ཁོ་ཚོས་ཁོང་
கூவிக் கூவிக்
கூப்பிட் டெம்மைக்
காவிச் செல்லும் கருனை யாளன் கூ கூ கூ
14
 

மசின்னத்தம்பி நினைவு வெளியீடு
கட்டு வேட்டி பாவைப் பிள்ளை கட்டு வெடிகள் காவிக் கொண்டு கொழும்பிலிருந்து
வந்து தீபா வளிக்குச் சேர்ப்பன் எந்தன் நண்பன் என்றும் மறவேண்
15

Page 14
கிராமத்து வாசம் - குழந்தைப் பாடல்கள்
ఉ
23. S. స్త్ర
ஏண்டி குட்டி
ஏண்டி குட்டி எண்ணடி குட்டி எண்ணடி செய்தாய் ? அம்மியடியில் கும்மியழுத்தேனி சும்மாவா இருந்தேன்?
ஏண்டி குட்டி எண்னழ குட்டி என்னடி செய்தாய் ? ஆட்டுக் குஞ்சுக்கு ஆறுதல் பண்ணினேன் சும்மாவா இருந்தேன்?
ஏண்ைடி குட்டி எண்னடி குட்டி எண்னடி செய்தாய் ?
கோழி முட்டையிலே மயிர் பிடுங்கினேண் சும்மாவா இருந்தேன்?
ஏண்டி குட்டி எண்ணடி குட்டி எண்னடி செய்தாய் ? பாம்புக் குட்டிக்குப் பல்விளக்கினேன் சும்மாவா இருந்தேன் ?
 
 

Defstsengischůh sunserta Ghansfluůuh
சிங்கிலி நோனா
சிங்கிலி நோனா சிங்கிலி நோனா சீப்புக் கொண்டைக் காரி பார்த்த பேர்கள் ஆசைப்படும் பந்துக் கொண்டைக் காரி.
காடை கெளதாரி மைனா வாங்கலையோ, ஆயாளு ! கட்டிப் போட்டுத்தீனைப்போட்டால் முட்டை போடும் ஆயாளு
சிறுக்கிதைக்கிற சிண்ணஊசி வாங்கலையோ, ஆயாளு பிச்சுத் தைத்திட்டு மேலே போட்டால் நல்லாயிருக்கும் ஆயாளு
17

Page 15
கிராமத்து வாசம் - குழந்தைப் பாடல்கள்
கடலை வாங்குவோம்
பாட்டி ஒருத்தி வீதி ஒரம்
கடலை வறுத்து விற்கிறாள்
ஒட்டமாக வந்திருங்கள்
ஒன்றாய்க் கடலை வாங்குவோம்
ஒட்டை வைத்து வறுத்துக் கடலை
உடனே எமக்குத் தருகிறாள்
ஆட்டை இழக்காச் சுவை மிகுந்த
கடலை வாங்கித் திண்னலாம்.
மணலைப் போட்டுக் கச்சாண் கடலை
மனக்க மனக்க வறுக்கிறாள்
சுணக்க மின்றிச் சோளம் போட்டு
வெடிக்க வறுத்துத் தருகிறாள்
மஞ்சள் துாளும் உப்பும் கரைத்துக்
கொண்டற் கடலை நனைத்தவள்
மஞ்சளாக நல்ல கடலை
பொரித்தே எமக்குத் தருகிறாள்
கோயிலுக்கு வந்திடாத
தம்பி தங்கை திண்றிடக்
கொண்டல் கச்சாண் சோளம் எல்லாம்
வாங்கிக் கொண்டு செல்லுவோம்.
18
 

LSTlOTTTT DOOLOLOL OOmt
எலியும் முயலும் செய்த தோய்டம்
எலியும் முயலும் ஒன்றாக
இசைந்தன தோட்டம் செய்யவே.
எலியோ உழுதது தரையை முயலோ செய்தது கரையை
பலாவிண் கொட்டை தேடியே
போட்டது முயலும் பாடியே
புடலங் கொட்டை தாவினார் எலியும் புளுகில் தாவினார்
Α' இரவும் பகலும் இறைத்தன ہے (بم s - - メ
வரம்பை உயர்த்தி நிறைத்தன
மாறி மாறிக் காவலாம்
● மலரும் என்று ஆவலாம்
பந்தல் போட்டு விட்டன (7 N 《《། حصص حصص ހަ ހިށިސ6
பலாவிற் கூரு கட்டின
புடலில் நீண்டு தாங்கியது புதிய பந்தல்தாங்கியது
19

Page 16
கிராயத்து வாசம் - குழந்தைப் பாடல்கள்
பலாவில் உருண்டை முள்ளுப் போல் பருத்திருத்ததை மெள்ளப் போய்
முயலும் வந்து கீறினார் முள்ளம் பண்றி சீறினார்
தாங்கின நீளக் காயென்று எலியும் புளுகில் ஆயவே
தாங்கின பாம்பு ஊரவே துடித்துப் பறந்தார் தூரவே
எலியும் முயலுந் தோட்டம் விட்டே எடுத்தார் ஓட்டம்,
2O
 
 

LSLTuluOTTTmTL mOOLOBOD LOm
கத்தரி லிவருளி
கத்தரித் தோட்டத்து மத்தியில் நின்று سیہسلسلہ۔-- c^2ణీ
காவல் புரிகின்ற சேவகா - நன்று
காவல் புரிகின்ற சேவகா மெத்தக் கவனமாய்க் கூலியும் வாங்காமல்
வேலை புரிபவன் வேறுயார் - உண்னைப் போல்
வேலை புரிபவனி வேறுயார்?
含
கண்ணு மிமையாமல் நித்திரை கொள்ளாமல்
காவல் புரிகின்ற சேவகா - என்றும் காவல் புரிகினிற சேவகா எண்ணி உண்னைப் போல் இரவு பகலாக
ஏவல் புரியவண் வேறுயார்? - என்றும் ஏவல் புரியவண் வேறுயார்?
3 வட்டமான பெரும் பூசினிக் காய் போல்
மஞ்சள் நிற உறுமாலைப்பார் - தலையில் மஞ்சள் நிற உறுமாலைப்பார்
21

Page 17
கிறாமத்து வாசம் கூ குழந்தைப் பாடல்கள்
கட்டியிறுக்கிய சட்டையைப் பாரங்கே
கைகளில் அம்பொரு வில்லைப்பார் - இரு கைகளில் அம்பொடு வில்லைப்பார்
4.
தொட்டு முறுக்காத மீசையைப்பார் - கறைச்
சோகி போலே பெரும் பல்லைப்பார் - கறைச் சோகி போலே பெரும் பல்லைப்பார்
கட்டிய கச்சையில் விட்டுச் செருகிய
கட்டை உடைவாளிண் தேசுபார் - ஆகா கட்டை உடைவாளிண் தேசுபார்
5 பூட்டிய வில்லுங் குறிவைத்த பானமும்
பொல்லாத பார்வையும் கண்டதோ? - உன்றன் பொல்லாத பார்வையும் கண்டதோ? வாட்ட மில்லாப் பயிர் மேய வந்த பசு
வாலைக் கிளப்பிக் கொண்டோடுதே - வெறு வாலைக் கிளப்பிக் கொண்டோருதே
G கள்ளக் குணமுள்ள காக்கை உண்னைக் கண்டு
கத்திக்கத்திக் கரைந்தோருமே - கூடிக் கத்திக் கத்திக் கரைந்தோடுமே நள்ளிரவில் வருகள் வனுனைக் கண்டு
நடு நடுங்கி மனம் வாருமே - ஏங்கி நடு நடுங்கி மனம் வாருமே
22

Unfehsergisühũn râsunserta GenGifuuh
7 ஏழைக் கமக்காரண் வேலைக் குதவி செய்
ஏவற்காரன் நீயே யெண்ணினும் - நல்ல ஏவற்காரன் நீயே யெண்ணினும் ஆளைப் போலப் போலி வேடக்காரன் நீயே
ஆவதறிந்தண் ணுண்மையே - போலி ஆவதறிந்தன் னுண்மையே
8 தூரத்திலே யுனைக் கண்டவுட னஞ்சித்
துண்ைனென்றிடித்ததென் நெஞ்சகம் - மிகத் துண்ைனெண் றிழுத்த தெண் நெஞ்சகம் சேரச் சேரப் போலி வேடக்காரனெண்று
தெரிய வந்ததுண் வஞ்சகம் - நன்று தெரிய வந்ததுண் வஞ்சகம்
9. சிங்கத்தின் தோலினைப் போர்த்த கழுதை போல்
தேசத்திலே பலர் உண்டுகாண் - இந்தத் தேசத்திலே பலர் உண்டு காண் அங்கவர் தம்மைக்கண் டேமாந்து போகா
அறிவு படைத்தனன் இன்று நாண் - உண்ணில் அறிவு படைத்தனன் இன்று நான்.
23

Page 18
கிராமத்து வாசம் - குழந்தைப் பாடல்கள்
தில்லை நடனம்
கடகடக்குது மேளம் கைகள் கொட்டுது தாளம் படமெடுக்குது நாகம் பாம்பு நடனம் பாரும்
மகுடி கொட்டும் நாதம் மத்தளத்தில் மோதும் குறவன் குறத்தி ஆடும் கூத்துக் கொள்ளுது வேகம்
தலையில் செம்பை ஏந்தி தாவி ஆரும் பாங்கி கலகலக்குது சலங்கை கரக நடனம் காணும்
கோபியர்கள் கூறு கொட்டுகின்றார் கும்பி நாயகனாம் கண்ணண்ை நாதம் நெளியும் நடுவில்
கடகடக்குது மேளம் நந்தி கொட்டுது தாளம் திமுதி முவென ஆளும் தில்லை நடனம் பாரும்
24
 
 

உசின்னத்தம்பி நினைவு வெளியீடு
ஒன் 象 ல்
குருவி ஒன்று கூடுகட்டி
முட்டையிட்டது
அருகில் ஒரு பாம்பு புற்றில் பார்த்திருந்தது
ஆழப்பாடி நாளும் குருவி அடையும் காத்தது பாம்பு அதன் முட்டை யுண்ணச் சமயம் பார்த்தது
குருவி ஒருநாள் உணவு தேடி வெளியே சென்றது அரவு மெல்ல குருவிக்கூட்டுள் நுழையப் போனது
காகம் ஒன்று பார்த்தே இதைக் “காகா” என்றது
கிளிகள் இதைக் கேட்டெழுந்து “கீகி” எண்றன
மைனாக் கூட்டம் “ஆபத்” தென்று மொய்த்துக் கத்தின கரிக் குருவி, காடை, கோட்டாண் திரண் டெழுந்தன!
25

Page 19
கிராயத்து வாசம் - குழந்தைப் பாடல்கள்
வட்டம் இட்ட பருந்தும் கீழே விரைந்து வந்து தன் துட்ட குணத்தை விட்டிவைக்குத் துணையாய் நின்றது
அத்தனையும் சேர்ந்து பாம்பைக் கொத்தத் தொடங்கின "ஐயோ” என்று பாம்பு கீழே செத்து விழுந்தது
ஒன்று கூறு பறவையினம்
பகையை வென்றது “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு" என்று பாடின.
Y நன்றி
ஈழத்துச் சிறுவர் பாடல் களஞ்சியம், 2007
- தொகுப்பாசிரியர் கலாநிதி செ.யோகராசா மஞ்சு மலர்க்கொத்து, 2003
- மதுரைப் பண்டிதர் க.சச்சிதானந்தன் ஆடலிறை குழந்தைப் பாடல்கள், 2005
- ஆடலிறை ஆடலிறை மழலைப் பாடல்கள்
- ஆடலிறை ஊஞ்சல் ஆடுவோம்
- மு. பொன்னம்பலம் சின்னப் பாப்பாப் பாட்டு, 2004
- ச. வே. பஞ்சாட்சரம் நாட்டார் பாடல்கள்
. கல்வி வெளியீட்டுத் திணைக்களம்
26
 


Page 20


Page 21
இவர். மயிலண் சினினத்தம்பி (1038-2008)
மனைவி erreroon
egratoga Scoob escritor e, e.targou கெருடாவில் தெற்கு,
(ာ်ioရှီးရွာ၇ရွtွငုံ
36)gren (soiko), Suur IfiGTණ්ෆෆෆෆ් ওচায্যেme