கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இப்படியுமா

Page 1

வி. ரி. இளங்கோவன்
حصے
UM
%'%'
G_D N

Page 2

6ÙՍջԱկՍt..?
oil.
சிறுகதைகள்
ரி. இளங்கோவன்
Unique Media integrators
No. 8, 6th Cross, 8th Main Road, Vaishnavi Nagar. Thirumullaivoyal, Chennai-600 109.. umi infobooks(@gmail.com

Page 3
M Unique
Media lintegrators
le &lar
No.8, 6th Cross, 8th Main Road, Vaishnavi Nagar, Thirumullaivoyal, Chennai-600 109. umi.infobooksG)gmail.com
Ippadiyuma.?
Author : V. T. ELANGOVAN This edition published and distributed by UMI (C) : Author
All rights reserved except for the inclusion of brief quotations in a review, no part of this publication may be repróduced, stored in retrieval system, or transmitted in any form or by any mean, electronic, mechanical, photocopying, recording, or otherwise without the written permission of the publisher.
First Published October, 2012
ISBN: 978-81-922530-3-9
Price 90/-
Text DTP, Layout & Cover Design by: Gemini Digital Designer,
Vilivakkam. 9840487404
Printing and Binding: Gemini Offset printers, Villivakkam, Chennai-49
Unique Media Integrators and its office bearers can't be held responsible for the consequences of any actions taken as a result of information provided in this book.
2 இப்படியுமா..?
 
 

முன்னோடிகள் . .
கே. 1 mனியல்
ஆகியோருக்கு.
9IL}ւմtջեւյLUI!... ։ —

Page 4

அணிந்துரை
இலக்கிய வடிவில் மிக முக்கியமான ஒன்றாகும் சிறுகதை என்பது. தான் வாழும் காலத்தில் தன் கண்முன் நிகழும் சம்பவங்களின் ஒற்றை நிகழ்வை எடுத்துக்கொண்டு அந்த மனிதனின் அல்லது மனிதர்களின் வாழ்வியல் யதார்த்தங்களை நறுக்குத் தெரித்தால் போல் வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட, பொறி தட்டும்படியான வார்த்தைகளும் மொழிலாவகமும், சொற்செட்டும் கொண்டதாக அமைய வேண்டும். உடலில் தேவையற்றுத் தொங்கும் சதைக் கோலம் போல வேண்டாத வார்த்தை ஜாலங்களும், தேவையற்ற விவரிப்புக்களும், தவிர்க்கப்பட்டு ஆரோக்கியமிக்க நரம்பு முறுக்கிட்ட உடல் கட்டுக் கோப்புப்போல் விளங்க வேண்டும். இதற்கு விரிந்த இலக்கியப் பயிற்சியும், மொழி ஆளுமைக்கான கற்றறிதலின் நினைவாற்றலும் மிக அவசியமாகும்.
இதற்கும் மேலாக வாழ்க்கையைப் பற்றிய ஒரு ஆரோக்கிய மிக்க பார்வையும், நேசிப்புத் தன்மையும், நோக்கமும் படிப்பவனின் உள்ளத்தில் தான் கூறும் சம்பவம் இதுவரை உணராத ஒரு சிலிர்ப்பை, சிந்தனைத் தவிப்பை ஏற்படுத்துவதாக அமைய வேண்டும்.
நண்பர் இளங்கோவன் அவர்களை 2010 ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் முதன் முறையாகச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அங்கு பல நாடுகளில் இருந்து வந்திருந்த புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்களைச் சந்திக்கும் அரிய வாய்ப்பு நிகழ்ந்தது. அப்படிச் சந்தித்தவர்களில் புலம் பெயர்ந்த எழுத்தாளர்களில் என் மனம் கவர்ந்த எழுத்தாளர்கள் லண்டன் உதயணன் அவர்களும் பாரிசில் வதியும் வி. ரி. இளங்கோவன் அவர்களும் குறிப்பிடப்பட வேண்டியவர்கள். ஆனால் கொழும்புச் சந்திப்பிற்குப் பிறகு இளங்கோவனின் தொடர்பு என்பது வழிப்பயணச் சந்திப்புப்போல் நின்றுவிட்டது. ஆனால் அவர் அப்பொழுது என்னிடம் சில நூல்களைக் கொடுத்துவிட்டுச் சென்றிருந்தார். அதைப் படித்துவிட்டு நிறைகுறைகளைச் சுட்டிக் காட்டி நீங்கள்
இப்படியுமா..? -- - 5

Page 5
உங்களுக்குக் கிடைத்துள்ள விரிந்த அனுபவங்களை ஒரு நாவலாக எழுதினால் குறிப்பிட்டுப் பேசும்படியானதாக அமையும் என்று தெரிவித்திருந்தேன். ஆனால் பதிலேதும் இல்லை.
திடீரென்று கடந்த மாதம் பாரிஸ் இளங்கோவன் பேசுகிறேன், சென்னைக்கு வந்துள்ளேன் என்று தொலைபேசியில் கூறினார். எனது வீட்டுக்கும் வந்தார். அப்பொழுது தான் வெளியிடப்போகும் சிறுகதை நூலுக்கு அணிந்துரை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இன்று சிறுகதைகளாகட்டும், நாவல்களாகட்டும் நவீன இலக்கியம் என்கிற பெயரால் யதார்த்தவாதம் என்கிற மனித வாழ்வின் சகல நிலைபாடுகளையும் வெளிப்படுத்துகிற இலக்கியப் போக்கை புறந்தள்ளிவிட்டு அதற்கு எதிராக மனித ஆளுமைகளைச் சிதைக்கிற அல்லது சீக்காளி ஆக்குகிற கண்ணோட்டத்தைத் தூக்கிப் பிடிக்கிற ஒரு மாயத்தோற்றம் உருவாகி வருகிறது. அதைத் தூக்கிப் பிடிக்கிற போக்கும் பாராட்டிக் குளிப்பாட்டுகிற வக்கிரங்களும் இன்று மெதுமெதுவாக ஆராதனைசெய்யப்படுகின்றன. யதார்த்தவாதம், விமர்சன யதார்த்தவாதம், சோசலிச யதார்த்தவாதம் என்கிற சொல்லாடல் - கருத்தாடல் இன்று விமர்சகர்கள், எழுத்தாளர்களின் சிந்தனையிலிருந்து மெதுமெதுவாக வழுவிக் கொண்டு மறைவதாகவே தோன்றுகிறது. யதார்த்தவாத இலக்கியம் என்கிற இடத்தில் நவீன இலக்கியம் என்று முற்போக்கு எழுத்தாளர்களே குறிப்பிட்டுச் சுட்டிக்காட்டி எழுதுகிறார்களே. அதன் அர்த்தம் என்னவென்று புரியவில்லை.
இன்று உலகில் தனியார் மயம், தாராள மயம், உலக மயம் என்று ஏகாதிபத்திய முதலாளித்துவம் தனது சுரண்டலின் கோரமுகத்தை முகமூடியணிந்து வெளிப்படுவது போல, நவீனத்துவம் என்கிற வடிவமும், யதார்த்தவாதம், சோசலிச யதார்த்தவாதத்தை மறைமுகமாக எதிர்கொள்ளும் முகமூடி அணிந்து வருகிறதா என்கிற ஐயப்பாடு எழுகிறது. தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்கிற ஏகாதிபத்தியச் சுரண்டல்காரர்களின் கோரமுகம் எப்படியெல்லாம் தம் கரங்களை பரப்பி வருகிறது என்கிற நவீனச் சுரண் டலையும், அதற்கெதிராக கரத்தாலும் கருத்தாலும் உழைக்கும் மக்கள்
6 9)ւI lգեւյԼՈT..?

நடத்திவரும் போராட்டங்களையும் போக்குகளையும் உணர்ந்து கொள்ள முடியாத படைப்பாளிகள் யதார்த்தத்தை ன்க கழுவிவிட்டு நவீனத்துவம், பின் நவீனத்துவம் என்று கருத்துத் திரிபு வாதத்தில் அறிந்தோ அறியாமலோ, போய்க்கொண்டிருக் கிறார்களோ என்று கருதவும் இடமளிக்கிறது.
இப்படியான முரண்பட்ட சிக்கலில் சமூகச் சிந்தனையும், பார்வையும், சித்தாந்தக் கண்ணோட்டமும் முற்போக்காளர்கள் மத்தியில் அருகிவரும் நிலையில் இலங்கைத் தமிழ் படைப்பாளர்களிடத்திலும், புலம்பெயர்ந்த தமிழ்படைப்பாளர் களிடத்திலும் சற்று ஆரோக்கியமான நிலை தொடர்வது மனதுக்கு ஆறுதல் அளிக்கிறது.
இலங்கையில் நடைபெற்று வந்த நீண்ட நெடிய தமிழர்களின் உரிமைப் போராட்டம் அந்தப் படைப்பாளிகளிடத்தில் தங்கள் வாழ்வை, பண்பாட்டை, கலாசாரத்தை, கட்டிக் காக்க வேண்டும் என்கிற ஆர்வத்தை, ஆவேசத்தை, அர்ப்பணிப்பை வெளியிடுவது போலப் பெரும்பாலான படைப்புக்கள் நம் கவனத்துக்கு வருகின்றன. அப்படியான படைப்புகளில் ஒன்றுதான் இளங்கோவனின். இந்த சிறுகதைத் தொகுப்பாகும். ஈழத்தமிழர்களிடத்தில் கரடுதட்டிப் போன ஜாதீயம், தீண்டாமை, போரின் அழிவிற்கு மத்தியிலும் கூட சம்பிரதாயங்களையும் சமயக்கோட்பாடுகளையும் இறுகப் பற்றிக்கொண்டு மனிதநேய உணர்வுகளை உதிர்த்துக் கொண்டிருக்கும் போக்குகளை ஒருபக்கம் இவரின் கதைகள் உணர்த்துகின்றன - வெளிப்படுத்தி இப்போக்குகளுக்கு எதிரான வெஞ்சினத்தை உமிழ்கின்றன.
மறுபக்கம் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் தம் மக்களின் போலித்தனமான வாழ்க்கையையும், போற்றிப் பேண வேண்டிய தம் கலாசார மரபுகளையும், குடும்பம் என்ற ஒரு அமைப்பு இல்லாமலேயே குழந்தை பெற்றுக் கொள்வதும், பிரிந்து வேறொருவனுடன் வாடகை வீட்டில் குடியிருப்பது போல மனம் பிடிக்கும் வரையில் - அதாவது பசையிருக்கும் வரையில் ஒட்டிக்கொண்டிருப்பதும், பிறகு பிரிவதும் விவஸ்தை இல்லாமல் இருபாலாரும் குடித்துக் கும்மாளமடிப்பதும், ஆடம்பர வாழ்வுக்குக் காசில்லாத போது விபச்சாரம் செய்வதும், குழந்தைகளைப் பெற்று விட்டால் கணவனிடமிருந்தோ,
9)ւILIջեւյԼՈT...? - 7

Page 6
காதலனிடமிருந்தோ பிரிந்து செல்லும் போது குழந்தைகளுக்கும், மனைவிக்கும் பராமரிப்புச் செலவு கொடுத்தாக வேண்டும் என்கிற அந்நாடுகளின் சட்டங்களுக்கு ஒடுங்கி அடங்கி தவறும் செய்யும் மனைவியை காதலனோ, கணவனோ காத்து வருவதும், குழந்தைகளும் தங்கள் பிரியம்போல் பெற்றோர்களுக்கு அடங்காமல் மனம்போன போக்கில் வாழ்வதும், தட்டிக்கேட்டு விட்டால் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து அந்நாட்டுச் சட்டத்திற்கேற்ப குழந்தைகளுக்கெதிரான பெற்றோர்களின் வன்முறை என்று தண்டிப்பதுமான பல்வேறுபட்ட செரிமானம் செய்து கொள்ள முடியாத தமிழ் கலாசார வாழ்விற்கு நிகழ்ந்து கொண்டிருக்கும் அவலம், சோகம், அதிருப்தி, வாழ்ந்தாக வேண்டும் என்கிற திருப்தியற்ற வாழ்கையின் உண்மைகள் பலவற்றை இவருடைய கதைகளில் காணமுடிகிறது.
புலம்பெயர்ந்த தமிழர்கள் ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் வருமானம் பெற்று எப்படியாக உயர்ந்த வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்கின்ற நம் நினைப்பிற்கு ஆணி அடிப்பது போல - அதிர்ச்சியூட்டுவது போல இதிலுள்ள கதைகள் நம்மை நிலை குலைய வைத்துவிடுகின்றன. சிந்தனையை தூண்டுவிக்கின்றன. நமக்கொரு புதிய வெளிச்சத்தையும் உமிழ்கின்றன.
வாழ்வின் நெருக்கடிகள் மட்டுமே - அதனைச் சரியாகப் புரிந்து கொண்டவர்களுக்கு மகத்தானவற்றைச் சாதிக்கும் வழித்தடங்களை சமைத்துக் கொடுக்கும். அந்த வழியில் நண்பர் இளங்கோவன் அவர்கள் நடைபயில ஆரம்பித்திருக்கிறார். அந்த நம்பிக்கை சிதையாது காப்பார் என்று நாம் எதிர்பார்ப்போம். வெற்றிகாண வாழ்த்துவோம்.
நாமக்கல். அன்புடன், O 1-O5-2O 12 கு. சின்னப்பபாரதி
8 இப்படியுமா..?

முனனுரை
சின்னஞ்சிறு வயதிலேயே பழந்தமிழ் இலக்கியப் போதனை எனக்கு அடுப்படியிலேயே கிடைக்க ஆரம்பித்தது.
ஆமாம். ஒழுங்காகக் கையெழுத்துப் போடத் தெரியாத என் தாயிடம் நாண் கேட்ட பழந்தமிழ் இலக்கியப் பாடல்கள், கதைகள், புராண, இதிகாச, நீதிக்கதைகள் ஏராளம். ஏராளம்.
பல்லாயிரம் பாடல்களை மனதில் வைத்திருந்து, சமய சந்தர்ப்பங்களில் அவற்றைக் கூறி விளக்கும் ஆற்றல் எமது பெற்றோருக்கு இருந்தது.
இதனால் தானி எங்கள் வீட்டில் எல்லோருக்கும் இலக்கிய விருப்பும் பரிச்சயமும் ஏற்பட்டதெனலாம்.
மூத்த சகோதரர் நாவேந்தண் (திருநாவுக்கரசன்) பத்து வயதிலேயே பாரதியாரின் பாஞ்சாலி சபதத்தை வாசிக்க எண் தாயார் அப்பாடல்களைக் கூறி விளக்கம் கூறுவாராம்.
அப்படியே தாண் எங்கள் வளர்ச்சி.!
எழுபதுகளின் நடுப்பகுதியில் ஒரு சில சிறுகதைகளும் ஒரு குறுநாவலும் எழுதினேனர். அவற்றைத் தோழர் கே. டானியலிடம் வாசித்துக் காட்டினேன்.
“சமுதாயப் பார்வை இருப்பினும் வாழ்வின் வளத்துக்கு வழிகாட்டுவனவாக, நம்பிக்கையூட்டுவனவாக அமைய வேண்டும். ஆபாச வர்ணனைகள் மேலோங்காமல் பார்க்க வேண்டும்’ என்றார். அத்துடனர், ‘உனக்குக் கவிதை தான் நன்றாக வருகிறது. அதனால் தொடர்ந்து கவிதையில் கவனஞ் செலுத்து' என்றார்.
அப்போது ஒரு சில கதைகள் பிரசுரமாகின.
கொழும்பு பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கம் நடாத்திய சிறுகதைப் போட்டியில் ஒரு கதை பரிசு பெற்றது ஞாபகம்.
உள்ளக் கொதிப்பு, உணர்வுத்துTணிடுதலினி போது எழுத வருவது கவிதைகளாகவே அமைந்தன.
இப்படியுமா..? 9

Page 7
நாட்டிலும், புலம்பெயர்ந்த பினர்னரும் மேடை, வானொலி, தொலைக் காட்சிக் கவியரங்கங்களுக்குத் தலைமை தாங்கிச்சொன்ன கவிதைகள் ஏராளம். அதற்கெனவே அதிகம் கவிதைகள் எழுத வேண்டியிருந்தது. சிறிது காலம் சிறுகதைகள் எழுதவில்லை.
பாரிஸ் வந்த நாட்களில் “பாரிஸ் ஈழநாடு’ ஆசிரியர் நணர்பர் எஸ். எஸ். குகநாதன் வேண்டுகோளுக்கிணங்க இலக்கியப் பகுதி சிறப்புற சிறிது காலம் உதவினேன். அப்போது சில கதைகளும் எழுதினேன்.
பிரான்ஸ் நாட்டின் தென்பகுதியிலுள்ள, உலகில் மிகச் சிறந்த விமானங்கள் தயாரிக்கப்படும் அழகிய, அமைதி மிக்க நகரான துலுஸ் நகரிலும, பின்னர் பாரிஸ் நகரிலும் 21 வருடங்களுக்கு மேலாக வசித்து வருகின்றபோதிலும் அவ்வப்போது ஐரோப்பாவின் பல இடங்களுக்கும் இலக்கியப் பயணங்கள் போவதுண்டு. அவ்வேளைகளில் ‘ஏண் அதிகம் எழுதுவதில்லை’ என நண்பர்கள் கேட்பதுண்டு. இயந்திர வாழ்வினர் நெருக்கடிக்குள்ளும், சாம வேளைகளில் விழித்திருந்து மனதில் நீண்ட காலமாகப் புடம் போட்டு வைத்திருந்த சில கதைகளை எழுதி முடித்தேனர். அவை பத்திரிகைகளிலும் பிரசுரமாகின. முன்னர் எழுதிய சில கதைகளையும் சேர்த்துக் கொண்டேன். எழுபதுகளில் எழுதிய கதைகள் கைகளுக்கு கிடைக்கவில்லை.
சிறு வயது முதல் மூத்த சகோதரர்களின் பாதையில், கலை, இலக்கிய, அரசியல் ஈடுபாடு கொண்டிருந்தாலும் நானாக விழிப்புணர்வு பெற்றுச் சிந்திக்கத் தொடங்கிய காலம் முதல் முற்போக்கு இலக்கிய இயக்கத்தினரால் கவரப்பட்டேன்.
அருமைத் தோழர் கே. டானியல், பல்கலை வேந்தர் சில்லையூர் செல்வராசன், பாரதிநேசன் வீ சின்னதம்பி போன்றோரின் தோழமை - நட்பு, வழிகாட்டுதலுடன் ஏராளமான இளந் தலைமுறையினரை அண்று இலக்கிய அணியில் இணைத்திட்டோம்.
கே. டானியல் தலைவராக விளங்கிய ‘மக்கள் கலை இலக்கியப் பெருமன்றத்தின் செயலாளராகவும் பணியாற்றிட முடிந்தது.
10 இப்படியுமா..?

ஏற்கெனவே மூன்று கவிதைத் தொகுதிகள், கட்டுரைத் தொகுப்புகள் எனப் பதினாறுக்கு மேற்பட்ட நூல்களை வெளியிட்டிருப்பினும் இச்சிறுகதைத் தொகுப்பின் வெளியீட்டில் எனக்கொரு திருப்தி.!
இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைகள் யாவும் கற்பனை வாசகங்கள் அல்ல. எண்றும் சமூகத்தில் உறவாடி, மக்களுடன் வாழ்ந்து பெற்ற அனுபவங்கள் - உண்மையான, உணர்வுபூர்வமான சம்பவங்களின் வெளிப்பாடுகளை, உள்ளக் கொதிப்புகளை எழுத்தில் வடித்துள்ளேண்.
புலம்பெயர்ந்த மண்ணில் சாதாரண மனிதர்களது நிறைகுறைகள், வசதி வாய்ப்புகள் தேடும் ஆவலாதி, ஓரளவு அவை கிடைத்தவுடன் குடும்ப வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள், மனித நேயம் மறக்கடிக்கப்படுவது எனக் கண்டுணர்ந்த சில வெளிப்பாடுகளின் பதிவுகள் இக்கதைகளில் அடக்கம்.
எவ்வகையிலும் பணம் தேடும் வாஞ்சை, போலிக் கெளரவம், அறிவீனங்கள் பலவற்றுடன் இடறுப்பட்டு ஓடும் எம்மவர் பலரின் மத்தியில் மனித நேயம் மிக்க படைப்பாளியாக வாழ நினைப்பது விசித்திரமாகவே சிலருக்குத் தோன்றும். என் செய்வது. காலம் கடத்தி விட்ட வாழ்வு.!
உண்மைகள் சிலவற்றை வலியுறுத்தித் தான் சொல்ல வேண்டும். அது சிலருக்குக் கசப்பாகவும் இருக்கலாம்.
ஆனால், "மக்களிடம் கற்றுப் புடமிட்டு மக்களிடம் கொடுப்பதுவே மக்கள் இலக்கியம்’ என்பர். இவையும் மக்களிடம் பெற்ற, கற்றுக்கொண்ட அனுபவங்களின் சத்திய வெளிப்பாடுகளே.
எனது சிறுகதைகளை மனமுவந்து வெளியிட்ட
இச்சிறுகதைத் தொகுதிக்கு அணிந்துரை வழங்கிய இந்தியாவின் பிரபல நாவலாசிரியர்களில் ஒருவரான கு. சின்னப்பாரதி அவர்களுக்கும், எண் கதைகள் குறித்து அன்று கருத்துத் தெரிவித்த பேராசிரியர் கா. சிவத்தம்பி, என்றும் எமது பணிகளை ஊக்குவித்துவரும் பேராசிரியர் சோ. சந்திரசேகரன்
இப்படியுமா..? 11

Page 8
ஆகியோருக்கும் இத்தொகுதியினை சிறப்புற வெளியிடும் UM பதிப்பகத்தினருக்கும் எனது நண்றிகள்.
இனி. வாசகர்களே. உங்கள் கருத்துக்களையே வேண்டுகிறேன்.
vtelangovan Gyahoo.fr - வி. ரி. இளங்கோவன்
OO 33 950 493 232 (பிரான்ஸ்)
12 9LLItջեւյԼՈII.?

1. வெயிலும் பணியும். 15
2. தண்ணிரும் எண்ணெயும். 22
3. ஒரு நிர்வாகச்சபை கூடுகிறது. 29
4. இப்படியுமா..? 38
5. கடிதம் சொன்ன கதை.! 44
6. வேட்கை. 49
7. திறப்பு விழா. 57
8. பிறழ்வு. 63
9. ஒளிக்கிற்று. 72
10. தீயை வளர்க்கிறார். 78
11. ஒப்பரேஷன். 82
12. அப்பா வருவார். 89
13. ஏன் இடம் மாறினான்.? 95
14. கிழக்கு நோக்கிய மேற்கு மனிதன். 101
15. காத்திருந்த புண்ணகை. 11O
16. கடைவாசலில். 116
9JU9LLOT..?

Page 9

வெயிலும் பணியும்.
அது ஒரு மாசி மாதம். பிற்பகல் நாலரை மணியிருக்கும். ஹாலிலுள்ள ‘கனப்பே? யில் நீண்ட நேரம் யோசித்துக் கொண்டிருந்த தங்கம்மாவுக்கு புரக்கேறியது போலிருந்தது. கணிகலங்கி நீர்த்துளி விழுந்தது. உரத்துச் செருமி அடக்கிக்கொண்டார்.
ஒரு கையால் நாரியைப் பிடித்துக்கொண்டும் மறு கையால் கனப்பேயின் மூலையைப் பிடித்துக்கொண்டும் எழுந்து, மெல்ல நடந்து குசினி மேசையிலிருந்த தண்ணிரில் கொஞ்சம் எடுத்துக் குடித்துக் கொண்டார்.
மீண்டும் ஹாலுக்குள் வந்து ‘பல்கணி” ப் பக்கமாகவுள்ள கதவுத் திரைச்சீலையை விலக்கி, கண்ணாடிக் கதவினூடே வெளியே பார்த்தார். மங்கல் பொழுதின் அழகிற்குள் புகுந்து, தேங்காய்ப் பூவை வானத்திலிருந்து கொட்டியதுபோல் பணிப்பூக்கள் பறந்து கொண்டிருந்தன.
"ஆஹா. என்ன அற்புதமாயிருக்குது.” தங்கம்மா எல்லாக் கவலைகளையும் மறந்து பனிப்பூக்கள் கொட்டுவதை நீண்ட நேரம் ரசித்துப் பார்த்துக் கொணர்டிருந்தார். குளிர் உறைந்த கண்ணாடியில் முகம்பட்டு ஜில்லெனக் குளிர்ந்த போதும் அவர் பார்வையை விலக்கவில்லை.
9)ůLJly u LOT...? 15

Page 10
குதிக் காலில் ஏற்பட்ட விறைப்பு நாரி வரை வந்து முதுகுத்தண்டு வழியாக தோள்பட்டைவரை வந்து வலியெடுத்த போது தான் தங்கமமா பார்வையை விலக்கி மெல்ல மெல்ல நகர்ந்து மீண்டும் ‘கனப்பேயில் வந்து அமர்ந்தார்.
அது மூன்றுபேர் இருக்கக் கூடிய நீண்ட ‘கனப்பே. கால்களை மெல்ல மெல்ல நீட்டி, தலைக்கும் குசனை’ அணைவைத்து படுத்துக் கொண்டார்.
“பணி கொட்டுறதைப் பார்க்க என்ன தானி வடிவா இருந்தாலும் சுவாத்தியத்துக்கு நம்ம நாடு மாதிரி வருமா. நம்ம பிள்ளையளப் பிடிச்சுக்கொண்டு போய் சிறையில் பூட்டி வைச்சிருக்கிறாங்கள் எண்டு சொல்லுவினமே. அந்த சிறை வாழ்க்கையும் இப்பிடித்தான் இருக்குமோ.”
மீண்டும் கண்கலங்கத் தொடங்கியது.
அவர் உயிரோட இருந்தா எனக்கு இந்த நிலைமை வருமா. என்ர ராசா. சாப்பிட்டுட்டு படுக்கப் போனவர்தான். அரை மணித்தியாலம்கூட இருக்காது. கட்டிலால விழுந்தார். பேச்சு மூச்சு இல்லை. அப்பு எங்கள விட்டுட்டுப் போய்ச் சேர்ந்திட்டார். இந்த வைகாசியோட இருபத்திநாலு வருஷம் முடியப்போகுது.
இந்த சினி னக் கணிணால எத்தனை காட்சியளக் கண்டிட்டன். வாத்தியார் வேலை பார்த்ததால கிடைச்ச அவர்ர பெண் சன வைச்சுக் கொணர்டு பிள்ளையள வளர்க்க நான் பட்டபாடு. ஏதோ. வயல் காணியளில நெல்ல விளைவிச்சும். வளவுக்குள்ள எல்லாப் புரோசனங்களையும் வடிவாப் பராமரிச்சும், காலநேரம் பார்த்து வீட்டுத் தோட்டம் போட்டும். படாத பாடெல்லாம் பட்டு இதுகள வளத்தண்.
அவர் போகேக்க. இவன் தம்பிக்குப் பதினாறு வயசு. நல்லது. கெட்டதுகளப் பாக்க அவருக்குக் குடுத்து வைக்கல்ல.
என்ர அண்ணனி கணிணையா. அவர் இருக்கேக்க எத்தனை தரம் கேட்டிருப்பான். வடிவுக் குஞ்சான வசந்தாவை தருவியே தங்கச்சி. நான் இப்பவே கொண்டு போய் பூப்போல வளக்கிறனெண்டு.
அவர் போனதும் நாங்க எல்லாருக்கும் இளக்காரமாப் போயிற்றம். அணர்ணனிர மூணர்டு பெடியணிகளும் கனடாவிலே. அவன் நடுவிலுப் பெடியனுக்கு வசந்தாவை
16 இப்படியுமா..?

செய்து வைப்பமெண்டு. நான் நடந்த நடையிலதானே எனக்குக் குதிவாதம் வந்திருக்க வேணும்.
'கடைசியில் பெடியனுக்கு ஒரு இடமும் சரிவராமப் போய். அவன் பெடியன்தான் எனக்குக் கடதாசி எழுதி வசந்தாவைக் கேட்டவன். என்ர மருமகன் என்ர ரத்தம் தானே. அதுக்குக் கூட என்ர சகோதரம் எவ்வளவு காசு ரொக்கம் தருவாயெண்டு. விடாப்பிடியா நிண்டு. நாலு லட்சம் காசா வாங்கினவன் எல்லோ. நான் சும்மாவே விட்டனான். வீடு வளவையும் எழுதிக் குடுத்து எல்லா நகையும் போட்டு முறைப்படிதானே அனுப்பினனான்.
பிள்ளையும் கனடா போய் இப்ப இரண்டு குஞ்சுகளோட ஏதோ சுக பலமா இருக்குதுகள். இவன் பெடியன் பாலன் தான் என்னட்ட பென்சன் காசையும் பறிச்சு சோக்கடிச்சவன். படிப்பையும் குழப்பிப் போட்டான். என்ன செய்யிறது. செல்லம் குடுத்து அக்கம்பக்கம் விடாம பொத்தி வளத்தன். ஆனா. அவன் கூட்டாளிமாரோட சேந்து பழகாத பழக்கமெல்லாம் பழகிட்டான். சனத்தின்ர கதையளக் கேக்க சங்கயினமாப் போச்சு.
‘எட மோனை. இப்பிடித் திரியாதை. நாட்டு நிலமையும் மோசமாகி வருகுது. நீ மோனை. ஏதாவது வேலையைத் தேடி உண்ர வாழ்க்கையைப் பார்க்க வேணும். எண்டு நித்தமும் அழுதழுது கெஞ்சிக் கேட்டன்.
'அம்மா. நான் கப்பலுக்குப் போகப் போறன். காசு ரெடி பண்ணு. எண்டு ஒரு நாள் சொன்னான்.
அவனர் சொன்ன தொகை காசுக்கு நாண் என்ன செய்வன். வயல் காணியள அறாவிலைக்கு வித்தன்.மனுசன்ர நினைவா வைச்சிருந்த தாலிக்கொடி. இரண்டு சோடிக் காப்பு. ஒரு அட்டியல். பதக்கம் சங்கிலி. எண்டு என்னட்ட இருந்த நகை எல்லாம் வித்துக் காசாக்கினன். இருந்த ஒரு தேயிடை ஒற்றப்பட்டு சங்கிலி மட்டும்தான் என்ர கழுத்தில.
ஆறு மாதம் கொழும்பில நிண்டு. சோக்கடிச்ச பிறகு. கப்பல் ஏறியிட்டன் எண்டு பம்பாயில இருந்து கடிதம் போட்டான். பிறகு கனகாலம் கடிதமே இல்லை. நான் வேண்டாத கடவுள் இல்லை.
இப்படியுமா..? 17

Page 11
பக்கத்து வீட்டு ராசம்மா தான் எனக்கு உதவி. நாடும் குழம்பிக் கொண்டு வந்தது. தபால் போக்குவரத்தும் குறைஞ்சு போச்சுது. எண்டு சொல்லிச்சினம்.
‘ஒரு வருஷத்துக்குப் பிறகு ஒருநாள் கள்ளியங்காட்டுப் பெடியன் ஒருவன் வீடு தேடி வந்தான். வந்தவன் தான் பாலாவோட கப்பலில வேலை செய்யிறதெண்டும். இப்ப லீவில வந்ததெண்டும் சொல்லி. பாலா தந்ததெண்ட கடிதமும் காசு 25,000 ரூபாயும் தந்தான். என்ர. முருகா எண்டு. கையெடுத்து கும்பிட்டு வாங்கினன்.
'அம்மா. நான் அடுத்த மாதம் பம்பாய் போய் கப்பல் ஏறுவனர். பிறகு கப்பல் எகிப்துக்குப் போகும். பிறகு பிரான்சுக்குப் போகும். அப்ப. நானும் பாலனும் பிரான்சில இறங்கியிருவம். அங்க அகதி அடைக்கலம் கேட்கலாமாம். அங்க தொழில் வசதிகள் இருக்காம். நீங்க. ஒண்டுக்கும் யோசிக்காதையுங்கோ. பிரான்சில இறங்கினவுடன் பாலன் கடிதம் போடுவான். அந்தப் பெடியன் சொல்லிற்றுப் போச்சுது. பெரிய ஆறுதலா இருந்தது.
தம்பி பாலனும் பிரான்சுக்கு வந்து இப்ப பதினாறு வருஷமாகப் போகுது.பிரான்சுக்கு வந்த இரண்டு வருஷத்தில என்னையும் கொழும்பில வந்திருக்க ஒழுங்கு செய்திற்றான். ஊரில நிலைமை மோசமாகிப் போச்சுது. போட்டது போட்டபடி விட்டுட்டு வெளிக்கிட்டனான்தான். வீடுவளவு என்னமாப் போச்சுதோ. ஆரு கண்டம்.
'கொழும்பில இரண்டு இடத்தில மாறி மாறி பதினோரு வருஷம் இருந்திட்டம். என்ர பெண் சனி காசு எனக்கு மட்டுமட்டாக் காணும். ஆனாலும் அவள் பிள்ளை வசந்தா இருந்திட்டு ஜஞ்சு. பத்து எண்டு அனுப்புவாள். இவனும் அப்பிடித்தான் அனுப்பினவன். எனக்கென்ன செலவு. அங்க எல்லாக் கோயிலுகளுக்கும் போனணர். மாறி மாறி பிள்ளைகளுக்கெண்டு அருச்சினை தான் செய்தன்.
அப்ப ஒரு நாள் தான் பக்கத்து வீட்டில இருந்த குடும்பமொணர்டு அறிமுகமாச்சு. அதுகளுக்கு மூணர்டு பொம்பிளப் பிள்ளையள். ஒண்டு கலியாணம்செய்து கனடா போயிற்றுதான். இரண்டாவது ஏதோ பேச்சுக் காலோ. அல்லது காதல் கிதலோ தெரியாது. சுவிசுக்குப் போகப்போறனெண்டு
18 9IUlgULOT.?

சொல்லிச்சு. அதுகளும் தகப்பண் இல்லாததுகள். . கனடா போன பிள்ளைதான் இடைக்கிடை கொஞ்சம் காசு அனுப்பிறதாம்.
“இந்தப் பிள்ளையள வைச்சுக்கொண்டு நான் என்ன செய்யப் போறனர்.” தாய் மனிசி என்னைக் காணும் போதெல்லாம் கண்ணிர் விடும். ஒருமூக்கு மின்னி நகையும் இல்லையெண்டு சொல்லும். எனக்கும் அப்பதான் ஒரு நினைவு வந்தது. எந்தப் பகுதி ஆக்களெண்டு விசாரிச்சன். தூரத்து அடியில எங்களுக்கு உறவாத் தான் வந்திச்சுது.
பிள்ளையின்ர சாதகத்தை வாங்கிக்கொண்டு போய் மகனின்ர சாதகத்தோட பொருத்தம் பார்க்க தெகிவளைச் சாத்திரியிட்டக் குடுத்தன். எண்பது வீதம் நல்ல பொருத்தம். செய்யலாம் எண்டான்.
‘மகன் ரெலிபோன் எடுக்கேக்க விஷயத்தைச் சொல்லி முற்றாக்கிப் போட்டன். அப்ப அவனுக்கு நஷனாலிற்றியும் கிடைக்கேல்ல. சிங்கப்பூருக்குப் பொம்பிளையை அனுப்பச் சொன்னான். எனக்கு உடல்நிலை சரியில்லாததால போக முடியல்லே. பொம்பிளையையும் அதுகளின்ர ஒண்டவிட்ட அணர்ணனர் முறையான ஒருவனையும் சேத்து அனுப்பிவைச்சன். அங்க செலவு. பொம்பிளைக்கான நகை நட்டு எல்லாம் என்ர செலவு தான். ஏதோ நல்லவிதமா கலியாணமும் நடந்து இரண்டு கிழமையால பொம்பிளை கொழும்பு திரும்பிச்சுது.
*அந்தக் கையோட கொஞ்ச நாளையில பாலனுக்கும் நாஷனாலிற்றி கிடைச்சிட்டுது. பிறகு ஆறு மாதத்துக் கிடையில மருமகளும் பிரான்சு போயிற்றா. தாய் மனிசி. அதுதான் சம்மந்தி. என்னை கையெடுத்து கும்பிட்டுது. அது நல்ல பிறவி.”
“இப்ப இரண்டு வருஷத்துக்கு முந்தி இவன் கொழும்புக்கு வந்து என்னவோ அலுவல் எல்லாம் பாத்து, இவன் என்னையும் இஞ்ச கொண்டு வந்திட்டான்.”
இஞ்ச வந்து பாத்தா இவன் இரவுபகலா றெஸ்ரோறன்ற் வேலையெண்டு பறந்து திரியிறான். அவளும் அங்கதான் வேலையெண்டு பகலா இரவா ஒடித் திரியிறாள். ஏதோ கார் வைச்சிருக்கிறதால அலுப்பில்லாம ஓடுதுகள் போல.
güLiguLDT..? 19

Page 12
‘இரண்டு கடுவன்கள் பெத்து வைச்சிருக்கிறாள். ஐயோ. அதுகளின்ர நெட்டூரம் தாங்கேலாது. மத்தியானம் இரண்டும் பள்ளிக்கூடத்தில சாப்பிட்டு பின்னேரம்தான் வருவினம். நான்தான் மத்தியானம் சோறு கறி காய்ச்சி வைக்கிறது.”
அதை இரவு கடுவன்கள் சாப்பிடாங்கள். அவங்களுக்கு சான்விச் செய்து குடுக்கவேணும். இல்லையெண்டா ரொட்டி சுட்டு அதோட ஏதோ பெரிய பேனை மாதிரி இறைச்சி உறுணர்டையாம். அதைப் பொரிச்சோ அல்லது அதுமாதிரி இருக்கும் இன்னுமொரு உறுண்டையை சின்னண் சின்னதாக வெட்டிப் பொரிச்சு இருக்கவேணும். படுக்கப் போகேக்க பால் காச்சி அதுக்குள்ள “சொக்கோளா பவுடர்” எண்டு போட்டுக் குடுக்கவேணும்.
நடுச்சாமத்தில தாய் தகப்பன் வரும்வரை அறைக்குள்ள பிரெஞ்சு ரி. வி. பாத்தபடி இருப்பாங்கள். கதவில சத்தம் கேட்டவுடன. போத்துக்கொண்டு படுத்திருவாங்கள். நான் ஏதும் சொன்னா. அப்பம்மா சாப்பாடு தரேல்ல. அது நல்ல சாப்பாடு இல்ல. பாலுக்குள்ள உப்பை போட்டுத் தாறா. எண்ட மாதிரி கோள் சொல்லுவாங்கள். இது ஆர்ர பரவணிக் குணமோ தெரியாது.
‘சாமத்தில வந்து அவன் கொஞ்சநேரம் தமிழ் ரி. வி. பார்ப்பான். எனக்குத்தானே நித்திரை வராது. நானும் போயிருந்து செய்தி கேட்பன். அப்பிடித்தான் காலமையும் கொஞ்சநேரம் அவனோடு இருந்து பாப்பன். பிறகு அவை வெளிக்கிடைக்க. அவள் பொடிச்சி அந்த ரி. வி. ரிமோட்டை ஒளிச்சுவைச்சுப் போட்டு போவா. நானும் அதை தேடுறதில்லை. இது அவனுக்குத் தெரியாது. ஒரு நாள் தம்பி, ரி. வியில பகல் முழுக்க சுனாமி அடிச்சதெல்லாம் காட்டினாங்களாம். பாத்திங்களா அம்மா. எண்டு கேட்டான். நான் ஒண்டும் பேசயில்லை. “ஏனம்மா. பாக்கேயில்லையா.” எண்டு திருப்பித் திருப்பிக் கேட்டான். நான் என்ன சொல்லுறது. “அது தான் ரிமோட்டைக் காணயில்லையே..” எண்டன்.
அவள் சொன்னாள். பகல் முழுக்க அவ ரி. வி. பார்த்தா ‘கரணர்ட் பில் ? எங்க வரும். பிறகு ஏதோ இரவி~~ . அறைக்குள்ள அடிபிடிப்பட்டினம்.
20 இப்படியுமா..?

ஒரு கிழமையா அவ என்னோட மூஞ்சி நீட்டினபடி தான். மூக்கு மின்னி தொட்டு சகலதும் போட்டு நான் அனுப்பின பொம்பிள. இப்ப எனக்குக் கணக்கு வழக்குப் பாக்குது.
“ஏதோ அவளின்ர சிக்கனத்தால் தான். மாடி வீடு வளவும் வாங்கி. நகை நட்டும் அந்த மாதிரி வாங்கி வைச்சுக் கொண்டு வாழுதுகள். அவையின்ர சந்தோஷம் பாத்திற்றன்.?
“எனக்கு. என்ர ராசா. கண் மூடின இடத்தில கிடந்து தான் போகவேணுமெண்டு ஆசை. ஒண்டுக்கு மேலே ஒண்டு எண்டு இரண்டு சொக்ஸ9ம் போட்டுக்கொண்டு இங்க. இந்தக் குளிருக்க. இந்த நாட்டில கிடந்து சாக வேணுமா..??
‘என்ன சுவாத்தியமான நாட்டை விட்டுட்டு. எப்ப தான் நாட்டுப் பிரச்சனை திருமோ. ம். என்ர முருகா. ம்.
நீண்ட பெருமூச்சு.
'குதிக்கால் கொதிக்குது. கால் நரம்பெல்லாம் இழுக்குது. டொக்டரிட்ட கொண்டுபோய் காட்டினா. சலரோகம் வந்திற்றுது எண்டு சொல்லி குளிசை தந்திருக்கிறார். மூக்கால. கண்ணால ஓடுது. தலை கொதிக்குது. சளி அடைப்பு. கண்மூடி ஒரு நிமிஷம் நித்திரை கொள்ளவிடாது. அஞ்சாறு குளிசைகளையும் போட்டுக்கொண்டு பகல் பொழுதில இந்த இடத்திலேயே கிடந்து நினையாது நினைச்சு அழுகிறன்.
அவள் பிள்ளை வசந்தாவும் கனடாவுக்கு வா அம்மா' எண்டுதான் கேக்கிறாள். ஒருக்கா இஞ்ச வந்து பாத்திற்றும் போனாள். இஞ்சயே இப்பிடியெணர்டா. கனடா குளிர கேள்விப்பட்டதும். நான் அந்தப் பக்கம் திரும்பியும் பாக்கமாட்டன் எண்டுசொல்லிப் போட்டன்.
இப்பிடியே இந்த சிறை வாழ்க்கை எத்தனை நாளைக்கோ. என்ர சீவன் எங்கதான். எப்பிடிப் போகப் போகுதோ. . Lih...?”
இப்படியுமா..? 21

Page 13
நயினாதீவு நாகபூஷணியம்மன் கோவில் தேர்த் திருவிழாவுக்கு அள்ளுப்பட்டு அந்நாட்களில். சனங்கள் போவார்கள். புங்குடுதீவின் குறிகாட்டுவாண், இறுப்பிட்டித் துறைமுகங்கள் சனங்களால் நிரம்பி வழியும். அதுபோலத் தான் எண்பதுகளின் நடுப்பகுதியில் தமிழ்ச்சனம் ஐரோப்பாவுக்கு அள்ளுப்பட்ட காலம்.
ரஷ்யாவின் 'ஏரோபுளட் விமானமூலம் குறைந்த செலவில் மொஸ்கோ வழியாக பேர்லின் வந்து குவிந்து கொண்டிருந்த நேரம்.
செல்வரத்தினமும் அவ்வாறே பேர்லின் வந்து சேர்ந்தவன். காம் பிலிருந்து பின்னர் அங்கு தங்கி, இங்கு தங்கி என அலைந்து ஒருவாறு பாரிஸ் வந்து சேர்ந்தான். பன்னிரண்டு பேர் தங்கியிருந்த ஓர் அறையில், ஒருவனாக முடங்கிக்கொண்டான்.
அவனவனின் காலைப்பிடிக்காத குறையாகக் கெஞ்சி மன்றாடி பொலிசுக்குப் போய் விசாவுக்குப் பதிந்து, தமிழில் கேஸ் எழுத ஆயிரம் பிராங்கும் அதனைப் பிரெஞ்சு மொழியில் மொழி பெயர்க்க ஆயிரத்து இருநூறு ‘பிராங்கும் கொடுத்து அகதி அடைக்கலம் கேட்டு விண்ணப்பம் செய்தான். அந்தக் காலம் அகதிகளை வரவேற்பது போலிருந்தது. விண்ணப்பித்த
22 9ւյLIջեւյԼՈT.?
 

தமிழரில் அதிகமானோர்க்கு விசா கிடைத்தது. பத்து வருட ‘விசாக்கார்ட் கைக்குக் கிடைத்ததும் செல்வரத்தினத்திற்கு இலட்சக்கணக்கில் பணம் ‘சுவிப்பில் வந்த மாதிரி. மகிழ்ச்சி.
கொஞ்சச் சம்பளத்தில் பதினான்கு மணித்தியாலம் வரை ‘றெஸ்ரோறனர்ரில’ LO TLT அடிச்சுக் குடுத்துக் கொணர்டிருந்தவணி, ‘விசாக் கார்ட் கைக்கு வந்ததும் ஏற்கெனவே சொல்லி வைத்திருந்த ஒரு சில றெஸ்ரோறன்ரில படிகளில் ஏறி இறங்கினான். விசா இருக்கிறதெனக் காட்டி வேலை கேட்டான். ஒரு பிரெஞ்சு றெஸ்ரோறன்ரில் வேலை கிடைத்ததில் அவனுக்குப் பெரும் திருப்தி.
புளோஞ்சர் வேலைதான். வந்து குவியும் சாப்பிட்ட எச்சில் கோப்பைகள், கிளாசுகள், கரண்டிகள் உட்பட யாவற்றையும் கழுவித் துடைத்து அடுக்க வேண்டும். காய்கறி, வெங்காயம் உட்பட சகலதும் வெட்டிக் கொடுக்க வேண்டும். சமையலுக்குப் பொறுப்பானவர் சொல்லும் வேலைகளைச் செய்தாக வேண்டும்.
குசினியில் பொறுப்பானவர் ‘செவ்'. அவருக்கு அடுத்த பதவியில் மூவர். உதவியாளர் இருவர்.அடுத்து புளோஞ்சர் இருவர். இவ்வாறாக எட்டுப் பேர் இரவு பகல் மாறி மாறி அந்தக் குசினிப் பகுதியில் வேலை செய்வர். அது பாரிஸ் நகரின் பிரபலமான ஒரு சந்திக்கு அருகாமையில் அமைந்துள்ள பெரிய உணவகம்தான்.
விசாக் கார்ட் கிடைத்து நிரந்தர வேலை உறுதியானதும் பிரமுகர்’ ஒருவருக்கு ஆயிரம் பிராங் கொடுத்து அழைத்துக் கொண்டு அகதிகளுக்கான ஐ. நா. அலுவலகத்திற்குச் சென்று இரண்டு வருடமாக கொழும்பில் தவித்துக் கொண்டிருக்கும் தனர் குடும்பத்தினை இங்கு அழைக்க விணர்ணப்பம் கொடுத்தான்.
கொழும்பில் வத்தளைப் பகுதியில் ஒரு தமிழ்க் குடும்பத்தினர் தங்கியிருந்த வீட்டினர் ஒரு அறையில் செல்வரத்தினத்தினர் மனைவியும் நான்கு வயது மகளும் தங்கியிருந்தனர். மாதா மாதம் அவர்களுக்கு1500 பிராங் உண்டியல் மூலம் அனுப்பிவிடுவான். அது அங்கு சுமார் 15,000 ரூபா வரையில் கிடைக்கும்.
இப்படியுமா..? 23

Page 14
பாரிஸ் புறநகர் பகுதியில் ஒரு பழைய கட்டிடத்தின் கடைசி மாடியான ஆறாம் மாடியில் ஒரு சிறிய ஸ்ரூடியொ விடும் எடுத்து விட்டான். அதற்கு வாடகை 2800 பிராங்.
வீடு இருப்பதாகக் காட்டி, விமானக் கட்டணமும் செலுத்தி குடும்பம் வந்து சேர பதினர் மூன்று மாதங்களாகி விட்டது.ஆயினும் அவனுக்கு அளவுகடந்த மகிழ்வுதான்.
இரவு பகலென வேலை செய்து மாதம் 1500 பிராங் சீட்டும் கட்டிவந்தார்.
மனைவி தங்கமலரை பிரெஞ்சு படிக்கவென வெளிநாட்டவருக்கென இலவசமாக நடாத்தப்படும் ஒரு பாடசாலையில் சேர்த்தார். சமூக சேவைப்பகுதியினரைத் தேடி விசாரித்துச் சில உதவிகள் பெறமுடிந்தது. அவர்களின் சிபாரிசில் தான் பிரெஞ்சுப் பாடசாலையும் கிடைத்தது.
ஆனால் மூன்று மாதம் அங்கு போய்வந்தும் தங்கமலருக்குப் பிரெஞ்சில் அரிச்சுவடி தானும் விளங்கவில்லை. பின்னர் தமிழர் நடத்தும் பிரெஞ்சுப் பாடவகுப்புக்கெனக் காசுகட்டி மூன்று மாதம் தங்கமலரை அனுப்பினார்.
இப்போது தங்கமலர் பிரெஞ்சு மொழியில் வணக்கம் கூறவும், இலக்கங்கள் சில எண்ணவும், பத்திரங்களில் பெயர், முகவரி நிரப்பவும் தெரிந்துகொண்டுவிட்டாள். கடைகளில் போய் பொருட்களை வாங்கி வரவும் பழகி விட்டாள்.
ஒரு சிறிய ஹோட்டலில் அறைகளைக் கழுவி துடைத்துத் துப்புரவு செய்யும் வேலையும் பெற்றுவிட்டாள். அங்கு இரு தமிழ்ப் பெண்களுடன் சேர்ந்துதான் நான்கு மணித்தியால வேலை. இதற்குள் கர்ப்பம் தரித்துவிட்ட தங்கமலருக்கு ஆண்குழந்தை பெறத்தான் விருப்பம்.
கர்ப்பமான காலம் தொடக்கம் பிரசவம்வரை எவ்வித கட்டணமுமின்றி சகல பரிசோதனைகளும் இலவசமாகக் கிடைக்கும் வசதி.
நான்காம் மாதத்தில் ஸ்கேனர் செய்து பார்த்துவிட்டு ஆண் குழந்தையாயிருக்கலாம் என டாக்டர் சொன்னார். பெண் குழந்தை என்றால் கருவைக் கலைத்துவிடலாமென்று தான் செல்வரத்தினமும் தங்கமலரும் பேசிக்கொண்டனர். இருவரும் வேலைசெய்து காசு சேர்க்கவும் இடைஞ்சல் இருக்காதெனத்
24 இப்படியுமா..?

திட்டமிட்டிருந்தனர். ஆனால் ஆணர்குழந்தையென்று அறிந்ததும் மகிழ்ச்சியுடன் அதனைப் பெற்று வளர்க்க எண்ணினர்.
இருவருமாக வேலைசெய்து, சிக்கனமாக வாழ்வைக்கடத்தி, சீட்டுப்பிடித்து மூன்று அறைகள் கொண்ட ஒர்
அப்பார்ட்மெண்ட் வீடும் வாங்கிவிட்டனர்.
மூத்த மகள் மாலினிக்கு பதினைந்து வயதிலேயே காதல் அரும்பிவிட்டது. இரண்டு வருடக் காதல் கனிந்து அவர்கள் தனிக்குடித்தனம் சென்றுவிட்டனர். தற்போது அவள் ‘சுப்பர்மார்சே ஒன்றில் 'கஷியராக வேலை செய்கின்றாள்.
அவர்களை செல்வரத்தினமும் மனைவியும் அங்கீகரிக் கவில்லை. 'வேதக்காரப் பெடியனாம். அதுக்கும்மேல அவர்கள் எந்தப் பகுதி ஆட்கள் எண்டும் தெரியாது. துக்கம் விசாரிச்ச பலரிடம் அவர்கள் இப்படிச்சொல்லி அழுது கொட்டினர்.
கைகழுவியிற்றம்’ என்று சொன்னவர்கள் ஒரு வருடத்திற்குப் பின் பேரன் பிறந்ததை அறிந்ததும் பட்டும் படாமலும் பழகிக் கொள்ள ஆரம்பித்தனர். பேரனை அடிக்கடி பார்க்க ஆசைகொண்டனர்.
மகன் நிரேஷ். பதின்நான்கு வயதாகிவிட்டது. 'கொலிசசில் படிக்கிறான். கேட்டதெல்லாம் வாங்கிக்கொடுத்து வளர்க்கும் செல்லப்பிள்ளை.
சோறு கறி அவனுக்குப் பிடிக்காது. ‘மக்டொனால்ஸ்’ சாப்பாடு, பிசா. இவைதான் அவனுக்கு விருப்பம். அவர்களின் வருமானத்தை அவன் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக கரைத்துக் கொண்டிருந்தான்.
அவன் கூட்டாளிகளுடன் சேர்ந்து பியர் குடிக்கிறான். சிகரெட் குடிக்கிறான் எனப் பலர் செல்வரத்தினத்திடம் சொல்லி வந்தனர்தான்.! பலமுன்ற இதனை அவர் மகன் நிரேஷிடம் கேட்டுப் பார்த்திருக்கிறார். மெளனம்தானி பதிலாக. கண்டித்துக் கத்திப் பேசியும் பார்த்தார். ஆனால். .
நினைத்த சாப்பாடு வேணும். சோறு கறி வேண்டாம். மத்தியானம் பாடசாலை கன்ரீன் சாப்பாடு. அதற்குக் காசு கட்ட வேண்டும். மற்ற வேளைகளில் வீட்டில் சான்விச் செய்து கொடுக்க வேண்டும். மக்டொனால்ஸ்’ சாப்பாடு. ‘பிசா தான்
9ÜLIşuyLOT.? 25

Page 15
அடிக்கடி வேண்டும். அதனை வாங்கி வந்து கொடுக்க வேண்டும். சிலவேளைகளில் தானே போன் செய்து வீட்டிலிருந்தே ‘பிசா' வருவித்துக்கொள்வான்.
சாப்பாட்டில்தானி இப்படி அழிக்கிறானர் எனர்றால் சிநேகிதர்மாரோடு சேர்ந்து இந்தப் பதினாலு வயதிலேயே சிகரெட், பியர் என்று அழிவு.
ஒருநாள். பகல் வேலை முடிந்துகளைப்புடன் மெற்ரோவில் வந்திறங்கிய செல்வரத்தினம் வீட்டிற்கு நடந்து வருகிறார். அந்த அடுக்குமாடி தொடர் வீடு மெற்ரோ நிலையத்திலிருந்து அதிக தூரமில்லை. 250 மீற்றர் தூரமிருக்கும். நேரம் பிற்பகல் நான்கு மணியாகி விட்டது. வீட்டிறக்கு வந்து சிறிது இளைப்பாறி விட்டு மீண்டும் ஆறு மணியளவில் இரவு வேலைக்குப் புறப்பட வேண்டும்.
வீதிக்கருகில் ஒரு சிறிய பூங்கா. அங்கேயுள்ள சாய்மனை வாங்கிலில் நான்கு இளவட்டங்களிருந்து உரத்த சத்தமிட்டு கதைப்பது கேட்டது. செல்வரத்தினம் உற்றுக் கவனித்தார். ஒரு கறுவல் பெடியன், ஒரு அடைக் கலப்புப் பெடியன். ஒரு பிரெஞ்சுப் பெடியன், அவர்களுடன் மகன் நிரேஷ். எல்லோர் கையிலும் சிகரெட். வாங்கிலில் பியர் போத்தல்களும் இருக்கின்றன.
*நிரேஷ். உண்ர பப்பா வாறார்.” அடைக்கலப்புப் பெடியன் சொன்னான்.
"அவருக்கு பலமுறை சொல்லியிற்றன். என்ர விஷயத்தில் தலையிட வேணர்டாமெணி டு. இது எங்கட சுதந்திரம். ஒண்டுக்கும் யோசிக்காதையுங்கோ. அவர் இந்தப் பக்கம் வரமாட்டார்.”
வீட்டுக்கு வரட்டும். இரண்டில ஒணர்டு இண்டைக்குப் பாக்கிறன். செல்வரத்தினம் நறுமிக்கொண்டு விறுவிறுவென வீட்டை நோக்கி.
“எடியே ஒரே ஒரு ஆம்பிளைப் பிள்ளையெண்டு செல்லம் குடுத்து வளத்து என்னத்தைக் காணுற. குசினி வெக்கையிலும், பனிக்குளிரிலயும் நாண் மாடா உழைச்சு முப்பதோட கூடிய முப்பத் தொண்டும் கொண்டுவந்து போட்டன்.
26 இப்படியுமா..?

அதுக்கு கேட்டதெல்லாம் வாங்கிக் குடுத்தன். மூத்ததை , பொன்குஞ்சு எண்டு பொத்திப் பொத்தி வளத்தன். அது என்ர பரம்பரை மானம் மரியாதை எல்லாத்தையும் காத்தில பறக்க வைச்சுப் போச்சுது. ஏதோ ஒரு பேரப் பெடியினைக் கண்டிட்டு உசிரோட இருந்தன். இந்தப் பொடி. இந்த வயதில் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடத் தொடங்கீற்றுது.”
தங்கமலர் மனுசனின்ர கொதியைக் கண்டதும் வாயே திறக்கவில்லை. கணிகலங்கியபடி தேத்தண்ணி போட்டுக் கொண்டுவந்து கொடுத்தா. தேத்தண்ணிப் பேணியை கையில் எடுக்கும்போது நிரேஷ் வீட்டிற்குள் வந்தான்.
தேத்தண்ணிப் பேணி குசினி மேசை மேலே போய் பெருத்த சத்தத்துடன் விழுந்தது. உருத்திர மூர்த்தியாக எழுந்து போய் நிரேஷின் சட்டையில் பிடித்து உலுப்பினார்.
“என்ன பழக்கமடா பழகிறாய். எனின ‘செற்" சேருகிறாய்.வெட்கக் கேடு. இந்த வயதில உனக்கு சிகரெட் பியர் எல்லாம் வேணுமா. உண்ரை மேசை லாச்சியிக்கை சிகரெட் பெட்டி, பல்கனியிலயும் சிகரெட் கட்டை கிடக்குது. நீயென்ன...பெரிய ஆளாயிற்றையோ..” என்றவாறு அவன் கன்னத்தில் இரண்டு அடி. தலை மயிரைப் பிடித்து, தலையை கீழே அமத்தி முதுகில் இரண்டு அடி.
"ஐயோ. எனிர முருகா. இதென்ன. பிள்ளையைக் கொண்டு போடாதையப்பா.” என்றவாறு தங்கம் இடையில் புகுந்து மனுசன் ஓங்கிய அடிகள் சிலதையும் வாங்கிக்கொண்டு மகனைப் பிடித்து அவனது அறைக்குள் விட்டுக் கதவைச் சாத்தினார்.
செல்வரத்தினம் உரத்து மூச்சு இழுத்தவாறு வந்து கனப்பேயில அமர்ந்து தமிழ்த் தொலைக்காட்சியைப் போட்டுப் பார்த்தார்.
பத்து நிமிடம் கூடக் கழிந்திராது. வாசல் கதவு பலமாகத் தட்டப்பட்டது. தங்கம் கதவைத் திறந்தார். மூன்று பொலிசார் வீட்டிற்குள் வந்தனர்.
"யார் நிரேஷ். என்ன பிரச்சினை." என விசாரித்தனர்.
இப்படியுமா..? 27

Page 16
“நான் தான் ரெலிபோன் செய்தனனான். இந்த வீட்டில ஒவ்வொரு நாளும் பிரச்சினை. எனக்கு ஒவ்வொரு நாளும் பேசுறார். அடிக்க வாறார் அப்பா. இப்ப என்ர முகத்தில நல்லா அடிச்சுப் போட்டார். பாருங்கோ. கன்னத்தில கைவிரல் அடையாளத்தை. முதுகிலேயும் அடிச்சதால நோகுது. எனக்கு நிம்மதியா படிக்க முடியுதில்லை. ஒருத்தரோடையும் சேரக்கூடாதெண்டு கட்டளை போடுறார். எனக்குச் சுதந்திரம் வேணும்.”
“அம்மாவோட பிரச்சினை இல்லை. இவருக்குத்தான் நல்லா விளங்கப்படுத்துங்கோ." நிரேஷ் பிரெஞ்சு மொழியில் நீண்ட வாக்குமூலம் கொடுத்தான்.
செல்வரத்தினம் பொலிசாரால் கொண்டுசெல்லபட்பட்டார். பொலிஸ் நிலையத்தில் விசாரணை நடந்தது. கண்ணிர் விட்டு அழுதவாறு, செல்வரத்தினம் தனக்குத் தெரிந்த பிரெஞ்சு மொழியில் தான்பட்ட கஷ்டங்களையும் பிள்ளைகள் மீதுள்ள பாசத்தையும் கொட்டிச் சொன்னார்.
பிள்ளைகளை அடிப்பது குற்றம். உம்மீது இதுவரை எந்தக் குற்றச்சாட்டும் இல்லாதபடியாலும் உமது நிலைமைகளை விளங்கிக் கொண்டபடியாலும் உம்மை விடுதலை செய்கிறோம். எனக் கூறிய பொலிசார் இந்த நாட்டுச் சட்டங்கள் குறித்தும், பிள்ளைகளின் உரிமை, சுதந்திரம் குறித்தும் நீண்ட விளக்கமளித்து அடுத்த நாள் மாலை ஐந்து மணியளவில் அவரை விடுதலை செய்தனர்.
சமூகசேவை அலுவலகத்திலுள்ள குடும்பநல ஆலோசகரிடம் சென்று ஆலோசனை பெறவேண்டுமெனவும் கூறித்தான் அனுப்பி வைத்தனர்.
வீட்டிற்கு வந்த செல்வரத்தினம் ஒருகிழமை வெளியே தலைகாட்டவில்லை. வேலைக்கும் உடல்நிலை சரியில்லையென லீவு போட்டார். சமூகசேவை அலுவலகத்திற்கு சென்று ஆலோசனை பெற்று வந்ததோடு சரி. வீட்டிற்குள்ளேயே. முடங்கியபடி. .
ஹாலிலுள்ள ‘கனப்பேயிலிருந்தவாறு தமிழ்த் தொலைக் காட்சி பார்ப்பார். அதிலேயே படுத்தும் கிடந்தார்.
28 இப்படியுமா..?

மகனை வீட்டைவிட்டு கலைத்துவிடவும் மனமில்லை. தான் வெளியேறி தனியே வாழவும் முடியாது. பிள்ளைகளைப் பார்க்காமல் வாழமுடியுமா..?
மனைவி தங்கத்தைப் பார்க்க அவருக்கு கணிணிர் வருகிறது. அவளுக்கும் அவ்வாறே.
ஒரு கிழமையின் பின்னர். வளர்ந்து கடித்துக்கொண்டிருந்த தாடியையும் நன்றாகச் “சேவ' செய்து விட்டு உசாராக வேலைக்குப் போனார். பகல்வேலை முடிந்து வரும் போது வழியிலுள்ள இத்தாலி பிசா கடையில் இரண்டு பெரிய பிசா வாங்கிக்கொண்டு வந்தார்.
கதவைத் திறந்ததும் மகன் வந்து மிக்க நன்றி' என்று பிரெஞ்சில் சொல்லியவாறு தகப்பனுக்கு ஒரு முத்தம் கொடுத்துவிட்டு பிசா பெட்டியை வாங்கிக்கொண்டு தனது அறைக்குள் போனான்.
ஒரு சில நாட்களின் பின்னர். றெஸ்ரோறன்ரில்'திருத்த வேலைகள் நடைபெறுவதால் ஒரு கிழமை செல்வரத்தினத்திற்கு லீவு. சனிக்கிழமை மாலை ஏழு மணியிருக்கும்.
“பாப்பா. இண்டைக்கு என்ர மூன்று நண்பர்கள் எண்ணட்ட வருகினம். ஒடிப்போய் ‘பிசாவும், “கொக்கோ கோலாவும், ‘சான்விச்’பானும் வாங்கிக்கொண்டு வாங்கோ. அம்மா சான்விச் நல்லபடியாச் செய்ய வேணும்."
பிரெஞ்சும் தமிழும் கலந்த மொழியில் நிரேஷ் சொன்னான். செல்வரத்தினம் கூடையையும் தூக்கிக்கொண்டு வீதியில் இறங்கினார்.
இப்படியுமா..? 29

Page 17
கூட்டம் நடைபெறுவதற்கான ஆயத்த வேலைகள் துரிதமாக மேற்கொள்ளப்படுகின்றன. கெளரவ செயலாளர் இருநாட்களுக்கு முன்பாகவே அங்கத்தவர்கள் எல்லோருக்கும் தொலைபேசி மூலம் அறிவித்தல் கொடுத்துவிட்டார். அங்கத்தவர்கள் எல்லோரும் கூட்டத்தில் தவறாது பங்குபற்றுவது வழமை. ஞாயிற்றுக்கிழமையில் கூட்டத்தை நடத்துவது எல்லோருக்கும் வசதி.
சங்கத் தலைவர் ஆனந்தனர் ஞாயிறுகாலை ஒன்பது மணிக்கே புறப்பட்டுவிட்டார். இடையில் வாங்க வேண்டிய பொருட்களையும் வாங்கிக்கொணர்டு பத்து மணி பத்து நிமிடமளவில் கூட்டம் நெைபறும் இடத்தில் ஆஜராகிவிட்டார்.
எதிர்பாராத பிரச்சினை ஒன்று வந்துவிட்டதால் கொஞ்சநேரம் தாமதமாக வருவதாகச் செயலாளர் தொலைபேசியில் சொன்னார்.
"இந்த ஆளைப் பாருங்க. எல்லாரையும் நேரத்தோட வாங்க எண்டுபோட்டு தான் பிந்தி வாறாராம்.” தலைவர் புறு புறுத்துக்கொண்டார்.
30 இப்படியுமா..?
 

சங்க அமைப்பாளர் குலரத்தினா வீட்டில் தான் கூட்டம் வழமையாக நடைபெறும். மற்றவர்களின் வீட்டில் சங்கக் கூட்டத்தை நடாத்துவது பிரச்சினைகளை உருவாக்கி விடும். கூட்டத்தில் காரசாரமான விவாதங்கள் நடைபெறுவதுண்டு. இப்படியான விவாதங்களை தமது வீடுகளில் நடத்துவதற்கு அவர்களின் 'இல்லத்தரசிகள் இடங்கொடுக்க மாட்டார்கள்தானே.
அமைப்பாளர் குலரத்தினா பிரமச்சாரியெனச் சொல்லிக்கொள்பவர். தனியாகவே வசிப்பவர். சகோதர இனத்தைச் சேர்ந்தவராகினும் அற்புதமான இதயமுள்ளவர். இரண்டு அறை, பெரிய ஹோல். குசினி. பிரச்சினை இல்லாத இடம்.
ஹோலில் நீண்ட மேசை, சுற்றிவர எட்டுக் கதிரைகள். பக்கத்தில் மூன்று பேர் அமரக்கூடிய கனப்பே தலைவர் கொண்டு வந்த பொதியைக் குலரத்தினாவிடம் கொடுத்தார். அவர் அதிலுள்ள பொருட்களை எடுத்து மேசையில் வைத்தார்.
பொருளாளர் போல்ராஜாவும் வந்துவிட்டார். அவர் கொண்டு வந்த ‘கொர்பியர் வைன’ போத்தல் ஒன்றினைக் குலரத்தினாவிடம் கொடுத்தார். அவர் ஒருவிதமான புன்சிரிப்புடன் அதனை வாங்கிச் சென்று குசினி மேசைக்குக் கீழே வைத்தார். பொருளாளர் பெயரளவில் தான். அவரது பங்களிப்பு அவ்வளவுதான். அவரது நிலமை அப்படி. கேட்டால் என்றும் போல் வறுமை வாய்ப்பாட்டை வாசிக்கத் தொடங்கிவிடுவார். ஆனால் பிரச்சினையில்லாத மனுஷன். கூட்டத்தில் அதிகம் பேசமாட்டார். சிலவேளை உச்சக் கட்டங்களில் நேயர் விருப்பம் போல் சில கேள்விகள் கேட்பார்.
செயலாளர் வருவதற்குக் கொஞ்சம் சுணங்குமாதலால் கூட்டத்தை ஆரம்பிக்குமாறு அமைப்பாளர் தலைவரிடம் கூறினார். 'குதிரைக் கடைக்குப் போயிருந்த விஜயபாலா உட்படச் சில அங்கத்தவர்களும் வந்துவிட்டனர்.
இது என்ன சங்கக் கூட்டம் என நினைக்கிறீர்கள். ?
இலங்கையில் ஐந்தாம் வகுப்புவரையுள்ள சிறிய ஆரம்ப பாடசாலைகளுக்கே புலம்பெயர்ந்த நாடுகளில் பழைய மாணவர்
இப்படியுமா..? 31

Page 18
சங்கங்கள வைததருககறாாகள. நாவாக சபைக கூடடoமன நடத்துகிறார்கள். ‘ஒன்றுகூடல' என விளம்பரம் கொடுக்கிறார்கள். பல போட்டிகள் நடக்குமென அறிவிக்கிறார்கள். அந்தப் பாடசாலைகளில் ஐந்தாம் வகுப்போ அல்லது அதற்கு கீழ் படித்தவர்களோ நிர்வாகிகளாக செயற்படுகிறார்கள். ஒடி ஒடிப் பல விதத்திலும் உழைத்துச் சீட்டுப் பிடித்து சேமித்து வைத்திருக்கும் பணத்தை இலங்கைப் பெறுமதியில் பெருக்கிப் பார்த்தால், அவர்களை அறியாமலே ஒரு பிரமிப்பு, அகங்காரம், நெஞ்சு நிமிர்தல் ஏற்பட்டுவிடுகிறது. என்ன செய்வது.
ஒன்றுகூடல்' விழாக்கள் பல நடாத்தி கோட் சூட்” போட்டு படங்கள் பலவும் எடுத்து பத்திரிகைகள் பலவற்றுக்கும் அனுப்பி விடுகிறார்கள். பத்திரிகையில் வெளிவந்த செய்திகள், படங்கள் பலவற்றையும் பெரிய அளவில் போட்டோகொப்பி செய்து பிரேம்' போட்டு வீட்டு வாசல் பக்கமாக மாட்டி வைத்துக்கொள்கிறார்கள்.
இந்த ‘மனிதாபிமானிகள் சங்கம்’ வித்தியாசமான ஒரு அமைப்பு. மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை அவர்களது கூட்டம் நடக்கும். குறிப்பிட்ட ஒரு சில விடயங்கள் என்றில்லாமல் சர்வதேச சகல சமாச்சாரங்களும் அங்கு அலசி ஆராயப்படும். விவாதிக்கப்படும். காரசாரமாகக் கருத்துக்கள் தெரிவிக்கப்படும். சின்னத்தனமான விடயங்கள் அங்கு எடுத்துக்கொள்ளப் படமாட்டாது. கூட்ட முடிவில் எல்லோரும் கசப்புணர்வு இல்லாத நண்பர்களாகவே கலைவார்கள். மீண்டும் அடுத்த மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை வழமைப்போல்.
தலைவர் ஆனந்தன் கொண்டு வந்திருந்த ஜொனிவாக்கர் விஸ்கிப் போத்தலையும், குளிர்சாதனப் பெட்டியிலிருந்த “பெரியர்' சோடாவையும் எடுத்து மேசையில் வைத்துக் கூட்டத்தை ஆரம்பிக்குமாறு குலரத்தினா கூறினார்.
இந்தச் சங்கத்தில் இன மத வேறுபாடுகள் எதுவும் கிடையாது. நட்புணர்வ பெரிதாக மதிக்கப்படுகிறது. ஆனாலும் சிலவேளைகளில் உச்ச நிலைகளில் அங்கத்தவர் ஒரு சிலர் இனரீதியாக குறிப்பிடும் வார்த்தைகள் சிலவற்றை தம்மை அறியாமலே உதிர்ந்து விடுவதுமுண்டு. அவ்வேளைகளில் தலைவரோ அல்லது செயலாளரோ குறுக்கிட்டு அத்தகைய வார்த்தைகளை வாபஸ் பெற வைத்துவிடுவர்.
32 இப்படியுமா..?

சுத்தமாக கழுவிய 'கிளாசுகள் சிலவும் மேசையில் வைக்கப்பட்டன. தலைவர் அவற்றை ஒருமுறை உற்றுப் பார்த்தார்.
நல்லாக் கழுவினதுதான்.' எனப் பிரெஞ்சு மொழியில் குலரத்தினா சொன்னார். தலைவர் சொண்டுக்குள் சிரித்துக்கொண்டார்.
தலைவர் 'விஸ்கியை திறந்து ஒவ்வொரு கிளாசிலும் சம அளவாக ஊற்றினார்.
ஒவ்வொருவரும் கிளாசுகளை எடுத்துக் கொண்டனர். ‘சிங்சிங். உங்கள் ஆரோக்கியத்திற்காக." என்று கிளாசுகளை உயர்த்திப் பிடித்து ஒன்றோடு ஒன்று முட்டிவிட்டு முதலாவது இழுவையை ஆசையோடு ஆரம்பித்தனர்.
தலைவர் ஒரு போத்தல் “ஜெனிவாக்கர் விஸ்கியும் நான்கு கிலோ எலும்புடன் கூடிய மாட்டிறைச்சியையும் கொண்டு வந்திருந்தார். அவர் புகைக்கும் "டுனில் சிகரெட் பெட்டியும் கைவசம்.
குலரத்தினாவுக்கு மாட்டிறைச்சிக் கறிதான் விருப்பம். மற்றையோரும் அப்படியே. ஆட்டிறைச்சி சிலருக்கு ஒத்துக் கொள்வதில்லை. கோழி இறைச்சி அலுத்துப் போன ஒன்று.
எல்லோருக்கும் எண்ணெய், கொழுப்பு ஒத்துக்கொள்ளாது. உடல்நிலை அப்படி.
“மச்சாங். ஆனந். நீங். இறைச்சிக் கறியை வையுங்க. நாங். பருப்புக்கறியும் சம்பலும் போடுறது. சோறு போட்டாச்சு. சரிங் தானே.”
தலைவர் ஆனந்தன் இறைச்சியை சிறுசிறு துண்டுகளாக வெட்டத் தொடங்கினார். ஏற்கெனவே சிறு துண்டுகளாக வெட்டப்பட்டிருந்தாலும் எலும்புகளில் கூட சிறு கொழுப்புப் படிவோ, சவ்வோ இல்லாமல் ஆறுதலாக இறைச்சியைத் துப்புரவாக வெட்டி முடித்தார்.
முதலாவது ரவுண்டு முடியும் தறுவாயில் செயலாளர் உலகநாதன் வந்து சேர்ந்தார்.
“மன்னிக்க வேணும். திடீரென ஆட்கள் வீட்ட வந்திற்றினம். ஒரு மாதிரி அவையை அனுப்பிப் போட்டு காரை
இப்படியுமா..? 33

Page 19
எடுத்துக்கொண்டு வந்திற்றன். பிள்ளையஸ் ஒரு மாதிரிப் பாத்தினம். தெரியும்தானே. புத்தகப் பிரச்சினை. சந்திக்கு சந்தி மூண்டெழுத்து நிக்கிறாங்கள். எல்லாம் இந்த
எங்க. அரைப் போத்தல் பாஞ்சிற்றுது போல.”
ஆனந்தன் ஒரு கிளாசை உலகநாதனுக்குப் பக்கத்தில் எடுத்து வைத்தார். அதில் அளவாக விஸ் கியையும் சோடாவையும் ஊற்றி ஒரே மூச்சில் இழுத்தார் உலகநாதன்.
இறைச்சிக்குள் கொஞ்சம் சூரியகாந்தி எண்ணெய் விட்டு, கணக்காக உப்பைத் தூவி, வெங்காயம், யாழ்ப்பாண ஸ்பெஷல் மிளகாய்த் தூள், கறுவாப்பட்டை சிறுதுண்டு, பெருஞ்சீரகம், கருவேப்பிலை, மற்றும் வாசனைப் பொருட்களும் அளவாகப் போட்டு நன்றாகப் புரட்டி உருட்டி கொஞ்ச நேரம் ஊறவைத்தார் ஆனந்தன்.
பருப்புக் கறிக்கு மிளகு மற்றும் மாசுக் கருவாட்டுத்தூள் என்பனவும் சேர்த்துச் சுவையாக வைத்தார் குலரத்தினா. அத்துடன், ‘பைக்கற்றில் உள்ள தேங்காய்ப்பூவை எடுத்து அதற்குள் சீனக் கடையில் வாங்கிய 'மிளகாய், உப்பு, என்பன அரைத்த கலவை, மாசு கருவாட்டுத்தூள், தக்காளிப்பழம், சின்ன வெங்காயம் எல்லாம் சேர்த்து சம்பல் போட்டு முடித்தார்.
ஒரு போத்தல் முடிந்து உலகநாதன் கொண்டு வந்த போத்தலும் திறக்கப்பட்டு விட்டது. விஜயபாலாவுக்கு கொஞ்சம் உஷ்ணமாகவிருந்தது. “தலைவரே. இறைச்சிக் கறி தானாக வேகும். நீங்க இங்க வாங்க. இந்த ஈராக் பிரச்சினையை பற்றி என்ன சொல்லுறீங்க. அமெரிக்கன் செய்யிறது சரியா. சொல்லுங்க..” என சிங்களம் கலந்த பிரெஞ்சில் கேட்டார்.
இறைச்சி வேகும் சட்டியைத் திறந்து கரண்டியால் ஒரு பிரட்டல் செய்துவிட்டு தக்காளிப்பழமும் வெட்டிப் போட்டுவிட்டு வந்து மேசைக்கருகில் தனது "டுனில’ சிகரெட்டைப் பற்றவைத்துக்கொண்டு தலைவர் பேசத் தொடங்கினார்.
“உலகத்தின்ர பொலிஸ்காரணி தானெணர்டு நினைச்சு கொண்டு தொடந்து அநியாயம் பண்ணிறான் அமெரிக்கன். ஜப்பானில அணுக் குண்டைப் போட்டு லட்சக்கணக்கான
34 இப்படியுமா..?

சனத்தை எரிச்சான். அங்க இண்டைக்குப் பிறக்கிற பிள்ளையஸ் கூட ஊனமாக் பிறக்குதாம். வியட்னாமில எல்லா அநியாயமும் செய்து, எத்தனையோ வருஷங்களுக்குப் புல் பூணர்டே முளைக்காத அளவுக்கு எரிகுண்டுகளைக் கூடப் போட்டுப் பாத்தான். கடைசியில என்ன நடந்தது. தங்கட ஆக்கள் லட்சக்கணக்கில பறிகுடுத்திற்று நல்லா அடிவாங்கி முகத்தில கரி பூசிக்கொண்டு தப்பினோம் பிழைச்சோமெண்டு ஓடினான். இண்டைக்கும் அங்க காணாமப் போன தங்கட ஆட்களைத் தேடி வியட்னாமுக்கு காவடி எடுக்கீனம். அதுக்குள்ள விழுந்தனான். மீசையில மண் புரளயில்லை. எண்ட மாதிரி. தங்கட வீரத்தைக் காட்ட ரம்போ. கிம்போ...' எண்ட மாதிரி சினிமாப் படங்கள் எடுத்து உலகத்து அப்பாவிச் சனங்களுக்கு விளையாட்டுக் காட்டுறாங்கள். எல்லா நாடுகளிலயும் அவங்களால தானே. பிரச்சினை. ஈராக்கில இவங்களுக்கு என்ன வேலை. சதாம் உசேன் சர்வாதிகாரியெண்டா அதை அந்த நாட்டு மக்களோ. பக்கத்து அரபு நாட்டு மக்களோ பாத்துக்கொள்ளட்டும். இல்லை. இவங்கட கையுக்க மடங்குற ஐக்கிய நாடுகள் சபை பாக்கட்டுமணி. ஏன் இவன் படை கொண்டு போனவன். பெரிய பாறைகள கொங்கிறிற் தளங்கள உடைத்து ஆழத்துக்கு பாயும் புதிய குண்டுகளப் பரிசோதிக்கவும், வேற புதிய ஏவுகணைகளைப் பரிசோதிக்க தானே ஆப்கானிஸ்தானுக்குள்ள போனவன். அதால அங்கயிருந்த தலிபான் ஆட்கள் சரியெண்டு சொல்லேல்ல.
ஆப்கானிஸ்தானிலயிருந்து ரஷ்யப் படையளைக் கலைக்கப் பின்லேடனுக்கு வெள்ளை மாளிகையில விருந்து கொடுத்து ஆயுதங்களும் குடுத்தது இவைதானே. ஏன் ஈரான், ஈராக் சண்டையில சதாம் உசேனுக்கும் அள்ளிக் குடுத்தவை தானே. பிறகு தங்கட ஆட்டத்துக்கு, சுரண்டலுக்கு சதாம் உசேன் இடம் குடுக்கேல்லே எண்ட உடன பிரச்சனை கிளப்பியிருக்கினம். எண்டாலும் சதாம் சுத்தமான ஈராக்கிய ஆமிக்காரன்தான். சரணடையேல்லைத் தானே. இவங்கள் தானி கொள்ளைக்காறங்கள். ஆக்கிரமிப்புக்காறங்கள். எண்டு சொல்லியிருக்கிறான். பாத்தியளே. ஈராக் அவங்களுக்கொரு வியட்னாமாகத் தான் முடியும் பாருங்கோ."
தலைவர் ஆனந்தனின் நீண்ட சொற்பொழிவை எல்லோரும் தலையை ஆட்டி ஆட்டிக் கேட்டுக் கொண்டுருந்தனர். “என்ன
இப்படியுமா..? 35

Page 20
விளங்கி எல்லோரும் தலையை ஆட்டிக்கொண்டிருக்கிறீங்க. எனக்குத் தான் தமிழ் அப்படியே விளங்காட்டிலும், விஷயம் விளங்கிச்சு. ஆனாச் சிலருக்கு." எனச் சிறு புன்னகையுடன் கூறினார் குலரத்தினா. தலைவர் ஆனந்தனும் புன்னகைத்துக கொண்டார்.
இறைச்சிக் கறியை ஒடிப்போய் பார்த்த ஆனந்தன். “நல்ல காலம் இன்னும் கொஞ்ச நேரம் எண்டா அடிப்பிடிச்சிருக்கும்.” என்று சொல்லிக்கொண்டு அதனை இறக்கி வைத்தார்.
ஒரு கோப்பையில் இறைச்சிக் கறி கொஞ்சம் போட்டு மேசையில் கொண்டு வந்து வைத்தார் குலரத்தினா. உஷ்ணம் கூடி ஹோலுக்குள் இங்கும் அங்குமாக நடந்து கொண்டிருந்த விஜயபாலா முள்ளுக்கரண்டியால் சில இறைச்சித் துண்டுகளை எடுத்து வாயில் போட்டுக்கொண்டார். தலைவரும் கறியை ருசித்துவிட்டு சிகரெட் புகையை வளையங்களாகத் தள்ளிக்கொண்டிருந்தார்.
எப்போதும் சோம்பல் முறித்துக்கொண்டிருக்கும் போல்ராஜா கிளாசுடன் போய் 'கனப்பே'யில் இருந்து கொண்டார். அவருக்கு இந்தக் கதைகள் என்னவோ செய்தது. “ஒரு பாட்டுப் பாடுங்கோவன்.” என்றார்.
உலகநாதனுக்கும் பாட்டுப்பாட ஆசையாகத்தான் இருந்தது. “மச்சாங். எங்கட நாட்டில எப்ப பிரச்சனை தீரும். எங்கட நாட்டுச்சனங்கள் எல்லாம் எப்ப சண்டை, பிரச்சனை இல்லாம வாழுற காலம் வரும். என்ன வளமான நாட்டை பதவி. தங்கட இலாபங்களுக்காக சுடுகாடா மாத்துறாங்கள். மாறி. மாறி பதவிக்கு வாற எல்லோரும் ஒண்டைத்தான் செய்யுறாங்கள். நாட்டைப் பற்றி சிந்திக்கிறவங்கள் குறைஞ்சு கொணர்டு போகுது. எல்லாத்துக்கும் பின்னணியில் தலைவர் சொன்ன மாதிரி உலகப் பொலிஸ்காரனும் அவங்கட உறவுக்காரங்களும் தான் காரணம் என்ன..” என இழுத்தார் குலரத்தினா.
தலைவருக்கோ இன்னும் ஒரு விளக்கம் கொடுக்க வாய் உண்ணியது. அதற்குள் போல்ராஜா உரத்துச் சொன்னார். “பொலிக்ரிக்ஸ் வேணாம். பாட்டுப் பாடுங்கோ.”
இதுதான் தருணமென உலகநாதன் எழுந்தார். “யாருக்காக இது யாருக்காக." எனக் கிளாசையும் கையில் ஏந்திக் கொண்டு
36 இப்படியுமா..?

சிவாஜி கணேசனையே விஞ்சி விட்ட நினைப்பில் பாடிக் கொண்டே நடிக்கத் தொடங்கினார். பின்னர் “பாவாடை தாவணியில் பார்த்த உருவமா." என உருக்கமாகப் பாடினார். சும்ம்ா சொல்லக்கூடாது. நன்றாகத்தான் பாடினார். அவர் வாழ்க்கையோடு இணைந்த பாடலாய் இருக்கலாம். அப்படி உருக்கம். தலைவரும். "ஆஹா. ” என ஒத்துTதத் தொடங்கிவிட்டார். போல்ராஜாவும் மெல்லிய குரலில் கனப்பேயில் இருந்தவாறு இணைந்து பாடிச் சுருதி கூட்டினார்.
இரண்டாவது போத்தல் முடிவதற்குள், கூட்டத்தில் எப்போதாவது சில வேளைகளில் வந்து நுழையும் இந்திரனும் அவருடன் வேலை செய்யும் காந்தனும் வந்து சேர்ந்தனர். இந்திரன் ஞாயிற்றுக்கிழமைகளிலும் வேலை செய்வார். ஒப்பந்த அடிப்படையில் கட்டிட நிர்மாண நிறுவனமொன்றில் மேசனாக வேலை செய்கின்றார். அவருக்கு உதவியாகக் காந்தன்.
இருவருக்கும் ஊற்றிக்கொடுத்ததோடு இரண்டாவது போத்தலும் முடிந்துவிட்டது. அடுத்த போத்தல் வாங்குவதனால் தொலைதூரம் போகவேண்டும். ஞாயிற்றுக்கிழமையல்லவா..! நேரம் இரண்டரை மணியைத் தாண்டி விட்டது. இந்திரனும் காந்தனும் மூன்று மணிக்கு மேல் வேலைக்குப் போகவேண்டுமென்று சொன்னதால் அவர்களுக்கு சாப்பாட்டைப் போட்டுக்கொடுத்தார் குலரத்தினா. சாப்பாட்டை மிக வேகமாக கொட்டிக்கொண்டு அவர்கள் புறப்பட்டு விட்டனர். அவர்கள் அப்படித்தான். சிலவேளைகளில் வருவர். தமது காரியத்தைப் பார்த்துக்கொண்டு போய் விடுவர். பிரச்சினை இல்லை.
கட்டிலுக்கு கீழிருந்த பெட்டியிலிருந்து ‘போதோ வைன்’ போத்தல் ஒன்றை எடுத்துவந்து மேசையில் வைத்தார் குலரத்தினா. அவரிடம் எப்பொழுதும் ஒரு ‘பெட்டிவைன்’ அதாவது ஆறு போத்தல் இருப்பில் இருக்கும். விஸ்கி ஓடி முடிய வைன் வந்து இறங்குவது வழமை. மூன்றாவது போத்தல் வைன் ஒடிக்கொண்டிருந்தது.
“இவன் தவேந்திரன் குடும்பமா லணர்டனோட போய் சேந்திற்றாண். எனின நோக்கமோ." என இழுத்தார் உலகநாதன். அவன் எங்கதான் ஒரு இடத்தில இருந்திருக்கிறான். பிரான்சிலேயே நானறிய ஆறு இடத்தில வீடு மாறி இருந்திருக்கிறான். எங்க போய்த்தான் என்ன.
இப்படியுமா..? 37

Page 21
சும்மா. பிள்ளையளின்ர படிப்பையும் குழப்பிக் கொண்டு. தலைவர் கூறி முடிக்கு முன்பு அமைப்பாளர் சாப்பாட்டுக்குக் குரல் கொடுத்தார்.
சோறு, கறிகள், சம்பல், களுத்துறையிலிருந்து வந்த அச்சாறு எனப் பல மேசைக்கு வந்தன. அவரவர் விரும்பியபடி போட்டுச்சாப்பிட்டனர். குலரத்தினா ஒரே தடவையில் நிறையப் போட்டுச் சாப்பிடுவது வழக்கம். இரண்டாவது தடவை போட்டுச் சாப்பிடமாட்டார். தலைவர் சாப்பாட்டுப் பிரியர். எந்த நிலையிலும் இரணிடு தடவை போட்டு வெட்டுவார். உலகநாதரும் அப்படியே. ரசித்துச் சாப்பிடுவார். விஜயபாலா கொஞ்சச் சோறு, அதேயளவுக்கு கறியும் போட்டு வேகமாக வெட்டிவிட்டு எதையோ பறிகொடுத்து விட்டுத் தேடுவது போன்ற யோசனையில் சிகரெட்டும் கையுமாக ஆழ்ந்துவிடுவார். போல்ராஜா ஒருமுறை போட்டுக்கொண்டதோடு நீண்ட நேரமாக போராட்டம் நடத்திக்கொள்வார். அவருக்கு 'உசார்’ கூடினால் உணவு இறங்குவது கஷ்டம்.
ஒருவாறாக எல்லோரும் சாப்பிட்டு முடித்து விட்டனர். யாராவது ஒரு பிரச்சினையைக் கிளப்ப, தலைவர் அதற்கு விளக்கங் கொடுக்கத் தொடங்க. இனி கூட்டத்தைத் தொடர முடியாத நிலை. ஒத்தி வைப்போம். நான் ‘வேலைக்குப் போகிறேனர். தலைவர் விரும்பினால் இந்த கட்டிலில ஒய்வெடுக்கலாம். சரிதானே. என்று கூறியவாறே குலரத்தினா ஒரு கட்டிலில் தனது வேலையை. நித்திரையை அணைத்துக்கொண்டார். உலகநாதன் கனப்பேயில் ஆழ்ந்த உறக்கத்தில். அடுத்த அறையில் விஜயபாலாவும், போல்ராஜாவும் அப்படியே.
மாலை ஏழு மணிக்குப் பினர் எல்லோரும் எழுந்து கொண்டனர். எல்லோரும் தேநீர் குடித்தனர். குலரத்தினா காரில் யாவரையும் ஏற்றி, அவரவர் வீடு நோக்கிக் கூட்டிச் சென்றார்.
இப்படியாக, “மனிதாபிமானிகள் சங்க” மாதாந்தக் கூட்டம், ஏனைய பல பழைய மாணவர் சங்கங்களின் நிர்வாகச் சபைக் கூட்டங்கள் போல் இல்லாமல் அமைதியாக, சந்தோஷமாக, வழக்குகளுக்குப் போகும் பிரச்சினை இல்லாமல் இனிதே நடந்து முடிந்தது.
38 9ւյLIջեւյIDIT..?

கொழும்பு கோட்டையிருந்து புறப்பட்ட அதிவேக இரயில் வணிடி காங்கேசந்துறையை நோக்கி விரைகிறது. அது அனுராதபுரம், வவுனியா, யாழ்ப்பாணம் ஆதியாமிடங்களில் மட்டும் தரித்துச் செல்லும். அதே போன்று கொழும்பு கோட்டையிலிருந்து புறப்பட்ட அதிவேக இரயில் வண்டிகள் தலைமன்னார், திருமலை, மட்டக்களப்பு, பதுளை, அம்பாந்தோட்டை ஆதியாமிடங்களை நோக்கியும் செல்கின்றன.
இந்த அதிவேக இரயில் வண்டிகள் பிரான்ஸ் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டனவாகும். மணிக்கு 250 கி. மீ. வேகத்தில் செல்லக்கூடியவை.
இலங்கையில் புதிய கல்வித்திட்டம் அமுல்படுத்தப் பட்டுள்ளது. சிங்களம், தமிழ், ஆங்கிலம் மொழிகள் கட்டாய பாடங்களாக்கப்பட்டு கற்பிக்கப்படுகின்றன. ஆறாம் ஆண்டிலிருந்து மாணவர்களுக்கு தாய்மொழியோடு மற்ற இரு மொழிகளும் கற்பிக்கப்படுகின்றன. ஒவ்வொரு மாணவரும் ஒன்பதாம் ஆணர்டிலிருந்து எந்தத் துறைகளில் ஊக்கம் காட்டுகிறார்களோ அந்த துறைகளில் மேற்படிப்பு தொடர வசதி.
இலங்கை நான்கு மாநில நிர்வாகப் பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு பிரதேசம், கரையோரப்
இப்படியுமா..? 39

Page 22
பிரதேசம், கண்டிப் பிரதேசம், மலையகத் தமிழ் பிரதேசம். இவற்றுள் முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்கள் ஒன்றிணைக்கப்பட்ட தனி அலகு.
அரசகரும மொழியாக தமிழும் சிங்களமும் அங்கீகரிக்கப்பட்டு செயற்படுகின்றன. சகல திணைக்களங் களிலும் தகுதி அடிப்படையிலேயே ஊழியர் நியமனங்கள். இரு மொழியிலும் இலங்கை முழுவதும் தொடர்பு கொள்ள வசதி. மதச்சார்பற்ற நாடாக இலங்கை ஒளிர்கிறது. இனவாதம், மதவாதம், பிரதேசவாதம் பேசுவது மிகப்பெரிய குற்றமாக கருதப்பட்டு அதிகபட்ச தண்டனை வழங்கப்படும். மத்திய அரசாங்க ஆயுதப்படைகள், மாநிலத் தொண்டர் படை, மாநில பொலிஸ் பிரிவு ஆகியவற்றுடன் மாநகரப் பொலிஸ் பிரிவுகளும் இயங்குகின்றன.
மத்திய அரசாங்க ஆயுதப் படைகளில் திறமை அடிப்படையில் சகல மக்களும் இணைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் மாநில தொண்டர் படைகளும் இணைந்து அந்தந்த பிரதேசங்களில் அபிவிருத்தி வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். ஆறுகள், குளங்கள் முதல் கிராமம் தோறுமுள்ள சிறு குளங்கள், கேணிகள் வரை ஆழமாக்கப்பட்டு அணைகள் அமைக்கப்பட்டு நீர் தேக்கப்பட்டு நீர்ப்பாசன வேலைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மலையகத்தின் மணி வெள்ளத்தால் அள்ளுண்டு போகாமல் பாதுகாக்க நடவடிக்கை.
விவசாய நடவடிக்கைகள் துரிதகெதியில். அரிசி, உப உணவுப் பொருட்கள் இறக்குமதி நிறுத்தப்பட்டு நீண்ட காலமாயிற்று. விவசாயத்தில் தன்னிறைவு பெற்று அரிசி, உப உணவுப்பொருட்கள் ஏற்றுமதியாகினர்றன. பஞ்சத்தால் அவலப்படும் நாடுகளின் மக்களுக்கென நன்கொடையாக உணவுப்பொருட்கள் அனுப்பப்படுகின்றன.
கிராமங்கள் தோறும் வைத்தியசாலைகள், மாவட்டந் தோறும் சகல வசதிகளுடன் கூடிய வைத்தியசாலைகள். இவ்வைத்திய சாலைகளில் சித்த ஆயுர்வேதப் பிரிவுகளும் சகல வசதிகளுடன் இயங்குகின்றன. நோய்களுக்கேற்ப அந்தந்த சிகிச்சைப் பிரிவுகளில், சுதேச மருத்துவர்களும் அலோபதி மருத்துவர்களும் கலந்தாலோசித்து சிகிச்சை அளிக்கிறார்கள்.
40 இப்படியுமா..?

இவ்வைத்திய சாலைகளில் வெளிநாட்டு மாணவரும் பயிற்சி பெறுகிறார்கள். கிராமங்களில் வீடுகள் தோறும் சென்று மருத்துவத் தொண்டர்கள் ஆரம்ப சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.
சிறுவர் பராமரிப்பு நிலையங்கள், வயோதிபர் பராமரிப்பு நிலையங்களில் அதிக வசதிகள். சராசரி வயது 91 ஆகக் கணிக்கப்படுகிறது. கைத்தொழில் வளர்ச்சி அபரிதமாக. குண்டூசியிலிருந்து கப்பல்கள்வரை செய்யப்பட்டு ஏற்றுமதிக்குத் தயாராகின்றன.
ஜனாதிபதியும் இரு உபஜனாதிபதிகளும் தேர்தல் மூலம் தெரிந்தெடுக்கப்படுகிறார்கள். ஜனாதிபதி பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவராக இருந்தால் உபஜனாதிபதிகள் சிறுபான்மை இனங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். அவ்வாறே சிறுபான்மை இனங்களைச் சேர்ந்தோரும் ஜனாதிபதியாக வருவதற்கு அரசியலமைப்பில் வழியுண்டு. தேர்தல்களில் ஒழுங்கீனங்கள் செய்வது மிகப் பெரிய குற்றமாகும். நீதித்துறை உச்ச அதிகாரம் கொண்டதாக விளங்குகிறது.
தேசியக் கொடியுடனர் மாநிலங்களில் அம்மாநிலக் கொடிகளும் ஏற்றப்படுகின்றன. மகாவலி கங்கை வடக்கே தொண்டமனாறுடன் கலக்கிறது.
நயினாதீவு தினசரி பல்லாயிரம் பல சமயத்து மக்களாலும் தரிசிக்கப்படுகிறது. கதிர்காமம் யாத்திரிகர்களால் எப்போதும் நிரம்பியே காணப்படுகிறது. சிவனொளிபாத மலையிலும் அப்படியே. பெளத்த, சைவ மக்கள் இங்குள்ள ஆலயங்களுக்கு ஒற்றுமையாக வந்து வழிபாடு செய்கிறார்கள். அரசியலமைப்பின் பிரகாரம் மதங்களுக்கு முன்னுரிமை இல்லையாயினும் அவரவர் தமது சுயவிருப்பின் பிரகாரம் தமது வழிபாடுகளைச் செய்து கொள்கிறார்கள்.
ஏற்கெனவே உள்ள பெரிய கோவில்கள், விகாரைகள், தேவாலயங்கள் தவிரப் பொதுமக்களுக்கெனப் புதிதாக அமைப்பதாயின் மாநில அரசின் அனுமதிபெற வேண்டும். எல்லா மக்களுக்குமான வேலை வாய்ப்புத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. தேவைக்கேற்றதான சம்பளத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. குடும்பத்தினர்
இப்படியுமா..? 41

Page 23
தேவைக்கதிகமான சொத்துக்கள் மாநில அரசினால் சுவீகரிக்கப்பட்டுத் தேவையானோருக்குப் பகிர்ந்தளிக்கப படுகின்றன.
ஒவ்வொரு பிரதேச மக்களும் தத்தமது கலாசாரம், பண்பாடுகளைப் பேணிடவும், தமது தாய்மொழியில் சகல தொடர்புகளையும் மேற்கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது. இலங்கையெங்கும் சகல மக்களும் சமத்துவம், சகோதரத்துவம் பேணி அணினியோனினியமாக இலங்கை மாதாவினி புத்திரர்களாக வாழ்வதைப் பார்த்து இப்படியா' எனப் பிறநாடுகள் வியக்கின்றன.
இப்படியான ஒரு மாற்றம் இலங்கை திருநாட்டில் வராதா என மனத்தால் ஏங்கினான் ஒரு மனிதன்.
'மனித உயிர் எவ்வளவு மலினமாகிவிட்டது. சுயநல அதிகார பீடத்தினர் தம் நலன்களுக்காக பொன்னான நாட்டைச் சாம்பல் மேடாக்கிறார்கள். இனப்பிரிவினையையும் மத பேதங்களையும் வளர்க்கிறார்கள். அகதி முகாம்களாக எம்நாடு மாறிவருகிறது. நாட்டினர் எதிர் காலத்தை, வளர்ச்சியைப்பற்றி சிந்திப்போர் குறைந்து விட்டனர். மனிதத் தன்மையற்ற, திட்டமிட்ட நாச வேலைகளும், அழிப்புகளும் பெருகி, அந்நிய ஆதிக்க சக்திகளின் வேட்டைக்காடாக எம்நாடு மாறுவதை மனிதத் தன்மையுள்ளவர்களால் எப்படி சகித்துக்கொள்ள முடியும். யுத்தம் ஒழிந்து எல்லா மக்களும் சம உரிமையுடன் வாழும் காலம் வராதா..?
இப்படி எத்தனையோ எண்ணங்களைக் கொட்டிப் பேசுவான் அந்த மனிதன். எண் நண்பன். ஆம். பிரான்ஸ் நாட்டின் துலூஸ் நகரத்தில் வசித்த, இலங்கையில் களுத்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட அந்த மனிதன், அடிக்கடி, இப்படியான ஒரு மாற்றத்தை எண்ணிப்பார் மச்சாங். .' என என்னுடன் பேசிக் கொண்டவன்.
களுத்துறையில் ஆறு சகோதரிகளுக்கு ஒரேயொரு சகோதரனாகப் பிறந்து கொழும்பில் உயர்கல்லூரியில் கல்வி கற்றவன். வசதியான குடும்பத்து செல்லப்பிள்ளையாக வளர்ந்தவன். இரு சகோதரிகள் டாக்டர்களாக பணிபுரிகிறார்கள். அவர்களில் ஒருவர் இலண்டனில் டாக்டரான வாழ்க்கைத் துணையுடன் வாழ்கிறார். தந்தையார்
42 இப்படியுமா..?

விட்டுச்சென்ற வியாபாரத்தைக் கவனித்து வந்தவனுக்கு ஒரு காதலி இருந்தாளாம். பிரேமதாசா ஆட்சிக்காலத்தில் அவளையும் பூனைப்படை தீர்த்துக் கட்டிவிட்டதாம். அதனால் விரக்தியுற்றவனுக்குப் பின்னர் பல்வேறு நெருக்கடிகளாம். இதனால் புலம்பெயர்ந்து 1991ல் பிரான்ஸ் வந்து சேர்ந்தான்.
பிரான்ஸில் ஒரு சில வருடங்கள் மிகுந்த கஷ்டப்பட்டான். வாய்த்த நண்பர்களும் அப்படி. பின்பு பிரெஞ்சு மொழியும் ஒரளவு கற்று பகுதி நேர வேலையும் செய்து தன்னை நிலைப்படுத்தியும் வந்தான். ஓரிரு தமிழ்க் குடும்ப நணர்பர்களுடனேயே நெருங்கிப் பழகி வந்தான். பணத் தட்டுப்பாடு ஏற்பட்டால்கூட அந்த ஒரிரு நண்பர்களிடமே உதவியும் பெறுவான். அல்லது இலண்டனிலுள்ள அக்காவிடம் கேட்டுப்பெறுவான்.
மனதில் வஞ்சகம், சூது, பொறாமையற்ற அற்புதமான இதயம் கொண்ட அந்த நண்பனின் பெயர் குலரத்தினா. எனத் தொடங்கி நீளும் பெயர். ஜோர்ஜ் என்பது தான் அவனது செல்லப் பெயர். அந்தப் பெயரில் அவனைத் தெரியாத இலங்கைக் குடும்பத்தினர் பிரான்ஸ் துலூஸ் நகரில் கிடையாது. அத்தனை மக்களினதும் இதயங் கவர்ந்த இனியவன். நல்லவன். . எம்மவர் எவராவது உதவி கேட்டால் இயன்றவரை உதவுவான்.
இலங்கையில் தந்தையாரின் வியாபாரத்தின் பொருட்டு பல வாகனங்கள் இருந்தனவாம். அதனால் அவன் இளமைக் காலத்திலேயே சிறந்த வாகனச் சாரதியாகவும் இருந்தான். இங்கு அவனது நெருங்கிய ஓரிரு நண்பர் குடும்பத்தினர் துலூஸ் நகரிலிருந்து ஐரோப்பாவினர் எந்த நாட்டிற்கோ, நகரத்திற்கோ போவதென்றால் அவனர்தானி வாகனம் ஒட்டிச்செல்வான்.
அன்றும் அவ்வாறே. . அவனது நெருங்கிய நண்பன் உலகநாதன் குடும்பத்தினர் பாரிஸ் நகரம் போகையில். காரை அவனே ஒட்டிச்சென்றான். அதிகாலை மூன்று மணியளவில். பெருந்தெரு பெற்றோல் நிலையமொன்றில் காரை நிறுத்திக் கோப்பி குடித்து சிகரெட்டும் புகைத்துவிட்டுப் புறப்பட்டனர். அரை மணித்தியாலம் கடந்திருக்கும். . பெருந்தெருவில் கார்
இப்படியுமா..? 43

Page 24
சுமார் 110 கி. மீ வேகத்தில் போய்க்கொண்டிருந்தது. திடீரென என்ஜின் இயங்க மறுக்கிறது. ஒருவாறு காரை பக்கவாட்டில் செலுத்தி நிறுத்திவிட்டு என்ஜினை தொடர்ந்து இயங்க வைக்க முயற்சித்துக்கொண்டிருந்தான். வெளியில் ஒரே பனிப்புகார். அது கார்த்திகை மாதப் பிற்பகுதி. . அருகில் வரும் வாகன வெளிச்சமே பணிப்புகாரில் தெரிவது கஷ்டம். அதிகாலை 3.30 மணி கடந்த வேளை. . பின்னால் வந்துகொண்டிருந்த பார வண்டி பக்க வாட்டில் நின்று கொண்டிருந்த காரை அடித்து நொருக்கிச் சென்றது. அந்தோ..!
அந்த மனிதன் ஜோர்ஜின் தலையின் பிற்பகுதியில் பலத்த அடி. அவனுக்கு நினைவு மயங்கி வந்தது. காரில் ஜோர்ஜ்க்குப் பக்கத்தில் முன் ஆசனத்தில் இருந்த உலகநாதனுக்கு அதிர்ஷ்டவசமாக சிறு காயம்தான். .
“என்ர அம்மாள் ஆச்சியே." என்று கத்தியவாறு தனது பக்கத்துக் கதவை உதைத்துத் திறந்து கொண்டு இறங்கிய உலகநாதனர் பினர் ஆசனத்தில் காயங்களுடனர் முனகிக்கொண்டிருந்த மனைவியையும் இரு பிள்ளைகளையும் கீழே இறக்கிவிட்டான். ஜோர்ஜ மச்சான். ஜோர்ஜ். என்று அவனை அழைத்தால் ம். ம். ம். என்ற சத்தமே அவனிடமிருந்து வந்தது. ஆம்புலன்ஸ். ஹெலிகாப்டர். எல்லாம் வந்து அனைவரையும் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்சென்றன.
உலகநாதனர், மனைவி, பிள்ளைகள் காயங்களுடன் ஒருவாறு தேறிவிட்டனர். ஆனால் ஜோர்ஜ். . கோமா நிலையிலேயே இருந்தான். இலண்டனிலிருந்து டாக்டர்களான அக்காவும் கணவரும் வந்து பார்த்தனர். மார்கழி மாதம் பிறந்து மறுநாள். . அவனது ஆவி பிரிந்து விட்டது.
துலூஸ் நகரிலிருந்து சுமார் 600 கி. மீ தூரத்திலுள்ள காப்பகத்தில் வைக்கப்பட்டிருந்த அவன் உடலை இறுதி வேளை போய்ப் பார்த்த எனக்கு. . அந்த மனிதனை. நண்பனை. கூவி அழைத்தேன். கதறி அழுதேன். கண்ணிர்விட்டேன். எண்ண அலைகள் மோதக் கலங்கி நின்றேன்.
அவனது விருப்பப்படி உடல் இலங்கைக்கு எடுத்துச் செல்லப்பட்டு களுத்துரையில் தகனஞ் செய்யப்பட்டது.1 52 வயதில் அவனது வாழ்வு முடிந்துவிட்டது. ஆனால்.
44 இப்படியுமா..?

நாங்கள். நண்பன் உலகநாதன் குடும்பம் அவனை நினைந்து நினைந்து ஆறாத் துயரில் ஆழ்ந்துள்ளது.
நானர் அவனைக் கடைசியாக அவனது வீட்டில் சந்தித்தபோது “மச்சான். . ரெலிபோனைத் தூக்கி வைச்சிற்று நித்திரை கொள்ளாதை. . தனி ஆளா இருக்கிறனி. .
ரெலிபோண் தான் உனக்குதவி. . ரெலிபோன் வேலை செய்யாட்டி. எங்களுக்குப் பயமா இருக்கும். . உனக்கு என்னாச்சோ. . எண்டு நினைப்பம்." என்று நான் கூறியதும்,
“மச்சாங். அப்படி ஏதும் நடந்தா, நீங்க தானே பாப்பீங்க. . லண்டன் அக்காக்கு அறிவிச்சு. ‘என்னை” களுத்துறைக்கு அனுப்பிப் போடுங்கோ. மச் சாங். ...” என்றல்லவா கூறியிருந்தான். அப்படியே ஆகிவிட்டதே. .
ஒன்றரை வருடத்திற்கு மேலாகியும் அந்த இனிய நண்பனை மறவாது தினசரி நினைத்துக் கொள்கின்றேன். அவன் எண்ணத்தில் நிறைந்த இலங்கைத் தாய் நாட்டில் என்று சாந்தியும் சமாதானமும் நிலைக்கும்.? சமத்துவம், சகோதரத்துவம் வேண்டும்.? நம்பிக்கை தானே வாழ்க்கை.
இப்படியுமா..? 45

Page 25
ர்ேனாமிப் பேரலை அடித்து. . ஆறு மாதங்களுக்கு மேலாகிவிட்டது. ஊரில் எனக்குத் தெரிந்த சிலர் விபரமாகக் கடிதங்கள் எழுதியிருந்தனர். அன்று. தொலைக்காட்சி மூலம் செய்தியறிந்ததும் உடனேயே தொலைபேசி எடுத்து கொழும்பில் சகோதரர்களிடம் பேசி விபரங்கள் தெரிந்து கொண்டேன்.
தொலைக்காட்சியில் மீண்டும் மீண்டும் காட்டப்பட்ட அழிவுகளைப் பார்த்து இதயம் படபடத்தது.
இன்றும் அதனை மறக்க முடியவில்லை.
நித்திரைக்குப் போனால். இராட்சத அலைகள் பேரிரைச்சலோடு. ஆயிரக்கணக்கானவர்களோடு சேர்ந்து ஒடும் என்னையும் கலைத்துக்கொண்டு வருகிறது.
என்ன அவலம்.
நேற்று ஒரு கடிதம் வந்தது. எழுபதுகளில் என்னுடன் பழகிய ஒரு தோழர்.
எண்பத்தோராம் ஆண்டு நடந்த அவன் திருமணத்திற்குக் கூடப் போயிருந்தேன்.
அன்பான மனைவி.
46 இப்படியுமா..?
 

அழகான இரு பெண் குஞ்சுகள் பிறந்தன. அவன் நல்ல இலக்கிய இரசிகன்.
கவியரங்குகளின்போது எண் கவிதைகளை இரசித்துக் கேட்டுப் பாராட்டியவன்.
வெல்டிங் ஒட்டுவேலை செய்தும், சைக்கிள் வாடகைக் கடை நடாத்தியும் உழைத்து வந்தவன்.
கபடமற்ற மனத்தினன்.
இராணுவ நடவடிக்கைகளால் பல இடங்களுக்கு அவன் இடம் பெயர வேண்டியிருந்தது.
ஆனாலும் ஒரு நாள் இனந்தெரியாதோரின் துப்பாக்கி அவனைப் பலிகொண்டு விட்டது.
சில மாதங்களுக்குப் பின்னர் தான் செய்தி அறிந்தேன்.
அப்போதுங்கூட அவன் குடும்பத்தினர் எங்கே இருக்கின்றனர் என்ற விபரம் கிடைக்கவில்லை. .
நேற்று வந்த கடிதம் அவன் மனைவி எழுதியதுதான். .
"அன்புள்ள அண்ணா அறிவது. உங்கள் நண்பர் இறந்து வருடங்கள் பல ஆகிவிட்டதனை அறிந்திருப்பீர்கள். என் கடிதம் உங்களுக்கு ஆச்சரியமளிக்கும். உங்கள் குடும்ப நிலைமை எப்படியோ எனக்குத் தெரியாது.
உங்களைத் தெரிந்த நல்ல மனிதர் ஒருவர்தான் உங்களது பாரிஸ் முகவரியைத் தந்துதவினார். எங்களுக்கு இரு பெண் பிள்ளைகள். உங்களுக்கு அவர்களை சின்னஞ் சிறுசுகளாகக் கண்டு ஞாபகமிருக்கலாம். எங்கள் வாழ்க்கை நிலைமை மோசமாகிவிட்டது.
எங்கள் வீடு வளவு இராணுவ வலயத்திறகுள் சிக்கிவிட்டதை அறிந்திருப்பீர்கள். அங்கு போய்க் கூட பார்க்க முடியாது. பல இடங்களில் இடம் பெயர்ந்து வசித்து, தற்போது வட்டுக்கோட்டையில் ஒரு வீட்டுக்காரரின் புண்ணியத்தில் அவர்களது சிறிய வீட்டின் கோடித் தாழ்வாரமாக பத்தி இறக்கி இருக்கிறோம்.
இப்படியுமா..? 47

Page 26
கடந்த ஒரு வருடமாக இங்குதாணி இருக்கிறோம். அவர்களும் தங்களுக்கு இடைஞ்சல் என்றும் விரைவில் வேறு இடம் பார்த்துப் போகுமாறு கண்டிப்பாக கூறிவிட்டனர்.
பிள்ளைகள் இருவரும் பெரிய பிள்ளைகள். பொத்திப் பொத்தி வளர்த்தனான்.
நிவாரண உதவியெண்டு கொஞ்சம் தந்தாங்கள். . இப்ப அதுவும் நிப்பாட்டிப் போட்டாங்கள்.
நகை நட்டு ஒன்றும் இல்லை. எல்லாம் வித்துத்தான் பிள்ளைகளின் படிப்பையும் கவனித்து, உயிரையும் மானத்தையும் இதுவரை காப்பாத்தி வந்தோம்.
பிள்ளைகள் இருவரும் ஜி. சி. ஈ சாதாரண தரம் சித்தியடைந்துவிட்டார்கள். மேலே படிக்க வசதியில்லை.
நானும் பிள்ளைகளும் தையல் வேலை செய்தும் பலகாரம் செய்து விற்றும் ஒரு மாதிரி உயிரைப் பிடிச்சு வைச்சிருக்கிறம்.
தற்போது நிலைமை மோசமாகிவிட்டது. அரைப் பட்டினி. வாழ்க்கை. மாத்திட்ட துணியில்லாத நிலைமை. பிள்ளைகளைப் பற்றி நினைக்க நினைக்க நித்திரையில்லை.
சின்னச் சின்ன கடன் தொல்லைகள் வேறு. . இனிமேல் பொறுக்கமுடியாத நிலை. . ஆரிடமும் உதவி கேட்க முடியவில்லை.
மருந்து மாயம் குடிச்சோ, கிணத்தில, குளத்தில விழுந்தோ சாகவேனும் போலிருக்கும். ஆனால். அவர் தந்த வாழ்க்கைப் போதனைகள். எம்மைக் கோழைகளாக்கிவிட வில்லை. . தைரியத்தோடு. .
பிள்ளைகளை மானத்தோடு வளர்க்க வேணும். எத்தகைய துன்பம்வரினும் கேவலமாக வாழமுடியாது. .
உங்கள் நண்பரின் நல்ல மனசும், தன்னம்பிக்கையும் உங்களுக்கு விளங்கும்தானே.
அவரினர் நினைவுகள் தானி எம்மைக் காப்பாற்றி வைத்திருக்கின்றன.
48 güUleguqLDIT...?

உங்கள் நண்பருக்காகவும், உங்கள் உடனர் பிறவாச் சகோதரி, பிள்ளைகளாக எங்களை நினைத்தும் உங்களால் ஏதும் உதவமுடியுமா..? நாங்கள் வேறு ஒரு வீடு பார்த்துப் போக வேண்டும்.
ஏதாவது சிறு வேலை, தொழில் செய்து பிழைக்கவேண்டும். பிள்ளைகளை மானத்தோடு வாழவைக்க வேண்டும். எண்செய்வேன் அண்ணா..?
உங்களால் இயனர்ற உதவியை எதிர்பார்க்கிறேனர். மேற்கணிட முகவரியில் தானி இம்மாதம் முடியும்வரை தங்கியிருப்போம்.”
என் முன்னால் எண் நண்பன் குடும்பம் தெரிகிறது. அந்தக் கடிதம் எனது கோட் பொக்கற்றில் தான் இன்னும் இருக்கிறது. கொழும்பில் எனக்குத் தெரிந்தவரின் பெயருக்கு நூறு ஈரோ அனுப்பி அதனை அங்கு உடன் கிடைக்க ஆவன செய்யுமாறு சொல்லிவிட்டேன்.
அந்தப் பணம் அங்கு பன்னிரண்டாயிரம் ரூபா வரையில் கிடைத்திருக்கும்.
ஆனால். . எண்மனம். . அந்தப் பணம் அவர்களுக்குச் சிறிய தேவைக்குத் தானும் போதுமா..?
எனது நிலைமை அவர்களுக்குத் தெரியுமா? எனக்கும் இரு பெண் பிள்ளைகள். பெரியவர்கள். முன்னர் தனியாகத் தொழில் செய்யவென வங்கிக்கடன் எடுத்திருந்தேன்.
தொழில் நட்டத்தில் முடிந்து விட்டது. வங்கிக்கடனர் முடியவில்லை.
தற்போது உணவகமொன்றில் வேலை. கிடைக்கும் சம்பளத்தில் வங்கிக்கடன் கழித்து, வீட்டு வாடகை, மின்சாரம், தண்ணிர் என பலவற்றுக்கும் வெட்டினால் மாதம் முடிய கையில் சில்லறைக்காசுகூட மிஞ்சாது.
உதவி செய்ய மனம் துடிக்குது. எண் செய்வேன். பணமில்லையே. யாரிடமும் கடன் பெறவும் முடியாது.
இப்படியுமா..? 49

Page 27
இங்கு பணம் வைத்திருப்பவர்கள் மேலும் மேலும் பணம் தேடவும், வீடு வளவு, வாகனம், வசதி தேடவும், வங்கிக்கணக்கில் பணத்தை நிரப்பவும் ஆவலாய் பறக்கிறார்கள். மனச்சாட்சி மனிதாபிமானத்தை அவர்களிடம் எதிர்பார்க்க (ՄիջեւIIIՑl.
இரவுவேலை முடிந்து, பஸ் எடுப்பதற்கு கொஞ்சத்தூரம் நடக்க வேண்டும். நேரம் நள்ளிரவுக்கு இன்னும் பத்து நிமிடங்களே இருக்கினர்றன. இதுவே கடைசி பஸ். எட்டிநடக்கின்றேன்.
வீதிக்கரையில் பெரிய மரத்தின் கீழ் நின்ற, சுமார் பதினைந்து வயதுடைய பொலிவான தோற்றமுள்ள சிறுமி ஒருத்தி புன்சிரிப்புடன் என்னை நோக்கி வருகிறாள்.
இவளது வாழ்க்கைக்கும் என்ன தேவையோ..?
அவளைப் பார்த்தும் பாராததுபோல். மனம் அலைபாய. . நள்ளிரவு பஸ் புறப்படும் இடத்தை நோக்கி மிக வேகமாக நடக்கின்றேன்.
50 இப்படியுமா..?

வாசலில் அழைப்பு மணியை அழுத்தமாக அழுத்தினான் உதயகுமார். நேரம் இரவு பதினொன்று முப்பதுக்கு மேலாகிறது. சிரிப்பை வலுவில் வரவழைத்துக்கொணர்டு வந்த சில்வியா கதவைத் திறந்தாள்.
“மாலை வணக்கம். ஷெரி. வாங்கோ." எனப் பிரெஞ்சு மொழியில் கூறியவாறு அவனின் கன்னங்களில் முத்தமிட்டு அணைத்தவாறு வரவேற்பறைக்குக் கூட்டிச் சென்றாள். உள்ளே அறையில் ஒரு கட்டிலில் ஒன்பது வயதுப் பிள்ளை ஜெசிகா
“ஷெரி. சாப்பிடுவோமா." எனக் கேட்டாள். “வேண்டாம். நான் சாப்பிட்டுவிட்டேன்." என்றான் உதயன். “நோ. நோ. கொஞ்சம் எனக்காக. சான்விச்-சாவது சாப்பிடுங்கோ." என்றவாறு உதயனின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு குசினிக்குள் சென்றாள்.
“ஏதாவது குடிக்கத்தரவோ. "வைனை எடுங்கோ" என்றான் உதயன். ஒரு ‘போதோ வைன்' போத்தலை எடுத்துத் திறந்து கொடுத்தாள். உதயனர் அதனை வாங்கிக்கொணர்டு வரவேற்பறைக்கு வந்து மேசையில் அதனை வைத்துவிட்டு
இப்படியுமா..? 51

Page 28
உட்கார்ந்தான். இரண்டு கிளாசுகளைக் கொண்டு வந்து வைத்தாள். அதனுள் வைனை ஊற்றி, ஒரு கிளாசை உதயனிடம் நீட்டினாள். உதயன் ஒரு இழுவையில் அதனை உறிஞ்சிவிட்டு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தான். அவளும் வைனை சிறிது உறிஞ்சிவிட்டு ஒரு சிகரெட் வாங்கி மூட்டிக்கொண்டாள்.
உதயன் பாரிஸ் நகருக்கு வந்து பதினைந்து வருடங்களுக்கு மேலாகிறது. பிரெஞ்சு பிராஜாவுரிமையும் கிடைத்து நான்கு வருடங்கள் கழிந்துவிட்டன. கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு மூன்று நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் துப்பரவு வேலை செய்யும்போது தான் அவன் சில்வியாவைச் சந்தித்தான்.
காலை ஏழு மணிக்கு ஹோட்டலில் துப்புரவு பகுதியில் சமூகமளிக்கவேண்டும். அங்கு பொறுப்பாகவுள்ளவள் சமூகமளித்துள்ளவர்களுக்கு எத்தனை அறைகள் எனப் பங்கிட்டுக் கொடுப்பாள். நான்கு மணித்தியாலம், ஆறு மணித்தியாலம் 6T6OT வேலை செய்வார்கள். ஒருமணித்தியாலத்தில் நான்கு அறைகள் வரை சுத்தம் செய்வார்கள்.
உதயன் பாரிஸ் வந்த காலத்தில் பகுதி நேரமாக சிறுசிறு வேலைகள் தான் செய்துவந்தான். பின்னர் நண்பன் ஒருவனின் சிபாரிசின் பேரில் இந்த வேலை கிடைத்தது. அங்கு ஆறுக்கு மேற்பட்ட பெண்களும் இரு ஆணிகளும் தான் வேலை. உதயனோடு வங்காள தேசத்தைச் சேர்ந்த ஒருவனும் வேலை செய்தான்.
சுத்தம் செய்வதற்கு முன்பு ஒரு தள்ளு வணர்டியில், அறைகளுக்குரிய கம்பளிகள், துவாய்கள், குளியலறை துப்புரவுக்கான மருந்து, கணிணாடி, மேசை என்பன துடைப்பதற்கான மருந்து, ‘சம்போ பக்கெற்றுகள்’, சிறிய சவர்க்காரக் கட்டிகள், “ஜெல் மூசோனி பக்கெற்றுகள் போன்றவற்றைத் தேவைக்கேற்றவாறு எடுத்து அடுக்கிக்கொள்ள வேண்டும். அதற்கான பதிவேட்டில் அவை குறித்துப் பதிந்து பின்பு, தூசி இழுக்கும் "மெசினிை’யும் தள்ளிக்கொண்டு ஒவ்வொரு அறையாகச் சென்று கட்டில்களில் ‘பெட்சிட்', கம்பளி, தலையணை உறை என்பனவற்றை மாற்றி
52 இப்படியுமா..?

மலசல கூடம் உட்பட யாவும் பளிச்செனத் துப்புரவு செய்ய வேண்டும்.
அங்கு அறையில் தங்கிச் சென்றோர், அல்லது தங்கியிருப்போர் மிச்சமாக விட்டுள்ள சாப்பாட்டுப் பொருட்களைத் துப்புரவு செய்வோர் சிலர் எடுத்து ஒரு பையில் போட்டு மறைத்து வீட்டுக்கு எடுத்துச் செல்வது முண்டு. சிலவற்றை அங்கேயே சாப்பிடுவதுமுணர்டு. அறையில் தங்கியிருப்போர் சிலர் கட்டிலில் தலையணைக்குக் கீழ் சில்லறைக்காசு சந்தோசமாக வைத்திருந்தால் அதனையும் எடுத்துக்கொள்வர். அறையில் தங்கியிருப்போரின் விலையுயர்ந்த பொருட்கள் சிலவற்றை ஒருசிலர் திருடிவிடுவது முண்டு. அந்த ஹோட்டலில் ஒரு தடவை அவ்வாறு நடந்து விசாரணை நடைபெற்று இருவர் வேலை நீக்கம் செய்யப்பட்டதுமுண்டு.
அங்கு அறிமுகமாகிய சில்வியாவின் நட்பு கடந்த ஏழு வருடங்களாகத் தொடர்கிறது. பாரிஸ் புறநகர் பகுதியில் சில்வியா குடியிருக்கிறாள்.
தற்போது உதயனர் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்கின்றான். காலை ஒன்பது மணி முதல் பிற்பகல் ஐந்து மணிவரை வேலை. சிலவேளை மேலதிக வேலையும் செய்வான். சனி பிற்பகல், ஞாயிறு விடுமுறை. விரும்பினால் சனி பிற்பகலும் வேலை செய்ய முடியும். மருந்துகள், இரசாயனப் பொருட்கள் பெட்டிகளில் அடைக்கப்படும் தொழிற்சாலை. உதயனைப் பொறுத்தவரையில் அது இலகுவான வேலை, நல்ல சம்பளம். மாதம் 1650 ஈரோவுக்கு மேல் கிடைக்கும்.
உதயன் கடந்த சில வருடங்களாக இரண்டு இடங்களில் சீட்டு க்கட்டி வந்தான். சீட்டு எடுத்த பணத்தை வங்கியில் போட்டு வைத்துள்ளான். கொஞ்சக்காசை கடை வைத்திருக்கும் நண்பன் ஒருவனுக்கு வட்டிக்கும் கொடுத்துள்ளான். அவனது நீண்ட நாள் இலட்சியம், ஈழத்தவரினர் பொதுவான நினைப்புப்போல. . ஒரு வீடு வாங்க வேண்டும். அத்துடன் ஒரு பலசரக்கு கடை அல்லது “றெஸ்ரோறன்ற் திறக்க வேண்டும் என்பது தான்.
பலவிதமாகவும் உழைத்து வங்கியில் ஒரு இலட்சம் ஈரோவுக்கு மேல் சேர்த்துவிட்டானர். அந்தப் பணத்தை
இப்படியுமா..? 53

Page 29
இலங்கைப் பெறுமதியில் பெருக்கிப் பார்த்தவாறு நித்திரை கொள்வதில் ஆனந்தம் அதிகம்தான்..!
வீண் செலவு எதுவும் கிடையாது. ஒய்வு வேளையில் ‘தணிணி அடிக்கும் பழக்கமுண்டு. அதுவும் அதிகமான வேளை "ஒசி"யில்தான்.
பாரிஸ் புறநகரில் ‘மெற்றோ’வில் போய் இறங்கக்கூடிய இடத்தில் ஒரு சிறிய “ஸ்ரூடியோ? அறையில்தான் தங்கி இருக்கிறான். தூரத்து உறவினனான ஈஸ்வரமூர்த்திதான் அவனது அறைத்தோழன்.
ஈஸ்வரமூர்த்திக்கு ‘சுப்பர் மார்சே ஒன்றில் காவலாளி வேலை. சில நாட்கள் பகலிலும் சில நாட்கள் இரவிலும் வேலை செய்ய வேண்டும். மனைவி, பிள்ளைகள் கொழும்பில். மாதா மாதம் பணம் அனுப்பவேண்டும்.
முப்பத்தெட்டு வயதுக்கு மேலாகியும் உதயனுக்கு திருமணம் செய்துவைக்கவில்லையே என ஊரில் வசிக்கும் பெற்றோருக்குப் பெருங்கவலை.
அயல் கிராமமான உரும்பிராயைச் சேர்ந்த பட்டதாரிப் பெண்ணைப் பேசிவைத்துவிட்டு உதயனுக்கு வற்புறுத்தி கடிதம் எழுதியிருந்தனர்.
யாழ். பல்கலைக்கழக நுணர்கலைப் பட்டதாரியான பெண்ணுக்கு வயது முப்பது. சீதனப் பிரச்சனை, செவ்வாய் தோசம் என இழுபட்ட கல்யாணம் இப்போது தானி பொருந்தியுள்ளது. பன்னிரெண்டு இலட்சம் காசு, வீடுவளவு, நகை எனப் பெற்றோர் பேசி முடிவு செய்துள்ளனர்.
‘சான்விச்சை கொண்டு வந்து மேசையில் வைத்தாள் சில்வியா. ஒரு போத்தல் முடிந்து, இன்னொரு போத்தல் வைனும் காலியாகிறது. நல்ல தூக்கம் வருவது போலிருந்தது. அறையிலுள்ள கட்டிலுக்கு உதயனை அணைத்தவாறு அழைத்துச்சென்றாள்.
காற்சட்டையையும் சேட்டையும் தள்ளாடித் தள்ளாடிக் கழற்றி எறிந்துவிட்டு கட்டிலில் சாய்ந்தான் உதயன். சில்வியாவும் பக்கத்தில்.
அதிகாலை நான்கு முப்பது. . எழுந்து சென்று சலம் கழித்துவிட்டு மீண்டும் வந்து படுத்தான். அவனது கறுத்த
54 9ÜUigu|LOT...?

மார்பில் காடாக வளர்ந்திருந்த மயிர்களுக்கிடையில் சில்வியாவின் சிவந்த கரங்கள் நுழைந்து துளாவியபடி இருந்தன. . அவளை இறுக்கி அணைத்தவாறு அவளது பிடரிப்பக்கமாக, அரையடி நீளமான செம்பட்டை மயிரை அவன் ஒரு கையால் கோதியபடி கிடந்தான்.
“ஷெரி. உங்களைப்போல. ஒரு பிள்ளை பெற எனக்கு ஆசை. எவ்வளவு நாளாக கேட்கிறன். சொந்தமாக தொழில் தொடங்கின பிறகு பாப்பம் எண்டு சொல்லிக் கடத்திறியள். . நீங்க தொழில் தொடங்கினா. . நான் இப்ப செய்யிற நாலு மணித்தியால வேலையையும் விட்டுட்டு. உங்களுக்கு உதவுவண்தானே. . அப்ப பிள்ளை பிறந்தாலும் இடைஞ்சல் இல்லைத்தானே. . ஜெசிகாவுக்கு ஒன்பது வயது முடிஞ்சுது. அவள் தன்ர அலுவல்களை தானே பாப்பாள். அவளும் ஒரு சகோதரம் வேணுமெண்டு சிலநேரம் கேக்கிறவள். என்ன ஷெரி. . சொல்லுங்கோவன். .
“ம். ம்..ம். அதுக்கென்ன. .
"நாங்க மேரியில போய் ரெஜிஸ்ரர் கல்யாணம் செய்வமா. . எத்தனை நாளைக்கு இப்படி. . நண்பர்களா இருக்கிறது.
"உனிர குப்பணி போர்த்துகீசுக்காரனோட இப்ப தொடர்பில்லையா. .”
“அவனர் விசரன். கிழட்டுக் குடிகாறனர். எனினட்ட குடிக்கிறதுக்குத் தான் வாறவன். குடிச்சுப்போட்டு. .
கனப்பேயில பிரண்டு போய் கிடந்திட்டு போயிருவான். .
"உனக்கு நாப்பது வயது முடிஞ்சும். தக்காளிப்பழம் போலத் தான் இருக்கிற.” அணைப்பால் இறுக்கி அவளை உறிஞ்சி முத்தமிட்டான்.
"நான் கேட்டதுக்கு ஒண்டும் சொல்லுறியள் இல்லை. . செல்லச் சிணுக்கம் போட்டாள் சில்வியா.
“சரி. சரி. . அடுத்த மாதம். நான் ‘மேரி”யில நாள் கேட்டுச்
சொல்லுறன். . என்றான்.
ஆசையாக. அவனது கறுத்த உதடுகளைக் கவ்வி இழுத்து முத்தமிட்டாள். காலை பத்துமணிக்குமேல் சோம்பல் முறித்தான். கால், கை. மூட்டுகள் உளைவெடுத்தன.
இப்படியுமா..? 55

Page 30
சில்வி. சில்வி. ஷெரி. எழும்புங்கோ.
அவள் எழுந்து போய் கோப்பி போட்டுக் கொண்டு வந்து கொடுத்தாள்.
கோப்பியைக் குடித்துவிட்டு எழுந்தவனிடம். ஷெரி. காசு. ஏதும் இருக்குதோ. வாடகைக் காசு கட்டேல்ல. ஏஜென்சிக்காரன் கடிதம் அனுப்பிப்போட்டான். இருந்தா. தாங்கோ. ஷெரி.
வாடகைக்காசு முழுவதும் கட்ட இப்ப எண்ணட்ட காசு இல்லை. இருநூறு ஈரோ தான் இருக்கு. என்று சொல்லி எடுத்துக் கொடுத்தான்.
வெளியில் எந்தவித செலவும் செய்யாத உதயன் இந்த விடயத்தில் மட்டும் காசு கொஞ்சம் இழக்குவான்.
வாடகை, மின்சாரம், தண்ணிர் காசு கட்ட வேண்டும் என அடிக்கடி சில்வியா அவனை அணைத்துக் கேட்டு வாங்கிக்கொள்வது வழக்கம்.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஐந்து மணி கடந்துவிட்டது. தனது அறையில் கட்டிலில் கால் கையை எறிந்து குப்புறக் கிடந்தான் உதயன்.
ஒரு 'விஸ்கி" போத்தல், முருங்கைக்காய், சின்ன வெங்காயம், ஆட்டிறைச்சி, நொருங்கிய பசுமதி குறுணி அரிசி உட்பட இன்னும் சில பொருட்களுடன் அறைக்கு வந்து சேர்ந்தான் ஈஸ்வரமூர்த்தி வந்தவனுக்கு, உதயன் கிடக்கும் கோலத்தைப் பார்த்ததும் ஆத்திரமாக இருந்தது.
"இரவு றுாமுக்கும் வராம. சரக்கிட்ட போயிற்று வந்து களைச்சுப் போய் கிடந்து மூசுறார்.” எனத் தனக்குள் சொல்லிக்கொண்டான்.
இறைச்சி மற்றும் பொருட்களை குசினி மேசையில் வைத்துவிட்டு, குளிர்சாதனப் பெட்டியில் இருந்த தண்ணிர் போத்தலை எடுத்தான். விஸ்கிப் போத்தலைத் திறந்து ஜஸ் தண்ணிரும் கலந்து ஒரு கிளாசை ஒரு மூச்சில் இழுத்துவிட்டு’ உரத்த செருமலுடன். உதயனைத் தட்டி எழுப்பினான்.
“டேய். உதயன். எழும்படா. ராத்திரி சரக்கிட்ட போயிற்று வந்து, இப்ப பகல் முழுவதும் உடம்பு உளைவில் கிடக்கிறாய்
56 இப்படியுமா..?

போல. எனின. உணர்ர அம்மா எனக்குக் கடிதம் போட்டிருக்கிறா. . நேற்றுத்தான் கிடைச்சுது. உன்னோட கதைப்பமெண்டா. நீயும் இரவு றுTமுக்கு வரேல்ல. . '' 6T6OT இழுத்தான் ஈஸ்வரன்.
“என்ன சொல்லி எழுதியிருக்கிறா." எனக் கேட்டான்.
"உனக்குப் புத்திசொல்லி இந்தக் கலியாணத்துக்கு ஒழுங்கு செய்யட்டுமாம். பாவமடா. அவையள். . உண்ர வயதைப் பற்றி கவலைப்படுகுதுகள். உண்ர திருக்கூத்துகள் அவையஞக்கு தெரியுமா. நல்ல பிள்ளையா. இந்தக் கலியாணத்தைச்
செய்யடாப்பா. நல்ல சீதனமும் பேசி வச்சிருக்கினம். . 6T6UT அன்பாகச் சொன்னான் ஈஸ்வரன்.
“எனக்கும் முந்தநாள் கடிதம் கிடைச்சதுதான். நான் என்ன விசரனே. ஓம். சொல்லி நேற்றுக் கடிதம் எழுதிப் போட்டிட்டு தான் மற்ற வேலைக்குப் போனனான். .”
மற்ற வேலையெண்டு. அவளிட்ட தானே போய் கிடந்திற்று வந்திருக்கிற. அவளையளிர் உணர்னை உரிச்சுப் போடுறாளையஸ். காசுகளை அழிச்சுத் துலைக்காதை. .
"நான் . எல்லாம் காரியத்தோடதான். அவள் வாடகைக் காசு கொடுக்கவெண்டு. அடிக்கடி 'செக் கேப்பாள். எண்ர பேரில "செக் குடுத்தா. பிறகு ஆபத்தா முடியும்.நான். காசாத்தானி கொஞ்சம் உதவி செய்யிறனானர். அவள் எனக்கெண்டு பிள்ளை பெற வேணுமாம். அதோட கலியாணத்தை 'ரெஜிஸ்ரர்' பண்ணுவமெண்டு ஆக்கினை பண்ணுறாள். அவள் காரியத்தோட தான். பிள்ளை பிறந்தா காசு. அதைச்சாட்டி என்னட்டையும் தொந்தரவு செய்து காசு பிடுங்கலாம். வீட்டு வாடகைக்கு நான் 'செக் குடுத்தனெண்டு “புறுTவ் பணிணலாம். எணர்டு பெரும் பிளானர். இதுகளெல்லாம் எனக்கு விளங்காதே. ராத்திரியோட அவளைக் கை கழுவியிற்றன்.”
"அப்ப. எப்ப ஊருக்குப் போற. கலியாணம். தாய் தகப்பனை கடைசிக் காலத்தில் மனவருத்தப்பட விடக்கூடாதெல்லே. .”
“எல்லாம் எனக்குத் தெரியாதே. வாற மாதம் 15ம் திகதி மட்டில. சிங்கப்பூருக்கு பெம்பிளையை கூட்டிக்கொண்டு
இப்படியுமா..? 57

Page 31
வரச்சொல்லி விபரமா எழுதிப் போட்டிட்டன். ரெலிபோனிலையும் விபரமா நாளைக்கு கதைப்பண். மாதவன்ர ஏஜென்சிக்குப் ‘போன் ‘பணிணி சிங்கப்பூருக்கு "ரிக்கற்றும் ஒழுங்கு பண்ணியிற்றன். பிறகென்ன. உனக்கும் இப்பதான் என்னைப் பற்றி சரியா விளங்கும்.” என்றான் உதயண்.
பிரசாவுரிமை இருந்தாலும் உதயனுக்கு ஊருக்குப் போக கொஞ்சம் பயக்கெடுதி. யாழ் இந்துக் கல்லூரியில் க. பொ. த. சாதரணதரப் பரீட்சையில் நான்கு பாடங்கள் மாத்திரம் சித்தியடைந்துவிட்டு ஏதோவொரு இயக்கத்துக்குப் பின்னால் திரிந்து நாட்டாமை செய்து காசும் திரட்டிச் சோக்கடிச்சவன்." நிலமை மோசமானதும் தோட்டக் காணியையும் அறாவிலைக்கு விற்றுப்போட்டு, பிள்ளையை வெளிநாட்டுக்கு ஒடு’ எனத் தாய் தகப்பன் அனுப்பி வைச்சவர்கள். அதனால் இப்பவும் ஊருக்குப் போக கொஞ்சம் யோசனை.
“சிங்கப்பூரில கலியாணம் முடிஞ்சு. பொம்பிளை ஊருக்குத் திரும்பினதும். ஓரிரு மாசங்களில் ‘பொனர் சர்’ செய்து கூப்பிடலாம் என்ற திட்டம்.”
சரி. கலியாணம் முடிஞ்சதும் உணர்ர ‘பொனர் சர்’ என்னடாப்பா.”
"ஆவணி 20ம் திகதி மட்டில கலியாணம். அக்டோபரில் “ரெஸ்ரோறன்ற் எடுத்திருவன். இப்பவே 'அட்வான்ஸ்’ குடுத்திற்றன். அப்ப. முந்திப்பிந்தி மனுசியும் வந்து சேந்திடும். “ஏஜெனிசி காரணிட்ட. புதுசா கட்டிற வீடு ஒண்டுக்கும் 'அட்வான்ஸ் கட்டிப் போட்டான். 'பாங் லோனும் ஒகே. மனுசி வந்ததும் புதுவிட்டில. நிம்மதியான சீவியம். கடையையும் மனுசி பாத்துக்கொள்ளும். படிச்ச மனுசிதானே. நான் வேலையை விடமாட்டன். ரெஸ்ரோறன்ற் நல்ல நடந்தா’ பிறகு பாத்து வேலையை விடலாம். மனுசிக்கெண்டு கொஞ்ச நகையும் மோகன் கடையில் ஒடர்’ குடுத்திருக்கிறன். இப்ப என்ன
"நீயடா யமனி தான்ரா. எல்லாம் சுழிச்சுக் காரியம் பாத்திடுவ. நான் தான் மனுசி பிள்ளையஞக்கு இஞ்ச. இந்தக் குளிரில மாடா உழைச்சு காசு அனுப்புறன். அவை. அங்க. கொழும்பில சொகுசுச் சீவியம். நாம படுற கஷ்டம் அவைக்கு
58 இப்படியுமா..?

தெரியுமா. என்னவோ. நீ புத்திசாலியடா. எல்லாம் தெரியும். வெல்லுவாய். அது சரி. உண்ர சரக்கை. என்ன ப்ளான். . s
“அது ராத்திரியோட கைகழுவியிற்றன். எண்டுதானே சொல்லுறன். இனி அவளிட்ட வேலையில்லை. அது அழுகின தக்காளிப்பழம் மாதிரி. அவளைக் கை கழுவினதைக் கொண்டாட வேணுமல்லே. உடம்பைக் கழுவிப்போட்டு வாறன். விஸ்கி"யை முடிச்சுப் போடாதை. இறைச்சியை நீதான் ருசியா சமைப்பாய் . அதைக்கவனி.”
உதயனர் எழுந்து குளியலறைக்குள் போய் நன்றாக உடம்பைக் கழுவிவிட்டு வந்து அமர்ந்தான். அவன் மனதிலும் உடலிலிருந்தும் அந்தப் போர்த்துகீச வழிவந்த ‘சில்வியா நினைவை, மணத்தைக் கழுவி. .
இருவரும் விஸ்கி"யை ஊற்றி ‘சிங்சிங் சொல்லி ஒரே மூச்சில் ஒவ்வொரு கிளாசை’ இழுத்தனர். வெளியே பாரிஸ் நகர வர்ண ஜால விளக்குகளை ஜன்னலூடாகப் பார்த்து வாய்விட்டுச் சிரித்துக்கொண்டனர். .
இப்படியுமா..? 59

Page 32
கொழும்பில் அந்த சிறிய 'லொட்ஜ்’ திறக்கப்பட்டு சில மாதங்கள் கடந்துவிட்டன. அதன். உரிமையாளரான தர்மபாலன் கொழும்பில் இன்று தமிழ் வர்த்தகப் புள்ளிகளில் ஒருவனாகிவிட்டான். இளைஞனான அவனுக்கு ஒரு புடவைக் கடையும் சொந்தமாக இருக்கிறது. நகைக் கடையொன்றிலும் பங்கிருக்கிறது. நகை, புடைவை வியாபாரம் சம்பந்தமாக அவன் அடிக்கடி சிங்கப்பூர், கோலாலம்பூர், பாங்கொங் எனப் பறந்து திரிவான்.
அவனது மூத்த சகோதரியின் கணவர்தான் நந்தன். வயது நாற்பத்தொன்று. மூன்று பிள்ளைகளுக்குத் தந்தை. ஒரு ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தில் மனேஜராகப் பல வருடங்களாக வேலை பார்த்தவன். நிறையச் சம்பளம். இலாபங்கள் கிடைத்தன. மிகுந்த செலவாளி. இரவு எட்டு, ஒன்பது மணிவரைகூட வேலைகளைக் கவனிப்பாண். பின்னர் மதுவில் மூழ்கித்தான் நித்திரைக்குப் போவது வழக்கமாகி வந்தது. நண்பர்களும் அதிகம். எவ்வளவு பணம் கிடைத்தாலும் மிச்சம் பிடிக்கத் தெரியாத பேர்வழி. வேலையில் நேர்மை இருந்தது. இளகிய மனம். இவனது நடவடிக்கைகள் காலப்போக்கில் நிறுவனத்தினி உரிமையாளருக்குப்
60 இப்படியுமா..?
 

பிடிக்காததால் இருவருக்குமிடையில் முரண்பாடுகள் முற்றின. வேலையைத் தூக்கியெறிந்து விட்டுப் புறப்பட்டுவிட்டான்.
மைத்துனர் வேலையிழந்ததை அறிந்த தர்மபாலன், அவனை அழைத்து தனது 'லொட்ஜ்ை’ கவனிக்கும்படி விட்டுவிட்டு தனது வியாபாரப் பயணங்களில் கவனஞ்செலுத்தி வந்தான்.
அந்த 'லொட்ஜ்ை’க்கு ஒரு நாள் மாலை வந்து சேர்ந்தாள் ழரீதேவி. தூரத்து முறையிலான சிறிய தகப்பன் ஒருவருடன் வந்து 'றும் எடுத்துத் தங்கினாள். மறுநாள் அந்த மனுஷன், தான் வேலைக்குப் போகவேண்டுமெனக் கூறி ஹட்டனுக்குப் பயணமாகிவிட்டார். அவர் தலவாக்கொல்லை தோட்டத்துப் பாடசாலையொன்றில் ஆசிரியராம். அவர் போகும்போது மனேஜரான நந்தனிடம், “தம்பி, பிள்ளை கலியாணம் முற்றாகி பாரிசுக்குப் போக வந்திருக்குது. மாப்பிளைப் பெடியன் அங்கயிருந்து பிரயாண ஒழுங்குகள் செய்திருக்கிறான். போகுமட்டும் கொஞ்ச நாள் இஞ்ச தங்கட்டும். காசு தருவா பிள்ளை. நான் வேலைக்குப் போக வேணும். பாத்துக் கொள்ளும் தம்பி.” என்று சொல்லிட்டுப் போனவர் பின்னர் அந்த பக்கமே எட்டிப் பார்க்கவில்லை.
“லொட்ஜ்ை' வேலை அதிகமில்லையாததால் நந்தனர் நண்பர்களுடன் பகலிலும் வெளியில் சென்று மது அருந்தத் தொடங்கிவிட்டான். அவனோடு நல்லபடி பழகுவது போல் நடித்த பூரீதேவியிடம் லொட்ஜைப் பார்த்துக் கொள்ளுமாறு சொல்லிவிட்டே அவன் வெளியே செல்வான். 'லொட்ஜிைல்’ மலையகத்துப் பையனர் ஒருவனும் உதவிக்கு நின்றான். "லொட்ஜிைன்’ கீழ் தளத்தின் முனர் பகுதியில் அடைக்கப்பட்டிருந்த பகுதிக்குள்ளிருந்து பூரீதேவி நிர்வாகம் செய்ய ஆரம்பித்துவிட்டாள்.
ஓரளவு போதையில் வரும் நந்தனை அணைத்துச் சென்று அறையில் தூங்கவைப்பாள். சாப்பாடு எடுப்பித்துக் கொடுப்பாள். அவனர் வேணர்டாம். என்றாலும் ‘சாப்பிடுங்கோ’ என மனைவிபோலப் பரிவாக ஊட்டி விடவும் தொடங்கினாள்.
அவன் 'லொட்ஜிைல் இல்லாத வேளையில் பாரிசுக்குத் தொலைபேசி எடுத்துக் கதைப்பாள். பாரிசிலிருந்து குணரெத்தினம் தனது மனைவியாக வரவிருப்பவள் பற்றிக்
9ւյLIդպԼՌT.? 61

Page 33
கற்பனையில் மிதந்தவாறு கதைப்பான். அவனுக்கும் சில பிரச்சனைகள் இருந்தன. பாரிஸ் வந்து எட்டு வருடங்கள் கடந்துவிட்ட போதிலும் நிரந்தர விசா கிடைக்கவில்லை. ஆனாலும் இரவு பகல் பாராமல் பலவிதமாக உழைத்து ஊருக்கு நிறைய பணம் அனுப்பியிருந்தான். பெற்றோர் ஒழுங்கு செய்த திருமணத்திற்கும் ஒப்புதல் அளித்துப் பெண்ணைப் பாரிசுக்கு அழைக்கவும் ஏஜன்சியை ஒழுங்கு செய்திருந்தான்.
பெண் நல்லெணர்ணெய்க் கறுப்பு என்றாலும் கவர்ச்சியிருந்தது. வயது இருபத்தினான்கு கடந்து விட்டது. அவனுக்கும் முப்பத்தெட்டு வயதாகிவிட்டதே.
அடிக்கடி குணமும் கொழும்பில் லொட்ஜிற்கு தொலைபேசிஎடுத்து மணிக்கணக்கில் கதைப்பதில் அதிக பணத்தை வீணடிக்க வேணர்டியிருந்தது. பூரீதேவியினர் வேண்டுகோளின்படி இப்போது அவன் தொலைபேசி எடுப்பது குறைவு. அவள்தான் அடிக்கடி “லொட்ஜ்’ தொலைபேசியில் நீண்ட நேரம் பேசுவது வழக்கமாகி விட்டது.
இரவு வேளையில் போதையில் வரும்போது இன்னுமொரு போத்தலும் கையில் கொணர்டு வருவான் நந்தனர். அறையிலிருந்து அவன் குடிக்கும்போது, இவள் எடுப்பித்த சாப்பாட்டிலிருந்து இறைச்சித் துண்டை எடுத்து அவனுக்கு ஊட்டிவிடுவாள். தனது அறையில் தனியாகப் படுத்திருக்கப் பயமாகவிருக்கிறதென்ற சாட்டில் அவனது அறையில் வந்து படுத்தவள் பின்பு மனைவி போன்று இரவில் அவன் அறையில் ஒன்றாகத் தங்கிவிடுவாள்.
நந்தனினர் அணைப்பிலிருந்தவாறே பாரிசிலிருக்கும் குணத்துடன் “என்னங்க.எப்ப என்னைக் கூப்பிடப் போறிங்க. இஞ்ச எத்தனை நாள்.உங்களை நினைச்ச படியே இருக்கிறது. உங்களிட்ட வந்தாத்தானி எனக்கு நிம்மதி." என்று சிணுங்குவாள். அப்போது அழாதேயடி ராசாத்தி. என நந்தன் அவளை மர்மமாகக் கிள்ளுவான். இப்படி நான்கு மாதங்கள் ஓடிவிட்டன. லொட்ஜினி வருமானத்தையே அவள் உறிஞ்சிவிட்டாள். நந்தனும் எல்லாப் போதையாலும் உருக்குலைந்து கொண்டே. .
ஏஜென்சிக்காரனின் ஏற்பாட்டின்படி ஒருசிலருடன் சேர்ந்து அவள் சிங்கப்பூர் வந்து, பின்னர் அங்கு மலேசியா விசா பெற்று கோலாலம்பூர் வந்து சேர்ந்தாள்.
62 இப்படியுமா..?

கோலாலம்பூர் புறநகர் பகுதியில் ஒரு தொடர்மாடிக் கட்டிடத்தில் ஒன்பதாம் மாடியில் ஒரு வீட்டில் ஆறு பெடியன்களுடன் மூன்று பெண்களென ஏஜென்சிக்காரனின் ஏற்பாட்டில் தங்கியிருந்தனர்.
அந்த மூன்று பெண்களில் பூரீதேவிக்கு மட்டும் சிறப்புச் சலுகைதான். மற்றவர்கள் எல்லோரும் இலட்சக்கணக்கில் பணம் கொடுத்துவிட்டு இருப்பினும். பூரீதேவி. . கொழும்பில் தேடிக்கொண்ட பணத்தை வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டே புறப்பட்டவளாச்சே.
பாரிசிலிருந்து குணத்தின் ஏற்பாட்டின்படி பூரீதேவிக்கென ‘அட்வானி சாக’ இரணர்டு இலட்சம் ரூபா கொழும்பில் ஏஜென்சிக்காரரின் பினாமியிடம் கொடுக்கப்பட்டது. மிகுதி பாரிசுக்கு ழரீதேவி வந்து சேர்ந்ததும் தந்துவிடுவதாக பாரிசிலிருக்கும் ஏஜென்சிக்காரரின் மைத்துனர் மூலமாக ஏற்பாடு.
பாரிசுக்கும் இலண்டனுக்கும் கனடாவுக்குமென அங்கு தங்கியுள்ளோர் கனவுகள் பல சுமந்து காத்திருக்கின்றனர். அங்குள்ள இருபது வயது இளைஞன் மீது பூரீதேவிக்கு ஒரு கண். அவனது உயரம், கவர்ச்சித் தோற்றம் எல்லாம் அவளை என்னவோ செய்தது.
அந்த வீட்டின் நடு ஹோலில் இளைஞர்கள் ஆறுபேரும் உறங்குவர். ஒரு அறையில் பெண்கள்.முறை வைத்து எல்லோரும் மாறி மாறி சமைத்துச் சாப்பிடுவார்கள். ஏஜென்சிக்காரன் ஹோட்டலில் தங்கியிருப்பார். இடைக்கிடை வந்து பார்த்து சமையலுக்குரிய பொருட்கள் வாங்கப் பணம் கொடுத்துச் செல்வார்.
அறையில் புழுக்கமாக இருக்கிறதென்று, பூரீதேவி குசினிக்குள் நல்ல காற்றோட்டமென அதற்குள் தனது படுக்கையை வைத்துக்கொண்டாள். தான் சமைக்கும் போது வாட்டசாட்டமான அந்த இளைஞனி இலிங்கநாதனுக்கு ‘சாப்பிடுங்கோ தம்பி. எனக் கூறி உபசரிப்பாள். அவனும் 'அக்கா. அக்கா..? எனக்கூறி வழியத் தொடங்கினான். ஒரு சில நாட்களில் அவனையும் இரகசியமாக இரவு வேளை குசினிக்குள் அழைத்துக்கொண்டாள்.
இப்படியுமா..? 63

Page 34
இந்த விளையாட்டு” மற்ற இளைஞர்களுக்கும் சாடைமாடையாகத் தெரியத்தொடங்கிவிட்டது. இதனை ஏஜென்சிக்காரனுக்கும் பற்றவைத்துவிட்டார்கள். மறுநாள் ஏஜென்சிக்காரன் வந்து இலிங்கநாதனை காரில் கூட்டிச்சென்று காட்டுப்பகுதியொன்றில் அவனை இறக்கிவிட்டு விபரம் கேட்டான். இலிங்கநாதனி அப்படி ஒன்றுமில்லையென மறுத்தான். ‘இரண்டு அடி" கையாலும் காலாலும் விழுந்தது. ‘உடுப்புகளைக் கழற்றடா..? என நிர்வாணமாக விடப்பட்டான். கார் சென்றுவிட்டது.
இலிங்கநாதனி நிர்வாணமாக பற்றை ஒன்றிற்குள் மறைந்துகொணர்டானர். பிற்பகல் மூன்றரை மணிக்கு விடப்பட்டவனை ஏழரை மணியளவில் வந்து உடைகளைக் கொடுத்து ஏஜென்சிக்காரன் கூட்டிச்சென்று, வீட்டில் ஒழுங்காக இருக்கவேண்டுமென சொல்லி விட்டுவிட்டான்.
ஏஜென்சிக்காரன் நடராஜன் ‘பாஸ்போர்ட் மற்றும் அலுவல் எனக் கூறி பூரீதேவியைக் கூட்டிச்சென்றான். ஒரு உணவகத்தில் புகுந்து உணவருந்தினர். நடராஜனின் ஊரில் தனக்கும் நெருங்கிய உறவினர் உண்டென்றும் அந்த வகையில் நடராஜன் தனக்குக் கிட்டிய உறவினர் என்றும் பூரீதேவி புதிய ‘புராணம்’ ஒன்றைத் தொடங்கினாள்.
“ஏஜென்சி நடராஜனுக்கு விளக்கம்? அதிகம். இவளைப் போல எத்தனை பேரை அவனி நாடுநாடாகக் கொண்டு சென்றவனி. ‘அங்க வீட்டில தங்க வசதி குறைவு. நீ ஹோட்டலில் தங்கலாம். .? என பூரீதேவியை அழைத்துச்சென்றான். அங்கு ஹோட்டலில் நடராஜனுடன் அறையில் ஒன்றாகத் தங்கினாள். பகல் நேரத்தில் அந்த ‘அப்பாட்மெணர்ட்” வீட்டிலும் இரவில் நடராஜனுடனர் ஹோட்டலிலுமாகச் சில நாட்கள்.
ஆறு மாதங்கள் கடந்த பின்னர் அங்கிருந்து ஒரு குழுவுடன் சேர்ந்து பூரீதேவி அனுப்பப்பட்டாள். ஈரான், துருக்கி வழியாக ஒரு மாதப் பயணத்தின் பின் பாரிஸ் வந்து சேர்ந்தாள். அந்தக் குழுவில் வந்த எல்லோரும் பூரீதேவிக்கு மரியாதை. ஏனெனில் *நடராஜன் என்ர கிட்டிய சொந்தக்காரர்? என்ற பூரீதேவியின் வெருட்டல். இலிங்கநாதனுடன் மட்டும் அன்பாகப் பேசிக்
64 இப்படியுமா..?

கொள்வாள். வாட்டசாட்டமாகக் கவர்ச்சிநாயகனாகப் புறப்பட்ட இலிங்கநாதன் இப்போது மலேரியாக் காய்ச்சலால் தொடர்ந்து வாட்டப்பட்டவன் போன்ற தோற்றத்தில் தானி வந்து சேர்ந்துள்ளான். .
இலிங்கநாதனின் மூத்த சகோதரர்கள் இருவர் இருபது வருடங்களுக்கு மேலாக இலண்டனில் இருக்கின்றனர். நல்ல வசதிகளுடனர்.! ஏஜெனிசி நடராஜனின் பினாமியிடம் இலணர்டனில் அவர்கள் நிறையப் பணம் கொடுத்து இலிங்கநாதனை விரைவில் இலண்டனுக்கு அனுப்புமாறு கேட்டுள்ளனர்.
பாரிசுக்கு பூரீதேவி வந்ததும், குணம் அவளுக்குரிய மிகுதிப்பணத்தை நடராஜனிடம் உடன் கொடுக்க முடியவில்லை. சீட்டு எடுத்து கொடுக்க முயற்சித்தும், அது சாத்தியப்படவில்லை. பூரீதேவி பாரிஸ் புறநகர் பகுதியில் நடராஜன் ஒழுங்கு செய்த இடத்தில் மற்றவர்களுடனேயே தங்கியிருந்தாள்.
இலிங்கநாதனும் மற்றும் ஒருவரும் இலண்டனுக்கு இரயில் மூலம் செல்ல ஏற்பாடு. .1 இலிங்கநாதன் மூலமாக இலண்டனிலிருந்து அதிக பணம் பெற்றுவிட்ட பூரீதேவி, தன்னையும் உடன் இலண்டனுக்கு அனுப்புமாறும் முழுப்பணமும் தான் உடன் தருவதாகவும் கூறிப் பணத்தினை நடராஜனிடம் கொடுத்தாள்.
நடராஜனுக்குத் திகைப்பு. "இவளிடம் ஏது இவ்வளவு பணம்?’ அவனால் ஊகிக்கமுடிந்தது. அவனுக்கென்ன. பணம் வந்தால் சரிதானே. .
ழரீதேவி, இலிங்கநாதனி மற்றும் ஒருவர் இரயிலில் இலண்டனை நோக்கி. அவர்களது படத்துடன் கூடிய மலேசியப் பாஸ்போர்ட்டில் பிரயாணம் தடங்கலின்றி.
பாரிசில் குணம். ஏக்க வாய்வு பிடித்தவன் மாதிரி. . நிரந்தர விசா இல்லை. வீட்டுக்காரர் ஊரிலிருந்து பேசியனுப்பிய பொம்பிளை. எவ்வளவு செலவு வைச்சுப்போட்டு இப்படிப் பறந்திட்டாள். எனப் பிதற்றியவாறு விஸ்கிப் போத்தலுடன் குடித்தனமாகி விட்டான். .
இப்படியுமா..? 65

Page 35
இலண்டனில் அகதி அந்தஸ்தும் பெற்று, தன்னிலும் நான்கு வயது குறைந்த இலிங்கநாதன் வீட்டில் சொகுசுகளுடனர் பூரீதேவி, மாதாமாதம் இலங்கையிலிருக்கும் பெற்றோருக்கும் காசு அனுப்புகின்றாள். இரண்டு வேலை என்று இரவு பகல் பாராது ஆவலாய்ப் பறக்கின்றான் இலிங்கநாதன்..!
விரைவில் “தேவி ரெக்ஸ்ரைல்ஸ்" திறப்புவிழா இலண்டனில் சிறப்புற நடைபெறவுள்ளது. ஒன்பது வயதுச் சிறுமியொருவரின் நடன அரங்கேற்றத்தில் பிரதம விருந்தினராக கலந்து கொள்ள இலண்டனர் வரும் பிரபல தமிழக சினிமா நடிகை ஒருவர் இத்திறப்பு விழாவிலும் கலந்து கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
66 இப்படியுமா..?

வேலையிலிருந்து தன் இருப்பிடம் திரும்பிய நாதன் அவசர அவசரமாகக் காக்கைக் குளிப்புக் குளித்துவிட்டு, எப்போதாவது விசேஷமாக அணிவதற்கென மெத்தைக்கு கீழே மடித்து வைத்திருந்த காற்சட்டை, ‘சேட்"டை எடுத்து மாட்டிக் கொண்டான். சப்பாத்துக்குள்ளிருந்து கருவாட்டு நாற்றமடித்துக் கொண்டிருந்த காலுறையை எடுத்து கட்டிலுக்குக் கீழ் ஒரு மூலையில் எறிந்துவிட்டு, தோய்த்து போட்டிருந்த ‘ரெனிஸ்? காலுறையை எடுத்து மாட்டி, ஓரளவு நல்ல நிலையிலுள்ள “ரெனிஸ்? சப்பாத்தையும் எடுத்துப் போட்டுக் கொண்டான்.
நணர் பணி ஜெகனுக்கு ஞாபகப்படுத்துவதற்காக தொலைபேசியை எடுத்து, அரை மணித்தியாலத்திற்குள் ஜெகனை விரைவாக வருமாறு கூறினான்.
கண்ணாடி முன் நின்று தலையை சீவிவிட்டு, பின் பக்கமாகத் திரும்பி திரும்பி தான் இளமையாக இருக்கிறேனா என எத்தனையோ எண்ணங்களில் இமைகளை வெட்டி, வெட்டிப் பார்த்தான்.
‘இவன் ஜெகனை இன்னும் காணேல்ல. எயர் போட்டுக்குப் போறதெணர்டால் சரியான நேரத்துக்குப் போகவேணும். இவனுக்கு எத்தனை தரம் சொல்லிற்றன். சரி. நானும் அவனைக் குறை நினைக்கேலாது.
güUiguOT...? 67

Page 36
அவனிர வானைப் (van) பிடிச்சுக்கொணர்டு போனா நானென்ன காசே குடுக்கிறனான். எப்பவாவது பெற்றோல் அடிச்சுவிடுவன். அவனோட ஒத்துத்தான் போகவேணும். பின்னேரம் அஞ்சரை மணிக்கு ஒர்லி எயர் போட்' டில நிக்கவேணும் எண்டு சொன்னனான். இப்ப நேரம் நாலு மணியாப் போச்சு. றோட்டு இறுகிச்சு தெண்டா நேரத்திற்கு போக ஏலுமோ தெரியா. பாவம். என்ர சகு அங்கை இருந்து தனியாக் களைச்சுப்போய் வருவாள். நானும் நேரத்திற்கு அங்கை போய் நிக்காட்டி பயந்திடுவாள்.”
ஜன்னலால் எட்டி எட்டிப் பார்ப்பதும் அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடப்பதும் கண்ணாடியில் பார்ப்பதுமாக நின்ற நாதனுக்கு ஒவ்வொரு நிமிடமும் தவிப்பில் கழிந்து கொண்டிருந்தது.
*சதா மச்சானி ஆறு மணிக்குத்தான் வேலையால வருவான். பிறகு எட்டு மணிக்கு மற்ற வேலைக்குப் போயிருவாணர். அவன் றுாமில் தங்கிறதிலும் பார்க்க வேலையளில தான் நேரத்தைக் கழிக்கிறான். அவனுக்கு எயர் போட்டுக்கு வர நேரமும் இருக்காது. லிவும் எடுக்கேலாது. ஏதோ அவனிர புணர்ணியத்தில இந்தி றுTமில இவ்வளவு நாளும் காலத்தைக் கடத்திற்றன். அவனும் பாவம் முப்பத்தொன்பது வயதாகியும் கலியாணம் காட்சி இல்லாம மாடாய் உழைக்கிறான். என்ர சகு வந்து சேருறதில அவனுக்குந் தான் எவ்வளவு சந்தோஷம். சதா உண்மையில ஒரு நல்ல பிறவி தான்.”
மாடிக்குக் கீழே ‘கோர்ணி’ சத்தம் கேட்டதும் மின்னல் வேகத்தில் கதவைப் பூட்டிக்கொண்டு ஆறாவது மாடியிலிருந்து அந்தப் பழைய மரப்படிகளில் குதித்து ஓடி வந்தான்.
ஜெகனின் ‘றெனோல்ட் வான் ‘ஓர்லி எயர்போட்டை நோக்கி விரைந்தது. இடையில் வாகன நெருக்கடியில் ஊர்ந்து போக வேண்டியும் இருந்தது.
"நாலரை மணிக்கே றோட்டு இறுகீட்டுது. எத்தனை மணிக்கு போய்ச்சேரப் போறமோ தெரியாது.” வாய்க்குள் முணுமுணுத்துக்கொண்டான் நாதன்.
சரியாக ஐந்தரை மணிக்கே விமான நிலையத்தைப் போய்ச் சேர முடிந்தது. அவசர அவசரமாக ஓடிப்போய், எதிர்பார்த்த
68 9ւյլ IկչպԼՈT.?

கொழும்பிலிருந்து வரும் கே. எல். எம். விமானம் வந்துவிட்டதா என நேர அட்டவணையை ஜெகன் பார்த்தான். அந்த விமானம் இருபதுநிமிடம் தாமதமாகும் என அதில் குறித்திருந்ததை ஜெகன் விளக்கமாக நாதனுக்குச் சொன்னான்.
நேரம் ஆறு மணியைத் தாண்டிவிட்டது. அந்த விமானத்தில் வந்த பலர் சூட்கேசுகள், பொதிகள் என இழுத்துக்கொண்டு வெளியேறிக் கொண்டிருந்தனர். நாதனுக்கு ஒரு இடத்தில் நிலைகொள்ளவில்லை. அங்கும் இங்கும் நடப்பதும் எட்டி உள்ளே பார்ப்பதுமாகத் தவியாய் தவித்தான்.
“என்ன மச்சாண் சகுவை இன்னும் காணேல்லை.” என அடிக்கடி ஜெகனைக் கேட்டபடி நின்றான். "ஆள் இப்ப வரும் மச்சான். கொஞ்சம் பொறுமையா நில்லு. .
"மச்சான். அங்கை பார். பச்சை உடுப்பிலை ஒரு ஆள். சகு மாதிரித் தெரியுது. .”
“ஓம் மச்சான். பச்சைப் பஞ்சாபியில.. எங்கட நாட்டு மூஞ்சியில தான் ஒரு ஆள் வருகுது.” நாதனின் முகத்தில் நூறு மின்னல் பிரகாசம் வெட்டி வெட்டி அடித்தது.
“விறு விறெண்டு வந்தவள் பிறகேன் மச்சாண் அதிலை போய் நிக்கிறாள்.” என்று ஒருவித ஏக்கத்தோடு கேட்டான் நாதன்.
"உனக்கு இதொண்டும் விளங்கிறேல்லை மச்சான். ஏதோ அப்ப மாட்டு வண்டில்ல வந்த மாதிரி “ரஷ்யன் ஏரோபிளைட்டில’ வந்து இறங்கீற்றிங்க. பரிசுக்கு வந்து பத்து வருசத்தில இண்டைக்குத் தான் எயர்போர்ட் பக்கம் வந்திருக்கிறாய் போல. கொஞ்சம் பொறுமையா நில்லு. அப்ப எண்ணெணர்டு கொழும்புக்குப் போய் கலியாணம் செய்து வந்தியோ தெரியாது. “பெலிற்றில லக்கேஜ் எடுத்துக் கொண்டெல்லே வரவேணும். அதுதாணி தங்கச்சி அங்க நிக்கிறா." என்று ஜெகன் சொன்னதும் பெண்களின் சிரிப்புப் போல் நளினத்தோடு கொடுப்புக்குள் சிரித்துக்கொண்டான் நாதன்.
பென்னம்பெரிய சூட்கேசை இழுப்பதும், இழுக்க முடியாது தவிப்பதுமாக, தோளில் மாட்டியிருந்ததையும் இறக்கி வைப்பதும் தூக்குவதுமாக அந்தரப்பட்டு அவலப்பட்டு மெல்ல மெல்ல வந்து கொண்டிருந்தாள் சகுந்தலா.
இப்படியுமா..? 69

Page 37
“சகு. சகு.” என்று கூவியவாறு இரண்டு கைகளையும் உயர்த்தி துள்ளியபடி நின்றான் நாதன். சகுவைக் கண்டதும் நாதனுக்கு அவனை அறியாமல் கண்கள் கலங்கிவிட்டன. சகுந்தலா கண்களில் நீர் வழிய பொங்கி வரும் விம்மலையும் அடக்கிக்கொண்டு, “இந்தச் சூட்கேசை இழுங்கோப்பா.” என்று பெரிய சூட்கேசைக் காட்டினாள்.
“ஏனம்மா கண் கலங்கிறாய்.” என்று சகுவின் கண்ணிரைத் துடைத்துவிட எண்ணியவனாய் அவளை உற்றுப் பார்த்தான் நாதன். பின்னர் ஏதோ வெட்கம் வந்தவனாய், அவள் தோளில் மாட்டியிருந்ததையும் வாங்கித் தன் தோளில் மாட்டியவாறு சூட்கேசை இழுக்க முயன்றான். அதுவோ பாறாங்கல்லுப் பாரம். அதை அசைப்பதே பெருங்கஷ்டமாக இருந்தது. “என்னணிடம்மா இதைக் கொணர்டு வந்தனிங்க. சரியா கஷ்டப்பட்டிருப்பீங்க போல கிடக்கு. .”
“அதெல்லாம் பிறகு சொல்லுறனர். இப்ப அதை இழுத்துக்கொண்டு வாங்கோவன்.”
“ஜெகன் கொஞ்சம் 'ஹெல்ப் பண்ணடாப்பா. சகு. இவர் என்ர சிநேகிதன் ஜெகன். இவற்ற வானிலதான் வந்தனான்.”
“வணக்கம். தங்கச்சி.”
இருவருமாக சேர்ந்து இழுத்தும் தள்ளிக்கொண்டும் ஒருவாறாக கொணர்டு வந்து வானில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டனர். களைப்பாய்க் கிடக்கு. ஜெகன். சகுவும் களைச்சுப் போயிருக்கு. வாற சந்தியில இருக்கிற தமிழ் றெஸ்ரோறன்ரில ஒருக்கா நிப்பாட்டன். ஏதும் குடிப்பம்.
வழியில். பெருத்த நீண்ட வீதிகளையும் வானளாவிப் புகை கக்கி நிற்கும் அடுக்கு மாடி கட்டடிடங்களையும் ஜாலம் காட்டும் வர்ண விளக்குகளையும் சில அரை நிர்வாண விளம்பரப் பலகைகளையும் பாதாளத்தில் ஒடுவது போன்ற ஆற்றினர் மேம்பாலங்களையும் இடையிடையே உயரமாக எழுந்து புகை கக்கும் புகையிலைப் போறணை போன்ற பெரிய புகைபோக்கிகளையும் ‘வானில் இருந்தவாறே பார்த்துக் கொணர்டு வந்த சகுந்தலாவுக்கு அந்த செப்டம்பர் மாத மெண்குளிரிலும் வியர்த்துக்கொண்டிருந்தது.
70 இப்படியுமா..?

சகுந்தலா தனக்கு ஒரு பிளேன் ரீமட்டும் போதும் என்றாள். “ஏனப்பா. இது தமிழ்க் கடைதானே. இஞ்ச வடை, போண்டா எல்லாம்தானே இருக்கு சாப்பிடுமன்.” தனக்கு ஒன்றும் வேண்டாம் என்றும், வாய் கைப்பதாகவும், சத்தி வருவது போலிருப்பதாகவும் சகுந்தலா சொன்னாள். அவர்கள் வீடு வந்து சேர இரவு ஒன்பது மணியாகிவிட்டது.
சதா வீட்டுக்கு வந்து அடுத்த வேலைக்கும் போய்விட்ட அறிகுறி தெரிந்தது. அவனது சாரம் கட்டிலில் எறிந்து கிடந்தது. அந்த வீடு ஒரு பழைய கட்டிடத்தில் கடைசி மாடியாகவுள்ள ஆறாவது மாடியில் ஒரு ஸ்ருடியோவாகும். பெரிய ஒரு அறை, அறையினர் ஒரு மூலையில் சிறு குசினி. குசினிக்கு ஒரு பக்கத்தில் ‘பாத்ரூம்". அதற்கருகில் வெளிக்கதவு. கதவைத் திறந்து இரண்டுஅடி கால்வைத்தால் அறை. அறையையும் குசினியையும் பிரித்து ஒரு பக்கமாகத் தற்போது திரைச்சீலை போட்டிருந்தார்கள். அறைக்குள் ஒரு பெரிய பழைய கட்டில். அதில் ஆள் உட்கார்ந்தால் கிறீச் என்று சத்தம் எழும். கட்டிலின் பின்பக்கமாக பழைய உடைவுகள் கண்ட ஒரு அலமாரி. அச்சிறிய அலமாரியின் மேல் பிள்ளையார், லட்சுமி, முருகன் சேர்ந்த ஒரு படமும் பக்கத்தில் லூட்ஸ் மாதா சொரூபமும் புகைமண்டி இருந்தன. கட்டிலுக்குக் கீழே இரண்டு சோடி பழைய சப்பாத்துக்களும் சில ஊத்தைக் காலுறைகளும் பரவி கிடந்து 'வாசனை’ வீசிக் கொண்டிருந்தன. மூலையில் இருந்த குசினியில் ஒரு சிறிய ஆட்டம் கண்ட பழைய மேசை, அதன் ஒரு பக்கத்தில் நெளிந்த, கரி பிடித்த ஒரு அலுமினியப் பானையும், பல வருடப் பாவனையைக் காட்டும் கீறல்கள் கண்ட ஒரு இரும்புக் கறிச்சட்டியும், அதேபோன்ற இன்னொரு சிறிய கறிச்சட்டியும், தேநீர்ச் சாயமேறிய நான்கு “கிளாசுகளும் இருந்தன. அந்த மேசையின் மறுபக்கத்தில் இரண்டு அடுப்புகள் கொண்ட காஸ் குக்கரும்", மேசையின் கீழ் “காஸ் சிலிண்டரும்’ இருந்தன.
அறையின் குசினியைப் பிரித்து திரைச்சீலை போடப்பட்ட பகுதியை ஒட்டி, மடித்து வைக்கப்பட்ட ஒரு பழைய மேசையும், மடிக்கப்பட்ட இரண்டு பழைய கதிரைகளும் இருந்தன.
“இதுதானாப்பா. நீங்க இருக்கிற வீடு.”
இப்படியுமா..? 71

Page 38
அறைக்குள் வந்த சகுந்தலா கேட்டபடி, “ஊரில ஒரு அறையோடு கூடிய எங்கட சிறிய கொட்டில் வீடு பரவாயில்லை” என்று மனதுக்குள் எண்ணிக்கொண்டாள்.
அவசர அவசரமாக நாதன் போட்டுக்கொடுத்த தேநீரைக் குடித்துவிட்டு, பிறகு சந்திப்போம் என்று கூறி விட்டு ஜெகன் அவர்களிடம் விடைபெற்றுச்சென்றான்.
அவனது புதிய “றெனோல்ட் வானும் அதனை ஒட்டிய லாவகமும், வழியில் தேநீர் குடித்தபோது நாதனைக் காசு கொடுக்க வேண்டாமென்று தானே கொடுத்ததும், அவனது வசீகரத் தோற்றமும், அன்பான பேச்சும், ஜெகனைப்பற்றி சகுவின் மனதில் நல்ல அபிப்பிராயமே ஏற்பட்டிருந்தது.
“பரிஸிலை வீட்டின்ர அருமை உனக்குத் தெரியாதப்பா. ஏதோ மச்சாண் சதாவின்ர புண்ணியத்தில நான் இதுக்கை ஒடுங்கிக்கொண்டு இருக்கிறன். அவன் நாலும் தெரிஞ்ச நல்ல மனுஷன். ஏதோ நான் குடுக்கிற கொஞ்சக் காசைப் பற்றிக்கூட சிந்திக்காம எனிர வீடு மாதிரி என்னை இங்கை இருக்கவிட்டிருக்கிறான். நான்தான் அதிக நேரம் இங்க இருக்கிறனான். அவன் வேலை. வேலை எணர்டு ஒடித் திரியிறவன். இப்பிடி ஒருவீடு வாடகைக்கு எடுக்கிறதெண்டாலே பத்தாயிரம் பிராங்குக்கு மேலே மாதச் சம்பளப் பட்டியல் காட்டவேணும். மூண்டு மாதமோ அல்லது அதுக்கு மேலோ அட்வான்ஸ் குடுக்கவேணும். வாடகை கிட்டத்தட்ட 3500 பிராங்குக்கு மேலே வரும். அதோட லைற் காசு, குடியிருப்பு வரியெண்டு கணக்க கட்டவேண்டும். அதுவும் வீடு குடுக்கிற ஏஜென்சிக்கு எங்களை ஆராவது "ரெக்கமண்ட் பண்ணினாத்தான் எங்கட தோலுகளுக்கு வீடு தருவாங்கள். அதுக்கும் தலையால கிடங்கு கிண்டுறமாதிரி அலைஞ்சு திரிஞ்சு அலுவல் பார்க்கவேணும். இப்பிடிப்பட்ட விட்டிலேயே எங்கட சனம் எட்டுப்பேருக்கு மேலே இருப்பாங்கள். இது எங்கட அதிர்ஷ்டமப்பா. சரி இதெல்லாம் கிடக் கட்டும். நீர் போட்டுக்கொண்டு வந்த உடுப்புக்களை மாத்தி ஒரு குளிப்புப் போடும். களைப்புத் தீரும். அதுக்குள்ள குஞ்சாவுக்கு என்ர கைவண்ணத்தில ஒரு சமையல் செய்யிறன்." என்றான் நாதன்.
"இதுக்குள்ள எங்கையப்பா உடுப்பு மாத்திறது.?”
72 இப்படியுமா..?

“ஏனப்பா. வெட்கப்படுறியே. கேட்டின் சீலையை இழுத்துப் போட்டு. உடுப்பை மாத்தும். நான் இஞ்சை குசினிப் பக்கமா நிக்கறன்.” என்று சொல்லியவாறு மேசைக்குப் பக்கத்தில் மூலையோடு இருந்த பழைய ‘பிரிட்ஜில் இருந்த ஒரு கோழியைத் தூக்கி குசினித் தொட்டிக்குள் வைத்த கறிச்சட்டித் தண்ணிருக்குள் போட்டான்.
“ஏணப்பா. தண்ணி ஜஸ்ஸாக் குளிருது.” என்று கத்தினாள் சகுந்தலா. “ஆ. ஆ. கொஞ்ச நேரம் பொறப்பா. அந்த சிவப்புப்புள்ளி போட்ட பைப்பையும், நீலப் புள்ளி போட்ட பைப்பையும் கொஞ்சம் கொஞ்சமா திறந்து கணக்கான சூட்டில குளியும்.”
“ஊரில செம்பாட்டுத் தோட்ட ஆழக் கிணத்தில குளிச்சா என்ன மாதிரி இருக்கும்.” என்று எணர்ணியவாறு இரு பைப்புகளையும் ஓரளவு சமமாகத் திறந்து, சூடும் குளிருமாக அவலப்பட்டு ஒருவாறு குளித்து முடித்தாள் சகுந்தலா.
மஞ்சள் அமெரிக்கன் அரிசிச் சோறும், கோழிக் குழம்பும், பருப்புக்கறியும், மிளகாய்ப் பொரியலும் கொஞ்ச நேரத்திற்குள் செய்து முடித்துவிட்டான் நாதன். சகுந்தலா தலையைத் துடைத்து முடியை வாரிவிட்டுக் கொணர்டு வரவும் நாதனர் “சாப்பிடுவமம்மா." என்று சொல்லவும் நேரம் சரியாக இருந்தது.
“வீட்டுக்காரர் இப்ப சாப்பிட வருவாரோ.”
“அவன் வர இரண்டரை மணிக்கு மேலே செல்லும். இப்ப நாங்கள் சாப்பிடுவம்.”
"நீங்கள் நல்ல ருசியாச் சமைக்கப் பழகியிருக்கிறீங்கப்பா.
அவர்கள் சாப்பிட்டு முடிய இரவு பதினொன்றரை மணியாகிவிட்டது.
“இது அவன் படுக்கிற கட்டில். இப்ப எங்களுக்குத் தந்திட்டான். நான் பெட்சீற்றைப் போட்டு வழமையாகக் கீழே படுக்கிறனான். இப்பதாணி இந்த கேட்டின் சீலையைப் போட்டுவிட்டவன். தன்ர தலையணையையும் பெட்சீட்டையும், கம்பிளியையும் கேட்டினுக்குப் பக்கத்திலை வைக்கச் சொன்னவன். நாங்கள் இந்தக் கட்டிலில படுக்கலாம்.”
இப்படியுமா..? 73

Page 39
இரண்டரை மணிக்கு வந்து குசினித் தொட்டிக்கு மேலுள்ள சிறிய ‘ரியுப்லைற்றைப் போட்ட சதாவுக்கு கோழிக் குழம்பு வாசனை மூக்கைத் துளைத்தது. சப்பாத்தைக் கழட்டி வாசல் கதவுப் பக்கம் போட்டுவிட்டு ‘கேட்டினர்? சீலையின் மேல் தொங்கிய சாரத்தை எடுத்து அதற்குள் புகுந்துகொண்டு, கோழிக்குழம்பு, பருப்போடு ஒரு சிறு வெட்டு வெட்டினான். அது அவனுக்கு விருந்துச் சாப்பாடு போல் இருந்தது. விரைவாகவே சிறிய ‘ரியுப் லைற்றை அனைத்துவிட்டு ‘கேட்டின் சீலைப் பக்கமாக தலையை வைத்து வாசற்பக்கமாக காலை நீட்டி படுத்துக்கொண்டான்.
அந்த நிசப்த இருளில் எலியின் சத்தம் போன்று அந்தப் பழைய கட்டில் இடைக்கிடை கிறீச்சிட்டுக்கொண்டது. இடைக்கிடை குசுகுசு சத்தங்களும் சதாவின் காதில் ஒலித்துக்கொண்டிருக்கும்போதே அவன் ஆழ்ந்த உறக்கத்தில் போய்விட்டான். காலை ஏழு மணிக்கு அவன் வேலைக்குப் புறப்பட வேண்டும். வேலைக் களைப்பினால் படுத்தவுடனேயே நித்திராதேவி அவனை அணைத்துக்கொள்வாள். ரயிலின் சத்தம் போன்று அவனது குறட்டை ஒலி அந்த விடெங்கும் எதிரொலித்தது.
பாரிஸிலிருந்து சில நூறு கிலோ மீற்றர் தூரத்திலுள்ள மலைப்பாங்கான அந்தச் சிறிய கிராமத்திலுள்ள சுகாதார விடுதிக் கட்டிலில் அரைத் தூக்கத்திலிருந்த நாதனுக்கு, பாரிஸில் அந்த முதல்நாள் குடும்ப வாழ்க்கை கனவில் படக்காட்சி போல் தெரிந்தது.
இருந்தாற்போல், சகுந்தலாவும் வாணி வைத்திருந்த ஜெகனும் புதுமணத் தம்பதிகள் போன்ற உடையோடு ஒரு திருமண வீட்டில் தம்பதிகளுக்கு அறுகரிசி போட்டு வாழ்த்துவது போல் காட்சிகள் தெரியவே, திடுக்கிட்டு “பாதகத்தி. தோறை" என்று கத்தியவாறு படுக்கையிலிருந்து எழுந்தவனுக்கு இரத்தமாக வாந்தி வந்தது.
பிரசாவுரிமை கிடைத்ததும் கொழும்புக்குப்போய், புரோக்கர் ஒழுங்குசெய்த செம்பாட்டுக் கிராமத்துப் பெணிணை கொழும்புக்கு அழைப்பித்துத் தன் செலவிலேயே திருமணம் செய்து கொண்டவன் நாதன்.
74 இப்படியுமா..?

அன்று கொழும்புக்கு வரும்போது கையில் நாலு பிளாஸ்ரிக் காப்பு போட்டுக்கொண்டு வந்த சகுந்தலா. இன்று.
சகுந்தலா இந்த ஒன்பது வருடத்தில் இரணர்டு பிள்ளைகளுக்குத் தாய். இரண்டு வீடுகளுக்குச் சொந்தக்காரி. ஓர் இந்தியனர் றெஸ்ரோரண்டுக்கும், ஒரு பலசரக்குக் கடைக்கும் சொந்தக்காரி. சாரதி அனுமதிப் பத்திரமும் பெற்று தனக்கென விலையுயர்ந்த புதிய ‘றெனோல்ட் காரும் வாங்கியுள்ளாள். கடைவேலைகளுக்கென இரண்டு வான்களும் இருக்கின்றன.
அவள் பாரிசுக்கு வந்த காலத்தில் பிரெஞ்சு மொழி ஆரம்ப வகுப்புப்படித்தாள். பலர் நண்பராகினர். ஜெகனின் உதவியால் கொஞ்சக் காலம் பீரோ கிளினிங் வேலை செய்தாள். அவனின் உதவியோடு மூன்று அறை கொண்ட ஒர் அப்பார்மெண்ட் வாங்கினாள். பின்னர் பாரிஸின் புறநகர் பகுதியில் தனி வீடொன்றும் வாங்கிவிட்டாள்.
ஐந்து வருடங்கள் வரைதானி நாதன் அவளுடனர் பிரச்சினைகளோடு குடும்பம் நடாத்தினான். குடிகாரரைக் கண்டாலே தூர விலகிய அவன், இன்று மனக்கவலைக்கு மருந்தென்றும், சிறிது நித்திரைக்கு வழியென்றும் மதுவைத் தொடர்நது அணைத்துக' கொண்டு. . நிலைமை மோசமாகிட, கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக ஆஸ்பத்திரி, நண்பர்கள் வீடு, சிலவேளை தெருவும் அவனுக்கு அடைக்கலம் கொடுத்தன. ஈரல் முற்றாகப் பாதிப்படைந்து, இரத்த வாந்தி எடுத்த நிலையிலேயே ஆஸ்பத்திரியே தஞ்சமென அவன் வாழ வேண்டியதாயிற்று.
பலதடவை பிள்ளைகளை பார்க்க ஆசைப்பட்டுக் கேட்டபோது அவர்கள் அவரது பிள்ளைகள் இல்லையென்று சகுந்தலா சொல்லி அனுப்பிவிட்டாளாம்.
பல ஆஸ்பத்திரிகள் மாறி மாறி தற்போது இந்தச் சுகாதார நிலையத்தில் சாவை எதிர்கொள்ளும் வரை ஒய்வென வைத்திருக்கிறார்களாம்.
பாரிஸில், தமிழர்களது பொது வைபவங்களில் சகுந்தலா, இப்போது பிரமுகர் வரிசையில்தான். . ஏற்கெனவே திருமணமாகி, இலங்கையில் மனைவியையும் இரணர்டு பிள்ளைகளையும் விட்டு விட்டு, பாரிஸில் பகட்டாகத் திரியும்
இப்படியுமா..? 75

Page 40
ஜெகனோடு சகுந்தலா ஒரே வீட்டில் வாழ்வது பற்றி யாரும் ஒன்றும் சொல்லிவிட முடியாதாம். இது ஐரோப்பிய வாழ்க்கை.
பிரசவ வார்ட்டின் படுக்கையில் சகுந்தலா, அவள் கையில் “பெண்ணுரிமை விடுதலை’ என்ற புத்தகம். இன்னும் ஒரு சில மணித்தியாலங்களுக்குள் அவளுக்கு குழந்தை பிறக்கவுள்ளது. இது மூன்றாவது குழந்தையென்றபடியால் அவளுக்கு இப்போது வேதனை பெரிதாகத் தெரியவில்லை.
சகுந்தலா பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி நாதனுக்கும் எட்டிவிட்டது.
இரத்த வாந்தி எடுத்து மயக்கமுற்ற நாதனைச் சுமந்தவாறு அம்புலன்ஸ் வணிடி நகரத்து ஆஸ்பத்திரியை நோக்கி கடுகதியில் விரைந்து கொண்டிருக்கிறது.
76 இப்படியுமா..?

நேரம் பிற்பகல் மூன்று மணிக்கு மேலாகிறது. வீட்டிற்குள் புழுக்கம். மனத்திற்குள்ளும். காதைக் கிழித்துக் கொண்டிருந்த வானொலிப் பெட்டியை நிறுத்தினார். துவாயை உதறித் தோளில் போட்டுக்கொண்டு கைத்தடியை எடுத்துத் தட்டித் தட்டிப் பார்த்தவாறு கார்த்திகேசு மாஸ்ரர் வீட்டுப் படியால் மெல்ல இறங்கி நடக்கிறார்.
வளவில் கறுத்தக் கொழும்பான் மாமரம் இந்த தடவை அதிகமாகக் காய்த்திருக்கிறது. அடிவளவில் உள்ள விளா மரத்தால் பழங்கள் விழுந்து கிடக்கின்றன. பலா மரமும் பெரிய அளவுகளில் காய்த்திருக்கிறது.
கண்கள் இரண்டும் நன்றாக மங்கிப்போய்விட்டன. பார்வை துப்பரவாகத் தெரியவில்லை. காலை வேளையில் மாத்திரம் சிறிது ஒளிக்கிற்றுப்போல் தெரியும். அந்த ஒளிக்கிற்றில்கூட எந்தப்பொருளையும் அடையாளம் காண்பது சிரமம்.
கைத்தடியின் உதவியுடனர் காலடியை கணக்காக வைத்தவாறு அவரால் வளவில் எந்த மூலைக்கும் தட்டுப்படாமல் போய்வர முடியும். மாமரத்தின் கீழ் போடப்பட்டிருந்த சாய்மனைக் கதிரையைக் கைத்தடியால் ஒரு தட்டுத் தட்டிவிட்டு அதில் மெல்ல சாய்ந்தார். மாமரச் சருகொண்று அவர் மார்பில் பறந்து
இப்படியுமா..? 77

Page 41
வந்து விழுந்தது. அதனைக் கீழே தட்டிவிட்டவரினர் எண்ணங்கள் பின்நோக்கி நகர்கின்றன. .
மூத்த மகள் தாமரைச்செல்வி. அவளது மூன்று செல்லப் பெண் குஞ்சுகள். அவர்களைத் தூக்கித் திரிந்த, மழலை பொழிந்த ஒவ்வொரு கணங்களும் நினைவுத் திரையில் வருகின்றன. ஏதோ விதமான விம்மல். கணிகள் கனத்தன.பெரிதாக ஒருமுறை செருமி. நெஞ்சுப்பாரத்தைக் குறைக்க முயற்சித்தார்.
பயிற்றப்பட்ட ஆசிரியராகக் கடமையாற்றி, பிற்காலத்தில் ஒரு மகாவித்தியாலயத்தின் அதிபராகி ஒய்வுபெற்றவர் கார்த்திகேசு. வளைந்து கொடுக்காத பிடிச்சிராவிக் குணம். சற்றுக்கொதிக்குணம் கொணர்ட கார்திகேசுவிடம் எந்த வேளையிலும் எதிர்த்தொரு வார்த்தைதானும் பேசாத பணிவுள்ளம் கொண்டவர் அவர் மனைவி யோகேஸ்வரி.
முதல் பிள்ளையும் கடைசிப் பிள்ளையும் பெண்கள். நடுவில் மூன்று ஆண்பிள்ளைகள். பெண் பிள்ளைகள் இருவரையும் யாழ் நகரின் பிரபல மகளிர் கல்லூரி ஒன்றில் தான் சேர்த்துப் படிப்பித்தார். க. பொ.த. உயர்தரப் பரீட்சை சித்திபெற்ற மூத்த மகள் செல்விக்கு தமிழ் இலக்கிய இரசிகத்தன்மை அதிகம். கவிதைகள் சிலவும் எழுதிப் பார்த்தாள். ஒருநாள் தான் படித்த கல்வி நிலையத்தில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவிற்குத் தன் தோழியுடன் சென்றிருந்தாள். மேடையில் முழங்கிய ஒரு கவிஞன் அவள் மனதில் நிறைந்துவிட்டான். அவன் கவிதைகளை உச்சரித்த விதம், பேச்சின் உணர்ச்சி, அவன் தோற்றம் எல்லாம் அவளை.
கார்த்திகேசு மாஸ்ரர் அந்த நாள் வரை, தினசரி கடமை முடிந்து பாடசாலையால் வரும்போதும், பத்தொன்பது வயது நிரம்பிய, பருவ எழில் பொங்கி நின்ற தனி மகளை குழந்தையென்று எணர்ணித்தானோ இனிப்பு கணிடோஸ் அல்லது பழவகை ஏதாவது கொண்டு வந்து ‘செல்வி. என மகளை அழைத்து அவளிடம் கொடுத்து மகிழ்ந்தவர்.
மகளின் காதல் செய்தி காதில் விழுந்ததும் திக்கித்துப் போய்விட்டார். அவரால் நம்பவே முடியவில்லை. அன்பு பொழிந்த மகளிடம் முகம் கொடுத்துப் பேச முடியவில்லை. சாப்பிடவும்
78 9ւյLIդպւՈT.?

முடியாமல் சில தினங்கள் தவித்தார். முகச்சவரம் செய்யாததால் தாடியும் கடிக்கத் தொடங்கியது. பாடசாலையில் சக ஆசிரியர்களிடம் வழமை போலச் சரிவர பேச முடியவில்லை. சக ஆசிரியரும், கார்த்தியேசுவின் உற்ற நண்பருமான வேலுப்பிள்ளை மாஸ்ரர் அன்று பாடசாலை மதிய இடைவேளையின் போது. .
“என்ன மாஸ்ரர். இந்தக் கோலம். ஒரு கிழமையா கேக்கிறன். ஒண்டுமில்லை. ஒண்டுமில்லையெண்டு. பேசாமல் போறிர். என்ன. பிரச்சினை. எண்ணட்ட சொல்லும். என்னால உதவ முடியுமெண்டா. உதவுறன்.” என்றார்.
“ஒணர்டுமில்லை.” கார்த்திகேசரினர் கணிகள் கலங்குகின்றன. "மாஸ்ரர். என்ர. பிள்ளை. மூத்த மகள். என்ன செல்லமா. வளர்த்தனான். ஆரையோ. விரும்புறாளாம். " கிணற்றுக்குள்ளிருந்து வந்த குரல்போல.
வேலுப்பிள்ளையர் நிமிர்ந்து உட்கார்ந்தார்.
“கார்த்தி. அட. இதுதானா. விஷயம். இதுக்குத்தானா. தாடி வளத்துக்கொண்டு. . யோசிச்சுக்கொண்டு திரியிறாய். . இது இந்தக் காலத்தில சின்ன விஷயமப்பா. அந்தந்த வயசில இப்படி ஏதும் குறுக்கிடும்தான். ஒணர்டு சொல்லட்டோ. பிள்ளைக்கு கல்யாணத்தைச் செய்து வையன்.”
“ஆரைச் செய்து வைக்கச் சொல்லுறாய். உரக்கக் கேட்டார் கார்த்திகேசர்.
என்று சற்று
“பிள்ளைக்குப் புத்தி சொல்லி ஒரு நல்ல இடத்தில செய்து வையன்."
"அவள் வளந்து நல்லாப் படிச்சு உத்தியோகம் கிடைச்சவுடன என்ர அக்காவின்ர மகனைத்தானி செய்து வைக்க வேணுமெண்டு. அக்காவோட எப்பவோ கதைச்சு வைச்சனான். இப்ப இதைக் கேள்விப்பட்டவுடன. என்னால நம்ப முடியல்ல. அவள் குழந்தைப்பிள்ளை.போன கிழமையும் பள்ளிக்கூடத்தால நாணர் போனவுடனர். ‘அப்பா. சொக்களேற். கொண்டந்தனிங்களோ..? எண்டு ஓடிவந்தவள். அவள் எப்படி..?”
“எட என்னப்பா. நீ. ஐம்பத்திரண்டு வயதுக்கு மேலாகியும் சின்னப்புள்ள மாதிரி பேசுறாய். பிள்ளைக்கு இப்ப என்ன வயது. அவள் பெரிய பிள்ளை. பத்தொன்பது வயது
guipu.LOT...? 79

Page 42
முடிஞ்சுதெண்டு சொன்னனி. சரி. சரி. நான் சொன்னபடி செய். ஒண்டுக்கும் யோசிக்காதை. ஒண்டு சொல்லுறன். பிள்ளை விடாப்பிடியா நிண்டா. புத்தி சொல்லிப்பார். இல்லாட்டி அதிகம் ஒண்டும் யோசிக்காதை, கடுமையாக பேசிப்போடாத. இந்தக் காலத்துப் பிள்ளையளிர். அந்தப் பெடியனையே விசாரிச்சுச் செய்து வை.” என்று இழுத்தார் வேலுப்பிள்ளை மாஸ்ரர்.
"நான். நம்ம சிநேகிதன் பண்டிதர் நல்லதம்பியிட்ட விசாரிச்சனான். பொடியன் நல்ல இடத்துப் பெடியன்தான். பண்டிதர்ர சொந்தக்காரப் பெடியன் தானாம்” என்று மெல்ல இழுத்தார் கார்த்திகேசர்.
“பின்னென்ன. யோசிக்கிற. அவங்கள் அந்த மாதிரி இடத்து ஆட்களப்பா. அறிவாளிகள். படிச்ச பரம்பரையள். எல்லாம் நல்லதா நடக்கும். ஒப்பேற்றிவை. சரியே. ’ என்று முத்தாய்ப்பு வைத்தார் வேலுப்பிள்ளையர்.
கார்த்திகேசு மாஸ்ரருக்கு மனது ஓரளவு தெளிந்தது. 'கண்டோஸ்’ பக்கெற்றுடன் வீடு சென்றார். மகளை அன்பாக அழைத்து ‘கண்டோஸை" கொடுத்து விபரம் கேட்டார்.
“ஒருகிழமைக்குப் பிறகு இண்டைக்குத்தான் மகளோட அன்பா பேசுறார்.” மனைவி யோகேஸ்வரிக்கும் மனது குளிர்ந்தது. மகளின் பிடிவாதத்தை அறிந்துகொண்ட மாஸ்ரர், மெளனமாகச் சம்மதத்துக்கு சமிக்ஞை காட்டினார். ஆனாலும் உரிய முறைப்படி இரு பகுதியினரும் பேச்சுகள் நடத்தி திருமணம் ஒப்பேற ஆறு வருடங்களுக்கு மேலாகி விட்டது.
மகளும் மருமகனும் அரசாங்க உத்தியோகம் பார்க்கத் தொடங்கி விட்டனர். அடுத்தடுத்து மூன்று பேரப் பிள்ளைகள். பெண் குஞ்சுகள்.
மூத்த பேத்தி இளநிலா. பப்பாப்பழம்போல. இளமஞ்சள் நிறத்தில். அத்தனை பேருக்கும் செல்லச்சிட்டு. அழகாலும் அறிவாலும் அனைவரையும் ஈர்த்திடுவாள். இரண்டாவது பேத்தி. நாவல் பழத்தழகி. பேரனின் பிரியத்திற்குரிய சூட்டி. இரவும் பகலும் பேரனின் தோளில் கிடந்தால் தான் அவளுக்கு உறக்கமே வருமாம். மூன்றாமவள் வார்த்தெடுத்த சித்திரம். ஆறுமாதக் குழந்தையாக. .
80 இப்படியுமா..?

அத்தனையும் நினைக்க. நினைக்க. பொங்கி வருகிறது விம்மல். கண்ணிர். கண்களை மூடி மூடித் திறக்கிறார். வாயைக் கையால் பொத்தி. செருமி. செருமி. நினைவுத் தொடரில். .
யுத்த மேகங்கள். கொடுமைகள். மனித உயிர்கள் மலிவாகிப் போய்விட்டன. தினசரி ஏக்கடி. பங்கள்? வாழ்க்கை. பொருட்கள் தட்டுப்பாடு. ஆயுதங்கள் முதன்மையாகிவிட்டன.
மகள் குடும்பம் புலம்பெயர்ந்து சென்றுவிட்டது. அதேபோல மூன்று ஆண்மக்களும் புலம்பெயர்ந்துவிட்டனர். கடைசி மகளும் நுண்கலைப் பட்டதாரியாகி கலியாணமும் ஒப்பேறி புலம் பெயர்ந்து விட்டனர். மனைவியோகேசு மாத்திரம். . வெறுமையான வாழ்க்கை. கடிதங்கள் தான் உறவாடிக்கொண்டிருந்தன.
சருகுகளின் மேல் கோழி, நாய், பூனை நடந்து சிறிது சலசலத்தாலும், "ஆரோ வருகினம். எனிர பேத்தியள் வாறாங்க..” என்றுதான் அந்த சத்தத்தை உற்றுக் கேட்பார்.
எல்லாப் பிள்ளைகளுக்கும் திருமணமாகி பதின்மூன்று பேரப்பிள்ளைகள் வந்துவிட்டனர்.
“ஏதோ மனுசி யோகேசோட. எல்லாம் பேசிப் பேசி ஒருவாறு பொழுது போச்சுது. இரணர் டொருக்கா. பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் வந்து பாத்து போச்சினம். ஆனா. என்ர மூத்த குஞ்சுதான் இன்னும் வரமுடியல்ல. அவளின்ர. நாலாவதாகப் பிறந்த பெடியன். என்ர பேரனையும், இன்னும் பார்க்க முடியல. பாப்பம். அவங்களுக்கும் காலம் சரி வந்ததும் வருவினம். அது மட்டும் என்ர சீவன் கிடக்கும். ம்.”
"கண் பார்வை மங்கினாலும் கண்ணாக எனக்கிருந்த யோகேசும் ஒருநாள் காச்சல்ல ஒரு சொல்லு. சொல்லாம போயிற்றா. சட்டென வீசின காத்தில அணைஞ்ச விளக்குப்போல. யோகேசு சட்டென போயிற்றா. இப்ப. இந்த கைத்தடியோட தான் பேசிக்கொண்டு வாழுறன். இரண்டு வருஷத்துக்கு முந்திக்கூட எல்லா இடமும் சைக்கிளில போய் அலுவல் எல்லாம் பாத்து வந்தனான். இப்ப. இந்தக் கைத்தடி.”
“பின்னேரத்தில. ஒரு போத்தல் பனங்கள்ளு கொண்டு வந்து தந்திற்று போனவன். இப்ப அதுக்கும் தட்டுப்பாடா போயிற்று. இரவு நித்திரை வாறதுக்காக. ஒரு றாம் சாராயம் எடுக்கிறன். ஆனாலும் சரியா நித்திரை வரமாட்டுதெங்குது.”
இப்படியுமா..? 81

Page 43
"நேற்று வந்த கடிதத்தைப் பார்த்தபிறகு. என்னவோ. ஒரு மாதிரி உசாரா இருக்குது. என்ர மூத்த மகள் குடும்பம் வருகுதாம். என்ர பேத்தி. இளநிலா எப்படி வளர்ந்திருப்பாள். யூனிவசிற்றிப் படிப்பு முடிச்சிற்றாளாம். சட்டப்படிப்பு படிச்சிருக்கிறாளாம். இங்கிலிசும் பிரெஞ்சும் அந்த மாதிரிப் பேசறாளாம். இங்க கொழும்பில சட்டப் பேராசிரியராயிருக்கிற சிறிய தகப்பனிட்டச் சொல்லி ஏதோ சட்ட ஆய்வு செய்யப் போறாளாம். யாழ்ப்பாண தேசவழமைச் சட்டத்தைப் பத்தின ஆய்வாம். எனிர பேத்தி. கொஞ்சக் காலம் இஞ்ச தங்கப் போறாளாம்.”
“வந்த கடிதத்தை அந்த மனுசி வாசித்துக் காட்டின நேரம் தொடக்கம் எனக்கு முப்பது வயது குறைஞ்ச மாதிரி இருக்குது. .”
“சரி. அடுத்த கிழமை பிள்ளை குடும்பம் வரமுதல் இஞ்ச எல்லா வசதிகளும் செய்து வைக்கவேணும். மாம்பழம், பலாப்பழம் எடுத்து வைக்கவேணும். அந்த மனுசியிட்ட சொல்லி விறாத்துக் குஞ்சுகளும் சேவல்களும் வாங்க வேணும். வீடு வளவு துப்பரவாக்கி, வீட்டுச் சாமான்கள் ஒழுங்காக்கவேணும். .”
ஓர் உரத்த செருமலுடனர் கைத்தடியை எடுத்துத் தட்டித்தட்டிக் கொண்டு வீச்சாக நடந்து வீட்டுக்குள் வந்த கார்த்திகேசு மாஸ்ரர், வானொலிப் பெட்டி இருக்குமிடத்தை அளந்து நடந்தமாதிரி நேரேபோய் அதனை இயக்கினார்.
“நாளை முதல் கொழும்புக்கும் யாழ் நகருக்கும் நேரடி சொகுசு பஸ் சேவை ஒழுங்காக நடைபெறவுள்ளது. மதவாச்சியிலும் வவுனியாவிலும் மட்டும் சோதனை நிலையங்கள் இயங்கும். பயணிகள் சிரமமின்றி இரவு பகல் பிரயாணம் செய்யலாம்.” எனச் செய்தியறிக்கை தொடர்ந்தது.
மாஸ்ரரின் கண்களில் ஒளிக்கிற்று. சிறிது மின்னல் கோடுகள் தெரிந்த மாதிரி. எழுத்து கைக்கெட்டிய மாதிரி இருந்த சிறிய கிளாசு நிறைய ‘மெண்டிஸ்? சாராயத்தை ஊற்றி ஒரே மூச்சில் இழுத்தார். ஒரு செருமல். உசாராக. மேசையில் அந்த மனுசி போட்டு மூடி வைத்திருந்த சாப்பாட்ட்ை பல நாட்களுக்குப் பிறகு இன்று நிறைவாகச் சாப்பிட்டு முடித்தார். அவருக்கு வயது குறைந்துதான் விட்டது போலும்.
82 இப்படியுமா..?

தீயை வளர்க்கிறார்.
னெக்கு அவனை நீண்ட காலமாகத் தெரியும். அவன் பிறந்த கிராமமும் நான் பிறந்த கிராமமும் அடுத்தடுத்துள்ள தீவுகள்.
அவன் முதன்முதலில் ஆசிரியனாகக் கடமையேற்றது நான் பிறந்த கிராமத்தில். எனது சகோதரர் அதிபராகக் கடமையாற்றிய கணேச மகாவித்தியாலயத்தில்தான். பின்னர், அவனி காதலித்துக் கல்யாணம் செய்த கிராமத்திலேயே நானும் காதலித்து கல்யாணம் செய்தேன்.
இப்போது அவனது வீடு எங்கள் வீட்டிற்கு முன்னாலுள்ளது.
1990 பிற்பகுதி வடபகுதியெங்கும் “பொம்மர்’களும் 'ஹெலிகளும் இஷ்டப்படி கண்ட இடங்களெல்லாம் அழிப்பு வேலை செய்தபோது. ஒருநாள். பகல் 11 மணியிருக்கும்.
சங்கானை உதவி அரசாங்க அதிபர் காரியாலயத்தில் கையெழுத்திடச் சென்றிருந்தேன். பேரிரைச்சலோடு மூன்று “பொம்மர்கள்? வந்தன. உதவி அரசாங்க அதிபர் காரியாலயம், கடைகள் யாவும் இழுத்து மூடப்பட்டன. மக்கள் சிதறி ஓடினர். பதுங்கிடம் தேடினர். எண் நண்பர் உபதபாலதிபர் நடாவும் நானும் மாடிக் கட்டிடமொன்றின் மூலையில் நின்றுவிட்டு, திரும்பி வந்துகொண்டிருந்தோம். “பொம்மர்கள்? நீள்வட்டமடித்து இரு முறை சுற்றிவந்தன.
இப்படியுமா..? 83

Page 44
நாங்கள் வந்து கொணர்டிருந்த ஒழுங்கையிலிருந்து பார்க்கக்கூடியதாக ஒரு மைல் தூரத்திற்கப்பால் பொம்மர்கள் பெருத்த சத்தத்துடன் நான்கு தடவை கீழே குத்தி இறங்கி நிமிர்ந்து பறந்தன.
மனதுக்குள் ஒரே ஏக்கம். தவிப்பு. உயதபாலகத்துக்கு வந்து சேர்ந்ததும் நண்பர் நடா அங்கு தர்மப் பணத்துக்காகக் காத்து நின்ற இரு ஏழை வயோதிபர்களுக்கு அவசர அவசரமாக பணம் கொடுத்தார்.
அப்போது வீதியால் சைக்கிளில் வந்த ஒரு பையனிடம் “எங்க குண்டுகள் விழுந்தது?" என நண்பர் கேட்டார்.
"சந்தியில் தான் நாலு குண்டும். உங்கட. மாஸ்ரர் ரவி ஐயா போயிற்றார். அதோட ஒரு இளம்பிள்ளை. இரணர்டு சின்னப்பிள்ளைகள். பாக்கேலாது.”
இருவரும் ஓடிவந்தோம். இளம் பெண்ணும், சின்னப் பிள்ளைகளும் துண்டு துண்டாய் போயிற்றாம்.” யாரோ வழியில் சொல்லிக்கொண்டு போனார்கள்.
அப்போதுதான் ரவியைச் சிலர் வீட்டிற்குள் தூக்கிக் கொணர்டு வந்தார்கள். 'வயிற்றில் ஒரு சின்னத்துணர்டு பறந்துட்டுது. அந்த இடத்திலேயே உயிர் போயிற்றுது. பக்கத்தில் ஒருவர் சொல்லிக் கேட்டது. என்னால் நம்ப முடியவில்லை.
மலர்ந்த முகத்தோடு எண் நண்பன் ரவி படுத்திருந்தான். வயிற்றைச் சுற்றி கட்டியிருந்த துணியில் நிறைய இரத்தம் தோய்ந்திருந்தது.
அவன் தலையைத் தடவியவாறு ஓவென்று வாய்விட்டு அழுதுவிட்டேன். அருகில் நின்ற அவனது சகலன் நல்லதம்பி என்னை அணைத்துக்கொணர்டார். முதல்நாள் இரவு பன்னிரெண்டு மணிவரை 'கேற்றடியில் நின்று கதைத்தோம். “சனம் உணவுப் பொருள்களுக்கு கஸ்ரப்படுகுது. எப்படியும் உதவவேணும். நீங்கள் எல்லாம் எங்களுக்கு ஒத்துழைக்க வேணும்" என்று சொன்னான்.
அவனர் அரசியல் வேலை செய்யவில்லை. அரச உத்தியோகத்தை ஒழுங்காகச் செய்தவன். மக்களைப் பற்றியே யோசித்தான்.
84 இப்படியுமா..?

கடந்த பல நாட்களாக நணர்பர் பலருடன் சேர்ந்து சாவகச்சேரி, கொடிகாமம் போன்ற இடங்களுக்கெல்லாம் சைக்கிளிலேயே சென்று உணவுப்பொருட்கள் வாங்கி வந்தான். கிராமத்திலுள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் கிடைக்கக் கூடியதாகப் பங்கீட்டு முறையில், மலிவு விலையில் அவற்றை விநியோகிக்க ஒழுங்கு செய்தான். சந்தியில் அதற்கென ஓர் இடத்தையும் தெரிவு செய்து அதில் வைத்து உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த முன்மாதிரியையே பல கிராமத்து ஆட்களும் பின்பற்றினரே.
‘உணவுப்பொருட்கள் வழங்கும் வேளையிலா குண்டுகளைப் பொழிவது? எல்லோரும் பதுங்கிடம் தேடி ஓடிட ஏழைகளுக்கு உதவிய நீயும், ஏதுமறியாச் சிறுவர்களும், அவர்களை அழைத்துப் போகவந்த அப்பாவி இளம் பெண்ணும் பலியாகி விட்டீர்களே.” எண் மனதில் ஆயிரம் எண்ணக்கீற்றுகள்.
எனக்கும் அவனுக்கும் கொள்கையளவில் பலத்த முரண்பாடுதான். ஆனாலும் அவன் மக்களை நேசித்தான். மக்களுக்கு உதவத் துடித்தான். உள்ளந் திறந்து பேசுவான். அதனால் அவன்மீது மரியாதை. நட்பு.
சட்டப்படி உடலைப் பரிசோதனை செய்து சான்றிதழ் பெறவும், உடலைக் கெடாமல் அடுத்த நாள் வரை பாதுகாக்கும் பொருட்டும் அரச வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லவேண்டும். அவன் வீட்டில் மூத்த மகன். அவனுக்கு பொறுப்புகள் பல இருந்தன. அவனுக்கும் மூன்று பாலகர்கள். இந்த பொறுப்புக்களை யார் சுமப்பர்.
எண்ணிப் பார்க்காதவர் அங்கில்லை. அரச வைத்திய சான்றிதழ் பெற்றால், அது பின்னர் அந்தப் பாலகர்களின் எதிர்காலத்துக்கு ஏதோ ஒரு வழியில் உதவும் என்பது எமது எண்ணம். ஏனெனில் அவன் அரச ஊழியன். கடமை தவறாத நல்லதோர் ஆசிரியன். வீட்டில் நின்றோர் பலரும் தடுத்தனர். நிலைமை அப்படி.
தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு, தெரிந்த ஒருவரின் காரில் உடலை எடுத்துச் சென்றோம். அப்போது வழியெங்கும் ஹெலியும் பொம்பரும் பறந்தபடி. நீண்ட தூரத்திற்கு காரை ஹெலி துரத்தியது. தொடர்ந்து சுட்டுக்கொண்டு வந்தது.
கார் ஓடிய வேகம்; புளிய மரங்களுக்கிடையில் அதனை மறைத்தது நாங்கள் நிலத்தில் படுத்துக்கொணர்டது;
இப்படியுமா..? 85

Page 45
சரமாரியாகச் சுட்டுத் தள்ளியபின் ஹெலி திரும்பியது; பின்னர் துரித வேகத்தில் கார் வைத்தியசாலைக்குள் புகுந்தது; எல்லாமே கனவு போல் தான் இருந்தது.
பரிசோதனை முடிந்து, சான்றிதழ் பெற்று உடலையும் பதப்படுத்திக்கொண்டு வீடு வந்து சேர்க்க மாலை ஏழரை மணிக்கு மேலாகிவிட்டது.
காருக்கு வெளிச்சமே இல்லை. ஆனாலும் மின்னல் வேகத்தில் வந்து சேர்ந்தது சாரதியின் திறமைதான். வீதியில் வேறு வாகனங்கள் நடமாட்டமும் அரிதுதானே. எனி மனைவிக்கு நான் எங்கு சென்று வந்தேன் எனத் தெரியாது. என்னைக் காணாது கலங்கிப் போயிருந்தவர் முற்றத்தில் என்னைக் கண்டதும் ஓடி வந்து கேட்டாள்.
“எங்கே போய்விட்டு வந்தீர்கள்."
“நல்லதம்பி அண்ணை.” வருத்தக்காற மனுஷன் அவரை இந்த நேரத்திலை தனிய ஆஸ்பத்திரிக்கு போக விடுறதே. அதுவுமில்லாமல். ரவி.” என்னால் பேச முடியவில்லை. கண்கள் முட்டிப் போயின.
என் மூன்று வயது மூத்த மகள் வந்து, "அப்பா. ஏன் கீதா அக்கா வீட்டில் அழுது கேட்குது. என்ன நடந்தது.” என்று கேட்டாள்.
பேச்சு வரவேயில்லை. கண்ணிர் முட்டி சேட்டில் துளி விழுந்தது. ரவியும் நானும் அவனது வீட்டு முற்றத்திலிருந்து இரவு நெடுநேரம் 660) L6) விடயங்களும் கதைத்துக்கொண்டிருக்க, என் மூத்த மகளும் அவன் ஒரே மகள் கீதாவும் ‘லைற் வெளிச்சத்தில் எத்தனை நாள் ஓடி விளையாடியிருப்பார்கள்.
பல நாட்கள் சென்றும். எண் மகள் நடுச்சாமத்தில் திடுக்கிட்டெழுந்து என்னை எழுப்பிக் கேட்பாள் "அப்பா. கீதா அக்காவின் அப்பா செத்துப் போயிற்றாரா. இனி வரவே மாட்டாரா. கீதாவும் என்னைப் போல அப்பா வின்ர செல்லம் தான். பாவம் அப்பா.”
என் கணிகள் நிறைந்துவிடும். மகளை இறுக அணைத்துக்கொள்வேன்.
இப்போது எண் மகளுக்கு ஐந்து வயதுகூட நிரம்பவில்லை. பொம்மர் சத்தம் கேட்டால் எல்லோரையும் பங்கருக்குள்? ஓடிவிடுமாறு முதலில் கூவி அழைப்பதுடன், ஒரு வயதுகூட
86 இப்படியுமா..?

நிரம்பாத தங்கச்சியையும் தூக்கிக் கொண்டு “பங்கருக்குள்’ ஒடுகிறாள்.
பங்கருக்குள்ளும் விளையாட்டுப் பொருட்கள்.
“கீதா அக்காவை அழ வைச்ச. அவளின்ரை அப்பாவை சாக்காட்டின “பொம்பரை ஒரு நாளைக்கு. அவள் கையில் அந்த சீனத் தயாரிப்பு விளையாட்டுத் துப்பாக்கி. பேரிரைச்சலோடு சீனத் தயாரிப்பு ‘சகடை விமானம் எங்கோ தூரத்தில் பீப்பா குண்டை தள்ளிவிட்டுப் போகிறது.
எண் காதுகளுக்குள்ளிலிருந்து இன்னும் இரைச்சல் சத்தம் போகவில்லை. மகள் வெளியில் வந்து நிமிர்ந்து பார்க்கிறாள்.
இப்படியுமா..? 87

Page 46
"மெல்ல. மெல்ல. மெதுவா தூக்கி வையுங்கோ. தம்பி கவலைப்படாதேயும். கொழும்பில எல்லாம் சரிப்படுத்திக் கொண்டு வாரும். இந்த நேரத்தில் அம்புலன்ஸ் கிடைச்சதே பெரிய காரியம். பத்திரமா படுத்திரும். அழக்கூடாது. நம்பிக்கையோட இருக்க வேணும். சரிதானே.”
அம்புலன்ஸ் வண்டியில் ஸ்ரெச்சரோடு தூக்கி அவனை ஏற்றி அனுப்பும்போது, கலங்கிய கண்களோடு அந்த நேர்ஸ் சொன்ன பரிவான வார்த்தைகள். அவனி மனம் வருந்திக்கொண்டிருந்தது. அவன் கணிகள் கலங்க அந்த நேர்ஸை பரிவோடு பார்த்தான்.
“மீண்டும் இவங்கள பார்ப்போமா. என்னை ஏன் பிழைக்க வைக்க முயற்சிக்கிறாங்கள். எனக்கு ஏன் வாழ்க்கை. ஆருக்காக நான் வாழ வேணும். எனக்குப் போல வேதனையள் ஆருக்கும் வந்திருக்குமா. கடவுள் எண்டு ஒருத்தன் இருக்கிறானா. இருந்தா. எனக்கு ஏன் இவ்வளவு வேதனையள். நான் ஆருக்கு என்ன கெடுதி செய்தேன். ஐயோ. என்ர செல்வம் எல்லாத்தையும இழந்திற்றேனே. எண் மனோ. என்ர ராசாத்தி. "உன்னைப் பறிகொடுத்த பின்னும் நான் உயிரோடிருக்க வேணுமா. கிளிக்குஞ்சு போல பெத்துத் தந்த பிள்ளையையும்
88 இப்படியுமா..?
 

இழந்தேனே. இனி நான் ஏன் சீவிக்க வேணும். ஆரிட்ட சொல்லி அழுவேன். ஐயையோ..!"
அம்புலனர்ஸ் பரந்தனர் சந்தியைக் கடந்து வேகமாக விரைகிறது.
சலம் போவதெற்கென கொழுவியிருந்த குழாய் பொருத்தப்பட்ட இடத்தில், சலவாசலில் வலி தாங்க முடியவில்லை. ஓவென்று கத்த வேண்டும் போலிருந்தது. பக்கத்திலிருந்த ஆளிடம் சொன்னான். கத்தினான். "ஐயோ. இந்தக் குழாயை ஒருக்கா கழட்டி விடுங்கோ."
அம்புலன்ஸ் கிளிநொச்சி ஆஸ்பத்திரி வாசலில் நின்றது. அவசரமாக டாக்டர் வந்து யாழ் ஆஸ்பத்திரியில் கொடுத்த துண்டினை வாங்கிப் பார்த்தார். பின் அவனைப் பார்த்தார்.
“சொறி. நான் அதைக் கழட்ட மாட்டனர். இப்படியே கொழும்புக்குக் கொணர்டு போங்கோ. கொழும்பு ஆஸ்பத்திரிக்குத்தான் துண்டு எழுதியிருக்கு நான் அதில் கைவைக்கப்படாது.” அம்புலன்ஸ் மீண்டும் ஒடுகிறது. அவனுக்கு உயிரே போவது போலிருக்கிறது.
"நான் மாத்திரம் பிழைக்க இவ்வளவு கஸ்ரப்பட வேணுமா. எனிர மனுசி. பிள்ளை பிளைச்சிடும் எணர்டா எவ்வளவு கஸ்ரத்தையும் தாங்கியிருப்பேனே. நான் பாவி. எனக்கேன் இப்பிடி ஒரு நிலை.”
பிள்ளை பிறந்து பத்து நாளாகவில்லை. எங்கும் ஒரே பிரச்சினை. சண்டை, இதுவரை காணாத கேட்டிராத சத்தங்கள், நிகழ்வுகள். ஆயிரமாய். ஹிந்தி மொழிச் சத்தங்கள். இரண்டாம் நாளே பெரியாஸ்பத்திரியிலிருந்து துண்டு வெட்டி கொணர்டு வந்திருந்த தாயையும், பிள்ளையையும் பதுங்குகுழிக்குள் எத்தனை மணித்தியாலம் தான் வைத்திருப்பது.
கூரைக்கு மேலால் விசில் ஊதினமாதிரி சத்தத்தோடு போகிறது ஷெல்..அருகில் எங்கோ விழுந்து இரண்டு, மூன்று பயங்கர சத்தங்கள் கேட்கிறது.
அவளுக்கு காய்ச்சல் வந்து நடுங்குகிறது. பிள்ளையின் காதுக்குள் எப்போதும் பஞ்சு அடைத்தபடிதான். தொடர்ந்து இப்படியே வைத்திருக்கப் பயமாகவிருக்கிறது. சூட்டுச் சத்தங்களும் கேட்கத் தொடங்கிவிட்டது. கார் ஒன்றைத்
இப்படியுமா..? 89

Page 47
தேடிப்பிடித்து பக்கத்து கிராமமொன்றுக்கு கூட்டிச்சென்று ஒரு வீட்டில் கெஞ்சி இடம் கேட்டு வைத்திருந்து விட்டு மானிப்பாய் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் காட்டினான். அவர்கள் கைவிரித்து விட்டனர். பெரியாஸ்பத்திரிதான் இனிக்கதி.
ரொம்பச் சிரமப்பட்டு பெரியாஸ்பத்திரிக்கு கொண்டு வந்து வார்ட்டில் சேர்த்தான். அன்று ஒரு டாக்டர் தான் அத்தனை வார்ட்டையும் கவனித்துக் கொண்டிருந்தார். அங்கும் ஒரே நெருக்கடி.
அந்த டாக்டரும் மறுநாள் இல்லை. ஊழியர்களும் குறைவு. பலர் ஆஸ்பத்திரியில் அடைபட்டுக் கிடந்தனர். வெளியில் போகவே பயமாகவிருந்தது.
ஒரு நேர்ஸ் அவனிடம் வந்தாள். கைநிறைய ‘அம்பிசிலின்? கப்சூல்களை அள்ளி அவனிடம் கொடுத்தாள். ஆறு மணித்தியாலத்துக்கு ஒருதரம். இரண்டு கப்சூல்கள் வீதம். நோயாளியை ஒருதரம் உற்றுப் பார்த்துவிட்டு அந்த நேர்ஸ் பறந்து மற்ற கட்டிடத்துக்குள் போனாள். இப்போது அவன்தான் அங்கு நேர்ஸ் மாதிரி. மனைவியையும் பார்த்துக் கொள்வதோடு. வேறு சிலருக்கும் இயன்றவரை உதவினான்.
அவளைத் தூக்கி வைத்து அழுகையைத் துடைத்து அவளுக்கு கப்சூல்களைக் கொடுத்தான். தொடர்ந்து படுக்கையில் கிடந்ததால் ஏற்பட்ட புணர்களைக் கழுவி துடைத்துவிட்டான். வார்ட்டில் கிடைக்கும் சாப்பாட்டையும் கொணர்டு வந்திருந்த ஹோர்லிக்ஸையும் கொடுத்துக் கொணி டிருந்தான். மனைவியோடு பக்கத்தில் பச்சிளம் குழந்தை பாலூட்ட அவளால் முடியாது. அவள் பால் குழந்தைக்கு கூடாதாம். அந்த நேர்ஸ் சொல்லியிருந்தாள். குழந்தையை தெரிந்த ஒருவர் மூலம் வீட்டிற்கு கொடுத்தனுப்பினான்.
அங்கு கொண்டு போய் நான்கு நாட்களுக்குள்ளேயே குழந்தைக்குக் காய்ச்சல், இடைக்கிடை பிரச்சினை கூடுவதும் குறைவதுமாகவிருந்ததால் பரிகாரியிடமும் கொண்டு போய் காட்ட முடியாத நிலை. சரியான உணவில்லை. அங்கு வந்து ஐந்தாவது நாள் குழந்தை இறந்து விட்டது. அவனுக்குத் தெரியாது. அன்று அந்த வார்ட்டுக்கு வந்த நேர்ஸ் இவனைப் பரிதாபமாகப் பார்த்துவிட்டு சொன்னாள். “தம்பி. பாலசிங்கம். உம்மைப் பார்க்க பரிதாபமாக இருக்கு. கலியாணம் முடிச்சுப்
90 இப்படியுமா..?

பதினைஞ்சு மாதம் எண்டு சொன்னீர். இப்ப அவவின்ர உடம்பில ரத்தத்தில கிருமி கலந்திற்று. சரியாக கவனிக்காததால இந்த நிலை. இங்க டாக்டர்மார் இல்லை. நீங்க கொண்டு வந்த நேரம் அந்த நல்ல டாக்டர் இங்க இல்லை. அவர் போயிற்றார். நேர்ஸ்மார் கூட இப்ப ஒழுங்காக வரமுடியாத நிலை. நான் கூட இங்கதான் தங்கியிருக்கிறன். கிட்டத்தட்ட நான் ஒரு அநாதை மாதிரி. என்ர வாழ்க்கை அப்பிடி. சனத்துக்கு எந்த நேரத்திலும் உதவி செய்யிறது தான் எனக்கு கடவுள் தந்த தொண்டு ஏணிடு நினைச்சு இங்கேயே இருந்து இப்பவேலை செய்யிறன். இவ பிழைக்கிறது கஸ்ரம். மனதைத் திடப்படுத்திக்கொள்ளும். ஏதாவது வழியில் கஸ்ரப்பட்டு வீட்டுக்கு கொண்டு போக முடிஞ்சா கொண்டு போகப் பாரும். பிறகு இங்க தகனம் பண்ணக்கூட கஸ்ரமாக இருக்கும். இந்தக் கப்சூல்களை நான் சொன்ன மாதிரி தொடர்ந்து குடும். கவலைப்படாதேயும்.”
அவனுக்கு தலை சுற்றியது. ‘எங்கேயோ போய்விழும் ஷெல் என்ர தலையில விழாதா. எனிர மனுசி என்னை விட்டு போறதுக்குள்ள இதில ஷெல் விழுந்தா நானும் சேர்ந்து என்ர ராசாத்தியோட போயிடுவேனே. இதுக்குத்தானா இவ்வளவு கஸ்ரப்பட்டு இங்க கொண்டு வந்தனான். அன்று காலை அவள் கண் சிறிது தெளிவாகத் திறந்திருந்தது. பக்கத்தில் வருமாறு கூப்பிட்டவள், “சோறு தாங்கோ” என்றாள். தன் கையை மெல்ல தூக்கி, அவன் கண்களைத் துடைத்தும் விட்டாள். வார்ட்டில் திரிந்து சோறு வாங்கி வந்தான். தண்ணிர் சாப்பாடே வேண்டாம் என்றவள் இன்று சோறு கேட்பது அவனுக்கு ஒருவிதம் தென்பாகவும் வியப்பாகவும் இருந்தது. அவளை முன்பக்கமாகத் துTக்கி தனி மார்பில் சாய்த்து வைத்து இடது கையால் அணைத்துக்கொண்டு குழந்தைக்குக் கொடுப்பது போல, சோற்றைக் குழைத்து தீத்தி விட்டான். இரண்டு கவளம் சாப்பிட்டாள். பின்பு சாப்பிட முடியவில்லை.
கண்களில் நீர் வடிந்தது. “அழாதே." என்று சொல்லித் துடைத்துவிட்டான். திருமணமான நாள் முதல் இன்றுவரையான ஒவ்வொரு நிகழ்வும் அவனர் கணி முனர் படமாக ஒடிக்கொண்டிருப்பது போலிருந்தது. உலரப்போட்ட ஈரத் துணியிலிருந்து துளித் துளியாய் நீர் சொட்டுவது போல அவன் கண்களிலிருந்தும் நீர் சொட்டிற்று.
இப்படியுமா..? 91

Page 48
அவனர் மார்பில் அவள் சாய்ந்து படுத்திருந்தாள். என்னென்னவோ நடந்து போன நினைவுகள் வந்து மோதுகின்றன. “எனக்கு அப்பா, அம்மா இல்லை. நீங்க தான் எனக்கு எல்லாம். உங்களை தூர இடத்துக்குப் போய் உழைக்க விடமாட்டேன். என்ன கஸ்ரம் வந்தாலும் நீங்க இங்கதான் இருக்கோணும். எனக்கு நீங்கதான். உங்களுக்கு நான்தான்.”
ஆறு மாதத்திற்கு முன்பு கடுமையான காய்ச்சல் வந்தபோது விடிய விடிய விழித்திருந்து குடிநீரும் மருந்தும் தந்து சொன்னவை. . வாயைக் கழுவி விட்டான்.
இவனி கணிகளையே அவள் பார்த்துக்கொணர்டு. "அழாதேயுங்கோ.எனக்கு என்னவோ ஒரு மாதிரி இருக்கு. நீங்க அழப்படாது. நல்லா இருக்கோணும். உங்க பெரியக்காவின்ர காணியை எப்பிடியும் மீட்டுக்கொடுக் கோணும். அவையள் பாடு கஸ்ரம். பார்த்துக் கொள்ளுங்கோ. நான் உங்கட மனோதானே. என்ர கையை உங்கட கையுக்கை பொத்தி வைச்சிருங்கோ.” அதுக்குமேல் அவளால பேச முடியவில்லை. அப்படியே வைச்சிருந்தான். அடிக்கடி நெஞ்சைத் தொட்டுப் பார்ப்பாண். மூக்கின் மேல் கையை பிடித்துப்பார்ப்பாண். அவள் தலையை அணைத்துக்கொள்வான். கண் கலங்குவான். இப்படி. பிற்பகல் மூன்று மணியிருக்கும் அவளிடமிருந்து மூச்சே வரவில்லை. அவள் கணிகள் அவனையே பார்த்தவண்ணம் நிலை குத்தி நின்றன.
ஓவென்று அழுதான். வார்ட்டில் போவோர் வருவோர் என ஆட்களே இல்லை. பக்கத்து வார்ட்டில் நின்ற ஒரு சிலர் வந்து பார்த்தனர். ஆறுதல் கூறினர்.
அங்கு நேர்ஸ் வந்தாள். “தம்பி. பாலசிங்கம். அழாதையும். நடக்க வேணர்டியதை பாரும். வில்லுTணர்டிக்கு வணிடி பிடிச்சுக்கொண்டு போய் எரிக்க காசு ஏதும் வைச்சிருக்கிறீரோ. இப்ப அதுவும் கஸ்ரம். வழியில. பிரச்சினையாம். ஒண்டு செய்யும். இங்க ஆஸ்பத்திரி வளவில சில உடம்புகளை கொழுத்தியிருக்கிறாங்க. இதையும் இங்க கொழுத்த பெமிஷன் கேட்டு இங்கேயே எரியும். யோசிக்காதேயும். நடக்க வேண்டியதை பாக்க வேணும். எழும்பி வாரும். முதல்ல அதுக்கு பெமிஷன் கேட்டுப் பாப்பம்” நிலைமைகளை அந்த நேர்ஸ்
92 இப்படியுமா..?

விளங்கப்படுத்தியதால் ஒருவாறு அனுமதி கிடைத்தது. ஆஸ்பத்திரி வளவில் தேடித் திரிந்து உடைந்த கட்டில் கால்கள், மரத் துண்டுகள், தடிகள், குச்சிகள், சருகுகள், கழிவுப் பஞ்சுக் குவியல்கள் எல்லாம் சேர்த்து ஒரு பெரிய மரத்துக்கு கீழே அவளைத் தகனம் செய்தான்.
இரவு முழுவதும் ஒரு ஜாம் வெற்றுப் போத்தலை அருகில் வைத்துக்கொண்டு அவள் எரிந்து அந்தச் சாம்பல் ஆறும்வரை காவல் இருந்தான். அந்தப் போத்தலுக்குள் அந்தியேட்டிக்கென எலும்புச் சாம்பலை எடுத்தான்.
தலைமாட்டில் சாம்பல் போத்தலுடன் இரண்டு நாட்கள் ஆஸ்பத்திரியிலேயே இருந்தான். வெளியில் ஓரளவு நிலைமை சரிவந்ததும், வீட்டிற்குப் போகுமுன் அந்த நேர்ஸ் வந்து கதைத்துவிட்டு நூறு ரூபா கொடுத்தாள். இவனர் வேண்டாமென்று மறுத்த போதும், “இந்த சகோதரத்தால் இவ்வளவு தான் இப்ப தரமுடியும் தம்பி. பிடியும். வீட்டை போய் ஆக வேண்டியதைப் பாரும்” என்று சொல்லி அதனைக் கைக்குள் திணித்துவிட்டு போய்விட்டாள்.
“இப்படிப்பட்ட நல்ல சனத்தாலதான். . ” வீட்டிற்குப் போனவனுக்கு மேலும் அதிர்ச்சி. குழந்தை இறந்த செய்தி. என்ன செய்வது என்றே தெரியாமல் ஒருமாதம் வரை வீட்டில் அடைபட்டுக்கிடந்தான். பெரியக்கா புருஷனோடு போய் அந்தியேட்டியை முடித்துவிட்டதிருப்தி.
“சிண்ணக்காவின் கலியாணத்துக்கென ஈடு வைத்த பெரியக்காவின் காணியை மீட்டுக் குடுக்கவேணும் என்ர ராசாத்தி கடைசியா சொன்ன விஷயம். வட்டியோட நாப்பதாயிரம். எப்படி உழைச்சு மீழுவண். அதை மீட்டுக் கொடுக்க மட்டுமாவது நான் உயிரோடயிருக்க வேணும்.”
நினைத்துப் பார்த்தவனுக்கு தலை சுற்றியது. சைக்கிளோடு விழுந்தவனை ஒரு சிலர் கூட்டி வந்து வீட்டில் சேர்த்தனர். வீட்டில் அவனைக் கவனிக்க யாருமில்லை. ஒரே மச்சான். அவனர் வணிடி பிடித்து அவனது பெரியக்கா வீட்டில் கொணர் டுபோய் விட்டான். அவ்வளவுதானர் மச்சானினர் மனிதாபிமானம்.
இப்படியுமா..? 93

Page 49
“என்ர ராசாத்தி இருந்தா. இப்பிடியா.”. அவன் மீண்டும் பெரியாஸ்பத்திரியில் ஒரு கிழமை வார்ட்டில் சிகிச்சை,
தலையில இரத்த உறைவாம். ஏதோ கட்டியாம். உடனே பெரிய ஒப்பரேசன் செய்யவேணுமாம். அந்த நேர்ஸ் அடையாளம் கணிடு உதவினாள். கொழும்பு பெரியாஸ் பத்திரிக்கு ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்தனர்.
கொழும்பு ஆஸ்பத்திரி வாசலில் அம்புலன்ஸ் நின்றது. "ஐயோ. அம்மா. இதை கழட்டுங்கோ. ” ஒரு அற்றெண்டன் வந்தான். ஸ்ரெச்சரில் அவனைத் தூக்கி ஏற்றிவிட்டு அந்தக் குழாயைப் பிடுங்கி விட்டான். ஐயோ. அவனுக்கு உயிர் போய் வந்தது. ரத்தமும் சலமும் ஒன்றாகப் போனது.
வார்ட்டில் படுக்கை கிடைத்தது, உணவும் பரவாயில்லை. கொழும்பில் முனர்னர் கடையில் வேலை செய்த போது கற்றுக்கொணிட சிங்களம் கை கொடுத்தது. ஒருவாறு சமாளித்தான்.
‘தலையில் நரம்புகளில் வீக்கம். கட்டி. ஒப்பறேசன். நினைக்க அழுகைதான் வந்தது. தலையை ஒட்ட வழித்து விட்டார்கள். மொழிங்குத் தோற்றம் என்பார்களே. அப்படி. இவனுக்கு சிறிது சந்தோஷம். ‘என்னை யாரும் இங்கு வந்தாலும் அடையாளம் காணமுடியாது.”
பெரிய டாக்டர் ஒரு தமிழர். அவரைக்கண்டதும் ஓடிப்போய் கும்பிட்டான். தனி கதையைக் கூறி கெதியில் தன்னை யாழ்ப்பாணம் அனுப்புமாறு கேட்டுக்கொண்டான்.
“தம்பி. இப்படி எண்னோட கதையாதையும். பாவமாகத்தானிருக்கு. உமக்கு நான் நேரடியா உதவ முடியாது. இது டொக்டர் அமரதேவாவின்ர வார்ட். அவர் தன் உமக்கு ஒப்பறேசன் செய்வார். நான் அவருக்கு போனில் உம்மைப்பற்றி சொல்லுறன். இப்பிடி எண்ணட்ட வராதையும். என்னையும் சந்தேகப்படுவாங்கள். சந்தேகப்பார்வை இங்கேயும் அதிகம். நீரும் கவனமாயிரும்.”
அவனது கன்னப்பக்கமாக சரிபாதி தலையை பிளந்து ஒப்பறேசனர் நடந்தது. மறுபக்கமும் ஒப்பறேசனர் செய்ய வேண்டுமென்றும் அதற்கு கொழும்பில் ஒரு தனியார்
94 இப்படியுமா..?

ஆஸ்பத்திரியில் பத்தாயிரம் ரூபா கட்டி படம் எடுத்து ஒப்பறேசன் செய்யுமாறும் கூறி, பாதி தலை ஒப்பறேசன் முடிந்த சில நாட்களில் துண்டு வெட்டி அனுப்பிவிட்டனர்.
சீதன வீடு, தாலிக்கொடி, நகைகள், வீட்டுப்பொருட்கள், போட்டிருந்த மோதிரம், அவன் உழைத்துத் தேடியவை எல்லாவற்றையும் மனைவி வீட்டாரே சொந்தமாக்கிவிட்டனர். அவனுக்கு எதுவும் கிடைக்கவில்லை. அவனது பழைய சைக்கிளைத் தவிர.
“பெரியக்கா குடும்பம் பாவம். நாலு பொம்பிளைப் பிள்ளைகள், இவையின்ர காணியை மீட்டுக் குடுக்க வேணும். வட்டியோட நாப்பதாயிரம். என்ர ராசாத்தி கடைசியா சொல்லிப் போட்டுப் போனது. அதை கட்டாயம் மீளவேணும். அதுவரையாவது நான் சீவிக்க வேணும். எனக்கு இனி ஒப்பறேசன் எதுவும் வேணாம். சா. வந்தால் வரட்டும். உழைக்க வேணும். உழைத்து அதை மீட்டுக் குடுக்க வேணும்.”
ஒரு தபால் வந்தது. பிரித்துப் பார்த்தான். பெரியாஸ்பத்திரியிலிருந்து மரணச் சான்றிதழ். அவன் மனைவி இயற்கை மரணமடைந்திருந்ததாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதிகாலை. சூரிய உதயத்தோடு. மாட்டு வணிடில் சத்தங்கள். பாலசிங்கம் எழுந்து தனது பழைய சைக்கிளை எடுத்துக்கொண்டு சுண்ணாகம் சந்தையை நோக்கி மீண்டும் போகிறான்.
இப்படியுமா..? 95

Page 50
அன்புள்ள அப்பாவுக்கு.
இரண்டு மாதங்களுக்கு முந்திய திகதியிட்ட உங்கள் கடிதமும் காசும் கிடைத்தன. அப்பா. மனதைத் திடப்படுத்திக் கொள்ளுங்கள். எல்லோர் குடும்பங்களிலும் போலத்தான் நம் குடும்பத்திலும்.
உங்கள் சின்னக்கா, எங்கள் ஆசை மாமி கடந்த 2-ம் திகதி காலமாகி விட்டார். முதல் நாள் இராசா பெரியப்பா வீட்டிற்குப் போய்விட்டு வீடு போனவர், இரவு காய்ச்சல் வரவே, மறுநாள் ஆஸ்பத்திரி போனார். அன்றிரவே போய்விட்டார். மூளைக் காய்ச்சலாய் இருக்கலாமாம்.
இராசா பெரியப்பா நிலை கலங்கிப் போய்விட்டார். படித்துப் பட்டதாரியாகி பெரிய உத்தியோகம் பார்த்துக்கொண்டு சீரோடும் சிறப்போடும் இருக்கிறாய் என பெருமையோடு இருந்தோம். இப்படி அரை வயதில் போய்விட்டாயே’ என்று கதறி அழுதார்.
மாமியின் இரு குழந்தைகளையும் நினைக்க அழுகைதான்! என்னைக் கட்டிப்பிடித்துக்கொண்டு கதறினார்கள். அழுகை வருகிறது. எழுத முடியவில்லை.
இராசா பெரியப்பா வீட்டில் வைத்துத்தானி இறுதிச் சடங்குகள் நடந்து முடிந்தன. எல்லோர் அலுவலகங்
96 இப்படியுமா..?
 

களிலுமிருந்து நிறைய ஆட்கள் வந்தார்கள். ‘கவலைப்படாதீர்கள் அப்பா. மாமி புகழோடு போய்விட்டார்!’
தீவுப்பகுதி ஆசிரியர் எல்லோருக்கும் யாழ்ப்பாணத்தில் தான் தற்காலிக இடம் போட்டுக் கொடுத்துள்ளார்கள். இந்து மகளிர் கல்லூரியில் பிற்பகல் நேர வகுப்புக்கள் தீவுப்பகுதிப் பிள்ளைகளுக்கென நடக்கினர்றன. அம்மா அங்குதாணி படிப்பிக்கப் போகின்றா. குட்டி மாமாதான் சைக்கிளில் பத்திரமாக கூட்டிப்போய் கூட்டி வருவா, அம்மாவுக்கு ஓய்வில்லை. கஷ்டம்தான். சரியாய் கறுத்து மெலிந்து போய்விட்டார். சாப்பாட்டைக் கவனிப்பதில்லை. தங்கச்சியவையைப் பார்க்கவேணும். பாடசாலை வேலைகள், பயிற்சிகள் செய்து முடிக்க வேணும். தங்கச்சியவை ஒரே குழப்படி, அம்மாவை ஒரு வேலையும் செய்யவிடமாட்டினம். சின்னத் தங்கச்சியை நான் தூக்கி வைச்சிருப்பேன். ஆனால் அவள் என்னோடு சேரமாட்டாளாம். அவள் இப்போதே நடக்கத் தொடங்கிவிட்டாள். நல்லாக் கதைக்கிறாள். பெரிய தங்கச்சி தாத்தாவின் செல்லம். எந்த நேரமும் தூக்குக்காவடி'தான்.
என்னோட எல்லாரும் செல்லம்தான். ஆனால் நாணி ஒருவருடனும் செல்லமில்லை. சிலவேளை அழுகை வரும். அப்பா வீட்டிலிருந்தால். என்று நினைப்பேன். நான் அப்பாவின் செல்லம் தானே. கடிதங்கள் பருத்தித்துறைக்கு கப்பல் மூலம் கொண்டு வரப்பட்டு, பின்னர் இங்கு தருகிறார்கள். உங்கள் கடிதங்கள் சிலவேளை ஒரு மாதத்திலும், சிலவேளை இரண்டு மாதங்கள் கழித்தும் கிடைக்கின்றன. நான் கவனமாகத் தான் படிக்கிறேனர். பெரிய தங்கச் சிக்குப் பாடம் சொல்லிக் குடுக்கிறேன்.
அன்ரிக்கு ஏப்ரலுடன் படிப்பு முடியுதாம். படிப்பு முடிந்து அவ வீட்டிலிருந்தால் எங்களுக்குக் கொண்டாட்டம் தான்.
அப்பா. சந்தியில், முன்னர் உங்கள் வைத்திய சாலைக்குப் பக்கத்து வீடு இராமநாதற்ற பேத்தி விஜி இயக்கத்திற்குப் போய்விட்டாளாம். தகப்பணி அங்குதான், சுவிஸிலிருந்து கனகாலமா உழைச்சு அனுப்பி குடும்பத்தைப் பார்த்தவர் எண்டு தெரியும்தானே. ஜி. சி. ஈ. நல்ல ரிஸல்ட் எடுத்த பிள்ளை. ஏ. எல். படிக்காம இயக்கத்துக்கு போயிற்று. ஏ. எல் படிக்கச்
இப்படியுமா..? 97

Page 51
சொல்லி, அனுப்புகிறதெனிடும் தகப்பனர் எழுதியிருந்தவராம். “இந்த மண்ணை இப்போது மீட்காமல் எப்போது மீட்பது? என்று தாய்க்கும் தகப்பனுக்கும் வேறு வேறாகக் கடிதம் எழுதி வைச்சுப் போட்டு போயிட்டுதாம். ‘தகப்பனுக்கு, கடிதத்தை சுவிசுக்கு அனுப்பினா, அந்த மனுஷன் மூளையை விட்டிடும் என்று தாய் தலையில அடிச்சு அழுதுபோட்டு பேசாமா இருக்கிறா. தமையன்மார் சுயநலத்தோட வெளிநாடு பறக்க, அந்தப் பிள்ளை மட்டும் இயக்கத்துக்குப் போயிற்றுது அப்பா.
மக்கள் கடை அலுவல் பார்க்கும்போது குண்டு விழுந்து செத்த உங்கள் பிறெண்ட் ரவி மாஸ்ரருடைய குடும்பத்தை, சகோதரி கனடா வரச்சொல்லிக் கேட்டவையாம். அவைக்குப் போக விருப்பமில்லை. அந்த மாஸ்ரரின்ர இழப்பு உங்களை எத்தனை நாள் அழவைத்தது. இன்று எனக்குத் துணை
பிறெண்ட்” மாஸ்ரரின்ர மகள் கிதாதான்.
கீதாவும் அப்பாவின் செல்லம்தான். பாவம் அப்பாவைப் பற்றியே அடிக்கடி கதைப்பாள். நீங்களும் ரவி மாஸ்ரரும் அவர்களது வீட்டு முற்றத்தில் கதிரையைப் போட்டுக்கொண்டு இரவு பத்து பன்னிரெண்டு மணிவரை இருந்து உலக நடப்புகள், அரசியல் பற்றியெல்லாம் கதைக்க, நானும் கீதாவும் முற்றத்தில் ‘லைற் வெளிச்சத்தில் ஓடி விளையாடினதைப் பற்றியெல்லாம் நினைச்சுப் பார்த்து கீதாவுக்குச் சொல்வேன். அவள் அழத்தொடங்கி விடுவாள். எனக்கும் அழுகை வந்துவிடும்.
பள்ளிக்கூடத்திலும், இப்படித்தான் ஒவ்வொரு பிள்ளைகளும் ஏதாவது ஒரு கதையைச் சொல்லி எங்களை அழவைத்து விடுகுதுகள்.
எங்கள் அழுகை எப்போதும் நிற்கும் அப்பா..! அரசுப் பெரியப்பாவைப் பார்க்க கவலையாயிருக்கிறது. இன்னும் பென்ஷன் கிடைக்கவில்லையாம். ஆசை மாமியின் இழப்பும் அவரை வாட்டிவிட்டது. “பெரியண்ணா என்றழைப்பாயே. என்றுருகி ஒரு கவிதை எழுதியிருந்தார். படிக்க அழுகை தான் வருகிறது. இப்போதும் குடிக்கிறார்தான். வீட்டிற்கு வந்தபோது எண்னோடு செல்லமாக கதைத்தார். 'குடிக்காதேயுங்கோ பெரியப்பா' என்றேன். இப்போது இங்கு குடிவகை இல்லையே. இல்லாவிட்டால் நானெப்படி குடிப்பேன்? என்று சொன்னார். அவர்களது வீட்டுப் பக்கம் பலர் இடம் பெயர்ந்து விட்டனர்.
98 இப்படியுமா..?

பலாலியிலிருந்து ஒரே ‘ஷெல்லடி. அவர்களை எங்கள் இடத்துக்கு வந்து, ஒரு வீடு பார்த்து இருக்குமாறு சொன்னேன். கணிணனர் அணிணாவிற்கு நூலகர் வேலை கிடைத்தது. ஆனால் அவர் போகவில்லை. அவரும் பெரியக்காவும் வெளிநாடு போய் மேற்படிப்பு படிப்பதுதான் நல்லதென பெரியப்பா சொல்கிறார். ஆனால் பெரியம்மா பிள்ளைகளைப் பிரிந்து தனியே இருக்க முடியாதென அழுகிறா. எண் செய்வது அவர்கள் நிலை அப்படி,
போனமாதம் எங்கள் வீட்டு சந்தியில் மூர்த்தி மாமா கடைப்பக்கமாக நான்கு குண்டுகள் போட்டதால் மூன்று பேர் அந்த இடத்திலேயே செத்துப் போயினர் மூர்த்தி மாமா கடை மேல் மாடி தூள்தூளாகிவிட்டது. சுவர்கள் பிளந்து போய் நிற்கின்றன. ஆனால் அவர் இப்போதும் அதற்குள்ளிருந்து மரக்கறி வியாபாரம் செய்கிறார். குணர்டு விழுந்தபோது காயப்பட்ட கிழக்கூரை சேர்ந்த விசுவலிங்கம் என்பவர் நேற்றுச் செத்துப்போனார்.
அப்போது உடைந்த எங்கள் வீட்டு ஓடுகள் எல்லாம் ஒருவாறு மாற்றிவிட்டோம். ஆனால் ஜன்னல் கண்ணாடிகள் ஒன்றும் மாற்றவில்லை. அவசியமில்லை என தாத்தா சொன்னார்.
காரைநகரிலிருந்து ஒவ்வொரு நாளும் ஷெல் அடித்தபடிதான். எங்கள் பகுதியில் ஒன்றும் விழவில்லை. ஆனால் மேற்குப் பகுதியில் சில நாட்களுக்கு முன் ஒரு வீட்டில் ஷெல் விழுந்து, தகப்பன் தலை பிளந்து செத்துப் போயிற்றாம். தாய்க்கும் பிள்ளைகள் இருவருக்கும் கடுங்காயமாம். பாவங்கள்.
தாத்தா யாழ்ப்பாணம் போய் வங்கியில் தான் பென்ஷன் எடுக்கிறார். சைக்கிளில் தான் கஷ்டப்பட்டு ஓடிக்கொண்டு போய்வருவார். போட்டி போட்டு முன்னுக்கு நின்றால்தான் காசு கிடைக்குமாம். அவ்வளவு நெருக்கடி. ஆயிரம் ரூபா தான் ஒரு நாளில் எடுக்க முடியும். சுபாவுக்கு தொழில்நுட்ப கல்லூரி பரீட்சை முடிந்துவிட்டது. தொடர்ந்தும் அங்கு வேறொரு வகுப்பு படிக்க விண்ணப்பித்துள்ளா. வவுனியா பல்கலைக்கழக கல்லூரியில் வகுப்பு இவ்வருடம் தொடங்கவில்லையாம். அதற்கு அனுமதி கிடைத்தாலும் அவவுக்கு அங்கு போக விருப்பமில்லை. ராணுவம் எந்நேரமும் முன்னேற முயற்சிக்கலாம்
இப்படியுமா..? 99

Page 52
என்று எதிர்பார்த்தபடியே தான் சனங்கள் இருக்கின்றனர். ஹெலியிலிருந்து எச்சரிக்கை நோட்டீஸ் போடுறாங்கள். பலாலியிலிருந்து வானொலி மூலமும் சொல்கிறார்கள். இயக்கத்தினரும் உஷாராக இருக்கின்றனர். சனங்கள் எதையும் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்திலுள்ளனர். வேறு வழியில்லைத் தானே. எங்கு தான் ஓடமுடியும். உங்கள் நண்பர் இரத்தினம் மாமாவின் புதியபாடல்கள் சில ‘கெசட்டில் வந்துள்ளன. அற்புதமாக இருக்கின்றன. அடிக்கடி கேக்க ஆசை. றேடியோ கேட்க பற்றறி வேணுமென்று தாத்தா நிற்பாட்டிப் போடுவார்.
“விரைவில் நாங்கள் அங்கு போய்விடலாம். அப்பா கூப்பிடுவார்.” என்று அம்மா தினம் தினம் எங்களுக்கு ஆசை வார்த்தை கூறுகிறா. எனக்கெண் அப்பா பக்கத்திலிருக்க வேணுமென்றுதான் ஆசை.
தம்பி மாமா முன்னர் போலத்தான். வருத்தக்காற மனுஷன். சைக்கிளில ஒவ்வொரு நாளும் பத்திரிக்கைக் கந்தோருக்கு போய்த்தான் வாறார். எந்தப் பிரச்சனை என்றாலும் மனுஷன் தன்ர கடமைக்கு ஒழுங்காப் போகுது. ஆச்சியைப் பற்றி ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. கவலைதான். ஆசை மாமியின் இழப்பும் அவவுக்குத் தெரியாது. செஞ்சிலுவைச் சங்கம் இவ்வாராம் தீவுப் பகுதிக்கு போகவுள்ளது. இராசா பெரியப்பா அவர்களுடன் கதைத்துள்ளார். அவர்கள் போய் வந்த பின் தான் ஏதும் விபரம் அறியலாம்.
பெரிய மாமி, மாமா, தாசனி மச்சானி எல்லோரும் தீவிலிருந்து வந்து நல்லூரில் பாலனர் மச்சானி வீட்டிலிருக்கின்றனர் . தாசன் மச்சாண் கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலைக்குக் போகின்றார். மாமாவுக்கு உடல் நிலையும் சரியில்லை.
மலர் மாமி வேலையும் படிப்பும்தான். பறந்து திரிகின்றா. வருஷம் ஒரு சோதனை பாஸ் பண்ணுறா. இடமாற்றம் வந்ததாம். அரசாங்க அதிபர் கொழும்பில் கதைத்து நிறுத்தியுள்ளாராம். அவவுக்கு ஒரு கல்யாணம் இராசா பெரியப்பா பேசி ஒழுங்காக்கியுள்ளார். காசு மூன்று லட்சம் வேணுமாம். நாங்களும் கொடுத்துதவ வேணுமென்று அம்மா சொன்னா.
எங்களிடம் தான் என்ன இருக்குது கொடுத்துதவ. காப்பு இரணர்டும் என்ர சங்கிலியும் ‘போராட்ட நிதி’க்கு
100 இப்படியுமா..?

கொடுத்துவிட்டது தெரியும்தானே. கொடி மட்டும் தான் இருக்குது. அதைத் தான் வித்துப் போட்டு கொடுத்துதவ வேண்டுமென்று அம்மா சொன்னா. உங்கள் எண்ணம் என்ன? கல்யாணம் ஒப்பேறினா எல்லோருக்கும் சந்தோஷம்தானே. இந்த நிலைமையிலும் சனம் சீதனம் கேட்கிறதை விட்டபாடில்லை அப்பா..!
இங்கு எல்லா நிலைமைகளையும் பார்த்துத் தொடர்ந்து படிப்பது கஷ்டம் என்று வடக்கு வீட்டு குணரத்தினம் கிளாக்கரின் மகள் 'கொழும்பு போய் படிக்கிற, வீட்டாரும் போன கிழமை கொழும்புக்கே போய்விட்டனர். வெளியிலிருந்து காசும் வருமாம். கொழும்பிலேயே இருக்கப் போயினமாம். இப்போது அந்த வீட்டில் காங்கேசன் துறையிலிருந்து இடம் பெயர்ந்து வந்த ஒரு குடும்பத்தை இருத்தியுள்ளோம்.
‘கெதியில அப்பாவிடம் போய்விடுவோம். என்று ஆறுதல் சொல்லி எங்களை நித்திரை கொள்ளவிட்டு அம்மா கணி கலங்குகின்றா. நானும் நித்திரை போல மெளனமாகக் கிடந்து அழுவேன்.
எனக்கு அங்கு வருவது விருப்பமில்லை அப்பா. அம்மாவுக்கும் அப்படித்தான் என நினைக்கிறேன். ஆனால் அவ இப்படி எழுத மாட்டா.
எங்கள் தாத்தா, அம்மம்மா, அன்ரி, தேவி அன்ரா, பெரியண்ரா, பெரியப்பாக்கள், பெரியம்மாக்கள், மாமியாக்கள், அக்காக்கள், அண்ணாக்கள், ஆச்சி, என்ர பிறெண்ட் கீதா என்று எங்கட சனங்களை எல்லாம் இங்க விட்டுட்டு, அங்க வந்து நாம் எப்படி சந்தோஷமாக இருக்க முடியும் அப்பா.
அப்பா. நீங்கள்தானே ‘மண்ணை நேசிக்கவேண்டும், மக்களை நேசிக்க வேண்டும்’ என்று சொல்லித் தந்தீர்கள். உங்கள் புத்தகத் தட்டிலிருந்து பல புத்தகங்கள் வாசித்து விட்டேனர். டானியலினர் “கானல்’ நாவல் அபாரம். சில விடயங்கள் விளங்குவதில்லை. அம்மா முன்னர் பலமுறை வாசித்ததாகச் சொன்னா. பாடசாலைப் பாடங்களும் கவனமாகப் படிக்கிறேன்.
அப்பா. நீங்கள் இங்கு வாருங்கள். கெதியில வாருங்கள். ஏதோ சனத்தோட சண்மா நாங்களும் வாழுவம். நான் அப்பாவினர் செல்லம்தானே..! எண் விருப்புகள் எல்லாம்
இப்படியுமா..? 101

Page 53
உங்களுக்குப் புரியும்தானே! லீலா அண்ரா அங்கு மாமாவிடம் வந்து சேர்ந்து விட்டாதானே. கணிடு கதைத் தீர்களா? அண்ராவின் ஆச்சி அவுஸ்திரேலியா போய் சேர்ந்துவிட்டாவா? இங்கு தினசரி செய்திகள் ஏராளம். எதை எழுதுவது எதை விடுவது. எல்லாம் வந்து பாருங்கள்.
எப்போது இங்கு என்னருகில் அப்பா..?
5 பங்குனி 1992 அன்புமகள், வட்டுக்கோட்டை. இளநிலா
102 இப்படியுமா..?

ரென் இடம் மாறினான்?
ஆனந்தனுக்கு இடமாற்றக் கடிதம் கிடைத்து. இரண்டு நாட்களாகிறது. இன்னும் பன்னிரண்டு நாட்களுக்குள் அவன் கொழும்புக்குப் பயணமாக வேண்டுமாம். 'இடமாற்றத்தை எதிர்த்து தலைமை அலுவலகத்திற்கு மனுச் செய்திருந்தான்.
அவன்தானி பிறந்த ஊரில் கடமையேற்று இரணர்டு வருடங்கள் தான் பூர்த்தியாகியிருந்தது. நான்கு வருடங்கள் கடமையாற்ற உரிமையிருந்தும் அதற்குள் திடீர் இடமாற்றம்.
அவனால் இந்த இடமாற்றத்தை ஜிரணிக்க முடியவில்லை. உள்ளூராட்சி மன்றத்தின் அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரி அவன். தனது கொள்கைக்கேற்ப கற்றுக்கொண்டவைக்கேற்ப சகல மக்களும் அவன் பார்வையில் ஒரே மாதிரியே. இயன்றவரை பணிபுரியத் துடித்தான்.
ஊரில் குடிநீருக்காக வாடும் மக்கள் பகுதிகளுக்கு குடிநீர் வழங்க ஆவன செய்தான். தேவையான இடத்து புதிதாகச் சனசமூக நிலையம், நூல்நிலையம் அமைத்திட உதவினான். தொற்று நோய்த் தடுப்பு, தாய் சேய் நலப் பணிமனை, ஆயுள்வேத மருத்துவ சேனை இப்படிப் பல.
இப்படியுமா..? 103

Page 54
ஆனந்தனின் உற்ற நண்பன் செல்வம் நல்லதோர் புகைப்படப் பிடிப்பாளன். அந்நியப்படை அப்பிரதேசங்களில் ‘அமைதி காத்த காலத்தில் செல்வத்தின் கமரா, பல நிகழ்ச்சிகளைப் படம் பிடித்திருந்தது. அவை உள்நாட்டு, வெளிநாட்டு பத்திரிகைகளில் பிரசுரமாக ஆனந்தன் உதவி செய்ததுண்டு.
முன்னர் ஒரு தடவை, ‘குமுதினி’ப் படகில் கடற்படைக் கழுகுகள் நிகழ்த்திய கொலை வெறியின் தாக்கத்தையும் செல்வம் புகைப்படம் பிடித்தது மாத்திரமின்றி, அதில் பலியானவர்களின் உடல்களை அக்கோரத்தையே வீடியோக் கமரா மூலம் படம் பிடித்திருந்தான். அவை உள்நாட்டு, வெளிநாட்டு பத்திரிகைகளுக்கும், மனித உரிமை நிறுவனங்களுக்கும் போய்ச் சேர்ந்தது உண்மைதான்.
ஊரிலும் அடுத்துள்ள கிராமங்களிலும் நடந்த அந்நியப் படையினரின் அட்டூழியங்களும் செல்வரத்தினத்தின் கமராவுக்குத் தப்பவில்லை. படையினரின் கண்களுக்கும் அவன் தப்பவில்லை.
ஒருநாள் அவனும் நண்பர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு முகாமில் அடைக்கப்பட்டனர். சித்திரவதைகளும், விசாரணைகளும் பலவிதம். ஊரில் நல்ல பிள்ளையென மதிக்கப்பட்ட அவனை விடுவிக்க மக்கள் திரண்டனர். அந்த மக்களுடன் ஆனந்தனும்.
நூற்றுக்கு மேற்பட்ட மக்கள், பெரும்பாலும் பெண்கள் அந்தப் பிரதேச பெரிய முகாமுக்கு படையெடுத்தாற்போலச் சென்றனர். எவ்வித வன்முறைகளிலும் ஈடுபடாத செல்வத்தையும் அவன் நண்பர்களையும் விடுவிக்க வேண்டுமெனக் கோரினர். முகாம் பெரியவரின் கடுமையான எச்சரிக்கை தான் பதிலாகக் கிடைத்தது.
ஆனந்தன் இயன்றவரை வாதாடிப் பார்த்தான். “செல்வமும் நண்பர்களும் வன்முறையாளர்களல்ல; அவர்கள் பத்திரிகைத் தொழிலுக்கு உதவுபவர்கள்; அவ்வளவுதான்; அவர்களை விடுதலை செய்யுங்கள்” எனக் கேட்டான். முடிவு பூச்சியம் தான். இருப்பினும் என்ன..! ஆனந்தன் உட்பட முப்பதுக்கு மேற்பட்ட ஆண்களும், ஐம்பதுக்கு மேற்பட்ட பெண்களும், முதியவர்கள்,
104 இப்படியுமா..?

குழந்தைகள் உட்பட முகாம் வாசலின் ஒரமாகச் சத்தியாக்கிரகம் இருந்தனர். அவ்வப்போது படையினரின் கடும் எச்சரிக்கைகள் வந்தன. கலங்கவில்லை ஒருவரும். காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்துமணி வரை இது நீடித்தது. ஒரு தடவை ஒரு பெரிய ட்ரக் வண்டி இவர்களின் ஊடாகச் செல்ல எத்தனித்தது. எவருமே அசையவில்லை.
ஐந்து முப்பது மணியளவில் முகாம் பெரியவர் மேஜர் ஆனந்தனைத் தனியே அழைத்தார். ‘எல்லாம் உமது ஏற்பாடுதானே? இல்லை. இது சனங்களின் ஏற்பாடு.” என்றான். கொதிக்கும் எண்ணெய் சட்டியில் தண்ணிர் துளி விழுந்த மாதிரி மேஜர் சீறினார். பின்னர் அடங்கி விசாரித்தார்.
“நீர் ஓர் அரசாங்க அதிகாரி என்பது எமக்குத் தெரியும். உமது நம்பிக்கையில் அவர்களை விடுதலை செய்கிறேனர். ஆனால் தொடர்ந்தும் அவர்கள் எமக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் எமது நடவடிக்கை மிகவும் கடுமையானதாக இருக்கும்” என்றார் மேஜர்.
முகாமிலிருந்து விடுதலை செய்யப்பட்டவர்கள் சில நாட்களில் இனந்தெரியாதவர்களால் திரும்பி வராத இடத்துக்கு அனுப்பப்படும் சம்பவங்கள் பல்வேறு இடங்களில் நடந்துள்ளதை ஆனந்தன் அறிவான்.
இரண்டு நாட்களாகவில்லை. காலை ஆறு மணியிருக்கும். ஆனந்தன் வீட்டிற்கு முன்னால் வீதியில் இரண்டு ஜீப், நான்கு ‘ட்ரக்" நிறைய படையினர். அவனது வீட்டுக் கேற்? பலாத்காரமாகத் திறக்கப்பட்டு வீட்டுக் கதவு தட்டப்பட்டது.
அப்போது தானி அவன் மனைவி குசினியில் தேநீர்
தயாரித்துக்கொண்டிருந்தாள். அவர்களது ஒரு வயது மகள் தந்தையின் மேல் கால் போட்டபடி நித்திரையில் இருந்தாள்.
கதவில் அடித்த சத்தத்தில் குழந்தை விழித்துக்கொண்டு மிரண்டது. குழந்தை தன் மீது போட்டிருந்த காலை எடுத்ததும், கதவுச் சத்தம் கேட்டதும் ஆனந்தனுக்கு என்னவோ போலிருந்தது. இதற்குள் மனைவி ஓடி வந்தாள். ‘பக்கத்து ஐயர் வளவுக்குள் ளால் தப்பி ஒடுங்கோ. அரக்கர் வந்து நிக்கிறாங்கள்.”
9ÜLigu|Lot...? 105

Page 55
“ஒன்றுக்கும் பயப்படாதே." குழந்தையைத் தூக்கி கொண்டு ஆனந்தன் முன் அறைக்கு வந்து கதவைத் திறந்தான்.
மனைவியும் பக்கத்தில். கதவின் முன்நின்ற படையினர் இருவர், அவனை ‘கேற்றின் முன் ஜிப்பிலிருக்கும் பெரியவரிடம் வருமாறு அழைத்தனர்.
படிகளால் இறங்கியவனி வளவை ஒருமுறை நோட்டமிட்டான். வளவைச் சுற்றி வெளிப்புறமாக மரங்களோடு மரங்களாக அவர்கள்.
ஜிப்பின் அருகில் அவன். ‘எப்படி ஊர் நிலவரம்.? 'ஒரு பிரச்சனையுமில்லை.” என்றான். அப்படியா வாருங்கள் என்னுடன் சிறிது தூரம் இந்தப் பக்கமாக போய்க்கொண்டு பேசுவம்?
அவனுக்கு பல விடயங்கள் படமாக விரிந்தன. அவர்கள் குறிவைத்து விட்டார்கள் என்பது புரிந்தது. இங்கேயே பேசுவோம்” என்றான்.
"பரவாயில்லை. பிள்ளையை மனைவியிடம் கொடுத்து விட்டு ஜிப்பில் ஏறுங்கள். போய்க்கொண்டே பேசுவோம்” என்றார் மீண்டும் பெரியவர்.
இதற்கிடையில் அவர்களில் ஒருவன் வந்து குழந்தையைப் பிடுங்க, ஆனந்தனை ஒருவன் கையில் பிடித்தான். அவன் மனைவி பாய்ந்து பிள்ளையைப் பிடித்துக்கொண்டு கத்தினாள். ‘மிஸ்டர் ஆனந்தனர். ஜிப்பில் ஏறலாம். பெரியவர் கண்டிப்பான குரலில் சொன்னார். ‘மனைவி, பிள்ளையை விட்டு இப்போது வரமுடியவில்லை. மன்னிக்கவேணும்.”
சில விநாடி அமைதிக்குப்பின் "மிஸ்டர் ஆனந்தன். நீர் ஊரில் பெரிய ஆளோ.. எமக்கு எதிராக எதுவும் செய்து விட முடியும் என்று நினைக்கிறீரோ. ஜிப்பில் ஏறும்.”
திடீரென அவர்களில் நான்கைந்து பேர் பாய்ந்து வந்து ஆனந்தனை இழுத்தனர். மனைவியையும் குழந்தையையும் வேலியோடு சாய்த்தனர். செல்ல மகள் ‘அப்பா..? என்று கத்தினாள்.
ஜிப்பில் ஏற்றுவதற்காக அவனை இழுத்து வந்தனர். எல்லோருக்கும் திகைப்பு. எங்கிருந்து இப்படி வந்தனர்.
106 9ւյLilջեւյIDIT.?

நூற்றுக்கு மேற்பட்டோர்; அதிகமானோர் பெண்கள். ஜிப்பைச் சுற்றி இருபதுக்கு மேற்பட்ட பெண்கள், சிறார்கள், மாணவிகள். ஆனந்தனைத் தாய்மார்கள் சூழ்ந்து கொணர்டனர். அத்தனை வாகனங்களைச் சுற்றியும் சனங்கள் வந்து கூடினர். வளவுக்குப் பின்னால் மரங்களோடு நின்ற படையினரும் ஓடி வந்து சேர்ந்தனர். படையினர் சத்தம் போட்டு எச்சரிக்கை செய்ய, சனங்களும் 'ஆனந்தனை விடுங்கோ." என்று கூச்சல்,
ஜிப்பிலிருந்து மேஜர் பாய்ந்து கீழே இறங்கினார். இடுப்புப் பட்டியில் கை வைத்துக்கொண்டு நிமிர்ந்து நின்று பார்த்தார். படையினர் துப்பாக்கிகளை உயர்த்திப் பிடித்தபடி. . "உனக்குச் சுட வேண்டுமானால் எங்களைச் சுடு, தம்பியைத் தொடாதே. எங்கள் மக்களை அழிக்காதே. கருணாமூர்த்தி தோன்றிய மண்ணில் பிறந்த உங்களுக்கு கருணையே இல்லையா.” ஓர் இளம் பெண் மேஜரைப் பார்த்துக் கத்தினாள். “அண்ணாவில் கை வைக்காதே." சிறுவர்கள் சத்தமிட்டனர்.
"ஆனந்தன் சட்டவிரோதமாக என்ன செய்தான்." அறுபது வயது ஐயர் அம்மா முன்னால் வந்த மேஜரின் முகத்திலடித்தாற் போல் கேட்டா.
மேஜர் மனதில் எண்னவோ நினைத்துக்கொணர்டு சிரித்தான்.
“பிள்ளைகளை அநியாயமா பிடிச்சுக்கொண்டு போகாதீங்க. எண்ணை வேணுமெண்டாச் சுடுங்க.. ஆனந்தனை ஒன்றும் செய்யாதீங்க."
எழுபத்தேழு வயது நிறைந்த, சிவனர் கோயில் மார்க்கண்டேயக் குருக்கள் கைத்தடியை ஊன்றிப் பிடித்தப்படி மேஜருக்குச் சொன்னார்.
அவ்வளவுதான். அதற்குள் என்னென்னவோ சத்தங்கள். இரைச்சல்கள். பெண்கள் மத்தியிலிருந்து. சிலர் கை நிறைய மண். படையினர் பலர் பாய்ந்து சனத்திற்கு எதிர்ப்புறமாக அணிவகுத்து நின்றனர். சனங்களில் பலர் வாகனங்களைச் சுற்றி அமர்ந்துவிட்டனர்.
‘என்ன இது. சத்தமாகக் கத்தினார் மேஜர். “வந்த வழியே போங்கோ.” சனங்கள் சத்தமிட்டனர். சனங்களை
9ւյLIջպԼ0T.? 107

Page 56
வழிவிடுமாறும், தான் ஒருவரையும் கைது செய்யவில்லை யென்றும் உரத்துச் சொன்னார் மேஜர், “என் சேவைக் காலத்தில் இது எண் முதல் அனுபவம். உன்னைப் பின்பு சந்திக்கிறேன்.” என்று ஆனந்தனை நோக்கி மெதுவாகச் சொன்னார்.
வாகனங்கள் மெல்ல ஊர்ந்தன. "அந்நியக் கழுகுகளுக்கு எங்கள் மணிணில் இடங்கொடுக்கவே கூடாது. எங்கள் கால்களில் நாங்கள் நிற்கவேணும்.” ஒரு மாணவி சத்தமாகச் சொன்னாள்.
தெருவில் எழுந்த புழுதி வாகனங்கள் சென்ற திசையை மறைத்தது. கண்களில் கண்ணிர் ததும்ப, சனங்களின் மத்தியில் அவன்.
மனைவியின் கையிலிருந்த செல்ல மகள் ‘அப்பா. என்றவாறு அவனிடம் தாவினாள்.
இடமாற்ற உத்தரவை எதிர்த்துச் செய்திருந்த மனுவின் பிரகாரம், சிறிது பரிகாரம் போல் மறுநாள் செய்தி வந்தது.
ஒரு கிழமைக்குள் வவுனியா அலுவலகத்தில் அவனைக் கடமையேற்கும்படியான அறிவுறுத்தல்தான் அது. தொழிற்சங்க ரீதியாக அதனையும் எதிர்த்து மனுச் செய்ய முயற்சித்தான். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் அவன் இடமாற்றம் பெற்றுச் செல்வது தான் அவனுக்குப் பாதுகாப்பனது என சனங்கள் வலியுறுத்தினர்.
வவுனியாவுக்கு இடம்பெயர்ந்த அவன், விடுதலையான மறுநாளே கொழும்புக்கு புறப்பட்டு போய்ச் சேர்ந்து, ஜெர்மனி செல்ல ஆயத்தம் செய்து கொணர்டிருந்த நணர்பணி செல்வத்துக்கு, ஊருக்கு செய்யவேண்டிய பணிகள் குறித்து கடிதம் எழுதினான்.
108 இப்படியுமா..?

மத்தியான உணவுவேளை முடிந்து உணவகத்தைப் பூட்டுவதற்கான வேலைகளில் ஈடுபட்டிருந்தார் தியாகர்.
பிராணிஸ் நாட்டினர் தெனர் பகுதியிலுள்ள துலூஸ் பெருநகரின் பிரதான இரயில் நிலையத்திற்கு அண்மையிலுள்ள தென்னிந்திய இலங்கை உணவகமான “யாதவா”
இதன் உரிமையாளர் தியாகர் என அழைக்கப்படும் தியாகராசா.
இவருடன் இவரது மனைவி, ஒரு வேலையாள். மூவரும் தான் உணவகத்தினை இயக்கி வருகின்றனர். இது ஒரு சிறிய உணவகம்.
சுமார் முப்பது பேர் ஒரே நேரத்தில் உணவருந்தக் கூடிய இடவசதி கொண்டது.
அன்று மத்தியானம் அருகிலுள்ள அலுவலகங்களைச் சேர்ந்த ஒன்பது பேர் வந்து சாப்பிட்டுவிட்டுப் போய்விட்டனர். அவர்களில் அதிகமானோர் காசுக்குப் பதிலாக உணவுக்கென வழங்கப்படும் “ரிக்கற் தான் கொடுத்துச் சென்றனர்.
இப்படியுமா..? 109

Page 57
இந்த 'ரிக்கற்றுகளைச் சேர்த்து ஒரு கட்டாக, அதற்குரிய அலுவலகத்திற்கு அனுப்பினால் இரண்டு கிழமையில் அதற்கான தொகை சிறிது கழிவு நீக்கி வந்து சேரும்.
இப்படி வந்துசேரும் தொகையில் ஏதாவது கடனை அல்லது கொடுக்குமதியைச் சரிகட்டிவிடுவார் தியாகர்.
இந்த *ரிக்கற் புத்தகம் அலுவலகங்களில் பணிபுரிபவர்களுக்கு மிகவும் கழிவுடன் கிடைக்கும்.
இதனால் வாடிக்கையாளர்களும் உணவகத்தினரும் நன்மையடைவர் என்றே கூறலாம்.
ஒருவர் திடீரென உள்ளே வந்தார். வாட்டசாட்டான உருவம். அழகாக உடையணிந்திருந்தார்.
பிரான்ஸின் வடபகுதியைச் சேர்ந்த கலப்பில்லாத பிரெஞ்சு மனிதர் என்று கூறிவிடலாம். வெளிர் நீலக் கண்கள்.
“மன்னித்துக்கொள்ளுங்கள். நேரம் பிந்தி வருகிறேன். சாப்பிடலாமா.” என்று கேட்டார்.
நேரம் பிந்தினாலும் ஏன் வருமானத்தை இழப்பான். என்ற எண்ணத்தில் "ஆம். சாப்பிடலாம். உட்காருங்கள்.” என்றார் தனக்குத் தெரிந்த பிரெஞ்சு உச்சரிப்பில் தியாகர்.
"சலாட், மரக்கறி சமூசா, கோழிக்கால் தண்டூரி, பசுமதிச் சோறு, பருப்புக்கறி. அத்துடன் “போதோ வைன்” போத்தல் என *மெனு புத்தகத்தைப் பார்த்து ஒடர் கொடுத்தார் வந்தவர்.
தியாகரும், நல்ல ஒடர் எனச் சந்தோஷத்துடன் ஒடிஓடி வேலை செய்தார். மத்தியானச் சாப்பாட்டுக்கு வருபவர்களில் அதிகமானோர் விரைவுச் சாப்பாடு எனக் குறைந்த விலைச் சாப்பாட்டையே வாங்கிச் சாப்பிட்டுவிட்டு அவசரமாகப் போய்விடுவர்.
இரவுச் சாப்பாட்டுக்கு வருவோரில் சிலரே, நல்ல சாப்பாடு? என விலை கூடிய சாப்பாட்டைத் தெரிவு செய்து குடிவகையும் எடுத்துக்கொள்வது வழக்கம். அப்படியான தெரிவின்போது தான் தியாகருக்கும் இலாபம் அதிகரிக்கும்.
உழைப்பதில் அதிக பணத்தை அரசு பல வகைகளிலும் வரிகளாகப் பெற்றுவிடும். மருத்துவக் காப்புறுதி,
110 இப்படியுமா..?

பென்சனுக்கான கட்டுப்பணம், ஒவ்வொரு சாப்பாட்டுக்கும் 19. 6% வீதம் அரசுக்கு வரி, சமூகக் கொடுப்பனவுக்கான வரி, மாகாண, மாவட்ட, மாநகர சபைகளுக்கான வரிகள், “காஸ்", மின்சாரம், தொலைபேசி என்ற செலவுகள் எல்லாம் முடிந்து இன்றைய நிலையில் இலாபம் பெறுவது மிகவும் சிரமமானதுதான்.
ஆனால், இன்றைய சூழ்நிலையில் தனக்கேற்ற வேறு வேலைகள் இந்நகரில் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில்தான், ‘சுதந்திரமாக இயங்கலாம்’ என்ற முடிவில் ‘யாதவா உணவகத்தை வங்கிக்கடன் உதவியுடன் தியாகர் ஆரம்பித்தார்.
ஒரு 'கிளாஸ் வைனை இழுத்துவிட்டு 'சலாட்டை சாப்பிட்டு முடித்தார். பின்னர் இன்னும் கொஞ்சம் வைனைக் குடித்துவிட்டு சமூசாவைச் சாப்பிட்டார். ‘மிக நன்றாயிருக்கிறது? என்றார்.
இது பிரெஞ்சுக்காரரின் நல்ல பண்புகளில் ஒன்று.
நன்றாயிருந்தால் உடனேயே மணந்திறந்து பாராட்டி விடுவார்கள்.
‘யாதவா? உணவகத்தின் மரக்கறி ‘சசா” மற்ற இந்திய உணவகங்களில் வழங்கப்படும் சமுசாவைவிட கொஞ்சம் வித்தியாசமானது.
வீட்டில் தயாரிப்பது போன்று மாவை முன்றப்படி குழைத்து, அத்துடன் அவித்த உருளைக்கிழங்குடன் சேர்க்கப்பட்ட மசாலா வகைகளை அதனுள் பொதிந்து பொரித்து எடுக்கப்படுவதாகும். இதனைச் சுடச்சுட சாப்பிட்டவர்கள் மிக நன்றாயிருக்கிறது என்று கூறிச் செல்வதே வழக்கம்.
பசுமதிச் சோற்றையும், பருப்புக்கறியையும் கலந்து சாப்பிட்டுக் கொணர்டு இடைக்கிடை கோழிக்கால் தண்டூரியையும் பதம் பார்த்துக்கொண்டிருந்தவரின் கண்கள் கலங்கின. உறைப்புக் கூடிவிட்டதோ எனத் தியாகர் நினைத்துக்கொண்டார்.
“சாப்பாட்டில் காரம் கூடிவிட்டதோ..?”
"இல்லை. இல்லை. சாப்பாடு நன்றாகயிருக்கிறது. எனக்கு என் மகனின் ஞாபகம் வந்துவிட்டது."என்று சொல்லும்போதே அவருக்கு புரக்கேறியது.
இப்படியுமா..? 111

Page 58
உரத்துச் செருமி, இருமிவிட்டுத் தண்ணிர் குடித்தார்.
"நீங்கள் இந்தியாவைச் சேர்ந்தவரா அல்லது பூரீலங்காவைச் சேர்ந்தவரா?.”
“நாங்கள் இலங்கைத் தமிழர்.”
"அப்படியா. நல்லது. நீங்கள் நல்ல கலாசாரத்தை உடையவர்கள். உங்கள் குடும்ப வாழ்க்கை அற்புதமானது.
எனது நண்பர் பாண்டிச்சேரி தமிழ்ப்பெண்ணை மணந்து அங்கேயே வாழ்கிறார். விடுமுறையில் வருடம் ஒருமுறை இங்கு வந்து போவார். நான் இருமுறை அங்கு போயுள்ளேன்.
அவர் அங்கு ஒரு தொழில் நிறுவனம் நடத்துகின்றார். அத்துடன் பிரெஞ்சு மொழியும் கற்பித்து வருகிறார். அவருக்குத் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளும் நன்கு தெரியும்.
இந்து தத்துவம். ஆயுர்வேத மருத்துவம் என்பவனவும் ஒரளவு கற்று வருகிறார். இரு குழந்தைகளுடன் அவர்கள் வாழ்க்கை மிக மகிழ்ச்சியாகவுள்ளதை நாண் பார்த்துப் பாராட்டினேன்.
சாப்பிட்டு முடித்துவிட்டு மிகுதியாகவிருந்த வைனையும் கொஞ்சமாகக் குடிக்கிறார்.
“உங்கள் மகனினர் ஞாபகம் வந்ததாகச் சொல்லிக் கவலைப்பட்டீர்கள். மகன் எங்கே இருக்கிறார்.?”
"அது பெரிய கதை. அதனை உங்களுக்குச் சொல்வதில் கொஞ்சம் ஆறுதல். ஏனெனில். உங்களுக்குத்தான் குடும்ப வாழ்க்கையின் அருமை. பாசம் புரியும்.”
வைனை உறிஞ்சுகிறார். நீலக்கண்கள் சிவந்து கலங்கி ததும்பி நிற்கின்றன. "நான் பிரான்சின் வடகிழக்கிலுள்ள ஸ்ரார்ப்பூக் நகரத்தைச் சேர்ந்தவன்
“உங்களுக்கு ஸ்ரார்பூக் நகரைத் தெரியுமா..?” “ஆம். இருமுறை அந்நகருக்கு வந்திருக்கிறேன். அங்கு எனக்குத் தெரிந்தவர்கள். எங்கள் நாட்டவர் சிலர் இருக்கிறார்கள்.”
112 இப்படியுமா..?

“நானிர் அங்கு ஒரு நிறுவனத்தினர் பணிப்பாளராக இருக்கிறேன். நாலாயிரம் ஈரோவுக்கு மேல் சம்பளம். மற்றும் வசதிகள்.”
இரணர்டு வருடங்களாகக் காதலித்துத் திருமணம் செய்தேன்.
அவள் வேறு ஒரு நிறுவனத்தில் வரவேற்பாளராகக் கடமையாற்றினாள். பின்னர் எங்கள் நிறுவனத்திலேயே அவளுக்கு காரியதரிசிப் பதவி பெற்றுக் கொடுத்தேன். ஒரு வருடம் சந்தோஷமாவ கழிந்தது.
செல்ல மகனர் பிறந்தான். நான் மகிழ்ச்சியாகவே இருந்தேன்.
ஆனால் அவள் ஊதாரித்தனமாகத் தனது சம்பளத்தையும் செலவு செய்து எனது சம்பளத்தையும் முடித்து விடுவாள்.
குடும்பம் என்பதை மறந்தவளாக வாழ முற்பட்டாள். சிக்கனம் என்பதே தெரியாது. மகனின் வேலைகளைக் கூட கவனிக்க மாட்டாள்.
அதிகமாகக் குடிக்கவும் தொடங்கிவிட்டாள்.
எனது பணம் மட்டும் தான் அவளுக்குத் தேவைப்பட்டது. மகனைப் பாடசாலைக்கு கூட்டிச்செல்வது முதல் அவனுக்கு உணவு கொடுத்து படுக்கைக்கு அனுப்புவதுவரை நானே செய்ய வேண்டியிருந்தது.
அவள் டிஸ்கோ. கசினோ. எனப் பணத்தை செலவு செய்து திரிந்தாள்.
இதனால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை எழுந்தது.
தனது சுதந்திரத்தில் தலையிட வேண்டாமெனக் கூறிக்கொண்டு அவள் புதிய நண்பர்களுடன் வெளியே சென்றுவிட்டு இரவு நேரங்கழித்தே வீடு வருவாள். மகனுக்காக எல்லாவற்றையும் பல மாதங்களாகப் பொறுத்துக்கொண்டேன்.”
"இன்னொரு சிறிய வைன் போத்தல் தாங்கோ.”
மீண்டும் வைனை உறிஞ்சிக்கொண்டு தொடர்ந்தார்.
இப்படியுமா..? 13

Page 59
“ஒருநாள் பொறுமை எல்லை மீறி. அவள் வார்த்தைகளால் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அவள் முகத்தில் இருமுறை அறைந்துவிட்டேன்.
அவள் உடனே ‘பொலிஸை வரவழைத்துவிட்டாள். பொலிஸார் நீதிமன்றத்துக்குக் கொண்டுபோய் விட்டனர். அவள் புதிய நண்பனுடன் எங்கோ போய் இருந்துவிட்டாள். மகன் எண்னைவிட்டுப் போக மறுத்துவிட்டான். பொலிஸார் மகனைத் தாயிடம் கொடுக்குமாறு கேட்டனர். ஆனால் மகன் அப்பாவுடன் தான் இருக்கப் போகிறேன் எனப் பொலிஸாரிடம் நேரேயே கூறிவிட்டான்.
அவள் பின்னர் நீதிமன்றத்தில், மகனைத் தன்னிடம் தரும்படி வாதாடினாள். மகனைத் தாயிடம் கொடுக்கும்படி நீதவான் தீர்ப்பளித்துவிட்டார்.
மகன் நீதிமன்றத்தில் அழுதபடியே அவளுடன் போனான். எணர் உயிரையே பறித்துக்கொணர்டு போனதுபோல் இருந்தது.
எத்தனையோ இரவுகள் நித்திரையின்றி இருந்தேன். மகனின் விளையாட்டுப் பொருட்களைப் பார்க்கும் போதெல்லாம் அழுகையே வரும்.
எனது நிலையை எனது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறி, மாதம் ஒருநாள் மகனைப் பாாக்க அனுமதி பெற்றுத் தந்தார். ஆனால். அதுவும் நான்கு மாதங்களுக்கு மேல் நீடிக்கவில்லை.
அவளுக்கும் மகனுக்குமென பெருந்தொகைப் பணம் மாதந்தோறும் செலுத்துகிறேன். அவள் அந்தப் பணத்துடன் புதிய நணர்பர்களோடு நன்றாகக் குடித்துக் கும்மாளம் போடுவதாக அறிகிறேன்.”
“நீங்கள் விவாகரத்துப் பெறவில்லையா..?” “அவள் புதிய நணர்பனுடன் வாழ்கிறாள் என்பதை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும்.
114 இப்படியுமா..?

அப்படி நிரூபித்தால்தான் விவாகரத்து கிடைக்கும். அது சுலபமான வேலையல்ல.
இங்குள்ள சட்டங்கள் அப்படி.
பெண்களுக்கு அதிக சுதந்திரம் கொடுத்துக் கெடுத்து வருகிறார்கள்.
பெணி விடுதலை எனக் கோஷம் போடுவதெல்லாம் போலித்தனமானவை.
ஆணர்களுக்குத்தான் நீதி கிடைக்கவில்லை. என்னசெய்வது.
என்னைப் போன்ற தந்தையினர் நிலையில் இருந்து பார்த்தால்தான் பிரச்சினையை உணரமுடியும்.
பாசப் பிரச்சினைக்கு முன் சட்டத்தை நீட்டக்கூடாது.
கண்ணிர் நிறைந்துவிட்டது. துடைத்துக்கொண்டு.
"இங்கு துலூஸ் நகருக்குப் புதிய நண்பனுடன் ஓடிவந்து விட்டாள்.
நாணி கடந்த சில மாதங்களாக மகனைப் பார்க்க முடியவில்லை. நீதிமன்றத்தில் மனுச்செய்தபோதுதான் அவள் இங்கிருப்பதாகப் பதில் கிடைத்தது.
மகனைப் பார்க்க இங்கு வந்தேன். மகனை ஒளித்து வைத்துவிட்டு தன்னைத் தாக்க வந்ததாகக் கூறிப் பொலிசாரை வரவழைத்து விட்டாள்.
நீதிமன்றத்தில் என்னை ஆஜர்படுத்தினர். அவளும் நீதிமன்றத்துக்கு வந்திருந்தாள். ஏணி அவளைத் தாக்கச் சென்றிரென நீதிபதி கேட்டார்.
நான் மகனைப் பார்க்கத்தான் அந்த வீட்டைத் தேடி அதன் வாசல்வரைதான் போனேன். மகனைத் தான் அழைத்தேன். அவள் ஒளித்துவைத்துவிட்டு, பொலிசாரை அழைத்தாள் என உண்மையைச் சொன்னேன்.
எண்ணிடம் மிகப் பிரியமான மகனுக்கு ஏதும் தீங்கு செய்துவிடுவாள் என மனம் வருந்திக் கூறினேன்.
பிள்ளையின் பாதுகாப்பு நலன் கருதி குறிப்பிட்ட காலம்வரை பிள்ளை தாயுடன் தான் இருக்க வேண்டும். நீர் அங்கு வீட்டில்
இப்படியுமா..? 115

Page 60
போய் பிரச்சனை கொடுக்க வேண்டாம். இங்கு நீதிமன்றத்துக்கு வந்து மகனை மாதத்திற்கொரு தடவை பார்க்கலாம் என்றார் பாசம் புரியாத நீதிபதி.
முதலில் எண் மகனைக் கண்ணில் காட்டுங்கள் என்று உரக்கக் கத்தினேன். அடுத்த தவணையின்போது அழைத்து வருவதாக அவள் சொன்னாள். கடந்த மாதம் தான் இது நடந்தது.
இந்த ஒரு மாதமும் ஒரு வருடம் போல் இருந்தது. இன்று காலை தான் எண் மகனை எண் முன் அழைத்து வந்தார்கள்.
என் செல்ல மகன் "பப்பா..? என்று கத்தியவாறு ஓடி வந்து என்னைக் கட்டிப்பிடித்துக்கொண்டான்.
நீதிமன்றம் முடியும் வரை தான் எண் மகன் என்னுடன் இருந்தான். எண் முகத்தைத் தடவியவாறு சொன்னான்.
“பப்பா கவலைப்பட வேண்டாம். நான் உங்கள் செல்ல மகனாகவே என்றும் இருப்பேன். எனக்கு இப்போது ஏழு வயது முடிந்துவிட்டது. இன்னும் ஐந்து வருடங்கள் பொறுங்கள். அதன்பின் நான் உங்களிடமே வந்து விடுவேன். அதன்பின் சட்டம் எங்களைப் பிரிக்க முடியாது. நான் பாடசாலையில் எங்கள் ஆசிரியரிடமும் எண் கவலைகளைச் சொன்னேன். அவர் உளவியல் ஆசிரியரிடம் என்னை அறிமுகப்படுத்தினார். அவர் என் பிரச்சினைகளைக் கேட்டு எனக்கு ஆலோசனை கூறினார். ஐந்து வருடங்களுக்குப்பினர் பப்பாவுடன் இருக்கலாம். இப்போது நன்றாகப் படிக்கிறேன். மம்மாவின் போக்குகள் குறித்து நீங்கள் கவலைப்படவேண்டாம்.”
"பப்பா. நன்றாகச் சாப்பிட்டு நன்றாக இருக்க வேண்டும். ஐந்து வருடங்கள் விரைவில் கழிந்துவிடும். உங்களுக்கு நேரங் கிடைக்கும்போது இங்கு வந்து என்னைப் பாருங்கள். கவலைப்படக்கூடாது. பப்பா.”
"ஆயிரம் கிலோ மீற்றர் தூரத்துக்கப்பாலிருந்து மாதமொரு முறை இங்கு நீதிமன்றத்துக்கு என்னால் வரமுடியுமா..?”
“எனக்கு எத்தனை வேலைகள் அங்கு இருக்கின்றன. இந்த நீதித்துறைக்கும் சட்டங்களுக்கும் எங்கள். .
116 இப்படியுமா..?

விக்கல் எடுக்கிறது. விம்முகிறார். எனக்கும் கண்கள் கலங்கி என்னவோ செய்தது.
“கவலைப்படாதீங்க. ஐந்து வருடம் மிக விரைவாகவே ஓடிவிடும். உங்கள் மகன் புத்தியுள்ள பிள்ளை. உங்களைக் கவலைப்படக் கூடாது என்றல்லவா சொல்லியிருக்கிறான். நீங்கள் மகனுக்காகவேனும் கவலைப்படாமல் பொறுமையாக இருக்க வேண்டும்.” என மனதார ஆறுதல் வார்த்தைகள் கூறினேன்.
“இந்திய மணி ஒரு புண்ணிய பூமி. அந்த மண்ணில் பிறப்பதை பெருமையாக நினைக்கவேண்டும். அங்குள்ள கலாசாரம் எனக்குப் பிடித்தது.
ஒரு சில புறநடையானவர்கள் எங்கும் இருப்பார்கள் தான்.
ஆனால் அந்த பூமி. .
மகனர் என்னிடம் வந்ததும், அவனையும் அழைத்துக்கொணர்டு வருடந்தோறும் பாணர்டிச்சேரி செல்லவிருக்கிறேன். அங்கு எண் நண்பர் எல்லா உதவிகளும் செய்வார்.
எனக்குத் தெரியும். உங்கள் நாட்டிலும் அரசியல் பிரச்சினைகள்; அதனால் இங்கு அதிகம் பேர் வந்திருக்கிறீர்கள்.
அங்கு பிரச்சினை தீர்ந்தால். நாங்கள் கட்டாயம் அங்கும் போவோம்.
“அந்த நாள் எப்போது வரும் என்றுதான் எம்மவர்கள் பலரும் எதிர்பார்க்கிறார்கள்.” என்றேன்.
சாப்பாட்டுக்குரிய பணத்தைவிட ஐந்து “ஈரோ? மேலதிகமாக வைத்துவிட்டுமீண்டும் ஒரு நாள் கட்டாயம் சந்திப்போம்.” என்று கூறி கைகுலுக்கி விடைபெற்றார் அந்த மனிதர்.
9ւյԼյդպԼՈT.? 117

Page 61
ழுெபதுகளின் பிற்பகுதி.
பயங்கரவாதத் தடைச்சட்டம் அமுலாகியிருந்தது.
வடபகுதியில் பயங்கரவாதத்தை ஆறு மாதங்களுக்குள் அடக்கவென விசேடமாக பிரிகேடியர் ஒருவர் யாழ்ப்பாணம் அனுப்பட்டிருந்தார்.
இரவோடிராவாக கறுப்புக்காரில் வருபவர்களால் பலர் கடத்தப்பட்டுக்கொண்டிருந்த இருண்ட காலத்தின் தொடக்கம்.
நள்ளிரவு வேளை கறுப்புக் காரில் வந்தவர்களால் நவாலியில் ஒரே வீட்டைச் சேர்ந்த இருவர் கடத்திச் செல்லப்பட்டு சொல்லொணா வகையில் சித்திரவதை செய்யப்பட்டு மரணமாகியபினர் அல்லைப்பிட்டி பணிணை வீதியில் வீசப்பட்ட அதிர்ச்சிச் செய்தி வடபகுதி மக்களை உலுப்பிய காலம்.
அந்தக் கல்லூரி க. பொ. த. உயர்தர வகுப்பு கலைப்பிரிவு மாணவர்களில் ஒருவன் சிவானந்தன். அதிபர், ஆசிரியர்களின் விருப்புக்குரிய சிறந்த மாணவன்.
அவன் படிக்கின்ற பாடங்களில் சமஸ்கிருதமும் ஒன்று.
அவனது தமிழ் அறிவை மெச்சிய சமஸ்கிருத ஆசிரியர் சமஸ்கிருதம் கற்பதன் மூலம் மொழி, இலக்கிய அறிவு மேலும்
118 இப்படியுமா..?
 

வளம் பெறும் எனக்கூறி, அவனைக் கட்டாயமாக சமஸ்கிருதம் கற்க வைத்தார்.
கல்லூரியில் நடைபெறும் கலை இலக்கிய நாடக விழாக்கள், போட்டிகள் பலவற்றிலும் சிவானந்தனுக்கும் பரிசுகள் காத்திருக்கும்.
அதேபோன்று இன்னுமொரு. சுவர்ணலதா. பெயருக்கேற்ற அழகுக்கொடி. .
கலை இலக்கிய நாடக விழாக்கள், போட்டிகள் யாவற்றிலும் அவள் ஒளிர்வாள். சிவானந்தனும் சுவர்ணலதாவும் ஒரே வகுப்பில் கற்றாலும் இருவருக்கும் எல்லா விடயங்களிலும் போட்டிதான்.
அவர்களின் தர்க்கங்களுக்குச் சமஸ்கிருத வகுப்பு மிக்க வசதி. ஏனெனில் அந்த நேரம் வேறு மாணவர் குறைவு. மாணவிகளே அதிகமாக வகுப்பில் இருப்பர்.
போட்டிகள், விழாக்கள் எல்லாம் அவர்கள் இதயங்களிலும் ஒருவரையொருவர் மறக்கமுடியாதபடி செய்துகொண்டுதான் வந்தன.
கல்லூரி அதிபர்தான் அந்த வகுப்புக்கு ஐரோப்பிய வரலாறு கற்பிப்பார். அந்த வகுப்பு அவனுக்குப் பிடித்தமானது.
ஒருநாள் தனது ஐரோப்பிய வரலாறு கொப்பியைப் புரட்டி பிரெஞ்சுப் புரட்சி பற்றிய விடயத்தை ஆர்வத்தோடு படித்தபின் கொப்பி மட்டையின் உட்பக்கத்தை மேலோட்டமாகப் பார்த்தான். அதில் ஆங்கிலத்தில் திட்டப்பட்டிருந்த வாக்கியம் அவனை எண்ண அலைகளில் மிதக்க வைத்தது. .
“சாகும்வரை உன் சுவர்ணாவை நினைவில் வைத்திரு.” இந்த வாசகம் நினைவில் ஆடிக்கொண்டே இருந்தது. ஆயினும். அதிலும் மேலாக. பரீட்சைக்கு இன்னும் நான்கு மாதங்கள் கூட இல்லை. ஏப்ரலில் நடைபெறவுள்ள பரீட்சையில் விஞ்ஞானப் பிரிவிலும், கலைப்பிரிவிலும் மிகச் சிறந்த சித்தியினைப் பலர் பெறுவரென அதிபரும் ஆசிரியர்களும் எண்ணியிருந்தனர்.
இப்படியுமா..? 119

Page 62
சிவானந்தன் சீர்திருத்த எண்ணங்களும், கருத்துக்களும், இனவுணர்வும், தமிழ் அபிமானமும் நிறையப் பெற்றவன். அவனது பெற்றோர் இலக்கியப் புலமை மிக்கவர்கள். அவ்வாறே அவனது சகோதரர்களும் இலக்கியத் துறையில் ஈடுபட்டவர்கள்.
இந்தத் தன்மைகள், தீவிரப்போக்குகள் சுவர்ணாவுக்கு அவ்வளவாய்ப் பிடிப்பதில்லை. வாழ்வுக்கான வழி தேட வேண்டும். இந்த விடயத்தில் அவள் தெளிந்த முடிவுள்ளவள். அவள் குடும்ப சூழ்நிலையும் அப்படி.
ஏப்ரலில் பரீட்சை.
கிறிஸ்மஸ் தினத்திலிருந்து சிவானந்தமுனும் அவனது
சுவர்ணா துடித்துப்போய்விட்டாள். “ஒரு சொல்லுச் சொல்லாமற் போய்விட்டாயே சிவா..” என மனதுக்குள் அழுதாள். வெள்ளிக்கிழமையில் கோவிலுக்குத் தாயுடன் போகும் போதெல்லாம் சிவா நல்லபபடி இருக்கவேனும் என வேண்டிக்கொள்வாள்.
பல மாதங்களாகச் சிவா க்ாடு, மேடு என நாட்டின் பல பகுதிகளைச் சுற்றி நடந்தான். மக்களைச் சந்தித்தான்.
அரைப்பட்டினி, சில வேளை முழுப்பட்டினியாகவும் இருக்க வேண்டியிருந்தது. அபாயங்களை அடுத்தடுத்துச் சந்தித்தாலும் நுண்ணிய அறிவாலும், சாதுர்யத்தாலும் உயிர்தப்பி வந்தான். பல மாதங்கள் இந்தியாவிலும் கழிந்தது.
நண்பர்கள்- தோழர்கள் பலரை இழந்தான். மனிதநேயம் மிக்க அவனை, தொடர் அராஜகங்கள், கொலைகள் மனவருத்தமடையச் செய்தன.
எல்லாவற்றையும் துறந்துவிட்டு எழுத்துத்துறையில் மட்டும் ஈடுபட்டு வந்தான். புனைப்பெயர்களில் கட்டுரை, கவிதை, கதைகள் தொடர்ந்து எழுதி ஓரளவு மன ஆறுதல் அடையினும் அவனுள் ஏதோ ஒருகனல் எரிந்து கொண்டே இருந்தது.
வீட்டாரிடமிருந்து பலமுறை திருமணப் பேச்சு வந்தது. அந்தப் பேச்சே வேண்டாமெனக் கண்டிப்பாக அவர்களுக்கு எழுதிவிட்டான். அவன் மனதிலிருந்து சுவர்ணாவினர் நினைவை அழிக்க முடியவில்லை. பத்திரிகை நிறுவன
120 இப்படியுமா..?

மொன்றில் வேலை பார்த்து வந்தான். பல்வேறு நெருக்கடிகளும் வந்து கொண்டிருந்தன.
பத்திரிகைத்துறை கருத்தரங்கொண்றில் கலந்துகொள்ள லண்டன் செல்லச் சந்தர்ப்பம் கிடைத்தது.
நண்பர்களின் அழைப்புகளுக்கிணங்க ஐரோப்பாவிலுள்ள பல நாடுகளுக்கும் சென்றான். நண்பர்களின் வற்புறுத்தலின் பேரில் ஐரோப்பாவிலேயே தங்கிவிடத் தீர்மானித்தான்.
பல்கலைக்கழக பட்டதாரியாகிவிட்ட சுவர்ணாவுக்கு திருமணப் பேச்சு நடந்தது. “படத்தைப் பார்த்ததும் மாப்பிள்ளைக்குப் பிடிச்சுப் போச்சு. சீதனமும் தேவையில்லையாம். நீங்கள் குடுத்து வைச்சனிங்கள்.” புரோக்கள் இனிக்கப் பேசினார்.
‘தகப் பனை இழந்த சுவர்ணா” இந்த விடயத்தில், அதிஷ்டக்காரிதான். . என அவளின் தாய் மனம் குளிர்ந்தது. பிரெஞ்சுப் பிரசாவுரிமையுடைய தர்மராஜனின் அழைப்பில் சுவர்ணா பாரிஸ் வந்து தூரத்து உறவில் சிறியதாய் முறையான ஒருவரின் வீட்டில் தங்கியிருந்தாள்.
ஒரு மாதத்தில் திருமண வரவேற்புபசாரத்தை, சிறிய அளவில் நண்பர் மட்டத்தில் மட்டும் நடத்துவோம் எனவும் வசதியுள்ள சிறிய வீடொனர்றும் வாடகைக்கு எடுத்துள்ளதாகவும் தர்மராஜன் கூறியிருந்தான்.
சுவர்ணா பாரிஸ் வந்துசேர்ந்து பத்து நாட்கள் கூடக் கழியவில்லை. ஒரு தொலைபேசி அழைப்பு அவளுக்கு வந்தது. ஜெனிபர் என்ற இளம்பெண் அவளை அவசியம் சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்தாள்.
குழந்தையொன்றையும் கூட்டிக்கொணர்டு வந்த அந்த அழகிய பெண், தானும் தர்மராஜனும் கணவண் மனைவியாக ஐந்து வருடங்களுக்கு மேலாக ஒரே வீட்டில் வாழ்வதாகக் கூறினாள்.
தன்னுடனர் கொண்டு வந்திருந்த “ஒலிவியா’ என்னும் மூன்று வயதுப் பெண் குழந்தைக்கும் தர்மராஜண்தான் தந்தை என்றும் கூறி, தாங்கள் ஒன்றாக எடுத்துக்கொண்ட படங்கள் யாவற்றையும் காட்டிக் கண்ணிர் சிந்தினாள்.
இப்படியுமா..? 121 --س

Page 63
தனது பெற்றோர் ரியுனியண் தீவைச் சேர்ந்தவர்கள் என்றும் தனது தந்தையின் மூதாதையர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறினாள்.
தான் தமிழ்ப் பெண்ணாகவே இயன்றவரை அவர் மனம் கோணாமல் நடந்து வருவதாகவும், அவரது கபட நோக்கத்துக்கு இடமளித்து தனது வாழ்க்கைக்குத் துரோக செய்துவிட வேண்டாமெனவும் அவள் பிரெஞ்சு, ஆங்கிலம், தமிழ் கலந்து இரந்து கேட்டாள்.
சுவர்ணாவுக்கு என்னவோ செய்தது. . தலை வலித்தது. “கவலைப்படாமல் போங்கோ. . என அவளை அனுப்பி வைத்தாள்.
தான் தங்கியிருந்த வீட்டு உறவுக்காரப் பெண்ணிடம் இது குறித்துக் கேட்டாள். இது உண்மைதான் என உறுதிப்படுத்திக் கொண்டபின் தர்மராஜனுக்குத் தொலைபேசி எடுத்தாள்.
முதலில் மறுத்த தர்மராஜன் பின்னர்.
“இது சின்ன விஷயம். அவளோட சிநேகிதியாத்தான் பழகினனான். அவள் ஒரு கலப்புச் சாதிக்கழுதை.
நீங்கதான் மனுசியப்பா; உங்களுக்கேண் சந்தேகங்கள். இன்னும் இரண்டு கிழமையில கலியாணம் முடியும். நாங்க நல்ல வீட்டுக்குப் போயிருவம். ஆக்களின்ர கதையளைக் கேட்டு மனதைக் குழப்பிப் போடாதையுங்கோ." என இழுத்தான். சுவர்ணாவுக்குக் கோபம் தலைக்கேறியது.
நான்கு வார்த்தைகள் உறைக்கச் சொல்லிவிட்டு “வையடா போனை' என்றும் சொல்லிவிட்டாள்.
தற்போது சுவர்ணாவுக்கு அகதி அந்தஸ்தும் கிடைத்துவிட்டது. ஓரளவு பிரெஞ்சும் படித்துவிட்டு ஒரு சுப்பர் மார் சேயில் வேலையும் பெற்றுவிட்டாள். ஞாயிறு தினங்களில் தமிழ் வகுப்பும் நடத்துகிறாள்.
இரண்டு வருடங்களுக்குப் பின் ஒருநாள். பாரிஸில் ஒரு நூல் வெளியீட்டு விழா. தமிழ் ஆசிரியை ஒருவரின் வேண்டுகோளுக்கிணங்க அங்கு போயிருந்தவளுக்கு அதிர்ச்சி.
122 ------------------------------------- July u0.?

பிரபல எழுத்தாளர் ஆனந்தன் தலைமை வகிப்பார் என விளம்பரத்தில் இருந்தது. ஆனால் மேடையில் ஆனந்தன் பெயரில் இருந்தவர்.
சுவர்ணாவுக்கு ஒருவித ஆனந்தம். மறுபுறம் ஆச்சரியம்.
விழா இடைவேளையின்போது மேடைக்கு அருகில் சென்று ஆனந்தனுக்கு வணக்கம் சொன்னாள்.
"நீங்கள் சிவாதானே.” என்று கேட்டாள். "ஒமோம். சுவர்ணா. நீங்க கூட்டத்துக்கு வந்தவுடனேயே கண்டனான். ஆனா." என இழுத்தான்.
“என்ன ஆனா. நான் கலியாணம் செய்யவேண்டு இஞ்ச வந்தனான். ஆனா. அவன் இஞ்ச குடும்பகாறன். அதை அறிஞ்சதும் கலியாணமே வேணாமெணி டிட்டு சின்னம்மாவோடதான் இருக்கிறன். வேலையும் செய்யிறன்.
உங்களைப் பாத்து எத்தனை வருஷம். . ஒரு செய்தியும் உங்களைப் பற்றித் தெரியேல்ல. எத்தனை நாள் அழுதிருப்பண். அம்மாவின்ர கரைச்சலால தான் இஞ்ச வர ஒமெண்டனான். . இப்ப. அதில ஒரு.”
சிவானந்தனர் புணர்னகையுடனர் தனது தொலைபேசி இலக்கத்தை அவளிடம் கொடுத்துவிட்டு விழாவைத் தொடர்ந்தான். G
‘இந்தச் சிரிப்பைப் பார்க்க எத்தனை காலம்.”
சுவர்ணா ஆனந்தத்தில் மிதந்தாள். ..!
இப்படியுமா..? -- ----- 123

Page 64
கடை வாசலில்.
போசனசாலை திறந்தே கிடக்கிறது. ஒழுங்கையில் ஆள்நடமாட்டம் குறைந்துவிட்டது. மதியம் திரும்பி. . மூன்றரை மணியாகிவிட்டது.
நகரத்தின் மத்தியில் பிரதான வீதியொன்றைச் சேர்ந்த குறுகிய ஒழுங்கை.
ஒரு சிலர் மட்டுமே ஒழுங்கையில் தெரிகிறார்கள். அவர்கள் ஒழுங்கையில் நடக்கிறார்களா. நிற்கிறார்களா. . என்று சொல்லமுடியவில்லை. பக்கவாட்டாகவுள்ள மதிலில் கையை ஊன்றி. . ஊன்றி நடக்க முயற்சிக்கிறார்கள்.
ஒருவர் ஒழுங்கையில் மதில் ஒரமாகக் கையை ஊன்றியவாறு குந்தியிருந்து மூத்திரத்தை விடுகிறாரா..? ஒரு கையை வாய்க்குள்விட்டுக் கக்குகிறார். எழும்ப முயற்சிக்கிறார். ஆனால். . அரை மணித்தியாலமாக அப்படியே தான். .
கடை வாசலில் நான்கு சைக்கிள்கள் மதிலோடு சாத்தப்பட்டுக் கிடக்கின்றன. கடை லாச்சிமேசையைச் சுற்றி ஏழெட்டுப் பேர். உள்ளே வாங்குகளில் மூன்று நான்கு பேர். .
124 ----------- ജൂLഴ!ഥIT...?
 

இரத்தினசாமி லாச்சிமேசையிலே போத்தலை வைத்து, சுதந்திரமாகக் கணக்குப் பார்த்து கிளாசுகளில் ஊற்றிக் கொடுக்கிறான்.
6 יין
“காசைத் தாங்க.”
“என்னப்பா. . ஊத்தன். தாறன். . தெரியாத ஆக்களா..!’
“அதுக்கில்லைங்க. எந்த மனுசருக்கும் எல்லா நேரமும் வசதியிருக்குமா. சில பேர் குடிச்சுப்போட்டு நாளைக்குத் தாறனெண்டு சொல்லிப்போட்டு போயிர்ராங்கள்.”
“என்னப்பா. இதுகள் என்னோட பேசிற கதையளே. என்னைத் தெரியாதா உனக்கு. எத்தனை வருசமா. இங்க வந்து போறன். எத்தனை பேர் என்னோட இங்க வருயினம். கதைக்கினம். போயினம். ஒரு மரியாதை இல்லாம. ஆரிட்ட. என்ன கதை பேசிறதெண்டில்லாம. கதைக்கிற.
“அப்படி ஒண்டுமில்லைங்க. முந்தி உங்களுக்கு இருந்த மரியாதை. பேர். விலாசம் எனக்கும் தெரியுமுங்க. நானும் உங்கட சங்கத்தில முந்தி இருந்தவன் தானே. . பிறகு. ஏதோ பிழைப்புக்காகத் தானே எல்லாத்தையும் விட்டிட்டு இந்த வேலையில் இறங்கினனான். நீங்க அப்ப நடத்தின போராட்டங்கள் எல்லாம் எனக்குத் தெரியாதா. . ஆனா. . இப்ப. ..?”
கிளாசை எடுத்து அண்ணாந்து வாய்க்குள் ஒரே மூச்சில் ஊற்றி விழுங்கிவிட்டு. “இப்ப. என்ன..!” என்றார் வடிவேலர்.
பக்கவாட்டில் வலதுகைப் புஜத்தை ஒருமுறை தூக்கிக் குலுக்கிவிட்டுக்கொண்டார். வாசலால் எட்டி ஒரு துப்புத் துப்பினார்,
“இப்ப. . உங்களோட ஒருத்தரும் சேர்ரதில்லையாம். நீங்க கனக்கப் பிழை செய்திட்டீங்களாம். சங்கத்தில உங்கட கருத்துக்கு மதிப்பில்லாமப் போச்சாமே. சங்க வருசாந்தக் கூட்டத்தில் உங்களுக்கு ஆதரவாப் பதினாலு பேர் தான் இருந்தின மாமே. மூன்னுறு பேருக்கு மேல உங்கள எதிர்த்தாங்களாமே. . கடைசியா நீங்க அவங்களுக்குக் கட்டுப்படுறதாச் சொல்லிப்போட்டு வந்து, அடுத்த நாள் அறிக்கையொண்டை விட்டுப் புதுச் சங்கம் தொடங்கினிங்களே. . இதெல்லாம் சரியா அண்ணா. .?”
9JU9u LOT..? 125

Page 65
ما سا
யார் அதெல்லாம் உனக்குச் சொன்னது.?’ வடிவேலர் செருமலுடன் உரத்துக் கேட்டார்.
“இங்க பேப்பர்காறகும் வாறவை தானே. அதில ஒருத்தர், உங்கட கூட்டாளி தான். . அவரிட்டக் கேட்டு. . அதில
இருந்து நான் இப்பிடியெல்லாம் கணிச்சன்.”
“அந்தப் பொறுக்கியள் சேந்து குடிச்சுப்போட்டு நம்மைத் திட்டிறது தான் பழக்கம்.
יין
“ஒரு றாம். தா.” பத்து ரூபா நோட்டை விசுக்கினார்.
அரைவாசியை அண்ணாந்து ஊற்றியபின், கிளாசைக் கையில் பிடித்துக்கொண்டு பக்கத்தில் கிடந்த வாங்கிலில் உட்கார்ந்து கொண்டார்.
அங்கு பக்கத்தில் இவர்களது பேச்சைக் கேட்டுக்கொண்டு நின்ற பத்திரிகை நிருபர் சர்வானந்தமும் தனது தொழில்முறையில் இவரைப் பார்த்துக் கேள்வி கேட்கத் தொடங்கினார்.
அண்ணே. . நீங்க ஏன் தலைவருக்கு எதிரா அறிக்கை விட்டீங்க. தலைவரில சனத்துக்கு இருக்கிற மதிப்பை நீங்க கணக்கிடல்லையா..?”
சர்வா. . சும்மா. புரியாமப் பேசாதை. இங்க வடக்கில தலைவருக்கு பேர் எடுத்துக் குடுத்தது ஆரு.? சனத்துக்கு என்னில இருக்கிற மதிப்பு என்ன குறைஞ்சதோ..? இங்க நான் தானே தலைவர் மாதிரி. இருந்தனான். என்ர கருத்தை அங்க கூட்டத்தில் அவங்கள் கேக்கல. அவர் ஏதோ பெரிய வானத்தால வந்த தலைவரோ.? வெளிநாடுகளில பெரிய பெரிய சங்கத் தலைவர்களைச் சந்திச்சவர் எண்டாப்போல எல்லாம் அவருக்குத் தெரியுமோ..? ஏதோ தத்துவ விளக்கம் பேசினார். தத்துவம் சோறு போடுமா? தத்துவம் மாத்திரம் இருந்தாச் சனத்துக்கு வழிகாட்டலாமா..? அதை எடுத்துச் சொல்ல. . நாம வாழ்ந்துகாட்ட வசதி வேணாமா..? தத்துவத்துக்காக. இருக்கிற வசதிகளையும் விட்டிட்டு றோட்டில் இறங்க வேண்டியதா? நீயும் என்னை வடிவாப் புரிஞ்சனி எண்டதாலை உள்ளபடி சொல்லுறன்..! இதுகளைப் பிறகு பேப்பருக்கு எழுதிப் போடாதை.1 பிறகு அவங்களுக்கு வலு சந்தோசமாப் போயிடும். இப்ப நான் தொடங்கின சங்கத்துக்கு நான் தான் தலைவர். வேலாயுதத்தைத் தெரியும் தானே. அவன் நல்லா
126 l-l'-— இப்படியுமா..?

உரத்துப் பேசுறவன். . அவன் என்னோட தான். அவன் தான் என்ர காரியதரிசி. வடக்கில என்னைத் தெரியாத சனமிருக்கா..? அதிகமான தோழர்மார் என்னோட தான். அவையின்ர ஆக்கள் சும்மர் குசுகுசுக் கூட்டம் வைச்சுக்கொண்டு திரியினம். அவன் சத்தார் தான் இங்க அவையோட நிக்கிறான். அவனுக்குப் பின்னாலை நிண்டு அந்த கராஜ் முதலாளியும் ஒத்துதுறான். அவன் சங்கத்துக்குத் தன்னை அர்ப்பணிச்சதாக் காட்டிக்கொண்டு முதலாளியா வந்தவன். எப்பிடி அவர்கள் கூட்டம் போட்டாலும்,
و و
திட்டம் போட்டாலும் என்னை அழிக்கேலாது. .
“உங்கட அறிக்கை வந்ததுக்குப் பிறகு தலைவரில விசுவாசமான அவங்களில கனபேர் அங்க கடைக்குள்ள பூந்து உங்கட காரியதரிசி வேலாயுதத்துக்கும், அந்தப் பொட்டுக்காறனுக்கும், அங்க நிண்ட சிலபேருக்கும் நல்லா அடிச்சுப் போட்டாங்களாமே..?”
“அது கொள்ளைக் கூட்டம். என்ர கடைக்குள்ள பூந்து கொள்ளை அடிச்சது. அது இப்ப வழக்கில இருக்குது. அதைப்பற்றிப் பேசாதை.!”
“அது உங்க கடையே.? உண்மையைச் சொல்லுங்க. சங்கத்தின்ர கடை தானே..? அவங்கள் சங்கத்தின்ர கடையை விடச்சொல்லித் தானே கேட்டவங்கள். உங்கட காரியதரிசி நியாயம் பேசி வாங்கிக் கட்டியிருக்கிறார். என்ன..? அதுசரி கொள்ளை அடிச்சது எண்டு தான் வழக்குப் போட்டியள். அது எனக்கு விளங்கும். ஆனா. அண்டைக்கு நீங்க அதில நிண்டிருந்தா அவங்கள் உங்களைத் துலைச்சிருப்பாங்களாமே..?”
“சும்மா. பேய்க் கதை பேசாதையும். அவங்கள் ஒவ்வொருவரையும் எனக்குத் தெரியும். நான் அவங்கள் கூட இருந்து வழி காட்டினவன் தானே. ஒவ்வொருவனும் என்ன செய்வானெண்டு எனக்குத் தெரியும். அவன் கராஜ் முதலாளி, சத்தார், தவராசா எல்லாரும் சேர்ந்துகொண்டு என்னை அழிக்கப்பாக்கிறாங்கள். பாப்பம். ஆர் அழியிறதெண்டு. நான் எங்கெங்க தொடர்பு கொள்ள வேணுமா. அங்கங்க பேசி வைச் சிருக்கிறன் . அவை எல்லாரும் கூட்டுக்க தான் போவினம்.” உரத்த செருமலுடன் சொன்னார் வடிவேலர்.
“சும்மா. கராஜ் முதலாளியெண்டு அந்தாளைத் திட்டிறீங்க. அந்தாள் உங்களிலயும் பழைய ஆளெல்லோ. சங்கத்துக்காக
இப்படியுமா..? - 127

Page 66
தன்னை அர்ப்பணிச்சு உதவுற மனுசனல்லே. எத்தின போராட்டங்கள் கண்ட மனுசன். . அதுசரி. வழக்கும் போன கிழமை தீர்ந்தல்லே போச்சுது. அதையேன் மறைக்கிறீங்க. அவங்களை கோடு விடுதலை செய்திற்றுதே.!”
“கோடு விடுதலை செய்யலாம். மக்கள் விடவா போறாங்கள்.”
“உங்களோட ஏதோ கனக்கவே சனம் நிக்குது..?”
“இதென்ன. கதை பேசிற. நான் எங்கட சங்கம் சார்பா கிட்டடியில ፍ9 (Ù கூட்டம் இங்க வைச் சன். கேள்விப்படேல்லையே. தெற்கிலை இருந்தும் ஆக்கள் வந்து பேசினாங்களே.!’
"அண்ணே. எல்லாம் எனக்குத் தெரியும். தெற்கில உங்கட சங்கத்துக்கு எத்தினை பேர் இருக்கீனம். வந்த ஆக்கள் இரண்டு பேரும் முந்தி சங்கத்தாலை விலத்தப்பட்ட போக்கிலியள் எண்டிராங்களே..? அவையை நீங்க பிடிச்சு வந்து தலைவரைத் திட்ட வைச்சீங்க. இல்லையா..? நான் தானே அந்தக் கூட்டத்துச் செய்தியைப் பேப்பருக்குக் குடுத்தனான்.”
“அப்ப. அந்தக் கூட்டத்துக்கு வந்தனியே.?”
“நான் வரேல்ல. உங்கட காரியதரிசி வேலாயுதம் தான் பெரிசா எழுதியந்து தந்தான். நான் அனுப்பினன். பேப்பரில அந்த அலம்பல் பேச்சுகளை வெட்டிப்போட்டுச் சின்னனாப் போட்டாங்கள். பாக்கேல்லையே..?
“பாத்தனான். எங்கட செய்தியளை.அவங்கள் அப்பிடித் தான் போடுவாங்கள். எங்கட பலம் அவங்களுக்குத் தெரியாது.”
“சும்மா. விடண்ணை கதையை. முந்தி நீங்க சங்கத்தில இருக்கேக்க நடத்தின ஊர்வலம். போராட்டம் எல்லாம் எனக்குத் தெரியுமண்ணே.! அப்ப சங்கத்தின்ர பலம் என்ன. தலைவர்ர பேரைக் கேட்டாலே எதிரியள் நடுங்குவாங்கள். அந்தாள் தத்துவரீதியா சர்வதேச விசயத்தைக்கூட எவ்வளவு அழகா மூண்டு மொழியிலும் விளங்கவைச்சுப் பேசுவார். அந்தாளுக்கு நிகரா இந்த நாட்டில் ஆர் இருக்கான். அந்தாள் ஒரு தமிழன் எண்டு சொல்லுறதில உங்கட கருத்துகளுக்கு மாறான நான்கூடச் சந்தோசப்படுறனான். அந்தாள் இங்க இண்டைக்கு வந்தாலும் எவ்வளவு சனம் அந்தாளின்ர பேச்சைக் கேட்க
128 --- இப்படியுமா..?

ஆவலாப் போகுது. நீங்க என்னடாவெண்டா. . நீங்க தான் தலைவர், அந்த உளறுவாய் வேலாயுதம் காரியதரிசி எண்டிருந்துகொண்டு. சும்மா குடாநாட்டுக்க மாத்திரம் அறிக்கை விடுறீங்க. உங்கட பேச்சைக் கேக்க ஆர் இருக்கீனம். இதுகளுக்க வந்தா. என்தரவளிதான் கேக்க வேண்டியிருக்குது. சும்மா. பழைய லேபல் வீரம் பேசுறியள்.”
சர்வா. . கனக்கக் கதைக்காதை. சும்மா நிப்பாட்டு உன்ர
“தம்பி . ஒரு றாம். தா.!” “நான் ஒரு கூட்டம் கெதியில வைக்கப்போறன். அப்ப பார் எங்கட பலத்தை.”
“அப்ப. வைக்காம இருப்பியளோ. நாலுபேரோட உசாரா நிண்டு கூட்டம் நடத்துவியள். எல்லாரும் மாறி மாறிப் பேசுவியள். எல்லாத்துக்கும் வசதியா அவங்கட சங்க அச்சுக்கூடமெல்லே உங்களிட்ட மாட்டியிருக்குது. .
“உனக்கு ஆரோ துரோகியள் நல்லா ஒதி இருக்கிறாங்கள்.”
“எனக்கு ஆரும் ஒதல்ல. எனக்கும் சமூகத்துக்க தானே வேலை. எனக்கு உங்கட சங்கதி எல்லாம் நல்லா விளங்கும். இங்க வடக்கிலை நீங்க பழைய மனுசன் எண்டதாலை. தொழில் ஒண்டும் இல்லாதவர் எண்டதாலை உங்கட பெயரில அச்சுக்கூடத்தை பதிஞ்சு வைச் சாங்கள். சங்கக்காறர் ஒவ்வொருவரும் காசு போட்டுத் தொடங்கின அச்சுக்கூடமெல்லே
.. ...llوت
“சும்மா. தனிப்பட்ட விசயங்களைக் கதைக்காதை. அச்சுக்கூடம் நான் தான் தொடங்கினனான். அது எனக்குத் தான் சொந்தம். என்ர பெயரில தான் இருக்குது.”
... .. உங்கட நிலவரங்கள் எல்லாம் எனக்குப் புரியும். நாளைக்கு அதை உங்கட சொந்தச் செலவுக்காக. . வித்தும் குடிப்பியள். எனக்கு விளங்கும்.”
“சர்வானந்தம்..”
செருமிக் கொண்டு கிளாசை எடுத்து அண்ணாந்து ஊற்றினார் வடிவேலர்.
“அதுசரி. . புத்தக வியாபாரம் இப்ப எப்பிடி. . இப்ப அவ்வளவு ஓடாது. என்ன . சனம் உங்களை நல்லாப்
இப்படியுமா..? 129

Page 67
புரிஞ்சிற்றுது. உங்கட தத்துவங்கள் எது எண்டும் சனத்துக்குத் தெரியும். அவங்கள் சங்கத்தை முந்தின மாதிரியே வடிவா நடத்திறாங்கள். அண்டைக்குக் கூட்டத்திலை பார்த்தன். எங்கட பெடியள்கூட சிலபேர் அவங்களோட நிக்கிறாங்கள். அடிக்கடி கிராமம் கிராமமாக கூட்டம் வைக்கிறாங்கள்.
ללן
. அவங்களோட நீங்க போட்டிச் சங்கம். .ஸா.ஸா. .
“சர்வானந்தம். .
சர்வானந்தத்தினுடைய சேட்டை இறுக்கிப் பிடித்த வடிவேலரின் கை அவரின் கன்னத்தில் விளையாடியது.
சரிந்து நிமிர்ந்து விடுவித்துக்கொண்ட சர்வானந்தம் வடிவேலரின் தலையில் ஒரு தட்டுத்தட்டி அவரை வாங்கிலில் வடிவாக இருத்தி இறுக்கிப் பிடித்துக்கொண்டு.
“உங்கட வெருட்டுகள். சேட்டையளை வேறை எங்கேயும் ஏழை எளியதுகளோட வைச்சுக் கொள்ளும். . உங்கட பயறு இனிமேல் சனத்திட்ட அவியாது. பெரிசா. என்னோட கதைச்ச மாதிரி ஆரோடையும் கதைச்சுப் போடதையும். உங்கட பழைய தோழர்மார்ர காதில கேட்டா சிலவேளை கண்காணாத இடத்துக்கும் உம்மை அனுப்பிப்போடுவாங்கள். உம்மிட துரோகங்கள் அப்பிடிப்பட்டதல்லோ. கவனமாப் போய்ச் சேரும்.
சர்வானந்தம் கையை விலக்கி. தன்னுடைய டயறியையும் எடுத்துக்கொண்டு, “பொறுக்கிப் பயல். ஊரைக் கொள்ளையடிச்சு வாய் வயிறு நனைக்கிறவன்’ என்று சொல்லிக்கொண்டு போகிறான்.
“வடிவேலண்ணை. . எழும்புங்கோ. இடத்தைக் காலிபண்ணுங்கோ. இப்ப அடிக்கடி காக்கிக்காறங்கள் இங்காலை வாறவங்கள். நாலு ரூபா ஐம்பது சதம் தந்திட்டுப் போங்கோ.”
அந்தக் காசை நாளைக்குத் தாறன். நான் வராட்டியும் அச்சுக்கூடப் பெடியன் நன்னியனிட்டக் குடுத்தனுப்பிறன்.
ཏུ་ཧུ་
என்னை சீப்பா நினைக்காதை. நான் ஒரு தலைவன்ரா. .
“நீங்க. தலைவர் தான். நடவுங்க. காசை மறந்திடாம கெதியா அனுப்புங்க. .” வடிவேலர் ஒழுங்கையில் இறங்குகிறார்.
130 ----------------------------------------------- LI]2.LT.?

“குடிக்க வாறது. கடன் சொல்லுறது. வழமையாப் போச்சு. அதுக்குள்ள. தம்பட்டம் வேற. தலைவர் எண்டு. . மண்ணாங்கட்டி. ஆக்களின்ர லட்சணத்திலை. தலைவர் பட்டம் தான் குறை. இந்த 1979-ஆம் ஆண்டும் முடியப்போகுது. இவங்க தரவளிக்கு முடிவில்லையா..?”
இரத்தினசாமி புறுபுறுத்துக்கொண்டான். ஒழுங்கையில். . .
ஐயோ. . தலை கிறுகிறுக்குதே. ”
அகம்பாவத்துடன் நடக்க முயற்சிக்கிறார்.
“அந்த காலத்தில. . எனக்குப் பக்கத்திலை எத்தனை தோழர்மார். . எங்களுக்குப் பின்னால ஆயிரக்கணக்கான தோழர்கள். முன்னால காக்கிக்காறங்கள் மிரண்டு போக. என்ன மாதிரி. கோசம்போட்டு நடந்தனான். இண்டைக்கு என்ர நிலை. அவங்கள் சிலபேரை காக்கிக்காறங்களுக்குக் காட்டிக்குடுத்தன். அப்பவும் அவங்கள் அடங்கல்லை. உசாராத் தான் இருக்கிறாங்கள். . அவர் பெரிய தலைவரோ. . தத்துவ மேதையோ. உலக நாடுகள் அறிஞ்ச மனுசனோ. . என்ர செல்வாக்குத் தானே இஞ்ச இருந்துது. சே. . என்னை இப்பிடி கைவிடுவாங்களெண்டு நினைக்கேல்லை. அறிவில்லாத சனம். . தலைவரும் நான் இப்பிடி மாறுவன் எண்டா நினைச்சிருந்தவர். என்ன நிலை வந்தாலும் . . ஏய். என்னை விழுத்த ஏலாது. அச்சுக்கூடம். என்ர செலவுக்கு உதவும் தானே. அவன் வேலாயுதம். அதை நம்பித் தானே அவன் எனக்குப் பின்னாலே O KO K சங்க வேலை செய்யிறான். கலியாணமே வேணாமெண்டு இருந்தவன். உழைப்பில்லாததாலை கலியாணத்துக்குப் பயந்தவன். . இப்ப என்னோட வந்ததில இருந்து எவ்வளவு மாற்றம். கலியாணமும் செய்திற்றான். நான் கைவிட்டா அவன் வயித்துப்பாட்டுக்காக. ஆரையும் காட்டிக்குடுத்தாவது சீவியம் ஒட்டுவான் எண்டு நினைக்கிறன். மற்றது சில்லறைக் கூட்டம். என்ர தண்ணிக்கு ஆமாம் போடுறதுகள் தானே. தண்ணி இல்லையெண்டாத் தானாப் போயிடுங்கள். ம்.. எனக்கு நிம்மதி வேணும். . இன்னொரு றாம் அடிச்சா நல்லம். பழக்கடைப் பக்கம் பாப்பம். .”
கையை விசுக்கி நடக்கத் தெண்டிக்கிறார் வடிவேலர்.
“ஒண்டுக்கு வருகுதே. . இதில இருப்பம். .”
இப்படியுமா..? ,----------.................................------------ 131

Page 68
மதிலில் கையை வைத்துக்கொண்டு மெல்ல அதில் சாய்ந்துகொண்டு குந்தியவர் அப்படியே பக்கவாட்டிற்குச் சாய்ந்துவிட்டார்.
வேட்டியும் கழன்று அலங்கோலமாக. . .
சட்டைப் பொக்கற்றுக்குள் கிடந்த பத்துச் சதக்குற்றிகள் குதித்து ஓடுகின்றன. .
பக்கத்து மூத்திர வாய்க்காலுக்குள் விழுந்த அவரது சிவப்பு டயறி ஒற்றைகள் நனைந்து விட. . டயறிக்குள் இருந்த சில துண்டுகள் காற்றுக்கு மெல்ல மெல்ல பறக்கின்றன. .
132 இப்படியுமா..?

வீரகேசரி
தினகரன்
தினக்குரல்
பாரிஸ் - ஈழநாடு
உதயன் - கனடா
வானவில் - ஐரோப்பா வண்ணத்துப்பூச்சி (ஆண்டு மலர்) ஜெர்மனி பூவரசம்பொழுது - சிறப்பு மலர் (2001) - கனடா ஞானம் - இலங்கை
புதிய பார்வை - தமிழ்நாடு
பதிவுகள்- இணையத்தளம் -கனடா

Page 69

★
நூலாசிரியரின் ஏனைய சில நூல்கள்
கரும்பனைகள் (கவிதைகள்) சிகரம் (கவிதைகள்) இது ஒரு வாக்குமூலம் (கவிதைகள்) நோய் நீக்கும் மூலிகைகள் ஆரோக்கிய வாழ்வுக்குச் சில ஆலோசனைகள் மண் மறவாத் தொண்டர் திரு நல்ல மனிதத்தின் நாமம் டானியல் மண் மறவா மனிதர்கள் இளங்கோவன் கதைகள் இலங்கை இலக்கியப் பேரவை - இலக்கிய வட்ட விருது பெற்றது.
தமிழர் மருத்துவம் அழிந்துவிடுமா..? பிரான்ஸ் மண்ணிலிருந்து தமிழ்க் கதைகள் - இளங்கோவன் கதைகள்' - இந்தி மொழிபெயர்ப்பு அழியாத தடங்கள் வளரும் வண்ணம் (கவிதைகள்)

Page 70


Page 71
றுத்தைகள்
s
புலம்பெயர்ந்த தமிழர்கள் ஆயிரக்க வருமானம் பெற்று எப்படியாக உய கொண்டிருக்கிறார்கள் என்கிற நம் நினைட் - அதிர்ச்சியூட்டுவது போல இதிலுள்ள கன வைத்துவிடுகின்றன. சிந்தனையைத் தூ: புதிய வெளிச்சத்தையும் உமிழ்கின்றன.
நாமக்கல். O1- 05 - 2012
நண்பர் இளங்கோவனி நிர்த்தாட்சண்யமான யதார்த்தம்’ என்ற நிற்கின்றது. இளங்கோவனின் கதை புலப்படுகின்றது. புகலிட வாழ்க்கையின் அவலத்தை இளங்கோவன் பிய்த்து வை பிரான்சுக்கு மிகக் காத்திரமான வெறுப்புகளுக்குகப்பால் நின்று நோக்கும் ஓர் ஆழமான பன்முகப்பாடு உண்டு. இச்சிறுகதைத் தொகுதி ஓர் விஸ்தரிப்பை வேண்டும். இச்சிறுகதைகளினூடே மேற்கிளம்புப் இளங்கோவனை வாழ்த்துகின்றேன். கொழும்பு. 2OO6
இரு தசாப்த காலத்துக்கு முன்னரே நான முதன்மையாளருமான வி. ரி. இளங்கோவ எனப் பல்துறைஅனுபவம் பெற்றவர். அத் வாழ்ந்தாலும் தன் புண்ணிய பூமியை மற வேந்தன் என்ற பாராட்டைப் பெற்றவர்.
ஐ. நா. தொண்டராக (U.N.V. பெற்ற இளங்கோவன், தலித் இலக்கிய மு மக்கள் கலை இலக்கியப் பெருமன்றத்தின் எழுத்தாளர், பேச்சாளர், கவி
பெற்ற, இவரது முற்போக்குச் சிந்தனைய பாராட்டையும் வரவேற்பையும் பெறும் என்
கொழும்பு. 2OO6
O
UMi Unique /S Media Integrators
No.8, 6th Cross, 8th Main Road, Vaishnavi Nat Chennai-600109, E-mail: umi.infobooks(0gm.
 

ணக்கில், லட்சக்கணக்கில் ார்ந்த வாழ்க்கை வாழ்ந்து பிற்கு ஆணி அடிப்பதுபோல தைகள் நம்மை நிலை குலைய
- கு. சின்னப்பமாரதி
ன் சிறுகதைகளை வாசித்த பொழுது
சொற்றொடரே என் மனதினுள் மேலோங்கி
கூறும் மனநிலை மிகத் துல்லியமாகப் ல் தெரியப்பட்டுள்ள பெறுமான மாறுபாட்டு பக்கிறார். தமிழ்ப் புகலிட இலக்கிய வரலாற்றில் ஒர் இடமுண்டு. தனிப்பட்ட விருப்பு பொழுது பிரான்சின் புகலிடத் தமிழிலக்கியத்தில் அந்தப் பன்முகப்பாட்டுக்கு இளங்கோவனின் க் கொடுக்கின்றது என்பதை ஏற்றுக்கொள்ளவே
ம் பாத்திரச் சித்திரிப்புச் செழுமைக்காக
- பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி
ாறிந்த கவிஞரும் முற்போக்கு அணியின் ஒரு ன் அவர்கள் மருத்துவம், இலக்கியம், பத்திரிகை துறைகளில் ஏராளம் எழுதியவர். புலம்பெயர்ந்து )க்காதவர். இளந்தலைமுறையினரின் பல்கலை
) பிலிப்பைன்சில் பணிபுரிந்து விருதுகள் பல ன்னோடி கே. டானியல் தலைவராக விளங்கிய செயலாளராகப் பணிபுரிந்தவர்.
ஞர், விமர்சகர் எனப் பன்முக ஆளுமை வளம்
பின் வழிவந்த இந்நூல் தமிழ் கூறும் உலகின்
ாபது எமது நம்பிக்கை.
- Gugltóirí luí Gaill, ar fé9y Geragás
R 90.00
987-81-922530-3-9
Jar. Thirumulaivoyal, il.Com 9'788 192'253O39