கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நகல் 2012

Page 1
-
கொழும்பு
TATA
 


Page 2
隱
鱷い? 翻: |- 職 聽:聽心
職 は、
整
 


Page 3

நகல்

Page 4

I5856)
தெரிவுசெய்யப்பட்ட நாடகப் பிரதிகளின் தொகுதி
கொழும்பு றோயல் கல்லூரி தமிழ்நாடக மன்றம்
2O 12

Page 5
அரண் சொல்லும் உரை.
ஒரு கலைஞன் தனது மனதிலெழுந்த உணர்ச்சிகளை வெளிப்படுத்த கரங்களில் பேனையினை ஏந்தி அதனை தன் மனம் என்ற வெண்மையான தாளிலே சிற்பமாக வடிக்கின்றான். அவ்வாறு உளியால் வடித்த சிலையே நகல் எனும் சிலையாக உருவாகியுள்ளது. பல கலைஞர்களின் உணர்ச்சிகளை உள்வாங்கிய நாடக பிரதிகளின் தொகுப்பு இந்த நகல் ஆகும்.
நகல் - நாடகப் பிரதிகளின் தொகுப்பு
பதிப்புரிமை 2ே012
வெளியீடு: கொழும்பு றோயல் கல்லூரி நாடக மன்றம், கொழும்பு. அச்சு: குமரன் அச்சகம், 39, 36வது ஒழுங்கை, கொழும்பு-6
Nakal
G 2012
Published by Royal College, Tamil Dramatic Society, Colombo Printed by Kumaran Press (Pvt) Ltd,39,36th Lane, Colombo -6

魏 ፰ ፳፩ у წწჯჯW ፪mሯ
፻W 懿
ప్రత్త

Page 6
hy spirit first to life awoke neighteen hundred and thirty five Beneath the sway of Marsh and Boake Thenceforth did Lanka's learning thrive
School where Our fathers learnt the Way before US Learnt of books and learnt of men, through thee Weldo the same
rue to Our Watchword "DİSCe Aut DjSCede We Will learn of books and men, and learn to play the game (Refrain)
Within thy shade Our fatherStrOd The path that leadstoman's estate They have repaid the debt they owed They kept thy fame inviolate
Refrain
And we their loyal Sons now bear The torch, with hearts as SOund as Oak Our lusty throats now raise a cheer For Hartley, Harward, Marsh and Boake
 

நாடகமன்ற பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தினி செல்வதாஸ்
நாடகத்துறைக்கு றோயல் கல்லூரி நாடகமன்றத்தின் புதுவரவு. இலங்கையின் தமிழ் நாடக வரலாற்றுப்பாதையில் அன்றுதொட்டு இன்று வரை நாடக ஆசிரியனுக்கு தட்டுப்பாடு உள்ளது போல் நாடகப்பிரதிகளுக்கும் தட்டுப்பாடு நிலவிவருகின்றமை நாடகத்துறை சார்ந்த அனைவரும் அறிந்த உண்மை.
அந்த வகையில் றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றமானது மாணவர் களிடையேயும் இளைய சமுதாயத்தினறிடமும் நாடகத்திறன்களை வளர்க்கும் பொருட்டு எடுத்து வரும் பல்வேறு முயற்சிகளில் நாடகப்போட்டிகளும் ஒன்றாகும். இந் நாடகப்போட்டிகள் கடந்த பலவருடங்களாக மேடையேற்றப்பட்டு வந்தாலும் மேடையேற்றப்படும் நாடகங்கள் தழுவலாகவும், நினைவூட்டுவனவாகவும் அமைந்து வருகின்றன. எனவே, போட்டிகளிலும் உத்திகளிலும் புதியனவற்றை கொண்டு வருவதற்கும் சமகால புதிய சிந்தனைகளை, புதிய ஆக்கங்களை புகுத்த வேண்டும் என்ற நோக்கிலும், அவை எம் இளைய சமுதாயத்திற்கு பயன்பட வேண்டும் என்ற அடிப்படையிலும் நாம் இம்முயற்சியில் காலடி எடுத்து வைத்தோம்.
நாட்டின் பல்வேறு இடங்களிலும் இருக்கும் நாடகக் கலைஞர்களை வெளிக் கொண்டுவரும் வகையில் புதிய படைப்புக்களை தேடுவதற்காக பகிரங்க அறிவித் தல் ஒன்றை அகில இலங்கை ரீதியாக விடுத்து போட்டிக்கு ஒழுங்கு செய்திருந்தோம். இப்போட்டிக்கு நாட்டின் பல்வேறு கலைஞர்களிடமிருந்தும் எழுபதிற்கும் மேற்பட்ட ஆக்கங்கள் வந்திருந்தன. இப்படைப்புக்களில் எமது தெரிவுக்குழுவினரால் தெரிவு செய்யப்பட்ட நாடகங்கள் இம்மலரில் வெளிவருகின்றன. இவற்றில் சிறுவர் இலக்கியம், சமூகம் என பல்வேறுபட்ட ஆக்கங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இப்பிரதிகள் யாவும் எமது பாடசாலை மாணவர்களின் நாடக ஆக்கத்திற்கு ஒரு உந்து சக்தியாக அமைய முயற்சி எடுத்திருக்கின்றோம். இவை அனைத்தும் நாடகங்களாக எதிர்வரும் காலங்களில் மேடையேறும் என்பதில் ஐயமில்லை. அதுமட்டுமல்லாது தமிழ் நாடக அரங்கின் தேவை கருதியும், சமூகத்தின் தேவை கருதியும் இந்நாடகங்களின் தொகுப்பையும் வெளியிடுகின்றோம்.
இத்தொகுப்பு நூலானது வருங்கால மாணவர்களிற்கு ஒரு முன்னோடியாக அமைந்து மேலும் இது போன்ற பல நூல்கள் வெளிவரவேண்டும்.
இந்நூலை ஆக்குவதற்கு உதவிய அதிபர் திரு உபாலி குணசேகர, பிரதி அதிபர் திரு மா. கணபதிபிள்ளை, நாடகமன்றப் பொறுப்பாசிரியர்கள், இவ்வருட மாணவர் செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோருக்கும் இதனை கணினி அச்சில் பதிவு செய்த திரு ச. அம்பலவாணர், புத்தகத்தை அச்சிட்டு உதவிய திரு க. குமரன் ஆகியோருக்கும் நன்றி கூறி விடைபெறுகின்றேன்.

Page 7
புரவலர் ஹாஸிம் உமரின் வண்ணத் தமிழால் வாழ்த்து
முத்தமிழில் மூன்றாம் இடம்பெறும் நாடகம், ஒரு காலத்தில் நம் நாட்டில், குறிப்பாகத் தலைநகர் கொழும்பிலும், யாழ்ப்பாணம் போன்ற தமிழ்ப் பிரதேசங்களிலும் வாராவாரம் மேடையேறி, தமிழ் வாடையைப் பரப்பியும் - நெஞ்சங்களில் நிரம்பியும் வந்திருப்பதை அறிகிறோம். இந்த நாடகக் கலை நலிந்து - நசிந்து போய்விடுமோ என்ற கவலை, தமிழ் உள்ளங்களை கவ்வி வரும் காலக் கட்டத்தில், ஒரு தேன்செய்தி நம் செவிகளைத் தொட்டுத் தடவுகின்றது.
அதுதான் - புகழ்பூத்த கொழும்பு றோயல் கல்லூரியின் தமிழ் நாடக மன்றம், இவ்வாண்டு (2012) முதன் முதலாகத் தமிழ் நாடகப் பிரதியாக்கப் போட்டியொன்றினை நடத்தி, சிறந்த நாடகப் பிரதிகளைத் தெரிவுசெய்து, அவற்றினை நூலுருவில் நகல்' என்ற நாமத்தில் வெளியிட்டு, தமிழ் நாடகக் கலைஞர்களை உற்சாகப்படுத்தும் உன்னத பணியை செய்ய முன்வந்திருக்கும் - தமிழன்னைக்குத் தங்கக் கிரீடம் சூட்டும் கைங்கரியமாகும்.
எந்த இலக்கிய வடிவமும் நூலுரு பெறும்போது, அது நிச்சயம் காலத்தை வென்று கதை பேசும். எனவே - அடுத்து வரும் சந்ததிகளுக்கு சமர்ப்பணஞ் செய்யும் இந் நகல் முயற்சி, பாராட்டப்பட வேண்டியது மட்டுமல்ல இனி தொடர்ந்து வெளிவர வேண்டும் என வாழ்த்தப்பட வேண்டியதுமாகும்.
ஆகவே - இந்த சீரிய முயற்சி, நேரிய வழியில் வெற்றி நடை போட, வண்ணத் தமிழால் வாழ்த்துகின்றேன்.
 

Principal Mr. Upali Gunasekara
It is with much delight, that I contribute this message to the pioneer Nagal the collection of Script book, which has been published for the first time by the Tamil Dramatic Society.
Indeed I am very happy the Tamil Dramatic Society is celebrating its 52nd Anniversary. A society based on aesthetics, continuing its journey is a great achievement and it has been helping the young royalists and other to mould their personal character and to bring out their hidden talents to the world. Functions of this nature will not only help to inculcate the correct values in the minds of the future generation, confident and leadership qualities, but also it would make them to think in various dimensions of art.
I congratulate the editors of this pioneer Nagal and the teacher in charge and other teachers who guide and facilitate the students and the students who put much effort to release in pioneer Nagal.
I wish the pioneer Nagal travels through every nook and corner of the island.

Page 8
Senior Deputy Principal Mr. Sarath Keerthisena
It is with Great Pleasure Isend this Message to the Nagal the Script book Published by the Royal College Dramatic Society,
The Society Engages in the task of molding young Minds and to Solve the cuddle of life through literature and Drama. I must Congratulate the Tamil Dramatic Society in its efforts of finding ways to understand the realities of life through an intellectual mode.
The book Nagal Consists of Selected Scripts of the young Writers all over the island the task was a tedious one which consumed time and capacity of the organizers and teachers in charge. Indeed these novel way of Creating the history of of School along with glory of the society should be appreciated.
I believe the Tamil Dramatic Society will forward nurturing cultured Attitudes and Promoting the Skills of writing Definitely it is away of improving the quality of life in general.
 

பிரதி அதிபர்
மா. கணபதிப்பிள்ளை
கொழும்பு றோயல் கல்லூரியின் தமிழ் நாடக மன்றத்தின் மற்றோர் செயற்பாட்டு மைல் கல்லாய் அமைவது நாடகப்பிரதி எழுதலுக்கான திறந்த போட்டியாகும். இப் போட்டியில் எழுபதிற்கு மேற்பட்ட நாடகப் பிரதிகள் கிடைத்த போதும் பாடசாலை மாணவர்களின் விழுமியங்களுக்கு பொருத்தப்பாடுடைய 22 நாடகப் பிரதிகளே முறையான நாடகக் கலைஞர்களைக் கொண்டு தெரிவு செய்யப்பட்டு இத்தொகுப்பில் பிரசுரிக்கப்படுகின்றன.
இது ஒரு புதிய முயற்சி. 15 நிமிடங்களுக்குப் பொருந்தும் வகையில் சிறந்த நாடகப் பிரதியாக்கம் தொடர்பாக திறந்த போட்டியாக நடாத்தப்பட்டு தரமான நாடகப் பிரதிகள் தேர்ந்து எடுக்கப்பட்டு பிரசுரிக்கப்படுகின்றது. பல்வேறு நாடகத் துறை சார் பெரியார்கள் இந்த முயற்சியில் தங்கள் பங்களிப்பை நல்கியுள்ளமைக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.
இலங்கைப் பாடசாலைகள் மட்டத்தில் முதன் முதலில் தமிழ் நாடகமன்றத்தை நிறுவி நாடகத்தமிழ் வளர்ச்சியில் அக்கறையுடன் செயற்பட்டவர்கள் றோயல் கல்லூரி மாணவர்கள். பல்வேறு பரிமாணங்களுடன் வளர்ச்சியடைந்த அம்மன்றம் தன் பல்துறை சார் செயற்பாடுகளோடு நாடகப் பிரதி எழுதல் போட்டியையும் நாடாத்தி இருப்பது பாராட்டுக்குரியது. அம்முயற்சிக்கு அயராது பாடுபடும் இவ் ஆண்டு நிருவாகக் குழுவினர்க்கும், பொறுப்பாசிரியர்கட்கும், குறிப்பாக பிரதான பொறுப்பாசிரியை திருமதி. சாந்தினி செல்வதாஸ் அவர்கட்கும் எனது வாழ்த்துக் களை தெரிவிக்கின்றேன்.
இந்நூல் வெளியீட்டுக்குப் பிரதமவிருந்தினராகக் கலந்து சிறப்பிக்கும் கொடைவள்ளல் கெளரவ ஹாசிம் ஒமர் அவர்களின் வருகை எமக்குப் பெருமை சேர்க்கின்றது. தனது பல்துறை வேலைப்பளுக்களின் மத்தியிலும் எமது எதிர்கால சந்ததியினரின் முன்னேற்றத்தில் நாட்டம் காட்டி எம்மோடு தனது பெறுமதி மிக்க நேரத்தை செலவிடும் இப் பெரியாருக்கு எமது உள்ளம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்.
உங்கள் கைகளில் தவழும் தமிழ் நாடக பிரதியாக்கம் தொடர்பான இந் நூல் பாடசாலை மட்டத்தில் மாணவர்களின் பண்புசார் நடத்தைக் கோலங்களிலும் விழுமியத்திலும் பாரிய தாக்கத்தை தரக்கூடிய வகையில் மேடை நாடகங்களுக்குப் பொருத்தமான உத்திகளுடன் வெளிவந்துள்ளது. இப் பாரிய முயற்சி பாராட்டுக் குரியது. எதிர்காலத்திலும், மன்றத்தின் இத்தகைய பணி மேலும் பல்துறை ஆளுமையுடன் வளர்ச்சியடைய இறையாசி வேண்டுகின்றேன்.

Page 9
அணிந்துரை
உங்கள் பார்வைகளுக்காக எனது பார்வைகள்?
கொழும்பு றோயல் கல்லூரியின் தமிழ் நாடக மன்றம், நாடகப் பிரதியாக்கப் போட்டியொன்றை நடாத்தி, அதிலே சிறந்த பிரதிகளைத் தெரிவு செய்து பணப்பரிசில் களும் சான்றிதழ்களும் வழங்குவதோடு, சிறந்த பிரதியாக்கங்களை உள்ளடக்கிய நாடக நூலொன்றையும் வெளியிடவிருப்பதை பத்திரிகையில் பார்த்தபோது என் உள்ளத்து ஊமைக் காயங்களுக்கு ஒத்தடம் கொடுப்பதுபோல் இருந்தது.
ஏனெனில், ஈழத்து தமிழ்நாடக அரங்கில் தரமான நாடகப் பிரதிகளுக்கு அன்றும் இன்றும் தட்டுப்பாடு. இத்தட்டுப்பாட்டை போக்க முனைந்த கல்லூரியின் இளங்கலைஞர்களின் உச்சி முகருவதில் உள்ளம் பூரிக்கின்றேன்.
அந்தப் பிரதிகளில் இருந்து குறிப்பிட்ட சில பிரதிகளை என்னிடம் தந்து அவற்றில் சிறப்பான பிரதிகளை தெரிவுசெய்யும் பொறுப்பையும் கொடுத்து வெளியிடப் படவிருக்கும் நாடக நூலுக்கான அணிந்துரையையும் எழுதுமாறு கேட்டபோது மெளனங்களாலேயே மகிழ்ச்சி மாளிகை கட்டிக்கொண்டேன்.
ஒருவித மரியாதையுடன் அணிந்துரை அளிக்க இசைவுதந்து பிரதிகளைப் பெற்றுக் கொண்டேன். என் ஆற்றல்களுக்கு கெளரவம் கொடுத்த றோயல் கல்லூரிக்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டிய கடப்பாடு எனக்கு உண்டல்லவா? அந்த வாய்ப்பை வழங்கிய வித்தக விரல்களை முத்தமிடுகிறேன்.
இருப்பினும் என் உள்ளத்துக்குள் ஒரு கிலேசம். என் பார்வைக்கு வந்த பிரதிகள் என்னுள் பாதிப்புக்கள் எதையும் ஏற்படுத்தாவிட்டால் எப்படி அணிந்துரை எழுதுவது? ஒப்புக்கு எழுதுவதே பாதிப்பு ஏற்படாத காரணத்தினால் என்பது ஒப்பனை இல்லா சங்கதி. என்னுள் எப்போதும் கூடுகட்டிக் கொள்வது இந்தக் கூறுகள்தான்!
விமர்சித்து எழுதுவதோ, விலாசித்தள்ளுவதோ கலையோடு எனக்குள்ள சுயதர்மத்துக்கு உடன்படாதவை. எனினும் புதிய படைப்பாளிகளை ஊக்குவிப்பதற்காக இவ்வாறு எழுதுவது பயன்தரலாம் என உள்மனது பக்கமேளம் வாசிக்கிறது. முழுமூச்சோடு மொத்தப் பிரதிகளையும் வாசித்து முடிக்கிறேன். என்னுள் கட்டுக் கடங்காத ஆவேசம். அது கோபாவேசமா? தர்மாவேசமா? எனக்கே புரியவில்லை.
ஆனால் ஒன்றுமட்டும் புரிந்தது! சினிமாவையும், சின்னத்திரையையும் இனியும் சிறைப்பிடிக்காமல் இருக்கக்கூடாது. அவைகள் இரண்டினதும் தாக்கமும், பாதிப்புமே பிரதியாக்கங்களில் ஆழப்பதிந்துள்ளதை அவதானிக்க முடிகிறது. சினிமா சின்னத் திரையின் ஆதிக்கத்தில் இருந்து விடுவிக்காமல் போனால் நெருப்புக்கும் காய்ச்சல் வருவது காலத்தின் கட்டாயமாகிவிடும்.
மனித சிந்தனைகளின் வளர்ச்சி புதிய சிந்தனைகளையும், கண்டுப்பிடிப்புக் களையும் அடிப்படையாகக் கொண்டே நிற்கிறது. இதனை உணர்ந்து கொண்டு, கட்டுப்பாடுகளையும் மீறி சிலர் எழுதுகிறார்கள், சிலர், எழுந்து வருகின்றார்கள்.
 

இளங்கோவின் துறவு இலக்கிய நயமிக்க நாடகம். ஆடற்கணிகை மாதவியின் அந்தரங்கம் புனிதமானது என்பதை அழகாய் சித்தரித்துள்ளது. கண்ணகிக்கு மட்டுமல்ல, மாதவிக்கும் கோவில் கட்டலாம் என்பதற்கு நாடகாசிரியரின் ஆய்வு நல்லதொரு சான்று.
“காட்டில் ஒரு களியாட்டம்’ என்ற சிறுவர் நாடகமும் ஒரு சீரிய சிந்தனைதான். இளஞ்சந்ததியினரால் சிறந்த சிறுவர் நாடகங்களை படைக்க முடியும் என்பதற்கு இந்நாடகம் கட்டியம் கூறுகிறது.
இருபது ரூபா நோட்டு ஒரு குறுநாடகத்திற்கான அடித்தளம் இட்டுள்ளது. நாடக வடிவம் செம்மைப்படுத்தப்படின் பூரணத்துவம் பெறும் என்பது நிச்சயம்.
பெரும்பாலான நாடகங்களில் கருப்பொருள் கணதியாக இல்லை. சில நாடகங்களில் கருப்பொருளே இல்லை. ஒரு கரு உருவாவது எப்படி? உருவாக்குவது எப்படி? என்ற அடிப்படை ஞானம் கூட சிலருக்கு இல்லை. வாழ்க்கையின் உண்மை - அந்த உண்மையில் ஒளித்திருக்கும் பொய்மையை - இந்த வாழ்க்கையின் பொய்மையை - இந்தப் பொய்மையில் மறைந்து இருக்கும் மெய்மையை, அந்த ஒளியையும் இருட்டையும் காட்டக்கூடிய அமைப்பே நாடகம் என்பதை ஒவ்வொரு நாடகாசிரியனும் உணர்வு பூர்வமாக உள்வாங்கி இருத்தல் அவசியம்.
ஏனெனில், கல்வியைப் பயிற்றுவிப்பதிலும் நாடகம் இன்று சாதனை படைக்கிறது. இதனால் நவீன நாடகத்தின் வலிமை கூடியிருக்கிறது. அதன் காரணமாக ஒரு நாடக பிரதியாளன் பாரிய பொறுப்புகளுக்குப் பாத்திரவாளியாகி இருக்கிறான்.
ஒரு கருவுக்கு நாடக வடிவம் கொடுக்கும்போது, அல்லது ஆற்றுகைப்படுத்தும் போது கவனத்திற் கொள்ள வேண்டிய சில அடிப்படை விஷயங்கள் உண்டு. நாடக வடிவம் பற்றிய அறிவும், தெளிவும் நம்மில் இன்னும் பலருக்கு இல்லை. ஏனோ அதைத் தெரிந்து கொள்வதற்கும் முற்படுவதில்லை.
ஒரு நாடகம் ஆரம்பம் - மத்திமம் - முடிவு என்ற மூன்று நிலைகளை கொண்டிருத்தல் வேண்டும். முதல் நிலையில் பாத்திர வார்ப்பை (Character) புலப்படுத்தும் முரணும் (Conflict) தொடக்கமும் இருத்தல் வேண்டும். இரண்டாம் நிலையில் முரண்பாட்டின் வளர்ச்சியும், பிரச்சினைகளின் அல்லது சிக்கல்களின் உச்சமும் (Climax) அமைந்திருக்க வேண்டும்.
முடிவு அல்லது இறுதிநிலை பிரச்சினைகளின் வீழ்ச்சியும் அல்லது சிக்கல்களின் விடுவிப்பும், முடிவும் கொண்டிருக்கும். இதுவே கதைக் கோப்பு (PLOT) எனப்படும். கதைக்கோப்பில் நிகழ்வுகள் அல்லது சம்பவங்கள் யாவும் ஒன்றுக்கொன்று சங்கிலிக் கோர்வையைப் போன்று தொடர்புடையதாக அமைந்திருக்கும். கருவும், கதைக்கோப்பும் நன்கு அமையப்பெறின் நாடகம் சிறப்பெய்தும்.
கருப்பொருள் (Theme) மக்களுக்குப் பயன்படும் சீரிய கருத்துக்களோடும், அக்கருத்துக்கள் சமகால வாழ்வின் உணர்வு பூர்வமான சிந்தனையுடன் மனிதப் பண்பையும் - சமுதாயத்தையும் உயர்த்துவதாகவும் அமைதல் முக்கியமானதாகும். அத்தகைய ஆற்றுகைகள்தான் கலைப்பொலிவெய்தி, காணுதரையும் களிப்புறச் செய்து, மனித மனங்களையும் பண்படுத்தும் என்பதிலே ஐயம் கிஞ்சித்தும் இல்லை.

Page 10
கோவணம் கட்டிய பக்கிரிகள் கற்பனையில் கட்டும் கோட்டையை விட யதார்த்தமான குடிசைகள் மேலானதல்லவா?
இன்னும் ஒரு விஷயத்தையும் இங்கு நான் சுட்டிக்காட்ட வேண்டியது அவசியம். 'நாடகப் பிரதி எழுதும் போட்டி' - நிபந்தனைகளில் நாடகப் பிரதிகள் எத்துறை சார்த்ததாகவும் இருக்கலாம் எனவும் - 12 பாத்திரங்களுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் எனவும் - 25-30 நிமிடங்களுக்குள் நடிக்கக் கூடியதாக இருத்தல் வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்விதிகளிளாலே போட்டியாளர்களுக்கும் மயக்கம். எனக்கும் மயக்கம். ஏனெனில் இப்போது இரண்டுவகையான நாடகங்களே உள்ளன. ஒன்று பாரம்பரிய அல்லது மரபு வழி நாடகம் மற்றது நவீன நாடகம். மரபுவழி நாடகங்களில் வடமோடி, தென்மோடி, காமன்கூத்து, இசை நாடகம், தாளலய நாடகம், தென்பாங்குக் கூத்து போன்ற இன்னபிறவும் அடங்கும்.
நவீன நாடகத்தில், முழுநீள நாடகம் (யதார்த்த இயற்பண்பு வாத நாடகங்கள்), குறு நாடகம், சிறுவர் நாடகம், மொழிபெயர்ப்பு நாடகம், தழுவலாக்க நாடகம் போன்றவை அடங்கும். போட்டி விதிகளின்படிநவீன நாடகங்கள்தான் கோரப்படுகின்றன என்றால், 30 நிமிடங்களுக்குள் முழுநீள நாடகம் அமையாது. குறு நாடகம் எனில் ஆறு பாத்திரங்களுக்கு மேற்படக் கூடாது. சிறுவர் நாடகம் என்றால் 20 பேர்களுக்கு கூடுதலாகவும் பங்கு பற்றலாம். அந்த வகையில் போட்டி நிபந்தனைகளின்படி நவீன நாடக பிரதியாக்கம் ஒரு கேள்விக்குறியாக அமைகிறது. இனிவரும் போட்டிகளில் இதனைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வது நன்மை பயக்கும் எனக் கருதுகிறேன். எது ஒன்றை செய்யும் போதும் துவக்கத்தில் சிறு சிறு தவறுகள் நிகழ்வது சகஜம் தான்.
எப்படியோ நிரந்தர வசந்தத்தின் நித்தியவருகைக்கு றோயல் கல்லூரியின் தமிழ் நாடக மன்றம் வழி அமைத்திருக்கிறது. இதற்குத் துணை நின்ற நாடக மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.
எமது சமூக நலன் கருதி கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களின் மேம்பாட் டுக்கான செயற்றிட்டங்களை பொறுப்புடனும், பொறுமையுடன் முன்னெடுத்து வரும் பொறுப்பாசிரியை திருமதி சாந்தினி செல்வதாஸ் அவர்களுக்கு என் வாழ்த்துக்களும் வணக்கங்களும்!
உங்கள் பார்வைகளுக்காக எனது பார்வைகளை பதிவு செய்துள்ளேன் நாளைய நாடகத் தலைமுறைக்கு - இது நல்லதோர் ஆவணமாக விளங்கக் கூடும்
நன்றி
கலா வித்தகர் கலைஞர் கலைச்செல்வன்

Senior Games Master
Mr. M.T.A. RAUF
It is with great pleasure I pen down this message for the Book Nagal, published by the Tamil Dramatic Society for the first time.
The Club has been on the path of nurturing drama skills which are useful to develop the emotional characteristics and a peaceful mind among Royalists and other Students for more than 50 years.
And I'm happy and appreciate their new idea to combine the best scripts and release it as a book which would make the students to improve their techniques in script writing.
I must express my gratitude to the Teachers-in-Charge and organizing committee of the Tamil Dramatic Society and others who gave their whole hearted support to publish this book.
I wish them success in their future endeavors.

Page 11
Senior Games Master Mr. Sudath Liyanagunawardena
It is with aheap of warm wishes Ipen these words to the script book Nagal which is published by the royal college Tamil dramatic society. The club has come a long way since 1960 and achieved many goals such as finding the hidden talents of students, training them well and giving them a godplatform to perform their talents.
This book contains a collection of well-written scripts of playwrights from all over the country. I appreciate this innovative idea and express my gratitude to the teachers-in-charge, office bearers and the students of the Tamil dramatic society for their innovative idea of publishing such a book.
Let me conclude by wishing them all the success in this event and future endeavors too.
 

ஆசியுரை தரும் தமிழ்நாடக மன்ற பொறுப்பாசிரியர்கள்
மனிதனுடன் மனிதன் நேரடியாக உறவாடும் கலை நாடக கலை. ஏனைய கலைகளை விட இது இயங்குகின்ற நிலையில் எப்போதுமுள்ள கலையாகும். புரதான மனிதர் வேட்டையாடி வாழ்ந்தனர். வேட்டைக்குப் போகும் முன்னர் இப்புராதன மனிதர் ஒரு நடனத்தை நிகழ்த்தினர். சிலர் வேட்டையாடுபவர்களாகவும் சிலர் வேட்டை யாடும் மிருகங்களாகவும் ஒப்பனை செய்து, வேட்டையாடுதலை அபிநயித்தனர். காலப்போக்கில் இவ் அபிநயம் சில அசைவுகளையும் நிலைகளையும் பெற்று ஓர் ஒழுங்கமைப்பாகி இதனடியாக நாடகம் தோற்றம் பெற்றது.
இன்றைய காலகட்டத்தில் இலங்கையில் தமிழ் நாடகத்தின் வளர்ச்சியானது குறிப்பிட்டுக் கூறுமளவிற்கு இல்லாதிருப்பது கவலைக்குரிய விடயமாகவே இருக்கின்றது. அதிலும் குறிப்பாக கொழும்பில் தமிழ் நாடகமானது நலிவடைந்து கொண்டே செல்கின்றது எனலாம்.
அந்தவகையில் றோயல் கல்லூரியின் தமிழ் நாடக மன்றத்தினால் முன்னெடுக் கப்பட்டு வரும் நாடக முயற்சிகள் வரவேற்கத்தக்கவை. அம் முயற்சியின் வெளிப் பாடுகளில் ஒன்றாக வெளிவரும் இந்நூலின் வருகை பாராட்டிற்குரியதாகும். மேலும் இம் முயற்சிகள் யாவும் பயனுள்ளதாகவும் சிறப்பானதாகவும் அமைய வேண்டும் என வாழ்த்துகிறேன்.
திருமதி.கே.ஜெயசிங்கம் ஆசிரியை, றோயல் கல்லுரி
றோயல் கல்லூரியின் தமிழ் நாடக மன்றமானது இவ்வாண்டில் தனது புதிய பரி மாணத்தை வெளிப்படுத்தி தீவு பூராகவுமுள்ள நாடக எழுத்தாளர்களிடமிருந்து பெறப்பட நாடகமுத்துக்களில் சிலவற்றை தொடுத்து மாலையாக்கி நாடக கலைத் தாய்க்கு அணியாக சூட்டியுள்ளார்கள். இவ் அணிகலன் பெறுமதி மிக்க பொக்கிஷமாக நாடக உலகம் போற்றும் என்பதில் ஐயமில்லை. இப்பணிக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து உள்ளங்களுக்கும் இதனை முன்னின்று செயற்படுத்திய எமது மன்ற பொறுப்பாசிரியை திருமதி. சாந்தினி செல்வதாஸ் அவர்கட்கும் எமது மனமார்ந்த நன்றிகள். இப்பணி தொடர இறைவனதும் வாசகர்களினதும் கலைஞர்களினதும் ஒத்துழைப்பு கிடைக்க அன்புடன் வேண்டுகிறேன்.
கு. பூநீராகவராஜன் ஆசிரியர், றோயல் கல்லுரி

Page 12
Xviii
நகல்’ என்னும் இந்நாடகப்பிரதி புகழ் என்னும் உச்சியைத் தொடும் என்பதில் ஐயமில்லை, தமிழ் இலக்கிய உலகில் நாடகத்துறைக்கு ஏற்பட்ட வறட்சியை போக்கி றோயல் கல்லுரி நாடக மன்றத்தால் அண்மையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் செயற்பாடுகள் வாடிய பயிருக்கு வான் மழை போல் இருக்கிறது என்பதை கலையுலகம் ஏற்றுகொண்டிருக்கிறது. மாணவர்கள் மத்தியில் தனது செயற்பாட்டை முடக்கிக்கொள்ளாமல் விரிவுபடுத்தி தனது செயற்பாட்டை தொடரும் தமிழ் நாடகமன்றத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். வளர்க நாடகம். மலர்க தமிழ் நாடக உலகம்.
திரு. எம். பிரசாந்தன் ஆசிரியர், றோயல் கல்லூரி
முத்தமிழ் கலைத்தாயின் தாகம் தீர்க்க வந்த புதிய வரவான நகல்’ நாடக நூலிற்கு ஆசியுரை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன். றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றமானது இச்சேவையை செய்ய முன்வந்ததையிட்டு பொறுப்பாசிரியர் என்ற வகையில் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறேன்.
- திருமதி.வி.யோகேஸ்வரி ஆசிரியை, றோயல் கல்லூரி
நவரசங்களை தரும் நாடகத்திற்கு புதிய வரவான நகல்’ நாடக நூலானது நாடகத் துறைக்கு ஒரு மைல்கல்லாக அமைகின்றது. கொழும்பு றோயல் கல்லூரி தமிழ் நாடகமன்றமானது இதனை முன்னெடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. நாடகக் கலையானது களிப்பூட்டுவதற்காக மட்டுமல்லாது அறிவூட்டலுக்கும் உதவும் என்பது அனுபவபூர்வமாக அறிந்த உண்மை. இந் நாடகக் கலைத்தாய்க்கு மேலும் ஒரு புதிய வரவாக அமையும் நகலுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- திரு. ஹாயிஸ் ஆசிரியர், றோயல் கல்லூரி
நாடகம் ஒரு கற்பித்தல் ஊடகம் என்பது கல்வியியலாளர்களால் ஏற்றுக் கொள்ளப் பட்ட உண்மை. அதனை முறைப்படி பாடசாலைகளில் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக கொழும்பு றோயல் கல்லூரி தமிழ்நாடகமன்ற பாடசாலை மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட இந்நாடக நூல் வெளியீடானது வரவேற்கத்தக்கது. இந் நகலுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
- திரு. ஆ. சண்முகராஜா ஆசிரியர், றோயல் கல்லூரி

இதழாசிரியர்களிடமிருந்து.
தமிழ் கலைத் தாய்க்கு புதிய வரவாக அறிமுகப்படுத்தும் றோயல் கல்லூரி தமிழ்நாடக மன்றத்தின் முயற்சியான நகல் மலரினூடாக உங்களை சந்திக்கின்றோம்.
றோயல் கல்லூரி தமிழ்நாடக மன்றமானது ஐம்பத்து இரண்டாவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் இவ்வேளையில் ‘நவரசம்’ எனும் நூலை வருடா வருடம் வெளியிட்டு வருகின்றமை யாவரும் அறிந்ததே. இவ்வருடம் கன்னி முயற்சியாக எமது பாடசாலை மாணவர் நலன் கருதியும், சமூகத்தின் தேவை கருதியும் இளம் சமுதாயத்தினரிடையே நாடக திறன்களை வளர்க்கும் பொருட்டும் தெரிவுசெய்யப் பட்ட நாடகங்களை தொகுத்து நகல்’ நாடகத்தொகுப்பினை உங்கள் கரங்களில் ஒப்படைத்துள்ளோம்.
அகில இலங்கை ரீதியாக நாடக எழுத்தாளர்களிடமிருந்து பெறப்பட்டவற்றி லிருந்து தெரிவுசெய்யப்பட்ட நாடகப் பிரதிகளையே தொகுத்து வெளியிட்டுள்ளோம். இப்பிரதிகள் எதிர்வரும் காலங்களில் நாடகங்களாக மேடையேற்றப்படும் என்பதில் ஐயமில்லை. இதன் மூலம் அடுத்த தலைமுறையினருக்கு ஓர் அடையாளத்தை ஆவணமாக்கியுள்ளோம். றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றம் இதனை வெளி யிடுவதால் இதழாசிரியர்கள் என்ற வகையில் நாம் பெருமிதம் அடைகின்றோம். இம்முயற்சிக்கு உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி கூறி விடை பெறுகின்றோம்.
த.கிஷாதனன், அ.ஜோன்போல்

Page 13
மன்றத்தலைவரிடமிருந்து.
றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றமானது செயற்படுத்தி வரும் செயற்பாடுகள் பல. அவற்றில் இவ் வருடம் எமது இளம் சமுதாயத்தினருக்காக நாடக நூல் ஒன்றை வெளியிடும் நோக்கில் நாடகக் கலைஞர்களிடமிருந்து பெறப்பட்ட நாடகப் பிரதிகளை தெரிவு செய்து தொகுத்து வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.
இந்நூலானது நகல்’ எனும் பெயருடன் வெளிவருகின்றது. இந் நாடகப் பிரதி நூலானது எமது கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமல்லாது ஏனையோர்க்கும் பயன்பட வேண்டும் என்பதே எமது விருப்பமாகும். இதற்காக என்னோடு தோள் நின்ற மன்ற உறுப்பினர்கள், மற்றும் உதவியும் ஆதரவும் தந்த அதிபர், ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
ஜே. அருஷன்
செயலாளர்களிடமிருந்து.
‘நகல்’ எனும் நாடக நூல் ஒன்றை வெளியிடவேண்டும் என்ற எமது உயர்ந்த நோக்கத்தை செயல்வடிவில் இவ் வருடம் உயிர் கொடுத்துள்ளோம். இதற்கு எமக்கு உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும் இந் நாடகப்பிரதி நூலானது எமது மாணவர்களுக்கு புதிய நவீன நாடகங்களை மேடையேற்ற உதவுவதோடு, சிறந்த நாடகங்கள் வெளிவர வேண்டும் என்ற நோக்கத்தையும் ஈடு செய்கிறது. இது போன்ற நூல்கள் இன்னும் வெளிவர, றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றமானது மேலும் பல முயற்சிகளை முன்னெடுக்கவேண்டும் என விரும்புகின்றோம்.
ஆர். அனந்தன், ஆர். ஹரேஷ்
 
 

OFFICE BEARES
PRESIDENT
Mr. H. A.U. Gunasekera
SENIORVICE PRESIDENT SENIOR SECRETARY
VICE PRESIDENT
Mr. B. Shanmugarajah, Mrs. V. Ellayathamby Mr. R. M. Hayees, Mr. S. Manoharan, Mrs. K. Srikanthan, Mr. G. Sri Ragavarajan, Mr. M. Prashanthan, Mrs. V. Ypgeshwary
CHARMAN
J. Arushan
SECRETARES TREASURERS
R. Ananthan M. I. S. Rahuman
R. Haresh V. Pavithran
EDITORS
M. S. Shiab, M. Infaaz Iqbal, T. Krishathanan, A. John Paul

Page 14
(10ļļpā) uBueųļeųSIX L'(IOļļp3)|ned ueųOT 'W'(|0||p5) |eqb|Zeeļu|'W'(|0||p5) qeųļųS ‘W’S’W:(HT) 9NIQNWIS SLLLLLLLS LLLLLLL LL SLLLLL00LS LLLLLLLL SLLLLCLL0S LLLLLLLSLLLL0000S LLLLLSLLLLLLS LLLLLLLLLSLS LLL
 

பொருளடக்கம்
வாழ்த்துரைகளும் அணிந்துரையும்
நாடகப் போட்டி தெரிவுக்குழுவால் தெரிவு செய்யப்பட்ட போட்டி நாடக நகல்கள்
இருபது ரூபாய் நோட்டு - செ. அம்பலவாணர் ஒரு பின்னம் முழுமையடைகிறது - பாத்திமா சுமையா ஜலால்தின் காட்டில் ஒரு களியாட்டம் - கனக மகேந்திரா இளங்கோவின் துறவு - சுப்பிரமணியம் சிவலிங்கம் மன்னிப்போம் மறப்போம் - ல.அமலானந்தகுமார் நோன்பு - ராஷிதா மொஹமட் இர்ஷாத் சிகரங்களாகும் மனிதங்கள் - யோகா யோகேந்திரன் தீர்ப்பு - செ. அம்பலவாணர் கருவறையிலிருந்து - கந்தையா பூரீ கந்தவேள் அழிவினைத்தேடும் உலகம் - இளையதம்பி குகநாதன் அகல் விளக்கு - கி.அஸ்வினி உறவுகள் - ச. ஹர்ச்சனா இருளினை நீக்கி - எஸ்.ரி.குமரன்
இளம் கலைஞர்களை ஊக்கிவிக்கும் முகமாக தெரிவு செய்யப்பட்ட நாடக நகல்கள்
தேனீ - ரா. ராதிகா
வரக்கூடாத வறுமை - கி. கிருஷ்ணபிரசாத் வினைப்பயன் - அனுராத பாக்கியராஜா இருகோடுகள் - வி. விஜகுமார்
உறவுகள் - த. திரேசா
விடியலின் வெளிச்சம் - முகமது நிஹார் பாத்திமா சாஜிதா சிதறிய சிப்பி - ஆரோக்கியம் எட்வேட் விதி - மொ.அ.பாத்திமா அம்ரா தி புட்டிப்பால் - கனக மகேந்திரா
என்றென்றும் நன்றிகள்.
vii-xx
17
31
38
57
68
75
84
101
112
118
127
137
144
150
156
170
181
190
202
211
22O
230

Page 15

இருபது ரூபா நோட்டு
(மேடை நாடகம்)
பிரதியாக்கம் மறவன்புலோ செல்லம் அம்பலவாணர்
பாத்திரங்கள்
1. மோகன் - அரசஉத்தியோகத்தர் 2. தயா - மோகனின் மனைவி 3. இராசம்மா - கிழவி
4. செந்தில் - மோகனின் நண்பன் 5. விக்னேஸ் - மோகனின் மகன் 6. லொத்தர் சீட்டு விற்பவர் - கொழும்பு சிங்களம் 7. லொத்தர் சீட்டு விற்பவர் - வவனியா முஸ்லிம் 8. லொத்தர் சீட்டு விற்பவர் - யாழ்ப்பாணம் தமிழ்
காட்சி: 1
இடம் மோகனின் வீடு
பாத்திரங்கள் : மோகன், தயா, இராசம்மா, விக்னேஸ்
(அதிகாலை ஒலி ~கூடவே நாய் குரைக்கும் ஒலி)
வீட்டின் முன்புறம் தயா நிற்க திரை விலக திரையின் பின் இராசம்மா கூப்பிட விக்னேஸ் ஓடி வரல். இயலுமாயின் நாயும் வரலாம்.)
இராசம்மா
விக்னேஸ்
இராசம்மா
பிள்ளை. பிள்ளை. பிள்ளை தயா. இந்த நாயைப் புடிமோனை.
விடியக்காத்தாலை வலு வேகமாய் நிக்கிறார் போல.
அம்மா. அம்மா. இராசம்மா ஆச்சி கூப்பிடுறா. ஜிம்மி விடுகு
தில்லை.
ஓம் மோனை. விடியக்காத்தாலை வலு வேகமாய் நிக்கிறார்
போல. மாறிக்கீறிப் பல்லுப் போட்டாலும். ஒருக்கா உதைப் புடி மோனை.

Page 16
g5U JT
விக்னேஸ்
இராசம்மா
தயா
இராசம்மா
தயா
விக்னேஸ்
இராசம்மா
மோகன்
இராசம்மா
மோகன்
விக்னேஸ்
மோகன்
இராசம்மா
நகல்
ஓம் இராசம்மா மாமி. கொஞ்சம் பொறுங்கோ நான் வாறன் .
அது சஞ்சயன்ரை சொல்லுக் கேளாது. காத்தாலேல கட்டப் பிந்தினால் ஆள் கொஞ்சம் மோசம் தான்..நேத்து உவர் கந்தசாமியற்றை சேவலிலையும் வாயை வைச்சிட்டுது. கொஞ்சம் பொறுங்கோ, உவருக்கு (வந்து கொண்டு).டேய். ஜிம்மி. வா இஞ்சை. வா. உனக்கு. எடு தம்பி விக்னேஸ் எடுத்துவா அவற்றை சங்கிலியை.
பாருங்கோம்மா அவர் என்னைப் பாக்கிறதை. சங்கிலியை
கொண்டந்ததெண்டு கோவம் போல.. ஆ. நீங்கள் வாங்கோ ஆச்சி இனிப் பயமில்லை. ஆள். சங்கிலிக் கட்டிலை.
: மோனை நாயெண்டால் கடிக்கத்தானே வேணும். அப்பதானே
கள்ளன் காடன் வராமலிருப்பான்.
அதாலைதான் இராசம்மா மாமி. உதோட இந்தப்பாடு. இவரும் அடிக்கடி கொழும்பு வவுனியா எண்டு வெளியூர் போய் வாறவர்
அப்ப ஜிம்மி தானே வீட்டுக்கு உதவி. ஒரு பிள்ளை மாதிரி.
ஓம் தயா அதுவும் நல்லதுக்குத் தானே. பிள்ளை
தம்பி ஆச்சிக்கு உந்த வெத்திலைத் தடடை எடுத்துக்
குடுமோனை ஓமம்மா. ரெண்டு பொயிலைக் காம்பும் கொண்டு வா மோனை.
(வந்து கொண்டு) ஆ.ஆ. இராசம்மா மாமியே. இருங்கோ.
ஏனப்பா தயா. மாமிக்குத் தேத்தண்ணியைக் குடுமனப்பா. விடியக்காத்தைலை வெத்திலைத் தட்டை.
சரி அப்ப கொஞ்சமாய் தேத்தண்ணியைத் தா பிள்ளை. சீனி
எப்பனாப் போட்டு.
; எப்பிடி மாமி. இப்ப கால் என்ன மாதிரி. அண்டைக்கு கைதடி
ஆயுள் வேதத்துக்குப் போனதாய் தயா சொன்னா.
: (வெத்திலைத் தட்டைக் கொணர்ந்து) இந்தாங்கோ ஆச்சி.
உதிலை வை தம்பி. ஆச்சி தேத்தண்ணியைக் குடிச்சிட்டுச்
சப்பட்டுமன். .அங்கை ஆயுள் வேதத்திலை என்ன சொன்னவை ஆச்சி
ஓம் மோனை. அது வந்து, வயது போன நேரம்.வாதக்குணம்
போல . அந்த ஆயுள்வேத எண்ணெயப் பூசினா படுக்கையெண்டு கிடவாமல் ஏதோ இயங்கலாம். ம்..ம்.இனியென்ன காடு வா வா எண்டுது.ஏதோ. அதுகளும் தாய்தேப்பனைத் திண்டிட்டிருக்கு

தயா
விக்னேஸ்
இராசம்மா
தயா
இராசம்மா
விக்னேஸ்
இராசம்மா
விக்னேஸ்
தயா
இராசம்மா
இருபது ரூபா நோட்டு S
துகள். அதுகள் தாங்களாய்ப் புல்லுப்பிடிக்கும் மட்டுமெண்டாலும் இந்தக்கட்டை ஊடாடித் திரிய வேணும்.
(வந்து கொண்டு) காடு ஆரைத்தான் வரவேண்டாமெண்டுது.
குருத்தோடையே எத்தினையள் சரியுது. எல்லாம் கலிகாலம். அதுவாற நேரம்வரட்டும். இந்தாங்கோ தேத்தண்ணியைக் குடியுங்கோ. விக்னேஸ்! உந்த வெத்திலைத்தட்டத்தை இதிலை கொண்டு வா. பொயிலைக் காம்பு பெத்தாச்சியின்ரை பாய்ச் சுத்துக்கை கிடக்கும்.
ஓமம்மா. கொண்டு வாறன்.
பிள்ளை உவர் . தம்பி மோகன் எப்ப கொழும்புக்குப் போறார்
பிள்ளை
ஏன் மாமி நீங்களும் போகப் போறியளே. என்ன திடீரெண்டு.
ஏன் ஏதும் விசேசமே.
எனக்கார் கொழும்பிலை இருக்கிறாங்கள்? எனக்கென்ன விசேசம்.
(பதிந்து) இல்லைப்பிள்ளை .. வந்து. தம்பியிட்டை சொல்லி ஒரு சாமான் அங்கை கொழும்பிலை வாங்குவ மெண்டு பாத்தன். அததான் கேட்டன்.
என்ன ஆச்சி அப்பிடி. இப்பதான் எல்லாம் யாழ்ப்பாணத்
திலையும் கிடைக்குதே. இன்னும் சிலது அங்கத்தையிலையும் இஞ்சை மலிவு. அது தெரியுமே உங்களுக்கு.
ஓம் மோனை. அது சரிதானடா. ஆனால் இஞ்சை வாங்கிறதுக்கு
விழாதாம். கொழும்பான் எண்டால் கட்டாயம் விழுமாம். அது தான் ஒருக்காப் பாப்ப மெண்டு நினைச்சன்
என்ன ஆச்சி அப்பிடி. கொழும்பு விழும் யாழ்ப்பாணம் விழாது.
விளங்கத்தான் சொல்லுங்கோவன். அம்மா உங்களுக்கத் தெரியுமே.
(ஏளனமாக) எனக்கோ உனக்கடா. நான்தான் வாய்ச்சன். ஊர்
சுத்துற உனக்குத் தெரியாது. இஞ்சை அடுப்படியே தஞ்சமெண்டு கிடக்கிற என்னைத்தான் கேள் ஒ.
: இதுக்கேன் தாயும் மோனும் புடுங்குப் படுறியள். அது அது.
லொத்தர் ரிக்கெற்று ராசா. ஓம் மோனை.அது வந்து இஞ்சை யாழ்ப்பாணத்திலை வாங்கிறதுக்கு விழாதாம். அப்பிடி விழுந்தாலும் ஒரு நூறு ஆயிரம் தானாம் விழும். கொழும்பிலை வாங்கிறதுக் கொண்டால் கட்டாயம் லச்சமெல்லாம் விழுமாம். கன பேருக்கு விழுந்துமிருக்காம். உங்கை ரிவியிலை காட்டு றாங்கள்.

Page 17
விக்னேஸ்,தயா !
விக்னேஸ்
இராசம்மா
தயா
விக்னேஸ்
மோகன்
இராசம்மா
மோகன்
நகல்
(இருவரும் சிரித்தல்) .எட உதுவே சங்கதி
எட எனக்கு இண்டைக்குத்தானே இது தெரியும். ஆனால் உது
பொய்க்கதை ஆச்சி. நாங்கள் வகுப்பிலை நிகழ்தகவு எண்டொரு பாடம் படிச்சனாங்கள். அதிலை மாஸ்டர் சொல்லித் தந்தவர் விக்கிற ரிக்கெற்றின்ரை தொகையும் பரிசு கிடைக்க ஒரு காரணியே தவிர. வேறொண்டுமில்லை. ஆங்கை கூட விக்கினம் விழு குது. இழுக்கேக்கை யாழ்ப்பாணம் கொழும்பு என்னண்டு பாக்கிறது. யாழ்ப்பாண ரிக்கற்றும் கொழும்பு ரிக்கற்றும் பொய்க் கதை. நீங்களே சொல்லுங்கோ பாப்பம்.
உண்மைதான் தம்பி. ஆனால் விழேலையே. அதுதான் ஒருக்கால்
கொழும்பிலை ஒண்டை வாங்கி பாப்பமெண்டு.
! நீயும் உன்ரை நிகழ்தகவும். உன்ரை மற்ஸ் மாஸ்டர் சொன்னாக்
கிடக்கட்டும். ஒருமனிசர் கேட்டால் ஏலுமெண்டால், விருப்ப மெண்டால் செய்து குடுங்கோ. அதை விட்டிட்டு அது இது எண்டு ஏன் தேவையில்லாத வியாக்கியானங்கள்.
இல்லையம்மா தவறைத் தவறெண்டு சொல்லத்தானே வேணும்.
தெரிஞ்சு கொண்டு சொல்லாமல் விட்டால் அதுதான் தான் பிழையம்மா
(வந்து கொண்டு) ம். ம். உங்கள் ரெண்டு பேருக்கும் விடிஞ்சாப்
பொழுதுபடும் வரைக்கும் உதுதான் வேலை. அவா ஒண்டு சொல்ல அதுக்கு இவரொண்டு சொல்ல நல்ல சாடிக்கேற்ற மாதிரி மூடியும். பைத்தியங்கள் .
தாய் பிள்ளை எண்டா அப்பிடித் தானே இருக்கும் மோனை.
அதிலையும் ஆம்புளைப் பிள்ளை யெண்டா. அது தான் தம்பி வாழ்க்கை. தம்பி சொல்லிறன் எண்டு தப்பாய் எடாதை. மோனை. நானும். எத்தினையைக் கண்ணாலை கண்டன். (அழுது கொண்டு) ஏன் அதுகளின்ரை தாய் தேப்பனை கண்ணுக்கு முன்னாலை பறிகுடுத்து கிடங்கு கிண்டி தாக்கேக்கையே நான் பைத்தியமாய் மாறியிருக்க வேணும். நானும் அதுகளோடை போயிருக்க வேணும். ஏதோ அந்த மூண்டு குஞ்சுகளாலை தான் இண்டைக்கு உசிரோடை உலாவித்திரியிறன். (கண்ணைத் துடைத்து) தம்பி உள்ளதைச் சொன்னாலென்ன எங்கட வீட்டிலை உலை பொங்குதோ இல்லையோ. அந்தக்குஞ்சுகளாலை. எங்கட மனசில உவகைக்கு குறைவில்லைத் தம்பி.
அதை ஆர் மாமி இல்லையெண்டிறது. ஏதோ அப்பப்ப தெரியாதே.
சரி.சரி.கதையோடை கதையாய் நான் தான் இப்ப விணாய் பழசுகளைக் கிண்டிப்போட்டன். அதுகளை விடுங்கோ.அது சரி

விக்னேஸ்
இராசம்மா
தயா
இராசம்மா
விக்னேஸ்
இராசம்மா
இடம்
இருபது ரூபா நோட்டு 5
நீங்கள் வந்தது ஏன் எண்டு அறியாமலே எங்கையோ போட்டம் இராசம்மா மாமி. இருந்து கதைச்சுப் போட்டு எல்லாத்தையும் விபரமாய்ச் சொல்லுங்கோ தயாவிட்டை. நான் வரப் போறன்.
ஆச்சிக்கு கொழும்பிலை லொத்தர் ரிக்கற் வாங்கி வரவேணும்.
அப்பிடித் தானே எத்தினை வேணு மெண்டு சொல்லுங்கோ. வேறையொரு தரகர். அதுதான்.அம்மா தேவையில்லை நீங்கள் நிக்கேக்கையே விசயம் முடிஞ்சுது
அவன் வலு கெட்டிக்காரன் தான். உடனை புடிச்சிட்டான்
ம்..ம். கெட்டிக்காரனோடை பட்டாத்தான் தெரியும் மாமி. உவர்
நாளைக்கு இரவுதான் வெளிக்கிடுறார். அடுத்த சனிதான் திரும்புற எண்ணம். பிந்துமோ. பரவாயில்லைத்தானே.
இதென்ன நாள் நேரம் பாத்து அவசரமாய்ச் செய்யவேணுமே.
(பதிந்து) ஏதோ நாலு பேர் சொல்லுகினம் அங்கை எங்கடை ஆக்களுக்கும் விழுந்ததாம்.தம்பி மோகனும் கொழும்பு போறார் தானே எண்ணேக்கை ஒரு நப்பாசை அவளவுதான் தயா. இந்தா பிள்ளை இந்தா 20 ரூபாய்க் காசு இருக்கு. பவுத்திரம் . ஒரு ரிக்கற் காணும் . ஆனால் தம்பி குறை நினைக்காதையும் ரிக்கற் கொழும்பில தான் வேண்ட வேணும். (துடிப்புடன் நக்கலாக) அப்ப தான் விழும். யாழ்ப்பாணம் விழாது. கொழும்பு விழும் . புத்தம் புது 20ரூபா நோட்டு. அம்மா இருந்து பாருங்கோ இலட்சம் கொண்டு வரும். (போய்க் கொண்டு) டட்டணாங்.
தம்பியின்ரை வாய் பொன்வாயாய் அமையட்டும். நான் சக்கரை
போடுறனடா.
திரை en m> m m im m mm m»
காட்சி: 2
: மோகனின் வீடு
பாத்திரங்கள் : மோகன், தயா, விக்னேஸ், செந்தில்
(மோகன் பாக்குடன் பயணத்திற்க ஆயத்தமாகுதல். )
தயா
விக்னேஸ்
விக்னேஸ் இந்தா அப்பா வெளிக்கிட்டிட்டார் எங்கை ஆச்சி தந்த
காசு. கொண்டந்து குடு அப்பாட்டை.
(திரைக்குப் பின்) அம்மா. (தமிழில்) அன்னையே அந்த இலட்சம்
தரப்போகும் புத்தம் புதிய 20ரூபா நோட்டு எங்கேயோ

Page 18
தயா
மோகன்
விக்னேஸ்
தயா
மோகன்
விக்னேஸ்
மோகன்
செந்தில்
விக்னேஸ்
செந்தில்
மோகன்
நகல்
தலைமறைவாகி விட்டது. நான் என்னசெய்வேன். ஏது செய்வேன்.
; சும்மா பகிடியை விட்டிட்டு கொண்டந்து குடு.விக்னேஸ் சும்மாய்
காசோடை பகிடிவிடாதை
சும்மாய் விடப்பா. இராசம்மா மாமிக்கென்ன கொழும்பிலை
ஒரு லொத்தர் ரிக்கெற் அவளவு தானே. அது நான் வாங்கி வாரன். இப்ப அவனோடை ஏனப்பா பாயிறாய்
இல்லையப்பா அந்தக் கிழவி அதை எவ்வளவு பக்குவமாய்த்
தந்தது. ஏதோ ஒரு நம்பிக்கையிலை தந்தது. ஏனப்பா . இப்ப என்ன20ரூபாய் இல்லாமலே. கிழவி தந்ந காசிலையே கிழவிக்கு கொழும்பிலை ஒரு ரிக்கற் வாங்கி வாங்கோ. அது விழுந்துதோ இல்லையோ பரவாயில்லை. தம்பி கொண்டு வா அதை. நீ அதைக்குடு.தேவையெண்டால் வேறை புது 20ரூபாய் நோட்டு நான் தாறன்.
: அம்மா நீங்களும் ஆச்சி மாதிரி விழும் எண்டு சொல்லாமல்
பிறைஸ் கிடக்கும் அல்லாட்டி வெற்றி பெறும் எண்டு சொல்லுங்கோ. (பொய்க் கோபத்துடன்) பிறகு திருத்து. இப்ப காசைக் கொண்டு
6T.
பயணம் வெளிக்கிடுற நேரமாய் ஏனப்பா அவனோடைபுடுங்குப்
படுறாய் ஒரு 20ரூபாயுக்காக
(வந்து கொண்டு) அமைதி நிலவட்டும்.இந்தாருங்கள் அந்த
ஆச்சி தந்த லட்சம் தரும் அபூர்வ 20ரூபா நோட்டு ஜீ.பும்பா (மோட்டார் சைக்கிள் சத்தம்) இதோ செந்தில் மாமா வந்து விட்டார் தங்களை பஸ்நிலையம் அழைத்துச்செல்ல. (நாய் குலைத்தல்)
ஆ. ஆ. வா செந்தில் வா.
சரி மச்சான் போவமே.பயணம் போறது. கொஞ்சம் வேளைக்காய்
போறது எதுக்கும் நல்லது. என்னவாம் விக்னேஸ் ஏதோ கொழும்பு யாழ்ப்பாணமாம். அது என்ன கதை தம்பி
ஒண்டுமில்லைச் செந்தில் மாமா. யாழ்ப்பாணம் விழாது.
கொழும்பு விழும் புத்தம் புது 20ரூபா நோட்டு.
(சிரித்து) என்ன ராசம்மா ஆச்சியின்ரை கதையே. அதுக்கே
உந்தப்பாடு.
அப்ப உனக்கும் தெரியும் போலை.

செந்தில்
தயா
விக்னேஸ்
மோகன்
செந்தூரன்
மோகன்
செந்தில்
விக்னேஸ்
மோகன்
இருபது ரூபா நோட்டு 7
பாவமடா கிழவி பட்டினி கிடந்தெண்டாலும் கிழமைக்கு ஒரு
ரிக்கற் எடுக்காமல் விடாது.நாங்கள் டெயிலி பேப்பர் எடுக்கிறனாங்கள் தானே. அதாலை றிசல்ட் பாக்க வரும்.
எப்பவாவது விழுந்திருக்குதா. செந்தில்
அம்மா! விழுந்திருக்குதா இல்லை. பிறைஸ் கிடைச்சிருக்கா
அப்பிடிக் கேளம்மா. எத்தினை தரம் சொன்னாலும் கேளா. உதைத்தானே நாய்வாலை நிமித்த முடியாதெண்றது . உதுதான் எப்பவும் இஞ்சை நடக்கிறது செந்தில் . நாயும். வாலும்.
ஓம். எப்பவேனிருந்திட்டு ஒரு 100ஒ1000மோ கிடைச்சிருக்கு.
நான்தான் ரவுணிலை எடுத்துவந்து குடுக்கிறனான். ஆச்சி கேட்டா நான் தான் சொன்னனான் கொழும்பிலை எடுத்தால் சான்ஸ் கூட எண்டு .மற்றது நீயும் இந்தக் கிழமை போறாயெண்டு.
(சிரித்து) அப்ப நீதான் கொன்ஸல்ரன்ற் எண்டு சொல்லு.
எப்பிடியெண்டாலும் நீ சொல்லு. பாவமடா. எல்லாத்தையும்
இழந்து ஒரு ஆதரவும் இல்லாமல் தட்டந் தனியனாய் தாய் தேப்பனைப் பறிகுடுத்ததன்ரை மூண்டு பேரப்பிள்ளையளோடை மனிசி படிற பாட்டுக்கு எப்பவெண்டாலும் ஒரு நாள் கடவுள் கண் முழிப்பாரெண்டு கிழவிக்குமொரு நம்பிக்கை. நப்பாசை. பாவமடா. உனக்கேதேன் பாரமே.இல்லைத்தானே. பிறகென்ன. கொழும்பிலையே வாங்கி வந்திடு. கிழவி தந்த காசிலையே வாங்கு. உனக்குப் புண்ணியம் கிடைக்கும். மறந்திடாதை.
LTS DLT..
செந்தில் மாமா. நீங்கள் பயப்பிடாதையுங்கோ. அப்பா
கொழும்பிலை நிக்கேக்கை நான் நினைப்பூட்டிறன். அது என்ரை பொறுப்பு.
ஓம் ஓம்.ஓம். நான் கொழும்பிலை வாங்கிவாறன் சரிதானே.
அலட்டினது காணும். வா செந்தில் லேட்டாகுது. பிறகு பஸ் வெளிக்கிட்டிடும். அப்ப தயா தம்பி. அப்பா போட்டு வாறன். (போதல்) (மோட்டார் சைக்கிள் சத்தம்)

Page 19
இடம்
நகல்
காட்சி: 3
மோகனின் வீடு
பாத்திரங்கள் : மோகன், தயா, விக்னேஸ், செந்தில்
(மேசையில் ரெலிபோன் மணி அடித்தல்)
தயா
மோகன்
தயா
மோகன்
தயா
மோகன்
தயா
விக்னேஸ்
மோகன்
விக்னேஸ்
மோகன்
விக்னேஸ்
ஹலோ . ஆர்.ஆ. நீங்களே. ஆ..சொல்லுங்கோ
வந்த அலுவலெல்லாம் சரி. ஆனால் உம்மடை தங்கச்சி
குடுத்துவிட்ட காசுதான் இன்னும் வந்து சேரேலை . டிலே ஆகும் போல கிடக்குது. அதுதான்.
இஞ்சை கதைச்சவை. ஒருகிழமை ஆகுமெண்டுதான்
சொல்லிச்சினம். பாங்க் எக்கவுண்ட் நம்பர் குடுத்தனான். பிந்தினால் பாங்க்காலயும் அனுப்பலாமாம். உங்களுக்குக் கஸ்டமெண்டால்.
ஓமப்பா இனி சும்மாய் நிக்கிறதெண்டால் என்ரை சொந்த லீவிலை தான் போகும். அதுதான் யோசிக்கிறன். அதுதானப்பா. இப்பவே இருக்கிற லீவை முடிச்சுப் போட்டு
பிறகு ஒரு அவசரத்துக்கு ஒண்டும் செய்யேலாது. நீங்கள் வாருங்கோ. நான் அவையிட்டை ரெலிபோனிலை சொல்லுறன் பாங்க்கிலை போடச் சொல்லி. அப்பிடியெண்டால் இஞ்சையும் எடுக்கலாம் தானே.
அப்ப . நீர் சொல்லிவிடும். நான் இண்டைக்கு இரவு பஸ்ஸிலை
வெளிக்கிடுறன். தம்பி சஞ்சயன் என்னவாம்.
! நிக்கிறான் கொஞ்சம் பொறுங்கோ . (கூப்பிடல்). தம்பி.தம்பி.
விக்னேஸ் அப்பா கதைக்கிறார். கதைக்கட்டாம். வா.ஒடிவா
(வந்து கொண்டு) வாறன் அப்பா. சொல்லுங்கோ இண்டைக்கு இரவு வெளிக்கிடுறன். அதுதான் தம்பிக்கு ஏதும்
வாங்கவேணுமோ எண்டு
எனக்கொண்டும் வேண்டாம். ஆனால்
ஆனால்
யாழ்ப்பாணத்திலை விழாது கொழும்பிலை விழும். 20 ரூபா
நோட்டு. அதை. ஆச்சி சொன்னதை மறந்து போகாதையுங்கோ. பிறகு ஆச்சியும் ஏன் செந்தில் மாமாவும் சேர்ந்து இஞ்சை எங்களை இருக்க விடாயினம். திருப்பி போகவேண்டி வரும். அதை மறந்திடாதையுங் கோ. அது சரி. வாங்கிப் போட்டியளோ

இருபது ரூபா நோட்டு 9
மோகன் இல்லை இனித்தான் அதிலை போட்றெயில்வே ஸ்ரேசனிலையே
வாங்கலாம்.
விக்னேஸ் ஏதோ மறக்காமல் வாங்கிக் கொண்டந்தால் சரியப்பா. பாவம்
ஆச்சி..அதே 20 ரூபா நோட்டு .கொழும்பிலை ரிக்கற். அம்மா கதைக்கப்போறியளே . ரெலிபோனை வைக்கிறன் பாய் அப்பா. (ரெலிபோன் வைக்கும் சத்தம்)
காட்சி: 4
இடம் கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் பாத்திரங்கள் : மோகன், லொத்தர் சிட்டு விற்பவர். (புகையிரத நிலையச் சத்தம் சைக்கிளில் லொத்தர் ரிக்கற் விற்றுக் கொண்டு நிற்க மோகன் வரல்)
மோகன் மல்லி. லொத்தர். மல்லி. இங்கை வா மல்லி. ஒரு ரிக்கற்
தா. லொத்தர் றுப்பியள் விஸ்ஸய். 20ருபாய் மாறுசல்லி கண்ட.ஆ.மென்ன
ரிக்கற் கமத்தி எக்கக் கண்ட
மோகன் ம். ஆச்சி சொல்லிவிட்டதுக்குச் சரிம்.ம். (தனக்குள்) சிலவேளை அவ சொன்னது உண்மையாயிருந்தால். நான் எனக்கும் ஒண்டை எடுத்துப்பாப்பம். என்ன ஒரு 20 ரூபாய் தானே. இஞ்சை எடுத்த ரிக்கெற்றுக்கு ஆச்சிக்கு பிறைஸ் கிடைச்சால் எனக்குக் கவலை யாயிருக்கும் . ஓம் ஓம். எனக்கும் ஒண்டு வாங்குவம். இது ஆச்சியின்ரை காசு. இதுக்கு முதல் ரிக்கற். ஆச்சிக்கு . இன்னொண்டு எனக்கு வாங்குவம்.பிறைஸ் கிடைக்காட்டில் பரவாயில்லை.தம்பி சொன்னமாதிரி ஒரு 20ரூபாய் தானே
லொத்தர் றுப்பியள் விஸ்ஸய். 20ரூபாய். மட்ட பறக்கு வெனவா. மோகன் தவ எகக். இன்னுமொண்டு தா மல்லி
லொத்தர் ஆ. தோறண்ட. எடுங்க . தவ 20ரூபா தாங்க
மோகன் ஆ. இந்தா மல்லி . ம். அது ஆச்சியுக்கு இது எனக்கு
மாறுப்படாமல் வேறை வேறையாய் பேசுக்கை வைப்பம். (தனது ரிக்கற்றை அடையாள அட்டையுள் வைத்தல்) இது என்ரை (மற்ற ரிக்கற்றை என்வலப்பினுள் வைத்தல்)
(லொத்தர் விற்றுக்கொண்டு போதல்)

Page 20
10
இடம்
நகல்
asmu.áil: 5
மோகன்வீடு
பாத்திரங்கள் : ஆச்சி, விக்னேஸ், தயா
(வீட்டில் தயா கதிரையில் இருக்க திரைவிலக)
தயா
ஆச்சி
தயா
விக்னேஸ்
தயா!
விக்னேஸ்
விக்னேஸ்
தயா
விக்னேஸ்
தயா
(திரையின் பின்) பிள்ளை பிள்ளை தம்பி விக்னேஸ்
ஆர் ஆச்சி என்ன ஆச்சி. இந்த நேரம் ! சும்மா வந்தன் பிள்ளை. கிணத்தடிக் கொய்யாவிலை இரண்டு
பழம் கிடந்தது. அதுதான் தம்பிக்குக் குடுப்பமெண்டு
உங்கட வீட்டிலையும் குழந்தையள் இருக்குது தானே. அதுகள்
பாவங்களெல்லே
அதுகள் நெடுகத்தானே தின்னுதுகள். (வந்து கொண்டு) என்ன ஆச்சி கூப்பிட்டனீங்களே
மணப்பெடுக்க வந்திடுவான்
மணப்பில்லை குரல் கேட்டு.
(முந்தானையை அவிழ்த்து). இந்தா ராசா மரத்திலை புடுங்கின கொய்யாப்பழம்
சா நல்ல பழம் நல்ல மணம்.
அது தானே சொன்னன் மணப்பெடுத்து வந்திடுவாய் எண்டு.
கழுவிப் போட்டு சாப்பிடு.
ஆச்சி. தங்க் யு.அப்பா கதைச்சவர். ஆச்சியின்ரை20 ரூபாவுக்கு
கொழும்பிலை லொத்தர் ரிக்கற் வாங்கியாச்சாம். ரெலிபோனிலை கதைச்சவர். (போய் கொண்டு) 20ரூபாய் நோட்டு கொழும்பில் லொத்தர் ரிக்கற் ஆச்சிக்கு ஒரு லட்சம் பரிசு. டட்டணாங் (மறைதல்)
நான் சொன்னன். அவனுக்கு எப்பவும் எதிலையும் பகிடி
தான்

இடம்
இருபது ரூபா நோட்டு 11
காட்சி: 6
வவுனியா புகையிரத நிலையம்
பாத்திரங்கள் : மோகன், லொத்தர் சீட்டு விற்பவர்.
(புகையிரத நிலையச் சத்தம். இயலுமாயின் யாழ்தேவிப் பாட்டு (லொத்தர் ரிக்கற் விற்றல் -ஆனால் முஸ்லிம் தமிழில்)
மோகன்
ேெலாத்தர்
மோகன்
லொத்தர் மோகன்
லொத்தர்
மோகன்
அப்பாடா ஒரு மாதிரி வவுனியா வந்தாச்சு. உம் நேரை
யாழ்ப்பாணம் எப்ப றெயின் போகப் போகுதோ,
(சைக்கிளில் வந்து) லொத்தர் லொத்தர்.இண்டைக்கு அந்திக்கு
இழுக்கிறது. 20லெச்சம் பரிசு. கடைசி ரிக்கற் .
(தனக்குள்) இஞ்சையும் லொத்தர் ரிக்கற் விக்கிறாங்கள். ம்..ம்.
உண்மையிலை தம்பி சொன்னமாதிரி கொழும்பிலை வாங்கின ரிக்கற் விழுந்து ஆச்சிக்கு லட்சம் கிடைச்சா. ம். அந்த ரிக்கற்றை நான் எடுப்பம் இஞ்சை ஒண்டை வாங்கி ஆச்சிக்குக் குடுப்பம். என்ன இன்னும் ஒரு 20ரூபா தானே.சீச்சீ. வேண்டாம். ம் ம் அது நம்பிக்கைத் துரோகம். அதுமட்டுமே எனக்கும் ஒரு ரிக்கற் கொழும்பிலை வாங்கினனான் தானே. விழுகிறதென்றால் எனக்கு லக்கிருந்தால் அதுக்கு விழும் தானே. ம்.கொழும்பிலை வாங் கின ரிக்கற் விழுந்து ஆச்சிக்கு லட்சம் கிடைச்சா. வேண்டாம். ஓம். ஓம். அதுதான் சரி. அவவுக்கு கொழும்பிலையோ வவுனியாவிலையோ வாங்கினதெண்ட விசயம் எப்பிடித் தெரியவரும். இப்பிடிச் செய்வம். கொழும்பிலை வாங்கின இரண்டு ரிக்கற்றையும் நான் எடுப்பம். இஞ்சை வவுனியாவிலை ஒண்டை வாங்கி ஆச்சிக்குக் குடுப்பம்.
என்னய்யா யோசிக்கிரியள். 20ரூபாக்கு 20லச்சம்.
தம்பி எனக்கொரு ரிக்கற் தாரும்.ம்.இல்லையில்லை ரெண்டு
ரிக்கற் தாரும்.ம்.
ஆ. . எடுங்க . 40ரூபா தாங்க கொழும்பு ரிக்கற் ரெண்டும் எனக்கு. வவுனியா ரிக்கெற் ஒண்டு
எனக்கு மற்றது ஆச்சிக்கு

Page 21
12
இடம்
நகல்
asm i láR: 7
: யாழ் பஸ்நிலையம்
பாத்திரங்கள் : மோகன், லொத்தர் சீட்டு விற்பவர்.
(மேசையில் இருந்த ரிக்கற் விற்றல் தமிழில்)
மோகன்
லொத்தர்
மோகன்
(பாக்கைத் தோளில் போட்டுக்கொண்டு வந்து)ம் . இஞ்சையும்
லொத்தர் ரிக்கற் விக்கிறாங்கள்.ம்..ம்.உண்மையிலை அவன் சொன்னமாதிரி கொழும்பிலை வாங்கின ரிக்கற் விழுந்து ஆச்சிக்கு லட்சம் கிடைச்சா.சீச்சீ.அது தானே வவுனியாவிலை ஆச்சிக்கு வாங்கியாச்சே.சீ. அதுக்கு விழுந்தால். இருக்காது சிலவேளை வவுனியா ரிக்கற்றுக்கு விழுந்தால், இஞ்சை ஒண்டை வாங்கி ஆச்சிக்குக் குடுப்பம். என்ன இன்னும் ஒரு 20ரூபா தானே. பரவாயில்லை. சீச்சீ. வேண்டாம். ம் ம் அது நம்பிக்கைத் துரோகம். அதுமட்டுமே எனக்கும் ஒரு ரிக்கற் கொழும்பிலை வாங்கினனான் தானே. விழுகிறதென்றால் எனக்கு லக்கிருந்தால் அதுக்கு விழும் தானே. ம்.வவுனியாவிலை வாங்கின ரிக்கற் விழுந்து ஆச்சிக்கு லட்சம் கிடைச்சா. வேண்டாம். ஓம். ஓம். அது தான்சரி. அவ கொழும்பிலையோ வவுனியாவிலையோ யாழ்ப்பாணத்திலையோ வாங்கினதெண்ட விசயம் எப்பிடிக் கண்டுபிடிக்கப் போகிறா. அது தெரிய வரவே வராது. இப்பிடிச் செய்வம். கொழும்பிலை வாங்கின இரண்டு ரிக்கற்றையும் நான் எடுப்பம். அங்கை வவுனியாவிலை வாங்கினதையும் நான் எடுப்பம். இஞ்சை யாழ்ப்பாணத்திலை ஒண்டை வாங்கி ஆச்சிக்குக் குடுப்பம். ஆச்சிக்கு நம்பிக்கைத் துரோகம் செய் யிறனோ. இல்லையில்லை. அவவுக்கு எப்பிடியெண்டாலும் ஒரு ரிக்கற் குடுத்தால் சரிதானே ம், தம்பிதம்பி.லொத்தர் தம்பி.
சொல்லுங்க ஐயா. 20ரூபாக்கு 20 லட்சம் அதிஷ்டம் அழைக்குது
ஐயா எத்தினை ரிக்கற் வேணும் யோசிக்காமல் எடுங்க
தம்பி எனக்கொரு ரிக்கற் தாரும்.ம். (வாங்குதல்)
கொழும்பு ரிக்கற் ரெண்டும் எனக்கு. வவுனியா ரிக்கெற்றும் எனக்கு. இது. இந்த யாழ்ப்பாணத்திலை எடுத்த ரிக்கெற் ஆச்சிக்கு. (பெருமூச்சு) ம் இன்னொரு 20ரூபா நோட்டு.

இடம்
இருபது ரூபா நோட்டு 13
காட்சி: 8
: மோகனின் வீடு
பாத்திரங்கள் : மோகன், தயா, இராசம்மா, விக்னேஸ்
(அதிகாலை ஒலி -நாய் குரைக்கும் ஒலி)
மோகன்
தயா
மோகன்
தயா
மோகன்
தயா
மோகன்
தயா
விக்னேஸ்
(நாயை அதட்டி) டேய் ஜிம்மி.டேய்.அங்காலை போ.நான் தான்
வந்துவிட்டேனே. ஆ. விலத்து. வா.வா.எங்கை அம்மா.
(வந்துகொண்டு) ஆ. வாங்கோ. வாங்கோ, இண்டைக்கு
வேளைக்கே பஸ் வந்திட்டுது போல.
ஓம் தயா.இப்ப என்ன முந்தி மாதிரியே. ஒவ்வொரு றைவரும்
தான் நினைச்ச மாதிரி.எல்லாம் போட்டி. றேஸ் ஓட்டம். முந்தி எண்டால் .ஒரு வாகனம் முறிகண்டிப் பிள்ளையாரிட்டை நிப்பாட்டாமல் வருமே. இப்ப ஆர் அதைக் கணக்கெடுக்கிறான். ஆயிரத்திலை ஒருத்தன். எங்கடை பஸ்காரனுக்கு முறிகண்டிப் பிள்ளையார் எங்கையிருக்கிறார் எண்டு தெரியுமோ தெரியாது. ஒரே இழுவை.இரண்டரை மணித்தியாலத்திலை வவுனியா
யாழ்ப்பாணம் எண்டால் பாரனப்பா.
உதாலை தானே எந்த நாளும் அக்சிடென்ற் அது இது எண்டு
எத்தினை அசம்பாவிதங்கள். சரிசரி அதை விடுங்கோ. நானோ நீங்களோ கதைச்சு உதுகளைத் திருத்தலாமே. நடக்கிறதைப் பாக்கிறதுதான். வாங்கோ பயணக் களைப்பு. கைகாலைக் கழுவிப்போட்டு வாங்கோ.
! சரி. தம்பி எங்கை.
இன்னும் ரியுசனாலை வரேலை.ஏனப்பா இராசம்மா மாமியின்ரை
ரிக்கற் குடுத்து விடவே. வாங்கியந்தனிங்கள் தானே.
(தடு தடுத்து) ஒமப்பா.நான் மறப்பனே. (தனக்குள்) யோசிச்சு
முடிவெடுப்பம்.ம் இந்தாரும் இந்த பாக்கை வையும். (போதல்) தம்பி வரட்டுமன் இராசம்மா ஆச்சியின்ரை ரிக்கற்றைக் குடுத்து விட.
(விக்னேஸ் திரைக்குள்ளிருந்த வரல்)
இஞ்சை அவனே வந்திட்டான். தம்பி சேட்டைக் கழட்டமுந்தி
உவ இராசம்மா ஆச்சிட்டை அப்பா கொழும்பிலயிருந்து வாங்கி வந்த ரிக்கெற்றைக் குடுத்திட்டு வா அப்பன்.
என்னம்மா யாழ்ப்பாணம் விழாது கொழும்பு விழும். 20ரூபா
நோட்டு அப்பிடித்தானே.

Page 22
14
மோகன்
விக்னேஸ்
மோகன்
விக்னேஸ்
இடம்
நகல்
(தனக்குள்) கிழவி விட்டாலும் இதுகள் விடாது போலை. ம்.
இது ரெண்டும். கொழும்பு.குடுப்பமோ வேண்டாம். இது. வவுனியா குடுப்பமோ, சில வேளை விழுந்தால் வேண்டாம். குடுப்பம். பாவம். துரோகம் செய்யக்கூடாது. கடவுளே மன்னிக்கமாட்டார். சீ.சீ. வேண்டாம்.நான் என்ன ஆற்றையேன் சொத்தைத் தட்டிப்பறிச்சனானே. களவெடுத்தனானே. பயப்பிட. ம். இதைக்குடுப்பம்.
என்னப்பா உங்கடைபாட்டிலை முணுமுணுக்கிறியள்.
: (படபடத்து) இல்லையப்பா. (தனக்குள்) நடக்கிறது நடக்கட்டும்
யாழ்ப்பாணத்திலை வாங்கினதைக் குடுப்பம்.(கூப்பிட்டு) தம்பி இந்தா இதைக் கொண்டு போய்க் குடுத்திட்டுவா தம்பி.
சரி தாங்கோ (சிரித்துக்கொண்டு) அப்பா.ஓ யாழ்ப்பாணம்
விழாது. கொழும்பு விழும். (போய்க் கொண்டு) இதோ கொழும்பு ரிக்கற். (போதல்)
காட்சி: 9
: மோகனின் வீடு (இரு பாதியாக ஒரு பாதி கோல்
மறுபாதி பாத்றும்)
பாத்திரங்கள் : மோகன், ஆச்சி, விக்னேஸ், செந்தில், தயா
மோகன்
(கோலுனுள்) (எரிச்சலுடன்) ச்சீ. அநியாயம். (பேப்பரைக்
கையில் வைத்துக் கொண்டு) இந்தா கொழும்பு ரிக்கற். எனக்கெண்டு ஒண்டு எடுத்தன். அதுக்கு மில்லை. இந்தா மற்றது. கிழவிக் கெண்டு எடுத்தது. அதுக்குமில்லை. வீண் வேலை. பேசாமல் கிழவியின்ரைகாசிலை வாங்கினதைக் கிழவியிட்டையே குடுத்திருக்கலாம். நப்பாசை. தேவையில்லாத நப்பாசை. அந்தா அடுத்தது. இது. வவுனியாவிலை எடுத்ததது. போ. அதுகும் போச்சு. அற்ப நப்பாசையாலை அறுபது ரூபாய் வீண் . அது மட்டுமே. அந்த அப்பாவி ஆச்சியையும் ஏமாத்திப் போட்டன். சீச்சீ. நான் பெரிய பிழைவிட்டுட்டன். ஆச்சியின்ர ரிக்கற் நம்பரை எழுதி வைக்கவும் மறந்திட்டன். அதுக்கு விழுந்ததோ எண்டு பாத்திருக்கலாம். சான்ஸே இல்லை. இதுகளுக்யேல்லை அது யாழ்ப்பாணத்திலை வாங்கினது. (பெருமூச்சுடன்) சரி. இனி யென்ன . நடந்தது நடந்தது தான். தெரியாமலே சுகறற்த பால் முலைக்கேறுமே எண்ட பழமொழி இருக்குசுசும். எல்லாத்தையும் முந்தியே யோசிச்சிருக்கவேணும். என்ன செய்ய.

இராசம்மா
மோகன்
தயா
மோகன்
தயா
விக்னேஸ்
விக்னேஸ்
தயா
மோகன்
இராசம்மா
இருபது ரூபா நோட்டு 15
பிள்ளை. பிள்ளை. பிள்ளை தயா. நாய் கட்டியே இருக்கு. (தனக்குள்) இந்த நேரம் பாத்து கிழவி செந்தூரனையும் கூட்டிக்
கொண்டு வருகுது .பேசாமல் பாத்றும் பக்கம் போவம். (கூப்பிட்டு).தயா உந்தத் துவாய் எங்கையப்பா. நான் ஒருக்கால் குளிச்சிட்டு வாறன் அங்கை பாத்றும் காங்கரிலை தான். என்ன இண்டைக்கு வேளைக்கே.
(பாத்றும் பாதிக்குப் போதல்) இல்லை ஒரு மீற்றிங் இருக்குது
வேளைக்குப் போக வேணும். (தனக்குள்) கிழவியைக் கண்டவுடனை என்ரை மனப்புளுக்கம் ஆருக்குத் தெரியும். தலையிடியும் காய்ச்சலும் தன் தனக்கு வந்தால்தான் தெரியும் ஆ. சரி. ஆர் கூப்பிட்டதெண்டு பார் விக்னேஸ்.
(மேடைக்கு வரல்) அம்மா. (அப்போ ஆச்சியும் செந்திலும்
வரல் )
அது நாங்கள் புள்ளை. நானும் தம்பி செந்திலும்.
: அம்மா.இராசம்மா ஆச்சி வந்திருக்கிறா. செந்தூரன் மாமாவும்
கூட பேப்பரோடை
(மேடைக்கு வரல்) ஆ. வாங்கோ. மாமி. வாங்கோ.வாங்கோ
செந்தூரன். எங்கை ரெண்டு பேரும் என்ன ஒண்டாய் வெளிக் கிட்டிருக்கிறியள்.
(பாத்றுமினுள்) வேறை என்ன கிழவி சாட்சியோடையே
வந்திருக்குது. யாழ்ப்பாண ரிக்கற் எண்டு கண்டு பிடிச்சிட்டுது போல. அப்பிடியெண்டா. மாறித்தந்திட்டன் எண்டு சொறி சொல்லி விழாத கொழும்பு ரிக்கற்றைக் குடுப்பம். எதுக்கும் குளிக்கிற மாதிரி பாத்றுமுக்கை நிண்டு நடக்கிறதைக் கேப்பம்.
: வாராசா. வா என்ரை செல்லக் குட்டி. என்ரை பிள்ளையின்ரை
வாய் பொன் வாயே தான். மகராசா. என்ரை செல்லக்குஞ்சு. பிள்ளை அண்டைக்குச் சொல்லேக்கையே நான் நினைச்சன். அதுமட்டுமே பிறகுகொண்டந்துதன்ரைகையாலை ஆச்சியிட்டைத் தந்து இந்தாங்கோ கொழும்புரிக்கற் எண்டு சொல்லித் தரேக்கையே பிள்ளையாற்றை மணிஅடிச்சது நினைச்சன்.எல்லாம் நல்ல சகுனம். நிச்சயம் விழுமெண்டு. தம்பி ராசா. ஒரு லச்சமடா. ஒரு லச்சம். அப்பா கொழும்பிலையிருந்து வாங்கிவந்த ரிக்கற்றுக்கு ஒரு லச்சமடா செல்லம். கடவுள் கண்திறந் திட்டாரடா.

Page 23
16
தயா
செந்தில்
விக்னேஸ்
செந்தில்
தயா
மோகன்
நகல்
அப்பிடியே.சந்தோசம். வடிவாய்ப் பாத்தனிங்களே ஆச்சு.
ஓம் அன்ரி. இஞ்சை பாருங்கோ. நான் கையோடை பேப்பரையும்
கொண்டந்தனான். என்ரை கண்ணையே நம்ப முடியேலை. உண்மையிலையே .பாத்தியளே கொழும்பு ரிக்கற் எண்டால் விழுமெண்டு சொல்லுறது உண்மைதான்
அம்மா. சொல்லுங்கோவன். 20ரூபாய் நோட்டுக்கு. யாழ்ப்பாணம்
விழாது. கொழும்பெண்டால் விழும்.
அப்பா எங்கை போட்டார் விக்னேஸ்.
இண்டைக்கேதோ மீற்றிங் இருக்குதெண்டு வேளைக்கு ஒவீஸ்
போகவேணுமெண்டு பாத்றுமுக்குக் குளிக்கப் போட்டார். (சவுக்காரம் போட்டபடி) இருக்கச் சொல்லும் வாறன். (தனக்குள் சிரித்துக்கொண்டு) ம். ம். இராசம்மா ஆச்சி உங்களுக்கெண்டது உங்களுக்குத்தான். என்னாலை மட்டுமில்லை எவையாலும் தட்டிப் பறிக்க முடியாது. இந்த இருபது ரூபா நோட்டு எத்தனையைச் சொல்லித் தந்தது தெரியுமே ..! முதலாவது அடுத்தவன்ரை சொத்துக்கு ஆசைப்படக்கூடாது. மற்றது . மற்ற வையை ஏமாத்த வெளிக்கிட்டால். ஏமாறுறது நாங்களே தான் மற்றவையில்லை.எல்லாத்துக்கும் மேல அவை அவைக்கு கிடைக்க வேணும் எண்ட நியதியிருந்தால் எவளவு வஞ்சக வேலை செய்தாலும் கிடைக்கிறதை மற்றவையாலை தட்டிப் பறிக்க முடியாது (பெருமூச்சு விட்டு) ஆச்சி ஓம். நீங்கள் சொன்ன மாதிரி இந்த இருபது ரூபா நோட்டு மூலம் கண் திறந்தது உங் களுக்கு மட்டுமில்லை எனக்கும் தான். கடவுள்தான் என்னை யும் காப்பாற்றி விட்டார். இப்ப என்னைத் தேடுகிறியள் சந்தோசம் பகிர. உண்மை தெரிஞ்சிருந்தால் தேடியிருப்பினம் தான் ஆனால். உதுக்கில்லை என்னை ஏமாத்துக்காரன் எண்டு பட்டஞ் சூட்ட. ஆண்டவனே உன் கருணையே என்னையும் காப்பாற்றினது

ஒரு பின்னம் முழுமையடைகின்றது
பிரதியாக்கம்
செல்வி முஹம்மது ஜலால்டீன் பாத்திமா சுமையா
பாத்திரங்கள்
கவிதா A குடும்பத் தலைவி திருமுருகன் VM கவிதாவின் கணவன் சுவேதா - கவிதாவின் மகள்
லட்சுமி -- p856it
ரதி மகள் கனகரத்தினம் கவிதாவின் தம்பி ராகவன் கனகசத்தினத்தின் மகன் ரஞ்சனி - LD856it
பார்வதி - தாய்
மாலதி - LD606016S தாதியர் 2
asn' &a: 1
இடம் : கவிதாவின் வீடு நேரம் : நண்பகல் 12.00 மணி
பாத்திரங்கள் : கவிதா, திருமுருகன், சுவேதா லட்சுமி, ரதி,
கனகரத்தினம், ராகவன், ரஞ்சனி மேடையமைப்பு: 1999ம் ஆண்டினைக் குறிக்குமாறு ஒரு நாட்காட்டி சலரில் தொங்க விடப்பட்டுள்ளது. சாய்வு நாற்காலியில் அமர்ந்து திருமுருகன் இலாவகமாக

Page 24
18
நகல்
தினசரிப் பத்திரிகை ஒன்றை வாசித்துக் கொண்டு இருக்கிறான். அருகில் கவிதா தன் 3 பிள்ளைகளிற்கும் தரையில் அமர்ந்தவாறு தமிழ்ப்பாடத்தைக் கற்பித்துக் கொண்டிருக்கிறாள். அவ்வேளை கனகரத்தினம் கையில் பழக்கூடையுடனும் தன்
பிள்ளைகளான ராகவன் (புத்தகப்பையுடன்) ரஞ்சனி (பெட்டிஒன்றுடன்) யுடன் மேடையின் இடது பக்கமூலையினூடாக அரங்கினுள் நுழைகின்றனர்.
கனகரத்தினம்
கவிதா
(தன் சால்வையினால் முகத்தைத்துடைத்து) அப்பப்பா என்ன வெயில் பஸ்ஸின் நெருக்கத்தில் என் விலா எலும்பு முறிஞ்சு விட்டது போல இருக்கு. அக்கா!.அக்கா! (கண்களில் பிரகாசம் மின்ன மலர்ந்த முகத்துடன்) அடடே வாப்பா உள்ளே வா. இண்டக்கி மழை வாறது நிச்சயம். எவ்வளவு காலத்துக்குப் பிறகு உன்னைக் காணுறன்.? ஒரு ஆறு மாசமாவது இருக்குமா..?
(அவள் இவ்வாறு கேட்டுக் கொண்டிருக்க சுவேதா,லட்சுமி, ரதி மூவரும் ஓடிச்சென்று ராகவன், ரஞ்சனியை கூட்டி வருகின்றனர். அங்கு மிகுந்த ஆரவாரமாக
இருக்கிறது) திருமுருகன்
கனகரத்தினம்
கவிதா
(தன்மூக்குக் கண்ணாடியைக் கழற்றி அருகில் உள்ள மேசையில் வைத்து விட்டு ஒரு அலட்சியைப் பார்வையை வீசுகிறான். உரத்த குரலில்) மின்னல் வந்தால் இடியையும் எதிர்பார்க்கவேண்டும். ஏய் சுவேதா, லட்சுமி, ரதி மூணுபேரும் என்ன ஒரே சத்தம். ? வாற மாதம் தவணைப் பரீட்சை வாறது தெரியுமா இல்லையா.? கள்ளி மரத்திலை இலைவந்தாப்போல அதிசயமாய்த் துள்ளுறியள். போங்கடி உள்ளுக்கு (கூறிவிட்டு தன் இருக்கையைக் காலி செய்கிறான். அனைவரும் திகைத்து நிற்கின்றனர்)
ஏனக்கா.? நான் வாறது அவருக்குப் பிடிக்கல்லியா..?நீ ஒவ்வொரு
முறையும் கடதாசி போட்டு வரச் சொன்னதாலதான் உடன கிளம்பி வந்தன். இவன் ராகவனும் தன்ட மச்சாள்மாரைப் பார்க்க ரொம்பவும் பிரியப்படுகிறான். அதான் வெள்ளாண்ம வெட்றதப்பத்தியும் கவலப்படாம ஓடோடி வந்தன். இந்தாம்மா சுவேதா, இந்தப் பழக்கூடையை கொண்டு போய் உள்ள வை. (சுவேதா பழக்கூடையை எடுத்துக் கொண்டு அரங் கின் வலது பக்க வாயிலின் ஊடாக நுழைய மற்றைய நான்கு பிள்ளைகளும் தங்களின் பாடப்புத்தகங்களை ஒருவருக்கொருவர் காட்டி மகிழ்கின்றனர்.கனகரத் தினம் நெற்றியில் கைவைத்தபடி இருக்கிறான்)
கவலப்படாத ரத்தினம். உலகத்தில எல்லா மனிசரும் ஒரேமாதிரி
இருக்கிறதில்ல. சிலரிற்கு படிச்சிட்டம் என்கிற திமிர். சிலரிற்கு பணக்காரன் என்கிற திமிர். அதுஅதுக்கு தகுந்த மாதிரி நாம

கனகரத்தினம்
ஒரு பின்னம் முழுமையடைகின்றது 19
நம்மள மாத்திக்கொள்ள ஏலாது. சுவேதா மாமாக்கும் பிள்ளைகளுக்கும் குடிக்க ஜூஸ் கொண்டு வா. (என்று கூறி விட்டு மீண்டும் கனகரத்தின் பக்கம் திரும்புகின்றாள்). ஒண்டு தெரியுமா?. இவரிண்ட அக்கா, தங்கச்சி யாருமே இப்ப இங்க வாறதில்லை. எல்லாத்துக்கும் காரணம் பணம்தான் . ஏழு மாதத்துக்கு மொதல் இவரிற்கு லொத்தர் சீட்டு விழுந்து அதிலை கிடைச்ச5 இலட்சத்தை கொழும்பில சொந்தமா வீடு வாங்கணும் எண்டு பேங்கில போட்டார். இன்னும் 5, 6 இலட்சம் தேவை எண்டும் சொல்லிக்கிட்டு இருந்தார். அப்பதான் இவர்டஅக்காவும் மச்சானும் ஒரு 3 இலட்சம் பணம் கடனாக் கேட்டு வந்தாங்க. இவரும் தண்ட நிலமையை எடுத்து விளக்கினார். ஆனா அதுகள் ரெண்டு பேரும் கண்ணாடிக்கு கல் எறியறாப் போல வெட்டு ஒண்டு துண்டு ரெண்டா கதச்சி சபிச்சுப்போட்டுதுகள். அதான் மனிசனுக்கு நாம ரெண்டு பேரும் பாசமா இருக்கிறதப் பாத்தா பத்தி எரியுது. என்ன செய்ய நம்மட அம்மா நம்மள எல்லாம் பணத்தாசை காட்டி வளர்க்கல்ல. உறவுக்குத்தான் உறுதி கூட எண்டு தான் சொல்லித் தந்தா. சரிப்பா. உண்ட வயல் வேல எப்படிப் போகுது, (சுவேதா அனைவரிற்கும் குளிர்பானம் கொடுக்கிறாள். கவிதா அதைக் குடித்துக் கொண்டே தன்பேச்சைத் தொடர்கிறாள்). அம்மாவும் மாலதியும் சுகமா இருக்கிறாங்களா..? அவங்க ரெண்டு பேரையும் கூட்டி வந்திருக்கலாமே.!
ஆமா அக்கா. எல்லாரும் சுகம்தான். அம்மாக்குத்தான் இஞ்ச
வாறதுக்குக் கொஞ்சம் பயம். மச்சான் முன்ன மாதிரி அவட்டயும் எரிஞ்சு விழுந்தா அவவாலை தாங்க முடியாதுக்கா. இது இரும்பு மனசு. எவளவு வளச்சாலும் வளைவேனேயொழிய லேசில உடைஞ் சிற மாட்டன். ஹம். (பெருமூச்சு விடுகிறான்) அப் போது ராகவனும் லட்சுமியும் பின்வரும் திருக்குறளை ராகத்துடன் இசைக்கின்றனர்
அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை இகழ்வாரைப் பொறுத்தல் தலை’

Page 25
2O
இடம்
நேரம்
நகல்
காட்சி: 2
: கவிதாவின் வீடு : இரவு 700மணி
பாத்திரங்கள் : கவிதா, திருமுருகன், சுவேதா, லட்சுமி, ரதி,
கனகரத்தினம், ராகவன், ரஞ்சனி
மேடையமைப்பு: வீட்டின் சமையலறையில் சில மட்பாண்டப் பாத்திரங்களும் எவர்சில்வர் சட்டிகளும் நேர்த்தியாக அடுக்கப்பட்டிருக்கின்றன. விறகடுப்பின் அருகில் அமர்ந்தவாறு கவிதா சோறு சமைத்துக் கொண்டிருக்கிறாள். அவளின் அருகில் பிள்ளைகள் இருவரும் உட்கார்ந்திருந்து அளவளாவிக் கொண்டிருக் கின்றனர். கனகரத்தினம் சமையலறையை ஒட்டியபடி அமைந்துள்ள அறையில் ஒருநாற்காலியில் அமர்ந்தபடி அவர்களின் பேச்சைமலர்ந்த முகத்தடன் அவதானித்துக் கொண்டிருக்கிறார்.
கவிதா
ராகவன்
லட்சுமி
சுவேதா
லட்சுமி
சுவேதா
ராகவா, நீ மிச்சம் கெட்டித்தனமா படிக்கிறதா ஒண்ட ஸ்கூல் டீச்சர் சொன்னா. கணக்குப்புலி. தலையன் எண்டு தானாமே ஒண்ட வகுப்புப் பிள்ளைகள் உன்னைக் கூப்பிடுற அவ ஒன்னப்பத்தி பெருமையா சொல்லச் சொல்ல எனக்கு எவ்வளவு சந்தோசமா இருந்திச்சி தெரியுமா? இவள் லட்சுமியும் ஒண்ட வயசுதானே. ஏனோ தெரியல்லப்பா அவள் கணிதத் தில ரொம்பவும் மட்டமா இருக்கா. அப்பா கணக்குப் பாட டீச்சர். மகளுக்கு கணிதபாடத்தில 40உம் 50உம் . நினைச்சாலே வெட்கமா இருக்கு.
ஏன் மாமி அப்படிச் சொல்றீங்க.? ஒன்றில்லாட்டி இன்னும்
ஒன்று. உங்கட ஜீன் லட்சுமிக்குக் கடத்தப்பட்டிருக்கு போல. அவ உங்களமாதிரி நல்லா கவிதை எழுதுறாளே. ஹைக்கூ, மரபுக்கவிதை, புதுக்கவிதை எண்டு தூள் கிளப்புறாளே.
அம்மாக்கு என்னைத் திட்டாட்டி பொழுதுபோகாது. அதவிடுங்க
ராகவன். எனக்கு இலக்கிய ஆர்வம் இருக்கிறது உண்மைதான். ஆனா நீங்க சகலகலா வல்லவனாக்கும். நீங்களும் நல்லா கவிதை எழுதுறதா ரஞ்சனி சொன்னாளே.
! சரி.சரி.இப்ப ஒரு போட்டி . ரெண்டு பேரும் ஒவ் வொரு
ஹைக்கூ கவிதை சொல்லுங்க. பார்த்து சிறந்தது எது எண்டு நான் முடிவு பண்றன்.
'ஒரு கொமடி நடிகன் ஹீரோவாகிறான் தன் சுயசரிதையில்.’
அம்மா! தங்கச்சியைப் பாருங்க. எப்படி சூப்பரா
இருக்கம்மா.

கவிதா
ராகவன்
கவிதா
சுவேதா
கவிதா
ரதி
லட்சுமி
ராகவன்
ராகவன்
லட்சுமி
ராகவன்
லட்சுமி
ராகவன்
லட்சுமி
ஒரு பின்னம் முழுமையடைகின்றது 21
ஆமாடி. நீ அவளுக்கு வக்காளத்து வாங்கு எப்ப பாரு சினிமா.
படம். நாடகம். ராகவனைப் பாத்தியா? சும்மா கதைக்கும் போதும் ஜீன் அது இதெண்டு எப்படி விஞ்ஞான ரீதியாக் கதக்கிறான் பாரு. ராகவா நீ ஒரு கவிதை சொல்லு, 'வைகறை கூட இருட்டறைதான் விழிகளை நீ திறக்கும் வரை."
வெரிகுட் (கண்களில் நீர் மல்க அவனை இறுக அணைத்து
முத்தமிடுகிறாள்).
மாமா.உள்ளே ஓடி வாங்க . அம்மா பாசமழை பொழிறாங்க.
(கனகரத்தினம் சிரித்துக் கொண்டு உள்ள வர எல்லோரும் சேர்ந்து புன்னகைக்கின்றனர்).
ராகவா ஒண்ட அப்பா. சின்னவயசில ஒன்னைப் போல நல்ல
கெட்டிக்காரன். காசில்லாததால அவன் வயலுக்குப் போய் என்னப் படிக்க வச்சான். ஆனா நீ நல்லாப் படிச்சி ஒரு பெரிய டொக்டரா வரணும். நீதான்டா உன்ட மாமாட திமிர அடக்கணும்.
சரிம்மா. அவன் டொக்டரா வந்து அப்பாக்கு ஊசி ஏத்தி திமிர
அடக்கட்டும்.
: நான் ஒவ்வொருவரைப் பத்தியும் அவங்கட குணத்தப் பத்தியும்
கவிதை எழுதியிருக்கிறன். ரொம்ப ஜோக்கா இருக்கும். கேக்கிறீங்களா.. ?
ஆகட்டும் தமிழ்ப் புலவரே! நக்கீரனின் வாரிசே!
ஒலிக்கட்டும் உங்கள் கவி வலிக்கட்டும் எங்கள் செவி
ரஞ்சனியின் சிரிப்பு
உன் பீரங்கிச் சத்தத்தில் எங்களின் மொத்த ரத்த நாளங்களும் உறைந்து விடும்.
சுவேதாவின் கோவம்
சற்று சீண்டியதும் பற்றிக் கொள்ளும் நெருப்புக் குச்சி.
; ரதியின் பாட்டு
வாய் திறந்து பேசினாள் குரலில் ஒரு இனிமை என்றேன் உடனே மெய் மறந்து பாடினாள் அடடா என்ன கொடுமை என்றேன்

Page 26
22
ராகவன்
லட்சுமி
நகல்
உன் அப்பா அரசியல் யாப்பிலும் தப்புக்கள் உண்டென்பார் நியுற்றனைக் கண்டால் நிற்க வைத்து வினாத் தொடுப்பார் பிழை ஒன்றைக் கூட சரி என்று நிறுவிடுவார் இல்லையென்று நாம் சொன்னால் அகோரமாய் பொறுமிடுவார்
(எல்லோரும் கை தட்டுகின்றனர்)
சுவேதா
ராகவன்
ராகவா! நீயும் லட்சுமி சொன்னதைப் போல ஜோக் கவிதை சொல்லன். சென்டிமென்டா வேணாம். உன்ட அப்பாவைப் பத்தியும் எங்கட அப்பாவைப் பத்தியும ரெண்டே ரெண்டு கவிதை.
என் அப்பா
என் அம்மா ஒன்றும் துரோணாச்சாரியார் அல்ல - ஆனால் அவள் உம் என்றால் இவர் இம் என்று தன் கட்டை விரலை வெட்டிக் கொள்ளும் ஏகலைவன்
(கனகரத்தினம் வெட்கத்தில் தலைகுனிந்து கொள்ள மற்ற அனைவரும்
சிரிக்கின்றனர்)
ராகவன்
கனகரத்தினம்
கவிதா
கனகரத்தினம்
உங்கள் அப்பா
கம்பனின் இராவணன் கணிதத்தின் மறை எண் எதிர்க்க முடியா வல்லரசு எரிகாயம் தரும் வன்னமிலம் மலரினைத் தொட்டால் குத்திடும் முள் எண்ணெயில் இட்டால் பொரிந்திடும் எள்
அக்கா . எனக்கு ஒரு யோசனை பிடிபட்டிருக்கு. அத ஒன்னட்ட
சொல்ல கூச்சமாகவும் இருக்கு. ஆனா ராகவன்ட எதிர்காலத்தை நினைச்சிதான் நான் இந்த முடிவ எடுத்தன்
ஏன் இழுத்திட்டு போறாய்.? எனட்ட சொல்றதுக்கு வெட்கப்படுகிற
அளவு பெரிய விஷயமா..? கெதி பண்ணி சொல்ல வந்ததச் சொல்லிவிடு.
அதில்லக்கா, நம்மட ஊரைப் பத்தி, அங்க இருக்கிற பள்ளிக கூடத்தைப் பற்றி ஒனக்குத் தெரியும் தானே. சொல்லிக்கிற அளவுக்கு அங்க படிப்பு நல்லமில்ல அதுதான், ராகவன ஒன்ட

கவிதா
கனகரத்தினம்
ஒரு பின்னம் முழுமையடைகின்றது 23
வீட்ல வச்சி இதுகள் போற பள்ளியில சேத்துட்டா பெரிய உதவியாயிருக்கும். இவனும் கரைச்சல் படுத்துற பெடியன் இல்ல. நீ சொல்றத கேட்டு நல்ல பிள்ளையா இருப்பான். படிச்சி முன்னுக்கு வருவான். இவன்ட எல்லாச்செலவையும் நானே ஏத்துக்கிட்டு மாசாமாசம் காசு அனுப்புவன். இருக்கிறதுக்கு ஒரு எடம் மட்டும் கொடுத்தால் போதும். (கண்களில் கோபத்துடன்) நிறுத்தடா உன்ர கதய . காசா அனுப்பப் போற.? அனுப்பு. ஒவ்வொரு நாளும் காசு அனுப்பு. நீ முந்தி எனக்கு செஞ்ச உதவிக்கெல்லாம் நானும் ஏதும் செய்யனும் எண்டு துடிச்சிட்டு இருக்கிறன். எண்ட மருமகன் ராகவனப் படிக்க வைக்க பிச்ச கேட்கிறியாடா..? இது ஒனக்கே நல்லா இருக்கா..? ஏண்டா நானும் பணத்தாசை பிடிச்ச பேயா..? என்ன ஒன்ட அக்காவாகவா நெனச்ச.? இல்ல வேறயாரோ எண்டு நினைச்சியா..? இப்படி மாறிட்டாய்யடா (தேம்பி அழுதல்)
அக்கா அழாத. இப்ப நம்மட நாட்டுல. இருக்கிற நிலமையைப்
பத்தி யோசிச்சுத்தான் நான் காசுப் காசப் பத்தி கதச்சன். ஒரு எறும்ப வளர்க்கிறது கூட இப்ப ஸ்கூல்ல சேத்துப் படிக்க வெக்கணும்டு நானும் கன நாளா ஆசப்படுறன். ஆனா இவன் வளர்ந்து 10ஆம் ஆண்டில படிக்கிற பெரியவன் எண்டு இண்டக்கி தான் உணர்றன். புத்தகப் பை, உடுப்பு எல்லாம் கொண்டு வந்திருக்கான் தானே!. அப்படியெண்டா அவன் ஒன்னோட திரும்பி வரத் தேவல்ல ஸ்கூல் பதிவை எடுக்க நான் வாறன். என்ட ராகவன் குட்டி என்னோடய இருந்த படிச்சி பெரியவனா வருவான்.
(கவிதா பேசிக்கொண்டிருக்கும் இடது பக்க வாயிலால் அரங்கினுன் திருமுருகன் நுழைகிறான். அவன் உள்ளே வருவதை யாரும் அவதானிக்கவில்லை.)
திருமுருகன்
(கவிதா சொல்லி முடிக்க முன்னரே அவளது கன்னத்தில் திருமுருகன் அறைகிறான்) அடியேய். யாருடி பெரியாளா வரப் போறான்.? ஒண்ட பரம்பரையே சகுனிட பரம்பரைடி. எண்ட படிப்புக்கும், தகுதிக்கும் எவ்வளவு பெரிய சம்பந்தம் எல்லாம் எனக்கு வந் திச்சி. ஒன்ட அப்பாவும், அம்மாவும் 20இலட்சம் சீதனம் தருவன் எண்டு சொல்லி என்ன நம்ப வச்சி கழுத்தறுத்து ஒன்ன என்ட தலைல கட்டிவச்சானுகள். இப்ப ஒண்ட தம்பி இந்த வீட்டுல அதுவும் ஒசியிலை கொண்டு வந்து விட்டிட்டு போப்புறானே.? வெட்கம் கெட்டவனுகள். வெளியிலபோங்கடா. ஈனப்பிற வியள், இனி ஒரு ஈ, காக்கா ஓங்கூர்ல இருந்து இந்தப் பக்கம் வரட்டும். அப்ப இருக்குடா ஓங்களுக்கு வேட்டு. நான் எவ்வளவு நேரம் கழிச்சி சாப்பிட வீட்டிற்கு வாறன். நீ ஒண்ட

Page 27
24 நகல்
பாட்டிற்கு இவனுகளோட சேர்ந்திருந்து குசினிலை பட்டி மன்றமா நடத்துறாய். ? ஆம்பிளப் பிள்ளைகளைப் பெத்துப்போட வக்கில்ல. உருப்படாத மூண்டு பெட்டச்சிகள பெத்துப் போட்டு என்ன ஆண்டியாக்கினது போதாதா..? இன்னும் கொஞ்சம் ஆட்கள் சேர்க்கிறியா..? (ஆத்திரத்தடன் கவிதாவை அடிக்கக் கை ஓங்குதல். அவ்வேளை கனகரத்தினம் ஓடிவந்து திருமுருகனின் கையைப் பிடித்து அவனைத் தடுக்க திருமுருகன் நிலைதடுமாறி கீழேவிழுகின்றான். பிள்ளைகளும் கவிதாவும் சத்தமிட்டு தொடர்ந்து அழுகின்றனர்.). திருமுருகன் டேய். என்னையாடா கீழேதள்ளுறாய்..? போடா.வெளியே
போடா. எவன்ட வீட்டுச் சோத்த எவன்டா தின்றது.? (கனகரத்தினம் ஒருகையால் தன்நெஞ்சைப் பிடித்தவாறும் மறுகையில் ராகவனையும், ரஞ்சனியையும் கைப்பிடித்த வண்ணம் அரங்கின் இடது பக்க வாயிலை நோக்கி நடக்கிறான். ராகவனின் கையில் புத்தகப் பையும் பெட்டியும் காட்சியளிக் கின்றன)
திரை மறைவில் குரல்: இன்று வார்த்தைகள் இல்லை
மெளனம் சிறையிட்டது. மெளனத்தின் எல்லையில் கண்ணிர திரையிட்டது கண நேர கதியில் நிலை மாறும் விதியில் பிரிவினால் நம் மனதில் சலனம் இனி வாழ்வோடு நாமும் தினப் போராட்டம் போடும் இலட்சியப் பாதைகள் ஜனனம் இது ஒரு நதியின் பயணம். ஒரு நதியின் கிளைகளாகத்தான் பிரிகின்றோம் - கானல் நீராய் அல்ல சில பின்னங்களாய் சிதறுகிறோம் அர்த்தமற்ற பூச்சியங்களாய் அல்ல

இடம் நேரம்
ஒரு பின்னம் முழுமையடைகின்றது 25
காட்சி: 3
கனகரத்தினம் வீடு : இரவு10.00மணி
பாத்திரங்கள் : பார்வதி, மாலதி, கனகரத்தினம், ராகவன்,
ரஞ்சனி
மேடையமைப்பு: படிக்கும் மேசை ஒன்றில் பல புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அதனருகில் உள்ள கதிரையில் உட்கார்ந்தவாறு ராகவன் எழுதிக் கொண்டிருக்கிறான். கனகரத்தின் அம்மா பார்வதியும் மனைவி மாலதியும் மகள் ரஞ்சனியும் தரையில் அமர்ந்திருந்து கதைத்துக் கொண்டிருக்கின்றனர். பார்வதியின் அருகில் வெத்திலைத் தட்டம் இருக்கிறது.
பார்வதி
ரஞ்சினி
பார்வதி
மாலதி
பார்வதி
என்னம்மா..? உண்யைத்தான் சொல்றியா.? அப்ப ராகவன்
அந்தப் பள்ளிக்கூடத்திலை படிக்க முடியாதா..?
அப்பம்மா பள்ளிக்கூடத்தில் மட்டுமில்ல அந்த ஊருக்கே போக
ஏலாது எண்டுதான் நினைக்கிறன்.
அந்த காட்டுமிராண்டி இவ்வளவு தூரம் ஏசியிருக்கு ஒங்கப்பாவும்
அரும மாமியும் ஒரு வார்த்த மாறிக் கதக்கிலயா..? எனக்கு அப்பவே தெரியும். ராகவன்டை கெட்டித் தனத்தில ஒன்ட மாமாக்கும் மாமிக்கும் பொறாமை. இவன் ஸ்கொலசிப்பு பாஸ் பண்ணினப்பவே 'நீ எல்லாம் படிச்சா வயல் வேலக்கும், மாடு மேய்க்கவும் யார்றா இருக்கு?. அவனவண்ட தகுதிக்கு ஏத்த படிப்பு படிக்கணும். எண்டு சொன்னவர் தானெடி உன்ட மாமா. ஒன்ட மாமி எண்டாப்போல
அம்மா போதும். ஓங்கட கதய நிப்பாட்டுங்க . இதுக் குத்தான்
நான் எதப்த்தியும் உங்களட்ட சொல்ல விரும் புறஇல்லை. கடும் கவலையா இருந்ததால என்னையும் மீறி எல்லாத்தையும் உளறிட் டன். ஓங்களுக்கும் மாமாக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை.
அம்மா மாலதி! நீ என்ட மருமகனைப் பற்றி பேசி னதைப்பற்றி
நான் கவலப்படல. அவர்ட குணம் எனக்குத்தெரியும். ஆனா என்ட மகள் கவிதா அப்படியில்லை அவ உன்னோடையும் இந்தப் பிள்ளையளோடையும், ரத்தினத்தோடையும் எவ்வளவு இரக்கம் எண்டு ஒனக்குத் தெரியாதா?. அவளுக்கு தண்ட பிள்ளைகள் படிக்காட்டியும் ராகவன் ஒரு டொக் டராக்கனும் எண்டுதான் எப்ப பார்த்தாலும் சொல்லிக் கிட்டிருப்பா. அவளப்போய் இப்படிக் கதக்கிறியே.1 மொதல்ல ஒண்ட வாயக் கழுவு.

Page 28
26
மாலதி
நகல்
ஓம்.ஓம்.கழுவத்தான் போறன் ஒரேயடியா அந்தக் குடும்பத்தக்
கைகழுவப்போறன், ஒங்கட மகள் பெரிய தியாகி. சும்மா வாய்ச்சொல் மட்டும். இருந்த சொத்தையும் முழுக்க முழுங்கிட்டு அவரு கேட்ட அவர்ட அம்மா கேட்ட எண்டு சொல்லிவிட்டு காசிக்கும் காணிக்கும் மட்டும் நம்மட வீடு தேடி வாறவ தானே..!
(இடது பக்க வாயிலின் ஊடாக அரங்கினுள் நுழையும் கனகரத்தினம் கையில் அரிவாளுடனும் மறுகையில் சாக்குப்பையுமாகக் காட்சி தருகிறாள்).
கனகரத்தினம்
மாலதி
மாலதி. (கோபமாகக் கத்துகிறான்) இவ்வளவு நேரமும் ஒன்ட
விசர்க் கதயக் கேட்டுத்தான் இருக்கன். நீ எல்லாம் திருந்தாத ஜென்மங்கள். இது வரைக்கும் ஒன்ன நான் கைநீட்டி அடிச்சில்ல. எனக்கு வாற ஆத்திரத்திற்கு (சாக்குப் பையையும் அரிவாளையும் கீழே வீசுகிறான். சாக்குப்பையில் இருந்து நெல் நிலத்தில் சிதறுகிறது). அம்மா. அவள உள்ளுக்குப் போகச் சொல்லுங்க
ஹ9ம். பெரிய பாசமலர்கள். எங்களுக்கும் கோவம் வரும்.
(அருகிலிருந்த வெற்றிலைத்தட்டத்தை கால்களால் உதைத்து விட்டு விறு விறு என்று நடந்து அரங்கின் வலது பக்க வாயிலூடு சென்று மறைகிறாள்)
(பார்வதி நிலத்தில் சிந்திய பொருட்களைப் பொறுக்குகிறாள். கனகரத்தினம் சாய்மனைக் கட்டிலில் சாய்கிறார். ரஞ்சனி மெதுவாக எழுந்து சென்று ராகவன்
அருகில் நின்று அவனின் தோளில் சாய்கிறாள்)
ரஞ்சனி
அண்ணா.1 ஏன்னா நம்மட குடும்பத்தில மட்டும் ஒருநாளும்
சந்தோஷம் நிலைச்சு நிற்கிறல்ல.? இப்ப நடக்கிற எல்லாக் கூத்தையும் ஆட்டத்தையும் மாத்தனும்டா நீயும் நானும் நல்லாப் படிக்கணும். அண்ணா. என்னண்ணா. கவிதையா எழுதிறாய். காட்டு பார்ப்பம்.
(ராகவன் ஒருகடதாசியை ரஞ்சனியின் கையில் கொடுத்துவிட்டு மேசையில் தலை
சாய்தல்)
ராகவன்
ரஞ்சனி
ரஞ்சனி . சத்தமாய்ப் படி
நாங்கள் வரம்புகள் கட்டுவது - வயலில்
மட்டு மல்ல
எங்கள் வார்த்தைகளிலும் தான் களைகள் பிடுங்குவது - கழனியில் மட்டுமல்ல எங்கள் இதயத்திலும்தான் நீங்கள் நிலாச் சோறு உண்பதற்காக சூரியனின் கிரணங்களால் நாங்கள் சுடப்படுகின்றோம்

இடம்
நேரம்
ஒரு பின்னம் முழுமையடைகின்றது 27
ஒரு உழவனின் வியர்வை முத்து இந்த தேசத்தின் உரிமைச்சொத்து எங்கள் புலங்கள் விதைக்கப்பட்டால் தான் உங்கள் புலன்கள் உயிரூட்டப்படும் நாங்கள் விதைக்கின்றோம் நீங்கள் அறுக்கின்றீர்கள் எங்களின் வருமானம் அதிகரிப்பதில்லை ஆனாலும் தினம் தினம் உண்ணாவிரதம் இருக்கிறோம் களைகள் மட்டுமல்ல - இனி எங்கள் மண்ணில் விருட்சங்களும் வியாபிக்கும்.
asmál: 4
கனகரத்தினம் வீடு : இரவு 10.00மணி
பாத்திரங்கள் : கவிதா, மாலதி,கனகரத்தினம், ராகவன், ரஞ்சனி,
இரு தாதியர்
மேடையமைப்பு: 2012ம் ஆண்டினைக்குறிக்குமாறு ஒரு நாட்காட்டி சுவரில் தொங்க விடப்பட்டுள்ளது. அனைவரின் ஒப்பனையிலும் 13 வருட முதிர்ச்சி காட்டப்படவேண்டும். திருமுருகன் கட்டில் அருகில் சேலைன் பொருத்திய படி அதன் அருகில் இரு தாதியர் நிற்கின்றனர். ராகவன் வைத்திய உடையில் ஸ்டெதஸ்கோப்பை அணிந்தபடி திரு முருகனை சோதித்துக் கொண்டிருக்கிறான். மேலே ICU அவசர சிகிச்சைப்பிரிவு என்ற பெயர்ப்பலகை தொங்கவிடப்பட்டுள்ளது. கட்டிலிற்கு முன்னால் ஒரு கதவு போன்ற அமைப்பு செய்யப்பட்டுள்ளது. கதவின் வெளிப் புறத்தில் மற்றய அனைவரும் கதவின் ஊடாக அவதானித்தபடி கவலையுடன் நின்று கொண்டிருக்கின்றனர்.
கனகரத்தினம் :
(கவிதாவைப் பார்த்து) அக்கா கவலைப்படாதே மச்சானிற்கு ஒன்றும் நடக்காது ராகவன் எல்லாத்தையும் பாத்துக்குவான்

Page 29
28
இடம் நேரம்
நகல்
காட்சி: 5
: ராகவனின் வீடு
: மாலை 5.00மணி
பாத்திரங்கள் : திருமுருகன், மாலதி, கனகரத்தினம், ராகவன்,
ரஞ்சனி
மேடையமைப்பு: பணக்கார வீட்டின் வரவேற்பறையில் ராகவன் பத்திரிகை வாசித்துக்கொண்டிருக்க, ரஞ்சனியும் மாலதியும் கதைத்துக் கொண்டிருக்க அழைப்புமணி அடிக்கின்றது
ரஞ்சனி
ராகவன்
திருமுருகன்
கவிதா
கனகரத்தினம்
(கதவைத்திறந்து) ஆ. வாங்க. வாங்க. உள்ளே வாங்க.
(திருமுருகன். கவிதா, சுவேதா, லட்சுமி, ரதி உள்வருதல்) அப்பா, அம்மா, அண்ணா எல்லோரும் ஓடி வாங்க. மாமா. உங்களுக்கு நல்ல சுகமா..? இப்ப ஒரு பிரச்சினையும் இல்லத்தானே..! (ரஞ்சனி பெருங்குரலுடன் சத்தமிடுகிறாள். அங்கு வருகின்ற ராகவனும், மாலதியும், கனகரத்தினமும் எல்லோரையும் உள்ளே அழைத்துச் சென்று உட்கார வைக்கின்றனர்)
எப்படி மாமா?. எல்லா டப்லற்ஸையும் (tablets) மறக்காம
போடlங்களா..? எதுக்கும் டென்சன் (tension) ஆகாதீங்க. மனசையும் உடம்பையும் றிலக்சா (relax) வெச்சுகிங்க. தென் u GSldi) is 626) 60) y' (then you will be all right) ராகவா. ஒன்டகால்ல விழுந்து மன்னிப்பு கேட்டாத் தான் நான் செஞ்ச பாவத்துக்கும் கெடுதிக்கும் கொஞ்சமாவது விமோச னம் கிடைக்கும். உன்ட முகத்தைப் பார்க்க எனக்கு கூச்சமா இருக்குப்பா..! எவ்வளவு வரிசமா ஒங்களப் பிரிச்சுவைச்சிட்டன். சே. என்ன நெனச்சா எனக்கே அசிங்கமா இருக்கு. பாத்தியா விதிய. யார நான் வீட்டைவிட்டு துரத்தினனோ அந்த மனிசன்ட கால்ல விழ வைச்சிருக்கு
இப்ப அழுது என்ன செய்ய. ? படிச்சவன் பணக்காரன் எண்டத
மட்டும் பாத்து ஒரு குடிகாரனை சுவேதாக்கு கட்டி வெச்சாரு. அவனும் கலியாணம் செய்து ஒரு வருசத்தில செத்துட்டான். இருந்த எல்லா சொத்தையும் சீதனமா அவனுக்கே எழுதிக் குடுத்தாச்சு.அவனும் குடிச்சுக் குடிச்சே அழிச்சுப்போட்டான். ஆனா என்ட தம்பி பிள்ளையளை அன்பு காட்டி வளர்த்தான். இப்ப பாருங்க. ஒரு பிள்ளை டொக்டர். ஒரு பிள்ளை டீச்சர் பாக்கவே எவளவு சந்தோசமாயிருக்கு
: அக்கா! எதுக்கு இப்ப பழைய கதை? அவரே ஏற்கெனவே
நொந்து போய் கெடக்கார்.

கவிதா
ராகவன்
திருமுருகன்
ராகவன்
திருமுருகன்
ராகவன்
ஒரு பின்னம் முழுமையடைகின்றது 29
இல்ல ரத்தினம். நீ என்னைத் தடுக்காத. நான் கதைக்கணும்.
எத்தன வருஷம் எவ்வளவு அடிய, ஏச்ச, திட்ட, வேதனையைத் தாங்கிட்டு இருந்திருப்பன். நம்மட அம்மா செத்ததுக்காவது என்ன இங்க வர விட்டாரா..? நான் எப்படித் துடிச்சிருப்பன். பொம்பிளைப் பிள்ளையன் மூணைப் பெத்திட்டன் எண்டு இவர்ட வாயால நான் பட்ட ஏச்ச மறக்க முடியுமா..?
எல்லா ஆம்பிளையஞம் ஒரு விஷயத்தைத் தெரிஞ்சுக்க
வேணும். பெண் பிள்ளைகள் பிறந்தா உங்கட மனைவிமாருக்கு ஏசுறதுக்கு முதல் அதுக்கு காரணம் யாரெண்டு உங்கள் யாருக்கும் விளங்கிறதில்லை. அதுக்கு முதல் காரணம் இறைவனின் நாட்டம். அதாவது ஆம்பிளையளைக் கொண்டு தான் இறைவன் தான் நாடிய குழந்தையைக் கொடுக்கிறான். பெண் என்பதை XX என்கிற இரண்டு நிறமூர்த்தங்களும் ஆண் என்பதை XYஎன்கிற இரண்டு நிறமூர்த்தங்களும் தான் தீர்மானிக்குது. அதாவது ஒரு பெண்ணில் இருந்து எப்போதும் X என்கிற நிறமூர்த்தம் தான் பெறப்படும். அது ஆணின் X நிறமூர்த்தத்துடன் சேர்ந்தால் வாற குழந்தை பெண்ணாகவும், ஆணின் Y நிறமூர்த்தத்துடன் சேர்ந்தால் வாற குழந்தை ஆணாகவும் இருக்கும். சோ (so) ஆண்களின்ர நிறமூர்த்தம் தான் குழந்தை ஆணா பெண்ணா எண்டதை தீர்மானிக்குது. புரியுது. இப்பதான் எல்லாம் விளங்குது. ராகவா எனக்கு நீ ஒரு உதவி செய்வியா..?
சொல்லுங்க . என்னால முடியும் எண்டா கட்டாயம் செய்றன்.
சுவேதா இவ்வளவு சின்ன வயசில விதவையாயிட்டா. லட்சு
மிக்காவது உன்னைப்போல ஒரு நல்லவனாகப் பாத்து கல்யாணம் செய்து வைச்சா நான் செத்தாலும் கவலப்பட மாட்டன். நீயே லட்சுமியை கலியாணம் செய்றியா..?
என்ன மாமா நீங்க..? நான் லட்சுமிய ஒரு நாளும் வேறை ஆளா
நினைக்கிறதில்லை. ரஞ்சனி எனக்கு எப்பிடிதங்கச்சியோ அதே மாதிரித்தான் இவங்க மூணுபேரையும் நினைக்கிறன். நீங்க இப்ப சொன்ன விசயம் எனக்கு மட்டுமில்ல எல்லாருக்குமே அதிர்ச் சியாத்தான் இருக்கும்.ஒரே குடும்பத்தில திருமணம் செய்யிறது பிறகு வரப்போற அடுத்த சந்ததிக்கு பல Genetic Problems ஐ தரும். பயப்படாதீங்க மாமா என்னோட வேலை பார்க்கிற ஒரு டொக்டர் நண்பன் இருக்கிறான். ஒழுக்கமான மரியாதையான வன். அவன் நிறையதரம் லட்சுமியைப்பற்றி என்னிடம் விசாரிச் சும் இருக்கான். அவனை லட்சுமிக்குப் பேசி முடிச்சிடலாம்

Page 30
30 நகல்
தானே. அப்படியே சுவேதாக்கும் நான் ஒரு நல்ல வேலைக்கு ஏற்பாடு செய்ய முயற்சி செய்கிறேன். அப்பதான் அவளின் கவலைகள் அவள மறக்க கூடிய மாதிரி இருக்கும். என்ன லட்சுமி உனக்கு ஓகே யா..? (லட்சுமி நாணத்துடன் தலைகுனிகிறான்) மாலதி மச்சாள் நானும் உங்களிட்ட கனனாளா மன்னிப்பு கேட்கனும் எண்டு துடிச்சிட்டிருந்தன். எங்கட அம்மா உயிரோட இருக்கேக்கை உங்களைப் பற்றி நிறையத் தடவை பிழையா ஏசியிருக்கா. ஆனா உங்கட நல்ல குணத்தைப்பற்றி நான் போன வருஷம் தான் தெரிஞ்சுக்கிட்டன். கனகரத்தினம் (ஆச்சரியமாக) என்ன மாலதி சொல்லுறாய்.? மாலதி அதாங்க என்தங்கச்சியிண்டகலியாணத்த எப்பிடி நடத்துறதெண்டு அம்மாதவிச்சிட்டு இருந்திருக்கிறாங்க. குடுத்துச் செய்ய சீதனமும் அம்மாட்ட இருக்கேலை. நம்மட்ட வந்து கேட்கிறதுக்கும் அவங் களுக்கு வெட்கமா இருந்திருக்குது. அந்த நேரம் அவதான் நகைகளுக்கு ஒழுங்கு பண்ணியிருக்கிறா அதுவும் எந்தப் பொறுப்புமில்லாமல் இந்தப் பெருந் தன்மைய மறக்கேலுமா..? (கண்களில் கண்ணீர் மல்க கவிதாவைக் கட்டி அணைக்கிறாள்.) ராகவன் லட்சுமி. இது நல்ல சிற்றுவேசன். (situation) இதுக்கு ஏற்ற மாதிரி
ஒரு கவிதை சொல்லன் லட்சுமி இல்ல ராகவன். அந்த கறுப்பு நாளுக்குப் பிறகு நான் கவிதையே
எழுதுகிறதில்லை. எல்லாம் அப்பவே மரத்துப் போச்சு. ரதி ஆனா. நான் கவிதை எழுத அன்றுதான் ஸ்ராட் பண்ணினன்.
எல்லாரும் கேளுங்க
அன்பு சாதனைக்குக் கை கொடுக்கும் இரு விழிகளில் கண்ணிரா..? இங்கே அத்தனை உள்ளங்களும் தீப்பிடிக்கும். மயிர்க்கொட்டியைக் கூடச் சபிக்க வேண்டாம் வானில் வட்டமிடும் பட்டாம் பூச்சியாய் அது மாறும். நிச்சயம் உரு மாறும் ஆம் இன்று ஒரு பின்னம் முழுமையடைகிறது (அனைவரும் வரிசையாக எழுந்து நின்று கைதட்டுகிறார்கள்)

காட்டில் ஒரு களியாட்டம் (சிறுவர் நாடகம்)
பிரதியாக்கம் திரு.கனக மகேந்திரா
பாத்திரங்கள்
நரி
முயல் பன்றி
Longit
Loulio
சிங்கம்
கழுதை குரங்கு 1 குரங்கு 11
. LoJLfb I
. LoJLib III
1.
2
. Loyib III
13. Loyib IV
(மாணவர்கள் இருபாலாரும் கைதட்டி கரடி ஆடிப்பாடியவாறு சபையில் இருந்து
மேடையை நோக்கி வருதல் ).
பாட்டு தந்த னானே தந்த னானே தானே னானே னா தந்த னானே தந்த னானே தானே னானே னா
தந்த னானே தந்த னானே தானே னானேனா தந்த னானே தந்த னானே தானே னானே னா
(மேடையில் ஏறி வட்டமாக ஆடுதல்)

Page 31
32 நகல்
சிறுவர் நாங்கள் ஒன்றாய்க் கூடி ஆடிடுவோமே
ஆடிப் பாடி நன்றாய்க் கூடி மகிழ்ந்திடுவோமே
தேடித் தேடி நாடகங்கள் நடித்திடுவோமே
ஆடிப்பாடிக் கூடி விளையாடிக் கற்போமே (சிறுவர் நாங்கள்)
(நடுவில் ஒருவர் முன்வந்து)
மாந்தர் 1 போதும் நிறுத்துங்கள்! இண்டைக்கு நாங்கள் ஒரு நாடகம்
நடிப்பம்.
எல்லோரும் என்ன நாடகமோ! (தமக்குள் குதூகலித்தவாறு) நாடகமாம் நாடகம்!! இண்டைக்கு நாடகமெடி இண்டைக்கு நாடகமெடி!.
மாந்தர் 11 அப்ப நான் தான் ராஜா!
LDTsög5j III நான் தான் மந்திரி.
மாந்தர் 1 லூசுகள். நெடுக உதையே நடிக்கிறது
மாந்தர் IV அப்ப கள்ளனும் பொலிசும்
மாந்தர் II அது அந்தக் காலத்த நாடகமெல்லோ.
மாந்தர் III அப்ப என்ன நாடகம் நடிக்கிறது.
மாந்தர் 1 அதுவோ அது சஸ்பென்ஸ்
DTb5Ij III :༤༡ ... ... ... ... - , எனக்குத் தெரியும். எனக்குத் தெரியும்
மாந்தர் III அப்ப சொல்லு பார்ப்பம்.
மாந்தர் 11 அப்ப தான் சஸ்பென்ஸ் நாடகம்.
மாந்தர் 1 இல்லை.இல்லை எல்லோரும் இங்கை வாருங்கோ
(காதுக்கை கதைக்கினம் சந்தோசத்தோடை தலையாட்டுகினம். பாத்திரங்களையும் பங்கிடுகினம்)
LDMTjög5j III அப்ப நாடகத்துக்கு என்ன பெயர் வைப்பம் மாந்தர் 1 (யோசித்து விட்டு) காட்டில் ஒரு களியாட்டம்' சரி
ஆயத்தப்படுத்துங்கோ.
(மேடையிலேயே உடுப்பு மாற்றி ஆயத்தப்படுத்தல்) எல்லோரும் ஆடி ஆடி எல்லோர் வாயிலும்
தொந்தனத் தோம் தெய் தெய்
தொந்தனத் தோம் தெய் தெய்
தொந்தனத் தோம் தெய் தெய் (நாடகம் ஆரம்பம் நரி, பன்றி, மான், முயல், மயில், குரங்கு, மரங்கள் ஒவ்வொருவரும் பாத்திர வெளிப்பாட்டுடன் அசைந்து அசைந்து வருதல் மரங்கள் ஆடிக்கொண்டு நிற்றல்)

குரங்கு
நரி
шопт6йт
முயல்
நரி
குரங்கு
குரங்கு
பன்றி
முயல்
60TחםL
கழுதை
பன்றி
நரி
பன்றி
நரி
கழுதை
காட்டில் ஒரு களியாட்டம் 33
(மைக்கில் தட்டிப் பார்த்து விட்டு) அனைவருக்கும் வணக்கம் எல்லாரும் இஞ்சை வந்திட்டியளோ?
நாகரிக காலம் வானத்தைத் தொடும் வளர்ச்சி உலகமே இப்ப
எங்கடை உள்ளங்கைக்கை வந்திட்டுது.
மனிதர் வாழும் எல்லா நாடுகளிலும் இப்ப மக்களாட்சி
நடக்குது.
ஆனால் நாங்கள் மட்டும் இன்னும் அந்தப் பரம்பரை ஆட்சியின்
கீழ் தினமும் அழிக்கப்பட்டு.
உதுக்கொரு முடிவு கட்டத்தான் இன்று அந்த மகா நாட்டையே
கூட்டியிருக்கிறம்.
உருப்பட்டாப் போலை தான். உது ஒண்டும் சரிப்பட்டுவராது.
(வெடிச்சத்தம். எல்லோரும் ஓடிப் பதுங்குகிறார்கள். குரங்கு ஓடிவந்து நளினமாக) மனிதர் வாழும் எல்லா நாடுகளிலும் இப்ப(நக்கலாக நெளிந்து நையாண்டி செய்து விட்டு) வெடிச் சத்தம் ஒய்(ஓடிப்பதுங்குதல்) (பன்றி வெளியே வரல்)
இப்பிடி எத்தினை நாளா நாங்கள் எத்தினை காடு மாறிட்டம்.
இனி எங்கை போறது. அவையின்ரைசண்டையாலைநாங்களெல்லே
ஒவ்வொரு நாளும் செத்து அழியிறம்.
! நீ ஒரு சுயநலக் காரன். இந்த அப்பாவிச் சனங்களும் பாவம்
தானே! மூட்டை முடிச்சுகளோடை.
குழந்தை குட்டிகளையும் காவிக்கொண்டு அகதிமுகாம் காடு
கரம்பை எண்டு அலைஞ்சு காயுதுகள் எல்லே.
கழுதையார் ஏதோ தான் தான் அதுகளையும் காவின மாதிரி
எல்லே சொல்லுறார் உவையும் எங்களைக் கொண்டு திண்டவை தானே
எங்களை மிருகங்கள் மிருகங்கள் எண்டு கிண்டல் பண்ணுறவை
ଗtଗାଁ) (ରା).
எங்கடை சவங்கள் காட்டுக்கை தான் கிடந்து உழுத்து நாறும்.
உந்த மனிசற்றை சவங்கள் தெருத் தெருவாய் எல்லே
ஆறறிவு படைச்சவை எல்லே.
உப்பிடி எல்லாம் கதையாதையுங்கோ இன்னா செய்தாரை
எதிரியையும். நேசி.
(சிங்கம் உறுமும் சத்தம் கேட்கிறது. எல்லோரும் ஓடிப் பதுங்குகினம் குரங்கு ஓடி
வந்து)

Page 32
54
குரங்கு
நகல்
தான் தனியே போகமாட்டாத மூஞ்சூறு விளக்கு மாத்தையும்
காவிக் கொண்டு போகுதாம்
(ஓடிப் பதுங்குதல்) (சிங்கம் அட்டகாசத்தோடு ஆடிக்கொண்டு வரல்)
சிங்கம்
முயல்
மயில்
முயல்
குரங்கு
நரி
ז6%חLD
குரங்கு பன்றி
நான் தான் ராசா. நானே ராசா
எட்டுத் திக்கும் நானே ராசா டேய் கிட்ட யாரும் வர மாட்டார். அவர் எட்டி ஒடவும் விட மாட்டேன்
(நான் தான் ) மானும் மரையும் மயிலும் முயலும் நரியும் பண்டியும் கழுதை குரங்கும் விட மாட்டேன் தப்ப நான்.விட மாட்டேன் நான் தான் ராசா. நானே ராசா
டேய். (ஓடுதல்)
இதுக்கொரு முடிவே இல்லையா கோவிக்காதையுங்கோ. எங்களுக்கு ஒற்றுமையில்லை முதலிலே
நாங்கள் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சுத் தின்னுறதை நிப்பாட்ட வேணும்.
ஓம். எங்களுக்கை ஒற்றுமைவேணும். உந்த மனிசரைப் போல
இருக்கக்கூடாது.
இப்ப எல்லாரும் கதைப்பியள். அவர் சிங்கராசா வைக்கண்ட
உடனை எல்லோருக்கும் வயித்தாலை போயிடும். சும்மா வெடிக்காதையுங்கோ. உங்கடை வண்டவாளத்தை இப்பதானே கண்டனாங்கள். (கிண்டலாக) (முயலிடம் போய்) முயலார் பாய்ஞ்சிடுவார் (பன்றியிடம் போய்) பன்றியார் பதுங்கியிடுவார் (மானிடம் போய்) மானார் மாயமாய் மறைந்திடுவார் (நரியிடம் போய்) நரியார் பந்தம் பிடிப்பார்
ஒமோம்! குரங்கார் மரங்களிலை தாவியிடுவார்.
நான் சொல்லறதைக் கொஞ்சம் கேளுங்கோ. என்னட்டை ஒரு
நல்ல திட்டம் இருக்கு
கண்ணிவெடி கிடி வைக்கப் போறார் போலக் கிடக்கு (அங்கும் இங்கும் பார்த்துவிட்டு) கொஞ்சம் மெதுவாய்க்
கதையுங்கோ. இதுக்கையும் உளவுப் படை இருக்கும்
(சைகையோடை எல்லோரையும் அழைத்து ரகசியமாச் சொல்ல எல்லாரும்
தலையாட்டுகினம். குரங்கிடமும் முயலிடமும் கேட்க)

முயல்
குரங்கு
பன்றி
ז6bחLD
எல்லோரும் பாடல்
காட்டில் ஒரு களியாட்டம் 35
ஐயோ! நான் மாட்டன். நான் மாட்டன். (ஒடல்)
ஐயோ! நானும் மாட்டன். நானும் மாட்டன்.
(ஒடல்)
சரி அப்ப எல்லாரும். கொஞ்சம் கொஞ்சமாய்ச் சாவம்.
அப்பிடித்தானே
சரி. எல்லோரும் வாங்கோ.
(நரி முயல், முயல் ஆடிக்கொண்ட போதல்) (எல்லோரையும் சமாதானப்படுத்திய பின்பு)
சிங்க ராசாவே எங்கள் தங்க ராசாவே
திங்கள் போல ஒளிபரப்பும் தங்க ராசாவே
மஞ்சள் நிறமும் மதியும் கொண்ட மன்மத ராசாவே
தங்க ஒளியும் தயவும் கொண்ட தர்ம ராசாவே
(சிங்க ராசாவே.)
(சிங்கம் வருகின்றது)
சிங்கம்
குரங்கு
டேய் எவண்டா என்முன்னே வந்து நிற்பவன் இங்கே
(கொப்பில் இருந்தபடியே). மகாராசா! நாங்கள் எங்கடை
காட்டிலை ஒரு பெரிய களியாட்ட விழா நடாத்தப் போறம். அதிலை மயிலாற்றை நடனமும் நடக்க இருக்கு.
(ஒவ்வொருவராக வந்து)
குரங்கு நரி
மான்
குரங்கு
கழுதை
குரங்கு நரி
சிங்கம்
நீங்கள் தான் சீவ் கெஸ்ட்
: நீங்கள்தான் பிரதம விருந்தினர். மாட்டன் எண்டு சொல்லாமல்
நீங்கள் கட்டாயம் வரவேணும் மகராசா!.
எங்கடை மகராசா எங்கடை பங்சனுக்கு வராமல் மாலை மரியாதை எல்லாம் ஒழுங்கு செய்திருக்கிறம் நாங்கள் எல்லோரும் வருவம். விழாமுடிய நீங்கள் விரும்பிய
இறைச்சி, சாப்பாடு எல்லாம் நிறைய ஆயத்தப்படுத்தி யிருக்கிறம்
! ஆட்டமும் பாட்டமும் அந்தமாதிரி இருக்கும்
நீங்களும் நல்லாய் ஆடுவியள் தானே ராசா! நிகழ்ச்சி நிரலிலை
அதையும் சேர்க்க வேணும் எல்லோ. (எழுதுவது போல பாவனை)
ம். எனக்கு ஆட்டம் எண்டால் நல்லாய்ப் பிடிக்கும். அதிலும்
மயிலாட்டம் எண்டால் நிறைய ஆசை. (வாயைச் சூப்புதல்)

Page 33
36
எல்லோரும்
சிங்கம்
எல்லோரும்
நரி
குரங்கு
சிங்கம்
எல்லோரும்
நகல்
நானும் சேர்ந்து ஆடுவன். (யோசித்து விட்டு) அதுசரி அங்கை பழைய கிணறு ஏதும் இருக்கே
: 6J6ा TirgIा!
நீங்கள் ஏதேனும் பிளானோடைதான் வந்திருப்பியள். நரியும்
முயலும் சும்மா வரமாட்டினம். ஏன்ரை நிழலைக் காட்டி என்னையும் அந்தக் கிணத்துக்கை தள்ளி விழுத்திக் குளோஸ் பண்ணுற பிளானோ.
அது முந்தின கதையெல்லோ! நாங்கள் எங்கடை மகாராசாவை
அப்பிடிச் செய்வமே.
முந்தி ஏமாந்த சிங்கராசாவே நீங்கள். இப்ப நீங்கள் உலகத்தை
நல்லாய்ப் படிச்சிருப்பியள் தானே. உலகமும் நல்லாய் வளர்ந்திட்டுது தானே.
! இப்ப நீங்கள் செரியான புத்திசாலியெல்லோ.
சரி. அங்கை பொடிகாட் பாதுகாப்பு ஏற்பாடுகள் எல்லாம்
ஒழுங்காய்ச் செய்து வைக்க வேணும். சரியான நேரத்துக்கு நான் வாறன்.
: நன்றி. அப்ப நாங்கள் போயிட்டு வரப் போறம். காத்துக்கொண்டு
இருப்பம் மகராசா. (எல்லோரும் போதல்)
(காட்டுக்கை ஒடி ஒடிச்சோடிக்கினம். காவடி மயிலாட்டம் ஏனைய நடனங்களுடன் குடைபிடித்து சிங்கத்தார் மாலை போட்டு அழைத்து வரப்படுகிறார். எல்லோரும் மாலை சலங்கையுடன் ஆடுகின்றார்கள். ஆசனத்தில் இருந்த சிங்கமும் எழும்பி ஆடுகிறார். கரகோசத்துடன் வானரப்படை இருமருங்கிலும் நிற்கின்றன. சிறிது
நேரத்தில்
சிங்கம்
நரி
டேய் நரிப்பயலே. நீங்கள் மட்டும் பெரிய மாலை போட்
டுக்கொண்டு ஆடுறியள். இந்த ராசாவுக்கு சின்ன மாலை என்ன?
(பெரிய மாலை போடல் மணியுடன்) இந்தாங்க ராசா உங்களுக்கு
இல்லாத மாலையா என்ன?. பெரிய மாலை அதுவும் மணி
dog).
(தொடர்ந்தும் ஆடல் . மணி ஒலிக்கிறது)
சிங்கம்
குரங்கு
டேய் குரங்குப் பயலே. உந்த மயிலுக்கு இரண்டு காலிலையும்
சலங்கை கட்டியிருக்கிறியள். கூட ஆடுற எனக்கு ஒருகாலிலை கூட சலங்கை இல்லை. நான் என்னண்டு தாளக் கட்டோடை
ஆடுறது.
(சலங்கையைக் கட்டுதல்) உங்களுக்கு இல்லாததா மகராசா

காட்டில் ஒரு களியாட்டம் 37
(தொடர்ந்தும் ஆட்டம் நடக்கிறது)
சிங்கம் : டேய் எனக்குப் பசிக்குது. எங்கை சாப்பாடு. . பசியிலை
சிறுகுடலைப் பெருங்குடல் தின்னுது. குரங்கு (மற்றவர்களைப் பார்த்து) நாங்கள் ஆடுறம். நீங்கள் எல்லாரும்
போய் மகாராசாவுக்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு வாருங்கோ (எல்லோரும் போக சிங்கமும் மயிலும் குரங்கும் மட்டும் ஆடல்)
நரி (கிண்டலாக) தேவையான எல்லாரும் இஞ்சை நிக்கிறம் எண்டாப்போல ராசா சாப்பிடாமலே வந்திட்டார் போல. (ஓடுதல்)
குரங்கு போனவையை இன்னும் காணேலை. நீங்கள் ஆடுங்கோ நான்
போய்ப் பாத்துக் கொண்டு வாறன்.
நரி இண்டைக்குராசா எங்கடை வலையிலை ஒழுங்காய் விழுந்திட்டார். (சொல்லிவிட்டு ஓடுதல். சிங்கம் நாலு மூலையும் ஆடி ஆடித் தேடுதல்)
சிங்கம் இந்தச் சின்னஞ் சிறிசுகள் எல்லாம் சேர்ந்து என்னை மடக்கிப் போட்டுதுகள். (இந்த மணிச் சத்தம் கேட்ட உடனை எல்லாம் ஓடி ஒழிக்குதுகள். ஐயோ. பசி.பசி. இந்த மணியும் சலங்கையும் இருக்கும் வரைக்கும் நானும் ஓட ஓட அதுகளும் ஓடி ஓடி ஒழிக்குதுகள். இனி எனக்குச் சாப்பாடு கிடையாது. பசி.பசி. (சுருண்டு விழுதல்)
எல்லோரும் : (ஆடிப் பாடிக் கொண்டு வட்டமாக வருதல்) ஏச்சுப் போட்டோமே. நாங்கள் ஏச்சுப் போட்டோமே.ஜெயிச்சுப் போட்டோமே. நாங்கள் ஜெயிச்சுசுப் போட்டோமே. (வரிசையில் நின்றவாறு)
ஒருவர் (முன்வந்து) அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு மற்றவர் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
மற்றவர் புத்திமான் பலவான்
இருவர் (சிங்கத்தை எழுப்புதல்). நாடகம் முடிஞ்சுது. சிங்கமும்
நித்திரையாய்ப் போச்சு, எல்லோரும் (காய் எனச்சிரிதல்) அனைவரும் முன்வந்து நன்றி! வணக்கம்!!
(அனைவரும் பாடிக்கொண்டு மேடையால் இறங்கிச் செல்லல்)

Page 34
இளங்கோவின் துறவு
பிரதியாக்கம் திரு. சுப்பிரமணியம் சிவலிங்கம்
பாத்திரங்கள்
மன்னவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், அமைச்சர் அழும்பில்வேள், மகாராணி நற்சோதனை, இளவரசர் இளங்கோ, இளவரசர் செங்குட்டுவன், ராஐசோதிடர், நலங்கிள்ளி, மாதவி,
வயந்தமாலை,
1.
O
புலவர் சாத்தனார்,
1
வாயிற்காவலன்,
1.
2
ஐம்பெருங்குழு உறுப்பினர்கள்,
3
எண்பேராயத்தார்கள்.
முன்னுரை
சேரமன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் மூத்த மகனின் பெயர் செங்குட்டுவன். இளையமகனின் பெயர் இளங்கோ. இளவரசன் இளங்கோ அரசபோகத்தை வெறுத்து, துறவறம் மேற்கொண்டு சமணத்தறவியாக மாறினார். இதனால் இளங்கோவடிகள் எனப்பெயர் பெற்றார். சிலப்பதிகாரத்தைப் படைத்து உலகிற்கு அளித்தார். இளங் கோவடிகள் அவரது நெருங்கிய நண்பரான புலவர் சாத்தனார் என்பவர் கண்ணகியின் கதையைக்கூற அதைக்கேட்டு இளங்கோவடிகள்
தேன் சொட்டும் தேன்தமிழில் சிலப்பதிகாரத்தைப் படைத்தார். ஆனால் அரச
 

இளங்கோவின் துறவு 39
போகத்தை அவர் ஏன் வெறுத்து துறவறத்தை மேற்கொண்டார் என்பதற்கு உறுதியான காரணம் இன்னும் நமக்குக் கிடைக்கவில்லை. எனவே கற்பனை கலந்த இலக்கிய நாடகமாக இந்த இலக்கிய கற்பனை நாடகத்தை ஆக்கியுள்ளேன்.
இடம்
asmi" &: 1
மன்னவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் அரண்மனை
பாத்திரங்கள் : மன்னவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்,
அமைச்சர்அழும்பில்வேள், இளவரசர் இளங்கோ இளவரசர் செங்குட்டுவன், ராஜசோதிடர், வாயிற் காவலன், மகாராணிநற்சோதனை, ஐம்பெருங்குழு உறுப்பினர்கள் எண்பேராயத்தார்கள்
(வஞ்சியில் பேரத்தாணி மண்டபத்தில் மன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் அரசியுடன் கொலுவிருக்கின்றான். உடன் இளவரசர் இளங்கோ, இளவரசர் செங்குட்டுவன், அமைச்சர் அழும்பில்வேள் பேசுகிறார் )
அமைச்சர்அழு வஞ்சியில் பேரத்தாணி மண்டபத்தில் கொலு வீற்றி ருக்கும்
மாமன்னர் மன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் அவர்களே! ஈருடலும் ஒருயிராய் அமைந்திருக்கும் மகாராணி நற்சோதனை அவர்களே! இள வரசர் செங்குட்டுவன், இளங்கோ அவர்களே அனை வருக்கும் அமைச்சர் அழும்பில்வேள் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்.
ஐம்பெருங்குழு உறுப்பினர்களும் எண்பேராயத்தார்களும் ஏனையோரும் அலங் கரிக்கும் இந்த அரச சபையில் நின்று பேசுவதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
நாட்டில் நீதி நிலைத்திட வீட்டில் செல்வம் செழித்திட. ஏட்டில் கல்வி வளர்ந்திட போரில் வீரம் தெறித்திட திக்கெட்டும் புகழ்பரப்பி நல்லாட்சி செய்திடும் பார் வேந்தே!. தங்களைப் பார்ப்பதற்கு இன்று ஒரு முக்கிய பிரமுகர் வந்துள்ளார் எனும் செய்தியை தங்களிடம் பணிவுடன் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
மன்னன் நெடு
அழும்பில்வேள்:
நெடுஞ்சேர
வாயிற்காவலன் :
நெடுஞ்சேர
யார் அந்தப் பிரமுகர் அமைச்சர் அழும்பில்வேள் அவர்களே!
சோதிடக் கலையில் கைதேர்ந்த மாளுவநாட்டின் ராஐசோதிடர்
மன்னா.
அப்படியா மிக்க மகிழ்ச்சி (வாயிற்காவலன் உள்ளே
வருகிறான்) மாமன்னர் பெருந்தகையே வணக்கம். அவையை நாடி மாளுவநாட்டின் ராஐசோதிடர் வந்துள்ளார்
அவரை உரிய மரியாதையுடன் உள்ளே அழைத்து வா

Page 35
40
நகல்
(வாயிற்காவலன் வெளியே போகிறான். ராஜ சோதிடர் உள்ளே வருகிறார்)
வருக! வருக!! ராஐசோதிடரே!!!. தங்கள் வரவு நல்வரவாகுக. இதோ ஆசனத்தில் அமருங்கள். . தாங்கள் வந்த காரணம் என்னவோ..?
ராஐசோதிடர்
நெடுஞ்சேர
ராஐசோதிடர்
நெடுஞ்சேர
ராஐசோதிடர்
நெடுஞ்சேர
வாழி சேரர் திலகமே. தமிழகம் முழுவதையும் தன் குடையின்
கீழ் கொண்டுவந்ததுடன் நில்லாது வட குலத்திலும் கொடி போற்ற வேந்தே வாழ்க! யவன அரசைப் போரில் வென்று அவர் தலையில் நெய்யைப் பெய்து கைகளைக் கட்டி சிறை பிடித்து வந்து அவருடைய செல்வங்களை எல்லாம் வஞ்சி மக்களுக்கு வாரி வழங்கிய வள்ளலேவாழ்க!. வாள் பட்டால் கூர்மழுங்கும் வலிமை மிக்க மார்பகத்தை பொன்மாலைகள் அலங்கரிக்க பாழ்பட்டார் பகைவர் எனக்கூறும் கண்கள் பளபளக்க, தோள் தட்டிக் குலம் காக்கும் சேர மன்னா!. முன்பொரு முறை வட நாட்டாரை வென்று வந்தீர்கள் அல்லவா. அதேபோல் மற்றுமோர் வடபுல வெற்றிவிஜயம் விரைவில் நடை பெறப்போகின்றது என்பதை அறியத்தரவே இங்கு வந்துள்ளேன் அரசே! (மகிழ்ச்சியுடன்) அப்படியா சோதிடரே.! மிக்க மகிழ்ச்சி. நல்ல செய்தி உரைத்தீர்கள். எனது வீரதீரச் செயல்களை உலகறியச் செய்ய இன்னுமோர் சந்தர்ப்பம். அப் போர் எப்போது நடைபெறும் கணியர் பெருமானே..?
அரசே அந்த வீரப்போர் தங்கள் காலத்தில் நடைபெறப்போவ
தில்லை. தங்களுக்குப்பின் முடிசூடப் போகும் இளவரசர் இளங்கோவின் காலத்தில் தான் நடைபெறப்போகின்றது.
(உரத்துச்சிரித்து) தவறு சோதிடரே!. எனக்குப்பின் முடிசூட
இருப்பவன் எனது மூத்த மகன் செங்குட்டுவனே இளையவன் இளங்கோ அல்ல. தந்தைக்குப் பின் மூத்த மகன் முடிசூடுவது தான் மரபு அல்லவா?
இருக்கலாம் மன்னவா. ஆனால் நான் சொல்லுவது விதி.
மரபையும் பாரம்பரியத்தையும் நிச்சயம் விதி மீறிவிடும் இளங்கோவின் முகத்தைப் பார்த்தே சொல்லுகின்றேன். இவர்தான் வருங்கால சேரமன்னன் என்று. இளவரசர் இளங்கோவே! தங்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள் அருள்க. அரசே அந்த வீரப்போர் தங்கள் காலத்தில் நடைபெறப்போவதில்லை. தங் களுக்கப்பின் அவாதான்
(முகமகிழ்ச்சியுடன்) அப்படியா சோதிடரே.! மிக்க மகிழ்ச்சி.
நல்ல செய்தி உரைத்தீர்கள். இளவரசர் இளங்கோவே தங்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள்.

இளங்கோ
ராஐசோதிடர்
இளங்கோ
ராஐசோதிடர்
இளங்கோ
இளங்கோவின் துறவு 41
(கடுங்கோபத்துடன்) ராஐசோதிடரே .தங்கள் நல் வாழ்த்துக்கள்
எனக்கு வேண்டியதில்லை. வீரம் விளைந்த சேர நன்னாடு இந்த நாடு. நாடிவரும் நல்லோர்க்கு நல்லதைச் செய்பவர்கள் நாங்கள். நீதிக்கும் நேர்மைக்கும் பேர்போன மாமன்னர் இந்நாட்டு மன்னர். இப்பெருந்தகைக்கு இளையமகனாகவும் என்மீது என்றென்றும் அளவுகடந்த பாசத்தைச் சொரியும் என் அருமை அண்ணன் செங்குட்டுவனுக்கு தம்பியாகவும் பிறந்தவன் தான் இந்த இளங்கோ. துரோகிகளை வேரொடும் வேரடி மண்ணோடும் அழித்தொழிக்கும் பரம்பரை எங்கள் பரம்பரை இப் பேரவையிலே வீணே என்பெயரைக் களங்கப்டுத்த வேண்டாம் ஏட்டைப்பார்த்து சோதிடம் சொல்வதில் நீங்கள் வல்லவராக இருக்கலாம். (ஏளனமாக) ஆனால் முகத்தைப்பார்த்துச் சொல்ல முற்பட்டால் நிச்சயம் கிடைப்பது தோல்வியேதான். ஆகையினால் வந்த வழியே திரும்பிப் போவது தான் தங்கள் மானத்தைக் காப்பாற்ற ஒரேவழி. சோதிடம் உண்மையானதாக இருக்கலாம். ஆனால் அனைத்து சோதிடர்களும் உண்மையுரைக்கிறார்களா என்பதை சோதிடம் பார்த் துத்தான் கூறமுடியும்.
! வருங்கால சேர மன்னா. என்னைக்கேலி செய்ய வேண்டாம்.
என் சோதிடம் என்றும் பொய்த்ததில்லை. நான் இன்று சொல்வ தெல்லாம் வல்ல ஊழ். இது நிச்சயம் நடந்தே தீரும்.
சோதிடரே. முடியும் குடியும் அறிந்திட இச்சபையில் நின்று நான்
உறுதியாகக் கூறுகிறேன். தந்தைக்குப் பின் இந்த நாட்டை நயம்பட முடிசூடி ஆளப்போகிறவன் என்னருமை அண்ணன் செங்குட்டுவனே. நான் முடியில்லாது முத்தமிழையும் ஆளப் போகிறேன். தமிழன்னையின் பொற்பாதங்களில் சிலம்பு என்னும் அணிகலனைச் சூடப் போகிறேன். மொத்தத்தில் இன்னிசை உலகையே நான் ஆட்சி செய்யப்போகிறேன். சோதிடத்தையும் ஊழையும் நான் பொய்யென்று நிரூபித்துக்காட்டத்தான் போகிறேன்.
(சிரித்தவாறு) எதிர்கால சேரமன்னா! ஊழை வெல்லும் வீண்
முயற்சியில் காலத்தை வீணடிக்க வேண்டாம். பதிலாக வட நாட்டுப் படையெடுப்புக்கான ஆயத்தங்களை இப்போதிருந்தே செய்யுங்கள். வெற்றி நிச்சயம்.
(கடும் கோபத்துடன்) சோதிடரே! எங்கள்நாட்டுக்கு விருந்தாளியாக
வந்த காரணத்தினால் நீங்கள் தப்பிப் பிழைத்தீர்கள் இல்லையேல் நடப்பதுவே வேறு. தங்கள் கற்பனைக்கு மட்டுமல்ல என்
பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு அறிந்திடுவீர் சோதிடரே.

Page 36
42
அரசிநற்சோத
நெடுஞ்சேரலா : செங்குட்டுவன் :
இளங்கோ
இடம்
நகல்
இன்றே இப்பொழுதே . உங்கள் உருப்படாத சோதிடத்தையும் விதியையும் தகர்த்து தூள்தூள் ஆக்குகின்றேன். இந்த வினாடியே அரச வாழ்க்கையையும் அரண்மனையையும் துறந்து சமணத் துறவியாக மாறுகின்றேன். எல்லோரிடம் இருந்தும் நான் விடை பெற்று அவையை விட்டு வெளியேறுகின்றேன். (இளங்கோ அவையை விட்டு வெளியேறுகிறார். சபையோ ஸ்தம்பித்து நிற்கின்றது).
மகனே நில். என்ன முடிவு செய்துவிட்டாய். ?
இளங்கோ நில். நான் சொல்வதைக்கேள். தம்பி இளங்கோ! என்கூடப் பிறந்தவன் நீ என்னை விட்டு எங்கும் போகவேண்டாம். நீதான் என் உற்ற துணை. நீ இல்லையேல் நான் இல்லை.
தங்கள் உதிரத்தைப் பாலாக்கி என்னை ஊட்டிவளர்த்தஅன்னையே!
எனக்கு ஞானத்தையும் வீரத்தையும் ஊட்டிய அருமைத்தந்தையே. என்மீது அணையாத இரத்த பாசத்தைக் காட்டும் அண்ணாவே!. என்னை மன்னித்து விடுங்கள். தமிழ் அன்னை என்னை மன் னித்து விடுங்கள். தமிழ் அன்னை என்னை அழைக் கின்றாள். நான் சென்று வருகிறேன்.
காட்சி: 2
; வஞ்சிக்குக் கிழக்கே உள்ள குணவாயிற் கோட் டத்தில் அமைந்துள்ள இளங்கோ அடிகளின் ஆச்சிரமம்
பாத்திரங்கள் : இளங்கோ அடிகள், புலவர் சாத்தனார்.
சாத்தனார்
இளங்கோ
சாத்தனார்
! வணக்கம் இளவரசர் இளங்கோ அவர்களே!. வெகுநாட்களுக்குப்
பின் குணவாயிற் கோயிற் கோட்டத்திற்கு வருகை தந்துள்ளீர்கள்.
மன்னிக்க வேண்டும் புலவர் சாத்தனாரே நீங்கள் என்னை
இளவரசர் என அழைப்பதற்கு தவறு. நான் இப்போது இளவரசர் அல்ல. துறவி இளங்கோவடிகள் என்பதை மறந்து விட வேண்டாம் எனது உத்தரியத்தை நீங்கள் கவனிக்க வில்லையா..?
மன்னிக்க வேண்டும் இளங்கோவடிகளே! அரச சபையில்
நடந்தவற்றை அறிந்து மிகவும் துயரமடைந்தேன். தங்கள் திடீர் முடிவு என்னை அதிர்ச்சியடைய வைத்தது.

இளங்கோ
சாத்தனார்
இளங்கோ
சாத்தனார்
இளங்கோ
காலம்
இடம்
இளங்கோவின் துறவு 43
நண்பர் சாத்தனாரே! நானே மகிழ்ச்சியோடிருக்கும் போது நீங்கள்
ஏன் வேதனையடைய வேண்டும்.?
அடிகளே! அண்ணன் செங்குட்டுவனுக்காக அரசபதவியைத்
துறந்தீர்கள். இதை நாடே பாராட்டுகிறது. நானும் பாராட்டுகி றேன். ஆனால் என்ன காரணத்திற் காக இல்லறத்தைத் துறந்து துறவறத்தை மேற்கொள்ள வேண்டும். தங்கள் பெற்றோரும் மற்றோரும் இதனால் அதிர்ச்சியடைந்துள்ளனரே..? அண்ணன் பாசத்தால் பரிதவித்துக் கொண்டிருக்கிறாரே. நாட்டு மக்கள் நடைப்பிணமாய் நலிந்து போயுள்ளனரே (மெளனம் சாதிக்கிறார்)
ஏன் இந்த மெளனம். கூறுங்கள் அடிகளே! உங்கள் துறவுக்கு
யார்தான் காரணம் சொல்லுங்கள்.
புலவர் சாத்தனாரே. நீங்களோ பெரும்புலவர். உணர்ச்சிகளை
ஆள்பவர். உணர்ச்சிகளால் ஆளப்படுபவர். உங்களிடமிருந்து எவரும் உணர்ச்சிகளையும் ஆதங்கங்களையும் மறைக்க முடியாதுதான். ஆனால் ஒரு வேண்டுகோள். நான் ஏன் துறவை மேற்கொண்டேன் என்ற காரணத்தை இப்போது கூறமாட்டேன். ஆனால் காலம் வரும்போது நிச்சயம் நானே முன்வந்து உங் களிடம் கூறுவேன். அப்போது நீங்களும் அதிர்ச்சி யடைவீர்கள்.
காட்சி: 3
: இளங்கோவடிகளின் அண்ணன் செங்குட்டுவன் நாட்டு மன்னனாக முடிசூடி சில ஆண்டுகளின் பின்.
குணவாயிற் கோட்டத்தில் அமைந்துள்ள இளங்கோஅடிகளின் ஆச்சிரமம்
பாத்திரங்கள் : இளங்கோ அடிகள், புலவர் சாத்தனார்
(இளங்கோவடிகள் பெருங்குருடு என்ற இசைத் தமிழ் நூலின் ஏடுகளைப் புரட்டிக் கொண்டிருக்கிறார். சாத்தனார் உள்ளே வருகிறார்).
இளங்கோ
வருக சாத்தனாரே. குணவாயிற் கோட்டத்திற்கு உங்கள் வரவு
நல்வரவாகட்டும். அண்ணன் செங்குட்டுவன் மன்னராக முடிசூடி சில ஆண்டுகள் ஆகிவிட்டனவே. ஆனால் இங்கு வருவதற்கு நேரம் இன்று தான் கிடைத்ததோ..?

Page 37
44
சாத்தனார்
இளங்கோ
சாத்தனார் இளங்கோ
சாத்தனார்
இளங்கோ
சாத்தனார்
இளங்கோ
சாத்தனார்
இளங்கோ
நகல்
மன்னிக்கவேண்டும் அடிகளே! ஓர் இலக்கிய முயற்சியில்
ஈடுபட்டுக்கொண்டிருந்ததால் அவகாசம் கிடைக்கவில்லை. ஆமாம் ஏதோ ஒரு ஏட்டைப் படித்துக் கொண்டிருந்தீர்களே. உங்களுக்கு ஏதும் இடையுறு ஏற்படுத்துகிறேனோ..?
: இல்லவே இல்லை. “பெருங்குருடு என்ற இசைத் தமிழ் நூலைப்
படித்துக் கொண்டிருந்தேன்.
பக்கத்திலும் பல ஏடுகள் காணப்படுகின்றனவே? அவையும் இசைத் தமிழ்நூல்கள் தான். அகத்தியம், பெருநாரை,
பேரிசை, சிற்றிசை, இசைமரபு என்பன அவற்றின் பெயர்கள். இந்த அரியநூல்களை அழிந்து போகாது பாதுகாத்து நமது வருங்காலசந்ததியினருக்கு வழங்குவது நமது கடமை யல்லவா?
முற்றிலும் உண்மை அடிகளே. தமிழிசைக்கு நீங்கள் செய்யும்
சேவை மகத்தானது.1
: நன்றி புலவரே. ஆமாம் பெரியாற்றங்கரைக்குச் சென்றிருந்தீர்களே.
எப்போது திரும்பினீர்கள். மன்னர் செங்குட்டுவன் முடிசூடியபின் அங்குதான் அவரை முதன்முதலாகச் சந்தித்திருப்பீர்கள் மன்னர் எப்படி இருக்கிறார்.?
ஆம் அடிகளே. அரசர் செங்குட்டுவன் இலவந்திகை வெள்ளி
மாடத்தில் தங்கி ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். நான் அங்கிருந்த போது ஒரு வியப்பான சம்பவம் நடைபெற்றது. குன்றக் குரவர்கள் வந்து திருக்குன்றத்து வேங்கை மரநிழலிலே ஒரு பெண் வந்து நின்றதாகவும் அப்போது வானுலகில் இருந்து ஒருவிமானம் இறங்கியதாகவும், அதிலிருந்த ஒரு ஆடவனுடன் அவளும் விண்ணுலகம் சென்றதாயும் கூறினார்கள்.
அப்படியா..? வியப்பான செய்தியாய் இருக்கிறதே அந்தப்பெண்
ஒரு தெய்வீகப் பிறவியாகத்தான் இருக்கவேண்டும். அந்தப் பெண்ணும் ஆடவனும் யார் என்பது தங்களுக்குத் தெரியுமா புலவரே.?
ஆம் தெரியும். அவன் பாண்டிய நாட்டைச்சேர்ந்தவன். புகார்
நகரத்து வணிகன் கோவலன். அந்தப்பெண் கோவலனுடைய மனைவி. பெயர் கண்ணகி.
(வேதனையுடன்) கோவலனின் மனைவி கண்ணகியா அவள்?
அவள் ஏன் நம் நாட்டிற்கு வந்தாள். அவளுக்கு என்ன துன்பம் நேரிட்டது புலவரே.?

சாத்தனார்
இளங்கோ
சாத்தனார்
இளங்கோ
சாத்தனார்
இளங்கோ
இளங்கோவின் துறவு 45
கோவலன் கண்ணகியைப்பற்றி தங்களுக்கு முன்பே தெரியுமா
அடிகளே..?
ஆம் தெரியும். கோவலன் ஒரு வணிகன் என்பதும் கண்ணகி
அவனின் பத்தினி என்பதும் மாதவி எனும் நாட்டியக்கணிகை அவனது காதலி என்பதும் மட்டுமே தெரியும். சாத்தனாரே அவர்களின் வரலாற்றை மேலும் அறிந்துகொள்ள நான் ஆவலாய் இருக்கிறேன். எனது ஆவலை நிறைவேற்ற முடியுமா..?
ஆம். அவர்களது துன்பியல் வரலாற்றைக்கூறுகிறேன். கேளுங்கள்.
கோவலன் என்பவன் தன் பத்தினி கண்ணகியை விட்டு பிரிந்து நாட்டியக் கணிகை மாதவியுடன் சிலகாலம் வாழ்ந்தான். அதனால் தன் செல்வம் அனைத்தையும் இழந்தான். பின்பு அவன் மாதவியை விட்டுப்பிரிந்து கண்ணகியிடம் திரும்பி வந்தான். கற்புக்கரசி கண்ணகி கோவலனை மீண்டும் ஏற்றுக்கொண்டாள். வறுமையால் கண்ணகியின் ஒற்றைக்கால் சிலம்பை விற்க கோவலன் மதுரைக்கு வந்தபோது திருட்டுக்குற்றம் சாட்டப்பட்டு பாண்டிய அரசனால் கொல்லப்பட்டான். நீதி தவறிய பாண்டியன் முன் மற்றக்கால் சிலம்புடன் சென்று தன் கணவன் கள்ளன் அல்லன் என நிரூபித்து மதுரையை எரித்தாள் மாபத்தினி கண்ணகி. யானோ அரசன் யானே கள்வன்’ எனக் கதறி பாண்டியன் உயிர் மாண்டான். கொடுங்கோல் மன்னனின் பாண்டிநாட்டைவிட்டு தங்கள் சேர நாட்டிற்கு வீர பத்தினி நடந்தே வந்தாள்.
இந்த உணர்ச்சிக் கதையை மன்னர் செங்குட்டுவனிடம்
கூறினீர்களா..?
ஆம். கூறினேன். தன் கணவனுக்குற்ற பழியைத் துடைத்து,
மதுரையை எரித்த வீரபத்தினியைப் பற்றி அறிந்ததும் அரசரும் தேவியும் மிகவும் பரவசமடைந்தனர். அதுமட்டுமல்ல அரசியாரின் வேண்டுகோளின் படிநம் நாட்டிற்கு வந்த பத்தினித் தெய்வத்திற்கு கற்கோயில் கட்ட வேண்டுமென்றும், இமயத்தில் கல் எடுத்து கங்கையில் நீராட்டி கண்ணகிக்கு சிலை எடுக்க வேண்டுமென்றும் உணர்ச்சி பெருக எடுத்துரைத்தனர்.
அப்படியா சாத்தனாரே. மிகவும் மகிழ்ச்சியான செய்தி. நம்நாட்டுத்
தாய்க்குலத்திற்கு கண்ணகியின் கற்புக்காவியம் ஒரு கலங்கரை விளக்கமாக அமைய வேண்டும்.
(அந்த நேரத்தில் மாமன்னர் செங்குட்டுவன் வாழ்க எனும் வாழ்த்தொலி ஆச்சிரமத்துக்கு வெளியே கேட்கிறது)
சாத்தனார்
ஏதோ ஒரு வாழ்த்தொலி வெளியில் கேட்கிறது. நான் பார்த்து
விட்டு வருகிறேன் அடிகளே. ஆகா! மாமன்னர் செங்குட்டுவன்

Page 38
A6
இளங்கோ
செங்குட்டுவன் :
இளங்கோ
செங்குட்டுவன் :
இளங்கோ
செங்குட்டுவன் :
சாத்தனார்
செங்குட்டுவன் :
இடம்
நகல்
தங்களைப் பார்த்து வருகிறார் அடிகளே. (மன்னர் உள்ளே வருகிறார். இளங்கோவடிகள் மன்னரைக் கட்டித் தழுவி வர வேற்கிறார்)
வாருங்கள் மன்னவா!. உங்கள் வருகை எனக்கு மட்டற்ற
மகிழ்ச்சியைத் தருகிறது. சொல்லி அனுப்பியிருந்தால் நானே தங்களைப் பார்க்க வந்திருப்பேனே.
தம்பி நலந்தானே!
ஆம் அரசே, கண்ணகியைப் பற்றி எல்லா விபரமும் புலவர்
சாத்தனார் கூறினார். தங்கள் வடபுல விஜயத்தைப் பற்றியும் அறிந்தேன். வெற்றியுடன் திரும்ப எனது வாழ்த்துக்கள் நன்றி தம்பி. பத்தினிக் கண்ணகியின் கதை எவ்வளவு உணர்ச்சி மிக்க கதை கேட்டாயா..?
ஆம் அரசே, கண்ணகியின் கதை தங்களுக்கு வீரத்தையும் எனக்கு
இலக்கிய ஆர்வத்தையும் தூண்டியுள்ளது. அவருடைய வரலாற்றை ஒரு வீரகாவியமாக எழுத வேண்டும் என எண்ணியுள்ளேன். (மகிழ்ச்சியுடன்) தம்பி உங்கள் எண்ணம் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நான் மிக மிகக் கொடுத்து வைத்தவன். சேரநாட்டின் வீர மன்னனாக நான் வரலாற்றில் இடம்பெறா விட்டாலும் பெரும் புலவர் இளங்கோவடிகளின் அண்ணன் என்ற வகையில் நிச்சயம் இடம்பெறத்தான் போகிறேன். நான் வடநாடு சென்று கொண்டு வரும் படிமக் கற்சிலைக்கு உன் காப்பியம் சிரஞ்சீவியாக இருக்கத்தான் போகிறது. இல்லையா சாத்தனாரே..?
ஆமாம். சேரநாட்டின் மூத்தமகன் கண்ணகிக்குக் கற்கோயில்
கட்டப்போகிறார். இளையமகன் அவளுக்கு சொற்கோயில் கட்டப்போகிறார். ஆகா கண்ணகி எத்தகைய அதிர்ஸ்ட
FITGS).
(விடைபெறுகிறார்) நான் வருகிறேன் தம்பி வருகிறேன் புலவரே.
காட்சி: 4
குணவாயிற் கோட்டத்தில் அமைந்துள்ள இளங்கோ அடிகளின் ஆச்சிரமம்
பாத்திரங்கள் : இளங்கோ அடிகள், புலவர் சாத்தனார்
சாத்தனார்
அடிகளே மன்னர் வடநாடு சென்று வெற்றிவாகை சூடி பல
மாதங்கள் ஆகின்றன. இந்த நிலையில் கண்ணகிக்குச் சிலை

இளங்கோ
சாத்தனார்
இளங்கோ
சாத்தனார்
இளங்கோ சாத்தனார்
இளங்கோவின் துறவு 47
அமைத்துக் கற்கோயில் கட்டும் வேலையும் முடியும் தறுவாயில் உள்ளது. கோயிலைப் பார்வையிட்டு நேற்றுத்தான் திரும்பினேன். தங்களது சொற்கோயில் எந்தளவில் இருக்கிறது என அறியலாமா?.
புலவரே!. புகார்க் காண்டமும் மதுரைக்காண்டமும் முடிந்து
விட்டன வஞ்சிக்காண்டம் முடியும் தறுவாயில் உள்ளது. இன்னும் சில நாட்களில் சேரன் செங்குட்டுவனின் வடநாட்டுப் படை யெடுப்பு கனகவிசயர் தலையில் கல்ஏற்றிவந்து கண்ணகிக்கு கற்கோயில் கட்டும் நிகழ்ச்சி ஆகியவற்றையும் இணைத்து வஞ்சிக்காண்டத்தையும் முடித்து விடுவேன். இதோ! இது வரையில் பாடிமுடித்த கவிதைகள். படித்துப் பாருங்கள்.
நல்லது. நான் படிக்கிறேன். நீங்கள் கருத்தைக் கூற வேண்டும்.
(ஏட்டை வாங்கி சில பகுதிகளைப் படிக்றார்) திங்களைப் போற்றுதும்! திங்களைப் போற்றுதும்! கொங்கு அலர்தார்ச் சென்னிகுளிர்வெண் குடை போன்று இவ்அம்கண் உலகு அளித்த வான்'
புலவரே!. கருத்தைக் கேளுங்கள் சந்திரனை வணங்குவோம். ஏனெனில் மகரந்தங்கள் சிந்துகின்ற மலர்மாலையை அணிந்த சோழனுடைய குடை இவ்வுலகிற்குக் குளிர்ச்சியைத் தருகின்றது. அதேபோல் சந்திரனும் இவ்வுலகிற்குக் குளிர்ச்சியைத் தருகின்றான்.
ஆகா புதுமையான காப்பு. இயற்கைச்சக்திகளைப் போற்றும்
மங்கள வாழ்த்துடன் காப்பியம் ஆரம்ப மாகிறது.
ஆமாம்!. புலவரே மேலும் படியுங்கள். : (ஏட்டைப்புரட்டிகோவலன்மாதவியை விட்டுப் பிரியக் காரணமாய்
இருந்த கானல் வரிப்பாடலைப் படிக்கிறார்) திங்கள் மாலை வெண்குடையாள் சென்னி செங்கோல் அது ஒச்சி கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி..! கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாதொழிதல் கயற்கண்ணாய்! மங்கை மாதர் பெருங் கற்பு என்று அறிந்தேன் வாழி காவேரி, அருமையான பாடல் இதற்குக் கருத்தைக் கூறுங்கள் அடிகளே..!

Page 39
48
இளங்கோ
சாத்தனார்
இளங்கோ
சாத்தனார்
இளங்கோ
சாத்தனார்
இளங்கோ சாத்தனார்
இளங்கோ
நகல்
(கருத்தைக் கூறுகிறார்). உன் நாயகன் சோழன் செங் கோல் ஒச்சி வடபால்சென்று கங்கையைப் புணர்ந்தாலும் தென்பால் சென்று கன்னியாகிய குமரியைப் புணர்ந்தாலும் நீ அவன் செயலைக் கண்டு ஊடாமல் இருக்கிறாய். ஆப்படி நீ இருக்கக் காரணம் உன் பெருங் கற்பே என்பதை உணர்ந்தேன். ஆகவே நீ
நீடுவாழி!
ஆகா அற்புதமான கற்பனை. செந்தமிழ்த் தேனைச் சிந்தையிலே
பாய்ச்சும் இனிய இசைத் தமிழ்ப்பாடல்கள். இந்தப் பாடல் தான் மாதவி கோவலனை விட்டுப் பிரியக் காரணமாய் இருந்தது. இல்லையா அடிகளே.
ஆமாம் மேலும் படியுங்கள்.
(மேலும் படிக்கிறார்) மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும் கையில் தனிச்சிலம்பும் கண்ணிரும். வையக்கோன் கண்டளவே தோன்றான் அக்காரிகை தன் சொற்செவியில் உண்டளவே தோற்றான் உயிர்.
இதன் கருத்து என்னவெனில் உடலில் படிந்த புழுதியும்
விரிக்கப்பட்ட கூந்தலும் கையில் ஒற்றைச் சிலம்பும் கண்ணீரும் மன்னன் கண்ட அளவிலேயே தன் நெஞ்சின் ஆற்றலை இழந்தான். அப் பெண்ணின் சொற்களைத் தன் செவியால் கேட்டதும் தன் உயிரையும் இழந்தான். என்பதாகும் .ஆமாம். எனது சிலப் பதிகாரக் காவியம் எப்படி இருக்கிறது புலவரே!..?
தங்கள் காப்பியம் சிறப்பாக இருக்கிறது என்று சொல் வது
தேன்சுவையாக இருக்கிறது என்று சொல்வதைப் போன்றது அடிகளே. ஆனால் ஒரு விளக்கம் வேண் டும் அடிகளே
ஏன் ஏதாவது குற்றங்கள் உள்ளனவா?.
இல்லை அடிகளே!. கதிரவனிடம் களங்கம் காண முடியுமா?.
ஆனால் நான் கேட்பது ஒரு ஐயம். கண்ணகிக்குச் சமமான ஒருகற்புக்கரசியாக மாதவியையும் படைத்திருக்கின்றீர்களே. அவளைப்பற்றி நான் கண்ணகி கதையை தங்களிடம் கூறும் போது அப்படிக் கூறவில்லையே. மாதவியோ நாட்டியக் கணிகை. கோவலனின் செல்வத்தை அழித்து அவனை வறிய வன் ஆக்கியவள். ஆனால் நீங்களோ அவளைப் பாசமுள்ள கோவலனின் மனைவியாகப் படைத்துள்ளீர்கள். ஒரு கணிகை கற்புக்கரசியாக இருக்க முடியுமா..?
புலவரே.! ஒரு கணிகை கூடலும் ஊடலும் கோவல னுக்கு
அளித்து உரிமையோடு வாழ முடியாது தான். ஆனால் மாதவி

சாத்தனார்
இளங்கோ
சாத்தனார் இளங்கோ
சாத்தனார் இளங்கோ
சாத்தனார் இளங்கோ
இளங்கோவின் துறவு 49
ஒரு கணிகை அல்ல. அவள் பிறப்பால் தான் கணிகை. ஆனால் பண்பால் ஒருகுடும்பப் பெண். (திகைப்புடன்) எனக்கு திகைப்பாய் இருக்கிறது. அடிகளாரின் கற்பனைப் படைப்பா மாதவி..?
இல்லை புலவரே. இது முற்றிலும் உண்மை வெறும் கற்பனை
அல்ல . நீங்கள் முன்பொருநாள். நான் துறவறம் பூண்டதற்கான காரணத்தைக் கேட்டீர்கள் அல்லவா..? அந்தக் கேள்விக்கும் தற்பொழுது தங்களிடம் ஏற்பட்டிருக்கும் ஐயத்துக்கும் விடைகூற வேண்டிய காலம் வந்துவிட்டதை உணர்கிறேன். (நீண்ட பெருமூச்சு விட்டபடி தொடர்கிறார்) . என் இதயச்சிம்மாசனத்தில் முன்பு குடியிருந்த ஓர் ஆடற் கலை அரசியைப்பற்றிக் கூறுகிறேன் கேளுங்கள். அவளின் பெயர் மாதவி
(திகைப்புடன்) மாதவியா..!
ஆம். மாதவி தான்
அவள் ஒரு விரிக்காத தோகை மயில் வண்டு கண்டு மடக்காத முல்லை மலர். பும் பொழிலில் மலர்ந்த நறுமலர். அலை புரள் நீர்த்துறையில் வீசும் இளம் தென்றல் மணல் படர்ந்த கடற்கரையில் மணம் வீசும் தாழம்பு மரம் நிறைந்த சோலையிலே செறிந்திருக்கும்
கணிக்குலையாள்
(இடை மறித்து) அற்புதமான கற்பனை அடிகளே..!
கற்பனை அல்ல நண்பரே..! இது முற்றிலும் உண்மை நான்
மாதவியை நேரில் பார்த்தும் பேசியும் உள்ளேன்
அப்படியா..!
1 ஆம்
அவளின்
பழுதற்ற இனியகுரல்
முழுமதி போன்ற முகம் வளைந்த இரட்டைவில் புருவம் கண்ணுக்குத் தெரிந்திடாத மின்னல் இடை வலம்புரிச்சங்கு போன்ற கழுத்து குறுநெல் முளை போன்ற இறுகிய பல்வரிசை இரட்டைக் கயல்விழிகள் இவை அனைத்தும் என்னை இடர் செய்தன நண்பரே.

Page 40
5O
சாத்தனார்
இளங்கோ
சாத்தனார்
இளங்கோ
சாத்தனார்
இளங்கோ
நகல்
என்ன சொல்கிறீர்கள் அடிகளே!. கேட்பதற்கு வியப்பாக
இருக்கிறதே
வியப்படைய வேண்டாம்.நான் இளவரசராக இருந்த போது
அடிக்கடி புகார் நகருக்குச் செல்வேன் அல்லவா..?
ஆமாம். தங்கள் மாமன் முறைக்காரரான புகார் மன்னன்
கிள்ளியவளவனையும் அவர் தம்பி நலங்கிள்ளி யையும் பார்க்கச் செல்வீர்கள்
அதற்காக மட்டுமல்ல புலவரே! புகார் பலகலைகள் செழித்
தோங்கும் நகரம். ஆங்கு முத்தமிழ்க் கலைஞர்களையும் அறிஞர் பெருமக்களையும் கண்டு உரையாடி மகிழவும் அடிக்கடி போவேன்
பூம்புகார் மிகவும் அழகான நகரம் அல்லவா அதன் வனப்பையும்
செல்வச் செழிப்பையும் கண்டு நிச்சயம் ஆச்சரியம் அடைந் திருப்பீர்களே.!
ஆம் புலவரே!பும்புகார் மிகவும் எழில் கொஞ்சும் நகரமே தான்.
அலையெறிகடலைத் தன் இடையைச் சுற்றியுள்ள ஆடையாகவும், மலைகளைத் தன் முலைகளாகவும், மலைகளிற் பாய்ந்தோடும் நதிகளைத் தன் மார்பில் அணிந்துள்ள முத்து வடங்களாகவும், வானில் குவியும் மழைமுகிலைத் தன் கருங்கூந்தலாகவும் கொண்டுள்ள மங்கை போன்றதே பும்புகார் நகரம். இந்த அழகிய நகருக்கு நானும் நண்பர் நலங்கிள்ளியும் இந்திரவிழா காண்பதற்காக ஒரு முறை சென்றோம். அங்குள்ள வாணிப வீதிகளிலே பலவகையான பொருட்கள் விற்பனைக்காக குவிக்கப்பட்டிருந்த காட்சி புகாரின் செல்வச் செருக்கைப் பறை சாற்றியது. ஒருபுறம் வண்ணக்குழம்பும் சுண்ணப்பொடியும், குளிர்மணச் சாந்தமும் புலவும் நறுமணப் புகைப்பொருளும், கோட்டம் முதலிய மண விரைகளும், மறுபுறம் பட்டும், சந்தணமும், அகிலும், முத்தும் மணியும் பொன்னும் இரத்தினமும் கும்பல் கும்பலாய்க் குவிந்து கிடந்தன. மேலும் பிட்டு வணிகரும், அப்பம் சுடு வோரும் கள்விற்கும் வலைச்சியரும், மீன் விற்கும் பரதவரும், வெற்றிலைவிற்கும் தோட்டக்காரரும், வெண்கலக் கன்னாரும் பொற்பணி செய்தட்டாரும், எண்ணை வணிகரும் சுறுசுறுப்பாக வியாபாரம் செய்தனர். மகர தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட வீதிகளில் இந்திரனின் திருவுருவம் தாங்கிய மகரதப்பல்லக்கு ஊர்வலம் வந்தது. புரண

சாத்தனார்
இளங்கோ
சாத்தனார்
இளங்கோ
சாத்தனார் இளங்கோ
இளங்கோவின் துறவு 51
கும்பங்களும் குலைவாழை, கரும்பும், பாவை விளக்கும், பசும் பொன் கொடியும், வெண்தாமரையும் பொருந்தினவாக வீதி வலம் வரும் இந்திரனை வரவேற்க இல்லங்கள் தோறும் மக்கள் காத்திருந்தனர். இந்திரவிழாக் காட்சிகளை பார்த்து ரசித்தக் கொண்டு செல்கையில் தற்செயலாக அங்கு கோவலனைச் சந்தித்தோம். அவனுடன் உரையாடினோம். அவன் ஒரு சிறந்த கலைஞன் என்பதையும் கண்ணகி அவனுடைய பத்தினி என்பதையும் அன்று நான் அறிந்து கொண்டேன். ஆனால் அவனது பத்தினியை விட மாதவியைப் பற்றித் தான் எங்களிடம் அவன் புகழ்ந்து பேசினான்.
என்ன தனது மனைவியை விட ஒரு கணிகையைத்தான் கோவலன்
புகழ்ந்து பேசினானா..?
ஆம் புலவரே, மாதவிதான் அந்த நாட்டின் சிறந்த நாட்டியத்
தாரகை என்றும் மற்றவர்களைவிட பதினொரு வகையான அபுர்வ ஆடல் வடிவங்களை மிகவும் அற்புதமாக ஆடக்கூடிய அழகிய கலைப் பொக்கிசம் என்றும் கோவலன் பெருமையுடன் கூறினான்.
வியப்பாக இருக்கிறதோ! அந்தப் பதினொரு வகை நடன
வடிவங்களை விபரித்துக் கூறுவீர்களா அடிகளே.
அவற்றைப் பற்றி ‘மாதவியின் பதினொரு ஆடல்' என்னும்
தலைப்பில் சிலப்பதிகாரத்தில் நான் பாடி இருக்கின்றேன். இருந்தும் சுருக்கமாக அவற்றை வரிசைக்கிரமமாகக் கூறுகிறேன் கேளுங்கள்.
கூறுங்கள் அடிகளே.
சுருக்கமாகச் சொல்லுகிறேன் கேளுங்கள்
'சிவபெருமான் திரிபுரத்தை எரித்த போது ஆவேச கொண்டாடிய 'கொடுகட்டி' என்னும் ஆடல் நான்முகனின் தேரின்முன் நின்று நாயகன் ஆடிய “பண்டாரக்கூத்து'. திருமால் வஞ்சனை வதைத்த போது ஆடிய 'அல்லியத் தொகு திக்கூத்து' அவுணனை எதிர்த்து மாயோன் மணம் மகிழ்ந்து ஆடிய 'மல்லாடல் மல்லர்கள் கூத்து.

Page 41
52
சாத்தனார்
இளங்கோ
நகல்
பெருங்கடலின் நடுவில் நின்று போர்செய்த சூரபன் மனை துடிப்புடன் எதிர்த்து வெற்றி கொண்ட முருகன் ஆடிய
துடிக்கூத்து'
அசுரர்கள் முன் நின்று முருகன் குடையைச் சாய்த்து ஆடிய
குடைக்கூத்து'
தனது இரண்டு கால்களால் புமி அளந்த மாயோன் ஆடிய 'குடக்கூத்து'
பெண்மைக்கோலத்தில் காமன் ஆடிய பேடிக் கூத்து'
அவுணாக்கனை அழிக்க துர்க்கை மரக்கால்கொண்டு ஆடிய "மரக்காற்கூத்து',
அசுரரை அழிக்க திருமகள் ஆடிய 'பாவைக்கூத்து'
வனாதரனை அழிக்க இந்திராணி ஆடிய 'கடையக் கூத்து'
ஆஹ. ஆஹா. மாதவி உண்மையிலேயே ஓர் ஆடற்கலை
அரசிதான்.
மறுநாள் மாதவியின் நடன அரங்கேற்றம் நடைபெற்றது.
அதைப்பார்ப்பதற்கு நானும் நலங்கிள்ளியும் சென்றோம். புதரையில் எழுதி தூண் நிழல் மறையுமாறு விளக்கமைத்து, முத்துச்சரத்தால் அரங்கம் அழகாக அலங் கரிக்கப்பட்டிருந்தது. அந்த அழகிய அரங்கில், வலக் கால் முன்வைத்து ஏறி, வலது தூண் சேர்ந்து நின்றாள் மாதவி. உடனே இசைக்கருவிகள் ஒலித்தன. குழலை ஒட்டி யாழும், யாழை ஒட்டி தண்ணுமையும், தண்ணுமைக்குப் பொருத்தமாக முழவும், முழவைத் தொடர்ந்து ஆமந்திரிகையும் ஒலித்தன. ஆமந்திரிகை யோடு அனைத்துக் கருவிகளும் ஒன்றாகக்கூடி இசைத் தன. மாதவி ஆடத்தொடங் கினாள். அவள் ஆடிய அந்தரக் கோட்டின் அழகைச் சொல்வதா! தேசிக்கூத் தின் திறமையைப் பாராட்டுவதா, மார்க்கக்கூத்தின் மகிமையைப் புகழ்வதா அவள் அந்த அரங்கிலே ஆடவில்லை. என் இதயத்தில் ஆடிக்கொண்டிருந்தாள். அந்தக் கலையரசியிடம் மனதைப் பறி கொடுத்தேன். மறுநாள் முதல்வேலையாக என் எண்ணத்தை நலங் கிள்ளியிடம் கூறினேன். என் உறுதியான முடிவைக் கேட்டு அவன் வியப் படைந்தான். என்னை வணிகன் போல உடையணியச்சொல்லி
மாதவியின் வீட்டுக்கு அழைத்துச் சென்றான்.

இளங்கோவின் துறவு 53
அவளுடைய வீட்டை அடைந்தபோது மாதவி யாழ் மீட்டிக் கொண்டிருந்தாள். அவளுடைய மணிக்காந்த விரல்கள் யாழ் நரம்புகளில் படரும்போது எழுந்த வார்தல், வடித்தல், உந்தல், உறழ்தல், உருட்டல், நெருட்டல், அள்ளல், பட்டடை ஒவ்வொன்றும் என் இதயவீணையிலிருந்தே எழுவதாக உணர்ந்தேன்.
யாழ் வாசித்து முடிந்ததும் நாங்கள் உள்ளே நுழைந்தோம். (மீள் நினைவுக் காட்சி)
நிலை
மாதவி
நலங்கிள்ளி
மாதவி
வயந்தமாலை :
நலங்கிள்ளி
மாதவி
காட்சி: 5
மாதவியின் இல்லம்
(இளங்கோ அடிகள் இரு வணிகனாக நலங்கிளியுடன் வருகிறார்.)
இளவரசர் நலங்கிள்ளி அவர்களே, வாருங்கள். இந்த ஆசனத்தில்
அமருங்கள். எனது இல்லம் தேடி வந்ததற்கு மிக்க மகிழ்ச்சி. நீங்கள் உத்தரவிட்டிருந்தால் நானும் இதோ இருக்கும் என் தோழி வயந்தமாலையும் உங்கள் அரண்மனைக்கே வந்திருப்போமே
பரவாயில்லை மாதவி. இதோ என்னுடன் வந்திருப்பவர் எனது
நண்பன். வஞ்சி நகரத்தின் பெரு வணிகன். எமது கலைகளில் ஆழ்ந்த அறிவும் ஆர்வமும் கொண்டவர். நேற்று உன் நடனத்தைப் பார்த்து மெய் மறந்து விட்டார்.
(நாணத்துடன்) வணக்கம் ஐயா! இதோ இவள்தான் என்ஆருயிர்த்
தோழி வயந்தமாலை. இவள் எப்போதும் என்னுடனிருந்து உற்சாகம் அளிப்பதால் இத் தெய்வீகக் கலையை ஓரளவு பயின்றுள்ளென். வணக்கம் இளவரசே! இப்பாராட்டைச் சொல்வதற்கு இந்த ஏழையின் இல்லத்திற்கு நீங்கள் வரவேண்டுமா என்ன..? கட்டளை யிட்டிருந்தால் அரண்மனைக்கு நாங்களே வந்திருப்போமே.
! வெறும் பாராட்டுச் சொல்வதற்கு மட்டும் நாங்கள் இங்கு
வரவில்லை. இத்தகையான அருமையான கலைச்செல்வத்தை வஞ்சிக்கே கொண்டு செல்ல விரும்புகின்றார் என் நண்பர். உண்மையைச் சொல்வதானால் அவர் மாதவியைத் திருமணஞ் செய்ய விரும்புகிறார். இதற்கு நீ சம்மதிப்பாய் என நம்புகிறேன் மாதவி.
(அதிர்ச்சியடைந்தவளாக.) இளவரசரே.! தங்கள் கூற்று எனக்கு
அதிர்ச்சியைத் தருகின்றது. என்தலைசுற்றுகிறது. நா இடறுகிறது நான் என்னத்தைச் சொல் வேன். (மெளனமாகிறாள்)

Page 42
54
நலங்கிள்ளி மாதவி
நலங்கிள்ளி
மாதவி
நலங்கிள்ளி
மாதவி
இளங்கோ
மாதவி
நலங்கிள்ளி
மாதவி
நகல்
ஏன் இந்த மெளனம். . இது சம்மதத்திற்கு அறிகுறியா..? இல்லை இளவரசே. தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்.
உங்கள் கட்டளைகளை நிறைவேற்ற முடியாத நிலையில் நான் இருக்கிறேன். ஏற்கெனவே நான் ஒருவனைக் காதலித் துள்ளேன்.
(ஆத்திரத்துடன்) காதலிக்கிறாயா..? இப்படி என்னிடம் ஒரு
பதில்சொல்ல என்ன துணிச்சல் உனக்கு யாரந்தக் காதலன் (பயத்துடன்) கோவலன் எனும் வணிகர். அவரும் என்னைக் காதலிக்கிறார்.
வணிகர் என்றபடியால் தான் அவரைக்காதலிக்கிறாயா..?
அப்படியானால் இந்த நண்பன் யார் தெரியுமா..? சேர நாட்டின் இளவரசர். இளங்கோ. உன்னைச் சேர்ந்து சேரநாட்டின் இளவரசியாக்க விரும்புகிறார் மாதவி நீ யாரை விரும்புகிறாய். ஒரு சாதாரண வணிகனையா அல்லது ஒரு வீர நாட்டு இளவரச 6060TuTP
இளவரசே!. நானோ ஒரு நாட்டியக் கணிகை. அரசகுடும்பத்தை
அலங்கரிக்க அருகதையற்றவள். அப்படி இருக்க சேரநாடு என்னை சேர்த்துக் கொள்ளுமா..?
ஆம் மாதவி. எனது சேரநாடு உன்னை நிச்சயமாக ஏற்றுக்
கொள்ளும். சேற்றில் முளைத்தது என்பதற்காக செந்தாமரையை யாரும் தள்ளிவிடுவதில்லை மாதவி
இளவரசர்களே!. ஒரு கணிகை அரசியாகத் தகுதியற்றவள். நான்
குலத்தால் கணிகை. ஆனாலும் பண் பால் உயர்ந்தவள் என இளவரசர் என்னைப் பாராட்டினார். ஆனால் ஒன்றைக் கவனியுங்கள். நான் ஏற்கெனவே ஒருவரை காதலித்துள்ளேன். அவருக்கு துரோகம் பண்ணிவிட்டு பணத்துக்காகவும், பதவிக் காகவும், அந்தஸ்துக்காகவும் இளவரசர் இளங்கோவை மணந்து கொண்டால், நடத்தையால் கணிகையாகி விடுவேன் அல்லவா..? பின்பு எப்படி நான் அரசியாகும் தகுதியுடையவள் ஆவேன்.?
(சினத்துடன்) என்ன? தர்க்க ரீதியாகப் பதில் தருவதாக
நினைப்பா..? இதுதான் உனது இறுதி முடிவா பெண்ணே.!
ஆம் இளவரசே!. கணிகையும் ஒரு பெண்தானே. அவளுக்கும்
உள்ளம், உணர்ச்சி, விருப்பு, வெறுப்பு எல்லாம் உண்டல்லவா. நான் மணந்தால் கோவலனைத்தான் மணப்பேன் இல்லையேல் மரிப்பேன்

நலங்கிள்ளி மாதவி
இளங்கோவின் துறவு 55
(கடுஞ்சினத்துடன்) என்ன துணிச்சல் உனக்கு கணிகையே? : நான் சேற்றில் முளைத்த செந்தாமரை என்கிறீர்கள். இந்தச்
செந்தாமரை சேற்றில் மலர்ந்து, சேற்றிலேவாடி, சேற்றிலேதான் மடிய விரும்புகிறது. பிடுங்கியெடுத்து நந்தவனத்திலே நாட்டினால் நிச்சயம் வதங்கி, சிதைந்து, உதிர்ந்து, உலரத்தான் போகிறது தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்.
(மீள் நினைவுக் காட்சி முடிவு)
இடம்
asnú láA: 6
: குணவாயிற்கோட்டம்
பாத்திரங்கள் : இளங்கோ அடிகள், புலவர் சாத்தனார்.
இளங்கோ
சாத்தனார்
இளங்கோ
சாத்தனார்
இளங்கோ
(பெருமுச்சு விட்டபடி) சாத்தனாரே..! இதுதான் மாதவி அன்று
எங்களுக்குத் தந்த பதில். அவளுடைய தர்க்க ரீதியான பதிலைக்கேட்டு நான் வியப்படைந்தேன். கணிகையில் ஒரு கற்புக்கரசியாகத் திகழ்ந்த அந்த மங்கை நல்லாளின் முகத்தை கடைசிமுறையாக நான் பார்த்தேன். நான் இவ்வுலகில் காதலோடும் கனி வோடும் பார்த்த ஒரேயொரு மங்கையின் முகம் அது
தான.
அடிகளே! சிலப்பதிகாரத்துக்குள்ளே இப்படியும் ஒரு துயரக்கதை
யாரும் அறியாமல் புதைந்து கிடக்கிறதா..?
ஆமாம் சாத்தனாரே. இதற்குச்சில நாட்களின் பின் எனது
காதல்கோபுரம் சரிந்துவிட்ட நிலையில் தான் இராசசபையில் ஆரூடம் கூறினார். அதைப் பொய்யாக்கும் நோக்குடன் தான், அண்ணனுக்காக அரச பதவியையும் காதல் தோல்வியால் இல்லறவாழ்வையும் துறந்தேன்.
அடிகளே சாதாரண மனிதன் செய்ய முடியாத மாபெரும் தியாகம்
உங்கள் தியாகம்
புலவரே! மாதவியைப் பற்றி சிலப்பதிகாரத்தில் நான் கூறியிருப்பது
யாவும் முற்றிலும் உண்மை. கண்ணகிக்கு நிகரான கற்புக்கரசியாக மாதவியைப் பாராட்டவோ புகழவோ இன்றைய சமுதாயம் இணங்காமல் இருக்கலாம். ஆனால் வருங்கால சமுதாயம் நிச்சயம் அவளின் பெருமையைப் புரிந்து கொண்டு பாராட்டும். கண்ணகியின் கதையை காவியமாக எழுத எதிர் காலத்தில் பலர் முன்வரலாம். அவர்கள் பத்தினிக் கண்ணகியின் புகழை உயர்த்திக் காட்டுவதற்காக மாதவியை தாழ்த்திவிடக் கூடும். ஆகவேதான்

Page 43
56
நகல்
நானே முன்வந்து இக்கதையை சிலம்பின் கதையாக சிலப் பதிகாரமாக உருவாக்கினேன். நான் கலையரசி மாதவிக்குச் செய்யும் தொண்டு இது தான். எனது காவியத்தில் கண்ணகியின் புகழ் உயர்கிறதோ இல்லையோ மாதவியின் பெயர் காப்பாற்றப் படும். அதுதான் என்னுடைய ஆசை.

மன்னிப்போம்! மறப்போம்!! (சிறுவர் பா நாடகம்)
பிரதியாக்கம்
திரு. ல.அமலானந்குமார் B.A. Sp.trd (Pri)
பாத்திரங்கள்
மயில்
முயல்
மான்
குரங்கு
Ulf T%3D6ð
கரடி
சிங்கம்
நரி 1, 2, 3
sm & I
காட்டு விலங்குகளான மயில், முயல், மான், குரங்கு, யானை, கரடி, சிங்கம், நரி 1,11,II போன்ற விலங்குகள் ஆடிப்பாடி சந்தோஷமாக மேடையினுள் நுழைதல். பாடலுக்கு ஆடிப்பாடுவர். பாடல் ஆட்டம் பாட்டம் போட்டிடுவோம்
ஆனந்தமாய் விளையாடிடுவோம் பாலர் நாங்கள் ஒன்று கூடி பாவினையும் இசைத்திடுவோம். (பாடகர் இடது முன்பக்க மூலைக்குச் செல்வர்) шопөйт விளையாடுவோம் வாருங்கள் எண்டு SMS அனுப்பி விட்டு
இப்படிச் சும்மா இருந்தால் எப்படி? ԼՃԱԳlóÙ என்ன விளையாட்டு விளையாடுவோம்?

Page 44
58
எல்லோரும்
கரடி எல்லோரும் குரங்கு எல்லோரும் முயல்
oulio
LoTaT
எல்லோரும்
மயில்
எல்லோரும்
பாடல்
நகல்
பந்து அடித்து விளையாடுவோமா?,
:鼻辱..
மரப்பொந்துகள் பிளந்து விளையாடுவோமா?
.ம்.கூம்.
குத்துக்கரணம் போட்டு விளையாடுவோமா?
! ஆஹா!
ஒட்டப்பந்தயம்?
நீங்கள் சரியான சுயநலவாதிகள். விளையாட்டிலும் பிறர் நலம்
பார்க்க வேண்டும்.
அப்ப வச்சுக் கொள்ளம்மா.. , , , வைச்சுக்கொள் .
விளையாட்டு?
அச்சா நல்ல விளையாட்டு. குலை குலையா முந்திரிக்கா விளையாட்டு? ஒமோம். ஒமோம். அதே விளையாடுவோம்.
குலை குலையா முந்திரிக்கா
கரடியே கரடியே சுற்றிவா குலை குலையா முந்திரிக்கா முயலே முயலே சுற்றிவா குலை குலையா முந்திரிக்கா யானையே யானையே சுற்றிவா
(சந்தோசத்துடன் விளையாடிக் கொண்டிருப்பர்)
கரடி
மற்றவர்கள்
ustL-6)
ம். எனக்கெண்டால் சரியாக் களைக்குது. என்னால் முடியாதப்பா.
நான் கிளம்புறன்.
என்ர நண்பன் போனால் இங்க எனக்கென்ன வேல?
சரி நீங்கள் போங்கோ, நாங்கள் வேற விளையாட்டு
விளையாடுவோம்.
ஒரு குடம் தண்ணிர் ஊற்றி
ஒரு பூ புத்தது இரண்டு குடம் தண்ணிர் ஊற்றி இரண்டு பூ புத்தது.
(மேடையின் பின் பகுதியில் இப்பாடலுக்கு ஏற்ப ஆடிப்பாடி சந்தோசமாக
கழிப்பர்)
(மேடையின் முன்பகுதியால் நரி 1,11,1II ஆகியோர் நுழைவர்)
(பின்வரும் பாடல் நடைக்கேற்ப ஆடி அசைந்து நரிகள் ஊளையிட்ட வண்ணம்
பொறாமையுடன் மேடையினுள் நுழைவர்)

. ກມີ ຂຶ ! 59
' ፣ ፳፯.ፍ» தொம் தொம் தொம் தகிடதகி.
தொம் தெ:ம் தொம் தகிட தாம்
5 நண்பர்களே! இங்கி, எல்லோரும் ஒற்றுமையாக இருப்பதால்
ஒண்டுமே செய்யேலாம கிடக்கு,
ངའི་} fi : இந்த ஒற்றுமைய சிதைக்க வேணும், சின்னாபின்னமாகக்வேனும்
Φιηπι ιπ,
ჯ“ :Hi ஒற்றுமை தான் இதுகளுக்கு பலம். இத உடைச்சு சுக்கு
:ராக்கோனும் நண்டா!
நரி 1 நண்பர்களே! இவர்களின்ர ஒற்றுமை. காகக்கூடில்ல லேசாப்பிச்செறிய. தேன் கூடு. தேன் கூடு. சிங்கத் தாரின்ர தலைமையில கட்டினது. இதக் குழப்ப வேறு விதமாகத் தான்
கையாளவேணும். நரி I ஓமோம் எங்க மூதாதையரும் லேசுப்பட்ட ஆக்களில்ல p5sf III காகத்தின்ற வடய பறிச்சது போல. அணுக வேணும். இவியளுக்கு
ஒரு பாடம் படிப்பிக்க வேணும். pf. I ஒண்டாச் சேந்து கூத்தும் கும்மாளமும்.ம். பிடிக்கேல்ல. மனம் பொறுக்க முடியாமக் கிடக்கு. அந்த முயலார ஒருக்கா. ருசி பார்க்க வேணும் போல கிடக்கு, நரி 11 மயில் இறைச்சி சரியான ருசி எண்டு சொல்லுவீனம். என்ர
வாழ்க்கையில ஒரு தடவை. p5sî III நண்பா ! நீங்கள் தான் எங்க தலைவர். எல்லோமே உங்களின்ர
கையில் தான் இருக்கு நீங்க மனசு வச்சா சரி நண்பா! (நரி1இற்குநரிIமாலை அணிவிக்க, நரி II கிரீடம் சூட்டி மகிழ்தலும், ஒற்றுமையைக் குழுப்ப சதித்திட்டம் போடுதலும்)
பாடல் நரியார் நரியார் குள்ள நரியார்
நலமாய் வாழ சதிகள் செய்தார் நரியார் நரியார் குள்ள நரியார் நட்புக்காக எதையும் புரிவார். (சதித்திட்டம் போட்டத்தில் சரியான திட்டம் கிடைத்த மகிழ்ச்சியில் மூவரும் மேடையை விட்டு வெளியேறுகிறார்கள்)
மயிலின்
வரவுப் பாடல் : தகிடதநத்தோம். தகிட தத்தோம் (நரி 11 ஐக் கண்ட மயில் பயந்து ஓடுதல்) நரி II மயிலாரே! பறவைகளின் ராணியே! பயப்பட வேண்டாம் உங்களுக்கு ஓர் நல்ல செய்தி சொல்லவே உங்களிடம் ஓடோடி வந்தேன்.

Page 45
60
மயில்
நரி II
மயில்
நரி II
ഥuി
நரி 11
upuી6)
நரி II
LDướìáo
நரி 11
மயில்
நரி II
Lougdi)
நரி II
மயில்
பியூட்டி வரவு (நரி 1)
நகல்
நல்ல செய்தியா? அதுவும் நரியாரிடமிருந்தா?ஆச்சரியமாய்
இருக்கிறதே! எதற்கும் கொஞ்சம் தள்ளி நின்று சொல்லும்.
; உனக்கு மானிடம் நட்பு கூடாது. அவனை ஒதுக்கி விடு! ! நல்ல செய்தி என்று சொல்லி விட்டு, எமது நட்பையும்,
ஒற்றுமையையும் கெடுக்கவா நினைக்கிறீர். அவன் எனது உயிர்த்தோழன்.
பொல்லாத உயிர்த்தோழன் உன்னைத் தேடி புதிய நட்பு ஒன்று
வந்திருக்கிறது.
புதிய நட்பா? யார்? அவரை அறிமுகம் செய்யுமன்
பார்ப்போம்?
அறிமுகம் செய்கின்றேன்! ஆனால் ஒரு கண்டிஷன்
எந்தக் கண்டிஷனுக்கும் நான் தயார். அந்தப் புதிய நட்பு, இளகிய மனம் கொண்டது. உன் நட்புக்
கிடைக்காவிட்டால் இந்த இடத்திலேயே துடிதுடித்து இறந்து விடுமாம்.
ஆ! அப்படியா? பாவம். நானும் ஓர் இளகிய மனம் படைத்தவள்
தானே! எனக்குப் பொருத்தமான நட்பு என்றுதான் நினைக் கிறேன்.
உன் மூளை சூடம் போல. (மெதுவாக) மூளை எவ்வளவு
ருசியாக இருக்கும்.
என்ன சொல்கின்றீர்?. (கோவமாக) ஒன்றுமில்லை மூளைசாலியான பெண் என வாழ்த்தினேன். சீக்கிரம் அந்த புதிய நட்பைக் கூப்பிடும்.
ஏய் பியூட்டி. லண்டன் பியூட்டி. வாரும் வெட்கம்
வேண்டாம்.
பியூட்டி. ஆ. அருமையான பெயர். அருமையான நட்பு.
தகிட தத்தோம் தகிட தத்தோம்
(மயில் போல் வருதல்)
(புதிய நட்பு நரி 1,
பாடல்
மயில் கூடிக்குலாவுதல், பரிசில் வழங்கி மகிழ்ச்சிப்படுத்தல்)
உண்மை நட்பு போலி நட்பு
புரியாத உள்ளங்களே - உங்கள் உறவுகளுக்குள் வண்மை புதையல்களைத் தேடுங்களேன் - அதில் வன்மை முத்தை தேடுங்களேன்.

மன்னிப்போம்! மறப்போம்!! 61
மயில் ம். பியூட்டி . இப்போது புரிந்து விட்டது. அந்த அருவருப்பான மானின் நட்பு எனக்கு வேண்டாம். உன் நட்புத்தான் புனிதமானது. நீயும். உன் பரிசில்களும் அருமை. நான் சென்று வருகின் றேன் Bye பியூட்டி.
(நரியார் கவலையுடன் பிரிவது போல பாசாங்கு செய்து நடித்தல்)
முயலின்
வரவுப் பாடல் : தனனான தனனான தானா - தானே தனனான தனனான தானா - தானே
(நரியார் IIIக் கண்ட முயல் பயந்து ஓடல்)
நரி II முயலாரே! உன் மேனியைப்போல வெள்ளை உள்ளம்
படைத்தவனே! ஏன் பயப்படுகின்றாய்?
முயல் உன் பொய்ப் புகழ்ச்சிக்கு நான் மயங்கமாட்டேன். துஷ்டனே
தூரப்போ!அல்லது நான் தூரப் போய் விடுவேன்.
நரி II முயலாரே! ஏன் இப்படிக் கீழ்த்தரமாக பேசுகிறீர்? எங்க மூதாதையர் காகத்திடம் நடந்து கொண்ட விதத்திற்காக வெட்கப்படு கின்றேன். நாம் இப்போ அப்படிச் செய்வதில்லையே. நம்பு நண்பா. நம்பு.
முயல் என் அருமை நண்பன் குரங்காரை விட வேறு யாரையும் நான்
நம்பமாட்டேன்.
நரி II சீச்சி. உன் அருமை நண்பனா அவன்? அவனின் மூஞ்சியும்
முகரக்கட்டையும்.
முயல் : நரியாரே! கதைய நிப்பாட்டும். என் நண்பனைப் பற்றிக் கதைக்க
உமக்கு எந்த அருகதையுமில்லை.
நரி II Cool முயலாரே Coolஉமக்கு உண்மை நண்பனை எடை போடத்
தெரியவில்லை.
(լpulat) என்ன சொல்கிறாய் நரியாரே!
நரி II ம். உனக்கு அந்தக் குரங்கை விட புனிதமான உயர்ந்த நட்பை
அறிமுகம் செய்யவா?
முயல் ம். உயர்ந்த நட்பா? அவரை அறிமும் செய்து வையுடின்.
p5s III அறிமுகம் செய்யலாம். அவருக்கு நமது பாசை புரியாதே!
வெளியாட்டவர். அவரிடம் கேள்விகள் கேட்டு தொந்தரவு செய்யக் கூடாது.
(փայ6Ù வெளிநாட்டவரா? ம். ஆ. அதிஷ்ரம். இவர் எனக்கு நண்பனாக
கிடைக்க நான் என்ன பாக்கியம் செய்தேனோ?
p5s III ம். பாக்கியம் தான் செய்திருக்கிறாய். (நக்கலாக)

Page 46
62 நகல்
முயல் எனக்கு வெளிநாடு போய்வர ஆசை. என் கனவு நிஜமாகப்
போகிறது.
Eý III எங்களது கனவும் நிஜமாகப் போகிறது (மெதுவாக)
(ՔաÇÙ என்ன?
5f III உனது நீண்ட நாள் கனவு நிஜமாகப் போகிறது என்று சொல்ல
வந்தேன்.
முயல் ஐயோ! கெதியாக் கூப்பிடும் அவரை.
bî III ; மிஸ் மிக்கிஷா . மிஸ் மிக்கிஷா. வாரும்!
முயல் மிஸ் மிக்கிஷா அருமையான பெயர்!
மிக்கிசாவின்
வரவுப் பாடல்: (முயல் போல் வருதல்)
தனனான தனனான தானான - தானே தணனான தனனான தனனான தானே.
(நரி 1 முயல் போல பாவனை செய்து வெளிப்படுதல். இருவரும் கைலாகு
கொடுத்து உறவாடுதல்)
பாடகர் நிறை நீர நீரவர் கேண்மை பிறை
பின்னிர் பேதையார் நட்பு முயல் ம். புரிந்து விட்டது. அந்தக் குரங்கு இத்தனை நாளில் ஒரு
நாளாவது ஒரு பரிசுதந்திருப்பானா? ஆனால் நீர் மிஸ் மிக்கிஷா. நீரும் அருமை. உமது பரிசில்களும் அருமை.
LJIT-Go தாதரிகிட தீதரிகிட
தொம் தரிகிட நம் தரிகிட (இச்சந்தர்ப்பத்தில் மயில் மானின் நட்பை வெறுத்தல், முயல் குரங்கின் நட்பை வெறுத்தல் இருவரையும் உதறித் தள்ளிவிடும் காட்சி) உரைஞர் 1 அறிவுடையார் தம்முள் செய்து கொள்ளும் நட்புகள் பிறைச்சந்திரன் நாளுக்கு நாள் பெருகுவது போல வளரும். உரைஞர் 11 அறிவில்லாதவர் தம்முள் செய்வன முழுமதி நாளுக்கு நாள்
தேய்வது போல தேய்ந்து ஒன்றுமில்லாமல் போகும். (மயிலும் மானும் சண்டையில் ஒருவரை ஒருவர் பிரிதல். அதேபோல் முயலாரும் குருங்காரும் பிரிதல், இச்சந்தர்ப்பத்திற்காக காத்திருந்த நரி 1, 11, 11 மயிலையும், முயலையும் பிடிக்க முயற்சி எடுத்தனர். இறுதியில் பலத்த காயங்களுடன் காப்பாற்றப்படுகின்றனர்) ഥuി லண்டன் பியூட்டி என்னைக் காப்பாற்று please
மிஸ் மிக்கிஷா என்னைக் காப்பாற்று please ده: {..ې؛ نزا)
{பிரிந்துபோன மானும் குரங்கும் திடுக்குற்று நோக்குதல்)

lor: #fff;
குரங்கு
இருவரும் இராகம்
மன்னிப்போம்! மறப்போம்!! 63
ஆ என் உயிர்த்தோழி மயிலின் சத்தம் : ஆமாம்! முயலும் கூக்குரலிடும் சத்தம் கேட்கிறது. ஏதோ ஆபத்து
எனத் தான் நினைக்கின்றேன்.
சிங்கராஜாவிடம் அறிவிப்போம்
(கையடக்கத் தொலைபேசியூடாக சிங்கத்தாருக்கு தகவல் பறக்கிறது)
சிங்கம் வரவு பாடல்
šáED
Lotó
சிங்கம்
T6069
Lont6iiT
战卵t4
T66
Lloff6ôr
குரங்கு
சிங்கம்
f6)
கரடி
சிங்கம்
பாடல்
தந்த தசிட தகிட தோம்
தந்த தகிடதகிட தோம்
யாரடா அவன் ஆபத்து! ஆபத்து! எனத் தகவல் தந்தவன்? வணக்கம் மகாராஜா. நானும் நண்பர் குரங்காரும் தான் இந்தச்
செய்தியைக் கூறினோம்.
எங்கே ஆபத்து? யாரால் ஆபத்து? ஆபத்தில் சிக்கியவர்
uurrij?
ம். மானாரே! திடமாகச் சொல்லும், ஆபத்தை ஏற்படுத்தியவனை
நாசகாரஞ் செய்து விடுகின்றேன்.
! அங்கு தான் மயிலாரும் முயலாரும் ஆபத்தில் சிக்கி குரல்
தந்தார்கள்.
நீங்கள் இருவரும் அவர்களுடைய ஆருயிர்த் தோழர்கள், ஏன்
அவர்களுக்கு உதவவில்லை.
ஆபத்தில் உதவுவதுதானே உண்மை நட்பு லண்டன் பியூட்டியுடன் சேர்ந்ததிலிருந்து, மயில் என்னுடைய
உண்மை நட்பை அறுத்து விட்டது.
மிஸ் மிக்கிஷாவுடன் முயலார் நட்புக் கொண்டதிலிருந்து
என்னுடைய உயர்ந்த நட்பை அறுத்து விட்டார் மன்னா!
லண்டன் பியூட்டி, மிஸ் மிக்கிஷா.ம் புதிதாய் ஓர் புதிர் இது ஓர் புதிய குழப்பமாகத்தான் இருக்க வேண்டும் மன்ன! : நாம் நேரிலே சென்றால் ஆபத்தை அகற்றிவிடலாம் மன் &
ஒற்றுமை எனும் கூடு ஒரு நாளும் ஆட்டங்காணக் கூடது.
ஒற்றுமையை அழிக்க பல தீய சக்திகள் எம்மிடம் தன் உஆம்: அதில நாங்கள் கவனமாக இருக்கவேண்டும். சரி. வாருங்கள் போய்ப் பார்க்கலாம்.
தந்த தகிட தகிட தாம்
திந்த தகிட தகிட தோம்.

Page 47
64 நகல்
(இப்பாடலுக்கு சிங்கத்தாருடன் ஏனைய விலங்குகள் வெளியேற, முயலையும் மயிலையும் நரிகள் இழுத்துக் கொண்டு மேடைக்கு வருதல்) UITL6) டும் டும் டும் மத்தளம்
பம் பம்பம் டமாரம்
மயிலின் இறைச்சி பிடிச்சுப்போட்டு
டும் டும் டும்
முயலின் இறைச்சி ருசிச்சுப் பார்ப்போம்
—0 l-LfÖ L....) (இப்பாடலுக்கு மயிலும், முயலும் சித்திரைவதைப்படல்) (இவற்றைக் கண்ணுற்ற சிங்கத்தாலும், ஏனைய விலங்குகளும் நரிகளைப் பிடிக்கத் திட்டம் தீட்டல்)
சிங்கம் டேய்! அவங்களப் பிடியுங்கோடா!
(நரி ஐ மட்டும் தப்பிவிடும்)
JT63)6 : நரியாரே! அற்பப் பதரே, எழுந்து நில், ஏன்? இப்படிச்
செய்தீர்?
5) to குள்ள நரியாரே! கள்ளமாய் தீங்கு செய்ய உனக்கு எப்படி மனம்
வந்தது சொல்.
நரி II ! ஐயா சிங்கமகாராஜா. நானில்ல அவர் தான் எங்கட பெரிய நரியாரின்ர வேல தான் இது. எனக்கெண்டால் ஒண்டுமே தெரியாதையா.
5î III ! ஐயா சிங்கமகாராஜா. உண்மையில் எங்களுக்கு மயிலாரையும்
முயலாரையும் சாப்பிட விரும்பமில்லை. அவர் பெரியவர்தான் எங்கள கட்டாயப்படுத்தினவர் அவரக் கேளுங்கோ!
சிங்கம் அப்ப! உங்கள் ரெண்டு பேருக்குமே ஒண்டுமே தெரியாது.
அப்படித்தானே!
5ới II,III ஓமோம். சிங்கமகாராஜா! எங்களுக்கு விடிஞ்சதும் தெரியாது.
பொழுதுபட்டதும் தெரியாது! மன்னா,
UL. f3)60T ம். நீங்கள் ரெண்டு பெரும் காயத்தோட மட்டும் தப்பி
விட்டீர்கள்.
கரடி உங்கட உண்மையானநட்புகள் எங்களுக்கு தெரிவிக்காவிடில் இப்ப
நீங்கள் ரெண்டு பெருமே, இரையாகிப் போயிருப்பீர்கள். மயில் மானாரே! என்னை மன்னியும் வெளுத்ததெல்லாம் பால் எண்டு
நம்பிப்போட்டன். முயல் குரங்காரே! என்ன மன்னியும் வெறும் புகழ்ச்சிய நம்பிப்
போட்டன்.

மன்னிப்போம்! மறப்போம்!! 65
மான் உண்மையான அன்பு ஆழ்மனதில் இருக்கும் உலக இன்பத்தைக்
காட்டுகிறது. எல்லாமே மாயை.
érÉjsub உங்களுக்குள் ஒற்றுமையா இருங்கோ! ஒற்றுமையா இருங்கோ! எண்டு எத்தின தடவ சொல்லியிருப்பன், நாங்கள் எல்லாம் ஒரே இனம். எங்களுக்குள்ள என்ன பாகுாபாடு? எங்கட ஒற்றுமையை குலைக்கிற சக்திய முதலில் கண்டுபிடிக்க வேணும். கண்டுபிடிக்கிற அந்த சக்திய அழிக்க வேணும். இப்படி எங்கட ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கிற சக்தி உருவாகாம அழிக்க வேணும்.
T6T மன்னா! இந்த இருவரையும் வைத்தே நாம் நினைக்கிறதசாதிக்க
(Մ)ւգսկմ). சிங்கம் டேய் நாணல்களே! நான் சொல்வது போல செய்ய வேண்டும்.
அப்படிச் செய்தால் உயிரோடு திரும்பு வீர்கள். இல்ல திரும்பவும் உங்கள் புத்திய காட்டுவீர்கள் எண்டால். JBiñ II,II இல்ல மகாராஜா. தாங்கள் சொல்வது போலவே செய்கி
றோம். (சிங்கம் காதில் உரைத்தல், நரி I, III மேடையில் நிற்க மற்றவர்கள் மேடையில் ஒழிதல்.)
நரி II ரீற், ரீற், ரீற், ஹலோ பெரிய நரியாரோ?
[5î III லண்டன் பியூட்டி, மிஸ் மிக்கிஷாவா?
நரி 1 ஓமோம்.உங்களுக்கு ஏதும் பிரச்சனையில்லையே?
நரி II இல்லை நண்பா. எப்பிடி முயலார் நல்ல ருசியோ?
நரி 1 டேய்! அந்த குள்ளர் ரெண்டு பேரும் தப்பி விட்டினம். அடுத்த
முறை தப்ப விடமாட்டன்.
நரி III சரி நண்பா இப்போ நீ எங்கே நிற்கிறாய்?
நரி 1 ம். நான் பாதுகாப்பான இடத்தில் தான் நிக்கிறன்.
நரி II உன்னிடம் ஒரு நல்ல செய்தி சொல்ல வேணும்.
[5î III நாம் பேத்து ஆலமரத்துக்கு கிழக்கால நிக்கிறோம்
நரி II அங்க அவசரமா உடனடியா வாரும்
நரி 1 : O.K நேரில் சந்திப்போம்.
பாடல் தொம் தொம் தொம் தகிட தகிட
தொம் தொம் தொம் தகிட தாம்.
(மற்றவர்கள் ஒழிந்திருப்பது தெரியாமல் நரியார் 1 மற்ற நரிகளிடம் வந்து பழகுதல்)

Page 48
Af
કીર્દિા8sti
நகல்
அவனைப் பிடியுங்கோடா.
(நரியார் மிருகங்களின் பிடியில் மாட்டிக்கொள்ளல்)
நரி 1
சிங்கம்
நரி 1
சிங்கம்
Uj T6)60T
கரடி
குரங்கு
நரி 1
Lomait
குரங்கு
எல்லோரும்
மான்
சிங்கம்
lugg3T
நரி 1
சிங்கம்
குரங்கு
65),
கரடி
எல்லாரும் என்ன மன்னியுங்கோ!
உன்னை மன்னிப்பதா துரோகி. ஏமாற்றுக்காரன் பித்தலாட்டக் காரன், மோசக்காரன்.
சிங்கராஜா என்ன இப்படி ஏசாதிங்கோ. எல்லாம் இந்த எட்டப்
பங்களால தான். மயிலாரின் இறைச்சி ருசி பார்க்க வேனும் எண்டு தவியாய் தவிச்சாங்க. என்னை உசிப்பிவிட்டவங்க இவர்கள்தான். டாவம் நாம் கொஞ்சம் பிந்தியிருந்தால் மயிலாரும், முயலாரும் பலியாகியிருப்பினம்.
ஒற்றுமைய குழப்புற சக்தி நீ தான். எங்கள சின்னா பின்னமாக்க நினைச்சீர்.
கடைசியில் உங்கள் இனம் தான் சின்னாப் பின்னமாப்
போச்சு.
எல்லாம் இந்த Hand phone ஆல வந்தது. இது உண்மையான
5L-l.
எப்போது ஜெயிக்கும் போலி நட்பு. ஒரு நாளில் வெளிப்பட்டு
விடும் என்பத நான் உணர்ந்திற்ரன்.
இந்த Hand phone ஆல கன கன விஷயங்களையும், கன கன
ஆட்களும் பிடிபடப் போயினம்.
வேண்டாம். இது எங்களுக்கு வேண்டாம். ஒற்றுமையா வாழ்ந்தா இந்த Handphone தேவை யில்லை. நரியாரே உமக்கு சரியான பசியோ? பசிக்கு முயலும் மயிலுமா இரை?
சரியான பசி. எட்டி எட்டிப் பார்த்தோம். திராட்சையும்
சரிவரயில்ல. ம்.பசி போக்க திராட்சைய கொடுத்திருந்தா பாவம் நரியார் ஏன்இப்படி நடந்திருப்பார்?
அப்ப உயிர்க்கொலை கூடாது எண்டால் எங்கட காட்டில நாங்களே
பயிரிடுவம்.
அடுத்தவரை எதிர்பார்க்காமல் எங்கட கைய நம்புவம்.
அநியாயமா உணவுக்காக கொல்லப்படும் உயிர்கள்
காப்பாற்றப்படும்

நரி 11
5ĵh III
நரி ஐஐ சிங்கம்
மயில்,முயல் பாடுனர் எல்லோரும்
பாடல்
desT6, Guruh ! uost'ICL TÈ! 67
எங்கட உதவி எப்பவும் உங்களுக்கு இருக்கும். உண்மையான நட்ப குழப்பிய நாங்கள் இப்படி உத வினோமென்டால் .
அதுவே ஒரு பிராயச்சித்தமாயிருக்கும். ஓம். உயிர்கள் கொல்லாம பயிர்கள் வளர்ப்போம் நாமெல்லோரும் சேர்ந்து உழைப்போம் மன்னிப்போம் மறப்போம். உண்மை நட்பை அறிந்து கொண்டு உறவாடுவோம். நாங்களும் உங்களோடு ஆடிப்பாட வரட்டோ? ஓம் ஓம் ஆடிப்பாடுவம். ஆட்டம் பாட்டம் போட்டிடுவோம். ஆனந்தமாய் விளையாடுவோம். பாலர் நாங்கள் ஒன்று கூடி, பாவினையும் இசைத்திடுவோம் ஏமாற்றம் வாழ்வில் கூடாது. ஏமாறும் உள்ளமே திடம் கொள்ளடா! நட்புக்கு இலக்கணம் வகுத்திடடா! நட்புக்காக வாழ்ந்திடடா!
6f 6ft 6) T6) agen
6T 6). 6d. T6 si6)6977...
(நடிகர்கள் மேடையை விட்டு வணக்கம் கூறி வெளியேறல்)

Page 49
நோன்பு
பிரதியாக்கம்
திருமதி ராஷிதா மொஹமட் இர்ஷாத்
ஆயிசுா கதீஜா ஹலீமா
ரசாக்
கலீல்
இடம்
பாத்திரங்கள்
அயல் வீட்டுப் பெண்
தாய் கதீஜாவின் மகள் கதீஜாவின் மகன்
ரசாக்கின் நண்பன்
காட்சி: 1
: கதீஜாவின் வீடு
(தாய் சினந்து வெடித்துக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டு அறையிலிருந்து வெளியே எட்டிப் பார்க்கிறான் ரசாக்.)
ரசாக்
கதீஜா
IIgfा5
கதீஜா
ரசாக்
கதீஜா
என்னம்மா..? சும்மா தொண தொணன்டு கத்திக் கிட்டிருக்கிங்க? கத்தாம பின்ன? இந்த பக்கத்து வீட்டு ஆயிசுா புள்ள என்ன பண்ணிருக்கா பாத்தியா..?
அப்புடி என்னதான் செஞ்சிர்ச்சி.?
நா அனுப்பி வெச்ச சாப்பாட்டதிருப்பியனுப்பியிருக்கா. (கோபம்
தணிந்த பாடில்லை. எரிந்து விழுகிறாள். சாப்பாட்டு அடுக்கைப் பார்த்தபடி) இவளுக்கு நல்லது செய்யவும் போப்படாது. ராங்கி புடிச்சவ
அந்தப் பொண்ணு எதுக்காக திருப்பியனுப்பிருக்கு.? சாக்குப் போக்குக்கு உண்ணும் கொறச்சலில்ல. நோம்பு வச்சிருக்காளாம். நோம்பு. !
 

ரசாக்
கதீஜா
ரசாக்
கதீஜா
ggré
கதீஜா
ரசாக்
கதீஜா
நோன்பு 69
நோம்பா..? இப்ப எதுக்கு.? நோம்பு காலம் வரத்தான் இன்னும் காலமிரிக்கே
அவளத்தான் கேக்கணும். அடக்க ஒடுக்கமான பொண்ணுன்டு
நெனச்சேன். படிச்சவ பிரியத்தோட அனுப்பி வச்சா மூங்கில அடிக்கிற மாதிரி திருப்பி விட்டிருக்காளே.! ஒரு தராதரம் தெரியவேணா? (ஆத்திரம் தீராமல் தாய் பேசிக் கொண்டேயிருக் கிறாள். ஆற்றாமையோடு அறையிலிருந்து சமையலறைக்கு வருகிறான் ரசாக்)
சரிமா!. யாரடயும்.உண்மையயான நெலம தெரியாம யார்மேலயும்
வீண்பழி சுமத்துவதும் அவளவு நல்ல மில்லம்மா ! (தனக்குள்) அண்டைக்கு பின்னேரம் மொகம் கழுவ வீட்டின் பின் கட்டுக்கு போககொல, சரிஞ்ச முக்கா டோட பக்கத்த வீட்ல அரபுப்பாடம் சொல்லிக் கிட்டிருந்திச்சே. நம்ம ஹலீமாக்கு . அது தான் ஆயிசாவோ. அந்தப் பொண்ண பாத்தா நிச்சயம் நம்ம உள்ளுர் பொண்ணு போல தெரியல.நான் வெளிநாட்டில இரந்த பல வருசுங்களுக்குள்ள இவள் இங்க வந்திருப்பாளோ..? என்னமோ. ? எது எப்பிடி போனாலும், பாவம். வயித்துப் பொழப்பக்கு ஒதிக்குடுக்குது போல. (பேச்சளவில் கேட்பது போல நாசூக்காக). அது சரிம்மா. நம்ம ஹலிமா இரிக்கே!.அதுக்கு ஒதிக்கொடுக்க ஆள் அமர்த்தியா இருக்கீங்க.?
ஆ. ரசாக்கு .அந்தப் பொண்ணு ஆயிசுா இருக்கே. அசலூர் பொண்ணா..?
ஆமா..! (தலையசைத்து) வந்து வருசும் ஒண்ணாச்சு. மதர்ஸாவுல
ஓதிக் குடுக்குது. அதோட ஒழிஞ்ச நேரத்துல நம்பளை மாதிரி யாராச்சும் ஒதிக்குடுக்கக் கூப்பிட்டா வுட்டுக்கு வந்துட்டு போவுது. கொஞ்ச நாள இங்க வரல்ல போல இருக்கு! ஊமப் பெண் ணாட்டம் ரொம்ப சாது. எண்ணி எண்ணி பேசும், ! ஏன் திருப்பி அனுப்பிச்செண்டு தான் யோசிக்கிறன். அப்பிடி செய்ற பொண்ணுமில்ல அது!.
அப்படியா உம்மா..!
: ஆமா. ஒருநாள் துருவத்துருவி கேட்டதில அந்தப் பொண்ணோட
கசுடநசுடம் தெரிஞகது. அஞ்சு வருசத்துக்கு முன்னாடி ஆயிசுாக்கு பரிசம் போட்டு கல்யாணம் செய்தாங்களாம். சொந்தத்துல தான் மாப்ள . ஆனா, நிச்சயம் பண்ணின கலியாணம் நடக்காம போச்சாம்.

Page 50
'?)
ரசாக்
ரசாக்
கதீஜா
இடம்
கலீல்
JgIाऊँ
கலீல்
ரசாக்
நகல்
ஏ. என்னாச்சாம் ? அந்த மாப்ளக்கி ஏதக்கம் ஆபத்தா..?
(படபடப்டன் கேட்கிறான்)
இல்லே. பெரும் டனத்தை கூலியா குடுத்து நகை, நட்டு, சீதனம்
ஏராளமா தர்றதா சொன்னடத்தில அந்தப்பையன் கலியாணம் முடிச்சிட்டானாம். அன்னிலேருந்த இநதப் பொண்ணுக்கு ஒண்ணும் சரிவர:ை அதோட பெத்த தகப்பனையும் பறிகுடுத் திட்டு ஒதிக் குடுத்து அதடயும் தாயிடயும் வயித்தக் கழுவிக்கிட் டிருக்குது. :ஈபம்.
அவளவு புத்திசாதுரியமா நடக்குற பொண்ணு காரண மில்லாம
சாப்பாட திருப்பியனுப்பியிருக்காதுமா. ஆயிசுா ஏன் இப்படி நடந்து கொள்ளோணும்.? விதிக் கப்பட்ட ஒரு மாத காலம் நோன்பிருக்கிறதுதான் நியதி. ஆல்லாத சமயத்தல நோன்பிருக்கிற Qg56TLIT?..
அத உட்டுப்போடு நமக்கு தேவையில்லாத விசுயம்.
காட்சி: 2
கடைத்தெரு
அடெய் மச்சான், வெளிநாட்ல இருந்து வந்தநீ சும்மா வாலும்
இந்தப்பக்கங்களுக்கு வரமாட்டா எனடா?. அவளவு பிசியா..? பழைய பிரண்ட்ஸ் எல்லாம் பார்க்கக்கூட ஒனக்கு மனசில்ல GT60T LIT...?
இல்லடா மச்சான். உம்மாவும் தங்கச்சியும் பொண் பார்க்க வல
போட்டு தேடுறாங்கடா. வெளியில தல காட்டமுடியலடா. அது சரி எங்கட பக்கத்து வீட்டு ஆயிசாவ பத்தி என்ன நெனக்குற.?
பாவம்டா..! எவ்வளவு அழகான அடக்கமான பொண்ணுன்
நான் மட்டமில்ல இந்த ஊரே சொல்லுது. ஒரு தடவ கலியாணம் கலஞ்சதுல இருந்து யாருமே கணக்கெடுக்கிறதில்லடா. அதட வாப்பாவயும் தொலச் சிட்டு நீ வெளில போயிருந்த 5வருசத்தில கண்மூடி திறக்க முன்னமே எல்லாமே முடிஞ்சு போச்சு. அது சரி. ஏன் திடீரெண்டு கேக்குறா..?சும்மா கேக்க மாட்டியே.?
இல்லடா எங்கட வுட்டால அனுப்பியிருந்த சாப்பாட்ட திருப்பி
அனுப்பிருந்திச்சு. ஏண்டு தேடிப்பார்த்தனவுல நோன்பு பிடிச்சிருந்தாம். அடிக்கடி நோன்பு பிடிக்கிறதா ஹலீமாவும் சொல்லிச்சி. ஏண்டா இப்படி. ஏதும் நேத்திக்கடனோ..?

கலீல்
Jafts,
கலீல்
ரசாக்
கலீல்
Jémठं
நோன்பு 7.
இல்லாட்டி? ஏதும் காசு பணமில்லாததாலயோ? ஒண்டும் வொங்கலடா?
ரன்டா நீ சும்மா மனச கொழப்பிக் கொள்:?
ஒனக்கிட்ட உண்Sைt) சென்ன என்ன.ா? ஒய்மாவும் தங்கச்சும்
பக்கத்தூருக்கு பொண் பார்க்க பெய்த் தாங்க. இப்படி அடிக்கடி போயிடராங்க. வீடும் வெறிச்செண்டு இருக்கு பெண்டார்க்கும் படலம் அதுவும் கார் ஹயருக் கெடுத்துக்கொண்டு போறாங்க. ஏப்பதான் முடியுமோ..? தெரியல. ஊண்டு மட்டும் உண்மை. நிச்சயமா எனக்கு பெரிய எடத்துல முடிக்க இசுடமில்லடா. ஆடம்பரம் மட்டும் தானிருக்கும். நிம்மதி இரிக்காது வந்து ஒரு மாதமாத்தான் உம் மாட்ட சொல்றன். பொண்ணு பாக்கிற வேலைய நிப்பாட்டச் சொல்லி. கேட்டாத்தானே.
ஒன்ட கதய பாத்தா ஒன்ட ரூட்டெல்லாம் அப்ப ஆயிசாக்க
போல இருக்கு?. என்னடா திடீர்க் காதலா?
காதலா ? அனுதாபமா ? எனக்கு ஒண்டுமே வெளங்கு தில்லடா.
மனசு கொழம்பிப் போயிருக்கு. அவள் அடிக்கடி நோன்பிருக்கா, ஏன் பட்டினியா.? இல்ல வழிஇல்லாமலா? இல்ல நேத்திக் கடனா..? ஒண்டுமே வெளங்குதில்லடா. ஒரு பணக்காரவூட்டுக்கு வாழ்க்கை பட்றத விட ஒரு தகப்பனில்லாத ஏழைப் பெண்ணுக்கு வாழ்க்க குடுக்கிற எவளவு நன்மை.
சரி. சரி. பக்கத்து வுட்டுப்பொண்ணு தானே.? சந்தர்ப்பம்
கெடக்ககேல கேட்றன். ஆப்ப தெரியும் உண்மை. நிம்மதியாவும் இருப்பாய். கடல் கடந்து போய் கேக் குற மாதிரி அலட்டிக் கொள்நியே! நேரம் பாத்து பட்டெண்டு கேட்ரு. சும்மா மனச போட்டு கொழப்பிக் கொள்ளாத. எல்லாம் நல்லாவே அமையும்.
சரிடா..! ஏதோ எல்லாம் அல்லாஹ்ட கைல தான் இருக்கு. நீயும்
துஆ செஞ்சி கொள். நா பொய்ட்டு வாறன். (வீடு நோக்கி நடக்கிறான் ரசாக்).
asné: 3
கதீஜாவின் வீடு
(நெற்றிப்பொட்டை அழுத்திய படி ரசாக் சிந்தனை வசப்பட்டிருந்த போது வாசலில் நடமாட்ட அரவம் கேட்டது. தொடர்ந்து மெல்லிய அழைப்புக்குரல்)
ஆயிசுா
ஹலீமா. ஹலீமா, (சுயாதீனமாக உள்ளே வந்துவிட்டு பதில்
சொல்ல யாருமில்லை என்று உறுதிப்படுத்திக் கொண்டவள்

Page 51
72
(J&FT&
ஆயிசுா
JIाठं
ஆயிசுா
ரசாக்
ஆயிசுா
Tgrार्य
ஆயிசுா
ரசாக்
ஆயிசுா
ரசாக்
ஆயிசுா
ரசாக்
ஆயிசுா
TFIाऊँ
ஆயிசுா
நகல்
போல் செல்ல எத்தனித்தவளாக இருக்கும் வேளை ரசாக் அறை யிலிருந்து வெளியே வருகிறான். இந்த அரிய சந்தர்ப்பத்தினை துளிகூட எதிர் பார்க்காதவனாக ஒரு சித்திரத்தின் மொத்த உருவையும் பார்ப்பது போல் அவன் அவளை உற்று நோக் கினான். நொடியில் அவள் திரும்பிப் போய் விடுவாளோ என்ற துடிப்பு. எப்படி நிறுத்தி வைப்பது எனும் பரபரப்புடன் அவனும் தாழ்மையான குரலில்)
கொஞ்சம் இருங்க..! (திடுக்கிட்டு படபடப்புடன்) ஹலீமா. ? உள்ளே. யாராச்சும். இல்லே. யாரும் இல்லே . அப்ப நா வர்றேன். நா வந்து போனதா சொல்லுங்கோ
(பார்வையை தரையில் பதித்து)
உங்ககிட்ட ஒண்ணு கேக்கணும் (ஆயிசுா: நிமிர்ந்து பார்க்க)
உம்மாக்கு உங்கமேல கோவம்.
இருக்கும். அன்னிக்கு சாப்பாட்ட திருப்பிட்டேனே. காரணமும்
சொல்லித்தானே அனுப்பினன். பொருத்தமா இல்லியே..!
ஏ. இல்லாம? நோன்பு வைச்சவங்க விருந்துச் சோறு சாப்பிடவா
(ւplգսկմ) ?. காலமில்லாத காலத்துல நோன்பு வைக்கக் காரணம்?
அது எனக்குப் பழக்கம்
எதுக்காக.
ஒங்களுக்கத் தெரிஞ்சிருக்கலாம்.
இல்ல. உண்மையா தெரியாது. ஒழுக்கமுள்ள ஒரு பெண்ணா இருக்கிறதுக்குத் தான். (நெற்றியைச் சுருக்கி) அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் (நிமிர்ந்து பார்த்து) வழியில்லாதவங்களுக்கு இது ஒரு வழி. ஆமா. கல்யாணம் பண்ணிக்க வசதி இல்லாத நம்மல மாதிரி வறியவங்க இச்சைகள கட்டுப் படுத்திக்கிட்டு ஒழுக்கமா வாழ்ற துக்கும் காப்பாத்தறதுக்கும் நோன்பு வைக்கிறது தான் வழின்னு நம்ம குர்ஆன்லே ஆண்டவன் சொல்லிருக்கான். இவளவு தூரம் கேட்டதால தான் சொன்னேன். (தணிவாகச் சொன்ன வார்த்தை கள் தணலைத் தன் மேல் வாரிக்கொட்டியது போன்ற உணர்வோடு)

நோன்பு 73
ஆயிசுா அது வந்து .ம். ஓங்களுக்கு. புடிச்சிருந்தா ஓங்கள.
ஒங்கள முடிக்க அனுமதி தருவீங்களா..? (நிலத்தில கண் புதைத்தவாறு வெட்கித் தலை குனிந்து வினவினான்) (பதில் வரவில்லை. ஆவலோட எதிரே பார்த்தான் அவள் அங்கு இல்லை என்ற திடகாத்திரம் கொண்டவனாக யோசிக்கலானான். தாயின் வரவை எதிர் பார்த்து வாசலை நோக்கியவனாக. ) இருபத்தைந்து வயதில் இளைத்துக் களைத்துப் பற்றுக் கோடில்லாத தனிக்கொடியாக நின்றுகொண்டிருக்கின்றாள் ஆயிசுா. நோன்பு தான் இவளுக்காகக் காவல்.கன்னி கழியாமல் தன்னை வதைத்துக் கொண்டு நோன்பிருக்கும் இவளைப்போல் எத்தனை ஆயி சுாக்களோ? அவள் நோன்பு வைப்பது கற்பை காப்பாற்ற மட்டுமில்ல: கல்நெஞ்சம் படச்சவங்க கண்கள திறக்கவும்
தான்.
(தாயும் தங்கையும் வருதல்)
ஹலீமா
கதீஜா
Tसा5
கதீஜா
ரசாக்
கதீஜா
JछIाऊं
என்ன நானா..? பெரிய யோசனை போல ஒனக்கு ராசியே இல்ல
. ஒண்டுமே சரிவருதே இல்லை.(ரசாக் புன்னகைத்தல்)
ஹலீமா .ஒன்ட வாய மூட்றியா? ஆட ரசாக்கு நீ ஒண்டுக்கும்
யோசிக்காதடா. ஆண்டவன் கண் பாக்காமலா போயிடுவான்.
(தனக்குள் நிம்மதிப் பெருமூச்சு விட்டவனாக) இப்ப கலியாணத்
துக்கு என்னதான் அவசரம். ஹலீமாவ கரசேத்த பிறகுதான். ஏன்ன செஞ்சாலும். அத எத்தன முறை சொன்னாலும் இங்களுக்கு வெளங்காது.
சும்மா இரிடா. ஹலீமாக்கு இப்பதான் 12வயசு அவளுக்கு
கலியான வயசு வரக்கொல நீ பாட்டனா போயிடுவா. என்ர கண்ணோட ஒனக்கு முடிச்சித் தந்திட்டா வாற மருமக எண்ட புள்ள ஹலீமாவுக்கு தொணையாக இருக்குமே. அதுக்குத்தான் நல்ல பொண்ணா அயலூர் வரைக்கும் வலை போட்டு தேர்ரன். (பட்டென்று கேட்கத் தொடங்கினான்) எதுக்கு இவளவ் தூரம் அலையிறீங்க, பக்கத்துலயே ஒழுக்கமான நல்ல பொண்ணா வெச்சிக்கிட்டு. ?
என்னடா சொல்ற.? சாப்பாட்ட திருப்பியனுப்பின தரம் கெட்ட
அந்த பொண்ணயா சொல்ற.?
இல்லமா நாங்கதா தவறா நெனச்சிட்டம். தன்ட இச்சைய
கட்டுப்படுத்துறதுக்கும் கற்ப காப்பாத்துறதுக்கும் கலியாணம்

Page 52
74
கதீஜா
ஹலீமா
கதீஜா
நகல்
முடிக்க வசதியில்லாதவங்களுக்கு இஸ்லாம் அனுமதித்த, ஒருமுறை தான் 'நோன்பு அதத்தான் அந்த பொண்ணு செஞ்சிருக்கு. பொய் சொல்லலம்மா.
அல்லாஹ்வே!. ஆயிசுா விசுயத்துல நான் தவறா நெனச்சத்த
நீதான் மன்சிக்கணும் மத்தவங்களைப் பத்தி தவறெண்ணம் கொண்டது. இஸ்லாத்துல எவ்ளவு பெரிய பாவம் இந்தப் பாவத்த போக்க ஒரேவழி {ரசாக் படபடப்புடன் தாயைகூர்ந்து பார்க்கிறான்) அந்த தங்கமான பொண்ண ஒனக்கு கட்டி வெக்கிற தாண்டா. (ரசாக்கின் சந்தோசத்திற்கு அளவே இல்லை. முகத்திலே வெட்கம் கலந்த சந்தோசத்தை வெளிப்படுத்தியவனாக அறைக்குள் நுழைகிறான்.)
தங்கமான அரபு ரீச்சரும் கூடமா. ஒரு ஏழைக்கு வாழ்க்கை
குடுக்குறது எவ்வளவு புண்ணியம், எனக்கும் சரியான சந்தோசம்மா!.
சரி. நாளைக்கே ரெண்டு பேரும் ஆய்சுாட உம்மாட்ட பொண்
கேட்டு மொறயா போவம். நிச்சயமா வாணாண்டு சொல்ல மாட்டாங்க . ஒன்ட நானாவும் எப்பவும் எங்க கூட எங்களுக்கு கிட்டவே இருப்பான். (என்றவாறு அந்தத் தாய் நிம்மதிப் பெருமூச்சு வீடுகிறாள்)

சிகரங்களாகும் மனிதங்கள்
பிரதியாக்கம் திருக்கோயில் யோகா யோகேந்திரன்
பாத்திரங்கள்
1. காயத்திரி WM ரீச்சர்
2. Consist m மாணவன்
3. மணிமேகலை Rw. காயத்திரியின் தாய் 4. தேவி மோகனின் தாய் 5. அதிபர் WW மோகனின் பாடசாலை அதிபர் 6. g) Lu S9âuj மோகனின் பாடசாலை உபஅதிபர்
asnáR: 1
இடம் பாடசாலை விட்டுச் செல்லும் வழி
(காயத்திரி ரீச்சர் பாடசாலை முடிந்து வீடு செல்கிறாள். அவளுக்குப் பின்னால் ஒரு சிறுவன் அவளை அழைத்தபடி வேகமாகப் பின் தொடர்கிறான்)
சிறுவன் காயத்திரி சிறுவன் காயத்திரி
சிறுவன்
காயத்திரி
ரீச்சர்! ரீச்சர்! கொஞ்சம் நில்லுங்க ரீச்சர். (திரும்பிப்பார்த்து) என்ன தம்பி.? ரீச்சர் நீங்கள் செயின் போட்டுக் கொண்டு வந்தனிங்களே.! (தனது கழுத்தை தடவி) ஐயோ கடவுளே!. என்ர செயினைக் காணல்ல. ஏன் தம்பி நீ அதை எங்காவது கண்டெடுத்தியா..? (சிரித்தபடி பொக்கற்றுக்குள் கையை விட்டு) இந்தாங்க ரீச்சர் உங்கட செயின் !
தம்பி! உன்னை யாரென்றே எனக்குத் தெரியாது. இவ்வளவு பெறுமதியான பொருளை உரியவரிடம் கொடுக்க எப்படியப்பா மனம் வந்தது. ?

Page 53
76
சிறுவன்
காயத்திரி சிறுவன் காயத்திரி சிறுவன் காயத்திரி
மோகன்
காயத்திரி
மோகன்
காயத்திரி
மோகன்
காயத்திரி
மோகன்
காயத்திரி
மோகன்
காயத்திரி
மோகன்
நகல்
உங்களுக்கு என்னைத் தெரியாட்டியும் எனக்கு உங்களை நல்லாத்
தெரியும். நீங்க ஸ்கூல் போர வார நேரம் கண்டிருக்கன்.
அப்போ உன்ர வீடு இந்தப்பக்கம் தானா..?
அல்ல ரீச்சர். வீடு மாக்கட் ரோட்டின் பின்பக்கம்.
அது சரி ..! உன்ரை பேரென்ன..?
மோகன்ராஜன். வீட்ல 'மோகன்'
மோகன்! என்ன இது!! உடுப்பெல்லாம் இப்பிடி அழுக்காயிருக்கு.?
நீ ஸ்கூல் போறதில்லையா..?
இல்ல ரீச்சர் அஞ்சாம் வகுப்பு பாஸ்பண்ணினதோட ஸ்கூல்
போறல்ல
எனக்கு உன்ர வீட்டுக்கு வரவேணும். உங்கம்மா வைப்
பார்க்கவேணும்.
ஏன் வீட்டுக்கு வரப் போறீங்க..?
இந்த நல்ல பிள்ளையோட அம்மாவை நான் பார்க்க வேணும்.
நீ செய்த இந்த நல்ல காரியத்துக்கு பரிசு தரவேணும்.
இல்லை ரீச்சர். எனக்குப் பரிசொண்டும் வேண்டாம். என்ட
அம்மாவைப் பாக்கோணும் ஏண்டா நான் அவவை உங்கட வீட்டுக்கு கூட்டிக்கொண்டு வாறன். எனக்கு உங்கட வீடு தெரியும். அம்மன் கோவில் றோட்டில மோகனா ரீச்சருக்குப் பக்கத்து வீடு தானே?
அட! பெரிய விபரகாரனாய் இருக்கிறாயே..? முறைப்படி நான்
தான் உங்கட வீட்டுக்கு வரவேணும். பரவாயில்லை நீ பின்னேரம் அம்மாவைக் கூட்டிக் கொண்டு வீட்டுக்கு வா. சரியா..?
சரி ரீச்சர் (திரும்பிப் போதல்) ! நீ அஞ்சாம் வகுப் பில படிச்ச கொப்பியள் ஏதும்
வச்சிருக்கிறாயா?
எல்லாக் கொப்பியும் இருக்கு. எதுக்கு கேக்கிறீங்க பின்னேரம் வாறபோது தமிழ், கணிதம், சுற்றாடல் கொப்பி
மூணையும் எடுத்துக் கொண்டு வா. ஏனெண்டு பிறகு சொல்லுறன்.
சரி ரீச்சர் (போகிறான்)
an ni in w திரை o wno - see

இடம்
சிகரங்களாகும் மனிதங்கள் 77
sid: 2
காயத்திரி வீடு
(காயத்திரி வீட்டில் காயத்திரியும் தாய் மணிமேகலையும் இருக்கிறார்கள். மோகனும் அவனது தாய் ரதிதேவியும் வருகிறார்கள்.)
காயத்திரி
தேவி காயத்திரி
தேவி காயத்திரி
மோகன்
காயத்திரி
தேவி
காயத்திரி
தேவி
வாங்கோ வாங்கோ இப்பிடி இருங்கோ (கதிரையைக் காட்டு
கிறாள்)
என்னம்மா வரச் சொன்னிங்க
உங்கட மகன் மோகன் எனக்குப் பெரிய உதவி செய்திருக்கிறான்.
அவனை உங்கட வீட்டுக்கு வந்து பாராட்டி பரிசு கொடுக்க நான் விரும்பினன். அதோட உங்களயும் பார்க்க ஆசைப்பட்டன். ஏன் மோகன் எதுவும் சொல்லலையா..?
இல்லம்மா. அவன் எதுவும் சொல்லலை
இவன் பெரிய அழுத்தக்காறன். நடந்த விசயத்த ஏன் அம்மாட்ட
சொல்லல.
இல்ல ரிச்சர் இஞ்ச வந்த அறிஞ்சு அம்மா சந்தோசப்படட்டுமன்
எண்டு தான் நான் சொல்லல
! உங்கட மகன் என்ர மூணு பவுண் சங்கிலிய வழியில கண்டெ
டுத்து என்னட்ட தந்தான். இந்தமாதிரி நல்ல குணம் அவனுக்கு வர நீங்கதான் முழுக்காரணமாய் இருக்க வேணும். அதனால தான் உங்களப் பார்க்க விரும்பினன்.
! அப்படியாம்மா..? உப்பிடித்தான் அடுத்தவயின்ர சொத்த
எமக்கேனம்மா என்பான்.
: இந்தக் காலத்தில இதெல்லாம் பெரிய விசயமம்மா இந்த மாதிரி
மனசு இருக்கிறது அபூர்வம் . அது சரி மோகன் ஏன் ஸ்கூல் போகாம நிப்பாட்டினீங்க?
கஷ்டம் தான். வருமானமொண்டுமில்ல அவரும் காலஞ்செண்ட
பிறகு இவன வளக்க நான் மிச்சம் கஸ்டப் பட்டுப் போனன். கொஞ்ச நாள் இடியப்பம் பிட்டு செய்து கடையஞக்குக் குடுத்தன். பிறகு அதையே பலரும் செய்யத் தொடங்கினால கடையஞக்குக் குடுக்கிறது கஷ்டமாப் போச்சு. இப்ப கச்சான் வறுத்து பின்னேரத்தில விக்கிறன். பக்கத்து வீடுகளில ஏதும் உதவிக்குக் கூப்பிட்டா போவன். சாப்பாட்டுப் பாட்ட கொன்டு நடத்திறதே கசுடம். ஆதனால மோகன் பள்ளியால நிப்பாட்டி செல்வம் முதலாளிர கராச்சில எடுபுடி வேல செய்ய அனுப்புறன். கிழமைக்கு ஐநூறு ரூபா காசு தருவார்.

Page 54
'78
நகல்
(உள்ளே போன மணிமேகலை கையில் தேநீர்த் தட்டுடன் வருகிறாள்)
மணிமேகலை
(அவர்கள் தேநீர்
r
இந்தாங்க தேத்தண்ணியைக் குடிங்க. மகன் நல்ல விதமாக
வளர்த்திருக்கிறாய். இந்தக் காலத்தில இப்பிடிப் பிள்ளையளக் காணேலாது. (மோகனின் தலையைத் தடவி) நல்ல பிள்ளை ! உனக்கு கடவுள் எல்லா ஆசீர்வாதங்களும் தருவார்.
குடிக்கும் போது மோகனின் கையில் இருந்த கொப்பிகளை
காயத்திரி வாங்கிப் புரட்டிப் பார்க்கிறாள். அவளுக்கத் திகைப்பாக இருக்கிறது. ஏற்கனவே பென்சிலால் எழுதப்பட்ட விடயங்கள் அழிறப்பரால் அழித்து மீண்டும்
பேனாவால் எழுதப்பட்டிருக்கின்றது).
காயத்திரி
(மோகன் தலைகு
தேவி
காயத்திரி
தேவி
மணிமேகலை !
என்ன இது.? கொப்பி முழுக்க பென்சிலால் எழுதி எழுதி அழிச்சு பென்னால எழுதியிருக்கு, !
னிந்து பேசாமலிருக்க)
அது வந்து . ரீச்சர் . மோகன் சின்ன வகுப்புக்கள்ல பென்சிலால
எழுதிப் படிச்ச கொப்பியள நான் தான் கொப்பி வாங்க காசில்லாததால றேசரால அழிச்சுக் குடுத்தன். ஏன் ரீச்சர் அப்பிடிச் செய்யக் கூடாதா..?
(இன்னும் திகைப்பிலிருந்து விடுபடாத காயத்திரி தேவியினதும் மோகனதும் சங்கடத்தைத் தவிர்க்க நினைத்து ) சீச்சீ. அதெல்லாம் தப்பே கிடையாது. எங்கட ஸ்கூல்லயும் பிள்ளைகள் இப்பிடிச் செய்யிறவங்க தான். அது கிடக்கட்டும். மோகன்ரைகொப்பிகளப் பார்க்கிற நேரம் அவன் நல்ல கெட்டித் தனமாகப் படிக்கக்கூடிய மாதிரிக் கிடக்கு. அவன திரும்பவும் ஸ்கூலுக்கு அனுப்புங்க.
எனக்கும் விருப்பம் தான் ரீச்சர். நான் என்ன செய்யட்டும்?
வயிற்றுப் பாட்டை சமாளிக்கிறதே கஷ்டம்
மோகன்ர படிப்புச் செலவப் பற்றி நீங்கள் கவலைப் படவேண்டாம்.
முழுச் செலவையும் நான் பார்த்துக் கொள்ளுறன். என்ன உதவி தேவையெளறாலும் நான் செய்யிறன். இப்படியான நல்ல பழக்க வழக்கங்களும் கெட்டித்தனமும் இருக்கிற பிள்ளையைப் படிப்பிக் கிறதாலை அவங்களுக்கு மட்டுமில்ல நம்மட சமுதாயத்துக்கே நன்மை கிடைக்கும்.
சரி ரீச்சர். நீங்க இவ்வளவு சொல்லற நேரம் அதை மறுக்கலாமா..?
இப்ப வருசக் கடைசியாகப் போகுது தைமாதம் அவன பள்ளிக்கு அனுப்புறன்.
நான் ஒரு விசயம் சொல்லுறன் கேளுங்க. வீட்ல நாங்க ரெண்டுபேரும் தான். நீங்க இஞ்ச வந்து எங்களோட இருங்க. பின்பக்கம் விறாந்தையோட சேர்ந்த பெரிய அறை யொண்டு

தேவி
காயத்திரி
தேவி
காயத்திரி
மோகன்
தேவி காயத்திரி
தேவி காயத்திரி
தேவி
சிகரங்ச87:கும் மனிதங்கள் 79
இருக்கு. அதில நீங்க இருக்கலாம். உங்கட வீட்ட யாருக்காவது வாடகைக்கு குடுங்க. முடியாமப் டோனா பூட்டிப் போட்டு வாங்க. இடைக்கிடை போய்ப் பார்த்துக் கொள்ளலாம்
எனக்கு சொந்தமா வீடு வளவு எதுவுமில்லம்மா. தெரிஞ்ச
தெரிஞ்சவங்கட வீட்டுக் காணியில பின் பக்கமா ஒரு குடிசையிருக்கு. அதிலை தான் இருக்கிறம்.
பிறகென்ன. அதைவிட்டுப் போட்டு வாங்க. மார்கழி மாதத்துக்
குள்ள மோகன் கராஜ் வேலைக்கும் சொல்லிப்போட்டு இங்க வந்து சேருங்க. தைமாதம் மோகன் ஸ்கூல்ல சேரவேணும் சரிதானே..!
சரியம்மா. நான் இஞ்சைவந்தா அம்மாவுக்கு உதவி செய்து
குடுப்பன்.
சரி ஒரு நல்ல நாளப் பார்த்து வந்த சேருங்க. என்ன மோகன்
எங்களோட இருக்கவும் ஸ்கூல் போகவும் விருப்பம் தானே..?
ஓம் ரீச்சர் நல்ல விருப்பம். சரியம்மா நாங்க போயிற்று வாறம்.
கொஞ்சம் இருங்க. (உள்ளே போதல் வெளியில் வந்த
காயத்திரியின் கையில் பெரிய டை இருக்கிறது. கூடவே ஒரு கவரும் இருக்கிறது - தேவியிடம் குடுத்து) மோகன் செய்த நல்ல காரியத்துக்கு என்ர ஒரு சின்ன அன்பளிப்பு இது. இந்தா பிடி மோகன். இதென்னம்மா இவ்வளவு பெரிய பை. ?
எல்லாம் மோகனுக்குரிய தின்பண்டங்கள். இந்தக் கவரில்
கொஞ்சக் காசிருக்கு.ரெண்டு பேருக்கும் உடுப்பு வாங்கிக் கொள்ளுங்க. இல்லம்மா. காசு வேணாம். இந்த சாப்பாட்டுப் பொருள்களை மட்டும் எடுக்கிறன்.
(காசுக் கவரை கதிரையில் வைக்கிறாள்)
மணிமேகலை
காயத்திரி தேவி காயத்திரி
தேவி ! அது நாங்கள் சந்தோசப்பட்டு குடுக்கிறது. மதுக்காத.
ரீச்சர் கவலைப்படுவா.
ஓம் தேவி வாங்கிக்கொள்ளுங்கோ. (கையில் திணித்தல்)
மிச்சம் நன்றியம்மா. நாங்க போய்வாறம்.
சரி. போய் வாங்க. (போகிறார்கள்)

Page 55
8O நகல்
காட்சி: 3
இடம் : காயத்திரி வீடு
(இரண்டு வாரங்களின் பின்பு தேவியும் மகனும் கொஞ்சம் வீட்டுப் பாவனைப்
பொருட்களுடன் காயத்திரி வீட்டில் ஒட்டோவில் வந்திறங்கல்)
மணிமேகலை ஆ.வாங்க. வாங்க. மனசு மாறி நீங்க வராமலிருந்து விடுவியளோ
எண்டு நானும் மகளும் யோசிச்சுக் கொண்டிருந்தம்.
தேவி அதெப்பிடியம்மா. நாங்க மனசு மாறுறது. கடவுள் மாதிரி நீங்க செய்யிற உதவிய உதறித் தள்ளினா அந்தக் கடவுளே பொறுத்துக் கொள்ள மாட்டார். எங்கம்மா ரீச்சரைக் காணேலை.
மணிமேகலை கூடப்படிப்பிக்கிற ரீச்சருக்கு சுகவீனமாம். பாத்திற்று வரப் போனா. இப்ப வந்திடுவா. உங்களுக்குத் தாறதா சொன்ன அறையை துப்பரவு செய்து கழுவி விட்டிருக்கிறா. வாங்க சாமான்களைக் கொண்டு போய் வைப்பம் (சாமான்களுடன் உள்ளே போதல்)
O MO KO திரை as
காட்சி: 4
இடம் 5: TIFFTGoo). Go
(மோகனையும் தேவியையும் அழைத்தக் கொண்டு காயத்திரி பாடசாலைக்குச் செல்கிறாள். அதிபரின் அலுவலகத்திற்குச் சென்ற காயத்திரி)
காயத்திரி : குட் மோனிங் சேர் அதிபர் குட் மோனிங்
காயத்திரி இவரை ஸ்கூல்ல சேர்க்க வேணும் சேர். இந்தாங்க இவரின்
பேர்த் சேட்டிபிக்கேற்றும் லீவிங் சேட்டி பிக்கேற்றும் இது தான் பிள்ளையின்ரை தாய் தகப்பன் தவறிவிட்டார்.
அதிபர் (ஆவணங்களைப் பார்த்து விட்டு) துறைநீலாவணையில் படித்திருக்கிறார் என்ன இவர் ஒரு வருசம் ஸ்கூல் போக வில்லையா..?. ஏன்.
தேவி ஓம் சேர் குடும்பக்கஸ்டம் சேர்.
காயத்திரி ஓம் சேர்.வீட்டில மிகவும் கஸ்டம். தகப்பனும் இல்லை இவன் போனவருசம் முழுதும் ஒரு கராஜிலை எடுபிடி வேலை செய்து கொண்டிருக்கிறான். இப்ப படிக்க விரும்புகிறான்.
அதிபர் இவர் அஞ்சாம் வகுப்பு பாஸ் பண்ணியிருக்கிறார். அதனால் ஆறாம் வகுப்பில சேர்க்கலாம். ஒரு வருசமா ஸ்கூல் போகாததால

சிகரங்களாகும் மனிதங்கள் 8.
எல்லாம் மறந்திருப்பார். அதனாலை முதலாம் தவணைப் புள்ளிகளைப் பார்த்து குறைவாக இருந்தால் திரும்பவும் அஞசாம் வகுப்பில தான் வைக்க வேண்டிவரும். நீங்களும் இவரைக் கொஞ்சம் கவனிக்க வேண்டும்.
காயத்திரி ஓம் சேர். நான் இவற்றை படிப்பு விசயத்தில முடிஞ்ச மட்டும்
அக்கறை எடுப்பன்.
அதிபர் அதுசரி. நீங்க..?
காயத்திரி நான் இங்க பக்கத்தில அம்மன் றோட்டில இருக்கிற உடையார் லேனில தான் இருக்கிறன். பற்றிமா லேடீஸ் கொலிஜில தான் ரீச் பண்ணுறன். நகுலராஜன் பொலிஸ்காரர் என்ர அப்பா தான். என்ரை பேர் காயத்திரி.
அதிபர் ஒ.! அவர் என்னோட தானம்மா படிச்சவர். பாவம் சின்ன வயதிலை அநியாயமாக கொன்று போட்டாங்க செத்த வீட் டுக்கும் நான் வந்தன். அப்ப நீங்கள் சின்னப்பிள்ளை. ஏழெட்டு
வயதிருக்கும்.
காயத்திரி சரி சேர். இவரை வகுப்பில விட்டுப் போட்டுப் போவமே?
எனக்கும் ஸ்கூலுக்கு நேரமாகுது.
அதிபர் பக்கத்துக் கட்டிடத்தில தான் ஆறாம் வகுப்பு சுஏசுசு பிரிவும்
பீ பிரிவும் இருக்குது. இவரை ஏ பிரிவில் வகுப்பாசிரியர் பாண்டியராசனிடம் ஒப்படைச்சு விடுங்கள்.
மூவரும்
a திரை Ab som i v ஆறு ஆண்டுகளின் பின்,
காட்சி: 5
இடம் பாடசாலை பிரதான மண்டபத்தில் விழா
(க.பொ.த (சாத)ரத்தில் சிறப்பாகச் சித்திபெற்ற மாணவர்களைப் பாராட்டும் நிகழ்வு பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேடையில் கல்வி அதிகாரிகள், அதிபர்அமர்ந்திருக்க உபஅதிபர் ஒலிவாங்கியில், பரிசு பெறும் மாணவர்கள் மோகனராஜன், நிர்மலன், கார்த்திகா, சிவாஜினி, மற்றும் தேவி, கார்த்திகா ரீச்சர், மணிமேகலை ஆகியோர் சபையில் பார்வையாளர்களுடன்) உபஅதிபர் : இதுவரை எமது பாடசாலை அதிபர், பிரதேசக் கல்விப்
பணிப்பாளர், வலயக் கல்விப் பணிப்பாளர், ஆகியோர் இந்தச்
சாதனை மாணவர்களையும் இந்தப் பாடசாலையில் கற்பிக்கும்

Page 56
82
ஆசிரிய ஆசிரியைகளையும் பாராட்டிப் பேசியதைக் கேட்டீர்கள். அடுத்ததாக இவ்விழாவின் முக்கிய நிகழ்வான பரிசு வழங்கல் நடைபெறவுள்ளது. முதலில் வலயக் கல்விப் பணிப்பாளரினால் ஒன்பது பாடங்களிலும் ‘ஏ’ சித்தி பெற்ற மாணவன் ஏநிர்மலன் கெளரவம் பெறுகிறார். (வலயக் கல்விப் பணிப்பாளரினால் பதக்கம் அணிவிக்கப்பட்டு சான்றிதழ் மற்றும் பரிசுப் பொதி என்பவற்றைப் பெற்றுக் கொண்டு ஏ.நிர்மலன் செல்லல், 2. Ljegošu ij அடுத்ததாக பிரதேசக் கல்விப் பணிப்பாளரினால் ஒன்பது பாடங்களிலும் ‘ஏ’ சித்தி பெற்ற மாணவி எம் கார்த்திகா கெளரவம் பெறுகிறார். (பிரதேசக் கல்விப் பணிப்பாளரினால் பதக்கம் அணிவிக்கப்பட்டு சான்றிதழ் மற்றும் பரிசுப் பொதி என்பவற்றைப் பெற்றுக் கொண்டு எம் கார்த்திகா செல்லல்.) உபஅதிபர் தொடர்ந்து மாணவி ரீ. சிவாஜினி எமது பாடசாலை அதிபரினால்
கெளரவம் பெறுகிறார். (ரீ, சிவாஜினி பாடசாலை அதிபரினால் பதக்கம் அணிவிக்கப்பட்டு சான்றிதழ் மற்றும் பரிசுப் பொதி என்பவற்றைப் பெற்றுக் கொண்டு செல்லல்) உபஅதிபர் பரிசு வழங்கிக் கெளரவம் பெறுவதில் இறுதியாக மாவட்ட மட்டத்தில் முதல்நிலையைப் பெற்ற சாதனை மாணவன் மோகனராஜன் கெளரவிக்கப்பட உள்ளார். முதலில் அவரை மேடைக்க அழைக்கிறேன். இவரைக் கெளரவப்படுத்துபவர் இவ்வாறான நிகழ் வுகளின் மாமூலான நடைமுறைக்குரியவர் அல்ல. இது தவறாதென யாராவது கருதினால் பாடசாலை நிர்வாகத்தையும் விழாக் குழுவினரையும் மன்னிக்க வேண்டும். மாணவன் மோகனராஜன் இந்தப் பாடசாலையையே கெளரவப்படுத்தியவர். அவருக்கான கெளரவத்தை வழங்க செல்வி காயத்திரி நகுலராஜன் அவர்களை மேடைக்கு அழைக்கிறேன். (சற்றும் எதிர்பார்க்காத அழைப்பைக் கேட்டு திகைப்படந்த காயத்திரி சுதாகரித்தக் கொண்டே விழா மேடைக்கு வரல். மோகனுக்கான கெளரவங்களை வழங்கியதோடு தன் கையில் அணிந்திருந்த கைச்செயினைக் கழட்டி மோகனுடைய கரத்தில் அணிவிக்கிறாள். பலத்த கரகோசத்தின் மத்தியில்) P_L-95luj அடுத்ததாக மாணவன் மோகனராஜன்நிகழ்வுக்கு நன்றி தெரிவித்து
சில வார்த்தைகள் பேசுவார். மோகன் சபைத்தலைவர் அவர்களே, மதிப்புக்குரிய கல்வி அதிகாரிகளே ஏணிப்படிகளாக இருந்து ஏற்றி வைக்கும் ஆசிரியப் பெருந்

2. Ljegláluj
சிகரங்களாகும் மனிதங்கள் 83
தகைகளே, அவர்களை வழி நடாத்திச் செல்லும் எங்கள் மதிப்புக்குரிய அதிபர் அவர்களே அனைவருக்கும் வணக்கம். எனக்கான பரிசையும் பதக்கத்தையும் வழங்க நான் ஏன் காயத்திரி ஆசிரியையை அனுமதிக்குமாறு அதிபர் அவர்களிடம் கேட்டேன் என நீங்கள் யோசித்திருப்பீர்கள். ஆவர் இப்பாடசாலையில் படிப்பிப்பவரோ என் உறவினரோ அல்ல. ஆனால் அவை எல்லாவற்றுக்கும் மேலாக என்னை உயரங்கள் தொட வைத்த தெய்வம் அவர். அழுக்கான உடையும், பரட்டைத்தலையும், கராஐ எடுபிடி பையனாகவும் இருந்த என்னை மீண்டும் பாடசாலையில் சேர்த்து எனக்கும் என் அம்மாவுக்கும் தங்கள் வீட்டில இடமளித்து உணவு தந்து, உடைதந்து, கல்வி தந்து சமுதாயத்துக்கு என்னை அடையாளம் காட்டிய அவருக்கு என்னால் தரமுடிந்த கெளரவம் தான் இது. இதைத்தவிர என் னால் அவருக்கு என்னதான் கைம்மாறு செய்ய முடியும்? (பலத்த கரகோசம்). ஆரம்பத்தில் இதுபற்றி நான் விழாக்குழுவினரிடம் கேட்டபோது அவர்கள் சம்மதிக்கவில்லை. பிறகு அதிபரிடம் போய் எல்லாம் சொல்லி கேட்டபோது தான் அவர் சம்மதித்து விழா ஏற்பாட்டாளர்களிடம் சொன்னார். இது தவறாயிருந்தால் என்னை மன். பகள். எங்கள் ஐவரைபும் பாராட்டிப் பரிசு வழங்கிய பாடசாலைச் சமூகத்திற்கு எல்லோர் சார்பிலும் என் மனமார்ந்த நன்றிகள். தனக்கு வழிகாட்டியாக இருந்து தன்னை இந்த அளவிற்கு கொண்டு வந்த ஆசிரியை செல்வி காயத்திரி நகுலராஜன் அவர்களுக்கு மோகனராஜன் அளித்த கெளரவம் சரியானதுதான். அவருக்கு இப்பாடசாலை யும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளது. இத்துடன் நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவடைகின்றன. அனைவருக்கும் நன்றி. வணக்கம்.

Page 57
தீர்ப்பு (இசைநாடகம்)
பிரதியாக்கம் மறவன்புலோ செல்லம் அம்பலவாணர்
பாத்திரங்கள்
1. வெள்ளைப் பூனை 2. கறுத்தப் பூனை 3. ஆச்சி 4. நீதிபதிப் பூனை 5. நீதிபதிக் குரங்கு 6. குரங்கு 1 7. குரங்கு 2 8. குரங்கு 3 9. குரங்கு 4 10. கட்டியக்காரர் 1 11. கட்டியக்காரர் 2
பக்கவாத்தியங்கள்
மிருதங்கம் ஆர்மோனியம்
தாளம்
 

தீர்ப்பு 85
காட்சி 1 : கடவுள் வாழ்த்து
(மேடையில் இடமிருந்து ஒருவரும் வலமிருந்து ஒருவருமாக வந்து அரைபேட்ட வடிவமாக நிற்க நிலை அமைத்தல்)
மெட்டு செந்தூருறை
தாளம் சதுஸ்ர ராகம்
epavib : கட்டபொம்மன்
Litt-Gv இசைமெட்டுகள் (27)
(பிற்பாட்டுக்காரர் இரண்டாவது வரி பாட ஆரம்பிக்க திரை விலகல் வேண்டும்) பிற்பாட்டு தன்னானானன தன்னானானன தன்னானானன னான தன்னானானன தன்னானானன தன்னானானன னான
(பின்வருமாறு சோடி சோடியாக மேடைக்கு வரல்)
கட்1 கட்2 ! தொந்தியுடை முந்தி வந்த மைந்தா நமஸ் காரம்
@6\l.ւ Ֆ.ւ நந்திக் கொடி யோனே சிவ பெருமானே நமஸ் காரம் பிற்பாட்டு (திரும்ப) நீதி.கு நீதி.பு சகல வரம் பெருக அருள் புரிவாய் நமஸ் காரம் குர 1,2,3,4 சரணடைந்தோம் கருணைகூர் விநாயகனே
நமஸ் காரம
பிற்பாட்டு (திரும்ப) ஆச்சி(மத்தி) சக்தி யுடன் வித்தை தரும் வாணிநமஸ் காரம் பிபா1.பிபா? : சகல கலைக் கினிய சரஸ் வதியே நமஸ் காரம்
அனைவரும் : (திரும்ப -3 தரம்)
( திரை )
காட்சி: 2 கட்டியக்காரர் வரவு
(பிற்பாட்டுக்காரர் இரண்டாவது வரி பாட அரம்பிக்க திரை விலகல் வேண்டும் அப்போது சோடியாக இடமிருந்து ஒருவரும் வலமிருந்து ஒருவருமாக-மத்தி, பின், இடம் - வலம் தனித்தனி குறுக்காக)
மெட்டு வந்தோமே கட்டியக்காரன்
தாளம் சதுஸ்ர ஏகம் epab சோழன் மகன்
பாடல் ; இசைமெட்டுகள் (8)

Page 58
86 :ઠઈ
பிற்பாட்டு தன்னான னானனனான னன்னானன்னா
தன்னான னானனனான ஈ1:ானானன்ன
கட்1 கட்2 வந்தோமே கட்டியக்காரர் வந்தோமைய
நீதிக்கோர் சங்கதியை நாம் தந்தோமையா
பிற்பாட்டு (திரும்.)
கட் கட்2 அந் நாளில் மந்தியொன்று நீதி சொன்ன காதை
தன்னை
இதநாளில் உங்களுக் குாைத்துப் போக வந்தோமையா
பிற்பாட்டு (திரும்ட)
கட்1கட்2 உள் வீட்டு உண்மைகளில் ஊரவர் தான் தலை யிடில்
உள்ளதும் இல்லாமலே போகுமதை உரைக்க வந்தோம்
தும இ gഥങ്ങ p555
பிற்பாட்டு (திரும்ப) கட்1 கட்2 ஊட்டி விடுவதற் காய் பாட்டி யுரைத்த கதை -சோறு
ஊட்டி விடுவதற் காய் பாட்டி யுரைத்த கதை சாட்சியில்லாத போதும் நீதியுரைக்கும் கதை வந்தோமே கட்டியக்காரர் வந்தோமையா நீதிக்கோர் சங்கதியை நாம் தந்தோமையா
கட்டி 2 கொஞ்சம் பொறுங்கள் அண்ணை அனைவரும் புரியத் தக்கதாய் மிகச்சுருக்கமாய் இதன் சாராம்சத்தை ஆங்கிலத்தில் கூறிவீடுவோமே
கடடி 1 ஆமாம் தம்பி அதுவும் நல்லது தான். சரியான தருணத்தில்
நினைவுட்டினாய். தமிழ்மொழி புரியாத பெரியோர்களும் ரசிகர்களும் புரிந்து கொள்ள இலகுவாயிருக்கும். கட்டியக்காரரான எமக்கு சபையோருக்கு புரியக்கூடிய விதத்தில் பகல்வதுதானே ஒதுக்கப்பட்ட கடமை
கட்டி 2 : So shall we summarize the story in Englishforbetter understanding
of audience
கட்டி 1 : Dear Sirs, madams and our friends, A summary of our Issai naadagam
- THEERPPU”
கட்டி 2 : Once upon a time there were two cats lived together
கட்டி 1 : One day they were so hungry and unable to found anything for their
lunch,
They came to grandma who is a seller of hoppers but unfortunately : 2 استا9
it was late lunch and she managed to give only one hopper to both and request to divide and eat
கட்டி 1 : They didn't agree to divide among them and it results in fighting with
one another

கட்டி 2
கட்டி 1
கட் g- 2
கட்டி 1
கட்டி 2
கட்டி 1 கட்டி 2
கட்டி 1
கட்டி 1 கட்டி 1,2
தீர்ப்பு 87
: They won't allow the elder cat who voluntarily support to divide into
equal portions
Then they werii to a monkey to divide the hopper in two equal parts.
That monkey agreed and used his balance for this
The monkey cut the piece of hopper into two. But on was bigger than other. The monkey bit from the bigger piece making it smaller than other.
: The monkey ate up that bit of hopper. He continued to do so till the
most part of the piece was eaten up by the monkey,
What is the message or moral we gathered from this short play
Good...that should be the focus of any type of play
yes. tell what is it
Don't invite the third to settle disputes between yourselves.
Don't invite the third to settle disputes between yourselves.
(திரை)
காட்சி 3 - பூனைகள் அறிமுகம்
(பிற்பாட்டுக்காரர் இரண்டாவது வரி பாட ஆரம்பிக்க திரை விலகல் வேண்டும் பின்பு வெள்ளைப்பூனையும் கறுத்தப்பூனையும் கை கோர்த்துக் கொண்டு இடமிருந்து
வலமாக எஸ் வடிவில் ஆடிக் கொண்டு மேடையின் மத்திக்கு வரல்)
பாத்திரங்கள் : வெள்ளைப்பூனை கறுத்தப்பூனை
மெட்டு
தாளம்
pavid
பாடல்
u9). Lumt
வெபு கபு
பிற்பாட்டு
மன்னர் சபை நாடியே
சதுஸ்ர ஏகம்
மனம்போல் மாங்கல்யம்
இசைமெட்டுகள் 14
தான னன்னா தான னன்னானா. தனன்ன னான.
தன்ன னன்னாதான னன்னன்னா. (மீண்டும்)
ஆச்சியை நாடி யே செல்வோமே - பசியைப் போக்க ஆச்சியையே நாடி யே செல்வோம்
(மீண்டும்)

Page 59
88 நகல்
வெபு கட சந்து பொந்து எங்கும் தேடி எங்கள் கண்ணுக் கெட்டிடாமல்
வந்து போய் எலிகளெல்லாம் தந்திரங்கள் செய்ததாலே வந்த பசி போக்கிடவே நொந்து தலை சுற்றிடவே வெந்து கொளுத்தும் வெயிலில் வேகமாகவே நடந்து
பிற்பாட்டு ஆச்சியை நாடி யே செல்வோமே - பசியைப் போக்க ஆச்சியையே நாடி யே செல்வோம்
வெ.க.பு ஆச்சியை நாடியே சென்று ஆசையுடன் அப்பம் பெற்று
போக்கியே பசியதனை ஆற்றவே நாம் ஆவலுடன் ஏங்கிய மனதுடனே ஏறிரைக்கும் மூச்செடுத்து வீச்சமுடனே நடந்து வீதி யருகில் இருக்கும்
பிற்பாட்டு ஆச்சியை நாடியே செல்வோமே - பசியைப் போக்க ஆச்சியையே நாடியே செல்வோம்
(இரண்டும் மறைகின்றன. திரை மூடுகின்றது)
காட்சி: 4 - ஆச்சி அறிமுகம்
(அப்பம் சுடும் நிலையில் சட்டி சருவம் அகப்பை பெட்டியுடன் மேடையின் மத்தியில் நிற்க பிற்பாட்டுக்காரர் பூனைகள் அறிமுக வரலை இசைக்க திரை விலகல்)
பாத்திரங்கள் : ஆச்சி, வெள்ளைப் பூனை கறுத்தப்பூனை
நீதிபதிப்பூனை ஆச்சி (பெரு மூச்சு விட்டபடி) ம் ஏதோ ஆண்டவன் செயலால் இன்று சுட்ட அப்பம் அனைத்தும் விற்று முடிந்து விட்டது. அப்பத்திற்கு புளிக்க வைத்த மாவும் முடிந்து விட்டது. வெயிலும் ஏறி உச்சிக்கு வந்து விட்டது . இனி அடுப்பை அணைத்து பாத்திரங்களைக் கழுவ வேண்டியது தான் (இரு பூனைகள் கத்தும் ஒலி) மியா.மியா, மியா மியா ஆச்சி என்ன .பூனைகள் கத்துகின்றன. ம் .இந்த நேரத்தில் எனது
வீட்டுப் பூனைகள் போலிருக்கின்றதே (இரு பூனைகள் கத்தும் ஒலி) மியா.மியா, மியா மியா (பூனைகள் ஒன்றாக, சோர்ந்து வலப்பக்கத்திலிருந்து தள்ளாடிக் கொண்டு மேடைக்கு Guy GD
வெ.பூ/க.பூ (சோகத்துடன்) ஆச்சி.ஆச்சி.ஆச்சி ஆச்சி ஆ. நான் நினைச்சது சரி. நம்ம பூனைகள் தான் சோர்ந்து போய்
என்ன நடந்தது வாருங்கள் அருகில் (கிட்டப்போய்)

மெட்டு
தாளம்
epavi
பாடல்
ஆச்சி
9.um
வெ.பூ
G.L.T
િિu.L},
8.1-
9).UT
5.
وليا.5ة
G.Lum
5.
9. Lum
ஆச்சி
தீர்ப்பு 89
பத்தினிக் கற்பகமே
ரூபகம் : முத்தா மாணிக்கமா : இசைமெட்டுகள் 149 வித்தை தனைக் காட்டி -வீ டெங்கும் சுற்றிச் சுழன்று வரும்
வீ டெங்கும் சுற்றிச் சுழன்று வரும்
வீ டெங்கும் சுற்றிச் சுழன்று வரும் -சத்துருவாம் மெத்த எலி பிடிக்க சென்று நீரும் நொந்து வருவதென்ன
அன்பு தனை ஊட்டி -ஆதரவாய் இல் லிடம் தந்தவளே. ஆதரவாய் இல் லிடம் தந்தவளே. ஆதரவாய் இல் லிடம் தந்தவளே -இன்று சோதனையாய் வந்த எங்க ளது சோகக் கதை கேளும் சந்து பொந்து தேடி- அன்னையுமே இன்று முழு நேரம் அன்னை யுமே இன்று முழு நேரம் அன்னை யுமே இன்று முழு நேரம் -நாமும் அங்க மெலாம் நோக தேடி யும் உண்ண உணவுமில்லை
கண்களே பஞ்சாக- ஆச்சியுமே
கால் களும் தள்ளாட
ஆச்சியுமே கால் களும் தள்ளாட
ஆச்சியுமே கால் களும் தள்ளாட -எங்களுக்கு உண்ண உணவு கேட்டு - ஆச்சியுமே உன்னைச் சரணடைந்தோம்
உண்ண உணவு கேட்டு - ஆச்சியுமே உன்னைச் சரணடைந்தோம் (வசனம்) ஆ . அப்படியா .என்ன செய்வது .உங்கள் நிலை யைப் பார்க்க கவலையாய்த் தான் இருக்கிறது. பிந்தி விட்டீர்கள். ஒருகொஞ்சம்முந்தி வந்திருந்தால் தாராளமாகக் கிடைத்திருக்கும். இப்போது அப்பமும் முடிந்து விட்டது . பானையும் கழுவ ஆயத்தம் பிந்தவிட்டீர்கள்.என்றாலும் ஏதோ பார்ப்பம். (பாசைளை நன்றாக விறாண்டி அப்பம் சுடல்) ஆ. ஏதோ ஒரு

Page 60
90
இரு-பு
(ஆச்சி போதல்).
நகல்
அப்பம் சுடக்கூடியதாயிருந்தது இந்தாருங்கள் இருவருமாக ஏதோ சமாளித்து சாப்பிடுங்கள். வெயில் ஏறிவிட்டது நான் வரப்போகிறேன் (ஆச்சி ஆயத்தமாதல்).
எங்களது கடும் பசிக்கு இதுவே கிடைத்தது போதும் ஆச்சி.
நன்றி ஆச்சி
(மேடை நடுவே அப்பம் இருக்க இருபக்கத்திலும் இரு பூனைகளும்)
வெ.பூ
لیا۔ 95
வெ.பூ
لیا.85
வெ.பூ
5.
நல்ல வேளை ஒரு அப்பம் தன்னும் கிடைச்சது. சரியான பசி.
நான் தானே கேட்டது. நான் சாப்பிட்டிட்டு மிச்சத்தைத் தாறன் நீ சாப்பிடு:
ம் நல்ல கதை எனக்கும் தான் பசி நானும் வந்து ஆச்சியைக்
கேட்டதாலை தானே தந்தவ. நான் சாப்பிட்டிட்டு மிச்சத்தைத் தாறன் நீ சாப்பிடு.
நல்லாயிருக்குநீர் சாப்பிட்டிட்டுத்தர. மிச்சத்தை நான் சாப்பிடுறது.
இது என்ன ஞாயம்
ம். ஏன் . என்ன பிழை நான் கேட்டதாலை தான் ஆச்சி தந்தவ.
என்னிலை தானே கூடப் பாசம் அதாலை நான் தான் முதல்லை சாப்பிடுவன் மிச்சம் தான் உனக்கு. சாப்பிட்டிட்டு மிச்சத்தைத் தாறன் நீ சாப்பிடு.
அடியடா புறப்படலேலை எண்டானாம் பட்சமாம் பாசமாம் .
அப்ப நீரே கேட்டு வாங்கியிருக்கலாம் தானே. (கோபமாக) நான் அப்பத்தை தொடவிட மாட்டன். சொன்னால் சொல்லுத்தான்.
என்ன. சண்டித்தனமோ.அப்பிடியெண்டால் நானும் தொடவிட
மாட்டன். மறந்திடாதை. சொன்னால் சொல்லுத்தான். எனக்கும் உது சரிவரும். ம் .ஞாபகத்திலை வைச்சுக்கொண்டால் சரி
(இரண்டும் சண்டைபிடிக்கத் தொடங்குதல் - மத்தியிலுள்ள அப்பத்தை நோக்கி.
சுற்றி, உள்வந்து ,
மெட்டு
தாளம்
மூலம்
69-LחנL
9. urt
வெளியே போய்)
கனகங்கள் ஒளிதங்கு சதுஸ்ர ஏகம் : தேவசகாயம் பிள்ளை
: இசைமெட்டு 147
தனனன்ன தன னான தனன்னன்ன தனதான
தானன்னா- னனா னனன்னன்ன னனனான னனனான னானனா.

חנGl.L)
ل.5
.닝,
19. Lumt
தீர்ப்பு 91
முறையின்றி தறிகெட்டு அறிவின்றி அனல் பொங்கும் வார்த்தையை - நீயும் முறை கெட்டு உரைத்திட்டால் உடைபட்டு உதை வாங்கப் போகிறாய்
நீயும் முறை கெட்டு உரைத்திட்டால் உடைபட்டு உதை வாங்கப் போகிறாய் (வசனம்)ம் என்ன. சண்டித்தனமோ.அப்பிடியெண்டால் நானும் தொடவிட மாட்டன். மறந்திடாதையும் பறையாதே பதர் வார்த்தை சதிர் போட்டு சதி கார சாத்தனே - நானும் அறை யொன்று அறைந்திட்டால் அறிவாய் நான் யாரெண்டு அற்பனே நானும் அறை யொன்று அறைந்திட்டால் அறிவாய் நான் யாரெண்டு அற்பனே
(இரண்டும் சண்டை பிடித்தல். கையிரண்டையும் மேலே பிடித்து மல்லுக்கட்டுதல். மியா.மியா எனக்கத்தி)
9.unt
தனனன்ன தன னான தனன்னன்ன தனதான
தானன்னா- னனா னனன்னன்ன னனனான னனனான னானனா.
(நீதிபதிப் பூனை இடது புறத்திலிருந்து வரல் )
9.um
நீதி.பூ
தனனன்ன தன னான தனன்னன்ன தனதான
தானன்னா- னனா னனன்னன்ன னனனான னனனான னானனா.
இது என்ன இருவரும் சண்டை சீச்சீவெட்கமாயில் லையா. உற்ற
நண்பர்கள் என்று ஊர் உலகமே போற்றும் போது இப்பிடி நடுத்தெருவிலை மோத உங்களுக்கு எப்பிடி மனம் வந்தது. முதலிலை சண்டை பிடிக்கிறதை நிறுத்துங்கோ.
மெட்டு சாக உமக்கு மனம் வந்ததோ தாளம் ; மிஸ்ர நடை மூலபாடம் : பவளக்கொடி
பாடல் : இசைநாடகப் பாடல் (198)
(நீதிபதிப் பூனை பாடல்)
மோத உமக்கு மனம் வந்த தோ பாதகமே வந்து தான் சேர்ந்த தோ ஐயா பாதகமே வந்து தான் சேர்ந்த தோ பாவிக ளே பரிகா ச மெல் லோ பாவிக ளே பரிகா ச மெல் லோ

Page 61
92 நகல்
பண் புடன் ஒன்றாயிருந் துண்டிடும் -இதை பண் புடனேயே பகிர்ந்துண்டிடும்
(அப்பத்தினருகில் நீதிபதிப் பூனை செல்ல பூனைகள் தடுத்தல்
பூனைகள் (வசனம்) அது எப்படி பூனை நீதிபதியாரே சரி வரும்
(நீதிபதிப்புனை முன்நோக்கி வந்து பாடுதல்)
நீதிபூ
(பாடுதல்) உச்சிப் பொழுதாகிப் போச்சுதெல் லோ உச்சிப் பொழுதாகிப் போச்சுதெல் லோ பிச்சுத் தாறன் பசி யாறிடு மேன் -நானும் பிச்சுத் தாறன் பசி யாறிடு மேன் வெற்று வயிற்றுடன் உற்றவரே வெற்று வயிற்றுடன் உற்றவரே வேண்டுமோ வீண் சண்டை என்னவரே - மேலும் வேண்டுமோ வீண் சண்டை என்னவரே மோத உமக்கு மனம் வந்த தோ பாதகமே வந்து தான் சேர்ந்த தோ -ஐயா பாதகமே வந்து தான் சேர்ந்த தோ
நீதி.பூ என்ன நண்பர்களே. இருவர்களும் ஆச்சிவீட்டு உற்ற நண்பர்கள் என்று ஊரே போற்றும் போது கேவலம் ஒரு அப்பத்துக்காக இருவரும் சண்டைபிடிக்கிறீங்களே பசி வேறை நான் இருவருக்கும் அப்பத்தைப் பகிர்ந்து தாறேன் சண்டையை நிறுத்திவிட்டு முதலில் சாப்பிடுங்கோ பிறகு பார்ப்போம்
பிரச்சனையே அது தானே.அப்பத்தைப் பகிர்வது தானே لحي. له0
நீ.யூ அது தானே நான் பிரித்துத்தாறன் எண்டு சொல் லுறனே
பிறகென்ன
5. : நான் ஒத்து வரமாட்டேன். நீங்கள் வெள்ளையற்றை நண்பன்.
அவருக்கு சப்போட் பண்ணுவியள்
வெ.பூ இல்லை. உவர் கிட்டடியிலை எலிவால் போட்ட பிரச்சனையிலை என்னை முன் வீட்டு முனியம்மாவுக்குக் காட்டிக் குடுத்தவர். அண்டைக்கு விழுந்த விளக்கு மாத்தடியை இண்டைக்கு நினைச்சாலும் எனக்கும் நம்பிக்கையில்லை. உவர் அப்பத்தை பிரிக்க வேண்டாம். நீர் ஒம் எண்டாலும் நான் சம்மதிக்கன். நான் மாட்டன்.
.닝, நானும்தான் பசி கிடந்து வெறுவயித்தோடை செத்தாலும் பரவாயில்லை.உவர் மட்டும் அப்பத்தைப் பிரிக்க வேண்டாம்.
நீ.பூ அப்பிடிச்சொல்லாதையுங்கோநான் ஆருக்கும் பக்கச்சார்பாக நடக்க மாட்டன். உங்களுக்கு துரோகம் செய்ய மாட்டன். நம்புங்கோ

கி.பூ வெ.பூ
85.
நீதி. பூ
தீர்ப்பு 93
நண்பர்களே. நான் இருவருக்கும் சமமாக அப்பத்தைப் பகிர்ந்து தாறேன் சண்டையை நிறுத்திவிட்டு முதலில் சாப்பிடுங்கோ பிறகு பார்ப்போம்
உவர் நஞ்சர் உள்ளொண்டு வைச்சு புறமொண்டு பேசுறவர்.
அண்டைக்கு மாதிரி இண்டைக்கும் மாட்டி விடாமல் நீங்கள்
உங்கடை வேலையைப் பாத்துக் கொண்டு போங்கோ
வீண்கதை வேண்டாம் இரண்டு பேருக்குமே நீங்கள் அப்பத்தைப்
பகிர்ந்து கொடுக்கிறது விருப்பமில்லை. நாங்கள் வேறை ஆரும் நல்லாளாய்ப் பார்ப்பம். நீங்கள் நேரத்தை மினக்கெடுத்தாமல் இடத்தைக் காலி பண்ணினால் சந்தோசம்
! நல்லதுக்குக் காலமில்லை. பட்டுப் பாருங்கோ. அப்ப தான்
புரியும். நான் வாறன்
காட்சி: 5 குரங்குக் கூட்டம் விளையாடல்
(மந்திகளின் விளையாட்டு - குரங்குக் (4) கூட்டம் அறிமுகம் அவற்றில் ஒன்று நீதிபதி - மாலை நேரம் ஆற்றங்கரையில் தள்ளி விளையாடல் - பிற்பாட்டுக்காரர் இரண்டாவது வரி பாட ஆரம்பிக்க திரை விலகல் வேண்டும திரைவிலக வலப்பக்கத்திலிருந்த முன்னவரின் தோளில் பின்னவர் கையிரண்டையும் வைத்துக் கொண்டு நீதிபதி கடைசியாக வரல்
9. UT
மந்தி
பிபா
மந்தி
பிபா
மந்தி
SlLJff
மந்தி
பிபா
தான னான தான னானதான னான னன்னானா ாைன னான னான னன்னானா
தான னான தானனான தான னான னன்னானா
னன னான னான னன்னானா
தன னான னான னான னான னான னான னன்னானா
னன னான னான னன்னானா
மந்தி ஐந்து ஆற்றங் கரைக்கு மாலை நேரம் வந்தன தந்த னந்தம் னந்தம் என்று சதிரும் ஆடி நின்றன
(திரும்ப) காலைத் தூக்கி ஆடும் ஒன்று கரணம் போடும் மற்றொன்று வாலைத் தூக்கி ஆடும் ஒன்று வானில் பாயும் மற்றொன்று (திரும்ப)

Page 62
94
மந்தி
Glum
மந்தி
Gum
மந்தி
பிபா
மந்தி
குரங்கு 1
குரங்கு 2
குரங்கு 3
நீகுரங்கு
குரங்கு 4 குரங்கு 3 குரங்கு 1
குரங்கு 2
நீ குரங்கு
குரங்கு 1 குரங்கு 2
நகல்
மூக்கைச் சொறியும் ஒன்று அங்கு முழிசிப் பார்க்கும்
இன்னொன்று
நாக்கை நீட்டும் ஒன்று அங்கு நளினமாடும் மற்றொன்று
(திரும்ப)
நிலவு வானில் வந்த வேளை நீரில் நிழலைக் கண்டன
அழகுப் பந்து எனக்கே என்று ஆற்றில் அலைந்து தேடின
(திரும்ப)
நீரில் மந்தி நான்கும் மோதி நீந்தி நீந்தி தேடின
யாருக் கந்த நிலவுப் பந்து என்று மோதி ஓடின
(திரும்ப)
ஓடி வந்த முகில்கள் நிலவை மூடி மறைத்து நின்றன வாடிப்போன மந்திக் கூட்டம் நீதி கேட்டு நின்றன
(வசனம்) (நீதிபதிக் குரங்கிடம): ஐயா பெரியவரே. அறிவுள்ள
நீதிபதியாரே. நீங்களும் கரையிலிருந்து பார்த்தீர்கள் தானே . தற்போது ஆற்றில் இருந்த நிலாப்பந்தைக் காணவில்லை. ஒருவர் கையிலும் இல்லை . என்ன நடந்தது என்று தெரியவில்லை . யார் எடுத்தவர் என்று நீங்கள் தான் கூறவேண்டும் ஐயா.
நானும் கண்டேன் ஆனால் இப்போது ஆற்றில் அதைக்
காணவில்லை. யாரோ எடுத்துத்தான் இருக்க வேண்டும்.
ஒருவர் கையிலும் இல்லை . என்னநடந்தது என்று தெரியவில்லை
. அதைநினைத்தால்தான்.
(சிரித்தபடி) ம்..ம். நீங்கள் ஆசை தீர விளையாடட்டுமன் எண்டு
பார்த்து ரசித்திருந்தேன். ஆற்றில் தெரிந்தது பந்து அல்ல
: நாங்கள் எம் கண்ணால் கண்டோம் .
நானும் என்ரை கண்ணால் கண்டேன். அழகான வட்டமான வெண்ணிறப் பந்து
; கொஞ்சம் பொறு. முந்திரிக்கொட்டை மாதிரி. நீதிபதியார்
சொல்லட்டுமன் விடு.
ஆம் அது பந்து அல்ல. வானில் தெரிந்த முழுநிலவின் நிரில்
தெரிந்த விம்பம். தற்போது முகில் கூட்டம் வானத்து நிலவை மறைத்ததனால் நீரிலும் அதனைக் காணவில்லை. பாருங்கள் வானத்தை
ஆம் ஆம். அவதானித்தோம். நான் அப்பவே நினைத்தேன் ஏன் கையில் பிடிபடவில்லை
எண்டு

குரங்கு 3 குரங்கு 4 நீதி குரங்கு
தீர்ப்பு 95
இதே விசயம். இப்பதானே தெரிஞ்சுது
ஐயா ..நீங்கள் தான் சரியான புத்திசாலியான நீதிபதி
சரி இன்று விளையாடியது போதும் வாருங்கள்
ஈரத்தைத் துடைத்து விட்டு போகலாம்.
(பாடிக் கொண்டு போதல்)
மந்தி
பிபா
மந்தி
பிபா
தான னான தான னான தான னான னன்னானா
னன னான னான னன்னானா
தன னான னான னான னான னான னான னன்னானா
னன னான னான னன்னானா
(திரை)
காட்சி: 6 (பூனைகளின் சண்டை)
பிற்பாட்டுக்காரர் இரண்டாவது வரி பாட ஆரம்பிக்க திரை விலகல் வேண்டும திரைவிலக குறுக்கும் மறுக்குமாக மேடையின் இரு புறத்தி லிருந்தும் வந்து பின் முன் வந்து சண்டைபிடித்தல்)
பாத்திரங்கள் : வெள்ளைப் பூனை கறுத்தப் புனை
மெட்டு
தாளம்
epavib
பாடல்
(9.um
L9. Lumr
وليا.5ة
நீதிபதிக்குரங்கு
கனகங்கள் ஒளிதங்கு சதுஸ்ர ஏகம்
: தேவசகாயம் பிள்ளை
: இசைமெட்டு 147
தனனன்ன தன னான தனன்னன்ன தன தான
தானன்னா-னனா னனன்னன்ன னனனான னனனான னானனா. (திரும்ப)
முறையின்றி தறிகெட்டு அறிவின்றி அனல் பொங்கும் வார்த்தையை - நீயும் முறை கெட்டு உரைத்திட்டால் உடைபட்டு உதை வாங்கப் போகிறாய்
நீயும் முறை கெட்டு உரைத்திட்டால் உடைபட்டு உதை வாங்கப் போகிறாய்
பறையாதே பதர் வார்த்தை சதிர் போட்டு சதி கார சாத்தனே - நானும் அறை யொன்று அறைந்திட்டால் அறிவாய் நான் யாரெண்டு அற்பனே

Page 63
96 நகல்
9. UT நானும் அறை யொன்று அறைந்திட்டால் அறிவாய்
நான் யாரெண்டு அற்பனே (இரண்டும் சண்டை பிடித்தல். கையிரண்டையும் மேலே பிடித்து மல்லுக் கட்டுதல்)
பி.பா தனனன்ன தன னான தனன்னன்ன தனதான
தானன்னா-னனா னனன்னன்ன னனனான னனனான னானனா. (நீதிபதிக் குரங்கு வரல்)
பி.பா தனனன்ன தன னான தனன்னன்ன தனதான
தானன்னா-னனா னனன்னன்ன னனனான னனனான னானனா.
என்ன நண்பர்களே. என்ன விசேடம் .நடுவீதியில் அதுவும் உச்சி வெயிலில் என்ன தர்க்கம் செய்கின்றீர்கள். ஏன்ன நடந்தது என்ன வென்று தான்
சொல்லுங்கோவன்)
நீதிபதிக்குரங்கு பாடல்
மெட்டு வானகவி - தரு தாளம் ரூபகம்
pavid கம்பன் மகன் பாடல் : இசைமெட்டு 135
நீதி, குர வீதியிலே நின்று நீரும் விண்சண்டை ஏனோ
சாது போல் வாழ்ந்த நீவிர் சண்டையும் செய்யலாமோ வாதென்ன சொல்வீர் வழக்கை நான் தீர்த்து வைப்பேன் வேதனை தனையே விட்டு விரைந்துமே விளம்புவிரே வாருங்கள் தோழர்களே
வழக்கை நான் தீர்த்து வைப்பேன்
வாதென்ன சொல்லிடுவீர்
வழக்கை நான் தீர்த்து வைப்பேன்
வேதனையை விட்டு நீவிர்
விரைந்துமே விளம்புவீரே
குதுவாதில்லாமல்
சூட்சுகமாய்த் தீர்ப்பேன் (வசனம்) என்ன பூனைகளே நண்பர்களுக்குள்ளேயே சண்டையா. எல்லாம் கலிகாலம். என்ன பிரச்சனை யென்று சொல்லுங்கோ நான் நீதி தவறாது தீர்த்த வைப்பேன். எனக்கு உதில் நல்ல அனுபவம் உண்டு. இங்கே பாருங்கள் நான் போட்டிருக்கிற

ليا. لهGl
கி.பூ வெ.பூ
5.
வெ.பூ நீதி.குர
F.닝
வெ.பூ
நீதி.குர
6િ).}, நீதி.குர
لميا. له6l)
5.
நீதி.குர
வெ.பூ
தீர்ப்பு 97
நீதிபதிக் கோட்டையும் கையிலிருக்கிற தாராசையும் பாருங்கோ (காட்டுதல்)
உங்களைப் பார்த்தால் நேர்மையானவர் போலத் தான்
தெரிகின்றது. ஓம்.ஓம். கையில் தராசும் வைச்சிருக்கிறியள்
நீதிபதிக் கோட்டும் போட்டிருக்கிறியள். முகத்திலையும் தெய்வீகக்
களை தெரியுது. நிட்சயம் நேர்மையான ஆளாய்த்தான் இருப்பியள்.
அதாலைதான் நானும் சொல்லுறன் நீங்கள் தான் இதுக்குச் சரி.
நான் பூரண சம்மதம்
நானும் தான்
இரண்டு பேரும் சம்மதம். அப்ப பிறகென்ன. உங்கடை பிரச்ச
னையைச் சொல்லுங்கோ.
ஆச்சி எனக்கு ஒரு அப்பம் தந்தவ. அதை எங்கள் இரண்டு
பேருக்கும் சமமாய்ப் பங்கிட்டுத் தரவேணும்
இல்லை இல்லை நான் தான் ஆச்சியிட்டைக் கேட்டனான்
எண்டாலும் உவருக்கும் குடுத்து சாப்பிடச் சொன்னவா
ஆ அப்பிடியே. ஆ. சரி.சரி.அதுதான் மூக்கைத் துளைக்குது போலை
ஓம்.ஓம்.இப்பதான் சுட்டுத் தந்தவ என்னும் சூடா றேலை
இஞ்சை தாங்கோ அப்பத்தை.தராசிலை போட்டுப் பிரிப்பம்.
ஆ. தராசிலை எந்தப் பக்கம் ஆருக் கெண்டு சொல்லுங்கோ.
எனக்கு வலப் பக்கம். அது தான் பொருத்தம்
எனக்கும் அப்பிடித்தான். ஆனால் நீ சொல்லிப் போட்டாய்.
(ம். ம்.பெருமூச்சு விட்டு) அதாலை இனி இடப்பக்கம் தான்.
சரி நான் இப்ப இரண்டாய்ப் பிரிச்சு ஒவ்லொரு பக்கம் போடுறன்.
கவனமாய்ப் பாருங்கோ
ஓம்.ஓம். நீங்கள் போடுங்கோ.
(நீதி.குரங்கு இரண்டாகப்பிரிச்சுப்போட இடப்பக்கம் தாழுதல்)
மெட்டு
தாளம் மூலம்
பாடல்
வானனையே
; சதுஸ்ர ஏகம் மரியதாஸ் : இசைமெட்டு 25

Page 64
98 நகல்
வெ.பூ தாளுகுதே தாளுகுதே
அவற்றை பக்கம் தாளுகுதே அந்தப் பக்கம் உள்ள தந்த அப்பத் துண்டு தானே -மிகப் பெரிய துண்டு தானே
நீதி.குர கொஞ்சம் பொறும் கொஞ்சம் பொறும்
கொஞ்சம் பிய்த்தால் சரியாயிடும் கொஞ்சம் பிய்த்து தானே எடுத்து விட்டால் தானே -ரெண்டும் சமனாயிடும் தானே
G. UT கொஞ்சம் பொறும் கொஞ்சம் பொறும்
கொஞ்சம் பிய்த்தால் சரியாயிடும்
(பிற்பாட்டுப் பாடும் போது குரங்கு அப்பத்தைப் பிரித்து உண்ணல்)
.இப்ப அவற்றை பக்கம் கூடியிட்டுது ولا.85
அங்கை பாருங்கோ தராசுத் தட்டு பதிஞ்சிருக்குது பதியுதுமே பதியுதுமே அவற்றை பக்கம் பதியுதுமே அந்தப் பக்கத் தட் டினிலே பெரிய துண்டு தானே கிடக்கிறதே தானே
நீதி.குர கொஞ்சம் பொறும் கொஞ்சம் பொறும்
கொஞ்சம் பிய்த்தால் சரியாயிடும் கொஞ்சம் பிய்த்து எடுத்து விட்டால் இருபுறமும் தானே சமனாயிடும் பாரீர்
19.uT ; கொஞ்சம் பொறும் கொஞ்சம் பொறும்
கொஞ்சம் பிய்த்தால் சரியாயிடும்
(பிற்பாட்டுப் பாடும் போது குரங்கு அப்பத்தைப் பிரித்து உண்ணல்)
! இப்ப அவற்றை பக்கம் கூடியிட்டுது.
அங்கை பாருங்கோ தராசுத் தட்டு பதிஞ்சிருக்குது
.િોu.J, தன னான தன னான தன னான (தொடர்ந்து)
(இரண்டு பூனைகளும் மாறி மாறி தட்டைக்காட்டிப்பாட குரங்கு மாறி மாறி உண் ணுதல் அப்பம் முடிய )
நீ.கு ம்.எல்லாம் தீர்ந்தது வெ.க பூ அப்ப அப்பம் நீ.கு எல்லாம் தீர்ந்தது ஆம் அப்பமும் தீர்ந்தது உங்கள் பிரச்சினையும்
தீர்ந்தது. இனியென்ன எனது அலுவலும் முடிந்தது. நான் வருகி றேன். (குரங்கு செல்லல்)

தீர்ப்பு 99
(ஏமாந்த பூனைகள் நீதிபதியை நிந்தித்தல் பாடல் )
மெட்டு
தாளம்
மூலம்
69-LחנL
5.
வெ.பூ
5.
9. unr
لىيا. لهd6)
bليا.85
9. urt
لى. لهd6)
9.ust
வானகவி - தரு
: ரூபகம்
கம்பன் மகன்
: இசைமெட்டு 135 மன்னவனும் நீயோ மனுநீதி கொண்டவனோ உன்னை அறிந்தோ நாம் உதவியைக் கேட்டோம்
உதவிட வே வந்த உத்தம னென்றெண்ணி உள்ளதையும் இழந்தோம் உண்மையை உணர்ந்தோம் நீதியையே அறியா பொல்லா நீதிபதிக் குரங்கே பொல்லா நீதிபதிக் குரங்கே
பாதி யாக்கு வதாய்க் கூறி பாசாங்கு தான் செய்தே மோசமும் செய்தாயே மெத்த மதித் திருந்தோம் பொல்லா தப்பிதமே செய் தாய்
பொல்லா தப்பிதமே செய் தாய்
உத்தம னென் றிருந்தோம் நீயோ சத்துரு வாகினாயே
நீயோ சத்துரு வாகினாயே
(திரை)
காட்சி: 7 ஏமாற்றம் - சோகம்
(தங்களுக்குள் சமாதானம் - பிற்பாட்டுக்காரர் இரண்டாவது வரி பாட ஆரம்பிக்க திரை விலகல் வேண்டும மேடையின் இருபுறத்திலிருந்தும் சோர்ந்து வந்து மத்தியில் சோகத்தடன் பாடுதல்)
மெட்டு
தாளம்
மூலம்
பாடல்
لی.
சிந்துபைரவி ஆதி : நல்லதங்காள் : இசைநாடக மெட்டு 210
எங்களது சண்டை யாலே அண்ணையரே அண்ணையரே ஏமாந்து போனோ மெல்லோ அண்ணையரே அண்ணையரே

Page 65
1OO நகல்
9. Lum (திரும்ப)
வெ.பூ அடுத்த வரை நம்பினதால் தம்பியரே தம்பியரே
9. UT அடுத்த வரை நம்பினதால் தம்பியரே
GG.I.UT ஆபத்து வந்ததுவே தம்பியரே தம்பியரே
.ī ஆபத்து வந்ததுவே தம்பியரே தம்பியரே
எங்களது பிரச்சனையை நாம் பேசித்தீர்த் திருந்தால் لیا. 95
இருந்ததை இழந் திருப்போமா அண்ணையரே அண்ணையரே
9T (திரும்ப)
இருபூ உள் வீட்டு உண்மைகளில் ஊரவர் தான் தலை யிடில்
உள்ளதும் இல்லாமல் போகும் உண்மையிஉணர்ந்திடுவீர் நம் வீட்டுப் பிரச்சனையில் நாம் பேசித் தீர்க்காது அந்நியர்தான் தலையிட்டால் ஆவதுவோ பெருங்கேடு அன்புடனே நாம் பேசி அனைத்தையுமே தீர்த்துவிடில் ஆகுமெல்லோ நல்வாழ்வு அவையோரே சபையோரே
சகலரும் அன்புடனே நாம் பேசி அனைத்தையுமே தீர்த்துவிடில் ஆகுமெல்லோ நல்வாழ்வு அனைவருமே கேட்டிடுவீர்
(மீண்டும் மீண்டும்) ஆர்மோனியம் பின்னணியில் இசைக்க கைதட்டியபடி மேடையின் மத்திக்கு இடப் புறத்திலிருந்தும் வலப்புறத்திலிருந்தும் ஒவ்வொருவராக மேடையின் மத்திக்கு வருதல் பின்னணியில் பிறிதொருவர் அவர்களின் பாத்திரம் முழுப் பெயர் வகுப்பு போன்றவற்றை அறிமுகம் செய்தல் - அனைவரும் வந்ததன் பிற்பாடு) இறுதியில் அனைவரும் கைகூப்பி மங்களம் பாடுதல்
மங்களமாம் மங்களமாம் எங்கள் கல்வித்தாய்க்கு மங்களமாம் மங்களமாம் மங்களமாம் எங்கள் கல்வித்தாய்க்கு மங்களமாம் மங்களமாம் மங்களமாம் வந்த பெரியோர்க்கு மங்களமாம் மங்களமாம் மங்களமாம் வந்த பெரியோர்க்கு மங்களமாம் மங்களமாம் மங்களமாம் இந்த சபையோர்க்கு மங்களமாம் மங்களமாம் மங்களமாம் இந்த சபையோர்க்கு மங்களமாம் மங்களமாம் மங்களமாம் அவையோர் அனைவர்க்கும் மங்களமாம் மங்களமாம் மங்களமாம் மங்களமாம் மங்களமாம்
- சுபம் -

கருவறையிலிருந்து
பிரதியாக்கம் திரு. கந்தையா பூரீகந்தவேள்
பாத்திரங்கள்
1. சிலுவை இயேசுவின் தந்தை 2. மரியாள் இயேசுவின் தாய் 3. இயேசு LD5667 4. சின்னஇயேசு சிறியவன் 5. புனிதம் இயேசுவின் பாட்டி 6. ஏமெல்டா இயேசுவின் தங்கை 7. சுந்தர் இயேசுவின நண்பர் 8. ஆசிரியர் இயேசுவின் ஆசிரியர் 9. குணம் மீனவன்
10. இருதயம மீனவன்
மற்றும் மீனவர் போர் வீரர் சிலர்
அறிமுகம்
(திரை மெல்லத் திறக்கிறது. பாடல் பாடப்படும் வேளை காட்சி ஒன்று நிலைப்படுத்தப் பட்டிருக்கும்)
கருவறை முதல் கல்லறை வரையில் கற்றிடல் நபியின் போதனை அன்றோ! வறுமை ஏழ்மை சிறுமை நீங்க பற்றுடன் கற்றிடல் உரிமையுமன்றோ! வாட்டும் வறுமை கொடுமை நீங்க காட்டிலே மேட்டிலே களனிகள் தோறும் கொலைகள் மலிந்த புமியிது மலைபோல் அவலங்கள் மலிந்த போதும் கலைகள் பல கற்று வாழ்ந்திடல் வேண்டும்.

Page 66
102 நகல்
SIL" é: 1
இடம் : இயேசு வீடு. பாத்திரங்கள் : சிலுவை, புனிதம், இயேசு, சுந்தர், எமெல்டா (இயேசுவும் சுந்தரும் வீட்டுக்குள் நுழைதல், நுழையும் போது இயேசு ஒரு பிறீவ் கேசுடனும் சுந்தர் ஒரு ரவலிங் பாக்குடனும் வருதல்). எமெல்டா அம்மா!. அங்க ஆரோ வாறாங்க! என்னைப் பிடிக்க
வாறாங்கள்!! (எமெல்டா வீட்டுக்குள் சென்ற பின்) புனிதம் ! அங்கை ஒருதரும் இல்லை மோனே! இயேசு: சுந்தர். இதில இரும் அப்பா. இவர் கொழும்பிலிருந்து மாற்றலாகி யாழ்ப்பாணத்துக்கு வந்திருக்கிறார் தங்கச்சி (பிஸ்கற்றை தங்கையிடம் கொடுத்தல்)
எமெல்டா ஓம். (சிலுவை எழும்ப முயற்சிக்க)
சுந்தர் இருங்கோ! எழும்ப வேண்டாம்.
சிலுவை எழும்ப ஏலேலை தம்பி. இரும். உதிலை
சுந்தர் ! உங்களுக்கு என்ன நடந்தது.?
சிலுவை : இம்.! அதை என்னண்டு தம்பி சொல்லுறது. தம்பி யேசு பட்ட
அவலங்களைவிட என்ர கால் என்ன.? சின்ன வயசிலை இருந்து, அவன் பட்ட கஷ்டங்கள் துன்பங்கள் எத்தனை தம்பி. இப்படி வாரும் சொல்லுறன்.
காட்சி: 2
இடம் ; இயேசு வீடு. பாத்திரங்கள் : சிலுவை, மரியாள், சின்ன இயேசு, (மரியாள் திருவலையைக் கொண்டு வந்து வைத்துத்திருவுதல். சிலுவை கடலுக்குப்போய் பறியுடன் வருதல்)
கடலம்மாகடலம்மாளனை நம்பி வந்தோ தாயே கடலம்மாகடலம்மாகைகொடுப்பாய் எங்கள் தாயே படகேறி வலையோடு கடல்தேடி வந்தோம் தாயே படகேறி வலைவீசி கரைதேடி வந்தோம் தாயே
மரியாள் வந்திட்டியளே.? சிலுவை இம் இண்டைக்கு பாலைமீன் குஞ்சு தான் கிடக்கு மரியாள் ஏன் மீன் படேல்லையே..? (இருந்து கொண்டு)

சிலுவை
மரியாள் சிலுவை மரியாள்
சிலுவை
மரியாள் சிலுவை
மரியாள்
சிலுவை
கருவறையிலிருந்து 103
வலை மாத்த வேணும். பொத்தல் வலையில பெரிசாப் படேல்லை.
(அமருதல்) தண்ணியைக் கொண்டு வா. (தண்ணியைக் கொடுத்துக் கொண்டு)
அரிசி புளி ஒண்டுமில்லை. காய்பிஞ்சு வாங்க வேணும்! தருமரது சந்திக் கடையில வாங்கன். குடுக்கலாம்!
(அமர்ந்து தேங்காய் துருவுதல்) காலமை பிள்ளைகள் சாப்பிடாமல்
பள்ளிக்குப் போனவை. பசியோட வரப் போகுதுகள்.
(தண்ணியைக் குடித்துக் கொண்டு) ம். அந்தோனி யாரே! பொறு
வாறன். (பறியைத்தூக்கிக் கொண்டு உள்ளே சென்று திரும்பி வருதல்). தம்பி இன்னும் வரேல்லையே..?
இன்னும் வரேல்லை. தனியொருவன், நான் எப்படி உழைக்கிறது. ? தம்பியைத் தொழி
லுக்குக் கூட்டிக்கொண்டு போகப் போறன்
அவன் கெட்டிக்காரன். படிக்கட்டும். படிப்பைக் குழப்பிப்
போடாதையுங்கோ!
பள்ளிப் படிப்புக் காணும்! பாடு இழுக்க வேணும் நாளைக்கு
(சிலுவை உள்ளுக்குச் செல்லுதல் தொடர்ந்து மரியாள் தேங்காய் துருவிய திருவலகையையும் துருவல் தட்டையும் எடுத்துக் கொண்டு செல்லுதல் மீண்டும் வந்து செம்பும் தண்ணியையும் எடுத்துச் செல்லுதல் சிலுவை மீண்டும் சேட்டை அணிந்து கொண்டு அரங்குக்கு வருதல். இயேசு பள்ளிக்கூடத்தால் வருதல். தந்தையைக்கண்டு பயப்படுதல்).
சிலுவை
இயேசு
சிலுவை
இயேசு
மரியாள்
சிலுவை
மரியாள்
இஞ்ச வா!. கழுதை, பள்ளி முடிஞ்சால் துள்ளி வர வேண்டியது
தானே!. அங்கை ஏன் இவ்வளவு நேரம் நிண்டனி.! எங்கடசேர் படிப்பிச்சவர்! அதுதான் நிண்டு படிச்சிட்டு வாறன்.
உனக்கெல்லோ சொன்னனான். வீட்டில இருக்கிற வேலையைச்
செய்ய வேணும் எண்டு! (காதை முறுக்குதல், அடித்தல்) ஐயோ! அப்பா1.அடிக்காதையுங்கோ.1
அவனுக்கு ஏன் அடிக்கிறியள். விடுங்கோ. (இயேசுவை
விலக்குதல்).
; சட்டையைக் களட்டிப்போட்டு கருவாட்டை அள்ளு வாறன்.
(வெளியேறல்)
அழாதை தம்பி, நீ வா. (பையை எடுத்துக் கொண்டு இயேசுவை
உள்ளே அழைத்துச் செல்லுதல்).

Page 67
104.
இடம்
நகல்
காட்சி: 3
: இயேசு வீடு.
பாத்திரங்கள் : சிலுவை, மரியாள், சின்ன இயேசு, ஆசிரியர்
(குடும்பமாக கருவாட்டை பொறுக்கி சாக்கினுள் நிரப்புதல்)
சிலுவை இயேசு
சிலுவை மரியாள்
சிலுவை
QGuust
சிலுவை
பொறுக்கின கருவாட்டைக் கொண்டு வா!
ஓம் அப்பா.
சாக்கை பிடியப்பா! பொறுக்கினதைக் கொண்டரட்டோ?
கொண்டா.
எங்க ஆவென்டுறாய் (இயேசு கருவாட்டை சாக்கினுள் போட்டு நிரப்பதல் நிரப்பியதும்
முள்ளுக்குத்திப்போட்டுது.
கயிறு எடுத்தரட்டே அப்பா..?
எடுத்துக் கொண்டா கெதியாய். நீர் மிச்சத்தை இதுக்கை
போடும்.
(ஆசிரியர் வருதல்)
ஆசிரியர் சிலுவை இயேசு மரியாள்
ஆசிரியர்
மரியாள்
சிலுவை
ஆசிரியர் சிலுவை
மரியாள்
தம்பி.1 இயேசு.! தம்பி.1 ஆர் தம்பி.?
அது எங்கட சேர். அப்பா!!
வாங்கோ வாத்தியார் இருங்கோ..! : இயேசு, ஒரு கிழமையாய் பள்ளிக்கு வரேல்லை. அதுதான்
என்னண்டு அறிஞ்சு கொண்டு போவமெண்டு வந்தனான்.
அவனுக்குச் சுகமில்லை அததான் வரேல்லை
ஏன் பொய் சொல்லறாய். அவனைத் தொழிலுக்குக் கூட்டிக்
கொண்டு போறனான் வாத்தியார்.
இயேசு, படிக்கக் கூடியவன். படிப்பிச்சால் நல்லது.
: படிச்சு என்ன செய்யிறது வாத்தியார். ? தொழிலுக்குப் போனால்
தான் எங்கட வயிற்றுப்பாட்டையும் பார்க்கலாம்.
என்ன தம்பி செய்யிறதுஎங்கட குடும்பத்தில ஒன்பது உருப்படி,
அத்தனை பேருக்கும் ஒருகை உழைச்சால் போதுமே. எண்டாலும் தம்பியைப் படிப்பிக்கத்தான் எனக்கும் ஆசை.!

ஆசிரியர்
கருவறையிலிருந்து
இயேசுவின்ர படிப்பச்செலவுகள நான் பாக்கிறன். அவனைப் பள்ளிக்கு அனுப்பிவையுங்கோ..! அப்ப அம்மா நான் வாறன்
(ஆசிரியர் எழுந்து செல்ல இயேசு மறித்து)
மரியாள்
இயேசு
ஆசிரியர்
மரியாள்
சிலுவை
ஓம் வாத்தியார் சேர்! எனக்கும் அதுதான் விருப்பம் அப்பாவிட்ட சொல்லி
என்னைப்படிக்க வையுங்கோ.1
உன்னுடைய உணர்வு எனக்குப் புரியது.! என்ன செய்கிறது. இம் முயற்சிப்பம்.!! நாளைக்கு தவறாமல் பள்ளிக்கூடம் வந்திடு. (ஆசிரியர் எழுந்து வெளியேறுதல். இயேசு ஆசிரியர்
வெளியேறுவதைப் பார்த்துவிட்டு திருப்புதல்)
(ஆசிரியர் வெளியேறிய பின்.) நானும் கூடமாட வேலை செய்து
தம்பியைப் படிப்பிக்கப் போறன்.
இதைப் பிடியும். (சாக்கைப் பிடித்தல்) (சாக்கை தூக்கி இயேசு வின் தலையில் வைத்தல். அடுத்த சாக்கை சிலுவை தூக்குதல் .
கடகத்தை மரியாள் தூக்கியவாறு உள்ளே செல்லல்)
காட்சி: 4
(இரண்டு படைவீரர் அரங்கில் தோன்றி ஆடுதல்)
தாம் திமி திமிதிந்தக்க தந்தோம் தீம் திமி திமிதிந்தக்க தந்தோம் தாம் திமி திமி தீம் திமி திமி தாம் திமி திமிதிந்தக்க தந்தோம் சூரர் வீரர் நாமையா - வெற்றி மிகு சூரர் வீரர் நாமையா -(2) சூரர் வீரர் நாமே சூழும் புவியில் தானே தாம் திமி திமிதிந்தக்க தந்தோம் ஆரும் எதிர்க்க வந்தால் அஞ்சிப் பயந்து ஓடி தாம் திமி திமிதிந்தக்க தந்தோம் ஊரும் பேரும் சொல்லா தொண்டி ஒழித்துப் பின்பு உற்ற மனையாளொடு கெட்டித் தனங்கள் பேசும் சூரர் வீரர் நாமையா - வெற்றி மிகு சூரர் வீரர் நாமையா தண்டு தடிகள் பொல்லுக் கொண்டு வருதல் கண்டால் தாம் திமி திமிதிந்தக்க தந்தோம் பெண்டில் தனக்குப் பின்னால் அண்டி மறைந்து நின்று தாம் திமி திமிதிந்தக்க தந்தோம்

Page 68
106
நகல்
ஒண்டி ஒழித்துப் பார்த்து ஓட்டம் எடுத்து - வந்து சூரர் வீரர் நாமையா - வெற்றி மிகு சூரர் வீரர் நாமையா செத்த பாம்பைக் கண்டு மிக்க மகிழ்ச்சிகொண்டு மெத்தப் பெரிய பொல்லால் மேனி அடித்து நின்று புத்தியாக வாலில் பிடித்து இழுத்த வந்து வித்தை காட்டி நிற்கும் வீரத்தனமுடைய சூரர் வீரர் நாமையா - வெற்றி மிகு சூரர் வீரர் நாமையா
(வீதியால் சிலுவை செல்லுதல். குணம் கண்டு மறித்து)
குணம்
சிலுவை
குணம்
சிலுவை
குணம்
சிலுவை
குணம்
சிலுவை
கடலுக்க ஒரு பெரிய பிரளயம் நடந்து போச்சுது அண்ணை!
என்ன சொல்லுறாய் குணம்.! எங்கட கஷ்டம் உனக்குத்
தெரியாதோ!
எங்கட சனம்தான் அதிகமாம்
நேற்றுத் தான் எங்கட வாத்திப் பெடியனும் தன்ர ஊருக்குப்
போனவர்!
அவரோடு சேர்த்து இருபத்தெட்டுப் பேர் எண்டு வாடியடியிலை கதைக்கினம்.
இந்த அநியாயத்தை ஆருக்கு எடுத்துச் சொல்லறது
கடவுளே.!
தங்கட சூரத்தனங்களை பொதுமக்களிடையே காட்டு றது.?
இம்.! இஞ்சை நிண்டு கதைக்காமல் வாரும் வாடியடிக்குப் போவம்.
காட்சி: 5
(பிரேதம் கொண்டு வரப்படுதல். ஒப்பாரிப் பாடல்)
எமெல்டா
இயேசு
குணம்
பொன்னான மேனியிலே -ஒரு பொல்லாப்பு வந்ததென்ன ! பொன்னான மேனியிலே -ஒரு பொல்லாப்பு வந்ததையே !
ஐயோ! அம்மா!! என்ன நடந்தது!!!
அம்மா! ஐயோ!! (அழுதல்)
இம்.! இருபத்தெட்டுப் பேரைப் பலியெடுத்து சில நாட்கள்
கடக்கேல்லை, பேந்தும் எங்களுக்குப் பேரிடி.!

கருவறையிலிருந்து 107
புனிதம் என்னைக் கொண்டு போகவேண்டிய நேரத்தில உன்னைக்
கொண்டு போட்டுதே கடவுள். ஐயோ..!!
இயேசு எங்களையேன் தொடர்ந்து சோதிக்கிறார் கடவுள்.? அம்மா!
புனிதம் : இந்த குஞ்சுகளை ஆர் பாக்கிறது.?
குணம் செல்லாலை கண்டபடி ஊர்மனைக்கு அடிக்கிறதே?
இருதயம் எழும்பு தம்பி.
நடக்கிற காரியத்தை பாப்பம்.! நெடுக வைச்சிருக்க ஏலுமே ! (கிறிஸ்தவப் பாதிரியார் வருதல்) வாங்கோ பாதர். (ஒப்பாரிப் பாடல்) செல்லாலே அடித்து எமை கொல்லுவதேன் ஐயாவே ! கொல்லாதே எம்மினத்தை கொடுந்துயரம் செய்வதுமேன்!! பாதிரியார் பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயரால் . அவலத்தால் இறந்து போன இந்த ஆத்மாவை உம்முடைய பாதத்திலே ஒப்படைக்கின் றோம் ஆமென்! (பன்னீர் தெளித்து குருசு போடுதல்) (ஒப்பாரிப் பாடல்)
அம்மாவை நாமிழந்து தவிக்கின்றோம் ஐயாவே!! (2) (சிலுவை ஒன்றை பாதிரியார் முன்னுக்கு எடுத்துச் செல்லல். அவருக்கு முன்னால் மெழுகுதிரியை ஒருவர் காவிச் செல்லல். பின்னணியில் சாவு ஒலி இசைத்தல்) குணம் ஆ! தம்பியவை தூக்குங்கோ. பிடியுங்கோ கவனம்!! (அங்கு நின்றவர்கள் தூக்குங்கோ பிடியுங்கோ என்று கூறிக்கொண்டு பெட்டியைத் தூக்கதல்).சோக ஒலியுடன் பிரேத ஊர்வலம் வலம் வந்து செல்லுதல்) (ஒப்பாரிப் பாடல்)
பொன்னான மேனியிலே -ஒரு பொல்லாப்பு வந்ததென்ன (2)
காட்சி: 6
(சிலுவை, இருதயம், வள்ளம் வலிப்போர், போர்வீரர், - வள்ளத்தில் சில மீனவர் வருதல்)
(அம்பா பாடல்)
ஏலோ ஏலோ ஏலேலோ ஏலோ ஏலோ ஏலேலோ -(2)

Page 69
108
நகல்
(சத்தம் ஒன்று கேட்கிறது. வள்ளம் வலித்து வந்தவர்களை வெட்டி விழுத்தும் கோரக்
காட்சி)
இரண்டு வீரர்கள். தாளக்கட்டுக்கு ஆடிவருதல்
தத்தகிட தத்தகிட தத்தகிட தத்தோம். தகதகிட தகதகிட தகதகிட தத்தோம்
(வீரர்கள் மீனவர்களை கலைத்து கலைத்து வெட்டுதல்)
(சிலுவை தனது வலையைக் கொண்டு வந்து வைத்து அதில் உள்ள பொத்தல்களை பொத்தியவாறு இருத்தல். இருதயம். கடலுக்குச் சென்று திரும்பி வருதல். இடைமறித்து சிலுவை தனது இருதயத்திடம் தனது மகன் எடிசனைப்பற்றி விசாரித்தல். )
சிலுவை
இருதயம் சிலுவை
இருதயம்
சிலுவை இருதயம்
சிலவை
இருதயம்
சிலுவை இருதயம்
சிலுவை
குணம்
இருதயம்
தம்பி, எம்மோட வள்ளம் வந்திட்டுதே.? இல்லை அண்ணை ! இன்னும் வரேலை.
என்ர பெடியன். ஏடிசன் போனவன்
கடலும் புதுசு நேரமும் செண்டு போச்சு..!!
சூரர்கள் தொழில் செய்து கொண்டிருந்த எங்கட பெடியன்களைப்
பிடிச்சுக் கொண்டு போறாங்கள்.
என்ர பெடியனைக் கண்டனியே தம்பி.
இல்லை அண்ணைஎங்கட வள்ளத்தை கலைச்சுக் கொண்டு
வந்தாங்கள். நாங்கள் ஒருமாதிரித்தப்பி வந்திட்டம்.
நெடுந்தீவில பிரச்சனையெண்டு மன்னாருக்கு வந்தம்! இங்கையும்
பிரச்சனையெண்டால் நாங்கள் எங்க போறது.? ஏன்ர பெடினைக் காப்பாற்று கடவுளே.!
அண்ணை உவங்களின்ர தொல்லை தாங்கேலாது. நாட்டை
விட்டுப் போறது தான் புத்தி.!
உதுக்குப் பயந்து பரதேசம் போறதே..!! நெடுந்தீவில எல்லாத்தையும் விட்டுட்டு வந்தம். இங்க இருக்கிற
உயிரையும் விடச்சொல்லுறீங்களே..!
சரி தம்பி. உதுகளை இப்ப யோசிக்கேலாது. கரை வரையும்
பாத்திட்டு வாறன். இம்.!!
இருதயம் என்ன திகைச்சுப் போய் நிக்கிற. இந்தக் குடும்பத்தில்: ஒண்டுக்குப் பின்னாலை ஒண்டா, எத்தனை
அவலங்கள்.? நீ முதலில் வீட்டை போ!. நான் சிலுவையைப் பாத்திட்டு வாறன்!.

கருவறையிலிருந்து 109
காட்சி: 7
(நினைவுக்காட்சி ஆரம்பம்)
எமெல்டா ! அங்க. ஆரோ! வாறாங்கள்.11 என்னைப் பிடிக்கிறாங்கள்.
இயேசு நான் இருக்கிறன். அம்மா பயப்படாதை.!!
எமெல்டா தண்ணி வேணும்.! அம்மா..! தண்ணி. !!! தண்ணி
வேணும்..!!
இயேசு குடத்தில் தண்ணி இருக்க வேணும். எடுத்துக் கொண்டு
வாங்கோ அப்பா..!!
சிலுவை குடத்தில தண்ணி இல்லைத் தம்பி.1 கிணத்தில அள்ளிக்கொண்டு
வாறன்..!!
இயேசு உதுக்கிளாலை போறது கவனம் அப்பா!. அவங்கள் இருந்த
இடங்கள்.
(பெரிய வெடிச் சத்தம் கேட்டல்)
புனிதம் என்ன சத்தம் கேட்குது. ? சிலுவை ஐயோ என்ர கால்.!! தம்பி.!!! இயேசு ; அப்பா..! என்ன !! வரறன்!!!
(புனிதமும் இயேசுவும் ஒடிச்சென்று தந்தை சிலுவையை தாங்கி வந்து மேடையின் மையத்தில் அமர்த்தியதும்)
சிலுவை ஐயோ என்ர கால்.!! என்ர.!!!
(புனிதம் ஓடிச் சென்று துணி ஒன்று எடுத்துக்கொண்டு வந்து கொடுத்து)
புனிதம் : இந்தாமோனை, தொலை கட்டு!
சிலுவை ஐயோ!. ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போங்கோ..!!
புனிதம் கெதியாக் கொண்டு போ தம்பி!! ஆஸ் பத்திரிக்கு..!!
காட்சி: 8
இடம் : இயேசு வீடு. நனவுக்காட்சி பாத்திரங்கள் : சிலுவை, இயேசு, சுந்தர், எமெல்டா, புனிதம்
சுந்தர் பிறகு என்ன நடந்தது.?
சிலுவை பிறகு இந்தியா போவம் எண்டு தலைமன்னார் கரையில வள்ளத்துக்
குக் காத்திருந்தம். இயேசு எங்கிருந்தோ வள்ளம் ரெண்டில் வந்தவங்கள் எங்களை வளைச்சுப்
பிடிச்சு: இழுத்துக் கட்டி அடிச்சுசித்திரவதை செய்தாங்கள்..!!

Page 70
110
சிலுவை
இயேசு
எமெல்டா
புனிதம் சிலுவை
சுந்தர்
இயேசு
சுந்தர்
சிலுவை
சுந்தர்
சிலுவை
இயேசு சிலுவை
சுந்தர் சிலுவை
நகல்
என்ர மூத்த பெட்டையை இழுத்துக் கொண்டு போய் எங்கள்
கண்முன்னாலேயே..!!?
அந்தக் கணத்தை என்ணெண்டு என்ர வாயால சொல்லுறது?
sely . . . . . . . . . . ! அங்க வாறாங்கள். . . . . . . . . ! கத்தியோட வாறாங்கள்..!!
அங்க ஒருத்தரும் இல்லை மோனை.!
அந்தக்காட்சியை தன்ர கண்ணால கண்டவன் தான் இவன்.
அதுக்குப் பிறகுதான் தம்பி எமெல்டா சித்தம் கலங்கி பேதையாகி நிற்கிறாள்.
: இம்.! இத்தனை அவலங்களையும் உனக்குள்ள வைச்சுக்
கொண்டு எங்களுக்கெல்லாம் வழி காட்டுறாய். இது எனக்கு மட்டுமல்ல சுந்தர். எங்கட ஊருக்கே பொதுவானது.
பொதுவானது எண்டாலும், உங்களைப் பொறுத்த வரையில் மிக
முக்கியமான விஷயம். இவ்வளவு அவலங்களுக்குள்ளையும் படிச்சு, கம்பசுக்கு போய், இண்டைக்கு ஒரு அரசாங்க அதிபராய் வாறதெண்டால். சாதாரண விஷயமே. அதுவம் நெடுந்தீவிலை இருந்து கொண்டு
அது தம்பி, இவன்ர ஆர்வமும், தாயின்ர மூச்சும், வாத்திப்
பொடியன்ர அறிவுரையும் தான் இதுக்கெல்லாம் காரணம்.
: நான் இங்கை வந்து உங்கட மனங்களையும் குழப்பிப்
போட்டன், நாங்கள், வந்த அலுவலை விட்டிட்டு வேற எங்கயோ போட்டம்.
எங்கை தம்பி.?
அமெரிக்காவில இரண்டு வருஷம் படிக்க வேணும் அப்பா..!
அதுக்கென்ன அவன் படிக்கட்டும். இவ்வளவு கஷ்டமும் பட்டாச்சு
. மேல ஏதாவது கஷ்டங்கள் அவலங்கள் வரப்போகுதே.?. சின்ன வயசில படிக்கிறதைத் தடுத்த நான், இப்ப அவன்ர உழைப்பில தான் சீவிக்கிறன் தம்பி. படிக்கிறதுக்கு வயசுமில்லை, காலமும் இல்லை. அவன் படிக்கட்டும்.
உங்களைப் பற்றித்தான் யோசிக்கிறன்.
இஞ்சை வாதம்பி. இவையள நான் பார்க்கிறன். நீ எதுவரை படிக்க
முடியுமோ அதுவரை படிக்கிறது தான் உன்ரை வேலை.

இயேசு சிலுவை
கருவறையிலிருந்து 111
அப்ப, நான் வெனிக்கிடுற அலுவலைப் பாக்கிறன் அப்பா
ஓம் அப்பா.1
(நால்வர் பாடலுக்கு ஆடியவாறு மேடையின் குறுக்காக மிடுக்காக வந்து நிற்பர்)
பாடல்
அலையோடும் வலையோடும்
மலையாமல் விளையாடிச் சளையாத வீர மனமே! -நாளை விடிவோடு புதுவாழ்வு திடமாக வருமென்று தளராமல் கூறு மனமே..!
தாளக்கட்டு:
தகிடதோம் தகிடதோம்
தகதகிட தகிடதோம் ஜொனுக்கத்தோம் ஜொனுக்கத்தோம் தகதகிடஜொனுக்கத்தோம் திமிதகிடஜொனுக்கத்தோம் - (2)

Page 71
அழிவைத் தேடும் உலகம் (யதார்த்த விரோதபாணி சிறுவர்நாடகம்)
பிரதியாக்கம்
திரு. இளையதம்பி குகநாதன்
பாத்திரங்கள்
சிறுவன் 1, 2 சிறுமி தாத்தா காடழிப்பவர் 1, 2
வேடன் 1, 2
ஆராய்ச்சியாளர் 1, 2
முன்னுரை
(உலகம் இன்று படிப்படியாக அழிவையே தேடிக்கொண்டு செல்கிறது. இவ்வழிவுக் குக் காரணமாய் இருப்பவர்கள் மனிதர்கள். எனவே சிறுவர்களை விழிப்புட்டும் ஒரு சீர்திருத்த நாடகத்தை இங்கு சமர்ப்பிக்கிறோம்)
காட்சி-1
(மேடையில் மூன்று சிறுவர்கள் பாடசாலை செல்லும் புத்தகப்பையுடன் தோளில்
போட்டு சுமந்து வருகிறார்கள். காட்சியாக ஒரு வீதிபோன்று மேடையைக் காட்சிப்
படுத்தலாம். அருகில் ஓர் இரு மரங்கள் நடப்பட்டு கம்பிக்கூடுகளால் பாதுகாக்கப்
பட்டுள்ளது. அவர்கள் வரும்போது பின்புறமாக பாடல். அதற்கு ஏற்ப ஆடிப்பாடிக்
கொண்டு வர முடியும்)
பாடல் சிறுவர் நாங்கள் ஒன்று சேர்ந்து சிறப்புறனே ஆடுவோம்
சின்னஞ்சிறு வயதினிலே சிட்டாய் பறந்து மகிழ்ந்திடுவோம் கல்வி என்ற கனியை நாமும் கசடறவே கற்றிடுவோம் நாளை வரும் உலகை நாங்கள் ஒன்றுசேர்ந்து ஆண்டிடுவோம்
 

சிறுவன் 1
சிறுவன் 2 சிறுவன் 1 சிறுமி
சிறுவன் 1 சிறுமி
சிறுவன் 2
சிறுவன்
தாத்தா
சிறுவன் 2
தாத்தா
சிறுமி
தாத்தா
சிறுவன் 1
தாத்தா
அழிவைத் தேடும் உலகம் 113
தாம் ததிங்கிணதெய்யகதா தந்தகதத்தும் தெய்யகதா
தோம் ததிங்கிணதெய்யகதா தொங்கத் ததிங்கிணதெய்யகதா
(கைகொட்டிய வண்ணம்) கண்டுத்தன். கண்டுத்தன். கண்டுத்
தன்.
என்னத்தை கண்டடா அந்த மரத்துல பெரியமாங்காய் ஒண்டு நிக்கி அத கண்டுத்தன்
முதல் எல்லாம் எவ்வளவு மாங்காய் நிக்கும். இப்போ
இலையெல்லாம் கொட்டுப்பட்டு ஒண்டேஒண்டு தான் நிக்கிது
சரியான வெயில். பெரியமரங்கள் ஒண்டுமே இல்லை
ஒரு மழை ஒண்டு பெய்யுமெண்டா என்னவடிவா இருக்கும்
ம். இந்த வெயில் என்னை சுடமாட்டுது
ஓம். இவ பெரிய வெள்ள. வெயிலால கறுத்திடுவா. இந்த
வெயில் வழமையா அடிக்கிறது தானே.
: நான் அந்தா நிக்கிற மரத்த பிடுங்கி தலையில வச்சிட்டு
போகப்போறன். (சென்று பிடுங்கும் போது அவ்வழியால் வரும் தாத்தா சிறுவனைத் தடுத்தல்)
பிள்ளைச் செல்வங்களே மரத்தைப் பிடுங்காதீர். அது
நிறுவனங்களால பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்படும் மரங்கள்.
தாத்தாநாங்க பள்ளிக்கு போய்வாறம் சரியான வெயிலா இருக்கு.
அதான் அவன் அதப்போய் பிடுங்கினான்
: பிள்ளைச் செல்வங்களே மரத்தைப் பிடுங்கினால் இன்னும்
இன்னும் வெயில்தான் அதிகரிக்கும். தெரியாதா?
தாத்தா இந்தச் சின்னமரத்தைப் பிடுங்கினால் எப்படிவெயில்
இதவிட அதிகரிக்கும்.
மரத்தினால் தான் எமக்கு நீர் கிடைக்குது. மழை பெய்தால் தான்
வெயில் குறையும். மரம், செடி, கொடிவளரும் விளங்கித்தோ.
தாத்தா நீங்க சொல்றது ஒண்டுமே விளங்கல அதுஎப்படி?
(பாடல்)
மழையில்லை நீரில்லை மக்காள் - நாங்கள் மரத்தை அழிப்பதால் குறையுதே மக்காள் வெப்பத்தின் அகோரத்தால் மக்காள் -உலகம் தினம் தோறும் அழிந்துமே செல்லுது மக்காள் தனனானேதனனானேதானாதன தனனானேதனனானேதனதானேதனனா

Page 72
114 நகல்
உங்களுக்கு விளக்கமா நடந்த கத ஒன்ற சொல்லுறன். இஞ்ச வந்து இப்பிடி இருங்கோ. (சிறுவர்கள் எல்லோரும் மேடை அருகில் செல்லல். )
சிறுமி சரி தாத்தா.
(ஒளி படிப்படியாக குறைகின்றது. இனி என்ன நடக்கப்போகிறது என்று சிறுவர்கள் பார்த்தவண்ணம் உள்ளனர். கதை சொல்லும் பாங்கில் அமைகின்றது.)
காட்சி - 2
மேடையில் படிப்படியாக ஒளிபிரகாசிக்கின்றது. இங்கு ஒரு காட்டினைப் போன்று காட்சிப்படுத்த வேண்டும். பின்குரலாக தாத்தா கதையைக்கூற மேடையில் நடிகர்கள் அசைகிறார்கள்.) தாத்தா : ஒரு காட்டிலே உலகத்திலே இருக்கின்ற அனைத்து பறவை, மிருகங்களும் சந்தோசமாக வாழ்ந்து வந்தன. (மிருகங்களாக சிங்கம், கரடி, முயல், மான், குரங்கு, யானை என பல்வகை மிருகங்களை அரங்கில் அசையவிடலாம்.)
பாடல் மிருகங்களே நாங்கள் மிருகங்களே
காட்டில் வாழும் மிருகங்களே எங்களுக்கோ இந்தக் காடு ஒற்றுமையின் புனிதவீடு
தொப்புதொப்பண்ணதொப்பண்ணதொப்பண்ண தொப்புதொப்பண்ணதொப்பண்ணதொப்பண்ண சிங்கம் நான் சிங்கம் காட்டின் ராஜசிங்கம் சிங்கம் நான் சிங்கம் காட்டின் ராஜசிங்கம் தொப்புதொப்பண்ணதொப்பண்ணதொப்பண்ண தொப்புதொப்பண்ணதொப்பண்ணதொப்பண்ண மிருகங்களே நாங்கள் மிருகங்களே காட்டில் வாழும் மிருகங்களே (அப்போது குரங்கு கேலியாக நையாண்டியாக பாவனைசெய்யலாம். பாடல் முடிய பயங்கரமான ஓசையை ஏற்படுத்தவேண்டும். அவ்வேளையில் இரு வேடர்கள் வில் அம்புடன் வேட்டை ஆட வருதல்) வேடர் பாடல் : வேட்டையாடும் மனிதர் நாங்கள் - மிருகத்தை
வேட்டையாடும் மனிதர் நாங்கள் சிங்கம் புலி கரடி காடை கெளதாரி என்று கனமிருகம் பிடித்திடுவோம் காட்டினிலே தினந்தோறும் வேட்டையாடும் மனிதர் நாங்கள் - மிருகத்தை வேட்டையாடும் மனிதர் நாங்கள்

அழிவைத் தேடும் உலகம் 115
வேடன் 1 (மிருகங்களைக் கண்டவுடன்) ச்சு தோழரே அதோபாருஇண்டைக்கு
நமக்கு நல்லவேட்ட இருக்குது ஒய். வேடன் 2 எண்ட சின்னப்பொண்ணு ஒரு மொசலு சுட்டுத்தரச் சொல்லிக்
கேட்டது. ஒய். இண்டைக்கி வசமா மாட்டியிருக்கிறாங்க வேடன் 1 சத்தம் போடாத ஓய். ஓடிடுவாங்க
(அப்போது மறைந்திருந்து பதுங்கிய வண்ணம் ஒரு முயலை எய்து அதனை ஒரு தடியில் கட்டி காவிச்செல்லல்) (அப்போது மிருகங்கள் அனைத்தும் எழுந்து அசைதல்) மிருகங்கள் பாடல் வருந்துகிறோம் முயலே வருந்துகிறோம்.
உன் பிரிவால் நாங்கள் வருந்துகிறோம் வருந்துகிறோம் முயலே வருந்துகிறோம். உன் பிரிவால் நாங்கள் வருந்துகிறோம் (அப்போது மெல்லமெல்ல ஒளி மங்குகிறது. அருகில் இருக்கும் சிறுவர்களுக்கு ஒளி பாய்ச்சப்படுகிறது)
சிறுமி ஐயோ தாத்தா முயல் பாவம்.
சிறுவன் 1 துள்ளி விளையாடித் திரிஞ்ச முயல்
சிறுவன் 2 தாத்தா அவங்க கொண்டு போயிட்டாங்க தாத்தா சரி. இனி என்ன நடக்குதெண்டு கேளுங்கோ.
(அப்போது மெல்லமெல்ல ஒளி மங்குகிறது. காட்சிமாற்றம்)
காட்சி - 3
(அதே காடுஅதே மிருகங்கள். பின்னணியாக ஏற்கெனவே போன பாடல்) மேடையில் படிப்படியாக ஒளி பிரகாசிக்கின்றது. இங்கு ஒரு காட்டினைப் போன்று காட்சிப்படுத்த வேண்டும். பின்குரலாக தாத்தா கதையைக்கூற மேடையில் நடிகர்கள்) மிருகங்கள் பாடல் மிருகங்களே நாங்கள் மிருகங்களே
காட்டில் வாழும் மிருகங்களே (அப்போது மரத்தை வெட்டி விற்பவர்கள் இருவர் கத்தி, கோடரி, கயிறுடன் மேடையில் வருதல்)

Page 73
116 நகல்
மரம் வெட்டிகள் பாடல் மரத்தை வெட்டுவோம் நாங்கள் மரத்தை வெட்டுவோம்
காட்டிலே உள்ள பெரிய மரத்தை கண்டு வெட்டுவோம். - நாங்கள் கண்டு வெட்டுவோம். கட்டைகட்டையாய் வெட்டி பெட்டிபெட்டியாய் அடுக்கி முட்டிமுட்டியாய் போட்டு துட்டு எடுப்போம். - நாங்கள் துட்டு எடுப்போம். (அப்போது காடு வெட்டுபவர்கள் ஒவ்வொரு மரமாக வெட்டுதல். அப்போது மிருகங்கள் அங்கும் இங்கும் திரிதல். பின் அவர்கள் மேடையைவிட்டு வெளியேறுதல். சோகமான இசைமிருகங்கள் அசையத் தொடங்குகின்றன. சோகமான பாடல் பின்னணியாக. மிருகங்கள் ஒவ்வொன்றாக விழுதல்.) பாடல் காடு அனைத்தும் அழிந்தன. மிருகங்கள் அனைத்தும்
அழிந்தன காட்டில் உள்ள உயிர்கள் பரிதவித்து, இறந்தன காடு அழிந்ததுமிருகம் அழிந்தது காட்டில் உள்ள உயிர்கள் யாவும் கதறிஅழுதது.
(அப்போது வெளிநாட்டைச் சேர்ந்த ஆண், பெண் ஆராய்ச்சியாளர்கள் காட்டை ஆராய்ச்சி செய்ய வருதல். அவர்கள் மொழியில்லா மொழியில் கதைத்தல். அவர்கள் கதைத்ததற்குரிய விளக்கத்தை அருகில் இருந்து தாத்தா மொழிபெயர்த்தல்)
ஆராய்ச்சி
ஆண் மொழியில்லா மொழியில் கதைத்தல்
தாத்தா ஐயோ என்ன பரிதாபம். இந்தக் காட்டில் அனைத்து மிருகங்களும்
அழிந்துவிட்டன.
ஆராய்ச்சி
பெண் மொழியில்லா மொழியில் கதைத்தல்
தாத்தா பரிதாபம். பரிதாபம். எல்லாம் அழிந்து போயிட்டுதே. இந்த உலகத்தில இந்த ஊர்ல இருக்கிறகாட்டிலதான் அதிகமானமிருகம், பறவைகள் வாழ்ந்தன. இப்போது அனைத்தும் அழிந்து விட்டன.
ஆராய்ச்சி
ஆண் மொழியில்லாமொழியில் கதைத்தல்
தாத்தா இதனால் உலகில் என்ன நடக்கப் போகின்றது. பல இடங்களுக்கு
சென்று ஆய்வினை செய்து வெளியிடுகின்றோம். வெப்பம் இன்னும் இன்னும் அதிகரிக்கப் போகின்றது. கடல் மட்டம் உயரப் போகின்றது. மனிதர்கள் மழையில்லாமல் நீருக்கு கஸ்டப்படப் போகின்றார்கள்.

ஆராய்ச்சி பெண்
தாத்தா
வேடன் 1
வேடன் 2
மரம்வெட்டி1 மரம்வெட்டி2
எல்லோரும்
அழிவைத் தேடும் உலகம் 117
மொழியில்லாமொழியில் கதைத்தல்
உலகம் அழிவை நோக்கிச் செல்கிறது. மனிதர்களே தங்களது
இறப்புக்கு காரணமாகப் போகிறார்கள். சரி நாங்கள் வருகி றோம். (ஒளி படிப்படியாக குறைதல் அப்போது மெதுவாக நடந்து கொண்டு ஏற்கெனவே வந்து போனவர்கள் வேடர், மரம்வெட்டி, ஒன்றன் பின் ஒன்றாக வந்து நிலத்தில் மடிதல்)
தண்ணிதண்ணி. ஐயோ வெயில். வெயில்.
தாகம். தாகம்.
பசிக்குது. தண்ணிதண்ணி. தண்ணி.
தண்ணி தண்ணி. தண்ணி.
(எல்லோரும் நிலத்தில் விழுந்துமடிதல். அப்போது தாத்தாவும் பிள்ளைகளும் மேடையின் மத்தியில் வந்து அவ்வேளையில் சோகமான மெட்டில் பாடல் ஒலிக்கின்றது. அவர்கள் எல்லோரையும் பார்க்கிறார்கள்)
பாடல்
தாத்தா சிறுவன் 1 சிறுவன் 2 தாத்தா
சிறுமி
சிறுவன் 1
சிறுவர்கள் தாத்தா
மரமும் இல்லை மழையும் இல்லை மனிதர்கள் பிழைப்பதற்குத் தண்ணியும் இல்லை மிருகங்கள் அழிந்தன மனிதர் அழித்தனர் அழிந்துவரும் மனிதர் கூட்டம் அதிகரித்தன அழிவை நோக்குது உலகம் அழிவை நோக்குது வெப்பத்தின் அகோரத்தால் அழிவை நோக்குது ஒகோகோ ஒ ஓ, ஒ
பார்த்தீர்களா என்ன நடக்குது என்று
: Luftoj Lib
நாங்க இனி மரத்த பிடுங்கமாட்டம் தாத்தா,
நீங்க மரத்தை பிடுங்காம இருக்கிறதோடை மட்டுமில்லாமல்
இந்த சூழலில் மரத்த நடனும், அதுமட்டுமல்ல மரத்தை வெட்டுபவர்களையும் தடுத்து நிறுத்தனும்.
சரி தாத்தா. நாங்க இனி மரத்தையும் நடுவோம். வெட்டுப
வர்களையும் விழிப்படையச் செய்வோம்.
: நன்றி தாத்தா ..! எங்களுக்கு நேரம் போகுது. வீட்ட தேடுவாங்க
போயிட்டுவாறம்.
ஹாய் தாத்தா போயிட்டுவாறம். சரி போயிட்டுவாங்க.

Page 74
அகல் விளக்கு
பிரதியாக்கம் செல்வி கிருபரெத்தினம் அஸ்வினி
பாத்திரங்கள் வேலாயுதம் பரிமளம் கயல்விழி மீனா
புவனா கருணாகரன் தேவி ஆதித்தியன் வைதேகி
காட்சி: 1
இடம் வேலாயுதம் வீடு (அதிகாலைப் பொழுது கடற்கரையிலிருந்து சற்றுத் தொலைவிலுள்ள பல ஒட்டு வீடுகள் நடுவே ஒரு சிறிய ஒலைக்குடிசை. அக்குடிசையுள் காணப்படும் ஒரு சிறு விளக்கின் ஒளியானது அவ்வீட்டினுள்ளே இடம்பெறும் நிகழ்வுகளை திரையிட்டுக் காட்டுகிறது. வேலாயுதம் மீன் பிடிக்கும் வலையை எடுத்துக்கொண்டிருக்கிறார். பரிமளம் அடுப்பங்கரையில் வேலை செய்கிறாள். பிள்ளைகள் நித்திரை செய்கிறார்கள்.) வேலாயுதம் : பரிமளம். பரிமளம் . பரிமளம் என்ன..? சற்றுப் பொறுங்கோ.இங்க அடுப்பும் சரியா எரியுதில்ல.
தேநீர் எடுத்திட்டு வாரன். வேலாயுதம் நேரமாகுது. கிழிந்த சாரத்தைப் புரைந்து வைக்கச் சொன்னனான். எங்க அத எடுத்து வா.தோணிதள்ள நேரமாகிட்டே போகுது.
 

அகல் விளக்கு 119
சீக்கிரம் போகணும். (பரிமளம் புரைந்த சாரத்தையும் தேநீர் கோப்பையையும் நீட்டுகிறாள்.)
பரிமளம் ! என்ன.? இன்றைக்கும் வர நேரமாகுமோ..?
வேலாயுதம் நம்மடதொழில் எத்தினை மணிக்கு வருவன் என்று சொல்லக்கூடிய தொழிலா பிள்ளை..? மீன் கொஞ்சம் அகப்பட்டா பரவாயில்ல நேரத்துக்கு வரலாம். பார்ப்பம் எத்தன நாளைக்குத்தான் மாரடிக்கிறதோ. நான் போயிற்று வாறன்.
பரிமளம் சரிங்க, கவனமாக பார்த்து போயிற்று வாங்க. நம்மட வாழ்க்கை கடலோடு மாரடிச்சே முடிந்திடும் போலை. எப்பதான் எங்களுக்கு முடிவோ.(பெருமூச்சுவிட்டவளாக கணவனை வழியனுப்புகிறாள். கயல்விழி நித்திரைவிட்டெழுந்து விட்டாள்)
கயல்விழி மீனா. புவனா. நித்திரை செய்தது போதும். எழுப்புங்க பரீட்சை தொடங்கப் போகுதே என்கிற எண்ணம் இல்லையா..? (மீனாவும் புவனாவும் எழுந்து பாடம் படிக்க தொடங்குகிறார்கள்)
பரிமளம் பிள்ளை கயல்விழி. இன்றைக்கு வேலைக்குப் போறதா..?
கயல்விழி இல்ல அம்மா. முதலாளி அம்மா வேலைவிடயமா கொழும்புக்குப் போறாங்க. அதனால ஒரு வாரத்துக்கு விடுமுறை தந்திருக்கிறாங்க.
பரிமளம் சரிபிள்ள, மீனாவுக்கும், புவனாவுக்கும் விளங்காத பாடத்தைச்
சொல்லிக் கொடு.
கயல்விழி சரி அம்மா.
காட்சி: 2
இடம் வேலாயுதம் வீடு
(பரிமளம் மற்றும் பிள்ளைகள் மூவரும் வீட்டிலிருக்கிறார்கள்)
மீனா அம்மா பொழுது சாயும நேரமாகிற்று. இன்னும் அப்பாவ
காணல்லயே.
பரிமளம் ! அப்பா போகும் போதே நேரமாகித்தான் வாரதாச் சொன்னார்.
வந்திடுவார். விளக்குவைச்சா கடையில அரிசியும் வாங்க இயலாது. நான் கடைக்குப் போயிற்று வாறன். பிள்ள கயல் உலையைக் கொதிக்க வை. நான் வாறன். (பரிமளம் கடைக்குப் போக வருகிறாள். எதிரே பக்கத்துத் தெருவிலே இருக்கிற கருணாகரன் பதறியடித்துக்கொண்டு ஓடி வருகிறான்.) என்ன தம்பி .ஏன் பதறியடித்துக்கொண்டு வருகிறாய்? என்னவென்று

Page 75
12O நகல்
சொல்லு. (கருணாகரன் சொல்ல வந்த விடயத்தை சொல்ல முடியாதவனாக அவதியுறுகிறான்) கருணாகரன் 1 ஐயோ அக்கா நடக்கக்கூடாதது நடந்து போயிற்றுது. பரிமளம் என்ன தம்பி சொல்லுறாய்? கருணாகரன் : அக்கா. வேலாயுதம் அண்ணா மீன்பிடிக்கப் போன தோணி எதிர்பாராத புயல் கடலிலை வீசினதால கடலில கவிழ்ந்திட்டுது. அதில போனவங்க யாருமே உயிரோட கிடைக்கவில்லை. அதில வேலாயுத அண்ணனும் . நம்மளவிட்டிட்டுப் போயிற்றாரு அக்கா (கருணாகரன் அழுதபடியே கூறி முடிக்க பரிமளம் மயங்கி விழுகிறாள்.) பிள்ளைகள் ஐயோ கடவுளே. நாங்க இனி என்ன செய்யப் போகி றம். ? எங்களுக்கு ஏன் இந்த நிலைமை.? நாங்க யாருக்குமே எந்தத் தீங்கும் செய்தது இல்லையே..? அம்மா எழும்புங்க. அப்பா எங்களுக்க இப்படி யொரு இடி விழுந்திட்டுது. (தண்ணீர் தெளிக்க பரிமளம் மயக்கம் தெளிந்து எழும்புகிறாள்) பரிமளம் கடவுளே. ஏன் நாங்க இப்போ அனுபவிக்கிற வேத னைகள் போதாதா..? எங்கட தலையில இப்பிடி ஒரு இடி விழும் என்று கனவிலைகூட நினைக்கேல் லயே..? நான் எப்படி என்ர பிள்ளையள கரைசேர்க்கப் போறேனோ..?
(பரிமளம் அழுதுபுலம்ப பிள்ளைகளும் ஒப்பாரி வைத்து அழுகிறார்கள்)
கயல்விழி அம்மா. அழாதீங்க . உங்கள. தங்கச்சியள பார்த்துக் கொள்ள நான் இருக்கிறன் (கயல் சொல்லிமுடிக்க பரிமளமும், புவனாவும், மீனாவும் கயலை அணைத்து அழுகிறார்கள்)
asmú Léa: 3
இடம் தேவி வீடு
(பரிமளம் ஒரு வீட்டில் பாத்திரம் கழுவி வேலை செய்து கொண்டிருக்கிறாள். அந்த வீட்டு எஜமானியான தேவி வீட்டின் ஒரு அறையிலிருந்து வெளிவருகிறாள்.)
தேவி பரிமளம் அக்கா, இங்க வாங்க பரிமளம் என்னம்மா கூப்பிட்டீங்களா..? தேவி முதல்ல அந்த அம்மா என்று கூப்பிடுறதை விடுங்க. தேவி
என்றே கூப்பிடுங்க. அது சரி என்ன அவசரமாக வேலைசெய்ரீங்க. வீட்டுக்க நேரத்துக்கு போகணுமா..?
பரிமளம் ஓம்பிள்ளை, பிள்ளைகள் தனியா இருப்பாங்க .அதுதான்.

தேவி
பரிமளம்
தேவி
பரிமளம்
தேவி
பரிமளம்
தேவி
பரிமளம்
தேவி
பரிமளம்
தேவி
பரிமளம்
தேவி
அகல் விளக்கு 121
சரி அக்கா இதோட வேலையை முடிச்சிட்டு வாங்க, முக்கியமான
விடயம் கதைக்க வேண்டியிருக்கு.
சரி பிள்ளை.
முதல்ல இருங்க அக்கா (பரிமளம் அங்கே இருந்த கதிரையில்
அமருகிறாள்) அக்கா! உங்கட பிள்ளையன் மூண்டு பேரும் நல்ல கெட்டித்தனமானவங்க என.
ஓம் பிள்ளை. கெட்டித்தனமாகத்தான் படிக்கிறாங்க. மூத்த பிள்ள
நல்லா படிச்சவள் தான். ஏங்கட குடும்ப வறிய நிலையால தான் படிப்பை AIL வரை படிச்சிட்டு புடவைக்கடைக்கு வேலைக்குப் போறாள். தங்கச்சிகள படிப்பித்து நல்ல ஒரு நிலைக்கு கொண்டு வரணும் என்றது தான் தன்ர இலட்சியம் என்று சொல்லுறா.
: அக்கா. மூத்தவளுக்கு எத்தினை வயசு.?
வாற மாசம் பத்தாந்திகதியோடைஇருபத்தைந்து வயசு தொடங்குது.
வயசு ஏறிக்கொண்டே போகுது. காலாகாலத்தில கலியாணம் காட்சி செய்து வைக்க ஒரு வழியும் இல்ல. (மேற்கொண்டு எதுவுமே கதைக்க முடியாமல் அழுகிறாள்)
அழாதீங்க அக்கா கயல்விழிக்கு ஒரு நல்ல வரன் அமைந்தா
கலியாணம் செய்து வைக்கலாம் தானே.
ம். (சிறு போலிச்சிரிப்புடன்) அதெல்லாம் எப்பிடி பிள்ள
சாத்தியப்படும். வாழ்வதே ஒரு ஒலைக்குடிசை நானும் என்ட பிள்ளையும் வேலைக்குப்போறதால தான் ஒரு வேளைச் சாப்பாடாவது திருப்தியாக சாப்பிட முடியது. இந்த நிலைமையில என்ன செய்வது..? எப்ப தான் கடவுள் எங்களுக்கும் வழிகாட்டப் போகிறாரோ.? (பெருமூச்சுடன் முடிக்கிறாள்).
அக்கா உங்கட நம்பிக்கை வீண் போகல்ல. கடவுள் ஒரு வழி
உங்களுக்குக் காட்டியிருக்கிறார். சொல்லு றன் கேளுங்கோ சம்மதம் என்றால் நல்ல முடிவுக்கு வரலாம்.
அப்படி என்ன வழி..? (ஆச்சரியத்துடன் கேட்கிறாள்) : அக்கா முதல்ல இதப்பிரிச்சுப் பாருங்க. (தேவி பரிமளத்திடம்
ஒரு கவரை நீட்டுகிறாள்.)
: இது வந்து .யார் பிள்ள. (போட்டோவைப் பார்த்துப் பரிமளம்
கேட்டாள்)
வேறு யாருமில்லை. என்ர பெரியம்மாவின் மகன். பெயர்
ஆதித்தியன். யுத்தம் ஏற்பட்ட காலத்துல இடம் பெயர்நது கனடாவுக்கு போனவன். அம்மா, அப்பா இரண்டு தங்கைகள் என அன்பான அழகான குடும்பம். யுத்தத்தில ஷெல் தாக்கியதில்

Page 76
122
பரிமளம்
தேவி
பரிமளம்
தேவி
பரிமளம்
தேவி
நகல்
பெரியப்பாவும் தங்கைகளும் இறந்திட்டாங்க. அதற்குப்பிறகு தான் கனடாவுக்கு தன் அம்மாவையும் கூட்டிக்கொண்டு போய் அங்கேயே நிரந்தரமாக இருந்திட்டான். இது வரைக்கும் நம்மட நாட்டுக்கு வர விருப்பமில்லாமல் மனசு உடைஞ்சு போனவன். இப்போ இங்க வாரதாகச் சொன்னான். பெரியம்மாவுக்கு இவனுடைய கவலை தான். பாவம் ஒரே அழுகைதான்.
பெற்ற பிள்ளை கவலையோட இருக்கிறதப் பார்த்தா தாய்க்கு
கவலைதானே.?
ஓம் அக்கா. ஆதித்தியன் நல்லா படிச்சிருக்கிறான். கைநிறைய
சம்பாதிக்கிறான். மற்றவங்களுக்கு கேட்காமலேயே உதவி செய்பவன். நல்ல குணமும் அழகும் கொண்டவன். முக்கியமான விடயம் என்னவென்றால் மறைமுகமாக அநாதை இல்லங்களுக் கென தன் சம்பாத்தியத்திலை கொடுத்து உதவி செய்திற்று வாரான். கனடாவிலையும்சரி நம் நாட்டிலையும் சரி எத்தனையோபேர் மாப்பிள்ளை கேட்டும் திருமணப் பேச்சை எடுத்தாலே எரிந்து விழுவான். பெரியம்மா ஒரே புலம்பல். போன கிழமைதான் பெரியம்மா கோல் எடுத்தவ. ஆதித்தியன் ஒருவாறு கல்யாணம் பண்ணிக்கச் சம்மதிச்சிட்டான் என்று. ஆனா..?
ஆனா என்ன பிள்ளை..?
ஆதித்தியன் தனக்கு வரப்போற மனைவி ஓரளவு படிச்சிருந்தாலும்,
பார்க்க இலட்சணமாகவும் மற்றவங்களுக்கு உதவும் எண்ணம் கொண்டவளாகவும், தான் எளியவர்களுக்கும் ஏழைகளுக்கும் உதவிசெய்து வருவதை ஏற்றுக்கொள்பவளாகவும், முக்கியமாக கஸ்டப்பட்ட குடும்ப பெண்ணாக இருக்கவேணும் என்றது தான.
என்ன பிள்ளை சொல்றீங்க. இந்தக்காலத்தில இப்படி ஒருவரா.?
பணம், பணம் என்று இருக்கிற இந்தக் காலத்தில எனக்கு ஒரே வியப்பா இருக்கு பிள்ள.
உண்மைதான் அக்கா. ஆதித்தியன் சிறு வயசிலை இருந்து
மற்றவங்களுக்கு உதவனும் என்கிற எண்ணம் கொண்டவன். எனக்கெண்டால் அவன் எதிர்பார்க்கிற குணாதிசயம் கொண்ட பெண் எண்டால் உங்கட மகள் கயல்விழி தான் . நிச்சயமா அவனுக்குப் பொருத்தமா இருப்பா. வாற மாதம் ஆதித்தியனும் பெரியம்மாவும் இங்க வாறாங்க. வந்ததும் இங்கேயே ஒரு கோயிலில வைச்சு கல்யாணம் பண்ணி பெண்ணைக் கூட்டிக் கொண்டு போற எண்ணத்தோட தான் வாராங்க. இதுபற்றி ஆதித்தியனிட்ட கதைத்திருக்கிறன். உங்களுக்கும், கயலுக்கும்

அகல் விளக்கு 123
பிடிச்சா மேற்கொண்டு என்ன செய்யிறது எண்டு பார்க்கலாம். சொல்லுங்க அக்கா
பரிமளம் (சங்கடத்துடன்) பிள்ளை எனக்கு என்ன சொல்லுறது எண்டே தெரியலை. என்ர பிள்ளையளின் சந்தோசம்தான் என்ர சந்தோசம்.
தேவி : அக்கா நீங்க கயல்விழியிட்ட இத பற்றி கதைத்து வையுங்க .
கயலின் போட்டோ ஒன்று கொண்டு வந்து தாங்க. நடக்கனும் எண்டு விதியிருந்தால் நல்ல படியே நடக்கும். உங்களுக்கும் கஸ்டம் ஓரளவு தீரும்,
பரிமளம் ஓம் பிள்ள .நீங்க சொல்றது சரிதான் . நான் போயிட்டு
வாறன்.
காட்சி: 4
இடம் பரிமளத்தின் வீடு
(பரிமளம் ஆடைகளைத் துவைத்துக் கொண்டிருக்கிறாள். மீனாவும் புவனாவும் பாடம் படித்துக் கொண்டிருக்கிறார்கள்)
புவனா அம்மா, என்ன இன்னும் அக்காவக் காணல்லயே..!
பரிமளம் : ஒம் பிள்ளை, அதுதான் நானும் யோசிக்கிறன்.
மீனா இரண்டு பஸ் மாறி வரணுமே. பாவம் அக்கா பஸ் கிடைக்கல
போல.
(கயல் வந்து கொண்டிருக்கிறாள்)
புவனா வா அக்கா, உன்னைக் காணல்ல என்று நாங்க கவலைப்பட்டு
இருந்தோம்.
கயல்விழி இன்றைக்கு கடைக்கு நிறையப்பேர் வந்தவங்க. அதுதான்
நேரமாயிற்றுது. வருடப்பிறப்பு நெருங்கிற்று தானே. ?
ußeorff : அக்கா, அம்மா உன்னட்டைக்காட்டவாம் என்று எங்களிட்டைக்
காட்டாமல் ஒரு கவர் வைச்சிருக்கிறா.
பரிமளம் மீனா முதல்ல நீ படி,! கயல் நீ முகம் கழுவிற்று சுடுதண்ணிப்
போத்தலிலை தேநீர் இருக்கு எடுத்துக்குடி பிள்ளை
கயல்விழி என்னம்மா மீனா சொல்றா..? முதல்ல என்னவென்று
சொல்லுங்கோ.
பரிமளம் ! நீ சொல்லாமல் விடமாட்டாய் பிள்ள. (பரிமளம் தேவி கொடுத்த
ஆதித்தியனின் போட்டோவை கயலிடம் கொடுக்க பிரித்துப்பார்த்த கயல் வியப்புடன்)

Page 77
124
கயல்விழி
பரிமளம்
கயல்விழி
நகல்
யார் அம்மா..?
தேவியின் தம்பி முறையானவன் பிள்ளை. கனடாவில
இருக்கிறாராம். தேவி உனக்குச் செய்து வைக்கலாம் எண்டு.
என்னம்மா இதெல்லாம் நடக்கிற விசயமா. இப்போ எனக்கு
கல்யாணம் ஒன்று தேவைதானா..?. அம்மா இதோட இத விட்டிடுங்க
(கயல்விழி அடுப்பங்கரைக்குள் நுழைகிறாள்)
இடம்
காட்சி: 5
தேவியின் வீடு
(ஆதித்தியன், தாய் வைதேகி ஆகியோர் கதைத்துக் கொண்டிருக்கிறார்கள். தேவி தேநீர் ஊற்றிக் கொடுக்கிறாள். அத்துடன் கயலின் போட்டோவையும்
கொடுக்கிறாள்)
தேவி ஆதித்யன்
தேவி
ஆதித்யன்
தேவி
வைதேகி
ஆதித்யன்
ஆதி! என்ன கயல்விழியை பிடிச்சிருக்கா?
ம். பிடிச்சிருக்கு அக்கா. நான் எதிர்பார்த்தத விட போட்டோவில
நல்ல அழகாயிருக்கா. போனில நீங்க இவங்களப்பற்றி சொன்னதில இருந்து எப்போ பார்க்கப்போறம் என்றிருந்தது. அப்போ மாப்பிள்ளைக்கு, பெண்ண பிடிச்சிருக்கு. (எல்லோரும் சிரிக்கிறார்கள்)
ஆனா அக்கா கயல் விழிக்குப் பிடிச்சிருக்கோ தெரி
யல்லையே..?
உன்ன யாராவது வேணாம் என்று சொல்லுவாங்களா. ஆதி?
கயல் மிக வறிய குடும்ப பெண். அவளுக்கு ஆசை இருக்கு. ஆனா தன் தகுதிக்கு மீறிய வாழ்க்கை கிடைக்கிறது பற்றி யோசிக்கிறா. தன்னோட விருப்பத்த தெரிவிக்க பயப்படுறா. ஆனா நீ அவளோட கதைச்சா நிச்சயமா அவ உன்ன புரிந்து கொள்ளுவா
ஓம் மகன். தேவி சொல்றது தான் சரி. நாங்க இப்பவே அவங்க
வீட்ட போய் பேசி முடிச்சிட்டு வருவமே.
சரியம்மா..! வாங்க புறப்படுவம்.
(மூவரும் பரிமளம் வீட்டுக்குப் போக ஆயத்தமாதல்)

இடம்
அகல் விளக்கு 125
காட்சி: 6
: பரிமளம் வீடு
(பரிமளம் அரிசிபுடைத்துக் கொண்டிருக்க, கயல்விழி வேலைக்குச் செல்ல ஆயத்தமாக மற்றப்பிள்ளைகள் படித்துக் கொண்டிருக்க ஆதித்தியன், தாய் வைதேகி, தேவி ஆகியோர் வருகிறார்கள்)
பரிமளம்
பரிமளம்
வைதேகி
ஆதித்யன்
வைதேகி
பரிமளம்
கயல்விழி
ஆதித்யன் கயல்விழி
ஆதித்யன்
வாங்க அம்மா, வாங்க பிள்ளை. வாங்கதம்பி.இருக்கச்சொல்லக்
கூட ஒரு கதிரை இல்லையே (பாய் ஒன்றை விரிக்கிறாள்) அதில் மூவரும் அமர்கிறார்கள்
கயல் வாம்மா.
வெட்கப்படாம வந்து இங்க இரும்மா. (கயல் வந்து
இருக்கிறாள்)
அம்மா! நான் கயலோட தனியா கதைக்கணும். என்ன
கதைக்கலாமா..?
பரிமளம் என்ன சொல்லுறீங்க.. ? ஆதி கயலோட
கதைக்கலாமா..?
ஐயோ அம்மா தம்பி நீங்க தாராளமாய்க் கதைக்கலாம். கயல்
உன் வாழ்வு நீங்கள் தானம்மா முடிவெடுக்க வேணும். போய்க் கதையுங்கோ.
சரி அம்மா (ஆதித்தியனும் மேடையின் முன்புறம் வந்து) என்ன கயல்விழி எதுவுமே கதைக்க மாட்டீங்களா..? இல்ல அது வந்து. : கயல்விழி நான் சுற்றி வளைக்காம நேரடியாகவே கேட்கிறன்.
என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறதிலை உங்களுக்கு இருக்கிற பிரச்சனை தங்கச்சிகள கரை சேர்க்கணும் என்பது தானே. அதப்பற்றிய கவலை இனி உங்களுக்கு வேண்டாம். என்னோட தங்கச்சிகள வாழவைக்கிற கொடுப்பனவு தான் எனக்கில்லாமல் போயிற்று. ஆனா இப்போ உங்கடதங்கச்சிகள கரைசேர்க்கிறது இனி என்னோட பொறுப்பு. இங்க எனக்கு இருக்கிற சொத்துக்கள தங்கைகளுக்கும் உங்க அம்மாவுக்கும் கொடுத்துவிட்டு நாம கனடாவுக்கு போய் எங்களின் வாழ்க்கையைத் தொடங்குவம். அது மட்டுமில்ல கயல் மேற்கொண்டு நீங்க படிக்க விருப்பப்பட்டா படிக்கலாம். என்ன கயல் நான் சொல்றது சரிதானே ?
(கயல் ஆனந்தக்கண்ணீருடன் ஆதியின் முகத்தைப் பார்க்கிறாள்)

Page 78
126
கயல்விழி
ஆதித்யன்
கயல்விழி ஆதித்யன்
நகல்
(ஆதியின் கால்களில் விழுந்து) என்னுடைய, இல்ல . எங்களின்
வாழ்க்கையை விளக்கேற்றி வைச்சிட்டீங்க. நான் உங்கள அடைய புண்ணியம் செய்திருக்கிறன். (கயல் அழுகிறாள்)
அம்மா கயல் எழுந்திருங்க. இனிமேல் சந்தோசத்தில கூட நீங்க
அழக்கூடாது. எப்போ உங்கட போட்டோவ பார்த்தனோ அப்பவே முடிவு பண்ணிட்டன். நீங்க என்னுடைய வாழ்க்கைத் துணைவி யென்று உண்மையைச் சொன்னால் நீங்கதான் வாழ்நாள் பூராவும் 'அகல் விளக்கு' என்னுடைய வாழ்க்கையை ஒளிரச் செய்யப் போlங்க (இருவரும் சிரிக்கின்றார்கள்)
வாங்க எங்களுக்காக காத்திருக்கிறாங்க போகலாம்.
சரி போகலாம் எங்கட இந்த முடிவுக்காக வீட்டவர்கள் காத்திருப்
பார்கள். போய் முதல்ல சொல்லுவம்.சீக்கிரம் போகலாம் (இருவரும் போய் தாய்மாரின் காலில் தனித்தனியாக விழுதல்.)

உறவுகள்
பிரதியாக்கம் செல்வி சந்திரசேகரன் ஹர்ச்சனா
பாத்திரங்கள்
1. வள்ளி தாய்
2. LIMaom மகன்
૭. પુ8T LD56t 4. முத்து நண்பன் 5. சதிஸ் நண்பன் 6. சங்கரன் ஆசிரியர் 7. சுந்தரம் அதிபர்
8. மாணிக்கம் பாலரின் மனைவி
9. JTFlbLDIT மாணிக்கத்தின் மனைவி 10. ரோசி தாதி
காட்சி: 1
இடம் 1 III ofGo6)
பாத்திரங்கள் : பாலா, முத்து, ஆசிரியர், சதிஸ் ஒளியமைப்பு : 1 ஒலியமைப்பு : 1 (ஆசிரியர் வகுப்பினுள் வருகின்றார்) மாணவர்கள் வணக்கம் ஐயா! ஆசிரியர் வணக்கம். எல்லாரும் தமிழ் பயிற்சிப் புத்தகத்தை எடுங்கோ! மாணவர்கள் சரி ஐயா! (படிப்பித்துக் கொண்டிருக்கும் போது)

Page 79
128
ஆசிரியர்
TG)
ஆசிரியர்
UTC)
ஆசிரியர்
நகல்
டேய் பாலா! உன் புத்தகம் எங்க..? இன்னும் வாங்கலையா?.
எத்தனை நாளாய் சொல்லுறன். ஏண்டா என் உசுரை வாங்குறாய்?
அம்மா நாளைக்கு கட்டாயம் வாங்கித் தாறனெண்டு
சொன்னாங்கையா.
இப்பிடியே எத்தின நாளாய் சொல்ற..? என்னைய என்ன
பேய்க்காட்டுறியா..?
இல்லை ஐயா நாளைக்கு கட்டாயம் வாங்கிட்டு வாரன்.
வாய மூடு. தலையில எண்ணையுமில்லை, சட்டையிலெ
நீலமுமில்ல, கையில புத்தகமுமில்ல. இல்.ல. தெரியாமத்தான் கேட்குறன் . நீ பள்ளிக்கு படிக்கத் தான் வாறியா?. முதல்ல வெளியே போ.
(கவிழ்ந்த தலையுடன் வெளியே செல்கிறான் -இடைவேளை மணி அடிக்க ஆசிரியர் போக உள்ளே வருகிறான்)
முத்து
UTC)
முத்து
TGT
LJTO)
ff3) T
என்னடா பாலா, அந்த மனுசன் தான் சிடுமூஞ்சினு தெரியுமே.
அதற்கேற்றாற் போல நீயும் புத்தகம் இல்லாம வந்திருக்கியே.
என்னடா என்ரை நிலைமையைப் பற்றி தெரிந்த நீயுமா இப்படி
பேசுற. ஒருவேளை சாப்பாட்டிற்கே திண்டாடும் நான் எப்பிடிடா புத்தகம், நீலம் எல்லாம் வாங்குறது.
கோவிச்சிக்காதடா. உனக்கு தெரியது எனக்கு தெரியுது. அந்த
சிடுமூஞ்சி. டுப்பா மண்டைக்கு விளங்குதில்லையே.
எப்படியாவது நாளைக்காவது வாங்க பாக்கணும். அவரகுறைகூறி
என்ன பயன்..? என் மேலதானே தப்பு.
ரெண்டு ரெண்டு பேரா எண்டாலும் ஒரு புத்தகத்தில படிச்சி
எழுதலாம், இந்த மனுசன் தனி புத்தகம் வேண்டுமென்று ஒத்த காலில நிக்குது. நீதான் வகுப்பில முதலாம் பிள்ளையா வாற இருந்தும் உன் மேல எறிஞ்சு தான் விழுது மனிசன்.
ம். என்ன தாண்டா செய்யிறது. எல்லாம் தலைவிதி சரி மணி
யடிக்கப்போகுது நீ வகுப்பிற்கு போ, நாம பேசிக்கிட்டிருப்பதைக் கண்டார்னா அவருக்கு இன்னும் சுதி வரும்.
இண்டைக்கு உன் பாடமெல்லாம் வீணா போயிட்டு. நா புத்தகம்
தாரேன். பயிற்சியை செய்திட்டு வா சரியா!
: sýLIT.

உறவுகள் 129
asmré: 2
இடம் பாலாவின் வீடு பாத்திரங்கள் : பாலா, வள்ளி ஒளியமைப்பு : 2 ஒலியமைப்பு : 2 (பாலா வீட்டினுள் வருகின்றான்)
Ug) அம்மா. அம்மா.
வள்ளி என்ன பாலா. ஏன் நடக்கேலாம நடந்து வார.?
TG)T தமிழ் பயிற்சி புத்தகம் வாங்கிட்டு வரலைனுவாத்தி வெளியிலியே
நிப்பாட்டி வெச்சிட்டாரு. கால் கடுத் திட்டம்மா. நாளைக்கு புத்தகம் இல்லாம பாடசாலை பக்கம் போக ஏலாது. இன்டைக்கு எப்படியாவது வாங்கிதர பாரம்மா.
வள்ளி ! இப்போ காசு இல்லைடா. கையில.
uffG).T ! என்னம்மா செய்யிரது. யாரிட்டையும் கடனா கேட்ட பாரம்மா.
பிறகு கொடுத்திடலாம்
வள்ளி 1 யாரிட்டதான் கேட்கிறது. ஆ மாமாகிட்ட கொஞ்சம் காசு கேட்டு
LJfrÚLJLoff..?
JTG) மாமா தருவாறாம்மா.
வள்ளி ! தங்கச்சிக்குனா தராமலாவிட்டிடுவாரு.? கட்டாயம் தருவாரு.
நான் இப்பவே போயிட்டு வாரன் நீ வீட்டில இரு.
TG) சரியம்மா.
(வள்ளி, அண்ணன் மாணிக்கம் வீட்டிற்கு செல்கின்றாள்)
காட்சி: 3
இடம் மாணிக்கத்தின் வீடு பாத்திரங்கள் : மாணிக்கம், வள்ளி ஒலியமைப்பு: 2 ஒளியமைப்பு: 4
மாணிக்கம் யாரது வள்ளியா..? வா உள்ள வா, என்ன நீண்ட நாளைக்குப்
பிறகு இந்தப்பக்கமா காத்து வீசுது வள்ளி ! உங்களை பார்த்திட்டு போகலாம்னு தான் வந்தன். எப்படி
அண்ணா இருக்கீங்க..?

Page 80
130
மாணிக்கம்
வள்ளி
மாணிக்கம்
வள்ளி
மாணிக்கம்
வள்ளி
மாணிக்கம்
வள்ளி
மாணிக்கம்
நகல்
நா. நல்லா இருக்கன். நீ எப்படி இருக்கா..? உன் புள்ள
எப்படியிருக்கின்றான்.?
ஏதோ. எங்க வண்டியும் ஓடுது. பாலாவுக்காக உங்ககிட்ட ஒரு
உதவி கேட்க வர்றன் அண்ண.
உதவியா..? (முகம் மாறுகிறது) புள்ளைக்கு வேல கீல
வேணுமா?
வேலையெல்லாம் வேணாம்னா.பாலாவுக்கு படிப்பு செலவுக்கு
பணம் போதாது. அதான்.
அதுதானே பார்த்தன் வராத மனுசி எங்க வீட்டுப் பக்கம்
வந்திருக்காளேனு. படிச்சி என்ன செய்யப் போறான். என்னோட வயல்ல வேலை செய்ய ஆளில்லை அவனை கொண்டாந்து விடு. வேலையும் பழகின மாதிரி இருக்கும். சம்பளமும் கிடைச்ச மாதிரி இருக்கும்.
இல்லண்ணா, அவன் டாக்டருக்கு படிக்க ஆசை படுறான், அ.
தான்.
ஒரு வேளை சாப்பாட்டுக்கே வழியில்லாத நாயள் டாக்டருக்கு
படிக்க போகுதுகளாம்.
(ஆவேசமாக) அண்ணா வார்த்தையை அளந்து பேசுங்க அவர்
இருக்கும் போது நாங்களும் வசதியா தான் இருந்தம். இப்ப தான் இப்படி கஸ்டப்படுறம். உங்களால பணம் தர ஏலாதுனா ஏலாதென சொல்லுங்க. அதுக்காக வாய்க்கு வந்தபடி பேசாதீங்க.
! என்ன்ன.டி வாய் நீளுது ரோட்டுல போற பிச்சைக்கார நாய்கள
வீட்டுக்குள்ள உட்கார வைச்சி பேசினா இப்படித்தான் நம்பகிட்டேயே குரைக்கத் தொடங்கும். முதல்ல வெளியே போடி,
போறன், போறன், ரத்தபாசம்னு உன்கிட்ட உதவி கேட்டு வந்தது
என்னோட மடத்தனம். இப்ப சொல்றேன். ஞாபகத்தில வச்சிருக்க இப்படி இக்கட்டான சூழ்நிலை உனக்கு வரக்குள்ள நீ என்கிட்ட தான் வரணும் அத மறந்திடாத,
அப்படி சூழ்நிலை எனக்கு வராது. நான் என்னைக்குமே
பணக்காரன் தான். நீ முதல்ல வெளிய போ.
போறதுக்கு முன்னாடி ஒன்னு சொல்லுறன். யானைக்கொரு
காலம் வந்தா பூனைக்கொரு காலம் வராமலா போகும். என் பிள்ளைய டாக்டராக்கி காட்டுறன். இது சத்தியம் (மிக மிக மனவேதனையுடன் வள்ளி விருட்டென வெளியேறல்).

TG)
வள்ளி
UTC)
வள்ளி
LjТОТ
வள்ளி
LTGT
皂&T
வள்ளி
8T
வள்ளி
இடம்
உறவுகள் 131
காட்சி : 4
பாலாவின் வீடு
பாத்திரங்கள் : பாலா, வள்ளி, பூஜா
ஒளியமைப்பு : 2
இடம்
! என்னம்மா ஏன் ஒரு மாதிரியா வாlங்க.?
என்னத்தடா நான் சொல்ல. மாமா உதவிசெய்ய மாட்டேன்டாருடா
அங்க பெரிய ரணகளமே நடந்திட்டு நமக்கும். இறைவன் இருக்காரு. அவர் பாத்துக்குவார்.
ஏம்மா ஏதாவது பிரச்சனையாகிட்டா. மாமா ஏசிட்டாரா?
ஆமா பாலா சரி அத விடு உன்னை டாக்டராக்கிதம் விட்டிட்டு
வந்திட்டன்.
: நாம முயற்சி செய்வம் அம்மா நமக்குன்னு ஒரு வழி இல்லாமலா
போகும்.
நாளைக்குத்தான் தோட்டத்திலே சம்பளம் கொடுப்பாங்க.
எப்பிடியும் நாளைக்கு தான் உனக்கு புத்தகம் வாங்க காசு தாமுடியும்.
சரிம்மா எனக்கு அடியும் பேச்சும் என்ன புதுசா? எல்லாம்
பழகுனது தானே நாளைக்கும் புத்தகம் இல்லாமல் தான் பள்ளிக்குப் போகணும் (முகத்திலை ஏக்கம்)
அம்மா பசிக்குதம்மா இரவிலிருந்து சாப்பிடலம்மா என்னடா செய்யிறது. அரிசியும் இல்ல ஏதாவது பாப்பம்.
அண்ணாவும் சாப்பிடாம களைச்சி வாரான்.நீங்களும் இப்பதான்
வெளியிலே போயிட்டு வந்திருக்கீங்க
: நம்மள கடவுள் இப்படி சோதிக்கிறாரே!.
asmré: 5
LLs)G)
பாத்திரங்கள் : பாலா, ஆசிரியர், அதிபர்
ஒலியமைப்பு: 1
ஒளியமைப்பு: 1
ஆசிரியர்
Ts)
டேய் பாலா. பயிற்சி புத்தகம் இன்னைக்காவது வாங்கிட்ட
வந்தியா..?
(பயந்து பயந்து) இ.ல் இல்ல ஐயா! நாளைக்கு

Page 81
132
ஆசிரியர்
அதிபர் ஆசிரியர்
அதிபர்
TG)
அதிபர்
LTGOff
அதிபர்
UTG).
அதிபர்
நகல்
(சொல்ல முன்பே) என்னடா. இழுவை இப்படியே ஆறு மாசத்தக் கடத்திட்ட இனி உன்னை வகுப்பில வச்சிருக்க ஏலாது இன்னைக்கு உன்னை அதிபருட்ட கொண்டு போய் விட்டு அவர் கையால பூஜை போட்டாத்தான் சரி (பாலாவுடன் ஆசிரியர் அதிபர் அறைக்குச் செல்கிறார்)
வாங்க சார் என்ன பையனோடை வாரீங்க..?
ஆறு மாதமா புத்தகம் இல்லாம வாறான். பாதி பாடமும்
முடிஞ்சிட்டு. நாளைக்கு நாளைக்குன்னு என்ன பேய்க் காட் டுறான். நீங்க தான் இவன கவனிக்க வேணும். (ஆசிரியர் வெளியேறுகிறார்)
: இங்க வா தம்பி நான் உன்ன அடிக்க மாட்டன். பக்கத்தில
பயப்படாம வா (பாலா அருகில் வரல்) என்ன பிரச்சனை உனக்கு நீதானே வகுப்பில முதலாம் பிள்ளையாய் வாறனி. ஏன் புத்தகம் வாங்கல. என்ன பிரச்சனையாயிருந்தாலும் என்கிட்ட சொல்லு TIाgIा.
(அழுதுகொண்டு) தனது குடும்ப சூழ்நிலையையும், கஸ்டத்தையும்
கூறிவிட்டு தான் வைத்தியராக வர வேண்டும் என்ற தன் இலட்சியத்தையும் கூறினான் (ஒருகணம் சிந்தித்து விட்டு) சரி இனி நீ கவலைப்படாத, உன் படிப்பு இனி என் கையில இந்தா இந்த பணத்த வச்சி நாளைக்கு புத்தகம் வாங்கு சரியா.
ரொம்ப நன்றி ஐயா (நன்றியுடன்) இனி என்ன உதவி வேணும்னாலும் தயங்காம என்கிட்ட கேளு
இவ்வளவு கஸ்டத்திலையும் நீ முயற்சியோடு படிக்கிறதாலை உனக்கு சிறந்த பலன் உண்டு. நீ கட்டாயம் வைத்தியரா வருவ அது வரைக்கும் உன் படிப்புச் செலவ நான் ஏற்குறன்.
ரொம்ப நன்றி ஐயா!. உங்கள என் வாழ்க்கையில என்றென்றும்
மறக்க மாட்டன்.
சரி இப்ப வகுப்பிற்குப் போய் நல்லாப் படி

இடம்
உறவுகள் 133
snú láA: 6
மாணிக்கத்தின் வீடு
பாத்திரங்கள் : மாணிக்கம், ராசம்
ஒலியமைப்பு : 2
ஒளியமைப்பு: 2
(பத்து வருடங்களின் பின்பு)
மாணிக்கம்
ராசம்
மாணிக்கம்
DJIT&-Lib
மாணிக்கம்
ராசம்
மாணிக்கம்
JT8-Lib
மாணிக்கம்
Մrgւb
மாணிக்கம்
ராசம்
மாணிக்கம்
(இருமுதல்) க்கூ. க்கூ. க்கூ. க்கூ.
என்னங்க ரொம்ப ஏலாம இருக்குதா..? ஆமா ராசம். நெஞ்சு வலியாயிருக்குது. இருமலோட வாயால
ரெத்தமும் வருது.
எல்லா டாக்டரிட்டையும் காட்டியாச்சு எந்த பயனுமில்ல என்ன
தான் செய்யிறது.
எனக்கு மட்டும் ஏன் தான் இப்படியொரு நோயோ? வேற எதுக்கு. நல்லாயிருக்கக்குள்ள உதவி கேட்டு வந்தவங்களுக்கு
ஒரு உதவியும் செய்யாம உதாசீனப்படுத்தினீங்க தங்கச்சி வள்ளிய ஏசியே விரட்டிட்டிங்க. அந்த பாவமெல்லாம் எங்க போகும் இப்படி இந்த ரூபத்திலை தான் வந்து சேரும்.
ஆமா ராசம் பிறரின் கஸ்டத்தை தீர்க்காத பணம் எனக்கும்
உதவாமலே போட்டுது.
எல்லாம் நீங்க செய்த அக்கிரமத்துக்குத்தான்.
வைத்தியம் பார்க்க கூட கையில காசில்ல இருந்ததெல்லாம்
பாவி மகன் குடிச்சே அழிச்சிட்டான்
நடந்து முடிஞ்சதைப் பற்றி பேசி என்னாகப் போகுது இனி
நடக்கப் போறத பாப்பம். பக்கத்து வீட்டு விமலா சொன்னா நம்ம ஊர் பாடசாலைக்கு கொழும்பிலயிருந்து ஒரு வைத்தியர் வந்து தங்கியிருக்கிறாராம் நல்ல கெட்டிக்காரராம் போய்ப் பாருங்கோவன்.
என்னத்தை ராசம் பார்க்க எல்லா வைத்தியரிட்டையும் காட்டியாச்சி.
ஒன்னும் சரியாகல. காச தண்ணியா இறைச்சது தான் மிச்சம்
இருந்தாலும் இவருகிட்டயும் ஒருக்கா காட்டிப் பாருங்
கோவன்
என்னம்மோ நீ சொல்ற. போய் தான் பார்ப்பமே (பாடசாலைக்கு
வைத்தியரைப் பாக்கச் செல்லல்)

Page 82
134
இடம்
நகல்
காட்சி: 7
பாடசாலை பிரதான மண்டபம்
பாத்திரங்கள் : பாலா, மாணிக்கம் ,ரோசி
ஒலியமைப்பு : 2
ஒளியமைப்பு : 3
மாணிக்கம்
Ug
மாணிக்கம்
6)
மாணிக்கம்
test
மாணிக்கம்
(இருமுதல்) க்கூ. க்கூ. க்கூ. க்கூ. என்ன ஐயா என்ன வருத்தம்,?
என்னண்ணு தெரியல ஒரே இருமலோட. ரெத்தம் ரெத்தமா
பெருது.
: இது எவ்வளவு காலமா இருக்கு.?
ஒரு மூண்டு மாசமாயிருக்குது டொக்டர். வேறு வைத்தியரிட்டையும் காட்டினதா?
எல்லாத்துகிட்டயும் காட்டியாச்சு ஒரு பலனும் இல்ல.
(பாலா பரிசோதித்தல்)
Ug
மாணிக்கம்
fTGOT
மாணிக்கம்
UGOT
ரோசி
மாணிக்கம்
LG)
மாணிக்கம்
Ug)
மாணிக்கம்
! உங்களுக்கு பரிசோதனை செய்ததிலை உங்களுக்கு காசநோய்
இருக்கிறதாய்த் தெரியுது.
காச நோயா..?
பயப்படாதீங்க ஐயா. இப்பதான் ஆரம்பம். சீக்கிரம் சுகமாக்
கிடலாம். ஆனா ஒண்டு . இந்த ஊரில அதற்குரிய மருந்துகள் இல்ல அதனால கொழும்புக்குத் தான் போகணும். கொழும்பில என்னட்டையே நீங்கள் வைத்தியம் செய்யலாம்.
கொழும்பில எப்ப டாக்டர் மருந்து வாங்கலாம்.
எப்ப வேணும்னாலும் வாங்கிக்கலாம் அது உங்கட வசதியப்
பொறுத்தது இப்ப மருந்த எழுதித் தாறன் அதைக் குடியுங்க சரியா. நேர்ஸ் இந்த மருந்தைக் குடுங்க சரி டாக்டர் வாங்க ஐயா. உங்க முழுப் பெயரைச் சொல்லுங்க 8ցաT.
மாணிக்கம் அப்பாத்துரை.
(திடுக்கிட்டு . எழுந்து சென்று) என்ன மாணிக்கமா..! உங்க மனைவி பெயர்.?
ராசம் ஏன் டொக்டர் கேட்கிறீங்க
உங்களுக்கு தங்கையிருக்காவா!. அவங்க பெயர் என்ன..?
வள்ளி.

LTG)
மாணிக்கம்
LJ TG)
மாணிக்கம்
LjTGDfT
மாணிக்கம்
UU TOT
உறவுகள் 135
என்ன வள்ளியா..?
ஆமாம் டொக்டர் வள்ளினு ஒரு தங்கை இருந்தா அவளும்
அவள்ட பிள்ளையும் இப்ப எங்க எப்பிடியிருக்காங்களோ மாமா நான் தான் பாலா உங்க தங்கச்சி வள்ளியோட மகன். (கண்ணீருடன்) நீ.நீ.நீங்க.நீ. பாலாவா..? பாலா உன் முகத்தைப் பாக்கவே. நான் அருகதை இல்லாதவன். உங்கம்மாவுக்குச் செய்த துரோகத்துக்கு தான் இப்பிடி நான் கஸ்டப்படுறன் என்ன மன்னிச்சிடு பாலா. மன்னிச்சிடு
ஏன் மாமா..! பெரிய வார்த்தையெல்லாம் பேசுறீங்க. நீங்க
என்னோட இப்பவே கொழும்புக்கு கிளம்புங்க காசு பற்றி யோசிக்காதீங்க
அன்று உங்கம்மாவை ஏசி அனுப்பினன். இன்று நீ எனக்கு
உதவுறியே. இப்பதாம்பா உறவுகளின் வலிமை எவ்வளவு பெரிதன்னு புரியது
எங்கம்மா பார்த்தா சந்தோசப்படுவாங்க அத்தையையும் கூட்டிட்டு
போவம்.
(மாணிக்கத்தின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வடிகின்றது)
திரைக்குப்பின்னால்.
பின்குறிப்பு
மேடை
ஆறறிவுடன் பகுத்தறிவு கொண்டு மானுடராய்ப் பிறந்தவர்க்கெல்லாம் உறவுகள் எனும் ஆயுதம் வேண்டுமடி செல்லமே என் செல்லமே
நாடகம் மேடையேற்றப்படும் போது ஒவ்வொரு காட்சியின்
போதும் விசேட விளக்குகள் மூலம் திரைக்கு ஒளிபாய்ச்ச வேண்டும் ஏனெனில் ஒரே மேடையில் பாலாவின் வீடு, பாடசாலை, மாணிக்கத்தின் வீடு, என்பன ஒழுங்கமைக்கப்பட்டு இருப்பதனால் ஒளி பாய்ச்சுவதன் மூலமே நாடகத்தின் களத்தினை இலகுவாக பார்வையாளர்களுக்கு அடையாளம் காட்ட முடியும்.
வ.மே ம.மே. இ. மே
6) I.LfD LD. LD. 9). LD
வ.கீ ம.கீ. இ. கீ வ.மே, வ.ம, வ.கீ பகுதியானது வகுப்பறைக்குரிய ஒழுங்கமைப் பாகும். இங்கு வகுப்பறைக்குரிய தளபாடங்கள் வைத்தல் வேண்டும்.

Page 83
136
ஒளியமைப்பு :
ஒலியமைப்பு
நகல்
ம.மே, ம.ம, ம.கீ பகுதியானது பாலாவின் வீட்டுக்கான ஒழுங்கமைப்பாகும். இங்கு ஏழைக்குரிய வீட்டுத் தளபாடங்கள் பொருத்தமாக வைத்தல் வேண்டும். இ.மே, இ.ம. இ.கீ பகுதியானது மாணிக்கத்தின் வீட்டுக்கான ஒழுங்கமைப்பாகும். இங்கு உயர் ரக வீட்டுத் தளபாடங்கள் பொருத்தமாக வைத்தல் வேண்டும். 1,2,3,4 என்பன வெவ்வேறு நிற ஒளி விளக்குகளாகும்.
1.காலை வேளையை சித்தரிக்கும் பிரகாசமான விளக்கு
2.மாலை நேரத்தினை சித்தரிக்கும் கடுமையான ஒளி
3.இனிமையான மஞ்சள் நிறத்திலான விளக்கு
4.கொடூரமான, பயங்கரத்தன்மையை எடுத்தியம்பும் செந்நிற ஒளி.
1.உடன் காலை நேரத்தின் பறவைகளின் ஒலிகள் ஒலிக்கப்பட
வேண்டும். 2.மாலை நேரத்திலே பறவைகளின் ஒலிகளுடன், வாகன ஒலியும் ஒலிக்கப்பட வேண்டும்.

இருளினை நீக்கி (சிறுவர் பா நாடகம்)
பிரதியாக்கம் திரு. எஸ்.ரி. குமரன்
பாத்திரங்கள்
1. கிழவன் 2. தந்தை 3. தாய் 4. மகள் - சுமதி 5. சாந்தன் - சுமதியின் காதலன் 6. வெளிநாட்டுக்காரர் 7. அரக்கர் 1
8. அரக்கர் 2
9. மக்கள்
10. இளைஞர்கள்
11. இயந்திரமனிதர்
(திரைவிலகும் போது வீட்டின் காட்சியைப் புலப்படுத்தும் பின்னணிக் காட்சி ஒன்று
காணப்படும். மேடையின் வலது மற்றும் பின், மத்திய பகுதியில் திண்ணை, குற்றி
போன்ற இருக்கைகள் காணப்படும். மேடையின் மத்திய பகுதியில் மூவர் உறை
நிலையில் விரும்பிய வடிவில் இருப்பர். கிழவன் வலது திண்ணையில் இருப்பார்.
இவ்வேளையில் பாடல் ஒலிக்கப்படும்.)
பாடல் உண்ணாமல் உறங்காமல் அலைகின்றோம் உறவினைக் கண்ணிரால் நனைக்கின்றோம் விளைகின்ற பொருள் எமக்கு உரிமையில்லை நாம் படுகின்ற துயரிற்கு முடிவேயில்லை (அவ்வேளையில் பாடல் முடிய அரக்கமனிதன் மேடையினுள் பிரவேசித்து ஆடுவான். அவ்வேளையில் மேடையில் நின்றவர்கள்

Page 84
138
அரக்கன் 1
அரக்கன் 2
அரக்கன் 1
அரக்கன் 1
கிழவன்
தந்தை
மகன்
தாய்
நகல்
நிலைதடுமாறிப் போவார்கள். அரக்கன் ஆடிய பின் உரையாடலை மேற்கொள்வான்).
நான் தான் சிறுவர்களைத் துஷ்பிரயோகம் செய்பவன் நான் தான் மது போதையின் அரக்கன் நான் தான் இளைஞர்களை தன்வசப்படுத்துபவன்
நான் தான் பெண்களைச் சீரழிப்பவன்
(உரையாடி விட்டு பின் மேடையில் அரக்கர்கள் வெளியேறுவார்கள். அரக்கர்களின் ஆடலின்போது நிலைதடுமாறியவர்கள் மீண்டும் உறைநிலைக்கு செல்வர். கிழவன் முன் மேடைக்கு வந்து உரையாடத் தொடங்குவார்)
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவியதும் இந்நாடே. அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து மடிந்ததும் இந்நாடே. இது எங்கட அழகிய பூமி. பண்பாடு கலாச்சாரத்தின் இருப்பிடம். எங்கட மூதாதையர் ஆண்டாண்டு காலமாக பேணிப்பாதுகாத்து வந்த கலாசார பூமி. இன்று நாகரிக மோகத்தால் சிக்கி சின்னா பின்னப்படுறம் இது ஆரால் வந்தது. இவையள் ஏன் பேயறைஞ்ச மாதிரி நிக்கினம். அதை நீங்களும் பாருங்கோவன். (உறைநிலையிலிருந்து விடுபட்டு) கடவுளே எங்கட இடம் எவ்வளவு மோசமாகிக் கொண்டு போகுது. இந்த சீரழிவிலை இருந்து தப்பிக்க வேணும் எண்டு என்ரை பிள்ளையையும் பிடிச்சு வெளிநாட்டுக்கு அனுப்பிப் போட்டன். அவன் என்ன கஷ்டப் படுகிறானோ தெரியாது. (மீண்டும் உறைநிலைக்குச் செல்லுதல்) (உறைநிலையிலிருந்து விடுபட்டு) அம்மா அப்பா எங்களை எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்தினம். நானும் அம்மான்ரை சொல்லைக் கேட்டு ஒழுங்காய்ப் படிச்சிருந்தனெண்டால் நானும் உயர் நிலைக்கு வந்திருப்பன் நான் படிக்க வேண்டிய வயசிலை படிப்பை விட்டிட்டு காதல் எண்டு என்ரை வாழ்க்கையை பாழாக்கிப்போட்டன் இப்ப என்ரை வாழ்க்கையே சூனியமாய்ப் போச்சுது. . (மீண்டும் உறைநிலைக்குச் செல்லுதல்) (உறைநிலையிலிருந்து விடுபட்டு) கடவுளே எங்கட ஊர் எவ்வளவு அழகாய் இருந்தது. எங்கட மூதாதையர் எவ்வளவு சந்தோசமாயும் ஒழுக்கத்தோடையும் கட்டுக்கோப்போடையும் இருந்தவை. இப்ப இந்த நாகரிக மோகத்திலை சிக்கி சின்னா பின்னப்பட்டு சீரழிஞ்சுபோகுது. இந்த சீரழிவுக்குப் பயந்து என்ரை பிள்ளையை வெளிநாட்டுக்கு அனுப்பிவைச்சன். அவன்

கிழவன்
வெளிநாட்டவர்.
கிழவன்
வெளிநாட் கிழவன்
வெளிநாட்
கிழவன்
வெளிநாட்
தாய்
இருளினை நீக்கி 139
இப்ப இடைநடுவிலை பிடிபட்டு சிறைக்குள்ளை வாடுறான். பிள்ளை போய் எந்தத் தொடர்பையும் காணேலை. (மீண்டும் உறைநிலைக்குச் செல்லுதல்) பாவம் இதுகள் . என்ன செய்யிறது. எல்லாம் மாறிட்டுதே. இதுக்கிள்ளை எப்படித்தான் வாழுறது. (வெளிநாட்டில் இருந்து ஒருவர் நீண்ட காலத்தின் பின் தாய்நாட்டிற்கு வருகிறார். இவர் முன் வலது மேடையினால் அரங்கிற்குள் பிரவேசிக்கிறார்) என்ரை மண்ணுக்கு நீண்ட நாளைக்குப் பிறகு வாறன். என்ரை மண்ணைப் பாக்கப் போறன். எங்கடை பண்பாடு எவ்வளவு உயர்ந்தது. எங்கடை மூதாதையர் கட்டிக்காத்த பொக்கிஷம். முன்னம் எங்கட ஊர் உறவுகள் சந்தோசமாய் இருந்தம். எங்கட விதி. எங்கள தூரதேசத்துக்கு அனுப்பி வைச்சுது வெளிநாடு வெளிநாடு எண்டு ஓடினம். எங்கட மண்வாசனையைப் போலை வருமே. அங்கத்தை இயந்திர வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையே. எங்கட மண்வாசனையோடை வாழப்போறன். 30 வருசத்துக்குப் பிறகு வாறன். எல்லாம் மாறிட்டுது ஓம் தம்பி. புதுசுபோல கிடக்கு. எல்லாம் மாறீட்டு ஆக்களும் மாறீட்டினம் எல்லாம் சுத்திச் சுத்திச் சுப்பற்றை கொல்லையாய்க் கிடக்கு.
எங்கட கலாசாரம், பண்பாடு உயர்ந்ததெல்லோ. ஒம். ஓம். அதெல்லாம் அந்தக்காலம். எல்லாம் நீர் போகப் போகப் பாருமன். (உறைநிலையில் உள்ள மூவரையும் பார்த்து) உவையள் ஆர் உவை ஏன் இப்படி இருக்கினம். உவைதான் சமூகத்தின் குறிகாட்டிகள் நாகரிக மோகத்தின்ர சீரழிவுக்கு பயந்து வாழ்க்கையை தொலைச்சிட்டு நிக்கினம். உவையளுக்கு என்ன நடந்தது. (அவ்வேளையில் உறைநிலையில் இருந்த தாய் விடுபட்டு உரையாடலை மேற்கொள்ளல்) எங்கட சமூகத்திலுள்ள மது அரக்கனுக்கும் போதை அரக்க னுக்கும் நாகரிக மோகத்தின் விளைவுகளுக்கும் பயந்து என்ரை பிள்ளையை சீரழிவில் இருந்து பாதுகாக்க வெளிநாட்டுக்கு அனுப்பிவைச்சன் இண்டைக்கு என்ர பிள்ளை இடைநடுவிலை நிக்குது இந்த சீரழிவெல்லாம் ஆரால வந்தது. (அவ்வேளையில் வலை ஒன்றிணைப் பிடித்தபடி இருவர் சமுதாயச் சீரழிவை ஏற்படுத்தும் தோரணையுடன் அரங்கிற்குள்

Page 85
140
பாடல்
தாய்
தந்தை
மகள்
கிழவன்
p85GT
கிழவன்
LD56T
சுமதி(மகள்)
சாந்தன்
நகல்
பிரவேசிப்பர். வலைக்குள் இருந்து சீரழிவிற்குரிய பொருட்களை தூக்கி வீசுவர். அவர்களுக்குப் பின்னால் மக்கள் கூட்டம் செல்லும். அவ்வேளையில் பின்வரும் பாடலுக்கு ஏற்ப அசைவர்)
டகு டகு டகு டகு டட்டா
நாங்கள் தான் உங்களின் நண்பன் உங்களின் சாகசங்களில் எங்களின் மகிழ்ச்சி வாரீர் வாரீர் மக்களே வாரீர்
டகு டகு டகு டகு டட்டா (சந்தோஷத்துடன் வலைபிடித்த இருவரும் செல்ல மக்கள் சீரழிவு மயக்கத்தில் தள்ளாடியபடியே அரங்கை விட்டு வெளியேறும் அவ்வேளையில்) உதுகளுக்கு பயந்துதான் நான் என்ர ஒரே பிள்ளையை என்ர கண்முன்ன என்ரை நாட்டிலை வைச்சிருக்காமல் கண்காணாத தேசத்துக்கு அனுப்பி வைச்சன். அவன் போய் எங்களையும் கூப்பிடுவான் எண்டு எங்கடை சொத்தை அடகு வைச்சு அவனை அனுப்பினது. அவன் போய் 6 மாத காலமாகுது. கடவுளே என்ன செய்யிறது என்ரை பிள்ளையை அனுப்பிப் போட்டன். இவளும் ஒருத் தியாய் பிறந்திட்டாள். . பொம்பிளையாய் பிறந்த பாவத்தை அனுபவிக்கிறாள்
பாருங். எங்கட சமூகத்தை ஓம்.ஓம். எங்கட இளம் சமுதாயத்தைப் பாருங்கோவன். (அவ்வேளையில் இளைஞர்கள் போன் உரையாடல் வீதியில் அங்க சேட்டை, வீண்பொழுது கழித்தல் என்னும் செயற்பாடு களில் ஈடுபடுவார்கள்) இதுகளை ஆர்தான் கட்டுப்படுத்துகிறது. இதுகளாலைதான் எங்கட வாழ்க்கை சீரழியுது. பாவம். பெண்ணாய்ப் பிறந்திட்டம். (இளைஞர்களின் அட்டகாசத்தைப் பார்த்து விட்டு) பாருங்கோவன் பள்ளிக்கூடம் போகவேண்டிய நேரத்திலை என்ன செய்யுதுகள். இப்ப இளசுகள் எல்லாம் விண்வெளியிலை பறக்கிறம் எண்ட ஏதோ கற்பனை பண்ணிக் கொண்டு திரியுதுகள். என்னையும் ஒருவன் நம்ப வைச்சு ஏமாத்திப் போட்டான் (அவ் வேளையில் அவள் பழைய நினைவுக்கு வந்து)
என்ன சாந்தன் என்ன விசயம்?
எனக்கு வீட்டிலை வேறை கலியாணம் பேச வெளிக்கிட்டினம்.

சுமதி
சாந்தன்
சுமதி
சாந்தன்
சுமதி
தாய்
தந்தை
கிழவன்
வெளிநாட்
பாடல்
வெளிநாட்
இருளினை நீக்கி 141
நீங்கள் எங்கடை விசயத்தை வீட்டிலை சொல்ல வேண்டியது தானே இப்ப கலியாணத்திலை முக்கிய விசயம் சீதனம் தான். நான் இஞ்சினியர். எப்பிடியும் 40, 50 இலட்சம் வேண்டலாம். அப்ப நீங்கள் காசைப் பார்க்கிறியளே எங்கடை கஷ்டம் தெரியும் தானே இப்ப காசு தான் முக்கியம். நீ எல்லாத்தையும் மறந்திடு (வெளியேறுதல்)
(மகள் மீண்டும் நினைவுக்கு வந்தவளாய்) எல்லாத்தையும் மறந்திடு எண்டால். இனி என்ன செய்யுறது கடவுளே.
(மகளைத் தேற்றியபடி) அழாதை பிள்ளை. அழாதை இப்ப நல்லதுக்குக் காலமில்லை எங்களுக்கு மட்டும் ஏன் இந்தத் துன்பம் என்ரை பிள்ளையாலை துன்பப்பட வேண்டியதாய்க் கிடக்கு (வெளிநாட்டுக் காரரைப் பார்த்து) இது தான் இவையளின்ரை கதை. இப்ப இஞ்சை இருக்கிறதை விட்டிட்டு வெளிநாடு போனால் சந்தோசமாக வாழலாம் எண்டுதான் எல்லாரும் போகினம்
வெளிநாட்டு வாழ்க்கை வெறுத்துப்போய்த்தான் இங்கு வாறன். அங்கத்தைய வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையே. இயந்திரமாய் வாழுறம். (அவ்வேளையில் இயந்திரமனிதர்கள் போல் இருவர் நடந்தபடி வேலை செய்வர் அவ்வேளை பணம் என்று எழுதப்பட்ட மனிதர் ஒருவர் பணத்தின் மீதி ஆசையை ஏற்படுத்துவார். அவருக்கு பின்னால் இயந்திர மனிதர்கள் செயற்படுவார்கள். அவ்வேளையில் பாடலுக்கு ஏற்ப செயலில் ஈடுபடுவர்)
பணம் பணம் பணம் இது தான்
எங்களின் மனம்
ஒய்வின்றி நித்தமும் உழைப்போம் இதுதான் எங்களின் வாழ்வின் இலட்சியம் எங்களுக்கு ஒய்வென்றதில்லை
பணம் பணம்பணம்
(பணமனிதனும் இயந்திரமனிதர்களும் பாடல் முடிய அரங்கை விட்டு வெளியேறுவர்)
இந்த இயந்திரவாழ்க்கை பிடிக்காமல்தான் என்ரை மண்ணுக்கு வாறன்.

Page 86
142
கிழவன்
பாடல்
நகல்
எங்கடை மண்வாசனை. பண்பாடு முந்தி எவ்வளவு உயர்வாய் இருந்தது. (பழைய நினைவுகளை வெளிநாட்டவருக்கு மீட்டுக் கூறுவர். அவ்வேளையில் கிழவன் வெளிநாட்டவர் அசைவற்று மேடையின் இடது முன்மூலையில் நிற்க பாடலுக்கேற்ப சம்பவங்கள் நகரும்.)
ஏலேலோ ஏல ஏலோ
ஏலேலோ ஏல ஏலோ ஆழமில்லை கடலினிலே
அலையுமில்லை ஏலேலோ அள்ளிவலை வீசி நாங்கள் ஆனந்தமாய் போய்வருவோம்
(மேடையில் கடற்கரைக் காட்சி இடம் பெறுகிறது பின்னணிக்குரல்கள் ஒலிக்கின்றன.
இக்காட்சியைத் தொடர்ந்து விவசாயக்காட்சி இடம் பெறும்)
நபர் 1 நபர் 2
இந்தமுறையும் நல்ல விளைச்சல் கிடைக்க வேணும் : இளையவளுக்கு சங்கிலி வாங்கிக் கொடுக்கோனும்
(இக்காட்சிமுடிய சிறுவர்கள் ஒற்றுமையாக விளையாடுவர். பெரியவர்கள் ஒருவருக்கொருவர் உதவியுடன் செயலில் ஈடுபடுவர். இக்காட்சி நிறைவடைய கிழவன் மீண்டும் நினைவுக்கு வந்து)
கிழவன்
வெளிநாட்
தந்தை
அரக்கர்கள்
தந்தை
Losoft
தாய்
கிழவன்
எல்லோரும்
எல்லாம் போச்சுது இப்ப எல்லாமே மாறிட்டுது இந்த சீரழிவுக்குள்ள
வாழப் பொறுக்காமல் ஊரைவிட்டுப் போகுதுகள். மீண்டும் எங்களோடை பழமைகள் கிடையாதோ இது என்ன துன்பம் எங்கடசமுதாயம் நாகரிக மோகத்தால சிக்கி சின்னாபின்னப்படுகுதே நாங்கள் எங்கடை எல்லாத்தையும் தொலைச்சிட்டம் (அவ்வேளை அரக்கர்கள் அரங்கினுட் பிரவேசித்து அட்டகாசம் செய்து மேடையில் உள்ளவர்களை நிலைகுலையச் செய்வார்கள்)
வென்று விட்டோம் நாங்கள் வென்று விட்டோம். (ஆடியபின்
அரங்கைவிட்ட வெளியேறல். நிலைகுலைந்து மேடையில் விழுந்தவர்கள் மெல்ல எழுகின்றனர்)
இதுக்கு என்ன முடிவு.
நாங்கள் என்ன செய்யிறது
நாங்கள் இப்பிடியே இருந்தமெண்டால் எங்கட அடையாளத்தை
இழந்திடுவம்
இதுக்கு ஒரே வழிதான் கிடக்கு
என்னவழி

கிழவன்
வெளிநாட்
LD&GiT
தந்தை
வெளிநாட்
ஏல்லோரும்
பாடல்
இருளினை நீக்கி 143
எங்கட இடத்தை விட்டு வேறை இடத்துக்கு போகவேண்டியது தான்.
(கோபத்துடன்) நிறுத்துங்கோ புராதனம் பழமை எண்டு வாயளவிலை சொல்லிக் கொண்டு இந்தச் சமூகம் தொடர்ந்தும் இருளுக்கை இருக்கலாமா?. புலம் பெயர்வும் கலாசார சீரழிவும் எங்கள் அடையாளத்தை அழிக்க இடமளியோம் ஓம். எம்மைச் சூழ்ந்துள்ள இருளை அகற்றுவோம் எங்கடை அடையாளத்தோடைநாங்கள் வாழ நாகரிக மோகத்தில் இருந்து விடுபட வேண்டும். எங்கடை நாட்டிலை சந்தோசமாய் ஒற்றுமையாய் வாழவேண்டும் இதுக்கு நாங்கள் எங்கள் அடையாளத்தைக் கட்டி வளர்க்க வேண்டும்.
(கைகோர்த்தபடி) எங்களுடைய நாட்டில் எங்கட அடையாளத்
தோட நாம் அனைவரும் ஒற்றுமையாய் வாழ்வோம் இதற்காக சூழ்ந்துள்ள சீரழிவுப் பேய்களை ஒட்டுவோம். எல்லோரும் எழுந்து வாருங்கள்.
(தாய், தந்தை, மகள், கிழவன், வெளிநாட்டவர் ஒன்றாக
பாடல்)
தகதகிட தக தகிட தந்தோம்
தக தகிட தக தகிட தந்தோம் எங்களைச் சூழ்ந்துள்ள இருளினையே போக்கி எங்களை அழித்திடும் சீரழிவினை விரட்டிடுவோமே கலாசார சீரழிவு எனும் பேயினை விரட்டிடுவோம். இனி எம் துயர் நீங்கும். எம் மண்ணில் ஒன்றாய் ஒற்றுமையுடன் வாழ்வோம். ( பாடல் முடிய மேடையில் எல்லோரும் விடியலை நோக்கிய வண்ணம் ஒரு நிலையில் நிற்பார்கள். அவ்வேளையில் பின்னணியில் மீளவும் பாடல் ஒலிக்கும். மெல்லத் திரை மூடுகிறது)
. சுபம்.

Page 87
தேனி
பிரதியாக்கம் செல்வி ராமச்சந்திரன் ராதிகா
பாத்திரங்கள்
1. ராமு 2. JGS 3. ராமச்சந்திரன் - ராமுவின் அப்பா 4. கணேசன் - ரவியின் அப்பா 5. கந்தையன் - காட்டிற்குப் பொறுப்பாளன் 6. ராஜா - ராஜா தேனி 7. குமாரி - ராணித் தேனீ 8. விஸ்வா - தேனீ 1 9. ருபன் - ஆசிரியர் 10. சரோஜினி - ரோஜாமலர் 11. பிரியா - மல்லிகைமலர்
12. கமல்
காட்சி: 1
(காடு அருகிலிருப்பது போன்று மரங்கள் ஆறுகள் என்பன கொண்ட பின்னணி)
ரவி ஏண்டா ராமு க.பொ.த. பரீட்சை முடிந்தவுடன் ஏதாவது பிரயோச
னமா செய்வமா..?
ராமு (யோசனையில் இருந்துவிடுபட்டு) என்னரவி சொன்னா.
சொன்னது விளங்கல்ல.
Jes ஐயோ..! முன்னாலபோறவருக்கும் விளங்கி திரும்பிபார்த்து விட்டுபோறாரு. உனக்கு விளங்கலனுசொல்லுற. என்னடா யோசனை
 

ராமு
ரவி
"JNGyp
ரவி
ராமு
ரவி
ராமு
தேனி 145
இல்லடா. அங்கப்பாரு. நம்ம அப்பா இருவரும் தேன் எடுக்கக் காட்டுக்குப் போறாங்க. ஆமாண்டா. அப்ப இன்னைக்கு நல்ல தேன் வேட்டை இருக்கு. நீ தேன் சாப்பிடுவையா..?
1 யாருக்குடா தேன் மேல ஆசை இல்ல. அப்பா கொண்டு வந்தா
தேன் ராட்டோட சாப்பிடுவே. ஒருநாள் அப்பிடித்தான் நானும் ராட்டோட சாப்பிட்டு ஒரு தேனி இருந்து என் நாக்குலையே கொத்திடுச்சி. (கவலையுடன்)
(சிரித்தபடி) அதுதாண்டா பெரியவுங்க"பேராசை பெருநஸ்டம்”
என்று சொல்லுவாங்க.
சரி அதவிடுடா. இருவரும் காட்டிற்குச் சென்று தேனீக்கள் தேனை
எவ்வாறு சேகரிக்கின்றன என்று ஆய்வு செய்வமா
ஆ! நல்லயோசனை சொன்னடா. அப்படினா நம்ம அப்பா
இருவரையும் சந்திச்சி பேசுவோம்.
அதற்குமுன்னால் நம்ம ஆசிரியரைக் கண்டு ஆலோசனை
பெறவேண்டும்.
காட்சி: 2
(இருவரும் பாடசாலையில் ஆசிரியரைச் சந்திக்கின்றனர். ஆசிரியரை நோக்கி காலைவணக்கம் கூறியபடி)
ஆசிரியர்
JTCup
ரவி
ஆசிரியர்
ரவி
ஆசிரியர்
வாங்க என்ன விடயம்.? என்னால எதுவும் உதவி வேண்டுமா..?
ஆமாம் சேர! நாங்க இருவரும் சேர்ந்து ஒரு ஆய்வு செய்ய
முடிவுசெய்துள்ளோம். அதாவது தேனீக்கள் எவ்வாறு தேனீனைச் சேகரிக்கிறது என்பதுதான்
(ஆசிரியரின் முகம் மாறுகிறது) ஆமாம் சேர். நீங்க எப்படியும் இதுக்கு உதவுவீங்கனு நம்புறம் ($8Fiji.
உங்க இருவரது துணிச்சலைக் கண்டுமகிழ்கிறேன். அதுமிகவும்
ஆபத்தானகாரியம். நீங்கள் இருவரும் ஏற்கனவே பாம்பு பற்றியே ஆய்வுசெய்தவர்களில்லையா..? அதனால் பயம் இல்ல. ஆனால் உங்களுடைய பெற்றோர் சம்மதிப்பார்களா..? அவர்களிடம் கொஞ்சம் எடுத்துச் சொன்னா புரிஞ்சி சம்மதிப்பார்கள்.
சரி. நீங்க இருவருடைய அப்பாவினையும் காட்டிற்குப் பொறுப்பான
வெள்ளையனையும் எனது வீட்டிற்கு அழைத்துவாருங்கள். (இருவரும் விடைபெற்றுச் செல்லுதல்)

Page 88
146
நகல்
காட்சி: 3
(ரவி, ராமு இருவரும் தமது தந்தை மற்றும் வெள்ளையனுடன் ஆசிரியரை வீட்டில்
சந்திக்கின்றனர்)
ஆசிரியர்
வெள்ளையன் :
ஆசிரியர்
ராமச்சந்திரன்
கணேசன்
ஆசிரியர்
ராமச்சந்திரன்
கணேசன்
ஆசிரியர்
வெள்ளையன் :
ராமு
ரவி
வாருங்கள். வாருங்கள். அனைவரும் அமருங்கள்.
என்ன சேர் எங்களை வரச் சொன்னீர்களாமே..?
ஆமாம். சிறுவர்கள் துடிப்பானவர்கள். அவர்களை அவர்கள் போக்கிலவிட்டு பிழைசெய்தால் மட்டும் தண்டிக்கவேண்டும். இருவரும் நல்ல பண்புடையவர்கள். தைரியசாலிகள். அவர்கள் செய்யும் நல்ல காரியங்களுக்கு எம்மால் இயன்ற உதவியைச் செய்தால் தான் எதிர்காலத்தில் நல்ல பிரஜையாக வருவார்கள்.
: இதுவரைகாலமும் அதைதானே செய்துவருகிறம்.
ஏதும் திட்டம் வைத்துள்ளார்களா இருவரும். ஆமாம். கொஞ்சம் ஆபத்தானவிடயம். ஆனால் எதுவாக
இருப்பினும் அவர்களது சமயோசித புத்தியால் வென்றுவிடுவார்கள். இருவரும் தேனி எவ்வாறு தேனினைச் சேமிக்கின்றதென்பதைப் பற்றி தெளிவுபெற காட்டிற்குச் செல்கின்றார்கள். அதற்கு நீங்கள் உங்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
அதற்கென்ன சேர். நீங்களே கூறுகையில் நாங்கள் என்ன
சொல்லுவது.
சில ஆட்களுடன் அனுப்பி வைப்போம். தங்குவதற்கான வசதி
களைச் செய்துவிட்டு அவர்கள் வந்திடட்டும்.
(வெள்ளையனை நோக்கி) நீங்கள் ஏன் அமைதியாக
இருக்கின்றீர்கள். (கைகளைக் கட்டியபடி) இல்லை ஐயா!. பெரியவர்கள் நீங்களே கூறுகையில் நான் என்னதடை சொல்லப் போகிறேன்? வேண்டு மானால் நானும் இவர்களுக்கு உதவியாகச் சென்றிடவா..?
உங்கள் ஆதரவிற்கு நன்றி ஐயா!. ஆனால் நாங்கள் சென்று சில
நாட்கள் தங்கவேண்டும். ஆதலால் எங்களை காட்டிற்கு அழைத்துச் சென்று விட்டு விட்டு வந்தாலே போதுமானது. ஆமாம் ஐயா..! (ஆசிரியர் தேவையான அனைத்து விடயங்களையும் கூறினார். அனைவரும் விடைபெற்றுச் சென்றனர்)

தேனி 147
காட்சி: 4
(காடு. சில மாற்றங்களுடன் ரவி, ராமு இருவரும் தமது தந்தை மற்றும் வெள்ளையனுடன் தேவையான பொருட்களுடன் செல்கின்றனர். சரியான இடம் ஒன்றைத் தெரிவுசெய்து கூடாரம் அமைத்துக் கொடுத்துவிட்டு மூவரும் விடைபெறுகின்றனர்)
IJFTCup
ரவி
Uπαρ
ரவி
ரவி
ராமு
ரவி ராஜா தேனி ராணிதேனி
ராஜா தேனி
ராணிதேனி ராஜா தேனி ராணிதேனி
ராஜா தேனி
ரவி. நாம் தேன் கூடு உள்ள இடம் ஒன்றை தேடினோம் என்றால்
சரி.
ஆமாம் ராமு . ஏதோ ஒரு சத்தம் கேட்கின்றதே ஐயோ. சிக்கலில்
மாட்டிக் கொண்டோம். தேனீக்கூட்டம் ஒன்று கலைந்து வருகின்றது.
ரவி ஓடாதே அருகில் உள்ள குழியில் இறங்கு நானும் வருகின்
றேன்.
ராமு வா விரைவாக. சத்தமிடாமல் மெதுவாக வா
(ராமு, ரவி இருந்த குழியை அடைத்துவிட்டான். இன்னும் அவை இருவரையும் காணவில்லை. பையில் இருந்த வீடியோகெமரா வினை எடுத்து தேனீக்களை அவன் வீடியோசெய்தான்.)
. ராமு இங்கைபார் முன்னால் இரு தேனிகள் செல்ல மற்றவை
எல்லாம் பின்னால் வருகின்றது.
; அது இரண்டும் தான் ராஜா தேனீயும் ராணி தேனீயும்போல.
சந்தேகமில்லை. அவைதான்
ராணி நல்ல இடம் தேடு இதோ பாருங்கள். இங்கே பெரியமரமொன்று காணப்படுகின்றன.
மிகவும் நன்றாக இருக்குமல்லவா ராஜா..?
உனக்கு இவ்விடம் பிடித்திருந்தால் என்னால் மறுப்பேதும்
உண்டோ..? (இராணிதேனி வெட்கத்தில் தலைகுனிகின்றது. ராஜாதேனி ராணிதேனி காட்டிய மரத்தைச்சுற்றி பறந்து பார்க்கின்றது)
ராஜா என்ன கூறு பயப்படாமல் கூறு.
: இங்கே யாரோ மனிதர் இருப்பது போன்ற ஒரு உணர்வு
ஏற்படுகின்றது. எனக்கு பயமாக உள்ளது.
(கர்வமாக) உன்னை தேனி.என்று கூறுவதற்கே எனக்கு வெட்கமாக
உள்ளது. அந்த மனிதன்தான்நம்மைப் பார்த்து பயப்படவேண்டும். மனிதர்கள் அனைவரும் நன்றி கெட்டவர்கள்.

Page 89
148
ராணிதேனி
ராஜா தேனி
ராணிதேனி
ரவி
ராமு JGS)
மலர்கள்
தேனி1 ரோஜா
ரவி
நகல்
மன்னிக்கவும் ராஜா. மனிதர்கள் எல்லாம் கெட்டவர்கள்
அல்ல.
(கோபத்துடன்) ஏன் அவ்வாறு கூறுகின்றாய். அவர்கள் உனக்கு
என்ன செய்திருக்கிறார்கள்.? நம் கூட்டத்தைச் சிந்தித்து நாம் சேகரித்துவைக்கும் தேனையும் எடுத்துக் கொள்வர். அவர்கள் மீதா நீ இரக்கம் காட்டுகிறாய்.
அது பொய் என்று கூறவில்லை. ஆனால் ஒருசமயம் நான்
எனது தோழிகளுடன் அங்கிருந்த சிலந்திவலையில் சிக்கிக் கொண்டேன். என்ன செய்வதென்று தெரியாத வேளையில் இரு சிறுவர்கள் என்னைக் காப்பாற்றினார்கள். (ராஜா தலைகுனிந்து மெளனமாகிறார்) (குழியினுள் இருந்த இருவரும் இலேசாகத் தலையைத் தூக்கிப் பார்த்துக் கொண்டே இருந்தனர் - தேனீக்களும் கூடுகட்டும் வேலையை ஆரம்பித்தன.
காட்சி: 5
ராமு. ஒருவாரம் ஆகிவிட்டது. நாம் கொண்டு வந்த உணவுப்
பொருட்களும் தீர்ந்துவிட்டன. என்ன செய்வது.
ஒன்றும் கவலைப்படாதே! இதோ இந்தப் பழத்தை நீ சாப்பிடு. ராமு. அங்கேபார். தேனீக்கள் பறந்து எங்கோ செல்கின்றன.
(இருவரும் கமரா எடுத்துக் கொண்டு மறைவில் இருந்து பார்த்துக் கொண்டிருத்தல்) (தேனிக்களைப் பார்த்து மலர்கள்)
வாருங்கள். வாருங்கள் உங்களைத்தான் எதிர்பார்த்துக் கொண்
டிருக்கிறோம். நாங்கள் நேற்றே மலர்ந்து விட்டோம். இன்று நாங்கள் உதிர்ந்து விடுவோம் தேனை எடுத்துக் கொள்ளுங்கள்.
உதிர்வதையிட்டு நீங்கள் கவலையடைய வில்லையா..?
நாங்கள் ஏன் கவலையடைய வேண்டும். நாங்கள் மலர்கின்
றோம். தேன் தருகின்றோம். அழகாகக் காட்சியளிக்கின்றோம் இன்னும் பலவிடயங்கள் எங்களால் இவ்வுலகிற்கு நேர்கிற தல்லவா?
(பேசிக்கொண்டே மலர்கள் மீது தேனீக்கள் அமர்ந்து சென்றது. தேனீக்கள் கூட்டில் தேனை வைத்துவிட்டுப் பறந்து சென்றது.)
ராமு என்னால் முடியவில்லை. எனக்குப் பசிக்கிறது. நான்
அந்த தேனை எடுத்துச் சாப்பிடப் போறேன்.

JTCup
ரவி
y TCyp
ரவி
ராஜா தேனி
ராமு ராணிதேனீ
ராணிதேனி
ராஜா தேனி
ராணிதேனி ரவி
ராஜாதேனி
ரவி
JM (Up
தேனி 149
என்ன சொல்கிறாய். இத்தனை நாட்களும் நாம் செய்த வேலைக்கு
பயனில்லாமல் போய் விடுமே.
சரி.ராமு. இல்லை என்று சொல்லவில்லையே நாம் ஊருக்குப்
போகும் முன் எமது உயிர் நம்மிடம் இருக்க வேண்டுமே (யோசித்துக் கொண்டிருக்கிறான்)
ரவி. நீ குழியினுள் இறங்கிக் கொள் எல்லா தேனீக்களும்
சென்றுவிட்டன. நாம் தேனை எடுத்து விடுவோம்.
இல்லை வேண்டாம் ராமு. உள்ளே. ராஜா தேனி இருக்கும்
சொல்வதைக்கேள்
வாருங்கள். நமக்கு ஆபத்து வாருங்கள். அனைவரும் வாருங்கள்.
இவனை வந்து தாக்குங்கள்.
(அனைத்து தேனீக்களும் ராமு முகத்தில் அமர்ந்து முகத்தையே மூடிவிட்டன)
நான் கூறியதைக் கேட்காமல் இப்படிச் செய்து விட்டாயே.
ஏதோ நேர்ந்து விட்டது. (ரவி நின்று கொண்டிருப்பதைப் பார்த்து
விட்டது. ராமைத்தான் கொத்துகின்றது என்று தெரிந்ததும் உடனே)
நிறுத்துங்கள். அவனை விடுங்கள் ராஜா அவனைவிட்டுவிடச்
சொல்லுங்கள்.
அவனை விடுங்கள் இது என் கட்டளை. ராஜா இவர்கள்தான் என்னைக் காப்பாற்றியவர்கள்.
நான் தேன் எடுக்கவரவில்லை. உங்களது செயற்பாடுகளை
அவதானிக்க வந்தோம். இங்கு நாங்கள் கொண்டு வந்த பொருட்கள் தீர்ந்தன. பசியினால் தான் இவ்வாறு செய்தோம். மன்னித்து விடுங்கள்.
நீங்கள் இத்தேனை எடுத்துக் கொள்ளுங்கள். நாங்கள் வேறு
இடத்தில் கூட்டினைக் கட்டிக் கொள்கிறோம். (இருவரும் தேனை உண்டு அவர்களுக்கு நன்றி தெரிவித்து விட்டு, வீட்டிற்குச் சென்று நடந்தவற்றை எல்லாம் ஆசிரியரிடம் கூறி ஒரு கூட்டம் மூலம் தேனீக்களை கொல்வது பாவம் எனக்கூறி விளக்கினார்)
மனிதர்களை விடவும் தேனீக்களுக்கு நன்றி உணர்வு
உள்ளதல்லவா..?
ஆம் நாமும் அதனைக் கடைப்பிடிப்போம்.

Page 90
வரக்கூடாத வறுமை (விழவேயில்லை என்பதை விட விழுந்த போதெல்லாம் எழுந்தேன் என்பது மேல்)
பிரதியாக்கம்
திரு. கி. கிருஸ்ணபிரசாத்
பாத்திரங்கள்
1. அன்னம்மா தாய் 2. தர்மராசு தந்தை 5. 9JuT LD856it
4. முருகன் p8561 5. மூக்காயி பாட்டி 6. முனுசாமி பக்கத்து வீட்டுக்காரர் 7. சரசு பக்கத்து வீட்டுக்காரர்
காட்சி: 1
நேரம் மாலை 3.00 மணி வீட்டுத்தலைவி அன்னம்மா கொழுந்து மலையிலிருந்து வேலைமுடிந்து வீடு திரும்பிய பின் மகன் முருகன் அம்மாவுடன் வீட்டில் உரையாடல்) முருகன் அம்மா இந்த வருசமாவது பலகாரம் சுட்டுத் தருவியாம்மா!?. அன்னம்மா : தீவாளி அட்வான்ஸ் போட்டவுடன் கடயில போய் சாமான் வாங்கி அரிசி பலகாரம் சுட்டுத் தாரேண்டா. கவலைப்படாதடா LDGJCS60T
(அட்வான்ஸ் பணத்தை எடுத்து தவணை முறையில் வாங்கிய நாட்காவுக்கு கொடுக்க வேணும் என்பதை அறியாத அன்னம்மா அப்போது முருகனை சமாளிக்க இவ்வாறு கூறுகிறாள்) மனதுக்குள் யோசித்தல்
அன்னம்மா நாட்காளி சல்லி கட்டனுமே.
 

முருகன்
அன்னம்மா
முருகன்
96T60T bLDFT
முருகன்
வரக்கூடாத வறுமை 151
அம்மா புது உடுப்பும் வாங்கித் தாரியாம்மா. நாளைக்கு ஸ்கூல்ல
வெள்ளிவிழா கொண்டாட்றாங்க நா அதுக்கு சேந்துருக்கே டீச்சர் நேத்தும் அடிச்சாங்க. நாளைக்காவது சல்லி தருவியாம்மா!
போய் கோமதி அக்கா வீட்ல ரெண்டு சிண்டு லாமெண்ணயும்,
பட்ட கொச்சிக்கா கொஞ்சமும் அப்படியே வர்றப்ப அன்னக் கிளியக்கா வீட்லநா கேட்டேன்னு அரிசி மூனுசிண்டும் இல்லாட்டி ரெண்டு சிண்டாவது அம்மா கேட்டுச்சு சம்பளம் போட்டு ஏற்கெனவே வாங்குனதையும் சேத்து தருதானு வாங்கிட்டு
G). TLT
ஏம்மா காசு தருவியா. நாளைக்கு ஸ்கூல்க்கு கொண்டு போக
தர்ரேனு சொல்லு. அப்பதான் போவன் (அடம் பிடித்தல்)
சரி. சரி. அப்படியே முனுசாமியண்ணே வீட்ல அம்மா சம்பளம்
போட்டவுன தருறதா 100 ரூவா காசு கேட்டுச்சுன்னு கேட்டுட்டு வா. உனக்கு அதுல நாளைக்கு ஸ்கூலுக்கு கொண்டு போக 100 ரூவா தாரேன்
(நிபந்தனையை ஏற்று புறப்படுதல்) பி.பீ.பீ. கீக் கீ (10 வயது
முருகன் ஏதோ கார் ஓட்டுவதாய் பின்னும் முன்னுமாய் வந்து முடக்கு திரும்பி கோமதி அக்கா வீட்டுப் பக்கமாய் ஓட்டமாய் ஓடுதல்.
காட்சி: 2
(முருகனின் அக்கா பிரியா பாடசாலை முடிந்து வந்து வீட்டிற்குள் நுழைதல்)
அன்னம்மா
3 suum
அன்னம்மா
Glýsluum
ஏண்டி இவ்வளோ நேரம் வெல்லனா வரத் தெரியாதா. எங்கபோய்
சுத்திட்டு வார.
ஐயோ! அம்மா (சலிப்பு மற்றும் களைப்புடன்) சேர் டியுசன்
வச்சாரு . அதான் லேட் நாளைக்கு கட்டாயம் டியுசன் பீஸ் கொண்டு போகனும். இல்லாட்டி அடிதான். சரிமா பசிக்குது.
சாப்பாடு எங்க (சமயலறைக்குள் நுழைதல்)
அந்தாப்பார். அம்மி மேலயே இருக்குது எடுத்து சாப்பிடு.
பொம்பள புள்ள தானே நாளெடத்துக்கு போறவளுக்கு கைமேல ஊட்டி விடனுமோ போய் சாப்புடடி.
அய்யோ! அம்மா இப்பதான் நா ஏழாங்கிளாஸ். என்ன பெரிய
மனுசியாக்கிடாத. அன்னக்கி சொன்ன பெரிய மனுசிமாதிரி பேசாதன்னு இன்னக்கி இப்புடி சொல்லம்மா (குரலை தாழ்த்திக் கூறுதல்)

Page 91
152
அன்னம்மா
jur
அன்னம்மா
9îíĵuLJIT
அன்னம்மா
Guut
அன்னம்மா
Guut
அன்னம்மா
மூக்காயி
Glýsluum
மூக்காயி
அன்னம்மா
நகல்
சரி. சரி. இப்பவும் சொல்றன் அதான் பெரிய வாய் பேசாத .
உடுப்ப கழட்டி வச்சிட்டு சாப்புடு. அதயேத்தான் நாளைக்கும் போட்டுகிட்டு போகனும் ஊத்தயாகிருச்சுனா வேற உடுப்பா இருக்குது. சவுக்காரமும் இல்லடி.
அம்மா (கோபத்துடன்) ஏன்டி இப்புடி வீடான வீட்டுல கத்துற. உள்ள விருத்தியும்
அப்படியே தொடச்சிகிட்டு போயிறனுமா வெள்ளிக்கிழமையதுமா கத்தாதடி.
கத்தாம என்ன செய்ய சொல்ற . பாதி ரொட்டிதான் இருக்கு .
இங்க பாரு சம்பளும் கொஞ்சூண்டு. (ஆத்திரத்துடன் முனங்கல்)
நல்லா பாரு. ஒரு துண்டு இருக்கும் பாருடி எங்க இருக்கு. (மீண்டும் கோபப்படல்) அப்ப அந்த முருகன் எடுத்து தின்னுட்டு போய்டான் போல.
மாவு வாங்க அனுப்பிருக்கேன். வந்ததும் சுட்டு தர்றே இப்ப இருக்குறத சாப்புடு.
(முனங்கியவாறு மெதுவான குரலில்) இந்தி வீட்ல சாப்பாடும்
இருக்காது. ஒன்னும் இருக்காது. எந்த நாளும் இதே கெதி தான்
இந்தா பாரு புள்ள வாய அடக்கி பேசு. நாக்கு என்னா நீளுது.
நா என்னா செய்ய. இப்ப வந்துருவாறு ஒங்க அப்பன். அவர் கிட்ட சொல்லு . ரொட்டி குறையுதுன்னு. ஏ. வாயி வயத்த கட்டி மலைக்கு தேயிலக் காட்டுக்கு தேத்தண்ணிக்கு கொண்டு போன ரொட்டிய அப்படியே கொண்டு வந்தேன். அல்லாட்டி அதுவுமில்லடி.
(உள் அறைக்குள்ளிருந்து) ஏ பிரியா! முருகன் வந்தா வெத்தல
ரெண்டு ரூவாய்க்கு வாங்கிகிட்டு வரச் சொல்லு. இந்த பத்து ரூவா ஏ தலவாணிக்கடில இருக்கு சரியா..?
தா பாட்டி. நா வாங்கியாந்து தர்றேன். (பணத்தை வாங்கியவள்
ஒடிப் போய் விசுக்கோத்து வாங்கி வந்து சாப்பிட்டுகொண்டிருக்கும் போது)
(வந்து கொண்டு) அடியே நாசமா போனவளே!. எனக்கு வாய்
புளிச்சு போகுதுனு வெத்தல வாங்கி யாரச் சொன்னா விசுகோத்து வாங்கி வந்து தின்னுருயேடி. (இடையில் குறுக்கிட்டு) ஏ அவன திட்றீங்க. சின்ன புள்ள தானே தின்னுட்டு போவுது.

மூக்காயி
96T60TubLDT
மூக்காயி
அன்னம்மா
9 furt
அன்னம்மா
9 suum
வரக்கூடாத வறுமை 153
ஏண்டி ஏகிட்டயே வாற எப்படியாவது என்ன வெரட்டுறது தானே
ஒ. அப்படியா . (ஏதேதோ சம்பந்தம் இல்லாமல் பேசுகிறாள்)
ஏ அத்த அண்ட இழுக்கனுனே இருக்கிறீங்க வயசான காலத்துல
செத்து தொலஞ்சி போங்களே (உரத்த குரலில் சொல்றாள்)
ஆமாண்டி என்ன கொண்டு குளிமாட்ல வச்சிட்டு நீ நல்லா இரு.
அவே வரட்டு. நல்லா வாங்கி வக்கிறேன். இருடி வவே ஏ மவெ வரட்டும்
என்ன அவரு அடிச்சா ஓ மனசு அப்படியே குநற்துரும் உனக்கு
சந்தோசம் தானடி (மூக்காயியை அடிக்க அன்னம்மா முற்படல்)
(பாட்டி அம்மாவுக்கிடையிலான சண்டையைத் தடுக்க முற்படல்)
அம்மா வுட்ருங்க. நீ போபாட்டி அங்கிட்டு. அய்யோ வாம்மா!. (விசுக்கோத்து கீழே விழுந்து நொருங்கி மிதிபட பிரியா அதனை ஏக்கத்துடன் பார்த்தல்)
உடுடி என்னய. எல்லாமே உன்னாலதா. திங்க இல்லாட்டிசும்மா
இருவே. அந்த கருமிவுட்டு சல்லிய ஏன் எடுத்து வாங்கி தின்னா. திம்பியா (இடையிடையே அடித்தல்)
: (அழுது கொண்டே) இல்லம்மா ஐயோ! செய்ய மாட்டேம்மா!!.
அடிக்காதீங்க அய்யோ அம்மா!. அப்பா அய்யோ!!. (மீண்டும் மீண்டும் அழுதல்)
காட்சி: 3
(வீட்டுத் தலைவர் தர்மராசு உள்ளே நுழைதல்)
அன்னம்மா
தர்மராசு
அன்னம்மா
தர்மராசு
மூக்காயி
அன்னம்மா
தர்மராசு
(சீலையையும் தலைமுடியையும் சரிசெய்து கொண்டு) ஏங்க
போன காரியம் என்னாச்சி.
அதுக்கு மேல தரமாட்டானா. அவ்ளோதானு சொல்லிட்டான்
அந்த கடைகாரன்.கொஞ்சம் கூட அசைந்தபாடில்லை!
மேகாது தோடுக்காவது கேட்டு பாத்திங்களா?. (அலுப்புடன்) அதுக்கும் இல்லனுட்டான் . போறப்ப பக்கத்து
வீட்டு பரமசிவத்துகிட்ட பஸ்க்கு வாங்கின 100ஐத் தான் எப்படி குடுக்குறதுன்னு யோசிக்றன்.
(தடியை ஊண்டியபடி மெதுவா வந்து) ஏண்டா மவனே . இவ
என்ன சொன்னா பாத்தாடா. நாயே, பேயேனு கடிக்கிறாடா
(அத்தையை முறைத்தபடி) ஏங்க அவ சின்ன புள்ள (சொல்லி முடிக்கும் முன்பு இடையில் தடுத்து) ஐயோ! ஓங்க
சண்டய நிறுத்துறீங்களா. மனுசன் கெடக்கிற கெடயில

Page 92
154
நகல்
காட்சி: 4
(முருகன் ஒரு கையில் பேக்கில் அரிசியும் அதனோடு கொச்சிக்காயை இறுக்கி பிடித்த படியும் மறுகையில் ஒழுக ஒழுக லாமெண்ணையையும் பிடித்துக் கொண்டு வெளியே பணத்தைத் தெரியும்படி பணத்தை சட்டைப்பையில் சொருகியவாறு
வீட்டை நோக்கி ஓடி வருகிறான்)
தர்மராசு
அன்னம்மா
முருகன்
அன்னம்மா
முருகன்
அன்னம்மா
முருகன்
அன்னம்மா
(வந்தவனை இடையில் தடுத்தி நிறுத்தி) ஏண்டா அந்த நூற
கொடு. (வாங்கி அப்படியே போய்க் கொண்டு) இரு அன்னம்மா மேல போயிட்டு வாறன்.
ஏனடா லாமெண்ணய கொட்டிக்கிட்டே வாற. விக்கிற வெலயில
ஒழுங்கா கொண்டு வரத் தெரியாதா..? எதுலதான் தெறமயா இருக்க நல்லா திங்க மட்டும் தெரியும்.
ஏம்மா சும்மா சும்மா ஏசுக்கிட்டே இருக்க
(சமாளித்த படி) சரி. சரி முனுசாமி அண்ணே கொடுத்தாறா. (சலிப்புடன்) ஆமாம்மா கொடுத்தார்.
எங்கடா காசு.?
அப்பா வாங்கிட்டு பொயிட்டாரும்மா
(கோபத்துடன்) அதான் அந்த மனுசன் மேட்டு லயம் பக்கம் போனாரோ சரிடா அப்ப இன்னிக்கி வர பன்னெண்டு மணியாகும் ஊத்திகிட்டுதான் வருவார்
(அமைதி ஒன்று நிலவல்)
பிரியா
முருகன் மூக்காயி
լԳlflսյm
தம்பி லாமண்ணய ஊத்துடா நா சிமிலிய கழுவி பேப்பர
ஒட்டுறே.
1 ஏக்கா. ஒடச்சதுக்கு கொஞ்சம் மேலேயே ஒட்டுக்கா.
ஏண்டி இங்க ஏகாம்புராவுக்கு ஒரு லாம்பு வைங்கடி. ஏ புள்ள
மரியா கொஞ்சம் தேத்தண்ணி கொண்டாடி.
(பாட்டி அருகில் சென்று காதில்) சீனி இல்ல பாட்டிதேத்தண்ணியும் இல்ல போ. (ஒரு குதி போடல் )
காட்சி: 5
(முருகனும் பிரியாவும் மங்கிய லாம்பொனியில் படிக்க அமர்தல் இரவு ஆகிக் கொண்டிருக்கிறது)
அன்னம்மா
ஏ புள்ள 1. பிரியா ஒழ கொதிச்சிருக்கானு பாருடி. நா உடுப்ப
மாத்திக்கிறேன்

suum
அன்னம்மா
முருகன்
அன்னம்மா
9tful T
அன்னம்மா
சரசு
அன்னம்மா
சரசு
முருகன்
அன்னம்மா
வரக்கூடாத வறுமை 155
ஏம்மா நாலு மணிக்கு வேலவுட்டு வந்து இப்போ 7 மணியாகி
இது வரைக்கும் உடுப்ப மாத்தலயாம்மா..?
எங்கடி இந்த எளவெடுத்த வீட்ல உடுப்பு மாத்துற மாதிரியா
இருக்கு.?
: அக்கா லாம்பு அணையப் போகுது. வா வந்து புத்தகத்தை
எடுத்து வை. அம்மா சாப்பாடு சரியா?.
இருடா. கொச்சிக்கா அரச்சி வச்சிர்றேன்.
ஏம்மா! எனக்கு சரியான பசிம்மா. பகலும் கொஞ்சம் தானே.
சாப்புட்டேன்
இருடி. சரசக்கா கறி வச்சிட்டான்னு பாப்பம். (சரசக்காவை
அழைத்தல்) ஏக்கா கறி வைச்சிட்டீங்களா!!
ஆமாக்கா. முருங்கக்கா இரண்டு கெடந்துச்சு பருப்பு போட்டு
வச்சென் . ஏக்கா.?
பிரியாவுக்கு பசி வந்துருச்சா. அதாக்கா கொஞ்சம் கறி
கேக்கலாம்னு.
கோப்ப ஒன்று எடுத்துகிட்டு வாம்மா.
(முருகனும் பிரியாவும் உண்ணுதல். இவற்றை நினைத்து அன்னம்மா அழுகுதல்.)
ஏம்மா. அழுகுற ஸ்கூல் பீஸ் வேணும்மா. அட்வான்ஸ்க்கு
குடுக்கலாமா நா அடி வாங்கிக்கிறேமா
இல்லடா. நம்ம நெலமய நெனச்சு அழுகுறேண்டா. ஏ பிரியா
அந்த படங்கை எடுத்து வாரி புள்ள.
(அடுப்பில் உள்ள உழையை இறக்கி வைத்து விட்டு கொச்சிக்காய் சம்பல் அரைத்து கணவனுக்கு உணவு தயார் செய்து விட்டு படுக்கையறைக்கு அன்னம்மா வருதல்.) முருகன் உறங்கி விட்டான்.
Gifurt
அன்னம்மா
ஏம்மா சாப்புடல.
ஒங்க அப்பா வரட்டுமடி.
(இரு பிள்ளைகளையும் மடியில் போட்டு கணவனுக்காக கண்ணீருடன் காத்திருக்கிறாள். வெளிச்ச நிலவும் வெண்மேகத்துடன் மறைய, ஜன்னல் ஒளி மறைந்து வாழ்வோடு சேர்ந்து வறுமையுடன் வீடும் இருள்கிறது).

Page 93
வினைப்பயன்
பிரதியாக்கம் திருமதி அனுராதா பாக்கியராஜா
பாத்திரங்கள்
1. நாகம்மா 2. gTg 3. சுந்தரி 4. ஜமுனா 5. சுந்தரம் 6. செல்வரஞ்சிதம் 7. IJाgा 8. டொக்டர் நாராயணன்
காட்சி: 1
இடம் : நாகம்மா வீடு. பாத்திரங்கள் : நாகம்மா, சரசு, சுந்தரி நாகம்மா சரசு எடியேய் சரசு. எங்க போய்த் துலைஞ்சாள் இவள். சரசு.
சரசு
சரசு (ஓடிவந்து) சொல்லுங்கோம்மா..! நாகம்மா எங்கடி போன நீ இவ்வளவு நேரமும் மூதேவி எவ்வளவு நேரமாய்க் கத்துறனடி. செவிட்டுக்கழுதை .? (காதைத் திருகிய படியே அடிக்க சரசு கத்துகிறாள்) சரசு ஐயோ. அடிக்காதீங்கம்மா நோகுது. தாயே உங்களைக் கும்பிட்டுக்
கேக்கிறன். அடிக்காதீங்கம்மா நாகம்மா உஸ் . பொத்தடி வாயை. சத்தம். மூச்சுக் காட்டக்கூடாது மீறிச்
சத்தம் வைச்சியோ அடிச்சுக் கொண்டே போடுவன். உன்னை. எருமை மாடு. எங்கடி போனணி இவ்வளவு நேரமும் சொல்லு. சொல்லடி

சரசு
BITSubLDIT
சரசு
நாகம்மா
சுந்தரி
நாகம்மா
சுந்தரி
நாகம்மா
சுந்தரி
நாகம்மா
சுந்தரி
நாகம்மா
சுந்தரி
BITS budm
வினைப்பயன் 157
பின் காணிக்குள்ள நிண்டனானம்மா
பின் காணிக்குள்ளையா அங்கை என்னடி வேலை யாரைப்
பார்க்கப் போன நீ சொல்லித் தொலையேண்டி (அடிக்கிறாள்) காலையிலை இருந்து என்ரை உடுப்புக்களைக் கழுவிப்போடு, எனக்குக் குளிக்கத் தண்ணிவை எண்டு கத்திக்கொண்டிருக்கிறன். அவ என்னடா எண்டால் பின்காணிக்கை உலாத்துப் பண்ணுறாவாம் உலாத்து. போவியா இனிப்போவியா.
ஐயோ. அடிக்காதீங்கம்மா நோகுது. பெரியையா தான் மாட்
டுக்குப் புண்ணாக்கு வைக்கச் சொன்னவர். அது தான் போனனான்
மூடுவாய் மூடடி
(வெளியிலிருந்து சுந்தரி கூப்பிடுதல்)
நாகம்மா அக்கா நாகம்மா அக்கா
ஆரடி அது இந்த நேரத்தில வந்து கத்திக்கொண்டு. போய்ப்
பாரடி அதாரெண்டு (சரசு போய்க் கதவைத் திறத்தல்) (வந்து கொண்டு) நாகம்மா அக்கா வீட்டில தான்
நிக்கிறியளோ..?
ஆரது எடட.சுந்தரியே. வாவா.என்ன உன்னைக்காண்றதே
பெரிய பாடாய்க்கிடக்குது. இவ்வளவு நாளாய் எங்கடியாத்த போய் இருந்த நீ.
: நான் எங்கையக்கா ஒழியப் போறன்.ஒரு ரெண்டு மாச லீவில
மகளின்ர வீட்டுக்குத்தான் போய் நிண்டிட்டு வந்தனான்.
மகள் வீட்டுக்கெண்டால் .? மட்டக்களப்புக்கோ..?
இல்லையக்கா. சந்திரகாந்தியெல்லே தன்ரை பிள்ளைப்
பெறுவுக்கெண்டு 2மாச லீவிலை என்னைக் கூப்பிட்டவள்.
(ஆச்சரியமாக) அப்ப லண்டனுக்குப் போனனியோ..?
தனியாகவே?
ஒமக்கா லண்டனுக்குத்தான். எனக்குத்தனியாகப் போகக் கொஞ்சம்
பயமாய்த்தானிருந்தது ஏதோ சன்னதியால் துணையோட போட்டு வந்திட்டன்.
ஒமெண்கிறன் இந்த ஊரைத்தவிர. இங்கிலிசு ஒருவார்த்தைகூட
பேசத் தெரியாத உனக்கு அதிஸ்டம் எப்பிடி வேலை செய்திருக்குது பாத்தியே!

Page 94
158
சுந்தரி
நாகம்மா
சுந்தரி
நாகம்மா
சுந்தரி
நாகம்மா
சுந்தரி
நாகம்மா
சுந்தரி
நாகம்மா
சுந்தரி
நாகம்மா
சுந்தரி
நகல்
அப்பிடிச் சொல்லாதையுங்கோ அக்கா! கஸ்டப்பட்டுப் படிப்பிச்சு
ஆளாக்கிவிட்டதாலை இண்டைக்கு என்ரை மகள் டாக்டாரா யிருக்கிறாள். இல்லையெண்டால் கூப்பிடுவளே.
: ஓமோம். நீ சொல்லறதும் சரிதான். அதுக்கும் அதிர்ஷ்டம்
இருந்தாதானே கைகூடும் சுந்தரி. நீகூட பார் ஒரு வார்த்தை சொல்லாமல் தானே வெளிக்கிட்டாய்.
ஐயோ அக்கா..! கொழும்புக்குப் போற அண்டைக்குக்கூட
உங்களிட்டைப் பயணம் சொல்லிப் போட்டுப் போகத்தான் ஓடிவந்தனான். உங்கட வீடு வாசல் எல்லாம் பூட்டிக் கிடந்தால் நான் என்ன பண்ணுவன். சொல்லுங்கோ. நீங்க கொழும்புக்குப் போனதாக உவர் சுப்பண்ணர் தான் சொன்னார்
ஒமடியாத்தை . மகள் செல்வரஞ்சிதமல்லே துபாயில நல்ல
வேலையொண்டு கிடைச்சதாலை போயிட்டாள். அவளை அனுப்பத்தான் போனனாங்கள். அப்ப என்ன நாகம்மாக்காவும் இனி துபாய்க்குப் போய்வருவா தானே.
நீங்கள் மட்டும் போகேக்குள்ள நான் மட்டும் ஏன் போகக் கு ந
கூடாதே.?
இல்லையக்கா ஒரு பேச்சுக்குச் சொன்னனானெல்லே. இந்தாங்கோ
சொக்கிலேற்றுக் கொஞ்சம் லண்டனாலை கொண்டந்தனான். வேறையொண்டும் பெரிசாக் கொண்டரேலையக்கா.
(அருவருப்போடு வேண்டாமென்று) .உதெதுக்குச் சுந்தரி
கொண்டு வந்தனி.வீட்டைகொண்டு போய் உன்ரைபேரப்பிள்ளை யளுக்குக் கொடன் இஞ்சை யார் தின்னப் போகினம்
உது சீனி வருத்தக் காரருக்குக் கொடுக்கிற சொக்கிளேட்டக்கா.
உங்களை நினைச்சுத்தான் வேண்டிக் கொண்டு வந்தனான்.
வேண்டாம் சுந்தரி உதுகளை இஞ்சை ஆரும் சீண்டாயினம். நீ
கொண்டு போ என்ன.
சரியக் கா. அது சரி இவள் சோதி எங்க. வீட்ட
போட்டாளோ..?
ஒ. அந்த மூதேவி போட்டுது. என்ன செய்யிறது. நாம எவ்வளவு
நல்லாப் பார்த்தாலும் நன்றியா சொல்லுதுகள்.
ஏனக்கா. அவள் போனாலென்ன நல்ல வடிவான பெட்டை
யொண்டை பிடிச்சிருக்கிறியள் தானே. எப்பிடி நல்லா வேலை செய்யுறாளே

நாகம்மா
சுந்தரி
நாகம்மா
சுந்தரி
நாகம்மா
சுந்தரி
நாகம்மா
சுந்தரி
நாகம்மா
சுந்தரி
நாகம்மா சுந்தரி
நாகம்மா
வினைப்பயன் 159
அதுகளைக் கேளாத சுந்தரி. மூதேவியோடை நான் படுற பாடு
எனக்கெல்லோ தெரியும்.
ஏனக்கா. வேலைசெய்யாளே
அவளுக்கு நான் வேலை செய்யவேண்டிய நிலையிலை இருக்கு.
போதாததுக்கு நீயும் வாறதாயில்லை. என்பாடு பெரிய திண்டாட்டம் தான் சுந்தரி.
நானென்னக்கா செய்யிறது. மூத்த மகள் வரட்டாம் வரட்டாம்
என்று ஒரே கேட்டபடி, பள்ளிக்கூடம் போறவளெல்லே. கொஞ்சக்காலம் போய் அவளோடையும் நிண்டு போட்டு வரலா மெண்டிருக்கிறன்.
அப்ப இனி நீயும் வீட்டுவேலையளுக்குப் போகமாட்டாய்
போல. என்ன..?
பிள்ளையன் வசதியாயிருக்குதுகள். என்ன இருந்தாலும் என்னைப் பார்ப்பளவை தானே அக்கா அப்போ நான் வரட்டே நல்லா நேரம் போட்டுது.
சரி சரி போட்டுவா நேரங்கிடைக்கிறப்போ கையுதவியாய் வந்தும்
ஏதுஞ் செய்து தாப்பா. எங்கையிவள் சரசு. ? சரசு. எடியேய்
சரசு.
அக்கா பெட்டை சின்னப்பெட்டையாயிருக்கிறாள். கண்டபடி
அடிச்சுக் கிடிச்சுப் போடாதையுங்கோ. கடை கண்ணிக்கும் அனுப்பாதையுங்கோ
! நீ என்ன சொல்லுறாய் சுந்தரி.
என்னத்தையக்கா சொல்லுறது. பதினாலு வயசுக்குக் குறைஞ்ச
பெட்டையை வேலைக்கு வைச்சதெண்டும், அவளை அடிச்சு ஆய்க்கினை பண்ணினதெண்டும் சோமசுந்தரம் ஐயாவின்ரை மகளைப் பிடிச்சு வழக்குப்போட்டிருக்கினமாம். விஷயம் தெரியாதா உங்களுக்கு.?
எனக்கொண்டும் தெரியாதப்பா..? சரி அக்கா நான்போட்டு வாறன். சரி. சரி. போட்டுவா.
(காட்சி மாற்றம்)

Page 95
160
இடம்
நகல்
காட்சி: 2
: நாகம்மா வீடு.
பாத்திரங்கள் : நாகம்மா, சரசு, ஜமுனா
(கதவு இடுக்கால் சரசு ரிவி பார்த்துக் கொண்டிருக்கிறாள். நாகம்மா கூப்பிட்டுக் கொண்டு உள்ளே வரும்போது கண்டு விடுகிறாள். அதைக்கண்டு கோபமுற்று தலைமயிரில் பிடித்து இழுத்து அடிக்கிறாள்).
நாகம்மா
சரசு
நாகம்மா
சரசு
நாகம்மா
82(p60TT
நாகம்மா
இடம்
எடியேய் சரசு இஞ்சை என்னடி பண்ணிக்கொண்டிருக்கிறாய்.
சமையல் கட்டிலை எவ்வளவு வேலையள் கிடக்கு. எல்லாத்தையும் விட்டுப்போட்டு . இஞ்சை வந்து நிண்டு ரிவி பார்க்கிறாயா. ரிவி.? கள்ள நாயே. என்ன திமிரடி உனக்கு, (சுவரில் கொழுவி யிருந்த தடிளைக் கழற்றி அடிக்கிறாள். சரசு வாய்விட்டுக் கத்து கிறாள்)
எல்லா வேலையையும் செய்துபோட்டனம்மா . அடியாதை
யுங்கம்மா. நோகுதம்மா தங்கச்சிதான் பாக்கச் சொன்னவ. நோகுதம்மா அடியாதையுங்கம்மா.
தங்கச்சி சொன்னா நீ படம் பாப்பியோ..? : படம் பார்க்கலையம்மா நான் படம் பார்க்கலையம்மா
! அப்ப என்னடி பார்க்கிறாய்.
(ஜமுனா நாகம்மாவின் பேத்தி ஓடிவந்து)
அம்மம்மோய். சரசுவை நான்தான் கூப்பிட்டனான். ஒருஅம்மம்மா
மயங்கி விழுந்திட்டா. அதுக்குமுதலுதவி எப்பிடிச்செய்யிறதென்று செய்து காட்டிறாங்க. அம்மம்மா அடிக்காதீங்க அம்மம்மா
போடி. இனிமேல் இப்படி ஏதும் செய்தால் உன்ரை தோலை
உரிச்சுப் போடுவன். போ போய் வாசலைக் கூட்டு
(சரசு அழுதுகொண்டு போதல்)
(காட்சி மாற்றம்)
asпц“ čl: 3
: நாகம்மா வீடு.
பாத்திரங்கள் : சுந்தரம், நாகம்மா, சரசு, ஜமுனா
சுந்தரம்
: நாகம்மா. இந்தாப்பா.நீ சொன்ன சாமான்களெல்லாம் வாங்கி
வந்திருக்கிறன். குரக்கன் மாவு மட்டும் இல்லையாம். ஊஹம் ஊஹம் என்ன வெய்யில் என்ன புழுக்கம். சரசு சரசு.

சரசு
சுந்தரம்
சரசு
சுந்தரம்
சரசு
சுந்தரம்
oOpeT f சுந்தரம்
ஜமுனா
சுந்தரம் நாகம்மா
சுந்தரம்
நாகம்மா
சுந்தரம்
நாகம்மா
வினைப்பயன் 161
(வந்து கொண்டு) சொல்லுங்கோ ஐயா.
இஞ்ச வா மோனை. உந்தப் பானை (Phone) போட்டுவிட் டிட்டு
. உதுகளையெல்லாம் கொண்டு போய் உள்ள வைச்சுப்ாேட்டுக் கொஞ்சம் தண்ணி கொண்டு வா மோனை.
சரி ஐயா. (சொல்லிய படியே சாமானை தூக்கப் போகிறாள்
காலால் இரத்தம் வடிகிறது. முகமும் வீங்கிக் கிடக்கிறது சுந்தரம் கண்டு விட்டார்.)
உதென்னடி மோனை காலாலை ரத்தம் ஒழுகுது. முகம் வேறை
வீங்கிப்போய்க் கிடக்குது என்னடி நடந்தது அழுதணிளோ..?
ஒண்டுமில்லை ஐயா.
என்னடியாத்தை ஒண்டுமில்லையென்கிறாய். உண்மையைச்
சொல்லு
அம்மம்மா அடிச்சவ அப்பு. அம்மம்மா அடிச்சவளோ, ஏனாம்.
இவள் கதவிடுக்குக்குள்ளாலை ஏவு பார்த்தவளப்பு. அதுதான்
அடிச்சுப்போட்டா.
அடி பாவி. நாகம்மா. நாகம்மா
என்னப்பா. நாகம்மா நாகம்மா எண்டு ஏலங்கூறுறியள் என்ன
பிரச்சனை.
உனக்கென்னடி ஆத்தை. இந்தச் சின்னப் பொட்டையைப் போட்டு
இந்த அடி அடிச்சிருக்கிறாய். உனக்கென்ன விசர் கிசர் பிடிச்சிட்டுதே. சின்னப் பிள்ளையளை வேலைக்கு வைச்சிருக்கிறதே இப்ப பாரதூரமான குற்றமாம். உதுகளை யாராவது கண்டால் எல்லோரையு மெல்லொ கொண்டுபோயிடு வாங்கள்.
ஒ. சீமாட்டி அதுக்கிடையிலை சொல்லிப் போட்டாவோ..? ஏய்! அடங்கு. அடங்கு. அவள் ஒண்டும் சொல்லயில்லை .
உன்ரை பேத்தி தான் எல்லாத்தையும் சொன்னவள். அவளுக்கு முன்னாலை இந்த அடாத்து வேலையள் செய்யுறியே.?ந்ாளைக்கு அவளும் உன்னைப்போலை பழகவெல்லே போறாள்.
எடட. பெரிய விஞ்ஞானியார். புதுக்கண்டுபிடிப்பையெல்லோ
கண்டு பிடிக்கிறார். இஞ்சாருங்கோ ஆரை எந்த இடத்திலை வைக்க வேணுமெண்டு எனக்குத் தெரியும். நீங்கள் பேசாமல் இருங்கோ. அவளவயின்ர இஷ்டத்துக்கு விட்டால் எங்கட தலையிலை மிளகாய் அரைச்சுப் போடுவாளவை.

Page 96
162
சுந்தரம்
இடம்
பாத்திரங்கள் :
நகல்
உன்னைத் திருத்தேலாதடி.என்னமோ கெடுகுடி சொல் கேளாது.
கொல்லும் வியாதி மருந்தைக் கேளாது. எண்டாங்கள். பட்டு அனுபவி அப்பதான் உணருவாய். என்னவிடு நான்போறன். (சால்வையை உதறித்தோளில் போட்டவாறு வெளியேறல்).
(காட்சி மாற்றம்)
காட்சி: 4
: நாகம்மா வீடு.
சுந்தரம், நாகம்மா, சரசு. ஜமுனா
(டெலிபோன் அடிக்குது நாகம்மா எடுத்து)
நாகம்மா
செல்வரஞ்சிதம்:
நாகம்மா
செல்வரஞ்சிதம்:
நாகம்மா
சுந்தரம்
நாகம்மா
சுந்தரம்
செல்வரஞ்சிதம்:
சுந்தரம்
நாகம்மா
ஹலோ.ஹலோ யாரு பேசிறது.
அம்மா நான் தான் செல்வரஞ்சிதம் துபாயிலை இருந்து பேசிறனம்மா அப்பாவை ஒருக்கால் பேசச் சொல்லுங்கோ அம்மா.
என்ன மகள். எப்பிடிச்சுகமாய் இருக்கிறியோ..? வேலையெல்லாம்
பிடிச்சுதோ? சம்பளம் நல்லாத் தருவானுகளோ..? எல்லாம் நல்லாயிருக்குதம்மா நானும் நல்லாயிருக்கிறன். அப்பாவை ஒருக்கால் பேசச்சொல்லுங்கோ அம்மா.அவசரமாய்க் கதைக்கவேணும்.
அப்பிடியென்ன அவசரமடியாத்தை.? கொஞ்சம் பொறு.
இஞ்சாருங்கோ. எங்க வெளியிலை நிக்கிறியளே. ?
என்னப்பா என்ன விசயம் சொல்லு.?
பிள்ளை செல்வரஞ்சிதம் கதைக்கவேணுமாம். கெதியாய் வாருங்கோ.
(சுந்தரம் ஓடி வந்து வாங்கிக்கதைத்தல்)
ஹலோ சொல்லுமகள்.
அப்பா. நான் ஒரு முக்கியமான விசயம் சொல்லப் போறன். கேளுங்க. ஆனால் இப்போதைக்கு அம்மாவிட்டை ஒண்டும் சொல்லாதையுங்கோ என்ன?
ஆசொல்லுமகள். ஆசரி சரி எப்ப சரிமகள் சரிளப்ப. அதொண்டும்
பிரச்சனையில்லை மகள். ஆ சரியம்மா ஒமோம் வைக்கிறன்.
என்னவாம் அப்பா என்ன சொன்னவள்.?

சுந்தரம்
நாகம்மா
சுந்தரம்
நாகம்மா
சுந்தரம்
நாகம்மா
சுந்தரம் நாகம்மா சுந்தரம் நாகம்மா
சுந்தரம்
psTsubudit
சுந்தரம் நாகம்மா
சுந்தரம்
நாகம்மா
சுந்தரம்
வினைப்பயன் 163
அதொண்டுமில்லையப்பா டுபாயாலை ஆரோ வருகினமாம்.
போய்ச் சந்திக்கச் சொன்னவள்.
ப்பூ. இதை எங்கிட்டச் சொன்னா நான்சொல்ல மாட்டேனாமா.
மடப்பெட்டை. நானும் என்னவோ ஏதோ எண்டு பயந்தெல்லே போட்டன்.
கண்களைத் துடைத்துக்கொண்டு வெளியே போகிறார் மெய்யே. எங்கேயாம் போய்ச் சந்திக்கட்டாம் வேறையெங்கை. கொழும்பிலதான்.
கொழும்புக்குப் போகவேனுமாமே இஞ்சாருங்கோ இந்தப்
புதினத்தையும் கேளுங்கோவனப்பா
சொல்லு என்னவாம் எங்கடை சுந்தரி இருக்கிறாளெல்லே . ஆரையப்பா சொல்லுறாய்.
வேறையாரப்பா எங்களிட்ட வேலைக்கு வாற சுந்தரியைத்
தெரியாதே உங்களுக்கு.
அவளையேனப்பா வேலைக்காறியெண்டு சொல்லுறாய். எங்கட
பொன்னம்பலத்தார் பெண்டாட்டி எண்டு சொல்லன்.
ஒமோம் அப்பிடிச் சொல்லாட்டி அவ குறைஞ்சு போவா தானே
அவட எழுப்பத்தைப் பாக்க வேணும் நீங்கள்.
! ஏன் அவளுக்கென்னவாம்.?
லண்டன் மாப்பிளைக்கு மகளைக் கட்டிக் குடுத்தவளெல்லோ.
அதுக்கென்னப்பா. பெடியனும் பெட்டையும் விரும்பினாங்கள்
அவள் கட்டிக்குடுத்தாள். அதுகளும் முன்னேறத்தானே வேணும்.
இவ்வளவுநாளும் இஞ்சவந்து வேலைசெய்து பிழைச்சவதானே
மூன்றுமாதம் லண்டனுக்குப் போட்டு வந்தவளாம் . இனிவர நேரமில்லையாம்.
அதுக்கென்ன நீயேன் அவளைக்குறை சொல்லுறாய் இப்போ
மக்கள் நல்லாயிருக்கினம். அவளைப் பார்ப்பினம் தானே. இந்தாபார் உன்ர மகனும் அமெரிக்கா போய் எத்தினை வருஷமாயிச்சு. . ஒருநாள்ல வாம்மா எண்டு உன்னைக் கூப்பிட்டிருக்கிறானே. எல்லாத்துக்கும் நல்ல மனசும் கொடுப் பினையும் வேணுமடியாத்தை . சரி. சரி.கதையைச் சாத்து நான் ஒருக்கா வெளியால போட்டுவாறன்.

Page 97
164
நாகம்மா
சுந்தரம்
இடம்
நகல்
உங்கட கதையைப் பார்த்தால் ஏதோ எனக்கு நல்ல
மனமில்லையெண்டாப் போலையெல்லே பேசிறியள்.
அதுதானேயப்பா உண்மை. கதவைச்சாத்து நான் வாறன்,
(காட்சி மாற்றம்)
காட்சி: 5
: நாகம்மா வீடு.
பாத்திரங்கள் : சுந்தரம், நாகம்மா,
(கதவைச் சாத்திப்போட்டு திண்ணையில் கிடந்த கதிரைக்குள் முடங்கிக் கொண்டாள் நாகம்மா. குசினிக்குள் ஏதோ விழுந்து சத்தம் கேட்கிறது சரசுவைக் கேட்கிறாள்)
சிருக்கட்டும்
நாகம்மா
சரசு
நாகம்மா
FJ
சுந்தரம்
நாகம்மா
சுந்தரம்
நாகம்மா
சுந்தரம்
psT85 budst
சுந்தரம்
சரசு என்னத்தையடி போட்டு உடைக்கிறாய். சனியன். ஏதாவது
உடைச்சிருக்கட்டும். உன்ரை முதுகை உடைக்கிறன் பார்.
ஒண்டுமில்லையம்மா தகரக்கோப்பை தான் விழுந்தது.
விழும். விழும்.எல்லாம் விழும். சாமான்களையெல்லாம்
கழுவித்துடைச்சுப்போட்டு ஆட்டுக் கல்லைக் கழுவி உழுந்தை நல்லா அரைச்சு வையடி,
சரி அம்மா
நாகம்மா. ஒரு இருபதாயிரம் ரூபாய் கொண்டாடியம்மா.
கதிரேசன்ரை வான் கொழும்புக்குப் போகுதாம். நானும் கையோட போட்டு வந்திடுறன்.
அதுக்கேனப்பா இருபதாயிரம் ரூபாய்.? ரக்ரருக்குப் பாட்ஸ் ஒண்டும் வாங்க வேண்டும். கொண்டோடியா.
அரை மணித்தியாலத்திலை போகவேனும்.
சரி சரி உடுப்பு பேக்கை எடுங்கோ கொண்டு வாறன். (உள்ளே
போதல்)
கெதியா வாப்பா
(வந்து) இந்தாங்கோ காசு கவனமப்பா கவனமாய்ப் போயிட்டு வாங்கோ
சரி வாறன். (சுந்தரம் போதல்)
(காட்சி மாற்றம்)

இடம்
வினைப்பயன் 1.65
காட்சி: 6
: நாகம்மா வீடு.
பாத்திரங்கள் : சரசு, நாகம்மா, ஜமுனா, டொக்டர்
(சுந்தரம் போனபின்பு நாகம்மா குசினியுக்குள் போகும்போது உழுந்து அரைத்த படியே சரசு தூங்கி விட்டாள்)
நாகம்மா
ஜமுனா
நாகம்மா
சரசு
gCp60TT
சரசு
உழுந்தரைக்கிறியோடி மூதேவி. உழுந்தை அரைச்சுவை எண்டால்
நித்திரையோ கொள்ளுறாய். எழும்படி எழும்படி எழும்படி கழுதை உன்னோடை கத்திக் கத்தி என்ர உயிர்தான் போகுது. சனியன் (உச்சிமயிரைப்பிடிச்சு இழுத்து சுவரோட மோத விடுகிறாள்.) (ஐயோ அம்மா என்று சரசு கத்துகிறாள். டெலிபோன் அடிக்கிறது) இது வேற இந்த நேரத்தில. அடியேய் நான் அங்க கதைச்சுப் போட்டு வாறத்துக்கிடையில. உந்த வேலையை முடிச்சுப்போடு. இல்லையெண்டால் கையைக்காலை உடைச்சுப்போடுவன். (உள்ளிருந்து) அம்மம்மோய். டெலிபோன் அடிக்குது. ஓடிவாங்கோவன்.
: இதோ ஓடிவாறண்டா . (ஓடிச்செல்லும் போது கால்தடுக்கி
விழுந்து மயங்கிப் போதல்)
முருகா.கடவுளே ஜமுனா. ஐயோ ஜமுனாத்தங்கச்சி . அம்மம்மா விழுந்து போனா. ஓடிவாங்க தங்கச்சி.
அம்மம்மா.அம்மம்மா எழும்புங்கோ அம்மம்மா (சரசு தண்ணீரை
முகத்தில் தெளிக்கிறாள் அப்போதும் எழும்பவில்லை - பயத்தில்) சரசு. அம்மம்மா எழும்புறாவில்லை (அழுகிறாள்). எனக்குப் பயமாயிருக்குது சரசு. அழாதீங்க அழாதீங்க தங்கச்சி கொஞ்சம் அம்மாவைப் பார்த்துக் கொள்ளுங்கடா
(டெலிபோன் புத்தகத்தில் தேடி நம்பரை எடுத்து டயல் பண்ணி) ஹலோ டாக்டர் ஐயா வீடுங்களா..?
டாக்டர்
சரசு
டாக்டர்
ஆமா நான்தான் . டாக்டர் நாராயணன் பேசுறேன் நீ யாரும்மா
! ஐயா..! பாங்க் மனேச்சர் ராசா ஐயாவோட அப்பா சுந்தரம்
ஐயாவின்ர வீட்டிலை இருந்து பேசுறன் ஐயா.
சொல்லம்மா என்னவேணும் உனக்கு.

Page 98
166
சரசு
டாக்டர்
சரசு
டாக்டர்
சரசு
ஜமுனா
gj8;
ஜமுனா
சரசு
ராஜா
FJag
ராசா
சரசு
Tामा
டாக்டர்
[Jाछा
டாக்டர்
நகல்
எனக்கு ஒண்ணுமில்லை ஐயா..! வீட்டில பெரிய ஐயாவும்
கொழும்புக்குப் போயிட்டாங்க இங்க பெரியம்மா மயக்கமா விழுந்து கிடக்கிறாங்க. ஒருக்கா வந்து பாப்பீங்களா ஐயா. ராசா அங்கை இல்லையாம்மா..? இல்லை ஐயா. அவங்க அவங்க வீட்டிலை தான் இருப்பாங்க. அப்படியா சங்கதி. சரிம்மா இதோ நான் வந்து பார்க்கிறன். கவலைப்படாதை
டாக்டர் ஐயாவை வரச்சொல்லிப்போட்டன். அழாதீங்க தங்கச்சி.
அழாதீங்க. வந்திடுவாரு. மாமாவை வரச்சொல்லு சரசு. மாமாவோடை நம்பர் தெரியாதே தங்கச்சி. ரெலிபோன் மட்டையிலை இருக்கும் பார் சரசு.
எழுத்துக் கூட்டி வாசிக்கிறாள். சு. யு. து. யு. ர். ராஜா
இதுவாகத்தானிருக்கும். டயல் பண்ணுகிறாள் ஹலோ. ஹலோ
சொல்லு சரசு. நீ சரசுதானே . என்னாச்சு. நீ ஏன் டெலிபோன் எடுக்கிறாய்.
! ஐயா நான் சரசுதான். அவசரமாக வீட்டுக்கு வாங்க ஐயா.
ஜமுனாத் தங்கச்சி வேறை அழுதபடி இருக்க.
ஏன் என்ன நடந்தது சரசு. அம்மா மயங்கிவிழுந்திட்டாங்க ஐயா. நீங்க உடனே வாங்க
சரி. சரி. இதோ வெளிக்கிடுறம். அம்மாவைப் பார்த்துக் கொள்
என்ன..?
(டொக்டரும் ராசாவும் ஒன்றாய் வருகிறார்கள். டாக்டர் பரிசோதிக்கிறார்)
ஹைப் பிறசர்தான் மிஸ்டர் ராசா. இப்ப ஒரு ஊசி போட்டு
மருந்து தாறன் நாளைக்கு புர் க்கு வந்து இந்த ரெஸ்ருகளை எடுத்திடுங்க சுகர் லெவல் பாக்க வேணும்.ஒகே.
சரி டாக்டர். ரொம்ப தாங்ஸ்.
தாங்ஸ் எனக்குச் சொல்லாதீங்க ராஜா. உங்க சேர்வன்ட் புசைட
க்குச் சொல்லுங்க. புத்திசாலித்தனமா சரியான நேரத்தில சொல்லியிருக்கிறாளே ப்ரில்லியன்ட், ஓகே நான் வாறன். (டாக்டர் போகிறார்.)

JTsm
erJe
jIाgIा
ஜமுனா
yngst
9-Jeii
υπενίτ
சரசு
JIाgा
சரசு
வினைப்பயன் 167
சரசு, சரசு, !
(தேநீர்க்கோப்பையுடன் வந்து கொண்டு) சொல்லுங்க ஐயா , இந்தாங்க ரீ
அதுசரி அம்மா எப்பிடி விழுந்தவா டொக்டருக்கு நீ எப்பிடிப்
போன் பண்ணின.?
நான் சொல்லுறன் மாமா இவள் உழுந்தரைக்கேக்க தூங்கிட்டாளாம்
எண்டு அம்மம்மா அடிச்சவ. அப்ப போன் மணி அடிச்சுது. அதை எடுக்க ஓடிவந்து விழுந்து போனா சரசுதான் படுக்க வைச்சுப்போட்டு டொக்டர் அங்கிளைக் கூப்பிட்டவள்.
! நீ படிச்சிருக்கிறாயே சரசு.
ஆறாம் வகுப்பு வரைக்கும் படிச்சிருக்கிறன் ஐயா..! அதுக்குமேல
காசில்லாமல் எங்கப்பன் படிக்க வைக்கல்ல.
அதுசரி டொக்டர் வீட்டு நம்பரெல்லாம் உனக்கெப்பிடித்
தெரியும்.
அதுவா. அது சொல்லு நம்பர் உனக்கெப்பிடித் தெரியும்.
பெரியையா நாராயணன் ஐயாவுக்கு அடிக்கடி போன் பண்றப்போ
நெம்பரைப் பார்த்தேனையா..? அதுபோக காலை ஒரு ரிவி படத்திலை மயங்கி விழுந்தா என்ன செய்யவேணுமெண்டு போட்டுக் காட்டினாங்கையா. அதைப் பார்த்துத் தான் செய்தனான்.
(அவளை அழைத்து முதுகில் தட்டிக் கொடுக்கிறான்)
Unrst
ஜமுனா
υπέσπ
சரசு
Uाgा
ஜமுனா நாகம்மா
கெட்டிக் காரியடி நீ அப்பா வரட்டும் உன்னைப் படிக்கவைக் கேலுமோ எண்டு பாப்பம். அம்மம்மா விடமாட்டா மாமா. பாவம் சரசுவுக்கு ஒரே அடி தான்
சரி. சரி. அதையெல்லாம் நான் பாக்கிறன் . நீங்க போய்
சாப்பிடுங்க.சரசு ஜமுனாவுக்குச் சாப்பாடு குடுத்திட்டு நீயும் சாப்பிடு
ஐயா நீங்க சாப்பிடல்லையா?
; எனக்கு சாந்தியம்மா சாப்பாடு கொண்டருவாங்க நீங்க ரெண்டு
பேரும் முதல்ல சாப்பிடுங்க. ஹாய் சாந்தி மாமி வரப்போறா (சந்தோசப்படுதல்)
(கண்விழித்து) ஆ. அம்மா. என்கால் அம்மா என்ன வலி
வலிக்குது. ராசா ஆ. நீ எப்படி அப்பா இங்கை

Page 99
168
Մm&IT
சரசு
Jrry T
நாகம்மா
Uпат
இடம்
நகல்
சரி அம்மா நீங்க தூங்குங்க. நாளைக்கு பேசிக்கலாம். நீங்க
விழுந்தப்பவே நான் வந்திட்டன். சரசு அம்மாவோடை பால வார்த்தெடுத்திட்டு 'சுபில்ஸ்சோடை தண்ணியும் கொஞ்சம் எடுத்திட்டு வா.
சரிங்க ஐயா.
நீங்க மருந்தைப் போட்டு பாலைக்குடிச்சிட்டு தூங்குங்கம்மா.
சாந்தி வந்து எல்லாம் கவனிப்பா. காலைக் காட்டுங்க மருந்து புசிவிடுறன்.
ஒமடா ராசா. காலைக் கழட்டி விட்டது போல் அப்பா கோல்
எடுத்தவரே. (வலியில் முகம் சுழித்தல்)
ஓமோம். விடிய வந்திடுவாராம். முதல்ல நீங்க றெஸ்ற் எடுங்க.
எல்லாம் பிறகு கதைக்கலாம்.
(காட்சி மாற்றம்)
8: 7
: நாகம்மா வீடு.
பாத்திரங்கள் : சரசு, நாகம்மா, செல்வரஞ்சிதம், ராசா
(நாகம்மாவும் ராசாவும் கதிரையில் இருக்கிறார்கள். வானில வந்த சுந்தரமூர்த்தியரும் மகள் செல்வரஞ்சிதமும் வரல்)
நாகம்மா
சரசு
நாகம்மா
செல்வரஞ்சிதம்:
தம்பி ராசா அப்பா வந்திட்டார் போலக் கிடக்குதடா எடியெய்
சரசு ஐயா வாறார் போல கிடக்கு. ஒடிப்போய் கேற்றைத் திறந்து விடு.
சரியம்மா.
உதென்னடா மோனை அப்பாவோடை செல்வரஞ்சிதமெல்லோ
வருகிறாள் போன வைகாசியிலை தானே போனவள். அதுக்கிடயிலை லீவிலை வாறாளோ செல்வரஞ்சிதம் .மகள். இப்பிடி மெலிஞ்சு போனாய் இதென்னடி கைகால் எல்லாம் காயமாய்க் கிடக்கு ?. எட சூடு வச்சிருக்கிறாங்கள் போலையெல்லோ கிடக்கு ஆர் மகள் இதெல்லாம் செய்தது நீ கந்தோரிலயெல்லோ வேலைக்குச் சேர்ந்தனி பிறகெப்பிடி அம்மா இதெல்லாம்.
(அழுதழுது தாயின் தோளில் சாய்ந்து). எல்லாம் தலைவிதியம்மா கந்தோர் ைேலயெண்டு தான் அனுப்பினவையள். ஆனால் அங்கை போனபிறகுதான் வீட்டுப் பணிப்பெண் வேலையெண்டு

&Fijgt
prT85 blost
சுந்தரம்
வினைப்பயன் 169
தெரிஞ்சுது. பொல்லாத மனிசியும் மனிசனும் அம்மா. கொடுமைக்காரர். வேலையும் கடுமை. விடிய நாலு மணிக்குத் தொடங்கினா இரவு பன்னிரண்டு மணி வரைக்கும் ஓயாத வேலைதானம்மா இல்லையெண்டால் இப்பிடித்தான். அடி, உதை சூடு எல்லாம் வாங்கணும். என்னால முடியல அம்மா. நான் எம்பஸ்ஸியிலை முறைப்பாடு செய்து புறப்பட்டு வந்திட்டன் அம்மா. மகள் அடி சரசு.
(ஓவென அழுது) ஐயோ! என்னம்மா கொடுமை
ஐயோ பெத்த வயிறு பத்தி எரியுதே. மோசம் போயிட்டோமே
யம்மா. நாசமாய்ப் போவார் என்ரை பிள்ளையைப் படுத்தியிருக்கிற கொடுமையை நான் என்னத்தைச் சொல்லுவன் கடவுளே
போதும். போதும். நாகம்மா அழாதை .உன்ரை மகள்
உயிரோடையாவது வந்திட்டாள் எண்டு கடவுளுக்கு நன்றி சொல்லு. ம். கையில காலிலை ஆணிஅடிச்சு, அடிபட்டு வந்தவையஞம் இருக்கினம். எல்லாம் வினைப்பயன் தான். எல்லோரும் மனிசனை மனிசன் மதிக்க வேணும். அதுதான் வழி அது எங்களுக்கும் ஓம். உனக்கும் பொருந்தும் .என்னசெய்யிறது படிப்பினையென்று மனதைத்தேற்றிக்கொண்டு அவள் பிள்ளையைத் தேற்று.

Page 100
இருகோடுகள்
பிரதியாக்கம் திரு. வி. விஜயகுமார்
10.
இடம்
ராமு
பாத்திரங்கள்
கணேசன்
95LO6)[T
கண்ணம்மா
ராமு சுதாகர்
மாலினி
செல்வம்
மாணிக்கம்
உரைஞர் குழுக்கள்
வரவேற்புப் பாடல்
நாடகம் கண்டு ரசிக்க தெரிந்தோர் நடுவினில் வந்து ஆட விழைந்தோர் வணக்கங்கள் கோடி அனைவருக்கும்
asir él: 1
கணேசன் வீடு அம்மா!. அ. ம். மா (என்றழைத்த வண்ணம் அரங்கின் LC மையத்திற்கு வருகின்றான். அதனை சற்று OR பகுதியில் தாய் ஊதிய வண்ணம் இருந்தவள் அவனின் சத்தம் கேட்டு வருகின்றாள்.)
 

SOG)T
85OGA) fT
56T600TubLost
SG)
கணேசன்
sarrossTubLomt
கணேசன்
ராமு
கணேசன்
SOGT
கணேசன்
ராமு
இருகோடுகள் 171
ராசா. ஏ.தங்கமே. ஏம்பா அழுகிற ப. ப ப. பசிக்கிறது. ஏ. (என்று அழுகிறான்)
கொஞ்சம் பொறப்பா. அடுப்பில் சாதம் வைச்சிருக்கேன். இன்னும்
கொஞ்ச நேரத்தில அவிந்திடும் சாப்பிடலாம். (அவனை அரவணைத்து மடியில் வைத்தவண்ணம்) ஒ. அப்பாட குடியாலதான் இந்த குடும்பமே சீரழிஞ்சு சின்னாபின்னமா போனது. அவராவது கொஞ்சம் நம்ம குடும்பத்த பத்தி நினைச்சா நம்ம வாழ்வும் நல்லாயிருக்கும்.
நொண்டிப் பயல விட்டிட்டு என்ட டிப்பன் பொக்ஸ் தேடித்தாம்மா.
(அவளை கன்னத்தில் தட்டி) அவன் உண்டதம்பி தானடி. அவன
ஏண்டி இப்படி பழிக்கிற. உனக்கெல்லாம். படிக்கிற என்ற திமிறடி. (முகத்தை சுழித்தல்) கமலம் உள்ளே (DR) செல்லுதல். தந்தை கணேசன் UL பகுதியினூடு வருதல்.கண்ணம்மா CRல் நிற்றல்.
(கண்ணம்மா அழுத வண்ணம் வருதல்) ஏம்மா அழுகிற . யார்
புள்ளய அடிச்சது. யாரம்மா புள்ளய அடிச்சது.
அப்பா. அம்மாதாம்பா டிப்பன் பொக்ஸ காணால என்று சொல்ல
அடிக்கிறா அப்பா.
! ஐயோ காலையிலேயே மனுசனுக்கு கரைச்சலப்பா. ஏய் கமலம்
இங்க வாடி, பாவம் படிக்கிற புள்ள. இவளுக்கு முதல்ல சாப்பாட குடுடி
(அரக்கி அரக்கி). அப்பா பாய்பாய்
சிவ சிவா. கருமம். கருமம் காலையிலேயே இவன்ட
முழிவியளமா..? போச்சி இண்டைக்கு என்னென்ன நடக்குமோ . ஏன்டி கமலம் எங்கம்மா. ஐயோ அந்த நொண்டிக் கழுதைய ஏன்டி இப்ப தொறந்து விட்ட விடியவே. அப்பாண்டு வாய் பொடிக்குது. . த அண்டைக்கே சொன்னன் ஏதாச்சி ஒரு குப்பத் தொட்டியில போட்டுரலாமுனு. கேட்டியா..?
ஏங்க இப்படி பேசிறீங்க. அவனும் நம்மட பிள்ள தானுங்க. பிள்ள. ஒலகத்திலேயே இல்லாத பிள்ளைய பெத்திருக்கா (பக்க
த்தில் இருந்த சாப்பாட்டுக் கோப்பய தட்ட வீசிய வண்ணம் UR ஊடு வெளியேறல்.
(தேம்பி தேம்பி அழுகிறான்) அம்மா எ. எ. ஏம்மா என்னமட்டும்
இப்படிப் பெத்திங்க . அப்பா, அக்கா, எல்லோரும் என்ன பேசிறாங்கம்மா.

Page 101
172
906)
நகல்
அழாதப்பா ஒனக்கு ஒ சித்தாக்கிட்ட பணம் வாங்கி இந்த
அம்மா ஒன்ன நடக்க வைப்பாடா. அழாத ஏதங்கமே. (உணவு ஊட்டுதல்)
(ஒலிகளின் மூலம் காட்சி மாறல்களை ஏற்படுத்தல்.
அரங்கை கறுப்பு ஒளி சங்கமித்தல்)
காட்சி: 2
இடம் : சுதாகர் வீடு
சுதாகர்
மாலினி
சுதாகர்
மாலினி
உரைஞர்
: LDTQS6ós.. udstGÓlaf... (CC)
: GT6T60TrÈ5 (DL)
அந்த பிரவண் கலர் டையை கொஞ்சம் எடுத்திட்டுவா. (எடுத்து
வந்து கொடுத்தல்) இண்டைக்கு ஒரு மார்க்கமாதான் இருக்க இப்படியே இரு ஆபிஸ் போயிட்டு வாறன் (என்று கூறி கன்னத் தில் கிள்ளி வெளியேற முற்படுதல். ஏதர்ச்சியாக சுதாகர் செல்வத்தைக் காணுதல். இவனைப்பற்றி மாலினி கூறியதை நினைத்து மனதில் பல்வேறு குழப்பங்களுடன் (DR) சுற்றி வருதல். வெளியேறுதல் பார்வையாளர்களுக்கு இதனை வெளிப்படுத்தல்.)
(செல்வத்தைப் பார்த்த இவளோ தலையினை குனிந்த வண்ணம்
உள்ளே செல்லுதல்). அங்கு ஆ. என்று கண்ணீர் வடித்தல். என்னை ஏ கடவுளே இப்படி சோதிக்கிறாய்.
(பார்வையாளருக்கு உரைஞர் கருத்தினைக் கூறல் -மாலினியும்,
செல்வமும் உரை முடியும் வரை சிலைபோல நிற்றல்) மாலினியும், செல்வமும் முன்பு காதல்கொண்டனர். இருவரும் ஏழை குடும்பம் என்பதால் பெற்றோர் மறுத்தனர். இதன்பொருட்டு செல்வமோ வெளிநாடு சென்றான். ஆனால் விதி யாரையும் விட்டு வைக்க வில்லை. மாலினியின் அழகைப்பார்த்து சம்பந்தம் கூடிவந்தது. அவளது தாய் தந்தையின் பிடிவாதத்தின் மத்தியிலும், தனது அக்காவின் வரதட்சணையை மனதில் வைத்தும் இவளுக்கு திருமணம் என்னும் புது சொந்தம் அறிமுகமானது. பின்பு இது வெளிநாட்டிலிருந்து வந்த செல்வத்திற்கு அதிர்ச்சியாயிருந்தது. எது எப்படி இருந்த போதிலும் மாலினி இன்னொருவரின் மனைவி என்பதை இதயத்தில் வைத்துக் கொண்ட செல்வம் தன் காதலை மறக்கவும் முடியாமல் சிறை கைதியைப் போல வாடுகிறான்.

இருகோடுகள் 173
பணத்தின் மீது மோகம் கொண்ட மாலினியின் தாய்தந்தையரையும் விதி எனும் போர்வை அவர்களையும் விட்டுவைக்கவில்லை.
(அரங்கின் மீது ஆபத்தை வெளிப்படுத்தும் முகமாக சிவப்பு ஒளியினைப் பாய்ச்சு தல். பின்னர் காட்சி மாற்றத்தைக் காட்டுதல்)
காட்சி: 3
இடம் : கணேசன் வீடு
கணேசன்
so
மாணிக்கம்
கணேசன்
மாணிக்கம்
கணேசன்
JITGp
கணேசன்
ஏய் கமலம் வெளிய வாடி
ஏங்க . குடிச்சிட்டு வந்து வாங்குங்க.. குடும்ப மானமே
போகுதுங்க. வாங்களேங்க. புள்ளைகளெல்லாம் அழுகிறாங்க. வாங்கங்க. மானமே போகுதுங்க.
கணேசண்ண. உள்ளே போங்கண்ண.
யாருடா என்ன கணேசன் எண்டது. டேய் கல்லடி கணேசன்..!
நம்மகிட்ட வச்சிக்கிட்ட (என்று கூறி கீழேவிழுதல்) அவ்வளவு தான். வாயில்புலம்புதல். (அந்தநேரம் பார்த்து வலுவிழந்தோர் காப்பகத்தில் பணிபுரிபவர் அவ்வழியால் செல்லுதல். இந்தக் காட்சியின் போது ஏனைய மாந்தர்கள் வேடமணிந்து அயலவர் போன்று காட்சியளிப்பார்)
(கணேசரை இழுத்த வண்ணம் உள்ளே கொண்டு செல்லுதல்).
அப் புறம் வாறன் அக்கா. அண்ணைய பார்த்துக் கொள்ளுங்க.
ஏன்னடி. வக்காளத்து வாங்கிறானா. ஆமா.என்ன சொன்ன.
ஏ.ஓ. ஒ. குடும்ப மானத்த வாங்கிறனா. எவளவு குடுத்து வாங்கிறன்டி என்ர கண்டுகுட்டி. (ராமு அரக்கி - அரக்கி வருகிறான்). ஆ. ஆ. ஆ ஓ அப்பேன் அதாவது மைடியர் மாமா உன்ன கட்டும் போது ஒரு டப்பா குடத்தையும் நாலு குண்டு மணியையும் தந்து இந்தாங்க மாப்புள. ஏ கண்ணையே ஓங்கிட்ட ஒப்படைக்கிறேனு சொன்னார். அதவச்சி என்னடி அலரிமாளிகையா கட்டமுடியும். ஏ மரியாதையா ஓ தங்கச்சிக்கிட்ட சொல்லி மீதிப் பணத்தையும் கொண்டந் தா அப்ப தான் நம்ப குடும்பமும் உருப்படும்.
அப்பா. அப்பா. அம்மாவ பேசாதீங்க..!
பாரு. பண்ணாட இந்தமூஞ்சில முழிச்சிட்டுப் போனா விடியுமா.
ஏன்டா நிக்கிர போய் சாகிடா. எனக்கு வந்து பிள்ளையா பிறந்து தொல் லைய தந்துக்கிட்டு இருக்கியே. (என்று கூறி கீழேவிழுதல்)

Page 102
174
85LD6)f
நகல்
ஏன்டா அழுகிற. ஏன் கண்ணில அழாத. கடவுளே இன்னும்
எத்தினை நாளைக்கு தான் இந்த துன்பமோ. ஆண்டவா..! இப்படிப்பட்ட குடிகாரனைக் கட்டி ஏ வாழ்க்கையிலையும் மண்ணள்ளிப் போட்டு ஏ பிள்ளைகளின்ட வாழ்க்கையிலையும் மண்ணள்ளிப் போட்டுட்டானே. கடவுளே என்ன மட்டும் ஏம்பா இப்படி சோதிக்கிற (அவளது அழுகையினூடாக காட்சி மாற்றம் காட்டப்படுகின்றது).
காட்சி: 4
இடம் : சுதாகர் வீடு (மாலை சுதாகர் வேலை முடிந்து office ல் இருந்து வீட்டிற்கு வருதல்)
சுதாகர்
65l60חLo
சுதாகர் மாலினி
சுதாகர்
மமுாலினி
சுதாகர்
மாலினி
மாலினி. மாலினி.
வாரேங்க
: மாலு
வந்திட்டேன். என்னங்க ஆபிசில வேல அதிகமோ . முகம்
எல்லாம் வாடியிருக்கு. ந்தாங்க டீ.
(மடக் மடக் என்று குடிச்சிட்டு) டீ யில முதல் இருந்த சுவையே
இல்ல. இப்ப வெறும் சப்பினு இருக்கு (UL). (மாலினிக்கு இது புதுசல்ல . என்னத்தான் தன் கணவன் காலையில் அவளைக் கட்டி அரவணைத் தாலும் மாலையில் அவளின் பலவீனங்களில் விளையாடுவதே அவனின் தொழில்) ஆமாம் மாலினி ஓங்க கிட்ட கேக்க மறந்திட்டன். செல்வம் ஏன் ஓங்கிட்ட வந்தானாம். பழைய உறவ புதுப்பிக்க வந்தானா. இல்ல நீயே சீ இல்ல . இல்ல. என்னப்பத்தி எதுவும் சொன்னானா..?
ஏங்க இப்படி பேசிறீங்க உங்களுக்குத்தான் நான் எல்லா
உண்மையும் சொன்னேன் தானங்க. அப்புறம் ஏங்க இப்படி தினமும் கொல்லாம கொல்லுறீங்க
ஆ.நீ பத்தினிபாரு. ஏகிட்ட என்ன சொன்ன. நான் ஒருத்தன
லவ் பண்ணினனு மட்டும் தான் சொன்ன. உன்ன லவ் பண்ணினவன் என் மனத தினமும் வந்து கொல்லுறானே. எனக்கு என்னமோ அணில் கடிச்ச பழத்த அவசரப்பட்டு தின்னுட்டனோ என்று அவமானமா இருக்கு.
சீ. நீங்கள் எல்லாம் மனுசனா. நம்மட வாழ்வில் ஒரு பிரிவு
வரகூடாதுனு நான் உங்ககிட்ட சொன்னன். உண்மையிலேயே என்னட வாழ்க்கைபந்தாட்டம். தினமும்தட்டி விளையாடறீங்களே.

சுதாகர்
மாலினி
சுதாகர்
உரைஞர்
இருகோடுகள் 175
ஒரு பொண்ணு எதவேனுமானாலும் யாரிடமும் பகிர்ந்து கொள்ளுவா. ஆனா கற்ப மட்டும் . கடடின கணவனோடதான். நீங்க ஒரு சைக்கோ. நீங்க ஒரு சந்தேகப் பிராணி. (பட்டென்று கன்னத்தில் அடித்து) பேசாத ஊரே நம்பலப்பத்திப் பேசுது. பணத்துக்காக இண்டைக்கு அவனை விட்டிட்டு எங்கிட்ட வந்த நீ நாளைக்கு என்னவிடப் பணக்காரன் வந்தா அவனோட போமாட்டேனு என்ன நிச்சயம்
அம்மா. (அழுதல்) கதறியழு நல்லா கதறி அழு
(இருவரும் சிலையைப் போல் இருக்கின்றனர்.) "ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமை - என்று எண்ணி இருந்தவர் மாய்ந்து விட்டார் வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போம் என்ற விந்தை மனிதர் தலைகுனிந்தார் மாட்டை அடித்து வசக்கித் தொழுவினில் மாட்டும் வழக்கத்தை கொண்டு வந்தே வீட்டினுள் எம்மிடம் காட்டவந்தார் - அதை வெட்டி விட்டோம் என்று கும்மியடி.” ஆம் பாரதியின் கவிதை அன்றே பெண் விடுதலை பற்றி பாரதி கூறிவிட்டான். ஆனால் இன்றும் பெண்கள் சிலர் மடையர்களின் கையில் மாட்டும் சமுதாயமே காணப்படுகிற பெண்ணுக்கென்று ஒரு வரையறை உண்டு. ஒடுக்க ஒடுக்க உறைந்து போகும் கறையல்ல பெண்ணடா. மலை எரிமலை. தான் பெண்ணடா. குமுறுவதற்கு முன் எச்ச ரிக்கை செய்வதில்லை. (அரங்கை சுற்றி காட்சி மாற்றத்திற்காக சகல ஒளி விதானப்புகளும் நிறுத்தப்படுகின்றது. கோரஸ் ஆ ஆ ஆ ஆ என்ற சத்தத்துடன் காட்சி மாறுகிறது).
காட்சி: 5
இடம் : கணேசன் வீடு
56T600T bLost
ராமு
கண்ணம்மா
: 9 bud IT. 9||b|DT..!!
அக்கா. அக்கா. வாவேன் விளையாடுவம்.
அம்மா. இவனால நான் வெளிய போக முடியாம இருக்கிறது.
வகுப்பிலையும் எல்லோரும் ஓ தம்பி ஊனமாமே என்று

Page 103
176
SGT
மாலினி
ராமு
மாலினி
506)
மாலினி
கணேசன்
SSD 60T
மாலினி
கணேசன்
ராமு கணேசன்
956)T
கணேசன்
மாணிக்கம்
கணேசன்
நகல்
பழிக்கிறாங்க. அப்பா நான் இனி பள்ளிக்கூடமே போகலை (என்று கூறி அப்பாவிடம் வந்து சேருதல்)
அப்பாவுக்கும் பிள்ளைக்கும் பொழுது போகலையா. விடியவே
ஆரம்பிச்சுட்டீங்களா. உங்கட பஞ்சாங்கத்த வாடாசெல்லம்.
: அக்கா (என்று கூறி உள்ளே நுழைதல் CR)
: சித்தி சித்தி வாங்க ! தங்கம். இந்தா சித்தா உனக்கு என்ன வாங்கிட்டு வந்திருக்கேன்
பாரு. ஆமாம்.அக்கா எங்க மாமா?
! இப்பத்தான் இஞ்சை வாறதுக்கு வழி தெரிஞ்சுச்சோ. வா
சாப்பிட்டியா..? ஆமாம் ஓ வீட்டுக்காரர் வரல நீமட்டும் வந்திருக்க.
அவர் ஆபிசில வேலையினு போயிட்டார். அது தான் வரல (சின்ன இருமலுடன்) என்ன இந்தப்பக்கம்.இப்பத் தான் காத்து
வீசிச்சோ. ம். காசும் வீசியிருக்கணும் இல்லையா? நானும் ஏதோ பெரிசா எதிர்பார்த்த மாதிரி.
ஏங்க வீட்டுக்கு வந்தவகிட்ட இப்படியாங்க பேசிறது.
இந்தாக்கா . வை உண்மைய சொன்னா கோபம் பொத்துக்கிட்டு வருதோ அக்காக்கும்
தங்கைக்கும்.
அப்பா சித்தாவுக்கு பேசாதீங்க (அழுதல்) எங்க வம்சத்தையே குழிதோண்டிப்புதைக்க வந்திருக்கான்.
சாவுகிறாக்கி. இவன தூக்கிகிட்டு உள்ளே போடி கருமம். கருமம்.
ஏங்க . அவனும் நம்ம பிள்ளதாங்க. அவனைமட்டும் ஏங்க
பிரிச்சுப் பேசுறிங்க.
என்னய எதிர்த்துப் பேசிற தாயும் பிள்ளையும். வெளியே
போங்கடி. போய் நடுதெருவில பிச்சை எடுங்க அப்பதான். என்ர அரும தெரியும்.போ.
என்ன கணேசண்ண பாவம் இப்படிசண்டபோட்டு குடும்பத்தையே
தெருவுக்கு கொண்டு வந்திராதீங்க. அயல் வீட்டுக்காரன் என்ற முறையில சொல்லுறன்.
யார் நீங்க..? போய் ஒங்க வேலைய மட்டும்பாருங்க. எதிர்வீட்டுப்
பிரச்சினையில விளக்குப்பிடிக்க வராதீங்க. எவன் எவன் எல்லாம் என் குடும்பத்தப் பத்திப் பேசுறான் பாத்தியா. கருமம்.கருமம். நான் வரும் போது இந்த நொண்டிப்பய இங்க இருக்கக் கூடாது.

ராமு
5)6)
மாலினி
மாணிக்கம்
ymrGp
856)
குழு1
S6)
மாலினி
இருகோடுகள் 177
அப்படி இருந்தா நானெ கொண்டு போட்டிடுவன். சனியன். ஏய் கமலம். சொன்னதச் செய் (என்று கூறி விட்டு வெளியேறல்)
ஏம்மாநான் ஊனமா பிறந்தது ஏன் பிழையாம்மா..? அப்பாவுக்கு
ஏம்மா என்னப் பிடிக்குதே இல்ல. நான் எல்லாருடைய சந்தோசத்திலயும் மண்ணள்ளிப் போடுரேனாம்மா. பேசாம என்ன கொண்டிடுங்கம்மா.
ஐயோ ஆண்டவா! ஏ தங்கமில்ல அழாத.
: இங்க பாருங்க அக்கா இந்தச் சின்னப்பயலப் பத்தி கணேசன்ன
ஒரு தப்பான கோணத்தில பாக்கிறார். ஒவ்வொரு நாளையிலும் அவனை இப்படிப் பேசிப் பேசியே அவண்ட மனசில இவரு நச்சு கலந்திட்டாரு இவன இங்க வச்சி சந்தோசமாக வச்சிருக்க முடியாது. பேசாம இவன எனக்கு தெரிஞ்ச இடம் ஒன்றிருக்கு. அங்க விடுவம். சந்தோசம் என்னன்று இவன் அறியட்டும். ஒவ்வொரு நாளும் அவன் இங்க சாகிறதக்கு அங்க போய் சந்தோசமாய் இருக்கட்டும் . என்ன சொல்றீங்க. ?
அம்மா அம்மா நான் போகலை. உங்கள விட்டு
போகமாட்டேம்மா.
ராசா! நீ கொஞ்சம் கொஞ்சமா சாகிறதுக்கா உன்னைப் பெத்தன்.
வேண்டாம்டா இந்த உலகம் உனக்கு வேணாம். நீ தேடுற வேறு உலகத்தில போய் வாழடா (என்றழுதல். மாலினி அவளை தாங்கிய வண்ணம் அழுகிறாள்)
(வந்து கொண்டு) அம்மாவணக்கம் அம்மா. நாங்க வலுவிழந்தோர்
காப்பகத்தில இருந்து வருகிறோம். உங்கட குடும்ப நிலைபற்றி சுரேந்திரன் சொன்னார். அது தான் உங்கள சந்திச்சு உங்கட மகன நாங்க தத்தெடுத்திட்டுப் போக வந்திருக்கிறோம். நீங்க எப்ப வேணும் எண்டாலும் வந்து உங்கட பையனபார்க்கலாம். (என்று கூறி ராமுவைத் தொடுதல்)
. வேணாம். என்டமகன் எனக்கு வேணும். நான் தரமாட்டன்.
(அழுதல்)
: அக்கா அவன விடு அக்கா. வேணாம் அவன அனுப்பி விடு.
ஓ புள்ள கோகுலத்தில வளரட்டும். இங்க வேணாமக்கா ஐயோ கடவுளே (ராமு அழுது நிற்க குழுவினர் அவனைத் தேற்றி அழைத்துச் செல்லல்)

Page 104
1.78
உரைஞர்
நகல்
(எல்லோரும் சிலையாகின்றனர்) சமூகத்தில் ஒடுக்கப்பட்ட
இதயங்களுக்கு உறவு எனும் பாலத்தை உருவாக்கிக் கொடுக்க சமுதாயம் எனும் இரத்தநாளம் ஓடிக்கொண்டிருக்கும்.)
காட்சி: 6
இடம் : சுதாகர் வீடு
செல்வம்
சுதாகர்
கோரஸ்
(சுதாகரின் வீட்டிற்கு அருகில் வந்து மாலினியைப் பார்த்து) ஒரு
நிமிடம் உங்ககூட கதைக்கனும் . நான் என்ன தப்பு செஞ்சேன் எண்டு எனக்குத்தெரியல (மாலினி அழுதவண்ணம் உள்ளே செல்லுதல். சுதாகர் officeல் இருந்து செல்வம் பாதையினூடாக வெளியேறல்)
(அழுதவண்ணம்இருந்த மாலினியைப் பார்த்து) ஏ. பொண்டாட்டி
கண்ணகி மாதிரி கண்ணகி மாதிரினு சொன்னனே ஆனால் இவ மாதவி மாதிரி மரத்துக்கு மரம் தாவிக்கொண்டு இருக்காளே. ஏய் என்னைப் பாக்கிற . உனக்கெல்லாம் என்னத்துக்குடிதாலி. ஐயோ! காலையிலை அவனோட குடும்பம் நடத்துற. இரவில என்னோட குடும்பம் நடத்துற பெண்ணா நீ இது. அங்க மட்டுமா..? நேற்று அக்கா வீட்டனு சொன்னியே. அதுவும் பொய்யா..? ஐயோ ஆண்டவா (மாலனி அழுதல்). ஆழாதடி நாட்டியக்காரி. நல்லா நடிக்கிறா.இந்த வாழ்க்கை வாழுறதுக்கு விஷம் குடிச்சு சாகிடி. (உள்ளே செல்லல் (UR). அவளின் இருப்பிடம் மட்டும் வெளிச்சம் அடிக்கிறது.
ஆஆ. ஆஆ என்று சத்தம் எழுப்புதல்)
கதவு மெதுவாக சாத்தப்படுகிறது
காட்சி: 7
இடம் : வலுவிழந்தோர் காப்பகம்
(35(9
ராமுவை அவர்கள் தூக்கி விளையாடுதல். அவன் சிரித்து சிரித்து
விளையாடுகிறான். குடும்பத்த மறந்து அவன் சிரித்து விளையாடுகிறான். தாய் கமலா இதனை மறைந்து பார்த்து விட்டு அவனின் சந்தோசத்தை கெடுக்காம தன் கண்களைத் துடைத்து விட்டு வெளியேறுதல் (மஞ்சள் நிற ஒளியைப் பிரயோகித்தல்)

இருகோடுகள் 179
asmléA: 8
இடம் : சுதாகர் வீடு (காலையில் இரண்டு ரோஜாப் பூக்களுடன் ஒரு மடலும் வீட்டிற்கு அருகில்
இருக்கிறது)
சுதாகர்
மாலினி
சுதாகர்
சுதாகர்
மாலினி
சுதாகர்
மாலினி
உரைஞர்
கதவு
மெல்லத் திறக்கிறது.
(வந்து பார்த்து விட்டு) ஏய் மாலினி ஏய் மாலினி உன்ன நேற்று
வந்துபாத்த கள்ளக்காதலன் இண்டைக்கு பரிசம்போட ரோஜாச் செடியோட வந்திருக்காண்டி. வாடி வெளியே (மாலினி வெளியே வருதல்) பாத்தியாடி. உன்ட கள்ளக் காதலன்ட லட்சணத்த வடிவாபார்.
(அழுது) எனக்கு ஒண்டுமே தெரியாதுங்க. ஏங்க இப்படி என்ன
கொல்லுறீங்க (கடிதம் பறந்து வந்து அவளின் முகத்தில் மோதுதல். அதனை அவள் படித்தல். அதனை வாங்கி சுதாகர் படித்தல்)
இதோ பாரு .உன்ர கள்ளக் காதலன்ட காதல்கடிதம். படிக்கி
றேன் கேளு. அன்புள்ள முதல் மலரே. காலத்தின் கட்டாயத்தில் ஏழை என முடிசூட்டப்பட்டு காதலில் பிரிந்தோம். நமது வாழ்க்கை நாடகம் போல தோன்றி மறைந்து விட்டது. விதி நமது வாழ்க்கையில் வீணை வாசித்து விட்டது. என் ஒருவனால் உன் வாழ்வு தினமும் பூனையிடம் சிக்கிய எலிபோல ஆகிவிட்டது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே என் மண்ணுடலைத் தண்ணீரிலே சங்கமிக்கிறேன். வழிதந்தால் மாத்திரம் என்னுடல் மண்ணை சங்கமிக்கும். இறுதிவரை புரியவில்லை நான் செய்த தவறு. நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டோம். என்றும் அன்புடன் செல்வம். சுதாகருடைய கண்ணில் இருந்தும் கண்ணீர் வந்தது. (மடல் வாசித்து முடிய மாலினி பையுடன் வெளியேறுதல்)
நான் தவறு செய்துள்ளேன். அதை உணர்கிறேன். என்னை
மன்னித்து விடு மாலினி.
நான் நிறைய அனுபவித்து விட்டேன். நான் என்ட வாழ்க்கையை
(அழுது) ஒடுக்கப்பட்டவர்களுக்காக வாழப் போகிறேன்.
நாம் இனி இணையவே முடியாதா..?
: காலம் எனும் பிரிவில் பிரிந்து செல்கிறோம். விடியல் எனும்
உதயம் வந்தால் பார்க்கலாம் என்று கூறி கதவை இழுத்துச் சாத்துகிறாள்.
சமுதாயம் என்பது ஒரு ஆயுதப் போராட்டம். அதில் வாழ்வ
தென்றால் போராட வேண்டும் என்பதைக் காட்டிவிட்டார்கள். இது மனிதநேயமுள்ள சமுதாயம் எங்கும் எவரும் வாழலாம்.

Page 105
18O நகல்
உம்மை நேசிப்பவர் எங்காவது இருப்பர். கறைபடிந்த
சமுதாயத்தை வே ரறுத்து புதிய சமூகம் ஒன்றை உருவாக்குங்கள்.
அரங்கின் அமைப்பு
UR UC UL
CR CC || CIL
DR DC DL
ஒளியின் பாவனைகள்
சிவப்பு ஆபத்து, கோபம், அழிவு மஞ்சள் இளமை, ஆரோக்கியம் கறுப்பு இறப்பு, பயங்கரம் வெள்ளை தூய்மை , சமாதானம்
நீலம் இரவு, உண்மை, உணர்வு

உறவுகள்
பிரதியாக்கம்
செல்வி த. திரேசா
பாத்திரங்கள்
13 பணக்கார குடும்பம்
{}
d
(s
()
(s
பாட்டிசரசு (75)
தந்தை வரதன் (56) தாய் சாந்தி (45) மகன் நிலுக்சன் (19) மகள் வாணி (16) நண்பி ஜோதி (16) வேலைக்காரி தேவி (14)
14 சாதாரண குடும்பம்
s
d
(s
பாட்டி செல்லம்மா (82) தந்தை மாணிக்கம் (52) தாய் லக்சுமி (50)
மகன் சுமன் (16)
மகள் சுமதி (19)
காட்சி: 1
(மேடையின் DR மூலையிலிருந்து அரங்கிற்குள் நுழையும் செல்லம்மா தனது வயது முதிர்ச்சியை நடையிலும் பார்வையிலும் புலப்படுத்தியவராய் அரங்கின் CC பகுதியில் சென்றமர்ந்து DL பகுதியை நோக்கி தன் பார்வைகளால் தேடுகிறாள்)

Page 106
182
செல்லம்மா
சரசு
செல்லம்மா
சரசு
செல்லம்மா
சரசு
செல்லம்மா
சரசு
செல்லம்மா
சரசு
செல்லம்மா
சரசு
செல்லம்மா
நகல்
அப்பப்பா என்ன வெயில் இப்பிடியே போச்சுதெண்டால்
நாங்களெல்லாம் பொசுங்கிப் போடுவம் போல கிடக்கு. ம். எங்க இன்னும் சரசுவைக் காணேலை (பார்வையாளர் பக்கமும் தேடுகிறாள்). இவளுக்கு வருத்தம் ஏதாச்சும் வந்திட்டுதோ?. (பார்வையாளரை நோக்கி) இந்த மரத்தடியில இருக்கிறப்போ என்ன சுகமா இருக்கு. உண்மையில இந்த காத்த வாங்கத் தானே, நாங்க ரெண்டு பேரும் தள்ளாடி தள்ளாடி வாறம். (மீண்டும் சுற்று முற்றும் தேடுகிறாள். சரசு அரங்கின் CC பகுதியிலிருந்து உட்பிரவேசித்தல்) ஆ. அங்க வாறாள்.
என்ன வாழ்க்க, எத்தினை நாளுக்குத் தான் இப்பிடிக் கிடந்து
சாகப் போறனே (என்று கூறியபடி CC பகுதியில் சென்றமர்கிறாள்)
ஓமோம். சரசு. இந்த நெருப்பு வெயில தாங்க முடியல தான்
(கண்களைக் கசக்கியபடி) இல்ல செல்லம், நெருப்ப வெய்யில
தாங்கலாம் ஆனா . என்ர வீட்டில இருக்கிறவங்க வாயால கொட்டுறத தான் என்னால தாங்க முடியல.
ஏன் சரசு, என்ன ஆச்சு..?
எப்பவும் போல தான், அந்த வீட்டில என்ன யாருக்குமே
பிடிக்குதில்ல.
சரி. சரி. இதெல்லாம் மனசில போட்டு யோசிக்காம இரு.
காலம் ரொம்ப கெட்டுப் போச்சு.
மருமகதான் கொடுமப் படுத்திறாளெண்டால், நேற்று முளைச்சது
கூட கண்டபடி பேசுது (அழுகிறாள்)
(சரசு தலையைத் தடவி) இங்க பாரு சரசு. இப்பத்தய பிள்ளயன்
தலகால் புரியாம ஆடுதுகள். இதெல்லாத்தையும் நீ யோசிச்சா, இப்ப உனக்கு பிறசர் தான் கூடப்போகுது.
ம்.நா இருந்த என்னத்த சாதிக்கப் போறன். போய்ச் சேருவம்.
ஐயோ!!
என்ன சரசு. ஏதாச்சும் செய்யுதா..?
(பதற்றத்தடன்) ஒன்னுமில்லை. மறந்து போச்சு உடுப்புக் கழுவிப்
போடாம வந்திட்டன். நா போயிட்டு வாறன். பிறகு வாறன். (கட கட வென வந்த வழியால் செல்கிறாள். செல்லம்மா அவர் போகும் திசையைப் பார்த்து விட்டு. சபையோரைப் பார்த்து)
! (பெருமூச்சுவிட்டு) ம். அந்தக் காலத்திலை எப்படி இருந்தவள்.
இண்டைக்கு . பாவியள் இவளின்ரை சொத்தெல்லாத்தையும் அனுபவிச்சுக் கொண்டு, படுத்தாத பாடு படுத்திறாளுகள்

உறவுகள் 183
அனுபவிப்பாள். ஒட்டு மொத்தமா அனுபவிப்பாள். பெண்பாவம் பொல்லாதது. வயசு போன நம்மள இப்ப நாயைவிட கேவலமாவ வச்சிருக்குதுகள். ம். அந்த வகேல நான் குடுத்து வைச்சவள். ஆமா நான் குடுத்து வைச்சவள். (எழுந்து வந்த வழி நோக்கி சென்று கொண்டு) போவம். நான் மட்டும் இதிலை இருந்து என்ன செய்ய. பாவம் அவள். (கண்ணை கசக்கியவாறு
செல்கிறாள்)
asmál: 2
(பணக்கார வீட்டில் வரவேற்பறையில் தாய் சாந்தி கணனியில் வெளி நாட்டிலுள்ள
ஒருவருடன் சந்தோசமாக உரையாடிக் கொண்டிருக்கிறாள்)
சாந்தி : இல்ல மச்சாள். என்ர பிள்ளயஞம் நல்ல கெட்டிக்காரர் தான், ம், பெடி பிரச்சன இல்ல, இங்கத்தய காவாலியள் மாதிரி இல்ல படிப்பு படிப்பு எண்டு தான். ஓமோம். ஆ. மாமி வெளியே போட்டா. நீங்க எப்ப யாழ்ப்பாணம் வாறிங்கள். ஆ. மாமியைக் கூட்டிட்டு போகப் போரீங்களோ..? விரும்ப மாட்டா. ம். எங்கள விட்டிட்டு வருவாவே. ஆ (வெளியே யாரோ கூப்பிடுதல்.) மச்சாள் யாரோ வெளியே கூப்பிடினம், கொஞ்சம் லேற்றா எடுக்கிறன் (அரங்கின் DL பகுதிக்கு வந்து) யாரு. ஆ.ஜோதி. வாங்கோ. வாங்கோ.
ஜோதி ! அன்ரி வாணி நிக்கிறாள்தானே?
சாந்தி ஒமோம் படிச்சுக் கொண்டிருந்தவள். வெயிற் பண்ணுங்கோ,
பிள்ளை வாணி.வாணி.
(புத்தகத்தை புரட்டியபடி அரங்கினுள் ஊடு நுழைதல்.) என்ன மம்மி. (நண்பியைக்
கண்டவுடன்) ஜோதி எப்ப நீ வந்தனி, கொழும்புப் பயணமெல்லாம் எப்புடிப்
போச்சு
ஜோதி பரவாயில்லடி.
சாந்தி கதச்சிட்டிருங்கோ நான் ரீபோட்டுக்கொண்டு வாறன். (அறைக்குள்
செல்லுகிறாள்)
ஜோதி (அவள் போவதை பார்த்துவிட்டு) என்ன வாணி. நீஉங்கம்மாவைப் பற்றிச்சொல்லுறதெல்லாம் பொய்யாடி, இவ்வளவு நல்லவங்களா. இருக்காங்களே.
வாணி ம் எல்லாம் பாசாங்கு, பத்து நாள் வந்து பாரு புரியுமெல்லாம்
(சாந்தி ரீ யுடன் வந்து கொடுக்கிறாள். இருவரும் எடுத்துக் குடிக்கின்றனர். ஜோதி புறப்பட அவளை தாயும் மகளும் வரியனுப்பியபடி உள் செல்லுதல்)

Page 107
184
நகல்
காட்சி: 3
(சாதாரண வீட்டிலுள்ள வரவேற்பறையை கூட்டியவாறு மகள் சுமதி வருதல்)
சாந்தி
லக்சுமி
சுமதி
லக்சுமி
செல்லம்மா
சுமதி
செல்லம்மா
சுமதி
செல்லம்மா
லக்சுமி
அம்மா அம்மா. (தாய் லக்சுமி கிழிந்த ஆடை ஒன்றை கையால்
தையலிட்ட படி அரங்கின் UR பகுதியால் வரல்). எங்கயண அப்பம்மாவைக் காணேல.?
அவ எங்க போயிருப்பா, ரெண்டு பேரும் இப்ப மரத்தடியில
நல்ல சம்பாசனையாய்த் தான் இருக்கும்.
(கிண்டலாக) ஒரு காலத்தில நீங்களும் எந்த ஊரதை
கதைக்குறிங்களோ..?
ம். இத தான் பிள்ளை இயற்கேன்ர நியதி. (இந்நேரம் செல்லம்மா
சோகமாக வீட்டுக்குள் நுழைகிறார்) ஆ இங்க வாற உங்கட அப்பம்மா, என்ன பிள்ள, ஆளின்ர முகத்தில ஈகூட ஆடேல
(மற்றய கதிரையில் அமர்ந்த படி) நாட்டில வீட்டில நடக்கிறதைப்
பாக்கேக்க, எங்க எங்களுக்கு சந்தோசமும் நின்மதியும் வரப்போகுது.
(அப்பம்மாவை ஆதரவாகப் பற்றியபடி) ஏனனை உங்களுக்கு
இப்ப என்னாச்சு. (சமாதானப்படுத்துபவளாய்) ணேய். எங்கட காலத்தில நாங்கெல்லாம் உங்களப்போல இருப்பமோ தெரியாது.
(கோபமடைந்தவளாய்) ஏன் பிள்ளை, பெரிய பெரிய
வார்த்தையளைக் கொட்டுற. நீ பாரன் ஒரு காலத்தில பெரிய டாக்குத்தரா வந்து சாதிக்கப் போற
(சந்தோசமாய் கட்டியணைத்து முத்தமிட்டு காலைத் தொட்டு
ஆசீர்வாதம் பெறுதல்)
பிள்ள நீ நல்லா படிச்சு சேவ செய்ய வேணும்.
சரிமாமி இதெல்லாம நீங்க இருந்து பாக்க வேணும். வாங்கோ
வந்து சாப்பிடுங்கோ
(சுமதி கூட்டி முடித்து விட மூவரும் உட் செல்லுகிறார்கள்)
காட்சி: 4
(பணக்கார வீட்டில் சாந்தி வரவேற்பறைக்கு வந்து பார்க்கிறாள். அவளது முகத்தில் கோபக்கணை தெரிகிறது)
சாந்தி
தேவி. யேய் தேவி இந்தச் சனியன் எங்கபோய் கிடக்குதோ.
கழுதய வீட்ட அடிக்கடி கூட்டு கூட்டு என்டு சொன்னாலும்,

தேவி சாந்தி
தேவி சாந்தி
வரதன் சாந்தி
வரதன்
சாந்தி
வரதன்
சாந்தி
வரதன்
சரசு
சாந்தி
வரதன்
சரசு
உறவுகள் 185
கழுத செய்யிற மாதிரி தெரியல. தேவி (தேவி தயங்கித் தயங்கி வரல்) வாடி இங்க (தேவிக்கு பலத்த அடி விழுகின்றது)
ஐயோ அம்மா! (கதறுகிறாள்)
என்னடி வந்து ஒரு மாசமாகேல சிக்கன், மட்டன். எண்டு
சாப்பிட்டு இப்ப உன்னாலை குனிஞ்சு நிமிந்து வேல செய்யேலாம இருக்கோ..?
இல்லம்மா. இனிநான் ஒழுங்காசெய்வன். (கெஞ்சுகிறாள்) சனியனே (மீண்டும் அடித்தல்) வீட்ட அழகா கூட்டு (தேவி
உட்செல்லுகிறாள். கணவன் வரதன் வருகிறான்)
சாந்தி , நீ பண்ணுறதொண்டும் சரியில்ல. ஏன்.? இந்த நாயை செல்லம் கொஞ்ச சொல்லுறிங்களே..?
நீ திருந்த மாட்டா, போனமாசம் தானே அவளொடை அம்மா
செத்துப் போனது. பாவமடி. ஏனுப்பிடி கொடுமப் படுத்துற.?
(கோபமாக) என்ன..? என்ன செய்யச் சொல்லுறிங்க.
! நீ ஒண்டும் செய்ய வேண்டாம். கொஞ்ச நாளுக்கு அந்த சின்ன
பொண்ண நின்மதியா இருக்க விடு. (அவசரமாக வெளியே செல்வதற்காக மகன் சதீஸ் தனது தலையை கோதி ஸ்ரைல் பண்ணியவாறு வரவேற்பறைக்குள் வருகிறான்)
மம்மி எனக்கு கொஞ்சம் மணி வேணும். இண்டைக்கு சாமோட
பேர்த்டே பார்டி.
ஒகே மகன். இரு வாறன். (உட்சென்று பின் பணத்தைக் கொண்டு
வந்து கொடுக்கிறாள்)
! நீ இப்பிடியே ஊரைச்சுத்தி கெட்டுப் போ. இவள் கண்டபடி
காசுதந்து உன்ன பழுதாக்கப் போறாள்.
அப்பா, நீ சும்மா இரு (DL பகுதியால் வரவேற்பறைக்குள் நுழைந்த படி) ஆமாட
உன்ன தண்ணி வென்னி குடிக்காம, தோளிலயும் காலிலயும் சுமந்து வளத்தாளே உங்கப்பன், அவனுக்கு உண்டும் தெரியாது. உனக்கு . உனக்கு எல்லாம் தெரியும்
வந்திட்டா (கணவனைப் பார்த்து) இந்தா பாரு உன்ரை கொம்மாவ
பேசாம இருக்கச் சொல்லு
அம்மா! நீ கொஞ்சம் சும்மா இரு.
ஆமாண்ட, இப்படி சொல்லிச் சொல்லியே என்ர வாயடிச்சு
மூடின, இப்ப அதுகள் நாள விட கேவலமா தானே வைச்சிருக்குதுகள்.

Page 108
186
சாந்தி
வரதன்
फ्रJg
சாந்தி
சரசு
வாணி
சரசு
வரதன்
சரசு
வரதன்
வாணி
சரசு
வரதன்
நகல்
இந்தக் கிளட இஞ்ச வைச்சிருக்கிறதே பெரிய பாடா இருக்கு யேஸ். மம்மி. இதக் கொண்டே அநாத மடத்தில தான்
போடவேணும்.
(அடிக்க ஓங்கியபடி) என்னடா கதைக்கிற.?
(வரதனை தடுக்கிறாள்) வரதா பெடிய அடிக்காத. இதுகள்
பாவத்த செய்து அனுபவிக்கப் போகுதுகள்.
என்ன. நீ சாபம் போடுறியா ? இனி நீ இந்த வீட்டிலை இருக்கத்
தேவையில்லை. போ. போ (சரசவை கடுமையாக தள்ளி விடுகிறாள். சதீசும் சேர்ந்து தள்ளுகின்றான். வரதன் மகனை அடிக்கிறான்.)
(பெரிய சத்தமாக) ஐயோ ! கடவுளே, எனக்கா இந்த வாழ்க்க,
நான் என்ன பாவம் செய்தேன். ஐயோ. ஐயோ. (தலையிலடித்துக் குழறுகிறாள். உள்ளுக்குள் இருந்து வாணி ஓடி வருகிறாள்)
அப்பம்மா எழும்புங்கோ. (கீழே விழுந்து குழறும் சரசுவைத்
தூக்கியவள் தாயை நோக்கி) ஏம்மா. உங்க புத்தி இப்படி ஆகுதோ..?
கடவுளே.! எனக்கா இந்த வாழ்க்கை .
அம்மா. இவள நல்லவளெண்டு தானே உன்ர விருப்பமில்லாமலே
கட்டினன். இவள். இவள். தன்ர புத்திய காட்டிட்டாளே
அப்பு.! இதெல்லாம் நீ குடுத்த இடந்தாய்யா, பெத்தவங்க மனச
புண்படுத்தினா கிடைக்கும் நிச்சயம் தண்டனை கடவுள் காட்டிட் டான் ஐயோ. கடவுளே.1
ஆமாம்மா. இவள் இப்ப மனிசனா என்ன மதிக்கி
றாளில்லையே..?
(கோபமாக) ப்ளிஸ் அழாதீங்க அப்பம்மா, இது யெல்லாம் மனித
மிருகங்கள். உண்மையான அன்ப புரிஞ்சு கொள்ளாத ஜென்மங்கள்
: நா. நா. என்னம்மா உங்களுக்கு செய்யிறன். ஒரு மூலேல
யாருக்கும் கரச்சல் குடுக்காம தானே இருக்கிறன். (திடீரென) ஐயோ!. என்ர புருசன் சேத்து வைச்சதுகளைக்கூட அனுபவிக்க முடியாத பாவியாகி விட்டனே. இனி நான் இந்த வீட்டில இருக்க
மாட்டன்
எங்க போகப் போரீங்க?. அம்மா இவளின்டை புத்தி ஏனுப்பிடி
போகுதோ..? (வாணி போக விடாது தடுத்தல்)
வாணி போக விடு விடு .விடு. அந்தக் கிழவிய.

சரசு
சாந்தி
சாந்தி
உறவுகள் 187
ஆமாடா, நான் போகத்தான் போறன். காவோல விழ குருத்தோல
சிரிச்ச கத இதுநான் போகிறன்
ம்.போதிரும்பி வருவ.
மம்மி வாங்க நாங்க ரெண்டு பேரும் பாட்டிக்கு போவம் (சரசு
அழுதுகொண்டு வெளியேறுதல்)
: நான் ரெடியாகிவிட்டு வாறன். (அறைக்குள் போகிறாள்).
காட்சி: 5
(சாதாரண குடும்பத்தில் அனைவரும் வரவேற்பறையில் உரையாடிக்
கொண்டிருக்கின்றனர்)
செல்லம்மா : சுமன் படிப்பெல்லாம் எப்படியப்பு போகுது.
ᏭᎦuᎠᎧ5Ꭲ பரவாயில்லை, மற்ஸ் தான் ரொம்ப பிடிச்சது
மாணிக்கம் அம்மா உன்ரை பேரன் இஞ்சினியரா வரப்போறான் என்ர
கஸ்ரமெல்லாம் தீரப் போகுது.
லக்சுமி ஆமாப்பா நம்ம பையன் நீங்க கஸ்ரப்படுறதைப் பாத்து கவலைப்படுவான். அது தான் வயலுக்கு உங்க பின்னாலை வாறான் நம்ம புள்ள.
சுமதி (படித்துக் கொண்டிருந்தவள்) ஏன் நானு உங்க பிள்ள இல்லயா..? நானும் உங்களுக்கு சமைக்க எல்லாம் கெல்ப் பண்ணுறன் தானே
மாணிக்கம் டொக்டரம்மா பின்னாடிநீதானே எங்கள கஸ்ரப்பட்டு பாத்துக்குவ இப்ப நீ பெரிசா கஸ்ரப்படாத பிள்ள (அனைவரும் சிரிக்கிறார்கள் இந்நேரம் சரசு தள்ளாடிய படி அழுது கொண்டு வருகிறாள்)
g[jफ्र செல்லம்மா! செல்லம்மா (அழுதுகொண்டு அவர்களருகில் சென்று விழுந்தழுகின்றாள்) என்ர நிலமய பாத்தியா..? என்ன அடிச்சு விரட்டிட்டாளு அந்தப் பாவி.
செல்லம்மா : எ.என்ன. நடந்திச்சு.? நீ. நீஅழாதை. உன்னை என்ர பிள்ள
பாத்துக் கொள்ளுவான்.
சரசு ! அது தான் நானிங்க வந்தனான். (அழுதுகொண்டு எல்லாரையும்
கெஞ்சுவது போல் பார்த்தல்)
லக்சுமி : இங்க பாருங்கம்மா, நாங்க உங்கள பாப்பம். அழாதீங்க
சுமதி, சுமன்
நாங்க இருக்கம்.நாங்களும் உங்கட பேரப்பிள்ளக தான்.

Page 109
188
சரசு
மாணிக்கம்
வாணி
சரசு
வாணி
சரசு
மாணிக்கம்
வாணி
வாணி
சரசு
சாந்தி
சதீஸ்
சரசு
சாந்தி
செல்லம்மா
நகல்
(இருவரையும் கட்டி அணைச்சு) இந்த வீட்டில நான் இல்லாம போயிட்டனே குடும்பமெண்டா இப் பிடி யெல்லோ இருக்கவேணும். (அழுகிறாள்)
சரியம்மா, இனி நீங்களும் இந்த வீட்டிலையே இருங்கம்மா நா
உங்க பிள்ள போல பாத்துக் கொள்ளுறன். (வாணி ஓடி வருகிறாள் அவளது ஆடை இரத்தக் கறையாக இருத்தல்) (வீரிட்டு அழுதபடி) அப்பம்மா அப்பம்மா (பதற்றத்துடன்) என்னம்மா, என்ன ஆச்சு. என்ன. சொல்லு சொல்லு
(வந்த வழியைக்காட்டியபடி) அம்மா. அம்மா.
ஏன் .என்ன ஆச்சு. ஐயோ கடவுளே. ஏன் இன்னும்
சோதிக்கிறா..?
எ.என்ன பிள்ள ஆச்சு ஆருக்கும் எதாச்சும் நடந்திட்டுதோ. அக்சிடென்ற். அம்மா (அழுகிறாள்). அண்ணனுக்கு என்ன
ஆச்சு. மருமக எங்க பிள்ள (எல்லோரும் கண்ணீர்மல்க அரங்கில் பதற்றத்தடன் இருக்க DL பகுதியால் உடம்பெல்லாம் இதைதக்கறையுடன் கை, கால், தலை எங்கும் துணிக்கட்டுடன் சாந்தியும் சதீசும் வர அவர்களைப் பிடித்த படி வரதன் வருகிறார்)
(வழியைக் காட்டியபடி) அம்மா. (எல்லோரம் பார்க்கிறார்கள்
சாந்தி. சதீஸ்..!! (தள்ளாடி அழுதபடி அரங்கின் CC பகுதிக்கு
ஓடி வருகிறாள் )
மா. மாமி. என்ன மன்னிசசுக் கொள்ளுங்கோ உங்களுக்குச்
செய்த பாவத்துக்கு அனுபவிச்சுட்டன். (அழுகிறாள்) என்ர அ.அம்மா போல நா. நா. இனி பாத்துக்கிறன்
அப. அபபம். அப்பம்மா.என்ன மன்னிச்சிடுங்க . ப்ளீஸ்
வாங்கோ வீட்டுக்கு பெரியவங்கள மதிக்காம நடந்ததுக்கு எனக்கு கிடைச்சிட்டுது தண்டன. வாங்கோ.
நானோ. , இல்ல. நீங்க போய் சந்தோசமா இருங்கோ
(பணிவாக) ப்ளீஸ் மாமி இனி நான் உங்கட பிள்ள நான் விட்ட தவற யாருமே விடமாட்டாங்க.
(சரசுவை ஆறுதல் படுத்துபவராய்) சரசு குடும்ப மெண்டா
ஆயிரம் பிரச்சனை வரும். இனி உன்ர பேரனும் நல்லாப் படிச்ச முன்னுக்கு வருவான். அதெல்லாத்தையும் பாப்படி. சந்தோசமா நீ இருந்து பார்ப்பா..!

வரதன்
g[Jफ्र
செல்லம்மா
சரசு
செல்லம்மா
உறவுகள் 189
ஆமா அம்மா திருந்திட்டா அம்மா. பணத்திமிரெல்லாம் போச்சு
வாம்மா நீ. (சாந்தி வாணி சதீஸ் எல்லோரும் சேர்ந்து அழைக்கிறார்கள்)
இல்லப்பா. ரண்டு நாளைக்கு இருந்திட்டு வாறன். என்ன சரசு, இந்த நேரம் தான் நீ பக்கத்தில இருக்க வேணும்.
உண்மையான அன்பு ஆபத்தில தான் வேணும். நீ போ. மருமகள வடிவாப் பாத்திட்டு வா .. கடவுள் இருக்காண்டி இனி நீ நின்மதியா இருக்கலாம். நீ போ. நான் ரண்டு நாள் இருக்க வாறன்.
சரி செல்லம். நான் போறன். ஆ. போயிட்டு வாறன். (சரசு
மற்றும் அனைவரும் தமது வீட்டிற்குச் செல்ல செல்லம்மா குடும்பம் சந்தோசமாய் வழிஅனுப்பி வைத்தல்) (பார்வையாளரை நோக்கி) இறைவன் எங்கள பகுத்தறிவுள்ள ஜீவராசிகளா படைச்சிருக்கான். ஆனா. ஆனா நாங்க ஒருத்தர மற்றவன் அடிச்சுக் கொண்டு வாழுறம் ஏன் நாம ஒற்றுமை யாகவும் சந்தோசமாகவும் வாழக் கூடாது. இருக்கிறத வைச்சு திருப்தியோட வாழுவம். இத ஒவ்வொருவரும் உணர்ந்து நடந்தா சொர்க்கம் நிச்சயம் கிடைக்கும். நமக்கு நிச்சயம் கிடைக்கும்.

Page 110
விடியலின் வெளிச்சம்
பிரதியாக்கம் செல்வி முஹம்மது நிஹார் பாத்திமா சாஜிதா
பாத்திரங்கள்
கமலினி
மருதாயி சாந்தி சுமதி சிவராசா சுந்தரி ராணி செந்தில் நரேன் 10. 9JLut
11. கனகரம் பிள்ளை
12. குஞ்சம்மாள்
(கமலினி 8 வயது சிறுமி. அவளது அம்மா மருதாயி. சாந்தி, சுமதி அவளது இரு சகோதரிகள். சிவராசா அவளது அப்பாவின் அப்பா. அவளது அப்பா அவளின் 5வயதிலேயே இறந்து விட்டார். மருதாயி வீட்டுக்கு வீடு பாத்திரங்கள் கழுவி தன் குடும்பத்தினர் வயிற்றை நிரப்புபவள். இடைக்கிடை சிவராசா குடும்பத்துக்கு ஏதும் உதவுவார்)
 

விடியலின் வெளிச்சம் 191
காட்சி: 1
(மருதாயி வீட்டில்)
சிவராசா
மருதாயி
சுமதி சாந்தி மருதாயி
சிவராசா
சுமதி
மருதாயி él०ीJITIाgrा
மருதாயி
சிவராசா
மருதாயி
சிவராசா
மருதாயி
கமலினி
சிவராசா
தாயி!. மருதாயி. !! என்ன செய்யிறம்மா..? நல்லா
இருக்கிறியாம்மா?
வாங்க மாமா. ஒரே இருமலா இருக்குது. உடம்புக்கு
(1Քlգեւ16Ù..
அம்மா. பசிக்குது. ம்ம். அம்மா. எனக்கும் பசிக்குது. ஏதும் இருந்தா தாங்களேன்.
பிள்ளைகள்!! நேத்தைக்கும் இன்னைக்கும் வேலைக்குப்
போகேல்லம்மா. போயிருந்தா ஏதும் கொடுத்திருப்பாங்க . நாமளும் சாப்பிட்டிருக்கலாம்
என்ன . பிள்ளைங்க எல்லாம் பட்டினியா. நான் போய் சாப்பாடு
வாங்கிட்டு வாறன்.(போதல்)
அம்மா. பசிக்குது. ம்ம். கொஞ்சம் பொறு பிள்ளை. (சிவராசா சாப்பாட்டுடன் வரல்) : இந்தாங்க பிள்ளைகளா!. சாப்பிடுங்க : நன்றி மாமா! கடவுள் போல உதவினிங்க
இப்படி உடம்பு சரியில்லாம உனக்கும் இருந்தா!. இந்த குடும்பத்த
யார் பார்க்கிறது? வயித்துப் பசிக்கு என்ன செய்யிறது? நான் வந்து பார்க்கத் தான் என்னால முடியுமா..?
என்ன செய்யலாம் மாமா..! எல்லாமே என்ட தலை விதி. அது
போல தானே எல்லாம் நடக்கும்.
எனக்குத் தெரிஞ்ச இடம் ஒன்னு இருக்கு அங்க நம்ம கமலினியை
வீட்டு வேலைக்கு விட்டா உன்ட குடும்ப செலவுக்கு வருமானமும் வந்திடும். அவளும் 3 வேள ஒழுங்கா சாப்பிட்டு வயித்த நிரப்புவாள். என்ன சொல்லுற.?
என்ன மாமா சொல்லுறீங்க நான் கஸ்டப்பட்டாலும் என்ரை
புள்ளைங்களை நல்லா வச்சிருக்கனும், நல்லாய்ப் படிப்பிக்கணும் என்றிருந்தேனே!.ஐயோ என்ட புள்ளைய வீட்டு வேலைக்கு இந்த சின்ன வயசில அனுப்புறதா 11 ஐயோ!. ஐயோ!! . (புலம்புகிறாள். கமலினி குறுக்கிட்டு)
என்னம்மா அழுவுறீங்க! என்ன தாத்தா என்ன நடந்தது. .?
ஒண்ணுமில்லையம்மா 1 குடும்ப வருமானத்திற்கு உன்னையும்
வீட்டு வேலைக்கு அனுப்பினா தட்டுப்பாடில்லாமல் இருக்கும்.

Page 111
192
கமலினி
மருதாயி
கமலினி
மருதாயி
கமலினி
சிவராசா
(தாத்தா வருதல்)
கமலினி
ġlGJ Jmrg IT
கமலினி
மருதாயி
நகல்
இளையதுகளையும் நல்லா பார்த்தக் கொள்ளலாம்னு சொன்னன். அதுக்கு அழுவுது.
என்னம்மா!. தாத்தா நம்ம நல்லதக்கு தானே சொல்லுறாரு.
இதக்கு போயி அழுவுற. என்டதங்கச்சிகள நல்லா படிப்பிக்கணும். வேளா வேளைக்கு பசியில்லாம அதுக நல்லா சாப்பிடணும். (தாத்தாவை நோக்கி) அதுகட எதிர்காலம் நல்லா இருக்கணும்னா நான் வேலைக்கப் போகணும் எண்டா நான் போறன் தாத்தா
இல்லம்மா. நீ சின்னவள். வீட்டு வேலைக்குப் போய்
படுற கஸ்டங்கள் எல்லாம் என்னோட போகட்டும்.நீ போக வேண்டாம்.மா..! வீட்டிலுள்ள வறுமை உன்ன இவ்வளவு பக்குவமாய் பேச வைக்குது.
இல்லம்மா..! நீங்க உடம்பு சரியில்லாம இருக்கிறீங்க நீங்க
வேலைக்கப் போக வேண்டாம் நான் வேலைக்கு போறன் . நான் உழைக்கிறன்
உனக்கு ஒரு வேலையுமே தெரியாதேம்மா
பழகிக்கிறன் அம்மா! தாத்தா நாளைக்கு வீட்டை வாங்க நாம இருவரும் நீங்க சொல்லுற இடத்துக்குப் போகலாம்.
சரி. நான் போய் வாறன்.
காட்சி: 2
அம்மா தாத்தா வந்திட்டார். வாங்கம்மா. வாங்க தாத்தா.
கமலினி ரெடியாகிவிட்டியா புள்ள..! புறப்படுவோமா..?
ஓம் தாத்தா வாரன். அம்மா!. சாந்தி!. சுமதி அக்கா!. போய்வாரன் நல்லா படிக்கணும் சரியா..?
போய் வா மகள்.
காட்சி: 3
(வீட்டு உரிமையாளர்களான ராணி செந்தில் தம்பதியினருக்கு 1வயது குழந்தை உண்டு. ராணிக்கு சுந்தரி என்ற தங்கையும் இவர்களுடனேயே தங்கியிருக்கிறாள்.
நல்லவர்கள்)
óile) 11].figis
அம்மா கமலினி 1 உள்ள வாம்மா !!. (சிவராசா உள்ளே
நுழைந்து)

கமலினி
சிவராசா
கமலினி
ராணி
&GJIJITyT
ராணி
ġlie u JITSIT
சுந்தரி
ராணி
கமலினி
(முதலில் கமலினி
விடியலின் வெளிச்சம் 193
என்ன பெரிய வீடு.! இப்பிடி ஒரு வீட்டை நான் பார்த்ததே
இல்லையே தாத்தா. (திகைப்பு)
பணக்கார வீடில்ல இப்படித்தான் இருக்கும். அவக சொல்லுற
மாதிரி நீ கேட்டு நடக்கணும் என்ன புரியதா..!
புரியது தாத்தா!. இவதான் நீங்க சொன்னவளா..? வேலை எல்லாம் தெரியுமா..?
பார்த்தா சின்னப்புள்ள மாதிரி தெரியுதே.
(தலையைச் சொறிந்து கொண்டே) ஆமா. 8வயது தான் ஆவுது
என்ட பேத்தி தான் இவள்
கொஞ்சம் இருங்க வாறன். (உள்ளே போய் கொஞ்சம்
பணம் கொண்டு வந்து கொடுத்தல்) இந்தாங்க ஐயா!. வைச்சிக்கொங்க
: நன்றியம்மா. நான் போய்வாறன். கமலினி ஒழுங்கா சொல்லுறத
கேட்டு நடக்கணும். தாத்தா போய் வாறன்.
அக்கா 1 வீட்டு வேலைக்கு இந்த சின்னவளா!! ஆமா!. இவளாவது கிடைச்சாள். இதோபார் கமலினி எனக்கு
வேலை காலயில எழும்பி டீ போடணும். அப்புறம் பூந்தோட் டத்துக்கு தண்ணீர் ஊற்றணும். அப்புறம் இந்த வீட்டைத் துடைக் கணும். பிறகு எண்ட பிள்ளைய அழாம பார்த்தக்கணும். சரியா..? சமையல் வேலையெல்லாம் உனக்கு இல்லை. என்ன விளங்குது தானே!
சரி அக்கா க்கு இந்த வேலைகள் மகிழ்ச்சியளித்தன காலம் செல்லச் செல்ல
வெறுப்பையும் சலிப்பையும் உண்டாக்கின)
காட்சி: 4
(ஆறு வருடங்களின் பின்பு)
கமலினி
Jrraf
கமலினி
: (அழுதுகொண்டு) அம்மா! நான் உன்னபார்க்கணும்போல இருக்கு.
என்னால முடியல அம்மா..! வயி றெல்லாம் வலிக்குது.
கமலினி டீரெடியா..? என்ன லேட்..? சம்பளத்த குறைச்சிடுவன்.
சீக்கிரம் வா சுந்தரிக்கு காலேஜுக்கு நேரம் ஆகுது
இதோ வந்துட்டன் அக்கா அக்கா . எனக்கு முடியலை அக்கா..!
எனக்கு வயிற்றுக்குள் வலிக்குது அக்கா!! என்னால தாங்க
(ւՔlգայ606)

Page 112
194
ராணி
சுந்தரி ராணி
செந்தில்
(ராணி வீட்டில்)
சிவராசா
T6ਨ
நகல்
என்னடி நேத்தைக்கு சாப்பிட்ட . வா ஹொஸ்பிட்டலுக்கு
போகலாம்!
அக்கா தேவையில்லை ! அவ பெரிய மனுசியாகி யிருக்கா..!!
அப்படியா சங்கதி. ஒன்ட வீட்டில சொல்லணுமே. என்னங்க!
என்னங்க! சிவராசாவைக் கண்டா சொல்லுங்க அவர் பேத்தி வயசுக்கு வந்திட்டா கூட்டிட்டு போகச் சொல்லி.
சரி. சொல்றன்.
காட்சி: 5
அம்மா! எங்க எண்ட பேத்தி..!! நான் பாக்கணும் அவளை..!!
அந்தா இருக்கா. கூட்டி போய் சடங்கு சம்பிரதாயங்கள எல்லாம்
முடிச்சுட்டு கூட்டி வந்து விட்டுடுங்க. இந்தாங்க இதை வைச்சுக் கொள்ளுங்க. (கொஞ்ச தொகைப் பணத்தை சிவராசாவிடம்
கொடுத்தனுப்புதல்)
esmL é: 6
(மருதாயி வீட்டில்)
கமலினி
மருதாயி சாந்தி சுமதி
élea u JITsT
மருதாயி
அம்மா!. அம்மா!!. (தேம்பித் தேம்பி அழுதல்)
வாம்மா என்ட செல்லம்
அக்கா! அக்கா! அக்கா! அக்கா11 (அனைவரும் அழுது கட்டியணைத்து முத்தமிடல்)
கமலினிக்கு சம்பிரதாயங்கள் எல்லாம் செய் அவக பணம்
தந்தாங்க
! நல்லது
காட்சி: 7
(இரண்டு கிழமையின் பின்பு மருதாயி வீட்டில்)
ġla u Jrsm
கமலினி
என்ன புள்ள அவங்க வீட்டுக்கு போகல்லையா?.
தாத்தா என்னால முடியாது தாத்தா. பிரிவுகள என்னாலநினைத்துப்
பார்க்கவே முடியலை.

மருதாயி
சிவராசா
விடியலின் வெளிச்சம் 195
அவ இங்கேயே இருக்கட்டுமே.
சரி உங்கட இஸ்டம் . நான் போய்வாறன்.
காட்சி: 8
(ஒரு மாதத்தின் பின் வீடடில்வறுமை மீண்டும் தலைதூக்க)
கமலினி
மருதாயி
கமலினி
மருதாயி
(உடைகளை அடுக்கிக் கொண்டே) அம்மா..! நான் ராணியக்கா
வீட்டுக்கு போறன்.
என்னம்மா சொல்லுற. உனக்கும் வயசு வந்திடுச்சு.
அதுக்காக தங்கச்சிய அனுப்புறதா..? பேசாம விடம்மா.
நான் போறதா முடிவெடுத்திட்டன். (கதவின் அருகே வந்து) போயிட்டு வாறன் அம்மா. அம்மா உடம்பை கவனமாப் பாத்துக் கொள்ளுங்கோ. தங்கச்சியள், அக்கா நான் போயிட்டு வாறன்.
; சரி. போய்வா (அழுது கொண்டே உள்ளே செல்லல்)
காட்சி: 9
(ராணியின் வீட்டில்)
ராணி
கமலினி
66
கமலினி
! என்ன கமலினி. உனக்கு கொழுப்பு வைச்சிட்டுதோ. 8நாள்
அல்லாட்டி 10 நாள்ல வராம ஒண்டரை மாதம் கழிச்சு வந்திருக்க. வேலைசெய்ய ஆளில்லாம எவ்வளவு கஷ்டப்பட்டனடி. இப்பத்தான் நீ வர்றியா..? நான் வேலைக்கெல்லாம் ஒருபுள்ளய வச்சிட்டன்.நீ போகலாம்.
: அக்கா! அப்படி சொல்லாதீங்க . அம்மா போக விடலை. அது
தான் என்னால வரமுடியாம போயிருச்சு. இப்போ வீட்டைபஞ்சம் பட்டினி தலை தூக்கிடிச்சு. அதாலதான் நான் மீண்டும் இங்கை வந்தன். அம்மாவோ போக வேணாம்னு அழுது புலம்புறா.
சரி அப்படியென்றால் உனக்கு இனி வேலையள் காலைச்சாப்பாடு
. பகல் சாப்பாடு, இரவுச் சாப்பாடு, தயாரிப்பதும் எல்லாருடைய உடுப்புக்கள கழுவுவதும் முற்றத்த கூட்டி துப்புரவாக்குவதும் செய்யணும். இவ்வளவு வேலைகளை உன்னால செய்ய இயலு மண்டா இங்க இரு. இல்லாட்டி இடத்த காலி பண்ணு. என்ன புரியதா?
சரி அக்கா!

Page 113
196 நகல்
காட்சி: 10
(ராணியின் வீட்டில்)
செந்தில் என்ன கமலினி. சாப்பாடு ரெடியா. ? ofice க்கு late ஆகுது.
சாப்பாடு எங்க..?
ராணி : சாப்பாடு ரெடியாகல்லயா..? எத்தனதடவ சொல்றது. நேரத்துக்கு
இதல்லாம் பார்க்கணும் எண்டு
சுந்தரி அக்கா!.காலேஜுக்கு லேட்டாகும் போலிருக்கு.
கமலினி வந்திட்டன் அக்கா. (பரிமாறல்)
செந்தில் சாப்பாட்டுக்கு உப்பே இல்ல. இந்த சாப்பாடு எனக்கு வேணாம்.
நீயே சாப்பிடு. நான் போய்வாறன். ராணி பாவம் எண்டு வேல கொடுத்தா. கொடுத்த வேலய திருத்தமா செய்யாம நீயெல்லாம் என்ன வேலைக்காரி டீ. இனிமே இப்பிடி நடந்துது. வேலய விட்டு அனுப்பிடுவன். போய் வேறது செய்து எடுத்திட்டு வா. கமலினி சரி அக்கா1. மன்னிச்சிடுங்க . இனிமே இப்படி நடக் காம பாத்துக்
கொள்ளுறன். (கமலினி செய்யும் ஒவ்வொரு வேலையிலும் அனைவரும் பிழை பிடித்தலும் கமலினி அழுதலும் தொடர்கிறது)
காட்சி: 11
(ராணியின் வீட்டில் சாப்பாட்டு நேரம்) ராணி . கமலினி சாப்பாடு பரிமாறியது போதும் பிள்ளைக்கு சாப்பாடு
ஊட்டி விடு . பாவம். பசிக்குதோ. தெரியல. supesos ஓம். அக்கா ஊட்டுறன். (போதல்) (காலேஜூ விட்டு வருகின்ற போது அவளது நண்பன் நரேனையும் கூட்டிக் கொண்டு சுந்தரி வீட்டுக்கு வரல்) சுந்தரி அக்கா..! அக்கா! என்ட friend ஐ வீட்ட கூட்டி வந்திருக்கன். ராணி ஒ.நரேன். வாங்க. உட்காருங்க. என்னங்க வந்து பாருங்களேன்
யார் வந்திருக்கானு கமலினி.கமலினி. எங்கயிருக்க. பகல்சாப்பாடு நரேனுக்கும் சேர்த்து பரிமாறேன்.சரியா..?.
கமலினி சரி அக்கா. (சாப்பாடு பரிமாறப்படுகிறது)
நரேன் என் கமலினி நீங்க சாப்பிடலயா..?

விடியலின் வெளிச்சம் 197
கமலினி இல்லங்க. நான் அப்பறம் சாப்பிடுறன்.
நரேன் எங்களுடனேயே உட்கார்ந்து சாப்பிடுங்களன் (சுந்தரி, ராணி, செந்தில் ஆச்சரியத்துடனும் கோபத்துடனும் பார்த்தல்)
ராணி (எரிச்சலுடன்) கமலினி குழந்தை அழுவுறாள் போல விளங்குது.
போய் குழந்தைக்கு சாப்பாடு ஊட்டி விடு (கமலினி இடத்தை விட்டு போகிறாள்)
கமலினி சரி அக்கா. (போதல்)
செந்தில் வேலைக்காரருக்கும் தனி மரியாதை செலுத்தlங்க குடும்ப பண்பு
போல.
நரேன் எல்லாருமே நம்ம மாதிரி மனிசர்கள் தானே உந்த சாப்பாடு
யார்சமைச்சது..?
சுந்தரி இப்ப நின்னாலே எங்க வீட்டு வேலைக்காரி. ஏன் ஏதோ ஒரு குறையாயிருக்கும். அவள் சமைத்தால். என்ன நரேன் சொல்லு. திரும்ப சமைக்கச் சொல்லுறன்.
நரேன் : அதெல்லாம் ஒண்ணும் வேணாம். சாப்பாடு ரொம்ப ருசியாக இருந்தது. சமைத்த கைகளுக்கு தங்க வளையல் போடணும் என்னு தான் நான் சொல்ல வந்தன்
(கமலினியின் காதில் விழுகின்றது. அவளுக்கு நரேனில் ஒரு மரியாதை
ஏற்படுகின்றது)
சுந்தரி நரேன் இந்த சாப்பாடு ஓரளவாகத்தான் இருந்தது. நான் சமைத் திருந்தால் இதைவிட ருசியா இருக்கும். இதேபோல் நாளைக்கு வீட்டுக்குவாநான் என்கையாலேயெ சமைச்சு பரிமார்றன். என்ர சமையல என்ன சொல்ற எண்டு பார்ப்பமே?
நரேன் : . நல்ல விருந்து. இன்னைக்கு. நல்ல கவனிப்பு. நீங்களும் என் வீட்டுக்கு வரணும். என்ன சரியா. நான் போய் வாறன். ராணிஅக்கா அண்ணா, சுந்தரி, கமலினி, குட்டிப்பொண்ணு !!! நான் போய் வாறன். (நரேன் போதல்)
சுந்தரி (கோபத்துடன்) இந்த வேலக்காரிய புகழ்றானே இவன் ஏன் நான் இவளவு நாளா அவனோடை பழகுறன். இம்மட்டு புகழ்ச்சியா பேசியதே இல்லை . இனிமே அவன் வீட்டுக்கு வரும் போது இந்த வேலைக் காரியை முன்னாலேயும் விடக்கூடாது.
ராணி ஏண்டி இவ்வளவு கோபப்படுற. என்னக்கிருந்தாலும் அவன்தான்
உனக்கு புருசன். போதுமா..!! நீ கவலைய விடு.
சுந்தரி தாங்ஸ் அக்கா ! எண்ட செல்லம். எண்ட மனசில இருந்தத அப்படியே சொல்லிட்டியே அக்கா. என்ன நல்லா புரிஞ்சிருக்கா

Page 114
198
(காலேஜூல்)
19jum
சுந்தரி
நரேன் சுந்தரி
பிரபா
சுந்தரி
நரேன்
நகல்
என்ட அக்கா. Okey அக்கா. (மகிழ்ச்சியுடன் படுக்கைக்குச் செல்லுதல்)
காட்சி: 12
சுந்தரி. நான் உன்கிட்ட நரேன் பற்றி ஒன்னு சொல் லனும்
இரவெல்லாம் என்ன தூங்க விடாம உன்கிட்ட இந்த விசயத்த சொல்லச் சொல்லி உயிர எடுத்திட்டான். அவன் (நரேன் எதிரில் வருதல்)
அப்படி என்ன விசயம். தோ!. அவனே வருகிறான் . நரேன்
என்ன விசயம். (ஆவலுடன் கேட்டல்)
அத நான் எப்படி சொல்லறது.? (ஆவல் அதிகரித்து. உற்சாகத்தடன்) பரவாயில்லை என்கிட்ட
சொல்ல என்ன தயக்கம்.?
நானே சொல்லறன். சுந்தரி நேத்தைக்கு உன்வீட்டுக்கு வந்தவன்
தானே நரேன். அப்போ உன் வீட்டு வேலைக்காரிய பார்த் திருக்கிறான். அந்தப் பொண்ண அவனுக்கு ரம்ப பிடிச்சிருக்காம். அவளயே கல்யாணம் பண்ண ஆசைப்படுறானாம். இந்த விச யத்தை உன்கிட்ட சொன்னா..நீ எப்படியாவது அந்தப் பொண்ணுகிட்ட சொல்லவ தானே. அத தான் விசயம். அத தான் கிடந்த என்னையும் அவஸ்தைப் படுத்துறான்.
(மனமுடைந்து ஏமாற்றத்துடன்) அவள் உனக்கு எப்பிடிப்
பொருத்தமா. இருப்பாளுன்னு நீ நினைக்கிற நரேன். அவள் வயித்துக்கு வழியில்லாத சாதாரண வேலைக்காரி. உன் படிப்பென்ன. ? அந்தஸ் தென்ன...?? வேலைக்காரி வீட்டுக்காரியா..? நினைத்துப் பார்க்கவே கேவலமாயிருக்கு. கொஞ்சமும் பொருத்தமில்ல.
காசு பணம் எதற்கு?. ஒரு பெண்ணுக்கு அழகு, அறிவு, அடக்கம்,
குணம் இருந்தால் போதும். இவ்வளவும் கமலியினிடம் இருக்கு. அவள் படிக்காட்டாலும் குடும்பம் நடத்த தேவையான அறிவு இருக்கு. நான் படிச்சிருக்கன் தானே. அது போதும். இப்படி ஒரு பொண்ணுக்காக தான் இம்பட்ட நாளா காத்திருந்தன். கடவுளா பார்த்து எனக்கு ஒரு நல்ல துணையை காட்டிருக்கார். நான் முடிவு செய்திட்டன். அவள் தான் என்மனைவி. என் வீட்டில கூட தெரியும்.

சுந்தரி பிரபா
நரேன்
விடியலின் வெளிச்சம் 199
சரி.உன் இஸ்டம்.
டேய். நரேன். நீ அந்தப் பொண்ண கல்யாணம் பண்ணுறன்
எண்டு சொன்னதும் சுந்தரிக்கு ஏதோ மாதிரி போல இருக்குதடா..? அவளோட முகத்த கவனிச்சியாடா. முகமே மாறி போயிட்டுதே.
நானும் கவனிச்சன். நீ சொல்லுறதும் சரிதான். அவ கமலினியிட்ட
சொல்லுவாளா மாட்டாளா?? வா அவ வீட்டுக்குப் போய்
பார்ப்பம்.
காட்சி: 13
(ராணியின் வீட்டில்)
சுந்தரி ராணி சுந்தரி
ராணி
சுந்தரி
ராணி
சுந்தரி
அக்கா! நாம ஏமாந்திட்டம் ஏமாந்திட்டம் (ஒ. என அழுதல்)
என்ன சொல்ற. புரியிர மாதிரி சொல்லம்மா..!
எல்லாம் அந்த கமலினியால வந்தது தான் அக்கா. .அந்த
நரேனுக்கு இவளதான் புடிச்சிருக்குதாம். (அதிர்ச்சியாகி நிற்கிறாள் கமலினி)
என்னடி மந்திரம் போட்ட அவனுக்கு. சாப்பாடு போட்ட
வீட்டுக்கே துரோகம் பண்ணிட்டியேடி. நம்பிக்க துரோகி. நன்றி கெட்ட நாயே. ஏய் நான் தெரியாம கேட்கிறன். நீ வீட் டுக்கு வேலைக்குதான் வந்தியாடி. இல்லையாடி ? வயித்துக்கு புளைக்க வந்தவளுக்கு அரண்மனை மாளிகை கேட்குதோ! . ஏய் நீ இனி இங்கிருக்க வேணாம். இங்கிருந்து போடி.போ..! (கண்டபடி ஏசி விரட்டுகிறாள் ராணி) நீ அழாத சுந்தரி. நான் எப்பிடியாவது பேசி அவன சமாதானப்படுத்துறன்.
இந்த வேலைக்காரிய நினைச்ச வரைக்கும் அவன் எனக்கு
வேண்டாம் அக்கா..! வேண்டாம்.இந்த வேலைக்காரியையும் அந்த நரேனையும் கண்ணால பார்க்கக்கூட எனக்கு அருவருப்பா இருக்குது.
நம்ம சிவகாமி அக்காவின் மகன் விநோத் வெளி நாட்டிலிருந்து
நேற்று வந்திருக்கான். அவன உனக்கு பேசி வைப்பமா சுந்தரி? பையன் நல்ல அழகு. குடும்பமும் வசதி. நம்ப தகுதிக்கேற்றவங்க. இந்த நரேன நம்பினதுக்கு நம்மள நாமே அடிச்சுக்க வேண்டியது தான்.
அந்த நரேன் இந்த வேலைக்காரிய விரும்பின வரைக்கும் அவன்
எனக்கு வேணாம். நீ சொல்றவனையே நான் கடடிக்கிறன் ஏய்.

Page 115
2OO
நகல்
! கமலினி . இன்னும் நீ போகேல்லையே. வெளியே போ.
என் கண் முன்னால நிற்காதே! (கமலினி அழுது கொண்டே வெளியேறுதல்).
காட்சி: 14
(ராணியின் வீட்டின் முன்பாக வீதியில்) (நரேனும் பிரபாவும் வரும் போது கமலினி அழுது கொண்டே பெட்டியுடன்)
9 just நரேன்
கமலினி
நரேன்
டேய். நாம நினைச்சது சரியா போயிட்டோ!
கமலினி . அழாத!. எனக்கு உன்ன ரொம்ப பிடிச்சிருக்கு. நான்
உன்ன என் மனைவியாக்கிக் கொள்ள ஆசைப்படுறன்.
வேணாம். என்னை விட்டுடுங்க. நீங்க யாரென்னும் தெரியாது.
உங்களால தான் எனக்கு இப்ப இந்த பிரச்சன. வேணாம் என்ன நம்பி ஒரு குடும்பமே இருக்குது. தயவுசெய்து என்ன விட்டுடுங்க. (தேம்பித் தேம்பி அழுகிறாள)
என்னை நம்பு கமலினி. என்னோட என் வீட்டுக்கு வா. !
Please.. அங்க போயும் உனக்கு நம்பிக்கை யில்லையெண்ணா நீதாராளமா உனக்குப் பிடிச்ச இடத்துக்குப் போகலாம். okPlease. என்னோட என் வீட்டுக்கு வா. !
(அவர்களை நம்பி கமலினியும் போதல்)
asT"Lé: 15
(நரேனின் வீட்டில்)
நரேன்
கனகரம் பிள்ளை
குஞ்சம்மாள்
கணகரம்
அம்மா! அப்பா!! எல்லாரும் இங்க வந்து பாருங்களன். என்
வருங்கால மனைவிய கூட்டி வந்திருக்கன். (கமலினி திகைத்து நிற்க)
அடடே.என் வருங்கால மருமகளா வந்திருக்குது. புள்ள குஞ்சு.
இங்க வந்து பாருங்களன்.
வரேங்க மருமகளெ. வலதுகாலை உள்ள வச்சு வாம்மா!!
(எல்லோரும் உள்ளே வந்து உட்காருகிறார்கள்)
எல்லா விசயத்தையும் நரேன் எங்ககிட்ட சொல்லி விட்டான்.நீங்க
இந்த வீட்டில மகாராணி போல இருக்கலாம். எங்களுக்கு
இருக்கிறது ஒரே ஒரு ஆண் பிள்ளை. இந்த ஆஸ்தி அந்தஸ்து. எல்லாமே அவனுக்குத்தான். எங்களுக்கு அவன்ட சந்தோசம்

கமலினி
குஞ்சம்மாள்
கமலினி
3655T5
விடியலின் வெளிச்சம் 2O1
தான் பெரிசு. எல்லோரும் ஒன்னா சந்தோசமா இருந்தாலே எங்களுக்கு போதும், நாங்க எப்பவுமே அவன் விரும்பவத மட்டும்தான் செய்வம்.
இல்லங்க நான் ஒரு வீட்டில வேலைக்காரியா இருந்தவ. என்ன
நம்பி ஒரு குடும்பமே இருக்குது. இந்த வீட்டைப் பாத்தா! இங்க நான் வேலக்காரியா இருக்க தான் தகுதி போலும். வீட்டுக் காரியா இருப்பதற்கு அல்ல.(இழுத்துக் கொண்டே.)
என்ன மகள். எல்லாவிசயமும் எங்களுக்கு தெரியும் தானே.
உன் அம்மா மருதாயி, உனக்கு இரு சகோதரிகள். உன் அப்பா சிறுவயதிலயே இறந்து விட்டார். நீங்க இருப்பதுகூட ஒரு வாடகை வீடுதான். இதற்கெல்லாம் பணம் நீதான் அனுப்பற. ஊன்ட தங்கச்சி கள நீதான் படிப்பிக்கிற. எல்லாமே தெரிஞ்சு தான் நாங்கள் இருவரும் சம்மதிச்சம். (ஆச்சரியத்தடன் திகைத்தப் போனாள் கமலினி)
இந்த விடயம் பற்றி அம்மாவிடம் கேட்க வேண்டும்.
தேவையேயில்லம்மா, நாங்க அவங்ககிட்ட போய் பேசிட்டம்.
இன்னும் கொஞ்ச நேரத்தில அவங்க எல்லொரும் இங்க இருப்பாங்க (மீண்டும் ஆச்சரியத்துடன் திகைத்தப் போனாள் கமலினி)
(மருதாயி, தாத்தா, சகோதரகள் வரல்)
மருதாயி
&GöT&
ġaJJITg IT
கமலினி இனிமெ நாங்க எல்லோருமே ஒன்னா. சந்தோசமா
ஒற்றுமையா . இதே வீட்டிலயே இருக்கப் போறம். நேற்றே நம்ம வீட்ட வந்து எல்லாம் பேசினாங்கம்மா நானும் சம்மதிச் சுட்டன். எல்லாமே உன்னால தானம்மா. (கட்டியணைத்தல்)
சரி. நாம நேரத்தோடு பேசினது போல வர்ர புதன்கிழமை
கல்யாணத்த கோயில்லயே வச்சிடுவம். என்ன சரிதானே
பிறகென்ன சரிதான்
(திருமணம் புதன்கிழமை கோயிலில் எளிமையாக நடந்தேறியது. பின்னர் ஊர்மகள் அனைவருக்கும் திருமண சாப்பாடு விமரிசையாக பெரியளவில் போடப்பட்டது. பின்னர் அனைவரும் ஒன்றாகவும் ஒற்றுமையாகவும் வாழ்கின்றனர். கமலினியின் வாழ்வில் ஏற்பட்ட விடியலின் வெளிச்சம் மங்காது அனைவரினதும் வாழ்வில் பிரகாசமாய் எரிகின்றது)

Page 116
சிதறிய சிற்பி
பிரதியாக்கம் திரு. ஆரோக்கியம் எட்வேட்
பாத்திரங்கள்
1. பைத்தியக்காரன்
2. பிள்ளைகள்
3. வாமன்
4. பணக்காரன்
5. பாபு
6. [Jाछा
7. ரதி
8. வன்னமதி
காட்சி: 1
பைத்தியக் காரன் ஹி. ஹி. ஹி. ஹி. என்ர புள்ள. ஹி. சுமதி. ஹி. ஹி.
பிள்ளைகள் கூட்டம் டேய் பைத்தியம் வாறாண்டா. பைத்தியம் வாறாண்டா.
ஹோய். ஏ.
பைத்தியக் காரன் நீ. நீ. என்ரை புள்ள . ஹி. ஹி. என்ர மகள் நீ. பிள்ளைகள் ! டேய் இது புள்ள புடிக்கிற பைத்தியம்டா. ஒடுங்க பிள்ளை 2 டேய். டேய். கல்லாலை எறிவம்டா வாங்கடா
பிள்ளை 3 எடு கல்ல அ. (கல்லைப் பொறுக்குதல்)
 

[JITgiा
வன்னமதி
JIाऊा
வன்னமதி
jITeछा
வன்னமதி
tյT&T
வன்னமதி
Jाछा
வன்னமதி
UIाऊा
வன்னமதி
JTIा
வன்னமதி
Trासा
சிதறிய சிற்பி 2O7
(சமாளித்து) இல்ல ஒவ்வொரு நாளும் கோயிலுக்கு வரனம்
போல இருக்கு.
! நான் கோயிலுக்கு பக்கத்தில தான் இருக்கிறனே தவிர கோயிலுக்கு
அவ்வளவா வாரதில்ல.
! அமைதியும் அடக்கமும்தான் பிடிக்கும் . நீங்க இன்னும்
பழயபாணியிலேயே இருக்கீங்க. புதுமப் பெண்ணாக மாற வேணும்.
அமைதியும் அடக்கமும்தான்பெண்ணுக்குத் தேவ. அத நான்
விரும்புறன் இதல பழம புதும என்ன இருக்கு
வெரிகுட். அவ்வளவு அறிவும் அடக்கமுமுள்ள உங்களுக்கு
வரப்போகிற கணவன் நிச்சயமாக அதிஸ்டசாலி தான்.
என்ன இருந்தாலும் வயசு போன பிறகு எனக்கு நம்பிக்கை
யில்லை.
அப்படி ஒருத்தர் ஒங்கள விரும்பினா! வயது கல்வி தராதரம் இதவிட எனக்கிட்ட பணமும் இருக்க
வேணுமே.
(தாழ்ந்தகுரலில்) நீங்க நெனக்கிற தகுதி தராதரம் எல்லாம் எனக்கு
இருக்குத்தானே.
(தடுமாற்றம்) என்ன. நீங்களா ! ஆ. வந்து. நான் எதிர்பார்க்கல்ல.
என்னோட மனைவி இறந்த பிறகு ரதிக்காகவே வாழ்ந்தேன்.
இப்ப எனக்கு ஒரு துணை வேணும். அது ரதிக்கு பிரயோசன மாயிருக்கும்.
(தயக்கம்) வந்து.எனக்கு என்ன சொல்லறதெண்டே புரியல்ல.
நான்.இத. ரதி. விரும்புவாளா. ம்.
உங்களோட மகள் நெருங்கிப் பழகிற மாதிரி நீங்களே அவளுக்கு
அம்மாவா வந்தா சந்தோசப்படுவாள். வித்தியாசம் அவ்வளவா தெரியாது.
(பயம்) என்னத்தான் ஆனாலும் நீங்க பணக்காரன். பொறகு பணத்
துக்காக செய்றேன் என்று சொல்லுவாங்க. ம். என்னால முடிவுக்கு வர முடியல்ல. மத்தது. இது அவசரப்படுற காரியமுமில்ல.
! நானும் அத விரும்பல. நிதானமா யோசிச்சு ஒரு முடிவுக்கு
வாங்க . அது வரயில காத்திருப்பேன்.

Page 117
208
வன்னமதி
ரதி
வன்னமதி
ரதி
வன்னமதி
ரதி
வன்னமதி
ரதி
வன்னமதி
ரதி
வன்னமதி
ரதி
υπότιτ
ரதி
ՄT&T
ரதி
Jाgा
நகல்
காட்சி: 5
(பாடசாலை விட்டு ரதிநிற்கிறாள் டீச்சர் வந்து) ரதி. நீ இன்னமும்
வீட்டுக்குப் போகல்லியா. அ!
(வாட்டம்) கார் வரல்ல டீச்சர். அ. பாட்டுப் போட்டியில எனக்கு
பிறைஸ் கிடைக்குமா டீச்சர்.?
! நீ கெட்டிக்காரிதானே. நிச்சயமா கிடைக்கும் பயப்படாத. அ.
அது சரி. உங்க டாடியும் சாப்பிடாம காத்துக்கொண்டிருப்பாரு. என்ன
: பாவம் டாடி. என்னோட சரியான விருப்பம் அவருக்கு.
(பக்குவமாய்) உனக்கொரு அம்மா வந்தா எப்படியிருக்கும்.
சித்தியா! ஐய்யய்ய சித்தி அடிப்பாசாப்பாடு தரமாட்டா கொடும்மப்
படுத்துவா என டாடி சொன்னவரு
அன்பா இருப்பா. சாப்பாடு ஊட்டிவிடவா. அணைச்சி கொஞ்சி
பாட்டுப் பாடி தூங்கவைப்பா. நாம கேக்காமலே எல்லாம்
தருவா. (கவலை) .ம். (பெருமுச்சு) எனக்குத் தான் அம்மா
இல்லியே..! அப்படியொரு அம்மா வந்தா . நீ என்ன செய்வ.
(சந்தோசம்) அம்மோய். எனக்கு ரொம்ப சந்தோச மாயிருக்கும்.
உனக்கு டாடி எல்லாம் செய்வாரு நீ பயப்படாம ஒரு நல்ல
அம்மாவ கூட்டி வரச் சொல்லு.
கட்டாயம் சொல்லுவேன். நல்ல அம்மா நல்ல அம்மா.
காட்சி: 6
எப்படி. ஓங்க டீச்சர் நல்லவ தானே. ம்..அப்ப புள்ளக்கு
அவவோட விருப்பம் தானே
விருப்பம்தான்
(தயக்கம்) அவ. அ.வந்து. உனக்கு . அம்மாவா வந்தா
எப்பிடியிருக்கும் (விருப்பமில்லாமல்) ச்சி. ச்சி. அவ டீச்சர் எப்படி அம்மாவாகிறது.
அது சரி அவ டீச்சர் தான். எங்க வீட்டிலேயே அம்மாவாக
வச்சிக்கொண்டா என்ன

ரதி
Մm&IT
IJासा
வன்னமதி
Մmgm
(ரதி வருதல்)
சிதறிய சிற்பி 209
(வெறுப்பாக கெஞ்சலாக) வேணாம் டாடி அத டீச்சர் விரும்ப
மாட்டா ஏன்னா எனக்கிட்ட சொன்னவ. ஒங்கட டாடி நீ கேட்டா ஒரு நல்ல அம்மாவ கூட்டி வருவாரு.
(ஏமாற்றம்) ஒன்னுமில்லை . ம். இருட்டிட்டு போய் முகம்
கழுவிக் கொண்டு பாடங்கள் படி
asni šol: 7
(யோசனையில்) என்ன வன்னமதி பேசாம இருக்கிறீங்க .ம்.
ரதி விரும்புறாள் இல்ல.
மகளுக்காகத்தான் என்ன விரும்பினிங்க. அதுக்காகத்தான் நானும்
ஒத்துகிட்டேன் ஆனா அத விரும்பல அப்ப என்ன செய்ய ம் மறக்க வேண்டியது தான்.
(ஆதங்கம்) மறுக்கிறதா.!ரதிக்கு அம்மா வேணுங்கிறது உண்மை
தான். ஆனா ஒன்ன மனசார விரும்பிட்டேன். அத மாத்த
(1ՔlգայոՖ]
மகள் வா.வா. ஆ. டாடியோட என்ன கோபம் . இம். இங்கே. ஓங்க டீச்சரும்
வந்திருக்கா வா.வா.
ரதி
வன்னமதி
ரதி
JIाम्रा
ரதி
பாபு
Iाछा
வன்னமதி
(கோபமாக) பெரிய மணிசர் நாலு பேர் சிரிக்கிற மாதிரி நடக்காதீங்க.
(கண்டித்து) டாடிக்கு இப்படியா கதைக்கிற
(கடுமையாக) டீச்சர் இது எங்க வீடு. நீங்க எனக்கு டீச்சர்.அம்மா
இல்ல. ஒங்க வேல பள்ளிக்கூடத்தில
: (கோபம்) ரதி. என்ன சொன்ன நீ. (அறைதல்)
ஆ. ஐயோ. என்ன. அம்மா. (அலறிபடி மாடிப்படிகளில்
விழுகிறாள்) பின் தலை. அடிபட்டு
(பதறி ஓடி வந்து) ஐயோ!. ரதி படியில விழுந்திருச்சே.! பின்தல
அடிபட்டு ரெத்தம் வருது ரெத்தம் வருது
(பயந்து அவசரமாக) ரதி. அட ஐயய்யோ பேச்சு மூச்சு
காணலையே பாபு. என்னடாஎன்னடா செய்யிறது
சுருக்கா ஆஸ்பத்திரிக்குக் கொண்ட போவம்

Page 118
210
பைத்தியக் காரன்
வாமன்
பைத்தியக்
காரன்
வாமன்
நகல்
காட்சி: 8
(அழுகையும் சிரிப்பும்) ஹி. ஹி. ஹி. அ.ம்ங். க.அ.தம்பி
இப்ப புரியதா. பைத்தியம். வந்த காரணம். ஹி. ஹி.
பொறகு. புள்ள. உங்க மகளுக்கு என்ன நடந்தது.
(அழுகை) அ.ஒ. ஹஅநான்பாவி. திரும்பவும் கண்ணத்தொறந்து
இந்த பாவிய பாக்காமலே போயிட்டா (ஒட ஆயத்தமாகுதல்)
(அவசரமாக) ஐயா!. ஏய் ஐயா. எங்க ஓடுறிங்க . ஓடாதீங்க
(பெருமூச்சு). ம். நாம என்ன செய்றது. அ.ம். இந்த ஒலகத்தில இப்படி எத்தனையோ பைத்தியங்கள்இம் (வாங்கோ ஆஸ்பத்திரிக்குப் போவம்)

விதி
பிரதியாக்கம் செல்வி மொஹமட் அனிஸ் பாத்திமா அம்ரா
பாத்திரங்கள்
முதியோர் இல்லப் பொறுப்பாளர் யாழினி பொன்னி அம்மா
சுந்தரம் அப்பா
சிவா மகன்
பாரதி மருமகள் பேரப்பிள்ளை
லீலா பாரதியின் நண்பி
சாரதா பக்கத்து வீட்டுப் பெண்
10 தரகர் கோபாலன் மருமகளின் அப்பா
காட்சி: 1
களம் முதியோர் இல்லம்
(அதிகாலைப் பொழுது யாழினி முதியோரில்லம் சென்று பொறுப்பாளரிடம்
அனுமதி பெறல்)
யாழினி வணக்கம். நான் பல்கலைக்கழக மாணவி. உங்கள் முதியோ ரில்லம் தொடர்பாக கொஞ்சம் ஆய்வு செய்யனும். அதாவது அவர்களின் கருத்துக்கள், மனோ நிலை சம்பந்தமா அனுமதி தருவீர்களா..?
பொறுப்பாளர் ! தாராளமா. (யாழினியை ஒவ்வொரு அறைகளுக்கும் கூட்டிச்
செல்கிறார்.)

Page 119
212 நகல்
யாழினி (தயக்கத்துடன்) மேடம். இது சம்பந்தமா இவங்க கூட பேசுறதால
ஏதும் பிரச்சனை வருமா.
பொறுப்பாளர் : இல்லை. இல்லை. இவங்க கூட அன்பா பேசினாலே போதும் எல்லாம் சொல்லிடுவாங்க உளரீதியாகப் பாதிக்கப்பட்ட இவங் களுக்கு யாரிடமாவது தன்ட கவலைகளை கொட்டி விடுறதுல தான் ஆறுதலே இருக்கு. நீங்க பயப்பிடத் தேவையில்ல. தாராளமாய்க் கதைக்கலாம்
யாழினி ரொம்ப நன்றி மேடம்.
பொறுப்பாளர் : ஹூம். இட்ஸ் ஓகே மா யாழினி எனக்கு கொஞ்ச வேலை யிருக்கு. நீங்க கதைச்சிட்டிருங்க இதோ வாறன் (பொறுப்பாளர் போதல்)
(அனைவரிடமும் கதைத்து விட்டு இறுதியாக இருந்த கட்டிலினருகே யாழினி
செல்லுகிறாள்)
யாழினி அம்மா அம்மா.
(தன் கைகளை முகத்தில் வைத்து அழுது கொண்டிருந்த பொன்னியை அழைத்
தல்)
பொன்னி : யாழினியைப் பார்த்தும் பார்க்காதவளாய்த் தேம்பி
அழுகிறாள்.
யாழினி (பொன்னியின் தலையைத் தடவி) அம்மா உங்க கூட கொஞ்சம்
85605ösöLOItbLDT (Lplu4udff.?
பொன்னி ஹ9ம். நீ.யாரு. (யாழினியின் கையைப் பிடித்து கதறி
அழுதல்)
யாழினி அழாதேங்கம்மா வாங்க. அந்த மரத்துக்குக் கீழ இருந்து உங்க
கதையைக் கேப்பம். வாங்கம்மா
காட்சி: 2
களம் பொன்னியின் வீடு
(ஒரு மாலைவேளை சுந்தரமும் பொன்னியும் உரையாடிக் கொண்டிருக்
கிறார்கள்)
சுந்தரம் என்ன பொன்னி. அமைதியா இருக்க ஏதாவது பேசலாமே (பொன்னிக்குக் கேட்கவில்லை) (மீண்டும்.) பொன்னி உன்னைத் தான். என்ன யோசிக்கிற (சுந்தரம் பொன்னியின் தோலில் தட்ட திடுக்கிடுகிறாள்.)
பொன்னி இல்லங்க. நம்ம. மகன பத்தி தான் யோசிச்சிட்டிருந்தன். படிப்பும்
முடிஞ்சு போச்சு . நாங்க ரெண்டு பேரும் இப்ப வயசாகிட்டம்.

சுந்தரம்
பொன்னி
களம்
தரகர்
பொன்னி
தரகர்
சிவா(மகன்):
பொன்னி
தரகர்
કોeum
பொன்னி
தரகர்
பொன்னி
விதி 213
. எங்களுக்கும் அவனுக்கும் ஒரு உதவியா. நம்ம வீட்டுக்கு விளக்கேத்த ஒரு மருமகள் வந்தா. நல்லா இருக்குமே.
ஹ9ம் . நீ சொல்றதும் சரிதான் . நானும் யோசிச்சேன் தான்.
எண்டாலும் நம்ம வசதிக்கு இருக்கணுமே. நம்ம மகன் ஒரு நாளைக்கி பல ஆயிரம் சம்பாதிக்குறான். அவன்ட அழகுக்கும். அறிவுக்கும். என்னைப் பொறுத்தவர ஒரு டாக்டர் பொண்ணாப் பாக்குறது தான் நல்லம். என்ன பொன்னி சொல்ற.
: நீங்க சொன்னா சரிதாங்க. நான் நாளைக்கே நம்ம தரகர
வரச்சொல்றன்.
காட்சி: 3
பொன்னியின் வீடு
என்னம்மா! என்ன வரச் சொன்னீங்களா.
ஆமா. தரகரே. மகனுக்கு பொண்ணு பாக்கணும். ஒரு நல்ல
பொண்ணா இருக்கணும்.எங்கட தகுதிக்கு ஏற்றவளா இருந்தா பார்த்து சொல்லுங்க. நாளைக்கே பேசி முடிக்கலாம். உங்க மகண்ட நேரம்மா. ஒரு பொண்ணு இருக்கா. சும்மா இல்ல. டாக்டருக்கு பாரின்ல படிச்சவ நல்ல வசதியான குடும்பம் பொண்ணும் பார்க்க நல்ல தேவதை மாதிரி இருப்பா. (வந்து கொண்டு) என்னம்மா ஒரே பரபரப்பா பாக்குற. ஆ தரகரே எப்படி என்ன இந்தப்பக்கம்
நான் தானப்பா வரச்சொன்னன். உனக்கு பொண்ணு
பார்க்கத்தான்.
(இடையில் குறுக்கிட்டு) தம்பி இந்தாப்பா. பொண்ணு போட்டோ
புடிச்சிருக்கா
அம்மா . நீங்க எந்தப் பொண்ணப் பார்த்தாலும் எனக்கு
ஒகேம்மா உங்கட விருப்பம் தான் என்ட விருப்பமும் (மகனைப் பெருமிதத்துடன் பொன்னி பார்க்கிறாள். சிவா வைத்திய சாலைக்குச் செல்கிறான்)
தரகரே நாங்க பொண்ணப் பாக்கணும் நாளைக்கே நாங்க
புறப்பட்டு வாரோம். நீங்க பொண்ணு வீட்ல சொல்லிடுங்க.
சரிம்மா . நான் போய்வாரேன். நான் வந்ததா ஐயா கிட்டயும்
சொல்லிடுங்க. வாரேன்மா.
சரி வாங்க

Page 120
214 நகல்
காட்சி: 4
களம் கோபாலனின் வீடு
(பொண்ணு பார்ப்பதற்காகச் சென்ற அனைவரும் கலந்துரையாடல்)
பொன்னி எங்களுக்கு பொண்ணப் புடிச்சுப் போச்சு. எப்ப நிச்சயதார்த்தத்த
வெச்சுக்கலாம்.
கோபாலன் உங்களுக்கு புடிச்சிருக்கா தம்பி எதுகும் பேச லையே
பொன்னி எங்கட விருப்பம் தான். எங்கட பையன்ட விருப்ப மும். நீங்க பயப்படவே தேவையில்ல உங்க பொண்ண எங்க வீட்டு மகள் போல பார்த்துப்போம்.
கோபாலன் எங்கட பொண்ணும் அடக்கமானவ. உங்களையும் தன் சொந்த தாய் தகப்பன் போல பார்த்துப்பா. அவளப் போல ஒரு மருமகள் கிடைக்க நீங்க கொடுத்து வைச்சிருக்கணும்.
பொன்னி சரி. அப்போ ஜோசியர கூப்பிட்டு நாள குறிச்சிட்டு எங்களுக்குச் சொன்னா நிச்சயதார்த்தத்த வெச்சுக் கலாம்.
கோபாலன் : அப்ப நான் நம்ம ஜோசியர விசாரிச்சு ஒரு நல்ல நாளாப் பார்க்கச்
சொல்றேனே.
பொன்னி : சரி. நாங்க போயி வாரோம். அம்மா. பாரதி. வரட்டுமா.
பாரதி ஹ9ம் (வெட்கத்துடன் தலையாட்டல்)
பொன்னி கூறியது போல் நிச்சயதார்த்ததம் முடிய திருமணமும் இனிதே நடக்கிறது. பாரதி சிவா வீட்டிலேயே இருக்கிறாள். காலங்கள் கடந்து பாரதி ஒரு குழந்தைக்குத் தாயாகிறாள்.
காட்சி: 5
களம் பொன்னியின் வீடு
சுந்தரம் பொன்னி என்னடி இன்னம் சாப்பாடு ரெடியாகலியா. இன்னம் என்னடி செய்ற. எனக்கு ஒரு முக்கியமான வேலையிருக்கு என்று நேத்து ராத்திரியே சொன்னனே. டிபன அவசரமா ரெடியாக்க தெரியாதா
பொன்னி கொஞ்சம் பொறுங்க. இங்க நானே எல்லாம் செய்யனும். உங்க பேரன குளிக்கவாக்குறதுல இருந்து அடுப்பு ஊதுறவர எல்லாம் என்டதலையில தானே. வீட்டுக்கு டாக்டர் மருமகள எடுத்தீங்க. அதுவும் சீதனமே இல்லாம . அவ ஒரு தும்புத்தடி புடிச்சி வீட்ட சரி கூட்டுறாவா..? அது தான் வேணா. அவ துணிமணிகள கூட

சுந்தரம்
பொன்னி
சுந்தரம்
பொன்னி
சுந்தரம்
பொன்னி
சுந்தரம்
விதி 215
நான் தானே கழுவணும். அது சரி கழுவ மாட்டாளே. ஒரே வேல.வேல. வேல எண்டு போறா. எங்கள கணக்கெடுக்குவாவா. இவ்வளவு காலத்துக்கும் அத்த. மாமா. எண்ணு சிரிச்சுப் பேசியிருக்காவா. இதவிட ஒரு ஏழைப் பொண்ணா எடுத் திருந்தா அடக்கமா வீட்ல இருந்திருப்பா. உங்கட பேச்சைக் கேட்டு இப்ப கஷ்டப்படறது நான்தான்.
என்னடி. அதுகள் உழைக்கிற காலத்துல நாங்க அதுகளுக்கு
கையுதவியா இருந்தா. எங்களுக்கு இயலாத காலத்துல பாக்காது களா என்ன..?
நீங்க சொல்றீங்க எனக்கு துளிகூட நம்பிக்கையில்ல. சிவா
எப்போ அவள இங்க கூட்டிட்டு வந்தானோ அண்டிலிருந்து அவ பின்னாடியே போறான். அவ பேச்சத்தான் கேக்குறான். தம்பி. சிவா. ஒரு சேலை வாங்கி வாப்பா, வாசு மாமா மகளுக்கு கலி யாணம் எண்டன். மறந்திட்டன் எண்டான் பார்த்தா பொஞ்சாதிக்கு வாங்கி வச்சிருக்கான் நேத்து கூட கொழந்த பசியில அழுகுது. கொழந்த அழுகுறது கேக்கலையா எண்டு கேக்கிறன் அந்த பாரதி அவ பாட்டுக்கு டீவி பாக்குறா இதெல்லாம் பார்க்கைக்க . தனியா, ஒரு வேள சாப் பிட்டாலும் நிம்மதியா இருக்க ஒரு சின்ன வீட வாடகைக்கு எடுத்திட்டு போய் நிம்மதியா இருக்கலாம் என்று நெனக்குறன். சாகப்போற காலத்துல நிம்மதியா கண்ண மூடிடலாம்
சீசீ அப்படியெல்லாம் பேசாத பொன்னி
பின்ன . என்னங்க செய்யிறது.
நான் இல்லாட்டி கூட நீ இங்கதானிருக்கணும். நம்ம ஞக்கெண்டு
வேற யாரடி இருக்கா. நமக்கு நம்ம புள்ளங்களும் பேரப் புள்ளங்களும் தானே சந்தோசம்.
(ஓடிவந்து சுந்தரத்தின் வாயை மூடி) அப்படி பேசா தீங்க .
நீங்க இல்லாட்டி எப்படிங்க. நீ போற இடத்துக்கு என்னையும் கூட்டிட்டே போயிடுங்க நீங்க இருக்கேக்கையே கணக்கெடுக்காத இவங்க . நீங்க இல்லாட்டி .அம்மம்மா (அழுதல்)
சரி. சரி. அப்பிடியெல்லாம் ஆகாது (சமாதானப்படுத்துகிறார்)
ம் நீ சொல்லுறதும் சரிதான் (பெருமூச்சு)

Page 121
26 நகல்
காட்சி: 6
களம் ; பொன்னியின் வீடு (இராப் பொழுது)
(6வருடங்களின் பின்பு --- சுந்தரமும், பொன்னியும் வயதாகிப் போக)
சுந்தரம் பொன்னி. நெஞ்சு வலிக்குதம்மா தாங்கமுடியல. கொஞ்சம்
தண்ணி கொண்டாம்மா
பொன்னி இந்தாங்க.குடிங்க. என்னங்க எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க.
கொஞ்சம் பாம் பூசி விடவாங்க.
சுந்தரம் இல்லை பொன்னி மகனையும் பாரதியையும் கூப்பிடு
(பொன்னி உடனே உள்ளே கூப்பிட்டுக் கொண்டு ஓடுகிறாள். சுந்தரம் சுருண்டு
போகிறார்)
பொன்னி சிவா. சிவாபாரதியம்மா. அம்மா பாரதி.
(வெகு நேரமாகியும் கதவைத் தட்டியும் பதிலில்லை. பொன்னி கதறி
அழுகிறாள்)
பாரதி என்ன இப்போ இந்தக் கத்து கத்திறீங்க . முழுநாளும் வேல செய்திட்டு வந்து நிம்மதியா தூங்கக்கூடி விட மாட்டீங்களா..?
பொன்னி இல்லம்மா. நெஞ்சு வலிக்குதெண்டு துடிச்சாரு இப்ப மூச்சுப்
பேச்சில்லாம கிடக்காரு.
பாரதி சரி வாங்க (எரிச்சலுடன்) அங்கு போய் பார்த்ததும் சுந்தரம் இறந்து அரைமணி நேரம் தாண்டி இருந்தது பாரதிக்கு தூக்கி வாரிப் போட்டது தனது ஸ்தெதஸ் கோப்பை எடுத்து வருவதாகக் கூறி தனது அறையினுள் நுழைகிறாள். சிவாவிடம் நடந்ததைக் கூறுகிறாள்.)
(ஏதோ விபரீதமென அறிந்து கொண்ட பொன்னி கதறி அழுகிறாள்)
காட்சி: 7
களம் பொன்னியின் வீடு (காலைப் பொழுது) (சுந்தரம் இறந்த 6மாதங்களின் பின்பு, ) பாரதி அத்த . நாங்க இன்னக்கி ஒரு பங்ஷனுக்கு போகிறம். வர
நல்லா நைட் ஆகும். மகன் ஸ்கூல் விட்டு வந்தா அவனுக்கு சாப்பாடு கொடுங்க துணிமணிகள் நெறய இருக்குதுவைச்சிடுங்க ரெண்டு நாளா புஞ்செடிகளுக்கு தண்ணி ஊத்தல்ல. அதையும் ஊத்திடுங்க. (சொல்லிக் கொண்டே காருக்குள் போதல்) பொன்னி (எதுவும் பேசாமல் மூலையில் தொங்கும் சுந்தரத்தின் படத்தருகே சென்று) என்னங்க ஏங்க என்ன தனியா தவிக்க விட்டுட்டு

விதி 217
போனிங்க எனக்கு இங்க எந்த நிம்மதியும் இல்லைங்க என்னால முடியலை கடவுளே இது என்ன சோதனை அவரோட என்னையும் சேர்த்து எடுத்திருக்கலாமே
(அப்போது பக்கத்து வீட்டுப் பெண் சாரதா வருகிறாள்)
சாரதா
பொன்னி
சாரதா
பொன்னி
சாரதா
என்னம்மா. இந்தக் கோலத்தில ஏம்மா அழுநீங்க
என்ன சாரதா செய்ய என்ட விதி. ஒரு பொண்ண பெத்திருந்தாக்
கூட என் கூடவே இருந்திருக்கும். . என்ன இருந்தாலும் இவ மருமகளா வந்தவ தான். எண்ட விதி ஐயா போனதில இருந்து
(அழுதல்)
தெரியும்மா பாரதியம்மா படுத்துற பாடு நீங்க பேசாம எங்கட
வீட்டுக்கு வாரீங்களாம்மா நாங்க ஏழைங்க தான் ஆனா எங்களுக்கு மனசாட்சி இருக்கம்மா. ஐயா இருந்தப்போ நீங்க எப்பிடி இருந்தீங்க
இல்ல சாரதா நான் இந்த வீட்ட விட்டு போரண்டா எப்பவோ
போயிருக்கணும். ஆனால் ஐயா. அவர் இல்லாட்டிலும் இந்த வீட்டில தான் இருக்கணும் எண்டு சொன்ன ஒரே காரணத்துக்காகத் தானம்மா பொறுத்துட்டிருக்கிறன்.
உங்க நல்ல மனசுக்கு எல்லாம் நல்லா நடக்கும்மா. கடவுள்
கைவிடமாட்டாரம்மா அப்போ நான் வரட்டா
(சாரதா செல்ல பொன்னி மருமகள் சொன்ன வேலைகளைச் செய்யத்
தொடங்குகிறாள்.)
களம்
காட்சி: 8
: பொன்னியின் வீடு (மாலைப் பொழுது)
(சுந்தரம் இறந்த 3 வருடங்களின் பின்பு, பொன்னி பலவீனமடைந்த நிலையில்)
பாரதி
LD569T
பாரதி
பாரதி
என்னடா. அழுகுறாய். பாரம்மா. பாட்டி ஸ்கூல் நோட் கொப்பியில மருந்து கொட்டிட்
-T..
அந்த கெழட்டு சனியனுக்கு சாகப்போற காலத்துல சரி ஒரு
இடத்தில திண்டோமா படுத்தோமோ என்று இருக்கேலாதா. சனியன் உசுர வாங்குது
என்ன இங்க சண்டை
பாருங்க உங்கம்மாவ இவண்ட ஹோம் வேர்க் செய்த கொப்பியில
மருந்த கொட்டிட்டா.

Page 122
218 நகல்
કોeum. சரி.சரி.அத விடு.வாடா நீ நாங்க விளையாடுவம்.
(சிவா மகனைக்கூட்டிப் போக பாரதியின் தோழி லீலா வருதல்)
லீலா ஹாய் பாரதி. எப்படியிருக்க
பாரதி ஏய். லீலா ஏதோ இருக்கேனடி.
(இடையில் பொன்னியின் அறையிலிருந்து இருமல்சத்தம்)
໒໓ລom யாரது பாரதி?
பாரதி ! வேற யாரு. சிவாவோட அம்மா சாகாம இன்னம் மனிசர
கொண்டிட்டிருக்கு அது தான் பெரிய தலையிடி லீலா.
லீலா பாரதி. இந்த இருமல் கூடாது. தொற்று நோய். அவவ ஒம்
புருஷன்ட சொல்லி வெளிய எங்கயாவது ஓரத்தில போடு.
பாரதி ஹ9ம்.
(லீலா செல்ல உடனே பாரதி சிவாவிடம் லீலா கூறியதைக் கூறுகிறாள். இதைக்கேட்ட பொன்னி தலையணையில முகத்தைப் பொத்திக்கொண்டு அழுகிறாள். மகன் தன்னை வெளியே போடமுன்தானாகவே ஒரு பாயுடன் வெளியேறி ஒரு மூலையில் முகவரியே தெரியாதவளாய் உறங்குகிறாள்)
asm'illáil: 9
களம் : பொன்னியின் வீடு (பேரனின் பிறந்த நாளுக்காக பலர் வந்துள்ளனர். ஆவலில் பொன்னி எட்டிப்பார்க்கிறாள்) வந்தவர் ஹ9 இஸ் தெட் ஓல்ட் லேடி. சிவா (முகம் சுழித்து) ஒ அவவா அவ. எங்க வீட்ல 25 வருஷமா வேல பார்த்த வேலைக்காரி. பாவமே இந்த வயசான காலத்துல எங்க போவா போனாப் போகட்டும்னு இங்க வச்சிருக்கோம். (என்று அழகாக அம்மாவை அறிமுகப்படுத்துறான் சிவா) இதைக்கேட்ட பொன்னிக்கு தாங்க முடியவில்லை. ஒரு முடிவெடுக்கிறாள். இந்தப் பரந்து விரிந்த பூமி எனக்கு ஒரு இடம் தரமலா போய்விடும் என்று எண்ணி பின்புறமாக வீட்டை விட்டு வெளியேறுகிறாள். பொன்னியின் கால்கள் எந்தத்திசையை நோக்கி நகர்ந்ததோ அத்திசையிலே பொன்னி செல்கிறாள். இறுதியில் அவளுக்கொரு முதியோர் இல்லம்தென்பட உடனே அங்கு செல்கிறாள். அங்கு. கொடுத்த மெத்தையும் தனியொரு கட்டிலுமே அவளது நிம்மதிக்கு வழியாக இருந்தது. தன் சொந்த வீட்டல கிடைக்காத நிம்மதியை அந்த முதியோர் இல்லம் நிறையவே கொடுத்தது.

களம்
பொன்னி
யாழினி
விதி 219
asné: 10
முதியோர் இல்லம்
: இத தான்மா எண்ட வாழ்க்கை. மீண்டும் அழுகிறாள் கண்டு
வந்தவ தான்மா நான்
அம்மா (யாழினியின் இரு கண்களும் குளமாகின) பொன்னியை
யாழினி தன் தோழிலே சாய்த்துக் கொள்கிறாள் 'விதியென்ற காற்றிலே திசைமாறும் வாழ்க்கையே.
போகிற போக்கில்
பாதைகள் காட்டிவிடும். எண்ணம் போல் வாழ்க்கை யாருக்கும் அமைவதில்லை."

Page 123
புட்டிப்பால் (தாளலய நாடகம்)
பிரதியாக்கம்
திரு. கனக மகேந்திரா
பாத்திரங்கள்
1. மரகதம் மாமியார் 2. சுந்தரம் மாமனார் 3. ஜெயந்தன் up856T 4. காந்திமதி மருமகள்
5. DITL6T வேலைக்காரன் 6. உரைஞர் 1 7. உரைஞர் 2
களம் வீடு
(குழந்தை வீறிட்டு குழறிக்கொண்டுடிருக்கிறது. மரகதம் விழுந்தடிச்சு வந்து அங்கும் இங்கும் பார்க்கிறாள். பதகளித்துக் கொண்டு அங்கு மிங்குமாய் போய் கதவினைத்
தட்டுகிறாள்)
மரகதம் காந்திமதி. காந்திமதி!!.
பச்சைப்பாலன் பதைபதைத்துத் துடியாய்த் துடிகிறான் பலமணியாய் அழுதவன் தன் பிராணனையே போக்கிறான் பெத்தவளின் காதில் இன்னும் அழுகுரலே கேக்கலையோ..?
காந்தி ஓம் மாமி ஓம் மாமி.
பால் ஆத்தி வருமுன்னே. பாவி ஊரை அழைச்சிடுவான் சோச் சோ சோ. சோச் சோ சோ.
(ஏணையை ஆட்டுவது போல) சோச் சோ சோ. சோச் சோ சோ.
(தாலாட்டு மெட்டு)
 

udryasgiSub
காந்தி
மரகதம்
காந்தி
மரகதம்
சுந்தரம்
மரகதம்
புட்டிப்பால் 221.
பால் ஆத்தி வருமுன்னே. பாவி ஊரை அழைச்சிடுவான் (கர்வத்துடன்) பால் ஆத்தி பால் ஆத்தி. காந்திமதி காந்திமதி (உறுக்கி) பெத்த அம்மா நீயிங்கே. புட்டிப்பால் ஊத்திறியோ. அம்மா பால் இல்லாமலா . புட்டிப் பால் குடுக்கின்றாய்
அம்மா பால் இல்லையெண்டால் என்ன மாமி செய்யிறது என்ரை பிள்ளை பாவம் அவன் எண்ணி எண்ணி ஏங்குகிறன்.
அம்மா பால் இல்லையெண்டால் அம்மா பால் இல்லாமல் நீ உண்பதெல்லாம் எங்கை போச்சு அடிக்கொருக்கபல் மார்புவலி பால் இல்லாமல் வருகிறதோ பால் ஊறா அம்மாவுக்கு மார்புவலி வருகிறதாம் கேட்டியளே இக் கதையை நீங்களும் தான் கேட்டியளே பால் ஊறா அம்மாவுக்கு மார்பினிலே வலி வருமா
(கள்ளச் சிரிப்பு) பாலூட்டத் தவறி விட்டால் வலியும் வரும் கொதியும் வரும். அறிந்திடடீ அம்மா அறிந்திடடி தெரிந்திடடி, பெண்ணே தெரிந்திடடி
என்ன மாமி சொல்லுறியள் ஏதேதோ பேசிறியள் என்ரை பிள்ளையும் நானும் படும் பாடு யாரறிவார.? பாலுக்குப் பாலன் இங்கே படும் பாடு கொஞ்சமல்ல பாலூட்டா அன்னை நான் படும் துயரும் சின்னனல்ல
கதை விடாதை சும்மா கதை விடாதை
இப்பத்தைப் பெண்டுகளை.
இப்பத்தைப் பெண்டுகளை எனக்கு நல்லாய்த்
தெரியும் மோனை
நாகரிகம். மேல்நாட்டு நாகரிகம் பிள்ளை பெற்றால் வடிவு போச்சு பால் கொடுத்தால் உடம்பு போச்சு
மார்பழகும் மங்கிப் போகும். பகட்டான உடை உடுத்தால். பகட்டான உடை உடுத்தால். பால் குடுக்கக் கஸ்ரம் தானே.

Page 124
222
காந்தி
சுந்தரம்
மரகதம்
சுந்தரம்
காந்தி
மரகதம்
சுந்தரம்
LD535lb
காந்தி
மரகதம்
நகல்
மேல் நாட்டு நாகரிகம் எங்கள் பண்பாட்டைச் சிதைக்கிறது போலி நாகரிக மோகம் எங்கள் பரம்பரையை அழிக்கிறது.
ஐயோ மாமி அபச்சாரம்
அபச்சாரம் அபச்சாரம் பொல்லாத நோயப்பா!. அது சொன்னாலே தொற்றி விடும். பக்கத்து வீட்டில் வந்தால் அடுத்த வீட்டிலும் எட்டி விடும் பொல்லாத வருத்தமிது பிடிச்சுட்டுதா உன்னையுமே!!. பெத்த நாளில் இருந்து நீயும் பாலூட்ட நான் காணேன் பச்சைப் பாலன் தினமும் இங்கே பாலுக்காய் அழுகின்றான் பச்சைப் பாலன் என்ரை பேரன் பசியால் தினம் துவழிகின்றான் பெத்த அம்மா நீயோ இங்கு ஸ்ரைல் பிடித்து திரிகின்றாய். நானும் தான் பார்த்து வாறன் கொல்லாமல் கொல்லுகின்றாய் பிள்ளையைக் கொல்லாமல் கொல்லுகின்றாய்
கொடுமை மாமா! இது கொடுமை மாமி !! ஆத்திரத்தில் எல்லாரும் அறிவிழந்து பேசுறியள்.
போசாக்குப் பாலைவிட்டு - தாயின் போசாக்குப் பாலிருக்க நீ புட்டிப் பால் குடுக்கின்றாய் சத்துணவு நிறையுணவு புட்டிப் பாலில் வருமோ..? நோஞ்சலாக நீ வளர்த்தால் பிள்ளை நோயாளி
ஆகுமெல்லோ..? தெரியாதா..? இது உனக்குத் தெரியாதா..? பெண்ணா நீ யும் ஒரு பெண்ணா..? தாயா..? நீ யும்ஒரு தாயா..? பூ முடிப்பதும் பொட்டு வைப்பதும் புருசனுக்காய்
என்பர் -நீ பூ முடிப்பதும் பொட்டு வைப்பதும் யாருக்காகச் சொல்லு
வயது ஐந்து ஆகும் வரை மடி தடவிப் பால் குடித்த வயது ஐந்து ஆகும் வரை பால் குடித்த மைந்தன் பிள்ளை புட்டிப்பால்! இன்று புட்டிப்பால் குடிக்கின்றான்..! ஐயோ மாமி கேளுங்கள். பொறுமையுடன் கேளுங்கள் நான் சொன்னால் கேட்கமாட்டீர் - பாவி நான் சொன்னால் நம்பமாட்டீர் மகனிடமே கேட்டிடுங்கோ உங்கள் மகனிடமே
கேட்டிடுங்கோ
அவனை என்ன கேட்கிறது -நான் அவனை என்ன கேட்கிறது பிள்ளைப் பெத்ததும் அவனா..?

சுந்தரம்
காந்தி
மரகதம்
LostL6T
மரகதம்
மாடன்
புட்டிப்பால் 223
பால் கொடுப்பதும் அவனா..? அம்மான்ரை விடயத்தை அப்பாட்டை யா கேட்க.?
எயிடஸ் காறப் பெண்களைப்போல் பால் இன்றி
வளர்க்கின்றாய் எயிடஸ் காறப் பெண்களைப்போல் பால் கொடாது
வளர்க்கின்றாய் பொம்பிளையா நீயும் ஒரு பொம்பிளையா..? பெண்ணே தான் நானும் பெண்ணே தான் மறைக்க ஒன்றும் இல்லை மாமி. மறைச்சும் பலன் இல்லை மாமி. பட்டதெல்லாம் போதும மாமி - இனிப்பட ஏதும் இல்லை மாமி எயிட்ஸ் நோய் தான் எனக்கு எயிட்ஸ் நோய் தான் எயிட்ஸ் நோய் தான் எனக்கு எயிட்ஸ் நோய் தான் எயிட்ஸ் என்று சொன்ன டொக்டர் - என்னைப் பாலூட்டக் கூடாதென்றார்.
எயிட்ஸ் நோய் தான் எனக்கு எயிட்ஸ் நோய் தான்
(கிண்டலாக.) எயிட்ஸ் நோயா ? உனக்கு எயிட்ஸ் நோயா ?
(ஆச்சரியத்துடன்.) எயிட்ஸ் நோயா ? உனக்கு எயிட்ஸ் நோயா ? என்ன சொன்னாய்? என்னடி சொன்னாய்? (கோபமாக) பாவி படு பாவி, கேடி குடி கேடி! கெடுத்தாயே என் பிள்ளையிம் வாழ்வைக் கெடுத்தாயே மாடா!. எட மோடா. வாடா. குழு மாடா மோடா எட மோடா வாடா ஒடி வாடா
அடடா!. அடடா!!. வந்திட்டன் அம்மா! கட கட எனச் சொல்லுங்கோ அம்மா
கேட்டியாடா..? கதையை கேட்டியாடா..? கதையை நீயும் கேட்டியாடா..? எயிட்ஸ் நோயாம் இவளுக்கு எயிட்ஸ் நோயாம்.
ஐயையோ!. ஐயையோ!!. (பின்னாலே ஒடுவது
போல் பின்வாங்கி ஒடல்) ஆட்கொல்லி நோயெல்லோ -அது ஆட்கொல்லி நோயெல்லோ ஊரெல்லாம் பரவுமெல்லோ -அது ஊரெல்லாம் பரவுமெல்லோ நடத்தை கெட்ட பெண்களாலை பரவுகிற நோயெல்லோ நடத்தை கெட்ட மனிசராலை தொத்துகிற நோயெல்லோ.

Page 125
224
மரகதம்
சுந்தரம்
மாடன்
மரகதம்
காந்தி
ஜெகன்
சுந்தரம்
மரகதம்
நகல்
கெட்டவளே! நடத்தை கெட்டவளே! - கெட்டவளே நீநடத்தை கெட்டவளே கேடி குடி கேடி! பிள்ளைக்கும் தொத்தி விடும். என் பிள்ளைக்கும்
தொத்தி விடும் (தலையிலடித்தல்) பாலனுக்கும் பரவிடும் பச்சைப் பாலனுக்கும் பரவிடும்
(அங்கும் இங்கும் ஒடல்) எனக்குமெல்லோ தொத்தியிடும் - ஐயையோ எனக்குமெல்லோ தொத்தியிடும் (கதிரைக்குமேல் ஏறிநிண்டு சீலையை உதறுதல்) கெடுத்தாளே என் மகனைக் கெடுத்தாளே (பதற பதறிக் குமுறுதல்) வித்தாளே! என் மானத்தை வித்தாளே மாடா எட மாடா வாடா ஒடி வாடா பிடிடா தலையிலை. தள்ளடா வெளியிலை. நான் மாட்டன் ஐயையோ நான்மாட்டன் (நடுங்கிய படி) ஐயையோ நான்மாட்டன் முட்டினாலே தொத்தி விடும். கிட்டப் போனால் பத்தி விடும். நான் மாட்டன் ஐயையோ நான்மாட்டன் வெளியிலை போ. உடனை வெளியிலை போ!! மற்றவைக்கும் தொத்த முந்தி உடனடியாய் வெளியிலைபோ (மயிரில் பிடித்துத் தள்ளுதல்) என்ரை மகன் ஜெகனுக்கு வேறை ஒரு பெண்பார்த்து அடுத்து வரும் சுப நாளில் மறுமணமே செய்து வைப்பன். போ. போ. போ. போ. போ. போ.
போதும் மாமி. போதும் மாமி. போதும் மாமி பொறுத்தது போதும் மாமி தவறேதும் செய்யாமல் நான் பழியைச் சுமக்கின்றேன் போதும் மாமி பொறுத்தது போதும் மாமி அதோ வாறார். உங்கள் மகன் அதோ வாறார் கேளுங்கள் அவரிடமே கேட்டறியுங்கள்
என்னம்மா இங்கே!. அட்டகாசம் பண்ணுறியள் காந்திமதி. நீ. கலங்காதே
அவமானம் அவமானம்.
கலைத்துவிடு. அவளைக் கலைத்து விடு. ஒரு நிமிடம் பிந்தாதே உடனடியாய்க் கலைத்து விடு

ஐெகன்
uDIJøgub
ஐெகன்
சுந்தரம்
மரகதம்
ஜெகன்
LostL6T
மரகதம்
புட்டிப்பால் 225
ஆட்கொல்லி எயிட்ஸோடை வீட்டுக்குள் இருக்கின்றாள் (மகனைத் தடவி.) என்ரை ராசா ! நான் பெத்த ராசா !! (கட்டி அணைத்தல்) தொத்த முந்தி அவளை அனுப்பி விடு பட்டதெல்லாம் போதுமடா அவமானம் அவமானம் பட என்ன இருக்குதடா
அம்மா. அம்மா!!. ஏச்சிட்டே னம்மா! அம்மா உனை நானே ஏச்சிட்டேனே அம்மா! (காலில் விழல்) மன்னித்தேன் என்று சொல்லுங்களம்மா அம்மா எனக்கே எயிட்ஸ் நோய் அம்மா
தந்திட்டாளா உனக்கும் தந்திட்டாளா
நான் தானே எயிட்ஸ் காரன் என்னால்தான் அவள் எயிட்ஸ் காரி. என்னால்தான் அவள் எயிட்ஸ் காரி ஆனாள்! நான் தான் எயிட்ஸைக் காவினேன் அம்மா.
உனக்கா! எட உனக்கா (மெதுவாகத் துடைத்தல்) எயிட்ஸா எயிட்ஸ் நோயா (ஆத்திர மேலீட்டால்)
ஆஹா ஹா
ஆஹா ஹா
ஆடுறியா நாடகமே ஆடுறியா! பெண்டிலின்ரை திருக் கூத்தை மறைக்க நீயும் ஆடுறியா ஆடுறியா நாடகம் ஆடுறியா! நம்பம்மா. என் கதையை நம்பம்மா - கேளம்மா என் சொல்லைக் கேளம்மா
நடத்தை கெட்ட மனிசருக்கே எச் ஐ வி தொத்து மென்பர்
நடத்தை கெட்டா வாழ்ந்தாய் நீ.? நீநடத்தை கெட்டு வாழ்ந்தாயா..? அவமானம்! ஐயையோ அவமானம்! பாவி இருந்த பாழ் வயிறு பாழ்பட்டே போகட்டும் பாவி இருந்த பாழ் வயிறு பாழ்பட்டே போகட்டும் (வயிற்றிலடித்து கீழே விழுந்தெழும்பி) பாலூட்டி வளர்த்த மார்பை அறுத்தெறிவேன் பாலூட்டி வளர்த்த மார்பை அறுத்தெறிவேன் உறைக்கும் கணப்பொழுதில் (ஒடிப் போய் கத்தியை எடுத்து வரல்)

Page 126
226
ஐெகன்
மரகதம்
Lost L-6T
ஜெகன்
மரகதம்
மாடன்
மரகதம்
ஐெகன்
மாடன்
ஜெகன்
அம்மா அம்மா கேளுங்கள் அம்மா! (கத்தியைப் பறித்தபடி) அம்மா அம்மா கேளுங்கள் அம்மா! கதையாதே கதையைச் சும்மா நீட்டாதே கதையாதே கதையைச் சும்மா நீட்டாதே
அம்மா அம்மா கேளுங்கள் அம்மா! தம்பி சொல்லுவதைக் கேளுங்கள் அம்மா! சின்ன வயசிலை வெளிநாடு போனன் ஓடாய் உழைத்தேன் காசாய் அனுப்பினேன் அனுப்பு காசென அடிக்கடி கேட்பியள் வயதோ 30 ஆன பின்னரும் காசிலை மட்டும் குறியாய் இருந்தியள் அன்னிய நாட்டிலை உழைக்கிற பிள்ளை அலுப்பு ஆறுதல் ஊன் சுகம் தனிமை எப்படி என்று எப்ப தான் கேட்டியள் பார். பார். பார். அவன் சொல்லிக் காட்டிறான் செய்ததை எல்லாம் சொல்லிக் காட்டிறான்
தம்பி சும்மா சொல்ல மாட்டார் தம்பி சொல்லுவதைக் கேளுங்கள் அம்மா!
மூடடா வாயை முட்டாள் பயலே
உற்றார் உறவினர் அறிந்தோர் இல்லை ஆறுதல் கூற யாருமே இல்லை தனிமை என்னை வாட்டி வதைத்தது தயவே இன்றித் தனிமையில் தவித்தேன் திருமண வயதைத் தாண்டிய பின்னும் -என் திருமண வயதை காசுப் பேய் கொன்றது திருமண வயதை காசுப் பேய் கொன்றது -என் திருமண ஆவலோ கானல் நீரானது
ஐயையோ அப்படியா! அட்டட்டா பரிதாபம். கேளுங்கள் அம்மா கதைதனையே கேளுங்கள்
65 j5 ඊර්ܘ
அன்னிய நாட்டின் படலைகள் திறந்தன அனைத்து வாசலும் அகல விரிந்தன மதுவை நாடினேன் மாதரை நாடினேன் இனிமையை நுகர்ந்தேன் இன்பத்தில் மிதந்தேன் வாழ்க்கைப் பொழுதோ எளிமையாய்க் கழிந்தது உழைக்கவும் எனக்கு ஊக்கமாய் இருந்தது இளமையின் முதிர்வில் ஊருக்க அழைத்தீர் இந்தா திருமணம் முடித்திடு என்றீர் வியாதி ஏதும் இல்லாத வேளை

மரகதம்
ஐெகன்
மரகதம்
ஜெகன்
காந்தி
ஜெகன்
மரகதம்
புட்டிப்பால் 227
எயிட்ஸ் நோய் இருந்ததை அறியா நிலையில் அன்னையின் ஆணையை அகமதில் கொண்டே முன்னதை மறந்தேன் முடிவுக்கு வந்தேன் பாச உணர்வுக்குப் பணிந்ததன் விலையாய் பெற்றொர் விரும்பிய பெண்ணை முடித்தேன் எட்டு ஆண்டுகள் ஆனதன் பின்னே எயிட்ஸ் நோய் இருந்ததை அறிந்திட முடிந்தது எயிட்ஸ் நோய் இருப்பது வெளியாய்த் தெரிந்தது எதுவும் அறியா அப்பாவி அவளுக்கு என்னிடம் இருந்தெ எச் ஐ வி படிந்தது ஐயையோ..! என் பேரன்..! அப்பப்பா என் பேரன்..! என் பேரன். ! என் பேரன்..! (பதறி அடித்து அங்கும் இங்கும் ஓடுதல்) அவனுக்கு அவனுக்கொன்றும் இல்லை அம்மா. அதிர்ஸ்டக்காரப் பிள்ளை அவன்அவனுக்கு எயிட்ஸ்
இல்லையம்மா
என்ன கதை . இது நல்ல கதை அப்பாவுக்கு எயிட்ஸ் நோயாம். அம்மாவுக்கும்
எயிட்ஸ் நோயாம் எயிட்ஸ் காரர் பிள்ளைக்கு எயிட்ஸ் நோயே இல்லையாம். என்ன கதை . இது நல்ல கதை நம்பங்கள் அம்மா நம்புங்கள் என்கதையை சில வேளை சில பிள்ளை தவறி விடும் என் பிள்ளை அதிர்ஸ்டக்காரன். என் பிள்ளை அதிர்ஸ்டக்காரன். சோதித்துப் பார்த்த டொக்டர் பயப்படாதீர் என்று
சொன்னார் பிள்ளைக்கு எயிட்ஸ் இல்லை தாய் பாலூட்டக்
கூடாதென்றார் பாதகியாள் நான் இங்கு பெரும் பாதகியாய் ஆகிவிட்டேன்
பாதகனும் நானே கொடும் பாதகனாய் ஆகிவிட்டேன் போக ஆசை கொண்டதனால் போக்கறவே போய்விட்டேன் பாவி இவள் வாழ்வதனை வட்டோடு விழுத்தி விட்டேன்
ஐயையோ!. ஐயையோ!. என் அருமை மகனே! ஏன் ஆசை மருமகளே!! உண்மையொன்றும் தெரியாமல் இராட்சசியாய் ஆகிவிட்டேன் அறியாமைப் பேயால் - நான் இராட்சசியாய் ஆகிவிட்டேன்

Page 127
228
சுந்தரம்
மரகதம் சுந்த
ஐெகன்
உரை 1
உரை 2
உரை 1
உரை 2
உரை 1
உரை 2
மரகதம்
நகல்
அவசரத்தால் என் படபடப்பால் கொடும் பாவி ஆகி விட்டேன் - நானும் கொடும் பாவி ஆகி விட்டேன் மன்னிப்பாய் மகனே! மன்னிப்பாய் மருமகளே!! மன்னிப்பாய் . மன்னிப்பாய் ..! மன்னிப்பாய் ..!
கருகிய மலர் நாம் உதிரும் நாள் தொலைவில் இல்லை ஒடும் நாள் எல்லாம் உதிர்ந்தொடிந்தே தேய்கின்றோம் இருக்கும் நாள் இன்றோ நாளையோ நாம் அறியோம் என் ஆசை அம்மாவே ஏற்றிடுவீர் என் பிஞ்சை ( பிள்ளையைக் கொடுத்தல்) ஏற்றிடுவீர் என்னிடத்தில்: என் கொலுவில்: என் முத்தை ஏற்றிடுவீர் என்னிடத்தில்: என் கொலுவில்: என் முத்தை: மன்னிப்பீர் அம்மா! மறந்திடுவீர் அம்மா!! மன்னிப்பீர் அப்பா மறந்திடுவீர் எம்மை!! மன்னிப்பீர் மன்னிப்பீர் போய் வாறோம் நாங்கள் போய் வாறோம் எம் வாழ்வின் வரலாறு உலகிற்கோர் உகந்த பாடம் எம் வாழ்வின் வரலாறு உலகிற்கோர் உகந்த பாடம்
கேட்டியளே! கதையை நீங்கள் கேட்டியளே.!! பாத்தியளே! பரபரப்பாய் பாத்தியளே.!! சொல்லுங்கோ மற்றவைக்கும் சொல்லுங்கோ..!! அறியாமை அறியாமை!! அறியாமை! இவரில் கொலுவேறி குதிக்கிறது! எச்ஐவி முட்டி விட்டால் ஒட்டிடாது தொட்டு விட்டால் தொற்றிடாது
எச் ஐ வி இது இரத்தத்தில் கலந்து வரும் ஊசியிலும் ஒட்டி வரும் பலபெண்கள் பாலுறவால் பாதுகாப்பற்ற பாலுறவால் பல்கிப் பெருகி விடும் எச் ஐ வி பெருகி விடும் ஒரு அறையோ. ஒரு உடையோ ஒரு சோப்போ, ஒரு கப்போ, கட்டித் தழுவினாலோ, கட்டி முத்தம் இடுவதாலோ எச்சில் படுவதாலோ, ஒரு பாயில் படுப்பதாலோ பரவும் நோயல்ல அது பற்றும் நோயல்ல ஐயையோ என் மகனே! ஏன் ஆசை மருமகளே ஆபத்து இல்லைத்தானே எங்கே நீர் போகின்றீர்

சுந்தரம்
ஐெகன்
உரை1, உரை2 :
புட்டிப்பால் 229
வாருங்கள்! வாருங்கள் ஒன்றிணைந்து வாழ்ந்திடுவோம் என் பிள்ளை என்னோடு உன்பிள்ளை உன்னோடு அனைவருமே இணைந்திடுவோம்
(சுட்டிக் காட்டி)
வாழ்நாளில் மரணம் ஒரு நாளே
மரணம் ஒரு நாளே எல்லோர்க்கும் மரணம் ஒரு நாளே
விட்டிடுவீர் அம்மா விலக்கிடுவீர் எம்மை விட்ட தவறுக்குத் தண்டனையும் தேவை அம்மா விட்டிடுவீர் அம்மா விலக்கிடுவீர் எம்மை (இருவரும் செல்லல்) (சுந்தரம், மரகதம் கையில் குழந்தையுடன், மாடன் அவர்கட்கு கை காட்டி நிற்றல்)
அன்புடையீர் கேளும் அறிவுடையீர் பேணும் அவதானம்! அவதானம்! அவதானம்! அவதானம்! (வலக்கையை உயர்த்தி அனைவரும் இணைந்து) அவதானம்! அவதானம்! அவதானம்! அவதானம்!

Page 128
230
நகல்
என்றென்றும் நன்றிகள்.
இந்நூல் வெளியீட்டு விழாவிற்கு தனது பொன்னான நேரத்தை எமக்குதந்துதவி பிரதம விருந்தினராக கலந்து கொண்ட திரு.ஹாசிம் ஒமர் அவர்களுக்கும்,
கேட்டபோதெல்லாம் அனுமதியும் ஆதரவும் தந்து உதவும் எமது கல்லூரி அதிபர் திரு. உபாலி குணசேகர, உப அதிபர், பிரதி அதிபர் மா. கணபதிப்பிள்ளை மற்றும் சங்கங்கள் கழகங்களுக்குப் பொறுப்பாசிரியர்களாக விளங்கும் திரு. ரவூப், திரு சுகத் லியனகே ஆகியோருக்கும் மன்ற சிரேஷ்ட பொறுப்பாசிரியர் திருமதி சாந்தினி செல்வதாஸ் மற்றும் மன்றப் பொறுப்பாசிரியர்கள், மன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கும்,
நாடகப் பிரதிகளை தெரிவு செய்வதற்கு பொறுப்பாக இருந்த எமது மன்ற ஆசிரியர் குழுவிற்கும், கலைஞர் கலைச்செல்வன் அவர்களுக்கும்,
றோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றத்திற்கு கேட்டபோதெல்லாம் தம்மால் முடிந்த உதவிகளை செய்து தரும் உள்ளங்களில் நன்றிக்குரியவர் திரு செல்லம் அம்பலவாணர் ஆவார். பொறியியலாளரும் நாடகக்கலைஞருமான இவர், றோயல் கல்லூரியின் பெற்றோர்களில் ஒருவருமாவார். ‘நகல்’ நூலுக்காக நாடகப் பிரதிகளை கேட்டவுடனேயே எந்த மறுப்பும் இன்றி பல வேலைப்பளுக்களின் மத்தியிலும் கணினியில் அச்சிட்டு உதவிய இவருக்கும்,
நகல்' நூலை அச்சிட்டு உதவிய எமது கல்லூரியின் பழைய மாணவரும் றோயல் கல்லூரி பெற்றோர்களில் ஒருவருமான திரு க. குமரன் அவர்களுக்கும்,
இந் நூல் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பிரதிகளை வாங்கிய பெற்றோர், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் ஆகியோருக்கும்,
இவ்வருட மன்ற மாணவர் செயற்குழுவிற்கும்,
உணவு, பானங்களை தந்துதவிய பெற்றோர்களுக்கும்,
மற்றும் இந் நூல் வெளியிட உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும்.


Page 129


Page 130
நன்றுப்பித்தும் தரவிடுதியற் இலங்கைத்தீவிர
Om Gunugsang gió Garfu Gurga
 

云