கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புற்றுநோய்

Page 1

3:39393 (393><
WW
eBUFT: 3-00
36D6D (3D6D6D6D

Page 2
புற்றுநோய்
பிரசுரிப்பவர் வடமாகாண புற்றுநோய்ச் சங்கம்
முதற் பதிப்பு:
பதிப்புரிமை புற்றுநோய்க் ö卤函ü
6. செட்டியார் அச்சகம், யாழ்ப்பாணம்
விலை ரூபா 300
 
 
 
 
 

முன்னுரை
எந்த நோயும் தோன்றிய பின் சிகிச்சை அளிப்ப திலும் பார்க்க, அது ஏற்படாமல் தடுப்பதே சிறந்தது இது புற்றுநோயைப் பொறுத்தளவில் மிகப்பொருத்தமா னது. எமது சங்கம் புற்றுநோய் சம்பந்தமாக பொது மக் களுக்கு அளிக்கும் சேவைகளில், நோயை தடை செய்யும் முறைகளை கற்றுக்கொடுப்பதும் ஒன்ருகும். இதற்காக இந் நூலைச் சமர்ப்பிக்கின்ருேம். நன்கு வாசித்து (முக்கியமாக
கடைசி இரு அத்தியாயங்கள்) பயனடைவீர்கள் என்று
நம்புகிருேம். * சுகாதார அறிவுரைகள்' என்னும் நூலை எழுதிய சத்திரசிகிச்சை நிபுணர் வே. கிருஷ்ணராசா எங்கள் வேண்டுகோளுக்கிணங்கி இந் நூலை எழுதியதற்கு எங்கள் நன்றி.
எமது சேவையில் சில புற்றுநோய்கள் (காலம் கழித்து சிகிச்சை பெறுவதற்கு வந்தால்) மாற்றமுடி யாத நிலையில் தவிக்கும் நோயாளிகளுக்கு விடுதி ஒன்று கட்டத் திட்டமிட்டிருக்கிறேம். ஊரெழுவைச் சேர்த்த திரு. தம்பிராசா, 14 இலாச்சம் நிலம் (தெல்லிப்பழையில்) நன்கொடை அளித்திருக்கின்ருர், கட்டிட நிதிக்கு தாராள மாக நன்கொடை செய்யுமாறு கேட்டுக்கொள்ளுகின்ருேம். எங்கள் சங்கம் இத்தகைய நன்கொடை வரி விலக்குக்கு பதியப்பட்டுள்ளது. நன்கொடை அனுப்பவேண்டிய விலா சம்: திரு ஈ. சீவரத்தினம், வழக்கறிஞர். 32, 4ம் குறுக்கு வீதி, யாழ்ப்பாணம்.
நன்றி
வைத்திய கலாநிதி மா. ஜெகநாதன் தலைவர், வடமாகாணப் புற்றுநோய்ச் சங்கம்.
፩o%

Page 3
புற்றுநோய் என்றல் என்ன?
புற்றுநோய் என்ருல் என்ன? இதனை நன்ருக விளங் கிக் கொள்வதற்கு, எமது உடலமைப்பைப்பற்றி முதலில் அறிந்து கொள்ள வேண்டும். கலம் (Cell) என்பது உடலை உருவாக்கும் அடிப்படைப் பொருளாகும். (கட்டிடத்திற்கு கொங்கிறீற் கல்லைப்போல் என சொல்லலாம்). பல கலங் கள் கலத்திடைப் பாய்பொருளால் (Intercellular Substance) இணைக்கப்பட்டு இழையங்களை (Tissues) உருவாக்கும். இவ் விழையங்களின் சேர்க்கையால் அங்கங்கள் (Organs) உருவாகின்றன.
கலம், இழையம், அங்கம் ஆகியன வெவ்வேறு தொழில்களைப் புரிவதற்காக, வேறுபாடடைந்து சிறப்ப டைந்துள்ளன. கலங்களுக்கு உதாரணமாக: மேலணி இழை již 36) jšísair (Surface Epithelial Cells) - Lunrg15T zůliš தொழில் புரிபவை; சுரக்கும் இழையக் கலங்கள் (Gland ular Epithelial Cells) — S; Urš 35th Gás nrysop&aviů LífluGO)6]); Gas TG4'll Gaolpudi di Gorild gir (Connective Tissue Cells) (உறுதியை அளிப்பவை); தசையிழையக் கலங்கள் (Muscle Cells) (தசைச் சுருக்கத்தை ஏற்படுத்துபவை): நரம்பிழை யக் கலங்கள் (Nerve Cells) - (கணத்தாக்கங்களை கடத்து பவை), செங்குருதிக்கலங்கள் (Red Blood Cels) -ஒட்சிசனை யும் (பிராணவாயு), வேறு பதார்த்தங்களையும் கடத்து பவை; வெண்குருதிக்கலங்கள் (White Blood Cells) (நோயை எதிர்த்து நிற்பவை), ஆகியவற்றைக் குறிக்கலாம். இழையங் களுக்கு உதாரணங்கள்: மேலணி இழையம் (EpitheliaTissue) Q57Gü1939ypub (Connective Tissue), 56)gu960yp uth (Muscle Tissue), G(55). (Blood), sóls007 söff (Lymph) என்பனவாகும். அங்கங்களுக்கு உதாரணங்கள்: இருதயம், மூளை, ஈரல், சிறுநீரகம், இரைப்பை, நுரையீரல் (Lung), கருப் (நுகப்) பிரிவின் ஆரம்பத்திலிருந்தே, கலப் பிரிவானது சீராக நடைபெற்று உடலில் வெவ்வேறு கலங் கள், இழையங்கள், அங்கங்கள் சீரானமுறையில் உருவா கின்றது. இவ்வாருக உருவான உடலின் அமைப்புக்கள்
 
 
 
 
 
 
 
 

பயன்படக்தக்க முறையில் சீராக தொழிற்படுகின்றன. சில வேளைகளில் வெவ்வேறு காரணங்களின் நிமித்தம் (உ- ம் கர்ப்பமாக இருக்கும் காலத்தில் தொற்றுநோய் ஏற்படல், சில மருந்துவகைகள் பாவித்தல், கதிர் வீசலுக்கு உட் படல்) உடலில் மாற்றங்கள் ஏற்படலாம். உடலில் சாதா ரணமாக உருவாகிய கலங்கள் அழிவதாலும், புதிய கலச் சேர்க்கையாலும், தொடர்ச்சியான ஒரு திருத்தம் (Repair) நடைபெற்று வருகின்றது. (இது நரம்புக் கலங்களில் நடை பெறுவதில்லை).
பின்பு கூறப்படும் சில காரணங்களால் சிலரில் கலப் பிரிவிலும், வளர்ச்சியிலும் மாற்றம் ஏற்பட்டு, புதிய வளர்ச் S5, Git (New Growths) a) CD airta, Gottb. இவ்வளர்ச்சிகளில் சில வடிவம், பருமன், அடுக்கப்பட்ட ஒழுங்குமுறை, சாதா ரண கலங்களை ஒட்டியும், உடலுக்கு பாதிப்பு விளைவிக்கா தவையாகவும் (Benign Growths) உள்ளன. இவற்றில் சில, காலத்தில் சில வேளைகளில் தீங்கு விளைவிக்கக்கூடியதாக (Malignant Growths) மாறலாம். புது வளர்ச்சிகளில் மற் றும் சிலவற்றில் ஆரம்பத்திலிருந்தே, கலங்கள், ஒழுங்கின்றி வெவ்வேறு பருமன் அமைப்பு ஆகியவற்றுடன் உருவாகி, அருகிலுள்ள இழையங்களைத் தாக்குவதுமல்லாமல் உட லின் வெவ்வேறு பாகங்களுக்கு பரவி உடல் தொழில்களைப் பாதிக்கவும் செய்கின்றன. இவ்வளர்ச்சிகள் தீங்கான வளர்ச்சிகள் (Malignant Growths) அல்லது புற்றுநோய் (Cancer) என அழைக்கப்படுகின்றன.
புற்று நோயானது, அது உருவாகும் கலத்தை அடிப் படையாகக் கொண்டு பலவகைகளாகும். மேலணிக்கலங் களிலிருந்து உருவாகுபவை காசி நோமா (Carcinoma) என் றும், தொகுப்பு இழையக்கலங்களில் இருந்து உருவாகு பவை சாக்கோமா (Sarcoma) என்றும் அழைக்கப்படுகின் றன. இவைகள் மேலும் எவ்வெவ்வகை கலங்களிலிருந்து எழுவதை ஒட்டி, வெவ்வேறு வகைகளாகும். உ. ம்- ஸ்கு G36) LD Gifu) 55 TGPG360) LDIT (Squamous Carci Donia). --?), GöTğı" தோல், களம் (உணவுக்குழாய்) வாய் முதலியவற்றின் மேலணியிலிருந்து (Squamous Cell) உருவாகின்றது. அடி னேகாசி னுேமா (Adenocarcinoma) இரைப்பை, சதையி (Pancreas) ஈரல் என்பனவற்றிலிருந்து உருவாகின்றது. Lrst sår6gfø0Tå Savub & T&GG9uDT (Transitional Cell Carcinoma) சிறுநீர்ப்பையிலிருந்தும், ஒஸ்ரியோசாக்கோமா (Oste0.
3

Page 4
sarcoma) 65, bGLIT (f) Fiti (35.stlost (Lymphosarcoma ) பை (f) பிரோசாக் கோமா (fibrosarcoma), என்பன முறையே எலும்பு, நிணநீர்க்கலங்கள், நார்கலங்களிலிருந்து உருவாகின்றன. இலுக்கீமியா (Leukaemia), வெண்கலங் களிலிருந்து உருவாகின்றது. இவற்றை விடவேறு பலவகை களும் காணப்படுகின்றன.
சில -தீங்கற்ற ---> தீய
-காசினுேமா - ?
புதுவளர்ச்சிகள் -
-சாக்கோமா - ?
- தீய - (Cancer)
-வேறுவகை - ->
புற்று நோயானது 9 அண்மையிலுள்ள இழையங்கி
ளுக்கு மட்டுமல்லாமல், வெவ்வேறு அங்கங்களுக்கும் குரு .
திக்குழாயினூடாகவும், நிணநீர்க் குழாயினூடாகவும் பரவு கின்றது. இவ்வாருன பரவல், பொதுவாக நிணநீர்க்கணுக் கள் (நெறி-Lymph node)நுரையீரல், ஈரல், எலும்பு, மூளை என்பனவற்றிற்கு நடைபெறுகின்றது.
புற்றுநோய் உடலுக்கு பலவழிகளால் கேடு விளை விக்கின்றது. பொதுவிளைவுகளில், உடம்பு மெலிதல், இரத் தச்சோகை என்பன சிலவாகும். (இவ்விளைவு எல்லா வகை களிலும், எல்லோரிலும் ஏற்படமாட்டா). புற்று நோயின் வகையைப் பொறுத்தும், எந்த இடத்திலோ, அங்கத்தி லிருந்தோ, எழுவதைப் பொறுத்தும் வெவ்வேறு விளைவு கள் ஏற்படும். உ. ம் உடல் மெலிவு, இரத்தச்சோகை
4.
 
 
 

பலகாரணங்களால் ஏற்படலாம்; பசியின்மையால் உணவு எடுத்தல் அளவைக்குறைத்தும், உணவு உறிஞ்சப்படுவதில் மாற்றம் ஏற்படுவதாலும், இலகுவில் கிருமித்தாக்கம் ஏற் பட்டும், சில புற்றுநோய்க் கட்டிகள் சுரக்கும் பதார்த்தங் களாலும் உடல் மெலிவு இரத்தச்சோகை ஏற்படலாம். களத்தில் ஏற்படும் புற்றுநோய் விழுங்கப்பட்ட உணவு உட்செல்வதைப் பாதிக்கும். பெருங்குடலில் எழும் கட்டி மலச்சிக்கலுக்கும், மலவாசலினூடாக இரத்தம், சீதம் செல்வதற்கு காரணமாகும், சிறுநீரகம், மூளை ஆகியவற் றில் ஏற்படும் கட்டிகள், முறையே கழிவுப் பொருட்கள் அகற்றப்படுவதில் கஷ்டத்தையும், பாரிசவாதம், கண் பார்வை கோளாறு, தலேயிடி, வேறு கோளாறுகளையும் ஏற்படுத்தலாம். பரவல் நேரிடும் பொழுது குருதிக் குழாய் களையும், தரம்புகளையும் பாதிப்பதால் இரத்த இழப்பு நோ ஏற்படும். சில புற்றுநோய்கள் ஓமோன்கள் (Hormones) சுரப்பதால் விளைவு ஏற்படும். தூரப்பரவல், நுரை யீரல், ஈரல், எலும்பு, மூளை அங்கங்களின் தொழில்களை பாதித்து கேடு விளைவிக்கின்றன.
புற்றுநோய் உடலுக்கு ஏற்படுத்தும் தீங்குகளின் உக்கிரம், பல காரணிகளில் தங்கியுள்ளது, இவ்வுக்கிர வேறுபாடு, புற்றுநோய் எவ்வகை மற்றுமல்லாது, ஒரே வகை வெவ்வேறு நோயாளியின் உடல்நிலையைப் பொறுத் தும் ஏற்படும். புற்றுநோயின் வகை என்னும்போது பல அம்சங்களை தங்கியுள்ளது; உருவாக்கப்பட்டுள்ள கலத்தின் வகை, அக்கலங்களின் படிவத்திலும் பருமனிலும் ஏற்பட்ட மாற்றத்தின் அளவு, புற்றுநோய் கட்டி வளரும் வீதம், உடலில் உருவாகிய அங்கம், ஏனைய உடற்பாகங்களுக்கு பர வியுள்ள அளவு, இவை யாவற்றையும் அடங்கியுள்ளது. உ. ம். சாக்கோமா குறைந்த வயதிலேயே தோன்றி, விரைவில் பரவி காசினுேமாவை விட அதிகளவில் தீங்கு விளைவிக்கும். காசினுேமா என்பவற்றிலேயே சில ஏனைய வற்றை விட அதிகளவில் தீங்குவிளைவிக்கும். உ. ம். ஈர லில் உண்டாகும் காசினுேமா மார்பில் ஏற்படும் காசினுே மாவை விட கூடிய தீங்கு விளைவிக்கும். நிறம் கூடிய தோலில் உகுவாகும் புற்றுநோய் நிறம் குறைந்ததை விட கூடிய விளைவை ஏற்படுத்தும்.
மேற் கூறப்பட்டவற்றிலிருந்து, புற்றுநோயானது
பல பல வகையாகவுள்ளதென்றும், வெவ்வேறு வகைகள்
வெவ்வேறு மனிதரில், வெவ்வேறு விளேவுகளை உருவாக்கிற
தென்றும் தெளிவாகின்றது. அ
5

Page 5
2. புற்றுநோய் தோற்றத்தில்
ஈடுபடும் காரணிகள்
இந்நோய் உருவாகுவதற்கு என்ன காரணங்கள் என அறிதல் இதைத்தடுப்பதற்கு உதவும். கலத்தில் அடிப் படையில் எம்மூலகாரணத்தால் உருவாகின்றது என கண்டு பிடிக்கப்படவில்லையாயினும், இதன் தோற்றத்தில் ஈடுபடும் அல்லது பங்களிக்கும் பல காரணங்கள் கண்டுபிடிக்கப்பட் டுள்ளன. இவற்றை
1) Guitgarter situ Gooflá; air (General Factors) 67 Gor
வும்
2) குறிப்பான காரணிகள் (Specific Factors) எனவும்
பிரிக்கலாம்.
A,
பொதுக்காரணிகள் , , ,
9) Lycius já,35s y Gof (Genetic or Hereditary)
புற்றுநோய் பரம்பரையாக தோற்றுவதில்லை என் பது (சில மிக அரியவகைகளை விட) உறுதியாக தெரிந்ததே. மிக அரிய வகைகளும் மிகவும் குறைந்த அளவிலேயே காணப்படுகின்றன. சில ருக்கு புற்றுநோய் உருவாகுவதற்கு, பரம்பரையை சேர்ந்ததல்லாத அதிக வாய்ப்புக்கள் (Predisposition) இருப்பதால் வேறு காரணிகள் இவர்க வில் இலகுவில் புற்றுநோயை தோற்றுவிக்கக் கூடும். புற்றுநோய் குடும்பத்தில் ஒருவருக்கு ஏற் பட்டால் மற்ருேருக்கும் ஏற்படுமென அச்சங் கொள்ளத் தேவையில்லை.
ஆ) வைரசுக்கள் (Viruses)
இவை மிருகங்களில் புற்றுநோயை உருவாக்குவ தாகக் கண்டுபிடிக்கப்பட்டிருப்பினும், மனிதரில் மிகச்சில வைரசுக்களே இதற்குக் காரணமாக * உள்ளன. (உ. ம்.) கெ (h) ப்பற்றைரிஸ் (B)
) 6
 
 
 

60)3upGh) (Hepatitis B Virus), eti i Gioa0) Tufair Cuit (b) f 60) an mair) (Epstein Barr Wirus) (2)30) a FF!r Gúl3ylí), மூக்குத்தொண்டையிலும் நிணகனுக்களிலும் புற்றுநோயை ஏற்படுத்தலாம்.
இ) ஒமோன்கள் (Hormones)
இவற்றல் உண்டாகும் சில புற்றுநோய்கள், சில அங்கங்களில் சிலரில் மட்டுமே ஏற்படுகின்றது. உ. ம். மார்புப் புற்றுநோய், புறொஸ்ரேற் புற்று நோய் (Prostate), கருப்பை புற்றுநோய்.
ஈ) அதிகளவு மன நெருக்கம் (Mental stress)
இதனுல் ஓமோன்கள் சுரக்கப்பட்டு இவைகாரண மாக அமையலாம். ஆனல் இன்னும் இதற்கு போதியளவு ஆதாரங்கள் இல்லை.
உ) புற்றுநோயை உருவாக்கக் கூடிய கர்த்தாக்கள்,
LI 51Ti 55 ši 3Gsir. (Carcinogenic agents)
இவை பெரும்பாலும் பெளதீகம் (Physical) அல்லது இரசாயன (Chemical) பதார்த்தங்களாகும். இவை பெரும்பாலும் குறிப்பிட்ட சில தொழில்களைச் செய்பவர்களை பாதிக்கின்றது.
*、
9ܢ
1) பெளதீக காரணிகள்.
காரணி *தொழில்? நோய் எழும் அங்கம் அயனியாகும் ஒளிவீசும் அல்லது எலும்பு, தோல், கதிர்வீசல் ரேடியம் முகம் வெண்கலம், மூளை
செய்தல் மார்பு, பெரும்
(Ionising Radiation) GTLą. Luwih 5; Tiši sisih (356sv, கேடயச்
மருத்துவம் - சிகிச் சுரப்பி. சை ஆய்வு நிருமாணித்தல், (Thyroid)
7

Page 6
அல்ராவியலெற் கதிர் (Ultra-violetRadiation)
இயற்கை(சூரியன்) தோல்
மருத்துவம் ம. சிகிச்சை
வெப்ப கதிர் (Thermal)
பைப் (Pipe) புகைத்தல்
உதடு, வாய்.
2) இரசாயன காரணிகள்.
புகைக்கரி, கரித் தார், தாதுஎண்ணை
சுரங்கம்
நுரையீரல், தோல்
அருேமற்றிக் அமின்ஸ் (Aromatie Amines)
சாயம் தொகுப்பு
சிறுநீர்ப்பை
நப்(f)தலமின்ஸ் (Naphthalmines)
ரப்பர் கயிறு
சிறுநீர்ப்பை.
வெப்பத்தார் அஸ்பெஸ்ரோஸ் (Asbestos)g Gaph உலோகத்தாது (Chrome Ore) நிக்கல் உலோ கத்தாது (Nickel Ore)
சுரங்கம்
АУ))
தயாரிப்பு.
நுரையீரல்,
மரத்தூசி
ஐசோபுரோ
65gif sopropylene. நிக்கஉலோகம் தாது
மரவேலை
தோல் பதனிடுதல்
நாசிக்குடா (Nasal Sinuses)
 
 

பொலிவினைல் தயாரித்தல் ஈரல்
குளோறைட் - (PVC)
துணி தயாரித்தல் சிறுநீர்ப்பை,
கிருமிநாசினிகள் கமம் நாசிக்குடா
தயாரித்தல் நுரை ஈரல், !
பூஞ்சனத்தில் உள்ள அப் (f)ளா ரொக்சின் (Aflatoxin) உணவு வகைகளில் (பனம்மா, பனம் கிழங்கு, நிலக்கடலை) சேர்ந்து ஈரலில் நோய் ஏற்படுத்தலாம்.
இக்காரணிகள் யாவரையும் பாதிப்பதில்லை. நோய் ஏற் படுவது, குறிப்பிட்ட காரணியின் பாதிப்புத்தன்மை, கார னியின் விசை அல்லது அளவு, உடலைத் தாக்கிய காலத்தின் அளவு பாதிக்கப்படுபவரின் உடல் நிலை முதலியவற்றில் தங்கியுள்ளது.
ஊ) நீடித்த காலமாக உடலைப்பாதித்து வரும் நோய்கள்.
)
2)
சில சாதாரணமான நோய்களும் நீடித்தகால மாக உடலைப்பாதிக்கும்போது புற்று நோய்க்கு வழிவகுக்கின்றன. உ. ம். தோலில் ஏற்படும் புண்கள், சிறுநீரகத்தில் அல்லது பித்தப்பையில் கற்கள், இரும்புச்சத்துக் குறைவால் உண்டாகும் இரத்தச்சோகை, மதுவால் உண்டாகும் ஈரல் சுருங்கல் (Cirrhosis) முறையே வாய், களம், ஈரல் என்பவற்றில் புற்று நோய்க்கு வழிவகுக்கலாம்.
சில தீங்கற்ற வளர்ச்சிகள் உ. ம், பப்பிலோமா (தோலில் ஏற்படும் தீங்கற்ற வளர்ச்சி) (Papillo. mal)லியுகோபிளேக்கியா வாயில், ஆண் உடம் பில் ஏற்படும் வெண்தடிப்பு (Leucopakia), சில காலத்தில் தீயவளர்ச்சியாக மாறலாம்.

Page 7
3. குறிப்பான காரணிகள்.
அ) உணவு
1)
2)
3)
4期
5)
6)
7)
8)
உணவில் உயிர்ச்சத்து ஏ. , இரும்புச்சத்து என் பனவற்றின் பற்ருக்குறைவு, வாய்குழி, களம்
இரப்பை என்பவற்றில் புற்றுநோய் தோன்றும்
வீதத்தை அதிகரிக்கலாம்.
- அதிகளவில் கொழுப்புச்சத்தையும் (பிரதானமாக விலங்குக் கொழுப்பு) அதிகளவு புரதத்தையும் உட்கொள்வதால், பெருங்குடல், கருப்பை, மார்பு
சிறுநீரகம் என்பவற்றில் புற்றுநோய் வீதம் அதி
கரிக்கின்றது. ஆனல் எமது நாட்டில் செல்வந்த ரைத்தவிர ஏனையோருக்கு இது காரணமல்ல.
நார்த்தன்மை குறைந்த உணவு பெருங்குடலில் நோயை ஏற்படுத்தலாம். இதுவும் எம்நாட்டில் அரிதாகவே காரணமாகும்.
அதிக காப்பி அருந்துவது, புகைத்தலுடன் சேர்த் தால் சதையி, சிறுநீரகம் ஆகியவற்றில் புற்று நோயை உண்டாக்கலாம்.
பூஞ்சணம் பிடித்த பனம் கிழங்கு, பனம்மா, நிலக்
கடலை தொடர்ந்து பாவித்தால், ஈரலில் புற்று
நோய் ஏற்படலாம்.
கு
அதிகளவில் உப்பைக் கொண்ட மீன் சாப்பிடுதல், களத்தில் புற்றுநோயை ஏற்படுத்தலாம்.
செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்களுக்கு சேர்க்கப்பட்ட சில பதார்த்தங் கள், களம், இரப்பை, சிறுநீர்ப்பை, என்பவற்றில் புற்றுநோய் வீதத்தை அதிகரிக்கலாம்.
மிகவும் சூடான உணவு உட்கொள்வதால் வாய்க்
குழியிலும் களத்திலும் புற்றுநோய் வாய்ப்பு அதி கரிக்கலாம்.
O

9) கறிகளுக்கு சேர்க்கப்படும் சரக்குகள் அதிகவா யின் வாய்குழி, களம், இரப்பை ஆகியவற்றின் புற்றுநோய் தோன்றும் வீதத்தை அதிகரிக்கலாம்.
ஆ) புகைத்தல்
புகைத்தல் - புகையிலுள்ள நிக்கொட்டின் எனும் பதார்த்தமும், புகை இலை எரியும் பொழுது உண் டாகும் வேறு பதார்த்தங்களும் நுரையீரலிலும் வேறு அங்கங்களிலும் புற்று நோயை உண்டாக் கலாம். பாதிக்கும் தாக்கச் சந்தர்ப்பம், ஒருவர் புகைக்கும் அளவு, நிக்கொட்டின் அளவு, புகைத் தலுடன் மதுபானம் பாவித்தல் என்பனவற்றில் தங்கியுள்ளது.
இ) மதுபானம்
பெரும்பாலும் வாய்க்குழி, களம், ஈரல், சிறுநீர்ப் பை என்பனவற்றில் காரணியாகலாம். புகைத் தலும் சேர்ந்தால் தாக்கச்சந்தர்ப்பம் அதிகரிக்கும்.
ஈ) வெற்றிலை சாப்பிடுதல்.
வாய்க்குழியில் புற்றுநோய் ஏற்படலாம். வெற் றிலையுடன் சேர்க்கும் புகையிலையே முக்கிய கார ணமாகும்.
உ) முன்கூறிய பொது காரணங்களின் அமைப்பில் தொழில், சுற்ருடல் சம்பந்தப்பட்ட காரணிகள்"
ஜா) சில மருந்துக்கள் 9۔
மிக மிக சில மருந்துகள் தொடர்ந்து சாப்பிடுவ தால் புற்றுநோய் ஏற்படும் சந்தர்ப்பம் உண்டா கின்றது.

Page 8
3. புற்றுநோயை தடுக்கும் முறைகள்
முன் கூறியவற்றிலிருந்து சில முறைகளால் புற்று நோய் ஏற்படும் சந்தர்ப்பத்தை இல்லாமல் பண்ணலாம் எனத்தெளிவாகின்றது. இவையாவன,
1. உணவு' சத்துள்ள உணவுவகை, இரும்புச்சத்து, உயிர்ச் சத்து ஏ நிறைந்ததாயும், நாட்படாத காய், கறி, பழம் முதலியன காப்பிடுதல். இரும்புச்சத்துள்ள உணவு வகையாவன. முட்டை மஞ்சட்கரு, இறைச்சி ஈரல், பச்சை இலைவகை (கீரை), எள்ளு, குரக்கன், பனங்கட்டி, உயிர்ச்சத்து ஏ; பால், மீன், மஞ்சள் நிறம் கொண்ட காய்கறி (கரட், பூசனி) பழம் (பப் பாசி, மாம்பழம்) ஆகியவற்றில் அதிகம் உண்டு.
ஆ) அதிக அளவு கொழுப்பு, புரதம் சாப்பிடுவதைத் தவிர்த்தல். ஆனல் எம் நாட்டில் இது செல்வந்தருக்கு மட்டுமே பொருந்தும். ஏனெனில் ஏனையோர் குறைந் தளவு புரதம், கொழுப்பு சேர்ந்த உணவையே நாளாந் தம் சாப்பிடுகிறர்கள். இவர்கள் உட்கொள்ளும் புர தம் இன்னும் கூடுதலாக இருக்கவேண்டும்.
இ) அதிகளவு சூடான உணவு, அதிகளவு சரக்கு கலந்த கறி வகைகள், அதிகளவு உப்பு, உப்பு கலந்த மீன் தவிர்த்தல்.
இ) பூஞ்சணம் பிடித்த உணவுவகைகள், முக்கியமாக பனங்
கிழங்கு, பனம் மா, நிலக்கடலை தவிர்த்தல்.
உ) செயற்கையாக தயாரித்து அடைத்து விற்கப்படும்
உணவுகள் குறைத்தல் அல்லது தவிர்த்தல்.
ஜ) அதிக இனிப்பு சேர்ந்த பண்டங்கள் தவிர்த்தல்,
○ &து
 
 

3.
மதுபானம் அருந்துவது, புகைத்தல், வெற்றிலை சாப் பிடுதல் முற்ருக ஒழிய வேண்டும்.
ஏலுமாயின் தொழிற்சாலைகள் அமைந்த இடங்களில் (Industrial Areas) (5qu55'Lgs 56ori 556ò.
மருத்துவரின் யோசனை இல்லாமல் தொடர்ந்து மருந் துகள் பாவிப்பது தவிர்த்தல்,
புற்றுநோயாக மாறக்கூடிய சில நோய்களுக்கு (உதா ரணம் பப்பிலோமா லியுகோபிளேக்கியா, நீடித்த காலப்புண்) விரைவில் சிகிச்சை பெறுதல்,
மேலே குறிப்பிட்ட சில தொழில்கள் புரிபவர்கள் சுக்ா தார சேவையாளரின் ஆலோசனைபபடி சில நடவடிக் கைகளை கைப்பற்றுதல் அவசியம். உதாரணமாக மூக மூடி, கையுறை பாவித்தல், வேலைமுடிந்து குளித்தல். தயாரிப்பு சாலைகளில் புற்றுநோய் ஏற்படுத்தும் பதார்த் தங்களை பாவியாமல் அல்லது அவற்றை மாற்றம் செய்து பாவித்தல், விளைபொருட்கள் கவனமாக அப் புறப்படுத்தல் சில முறைகளாகும். கிருமி நாசினி அடிப்போர் காற்று வீசும் பக்கம் சேர்ந்து அடித்தல், கைகழுவுதல், குளித்தல் கைப்பற்ற வேண்டும்.
3.
O

Page 9
"4. புற்றுநோயின் ஆரம்ப
அறிகுறிகள்
சில காரணங்களால் (பண வசதி, சுற்ருடல் நிலை) மேற்கூறிய முறைகள் கைப்பற்றுதல் கஷ்டமாயிருக்கக் கூடுதலாலும் சிலரில் புற்றுநோய் உருவாகுவதற்குரிய சாத்தியக்கூறுகள் அதிகமாக காணப்படுவதாலும், சிலரில் மாத்திரம் புற்றுநோய் தோன்றும் சந்தர்ப்பம் எழக்கூடும். எனினும் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடிப் போமானல் இதனை முற்றிலும் குணமாக்குவது சுலபம். ஆகையால் புற்றுநோய் ஆரம்பத்தில் தென்படும் அறிகுறி கள். நன்கு அறிந்திருக்கவேண்டும். இவை தென்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனை பெறவேண்டும். இவை
Luso 6T
அ* காரணமின்றிய பசியின்மை, உடம்பு மெலிதல்
பசியின்மையும் உடம்புமெலிதலும் பல காரணங்க ள்ால் உருவாகலாம். உதாரணம் காய்ச்சல், கசநோய், மனநோய் மதுபானம் அதிகம் பாவித்தல், பசியின்மை ஏற்படுத்துவன. ஆனல் பசியின்மை, உடம்புமெலிதல் பலபுற்றுநோய்களுக்கு, கூடியளவில் களம், இரைப்பை, இரத்தப்புற்றுநோய் என்பவற்றிற்கு அறிகுறிகளாகும். எனவே இவ்வறிகுறிகள் தென்படின் விரைவில் வைத் திய ஆலோசனை பெறவேண்டும்.
ஆ. உணவு விழுங்குவதில் கடினம்
உட்கொள்ளப்பட்ட உணவானது கீழே கடத்தப் படுவதற்கு தடை ஏற்படின், களத்தில் புற்றுநோயைக் குறிக்கும். வேறு நோய்களாலும் இக்கஷ்டம் ஏற்படி னும் 40 வயதுக்கு மேற்பட்டோரில் இவ்வறிகுறி நிச் சயமாக புற்றுநோயையே குறிக்கும்.
இ. சமிபாட்டின்மை அல்லது அசீரணம்
உணவு சமிபாடடையாமல் இருப்பது அல்லது சாதாரணமாக உண்ணும் அளவு உணவு உட்கொள்ள
0 4
 
 
 
 
 
 

{ቖ* *
முடியாமல் இருப்பது, இலகுவில் வயிறு நிரம்புந்
தன்மை, சாப்பாட்டின்பின் அசெளகரியமாக இருப் பது என்பன இரைப்பை புற்றுநோயை குறிக்கலாம்.
மலம் கழித்தலில் ஏற்படும் மாற்றங்கள்
விரைவில் ஏற்பட்ட மலச்சிக்கல், மலச்சிக்கலை
யடுத்து வயிற்ருேட்டம். திரும்பச்சிக்கல் இவ்வாருன்
மாற்றங்கள் அதுவும் இரத்தம், சீதம் கசிதலு
டன் சேர்ந்தால் பெருங்குடல் புற்று நோயைக் குறிக்
கும்.
it, Ali i
蠶
குருதியிழப்பு, சிதம் கழிதல்
மலவாசலால் குருதியிழக்கம், பெருங்குடலில் புற்றுநோயையும்; சிறுநீருடன் இரத்தம் செல்வது, சிறு நீரகத் தொகுதியில் புற்று நோயையும்; இரத்த வாந்தி இரைப்பை புற்று நோயையும் ஒழுங்கின்றி வரும் அல்லது அதிக மாதவிடாய் கருப்பை புற்று'
நோயையும் குறிக்கலாம். இத்தகைய குருதியிழப்புக்கு
$) (21H ),
"ایق
வேறு காரணங்களும் உண்டு. எனவே உடனே வைத் திய ஆலோசனை பெறவேண்டும்.
மார்பில் கட்டி, உடல் எப்பாகத்திலும் கட்டி, கழலை,
இவை விரைவில் தோன்றினல் சந்தேகத்துக்குரி யது. வளர்ச்சியற்றிருந்து அல்லது குறைந்த வீதத்தில் வளர்ந்து வந்த ஒரு கட்டி சடுதியாக வளருமானல் பருமன் அதிகரிக்குமானல் புற்றுநோயாகலாம். அதே வேளையில் மெதுவாக வளரும் புற்றுநோய்க்கட்டிகளும் உண்டு. எனவே வைத்திய ஆலோசனை பெறவேண்டும். மகளிர் தமது மார்ப்ை தாமே (காலத்துக்குக் காலம்) பரிசோதித்து வருவது நன்று. மார்பை விரல்களின்
தட்டையான பகுதியால் சோதிக்கவேண்டும். ஏனெ னில் விரல் நுனியால் சோதித்தால் அல்லது மார்பை
கிள்ளி பார்த்தால் கட்டியற்றவர்களிலும் கட்டி உள் ளது போன்று தோன்றும்,
சீக்கிரம் ஆருத புண்
உடலில் புண் ஏற்பட்டு கிட்டத்தட்ட மூன்று கிழ மைகளில் ஆருவிட்டால் வைத்திய ஆலோசனை நன்று.

Page 10
அதிலும் வாய்க்குழியில் ஏற்படும் புண்ணுக்கு விரைவில்
வாயில் புண் ஏற்படலாம்.
ஏ. தொடர்ச்சியான இருமல் அல்லது குரலடைப்பு
மூன்று கிழமைக்கு மேலும் தணியாவிடின் நுரை
யீரல் அல்லது குரல்வளைப்பகுதியில் ஏற்படும் புற்று நோயை குறிக்கலாம்.
ஐ. உடலில் ஏற்கனவே உள்ள கட்டி அல்லது மச்சத்தில்
மாற்றம்.
சடுதியான அதிகவளர்ச்சி, இரத்தம் வடிதல், நிறம்
அதிகரித்தல், அருகாமையில் புதிய கட்டி மச்சம் தோன்றல், புற்றுநோயைக் குறிக்கலாம்.
தணியாத மஞ்சட்காமாளை
இரண்டு கிழமைக்கு மேலாக தொடரும் மஞ்சட் காமாளை சதையில் தோன்றும் புற்று நோய்க்கு கார 637 LOT36)Irii).
இந்நூலில் கூறப்பட்டவற்றிலிருந்து புற்றுநோய் பலபல வகைகள் அடங்கியதென்றும், வெவ்வேறு மணி தரில் வெவ்வேறு விளைவுகள் ஏற்படுத்தலாமென்றும், ஒரேவகையான புற்றுநோய், வெவ்வேறு மனிதரில் வெவ்வேறு விளைவுகளை ஒஏற்படுத்தலாமென்றும் புற்று நோய் பரம்பரையாக கடத்தப்படுவதல்ல என்றும் அறிவோம். புற்றுநோய் ஆரம்பத்தில் கண்டு பிடிக்கப் பட்டால் அனேகமானவை முற்ருகக் குணப்படுத்தப்பட லாம் என்றும் அறிந்தோம். இங்கு கூறப்பட்டவற்றில் முக்கியமாகக் கடைசி இரு அத்தியாயங்களையும் மீண் டும் மீண்டும் வாசித்து பயனடைவீர்கள் என நம்பு கிருேம். -
காபம்,
ஆலோசனை பெறவேண்டும். வேறு காரணங்களாலும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 11

参豪 .
ܕ݇:
......... یعنی زنجیرمینی یہ