கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சாயி காட்டிய ஆரோக்கிய வாழ்வு

Page 1

வி நிலையம், மானிப்பா
ܒ ܐ ܘ .

Page 2


Page 3

டொக்டர் எம். கே. முருகானந்தன் ് (). (ി. ി. ബ. (ളഖ.)
105832
ငါ့ဇုံ
பகவான் பூரீ சத்ய சாயி பாபா நிலையம்
மானிப்பாய்,

Page 4
சாபி காட்டிய ஆரோக்கிய வாழ்வு
முதற் பதிப்பு - ஐப்பசி 1994
sy
Sai Kadiya Arokiya Valvu
( Path Shown by Sai Baba for a healthy life )
bν. D. R. M. K. MURUGA NAN DA N
M.B. B. S., (CEY.) Main Street, Point Pedro.
Published by: Bhagavan Sri Sathya Sai Centre Manipa.y
Fir St Edition:
Ο ofo be r 1994
Pri inter:
Vinayagar Trust Fund Press Puloly West, Point Pedro.
Cover design & Printing:
Mr. A. Gnanasekaran
Chan kanai.
No. of Pages 141 -- VI
Price:
ISBN No. 955 - 95249 - 5 - 5
 
 

O5832
ᏡᏁ4ᎴvᏁᏪᏙᏁᎲᏑᏓᏁᏪᎵvᏁᏗᏡᏁᏪᏙᏁᏪᏙᏁ4ᏈᏙᏁᎴᏙᏁᏪᏙᏁᎴᏉᏁ4ᏑᏁᏪᏡᏁᏪᏡᏁᏪᏙᏁᏪᏡᏁᏗᏡᏁvᏈᏁvᏡᏁᏪᏙᏁᏪᏡᏁzᏡᏁᎲᏱᏁzᏁᏁzᎴᏁᎲ
ஓம் பூ சாயிராம்
அணிந்துரை
"தினமும் சாயி இலக்கியங்களை ஆழ்ந்து படிக்க வேண்டும்" என்பது சுவாமியின் ஒழுக்கக் கோவை ஒன்பதில் முக்கியமானதொன்று. இதைச் சற்று விரிவாகச் சிந்திக்கும்போது சுவாமியின் போதனைகள் தத்துவங்கள், கதைகள் யாவற்றையும் நாம் மட்டும் வாசித்து, உணர்ந்து செயற்படுவது போதுமானதல்ல. அவற்றை ஏனை யோரும் வாசித்தறிந்து, தமது வாழ்க்கையில் கடைப்பிடிக்க நம் மாலான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்த வகையில் சுவாமி பற்றிப் புதிய புதிய நூல்கள் பல வெளிவருவது அவசியமானதாகும். ஆன்மீக வாழ்விற்கு அத்திவாரம் போன்ற உடல் உள ஆரோக்கியத்திற்கு சுவாமி அளிக்கும் முக்கியத் துவத்தை அவரது அருளுரைகளிலும், பொதுமக்களுக்காக அவர் ஒழுங்கு செய்திருக்கும் இலவச வைத்திய சேவைகளினூடாகவும் நாம் உணரலாம். மேலும் பஜனை இறுதியில் நடக்கும் சொற் பொழிவின் போது சுகாதாரம் பற்றியும் பேசி மக்களிடையே ஆரோக் கியம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனப் பல ஆண்டுகளுக்கு முன்பே பணித்துள்ளார்.
வைத்திய கலாநிதியும், வைத்தியம் சம்பந்தமான பல நூல்களை எழுதி வெளியிட்ட பிரபல எழுத்தாளரும், வியாபாரிமூலை பூரீ சத்ய சாயி நிலையத்தின் தலைவருமான பூரீ எம். கே. முருகானந்தன் அவர்கள் உணவு, சுகாதாரம், வாழ்க்கை முறைகள், மன அமைதி போன்ற உடலாரோக்கியத்திற்கு அடிப்படையான பல விடயங்கள் பற்றி சுவாமி கூறிய கருத்துக்களைத் தொகுத்தும், விரித்தும் சாயி காட்டிய ஆரோக்கிய வாழ்வு எனும் நூலை ஆக்கியுள்ளார். சாயி
S

Page 5
அடியார்கள் தமது ஆரோக்கியத்தை வளப்படுத்துவதற்கு மா திரமின்றி, பஜனை இறுதியில் நடைபெறும் வாராந்திர ச் செ1 பொழிவுகளிலும், கல்விவட்ட நிகழ்ச்சிகளிலும் பயன்படுத்துவதற் இந்நூலிலுள்ள குறிப்புக்கள் நிச்சயம் உதவும்:
ஈழத்தில் வெளிவந்துள்ள தாயி இலக்கியங்களில் புதியதொ துறைசார்ந்த முன்னோடி நூலான இதனை மானிப்பாய் பூரீ சத் சாயி நிறுவனத்தினர் மிகுந்த பொருட் செலவில் அச்சிட்டு வெ யிடுகின்றனர். அவர்களது சேவையும் போற்றுதற்குரியது. நூன எழுதியவருக்கும், வெளியிட்டவர்களுக்கும், இந்நூல் தயாரிப்பி உதவிய அனைவருக்கும் சுவாமியின் அருளும், ஆசியும் கிடைக் வேண்டுமெனப் பிரார்த்திக்கிறோம்.
ச. விஜயரட்ணம்
தலைவர் வடபிராந்திய சத்ய சாயி 82, நல்லூர் குறுக்கு வீதி நிறுவனங்களின் இணைப்புக் கு
யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்,
蚤 தீர்பி காட்டி
三

II.
டு)
, ,
().
ஓம் சாயிராம்
வெளியிட்டுரை
SLSMMLL SMEEEEELCLSMMMSMSMSMSMSLMS
இந் நிலவுலகத்தில் உதித்த ஜீவராசிகள் அனைத்தும் சிறப்புற வாழ்வதற்கு நலம் பேணுதல் அவசியமானதாகும். இதனாலேயே நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என நம் ஆன்றோர்கள் வாழ்வைச் செல்வமாக எடுத்துரைத்தனர் நோய், நொடியின்றி வாழ்ந்தோமாயின் நாம் வாழ்வாங்கு வாழ்வதற்குரிய வழிமுறை களைப் பேணலாம். ஆரோக்கிய வாழ்வே வாழ்வின் வளத்திற்கு ஆதாரமும் அடிப்படையுமாகும் ,
உடல் ஆரோக்கியத்தைப் பேணுகின்றபோது அது உள ஆரோக் கியத்தையும் பேண வழிவகுக்கின்றது. உடலும் உள்ளமும் ஆரோக்கிய மான போதிலேயே ஆன்மீக நலம் அண்மிப்பது இலகுவாகின்றது. சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும் என்பது நாம் எல்லோரும் அறிந்ததுதானே. எனவே நாம் அனைவரும் ஆன்மீக வளம் பெற ஆரோக்கிய வாழ்வு அவசியமானதாகும்.
பூரீ சத்ய சாயி பாபா காட்டிய வழியில் ஆரோக்கிய வாழ்வுக்கு வழி காட்டுவதாய் சாயி காட்டிய ஆரோக்கிய வாழ்வு அமைவது மனமகிழ்வுக்குரிய தொன்றாகும். எமது உடல் நலத்தை பேணு வதற்கு எவற்றை நாம் கைக்கொள்ள வேண்டும், எவற்றை நாம் தவிர்க்க வேண்டும், எவற்றை மனத்திலிருத்த வேண்டும், எவற்றை நாம் செய்யவேண்டும் என நல்ல பல கருத்துக்களை இலகுதமிழில் அழகுற டாக்டர் எம். கே. முருகானந்தன் அவர்கள் தந்துள்ளார்கள் வைத்திய உண்மைகளைத் தாங்கியுள்ள இந்நூல் அனைத்துப் பொது மக்களுக்கும் பயன்படத்தக்கதாகும். வியாபாரிமூலை சத்ய சாயி
நிலையத் தலைவராக விளங்குவதுடன் இந்நூலை, அழகுற அச்சிடப்
ஆரோக்கிய வாழ்வு E III

Page 6
பல வகையிலும் உதவி புரிந்து எமது நிலையம் இந்நூலை வெளியிடு வதற்கு அருந் துணையாக விளங்கிய டாக்டர் எம். கே. முருகானந்தன் அவர்களுக்கு எங்கள் நன்றி கலந்த அன்பைத் தெரிவிக்கக் கடமைப் பட்டுள்ளோம். வைத்திய அறிவுரைகளுடன் பாபாவின் பொன் மொழிகளையும், வாழ்வின் நிகழ்வுகளையும் இணைத்து ஆன்மீகத் துடன் ஆரோக்கியத்தை இணைத்துத் தந்த இந்நூலும் அவரது சேவையும் சிறப்புற சுவாமிகளின் ஆசிர்வாதம் அண்மிக்குமெனப் பிரார்த்திக்கின்றோம்.
இந்நூல் அழகுற எமது நிலையத்தின் சார்பில் பொருள் உதவி புரிந்த சாய் சகோதரர் பூரீ செ. ஜெகதீஸ்வரனுக்கும், இந்நூலை அச்சிட்ட விநாயகர் தரும நிதியத்திற்கும், இந்நூலின் அட்டைப்படத்தை அழகு செய்த ஞானம் சித்திரவிளம்பர நிறுவனத் தினர்க்கும் எமது மனமார்ந்த நன்றிகள். அத்துடன் இச்சேவையில் இணைந்து பணிபுரிந்த அனைத்து அன்பர்களுக்கும் சுவாமிகளின் கருணைக்கடாச்சம் எட்டவேண்டுமென இறைஞ்சி இந்நூலை வெளி யிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
ஜெய் சாயிராம்
பூரீ சத்ய சாயி நிலையம் R. வசந்தசேனன்
լDIT 6ծflլյլ լրru:, தலைவர்
IV E. சீாபி காட்டிய
 
 

ஓம் சாயிராம்
(!pg ബഞ്
1ெறத்தாள ஒரு வருடத்திற்கு முன் "சாயிகாட்டிய ஆரோக்கிய வாழ்வு பற்றி மந்திகை சத்யசாயி நிலையத்தில் ஆற்றிய சிந்தனை யின் பரிணாமமாக இன்று "சாயி காட்டிய ஆரோக்கிய வாழ்வு' மலர்ந்துள்ளமை மகிழ்ச்சிக்குரியது. இம்மலர் மலர்வதற்கு ஊக்கமும் உறுதுணையும் அளித்த மானிப்பாய் சத்யசாயி நிலையத்தினருக்கு எனது அன்பைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன். இந்நிலையத்தி னரின் அன்புக் கட்டளைக்கு அமைய இந்நூல் அவர்களின் வெளியீ டாக வெளிவருகின்றது.
இந்நூல் செழுமை பெறுவதற்கு பல சாயி விகோதரர்கள் பல வகைகளில் உதவி புரிந்துள்ளனர். அவர்களுடைய அன்பார்ந்த உதவி களுக்கு எமது அன்புக் கரிசனையைத் தெரிவிப்பதில் அகமகிழ்வடை கிறேன். இந்நூலுக்கு அணிந்துரையையும் வெளியீட்டுரையையும் வழங்கி நூலைச் சிறப்பித்த சாயி சகோதரர்களுக்கும் பணிவான எங்கள் அன்பு உரித்தாகுக. மேலும் இந்நூல் அழகுற வெளிவர உதவிய விநாயகர் தரும நிதிய அச்சகத்தினருக்கும், ஞானம் சித்திர விளம்பர நிறுவனத்தினருக்கும் எனது மனமார்ந்த அன்பைத் தெரி வித்துக் கொள்கிறேன்.
மேற்கூறிய அனைவர்க்கும், இன்னமும் தவறவிட்ட ஆனால் ஒத்துழைப்பு நல்கிய அனைவர்க்கும் பகவானின் பூரண அருளாசி கிடைக்க இறைஞ்சுகின்றேன்.
இந்நூல் தயாரிப்பின் ஒவ்வொரு கட்டத்திலும் பகவானின் பூரண அருளை உணரக் கூடியதாக இருந்தது. தோன்றாத் துணை யாகவும், தனது அடியார்கள் ஊடாகவும் இந்நூலை எழுதத் தூண்டி,
ஆரோக்கிய வாழ்வு W

Page 7
உற்சாகமூட்டி, வேண்டிய ஆலோசனைகளைத் தகுந்தவர்களிடமிருந்து கிடைக்கச் செய்து சிறப்பாக அச்சிட்டு வெளியிட வாய்ப்பளித்த பக வான் பூரீ சத்ய தாமரைப் பொற் பாதங்களுக்கு எனது பணிவான நன்றி கலந்த வணக்கங்கள் உரித்தாகுக.
அடியார்கள் துயர் நீக்கும் ஆபத்பாந்தவனாகிய பகவானின் பாதங்களில் இந்நூலைப் பணிவுடன் சமர்ப்பிக்கிறேன்.
லோகா சமஸ்தா சுகினோ புவந்து
ஜெய் சாயிரம்
ஆங்கில வைத்தியசாலை, எம். கே. முருகானந்தன்
பருத்தித்துறை, 09.02 - 994
W{ 2;

G|L|1,5331 1910 աII Այնւ 1571 in.
*uf్క^^^^^^^^^^^^ AAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAA
பொருளடக்கம்
அணிந்துர்ை
2 . به وی , ിഖ് ഒ്ധ്(്ത മ . الا انه ". )g000قى تق" W سی. اردو الخط راہ راز / ک (63/60 تک ”طو) . . . تققه الانتر ஆரோக்கிய வாழ்வு uسال آل
சுத்தமும் சுகாதாரமும் 榭
2_80076}} 3. வாழ்க்கை முறையும் ஆரோக்கியமும் 37 மன அமைதியும் ஆரோக்கியமும் - ا.
ஆன்மீகத்திற்கு வழிகாட்டும் ஆரோக்கியம் 132
3. རྒྱ་ ༈ | ဧူ၊
.8 بخشیہ

Page 8
ஓம் ஸர்வே வை எலகின: 6γυήβων 6γυβ. 3) θα σαρανσί
ஸர்வே பத்ராணி பஸ்பந்து
ബ%ള്
மா கஸ்சித்து கமாப்னு யாத்.
ஒம் சாந்தி, சாந்தி, சாந்தி.
எல்லோரும் இன்பம் அனுபவிப்பவர்களாயிருக்கட்டும், எல்லோரும் நோயற்றவர்களாக இருக்கட்டும்,
எல்லோரும் மங்களகரமானவற்றைப் பார்க்கட்டும்,
ஒருவரும் துன்பம் அடையாமலிருக்கட்டும்.
黃素實
 

s
ᏑvᎴᏡᏗᏛᏉᎵᏉᏃᎮᏙᎵᏁ AᏁᏗᏑᏙᏁᏗᏑᏙᏁᏗᏈᎷᏁᎯᏡᏁᏗᏛᏁᏁᏗᎵᏖᏁᏪᏡᏪᏈᏪᏡᏁᏪᏡᏪᏁᏪᏡᏁᏪᏙᏁᏗᏡᏁᏪᏡᏁᏪᏡᏁᏪᏡᏁᎲᏡᏁᏗᏈᏁᏗᏡᏁᎲᏡᏁzᏡᏁᏪᏡᏪᏓᏡᏁᏗ
ஓம் சாயிராம்
1. ஆரோக்கிய வாழ்வு
ஆரோக்கியம் என்றால்.
ஆரோக்கியம் என்றால் என்ன?
ஒருவன் திடகாத்திரமான உடலைப் பெற்றிருப்பதா? பலசா வியாக விளங்குவதா? நோய் நொடிகள் அணுகாமல் இருப்பதா? அல்லது மன அமைதியுடன் வாழ்வதா?
இவை எல்லாமே ஆரோக்கியத்தின் அறிகுறிகள் என்பது உண்மைதான்; ஆனால் இவை எதுவுமே ஆரோக்கியம் என்பதன் கருத்தைப் பூரணமாகவும் தெளிவாகவும் வெளிப்படுத்தவில்லை.
அப்படியாயின் ஆரோக்கியம் என்பதன் சரியான வரையறை
நோய் இல்லாமல் சுகமாக இருக்கும் நிலை எனக் க்ரியா வின் தற்காலத் தமிழ் அகராதி கூறுகிறது. சுகமாக இருப்பது என்று சகத்திற்கு அழுத்தத்தை இக் கருத்துக் கொடுத்தாலும் அதுவும் பூரணமாகப் படவில்லை.
'நோயின்றியும், பலவீனப்படாத உடல் நிலையிலும் இருப்பது மாத்திரம் ஆரோக்கியம் அல்ல. உடல், உள் ளம், சமூகம், ஆன்மீகம் ஆகிய நிலைகளில் ஒருவன் பூரண சுகத்துடனும் நன்நிலையிலும் வாழ்வதையே அது குறிக்கும் , '
என உலக சுகாதார ஸ்தாபனம் (W. H, O) கூறுகிறது. இதுவே அறிஞர் பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாக இன்று இருக்கிறது.
ஒருவன் பெளதிகமான உடலையும், அதனைச் சார்ந்த மனத் தையும் நல்ல நிலையில் வைத்திருப்பது என்ற குறுகிய வட்டத்

Page 9
eLeLMLMcLMeLeeLMLMcLMLMeLLcLcLAeLLLLLLeMeMeMLMLcLMLLcLLccLcMLcLSecLccLLccLcLScLcLceLeAcccccL ccccLcccLcLLLLLLL ccccLcccS
திலிருந்து உடைத்துக் கொண்டு வெளியேறித் தான் வாழ்கின்ற சமூகம் பற்றிய விசாலமான பார்வையையும், அதனைப் புரிந்து கொண்டு அதனோடு இசைந்து வாழ்வதையும், அதன் முன்னேற்றத்திற்கான சேவையை அளிப்பதையும் கூட ஆரோக்கியம் பற்றிய இந்தப் புதிய வரையறை கூறுகிறது.
அதுமட்டுமல்ல!
எம் எல்லோரையும் விட மேலான ஒரு சக்தி - கோடானுகோடி நட்சத்திரங்களையும், சூரியர்களையும், கிரகங்களையும் மாத்திரமின்றி மிகச் சிறிய கூறான அணுவரை (அணுவின் கூறான இலத்திரன், நியூத்திரன், புரோத்திரனையும் அவற்றை ஆக்குகின்ற மிக நுண்ணிய கூறான குவார்க் (Quark) யையும் விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள் ளார்கள்) - எல்லாவற்றையும் ஒழுங்கான முறையில் இயக்குகின்ற சக்தி ஒன்று உண்டென்பதை உணர்ந்து, அதன் ஆற்றலின் முன் நாம் அற்பமானவர்கள் என்பதைப் புரிந்து, அதன் முன் பணிந்து, எம்மை நன்நெறிப்படுத்திச் சலனமின்றி அமைதியாக வாழ வைக்கின்ற ஆன் மீக உணர்வும் கூட ஆரோக்கியம் பற்றிய உலக சுகாதார ஸ்தாபனத் தின் வரையறைக்குள் அடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆன்மீகம் தவிர்ந்த ஆரோக்கியத்தின் ஏனைய கூறுகளான உடல் நலம், உளநலம், சமூகநலம் பற்றிய அறிவையும் திறனையும் ஆசிரியர் க ளா லும், வைத்தியர்களாலும், சமூகவியலாளராலும் கொடுத்து விட முடியும்.
ஆனால் ஆன்மீகம் என்பது பெளதீக அதீதமானது; உள்ளிருந்து பிறக்க வேண்டியது. ' உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தத் தைப்' பெறுவதற்கு 'அவனருளாலே அவன் தாள் பற்ற' வேண் டும்.
எமக்கு ஆன்மீக உணர்வைப் பிறப்பித்து ஊட்டி வருகின்ற மானிடத் தெய்வம், பரம்பொருள் சத்ய சாயி பாபாவின் சாயி அடிய வர்களாக இருப்பதனால் நாம் பாக்கியசாலிகள் அல்லவா!
பாபாவின் அருள் மானிடகுலத்திற்குப் பரவி இருக்கிறது, எமது மனித முயற்சியும் சிறிது சேர்ந்து கொண்டால் ஆரோக்கிய வாழ்வு நிச்சயம் கிடைக்கும்.
Ε 2 Y. சாபி காட்டிய

ஆசிய ந", , மாநகர து வயக சேவை யாழ்ப்பாணம், ការ s
リT"* . . ബ كذلك تقل 11 لله
ஆரோக்கியத்தின் அவசியம்
*அரிது அரிது மானிடராய்ப் பிறப்பது அரிது' என்பது மூதுரை, அரிதாய்க் கிடைத்த இந்த மானிடப் பிறவியை நாம் சரி யான முறையில் பயன்படுத்த வேண்டும். தனக்கும் தனது குடும்பத் திற்கும் மாத்திரமின்றி, தனது சமூகத்திற்கும், தனது நாட்டிற்கும் ஏன் முழு உலகிற்குமே பயன்படுமாறு வாழ வேண்டும். அப்படி வாழ்வதற்கு உடல் ஆரோக்கியம் அவசியம்.
மாறாக, ஒருவனது உடல் நேர்யினால் பீடிக்கப்பட்டால், அது அவனுக்குத் துன்பம் தருவது மாத்திரமின்றி அவனது குடும்பத் திற்கும், சமூகத்திற்குமே சுமையாக மாறிவிடும்.
ஆனால் நாம் இந்த உடல் நிலையற்றது என்பதை அறிவோம் ஆத்மாவும் பரம்பொருளும் மாத்திரமே நிலையானவை என்பதையும் அறிவோம். சுவாமியும் கூட உடலின் நிலையாமை பற்றிக் கூறியுள் SYT ITFj 556 .
'இது ஜடமானது, இவ்வுடல் தூசி நிறைந்த வீடு. வியாதிகள் நிறைந்த கூடை. இது பற்பல (இளமை முதல் வயோதிபம் வரை) மாற்றங்களையும் அடைகி றது. இறந்த பின் இவ்வுடல் எரிக்கப்படுகிறது' "
இப்படிப்பட்ட நிலையற்ற உடலை ஆரோக்கியமாக வைத் திருக்க வேண்டியது ஏன் என்ற கேள்வி இயல்பாகவே எழும் பக வானே அதற்கான பதிலைத் தெளிவாகக் கூறியுள்ளார். இரண்டு காரணங்களைக் கூறுகிறார்.
(1) தேஹோ தேவாலய ப்ரோக்தோ
ஜீவோ தேவ ஸநாதன
நிரந்தரமான தெய்வமாகிய ஜீவன் குடிகொண்டிருப் பதால் இத்தேகம் தேவாலயமாகும். இவ்வுடல் இறை வனின் மிகப் புனிதமானதும், தெய்வீகமானதுமான பீடம் ஆகும். தேஹாலயத்தை கேவலப்படுத்துவதோ
ஆரோக்கிய συσώσιν E 3

Page 10
துஷ்பிரயோகம் செய்வதோ சரியல்ல. இதனைப் புனித மாக நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும் 1 2
(2) 'வாழ்வின் நான்கு முக்கிய குறிக்கோள்களை அடைய உடல் நலம் முக்கியமானது. தர்மம் (நெறிப்படுத்தப் பட்ட வாழ்க்கை) அர்த்தம் (செல்வம்), காமம் (ஆசை கள்), மோட்சம் (பந்தங்களிலிருந்து விடுதலை)' 3
உலக வாழ்க்கையில் மனிதனுக்குப் பல்வேறு கடமைகளும் , பொறுப்புக்களும் இருக்கின்றன. கடமையே முக்கியமானது (Duty first) என பகவானும் பல தடவை வற்புறுத்தியுள்ளார்.
"'உங்கள் பொறுப்புக்களைத் தள்ளி விடாதீர்கள் அவற்றை எதிர் கொள்ளுங்கள். அதற்காக ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக பொறுப்புகளை, உங்கள் அகங்காரத்தை மகிழ்விப்பதற்காக ஏற்றுக் கொள் ளாதீர்கள்' 4
என வரையறையும் செய்கிறார். கடமைகளையும் பொறுப்புக் களையும் திருப்தியுடன் செய்ய வேண்டுமாயின் உடல் ஆரோக்கிய மாக இருக்க வேண்டியது அவசியம். மாறாக உடல் நோயுற்றிருந் தால் மனிதனால் எதுவுமே செய்ய முடியாது. செயலற்று இருக்க வேண்டிய நிலை ஏற்படும். துன்பம்தான் கிட்டும். ஆனந்தத்தை அனுபவிக்க முடியாது. சாதாரண ஆனந்தத்தையே அனுபவிக்க முடி யாத உடலால் பரம்பொருளின் பேரானந்தத்தை எப்படி எண்ண முடியும்
'நோயாலும், பலவீனத்தாலும் பிடிக்கப்பட்ட உடல் உறுதியான முடிவு எதையும் எடுக்க வல்லமையற்றதா கிறது. உயர் ந் த விசாலமான உணர்வுகளும் எண் ணங்களும் மனிதனிடமிருந்து வெளிப்பட வேண்டுமா யின் அவனது உடல் வலிமை மிக்கதாயும் ஆரோக்கிய மானதாகவும் இருக்க வேண்டும்' 5
சாயி காட்டிய
4.

ᏑvᏁᎲᏍᏁᎲᏁᏁᎲᏍᏁᏡᏁᎲᎮᏙᏁᏗᏁᏁᎲᏑᏙᏁvᏡᏁᎲᏉᏁᎲᏡᏁᏗᏡᏁzᏡᏁ4ᏡᏁᎲᏡᏁᏗᏡᏁᏗᏁᏁᎲᏡᏁᎲᏡᏁᏗᎵᏙᏁᏡᏁᎲᏡᏁzᏁᏁᏗᏡᏁzᏡᏁᏗ ᏛᏙᏪᏠᏪ
'இவ்வுடல் நோய் வாய்ப்படுவதால் மனிதன் ஆனந் தத்தை அனுபவிக்க முடிவதில்லை, ° என பகவான் சத்ய சாயி பாபா உடலாரோக்கியத்தின் அவ
சியத்தை வலியுறுத்துகிறார்.
உடலைப் பராமரித்தலின் அவசியம்
எமது உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமாயின் நாம் அதனை நன்கு பராமரிக்கவேண்டும். போதிய உணவளிக்க வேண்டும், உடலைச் சுத்தமாகப் பேண வேண்டும், தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்க வேண்டும், போதிய உடற்பயிற்சி கொடுக்க வேண்டும். ஒய்வும் நித்திரையும் கொடுக்க வேண்டும். இவை யா வுமே உடற் பராமரிப்பின் அடிப்படைகளாகும். இவற்றை ஒவ்வொரு மனிதனும் கடைப்பிடிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பகவான் ஒருபடி மேலே போய் இதுவே மனிதனுக்கு விதிக்கப் பட்ட கடமை என வலியுறுத்துகிறார்.
'இறைவனாகிய பரமாத்மாவின் இல்லமாக இருப்ப தால் இதனை நன்கு பராமரிக்க வேண்டும் இத் தூய வுடலை நல்வழியில் போஷிப்பதே மனிதனுக்கு விதிக் கப்பட்ட கடமையாகும்' 7
இதே கருத்தை அ ழ கா ன உதாரணத்துடன் கீழ்வருமாறு விளக்குகிறார்.
'ஒரு கருவியை நன்கு பயன்படுத்துவதற்கு அ த ன் உப கர ண ங் கள் குறைபாடில்லாதிருக்க வேண்டும். பேனாவில் "நிப் கூர்மையாக இருந்து மையும் இருந் தால்தானே எழுத முடியும், அவ்வாறே குறைபாடில் லாமல் இவ்வுடலைப் போஷிக்க வேண்டும்' 8
ஏனையோர் கருத்துக்கள்
உடலாரோக்கியத்தின் அவசியம் பற்றிப் பலரும் காலத்திற்குக் காலம் கூறியுள்ளார்கள். எமது முன்னோர்களும் முனிவர்களும் கூட
ஆரோக்கிய வாழ்வு S 5

Page 11
ᏛᏈᎯᏁᏗᏑvᏛvᏉᏁ, AᏁᏗᏛᏙᏁᏗᏛᏁᏁᏗᏛᏙᏁᏘᏡᏁᏗᏛᏙᏁᎲᏛᏉᏠᏪᏡᏁ4ᏡᏁ4ᏡᏁᏗ ᏑᏙᏁ2ᏛᏁᎯᏖᏪᏡᏁᏎᏉᏙᏁzᏡᏁᏗᏡᏁᎲᏑᏙᏛᏖ4ᏈᏙᎴᏖᏗ ᏑᎷᏁᏗᏡᏁᏘᏡᏁ4ᏑᏙᏁᏗ,ᏛᏉᏁ4
அ த  ைன நன்கு உணர்ந்திருந்தார்கள். இதன் காரணமாகத்தான் பதஞ்சலி முனிவரும் கூட ஆரோக்கியத்தை நிலைநாட்டும் யோகாச னக் கலை பற்றி ஒரு நூலே யாத்திருந்தார்,
୫୪୬, ୫FରJ சித்தாந்தத்தைப் பிழிந்து திருமத்திரமாக வார்த்த திரு மூலரும் உடல் ஆரோக்கியத்தைப் பற்றி இவ்வாறு பாடுகிறார்
'உடம்பார் அழியில் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே' 9
இந்து மதத்தின் மேன்மையை மேற்குலகத்தாருக்கு முதன் முத லில் தெளிவு படுத்திய ஞானதீபமாகிய சுவாமி விவேகானந்தர் உறுதி யான உடலின் அவசியத்தை இவ்வாறு வலியுறுத்துகிறார்.
“என் வாலிப நண்பர்களே! நீங்கள் பலசாலிகளாகுங் கள். உங்களுக்குக் கீதையைவிட விளையாட்டு சுவர்க் கத்திற்கு சுருக்க வழியாகும். உங்கள் தசை நார்க ளும், புஜங்களும் இன்னும் சிறிது வலிவு பெறுங்கால் கீ  ைத  ைய இன்னும் நன்றாய் அறிந்து கொள்வீர்
g;6 ' ' 1 o
* தி ட ங் கொ ண் டு வாழ்ந்திடுவோம், தே ம் பல் Gangor LT 11
என இந்த யுகக் கவிஞனான மகாகவி ப ா ர தி யு ம் முழங்கு கிறான்.
இந்துமதம் மாத்திரமின்றி 'அனைத்துச் சமயங்களும் இவ்வுடலைப் போஷிப்பதன் அவசியத்தை வற்புறுத்தி வருகின்றன; 12
ஆரோக்கியத்தைப் பேணுவது எப்படி
இக் கேள்வி சுலபமானதாகவும் சுருக்கமானதாகவும் அமைந்த போதிலும் நாடி நிற்கும் பதில் ஆழமான பரந்த விடையை உள்ள
三 6 ισσαύ σ σε φαν

11 : 1 1 1 ܕܬܐ ܘܐܬܐ ܝ.
ᏛᏁᏁᎲᎹᏙᏁᏗᎹᏙᏁᎲᏛᏖᏁ4 °ᏙᏁᎲᏡᏁᎯᏡᏁᎲᏡᏁᎴᏡᏁᎴᏡᏪᏙᏪᎵᏙᏁᎲᏑᏉᏁᏗ ᏑᏙᏁᎲᏡᏁᎲᏉᏁᎲᎮᏙᏁzᏡᏁ,ᏡᏁᏗᏡᏁᎲᏡᏁᏗᎴᏙᏁᏗᏡᏁᎲ ᏑᏙᏁ,ᏡᏁ4ᏡᏁᏗᏁᏁᏗ
டக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது ஒன்றுக்கொன்று தொடர்புடைய பல்வேறு கோணங்களில் நோக்கப்பட வேண்டியது அது. ஆரோக்கி யத்தைப் பேணுவதின் சில அடிப்படை அம்சங்கள் மாத்திரம் இங்கு தரப்பட்டுள்ளன அவற்றில் சில பற்றி விரிவாக அடுத்துவரும் அத்தி பாயங்களில் பார்க்கலாம்.
1) சுத்தமும் சுகாதாரமும் மிக முக்கியமானது. இது சரி யாகப் பேணப்பட்டால் எம்மைப் போன்ற வளர்முக நாடுகளில் பெரும் பான்மையான மக்களை அதிகமாகப் பீடிக்கும் பல தொற்று நோய் களிலிருந்து தப்பிவிடலாம்.
i) மிகவும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய இன்னொரு விடயம் உணவு முறைகளாகும். உடல் வளர்ச்சிக்கும், சிதைந்த உறுப்புக்களைச் சீர்செய்வதற்கும், சக்தியைக் கொடுப்பதற்கும் மாத் திரமின்றி போஷணைக் குறைபாடு, அதீத போசணை, த வ றா ன உணவு முறைகள் ஆகியவற்றால் உடலுக்கு ஏற்படக்கூடிய நோய்க ளைத் தடுப்பதற்கும் சரியான உணவு முறைகளைக் கடைப்பிடிப்பது அவசியம்,
i) ஒருவனது வாழ்க்கை முறைக்கும் அவனது ஆரோக்கியத் திற்கும் இடையில் நெருங்கிய தொடர்பிருக்கிறது. ஒய்வு, நித்திரை, உழைப்பு, உடற்பயிற்சி, தியானம், ஒழுங்கான தினசரிக் கடமைகள் போன்ற பல விடயங்கள் கவனத்தில் எடுக்கப்பட வேண்டியவை.
iv) நவீன மருத்துவ விஞ்ஞான அறிவைப் பயன்படுத்தி நோய்களை ஆரம்பத்திலேயே இ ன ங் கண் டு சிகிச்சையளித்தலும், நோய் வராமல் தடுப்பதும் ,
V) சுகாதார அறிவு பற்றிய விரிப்புணர்வை மக்களி டையே பரப்புவதன் மூலம் அவர்களிடையே சுய, சமூக ஆரோக் கியத்தைப் பேணுவதற்கு வழிவகுக்கலாம்.
ஆரோக்கிய வாழ்வு E 7

Page 12
ᏛᏙᏁᏗᎵᏖᏁᎲᏛᏙᏁᏗᏛᏡᎯᏁᏗᏛᏖᏁᏗᏛᏖᏁᏗᎮᏠᏁᏓᏛᏙᏁᏛᏙᏁᏗᏑᏙᏁᏗᏛᏙᏁ4ᏛᏉᏁ,ᏡᏁᏗᏑᏙᏁᏗᏡᏁᏗᏡᏁᏗᎵᏙᏁᏗᏈᏙᏁᏪᏛᏙᏁ4ᏡᏁᏗᏡᏁᏗᏡᏁ4ᏡᏁᏪᏙᏁᏗ ᏡᏁᏗᏡᏁᏃ
சுவாமியின் வழிகாட்டல்
பகவான் சத்யசாயி பாபா மனித குலத்தின் ஈடேற்றத்திற்காக வந்துதித்த ஒர் அவதார புருஷர் ஆவார். தர்மம் ஒடுங்கி அதர்மம் தலை தூக்குகின்ற வேளை அதர்மத்தை ஒழித்து தர்மத்தை நிலை நாட்டத் தான் அவதரிப்பதாக கீதையிலே பகவான் கூறியுள்ளமை இங்கு நினைவு கூரத்தக்கதாகும், பகவான் சத்யசாயி பா பா வும் தமது அடியவர்களின் வாழ்க்கையின் உயர்விற்கும் உன்னத நிலைக் கும் வழிவகுக்கும் வகையில் ஒவ்வொரு நிலைப்படியிலும் வழிகாட்டி யாகச் செயற்படுகிறார் என்றால் மிகையாகாது, தனது 21 வது வய தில் தனது சகோதரர் சேஷ ராஜிவுக்கு எழுதிய கடிதத்திலேயே இத னைத் தெளிவாகக் கூறியுள்ளார்.
'எனக்கு ஒரு பிரதிக்ஞை உ ண் டு. நேர்பாதையிலி ருந்து விலகிச் செல்லும் எல்லோரையும் மீளவும் நல் வழிக்கு இட்டுச் செல்வதும் பாதுகாப்பதுமே அது' 13
ஆன்மீக வாழ்க்கையை மாத்திரமின்றி மனிதர்களது நாளாந்த வாழ்க்கையைக் கூடச் செப்பனிட வழிகாட்டுகிறார். 'எனது வாழ்க் கையே நான் தரும் செய்தி' என அவர் அடிக்கடி கூறுவதற்கிணங்க தனது சீரிய வாழ் க்  ைக முறையாலும் தனது உபதேசங்களாலும் மனித குலத்திற்கு வழி காட்டுகிறார். ஆரோக்கிய வாழ்வு பற்றிய வழிகாட்டல்களும் இவற்றுள் உள்ளடங்குகின்றன.
(t) சுத்தமும் சுகாதாரமும் சுவாமியால் கடுமையாக வலியுறுத் தப்படுவன. அதனால் அவர் வதியும் ஆலயங்களான புட்டபர்த்தியும், வைட்பீல்டும் அவற்றின் சுற்றாடலும் பளிங்கு ஒளிர்வது போல் தூய் மையாகப் பேணப்படுகின்றன. இவற்றைச் சா யி அடியார்களாகிய நீங்கள் நேரடியாகவோ, வீடியோப் படங்கள் மூலமோ நி ச் ச யம் அவதானித்திருப்பீர்கள்.
அங்குள்ள உணவுச்சாலை மிக வும் தூய்மையானவை. அங்கு உபயோகிக்கப்படும் ஒவ்வொரு பாத்திரமும் ஒ வ் வொரு முறை உப யோகித்த பின்னும் வெறுமனே கழுவப்பட்டு மாத்திரம் மீ ண் டு ம்
S 8 சாயி காட்டிய
\
*

ᏑvᏁᏁᏁᏗᏡᏁzᏡᏁᎲᏁᏁzᏡᏁ4ᏡᏁ4ᏡᏁᏗᏡᏁᏪᏑᏙᏁzᏁᏁzᏡᏁᏗᏡᏁᏗᏡᏁzᏡᏁzᏡᏁᎯᏁᏁᏗᏡᏁᏗᏡᏁᎲᏡᏁᎲᏡᏁᏗᏡᏁᏗᏡᏁᏗᏡᏁᏗᏈᏙᏁᎲᏡᏁᏗ
உபயோகிக்கப்படுவதில்லை முறையாகக் கிருமி நீக்கம் செய்தே மீண்டும், பாவனைக்கு விடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. புட்டபர்த்தி யில் உள்ள வைத்தியசாலைகளும் அப்பழுக்கற்ற தூய்மையுடன் இயங்கு கின்றன .
பகவானின் உடலைத் தூய்மையின் உச்சநிலை என்று கூறலாம். ஒழுங்கான தலைமுடி, மழுங்கச் சவரம் செய்யப்பட்டு பளிச்சென மின்னும் முகம், ஒட்டவெட்டப்பட்ட நகங்கள், மிகத்தூய்மையான அப்பழுக்கற்ற ஆடைகள், பாததரிசனத்திற்காக பக்தர்களிடையே வெறுங்காலுடன் நடந்து திரிந்தாலும் தூய்மையாகக் காணப்படும் புனித கமலப் பாதங்கள்.
மொத்தத்தில் பகவான் தூய்மையின் சின்னம், அதனால் தான் அவரை, “ஓம் பூரீ ஸித்தி ரூபாய நம,- தூ ய்  ைம யி ன் வடிவான இறைவனே வணக்கம்- எனக்கூறித் தோத்திரம் செய்கிறோம்.
(i) உணவு விடயத்தில் சுவாமி மிகவும் கட்டுப்பாடானவர் அவர் தாவர போசனம் செய்பவர் மாத்திரமின்றி மிகக் குறைந்தளவு உணவையே உட்கொள்கிறார். காப்பி, தேநீர் போன்ற பானங்களைக் கூட அருந்துவதில்லை. தனது உணவு பற்றி சு வா மி இவ்வாறு கூறுகிறார்:-
' ஒரு சிறிதளவு கூட அதிகமாக ஸ்வாமி உண்ப தில்லை பணக்கரார் விருந்துக்கு அழைத்தாலும் பரம ஏழை அழைத்தாலும் ஸ்வாமி ஆண்பது என்னவோ அந்தக் கட்டுப்பாட்டுக்குள் தான் ஸ்வாமிக்கு 68 வயது ஆனபோதும் உடல் மட்டும் முறையில் "டிரிம்" ஆக இருக்கிறது. ஸ்வாமிக்கு வலிகள் கிடையாது ஸ்வாமியின் இதயம் பாறை போன்று உறுதியாக இருக்கிறது. யாரும் ஸ்வாமியைப் போ ல் உழைக்க முடியாது. கடினமாகத் தன்னை வருத்திக் கொள்ள முடியாது. ஸ்வாமியின் ஆரோக்கிய ரகசியம் உண்பதில் கட்டுப் பாடு, நேரந்தவறாமை ஆகி ய வ ற் றி ல் தங்கியுள் 14 6u123יח6
ஆரோக்கிய வாழ்வு E 9

Page 13
ᏡᏁzᏛᏁᏁzᎹᏁᏁᏗᏡᏁᏓᏛᏁ,ᏑvᏁᏛᏁᏁᏗᎹᏙᏁᏗᏑvᏁᏗᎹᏉᏁᏗᏎᏉᏁᏗᏛᏉᏁᏗᏛᏙᏁᏗᏈᏙᏁᏓᏉᏙᏁᏗᏡᏁ ᏑᎷᏁᏗ°ᏙᏁᏗᏡᏁᏗᏈᏙᏁᏗ"ᏙᏁᏗᏉᏙᏁᏗ "ᏙᏙ ᏙᏙᏙᏙ ᏙᏁᏗ
சுவாமி காட்டுகிற வழியில் நேரந்தவறாமல் அளவோடு உண் டால் நாமும் ஆரோக்கியமாக வாழலாம்.
(ii) வாழ்க்கை முறை பற்றிய விடயத்தில் புலன டக்கத்திற்கு சுவாமி கொடுக்கிற முக்கியத்துவத்தை மாத்திரம் இங்கு நோக்கலாம் புலனடக்கத்திற்கு உதாரணமாக சுவாமி, பீஷ்மரைக் காட்டுகிறார்.
* மகா பா ர த ப் போரின்போது பீஷ்மருக்கு வயது
116 யுத்தமுனையில் ஒரு பா  ைற போல நின்றார்.
- - - - - - - - - பீஷ்மருக்கு தனது இந்திரியங்களின் மேல் கட்டுப்
பாடு இருந்தது' 18
மேலும், எழுபது வயதை அண்மிக்கும் இன்றைய நிலையிலும் சுவாமி இளமையாக இருப்பதற்கு கட்டுப்பாடான வாழ்க்கை முறை யும் காரணம் என்பதை அவரே பின்வருமாறு சுட்டிக் காட்டுகிறார்.
ஸ்வாமிக்கு எல்லாப் புலன்களும் கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றன. ஸ்வாமியின் உடம்புக்கு வயது 67 ஆனாலும் எல்லாவற்றையும் தெளிவாகப் பார்க்க முடிகிறது. சிறிய எழுத்துக்களைக் கூடப் படிக்க முடி கிறது. நான் இந்த உலகில் இருக்கும் வரை அலை (புலன்கள்) நல்ல முறையில்தான் இயங்கும். சரியான கட்டுப்பாட்டுக்குள் தான் இயங்கும்' 19
iv) மனிதனின் உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதில் மருத் துவ விஞ்ஞானத்தின் பங்களிப்பை ஒதுக்கி விட முடியாது. நவீன மருத்துவ விஞ்ஞானம் நோயைக் குணப்படுத்துவதில் மாத்திரமல்ல, நோய் வராமல் தடுப்பதிலும் கூட தனது காத்திரமான பங்களிப்பைச் செலுத்தியுள்ளது. சின்னமுத்து, ஏற்புவலி, கூகைக்கட்டு, நீர்வெறுப்பு நோய் (விசர்நாய்க்கடி) போன்ற எண்ணற்ற நோய்களுக்கு த டு ப் பு மருந்துகளைக் கண்டு பிடித்துள்ளது. அதற்கு மேலாக மிகவும் பயங் கரமான தொற்று நோயாக மனிதனைப் பயமுறுத்திய பெரியம்மை (Small pox) நோயைப் பூவுலகிலிருந்து அ டி யோ டு ஒழித்துவிட்ட பெருமை தடுப்பூசி ம ரு த் துவ முறையையே சாரும். இந்நோயால்
{0 : - சாயி காட்டிய
。
*

ف
ᏍᏁᏛvᏁᎲᎮᏉᏁᎲᏑᏓᏁᏗᏍᏙᏁᏍᏙᏁᎲᎮvᏁᎲᎹvᏁᎲᏉᏁᎲᏛᏙᏁᏗᏉᏙᏁᏗᏉᏙᏁᎲᎹᏙᏁᎲ ᏑᏙᏁzᏡᏁᎲᏡᏁᏗᏡᏁᎲᏁᏁᏗᏡᏁᎲᏡᏁᏓᏡᏁᏗᏡᏁᏗᏡᏁᎲᏁᏁᎲᏁᏁᏪᏙᏁᎯ
கடைசியாகப் பிடிக்கப்பட்டவர் சோமாலியா நாட்டைச் சே ர் ந் த அலி மாஒ மாலின் என்பவரே 1977 ம் ஆண்டு அக்ரோபர் மாத இறுதியில் அவர் நோயால் பீடிக்கப்பட்டு ஒருவாறு உயிர்தப்பினார்.
தடுப்பு ஊசியைத் தவிர இன்னும் எத்தனையோ துறைகளில் மருத்துவ விஞ்ஞானம் முன்னேறியிருப்பது நாம் அறிந்த ஒன்றே.
எனவே தான்,
'மருத்துவ விஞ்ஞானம் மனிதனுக்கு ஆரோக்கியமான வாழ்வையும் மகிழ்ச்சியையும் அளிக்கவே உருவாகியுள் ளது' * 1 ア
என்று சுவாமியும் கூறியுள்ளார். நவீன மருத்துவ விஞ்ஞானத் தைப் பயன்படுத்தி மனித குலத்திற்கு சேவை செய்யும் நோக்கில், புட்டபர்த்தியில் பல வைத்தியசாலைகளை அமைத்து மக்களுக்கு இலவச சிகிச்சை வழங்கவும் பகவான் ஏற்பாடு செய்துள்ளார் என்பதை நாம் மறந்து விடக் கூடாது. சா தா ர ண நோயாளர்களுக்கான வெளி நோயாளர் பிரிவு, சற்றுக் கடுமையான நோயாளர்களை விடுதிகளில் அனுமதித்து சிகிச்சை செய்யும் வைத்தியசாலை, இருதயம், சிறுநீர கம் ஆகியவற்றில் ஏற்படும் நோய்களை அதிநவீன சத்திர சிகிச்சை கள் மூலம் குணப்படுத்தும் அதிவிசேட வைத்தியசாலை (Super Spec iality Hospital) போன்றவை இதில் அடங்கும்.
இவற்றிற்கு மேலாக மருத்துவத்தால் குணப்படுத்த முடியாத எத்தனையோ நோய்களைத் தனது தெய்வீக அருளினால் அற்புதமா கக் குணப்படுத்துவதும் நாம் அறிந்ததே.
v) சுகாதார அறிவை ம க் களு க் கு பரப்புவதின் முக்கியத்து வத்தை உணர்த்த ஸ்வாமி, பஜனைகளின் இறுதியில் பத்து நிமிடம் உடல் நலக் கல்வி பற்றிப் பேச வேண்டும் என்று 1983ல் உடல்நல முகாம் ஆரம்ப உரையில் கூறியுள்ளார்.
'உங்கள் நண்பர்களின் அல்லது பந்துக்களின் இல்லங் களுக்கு சாதாரணமாய் அரட்டை அடிக்கவோ, வெட்
டிப் பேச்சு பேசவோ செல்கிறீர்கள் அல்லவா ? அப்
ஆரோக்கிய வாழ்வு E : 1

Page 14
போது பத்து நிமிட நேரம் இந்த உடல் நலக்கல்வியைப் பற்றி நீங்கள் கேட்டு தெரிந்து கொண்டதை அவர் களுக்கும் சொல்லலாமே. பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை தானே இந்தக் கல்வி உரை நடைபெறு கிறது. இப்படி நீங்கள் அவர்களுக்கும் இதை எடுத் துரைப்பதால் அவர்களும் நல்வாழ்வு வாழ வழி செய் கிறீர்கள்.
இப்படி நீங்கள் செய்யும் சேவை மற்ற சாதனை வழிகளை விட பன்மடங்கு உயர்ந்தது. இ த ன n ல் நீங்கள் ஸாயி சேவை மட்டும் அல்லாது உங்களுடைய சொந்த சாதனா மார்க்கத்திலும் ஒருபடி முன்னேறு 6ჭ’ff-ჟ56 წr * ° 1' <=
சுவாமி காட்டியபடி இந்த அடிப்படை விடயங்களைக் கடைப்
பிடித்தால் தானும், தனது குடும்பமும், தனது சமூகமும் ஆரோக் 4. கியமாக வாழ்வதை ஒவ்வொருவரும் உறுதிப்படுத்த முடியும்.
அடிக்குறிப்புகள்
மிழ் சனாதன சாரதி (த, ச. சா) யூலை 90 - பக் 1
. ச. சா. ஆகஸ்ட் 90 - பக் 1
. SFIT. LDITrij 93 – Jš; 1
சா. ஜூன் 94 பின் அட்டை
சா. ஆகஸ்ட் 90 - பக் 1
சா. ஆகஸ்ட் 90 - பக் 5
சா. ஆகஸ்ட் 90 - பக் 1
ச. சா. ஜூலை 90 - பக் 2
9. திருமூலர் திருமந்திரம் - 3ம் தந்திரம் - பாடல்எண் 724 *
10. நமது தாய் நாடு - சுவாமி விவேகானந்தர்
11. பாரதி அறுபத்தாறு பாடல் - 10
12. த. ச. சா, ஆகஸ்ட் 90 - பக் 1
13. பகவான் பூரீ சத்யசாயி பாபாவின் அருளுரைகளிலிருந்து சில முத்
துககள
12 E - ση (ό ό,τι φαν
 

ہے ؟
ᏑᎷᏁᏓᏛᏁᏁᎴᏉᏁᏗᏛᏙᏁᏗᏛᏉᏁᏗᏑᏙᏁᏪᏛᏙᏁᏗᏡᏁᏗ °ᏙᏁᎲᏑᏙᏁzᏛᏙᏁᏗᏛᏙᏁᏗᏡᏁᏗᎵᎸᏁᏗᏡᏁᎴᏑᎷᏙᏪᏑᏙᏁᏪᎵᏙᏁᎲᏡᏁᏪᎵᏙᏁᏗᏈᏙᏁᏗᏛᏙᏁᏗᏡᏁᏛMᏈᏪᏡᏪᏁᏗ ᏑᎷᏁᎯ
14.
15.
16.
17.
9.
த. ச. சா. ஜூன் 1994 - பக் 18 5. F. FIT, GLD 93 - Ludi 10
த. ச. சா. மே 93 - பக் 10 சுவாமிக்கு தற்போது வயது 68; மேற்படி கூற்று கடந்த வருடத் தில் கூறப்பட்டதாகும்.
த. ச. சா. மார்ச் 93 - பக் 1
வீட்டிற்கு வீடு தேவைப்படும் உடல் நலக் கல்வி - பக் 5
ஆரோக்கிய வாழ்வு
3325 C-o.
எல்லாவற்றிற்கும் ஆதாரமானது பிரேமையே! அன்புடன் பேசப்படும் ஒவ்வொரு வார்த்தையும்
சத்யம்
அன்புடன் செய்யப்படும் ஒவ்வொரு செயலும்
தர்மம் அன்புடன் மனம் எதை நினைத்தாலும் அது சாந்தி அன்பை உணர்வில் சரியாகப் புரிந்து கொள்ளலே அஹிம்சை,
== LITTL/Fj“ :
3.
Ε

Page 15
*ᏙᏁᎲᏡᏁᏗᏑᏓᏁᏗᏡᏁᏗᎪᏁzᏡᏁᎲᏡᏁ2ᏡᏁᎲAᏁᏗᏡᏁᏗ ᏉᏁᏗᏡᏁᏗᏁᏁᏗᏡᏁᏗᏡᏁzᏉᏁᏗ ᏁᏁᎲᎮᏙᏁᏗᏡᏁ,ᏡᏁᎲᏡᏁᏗrvᏁᏗᏡᏁᏗᎵᏙᏁᎲᎹᏙᏁᏗᎵvᏁᏗ
ஓம் சாயிராம் 2. சுத்தமும் சுகாதாரமும்
தொற்று நோய்களும், சுகாதாரமின்மையும்
எமது நாட்டிலும், ஏனைய வளர்முக நாடுகளிலும் மக்களைப் பீடிக்கின்ற நோய்களில் பெரும்பாலானவை தொற்று நோய்களே. இவை பக்டீரியா, வைரசு, பங்கஸ், அமீபா போன்ற பல்வேறு வகையான கிருமிகளால் பரவுகின்றன. மிகவும் சாதாரணமான ஆபத்தற்ற தடி மன் காய்ச்சல் முதல், மிக ஆபத்தான மரணத்தை விளைவிக்கக் கூடிய ஏற்புவலி வரை பெரும்பாலான நோய்கள் தொற்று நோய்களே.
மிகச் சாதாரணமானது என நீங்கள் நம்பியிருக்கும் வயிற்றோட்ட நோயினால் வருடந்தோறும் இலட்சக்கணக்கான குழந்தைகள் உலகம் முழுவதும் மரணத்தைத் தழுவுகின்றன. தொற்று நோய்கள் பரவு வதால் ஏற்படும் பாதிப்புகள் பலவாகும். அந்தப் பாதிப்புகளின் ஒர் எல்லை மரணமாயின் மறு எல்லை வேலைநாள் இழப்பும் பொரு ளாதாரச் சுமையுமாகும். நெருப்புக் காய்ச்சலால் பீடிக்கப்படும் ஒரு வன் 15 முதல் 30 நாட்கள் வரை வேலை செய்யாது ஒய்வு எடுக்க வேண்டி நேரிடலாம். இது அவனது குடும்பத்திற்கு கொடுக்கிற பொருளாதார இழப்பு அதிகமானது தான். ஆனால் அதற்கு மேலாக ஒருநாடு நெருப்புக் காய்ச்சலால் எத்தனை வேலை நாட்களையும் அதன் பலனாக எவ்வளவு பொருளாதார நஷ்டத்தையும் பெறுகிறது என்பதைக் கற்பனை செய்து பாருங்கள். -
சுத்தத்தையும் சுகாதாரத்தையும் பேணுவதன் மூலம் பெரும் பாலான தொற்று நோய்களிலிருந்து தப்பிவிடலாம்.
தொற்று நோய்கள் எப்படிப் பரவுகின்றன
தொற்று நோய்கள் பரவுவதற்கான அடிப்படைக் காரணம் சுத்தமும் சுகாதாரமும் பேணப்படாமையேயாயினும் அவை பரவும் முறைகள் வேறுபடுகின்றன .
{4 E சாயி காட்டிய
نوي ٩

fᏙᏁᎲᎮᏠᏁzᏡᏁ4ᏡᏁᎯᏡᏁ4ᏡᏁᏪᏡᏁᏪᏡᎯᏁzᏉᏙᏁᏗᏡᏁᏗᏡᏁᏪᏡᏁᎯᏡᏁ,ᏡᏁzᏡᏁvᎹᏙᏁᏪᏡᏁzᏡᏁzᏡᏁᏪᎵᏙᎯᏖᏗᏛᏁᏗᏡᏁᏗ ᏑᏁᎲᏑᏁᏗ*ᎷᏛᏉᏗᎹᏙᏁᏗ
i) உணவு அல்லது நீர் மலத்தினால் மாசடைவதன் மூலம் நோய்கள் பரவலாம். நீர் மலத்தினால் அல்லது மிருக எச்சங் களால் மாசடையலாம். எனவேதான் எப்பொழுதும் கொதித்து ஆறிய நீரை அருந்தும்படி வைத்தியர்களும் சுகாதார சேவையாளர்களும் சிபார்சு செய்கிறார்கள். அசுத்தமான பாத்திரங்களாலோ, சுத்தம் செய்யப்படாத கைகளாலோ, ஈக்களாலோ உணவு மாசடையலாம் .
வயிற்றோட்டம், வயிற்றுளைவு, கொலரா, நெருப்புக்காய்ச்சல் செங்கண்மாரி, குடற்புழுக்கள், இளம்பிள்ளை வாதம் போன்றவை இவ்வாறே பரவுகின்றன.
i) நேரடித் தொடர்பினால் அல்லது நோயாளியின் படுக்கை, போர்வை, ஆடை போன்றவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் வேறு சில நோய்கள் தொற்றுகின்றன. சொறிசிரங்கு, பேன், வட்டக்கடி ? பாலியல் நோய்கள் போன்றவை இவ்வாறு பரவுகின்றன.
i) இருமும்போதும் தும்மும்போதும் சுவாசப்பாதையில் உள்ள நோய்க்கிருமிகள் வேகமாக வெளியே தள்ளப்படுகின்றன. காற்றில் கலக்கும் இவற்றை மற்றவர்கள் சுவாசிக்கும் போது கிருமிகள் காற் றுடன் சுவாசப்பையினுள் சென்று நோயை ஏற்படுத்துவது இன்னு மொரு முறையாகும். கசரோகம், சின்னமுத்து, கொப்பளிப்பான், சாதாரண தடிமன் காய்ச்சல் (இன்புளுவென்சா), நியூமோனியா, தொண்டைக் கரப்பன் போன்றவை இவ்வாறு காற்றினால் U0 ഖഗ്ര நோய்களாகும்.
iv) பூச்சிகள், மிருகங்கள் மூலமும் நோய்கள் பரவலாம் , நோய்க்கிருமியால் பாதிக்கப்பட்ட பூச்சி நம்மைக் கடிக்கும் போது, அல்லது பாதிக்கப்பட்ட மிருகத்தின் இறைச்சியை உண்ணும் போது, அல்லது கிருமியால் பாதிக்கப்பட்ட மிருகம் நம்மைக் கடிக்கும் போது கிருமிகள் பரவி நோய் தொற்றலாம். உதாரணமாக, மலேரியா, யானைக்கால் நோய், டெங்குக் காய்ச்சல், சிலவகை மூளைக்காய்ச்சல் போன்றவை நுளம்பினால் பரவுகின்றன . நன்கு வேகவைக்கப்படாத பன்றி இறைச்சியை உண்ணும் போது நாடாப்புழு தொற்றலாம்.
ஆரோக்கிய வாழ்வு 三 售5

Page 16
ᎮᏁ4ᏁᏁvᏁᏁᎲᏡᏁ4ᎮᏙᏁᎴvᏁvᏁᏁᎴᏁᏁᎴᏡᏁvᏁᏁᎲᏁᏁᎲᏁᏁᎴᏁᏁvᏁᏁᏉᏁᏪᏡᏁvᏈᏁᎴᏁᏗᏁᏁᎴᏁᏁᎯᏁᏁvᏁᏁᏁᏁᎲᏁᏁᎲᏁᏁvᏁᏁ
நோயுற்ற நாய் கடிப்பதனால் நீர் வெறுப்பு நோய் (விசர் நாய் கடி) பரவுகிறது.
நோய்கள் பரவுவதைப் பற்றிச் சுவாமி கூறும் கருத்து இன் னும் விசாலமானது.
'நாம் சுவாசிக்கும் காற்று தூய்மையானதாக இல் லை. குடிக்கும் நீர் மாசுள்ளதாக இருக்கிறது. உண் ணும் உணவு தூய்மையற்றதாக இருக்கிறது. நாம் கேட்கும் சப்தமும் சுத்தமானதாக இல்லை. இதனால் இயற்கையின் பஞ்சபூதங்களும் தூய்மையற்றுக் காணப் படுகின்றன. இத்தகைய மாசு நாம் இதுவரை கேட் டறியாத பல நோய்களுக்கும் காரணமாக இருக் கிறது”
கிருமிகளால் மாத்திரமின்றி வேறு வழிகளாலும் கூட நோய் கள் உண்டாகலாம் என்பதை இங்கு அவர் கோடி காட்டுகிறார். இயந்திரமயமான இன்றைய உலகில் கடுமையான ஒ லி க ஞ ம் கூட வளியை மாசடையச் செய்து, எமது செவிகளின் ஒலிவாங்குந் திற னைப் பாதிக்கின்றன என்று விஞ்ஞானம் வெளிப்படுத்தியதைச் சுவாமி மேற்கூறிய வசனம் மூலம் சுட்டிக் காட்டுகிறார்.
'தீயார் சொற் கேட்பதுவுந் தீதே' என்ற முதுமொழிக்கேற்ப தீயசொற்களும் கூட வளியை மாசடையச் செய்து, எமது உள்ளத் தில் மன விகாரங்களையும் மன அமைதியின்மையையும் ஏற்படுத்தி எமது ஆன்மீகப் பாதையைத் தடைசெய்கின்றன என்பதையும் பக வான் மறைபொருளாக மேலே சுட்டிக்காட்டியிருப்பதை நாம் அவ தானித்துக் கொள்ள வேண்டும்.
கடைப்பிடிக்க வேண்டிய சுகாதாரமுறைகள்
தொற்று நோய்களிலிருந்து எம்மை நாமே காப்பாற்ற வேண் டுமாயின் நாம் உண்கிற உணவும், அருந்துகிற நீரும், சுவாசிக்கிற
16三 Y சாபி காட்டிய
 
 

காற்றும். நாம் தொடர்பு கொள்கிற ஏனைய பொருட்களும் மாச டையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும், வேறு வார்த்தைகளில் கூறுவதாயின் அடிப்படைச் சுகாதாரத்தைப் பேணவேண்டும்.
நாம் பேணவேண்டிய அடிப்படைச் சுகாதார முறைகள் LufTGO) 6: ?
(1) தற் சுகாதாரம் (2) உணவுச் சுகாதாரம் (3) வீட்டுச் சுகாதாரம் (4) சுற்றாடல் சுகாதாரம்
சுகாதாரத்தைப் பேணவேண்டியதின் அவசியத்திற்கு சுவாமி கொடுக்கும் முக்கியத்துவம் என்ன?
சுவாமி தனது அடியவர்களை நெறிப்படுத்துவதற்காக சத்யம், தர்மம், சாந்தி, பிரேமை, அஹிம்சை ஆகிய ஐந்து அடிப்படைக் கோட்பாடுகளையும், ஒழுக்கநெறிக் கோவை ஒன்பதையும், அன்புக் கட்டளைகள் பத்தையும் அருளியுள்ளார் அல்லவா? அன்புக் கட்டளை பத்தில், நான்காவதாக சுகாதாரத்தைப் பேணுவதை வலியுறுத்திப் பின்வருமாறு கூறுகிறார்.
"நாம் வாழும் இல்லத்தையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இது உலக வாழ்க் கைக்கு இன்றியமையாத உடல் நலத்தையும்
جو 3
சுகாதாரத்தையும் பேணிக் காப்பதாகும்
தற்சுகாதாரம்
தனது உடலை நோய்கள் அணுகாவண்ணம் சுத்தமாகவும் தூய்மையாகவும் வைத்திருப்பதே தற்சுகாதாரம், உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால்வரை சுத்தமாக வைத்திருப்பது அவசியம் ,
1) எல்லோரும் தினமும் குளிக்க வேண்டும். கைக்குழந்தைகள், முதியவர்கள், நோயுற்றவர் உட்பட அனைவருமே தினமும் குளிக்க
ஆரோக்கிய வாழ்வு S 17

Page 17
ᏪᏁᏁᏗᏡvᏁᏗᏑᏙᏁᎲᏡᏁ4ᏡᏁzᏡᏁ2ᏡᏁzᏡᏁzᏡᏁzᏡᏁ4ᏡᏁᏗᏑᏁᏁᏗᏡᏁzᏡᏁzᏡᏁᎲᏡᏁ4ᏁᏁzᏡᏁᏗᏡᏁᎲᏡᏁᏗᏡᏁᏗᏡᏁ4ᏡᏁᎲᏡᏁᎲᏡᏁᏗᏡᏁz
வேண்டும். முடியாவிட்டால் உடல் முழுவதையும் சுத்தமாகக் கழுவ வேண்டும். கடினமான வேலைக்குப் பிறகும், வியர்த்த பின் னரும் குளிப்பது அதிமுக்கியமானது. நோயுற்றிருக்கும் போதும் குளிக்கலாம். கடுமையான நோயுற்றிருக்கும் போது இளஞ்சூட்டு நீரில் நனைத்த துணியினால் உடலைத் துடைத்துத் தூய்மைப் படுத்தலாம். தினமும் குளிப்பதன் மூலம் தோல் தொற்று நோய் கள், பொடுகு, பருக்கள், கட்டு, சொறிவு ஆகியவற்றைக் கட்டுப் படுத்தலாம். புண்களும் விரைவில் மாறிவிடும்.
'நாம் வெளியில் சஞ்சரிக்கும் போது சுற்றுச் சூழலி லிருந்தும் கூட நமது உடலில் பல கோடி கிருமிகள் வந்து சேர்கின்றன. நாம் புனிதமற்ற, தூய்மையற்ற இடங்களில் வசிப்பதனால் அவ்விடங்களிலிருந்து மேலும் அதிகமாக கிருமிகள் நம் உடலில் பிரவேசிப்பதற்கு வாய்ப்பிருக்கின்றது. இதன்காரணமாகவே அன்றாடம் நீராடுதல் என்பதைக் கடைப்பிடித்து வருகிறோம். உடலைத் தூய்மையாக வைத்துக் கொள்வதன் பொருட்டு நீராடுகிறோம் என எண்ணிக்கொண்டிருக்கி றோம். இல்லை நோய் வராமல் தடுப்பதன் பொருட்டே நீராடுகிறோம்? 3
என்று பகவான் கூறியுள்ளார். நோய் வராமல் தடுப்பதற்கே
குளிக்கிறோம் என்று அவர் வலியுறுத்தியிருப்பது சுகாதாரத்திற்கும் நோய்த் தடுப்பிற்கும் உள்ள நெருங்கிய தொடர்பை நாம் கவனத்தில் எடுக்க வேண்டும் என்பதற்காகவே,
2)
18
தோய்த்து உலர்ந்த சுத்தமான ஆடைகளையே அணிய வேண் டும், பல் வேறு விதமான தோல் நோய்கள் மாத்திரமின்றி பாலியல் நோய்களும், தொற்று நோய்களும் கூட ஆடைகளால்
பரவலாம்.
"மானிடன் அணியும் ஆடைகளும் கூடச் சுத்தமாக இருத்தல் வேண்டும்? 4
என்பது பகவானின் அமுதவாக்கு,
E Y சாயி காட்டிய
 

பொதுசன நூலகம் աII Աքն է: Շծrtb,
3) சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும், மலசலம் கழித்த பின்னும், அழுக்கான வேலைகளைச் செய்த பின்னும் சோப் போட்டுக் கைகழுவுதல் அவசியம். கரி, மண், போட்டுக் கழுவுதல் கூடாது. ஏனெனில் அவை சருமத்தை உறுத்தி உராசல் காயங்களை உண்டு பண்ணலாம். அத்துடன் அவையும் கிருமிகளால் மாசடைந்திருக்
556) (TLD .
4) தலை முடியை ஒழுங்காக வெட்ட வேண்டும். அடிக்கடி முழுகு தல் வேண்டும். தினமும் எண்ணெய் பூசித்தலையை ஒழுங்காக வாருதல் வேண்டும். இவற்றின் மூலம் பேன் தொற்றாமலும், தலையில் பொடுகு, புண், அவிச்சல் ஏற்படாமலும் தடுக்க முடியும் ,
'ஒழுங்காக வாராத பரட்டை பிடித்த அழுக்கான தலை ஒழு ங் கற் ற எண்ணத்தையும், அறிவையும் குறிக்கும்? 9
என்று பகவான் கூறுவது அழுக்கான உடல் நோயுடன் மாத் திரமின்றி அழுக்கான எண்ணங்களுடன் கூடத் தொடர்புடையதாத லால் ஆன்மீக சாதனையாளர்களுக்கு ஏ ற் பு  ைட ய து அன்று என வலியுறுத்தவே எனலாம்.
5) கண்ட இடங்களிலும் மூக்குச் சீறுதல், துப்புதல், மலசலம் கழித் தல் ஆகியவற்றை நிறுத்த வேண்டும். மலசல கூடத்திலேயே மலசலம் கழிக்க வேண்டும். இல்லையேல் ஈக்கள் மூலம் நோய்கள் பரவும். கொழுக்கிப்புழு கால் மூலம் தொற்றும் மழைகாலத்தில் அசுத்த நீர் கிணற்றில் ஊறி நோயை ஏற்படுத்தும்.
6) பற் சுகாதாரம் மிகமிக முக்கியமானது. இதைப் பேணாவிட்டால்
பற்சொத்தை மாத்திரமின்றி வாய் அவிச்சல், முரசு க  ைர த ல், பயோரியா, புற்றுநோய் போன்ற பல்வேறு நோய்கள் ஏற்படலாம்.
காலையும், மாலையும் மாத்திரமின்றி ஒவ்வொரு முறையும் ஆகாரம் உட்கொண்டு 15 நிமிடம் ஆவதற்கிடையில் பற்களை நன்கு
பிரஷ் கொண்டு துலக்க வேண்டும்,
ஆரோக்கிய வாழ்வு E 9

Page 18
மேல்வாய்ப் பற்களை மேலிருந்து கீழும், கீழ்வாய்ப் பற்களைக் கீழிருந்து மேலும் துலக்க வேண்டும். பக்கவாட்டில் துலக்குவது பூரண பலனைத் தராது.
பற்பசை நல்லது. ஆனால் அவசியமானது அல்ல; வெறுமனே துலக்கினாலே போதும். கரி, உப்பு, பற்பொடி போன்றவை ஈறுகளை உறுத்துவதன் மூலம் தீங்கு விளைவிக்கும். ஆலும் வேலும் பல்லும் குறுதி என்ற முதுமொழியின் கருத்தையும் மீளாய்வு செய்ய வேண் டும். ஏனெனில் அவற்றின் தும்புகள் மழுங்கக் கூடியவையாதலால் பற்களுக்கு இடையேயுள்ள அழுக்குகளை நீக்க உதவாது. அத்துடன் அவற்றின் கூர்மையான முனைகள் ஈறுகளுக்கு ஊறு விளைவிக்கலாம். இதே போல் முனை மழுங்கிய பிரஷ் உதவாது.
உப்புத் தண்ணிரால் வாய் கொப்பளிப்பது நல்லது. பகவானும் வாய்ச்சுத்தத்தை வலியுறுத்தியுள்ளார்.
* உடல் என்ற மாளிகைக்கு வாயே வாசலாகும். வாசலே அழுக்காகவும், நாற்றமாகவும் இரு ந் தா ல் உள்ளே இருப்பதைப் பற்றி என்ன சொல்ல முடியும் 9
என்று நகைச்சுவையாகக் கேட்கிறார்.
7) நகங்களை ஒழுங்காக வெட்டி நக இடுக்குகளில் அழுக்குச் சேரா மல் பார்த்துக் கொள் ள வேண்டும். இல்லையேல் அவற்றில் சேரும் கிருமிகள் உணவுடன் உடலை அடைந்து நோய்களை ஏற்படுத்தும்.
8) அக்குள், கால் இடை, அரை, இடுப்பு, கால் விரல் இடை போன்ற வற்றின் சுத்தத்தில் கூடிய கவனம் செலுத்த வேண்டும். இவை ஈரலிப்பாகவும், அசுத்தமாகவும் இருந்தால் வட்டக்கடி என்று பொதுவாகச் சொல்லப்படும் பங்கசு கிருமித்தொற்று ஏற்பட
G) TTLD ,
அத்துடன் சொக்ஸ், உள்ளாடை கைக்குட்டை ஆகியவற்றை யும் தினமும் தோய்த்து உலரவைத்தே உபயோகிக்க வேண்டும்.
20 三 σ (Ταύ. ά. (Τι φαν
 

3.
ᏑvᏁᏗᏡᏁ,ᏡᏁᏁᏁᏗᏡᏁ4ᏡᏁᏗᏡᏁᏪᏡᏁᏪᎵᏙᏁᏪᏙᏁᏪᏙᏁᏪᏡᏁᏗᏡᏁᏗᏡᏁᎲᏡᏁᏪᏙᏁᎲᏁᏁᏗᎪᏁ4ᎮᏙᏁ4ᏛᏁᏁᏪᏡᏁᏪᏡᏁ4ᏡᏁ4ᏡᏁ4ᏡᏁ4ᏡᏁᎯ
9) மண்ணில் நடக்கும் போதும், மலசலகூடம் செல்லும் போதும் கட்டாயம் செருப்பு அணிதல் வேண்டும். இரத்த சோகையை ஏற்படுத்தும் கொழுக்கிப் புழுக்கள் கால்கள் ஊடாகவே தொற் றுகின்றன என்பதை நினைவில் வைத்திருங்கள்.
நீரிழிவு நோயாளர்கள் கால்களைத் தினமும் சுத்தம் செய்து, செருப்புக்கள் அணிந்து கவனமாகப் பாதுகாக்க வேண்டும். ஏனெனில் அவர்களது கால்களில் விறைப்புத்தன்மை இருப்பதால் சுலபமாக காயங்களோ கிருமித்தொற்றோ ஏற்பட்டு விரைவில் பரவிவிடும். அங் கங்களை நீக்கவேண்டிய சத்திர சிகிச்சைக்குக் கூட அவை இட்டுச் செல்லலாம்.
வீட்டுச் சுகாதாரம்
நாம் வசிக்கும் வீடு சுத்தமாக இருக்க வேண்டும். இல்லையேல் பற்பல நோய்கள் சுலபமாக எம்மைத் தாக்கும். தினமும் கூட்டுவது அடிக்கடி கழுவுவது, தூசி தட்டுவது மாத்திரம் சுத்தத்தைப் பேணும் நடவடிக்கைகள் அல்ல. கழிவு நீரை வெளியேற்றுவது, சமையலறைக் கழிவுகளை உரிய முறையில் அகற்றுவதும் முக்கியமானதே.
1) சமையலறைக் கழிவு நீரையும் , குளியலறை நீரையும் தேங்க விடாது வீட்டுத் தோட்டத்திற்குப் பயன்படுத்த வே ண் டு ம். இடவசதியில்லாவிட்டால் 21/2 மீட்டர் ஆளமுள்ள, நீர்வடிவதற் காக அடியில் பாரக்கற்கள் பரவியுள்ள, மூடப்பட்ட குழிகளில் சேரவிடவேண்டும். நீர் வெளியே தேங்கி நி ன் ற ர ல் நுளம்பு பெருகும். அவற்றினால் மலேரியா, யானைக்கால் நோய், டெங்கு, மூளைக்காய்ச்சல் போன்றவை பரவும். பெண் நுளம்புகளே இரத் தத்தை உறுஞ்சுகின்றன. ஆண் நுளம்புகள் தாவரங்களின் சாற் றையே உறிஞ்சுகின்றன. எனவே புல், பூண்டு தாவரங்கள் பெருகா மல் சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் நுளம்புகளின் இனப்பெருக் கத்தைக் கட்டுப்படுத்தி அவை பெருகாமல் தடுக்கலாம். சிங்கப்பூர் போன்ற நாடுகள் மிக சுத்தமாகப் பேணப்படுவதால் அங்கு தொற்று நோய்கள் பரவுவது குறைவாகவேயுள்ளது.
2) கிணறு ஆழமாகவும் காணியின் உயர்ந்த பகுதியில் அமைக்கப் பட்டிருக்க வேண்டும். மலசலகூடத்திலிருந்து போதிய தூரத்திற்கு அப்பால் (30 அடி) அமைக்கப்பட்டிருக்க வேண்டும். வெள்ள
ஆரோக்கிய வாழ்வு 도 2

Page 19
ᎮᎲᏁᎨᏍᏁᏓᏍᏁᎲᏑuᏁᏓᏍᏁᏁᏁᏑᏓᏁᏗ°ᏙᏁᎲᏑᏙᏁᏗᎴᏙᏁᏗᎵᎨᏁᏗᏡᏁᏗᏡᏁᏡᏁᏗᏉᏁ ᏡᏁᎲᏑᏙᏁᎴᏡᏁᏁᏁᏗᏡᏁᏗᏡᏁᏪᏙᏙᏡᏁᏪᏙᏁᏗᏉᏁᎲᏡᏁᎴ
4)
6)
7)
22
நீரோ, கழிவுநீரோ நேரடியாக உள்ளே விழாதவாறு சுற்றுச் சுவர் கட்டப்பட வேண்டும். கிணற்றைச் சுற்றி 5 அடி வரையான சீமேந்துத் தளம் அமைக்க வேண்டும். கிணற்றுக்கென தனியான வாளி இருக்க வேண்டும். உபயோகிக்கப்படாத நேரத்தில் அதனை அழுக்கான தரையில் வைக்கக்கூடாது. உயரமான இடத்தில் அழுக்குப்படாதவாறு கவிழ்த்து வைக்க வேண்டும்.
மலசலகூடங்கள் சுத்தமாயிருக்க வேண்டும். மலசலகூடம் சென்று வந்த பின் மலசலகூடத்தையும், கைகால்களையும் சுத்தப்படுத்து வதற்கான நீர் வசதி (வாளி, தொட்டி, குழாய்நீர்) அருகில் இருக்கவேண்டும். அவ்விடத்தில் சோப் வைத்திருப்பதும் அவசிய மாகும். - வளர்ப்பு மிருகங்களின் சுத்தத்தில் (குளிக்க வார்த்தல், உண்ணி குடற்புழு நீக்கல்) அக்கறை செலுத்த வேண்டும். அவற்றின் அசுத்தங்களை உடனடியாக அகற்ற வேண்டும். குழந்தைகளை அவற்றுடன் நெருங்கி விளையாடவிடக்கூடாது.
மேசை, கதிரை, கட்டில் போன்றவற்றின் அடிப்பாகம், வீட்டின் மூலை முடுக்குகள் ஆகியவற்றையும் துப்பரவு செய்ய வேண்டும். இதன் மூலம் நுளம்பு, கரப்பொத்தான் போன்ற நோய் காவிகளை ஒழிக்கலாம். தேள், மட்டத்தேள் போன்றவை ஒழிந்து கொள் ளாதபடி நிலத்திலும் சுவர்களிலுமுள்ள உடைசல்கள் துவாரங் களை அடைத்து விட வேண்டும் .
மூட்டைப்பூச்சி, கரப்பொத்தான், தெள்ளு போன்ற பூச்சிகளை கொதிநீர் மூலமோ ஏற்ற கிருமிநாசினி மூலமோ ஒழிக்க வேண்டும்.
படுக்கை, படுக்கை உறை, தலையணை அதன் உறை ஆகிய வற்றை அடிக்கடி தோய்ப்பதுடன் தினமும் வெயிலில் காயப் போட வேண்டும். இவற்றின் சுத்தம் மிக முக்கியமானது. ஏனெனில் தினமும் எமது நேரத்தில் 1/3 பகுதியைப் படுக்கையில் தொடர்ச்சியாகக் கழிக்கிறோம். எனவே இவை அசுத்தமாயிருந் தால் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் . அத்துடன் படுக்கையில் உள்ள துணிகளில் ஒருவகைக் கிருமி (Dust mile) இருக்கிறது. அது ஆஸ்துமா போன்ற நோய்களைக் கொண்டு
Y சாயி காட்டிய

به
أضا , |-
ܕ ܐ ܓ
தேசிய நாலகப் பிரிவு மாநகர நூலக சேவை ᏈᏓᏁᎲᏑᏁᏗᎵᏉᏁᏗᏑvᏁ,ᏡᏁᎮᏙᏁᏗᎵᏙᏁ4ᏁᏁ4ᎵᏁᏁzᏡᏁᏪᏉᎩᎲᏡᏁᏗ °ᏉᏁzᏡᏁᎲᏡᏁᏪᏁᏁᏗᏡᏁ,ᏡᏁzᏡᏁᎲᏡᏁ4ᏡᏁᏘᏡᎯᏡᏪᏑᏉᏁᎲᏡᏪᎷᏡᏁᏪᏡᏁᏪ
KLJIT LDLJILJF, 6037 LO. வரும், இதைத் தடுப்பதற்கு படுக்கையில் உள்ள துணிவகை களைச் சுத்தமாகவும், ஈரலிப்பின்றியும் வைத்திருப்பது அவசியம்.
8) நிலத்தில் துப்பாதீர்கள். ஏனெனில் எச்சிலும் நோய்களைப் பரப்பக் கூடும் இருமும் போதும், தும்மும் போதும் வாயையும் மூக்கை யும் கைக்குட்டையாலோ, துணியாலோ மூடவேண்டும்.
9) தொற்று நோய்கள் ஏற்பட்டால் நோயாளியைத் தனிமையாக்கிப்
பராமரிக்க வேண்டும். அவர் உபயோகிக்கும் கோப்பை, டம்ளர், ஆடைகள், துவாய், படுக்கை விரிப்புக்களை ஏனையோர் பயன் படுத்தக் கூடாது.
10) வீட்டைச் சுற்றி மரக்கட்டைகள், விறகுக்கட்டைகள், கற்கள்
கிடக்க விடாதீர்கள். அடர்ந்த புதர்களையும் இருக்க விடாதீர்கள் ஏனெனில் பாம்புகள் இவற்றினுள் வசதியாக வதியும். எறும்புப் புற்றுகளை அழிக்க வேண்டும். மரப்பொந்துகளை நிரப்ப வேண் டும். தரையில் கிடக்கும் மரக்கட்டைகள், குற்றிகளை அகற்ற வேண்டும்.
பாம்புகள் உணவிற்காக எலி, தவளை, பல்லி ஆகியவற்றை நாடும். எனவே வீட்டையும் சுற்றாடலையும், குப்பை கூளங்கள் சேராமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
சுற்றாடல் சுகாதாரம்
"மானிடன் வசிக்கும் இடத்தின் சுற்றுசூழல் முழு வதும் கூட பரிசுத்தமாக இருக்க வேண்டியது மிகமிக அவசியமாகும்? 7
என்று பகவான் சுற்றாடல் சுகாதாரத்தின் அவசியத்தை வலி யுறுத்துகிறார்.
சுற்றாடல் சுகாதாரத்தில் நாம் கவனிக்க வேண்டிய சில முக்கிய விடயங்களைப் பார்க்கலாம்.
ஆரோக்கிய வாழ்வு 王23

Page 20
ᏑᏉᏁᎲᏡᏪᎷᏪᏛᏙᏁᏪᏑᎷᏁᏗᏛᏈᏁᏪᏈᏖᏁᏪᏎᏉᏁ,ᏈᏉᏁᏪᏛᏙᏁᏪᏛᏈᏁᏪᏡᏁ4ᏛᏠᏁᏎᏡᎯᏁᎯᏡᎯᏈᏪᏡᏁᏗᏑᏠᎯᏉᎯ*ᏡᏁᎯᎵᏙᏁ4ᏡᏁᏪᏈᏉᏁᎯᏉᏙᏁᏗᏉᏙᏁᏪᎵMᏈᏪᎵᏠᏁ4 ᏡᏁᎯᎵᏙᎴᏡᎯ
1) குப்பைகூளங்கள், சமையலறைக் கழிவுகள் ஆகியவற்றில் பலவித கிருமிகளும் பூச்சிகளும் பெருகி நோயை உண்டுபண்ணும். எனவே அவற்றைப் புதைக்க வேண்டும் அல்லது எரித்தல் வேண்டும்.
2) சிரட்டை, தேங்காய்ப்பொச்சு, ரயர், வெற்றுப் பாத்திரங்கள், போத்தல்கள், பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவை நீர் தேங் கும் இடங்கள். இவற்றில் நுளம்பு பெருகும். எனவே நுளம் பினால் பரவும் நோய்களான மலேரியா, யானைக்கால்நோய், மூளைக்காய்ச்சல், டெங்குக் காய்ச்சல் போன்றவை பரவும். நீர் தேங்கும் அத்தகைய பொருட்களை அழித்தல் அல்லது ஆழப் புதைத்தல் அவசியம் ,
3) சமையலறை, குளியலறை கழிவு நீர்களைத் தேங்கவிடக்கூடாது. முன்பு கூறியபடி குழிகளில் விடவேண்டும் அல்லது வீட்டுத் தோட்டத்திற்குப் பயன்படுத்த வேண்டும்.இவ்விடயத்தில் பகவான் கூறிய கருத்துக்கள் கட்டாயம் கவனத்தில் கொண்டு செயற் படுத்தப்பட வேண்டியதாகும்.
* சிற்சில சிறிய சிறிய கிராமங்களிலும், சில அசுத் தமான குடிசைப் பகுதிகளிலும் தூய்மையற்ற சூழ் நிலை இருப்பதாலும், கழிவு நீர் செல்வதற்குச் சரி யான இடம் இல்லாத காரணத்தாலும் ஆங்காங்கே கழிவு நீர் குட்டைகளில் தேங்கி நிற்பதாலும், கிரா மங்களிலும் குடிசைகளிலும் வாழும் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும், ஆண்களுக்கும், வயோதிபர்களுக்கும் சிலவிதமான நோய்கள் தாக்கி அவர்கள் பலவிதமான இன்னல்களுக்கு இலக்காகிக் கொண்டிருக்கிறார்கள்.
அத்தகைய இடங்களுக்கு சேவா நிறுவனங்க ளைச் சார்ந்தவர்களும், சேவாதளத் தொண்டர்களும் சென்று அவைகளனைத்தையும் சுத்தம் செய்தல் வேண் டும். அந்த மக்களுக்கும் கூட "அசுத்தம் செய்வதால் உங்களுடைய ஆரோக்கியம் கெடுகிறது, பிறகு உயி ருக்கே அபாயம் ஏற்பட்டுவிடும்' என அவர்களுக்கு
சாயி காட்டிய
24

*ᏠᏛᏈᏪᏡᎯᏡᏗᏡᏁ, ᎪᏁᏗ ᏛᏙᏁᎲᏈᎸᏁᏗ ᎮᏙᏁᏗᏡᏁ,ᏡᏁᏗᏑᏙᏁᎴᏉᏁᏗᏡᏁᏗᏡᏁ4ᏡᏁ,ᏡᏁᏗ2ᏉᏁᏗᎹᏙᎯᏈᏗᏡᎯᏁᏗᏛᏁᎲᎹᏉᏁzᏡᏁzᏡᏁᎴᏡᎯᏖᏗ ᏑᏉᏛᏈᏗᏡᎯᏁᏗᏡᏁz
ஒரளவு நன்றாக அர்த்தம் புரியும்படியான முறையில் போதித்தல் வேண்டும்.
அவர்களுக்கு வெளியுலகத் தொடர்பை ஏற்படுத்தச் செய்து, வலிமையான உடல்களையும் கூட அபிவிருத்தி செய்விக்கச் செய்து, பிறகு அவர்களை ஆன்மீக மார் கத்தில் ஈடுபடச் செய்வது சரியான கோட்பாடு ஆகும்” 8
இந்த நீண்ட வசனத்தில் பகவான் நான்கு முக்கிய விடயங் களை அழுத்தம் திருத்தமாகக் கூறியிருப்பது அவதானிக்கத்தக்கது.
1) சுற்றாடல் சுகாதாரத்தின் அவசியமும், அது சீர்கெடும் சந்தர்ப்
பங்களும்
11) அதனால் நோய்கள் ஏற்படுதல்
I) அதைச் சீர்செய்ய சேவாதளத் தொண்டர்களும் பக்தர்களும்
செய்ய வேண்டிய கடமைகள்
17) மக்களுக்கு சுகாதாரம், நோய் பற்றிய அடிப்படை அறிவைப்
புகட்டுதல் ஆகியவையே அவை
உணவுச் சுகாதாரம்
தொற்று நோய்கள் பரவுவதில் மாசடைந்த நீரும், உணவும் பெரும்பங்கு வகிக்கின்றன. உணவுப் பண்டம் உற்பத்தியாகி நாம் வாங்குமுன்னரே மாசடையலாம், உணவு தயாரிக்கும்போது மாச டையலாம், தயாரித்த உணவைப் பாத்திரங்களில் வைத்திருக்கும் போது அல்லது உண்ணும் போது கூட மாசடையலாம். எனவே உணவுச் சுகாதாரத்தை ஆரம்பம் முதல் இறுதிவரை ஒவ்வொரு கட்டத்திலும் அவதானிப்பது அவசியமாகிறது.
* உண்பதற்கு சத்துள்ள உணவு கிடைக்கவில்லை என்றாலும், உள்ள உணவையாவது புனிதமானதாக
ஆரோக்கிய வாழ்வு Ε 25

Page 21
வும் பரிசுத்தமானதாகவும் சாப்பிட வேண்டியது மிக மிக அவசியமானதாகும்” 9
மேற்படி கூற்றை மேலெழுந்த வாரியாகப் பார்த்து விட்டு சத்துள்ள உணவு முக்கியத்துவமற்றது என நாம் அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது. ஒருவேளை, சத்துள்ள உணவு கிடைக்கவில்லை என்றால் அடுத்த நேரம் அதற்கேற்றவாறு சத்தான உணவுகளை எடுத்து அதனை ஈடுசெய்துவிடலாம். அதன் மூலம் போஷாக்குக் குறைபாட்டு நோய்கள் ஏற்படாமல் தடுத்து விடலாம். ஆனால் அசுத்தமான உணவை உட்கொண்டால் உடனடியாகவே கிருமி தொற்றிவிடும், நோய் பரவிவிடும். அதனைத் தடுக்க முடியாது. எனவேதான் கிடைக்கின்ற உணவு எத்தகைய போஷாக்குப் பெறு மானம் கொண்டதாயினும் அதனைச் சுத்தமாக, சுகாதார முறைப் படி உண்ண வேண்டும் என பகவான் வலியுறுத்தியுள்ளார்.
சில அடிப்படை உணவுச் சுகாதார முறைகளை நாம் தவறாது கைக்கொள்ள வேண்டும்.
1) கொதித்து ஆறிய நீரையே எப்பொழுதும் பருக வேண்டும். தண்ணிர் கலந்த சுடுநீர் பயனற்றது, ஏனெனில் கிருமிகள் முற் றாக அழியமாட்டா. கொதிக்க வைத்த நீரை அகண்ட வாயுள்ள மட்பானையில் விட்டு வைத்தால் மிகவும் குளிர்மையாகவும் சுவை யாகவும் இருக்கும். அந்நீரை எடுக்கும் போது அசுத்தமான எமது கைகள் நீரில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தை களுக்கு அதற்கான செய்முறை அறிவினை ஊட்ட வேண்டும். அவ்வாறு அள்ளுவதற்குக் கைபிடியுள்ள, சுத்தமான தனியான குவளை வைக்க வேண்டும்; அல்லது நீர்க்கலசத்தைச் சரித்து எடுக்க வேண்டும். மூக்குள்ள கூஜா போன்ற பாத்திரங்களும் விரும்பத்தக்கவையே.
சொந்தக் கிணற்று நீரானாலும் கொதிக்க வைத்தே அருந்த வேண்டும்.
சிலர் நோயுற்ற காலங்களில் மாத்திரம் கொதித்து ஆறிய நீரை அருந்துகிறார்கள். இது அர்த்தமற்ற செயல். நோய் தொற்றாமல்
26 E w சாபி காட்டிய
 

ᏑᏓᏁᎲᏉᏁᎲᏡᏁᎲᏁᏁᎲᎹᏁᎲᏉᏁᎲᏡᏁzᏡᏁᏗᏁᏁᎲᎹᏙᏁᏗᏡᏁᎲᏡᏁᎲᏡᏁᎲᏡᏁᏗᏡᏁ4ᏡᏁᏗᏁᏁzᏡᏁᏗᏡᏁᎲᎹᏁᏗᏡᏁzᏁᏁzᏡᏁzᏡᏁᎲᏡᏁᎲᏡᏁz
2)
3)
釜)
ஆரோக்கிய வாழ்வு
தடுப்பதற்கே கொதித்து ஆறிய நீர் தேவையே அன்றி நோயைக் குணமாக்க அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
ஏரிகள், குளங்கள், ஆறு முதலியவற்றின் நீர் பார்ப்பதற்கு சுத் தமாக இருந்தாலும் மாசடைந்தவையே; எனவே கட்டாயம் கொதிக்க வைத்தே அருந்த வேண்டும்.
எமது யாழ்ப்பாணப் பிரதேசத்தில் நைதரசன் அதிகமுள்ள செயற்கைப் பசளைகள் அதீதமாக உபயோகிக்கப்படுகின்றன: அத்துடன் எமது பிரதேசம் கடல் மட்டத்திலுள்ளது. இதனால் குடிநீரில் நைதரசனின் அளவு அதிகரித்துள்ளது. இது புற்று நோய்களைத் தோற்றுவிக்கலாம் எனக் கருதப்படுகிறது. முக்கி யமாகக் களப் புற்று நோய்க்குக் காரணமாகலாம்.
நீரில் நைத்திரேட்டின் அளவு 45 mgm/L ற்கு மேற்படக்கூடாது என உலக சுகாதார ஸ்தாபன அறிக்கை கூறுகிறது ஆயினும் குடாநாட்டின் பல பகுதிகளில் இது 50 mgm/L யைத் தாண்டி விட்டது.
அதீதமான இரசாயனப் பசளைகள் மாத்திரமின்றி அதிகமாக உபயோகிக்கும் பீடை கொல்லிகளும் பூச்சி கொல்லிகளும் கூட எமது நீரை மாசுபடுத்தி நோய்களை உண்டாக்குகின்றன. இத் தகைய இரசாயன மாசுகளை கொதிக்க வைத்தோ, வடிகட் டியோ நீக்கமுடியாது. அத்தகைய இரசாயனப் பொருட்களின் பாவனையைக் குறைத்து, இயற்கைப் பசளைகளை உபயோகிப் பதே ஒரே வழியாகும்.
சமைப்பதற்கும், சமைத்த உணவை எடுத்து வைக்கவும், உண் பதற்கும், பரிமாறுவதற்கும் பயன்படுத்தும் பாத்திரங்களும், கரண்டிகளும் சுத்தமானவையாக இருக்க வேண்டும்.
உணவுப் பண்டங்களை எப்பொழுதும் மூடிவைத்திருக்க வேண் டும். இல்லையேல் அசுத்தங்களில் வாசம் செய்யும் ஈ, கொசு, கரப்பொத்தான் போன்றவை உணவை கிருமிகளால் மாசுபடுத்தி விடும் ,
S. 27

Page 22
. . . . . . .
. . . . . .
ᏑᏙᏁᏪᎵᏙᏛᏈᏗᏡᏁᏓᏛᏙᏁᏗᏑᏉᏁᏗᏡᏁ4ᏛᏙᏁᏗ ᏛᏙᏁᏗᏡᎯᏁ,ᏛᏁᏗᏑᏙᏁᎯᏡᎯᏁᏪᏡᏁᎲᏛᏙᏁᏗᏡᏙᏁ4ᏡᏁᏗᏡᏁᏗᏡᏁ4ᏡᏁᏪᏡᏁᏪᏡᏁᏪᏙᏁᎴᏙᏁᏗᎴᏙᏁᎴᏙᏁᎴᏙᏁ2
5)
6)
தெருவோரங்களிலும், கடைகளிலும், விழாக்களிலும், திறந்த
வெளிகளிலும் விற்கப்படும் தின்பண்டங்களும், பழத்துண்டுகளும், பலாச்சுளைகளும் பெரும்பாலும் திறந்து வைத்தே விற்கப்படு கின்றன. இவை தூசியினாலும், ஈக்களினாலும் மாசுபடுத்தப் பட்டு நோய்களைப் பரப்புகின்றன. எனவே அவற்றை உண்ணக் ಆn-L-IT5 •
கரட், பீற்ரூட், முள்ளங்கி, வத்தாளை போன்ற மண்ணில் வளரும் கிழங்குவகைகளும், பொன்னாங்காணி, வல்லாரை, கீரை போன்றவையும் தோட்டமண்ணிலும் நீரிலும் உள்ள அசுத்தங்க ளால் மாசடைந்திருக்கும் . அவற்றை நன்கு அலசிக் கழுவி அல் லது சமைத்தே உண்ண வேண்டும். அதேபோல நிலத்தில் விழுந்து கிடக்கும் பழங்களையும் நன்கு கழுவியே உண்ண வேண் டும்
* பழமரங்கள், காய்கறிகள் இவற்றின் மீது டீ. டீ. ரீ. தெளிக்கிறோம். திராட்சைத் தோட்டங்களில் கூட இந்த டீ. டீ. ரீ. தெளிப்பு நடக்கிறது. டீ. டீ. ரீ. சக்தி வாய்ந்த கிருமிநாசினி, பழங்களிலும், காய்கறி களிலும் ஊடுருவுகிறது. நாம் சாப்பிடும் எல்லாவற் றிலும் அது காணப்படுகிறது. படித்தவர்கள், பணக் காரர்கள் இவர்களெல்லாம் இவற்றை நன்கு சுத்தம் செய்துவிட்டு உட்கொள்கிறார்கள். ஆனால் ஏழைகள், தெருக்களில் வசிப்போர் அவற்றை அப்படியே உண் ணுகிறார்கள். அவை முழுவதும் டீ. டீ. ரீ. நிறைந் திருக்கிறது. இது பலவிதமான நோய்களுக்கும் கார ணமாகிறது' 19
பகவான் டீ. டீ. ரீ. யை ஒரு உதாரணமாகவே கூறுகிறார்.
எல்லாக் கிருமிநாசினிகளும் இவ்வாறே நோய்களை ஏற்படுத்தும் . எனவே பழங்களையும், காய்கறிவகைகளையும் நன்கு கழுவிச் சுத்தம் செய்யாமல் உண்ணக் கூடாது.
டீ. டீ. ரீ. முன்பு எமது நாட்டிலும் நுளம்பு ஒழிப்பிற்காக
ஏராளமாக விசிறப்பட்டதை நீங்கள் மறந்திருக்கமாட்டீர்கள். அந்த
28 E. w சாயி காட்டிய
*

w
u r) ਲ பிரிவு '15 ஈர நூலக சேஜை யாழ்ப்பாணம்,
ᎪᏁᎲᏡvᏁᏁᏁᎲᏁᏁᎲᏍᏁᎲᏉᏁᎲᏉᏁᎲ ᎴvᏁᎲᏉᏁᎲᏡᏁᎲᏡᏁᎲᏡᏁᏁᏁzᏡᏁzᏡᏁ4ᏡᏁzᏡᏁ4ᏡᏁᏪᏡᏁᎲᏁᏁᎲᏡᏁᎲᏡᏁᏗᏡᏁᏡᏁᎲᏉᏁᎲᏡᏁᎲ
டீ. டீ. ரீ. சில பாரதூரமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம் எனச் சில ஆராய்ச்சிகள் இப்பொழுது கூறுகின்றன. அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள பெரிய ஏரிகளில் வாழுகின்ற சில இன ஆண் மீன்களில் பெண் பாலுறுப்புக்களும் தோன்ற ஆரம்பித்துள்ளன; அங்குள்ள ஆண்முதலைகளின் பாலுறுப்பின் வளர்ச்சி அரைவாசியாகக் குறைந் துள்ளன. அருகில் வாழும் ஆண்களின் விந்திலுள்ள உயிரணுக்களின் எண்ணிக்கை அரைவாசியாகக் குறைந்துள்ளது. ஆண் இனத்தில் பெண் இயல்புகள் தோன்றும் . இத்தகைய மாற்றங்கள் பாரதூரமா
60 0001.
இதற்குக் காரணம் அந்த ஏரியில் உள்ள நீர் மிக மோசமாக 12. டீ. ரீ. யினால் மாசடைந்திருப்பதே என நம்பப்படுகிறது. டீ 12. ரீ. இயற்கையாக சிதைவடையும்போது டீ. டீ. ஈ. என்ற இரசாய னப் பொருளாக மாறுகிறது. டீ. டி. ஈ. க்கும், பெண்மை இயல்பிற் கான ஒமோன் ஈஸ்ரோஜனுக்கும், உருவ அமைப்பில் ஒற்றுமை இருக்கி றது. இதனாலேயே அத்தகைய பாரதூரமான மாற்றங்கள் தோன் றின. இவ்வாறு இரசாயனப் பொருட்களால் சூழல் மாசடைவது, உயிரினங்களின் பாலியல் வேறுபாட்டிற்கும், இயல்பான கூர்ப்பு வளர்ச் சிக்கு ஊறு விளைவிப்பதும் நம்புதற்கரிய விடயங்களாக இருக்கின் றன. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டே டீ. டீ. ரீ. யை பக வான் உதாரணம் காட்டினார் என எண்ணத் தோன்றுகிறது.
7) நாட்பட்ட அல்லது நாற்றமடிக்கின்ற உணவுகளைச் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அது விஷத்தன்மையுள்ளதாக இருக்கலாம். தகரத்தில் அடைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவு விடயத் திலும் அவதானமாக இருக்க வேண்டும். அதனைத் திறக்கும் போது நுரை அல்லது வாய்வுடன் திரவம் பீறிட்டுக் கொண்டு வந்தால் அவற்றை உண்ணாது வீசிவிட வேண்டும்.
'நீரில் சமைத்த உணவுகளை மறுநாள் உண்ணக் கூடாது அவை தீமை விளைவிக்கும். எண்ணெயில் தயாரித்த பண்டங்களையும் கெட்டமணம் வருவதற் கிடையில் உண்ண வேண்டும்* 11
என பகவான் தெளிவாகக் கூறியிருப்பது இவ்விடத்தில் நினைவு கூரத்தக்கது.
璽酚
ഷ്ട്ര്സ്കി ധ ഖേ
@要@@
Ε
2.
ஆேதி நூலகப் ar巫5万马s° யாழ்ப்பா னம்,

Page 23
eSeSAA eSceSeSe eSeSeSeeS S SeA ScSeeeSL cL e SeScceS e cee ekeSLe S cLSAA e eASeAeeSceLc S cLeSeS cLSeLe AceccS ccAc eLAcLcLce kLkLAc ccccccc LaLccLcccLcc aeccS
இறுதியாக, உணவுச் சுகாதாரம் பற்றிய பகவானின் பின்வரும் கூற்று முழுமையான அர்த்தத்தை உணர்த்தி நிற்கின்றது எனலாம்.
'மூன்று வகையான சுத்தங்களை (Purity) கவனத் தில் எடுக்க வேண்டும். உணவுப் பொருட்களின் சுத்தம், உணவு தயாரிக்கும் பாத்திரங்களின் சுத்தம் தயாரித்த உணவைப் பரிமாறுகிறவனின் சுத்தம்" 12
பரிமாறுகிறவனின் சுத்தம் என பகவான் கூறும் போது,
அவனது உடற்சுத்தத்தை மாத்திரமின்றி அவனது மனச்சுத்தத்தை
மே குறிப்பிடுகிறார் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
அடிக்குறிப்புகள்,
1) தமிழ் சனாதன சாரதி (த. ச. சா.) மார்ச் 93 - ப 3
2) பூரு
3) மனதின் மர்மம் ப 21
சத்யசாயிபாபா பாலவிகாஸ் பாடப் புத்தகம் 1 203
4) மேற்படி - ப 31 5) How to naittain health - I J 6 6) மேற்படி - ப 2 7) மனதின் மர்மம் ப 21 8) மேற்படி - ப 22 3) மேற்படி - ப 31 10) த. அ. சா. ஏப்ரல் 93 - 22 J. J. H. M. H - 2
12) மேற்படி - ப 3 -
30
Ε
10 ക0 ('gധ
..

ᏉᏁᎲ?ᏁᏁᏉᏁᎲᏉᏁᎲAᏁᎲᎮᏉᏁᎲᏉᏁᏁᏁᎲᏡᏁᎲᏡᏁᏗᎪᏁᏉᏁᏗᏡᏁᎲᏈᎸᏁ4ᏡᏁᏁᏁᎲᏡᏁᎫᏉᏁᎲᏡᏁᏗᏡᏁᎲᏡᏁᎲᏡᏁᏗᏡᎫvᏡᏁᎲᏡᏁᏉᎯᏠᏱ
ஓம் சாயிராம்
3. உணவு
உணவு என்றால் என்ன?
எந்த ஒரு பொருள் ஒரு உயிரினத்தால் உட்கொள்ளப்படும் போது அதன் வளர்ச்சிக்கும், வளர்ச்சியோடு கூடிய ஆரோக்கியத்தைப் பேணுவதற்கும் உதவுகிறதோ அதனை உணவு என்று சொல்லலாம். ஒரு கல உயிரினமாகிய அமீபா முதல் ஆறறிவு படைத்த உயிரின மாகிய மனிதன் வரை எல்லாவற்றுக்குமே உணவு அவசியமாகிறது என்பது தெளிவு.
உணவு என்ற பதம் திண்மம், திரவம், நீர், நீரில் கரைந்துள்ள பொருட்கள் யாவற்றையும் உள்ளடக்குகிறது.
உணவு எமது உடலின் நாளாந்த தொழிற்பாட்டுக்கான சக்தி யைக் கொடுப்பதுடன், பிள்ளைகளின் உடல் வளர்ச்சிக்கும், சிதைந்த அல்லது பழுதடைந்த உறுப்புக்களைச் செப்பனிடுவதற்கும் அவசிய tಡಿ!T 65Tg »
உணவின் முக்கியத்துவத்தைச் சுவாமி பின்வருமாறு குறிப்பிடு கிறார்.
'உண்வே கடவுள் (அன்ன்ம் - பிரமம்) இத்தூலவுடல் உணவிலிருந்து வந்தது. உணவினால் ஊட்டமடைகி றது. உணவைக் கொண்டுதான் வாழ்கிறது. உணவி னால்தான் உயிர் நிலைத்திருக்கிறது, ஆகையினால் உணவை வீணடிப்பது வாழ்க்கையை வீணடிப்பதா கும்" 1
பிரமம் என சுவாமியால் அதிமுக்கியத்துவம் அளிக்கப்படும் &. godt ଫ୍ଲା) ବନ୍ଧୁ!!! |5frւծ,
- வீணாக்கக் கூடாது - தேவைக்கு ஏற்ற அளவு மாத்திரம் உண்ண வேண்டும்
ஆரோக்கிய வாழ்வு S 3

Page 24
ᏡᏁ4ᏡᏁ4ᏡᏁ4ᏡᏁ4ᏡᏁ4ᏡᏁᎲᏛvᏁᎲᏡᏁᏪᏡᏁᎲᏡᏪᏙᏁᏁᎲᏡᏁᎲfᏙᏁ4ᏡᏁᎲᏡᏁ4ᏡᏁ4ᏡᏁ4ᏡᏁ4ᏡᏁ4ᏡᏁᎴ ᏉvᏉᏁ,rvᏁ, ᎮᏙᏁ,ᏛᏁᏁᏉᏁᎲ
- பழுதடைய விடக் கூடாது - மாசடையாமல் துப்பரவாக வைத்திருக்க வேண்டும்
உணவின் கூறுகள்
நாம் உட்கொள்கின்ற உணவின் தன்மை திரவமாகவோ, திண்ம மாகவோ இருக்கலாம். அதன் நிறம், மணம், சுவை வேறுபடலாம்; அதன் வடிவம் பலவாயிருக்கலாம், ஆனால் அவற்றை ஆறு அடிப் LJ60) 1– 616) 356IT fr5L" l flåg,6V/Th.
மாப்பொருள் கொழுப்பு புரதம் கனியங்கள் உயிர்ச்சத்து
நீர்
மாப்பொருள்
இதனைக் காபோகைதரேற் என்றும் கூறுவர். இது எமது உட லின் தொழிற்பாட்டுக்கான சக்தியைக் கொடுப்பதுடன், உடல் வெப்ப நிலையைப் பேணுவதற்கும் உதவுகிறது, மாப்பொருளை மிகையாக உட்கொண்டால் அது கொழுப்பாக மாற்றப்பட்டு உடலில் சேமிக் கப்படுகிறது.
மாப்பொருளிலுள்ள செலுலோஸ் என்ற கூறு மனித உட லில் சமிபாடடைவதில்லை. நார்ப்பொருள் என்றும் இதனை அழைப்பர். இது மனித உடலில் சமிபாடு அடையாத காரணத்தால் மலம் இலகுவாக கழிய உதவுகிறது. மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக் கிறது. இதனைப் போதியளவு உட்கொண்டால் மூலவியாதி ஏற்படு வது குறைவு. பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான சந்தர்ப் '8984ம் குறைக்கிறது. குடலிலிருந்து இனிப்புச்சத்து உறிஞ்சப் படுவதை நார்ப்பொருள் தாமதப்படுத்துவதால் நீரிழிவு நோயாள ருக்கு அதிமுக்கியத்துவம் வாய்ந்தது,
32, 三 y சாம்பி காட்டிய

ᎵMᏁzᏡᏁᏡᏪᏁᏪ eMeLecLccMMLMeLeLcLLcLLccceccecLeLeEeeMLMccMeLeLMMeLeLSLcecLEeLeLeLeLceLeeeLee eLeLeSecAaae ecccceLececccccc
மாப்பொருளை நாம் அரிசி, கோதுமை, சோளம், குரக்கன் போன்ற தானியவகைகளிலிருந்து பிரதானமாகப் பெறுகிறோம். உரு ளைக்கிழங்கு, வத்தாளை, மரவள்ளி, போன்ற கிழங்கு வகைகளும், சில பழங்களும் மாப்பொருளைக் கொடுக்கின்றன.
கொழுப்புப் பொருள்
இதனை இலிப்பிட்டுக்கள் என்று கூறுவர். இவையும் அதிக சக்தியைக் கொடுக்கின்றன. அத்துடன் தோலின் கீழ் சேமிக்கப்பட்டு வெப்பக் காவலியரகவும் தொழிற்படுகிறது. உணவை உள்ளெடுக்க முடியாத வேளைகளில் சேமித்து வைக்கப்பட்ட கொழுப்பு சக்தியைப் பெறுவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. நீரில் கரையாத விற்றமின் களான A, D, K, E, ஆகியவை உறிஞ்சப்படுவதற்கும் கொழுப்பு உதவுகிறது.
கொழுப்புப் பொருட்கள் கொழுப்பு அமிலங்களால் (Faty - LLLLLL LLLS TTTTTT S S TTT S TT S TTTTTT TT S T T T SS SS LL LLtLtLLLLLLL LS கொழுப்பு அமிலம், நிரம்பாத (Unsaturated) கொழுப்பு அமிலம் என இரு வகைகளாகப் பிரித்துள்ளார்கள். நல்லெண்ணெய், கோர்ன் (Corn) எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் போன்றவை நிரம்பாத கொழுப்பு அமிலத்தைக் கொண்டவை. இவை உடலுக்கு அவசியமா னவை வெண்ணெய், பால், நெய், இறைச்சி ஆகியவற்றிலும் தேங்காய் எண்ணெயிலும் நிரம்பிய கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவற் றைக் குறைவாக உண்பதே நல்லது.
புரதம்
புரோட்டின் (Protein) என்று கூறப்படும். உயிரினங்களின் தொழிற்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் மிகமிக முக்கியமானது. கலங்க ளின் திருத்தம், புதிய கல உற்பத்தி, ஒமோன்கள், நொதியங்கள், பிறபொருள் எதிரி, இரத்தம் ஆகியவற்றின் உற்பத்தி போன்றவற் றிற்கு மிக அவசியமானது.
ஆரோக்கிய வாழ்வு E 33

Page 25
மனித உடலில் உள்ள புரதங்களில் 21 அமைனோ அமிலங்கள் உள. இவற்றில் எட்டு எமது உடலால் உற்பத்தி செய்ய முடியா தவை உணவின் மூலமே பெறக்கூடியவை. இவற்றை பிரதான TTTT TtTTT SLLL STTTTTTTT SLLL LLLL LLLLLLLLS LLLLLLLCC LLLLLLSS TTTTT T TTttLLS
புரதச்சத்து மீன், முட்டை, இறைச்சி போன்ற விலங்கின் உணவு மூலமே கிடைக்கின்றதெனப் பலரும் எண்ணுகிறார்கள், பருப்பு கடலை, பயறு, உழுந்து, சோயா, கச்சான், எள்ளு, பலாக்கொட்டை போன்ற பல்வேறு தாவர உணவுகளிலும் நிறையப் புரதம் உண்டு
கனிேயங்கள்
உடலிற்குப் பலவிதமான கனியங்கள் குறைந்த அளவில் தேவைப்படுகின்றன. காபன், ஐதரசன், ஒட்சிசன், நைதரசன், சல் பர், பொசுபரஸ், குளோரின், சோடியம், பொற்றாசியம், கல்சியம், மக்னீசியம், இரும்பு, அயடீன் போன்றவை முக்கியமானவை. இவற்றை விடக் குறைந்த அளவில் வேறுசில கனியங்கள் தேவைப்படுகின்றன .
விற்றமின்கள்
உயிர்ச்சத்துக்கள். இவையும் மனித உடலால் தயாரிக்க முடியா
தவை. மிகச் சிறிய அளவிலேயே எமக்குத் தேவைப்பட்டாலும் எமது உடலின் தொழிற்பாட்டிற்கு மிகவும் அவசியமானவை. விற்றமின் களை இரு வகைகளாகப் பிரிக்கலாம். விற்றமின்கள் k, A, D, E ஆகியவை கொழுப்பில் கரைபவை விற்றமின்கள் Bயும் Cயும் நீரில் கரையக் கூடியவை. B என்பது உண்மையில் ஒரு கலப்பு உயிர்ச்சத்து ஆகும். அதில் B1, B2, B3, B2 எனப் பல பிரிவுகள் உண்டு. இது னால் அவை யாவற்றையும் ஒன்று சேர்த்து B கலப்பு உயிர்ச்சத்து அல்லது விற்றமின் B கொம்பிளக்ஸ் (Wi, B. Complex) என அழைக்கின் றோம்.
சாபி காட்டிய نتيجة 34
 

evᏁᎲᎵᏉᏙ, ᏑᎲᏁᏗᎴᏙᏁᏗ?ᏠᏁᎲᏡᏁᏡᏁᎲᏡᏁᏡᏁᎲᏑᎪᏁᏗᎵᎪᏁzᏡᏁᏗᏡᏁᏗᏉᏗᏡᏁᏊᏡᏁzᏡᏁᎲᏡᏁᏗᏉᏁᏗᏡᏓᏁᎲᏡᎯᏙzᏡᎯᏙᎲᏉᏁᎴ*ᎷᏁᏪᏙᏁᎲ*ᏙᏁᎲ
நீர்
எல்லா உயிரினங்களினதும் அடிப்படைப் பொருளாகும், எமது உடலின் 80% நீராலேயே ஆனது. உணவுச் சமிபாட்டிற்கும் உறிஞ் சலுக்கும், கழிவுப்பொருட்களின் வெளியேற்றத்திற்கும், வெப்ப நிலை யைக் கட்டுப்படுத்தவும் இன்னும் பல்வேறு விதமான தொழிற்பாட் டிற்கும் நீர் அவசியமானது,
'உணவு உடலுக்கு அவசியமானது. அதனுடன் இணைந்து நீரும் உட்கொள்ளப்படுகிறது. இவை இரண்டும் அதிமுக்கியமானவை. தண்ணீர் வாழ்க்கை யின் ஆதார உருவம். உணவு மனதின் ஆதார உருவம் ஆகஇவை இரண்டும் வாழ்க்கைக்கும் மனதிற்கும் ஆதா ரமானவையாக, அவற்றின் போக்கை மாற்றுபவையாக விளங்குவதை உணரலாம். உணவு எப்படிப்பட்டதோ அப்படிப்பட்டதே எண்ணங்கள். நம் உணவுப் பழக்கங் களின்பாற்பட்டே நம் எண்ணங்கள், நம் ஆசைகள்
நாட்டங்கள் முதலியவை அமைகின்றன' F
நாம் தினசரி 25 லீட்டர் நீரை உட்கொள்கிறோம். இதில் 35 முதல் 50 வீதமானது நாம் உண்ணும் உணவுகளிலிருந்து கிடைக் கின்ற நீராகும். இதைத்தவிர சக்தி உற்பத்திக்காக எமது உடலில் உணவுப் பொருட்கள் எரியூட்டப்படும்போது, தினசரி 350 மி. லீட்டர் நீர் உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே நாம் தினசரி நீராகாரமாகக் குடிக்க வேண்டிய நீரின் அளவு ஒன்று முதல் இரண்டு லீட்டராக ஒவ் வொருவரின் உடல் வாகைக்கு ஏற்ப மாறுபடலாம்.
உணவும் நீரும் உடலுக்கு முக்கியமானவை என்பதை நாம் அறிவோம். அதற்கும் மேலாக அவை எமது உள்ளத்தின் எண்ணங்கள், ஆசைகள் முதலியவற்றைக்கூட கட்டுப்படுத்தும் ஆற்றல் உடையவை என பகவான் வலியுறுத்துகிறார். ஆன்மீக ஈடேற்றத்தில் அக்கறை புள்ள ஒவ்வொருவரும் அவதானிக்க வேண்டிய விடயம் இது, சாத் விக உணவு பற்றிய பகுதியில் அதுபற்றி விரிவாகப் பார்க்கலாம்.
',600 &ിധ ഖ0ഴ്ച E 8
W

Page 26
ᏛᏙᏁᏗᎴᏙᏁᏗᏡᏁᏗᏡᏁᏗᎹᏙᎴᏉᏗᏑᏙᏁᏗᏑᏙᏁᏗᏡᏁᏗᏑᏙᏁᏗᎵᏡᏁᏗᏛᏉᏁᏗᏎᏉᏁᏗ ᏠᏁᏗᏡᏁᏗᏱᏁᏗ ᏑᏉᏁᎯᏡᏁᏗᏡᏁᎲᏡᏁzᏡᏁᏪᏡᏁᏪᏉᏁᏙᎲᏡᏁᏪᏉᏙᏁᏪᏉᏁᏗ ᎪᏁᏗ
சமநிலைப்பட்ட உணவு
மேற்கூறிய உணவின் கூறுகள் நாம் வழமையாக உண்ணும் உணவுகளில் மாறுபட்ட விகிதங்களில் கலந்து விளங்குகின்றன. உதாரணமாக சோற்றில் 75% மாப்பொருள் உள்ளது. அதில் புரத மும் கொழுப்பும் குறைந்த அளவிலேயே உள்ளன. எதிர்மாறாக பட் டரில் 80% கொழுப்புள்ளது; மிகக் குறைந்தளவு புரதம் உள்ளது. மாட்டிறைச்சியில் 22% மும், பருப்பில் 24% மும் புரதம் உள்ளது. கணியங்களும், உயிர்ச்சத்துக்களும் குறைந்த அளவிலேயே காணப்படும் அட்டவணை !
பொதுவான உணவுகளில் காணப்படும் போசணைப்பெறுமானங்கள் 100 கிராமில் காணப்படுவது
புரதம் கொழுப்பு மாப் உணவுப் பொருள் பொருள் விற்றமின் கனியம்
( கிராமில் )
அரிசி தீட்டிய பச்சை 6 8 0 - 5 78 . 0 B கைக்குத்து 8 - 5 O 6 7 7" 4 B கோதுமை மா I O 9 73 Oα , Fe குரக்கன் 7 3 I 3 72 Oα, Fe மைசூர் பருப்பு 25・I 0 - 7 57 . 6 : A Ca, Fe LЈ и јд) 24 I 5 56 7 A Oα, Ρε மரவள்ளி O. 7 (0) · 2 38 · 7 C வத்தாளை I 2 0 3 28 - 2 A, C கரட் O 9 O 2 O 6 A. வெண்டி I 9 O - 2 6 * 4 தக்காளி 1 - 9 O' I 3 · 6 A, C Ca பப்பாசி 0 - 6 O 1 7.2 A. A, C வாழைப்பழம் 1 : 0 1 0 3 27 A A . Ο முட்டை I 3 - 3 : 1 3 - 3 0 - 8 . A Fe
19 3 · 5 22 Fe, Oα மாட்டிறைச்சி 22·6 2·6 - Fe, Cal கருவாடு 42 4·0 — Fe, Cal L, IT Gi) (t. 14; } 32 4 * 1 全·奎 Fe, Ca. J. Ti り“35 S I・5 O --- nama தேங்காயெண்ணெய் O 99 4. O - -
36 காபி காட்டிய

ി.
ᏑᏙᏁᏡᏁᏡᏁᎲᏛᏙᏁᏗᏑvᏁᏗᏡᏁᏡᏁᎲᏡᏁzᏡᏁᏗᏉᏁᎲᏡᏁᏗᏡᏁ4ᏡᏁᏪᏑᏙᏁᏪᏡᏁᏪᏡᏁᏪᎵᏙᏙᏡᎯᏡᏗᏡᏁzᏡᏁzᏡᏁzᏁᏁ4ᏡᏁᏪᏡᏁᏪᏡᏁ ᏡᏁᏪ
இவற்றை நாம் எந்த விகிதத்தில் உட்கொள்ள வேண்டும்? எமது உணவில் 60% மாப்பொருளாகவும், 15% - 20% புரதமாகவும், 20%-25% கொழுப்பாகவும் இருக்க வேண்டும். மேற்கூறிய விகிதத்திற்க மைய வெவ்வேறு உணவுப் பொருட்களை உண்ணும் போது அவற்றுடன் கலந்திருக்கும் கனியங்களும், விற்றமின்களும் எமது நாளாந்தத் தேவைக் குப் போதுமாயிருக்கும் உணவின் எல்லாக் கூறுகளும் அடங்கிய இத்தகைய உணவையே சமபல உணவு அல்லது சமபல போஷாக்கு உணவு (Balanced Diet) என அழைக்கிறோம்.
சுவாமியும் சமபல உணவின் அவசியத்தைப் பற்றிக் கூறியுள் GITIT (i.
"நம் உணவு, சரிவிகிததிட்டம் சரியான முறையில் இருக்க வேண்டும்" 2
எமது ஆலயங்களில் படைக்கப்படும் மோதகம் ஒரு சமபல போஷாக்கு உணவாகக் கருதப்படுகிறது. ஏனெனில் மோதகத்தி லுள்ள அரிசிமா மாப்பொருளையும், பயறு புரதச்சத்தையும், தேங் காய்த்துருவல் கொழுப்புச் சத்தையும் கொடுக்கிறது. ஒரு போஷாக்கு உணவுக்கு வேண்டிய எல்லாப் பொருட்களும் அதில் அடங்கியுள்ளன. எமது ஆலயங்கள் ஆன்மீக மையங்களாக மாத்திரமன்றி சமூகத்தின் கல்வி, சுகாதாரம், ஆரோக்கியம், வாழ்க்கை முறை யாவற்றிலும் அக்கறை செலுத்த வேண்டும் என எமது முன்னோர்கள் கருதி ஒழு கினார்கள் என்பதற்கு இது ஒர் உதாரணம்.
அட்டவணையில் Ca - கல்சியம், Fe - இரும்பு எனக் குறிக்கப்பட்டுள்ளது எமது உணவு முறைகள்
இலங்கையர்களாகிய எமது பிரதான உணவு அரிசியாகும் இதனைச் சோறாகவும், மாவாக்கி இடியப்பம், பிட்டு, அப்பம், களி போன்ற பல்வேறு பலகாரங்களாகவும் சாப்பிடுகிறோம். கோதுமை மாவும் இப்பொழுது அதிகம் உபயோகிக்கப்படுகிறது. பாண் பெரும் பாலும் ஒரு நேர உணவாகி வருகிறது.
இவற்றுடன் பல்வேறு விதமான காய்கறிகள், கிழங்குகள், பருப்பு, பயறு சேர்ந்த கறிகளையும், தேங்காய் மிளகாய் சேர்ந்த சம்பலையும்
ஆரோக்கிய வாழ்வு E 37

Page 27
ᏛᏁᏁ,ᏍᏛᏙᏓᏍᏁᏗᏍᏁᏓᏍᏁᏓᏍᏁᏗᏛᏁᏗᏛᏙᏁᏃᏛᏙᏁᎲᏛᎨᏁᎲᏛᏙᏁ,ᏡᏁᏗᏡᏁ4ᏛAᏁ,ᏡᏁᏗᏡᏪᏁᏛᏉᏁᎲᏡᏁzᏡᏁᏗᏡᏁ4ᏡᎯᏁᏗᏡᏁ4*ᏙᏁ,ᏡᏁ,ᏡᏁᏗᏡᏁᏗ
சேர்த்து உண்கிறோம். விலங்கின உணவு உண்பவர்கள் முட்டை, இறைச்சி போன்றவற்றைச் சேர்த்து உண்கின்றனர்.
பலவகையான பழங்களும், வாசனைப் பொருட்களும் எமது உணவிற்குச் சுவை சேர்க்கின்றன. பானங்களைப் பொறுத்தவரை பால், கோப்பி, தேநீர் முக்கிய இடத்தையும்; மோர், பழச்சாறுகள், மென்பானங்கள் போன்றவை இரண்டாம் இடத்தையும் பெறுகின்றன:
அரிசியும், கோதுமையும் பிரதான உணவுகளாக இருக்கின்ற காரணத்தால் எமது உணவின் மாப்பொருள் தேவை சுலபமாக ஈடு செய்யப்படுகிறது. பருப்புப் பயறு வகைகளும், விலங்கின உணவும் புரதத்தையும், தேங்காயெண்ணெய், நல்லெண்ணெய் கொழுப்புச் சத்தையும் கொடுக்கின்றன. மேற்கூறிய உணவுவகைகளிலிருந்தே கனியங்களையும், விற்றமின்களையும் பெற்றுக் கொள்கிறோம்.
நேரத்திற்கு நேரமும், நாளுக்கு நாளும், காலத்திற்கு காலமும் நாம் உண்ணும் உணவுகள் வேறுபடுகின்ற காரணத்தால் அவை முக் கிய போஷணைப் பதார்த்தங்களை வழங்குகின்றனவா என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். கலப்பு உணவுகளை உட்கொள்கின்ற காரணத்தால், கனியங்களும் விற்றமின்களும் ஒருநாள் சற்றுக் குறைந் தாலும், மறுநாளோ அடுத்தநாளோ ஈடுசெய்யப்படுகிறது.
ஒரே விதமான உணவைத் தினமும் உண்ணவிரும்பாது வேறு பாடுகளையும் சுவைமாற்றங்களையும் தேடும் எமது நாக்கு இவ்வாறு பல்வேறு போஷணைப் பொருட்களைப் பெற்றுக் கொள்ள உதவி செய்கிறது. கால தோஷண நிலைகளுக்கேற்ப எமக்கும் கிடைக்கின்ற உணவுப் பொருட்களிலும் மாற்றமிருக்கின்றன. அந்தந்தக் காலங்களில் மலிவாகக் கிடைக்கின்ற பொருட்களை உணவில் சேர்த்துக் கொள் வதன் மூலம் சமபல உணவு கிடைக்க இயற்கையே உதவி செய்கிறது எனலாம் ,
'எதையும் சரிசமமாகப் பார்க்கும் மனநிலை இருந் தால் எமக்கு நோயே வராது. உணவைப் பொறுத்த, வரை நமக்குச் சரியான பழக்கங்கள் இருக்க வேண் டும். 4 -
σ σαύ 3, σε ζα αυ
38

ܠ ܐ
evᏁᏡᏁᏓᏛᏁᏁᎲᏑuᏁᏛᏉᏁᏁᏁᏁᏁᏪᏙᏁᎲᏑvᏁᎲᏡᏁ4ᏡᏁᎴᏔᏁᏪᏡᏁᎲᏡᏁᎲ°ᏙᏁ/ᏑᏁᏗᏡᏁᎯᏡᏁᎲᏡᏁ4ᏑᏁzᏡᏁᎲᏡᏁᎲᏡᏁᏗᏡᏁᎲ°ᏙᏁᏗᏡᏁᎲ
எனக் கூறுவதன் மூலம் பகவான் எமது உணவுமுறைகள் சரி யான முறையில் அமைந்து, கலப்பு உணவை எடுத்து, உணவில் சம பல நிலையைப் பேண வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டுகிறார்
* உடலைப் போஷிக்கும் அளவே உண்ண வேண்டும் , ஆனால் பலர் உண்பதற்காகவே வாழவேண்டும் என நினைக்கிறார்கள்' "
மேற் கூறிய வசனத்தின் மூலம் சுவாமி எமது உணவின் அளவு எப்படியிருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். அந்த இரு வசனங் களின் மூலம் எமது உணவுப் பழக்கத்தின் இரண்டு அடிப்படை அம் சங்களான சமபல கலப்பு உணவு பற்றியும், உடற் தேவைக்கு ஏற்ப மட்டுமே உண்ண வேண்டும் என்பதையும் தெளிவாக்குகின்றார்.
எமது மாப்பொருள் உணவுகள்
எமது உணவின் மாப்பொருள் தேவையைத் தானிய வகை களே பெருமளவு பூர்த்தி செய்கின்றன. அரிசியும், கோதுமையும் முக்கிய இடத்தைப் பெற்றாலும் குரக்கன், சாமை போன்ற சிறு தானியங்களும் கூடிய இடத்தைப் பெறக் கூடியவையே.
அட்டவணை 11 - 100 கிராம் உணவில்
புரதம் மாப்பொருள் கொழுப்பு
ng it இரTம் இராம் அரிசி (கைக்குத்து) 3・5 γ 7 - 4 O 6 அரிசி (பச்சை) 6 8 78 2 0.5 கோதுமை மா I 1 - 0 73 - O O 9 குரக்கன் 7 3 72 - O 교 · 3 மரவள்ளி O 7 38 · O 2 ஒடியல் மா 5 2 7. On 3
ஆரோக்கிய வாழ்வு E 39

Page 28
தேசிய நூலகப்
unT5亭ア 夢T* GF SDans
熙、
ceceLeLeeLccS LLLe LLL LLeLLALALAL S SLcLA SLccLeLc ccc LLLecccLe Seccce ALccccLAcccLeeLeLcL S LALcLcLcLMLMLcL L LLeLeLceEeLcS
மேற்கூறிய தானியவகை உணவுகளின் போஷணைப் பெறுமானத்
தில் பெருமளவு வித்தியாசம் இல்லை என்பதனை அட்டவணை 11
காட்டுகிறது. விலை மலிவிற்காகவும், சுலபமாக உணவு தயாரிக்கக்கூடிய
வசதிக்காகவும், கேக், பிஸ்கட் போன்ற பல்வேறு தின்பண்டங்களைச்
செய்யக்கூடிய காரணத்தினாலும் கோதுமை மாவின் பாவனை எம்
மிடையே அதிகரித்து வருகின்றது.
சிறு தானியங்கள் இலகுவாக உற்பத்தி செய்யக் கூடியவை. நீண்டகாலம் சேதமின்றிச் சேமித்து வைக்கக்கூடியவை. நோயாளி களுக்கும் உகந்தது. சமிபாடு அடைவதில் சமசீராகவும், நீண்ட நேரம் எடுப்பதாலும் குருதியில் சீனிச்சத்தை திடீரென உயர்த்துவதில்லை. எனவே நீரழிவு நோயாளருக்கும், எடையைக் குறைக்க வேண்டிய
தேவையுள்ளவர்களுக்கும் அதிக பயனுடையது. அத்துடன் அதில் அதி
களவு இரும்புச் சத்தும், நல்ல தரமான வகைப் புரதமும் இருப்பதால் எல்லோரும் உபயோகிப்பது நல்லது. அரிசிமாவுடன் கலந்து பிட்டு, இடியப்பம், அப்பம், ரொட்டி போன்ற உணவுகளைத் தயாரிக்கலாம்.
அரிசி உணவு
நாம் மாத்திரமின்றி, உலக சனத்தொகையில் அரைப்பங்கிற்கு மேற்பட்டோரது பிரதான உணவு அரிசியாகவே இருக்கின்றது. பூமத் தியரேகைக்கு அருகில் உள்ள வெப்பவலய நாடுகளிலேயே அரிசி முக்கிய உணவாகப் பயன்படுத்தப்படுகிறது. இவர்கள் பொரும்பாலும் எம்மைப் போன்ற வறிய வளர்முக நாடுகளைச் சேர்ந்தவர்கள். இதனால் அதிக விலையுள்ள விலங்கினப் புரதம் இவர்களுக்குப் போதிய அளவு கிடைப்பதில்லை. ஆயினும் அரிசி உணவு உண்போர் புரதக் குறைபாட்டு நோயினால் பாதிக்கப்படுவது குறைவு. அரிசியில் 8 - 14% புரதமே உண்டு. தினமும் அரிசியைச் சோறாகவோ, பலகாரங்களா கவோ அதிகளவு உண்பதால் அதில் உள்ள புரதம் எமது புரதத் தேவையின் பெரும் பங்கைக் கொடுத்துவிடுகிறது.
ஆனால் மரவள்ளிக் கிழங்கைப் பிரதான உணவாக உட்கொள் ளும் சில ஆபிரிக்க நாடுகளில் புரதக் குறைபாட்டு நோய்கள் பெரு
40 E. * σσιό όσ φαν
 

ᎪᏪᏙᏗ ᏍᏁᏗ ᏑᏙᏁᎴᏡᏁᏗᎹᏙᏁᏗᏡᎯᏖᏗᏎᏉᏁᏗᏎᏉᏁᎴᏡᏁᏗᏡᏁᏗᎴᏉᏁᏗᏈᏙᏁᏗᏉᎯᏁᏗᏑvᏁᏗᏑᏙᏁᏗᏡᏁzᏡᏁᏗᏡᎯᏁzᏡᏁᏗᏑvᏁᏗᎴᏙᏁᏗᏡᏁᏗᏡᏁᎲᏡᎯᏁ,ᏍᏁᎲᎹᏉᏁᏗ
மளவில் இருக்கின்றன. இதற்குக் காரணம் மரவள்ளிக் கிழங்கில் மிகக் குறைந்தளவு - 0.7% புரதம் இருப்பது தான்.
அரிசியில் மாப்பொருளும், புரதமும் மாத்திரமின்றி தயமின் , றைபோபிளேவின், நியாசின் போன்ற விற்றமின்களும் உண்டு.
தவிடுள்ள அரிசி மலச்சிக்கலைத் தடுப்பது மட்டுமின்றி பெருங் குடல் நோய்களையும் தடுக்கிறது.
கல்வியில் ஆன்மீகத்திற்கு இருக்க வேண்டிய முக்கிய பங்கு பற்றிக் கூறவந்த சுவாமி அரிசியை உதாரணம் காட்டிப் பின்வரு மாறு கூறுகிறார்.
"எமது கல்வி ஆன்மீக மதிப்பீடுகளைப் பெற்றிருக்க வேண்டும். அவை உணவின் முக்கிய அம்சமாகிய அரிசி (சாதம்) போன்றவை. கறி, சட்னி, சூப் போன்ற மற்றவை புலன்களைத் திருப்தி செய்யும் உபரிகள்? ெ
கல்விக்கு ஆன்மீகம் எவ்வளவு முக்கியமானதோ, அதேபோல் எமது உடலின் இயக்கத்திற்கு அரிசி முக்கியமாக அமைந்துள்ளது என்பதை அக் கூற்றிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
அரிசி உணவு தயாரிப்பில் அவதானிக்க வேண்டியவை
அரிசியில் உள்ள புரதமும், விற்றமின்களும் அதன் கரு உள்ள முனையிலும், அதன் உள்ளுறையிலுமே அடங்கியுள்ளன. நன்கு திட் டிய அரிசியில் இவை குருணலாகவும், தவிடாகவும் வீணாகி விடுகின் றன. மாப்பொருளே மிஞ்சும். அதிலும் பச்சை அரிசி விரைவில் குரு ணலாவதால் இச் சத்துக்கள் வீணாகுவது அதிகம்.
நெல்லை ஊறவைத்து புழுங்கவைக்கும் போது அரிசியின் உள் ளுறையில் உள்ள விற்றமின் சத்துக்கள் உட்பாகத்திற்கு ஊறிச்சென் றுவிடுகின்றன. இதனால் நெல்லைக் குற்றும் போதும், பின் அரிசி
βα (τα άμυ (2) (τώΩ. == 芝ーの ழி/ெ @。@u g町° ... 41 عضي
r" | prrリア யாழ்ப்பானரி
நூலக G3

Page 29
ᏑᏓᏁ4ᏡᏁᏗ ᏡᏁzᏡᏁᏗᏑᏓᏁ4ᏡᏁᏗᏈᏁᏗᏡᏁᏗᏉᏁᏗᎴvᏁᎴᏁᏗᏍᏁᏍᏁᏗᏍᏁᏗ ᏑᏁ4ᏉᏁᏪᏡᏁᏪᏑᏙᏁᎴᏡᏁzᏡᏁᎲᏡᏁ4ᏡᏁᎲᏡᏁ4ᎵᏙᏁᎲᏉᏁ ᏑᏉᏁz
யைக் கழுவும் போதும் விற்றமின் சத்துக்கள் வீணாவது குறைந்து விடுகிறது. எனவே அதிகம் திட்டாத புழுங்கல் அரிசியே சிறந்தது.
அரிசியில் கலந்துள்ள தூசி, நெல், உமி, மண் போன்றவற்றை நீக்குவதற்காக கழுவுகிறோம். கழுவாவிட்டால் காய்ச்சியபின் சோறு பிசுபிசுப்பாக ஒட்டும் தன்மையைப் பெறும். எனவே கழுவுவது அவ சியம்தான். ஆனால் கழுவும்போது அரிசியில் உள்ள தயமின், ரைபோ பிளேவின், நியாசின் ஆகிய விற்றமின்கள் நீருடன் கரைந்து வீணாகி விடுகின்றன. எனவே அரிசியை குறைந்த அளவு நீரிலே சிறிது நேரம் அமிழ்த்தி வைத்து அதிகம் அலகிக் கழுவாமல் வடித்துச் சுத்தப் படுத்துவதே சிறந்தது,
சோறு காய்ச்சும்போதும் அளவான நீரை விட்டு கஞ்சி வடிக்கா மல் சமைப்பதே நல்லது. கஞ்சி வடித்தால் பெருமளவு சத்துக்கள் கஞ்சியுடன் வீணாகிவிடுகின்றன.
திறந்த பாத்திரத்தில் வைத்துச் சமைக்கும் போது அரிசியில் உள்ள விற்றமின்களில் பெரும்பகுதி ஆவியாகி வெளியேறிவிடுகின்றன. எனவே பாத்திரத்தை மூடி வைத்துச் சோறாக்கினால் விற்றமின்கள் சேதமடைவதைத் தடுக்கலாம்.
அரிசி - நிறையுணவல்ல
ஆரிடு எமக்குத்தேவையான மாப்பொருளில் 60% யையும் புரதத் தில் 25%- 60% தைத் தந்தாலும் அதை ஒருநிறையுணவாகக் கொள்ள முடியாது. அதிலுள்ள கொழுப்புப் பொருட்களும் கணிப்பொருட்க ளும் மிகக் குறைவே. எல்லா விற்றமின்களும் அதில் இல்லை. அத் துடன் அரிசியிலிருந்து கிடைக்கும் புரதத்தில் எமது உடலுக்கு மிகவும் அத்தியாவசியமான லைசின் (Lysine), ரிப்ரோபன் (Tryptopham) போன்ற பிரதான அமினோஅமிலங்கள் மிகக் குறைவே.
எனவே இவற்றை ஈடு செய்ய வேறு உணவு வகைகளையும் அரிசியுடன் சேர்த்து உண்ண வேண்டும். விற்றமின்களையும் கணிப்
42三 சாயி காட்டிய

பொருட்களையும் பெறுவதற்கு காய்கறி வகைகள், இலை வகைகள், பழங்கள் சேர்க்க வேண்டும்,
கொழுப்புப் பொருளை எள்ளு, நல்லெண்ணெய், கச்சான், வெண்ணெய், நெய் மூலம் பெறலாம்.
அரிசியிலிருந்து கிடைக்கும் குறைந்தளவு புரதத்தையும், லைசின் என்ற பிரதான அமைனோ அமிலக் குறைபாட்டையும் நிவர்த்தி செய்ய பருப்பு, பயறு வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மரவள்ளி
மரவள்ளியில் மிகக் குறைவான புரதமே இருப்பதால் அத னைப் பிரதான உணவாக உட்கொள்ளும் மக்களிடையே புரதக் குறைபாட்டு நோய்கள் ஏற்படலாம் என ஏற்கனவே பார்த்தோம். இலங்கையில் இது பிரதான உணவாக உட்கொள்ளப்படுவதில்லை. ஆயினும் பலரின் முக்கிய உப உணவாக இருக்கிறது.
மரவள்ளியில் உள்ள முக்கிய பிரச்சனை அதிலுள்ன சயட்ை நஞ்சுதான், இலை, தண்டு, கிழங்கு யாவற்றிலும் சயனைட் காணப் பட்டாலும் அதன் தோலிலும், கிழங்கின் வெளிப்புறத்தில் உள்ள துமே முக்கியமானதாகும். கிழங்கை மண்ணிலிருந்து கிண்டிய பின் 24 மணி நேரமே பசுமையாக இருக்கின்ற போதிலும், மூன்று நாட் கள்வரை சமையலுக்கு உபயோகப்படுத்தலாம். தோலின் அடிப்பாகத் தில் தொடங்கி கிழங்கின் நடுப்பகுதிக்கு நீல நிறமாகப் பரவுகிற கோடுகள், அது பழுதடைந்து விட்டது என்பதைக் காட்டும்.
நஞ்சு ஆபத்தின்றி மரவள்ளியைச் சமைப்பது எப்படி? தோலை உரித்தபின் கிழங்கை நீரில் நன்கு கழுவவேண்டும்; துண்டு துண்டுகளாக வெட்டிய பின்னரும் நீரில் நன்கு ஆழ்த்திக் கழுவ
வேண்டும். கழுவும்போது சயனைட் நஞ்சு நீரில் கரைத்து விடுவதால்
அந்நீரைக் கழித்துவிட வேண்டும். அவிக்கும் போது வா யகண்ட
ஆரோக்கிய வாழ்வு - E 43

Page 30
ᏛMᏁᏗᏡᏁᏗᏡᏁᏛᏙᏁᏃ ᏉᏁᏗᏛᏁᏁᏗᏉᏁᏗ ᏛᏙᏁᏗ*ᏉᏁᎴᏑᎷᏠᏗ*vᏁᏗ ᏑᏙᏁᏗ*ᏁᏁᏪᎹᏁᏪᏡᏁᏗᏡᏁᏗ ᏠᏁᎯᎹᏁᏗᏡᏁᎲᏡᎯᏈᏪᏡᎯᏁᏪᏡᏛᏁᏪ*ᏙᏁᎲᏑᏙᏁgᏡᎯᏁᎯᏉᎯᏁᎯ
பாத்திரத்தில் நிறைய நீர் விட்டு, மூடாமல் அவிக்க வேண்டும். அப்
பொழுது மீதி நஞ்சும் ஆவியாகிவிடும். அந்த நீரையும் வீசிவிட வேண்டும்.
சிலர் மரவள்ளி இலையையும் உண்பதுண்டு. அதையும் சிறு சிறு துண்டுகளாக வெட்டி, நன்கு நீரில் அலசிக் கழுவி, நஞ்சு நீக்கிய பின்னரே சமைக்க வேண்டும்.
உருளைக்கிழங்கும் வற்றாளையும்
உருளைக் கிழங்கில் 19% மும், வற்றாளையில் 28% மும் மாப் பொருள் உண்டு. அவற்றில் உள்ள 2% புரதம் மிகவும் தரமானது. உருளைக் கிழங்கில் விற்றமின் k யும் C யும் உண்டு. வற்றாளையில் அத்துடன் விற்றமின் A யும் உண்டு.
மிகவும் இலகுவாக ஜீரணமடைந்து சுலபமாகக் குடலால் உறிஞ் சப்படக் கூடியவை என்பதால் இவை நோயாளர்களுக்கும் ஏற்ற உணவாகும்.
வற்றாளையின் இலை நல்ல் இலைவகை உணவாகவும் பயன் படுத்தப்படுகிறது,
ஒடியல்
ஒடியல் மா 73% மாச்சத்தை மாத்திரமின்றி 5 2% புரதத் தையும், கல்கியம் இரும்பு ஆகிய கனியங்களையும் கொடுப்பதால் ஏனைய கிழங்கு வகைகளை விட ஊட்ட உணவாகிறது.
எமது உணவில் புரதங்கள்
மனிதனின் வளர்ச்சிக்கு மட்டுமின்றி, உடற் தொழிற் பாட் டிற்கும் அவசியமாதலால், புரதம் உணவின் முக்கிய அம்சமாகிறது எல்லோருக்குமே இது முக்கியமானாலும், வளரும் குழந்தைகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மாருக்கும் அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
5 70 67(20

eMr SLccMMek kcccEkAckELccEcAeEecAEEeMeeMLSMe Me eMe MeLeM ee S AA e e ee S JJe eLSL e eeee e eM eeeS
மனிதனது நாளாந்தப் புரதத்தேவை அவனது வயதிற்கும், நிறைக்கும் ஏற்ப மாறுபாடடைகிறது.
அட்டவணை II
எமது நாளாந்தப் புரதத் தேவை (W. H, O, 1985)
நிறை நாளாந்தப் 6), Ugs சராசரி புரதத்தேவை
(கிலோகி,) (இராமில்) 3 - 6 LIDITá5 Lih 7 丑3 6 - 9 ୫ * 5 4 夏4 5 * 9 , , 12 - 9 ܐܬܐ 5 - 13 .வருடம் II 2 - 1 ضد 2 - 3 , , 13 5 I 5 - 5 3 - 5 , , I 6 5 17 5 5 - 7 , , 20 - 5 21 7 - 10 , , 27 27 ஆண் குழந்தைகள்
10 - 12 34 ・ 5 3 4ے 12 - 14 44 43 I4 - 16 55 ・ 5 52 16 - 18 6 4 56 பெண் குழந்தைகள்
10 - 12 36 36 12 - 14 46 ”5 44 4 - 16 52 46 16 - 18 54 42 翡 வயதுவந்தோர் | ஆண்கள் む5 雀岛 பெண்கள் 55 4 I
ஆரோக்கிய வாழ்வு
Ε
4
5

Page 31
ᏛᏖᏁ4ᏡᏁᏗᏛᏙᏁᏗᏡᏁᏗᏑᎷᏁᎴ?ᏉᏁᏪᏡᏁᎲᏡᏪᏁᎯᏡᏁᏗᏡᏁᏗ ᏡᏁᎯ ᏉᏁ4ᏡᏁᎯᏡᏁᏪᏛᏙᏁᎯᏡᏁᏗᎵᏈᏪᏁ.ᎮᏑᏁᎯ ᏉᏁᎯ ᏤᏈᏁᎲᏑᏁᏪᏑᎷᏈᏪᏡᏁᎯᏡᏪᏛᏗ ?ᏉᏁᎯᎵᏙᏁᏃ
குழந்தைப் பருவத்தில் அவர்களது நிறையோடு ஒப்பிடுகையில் அதிக புரதமும், கட்டிளம் பருவத்தில் சற்றுக் குறைவாகவும், வளர்ந்த பின் மேலும் குறைவாக இருப்பதையும் அவதானிக்கலாம். பெண்கள் கர்ப்பமாயிருக்கும்போதும், பாலூட்டும்போதும் நாளாந்த புரதத் தேவை அதிகரிக்கும்.
ஏனைய உணவுக் கூறுகள் சரியாகக் கிடைத்த போதிலும் புரதம் குறைவாக உட்கொள்ளப்பட்டால் புரதக் குறைபாட்டு நோய் குவாஸியாக்கோர் ( Kwashiorker ) முக்கியமாகக் குழந்தைகளில் ஏற்படும்.
தேவைக்கு அதிகமாகப் புரதத்தை உட்கொள்வதும் அவசிய மற்றதாகும். ஏனெனில் உடலில் புரதம் சேமித்து வைக்கப்படு வதில்லை. மேலதிகமாக உட்கொள்ளப்படும் புரதம் உடலில் இர சாயன மாற்றங்களை அடைந்து கழிவுப் பொருட்களாக வீணே வெளியேற்றப்படுகிறது. சிலர் தேவைக்கு அதிகமாகப் புரதங்களை உட்கொண்டு வீணாக்கும் போது, எத்தனையோ பேர் நாளாந்தப் புரதத்தை பெற்றுக்கொள்ள இயலாமல் நோய்வாய்ப்படுகிறார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது.
ஒரளவு புரதத்தை தேவைக்கு மேற்பட உட்கொண்டாலும் உடலுக்குக் குறிப்பிடத்தக்க பாதிப்பு ஏற்படுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மனிதர்களது நாளாந்தப் புரதத் தேவையை முட்டை, மீன், இறைச்சி ஆகிய விலங்கின உணவுகளும், பருப்பு, பயறு, சோயா, அவரை, கடலை, அரிசி, கோதுமை, பால் போன்ற தாவர உணவு களும் அளிக்கின்றன.
இவற்றின் சமிபாட்டுத் தன்மையைப் பொறுத்த அளவில் விலங்குப் புரதங்கள் 100% ஜீரணமடையக் கூடியவையாகும். தாவ ரப் புரதங்கள் 80% - 95% ஜீரணமடையும். எனவே தாவரப் புரதங் களை உட்கொள்வோர், சமிபாடு அடையாமல் விடுபடும் புரதத்தை ஈடு செய்யுமுகமாகச் சற்று அதிகமாகப் புரதத்தை உட்கொள்வது அவசியம் ,
46三 *(Tധി 60 (U
 

ᎹᏠᏁ,ᏑᏁᎲᏜᏁᏗᏡᏁᏗᎮᏉᏛᏈᏗᎴᏙᏁᎲᏑᏙᏁᏗᎵᏙᏓᎴᏉᏁᎲᏑᏙᏁᎲᎹᏉᏁᏗᏑᏁᏗᎹᏉᏁᏗ*ᏙᏁᎲᏛᏙᏁᎴᏡᏁᏗᏡᏁᎯᎵᏙᏪᏙᏉᏙᏁᎴᏉᏙᏁᏗᏉᏙᏁ4ᏡᏁᏗᏡᏁᏗᏉᏙᏁᎯᏡᏁᏗᏉᎷᏡᏪ
அட்டவணை TV - 100 கிராம் உணவில்
விலங்கின உணவு 臀 :g6ח(J660161.פ ש E.
கோழி இறைச்சி 25 9 பருப்பு (மைசூர்) 25 ・ I கோழி முட்டை 13 3 உழுந்து 24 மீன் 19 Lili Ol 24. ஆட்டிறைச்சி 2 1 * 4. || GSFIT LufT 43 - 2 மாட்டிறைச்சி 22 6 நிலக் கடலை 25 ༠ 3 பன்றி இறைச்சி 14 ᏯᎦ5Ꭵ_ 6Ꮘ0Ꭷb) 19 - 7 இறால் 19 1 | தட்டைப் பயறு 23 கருவாடு 奎2 அரிசி (கைக்குத்து) 8 5
கோதுமை மா குரக்கன் 7 3 பால் (பசு) 3 - 2
நாம் பொதுவாக உண்ணும் பல்வேறு உணவுப்பொருள்களில் உள்ள புரதத்தின் அளவு அட்டவணை 1W - ல் தரப்பட்டுள்ளது 100 கிராம் உணவில் உள்ள புரதத்தின் அளவு கிராமில் தரப்பட்டுள்ளது,
இந்த அட்டவணை மூலம் புரதச் சத்து விலங்கின உணவிலி ருந்து மாத்திரம் கிடைப்பதில்லை, தாவர உணவுகளிலும் தாராள மாகக் கிடைக்கிறது என்பது புலப்படுகிறது,
it in ai)
பால் ஒரு நிறையுணவு. முக்கியமாகக் குழந்தைகளைப் பொறுத்த வரையில் பிறந்தநாள் முதல், 4 - 6 மாதங்களுக்குத் தாய்ப்பால் மாத்திரமே தனி உணவாகக் கொடுக்குமளவிற்கு எல்லா விதமான போஷணைப் பதார்த்தங்களையும் கொண்டிருக்கிறது. ஆயினும் 4 - 6 மாதங்களில் பாலுடன் வேறு சில ஆரம்ப உப உணவுகளையும் குழந்தைக்குக் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்
ஆரோக்கிய வாழ்வு S 47

Page 32
ᎹᏊᏁᏗ*vᏁᏗᏡᏁᎲᏁᏁᎲᏡᏁᎲᏡᏁᏗᏡᏁᏗᏉᏁᏗᏁᏁᏗᎴᏙᏁᎲᏉᏁᎲᏉᏁᎲᏡᏁᎲᏉᏁᏗᏉᏁᏗᏉᏁzᏡᏁᏪᏙᏁᏪᏙᏁᎲᏡᏁᏪᏙᏁᏗᏉᏁᏗrvᏁᏗ rvᏁᎲrvᏁᎲᎵᎪᏁᏗ
மனித இனம் மாத்திரமின்றி, பாலூட்டி மிருகங்கள் அனைத் துமே தமது குட்டிகளைக் குறிப்பிட்ட காலம் வரை போஷிப்பதற் காகப் பாலைச் சுரக்கின்றன. இது இயற்கை அன்னை கொடுத்த வரப்பிரசாதம். ஆனால் மனிதன் மாத்திரமே தனது குழந்தையைப் போஷிப்பதற்கு தனது பாலை விட ஏனைய மிருகங்களின் பாலை யும் பயன்படுத்துகிற ஒரேயொரு விசித்திர விலங்காகயிருக்கின்றான். குழந்தைக்கு மாத்திரமின்றி வளர்ந்து விட்ட மனிதர்களின் போவு ணைக்கும் கூட ஏனைய மிருகங்களின் பாலை வஞ்சித்துப் பெறுகி றான். அன்பு வள்ளலாகிய சுவாமி பால்கூட அருந்துவதில்லை என் பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் பால் மிகச் சிறந்த ஊட்ட உணவு என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. பாலில் மிக உயர்ந்த தரமுடைய புரதங்களும், இலகுவில் சமிபாடடையக் கூடிய லக்டோஸ் (Lactose) என்ற மாப் பொருளும், கொழுப்பும், கனியங்களும், விற்றமின்களும் போதியள வுள்ளன. இரும்புச் சத்து மட்டும் குறைவாக உள்ளது.
3σιόν ζύμ (του
குழந்தைகளுக்கென்றே பிரத்தியேகமாக இயற்கையன்னையால்
வழங்கப்படும் பிரதான உணவு இதுவாகும். தாய்ப்பாலை 4 - 6 மாதங்கள் வரை தனி உணவாகச் கொடுக்கலாம் என்பதை முன்
னரே பார்த்தோம். ஆயினும் அதன் பின்னரும் அதனை உபஉணவு
களோடு சேர்த்துத் தொடர்ந்து கொடுக்க வேண்டும். குறைந்தது
ஒரு வருடமாவது கொடுக்க வேண்டும். இரண்டு வயது மட்டும்
கொடுப்பது சிறந்தது.
தொடர்ந்து பாலைக் கொடுக்கும் போது தாய் சேய் பாச உணர்வு வளர்கிறது. குழந்தைக்குப் பாதுகாப்பு உணர்வும் ஏற்படு கிறது. இது குழந்தையின் பிற்கால வாழ்க்கைக்கு மிகவும் உதவும். அத்துடன் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு வயிற்றோட்டம் முதல் பல்வேறு தொற்று நோய்கள் வருவது குறைவு.
48 = w στίχύ άγγι φαν
امر

*ᏉᏁᏪᏙᏁzᏡᏁᎲᎮᏁᎲᏡᏁᎲᏡᏁ4ᏡᏁᏪᏡᏁ4ᏡᏁᎲᏉᏁᎲᏡᏁᏗᏡᏁ4 ᏉᏁᎲᏡᏁᏗᏁᏁᎲᏡᏁᎲᏡᏁᎲᏡᏁᎲᏡᏁᎲᏡᏁᏁᏁᎲᏡᏁᎲ ᏛᏉᏁᎲᏡᏁᎲᏡᏁᎲAᏁᏗ
பாலும் அதன் பொருட்களும்
வளர்ந்த மனிதர்கள் பசுப்பால், ஆட்டுப்பால், தயிர், மோர் நெய், வெண்ணெய் போன்ற பால் சார்ந்த உணவுப் பொருட்களை உட்கொள்கிறார்கள்.
பால் ஒரு நிறையுணவு; ஆயினும் அதில் புரதச்சத்துக் குறை வாகவே உள்ளது. அரிசியில் புரதம் 85% கிடைக்கிறது. ஆனால் பசுப் பாலில் 32% தான் உள்ளது. ஆயினும் பாலிலிருந்து கிடைக்கும் புரதத்தின் தரம் உயர்ந்தது; லைசின் என்ற பிரதான அமைனோ அமிலம் அதிகம் உள்ளது. இது அரிசியில் மிகக் குறைவாகவே உள் ளது என்பதை முன்னரே பார்த்தோம். எனவே அரிசியுணவு உண் பவர்களுக்கு பால் மிகவும் முக்கியமானதாகும். அவர்கள் தினமும் பால் அருந்த வேண்டும்.
அரிசி உணவிலுள்ள கல்சியம், மற்றும் விற்றமின் A குறை பாட்டையும் பாலைத் தினமும் அருந்துவதன் மூலம் தீர்க்கலாம்.
'பாலையும் தயிரையும் அருந்துங்கள், பழங்களையும் விதைகளையும் உண்ணுங்கள்” 7
எனப் பகவான் கூறியுள்ளார். இதற்குக் காரணம் பால் ஒரு நிறை உணவு என்பதே.
பால் என்று கூறும் போது பசுப்பால், ஆட்டுப்பால் இரண் எடையும் சேர்த்துத்தான் கூறுகிறோம். ஆட்டுப்பால் தடிப்பானது; இலகுவில் சமிக்காது, குழந்தைகளுக்கு நீர் கலந்து தான் கொடுக்க வேண்டும் போன்றவை தவறான கருத்துக்கள். இரண்டிலும் உள்ள போஷனைப் பொருட்கள் கிட்டத்தட்ட சமமானவையே. கீழ்வரும் அட்டவணை Wயைப் பார்த்தால் அது தெளிவாகப் புரியும்,
அட்டவனை W
பகுப்பால் ஆட்டுப்பால்
புரதம் 3 - 2%. 3 : 3% கொழுப்பு 4 - 1% 4 3%
காபோகைதரேற்று 4 4% 4 - 6%
இரும்புச்சத்து 0 - 2%. 0 3%,
ஆ இ ஈ و سر ز Ras ஆரோக்கிய வாழ்வு E 43

Page 33
ᏈᏠᏁᏗ ᏑᏓᏁgᏡᏁᏗᎵᏉᏁᎲᏑᏙᏁᏗᏡᏁᏗᏑᏙᏁᏗᏑᏙᎴᎲ ᏑᏙᏁᏗᏑᏙᏁᏗᏑᏙᏁᎴᏍᏁ4ᏑᏙᏁᏗᏑᏉᎯᏙᏪᏎᏡᏛᏠ4ᏡᏁᏪᏎᏉᏁzᏛᏙᏁᏗ*ᏙᏁᏪᏡᏁᏪᏑᏙᏁᎴᏡᏁᏪᏡᏁᏪᏙᏁᏪᏡᏁᏗ ᏡᏁz
'எல்லாம் சரிதான், என்றாலும் ஆட்டுப்பாலின் மணம் எனக் குப் பிடிப்பதில்லையே' என்று சிலர் கூறக்கூடும். அதை நீக்க எமது மூதாதையர் காட்டிய சுலபமான வழி இருக்கவே செய்கிறது. மிளகு, வெந்தயம், உள்ளி போன்றவற்றைச் சேர்த்துக் கொதிக்க வைத்துக் குடிக்கலாம். அதுவும் பிடிக்கவில்லையெனில் கோப்பி, கொக்கோ, தேயிலை சேர்த்துக் குடிக்கலாம். ஆனால் கோப்பி, கொக்கோ, தேயிலை போன்றவை ஆரோக்கியத்தை அளிக்கும் பானங்கள் அல்ல என்பதை மறந்து விடக்கூடாது.
பாலைப் பற்றி வேறும் சில தவறான கருத்துக்கள் உள்ளன. மாப்பால் குடித்தால் சளிப்பிடிக்கும் என்பது இன்னுமொரு தவறான கருத்தாகும் எந்தப் பாலுக்குமே சளிப்பிடிக்காது.
பால் எமக்குப் போஷாக்கு உணவாக இருப்பது போலவே நோய்களைப் பரப்பும் பக்டீரியாக்களுக்கும் சிறந்த உணவாகிறது. சுத்தமில்லாத பால் மூலம் நெருப்புக்காய்ச்சல், கசநோய் போன்றவை பரவலாம். குடிப்பதற்குச் சற்று நேரம் முதல், பாலை நன்கு காய்ச்சு வதன் மூலம் சுலபமாக அக்கிருமிகளை அழித்து விடலாம். குழந் தைகளுக்குப் புட்டியில் பாலைக் கொடுக்கும் போது, மீதியிருந் தால் அதை வீசிவிடவேண்டும், சற்று நேரத்தின் பின் கொடுத்தால் கிருமிகள் பாலில் மீண்டும் தொற்றி விடலாம்.
குளிரூட்டுவதன் மூலம் பாலில் உள்ள கிருமிகள் அழிவதில்லை. தாக்கமற்ற நிலையில் இருக்கும். மீண்டும் சாதாரண வெப்பநிலைக் குக் கொண்டு வந்ததும் கிருமிகள் பெருகும். ஐஸ்கிறீம் மூலம் நெருப் புக் காய்ச்சல் பரவுவது இதனால்தான். எனவே ஐஸ்கிறீம் உண்ணும் போது அது கிருமி நீக்கப்பட்ட பால் மூலம் தயாரிக்கப்பட்டதா என நிச்சயப்படுத்த வேண்டும் ,
είχύ ή
தேயிரை அருந்துங்கள் என்று சுவாமி ஏன் கூறினார்? நாம் தயிரினுடைய போஷாக்குப் பெறுமானத்தையும், மிக இலகுவில் சமி பாடடையும் தன்மையையும், ஏனைய சிறப்புக்களையும் சரியாகப் புரியாமல், அதனைப் பயன்படுத்தாமல் இருப்பதால்தான் எனலாம்.
ση (ή 3, η (φαν
 
 

105832
ᏉᏁᏗᏑᏙᏁzᏡᏁᏗᏡᏁzᏡᏁᏪᏡᎯᏁzᏡᏁᏪᏡᏁᎲᏑᏙᎯᏁᎯᏱᏙᎯᏈᏗᎹᏁᏗᏡᏁᎯ*ᎸᏁᏗᎹᏙᏁzᏡᎯᏉv ᏡᏁᎸᎯᏡᏁᏗᏡᏁᏗᎹᏙᏁᏗᏡᏁᏗᏡᏁᏗᏡᏁᎮᏉᏁᎲᎮᏉᏁᏗᏛᏁᏡᏁ,
தயிர் பாலிலிருந்து பெறப்படுவதால், அதில் பாலில் உள்ள ஊட்டப் பொருட்களுடன், அது புளிப்படைவதால் மேலும் அதிக ஊட்டப் பொருட்களையும் பெறுகிறது. உதாரணமாக தயமின், ரைபோபிளேவின், விற்றமின் B ஆகியவை கூடியளவு தயிரில் கிடைக்கின்றன.
தயிர் மிகச் சுலபமாகச் சமிபாடடையும் என்பதால் நோயா ளிகளுக்கும் சிறந்த உணவாகும் முக்கியமாகப் பாலில் உள்ள புரதம் புளிப்படையும் போது மிகச் சுலபமாகச் சமிபாடடையும் புரதமாக மாற்றப்படுகிறது. அத்துடன் உமிழ்நீர், பித்தம், சதைய நொதியம் போன்ற, உணவைச் சமிபாடடையச் செய்யும் பொருட்களை அதிகம் சுரக்கச் செய்கிறது. இவ்விரு காரணங்களாலும் தயிர் மிக இலகுவாக எமது உடலில் சமிபாடடைகிறது.
எனவே நோயாளிகளுக்கும், ஏனையோருக்கும் மிகவும் சிறந்த உணவாகும். முக்கியமாக வயிற்றோட்டம், நாட்பட்ட வயிற்றோட் டம் ஆகியவற்றிற்கு மிகச் சிறந்ததாகும், தென்னிந்தியாவில் வயிற் றோட்டம், காய்ச்சல் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தயிர்ச் சாதம், மோர்ச் சாதம் ஆகியவற்றையே முதல் உணவாகக் கொடுக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் எமது நாட்டில் தயிர் குளிர்மையான உணவு என்று கூறி நோயாளிகளுக்குக் கொடுப்பதேயில்லை, தடிமன், சளி பிடித்து விடும் என்று கூறிக் குழந்தைகளுக்கும் கொடுப்பதில்லை; பெரியவர் களும் மிகுந்த அவதானத்துடன் தான் தயிரைச் சாப்பிடுகிறார்கள் இரவில் சாப்பிடுவதேயில்லை; இவை யாவுமே தவறான கருத்துக்கள். யாவருக்கும் எப்பொழுதும் ஏற்ற உணவு தயிராகும்.
ரஷ்யாவில் குழந்தைகள் தாய்ப்பாலிலிருந்து, கட்டியுணவுக்கு மாறும் காலத்தில் ஆரம்ப உப உணவாக 5% சீனி சேர்த்த தயிரைக் (Yoghort) கொடுக்கிறார்கள். பெரியவர்களும் கூட, தயிர் போன்ற புளிக்கவைக்கப்பட்ட பாலை விரும்புவதால் பெரியதொழிற்சாலைகள் மூலம் அவற்றைத் தயாரித்து ஆறு வித்தியாசமான சுவைகளில் வழங்குகிறார்கள்.
ஆரோக்கிய வாழ்வு 三. 51

Page 34
ᏑᏈᏁzᏡᏁᏪᏈᏁ4ᏛᏙᏁᏗᏡᎯᏁᏗᏉᏙᏁᏪᏑvᏁᏗ ᏑᎷᏈᎯᏈᏙᏁᏗᏛᏙᏁᏗᏈᏙᏁᏗᏡᏁᏗᏛMᏖᏗᏈᏙᏁᏗᏑᏙᏁᏪᎹᏙᏁᏗᏈᏙᏁ ᎵᏁᏁᏗ ᏑᏁᏗᏛᏁᏁᎲᎮᏠᏁᏗ ?ᏉᏁᏗ*ᏙᏓᎵvᏁᏗ °vᏁᏗᎵᎪᏁᏗ
பாலைப் போல அன்றி, கிருமிகளை அழிக்கும் ஆற்றலும் தயிருக்கு உண்டு. உதாரணமாக வயிற்றோட்டம், நெருப்புக்காய்ச்சல், கொலரா போன்ற நோய்களை உண்டாக்கும் கிருமிகளை அதன் புளிப்புத் தன்மை அழித்துவிடுகிறது.
இவை யாவற்றையும் கருத்தில் கொண்டுதான், பகவான் பாலை யும், தயிரையும் அருந்துங்கள் என்று கூறினார்.
பழங்களையும் விதைகளையும் உண்ணுங்கள் என்று பகவான் கூறினாரல்லவா. விதைகள் என்று கூறும் போது கடலை, பயறு, உழுந்து, சோயா, தேங்காய் போன்றவற்றை மாத்திரமின்றி அரிசி, கோதுமை, சோளம், குரக்கன் போன்ற தானிய வகைகளையும் சேர்த்தே கூறியுள்ளார் என்றே கருத வேண்டும்.
தாவரங்களில் புரதம்
எமது உடலின் தினசரிப் புரதத் தேவையின் பெரும் பகுதி அரிசியிலிருந்து கிடைப்பதையும், மேலும் சில அளவு தரமான புரதங் கள் பாலிலும், தயிரிலும் இருப்பதையும் ஏற்கனவே பார்த்தோம். மேற் கூறிய புரதங்களின் அளவு போதாது எனக் கருதி விலங்குப் புரதத்தை நாடுவது தேவையற்ற ஒன்றாகும்.
அட்டவணை IV யைப் (ப 47) பார்த்தால், மேலதிகமான புர தத்தை சோயா, பருப்பு, கடலை, பயறு, அவரை போன்றவற்றி லிருந்து பெற்றுக் கொள்ளலாம் என்பது தெளிவாகிறது.
சோயா மிக அதிகளவு (43') புரதத்தைக் கொடுக்கும் சிறந்த உணவாகும். இரண்டாவது உலகமகாயுத்தத்தின் போது ஜேர்மனி, ஜப்பான், இங்கிலாந்து போன்ற தேசங்கள் சோயாவை அதிகம் பயன்படுத்தியே தமது மக்களின் ஆரோக்கியத்தைப் பேணினார்கள். அதன் புரதம் உயர்தரமானது; அரிசி உணவில் இல்லாத லைசின் என்னும் பிரதான அமைனோ அமிலம் அதில் அதிகம் உள்ளது. எனவே அதன் ஊட்டவலு பசுப்பாலுடன் இணைத்துப் பார்க்கக் கூடிய அளவு சிறப்பானது.
ക0 (ി ക7 ('g(U
52
5
 

خڈ
ᎹᏓᏁᎲᏛᏁᎲᎹᏉᏁᎲᎮᏉᏁ,ᎵᎨᏁ ᏛᏙᏁᎲᎹᏁᎲᏡᏁᎲᎮvᏁᎲᏡᏁ4ᏉᏁ4ᏡᏁᎲᏡᏁᏗᏛᏁᏗᏡᏁᎯᏡᏁᎲᏉᏁ4ᏡᏁᎯ ᏠᏁᎲᏑᏁᎲᏉᏁᎫᏡᏁᎯᏡᏁᏗ ↑ᏙᏁᎴᏡᏁᏗᏡᏁᏗ
சோயாவிலிருந்து பால், தயிர், சோஸ் போன்றவையும் தயா ரிக்கலாம். தேங்காய்ப்பாலுக்குப் பதிலாக சோயாப்பாலை கறி சமைக்க உபயோகிக்கலாம்.
சோயா எண்ணெய் மிகச் சிறப்பானது ஏனெனில் பிரதான கொழுப்பு அமிலங்கள் அதிகம் உண்டு.
பருப்பு, பயறு, கெளட்பீ, போஞ்சி, பயிற்றங்காய், சிறகு அவரை ஆகியவற்றிலும் லைசினை உள்ளடக்கிய தரமான புரதம் இருப்பு தால் அரிசியுடன் சேர்த்து உண்ணக் கூடிய குறைநிரப்பு உணவாக உபயோகிக்கப்படக்கூடியவை.
பயறு சார்ந்த உணவுகளில் வாய்வு அதிகம் என்பது பலரது குற்றச்சாட்டு. எந்த உணவுமே பூரணமாகச் சமிபாடு அடையாவிட் டால் எமது பெருங்குடலில் உள்ள பக்டீரியாக்கள் அவற்றைத் தாக் குகின்றன. அப்பொழுது காபனீரொட்சைட் (CO2), ஐதரசன் (H2) ஆகிய வாயுக்கள் உண்டாகி, பின் மலவாசலால் வெளியேறுகின்றன. பயறு சார்ந்த உணவுகளில் சமிபாடடைய முடியாத சில மாப் பொருட்கள் இருப்பதால் வாய்வு அதிகம் வெளியேறுவது உண் மையே. இதன் காரணமாக சிலர் போஷாக்கு மிக்க அந்த உணவு களைத் தவிர்க்கவும் செய்கிறார்கள்.
எமது முன்னோர்கள் காட்டி வைத்த ஒரு முறையைக் கடைப் பிடிப்பதன் மூலம் இந்த வாய்வுத் தொல்லையை நீக்கலாம் முளைக்க வைத்தலே அது. பயறு, உழுந்து போன்றவற்றை 14 - 24 மணித் தியாலம் நீரில் ஊறவைத்து, பின் ஈரத்துணியில் பரவி வைக்க அவை முளைக்கும். பின் விரும்பிய முறையில் சமைத்து உண்ணலாம். இவ் வாறு முளைக்க விடும் போது அவை எளிதில் சமிபாடடைகிறது. வாய்வுத்தொல்லையும் நீங்குகிறது. அத்துடன் அவற்றிலிருந்து கிடைக் கும் புரதத்தை உடல் இலகுவில் பயன்படுத்தக்கூடியதாகிறது. விற்ற மின்களின் அளவும் அதிகரிக்கிறது.
சோயா, சிறகு அவரை போன்றவை முளைக்க அதிக காலம் எடுக்கலாம். புளிக்க வைத்தல் இன்னுமொரு முறை நாம் இட்டலி
ஆரோக்கிய வாழ்வு E 53

Page 35
ᏑᏙᏁᎲᏡᏁᏡᏁ4ᏡᏁ4ᏡᏁ4ᏡᏁ4ᏡᏁᏪᎵᎷvᏡᏁ4ᏡᏁzᏡᏁ4ᎵᏙᏁ4ᏑvᏁ4ᏛvᏁᎲᏡᏁᎯᎵᏙᏁ2ᏡᏁᎲᏁᏛᏁᏪᏁᏁᏗᏡᏁᏗᏡᏁᎲᎮᏁᏁᏗᏈᎷᏡᏗᏛᏙᏁᏡᏁᎲᎮᏁᏁᏗ
தோசைக்காக உழுந்தை ஊறவைத்துத் தோலை நீக்கிய பின் அரிசி யுடன் அரைத்துப் புளிக்க வைக்கிறோம். இம்முறையாலும் சமி
பாடடைவது சுலபமாகிறது. அத்துடன் பல ೨॰
னதும் போலிக் அமிலத்தினதும் (Folic acid) அளவு அதிகரித்து போஷணை உணவாகிறது.
எமது உணவில் கொழுப்பு
எமது உணவின் கொழுப்புத் தேவையை தாவர உணவிவிருந் தும், விலங்கின உணவிலிருந்தும் பெறுகின்றோம்.
தேங்காயெண்ணெய், நல்லெண்ணெய் போன்ற எல்லா தாவர எண்ணெய்களும், விலங்கின எண்ணெயாகிய நெய்யும் 100% மும் கொழுப்பையே கொண்டுள்ளன. இவற்றைத் தவிர பல்வேறு ஏனைய உணவுகளும் எமது கொழுப்புத் தேவையைப் பூர்த்தி செய்கின்றன.
ஏனைய சில உணவுப் பொருட்களில் உள்ள கொழுப்பின் அளவு அட்டவணை W1 - இல் தரப்பட்டுள்ளது.
அட்டவணை W1 - 100 கிராம் உணவில்
, , , , விலங்கின உணவு ,E6חuתפ c2.66016.4 "
கோழி முட்டை 12 தேங்காய்த் துருவல் 34 இறைச்சி - கோழி I 2 6 5jgsT657 43 9, 2 மாடு 22 சோயா 20 ஆடு 9 4 ਯ 5五 , , பன்றி 45 எள்ளு 51 ஈரல் 4 - 9 L5-L’i LIT6) 尘 தகரத்தில் அடைக் மாஜரின் 8O கப்பட்ட மீன் 2I Li 81. மின் 10 - ڑ நண்டு 22
54三 w σ (7ιό 3/7ι φαν
,

خدڑ',
ᏑᏙᏁᏁᏁᏗᏍᏁᏛᏉᏁᎲᏑᏁᏗᏛᏉᏁᏓᏑᏁᎲ ᏑᏉᏁᏗᏡᏁᎲᏑᏙᏁᎴᏑᏉᏁᎯᎵᏉᏁᏗ ᏑᏙᎯᏙᎲᏛᏉᏁᏡᎯᏡᏗᏡᏪᏙ4ᏡᏁᏗᏡᏁᎲᏡᏁᏪᎴᏡᏁᏪ ᏉᏁᎯᏡᏪᏁᏃᏈᏙᏁᏗᏛᏙᏁᎲᏡᏁᏗᏡᏁᏪ
கொழுப்புக்கள், நிரம்பிய கொழுப்பு அமிலங்களாலும், நிரம் பாத கொழுப்பு அமிலங்களாலும் ஆனவை என ஏற்கனவே பார்த்தோம்
நிரம்பாத கொழுப்பு அமிலங்களில் லின லிக் அமிலம் (Linolete Acid), லின லினிக் அமிலம் (Liolenic Acid) ஆகியவை எமது உட லால் உற்பத்தி செய்ய முடியாதவை என்பதால் இவற்றை உணவின் மூலமே எடுக்க வேண்டும். இவற்றை பிரதான கொழுப்பு அமிலங்கள் என்றும் விற்றமின் F என்றும் அழைப்பர். இவற்றின் குறைபாடு (3)(1554, Tổi): 6ì6) g (1510 (35 T từ 56ir (Hyperkeratotic Dermatosis) 6167ĩ 5 தோரிலும், குழந்தைகளிலும் தோன்றலாம். அத்துடன் இருதய நோய் கள், பாரிசவாதம் போன்ற நோய்களுக்குக் காரணமான இரத்தக் குழாய்களில் கொழுப்புப் படிவதையும் துரிதப்படுத்தும்.
339.5 C, a
தேங்காயும் தேங்காயெண்ணெயும் எமது உணவின் கொழுப் புத் தேவையைப் பூர்த்திசெய்வதில் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. தேங்காய்ப்பூவைப் பிழிந்து பால் எடுக்கும் போது 84% கொழுப்பும், 80% புரதமுமே கிடைக்கின்றன. மிகுதி 16% கொழுப்பும், 20% புரதமும், பிழிந்து தேங்காய்ப் பூவுடன் வீணாகிவிடுகின்றன. இதைத் தடுப்பதற்கு தேங்காய்ச் சொட்டை அரைத்து அல்லது பூவைப்பிழி யாது அப்படியே சமையலில் சேர்த்தல் நல்ல முறையாகும். தேங் காயில் உள்ளது நிரம்பிய கொழுப்பு அமிலம், இது இருதய நோயா
ளருக்கு உகந்ததல்ல.
எள்ளிலிலும், நல்லெண்ணெயிலும் நிரம்பாத கொழுப்பு அமி லங்கள் உள்ளன. இவை இருதய நோயாளருக்கு உகந்தன. நல் லெண்ணெயில் விற்றமின் Aயைக் கொடுக்கும் கரட்டீன் என்ற சத்தும் தைரொயிட் சுரப்பி நோய்களைத் தடுக்கும் அயடீன் சத்தும் உண்டு. எனவே நாம் கூடியளவு எள்ளையும், நல்லெண்ணெயையும் உணவில் சேர்ப்பது நல்லது,
வெஜிட்டபிள் எண்ணெய் என்று கூறப்படும் பாம் (Palm Oil) எண்ணெயும், நிலக்கடலை, நிலச்கடலை எண்ணெயும், தேங்காய் எண் ணெயைப் போன்று நிரம்பிய கொழுப்பு அமிலம் கொண்டவை. ஆனால் சூரியகாந்தி எண்ணெயும், கோர்ன் (Corn Oil) எண்ணெயும்,
ஆரோக்கிய வாழ்வு

Page 36
eeeAekekkS LSeeMS eLeeeLeMeA eAkekecL eeAecL eeeSeeSeee eec ceAeSSeLE e eeAe LceLLAcALcScLcLSLeLecLcLcLSceLccSccc ccAccScAccSccccLALLSS eeeS
சோயா எண்ணெயும், நல்லெண்ணெயைப் போன்று நிரம்பாத கொழுப்பு அமிலத்தைக் கொண்டதால் இருதய நோய்களைத் தடுக் கும் ஆற்றல் கொண்டவை.
எமது கவனத்தை அதிகம் பெறாத கஜபக் கொட்டையில் உள்ள 51% கொழுப்பில், எமது உடலுக்கு அதிகம் தேவையான பிரதான கொழுப்பு அமிலம் அதிகம் உண்டு அதிலுள்ள புரதம் இலகுவில் சமிபாடடையக் கூடியது என்பதுடன், பிரதான அமைனோ அமிலங் தளையும் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஊட்டமுள்ள விதையைத்தரும் கஜா மரத்தை எமது வரண்ட பிரதேசங்களில் பயிரிட நாம் முயற்சி செய்ய வேண்டும்.
நிலக்கடலையில் 45% கொழுப்பு மாத்திரமன்றி, 25% - 80% புரதமும் கிடைக்கிறது. நிலக்கடலையை நாம் பல விதங்கரில் உட் கொள்கிறோம். சிலர் பொரித்துச் சாப்பிடுகிறார்கள், 45% கொழுப் புள்ள நிலக்கடலையைப் பொரிக்கும் போது கொழுப்புச் சத்து மேலும் அதிகரிக்கும் என்பதால் இது சிறந்த முறையாகாது. வறுத்து அல்லது அவித்துச் சாப்பிடுவதே நல்லது.
நிலக்கடலையைச் சேமித்து வைக்கும் போது அதில் பங்கசு தொற்றுவதுண்டு. உடைத்துப் பார்க்கும் போது உட்பகுதியில் பூச் சனம் பிடித்தது போலிருப்பதே பங்கசு தொற்றாகும். இதனை உட்கொள்ளாது வீசிவிடவேண்டும். ஏனெனில் இது நச்சுத்தன்மையைக் கொண்டிருப்பதுடன் பிற்காலத்தில் புற்றுநோயையும் ஏற்படுத்தலாம்.
நிலக்கடலையிலிருந்து மா, பால், சோஸ், பட்டர் போன்ற வற்றையும் தயாரிக்கிறார்கள் :
எமது உணவில் விற்றமின்கள்
விற்றமின்கள் மிகக் குறைந்த அளவிலேயே எமது உடலுக்குத் தேவைப்பட்டாலும் மிகவும் அத்தியாவசியமானவையாகும்.
5 - சாயி காட்டிய
| KK |

.ᎴᏙᏁᎴᏙᏁᎲᏛᏉᏁᎲᏡᏁᎲᏛᏁᏁᎲᏛᏁᏁᎴvᏁᎲᏉᏁᎲᎵᏙᏁᏗᏡᏙᏁᏁᏁᏗᏈᏙᏁᏗᏍᏁ4ᎴᏔᏁ4ᏛᏉᏁᏗᎵᏉᏁᏗᏉᏁᏗᏡᏁᏗᏉᏁᏗᏡᏁᎲ*ᏙᏁᎲᏈᏙᏁᎲᏡᏁᎲᏡᏁᏗᏡᏁᎯ
ஒரு பொருளை விற்றமின் என்று நாம் சொல்வதாயின் அது மூன்று முக்கிய அம்சங்களைக் கொண்டிருக்க வேண்டும்,
t) அது எமது உடலால் உற்பத்தி செய்ய முடியாததாயும், உண
வின் மூலம் பெறக்கூடியதாயும் இருக்க வேண்டும்,
t) போதியளவு உட்கொள்ளாததால், அதனளவு எமது உடலில் குறையும் போது தனித்துவமான சில நோய்களை அல்லது அறிகுறிகளை எமக்கு ஏற்படுத்தும் ,
i) மீள அப்பொருளைப் போதியளவு உட்கொள்ளும் போது, அத்
தகைய குறைபாட்டு நோய்களும், அறிகுறிகளும் மறைந்து விடும்.
விற்றமின் சி யின் முக்கியத்துவம் இப்பொழுது அதிகமாக உண
ரப்பட்டு வருகிறது. இதன் குறைபாட்டால் மாலைக்கண், பிற்றோ ܠܐ
خلال
வின் புள்ளி எனப்படும் விழிவெண்படலத் தடிப்பும், பின்பு கண்ணில் கெரற்றோ மலேசியா எனும் கருவிழி அழற்சியும் ஏற்படுவது பலரும் அறிந்ததே. தேரைத் தோல் எனப்படும் நோயும் ஏற்படும் குழந்தை களின் வளர்ச்சிக்கும் இது அவசியமானது.
விற்றமின் A குறைபர்ட்டிற்கும் குழந்தைகள் வயிற்றோட்டத் தினால் மரணமடைவதற்கும் தொடர்பிருக்கிறது என அண்மைக்கால ஆராய்ச்சிகள் சுட்டிக் காட்டுகின்றன வயிற்றோட்டம், சின்னமுத்து, நெஞ்சுச்சளி போன்றவற்றிலிருந்து விரைவாகக் குணமடையவும் நோயெதிர்ப்புச் சக்திக்கும் விற்றமின் A அவசியம் என இப்பொழுது உணரப்படுகிறது.
தேவைக்கு அதிகமாக உட்கொள்வதும் நல்லதல்ல, பசியின்மை, கைகால் குத்துளைவு, வரட்சியான தோல், மயிர் கொட்டுதல், இரத்த சோகை போன்ற நோய்கள் விற்றமின் Aயை அதிகம் உட் கொள்ளும் போது ஏற்படுகிறது. எனவே வைத்திய ஆலோசனையு டனேயே விற்றமின் A மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும்.
ஆரோக்கிய வாழ்வு 드 5

Page 37
ᏑᎿᏁᎲᏑvᏁᏗᎵᏉᏁ, AᏁᎲᎮᏉᏁ,ᏛᏙᏁᏗᏑvᏁᏗ ᏛᏙᏁᏗᏛᏙᏁᎲᏍᏙᏛᏙᏓᏑᏙᏁᎲᏑᏙᏛᏙᏓᏑᏙᏛᏠᎯᏍᏛvᏓᎴᏠᏁᏗzᏉᏛᏖᏗᏑᏙᏛᏙᏗᏛvᏁ,ᏛᏡᏛᏠᏪᏡᏁzᏈᏙᏪᏙ4ᏡᏁ4ᏡᎲᏡᎲᏡᏁᏪᏡᏁzᏡᎯᏈᎯ
ஈரல், மீன் எண்ணெய், பட்டர், சீஸ், முட்டை ஆகியவற்றில் நிறைய விற்றமின் A கிடைக்கிறது ஆனால் தாவர உணவில் உள்ள கரட்டீன் சத்துத்தான் மிருக உணவில் உள்ள விற்றமின் A க்கும் அடிப்படை என்பதை மறந்துவிடக்கூடாது. கரும் பச்சை இலைகள், கரட், வத்தாளை, பூசணி, மாம்பழம், பப்பாளி போன்றவற்றிலி ருந்து விற்றமின் 4 சத்தை கொடுக்கும் கரட்டீன் தாராளமாக கிடைக்கிறது.
விற்றமின் D குறைபாடு குழந்தைகளில் என்புருக்கி (Ric kets) நோயையும். வயதானவர்களில் மென் எலும்பு (Osteoma lacia) நோயையும் ஏற்படுத்தலாம். சூரிய ஒளியிலிருந்து எமது தோலே விற்றமின் Dயை உற்பத்தி செய்யும் ஆற்றல் உள்ளது. மீன் எண்ணெய், முட்டை, பட்டர், மாஜரின் ஆகியவற்றிலிருந்து மேல் திகமாகக் கிடைக்கிறது.
விற்றமின் E குறைபாட்டால் எவருமே நோய் வாய்ப்படு வதாகத் தெரியவில்லை. குருதியில் உள்ள நல்ல கொழுப்பை சம நிலையில் பேணுவதற்கு இது உதவுகிறது. கொழுப்பினால் இரத்தக் குழாய்கள் சுருங்கி அதனால் சிலருக்கு நடக்கும் போது கெண்டை காலில் வலிக்கும், (Intermitan Claudication) என்ற அந்த நோயைத் தணிக்க விற்றமின் E உதவும். சோயா எண்ணெய், நிலக்கடலை எண்ணெய், கோர்ன் எண்ணெய் போன்றவற்றில் பெருமளவும், வெங் காயம், வாழைப்பழம், திராட்சை, தக்காளி ஆகியவற்றில் ஒரளவும் கிடைக்கிறது.
விற்றமின் K ருதியுறைதலுக்கு அவசியமானது. குழந் தைகள் பிறந்த ஒருசில நாட்களுக்குள் குருதி உறைவுக் குறைபாடு இருந்தால் விற்றமின் K கொடுக்கப்படுகிறது. பெரியவர்களில் இவ் விற்றமின் குறைபாடு ஏற்படுவது குறைவு. கோவா, பால், முட்டை இறைச்சி, மீனெண்ணெய், சோயா எண்ணெய் போன்றவற்றில் அதிகம் இருக்கிறது.
விற்றமின் B - தயமின் என்றும் அழைக்கப்படுகிறது. நரம்புத்தொகுதியின் செயற்பாட்டிற்கு மிகவும் அவசியமானது. இதன்
58三 Y. சாயி காட்டிய
ܐ ܐ̄.
| | ܛ݂

தி
l
MeLeLeeLeLeLeeLeLeMeLccLcLcMcLcL LcLMLSecceLeLeeLeAcLceLeccecLeeLeeLeLececceLeLeceLcLeccceLeLMeS eeLecceMcccLeLeLeLeLeLLeLeeLecececeMLeLecS
குறைபாடு பெரிபெரி என்ற நோய்க்கு இட்டுச் செல்லும், பசியின்மை, களைப்பு, ஓங்காளம் சமிபாட்டுப் பிரச்சனை போன்றவற்றையும் ஏற்படுத்தலாம். கர்ப்பிணிப் பெண்களுக்கு அவசியமானது. தானி யங்களிலும், விதைகளிலும், பயறு, பருப்பு வகைகளிலும் கிடைக் கிறது. தவிடு நீக்காத அரிசியிலேயே அதிகம் உண்டு. மார்மைட்டி லும் அதிகம் கிடைக்கும். விலங்கின உணவுகளாகிய இறைச்சி வகை களிலும், ஈரலிலும் நிறையக் கிடைக்கிறது.
விற்றமின் B, - ரைபோபிளேவின் என்றும் அழைக்கப் படுகிறது. தோல், நகம், மயிர் ஆகியவற்றின் ஆரோக்கிய வளர்ச்சிக்கு அவசியமானது. வாய், உதடு, நாக்கு, தோல் ஆகியவற்றில் வீக்க மும் புண்களும் இதன் குறைபாட்டால் ஏற்படும். தானியங்களிலும், பாலிலும், இலைவகைகளிலும், வாழைப்பழத்திலும் தாராளமாகக் கிடைக்கிறது. முட்டை, இறைச்சி, ஈரல், மீன் ஆகிய விலங்கின உணவி லும் நிறைய உண்டு.
சூரிய ஒளி படும்போது பாலிலுள்ள ரைபோபிளேவினில் 5% மும் விற்றமின் C யில் 50% மும் சிதைந்து விடுகின்றன. எனவே ஒளிபுகக் கூடிய வெள்ளைப் போத்தல்களில் சூரிய ஒளிபடுமாறு பாலை வைக் காதீர்கள். ஒளிபுகாத பாத்திரங்களில் வைப்பதே நல்லது.
விற்றமின் Bes- பிரிடுடாத்ஸின் என்றும் அழைக்கப்படும். இதன் குறைபாடு தசைப் பெலவீனம், இரத்த சோகை, பொடுகு, மயிர் கொட்டுதல், மாதவிடாயுடன் சம்பந்தமான சில பிரச்சனை களுக்கும் காரணமாகலாம். பல்வேறு தாவர, விலங்கின உணவுகளில் கிடைத்தாலும், தவிடு, முளைக்கும் விதைகள், பால், முட்டை, மீன் ஆகியவற்றிலிருந்து அதிகம் கிடைக்கிறது.
விற்றமின் B, - கோபாலமின் மிகக் குறைந்தளவிலேயே தேவைப்படுவதுடன் உடலில் சேமித்தும் வைக்கப்படுகிறது. மது வும், புகைத்தலும் உடலில் விற்றமின் B12 யைக் குறைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இரத்த சோகையைத் தடுப்பதற்கு அதி லும் முக்கியமாகக் கர்ப்பிணிப் பெண்களில் இரத்த சோகையைத் தவிர்க்க இது அவசியமானது. இது விலங்கின உணவுகளிலேயே அதி கம் காணப்படுகிறது. தாவர உணவுகளிலிருந்து தினசரி கிடைக்கும்
ஆரோக்கிய வாழ்வு E 59

Page 38
மிகக் குறைந்த அளவு (03-04 மை. கிராம்) ஆரோக்கியத்தைப் பேணப் போதுமானது. கர்ப்பிணிகளுக்கும் பாலூட்டும் தாய்மாருக் கும் இதன் தேவை அதிகம் என்பதால், தாவர போசனம் செய் பவர்கள் அந்நேரத்தில் மேலதிக B யை வைத்திய ஆலோசனை யுடன் பெற்றுக்கொள்ளலாம்.
போலிக் அமிலம் இதன் குறைபாடு இரத்த சோகையை ஏற்படுத்தும். கல வளர்ச்சிக்கும், காயங்கள் ஆறுவதற்கும் அவசிய மானது. எனவே வளரும் குழந்தைகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும் தொற்று நோய்களுக்கு ஆளானவர்களுக்கும் இதன் தேவை அதிக மாகும். கருச்சிதைவு, அங்கக் குறைபாடுள்ள குழந்தைகள் பிறத்தல், கர்ப்பகால நச்சு ஆகியவற்றைத் தடுக்க இது உதவும்.
மது, வலிப்பு மாத்திரைகள், குடும்பக் கட்டுப்பாட்டு மாத் திரை, மலேரியா மாத்திரை ஆகியவற்றை உட்கொள்ளும் போது போலிக் அமிலம் உடலால் உறிஞ்சப்படுவது குறைவு. எனவே அந் நேரங்களில் போலிக் அமிலமு. வள உணவுகளை அதிகம் உண்ண வேண்டும். -
கரும்பச்சை இலையுணவுகளிலும், காய்கறிகளிலும் இது தாராள மாகக் கிடைக்கிறது. பால், முட்டை ஆகியவற்றில் மிகக் குறை வாகவே காணப்படுகிறது.
விற்றமின் C - அஸ்கோர்பிக் அமிலம் என்றும் அழைக்கப் படுகிறது. விற்றமின் C குறைபாட்டினால் முரசு கரைதல், பல் ஆட் டம், முடி கொட்டுதல், பொடுகு போன்ற அறிகுறிகள் தோன்றலாம். தடிமன் காய்ச்சலைத் தடுக்கும் எனப் பரவலாக நம்பப்பட்டாலும் விஞ்ஞான மூலமாக நிறுவப்படவில்லை. காயங்கள் ஆறு வதற்கு மிக வும் முக்கியமானது.
நெல்லி, கஜ"ப்பழம், கஜபக் கொட்டை, கொய்யா, பச்சை மிளகாய், இலைவகைகள் ஆகியவற்றிலிருந்து இது மிக அதிகமாகக்
கிடைக்கிறது. தோடம்பழம், தேசிப்பழம், பப்பாளி, மாம்பழம், தத்
60三 சாபி காட்டிய
པའི་
 
 

TMLLMLMLMLcLELELELcLM EcLMLeLcLMMEeMLLMLcLcMLcELEMMLMceLLecLcLLMLccMccMcccLLccLSLLcccLAcLcLccLSeLece LSLe ekeAeeekMeLe
காளி, வாழைப்பழம், கோவா போன்றவற்றிலிருந்தும் நிறையக் கிடைக்கிறது.
கணியங்கள்
எமது உடலில் உள்ள கனியங்களில் அதிகமாக (60-80%) காணப்படுபவை கல்சியம், மக்னீசியம், சோடியம், பொட்டாசியம், பொசுபரசு, கந்தகம், குளோரின் ஆகியவையே.
இரும்பு, செம்பு, அயடீன், புளோரின், மங்கனீஸ், கோபால்ட், நாகம் (Zn), செலீனியம், குரோமியம் ஆகியவை மிகக் குறைவாகவே தேவைப்பட்டாலும் மிகவும் அவசியமானவை.
கல்சியம் - எலும்பு, பற்கள் ஆகியவற்றின் வளர்ச்சிக்கும் உறுதிப்பாட்டிற்கும் அவசியமானதாகும். கருவாட்டில் மிக அதிகமாக கல்சியம் கிடைக்கிறது. தாவர போசனத்தைப் பொறுத்தவரை அகத்தி, ஏனைய கரும் பச்சை இலைவகைகள், பருப்பு, பயறு, உழுந்து, பால், சீஸ் ஆகியவற்றிலிருந்து தாராளமாக கிடைக்கிறது.
இரும்பு - இரத்தத்திலுள்ள ஈமோகுளோபின் உற்பத்திக்கு மிக அவசியமானது. எனவே இரும்புச் சத்துக் குறைபாடு இரத்த சோகையை ஏற்படுத்தும், குழந்தைகளுக்கும், பருவம் எய்திய பெண் களுக்கும், கர்ப்பிணிகளுக்கும் மிக முக்கியமானது. கீரை, இலை வகைகள், சோயா, எள்ளு, பயறு, உழுந்து ஆகியவற்றிலிருந்து பெற்றுக் கொள்ளலாம். வல்லாரை, மரவள்ளி இலை ஆகியவற்றி லிருந்து மிக அதிகமாகக் கிடைக்கிறது விலங்கின உணவைப் பொறு த்தவரை இறைச்சி, ஈரல் ஆகியன இரும்புச் சத்தைக் கொடுக்கின்றன.
அயடீன் - தைரோயிட் சுரப்பியின் செயற்பாட்டிற்கு மிக முக் கியமானதாகும். கடலுணவுகள் அயடீனை அதிகமாகக் கொண்டுள் ளன. கோதுமை, பாண், பால், அரிசி, காய்கறிகளிலிருந்து ஓரளவு அயடீன் கிடைக்கிறது. அயடீன் கலந்த உப்பு விற்பனைக்குக் கிடைக் கிறது. அயடீன் குறைபாடு உள்ளவர்களும், அதற்கான வாய்ப்புள்ள வர்களும் இந்த உப்பை உபயோகிக்கலாம்.
ஆரோக்கிய வாழ்வு E 61

Page 39
ᎪᏛᎲ ᏡᎯᏁ,ᏛvᎴᎲᏛᏖᏁ,ᏑᏙᏛᏖᏗᏡᏁ4ᏛᏙᏁzᏡᏁ4ᏡᏁᏗᏡᏁᏗᏡᏁ,ᎹᏙᏁ4ᏛᏉᏁ,ᏍᏙᏁzᏛᏠᏁ ᏍᏉᏁzᎹvᏁᏗᏡᏁzᏡᏁᎯᏡᏁᏗᏡᏁᏗ*ᏙᏁ ᏑᏙᏁᏗᏑᏙᏛᏁᏗᏉᏁzᎹᏙᏁᏗ
புளோரின் - பல்லின் உறுதிக்கும், பற்சொத்தையைத் தடுப் பதற்கும் அவசியமானது. நீரில் புளோரின் குறைவாக உள்ள சில நாடுகளின் குழாய் நீரில் அதனைக் கலக்கிறார்கள். எமது நாட்டில் புளோரின் கலந்த பற்பசைகள் கிடைக்கின்றன. இவற்றை உபயோகிப்
பது நல்லது.
நாகம் - இதன் தேவை இப்பொழுது அதிகமாக உணரப்படு கிறது. பாலியல் வளர்ச்சிக்கு முக்கியமானது. இதன் குறைபாடு சுவை, மணம் ஆகியவற்றை உணர்வதில் சிக்கலை ஏற்படுத்தலாம். மீன், இறைச்சி, கோதுமை மா, பால் ஆகியவற்றிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
காய்கறி வகைகளும், பழங்களும்
காய்கறிகளுக்கும், பழங்களுக்கும் இடையில் விஞ்ஞான ரீதி யில் பெரிய வித்தியாசம் எதுவும் கிடையாது. எமது பிரதான உன வுடன் சேர்த்து ( சமைத்தோ பச்சையாகவோ ) உண்ணும் காய், கனிகளை காய்கறிகள் என்றும், உணவிற்குப் பின்னரோ, இடை நேரங்களிலோ தனியாக உண்பவற்றைப் பழங்கள் என்றும் கூறு கிறோம். இதனால்த்தான் பூசணி, கத்தரி, வெண்டி போன்றவற்றை காய்கறிகள் என்கிறோம். (பயறு வகைகளை நாம் அடக்கவில்லை) மா, பலா, வாழை ஆகியவற்றின் கனிகளைப் பழங்கள் என்கிறோம்.
இவற்றில் பெருமளவு (70-98%) நீர்தான் இருக்கிறது. மிகு தியில் பெருமளவு நார்ப்பொருள் இருக்கிறது, 0 3 முதல் 44% வரை மட்டுமே புரதம் இருக்கிறது. ஒர்ளவு மாப்பொருளும் இருக்கி றது. கொழுப்பும் மிகக் குறைந்த அளவிலேயே உண்டு. ஆனால் அவற்றிலிருந்து கிடைக்கும் விற்றமின்களும் கனியங்களும் முக்கியமா
&ზჭf (მზ) @)/ ,
62. E சாம்பி காட்டிய
 

ỹ3 | 90 - 0 | †0 - 0 || 90 . 00&贰|5• 0I I§ . .0 || I - I03qđỉrısıųoljops 63 - 0 || 70 - 0 i go - 0 | 083 : 0 || 체%2 - 0ỹ . I0球,974%9 0 • I || 20 • 0 || 60 - 0| gzg3 · I|G Z& - 0£ - Ig 的 | *I logosto (g) † - 0""90 - 000 sz-oszl9 . 0& I3 - 08 · I g g .- |ựcos ofī £ , 0 | 90 - 070 - 0 ||7时|£ . 0937£ . 0Q 08. I||ebJDJ 3 •0 Z 0 - 0----3. Ig· 0|8II - 0g - 0Z I |-岛崎47 o : 0 || 60 - 0 || 20 - 009§ • I| 03g - 0 | 9 - IĢ3In Los@souri 3 - 0 1 / 0 - 0 1 g 0 - 090 I-===QgI - 0 || 3 · 3ぬgIn Logotos@fī) 6 - 0 || @ 0 : 0 | Þ0 - 0† / I8 - 09g . O į 3 · IÞoII. Jo 1991 ogoffa Z * 0 | Þ0 - 0 || 90 - 0003 I || 9 . 0jogo3 - 0I - I0 †斗74岭 9 · 0||90 · 0 || 70 · 0|| 「|甜。0g I || 2 | 0 || 3 · Ifoo yooo ! g - 0 || 2 I - 0 || 80 - 0 | 073 || 9 . 0Zg# .. 0 || Ž · 3Qg17. Losaïqïsmrti † - 0 | z I - 002 - 03: 9&.g . I§ 96so |I , g isg o g@b「Q :- * ... --그||T그 이터]T그|그「터 1그鱷*: 27*唱*鹰韃*****海)!
·ẤT| {{*역**3 ||역rma학(海5||H와%R253|| g후g그爾博由 | | |- |( 49ųoo@soos uso ) qosorogo, qa u 113 00I – IIA logogorio:Tlo

Page 40
காய்கறிவகைகளில் பல வித்தியாசங்களைக் காண்கிறோம்.
காய்வகைகள் என்பது செடியாக வளரும் தாவரத்தின் காய் களையும், பழங்களையும் குறிக்கும். உதாரணமாக கத்தரி, வெண்டி, தக்காளி ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
மிளகாயும் இதனுள் அடங்குமானாலும் அதனை உணவிற்குக் காரச்சுவை ஊட்டவே பயன்படுத்துகிறோம். இதில் விற்றமின் Cயும் விற்றமின் Aயைக் கொடுக்கும் கரட்டீன் சத்தும் அதிகம் உண்டு. பழமாக இருக்கும்போதே சத்துக்கள் அதிகளவில் இருக்கும். செத்த லாகும் போது பெருமளவு விற்றமின் C சேதமடைந்து விடுகிறது இதி லுள்ள கப்ஸிகம் என்ற பதார்த்தம் உணவுக் கால்வாயிலுள்ள மென் சவ்வைக் கடுமையாக உறுத்தும் தன்மை கொண்டது. குடற்புண் உள்ளவர்கள் மிளகாய் அதிகம் சேர்க்க வேண்டாம் எனக் கூறுவது இதனால்தான் . இது துண்டுதுண்டாக இருப்பதை விடத் தூளாக இருக்கும்போது குடலைக் கூடுதலாக உறுத்துகிறது.
சம்பலுக்காக இடிக்கும்போது இவை பெரும்பாலும் துண்டுக ளாகவே உடைகின்றன. சம்பல் சாப்பிட்ட மறுநாள் மலத்துடன் மிளகாய்த் துண்டுகள் சிவப்பு சிவப்பாக வெளியேறுவதை நீங்கள் அவதானிக்கக்கூடும். இதற்குக் காரணம் அவை பூரணமாகச் சமிபா டடையாமையே. பச்சையாக அரைக்கும்போது அதிலுள்ள கரட்டீன் சத்து ania)Luldnta, எமது குடலால் உறிஞ்சப்படும். ஆனால் அதே நேரம் கூடுதலாகக் குடலை உறுத்தும் என்பதும் உண்மை சம்ப லுக்குச் செத்தல் மிளகாய்க்குப் பதிலாகப் பச்சை மிளகாயைச் சேர்க் கும் போது கூடியளவு விற்றமின் C கிடைக்கும்.
கரட், பீற்ருட், முள்ளங்கி போன்றவை வேர்வகைத் தாவ ரங்களாகும். கரட்டீன் சத்துநிறைய இருப்பதால் கரட் இவ்வகை காய்கறிகளில் முக்கியமானது, கரட்டைப் பச்சையாக சாப்பிட்டால் தான் சத்து அதிகம் கிடைக்கும் எனப் பலர் கருதுவது தவறானதா கும். கரட்டை அவித்து மசிக்கும்போதே அதிலுள்ள கரட்டீன் சத்து சுலபமாக குடலால் உறிஞ்சப்படுகிறது. பீற்ரூட்டைப் பொறுத்த
64 SE Y- சாயி காட்டிய
 

வரை அதில் அதிக ஊட்டச் சத்துக்கள் இல்லாவிடினும், அதன் இலைகளில் அதிக இரும்புச்சத்து உண்டு என்பதால் அதன் இலை களை நாம் உபயோகிக்கப் பழகிக்கொள்ள வேண்டும்.
புடோல், பீர்க்கு, பாகல் போன்ற கொடிக் காய்களும் பூசணி வகைகளும் சுலபமாகப் பயிரிடக் கூடியதும், விரைவில் பழுதடையாதவை என்பதாலும் அதிகம் உபயோகிக்கப்படுகிறது. பூசணியில் கரட்டீன் சத்து அதிகம் உள்ளது. பாகற்காய் நீரிழிவு நோய்க்கு நல்லது என்பது விஞ்ஞான பூர்வமாக நிறுவப்பட்டுள்ளது. பூசணியின் இலைகளும் உண்ணப்படுகின்றன.
232.5 ○-○ー
இலைவகைகள் பலவகையானவை. பொன்னாங்காணி, கீரை, கோவா, முருங்கையிலை, அகத்தியிலை, வல்லாரை போன்றவை சில. வத்தாளை, மரவள்ளி, பீற்ரூட் ஆகியவற்றின் இலைகளும் உண் ணப்படுகின்றன. அரிசி உணவில் விற்றமின் A குறைவாக இருப்பதால் தினமும் 50 கிராமாவது கரும்பச்சை இலைகளை உணவில் சேர்ப்பது அவசியமாகும்.
விற்றமின் C, ரைபோபிளேவின், போலிக் அமிலம் போன்ற விற்றமின்களும், கல்சியம், இரும்புச்சத்து போன்ற கனியங்களும் இலை வகைகளிலிருந்து தாராளமாகக் கிடைக்கின்றன. இலைவகைகளிலி ருந்து மிகக் குறைந்தளவு புரதமே கிடைத்தாலும் அது லைசீன் என் னும் பிரதான அமைனோ அமிலத்தைக் கொண்டிருப்பதால் உயர் தரப் புரதமாகும்,
அட்டவணை VII யைப் பார்த்தால் வல்லாரையில் மிக அதிக ளவு இரும்புச்சத்து உள்ளது புலனாகும். விலை கூடிய இலைவகை உணவுகளான கோவா, லீக்ஸ் ஆகியவற்றை விட மலிவான, இலகு வில் கிடைக்கும் இலைவகைகளான முளைக்கீரை, முருங்கையிலை, மரவள்ளியிலை, வத்தாளையிலை, அகத்தி ஆகியவற்றில் அதிகளவு புரதமும், இரும்புச் சத்தும், கரட்டீனும் இருப்பதைக் காணலாம்.

Page 41
S
ÈS
(ང་སྟེ་
德
os
|
t
 
 
 
 
 
 
 
 

தேசிய நூலகப் பிரிவு
மாநகர நூலக சேவை
யாழ்ப்பாணம், ᎮᎸᎯᏁᎴᏉᏁᏛᏙᏁᏓᏛᏁᏁᏛᏉᏁᏛᏙᏁᏛᏉᏛᏗᏛᏙᏁᎲᏑᏙᏁᏗ*ᏠᏁᎯᏑᎲᏪᏁᏪᏡᎯᏉᏗᎹᎯᏉᏗᏡᏁᏗᏉᏁᏗᏑᏉᏁᏗᏡᏙᏁᎲᏡᏁᏗ ᏑᏉᏁᏍᏡᏁᏗᏡᏁᏗᏑᏍᏁᏗ *ᏁᎫᏡᎯᏉᏗᏉᏁᎫᏡᏁᎯ
இலைவகைகளை அதிகம் உண்பவர்களுக்குச் சிறுநீரகம், சுவா சப்பை, பெருங்குடல், மார்பு ஆகியவற்றில் புற்றுநோய் உண்டாவது ஏனையோரைவிடக் குறைவு எனச் சில ஆய்வுகள் கூறுகின்றன. இவற் றிலுள்ள நார்ப்பொருள் மலக்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
பழங்கள் தமது அழகான வடிவங்களாலும், நிறங்களாலும் கண்களைக் கவர்கின்றன; வேறுபட்ட வாசனைகளால் மூக்கைக் கவர்கின்றன; இனிப்பு, புளிப்பு போன்ற சுவைகளால் நாவைக் கவர் கின்றன. குழந்தை முதல் முதியோர் வரை ஆவலுடன் புசிக்கிறார்
ᏧᏠ5ᎶYᎹ .
நார்ப்பொருளைத் தவிர பழங்களிலுள்ள குறிப்பிடத்தக்க சத்து விற்றமின் C மாத்திரமே. உண்பதற்கு நீண்ட நேரம் முதலே பழங் களை வெட்டி வைத்தால் விற்றமின் C சிதைந்து வீணாகி விடும். எனவே பழங்களை வெட்டியவுடன் உடனடியாகச் சாப்பிடுவதே சிறந்தது. எல்லாப் பழங்களிலும் விற்றமின் C இருந்தாலும் நெல்லி, கொய்யா, கஜ"சப்பழம் ஆகியவற்றில் மிக அதிகமாக உண்டு. தோடை, எலுமிச்சை, திராட்சை ஆகியவற்றில் விற்றமின் C ஒரளவு உண்டு.
வாழைப்பழம் எமது நாட்டில் அதிக பயன்பாடுடைய பழமா கும். அதில் 20% மாப்பொருள் இருக்கிறது. குழந்தைகளுக்கு மூன்று மாதமாகும் போதே வாழைப்பழம் கொடுக்கலாம். ஆனால் மிகக் கரைந்த பழங்கள் குழந்தைகளுக்கு ஏற்றதல்ல. வயிற்றோட்டமுள்ள குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் ஏற்ற நல்ல உணவு வாழைப்
பழம்தான். அதிலும் கப்பல் பழம் அவர்களுக்கு மிகவும் பிரயோச
னமானதாகும். தினமும் அப்பிள் சாப்பிட்டால் டாக்டரை விரட்டி விடலாம் எனக் கூறப்படுவது மிகைப்படுத்தப்பட்ட கூற்றே. அதில் விற்றமின் C கூட மிகக் குறைவாகவே உள்ளது.
பப்பாளிப்பழம், பளன், மாம்பழம் போன்ற மஞ்சள் நிறப் பழங் களில் கரட்டீன் சத்தும் அதிகம் உண்டு விளாம்பழத்தில் ஒரளவு (79%) புரதம் உண்டு. இது சிறுநீரக நோய்களுக்கு நல்லதென நம்பப்படுகிறது,
ஆரோக்கிய வாழ்வு 三67

Page 42
! !! : ? ------ £8 - 0----† 0 - 00的|9 - 00 £ IZ · §6 - Z į jo o I quốiriqi u Losso 甜3 - 0----[ 0 - 0|------3 : 0Z - 0Z 8giữirīgi ugon 0 0.9 || 3 - 0~ | € 0 - 0† || 3 . I0 @I - 0 | g . 03い|(9909@@ 8 # 3 - 0 || @ 0 : 0 || @ 0 : 00 ; † - 0£& - 0 || 9 . 099logos@juga I IZ - 0 | 90 - 0 ; †0 - 003 I || g - 06jo - 0£ . Iįž6qđỉrīņđivao urte 0 * | 3 - 0 i 80 - 0 || 80 - 0sg | G | 0 | 8 I || 3 | 0 | g | 0 | ►►se u svo solo |- so I0 | 30 - 0 || I0 - 0 || 896 I | Z | 00 I3 - 0 | g . IZ £IỮ LẠo 1990/917 † 9 i Ž · 0 || ±0 | 0 || 20 - 0 # 009 | Đ | 0 | ÞzI - 0 || 9 | 0 || 6 g(solstī£TTT 85 | 9 | 0 | 90 - 0 | go : 0 || 0 0 2 g | ► | 0I I3 - 0 | Z | 0ĝ9giữirīgi uga Z† - 0 || 8 I - 0 | € 0 , 0g/, Ig ()03I - 06 . I88 | qīfirasi Udora| ZTZį7 - 080 - 0 # $ 0 , 00įž . I0 I£ - 06 - 0I Ģ urm smijo@) Ɛ6 - 0 || 3 0 - 01 0 - 0 ||93 || 8 . /93. Ijo - 0Q 3Z I £ │ │ GIỮirīņogļrig) † 9. || @ : 0 | € 0 - 0 || 90 , 0 1 0 9 s p . 0† 8. || 3 - 0 || 6 , 0go | sā uppfinn- uogo gï || I - 0 || ±0 - 0 i 3 0 - 00 | 9 . 00 * # 9 - 0 || 9 . 0| + | Novog popgif@so I ?8 - 0 # 3.0 - 0 || @ I - 0-3 - 003I - 0Z - 03. Ɛsĩ lo powo-Tung g || 3 - 0 || 80 , 0 ; † 0 , 0† 9. || @ : 097 - 0 | 9 . 0gい1,95īsī£ 183 :&T || : 3 : 3 || : 3 : 3 || "g : 3 ||rg :58|| ·3 : ? || rg : 3 || : 3 || ru)P3 ||*****|- O {1993? Umg | ogP67 ||馬學的니25|| hggg ||gragg|그55는 58)|| 영원』H*1954) (99stojin 哈动 | 49oogoređĩri 49091, qi u 119 00I – XI logogoro--lae
 
 

BeteeLeL EeEececLELccLeLeeLee eLeMeecLec eLeLcLEL cccLLccL ecLecceLeL eEeMLeMcecLEEEEceceLeeecMeceeMeeMceMLMcecec SeMcM
பேரீச்சம்பழம், பலாப்பழம், பலன், வாழைப்பழம் ஆகியவற் றிலும் ஒரளவு புரதம் உள்ளது.
பேரீச்சம்பழம் மிகுந்த ஊட்டச்சத்துள்ள உணவு என்பதை அட்டவணை மூலம் காணலாம். மாப்பொருள், புரதம், விற்றமின் கள், கனியங்கள் யாவுமே உண்டு. எனவேதான் சில பிரிவினர் விரத காலங்களில் இதை அதிகம் உண்கிறார்கள். மிக அதிகளவு மாப்பொருள் இருப்பதால் நீரிழிவு நோயாளருக்கு ஏற்றதல்ல.
மொத்தத்தில் அரிசி, பால், தயிர், காய்கறிகள் ஆகியவை அடங்கிய சைவ உணவில் எமது உடலை ஆரோக்கியமாக வைத்தி ருப்பதற்குத் தேவையான சகல போஷணைப் பொருட்களும் இருந் ததை மேலே பார்த்தோம்.
'உணவு வகைகளில் காய்கறிகள் நிறைந்த சைவ உணவினால் நோய்கள் குறையும், சமநிலையான உணவு கிடைக்கிறது. புரோட்டீன் போன்ற சத்துக் களும் சைவ உணவில் அதிகம். சைவ உணவினால் நோய்வாய்ப்படுவது குறைவு? 8
என பகவான் இரத்தினச் சுருக்கமாகக் கூறியுள்ளதை நாம் நினைவு கூர்வது பொருத்தமாயிருக்கும்.
எத்தகைய உணவு
நாம் எத்தகைய உணவை உட்கொள்ள வேண்டும்? எல்லா வித போஷனைக் கூறுகளும் அடங்கிய சமநிலைப்பட்ட உணவையே உட்கொள்ள வேண்டும் என ஏற்கனவே பார்த்தோம்.
ஆனால் அது மட்டும் போதுமா? ஆன்மீக ஈடேற்றத்தில்
நாட்டமுள்ள எல்லோரும் - சாயி அடியார்கள் உட்பட அனைவரும் - கடைப்பிடிக்க வேண்டிய உணவு முறை என்ன?
* எத்தகைய உணவினை உட்கொள்ள வேண்டும் என
நன்கு யோசிக்க வேண்டும். பசியைத் தணிக்க எதை
ஆரோக்கிய வாழ்வு

Page 43
ccec cEEeLELESLccEceeLeMc EeEEEkeLecc EekeEeLeAeeceAeAeLeLcccceccecceLeMeMceeceMMMeMMMMMeMMM
யும் உண்ணலாம் என்று கொள்ளலாகாது சாத்விக உணவையே உட்கொள்ள வேண்டும். உணவைப் பொறுத்தவையே எண்ணங்கள். நாம் எத்தகைய உண வினை உண்கின்றோமோ அவற்றைப் பொறுத் து நல்ல அல்லது கெட்ட எண்ணங்கள் உருவாகின்றன . ஆகவே உணவினைப் பொறுத்த நியமங்களைக் கடுமையாகப் பின்பற்ற வேண்டும்? 9
மனித குணங்கள் எவ்வாறு உணவினால் மாற்றமடைகின்றன என்பதை விளக்க இராவணன், விபீஷணன் போன்றோரை உதார ணமாகக் காட்டுகிறார்.
'நாமுண்ணும் உணவு சாத்வீக, தாமஸ் , ராஜஸ் இயல்பில் எவ்வகையைச் சார்ந்ததாயினும் அவற்றி லிருந்தே மனித இயல்புகள் பிறக்கின்றன, மக்களின் )Nپھ எண்ணங்களுமே உட்கொண்ட உணவின் வகையைப் பொறுத்துத் தீர்மானிக்கப்படுகிறது. இராவணனும், விபீஷணனும் சகோதரர்களாயினும் அவர்களிடையே உள்ள வேற்றுமை க்கான காரணம் அவர்கள் உட் கொண்ட உணவுவகைகளின் வேற்றுமையே.
ஒரு வரம்புக்குட்பட்ட தூய்மையான சத்துள்ள உணவே நியதியாகும். உப்பு மேலதிகமான உணவு இரத்த அழுத்தத்தை உருவாக்கும். மேலதிகமான காரம் மிக்க உணவு அரக்கர்களின் சுபாவங்களைக் கொடுக்கும். தீய குணங்களில் மிகக் கேடான மாத் சர்யத்தை (பொறாமை) அது தோற்றுவிக்கும். சாத் வீக உணவை ஒருவர் புசிக்காவிடின் எவ்விதமான சாதனைகளினாலும் பயனில்லை” 10
சாத்வீக உணவு என்றால் என்ன? இறைச்சி, மீன், முட்டை போன்ற உயிர்வதையுடன் கூடிய மிருக உணவுகளையே நாம் ராஜச உணவுகள் என்கின்றோம். மாமிச உணவை, அசைவ உணவு என்றும்
70三 Y. சாப்பி காட்டிய
 

AqA ELeSL eeLec cLAcLEcLcLALELMLLLLLL LLLLALcL MMLeLeLeeLecLLALcAeAeLcA cLeS eeeSLL LLcccLALcLcLLcL LeLeeL cLeL cLeLcccccA AecAcScLcLe eLeS
குறிப்பிடுகிறோம். அவற்றைத் தவிர்த்து பால், பழம், தானியம், விதை, காய்கறி ஆகியவற்றை உள்ளடக்கிய உணவினையே சாத்வீக உணவு என்கிறோம்.
'பொல்லாப் புலாலை நுகரும் புலையரை எல்லோருங் காண இயமன்றன் தூதுவர் செல்லாகப் பற்றித் தீவாய் நரகத்தில் மல்லாக்கத் தள்ளி மறித்து வைப்பாரே? 11
எனத் திருமூலரும் புலாலுண்ணாமையை வலியுறுத்துகிறார்.
'அவிசொரித் ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர் செகுத் உண்ணாமை நன்று 12
புலால் உண்பது செய்யவே தகாத காரியம். ஒருவனுடைய யோக முயற்சிகளையும், யாக முயற்சிகளையும் விடப் பல மடங்கு சிறந்தது புலால் உண்ணாமை, அவிர்ப் பாகங்களைக் கொட்டி ஆயிரம் யாகங்களைச் செய்வதைவிட உண்பதற்கென்று ஒர் உயி ரைக் கொல்லாதிருப்பது மேல் என திருவள்ளுவரும் கூறியுள்ளார்.
புலால் உண்ணாமை மாத்திரம் சாத்வீக உணவின் தன்மையா? இல்லை!
சாத்வீக உணவு என்று எதனை நாம் கூறமுடியும்? பழங்களும், பாலும் மட்டுமே சாத்வீக உணவு என்ற தவறான எண்ணத்தில் இருக்கிறோம். அவை ஐம் பொறிகளில் ஒன்றாகிய நாவின் மூலம் மட்டுமே சுவைக்கப்படும் சாத்வீக உணவாகும். உடலுக்கு ஐம் பொறிகளுண்டு; பார்க்கின்ற கண்கள், கேட்கின்ற செவிகள், சுவைக்கின்ற வாய், உணர்கின்ற இவற்றில் ஒரே ஒரு பொறி மூலம் செல்கின்றது மட்டும் சாத்வீகமாக இருந்தால் போதாது. ஐம்பொறி கள் மூலம் உட்செல்வதும் சாத்வீகமாக இருக்க வேண்டும்* 13 கண்காள் காண்மின்களோ கடல் நஞ்சுண்ட கண்டன் தன்னை என அப்பர் சுவாமிகள் அங்கமாலையில் பாடியது போல ஒவ்வொரு புலனுக்கும் நல்ல புனிதமான உணர்வுகளையே உணவாக ஊட்ட வேண்டும்.
ஆரோக்கிய வாழ்வு E 7

Page 44
ᏡᏁᏪᏡᏁᏪᏡᏁᏗᏉᏁ4ᏡᏁzᏡᏁ ᏈᏁᏗᏡᏁᎴᏡᏁᏪᏙᏁᎯ ᏉᏁᏗᏡᏁᏗᏁᏁᎴᏈᎯᏁᎴᏡᏁᏗᏉᏁᏪᏡᏁᏗᏡᏁᏗᏉᏙᏁ4 ᏉᏁzᏉᏁᎲᏑᏙᏁᏗᏡᏁᏗ ᏑᏙᏁᎲᏛvᏁᎲᎹvᏁᏗ
உணவின் வகையில் மாத்திரமின்றி, உணவின் அளவிலும் சாத்வீகத் தன்மை இருக்கிறது என்பதை பகவான் கீழ்கண்ட வாறு விளக்குகிறார்.
'மீன் வகைகள் மற்றும் மாமிச உணவுகள் ராஜச வகையைச் சார்ந்தவை. இவைகளை விட்டுவிட வேண் டும். நல்ல சாத்வீக உணவும் கூட அதிகமாக உட் கொள்ளலாகாது. சிலர் சாத்வீக உணவுதானே என்று அளவுக்கு மீறி உட்கொண்டு விடுகின்றனர். இது ராஜச உணர்வையே உண்டு பண்ணும். உணவு உட் கொள்ளுமுன் வயிறு காலியாக இருப்பது போலவே உட்கொண்ட பின்னும்கூட காலியாயிருப்பது போன்ற உணர்வே இருத்தல் வேண்டும். இதுவே சாத்வீக உணவு முறை. வயிறு புடைக்கும் வரை உணவு உட்கொண்டு எழுந்திருக்கவே திணறிப் போகும் வகையில் புசித்தால் அது தாமஸ் குணத்தையே அதிகரிக்கும்” 14
முன் கூறிய பகவானின் வார்த்தைகளினூடாக அவர் விலங்கின உணவுகளை விலக்கி, சாத்வீக உணவான தாவர போசனத்தையே வலியுறுத்துவதை நாம் கண்டோம். அவர் விலங்கின உணவை எவ் வளவு தூரம் வெறுக்கிறார் என்பதற்கு ஒரு உதாரணத்தைப் பார்க்
AE 6υ Π 1 Ο.
பல காலம் நாத்திகனாக இருந்து, பின் பகவானின் அருளி னால் அவரது தெய்வீகத் தன்மையை உணர்ந்து, அவரது பக்தனாக மாறியதுடன் அவரது கார்ச் சாரதியாகவும் பணியாற்றிய ஒருவரால் மாமிச உணவை முற்றாக நிறுத்த முடியவில்லை. எனவே வாரம் ஒரு முறையாவது மாமிச உணவு உண்ண பகவானிடம் அனுமதி (需互rfa江厅斤。
ரைட் அப்படியே செய், விஷத்தை வாரத்திற்கு ஒரு
முறை சாப்பிட்டால் என்ன, வாரம் முழுவதும் சாப் μήμ ί του σΤούτσοτ ο 2ο 155
72 E w 50 (ി ക0 (U
)
fi

MLcLcLcLMLMeLcLMLcLMLcMLMcccLMLMLcLcLcLcLccccccLSASL LeLeeLSLLcA wnAn Arunn An/AnnnAnnn/wwwn, fun
எனக் கிண்டலாகப் பதில் அளித்தாலும், மாமிச உணவை விஷத்திற்குச் சமமாக வெறுக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
தாவர உணவு ஊட்டமளிப்பதே
விலங்குணவு தங்களை மிக வலிமை மிக்கவராக மாற்றும் என்கிற எண்ணம் இன்னமும் மக்களிடையே நிலவி வருகிறது. விலங் குகளின் தசைகள் தங்களுக்கு நேரடியாகவே வலிமையூட்டுவதாக அவர்கள் நம்புகிறார்கள், உண்மையில் நாம் எதை உண்டாலும் அது எமது உடலில் ஜீரணமடைந்து, உறிஞ்சப்பட்டு, எமது உடற் தேவைக்கு ஏற்ப உபயோகிக்கப்படுகிறது அல்லது மாற்றப்படுகிறது.
தாவர உணவிலிருந்து எல்லா ஊட்டச்சத்துக்களையும் பெற் றுக் கொள்ளலாம் என ஏற்கனவே பார்த்தோம். மாப்பொருள், புரதம், கொழுப்பு, விற்றமின்கள், கனியம், நார்ப்பொருள் யாவுமே தாவர உணவிலிருந்து கிடைக்கின்றன. பிரதான அமைனோ அமி லங்களும், பிரதான கொழுப்பு அமிலங்களும் கூட தாவர உணவில் மிகுதியாகக் கிடைப்பதைப் பார்த்தோம்.
முன்னைய சோவியத் ரஷ்யாவின் அப்காஸிய குடியரசில் பெருமளவில் 100 வயதிற்கு மேல் வாழ்கிறார்கள். இதற்குக் கார ணம் அவர்களது தாவர உணவே என்று ஆய்வுகள் கூறுகின்றன.
மிருகங்களைப் பொறுத்தவரையில் கெரில்லாக் குரங்குகள், குதிரைகள், எருமைகள், பசுக்கள், யானைகள் போன்றவை தாவர உணவு உண்பவையே என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஆயினும் மிக வலிமையான மிருகங்களாக இருப்பதையும் மறந்து விடக்கூடாது.
" தானியங்களும் முட்டையும் சேர்ந்த கலப்புணவு போல, அல்லது தானியங்களும் பாலும் சேர்ந்த கலப் புணவு போல, தானியங்களும் பயறுவகை பருப்பு வகை சேர்ந்த கலப்புணவு வளர்ந்தவர்களின் ஆரோக் கியத்தைப் பேணவும், குழந்தைகளின் வளர்ச்சியை உறுதி செய்யவும் போதுமானது? 16
ஆரோக்கிய வாழ்வு E 73

Page 45
6ᏙᏁzᏡᏁᎲ ᏡᏁᏗ ᏡᏁᎲᎹᏠᏁ.ᏛᏖᏁᏗ *Ꮑ4ᏛᏉᏁᏗᏛᏁᏗᏡᏁᏗ ᏑᏙᏁᎲᏁᏁᏗᏡᎯᏖᏎᎵᏉᏁᏗ ᏡᏁᏗᏁᏁᏗ "ᏙᏁᏗ ᏖᏁᏗ ᏡᎯᏉᏗ ᏡᏁzᏡᏁᎲᏡᎯᏉᏃᏡᎯᏡᏗᏡᏁᏗ ᏑᏓᏁᏗ ᎪᏁᏖᏗ
எனப் பேராதனைப் பல்கலைக் கழகத்தின் உயிர்இரசாயன வியல் பேராசிரியர் விக்ரமநாயக கூறியிருப்பதை நினைவு கூர்வது இத்தருணத்தில் பொருத்தமாயிருக்கும்.
விலங்கினப் புரதச் சாப்பாடு இல்லாமல் அவசிய அமினோ அமிலங்கள் கிடையாது என்பது பிழையான நம்பிக்கை. சோற்றில் ஒரேயொரு அவசிய அமைனோ அமிலம் குறைவு. சோற்றுடன் பருப்பு வகைகளும் தேங்காயும் பாவிக்கும் போது எட்டு அவசிய அமைனோ அமிலங்களும், மற்றைய அமைனோ அமிலங்களும் கிடைக்கின்றன. அத்துடன் பால், தயிர் சாப்பிட் டால் இன்னும் திருப்தி? 17
இது யாழ் போதனா வைத்தியசாலையின் முன்னாள் பிரபல சத்திரசிகிச்சை நிபுணர் Dr. வே. கிருஷ்ணராசாவின் கூற்று. இவ்விரு கூற்றுக்களும் தாவர உணவுகளின் போஷாக்குத் தரத்தை எமக்கு நன்கு உணர்த்துகின்றன.
தாவர உணவு ஏன் சிறந்தது?
மனிதனுக்கு ஊட்டச்சத்துக்களை அளிப்பதில் தாவர உணவு, மாமிச உணவிற்கு இணையானது என்ற முன்னைய கருத்திற்கு மேலாக, மனிதனுக்கு நோய் நொடிகள் ஏற்படாமல் ஆரோக்கிய வாழ்வைத் தருவது தாவர உணவு மாத்திரமே என்ற கருத்து இப் பொழுது மேலோங்கி வருகிறது. அதனால்தான் எல்லா வளங்களும் நிறைந்த அமெரிக்க நாட்டில் குறைந்தது 10 மில்லியன் பேராவது மரக்கறி உணவை ஏற்று வாழ்ந்து வருகிறார்கள்.
இதற்குக் காரணமாக மரக்கறி உணவில் உள்ள மூன்று முக் கிய அம்சங்களைக் கூறலாம் .
1) காய்கறிகளில் உள்ள அதிக நார்ப்பொருள் i) அவற்றில் உள்ள மிகக் குறைந்த கொலஸ்டரோல் (OA, ο Ια δί -
e rol) .
74 E ട് സി & (' (ധ
 

s
s
eES EeML LLLLLLLLeeeLLLLLLeLecL LcceMMeLeLee eLMeMMLeMMMeMMLMLMLeLLML MMLMeMMMeesMMEaMeceeMMcM MMe eccM ccc MMMeMS
i) விலங்குகளிலிருந்து மனிதனுக்குப் பரவும் நோய்களிலிருந்து
பாதுகாப்பு
தாவர உணவில் அதிக நார்ப்பொருள் இருப்பதால் மூலநோய், மலச்சிக்கல், ஹெயடஸ் ஹெர்னியா, (Hiats Hernia) குடலழற்சி (UIcerative Colitis) (51-söl (söI (Peptic Ulcer) Gutt sit so G5íru) களிலிருந்து பாதுகாப்புக் கிடைக்கிறது. தாவர உணவில் உள்ள கொழுப்பு, பெரும்பாலும் நிரம்பாத கொழுப்பு அமிலத்தினால் ஆனது இதனால் குருதியில் கொலஸ்டரோல் அதிகரிப்பு தடுக்கப்பட்டு. மார டைப்பு, பாரிசவாதம் போன்ற நோய்களுக்கான வாய்ப்புக் குறைந்து விடுகிறது.
* அசைவ உணவுகள் மூர்க்கத்தனமான உணர்வுகளை எழுப்புவதுடன் மிருகங்களின் சில நோய்களைத் தொற் றவைக்கவும் செய்கின்றன? 18
என்று பகவான் கூறுகிறார். உண்மையில் 160 நோய்கள் விலங் குகளிலிருந்தும், பிராணிகளிவிருந்தும் மனிதனுக்குத் தொற்றுகின்றன என உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் பல தொடுவதனாலும், கடிப்பதனாலும் தொற்றுகின்றன. சில அவற்றின், இறைச்சியை உண்பதால் பரவுகின்றன. மிருகங்களி லிருந்து மனிதனுக்கு இறைச்சி மூலமாக தொற்றுவதற்குச் சிறந்த உதாரணம் நாடாப் புழுக்களாகும். இது முக்கி பமாக பன்றி இறைச்சி சாப்பிடுபவர்களிடையே அதிகம் காணப்படுகிறது.
* அசைவ உணவினால் நோய்வாய்ப்படுவது மிகுதி” 19 என்று பகவான் பிறிதோர் இடத்தில் கூறுகிறார்.
இது முற்றிலும் உண்மையே. சிலவகையான நோய்கள் அசைவ உணவை உண்பவர்களிடையே அதிகமாக உள்ளது.
அசைவ உணவு உண்பவர்கள், பெரும்பாலும் காய்கறி, இலை வகைகளையும், பழங்களையும் உண்பது குறைவு. இதற்கு உதாரண மாக மேல்நாட்டவரின் உணவு முறைகளைக் கூறலாம். இதனால் தான் அவர்களிடையே பெருங்குடல் சம்பந்தமான புற்று நோய்கள் அதிகமாகக் காணப்படுகின்றன,
ஆரோக்கிய வாழ்வு E 75

Page 46
MLcSLccAccLScLceeLe eekLMLM McccSL LcMLcSL LcLcccLLcLkLLcLMLAe LLLeLeLLLLS LLLLLLLAALLcLcMLLLA McLcLScLSLcLScLASALLLSAcAALLcLALASSALALAAcSLAL ASLSALS LALASAS
மாமிச உணவில் உள்ள கொழுப்பு, நிரம்பிய கொழுப்பு அமி லம் (Saturated Faity Acid) என்ற வகையைச் சார்ந்தது. இது எமது இரத்தத்தில் உள்ள கொலஸ்டரோலின் அளவை அதிகரிக்கும் . இக் கொழுப்புப் பொருட்கள் இரத்தக் குழாய்களில் படிவுகளாகப் படிந்து இரத்த ஓட்டத்தைக் குறைக்கும். இதுவே இருதய நோய் களும், பாரிசவாதமும் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாகும். பட்டர், நெய் போன்ற விலங்கின கொழுப்புக்களும், மாமிச உணவுகளுமே இவ்வாறு கொலஸ்டரோல் அதிகரிப்பதற்குக் காரணமாகின்றன எனச்
é95 A 7 GR) * # fiğ ,
அத்துடன் நண்டு, இறால் போன்ற உணவுகள் பலருக்கு ஒவ் வாமை என்று சொல்லப்படும் அலர்ஜியை ஏற்படுத்துகின்றன. இத னால் உடலில் சொறி, தடிப்பு போன்ற அறிகுறிகளோ எக்ஸிமா போன்ற நோய்களோ அவர்களுக்கு ஏற்படலாம்.
அதிகளவு மாமிச உணவுகளை உட்கொள்வது மலச்சிக்கலுக்கும் காரணமாகிறது.
எப்படி உண்பது சிறந்தது?
உணவுகளை நாம் சமைத்தே உண்கிறோம். இது சில வேளை களில் தவிர்க்க முடியாதது ஏனெனில் சில உணவு வகைகளை வேக வைத்தால் தான் சுலபமாக ஜீரணமடையும். கிருமிகளைக் கொல் வ தற்கும் அது அவசியமானது. ஆனால் வேகவைக்கும் போது பல விற்றமின் சத்துக்கள் முக்கியமாக விற்றமின் B, C போன்றவை ஆவியாகிவிடுகின்றன . அதற்கும் மேலாக உணவைச் சுவையுள்ளதாக மாற்றுவதற்கு உப்பு, புளி, வாசனைப்பொருட்கள் ஆகியவற்றைச் சேர்க்கிறோம். இவை சுவையைக் கொடுத்தாலும் நோய்களுக்கும் காரணமாகின்றன.
"மிருகங்கள் இயற்கை உணவை அப்படியே அருந்து கின்றன. ஆகையால் அவைகள் பலமும், உடல் fb ᎧᎸ) மும் பெற்று ஆரோக்கியம க வாழ்கின்றன. ஆனால் மனிதனோ தன் நாக்கை நன்றாகத் தீட்டிக்கொண்டு, பல வித ருசிகளுக்கு அடிமையாகி பல விதத்தில்
76
S
சாம்பி காட்டிய

eaS eeS LcLS SEEaaS SJSES LLLe eLSeSSLeLLLLSS SLLMAMeLeLSAS eeeLee eSAeLLLLSScLaLSMSaSeLJLES Ske LcLSASLAeM McLSLSSSSSSMLcccSEaLSLSLcSMSeckALASS v\,\r\,AAAruvur\n\n,
சமைத்துச் சாப்பிடுகிறான். ஊட்டமளிக்கும் பொருட் கள் சமைப்பதில் வீணடிக்கப்பட்டு விடுகின்றன. அத னால் சத்துக்குறைவு ஏற்படுகிறது. மனிதன் நல்லு ணவு உட்கொள்வது மிக முக்கியம்” 29
என்று பகவான் கூறியதைக் கவனத்தில் எடுக்க வேண்டும். பழவகைகள், காய்கறிகள் போன்றவற்றை இயன்றவரை பச்சையாக உண்ண வேண்டும். நன்கு நீரினால் கழுவி சுத்தம் செய்த பின்னரே அவ்வாறு உண்ண வேண்டும்.
மூட்டு வாதத்தையும் வேறு சில நோய்களையும் முற்றாகக் குணப்படுத்துவதற்கு இறைச்சி உட்பட எல்லா உணவுவகைகளையும் இயற்கையாக, வேகவைக்காமல் பதப்படுத்தாமல் அப்படியே உண்ண வேண்டும், செயற்கையான உணவுகளை முற்றாகத் தவிர்க்க வேண்டும் என்று சிலர் கருதுகிறார்கள். இதற்காகவே ஒரு இயக்கம் அமெரிக் காவில் ஆரம்பிக்கட் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இறைச்சியை வேகவைக்காமல் தின்பதால் நாடாப்புழு போன்ற நோய்களும் பர வலாம் என்பதால் அது நல்லதல்ல. ஆயினும் காய்கறிகளைப் பச்சை யாகவும், விதைகளை முளைக்கவைத்தும் உண்பது சிறந்ததே.
உணவுவகைகளை பொரித்து அல்லது வதக்கி உண்ணும் போது எண்ணெய் அல்லது நெய் பயன்படுத்தப்படுகிறது. இதனால் எமது உடலில் மேலதிக கொழுப்புச் சேர்ந்து இருதய நோய்கள் போன்ற வற்றிற்கு வித்திடுகிறது.
தகரத்தில் அல்லது போத்தலில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வரும் பதப்படுத்தப்பட்ட பொருட்களில் அதிகளவு சீனி அல்லது உப்புடன் பல இரசாயனப் பொருட்களும் சேர்க்கப்படுகின்றன. இவை எமது உடலுக்குப் பல விதத்தில் தீமை அளிக்கின்றன. எனவேதான் அவற்றை இயற்கையாக உண்பதே சிறந்தது என்கிறார் பாபா. அதனை அவர்,
'உணவு அதிக காரமுள்ளதாகவோ அதிக உப்புள்ள தாகவோ இருக்கக்கூடாது. உணவை கடும் சூட்டு டன் உட்கொள்ளக்கூடாது? 21
ஆரோக்கிய வாழ்வு 크 77

Page 47
flail/9ן ומקור חוח, ש388&C3 மாநகர நூ சேவை யாழ்ப்பாணம்,
MLMMMcccSceLceceLeLeLeLeeLe LLLAeS LAMeSeecaAMMeLJcSLLMLaaS cLac LcMMeLeeLeLee SLLeeLcAeSMLMMeLeLeAecLcL LcAccLAcAHScAccAtSALALASAT LALAcAccAcc ccAcS
என்று மேலும் வரையறை செய்துள்ளார்.
குடற்புண் உள்ளவர்களுக்கு அதிக உறைப்பு, புளி, கடும் சூடு ஆகியவை கூடாதென்பது நாம் அறிந்ததே.
உப்பைப் பொறுத்தவரையில் உப்பிற்கும் உயர் இரத்த அமுக் கத்திற்கும் நிறையத் தொடர்பிருக்கிறது. உப்பையே உபயோகிக்காத சில ஆபிரிக்கப் பழங்குடி மக்களிடையே உயர் இரத்த அமுக்க நோய் இல்லை எனச் சில சமூக ஆய்வுகள் கூறுகின்றன. இத்துடன் உயர் இரத்த அமுக்க நோயினால் பீடிக்கப்பட்டவர்கள் உப்பை அடிபோடு நிறுத்தினால் அல்லது பெருமளவு குறைத்தால் அவர்களது இரத்த அமுக்கம் குறைவதும் விஞ்ஞான பூர்வமாக நிறுவப்பட்டுள்ளன. எனவே நாம் எமது உணவில் உப்பை இயன்ற அளவு குறைக்க வேண்டும். கீழைத் தேச மக்களாகிய நாம் உப்பு, காரம் ஆகிய வற்றை அதிகம் உபயோகிக்கிறோம் இது தீங்கானது என்பதால் அவற்றை நாம் குறைக்க வேண்டும்.
அதிக இனிப்பும் பல நோய்களுக்குக் காரணமாகின்றது. குழந் தைகளில் இனிப்பு பற்சொத்தைக்கு முக்கிய காரணமாகிறது. பெரி யவர்களைப் பொறுத்தவரையில் அதிக இனிப்பு அவர்களது எடையை அதிகரிக்கச் செய்கிறது. எடை அதிகரித்தால் உயர் இரத்த அமுக்கம், நீரிழிவு, இருதய நோய்கள், நாரிப்பிடிப்பு, முழங்கால் வாதம் போன்ற பல்வேறு நோய்களுக்கும் காரணமாகலாம். நீரிழிவு நோயாளர்கள் இனிப்பை அடியோடு நிறுத்த வேண்டும் என்பதும் நாம் அறிந்ததே.
மேலே கூறியவற்றிலிருந்து நாம் உணவில் சுவையைத் தேடி
னால் ஆரோக்கியம் கெடும் என்பதும், சரியான முறையில் உட்கொண்
டால் ஆரோக்கியம் கிட்டும் என்பதும் புரிகிறது. இவற்றைக் கருத் தில் கொண்டுதான்,
* மனிதன் மட்டுமே இயல்புக்கு மாறாக நடக்கிறான். நாவின் ருசிக்கு அடிமையாகி அதற்குத்தகுந்தவாறு பல உணவுகளைச் சமைத்துண்பதுடன் நீண்ட ஆயுளை அளிக்கும் உணவினை அசட்டை செய்கிறான்? 22
என்று பகவான் எமது பிழையான உணவுமுறைகளைச் சாடுகிறார்.
78 E w ക0 (ി ക7 (20)
r

s
ᏑuᏁᏗᎮvᏁᎲᎮvᏁᎲᏡᏁᏗ ᏡᏁᏗᏉᏁᎲᏉᏁᏗᏉᏁᎲᏉᏁᎯᏡᏁ4ᏉᏁᏗᏉᏁᎲᏡᏁᏪᏈᏁᏪᏁᏁᎴᏡᏁᏗᏡᏁz ᏉᏁᏗᏡᏁz ᏉᏁᏗ ᏈᏁzᏡᏁᎲᏡᏁᏗᏡᏁᏗ ᏠᏁᏗ*ᏙᏁᏗ
எப்பொழுது உண்ண வேண்டும்?
நீங்கள் உணவு உண்ண உட்காரமுன் கடும் பசி ஏற்படுவதை நிச்சயப்படுத்துங்கள். அடுத்ததடவை உணவு உட்கொள்ள முன்னும் அத்தகைய கோரிக்கை உங்கள் குடலிலிருந்து எழ வேண்டும். வேலை செய் யாத எவனுக்கும் உண்பதற்கான உரிமை கிடையாது. தனது இரு கைகளாலும் உழைப்பவனுக்கே அதற் கான உரிமை உண்டு 23
என்று பகவான் தெளிவாகக் கூறியுள்ளார்.
பசிக்காமல் உண்பதென்பது எமது உடலின் தேவைக்கு அதி கமான உணவு என்று கொள்ளலாம். அத்தகைய உணவு உடலின் எடையை அதிகரிப்பதுடன் பல்வேறு நோய்களையும் கொண்டுவரும்.
அதே போல உழைக்காமல் உண்ணக்கூடாது என்று பகவான் கூறியதும் மருத்துவ ரீதியான கருத்தே, ஏனெனில் உழைக்காமல் இருப்பதால் இரண்டுவிதமான தீமைகள் ஏற்படுகின்றன. முதலாவ தாக நாம் உழைக்காமல் இருந்தால் எமது அங்கங்களும் ஏன் எமது உடலுமே செயற்திறனை இழந்து பலவீனமடைகின்றன. இதனால் நோய்க்கு உள்ளாகும் வாய்ப்பு அதிகமாகிறது. இரண்டாவதாக நாம் உழைக்காவிட்டால் மிகக் குறைந்த அளவு கலோரி சக்தியே எமது உடலால் பயன்படுத்தப்படுகிறது. உணவிலிருந்து கிடைக்கும் மிகு திச்சக்தி, உழைப்பு இன்மையால் கொழுப்பாக மாறி எமது உடலில் சேமித்து வைக்கப்படுகிறது. இதனால் எடை அதிகரிப்பதுடன் பல் வேறு நோய்களும் ஏற்படலாம்.
எவ்வளவு உண்ணலாம்
arrasa
நாம் உண்ணும் உணவின் அளவு எமது உடலில் நிகழும் தொழிற்பாட்டிற்கும், எமது உடலுழைப்பிற்கும் தேவையான சக்தி யைக் கொடுக்கப் போதுமானதாக இருக்க வேண்டும். சக்தித் தேவையை கலோரியில் குறிப்பிடுவார்கள்.
ஆரோக்கிய வாழ்வு

Page 48
LeeeL LcL LLLee eLcL LccLLecLSLLLLLAALLceLLeLLeLcL ecLcMeLeLeMLeLeeLLLLaLLeLeeLccLLeLeeLecALccSecALLeSeccAcccAcAccccLeAAA AAA
எமது சக்தித் தேவை நிறை, தொழில், வயது, பால், வாழும் பிரதேசத்தின் சுவாத்திய நிலை ஆகியவற்றுக்கு ஏற்ப மாறுபடும். 2.5 TJT600TLDFT dis கடினமான வேலை செய்பவர்களுக்கும், துடியாட் டம் உள்ள இளம் பராயத்தினருக்கும், பாலூட்டும் தாய்மாருக்கும் சக்தித் தேவை அதிகமாயிருக்கும். குளிர்ப் பிரதேசங்களான மேல் நாடுகளில் வாழ்பவர்களது சக்தித் தேவை வெப்பவலய நாடுகளில் வசிக்கும் எங்களை விட அதிகமானதாகும்.
அட்டவணை X
18 வயதிற்கு மேற்பட்டோரின் தினசரி சக்தித் தேவை.
P : Ε (δά 50-601 | p || ' கி. கலோரி | இ கலோ 1 கி. கலோரி ஆண்கள் 50 罗300 2600 3000 5 5 24 0 0 2700 岛及50 60 25 2 & 50 3300
பெண்கள் 40 | 700 95 () 22捞0 45 18 50 2 II () () 2拿伊0 50 1950 2200 2550 55 2 OO 2.35 () 2750
அட்டைைண X
வளரிளம் பருவத்தினரின் தினசரி சக்தித் தேவை.
ஆண்கள் பெண்கள் [ولک للا [6
வருடம் நிறை கி. கி. இ. கலோரி நிறை இ. சி. கி. க. 10 - 12 34 - 5 2200 36 950 12 - 14 44 24 OO 46·5 2 : 00 Ι 4 - E 6 55·5 26.50 52 2 150 6 - 18 385() 5 4 2 I 50
80三 ነ- σ σαύ α (τέφαν
 

ஒரு கிராம் மாப்பொருளிலிருந்து 4 கலோரி சக்தியையும், ஒரு கிராம் புரதத்திலிருந்தும் 4 கலோரி சக்தியையும், ஒரு கிராம் கொழுப்பிலிருந்து 9 கலோரி சக்தியையும் பெறலாம். எனவே எமக்குத் தேவையான முழுச் சக்தியையும் மாப்பொருள் அல்லது கொழுப்பு
அல்லது புரதத்தை மாத்திரம் உட்கொண்டு பெற்றுவிடலாம். அப்
படிச் செய்வதன் மூலம் சக்தியைப் பெறலாமே ஒழிய ஏனைய போஷணைப் பதார்த் தங்களைப் பெறமுடியாது. எனவே தான் சம நிலைப்பட்ட உணவு தேவை என (பக்36) ஏற்கனவே பார்த்தோம் . அதன் மூலம் மாப்பொருள் 60% மும், புரதம் 15-20% மும், கொழுப்பு 20-25%மும் இருக்க வேண்டும் என்பதும் நாம் அறிந்ததே.
எமது சக்தித் தேவைக்கு அதிகமாக உணவு உண்டால் அவை
உடலில் சேமித்து வைக்கப்பட்டு எமது உடல் நிறையைக் கூட்டி
விடும் , எடை அதிகரித்தால் இருதய நோய், நீரிழிவு, உயர் இரத்த
அமுக்கம் போன்ற பல்வேறு நோய்களும் தோன்ற வழி வகுக்கும்.
“இப்பொழுது நாம் 4000, 5000 கலோரிகளுக்கு உண்பதால் தூக்கம் கெட்டு, மனம் திரிந்து, உடல் நலம் கெடுகிறது. 24
என்று பகவான் கூறி, தேவைக்கு ஏற்பவே உண்ண வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். மேலும்,
உணவின் உஷ்ண சக்தியான கலோரி எவ்வளவு இருக்கிறது நாம் உண்ணும் உணவில் என்பதைப் பற் றியெல்லாம் கவலைப்படாது, பலர் எந்தக் கட்டுப் பாடுமின்றி தின்று தீர்க்கிறார்கள். உதாரணமாக சிலர் எண்ணெயில் பொரித்த பப்படம், அப்பளம் போன்ற வற்றைச் சாப்பிடுகிறார்கள். அதன் கலோரி சக்தி அதிகம். சிலர் நெய் அதிகமாகச் சேர்த்துக் கொள் கிறார்கள். அதுவும் அதிகமான கலோரி சக்தி கொண் டது. ஒரு அப்பளம் 100 - 150 கலோரியும், ஒரு ஸ்பூன் நெய் 100 கலோரியும் கொண்ட உணவுப் பொருட்கள். உண்ணும் உணவின் அளவைக் குறைத்தா லும் கலோரி சக்தியின் அளவு குறையவில்லையே.* 25
ஆரோக்கிய வாழ்வு E 8

Page 49
ᏑᎸᎯᏡᏗᎵᏙᎯᏙᏗ ᏑᏙᏪᏁᏗᎵᎪᏁᏗᏈᏙᏪᏁᏗ ᏑᏙᏁᏗᏈᏁᏗ ᏑᏙᏁ ᏛᏙᏁᏗᏍᏁᏗ ᏎᏉᏁᏗ °ᏙᏁᏗ ᏠᏁᏗ ᏑᏙᏁᏗᏡᏁᎲ ᎵᏙᏁ,ᏡᏁᏪᏙᏁᎲᏡᏁzᏡᏁᏗᏡᏁᎲᏉᏁᏗ ᏑᏓᏁᏗᏉᏁᏗ ᏁᏁᏗ ᎪᏁᏗ
விரதங்கள் உபவாசங்கள் அவசியமா?
அதிக உணவு உட்கொள்வது எவ்வளவு தீமையானதோ அதே போல் பட்டினி கிடப்பதும் தீமையானதே. விரதம் உபவாசம் என்று கூறி நாம் உணவு உட்கொள்ளாவிடில் எமது உடலின் இயக்கத்திற்கு வேண்டிய சக்தி கிடைக்காது, நேரத்திற்கு உணவு உட்கொள்ளாவிடில் எமது இரத்தத்தில் உள்ள சீனியின் அளவு குறைகிறது; உறுப்புக்கள் சரியாக இயங்க முடியாதிருக்கிறது. இதனால் உடலும் மனமும் சோர்ந்து விடுகிறது. விரதத்தின் முக்கிய நோக்கமான இறை வனைத் தொழுதல் கூடப் பாதிப்படைகிறது.
'துரதிஷ்ட வசமாக இதன் இரகசியத்தைப் புரிந்து கொள்ளாத மக்கள் உடலைப் பலவீனப்படுத்துகின்ற விரதங்களையும் நியமங்களையும் அனுஷ்டிக்கிறார்கள் : இவற்றினால் மட்டுமே ஆத்மாவின் உண்மையிருப்பி னைப் பற்றிய உணர்வினை அடைதல் இயலாத 3, it fullb.
.உண்ணும் உணவினையும் பருகும் நீரினையும்
விலக்குவதால் மட்டுமே ஆத்ம ஞானியாக இருக்க முடியுமா?’ 28
என்று பகவானும் அவற்றை பிரயோசனமற்றவை என்றே கூறுகிறார்.
இன்னும் தெளிவாகவும் விபரமாகவும் பிறிதொரு இடத்தில்
கூறியுள்ளதைப் பாருங்கள்.
" ..நம் நாட்டில் இறைவன் பெயரால் உபவாசம் செய்யும் பழக்கத்தைப் பற்றிச் சொல்ல வேண்டும். இதைப் பற்றிப் புரிந்து கொள்ள முதலில், உபாஸன என்பதற்கும் உபவாஸ்' என்பதற்கும் உள்ள வேறு பாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும். உபவாஸ்ம்' என்பது அருகாமையில் வசிப்பது. * g2 - t_117 5))) &লো ” அருகாமையில் உட்கருவது. எயர் கண்டிஷனர்
82 σημο 3 σε φαν

அருகே நாம் உட்கார்ந்திருக்கும் போது நமக்கு வெப் பம் தெரிவதில்லை. அதேபோல் குளிர்காலத்தில் ஹிட்டர் அருகாமையில் இருந்தால் நமக்கு வெம்மை யின் சுகம் கிடைக்கிறது.
நாம் இறைவன் அருகே சென்று, அங்கே இருக்க, வசிக்க விரும்புவதால் நாம் உபவாஸம் செய்கிறோம் இறைவன் அருகே செல்வதின் நோக்கம் என்ன? இறை வனின் ஸச்சிதானந்தம் நமக்கும் கிடைத்து நம்மிட முள்ள கெட்ட குணங்கள் அழிவதே. உபவாஸ்ம் என்பதன் பொருளை இவ்வாறு அறிய வேண்டும். இறைவன் அருகாமையில் செல்ல வேண்டும் என்பது நமது எண்ணம். ஆனால் நடைமுறையில் இதை அரை டஜன் சப்பாத்தி, ஒரு டஜன் வாழைப்பழம், ஒரு படி பால் ஆகியவை சாப்பிடும் செயலாக்கியுள்ளோம். அதாவது அரிசிச் சாப்பாடு சாப்பிடக்கூடாது என் பதற்கே இந்த ஏற்பாடு.
இப்பேர்ப்பட்ட உபவாஸ்த்தில் ஏதாவது அர்த் தமிருக்கிறதா ? பெரும்பாலும் நமது கலாசாரத்தின் சரியான அர்த்தத்தை நாம் உணரவில்லை. எனவே எமது சாதனைகளும் ஆன்மீகப் பயிற்சிகளும் ஏ மாற் றத்தையே கொடுக்கின்றன 27
இதற்கு மேலும் விளக்கம் எதுவும் தேவையா?
உணவு தயாரிக்கும் பாத்திரம்
உணவு தயாரிக்கும் பாத்திரங்களாலும் ஆரோக்கியம் கெட லாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். உதாரணமாக நீண்ட காலத் திற்கு தொடர்ந்து அலுமினியப் பாத்திரங்களை உபயோகித்து வந் தால் முதுமைப் பருவத்தில் அல்ஸிமியர் நோய் (Alzheimer's Disease) என்ற கடுமையான நோய் தாக்கலாம் என நம்பப்படுகிறது. ஆயினும் இன்னமும் சரியாக நிறுவப்படவில்லை.
ஆரோக்கிய வாழ்வு E83

Page 50
ᏉᏁᎲᏡᏁᎲᏡᏁᏗᏡᏉᏁᏓᏡᏙᏁᎲ*ᏉᏁᏡᏪᏙᏡᏁᏎ*ᏉᏁᏘᏡᏁᏡᏙᏁᎲᏡᏁᏡᏁᏡᏁᏗᏡᏁᏗᏡᏗᏁzᏡᎯᏁᏪ*ᏉᏁᏘ *ᏙᏁᏗᏡᏁᎯ*ᏙᏁᎲᏡᏁᏗᏡᏁᏗᏤᏙᏁᏗᏈᏁᏁᏉᏁᎸᎯ
இப்பொழுது ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்களையே அதி கம் உபயோகிக்கிறோம். இவற்றில் பெருமளவு இரும்பும், ஒரளவு குரோமியமும், மிகக் குறைந்த அளவு மங்கனிசும் கலந்துள்ளன இரும்புச்சத்து உடலுக்குத் தேவைதான். ஆனால் அதிலுள்ள ஏனைய மூலகங்கள் உடலுக்கு நல்லது என்று சொல்ல முடியாது. ஸ்டெ யின் லெஸ் ஸ்டீல் பாத்திரங்களால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்க வேண்டுமாயின் அவற்றை நீண்ட நேரம் அடுப்பில் விடக்கூடாது.
கண்ணாடிப் பாத்திரங்கள் சிறந்தவை. நெருப்பில் போட்டால் கூட வெடிக்காத கண்ணாடிப் பாத்திரங்கள் பாவனையில் உள்ளன. இவற்றால் உடலுக்கு எந்தவித தீமையும் கிடையாது. ஆயினும் அவற்றின் விலை மிக அதிகம்.
எம்மைப் பொறுத்தவரையில் மட்பாண்டங்களே சிறந்தவை. அவற்றை எந்த வெப்ப நிலைக்கு ஏற்றினாலும் உடையாது, கரை யாது, எந்த நச்சுத்தன்மையையும் கொடுக்காது.
பகவானும் வெண்கலப் பாத்திரங்களில் சமையல் செய்வது பற்றி ஒரு உதாரணம் கூறியுள்ளார்.
*பதார்த்தங்கள் யாவும் பரிசுத்தமானவையே. சமை யல் செய்பவரும் திறமை உள்ளவரே. ஆனால் பாத் திரத்தின் உட்புறம் கலாய் பூசப்படாதிருந்தால் அது களிம்பேறி, செய்யும் பண்டம் கெட்டுவிடும், 29
பவரோகம், உணவு
உணவு பற்றிய இந்த அத்தியாயத்தை ரோகம், பவரோகம் , உணவு ஆகியவை பற்றி பகவான் கூறிய கருத்துடன் நிறைவு செய்
Ugly fri) .
'சாதகர்களான நீங்கள் பக்தர்களாக ஆயத்தமாகப் போகின்றீர்கள் . இயன்றளவு ஆகாரத்தை மாற்றிக்
கொண்டு இந்த ஐம்புலன்களின் வாயிலாக சாத்வீக
மான ஆகாரங்களை உட்கொள்ளத் தொடங்கும் போது மனத்தின் வல்லமை ஒடுங்கிவிடுகிறது.
சாயி காட்டிய
84
 

eMeL eeLeLMSaLeLeLLeLEL LELEL MLcL LccLLLLLS LLLLeAkSkSkLcSAeELeLeeLeLeeLekeLcScecLcSaLcL aeMLec SS eLeAeS SecLcS eeLcLSMAeL LSLeLeMS eeLeAS
பசியை அகற்றிக் கொள்வதன் பொருட்டு நாம் உணவை உட்கொள்கின்றோமேயன்றி மனதின் இன் சுவைக்காக உணவை உட்கொள்வதில்லை. விஷ் ஜாரத்தைக் குணப்படுத்திக் கொள்வதன் பொருட்டு நாம் கசப்பான மருந்தை உட்கொள்கிறோம். ஆனால் மருந்தின் சுவையைப் பார்க்கின்றோமா? இல்லை. ஆகவே நமது நோயை அகற்றிக் கொள்வதன் பொருட்டு எத்தகைய மருந்தாயினும் உட்கொள்வது போன்று நமது பவரோகத்தை (பிறவிப் பிணியை) அகற்றிக் கொள்வதன் பொருட்டு எத்தகைய சுவை களையும் பொருட்படுத்தாமல் சாத்வீக உணவை உட் கொள்ள வேண்டும். ஆகவே நாம் உணவை சாத் வீகமாக உட்கொண்டு கர்மேந்திரியங்களின் வாயிலாக, ஞானேந்திரியங்களின் வாயிலாக, இவ்விரண்டின் வாயி லாகக் கூட, பார்வையை செவியுறுதலை, பேசுதலை, மனத்தை இயன்றளவு அடக்குவதினால் நம்மால் முடிந்தளவு பவித்திரமான பயனைச் சாதிப்பதற்கு வகை ஏற்படுகிறது” 29
அடிக்குறிப்புகள்
1) 2) 3) 4)
5)
6 ) 7) 8) 9) a 0) | 1)
2)
34βα (73 βαν Ωντώσον
சனாதன சாரதி தமிழ் (த. ச. சா) ஆகஸ்ட் 90 பக் 4 சனாதன சாரதி ஆங்கிலம் (ஆ. ச. சார் மார்ச் 93 பக் 75 த ச. சா ஏப்ரல் 93 பக் 21
மேற்படி பக் 21 தீ ச. சா ஆகஸ்ட் 90 Uáš த. ச. சா ஜூன் 98 பக் 3 How to Maintain Health ( H. M. Hy Page 2 தி சி . சIT ஆகஸ்ட் 90 L鲇 & த. ச. சா ஜூலை 90 பக் 3-4 சாயியுடன் தெய்வீகத்தை நோக்கி பக் 20 திருமூலர் திருமந்திரம் - முதல் தந்திரம் பாடல் 199 திருவள்ளுவர் திருக்குறள் துறவறவியல் பாடல் 259 த. ச. சா, ஜூலை 90 பக் 4
pم
85

Page 51
ᏡᏁᏗᏡᏁzᏡᎯᏡᏗᏡᎯᏉᎯ ᏉᎫᏁᎫᏡᎯᏖᏗ ᎹᏙJᏙᏗᏡᏁᏗ ᏑᏓᏁᎯ °ᏙᏁᎲ ᏑᏓᏁᏗᏡᏁᏗ ᏑᏁᏗᏛᏁᏁᏗ%ᏉᏁᏗᏈᏙᏁᏗᏑᏓᏁᏡᏁᏗᏑᏉᏁᏗ ᏛᏁᏁᏗ ᎮᏁᏁᏗ ᏑᏙᏁᎲᏡᏁᏗ ᏡᎯᏁᏗ ᏑᏁᏁᎲᏡᏁᎴ
14 )
15) 16)
I 7)
18) 19) 20)
21 ) 22) 名ó) 24) 25) 26) 27) 28) 29)
86
主持
பகவான் பூரீ சத்தியசாயி பாபாவின் அருளுரைகளிலிருந்து சில முத்துக்கள் பக் 44-45 சாவி - சாயி சிறப்பிதழ் 27-7-98 பக் 41 Prof T.W Wikramanayake - Emeritus Professor & Bioche mistry - University of Peradenija Food & Nutrition Page
104. Dr. K. கிருஷ்ணராசா - முன்னாள் சத்திரசிகிக்சை நிபுணர் யாழ். வைத்தியசாலை - சுகாதார சேவையாளர்களின் கை நூல் பக் 52
H. M. H. Page 3
த. ச. சா ஆகஸ்ட் 90 பக் 8 வீட்டிற்கு வீடு தேவைப்படும் உடல் நலக் கல்வித் திட்டம் (வி. வி. உ. க. தி) பக் 9 - 10 H. M. H. Page 2
த. ச. சர் ஆகஸ்ட் 90 பக் 8
H. M. H. Page 11
த. ச. சா ஆகஸ்ட் 90 பக் 9
த. ச. சா மார்ச் 94 பக் 17
மேற்படி பக் 2 பிருந்தாவனத்தில் கோடை அருள் மழை பக் 224 த. ச. சா ஆகஸ்ட் 98 பக் 10 மனதின் மர்மம் பக் 108
ക0 (ി 50(2()
A
 
 
 

ᏑᏁ, evᏁᎲᏡᏁᏇᏡᏁᎲᏍᏁ,ᏁᏁᏗᏈᏁᎯ*ᏙᏁ4°ᏙᏁᏪᏁᏁᏗᎵᏉᏁ4ᏑᏙᏁ4ᏑᏙᏁ, ᏑᏙᏁᎲᏡᏁzᏁᎴᏓᏡᏁᏗ ᏑᏙᏁᏁᏁᏗᏑᏙᏁᎲᏑᏙᏁᏗᎵᏉᏁᏁᏁᏗᏡᏁᎯ ᏡᏁᏙᎵᏙᏁᏗ
ஓம் சாயிராம் 4. வாழ்க்கை முறையும் ஆரோக்கியமும்
மனிதர்கள் பலவிதம் அவர்களது வாழ்க்கை முறைகள் அதை விடப் பல்வேறு விதங்கள்.
சிலர் சோம்பேறிகளாக வாழ்வார்கள், சிலர் சுறுசுறுப்பாக உழைப்பார்கள்; சிலர் மிதமாக உண்பார்கள், வேறுசிலர் சொற்ப மாக உண்பார்கள்; சிலர் மனம் போனபடி வாழ்வார்கள், வேறு சிலர் கட்டுப்பாடாக வாழ்வார்கள்; சிலர் அமைதியாகச் செயற்படு வார்கள் வேறு சிலர் எதற்கெடுத்தாலும் உணர்ச்சி வசப்படுவார்கள்.
இவையெல்லாம் அவர்களுடைய இயற்கை இயல்புகள்தாம் என்று எண்ணமுடிவதில்லை.
மனிதர்களுடைய வாழ்க்கை முறைகளுக்கும் ஆரோக்கியத்திற் கும் இடையில் நிறையத் தொடர்பிருக்கிறது என்பதை மறந்து விடக் கூடாது. வாழும்முறைகளை ஆரோக்கியத்திற்கு உதவும் வகை யில் நாம் நெறிப்படுத்த வேண்டும், அதற்கு ஒழுங்கான பயிற்சியும் விடாமுயற்சியும் அவசியம்
'விடாமுயற்சி என்பது ஏதேனும் ஒர் இலக்கை அடைய மிகவும் தேவையானது. இதன் மூலம் நரன் நாராயணனாக மாற முடியும். அதாவது மனிதன் தெய்வமாகலாம். இந்தக் குணம் இல்லாவிட் டால் எதையும் அடைய முடியாது. விடாமுயற்சி இல்லாதவர்களின் முயற்சி எல்லாம் ஒட்டைகள் நிறைந்த பானையில் நீரைப் பாதுகாத்து வைப்ப தற்கு ஒப்பாகும்?
என்று பகவான் கூறியதற்கிணங்க, எமது வாழ்க்கை முறை களைச் சரியான முறையில் திருப்புவதற்கு விடாமுயற்சியுடன் முயல வேண்டும். எமது ஆரேக்கியத்துடன் நெருங்கிய தொடர்புடைய அமிசங்களாகிய உடலுழைப்பு அல்லது உடற்பயிற்சி, உறக்கமும்
ஆரோக்கிய வாழ்வு E 87

Page 52
LAe LeAeAeA LLAe ecceLeS LLLee eLeLeAeSALAcLS ALALAeS LALAeMLALAMeLceLALAcLAcAASALALSLALSLMcL LLLLLLLAAAASe SLASLLALcSeLALLAMS cLccc cLMLeLMe EcLc ceS
ஒய்வும், மன அமைதி போன்றவற்றைத் தகுந்த அளவிலும் சரியான முறையிலும் பெற நாம் முயற்சி செய்ய வேண்டும்.
9:) ), I ) Lu u fî ji f
உடற்பயிற்சி எல்லோருக்குமே அவசியமானதுதான்; ஆயினும் உடலுழைப்புடன் அதிகம் இணையாத தொழில் செய்பவர்களுக்கு (உ+ம்: வைத்தியர்கள், ஆசிரியர்கள், விகிதர்கள், மதகுருமார்) அதி முக்கியமானது என்பதில் ஐயமில்லை. பலரது தொழில்நிலை மாத் திரமின்றி அவர்களது பொழுதுபோக்குகளும் கூட உடற் பயிற்சிக்கு இடமளிக்காத சோம்பேறித்தனத்தை உருவாக்குகின்றன.
தொலைக் காட்சிப் பெட்டி பெரும்பாலான நாடுகளில் மனி தர்களை கதிரைகளிலேயே உட்கார வைத்து, பின் நோயாளிகளாக்கி, கட்டிலுக்கு அனுப்பிவிடுகிறது. வீடியோ கேம்ஸ், காட்ஸ், கரம், செஸ் போன்ற விளையாட்டுக்களும் மனிதர்களைக் கதிரைக்குப் பாரமாக்கி இறுதியில் அவர்களை அவர்களுக்கே பாரமாக்கும் நிலைக்குத் தள்ளி விடுகிறது. ஆனால் உடற்பயிற்சி மனிதர்களுக்கு ஆரோக்கியத்தையும் உற்சாகத்தையும் மன அமைதியையும் கொடுக்கின்றது.
உடற்பயிற்சியின் நன்மைகள் என்ன?
உடற்பயிற்சி உடலாரோக்கியத்திற்கு உகந்ததெனப் பெரும் பாலானோர் பேசுகின்றனர். எனினும் பேசுபவர்களும் செவிமடுப்பு வர்களும் உடற்பயிற்சியைத் தம் வாழ்வில் நடைமுறைப்படுத்துவ தென்பது அரிதாகவே உள்ளது. இதற்கொரு முக்கிய காரணமாக அமைவது அவர்கள் உடற்பயிற்சியால் ஏற்படும் நன்மைகள் பற்றித் தெளிவாக அறிந்து கொள்ளாமையே. எனவே அதைப்பற்றிச் சிறிது ஆராய்வது பயன் தரவல்லதாகும்.
1) உடற்பயிற்சி மன அழுத்தத்தைக் குறைக்கிறது. கவலை , போன்ற உணர்வுகள் தோன்றுவது குறைவதால் எமது வாழ்க்கைப் பிரச்சினைகளைச் சமாளிக்கக் கூடிய மனத்திடமும் தன்னடக்கமும், சு கவுணர்வும் வளருகின்றது.
88 E w 50 ഗ്രി 87 ( "(±)

e
தேசிய 5 ഓക്' Lിtിഖു ""「リケ 巫76りg Gga"Qf
O 8 3 2 ԱյTյիւնւյր ணம்.
- rᏗᏉᏁᏗᏉᏁᏗ ᏡᏁᏗᏡᎯᏁzᏡᎯᏡᏗᏡᏁᏗ °ᏙᏁᏗᏡᏁᏗ*ᏉᏁᏗᎵᏉᏁᏗᏈᏉᏁᏗ ᏠᏁᏗ ᏑᏙᏁᎲᏡᏁᎯ ᏉᏁᏗᏈᏙᏁᏗᏡᏉᏁᏗᏉᏁᏗeᏡᏙᏁᏗᏑᏠᏁᏗ °ᏠᏁᏗ °ᏉᏁᏗ °ᏉᏁᏪ°ᏠᏁᏗ °ᏉᏁᎲ
i) மூளையின் இயக்கத்தையும், மன ஆற்றலையும் விருத்தி செய்வதால் புத்துணர்ச்சி கிடைப்பதுடன் மனத்தை ஒருமுகப்படுத் தும் ஆற்றலும் அதிகரிக்கின்றது. இதன் மூலம் மூளைக்கு நீண்ட நேரம் வேலை கொடுப்பதால் தோன்றும் மூளைச் சோர்வு தடுக்கப் படுகிறது,
i) தூக்கமின்மைக்கும், நித்திரைக் குழப்பங்களுக்கும் ஏற்ற நல்ல இயற்கை மருந்து உடற்பயிற்சிதான். உடற்பயிற்சியினால் வரும் களைப்பு தூக்கமில்லாதவர்களையும் சுலபமாகத் துரங்கச் செய்துவிடும்.
iv) ஒருவர் தனது உடற் தேவைக்கு அதிகமான உணவை உட்கொண்டால் அவரது எடை அதிகரிக்கும் என்பது நாம் அறிந் ததே. அதைத் தடுத்து, மேலதிகமாக உட்கொண்ட கலோரியைசக்தியை எரிக்க வல்லது உடற்பயிற்சி ஒன்றுதான்.
V) பல்வேறு நோய்களையும், உபாதைகளையும் தடுத்து நிறுத்த உடற்பயிற்சியைவிடச் சிறந்த மார்க்கம் எதுவுமில்லை. உடற்பயிற்சியை ஒழுங்காகச் செய்பவர்களுக்கு சளி, காய்ச்சல், நுரை யீரல் நோய்கள் அதிகம் ஏற்படுவதில்லை.
Vi) உணவுக்கால்வாய், சிறுநீரகங்கள், கல்லீரல், இருதயம் உட்பட எல்லா உள்ளுறுப்புகளுமே உடற்பயிற்சியின் போது சிறப் பாகத் தொழிற்படுகின்றன. இதனால் கழிவுப்பொருட்கள் துரிதமாக வெளியேறி உடலை ஆரோக்கியமாக்கும். கழிவுப் பொருட்கள் மலம், சிறுநீர் ஆகியவற்றின் ஊடாக மாத்திரமின்றி வியர்வையுடனும் வெளியேறுகின்றன. இதனால் நீரிழிவு, புற்றுநோய் ஆகியன ஏற்படு வதற்கான வாய்ப்புக் குறைகிறது.
Vi) உடற்பயிற்சியின் போது உடலுக்கு அவசியமான HDL னும் கொழுப்பு அதிகரித்து, LDL என்னும் கொழுப்புக் குறைகிறது. இதனால் இரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவது குறைந்து மார டைப்பு, இருதய நோய்கள் போன்றவை தோன்றுவதற்கான சாத் தியம் குறைகிறது.
இான்
9,600 ക്ലിധ ഖ7ഗ്ഗഖ S. 89

Page 53
%ᏁᏗ ᏡᏁ4ᎵᏉᏁz "ᎯᏁ ᏡᏁᎲᏑvᏛuᏑᏓᏁᎲᏡᏁᏗ ᏎᏓᏁzᏡᏁᎲᏡᏁᏗᏡᏁᏪᏈᏁᏗᏡᏁᎯᏑᏁᏗᏉᏁᏗᏉᏁᏗᏡᏁ4ᏡᏁᏪᎵᎷᏛᏙᏗᏑᏔᏁᏪᎵᏙᏁᎴᏉᏁzᏡᏁᎲᏑᏉᏁᏗᏍᏁᏠᏗ
Wi) உடற்பயிற்சியின் போது எமது நுண்ணிய இரத்தக் குழாய் கள் விரிவடைகின்றன. இதனால் இரத்த அமுக்கம் குறைகின் றது; இருதயத்தின் வேலைத்திறன் அதிகரிக்கின்றது; இருதயத் துடிப்பு நாளொன்றிற்கு 20,000 வரையில் குறைகிறது. எனவே இரு தயத்தின் வேலைப்பளு குறைகிறது. அதனால் மாாரடைப்பிற்கான வாய்ப்பும் குறைகிறது.
ix) உடற்பயிற்சி இளமை வனப்பையும், இளமை உணர்வையும் கொடுக்கிறது. ஒழுங்கான உடற்பயிற்சி ஒருவரது சராசரி ஆயுளை இரண்டரை வருடங்களால் அதிகரிக்கிறது எனச் சமீபகாலத்தைய ஆய்வுகள் சில தெரிவிக்கின்றன.
எந்த உடற்பயிற்சி சிறந்தது?
உடற்பயிற்சிகளை உங்களது உடல் வாகைக்கும், தொழிலுக்கும் விருப்பத்திற்கும் ஏற்பத் தேர்ந்தெடுக்கலாம். ஒட்டம், விரைவுநடை மென்னடை, நீச்சல், கயிறு குதித்தல், மாடிப்படி ஏறி இறங்குதல், சைக்கிள் ஓடுதல் போன்ற இன்னும் எத்தனை எத்தனையோ வகையில் உடற்பயிற்சியைக் கைக்கொள்ளலாம். இவற்றைத் தவிர பூப்பந்தாட் டம், மேசைப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம், கரப்பந்தாட்டம் உதைப்பந்தாட்டம், கூடைப்பந்து போன்ற ஏதாவது ஒரு விளை யாட்டையும் தேர்ந்தெடுக்கலாம். உங்கள் தெரிவு எதுவானாலும் பின் வரும் குறிப்புக்களைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.
ஆரம்பத்தில் குறைவாக ஆரம்பித்து படிப்படியாக அதிகரியுங்கள்
* காற்றோட்டமான இடத்தைத் தேர்ந்தெடுங்கள். குறைந்தது 12 - 20 நிமிடங்கள் செய்யுங்கள், * தினமும் செய்வது நல்லது.
முடியாவிட்டால் வாரத்தில் மூன்று நாட்களேனும் செய்யுங்கள் * உடற்பயிற்சிக்கு முன்னரும் பின்னரும் தண்ணீர் அருந்துங்கள்
சாப்பிட்டபின் கடும் உடற்பயிற்சி வேண்டாம். * மென்மையான பருத்தி ஆடைகளை அந்நேரம் அணியுங்கள்
90 E. w #0 (ി 9,0 (ഗ്ഗൾ
 

lly
ᎭᏉᏁᏗᎹvᏁᎲ ᏡᏁᏗᏡᏁᎲ ᏑᏉᏁᏗᎮᏉᏁᎯᏡᏪᏈᏗ °ᏙᏁᏗᏡᏁᏗᏡᏁᏗᏛᏁᏁᏗᏡᏁᏗᏡᏁᎲ*ᏁᏁᎲᏉᏁ4ᏑᏙᏁᏗᏑᏙᏁ,ᏡᏁᎲᏡᏁᏗ ᎪᎯᏈᏗᏉᏁᏪᏑᎨᏁᏗ*ᏙᏁᏗ "ᏉᏁᏗᏡᏁᏪᏡᎯᏁᎯ
உடற்பயிற்சியினால் ஒவ்வொருவரும் நன்மைகளைப் பெறலாம். உங்கள் குறிக்கோள் உயர்ந்த ஆன்மீக நாட்டங்களைக் கொண்டிருந் தாலும் சரி அல்லது வெறுமனே இலெளகீக வாழ்க்கையாயிருந்தாலும் சரி உடற்பயிற்சி நிச்சயம் உங்கள் குறிக்கோளை அடையப் பெரி தும் உதவும். ஏனெனில் அது உடலாரோக்கியத்தை மாத்திரமின்றி மன ஆரோக்கியத்தையும் வளர்க்கிறது. இரண்டையும் தொடர்பு படுத் திச் சுவாமி பின்வருமாறு கூறுகிறார்.
* உடல் நலனுக்காக உடற்பயிற்சிகளையும், யோகாச னப் பயிற்சிகளையும் செய்கிறோம். இது உலக வழக் கம். இந்த உடலுக்கு உடற்பயிற்சி, யோகாசனப் பயிற்சிகள் எவ்வளவு ஆதாரமான பாவனைகளோ, சத்சங்கங்களின் மகத்துவங்கள், நற்செயல்களின் நலன் கள் கூட வலிமையளிக்கக் கூடிய உணவாகின்றன? ே
94) (3 (AJ J 5 r 3 5JY Elb
யோகமும் யோகாசனமும் கீழைத்தேச சிந்தனை மரபில் குறிப்பிடத்தக்களவு வலியுறுத்தம் பெற்ற எண்ணக் கருத்துகளாகும். பதஞ்சலி முனிவரின் யோகசூத்திரமும், திருமூலரின் திருமந்திரமும் குறிப்பிடத்தக்களவு யோகாசனம் பற்றி விளக்கி நிற்கின்றன. இன் றுள்ள ஞானிகள், ஆன்மீக சிந்தனையாளர்களும் கூட யோகாசனம் பற்றி வலியுறுத்தி வருகிறார்கள்.
முன்கூறிய மேற்கோளில் ஆரோக்கிய வாழ்வில் யோகாசனத் தின் பங்கு பற்றி சுவாமி சுட்டிக் காட்டியுள்ளதை மனதிற் கொண்டு, யோகாசனத்தின் சில அடிப்படை நியமங்களைப் பார்க்கலாம்,
இன்று மேலைநாட்டு வைத்தியத்துறை சார்ந்த பல வைத் திய நிபுணர்களும் யோகாசனத்தின் நன்மை பற்றிப் புரிந்திருப்பது டன் நோயாளர்களுக்கும் சிபார்சு செய்கிறார்கள். நாரிப்பிடிப்பு, மூட்டு வலிகள், ஆஸ்த்மா, மன நோய்கள் போன்ற பல்வேறு நோய் களுக்கும் யோகாசனம் நல்ல பலனைத் தருகிறது.
ஆரோக்கிய வாழ்வு 9

Page 54
ᏑᏁ,ᏡᏁᎯᎪᏛᏁᎴᏉᎯᏁ ᎮᏙᏁᎲ ᎹᏁᏗ ᏑᏉᏁᏗ ᏑᏓᎴᏁ ᏑᎷᏁᎮᏖᎯᏈᏗ ᏑᎷᏁᏡᎯᏁ4 ᏑᏓᏁᎯᏡᏁᏗᏡᏁᏗᏈᏁᏗᏡᏁᎲᏡᏪᏈᎯᏉᏙᏁᏪᎹᏁᎯᏉᏁᏗ ᏡᏗᏁᎲ ᏑVᏁᏗ rvᏁᎯᏡᎯᏁᏗ ᏠᏁ2
ஆனால் யோகாசனத்தை வெறும் உடற்பயிற்சியாக எடுத்து விடமுடியாது.
'ஆசனங்களும், பிராணாயாமும் உள்ளுறுப்புகளைச் சீரிய முறையில் இயங்கச் செய்கின்றன. அவை உள் ளுறுப்புகளின் இயக்கத்திற்கு உயிரூட்டுகின்றன. நல்ல ஆரோக்கியம் இருந்தால் தான் வாழ்க்கைப் போராட் டத்தில் நாம் வெற்றிகாணமுடியும், கடவுளை உணர முடியும்' 8
என்று வைத்திய நிபுணராயிருந்து, சிறந்த ஆன்மீக சாதனை யாளராகவும், போதனையாளராகவும் மிளிர்ந்த சுவாமி சிவானந்தர் கூறியுள்ளார்.
யோகாசனத்தில் பலவித ஆசனங்கள் உண்டு. அதில் சூரிய நமஸ்காரம் என்பது ஒன்று. அது உடலின் ஒவ்வொரு உறுப்பிற்கும் பயிற்சி கொடுக்கும் சிறந்த ஒரு பயிற்சியாகும். சூரிய நமஸ்காரம் பற்றி சுவாமி சிவானந்தர் பின்வருமாறு கூறுகிறார்.
'உடலினைப் பேணும் பண்பாடு என்ற நிலையில் சூரிய நமஸ்காரத்திற்கு நிகரானது ஏதும் இல்லை. சூரிய நமஸ்காரம் என்பது தீவிரமான உடற்பயிற்சி, யோகாசனம், பிராணாயாமம், சூரிய ஒளி ஸ்நானம் ஆகியவை யாவும் இணைந்தது ஆகும்' "
நாம் தினமும் அதிகாலையில் சூரிய நமஸ்காரத்தை சில தட வைகளாவது செய்வது உடல் உள ஆரோக்கியத்தைப் பேண உதவும்
யோகாசனம் நாம் அமர வேண்டிய நிலை பற்றியும் சொல்லித் தருகிறது. எமது உடலாரோக்கியத்திற்கு மாத்திரமின்றி எமது ஆன்மீக சாதனைகளான பிராணாயாமம், தியானம், ஜபம் ஆகி யவற்றிற்கும் நாம் அமரும் நிலை முக்கியமானது.
92 E y சாயி காட்டிய
 
 

ᎮvᏁᎲᎹvᏁᎲᏈvᏁᎲᏑᏙᏁᎲᏡᏁᎲᎮᏉᏁᎲᏡᏙᏁᎲᏡᏪᏙᏡᏁᏗᏡᏁ4ᏡᏁᏗᏡᏁᎲᎮᏁᏁᎲᏡᏁᎲᎹᏙᏁᏗ?ᏁᏁᏗᏡᏁᎫᏡᏁ4ᏡᏁᏗ?ᏉᏁᏗᏡᏁᎯᏡᏁᏗ*ᏉᏁᎲ *ᏉᏁᏗᏡᏁᏗ ᏑᏙᏁᎲ
உடலாரோக்கியத்திற்கும், நாம் உட்காரும் நிலைக்குமுள்ள தொடர்பு என்ன ?
நாம் தொழில் செய்யும் போதும், ஒய்வாக உட்கார்ந்திருக்கும் போதும் எமது உடலின் நிலையில் (Posture) கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் தவறான நிலைகள் நோய்களுக்கு இட்டுச் செல்கின்றன. -
உதாரணமாக தட்டச்சு இயந்திரத்தில், அல்லது கொம்பியூட் டரில் தொடர்ந்து வேலை செய்பவர்களுக்கு முதுகு, தோள்மூட்டு ஆகியவற்றில் அடிக்கடி வலி ஏற்படுகிறது. அதேபோல் உட்கார்ந் திருந்து குனிந்து வேலை செய்யும் சுருட்டுத் தொழிலாளர், நகைத் தொழிலாளர் போன்றவர்களுக்கு நாரிவலி அடிக்கடி ஏற்படுகிறது.
உட்காரும் போது நாம் முதுகை வளைக்காது, நேராக உட் கார வேண்டும், கதிரையில் உட்காரும் போது முதுகை வளைக்காது நிமிர்ந்து முள்ளந்தண்டு கதிரையின் சாய்மனையில் படுமாறு உட்கார வேண்டும் முக்கியமாக கதிரையின் உட்காரும் பகுதியிலிருந்து 4 - 6 அங்குலத்திற்கு மேல் தொடங்கி முதுகின் நடுப்பகுதி வரையான முள்ளந்தண்டுப்பகுதி கதிரையில் படுமாறு உட்காருவது அவசியம்.
நவீன தளபாடங்கள் மிகத் தாழ்வாகவே இருக்கின்றன. இவை பொருத்தமானவையல்ல. பாதங்கள் நிலத்தில் படுமாறு நிமிர்ந்து உட்காரும் போது முழந்தாள்கள் செங்குத்தாக மடிந்திருக்குமேயா யின் அதுவே சரியான உயரமுள்ள கதிரை என்று சொல்லலாம்,
படுக்கும்போதும் நிமிர்ந்து படுப்பதே நல்லது,
'இளைஞர்களுக்கு நேராக உட்காருவது எப்படி என்று தெரியவில்லை. அவர்கள் உட்காரும் போது முதுகு வளைகிறது. இதனால் பற்பல உடற்துன்பங்கள் ஏற் பட்டு விரைவில் முதுமை அடைகிறார்கள். உட்காரும் போதும், நடக்கும் போதும் குச்சி போல நேராக இருக்க வேண்டும்' 5
മൃ300 കേധ ഖേ, S 93

Page 55
ᏈᏁᏗᎵᏖᏁᎲᎵᏈᏁ4ᎵᏉᏁᏗᏛᏁᏗᏑᏓᏁᏗᏛᏁᏗ fᏉᏁᎲᏑvᏁᏛᏉᏁᏗᏈᏙᏁᎲᏑᏓᏁᏗ ᏑᏙᏛᏁᎲᎮvᏁᎲᏛᏖᏁᎲᏡᎯᏈᏗᏑvᏁᎲᏑvᏛᏗᏑᏙᏁᎲᏑᏙᏁᏗᏈᏙᏁzᎵᏉᏁᎲᏛᏁᏁᏗᎵᎪᏁᏗ ᏑᏓᎴᏊᏡᎫᏡᏗ
பகவான் கூறுவது போல் நிமிர்ந்து உட்காருவதன் மூலம் நாரி, முள்ளெலும்பு சம்பந்தமான நோய்களும், வலிகளும் ஏற்பட மல் தடுக்கலாம்.
முள்ளந்தண்டு ഖഒ് ഞെurഥഒ நிமிர்ந்து உட்காருவதற்கான மூன்று முக்கிய முறைகளை யோகாசனம் எமக்குச் சொல்லித் தருகிறது. பத் மாசனம், சித்தாசனம், வஜ்ராசனம் ஆகியவையே அவை.
பத்மாசனம் பலரும் அறிந்த ஒன்றே. இரண்டு கால்களையும் நீட்டி அமர்ந்த பின் வலது காலை மடக்கி இடது தொடையின் மேல், குதிக்கால் அடிவயிற்றில் படுமாறு வைக்க வேண்டும். பின்பு இடது காலையும் அதேமாதிரி மடக்கி வலது தொடையின் மேல் வைக்க வேண்டும். இப்படி அமரும் போது முதுகு நிமிர்ந்து அழ காகவும் நேராகவும் இருக்கும்.
சித்தாசனம் பத்மாசனத்தை ஒத்த ஒன்றே; ஆயினும் சற்று இலகுவானது. வலது காலை மடக்கிக் குதியை மூலத்திற்கும் மர்மஸ் தானத்திற்கும் இடையில் வைக்க வேண்டும். பத்மாசனத்தில் குதிக் கால் சற்று உயர்வாக அடிவயிற்றில் படுமாறு வைக்கப்படுகிறது என் பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். பின்பு இடதுகாலை வலது குதிக்காலுக்கு மேல் வைத்து நிமிர்ந்து இருக்க வேண்டும்.
வஜ்ராசனம் மிகவும் இலகுவானது. வயதானவர்களும் நோயுற் றவர்களும் கூடச் செய்யலாம். நீங்களும் தியானம், ஜபம் செய்யும் போது வஜ்ரா சனத்தில் இருப்பது எளிதாயிருக்கும். வஜ்ராசனத்தின் போது முழங்கால்களை, முட்டுக்கால்களில் நிற்பது போல பின்னால் மடக்கி, பாதங்களை நீட்டி கணுக்காலிலும் கீழ்க்காலிலும் பாரம் பொறுக்குமாறு உட்கார வேண்டும் முதுகு நிமிர்ந்தபடி உட்கார வேண்டும்.
இம் மூன்று ஆசனங்களிலும், முள்ளந்தண்டு தனது இயல்பான வளைவுகளுடன் நிமிர்ந்தபடி உட்கார உதவுகிறது என்பதே முக்கிய அம்சமாகும். இதனால் முள்ளந்தண்டு சம்பந்தமான நோய்களும் வலி களும் ஏற்படாமல் தடுக்க முடியும். سب سے
94三 Y. + Tധി 50 (U

ScMLc Accc cceMe eLccESELeceAceLc ccac ccccMLL SeL SMeLeeSEEcccLcLeLcLcLecee SeMc eceLeLeLe ceES cLLe eeSeee ceELS eeeS e LLL ekeM eEES AeeS
ஆசனங்களை நூல்களைப் படித்துவிட்டு தாமாகவே செய்ய ஒருபோதும் முயற்சிக்கக் கூடாது. ஏனெனில் அவற்றைச் சரியான முறையில் செய்யாவிட்டால் விரும்பத்தகாத விளைவுகளும் ஏற்பட லாம். எனவே அவற்றைக் குருவின் துணை கொண்டே பயில்வதே சிறந்தது.
எனவேதான் பல்வேறு ஆசனங்கள் பற்றியும், ஆசனங்களை
செய்யும் முறை பற்றியும் இங்கு விரிவாகக் கூறவில்லை.
*பத்மாசனம், ஸ்வதிகாசனம், ஜப்பான் போன்ற
நாடுகளில் பிரபலமாக உள்ள வஜ்ர சனம் - இப்படிச் சில ஆசனங்கள் தியானத்துக்காகவே உள்ளன. நேராக உட்கார வேண்டும். அதாவது முதுகு நேராக இருக்க வேண்டும். இப்படி ஆசனமிட்டு அமர்ந்து பிரானா யாமம் செய்யும் போது மனம் கட்டுப்படுகிறது, ஒர் இடத்தில் மனத்தை நிறுத்தி அமைதி பெறமுடி யும் 8
என சென்னை கிருஷ்ணமாச்சாரியார் யோக மந்திரத்தின் தலைமை யோகாசன நிபுணர் டி. கே. வி தேசிகர்ச்சாரி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
3) E IL I u II GAT 5) u II L )
எமது உடல் பருமனாக இருப்பதற்கும், அல்லது சாதாரண மாகவோ, மெலிவாகவோ இருப்பதற்குக் காரணம் எமது வாழ்க்கை முறைதான். ஒரு காலத்தில் கொழுத்த புஸ்டியான உடம்பு உடல் ஆரோக்கியத்துடனும், உடல் அழகுடனும், செழிப்பான வாழ்க்கைத் தரத்துடனும் தொடர்புபடுத்தி வரவேற்கப்பட்டது. ஆனால் இன்றோ கொழுத்த உடம்பு நோய்களுடன் தொடர்புபடுத்தப்படுவதால் பயப் படும் அம்சமாகிவிட்டது.
கொழுத்த உடம்பு பல்வேறு நோய்களுக்கும் காரணமாகிறது. தற்காலத்தில் பரவலர்யிருந்து, மரணங்களின் முக்கிய காரணமாகிற
ஆரோக்கிய வாழ்வு

Page 56
ᏑᏙᏁᏗ ᏑᏙᏁᏗ °ᏉᏁᏗᏎᏉᏁᏗ ᏑᏉᏁᏗᎴᏉᏁᏗᏈᏉᏁᏗᎴᏙᏁᎲᎵᏙᏁᏗ ᏠᏁᏗᏡᏁᎲᎹᏙᏁᏗᏡᎯᏉᏗᏡᎯᏖᏗᏛᏙᏁᏗᏡᏗᏡᏗᏁᏁᏗ "ᏉᏁᏗ ᏠᏁᏗᏡᎯᏉᏗᎹᏙᏁᎲᏉᎯᏙᏡᏙv 'ᏉᏛv 'ᏙᏁᏗᏉᏗᏉᏗ
நீரிழிவு, உயர் இரத்த அமுக்கம், இருதயநோய்கள், மாரடைப்பு போன்ற நோய்களுக்கும், கொழுத்த உடலுக்கும் நெருங்கிய தொடர் பிருக்கிறது. அவர்களது இரத்தத்தில் பொதுவாக கொலஸ்டரோல் என்னும் கொழுப்பு அதிகமாயிருப்பதும், அதன் காரணமாக கொழுப்புப் படிந்து இரத்தக் குழாய்கள் சுருங்குவதுமே மாரடைப்பு, பாரிசவாதம் போன்ற நோய்களுக்குக் காரணமாகிறது.
பித்தப்பையில் கற்கள், கால்களில் இரத்த நாளப்புடைப்பு ( Wari008e Veins ), வயிற்றறைக்கும் நெஞ்சறைக்கும் இடையில் தோன்றும் ஹையட்டஸ் ஹேர்ணியா, முழங்கால்களிலும் இடுப்பு மூட்டுக்களிலும் எலும்புத் தேய்வினால் ஏற்படும் வாதம், தோலில் அடிக்கடி ஏற்படும் தொற்று நோய்கள் ஆகியவற்றுக்கும் கொழுத்த உடம்பிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.
கட்டான உடலைப் பேணுவது எப்படி?
* கொழுத்த குழந்தைகள் கொழுத்த மனிதர்களாகவே வளர்கிறார் கள். எனவே உங்கள் குழந்தை கொழுப்பாக மாறாத விதத்தில் அதன் உணவு முறையைச் சீர்படுத்துங்கள். ஐஸ்கிரீம், இனிப்புக் கள், பொரித்த உணவுகள், மாமிசம் ஆகியவற்றை குறைத்து பழங் களையும், காய்கறிகளையும் அதிகம் கொடுங்கள்.
* உணவுக்கு இடைப்பட்ட நேரத்தில் சிற்றுண்டிகளைக் கொறிப்ப தையும், இனிப்புப் பானங்களை அருந்துவதையும் தவிர்த்தல் வேண்டும். இவற்றிக்குப் பதிலீடாக மோர், பழச்சாறு, கஞ்சி போன்றவற்றை உட்கொள்ளுங்கள்.
* உணவில் கொழுப்புப் பதார்த்தங்களை அளவோடு சேருங்கள்
பட்டர் , வெண்ணெய், நெய், தேங்காயெண்ணெய் யாவும் கொழுப்பு மிகையாக உள்ள பதார்த்தங்களே. (கொழுப்புத் தொடர்பான விடையங்களை 3-ம் அத்தியாயத்தில் பார்க்கவும் )
* நார்ச்சத்து அதிகமுள்ள பழங்கள், காய்கறிகள் , தானியங்கள்
ஆகியவற்றை உங்கள் உணவுக்காகத் தேர்ந்தெடுங்கள்.
96 E w | 3 (Ταύ. 3/7 ( ως αν
 

ཞིའི་
MM M AMLL S MAM eeeLSeeeeLeM keLeLMMS eeLcSMM MMMMMMMMMS ecM cLAeLcLeLMSLcLAcMcASeS ceASLLcAeAeS SLLLLLAScLcAcAeAM LALAee ecAeAeAeAeeAL AeAeAeAS Se eM
* உணவின் அளவில் கட்டுப்பாடாக இருங்கள் ருசியாக இருக்கிற தென அதிகமாக உண்டால் எடையைக் கட்டுப்படுத்தவே முடி
LLIT gJ.
* தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்.
சோம்பேறியாக இருக்காது உற்சாகத்துடனும், உடலுழைப்
புடனும் கூடிய வேலைகளில் ஈடுபடுங்கள்.
உடல் எடையைக் கட்டுப்படுத்துவதற்கு சுவாமி மிகுந்த முக்கியத்துவம் காட்டுகிறார். அதனால்தான் அன்றும் இன்றும் அவர் இளமையாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கிறார்"
ஸ்வாமிக்கு வயது 68. நம்பினால் நம்புங்கள், ஸ்வா மியின் எடை கடந்த 54 வருடங்களாக அதே 108 பவுண்டுதான். ஒருமுறை கூட 109 ஆனதில்லை 107க்கு இறங்கியதுமில்லை. இத்தகைய கட்டுப்பாட்டை நீங் களும் பெறலாம். இதன் மூலம் ஆரோக்கியமான வாழ்வு வாழலாம்' 7
எனத் தன்னையே உதாரணம் காட்டுகிறார். அவரது வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்தால் நாமும் ஆரோக்கியமாக வாழலாம்.
உங்கள் எடை எவ்வளவு இருக்க வேண்டும்?
உங்கள் எடை அதிகமானதா , சாதாரணமானதா என எவ்வாறு அறிவது? தக்காளிப்பழம் போல் உருண்டு திரண்டு இருப்பவர் களையும் என்ன மெலிந்து விட்டீர்களே என்று கேட்பது எமது மக்களின் வழக்கம். எனவே மற்றவர்களின் நாகரீக விமர்சனங்களை சரியான கருத்துக்களாகக் கொள்ளாதீர்கள். உங்கள் கண்ணாடி கூட உங்களை ஏமாற்றி விடலாம். விஞ்ஞான பூர்வமான அணுகுமுறையே ஏற்றுக் கொள்ளக் கூடியது.
மிகச் சிக்கலான பல அட்டவணைகள் இருக்கின்றன. ஆயினும் இலகுவில் நீங்கள் அறிந்து கொள்ளக்க டிய மிகச் சுலபமான
ஆரோக்கிய வாழ்வு E 97

Page 57
ᏠᏁᏗ ᏑᏓᏁzᏡᎯᏙᏗᏡᏁᎲᏡᏁᏗᏡᏁᎲᏡᏉᏁᏗᏡᏁᏗᏡᏁᎲᏡᏁᏗᎵᏙᏁᎴᏡᏁ4ᏡᏁᎲᏡᏁᎴᏡᏁ ᏉᏙᏁᏗᏉᏁᎲ*ᏙᏛᏓᏡᏁᏗᏡᏁᏗᏡᏁᏗᏉvᎴvᏁᎮvᏁᏗrvᏁᏗ ᏛᏙᏛᎲ
ஒரு முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க உங்கள் எடை எவ்வளவு இருக்க வேண்டும் என நீங்களே கணித்துக் கொள்ளலாம் ஆண்கள்
5 அடி அல்லது 150 செ. மீ உயரமாயின் 110 இறாத்தல் 50 கிலோ கிராம். அதற்கு மேல் ஒவ்வொரு அங்குல உயரத்திற்கும் 5 இறாத்தல் கூட்டுக்கள்; அல்லது ஒவ்வொரு சென்டி மீட்டருக்கும் 23 கி.கி கட்டுக்கள்.
உதாரணமாக உங்கள் உயரம் 5 அடி 4 அங்குலமாயின் 110 + (5 x 4) = 130 இறா. அல்லது உங்கள் உயரம் 155 செ. மீட்டராயின் 50 + ( 5 x 2 3) - 6 1.5 கி. கிரா. 6ിUn7567
5 அடி அல்லது 150 செ. மீ உயரமாயின் 100 இறா/45, 5 கி. கிரா. அதற்கு மேல் ஒவ்வொரு அங்குலத்திற்கும் 5 இறா அல்லது ஒவ்வொரு செ. மீ. க்கும் 2 3 கி. கிரா,
மேற்கூறியது வளர்ந்தவர்களுக்கானது. குழந்தைகளுக்கும் வளரி ளம் பருவத்தினருக்கும் வெவ்வேறு அட்டவணைகள் உண்டு. அவர் களது நிறையை அறிய உங்கள் வைத்தியரை அணுகுங்கள்.
F) ) i II b hI & H (s f
ஒருவனது ஆரோக்கியத்திற்கு உழைப்பு எவ்வளவு முக்கியமா னதோ, அதேபோல் ஒய்வும் முக்கியமானதே. வேலையினால் உட லுக்கும் மூளைக்கும் ஏற்படும் களைப்பை நீக்கி மீண்டும் புத்துணர்ச் சியை ஏற்படுத்துவது ஒய்வுதான். ஆனால் வேலைவெட்டியின்றிச் சோம்பலாகப் படுத்துக் காலத்தைக் கழிப்பதை ஒய்வுடன் ஒப்பிடக் கூடாது; அது வெறும் சோம்பேறித்தன்மை தான்.
இயந்திரங்கள் கூட தொடர்ச்சியாக இயங்க முடி யாது. அவற்றிற்கும் ஒய்வு தேவை எனவே மிக நுணுக்கமாக அமைக்கப்பட்ட மனித உடலுக்கும் -9| 5/ * : $.
9:0 (ി 47 ("ശ്ശ്ശ
98

y
ᏤᏁᏁᏗᏡᏁᎲᎮvᏁᏗᏡᏁᎲᎵᏉᏁᎲᏡᏁᎵᏙᏁᎲᏑᏙᏁᎲᏡᏁᏗᎮᏙᏁᎲᏡᏁv*ᏙᏁᎲᏉᏁᏁᏗᏡᏁᎲᏁᏁᎲᏁᏁvᎮᏙᏁᎲᏁᏁᏗᏡᏁᏗ ᏁᏁᎫᏡᏁᏗ ᏑᏙᏁᏗᏈᏙᏁᎲ*ᏙᏁᎫᏡᏁᎲᏡᏁᏗ
என பகவான் ஒய்வின் முக்கியத்துவத்தைப் பற்றிக் கூறுகிறார். இயேசு கிறிஸ்துநாதர் ஒய்வின் முக்கியத்துவத்தை உணர்ந்ததினா லேயே 2000 ஆண்டுகளுக்கு முன்பே ஞாயிற்றுக்கிழமையை ஒய்வு நாளாகப் பிரகடனப்படுத்தினார்.
இன்றைய அரசாங்கங்களும், கல்விஸ்தாபனங்களும் ஒய்வின் முக்கியத்துவத்தைப் புரிந்துள்ளன. அதனால்தான் தொழில் புரி வோருக்கு வார இறுதிநாள் ஒய்வு தினங்களாகக் கொடுக்கப்படு கின்றன. மாணவர்களுக்கு அத்துடன் தவணை ஒய்வும் கொடுக்கப் படுகின்றன.
"ஒய்வு என்றால் என்ன? சும்மா படுத்திருப்பதா
ஒய்வு? இல்லை சுவாமி சொல்கிறேன் வேலை மாற்றமே
ஒய்வு' 9
என்று சுவாமி செர்ல்வது முக்கியமானதொரு கருத்தாகும்.
நீங்கள் கடும் உடல் உழைப்பாளராய் இருந்தால் படம் அல்லது நாடகம் பார்த்தல், நூல் வாசித்தல், நுண்கலைகளில் ஈடு படுதல் போன்ற மனத்தோடு தொடர்புடைய பொழுதுபோக்கு நல்ல ஓய்வாக அமையும். மாறாக கடும் மூளை அல்லது மன உழைப்பு உங்களது தொழிலாக இருந்தால் தோட்டவேலை, தச்சு வேலை, உடற்பயிற்சி, கடுமையான விளையாட்டு போன்றவை உங் களுக்கு ஒய்வாகலாம்.
ஒய்வு என்பது நீண்ட நேரம் எடுக்க வேண்டியது என்பதும் அர்த்தமல்ல, கடும் மூளை உழைப்பாளிகள் மணித்தியாலத்திற்கு ஒரு முறை ஐந்து நிமிடம் குட்டித் தூக்கம் கொள்வது அல்லது மன அமைதியுடன் ஒய்வு எடுப்பது அவர்களுக்கு நல்ல பலனைக் கொடுக் கிறது என்று சில விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
'இருதயம் மனிதர்களுக்கு ஒரு முக்கிய பாடத்தினைக் கற்பிக்கிறது, அது ஒய்வு ஒழிச்சலின்றித் தொடர்ச்சி யாக துடித்தியங்குவதாக எமக்குப்படுகிறது, ஆனால் உண்மையில் ஒரு துடிப்பிற்கும் அடுத்த துடிப்பிற்கும்
ஆரோக்கிய வாழ்வு 三99

Page 58
MeMeEeMe MLSS eMLeMMeM eLeLe MLM cMeS LeELEMeLeLeM eLeeLeMMLMM eSeS S cLSeLecLe eccccceMecccMccc ecccc cccccceLeL eLeLe J e J S
இடைப்பட்ட குறுகிய நேரத்தில் ஒய்வு எடுத்துக் கொள்கிறது. வேலை செய்யும் போது கூட எவ்வாறு ஒய்வு எடுத்துக் கொள்ளலாம் என இருதயம் எமக்கு "கற்பிக்கிறது.
இதனால்தான் “வேலை மாற்றமே ஒய்வு என நான் அடிக்கடி சொல்வதுண்டு' 19
இருதயத்தை உதாரணம் காட்டி பகவானும் அதே கருத்தை வலியுறுத்துகிறார்.
ஒய்வின் ஒரு முக்கிய அம்சம் துரக்கம், விலங்குகளின் உடல் உள ஆரோக்கியத்திற்குத் தூக்கம் அத்தியாவசியமானது. அதனால் தான் எல்லா விலங்குகளுமே நித்திரை செய்கின்றன.
பச்சிளம் குழந்தைகள் நாளாந்தம் ஒரு மணி நேர முழிப்பிற்கு இரண்டு மணி நேரம் தூங்குகின்றனர். ஆனால் வளர்ந்தவர்கள் ஒரு மணி நேர முழிப்பிற்கு அரைமணி நேரமே தூங்குகிறார்கள்.
- நித்திரையின் போது உடலின் வெளி உறுப்புகள் இயக்கமின்றி இருக்கின்றன; ஆனால் உள்ளுறுப்புக்கள் இயங்கிக் கொண்டே இருக் கின்றன. நித்திரையின் போது தசை நார்கள் தளர்ச்சியடைகின்றன: இருதயத் துடிப்பின் வேகம் குறைகிறது; இரத்த அமுக்கம் குறை கின்றது. சுவாசம் ஆழமாகவும், ஒழுங்காகவும் நடைபெறுகிறது.
மூளையைப் பொறுத்தவரையில் அது இயங்கிக் கொண்டே இருக்கிறது. தூக்கத்தின் போது கண், காது, மூக்கு, நாக்கு, சர்மம் போன்ற புலன்களிலிருந்து செய்திகளும், சமிக்கைகளும் மூளைக்குக் கிடைக்காதிருப்பதால் மூளையின் நினைவு நிலை செயலற்ற தாக்கப் படுகிறது. ஆயினும் மூளையினுடைய செயற்பாடுகளும், அது சக்தியை உபயோகிக்கும் அளவும் விழிப்பு நிலையில் உள்ளது போலவே இருக்கிறது.
எனவே தூக்கம் என்பது மூளையின் ஒய்வு நேரம் அல்ல. உண் மையில் அன்றைய தினம் நடந்த நிகழ்வுகளும், தகவல்களும் சரியான
{00 E ά η κρύο 27, 20
 

ᎤvᏁᏗ ᎮᏉᏁᏠᏗ ᏁᏁᏛᏉᎯᏁᎲ*ᏠᏁᏠᏗᏡᏉᏛᏠᏗ ᏧᏉᏁᎯ ᎵᏉᏁᏗ ᎤᏙᏁᎲᎮᏉᏛᏖᏗᏡᎯᏈᏗ ᏑᎷᎯᏉᏗ ᎮᎸᏁᏡᏁᎴᏡJᏁᎲᏑᎷᏁᏗ ᏡᏁᎲᏡᎯᏡᎲᏡᏁᎯ ᏡᎯᏉᏗ °ᏁᎲᏡᏁᎲ ᏑᏉᏁᎸᏗ ᎮᏠᎯᏉᎯ ᏡᏁᎯ ᎪᎯᏉᎯ
முறையில் தரம் பிரிக்கப்பட்டு ஞாபகத்தில் சேர்த்து வைக்கப்படுகிறது. எல்லாமே புது அனுபவங்களாகவும், புதிய தகவல்களாகவும் இருப்ப தால் குழந்தைகளுக்கு அவற்றை நித்திரையில் ஒழுங்குபடுத்தி ஞாபகத்தில் சேர்க்க அதிக நேரம் தேவைப்படுகிறது, எனவே அவர்கள் நீண்ட நேரம் தூங்குகிறார்கள்.
வயதானவர்களுக்கு பெரும்பாலான அனுபவங்களும் தகவல் களும் பழக்கப்பட்டமையாக இருப்பதால் குறைந்த நேரத்திலேயே ஒழுங்கு படுத்த முடியும், எனவே குறைந்த நேரமே தூங்குகிறார்கள்
உங்களுக்கு எவ்வளவு நேரம் நித்திரை தேவை?
உங்களது வயது, வாழும் முறை, தொழில், மரபு வழிசார்ந்த உங்களது உடலமைப்பு யாவுமே அதைத் தீர்மானிக்கின்றன. எனவே மனிதர்க்கு மனிதர் அது மாறுபடலாம். ஆனால் பொதுமைப் படுத் தப்பட்ட அட்டவணையாக கீழேயுள்ளதைக் கூறலாம்.
ஒரு வயதிற்குள் 16-20 மணி நேர நித்திரை 1-3 வயது வரை 12-14 , ,
23.
4-8 , , I 2 p. p. 3 6-12 , , II. * 。 12-14 , , IO 15-20 , , 9 为 * ஏனையோருக்கு 7.8 2 9 y
இது மிகவும் பொதுமைப்படுத்தப்பட்ட அட்டவணையே பல ருக்கு இதைவிடக் குறைந்த நித்திரையே போதுமானது.
ஆனால் எமது மாணவர்கள் மிகக் குறைந்தளவு நித்திரையே கொள்கிறார்கள், சிலர் பரீட்சைக் காலங்களில் 4-5 மணி நேரம் கூடத் தூங்குவதில்லை என்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இது மிகவும் தவறானது. ஏனெனில் படிக்கும் போது நிறையத்
ஆரோக்கிய வாழ்வு E 101

Page 59
"ᏙᏁᎲᏡᏁᏗᏑᏙᏛᏁᎯᎵᏙᏁᏗᏃᎪᏁᎲᏈᏙᏁ,ᏡᏁᏡᏁᏗᏡᏁᏗᏛᏙᏁᎯᎵᏙᏁᎮᏙᏁᎲᏡᏁᎯᏡᏁᏗᏉᏙᏁᎯᏡᏁᏗᏡᏁᏗ ?ᏙᏁᏗᏡᏁᎲᏑᏙᏁᎯᏡᏁᎯᏡᏁᏪᎵᏙᏁᏗᏡᏉᏁᎯᏡᎷᏁᏗᏉᏙᏁᎯ
தகவல்களை அவர்கள் ஞாபகத்தில் சேமிக்க வேண்டியுள்ளதால் அதற் கேற்ற அளவு துரங்கவேண்டும். இல்லையேல் அவை மூளையின் ஞாப கப் பகுதியில் சேமிக்கப்படாது வியர்த்தமாகிவிடும்.
நித்திரையின் ஒரு முக்கிய அமிசம் கனவுகள் ஒவ்வொரு இர வும், ஒவ்வொருவரும் நான்கு அல்லது ஐந்து தடவைகள் கனவு காண்கிறோம். ஒரு இரவில் எல்லாமாக சுமார் ஒன்றரை மணி நேரம் கனவு காண்கின்றோம். ஆயினும் பெரும்பாலானோருக்கு அவை நினைவில் நிற்பதில்லை. நான் கனவே காண்பதில்லை என நிச்சயமாகக் கூறுபவர்கள் கூட கனவு காண்கிறார்கள் என்பது விஞ் ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தினமும் ஒரளவு கனவு காண்பது மனிதனுக்கு அவசியம் என்பதும் நிரூபிக்கப்பட்டுள் ளது. ஒரு இரவில் ஒரு மனிதன் கனவு காண ஆரம்பிக்கும் ஒவ்வொரு தருணத்திலும் அது விஞ்ஞான முறைகளில் அறிந்து தடுக்கப்பட்டால் மறுநாள் அவன் மிகவும் சோர்வுற்றிருப்பான். மறுஇரவு முன்னை நாளுக்கு ஈடு கொடுக்குமாற் போல் அதிக கனவுகள் காணுவான். ஆனால் தெர்டந்து 2,3 நாட்களுக்கு அவனது கனவுகள் முற்றாகத் தடுக்கப்பட்டால் அவன் மனநிலை குழம்பும் என்பது தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
எனவே எல்லோரையும் போலவே எமக்கும் நித்திரையும், கனவுகளும் மிக அவசியமே. எனினும் பகவான் சத்யசாயி பாபாவின் பக்தர்களாகிய எங்களுக்கு கனவுகள் அதிக முக்கியமுள்ளவையாகவும், ஆழ்ந்த அர்த்தம் பொதிந்தவையாகவும் திகழ்கிறது. ஏனெனில் மக் களைத் தன் பக்தர்களாக மாற்றவும், பக்தர்களைத் தேற்றவும், அறிவுறுத்தவும், அமைதிப்படுத்தவும், எச்சரிக்கவும் பாபா கனவுகளில் தோன்றுகிறார்.
பக்தர்களுக்கு உதவுவதற்காக அவர் எவ்வாறு கனவுகளைப் பயன்படுத்துகிறார் என்பதற்குப் பல உதாரணங்களை புத்தகங்களில் மாத்திரமின்றி நாம் நேரே சந்திக்கும் பலரது அநுபவங்களிலும் காண்கிறோம்.
ஆயினும்,
102 E w ക0 (ി ക0 ( (gധ
 

- ᏗevᏁᏗᎴvᏁᏗᏎᏖᏛᏗᎴᏙᏁᏗᏑVᏁᏗ ᏑᏙᏁᏗᎵᏙᏁ2ᎵᏙᏁᏗᏉᏁᏪᎵᏙᏁᎲᏡᏁ,ᏡᏁᏗᏈᏉᏁᏗᏡᏁᏪᏡᏁᏗᏉᏁᏗᏡᏁᏗᏡᏁᏗᏡᏁᏗᏡᏁᏗᏡᏁᏗᏡᏁᏗᎹᏙᏁᏪᎹᏙᏛᏙ ᏑᎯᏖᏗ
'நான் விரும்பும் பொழுதுதான் நீங்கள் என்னை
உங்களின் கனவுகளில் காண முடியும்' 11
என்று பகவான் கூறியதையும் மறந்து விடக்கூடாது.
'பாபா சொல்வதை நான் கேட்டிருக்கிறேன். பாவம் அவன் போகும்போது கனவிலேனும் என் தரிசனம் கிடைக்க வேண்டும் என்று வேண்டினான். அவனுக்கு அவ் வாய்ப்பினைக் கொடுக்க வேண்டும் என்று கூறு வதையும், "நான் அடுத்த வியாழக்கிழமை உன் மகன் கனவில் தோன்றுவேன்' என்று ஒருவரிடம் கூறுவ தையும் கேட்டுள்ளேன்.
சிலரிடம் என்னை அனுப்பி பாபாவை நேற்று உன் கனவில் பார்த்தாயா என்று கேட்குமாறும் கூறுவார். நிச்சயமாக பாபா அவரது கனவில் நிச்சயம் தோன் றித் தன் தரிசனத்தையும் ஆசீர்வாதத்தையும் அளித் திருப்பார் அந்த அனுபவத்தை அதற்குள் மறந்துவிட முடியுமா? பாபா சிலருடைய கனவில் தோன்றி ஆன் மீக சாதனத்திற்கான உபதேசங்களையும் அருளியுள் GTTfi ...... ° 12
விஞ்ஞானத்தால் இன்னமும் சரிவரப் புரிந்து கொள்ள முடி யாத நித்திரையையும், கனவுகளையும் பரம்பொருளான பகவான் சத்ய சாயி பாபா எமது மகிழ்ச்சிக்காக மாத்திரமின்றி எமது ஆன்மீக முன்னேற்றத்திற்காகவும் எவ்வாறு பயன்படுத்துகிறார் என்பதை திரு. கஸ்தூரி அவர்கள் மேலே கூறிய வாசகத்திலிருந்து தெளிவா கப் புரிந்து கொள்ளலாம்.
மனிதனைப் பொறுத்தவரையில் அவன் உணவில்லாமல் 40 நாட்கள் வரை வாழலாம்; நீரின்றி ஒரு வாரம் வரையில் வாழலாம். ஆனால் தூக்கமின்றி மூன்று நாட்கள் கூட இருக்க முடியாது. இது ஒய்வின் காத்திரத்தன்மையைத் தெளிவாகப் புலப்படுத்துகிறது.
ஆரோக்கிய வாழ்வு 三f{3

Page 60
ᏑᏓᏁᏗᏁᏁᎲᏉᏁᏗᏉᏁᏁᏁᏗᏁᏁᏗᏁᏁᏗᏁᏁᎲᏡᏁᎲᏉᏁᎲᏁᏁᏗᏈᏁᎲᏉᏁᏗ ᏉᏁᎲᏁᏁzᏡᏁzᏉᏁᎴ ᏉᏁ4 ᏙvᏉᏁvᏉᏁᎲ ᏡᏁᎲᏉᏁᏓᏁᏁᎴ ᏁᏁᎲᏉᏁᏗ
9.) II). D. Sul (? É GB31 al a j ) ) is.
'சிலர் சொல்கிறார்கள் "ஸ்வாமி எங்களுக்கு வயதாக ஆக எங்கள் ஞாபக சக்தி குறைகிறது' என்று. இதை ஏற்றுக்கொள்ள மாட்டேன்; வயதுக்கும் ஞாபகசக்திக் கும் சம்பந்தமில்லை. அது மனதின் இயற்கையைப் பெர்றுத்தது வயதைப் பொறுத்ததல்ல. வயதுக்குத் தகுந்த படி எண்ணங்கள் வேண்டுமானால் மாற @厅ü””1宇
இன்று வயதானவர்கள் மாத்திரமின்றி, மாணவர்களும் கூடத் தமக்கு மறதி அதிகரித்துவிட்டது எனக் கூறுகிறார்கள்; படித்தது மறந்துவிட்டது என்கிறார்கள்.
வயது அதிகரிக்கும் போது, மனிதர்களுக்கு இரண்டு விதமான மாற்றங்கள் ஏற்படலாம். வயது அதிகரிக்கும் போது உடற் தொழிற் பாட்டு ரீதியாக உடலும் உள்ளமும் தளர்வடைவது இயற்கையானதே இதில் மனநிலையும், நினைவாற்றலும் பெரிதும் பாதிக்கப்படாது. இதனை முதுமைக் கூர்வு (Senescence) என்று கூறுவர். இதற்கு மாறாசனது முதுமை நொய்வு (Sereli). இது ஒரு நோய். இங்கு மனநிலை கடுமையாகப் பாதிக்கப்படும். கடுமையான மறதியும் ஏற்
படும் ,
நினைவு என்றால் என்ன?
ஒரு கருத்து, எண்ணம் அல்லது நிகழ்ச்சியைப் பற்றிய அறிவு டன், நாம் அதை முன்பே அறிந்தோ அனுபவித்தோ இருக்கிறோம் எனும் வேறொரு உணர்ச்சியும் நம் உள்ளத்தில் ஏற்படுதலே நினைவு என்கிறோம். எனவே மறதி எனும் போது ஏற்கனவே கற்ற ஒரு விடையத்தை பின்னொரு சமயத்தில் நினைவுகூரத் தவறுவதைக் குறிக்கும்.
மறதிக்குப் பல காரணங்கள் கூறப்படுகிறது.
மூளையில் உள்ள நினைவுச் சுவடுகள் காலம் செல்லச் செல்ல மறந்து விடுகின்றன. எனவே நாம் கற்றவற்றையும் அனுபவித்தால்
104 = Y சாபி காட்டிய
 

ᎵᏙᏁᎴᏙᏁᏗᎴᏙᏁᏗᏉᏁᎲ ᏛᏠᏁᏗᏡᏁᏗᏉᏁᏪᏎᎷᏁᏗᎹᏙᏁᏉᏙᏁᏪᎵᏙᏁ4ᏡᏁᏗᏡᏁᎯᏡᏁᏪᏉᏙᎯᏁᏪᎵᏙᏁᏪᏙᏁᏪᏉᏁᎯᏡᏁᏪᏡᏁᏪᏠᏁᏪᏡᏁᎯᏉᏙᏁᏗᏡᏁᏪᏈᏙᏁᏗᏑᏓᏁᎯ
உணர்ந்தவற்றையும் மீண்டும் பயிற்சி செய்வதன் மூலமும், மீளப் பயன்படுத்துவதன் மூலமும் மறக்காமல் நினைவிலிருத்தலாம். வேறு பட்ட மனநிலையில் இருக்கும் போதும் சில விடயங்கள் திடீரென ஞாப கத்திற்கு வராமல் போகலாம். அச்சம், சினம், துன்பம் போன்ற தீவிர மனநிலைகளும் கூட மறதிக்குக் காரணமாகலாம்.
சூழ்நிலை காரணமாகவும் மறதி ஏற்படலாம். உதாரணமாக பரீட்சைக்குப் படித்திருக்கும் மாணவன்கூடத் தோல்வியடையலாம். இதற்குக் காரணம் பரீட்சை மண்டபத்தில் நிலவும் பதட்டநிலை கலந்த சூழலாகும். மன அமைதியின்மையும், தன்னம்பிக்கையின்மை பும்கூடக் காரணமாகலாம்.
மறதியென்பது பொதுவாகக் கற்றலுக்கும், நினைவு கூர்தலுக் கும் எதிரானது எனலாம். பெரும்பாலும் அவசியமற்றவை மறக்கப் படுகின்றன. அத்துடன் ஆர்வமின்மையும், அக்கறையின்மையும் மறதிக் குக் காரணமாகின்றன. மாறாகக் கற்றபின் ஒய்வும் தூக்கமும் நினைவில் வைத்திருக்க அதிக வாய்ப்பளிக்கிறது.
மறதியை ஒரு தீங்கான விஷயம் என எப்பொழுதும் கருதுவதும் தவறானது. வீண் சுமை, அவமானங்கள், துன்பநினைவுகள் போன்ற வற்றை மறப்பது நல்லது தானே. அதனால் மன அமைதி கிடைக்கு மல்லவா?
நினைவாற்றலை வளர்த்துக் கொள்வது எப்படி? நினை வாற்றல் என்பது மூன்று அம்சங்களைக் கொண்டது. அவையாவன,
1. மனதில் பதித்தல் (Registration) 2. Jiao)6OTo5ācij36i) (Retention) 3. மீள நினைத்தல் (Recal)
இவற்றை எவருமே பயிற்சிகள் மூலம் வளர்த்து தமது நினை வாற்றலை அதிகரித்துக் கொள்ளலாம். சில உடல் நோய்களிலும், மன நோய்களிலும் மறதி ஒரு அறிகுறியாக இருக்கலாம். ஆனால் ஆரோக்கியமான ஒருவருக்கு மறதி ஏற்படுகிறதாயின் அது அவரது கவலையீனத்தால்தான் என நிச்சயம் கூறலாம்.
ஆரோக்கிய வாழ்வு 10.5

Page 61
ᎵᏡᏗᏈᏗ ᏑᏓᎴvᎴVᏁᏡᏉᏁᎲᎴᏖᎯᏙᎲᎴVᏁᎲᎮᏙᏁᎲᏡᏁz ᏑᏙᏁ ᏈᏖᏁᏗ ᏡᏁᎲᏈᏙᏁᏗᎵᏠᏁᏗᎵᏠᏁᏗᎴᏙᏁᎲᏛᏙᏁzᏈᏙᏁᎲ ᏑᏙᏁᎲᏈᏈᏁᏇ ᏑuᏁᎲᏑᏓᏁᏗᎵᏙᏁᏗᎴᏙᏁᎲᏑᏉᏁᏗᎴvᏁᏗ ᏠᎯᏉᏗ
மனதில் பதித்தல் என்பது ஒரு அனுபவத்தை அல்லது வாசித் ததை மூளையில் பதித்தல் என்று கூறலாம். விடயத்தில் ஆர்வமின் மையும், மனதை அலைபாய விடுதலுமே மனப்பதிவைப் பாதிக் கின்றன. இதைத் தவிர்க்க மன ஒருங்குவிப்பை (Concentration) வளர்க்க வேண்டும். ஸ்வாமி விவேகானந்தருக்கு ஆச்சரியப்படத் தக்க நினைவாற்றல் இருந்தது எனில் அதற்கு அடிப்படைக் காரணம் அவரது அளப்பரிய மன ஒருங்குவிப்புத் திறனே ஆகும். சிறு வயதி லேயே அவர் ஆழ்ந்த தியானத்தில் ஆழ்ந்து உலகை மறந்து விடு வதை நாம் அறிவோம். தியானம் மன ஒருங்குவிப்பை வளர்க்கும் ஒரு முக்கிய வழியாகும். ஆனால் தியானம் செய்வது மணஒருங்கு விப்பை வளர்க்க அல்ல.
அத்துடன் நாம் வாழ்க்கையின் அனுபவங்களில் ஆர்வத்தை இழந்து விடக்கூடாது. ஆர்வம் இருந்தால்தான் மனப்பதிவும், நினைவாற்றலும் வளரும்.
'உன் நினைவாற்றல், உன் ஆர்வத்தை அடிப்படை யாகக் கொண்டது. ஒரு பொருளை அல்லது நிகழ்ச் சியை எவ்வளவு ஆர்வத்துடன் நீ கவனிக்கிறாய் என் பதைப் பொறுத்தது' 14
நினைவிலிருத்தலைப் பொறுத்தவரை நன்கு புரிந்து கொண்ட அல்லது விளங்கிக் கொண்ட விடயங்களை நினைவிலிருத்துதல் சுலப மானது. திரும்பத் திரும்ப வாசிப்பதும், படிப்பதும், அதை மீள ஒப்புவித்துப் பார்த்தலும் நினைவிலிருத்தும் ஆற்றலை வளர்க்கும்.
மனதில் பதித்தலும், நினைவிலிருத்துதலும் திருப்திகரமாக நிறை வேற்றப்பட்டால் மீள நினைத்தல் இலகுவாகிவிடும்.
எனவே மறதியை எமது இயல்பு என்று சொல்லி வாழாவிருக் காமல் எமது நினைவாற்றலைத் திட்டமிட்டு வளர்க்க வேண்டும்.
ஊ) போதைப் பொருட்களும் ஆரோக்கியக் கேடும்
ஒருவனால் உட்கொள்ளப்படும் போது அவனது உடலிலும் மனதிலும், நடத்தையிலும் மாற்றங்களை ஏற்படுத்தும் இரசாயனப்
{{6 - 9, 10 67('g()
 
 

ܬܸܪ
േണ്ടൈ
பொருட்களைப் போதைப் பொருட்கள் என்று சொல்லலாம். உண்பது, குடிப்பது, புகைப்பது, புகையைச் சுவாசிப்பது, முரசினில் தேய்ப்பது, ஊசியால் ஏற்றுவது எனப் பலவகைகளில் அவை உட்கொள்ளப் L JILGA) ITL b .
போதைப் பொருட்கள் மனிதனின் நரம்பு மண்டலத்தையும், மனநிலையையுமே ஆரம்பத்தில் பாதித்தாலும் இறுதியில் அவனது ஒவ்வொரு உறுப்பையும் பாதிக்கவே செய்யும். போதைப்பொருட்கள் ஆரம்பத்தில் போலியான இன்ப உணர்வையும், மனக்கிளர்ச்சியை யும் ஏற்படுத்தி, மீண்டும் மீண்டும் உபயோகிக்கச் செய்து, அவனை அடிமையாக்குகின்றன. கோபம், குரோதம், காமம் போன்ற தீய உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு, பொய், களவு, கொள்ளை, கொலை , பாலியல் குற்றங்கள் போன்ற பாரதூரமான குற்றச் செயல்களைச் செய்யவும் வழி வகுக்கின்றன.
உடலை நீரால் தூய்மைப்படுத்தலாம், மனதைச் சத்தியத்தால் தூய்மைப்படுத்த வேண்டும். ஆகவே சத்திய நெறியில் அமைந்த உணவினை உட்கொள்ளும் போது எண்ணங்களும் சத்தியத்துடன் தொடர்பு கொள்பவையாகின்றன. தேகம் தேவாலயம் என்று நம்புகின்ற யாவரும் போதையூட்டும் எதனையும் உட் கொள்ளலாகாது 15
மேற் கூறியவாறு பகவான் போதைப் பொருட்களை உட் கொள்ள வேண்டாம் எனத் தடுக்கிறார்.
கஞ்சா, அபின், ஹெரோயின், மோர்பின், பெத்திடீன் போன்றவை மாத்திரம் போதைப் பொருட்கள் அல்ல. பல தூக்க மாத்திரைகளும் கூட போதைப்பொருட்களாகலாம். அரசாங்க அனு மதியோடு விற்பனை செய்யப்படுகின்ற கள், சாராயம், பியர் போன்ற மதுவகைகளே, பலவித சமூகப்பிரச்சினைகளையும் ஆரோக் கியக் கேட்டையும் ஏற்படுத்தும் போதைப் பொருளாகவுள்ளது.
*மனிதன் சரியான கட்டுப்படுத்தப்பட்ட அளவு உண்டு, போதை தரும் மதுவகைகளை ஒதுக்கி தன்
ஆரோக்கிய வாழ்வு = 107

Page 62
ᏡᏁᏗᏡᏁᏗ ᏑᏓᏁᏗᏡᏁᏇᏡᏁᎲᏁᏁᏗ °ᏓᏁᏗᏡᏁᎲᎮvᏁ ᏑᏙᏁᎴᏉᏁzᏡᏁ4 °ᏓᏁᎲ°ᏉᏁᏗᏡᏁᎫᏡᏁᏗᏉᏁᏗᏡᏁᎲ ᏑᏓᏁᏗᏡᏁᎲᏑvᏁᎲᏡᏁᎲᎮvᏁᎲᏉᏁᎲᏍᏁᏁᏁᏗ
ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்ள வேண் 6լի ** 1 e
என்று பகவான் ஆலோசனை கூறுகிறார்.
புகையிலை இன்னுமொரு போதைப் பொருளாகும், புகை யிலையிலுள்ள நிக்கரின் என்ற இராசயனப் பொருளே போதைப் பொருளாகச் செயற்படுகிறது. அத்துடன் புகையிலை வாய்ப் புற்று நோய், குரல்வளைப் புற்றுநோய், சுவாசப்பை புற்றுநோய், சிறுநீரகப் புற்றுநோய் ஆகியவற்றிற்கும், புரன் கைடிஸ், ஆஸ்த்மா போன்ற சுவாச நோய்களுக்கும் காரணமாகலாம். சுருட்டு, சிகரெட், பீடி, சுங்கான் புகை ஆகியவற்றில் மாத்திரமின்றி மூக்குத் தூளிலும் புகை யிலை உள்ளது. அவற்றைத் தவிர்ப்பதுடன் வெற்றிலையுடன் புகை யிலை சேர்த்துச் சப்புவதையும் நாம் நிறுத்த வேண்டும்.
காஃபீன் ( Caffeine ) என்ற போதைப் பொருள் நாம் தின சரி அருந்தும் காப்பி, தேநீர், கொக்கோ, கொக்காக்கோலா போன்ற பானங்களிலும், சொக்ளட்டிலும் கலந்துள்ளது. சிலவேளைகளில் அது சுத்திகரிக்கப்பட்டு மருந்தாகவும் பாவிக்கப்படுவதுண்டு.
குறைந்த அளவில் அருந்தும்போது அவை பாரதூரமான பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதில்லை. ஆனால் தினசரி ஐந்து கோப்பை கடும் காப்பி அல்லது பத்துக் கோப்பை தேநீர் அருந்து பவர்கள் காஃபீனுக்கு ஆட்படலாம். நீண்ட காலம் அவ்வாறு குடித்தவர்கள் 12 முதல் 16 மணி நேரம் அதனை உட்கொள்ளாமல் தவிர்த்தால் தலையிடி, எரிச்சல், கோபம் போன்ற அறிகுறிகள் தோன்றலாம்.
அவற்றை மிக அதிகமாக உட்கொண்டால் பதகளிப்பு அமைதி பின்மை, கைவிரல் நடுக்கம், தலையிடி, நித்திரைக் குறைவு, இரு தயத் துடிப்புக் கோளாறுகள் போன்ற விளைவுகள் ஏற்படலாம். எமது வழமையான நம்பிக்கைக்கு மாறாக கடுமையான காப்பி
வயிற்றோட்டத்தையும், கடுமையான தேநீர் மலச்சிக்கலையும்
படுத்தலாம்.
108三 *() 0ി 60 ('g ()
 

ᏉᏁᎲᏡᏁᎲᏑᏁᎲᏑᏓᏁᎲᏡᏁᎲᏑᏁᎲᏁᏁᏪᏑvᏁᎲᏡᏁᎲᏡᏁᎲᏡᏁᏗᏁᏁᏗᏡᏁᏗᏡᏁᎲᏁᏁᎲᏡᏁᎲᏁᏁᏗᏁᏁᎲᏡvᏁᎲᏡᏁᎲᏁᏁᏗ ᏁᏁᏗ ᏖᏁ4ᏡᏗᏁᎲ AᏁᎲᎹᏁᏗ
பகவான் காப்பி, தேநீர் போன்ற பானங்களைக் கூட அருந்து வதில்லை. அவரது முன்னுதாரணத்தை நாமும் கைக்கொள்ள வேண் டும். ஏற்கனவே இவற்றிற்குப் பழக்கமானவர்களுக்கு, கைவிட முடி யுமா என்ற தயக்கம் இருக்கலாம். மனத்திடம் இருந்தால் காப்பி, தேநீரைக் கூடக் கைவிடலாம். பழக்கங்களுக்கு அடிமையாவது பற்றி யும் அவற்றைக் கைவிடுவது பற்றியும் பகவான் பின்வருமாறு கூறு கிறார்.
"ஆனால் காலையில் காப்பி கிடைப்பதற்குத் தாம தமானால் கோபம் வருகிறது. புகை பிடிப்பவர்களுக்கு சிகரெட் பிடிக்கவில்லையென்றால் கஷ்டமாக இருக்கி றது. கொதித்துப் போகிறார்கள், வெற்றிலை பாக்குப் போடுகிறவர்கள் அவை இல்லையென்றால் அவதிப் படுகிறார்கள், இந்தச் சாதாரண பழக்கங்களையே விடமுடியாமல் அல்லல் படும்போது, பெரிய தத்துவ மான இந்திரிய தத்துவத்தைப் பற்றி எப்படி புரிந்து கொள்ள முடியும்? ஆகவே அதைப் புரிந்து கொள்ள மிகச் சிறந்த ஆன்மீகப் பயிற்சி தேவையாகிறது.
ஸ்வாமியின் கருத்துப்படி இத்தகைய வழக்கங் களை விடுவது மிக சுலபம். அதைப் பற்றிக் கொண் டிருப்பதுதான் கஷ்டம் கையிலிருக்கும் துணியைக் கீழே போடுவது சுலபம் , கெட்டியாகப் பற்றிக் கொள் வது தான் கஷ்டம்' 17
மருத்துவ ரீதியில், கடுமையான போதைப் பாவனையாளர் ஆள்கூட திடமனமிருந்தால் அதனைக் கைவிடுவது சுலபம். அத் துடன் சில வேளைகளில் உளவளத்துணையும், சில மருந்து மாத்திரை களும் தேவைப்படலாம். ஆனால் முக்கியமானது மனத்திடமே, கைவி டும் போது சிறிது சிறிதாகக் கைவிட முடியாது. உடனடியாக ஒரே படியாகக் கைவிட வேண்டும்.
ஆரோக்கிய வாழ்வு 109

Page 63
BeMMeMMeAeLeLeLeeLeLMe eMLeMe LeMeMe eMMMe eMeMeLeMeMeMeLeLeeLM MM eaMceLceSeM ccAe LeLMS SeeSe S cccScSA AccAcee eAeSe AM AA A McM M AS
அடிக்குறிப்புகள்
1) த. ச.சா ஜூன் 94 பக் 18 2) மனதின் மர்மம் (ம. ம) பகவான் பூரீ சத்ய சாயிபாபா - பக் 37 3) பூரீ சுவாமி சிவானந்தர் - யோகாசனங்களும் சூரிய நமஸ் காரமும்
மில்க்வைட் வெளியிடு - பக் 2 4) மேற்படி - பக் 7 5) த, ச. சா. ஆகஸ்ட் 90 - பக் 17 6) டி. கே. சி. தேசிகாச்சார் - உடலே உன்னை ஆராதிக்கிறேன்
பக் 46 7) த ச. சா. மார்ச் 94 - பக் 17 - 18
8). H. M. H. - Lig, 13 9) த. ச. சா. ஏப்ரல் 93 - பக் 26 10) ஆ. ச. சா. மார்ச் 93 - பக் 77 11) N கஸ்தூரி - சத்யம் சிவம் சுந்தரம் பாகம் 11-பக் 124 12) மேற்படி - பக் 124 13) த. ச. சா. மே 93 - பக் 9 14) மேற்படி - பக் 9 15) த. ச. சா. ஜூலை 90 - பக் 4 16) .. TLDi94 -16 17) த, ச. சா. மே 94 - பக் 16
به گف ృక' (శ S. ృతీ لا الألكي ܕ "ܣܛܘܼ
« Ko Ko لري "'(P الة كون
1 = #00ി 67(20)

ஆே : Ա576) ց: , "|5.5ց- 27 )ெஐ
遭 - Պոյիլյլար ØüürLû ᎵᏉᏁᎲᏑᏉᎯᏁᏗ6ᏉᏁᏗᏛᏉᏁ4ᎮᏙᏁᎲᏑᏙᏁᎲᏛᏁᏪᏑᏙᏁᏗᏑᏙᏁᏪᎵᏙᎯᏁ4ᏡᏁᏪᏡᏁᏪᏉᏁᏉᏪᎵᏙᏁᎲᏑᏙᏁᏗᏡᎯᏠᏪᎵᏙᏁᏗᏈᏙᏁᎲᎵᏉᏁᏗ ᏑᏙᏁᏗᏑᏙᏁᏗᏈᏙᎯᏖᎴᏛᏉᏁᏗᏡᏪᏉ,ᏛᏁᏁᏛᏉᏁᎴ
/apo بھوت)
ஓம் சாயிராம்
5. மனஅமைதியும் ஆரோக்கியமும்
இன்றைய நவீன விஞ்ஞான யுகத்தில் மனிதனுக்கு எல்லா விதமான வசதிகளும் கிடைத்துள்ளன. நல்ல உணவு, வசதியான இருப்பிடம், தொலைக்காட்சி, வானொலி, தொலைபேசி, கொம்பி யூடர் இன்னும் எத்தனையேர். ஆனாலும் மனிதனின் மனம் அமைதி
யாக இல்லை.
காரணம் என்ன ? மன அழுத்தங்கள் தான்!
புதிய புதிய வசதிகள் கண்டுபிடிக்கப்பட, அவற்றைத் தன தாக்கிக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் எழுகிறது. அதற்காக அதீதமாக உழைக்க வேண்டியுள்ளது, சோர்வு ஏற்படுகிறது. மற்றவனை விட அதிகம் உழைக்க வேண்டும், அதிக வசதிகளைப் பெற வேண்டும் என்ற போட்டி மனப்பான்மை கிளர்கிறது. முடியாதபோது எரிச்சல், கோபம், பொறாமை தோன்றுகிறது. கிடைக்காதபோது கவலை வாட்டுகிறது. எல்லாம் கிடைத்தாலும், அவற்றை இழந்து விடுவேனோ என்ற பயம் அருட்டுகிறது.
இவை எல்லாமே மன அழுத்தத்தைக் (StreSS) கொடுக்கின்றன. ஆம் ஆவல், சோர்வு, போட்டி மனப்பான்மை, எரிச்சல், கோபம், பொறாமை, கவலை, பயம் போன்ற உணர்ச்சிகளால் மனம் பாதிக்
கப்பட்டிருக்கும் நிலையைத்தான் மன அழுத்தம் என்கிறோம்.
மனஅழுத்தங்கள் எல்லோரையுமே தாக்குகிறது. ஆண் பெண் எனும் வேறுபாடு, இன வேறுபாடு, சமுதாய ஏற்றத் தாழ்வு எது வுமே இதற்கு விதிவிலக்கு இல்லை. ஆயினும் இறுக்கமான உறவு களையும், கூட்டுக் குடும்ப வாழ்க்கையையும், நெருக்கமாகப் பிணைக் கப்பட்ட சமூக உறவுகளையும், நெருக்குதல்களும் அவசரமும்குறைந்த வாழ்க்கை முறையையும் கொண்ட கிராமப்புற வாழ்வை விட நகர்ப்புறங்களில் அதிகம் என்பதில் ஐயமில்லை.
ഴ്സ് ക്ലിധ ഖ0 ഏറ്റു Ε και η και

Page 64
ᏡᏁzᏡᏁᎲᏈᏁ4ᏈᏁᏗᏡᏁᏗᏁᏁᎲᏡᏁᏗ ᏁᏁᏪ°ᏙᏁᏗᏉᏁᎲ°ᏙᏁzᏡᏁᏪᏡᏁᏗ ᏉᏁᎲᏡᎲᏡᎲᏡᏁᏪᎵᏙᏁzᏡᎯᏈᏪᏡᎯᏁᏗ ᏑᎷᏁzᎵvᏁᏗ ᏠᏁᏗᎵvᏁᏗ rvᏁᎲᏡᏁᎲᏑᎸᏛᏓ
ஒரளவு மனப்பதற்றமும், மன அழுத்தமும் மனிதனின் முன் னேற்றத்திற்கு அவசியமாயிருக்கலாம். பரீட்சைக்கு ஆயத்தமாதல், விளையாட்டுப் போட்டிகள், சில அலுவல்களை நேரத்திற்கு முடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் போன்ற தருணங்களில் மனம் அவசரப்பட் டாலும் வேலைகளைச் சுறுசுறுப்பாக முடிக்க உதவுகிறது.
அதுவே எல்லை மீறிப் போகும்போது நோயாகி விடுகிறது!
அத்தகைய அமைதியற்ற நிலை ஒருவருடைய உடல், மனம் , உணர்வு, ஆன்மீக உணர்வு ஆகியவற்றைப் பாதிக்கும்போது தீமை யாகிவிடுகிறது.
மன அழுத்தங்கள் ஏற்படக் காரணங்கள் என்ன?
மற்றவர்களுடனான மனித உறவுகளில் ஏற்படும் திருப்தியின் மையும், அந்த உறவுகளில் ஏற்படும் மாற்றங்களும், குழப்பங்களும் மன அழுத்தங்களுக்கு முக்கிய காரணமாகின்றன. மாறாக தனிமை யும், தனிமையுணர்வும் கூட காரணமாகலாம் .
உறவுகளில் ஏற்படும் சிக்கல்களினாலும், குழப்பங்களாலும் மனம் எவ்வாறு சோர்வடைகிறது; அழுத்தம் பெறுகிறது என்பதை பகவத் கீதை மிக அழகாக சித்தரிக்கிறது. தன் நெருங்கிய உறவினர் களைப் போர்க்களத்தில் எதிர் கொள்ள வேண்டிய மனச்சங்கடமான நிலை ஏற்பட்டதும் அர்ச்சுனன் பின்வருமாறு தன் மனக்கிடக்கையை வெளிப்படுத்துகிறான்.
'கண்ணா போர் செய்ய வேண்டி இங்கு திரண்டு நிற்கும் சுற்றத்தவர்களைக் கண்டு
என் அவயங்கள் சோர்கின்றன என் வாய் உலர்கிறது என்னுடம்பு நடுங்குகிறது மயிர் சிலிர்க்கிறது
και 12 E Y. θα μύ θηρίω αν
 
 

ᏉᏁᏗ ᎪᏁᏗᏡᏁᏡᏁᏪᏡᏁᏗᏈᏙᏁᏗᎵᏉᏁᎲᏑᏙᏁᏗᏡᏁᏗᏑᎪᏁᏗᏡᏁ4ᏡᏁᏗᏑᏙᏁ4ᏡᏁᎴᏡᏁz*ᏙᏁᎲᏑᏉᏁ4ᎵᏙᏁzᏡᏁᏪᏑᏙᏁzᏡᏁ4ᏡᏁᏗ°ᏙᏁᎯᏡᏁᏗ AᏁ4ᎵᎸᏁ;
காண்டீபம் கையிலிருந்து நழுவுகிறது உடம்பில் எரிச்சலுண்டாகிறது என்னால் நிற்க முடியவில்லை என் மனம் சுழல்கிறது' !
மனம் பாதிப்புறுவதை மாத்திரமின்றி, அந்தப் பாதிப்பினால் உடலில் ஏற்படுகின்ற விரும்பத்தகாத மாற்றங்களையும் கூட இச் சுலோகங்கள் மிகத் தெளிவாகக் காட்டுகின்றன.
இவற்றினால் மன்ம் பாதிக்கப்படாமல் தடுப்பதற்கு வழி என்ன? ஆசையையும் அன்பையும், பாசத்தையும் பற்றுதலையும் அளவோடு வைத்துக் கொள்வதே என்பது தெளிவு.
பற்றுதல் தனது கடும்பத்தினரிடமும் நண்பர்களிட மும் கொள்வதில் தவறில்லை. பெற்றோரிடம் பற்று தலுடன் மரியாதை கலந்த அன்பும், சகோதர சகோதரிகளிடம் பாசத்துடன் அன்பு காட்டுதலும் மிகவும் அவசியமானதே. தேகத்தையும் நலமாக வைத்திருக்க வேண்டியதும் முக்கியமே. இவைகள் நல்ல வகையான பற்றுகளே. ஆயினும் இதற்கு ஒரு வரையறை வேண்டும். இது எப்படியென்றால் ஒரு சங்கீத வித்துவான் இசைக்கச்சேரியில் ஒரு "ராகத்தை ஆலாபனம் செய்வதிலேயே அளவுக்கு மீறிய அதிக நேரம் எடுத்துக் கொண்டால் அது *ரோக" மாக மாறிவிடும் 2
என பகவான் உதாரணத்துடன் தெளிவாக விளக்குகிறார்.
பொறுப்புகள் அதிகரிப்பதும் மன அமைதியின்மைக்குக் காரண மாகலாம், குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கலாம், வேலைத்தளத் தில் வேலைப்பளு அதிகரிக்கலாம்; சமூகத்திலும் இவ்வாறாகச் சுமைகள் அதிகரிக்கலாம், எனவே நாம் எம்மால் செய்ய முடியாத வேலை களையும் பொறுப்புக்களையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது. முக காட்சணியத்திற்காக, முடியாது’ என்று சொல்லத் தயங்குவது
ഷ്ട് 00 & ക്ലിധ ഖ0 ട്രൂ =í3

Page 65
ᏑᏙᏁ4ᏡᏁᏗᎴᏙᏁᎲᏡᏁᏗᏡᏁ4ᏡᏁᏗᏁᏁᏗᏡᏁᏪᎵᏙᏁᎲᏡᏁᏗ NᏁ4ᎵᏙᏁᏗᏡᏁzᏡᏁ4ᏡᏁᏗᏡᏁzᏡᏁzᏡᏪᏓᏡᏁ4ᎹᏙᏁᏗᏡᏁᏗᏎᏉᏁᎲᎮvᏁᎲᏑuᏁᎲᏡᏁᎲᏛᏁᏗ
சிலரது இயல்பு. அதை மாற்ற வேண்டும். செய்ய இயலாததை முடியாது' என நேரடியாக மறுக்கும் தைரியத்தை நாம் வளர்த்துக் கொண்டால் தேவையற்ற பொறுப்புகள் எமக்கு பாரமாகாது தடுத்துக் கொள்ளலாம்.
'உங்கள் பொறுப்புகளைத் தள்ளி விடாதீர்கள். அவற் றை எதிர்கொள்ளுங்கள். அதற்காக ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக பொறுப்புக்களை, உங்கள் அகங்காரத்தை மகிழ்விற்பதற்காக ஏற்றுக் கொள்ளா தீர்கள். கொச்சையாகச் சொல்லப் போனால் தொந் தரவுகளை விலைக்கு வாங்காதீர்கள். உலக நடவடிக் கைகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். உட்புறமாக மனதைச் செலுத்தி பிரார்த்தனை செய்யுங்கள். முழு மையான மன அமைதி மனம் இறந்த பின்தான் கிடைக்கும். மனம் என்றால் எண்ணங்கள். எண்ணங் கள் என்றால் பதட்டங்கள். எந்த அளவுக்கு மனம் எண்ணங்களைக் குறைக்கிறதோ அந்த அளவுக்கு அமைதி நிச்சயம்' சி
மேற் கண்டவாறு பகவானும் அக்கருத்திற்கு அழுத்தம் கொடுத்துக் கூறியுள்ளார்.
தன்மதிப்பு குறைந்தவர்களும் மன அமைதியற்றே இருப்பார்கள். நான் அறிவாளி அல்ல; நான் அழகற்றவன்; எனக்குத் திறமை போதாது; நான் பலவீனமானவன் என்றெல்லாம் சிலர் தங்களைத் தானே குறைத்து மதிப்பிட்டு தாழ்வு மனப்பான்மையில் மாட்டிக் கொள்கிறார்கள். இவர்கள் மனம் எப்பொழுதும் கவலையிலும் ஏக் த்திலுமே அமிழ்ந்து கிடக்கும். இதனால் எதையும் சாதிக்க முடி யாது வாழ்வை வீணாக்குவார்கள்.
பகவான் சத்ய சாயிபாபா நம் எல்லோருக்குமே தன்நம்பிக்கையை ஊட்டுகிறார், எங்களைத் தெய்வீகமானவர்கள் என்று கூறி எங்களி டமிருந்து தாழ்வு மனப்பான்மையை அடியோடு விரட்டுகிறார். அவர் கூறுவது என்ன?
侧14三 σ η μύ' ό,τι φαυ
 

ᎴᏙᏁᎴᏠᏁᏓᎵᏁᏛᏁᏛᏁᎴᏠᏗᎵᏙᎯᏈᏗᏛᏈᏁᏛᏙᏁᏗ ᏠᏁᏃᏈᏙᏛM4ᏛᏠᏁᏗᏈᏉᏛᏠᏪᏡᏪᏠᏪᏑᎸᏁᏠᏗ*ᏠᏁ ᏡᎯᏈᏪᏉᏁᎯᏡᎯᏈᎯᏡᏁᏗᏡᎯᏁᏗᏡᎯᏛᏙ4ᏡᎯᏡᎯᏡᎯᏛᏁᏪᏈᏁᏗ ᏑᎯᏈᎷᏪᏈᏁᎯ °ᏔᏁᎯ
'மனிதன் தெய்வீகமானவனே என்பதை நான் உறுதியாகக் கூறுகிறேன், நம்புங்கள், தெய்வத்தின் நோக்கத்தை நிறைவேற்றும் புனிதபணி புரிந்திடவே இவ்வுலகில் பிறவி எடுத்துள்ளான் மனிதன். தாழ்ந் தவன் என்றோ, பலவீனமானவனென்றோ, பாவி என்றோ மனிதனைக் கருதுவது தவறு. அப்படிக் கருதுவதே மகத்தான பாவச் செயலாகும்' "
நீங்களும் தெய்வீகமானவர்கள், தெய்வீகக் குணங்களையும்
ஆற்றல்களையும் உடையவர்கள் என்று கூறும்போது எம்மைப் பற்றிய
எமது மதிப்பு அதிகரிக்கிறது; நம்பிக்கை வளர்கிறது; செயலாற்றல் அதிகரிக்கிறது.
உடற் தொழிலியல் பாதிப்புகள்
கோபம், பயம், அதிர்ச்சி, எரிச்சல், பொறாமை போன்ற உணர்வுகள் எம் உடலில் என்ன விதமான தாக்கங்களை ஏற்படுத்து கின்றன என அறிவீர்களா? அவ்வாறான உணர்ச்சிப் பெருக்குகளின் போது எமது உடலில் சில இரசாயனப் பொருட்கள் சுரக்கப்படு கின்றன. இதனால் எமது இரத்த அமுக்கம் அதிகரிக்கிறது; இருதயம் வேகமாக வேலை செய்கிறது; நாடித்துடிப்பு அதிகரிக்கிறது; சுவா சம் வேகமாகிறது, சருமம் சூடேறுகிறது; அதிகமாக வியர்க்கிறது, நரம்புகள் பாதிப்படைந்து உடல் பதறுகிறது. இவை யாவுமே எமது உடலாரோக்கியத்திற்குக் கேடானவை.
“டென்ஷனாக இருப்பது மனித ஆரோக்கியத்திற்குக் கேடு. அதனால் தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் கலையை மனிதன் கற்க வேண்டும் கட்டுப்படுத்தாத உணர்ச்சிகள் மனித மனத்தைக் கஷ்டப்படுத்துகின் ഇബ്ന ' ' =
என்றும்,
'கோபம் என்பது உடலையும் கூட சாம்பலாக்கு கின்றது. ஒரு முறை கோபத்திற்கு இலக்கானால்
ஆரோக்கிய வாழ்வு # {{

Page 66
SkeSece SeLeeSekeSekkeSLkLLLL SkeM LSeeeeL SL eeS eeeLeM AeELecSeeE LM keSLMSekeMe eeEeLL e kMcecS eeLeLSeS ekL kkLcMLMLeAeLe Me eLeAcS keLLeM Seccc McLMSScccMS ccMS eSekeSMSLcMeLMS
மூன்று மாதங்கள் நாம் உண்ட உணவின் சக்தியும் கூடக் குறைந்து விடுகிறது. கோபம் நமது மனத்துள் சேர்ந்தால் உடல் முழுவதும் சூடேறுகிறது. இரத்தம் வேகமாக ஒடத் தொடங்குகின்றன. அதன் வாயிலாக நரம்புகள் முழுவதும் பலவீனமடைகின்றன’’ 8
என்றும் பகவான் கூறுகிறார்.
மனோவியல் பாதிப்புகள்
அதீத உணர்ச்சிகளும், மன அழுத்தங்களும் மனிதர்களின் இயல்பு என நாம் கருதினாலும், அவை அளவை மீறும் போது மன நோய்களாக மாறிவிடலாம். உதாரணமாக மனப் பதகளிப்பு, மனச் சோர்வு, பீதி நோய், ஹிஸ்டீரியா - இசிவு நோய் (Hysteria), கொள் கைப் பிடிவாதம் (Obsessional State) போன்ற யாவும் கடுமை குறைந்த மன நோய்களே. இவற்றை நியூரோசிஸ் ( Neurosis) 6765 அழைப்பர். நரம்புத்தளர்ச்சி நோயென்றும் கூறலாம்.
மிகச் சில வேளைகளில் அத்தகைய மனத் தாக்கங்கள், மாயப் புலனுணர்வு, போலி நம்பிக்கை போன்ற அறிகுறிகளுடன் கூடிய கடுமையான மனநோய்யான உளமாய நோய் (Psychosis) ஆகவும் மாறிவிடலாம்.
உடற் பாதிப்புக்கள்
மேலே சொல்லப்பட்டவை தனியே மனதோடு சம்பந்தப்பட்ட நோய்களாகும். அவற்றைத் தவிர பல உடல் சம்பந்தமான நோய் களுக்கும் மன நிலை மாற்றங்களே காரணமாயுள்ளன. இவற்றை மனநலக் குறைவால் தோன்றும் உடல் நோய்கள் (Psych080/10di Sorder S) 6T 65T jrf.
“இத்தகைய மன அதிர்ச்சி (அழுத்தம்) மீண்டும் மீண்டும் அளவுக்கு அதிகமாக ஏற்பட்டால் நாள டைவில் அதுவே குடற்புண், உயர் இரத்த அமுக்கம்,
1鲁6三 σ (τιςύ ά σε αλαν
 

ᏈᎳᏛv ᎹvᏪᏙᎯ ᏛᏙᏛᏉᎲᎵᏙᎯᏛᎲᎴᏠᏁ, ᏛᏈᏁoᏡᏁᎯᏈᏙᏁᏗᏈᏁᏉ. eee eee eeMMeM MLeL eeLeMeLeLLeS eEeL ee eMeLeLeMeLeMeMMe eMLMeeceMeMLS
ஆஸ்த்மா போன்ற உடல் நோய்களாக உருவெடுக்கும் என்ற உண்மையைப் பலர் அறிய வாய்ப்பில்லை. மனதில் அடக்கி அடக்கி வைக்கப்பட்ட தீவிர உணர்ச்சிகளுக்கு வடிகாலாக அமையும் இத்தகைய உடல் நோய்களே மனநலக்குறைவால் வரும் உடல் நேர்ய்கள் எனப்படுகின்றன' 7
என வைத்தியத்துறைப் பேராசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.
ஆஸ்த்மா
மூக்கிலிருந்து நீர் வடிதல்
குடற்புண் யானைத்தடிப்பான் சில பெருங்குடல் நோய்கள் மூட்டு வாதங்கள் உயர்இரத்த அமுக்கம் தசைநார் நோய்கள் இருதய நோய்கள் நீரிழிவு
பாரிசவாதம் தைரொயிட் நோய்கள் கபாலக்குத்து மாதவிடாய்க் குத்து பெT ய்க்கர் ப்டம் அதீத குறைவான மாதவிடாய்
மேற்கூறிய நோய்களுக்கு மனநிலைகளும், உணர்ச்சிக் கொந் தளிப்புகளும் காரணமாகலாம், அல்லது ஏற்கனவே உள்ள நோயை மோசமாக்கலாம். மனநிலைகள் மாத்திரமே இந்நோய்களுக்குக் கார னம் என்று கூறமுடியாது. வேறுபல காரணங்களும் இருக்கலாம். ஆனால் மனநிலை அமைதியாக இருக்குமானால் இந்நோய்கள் தணி யும் என்பது நிச்சயம்,
மன அமைதியின்மைக்கும், மன நோய்களுக்கும், ஏனைய நோய் களுக்கும் உள்ள தொடர்பைப் பற்றிப் பகவானும் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
வேண்டாத சிந்தனையாலும், கவலையாலுமே மன நோய்கள் வருகின்றன. சிந்திப்பதை நிறுத்துங்கள். அளவுக்கு மீறிய சிந்தனைதான், கவலை தான் எல்லா வித நோய்களுக்கும், பிரச்சனைகளுக்கும் காரணம்' 8
ஆரோக்கிய வாழ்வு

Page 67
SMckcMecLMLMMcLScS LcMLcMMccLMSLcMMS eeLMMLMLML LMMMMLMMSLceE McMAc McLScS SLcLSLccLMSLLLeeeeS LeeeLSLcMLLcLMccMcccSccS S eeLAeS AeMMAcM cLLS
மன அழுத்தத்தைக் குறைக்கும் வழிகள்
மருந்துகள் மாத்திரைகளைச் சாப்பிட்டு மன அழுத்தத்தை மாற்றலாம் என எண்ணக் கூடாது. எமது வாழ்க்கை முறைகளை யும் சிந்தனைகளையும் சரியான முறையில் ஒழுங்குபடுத்துவதே சரி யான அணுகுமுறையாகும்.
இதற்கு பகவான் காட்டும் வழி என்ன ?
எமது எண்ணங்கள் எப்பொழுதும் ஒரளவிற்குள் இருக்க வேண்டும். இறந்துவிட்ட கடந்த காலத்தை யும், இனிப் பிறக்கப்போகும் எதிர்காலத்தையும் சட்டை செய்யலாகாது.
. சுடியவரையில் எண்ணங்கள் ஒரளவிற்குள் அடங்க வேண்டும். அளவிற்கு மிஞ்சிய படிப்பு, அள விற்கு மிஞ்சிய விளையாட்டு, அளவிற்கு மிஞ்சிய பார்வை, அளவிற்கு மிஞ்சிய பேச்சு இவையனைத்தும் தூல உடலுக்குக் கெடுதல் விளைவிக்கின்றன’’ 9
பகவான் கூறியதிலிருந்து அதீத ஆசை, வேண்டாத கவலை, எதிர் காலம் பற்றிய அச்சம், அவசர வாழ்க்கை போன்றவை பலவித நோய்களுக்குக் காரணம் என்பது புரிகிறது. அவற்றிலிருந்து விடுபட வேண்டுமாயின் எமது மனதில் அமைதி நிலவ வேண்டும். அமைதி தோன்ற வேண்டுமாயின் உள்ளத்தில் அன்பு நிறைய வேண்டும், அது வும் பிரதிபலனை எதிர்பாராத அன்பு வேண்டும்.
அத்தகைய அன்பு எங்கிருந்து கிடைக்கும்?
'அலைகள் கடலிலிருந்து வெளிவருவது போல, கிர ணங்கள் சூரியனிடமிருந்து வெளிவருவது போல, அன்பு இறைவனிடமிருந்து வருகிறது. இறைவனுக்கும் அன் புக்கும் இடையே வேறுபாடு இல்லை' 19
18 E Y. ക 70 ക7('ഗ്ഗ0

ᏑᏉᏁᏗᎵᏖᏁᏗᎵᏙᏁᏗᎵᏉᏁᎲᏍᏁᏗᎮᏉᎯᏁᏗ ᏡᏁᏗ ᏡᏁᏗᏎvᏁᏗ ᏑᏓᏁᏗᏑvᏛᏈᏗ*ᏉᏁᏗᏑᏙᏛᏓᏑᏠᏁᏗᏡᏁᏪᏙᏁᏗᏡᏁᏗ ᏡᏁzᏡᏁᏗ ᏑᏉᏁᏉᏗᏡᎯᏁᏗᎵᏉᏁᏗᏑᏙᏁᏪᏙᏁᏪ°ᏙᏁ4ᏡᏁᎸᎯ
எனவே எண்ணங்களை இறைவன் மேல் செலுத்தினால் எமது
மனதில் அன்பு நிறையும், அமைதி தவழும். இதற்காக பல வழிமுறை களைப் பகவான் சத்யசாயி பாபா எங்களுக்குக் காட்டித் தந்துள் ளார். அவரது வழிகாட்டலிலேயே நாம்,
ஓங்காரம் சொல்கிறோம். காயத்திரி மந்திரம் சொல்கிறோம். உணவு வேளைகளிலும், துயிலுக்குப் போகும்போதும், துயில் விட்டெழும்போதும், அவற்றிற்கான மந்திரங்களைச் சொல் கிறோம்.
நாமஸ்மரணை செய்கிறோம்
பஜனை பாடுகிறோம்.
ஜபம் செய்கிறோம்.
தியானம் செய்கிறோம்.
இவை யாவும் எமது மனதில் அமைதி நிலவச் செய்வதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்துள்ளோம்.
மன அழுத்தத்தைச் சமாளிக்க மருத்துவம் கூறும் வழிகளை இனிப் பார்க்கலாம். அவை பகவானின் போதனைகளுடன் ஒத்திருப் பதையும் காணலாம்.
i) உங்களுக்கு நேரம் போதவில்லை என்பது ஒரு பிரச்சனை இருக்கலாம். எல்லோரது பிரச்சனையும் அதுதான். அதற்காக இறைவன் ஒரு நாளில் உள்ள 24 மணி நேரத்தை 30 மணி நேர மாகவோ இன்னும் அதிகமாகவோ அதிகரிக்கப் போவதில்லை. எனவே முக்கியமான வேலைகளுக்கு முன்னுரிமை கொடுங்கள் அவசியமற்ற வேலைகளைக் கைவிடுங்கள் அதற்காக மன வருத்தப்படாதீர்கள். உங் களால் முடிந்ததைத் தானே நீங்கள் செய்ய முடியும் செய்வதைத் திருத்தமாகச் செய்யுங்கள். உங்களுடைய சொந்த வேலை, வாசிப்பு
མས་དད་
ஆரோக்கிய வாழ்வு

Page 68
தூக்கம், பொழுதுபோக்கு, உணவு, கடவுள் வழிபாடு ஆகியவற்றை திட்டமிட்டு நேர ஒழுங்கில் செய்யுங்கள்,
i) உங்கள் தொழில் சம்பந்தமான வேலைகளை வீட்டுக்குக் கொண்டு வந்து செய்யாதீர்கள். தொழில் நேரத்தில் கடுமையாக உழையுங்கள். ஆனால் அந்த வேலையை உங்களது அலுவலகத்திலேயே விட்டுவிட்டு வாருங்கள். அவற்றை வீட்டிற்குக் கொண்டு வந்தால் உங்களுக்கு மாத்திரமின்றி உங்கள் குடும்பத்தினருக்கும் கூட வேலைப் பளு அதிகரித்து மன அமைதி கெட்டுவிடும்.
i) உங்கள் இல்லத்தை அன்பும், அமைதியும், ஆனந்தமும் நிறைந்த இடமாக மாற்றுங்கள். இதற்குப் புரிந்துணர்வும், விட்டுக் கொடுத்தலும் அவசியமானவை என்பதை மறந்துவிடக் கூடாது, சிறிய வேலைகளுக்குக் கூட மற்றவர்களை ஏவிக் கொண்டிருக்காதீர்கள்; அது அவர்களை சினக்கச் செய்யும்; எனவே உங்கள் வேலையை நீங் களே செய்யப் பழகிக் கொள்ளுங்கள்.
ty) மற்றவர்களிடத்தில் ஆழ்ந்த நட்பையும், நெருங்கிய உற வையும் வளர்த்துக் கொள்ளுங்கள். மற்றவர்களை அற்புதமான மணி தர் என்ற உணர்வில் அணுகும்போது அவர்களிடம் உள்ள சிறிய குறைகள் கூடப் பெரிதாகப் படும். அப்பொழுது சலிப்பும், வெறுப்பும் ஏற்படுகிறது. எனவே அவர்களிடமுள்ள குறைகளையும், நிறைகளை யும் புரிந்து கொண்டு அவர்களை அவர்கள் இருக்கும் நிலையிலேயே ஏற்றுக் கொள்ளப் பழக வேண்டும்.
நட்பை வளர்ப்பதற்கு இன்னுமொரு முக்கிய வழி அனுசரணை யாகப் பேசுவதாகும். சில தருணங்களில் நீங்கள் பேசுவது சரியென நீங்கள் உணர்ந்தாலும், மற்றவர்களுடைய கருத்திற்கும் மதிப்புக் கொடுத்து அநுசரித்துப் பேசுவது நட்பை வளர்க்க உதவும் பின் அவர்கள் தங்கள் தவறை உணர்ந்து திருந்திக் கொள்ளவும் அது உதவலாம் .
'நீங்கள் எப்பொழுதும், எல்லாவற்றிற்கும் இணங்க முடியாது என்றாலும் இணக்கமாகவாவது பேச முடி யும்; அதைச் செய்யுங்கள்' 11
{{SE சாயி காட்டிய

என பகவான் கூறியதை நாம் எப்பொழுதும் மனதிலிருத்திக் கொண்டால், மற்றவர்களுடனான எங்கள் உறவும், நட்பும் என்றுமே பாதிப்படையாது.
w) மற்றவர்களது துன்பத்திலும், பிரச்சனைகளிலும் சிறிது அக்கறை காட்ட முயற்சி செய்யும்போதும் கூட உங்கள் மனஅழுத் தம் குறைந்து விடுகிறது. என்னுடைய சொந்தப் பிரச்சனையையே என்னால் சமாளிக்க முடியாமல் இருக்கும்போது, மற்றவர் பிரச் சனையில் தலையிட்டு சுமையை இன்னமும் ஏற்றுவதா என நீங்கள் சிந்திக்கக் கூடும் உண்மை தான்; ஆனால் அதற்காக நீங்கள் நீண்ட நேரத்தை எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. ஒரு ஆறுதல் வார்த்தை, சில வார்த்தைகளில் ஒரு அனுதாபக் கடிதம், அல்லது ஒரு கோப்பை தேனீர் கூட அவருக்கு நிறைந்த ஆறுதலைக் கொடுப்பதுடன் உங்களையும் மகிழ்சியுறச் செய்யும்,
"நாம் மனக்கவலை தரும் விஷயங்களில் ஈடுபடாமல், ஏதோ சற்று பரோபகார சம்பந்தமான செயல்களி லும் சமூக சேவைகளிலும் ஈடுபட வேண்டியது மிக மிக அவசியமானது' 12
Vi) மற்றவர்களை அவர்கள் இருக்கும் வண்ணம் ஏற்றுக் கொள்வது போலவே உங்களையும் நீங்கள் இருக்கும் வண்ணமே ஏற்றுக் கொள்ளுங்கள்.
நீங்கள் கொழுத்தவராயிருந்தால் உங்கள் எடையைக் குறைக் கலாம். கோபக்காரனாக இருந்தால் அமைதிப்படுத்த முயற்சிக்கலாம். ஆனால் நீங்கள் குட்டையாகவோ, நெட்டையாகவோ, மொட்டை யாகவோ இருந்தால் அதை மாற்ற முடியுமா? கிளிமூக்கையும், பூனைக் கண்ணையும், யானைச் செவியையும் மாற்ற முடியுமா?
மாற்ற முடியாதவையையிட்டு கவலைப்படாமல் அதை அப் படியே ஏற்றுக் கொள்ளுங்கள்; அதே நேரத்தில் உங்களது குணங் களையும் பண்புகளையும் சிறப்பாக வளர்க்க முயற்சியுங்கள். ஏனென் றால் எத்தனை விதமான உடற்குறையிருந்தாலும் நல்லவராகப்
ξέβη (τόό αν ο), σώων 三12议

Page 69
ᏡᎯᏁᎲᏑuᏁᏗᎵᏉᏁᏗ *ᏉᏁᏗᎴᏉᏪᏉᏗᎹᏗᏉᏡᏁᎯ °ᏁᏗᏑᏪᏠᏗᎵᏉᏁᏗᎵᏉᏁᏗ ᏡᏗᏉᏗ ᎪᏁᏉᏗᏍᏁᎯ ᏑᏉᏁᎲᏡᎯᏉᏗ ᎮᏙᎯᏉᏗ ᏡᏁ4ᏡᏁᎲ ᏑᏠᏪᏁ4ᎴᏉᏁᏗᎵᏖᏁᎯᎪᏁᏪᎴᎷᏖᏪᏛᏙᏁᎲᏡᏪᏡᏗ
பண்பாளனாக, இனிமையாகப் பேசுபவராக இருந்தால் மற்றவர்களை நீங்கள் நிச்சயம் கவருவீர்கள். அது உங்களுக்குப் பெருமையையும் அமைதியையும் தரும்.
Vi) சிரிக்கப் பழகுங்கள் போலியாக அல்ல, மனம் விட்டுக் சிரியுங்கள். அது ஆரோக்கியத்தைப் பேணும். சில மேனாட்டு வைத் தியசாலைகளில் புற்றுநோய், மனவிரக்தி நோய் போன்ற நோய் ஆளால் பாதிக்கப்பட்டவர்களின் மனத்தில் மகிழ்ச்சியை உருவாக்க சிரிப்பு நிலையங்களை அமைக்கிறார்கள். இதற்குக் காரணம் சிரிப்பு உடலில் சில இரசாயன மாற்றங்களை ஏற்படுத்தி, உடலாரோக்கி யத்திற்கு உதவுவதாக சில ஆராய்ச்சிகள் கூறுவதாலேயே ஆகும்.
கிரிப்பின் சிறப்பைச் சுவாமியும் பின்வருமாறு கூறுகிறார்.
'மற்ற உயிரினங்களுக்கு இல்லாத ஒரு ஆற்றல் மணி தனிடம் இருக்கிறது. அதுவே சிரிக்கும் தன்மை விலங் கினங்களோ, பறவைகளோ, காட்டு மிருகங்களோ மனிதர்களைப் போலச் சிரிக்க முடியாது. இதற்குக் 95 TITUT 63°5Th னிதப் பிறவியில்தான்
பேரானந்த நிலையை அடையும் தாகம் உள்ளது' "
Wi) விருப்பமான பொழுது போக்கு ஒன்றைத் தேர்ந்தெடுத்து தினமும் அதற்கு போதிய நேரம் கொடுங்கள். ஒவியம் வரைதல், புகைப்படம் எடுத்தல், ஏதாவது கை வேலை, தோட்டவேலை, தையல், முத்திரை சேகரித்தல், பழைய அல்லது வெளிநாட்டு நான யங்கள் சேகரித்தல் இப்படியாக ஏதாவது ஒன்றை உங்கள் மன விருப் பத்திற்கு ஏற்றவாறு தேர்ந்தெடுங்கள். மீன் வளர்த்தல் கூட நல்லதே.
இவற்றை விட ஒரு செல்லப் பிராணியை - நாய், பூனை, முயல் , கிளி வளர்ப்பது மன அழுத்தத்தைக் குறைக்கின்றது எனவும், அப்படி
வளர்ப்பவர்களின் இரத்த அமுக்கம் குறைவாகவும், இரத்த கொலஸ்
டரோல் அளவு குறைவாகவும் இருப்பதாக அண்மைக்கால ஆஸ் திரேலிய ஆராய்ச்சி சுறுகிறது.
122 : */TE 6.0 ( ( ()
 
 

VᏁᏗ °ᏙᏁ ᏛᏙᏁᎲᏑᏠᏁᏗᏈᏓᏁᎫᏡᏁᎯ ᏙᏁᎲ ᏡᏁᏙᎯᏡᏁᏇᏡᏁᎯ ᏈᏁ4ᏉᏙᏁᏗᏛᏙᏁᏗ ᏑᏙᏁᏉᏗ ?ᏉᏁᎲ ᏑᏉᏁᏗᎹᏁᏁᎯ?ᏠᏁᎯ?ᏉᏁᏪᏡᏪᏙᎯᎮᏉᏁᏗ ᏡᎯᏉᏗ ᏛᏙᎴᏠᏗ 8ᏉᏁᎸᎴ?ᏠᏁ, ᎮᏉᏁᏗ
சில நாள் அவர் (பாபா) ஒரு குதிரையும் வைத்
திருந்தார். கலைமான்களும், புள்ளி மான்களும், மயில் களும், குழி முயல்களும் அவருடைய ஆசிக்கும் அருளுக்கும் அன்புக்கும் பாத்திரமாகி வளர்ந்து வந்தன .
நாய்கள் சிலவற்றையும் அவர் அன்போடு
வளர்த்து வந்தார். அந்த நாய்களின் சரிதை பாபா அவர்களின் அருட்திறத்திற்கும், அன்பிற்கும் எடுத் துக் காட்டாக விளங்குகின்றன. 99 4.
என கஸ்தூரி கூறுகிறார். இவற்றைத் தவிரப் பசுக்களைப் பேணும் கோகுலத்தை பகவான் பேணி வருவதும், சாயி கீதா என்ற யானையை வளர்த்து வருவதும் நாம் அறிந்த விடயங்களே.
ix) இவற்றைத் தவிர,
* தினமும் போதிய ஒய்வு எடுங்கள். * தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். * அமைதியான இசையைக் கேளுங்கள் அல்லது பாடுங்கள் * உடலையும் ஆரோக்கியமாக வைத்திருங்கள்.
இவையும் உங்கள் மன அழுத்தத்தைக் குறைக்க நிச்சயம் உதவும்.
x) தியானம், ஜபம் (மந்திர உச்சாடனம்), சுவாசப் Lu? Öð, சாந்தியாசனம் போன்ற பல ஆன்மீக, யோகக்கலை சார்ந்த பயிற் c சிகளும் மன அழுத்தத்தைக் குறைத்து மன அமைதியைப் பேண உதவும்,
ஜபத்திற்கும், தியானத்திற்கும் பகவான் அதிமுக்கிய இடம் அளித்திருப்பதை சாயி அடியார்களாகிய நாம் நன்கு அறிவோம்.
А தினந்தோறும் ஜபம், தியானம் சிறிது நேரமாவது
செய்ய வேண்டும் 15
യ്ക്കൂ, 70 ക്ലിധ ഖon, 3

Page 70
eccc LLAcckkkccceceSeSeS eeALSAeecLAe cLSLcLS eeLeLeLeeccc McLSeS eeLeS Lcec L LLLLeeeSeeeeeeeS LeS LSeMccccS eeAe SAeELSELeMSe eeLMecLeMLES MLMcLEM eMeS
என பகவான் ஒழுக்கக் கோவை ஒன்பதில் முதலாவதாக இட மளித்து வலியுறுத்தியுள்ளார்.
சாந்த வழிமுறை கள்
இன்றைய நவீன மருத்துவமும், மேற் கூறிய வழிமுறைகளை சாந்த வழிமுறைகளெனத் தனது சிகிச்சை முறையில் பயன்படுத் துகிறது.
'யோகாசனப் பயிற்சி நிலைகள், தசை மூட்டு நோய் கள், மெய்ப்படுத்தல் (Somatization), உடல் பிம்பக கோளாறுகள் (Body Image disorder) என்பவற்றி லிருந்து குணமடைவதற்கும், தளர்வுற்ற சாந்த நிலை யினை ஏற்படுத்தவும் பயன்படும்.
.மெதுவானதும் ஆழமானதும் தளர்வடைந்தது மான சுவாசப்பயிற்சி உளச் சிகிச்சையாளரினால் வழங் கப்படும். இது தளர்வடையைச் செய்யும் சாந்த வழி முறைகளில் ஒன்றாகும் எமது கலாசார வழக்கிலுள்ள பிராணாயாமம் எனும் சுவாசப்பயிற்சியும் இதை ஒத்த தாகும். இதைவிட சாந்த வழிமுறைகளுக்கு மந்திர உச்சாடனமும், தியானமும் பயன் வாய்ந்தவை u jfr (gubo o 1o
என யாழ் போதனா வைத்தியசாலையின் மன நோய் வைத்திய நிபுணர் தயா சோமசுந்தரம் கூறுவது எமது பாரம்பரிய முறைகள், நவீன சிகிச்சை முறையில் எவ்வாறு பயன்படுகின்றன என்பதைப் புலப்படுத்துகின்றன.
மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் முக்கிய சாந்தவழி முறை Ꮬ ᎧTᎱᎢ Ꭷ! 6ᏡᎢ ,
i) சுவாசப் பயிற்சி
ii) சாந்தியாசனம்
iii) gLith
ty) தியர்னம்
24 S 8 (്ധി 50് (ഗ്ഗ0)
鷗。

SLMccLcLcLcccLMcLcLcccLLLLeAcLcLcLeA LeeccLLcLckMcL SkMck eLeSSekMMkSkLMSkMeMcLe keLecLcM LcSceccckeLALee eSeALeSSeSSMLkkeLeLSke eLeMLSc eLeS
சாந்த வழிமுறைகளைச் செய்வதற்காகத் தேர்ந்தெடுக்கும் இடம் அமைதியான, காற்றோட்டமுள்ள இடமாக இருக்க வேண்டும். எறும்பு, நுளம்பு, மூட்டைப் பூச்சித் தொல்லைகள் இல்லாமல் பார்த் துக் கொள்ள வேண்டும். உங்கள் வழிபாட்டு இடமே சிறந்த இட மாயிருக்கலாம்.
காலையிலும், மாலையிலும் ஒரு நாளைக்கு இரண்டு தடவைகள் முப்பது நிமிடத்திற்குச் செய்யலாம். உணவு உண்பதற்கு முன் செய் வதே நல்லது. கோப்பி, தேனீர் போன்ற கிளர்ச்சியூட்டும் பானங் களையும் தவிர்ப்பது நல்லது. தண்ணிர், மோர், கஞ்சி, பழச்சாறு போன்ற குளிர்மையான பானங்களை அருந்திய பின் செய்யலாம்.
இவற்றைச் செய்யும் போது இறுக்கமற்ற, தளர்வான ஆடை களை அணிய வேண்டும், நைலோன், டெட்ரோன் போன்ற செயற்கை இழை ஆடைகளைத் தவிர்த்து பருத்தி ஆடைகளை அணிவதே விரும்பத்தக்கது.
அமைதியாகவும், அவசரமின்றியும் மனப்பூர்வமாகச் செய்ய வேண்டும். நிர்ப்பந்தத்திற்காகவோ, செய்து முடிக்க வேண்டும் என்ற அவசர மனநிலையிலோ செய்யக் கூடாது. கடும் முயற்சியாகவும் செய்யக் கூடாது. தளர்வுற்ற நிலையிலேயே செய்ய வேண்டும்.
சுவாசப்பயிற்சி
இதனைப் பிராணாயாமம் என்றும் சொல்லுவர்.
நாம் உணர்ச்சிவசப்படும் போது எமிது சுவாசம் வேகமாகவும்,
ஒழுங்கற்றதாகவும், ஆழமற்றதாகவும் அமைவதை அவதானிக்க
முடியும். இது ஆரோக்கியமற்றது. மாறாக எமது சுவாசத்தை ஆழ மாகவும், ஒழுங்காகவும் நெறிப்படுத்தினால் ஆரோக்கியமற்ற உடல், உள மாற்றங்களைத் தவிர்த்து, மனச்சாந்தி பெறலாம்.
பத்மாசனத்தில் அல்லது சித்தாசனத்தில் இருந்து செய்வது நல்லது. கதிரையில் முதுகை நிமிர்த்தித் தளர்வாக இருந்து கொண்டும்
ஆரோக்கிய வாழ்வு = 125

Page 71
ᏡᏁᏗᏡᏁᏗᏈᏙᏁᏪᏉᏁᎲ*ᏉᏁᏗ ᏑᏙᏁᎲrᏙᏁᏗᏑvᏁ4 ᏈᏙᏁᏁᏁᏗᏡᏁᎲᎹᏓᏁᏗ ᏠᏁᎲᏡᏁᏗᏈᏉᏁᏗ 'ᏉᏁᎲ ᏑᏙᏁᏪᏡᏁᎲᏉᏁᎲᏑᏉᏁᎲᏛᏁᏁᏗᎵvᏁᎲᏡᏁᏗᏈvᏁᎲrᏁᎲ AᏁ.
செய்யலாம். மூக்கு நுனியில் மனதை இருத்தி சுவாசம் உட்செல் வதையும், வெளியேறுவதையும் சில நிமிடங்கள் அவதானிக்கவும்.
வலது பெருவிரலாலும், மோதிர விரலாலும் மூக்கை முதலில் பிடித் துப் பின் பெருவிரலை எடுத்து சுவாசத்தை நிதானமாக வலது நாசி யால் வெளியிட்டுப் பின் உள்ளெடுக்க வேண்டும். சற்று நேரம் மூச்சை உள்ளடக்கியபின் வலது நாசியை பெருவிரலால் மூடி மோதிர விரலை எடுத்து இடது நாசியால் அதே போல் செய்ய வேண்டும். இவ்வள வும் ஒரு சுற்று. இதைப்போல பத்துத் தடவையாவது செய்ய வேண் டும். 10-15 நிமிடங்கள் வரை செய்யலாம்.
மூச்சை உள்ளெடுத்தல், அடக்கி வைத்திருத்தல், வெளிவிடுதல் ஆகியவற்றை 1 : 4 : 2 என்ற நேர விகிதத்தில் செய்வது உகந்தது. இப்பயிற்சியின் போது சுவாசிப்பிற்கு மார்புப் பகுதியை விட வயிற் றுப்பகுதித் தசைகளையே உபயோகித்துப் பழகுவது நல்லது,
சாந்தியாசனம்
இதனைச் சாவாசனம் என்றும் சொல்வர். உண்மையில் இது படிப்படியாகத் தசைகளைத் தளரச் செய்யும் பயிற்சியேயாகும்.
தசைகளில் இறுக்கம் இருப்பதால் தலையிடி, கபாலக்குத்து, பிடரிவலி, கழுத்துநோ, முதுகுவலி போன்ற உடல் அறிகுறிகளும், களைப்பு, பயம், பதகளிப்பு, அந்தரம், திடுக்காடு போன்ற மனோ
வியல் அறிகுறிகளும் ஏற்படலாம். இவற்றிலிருந்து விடுபடவும், மன
அமைதியைப் பேணவும் இது சிறந்ததொரு பயிற்சியாகும்.
கண்களை மூடியபடி நேராகப் படுக்க வேண்டும். அங்கங்களை யும், தசைகளையும் துளியும் இயங்காதவாறு தளரவிட வேண்டும். கால்விரல்களில் தொடங்கி பாதங்கள், கணுக்கால்கள், முழங்கால்கள் பாலுறுப்பு, மூலம் என ஒவ்வொரு அங்கமாகத் தளரவிட வேண்டும் ஒவ்வொரு அங்கத்தையும் தளரவிடும் போதும் சாந்தி, சாந்தி, சாந்தி என மனதில் சொல்ல வேண்டும் . இறுதியாக கழுத்து, வாய், கண், மூக்கு, காது, தலை, மூளை எனத் தளரவிட வேண்டும். எல்லாம் தளர்ந்த நிலையில் உடல் பிரேதம் போலக் கிடக்கும். அமைதியும்
126 - சாபி காட்டிய

ccAcccLELereEALeLALeLeeLeLeeL eLeMEcc cceM MLcceMLeLLeLeLeeLeLTLceLeLeeLMeMeMMLMMeMMeLeLeL eeLeMMMMMeMeMMeMeMMMLS
சாந்தமும் உள்ளத்தில் நிறையும் சிறிது நேரம் அதை ரசித்தபடி இருக்கவும்.
எழும்பும்போது திடீரென எழும்பாமல் அங்கங்களைச் சிறிது சிறிதாக அசைத்து அமைதியாக எழவேண்டும்.
LCO
மந்திர உச்சாடனம் என்றும் சொல்லப்படுகிறது. ஒரு சொல்லை அல்லது சொற் தொடரை அல்லது மந்திரத்தை நிதா னமாக மீண்டும் மீண்டும் சொல்லும் போது மன அமைதி உண் டாகிறது.
ஜ
ஒம் என்ற மந்திரத்தையோ, ஒம் சாயிராம், ஒம் பூரீ சாயிராம் என பகவான் நாமத்தையோ பயன்படுத்தலாம். வேறு இஷ்ட தெய்வங்களின் பெயரையும் பயன்படுத்தலாம். நிதானமாகவும், மெது வாகவும் திரும்பத் திரும்ப (உ+ம் 108 முறை) சொல்ல வேண்டும். சில காலத்தின் பின் உச்சரிப்பு இயல்பாகவும், இலேசாகவும் வரும் அதன் பின் எமது முயற்சி இன்றியே வரும்.
அடுத்தபடியில் சத்தமின்றி ஆனால் நாவையும். பேச்சுக்கு உதவும் தசைகளையும் உபயோகித்துச் சொல்லப் பழக வேண்டும். அதன் பின் தசைகளின் அசைவின்றியும், இறுதியில் மனதால் மட் டும் சொல்ல வேண்டும். தினமும் குறைந்தது இரண்டு தடவையா வது செய்து வர வேண்டும் ,
θανσοτώ
தியானத்தின் போது பத்மாசனம், வஜ்ராசனம் போன்றவற்றில் அமரலாம். முதுகு நேராக இருக்க வேண்டும். தியானம் என்றால் கண்களை மூடிக்கொண்டு அமைதியாக அமர்ந்திருப்பதல்ல. உண்மை யில் தியான யோகத்தில் அட்டமா யோகங்கள் என்னும் எட்டுப் படிகள் உள்ளன. இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியர்காரம், தாரணை என்பன முதல் ஆறுபடிகள் எட்டாவது இறுதிப்படி சமாதி நிலை (சமாதி என்பது சவம் அல்ல). அதற்கு முந்திய ஏழாவது படியே தியானம்,
ഷ്ട് 07&ിധ ഖ് ഖ E {

Page 72
*ᏁᎴᏡᏁ4 ᏑᏁᏗ ᏁᏁᎲᏑᏙᏁᎲᎮᏉᏁ, ᏑᏙvᏡᏁᎲᎮᏙᏁ4ᏡᏪvᎹᏓᏁᏇᏡᏁᎲᏡᏁᎲᏉᏁzᏡᏁᎲᏉᏁᏪᏉᏁᎲᏡvᎴvᏡᏁᎲᏡᏁ4ᏡᏁᎲᏡᏁᎲᏑuᏁᏓᏠᏁᎲᏍᏁᏍᏁ,
1 தியானம் செய்ய வேண்டுமென்று கண்ணை மூடிக் கொண்டு உட்கார்ந்தால், மனம் கடைத்தெருவிலும் மற்றவிடயங்களிலும் அலைகிறது. இது போலித் தியா னம். இதன் நுட்பங்களை அறியாது தியானம் செய் யும் போது அது தூக்கத்தில் முடியும்? 17
என்று பகவானும் எச்சரித்துள்ளார். எனவே ஏனைய Gunung முறைகளைப் போலவே இதனையும் குரு மூலமே கற்றுக் கொள்ள வேண்டும்.
இயானிக்கும் போது பகவான் பாபாவின் உருவத்தையோ ஏனைய இஷ்ட தெய்வங்களின் உருவத்தையோ ஒரு பெரியாரின் தோற்றத்தையோ, ஏன் இயற்கைக் காட்சியைக் கூட மனதில் வைக் தலாம். மாறாக ஜபத்தில் செய்ததைப் போல ஏதாவது ஒரு நாமத் தையோ, மந்திரத்தையோ மனதில் இருத்தலாம். ஆனால் சுவாமி எங்களுக்கு ஒளித் தியானத்தையே சிபார்சு செய்கிறார்.
தியானத்தை மன அமைதிக்காகவும், மனதை ஒருமுகப்படுத் தும் பயிற்சியாகவும் வைத்தியர்கள் கையாளுகிறார்கள். ஆனால் அதன் உண்மை நோக்கம் மிக உயர்வானது.
"ஜீவனும் பிரம்மனும் ஒன்றே என்பதை உணரும் முயற்சி இது' 19
என்று பகவான் அதன் உயர் நோக்கை தெளிவுபடுத்துகிறார். மேலும் ,
*தியானத்தின் மூன்று அம்சங்களான தியானிக்கப் படும் விஷயம்-இறைவன், தியானிப்பவர்-நான் என்ற நபர், தியானம் செய்யப்படும் செயல்-இடையறாச் சிந்தனை (தியானம்) இவைகளை சாதகன் ஒன்றாகப் பாவிக்க முயல்கிறான். இந்த மூன்றின் கூட்டுத் தொகுப்பே, ஒற்றுமையே தியானம் எனப்படும்.
இன்று தியானம் செய்யும் விதானமும், அதன் டேட்பொருளும் பெருமளவில் தவறாக விமர்சிக்கப்
{}8 ነ- σ σαύ ο σωφ αυ

படுகின்றன. மனதின் ஒருமுக நிலை (Concentration) எனவும் கருதப்படுகிறது. மனதினை ஒருமுகப்படுத்த நாம் தியானம் செய்யத் தேவையில்லை” 19
'மன ஒருமுகப்படுத்தல் என்பது ஐம்பொறிகளுக்கு உட்பட்டுச் செயற்படுவது. தியானம் ஐம்பொறி களுக்கு மேற்பட்டுச் செயற்படுவது'89
என்று கூறி தியானத்தின் அடிப்படைக் கருத்தையும், அது தவ றாக விளங்கப்படுவதையும் விளக்கிக் காட்டுகிறார்"
ஒளித்தியானம் செய்யும் முறை
ஒளித்தியானத்தின் படிமுறைகள் இங்கு தரப்பட்டுள்ளன.
* ஆசனம்
* நாடி சுத்தி
* ஞான முத்திரை
* பிரார்த்தனை
* உற்று நோக்குதல் - கண்னை மூடல்
* ஒம் காரம்
* அங்கங்களையும், தசை நார்களையும் மானசீகமாய்த் தளர்த்
35 Gäv (Thought mas Sage)
* எண்ணங்களின் அணிவகுப்பு (Thought Parade)
* சோ - ஹம் மூச்சுவிடல் - மனம் மூக்கு நுனியில்
* பாரிய இருட்பரப்பு - ஜோதியின் வரவு
1) ஜோதியில் சுவாமியின் ஆசீர்வாதத் தோற்றம் 2) உற்று நோக்குதல் 3) சாஷ்டாங்க நமஸ்காரம் (மானசீகமாக) 4) சுவாமி ஜோதியில் மறைதல் ஜோதி புருவ மத்தியூடாக ஆத்மீக இருதயத்தில் புகுதல், உள்ளே பரவுதல்
* வாசுனாமலம், பாபம், ரோகம் அழித்தல் (பாவனை)
* பரிசுத்தன், நித்தியன், ஆனந்தன் என்ற நிலையில் நானே ஜோதி
( I ain the light) atai p UTaian 67
ஆரோக்கிய வாழ்வு
ဣျား
123

Page 73
* ஜபம் - தியானம் ஆரம்பம்
இஷ்ட தெய்வத்தின் (சுவாமியின்) உருவத்தை மனதில் கொண்டு " ஓம் பூரீ சாய்ராம்' / 'ஓம் சாய்ராம்' என்ற மந்திரத்தை மான சீகமாக ஜெபித்தல் * ஜபம் தானாக ஒய்ந்து விடல், சுவாமியின் ரூபம் மறைந்து
விடல் * தியத்தா, தியேய தியானம் இரண்டறக் கலத்தல், ஆழ்ந்த
அமைதி, அகண்ட பிரம்ம ஜோதி, பிரம்ம ஜோதி * கண் விழித்தல் - தியானம் கலைத்தல் * கால் மாறி சற்று நேரம் இருந்து எழுதல்' 21
மன அமைதி பற்றிய இந்த அத்தியாயத்தை பகவான் அமைதி யாக இருப்பது பற்றிக் கூறிய பின்வரும் கருத்துடன் நிறைவு செய் ki so TL).
அமைதியாக இருப்பது ஒரு வலிமையான ஆயுதம் , எந்த கஷ்டமான நிலையிலிருந்தும் விலகி வெளியே வர அது உதவுகிறது. அவமதிப்புகள் ஏற்பட்டாலும் அதைப் பொருட்படுத்தா தீர்கள். யார் வேண்டுமானா லும் அவர்களுக்குப் பிடித்ததைப் பேசிக்கொண்டு போகட்டும் சொல்வதைச் சொல்லட்டும். எல்லோ ரிடமும், எல்லா நிலையிலும் பணிவோடு இருங்கள். உயர்வு, மற்றும் தாழ்வு மனப்பான்மையைக் கைவிட் டால் இது உங்களால் முடியும் எல்லா இடத்திலும் எல்லாரிடமும் கடவுளைக் காணக் கற்றுக்கொண்டால், இது உங்களுக்குச் சாத்தியமாகும். அவமதிக்கப்படும் போது கடவுள் விருப்பம் அதுவானால் அப்படியே யாகட்டும்' என்று உங்களுக்குள் சொல்லிக் கொள் ளுங்கள். எதற்கும் அசையாமல் திடமாக இருங்கள். அவமதிப்புகளைத் தாங்கிக் கொள்ளும்போது உங்கள் அடக்கமும், தூய்மையும் வளருகின்றன. நீங்கள் ஆன் மீகச் செல்வம் பெற்றவராகிறீர்கள் 22
1 30 E ക0 (ി' &f (g ധ
 

ᏑᏠᏁᏗᏛᏁᎯᏈᏓᏛᏁᏗᏑᏉᏁᏗᎴᏙᎴᏈᏗᏡᎯᏁᏓᏈᏠᏁᏡᏁᏪ ᏡᏁᏗ*ᏠᎯᏛᏙᎲ*ᏉᏁᎯᏑᏙᏁᎯ ᏑᏙᏁᎯᏡᏪᏈᏗ ᏡᏁᏗᏉᏙᏁᎯ ᏉᏈᏁᏪᏈᏁᎯᏡᏁᏪᏉᏙᏁᏪᏡᎯᏁᏗ ᏡᏁᎲ*ᏠᏁᏗ ᏡᏱᏗᏈᏉᏁᎯ رہسرام
அடிக்குறிப்புகள்
1) பகவத்கீதை - பாரதியார் மொழிபெயர்ப்பு அத் 1 சுலோ 281
29, 30 2) பகவான் பூரீ சத்ய சாயி பாபாவின் அருளுரைகளிலிருந்து சில
முத்துக்கள் (ப. ச. அ. மு) - பக் 64 3) த. ச. சா. ஜூன் 94 பின் அட்டை 4) ப. ச. அ. மு - 4 5) த . ச. சா மார்ச் - 94 பக் 15 6) மனதின் மர்மம் (ம. ம.) பகவான் பூரீ சத்திய சாயி பாபா -
L di 105 7) Dr ga. சோமசுந்தரம், D தி. ஜெயராமகிருஷ்ணன் - 1963
நோயும் இன்றைய மருத்துவமும் - பக் 91 8) த. ச. சா ஆகஸ்ட் 90 - பக் 5 9) மேற்படி - பக் 5 10) மேற்படி - பக் 4 11) த, ச. சா. மார்ச் 93 - பக் 6 12) LD. LD. – Luž 86 13) ப. ச. அ. மு - பக் 56 14) N. கஸ்தூரி - சத்யம் சிவம் சுந்தரம் பாகம் 1 - பக் 145, 146 15) பாலவிகாஸ் - பாடப்புத்தகம் - பக் 202 16) வைத்திய கலாநிதி தயா சோமசுந்தரம் - மனவடு - பக் 128, 129 17) த. ச. சா, ஆகஸ்ட் - 90 பக் 9 18) பிருந்தாவனத்தில் கோடை அருள்மழை - பக் 228 19) மேற்படி - பக் 229, 230 20) மேற்படி - பக் 230 21) தியானப் பயிற்சி - பிரசுரம் - மந்திகை பூரீ சத்ய சாயி நிலையம்
(29 - 2 - 93)
மேலதிக விபரங்களுக்கு வாசிக்க வேண்டியவை 1. பக்தர்களுக்கு சுவாமியின் வழிகாட்டல்கள்
வியாபாரிமூலை பஜனை நிலைய வெளியீடு பக் 2, 3 2. தியானம் பகவான் பூரீ சத்யசாயி சேவா நிலையம் - யாழ்ப்
பாணம் வெளியீடு 22) த ச. சா. மே - 94 பின் அட்டை
ஆரோக்கிய வாழ்வு SE {3}

Page 74
| Li ਸੁ76) மாநகர நூலக சேவை யாழ்ப்பாணம்,
MMAcc cccLcLcLcLAMLcLLccMLcMeML LcLceLecLMLLLcLcLLcLcLcLMkS LcS LMLcLLLMLLLLcccLLeSLLcLcMcLAcLcLAccLc S cLc AeLcLSAAAALASS
ஓம் சாயி ராம் 6. ஆன்மீகத்திற்கு வழிகாட்டும்
ஆரோக்கியம்
ஆன்மீகம் என்றால் என்ன?
ஆன்மா தொடர்பானது ஆன்மீகம் எனச் சுருக்கமாகக் கூறி விடலாம். ஆனால் இவ்வரையறை அச் சொல்லின் கருத்தைப் பூரண மாகத் தெளிவுபடுத்துவதாக இல்லை.
ஆன்மீகம் என்பது ஆன்மா என்ற சொல்லிலிருந்து வந்ததால், ஆன்மா என்றால் என்ன என்பதை முதலில் சிந்திக்கலாம்.
மனிதனுக்கு தேகம், இந்திரியம், பிராணன், அந்தக்கரணங்கள் போன்றவை சேர்ந்துள்ளன. ஆனால் இவை எதுவுமே தனித்தோ , சேர்ந்தோ ஆன்மாவெனக் கூறப்படுவதில்லை, ஆன்மா என்பது அழி யாத, நிலையான, அருவமான வஸ்துவென இந்திய சிந்தனையாளர் கள் பலரும் கூறுவர். எமது பிறப்புக்கு மூலமாகவும், எமது வினை களின் பலாபலன்களினைக் கொண்டு விளங்குவதுமாக ஆன்மா உள்ளது.
ஆன்மா பற்றி அறிதலும், விழைதலும் ஆன்மீகத்தில் அடங் குகிறது. ஆத்ம விசாரணையே எமது வாழ்வின் இறுதி இலக்கை அடைவதற்குரிய முதலும் முழுவதுமான விசாரமாகும். இவ் விசார ணையையே மெய்ஞானம் என்றும் கூறலாம்.
மனித குலம் தோன்றியது முதலே அவனது மனதில் தன் னைப் பற்றியும், தனது சுற்றாடல் பற்றியும் பல சந்தேகங்கள் எழுந்தன.
நான் யார்? நான் எப்படிப் பிறந்தேன்? இறப்பின் பின் என் நிலை என்ன? மீண்டும் எனக்கு ஒரு வாழ்வு இருக்கிறதா? இருந் தால் அதைத் தீர்மானிப்பவை எவை?
கேள்விகள் மேலும் கேள்விகளாகின்றன.
32 E * 0 0 50 | (20)

ܐ
ᏉᏪᏙᏓᎵᏉᏁᏗᏛᏙᏁzᏛᏙᎴᏈᏓᏡᏁᏛᏉᏁᏗ °ᏙᏁᏙᏗᏉᏁᏉᏁ ᏡᏪᏙ4ᏡᏁᏗ*ᏠᏁᏗᏡᏁ4ᏡᏁᎲᏡᎫᏙᎯᏡᏪᏈᏗᏑᏉᏁᏗᏡᏁᎲ ᏑᏓᏁᏗ*ᏠᏪᏠᏗ 9ᏉᏛᏓᏡᎯᏁ9ᏡᏉᏁᎯᏡᎯᏁᏗᏡᏁᏠᎯ ᎹᏁᎯ
நான் வசிக்கும் பூமி எப்படி உண்டாயிற்று? அதிலிருக்கின்ற மரம், செடி, கொடி, விலங்குகள் யாவும் எப்படித் தோன்றின? அவற்றிற்கும் எனக்குமுள்ள தொடர்பு யாது?
வானில் ஜொலித்துக் கொண்டிருக்கும் சூரியன், சந்திரன், கிர
கங்கள், நட்சத்திரங்கள் அடங்கிய இந்தப் பிரபஞ்சம் எவ்வாறு
தோன்றியது? அதன் நோக்கம் என்ன? இந்தப் பிரபஞ்சம் அழிவு டையதா?
இவையெல்லாம் எப்படி ஒரு ஒழுங்கில் இயங்கிக் கொண்டிருக் கின்றன?
கடைசிக் கேள்வி இதுதான்! இவற்றையெல்லாம் உருவாக்கி ஒழுங்காக இயங்க வைப்பவர் யார்? எதற்காக இவ்வியக்கம் அமை
கிறது?
இவ்வாறான கேள்விகளுக்குரிய விடைகளைப் பலரும் பல வகைகளில் தேடினர் எமது கீழைத்தேய ஞானிகளும் முனிவர்களும் மனிதனுக்குள்ளேயே ஆன்மீக உண்மைகள் பொதிந்திருப்பதை உணர்த்தி நின்றனர். நம்மை உணர்வதின் ஊடாக ஆன்மா, இறை வன், பிரபஞ்சம் ஆகியவை பற்றிய கேள்விகளுக்கு விடை கண்டு CO)4, Too Laurii.
தன்னை உணர்தல், தன் தலைவனை உணர்தல் என்ற நிலை பூரண விடுதலையாயும், பேரின்ப நிலையாயும், மோட்சமாயும் சொல் லப்படுகிறது.
ஆன்றோர் வாக்குகளும், அவதார புருஷர்களின் வாழ்க்கைக ளும் இந்த உண்மை நெறியை எமக்குத் தெளிவாய் எடுத்துரைக் கின்றன. பந்தத்திற்கு உட்பட்டு அல்லலுறும் ஆன்மாக்கள் உய்வ டைய இறைவன் அருள் அவசியமாகின்றது. இறைவனை அறிதல் முழுமையாகச் சாத்தியமில்லை என்ற போதிலும் இறைவனை உணர் சில் ஆன்மாக்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதமான வாய்ப்பாகும்.
பகவான் சத்யசாயி பாபா அவர்கள், மனிதகுலத்தின் ஈடேற் மத்திற்காகப் பல்வேறு முறைகளில் வழிகாட்டுகிறார் என்பது நாம்
ஆரோக்கிய வாழ்வு S 33

Page 75
ᏈᏁᎲᏡᏁᏗᏉᏁzᏡᏁᏗᏡᏁᎴᏡᏪᏁᏗᏉᏙᏁᏗᎵMᏙ ᏛᏙᏁᏗᏈᎷᏙᏗ ᏑᏙᏁᎯ ᏑᏓᏁᏗ ᏠᏁᏗᏈᏠᏁ,ᏛᏉᏁᎯ ᎵᏁᎯᏈᎲᎮᏖᎫV. ᏛᏙᏁᎲ ᏛᏙᏁᎯᎮᏉᏁᏗᏡᏁᎯᏡᏪᏙᎴᏡᏁᏪᏡᏁᏗ ᏑᏉᏁᏗ ᎪᏁᏗ
அறிந்ததே. மனிதனின் உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு அவர் காட்டிய வழிகளை இந் நூலில் இதுவரை ஆராய்ந்தோம்.
'நோய் தீர்க்கும் தனது இறகுகளோடு எழும்பி அவன் எங்கும் ஒளியும் ஜீவசக்தியும் கொண்டு வரு கிறான்?
எனச் சார்ல்ஸ் வெஸ்லி அவர்கள் கூறுவதைப் போல பகவான் சத்யசாயி பாபாவும் தன்னில் முழு நம்பிக்கை கொண்டு சரணாகதி அடைந்து விட்ட பக்தர்களின் நோய்களைப் பல்வேறு வழிகளிலும் தீர்த்து வருகின்றார்.
அவரே ஆபரேஷன்கள் செய்திருக்கிறார்; ஸ்பரிஸ்த்தால் மாத் திரம் குணமாக்குகிறார்; விபூதியால் நோய்தீர்க்கிறார்; கனவுகளில் வந்து கூடப் பிணி நீக்குகிறார்.
அவரது ஆபரேஸன் ஒன்றை ரா. கணபதி அவர்கள் பின்வரு மாறு விபரிக்கிறார்.
'அப்பையாவிடம் ‘எங்கே வலிக்கிறதப்பா' என்றார் ஸர்வக்ஞர், தலையிலிருந்து கால் இதயமொன்று உள் 6Τ6), ΠΓΤθο . அவர் வயிற்றில் வலிக்கும் பகுதியைக் காட்டினார். பாபா அவர் முகத்தெதிரே கையை நீட்டினார். உடனே அவ்விடம் முழுவதும் குளோரோஃபோ ம் மணம் வீசுவது போன்ற நெடி பரவலாயிற்று.
பாதமந்திர நடுஹால் ரணசிகித்ளை தியேட்ட ராகிறது! ஸெப்டிக் ஆகக்கூடாது என்பதற்காக டாக்டர்கள் அனுசரிக்கும் சுத்திகரிப்பு எதுவுமேயில்லை. இருபது அடியார்கள் பக்கத்திலேயே நின்று கொண்டிருக்கி றார்கள்,
அப்பையாவின் பிடரியில் பாபா கைகொடுத்து மயக்கமுற்ற அவரைப் படுக்க வைத்தார்.
해 34 三 - 3 (τα 3/τ. (2 αν
 

105832
வலக்கையை அசைத்தார். பளபளப்பான ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பெட்டி அதிலே வந்து குதித்தது! திறந்தார். ஒரு கத்தியை எடுத்தார்.
பார்த்தவர்கள் கண்மூடித் திறப்பதற்குள் அப் பையாவின் வயிற்றைக் கிழித்துவிட்டார்.
கிறுகிறு என்று வேலை முடித்தார். குடலை வெளியே இழுத்தார் அதிலிருந்து சீழும் இரத்தமுமாய் பெரிய நெல்லிக்காய் அளவிலிருந்து கட்டியைக் கத்த ரித்து எடுத்தார்.
இத்தனை நேரம் வெளியே தொங்கிக் கொண்டிருந்த அவரது குடலை உள்ளே தள்ளினார்.
கிழித்த வாயின் இரண்டு புறங்களையும் கை விரல்களால் பிடித்து ஒன்று சேர்த்து, அதன் பக்க மாய் விரலை அசைத்தார். தையல் போட்டமாதிரியே அவ்விடம் சேர்ந்து விட்டது”
பாபாவின் விபூதியின் குணமாக்கும் ஆற்றலை அறிய நாம் ஆதாரங்களைத் தேடி நூல்களைப் புரட்ட வேண்டியதில்லை. சாயி அடியார்களில் பெரும்பாலானோர் தமது வாழ்விலேயே அதை நிச் சயம் அனுபவித்திருப்பர்; அல்லது நண்பர், உறவினரிடமிருந்தாவது அறிந்திருப்பர்.
'கனவிலே தனக்கு ஆபரேஷன் ஆனதாகக் கண்டு, காலையில் கண் விழித்தெழுகையில், வாஸ்தவமாகவே பாண்டேஜ் போடப்பட்டிருப்பதையும், வாஷ்பேஸினில் ரத்தம், பஞ்சு முதலியன இருப்பதையும் பார்த்து ஐயனின் அருளில் உருகிக் கரைந்திருக்கும் பாக்கிய சாலிகளும் உண்டு பாதமந்திரம் கட்டிய திருமல்
ராவுக்கே இப்படி ஒரு அனுபவம் உண்டு 2
என்று கன வில் குணமாக்குவதை ரா. கணபதி வரைகிறார்.
ஆரோக்கிய வாழ்வு
王
3.
5

Page 76
ᏑᏉᏁᏗ ᏑᏙᏁᏉᏪᏑᏉᏁᏗ 'ᏉᏁ4ᏑᏙᏁ4ᏡᏁᏪᏉᏓᏁ%Ꮄ ᏑᏙᏁ4ᎵᏉᏁ4ᏑᎷᏖᏪᎵᏙᏁᎲᏡᏁᏓᎴᏠᏁzᏑᏠᏪᏠ4ᎴVᏁᏪᎵᏙᏪᏠᏗᏡᏁ4ᎵᏉᏁ4ᏡᏁᎲ ᏡᎯᏁ4ᏑᏙᏁᏪᎵᏙᏁᏪᏡᏁᏓᎴᎷᏠᏪᎵᏖᏁ4ᎵᏖᏁᎯ
இவ்வாறான குணமாக்கும் அற்புதங்கள் எவ்வாறு நிகழ்கின்றன. சுவாமியே பின்வருமாறு விளக்குகிறார்.
'நோய்களைக் குணமாக்கும் விடயத்தில் இருவழி அம்சங்கள் உண்டு. மக்கள், ஆத்மீக அருள் பெறும் பக்குவ நிலையில் இருப்பார்களாயின் அவர்களுடைய நோயைக் குணப்படுத்த, அவர்களைக் காப்பாற்ற, ஏன் இறந்து போனாலும் அவர்களை மீளவும் எழுப்ப என்னால் முடியும். மின்னோட்டத்தின் நேர், மறை ஒட்டங்களைப் போன்றது இது. சுகப்படுத்தும் எனது வல்லமையை நேரோட்டத்திற்கு ஒப்பிடலாம். என்னை நோக்கிய உங்களது பக்தி மறை மின்னோட்டமாகும். இந்த இரண்டும் ஒன்றாக இணைந்தவுடன் அந்தப் பக்தியே, அந்தக் குணமாக்கும் அற்புதத்தைச் செய் கிறது.
ஆரோக்கியமின்மைக்கு அல்லது ஆரோக்கியத் திற்குப் பொறுப்பாயிருப்பது மனிதனுடைய மனமே. இரண்டிற்கும் காரணமாயிருப்பது அல்லது உந்து சக்தியாயிருப்பது மனிதனேதான். நோய் குணமாக வேண்டுமெனின், அதற்குரிய அவசியமான நம்பிக்கை அவனது மனதில் உண்டுபண்ணப்பட வேண்டும். அவனைக் குணப்படுத்த அவனுக்கு வேண்டிய நம் பிக்கை, உறுதி, வல்லமைகளை அவனுக்கு அளிப்பதே நான் செய்யும் வேலை. என்மீது பக்தனுடைய நம் பிக்கையின் செறிவிற்கேற்ப நான் காட்டும் அளவு கடந்த அன்பே விரும்பிய பெறுபேற்றினை அளிக் கிறது' 3
மேற்கூறிய தனது அற்புத ஆற்றல்களால் மாத்திரமின்றி புட்டபர்த்தியில் அமைந்திருக்கும் பல்வேறு வைத்தியசாலைகள் ஊடா கவும், தனது தெளிவான போதனைகளூடாகவும் பகவான் மனித குலத்தின் நோய்களைத் தடுக்கிறார்; குணமாக்குகிறார்; அவர்களை ஆரோக்கியம் ஆனவர்களாக்குகிறார்.
售36三, சாயி காட்டிய

ᏑᎲᏪᏈᏪᏡᏛᏗᏡᏁᏗᏑᏔᏛᏁᎲᏑvᏛᏠᏪèᏙᏁzᏛᏠᏁᏪᏛᏙᏁᏪ*ᏍᏁᏪᏛᏙᏁᏪᏡᏙᏪᏠzᏡᏁ4ᏛᏙᏪᏠ4ᏡᏪᏁgᏡᏪᏙ4ᏡᏁ4ᏡᏪᏠᏪᏡᎯᏙgᏡᏁ4ᏛᏡᏁ4ᏛᏠᏁᏗᏡᎯᏍ4ᏡᏪᏠᎯ ᎪᏁᎯᏑᏠᏁ4ᏡᏁᎯ
பகவான் மனிதர்களின் ஆரோக்கியத்தில் இவ்வளவு தீவிர அக் கறை காட்டுவதன் காரணம் என்ன? அன்புதான்!
எதிர்பார்ப்புகள் அற்ற, பிரதியுபகாரம் தேடாத, பிறர் ஈடேற்றம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட வற்றாத, எல்லை யற்ற பகவானின் அன்புப் பிரவாகம்தான் காரணம்.
அந்த அன்பு எங்களை மீண்டும் மீண்டும் பிறந்து, வளர்ந்து, மடிந்து பிறவிப்பிணிச் சுழியில் தொடர்ந்து மூழ்கிவிடாமல் ஆன்மீக உயர்விற்கு வழிகாட்டுகிறது. எமது பிறவியின் குறிக்கோளான தன்னை உணர்தலுக்கு, இட்டுச் செல்தலுக்கு ஆரோக்கிய வாழ்வும் அவசிய மாகிறது.
"உடல் நலம் சரியாக இல்லாவிட்டால் தியானத்தில் மனம் ஈடுபடமுடியாது. ஜூரம் வந்தால் நீங்கள் சாதாரண அலுவல்களையே கவனிப்பதில்லையே! அதைவிடக் கடினமான தியானத்தில் எவ்வாறு ஈடு படமுடியும்? நன்றாக உடற்பயிற்சி செய்வதும், நன் றாகக் குளித்துவிட்டு அமர்வதும் தியானத்திற்கும் பூசைக்கும் அவசியமானது. நல்ல சாத்வீகமான உண வும், நிச்சிந்தையான உறக்கமும் உடம்பை அமைதி யாக வைத்திருக்கும். அப்பொழுதுதான் அமைதி யாகப் பூசை செய்ய முடியும்' "
என்று கூறிய பகவான், மேலும், எமது உடல் இறைவன் குடி கொண்டிருக்கும் ஆலயமாதலால் அதை ஆரோக்கியமாகவும், புனித மாகவும் வைத்திருக்க வேண்டும் என்று பின்வருமாறு கூறுகிறார்.
'நமது உடல் கடவுள் குடியிருக்கும் கோயில் அவர் நமது உள்ளத்தில் தங்கியிருப்பார். அதற்கேற்ப நம் முடைய உடலை நாம் தூய்மையாக, குறையற்ற தாக வைத்துக் கொள்ள வேண்டும். அதே பேரில் நமது உள்ளம் தீய எண்ணங்கள் இல்லாமல் தூய்மை யாக இருக்க வேண்டும். கெட்ட எண்ணங்களின் காற்று வீசினால் உள்ளத்தில் இருக்க வேண்டிய ஞான ஒளி அணைந்து போகும்' "
ஆரோக்கிய வாழ்வு E 13 ή

Page 77
LcccL LcLccAcLMckkMLcLLLcLcccLcLcLccccLeLALcLMLcLLcLLcLcLMcLcLMcccLLccLcLLcLMcLMLcLcLcLLeLeeLecMLMLMLMLLcLcLcLMLMLMcLMLML MMS
உடம்பினை இழுக்கானது என்று முன்பு எண்ணியிருந்தேன்" ஆனால் அது சரியல்ல; எமது உடம்பினுள்ளே முக்கிய பொருளான இறைவன் குடியிருக்கிறான் என்பதால் நான் அதை ஒம்பி வருகிறேன் எனத் திருமூலர் பின்வருமாறு கூறுவதையும் நாம் நினைவில் கொள் ளலாம்,
'உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன் உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன் உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்று உடம்பினை யானிருந் தோம்புகின்றேனே' 8
மனித இனத்திற்கு மிகப்பெரிய பேறு கிடைத்துள்ளது. ஆறறிவு பெற்றதால் அதுவே இறைவனை அறியும் பேறு கொண்டது. விஞ் ஞான ரீதியில் பார்க்கும் போது கூர்ப்பின் மிக உச்ச நிலையில் நிற் பதும் மனிதப் பிறவிதான். அதனால்தான் மாணிக்கவாசக சுவாமிகள்
"புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச் சொல்லாஅ நின்றவித் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்' 7
புல், பூண்டு முதலிய பிறவிகளில் வாழ்வைத் தொடங்கி, அறி வோடு கூடிய மானுடன் வரை பல்கோடிப் பிறவிகளை எடுத்துச் சலிப் படைந்து விட்டேன் என்கிறார்.
அத்தகைய உயர் நிலையாகிய மானிடப் பிறப்பை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்? உண்டு களித்திருந்து ஊருக்கும் தனக்கும் உபயோகமற்று வாழ்ந்து வீணே மடிவதா? இந்த வாழ்க்கையை ஆழ்ந்த அர்த்தம் பொதிந்ததாக மாற்ற வேண்டாமா? மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, விலங்கு மனத் தோடு காலத்தைக் கழிப்பதா?
அல்லது 'பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமானின் பாதங் களைப் பணிந்து உயர்ச்சி பெறுவதா?
138 S ση αθ’ ο, (τα έραν
 

cMccccMLMeLMLeLeeLeeLMeLeLeecccMcMeeMMeMMeceeekLLeMeeMLceMcceMcLLSLceeSeLeL LsC McEeeSce S ee ccceLLeeeLee ecc
அவன் தாள் பணிவதற்கும், அவன் சேவை, செய்வதற்கும், அவன் நாமம் இசைப்பதற்கும், அவன் வழிகாட்டுதலைச் செயற் படுத்துவதற்கும் உடலாரோக்கியம் தேவை.
அதையும் அவன் தானே கொடுக்க வேண்டும்! எனவேதான் அவரைப் பின்வருமாறு அஷ்டோத்திர சத நாமா வளி ஒதும் போது வேண்டுகிறோம்.
ஓம் பூரீ சர்யி சர்வரோகி நிவாரினே நம ஒம் பூரீ சாயி சர்வ உபாத ஹராய நம.
எல்லா வியாதிகளையும் நீக்குபவரே உமக்கு எமது வணக்கம்; எல்லா உபாதைகளையும், தொந்தரவுகளையும் நீக்குபவரே உமக்கு வணக்கம் என்கிறோம்.
'ஆனால் உடம்பு மட்டும் நம்மை முன்னேற்றிவிட முடியாது. ஆண்டவனை அடைய, வாழ்க்கை என்ற ஆற்றைக் கடக்கின்றோம். அதற்கு உதவும் படகு தான் தேகம், அது உறுதியாகப் பழுதில்லாமல் இருந் தால்தான் ஆற்றைக் கடக்க முடியும் ஆற்றைக் கடந்து விட்டால் அப்புறம் படகுக்கு வேலை இல்லை. நமது பக்தி நிறைந்த எண்ணங்களை மாலையாகக் கோர்த்துப் போட ஒரு நல்ல நார் தேவை. அதுதான் நமது உடம்பு. மாலையைப் போட்டு மலர்களும் உதிர்ந்து விட்டால் நாருக்கு வேலை இல்லை. ஆனால் அதுவரை நார் மிக அவசியம் ' 8
என்று பகவான் கூறுவதற்கிணங்க உடம்பை ஒரு கருவியாக
உபயோகித்து மெய்ஞானத்தை அடைய வேண்டும்.
அதற்கு ஒரே வழி, எந்தவித சஞ்சலமும், சந்தேகமுமின்றி அவரது பாதங்களை அன்போடு பற்றிக் கொள்வதுதான், அன்னை போன்று அன்பைச் சொரியும் பகவான் சத்ய சாயி பாபாவின் கழல் பற்றி, அவன் காட்டும் பாதையில் நடந்தால், எம் உடலுணர்வு ஒடுங் கும், ஞான ஒளி வளரும், சிவானந்தத் தேன் சொரியும்.
ஆரோக்கிய வாழ்வு 王 133

Page 78
reeAeMM eccMS eAeLeeLE e eLeLMLELM MAMceLeLeL L LeLMLMLMLLeLMLceLeLe cceLe eMeS SeLeLAeS LeeeLeeS ee eLeLeeLcAcSccLcLcccLLcLc cLSLccLcLcLec cLSM ecM
LF5) நினைந்து ஊட்டும் தாயினும் சாலப்
பரிந்து நீ பாவியேன் உடைய ஊனினை உருக்கி உள் ஒளி பெருக்கி உலப்பு இலா ஆனந்தம் ஆய தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த
செல்வமே சிவபெருமானே யான் உனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கு எழுந்தருளுவது இனியே' 9
என்று மாணிக்கவாசக சுவாமிகள் போன்று நாமும் பகவான்
சத்ய சாயி பாபாவை வேண்டுவோம்.
அனைத்தும் அறிந்த எம் பகவானின் பிரேமை கலந்த கருணைக் கடாட்சம் அனைவர்க்கும் கிட்டி, அனைத்து ஜீவராசிகளும் உய் வடைந்து, இன்பப் பேற்றைப்பெற பிரார்த்திப்போமாக. சற்குரு வின் அன்பில் கலந்து எம்மை முழுமையாக அர்ப்பணித்து இன்பத் தில் திளைக்க பாபாவின் பாதார விந்தங்களைப் பணிந்தேத்தித் தொழுவோமாக,
'நீங்களும் தெய்வமாகலாம். உங்களிடமில்லாத எதுவும் என்னிடமில்லை.
உங்களுள் அது மறைந்துள்ளது. இங்கே வெளிப்பட்டு சக்தியுடன் திகழ்கிறது.
இது மாத்திரமே அவ்வேறுபாடு' 19
ܘܢܝܚܘ IT/.) |#/ܐ ܤܸܰ
ஜெய் ge:ITC SoffT LÒ
氰4●三 400 60 ('g()
4)
5)
6)
7)
8)
9)
10.

ア3う三て○-○-
ᏁᏪᏡᏁᎯ?ᏉᏁᏗᏡᏁ4ᏡᏁᏗᏡᎯᏙᎴVᏁᏗᎵᏖᏁᎴᏉᏛᎲᏈᏙᏛᏙᏡᎯᏉᏗᏑᏓᏁᏗᏡᏪᏙ4ᎹᏙᏁᎴᎹᏙᏁᎲᎹᏠᏁᏗ FᎨᏛᏓᎵᏉᏁᎲ ᏑᏠᏛᎲᏑᏙᏁᏗᏡᏁᏪᏛᏁᎲᏡᏁᎯᏡᎯᏉᏗ ᏡᏁᏠᏊ
டக்குறிப்புக்கள்
ரா. கணபதி - ஸ்வாமி - பக் 413, 4 14
மேற்படி - பக் 417
சுவாமியுடன் ஒரு சம்பாஷணை - பூரீ சத்யசாயி சேவா நிலை
யம் சாவகச்சேரி - பக் 20
சத்திய தரிசனம் - பக் 56
பூரீ சத்ய சாயி பாபா - அநுராகம் வெளியீடு - பக் 12 திருமூலர் திருமந்திரம் - 3ம் தந்திரம், சரீர சித்தி உபாயம் மாணிக்கவாசகர் - திருவர் சகம் - சிவபுராணம் - வரி 26, 31
சத்திய தரிசனம் - பக் 56, 57 மாணிக்கவாசகர் - திருப்புகழ் - பிடித்த பத்து பாடல் 9 சாயியுடன் தெய்வீகத்தை நோக்கி - பக் 8
கோடி மலர்களைக் கொணர்ந்து அவற்றால் அர்ச்சனை செய்யுங்கள். - எல்லாமே ஒதுக்கித் தள்ளப்படும் ஒ ஒன்றுமே ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. ஒரேயொரு கமலமான உங்கள் இருதயத்தைக் கொண்டு வாருங்கள். சத்யசாயி ஏற்றுக் கொண்டு பிரேமை, சாந்தி இரண்டையும் வழங்குவார்.
ரோக்கிய வாழ்வு 砷Dun° E {4{

Page 79


Page 80


Page 81
1SB1
 

●55-95249-3-3