கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிறுவர் கட்டுரைகள் - தரம் - 5, 6

Page 1
☆ ẽ
 


Page 2

சிறுவர் கட்டுரைகள்
/ 7 ܘܢ
,,
ফুৰে)। ৪৯) ***', 島。
aajuus
ஐந்தாம், ஆறாம் வகுப்பில் கற்போர்க்கும் கல்வியமைச்சு
நடத்தும் புலமைப்பரிசிற் பரீட்சை, தெரிவு செய்யப்பெற்ற \ பாடசாலைகளிற் சேர்வதற்கான பிரவேசப் பரீட்சை 3 ஆகியவற்றுக்குத் தோற்றுவோர்க்கும் பயன்தரும் ,ഖങ്ങി ஆக்கப்பெற்ற கட்டுரைத் தொகுப்பு.
ஆக்கம்: இலக்கிய வித்தகள் கவிஞர். த. துரைசிங்கம் B.A. (Hons), Dip-in-Ed., S.L.E.A.S கல்விப் பணிப்பாளர் (ஓய்வு)
13679 G
மறீ லங்கா புத்தகசாலை, 234, காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம்,
に三らT?O○ヘ○一 cmso: 90/=

Page 3
鬥
鷺鷺
நூல்விவரக்குறிப்பு
This 6. சிறுவர் கட்டுரைகள்
ஆசிரியர் கவிஞர் த. துரைசிங்கம்
திருத்திய பதிப்பு மார்ச் 2002
இ) பதிப்புரிமை நூலாசியருக்கு.
ரீ லங்கா புத்தகசாலை,
234. காங்கேசன்துறை வீதி,
யாழ்ப்பாணம்.
கொழும்பில் அச்சிட்டு
வெளியிடுவோர் லங்க புத்தகசாலை,
குணசிங்கபுர, கொழும்பு - 12.
Te: 34 || 942
N
6íl60)6u) (IbLIT 90/-
 
 

உலகில் உள்ள தொழில்களில் மக்கள் உயிர் காக்கும் தொழில் வைத்தியமாகும். அதுவே நான் விரும்பும் தொழில் நோயால் வாடும் மக்களின் துயர் துடைப்பவனே வைத்தியனாவான். அவன் பயன் கருதாது பணி செய்பவன். காலை மாலை என்று பாராது எந்நேரமும் மக்கள் பணி செய்ய அவன் கடமைப்பட்டுள்ளான்.
ஏழை, பணக்காரன், தாழ்ந்தவன், உயர்ந்தவன் என்ற பேதம் பாராது அனைத்து உயிருக்கும் தொண்டாற்றுபவன் வைத்தியன். அவனது தொழில் புனிதமானது. இப்புனிதமான தொழிலில் ஈடுபட்டுழைப்பதே என் இலட்சியமாகும்.
உயிர்களைப் பிடித்து வாட்டும் பிறவிப் பிணியைப் போக்கி அவர்களுக்குப் பேரின்பத்தை வழங்குபவன் இறைவன். அவன் வைத்தியநாதன் என்று அழைக்கப்படுகிறான். இம் மண்ணுலகில் நோயால் வாடும் மக்களின் துன்பத்தைப் போக்குபவன் வைத்தியன். அவன் கண்கண்ட கடவுளாகப் போற்றப்படுகிறான்.
தாகத்தால் தவிப்பவனுக்குத் தண்ணிரே மிக உயர்ந்த பொருளாக விளங்கும். அதே போன்று நோயால் வருந்துபவனுக்கு அவனது நோய் நீங்குதலே மிக உயர்ந்த பொருளாகும். இதனை நிறைவேற்ற வல்லவன் வைத்தியன். உயிர் காக்கும் இந்த உத்தமத் தொழிலில் ஈடுபடுவோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்புண்டு மக்கள் மதிப்பும் உண்டு.
சிறுவர் கட்டுரைகள்

Page 4
இன்று இத் தொழிலில் ஈடுபட்டோருக்கு அரசு மிக்க மதிப்பளிக்கிறது. உயர்ந்த ஊதியமும் வழங்குகிறது. நான் வைத்தியத் தொழிலில் ஈடுபடுவதன் மூலம் நல்ல வருமானத்தைப் பெறுவேன். அதன் மூலம் மக்களுக்குத் தொண்டு செய்யும் வாய்ப்பையும் பெறுவேன்.
வைத்தியத் தொழிலுக்கு வயதுக் கட்டுப்பாடே இல்லை. இத்தொழிலில் ஈடுபட்டவர்கள் இறுதிவரை தொண்டாற்ற முடியும். ஏனைய தொழில்களில் இத்தகைய வாய்ப்பு வசதி இல்லை.
வைத்தியத் தொழிலில் ஈடுபடுவதன் மூலம் அத் தொழிலில் மேன்மேலும் சிறந்த பயிற்சியினைப் பெறமுடியும். இதன்மூலம் என் மதிப்பும் உயரும்.
ஆகவே உலகிற் சிறந்த தொழில் வைத்தியத் தொழிலே உயிர் காக்கும் இத் தொழிலையே நான் பெரிதும் விரும்புகிறேன்.
2. நான் கண்டெருத்த பணப்பை,
கடந்த திங்கட்கிழமை மதிய நேரம் எனது பாடசாலை விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தேன். அப்போது எனது காலில் ஏதோ தட்டுப்படவே குனிந்து பார்த்தேன். அது ஒரு பணப்பை அதனை எடுத்துத் திறந்து பார்த்தேன். அதனுள் இருநூறு ரூபா பணம் இருந்தது. உடனே எனக்குப் பெற்றோர் அடிக்கடி சொல்லித்தரும் அறிவுரைகள் ஞாபகத்திற்கு வந்தன. அதனைக் கொண்டு சென்று அதிபரிடம் ஒப்படைத்தேன். அவர் அதனைப் பார்த்துவிட்டு என்னைப் பாராட்டினார்.
அப்போது பணப்பையைத் தொலைத்த மாணவன் எங்கும் தேடிக் காணாமையினால் அதிபரிடம் முறையிட வந்தான் அதிபரின் கையிலிருந்த பணப்பையைக் கண்டதும் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தான்.அது தன்னுடைய பணப்பை என்று நடந்தவற்றைக் கூறினான். அதிபர் என்னைப் பார்த்து இதனைக் கண்டெடுத்தது இந்த மாணவன்தான் என்று கூறினார். உடனே அந்த மாணவன் பாசத்துடன் என்னைப் பார்த்து நன்றி கூறினான். எனது பாடசாலையில் இப்படியான நேர்மையான மாணவர்கள் இருப்பதையிட்டு மகிழ்வடைகிறேனென அதிபர் கூறி என்னைப் பாராட்டினார். நான் அந்தப் பெருமிதத்துடன் எனது வகுப்பறைக்குச் சென்றேன்.
2. சிறுவர் கட்டுரைகள்
 
 

3. நான் பார்த்த திருவிழா.
அன்று புதன்கிழமை, நல்லூர்க் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா. அதிகாலை ஐந்து மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டேன். என்னுடன் அப்பாவும் அம்மாவும் தம்பியும் வந்தனர். காலை ஆறு மணிக்கு ஆலயத்தை வந்தடைந்துவிட்டோம். நாலாபுறமும் பக்தர்கள் கூட்டம் உள்ளே செல்ல முடியவில்லை. கோபுர வாயிலின் வெளியே நின்று முருகனைத் தரிசித்தோம். எங்களைப்போல் பல்லாயிரக்கணக்கானோர் அங்கு திரண்டு நின்றனர். சரியாகக் காலை எட்டுமணிக்கு முருகப்பெருமான் பக்தர்கள் புடைசூழ, மேளவாத்தியங்கள் முழங்க, கோபுர வாயிலைக் கடந்து வந்து அழகிய தேரில் எழுந்தருளினார். அப்பொழுது அரோகரா’ என்ற கோஷம் விண்ணதிர ஒலித்துக் கொண்டிருந்தது. நாலாபுறமும் திரும்பிப் பார்த்தேன். பார்க்குமிடமெங்கும் பக்தர் கூட்டமே தென்பட்டது. கற்பூர தீபம் ஏந்துவோர் ஒரு புறம், திருமுறைகளைப் பாடுவோர் மறுபுறம், நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவோர் தேரின் பின்புறம், எங்கும் பக்தி மயமான சூழ்நிலையே தென்பட்டது.
தேரில் முருகப் பெருமான் எழுந்தருளிய பின் குருக்கள் கிரியைகளை நடத்தினார். பின்னர் மணி ஒலித்தது. தேரில் பூட்டப்பட்டிருந்த பெரிய வடத்தைப் பக்தர்கள் கரந்தொட்டு இழுத்தனர். அரோகரா என்ற கோஷம் எங்கும் எதிரொலித்தது. தேர் மெல்ல அசைந்தது. பக்தர்கள் அதன் முன்னும் பின்னும் சென்ற வண்ணமிருந்தனர்.
சிறுவர் கட்டுரைகள் 3.

Page 5
தெற்கு மேற்கு, வடக்கு வீதி வழியாகத் தேர் மெல்ல மெல்ல அசைந்து சென்று கோபுர வாயிலின் கிழக்குப் பக்கத்தில் தேர்முட்டிக்கு அருகில் நின்றது. அங்கு அடியார்கள் தேர் அர்ச்சனை செய்தனர் நாங்களும் அர்ச்சனை செய்வித்தோம். பின்னர் குருக்களிடம் விபூதிப் பிரசாதம் பெற்றுக் கொண்டு பகல் பத்து மணியளவில் வீடு திரும்பினோம். என் வாழ்நாளில் இத்தகைய பெருங் கூட்டத்தை இத்தேர்த் திருவிழாவிற்றான் கண்டேன். நான் பார்த்த இத் திருவிழாவை என்றும் மறக்க முடியாதுள்ளது.
4. நான் விரும்பும் பெரியார்
ஈழநாடு பெற்றெடுத்த பெரியோர்களுள் சேர். பொன் இராமநாதனும் ஒருவர். இவரே நான் விரும்பும் பெரியார். இவரது
பெருமை சொல்லுதற்கு அரிது.
கல்வி அறிவு, மதிநுட்பம், பேச்சுத்திறன், சைவப்பற்று, உயர் குணங்கள் ஆகிய அரிய பண்புகளால் இவர் சிறந்து விளங்கினார். இவரால் நமது நாடும் பெருமை பெற்றது. இவர் யாழ் - மாவட்டத்தில் மானிப்பாய் என்னுமிடத்தில் பிறந்தார். தமது கல்வியைக் கொழும்பு நகரில் கற்றார். கல்லூரிப்படிப்பில் சிறந்து விளங்கினார். சட்டநூற் கல்வி பெற்று நியாயவாதியானார். வழக்குப் பேசும் திறமையில் முன்னணியில் திகழ்ந்தார். இவரது வாதத்திறன் மக்களைப் பெரிதும் கவர்ந்தது. தமிழ் மக்களதும் பிற மக்களதும் மதிப்புக்கு உரியவர் ஆனார்.
4. சிறுவர் கட்டுரைகள்
 
 

இலங்கை ஆட்சிமுறையில் பலவேறு சீர்திருத்தங்களை ஏற்படுத்த விரும்பினார். சட்ட நிரூபண சபையில் படித்த இலங்கை மக்களின் பிரதிநிதியாகப் பதவி வகித்தார். தன் சொல் வன்மையாலும் மதிநுட்பத்தாலும் ஒப்பற்ற தலைவனாக விளங்கினார்.
இவர் தம் வாழ்நாள் முழுவதும் சைவ சமய வளர்ச்சிக்காகவும் தமிழ் இனத்தின் நல்வாழ்வுக்காகவும் அரும்பாடுபட்டார்.
யாழ்ப்பாணத் தமிழ் மாணவர்கள் கல்வியைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் பெற வேண்டுமென விரும்பினார். இதன்பொருட்டு இரு கல்லூரிகளை நிறுவினார். தமிழ்ப் பெண்கள் கல்வி விருத்திக்காகச் சுன்னாகம் இராமநாதன் கல்லூரியைத் தாபித்தார். அதே போன்று ஆண்பிள்ளைகள் கல்வி பயிலப் பரமேசுவராக் கல்லூரியை ஆரம்பித்தார். இக்கல்லூரியே பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகமாக மாறியது.
கொழம்பு நகரில் கொட்டாஞ்சேனையில் பொன்னம்பலவாணே சுவரர் சிவாலயத்தை அமைத்தவரும் இவரே. இவர் தாபித்த கல்லூரிகளும் எழுப்பிய கோவில்களும் இவர் ஆற்றிய தொண்டுகளும் இன்றும் இவரை நினைவூட்டிய வண்ணம் உள்ளன. இவரது ஒப்பற்ற சேவைகளைப் பாராட்டி இவருக்குச் சேர் பட்டம் வழங்கப்பட்டது.
சேர் பொன் இராமநாதனின் உருவச்சிலை கொழும்பு மாநகரில் பழைய பாராளுமன்றக் கட்டட முன்றலில் இன்றும் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. அவரது நாமம் இலங்கை மக்கள் தம் மனதில் என்றும் நிலைபெற்று விளங்கும் என்பதில் ஐயமில்லை.
சிறுவர் கட்டுரைகள் 5

Page 6
5 எனக்குச் சிறகு இருந்தால்.
அன்று ஞாயிற்றுக்கிழமை. எங்கள் பூந்தோட்டத்திற்கு நீர் ஊற்றிக் கொண்டிருந்தேன். அப்போது பூந்தோட்டத்தில் அங்குமிங்குமாகச் சிட்டுக்குருவிகள் சில பறந்து கொண்டிருந்தன. பூக்களில் தேன் உண்ண அவை சுற்றிச் சுழன்ற வண்ணம் இருந்தன. இக்காட்சி எனது மனதில் ஒரு கற்பனை உணர்வை ஏற்படுத்திற்று. எனக்குச் சிறகு முளைத்தால் எப்படியிருப்பேன் என்று சிந்தித்தேன்.
நான் ஒரு பறவையானால் எந்தன் சிறகின் துணை கொண்டு எங்கும் பறந்து செல்வேன். ஆறு, மலைகள் எல்லாம் கடந்து ஆகாய வெளியில் ஆனந்த நடனமிடுவேன். முன்னர் எட்ட நின்று பார்த்த இடங்களையெல்லாம் கிட்டச் சென்று பார்ப்பேன்.
அதிகாலை வேளையில் எனது இனிய ஓசையால் மக்களைத் துயில் எழுப்புவேன். வயல் வெளிகளிலும் தோட்ட நிலங்களிலும்
புகுந்து தானியங்களையும், பழவகைகளையும் கொத்தி உண்பேன்.
என் நண்பர்களுடன் கூடிப் பசுந்தரைகள், கடற்கரைகள், மலையடிவாரங்கள் எங்கும் பவனி வருவேன். இயற்கைக் காட்சிகளைக் கண்டு இன்புறுவேன். எவ்வித கலலையுமின்றி எங்கும் சுற்றுலாச் செல்வேன்.
இப்படி எண்ணிய வண்ணமிருந்த போது மழைத்தூறல்கள் என் மேனியிற் பட்டன. என் கற்பனை கலைந்தது. மழையில் நனைய வேண்டி ஏற்படுமே என்று எண்ணினேன். உடனே வீடு நோக்கிப் புறப்பட்டேன். எனது இனிய கற்பனையை நினைத்து நினைத்து இன்புற்றேன்.
6 சிறுவர் கட்டுரைகள்
 
 

6. 6T60T5I LITLöfT6O6V)
எனது பாடசாலையின் பெயர் வயலூர் மகா வித்தியாலயம். இது யாழ்ப்பாணத்திற்கு அண்மையில் உள்ளது. இங்கு முதலாம் வகுப்பு முதல் பதின்மூன்றாம் வகுப்பு வரை வகுப்புக்கள் உள்ளன. அறுநூற்றிருபது மாணவர்கள் இங்கு கல்வி கற்கின்றார்கள். இருபது ஆசிரியர்கள் கடமையாற்றுகின்றார்கள்.
燃滋
நான் ஆறாம் வகுப்பிற் படிக்கிறேன். எனது பாடசாலையிற் பெரிய விளையாட்டு மைதானம் இருக்கிறது. இதில் நாங்கள் தினந்தோறும் விளையாடுவோம். இம் மைதானத்தில் வருடந்தோறும் இல்ல விளையாட்டுப்போட்டி நடைபெறும், சிவப்பு, நீலம், பச்சை ஆகிய இல்லங்களைச் சேர்ந்த மாணவர்கள் இதிற் பங்கு பற்றுவார்கள்.
எனது பாடசாலையிற் திங்கள், வெள்ளி நாட்களில் காலைக்கூட்டங்கள் நட்ைபெறும். இக்கூட்டங்களில் எங்கள் அதிபர் பல புத்திமதிகள் கூறுவார். மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு அவர் ஊக்கமூட்டுவார். எனது பாடசாலை ஆசிரியர்கள் அனைவரும் நல்லவர்கள். அவர்கள் மாணவர்களுக்கு நல்ல முறையில் படிப்பிக்கிறார்கள். இங்கு நவராத்திரி, பரிசளிப்பு விழா, ஒளிவிழா, என்பன சிறப்பாக நடைபெறும். இவ்விழாக்களில் மாணவர்களும், பெற்றோர்களும் பங்கு கொள்வர்.
இங்கு புதிய கட்டடங்கள் சில தற்போது அமைக்கப்படுகின்றன. எனது பாடாசலையின் வளர்ச்சி குறித்துப் பெருமையடைகின்றேன்.
சிறுவர் கட்டுரைகள் 7

Page 7
நான் காலை ஐந்து மணிக்கு நித்திரை விட்டு எழும்புவேன். காலைக்கடன்களை முடித்தபின் பூக்கள் பறித்துச் சென்று கடவுளுக்குச் சாத்தி வழிபடுவேன். ஆறுமணியில் இருந்து ஏழுமணிவன்ர எனது வீட்டுப் பாடங்களைப் படிப்பேன். எனது அம்மா காலை உணவு கொண்டுவந்து தருவா. நான் அதைச் சாப்பிட்ட பின்னர் பாடசாலைக்குப் புறப்பட்டுச் செல்வேன். பாடசாலை இல்லாத நாட்களில் காலையில் எட்டு மணிவரை படிப்பேன். அதன்பின் அம்மாவிற்கு வீட்டு வேலைகளுக்கு உதவி செய்வேன்.
மதிய உணவு முடிந்தபின்னர் சிறிது ஓய்வெடுப்பேன். மாலை நான்கு மணியிலிருந்து ஐந்து மணிவரை அயல் வீட்டுப் பையன்களுடன் சேர்ந்து விளையாடுவேன். ஆறுமணிக்குப் படிப்பதற்குச் சென்றுவிட வேண்டுமென்பது அப்பாவின் கட்டளை. அதன்படி நானும் எனது சகோதரர்களும் படிக்கத் தொடங்குவோம். பின்னர் இரவு உணவு அம்மா தருவார். சாப்பிடுவேன். சிறிது நேரத்தின் பின்னர் நித்திரைக்குச் செல்வேன். வெள்ளிக்கிழமைகளில் மாலை ஐந்து மணிக்கு அம்மாவும், அப்பாவும் கோயிலுக்குச் செல்வார்கள். அவர்களுடன் நானும் செல்வேன். சில நாட்களில் மாலை வேளைகளில் அம்மா, அப்பாவுடன் கடற்கரைக்குச் செல்வேன். கடற்கரையில் சிறிது நேரம் உலாவுவேன். கடற்கரைக் காட்சிகளைக் கண்டு மகிழ்வேன். எனது நாளாந்தக் கடமைகளைச் சிறப்பாக மேற்கொள்வதற்கு என் பெற்றோர் பெரிதும் உதவுகிறார்கள்.
8 சிறுவர் கட்டுரைகள்
 
 

8. எனது கிராமம்
இயற்கை எழில் நிறைந்து விளங்கும் சிறிய ஊராகிய நெல்லூர் என்பதே எனது கிராமம். இது யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் ஒன்றாகும்.
அழகான இக்கிராமத்திற்கு மெருகூட்டுவது தென்னந் தோட்டங்களும் நெல் வயல்களுமாகும். அடுக்கடுக்காகக் காணப்படும் நெல் வயல்கள் பச்சைப்பசேலெனப் பச்சைக் கம்பளங்கள் விரித்தாற் போல் காட்சியளிக்கிறது.
நெல் வயல்களையடுத்துக் கிராம மக்களின் வீடுகள் காணப்படுகின்றன. சிறியதும் பெரியதுமான வீடுகள் இங்கு உண்டு. இங்கு இருப்பவர்களுள் பெரும்பான்மையோர் கமக்காரர்கள். விவசாயம் இவர்களது பிரதான தொழிலாகும். சிலர் உத்தியோகம் பார்க்கிறார்கள். மேலும் கடற்றொழில் செய்பவர்களும் வசிக்கிறார்கள். சைவ, கிறிஸ்தவ சமயங்களைச் சேர்ந்தவர்கள் எனது கிராமத்தில் வாழ்கிறார்கள். இவர்கள் மதத்தால் வேறுபட்டாலும் ஒற்றுமையாக வாழ்கிறார்கள் எனது கிராமத்தில் பத்துப் பாடசாலைகள் இருக்கின்றன. ஒன்று மத்திய மகா வித்தியாலயம். இது தற்போது தேசியப் பாடசாலையாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இது எமது கிராமத்திற்குப் பெருமையளிக்கிறது. -
பாடசாலைகள் மட்டுமன்றி இங்கு இயங்கும் சனசமூக நிலையங்கள், கிராம முன்னேற்றச் சங்கங்கள் போன்றவற்றின் மூலம் மக்கள் அறிவுத்துறையில் மேம்பட்டு வருகிறார்கள். பொருளாதார விருத்தியுடையவர்களாகவும் காணப்படுகிறார்கள்.
எனது கிராமத்தில் அனேக சைவ ஆலயங்களும், இரு கிறிஸ்தவ தேவாலயங்களும் இருக்கின்றன. ஆண்டு தோறும் இவ்வாலயங்களில் விழாக்கள் சிறப்பாக நடைபெறும்.
வைத்தியாசலை வசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி போன்றவற்றையும் கொண்டதாக எனது கிராமம் விளங்குகின்றது. முன்னர் ஒழுங்கைகளாக இருந்தவை பல தற்போது தார் போட்ட வீதிகளாக மாறியுள்ளன. அனேக வீடுகளில் வானொலிகளும், தொலைக்காட்சிப் பெட்டிகளும் காணப்படுகின்றன. எனது கிராமம் வெகு வேகமாக முன்னேறி வருகின்றது என்பதற்கு இவை நல்லதோர் உதாரணமாகும்.
தற்போது எனது கிராமம் சகல துறைகளிலும் வளர்ச்சி பெற்றுள்ளது. இதன் வளர்ச்சி குறித்து நான் பெரிதும் மகிழ்வடைகிறேன். எதிர்காலத்தில் எனது கிராமம் மேலும் வளர்ச்சி பெறும் என்பது திண்ணம்.
சிறுவர் கட்டுரைகள் - 9

Page 8
| 9. 6 TLDç5I böITQbo
எமது நாடு இலங்கை. இது இந்து சமுத்திரத்தின் முத்து என வர்ணிக்கப்படுகிறது. இது நீர்வளம், நிலவளம், மலைவளம், கடல்வளம் அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்ற எழில் மிகு நாடாகும். இதனால் இதன் புகழ் பாரெல்லாம் பரவிக் கிடக்கிறது. ஈழம், இரத்தினதுவிபம், தப்ரபேன், ரீலங்கா எனப் பல பெயர் கொண்டு எமது நாட்டை அழைப்பர்.
இங்கு சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், பறங்கியர் எனப் பல இனத்தினர் வாழ்கின்றனர். பெளத்தம், சைவம். இஸ்லாம், கிறிஸ்தவம் என்பன நமது நாட்டு மக்கள் பின்பற்றும் மதங்களாக உள்ளன. இலங்கை கடலாற் சூழப்பட்டுள்ள போதிலும் அதன் மத்தியில் உயர்ந்த மலைத் தொடர்கள் இருக்கின்றன. இங்குள்ள மலைத் தொடர்களில் பீதுருதாலகால மலையே அதி உயர்ந்த மலையாகும். இம்மலைத் தொடர்களிலிருந்து பல ஆறுகள் உற்பத்தியாகி எமது நாட்டை வளமுறச் செய்கின்றன. எமது நாட்டில் பாய்ந்தோடும் நதிகளில் மகாவலி கங்கையே அதி நீளமானதாகும். எமது நாட்டில் பெறுமதி மிக்க கனிம வளங்கள் அகழ்ந்தெடுக்கப்படுகின்றன.
எமது நாடு ஒரு விவசாய நாடு ஆகும். தேயிலை, றப்பர், தென்னை ஆதியாம் பொருட்களை ஏற்றுமதி செய்கின்றது. எமது நாட்டில் கைத்தொழில் வளர்ச்சியைப் பிரதிபலிக்கும் முகமாகச் சீனித் தொழிற்சாலை, சீமெந்துத் தொழிற்சாலை, புடைவை ஆலை, இரசாயனப் பொருள் தொழிற்சாலை, ஒட்டுப் பலகைத் தொழிற்சாலை, ஒட்டுத் தொழிற்சாலை ஆகிய தொழிற்சாலைகள் பல இருக்கின்றன.
எமது நாட்டின் தலைநகராக பூரீஜெயவர்த்தனபுர விளங்குகிறது. இயற்கைத் துறைமுகமாகத் திருகோணமலை விளங்குகிறது. கொழும்பு, காலி, காங்கேசன்துறை என்பனவும் இங்கு உள்ள பெரிய துறைமுகங்களாகும். கட்டுநாயக்கா விமானநிலையம் எம் நாட்டின் பாரிய விமான நிலையமாகும். எமது நாட்டின் இயற்கை அமைப்பு வெளிநாட்டவரைப் பெரிதும் கவருகின்றது. பல்லாயிரக்கணக்கான உல்லாசப் பிரயாணிகள் இங்கு வந்து செல்கின்றனர். எம் நாட்டின் இயற்கை எழிலே இதற்குக் காரணமாகும்.
O சிறுவர் கட்டுரைகள்
 

10. எனது செல்லப் பிராணி
நான் அன்போடு வளர்க்கும் பிராணி சிராணி. அதுவே என் செல்லப் பிராணி. பால் போன்ற நிறம். பஞ்சு போன்ற மெல்லிய உடல், பார்க்க ஆனந்தம் அளிக்கும் வண்ணத் தோற்றம் என்னைக் கண்டதும் சுற்றிச் சுற்றி ஓடிவரும் என் அன்புப் பூனைக்குட்டி இது.
எனக்கு இதன் மேல் கொள்ளை ஆசை. பெரிய கண்களை உருட்டி உருட்டி அது என்னைப் பார்க்கும். நான் அதற்குப் பாலும் சோறும் உண்ணக் கொடுப்பேன். நான் உணவு உண்ணும்போது என்னோடு அதுவும் அருகில் இருந்து சாப்பிடும். சாப்பிட்டு முடிந்ததும் என் மடியில் பச்சிளங் குழந்தை போல அது படுத்து உறங்கும்.
நான் பாடசாலை சென்றுவிட்டு வீடு வந்து வாசற்படியில் ஏறும்போது என்னை வரவேற்க அம்மாவுடன் என் சிரானியும் வந்து நிற்கும். மாலைவேளைகளில் நானும் சிராணியும் தோட்டத்திற்குச் செல்வோம். பந்தை உருட்டி விளையாடுவோம். சிராணி கட்டையான தனது கால்களினால் பந்தை உருட்டி விளையாடுவது பார்க்க ஆனந்தமாயிருக்கும்.
சிராணி தன் கால் நகங்களை மரத்திலே தேய்த்துக் கூராக்கும். மரத்திலே பாய்ந்து ஏறும். பின் துள்ளித் துள்ளி என்னிடம் ஓடி வரும். அதன் செய்கைகளைப் பார்ப்பதில் எனக்கு நல்ல விருப்பம். எனது செல்லப் பிராணியான சிராணியை என்னால் என்றுமே மறக்க (LDL9 ULT5).
சிறுவர் கட்டுரைகள்

Page 9
11. எனது முதற் புகைவண்டிய் பிரயாணம்
ill
சென்ற ஆண்டு இறுதியில் ஐந்தாம் வகுப்புத் தேர்வில் சிறப்பாகச்
சித்தியடைந்தேன். அதனால் எண் அணி னா மிகுந்த
மகிழ்ச்சியடைந்தார். என்னைத் தன்னுடன் மார்கழி விடுமுறையில் கண்டிக்குக் கூட்டிச் செல்வதாகக் கூறினார். அதைக் கேட்ட போது நான் துள்ளிக் குதித்தேன். மார்கழி பத்தாம் நாள் உடரட்ட மெனிக்கேயில் செல்வதாக அவர் கூறினார். அந்த நாளும் வந்தது.
அன்று அதிகாலையில் நாங்கள் பிரயாணத்துக் கு ஆயத்தமானோம். அம்மாவும், அப்பாவும் எங்களை வழியனுப்பி வைத்தனர். அண்ணாவுடன் நான் கோட்டைப் புகையிரத நிலையத்தை அடைந்தேன். பிரயாணச் சீட்டுப் பெற்றுக் கொண்டதன்
பின்னர் நாங்கள் உள்ளே சென்றோம். புகையிரதம் வருவதற்கு நேரம் இருந்தது. அதனால், அங்குள்ள புகையிரத மேடையில்
உள்ள இருக்கையொன்றில் அமர்ந்தோம். சிறிது நேரத்தில் புகைவண்டியின் ஊதுகுழல் சத்தம் கேட்டது. புகைவண்டி மேடையில் நின்றதும் மக்கள் ஆரவாரத்தோடு ஒருவரை ஒருவர் தள்ளியும் நெருக்கியும் உள்ளே ஏறினர். அவர்களிற் சிலர் வசதியான இடங்களில் அமர்ந்து புன்முறுவல் பூத்தனர். சிலர் வசதியான இடம் கிடைக்காமல் முகம் சோர்ந்தனர். என் அண்ணா எப்படியோ வசதியான இடம் பிடித்து என்னை யன்னல் அருகில் அமரும்படி செய்தார்.
2 - சிறுவர் கட்டுரைகள்
 
 

வண்டி நீண்ட குரல் எழுப்பிக்கொண்டு புறப்பட்டது. நான் சாளரத்தின் வழியாக வெளிக் காட்சிகளைப் பார்த்தேன். சோலைகள் கண்கொள்ளாக் காட்சியாக விளங்கின. இடையிடையே நீர் நிறைந்த பசுமையான வயல்வெளிகள் தோன்றின. குரங்குகள் மரங்களிலே தாவித் திரிந்தன. சிறு சிறு வீடுகளும் பரந்த வயல் வெளிகளும் காணப்பட்டன. சிறிய மலைகளும் தேயிலைத் தோட்டங்களும் தென்பட்டன. அவை பச்சைக் கம்பளம் போர்த்தமை போல் காட்சியளித்தன. வண்டியினுள்ளே சிலர் அமர்ந்து தூங்கினர். புகைவண்டி இருப்புப் பாதையில் வளைந்து வளைந்து ஓடிக்கொண்டிருந்தது.
சிலர் சிரித்துப் பேசி மகிழ்ந்தனர். சிலர் ஒருவரோடொருவர் வாக்குவாதம் புரிந்தனர். சிலர் பத்திரிகை படித்தனர். புகைவண்டி கடுகண்ணாவை நிலையத்திலே சிறிது நேரம் தங்கிப் புறப்பட்டது. இனி கண்டி வந்துவிடும் என்றார் அண்ணா. அரைமணி நேரம் கழிந்ததும் பெரிய பாலம் ஒன்று என் கண்ணிற் பட்டது. பேராதனையை நெருங்கி விட்டோம் என்று எண்ணினேன். சில நிமிடங்களில் வண்டி கண்டிப் புகையிரத நிலையத்தை அடைந்தது. நாங்கள் பொருட்களுடன் இறங்கினோம். கண்டி மாநகரம் அழகொளிரக் காட்சி தந்தது. தலதா மாளிகை, கண்டி வாவி ஆகியவற்றைப் பார்த்து ஆனந்தமடைந்தேன்.
இதுதான் எனது முதற் புகைவண்டிப் பிரயாணம் ஆகும். அந்த அனுபவத்தால் நான் மகிழ்ச்சி அடைந்தேன்.
சிறுவர் கட்டுரைகள் 1. 3. 6 9 13
s
默

Page 10
12. எனது பொழுதுபோக்கு
காலம் அருமையானது. காலத்தை வீணே கழியவிடாது கிடைக்கும் நேரத்தைத் தனக்கும் பிறர்க்கும் பயன்படுமாறு தக்க முறையில் பயன்படுத்துதல் வேண்டும் என்று பெரியோர் கூறியுள்ளனர்.
அந்த வகையிலே முத்திரை சேகரித்தல் ஒரு உன்னதமான பொழுதுபோக்காகும். எனவேதான் எனது பொழுது போக்குக்காக நான் முத்திரை சேகரிக்கின்றேன்.
முத்திரைகள் பல வடிவங்களிலும் வண்ணங்களிலும் அச்சிட்டு வெளியிடப்படுகின்றன. அத்துடன் பல்வேறு விபரங்களைக் காட்டும் வகையில் விளங்குகின்றன. இவற்றைச் சேகரிப்பதன் மூலமாக நாம் புவியியல், அரசியல், வரலாற்றுச் செய்திகளையும், விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் சம்பந்தமான விபரங்களையும் பெரியோர்கள் பற்றிய தகவல்களையும் அறிந்து கொள்ளக் கூடியதாயிருக்கின்றது. நம் நாட்டு விபரங்கள் மட்டுமன்றி பிறநாட்டு விபரங்களையும் நாம் அறிந்து கொள்ளலாம். இத்தகைய இன்பமான அறிவை வளர்க்கும் பொழுதுபோக் கையே நாண் எனது பொழுதுபோக்காகக் கொண்டுள்ளேன்.
முத்திரை சேகரிப்பதால் நாம் சில வேளைகளில் அதிஷ்டத்தையும் எதிர்நோக்க முடியும். இவ்வாறு முத்திரை சேகரிக்கும்போது கிடைத்தற்கரிய சில முத்திரைகளும் பெறுமதி வாய்ந்த முத்திரைகளும் வந்து விடக் கூடும். மிகக் கவனமாகவே முத்திரைகள் அச்சிடப் படுகின்றனவெனினும் சிலவேளைகளில் அச்சுத்தவறுடனும் வெளிவந்து விடுகின்றன. அச்சுத்தவறுடன் வெளிவந்த முத்திரைகள் பெறுமதி
14 சிறுவர் கட்டுரைகள்
 
 

வாய்ந்தவையாகக் கொள்ளப்படுகின்றன. இம்முத்திரைகளை
முத்திரை சேகரிக்கும் ஆர்வமுள்ள சிலர் பெருந் தொகைப் பணம்
கொடுத்து வாங்கவும் முன்வருகிறார்கள்.
எனவேதான் முத்திரை சேகரிக்கும் பழக்கம் அறிவுக்கு மட்டுமல்ல.
அதிஷ்டத்துக்கும் ஒரு வழிகாட்டி என்பதை உணர்ந்து கொண்டு செயற்படுகின்றேன.
13 பாடசாலையில் எனது முதல் நாள் அனுபவம்
அப்பொழுது எனக்கு ஐந்து வயதிருக்கும், என்னைப் பெற்றோர்கள் பாடசாலைக்கு அனுப்ப விரும்பினார்கள். எனக்கும் ஒரே ஆசை புத்தகப் பைதனைத் தோளில் போட்டு, தண்ணீர்ப் போத்தலையும் மாட்டிக் கொண்டு. சப்பாத்து தொப்பி எல்லாம் அணிந்து பாடசாலைக்குப் படிக்கச் செல்ல வேண்டுமென்று விரும்பினேன்)
எல்லாப் பொருட்களும் அப்பா வாங்கித் தந்துவிட்டார். எனக்குப் பாடசாலை செல்லும் நாள் எப்பொழுது வரும் என்றிருந்தது.
அந்நாளும் வந்தது. எனக்கு ஒரே மகிழ்ச்சி. அன்று காலை என்னை
சிறுவர் கட்டுரைகள் 15

Page 11
அம்மா நீராட்டினார். புதுச்சட்டை அணிவித்தார். தலைவாரி பொட்டிட்டார். சப்பாத்து, தொப்பி எல்லாம் போட்டாகி விட்டது. நான் பாடசாலைக்குப் போகிறேன் என்று நினைக்கவே பெரும் ஆனந்தமாயிருந்தது.
அப்பா என்னை அழைத்துக் கொண்டு பாடசாலைக்கு வந்தார். நான் அப்பாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு துள்ளித் துள்ளி நடந்தேன் பாடசாலையும் வந்து விட்டது. அங்கே சிறிய பெரிய மாணவர்கள் பலர் நின்றார்கள்) அதிபரின் அலுவலகத்திற்கு அப்பா என்னை அழைத்துச் சென்றார். அதிபர் அலுவலகத்திற்குச் சென்றவுடனேயே என்னைப் பயம் பிடித்துக் கொண்டது. அதிபர் அவர்கள் என் கையைப் பிடித்து மெல்ல உங்கள் பெயர் என்ன? என்று கேட்டார். எனக்கு என் பெயரே மறந்து விட்டது போலிருந்தது. அப்பாவிற்கு அருகில் போய் நின்று கொண்டேன்.
பின்பு அப்பாவும், அதிபரும் ஏதோ கதைத்தார்கள். பின் அப்பா என்னைப் பாலர் வகுப்பிற்கு அழைத்து வந்தார். எனக்குப் பயத்தினால் உடம்பே விறைத்து விட்டாற் போலிருந்தது. பாலர் வகுப்பு ஆசிரியை என்னை அன்புடன் அழைத்து ஒரு ஆசனத்தில் அமரச் செய்தார். எல்லா மாணவர்களும் என்னையே பார்த்தார்கள் எனக்கு இன்னும் பயம் அதிகரித்து விட்டது. உடனே ஆசனத்தை விட்டெழுந்து நின்று விட்டேன். அப்பா எனக்கருகே வந்து இடத்திலே இருந்து நன்றாகப் படிக்க வேண்டுமென்று தட்டிக் கொடுத்தார். பின்பு வந்து கூட்டிச் செல்வதாகக் கூறிச் சென்று விட்டார்.
எனக்கு அழுகை வந்துவிட்டது. விக்கி விக்கி அழுதேன். அப்போது அந்த ஆசிரியை என்னைத் தன் அருகிலே அழைத்து அன்பாகக் கதைத்து என்னை அழாதிருக்கும்படி செய்தார்"அதன் பின்னர் நான் அழாமல் இருந்து படித்தேன். என்றாலும் மனப் பயம் விட்டு நீங்கவில்லை. பின்பு பன்னிரண்டு மணியளவில் பாடசாலை விட்டது. அப்பாவுடன் வீடு வந்து சேர்ந்தேன். இன்றும் கூட அந்த முதல் நாள் அனுபவத்தை நினைக்க என் உள்ளம் மகிழ்ச்சியடைகிறது.
16 - சிறுவர் கட்டுரைகள்
 

14. எனது பாடசாலைப் பரிசளிப்பு விழா பற்றிய கடிதம்
164, பருத்தித்துறை வீதி, b6)g)TT, 23.04.2002 அன்புள்ள நண்பன் மோகன், இவ்விடம் நான் நலமாயுள்ளேன். நீரும் நலமாயிருக்க இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். உனது கடிதம் கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி. எனது பாடசாலையில் நிகழ்ந்த பரிசளிப்பு விழாவைப்பற்றி எழுதுமாறு கேட்டடிருந்தாய் சுருக்கமாக எழுதுகிறேன்.
கடந்த மார்ச் மாதம் 10 ஆம் திகதி எனது பாடசாலையில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. அன்று பாடசாலை விழாக்கோலம் பூண்டிருந்தது. நாங்கள் விழா மண்டபத்தை மிகவும் அழகாக, கண்ணைக்கவரும் வகையில் அலங்கரித்திருந்தோம். காலை 10 மணிக்கு விழா எங்கள் பாடசாலை அதிபர் திரு.க. சோமசுந்தரம் தலைமையில் கடவுள் வணக்கத்துடன் ஆரம்பமாகியது. பிரதம விருந்தினராக யாழ்பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் சந்திரசேகரம் கலந்துகொண்டார். எட்டாம் வகுப்பு மாணவிகள் வரவேற்புப்பா - பாடினார்கள். அதைத் தொடர்ந்து அதிபர் தமது அறிக்கையினை வாசித்தார். பின்னர் பிரதம விருந்தினர் உரையாற்றினார். அவரது உரையைத் தொடர்ந்து பரிசில்கள் வழங்கப்பட்டன.
முதலாவதாக சென்ற ஆண்டு பல்கலைக் கழகம் சென்ற மாணவர்களுக்கும் புலமைப் பரிசில் பரீட்சையிற் சித்தியெய்திய மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன. முதலாம் வகுப்பு முதல் பதினொராம் வகுப்பு வரையும் சென்ற ஆண்டில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு பிரதம விருந்தினர் பரிசில்களை வழங்கினார். அதில் நான் சென்ற ஆண்டு ஐந்தாம் வகுப்பில் முதலாம் இடத்தைப் பெற்றமைக்கான பரிசினைத் தட்டிக் கொண்டேன். எட்டாம் வகுப்பு மாணவர்களுடைய 'யார் குற்றாளிகள்? என்னும் நாடகம் அடுத்து இடம் பெற்றது. இதனைக் கண்டுகளித்தவர்கள் மிகவும் பாராட்டிப் பேசினார்கள். அதனை அடுத்து இடம்பெற்ற முதலாம் வகுப்பு மாணவர்களுடைய அபிநயப்பாடல் சபையோரைப் பெரிதும் கவர்ந்தது.
ஈற்றில் மாணவ தலைவருடைய நன்றியுரையுடன் விழா இனிது நிறைவெய்தியது. எனக்கு என்றுமே மறக்கமுடியாத நாளாக அப்பரிசளிப்புத் தினம் உள்ளது.
உமது பாடசாலைப் பரிசளிப்பு விழாவைப் பற்றி அறிய ஆவலுடைய்ேன், எழுதுவீரென எதிர்பார்க்கின்றேன்.
இங்ங்னம், உனது அன்பு நண்பன், ந. சீலன்
சிறுவர் கட்டுரைகள் 17

Page 12
15. கடற்கரையில் ஒரு
மாலைப்பொழுது
அன்றொருநாள் நான் காலிமுகக் கடற்கரையில் நின்றேன். அப்போது ஆதவன் தன் சூடு நீங்கிக் குளிரடையும் மாலைநேரம் வான் வெளியை நோக்கினேன். அவன தங்கத் தாம்பாளம் போல் காட்சியளித்தான். கருநீலக்கடலும் நீலவானும் ஒன்றை ஒன்று தொட்டுத் தழுவுவது போன்ற காட்சி என்னை வியப்புக்குள்ளாக்கியது. இப்புதுமையைக் கண்ட களிப்போடு நான் கடலையே நோக்கி நின்றேன். என்னை உள்ளே வரும்படி அழைப்பது போல் சிற்றலைகள் காலைக் கழுவிக் கொண்டு சென்றன. அதைத் தொடர்ந்த பேரலைகள் ஆரவாரத்துடன் ஒன்றுடன் ஒன்று மோதிய வண்ணம் வருக வருக என்று அழைப்பது போலிருந்தது.
கடல் நடுவே பெரிய கப்பல்கள் பல அங்குமிங்கும் அசைந்து கொண்டு சென்றன. அந்த ஆழ் பெருங்கடலிலே தம் உயிரையும் பொருட்படுத்தாது மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களின் காட்சி என் நெஞ்சை நெகிழ வைத்தது. காலி முகக் கடலோரத்தில் பலர் காற்று வாங்குவதையும் நடை பயில்வதையும் கண்டேன். சிறுவர்கள் பலூன்களைப் பறக்க விட்டு ஆனந்தமாக விளையாடினார்கள். இறுதியாக ஆதவன் மேற்கு வான் எல்லையைத் தொட்டுவிடடான். அவனுடைய செங்கதிர்கள் வானையும், கடலையும் இணைத்து நின்றன.
சற்று நேரத்தில் கரையோரத்திலிருந்த கற்பாறைகள் கருமை நிறம் பொருந்திய எருமைகள் போல் காட்சியளித்தன. பின்பு கருமேகம் எங்குமே சூழ்ந்து விட்டது. மாலைநேரக் கடற்கரைக் காட்சியைக் கண்ட களிப்போடும், நிறைவோடும் நான் வீடு திரும்பினேன்.
8 சிறுவர் கட்டுரைகள்
 
 

16. தைப்பொங்கல்
தமிழர் திருநாள் தைப்பொங்கல் திருநாள். இதுவே உழவர் திருநாளாகவும் விளங்குகிறது. இத்திருநாள் தைமாதம் முதல் நாளில் வரும். இத்தினத்தன்று உழவர்கள் தமது உழைப்பின் வெற்றியைக் கொண்டாடுகிறார்கள்.
வயலில் விளைந்த புது நெல் அரிசி கொண்டு பொங்கித் தாமும் உண்டு பிறர்க்கும் பகிர்ந்தளித்து மகிழ்கிறார்கள். தைப்பொங்கல் தினம் சிறியவர்க்கும் பெரியவர்க்கும் மகிழ்ச்சியான தினம். பொங்கல் நாளுக்கு முதல் நாளே வீடுகளைச் சுத்தம் செய்வர். பொங்கலன்று வீட்டு முற்றத்தை மெழுகிக் கோலமிட்டு அலங்கரிப்பர். சாணத்தில் பிள்ளையாரை அமைத்து ഞഖ|i. U600T கும்பம் வைத்துக் குத்துவிளக்கேற்றுவர். பழம், பாக்கு, வெற்றிலை ஆகியவற்றையும் வைப்பர்.
శిష్టి
புதிய பானைக்கு மாவிலை, இஞ்சியிலை, மஞ்சளிலை ஆகியவற்றைக் கட்டி அழகு செய்வர். பின்னர் புதிய அடுப்புக்களின் மீது புதிய பானையில் நீர் நிறைத்துப் பாலும் விட்டு வைப்பர். அடுப்பில் தீ மூட்டி எரிப்பர். பொங்கற் பானையிலிருந்து பால் பொங்கி வழிந்ததும் புத்தரிசியைப் பானையில் முறைப்படி இடுவர். சர்க்கரை, முந்திரிப்பருப்பு ஆகியனவற்றையும் பொங்கற் பானையிலிடுவர். பொங்கல் பதமாக வந்ததும் பொங்கற் பானையை அடுப்பிலிருந்து இறக்குவர்.
பின்னர் சூரியனுக்குப் பொங்கலைப் படைத்து வழிபடுவர். அவ்வேளையில் சிறுவர்கள் பட்டாசுகள் கொழுத்தி மகிழ்வார்கள். பொங் கலைத் தாமும் உண்டு அயலவர் க்கும் கொடுத்து மகிழ்வார்கள். தங்கள் உறவினர்களது இல்லங்களுக்குச் சென்று பொங்கல் வாழ்த்துக் கூறுவார்கள்.
சிறுவர் கட்டுரைகள் 19

Page 13
மக்கள் உணவுக்காகக் காய்கறிகளை வாங்குகிறார்கள். இவற்றை வாங்குவதற்குப் பணம் வேண்டும். நமது வீட்டுவளவில் இவற்றை உண்டு பண்ணலாம். இதனால் பெருமளவு பணம் மீதமாகும். எங்கள் வீட்டுவளவில் சிறிய காய்கறித்தோட்டம் ஒன்றை உருவாக்கினோம். நானும் தம்பியும் அப்பாவின் உதவியுடன் இதை உருவாக்கினோம். தோட்ட நிலத்தை நன்கு கொத்தினோம். எருப்பசளை இட்டோம். நன்றாகப் பண்படுத்தினோம். தக்காளி, வெண்டி, கத்தரி போன்றவற்றை இங்கு நட்டுள்ளோம்.
சனி, ஞாயிறு தினங்களிலும் மாலைவேளைகளிலும் நாங்கள் தோட்டத்தில் வேலை செய்வோம். அப்பா தண்ணிர் இறைப்பார். நானும் தம்பியும் பாத்தி கட்டுவோம். புல் பூண்டுகளைப் பிடுங்குவோம். எங்கள் தோட்டத்தில் காய்கறிச் செடிகள் செழித்து வளருகின்றன. இங்கு கிடைக்கும் காய்கறிகளை எங்கள் தேவைக்குப் பயன்படுத்துவோம். இதனால் பெருமளவு பணம் மீதமாகும். நாங்கள் காய்கறிகள் வாங்க வேண்டி நேரிடாது.
'காய்கறித் தோட்டம் செய்திடுவோம். கவலையின்றி வாழ்ந்திடுவோம்.
20 சிறுவர் கட்டுரைகள்
 

18. உழவுத்தொழில்
§ܠ ܐܪyܪܣܛܢܛܥܝ ܚܘ```
உலகில் உள்ள தொழில்கள் அனைத்திலும் உழவுத் தொழிலே சிறந்தது. உலக மக்களுக்கு உணவு அளிக்கும் தொழில் இது. நெற்றி வியர்வை நிலத்திற் சிந்தப் பாடுபட்டு உழைக்கும் உழவனை நாம் மறந்து விட முடியாது. இதனாற்றான் உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” என்று பாரதியார் பாடினார். திருவள்ளுவரும்
சுழன்றும் ஏர்பின்னது உலகம், அதனால் உழன்றும் உழவே தலை' என்றார்.
மனித வாழ்க்கைக்கு இன்றியமையாதது உணவு, உடை, உறையுளாகும். இவற்றுள் உணவே முக்கிய இடத்தை வகிக்கிறது. உணவளிப்பதற்கு உழவுத்தொழில் சிறக்க வேண்டும். இத் தொழிலில் ஈடுபடுவோர் உண்மையிலேயே போற்றுதற்கு உரியவர்கள்.
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்பது திருவள்ளுவரின் ஆணித்தரமான அறிவுரையாகும். அமுதத் தமிழ்ப்பாடல் பல தந்த ஒளவைப் பாட்டியும் உழவுத் தொழிலின் உயர்வைப் போற்றிப்பாட மறக்கவில்லை.
ஆற்றங்கரையின் மரமும் அரசறிய வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம் உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லைக் கண்டீர் பழுதுண்டு வேறோர் பணிக்கு - என்பது அவர் தம் வாக்கு.
உழவுத்தொழில் நடைபெறாவிடில் மக்கள் உயிர் வாழ முடியாது. எனவேதான் உழவுத் தொழிலை அதிகமானோர் மேற் கொள்கின்றனர். இன்று உலகெங்கும் உழவுத்தொழிலில் நவீன முறைகள் கையாளப்படுகின்றன. விஞ்ஞானத்தின் உதவியினால்
சிறுவர் கட்டுரைகள் 21

Page 14
புதிய இயந்திரங்கள் பல இத்தொழிலுக்குப் பயல்படுததபபடுகின்றன.
விளைச்சலைப் பெருக்க இயற்கை உரங்களை மட்டுமன்றிச் செயற்கை உரங்களையும் பயன்படுத்துகின்றனர். உழவுத் தொழிலின் மகிமையினை உணர்ந்து நாமும் இத்தொழிலில் ஈடுபடுவோமாக.
19. சுகவாழ்வு
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்பது முதுமொழி. எனவே நாம் நோயின்றி வாழ வழிவகுத்துக் கொள்ள வேண்டும். சுகவாழ்வுக்குச் சுத்தமான காற்றோட்டம், சூரியவெளிச்சம், உடற் பயிற்சி, சத்துக் கள் நிறைந்த உணவு எண் பன அவசியமானவையாகும்.
சூரிய ஒளி நிறைந்த இடத்தில் தேகாப்பியாசம் செய்தல் வேண்டும். அழுக்கு நிறைந்த இடங்களிலே வாழக் கூடாது. வீட்டில் அழுக்குப் பொருட்களைச் சேரவிடக் கூடாது. உடனுக்குடன் அவற்றை அகற்றி விட வேண்டும். அவற்றைத் தேங்கவிட்டால் தொற்று நோய்க்கிருமிகள் அவற்றிலிருந்து பெருகி நோய்களைத் தோற்றுவிக்கும். இதனால் மனிதனின் வாழ்வில் சுகம் கெட்டுவிடும். அழுக்கான ஆடைகளை நாம் அணியக்கூடாது. தோய்த்து உலர்ந்த ஆடைகளை அணிய வேண்டும். நாளாந்தம் குளித்து உடலைச் சுத்தமாக வைத்துக் கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டும்.
பகலில் நித்திரை செய்யக் கூடாது. அது சோம்பலை உண்டாக்கும். எச்சில் உணவையோ அல்லது பழுதடைந்த உணவையோ உண்ணக் கூடாது எவ்வளவுக்குச் சுத்தமாக இருக்கப் பழகிக் கொள்கிறோமோ அவ்வளவிற்குச் சுகமாக வாழ முடியும். எனவே தான் சுத்தம் சோறு தரும் என்பர். சுகவாழ்வே நமது இலட்சியமாக இருத்தல் வேண்டும். இதற்கான வழிமுறைகளை நாம் பின்பற்றுதல் அவசியமாகும். م" '
22 சிறுவர் கட்டுரைகள்
 
 
 

—
20. கல்வி
கல்வி என்பது மனிதனுக்கு அறிவுட்டும் ஒளி விளக்குப் போன்றது. மனிதரிடத்துள்ள அறியாமையைப் போக்கி நல்வழி காட்டவல்லது. கற்றறிந்தவனே கண்ணுடையவனாகக் கருதப்படுவான். கல்வி அறிவில்லாதவன் கண்கள் இருந்தும் கண்கள் அற்றவன் எனக் கருதப்படுவான்.
கண்ணுடைய ரென்பர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லாதவர்” என்கிறது திருக்குறள். எனவே
மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் கற்க வேண்டியவற்றைக் கற்று கற்ற நெறிப்படி ஒழுகுதல் வேண்டும். இதனையே திருவள்ளுவரும்,
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக என்கிறார். கற்கவேண்டியவற்றைக் கற்கும் பருவத்திலேயே நாம் கற்க வேண்டும்.
உலகில் இருவகைச் செல்வங்கள் உள்ளன. ஒன்று கல்விச் செல்வம் மற்றையது பொருட்செல்வம். பொருட்செல்வம் பிறருக்குக் கொடுக்குந் தோறும் குறைவடையும். வெள்ளத்தால், நெருப்பால் அழியக் கூடியது. கள்வரால் கவரக்கூடியது. எவ்வளவு பொருட் செல்வத்தை நாம் தேடி வைத்தாலும் அவை நிலைப்பதில்லை. ஆனால் கல்விச் செல்வமானது நிலையானது. அழியாதது. கல்விச் செல்வமானது பிறருக்குக் கொடுக்குந்தோறும் பெருகிக் கொண்டே செல்லும்.
கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்புண்டு. ஒருவனுக்குக் கல்வி அழகே உண்மையான அழகாகும். கல்வி அழகைப் பெறுவதற்கு நாம் முயற்சிக்கவேண்டும். கல்வி அறிவாலேயே நாமும், நாடும் முன்னேற முடியும். இதனை நன்குணர்ந்து கல்விச் செல்வத்தைப் பெருக்கிக் கொள்ள நாம் ஒவ்வொருவரும் முயற்சித்தல் வேண்டும்.
தேடி நிதம் பூக்களில்
தேன் சேர்க்கும் தேனிபோல்
தேர்ந்து நல்ல கல்வியைத்
தேடி நாமும் கற்போமே.
சிறுவர் கட்டுரைகள் 23

Page 15
21. 6IVT6N6ØTTGSUísaðir LIULIGðir
இக்காலத்தில் வானொலி இன்றியமையாத ஒன்றாகி விட்டது. வானொலி இல்லாத வீடுகளே இல்லை என்றே சொல்லலாம். எமது அறிவு வளர்ச்சிக்கும் பொழுது ப்ோக்குக்கும் வானொலி பெரிதும் உதவுகிறது. இதனைக் கண்டுபிடித்தவர் மார்க்கோனி எனும் விஞ்ஞானி ஆவார்.
வானொலியில் உலகச் செய்திகள், உள்நாட்டுச் செய்திகள், சிறுகதைகள், நாடகங்கள். கவிதைகள், அறிவுரைகள், திரைப்படப் பாடல்கள் என்பன ஒலிபரப்பப்படுகின்றன. இதில் எல்லா மொழிகளிலும் நிகழ்ச்சிகளைக் கேட்கலாம். சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகின்றது. சூரியன், சக்தி, சுவர்ண ஒலி ஆகிய வானொலிகளும் தற்போது இயங்குகின்றன. மேலும் பல வானொலிகளும் தோன்றலாம். இவற்றின் மூலம் பல்வேறு தகவல்களையும் உடனுக்குடன் அறியும் வாய்ப்புக் கிட்டியுள்ளது.
வானொலியில் ஒலிபரப்பப்படும் கல்வி ஒலிபரப்புக்களை நாம் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உலக நாடுகள் அனைத்திலும் வானொலி நிலையங்கள் செயற்படுகின்றன. இவற்றின் ஒலிபரப்புகளைக் கேட்பதன் மூலம் ஒவ்வொரு நாட்டைப்பற்றியும் நாம் அறிந்து கொள்ள முடிகின்றது. வானொலி நிகழ்ச்சிகள் சிறுவர் முதல் வயோதிபர் வரை கேட்டு மகிழக்கூடியதாக உள்ளன.
பொதுசனத் தொடர்பு சாதனங்களில் இன்று வானொலி முக்கிய
இடத்தை வகிக்கின்றது. அதனை நன்முறையில் பயன்படுத்தி நமது அறிவை மேலும் வளர்த்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.
24 சிறுவர் கட்டுரைகள்
 
 

22 அன்னையும் பிதாவும் முன்னறி
வாக்கு. இவ்வுலகில் எம்மைப் பெற்று அனைத்தையும் தந்து அன்புடன் வளர்ப்பவர்கள் எமது தாயும் தந்தையுமாவர். நமது தாய் பத்து மாதம் சுமந்து பல்வேறு கஷ்டங்களையும் தாங்கி எம்மைப் பெறுகிறாள். எமக்குப் பாலூட்டித் தாலாட்டி வளர்க்கிறாள். எமக்கு நோய் ஏற்படும் போதெல்லாம் தான் மருந்துண்டு எம்மைக் காக்கிறாள். அல்லும் பகலும் கண்ணை இமை காப்பது போல நம்மைக் காத்து வளர்க்கிறாள்.
நமது பிதா எமக்கு உணவு, உடை, கல்வி அனைத்தும் அளித்திட அயராது உழைக்கிறார். நாம் வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லவர்களாக, பயனுள்ளவர்களாக வாழவேண்டும் என்று விரும்புகிறார். நமது கண்கண்ட தெய்வங்களாக அன்னையும் பிதாவும் விளங்குகின்றனர். அவர்களை நாம் என்றும் மதித்துப் போற்ற வேண்டும்.
"தந்தை தாய் பேண் என்ற பொன்மொழியை நாம் மறக்கக் கூடாது. நமது தந்தை, தாய் கூறும் புத்திமதிகளைக் கேட்டு அதன்படி நாம் நடக்க வேண்டும், வயோதிய காலத்தில் அவர்களுக்கு வேண்டிய உதவிகளை நாம் மனங் கோணாது செய்தல் வேண்டும். அவர்களது தேவையை அறிந்து உதவ வேண்டும். அவர்களது விருப்பங்களை நாம் நிறைவேற்ற வேண்டும். அன்பும் ஆதரவும் காட்டவேண்டும்.
நாம் முதன் முதலாக அறிந்து கொண்ட தெய்வங்களான அன்னையும் பிதாவையும் எந்நாளும் போற்றி வாழ முற்பட வேண்டும். அவர்களது ஆசியினால் நமது வாழ்வு சிறப்புறும் என்பதில் ஐயமில்லை.
சிறுவர் கட்டுரைகள் 25

Page 16
ஒளவையார் வயதில் முதிர்ந்தவர். சிறந்த தமிழ்ப் புலவர். கவி பாடுவதில் வல்லவர். இவரிடத்தில் அன்பு, நன்றி மறவாமை, பிறருக்கு உதவி செய்தல் போன்ற சிறந்த குணங்கள் காணப்பட்டன. புலவர்கள் இவரைப் பெரிதும் மதித்தனர். அரசர்கள் ஒளவையார் என்று அன்புடன் அழைத்துப் பாராட்டினர்.
நாங்கள் ஒளவைக்கிழவி என்று இவரை அழைப்போம். இவர் நம்மிடம் மிக்க அன்புடையவர். அதனால் நமது நன்மைக்காகப் பல புத்திமதிகளைப் பாட்டாகப் பாடியிருக்கிறார். அவற்றை நாமும் படித்துப் பயன் பெற வேண்டும். ஒளவைக்கிழவி வாக்குண்டாம், ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நல்வழி போன்ற நூல்களை எழுதியுள்ளார். இந்நூல்கள் சிறந்த நீதிகளைப் போதிக்கின்றன.
நமக்கு அருமையான பாடல் களைப் பாடித் தந்த ஒளவைக்கிழவியை என்றும் மறவாது போற்றுவோம்.
ஒளவைக் கிழவி நம் கிழவி அமுதின் இனிய சொற் கிழவி செவ்வை நெறிகள் பற் பலவும் தெரியக் காட்டும் தமிழ்க் கிழவி' என்று பாடி மகிழ்வோம்.
26 சிறுவர் கட்டுரைகள்
 
 

வீதிகளைப் பயன்படுத்துவோர் பொதுவாக வீதி ஒழுங்குகளைப் பின்பற்றி ஒழுகுதல் வேண்டும். நகரங்களில் நாளுக்கு நாள் போக்குவரத்துகள் அதிகரித்து வருகின்றன. இதனால் வீதிகளில் போக்குவரத்து நெருக்கடிகள் உருவாகின்றன. வீதி ஒழுங்குகளை மக்கள் பின்பற்றினால் வீதி விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பிருக்காது. வீதி ஒழுங்குகளைச் சாலைவிதிகள் என்றும் கூறுவர்
வீதியில் செல்வோர் அனைவரும் இடப்பக்கமாகச் செல்ல வேண்டும். வீதியைக் கடக்க வேண்டுமானால் அதற்கென்று கோடுகள் போட்ட (மஞ்சள் கோடுகள்) இடத்திலேயே கடக்க வேண்டும். முதலில் வலப் புறமாகப் பார்த்துக் கடந்து சென்று வீதியின் நடுவில் சென்ற பின்னர் இடப்புறம் பார்த்து வண்டிகள் வரவில்லை என்றால் வீதியைக் கடக்க வேண்டும்
வீதிகள் சந்திக்கும் இடமாயின் சமிக்ஞை விளக்குகள் இருக்கும். சிவப்பு விளக்கு எரியும் போது வண்டிகள் கோட்டின் பின் நின்றுவிடும். பச்சை விளக்கு எரிந்தால் செல்லலாம். மஞ்சள் விளக்கு எரிந்தால் புறப்படும (ஆயத்த) நிலையில் இருத்தல் வேண்டும். இவ் அறிவுறுத்தல்களைக் கவனித்து வண்டிகள் வீதியைக் கடந்து செல்ல வேண்டும.
பெரிய நகரங்களில் பாதசாரிகளின் வசதி கருதி வீதிகளைக் கடப்பதற்குச் சுரங்கப் பாதைகள், மேம்பாலங்கள் என்பன அமைக்கப்பட்டிருக்கும். இத்தகைய வசதிகள் எதுவும் இல்லாத
IQ இடங்களில் நகர காவலர்கள் வீதிகளில் நின்று வழி காட்டுவார்கள். () அவர்களின் அறிவுறுத்தல்களுக்கு அமைய நாம் வீதியைக் கடக்க
வேண்டும்.
இவை தவிர வேறும் சில வீதிகள் உள்ளன. விதிகளில் விளையாடுதல், காற்றாடிகள் பறக்கவிடுதல் ஆகியவற்றைத்
சிறுவர் கட்டுரைகள் 1. 3. 6 9 27

Page 17
தவிர்த்தல் வேண்டும் ஒருவரோடு ஒருவர் கைகோர்த்துக் கொண்டோ, கதைத்துக் கொண்டோ வீதிகளில் செல்லுதல் கூடாது பேருந்தில் ஏறுவதாயின் அது நின ற பின் னரே ஏற வேண்டும் . ஒடிக்கொண்டிருக்கும் வணடியில் ஏற முற்படக் கூடாது. ஏறும்போது வண்டியின் பின்புறமாக ஏற வேண்டும். பேருந்து நிற்கும் போது அதன் முன்பக்கமாகவோ பின்பக்கமாகவோ வீதியைக் கடத்தல் கூடாது. வீதி ஒழுங்குகளைச் சரிவரப் பின்பற்றாமையினாலேயே விபத்துக்கள் ஏற்படுகின்றன. வீதி ஒழுங்குகளைப் பின்பற்றுவதன் மூலம் விபத்துக்களைத் தவிர்த்துக் கொள்ளலாம்.
r
25. LITLFIT60)6) DT6Or6) சங்கக் கூட்டத்தில் நெசவுத்தொழில் பற்றிய பேச்சு
மதிப்பிற்குரிய அவைத் தலைவர் அவர்களே! ஆசிரியர்களே! சகோதர, சகோதரிகளே! அனைவர்க்கும் எனது அன்பான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். யான் உங்கள் முன் பேச எடுத்துக் கொண்ட விடயம் நெசவுத்தொழில் என்பதாகும்.
செய்கின்ற தொழில்கள் எல்லாவற்றையும் ஒப்பிட்டுப் பார்க்கின்ற போது, நெய்யும் தொழிலான நெசவுத்தொழிலுக்கு நிகரில்லை எனலாம். மனித உயிருக்கு மானம் காக்கின்ற உடையை வழங்குவது நெசவுத் தொழிலாகும். இதனாலேயே இத் தொழில் சகல தொழில்களிலும் பார்க்க மேன்மை பொருந்திய தொழிலாக விளங்குகின்றது. பூமியிற் பிறந்த மனித உயிர்கட்கு இரண்டு விடயங்கள் இன்றியமையாததாக உள்ளன. ஒன்று உணவு. மற்றொன்று உடை உழவுத்தொழிலை மேற்கொள்வதன் மூலம் உணவு கிடைக் கினி றது. நெசவுத் தொழிலை நாம் செய்வோமேயானால் உடை கிடைக்கும். பணம் கிடைக்கும். எமது சோம்பலும் நீங்கிவிடும். நீதிமானாகிய திருவள்ளுவரும், உலகம் போற்றும் உத்தமனான காந்தியடிகளும் விரும்பி மேற்கொண்ட தொழில் நெசவுத்தொழிலேயாகும்.
நாமனைவரும் அத்தொழிலின் மகிமையை உணர்ந்து இதில், ஈடுபட்டால் நமது சுய தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள முடியும். இத்தொழிலின் மூலம் மக்களுக்குச் சிறந்த சேவையை நாம் ஆற்றக்கூடியதாக உள்ளது எனக்கூறி எனது விரிையை முடித்துக்
கொள்கிறேன். வணக்கம்.
فنية
.28 சிறுவர் கழ்டுரைகள்
 

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்பது பழமொழி. நாம் நோயின்றிச் சுகமாய் இருக்க வேண்டுமாயின் நமது உடல் உறுதி அடையவேண்டும். உடம்பு உறுதியடைவதற்குச் சுத்தமான காற்று, சுத்தமான நீர், நல்ல உடை, உடற்பயிற்சி என்பன அவசியமாகும்.
உடற்பயிற்சி செய்வதனால் நமது உடம்பில் உள்ள தசைநார்கள் உறுதியடைகின்றன. உடற்பயிற்சி செய்யும் பொழுது அதிகமான காற்றை உட்கொள்ளுகின்றோம். அதனால் இரத்தம் நன்கு சுத்தமடைகிறது. உடம்பில் உள்ள அழுக்குநீர் வியர்வையாக மாறி வெளியேறுகிறது. உணவு நன்றாகச் சீரணமாகின்றது. ஞாபகசக்தி விருத்தியாகின்றது. உடல் உறுப்புக்கள் சோர்வு நீங்கி உற்சாகம் அடைகின்றன.
உடம்பில் உள்ள ஒவ்வோர் உறுப்புக்கும் பயன் உண்டாக்கத்தக்க உடற்பயிற்சிகள் பல உண்டு. அவற்றை நாம் நாளாந்தம் செய்து வந்தால் நமது உடல் உறுதியடைவதோடு நோயற்ற வாழ்வு வாழவும் வழி சமைக்கும். சரீரத்திற்கு வலிமையைத் தரும் விளையாட்டுக்கள் பல இருக்கின்றன. அவற்றை நாம் சுத்தமான காற்று வீசும் திறந்த வெளியில் மேற்கொள்ளல் வேண்டும். உடற்பயிற்சி செய்யும்போது மூகினால் சுவாசித்தல் வேண்டும். உணவு உண்டபின் உடற்பயிற்சி செய்தல் கூடாது.
வளரும் பருவத்தில் உடற்பயிற்சி உணவு நுகர்ச்சியையும் அதிகரிக்கச் செய்கின்றது. எனவே உடல், உள விருத்திக்கு உடற்பயிற்சி இன்றியமையாததாக விளங்குகின்றது. நாம் நாளாந்தம் அதன் அவசியத்தை உணர்ந்து கைக்கொண்டு வருவோமேயானால் நோயின்றி சுகமாக, மகிழ்வோடு வாழ முடியும் என்பதில் ஐயமில்லை.
சிறுவர் கட்டுரைகள் 29

Page 18
27. போக்குவரத்துச் சாதனங்கள்
மக்கள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் செல்வதற்குப் போக்குவரத்துச் சாதனங்கள் உதவுகின்றன. அறிவியல் கண்டுபிடிப்புக்களின் உதவியினால் இக்காலத்தில் பல்வேறு சாதனங்கள் மக்களின் போக்குவரத்துக்குப் பயன்படுகின்றன.
ஆதிகாலத்தில் மக்கள் ஓரிடத்தில் நிரந்தரமாக வாழ வேண்டிய நிலை இருந்தது. பின்னர் நாகரிகம் வளர்ச்சியடையப் பல இடங்களுக்கும் செல்லத் தொடங்கினர். அதற்குப் போக்குவரத்துச் சாதனங்கள் பெரிதும் தேவைப்பட்டன. முன்னர் கால்நடையாகவே மக்கள் பயணம் செய்தனர். இதனால் காலதாமதம் ஏற்பட்டது. பின்னர் குதிரை, யானை, எருது, ஒட்டகம் போன்றவற்றை வளர்த்து அவற்றின் மீது அமர்ந்து பயணம் செய்தனர். காலப்போக்கில் இவற்றை வண்டிகளில் பூட்டித் தாங்கள் வண்டிகளில் அமர்ந்து பிரயாணம் செய்தனர்.
விஞ்ஞான வளாச்சியினால் புதிய பொறிகள் பல கண்டுபிடிக்கப்பட்டன. இதன் பயனாக மிதிவண்டி, மோட்டார் வண்டி புகைவண்டி புகைக்கப்பல். பேருந்து விமானம் போன்றவை உருவாயின. இவற்றின் மூலம் போக்குவரத்துச் சேவைகள் விரிவடைந்தன.
இன்று தரைவழி, கடல்வழி, வான்வழி ஆகிய மூன்று வழிகளிலும் விரைந்து செல்லக்கூடிய ஊர்திகள் பல உள்ளன. தரைவழிப் போக்குவரத்துக்கெனப் பல வீதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு விரைந்து செல்ல முடிகின்றது. விளைபொருள்கள், தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் பொருள்கள் அனைத்தையும் காலதாமதமின்றி ஓரிடத்திலிருந்து
30 - சிறுவர் கட்டுரைகள
 
 

மற்றோர் இடத்திற்குக் கொண்டு செல்லக் கூடியதாயுள்ளது. இதன் மூலம் வர்த்தகம் பெருகியுள்ளது. மக்களது தேவைகள் உடனுக்குடன் நிறைவடைகின்றன. முன்னர் மாதக்கணக்காகப் பயணம் செய்து சென்றடைந்த இடங்களைத் தற்போது விமானமூலம் ஒரு சில மணித்தியாலங்களுள் சென்று சேர முடிகிறது. இதனால் உலகமே மிகச் சுருங்கியதாகக் காணப்படுகிறது. போக்குவரத்துச் சாதனங்களின் பெருக்கத்தால் மக்கள் ஒருவரோடு ஒருவர் கலந்து பழகுவதற்கு வாய்ப்புக் கிட்டியுள்ளது. உலகனைத்தும் இன்று பல்வேறு போக்குவரத்துச் சேவைகள் உள்ளன. இவற்றின் உதவியினால் மக்கள் தாம் விரும்பிய இடங்களுக்கு விரைவாகச் செல்லக் கூடிய வசதி கிட்டியுள்ளது. நாளுக்குநாள் அறிவியல் அறிஞர்களின் கண்டுபிடிப்புக்கள் பெருகி வருகின்றன. இதன் மூலம் போக்குவரத்துச் சாதனங்களின் உருவாக்கத்திலும் புதிய புதிய மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.
28. விஞ்ஞானத்தின் விந்தைகள்
*○um○ *" \
نيnنازو ژ( ***\
இன்று நாம் விஞ்ஞான யுகத்தில் வாழ்கின்றோம். நாளுக்கு நாள் புதுமைகள் நிகழ்ந்த வண்ணமுள்ளன. விஞ்ஞானத்தின் வளர்ச்சியே இதற்குக் காரணமாகும். விஞ்ஞானம் மனித வாழ்வில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதைக் காண்கிறோம்.
நமது முன்னோர் வாழ்ந்த காலத்தில் இத்தகைய நிலை இல்லை. அக்காலத்திற்கும் இக்காலத்திற்கும் இடையே பெரும் வேறுபாடு உண்டு. அக்காலத்தில் மக்கள் கால்நடையாகவே பயணம் செய்தனர். தொலைவில் உள்ளாருடன் நினைத்தவுடன் தொடர்பு கொள்ள முடியாதிருந்தது. இன்று நெடுந்தூரத்தில் உள்ளாருடன் பக்கத்தில் இருந்து பேசுவதுபோற் பேசமுடிகிறது. தொலைபேசி
சிறுவர் கட்டுரைகள் 31

Page 19
என்னும் கருவி இதற்குப் பயன்படுகிறது. கணனியின் மூலம் பல சாதனைகளை நிலைநாட்ட முடிகிறது. இணையம் உலகமனைத்தையும் ஒரு வலைப்பின்னலில் இணைத்து நிற்கிறது. பல்லாயிரக்கணக்கான மைல் தூரத்தில் உள்ள இடங்களை வானவூர்தி மூலம் சில மணித்தியாலங்களிற் சென்றடைய முடிகிறது. அக்காலத்தில் இத்தகைய வசதி இருக்கவில்லை.
மோட்டார் வண்டி, புகைவண்டி போன்றன இன்று தரை வழிப்பயணத்திற்குப் பெரிதும் உதவுகின்றன. கடல்வழிப் பயணத்திற்குப் பாய்க்கப் பல்களை நம்பியிருந்த காலம் மறைந்துவிட்டது. அதிவேகப் புகைக்கப்பல்கள் இக்காலத்தில் பயன்படுகின்றன. முற்காலத்தில் இத்தகைய வசதியிருக்கவில்லை.
உலகின் பல வேறு பாகங்களிலும் நிகழ்த் தப் படும் பேச்சுக்களையும், இசை நிகழ்ச்சிகளையும் வானொலிக் கருவிகள் மூலம் நாம் கேட்டு மகிழ்கிறோம். சிறந்த காட்சிகளையும் நடிப்புக்களையும் திரைப்படங்கள் மூலம் பார்த்து மகிழ்கிறோம். மின்சார விளக்குகள், மின்விசிறிகள் என்பன நமது நாளாந்த வாழ்வில் நீக்கமுடியா இடத்தைப் பெற்றுவிட்டன. வீடு தோறும் தொலைக்காட்சிப் பெட்டிகள் பெருகிவிட்டன. இத் தொலைக்காட்சி மூலம் சகல நிகழ்ச்சிகளையும் நாம் நேரிற் காண முடிகிறது. மின்சாரம் மனிதனின் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றாகிவிட்டது.
மனிதனின் இதயத்தை மாற்றி வைக்கும் சத்திரசிகிச்சையும் வெற்றி பெற்றுள்ளது. கணனி இயந்திரங்கள் மூலம் குறுகிய நேரத்தில் கூடிய வேலைகளைச் செய்து முடிக்கின்றனர். இயந்திர மனிதனும் செயற்படத் தொடங்கிவிட்டான்.
இவையெல்லாம் விஞ்ஞானம் விளைத்த விந்தைகளே. விந்தை புரியும் விஞ்ஞானம் மனித குலத்துக்கு ஆக்கத்திற்கு உதவுவதோடு அழிவுக்கும் வழி சமைப்பதாயுள்ளது.
விஞ்ஞானத்தின் வளர்ச்சியினால் கண்டுபிடிக்கப்பட்ட அணுகுண்டு, சலவாயுக்குண்டு, ஏவுகணைகள் போன்றவை இன்று உலக மக்களை அழிவுப் பாதைக்கும் அழைக்கின்றன. இத்தகைய ஆபத்துக்கள் இருந்த போதிலும் விஞ்ஞானத்தின் விந்தைகளை உலகம் இன்று வரவேற்கின்றது. புதுமைகள் மலிந்த இக்காலத்தில் நாம் வாழ்வது குறித்துப் பெருமைப்படலாம்.
மாணவர்களாகிய நாம் விஞ்ஞானத் துறையில் ஆர்வம் கொள்வதன் மூலம் விஞ்ஞானத்தின் விந்தைகளை நன்கு உணர்ந் கொள்ள முற்படவேண்டும்.
32 சிறுவர் கட்டுரைகள்
\
 

კლად, Siya
29. மழைநாள்
அன்று ஒரு வெள்ளிக்கிழமை, காலை எழு மணிக்குப் பாடசாலைக்குப் புறப்பட்டேன். வானம் இருண்டு காட்சியளித்தது. குளிர் காற்று வீசியது. புத்தகப் பையைத் தோளில் மாட்டிக்கொண்டு குடையைக் கையில் பிடித்தபடி பாடசாலை நோக்கி நடக்கத் தொடங்கினேன். சிறிது தூரம் சென்றிருப்பேன். பளிச் பளிச் என்று வானில் மின்னல்கள் தோன்றின. பலத்த இடிமுழக்கம். பயந்துவிட்டேன். மழை 'சோ வெனப் பொழியத் தொடங்கியது. குடையை விரித்துப் பிடித்துக் கொண்டு மெல்ல மெல்ல நடந்து கொண்டிருந்தேன். மழையின் வேகம் அதிகரித்தது. வீதி எங்கும் வெள்ளம். காற்றின் வேகத்துக்கு எனது குடை ஈடு கொடுக்க முடியாது சுழலத் தொடங்கியது. வீதியோரமாக உள்ள கடையொன்றின் விறாந்தையில் புகுந்து நின்று கொண்டேன்.
மழை தொடர்ந்து பொழிந்து கொண்டே இருந்தது. வீதியிற் செல்வோரெல்லாம் மழைக்கு அஞ்சி அயலில் உள்ள வீடுகளுக்குள் தஞ்சம் புகுந்தனர். காலை பத்துமணியாகியும் மழை ஓயவில்லை. பார்க்குமிடமெங்கும் வெள்ளக் காடாகவே காட்சியளித்தது. பாடசாலை செல்ல வந்த மாணவர்கள் எல்லாம் மழையில் நனைந்தபடி தங்கள் வீடுகளுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்கள். வெள்ளப் பெருக்கினால் வீதிகளில் மோட்டார் வாகனங்களே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. யான் எப்படி வீடு திரும்புவது? என்று யோசித்த வண்ணம் அந்தக் கடைக் கட்டிடத்தின் முன்னே நின்று கொண்டிருந்தேன். காலை பதினொரு மணியளவில் மழை சற்றுக் குறைந்தது. குடையை விரித்துப் பிடித்துக் கொண்டு வீதியில் மெல்ல மெல்ல வீடு நோக்கி நடந்தேன். இடைவழியில் எனது அம்மா என்னைத் தேடிய வண்ணம் வந்து கொண்டிருந்தார். அவரைக் கண்டதும் எனது பயம் அகன்று விட்டது. அம்மாவின் கையைப் பிடித்தபடி வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.
காலையில் வயலுக்குச் சென்றிருந்த எனது அப்பா நண்பகல் வீடு வந்து சேர்ந்தார். நெல் வயல்கள் எல்லாம் வெள்ளத்தால் பெரும் சேதமடைந்து விட்டதாகவும் ஐந்து மண்வீடுகள் வெள்ளப் பெருக்கால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மழை மக்களுக்கு நன்மையளிப்பது போலச் சிலவேளைகளில் பெரும் பாதிப்பையும் ஏற்படுத்தி விடுகிறது என்ற உண்மையை மழை நாளில் நான் நன்குணர்ந்து கொண்டேன், அந்த மழை நாளில் நான் பட்ட வேதனையை இன்றுகூட மறக்கமுடியவில்லை.
சிறுவர் கட்டுரைகள் へハン 33

Page 20
இதி
இக்காலத்தில் பயன்படும் போக்குவரத்துச் சாதனங்களில் வானவூர்தியும் ஒன்று. வானத்தில் பறந்து செல்வதால் இதனை வானவூர்தி என்று அழைப்பர். ஆகாயக்கப்பல், ஆகாயவிமானம் என்றும் இதனைக் கூறுவர். நிலத்திலும் நீரிலும் செல்லும் வன்மையுள்ள வானவூர்திகளும் உள்ளன.
வானவூர்தி மூலம் பல்லாயிரக் கணக்கான மைல் தூரத்தைச் சில மணித்தியாலங்களுள் கடந்து விடலாம். மக்கள் வானவூர்தி மூலம் பிரயாணம் செய்வதால் தங்கள் அருமையான நேரத்தை ஆதாயப்படுத்திக் கொள்கிறார்கள்.
ரைட் சகோதரர்கள் முதன் முதலில் வானவூர்தியை அமைத்தனர். பின்னர் படிப்படியாகப் பலவகையான வானவூர்திகள் அமைக்கப்பட்டன. வானவூர்தி பாரமற்ற இலேசான உலோகத்தகட்டினால் செய்யப் படுகின்றது. அதன் முற்பாகத்தில் இரண்டு உறுப்புக்கள் இருக்கின்றன. அவை அதிகம் வேகமாகச் சுழலக்கூடியன. வானவூர்தியின் நடுப்பாகம் பருமனாகவும், முன்பாகம் சிறுத்தும், பின்பாகம் நீளமாகவும் இருக்கின்றது. அது உயரத்தில் பறந்து செல்லும் பொழுது ஒரு பறவையைப் போலத் தோன்றும். இதன் நடுப்பாகத்தில் பிரயாணிகள் இருப்பதற்கு வசதியான ஆசனங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. விமானி இயந்திரத்தை இயக்கியதும் ஊர்தி மேலே எழுந்து படிப்படியாக உயர்ந்து செல்லும், பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள நாடுகளுக்கெல்லாம் மக்கள் சில மணிநேரத்தில் இதில் பயணம் செய்கின்றார்கள். வானவூர்திகள் அமெரிக்கா, ஐரோப்பிய தேசங்களில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இன்று உலகின் பல பாகங்களிலும் போக்குவரத்துச் சேவைக்கு வானவூர்திகள் பயன்படுத்தப்படுகின்றன. போக்குவரத்துச் சேவைக்கு மட்டுமன்றி யுத்த நடவடிக்கைகளுக்கும் வானவூர்திகள் இக்காலத்தில் பயன்படுகின்றன. பலவகையான வானவூர்திகள் இதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.
34 சிறுவர் கட்டுரைகள்
 
 
 

31. செய்வன திருந்தச் செய்
செய்வன திருந்தச் செய்' என்பது ஒளவையார் அருளிய அறிவுரையாகும். நாம் எல்லோரும் பிறப்பு முதல் இறப்பு வரை எத்தனையோ கருமங்களைச் செய்கிறோம். ஒவ்வொரு கருமத்தையும் செய்யும் போது நாம் செய்யப்போகும் கருமத்தைப்பற்றி நன்கு சிந்திக்க வேண்டும். நல்லன செய்தால் உலகம் நம்மைப் போற்றும். தீயன செய்தால் உலகம் நம்மைத் தூற்றும். எனவே நமது : Ggu 6O356it நல்லனவாக அமைதல் வேண்டும்.
நாம் செய்யும் செயலில் நமது திறமையும் பண்பும் வெளிப்பட வேண்டும். செய்யும் செயலைத் திருத்தமாகச் செய்தல் வேண்டும். இதற்கு முதலில் நமது மனதில் துணிவு வேண்டும். எண்ணித் துணிக கருமம் என்றார் வள்ளுவர். ஒரு கருமத்தைச் செய்ய முற்படும்போது அதனைப் பற்றிய தெளிவான கருத்து நமது மனதில் நிலைக்க வேண்டும். அப்படியிருந்தாற்றான் அக்கருமத்தைச் செம்மையாக, திருத்தமாக நாம் செய்ய முடியும்.
ஊக்கம் தளராமை, துன்பத்தைக் கண்டு சோர்வுறாமை, அழகுணர்ச்சி ஆகியன மிக அவசியமானவை. இவற்றின் மூலமே நாம் ஒரு கருமத்தைச் சிறப்புறச் செய்ய முடியும். நாம் செய்யும் செயல்களை மற்றவர்கள் மதிப்பிடுகிறார்கள். அச்செயல்கள் திருத்தமானவையாக, மற்றவர் களது பாராட்டுக்களைப் பெறுபவையாக விளங்க வேண்டும்.
நாம் நல்லனவே செய்தல் வேண்டும். அவற்றைத் திருத்தமுறச் செய்தல் வேண்டும். செய்வன திருந்தச் செய்' என்ற பொன்மொழியை நம் வாழ்வில் எந்நாளும் மறவாது செயற்படுவோமாக.
நாளும் பொழுதும் நல்லன செய்வோம். செய்வன யாவும் திருந்தச் செய்வோம்.
சிறுவர் கட்டுரைகள் 35

Page 21
32. நான் விரும்பும் கவிஞர்
"தமிழுக்கு அமுதென்று பேர், அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்' என்று முரசு கொட்டியவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். புதுவை தந்த புரட்சிக் குயில் அவர். அவரே நான் விரும்பும் நல்ல தமிழ்க் கவிஞர்.
பாரதிதாசன் தமிழே வடிவானவர். தமிழின் உயர்வுக்குப் பாடியவர். தமிழர் உயர்வுக்குப் பாடியவர். துறை தோறும் தமிழ் வளம் பெற, நலம் பெற வழி காட்டியவர். வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ் நாட்டைப் பெருமைப்படுத்திய பாரதியின் எண்ணங்களை எம் இதயங்களில் ஏற்றியவர் பாவேந்தர் பாரதிதாசன். பாரதியின் தமிழிலும் எளிய தமிழைக் கவிதைக்குப் பயன்படுத்தினார். மக்கள் தமிழில் மாண்புறு கவிதைகள் பாடினார். தமிழ்ச் சொல்லின் உயர்வினை ஆட்சியில் கொணர்ந்தார். தமிழ் | வழிபாடு செய்தார். வழிபடத் தமிழ் அடியார் குழுவினையும் உருவாக்கினார். தமக்கெனக் கவிஞர் பரம்பரை ஒன்றினையே உருவாக்கினார், வாழையடி வாழையெனக் கவிஞர் அணி இன்று பெருகுகின்றதென்றால் அப்பெருமை பாவேந்தர் பாரதிதாசனுக்கே உரியதாகும். கனகசபை சுப்புரத்தினம் என்னும் தமது பெயரைப் பாரதிதாசனாக மாற்றிப் பாரதிக்கும் தமிழுக்கும் பெருமை சேர்த்த பெருந்தகை அவர்.
36 சிறுவர் கட்டுரைகள்
 
 
 
 

பாவேந்தரின் சொல்லும் சொல்லாட்சியும், நடையும் உத்திகளும், உவமைகளும், உருவகங்களும் அவருக்குப் பின் தோன்றிய கவிஞர் கள் அனைவரையும் பாதித்துள்ளன. பாரதிதாசன் தமிழுக்குப் புதிய வழி காட்டினார். ஒளி கூட்டினார். புத்தொளியில் புத்துணர்வு பெற்று, புதியன படைத்து வளர்கின்றது தமிழுலகம் பாரதி நாட்டு விடுதலைக்கு உரமூட்டினார். பாரதிதாசனோ சமூக விடுதலை, பொருளாதார விடுதலை, மொழி விடுதலை முதலியவற்றுக்கு அழுத்தம் கொடுத்துப் பாடினார். -
அவர் படைத்த கவிதைகள் அழியா அழகுடையன. அழகின் சிரிப்பு, குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு, சேரதாண்டவம், இளைஞர் இலக்கியம், பிசிராந்தையார், தேனருவி, எதிர்பாராத முத்தம், குறிஞ்சித்திரட்டு, பாரதிதாசன் கவிதைகள் ஆதியாம் நூல்கள் அவர்தம் புகழ் பரப்பும் படைப்புக்கள். பாவேந்தர் படைப்புக்கள் அனைத்தையும் தற்போது நாட்டுடமை ஆக்கியுள்ளது தமிழக அரசு. இதன்மூலம் பட்டி தொட்டி எங்கும் பாவேந்தரின் கவிதைகள் பரவ வழி பிறந்துள்ளது. புதியதோர் உலகம் செய்வோம். கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் என முழக்கமிட்ட புரட்சிக் கவிஞரின் வழிநின்று தமிழ் வளர, தமிழினம் தலைநிமிர உழைத்திடல் நமது கடனாகும். கவிஞரின் படைப்பாற்றலை, படைப்புக் கூறுகளை, படைப்பு நுட்பங்களை நாம் பலமுறை படித்துணர்ந்திட வேண்டும். பாவேந்தரின் கவிதைகள் தமிழர்தம் இல்லங்கள் எங்கும் அவர்தம் இதயங்கள் எங்கும் இடம் பெற வேண்டும்.
'ஆதிமனிதன் தமிழன்தான் அவன் மொழிந்ததும் செந்தமிழ்த் தேன் மூதறிஞர் ஒழுக்க நெறிகள் முதலிற் கண்டதும் தமிழகந்தான்! காதல் வாழ்வும் புகழ் வாழ்வும் காட்டியதும் தமிழ் நான் மறைதான் ஒதும் அந்தத் தமிழ் நான்மறை உலகம் போற்றும் முத்தமிழ்தான்!
என்று முழங்கிய பாவேந்தரின் நாமம் நற்றமிழ் உள்ளவரை நானிலமெங்கும் நின்று நிலைக்கும் என்பது திண்ணம், பாவேந்தர் நாமம் வாழ்க! வாழ்கென வாழ்த்துவோம் நாமே.
சிறுவர் கட்டுரைகள் 37

Page 22
33. பாழடைந்த வீடொன்று தன் கதை கூறல்
அன்று வெள்ளிக்கிழமை. நல்லூர் கோயில் வீதியால் சென்று கொண்டிருந்தேன். தம்பி என்னை ஏன் பார்க்கிறாய்? என்றொரு குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். பாழடைந்த வீடொன்று பேசத் தொடங்கியது. நான்கு ஆண்டுகளுக்கு முன் நானிருந்த நிலையினையும் இன்றைய நிலையையும் எண்ணிப் பார்க்கும் போது வேதனை என்னை வேகவைக்கிறது. என் நிலைமை பற்றி அறிய விரும்புகிறாயா? சொல்கிறேன். கேள்.
யாழ்ப்பாண அரசின் இராசதானி என அழைக்கப்படுவது நல்லூர். நல்ல ஊர். அதனாற்றான் நல்லூர் என்று பெயர் வைத்தார்கள் போலும். நல்லூரில் கோயில் வீதியில் கந்தசுவாமி கோயிலின் மேற்குப் புறத்தில் பரந்த நிலப்பரப்பில் யான் இருந்தேன். இரு மாடிகளையும், பத்து அறைகளையும் கொண்ட என்னைப் பார்ப்பவர்கள் எல்லாம் ஆசை கொண்டனர். எனது முற்றத்தில் அழகிய பூந்தோட்டம். எனக்கு மின்னொளி வசதி. எந்நேரமும் கலகலப்பாக இருப்பேன். என் வரவேற்பு அறையில் அழகான ஆசனங்கள். பூச் சாடிகள் வாயில் களை அழகுபடுத்தின. தொலைக்காட்சிப் பெட்டி, வானொலிப்பெட்டி என்பன மேசைகளில் எந்நேரமும் காட்சியளித்த வண்ணம் இருக்கும்.
சுவர்களில் அழகிய வர்ணச் சித்திரச் சீலைகள், சாளரங்களில் அழகிய திரைகள். பகலிலும் இரவிலும் பார்ப்போர் மயங்கும்
வகையில் சொர்க்கபுரியாக விளங்கினேன். என்னைப்போல் அழகான மாளிகை அந்த வீதியிலேயே இல்லையெனப் பெருமைப்பட்டேன்.
என் வீட்டுச் சொந்தக்காரர் சிறந்த வைத்திய நிபுணர். அவர் மனைவியும் வைத்தியரே. இருவரும் என்னை எந்நாளும் அழகுறக் கவனித்தனர். அவர்களது பிள்ளைகளும் என்னை அழகுபடுத்துவதில் பின்னிற்பதில்லை. இதனால் எந்நாளும் யான் புதுப்பொலிவுடன் காட்சியளித்தேன். என் வீட்டுக்கு வருவோரெல்லாம் என் அழகைப் பற்றிப் புகழ் பாடத் தவறுவதில்லை. இதெல்லாம் இரு ஆண்டுகள்தான் நிலைத்தன.
1995 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 29 ஆம் நாள் எனக்கு நன்கு நினைவிருக்கிறது. திடீரென இடிமுழக்கம்போல் பல
38 சிறுவர் கட்டுரைகள்
 

எறிகணைகள் வந்து வீழ்ந்தன. வீட்டிலிருந்தோர் எல்லாம் மோட்டார்க்காரில் ஏறி வேறிடங்களுக்கு ஓட்டம் பிடித்தனர். தொடர்ந்து எறிகணைகள் என்மீது வீழ்ந்து வெடித்தன. கூரை ஓடுகள், சாளரங்கள், கதவுகள் அனைத்தும் சிதறின. பீரங்கிகளிலிருந்து குண்டுகள் என் மீது பாய்ந்தன. சுவர்கள் எல்லாம் இடிந்து வீழ்ந்தன. தொடர்ந்து வீழ்ந்த குண்டுகளால் நான் தரைமட்டமானேன். ஆண்டுகள் நான்காகியும் என் வீட்டார் இப்பக்கம் வரவே இல்லை. அவர்கள் எல்லாம் இந்த நாட்டை விட்டுச் சென்று விட்டார்களாம். நான் மண்ணோடு மண்ணாகக் கிடக்கிறேன். என்னைப் பார்ப்பாரே இல்லை. தம்பி நீ இன்று என்னிடம் வந்ததால் என் அவல நிலையை உன்னிடம் கூறினேன். என் கவலையை வேறு யாரிடம் சொல்வது? காலம் மாறும் என்றோ ஒரு நாள் என் எசமானர் இவ்விடம் வருவார் என்று காத்துக் கொண்டிருக்கிறேன். என் கவலை என்று தான் தீருமோ? என் பழைய நிலை திரும்புமா? சொல்லு தம்பி என்று தன் சோகக் கதையைக் கூறியது பாழடைந்த வீடு. அதன் பரிதாப நிலையைப் பார்த்துக் கண்ணிர் சிந்திய வண்ணம் என் வீடு நோக்கித் திரும்பினேன்.
34. கணிப்பொறி
இன்று உலக மக்கள் அனைவரது உள்ளங்களிலும் இல்லங்களிலும் உச்சரிக்கப்படும் கருவி கணிப்பொறியாகும். கணனி என்று அழைக்கப்படும் இக்கருவியைக் கண்டு பிடித்தவர் டாக்டர் ஜோன்பான் நெய்மன் என்பவராவார். இக்கருவி இன்று உலகில் வாழும் அனைத்து மக்களுக்கும் ஏதோ ஒரு வகையில் பயன்பட்டு வருகிறது. மாணவர், வணிகர், அலுவலர், தகவல் தொடர்பாளர் என்றவாறு எல்லாவகையினருக்கும் பயன்தரும் இக்கணிப்பொறி இன்று உலகில் பயன்தரும் பாரிய அறிவியல் கண்டுபிடிப்பாகும்.
சிறுவர் கட்டுரைகள் 39

Page 23
கணிப்பொறிகளில் பலவகை உள. பெரிய கணிப்பொறிகள் அதிக வேகத்துடன் இரண்டாண்டுக்கு ଡ୍ର (୬ முறை வேகம் கூட்டப்பட்டும் வருகிறது. சிறிய கணிப்பொறிகள் தற்போது பரவலாக வீடு முதல் அலுவலகங்கள், பள்ளிகள், வங்கிகள் என உபயோகத்தில் உள்ளன. கணிப்பொறியின் அறிமுகம் கடந்த இருபது ஆண்டுகளில் சமூகத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. கணிப்பொறியானது புதிய வேலை வாய்ப்பையும் அதே சமயத்தில் பழைய வேலை வாய்ப்பு முறைகளை மாற்றியும் புரட்சி படைத்துள்ளது.
வங்கிகளில் கணிப்பொறியின் உதவியினால் அதிக செய்திகளைச் சிறிய இடத்தில் பதிவு செய்யவும் கணக்குகளை நிலைநிறுத்தவும். வங்கி வரவு-செலவுகளைக் கட்டுப்படுத்தவும் முடியும். பத்திரிகைகள் செய்திகளை, தகவல்களை விரைவாகப் பெற உதவுகிறது. கணிப்பொறி காவல் துறையினருக்கும் பெரிதும் பயன்படுகிறது. காவல் துறையில் குற்றவாளிகளின் தடயங்கள், கைரேகைகள், அவர்கள் பற்றிய விடயங்கள் அனைத்தையும் பதிவு செய்யக் கணிப்பொறி உதவுகிறது.
கணிப்பொறி மூலம் இயக்கப்படும் றோபோ என்னும் மனித இயந்திரத்தால் இதுவரை மனிதரால் செய்யப்பட்டு வந்த கார் தயாரிப்பு, ஆடை நெய்தல் போன்ற மற்றும் பல தொழிற்சாலை இயந்திரங்களை இயக்கிட, கட்டுப்படுத்த முடிகிறது. இத்தகைய பயன்களை அளிக்கும் கணிப்பொறிக் கல்வியை மாணவர்கள் நன்கு பயின்றிட வேண்டும்.
இருபத்தோராம் நூற்றாண்டில் வாழும் நாம் கணிப்பொறிக்கருவி பற்றிய அறிவின்றி வாழுதல் பொருந்தாது. வளர்ந்துவரும் அறிவியல்துறை முன்னேற்றத்திற்கமைய மாணவர்களாகிய நாமும் அறிவியல் தந்த கணிப்பொறிக் கருவி தொடர்பான நுட்பங்களை நன்கறிந்து முன்னேறிட முயலவேண்டும்.
40 சிறுவர் கட்டுரைகள்
 
 

35. பத்திரிகைகள்
பத்திரிகைகள் காலக் கண்ணாடிகள் எனலாம். உலகப் புதினங்களையும் உள்ளுர்ச் செய்திகளையும் உடனுக்குடன் தருவன பத்திரிகைகளாகும். காலை எழுந்ததும் நாம் பத்திரிகைகளையே நாடுகிறோம். அந்த அளவுக்குப் பத்திரிகைகள் நம் வாழ்வில் செல்வாக்குச் செலுத்துகின்றன. உலகின் எந்த மூலை முடுக்குகளிலும் நிகழும் முக்கியமான சம்பவங்களையும் பத்திரிகைகள் நமக்குத் தருகின்றன.
பத்திரிகைகளில் பல வகையுண்டு. தினந்தோறும் வெளிவருவன தினசரிகள் எனப்படும். வாரம் ஒரு முறை வெளிவருவன வார இதழ்களாகும். இவற்றைவிட மாதம் இருமுறை, மாதம் ஒரு முறை வெளிவரும் ச ஞ சிகைகளும் உண்டு. உலகின் பல பாகங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பத்திரிகைள் பல மொழிகளில் வெளிவருகின்றன. அவை அரசியல், கல்வி, வணிகம், விளையாட்டு, சினிமா, தொழில் நுட்பம், மனையியல் சார்ந்த பல்வேறு வகைப்பட்டனவாகவுள்ளன.
பத்திரிகைகள் மக்களது அபிப்பிராயங்களை வெளியிடும் சாதனங்களாக விளங்குகின்றன. அவை மக்கள் கருத்துக்களைப் பிரதிபலிப்பதோடு சனநாயகத்தை நிலைநாட்டவும் துணைபுரிகின்றன. பத்திரிகைகளில் வெளிவரும் விளம்பரங்கள் மக்கள் தமக்குத் தேவையான பொருள்களைப் பெற்றுக் கொள்வதற்கும் வழிகாட்டுகின்றன. அறிவியல் சம்பந்தமான விடயங்களை மாணவர் அறிந்து கொள்ளவும் பத்திரிகைகள் துணைபுரிகின்றன. மக்களுக்குப் பயன் தரும் பற்றிய கட்டுரைகள், கதைகள், என்பனவற்றையும் பத்திரிகைகள் வெளியிடுகின்றன. இவற்றை வாசிப்பது பயன் தரும் பொழுது போக்காகவும் அமைகின்றது.
சிறுவர் கட்டுரைகள் 41

Page 24
சிறுவர்கள் முதல் பெரியோர் வரை படித்து மகிழத்தக்க பத்திரிகைகள் பல இன்று உலகெங்கும் வெளியாகின்றன. சிறுவர்களாகிய நாம் நமது அறிவு, திறன், மனப்பாங்கு என்பனவற்றை வளர்ப்பதற்கு உதவும் பத்திரிகைகளைத் தவறாது கற்க வேண்டும். இதன் மூலம் நமது எழுத்தாற்றலையும் பேச்சாற்றலையும் வளர்த்துக் கொள்ள முடியும்.
நல்ல பத்திரிகைகளை நாளும் படிப்போம்! நல்லவராக நாடு போற்ற வாழ்வோம்!
36. வேம்பின் வீம்பு
ஆற்றங்கரையின் ஒரமாக வேப்பமரமொன்று நன்கு செழித்துப் பருத்து வளர்ந்திருந்தது. அதன் அயலிலே நாணற்புற்கள் பல வளர்ந்திருந்தன. காற்று வீசும்போதெல்லாம் இந்த நாணற்புற்கள் எல்லாம் வளைந்தும் நெளிந்தும் தலை தாழ்த்தி நிற்பது வழக்கம். இவற்றைப் பார்த்து வேம்பு தன்னுள் பெருமைப்பட்டுக் கொள்ளும். அற்பப் புற்கள் இவை சிறு காற்றுக்குக் கூட வளைந்து கொடுக்கின்றனவே. என்னைப்போல் நிமிர்ந்து நிற்க முடியவில்லையே என்று தனக்குள் செருக்குற்றது.
நாணற்புற்களைப் பார்த்து ஒருநாள் வேம்பு ஏளனமாகப் பேசியது. "என்னைப் பாருங்கள் - எந்தக் காற்றுக்கும் நான் அசைந்து கொடுப்பதில்லை. உங்களைப் போல் வளைந்து தாழ்ந்து கொடுப்பதில்லை. உங்களுக்கு வீரம் இல்லையா? பலம் இல்லையா? நிமிர்ந்து நிற்க முடியாதா? வெட்கம் வெட்கம்” என்று வேம்பு வீம்பு பேசியது. அதற்கு நாணற்புற்கள் "எங்கள் பலம் எங்களுக்குத்தான் தெரியும். உங்களைப் போன்று எதையும் எதிர்த்து நிற்க எங்களால் முடியாது. நாங்கள் பணிந்து நின்றாற்றான் நிலையாக நிற்க முடியும்" என்றன.
நாணற்புற்களின் இயலாமையைக் கண்டு வேம்பு மேலும் செருக்குற்றது. ஒருநாள் இரவு திடீரெனப் புயற்காற்று வீசியது. ஆற்றோரத்தில் நின்ற மரங்களெல்லாம் "படபட" வென்று முறிந்து வீழ்ந்தன. வீம்பு பேசிய வேப்பமரமும் வேரோடு சாய்ந்து வீழ்ந்தது. அதன் கொப்புகள் எல்லாம் முறிந்து கிடந்தன. இலைகள் எல்லாம் புயற்காற்றில் பறந்து பரந்து கிடந்தன.
42 சிறுவர் கட்டுரைகள்
 

மறுநாள் காலை நாணற்புற்கள் தலை நிமிர்ந்து நின்றன. வீழ்ந்து கிடக்கும் வேம்பின் அவல நிலையைப் பார்த்து அவை அனுதாபப் பட்டன. "வீம்பு பேசிய வேம்பே உன் வீரம் எங்கே? உனது செருக்கும் விட்டுக் கொடுக்காத தன்மையும்தான் உன் வீழ்ச்சிக்குக் காரணம் என்பதை உணர்ந்து கொள்” என்று நாணற்புற்கள் நயம்படக் கூறின. நாணற்புற்களின் பணிவும் நெகிழும்தன்மையும் அவற்றுக்கு வாழ்வளித்தன என்பதை வேம்பு அப்பொழுது ஏற்றுக்கொண்டது.
37 முயற்சி திருவினையாக்கும்
"முயற்சி திருவினையாக்கும்", "முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்”, “முயலாதார் வாழ்க்கை திருந்துதல் இல்லை” என்பன போன்ற சொற்றொடர்களை நாம் அடிக்கடி கேட்கிறோம். இச்சொற்றொடர்கள் எல்லாம் முயற்சி செய்தால் அதன் பயன் கட்டாயம் கிடைக்கும் என்ற உண்மையை நமக்கு உணர்த்துகின்றன. எந்த ஒரு செயலும் வெற்றி பெறவேண்டுமாயின் முயற்சி செய்ய வேண்டும். முயன்றால் எதுவும் வெற்றி தரும் என்பது திண்ணம்.
பறவைகளைப் பாருங்கள். அவை மேலும் மேலும் உயரப் பறக்க முயலுகின்றன. மீன் நீரில் நீந்த முயலுகிறது. மயில் நன்கு ஆடவும் குயில் பாடவும் முயலுகின்றன. இவ்வாறே மனிதனும் தன் செயல்கள் வெற்றிபெற முயற்சிக்க வேண்டும், சிறுவர்களாகிய நாம் சோம்பியிருக்காது எந்நாளும் முயற்சிக்க வேண்டும்.
குழந்தை தன் முதல் பருவத்தில், தவழ்ந்த பின் நடை பயிலத் தொடங்குகிறது. அப்போது அது பலமுறை கீழே விழுந்தாலும் அதற்கு அதன் தாயோ வேறு எவருமோ எவ்வாறு நடக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை. ஆனால் அது தானாகவே முயன்று நடக்கத் தொடங்குகிறது. பின் ஒடவும் செய்கிறது. இது இயற்கையாகவே நடக்கும் செயல். குழந்தையின் முயற்சியே இதற்குக் காரணம்.
சிலந்தி தன் வலையைப் பின்னித் தன்னைக் காத்துக் கொள்கிறது. பல முறை முயன்ற பின்னரே அது சாத்தியமாகின்றது. இவையெல்லாம் முயற்சி உயர்ச்சி தரும் என்பதையே உணர்த்துகின்றன. முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்ற
சிறுவர் கட்டுரைகள் 43

Page 25
மனவுறுதி நமக்கு வேண்டும். ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுப்போரும், மீன் பிடிப்போரும் தங்கள் முயற்சியினாலேயே பயன் பெறுகின்றனர்.
நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைக்கும் விவசாயியும், ஆலைகளில் அயராது உழைக்கும் பாட்டாளிகளும், வீரசாகசம் புரியும் வீரர்களும், விளையர்ட்டுப் போட்டிகளில் சாதனை படைப்போரும் தங்கள் முயற்சிகளாலேயே நினைத்ததைச் சாதிக்கின்றனர்.
நாம் கொண்ட இலட்சியத்தை, இலக்கை அடையவேண்டுமாயின் நாம் அயராது உழைக்க வேண்டும். தோல்விகளைக் கண்டு மனம் தளராது தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். தோல்வியே வெற்றியின் அடிப்படை எனக்கொண்டு தொடர்ந்து நாம் முயற்சிக்க வேண்டும். முயற்சி ஒருபோதும் வீண்போகாது என்பதை நன்குணர்ந்து நாம் வாழ்வில் முன்னேறத் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும் முயற்சி உயர்ச்சி தரும் என்பது திண்ணம்.
38. LD6 or soft
மலர்கள் அழகானவை. அவை கண்ணுக்குக் கவர்ச்சியையும் மனதுக்கு மகிழ்ச்சியையும் தருகின்றன. மலர்களில் மயங்காதோர் எவருமிலர். மனிதர் முதல் வண்டுகள் வரை மலர்களின் அழகில் மயங்குவதை நாம் காண்கிறோம். அழகை விரும்பும் அனைவரும் மலர்களை விரும்புவர். இது உண்மை.
மலர்கள் இயற்கை அளிக்கும் பெரும் செல்வங்களாகும். ஆயிரமாயிரம் மலர்களை இப்பூமியில் நாம் காண்கிறோம். அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமானவை. பல பல வடிவங்களில் பல பல வர்ணங்களில் மலர்கள் மலர்கின்றன. மக்கள் மனதைக் கொள்ளை கொள்கின்றன. மணம் வீசுகின்றன.
44 சிறுவர் கட்டுரைகள்
 
 
 

மல்லிகை, முல்லை, உறோசா, தாமரை, சூரியகாந்தி போன்றன
நாம் விரும்பும் மலர்களில் சிலவாகும். மலர்களால் மக்கள் பெரும்
பயனடைகின்றனர். தேனீக்கள் மலர்களை நாடித் தேனருந்துகின்றன. அவற்றின் மூலம் மகரந்தச் சேர்க்கை ஏற்படுகிறது. மலர்கள் இறைவனின் பூசைக்குப் பயன்படுகின்றன. மாலைகள் கட்ட உதவுகின்றன. மலர்கள் நிகழ்ச்சிகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. வாசனைத் தைலங்கள் வடித்தெடுக்கவும் மலர்கள் உதவுகின்றன. மலர்களால் மக்கள் வருமானத் தைப் பெறுகிறார்கள் , வெளிநாடுகளுக்கு மலர்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் பெருமளவு அந்நியச் செலவாணியைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பும் கிட்டுகிறது.
எந்த மரமும் மலர்களின்றிக் காய்ப்பதில்லை, பூவாகிக் காயாகிக் கனியாவதே இயற்கை நியதியாகும். இதன் மூலம் பூவின் முக்கியத்துவம் புலனாகிறது. மக்கள் மலர்களை விரும்பிச் சூடிக் கொள்வர், அழகிய முகத்தைப் புலவர்கள் மலர் போன்ற முகமென வர்ணிப்பர்.
மலர்களைப் பற்றிப் பாடாத புலவர்களே இல்லையெனலாம். மன்னர் மணிமுடி முதல் மங்கையர் கூந்தல்வரை வீற்றிருக்கும் பெருமை மிக்கன மலர்களாகும். மலர்ச்செடிகளைப் பலர் தங்கள் வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கிறார்கள். இதனைத் தங்கள் பொழுது போக்காகவும் கொள்கிறார்கள்.
ഥസെi5:'ഠിgറ്റൂട്ടങ്ങണ வளர்ப்பதன் மூலம் நாம் பெரும் பயன் பெற முடியும் என்பதை உணர்ந்து செயப்படுவேஜக: 皺
リ*
சிறுவர் கட்டுரைகள் 45

Page 26
39. பழந்துணியின் சுயசரிதை
நான் இப்பொழுது பழந்துணியாகக் குப்பை மேட்டிலே கிடக்கிறேன். என்னைக் கவனிப்பார் யாருமில்லை. இனி என்ன என் முடிவுகாலம் கிட்டிவிட்டதென எண்ணுகிறேன். மழை பெய்து என்னை உக்க வைக்கிறது. வெய்யில் தகித்து உருக்குலைத்து வருகிறது. என் இதயம் துன்ப மிகுதியினாலே வெடித்துவிடும் போலிருக்கிறது.
என் கவலைகளை, என் அனுபவங்களை உங்களுக்குச் சொல்ல வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். இதன் மூலமாகவாவது எனக்கு மனப்பாரம் குறையும். அதன் பின்பு நான் செத்து மடிந்து போகலாம். என் கதையை நீங்கள் கேட்க விரும்புகிறீர்களா? அப்படியானால் சரி. சொல்லுகிறேன் கேளுங்கள்.
இந்தியாவில் கோயம்புத்தூர் என்னுமிடத்தில் பெரும் பருத்தி வயல் இருந்தது. அவ்வயலில் உள்ள ஒரு பருத்திச் செடியில் நான் தோன்றினேன். அப்போது என் நிறத்தைப் பார்த்தாலே கண்கூசும் பால் போன்ற வெண்மை நிறம் சிறிது காலத்தின் பின்பு என்னையும் எனது நண்பர்களையும் பறித்து கூலியாட்கள் பொதிகளாக்கினார்கள். பின்னர் எம் அனைவரையும் இயந்திர சாலைக்கு அனுப்பினார்கள். எனக்கு ஒரே மகிழ்ச்சி.
இயந்திரசாலைக்கு வந்த சிறிது நேரத்தில் ஒரு கதை பரவியது. எங்களை இயந்திரங்களினுட் செலுத்தி விதைகளினின்றும் வேறாக்கப் போகிறார்களாம். நான் நடுநடுங்கிப் போய் விட்டேன். என் சந்தோசம் மறைந்தது. பின்பு எங்களை இயந்திரங்களினுட் செலுத்தினார்கள். சிறிது நேரத்தின் பின் விதைகளினின்றும் பிரிக்கப்பட்டு வெவ்வேறு வழியாக வெளியே வந்தோம். இவ்வாறு பெறப்பட்ட எங்களுக்கு பஞ்சு எனும் பெயர் வைக்கப்பட்டது. பின்பு பல இயந்திரங்களினூடாகச் செலுத்தப்பட்டுத் தூய்மையாக்கப்பட்டோம். பின்னர் எங்களை மூன்றங்குலக் கனமுள்ள பாய்களாக அழுத்தினார்கள். வேறு இயந்திரங்களின் உதவியுடன் எம்மை மெல்லிய இழைகளாக்கிக் சுருணைகளாக்கினர். இழைகளாக்கப்பட்ட எங்களைப் பெட்டிகளில் அடைத்து வேறு ஒரு இயந்திரசாலைக்கு அனுப்பினார்கள். அங்கே பல நிறச் சாயங்களில் ஊற வைத்தார்கள். பின்பு பல இயந்திரங்களினுதவியுடன் துணிகளாக நெய்யப்பட்டோம்.
இதுவரை அனுபவித்த கஷ்டங்களுக்கெல்லாம் ஒரு விடிவு காலம் வந்ததென்று நினைத்தேன். என்னையும் என் நண்பர்களையும் துணியின்
46 சிறுவர் கட்டுரைகள்
 
 

வடிவிலே பார்க்கும் போது மிக அழகாக இருந்தது. எனக்கு என்னை நினைக்கும் போது மிகப் பெருமையாக இருந்தது. பின்பு துணிகளாக நெய்யப்பட்ட நானும் நண்பர்களில் சிலரும் பெரிய கப்பலில் ஏற்றப்பட்டடோம். எங்களுக்கு மிகவும் சந்தோசம், நண்பர்களுடன் பிரயாணம் செய்வதென்றால் கேட்கவும் வேண்டுமா? எங்களுக்கு எங்கே போகிறோம் என்று துறைமுகத்தில் இறங்கும் வரை தெரியாது. துறைமுகத்தில் இறங்கிய பிறகுதான் நாங்கள் இலங்கை வந்துள்ளோம் என்பது தெரிந்தது. எனது மனம் ஆனந்தக் களிப்பில் ஆடியது. இலங்கையைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை முன்பு இருந்தது. அது நிறைவேறுவதையிட்டு எனக்குச் சந்தோஷம் எல்லை கடந்தது.
பின்பு நாங்கள் கடைகளுக்கனுப்பப்பட்டோம். அங்கு அலுமாரியில் வீற்றிருந்தோம். கடைக்கு வருபவர்கள் எல்லோரும் என்னையே பார்த்தார்கள். எனக்குப் பெருமை தாங்க முடியவில்லை. என்றாலும் அவர்களைப் பார்க்க எனக்குப் பிடிக்கவில்லை. திரும்பி உட்கார்ந்து விட்டேன். அந்நேரத்தில் ஒரு பெண்மணி அங்கு வந்தார். என்னைக் காட்டி ஏதோ கூறினார். விற்பனையாளனும் என்னை எடுத்துக் காட்டினான். அவர் என்னைத் தொட்டுப் பார்த்தார். பின் பணத்தைக் கொடுத்து என்னைப் பெற்றுக் கொண்டார்.
நண்பர்களைப் பிரிகின்றேன் என்ற கவலை இருந்தாலும் அந்தப் பெண்மணியின் வீட்டிற்குச் செல்கிறேன் என்று நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது. அங்கு அவரின் சின்ன மகளுக்கு நான் சட்டையாக ஆக்கப்பட்டேன். அந்தச் சின்ன மகளின் மேனியை அலங்கரிப்பதில் நான் சொல்லொணாப் பேரின்பம் அடைந்தேன். அவள் பிஞ்சுக் கைகள் என்னைத் தொடும்போது நான் என்னையே மறந்தேன். அவள் என்னை எந்நேரமும் ஆசையுடன் அணிவாள். பாடசாலைக்கு அணிந்து கொண்டு செல்வாள். மாலையில் கடற்கரைக்குப் பெற்றோருடன் செல்லும்போது அணிந்து கொள்வாள். எனக்குப் பெரிய மகிழ்ச்சி. ஆறுமாத காலம் சந்தோஷமாக வாழ்ந்தேன். இவ்வாறு பலமுறை அணியப்பட்டுச் சலவை செய்யும் அவர்களது வேலைக்காரனால் கிழியுண்டேன். பின்னர் அவனாலே சிறிது காலத்தின் பின் விளக்குத் துடைக்கப் பயன்பட்டேன். அதன் பின்பு குப்பை மேட்டில் எறியப்பட்டேன். இன்று யாரும் கவனிப்பாரில்லாமல் வாடுகிறேன். உயர்ந்த நிலையில் இருக்கும் போது மாத்திரம் பெட்டியில் பூட்டி வைத்துப் பாதுகாப்பார்கள் நிலைகெட்டு விட்டால் இப்படிக் கேவலப்படுத்துகிறார்கள். இனி என்ன? என் முடிவு நாளும் நெருங்கிவிட்டது. என் வாழ்வு வீழ்ந்து போனாலும் என் எசமானர் குடும்பம் சுகத்தோடு வாழவேண்டும். அதுவே என் விருப்பம்.
சிறுவப் கட்டுரைகள் 47

Page 27
40. பாட்டி சொன்ன கதை
எங்கள் பாட்டி கதைகள் சொல்வதில் வல்லவர், நாங்கள் இரவு உணவு உண்டபின் அவரைக் கதை சொல்லுமாறு கேட்போம். அவர் அறிவு மிகுந்த கதைகளை எனக்கும் எனது தம்பி தங்கைக்கும் சொல்லி வருவார். ஒரு நாள் அவர் எங்களுக்குக் கூறிய கதை
இது.
ஒர் ஊரிலே ஒரு விவசாயி சிறிய வெள்ளரித் தோட்டம் ஒன்றை உண்டாக்கியிருந்தான். அதனை அவன் கண்ணும் கருத்துமாய்ப் பேணி வந்தான். சிறிது நாட்களில் வெள்ளரிக்கொடிகள் எல்லாம் நன்றாகப் பூத்துக் குலுங்கின. பிஞ்சுகள் வெளிவரத் தொடங்கின. இதனைக் கண்ட விவசாயி மிகவும் மகிழ்வடைந்தான்.
விவசாயியைப் போலவே பக்கத்து மரக்கிளையில் இருந்த காகம் ஒன்றும் இந்த வெள்ளரிப் பிஞ்சுகளைக் கண்டு மிகவும் களிப்படைந்தது. இன்னும் பல நாட்களுக்கு நான் உணவு தேடி கஷ்டப்படாமல் வெள்ளரிக் காய்களைச் சாப்பிட்டு நிம்மதியாக இருக்கலாம் என்று மனதில் எண்ணிக் கொண்டது. அதன்படி தினமும் வெள்ளரிப் பிஞ்சுகளைச் சாப்பிடுவதை விட மிக அதிகமான பிஞ்சுகளைச் சேதப்படுத்தியது.
தினமும் வெள்ளரிப் பிஞ்சுகள் நாசமாக்கப்படுவதைக் கண்ட விவசாயி பெரும் கவலை கொண்டான். காகத்தைப் பிடிக்கப் பல முறை முயன்றும் அந்தப் பொல்லாக் காகம் தப்பித்துக் கொண்டே இருந்தது. கடைசியாகக் கறுப்பு நூலால் செய்த சுருக்குக் கண்ணிகளைப் பல இடங்களிலும் வைத்துச் சென்று விட்டான். அதிகாலையிலே அந்தக் காகம் வந்து வெள்ளரிப் பிஞ்சுகளைச் சாப்பிட ஆரம்பித்தது. சடுதியாக இரண்டு கால்களும் நூலில் மாட்டிக் கொண்டன. காகத்தினால் பறக்க முடியாமாற் போய்விட்டது. சிறிது நேரத்தில் விவசாயி தன் தோட்டத்தைப் பார்க்க வந்தான். அவன் வருவதைக் கண்ட காகம் தன் ஆயுள் இன்றோடு முடிந்துவிடுமோ என்று அஞ்சியது. கடைசியாக ஒரு தந்திரம் செய்து பார்ப்போமென எண்ணி இறந்தது மாதிரிக் கிடந்தது. கண்ணியிற் சிக்கிய காகத்தை விவசாயி அருகில் போய்ப் பார்த்தான்.
காகம் இறந்து கிடந்ததைக் கண்டு அதன் கால்களில் உள்ள
நூல்களை வெட்டிக் கையிலெடுத்து இன்றோடு ஒழிந்தாய் என்று மகிழ்வோடு அருகில் உள்ள வாய்க்காலுக்குள் எறிந்தான். இதுதான்
48 சிறுவர் கட்டுரைகள்
 

சமயம் என்பதறிந்த காகம் கீழே விழுமுன் திடீரெனப் பறந்து மரத்தில் உட்கார்ந்தது. விவசாயியைப் பார்த்து “கா.கா.கா.கா என்று பலமுறை கிண்டலாகக் கரைந்தது. காகத் தால் ஏமாற்றப்பட்டுவிட்டேனே என்று அவன் வெட்கமும் துக்கமும் அடைந்தான்.
41. உண்மை உயர்வு தரும்
தயாளன் ஒரு ஏழை. அவன் விறகு வெட்டிச் சீவித்து வந்தான். அவன் தேவனிடத்தில் மிகுந்த பற்று உள்ளவன். அவன் தினந்தோறும் விறகு வெட்டப் போவான். கோடரியை எடுக்கும் போதெல்லாம் தேவனைத் துதிப்பான்.
ஒரு நாள் தயாளன் காட்டுக்கு விறகு தறிப்பதற்காகச் சென்றான். ஆற்றங்கரையில் நின்ற ஒரு மரத்தைத் தறித்தான். ஐயோ பாவம் அவனது கோடரி தவறி ஆற்றுள் விழுந்துவிட்டது. "ஆ1 ஆண்டவரே என் கோடரிஆற்றுக்குள் விழுந்துவிட்டதே. என்னிடத்தில் வேறு கோடரியும் இல்லையே. இனி யாது செய்வேன்” என்று அழுதான்
அப்பொழுது ஒரு தேவதூதன் அங்கு தோன்றினான். அவன் ஆற்றுக்குள் மூழ்கிக் கையில் ஒரு பொற்கோடரியோடு வெளியே வந்தான். இது உனது கோடரியா? என்று கேட்டான். விறகு வெட்டி இல்லை என்றான். தேவதூதன் மீண்டும் நீருள் மூழ்கி ஒரு வெள்ளிக் கோடரியை எடுத்து வந்தான். இதுவா உனது கோடரி என்று கேட்டான். விறகு வெட்டி இல்லை என்றான். மறுபடியும் தேவதூதன் ஆற்றில் மூழ்கி இரும்புக் கோடரி ஒன்றை எடுத்து வந்தான். இதுவா உனது கோடரி? என்று கேட்டான். "ஆம், இதுதான் என் கோடரி என்று விறகு வெட்டி மகிழ்ச்சியோடு கூறி வாங்கிக் கொண்டான். தேவதூதன் அவனைப் பார்த்து நீ உண்மை பேசியதால் உயர்வடைவாய். இதோ! மற்ற இரு கோடரிகளையும் நீயே வைத்துக்கொள். இதனால் நீ செல்வந்தன் ஆவாய்' என்று கூறி நீருள் மூழ்கி மறைந்தான்.
உண்மை உயர்வு தரும்.
'உண்மை சொல்லிக் கெட்டாருமில்லை பொய் சொல்லி வாழ்ந்தாருமில்லை
சிறுவர் கட்டுரைகள் 49

Page 28
சுயசரிதை
நான் இன்று வங்கியில் ஆயிரம் ரூபாய்க் கட்டுக்குள் அடங்கிக் கிடக்கிறேன். நான் இங்கு வருமுன்னர் பலதரப்பட்ட மனிதர்களிடம் பல்வேறு அனுபவங்களைப் பெற்றிருக்கின்றேன். நான் முதன் முதலில் இங்கிலாந்து தேசத்தில் பிறந்தேன். எனது உடலில் இலங்கையில் உள்ள அழகிய குருவிகளின் வனப்பை வரைந்திருந்தனர். சிலர் என்னை எப்போதும் தங்களுடன் வைத்துக் கொள்ள ஆசைப்பட்டனர்.
இலங்கை மத்திய வங்கியில் நான் வந்திருக்கும்போது இளமை எழில் பிரகாசிக்கக் காண்பவர் கண்ணைக் கவரும் வகையில் அழகும், இளமையும் கொண்டு விளங்கினேன்.
ஒரு நாள் மத்திய வங்கியிலிருந்து வேறொரு வங்கிக்கு எனது சகோதரர் பலருடன் பயணம் செய்தேன். வங்கி அதிகாரி எங்களை ஒரு பெட்டிக்குள் அடைத்து எடுத்துக்கொண்டு வெளியே வந்தார். நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தோம். மோட்டார்க்கார் ஒன்றில் எங்களை வைத்துக்கொண்டு சென்றனர். பொலீஸ் பாதுகாப்புடன் நாங்கள் அக்காரில் சென்றோம். மலைநாட்டில் உள்ள வங்கி ஒன்றினுள் எங்களைக் கொண்டு சென்று வைத்தனர். மீண்டும் நாங்கள் பாதுகாப்புடன் இரும்புப் பெட்டியொன்றினுள் வைத்துப் பூட்டப்பட்டோம்.
சிலநாட்கள் எனது சகோதரர்களுடன் பெட்டிக்குள் அடங்கிக் கிடந்தேன். ஒரு நாள் தேயிலைத் தோட்டச் சொந்தக்காரர் ஒருவர்
SO சிறுவர் கட்டுரைகள்
 
 

வங்கிக்கு வந்தார், தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்குச் சம்பளம் வழங்குவதற்காக எங்களை அவர் வாங்கிச் சென்றார். மோட்டார்க் காரில் மீண்டும் பயணம் செய்தோம். தோட்டத்துரையின் அலுவலகத்திற்குச் சென்றோம். அங்கு தொழிலாளர்கள் பலர் வரிசையாக வந்து கையெழுத்துப் போட்டுச் சம்பளத்தைப் பெற்றுச் சென்றனர். இராமுவின் முறை வந்தபோது துரையவர்கள் என்னையும் சில சகோதரர்களையும் அவனிடம் கொடுத்தார். அவன் எங்களை வாங்கி மடித்துத் தனது மடியில் வைத்துக் கொண்டான்.
பின்னர் உற்சாகத்துடன் வீட்டுக்குச் சென்று தனது மனைவியிடம் எங்களைக் கொடுத்தான். அவனது மனைவி எங்களை ஒவ்வொருவராக எடுத்துப் பார்த்தாள். சந்தோஷப்பட்டாள். என்னைத் தன்னுடன் வைத்துக் கொண்டாள். ஏனையவற்றை இராமு வாங்கிக் கொண்டான். இராமுவின் மனைவி என்னை ஒவ்வொரு நாளும் காலையில் எடுத்துப் பார்ப்பாள். அழகான ரூபா நோட்டு என்று கூறுவாள். தனது சேலைத் தலைப்பில் முடிந்து வைத்துக் G5IT6frg T61.
ஒரு நாள் இராமுவின் மகன் கண்ணன் பாடசாலைக்குச் செல்வதற்குப் பணம் கேட்டான். இராமுவின் மனைவி என்னை அவனிடம் கொடுத்தாள். அப்போது நான் நன்கு கசங்கியிருந்தேன். கண்ணன் என்னை ஒரு சில்லறைக் கடையில் கொடுத்து மாற்றிப் பணம் பெற்றான். அந்தக் கடைக்காரன் நல்ல புத்திசாலி. அவன் என்னைக் கொண்டு சென்று தான் வைத்திருந்த ஏனைய பத்து ரூபாத் தாள்களுடன் என்னையும் சேர்த்து எண்ணினான். அப்போது பத்தாயிரம் ரூபா இருந்தது. எங்களால் சிறந்த பயனைப் பெற அவன் விரும்பினான். அவன் என்னையும் எனது சகோதரர்களையும் கொண்டு சென்று தேசிய சேமிப்பு வங்கியில் தனது பெயரில் இருப்புப் பணமாக வைத்தான். இங்கே எங்களுக்கு நிறையப் பாதுகாப்பு உண்டு. அதுவுமல்லாமல் எங்களை வங்கியிலிட்டவருக்கு வட்டியாகப் பணமும் கிடைக்கிறது. எனது மதிப்பும் குறையவில்லை. நான் ஆயிரம் ரூபாக் கட்டுக்குள் மீண்டும் அடங்கிக் கிடக்கிறேன்.
சிறுவர் கட்டுரைகள் 51

Page 29
43. நினைவில் நிற்கும் அருட்தந்தை
இறையியற் பணிக்கே தன் வாழ்வை அர்ப்பணித்த இளைஞர் ஒருவர் தனது இருபத்து மூன்றாவது வயதிலேயே எம்.ஏ., எம்.எஸ்.சி பட்டங்களைப் பெற்றுச் சாதனை நிலை நாட்டினார். தென் கிழக்காசியாவிலேயே சிறந்த கல்விமானாகப் போற்றப்பட்டார். இருபத்தேழாவது வயதில் கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டதோடு முப்பத்திரண்டாவது வயதில் இறையியற் கலாநிதிப் பட்டத்தையும் பெற்று ஈழத்துக்குப் பெருமை தேடித் தந்தார்.
இத்தகைய வியத்தகு விவேகமும் இறையியல் பற்றும் கொண்டவர்
தான் அருட்தந்தை பீற்றர்பிள்ளை அடிகளார்.
"தோன்றிற் புகழொடு தோன்றுக, அது இலார்
தோன்றலிற் தோன்றாமை நன்று' என்னும் வள்ளுவர் வாக்குக்கு இணங்க இறையியற் சேவையில் இணையற்று விளங்கிய புகழ் மிகு குடும்பம் ஒன்றில் தோன்றியவர் அருட்தந்தை பீற்றர்பிள்ளை அடிகளார்.
இன்று யாராவது பீற்றர்பிள்ளை என்ற பெயரை உச்சரித்தால் அது கேட்பவர் மனதில் அருட்தந்தை பீற்றர்பிள்ளை அவர்களையே நினைவூட்டுமளவுக்கு அன்னாரின் பெயர் இந் நாட்டு மக்கள் மனதில் நன்கு பதிந்துள்ளது.
ஆற்றலும் ஆளுமையும் அருட்பண்பும் ஒருங்கமைந்த அடிகளார் 1904 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19 ஆம் திகதி (19.10.1904) நீர்கொழும்புப் பகுதியைச் சேர்ந்த வென்னப்புவ என்னுமிடத்தில் ஊர்காவற்றுறையைச் சேர்ந்த ஆசிரியர் ஜேக்கப்பிள்ளைக்கும் அன்னம்மாவுக்கும் மகனாகப் பிறந்தார்.
இவர் தமது ஆரம்பக்கல்வியைத் தந்தையார் கற்பித்து வந்த வென்னப்புவ பாடசாலையில் பெற்றார். பின்னர் கொழும்பு கொட்டாஞ்சேனையில் உள்ள புனித பெனடிக்ற் கல்லூரியில் சேர்ந்து உயர் கல்வி பயின்றார். எம்.ஏ., எம்.எஸ்.சி பரீட்சைகளில் மிகத் திறமையுடன் தேறினார். பின்னர் இறையியற் சேவையில் ஈடுபடும் ஆவலால் உந்தப்பட்டு தமது இருபத்து நான்காவது வயதில் (1928இல்) பெல்சியம் நாட்டில் உள்ள குருமடத்தில் சேர்ந்தார். 1934 ஆம் ஆண்டில் இவர் குருவானவராகத் திருநிலைப் படுத்தப் பட்டார்.
1936 ஆம் ஆண்டில் தமது முப்பத்திரண்டாவது வயதில் அடிகளார்
52 சிறுவர் கட்டுரைகள்
 

இலங்கை திரும்பினார். கொழும்பு பம்பலப்பிட்டியில் உள்ள புனித பீற்றர்ஸ் கல்லூரியில் ஆசிரியப் பணியில் அமர்ந்தார். அவரது ஆசிரியப் பணியின் சிறப்பினை உணர்ந்தோர் அவரை மருதானை புனித ஜோசப் கல்லூரியின் அதிபராக அமர்த்திப் பெருமை சேர்த்தனர்.
புனித பீற்றர்ஸ் கல்லூரியிலும் புனித ஜோசப் கல்லூரியிலும் அடிகளார் பணியாற்றிய காலத்தில் கல்வித்துறையில் மகத்தான மாற்றங்கள் உருவாகக் காலாகவிருந்தார். உயர் கல்வி பயிலும் மாணவர்கள் சீரிய கல்வியினைப் பெறுதற்குத் துணை புரியும் வகையில் அவர்களுக்கெனத் தனியான உயர்தர கல்வி நிலையம் ஒன்றினை உருவாக்க வேண்டு என்று ஆவல் கொண்டார். அவரது தணியாத ஆவல் காரணமாக 1954 இல் பொரளையில் அக்குவைனாஸ் உயர்கல்விக் கூடத்தை உருவாக்கினார். தமது இறுதிக் காலம்வரை (1964-9-27) அதன் அதிபராக இருந்து தொண்டாற்றினார்.
அடிகளார் “சோஷல் ஜஸ்ரிஸ் (Social Justice) என்னும் ஆங்கில ஏட்டைத் தொடங்கி அதன் மூலம் சமூகத்தில் உள்ள ஏற்றத் தாழ்வுகளையும் சீர்கேடுகளையும் துணிவுடன் வெளியிட்டார். அவருடைய எழுத்து வன்மையையும் சமூக சீர்திருத்தக் கருத்துக்களையும் இவ்வேடு அனைவருக்கும் பறைசாற்றியது. இதன் தாக்கம் நாடாளுமன்றம் வரை எதிரொலிக்கத் தக்கதாய் அமைந்திருந்தது.
இறையியற் சேவைக்காகவும் சமூக சீர்திருத்தத்திற்காகவும் தமது வாழ்வை அர்ப்பணித்த அடிகளார் இறக்கும்வரை தம்மாலான பணிகளை மேற்கொண்டதன் மூலம் இந்நாட்டு மக்கள் தம் உள்ளங்களில் அழியாத இடத்தைப் பெற்றுள்ளார்.
கொட்டாஞ்சேனை புனித பெனடிக்ற் கல்லூரி அதிபராக இருந்த வண. சகோதரர் லூக், யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயராக இருந்த மேதகு எமிலியானுஸ் பிள்ளை ஆண்டகை, அருட்தந்தை கயித்தாம்பிள்ளை, திறைசேரியில் உயர்பதவிவகித்த திரு. ஸ்ரனிஸ்லோஸ் ஆகியோர் அடிகளாரின் சகோதரர்களாவர்.
அடிகளாரின் சேவைகள் காலத்தால் அழியாதவை. அவரின் வாழ்வும் வாக்கும் இளம் சந்ததியினருக்கு நல்லதோர் எடுத்துக்காட்டாகும். அவரின் புகழ் இந்நாட்டு மக்கள் தம் உள்ளங்களில் என்றும் நிலைத்து நிற்கும் என்பது உறுதி. அருட்தந்தை பீற்றர்பிள்ளை அடிகளாரின் நாமம் வாழ்க
சிறுவர் கட்டுரைகள் 53

Page 30
44. செய்ந்நன்றி மறவோம்
"நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி என்று தருங்கொல் என வேண்டா - நின்று தளரா வளர் தெங்கு தாளுண்டநீரைத் தலையாலே தான் தருதலால்"
என்று செய்ந்நன்றி மறவாமைக்கு எடுத்துக்காட்டு கூறுகின்றார் ஒளவையார்.
ஒருவர் செய்த நன்றியை நாம் உயிருள்ளவரை மறத்தல் கூடாது. செய்யப்பட்ட உதவி சிறிதாயினும் அதனை நாம் பெரிதாக மதித்துப் போற்றுதல் வேண்டும்.
தென்னம்பிள்ளைக்கு நீர் ஊற்றி வளர்க்கிறோம். அது உடனே நமக்குப் பயன் தரும் என்று எதிர்பார்ப்பதில்லை. ஆனால் அது வளர்ந்ததன் பின்னர் அடி வேர்களினால், தான் உண்ட நீருக்குப் பதிலாக இனிமையான இளநீராக நமக்குத் தந்துதவுகிறது. தாளுண்டநீரைத் தலையாலே தருகின்றது என்கிறார் ஒளவையார். எனவே பயனை எதிர்பார்த்து நாம் பிறருக்கு உதவிசெய்தல் கூடாது. பயன் கருதாது செய்யும் உதவியே உதவியாகும்.
பிறர் நமக்குச் செய்யும் சிறிய உதவியையும் நாம் மறக்கக்கூடாது. சிறிய உதவியேயாயினும் தக்க தருணத்தில் அது நம்மைக் காத்திட உதவிடலாம். எனவே தான் திருவள்ளுவரும்
"காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது.” என்கிறார்.
தக்கதருணத்தில் செய்யப்பட்ட உதவி சிறிதாயினும் அது இப் பூமியிலும் பெரிதாகக் கருதிப் போற்றப்படவேண்டும் என்பது வள்ளுவர் வலியுறுத்தும் கருத்தாகும்.
இதனை ஒரு உதாரணம் மூலம் விளங்கிக் கொள்ளலாம். தாகத்தால் தவிக்கும் ஒருவனுக்கு எவ்வளவு பொன்னைக் கொடுத்தாலும் அவனது தாகம் தணியப் போவதில்லை. அவ் வேளையில் அவனுக்குச் சிறிதளவு நீரைக் கொடுத்தாலே போதுமானது. அவ்வேளையில் அச் சிறிதளவு நீரின் பெறுமானம் பொன்னைவிட உயர்ந்த பெறுமானம் மிக்கதாகும்.
இதன் மூலம் தக்க தருணத்தில் செய்யும் உதவியே மிகமிகப் பெரியது என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம்.
54 சிறுவர் கட்டுரைகள்
 

நமது பெற்றோர் கைம்மாறு கருதாது நமக்கு எவ்வளவோ உதவிகளைச் செய்கிறார்கள். அவர்கள் செய்த உதவிகளை நாம் வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் போற்ற வேண்டும். அவர்களைக் கண்கண்ட தெய்வங்களாக மதிக்க வேண்டும். இதனாலேயே அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என ஆன்றோர்கள் சொல்லி வைத்தனர்.
பிறர் நமக்குச் செய்த உதவியை ஒரு போதுமே மறக்கக்கூடாது. எதனையும் நாம் மறந்து போகலாம். ஆனால் செய்ந்நன்றியை நாம் மறத்தல் ஆகாது. ཡིག་
'எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு" என்னும் வள்ளவர் வாக்கும் இதனையே வலியுறுத்துகிறது.
நன்றிமறவாது நல்லவர்களாக வாழ்வோம்.
13679.
சிறுவர் கட்டுரைகள் 55

Page 31
45. சூழலைப் பாதுகாப்போம்
இன்று உலகில் எங்கு நோக்கினும் சூழல் பாதுகாப்புப் பற்றியே பேசப்படுகிறது. விஞ்ஞான யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் தம் சுற்றுப்புறச் சூழலைப்பேனத்தவறிவிட்டார்கள் பெருகிவரும் உரவகைப் பாவனை நிலத்தின் மண்வளத்தைப் பெரிதும் பாதிக்கிறது. தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள், குப்பை கூளங்கள் ஆறு, குளங்களில் கலந்து நீரை மாசுபடுத்துகின்றன. நாளாந்தம் வீதிகளிற் செல்லும் வாகனங்கள் வெளிவிடும் புகையினால் சுற்றுச் சூழல் மட்டுமன்றி, மக்களே பெரிதும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
விஞ்ஞானிகளின் அறிவாற்றலைக் கண்டு கூடிய சீக்கிரத்தில் மனித குலம் மாண்புறும் என்று எதிர்பார்த்தோர் ஏமாற்றமுற்றுள்ளனர். போராயுதங்களின் பெருக்கத்தினாலும் பற்பல வகைக்குண்டுகளாலும் மனித இனமே அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. உயிரினம் அனைத்தையும் வாழ வைக்கும் அன்னையான தாவர இனங்கள் கண்டபடி அழிக்கப்படுகின்றன. காற்று, நீர், நிலம் அனைத்துமே இன்று மாசடைந்து விட்டது. இந்நிலையில் சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் பணியில் மாணவர்களும் பங்கு கொள்ள வேண்டும். வீட்டிலும் பாடசாலையிலும் சூழல் சுத்தம் பேணினாற் போதாது. சமுதாய நன்மைகருதி வருங்காலச் சந்ததியினரின் நலன் கருதி மரம் நடும் இயக்கத்தில் ஈடுபட வேண்டும். ஒவ்வொரு சிறுவனும் சிறுமியும் தாவரத்திடமிருந்து தாம் பெறும் நன்மைக்காக ஒரு மரம் நடுவதாக உறுதி பூண வேண்டும். மரம் நடுவதன் மூலம் சுற்றுச் சூழல் பாதுகாக்கப்படுகிறது. மண்ணரிப்புத் தடுக்கப்படுகிறது. நிலத்தின் வளம் பேணப்படுகிறது.
சுத்தமான காற்று, சுத்தமான நீர், வளமான வாழ்க்கை இவற்றைப் பெறுவதற்கு நாம் அயராது உழைத்தல் வேண்டும். சூழல் பாதுகாப்பைப் பேணுதலே இன்றைய தேவையாகும். இதனைக் கருத்திற் கொண்டு அனைவரும் செயற்படுதல் அவசியமாகும்.
சூழலைப் பேணுவோம். சுகமாக வாழ்வோம்.
56 சிறுவர் கட்டுரைகள்
 

46 முதலுதவி
எதிர்பாராத விதமாகத் திடீரென்று ஏற்படுவனவே விபத்தாகும். இவ்வாறு ஒருவர் விபத்திற் சிக்கிக் கொண்டாலோ, மயக்கம், மாரடைப்பு போன்ற உயிர் ஆபத்தை ஏற்படுத்தும் நோய்க்குட்பட்டாலோ, மருத்துவ உதவி கிடைக்குமுன் அவரது உயிரைக் காப்பாற்ற அளிக்கப்படும் சிகிச்சைக்கே முதலுதவி என்று பெயராகும்.
மருத்துவர்களுக்குக் கூட மருத்துவ மனையில் உள்ள கருவிகளின் - உபகரணங்களின் உதவியின்றி, ஓர் அவசர வேளையில் ஒருவருக்கு என்ன நிகழ்ந்தது என்று கண்டுபிடிப்பது கடினமான செயலாகும். அதுபோல ஒருவர் மூர்ச்சையுற்று, உணர்வின்றி விழுந்து கிடக்கின்றார் என்றால் அவருக்கு என்ன நேர்ந்தது, எதனால் அவர் பாதிக்கபட்டுள்ளார் என்பதைக் கண்டுபிடிப்பது கஷ்டமான காரியமாகும்.
இந்நிலையில் முதலுதவி செய்பவர் ஒருவருக்கு முதலுதவி அளிப்பதென்பது மிகவும் சிரமமான காரியம் என்பதை முதலில் அறிந்து வைத்திருத்தல் அவசியமாகும்.ஒருவர் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நிலைமைகள் என்ன என்பதைக் கண்டுபிடித்து அவரது உயிரைத் தக்க வைத்துக் கொள்வதற்கு என்ன செய்ய வேண்டுமோ, அதைத் தான் முதலுதவி செய்பவர் முதலில் செய்ய வேண்டும். அவரது நோய் நாடி, நோயின் முதல் நாடுவதெல்லாம் அப்புறம் பார்க்க வேண்டியவையாகும்.
ஒரு விபத்தில் அல்லது ஒர் ஆபத்தில் ஒருவர் சிக்கிக் கொண்டா ரென்றால் அவரது உயிரைக் காப்பாற்றுதற்கு என்னென்ன செய்ய வேண்டுமோ அவற்றையே முதலில் செய்ய வேண்டும். முதலுதலி செய்பவர் அவ்வேளையில் அருகில் இருந்தவர்களிடம் என்ன நேர்ந்தது என்பதைக் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும். அதுபோல் அவரது பெயர், வயது, முகவரி போன்ற விபரங்களையும் கூடுமான வரை அறிந்து கொள்ள முயல வேண்டும்.
முதலுதவி செய்ய முற்படுபவர் முதலுதவி செய்யும் முறைகளை ஓரளவேனும் அறிந்திருத்தல் வேண்டும். எவர் ஒருவருக்கு முதலுதவி செய்வதாக இருந்தாலும் முதலுதவி செய்பவர் ஏற்கனவே இருக்கின்ற நிலைமையை மேலும் மோசமாக்காமலும், தான் எந்த ஒரு ஆபத்திலும் சிக்காமலும் முதலில் தன்னைக் தற்காத்துக் கொள்ள வேண்டும். அருகில் நிற்பவர்களிடம் எதனால் பாதிக்கப்பட்டார்,
சிறுவர் கட்டுரைகள் 57
s

Page 32
எப்படிப்பட்ட மருத்துவ உதவி தேவை என்பதனை விபரமாகக் கூறி மருத்துவமனைக்குத் தொடர்பு கொள்ளச் சொல்ல வேண்டும்.
போக்குவரத்து நெருக்கடி மிக்க இடங்களில் அடிக்கடி வீதிவிபத்துக்கள் இடம் பெறும். இவ்விபத்துக்களில் ஒன்றுக்கு மேற்பட்ட பலர் பாதிக்கப்படலாம். தீவிபத்து போன்ற சூழ்நிலையில் முதலுதவி செய்பவர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை நன்கு அறிந்திருக்க வேண்டும்.
சென். ஜோன்ஸ் அம்புலன்ஸ் இயக்கம், சாரணர் இயக்கம், செஞ்சிலுவைச் சங்கம் போன்ற உலகளாவிய நிறுவனங்கள் முதுலுதவி வகுப்புக்களை நடத்தித் தொண்டர்களுக்குப் பயிற்சி அளித்து வருகின்றன. இப்பயிற்சி வகுப்புக்களில் மாணவர்களும் பங்கு கொண்டு முதலுதவி அளிக்கும் முறைகளை அறிந்து கொள்ள வேண்டும். அதுமட்டுமன்றி வீடுகளில் உள்ளோரும் விபத்துக்கள், ஆபத்துக்கள் ஏற்படும் போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்னும் முதுலுதவி தொடர்பான அறிவினைப் பெற வேண்டும். முதுலுதவி தொடர்பான நூல்களைக் கற்பதன் மூலம் இவ்வறிவினைப் பெற்றுக் கொள்ளலாம்.
ஒவ்வொரு வீட்டிலும் பாடசாலைகளிலும் தொழிற்சாலைகளிலும் முதுலுதவிப் பெட்டிகள் இருத்தல் வேண்டும். முதுலுதவி குறித்த நூல்களும் இடம் பெற வேண்டும். நாம் விழிப்புடன் செயற்பட்டால் விபத்துக்களைத் தவிர்த்துக் கொள்ளலாம். முதுலுதவி செய்ய முற்படுவோர் தாம் முதுலுதவி செய்பவர்தான் என்பதை எப்போதும் நினைவிற் கொள்ள வேண்டும். மருத்துவர்களாக மாறி விபரீதங்கள் ஏற்பட இடமளிக்கக் கூடாது.
முதுலுதவி செய்ய முந்துவோம்.
பயன் கருதாது பணி செய்வோம்.
58 சிறுவர் கட்டுரைகள்
 
 

47. சுற்றுலாவின் பயன்கள்
சுற்றுலாச் செல்வது ஒரு கலை. இன்பப்பொழுது போக்குடன் ஏற்றமிகு பயனையும் தரவல்லது அது. நாம் கிணற்றுத் தவளைகளாக, ஓரிடத்தில் மட்டும் வாழ்தல் கூடாது. பல்வேறு இடங்களுக்குச் செல்வதும் பல்வேறு மக்களைக் கானன்பதும் நமது அறிவை விருத்தி செய்து கொள்ள உதவும். புதிய புதிய அனுபவங்களைப் பெற்றிட முடியும். இன்று அறிவியல் வளர்ச்சியின் காரணமாக உலகம் பெரிதும் சுருங்கி விட்டது. இதனால் உலக மக்கள் அனைவரதும் வாழ்க்கை முறைகளை, பண்பாடுகளை நாம் அறிந்து கொள்ளச் சுற்றுலா பெரிதும் பயன்படும்.
இறைவன் படைப்பில் தான் எத்தனை எத்தனை அழகு, இயற்கைக் காட்சிகள், கண்ணையும் கருத்தையும் கவரும் தன்மையன. அவை
அனைத்தும் ஒரே இடத்தில் இருப்பனவல்ல. பாய்ந்து செல்லும்
ஆறுகள், பரந்து விரிந்த கடல்கள், மலைக் காட்சிகள், மண்ணின் வளங்கள், குகைகள், கோட்டைகள் அனைத்தையும் ஒரே இடத்தில் நாம் காண முடியாது. பல்வேறு இடங்களுக்கும் பயணம் செய்வதன் மூலமே இவற்றை நாம் பார்த்திட முடியும். மனதிற் பதித்திட முடியும்.
நாகரிகமும் பண்பாடும் நாட்டுக்கு நாடு, இனத்திற்கு இனம், மொழிக்கு மொழி மாறுபடும். வேற்றுமைகளில் ஒற்றுமை காண்பதே மனிதப்பண்பு வளரும் உலகில் சுற்றுலாவின் மூலமே ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்ளும் வாய்ப்புண்டாகும்.
உள்நாட்டிலும் சரி, வெளிநாடுகளிலும் சரி நாம் சுற்றுலாவை மேற்கொள்ளும்போது அது குறித்து நாம் திட்டமிட வேண்டும். மாவட்ட மட்டத்திலோ, தேசிய அளவிலோ, அனைத்துலக அளவிலோ அவரவர் வாய்ப்புக்கும் வசதிக்கும் ஏற்பச் சுற்றுலாவை மேற்கொள்ளலாம். சுற்றுலாவை மேற்கொள்ளும் போது செல்லும் இடங்களின் சிறப்புக்களையும் பண்பாட்டு முறைகளையும் நன்கு அவதானித்துக் கொள்ள வேண்டும். பண்பாட்டுச் சின்னங்களைப் பார்வையிடுவதன் மூலம் பல்வேறு பண்பாட்டு முறைகளை அறிந்திட வழி பிறக்கும்.
உலக நாடுகளில் சுற்றுலாத்துறைக்கு இன்று முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. சுற்றுலாச் செல்வது ஒரு கலையாகவே கணிக்கப்படுகிறது. சுருங்கக்கூறின் சுற்றுலாவின் மூலம் நமது அறிவு விருத்தியடைகிறது. உள்ளம் மகிழ்ச்சியடைகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர் என்னும் உன்னத நிலை உருவாகிறது.
சிறுவர் கட்டுரைகள் 59

Page 33
48. இளமைப் பருவத்தில்.
இளமைப்பருவம் இனியது. இப்பருவத்தில் எந்தக் கவலையுமின்றி. எந்தப் பொறுப்புமின்றி இனிதே காலத்தைப் போக்கலாம் என்று ஆயிரக் கணக்கான சிறுவர்கள் நினைக்கிறார்கள். இது அறியாமையால் ஏற்படும் தவறான கருத்தாகும். இக்கருத்தை ஆரம்பத்திலேயே நாம் மறந்து விடவேண்டும்.
பெரியோர்களின் வாழ்க்கை வரலாறுகளைச் சிறிது புரட்டிப் பார்ப்போம். அறிவியல் மேதைகள், அரசியல் அறிஞர்கள், ஆன்மீகப் பெருமக்கள், சான்றோர்கள், இலக்கியவாதிகள் இவர்களின் இளமைக்காலங்களை ஏடுகள் சுவைபடச் சொல்லுகின்றன.
திருஞானசம்பந்தர் சைவசமயக் குரவர்களில் ஒருவர். உமையம்மையிடம் ஞானப்பால் அருந்தி ஞானம் பெற்ற ஞானக்குழந்தை அவர் தோடுடைய செவியன் என்ற தேவாரப் பாடலைப் பாடும் பொழுது அவருக்கு வயது மூன்று. இராமகிருஷ்ண பரமகம்சரை அறியாதார் எவருமிலர். சுவாமி விவேகானந்தரின் ஞானகுரு. அவர் இதிகாச, புராணங்களைக் கேட்டுக் கேட்டு, சிவனாகவே தன்னை எண்ணி மெய்மறந்த பொழுது அவருக்கு வயது ஏழு விவேகானந்தர் சமஸ்கிருத நிகண்டை மனப்பாடம் செய்து ஒப்பித்தபோது அவருக்கு வயது பத்து.
படிக்கவே வசதியற்ற ஏழைக் குடும்பத்தில் பிறந்து, புத்தகம் கட்டும் தொழிலைச்செய்து, புத்தகம் கட்டுதற்காகத் தரப்படும் புத்தகங்களைப் படித்து அறிவை வளர்த்தவன் மைக்கேல் பரடே. பிரித்தானியக் கலைக்களஞ்சியம் என்ற மிகப் பெரிய நூலையும் இரசாயன உரையாடல் என்ற அறிவியல் நூலையும் தனது மனத்தில் பதித்துப் பத்திரப்படுத்தியபோது அவருக்கு வயது பதினான்கு.
விளையாடுதற்காகப் பெற்றோரால் தரப்பட்ட மின்காந்த திசைகாட்டும் கருவியில் விஞ்ஞானப் புதிரை ஆராய்ந்த பொழுது ஐன்ஸ்டீனுக்கு வயது ஐந்து மின் பொறி கருவிகளால் ஆராய்ச்சி செய்த பொழுது சி.வி இராமனுக்கு வயது பன்னிரண்டு. இவர் பிற்காலத்தில் நோபல் பரிசு பெற்றுப் பாரத நாட்டுக்குப் பெருமை சேர்த்தவராவர்.
அரிச் சந்திரன் கதையைப் படித்து, சத்திய வாழ்வை மேற்கொள்வேன் என்று காந்தியடிகள் தன்மனத்தில் உறுதி பூண்ட
60 சிறுவர் கட்டுரைகள்
 
 

பொழுது அவருக்கு வயது பத்து முதலாளியின் பண்ணையில் பகல் முழுவதும் வேலை செய்து விட்டு இரவில் எவரிடமாவது இரவலாகப் புத்தகம் வாங்கி, தெருவிளக்கில் விடிய விடியப் படித்துத் தன் அறிவுப் பசியைத் தீர்த்துக் கொண்டாரே ஆபிரகாம்லிங்கன், அவருக்கு அப்பொழுது வயது பன்னிரண்டு.
பாட்டுக்கொரு புலவன் எனப் பாராட்டப்படும் சுப்பிரமணிய பாரதியார், பாரதி எனப் பட்டம் சூட்டப்பட்டவேளை அவருக்கு வயது பத்து அற்புதமான பாடல்களை அன்னைத் தமிழுக்குத் தந்த ஒளவையார் பாட்டுப் பாட ஆரம்பித்தபோது அவருக்கு வயது பதினான்கு
இந்த மேதைகள் எல்லாம் உலகம் போற்ற உயர்வு பெற்றார்கள் என்றால் அவர்கள் இளமைப் பருவத்தைப் பயனுள்ள வகையில் பயன்படுத்திக் கொண்டமையே அதற்குக் காரணம் எனலாம். @ 6mo 60) LD Lilì LJ (56) i Ló அகிலத்தில் அடையக் கூடிய வெற்றிகளுக்கெல்லாம் அடித்தளம் இடும் பருவம் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். பார்த்தவை, படித்தவை, பழகியவை எல்லாம் பசு மரத்தானிபோல் உளத்திற் பதிகின்ற பருவம் இளமைப்பருவம்,
தொட்டிலிற் பழக்கம் சுடுகாடுமட்டும், இளமையிற் கல்வி சிலையில் எழுத்து. ‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? என்னும் பழமொழிகள் எல்லாம் இளமையிற் கல் என்றே நமக்கு எடுத்துக்கூறுகின்றன. எனவே இளமைப் பருவத்தை விளையாட்டுப் பருவமாக எண்ணிவிடாது, அப் பருவத்தில் கற்க வேண்டியன அனைத்தையும் நாம் கற்றிட வேண்டும். காலத்தைப் பொன்னெனப் போற்றி நூல் பல கற்றிடுவோம்.
“அரும்பாக நாமிருக்கும் பருவந்தன்னில் அகிலத்தை நமக் கேற்றவகையில் மாற்றி அறிவியலில் ஆன்மீகத்துறைகள் தோறும் அரிய பல சாதனைகள் நிகழ்த்துதற்கு விரும்பிய நற் புதுமைகளை விரைந்துகற்று விருது பல பெற்றிடவே உறுதிகொள்வோம்"
சிறுவப் கட்டுரைகள் 6.

Page 34
சுரேஸ்
3) LIT
சுரேஸ்
அப்பா
சுரேஸ்
அப்பா
சுரேஸ்
அப்பா
சுரேஸ்
S|ÚILIT
சுரேஸ்
அப்பா
சுரேஸ்
49. கடிதம் எழுதுதல்
(அப்பா - மகன் உரையாடல்)
அப்பா உங்களுக்கு ஒரு கடிதம் வந்திருக்கிறது.
எங்கிருந்து வந்துள்ளது? கொண்டு வா பார்ப்போம்.
அண்ணனுடைய கையெழுத்துப் போல இருக்கிறது
அப்பா,
அதை என்னிடம் கொடு பார்ப்போம். ஆமாம்
யாழ்ப்பாணத்திலிருந்து தான் வந்திருக்கிறது. உன் அண்ணன் தான் எழுதியிருக்கிறான்.
என்ன எழுதியிருக்கிறார் அப்பா?
தைப் பொங்கலுக்குக் கல்லூரி இரண்டு நாள்
விடுதலையாம். வீட்டுக்கு வரலாமா? வேண்டாமா? என்று கேட்டு எழுதியிருக்கிறான்.
அண்ணன் கண்டிப்பாக வரவேண்டும் அப்பா. நாங்கள்
அனைவரும் ஒன்று கூடிப் பொங்கலைக் கொண்டாட வேண்டும். நான் அண்ணனுக்குக் கடிதம் எழுதட்டுமா அப்பா?
உனக்குக் கடிதம் எழுதத் தெரியுமா?
நீங்கள் சொல்லிக் கொடுத்தால் நான் அப்படியே
எழுதுவேன். அப்பா.
சரி, சரி. நான் சொல்லித் தருகிறேன். கடிதம் எழுதும்
போது முதலில் எழுதுபவரின் முகவரியை எழுத வேண்டும்.
அதை எந்த இடத்தில் எழுத வேண்டும்?
கடிதத்தின் மேலே வலப்பக்க ஓரத்தில் எழுத வேண்டும்.
வீட்டு எண், வீதிப்பெயர், ஊர், கடிதம் எழுதும் நாள் (திகதி) என்னும் ஒழுங்கு வரிசையில் ஒன்றுக்குக் கீழ் ஒன்றாய் எழுத வேண்டும்.
பின்னர் என்ன எழுத வேண்டும் அப்பா?
62
சிறுவர் கட்டுரைகள்
 

gəqÜ LAOT
சுரேஸ்
g|List
சுரேஸ்
அப்பா
சுரேஸ்
அப்பா
சுரேஸ்
அப்பா
கடிதம் எழுதுபவர் யாருக்கு எழுதுகிறாரோ அவரை
அழைத்துக் கூறுவது போல் எழுத வேண்டும். இதனை விளிப்பு என்பர். நீ அண்ணனுக்கு எழுதுவதாயின் அன்புள்ள அண்ணா என்று எழுது. அதன் கீழ் வணக்கம் என்று எழுது.
சரி அப்பா. அடுத்து எழுத வேண்டியவற்றைச்
சொல்லுங்கள்.
தொடர்ந்து அண்ணனுக்குத் தெரிவிக்க வேண்டிய
செய்தியை எழுத வேண்டும். இதனைக் கடிதத்தின் உடல் என்று கூறுவர்.
செய்திக்குப் பின்னர் என்ன எழுத வேண்டும்?
செய்தியின் கீழ் வலப்பக்கமாக 'உங்கள் அன்புள்ள
என்று எழுதி, அதன் கீழே எழுதுபவர் கையொப்பம் இட வேண்டும். இதனை முடிப்பு என்பர். நீ உன் அண்ணனுக்கு உங்கள் அன்புத் தம்பி என்று எழுதிக் கையொப்பம் இடு.
கடிதம் எழுதி முடித்ததும் இன்னும் என்ன எழுத
வேண்டும்?
யாருக்குக் கடிதம் எழுதினோமோ அவரது முகவரியைக்
கடித உறையின் மேல் எழுத வேண்டும். அஞ்சல் அலுவலகக் குறியீட்டு இலக்கத்தையும் எழுதுதல் நல்லது.
நல்லது அப்பா. நீங்கள் சொல்லியவாறு கடிதம் எழுதி
உங்களிடம் காட்டுகிறேன்.
கையெழுத்துத் தெளிவாக இருக்க வேண்டும்.
அப்படியிருந்தாற்றான் எளிதாகப் படிக்க முடியும். சரி,
எழுதிக் கொண்டு வா பார்க்கலாம்.
சிறுவர் கட்டுரைகள் 63

Page 35
1. உறவு முறைக்கடிதம்
15, 1 സെബി ബി. 3,6660TT35lb.
10-01-2002
அன்புள்ள தம்பிக்கு, - அண்ணன் அநேக ஆசிகள். இவண் நலம். அவனன் நலம் அறிய அவா. உன் கடிதம் கிடைத்தது. விவரங்கள் யாவும் தெரிந்து கொண்டேன். உன்னையும், அம்மா. அப்பாவையும் பிரிந்து வந்தபின், எனக்கு நம்வீடு, ஊர் பற்றிய நினைவுகளே அதிகம் வந்த வண்ணம் இருக்கின்றன.
இவ்விடம் எனக்கு வேலை அதிகம். இதன் காரணமாக இம்முறை தைப்பொங்கலுக்கு வீடு வர முடியாதுள்ளது. பொங்கல் பண்டிகையை அம்மா, அப்பாவோடு சேர்ந்து மகிழ்ச்சியாகக் கொண்டாடு.
நீ தினமும் பாடசாலைக்குச் சென்று வருகிறாயா? புதுப் பள்ளிக்கூடம் எப்படி இருக்கிறது? உனது வகுப்பில் உள்ள மாணவர்களுடன் அன்பாகப் பழகு. புதுப்பள்ளிக்கூடம் என்று எப்பவும் நீ தனித்து இருக்காதே. நல்ல நண்பர்களைக் கண்டறிந்து நட்புடன் பழகிக் கொள். ஆசிரியர்கள் கற்பிக்கும் பாடங்களைக் கருத்தூன்றிக் கவனமாகக் கேட்க வேண்டும். சந்தேகங்கள் ஏற்பட்டால் உடனுக்குடன் கேட்டுத் தெளிவடைந்து கொள்.
பள்ளியில் உள்ள நூலகத்தை நன்முறையில் பயன்படுத்திக் கொள். வாரம் ஓரிருமுறை நூலகம் சென்று நல்ல நூல்களைத் தேடிப் படித்துக் கொள். புத்தகங்கள் தான் சிறந்த நண்பர்கள் என்பதை மறவாதே. பள்ளி வாழ்க்கையில் பெறும் அனுபவங்களே நம் மனதில் பசுமரத்து ஆணிபோல் பதியும். நிலைத்து நிற்கும். வருங்கால வாழ்க்கைக்கு உதவும்.
புத்தகப் படிப்புடன் மட்டும் இருந்து விடாதே. தினமும்மாலையில் நன்கு விளையாடு உடல் வலிமையுடன் இருந்தாற்றான் வாழ்வும் வளமாகும். பள்ளி வாழ்க்கையில் கவனத்திற்கொள்ள வேண்டிய விடயங்களையே எழுதியுள்ளேன். இவற்றை நன்கு மனதிற் பதித்துக் கொள்.
அம்மா, அப்பா அனைவருக்கும் என் அன்பைத் தெரியப்படுத்து. அனைவருக்கும் என் பொங்கல் நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். பிற யாவும் உன் பதில் கண்டு.
இங்ங்னம் உன் அன்பு அண்ணா,
சி. அருணோதயன்.
64. சிறுவர் கட்டுரைகள்
 
 

i. பாராட்ருக் கடிதம்
64, அண்ணா வீதி, ஆம்பலூர். 20.02.2002
அருமை நண்பன் உதயனுக்கு,
நல்வாழ்த்துக்கள். சென்ற ஆண்டு நடைபெற்ற ஐந்தாம் வகுப்புப் புலமைப் பரிசிற் பரீட்சையில் நீர் சித்திபெற்றுள்ள செய்தியினை நண்பர் குமார் மூலம் அறிந்தேன். உள்ளம் மகிழ்ந்தேன். யாழ்ப்பாண மாவட்டத்தில் மிகக் கூடுதலான புள்ளிகளைப் பெற்று நீர் சாதனை நிலைநாட்டியுள்ளமையை அறிந்து என் உள்ளம் பூரிக்கின்றது. தங்களது இச்சாதனை தங்களுக்கு மட்டுமன்றி எங்களுக்கும் பெருமை அளிக்கின்றதென்பதைக் குறிப்பிட விரும்புகின்றேன்.
தங்களுக்கு என் உளங்கனிந்த பாராட்டுக்களை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கின்றேன். எதிர் காலத்தில் நிகழவுள்ள பரீட்சைகளிலும் சிறந்த சாதனைகளை நிலைநாட்டுவீரென எதிர்பார்க்கிறேன்.
நன்றி,
இங்ங்னம், உனது நண்பன்,
சி. அருணன்
சிறுவர் கட்டுரைகள் 65

Page 36
* உங்கள் பாடசாலை மாணவர் மன்றத்தின் செயலாளர் என்ற முறையில் அறிஞர் ஒருவரை ஆண்டு விழாவுக்கு வருகை தருமாறு அழைப்புக் கடிதம் ஒன்று எழுதுங்கள்.
i. அழைப்புக் கடிதம்
மாணவர் மன்றம், கொ/இந்துக் கல்லூரி,
பம்பலப்பிட்டி, கொழும்பு - 04, 14-2-2002
பேராசிரியர் ஆ. சதாசிவம் அவர்கள்.
தமிழ்த்துறை,
கொழும்பு பல்கலைக்கழகம்,
கொழும்பு.
29Ա. III,
எங்கள் மாணவர் மன்றத்தின் பத்தாவது ஆண்டு நிறைவு விழாவினை எதிர்வரும் புதன்கிழமை (20-2-2002) காலை 9.00 மணிக்கு சரஸ்வதி மண்டபத்தில் நடத்தவுள்ளோம். இவ்விழாவில் மாணவர்களின் சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், பரிசில் வழங்கல் ஆதியாம் நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.
இவ்விழாவில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு. பரிசில் வழங்கி உரையாற்றுமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம். இது தொடர்பான தங்கள் பதிலை எதிர்பார்க்கின்றோம்.
நன்றி
இங்ங்னம் தங்கள் உண்மையுள்ள, த. இளங்கோவன் Gag-LL6)T6Tit.
66 சிறுவர் கட்டுரைகள்
 

50. அழைப்பிதழ் எழுதுதல்
(அழைப்பிதழ்கள் எழுதும் போது கவனிக்க வேண்டியன) அ) அழைப்பிதழ்கள் பல வகைப்படும்.
1) கூட்ட அழைப்பிதழ் i) திருமணம், பூப் புனித நீராட்டுதல் போன்ற மங்கல
வைபவங்களுக்கான அழைப்பிதழ் i) விழாக்கள் தொடர்பான அழைப்பிதழ் போன்றவை. ஆ) அழைப்பிதழ் சுருக்கமாக அமைதல் வேண்டும். இ) எளிமையும் இனிமையும் பொருந்த எழுதப்படல் வேண்டும். ஈ) நிகழ்வுகள் இடம்பெறும் காலம், இடம், பெயர் யாவும் பிழையின்றி
எழுதப்பட்டுள்ளனவா என்பதைக் கவனித்தல் வேண்டும். உ) ஒருவரின் பெயர் இடம் பெறும் போது அவரது முதல் எழுத்து இடப்படல் வேண்டும். தேவையாயின் அவரின் பட்டம், பதவி, திரு. திருவாட்டி, செல்வி முதலிய மரியாதை அடைமொழிகளையும் சேர்த்துக் GET6frg T6)TLD.
* உமது ஊரில் உள்ள சனசமூகநிலையம் ஒன்றின் வருடாந்தப் பொதுக் கூட்டத்திற்கான அழைப்பிதழ் ஒன்று எழுதுக.
நல்லூர் நாவலர் சனசமூகநிலையம்
வருடாந்தப் பொதுக்கூட்டம் காலம் : 2002.02.10 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி
3Lib சனசமூக நிலைய மண்டபம் தலைவர் : வித்துவான் சி. வேலாயுதம்.
நிகழ்ச்சி நிரல்
1. கடவுள் வணக்கம்
2. வரவேற்புரை: திரு சி. அருணோதயன்.
3. தலைவர் உரை
4. வருடாந்த பொதுக் கூட்ட அறிக்கை/ஆண்டறிக்கை
5. கணக்கறிக்கை - (பொருளாளர்)
6, சிறப்புரை புலவர் த. இளங்கோவன்
7. நடப்பாண்டு அலுவலர் தெரிவு
8. பிற
9. நன்றியுரை
10. கடவுள் வணக்கம்.
உறுப்பினர் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
264, பருத்தித்துறை வீதி 55. 55。 தியாகராசா நல்லூர், QēFu IGMDPT6Tři 2002. I-25
சிறுவர் கட்டுரைகள் 67

Page 37
。 AA AA , LA LA tali, il-lo .
않. ál6)ILDuJub திருமண அழைப்பிதழ் திரு/திருவாட்டி/செல்வி . அன்புடையீர்,
நிகழும் மங்களகரமான விஷ"வருடம் ஆவணித்திங்கள்21 ஆம் நாள் (06-09-2001) வியாழக்கிழமை காலை 0722 மணிமுதல் 8.58 மணி வரையுள்ள சித்தாமிர்த யோகமும் கன்னிலக்கினமும் கூடிய மங்கல ஒரையில்
எமது ஏகபுத்திரன் எமது கனிஷ்ட புத்திரி
திருநிறை செல்வன் திருநிறை செல்வி
சுகிர்தா அவர்கட்கும் அவர்கட்கும்
|திருவருள் துணைக்கொண்டு கொழும்பு பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் நிகழவிருக்கும் திருமண வைபவத்திற்கு சுற்றஞ் சூழ வருகைதந்து மணமக்களை வாழ்த்திச் சிறப்பிக்குமாறும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் விருந்துபசாரத்தில் கலந்து கொள்ளுமாறும் தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
தங்கள் நல்வரவை நாடும்
க. சிற்றம்பலமும் பாரியாரும் சி. சிவலோகநாதனும் பாரியாரும், 215, அளுத்மாவத்தை விதி, 430 காலி வீதி, கொழும்பு - 15. கொழும்பு - 03
(இரு வீட்டார் அழைப்பு)
68 சிறுவர் கட்டுரைகள்
 

யா/ஆம்பலூர் அருணோதயாக் கல்லூரி வருடாந்த பரிசளிப்பு விழா
திரு/திருவாட்டி/செல்வி . அவர்கள்
2001 - 09-15 சனிக்கிழமை பி.ப. 500 மணிக்கு கல்லூரியின் நாவலர் மண்டபத்தில் நிகழவிருக்கும் வருடாந்தப் பரிசளிப்பு விழாவிற்கு வருகை புரிந்து சிறப்பிக்கும் வண்ணம் தங்களை அன்புடன் வேண்டுகின்றோம்.
முதன்மை விருந்தினர்:
கல்விப் பணிப்பாளர்
கலாநிதி க. கனகரத்தினம் அவர்கள்.
திருவாட்டி மலர்மணி கனகரத்தினம் அவர்கள் பரிசில்களை வழங்குவார்.
ஆம்பலூர் = அதிபர், ஆசிரியர், மாணவர் 2001-09-01
சிறுவர் கட்டுரைகள் 69

Page 38
* உங்கள் பாடசாலைத் தமிழ் மொழித்தின விழாவுக்க அழைப்பிதழ் ஒன்று எழுதுங்கள்.
மாந்தோப்பு மகாவித்தியாலயம் தமிழ் மொழித்தின விழா
காலம் 15-02-2002 வெள்ளிக்கிழமை பி.ப. 4.00 மணி SLLD வித்தியாலயக் கலைஅரங்கு தலைவர் திரு.சி. மெய்யழகன்
(வித்தியாலய அதிபர்) பிரதம விருந்தினர் : திரு. த. சிவானந்தன்.
(வலயக் கல்விப் பணிப்பீாளர்)
நிகழ்ச்சிகள் 1. மங்கல தீபம் ஏற்றுதல். 2. தமிழ்மொழி வாழ்த்து. 3. வரவேற்புரை திரு. த. அன்பரசன்
(பிரதி அதிபர்) 4. தலைவர் உரை.
5. (Lਲੇ செல்வி. சி. பிரதீபனா
(கீழ்ப்பிரிவு) 6. பாஒதல் செல்வி. க. மஞ்சுளா
(மத்தியபிரிவு) 7. (8 gig, செல்வன். த. அற்புதராசா
(மேற்பிரிவு) 8. பாஒதல் : GlgF6Ö6ʻ. LD. LD6n)ñTLD60öñ
(மேற்பிரிவு) t 9. தனிநடனம் செல்வி. து. யசோதா
(மத்தியபிரிவு) 10. குழுநடனம் பத்தாம் வகுப்பு மாணவிகள். * 11. வில்லுப்பாட்டு பதினொராம் வகுப்பு மாணவர்கள்
12. பிரதம விருந்தினர் உரை. 13. இலக்கிய நாடகம் : “ கவரி வீசிய காவலன்'
(பதினொராம் வகுப்பு மாணவர்கள்) 14 பரிசில் வழங்கல் திருமதி க. சிவானந்தன். 15. நன்றியுரை செல்வன். சி. அருணோதயன்.
(மாணவர் தலைவன்) 16. தேசிய கீதம்.
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். மாந்தோப்பு, - அதிபர், ஆசிரியர்கள், மாணவர்க
மகிழுர், 30-01-2002 も2e5
70 1. 3. 6 9 சிறுவர் கட்டுரைக
 
 
 


Page 39
: , ، ، ، ، ، ، ، ،
● ● ● ● ● ● ● ● ● ● ● ● ● ● ● ● ●