கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விடுதலை தரும் இறையரசு: ஒரு கண்ணோட்டம்

Page 1
அருள்திரு
கிறிஸ்தவ
யாழ்
くくくっくくくくくくくく〜〜〜くくくくくくくくくくくくくくくくくくくくくくくく????
***くくくくくくくくくくくくくくくくくくくくくくくくくメくくくくくとう〜〜くく、くくくくくくくくくくくくくくくくくくくくくくくくくくくノノくくくくくくくくくくくくく??????
---- |--* **
 

உண்மையை நோக்கி 1
ரும் இறையரசு
ஒரு கண்ணுேட்டம்
\
அன்ரன் மத்தாயஸ்
நாகரிகத் துறை பல்கலைக்கழகம்
".
曼

Page 2
உள்ளே
as
இறை அரசு என்ருல்.
1. பழைய ஏற்பாட்டில்
அ. எகிப்திய விடுதலை ஆ. படைப்பினூடே விடுதலை 2 இ. மக்களின் நம்பிக்கை
1 வரலாற்றில் விடுதலை 11 வரலாற்றின் முடிவில் விடுதல்
2. கிறிஸ்துவும் இறையரசும் 5.
அ போதனையில் ஆ. புதுமையில் இ. வாழ்க்கை முறையில் "g
3. இறையரசின் விழுமியங்கள் ια அ. சுதந்திரம் C. ஆ. அன்புறவு இ. நீதி 2.
4. இறையரசும் திருச்சபையும் 3
அ திருச்சபையின் பணி la
ஆ எல்லா ஏழையர்க்கும் விடுதலே வாழ்வு 18
 

っ。愛・一?イ“一
” وہ حصہ ہی کو اع63Y
இறை அரசு என்றல் . .
யேசு இவ்வுலகில் வாழ்ந்தபொழுது அவர் "இறை அரசை' யே மக்களுக்குப் போதித்தார். தமது போதனை யாலும், புதுமைகளாலும், வாழ்க்கை முறையாலும் இறை யரசிற்குச் சான்று பகர்ந்தார். இந்த "இறையரசு" என்ருல் என்ன?
gaopupTa 6.tašr to uslib (Basilea tou Theou) இரேக்க மொழியில் ஒர் இடத்தையோ, நாட்டையோ, பிர தேசத்தையோ குறிப்பதில்லை. அத்தோடு ஆட்சி செய்யும் இடத்தை-அரசை அது குறிப்பதற்குப் பதிலாக, இறைவன் தம்மை அரசனுக வெளிப்படுத்தும் செயற்பாட்டையே அது விளக்குகின்றது. எனவே இறையரசு என்ற பதத்திற்குப் பதிலாக "இறைவன் ஆட்சி செய்கின்றர்" என்றும், 'இறைவன் தம்மை அரசனுக வெளிப்படுத்தும் செயல்கள்" என்றும் கூறலாம்.
1. பழைய ஏற்பாட்டில்
இந்த இறைவனின் அரச செயல் மக்களைப் படைத்து பாதுகாப்பதிலும், அவர்களை விடுவிப்பதிலும் பழைய ஏற் பாட்டில் வெளிப்படுகின்றது. மக்களைப் பாதுகாத்து தீமை. கள் அனைத்திலுமிருந்து விடுவிப்பதே அரசனின் தலையா பணியாகக் கணிக்கப்பட்டது.

Page 3
2
அ. எகிப்திய விடுதலை
எகிப்திய அடிமைத்தனத்திலிருந்த மக்களின் துன்பத்துை இறைவன் கண்ணுற்று அவர்களை விடுவிக்க முன்வந்தார். வரலாற்றின் ஆரம்பத்தில் இருந்தே படிப்படியாக அவர்களை வழிநடாத்திய இறைவன், எகிப்திய கொடுமைகளிலிருந்து அவர்களை விடுவித்து, அவர்களுக்கென ஒரு நாட்டை விடு தலையின் அடையாளமாகக் கொடுப்பதாக வாக்குப் பண்ணு கின்ருர், அத்தோடு தம் மக்களோடு ஓர் உடன்படிக்கை யையும் செய்துகொண்டதன் மூலம் தம்மை இறைவன் என்று வெளிப்படுத்தினர். W
*அவர்கள் அந்நியர்களாய் அலைந்து திரிந்த கானுன் நாட்டை அவர்களுக்கு அளிப்பதாக அவர்களோடு உடன் படிக்கை செய்தோம். ஆண்டவராகிய நாமே எகிப்திய ருடைய சிறையினின்றும் உங்களை விடுதலையாக்கி, அடிமைத் தனத்தினின்றும் மீட்டு, ஓங்கிய  ைகயா லும், பெரும் தண்டனைகளாலும் உங்களே நாம் ஈடேற்றுவோம். மேலும், உங்களை நம் சொந்த மக்களாகத் தெரிந்து கொள்வோம். அஃதோடு, உங்கள் கடவுளாகவும் இருப்போம். பிறகு நீங்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் நாம் என்று அறிவீர் கன்’ (யாத், 6: 4-7).
இந்த விடுதலையின் மூலமாகவே இஸ்ராயேல் மக்கள் கடவுளை "யாவே' என்று, அதாவது "விடுதலை செய்யும் ஆண்டவர்” என்று கண்டுணர்ந்தனர். கடவுளைப் பற்றிய இவ் ஆழமான அனுபவம் அன்றிலிருந்து அவர்களுக்கு நம்பிக்கை கொடுத்து வழி நடத்தி வந்தது.
ஆ. படைப்பினூடே விடுதலை 。 தம்மை விடுவித்த இறைவனே தம்மைப் படைத்தார் என்றும் இஸ்ராயேல் மக்கள் படிப்படியாக உணர்ந்தனர்.

அனைத்தையும் வெறுமையிலிருந்தும், இருளிலிரு ந்தும் எடுக்கும் s(5 செயலாகவே அவர்கள் படைப்பைக் கண்டனர் (ஆதி. 1: 1-25; சங், 73; 12-17; 88: 8-14).
இ. மக்களின் நம்பிக்கை
பழைய ஏற்பாட்டில் இவ்விதமான அனுபவங்களைப் பெற்ற இஸ்ராயேல் மக்கள் தொடர்ந்து இறைவன் தம்மை விடுவித்து வாக்களிக்கப்பட்ட பூமியைத் தந்து தம் வாழ்வை மலரச் செய்வார் என்று என்றுமே நம்பினர். இவ்விதம் பழைய ஏற்பாடு முழுவதுமே ஒரு நம்பிக்கையூட்டும் நூலாக அமைகின்றது. எனினும் நாளாந்த வாழ்வில் அவர்கள் எதிர்பார்த்த நல்வாழ்வுக்கும் அனுபவித்த இன்னல்கள் இடையூறுகளுக்கும் இடையே வேறுபாடும் முரண்பாடும் காணப்பட்டபோது பல்வேறு விதமான சிந்தனைகளின் அடிப் படையில் நம்பிக்கைகள் உருவாகின. இவற்றில் இரண்டு முக்கியம் பெறுகின்றன.
1. வரலாற்றில் விடுதலை ,
Historical Liberation
தாவீதின் மரபிலே பிறக்கும் ஒருவர் ("தாவீதின் குமாரன்") மூலம் இறைவன் தமது மீட்பை - விடுதலையை செயற்படுத்துவார் என்ற நம்பிக்கையை கி. மு. எட்டாம் நூற்முண்டில் வாழ்ந்த இறைவாக்கினர்களான ஆமோஸ், இசையாஸ், மிக்கேயாஸ், ஓசே போன்றவர்கள் தருகின் முர்கள். இறைவனல் அபிஷேகம் செய்யப்பட்ட மெசியா வின் மூலம் நீதியும், சமாதானமும், நிறைவளமும் மிக்க அரசை (பூமியை) உருவாக்குவார் என்று நம்பினர். இவ் விதமான சிந்தனை நாத்தானின் இறைவாக்கில், நித்திய மான ஒரு பரம்பரையைத் தாவீதுக்கு இறைவன் கொடுப் பார் (2 சாமு. 7; 12-16) என்பதில் உருவாகின்றது,

Page 4
4
ஆவியின் கொடைகளை நிறைவாகப் பெற்று, முன்மாதிரி யான அரசனுகவும், ஏழைகள் மட்டில் கரிசனை உடையவ ராகவும், இரக்கத்தோடு கண்டிப்பும் கலந்த சமாதானம் நிறைந்த அரசை அந்த மெசியா உருவாக்குவார் எனவும் எதிர்பார்த்தனர் (இசை, 11: 1-9).
ஆரம்பத்தில் படைக்கப்பட்ட மனிதன் படைப்பு அனைத் தையும் தன்கீழ் வைத்து நிறைவைக் கண்டான் என்ற புராண இலக்கிய சிந்தனையின் அடிப்படையில், மெசியாவின் ஆட்சியில் மகிழ்ச்சியும், சுதந்திரமும், நிறைவும் மீண்டும் கொணரப்படும் என நம்பினர் "அந்நாளில், செம்மறி யோடு ஓநாய் தங்கியிருக்கும், வெள்ளாட்டுக் குட்டியோடு சிறுத்தைப்புலி படுத்துறங்கும், கன்றும் சிங்கமும் ஒன்ருய் மேயும்" (இசை, 11: 6); அவர்களோ தங்கள் வாள்களைக் கலப்பைக் கொளுக்களாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள் களாகவும் அடிப்பார்கள். நாட்டுக்கு எதிராய் நாடு வாள் எடுக்காது" (இசை, 2: 4). இறைவன் தாம் வாக்குப் பண்ணிய தம் அரசை இவ்வுலகிலேயே நிறுவுவார், வரலாற் றிலேயே அது நிறைவுறும் என்பது இச் சிந்தனைகளில் நாம் காணும் அடிப்படையான உண்மை.
தாவீதின் பரம்பரையிலே தோன்றும் ஒரு மெசியாவை எதிர்பார்ப்பது யூத மக்களின் பபிலோனிய அடிமைத்தனத் தோடு (கி. மு. 587) முறிகின்றது. ஏனெனில் தென்னரசை ஆட்சி செய்த தாவீதின் பரம்பரை இந்தக்கட்டத்தில் வாலாற்றில் இருந்து மறைகின்றது. அடிமைத்தனத்திலிருந்து திரும்பிய யூத மக்களைத் தாவீதின் பரம்பரை அன்று. ஆனல் எஸ்திரா, நெகேமியா போன்ற குருக்களே வழிநடத்துகின் றனர். எனவே மெசியா நம்பிக்கைக்குப் பதிலாக வேறேர் விதமான நம்பிக்கை உருவாகின்றது. -

5
. . . . 11. வரலாற்றின் முடிவில் விடுதலை
Apocalyptic Liberation
இஸ்ராயேல் மக்கள் அடிமைகளாய் இருந்த பபிலோ னியா, பேர்சியா நாடுகளின் மறைகளில் இருந்த சிந்தனை கள் புதியதொரு நம்பிக்கைக்கு வித்திடுகின்றன. தீமை நிறைந்த இந்த யுக்ம் இறைவனின் வல்லமை மிக்க செய லாற்றலால் அழிக்கப்பட்டு "புதிய வானமும், புதிய பூமி யும்" (இசை, 65; 23; திருவெளி. 21: 1) உருவாக்கப் பட்டு, உயிர்ப்பிக்கப்பட்ட நீதிமான்கள் அதில் வாழ்வார்கள் (தானி. 12:1-3). உலகம் மீட்கப்படமுடியாத அளவிற்குத் தீமை நிறைந்ததாக இருப்பதனுலேயே இறைவன் அதை அழிப்பார். இவ்வுலகின் தலைவனுகிய" (அரு. 12: 31) சாத்தானின் ஆதிக்கத்தில் இருப்பதனல் நோயும், துன்பமும், தீய தலைவர்களும் கடவுளின் மக்களைத் துன்புறுத்துகின்றனர். இத் தீய உலகிற்குப் பதிலாக வேருென்றைக் கடவுள் படைப்பார் (தானி. 8: 1 7-27) என்ற எண்ணம் வலுவடை கின்றது.
இதில் இவ்வுலகையும் எமது வரலாற்றையும் கடந்து, புதியதொரு வரலாற்றிலே இறைவனின் வாக்குறுதியும் செயலாற்றலும் நிறைவு பெறும் என நம்பினுர்கள்.
2. கிறிஸ்துவும் இறையரசும்
யேசுவின் அடிப்படைச் செய்தி இறையரசைப் பற்றியதாகவே இருந்தது. "காலம் நிறைவேறிற்று; கடவுளரசு நெருங்கிவிட்டது. மனந்திரும்பி, இந்நற்செய்தியை நம்புங்கள்' (மாற். 1; 15) என்பதே அவர் மக்களுக்கு விடுத்த முதல் அழைப்.ே பழைய ஏற்பாட்டு இறையியற் சிந்தனைகளின் அடிப்படையில் போதித்த கிறிஸ்து இறையர

Page 5
6
சிற்கு வரைவிலக்கணம் ஒன்று தரவில்லை. ஆனல் அதைப் பல்வேறு வழிகளில் விளக்க முற்பட்டார். இறைவனின் விடுவிக்கும் செயலின் அடிப்படையிலேயே தமது பணியை யும் அவர் உணர்ந்து செயற்பட்டார். "ஆண்டவருடைய ஆவி என்மேலே. எளியோர்க்கு நற்செய்தி சொல்லவும், சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், குருடர் பார்வை பெறுவர் என அறிவிக்கவும், ஒடுக்கப்பட்டோருக்கு உரிமை வாழ்வு வழங்கவும். அவர் என்னை அனுப்பினுர்' (லூக் 4: 18-19) என்று தமது பணி பற்றி ஆரம்பத்தி லேயே கூறினர்.
பழைய ஏற்பாட்டின் எந்த நம்பிக்கைச் செய்தியின் அடிப்படையில் கிறிஸ்துவின் மீட்பு (விடுதலைப் பணி) அமை கின்றது? தாவீதின் மரபில் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட மெசியாவின் பணி அரசியல் அதிகாரத்தில் தங்கியிருந்தது. கிறிஸ்துவின் காலத்தில் வாழ்ந்த தேசியவாதிகள் ஆயுதத்தில் நம்பிக்கை வைத்துச் செயற்பட்டனர். பரிசேயரோ சட்டத்தை நுணுக்கமாக அனுசரிப்பதில் கிடைக்கும் வலிமை யில் மீட்படைய முற்பட்டனர். ஆணுல், இவற்றைக் கிறிஸ்து ஏற்க மறுத்தார்(மத். 4: 1-11).ஏனெனில் பலமும் அதிகார மும் முழுமையான வி டு த லை  ையக் கொண்டு வரா. உண்மையான அன்பே மனிதனுக்கு முழு விடுதலையையும் நல்கக்கூடியது என்பதனுல் அதையே இறையரசின் அடிப் படையாகக் கிறிஸ்து போதித்தார்.
கிறிஸ்து இறையரசை அறிவித்தபோது இறைவனை அவர் உணர்ந்த வழியில் "அப்பா, தந்தாய்' என்று வெளிப்படுத்தினர். இறைவனைப் பெயர் சொல்லி அழைக் கவே அஞ்சிய யூதர்களுக்கு அவரை "அப்பா, தந்தாய்" என்று அழைப்பது விந்தையாயிருந்தது. எனினும் கிறிஸ்து தாம் இறைவனேடு கொண்டிருந்த அனுபவத்தின் அடிப் படையில், அதே உரிமையை ம்க்களுக்கு அளிக்கிருர்,

7
இறை பராமரிப்பையும் வழிநடத்தலையும் ஏற்பதன் மூலம், அவர் அன்பின் வழியை ஏற்போமானுல், நாம் தனியாகவும் சமூகமாகவும் உண்மையான விடுதலையை அடையலாம், எனவே, கிறிஸ்து இறையரசை வெளிப்படுத்தினுர் என்று கூறும்பொழுது இறைவனின் நிபந்தனையற்ற அன்பைய்ே வெளிப்படுத்துகின்றர்.
இந்த இறையரசு (இறைவனின் அரச செயலாற்றல்) வளரவேண்டியது (மாற். 4: 30-32). எனவேதான் அவ் வரசு ஏற்கனவே பிரசன்னமாய் இருக்கிறதென்றும், அதே வேளையில் அது வருங்காலத்திற்குரிய தென்றும் (மாற். 9: 1) கிறிஸ்து குறிப்பிடுகின்ருர். அதாவது கிறிஸ்துவின் வருகை யினல் ஆரம்பிக்கப்பட்ட இறையரசு வரலாற்றிலே படிப் படியாக முழுமை பெறும் என்பதைக் குறிப்பிடுகின்ருர்,
மனிதனின் நல்ல செயல்களுக்கு ஊதியமாக இறிை யரசைப் பெறலாமென்ற தீவிரவாதிகளினதும் பரிசேயர்களி னதும் சிந்தனைகளை நாம் ஏற்க முடியாது. ஏனெனில் அன்பை ஊதியமாகப் பெறமுடியாது. இறையரசு ஓர் இலவசக் கொடையாகத் (மாற். 4: 26-29) தரப்படுகின்றது என்று கிறிஸ்து வலியுறுத்திக் கூறுகின்றர். எனினும் மனித செயலற்ற தனத்தின் பரிசாக அஃது இருக்க முடியாது. அன்பைப்போல் இறையரசும் எமது வாழ்வை ஊடுருவி ஒரு பதிலை எதிர்பார்த்து நிற்கின்றது (லூக். 16: 10). இறை யரசு ஒரு கொடையாகவும் (Gif), அதேவேளையில் எம் வாழ் விற்கு ஒர் அறைகூவலாகவும் (Challenge) இருக்கின்றது. இதற்குரிய எமது பதிலேயே கிறிஸ்து "மனந்திரும்புதல்" என்று குறிப்பிடுகின்ருர்,
மனந்திரும்புங்கள் என்ற பதம் ஒரு பாவத்திலிருந்தோ குற்றத்திலிருந்தோ விடுபடுவதை மட்டும் குறிக்காது. மாழுக ஒவ்வொரு மனிதனும், சமுதாயமும் தம் வாழ்வை இறைவன்

Page 6
8
பால் திருப்பி அவர் நெறியில் வாழ்வதையே குறிக்கின்றது. எம்சொந்த நன்மைத்தனங்களிலும், மனித வெற்றிகளிலும் அல்ல, அதற்கு மாருக இறைவனின் நிபந்தனையற்ற அன்பை ஏற்று அதை வாழும் வழியிலேயே எமது மனம்திரும்புதல் (வாழ்வின் திசைதிருப்பம்) அடங்கியுள்ளது.
அ. போதனையில்
கிறிஸ்துவின் வாழ்வு முழுவதுமே இறைவனின் தந்தைக் குரிய அன்பையும், பராமரிப்பையும், அவர் தரும் விடுதலை யையும்வ்ெளிப்படுத்துவதாக அமைந்தது. இவ்வரசில் பங்கு பெறுவதற்கு உரிய நிபந்தனைகளைச் சிறப்பாக மலைப்பொழி வில் யேசு தருகின்ருர் (மத், 5). இறைவனின் அரசை விருந் திற்கும் (மாற். 14: 25), வாழ்விற்கும் (மாற். 9: 43), திருமணத்திற்கும், மகிழ்ச்சிக்கும் ஒப்பிடுகின்ருர், அரசியற் சிந்தனையை இறையரசுக்கும் கொடுக்க மறுக்கும் கிறிஸ்து தமது வாழ்வின் மூலமாக அந்த அரசு நிறைவேறுவதை உணர்ந்தார். இறையரசின் பண்புகளை விளக்குவதற்கு யேசு பின்வருபன போன்ற உவமைகளைக் கையாண்டார்: விதைப்பவன், நல்ல விதையும் களையும், கடுகு, புளிப்பு LDIT6/, புதையலும் முத்துக்களும், வலை (மத், 13). இன்னும் நல்ல சமாரித்தன் உவமையின் மூலம் இறையரசின் மக்களில் காணப்படவேண்டிய அடிப்படை அன்புறவைச் சுட்டிக் காட்டினர். பொருளையும், பணத்தையும் சேகரிப்பவன் அல்லன் (லூக், 12: 16-21), ஆனல் அன்புப் பணிவிடை புரிகின்றவனே (மத், 25: 31-46) இறையரசிற்கு உரியவ னென்று கூறினர் கிறிஸ்து.
ஆ. புதுமையில் 3. கிறிஸ்துவின் புதுமைகள் அனைத்தும் அவர் மக்கள்
பால் கொண்ட அன்பிற்கும், அனைத்துத் தீய சக்திகளி
லிருந்தும் அவர்களைக் கடவுள் விடுவிக்கின்ருர் என்பதற்கும்

9
அடையாளமாகவும் இருந்தன, மனித விடுதலையே இறை வனின் செயலாற்றலை வெளிப்படுத்துகின்றது என்பதைக் காட்ட நோயாளர்களைக் குணமாக்கி, இறந்தோரை உயிர்ப் பித்து, சாத்தானின் ஆதிக்கத்திலிருந்தோரை விடுவித்தார் "நான் பேய்களை ஒட்டுவது கடவுளின் விரலால் என்ருல், கடவுளின் அரசு உங்களிடம் வந்துள்ளது" (லூக், 11 20) என்று துணிவோடு கூறிஞர். **வரப்போகிறவர் நீர்தாமோ?” என்ற அருளப்பரின் சீடர்களின் கேள்விக்கு, "குருடர் பார்க் கின்றனர், முடவர் நடக்கின்றனர், தொழுநோயாளர் குணமாகின்றனர், செவிடர் கேட்கின்றனர், இறந்தவர் உயிர்க்கின்றனர், எளியவருக்கு நற்செய்தி அறிவிக்கப்படு கின்றது” (லூக் 7: 18-23) என்று விடை பகர்ந்ததிலிருந்து தமது புதுமைகளினல் (மக்களுக்கு விடுதலை கொடுப்பதினல்) இறையரசு வெளிப்படுவதை அவர் தி ட்ட வட்ட மா கி உணர்ந்திருத்தார் என்பது வெள்ளிடைமலை,
இ. வாழ்க்கை முறையில்
ஒடுக்கப்பட்டோருக்கு உரிமை வாழ்வு வழங்க வந்த கிறிஸ்து,சமுதாயத்தினல் புறக்கணிக்கப்பட்ட அனைவரோடும் உறவாடவும், அவர்களோடு தொடர்பு கொள்ளவும் பின் வாங்கவில்லை. சமூக அமைப்புக்களினல் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கே சிறப்பான முறையில் பணியாற்றினர். மக்கள் யாரைப் பாவிகள் என்று கருதினர்களோ அவர்கள் மேல் மிகுந்த அன்பு வைத்தார். ஆயக்காரரோடு பந்தியில் அமர்ந்த கிறிஸ்துவை யூத மதத் தலைவர்கள் குற்றம் சாட்டி ஞர்கள். கடவுளின் பெயராலேயே மக்கள் மத்தியில் வேற் றுமைகளை வளர்க்கும் அமைப்புக்களையும், அர்த்தமற்றதும் அன்புக்கு மாருனதுமான சட்டங்களையும் தேவைக்கேற்ற போது மீறவும் அவர் பின்வாங்கவில்லை. இவ்விதமான வாழ்க்கைமுறையே கிறிஸ்துவுக்குக் கடைசியில் சிலுவை மரணத்தையும் கொணர்ந்தது. ஏழைகளும் ஒடுக்கப்பட்

Page 7
Il O
டோரும் இறைஅன்பைச் சிறப்பாகப் பெறும் அருகதை உள்ளோர் என்பதை வார்த்தையிஞல் மட்டுமன்று செயலி லுைம் காட்டினர். இவ்விதம் இறையரசு கிறிஸ்துவின் மூலமாகவளரத்தொடங்கியது
3. இறையரசின் விழுமியங்கள்
காலாகாலத்தில் இறையரசு எவ்வித அமைப்புக்களைக் கொண்டிருக்க வேண்டுமென்பதைப் பற்றி யேக் கூறவில்லை. எனினும், அவரின் வாழ்விலே இறையரசில் அங்கத்துவம் வகிப்போரில் இருக்கவேண்டிய மூன்று முதன்மையான விழுமியங்களை நாம் இனம் கண்டு கொள்ளலாம். அவை சுதந்திரம், அன்புறவு, நீதி என்பவையே.
அ. சுதந்திரம் எமக்கு வெளியே இருந்தும் உள்ளிருந்தும், எம்மை நிர்ப் பந்திக்கும் அனைத்திலிந்தும் இறையரசு எமக்குச் சுதந்திரம் அளிக்கின்றது. அன்பின்மையால் எழும் தேவைகளும், பயங் க்ளும் எம்மை ஆட்டிப் படைக்கின்றன. அன்பின்மையால் எழும் பாதுகாப்பின்மையைப் போக்கப் பொருள் பண்டங்க ளும், அதிகாரங்களும், பதவிகளும் இன்று பயன்படுத்தப்படு கின்றன. நேரிய உறவின்மைக்கு இவை அடையாளங்க ளாயுள்ளன. மற்றவர்கள் எம்மை மதிப்பிடுவதில் மட்டுமே எம் வாழ்வின் நிறைவு இருக்குமாயின் நாம் அடிமைகளா கவே என்றும் வாழ்வோம்; நன்மை செய்வதும் கடினமாக இருக்கும்.
ஆனல், கிறிஸ்து சுதந்திர மனிதனுக வாழ்ந்தாரென்று நற்செய்தி கூறுகின்றது. பெயரையோ, புகழையோ, வசதியையோ, பணத்தையோ விரும்பாத கிறிஸ்து 'மனு மகனுக்குத் தலை சாய்க்கவும் இடமில்லை' (லூக். 9 : 58)

11
என்ற நிலையில் யாருக்கும் அடிமைப்படாது வாழ்ந்தார். அமைப்பு முறைகளின் அதிகாரத்திற்கு அவர் அஞ்ச வேண்டி யிருக்கவில்லை (லூக். 13:31-33). புனிதமாகக் கணிக்கப் பட்ட சட்டங்களை மதியாது தொழுநோயாளரைத் தொட்டு (மாற். 1:41), சமுதாயத்தினுல் ஒடுக்கப்பட்டவர்களோடும், பாவிகளோடும் உண்டு குடித்து (மாற். 2; 15-17), நன்மை செய்வதற்காக ஓய்வுநாளை மீறி யும் (மாற். 7: 1-15) வாழ்ந்தார்.
கிறிஸ்து தமது விடுதலை வாழ்வை எமக்கும் தருகின்ருர், அனைத்து அடிமைத்தனங்களிலிருந்தும் மனிதனை மீட்கின்ருர், பாவத்திலிருந்தும் குற்ற உணர்வுகளிலிருந்தும் (மாற். 2: 1-12), சாத்தானுக்கு அடிமையாயிருக்கும் நிலையிலிருந்தும் (மாற். 1: 21-28). அடிமையாக்கும் சடங்கு முறைகளி லிருந்தும் (மத் 6, 7), சட்டத்தினுல் வரும் பளுவிலிருந்தும் (மத். 11:21-30) எம்மை விடுவிக்கின்ருர், எம்மை முழுமை யாக விடுதலை செய்யும் நிலை அனைத்துத் தேவைகளையும் கடந்து இறைவனில் ஆழமான நம்பிக்கை வைக்க (மத் 6: 25-34) எம்மை அழைக்கின்றது. இதுவே இறையரசு எமக்குத் தரும் விடுதலை.
ஆ. அனபுறவு
உண்மையான சுதந்திரம் ஒருவர் மட்டில் கரிசனை நிறைந்த உறவு கொள்ள எம்மைத் தூண்டுகின்றது. இறை வனின் நிபந்தனையற்ற அன்பினுல் வழி நடத்தப்படும் நாங்கள் அன்பிற்காக எம்மையே அடிமையாக்கவேண்டும். நாம் பெற்ற சுதந்திரம் சுயநலத்திற்காகவன்றி, ஏனையோர்க் குப் பணி செய்வதற்கே பயன்படுத்தப்பட வேண்டும். ஏனெனில் சுதந்திரத்தின் நிறைவு அன்புறவே ஆகும்.
பழைய ஏற்பாட்டின் "இறைவனை அன்பு செய், அயல வன அன்புசெய்" என்ற கட்டளையைக் கிறிஸ்து"அயலவருக்கு

Page 8
I 2
அன்பு செய்வதே கடவுளுக்கு அன்பு செய்வதன் அடையாளம்' என மாற்றி உள்ளார். அதாவது அயலவரை அன்பு செய் வதன் மூலமே நாம் கடவுளை அன்பு செய்யலாம். புதிய ஏற்பாடு கடவுளை அன்பு செய்யுங்கள் என்ற கட்டளையை அதிகமாகக் குறிப்பிடவில்லை. அதற்கு மாறுகச் செயலில் பிறருக்குக் காட்டும் அன்பையே வலியுறுத்துகின்றது. அயலவர்களுக்காக வாழ்வதே இறையரசில் பங்குபற்றுவ தற்கு நிபந்தனையாக உள்ளது (மத். 25: 31-46).
இ. நீதி
எங்கு அன்புறவு உண்டோ அங்கு நீதி உண்டு. அநீதி யான சமூக-பொருளாதார-அரசியல்-மத அமைப்புக்கள் இருக்குமிடத்தில் கண்டும் காணதவர்களாக, அவற்றை ஏற்றுக்கொள்பவர்களாக நாம் இருக்கமுடியாது. அநீதியான அமைப்புக்கள் மனித மாண்பை அழிக்கின்றன. அநீதியிருக்கு மிடத்தில் அன்பிற்கு இடமில்லை.
இன்றைய சூழலில் அமைப்புக்களை உருவாக்கும் சக்திகளை நாம் இனங்கண்டு கொள்வதற்கு வாய்ப்புக்கள் இருப்பதைப்போல, அக்காலத்தில் கிறிஸ்துவுக்கு வாய்ப்புக் கள் இருக்கவில்லை. எனினும் அக்காலத்திலிருந்த பின்ழயான சட்ட அமைப்புக்களை அவர் கடிந்துகொள்ளப் பின்நிற்க வில்லை (மாற். 2: 23-3: 6); இர க் கத் தை வி டச் சட்டத்திற்கு முதலிடம் கொடுக்கும் முறையை அவர் எதிர்த்தார் (மாற். 7 - 9-13); மக்களிடையே இருந்த ஏற்றத் தாழ்வுகளை யேசு தம் வாழ்விலே ஏற்றுக்கொள்ள வில்லை (மாற். 2:5-17). ஆலயத்தைச் சுத்திகரித்ததன் மூலம் குருவர்க்கத்தின் அதிகார முறைக்குச் சவால் விடுத்தார் (மாற். 11:15-19). இவ்வமைப்புகளெல்லாம் பொருளாதார - அரசியல் அதிகாரங்களைக் கொண்ட மத அமைப்புக்களாகவே இருந்தன.

3
கிறிஸ்துவின் காலத்துச் சிந்தனையின்படி நோய்கள் அனைத்தும் தீய சக்தியின் அதிகாரத்தின் அடையாளங் களாகவே கொள்ளப்பட்டன. இந்நிலையில் கிறிஸ்துவின் புதுமைகள் அனைத்தும் தீய சக்திகளின் அடிமைத்தனத்தி லிருந்து மக்களை விடுவிக்கும் அடையாளங்களாகவே நாம் காணக்கிடக்கின்றன. சமூகத் தி லுள்ள அநியாயங் கள் பலவற்றை உருவாக்கி வளர்க்கும் அமைப்புக் களை நாம் இனங்கண்டு ** நீதியின்பால் பசிதாக முள்ளோ ராய்" ( மத், 5 : 6) இருக்க முற்படும்போது இறை யரக எம்மத்தியிலுள்ளது என்பதற்குச் சான்று பகர் பவர்களாவோம்.
4. இறையரசும் திருச்சபையும்
கிறிஸ்துவழி நின்று இறையரசுக்குச் சான்றுபகரும் திருச்சபை, எவ்விதம் காலாகாலத்தில் செயற்படுமென்ருே, அன்றேல் எவ்வித அமைப்புக்களையும் அதிகார முறைகளை யும் கொண்டிருக்க வேண்டுமென்ருே கிறிஸ்து திட்டவட்ட மாகக் கூறியுள்ளார் என எவரும் சொல்லமுடியாது. நிறை உண்மையை நோக்கி வழிநடத்தும்" (அரு. 16:13) ஆவியின் துணையோடு இறைமக்கள், தம் தலைவர்களோடு ஒன்றிணைந்து, விசுவாச வாழ்வின் அனுபவத்தில் நாளாந்தம் தாம் செல்லவேண்டிய பாதையைத் தேடவேண்டும்.
இறையரசிற்கு வித்திட்ட கிறிஸ்துவின் அன்பிற்குச் சான்று பகரும் திருச்சபை, அந்த இறையரசிற்கே தொடர்ந்து சான்று பகர்கின்றது. போதித்த கிறிஸ்து தமது பாடுகள் மரணம் உயிர்ப்பினுல் இறையரசை நிரந் தரமாக ஆரம்பித்ததால், திருச்சபை, அவரின் சீடர்களைப் பின்பற்றி, போதித்த கிறிஸ்துவையே தனது போதகத்தின் மையமாகக் கொண்டு போதிக்கின்றது (போதித்தவரைப் போதிக்கின்றது). ,

Page 9
4
திருச்சபை தன்னிலே நிறைவைத் தேடாது, காலத் திற்கும் சூழலுக்கும் ஏற்ப, இறையரசின் அடையாள மாக, அனைத்து மக்களுக்கும் எல்லாக் காலங்களுக்கும் இசைய துலங்க முற்படுவதன் மூலம் இறையரசின் நிறைவை நோக்கி முன்னேறுகின்றது எனக் கொள்ளலாம்.
இறைவனின் அன்பு நிறைந்த, மீட்கும் அரச செய லாற்கல் எங்கெங்கெல்லாம் செயலாற்றுகின்றதோ, அவற்றை இனம் கண்டு, மக்களுக்கு "மீட்பின் அருட்சாதனமாக” விளங்கத் திருச்சபை இவ்வுலகில் அழைக்கப்படுகின்றது.
அ. திருச்சபையின் பணி
ஏழைகள், ஒடுக்கப்பட்டோர், அணுைெதகள்,. என்போரே இறைவனின் சிறப்பான அன்பிற்கும், பராமரிப் பிற்கும் உரியவர்களாக இருந்தனர் என்பதைப் பழைய ஏற்பாட்டில் நாம் காண்கிருேம். 'அனவிம்’ (anawim) என்று அழைக்கப்பட்ட இவர்கள், மீட்பு அடைவதற்கு தம் சொந்தப் பலத்திலும் சக்தியிலும் நம்பிக்கைவைக்காது, “இறைவனே நமக்கு எல்லாம் என்று வாழ்ந்தவர்கள்.
இதே பாணியில், கிறிஸ்துவும் தமது பணியை ஆரம்பித்தபோது *ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்க வந்தேன்' (லூக் 4: 18-21) என்று கூறிய தோடு, பல்வேறு விதத்தில் ஏழைகளாயிருந்தோர்க்கே பணி புரிந் தார். சமூகத்தினல் பாவிகளென்றும் புறவினத்தார் என்றும் ஒதுக்கப்பட்டோருடன் உறவாடியதும் அவர் தமது அழைப்பிற்கேற்பச் செயற்பட்டார் என்பதன் அடையாளங் களே. '
கிறிஸ்து தமது பணியைக் கலிலேயாவில் ஆரம்பித்த தயுைம் இதே பின்னணியிலேயே காண்கிருேம், கலிலேயா

亚烷
எவ்விதத்திலும் முக்கியத்துவம் பெருததும், வரலாற்றிலேயே இடம்பெருததுமான இடமாயிருந்தது. கலிலேயா வெறுக்கப் பட்டதாகவும் (மத் 26: 73), மறை வாழ்வில் பின்தங்கிய தாகவும், புறவினத்தாரைக் கொண்ட இடமாகவும் (மத், 4: 13) இருந்தது. இவ்விதமான இடத்திலிருந்தே மீட்பு வரும் வேளையில், நாகரிகமும், பெருமையும், பணமும் படைத்த இடமாகிய யெருசலேமிலிருந்தே கிறிஸ்துவுக்குத் துன்பமும் சிலுவை மரணமும் கிடைக்கின்றன என்பதை நற்செய்தியாளர் இறையியற் காரணத்தோடேயே கூறுகின்
165 ft.
மேலும், கிறிஸ்துவின் பணி வாழ்வில் சம்பந்தப்படும் இடங்கள் பிரபல்யம் பெருதவையாகவுள்ளன. நசரேத்து போன்ற குக்கிராமங்களில் வாழ்ந்து (பழைய ஏற்பாட்டில் இப்பெயரே இல்லை) "பெத்சயிதா போன்ற மீன்பிடி கிராமங் களில் திரிந்து (மத், 11 21; மாற். 8:45, 8:22), அனேக மாகக் கலிலேயாவில் செயலாற்றுகிருர் (மத். 4; 13; 85; மாற். 1; 21; 2: 1; 9:33; லூக், 10, 15). இக்குறிப்புக ளெல்லாம் கிறிஸ்து எளியோர்க்கே தம் பணியையும் போதகத் தையும் சிறப்பாக நல்கினுர் என்பதற்குச் சான்று பகர் கின்றன. இன்று பரந்த, உயர்ந்த மரமாக விளங்கும் திருச் சபைக்கு அன்று ஒரு சிறிய வித்தே விதைக்கப்பட்டது என்பதை மறக்கலாகாது.
இவ்விதம் கிறிஸ்துவால் ஆரம் பிக் க ப் பட்ட திருச்சபையும் அவரின் வாழ்க்கை முறையைப் பின் பற்றி ' ஏழை” களுக்குச் சிறப்பான முறையில் பணி செய்வது அவசியம். 'சிறு மந்தை' யாக ஆரம்பித்த திருச் சபை, கடந்த 20 நூற்றண்டு காலமாகப் பல்வே t!) பிரச்சனை கள் துன்பங்களினூடாக இன்றைய நிலைக்கு வளர்ந்து வந் துள்ளது. அத்தோடு பல அதிகார அமைப்பு க் களை யும்

Page 10
6
வளர்த்து, சில வழிகளில் பலம் வாய்ந்த ஒரு நிறுவனமாக வும் இன்று காட்சியளிக்கிறது. ‘ஏழைகள்" என்று நாம் அழைக்கக் கூடியோரை மு ற் ரு க மறக்க, அன்றேல் இரண்டாந்தர அங்கத்தினராகக் கணிக்க முற்படும் நிலையை மாற்றவேண்டும் எனத் தீர்மானித்த இலத்தீன் அமெரிக்க திருச்சபை, புரபிளா”வில் (Puebla) நடத்திய கூட்டத்தில் (1979) தமது திருச்சபை, 'ஏழைகளுக்கும் இளைஞருக்கும்” பணிசெய்வதில் முதன்மையான கரிசனைகொள்ள வேண்டு மெனத் தீர்மானித்தது (காண்: புஏபிளா ஆவணம், iv, 2).
ஆ. எல்லா ஏழையர்க்கும் விடுதலை வாழ்வு
பணத்திலும், அதிகாரத்திலும் நம்பிக்கை வைப் போரும், மற்றவர்களைச் சுரண்டி வாழ்வோருங் கூட ஒரு விதத்தில் "ஏழைகளே. யார் யாரெல்லாம் தமது வாழ்வில் நீதியைக் கடைப்பிடியாது, அ ன் கீ ற வு இல்லாமல், நன்மை செய்யச் சுதந்திரமற்று இருக்கிருர்களோ, அவர்க ளெல்லோரும் ஏழைகளே. இவ்விதமானேரும் மனந்திரும்பி", பகிர்ந்து வாழத் திருச்சபை ஊக்கு சக்தியாக இருக்க வேண்டும். "நெஞ்சிலே செருக்குற்றவர்களைச் சிதறடித்தார்; வலியோரை அரியணையினின்று அகற்றினர். செல்வரை
வெறுங்கையராய் அனுப்பினர்." (லூக், 1: 46-55) என்று மரியாளின் நன்றிப்பாடலில் நாம் காணும் இறைவ னின் செயலாற்றல்களெல்லாம் இப்படிப்பட்டோரை
மீட்புப் பாதைக்கு இட்டுச் செல்லும் வழிகளே. ஏனெனில் எல்லா மனிதரும் மீட்படைய வேண்டுமென்பதே இறை சித்தமாயுள்ளது (1 தீமோ 2: 4).
அனைத்து மக்களுக்கும் திருச்சபை அன்னையே என்பதை ஏற்கும் அதேவேளையில், பல்வேறு மட்டங்களிலே "ஏழை களாயிருப்போர்க்கு சிறப்புப் பணி செம்வதன் மூலமே, "பணிவிடை பெறவன்று, புரியவே வந்தேன்" (மாற். 19: 45)

1 7
எனக் கூறிய கிறிஸ்துவின் அன்பின் (மீட்பின்) அருட் சாதனமாகத் திருச்சபை வெளிப்படும் (2ஆம் வத்திக்கான் ஏடு - திருச்சபை, இல, 1).
எமது சமுதாயத்தில் மொழியால், படிப்பால், மத அமைப்பால், பணத்தால், குலத்தால், சாதியால், அதி காரத்தால், செல்வாக்கால், பதவியால், l i Göor Lit Giv, அழகால். “குறைந்தோர்' (ஏழைகள்) யார் என்பதை இனங்கண்டு, நாம் உள்ளத்தில் கிறிஸ்துவைப்போல் விடுதலை யடைந்தவர்களாய், நீதியோடு செயற்பட்டு, ஒரே தந்தையின் மைந்தர்களாக அன்புறவை சிறப்பாக அவர்களோடு பகிர் வதை எம் இலட்சியமாகக் கொண்டு வாழவேண்டும். இவ்விதம் இன்று, எமது வரலாற்றிலே, நாம் வாழ்வதை ஏனையோரும் அனுபவிக்கக் கூடியதாயிருக்கும்போதுதான் 'விண்ணரசு ஏற்கெனவே எம் மத்தியில் வந்துள்ளது' என்பதற்குச் சாட்சிகளாய் நாம் (திருச்சபை) இருப்போம். இவ் வித மே இந்த இறையரசின் நிறைவை நோக்கிச் செல்லும் பயணிகளாவோம்.
தழுவல்:
Fr, George Soares-Prabhu, S. J. The Kingdom of God-Jesus'
Vision of a New Society, - BANGALORE, 1981.
யாழ். புனித வளன் கத்தோலிக்க அச்சகம் - 1985

Page 11
-
-
A.
W
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 12
عميحميه جميعيخضعيف8حمضخة
աngb. புனித 66T6ir ಚಿ
جمعینہ&حمحبخحمحمختبرصحیحيخ=

ܬܹܐ
壽
g
-NMSM MaNMNMNMMNMNMMNMNMMMN" تصيح صيپيعيحمجھے
த்தோலிக்க அச்சகம் - 1985