கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யாப்பிலக்கணம்: வினா-விடை

Page 1

繆
縱

Page 2

யாப்பிலக்கணம்
வினா - விடை
கே. பொ.த. உயர்தர மாணவர்கள் மற்றும் உயர்கல்வி மாணவர்களுக்குரிய இலகுமுறை இலக்கணம்)
செல்லத்துரை சுதர்சன்
திருவடி வெளியீடு கொழும்பு. 2011

Page 3
நூல் விபரம்
நூல் யாப்பிலக்கணம்
வினா - விடை
66035
இலக்கணம்
ஆசிரியர் செல்லத்துரை சுதர்சன்
பக்கம்
36
வெளியீடு "திருவடி வெளியீடு' கொழும்பு.
உரிமை
வெளியீட்டு நிறுவனத்திற்கு
ஆண்டு 2011
 
 

என்றும்

Page 4

பதிப்புரை
பாடசாலை மாணவர்களுக்கான புத்தகங்களை வெளியிடும் எமது திருவடி வெளியீட்டு நிறுவனத்தின் வெளியீடுகளில் யாப்பிலக்கணம்' என்ற இந்த வினாவிடை நூலும் ஒன்றாகும். யாப்பிலக்கணம் தமிழ்மொழிக்குரிய இலக்கணங்களில் முக்கியமானதாகும். செய்யுள் வடிவங்களோடும் பழைய உரைகளோடும் இருக்கும் இவ்விலக்கணத்தைக் கற்கும் நிலை இன்று குறைவடைந்து வருகிறது.
தற்போது க.பொ.த. உயர்தரத் தமிழ் பாடத்திட்டத்தில் யாப்பிலக்கணம் ஒரு பகுதியாகச் சேர்க்கப்பட்டுள்ளமை யாவரும் அறிந்ததே. இன்னும் பல்கலைக்கழகங்களிலும் பிற உயர்கல்வி நிலையங்களிலும் இவ்விலக்கணம் கற்பிக்கப்படுகிறது. யாப்பிலக்கணம் பற்றிய ஆரம்பநிலை அறிவை முழுமையாகப் பெறுவது இன்றைய மாணவர்களுக்கு அவசியமானதாகும். இவ்வெண்ணத்துடன் அனைவருக்கும் விளங்கும் எளிய நடையில் இதனை வெளியிடும் எண்ணம் எமக்கு ஏற்பட்டது. அவ்வெண்ணத்துடன் நண்பர் திரு. செல்லத்துரை சுதர்சன் அவர்களைத் தொடர்பு கொண்டோம். அவர் இப்புத்தகத்தை நாம் கேட்டவாறே வினாவிடை வடிவில், கற்பதற்கு இலகுவாக எமக்கு எழுதிக்கொடுத்தார். இந்நூல் தமிழில் யாப்பிலக்கணம் பற்றிய முழுமையான அறிமுகத்தை வழங்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என்பதை நாம் மகிழ்ச்சியோடு கூறிக்கொள்கிறோம்.
இந்நூலின் ஆசிரியர் திரு. செ. சுதர்சன் அவர்கள் யாழ். உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியின் பழைய மாணவர் ஆவார். அவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழைச் சிறப்புப் பாடமாகக் கற்று முதற் தரச் சித்தியைப் பெற்றவர். பின்னர் தமிழ்த் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். தற்போது அப்பல்கலைக்கழகத்திலேயே முது தத்துவமாணிப் பட்ட ஆய்வு மாணவராக உள்ளார். ஆசிரிய சேவையில் பணிபுரிந்து வரும் இவர் மறுமலர்ச்சிக் கவிதைகள், செம்புலம், மற்றுமொரு மாலை, என்தேசத்தில்நான், சாவதும் புதுவதன்றே முதலிய பல நூல்களை வழங்கியுள்ளார். பல ஆய்வுக் கட்டுரைகளையும் பத்திகளையும் எழுதியுள்ளார். சில திரையிசைப் பாடல்களையும், பல கவிதைகளையும் எழுதியுள்ளார். தனது ஆக்கங்களுக்காகப் பரிசில்களையும் விருதுகளையும்
செ. சுதர்சன் 5/யாப்பிலக்கணம்

Page 5
பெற்றுள்ளார். "இரத்தின தீபம்’ என்ற விருதைத் தன் இளவயது இலக்கியப் பணிக்காகப் பெற்றுக்கொண்டார்.
இளவயதிலேயே தமிழறிவும் பேச்சாற்றலும் நிறைந்தவரான இவரின் புத்தக எழுத்து முயற்சிகள் தொடரத் திருவடி வெளியீட்டு நிறுவனத்தின் சார்பில் வாழ்த்துகிறோம்.
இப்புத்தகத்தைப் பயன்படுத்தும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அனைவருக்கும் திருவடி வெளியீட்டு நிறுவனத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
- நன்றி -
வெளியீட்டாளர்,
് திருவடி, , கொழும்பு.
2011
செ. சுதர்சன் 6/யாப்பிலக்கணம்

நூலாசிரியர் உரை
செம்மொழியாகிய தமிழ் பஞ்ச இலக்கணங்களை உடையது. எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பனவே அப்பஞ்ச இலக்கணங்கள். இவற்றுள் எழுத்தும் சொல்லும் மொழியின் அமைப்புத் தொடர்பானவை. பொருள், யாப்பு அணி ஆகியவை பாவியல் தொடர்பானவை.
யாப்பிலக்கணம் செய்யுள் யாப்பதற்கேற்ற விதிமுறைகளை இயம்புகிறது. தனித்துவமான கலைச்சொற்களைக் கொண்டு தமிழில் யாப்பிலக்கணம் அமைந்திருப்பது வியக்கத்தக்கது. பழந்தமிழில் இலக்கியம் முதல் நிகண்டுவரை எல்லா நூல்களும் செய்யுள் வடிவில் வெளிவந்தவையே. அந்தவகையில் உரைநடை யுகத்திற்கு முன்பு கருத்தைக் காவும் பிரதான வாகனமாக யாப்பே அமைந்தது.
இன்றைய காலத்து எழுத்துக்களுக்கு உரைநடை 'வாகனமாய் அமைந்தது. இயல்பாகவே இலக்கணம் கடினமானது என்ற பொருளற்ற சூத்திரம் மாணவர் மனதில் பதிந்துபோயுள்ளது. அதற்கு கற்கும் முறையும், கற்பிக்கும் முறையுமே காரணம். அது நம் மொழியின் தவறில்லை. இலக்கணம் தொடர்பான பிரயோகக் கற்பித்தல் மற்றும் கற்றல் முறைகள் ஈழத்துக் கல்விச் சூழலில் பெருமளவு நிகழாமையே இதற்குப் பிரதான காரணம்.
பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் விரிவுரையாளராக இருந்த காலத்தில் தமிழ் விசேடதுறை பயிலும் மூன்றாம் வருட மாணவர்களுக்கு யாப்பிலக்கணத்தையும் மூன்று வருடங்கள் கற்பிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. தமிழில் யாப்புத் தொடர்பான பல சிந்தனைகள் என்னுள் வளர இவ்வாய்ப்புக் காரணமாகியது. பல நண்பர்கள் தமது பிற பரீட்சைத் தேவைகளுக்காக என்னிடம் இலக்கணம் கற்கும் போது யாப்பிலக்கணத்தையும் கற்பிக்க நேர்ந்தது. ஆசிரிய சேவையில் ஈடுபட்டதன்பின் சில பாடசாலை மாணவர்களுக்கான (க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு கருத்தரங்குகளில் இலக்கணப் பகுதிகளைக் கற்பிக்கும்போது யாப்பியல் பகுதியையும் கற்பிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. வடமராட்சிக் கல்விவலய ஆசிரிய வளநிலையம் ஒழுங்கு செய்த உயர்தர வகுப்பு மாணவர்களுக்கான இலக்கண முகாமிலும் இவ்விலக்கணத்தைக் கற்பிக்கக் கிடைத்தது. இவற்றின்போதெல்லாம் நான்
செ. சுதர்சன் 7/யாப்பிலக்கணம்

Page 6
எழுதிச் சேர்த்த குறிப்புகளைப் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். கருத்தரங்குகளிலும் வகுப்பறைகளிலும் யாப்பிலக்கணம் தொடர்பான எளிமையான வினாவிடை முறையில் அமைந்த நூல் ஒன்று தேவை என்பது மாணவர் பலரின் கோரிக்கையாக இருந்தது.
சென்ற வருட இறுதியில் 'திருவடி வெளியீட்டாளர் திரு. சிவ. வேதநாதன் அவர்கள் யாப்பிலக்கணம் தொடர்பான வினாவிடை வடிவில் அமைந்த நூல் ஒன்றை எழுதித்தரும்படி அன்புக் கட்டளையிடழ்டார். இருந்த குறிப்புக்களையும் யாப்பிலக்கணம் தொடர்பான பிற நூல்களையும் தழுவி இந்நூலை உருவாக்கிக் கொடுத்தேன். நூலாக்கிய அவருக்கு எனது நன்றிகள்.
யாப்பிலக்கணத்தைப் பாடசாலைக் காலத்தில் எனக்கு அறிமுகப்படுத்திய புலவர்மணி. கா. நீலகண்டன், திருமதி. இராஜேஸ்வரி தில்லையம்பலம், பண்டிதர் , க. முத்துவேலு ஆகியோரையும், பல்கலைக் கழகத்தில் யாப்பும் அணியும் கற்பித்த பேராசிரியர் எம். ஏ. நுஃமான், கலாநிதி துரை. மனோகரன் , திரு. பூ சோதிநாதன் மற்றும் விரிவுரையாளர்களையும் இந்நேரத்தில் நன்றியோடு நினைக்கின்றேன். என் எழுத்துக்களை பாராட்டும் ஆசான் திரு. கி. நடராசா அவர்களுக்கும் என் நன்றிகள்
இதைப் பயன்படுத்தும் அனைவருக்கும் ஒன்று கூற விரும்புகிறேன், இந்நூலில் பல சான்றோர்களின் நூற்கருத்துக்களே அமைந்துள்ளன. மொழியை இலகுபடுத்தியதும், வினாவிடை அமைப்பில் ஆக்கியதுமே எனது பணி. இலக்கணத்தை வினாவிடை வடிவில் அமைக்கும்போது கற்போர்க்கு இலகுவாய் அமையும். ஆறுமுகநாவலர் இதற்கு முன்னோடி. விசாகப்பெருமாளையர் ய்ாப்பிலக்கணத்தை வினாவிடை வடிவில் கொணர்ந்ததில் முன்னோடி. பல யாப்பிலக்கண நூல்கள் இந்நூலை உருவாக்க உதவின. இந்நூலின் நிறைகள் யாவும் இலக்கணம் வகுத்த சான்றோர்களுக்கும் எனக்குக் கற்பித்த பெரியோர்களுக்கும் உரியவை. நூலின்கண் காணும் குறைகள் மட்டுமே என்னுடையவை.
- செல்லத்துரை சுதர்சன் -
செ. சுதர்சன் 8/யாப்பிலக்கணம்
 

unrufuli
01. யாப்பியல் என்றால் என்ன?
செய்யுள் அமைப்பதற்குரிய விதிகளைக் கூறும் இயல் யாப்பியல் எனப்படும்.
O O O யாப்பிலக்கணம்
02. யாப்பிலக்கணம் என்பது யாது?
இலக்கணம் என்பது மொழியின் அமைப்பைக்குறிக்கும் சொல்லாகும். செய்யுள் யாப்பதற்குரிய மொழியின் அமைப்பைக் கூறும் இலக்கணம் யாப்பிலக்கணம் ஆகும். இவ் இலக்கணம் படைப்பு ஒன்றின் வடிவநிலை
தொடர்பானது. இலக்கியக் கட்டமைப்பை, செய்யுளின் ஓசை நியதியை இவ் இலக்கணம் இயம்புகிறது.
03. யாப்பிற்குரிய வேறு பெயர்கள் எவை?
பாட்டு, தூக்கு, தொடர்பு, செய்யுள்
04. யாப்பிலக்கணம் கூறும் செய்தி யாது?
யாப்பிலக்கணம்
(1) செய்யுள் உறுப்புகள்
(2) பாக்கள்
(3) பாவினங்கள்
ஆகியவை பற்றி விரிவாக எடுத்துக் கூறுகிறது.
05. யாப்பிலக்கணம் பற்றி அறிய உதவும் நூல்கள் எவை?
தொல்காப்பியம் - பொருளதிகாரம் - செய்யுளியல் யாப்பருங்கலம் - அமிர்தசாகரர் யாப்பருங்கலக் காரிகை - அமிர்தசாகரர் யாப்பருங்கலக் காரிகை - குமாரசுவாமிப் புலவர் உரை யாப்பருங்கலக் காரிகை - உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவர் உரை
செ. சுதர்சன் - 9/யாப்பிலக்கணம்

Page 7
பாப்பாவினம் - திருக்குருகைப் பெருமாள் கவிராயர் யாப்புநூல் - புலவர் த. சரவணத்தமிழனார் யாப்பதிகாரம் - புலவர் குழந்தை யாப்பிலக்கணம் - திருத்தணிகை விசாகப்பெருமாள் ஐயர் தமிழ்ப் பாவடிவங்களை விளங்கிக் கொள்ளல் - பேராசிரியர் :). இரகுநாதன்
06. யாப்பிலக்கண நூல்களுள் முதன்மையான நூல்கள் இரண்டினைக்
குறிப்பிடுக.
யாப்பருங்கலம் - அமிர்தசாகரர் யாப்பருங்கலக் காரிகை - அமிர்தசாகரர்
07. யாப்பிலக்கணத்தின் பயன்கள் எவை?
1. பழந்தமிழ் இலக்கியத்தின் வடிவமைதியை அறிந்துகொள்ள
உதவுதல்.
2. பழந்தமிழ் நூல்களைக் கற்க, ஆய்வு செய்ய, பரிசோதித்துப்
பதிப்பிக்க உதவுதல்.
3. எழுத்து,சொல் ஆகிய இலக்கணங்களின் பிரயோக அறிவை
வளர்க்க உதவுதல்.
4. செய்யுள் மரபின் வரலாற்றைத் தெளிவாக அறிய உதவுதல்.
5. செய்யுளின் ஓசை முதலிய இயல்பான கவித்துவ மேன்மைக்கும்
செழுமைக்கும் உதவுதல்.
08. யாப்பிலக்கணம் செய்யுள் வழக்கினைச் சார்ந்ததா, விளக்குக. ஆம். செய்யுள் வழக்கினைச் சார்ந்தது செய்யப்படுவதால் செய்யுள் எனப் பெயர் பெற்றது. முன்னைய காலத்தில் இலக்கியம், இலக்கணம் ஆகிய இரண்டும் செய்யுள் நடையில் செய்யப்பட்டமையால் எழுதும் தமிழ் செய்யுள் வழக்கு எனப் பெயர் பெற்றது. இச் செய்யுள் வழக்கிற்கேயான வடிவவியல்சார் விதிகளைக் கூறுவதே செய்யுள் இலக்கணம் (யாப்பிலக்கணம்) ஆகும்.
09. செய்யுள் இலக்கணம் எத்தனை பிரிவுகளை உடையது, அவை எவற்றினை விபரிக்கின்றன?
செய்யுள் இலக்கணம் உறுப்பியல், செய்யுளியல், ஒழிபியல் என மூன்று பெரும் பிரிவுகளை உடையது.
உறுப்பியலில் செய்யுள் உறுப்புக்களின் இலக்கணத்தையும் ஏனையவற்றில் பா,பாவினம் ஆகியவற்றின் இலக்கணத்தையும் விபரிக்கின்றன.
செ.சுதர்சன் 10/யாப்பிலக்கணம்

உறுப்பியல் - செய்யுள் உறுப்புகள் 10. செய்யுள் உறுப்புகள் என்றால் என்ன?
செய்யுளை இயற்றும்போது அடிப்படையாய் அமையும் உறுப்புகள் செய்யுள் உறுப்புகள் எனப்படும்.
(உறுப்பு - அவயம், இயல் - இலக்கணம்)
11. செய்யுள் உறுப்புகள் எத்தனை, அவை எவை?
ஆடு. 1. எழுத்து 2. Ꮿj60ᎠᏧ 3. ਸੰ 4. தளை 5. 9[Iọ 6. தொடை
- எழுத்து 12. எழுத்து என்றால் என்ன?
மொழிக்கு முதற்காரணமாகிய ஒலியே எழுத்து எனப்படும். இது செய்யுள் உறுப்புகளில் முதன்மையானது. எழுத்து என்னும் உறுப்பு அசை என்னும் உறுப்பிற்கு அடிப்படையாக அமைகிறது.
13. தமிழ் எழுத்துக்களை வகைப்படுத்துக.
உயிர்க்குறில் 05 குறில் < குற்றெழுத்துக்கள் 95
உயிர்மெய்க்குறில் 90 -
உயிர்நெடில் 07
நெடில்< நெட்டெழுத்துக்கள் 133
உயிர்மெய்நெடில் 126
மெய் 18 ஒற்று < ஒற்றெழுத்துக்கள் 19
ஆய்தம் O1 -
மொத்தம் 247
> பொதுவாக மெய் எழுத்தையே “ஒற்று' என்பர். யாப்பிலக்கணத்தில்
ஆய்தத்தையும் ஒற்று என்பர்.
செ. சுதர்சன் 11/யாப்பிலக்கணம்

Page 8
> குற்றெழுத்து, நெட்டெழுத்து ஆகியவை அசைகளை ஆக்கும் போது
எப்போதும் உறுப்பாக நிற்கும்.
14. மாத்திரை என்றால் என்ன?
எழுத்துக்களை ஒலிக்கும் கால அளவுக்கு மாத்திரை என்று பெயர்.
மரபு ரீதியாக மாத்திரையை அளக்கக் கண் இமைப்பொழுது,
கைநொடிப்பொழுது ஆகியவை குறிப்பிடப்படுகின்றன.
15. தமிழ் எழுத்துக்களைக் குறிப்பிட்டு அவற்றுக்கான
மாத்திரைகளைத் தருக.
நெடில் எழுத்து - 2 மாத்திரை குறில் எழுத்து - 1 மாத்திரை உயிர்அளபெடை. 3 மாத்திரை ஒற்றளபெடை - 1 மாத்திரை மெய்எழுத்து - % மாத்திரை குற்றியலுகரம் - % மாத்திரை குற்றியலிகரம் - % மாத்திரை ஆய்தம் - % மாத்திரை ஆய்தக்குறுக்கம்- % மாத்திரை மகரக்குறுக்கம் - % மாத்திரை
“ஐ’ தன்னைத்தான் உணர்த்தும் போது மட்டும் 2 மாத்திரை ஐகாரக்குறுக்கத்திற் பின்வருமாறு அமையும்.
1. ஒரு சீரின் முன்வரும் போது -1% மாத்திரை
உ - ம் ! ஐயர் (வடிவம் மாறாது ஒரு சீரின் முன்வருதல்) 2. வடிவம் சிதைந்த ஒரு சீரின் முன்வரும்போது - 1% மாத்திரை
உ - ம் : தைமாதம் 3. வடிவம் சிதைந்து சீருக்கு இடையில் வரும்போது - 1 மாத்திரை
உ - ம் :(இடைவேளை
16. இன எழுத்து என்றால் என்ன?
எழுத்துக்களை உச்சரிக்கும் போது அவை தோன்றும் இடம்,
ஒலிக்கும் முயற்சி, ஒலிக்கும் கால அளவு, உருவம் ஆகியவற்றில்
ஒற்றுமை உள்ள எழுத்துக்கள் இனனழுத்து எனப்படும்.
செ. சுதர்சன் 12/யாப்பிலக்கணம்

17. எழுத்துக்களையும் அவற்றுக்குரிய இன எழுத்துக்களையும்
குறிப்பிடுக. உயிர் : 1. அ, ஆ, ஐ, ஒள - ஓரினம் மெய்: 1. ஞ், ந் - ஓரினம்
2. இ, ஐ, எ, ஏ - ஓரினம் 2. ம், வ் - ஓரினம் 3. உ, ஊ, ஒ, ஒள - ஓரினம் 3. த், ச் - ஓரினம்
(இயைபும் வழக்கும் பற்றி யகரத்தையும் உயிர் பிரிவு 2இல் சேர்ப்பார்கள்)
உயிர் எழுத்துக்கள்
அ ஆ ஐ ஒள இ ஈ எ ஏ உ ஊ ஒ ஓ எ ஏ இ ஈ
ஐ அ ஆ ஒலி ஒ ஓ உ ஊ ஒள அ ஆ ஐ
Q
6
உயிர்மெய் எழுத்துக்கள்
உயிர் எழுத்துக்களுக்கு அமைவதைப்போல அமையும்
85 - க கா கை கெள கி - கி கீ கெ கே
கு கு கூ கொ கோ கெ - கெ கே கி கீ
605 - கை க கா கொ கொ - கொ கோ கு கூ கெள - கெள க கா கை
இதனைப்போல மற்றைய எழுத்துக்களையும் பொருத்திப் பார்த்துக்கொள்ளவும்.
இன்னொரு வகை
உயிர் மெயப் அ - ஆ க் - ங் இ - ஈ ச் - ஞ் 9) -96 ட் - ண் 6T - 6 த் - ந் ஐ - இ 'j - , LD ஒ - ஒ ற் - ன் ஒள - உ
இடையினனழுத்துக்கு இனமில்லை
செ. சுதர்சன் 13/ யாப்பிலக்கணம்

Page 9
96).F
18. அசை என்றால் என்ன?
அசைக்கப்பெறுவது அசை எனப்படும். எழுத்துக்களால் அசைத்து இசை கொள்ளுதலால் அசை எனப்படுகிறது. எழுத்துக்களின் இசைத் தொடர்ச்சியை அசைத்துச் செல்லும் போது அசைக்கப்பட்டுப் பிரிந்து வரும் எழுத்தால் அமைந்து, சீர்க்கு உறுப்பாக நிற்பது அசை ஆகும்.
19. அசை எவ்வாறு உருவாகும்?
குறில், நெடில், ஒற்று எனும் மூவகை எழுத்துக்களால் அசை
உருவாகும். மெய் தனித்து நின்று அசை ஆகாது. ஓரெழுத்து அல்லது
இரண்டெழுத்துச் சேர்ந்து அசையாகும். -
20. அசை எத்தனை வகைப்படும் அவை எவை?
இரண்டு வகைப்படும். நேரசை, நிரையசை,
21. நேரசை என்றால் என்ன?
ஓர் எழுத்தால் ஆகிய அசை நேர் அசை. இதனைத் 'தனியசை’ என்றும் கூறுவர்.
குற்றெழுத்துத் தனியே வந்தால், நெட்டெழுத்துத் தனியே வந்தால் அல்லது இவை இரண்டும் முறையே ஒற்றடுத்து வந்தால் அது நேர் அசை ஆகும்.
22. நேரசையின் வகைகளைக் குறிப்பிட்டு உதாரணம் தருக.
1. குறிலால் ஆகிய நேர் அசை - 5 2. நெடிலால் ஆகிய நேர் அசை - 凸BT 3. குறில் ஒற்றெடுத்ததால் ஆகிய நேர் அசை - கல் 4. நெடில் ஒற்றெடுத்ததால் ஆகிய நேர் அசை கால்
23. நிரை அசை என்றால் என்ன?
இரண்டு எழுத்துக்களால் ஆகிய அசை நிரை அசை எனப்படும்.
இது “இணையசை’ என்றும் கூறப்படும்.
குறிலிணை வந்தால், குறிநெடில் வந்தால் அல்லது இவை இரண்டும்
முறையே ஒற்றடுத்து வந்தால் அது நிரை அசை ஆகும்.
செ. சுதர்சன் 14/யாப்பிலக்கணம்

23. நிரையசையின் வகைகளைக் குறிப்பிட்டு உதாரணம் தருக.
1. குறில் இணையால் ஆகிய நிரையசை கிளி 2. குறில் நெடிலால் ஆகிய நிரையசை - 5LT 3. குறில் இணை ஒற்றடுத்ததால் ஆகிய நிரையசை - வரம் 4. குறில் நெடில் ஒற்றடுத்ததால் ஆகிய நிரையசை - விளாம்
குறிப்பு : தனிக் குறிலானது சொல் முதலில் நேரசையாக வருவதில்லை. இது தொடர்ந்து வருகின்ற நெடிலுடனோ அல்லது ஒற்றுடனோ சேர்ந்தே அசை ஆகும். நெடிலுக்குப் பின்னர் வரும் தனிக்குறில் நேரசையாகக் கொள்ளப்படும்.
24. அலகிடுதல் என்றால் என்ன?
ஒரு சீரைப் பிரித்து அசை பார்ப்பதே அலகிடுதல் ஆகும்.
25. அலகிடும் போது அலகு பெறாத எழுத்துக்கள் எவை?
குற்றியலுகரம், குற்றியலிகரம், மெய்யெழுத்து
26. பின்வரும் செய்யுளை அலகிடுக
சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து
முறை 1
சொல்/லுக சொல்/லைப் பிறி/தோர்/சொல் அச்/சொல்/லை வெல்/லுஞ்/சொல் இன்/மை அறிந்/து
சொல் லுக சொல் லைப் பிறி தோர் சொல் அச் சொல் லை வெல் லுஞ் சொல் இன் மை அறிந் து
நேர்நிரை நேர்நேர் நிரைநேர்நேர் நேர்நேர்நேர் நேர்நேர்நேர் நேர்நேர் நிரை
முறை 2
சொல் - குறில் ஒற்றடுத்ததால் ஆகிய நேர் அசை லுக - குறிலிணையால் ஆகிய நிரை அசை சொல் - குறில் ஒற்றடுத்ததால் ஆகிய நேர் அசை லைப் - நெடில் ஒற்றடுத்ததால் ஆகிய நேர் அசை பிறி - குறிலிணையால் ஆகிய நிரை அசை
செ. சுதர்சன் 15/யாப்பிலக்கணம்

Page 10
தோர் - நெடில் ஒற்றடுத்ததால் ஆகிய நேர் அசை சொல் - குறில் ஒற்றடுத்ததால் ஆகிய நேர் அசை
அச் - குறில் ஒற்றடுத்ததால் ஆகிய நேர் அசை சொல் - குறில் ஒற்றடுத்ததால் ஆகிய நேர் அசை லை - நெடிலால் ஆகிய நேர் அசை வெல் - குறில் ஒற்றடுத்ததால் ஆகிய நேர் அசை லுஞ் - குறில் ஒற்றடுத்ததால் ஆகிய நேர் அசை சொல் - குறில் ஒற்றடுத்ததால் ஆகிய நேர் அசை இன் - குறில் ஒற்றடுத்ததால் ஆகிய நேர் அசை 60D - குறிலால் ஆகிய நேர் அசை அறிந் - குறிலிணை ஒற்றடுத்ததால் ஆகிய நிரை அசை
S. g - குற்றியலுகரம் (அறிந்து - மென்றொடர்)
நேர் அசைகளின் மொத்த எண்ணிக்கை - 13 நிரை அசைகளின் மொத்த எண்ணிக்கை - 03
27. சீர் என்றால் என்ன?
நேரசை, நிரையசை ஆகிய இரு வகை அசைகளும் தனித்தோ அல்லது இரண்டு முதலியன இணைந்தோ இலயம்பட இசைத்துச் சீர் போன்று நிற்பது சீரெனப்படும். செய்யுளுக்கு இசையாக அமைவதும் செய்யுளை ஒழுங்குபடுத்துவதும் சீர் ஆகும்.
28. சீரினை வகைப்படுத்துக.
சீரானது அசையின் தொகை (எண்ணிக்கை) அடிப்படையில் நான்கு வகைப்படும்.
1. ஓரசைச்சீர் 2, ஈரசைச்சீர் 3. மூவசைச்சீர் 4. நாலசைச்சீர்
செய்யுளுக்கு உரிமை பூண்டு நிற்கும் தன்மை நோக்கியும்
பின்வருமாறு சீரை வகைப்படுத்துவர்.
1. அகவற்சீர் 2. வெண்சீர் 3. வஞ்சிச்சீர் 4. பொதுச்சீர் 5. அசைச்சீர்
29. ஓரசைச்சீர் என்றால் என்ன?
அசை ஒன்று மட்டும் தனித்து நின்று இசை நிறைத்து வந்தால் சீர் எனப்படும். இதனை 'அசைச்சீர்’ என்றும் கூறுவர்.
செ.சுதர்சன் 16/யாப்பிலக்கணம்

30. ஓரசைச்சீரின் வகைகள் எவை, உதாரணத்துடன் விளக்குக.
அசை இருவகைப்படுவதுபோல அசைச் சீரும் நேரசைச்சீர், நிரையசைச்சீர் என இருவகைப்படும்.
*அசைச்சீர்க்கு உதாரணம் நாள் மலரே” 1. நேர் அசை - நாள் 2. நிரை அசை - LD6)ij
அறிகொன் றறியா னெனினு முறுதி யுழையிருந்தான் கூறல் கடன்
கடன், மலர் திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும் பொருளும் அதனினுTஉங் கில்
கில் - நாள் கடன், கில் முதலியவை ஓரசைச் சீர்கள்
ஓரசைச்சீர் வெண்பாவில் மட்டும் இறுதிச் சீராக நாள், மலர், காசு, பிறப்பு எனும் வாய்ப்பாட்டில் அமையும. காசு, பிறப்பு ஆகியவை குற்றியலுகரங்களாகும். அவற்றில் வரும் இறுதி அசைகள் அலகுபெறமாட்டா.
சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து
அறிந்து - பிறப்பு சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு தாழ்ச்சியுள் தங்குதல் தீது
தீது - காசு
s பிறப்பு - பிற - நிரை அசை S. தீது - தீ - நேர் அசை
31. ஈரசைச்சீர் என்றால் என்ன? அவற்றின் மறுபெயர்கள் எவை?
ஈரசைச்சீர் என்பது இரண்டு அசைகளால் ஆகிய சீர். இதனை அகவற்சீர், ஆசிரியச்சீர், ஆசிரிய உரிச்சீர், இயற்சீர் எனப் பலவாறு குறிப்பிடுவர்.
32. ஈரசைச்சீர் எவ்வாறு உருவாகிறது?
நேரசை, நிரையசை என்ற இரு வகை அசைகளையும் தன்னொடுதானும், பிறிதுமாகச் சேர்க்கும் போது நேர்நேர் என்றும் நிரைநேர் என்றும் நிரைநிரை என்றும் நேர்நிரை என்றும் ஈரசைச்சீர்கள் உருவாகின்றன. இவை நான்கும் அகவற்பாவுக்குரிய சீர்கள் ஆகும்.
செ. சுதர்சன் 17/யாப்பிலக்கணம்

Page 11
33. ஈரசைச்சீர்க்குரிய அசை, வாய்பாடு என்பவற்றினைத் தருக.
அசை வாய்பாடு சீர் ே நேர்நேர் தேமா நிரைநேர் புளிமா மாச்சீர் 2
நிரைநிரை " ه . م. நேர்நிரை கூவிளம் 2
34. மாச்சீர், விளச்சீர் என்பவற்றை விளக்குக."
நேர் ஈற்று ஈரசைச்சீர் மாச்சீர் என்றும் நிரையீற்று ஈரசைச்சீர் விளச்சீர் என்றும் அழைக்கப்படும். | SK "A":'',
35. மாச்சீர் எத்தனை, விளச்சீர் எத்தனை, அவை எவை?
மாச்சீர் 2 — (8.g5 DIT, q6ńLDT விளச்சீர் 2 - கருவிளம், கூவிளம்
36. அகவற்சீர், இயற்சீர் ஆகிய பதங்களின் மூலம் நீர் விளங்கிக்
கொள்வது யாது? . . . . . .
ஈரசைச்சீர்கள் நான்கும் அகவற்பாவுக்குச் சிறப்பாக உரியதால் அகவற்சீர் என்றும் எல்லாப் பாக்களுக்கும் பொதுவாக உரியதால் இயற்சீர் என்றும் அழைக்கப்படுகின்றன.
37. பின்வரும் செய்யுளில் உள்ள சீர்களின் எண்ணிக்கையையும்
வகையையும் குறிப்பிடுக.
சொல்லுதல் யார்க்/கும் எளிய அரியவாம்
நேர் நிரை நேர் நேர் நிரை நேர் நிரை நிரை கூவிளம் தேமா புளிமா கருவிளம்
சொல்/லிய வண்ணம் செயல்
நேர்நிரை நேர்நேர் நிரை கூவிளம் தேமா ஓரசைச்சீர் - நிரை(மலர்)
* M
சீர்களின் மொத்த எண்ணிக்கை - 07
மாச்சீர் எத்தனை' -03 விளச்சீர் எத்தனை -03
அசைச்சீர் எத்தனை - 01
செ. சுதர்சன் 18/யாப்பிலக்கணம்
 
 
 
 

38. மூவசைச்சீர் என்றால் என்ன, அவை எத்தனை வகைப்படும்?
மூன்று அசைகளால் ஆகிய சீர் மூவசைச்சீர் எனப்படும். எட்டு வகைப்படும்.
39. மூவசைச்சீர் எவ்வாறு உருவாகிறது?
ஈரசைச்சீர்கள் நான்கும் இறுதியிலே நேரசை, நிரையசை என்னும் இருவகை அசைகளையும் தனித்தனியே கொள்ள மூவசைச்சீர் உருவாகிறது.
40. மூவசைச்சீருக்குரிய அசை, வாய்பாடு என்பவற்றைத் தருக.
Ꮿl60ᎠᏑ வாய்பாடு 的 1.நேர் நேர் நேர் - தேமாங்காய் காய்ச்சீர்/ வெண்சீர்-4 2.நிரை நேர் நேர்' புளிமாங்காய் வெண்பாவுக்கே சிறப்பாக உரியவை 3.நிரை நிரை நேர் - கருவிளங்காய் 4.நேர் நிரை நேர் - கூவிளங்காய்
5.நேர் நேர் நிரை - தேமாங்கனி 6.நிரை நேர் நிரை - புளிமாங்கனி கணிச்சீர்/வஞ்சிச்சீர் 4 7.நிரை நிரை நிரை - கருவிளங்கனி வஞ்சிப்பாவுக்கே சிறப்பாக உரியவை 8.நேர் நிரை நிரை - ரி கூவிளங்கனி
41. வெண்சீர்(காய்ச்சீர்), வஞ்சிச்சீர்(கனிச்சீர்) என்பவற்றை விளக்குக? நேர்ஈற்று மூவசைச்சீர் வெண்சீர் (காய்ச்சீர்), என்றும் நிரையீற்று மூவசைச்சீர் வஞ்சிச்சீர்(கனிச்சீர்) என்றும் அழைக்கப்படும்
42. பின்வரும் செய்யுளடியை அசைகளாகப் பிரித்துச் சீரினைக்
கண்டறிக. புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள் புல்/லவையுள் பொச்/சாந்/தும் சொல்/லற்/க நல்லவையுள் நேர்நிரைநேர் நேர்நேர்நேர் நேர்நேர்நேர் நேர்நிரைநேர் கூவிளங்காய் தேமாங்காய் தேமாங்காய் கூவிளங்காய்
காய்ச்சீர் என்பதால் வெண்சீர்
43.பின்வரும் செய்யுளடியை அசைகளாகப் பிரித்துச் சீரினைக் கண்டறிக
பூந்தாமரைப் போதலமரத் பூந்/தாமரைப் போதல/மரத் நேர்நேர்நிரை நேர்நிரைநிரை
தேமாங்கனி கூவிளங்கனி - கனிச்சீர் என்பதால் வஞ்சிச்சீர்
செ. சுதர்சன் 19'யாப்பிலக்கணம்

Page 12
44. நாலசைச்சீர் என்றால் என்ன, அவை எத்தனை வகைப்படும்?
நான்கு அசைகளால் ஆகிய சீர் நாலசைச்சீர் எனப்படும். பதினாறு
வகைப்படும்.
45. நாலசைச்சீர் எவ்வாறு உருவாகிறது?
ஈரசைச்சீர்கள் நான்கும் தன்னொடு தானும் தன்னொடு பிறிதுமாகக்
கூட நாலசைச்சீர்கள் உருவாகிறது. தேமா, புளிமா முதலிய வாய்பாடுகள்
நான்கினையும் நிறுத்தித் தண்நிழல், தண்பூ முதலியன நான்கினையும்
தந்து உறழ்ந்தால் பதினாறு நாலசைச் சீர்கள் உருவாகும்.
46. பொதுச்சீர் என்று எதனை அழைப்பர், காரணம் தருக.
நாலசைச்சீர்கள் பதினாறும் 'பொதுச்சீர்கள்' எனப்படும்.
மற்றைய சீர்கள் போல ஏதாவது ஒரு பாவிற்கு மட்டும் உரிமை கோராது வெண்பா அல்லாத பாக்களிலே வந்து பொதுப்பட நிற்றலாற் பொதுச்சீர் எனப்பட்டது.
47. நாலசைச் சீருக்குரிய அசை, வாய்பாடு என்பவற்றைத் தருக.
ᎦᏪl60ᎠᏑ வாய்பாடு சீர் நேர் நேர் நேர் நிரை தேமாந்தண்ணிழல்
1.
2. நிரை நேர் நேர் நிரை புளிமாந்தண்ணிழல் 3. நிரை நிரை நேர் நிரை கருவிளந்தண்ணிழல் தண்ணிழல் 4. நேர் நிரை நேர் நிரை கூவிளந்தண்ணிழல்
5. நேர் நேர் நேர் நேர் தேமாந்தண்பூ 6. நிரை நேர் நேர் நேர் புளிமாந்தண்பூ 7. நிரை நிரை நேர் நேர் கருவிளந்தண்பூ தன்பூ 8. நேர் நிரை நேர் நேர் கூவிளந்தண்பூ
9. நேர் நேர் நிரை நிரை தேமாநறுநிழல் 10. நிரை நேர் நிரை நிரை புளிமாநறுநிழல் 11. நிரை நிரை நிரை நிரை கருவிளநறுநிழல் நறுநிழல் 12. நேர் நிரை நிரை நிரை கூவிளநறுநிழல்
13. நேர் நேர் நிரை நேர் தேமாநறும்பூ 14. நிரை நேர் நிரை நேர் புளிமாநறும்பூ 15. நிரை நிரை நிரை நேர் கருவிளந்நறும்பூ நறும்பூ
16. நேர் நிரை நிரை நேர் கூவிளநறும்பூ
செ. சுதர்சன் 20/யாப்பிலக்கணம்

48. பின்வரும் செய்யுளடியை அசைகளாகப் பிரித்துச் சீரினைக்
கண்டறிக.
அள்ளற்பள்ளத் தகண்சோணாட்டு அள்ளற்/பள்ளத் தகண்/சோlனாட்டு நேர்நேர்நேர்நேர் நிரைநேர்நேர்நேர்
தேமாந்தண்பூ புளிமாந்தண்பூ -
49. சீர்களின் மொத்த எண்ணிக்கையைக் குறிப்பிடுக.
அகவற்சீர் - 04 வெண்சீர் - 04. வஞ்சிச்சீர் - 04 பொதுச்சீர் 16 அசைச்சீர் - 02 மொத்தம் 30
தளை
50. தளை என்றால் என்ன?
சீரோடு சீர் புணரச் சேர்ந்து இயற்றும் அடியிலே சீர்களின் இடை நின்று இசைத் தொடர்ச்சியுறச் சீர்களைப் பிணிப்பது தளை ஆகும். அதாவது சீரோடு சீரைச் சேர்த்துச் செய்யுளடிகளை அமைக்கும் போது அவற்றுக்கிடையில் உருவாகும் இயைபே தளை எனப்படும்.
51. தளையின் வேறு பெயர் யாது?
பந்தம் (பிணித்தல்) ே 52. தளை எவ்வாறு பார்க்கப்படும்?
தளை பார்க்கும் போது நின்ற சீர் என்ன சீர் என்பதையும் வரும் சீரின் முதலசை என்ன அசை என்பதையும் கவனத்தில் கொண்டு பார்க்கப்படும். 8.
உதாரணம்: கருங்கால் வேம்பின்
நின்ற சீர் வரும் சீர் புளிமா தேமார்
நின்ற சீர் புளிமா. வரும் சீரின் முதல் அசை நேர். எனவே நேர் ஒன்றிய ஆசிரியத்தளை." W)、 "
53. ஒன்றிய தளை என்பது யாது?
நின்ற சீரின் இறுதி அசையும் வரும் சீரின் முதல் அசையும் ஒரே
அசையாக அமைந்து இணைதல் ஒன்றிய தளை ஆகும்.
செ. சுதர்சன்' 21/யாப்பிலக்கணம்

Page 13
54. ஒன்றாத தளை என்பது யாது?
நின்ற சீரின் இறுதி அசையும் வரும் சீரின் முதல் அசையும் வேறுபட்டு அமைந்து இணைதல் ஒன்றாத தளை ஆகும்.
55. தளையின் வகைகள் எத்தனை வகைப்படும், அவை எவை?
ஏழு வகைப்படும். 01. நேர் ஒன்றிய ஆசிரியத்தளை 02. நிரை ஒன்றிய ஆசிரியத்தளை
03. வெண்சீர் வெண்டளை 04. இயற்சீர் வெண்டளை 05. ஒன்றிய வஞ்சித்தளை 06. ஒன்றாத வஞ்சித்தளை 07. கலித்தளை
56. நேர் ஒன்றிய ஆசிரியத்தளை என்பது யாது?
நேர் அசை ஈற்று அகவற்சீருடன் நேரசை முதலாய் வரும் சீர்
புணரும்போது உருவாகும் தளை நேர் ஒன்றிய ஆசிரியத்தளை எனப்படும்.
அதாவது மாச்சீருக்குமுன் நேர்வருவது நேர் ஒன்றிய ஆசியத்தளை ஆகும்.
உதாரணம்: கருங்கால் X வேம்பின்
57. நிரை ஒன்றிய ஆசிரியத்தளை என்பது யாது?
நிரை அசை ஈற்று அகவற்சீருடன், நிரையசை முதலாய் வரும் சீர் வந்து புணரும்போது, உருவாகும் தளை நிரை ஒன்றிய ஆசிரியத்தளை எனப்படும்.
உதாரணம்: இன்றியும் X கழிவது
58. வெண்சீர் வெண்டளை என்றால் என்ன?
வெண்சீர் நின்று நேரசை முதலாய் சீருடன் புணரும் போது
உருவாகும் தளை வெண்சீர் வெண்டளை எனப்படும். காய்ச்சீருக்கு முன்
நேரசை வரும் போது வெண்சீர் வெண்டளை உருவாகும். உதாரணம்: பழுதெண்ணும் X மந்திரியின்
59. இயற்சீர் வெண்டளை என்றால் என்ன?
இயற்சீர் ஒன்று, வரும் சீருடன் ஒன்றுபடாது நிற்க உருவாகும் தளை இயற்சீர் வெண்டளை எனப்படும். அதாவது மாச்சீர், நிரையசையை முதலாகக் கொண்ட சீருடனும் விளச்சீர் நேரசையை முதலாகக் கொண்ட சீருடனும் இணையும்போது உருவாகும் தளையே இயற்சீர் வெண்டளை. உதாரணம்:- எல்லாம் X அழப்போம்
பாதகம் X செய்பவர்
செ. சுதர்சன் 22/யாப்பிலக்கணம்

60. ஒன்றிய வஞ்சித்தளை என்றால் என்ன?
வஞ்சிச்சீர் நின்று, நிரை முதலாய் வருகின்ற சீருடன் புணரும்
போது உருவாகும் தளை ஒன்றிய வஞ்சித்தளை எனப்படும். அதாவது
கணிச்சீருக்கு முன்னே நிரை வருதலே ஒன்றிய வஞ்சித்தளை.
உதாரணம் - தண்டாமரைத் X தனிமலர்மிசை
61. ஒன்றாத வஞ்சித்தளை என்றால் என்ன?
வஞ்சிச்சீர் நின்று வரும் சீருடன் ஒன்றாவிடின் உருவாகும் தளை
ஒன்றாத வஞ்சித்தளை எனப்படும். கணிச்சீருக்கு முன்னர் நேர் வருதலே
ஒன்றாத வஞ்சித்தளை.
உதாரணம் - மந்தாநிலம் X வந்தசைப்ப
62. கலித்தளை என்றால் என்ன?
வெண்சீர் நின்று வரும் சீருடன் ஒன்றாத போது உருவாகும் தளை
கலித்தளை எனப்படும். காய்ச்சீருக்கு முன்னார் நிரை வருதலே கலித்தளை.
உதாரணம் - பல்லுயிரும் X பலவுலகும்
பின்வரும் அட்டவணையை நினைவிற் பதிக்குக.
தளை
தளையின் வகைகள் நின்றசீர் வரும் சீரின்
முதல் அசை
1. நேர் ஒன்றிய ஆசிரியத்தளை LDs நேர்
2. நிரை ஒன்றிய ஆசிரியத்தளை விளம் நிரை
3. வெண்சீர் வெண்டளை Ց5Tեւն நேர்
4. இயற்சீர் வெண்டளை LDs நிரை
விளம் நேர்
5. ஒன்றிய வஞ்சித்தளை கனி நிரை
6. ஒன்றாத வஞ்சித்தளை கனி நேர்
7. கலித்தளை 5Tui நிரை
செ. சுதர்சன்
23/ யாப்பிலக்கணம்

Page 14
... .
епр 63. அடி என்றால் என்ன?
இரண்டு முதலிய சீர்களைக் கொண்டு முடிவது அடி ஆகும். அல்லது ஒன்று முதலிய தளைகளை அடுத்து வருவது அடியாகும்,
64. அடி எத்தனை வகைப்படும் அவை எவை? ஐந்து வகைப்படும்.
1. குறள் அடி 2. சிந்தடி 3. அளவடி 4. நெடிலடி 5. கழிநெடிலடி
65. குறளடி என்றால் என்ன?
இரண்டு சீர் கொண்டு முடிவுபெற்று நிற்கும் அடி குறளடி எனப்படும். இவ் அடி மற்றைய அடிகள் யாவற்றிலும் குறுகியதாய் அமைவதால் குறளடி எனப்படுகிறது. ஒரு தளை கொண்டு நிற்கும், இரு சீரால் வரும் இவ்வடி ஒரு தளையை அடுத்து வரும்.
உதாரணம்:
வேலென்றால் வீரன்கை வேலொன்றே வேலாகும்
63. சிந்தடி என்றால் என்ன?
மூன்று சீர் கொண்டு முடிவு பெற்ற நிற்கும் அடி சிந்தடி
எனப்படும். இது இரண்டு தளை பெற்று நிற்கும். அதாவது, மூன்று சீர்களைக்
கொண்டு இரண்டு தளைகளால் அமையப்பெற்று முடிவு பெற்று நிற்கும் அடி சிந்தடி ஆகும்.
ஊதாரணம்: துணர விரித்துரையா தார்
66. அளவடி என்றால் என்ன?
நான்கு சீர் கொண்டு முடிவு பெற்று நிற்கும் அடி அளவடி எனப்படும். இதனை நேர் அடி என்றும் கூறுவர். குறுக்கமும் நீட்டமும் இன்றி அளவுபட நிற்பதால் அளவடி என அழைக்கப்படுகிறது. எப்போதும் பயில் நிலையில் இருப்பதால் நேரடி எனவும் அழைக்கப்படுகிறது.
உதாரணம்: சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்
67. நெடிலடி என்றால் என்ன?
ஐந்து சீர் கொண்ட முடிவு பெற்று நிற்கும் அடி நெடிலடி ஆகும். உதாரணம்:
செவ்விய லென்றிடில் சிந்தையில் தோன்றுதல் செந்தமிழே
செ. சுதர்சன் 24/யாப்பிலக்கணம்
 
 

68. கழிநெடிலடி என்றால் என்ன? ܐܰܢ݈ܬ݁
ஐந்துக்கு மேற்பட்ட சீர்களைக் கொண்ட அடிகழி நெடிலடி எனப்படும்.
உதாரணம் : வாழ்க வாழ்க வண்டமிழ் வளர்க்கும்
வாள்நிகர் வீரர் வாழ்க - (எழுசீர்க்கழிநெடிலடி)
பின்வரும் அட்டவணையை நினைவிற் பதிக்குக.
99. அடிகளின் வகைகள் விளக்கம்
ന്ദ്രബg 2 சீர்களை உடையது
சிந்தடி 3 சீர்களை உடையது
அளவடி 4 சீரகளை உடையது
நெடிலடி 5 சீர்களை உடையது
கழிநெடிலடி 6 சீர்களையும் அதற்கு மேற்பட்ட சீர்களையும்
உடையது. சீர்களுக்கேற்ப அறுசீர்க்கழிநெடிலடி,
எழுசீர்க்கழிநெடிலடி என்றவாறு பெயர்பெறும்.
தொடை 69. தொடை என்றால் என்ன?
தொடுக்கப்படுவதே பொதுவாகத் தொடை எனப்படும். அடிகளிலும், சீர்களிலும் அமையுமாறு எழுத்து முதலியவற்றால் தொடுக்கப்படுவது தொடை ஆகும். செய்யுளின் ஒசைக்கும் இனிமைக்கும் சிறப்பிற்கும் இத்தொடை இன்றியமையாதது.
70. தொடையின் இரு பிரதான வகைகளும் எவை விளக்கம் தருக.
1. முதற்றொடை - அடிகளில் வருவது 2. உறழ்ச்சித் தொடை - ஓர் அடியிலுள்ள சீர்களில் வருவது
71. முதற்றொடை எத்தனை வகைப்படும். அவை எவை?
ஐந்து வகைப்படும்
1. மோனை 2. எதுகை 3. முரண் 4. இயைபு 5. அளபெடை
செ. சுதர்சன் 25/யாப்பிலக்கணம்

Page 15
72. உறழ்ச்சித் தொடைகள் எவை?
1. sell) 2. இணை 3.பொழிப்பு 4. ஒருஉ 5. கூழை 6. மேற்கதுவாய் 7. கீழ்க்கதுவாய் 8. முற்று
73. பிறதொடைகள் எவை?
அந்தாதித் தொடை, இரட்டைத் தொடை, செந்தொடை
74. மோனைத் தொடையை விளக்குக.
அடி தோறும் முதல் எழுத்து அல்லது அடி ஒன்றின் சீரின் முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுக்கப்படுவது மோனைத் தொடை எனப்படும். அடி தோறும் முதலெழுத்து ஒன்றுவது அடிமோனை என்றும் சீரின் முதலெழுத்து ஒன்றுவது சீர்மோனை என்றும் கூறப்படும். இதனை இரண்டு வகையில் நோக்குவர். 1. முன்வந்த எழுத்தே பின்னரும் வருதல் 2. முன்வந்த எழுத்திற்குரிய இன எழுத்தே மறுபடியும் வருதல். உதாரணம் : நாட்டை வளர்க்க நன்றாய் உழைப்போம்
நாட்டைக் காப்பதே நல்லோர் கடமை
75. கிளை எழுத்து என்றால் என்ன அவற்றை குறிப்பிடுக.
கிளை எழுத்து என்பது இன எழுத்துக்களையே குறிக்கும்.
1. அ, ஆ, ஐ, ஒள 2. இ, ஈ, எ, ஏ 3. உ, ஊ, ஒ, ஓ 4. ஞ, ந 5. LD, 6)I 6. த, ச
76. எதுகைத் தொடை என்றால் என்ன?
அடிதோறும் தொடக்கம் அல்லது அடி ஒன்றில் உள்ள சீரின் தொடக்கம் இரண்டாம் எழுத்தினால் ஒன்றத் தொடுக்கப்படுவது எதுகைத் தொடை எனப்படும்.
உதாரணம் : கருவியும் காலமும் செய்கையும் செய்யு
மருவினையும் மாண்ட தமைச்சு
77. முரண்தொடை என்றால் என்ன?
அடிதோறும் தொடக்கம் அல்லது அடி ஒன்றில் உள்ள சீர்கள் ஒன்றாது மாறுபட்ட சொல்லாலோ பொருளாலோ தொடுக்கப்படுவது முரண் தொடை எனப்படும்.
உதாரணம் : நன்மைக்குத் தீமையை நாம்செய்தல் நன்றாமோ
செ. சுதர்சன் 26/யாப்பிலக்கணம்
 

78. இயைபுத் தொடை என்றால் என்ன?
அடிதோறும் இறுதியாவது அல்லது சீரின் இறுதியாவது ஒன்றத் தொடுக்கப்படுவது இயைபுத் தொடை எனப்படும். இது சொல்லினால் தொடக்கப்படுவது, எழுத்தினால் தொடுக்கப்படுவது என அமையும்.
உதாரணம் : மாயோன் கூந்தற் குரலும் நல்ல
கூந்தலில் வேய்ந்த மலரும் நல்ல
79. அளபெடைத் தொடை என்றால் என்ன?
அடிதோறும் தொடக்கம் அல்லது அடி ஒன்றில் உள்ள சீரின் தொடக்கம் இசை கெடாமல் எழுத்தினால் அளபெடுத்துத் தொடுக்கப்படுவது அளபெடைத் தொடை எனப்படும்.
உதாரணம் : ஒஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தாஅம் இதற்பட்டது
80. அடி மோனைத் தொடை என்றால் என்ன?
அடிதோறும் முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பதே அடிமோனைத் தொடை
உதாரணம் : நாட்டை மறப்பது நன்மையில்லை
நாட்டை வைத்துத்தான் நம்மை மதிப்பரே
81. அடி இயைபுத் தொடை என்றால் என்ன?
அடிதோறும் இறுதிச்சீர் ஒன்றி வருதலே அடி இயைபுத் தொடை. உதாரணம் : மாயோன் கூந்தற் குரலும் நல்ல
கூந்தலில் வேய்ந்த மலரும் நல்ல
83. அடி எதுகைத் தொடை என்றால் என்ன?
அடிதோறும் இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுக்கப்படுவது. உதாரணம் : நூலென்றால் திருக்குறளே
பாலென்றால் முப்பாலே
84. அடி முரண்தொடை என்றால் என்ன?
அடிகள் தோறும் சொல்லும் பொருளும் மாறுபடத் தொடுக்கப்படுவதே அடி முரண்தொடை உதாரணம் : உறங்கு வதுபோலுஞ் சாக்கா டுறங்கி
விழிப்பது போலும் பிறப்பு
செ. சுதர்சன் 27/யாப்பிலக்கணம்

Page 16
85. அடி அளபெடைத் தொடை என்றால் என்ன?
அடிகள் தோறும் தொடக்கம் அல்லது அடி ஒன்றில் உள்ள சீரின் தொடக்கம் இசை கெடாமல் அளபெடுத்துத் தொடுக்கப்படுவதே அளபெடைத் தொடை
உதாரணம் : இலங்ங்கு வெண்பிறைசூ டீசனடி யார்க்குக்
கலங்ங்கு நெஞ்சமில்லை காண்
உறழ்ச்சித் தொடைக்குப் பின்வரும் அட்டவணையை நினைவிற் பதிக்குக
சீர் 1 சீர் 2 சீர் 3 சீர் 4
ese9HLQ. இணை (1,2) y ́ v ́ - | பொழிப்பு (1,3) y v/
ஒருஉ (1.4) w ́ vک கூழை (1,2,3) y v ́ v ́ மேற்கதுவாய் (1,3,4) y ́ - v ́ y ́ கீழ்க்கதுவலாய் (1,2,4) v/ vک y முற்று (1,2,3,4) v ́ y ́ y y
86. அந்தாதித் தொடை என்றால் என்ன?
ஓர் அடியில் அந்தமாய் நிற்கும் எழுத்து, அசை, சீர் முதலியன
அடுத்த அடியின் ஆதியாக வரும் வகையில் தொடுக்கப்படுவது அந்தாதித்
தொாடை எனப்படும்
உதாரணம் : உலகுடன் விளக்கும் ஒளிதிகழ் அவிர்மதி
- மதிநலன் அழிக்கும் வளங்கெழு முக்குடை
முக்குடை நீழல் பொற்புடை யாசனம் ஆசனத் திருந்த திருந்தொளி அறிவன் ஆசனத் திருந்த திருந்தொளி அறிவனை அறிவுசேர் உள்ளமோ டருந்தவம் புரிந்து துன்னிய மாந்தர தென்ப பன்னருஞ் சிறப்பின் விண்மிசை உலகே!
செ. சுதர்சன் 28/யாப்பிலக்கணம்

87. இரட்டைத் தொடை என்றால் என்ன?
அடியின் தொடக்கத்தில் வந்த சொல்லே அந்த அடியில் தொடர்ந்தும் வருவது இரட்டைத் தொடை எனப்படும்.
உதாரணம் : ஒக்குமே ஒக்குமே ஒக்குமே ஒக்கும்
விளக்கினிச் சீரெரி ஒக்குமே ஒக்கும் குளக்கொட்டிப் பூவின் நிறம்
88. செந்தொடை என்றால் என்ன?
முற்குறிப்பிட்ட தொடைகள் எதுவும் செயற்கையாய் அமையாது அசை, சீர், இசை முதலியவற்றால் அழகும் பொருத்தப்பாடும் அமையப் பெற்றுச் செய்யுளைச் சிறப்பித்து நிற்பது செந்தொடை எனப்படும்.
உதாரணம் : பூத்த வேங்கை வியன்சினை யேறி
மயிலினம் அகவும் நாடன் நன்னுதற் கொடிச்சி மனத்தகத் தோனே.
செய்யுளியல் 89. செய்யுள் என்றால் என்ன?
செய்யுள் என்பது உறுப்பியலில் கூறப்பட்ட உறுப்பெல்லாம் அமைந்து நிற்கச் சொற்களாலே பொருட்கு இடனாகச் செய்யப்படுது.
90. செய்யுள் எத்தனை வகைப்படும்?
செய்யுளானது பா என்றும் பாவினம் என்றும் இரு வகைப்படும்.
91. பா என்றால் என்ன?
பா என்பது பரந்துபட்டுச் செல்வதோர் ஓசை என விளக்கம்
பெறும். சிலர் அறம் முதலிய நான்கு பொருட்களையும் பாவி நீடந்ததால்
பா என்ற பெயர் பெற்றது எனக் கூறுவர்.
92. பா வகைகள் எவை?
1. வெண்பா
2. ஆசிரியப்பா 3. கலிப்பா
4. வஞ்சிப்பா
செ. சுதர்சன் 29/யாப்பிலக்கணம்

Page 17
93. பாக்களையும் அதற்குரிய ஓசைகளையும் குறிப்பிடுக.
வெண்பா - செப்பல் ஓசை - இருவர் உரையாடுவது போன்று அமைந்திருக்கும்
அகவற்பா / ஆசிரியப்பா - அகவல் ஓசை - ஒருவர் பேசுவது போல
அல்லது சொற்பொழிவாற்றுவது போல அமைந்திருக்கும்.
கலிப்பா - துள்ளல் ஓசை - கன்று துள்ளினாற் போல சீர்தே:ம் துள்ளிவரும் ஒசை. அதாவது ஓசை தாழ்ந்தும் உயர்ந்தும் வருவது
வஞ்சிப்பா - தூங்கல் ஓசை - சீர்தோறும் துள்ளாது தூங்கிவரும் ஓசை,
ஓசை தாழ்ந்து வருவது.
வெண்பா 94. வெண்பா என்றால் என்ன?
வெண்தளையும் அளவடியும் பெற்றுச் செப்பல் ஓசை உடையதாய் வரும் செய்யுளே வெண்பா.
95. வெண்பாவின் வேறு பெயர்கள் எவை?
வெண்பா, வெள்ளைப்பா, முதற்பா, அந்தணர்பா, வன்பா
96. வெண்பாவின் பொது இலக்கணத்தைக் குறிப்பிடுக
1. இயற்சீர் நான்கும் வெண்சீர் நான்கும் வருதல் வேண்டும்.
2. இயற்சீர் வெண்டளையும் வெண்சீர் வெண்டளையும் வருதல் வேண்டும்
3. ஈற்றடி சிந்தடியாக இருக்க ஏனைய அடிகள் அளவடிகளாக இருக்க
வேண்டும்.
4. நாள், மலர், காசு, பிறப்பு என்னும் வாய்பாட்டில் ஒன்றைக் கொண்டு
முடிவடைய வேண்டும்.
97. வெண்பாவின் வகைகளைக் குறிப்பிடுக.
குறள் வெண்பா - ஈரடி பெற்ற வெண்பா சிந்தியல் வெண்பா - மூவடி பெற்ற வெண்பா அளவியல் வெண்பா - நாலடி பெற்ற வெண்பா ப.றொடை வெண்பா - பல அடிகள் பெற்ற வெண்பா கலிவ்ெண்பா - பன்னீரடியின் மிக்கது.
98. குறள் வெண்பா என்றால் என்ன?
இரண்டு அடிகளை உடையது குறள் வெண்பா ஆகும். பாக்கள் எல்லாவற்றிலும் குறுமை உடையதால் குறள் என அழைக்கப்படுகிறது. (வெண்பாவிற்குரிய அனைத்து இலக்கணங்களையும் கொண்டு இரண்டடிகளில் அமையும்)
செ. சுதர்சன் 30/யாப்பிலக்கணம்
.

குறிப்பு : திருக்குறளில் வரும் வெண்பாக்கள் குறள்
வெண்பாவில் அமைந்தவை
99. குறள்வெண்பாவில் அமைந்த நூல் ஒன்று தருக.
திருக்குறள்
100. பின்வரும் செய்யுளின் சீர், தளை, அடி என்பவற்றைக் கண்டறிந்து
அது எவ்வகைப்பா எனக் குறிப்பிடுக. வேட்பத்தாஞ் சொல்லிப் பிறசொற் பயன்கோடல் மாட்சியின் மாசற்றார் கோள்
வேட்பத்தாஞ் (1) சொல்லிப் (2) பிறசொற் (3) பயன்கோடல் (4) மாட்சியின் (5) மாசற்றார் (6) கோள்
சீர் - தேமாங்காய், தேமா, புளிமா, புளிமாங்காய், கூவிளம், தேமாங்காய், நாள் (ஓரசை)
தளை - இலக்கங்கள் 1, 4, 6 - வெண்சீர் வெண்டளை
இலக்கங்கள் 2, 3, 5 - இயற்சீர் வெண்டளை அடி - இரண்டு அடிகளைக் கொண்டது. முதலாவது அடி நாலுசீர்
பெற்ற அளபடி. ஈற்றடி மூன்று சீர் பெற்ற சிந்தடி
இது குறள் வெண்பா ஆகும்.
101. அளவியல்வெண்பா என்றால் என்ன?
நான்கு அடிகளைப் பெற்று வெண்பாவிற்குரிய இலக்கணங்களால் அமைந்தது.
உதாரணம் : அப்பிலே தோய்த்திட்டு அடுத்தடுத்து நாமதனைத்
தப்பினால் நம்மையது தப்பாதோ - இப்புவியில் இக்கலிங்கம் போனாலென் ஏகலிங்க மாமதுரைச் சொக்கலிங்கம் தானிருக்கச் சொல்.
102 அளவியல் வெண்பாவின் இரண்டு வகைகளையும் குறிப்பிட்டு விளக்குக.
1. நேரிசை அளவியல் வெண்பா
வெண்பாவிற்குரிய இலக்கணங்களைக் கொண்டமைந்திருப்பதுடன் நாலடிகள் அமையப் பெற்று முதல் இரண்டடியில் எதுகை பெற்ற தனிச்சீரை இரண்டாவது அடியில் இறுதியில் பெற்றுவருவது நேரிசை அளவியல் வெண்பா ஆகும்.
செ. சுதர்சன் 31/யாப்பிலக்கணம்

Page 18
2. இன்னிசை அளவியல் வெண்பா
நாலடி வெண்பாவில் முதல் இரண்டடியின் எதுகை பெற்ற தனிச்சீரை இரண்டாவது அடியினிற்றில் பெறாது வருவது இன்னிசை அளவியல் வெண்பா ஆகும். இவ்வெண்பாவானது நாலடியும் ஒரே எதுகையைப் பெற்றும் அடிதோறும் தனிச் சொல் பெற்றும் இரண்டாம் அடியிலும் மூன்றாம் அடியிலும் தனிச்சொல் பெற்றும் இன்னும் பல வழிகளிலும் வரும்.
103. சிந்தியல் வெண்பா என்றால் என்ன? அதன் வகைகளைக்
குறிப்பிட்டு விளக்குக. சிந்தியல் வெண்பா, வெண்பாவுக்குரிய இலக்கணங்களைக் கொண்டிருப்பதுடன் மூன்று அடிகளால் அமையப் பெற்றது. இது நேரிசைச் சிந்தியல் வெண்பா, இன்னிசைச் சிந்தியல் வெண்பா என இருவகைப்படும்.
1. நேரிசைச் சிந்தியல் வெண்பா
மூன்று அடிகளைக் கொண்டு வெண்பாவிற்குரிய இலக்கணங்களால் அமையப்பெற்று இரண்டாம் அடியில் எதுகை பெற்ற தனிச்சொல் வந்தால் அது நேரிசைச் சிந்தியல் வெண்பா எனப்படும்.
2. இன்னிசைச் சிந்தியல் வெண்பா
இது பல அடிகளால் ஆகிய வெண்பாவைக் குறிக்கும். இவ்வெண்பாவும் நேரிசைப் பட்றொடை வெண்பா, இன்னிசை ப.றொடை வெண்பா என இருவகைப்படும்.
104. ப.றொடை வெண்பா என்றால் என்ன, அவற்றின் வகைகளைக்
குறிப்பிட்டு விளக்குக.
இது வெண்பாவிற்குரிய இலக்கணங்களைக் கொண்டு பல அடிகளில் அமைந்திருக்கும். நேரிசைப் ப.றொடை வெண்பா, இன்னிசைப் ப.றொடை வெண்பா என இருவகைப்படும்.
1 நேரிசைப் ப.றொடை வெண்பா பல அடிகளாலாகி வெண்பாவிற்குரிய இலக் கணங்களில் அமையப்பெற்று இவ்விரண்டடிக்கு ஓர் எதுகையாய் இரண்டடிக்கு ஒருமுறை அவ் இரண்டின் எதுகையை உடைய தனிச்சொல் பெற்றுவரும்.
2. இன்னிசைப் ப.றொடை வெண்பா பல அடிகளால் அமைந்து வெண்பாவிற்குரிய இலக்கணங்களால் அமையப் பெற்று இரண்டடிக்கு ஓர் எதுகை பெற்ற தனிச்சொல் கொண்டு வராத வெண்பா எல்லாம் இன்னசை பஃறொடை வெண்பா ஆகும்.
செ. சுதர்சன் 32/யாப்பிலக்கணம்

105. கலிவெண்பா என்றால் என்ன, அவற்றின் வகைகளை விளக்குக. வெண்பாவிற்குரிய இலக்கணங்களால் அமையப்பெற்று பன்னிரண்டு அடியைவிடக் கூடியதாய் அமையும்
இது நேரிசைக் கலிவெண்பா, இன்னிசைக் கலிவெண்பா என இருவகைப்படும். நேரிசைக் கலிவெண்பா என்பது ப.றொடை வெண்பாவேபோல் இரண்டிரண்டடி ஓர் எதுகையாய் அவ் எதுகை பெற்ற தனிச்சீரை அவ்இரண்டாம் அடியின் ஈற்றில் பெற்றுவருவது. அவ்வாறு தனிச்சொல் பெறாது வருவது இன்னிசை கலிவெண்பா ஆகும்.
ஆசிரியப்பா 106. ஆசிரியப்பாவிற்குரிய பொது இலக்கணத்தைக் குறிப்பிடுக.
1. கனிச்சீர் தவிர்நத ஏனைய எட்டுச்சீரும் வரும். 2. இருவகை வஞ்சித்தளைகளும் அல்லாத ஏனைய ஐந்து தளைகளும்
வரும் 3. நெடிலடியும் கழிநெடிலடியும் அல்லாத ஏனைய அடிகள் வரும். 4. ஏகாரத்தில் முடிவடையும். உதாரணம் : கருங்கால் வேம்பின் ஒண்பூ யாணர்
என்னை இன்றியும் கழிவது கொல்லோ sipu லெழுந்த வெண்கோட் டதவத் தெழு குளிறு மிதித்த ஒரு பழம் போலக் குழைய கொடியோர் நாவே காதலர் அகலக் கல்லென்றவ்வே
107. ஆசிரியப்பாவின் வகைகள் எவை? 1. நேரிசை ஆசிரியப்பா 2. இணைக்குறள் ஆசிரியப்பா 3. நிலைமண்டில ஆசிரியப்பா 4 அடிமறிமண்டில ஆசிரியப்பா
108. நேரிசை ஆசிரியப்பா என்றால் என்ன?
ஆசிரியப்பாவிற்குரிய இலக்கணங்களைக் கொண்டு அமையப்
பெற்றிருப்பதுடன் ஈற்றயலடி சிந்தடியாக அமைய ஏனைய அடிகள் எல்லாம்
அளபடியாக அமையப் பெற்றிருப்பது நேரிசை ஆசிரியப்பா ஆகும்.

Page 19
109 இணைக்குறள் ஆசிரியப்பா என்றால் என்ன?
சிந்தடியோடு குறளடியும் இணைந்து வருவது இணைக்குறள்
ஆசிரியப்பா ஆகும். இணைக்குறள் ஆசிரியப்பாவின் முதலாவது அடியும்.
இறுதி அடியும் அளபடிாயகவே அமைந்திருக்கும்.
110. நிலைமண்டில ஆசிரியப்பா என்றால் என்ன?
ஆசிரியப்பாவிற்கு உரிய இலக்கணத்தால் அமையப்பெற்று எல்லா அடியும் அளபடியாக அமைந்த பா நிலைமண்டில ஆசரியப்பா ஆகும்.
111. அடிமறிமண்டில ஆசிரியப்பா என்றால் என்ன?
நிலைமண்டில ஆசிரியப்பாவில் எந்த அடியை முதல்வைத்து பொருள் கொள்ளினும் பொருள் மாறுபடாமல் இருப்பது. அதாவது ஒவ்வோர் அடியிலும் பொருள் முற்றுப் பெற்று அமைந்து இருக்கும். அடியை முன்னும் பின்னும் மாற்றிப் பொருள் கொள்வதால் இப்பெயர் பெற்றது.
குறிப்பு - ஆசிரியப்பாவில் வரும் அளவடிகள் பொழிப்பு மோனை பெற வேண்டும். சிந்தடிகள், முதற்சீரிலும் மூன்றாவது சீரிலும் மோனை பெறுவது சிறப்புடையதாகும்.
கலிப்பா 112. கலிப்பாவின் இலக்கணத்தைக் குறிப்பிடுக.
தேமா, புளிமா என்னும் மாச்சீர் இரண்டும் கருவிளங்கனி, கூவிளங்கனி என்னும் விளச்சீர் இரண்டும் அல்லாத ஏனைய எட்டுச் சீர்களும் வரும். நேர் ஒன்றிய ஆசிரியத்தளை அல்லாத ஆறுதளைகளும் வரும். எனினும் பெரும்பாலும் கலித்தளையே வரும். கலிப்பாவில் அளவடியே பெரும்பான்மையாக வரும்.
உதாரணம் : சுடர்தொடீஇ கேளாய். என்ற கலித்தொகைப் பாடலை
நோக்குக.
113. கலிப்பாவின் வகைகள் எவை?
1. ஒத்தாழிசைன் கலிப்பா
2 வெண்கலிப்பா 3. கொச்சகன் கலிப்பா 4 குறள் கலிப்பா
 

114. கலிப்பாவிற்குச் சிறப்பாக அமையும் உறுப்புக்களைக் குறிப்பிட்டு
விளக்குக. 1. தரவு - தரவு என்பது கலிப்பாவின் முதல் உறுப்பாகும். 2. தாழிசை - இது பாட்டின் இரண்டாவது உறுப்பாகும். "இசை தாழ்ந்து நிற்கச் சொற்கள் மேலெழுதல்" என இதற்குப் பொருள் கூறுவர். 3. அராகம் - இது கலிப்பாவின் மூன்றாவது உறுப்பாகும். அராகம் என்பது இசையைக் குறித்து நிற்கிறது. இசை ஒழுங்கில் அதிகரித்துச் செல்வதை இது குறிக்கும் 4. அம்போதரங்கம் - இது கலிப்பாவின் நான்காவது உறுப்பாகும்.
அலைபோல் சுருங்கி வருவதால் இப்பெயர் பெற்றது. 5. தனிச்சொல் - பொருள் தொடர்பு உடையதாய் ஓர் அசை அல்லது சீார தனித்து வருவதால் இது தனிச்சொல் எனப்படும். இது கலிப்பாவின் ஐந்தாவது உறுப்பாகும். - 6. சுரிதகம் - இது கலிப்பாவின் ஆறாவது உறுப்பாகும். கலிப்பாவைப் பொறுத்தவரையில் விரைந்து ஓசைவந்து பாட்டினை முடிக்கும் உறுப்பாகும்.
வஞ்சிப்பா 115. வஞ்சிப்பாவின் பொது இலக்கணத்தைக் குறிப்பிடுக.
குறளடியால் அல்லது சிந்தடியால் வந்து தனிச்சொல்லும் சுரிதகமும் வஞ்சிப்பா பெறும். பெரும்பாலும் கனிச்சீர்களும் வஞ்சித்தளையும் வரும் சிறுபான்மை பிறச்ரும் பிறதளைகளும் வரும், தூங்கல் ஓசை உடையது. சிற்றெல்லைக்கு மூன்றடி, பேரெல்லைக்கு வரையறை இல்லை.
உதாரணம் : மொழிவரையறை வரப்பாகவும்
விழிமொழியதன் இமையாகவும்
நல்லதொருசிர் விளங்குவேலியாந்
தொல்காப்பியம் நமதுமொழியாம்
தமிழெனும்மொழிக் கெனக்கிடைத்ததோர்
அமிழ்தமெனவும் உயிருடலுறை
எனவாங்கு
முரசு கொட்டி மழுக்கிப்
பறையைச் சாற்றுவோம் பாரினில் எங்குமே!
116. வஞ்சியப்பா வகைகள் எவை?
1. குறளடி வஞ்சிப்பா - இரண்டு சீர்களைக் கொண்டமைந்தது 2. சிந்தடி வஞ்சிப்பா - மூன்று சீர்களைக் கொண்டமைந்தது.

Page 20
பாவினம் 117. பாவினங்களைக் குறிப்பிடுக.
1. தாழிசை 2. துறை 3. விருத்தம்
118. நால்வகைப் பாக்களுக்குரிய பாவினங்களையும்
குறிப்பிடுக.
நாவகைப் பாக்களுக்கு மூவகைப் பாவினங்கள் உண்டு. 1) வெண்பாவினம் 1) வெண்தாழிசை
2) வெண்துறை 3) வெளிவிருத்தம்
2) அகவற் பாவினம் 1) ஆசிரியத்தாழிசை
2) ஆசிரியத் துறை 3) ஆசிரிய விருத்தம் f
3) கலிப்பாவினம் 1) கலித்தாழிசை s t
2) கலித்துறை ', ' ' 3) கலிவிருத்தம்
4) வஞ்சிப்பாவினம் 1) வஞ்சித்தாழிசை . 2) வஞ்சித்துறை
3) வஞ்சி விருத்தம்
 
 
 
 


Page 21

ாம்த உயர்தர் \