கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: 25 கட்டுரைகள்: க.பொ.த.உயர்தரம், க.பொ.த.சாதாரணதரம்

Page 1


Page 2

(25ted 602/72567
க.பொ.த. (உ/த) க.பொ.த.(சா/த)
இசிரி/ை செல்வி யோகடீைசுறு. 867 Doria/Tob B.A (Dip in. Ed)

Page 3
எழுதியவர்
பதிப்புரிமை
முதற் பதிப்பு
அச்சுப்பதிப்பு
விலை
முகவரி
25
கட்டுரைகள்
செல்வி யோகலட்சுமி சோமசுந்தரம்
ஆசிரியருக்கே
2008-02-10
G. H. Printers
160/=
"தமிழ்ச் சோலை’
30/2 10 ஆம் ஒழுங்கை,
வைரவபுளியங்குளம்,
வவுனியா,
a Disjugori)
கல்வி என்னும் ஞானவிளக்கை ஏற்றி அறிவுக் கண்ணைத் திறந்த எனது பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய என்னருமை ஆசான்களிற்கு இந்நூல் சமர்ப்பணம்

என்னுரை
"வாசிப்பினால் மனிதன் பூரணத்துவம் பெறுகிறான்” உணவு உடலை வளர்ப்பது போல வாசிப்பும் அறிவை வளர்க்கின்றது. ஒவ்வொரு மனிதனின் வளர்ச்சியிலும் வயிற்றுப் பசிக்கு இணையான முக்கியத்துவம் அறிவுப் பசிக்கும் உண்டு. ஒவ்வொருவரின் வாழ்க்கைப் பயணத்திலும் அறிவைப் பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் பல உண்டு. எனினும் நம் அனுபவங்களிலிருந்து நாம் கற்ற பாடம் முடியுமானவரை நூல்களைக் கற்கவேண்டும். ஏனெனில் அவரவர் அனுபவமே அவரவர்க்கு சிறந்த வழிகாட்டி எனவே மற்றவர்களும் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் சில கட்டுரைகளை முன்வைத்துள்ளேன். மற்றவர்களின் உயர்வில் பங்கு கொள்வதால் கிடைக்கும் மனநிறைவு வேறு எதிலும் இல்லை. கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் நல்லதையே நினைத்துச் செயற்பட்டுள்ளேன். ஒரு செயலில் வெற்றியடையும் போது ஏற்படும் மனநிறைவே திருப்தி தருவது. செய்தது சொற்பமே இன்னும் செய்ய வேண்டியது மிக அதிகம்.
தேவைக்கும் தேடலுக்கும் ஏற்றவாறு இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டு க.பொ.த (சாத) க.பொ.த (உத) மாணவர்களின் எழுத்தாற்றலை விருத்தி செய்யும் நோக்குடன் இருபத்தைந்து (25) கட்டுரைகளை முன்வைத்துள்ளேன்.
கட்டுரை எழுதும் ஆற்றல் இன்று மாணவர்களிடையே குறைந்து வருகின்றது. அத்துடன் அவர்கள் கட்டுரை எழுதுவதையும் தவிர்த்துக் கொள்கின்றனர். நிதானமாகச் சிந்திக்கவோ எழுதவோ அவர்களுக்குப் பொறுமையில்லை. எழுத்தாற்றல் கட்டாயமாக விருத்தி செய்யப்படவேண்டிய ஒன்று. ஏனெனில் ஒருவர் தமது கருத்தைப் பிறருக்குப் புலப்படுத்த வேண்டுமாயின் சரியான முறையில் அதனைப் புலப்படுத்த எழுத்தாற்றல் மிக மிக அவசியம். அத்துடன் பரீட்சையில் கட்டுரை கட்டாய வினாவாக இருப்பதுடன்
அதிக புள்ளிகளையும் பெற்றுத்தருவது.
CH) கட்டுரைகள்

Page 4
பந்தியமைப்பு, வாக்கிய அமைப்பு, விடய உள்ளடக்கம், குறியீட்டுப்
பயன்பாடு ஆகியவற்றின் தன்மைகளை மாணவர்கள் அறிந்து, அதற்கேற்ப தம்
ஆற்றலை விருத்தி செய்ய இக்கட்டுரைகள் உதவும் என்பது எனது நம்பிக்கை
தீராத ஆர்வம் ஒன்றே பற்றுக்கோடாக இப்பணியினை மேற்கொண்டுள்ளேன். மாணவர்
உலகம் இதனைப் பெரிதும் வரவேற்கும் என நம்புகின்றேன்.
நன்றி
30/2 “தமிழ்ச் சோலை” இங்ங்னம்,
10് ഉഗ്രൂട്ടങ്ങ5, பண்டிதைசெல்வியோகலட்சுமி
வைரவபுளியங்குளம், (Bay (TLD&#f5f5JJub B.A (Dip.in. Ed)
ഖഖുങ്ങിult.
T. PO24 - 222 1605
 

அணிந்துரை
ܗܝ
- தமிழ்மணி அகளங்கன் -
இக்கட்டுரைத் தொகுப்பு நூல் காலத்தின் தேவையறிந்து இப்பொழுது
வெளியிடப்படுகிறது.
இந்நூலின் ஆசிரியர் ஒரு பண்டிதை. அத்தோடு கலைமாணிப் பட்டதாரியுங்கூட ஆசிரியப்பணியை அறப்பணியாகச் செய்து அப்பணிக்கே தன்னை அர்ப்பணித்தவர். பட்டப்பின்படிப்புக் கல்வி டிப்ளோமா பட்டம் பெற்றவர். தமிழ்ப்பாட
ஆசிரிய ஆலோசகராப் பணிபுரிந்தவர்.
ஓய்வு பெற்ற பின்பும் கல்விப்பணியில் தன்னை இணைத்துக் கொண்டவர். வவுனியா குருமன்காடு ரீகாளியம்மன் தேவஸ்தானத்தால் நடாத்தப்பட்ட சைவப்புலவர்
வகுப்புகளில் விரிவுரையாளராக சிறந்த பணிபுரிந்தவர்.
கலைமாணி முதற் தேர்வு இறுதித்தேர்வு மாணவர்களின் இலக்கண அறிவு வளர்ச்சிக்காக வினாத்தாள்களில் வெளிவந்த வினாக்களுக்கு (வெளிவாரி பேராதனை) விடை எழுதி நூலாக்கி உயர்கல்வி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு அரிய
பணியை ஆற்றியவர்.
வவுனியாவில் நடைபெறும் இலக்கிய விழாக்களிலும் ஆன்மீக விழாக்களிலும் இவரின் பங்களிப்பு முக்கியமானது பேச்சு பட்டி மண்டபம் வழக்காடு மன்றம், போட்டிகளின் நடுவர் எனப் பல வகைகளில் எமக்கு ஒத்துழைத்துத் தன் நுண்மாண்
நுழைபுலத்தாலும், ஆற்றலாலும் பெயர் புகழ் பெற்றவர்.
GwO கட்டுரைகள்

Page 5
பண்டிதை செல்வி.யோகலட்சுமி சோமசுந்தரம் என்ற இவரது பெயர் பிரபலமானது. யோகாரீச்சர் என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படுபவள் இவர். தமிழ்ப்பணி, சமயப்பணி, சமூகப்பணி எனப் பணி செய்து பண்போடு வாழ்ந்து
வருபவர்.
இவரின் இக்கட்டுரைத் தொகுப்பு இருபத்தைந்து ஆக்கங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. க.பொ.த (சாத) க.பொ.த (உத) மாணவர்களின் பரீட்சைத் தேவையை முதல் நோக்கமாகக் கொண்டு அறிவை வளர்க்கும் முகமாக
இவ்வாக்கங்கள் எழுதப்பட்டுள்ளன.
பொலித்தீன் பாவனை பற்றிய துண்டுப்பிரசுரம், விலைவாசி ஏற்றம் பற்றிய கலந்துரையாடல், பாதுகாப்பான நகரம் பற்றிய பேச்சு ஆகியவை தவிர ஏனைய
ஆக்கங்கள் கட்டுரைகள்.
இலக்கியமும் சமூகமும், சிறுவர் இலக்கியம், புகலிடத் தமிழ் இலக்கியம், திரைப்படங்களும் சமூகமும், இலங்கைத் தமிழ் நாட்டார் பாடல்கள், கலைகளும் சமுதாயமும் ஆகிய ஆறு கட்டுரைகளும் கலை இலக்கியம் சமூகம் சார்ந்த
கட்டுரைகள்.
தகவல் தொழில் நுட்பம், கடல்கோள்களும் அழிவுகளும், தமிழ் இணையம், ஊடகங்களும் தமிழ் மொழி வளர்ச்சியும், இந்நான்கு கட்டுரைகளும் விஞ்ஞானம்
சமூகம் சார்ந்த கட்டுரைகள்.
இன்றைய சிறுவர்களே நாளைய தலைவர்கள், இடப்பெயர்வுகளும், அவலங்களும், எண்ணித் துணிக கருமம், சூழல் மாசடையாது பாதுகாத்தல், நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம், விலங்குகளிடம் இருந்து மனிதன் கற்றுக்
கொள்ள வேண்டியவை, நீர்மாசடைதல், வீதி விபத்துக்கள் உயர்கல்வியும்,
GvīD

ஆங்கிலமும், உலக மயமாதலும், பண்பாட்டுத் தனித்துவமும், கற்றது கைம் மண்ணளவு கல்லாதது உலகளவு, மெய்ப்பொருள் காண்பதறிவு ஆகிய பன்னிரண்டு
கட்டுரைகளும் உற்சாக மூட்டல், வழிநடாத்தல், சிந்திக்கச் செய்தல் என்னும்
பண்புகளைக் கொண்டவை.
இந்நூலாசிரியர் ஆசிரியர் பணியாற்றியவர் என்ற காரணத்தால் மாணவர்களின் வயது, அறிவு என்பவற்றை அறிந்து உளவியல் ரீதியாக உள்ளத்தில் பதியும்
வண்ணம் இக்கட்டுரைகளை எழுதியிருப்பது பாராட்டுக்குரியது.
இக்கட்டுரைத் தொகுப்பில் பல அரிய தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதால்,
மாணவர்களுக்கு மட்டுமன்றி மற்றையோர்க்கும் இந்நூல் பயன்படக்கூடியது.
நவீன உரை நடைப் பண்புகளைப் பயன்படுத்துவதில் இந்நூலாசிரியர் இன்னும் கவனம் செலுத்தினால் இவரது அடுத்த நூல் இன்னும் சிறப்புற அமையும் என்ற ஆலோசனையை வழங்கி இவரது இம்முயற்சி வெற்றியளிக்க வாழ்த்துகிறேன்.
தமிழ்மொழி, இலக்கியம், சமூகம், கலைகள் சார்ந்த இவரது அறிவும், சைவசமயம் சார்ந்த அறிவும் இன்னும் பலவகையில் வெளிப்படுத்தப்பட்டால் அடுத்த
தலைமுறைக்கு அது மிகவும் பயன்படும் என உறுதியாக நம்புகிறேன்.
இவரது முயற்சியின் பயன்பாட்டைப் பெற மாணவர்களைத் தயாராகும்படி வேண்டி நிறைவு செய்கிறேன்.
நன்றி
-அகளங்கன்
90. திருநாவற்குளம், வவுனியா.
(i) கட்டுரைகள்

Page 6
1.
நூலின் உள்ளே.
இலக்கியமும் சமூகமும்
தகவல் தொழினுட்பம்
கடற்கோள்களும் அழிவுகளும்
சிறுவர் இலக்கியம்
இன்றைய சிறுவர்களே நாளைய தலைவர்கள்
இடப்பெயர்வுகளும் அவலங்களும்
புகலிடத் தமிழ் இலக்கியம்
திரைப்படங்களும் சமூகமும்
தமிழ் இணையம்
எண்ணித் துணிக கருமம்
சூழல் மாசடையாது பாதுகாத்தல்
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
விலங்குகளிடம் இருந்து மனிதன் கற்றுக் கொள்ள வேண்டியவை
நீர் மாசடைதல்
வீதி விபத்துக்கள்
பொலித்தீன் பாவனை பற்றிய துண்டுப் பிரசுரம்
இலங்கைத் தமிழ் நாட்டார் பாடல்கள்
விலைவாசி ஏற்றம் பற்றிய கலந்துரையாடல்
கலைகளும் சமுதாயமும்
ஊடகங்களும் தமிழ்மொழி வளர்ச்சியும்
உயர்கல்வியும் ஆங்கிலமும்
உலக மயமாதலும் பண்பாட்டுக் தனித்துவமும்
கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு
பாதுகாப்பான நகரம் பற்றிய - பேச்சு
மெய்ப்பொருள் காண்பது அறிவு
பக்கம்
01 - 04.
0.5 - 08
09 - 11
12 - 15
16 - 19
20 - 23
24 - 25
26 - 29
30 - 32
33 - 34
35 - 38
39 - 41
42 - 44
45 - 47
48 - 50
51 - 53
54 - 58
59 - 63
64 - 67
68 - 70
71 - 73
74 - 77
78 - 80
81 - 83
84 - 87

1. இலக்கியமும் சமுகமும்
மொழி, பண்பாடு, இனம், பழக்கவழக்கம் என்பவற்றின் அடிப்படையில் ஒரு
கூட்டத்தினர் தம்முள் ஒன்றுகூடி குறிப்பிட்ட ஒரு இடத்தில் கூடி வாழும் போது
அவர்களை ஒரு சமூகத்தினர் என்பர். எனவே சமூகம் என்பதற்கு கூட்டு வாழ்வே
அடிப்படை என்பர். அவன் நம்மவன், நாம் அவனோடு இணைந்து வாழ வேண்டும்
என்று நினைத்த நினைப்பே சமூகத்தை உருவாக்கிற்று. இத்தகைய சமூகத்திலிருந்து
தோன்றிய திறன்மிக்க எழுத்தாளர்கள் படைக்கும் படைப்புக்களை இலக்கியம் என்டர்.
இலக்கியம் என்பதற்கு அறிஞர்கள் பற்பல விமர்சனங்களைச் செய்வர். எவ்வாறாயினும்
வாழ்வினை அடிப்படையாகக் கொண்டு நல்ல உளம் படைத்த கவிஞனிடம் இருந்து
உருப்பெற்று வருவனவற்றை இலக்கியம் என்பர். உலகியல் வாழ்வையும் உயரிய
நோக்கத்தையும் உணர்த்தும் இலக்கியங்கள் காலத்தை வென்று வாழும் தன்மையின.
உண்மை அனுபவத்தின் அடிப்படையில் கவிஞன் உலகியலை உணர்த்தும் போது
அவ் உணர்வு நம் உணர்வையும் பற்றிக் கொண்டு பயில்வோனைத் தன் இனமாக
மாற்றும் தன்மை உடையதாக அமையும் போது அவ் இலக்கியம் சிறந்த இலக்கியம்
ஆகும்.
இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பல நல்ல இலக்கியங்கள்
சமூகத்தில் தோன்றி மலர்ந்தன. இவை நாட்டின் ஒருமைப்பாட்டினையும், பிற நல்ல
இயல்புகளையும், பிரச்சினைகளையும், மக்கள் வாழ்வியல் அம்சங்களையும் பிரதிபலிக்கும்
ஆற்றல் உடையவை. இத்தகைய இலக்கியங்களுள் சில காலத்தை வென்று வாழும்
இலக்கியங்களாகவும், காலம் வரையறுக்க முடியாத இலக்கியங்களாகவும் உள்ளன.
எவ்வாறாயினும் இலக்கியங்கள் யாவும் சமூகத்திலிருந்தே தோன்றுவதுடன்
சமூகப்பண்பாடுகளையும். தேவைகளையும் பிரதிபலிப்பனவாய் அமைகின்றன. எனவே
இலக்கியமும் சமூகமும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்தவை என்பது வரலாற்று
உண்மையாகும்.
காலம் தோறும் மக்களின் சூழ்நிலைக்கும் தட்ப வெப்பநிலைக்கும், பிறவற்றுக்கும் ஏற்பவே அவர் தம் வாழ்க்கை முறையும், பண்பாடும், பிற இயல்புகளும்
அமைந்திருந்தன. எனவே இலக்கியங்கள் அவற்றை வெளிப்படுத்துவனவாக அமைந்தன.
( ) கட்டுரைகள்

Page 7
இலக்கு இயம் இலக்கியம். எனவே ஒரு இலக்கை அதாவது மக்களின் நாளாந்த
வாழ்க்கையை மையமாகக் கொண்டு கவிஞர்கள் செய்யுட்களை புனைந்தனர். வரலாற்றுரீதியாக சமூகப் பண்பாட்டை ஆராயும் போது சங்க கால மக்கள் அகமும்
புறமும் முரண்பாடில்லாத வாழ்க்கையை வாழ்ந்தனர். தாம் கண்ணால் கண்டு மனதால் உணர்ந்து அனுபவித்தவற்றை பொருளாகக் கொண்டு செய்யுட்களை செய்தனர். அவர்கள்
வாழ்வில் காதலும் வீரமும் சிறப்பிடம் பெற்றன. அதற்கேற்ப அக்காலப் பகுதியில்
எழுந்த செய்யுட்களை அகம், புறம் என இரு கூறாக வகுத்தனர். அகப் பொருள் இலக்கியங்கள் அவர்களது அகத்தில் ஏற்பட்ட காதல் உணர்வுகள், போராட்டங்கள்,
விருப்பு வெறுப்புக்கள், தேவைகள் என்பவற்றை சித்திரிப்பனவாக அமைந்திருந்தன.
மன்னர்களது ஆட்சி சிறப்பு, கொடை, வீரம் முதலியவற்றை சித்தரிப்பனவாக எழுந்த
இலக்கியங்களைப் புறத்திணை இலக்கியங்கள் என்பர். அதாவது சமூகப் போக்கிற்கும்,
காலத்திற்கும் ஏற்ப இலக்கியங்கள் படைக்கப்பட்டன. எனவே சமூகமும் இலக்கியமும்
ஒன்றோடு ஒன்று நெருங்கிய தொடர்பு உடையனவாக விளங்கின எனலாம். புலவர்களும்
மன்னர்களும் ஒன்றுபட்டு வாழ்ந்தனர். புலவர் அன்பைப் பெறுவதை மன்னர் பெரும் பேறெனக் கருதினர். புலவர்களும் தெளிந்த உள்ளம் உடையவர்களாய் உண்மையை
எடுத்துக்கூறும் மனத்திண்மை நிறைந்தவர்களாய் விளங்கினர். எனவே மன்னர்களுக்கும்
புலவர்களுக்கும் இடையே நெருங்கிய ஈடுபாடு காணப்பட்டது. இத்தகைய நிலையில்
எழுந்த இலக்கியங்கள் யாவும் சமூகத்தை சித்திரிப்பனவாக எழுவதில்
வியப்பொன்றுமில்லை.
வரலாற்று ரீதியாக சங்க மருவிய காலத்தை நோக்குமிடத்து இக்காலப் பகுதியில் வாழ்ந்த மக்களுக்கு மன அமைதி தேவைப்பட்டது. காதல், வீரம் என்ற
மரபுக்குள் சிக்குப்பட்டிருந்த இலக்கியங்கள் அகம், இன்பம் ஆகியவற்றில் ஏற்பட்டிருந்த
பற்றினைக் குறைத்து நிலையாமை பற்றி சிந்திக்கத் தலைப்பட்டன. “வாழ்வாவது
மாயம்” என்ற கருத்து மேலோங்கியது. சமண பெளத்தச் செல்வாக்கினால் திருக்குறள்,
நாலடியார், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற இலக்கியங்கள் எழுந்தன. வையத்துள் வாழ்வாங்கு வாழும் ஒழுக்க நெறியினை போதிப்பனவாக இத்தகைய இலக்கியங்கள் அமைந்தன. எனவே இவை விரக்தியுற்ற மக்களுக்கு ஆறுதலளிப்பனவாகக்
காணப்பட்டன. சமூக வாழ்க்கையும், சமயவாழ்க்கையும் பின்னிப் பிணைய சங்கமருவிய
G2D- கட்டுரைகள்

கால பிற்பகுதியில் காரைக்கால் அம்மையாரதும் முதல் மூன்று ஆழ்வார்களதும் பாசுரங்கள் பெரும் துணை புரிந்தன. இவ்வாறு காலந்தோறும் தோற்றம் பெற்ற
இலக்கியங்கள் யாவும் அக்கால சமூகத்தைப் பிரதிபலிப்பனவாக அமைந்தன.
பல்லவர் காலப்பகுதியில் வாழ்ந்த மக்கள் சமயத்தின் மீது பற்றுக் கொண்டனர்.
சமயப் போட்டிகள், பூசல்கள் இடம் பெற்றன. ஒவ்வொருவரும் தத்தம் சமயக் கொள்கைகளை நிலை நிறுத்துவதற்காக முனைப்புடன் செயற்பட்டனர். தம் உள்ளத்தில் தாம் அநுபவித்த இறை அநுபவத்தை அப்படியே பிரதிபலித்தனர். எனவே இக்காலப் பகுதியில் எழுந்த இலக்கியங்கள் இறையனுபவங்கள், இறையுணர்வு ஆகியவற்றைப் புலப்படுத்தும் வகையில் பக்தி இலக்கியங்களாகத் தோற்றம் பெற்றன. அதாவது சமூகமே இலக்கியங்களுக்கு வேண்டிய கருப்பொருளை வழங்கியது. எனவே சமூகமும் இலக்கியமும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாதவை எனலாம்.
சோழர்காலம் கலை நிறைவுக் காலம், இலக்கிய நிறைவுக் காலம், காவிய எழுச்சிக்காலம் என்றெல்லாம் சிறப்பாகப் போற்றப்படுகிறது. இதற்கு காரணம் அக்கால சமுதாய அமைப்பில் காணப்பட்ட மன நிறைவே. சோழப் பெருமன்னர் ஆட்சியில் செல்வச் செழிப்பும், எல்திரமான அரசியல் நிலையும் காணப்பட்டமையால் அக்காலப்பகுதியில் எழுந்த இலக்கியங்கள் அக்கால சமூகத்தைப் பிரதிபலிப்பனவாக உயிரோட்டமுள்ள இலக்கியங்களாக மலர்ந்தன. இறையுணர்வு மூலம் நிறைவு காண முற்பட்ட சமுதாயம் சூக்கும வடிவில் உள்ள இறைவனை அடைவதற்குரிய வ்ழிமுறைகளை நீண்ட கதைகளாகக் கூறும் வகையில் இலக்கியங்களைப் படைத்தனர். கம்பராமாயணம், கந்தபுராணம், பெரியபுராணம், சீவக சிந்தாமணி என ஒவ்வொரு சமயமும் தத்தம் சமய உண்மைகளை விரித்து இலக்கியங்களைச் சமைத்தன. எனவே சமுதாயத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் சோழர்காலப் பகுதியில்
எழுந்த இலக்கியங்கள் காணப்பட்டன எனலாம்.
இலக்கியங்கள் மக்கள் வாழ்க்கையை பிரதிபலிப்பன சமூகத்தை விமரிசிப்பது
என்ற இவ் அடிப்படையில் நாயக்கள் காலப்பகுதியில் எழுந்த இலக்கியங்கள் வரண்ட இலக்கியங்களாகக் காணப்பட்டன. வித்துவத்தன்மை மிக்க புலவர்கள் காணப்பட்ட
போதும் அமைதியற்ற அரசியல் சூழ்நிலை ஆதிரிப்பார் இன்மை, விரக்தி என்பன
C.3) கட்டுரை கள்

Page 8
அவர்களைச் சமூகத்திலிருந்து விலக்கியது. எனவே சமூகத்தின் மீது ஏற்பட்ட வெறுப்புக்களை வசைக்கவிகள், தனிப்பாடல்கள் மூலம் வெளிப்படுத்தினர். தமது வித்துவத் தன்மையைப் பிரபந்தங்கள் மூலம் வெளிப்படுத்தினர். எனவே உயிர்த்துடிப்பற்ற சமூகத்திலிருந்து எழுந்த இலக்கியங்களும் வரண்டனவாக இருப்பதில் புதுமை ஒன்றும் இல்லை. எனினும் பொதுமக்களைப் போற்றும் பள்ளு, குறவஞ்சி ஆகியனவும் சமயத்தின் மீது கொண்ட பற்றுக் காரணமாக சித்தர் பாடல்களும், தலபுராணங்களும் கூட
தோற்றம் பெற்றன. எனவே காலத்தின் கண்ணாடியே இலக்கியம். அவ் இலக்கியங்கள்
சமூகத்தைப் பிரதிபலிப்பன என்பது யாவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய பேருண்மையாகும்.
காலங்காலமாக சமூகத்தில் ஏற்பட்டுவரும் மாற்றங்களுக்கு ஏற்ப இலக்கியங்களும் உருவத்திலும், உள்ளடக்கத்திலும் மாற்றம் பெற்று வந்தமை யாவரும் அறிந்த உண்மை, அச்சியந்திர வருகை, கல்வி மறுமலர்ச்சி ஆகியன ஐரோப்பியர் காலப்பகுதியில் நூல்கள் பல தோற்றம் பெறவும், புதிய இலக்கிய வடிவங்களாகிய நாவல், சிறுகதை, உரைநடை, நாடகம் போன்றன எழிச்சி பெறவும் காரணமாயிற்று. அத்துடன் மன்னர் புகழ்பாடும் இலக்கியங்கள் 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சமூகப் பிரச்சினைகளை வெளிப்படுத்துவனவாக மாற்றம் பெற்றன. தொடர்ந்து இன்றுவரை தோற்றம் பெற்ற இலக்கியங்கள் யாவும் சமூகத்தில் நிலவிய சாதிப்பிரச்சினை, சீதனக் கொடுமை, இனப்பிரச்சினை, பெண்ணியம், முதலாளித்தும், பொதுவுடமை போன்ற கருத்துக்களை மையமாக வைத்தே எழுதப்பட்டன. எனவே இலக்கியத்துக்கு வேண்டிய கருப்பொருளை சமூகம் வழங்க, சமூகத்திலிருந்து தோற்றம் பெற்ற எழுத்தாளர்கள் சமூகத்தை பிரதிபலிக்கும் வகையில் இலக்கியங்களைப் படைத்தனர் என்பதை வரலாற்று ரீதியாக ஆராய்ந்து பார்க்கும் போது கண்டுகொள்ளக் கூடியதாக உள்ளது. எனவே சமூகமும் இலக்கியமும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்துள்ளன
6T6076)T(b.
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SSS S S S S S S S S S S SS S S S S S S S S S S S
C4D----------- கடஜகள்

2. தகவல் தொழில்நுட்பம்
தகவல் தொழில்நுட்பம் பற்றிய சிந்தனை இன்று வேகமாக வளர்ச்சி பெற்று பலராலும் ஆராயப்பட்டு வருகிறது. எனவே அதுபற்றி சிந்திக்கவேண்டியது நம் ஒவ்வொருவரதும் கடமையாகும். தகவலை உருவாக்குவதற்கும் பரிவர்த்தனை செய்வதற்கும் பயன்படும் நவீனத்துவமான தொழில்நுட்பமே தகவல் தொழில்நுட்பம் எனப்படும். உலகம் உருவாகிய காலத்திலிருந்தே தகவல் தொடர்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. தகவல் அளித்தல், கல்வி, பொழுதுபோக்கு எனும் மூன்று வழக்கமான பணிகளைச் செய்வதுடன் பொதுக்கருத்தை உருவாக்குவதற்கும் தகவல் தொடர்பு அவசியமானது. அதாவது மனிதன் பிறப்பிலிருந்து இறப்புவரை சகல நடவடிக்கைகளும் தகவலுடன் தொடர்புபட்டது. தகவல் அறிவுடன் தொடர்புபட்டது. தர்க்க ரீதியில்
ஆராயப்பட வேண்டியது.
மனிதன் தனித்து வாழ முடியாது. அவர்கள் ஒருவருக்கொருவர் தகவல்களைப் பரிமாறிக்கொண்டே இருக்கின்றனர். எனவே மனித சமுதாயத்தின் தோற்றமே தகவல் பரிமாற்றத்தால் தான் சாத்தியமானது. ஒவ்வொரு மனிதனும் ஒரு நாளில் சில மணி நேரங்களாவது தகவல் பரிமாற்றத்துக்கெனச் செலவிடுகின்றான். தகவல் ஒரு சமூகத்தையும் நாட்டையும் உருவாக்கும் ஆற்றல் பெற்றது. தகவல் பரிமாறிக் கொள்வதில் வயது முதிர்ந்தவர்களும், குழுமங்களும் கூடிய பங்காற்றுகின்றன. ஏனெனில் அவர்களே நீண்டகாலம் வாழ்ந்து உலக அறிவைப் பெற்றவர் என்பதனால் அவர்களுக்கு இப்பொறுப்பு வழங்கப்படுகின்றது. எனவே சரியான முறையில் சரியான தகவலைப் பயன்படுத்தும்
போதே நாம் வளர்ச்சிப் பாதையில் செல்ல முடியும் என்பதில் ஐயம் இல்லை.
மனித சமூகம் தோன்றிய காலத்திலிருந்தே அதாவது மொழி தோன்றுவதற்கு முன்னரே தகவல் இடம் பெற்றுவிட்டது. அது இயற்கையாக உயிரினங்கள் உள்ள இடங்களில் எல்லாம் இடம் பெற்றுவிட்டது. விலங்குகள் பறவைகள் கூட தகவல்களைக் குரலொலிகள், சமிக்ஞைகள் மூலம் பரிமாறிக்கொள்கின்றன. தகவல் பரிமாற்றம் இது தான் என வரையறை செய்யமுடியாது. ஆரம்பத்தில் சைகைகள் மூலம் பரிமாற்றம்
செய்யப்பட்ட தகவல்கள் பின் ஒலிகள் மூலம் பரிமாற்றம் செய்யப்பட்டன. அவ்
C 5) கட்டுரைகள்

Page 9
ஒலிகளே பேச்சொலிகள் ஆகியன. பேச்சொலிகள் அதன் கூறுகளின் தன்மைக்கேற்ப
எழுத்துக்களாக வடிவமைக்கப்பட்டன. ஆகவே தகவல் என்பது ஒரு செயற்பாட்டினை
ஆற்றுவதற்கும் அதனை எவ்வாறு ஆற்றுவது என்பதைப் பிறருக்கு அறிவிக்கவும்
உதவும் ஒரு ஊடகம். அதாவது தகவல் என்பது ஒரு செய்தி. தகவல் பரிமாற்றம்
ஒவ்வொருவருக்கும் இடையே அன்றாடம் நடைபெறும் ஒரு நிகழ்வு ஆகும்.
2% சக மனிதரோடு உறவாட
米 தான் வரும் உலகத்தைப் புரிந்து கொண்டு செயற்பட
米 தன்னை வளர்த்துக் கொள்ள
என்று தகவல் அளிப்பவர்களையும், தகவல் பெறுநர்களையும் இணைக்கும்
செயற்பாடே தகவல் தொழில்நுட்பம் ஆகும். ஆரம்பகால மனிதர்கள் சைகைகளையும்
ஒலிகளையுமே பயன்படுத்தினர். இன்று தொழிநுட்ப வளர்ச்சி காரணமாகச் சஞ்சிகைகள்,
பத்திரிகைகள், வானொலி, தொலைபேசி, தொலைக்காட்சி, மின்னஞ்சல் உருநகல், தந்தி, கணினி, இணையம், குறுந்தகடு என தொழில்நுட்ப சாதனங்கள் பெருகி
விட்டன. எனினும் தகவலை வினைத்திறனும், பயனுறுதியும் மிக்க வகையில்
செயற்படுத்துவதே அதன் நுட்பமாகும். ஏனெனில் தகவல் பரிமாற்றத்தில் பல்வேறு
தடங்கல்கள் ஏற்படுகின்றன. அதாவது
米 புலன் ரீதியான தடங்கல்கள்
米 உள்ளிதியான தடங்கல்கள்
米 சாதன ரீதியான தடங்கல்கள்
米 மொழி ரீதியான தடங்கல்கள்
என்பனவாகும். எனவே தகவல் பரிமாற்றம் மிக நுணுக்கமாகச் செய்பட
வேண்டிய ஒன்றாகும். தகவல் பரிமாற்றம் பற்றிய பல்வேறுபட்ட செய்திகள்
காணப்படுகின்றன. ஜேர்மனியில் குதிரை வடிவ சிற்பமொன்று கண்டெடுக்கப்பட்டது.
அதில் செதுக்கப்பட்ட சிற்பம் பரிமாற்றமாக இருக்கலாம் என நம்புகின்றனர். பிரான்சில்
கடல் நாய், மான் கொம்புகள் போன்றனவும், மொசாப்பெத்தேமியாவில் கண்டெடுக்கப்பட்ட
களிமண் தட்டுக்கள், சித்திர எழுத்துக்கள் போன்றனவும், எகிப்தில் ஹயரோகிளிபிக்ஸ்
என்ற சித்திர வடிவமும், சிந்துவெளியில் கண்டெடுக்கப்பட்ட களிமண் தட்டுக்களும்,
C5) கட்டுரைகள்

சீனாவின் எலும்பெழுத்துக்களும், குகை ஓவியங்களும் தகவல் பரிமாற்ற சாதனங்களாக விளங்கியிருக்கலாம் என நம்புகின்றனர். தமிழ் நாட்டில் முரசறைந்தும், ஊதுகுழல்களைப் பயன்படுத்தியும், புகை எழுப்பியும், தீப்பந்தங்களைப் பயன்படுத்தியும், புறாக்கள், குதிரைகள் மூலமும் தகவல்கள் பரிமாற்றம் செய்யப்பட்டன. அத்துடன் ஒற்றர்கள் மூலமாக இரகசியத் தகவல் பரிமாற்றம், ஒடிச்சென்று தகவல்களைப் பரிமாறுதல், புலவர்களின் இலக்கிய வெளிப்பாடுகள் போன்றனவும் தகவல் பரிமாற்ற சாதனங்களாக
விளங்கின.
அச்சியந்திர வருகை தகவல் பரிமாற்றத்தின் ஒரு திருப்புமையம் எனலாம். தொடர்ந்து தொழினுட்ப சாதனங்களால் ஏற்பட்ட தொடர்ச்சியான வளர்ச்சிப் போக்கு தொழில்நுட்பத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தியது. சமுதாய மாறுதலுக்கு ஏற்ப நவீன உலகோடும் வலைப்பின்னலோடும் மனிதனைத் தொடர்புபடுத்தி மனிதவாழ்விற்கு பெருந்துணை புரிகின்றது எனலாம். அம் மாற்றங்களின் ஒரு மைல்கல்லாக கணினியும், தொலைபேசியும் சிறப்பிடம் பெறுகின்றன. அவை உலகம் முழுவதுமான தொடர்புகளைப் பேண உதவுவதுடன் தொழில் துறைகளின் வளர்ச்சிக்கும் பெரும்பங்காற்றுகின்றன. மின்னல் வேகத்தில் தகவல்களைப் பரிமாற்றம் செய்ய மின்னஞ்சல், இணையம், கணினிதொழில்நுட்பம் என தொழில்நுட்பங்கள் விரிவடைந்து வருகின்றது. அதாவது தகவல் பரிமாற்ற உலகம் இன்று பெருமளவில் வளர்ச்சி பெற்று வருகிறது.
தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் மிகப்பெரிய சமுதாய பொருளாதார மாறுதல்கள் ஏற்பட்டு வருகின்றன என்பதை எவரும் மறுக்க முடியாது. உலகையே இணையம் மூலம் இணைத்துள்ளனர். அதாவது காலம், இடம் என்பவற்றை எளிதாகக் கடந்து உலகளாவிய வலைத்தொடர்பை பேணிக்கொள்ள உதவுகின்றது. எனவே இன்று தகவல் பரிமாற்ற உலகம் மனித வாழ்க்கையோடு இணைந்து சொல்லாத செய்திகளையும், சொல்லியறிந்த விடயங்களையும் அறிய வைத்து உலகவலைப்பின்னலோடு மனிதனைத் தொடர்புபடுத்தி மனிதன் வாழ்வாங்கு வாழ உதவுகின்றது. எனினும் தகவல்கள் மிகவும் துல்லியமானதாகவும், சுருக்கமானதாகவும், எளிமையானதாகவும், எல்லோருக்கும் புரிந்துகொள்ளக் கூடிய வகையில் அமைவதுடன்
நம்பகரமானதாக அமைதல் வேண்டும் அத்துடன் உரிய நேரத்தில் தகவல் சென்றடையும்
C乙の一 உஇட்டுரைகள்

Page 10
வகையிலும் அமைதல் வேண்டும்.
தகவல் தொழில் நுட்பம் என்ற சொல் நவீன உலகின் தாரக மந்திரம்.
இன்றைய உலகின் புதிய போக்குகள் அனைத்துமே தகவல்தொழினுட்பத்தின்
ஆதிக்கத்தைக் கொண்டுள்ளன. தற்காலத்தில் கணினி முதலிய தொடர்பாடல்
சாதனங்களும், நவீன பிற இலத்திரனியல் சாதனங்களும் ஒன்றுசேர்ந்து தகவல்
தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்குப் பெரும்பங்காற்றுகின்றன. கணினித்தரவைப் பெற்றுக்
களஞ்சியப்படுத்தி அவற்றை நிரற்படுத்தி தகவல்களை அளிக்கும் தன்னியக்க
இலத்திரனியல் சாதனம். இதன் விளைவாக தகவல் தொழினுட்பத்தின் வளர்ச்சி
இன்று பன்மடங்கு வேகமாகப் பரவி உலகை வலம் வருகின்றது. எனவே கணினிப்
பொறிமுறை தொழில்நுட்பம் தொடர்பியல் கருவிகளுக்கு ஒரு புதிய பரிமாணத்தை வழங்கியுள்ளது எனலாம். இவ்வாறு புதிய அறிவுத்துறைகளின் வளர்ச்சி தகவல்
தொழினுட்பத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
ஒரு நாணயத்துக்கு இரண்டு பக்கங்கள் உண்டு. அதுபோல் எந்த ஒரு
செயற்பாட்டிலும் தீமைகளும் ஏற்பட இடமுண்டு. சாதாரண மொழிவழித்தகவல்கள்,
சமிக்ஞைகள், குறியீடுகள் ஒரு தனி மனிதனையோ அல்லது ஒரு சில நிறுவனத்தையோ
மட்டும் பாதிக்கும். ஆனால் தகவல் தொழினுட்பத்தில் ஒரு சிறு தவறு ஏற்படுமாயின்
அதனால் முழு உலகமும் பாதிக்கப்படுவதுடன் அதிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும் முடியாது. எனவே மனித நாகரிகத்தின் ஆரம்பம் முதல் இன்றுவரை
படிப்படியாக வளர்ச்சி பெற்று முழு உலகையும் தமது ஆதிக்கத்துள் கொண்டு
வந்துள்ளது. எனவே சரியான முறையில் பயன்படுத்தும் போது தகவல் தொழினுட்பம்
மனித வாழ்வை மேம்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
S S S S S S S S S S S S S S SSS S S S S S S S S S S SS S S S S S S S S S S S SSS S S S S S S S S S S S S
( 8D கட்டுரை:

3. கடல் கோள்களும் அழிவுகளும்
கடற்கோள் என்பது பண்டைக்காலத்திலிருந்து எல்லோராலும் அறியப்பட்டு வந்த ஒரு பதம். அதாவது சங்ககாலப்பகுதியில் சங்கங்கள் இருந்து தமிழை வளர்த்தன என்றும் அவை கடற்கோள்களால் அழிவுற்ற பின் மீண்டும் சங்கங்கள் உருவாக்கப்பட்டன என்றும் தென்மதுரை, கபாடபுரம், மதுரை ஆகியன முச்சங்கங்கள் இருந்த இடங்கள் என்றும் வரலாற்று ஆசிரியர் கூறுவர். எனவே கடல்கோள் என்பது புதிதல்ல. குறிப்பிட்ட சில காலப்பகுதியில் சமுத்திரப் பகுதிகளில் ஏற்படுகின்ற இயற்கைச் சீற்றங்களின் விளைவாக உருவாவது, அதாவது நில நடுக்கம், எரிமலை வெடிப்பு, நிலச்சரிவு போன்ற இயற்கைச் சீற்றங்கள் நிகழும் வேளையில் கடல் மிகப் பெரிய அளவில் பாதிப்பிற்கு உள்ளாகின்றது. இதன் விளைவாக ஆக்குரோசமான கடல் அலைகள் உருவாகிப் பேரலைகளாகி இவை கரையை நோக்கி வேகமாக நகரும், அவ்வாறு நகரும் பேரலைகள் கரையை அடைந்ததும் பெரும் சீற்றத்துடன் மோதிச் சிதறும். அந்தச் சமயத்தில் கடற்கரை நிலப்பகுதிக்குள் பெரும் சீற்றத்துடன் புகுந்து விடுவதையே
"கடல்கோள்" என்பர்.
கடல்கோள் கடற்பகுதிகளில் அடிக்கடி நிகழும். பசுபிக் கடற்பகுதிகள் கடற்கோள் அழிவுக்கு அதிகமாக உட்பட்ட போதும் இந்தியப் பெருங்கடற்பகுதிகளில் மிக அரிதாகவே நிகழ்ந்தது. கடற்கோள்களினால் இந்து சமுத்திர நாடுகளாகிய இலங்கை, இந்தோனேசியா, இந்தியா, தாய்லாந்து, கிழக்கு ஆபிரிக்கா, மலேசியா, மியன்மார், பங்களாதேசம், மாலைதீவுகள், என்பன பெரிதளவில் பாதிக்கப்பட்டன. அண்மையில் அதாவது 2004ம் டிசம்பர் 26 திகதி ஏற்பட்ட கடற்கோளை "சுனாமிப் பேரலை'என்பர். “சுனாமி" என்பது ஜப்பானியப் பதம் ஆகும். "சு" என்பது துறைமுகத்தையும் "E" என்பது துறைமுக அலைகள் என்பதையும் இப்பேரலைகள் உருவாகிய இடத்தையும் குறிக்கும். ஆயிரக்காணக்கான மைல்கள் பயணித்து அதற்கு அப்பால் உள்ள கடற்கரைப்பகுதிகளைத் தாக்கி சேதப்படுத்தும் வலிமை கொண்டது. கடலுக்கு அடியில் எரிமலைகள் வெடித்துச் சிதறி கடலைச் சீற்றமடையச் செய்யும் போது கடற்கோள்
உருவாகும்.
C ஏ) கட்டுரைகள்

Page 11
கடல் அலைகளில் "டைட்” எனப்படும் அலை வலிமையும் ஆற்றலும்
மிக்கது. நிலா சூரியனை விட பூமிக்கு மிக அருகில் இருப்பதனால் பூமிப் பகுதியில்
உள்ள கடல் அலைகளைக் கவர்ந்து இழுக்கும் போது பெளர்ணமி போன்ற சமயங்களில்
மிகப் பெரிய அலைகள் எழுகின்றன. இவை அழிவிற்குக் காரணமாகின்றன. புவியின்
அடித்தளப் பகுதியில் கவசத் தகடுகள் காணப்படுகின்றன. இவை சமுத்திரத் தகடு,
கண்டத்தகடு, என இரு வகைப்படும். இரண்டு தகடும் ஒன்றை ஒன்று நோக்கி ஒடுங்கும்
போது அடர்த்தி கூடிய சமுத்திரத்தகடு கண்டத்தகட்டின் கீழ் அமிழும். அவ்விடத்தில்
பெரியதொரு அகழி தோன்றும். அந்த அகழியில் சமுத்திர நீர் மிக வேகமாக உள்வாங்கப்படும். அப்பொழுது துவாரத்துள் இருந்து வெளியேறும் வாயுக்கள்
அகழியினுள் உள் நுழையும் சமுத்திர நீரை மிக்க விசையோடு உந்தித் தள்ளுவதால்
கடற்கோள் ஏற்படுகின்றது. இதனால் உயிரழிவுகள், சொத்திழப்புக்கள், நன்னீர் கிணறுகள்
உவராதல், வயல்கள், தோட்ட நிலங்கள், பாதிக்கப்படுதல், அனாதைகள், ஆதரவற்றோர்
தொகை பெருகுதல், மானிட இயல்பு வாழ்க்கை பாதிப்படைதல், வதிவிடங்கள் அற்றோர்
தொகை பெருகுதல், மனவடுக்கள், உளவியல் பாதிப்புக்கள் ஏற்படுதல் போன்றன
நிகழ்கின்றன.
கடல்கோள் அழிவிலிருந்து மக்களைப் பாதுகாக்க முடியுமா? அவற்றை
முன்கூட்டியே அறிய முடியுமா? என்பது பாரிய பிரச்சினையாக உள்ளது. அதாவது
கடல் உள் வாங்குவது, குமிழிட்டுக் கொதிப்பது, பெரும் பாறைகள் புரண்டு வரும் சத்தம் கேட்பது, மீன்கள், கடற்பாம்புகள் கரை ஒதுங்குவது ஆகியவை முன்
அறிகுறிகளாகும். இவற்றை விட 1949ல் பசுபிக் சுனாமி, எச்சரிக்கை நிலையம்,
சர்வதேச சுனாமி தகவல் நிலையம் என இரு நிலையங்கள் ஐக்கிய அமெரிக்காவிற்கு
மேற்கே உள்ள ஹவாய்த் தீவில் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் நாம் கடற்கோள் அழிவுகளைக் கண்டறிய முடியும். கடல் அணைகள் அமைத்தல், கடற்கரை
ஒரத் தாவரங்களை உருவாக்குதல், கடற்கரை ஓரங்களில் குடியிருப்புக்களை
அமைப்பதைத் தவிர்த்தல், ஆகியவற்றின் மூலம் கடற்கோள் அழிவில் இருந்து
எம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
எனவே இத்தகைய கடற்கோள் ஏற்படும் போது நாம் இயற்கையிடம் இருந்தும்
C O) கட்டுரைகள்

உலகியல் வாழ்வில் இருந்தும் பல அநுபவங்களைப் பெற்று அவதானிப்புக்களை
எம்மிடையே வளர்த்துக்கொள்ள முடியும். இயற்கையில் மாற்றங்கள் ஏற்படும் போது
இவை ஏன் ஏற்படுகின்றன? இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதைச் சிந்தித்துப்
பார்க்க வழி சமைக்கும். விலங்குகள் இயற்கையிடம் இருந்த கற்றுக்கொண்ட பாடங்களை
நாமும் கற்று எம்மை மேனிலைப்படுத்த முடியும். விலங்குகள் முன்கூட்டியே அறியும்
அறிவைப் பெற்றிருப்பதால் அவை இத்தகைய பேரழிவிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்
கொள்கின்றன. ஆனால் ஆறறிவு பெற்றிருந்தும் நாம் இயற்கையைப் பற்றிக் கவனம்
செலுத்தாமையினால் நம்மை நாமே தாழ்த்திக்கொண்டு விட்டோம் எனலாம்.
கடற்கோள் அழிவுகள் ஏற்பட்ட காலத்தில் எல்லோரும் ஓரினம் என்ற
கொள்கையில் நின்று மனிதனுக்கு ஏற்பட்ட பேரழிவிலிருந்து அவர்களைக் காப்பாற்ற
இன, மத, மொழி, பாராது ஒன்றிணைந்து செயற்பட்டமை, இன்னும் மனிதநேயம்
மறைந்து விடவில்லை. என்பதை எடுத்துக்காட்டுகின்றது. எனவே பல்லின மக்கள்
வாழும் நாட்டில் வசிக்கும் ஒவ்வொருவரும் எல்லாச் சமூகத்தவரையும் ஒன்றிணைத்து
"எல்லோரும் ஒரு குலம்" என்று வாழும் மனப்பாங்கை வளர்த்துக்கொள்ளல் அவசியம்,
மனிதநேயம், சகலரையும் நேசிக்கும் மனப்பாங்கு, ஆபத்தில் உதவுதல்,
துன்பம் வந்தபோது கை கொடுத்தல், ஏற்றத்தாழ்வு, பாராட்டாது வாழும் மனப்பக்குவம்
போன்ற அனைத்துப் பண்புகளும் இச்சந்தர்ப்பத்தில் வெளிப்படுகின்றன. உலக நாடுகள்
எல்லாமே பேரழிவுகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் எல்லாம் போட்டி போட்டு உதவி வருகின்றன. ஆனால் இப்பண்புகள் ஒரு சில நாட்களில் மறைந்து விடுகின்றன.
எனவே நாம் இயற்கையிடம் இருந்து கற்க வேண்டிய பாடங்கள் நிறைய உள்ளன. இயற்கையின் சீற்றங்கள் கூட மனிதனை ஒன்றிணைக்க உதவுகின்றன. ஆனால்
இப்பண்புகளை நிரந்தரமாக எம்மிடையே வளர்க்க நாம் முயற்சி எடுப்பதில்லை.
எனவே மனித நேயம் உள்ளவர்களாக எம்மை நாம் மாற்றிக்கொள்வது நாம் கற்க
வேண்டிய மிகப் பெரிய பாடம்.
S S S S S SSSSS SSS SSS LSL LLL LS L L L L L S SSL L L L L SLL L L S S SS LLCLLCLLSLSL SLSLSL SLL L
7) கட்டுரைகள்

Page 12
4. சிறுவர் இலக்கியம்
சிறுவர் இலக்கியம் எப்போது யாரால் தோற்றுவிக்கப்பட்டது என அறுதியிட்டுக்
கூற முடியாது. ஆனால் தொல்காப்பியத்தில் "பொருள் மரபில்லா பொய்யல்லா மரபு” என குறிப்பு ஒன்று காணப்படுவதால் அக்காலப்பகுதியிலே குழந்தை இலக்கியம் தோன்றிவிட்டது எனலாம். ஆனால் டாக்டர் பூவண்ணன் அவர்கள், "சிறுவருக்காக
சிறுவர் மொழியில் சிறுவர் தம் அனுபவத்தை வெளிப்படுத்தும் படைப்பே குழந்தை இலக்கியம் அல்லது சிறுவர் இலக்கியம் என்பர்.” குழந்தை உலகம் தனியானது.
மகிழ்ச்சியும் கலகலப்பும் நிறைந்தது. கற்பனையில் சுகம் காணும் உணர்ச்சியும்
சிந்தனையும் நிறைந்தது. எனவே கள்ளம் கபடமற்ற அவர்கள் உள்ளம் எதையும்
கண்டு பிடிக்க, எண்ணிப்பார்க்க, தொட்டுப் பார்க்க விரும்பும், அதனால் அவர்கள் தம்
உணர்வுகளை ஆடல் பாடல், கதை சொல்லல், கதை கேட்டல், சித்திரம் திட்டல்,
ஆகிய செயற்பாடுகள் மூலமே வெளிபடுத்துவர். எனவே அவர்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் இலக்கியங்கள் பெரிய அளவில் எழ இல்லை. இதனாலேயே பேராசிரியர் கைலாசபதி அவர்கள் ஒப்பீட்டு ரீதியில் குழந்தை இலக்கியம் மிகக்
குறைவு என்பர்.
சிறுவர் இலக்கியம் எனும் போது அவை குழந்தைப் பாடல்கள், குழந்தைக் கதைகள், குழந்தை நாடகம், குழந்தை நாவல்கள் எனப் பல வகைப்படும் குழந்தையின்
மனம் மென்மையான இனிமையான இசையின் வசமாகும். எனவே அதற்கு ஏற்ப
குழந்தை இலக்கியங்கள் பறவை, மிருகம், போன்றவற்றை அழகான வண்ணப் படங்களுடன் வெளிப்படுத்தி இலகுவான நடையில் சிறுவர் உலகொடு இணைத்து நல்ல தாளில் பெரிய எழுத்தில் சுவை நிறைந்த கதைகள், இயற்கை காட்சிகள், கொண்டதாய் எளிமையும், இனிமையும் சந்தமும், நிறைந்து அமையும் இடத்து அதனை
குழந்தை இலக்கியம் என்று வரையறை செய்யலாம்.
குழந்தை இலக்கியம் இரு வகைப்படும்.
1. குழந்தையைப் பொருளாகக் கொண்டு பாடுவது.
2. குழந்தைக்கு விளங்கும் வகையில் பாடுவது.
ஆரம்ப காலத்தில் எழுந்த குழந்தை இலக்கியம் யாவும் குழந்தையைப் பொருளாகக் கொண்டு அமைக்கப்பட்டவையே. அவை குழந்தை இலக்கியங்கள்
அல்ல. குழந்தை இலக்கியங்கள் பிள்ளைகள் மகிழ்வதற்கு ஏற்ற வகையில் எளிய
நடையில் இனிய சந்தம் கொண்டு அமையும் பாடல்களைக் குறிக்கும். அவை
感 -.-.-.-.-...سسسسس('2 ? گ

1. தனிப்பாடல்கள்
2. கதைப்பாடல்கள்
என இரு வகைப்படும்.
தனிப்பாடல்கள் எனும் போது பறவைப்பாடல்கள், வண்ணப்பாடல்கள், எண்
பாடல்கள் என பல வகைப்படும்.
g) + b :-
"சிட்டு சிறிய சிட்டு
செடியில் பாடும் சிட்டு
கொட்டை பாக்கைப் போல
தோன்றும் மஞ்சள் சிட்டு”
என்றும்
"வானம் நீலம்
வெண்மை மல்லிகை
ஆணை கறுப்பே
அலரி சிவப்பே'
என்றும்
“ஒன்று இரண்டு மூன்று என்றே உரக்கச் சொல்லு'
என்று அமையும் கதைப்பாடல்கள், பாடசாலைக்கு சென்ற யானை,
குரங்கின் தீர்ப்பு போன்றவை.
2) + Lb :-
“தேசம் சுற்றிப் பார்ப்பதற்கு சென்ற தொரு சீமானக்
செத்தது போல் கிடந்த ஒரு குரங்கை கண்டான்'
என்றும்
“காலை வேளை
கமலம் வீட்டுக்
கோழி எட்டுக் குஞ்சுடன் சாலையோரம் இரைதேடிச் சென்றது”
G13)- கட்டுரைகள்

Page 13
என்றும் அமையும். இவற்றை விட தாடி அறுந்த வேடன், பவளக்கொடி, கொழுக்கட்டை, பொன்னன் போன்றவை கதையும் பாட்டும் அமைந்த சிறுவர் இலக்கியம் ஆகும் "ஓடி விளையாடு பாய்யா" என்ற குழந்தை நாடகம் குழந்தை எழுச்சி தினத்தமன்று வெளியிடப்பட்டது.
மேனாட்டார் தொடர்பால் சிறுவர் இலக்கியம் பற்றிய திட்டமிட்ட அமைப்பு ரீதியான சிந்தனைப் போக்கு எழுச்சி பெற்றது. ஆத்திசூடி, கொன்றை வேந்தன், முதுரை, நல்வழி முதலிய அறப் போதனைகளே தமிழில் தோன்றிய முதல் குழந்தை இலக்கியங்கள் ஆகும். உரத்துப் படித்து மனனம் செய்யவே இவை உதவின. உலக நீதி மூலம் "ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்" என புதிய பாப்பா பாட்டுக்கள் வெளிவந்த போதும் அவையும் போதனை வடிவங்களாகவே அமைந்தன. "குண்டுடுக்கி குடுகுடுக்கி" என இலகுவான நடையில் அமைந்த போதும் அவை குழந்தைப் பருவத்து அநுபவங்களை இயல்பாக கடந்து செல்லாமல் மனிதன் நீளப்பாய்ச்சல் வடிவில்
உயர்ந்து செல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
1930 களின் பின்னரே கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, புரட்சிக்கவிஞர்
பாரதிதாசன், நவாலியூர் சோமசுந்தரப் புலவர், கோ.சுதா. பஞ்சாட்சரஐயர், சுபைர், போன்ற குழந்தை கவிஞர்கள் உலாவரத் தொடங்கினர். மதுரகவி இ.நாகராசன், சந்தன
நங்கை கந்தப்பு, யாழ்ப்பாணன், பண்டிதமணி சு.இராசையா, கல்வயல் குமாரசுவாமி,
கவிஞர் த.துரைசிங்கம், பீதாம்பரன், ஆழ்வாப்பிள்ளை, கவிஞர் அகளங்கன் போன்ற கவிஞர்கள் எழுச்சி பெற்றனர். தமிழ்நாட்டிலும் அழ.வள்ளியப்பா, கவியோகி சுத்தானந்த பாரதி,டாக்டர் பூவண்ணன், போன்றோர் எழுச்சி பெற்றனர். 1985ல் க.ச.அருணந்தி என்பார். வட இலங்கை தமிழாசிரியர் சங்க வெளியீடாக முதன்முதல் பிள்ளைத் தமிழ் தொகுப்பு ஒன்றை வெளியிட்டார். அழ.வள்ளியப்பா குழந்தைக் கவிஞர் என்று பெயர் பெற்றார். ஈழத்திலும் வித்துவான் க.வேந்தனாரின் பாடல்கள் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. குழந்தை அநுபவத்தோடு பொருந்தி வந்தன. அண்மைக்காலத்தில் கவிஞர்
பா.சத்தியசீலன் சிறப்பிடம் பெற்றுள்ளார்.
வித்துவான் வேந்தனாரின் "காக்கா குஞ்சுக்கு கலியாணம்”, “காலைத்தூக்கி கண்ணில் ஒற்றிக் கட்டிக் கொஞ்சும் அம்மா", "அம்மா மெத்தப் பசிக்கிறது", "நிலா
நிலா ஓடி வா", "சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு",
C 4 கட்டுரைகள்

கவிஞர் செல்லையாவின்,
"அம்மா அம்மா வெளியே வா -
அழகாய் அண்ணாந்து பாரம்மா
அழகாய் இருந்த சந்திரனை
வெட்டிப் போட்டது யாரம்மா?"
நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் "கத்தரித் தோட்டத்தின் மத்தியிலே நின்று காவல் புரிகின்ற சேவகா", "விமா வீமா ஓடி வா" "ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை" ஆகிய பாடல்கள் குழந்தை இலக்கியத்தின் திருப்பு மையமாக அமைந்துள்ளன.
குழந்தை இலக்கியத்தின் வளர்ச்சி பாப்பா மலர், பாலர் மலர், போன்ற கவிதை தொகுப்புக்களுடன் அம்புலிமாமா, பால மித்ரா, கரும்பு, பூத்சோலை, போன்ற சஞ்சிகைகளும் வெளிவரத் தொடங்கின. 1950ல் குழந்தை எழுத்தாளர் சங்கம் முதன் முதலாக குழந்தைப் புத்தக கண்காட்சியை நடத்தியது. 1970இல் குழந்தை எழுச்சி விழா இடம்பெற்றது. இதில் முத்துக்குவியல் எனும் கவிதைத் தொகுதி வெளியிடப்பட்டது. இம் முயற்சியில் டாக்டர் பூவண்ணன் பெரிதும் உழைத்தார். பேரா.அப்புசுவாமி, சித்திரக் கதைப் பாடல்களை ஆக்கினார். 1948இல் பால விநோதக் கதைகள் என்ற கதைத்தொகுதி வெளிவந்ததது. 1955 இல் சிறுவர் நாடக விழா எழுச்சி பெற்றது. 20ம் நூற்றாண்டில் சினிமா, தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகை, போன்றவற்றில் சிறுவர் விருந்து, மழலையர் வாரம், மொட்டும் மலரும், வானொலி மாமா, கண்மணிப் பூங்கா நிகழ்வுகள் ஒளிப்பேழை வெளியீடுகள், சிறுவர் இலக்கியம் பற்றிய சிந்தனை வளர்ச்சி பெற்றதை எடுத்துக்காட்டுகின்றது. 1980களில் யாழ்ப்பாணத்தில் எழுந்த "அர்ச்சுனா” என்ற சிறுவர் ஏடும் சிறுவர் ஏடாக சிறப்பிடம் பெறுகின்றது. திரைப்பட கவிஞர்களாகிய பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், கண்ணதாசன், வைரமுத்து, போன்றோர் சிறுவர் பாடல்களை இயற்றியுள்ளனர். தமிழர் வாழும் பகுதிகளாகிய சிங்கப்பூர், மலேசியா, போன்ற இடங்களிலும் சிறுவர் இலக்கியம் பற்றிய சிந்தனை மலர்ந்துள்ளது. எனவே குழந்தை இலக்கியத்துக்கு வளமான எதிர்காலம் உண்டு
என்பதில் ஐயமில்லை.
S S S S S S S S S S S S S SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SSS S S S S S S S S S S SS S S S S S S
75) கட்டுரைகள்

Page 14
இ இண்றைய சிறுவர்களே நாளைய தலைவர்கள்
சிறுவர்களின் உள்ளம் தூய்மையானது; தெளிவானது; மாசுமறுவற்றது;
அவர்களிடம் ஆற்றல்கள் நிறைய உள்ளன. அவை உள்ளார்ந்த நிலையில் உறங்கிக்
கிடக்கின்றன. அவர்களுக்கு ஏற்படும் அநுபவங்களும், ஆசாபாசங்களும் அவர்களது
எண்ணங்களுக்கும், சிந்திக்கும் ஆற்றல்களுக்கும் எல்லை வகுக்கின்றன. எண்ணங்கள்
மிகவும் வலிமை படைத்தவை. எண்ணங்கள் தோன்றுவதற்கு காரணமானது மனம்
மனதில் வலிமையை வளர்த்துக்கொண்டால், எந்தக் காரியத்தையும் சுலபமாகச்
சாதித்துக்கொள்ள முடியும். இன்றைய சிறுவர்களே நாளைய தலைவர்கள். ஆதலால்
அவர்கள் தமது தனித் தன்மையை சிறப்பானதாக வளர்த்து தமக்கும் சமுதாயத்துக்கும்
பயன்படும் வகையில் நற்பழக்க வழக்கங்களை உடையவராய் நாளைய தலைவர்களாக
உருவாக முடியும் என்பதில் ஐயமில்லை.
தனி மனிதனே சமுதாயம், "ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?"
எனவே அன்பு, பணிவு, பெரியோரை மதித்தல், சுய நம்பிக்கை ஆகிய நற்பழக்க
வழக்கங்களைப் பெற்று வளமான வாழ்வு வாழ்வதற்கு வேண்டிய மனப் பயிற்சி
சிறுவயதிலேயே வழங்கப்படல் வேண்டும். நற்பழக்க வழக்கங்களை உருவாக்குவதில்
குடும்பங்கள், பாடசாலைகள், சமயநிறுவனங்கள் பெரும் பங்காற்றுகின்றன. "இளமையில்
கல்வி சிலையில் எழுத்து" அதாவது பிள்ளையின் ஆரம்பப் பருவம் வீட்டில் இருந்தே
தொடங்குகின்றது. என்வே பெற்றோர், குடும்ப அங்கத்தினர் ஆகியோர் பிள்ளைகளுக்கு
முன் மாதிரியாக நடந்து காட்டல் வேண்டும்.
எண்ணம் என்பது ஒரு சிறிய விதை, விதை தானாக முளைக்காது.
முளைப்பதற்கு வேண்டிய சூழ்நிலை அவசியம். அதனை உருவாக்குவது பெற்றோரின்
பொறுப்பு ஆக்க பூர்வமான பக்கங்களைக் கண்டறிந்து, ஆற்றுப்படுத்த வேண்டும்.
அதற்கு சரியான வழிகாட்டல் அவசியம். பிள்ளைகளிடமுள்ள ஆற்றல்களைக்
கண்டறிந்து அவற்றை வளர்த்து அவர்களதுபண்பு நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி
G16) கட்டுரைகள்

அவர்களை நடைமுறைப்பெறுமதி உடையவராக்குவது பெற்றோரின் கடமை. சமூகப் பொறுப்புணர்ச்சியோடு வளர நாட்யுைம், நானிலத்தையும் வாழ்விக்கும் ஆற்றல் பெற, விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு வளர்த்தெடுக்கப் படல் வேண்டும. குடும்பம், சுற்றம்,
ஊர், நாடு, உலகம், என விரிந்து பரந்த சமுதாய உணர்வு தோற்றம் பெற நெறிப்படுத்தல்வேண்டும். அன்பு, உண்மை, நேர்மை முதலிய நல்லொழுக்கப் பண்புகள் வளரும் பருவத்தில் பிள்ளைகளிடத்து பொறுப்புக்களை வழங்கித் திறமையாகச் செயற்பட வேண்டிய வழிகாட்டல்கள், ஆலோசனைகள் வழங்கப்படுமிடத்து இன்றைய
சிறுவர்கள் நாளைய தலைவர்களாக உருமாற முடியும் என்பதில் ஐயமில்லை. "வளரும் பிள்ளையை மண் விளையாட்டில் தெரியும்" வளரும் பருவமே நல்லொழுக்கப் பண்புகள்
வித்திடப்பட வேண்டிய பருவமாகும்.
சிறுவர்களின் வளரும் பருவத்தில் மிக முக்கியமான காலப்பகுதி பாடசாலைகளுடன் தொடர்புபடுத்தப்படுகின்றது. எனவே பாடசாலைகள் வெறும், அறிவுப் பெருக்கம் அறிவு ஆற்றல் விருத்தி என்பவற்றில் மட்டும் கவனம் செலுத்தாது மனிதப் பண்பாடு, விழுமியம், போன்ற நற்பண்புகளை விருத்தி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். பாடசாலைகளில் இடம்பெறும் இணைப்பாட விதானச் செயற்பாடுகள் பல நற்பண்புகள் உருவாகத் துணை புரிகின்றன. கூட்டு மனப் பாண்மை, ஒற்றுமை,குழுச்செயற்பாடு, ஆகிய நற்பண்புகளை வளர்க்க உதவுகின்றன, பாடசாலைகளிடையே மேற்கூறிய செயற்பாடுகள் இடம்பெற வழிகாட்டுகின்றன. அத்துடன் தலைமைத்துவப் பண்பு, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை ஆகிய சமூகம் சார்ந்த மனப்பாங்குகளையும் வளர்த்தெடுக்கின்றன. பாடசாலையில் இடம் பெறுகின்ற, சட்ட திட்டங்கள் நேரசூசிகள் ஆகியன உடல், உள விருத்திப் பயிற்சிகளை வழங்குகின்றன. சமூகப் பொறுப்புணர்ச்சியோடு வளர்ந்து பிரச்சினைகளைச் சந்திப்பதிலும், தீர்ப்பதிலும் சரியான அணுகுமுறைகளைக் கையாள இப்பண்புகளே வித்திடுகின்றன. சிறு வயதில் ஏற்படும் அநுபவங்களும், நிகழ்ச்சிகளும் தான் அவர்களது எதிர்கால வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்தும். ஏனெனில் ஒரு கரு உருவான காலத்திலிருந்து ஏற்படும். எந்த
ஒரு அநபவமும் அவரை விட்டு சுலபமாக நீங்கி விடுவதில்லை. அவர்களது உடல்
C 矛) கட்டுரைகள்

Page 15
இயக்கமே அவர்களுக்கு வேண்டிய பாடங்களைக் கற்றுக் கொடுக்கின்றது. உடலின்
ஒவ்வொரு உறுப்பும் தன் தன் வேலையைக் காலக் கணக்குப்படி செய்வதும் ஒன்றோடு
ஒன்று இணக்கமாக ஒத்துழைப்பதும் விந்தையான ஒரு நிகழ்வு. இந் நிகழ்வுகள் ஒரு
முன் உதாரணமாக இருப்பதை சிறுவர்கள் புரிந்து கொள்ள உதவ வேண்டும்.
சிறுவர்கள் இப்பிரபஞ்சத்தின் ஓர் அங்கம். அவர்களை நெறிப்படுத்துவதில்
சமய நிறுவனங்களுக்கும் பெரும் பங்குண்டு. உலகத் தோற்றம் எதிர்கால சந்ததி.
நாம் வாழும் உலகம் பற்றிய மதிப்பீடுகள் பற்றித் தெளிவாகவும் திட்டமாகவும்
வரையறை செய்யும் ஆற்றல் சமய நிறுவனங்களுக்கு உண்டு. சமய வாழ்வு வாழ
அதன் மூலம் அவர்களது சமுதாயப் பண்புகள் மலர வித்திடப்படலாம். ஜீவகாருண்யம்,
மனித வாழ்விற்கு இன்றியமையாதது. சமுதாயத்திற்கு உதவுதல், ஆன்மீக உணர்வை
வளம்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் நல்லதோர் சமுதாயத்தைக் கட்டியெழுப்ப
முடியும். இன்றைய சிறுவர்களே நாளைய சமுதாயத்தைக் உருவாக்கும் சமுதாயச்
சிற்பிகள். அவர்கள் தமது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் வழிவகைகளை
சீர்தூக்கி அறிதல் வேண்டும். மனோதத்துவ ரீதியில் அணுகல், தவறுகளைச் சுட்டிக்
காட்டித் திருத்துதல், ஆற்ற வேண்டிய கடமைகளையும் நிறைவேற்ற வேண்டிய
பொறுப்புக்களையும், தமது செயல்களின் விளைவுகளையும் உணர்ந்து அநுபவிக்கும்
திறனையும் வளர்த்தெடுக்க வேண்டும். எனவே சமநிலை நோக்கு கொண்ட ஒருவனாக
உருவாக்கப்படல் வேண்டும். அதற்கு புரிந்து கொள்ளல், திட்டமிடல், தெளிவு ஆகியவை
இன்றியமையாதவையாகும். இதன் மூலம் சொந்த வாழ்க்கையில் பொறுப்பேற்று
நடப்பதோடு ஒருவன் சமுதாய வாழ்க்கைக்கும் பொறுப்புள்ளவனாக தன்னை
மாற்றியமைத்துக்கொள்ள முடியும்.
பண்டைக்காலத்தில் மக்கள் கூடி வாழ்ந்தனர். தேவைகள் குறைவு, தமது
தேவைகளைத் தாமே பூர்த்தி செய்து கொண்டனர். எனவே சார்ந்து வாழ வேண்டிய
அவசியமில்லை. இன்று தேவைகள் முற்றிலும் மாறுபட்டவை. தமது தேவைகளைத்
தாமே பூர்த்தி செய்வது என்பது சாத்தியமற்ற ஒன்று. சார்ந்து வாழ வேண்டிய சூழல்,
G18) கட்டுரைகள்

ஆகவே பிறரோடு சகஜமாகப் பழகுதல், ஒத்து வாழுதல், விட்டுக்கொடுத்தல்,
சவால்களைச் சந்தித்தல், ஆகிய நல்லொழுக்கப் பண்புகளை வளர்த்தெடுத்தல்
வேண்டும்.ஆரோக்கியமான கண்ணோட்டத்தைப் பெற்று மனிதப் பண்பாடுகளையும்
விழுமியங்களையும் வளர்த்து நல்ல தலைவர்களாக திறமையாகவும், செம்மையாகவும்
செயல் புரிந்து வாழ்வில் வெற்றி பெற சமய நிறுவனங்களும் பெருந்துணை புரிகின்றன.
"தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்”. மனித மேம்பாடு அவனது செயல்களைப்
பொறுத்தது. எனவே இன்றைய சிறுவர்கள் நாளைய பெருந்தலைவர்களாக மகத்தான
சாதனைகளைச் சாதிக்கும் ஆற்றல் பெற்றவர்களாக நல்லதொரு சமுதாயத்தின்
வழிகாட்டிகளாக, ஒழுக்க சீலர்களாக உருமாற்ற வேண்டியது. சமூகத்தின் கடயைாகும்.
"எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே அவன்
நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே" என்று ஒரு கவிஞர் பாடியுள்ளார். எனவே நல்லதோர் சமுதாயம் உருவாக ஆணிவேராக இருக்கின்ற சிறுவர்கள் சரியான முறையில் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். ஏனெனில் இன்றைய சிறுவர்களே நாளைய
தலைவர்கள் ஆவர்.
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS S S S S S S S S S S S
G19) கட்டுரைகள்

Page 16
,ே இடப்பெயர்வுகளும் அவலங்களும்
"மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்' என்ற கொள்கை ஒரு காலப் பகுதியில் மக்கள் மத்தியில் வேரூன்றி இருந்தது. அவர்கள் தாம் பிறந்த தாய் நாட்டை உயிரினும் மேலாக நேசித்தனர். -
"பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
நற்றவ வானிலும் நனி சிறந்தனவே"
என்று கருதி வாழ்ந்தனர். "எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே” என இறும் பூதெய்தினர். ஆனால் காலப்போக்கில் ஏற்பட்ட மாற்றங்கள் மக்களைப் பல்வேறு அவலங்களுக்கும் முகங்கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளிவிட்டது. ஓரிடத்தில் நிலையாக இருந்து வாழ முடியாத அவல நிலை. நாட்டில் காலத்துக்குக் காலம் ஏற்படும் உள்நாட்டுப் பிரச்சினைகள் மக்களை இடத்துக்கிடம் செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளியது. அவர்கள் இடம்விட்டு இடம் பெயர்ந்தனர். தம் முந்தையோர் நிரந்தரமாக காலங்காலமாக வாழ்ந்த வாழ்விடங்களை விட்டு இடம்
பெயர வேண்டிய நிலை.
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற முதுமொழிக்குரற்ப எல்லா நாடுகளிலும் பரவி வாழ்கின்றனர். அவர்களுக்கென நிலையான ஓர் இடம் இல்லை. விலங்குகள், பறவைகள் போல இடப் பெயர்வு என்பது நிரந்தரமான ஒன்றாகி விட்டது. இவ்வாறு ஏற்படும் இடப்பெயர்வுகளை.
i. உள்நாட்டு இடப்பெயர்வுகள்
2. சர்வதேச இடப்பெயர்வுகள்
என இரண்டாக வகுக்கலாம். உள்நாட்டு இடப்பெயர்வுகள் என்பது உள் நாட்டிலேயே ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு இடம்பெயர்வதாகும். ஆரம்பகாலத்தில் நீர்வளம், நிலவளம் மிக்க பகுதிகளை மக்கள் நாடிச்சென்று குடியேறினர். இதனால் விவசாயக் குடியிருப்புக்கள் உருவாயின. மன்னர்கள் ஆதரவு அளித்தனர். குடியேற்றத் திட்டங்கள் அமைக்கப்பெற்று காலத்துக்கு காலம் அரசர்களால் மானியங்களும் நிவாரணங்களும் சலுகைகளும் வழங்கி சனத்தொகைச் செறிவில்
மாற்றத்தை ஏற்படுத்தவும் விவசாய உற்பத்தி நடவடிக்கைகளை விருத்தி செய்யவும் (20) கட்டுரைகள்

அரசு இடப்பெயர்வுக்கு ஊக்கமளித்தது. ஆனால் அண்மைக்கால்ங்களில் ஏற்படும் இடப்பெயர்வுகள் முற்றிலும் மாறுபட்டவை. உள்நாட்டுப் பிரச்சினைகள் காரணமாக இடப்பெயர்வுகள் ஏற்படுகின்றன. இது பொருட்சேதம், உயிர்ச் சேதம் ஆகியன ஏற்பட வழி வகுக்கின்றது. உற்பத்தி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு பொருளாதார சீரழிவுகள் ஏற்படுவதுடன் மீள அவர்களை குடியமர்த்துவதும் பாரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகின்றது. நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்தை நோக்கிச் செல்கின்றது. எனவே இன்று இடப்பெயர்வுகள் நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடுகின்றன எனலாம்.
சர்வதேச இடம் பெயர்வுகள் எனும் போது நாட்டுக்கு வெளியே ஒரு நாட்டிலிருந்து ஏனைய உலக நாடுகளுக்கு இடம் பெயர்தலாகும். படித்தவர்கள், உயர் வேலை வாய்ப்பு, அதிகரித்த சம்பளம், வாழ்க்கை வசதி, ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஆரம்ப காலப்பகுதிகளில் மலேசியா, சிங்கப்பூர், இலண்டன், அமெரிக்கா, கனடா, போன்ற நாடுகளுக்கு இடம் பெயர்ந்தனர். எண்பதுகளின் பின் இடப் பெயர்வுகள் மிக அதிகமாக அதிகரித்துச் சென்றுள்ளது. இன்று ஒவ்வொரு நாடுகளிலும் ஏற்படும் பிரச்சினைகள் அதாவது உயிர்ப்பாதுகாப்பு, வாழ்க்கை வசதி, சமூகப் பிரச்சினைகள் ஆகியன சர்வதேச இடப்பெயர்வுக்குக் காரணமாக அமைகின்றது.இன்று மனிதர் செல்லாத இடமே இல்லை. எல்லா நாடுகளிலும் பரந்து வாழ்கின்றனர். சர்வதேச இடப்பெயர்வுகள் ஒரு நாட்டின் பொருளாதார வளத்தை மேம்படுத்த மறைமுகமாக உதவிவருகின்றது எனலாம். அதாவது வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் அந்நியச் செலாவணி வருமானம் கணிசமான அளவு அதிகரித்துச் செல்வதால் நாட்டின் பொருளாதாரம் அபிவிருத்தியடைய வழி வகுக்கின்றது. வெளிநாட்டு மோகத்தாலும், கவர்ச்சிகரமான ஆடம்பர வாழ்க்கை வசதிகளாலும் கவரப்பட்ட மக்கள் காலத்துக்கு காலம் இடம் பெயர்கின்றனர். உள்நாட்டு இடப்பெயர்வுகள் கூட சர்வதேச இடப்பெயர்வுக்கு வழி வகுக்கின்றது. எனவே இன்று இடப்பெயர்வு என்பது சர்வ சாதாரணமான ஒரு நிகழ்ச்சியாகி விட்டது. நூற்றுக்கு
தொண்ணுறு வீதமான மக்கள் இடம் பெயர்ந்தவர்களாகவே காணப்படுகின்றனர்.
எனினும் ஒரு நாட்டின் இடப்பெயர்வுகள் அந் நாட்டின் நிலைத்த பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையப் போவதில்லை. அது ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தவே பெருந்துணை புரியும். ஒரு நாட்டில் மக்கள் நிலையாக ஓரிடத்தில் வாழ முற்படும் போதே அவர்கள் பொருளாதார
G2D கட்டுரைகள்

Page 17
நடவடிக்கைகளில் ஈடுபட முடியும். இடம்பெயரும் போது அவர்களது உற்பத்தி நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதுடன் உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடும் மனவலிமையும் குறைகின்றது. உடல் உள பாதிப்புக்கள் ஏற்படுகின்றன. மக்கள் விரக்தியின் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். எதிலும் அக்கறை செலுத்தும் மனோபாவத்தை இழக்கின்றனர். பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த குடியிருப்புக்கள், சொத்துக்கள்
யாவற்றையும் இழப்பதால் பாடுபட்டு உழைக்க வேண்டும் என்ற மனோபாவம் மாற்றமடைகின்றது. பலர் அகதிகளாக வாழ வேண்டியிருப்பதால் அவர்கள் உற்பத்தி முயற்சிகளில் ஈடுபடுவதில்லை. நாளாந்த வருமானம் பெறுபவர்களாக கூலி வேலை
செய்பவர்களாக மாறி வருகின்றனர்.
ஸ்திரமான அரசியல் நிலையே ஒரு நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு உந்து சக்தியாக அமையும், அத்துடன் இடப்பெயர்வுகள் நாட்டின் கலாசார சீரழிவுக்கும் காரணமாக அமைகின்றது. ஓரிடத்தில் நிலையாக வாழும் போது அவர்கள் தமக்கென குறிப்பிட்ட ஒரு கலாசாரத்துக்கு கட்டுப்பட்டு கூட்டுறவு மனப்பான்மையுடன் ஒற்றுமையாக வாழ்கின்றனர். இடம்பெயரும் போது அவர்கள் குறிப்பிட்ட ஒரு இடத்தில் அல்லது தாம் விரும்பிய இடத்தில் வாழ முடியாது. பல்வேறு வெவ்வேறுபட்ட சமூகங்களின் மத்தியில் வாழ வேண்டிய கட்டாயம். தமக்கென ஒரு கலாசாரத்தைக் கட்டிக் காத்த மக்கள் இன்று எப்படியாவது வாழ வேண்டும். என்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். வாழ்விடங்கள் அனைவருக்கும் பொதுவானவை. எனவே தனித்துவத்தைப் பேண முடியாது. இருப்பதுடன் எந்தவித கட்டுப்பாடுகளுமில்லை. மனம் போன போக்கில் வாழ்கின்றனர். இதனால் கலாச்சார சீரழிவுகள் பெருக வழிவகுக்கின்றது.
மேலும் மாணவர்களது கல்வி பாதிக்கப்படுகின்றது. மாணவர் தாம் படித்த பாடசாலைகளில் மட்டுமன்றி படித்த பாடக் குறிப்புகள், பாடப்புத்தகங்கள் ஆகியவற்றை இழக்கின்றனர். சிறிய குடியிருப்புக்களில் வாழ்வதால் படிப்பதற்கு ஏற்ற தளபாட வசதிகளோ, சூழ்நிலைகளோ இருப்பதில்லை. பெற்றோர் தம் வாழ்வில் ஏற்பட்ட அவலங்களுக்கு முகம் கொடுத்த நிலையில் பிள்ளைகள் கல்வியில் அக்கறை செலுத்த முடியாத நிலை. அவர்கள் ஏழ்மை நிலையும் அவர்களை உளவியல் பாதிப்புக்கு உள்ளாக்கின்றது. இடம்பெயர்ந்து புதிய பாடசாலைகளில் புதிய சூழ்நிலையில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை. இளம்பருவத்தில் வாழ வேண்டிய
வயதில் எந்தக் கஷ்டத்தையும் ஜீரணிக்க முடியாத நிலையில் உளவியல் பாதிப்புக்கு G22) கட்டுரைகள்

உள்ளாகின்றனர். இவ்வாறு இடப் பெயர்வுகள் மக்கள் மத்தியில் சொல்லொணாத்
துன்ப துயரங்கள் ஏற்பட வழி வகுக்கின்றது எனலாம்.
உயர் பாதுகாப்புக் கருதி பலர் இடம் பெயர்கின்றனர். அதாவது அரசியல் கெடுபிடிகள் கொந்தளிப்புக்களாலும், சமய நெருக்கடிகளாலும் இடம்பெயர்கின்றனர்.
இதனால் அடிப்படை வசதிகளின்றி பலர் வாழ்கின்றனர். அகதிகள், அநாதைகள்,
தொகை அதிகரித்துச் செல்கின்றது. இனங்களுக்கிடையே பேதங்கள் அதிகரிக்கும் போக்கு காணப்படுகின்றது. இடப்பெயர்வு எனும் போது எதிர்பாராத விதத்தில் ஏற்படும்
பிரச்சினைகள் காரணமாக இடப்பெயர்வதுடன் இன்று இனவாதப் பிரச்சினைகளாலும்
இடம் பெயர வேண்டியுள்ளது. ஆப்கானிஸ்தான், அங்கோலா, ருவாண்டா போன்ற நாடுகளில் மட்டுமன்றி இலங்கையிலும் அகதிகள் பிரச்சினை பாரிய பிரச்சினையாக
உருவெடுத்துள்ளது. இதனால் ஒரு நாட்டின் ஸ்திரத்தன்மை பெருமளவு பாதிக்கப்படுகின்றது. அந்நாடுகளில் அடிப்படை வசதிகளை வழங்குவதில் துஸ்பிரயோகங்கள் இடம் பெறுகின்றன். குழந்தைகள், விதவைகள், ஊனமுற்றவர்களைப்
பராமரிப்பதில் ஏற்படும் பிரச்சினைகள் சொல்லொணாதவை. அத்துடன் மீளக்குடியமர்தல்
தொடர்பான பிரச்சினைகள் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் தேசிய கலாசாரம்
சமய பண்பாடு என்பன பாதிக்கப்படுகின்றன. பொருளாதார ரீதியான தாக்கங்களும்
ஏற்பட வழி வகுக்கின்றது. அகதி முகாம்களில் இடநெருக்கடியைக் கட்டுப்படுத்துதல்,
குடி நீர் வழங்குதல், மலசலசுட வசதிகளைப் பெற்றுக்கொடுத்தல், அவர்களுக்கு
வேண்டிய பாதுகாப்பு வழங்குதல், சுயதொழில் வேலை வாய்ப்புக்களை வழங்கல் போன்ற பல்வேறு பிரச்சினைகளுடன் சூழல் மாசடைதல் சம்பந்தமான பிரச்சினைகளையும் கட்டுப்படுத்த வேண்டிய நிலைக்கு அரசும், அரச சார்பற்ற நிறவனங்களும் முகங்கொடுக்க வேண்டி உள்ளது. எனவே ஒரு நாட்டில் ஏற்படும் இடப்பெயர்வகள் அந் நாட்டின் பொருளாதார வளங்களை சீர்குலைத்து அபிவிருத்தியைப் பின்தள்ளும் ஒரு
நடவடிக்கையாக இன்று விஸ்வரூபமெடுத்து வருகின்றது எனலாம்.
S S S S S S S S S S S S S S SS S S S S S S S S S S SSS S S S S S S S S S S SSS S S S S S S S S S S S S S
G23) கட்டுரைகள்

Page 18
7. புகலிடத் தமிழ் இலக்கியம்
மக்கள் காலத்துக்கு காலம் தமது வாழ்வில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகள் காரணமாக இடத்துக்கு இடம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இடம் பெயர்ந்துள்ளனர். இவ்வாறு புலம் பெயர்ந்தவர்கள் தாம் சென்று வாழ்ந்த இடங்களில் தம் மனதில்
எழுந்த ஆதங்கங்களை கட்டுரைகள், கவிதைகள் வாயிலாக வெளிப்படுத்தினர் இலங்கையில் இருந்து 1980/90 களில் புலம்பெயர்ந்து கனடா, அவுஸ்திரேலியா, நெதர்லாந்து, நோர்வே, சுவிஸ், பிரான்ஸ், ஜேர்மனி போன்ற நாடுகளில் புகலிடம் தேடிக்கொண்டவர்களால் எழுதப்பட்ட இலக்கியங்களையே புகலிட இலக்கியங்கள்
6T66 Lj.
புகலிட இடங்களில் வாழ்ந்தவர்கள் தமக்கு ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு
முகம் கொடுக்கும்போது தாயக நினைவுகளால் தூண்டப்பட்டு தமது அந்நியமான
நிலையை வெளிப்படுத்தும் வகையில் எழுதப்பட்ட சஞ்சிகைகள், நாவல்கள், கதைகள்,
கட்டுரைகள், விமர்சனங்கள், யாவும் புகலிட இலக்கியங்களாகக் கொள்ளப்படுகின்றன.
எமது கலை, கலாசாரம், பண்பாடு ஆகியன மேலைத்தேய நாகரிகத்தால் அழிந்து விடாமல் பேணிப் பாதுகாப்பவையாக இத்தகைய இலக்கியங்களே அமைகின்றன. அதாவது வதிவிடப் பண்பாட்டுப் பிரச்சினைகள், அகதி வாழ்வின் சிக்கல்கள், தாயகம்
பற்றிய ஏக்கம், எதிர்காலம் பற்றிய எண்ணம் ஆகியவற்றை கருவாக கொண்டெழுந்தவை.
புகலிட இலக்கியங்களாக ஜேர்மனியில் “தூண்டில்', பிரான்சில் “ஓசை’, சுவிஸில் “மனிதம்’ நோர்வேயில் “சுவடுகள்” “சக்தி” அவுஸ்திரேலியாவில்
"அக்கினிக்குஞ்சு” “மரு', "அவுஸ்ரேலிய முரசு', கனடாவில் "பாலம்'நான்காவது பரிமாணம்’, நெதர்லாந்தில் அ, ஆ இ ஆகிய சஞ்சிகைகள் வெளிவருகின்றமை குறிப்பிடத்தக்கது. பெற்றோர் தம் எதிர்காலம் பற்றி, எதிர்காலக் குழந்தைகள் பற்றிக் கொண்ட ஏக்கத்தை, அச்சத்தை வெளிப்படுத்தும் வகையில் இலக்கியங்களைப்
படைத்தவர்களுள் பிரான்ஸில் வாழ்ந்து அண்மையில் மறைந்த எஸ்.அகஸ்தியர், அவுஸ்திரேலியாவில் வாழ்ந்த எஸ்.பொன்னுத்துரை மற்றும் முருகபூபதி, சாமி அப்பாத்துரை, நோர்வே வ.ஐ.ச.ஜெயபாலன் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
அவர்களை விட கலாமோகன், கலைச்செல்வன், பார்த்தீபன், கிருபா, சுகன், கோசல்யா,
தேவகி இராமநாதன், சுசிந்திரன், கருணாமுர்த்தி, சரண்யா, விக்கிரம், சந்திராதேவி,
கட்டுரைகள்

போன்ற இளைய எழுத்தாளர்களும் புகலிட இலக்கியங்களைச் செய்தவர்களுள்
குறிப்பிடத்தக்கவர்கள்.
உண்மையில் கலை ஈடுபாடு கொண்ட படைப்பாளி தன் படைப்பின் ஊடாக உலகிற்கு ஏதோ சொல்ல வருகிறான். "எழுதப்பட்ட கவிதைகளுக்கு வரையப்பட்ட சித்திரம்”, “தூண்டில்”, “தலைப்பூக்கள்”, ஆகியன இத்தகைய முயற்சியின் வெளிப்பாடே கவிஞர் சேரன் ஜேர்மனியில் இருந்து வெளியிட்ட "நீ இப்பொழுது இறங்கும் ஆறு' என்ற கவிதைத் தொகுதியும், ந.சுசீந்திரனின் "பணிவயல் உழவு', ஆகியன இலக்கிய கர்த்தாக்கள் தமக்கே லாவகமான வடிவமொன்றில் தாம் பெற்ற தரிசனங்களை
வெளிப்படுத்தும் முயற்சியாகும்.
கனடாவில் இருந்து இளைய பாரதியின் தீபம் தொலைக்காட்சி நிகழ்வுகள், "எனக்குள் பெய்யும் மழை" யமுனா இராஜேந்திரனின் மொழி பெயர்ப்பு நூல்களும் புலம்பெயர் இலக்கியங்களாகும். எனவே தமிழர் தம் இருப்பை நிலை நிறுத்தவும், தனித்துவத்தை பேணவும் எழுதப்பட்ட இலக்கியங்களாகும். இவ்வாறு எண்பதுகளில் வெளியான சிறுகதைகள் தாயக நினைவுகளாகவே விளங்கின. 'மண்ணைத் தேடும் மனங்கள்', மாத்தளை சோமு எழுதிய "வெள்ளைக்காரர்கள்”, அருள் விஜயராணி எழுதிய "கன்னிகாதானங்கள்", முருகபூபதி எழுதிய "மொழி", நிருபா எழுதிய "ஏக்கங்கள்", கலைச்செல்வன் எழுதிய "கூடுகளும் குயில்களும்” ஆகிய புகலிட இலக்கியங்கள்
சிறுகதைகளாக வெளிவந்துள்ளன.
புகலிட நாடுகளில் வாழ்ந்தவர்கள் தம்மிடையே நிறுவனங்களை அமைத்தும், எழுத்தாளர் இலக்கிய சந்திப்புக்களை நடத்தியும் முத்தமிழ் அறிஞர்களை கனடா, சுவிஸ், அவுஸ்திரேலியா, இலண்டன் போன்ற நாடுகளுக்கு வரவழைத்து இலக்கிய சர்ச்சைகளை நடத்தியும், நாடகங்களை மேடை ஏற்றியும் கருத்தரங்குகளை நிகழ்த்தியும், இலக்கியங்களின் வளர்ச்சிக்கும் தமிழின் உயிர்ப்புக்கும் புத் துயிர் அளித்துக்கொண்டிருக்கின்றனர். திறமையான புலமையெனில் அதை மற்றவரும் அறிந்திடச் செய்திட வேண்டும். என்ற பாரதியாரின் இலட்சியத்தை நனவாக கொண்டிருப்பவர்கள்
புகலிட கர்த்தாக்களே. அவர்கள் முயற்சி பெருகும் வரை தமிழ் வாழும். வளரும்.
S S S S S S S S S S S S S S SS S S S S S S S S S S S S SSS S S S S S S S S S S SSS S S S S S S S S S S S S S S S S S S S
G25) கட்டுரைகள்

Page 19
8. திரைப்படங்களும் சமூகமும்
விஞ்ஞான வளர்ச்சியின் பயனாக இன்று உலகில் பல்வேறு புதிய புதிய சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை சமுதாயத்தைக் கோடிட்டுக் காட்டுவதற்குப் பெருந்துணை புரிகின்றன. அத்தகைய சாதனங்களுள் ஒன்று திரைப்படம். இது ஒரு வெகுசனத் தொடர்பு சாதனம் ஆரம்பகாலத்தில் வெறும் பிரச்சாரக் கருவியாக திரைப்படம் பயன்பட்டது. அதாவது வாழ்வின் புதிரை அவிழ்க்கும் விழிப்புணர்ச்சியின் வடிவமாகவோ
அன்றேல் கலை வடிவமாகவோ தான் பயன்பட்டது.
எழுபதுகளில் தமிழ் சினிமாவில் புதியதோர் பாய்ச்சல் ஏற்பட்டது. பாலச்சந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா, பாக்கியராஜா, போன்றோர் இதற்கு பெரும் துணை புரிந்தனர். காட்டாற்று வெள்ளப்பிரவாகமாக மளமள என்று திரைப்படத்துறையில் வளர்ச்சி ஏற்பட்டது. கலைகளும், கலைத்துறை, அறிவுத்தறை, உலகியல் சம்பந்தமான அறிவு வளர பெருந்துணை புரிந்தது. எனினும் தொண்ணுறுகளில் அகத்தியன், விக்ரமன், பார்த்தீபன், கே.எஸ் ரவிக்குமார், கே. செல்வமணி போன்றோரின் வருகை சினிமாவின் வலிமையைச் சமூகத்திற்கு உணர்த்தியது. கலை, கலைத்துறை சம்பந்தமான பார்வை அரசியல் பார்வையாக மாறத் தொடங்கியது. அரசியல் வாதிகள் தமது வாழ்வை சினிமாவாகவும்
மக்கள் சினிமாவை தம் வாழ்வாகவும் ஆக்கிவிட்டார்கள்.
சினிமா ஒரு கலை, அது அற்புத அநுபவம் தரும் ஒர் ஊடகம், விழிப்புணர்வைத் தரும் ஒரு ஆயுதம், மக்களிடையே கலை, கலாசாரம் முதலியவற்றை வெளிப்படுத்த எழுந்த ஒரு வரப்பிரசாதம் என்றே மக்கள் கருதினர். அந்த அளவுக்குத் திரைப்படம் சமுதாயத்துடன் இணைந்து காணப்பட்டது. சமுதாயத்துக்கு நல்ல செய்திகளை எடுத்துக் கூறியது. “பாசமலர்” சகோதர பாசத்தையும் "சம்சாரம் அது மின்சாரம்" குடும்ப பிரச்சினைகளையும் என அவை ஏதோ ஒன்றைச் சொல்ல விழைந்தன. சமுதாயத்துக்கு பல நல்ல கருத்துக்களைத் தந்தன. சமூகத்தில் உள்ள அனைவரும் விரும்பிப் பார்க்கக் கூடிய ஒன்றாக அமைந்தது. பல நல்ல தத்துவக் கருத்துக்களை மையமாக
வைத்துப் பின்னப்பட்டன. "தில்லானா மோகனாம்பாள்" சிந்தனையை விட்டு அகலாத
C26) கட்டுரைகள்

ஒரு திரைப்படம். நல்ல கலைக்குடும்பம் ஒன்றை அறிமுகம் செய்து கலையை
ரசிக்கும் உணர்வை ஏற்படுத்த தூண்டுகோலாக அமைந்தது. "பாகப் பரிவினை"
ஒற்றுமையாக இருந்த குடும்பத்தில் ஏற்படும் பிளவுகள் பற்றிக் கூறுவது.
அண்மைக்காலத்தில் வெளிவந்த "ஆட்டோ கிராப்" உடற்குறைபாடுள்ள இளைய
சமுதாயத்தை அவர்களின் கலையுணர்வை நுணுக்கமாகப் புலப்படுத்தும் வகையில்
தத்துவக் கருத்துக்கள் கொண்டமைந்தது. இவ்வாறு ஏதாவது ஒரு கருப்பொருளை
மையமாக எடுத்துக்காட்டும் முறையில் அமையும் போது அது சமுதாயத்துக்கு ஏற்புடைய
ஒன்றாக அமையும் மக்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு அம்சமாகத் திகழ்ந்து, சோகத்தில்
முழ்கியிருக்கின்றவர்கள் தம் கவலையை மறந்து ஆனந்தத்தில் மிதக்க ஒரு இதந்தரும்
இன்ப மருந்தாகவும் அமையும்,
இன்று உலகின் போக்கினையும், சமுதாய மாற்றத்தையும் நோக்கும் போது
சினிமா மனித சமூகத்தின் தீர்க்கமுடியாத பாரிய பிரச்சினையாக உருவெடுத்து
வருகின்றது. வளர்ந்து வரும் சமுதாயம் சினிமாவே வாழ்க்கை என்ற ஆணித்தரமான
கொள்கையை வளர்த்து வருவதைக் காணக்கூடியதாக உள்ளது. பள்ளிப் பருவத்தினர்
முதல் முதிர்ந்தவர்கள் வரை ஒன்றிய ஒரு பொழுது போக்கு சாதனம் சினிமாவே
என்று கருதுகின்றனர். தொலைக்காட்சி, வானொலி அவர்களிடையே பிரபல்யம்
பெறுவதற்கு இதுவே காரணம். தேசிய தொலைக்காட்சிகளில் கல்வி சம்பந்தமான
அறிவியல் நிகழ்ச்சிகள் மாணவர்களிடையே நடைபெறும் அறிவியல் சம்பந்தமான போட்டிகள், சிறுவர்களுக்கான நிகழ்வுகள், செய்திகள், முதலியன ஒலிபரப்பட்படுகின்றன.
அவற்றைப் பார்ப்பவர்கள் பயன்பெறுபவர்களின் எண்ணிக்கையை விரல் விட்டு
எண்ணிவிடலாம். கவர்ச்சிகரமானதும் வசீகரமானதுமே சினிமா என்ற எண்ணம் மக்கள்
மத்தியில் மேலோங்கிவிட்டது. மாணவர்களைப் பொறுத்த வரை படங்களில் வரும்
நடிகர்கள், பாடல்கள், பாடகர்கள், பாடல்களை இயற்றியவர்கள், இசையமைத்தவர்கள், பெயர்களை தெளிவாக ஞாபகத்தில் வைத்திருக்கும் அளவிற்கு அவர்களது
சிந்தனைப்போக்கு மாறிவிட்டது. அதாவது சினிமாத்துறை மாணவ சமூகத்தில்
பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகிறது எனலாம்.
G22) கட்டுரைகள்

Page 20
இன்றைய இளைஞர்களிடையே சினிமாவை தங்கள் வாழ்க்கையுடன் ஒப்பிட்டு
நோக்கும் போக்கு வேரூன்றியுள்ளது. காதல் காட்சிகளை பார்ப்பவர்கள் சினிமாவில்
வரும் காதலர்களைப் போன்று தாங்கள் காதலர்களாய் திகழ வேண்டும் என்று
எண்ணுகிறார்கள். தங்கள் நிலையை வெளிப்படுத்தும் வகையில் பாடல்கள் ஒலிபரப்பானால் அதுவே தங்கள் நிலை என்று எண்ணுவதும், தோல்வியடைந்தவர்கள்
சோக கீதங்களைப் பாடுவதும், கேட்பதுமான நிலை உருவாகிவிட்டது. சினிமா வாழ்க்கை
நடைமுறைக்கு ஒவ்வாதது என்பதை அவர்கள் உணர மறுக்கின்றனர். திரையுலகம்
அவர்களின் இரத்தத்தில் கலந்து சங்கமமாகி விட்டது. மக்களின் உயிர்நாடி என்று
கூடச் சொல்லலாம். சினிமாவில் வரும் கதாநாயகர்களைப் போன்று தங்களை
உருவகித்துக் கொள்ளும் மனோவாபம் மக்கள் மத்தியில் பரவலாக வேரூன்றி விட்டது.
இன்று வெளிவரும் பாடல்கள் வணிக நோக்கில் தயாரிக்கப்படுகின்றன.
பெரும்பாலான பாடல்கள் சமூகவிரோதச் செயல்களை, அவற்றிலிருந்து தப்பிக்கும்
மார்க்கங்களையே வெளிப்படுத்துகின்றன. இறுதியில் ஏதோ ஒரு முடிவை நோக்கிச்
சென்றாலும் படம் முழுவதும் அபத்தம், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பழிவாங்கும்
உணர்வு இடம்பெறாத படங்களே இல்லை. பெண்களின் அவலக்குரல் ஒவ்வொரு
படங்களிலும் ஏதோ ஒரு வகையில் எதிரொலிக்கின்றது. வெறித்தனமான பழிவாங்கும்
நடவடிக்கைகள் மோசமாக சித்தரிக்கப்படுகின்றன. குடும்பத்துடன் மகிழ்ச்சியாக அமர்ந்து
பார்க்கக் கூடியவையாக அவை இல்லை. வன்முறை கலாச்சாரம் ஒன்று சமுதாயத்தில்
பெருகி வருவது பெரும் சாபக்கேடு. சினிமா தான் வக்ரபுத்திக்கு தீனி போடுகின்றது.
என்பதை மறுப்பதற்கில்லை. கருப்பொருள் எதுவும் இல்லாத படங்களைப் பார்க்க
வேண்டியது துர்பாக்கிய நிலை இன்று பெருகி வருகின்றது.
தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகும் படங்களை விட இன்று சின்னத்திரை
படங்களின் தொகை நாளாந்தம் பெருகிய வண்ணம் உள்ளது. திரைப்படங்களே மேல்
என்று கூறுமளவிற்கு அவற்றின் தரம் மேலும் மேலும் கீழிறங்கிக் கொண்டு வருவது
வேதனை தரும் விடயம். சிறந்த ஒரு கருப்பொருளை மையமாக வைத்து அத்
திரைப்படங்கள் ஒலிபரப்பப்படுவதில்லை. வன்முறைக்கலாசாரம் உருவாவதற்கும்,
(28) கட்டுரைகள்

சமுதாயச் சீர்கேடுகள் பெருகுவதற்கும், பாலியல் வல்லுறவுகள், பழிக்குப் பழி வாங்கும் மனோபாவங்கள் வளர்த்தெடுக்கப்படுவதற்கும் அவை பெருந்துணை புரிகின்றன. கருணையின் இருப்பிடம் அன்பின் உறைவிடம், ஒழுக்கத்தின் பிறப்பிடம் என்று கூறப்படும் பெண்களே வக்கிரபுத்தி கொண்டவர்களாக மாறிவிடும் போக்கே இத்திரைப்படங்கள் மூலம் வெளிப்படுத்தப்படுகின்றது. வளர்ந்து வரும் சமுதாயம் சிறந்த ஒழுக்கமுள்ள
சமுதாயமாக மலர்வதற்குப் பதிலாக சீர்கேடடையவே வழி வகுக்கின்றது.
நல்ல கதையம்சங்கள் இல்லையா? சமுதாய மேம்பாடு பற்றிய எண்ணக்கரு படித்தவர்கள் மத்தியிலிருந்து விடை பெற்றுவிட்டதா? பணத்தினால் எல்லாவற்றையும் பெற்றுவிட முடியுமா? இன்றைய இளைய சமுதாயமே நாளை நமது நாட்டை ஆளப்போகும் தலைவர்கள், அவர்கள் ஒழுக்க சீலர்களாக பண்புள்ளவர்களாக, எமது கலாசாரத்தை மதிப்பவர்களாக எமது நாட்டின் உயர்வுக்காக தம்மை அர்ப்பணிப்பவர்களாக வளர்த்தெடுக்கப் பட வேண்டாமா? செவிடன் காதில் ஊதிய சங்கு போல பெற்றோர் சொல்லும் அறிவுரைகள் பிள்ளைகள் மனதில் பதிவது இல்லை. நல்ல விடயங்கள் மெதுவாக, அமைதியாக வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல ஏற்றப்பட வேண்டுமே அன்றி திணிக்க முடியாது. அதற்கு திரைப்படங்களும், தொலைக்காட்சிகளும் தான் உதவும். எனவே மக்கள் நலனைக் கருத்திற் கொண்டு திரைப்பட தயாரிப்பாளர்கள் செயற்படுவாராயின் அது மக்கள் சமுதாயத்துக்கு அவர்கள் செய்யும் மகத்தான
சேவையாகும்.
C 2ഴ கட்டுரைகள்

Page 21
9. தமிழில் இணையம்
இருபத்தோராம் நூற்றாண்டில் காலடி எடுத்து வைத்துள்ள ஒவ்வொருவரும் இணையம் பற்றி அறிந்திருப்பார்கள் என்பதில் ஐயம் இல்லை. அதுவே மனித இனத்தின் முதல் பன்மொழி ஊடகம். தகவல் தொழினுட்பம், தொலைத்தொடர்பு என்னும் இரண்டு பெரிய துறைகளின் இணைப்பினால் உருவாக்கப்பட்டதே இணையம். அது தகவல்களின் மிகப் பிரமாண்டமான தொகுப்பாகும். இணையத்தை உலகின் மிகப் பெரிய நூல்நிலையம் எனக் குறிப்பிட முடியும் எந்தவொரு விடயம் தொடர்பாகவும் வரலாற்று ரீதியாக தகவல்களை தருவதுடன் மிகவும் பிந்திய தகவல்களை உடனடியாக பெற்றுக்கொள்ள உதவும் சாதனம். அதாவது தொழில் நுட்பத்துறையில் ஏற்பட்ட வியத்தகு மாற்றங்களின் விளைவே இணையம். அதனுடைய சிறப்பம்சம் அது ஒரு பல்லூடகத் தொடர்பியல் சாதனமாக விளங்குவதே! அதாவது உலக நாடுகளில் உள்ள பலமொழி பேசுபவர்களையும், பலதுறை சார்ந்தவர்களையும் பல்வேறுபட்ட செய்திப் பரிமாற்றங்களையும் ஒன்றிணைப்பது. மிகப் பெரும் பொழுது போக்கு
சாதனங்களை ஒன்றிணைத்தும் முப்பரிமாண இயல்பில் தகவல்களை வழங்குகிறது.
ஆரம்பத்தில் உயர் கல்வித் துறையிலும் மட்டுமே பங்களிப்பை செய்த இணையம் இன்று பல்வேறு தேவைகளுக்கும் தனது கதவுகளை அகலத்திறந்து வைத்துள்ளது. உலகில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் இதன் மூலம் நன்மை அனுபவிக்கத் தொடங்கிவிட்டனர். அதாவது உலக வலயக் கட்டமைப்பு ஒன்றை உருவாக்கும் செயற்பாடாக மாற்றமடைந்துள்ளது. மக்கள் தமது தொழில்களையும் தேவைகளையும் இணையத்தின் மூலம் பூர்த்தி செய்து கொள்ள முடியும். தொலைக்கல்வி முறையில் திறந்த போதனா முறை ஒன்றை வழங்குகிறது. ஒரு மொழியின் வளர்ச்சியும் இருப்பும், தகவல் தொழில் நுட்பத்தின் கைகளிலேயே தங்கியுள்ளது. அந்த வகையில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் இருப்புக்கும் கூட
இணையம் கைகொடுத்து உதவியுள்ளது எனலாம்.
இணையத்துக்கு உரிமையாளர் எவரும் இல்லை. எனினும் எவரும் நேரடியாகத் தொடர்பை பெறமுடியாது. இணைய ஊடகங்கள் மூலமே தொடர்பை பேணிக்கொள்ள முடியும். வீடுகளிலும், பாடசாலைகளிலும், அலுவலகங்களிலும் அதனை உபயோகிப்பவர்களுக்கு பல்வேறுபட்ட அளவிலான தகவல்களை உடனுக்குடன்
வழங்குகிறது. தனி ஒரு நிறுவனத்தின் தனிப்பட்ட உபயோகத்துக்கென சிறு அளவிலான Go)- கட்டுரைகள்

இணையங்களும் காணப்படுகின்றன. 1996 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இணையம் சுமார் 180 நாடுகளில் உள்ள 25 மில்லியன் கணிப்பொறிகளை ஒன்றுடன் ஒன்று
இணைத்து இருந்தது. இன்று அது இடையறாது வளர்ச்சியடைந்து கொண்டு வருகிறது.
எனவே இன்று தகவல் தொழில் நுட்பத்தில் பெருமளவுக்கு வியப்பூட்டும்
ஒரு சாதனமாக இணையம் விளங்குகிறது. அறிவுத் துறைகள் தொடர்பான பேரளவான
தகவல் தளங்களைத் தன்னகத்தே கொண்டது. மக்களது எண்ணங்களையும் சிந்தனைகளையும் பரவலாக எடுத்துச் செல்வதற்கான ஒரு வழி முறை. எனவே தமிழிலும் இணையப்பயன்பாடு வளர்ச்சியடைய வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகும். தமிழில் இணையம் எனும் போது அது கணினியின் கட்டளை மொழியாக தமிழைப் பயன்படுத்துதல், தமிழில் விசைப்பலகை அமைத்தல், போன்ற முயற்சிகளைக் குறிக்கும். தமிழில் கணினி அமைக்கும் முயற்சி மலேசியாவில் தோற்றம் பெற்ற போதும் தமிழ் நாட்டிலும் இதன் தொடர்ச்சியான வளர்ச்சிப் போக்கை காணக்கூடியதாய் உள்ளது. எனினும் தமிழில் இணையம் அமைப்பதில் உலக நாடுகள் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்க வேண்டி உள்ளது. அதாவது தமிழ் மொழியில் பொதுவான
கலைச்சொற்களை ஆக்குவது சிரமம். இதற்காக இலங்கை, இந்தியா, சிங்கப்பூர் போன்ற இடங்களில் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இலங்கையில் இருந்து பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களும்இவ் ஆய்வில் கலந்து கொண்டார். எனினும் பன்னாட்டு பல்வகை இணையங்களை ஒன்றுபடுத்துவது சிக்கல் நிறைந்த ஒன்றாக
உள்ளது.
இதனால் சென்னை, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற இடங்களில் தமிழில் இணையம் தொடர்பாக மாநாடுகள் நடத்தப்பட்டன. எனினும் தகவல் தேவையைக் குறிப்பிட்ட ஒரு மொழியில் நிறைவேற்ற முடியுமா? என்பது சிந்தனைக்கு உரியது. காலத்தின் கட்டாயம் தமிழிலும் இணையம் வளர்ச்சியடைய வேண்டியுள்ளமை.ஏனெனில்
ஊடகங்களால் தான் ஒரு மொழியின் நிலைபேற்றை தக்க வைக்கவும், வளர்ச்சியைப்
பேணவும் முடியும். அவையே வளர்ச்சிக்கும் நிலைபேற்றிற்கும் காரணமாக அமைவன.
மொழி வழி சமூகங்கள் தமிழ் மொழி வளர்ச்சி குறித்து பிற்காலத்தில் திரும்பிப் பார்க்க பிந்திய கால மாற்றங்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள
ஒப்பற்ற அரும்பெரும் சாதனமாக விளங்குவது இணையம் தான். இன்று சிறுவர் முதல்
GD- கட்டுரைகள்

Page 22
பெரியோர் வரை இணையத்தையே பயன்படுத்தி வருகின்றனர். அவ்வாறாயின் தமிழ்
மாணவர்கள் தமிழில் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள தமிழில் இணையம் வளர்ச்சி
பெறுதல் வேண்டும் எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையில் கணினி தமிழில் உருவாவது
அவசியம். ஆங்கிலத்தைப் போன்று தமிழையும் பயன்படுத்தக் கூடிய வகையில் உலகளாவிய ரீதியில் கணிப்பொறி முறைகளைப் பயன்படுத்த குறியீட்டு முறையும்,
விசைப்பலகையும் தராதரப்படுத்தப்பட்டுள்ளதால் தமிழில் இணையத்தை பயன்படுத்துவதிலுள்ள மிகப் பெரிய சிக்கல் நீங்கிவிட்டது. இன்று நூற்றுக்கணக்கான
தமிழ் வலயங்களிற்கு இலட்சக்கணக்கான வாசகர்கள் இருக்கிறார்கள்.
1. தனிநபர் நிலையத் தொடர்புகள்
2. குழு நிலைத் தொடர்புகள்
3. வெகுசன ஊடகங்கள்
என மூன்று வழிகளிலும் தொடர்புகளை மேற்கொள்ள முடியும்.
ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் உள்ளது போன்று நன்மைகள் பெருகுமளவிற்கு சிக்கல்களும் உண்டு என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். முயற்சியினால் சிக்கல்களை வெற்றிகொள்ள முடியும். அவற்றை வெற்றி கொள்வதிலேயே மனித செயற்பாடு தங்கியுள்ளது. எனவே எமது விழுமியங்களைப் பேணி அபிவிருத்திக்கு பயன்படுத்தக்கூடிய வகையில் தமிழிலும் இணையத்தைப்
பயன்படுத்துவதிலேயே எமது வருங்கால வெற்றி தங்கியுள்ளது எனலாம்.
இன்றைய இருபத்தோராம் நூற்றாண்டில் மனிதனின் செயற்பாடுகளை இலகு
பெறச் செய்து பெரும் சாதனை படைத்துக்கொண்டிருக்கிறது இணையம். தமிழில் குறியீடுகளும், விசைப்பலகைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. மருத்துவத்துறையில் தமிழ்க்கலைச்சொற்கள் மிகக் குறைவாக காணப்படுகின்ற சந்தர்ப்பத்தில் கணினித் தமிழ்ச்சங்கம் இணையத்தளத்தினூடாக கலைச் சொற் தொகுதிகளை அறிமுகம் செய்து “வெப்' தளங்களினூடாக வெளியிடுகின்றது. "தமிழ் நெற்’ மூலம் செய்திகளை பெற்றுக்கொள்ளக் கூடியதாக உள்ளது. இவ்வாறு தமிழ் மொழியானது உலகம்
போற்றும் மொழியாக வளர்ச்சியடைய தமிழ் இணையம் மேலும் மேலும் சேவையை வழங்கி வருகின்றது, மேலும் வழங்க வேண்டிய நிலைக்கு உயர்வடையும் என்பதில்
ஐயமில்லை.
(32) கட்டுரைகள்

10. எண்ணித் துணிக கருமம்
களைப்பு அதிகம், ஓய்வு வேண்டும், வீதி பொது இடம், அதனால் நமக்கு சொந்தம் என்று வீதியில் ஓய்வுஎடுக்க முடியுமா? வீதி பலரும் போக்குவரத்து செய்யும் இடம். பிறருக்கு துன்பம் தரும்படி நாம் நடக்க முடியுமா? எனவே எமது உடம்புக்கு ஏற்படும் பாதிப்பை அறிந்துகொள்ள வேண்டும். அதற்கான காரணங்களை ஆராய்தல் வேண்டும். களைப்பில் இருந்து எப்படி எமது உடம்பைப் பாதுகாக்க முடியும்? களைப்பு ஏற்படும் போது என்ன செய்யலாம் என்பதைத் தீர்மானிக்க வேண்டும். இதுவே சிறந்த வழி.
வேலைக்கு செல்ல வேண்டும். நேரம் வந்துவிட்டது. உடனே புறப்படலாமா? கோவைகள் தேவை, வாகனம் தேவை, செலவிற்கு பணம் தேவை, வேலைக்கு செல்ல வேண்டிய நேரம் எனக்குத் தெரியும். எனவே நேரத்தை திட்டமிடல் வேண்டும். உரிய நேரத்தில் உரிய வேலையைச் செய்யப் பழகிக்கொள்ளுதல் வேண்டும். அதுவே நல்ல பழக்கம் அதனால் சிக்கல் ஏற்படாது.
நாடகம் ஒன்றைப் பார்க்கப் போகிறோம். நடிப்புக்கலையில் அனுபவம் உண்டு. நடிகர் ஒருவருக்குத் திடீரென சுகவீனம் நடிக்க முடியாமல் போய் விட்டது. என்ன செய்யலாம்? ஒரு சில நிமிடங்கள் திட்டமிட்டுத் தீர்மானிக்க வேண்டும். முகபாவனையில் என்னென்ன மாற்றம் செய்ய வேண்டும். தொனியில் எவ்வாறான ஏற்ற இறக்கங்களைச் செய்ய வேண்டும். நமக்கு தரப்பட்ட பாத்திரத்தை மனக்கண்ணில் காண வேண்டும். குறிப்பிட்ட பாத்திரமாக நாம் மாற வேண்டும். சில மணித்துளிகளில் எல்லாவற்றையும் தீர்மானிக்க வேண்டும். அதனால் பாராட்டுதல் கிடைக்கும் ஆர்வம் பெருகும். நடிப்புக்கலையில் உற்சாகம், பெருகும். எமது நடிப்புதிறனும் வளரும்.
எந்தச் செயலை செய்வதாக இருந்தாலும் செயல் பற்றி நிதானமாக சிந்திக்க வேண்டும் செயலைச் செய்யலாமா? அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாம் செய்யும் செயல் சரியானதா?
LUTTITÜ (BLI GALUMBILDT? 6T6IOT ாய வேண்டும். செயலின் வகை. செய்ய 丞多 கட்டுரைகள்

Page 23
எடுக்கும் நேரம், அச்செயல் பொருத்தமானதா? என அறிவு பூர்வமாக அணுக வேண்டும். உணர்ச்சிக்கு முதலிடம் கொடுத்தலாகாது. அறிவும் உணர்வும் ஒத்தியங்க வேண்டும். நமது சக்திக்கு உட்பட்டதா? அதற்கேற்ப பணபலம், ஆட்பலம், உடல்பலம் உண்டா? என்பதையும் ஆராய வேண்டும்.
செயல் செய்வதால் நன்மை விளையும் என தீர்மானித்தால் அச் செயலைச் செய்யலாம். நாம் செய்யும் செயல் அறமற்றது. விவேகமற்றது. மனச் சாட்சிக்கு பொருந்தாதது எனத் தீர்மானித்தால் பிறரின் வற்புறுத்தலுக்காகச் செய்தல் கூடாது. ஆசையினால் தூண்டப்பட்டு செய்யும் செயல்கள் விபரீத விளைவைத் தரும்.
செயலில் தடைகள் ஏற்படும் என்று தெரிந்தும், வரும் போது பார்த்துக்கொள்ளலாம் என ஒரு செயலில் இறங்குவது கண்மூடித்தனமானது. படுகுழியில் விழுவது முட்டாள்தனம். எனவே செயலில் விழிப்புத் தேவை வள்ளுவர்.
"எண்ணித் துணிக கருமம் துணிந்த பின்
எண்ணுவம் என்பது இழுக்கு”
என்றார். வள்ளுவர் கூறும் கருத்து மிக நுட்பமானது. செயலில் இறங்குவதற்கு முன்னர் அதனைப்பற்றி நன்கு சிந்தித்தல் வேண்டும். செயலில் இறங்கிய பின்னர் சிந்திப்பது இழப்பைத் தரும். வள்ளுவரின் குறள்கள் நமது நல்வாழ்வுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கங்கள். குறள் வழி நடப்போம்! வாழ்வில் வெற்றி பெறுவோம்.
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S LSSSS S S S S S S S S LSL S S SSS S S S S S S S S S S S S S S S S
G2) கட்டுரைகள்

11. சூழல் மாசடையது வrதுகrத்தல்.
அண்மைக்காலங்களாக இயற்கை சமநிலை பற்றியும், சுற்றுப்புறச் சூழல்
பற்றியும் அவை பொருளாதார அபிவிருத்தியில் ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றியும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்று உலகில் கவலை தரும் விடயங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக திகழ்வது சூழல் பிரச்சினைகளே. உயிர அங்கிகள் புவியில் வாழ்வதற்கு தேவையானவற்றைச் சூழலில் உள்ள உயிரற்ற சடத்துவக் கூறுகளே வழங்குகின்றன. இவ்வாறு ஒன்றுக்கொன்று உதவும் போது சூழலின் சமநிலை
பேணப்பட்டது. விரைவான சனத்தொகை வளர்ச்சி, முன்னேற்றமடைந்துவரும் தொழில் நுட்பங்கள், விருத்தியடைந்து வரும் போக்குவரத்து வசதிகள், கைத்தொழில் உற்பத்தி செயன்முறைகள், தொலைபேசி உள்ளிட்ட தொடர்பாடல் வசதிகள், இரசாயன உற்பத்திப் பாவனைகளது அதிகரிப்பு போன்றவை சூழலில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்திவரும்
செயற்பாடுகளாகும்.
மனிதனின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட சூழலை மனிதனே மாசடையச் செய்யும் துரதிஷ்ட நிலையே இன்று காணப்படுகின்றது. தேவைகளின் பெருக்கம் காரணமாக மனிதன் தனது தேவைகளை நிறைவேற்ற சூழலைச் சுரண்டி சூழலில் வரையறையற்ற தாக்கங்களை ஏற்படுத்தியதன் விளைவாக சூழல் மாசடைதல் என்பது ச்ர்வதேச ரீதியான பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. எனவே உலகளாவிய ரீதியில் சூழல் மாசடையாது பாதுகாக்க பல்வேறு கோட்பாடுகள் தேசிய ரீதியாகவும், அரசசார்பற்ற
நிறுவனங்களின் ஊடாகவும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மனிதன் தனித்து வாழ முடியாது. உணவு, வாழிடம், பாதுகாப்பு, இடப்பெயர்ச்சி, இனப்பெருக்கம் ஆகியன சூழலில் இருந்தே பெறப்படுகின்றன. சூழல் தொகுதிகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து இயற்கைச் சமநிலையைக் குழப்புகின்றன. இவ்வாறு இயற்கைச் சமநிலையை குழப்புங் காரணிகளில் மனிதனே முதலிடம் வகிக்கின்றான்.
G.தி) கட்டுரைகள்

Page 24
குடியிருப்புக்களை அமைத்தல், விவசாய உற்பத்திகளின் பெருக்கம், போக்குவரத்து விருத்தி, ஆகியவற்றின் காரணமாக காடுகள் அழிக்கப்படுதல், வளமாக்கிகளின் வரையறையற்ற பாவனை. பீடைகொல்லிப் பயன்பாடு, கனியங்களின் அகழ்வு ஆகியன சூழலை மாசடையச் செய்கின்றன. நிறுவனங்களின் உற்பத்தி நடவடிக்கைகளும் சூழலின் பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்றன. பொருட்களின் உற்பத்தி நடவடிக்கைகள், பொதி செய்தல் ஆகிய முறைகளின் போதும் சூழல் பாதிக்கப்படுகின்றது. எனவே சூழலில் ஏற்படும் மாசுக்களைக் கட்டுப்படுத்தி சூழற் சமநிலையைப் பேண வேண்டிய கட்டாயம் இன்று ஏற்பட்டுள்ளது. இதனால் சூழல் சமநிலையைப் பேண உள்ளுர் மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும் சூழல் தொடர்பான சட்ட விதிகளை அமைத்தல் வேண்டும். தற்போது நிறுவனங்கள் இயற்கை சூழலில்ஏற்படும் தாக்கங்களைக் குறைக்கும் வகையில் தமது உற்பத்திச் செயல் முறைகளில் பல்வேறு மாற்றங்களைப் புகுத்தி வருகின்றன. எனவேசூழல் என்ற எண்ணக்கருவுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் உற்பத்தி நடவடிக்கைகள் அமையுமாயின் அது சூழல் சமநிலையைப் பேணி சூழல் மாசடையாது பாதுகாக்க
பெரிதும் உதவும்.
விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட உற்பத்தி நடவடிக்கைகள்,தயாரிப்புக் கைத்தொழில்கள், பதனிடுங் கைத்தொழில்கள், சுற்றுலாப் பயணத்துறை போன்ற சேவைக் கைத்தொழில்கள் மூலம் சூழல் பெருமளவு மாசடைகின்றது. உற்பத்திக் கழிவுகள் பெருமளவு சூழலில் தேங்குகின்றன. எனவே அவை உடனடியாக அகற்றப்படல்
வேண்டும்.
வளிமண்டலம் சிக்கலான ஒரு தொகுதி, வளி மண்டலத்தில் நாம் சுவாசிக்கும் ஒட்சிசனின் அளவு வேறுபடுகின்றது. ஒட்சிசன் காபனீரொட்சைட்டு ஆகியவற்றின் விகிதங்களை இயற்கைச் சமநிலையில் பேணும் தாவரங்கள் அழிக்கப்படும் போது இயற்கை சமநிலை குழம்புகிறது. குளிரூட்டியின் பாவனை, மீயொலி விமானங்களின்
அதிகரித்த போக்குவரத்து, அனுப்பரிசோதனைகள், தொழிற்சாலைகளில் இருந்து
(குதி)- கட்டுரைகள்

வெளியேறும் வாயுக்கள் போன்றவற்றாலும் வளி மாசடைகின்றது. அமில மழை பொழிதல், ஓசோன் படை பாதிக்கப்படுதல் போன்ற தீய விளைவுகள் ஏற்படுகின்றன. இது காலநிலை மாற்றங்கள் ஏற்படவும் உடல் நலம் பாதிக்கப்படவும் காரணமாக அமைகின்றது. எனவே இதனைக் கட்டுப்படுத்த தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும்
மாசுக்கள் வளிமண்டலத்தை அடையாது தடுத்தல், எரிபொருள் தகனத்தின் போது உருவாகும் மாசுக்களை அகற்றுதல், சுவட்டு எரிபொருட்களுக்கு பதிலாக இயற்கை
வாயு, சூரியசக்தி போன்றவற்றைப் பயன்படுத்துதல், சூழல் சம்பந்தமான சட்டங்களை
அமுல்படுத்துதல், சர்வதேச ஒத்துழைப்புடன் புதிய தொழில் நுட்பங்களை அறிமுகம் செய்தல், குளிரூட்டிகளின் பாவனைகளைக் கட்டுப்படுத்துதல் போன்றன அவசியமானவை. எனினும் இவற்றை நடைமுறைப்பபடுத்துவதில் பல சிக்கல்கள் காணப்படுகின்றன.
நீரில் சேதனப் பொருட்கள் அதிகளவில் தேங்குவதால் நீர் மாசுறுகின்றது.
நகர்ப்புறக் கழிவுகள், தொழிற்சாலைக் கழிவுகள், எண்ணெய்க் கழிவுகளை நீரில் கொட்டுதல், பீடைகொல்லிகள் போன்ற கரையும் திண்மங்களின் சேர்வைகள் நீரில்
சேர்தல், நுண்ணங்கிகளின் பெருக்கம் போன்றவற்றால் நீர் மாசடைகின்றது. எனவே
மாசுபடுத்தலின் அளவைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தல் வேண்டும். புதிய தொழில் நுட்ப முறைகளை செயற்றிறன் வாய்ந்த தொழில் நுட்ப முறைகளாகப் பயன்படுத்துதல் சூழற் தாக்கம் ஏற்படும் போது குறிப்பிட்ட நிறுவனங்களின் மீது வரி
அறவிடல், அரசு தலையிடுதல் போன்ற அணுகு முறைகளைக் கையாண்டு சூழல்
மாசுபடுதலைக் கட்டுப்படுத்த முடியும்.
தரை மாசுபடுதலைக் கட்டுப்படுத்த பச்சை வீட்டு விளைவு பற்றி அதிக கவனம் செலுத்தப்படுகின்றது. பச்சை வீட்டு விளைவு என்பது வெப்பச் சமநிலையைப்
பேண உதவும் ஒரு செயற்பாடு நீளம் கூடிய வெப்பக் கதிர்களை அகத்துறிஞ்சி வெப்பநிலை அதிகரிக்காது கட்டுப்படுத்தலையே பச்சை வீட்டு விளைவு என்பர். மனிதனே சூழலின் ஆக்கக் கூறு. சுற்றுச் சூழல் பாதுகாப்பின் மனிதனின் பங்கு தவிர்க்க முடியாதது. மனிதன் தன்னைச் சுற்றியுள்ள நிலம், நீர், வளி, கடல்வாழ்
C彦矛) கட்டுரைகள்

Page 25
உயிரினங்கள் ஆகியவற்றோடு தொடர்புடையவன். அவன் தன் தேவைகளுக்காகவும்,
விருப்பங்களை நிறைவேற்றவும் தன்னை அறியாமலே சூழலை மாசுபடுத்துகின்றான்.
எனவே தான் காலத்துக்கு காலம் சுற்றுச்சூழல் மாநாடுகள் நடாத்தப்பட்டு வருகின்றன.
1972ம்ஆண்டு யூன் மாதம் 5ம் திகதி உலக சுற்றுச்சூழல் மகாநாடு சுவீடனில்
இடம்பெற்றது. அன்றைய தினம் சுற்றுச்சூழல் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.
எனினும் அதிக மாற்றம் ஏற்படவில்லை. எனவே 1992 ம் ஆண்டு யூன் மாதம் 4ம்
திகதி பிரேசிலில் “பூமிப்பாதுகாப்பு மாநாடு” நடைபெற்றது. இதில் 98 நாடுகள்
கலந்துகொண்டு சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதாகக் கையெழுத்திட்டன. ஆனால் அமெரிக்கா மட்டும் இதில் கையெழுத்திட மறுத்தது. அண்மையில் இந்தியாவில்
கழிவுநீரை நன்னீராக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு ஒவ்வொரு
நாடும் தம்மளவில் முயற்சிகளை மேற்கொண்டால் வெற்றி கிடைக்கும்.
எனவே மனிதர்களின் பொறுப்பற்ற நடவடிக்கைகளே சூழல் மாசடைவதற்கு
பிரதான காரணியாகும். ஆகவே மக்களிடையே விழிப்புணர்வு தேவை. பாதுகாப்பு
என்பது சட்டங்கள் மூலம் மட்டும் ஏற்படுத்த முடியாது. அது நம் கைகளிலேயே
தங்கியுள்ளது. சூழல் அபிவிருத்தி அதிகார சபை பல திட்டங்களை அறிமுகம்
செய்துள்ளது. எனினும் இன்றுவரை பிரச்சினைகள் தீர்ந்தபாடில்லை. எனவே சூழல்
மாசடையாது பாதுகாப்பதில் மனித நடவடிக்கைகளில் விழிப்புணர்வு ஏற்படும் போது
தான் அது பயனுள்ள செயற்பாடாக அமையும் என்பதில் ஐயம் இல்லை.
SSSS SSS SSS SSS SSS SS SS SS SS SSSSS S S S S S S S S S S S SS SS S SS SS S S S S S S
Gae) கட்டுரைகள்

12. நோயற்ற வாழ்வே தறைவற்ற செல்வம்
ஆன்றோர் தம் வாழ்வில் தாம் பெற்ற அனுபவங்களை எமக்கு முதுமொழிகளாகத் திரட்டித் தந்துள்ளனர். நம் வாழ்நாள் மிகக் குறுகியது. இக்காலப்பகுதிக்குள் எல்லாவற்றையும் உணர்ந்து அனுபவித்து அறிந்துகொள்ள முடியாது.எனவே எமது முன்னுோர் அனுபவங்களே எமக்கு நல்ல வழிகாட்டிகளாக அமைகின்றன. "சுத்தம் சுகம் தரும்' என்பது அவர்கள் கருத்து, அதாவது நம் முன்னோர்கள் உடல் உள தூய்மையைப் பேணுவதில் அதிக அக்கறை செலுத்தினர். ஏனெனில் உடல், உளச் செயற்பாடுகளே நமக்கு நோயை ஏற்படுத்தும் காரணிகளாக அமைகின்றன. எம்மையும் எமது சுற்றுப்புற சூழலையும் எமது மனதையும் தூய்மையாக வைத்திருந்தால்
நோய் அணுக வாய்ப்பில்லை. நோய் எமது உடலை மட்டுமல்ல உள்ளத்தையும் பாதிக்கும். ஆரோக்கியமான உடலிலேயே ஆரோக்கியமான உள்ளம் ஒன்றும் உண்டு என்று சொல்லுவர். ஆரோக்கியமான உள்ளம் இல்லாத போது உடல் ஆரோக்கியமும் கெட்டுப்போகின்றது. எனவே நல்ல மனித வாழ்க்கைக்கு ஆரோக்கியமான உடலும் மனமும் தேவை. இதனாலேயே நோய்க்கு இடம் கொடேல் என்று பெரியவர்கள்
கூறியுள்ளனர்.
“கந்தையானாலும் கசக்கிக் கட்டு'கூழானாலும் குளித்துக் குடி” என்ற பழமொழி மனிதன் உடல், உளத் தூய்மையுடன் வாழ வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றன. ஆரோக்கியம் அற்ற உணவு, ஆரோக்கியம் அற்ற சூழ்நிலை நோய்க்குக் காரணமாகின்றது. மக்களில் சிலர் போதிய சத்து உணவு, இன்மையால் நிறையுணவு உட்கொள்ளாமையால் துன்பப்படுகின்றனர். வேறு சிலர் கண்ட கண்ட நேரங்களில் கண்ட கண்ட படி உணவு உட்கொள்ளுவதால் துன்பப்படுகின்றனர். இன்னும் சிலர் உடல் உழைப்புக் குறைவாக இருத்தல், மலிவான விலையில் கிடைக்கும் உணவுகளை உட்கொள்ளல், விலங்குப் புரத உணவுவகைளை உட்கொள்ளல், ஆகியவற்றால் நோய்க்கு ஆளாகின்றனர். நாம் உட்கொள்ளும் உணவு ஜீரணிக்கப்படுவதும் அது எரிந்து சக்தியாக மாறுவதும், கழிவுப் பொருட்கள்
(கு) கட்டுரைகள்

Page 26
வெளியேற்றப்படுவதும் உடல் அமைப்பின் நிர்வாக நடைமுறை. எனவே இந்த உடல்
உறுப்புக்களை ஆரோக்கியமாக வைத்திருப்பது மனிதனது முதற்கடமை.
"அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” என்பர். ஏனெனில் அளவுக்கு அதிகமாக உணவு உட்கொள்ளும் போது ஜீரண உறுப்புக்கள் சக்திக்கு மீறிய
வேலையைச் செய்ய வேண்டி இருப்பதால் இரத்த ஓட்டம் அதிகரிக்க மந்த உணர்ச்சியும்,
தூக்கக் கலக்கமும் ஏற்படும். உடலில் ஜீரணக்கோளாறுகள் ஏற்படும். மனிதவளம்
மேம்பாடடைய சிந்தனைகள் செயல்வடிவம் பெற ஆரோக்கியமான உடல் தேவை.
உடல் நோய்வாய்ப்படும் போது உடலியக்கம் சரிவர நடைபெறாது. மனம் பாதிப்படையும்,
சமுதாய வாழ்க்கையில் மற்றவர்களுடன் ஒத்து வாழ முடியாது அல்லற்படுகின்றனர்.
எதற்கு எடுத்தாலும் சினமும் சிடுசிடுப்பும் ஏற்படும். முன்கோபம், இரத்தக் கொதிப்பு
ஏற்பட வழிவகுக்கும். சிந்தனை நன்முறையில் செயற்படாது. ஒருவரோடு ஒருவர்
முரண்பட்டு வாழும் சூழ்நிலை உருவாகும். மனதில் நிம்மதி இன்றி அல்லலுறுவதுடன்
தத்தமக்குரிய தனித்தன்மையை இழந்து விடுவர். மனம் பாதிக்கப்படும் போது அது
வாழ்க்கையின் போக்கினையே திசை திருப்பிவிடும். இதனாலேயே "நோயற்ற வாழ்வே
குறைவற்ற செல்வம்' என்று நம் முன்னோர் கூறியுள்ளனர்.
“எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே' என்பது
சங்கச் செய்யுள். அதாவது ஆடவர் விடாமுயற்சியும் உற்சாகமும் உடையவராக
இருந்தால் தான் அவர்கள் தம் நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு பங்களிப்பைச்
செய்ய முடியும். நாடு பொருளாதாரத்தில் மேம்பட,அபிவிருத்தி அடைய மனித
செயற்பாடுகளே காரணம். மனித செயற்பாடுகளுக்கு ஊக்கம் தருவது அவரது உடல்
நலம். நாடு வளம் பெற்றால் வீடு வளம் பெறும். நாடோ வீடோ வளம் பெறுவது
மனிதனது உழைப்புத் திறனிலேயே தங்கியுள்ளது. உழைக்கும் வர்க்கத்தினர் உடல்
வலிமையும் உள வலிமையும் பெற்றிருந்தால் அதைவிட மேலான செல்வம் வேறெதுவும்
இல்லை. மனமும் உடலும் வளர்ச்சி பெறுவதே சிறந்த செல்வமாகும். உடல் வலிமை
இருந்தால் தான் உடல் உழைப்பில் ஈடுபடமுடியும். இல்லையேல் அவர்கள் வீட்டுக்கும்
Go) _கட்டுரைகள்

நாட்டுக்கும் பெரும் சுமையாகக் கருதப்படுவதுடன் தமக்கு தாமே பாரமாக இருப்பர்.
அவர்களால் தமக்கும் சுகமில்லை. பிறருக்கும் நின்மதி இல்லை. மனநிறைவான
வாழ்க்கை வாழ்பவர்கள் தான் நாட்டின் ஆணிவேர்கள், சிந்தனையின் நிறைவே செல்வம்,
மக்களாய் பிறந்த ஒவ்வொருவரும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வாழப்
பழகுவதுடன் ஒழுங்கான உணவுப் பழக்க வழக்கங்களை கைக்கொண்டும் மது, புகைப்பிடித்தல், போன்ற தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகாது இருத்தல்,
நெற்றி வியர்வை சிந்த உழைப்பில் ஈடுபடுதல் ஆகிய ஒழுங்கான பழக்க வழக்கங்களை
மேற்கொள்ளல் வேண்டும். இதனால் நாடி நரம்புகள், சீரண உறுப்புக்கள் சரியான
முறையில் தொழிற்படவும் இரத்தோட்டம் அதிகரித்து வியர்வை முதலிய கழிவுப்
பொருட்கள் வெளியேறவும், வாய்ப்பளிப்பதனால் உடல் ஆரோக்கியம் பெறும்
நோய் நம்மை அணுகும் வாய்ப்புக்கள் குறையும். எனவே நற்பழக்க வழக்கங்களை
ஒழுங்காக அனுசரித்து வாழ்வோமாயின் நூறாண்டு காலம் நிம்மதியாகவும்,
அமைதியாகவும், மனநிறைவுடனும் வாழ்ந்து நாட்டின் பொருளாதாரம் மேம்பாடடைய
உழைக்க முடியும் என்பதில் ஐயம் இல்லை.
S S S S S S S S S S S S S SSS S S S S S S S S S S S S S S SS S SS SS S SS SS S SS SS SS SS SS SS SSS SSS S S S S S S S SS S SS S S S S
G4 IID கட்டுரைகள்

Page 27
18. விலங்குகளிடம் இருந்து மனிதன் கற்றுக்கொள்ள வேண்டியவை
மனிதன் உலகில் காணும் மற்றெல்லா உயிர்களிலும் மேலாக
மதிக்கப்படுகின்றான். காரணம் மற்ற உயிர்களுக்கில்லாத தனிப்பண்பு ஒன்று அவனிடம்
உண்டு. நல்லதன் நலனும், தீயதன் தீமையும் அறிந்து, அற நெறியில் வாழ அறிந்து
கொண்டுள்ளான். அதுவே அவன் உயர்வுக்கு காரணம். எனவே மனித மேம்பாடு
அவனது செயல்களைப் பொறுத்தே அமைகின்றது. உலகம் தோன்றிய காலத்தில்
இருந்து மண்ணில் மலர்ந்த உயிரினங்கள் மரம், செடி, கொடி ஊர்வன பறவைகள்,
விலங்குகள், எனப்பலவகைப்படும். இவற்றுள் மனிதனே பரிணாம வளர்ச்சியின்
முதற்கட்டத்தில் இருப்பவன்.
எனினும் மனிதன் கூடி வாழக் கற்றுக்கொள்வதற்கு முன்பே அவனிலும்
கீழ்ப்பட்டனவாகக் கருதும் பறவைகளும் விலங்குகளும் எறும்பு முதலிய சிற்றுயிர்களும் கூடி வாழக் கற்றுக்கொண்டு விட்டன. செடி, கொடி தொடங்கி மாடு முதலிய விலங்குகள்
வரையில் அனைத்தும் சேர்ந்தும், இணைந்தும், பிணைந்தும் வாழ்கின்றன. எனவே
மனிதனிடம் இல்லாத சில விசேட பண்புகளை விலங்குகள் கொண்டுள்ளன. அவை தமது இயல்பினாலும் செயற்பாடுகளினாலும் மனித குல வர்க்கத்துக்கே நல்லறிவு புகட்டுபவையாக உள்ளன. ஆகவே அவற்றிடம் இருந்து மனிதன் கற்றுக்கொள்ள
வேண்டிய விடயங்கள் பல உள.
அறிவைப் பெறுவதற்கு வேண்டிய வாயில்கள் பல உள. அறிவை யாரிடமிருந்தும், எவற்றிடமிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும். என்பதுவே இயற்கை
தரும் பாடம். “குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன்' அதாவது இயல்பாகவே விலங்குக்
குணம் கொண்டவன் மனிதன், எனினும் அவன் பகுத்தறியும் ஆற்றல் பெற்றவன்.
பகுத்தறிவின் காரணமாக அவன் தனது இயல்பான குணங்களைத் திருத்தியமைக்க
முடியும். காடுகளிலே ஆடையின்றி விலங்குகளோடு விலங்காய் வாழ்ந்த மனிதன் பகுத்தறிவின் காரணமாக தனது வாழ்க்கையை மாற்றியமைத்துக் கொண்டான, தனக்கென ஒரு நாகரிகத்தை உருவாக்கிவிட்டான். நினைத்ததைச் செய்து முடிக்கும் ஆற்றலைப்
பெற்றுவிட்டான். ஆனால் இன்பம் துய்த்து வாழ்தல் மட்டும் வாழ்க்கை அல்ல
வாழ்க்கையை ஒழுங்குபடுத்த வேண்டியது மனிதனின் கடமை.
G2)

ஏதோ பிறந்தோம் எதற்காக வாழ்கிறோம் என்று தெரியாது "கண்டதே காட்சி கொண்டதே கோலம்” என வாழ்கின்ற மனிதன் வாழ்வரங்கு வாழும் நெறியறிந்து வாழ
இயற்கை கற்றுத்தரும் பாடங்கள் பற்பல.
கறையான், எறும்பு, தேனி முதலிய உயிரினங்கள் மனிதனிலும் கீழ்ப்பட்ட அறிவுடையன. எனினும் சுறுசுறுப்பு, கூட்டு வாழ்க்கை, சேமிப்பு முதலிய நற்பண்புகளை மனிதன் அவற்றிடமிருந்து கற்றுக்கொள்ள முடியும். சிறிய உயிரினங்கள் ஆயினும் சுறுசுறுப்புடனும் ஒற்றுமையுடனும் செயற்படும் ஆற்றல் பெற்றவை. மனிதரைப் போன்று விரைவாகச் செயற்படும் ஆற்றல் இல்லாதபோதும் எந்தப் பொருளையும் ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்கு நகர்த்திச் செல்லவும் மழை, வெள்ளம், ஏற்படும் காலங்களில் உண்பதற்கென உணவுப் பொருட்களைச் சேமித்து வைக்கவும், கால மாற்றங்களை
முன் கூட்டியே அறிந்து கொள்ளவும் ஆற்றல் உடையவை.
யானை ஒரு பெரிய விலங்கு. எனினும் தன்னைச் சரணடைந்தவர்களைக் கைதுக்கி விடும் பண்பும், எதையும் கூர்மையாக அவதானித்துக் கேட்கும் ஆற்றலும், ஞாபக சக்தியும் நிறைந்தது. மாடு இரையைக் கண்டதும் தேடித்தேடிப் போய் உண்ணும். ஆனால் உண்டு முடித்தவுடன் ஓரிடத்தில் இருந்து அவற்றை இரை மீட்கும். இது மனிதருக்கு நல்லதோர் பாடம், அறிவைப் பெற்றுக்கொள்ளகக் கூடிய நூல்கள் பல. அவற்றைக் கண்டவுடன் தேடித் தேடி வாசித்தல், கற்றவற்றை மீண்டும் சிந்தித்தல், காலை தொடக்கம் மாலை வைைர ஒவ்வொருவர் வாழ்விலும் இடம் பெறும் விடயங்களை நித்திரை செய்யுமுன் இரை மீட்டுப் பார்த்தல் எவ்வளவு சிறப்பான விடயங்கள். எனவே நூல்களைக் கற்பதிலும் கற்பவற்றைச் சிந்திப்பதே கற்றவை மனதில் நிலை பெற உதவும். அதுபோல மனிதர் தம்முடைய வாழ்வில் தாம் செய்த விடயங்களை அறிந்து தம்மைத் திருத்திக் கொள்ளவும், சரியான வழியில் தம்மை வழிநடத்தவும் வளம்படுத்தவும், இவை உதவும். எனவே விலங்குகளிடமிருந்து மனிதர் கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள் பல உண்டு என்பதை யாரும் மறுப்பதில்லை. விலங்குகள் மட்டுமல்ல பறவைகளில் "தோட்டி” என்று அழைக்கப்படும். இழிந்த பறவை காகம் எனினும் அதனிடம் நாம் கற்றுக்கொள்ளக் கூடிய விடயங்கள் உண்டு.
“காலை எழுந்திருத்தல் காணாமலே புணர்தல்
மாலை குளித்து மனைபுகுதல் - சாலவே
உற்றாரோடு உண்ணல் உறவாடல் இவ்வைந்தும்
கற்றாயோ காக்கைக் கணம்”
G3) கட்டுரைகள்

Page 28
என்ற நீதிப்பாடல் காலையில் எழுதல், மற்றவர்கள் காணாமல் ஆணும் பெண்ணும் சேர்தல், மாலையில் நாள்தோறும் நீராடிய பின் கூடு செல்லல், தனக்குக்
கிடைத்த உணவைத்தன் இனங்களைக் “கா கா” என்று அழைத்து உண்ணல்,
உறவாடல், ஆகிய இவ்வைந்து குணங்களையும் மனிதனுக்குப் போதிக்கின்றது.
அது மட்டுமா? கைம்மாறு கருதாமல் கொடுத்தல், விசுவாசம், செய்ந்நன்றி,
மறவாமை ஆகிய உயர்பண்புகளை விலங்குகள் மட்டுமன்றி தாவரங்களும்
கற்றுத்தருகின்றன.
நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கொல் எனவேண்டா - நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான் தருத லால்.
என்ற ஒளவையாரின் நீதிப்பாடல் இவ்வுண்மையை உணர்த்தும், நாம் தென்னைக்கு கொடுத்தது நீர், தென்னை நமக்குத் தருவது இளநீர், எவ்வளவு உயர்ந்த
L1606 L.
எனவே இன்று மக்களிடையே கூடி வாழும் இயல்பும் பிற நல்லியல்புகளும் அருகிவரத் தொடங்கி விட்டன. உள்ளத்தால் பண்பாட்டால் - நல்லுணர்வால் - அன்பு
நலத்தால் சமுதாயம் வளரவில்லை என்பது கண்கூடு. மனிதனிடம் மனிதப் பண்பு
மறைந்தொழிந்து விட்டது. மனிதர் இன்றைய நிலையில் ஒவ்வொரு விலங்குகளிடமிருந்தும் கற்றுக்கொள்ள வேண்டிய நல்ல பழக்கங்களைப்
பழகிக்கொண்டால் மனித வாழ்வில் நிம்மதியும் அமைதியும் பெருகி, மனித வாழ்வு
சுபீட்சம் நிறைந்த ஒன்றாக அமையும் என்பதில் ஐயமில்லை.
S S S S S S S S S S S S S S S S S S S LS S S LS S S S S S S S S S S S S S S S S S S S S S SSS SSS S S S S S S S S S S S S S S S S S
(44) கட்டுரைகள்

14. fi LDSTJULiti
இறைவனால் உலகிற்கு வழங்கப்பட்ட மூல வளங்களுள் மிக மிக
இன்றியமையாதது நீர். நீர் மக்கள் உயிர்வாழ்க்கைக்கு மட்டுமன்றி இவ்வுலகில்
வாழும் சகல ஜீவராசிகளுக்கும் இன்றியமையாதது.
"நீரின்றி அமையா யாக்கைக்கு எல்லாம் உண்டி
கொடுத்தோர் உயிர் கொடுத்தாரே."
என்று கூறப்படும் சங்கச் சான்றோர் வாக்கு இதனை மெய்ப்பிக்கின்றது. புவி
மேற்பரப்பில் ஏறக்குறைய 75% நீரினால் மூடப்பட்டுள்ளது. இவற்றுள் படிவு வீழ்ச்சி மூலம் கிடைக்கும் மிகச் சிறிய அளவு நீரே உயிர்ச் சூழல் இயக்கத்திற்கு உதவி
வருகின்றது. அதாவது பெரும் பகுதி உவர் நீராகக் காணப்பட சிறிய அளவு ஏறக்குறைய
ஒரு சத வீதத்திற்கும் குறைவான அளவு நீரே நன்னீர். இந் நீரையே புவியில் சகல
உயிர்களும் தம் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தி வருகின்றன. அதே நேரம் புவியின்
பல பகுதிகளில் நீர் பற்றாக்குறை நிலவுகின்றது. எனவே நீரைச் சரியான வழியில்
திட்டமிட்டு பயன்படுத்துதல் நம் ஒவ்வொருவரதும் கடமை ஆகும்.
பண்டைக்கால மன்னர்கள் ஆறுகள், குளங்களில் பெருகுகின்ற நீரை
மழைக்காலங்களில் குளங்கள், அணைகள் கட்டி தேக்கி விவசாய உற்பத்திகளுக்கும் ஏனைய பொருளாதார நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தினர். எனவே நீர் மாசடையாது
பேணப்பட்டது. இன்று மனிதனது நடவடிக்கைகளே புவியின் நீரை மாசடைய
வைக்கின்றனவாக மாறி வருகின்றன. மனிதனது உற்பத்தி நடவடிக்கைகளுக்கும்,
கடல் வழி போக்குவரத்திற்கும், கடல்வாழ் உயிரினங்கள் உப்பு, சிப்பி, சங்கு
போன்றவிளை பொருட்களைப் பெற்றுக் கொள்ளவும் மின்னியல் உற்பத்திக்கும்,
தொழிற்சாலை நடவடிக்கைகளுக்கும் நீர் இன்றியமையாத ஒன்று. எனினும் பொறுப்பற்ற
முறையில் மனிதனது நடவடிக்கைகள் அமைவதால் நீர் மாசடைவதுடன் மனித செயற்பாடுகளுக்கும் தீங்கு விளைவிப்பதாய் அமைந்து வருவது வேதனைக்கு உரிய
செயலாகும். மனிதன் தானே தனக்கு தீங்கு செய்பவனாக மாறி வருகின்றான்.
C4G) கட்டுரைகள்

Page 29
கைத் தொழிற்சாலைகள் வளியையும் நிலத்தையும் மட்டுமன்றி நீரையும்
மாசடைய வைக்கின்றன. அபிவிருத்தி அடைந்த நாடுகளில் இதன் தாக்கம் பாரிய
அளவில் காணப்படுகின்றது. ஐரோப்பாவில் நைல் நதி குப்பை கூழங்களின் தொகுதி
என்று சொல்லப்படுகின்றது. இலண்டனின் தேம்ஸ் நதி, இலங்கையில் களனி கங்கை, மாதுறு ஒயா, ஆகியனவும் தொழிற்சாலைக் கழிவுகளினால் பாதிக்கப்படும் இடங்களாக
மாறி வருகின்றன. இது மனிதனுக்கு பாரிய தீங்கை ஏற்படுத்துவதுடன் நாட்டின்
பொருளாதார அபிவிருத்திக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமைந்து வருவது வேதனைக்கு
உரிய விடயமாகும்.
கடற்கரை ஓரங்களையும், உள்நாட்டு நீர்நிலைகளையும், இரசாயனக் கழிவுகள்
மாசடைய வைத்து விடுகின்றன. இக் கழிவுகள் நீரில் கலக்கின்ற போது நீர்வாழ்
விலங்குகளும் தாவரங்களும் அழிய நேரிடுகின்றது.
மேலும் கப்பல்களில் பெற்றோலியப் பொருட்களை ஏற்றிச் செல்கின்ற போது
அதனின்றும் வெளிவரும் கசிவுகள், நச்சுக் கழிவுகளை கடலில் கொட்டுதல், கடலில்
ஏற்படும் விபத்துக்கள் போன்றனவும் மீன் உணவான பிளாங்ரன் அழிவடைவதற்கு
காரணமாக அமைவதால் மீன் உற்பத்தி பெருமளவிற்கு பாதிக்கப்படுகின்றது. ஏராளமான
நீர் நிலைகள் இருந்தும் வருமானம் பாதிக்கப்படுவதால் அபிவிருத்தி பின் தள்ளப்படுகிறது.
பூச்சி கொல்லிகள், வளமாக்கிகள் போன்ற திண்மக் கழிவுகள் நீரில் கரைந்து கலக்கின்றன.
இதனால் புவியின் மேற்பரப்பு நீர் மட்டுமன்றி தரைக்கீழ் நீரும் மாசடைகின்றது.
இவ்வாறு மனித நடவடிக்கைகளினால் தரை மேற்பரப்பு நீர் நிலைகள், தரைக்கீழ் நீர்
நிலைகள், சமுத்திர நீர் நிலைகள், என்பன மாசடைகின்றன. இதனால் தூய்மையான
குடிநீரைப் பெறுவது கூட பிரச்சினையாக மாறி வருகிறது. அதாவது 1.5 மில்லியன்
மக்களுக்குப் பாதுகாப்பற்ற நீரே கிடைப்பதாக கூறப்படுகின்றது.
எனவே நீர் மாசடைவதைக் கட்டுப்படுத்துவது இன்றியமையாத ஒன்றாகும்.
அதற்காக அரசும், அரச சார்பற்ற நிறுவனங்களும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து
வருகின்றன. அதாவது அணுக் கழிவுகள், குப்பை கூழங்களை கொட்டும் தடைச்சட்டம்,
G6) _கட்டுரைகள்

தொழிற்சாலை கட்டுப்பாட்டுச் சட்டங்கள்,வரிவிதித்தல், முன்னுரிமை, வழங்கல் போன்றனவாகும். எனினும் சட்டங்களால் எதனையும் செயற்படுத்த முடியாது. சட்டங்கள் செயற்றிறன் உள்ளவையாக அமைதல் வேண்டும். சட்டங்களுக்கு மதிப்பளிக்கும் மனப்பாங்கு ஏற்படல் வேண்டும். அப்பொழுது தான் எதிர்பார்த்த பலனை அடைய
முடியும்.
1992ம் ஆண்டில் "றையோடி ஜெனரோவில்" புவியுச்சி மாநாட்டில் கடல் மாசின்றி பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றி குறிப்பிடப்பட்டது. அத்துடன் ஐரோப்பிய நாடுகளில் கடல்கள் பாதுகாப்புச் சட்டங்கள், கடல்சார் உயிரினங்களைப் பாதுகாப்பதற்கான சர்வதேச உடன்படிக்கைகள், ஆகியவற்றின் மூலம் ஓரளவு நடவடிக்கைகள் எடுத்துள்ளனர். 1998இல் இலங்கைக் கடற்பாதுகாப்புக் கரைச்சட்டம், மாலைதீவு சுற்றுலாப் பயணிகள் முலம் கரையோரப் பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் சட்டமும் இயற்றப்பட்டன. யப்பான் கடல் வாழ் உயிரினங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சர்வதேச உடன்படிக்கைகளும் உள்ளன. எனினும்
இன்றுவரை நீர் மாசடைவதைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
நீர் மாசடைதல் என்பது ஒரு நாட்டின் பொருளாதார நடவடிக்கையைப் பெரிதும் பாதிக்கும் செயற்பாடு. எனவே நாடு பொருளாதார நடவடிக்கையில் மேம்பட வேண்டுமாயின் மாசடைதலைக் கட்டுப்படுத்தல் வேண்டும். அதற்கு நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் விழிப்புடன் செயலாற்ற வேண்டும் நீரின் முக்கியத்துவத்தை உணர்ந்து நீரை வீண்விரயம் செய்யாதும் மாசடையும் வழிகளைக் கட்டுப்படுத்தியும் வாழ்வது நம் ஒவ்வொருவருடைய
85L60)LD 395 b.
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SSS S S S S S S S S S S S
G2) கட்டுரைகள்

Page 30
15. விதி விபத்துக்கள்
மனித நாகரிகம் வேகமாக வளர்ச்சி பெற்றுவரும் அதே வேளை மனிதனது தேவைகளும் நாளாந்தம் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. மனிதன் தனது தேவைகளை நிறைவேற்றுவதற்காக வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொண்டான். வாழ்க்கை வசதிகள் பெருகப் பெருக வாழ்க்கையில் பரபரப்பும் நிம்மதியின்மையும் ஏற்படுகின்றது. பலர் மன அழுத்தத்துக்கு உள்ளாகின்றனர். இதனால் உட உள சமநிலை பாதிக்கப்படுகின்றது. இவ்வண்ணமே சமூகத்தில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட வழி வகுக்கின்றது. ஆரம்பகாலப் பகுதியில் மனிதன் தனது தேவைகளையும் விருப்பங்களையும் கட்டுப்படுத்தி மிகக் குறைந்த அளவில் அவற்றை நிறைவு செய்து கொண்டான். நாகரிகம் வளர மனிதனது வாழ்க்கை வசதிகளும் பெருகியது. கால்களைப் பயன்படுத்தி பல மைல் தூரம் பயணம் செய்த மனிதன் நாளடைவில் மாட்டு வண்டியையும், நிக்ஷாக்களையும் பயன்படுத்தினான். மேலும் வளர்ச்சி அடைய வாகனங்களின் தொகையும் அதிகரித்தது. ஈருருளி, உந்துருளி, மோட்டார் சைக்கிள் என வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. ஒரு சிலர் வாகனங்களைப் பயன்படுத்திய முறை மாற்றம் அடைந்தது. எல்லோருமே வாகனங்களுக்கு அடிமை ஆகினர். வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஆளுக்கு ஒரு வாகனம் என்ற வகையில் எண்ணிக்கையைப் பெருக்கிக் கொண்டனர். தேவைகளுக்கு ஏற்ப வாழ்க்கை வசதிகள் பெருக வாகனங்களின் தொகையும் பெருகியது. மக்கள் போலிக் கெளரவத்திற்கும், போலி வாழ்க்கை முறைக்கும் தம்மை அடிமையாக்கிக் கொண்டனர். மக்களிடையே முன்னேற வேண்டும் என்ற வெறி அளவுக்கதிகமாக ஏற்பட்டது. அந்த வெறி வாகனங்களைச் செலுத்தும் போதும் வெளிப்படுத்தப்பட்டது. அதன் விளைவு எங்கு பார்த்தாலும் வீதி விபத்துக்கள், பத்திரிகைகளில் விபத்துக்கள் பற்றிய செய்திகள் வராத நாட்களே மிகக் குறைவு. வேகக் கட்டுப்பாட்டைப் பேணாமை,
அளவுக்கதிகமான வேகமும் வீதி விபத்துக்கள் ஏற்படக் காரணம்,
வீதிகளில் வாகனம், செலுத்துபவர்கள் வீதி ஒழுங்குகள் பற்றி கவனம் செலுத்துவதில்லை. அத்துடன் அவர்கள் நிதானம் இழந்த நிலையில் செயற்படுவதும் விபத்துக்கள் ஏற்படக் காரணம். மதுபாவனை, போதைவஸ்து பயன்பாடு ஆகிய G8) கட்டுரைகள்

செயற்பாடுகளால் அவர்கள் தம் நிதானத்தை இழந்து விடுகின்றனர். அந்த நிலையில்
அவர்கள் சுயநினைவிழந்து மன அழுத்தத்துக்கு உள்ளாகி இருப்பர். நாடி நரம்புகள்
தளர்ந்த நிலையில் நிதானத்துடன் செயற்பட முடியாது. வேகக் கட்டுப்பாட்டையும்
மேற்கொள்ள முடியாமையினால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. இன்று விபத்துக்கள்
ஏற்படுவதற்கு இதுவே பிரதான காரணம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் கோபம், ஆத்திரம், போன்ற மனவெழுச்சிக் காரணிகளால் பாதிக்கப்பட்ட
நிலையில் வாகனத்தை செலுத்துவதும் விபத்து ஏற்படுவதற்கான காரணிகளில் ஒன்று.
வாகன்ததை செலுத்துபவர்களுக்கு மனக்கட்டுப்பாடும் உளச் சமநிலையும் அவசியம்.
மேற் கூறிய மன அழுத்தங்களால் பாதிக்கப்பட்ட நிலையில் நிதானமாகச் செயற்பட
முடியுமா? விபத்து ஏற்படப் போகின்றது என்பதை அறிந்து கொண்டாலும் அவர்கள் தம்மைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாது? "கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்"
செய்ய முடியுமா? விளைவு பயங்கரமானது தான்.
இன்று கையடக்கத் தொலைபேசிப் பயன்பாடும் வீதி விபத்துக்கு ஒரு காரணம்
இந்தியாவில் நாளாந்தம் எண்ணற்ற விபத்துக்கள் ஏற்படுகின்றன. எத்தனையோ உயிர்கள்
காவு கொள்ளப்படுகின்றன. இச் செயல்களுக்கு யார் பொறுப்பு? இலங்கையிலும்
வாகன ஓட்டுநர்கள் தொலைபேசியில் கதைத்தபடியே பயணம் செய்வதைக் காணக்
கூடியதாக உள்ளது. இழந்து போன மனித உயிரை மீட்டுத் தர முடியுமா? மனித உயிர்கள் விலை மதிப்பற்றவையா? வீதி விபத்துக்கள் மூலம் பலர் தம் கைகளை
இழந்துள்ளனர். அவர்களது எதிர்கால வாழ்வு எவ்வளவு பயங்கரமானது உடல் பாதிப்புக்கு
உள்ளானவர் பலர். படுத்தபடுக்கையில் அசைய முடியாது இருப்பவர்கள் எத்தனை
பேர்? மூளை நரம்புத் தொகுதி முதலியன பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பவர்கள்
எத்தனை பேர்? இவர்களது அவல நிலையைத் தீர்க்க முடியுமா?
எனவே விபத்துக்களுக்கு காரணம் என்ன என்பதைக் கண்டறிந்து அவற்றைக்
கட்டுப்படுத்த முயல வேண்டும். வாகன அனுமதிப் பத்திரத்தை பணத்திற்காகவோ
அன்றேல் பிற சலுகைகளின் அடிப்படையிலோ வழங்குவது பார தூரமான குற்றம்.
G49)- கட்டுரைகள்

Page 31
மேலும் வாகன சாரதிகள் மதுபோதையில் வாகனம் செலுத்துவதைக் கண்காணித்து கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். வீதி ஒழுங்குகளை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வாகன நெருக்கடிகளைக் கட்டுப்படுத்த வேண்டும். வாகனங்களைப் அடிக்கடி பார்வையிட்டு உரிய முறையில் பயன்படுத்துகிறார்களா? என்பதை அறிதல் வேண்டும். பிரேக் முதலியன பழுதடைந்த நிலையில் ஓடும் வாகனங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த வேண்டும். வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்திச் செல்லும் வேகத்தில் வீதி ஒழுங்குகளை மீறாது பிரதான சந்திகளில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு உரிய நடவடிக்கை எடுக்கப்படுமிடத்து வீதி விபத்துக்களைக் கட்டுப்படுத்த முடியும்.
வீதி விபத்துக்களால் உயிர்ச் சேதம், பொருட் சேதம், மட்டுமன்றி, உடல் உள பாதிப்புக்களும் ஏற்படுகின்றன. என்பதை ஒவ்வொருவரும் மனதில் பதித்து நடப்பார்கள் ஆயின் விபத்துக்களைக் கட்டுப்படுத்த முடியும். மனித உயிர் பெறுமதி மிக்கது. விலை மதிப்பற்றது. இழந்த உயிரைத் திரும்ப பெற்றுக்கொள்ள முடியாது. எனவே வீதி விபத்துக்கள் ஏற்படாது கட்டுப்படுத்துவது நம் ஒவ்வொருவரதும்
35L60). DLLs (85tb.
S S S S S S S S S S S S SSS S S S S S S S S S S SS S S S S S S S S S S SSS S S S S S S S S S S S
(கு) கட்டுரைகள்

16. பொலித்தீன் பாவனை பற்றிய துண்டுப் பிரசுரம்
அன்பார்ந்த மக்களே!
நாம் சுத்தமாகவும் சுகமாகவும் மனநிறைவுடனும், எமக்குரிய சகல
செளபாக்கியங்களுடனும் உயிர் வாழ, எமக்குரிய உரிமைகளை அநுபவிக்க,
ஆரோக்கியமான சுற்றாடல் அவசியம். எனவே தான் சுற்றாடலைப் பற்றியும் சுற்றாடலை
மாசுபடுத்தும் காரணிகள் பற்றயும் இன்று அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.
சுற்றாடலை மாசுபடுத்தும் காரணிகள் பல. அவற்றுள் பொலித்தீன் பாவனை
மிகப்பயங்கரமான விளைவை ஏற்படுத்தக் கூடிய ஒன்று. அதனால் தான் பொலித்தீன்
பாவனையை கட்டுப்படுத்துவதில் அரசும், அரச சார்பற்ற நிறுவனங்களும் அதிக
நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
BarDTÜ jöjj5 Döböb66AT!
இன்று மனித தேவைகளின் அதிகரிப்பு அவற்றை நிறைற்ேறுவதற்கு
கையாளும் வழிமுறைகள் என்பன எதிர் விளைவுகளையும் தோற்றுவிக்கும் என்பது
யாவரும் அறிந்த உண்மை. அதாவது அபிவிருத்திச் செயற்பாட்டை மேற்கொள்ள
எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விளைவானது சுற்றாடலைப் புறக்கணிக்க
வழிவகுத்தமையால் இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டன. இதனால் அபிவிருத்திக்கும்
சுற்றாடல் பாதுகாப்பிற்கும் இடையே ஒரு சமநிலையை ஏற்படுத்தும் வகையில் தூரநோக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்படுதல் வேண்டும். இரசாயனச் செயற்கைப்
பதார்த்தங்களின் விளைவாக சூழலின் மிக முக்கிய அங்கங்கள் அழிக்கப்படுகின்றன.
ஆகவே பொதுமக்களாகிய நாம் செயற்கைப் பாவனைகளைக் கட்டுப்படுத்தல் வேண்டும்!
இன்று நாகரிக வளர்ச்சி பொலித்தீன் பாவனையின் தேவையை
அதிகரித்துள்ளது. பொருட்கள் பிளாத்திக்கினாலும், பொலித்தினாலும் செய்யப்படுவதுடன்
பொருட்களை கொண்டு செல்வதற்கான உறைகளும் பொலித்தீனால் செய்யப்படுகின்றன.
செயற்கைப் பதிலீட்டுப் பொருட்கள், மலிவாகவும் சுலபமாகவும் கிடைப்பதனால் அவற்றின்
பாவனை பரவலாக அதிகரித்து வருகின்றது. அத்துடன் வெளிநாட்டு மோகமும் நுகர்வுப்
பழக்க வழக்கங்களை மாற்றியமைத்துள்ளமையினால் பதப்படுத்தப்பட்ட உணவுப்
பொருட்களை குளிரூட்டிகளில் பேணவும் பசும்பால், எண்ணெய் முதலிய திரவப்
G5) கட்டுரைகள்

Page 32
பதார்த்தங்களை கொண்டு செல்லவும், பொலித்தீன் உறைகள் பல்வேறு வடிவங்களில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அத்துடன் அழகு சாதனப்பொருட்களை காட்சிப்படுத்தவும், விளையாட்டுப் பொருட்கள் போன்றவற்றை பேணவும், புத்தகங்கள், அப்பியாசக் கொப்பிகள் போன்றவற்றைப் பாதுகாப்பதற்கு பயன்படும் உறைகளாகவும் பொலித்தீன் பயன்படுத்தப்படுகின்றது. இதனால் பொலித்தீன் பாவனை மிக வேகமாக மக்கள்
மத்தியில் செல்வாக்குப் பெற்றுவிட்டது என்பதை நீங்கள் அறிவீர்கள்!
எனினும் பொலித்தீன் மண்ணுடன் மண்ணாக கலக்காது, உக்காது, நீண்ட காலத்திற்கு அப்படியே புதையுண்டு கிடப்பதால் அது சூழலை மாசுபடுத்துகிறது. மீள் சுழற்சி முறையிலும் பயன்படுத்த முடியாதது. நிலத்தினுள் புதையுண்டு கிடக்கும் போது பொலித்தீன் தாவரங்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துகின்றது. அதாவது தாவரங்களின் வேர் உட்செல்லாதவாறு தடுக்கிறது. அவை உக்காமையால் நீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுவதற்கும், நோய்க்கிருமிகள் பெருகுவதற்கும் வாய்ப்பளிக்கின்றது. நுளம்புகள் பெருகுவதால் டெங்கு, யானைக்கால், மலேரியா போன்ற நோய்கள் பரவவும் வழி வகுக்கின்றது. இதனை நீங்கள் சற்று சிந்தித்துப்
பாருங்கள்!
பொலித்தீன் பாவனையில் ஏற்படும் பிரச்சினை அனைத்து நாடுகளிலும் உள்ள தேசிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. எனவே மக்களின் மனப்பாங்கை மாற்றி உணர்வு பூர்வமாக சிந்திக்கத் தக்க வகையில் விழிப்பூட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஊடகங்கள் மூலம் பொலித்தீன் பாவனைகளும் அவற்றால் ஏற்படும் விளைவுகளும் அவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகளையும் பற்றி விளக்கமளிக்கப்பட்டுள்ளன. "முடிந்தவரை சணல், நார், வைக்கோல், போன்ற அழிவடையக்கூடிய பொருட்களைக் கொண்டு உற்பத்தி செய்யும் உறைகளை பயன்படுத்துதல்" "மீறிப் பயன்படுத்துவோர் மீது நடிவடிக்கை எடுத்தல்” “உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மீது வரி விதித்தல், "சுற்றாடல் மத்திய அதிகார சபை, மாநகரசபை, சுற்றாடல் அமைச்சு' போன்றவை இவற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் செயற்றிறன் மிக்க நடவடிக்கைகளை எடுத்தல், பதிலீட்டுப் பொருட்களை உற்பத்தி செய்தல், பயன்படுத்தல் போன்றவற்றின் மூலம் பாவனையைக் கட்டுப்படுத்த
நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
G.Eの கட்டுரைகள்

பொலித்தீன் நீண்ட காலம் மண்ணில் புதையுண்டு, கிடந்த போதும் அவை உக்குவதில்லை. நிலத்தினுள் அமிழ்ந்து கிடப்பதனால் தாவரங்களின் வேர்கள் உட்செல்வது தடுக்கப்படுவதுடன், தரைக்கீழ் நீரை உட் செல்லவிடாதும் தடுப்பதனால் தரைக்கீழ் நீரைப் பெற்றுக்கொள்வதும் கடினம். எனவே சுலபமாக கரையும் திறன்
கொண்ட இரசாயனச் சேர்க்கைகளால் உருவாக்கப்பட்ட பொலித்தின் உறைகளை அறிமுகம் செய்யின் அவை பெரும் நன்மையளிப்பதாக அமையும், விஞ்ஞான அறிவும், கண்டுபிடிப்புக்களும் பெருகி வரும் இக்காலப் பகுதியில் அதனால் ஏற்படும் எதிர்பாராத விளைவுகளும் தவிர்க்க முடியாதவை. எனவே சர்வதேச நன்மை கருதி விழிப்புடன் செயற்பட்டால் எல்லாத் தடைகளையும் வெற்றி கொண்டு அவற்றைப் பயனுள்ளதாக
மாற்றியமைத்துக் கொள்ள முடியும் என்பதில் ஐயம் இல்லை!
&lar IIliffs andjobéall!
நீங்கள் இவற்றை உணர்ந்து சரியான முறையில் செயற்படுவீர்களாயின்
முழு நாடும் நன்மையடையும் என்பதில் ஐயம் இல்லை. உணர்ந்து செயற்படுங்கள்!
நன்றி
இங்ஙனம்,
சுகாதாரத்திணைக்களம்.
S S S S S S S S S S S S S S SSS S S S S S S S S S S S S S S S SSS S S S S S S S S S S S S S S S S S S S S SSS S SS S SS SS SS SS SS SS SS SS SS
G.3) கட்டுரைகள்

Page 33
17. இலங்கைத் தமிழ்நாட்டாள் பாடல்கள்
நாட்டுப்புற மக்களின் பண்பாட்டை வெளிப்படுத்துவனவாக மக்களின் பண்பாட்டின் வெளிப்பாடாக அவர்களது தனித்தன்மைகளைக் குறைக்காமல் இயற்கையோடு இணைந்து வாழும் சமூகத்தின் ஒட்டு மொத்தமான உணர்ச்சிகளை வெளிக்கொணரும் தன்னுணர்ச்சிப் பாடல்களாக இவை அமைகின்றன. அவர்கள் இதயத்திலிருந்து பீறிட்டு எழும் உணர்ச்சிகளின் வெளிப்பாடே நாட்டார் பாடல்கள் ஆகும். இவை பிறருக்காக பாடப்பட்டவை அல்ல. தமக்கு தாமே பாடப்பட்டவை. அதாவது தம்முடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்காக பாடப்பட்டன. ஆனால் மோனை, எதுகை, சந்தம், ஓசைநயம், அடுக்குத் தொடர், இரட்டைக் கிளவி போன்ற
அமைப்புக்கள் கொண்டவை.
கிராமப் புற மக்களின் ஜீவனோபாய முறைகளையும், வாழ்க்கை ஒழுங்குகளையும் மதிநுட்பங்களையும் ஆக்கத்திறனையும், கற்பனை ஆற்றலையும் வெளிப்படுத்தும் நாட்டார் இலக்கிய வகைகளாக
1. bTLT UTL6O66i
2 நாட்டார் கதைகள்
3. கதைப் பாடல்கள்
4. பழமொழிகள்
5 விடுகதைகள்
6 நாட்டார் கலைகள்
என்பவற்றைக் குறிப்பிடலாம். கள்ளங்கபடமற்ற மக்களின் உணர்ச்சி வெளிப்பாடாக இவை தோன்றியமையால் இட்பாடல்கள் தோன்றிய காலத்தைத் தெளிவாக வரையறை செய்து கொள்ள முடியாத நிலையில் காணப்படுகின்றது. இவை ஒருவருக்காக பிறர் பாடுவது தாங்களே பாடுவது, என்ற இரு நிலைத்தன்மை கொண்டவை. வாய்மொழி மரபாக பரம்பரை பரம்பரையாக பேணப்பட்டு வருகின்றமையால் அவை திரிபடைந்து, பழைய வடிவங்களில் நின்று வேறுபட்டு மாற்றமடைவதால் அவற்றைப் பேணிப் பாதுகாத்தல் அவசியம். இவற்றைத் தொகுப்பதில் கலாநிதி வித்தியானந்தன் போன்ற G2) _கட்டுரைகள்

பேராசிரியர்களும், பல்கலைக்கழகங்களும் அதிக அக்கறை செலுத்தி வந்தமை
குறிப்பிடத்தக்கது.
நாட்டார் இலக்கியங்கள் தமிழ்ப் பாரம்பரியத்தில் எச்சசொச்சங்களாக இன்றும்
நிலவுகின்றன. பிசி வாய்மொழி, முதுசொல் ஆகியவை நாட்டுப்புற இலக்கிய
யாப்புக்களாகும். நாட்டார் பாடல்கள் பரம்பரை பரம்பரையாக ஒரு சந்ததியில் இருந்து
இன்னொரு சந்ததிக்கு கொண்டு செல்லப்படுகின்றன. படிப்பறிவற்ற கிராமிய மக்களின்
உணர்ச்சி வெளிப்பாடாக இவை அமைந்தமையால் இவை ஒரு வாய்ப்பாட்டு நெறிக்குள்
அடங்கவில்லை. சூழலுக்கு ஏற்ப திரிபடைந்து மாற்றம் பெற்று வருகின்றன. இவற்றை
இசைப்பதற்கு இசைக்கருவிகள் தேவையில்லை. மட்டக்களப்பு, மன்னார், வன்னி
ஆகிய பிரதேசங்களே நாட்டார் இலக்கியம் உருப்பெற்ற களங்களாக விளங்குகின்றன.
பிறப்பிலிந்து இறப்புவரைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலிலும் அதாவது ஒன்பது
பருவங்களிலும் மக்கள் தங்களுடைய மகிழ்ச்சியையும், துன்பங்களையும் குறைப்பதற்கும்,
ஆடிப்பாடி வேலை செய்யவும், தகவல் பரிமாறிக்கொள்ளவும், ஒற்றுமையை வளர்ப்பதற்கும்
பாடிய பாடல்களே நாட்டார் பாடல்கள் ஆகும்.
சமூகநீதி, சமூக ஒற்றமை போன்றவற்றை இயல்பான முறையில் எடுத்து
விளக்குவதுடன் நம்பிக்கைகள், சடங்குகள், தெய்வ வழிபாடுகள் , நிமித்தங்கள்
ஆகிய வற்றின் வழியாக சமூக ஒழுங்குகளையும கட்டுப்பாடுகளையும் உருவாக்கும்.
நோக்கில் நாட்டார் பாடல்கள் எழுந்தன. இவை நம் நாட்டில் தாலாட்டுப் பாடல்கள்,
தொழிற்பாடல்கள், காதற்பாடல்கள், விளையாட்டுப்பாடல்கள், வேடிக்கைப்பாடல்கள்
எனப் பல்வகையாகத் தோற்றம் பெற்றன.
"இஞ்சி கொண்டு வந்தீரோ தம்பி
இஞ்சி மலை நாடும் கண்டீரோ தம்பி’
என்றும்
“ஆராரோ ஆரிவரோ
யாரடித்து நீயழுதாய்”
என்றும் தாலாட்டுட்பாடல்கள் எளிய சத்தத்துடன் வாய்மொழியாக வெளிப்பட்டன
(கு) ஆட்டுரைகள்

Page 34
“பால் போல நிலவெறிக்க
பாத்திரத்தில் சோறுண்ண
ஒரு பாலன் விளையாட
பாக்கியந்தா ஆண்டவரே”
என தமக்கு பிள்ளை தேவை என இறைவனிடம் வேண்டுகின்ற சமுதாய
அமைப்பின் நம்பிக்கையையும் எடுத்துக்காட்டுவதாக இப்பாடல்கள் அமைகின்றன.
சிறுவர்கள் விளையாடும் பொழுது,
"ஆலையிலே சோலையிலே
ஆலம் பாடி சந்தையிலே
கிட்டிப் புள்ளும் பம்பரமும்
கிறுகி அடிக்க பாலாறு”
என விளையாட்டுப் பாடல்கள் காணப்பட்டன. காதல் பாடல்களுக்கும்.
குறைவில்லை
"தண்ணி கொண்டு போற பெண்ணே
கொஞ்சம் தண்ணி தா கண்ணே”
என்று கேட்க அதற்கு விடையாக
“ஒடையிலே போற தண்ணி
தும்பி விழும் தூசி விழும்
வீட்டுக்கு வாங்க மச்சான்
வெந்த தண்ணி நான் தாறன்"
என காதலை வெளிப்படுத்தும் வகையில் இவை அமைந்துள்ளன. இப்பாடல்கள்
தூதுப் பிரபந்தங்கள் தோன்றுவதற்கும் கூட வித்திட்டன எனலாம்.
குD கட்டுரைகள்

உ+மாக “எருக்கலம் பிட்டிக்கு எருவு கொண்டு போற தம்பி மச்சான கண்டா உங்க மயிலு வரட்டாம் என்று சொல்லு" எனவும் அமைந்துள்ளன. மேலும் மக்களிடையே வீரம், புனிதத் தன்மை, பேராற்றல் என்பவற்றை வெளிப்படுத்தவும்
bIT'LIT LIFTL6b556i Ju 6 Lil' L60.
“அஞ்சுதலை நாகம் அடைகாக்கும் தாழையிலே
அஞ்சாமல் பூ வெடுக்கும் அருச்சுனனார் உங்கள் ஐயா" என வீரத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது "அரிவி வெட்டப் போறேன் பெண்ணே
அரிவாளைக் கொண்டு வா."
என்றும்
“ஏலேலோ ஏலேலோ ஐலசா.”
என்றும்
“பொலி பொலி தாயே
பொலி தம்பிரானே.”
என்றும் உடல் உழைப்பில் ஈடுபடுபவர்கள் உற்சாகம் கொள்ளவும் வயல் நிலங்களில் நெல்விதைக்கும் போதும், அரிவி வெட்டும் போதும், சூடு அடிக்கும் போதும், கடலில் தொழில் செய்யும் போதும் உற்சாகமாகப் பாடல்களைப் பாடினார்கள் அவை கிராமிய மக்களின் பண்பட்ட உணர்வுகளையும் தெய்வ நம்பிக்கையையும்
வெளிப்படுத்துவனவாக அமைகின்றன.
"கஞ்சி காச்சடி குஞ்சி
கரணம் போடடி சிங்கி
வந்த மாப்பிளை நொண்டி
கதவைச் சாத்தடி தெண்டி.
என நகைச் சுவையும் மோனை, எதுகை, சந்தம் நிறைந்தனவாகவும் அமைந்தன.
நாட்டார் இலக்கியங்கள் கால ஓட்டத்தில் திரிபடைந்துள்ளன.
GZ) கட்டுரைகள்

Page 35
“அறவடித்த முன்சோறு கூழ்ப்பானையில் வீழுந்தது போல.
என பழமொழி “அறப்படிச்ச மூஞ்சூறு கூழ்ப்பானைக்குள் விழுந்தது” போல
என்றும், “ ஆயிரம் வேரைக் கொன்றவன் அரைப்பரியாரி” என்பது "ஆயிரம் பேரைக்
கொன்றவன் அரைப்பரியாரி” எனத் திரிபடைந்து வந்துள்ளமையைக் காணலாம்.
அக்கால சமூக ஒழுங்கமைப்பின் ஊடாக வெளிப்படுத்தப்பட்ட மரபுகளில்
பல இன்று வழக்கிழந்து போயுள்ளன இலக்கண வரம்பிற்குட்படாத வாய்மொழி
இலக்கியங்கள் ஆதலால் அவற்றின் பண்பு காரணமாக செந்நெறி மரபு பேணுவோரது
அங்கீகாரத்தைப் பெறத்தவறியமை, நவீன இலத்திரனியல் சாதனங்களின் வருகை
ஆகியவை நாட்டார் இலக்கியத்தின் போக்கினையும், இலக்கையும் மாற்றி
அமைத்துள்ளன. நாட்டார் இலக்கிய வளர்ச்சி தொடர்பான முழுமையான ஆய்வுகள்
மேற்கொள்ளப்படாமை, அந்நியர் ஆட்சியில் நாட்டுப்புற வழிபாடுகளை நூலுருவாக்கம்
செய்த போது அறிஞர்களின் திருத்தங்களுக்கு உள்ளாக்கப்பட்டமை ஆகியவை
நாட்டுப்புறப்பாடல்கள் உண்மையான வடிவங்களை அறியத்தடைகளாக உள்ளன.
எனவே நாட்டர் இலக்கியங்களைப் பேணிப்பாதுகாக்க கேண்டியது நம் ஒவ்வொருவரின்
கடமை ஆகும்.
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SSS S S S S S S S S S S S
(கு) கட்டுரைகள்

இடம்
18. விலைவாசி ஏற்றம்பற்றிய கலந்துரையாடல்
:- பூங்கா
பாத்திரங்கள் :- ராஜா, சேகள்
(ராஜா, சேகர் என்ற இரண்டு நண்பர்களும் பூங்காவில் சந்தித்த போது
அவர்களிடையே நடைபெற்ற உரையாடலில் ஒரு பகுதி கீழே தரப்பட்டுள்ளது)
சேகர்:-
JT82T:-
சேகர்:-
ராஜா
சேகர்:-
ராஜா
வணக்கம் ராஜா,
பல நாட்களின் பின் நாம் இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்கிறோம்.
எவ்வளவு மகிழ்ச்சியான சந்திப்பு.
வணக்கம் சேகர்,
நீ சொல்வது முற்றிலும் உண்மை. எவ்வளவு நாட்கள் ஒன்றாக மகிழ்ச்சியாகப் பழகினோம். இன்று ஆளுக்கொரு திக்காகப் பிரிந்து விட்டோம். அவ்வப்போது எழும் மன உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள நீ இங்கு இல்லையே என்ற
ஏக்கம் தான்.
நண்பா! நாம் என்ன நாட்டை விட்டா சென்று விட்டோம் நினைத்தவுடன்
கதைப்பதற்கு தொலைபேசி இல்லையா?
சேகர். தொலைபேசியில் கதைப்பது நாம் நேரடியாக கதைப்பது போல் வருமா? சரி சரி போகட்டும். நீண்ட நாட்களின் பின் ஏற்படும் இந்த வாய்ப்பைக்
G35T60örLTL (86).j606LTLDIT?
நண்பா! வா முதலில் உல்லாசமாக சிரித்துக் கதைத்துச் சாப்பிடுவம், ஏதாவது ஒரு உணவகம் செல்வோம்.
(இருவரும் உணவகம் செல்கிறார்கள்
சேகர், நான் தான் பணம் கொடுப்பது. நீ எதுவும் பேசக் கூடாது.
(கு) கட்டுரைகள்

Page 36
சேகர்:
ராஜா
சேகர்:
ராஜா:
சேகர்:
ՄTջg/T:-
சேகர்:
நண்பா இன்று பணத்துக்கு என்ன மதிப்பு? ஆயிரம் ரூபா கூட பெறுமதியற்ற ஒன்றாகி விட்டது. அப்பணத்தைக் கொடுத்து என்ன பொருளை வாங்கலாம்?
ஒரு நாள் செலவுக்குக் கூட போதாதே!
உண்மை தான் சாதாரண ஏழை மக்களின் அன்றாட உணவான பாண், கோதுமை ரொட்டி ஆகியவற்றைக் கூட உண்பதற்கு அவர்களால் முடியாதே! கோதுமை மா ரூபா 75/=த்தாண்டும் போல் உள்ளது. எனவே அவர்கள்
எவ்வளவு கஸ்ரப்படுகிறார்கள்.
நண்பா கோதுமை மா மட்டுமல்ல நெருப்பு எரிப்பதற்கு வாயு அடுப்புக் கூட இல்லை. வாயு அடுப்பிற்கான சமையல் வாயுவின் விலை 1500/=ஆகி விட்டது. மண்எண்ணெய்யின் விலையும் அதிகரித்து விட்டது.
சேகர் எரிபொருட்களின் விலை வேகமாக அதிகரிப்பதைப் பார்க்க பயமாக
இருக்கிறது.
நண்பா ஒரேயடியாக பயந்து விடாதே!
எரிபொருட்களின் விலை அதிகரிப்பு மக்கள் வாழ்க்கையிலும் பாரிய தாக்கத்தை
ஏற்படுத்தி விட்டதை நீ அறியவில்லையா?
சேகர் தெரியும் தெரியும்!
விவசாயிகள் நீர் இறைக்க, இயந்திரங்களை இயக்க எரிபொருள் தேவை எனவே காய்கனிகள் விலையும் அதிகரித்து விட்டது.
அதுமட்டுமல்ல. பாவனைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. பொருட்களின் ஏற்றுமதி இறக்குமதி பாரிய பொருட் செலவு நிறைந்த ஒன்றாக அமைந்தமையால் இன்று பொருட்களை இறக்குமதி செய்யும் போது வாகன உரிமையாளர்கள் அதிக கூலியை நிர்ணயிப்பதால் அச் செலவு
பொருட்களின் விலை உய்ர்வுக்கு காரணமாகி விட்டது.
G60) கட்டுரைகள்

ராஜா
சேகர்:
JT98T:-
சேகர்:
ராஜா
சேகர்:-
ராஜா
சேகர்:-
ஓம்! ஓம்! நீ சொல்வது சரி. இன்று வாகனங்களில் பயணம் செய்வதே பெரும் பிரச்சனையாக உள்ளது. வாகன உரிமையாளர்கள் நினைத்தபடி
பணத்தை அறவிடுவார்கள், கேட்டால் எரிபொருள் விலை அதிகரித்து விட்டது
என்று கூறுவார்கள்
நண்பா! அவர்களைக் குறை கூறுவதால் பயனில்லை. எத்தனை முறை பெற்றோல் டீசல் முதலிய பொருட்களின் விலை உயர்ந்து விட்டது?
நானே இன்று வேலைக்குச் செல்லவும் ஏனைய அவசர தேவைகளுக்கும்
மட்டும் தான் வாகனத்தைப் பயன்படுத்துகிறேன்.
சேகர் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகிய நாமே எவ்வளவு
கஸ்ரப்படுகிறோம், ஏழை மக்களின் நிலைமையை நினைத்துப் பார்ததாயா?
நண்பா ஏழை மக்கள் படும் துன்பங்கள் சொல்லொணாதவை. அவர்கள்
சாதாரண தேநீரைக் கூடப் பருக முடியாது. மா பக்கெற் ஒன்றின் விலை ரூபா இருநூறு, தேயிலையின் விலை ரூபா ஐந்நூறு எனவே எட்படி மகிழ்ச்சியாக
ஒரு வேளையாவது தேநீர் பருகுவது?
என்னப்பா மா கோப்பி பற்றிக் கூறுகிறாய்?
உப்பு இன்று என்ன விலை? விலை குறைந்த பொருள் ஏதாவது உண்டா?
ஆம் ஆம்! இன்று குடிக்கும் தண்ணீர் கூட அதிக விலை கொடுத்து தானே வாங்க வேண்டி இருக்கிறது? மக்களால் நிம்மதியாக உணவை உண்ண நீரைப் பருக, போக்குவரத்து செய்ய முடியாத நிலை எவ்வளவு வேதனைக்கு
உரியது.
என்ன இவ்வளவு கவலைப்படுகிறாய்? எங்கு பார்த்தாலும் சுலபமாய் பெற்றுக்
கொள்ளக் கூடிய விலையில்லாத பொருளும் உண்டு தெரியுமா?
இல்லையே! என்ன பொருள் என்று சொல்லு நானும் முயற்சிக்கிறேன்.
G67) கட்டுரைகள்

Page 37
ராஜா
சேகர்:-
ராஜா
சேகர்:-
ராஜா
சேகர்
ராஜா
சேகர்:-
ராஜா
என்ன அதிசயமாக இருக்கிறது. மனிதன் தான் விலையில்லாத பொருள். உழைத்து உழைத்து தம் உழைப்பை எல்லாம் பொருட்கள் வாங்க
செலவிட்டமையால் இன்று அவர்கள் பெறுமதி இழந்து விட்டார்கள்.
மனிதன் தாம் சுகமாக வாழ்வதற்கு எவ்வளவு கஸ்ரப்படுகிறான். ஆனால் பொருட்களின் விலைகள் விஷம் போல மள மள என்று நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாய் வளர்ச்சி அடைவதைக் கட்டுப்படுத்த
ഗ്രguഖിബ്ലെu!
விலையேற்றம் என்பது இன்று தீரக்கமுடியாத பெரிய பிரச்சனை. எனவே
இதனால் ஒவ்வொருவரும் பாதிக்கப் படுகின்றார்கள்.
மக்கள் மட்டும் பாதிக்கப் படுகின்றனர் என்று சொல்ல முடியாது. அரசு கூட மூச்சு விட முடியாது திணறிக்கொண்டு இருக்கிறது. எதிலும் பற்றாக்குறை, துண்டு விழும் தொகை தான் அதிகரித்து வருகின்றது.
சரி சரி விலையதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாதா? அதற்கு என்ன தான்
வழி? ஏன் ஏதாவது நல்ல வழிமுறைகளைக் கடைப்பிடிக்கலாம் அல்லவா?
நண்பா! நீ எந்த நாட்டில் இருக்கிறாய்?
நமது நாட்டில் நிலை சாண் ஏற முழஞ்சறுக்கும் நிலை கொஞ்சம் சிந்தித்துப்பார்.
சரி என்னதான் செய்யலாம்?
அப்படிக்கேள், இன்று நம் நாட்டில் நிலவும் உள்நாட்டுப் போர் எமக்கு ஒரு சாபக்கேடு. அது ஒரு முடிவுக்கு வந்தால் தான் விலையதிகரிப்பைக்
கட்டுப்படுத்த முடியும்.
நீ சொல்வது சாத்திய மற்ற ஒன்று, ஏனெனில் மழைவிட்டாலும் தூவானம் மாறாதது போல போர் முடிவுற்றாலும் போரினால் ஏற்பட்ட வடுக்களில்
இருந்து மீள பெருந்தொகைப் பணம் தேவைப்படுமே!
32) கட்டுரைகள்
 

சேகர்:-
உண்மை, பேர் பொருள் இழப்பு, உயிரிழப்பு மட்டுமன்றி மக்கள் அகதிகளாகியும் அநாதைகளாகியும் ஊனமுற்றவர்களாகியும் வருவதால்
அவர்களைப்பராமரிக்க மீளக் குடியமர்த்த என்று பெருந்தொகைப் பணம்
தேவைப்படும்.
ராஜா- சரி சரி!
விலையேற்றம் என்பது கட்டுப்படுத்த முடியாதது என்று கூறு.
சேகர்: ஆம்! மக்கள் அவலங்களைச் சுமந்து கொண்டு வேதனைகளுக்கு முகம்
கொடுத்து துன்ப துயரங்களின் மத்தியில் வாழ வேண்டிய நிலை தான்
இன்று உள்ளது.
ராஜா சேகர்! நான் பணம் கொடுக்கப் போய் இப்போது பெரிய உரையாடல் ஒன்றே
இடம் பெற்றுவிட்டது.
சேகர்:- ஆம்! நண்பா இன்று மக்கள் படும் அவலங்களுக்கு விலை அதிரிப்பே
காரணம் என்பது எல்லோரும் அறிந்த உண்மை. மக்கள் அவலங்கள் என்று தீரும்? அவர்கள் துயர் தீரப்பாடுபடுவோம்.
ராஜா. வணக்கம் சென்று வருகிறேன்.
சேகர் வணக்கம் மீண்டும் சந்திப்போம்!
*............'............'............
G63) கட்டுரைகள்

Page 38
19. கலைகளும் சமுதாயமும்
மொழியால், இனத்தால், பண்பாட்டால் ஒன்றுபட்ட மக்கள் ஓரிடத்தில் கூடி
வாழும் போது அவர்களைச் சமூகம் என்பர். கூடி வாழ்வதுவே சமூக வாழ்வு. சமூகத்தில் பல்திறன் ஆற்றல் மிக்கவர்கள் காணப்படுகின்றனர். அவர்கள் தம் உள்ளத்தில்
ஏற்படும் உணர்வுகளை பிறருக்குப் புலப்படுத்தும் வகையில் வெளிப்படுத்தப்படும்
போது அவைகள் கலைகள் ஆகின்றன. உடலுக்கும் உள்ளத்துக்கும் உற்சாகம்
தரும் வகையில் வெளிப்படுத்தும் கலைகள் கவின்கலைகள் என்றும், அக்கலைகள்
சமுதாயத்துக்கு பயன்தரும் போது அவற்றைப் பயன் கலைகள் என்றும் கூறுவர்
இசை, நடனம், ஓவியம், சித்திரம் முதலிய கலைகளை கவின் கலை என்றும்.
இலக்கியம், நாடகம் முதலியவற்றை பயன்கலைகள் என்றும் பாகுபடுத்துவார். அது
எவ்வாறாயினும் சமூகத்தின் ஆணிவேராக இருந்து சமுதாயம் வளம் பெற உதவுவன
கலைகளே!
மனிதன் இன்ப நாட்டங் கொண்டவன். அவன் என்றும் இன்பமாக வாழ
விரும்பினான். அவன் உள்ளத்தில் மகிழ்ச்சி ஏற்பட்ட போது ஆடியும் பாடியும் மகிழ்ந்தான்.
அச்சம் ஏற்பட்ட போது ஒலிகள் எழுப்பியும், சித்திரவடிவங்கள் சமிக்ஞைகள் மூலமும்
தமது உணர்வை வெளிப்படுத்தினான். இயற்கையோடு இணைந்து வாழ்ந்த மனிதன்
தனக்கு ஏற்பட்ட இன்பதுன்பங்களைப் புலப்படுத்த ஆடல் பாடல்களில் ஈடுப்பட்ட
போது கலையும் தோற்றம் பெற்றுவிட்டது. நாட்டு நிலைமைக்கும், கல்வி அறிவுக்கும்,
இயற்கைச் சூழலுக்கும் ஏற்ப கலைகள் வளர்ச்சியடைந்து சமுதாயத்தில் நிலவிய
பண்பாட்டுக் கோலங்களை வெளிப்படுத்துவனவாக அமைந்தன. எமது நாட்டில் மட்டுமல்ல
உலக நாடுகள் பல வற்றிலும் அந்நாட்டின் பாரம் பரியச் சொத்துக்களாக பண்பாட்டின்
வெளிப்பாடுகளாக அந்நாட்டின் கலைச் செல்வங்களே விளங்குகின்றன.
ஐரோப்பிய நாடுகளின் நாகரிகத்தின் தொட்டில்களாக விளங்கிய கிரேக்கம்,
உரோமம் ஆகிய நாடுகளில் தோற்றம் பெற்ற கலைகளாகிய சிற்பம், கட்டிடம்,
விளையாட்டு ஆகிய கலைகள் தனித்துவம் பெற்று விளக்கியதோடு ஐரோப்பிய
G62) *Y YAR

நாட்டின் கலைகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி அதாவது கலைகள் சமுதாயத்தில் சிறப்பிடம் பெற்று மக்கள் வாழ்வுடன் ஒன்றிணைந்து அவர்கள் வாழ்வியல் அம்சங்களில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் செல்வாக்குப் பெற்றிருந்தன. அதே போன்று சீனா, ஜப்பான், எகிப்து, இந்தியா போன்ற நாடுகளில் தோற்றம் பெற்ற கலைகள் கீழ்த்திசை நாடுகளின் நாகரிகத்தை வெளிப்படுத்துவனவாக அமைந்தன. எமது நாட்டில் சமயம், தத்துவம், இலக்கியம் ஆகிய பண்பாட்டுக் கூறுகளே எமது கலாச்சாரத்தை
வெளிப்படுத்தும் கலைகளாகச் சிறப்பிடம் பெற்றுள்ளன.
வரலாற்று ரீதியான சமுதாயமும் கலைகளும் ஒன்றிணைந்து வளர்ச்சி பெற்றமையை அக்கால இலக்கியங்கள் எமக்கு எடுத்துக் காட்டுகின்றன. சங்ககாலப் பகுதியில் வாழ்ந்த மக்கள் இன்பப் பொழுது போக்கிற்காக ஆடல் பாடல்களில் ஈடுபட்டனர். அவர்கள் இசைக்கருவிகளை இசைத்துப் பாடி ஆடல், வேலன் வெறியாடல் போன்ற கலைகள் சமூகத்தில் சிற்ப்பிடம் பெற்றிருந்தன. காலமாற்றத்துக்கு ஏற்ப கலைகளும் வளர்ச்சியடைந்து வருதல் இயற்கை. சங்க மருவிய காலப்பகுதியில் வாழ்ந்த சமுதாயம் கலைகளில் அதிக ஆர்வம் காட்டியது என்பதை சிலப்பதிகாரம் வாயிலாக அறியக்கூடியதாக உள்ளது. ஆடலரங்குகளிலும் விதானங்களிலும் மேற்கூரைகளிலும் வரையப்பட்ட ஓவியங்கள், பல்வேறு பட்ட இசைக்கருவிகள் பற்றிய குறிப்புகள், மாதவி ஆடிய ஆடல்வகைகள், அணிந்த சித்திர வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ஆடைகள், அணிகலன்கள் பற்றிய குறிப்புக்கள் சிலப்பதிகாரத்தில் காணப்படுகின்றன. எனவே அக்காலப்பகுதியில் சமுதாயத்தில் கலைகளுக்கிருந்த செல்வாக்கைப் பற்றி அறியக் கூடியதாக உள்ளது. சமுதாயத்தின் பண்பாட்டு தனித்துவத்தை ஆதிகால மக்களின் அழகியல் உணர்வை இக்கலைகள் வெளிப்படுத்துவனவாக அமைந்தன. சமுதாயம் மேனிலையடைய இக்கலைகள் பெரிதும் உதவின. திராவிட கட்டடக்கலைகள் கர்நாடக சங்கீதம், பரதநாட்டியம் போன்ற கலைகள் வளர்ச்சியடைந்து வாழ்வில் இன்பமும் அமைதியும் ஏற்பட துணை செய்தமையை சிலப்பதிகாரம் எடுத்துக் காட்டுகிறது. அதாவது சமுதாயமும் கலைகளும்
ஒன்றிணைந்த போக்கை இக்காலப்பகுதியில் காணக்கூடியதாக உள்ளது.
Св5) கட்டுரைகள்

Page 39
ஒரு காலப்பகுதியின் செல்வாக்கு அடுத்த காலப் பகுதியையும் பாதிக்கும் என்பது வரலாற்று உண்மை. பல்லவர் காலப்பகுதியில் மக்கள் கலையில் தம்மை மறந்து ஈடுபட்டனர் அழகுணர்வால் உந்தப்பட்ட அவர்களின் உணர்ச்சி வெளிப்பாடு கலைகளாகப் பரிணமித்தன. கலைகளின் வளர்ச்சியால் கற்பனாவாதம் மேலோங்கியது. கலையுணர்வு சமுதாயத்துடன் இணைந்தது. பெளராணிகக் கதைகளை மையமாக வைத்து இறை வடிவங்கள், ஓவியங்கள், சிற்பங்களாக மிளிர்ந்தன. கலைகள் வேகமாக வளர்ந்தன. சமுதாயம் எண்ணற்ற கலைஞர்களை உருவாக்கியது. அவர்கள் தம் செயல் நெறிகளை கலைகள் மூலம் வெளிப்படுத்தினர். கலைஞர்களை மன்னர்கள் ஆதரித்தனர். மன்னர்களும் கலைஞர்களாக மிளிர்ந்தனர். சமுதாயத்தில் கலைகள் சிறப்பிடம் பெற்றன. கல்வெட்டு ஆதாரங்கள் மூலம் கலைஞர்களை மன்னர்கள் கெளரவித்து அவர்களுக்கு பட்டங்களும் பரிசில்களும் வழங்கியதுடன் மானியமாக நிலங்களை வழங்கியதையும் அறியக்கூடியதாக உள்ளது. இவ்வாறு சமுதாயமும் கலைகளும் இணையும் போக்கு பல்லவர் காலத்தில் மேலோங்கி வந்தமையை அறியலாம். இப் போக்கு பின்வந்த சோழர்காலப் பகுதிகளிலும் தொடர்வதை எச்ச சொச்சங்களாக உள்ள அக்கால ஆலயங்களும், சிற்பங்களும், உருவங்களும் இசைக்கலைகளும், நடனக்கலை விற்பனர்களும் எடுத்துக் காட்டுகின்றனர். எனவே கலைகளும் சமுதாயமும் இணையும் போக்கு மேலோங்கி வந்தமையை நாம்
காணக்கூடியதாக உள்ளது.
எனினும் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடியதாய் மிகச்சிறிய உணர்வைக்
கூட வெளிப்படுத்தும் வகையில் கலைகள் வளர்ச்சி பெற்றிருந்த போதும் அவற்றில் பெளராணிகத் தன்மையே மேலோங்கியிருந்தது. சமுதாயத்தின் வெளிப்பாடுகளாக அக்கலைகள் அமையவில்லை. ஆனால் அடுத்துவந்த காலப்பகுதிகளில் இவ் உணர்வு படிப்படியாக வீழ்ச்சியடையும் போக்கை காணக்கூடியதாக உள்ளது. சமுதாயத்தில் கலை உணர்வு மங்கிவிட்டது என்று கூற முடியாது. ஆனால் மடை மாற்றம் சொய்யப்பட்டு விட்டது. இன்று கலைகள் பெரும்பாலும் மாற்றமடைந்து வருகின்றன. அழகுணர்வை வெளிப்படுத்தவும் பொழுதுபோக்கிற்காகவுமே பயன்படுகின்றன. மனித சமுதாயத்தை மேம்படுத்தவும் மானிடத்தை அதன் வழியே சென்று முன்னேற்றவும் இன்று கலைகள்
(G)- கட்டுரைகள்
 

பயன்படுகின்றன. சமுதாயத்தில் ஏற்படும் மாற்றங்களை யதார்த்த பூர்வமாக
வெளிக்கொணருகின்றன. பழமையைப்பேணி பாதுகாக்க உதவுவது கலை என்ற
சிந்தனைப் போக்கு சமுதாயத்தில் மெல்ல மெல்ல மாறி வருகின்றது.
எனவே சமுதாயத்தில் ஏற்படும் சிந்தனை மாற்றம் கலைகளின் பாரிய
தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உண்மை, சமுதாயப்பண்பாடு சமுதாயப்பிரச்சனைகளின்
வெளிப்பாடு, நல்லதோர் சமுதாயத்தைக் கட்டியெழுப்புதல் போன்றவையே கலையின்
பயனாதல் வேண்டும். வாழ்க்கையிலிருந்து பிரிந்து வேறாகாது அதாவது அந்நியமாகாத
வகையில் கலைகள் பேணி வளர்க்கப்படல் வேண்டும். அதுவே கலையின் பயன்பாடு,
உண்மை, நன்மை, அழகு என்ற இல்ட்சியங்களை நோக்கி கலைகள் வழி நடத்தட்படல்
வேண்டும். அதன் மூலமே நல்லதோர் சமுதாயம் மலரமுடியும்.
"கலை கலைக்காகவே” என்ற கூற்று இன்று அர்த்தமற்றது. கலை
சமுதாயத்துக்காகவே, அச்சமுதாயத்தை மேம்படுத்த உதவவேண்டும். சமுதாயத்தில்
நல்ல பண்பாடு, நாகரிகம் வளர உறுதுணையாக அமைதல் வேண்டும். மனித சமுதாயம்
இணைந்தும் பிணைந்தும் வாழவேண்டும் என்று விரும்பிய உணர்வே கலையின்
வெளிப்பாடு, சமூகம் வேறு, தனிமனிதன் வேறு என்ற உணர்வு இன்றி கால, தேய,
மொழி வேறுபாடுகளுக்கிடையில் சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவரையும் ஒரே
மரத்துக்கிளைபோல் ஒன்றுபடுத்த உதவுவதே கலை, சமுதாயம் செம்மை பெறும்
அதே வேளை ஆணிவேராகிய தனி மனிதனது வாழ்வும் செம்மை பெற கலையே
பெரிதும் பயன்படும். அதாவது தனிமனிதன் தனது பெருமையை சமுதாயத்துக்கு
உரிமையாக்க கலையே உதவும். அப்போது சமுதாயம் ஏற்றம் பெறுவது உறுதி.
S S S S S S S S S S S S S S SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SSS S S S S S S S S S S S S S S S
GžD. ஆட்டுரைகள்

Page 40
20. ஹெடகங்களும் தமிழ் மொழி வளர்ச்சியும்
செம்மொழி என்று போற்றப்படும் நம் தமிழ்மொழி காலங்காலமாக வளர்ந்து வருகின்றது. இன்றும் வளர்ந்து கொண்டு இருக்கின்றது. இம் மொழி வளர்ச்சியில் ஊடகங்கள் பெரும் பங்காற்றியுள்ளன. "காலத்தின் கண்ணாடி" என்று போற்றப்படும் இலக்கியங்கள் இன்றும் அழியாது வளர்ந்து வருவதற்கும் உலக நாடுகள் இவ்விலக்கியங்களை அறிந்து போற்றுவதற்கும் ஊடகங்கள் உதவி புரிந்துள்ளன. ஊடகங்களை வெகுசனத் தொடர்பு சாதனங்கள் என்பர்! இவை மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கைப் பெற்றிருப்பதால் மொழி வளர்ச்சியில் இவற்றின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகின்றது. ஒரு தகவலை ஓரிடத்திலிருந்து பரிமாற்றம் செய்ய உதவுவதால் அதற்கு முக்கிய கருவியாக மொழியே பயன்படுகிறது. தனி மனிதனுக்கு மட்டுமன்றி பெரிய மக்கள் கூட்டத்துக்கும் தகவல் சொல்பவை பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, சஞ்சிகைகள், விளம்பரங்கள், தொலைபேசி, மின்னஞ்சல், திரைப்படம் ஆகிய வெகுசனத்தொடர்பு சாதனங்களாகும். நமது கலாச்சாரத்தையும், மொழியையும் வளர்ப்பதற்கு அடிப்படையாக இருப்பது தொடர்பு சாதனங்களே, தொலைபேசி, கடிதம் ஆகியன தனிநபர் தொடர்பு சாதனங்கள் ஆகும். ஒலிபெருக்கி, கரும்பலகை, வீடியோ ஆகிய குழுநிலை தொடர்பு சாதனங்களாகும், வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம், செய்தித்தாள் பத்திரிகை ஆகியன வெகுசனத்தொடர்பு சாதனங்கள் ஆகும். எனவே மனித தொடர்பாடல் அனைத்தும் தேடலுடன் தொடர்புபட்டது தேடலின் அடிநாதம் தகவல் ஆகவே தொடர்பாடல் என்பது பரந்துபட்ட விடயங்களை ஆராய்கின்ற வலுவான செயற்திறன் மிக்க ஒரு செயற்பாடாகும்.
நமது வாழ்வோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பவை ஊடகங்களே. இன்று தகவல் தொடர்பை வழங்கும் ஊடகங்கள் புதிது புதிதாக பெருகி வருகின்றன. அதற்கேற்ப அவைமொழியிலும் தம் முத்திரையைப் பதித்து வருகினறன. நமது கருத்துக்கள், எண்ணங்கள், விருப்பு வெறுப்புக்கள் கேள்வி, சந்தேகம் ஆகியவற்றை கிடைத்த தகவல்களுக்கேற்ப ஒழுங்குபடுத்தித் தருகின்றன. எனவே மொத்த தகவல்களிலிருந்து எந்த தகவலைத் தெரிவு செய்ய வேண்டும்? என்று திட்டமிட்டு செயற்படுத்தும் போது அதற்கு மொழியே பிரதான கருவியாகப் பயன்படுகின்றது. தொடர்பாடல் என்பது ஒருவர் இன்னொருவருக்கு செய்தியை வெறுமனே பேசுவதோ, எழுதுவதோ அல்ல. கேட்பவர்கள் விளங்கிக்கொள்ளத்தக்க வகையில் மொழியைப்பயன்படுத்த வேண்டும். மொழி தெளிவானதாக, சரியானதாக, சுருக்கமானதாக, முழுமையானதாக அமைதல் வேண்டும். இதனால் கருத்துச் செறிவுடன் எழுதும்
Сбв). கட்டுரைகள்

ஆற்றல் விருத்தி செய்யப்படுகின்றது. எண்ணக்கருத்தை வெளிப்படுத்தும் வகையில் பொருத்தமான செயல்களைக்கையாளும் திறன் வளர்கின்றது. இலகுவாக அடையாளம் காணத்தக்க சொற்களைப் பயன்படுத்தும் ஆற்றல் வளர்கின்றது. ஒவ்வொருவரது அநுபவம், அறிவு, விருப்பம் ஆகியவற்றை அறிந்து அதற்கேற்ப மொழிநடையைக் கையாளும் பொறுப்பு வளர்த்தெடுக்கப்படுகின்றது. வாசகர்கள் விரும்பக்கூடிய வகையில் திட்டமானதாக கவர்சியானதாக பயனுறுதிமிக்க பொருளாளம் கொண்ட சொற்களைப் பேசும் திறன், எழுதும் திறன், பயன்படுத்தும் திறன் ஆகியவற்றை வளர்த்தெடுக்க ஊடகங்களே பெரிதும் உதவுகின்றன என்பது உண்மை கட்புல, செவிப்புல சாதனங்களைப் பயன்படுத்தும் போது அவதானிக்கும் திறன் வளர்கின்றது. எனவே சுய சிந்தனை வளர்கின்றது . பொதுமக்கள் உறவை விருத்தி செய்யும் வகையில் மொழிக் கையாளுகை விரிவடைகின்றது. ஊடகங்களுள் பத்திரிகையே மிகச்சிறந்த தொடர்பு சாதனம், இலவசமாக, குறைந்த கட்டணத்தில் ஏனைய சாதனங்களை விட எங்கும் பரந்து இலகுவாக கிடைப்பது. இவை பொதுமக்களின் கைகளில் நாள் தோறும் தவழ்கின்றன. எனவே பத்திரிகைகளில் எழுதும் செய்திகள் வாசகர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் எழுதப்படுவதால் மொழி எளிமைத் தன்மை அடைகின்றது. அதே நேரம் பேச்சு மொழிச் சொற்கள் கையாளப்படுகின்றன. சொற்களுக்கு இடையே சந்தி பிரிப்பதில் ஏற்படும் தவறுகள் மொழிச் செம்மையைப் பாதிக்கின்றன. செய்தி, அமைப்பு, அலகு, இடம், வெளிப்பாடு, நிறம் ஆகியன பேணப்படுவதுடன் கட்டுப்பாடற்ற கருத்துக்களை வெளிப்படுத்தல், முரண்பாடான கருத்துக்கள் இடம் பெறுதல் ஆகியன தவிர்க்கப்படுகின்றன.
செய்திகளை எழுதும் பயிற்சி, முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டிய விடயங்கள் பற்றி ஆராயும் அறிவு, சுருக்கமாகச் செய்திகளை சொல்லும் திறன் ஆகியன வளர்கின்றன. அதேபோல் விளம்பரங்க்ள் பட்டி தொட்டிகளில் கூட தமது செல்வாக்கைச் செலுத்துவதால் அதற்கேற்ப சரியான முறையில் சொற்களை கையாளும் ஆற்றல் வளர்வதுடன் கிராமத்துப் பெண்கள் கூட மொழி அறிவைப்புரிந்து கொள்ளும் ஆற்றல் வளரவும் உதவுகின்றது சம்பவங்கள் வெறும் பரபரப்பு சம்பவங்கள் ஆக்கப்பட்டு வேடிக்கைப் பொருளாக்கப்படுதல் பாரிய குறைபாடு ஆகும். இதனைக்கருத்தில் கொண்டு செயற்பட்டால் மொழிஅறிவு வளம் பெற பெருந்துணை புரியும்
கல்வி அறிவுடையவர் மட்டுமன்றி கல்வி அறிவு இல்லாதோர் கூட தகவல்களை இலகுவாகப் புரிந்து கொண்டு மொழி அறிவை சுயமாக விருத்தி செய்ய உதவும் சாதனமாக வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் துணைபுரிகின்றன.
C69) கட்டுரைகள்

Page 41
v
இவற்றினுடாக நிகழ்த்தப்படும் சில தனித்துவமான நிகழ்ச்சிகளுடாக மொழித் தொடர்பாடலும், மொழிச்செம்மையும் வலுப்பெறுகின்றது. அந்நேரம் வானொலி, தொலைக்காட்சி போன்றன அரசியல் விம்பத்துக்கு வலிமை சேர்ப்பதாக அமைவதால் செய்திகள் முதன்மை பெறுகின்றன. அத்தோடு மேற்கத்திய கலாசார தாக்கம், ஆங்கிலச் சொற்களின் செல்வாக்கு அதிகரித்த போக்கு, பிரதேச ரீதியான பேச்சு மொழிகள் கையாளப்படுதல், பிழையான கருத்தற்ற வசனங்களும் , உச்சரிப்புக்களும் இடம் பெறுதல் ஆகியன எட்டி நின்று வேடிக்கை பார்ப்பதாக அமைகின்றது. இத்தோடு திரைப்படங்கள், நெடுந்தொடர்கள் மூலமாக பழிவாங்கல்கள், மோசமான வன்முறைகள், ஆபாசக்காட்சிகள் சித்திரிக்கப்படுதல் முதலிய நடத்தை சார்ந்த பிரச்சினைகள் வெளிப்படுத்தப்படுகின்றன. எனினும் விமர்சன நோக்கில் எதையும் சிந்தித்து வெளிப்படுத்தும் திறன் வளர்ச்சியடையவும் தகவல் பெறுதல், பொழுதுபோக்கு சாதனமாக மட்டுமன்றி கல்வி வழங்கும் சாதனமாகவும் ஊடகங்கள் உதவுவதால் அவை மொழி வளர்ச்சிக்கு உதவுகின்றன.
உறவினர் போன்று ஊடகங்கள் யாவும் ஒன்றோடு ஒன்று இணைந்தனவாக தகவல்களை வழங்குவதில் தம் பணியை மேற்கொள்கின்றன. இவற்றின் பயனாக விமர்சனம் செய்யும் திறன் வளரவும், சொல்லவருவதை சுருக்கமாக சரியாக வெளிப்படுத்தும் வகையில் மொழி ஆற்றல் பெறவும் உதவுகின்றது. ஆனால் தமிழ் மொழியைப் பயன்படுத்தும் போது எழுத்துத் தமிழும் பேச்சுத்தமிழும் கையாளப்படுவதுடன் அச்சு ஊடகங்களில் தமிழ், மின்னியல் ஊடகங்களின் தமிழிலிருந்து வேறு படுகின்றன இது மொழி வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. எவ்வாறாயினும் ஊடகங்களின் பயனால் வாசிப்புப் பழக்கம் விருத்தி பெறுவதோடு, ஆக்கத்திறன், மொழியைச் சுவைத்துக் கேட்கும் திறன், கிராமமட்டம் வரை தகவல்களை புரிந்து கொள்ளும் திறன் நமது முன்னோர் உருவாக்கிய இலக்கியங்களை யாவரும் அறியும் புலமை விருத்தி, தகவல்விருத்தி, மாணவர் சிறுவர்களுக்கான ஒளி ஊட்டல், விடயப்பரப்பு உத்திகள், நகைச்சுவை உணர்வு, நாடகம், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், அரசியல் விமர்சனங்கள், சினிமா ஆய்வாளர் நேர்காணல், விளையாட்டுச் செய்திகள் விண்வெளி ஆய்வுகள் இவ்வாறு பல் வேறுபட்ட நிகழ்ச்சிகள் இடம் பெறுவதும் அவை சுவை தரும் மொழிநடையில் தவழ்வதும் ஊடகங்களை ஜனரஞ்சகமாக்கியதோடு மொழியை எளிமைப்படுத்தியமையும் வெகுசனத் தெடர்பாடலுக்கு ஏற்ற ஊடகமாக வளம் படுத்தியமையும் ஊடகங்கள் மொழி வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்புக்கள் எனலாம்.
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
○ கட்டுரைகள்
 

2. உயர் கல்வியும் ஆங்கிலமும்
மக்களாகப் பிறந்த ஒவ்வொருவரும் தத்தம் தேவையை நிறைவு செய்வதற்கு மொழியைப் பயன்படுத்துகின்றனர். மொழி ஒர் ஊடகம், தேவைகளும் விருப்பங்களும் இணையும் போது மொழியில் சொற்களஞ்சியம் பெருகுவதற்கு வாய்ப்பளிக்கின்றது. ஆனால் கல்வி உளவியலாளர் சிறுவர்களின் பாலியப் பருவத்திலேயே மொழி கற்கும் திறன் வேகமாக வளர்ச்சியடைகின்றது என்பர். எனவே ஒருவர் பிறந்த பின் முதன் முதல் அறிமுகமாகும் மொழி தாய் மொழி. அம்மொழியில் அவர்கள் மொழிகற்கும் முயற்சி ஏறக்குறைய ஐந்து வயதளவில் பூரணத்துவம் பெற்று கருத்தனைத்தையும் வெளிப்படுத்தும் திறன் பெறுகின்றது. எனவே மொழித்திறன் பெற்ற நிலையில் பிறிதொரு மொழியைக் கற்றுக்கொள்வது சுலபமானது. இந்நிலையிலேயே எட்டு ஒன்பது வயதில் பிறிதொரு மொழியைக் கற்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். ஆரம்பத்தில் தாய்மொழியில் கற்றவர்கள் ஐரோப்பியரின் வருகையின் பின் ஆங்கிலக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தனர்.
ஐரோப்பியர் வருகை ஆங்கிலக் கல்வியை அறிமுகம் செய்தது. இதன் விளைவாக ஆரம்பக்கல்வியிலிருந்து உயர்கல்வி வரை அதாவது பல்கலைக்கழக கல்வி வரை ஆங்கில மொழி மூலமே கல்வி கற்றனர். ஆனால் 1960ம் ஆண்டில் அரசினால் இலவசக் கல்வி அறிமுகம் செய்யப்பட்ட போது தேசிய மொழியிலேயே கல்வி கற்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதனால் மாணவர்கள் சிங்கள மொழி மூலமும் தமிழ் மொழி மூலமும் கற்றனர். ஆனால் இன்று நிலைமை மற்றமடைந்து வருகின்றது. "பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்” என்றார் பாரதியார். எனவே பிறமொழி தெரியாது அதனை மொழிபெயர்க்க முடியுமா? ஆகவே உயர்கல்வியை ஆங்கிலத்திலேயே கற்க வேண்டும் என்பது இன்று பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை. உலகில் பிரசித்தி பெற்ற மொழிகளுள் ஒன்றாகக் கருதப்படுவது ஆங்கிலம். எனவே அம் மொழியிலேயே கற்க வேண்டும். இன்றைய விஞ்ஞான உலகில் ஆங்கில மொழியின்றி எவ்வாறு அறிவைப்பெறமுடியும். சமூகத்தில் ஒவ்வொருவரும் தமக்குரிய அந்தஸ்தையும் கெளரவத்தையும் காட்பாற்றிக் கொள்ள உதவுவது ஆங்கில் மொழியே, அறிவியல் வளர்ச்சி வியக்கத்தக்க வகையில் வளர்ச்சியடைந்து விட்டது. கற்க வேண்டிய விடயங்கள் நிறைய உள்ளன. விஞ்ஞானம், தொழினுட்பம் என ஒவ்வொரு துறையிலும் பாரிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நாள் தோறும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இணையத்தினூடாக பல செய்திகள் வெளிவருகின்றன. எல்லா விடயங்களையும் தமிழ் மொழி மூலம் அறிந்து கொள்ள
GzīD கட்டுரைகள்

Page 42
முடியுமா? இன்றைய புதிய புதிய சாதனங்கள் பற்றி நாள்தோறும் எண்ணற்ற புத்தகங்கள், கட்டுரைகள், சஞ்சிகைகள் ஆகியன ஆங்கில மொழியிலேயே வெளிவருகின்றன. அவற்றை வாசித்து விளங்கிக் கொள்ள ஆங்கில மொழி அறிவு அவசியமானது அல்லவா?
கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பம் தெரியாது என்பது ஒரு பழமொழி. அது மிக மிக ஆழமான கருத்துடையது. மொழிப் பாகுபாடு தேவையில்லை ஒவ்வொருவருக்கும் தமது மொழி மேலானது, உயர்வானது. ஆனால் அதற்காகப் பிற மொழியைக் கற்கக் கூடாது என்பது தவறான கருத்தாகும். ஆங்கில மொழி தெரியாவிட்டால் நாம் பல விடயங்களை அறியத் தவறியவர்களாவோம். எனவே எமது வருங்கால சந்ததியினராவது வளமுள்ள வாழ்வு வாழ அவர்கள் தமது உயர்கல்வியை ஆங்கிலத்தில் கற்க வேண்டியது மிக மிக இன்றியமையாதது. ஆங்கில மொழியைக் கற்று அதனைத் தேவைக்கு ஏற்ப பயன்படுத்துவதே சிறப்பு பிற மொழிகளில் உள்ள உயர்கலைகளை அறிந்து கொள்வதற்கு ஆங்கில மொழியறிவு தேவை. தமிழ் உயர் மொழி, செம்மொழி, ஆனால் இன்றைய இலத்திரனியல் யுகத்தில் காலங்காலமாக ஏற்பட்டு வருகின்ற மாற்றங்களை எவ்வாறு அறிந்து கொள்வது? உலகிலேயே மிகச்சிறந்த அபிவிருத்தி அடைந்த பொருளாதாரத்தில் மேம்பட்ட வளர்ச்சிமிக்க நாடுகளில் எல்லாம் தத்தம் கருத்துக்களை ஆங்கில மொழியிலேயே அறிமுகம் செய்கின்றனர். எனவே அவர்கள் சாதனைகளைக் கற்றறிந்து கொள்ள ஆங்கில மொழியறிவு தேவை. ஆகவே உயர்கல்வியை ஆங்கிலத்திலேயே கற்பது பெரும் பயனுடையது.
ஒருசாரார் தமிழர்களாகிய நாமே தமிழைப் புறக்கணிக்கலாமா? தமக்கு இயல்பான மொழியினூடாக கற்கும் போதே விளக்கம் கூடுதலாக இருக்கும். விளங்கியதைப் புலப்படுத்த மொழி நெகிழ்ந்து கொடுக்கும். இதனால் கல்வியின் பயனும் பூரணமாகக் கிடைக்கும். ஒவ்வொருவரும் தத்தம் உள்ளக் கருத்துக்களைப் புலப்படுத்துவதற்கேற்ற சொற்களஞ்சியம் அவரவர் தாய் மொழியிலேயே உண்டு. உயர்கல்வியை இவ்வளவு காலமும் நம்மவர் தமிழில் கற்கவில்லையா? பிற மொழிகளுக்கு நாம் அடிமையாகும் போக்கு முனைட்பு பெறுவதால் "மெல்லத் தமிழினிச்சாகும்" என்ற கூற்று உண்மையாகும் என்று கூறுகின்றனர். அது அவரவர் மனோபாவனைக் குறைபாடேயன்றி உண்மையான குறைபாடன்று. ஒரு மொழியில் உறுதியான பற்றுக் கொண்டவர் பிற மொழியைக் கற்கும் போது இரு மொழிகளிலும் உள்ள ஏற்றத் தாழ்வுகளை உணர்ந்து கொள்வர். குறைகளைச் சீ செய்வர். ஐரோப்பிய அறிஞர்கள் தமிழ் மொழியைக் கற்று பாண்டித்தியம்
@ கட்டுரைகள்

பெற்று “தமிழ் மாணவன்' என்று தங்கள் பெயரையும் கல்லறையில் பொறித்தார்கள். அதனால் அவர்கள் தாய் மொழியில் பற்றில்லாதவர்கள் என்பதாகி விடுமா? எந்த மொழியாக இருந்தாலும் நாம் அதனைக் கற்று அதிலுள்ள நல்ல விடயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டியது எமது தலையாய கடமை. எனவே ஆங்கிலத்தில் உயர் கல்வியைக் கற்பது காலப்பொருத்தமானது.
தொழில் வாய்ப்புக்கள் பாரிய சிக்கல் நிறைந்த இக்காலப்பகுதியில் தமிழ் மொழி மூலம் கற்றவர்கள் வேலை வாய்ப்பை பெற்றுக் கொள்வது மிக மிக கடினமான ஒன்று. அத்துடன் வெளிநாடுகளில் வேலை வாய்ப்பை பெற்றுக் கொள்வதற்கும் ஆங்கிலக் கல்வியே பெரிதும் உதவும்.
“முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்’ நாம் முயன்றால் எதையும் சாதிக்கலாம். விருப்பங்களும், தேவைகளும் அதிகரிக்கும் போது அதனைப் பூர்த்தி செய்வதற்கான வழிமுறைகள் கிட்டும். எனவே ஆங்கிலம் புதிய மொழியாக இருந்தாலும் எம்மால் முடியாத செயல் ஒன்றும் இல்லை. ஆங்கில மொழியைக் கற்று அம்மொழியாளர் போல உச்சரித்து, அவர்களைப்போல இயல்பாகப் பேசி உயர்கல்வியைப்
பெற்றுக்கொள்ள முடியும். அவ்வாறு பெறுமிடத்து அம்மொழியிலுள்ள அறிவுக் களஞ்சியங்களை எல்லாம் கற்றுத் தெளிந்து எமது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் அளவிற்குப் பயன்படுத்துவதே புத்திசாலித்தனமானசெயல். நமது நாட்டில் வாழ்ந்த அறிஞர்கள் பன்மொழிப் பாண்டித்தியம் பெற்றவர்களாக விளங்கினார்கள் என்பது வரலாற்று உண்மை. எனவே குமரப் பருவத்தை அடையும் போது இளைஞர்கள் உள்ளம் விரிவடைந்து புதியவற்றைத் தேடுவதில், புதியவற்றை கண்டறிவதில் ஊக்கம் அதிகரிக்கும். அவர்கள் சிந்தனைத் திறன் விரிவடைய அவர்களை நல்வழிப்படுத்த வேண்டியது அவசியம் அதற்கு மொழி பெருந்துணைபுரியும் இருபத்தோராம் நூற்றாண்டில் இன்றைய இளைஞர் சமுதாயம் உயர்கல்வியை ஆங்கில மொழியில் கற்கத் தவறினால் அவர்கள் பல அரிய நல்ல வாய்ப்புக்களை இழந்தவர்களாகவே கருதப்படுவர். உலகளாவிய தொடர்புகளைப் பேணி நமது இளைஞர் சமுதாயம் சமூகத்தின் மேனிலை பெறவும் , பல்துறை அறிவைப் பெறவும் உயர் கல்வியை ஆங்கிலத்தில் கற்றல் வேண்டும்.
S S S S S S S S LSS S SSS S SSS S S S S LS SL S0 S S SSL SSS S S S S S S S S S S SSS S S S S S S S S S S S
Ga) ai.

Page 43
22.உலகமயமாதலும் பண்பாட்டுத்தனித்துவமும்
உலகின் சமகாலக் கருத்துத் தொழிற்பாட்டில் உலகமயமாதல் என்ற எண்ணக்கரு முனைப்பு பெற்றுவருவதைக் காணக்கூடியதாக உள்ளது. உலகமயமாக்கல் என்பதற்குப் பொதுவாக ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு வரைவிலக்கணத்தை வழங்குவது மிகவும் கடினமானது. உலகமயமாக்கல் பற்றிய கருத்து 1960 ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே முன்வைக்கப்பட்டது. மக்களின் சமூக கலாச்சார ஏற்பாடுகளால் புவியியல் ரீதியிலான வரையறைகள் பின் தள்ளப்படும் ஒரு சமூகச் செயல் முறையே உலகமயமாக்கல் என்பர். இதனால் மூலதனத்திற்காக ஏங்கிக்கொண்டிருக்கும் வளர்முக நாடுகள் மூலதனத்தைக் கொண்டுள்ள நாடுகளை நோக்கி நகர்ந்து செல்லும் நிலை உருவாகும் என்பர். இது மனித வாழ்க்கைச் செயல்முறை ஒன்றின் தவிர்க்க முடியாத ஒரு விளைவாகும். அடிப்படையான கருத்தியல் சார்ந்த தெளிவின்றி கோள நோக்கில் சிந்தியுங்கள். பிரதேச நோக்கில் செயற்படுங்கள்; என்ற வாதங்கள் முன் வைக்கப்படுகின்றன. உலகம் ஒரு கிராமமாக சுருங்கி விட்டது. என்றும் கூறப்படுகின்றது. எனவே உலகமயமாதல் என்றால் என்ன? உலகமயமாதலுக்கு வித்திட்ட காரணிகள் எவை? என்பதைச் சிந்திக்க வேண்டியுள்ளது. கல்வி, தொலைத்தொடர்பு நுட்பங்கள் ஆகியன யாவும் ஒன்றிணைந்து மாபெரும் பரந்த இப்பூமியை பூமிக்கிராமம் என்ற அளவுக்கு சுருக்கி விட்டது. இதனை உலக மயமாதல் என்பர். 18" நூற்றாண்டில் "ரிக்காடோ” என்பவரால் முன்வைக்கப்பட்ட உலகமயமாதல் என்ற எண்ணக்கருவே இன்று விரிவடைந்து வருகின்றது. உலகம் முழுவதையும் ஒர் அலகாகக் கொண்டு பொருளியல், கல்வி, மனித உரிமைகள், அரசியல், தொழில் போன்ற துறைகளில் ஏற்படும் செயற்பாடுகளை ஒருங்கிணைத்தலே உலகமயமாதலின் அடிப்படை என்பர். இதனால் சர்வதேச வர்த்தகம், சேவைகளின் பயன்பாடு ஆகியன எல்லோருக்கும் கிடைப்பதுடன், கிடைக்கத்தக்க அனைத்து வளங்களின் ஒதுக்கீடும் பயன்பாடுடையதாக இருக்கும் என்பர். எனவே உலக மயமாக்கலால் ஒரு பல்லினப் பண்பாடு உருவாகலாம்
என்று கூறுகின்றனர்.
உலக மயமாக்கல் என்ற சிந்தனைக்கு பொதுவுடைமை நாடுகளின் வீழ்ச்சியும், சர்வதேச வியாபாரத்தின் வளர்ச்சியும் பெருமளவிற்கு உதவியது எனலாம். வர்க்கப் பாகுபாடு மறைந்தமை உலகமயமாதலுக்கு வித்திட்டது. உலகமயமாதலுக்கு அரசியல்
G72) _கட்டுரைகள்

காரணிகளும் உறுதுணையாக அமைந்தன. ஐரோப்பாவில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள், விஞ்ஞான தொழில் நுட்ப மாற்றங்கள், தகவல் துறையில் ஏற்பட்ட புதுமைகள், இணையம், கணினி போன்ற வலையமைப்புக்கள் தொடர்பாடல் துறையை சுலபமாக்கியமை, சர்வதேசக்கல்வி, உயர்கல்வி, தொழிற்கல்வி, போன்றவற்றில் உலகளாவிய ரீதியில் பொதுத்தன்மை ஏற்பட்டமை எல்லோரையும் உலகமயமாதலுக்குள் இட்டுச்சென்றது. பாகுபாடுகள் மறைந்து ஒன்றிணையும் வாய்ப்புக்கள் பெருகின.
உலக மயமாதலின் தற்போதைய போக்கு தடையற்ற பொருளாதார நடவடிக்கைகளுக்கு வித்திட்டுள்ளது. இதன் விளைவே வலய வர்த்தக ஒப்பந்தங்கள் செயற்படுத்தப்பட்டமை. எனவே சர்வதேச பங்களிப்பு, சந்தை மயமாக்கல், அரசியல் பன்முகப்படுத்தல், இலத்திரனியல், வளர்ச்சி வணிக நடவடிக்கைகள் வேகமாக வளர்ச்சியடைதல், ஆகியன. இதனால் மக்கள் தெரிவிற்கு ஏற்ப பல்வேறு வகையான பொருட்கள் கிடைக்கின்றன. வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படுகின்றன. உள்நாட்டு வளங்கள் வினைத்திறன் மிக்கதாக பயன்படுகின்றன. நாடுகளுக்கிடையே பொருளாதார ஏற்றத்தாழ்வு காணப்படுமாயின் உலகமயமாதல் என்ற எண்ணக்கரு திறமையாகச் செயற்பட முடியாது. இந்த இடை வெளியைக் குறைப்பதற்காக அபிவிருத்தியடைந்த நாடுகளும், சர்வதேச நிறுவனங்களும், ஐ.நா.சபை உலக வங்கி முதலானவையும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கான உதவிகளை விரிவாக்கியுள்ளன. இவை கோளமயமாக்கல் செயற்பாட்டை உறுதிப்படுத்துவனவாக அமைந்தன. உலகமயமாக்கல் பற்றிய எண்ணக்கருவை விருத்தி செய்யும் நோக்குடன் பல சர்வதேச பல்கலைக்கழகங்களில் "உலக மயமாதல்" பற்றிய எண்ணக்கரு உயர்கல்வித் தள நிலையில் உலகளாவிய ரீதியில் கல்விச் சீர்திருத்த நடவடிக்கைகள் மூலம் உலகின் தேவையை ஒட்டி முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை உலக மயமாதலின் விளைவே ஆகும். இவ்வாறு கோளமயமாக்கலின் அழுத்தங்கள் கல்வியில் பிரதிபலிப்பதைக்
காணக்கூடியதாகவுள்ளது.
உலகம் ஒரு கிராமமாகச் சுருங்கிய நிலையில் பல்துறைகளின் தேவைகள் அதிகரித்து வருகின்றன. தேவைகளைப் பூர்த்தி செய்ய பன்முகத் திறன் கொண்ட தொழிலாளர்களே தேவைப்படுகின்றனர். ஆகவே பல்வகைத் திறன்களையும், ஆற்றல்களையும் பெற்றவர்களையே வேலை கொள்வோர் விரும்பினர். அதனால்
கல்வி அதற்கேற்ப மாற்றமடைய வேண்டிய தேவை ஏற்பட்டது. இது
G75) கட்டுரைகள்

Page 44
உலகமயமாதலினால் ஏற்பட்ட விளைவு ஆகும். எனவே மரபு ரீதியான கல்வி
புறக்கணிக்கப்பட்டதுடன் தொழிற்கல்வி அணுகுமுறைகள் உயர்கல்வியில் பெரும்
செல்வாக்கைச் செலுத்தின. அத்துடன் பொருளாதார நிலையில் மேம்பாடு பெற்றவர்களே
கல்வி நிலையில் மேலும் மேலும் மேம்பாடு பெறுதல் வலுவடைவதற்கும் உலகமயமாதல்
காரணமாகியது. கல்வி முறையானது குறைந்த சம்பளத்தில் ஆற்றல் உற்றவர்களை
வேலைக்கு அமர்த்தவும், சந்தையை உலகளாவிய நிலைக்கு விரிவாக்கவும்
உலகமயமாதல் உதவியது. கல்வி நிலையங்கள் தொழிற்சாலைகள் என்ற அணுகுமுறைக்குள் கொண்டு வரப்பட்டன. எனவே உயர்நிலை மனித ஆற்றலை
சுரண்டுவதற்கு ஏற்ற உபாயமாக கல்வி முறை மாற்றமடைந்துள்ளது. தொழினுட்ப
அறிவின் வேகம் அதிகரித்துள்ளது. சமூக இருப்பே அறிவின் இருப்பாக மாற்றமுறுகின்றது.
இதனால் உயர்தர மத்திய வகுப்பினரே அநுகூலங்களைப் பெற்றுக்கொள்கின்றனர்.
ஆகவே உலகமயமாதலின் நேரடியான தாக்கம் கல்வி நிறுவனங்களின் இலாப மீட்டலை
அதிகரித்தமையாகும்.
தகவலும், தொடர்பாடலும் உலகளாவிய ரீதியில் விரிவடையவும்
இணையத்தளங்கள் வாயிலாக அறிவு விரிவடையவும் உலகமயமாதல் உதவியது. எனவே முழு உலகமும் வேகமான மாற்றத்துக்கு உட்பட்டு வருகின்றது. கல்வி எதிர்காலத்தில் வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்வதற்கான கல்வி முறையாக மாற்றமடையும் போக்கு உலகமயமாதலால் ஏற்பட்ட பாரிய மாற்றம் ஆகும். எனவே கல்வி முறை விருத்தி செய்யப்பட்ட வேண்டும். ஆங்கிலக் கல்விக்கு முக்கியத்துவம்
கொடுக்க வேண்டும். சுயமொழி என்ற எண்ணக்கரு மாற்றமடைய வேண்டும். அத்துடன்
கல்வி அறிவு மேம்பாட்டிற்காக மட்டுமன்றி வாழ வழிதேட உதவும் ஒரு கருவியாகவும் அமைதல் வேண்டும். எனவே பாடவிதானங்கள் விரைவாக மாற்றம்செய்யப்பட வேண்டும். ஏனெனில் மரபுரீதியான கல்வி மாணவர்களை பாடக்குறிப்புக்களை ஒப்புவிக்கும் திறன் கொண்டவர்களாக மட்டும் ஆக்கியது. இது தரமற்ற ஒரு கல்வி முறை. இக்கல்வி முறையில் மேலதிக தேடல்கள் எதுவும் இல்லை. இன்று பல்திறன் ஆற்றல் கொண்டவர்களும், கூர்மதி உள்ளவர்களும், எதையும் விரைவாக கிரகிக்கக்
கூடியவர்களும் ஒன்றுக்கு மேற்பட்ட மொழி பேசுபவர்களும் இணையத்தளம் மூலம் தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளக் கூடியவர்களுமே தேவைப்படுகின்றனர். அவர்களே வேலைவாய்ப்பை பெறுகின்றனர். ஏனையோர் வேலைவாய்ப்பைத் தேடி அலைகின்றனர். இவ்வாறு ஆற்றலுடையவர்களை வேலைக்கு அமர்த்துதலும், ஆற்றல்
G2a).

இல்லாதவர்களை வேலையிலிருந்து துரத்துதலும் என்ற செயற்பாடு ஏற்பட
கோளமயமாதல் வழி வகுத்துள்ளது. ”
உலகமயமாக்கல் காரணமாக தொடர்பாடல் வளர்ச்சி, போக்குவரத்து வளர்ச்சி, என்பவற்றால் நேரமும் தூரமும் சுருங்குதல், அரசியல் எல்லைகள் முக்கியத்துவம் அற்றுப்போதல், நிறுவனங்கள் உலகளாவிய ரீதியில் ஒன்றில் ஒன்று தங்கியிருக்கும் நிலை தோன்றுதல் ஆகியன உருவாகும். கோளமயமாதலின் விளைவாக அநுகூலங்கள் மட்டுமன்றி பல்வேறு சிக்கல்களும் ஏற்பட்டுள்ளன. அதாவது சர்வதேசப் பாடசாலைகள் உயர் அந்தஸ்தின் சின்னம் என்று கருதும் போக்கு விருத்தியடைந்துள்ளது. அதனால் மாணவர்கள் தம் நாட்டிலேயே அந்நியமாகும் நிலைக்கு தள்ளப்படுதல், சர்வதேச செல்வாக்கு அதிகரித்தல், பின் தங்கிய நாடுகள் உளவியல் நெருக்கடிக்கு உள்ளதல், தாழ்வுச் சிக்கல், தனிநபர் சார்ந்த உளவியல் பதகளிப்பு ஆகியன ஏற்பட வாய்ப்புண்டு. ஆனால் தகவல் தொழினுட்பம் உயர்கல்வியுடன் இரண்டறக் கலக்கும் போது கல்வியில் அபிவிருத்தி ஏற்பட வாய்ப்புண்டு. ஒரு பட்டப்படிப்பை முடித்த பின்தான் அடுத்த பட்டப்படிப்புக்கோ, பயிற்சிக்கோ செல்ல வேண்டும் என்ற நிலை மாற்றமடைகின்றது. ஒரே நேரத்தில் பட்டப்படிப்பில் ஈடுபடுவதுடன், தொழிற் பயிற்சிகளையும் கணினிப் படிப்புக்களையும் படிக்கலாம். குறிப்பிட்ட ஒரு நாட்டில் இருந்து கொண்டு ஏனைய நாட்டு பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. எனவே உலகமயமாதலின் விளைவாக சர்வதேச சந்தைகள் விரிவடைந்தன. நாடுகள் துரித வளர்ச்சி அடைந்தன. தொழினுட்ப முன்னேற்றம் அதிகரித்தது. உலகளாவிய ஒருங்கிணைப்பு ஏற்பட்டது.
பல்லினப் பண்பாடுகள் கலக்கும் போது அவற்றின் மத்தியில் நம் பண்பாட்டுத் தனித்துவம் பேணுதல் என்பது சிக்கல் நிறைந்த ஒன்று. எனினும் ஒவ்வொரு நாட்டிற்கும் தமக்கென தனித்துவமான பண்பாடு ஒன்று உண்டு. அப்பண்பாட்டை அழிவடையாது காத்தலும், அவற்றை மேம்படுத்தலும் எமது தலையாய கடமை. உலகமயமாதல் வேகமாக அதிகரிக்கும் போது எமது பண்பாட்டுப் பாரம்பரியங்கள் தகர்த்தெறியப்படுகின்றன. அவை பயனற்றவை என்று கருதும் போக்கு காணப்படுகின்றது. இந் நிலைமையை மாற்றி எமது பண்பாட்டை உலகமயமாதலின் பிடிக்குள் சிக்கிக்
சீரழியாது பாதுகாத்து எமது பண்பாட்டை மேம்படுத்துவோமாக!

Page 45
23. கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு
“கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு" என்பது ஒரு முதுமொழி. ஆன்றோர் தம் வாழ்க்கையில் ஏற்பட்ட அநுபவங்களையே எமக்கு முதுமொழிகளாக்கித் தந்துள்ளனர். அவர்களது அநுபவங்கள் அரிய பல உண்மைகளை வெளிப்படுத்துவன. அதாவது உலகில் உள்ள உயிரினங்களுக்குள் மனிதன் பிற உயிரினங்களைக் காட்டிலும் மேலானவனாக கருதப்படுகின்றான்.அவன் நல்லதையும் கெட்டதையும் ஆராய்ந்து காணும் பகுத்தறிவு உடையவன். நல்லதைச் செய்தலும் அல்லதை விலக்குதலும் அவனது இயற்கை. அந்த இயற்கை நியதியின் படி கொடுமைகளை விலக்கி எல்லாவற்றிலும் உயர்ந்ததான நல்லவற்றை செய்து மனிதனாக மதிக்கப்படுகின்றான். அவனுக்கு இத்தகைய மேலான அறிவு இயற்கையாக அவன் பெற்ற அறிவுடன் கற்ற கல்வியும் சேர்வதனாலே ஏற்படுகின்றது எனலாம்.
"கற்றனைத்து ஊறும் அறிவு” என்றார் வள்ளுவர். எனவே ஒருவன் நூல்களைத் திரும்பத் திரும்பக் கற்பதனால் அவன் அறிவு பெருகும். அதன் வழியே நல்லறிவு உண்டாகும். "எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்" என்ற முதியோர் வாக்கும் கல்வியின் பயனை எடுத்தியம்புகின்றது. எனவே மனிதருக்கு கல்வி இன்றியமையாதது. கல்வியின் சிறப்பைப் பாடாத புலவரே இல்லை.
"நெஞ்சத்து நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு" என்கிறது நாலடியார். கல்வி என்ற சொல்லின் பகுதி "கல்' கல்லுதல் என்பது தோண்டுதல் எனப் பொருள்படும். நாலடியாரில் "கல் என்று தந்தை கழற" என்று குறிப்பு உண்டு. இவ்வாக்கியம் கல்வியின் சிறப்பைப் பற்றி எடுத்துக் கூறுகிறது. அறிவைத் தோண்டுதல் அல்லது கிளறுதல் கல்வி ஆகும். எமது அடிமனதிலே புதையுண்டு கிடக்கும் நல்லறிவைத் தட்டி எழுப்புவதே கல்வியின் பயன். கல்வியை எப்படி கற்பது? எதுவரை கற்பது? எனின் வாழ்நாள் முழுவதும் கல்.
"யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு' என்பது குறள். எனவே உனது கல்வி இன்று நாளையுடன் முடிவடையாது. சாந்துணையும் கல். வாழ்நாள் முழுவதும் கல். கல்விக்கு தொடக்கமும் இல்லை. முடிவும் இல்லை. அதற்கு இவ்வளவு தான் என்று வரையறையும் இல்லை. உன்னால் முடிந்தவரையும் கல். வாழ்நாள் முழுவதும் கல். நீ வாழக் கல். மற்றவருக்காக
அல்ல. உனக்காகவே கல்வி, அது ஒரு மிகப் பெரிய பரந்த கடல். கடலுக்கு கரை Cza) கட்டுரைகள்

இல்லை. எங்கே தொடங்குகிறது. எங்கே முடிகின்றது. என அதன் நீள அகலத்தையோ ஆழத்தையோ யாராலும் அளந்தறிய முடியாதவாறு போல கல்வியையும் இவ்வளவு என கணக்கிட்டுக் கூறவோ வரையறுக்கவோ முடியாது. மனிதன் பிறந்தவுடனேயே மனிதனது அறிவு செயற்படத் தொடங்குகின்றது. எனவே அவன் கற்க வேண்டிய கல்வி எதுவென திட்டமிட்டு வரையறை செய்ய முடியாதுள்ளது. இதனாலேயே,
"கல்வி கரையில, கற்பவர் நாள் சில
மெல்ல நினைக்கின் பிணி பல” என்று ஆன்றோர் கூறியதுடன் ஆராய்ந்த அமைவுடையவற்றை "பாலுண்குருகுபோல" தெளிந்து, தேர்ந்து, கற்குமாறு, எமக்கு அறிவுறுத்தியுள்ளார். அநுபவமே சிறந்த ஆசான். எனவே முன்னோர் அநுபவத்தின் வழி நாம் நல்ல நூல்களைக் கற்க வேண்டும் என்பது தெளிவு.
"படித்ததனால் அறிவுபெற்றோர் ஆயிரம் உண்டு - பாடம்
படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு” என்பது ஒரு சினிமாப் பாடல். எனவே படிக்காது அறிவு பெறலாமா? எனின் ஒவ்வொருவரும் பெற்றுக்கொள்ளும் அறிவைப் பட்டறிவு, ஏட்டறிவு என வகைப்படுத்துவர். பட்டறிவு என்பது அநுபவத்தின் மூலம் பெறும் அறிவு-ஏட்டறிவு என்பது நூல்களைச் கற்பதன் மூலம் பெறும் அறிவு பட்டறிவு இயல்பாகப் பெறப்படும் அறிவு. அதனை ஏட்டறிவின் மூலம் விருத்தி செய்துகொள்ள முடியும். எனவே தான் ஒவ்வொருவரும் தான் இயல்பாகப் பெற்ற அறிவை மேலும் மேலும் வளர்த்துக் கொள்வதற்காக நூல்களைக் கற்றல் வேண்டும். கற்க கற்க அறிவு பெருகும். மணற்கேணியை தோண்டத் தோண்ட நீர் ஊறுவது போல கற்க கற்க அறிவு வளரும்,
சில் வாழ் நாள் பல்பிணிச் சிற்றறிவு உடையவர்களாகிய மனிதர் தாம் எல்லாவற்றையும் கற்றுவிட்டோம் என்று இறும்பூது எய்த முடியாது. இன்று நாட்டில் கற்பவர் தொகை நாள் தோறும் பெருகி வருகின்றது. பாடசாலைகளின் எண்ணிக்கைகளுக்கும் அளவில்லை. கற்பதற்கு இடமில்லையே என்று எண்ணுமளவிற்கு மாணவர் தொகையும் பெருகிக்கொண்டு வருகின்றது. ஆனால் பட்டம் பெறுவதற்காகப் பெறப்படும் கல்வி மட்டும் உண்மையான கல்வி ஆகாது. மனிதப் பண்பாட்டை வளர்த்தெடுக்க வேண்டிய கல்வி இன்று தமக்குள்ளே போட்டியையும், பொறாமையையும் வளர்த்தெடுக்கும் நிலைமையை உருவாக்கிவிட்டது. இந்த நிலையே இன்று உலகெங்கும் காணப்படுகிறது.
"தாம் இன்புறுவது உலகு இன்புறக் கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்" என்பது வள்ளுவர் வாக்கு, தாம் பெற்ற இன்பத்தை பிற உயிரகளும்
G9) கட்டுரைகள்

Page 46
அநுபவிப்பதைக் கண்டு கற்றவர்கள் மகிழ்வார்கள். எனவே எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே கல்வியின் நோக்கமும் பயனும், அத்தகைய கல்வியே மேலான கல்வி. அதற்கு காலம் இடம் தேவையில்லை. எந்நாளும் எப்பொழுதும் கற்கலாம். இவ்வாறு பரந்து விரிந்த வளம் மிக்க கல்வியை நாம் கற்றுவிட்டோம். என்று கூற முடியுமா? ஒரு கைப்பிடி மண்ணை வைத்துக்கொண்டு முழு மண்ணையும் அளந்து விட்டதாகக் கூற முடியுமா? ஒளவையார் தமிழ் நாட்டில் வாழ்ந்த கல்விக் கடல் மிகப் பெரிய அறிவாளி. எனினும் தனது கல்விச் செருக்கால் எல்லாம் தெரியும் என்று எண்ணிய ஒளவையாரை "சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?’ என்று இடைச்சிறுவன் வடிவில் நின்று முருகன் கேட்டு நாணமடையும் படி செய்தான்.
"கருங்காலிக் கட்டைக்கு நாணாத கோடரி
இருங் கதலித் தண்டுக்கு நாணும்" என ஒளவையார் அந்நிலையில் உணர்ந்து பாடிய பாடல் எம்மையும் சிந்திக்க வைக்கின்றது. "கற்றது கைம் மண்ணளவு" தான். நாம் கற்க வேண்டிய விடயங்கள் மிகப்பெரிய அளவில் உள்ளன.
பரந்து விரிந்த கடல் போல மனிதன் கற்க வேண்டிய துறைகள் எத்தனை? எத்தனை விவசாயம், மருத்துவம், விஞ்ஞானம், கலைத்துறைவானியல், சோதிடவியல், இலத்திரனியல், தொழினுட்பவியல் என எத்தனை துறைகள் ஒவ்வொரு துறையிலும் எத்தனை நுண்பிரிவுகள், மருத்துவத் துறையை நோக்கின் ஒவ்வொரு உறுப்புக்கள் பற்றியும் தனித்தனியான துறைகள் மட்டுமா? சத்திர சிகிச்சை, மாற்று உறுப்புக்கள் போன்று பல்வேறு நுண்பிரிவுகள் உண்டல்லவா? பட்டம் பெற்ற மருத்துவர், ஒருவர் எல்லாத் துறைகளிலும் தேர்ந்த அறிவு பெற்றிருப்பாரா? அல்லது பெறத்தான் முடியுமா? யாராவது எந்த ஒரு துறையையாவது முழுமையாகக் கற்றிருக்க முடியுமா? ஒவ்வொரு துறையிலும் ஏதோ ஒரு சிறிய பிரிவைத் தான் கற்றுள்ளோம். எல்லாத் துறைகளையும் கற்பதாயின் காலம் போதாது. வசதியின்மைகள் ஏராளம். எனவே தான் நம் முன்னோர்
"கற்றது கை மண்ணளவு கல்லாதது உலகளவு" என்று குறிப்பிட்டுள்ளனர். எனவே நாம் கற்றதை விட கற்க வேண்டிய விடயங்கள் அதிகம் உள்ளன எனலாம். அத்துடன் பண்பட்ட மனித வாழ்வு வாழப் பழகுதல், உலகியலை அறிந்து தெளிதல் அதுவே உண்மையான கல்வி, அத்தகைய கல்வியை நாம் பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.
(GC) கட்டுரைகள்

24. பாதுகாப்பான நகரம் பற்றிய பேச்சு
அன்பார்ந்த பெற்றோர்களே! தாய்மார்களே! சிறுவர்களே!
பாதுகாப்பான நகரம் எவ்வாறு அமைய வேண்டும் என்பது பற்றி இப்போது
உங்கள் முன் சில கருத்துக்களை முன்வைக்க விரும்புகின்றேன்.
பெரியோர்களே!
மனிதர்கள் வாழ்வாங்கு வாழ்வதற்குரிய இருப்பிடங்கள் மக்கள் உண்மையாக,
நேர்ைைமயாக மனிதாபிமானத்துடன் வாழ்வதற்கு ஏற்ற இடங்களாக அமைதல் வேண்டும்
என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும், ஆரம்ப காலங்களில் மக்கள் கூட்டம்
கூட்டமாக ஒன்றிணைந்து வாழ்ந்தார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் உறவும் உரிமையும்
உள்ளவர்களாக இருந்தார்கள். எனவே துன்ப துயரங்களில் பங்குகொண்டு "எல்லோரும்
ஓர் குலம்' எல்லோரும் ஓர் இனம்" என்ற உணர்வுடன் வாழ்ந்தனர். ஒருவர் மீது ஒருவர்
அன்பும் அபிமானமும் உடையவர்களாய் வாழ்ந்தனர். இதனால் அவர்கள் வாழ்ந்த
இடங்கள் பாதுகாப்பான இடங்களாக இருந்தன. அவர்களது மகிழ்ச்சிக்கும்
மனநிறைவுக்கும் குறைவே இருக்கவில்லை. அவர்கள் வாழ்ந்த இடங்கள் கிராமமாக
இருந்த போதும் அச்சம் என்பது என்ன என்பதை அறியாது வாழ்ந்தனர். எனவே
பாதுகாப்பு பற்றி அவர்கள் சிந்திக்கவில்லை. ஆனால் காலத்துக்கு காலம் ஏற்பட்ட
பிரச்சினைகள் மக்கள் வாழ்வை கேள்விக்குறி ஆக்கியது. பாரம்பரியமாக வாழ்ந்த
வாழ்விடங்களை விட்டு பாதுகாப்பான இடங்களை நாடி ஓடினர். பாதுகாப்பைப் பற்றி
புல முறை சிந்திக்க வேண்டிய அவல நிலை 'வேலியே பயிரை மேய்வது போல”
பாதுகாப்பான இடங்களெல்லாம் திறந்த வெளிச் சிறைச்சாலைகளாக மாறிவரும்
போக்கு இன்று அதிகரித்துக் காணப்படுகிறது. உண்மை, நேர்மை, அன்பு, தயை,
கருணை, இரக்கம், முதலிய நற்பண்புகள் மனிதரிடையே அருகி வருகின்றன. நகரங்கள் எல்லாம் குற்றச் செயல்கள் பெருகி வருகின்றன. ஆடம்பர மோகம், பேராசை, பொறாமை,
போன்ற குணங்களே குற்றச் செயல்கள் பெருகுவதற்கு காரணம் என்பர். இன்று
சமுதாயம் ஆளும் வர்க்கம், அதிகார வர்க்கம், என்று பிளவுபட்டுக் காணப்படுகின்றது.
அதிகார வர்க்கத்தினர் ஆளும் வர்க்கத்தை அடக்கியாள முற்படுகின்றனர்.இதனால் அவர்களது உரிமைகள் நசுக்கப்படுகின்றன. துன்ப துயரங்கள் பெருகி வருகின்றன. பகைமை அதிகரிக்கின்றது. எனவே நகரங்கள் பிரச்சினைகள் மலிந்த நகரமாக மாறி
வருகின்றது என்பது கண்கூடு.
【霹s) கட்டுரைகள்

Page 47
நகரங்களில் வாழ்பவர்கள் பல்வேறுபட்ட இனம், மதம், மொழி பேசுபவர்கள், அவர்களிடையே விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும், புரிந்துணர்வும் மிகக் குறைவு. நாகரிக மோகத்திற்கு அடிமையாகி நாகரிக சூழலுக்கு கட்டுப்பட்டு வாழ்கின்றனர். "விரலுக்கு தக்க வீக்கம்" என்பதை உணர்ந்து தகுதிக்கு ஏற்ப தமது வாழ்க்கையை
அமைத்துக்கொள்ள வில்லை. "புலியைப் பார்த்து பூனையும் குறி போட்டுக் கொண்டது போல்”தமது வாழ்க்கை முறைகளை மாற்றி அமைத்துக் கொண்டனர். வருமானப்
பற்றாக்குறை அவர்களது எண்ணங்களுக்கு முட்டுக்கட்டையாக பெரிய தடைக்கல்லாக அமைகிறது. எனவே அதிகரித்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய கொலை, கொள்ளை, அடிதடி, திருட்டு போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். நகரங்கள் எங்கு திரும்பினாலும் இதே நிலை. நகரங்களில் வாழும் மக்கள் அச்சத்துடன் உயிரைக் கையில் பிடித்த வண்ணம் வாழுகின்றனர். இத்தகைய நகரங்கள் பாதுகாட்பான நகரங்களா?
நீங்களே சிந்தித்துப் பாருங்கள்.
வாழ்க்கை வசதிகளை நோக்கியே நகரங்களை நாடி மக்கள் செல்கின்றனர். ஒரு சிலர் ஆடம்பரமாக வாழ்கின்றனர். வாழ்க்கையில் எல்லா வசதிகளையும் அநுபவிக்கின்றனர். அவர்களைப் போல ஒவ்வொருவரும் வாழ வேண்டும் என்று ஆசைப்படலாமா? "சிந்தையின் நிறைவே செல்வம்" என்பதை உணர மறுக்கின்றனர். இன்று விரைவாக முன்னேறும் ஆசை, சுய உழைப்பின்றி சுலபமாக பணத்தை சம்பாதிக்கும் விருப்பம் பெருகி வருகிறது. இதனால் நகரங்களில் குற்றச் செயல்கள் பெருகி வருகின்றன. பாதுகாப்பான நகரம் என்றால் என்ன? மக்கள் ஒவ்வொருவரும் மன அமைதியுடனும் நிறைவுடனும் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு ஏற்ற பாதுகாப்பான சூழல் எங்கு காணப்படுகிறதோ? அதுவே பாதுகாப்பான நகரம் என்பது நீங்கள் அறிந்த விடயம் தானே!
நகரங்கள் இயந்திரமயமாகி வருகின்றன. பொறுமையாக வீடுகளில் இருந்து தத்தம் அலுவல்களைக் கவனிப்பவர்கள் தொகை குறைவடைந்து வருகின்றது. பரபரப்பான சூழலில் ஒடிக்கொண்டே இருக்கின்றனர். வீடு, குடும்பம், மனைவி, மக்கள்,
அவர்களது நலன்களில் அக்கறை செலுத்துதல் போன்ற சிந்தனை குறைவடைந்து வருகின்றது. பணம் தேடுவது ஒன்றே குறிக்கோள். மனிதர்கள் எங்கே போகிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது. நகரங்கள் பாதுகாப்பற்றவையாகி மாறி வருவதற்கு
கட்டுரைகள் (82)-----♔്.

இவர்களது செயற்பாடுகளே காரணம். பெற்றோர் பிள்ளைகளின் நலனில் அக்கறை செலுத்துவதில்லை. கல்வியில் அக்கறை காட்டுவதில்லை. பிள்ளைகளும் பெற்றோரை ஏமாற்றப் பழகி விட்டனர். வரட்டுக் கெளரவத்திற்கு ஆளாகி விட்டனர். நற்பழக்க வழக்கங்களில் அக்கறை செலுத்துவதில்லை. இதனால் நகரங்கள் இன்று குற்றச் செயல்களின் தொட்டியாக மாறி வருகின்றன. இதுவும் நீங்கள் தெரிந்து கொண்ட
விடயம் அல்லவா?
புரிந்துணர்வு, மனப்பாங்கு மாற்றம், சமநிலை, நடத்தை மாற்றம், என்பன ஏற்படும் போதே குற்றச் செயல்கள் குறைவடைய வாய்ப்புண்டு நகரத்தில் குடியிருப்புக்கள் நெருக்கமாகக் காணப்படுவதும் இயற்கையாகவே கிடைக்கும் வளங்கள் அருகுவதும், சுத்தம், சுகாதாரம், பாதிக்கப்படுவதற்கு காரணம். எனவே சூழற்சமநிலை குறைகின்றது. மக்கள் சுகமாக வாழ்வதற்கு ஒவ்வாத பகுதியாக நகரங்கள் மாறி வருகின்றன. இயற்கை அனர்த்தங்கள் பெருகுவதும் நகரத்தின் பாதுகாப்பு முறை பற்றி மீண்டும் ஒருமுறை சிந்திக்க வைத்துள்ளது. மனித நேயம் மண்ணோடு மண்ணாய் மறைந்து
விட்டது. எனவே பாதுகாப்பான நகரம் ஒன்று உண்டா?
மக்களிடையே பெருகி வரும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தி மக்கள் அமைதியாக வாழ்வதற்கு ஏற்ற வகையில் சூழற் சமநிலையைப் பேணி புரிந்துணர்வு, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, ஆகியவற்றை மக்கள் உள்ளங்களில் விதைத்து நெருக்கமற்ற, பாதுகாப்பான, உறுதியான கட்டடங்களையும், குடியிருப்புக்களையும் அமைத்து மக்கள் அச்சசமின்றி வாழத்தக்க வகையில் நகரங்கள் அமைக்கப்படுமாயின் அதுவே பாதுகாப்பான நகரம் என்பதில் ஐயம் இல்லை. வாய்ப்புக்கு நன்றி!
வணக்கம்!
S S S S S S S S S S S S S S S S S SSS S S S S S S S SS SS SS S S SSS S S S S S S S S S S S SSS S S S S S S S S S S S S S
(கு) கட்டுரைகள்

Page 48
உ5. மெய்ப்பொருள் காண்பதறிவு
நாம் அறிவு என்று நினைத்து சேகரிப்பதெல்லாம் அறிவாகி விடுவதில்லை. சில சமயங்களில் தேவையற்ற தகவல்களையும் விபரங்களையும் மூளையில் போட்டுத் திணித்துக் கொள்கிறோம். ஆனால் அவற்றையெல்லாம் அறிவு என்று கூறமுடியுமா? அறிவு வளர்ச்சி ஒவ்வொரு மனிதனதும் உரிமை. எனினும் ஒவ்வொருவரும் விரும்புகின்றபடியும் பயனளிக்கும் வகையிலும் அமைவதே உண்மையான அறிவு, அறிவைப் பயனுள்ள வகையில் செயற்படுத்துகின்ற போது அது புத்திசாலித்தனமாகும். எனவே அறிவைப் பெறுவதுடன் அவ் அறிவை புத்திசாலித்தனமாகவும் மாற்றிக் கொள்ளும் போதே அவ் அறிவு மெய்யறிவு என்னும் பெயரைப் பெறும். அந்நிலையில் அறிவே பலம் மிகுந்ததாக அமையும். தம்முடைய பலத்தை மட்டும் நம்பாமல் அறிவின் பலத்தையும் கொண்டு ஒருவன் செயற்படும் போது அவர் பெற்ற அறிவு மெய்யறிவாக
LDSO(5tb.
அறிவுள்ளவர்கள் எல்லோரும் வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் என்று கருதப்படமட்டார். அறிவை எப்படிப் பயன்படுத்துகின்றோம்? எவ்வாறு பயன்படுத்துகிறோம்? என்பதிலேயே நமது வெற்றியும், தோல்வியும் தங்கியுள்ளது. அறிவு என்பது மனிதனுக்குக் கிடைத்திருக்கும் ஒப்பற்ற கூரியவாள். அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை ஒருவன் அறிவதைப் பொறுத்தே வாளின் உபயோகமும் அமையும் இயற்கை மனிதனுக்கு அளித்துள்ள வரப்பிரசாதமே அறிவு ஐம்புலன்கள் மூலம் நிகழ்வுகள் மூளையில் பதிவாகும் போது ஏற்படும் உணர்வுகள் ஒன்றோடு ஒன்று தொடர்புற்று அறிவாகப் பரிணமிக்கின்றது. அறிவை இலட்சிய ஈடேற்றத்திற்கு ஒரு முகப்படுத்தும் போது அவ்அறிவு மெய்ப்பொருளைக் காணும் ஆற்றல் பெறும்.
ஒவ்வொருவரும் தமது வாழ்க்கைச் சூழ்நிலைகளை மையமாகக் கொண்டு சரியான உண்மைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும். எதையும் நுணுக்கமாக ஆராய்ந்து அறிதல் வேண்டும். எல்லா விடயங்களையும் கற்றுவிட்டால் கற்ற அனைத்தும் அறிவாகாது. அவை வெறும் தகவல்கள் மட்டுமே. கற்றவற்றை ஒன்றோடு ஒன்று இணைத்துப் பார்க்கின்ற பொழுதே பயனுள்ள அறிவாக மெய்ப்பொருளைக் காணும் ஆற்றல் பெற்றதாக விளங்கும். மெய்யறிவு பெற்றவர்கள் மற்றவர் கண்ணுக்குப்
(32) கட்டுரைகள்

புலனாகாத இயற்கையில் ஒனிந்து கொண்டிருக்கும் விடயங்களை அறிந்து கொள்ளும் ஆற்றல் பெற்றவர்கள். அதனாலேயே மெய்யறிவு பெற்றவர்களை விஞ்ஞானி என்றும் மெய்ஞ்ஞானி என்றும் கூறுகின்றனர். சமய ஞானிகளின் மெய்யறிவு மெய்ப்பொருளாகிய இறைவனைக் காண்பதில் நாட்டம் கொள்கிறது. விஞ்ஞானிகளின் மெய்யறிவு வாழ்க்கையை வசதியாக்கிக் கொள்ள உதவுகிறது. அரசியல் தலைவர்களின் அறிவு சமூக அமைப்புக்களை உருவாக்க உதவுகின்றது. எனவே ஒரு சமூகமோ, நாடோ
முன்னேற்றம் பெற மெய்யறிவு அவசியம்.
கற்கப்படுவது கல்வி, பிறர் சொல்லத் தெரிந்து கொள்வது கேள்வி. இவை இரண்டிலிருந்தும் பெறப்படும் பயன் அறிவு கல்வி என்பது ஏடுகளில் பதிவு செய்யப்பட்ட விடயங்களையே குறிக்கும். ஆனால் மனிதர் நடைமுறை வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்க்கையைப் பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ள மெய்யறிவே தேவை. மனிதனுக்கு அவனது குணங்கள் மூன்றும் மாறி மாறி வருதல் இயல்பு. எனவே உயர்ந்த பொருள் இழிந்தார் வாயிலும், இழிந்த பொருள் உயர்ந்தார் வாயிலும், உறுதிப்பொருள் பகைவர் வாயிலும், கெடுபொருள் நண்பர்வாயிலும், ஓரோ வழி கேட்கப்படுதலான் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ளாது அதன் தன்மையை அறிந்து அதன் மெய்மை, பொய்மை அறிந்து சொல்வாரது இயல்பு நோக்காது, அப்பொருளின் பயன்நோக்கிக் கொள்வதே
மெய்யறிவு என்பர் பரிமேலழகள்.
எனவே தான் சொல்லும் சொற்களை ஆராய்ந்து பிறர்மனம் கொள்ளுமாறு சொல்வதுடன் பிறர்வாய்க்கேட்கும் சொற்களின் நுண்பொருள் காண அரிதாயினும் அதனை ஓர்ந்து அதன் உண்மைத் தன்மையை நுனித்து உணர்வதே மெய்யறிவு, எனவே தான் வள்ளுவர்,
எப்பொருள் யார்யா”வாய்க் கேட்பினும் அய்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு என்றார்.
கண் நமக்குக் காட்டும் காட்சி புலக்காட்சி அதை உணர்வதற்கு அறிவு தேவை. மெய்யறிவு வாய்க்கப் பெற்றவர்களே அறிவுடையவர்களாகக் கருதப்படுவர். அறிவு என்பது ஒரு மகா சமுத்திரம். சிந்தனையைக் கீறிக் கிளறி மேலும் மேலும் சிந்திக்க வைப்பது அறிவு வளர கண், காதுகளை மட்டுமன்றி மனதையும் திறந்து
வைத்திருத்தல் வேண்டும். சொல் வெல்லும் சொல்லாக அமைய வேண்டும். எழுத்து ୫5 கட்டுரைகள்

Page 49
படிப்போர் நெஞ்சத்தில் வெளிச்சத்தைப் பரப்ப வேண்டும். அறிவு மெய்பொருளைக் கண்டறியும் ஆற்றல் பெற்றதாய் இருத்தல் வேண்டும். தோண்டத் தோண்ட மணற்கேணி ஊறுமாப் போல் தூண்டத் தூண்ட விளக்கு எரியுமாப்போல் கற்கக்கற்க அறிவு வளரும் 'அறிவுடையார் ஆவது அறிவார்’ அதாவது மெய்யறிவு பெற்றவர்கள் உண்மை உணர்ந்து உலகத்தோடு ஒட்ட ஒழுகும் ஆற்றல் பெற்றவர். ஆதலின் தமக்கு வரக்கடவதாகிய நன்மை, தீமைகளையுணர்ந்து அதற்கேற்ப தம்மை வழிநடத்திச் செல்வர். எத்தகைய துன்பம் வந்தபோதும் தம்நிலையில் நின்றும் வழுவமாட்டார். எதையும் சொல்லும் ஆற்றல் பெற்றவர்கள். அதனாலேயே வள்ளுவர் "அறிவுடையார் எல்லாம் உடையார்” என்று குறிப்பிட்டுள்ளார். எனவே மெய்யறிவு என்பது உண்மையறிவு, மட்டுமன்றி எதையும் பகுத்துணரவும் நல்லன, தீயன பற்றிய உண்மையைக் காணவும் உதவும் அறிவாகும். நாலடியார்,
"இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால்
தம்மை விளக்குமால் தாம் உளராக் கேதன்றால்
எம்மை உலகத்தும் யாம்கானேம், கல்வியோல்
மம்மர் அறுக்கும் மருந்து'.
என்று கல்வி பற்றி இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. தம்மை விளக்குமால் என்பது தமது பலம், பலவீனம் ஆகியவற்றை தாமே உணரச் செய்யும் அறிவு அதுவே மெய்யறிவு “உன்னையே நீ அறிவாய்” என்றார் சோக்கிரட்டீஸ் அதாவது ஒருவன் தன்னைச் சரியாகப் புரிந்து கொள்கின்ற அறிவு தான் மெய்யறிவு, மெய்யறிவு வாய்க்கப்பெற்றவர்கள் ஞானிகள். அவர்கள் தம்மினுள்ளே தமக்கு மேலாய ஒரு பொருள் உண்டு என்று உணர்ந்தனர். அறிவின் பயன் சிந்தித்துத் தெளிதலே வாழ்க்கை பயன்படவும், நிலைபெறவும் உதவுவது மெய்யறிவு. உலகளாவிய சிந்தனை வளர பரம்பொருளைக் காண, உண்மையை உணர்ந்து கொள்ள மனிதன் தனது ஆளுமையை விருத்தி செய்ய மனதை நன்மையின் பக்கம் செலுத்த மெய்யறிவே உதவும். சொல்லப்படும்செய்திகள் பல, கேட்கப்படும் செய்திகள் பல. ஆனால் அவையெல்லாம் உண்மையல்ல. சீர்தூக்கி ஆராய்ந்தால் அறிவு கூர்மை பெற்றால், நுட்பமாக உணர்ந்தால் மெய்யறிவைப் பெறலாம். மெய்யறிவு வளர, அறியாமை அகலும் எனவே நிலைபேறுடையதும், பயனுறுதிமிக்கதும் மெய்யறிவே, மெய்யறிவின் மூலமே
மெயப்பொருளைக் காணமுடியும்.
Cз5)————-

வாழ்க்கையில் எதிர் நோக்கும் சிக்கல்களைக் கண்டு அதனைத் தெளிந்து எப்படித்தீாப்பது என்பதை உணர்ந்து மெய்மை, பொய்மைகளை அறியும்படி அறிவு நடைமுறைமாற்றம் பெறவேண்டும் அறியப்படுவது அறிவு அறிவாளி பலசாலி சிந்திக்கும் போது அறிவில் தெளிவு ஏற்படும். சிந்திக்கும் அறிவு மனிதனது சிறப்பியல்புகளில் தலையானது. அறிவு சிந்தனை அலைகளைத் தோற்றுவித்து புதிய தீட்சண்யம் பெற்று உண்மையை உணரவைக்கின்றது. மனித எண்ணங்களில் புதிய பரிமாணங்கள் பரிணமிக்கும். சிந்தித்துப் படிப்பதும், படித்துச் சிந்திப்பதும் அறிவு வளர்ச்சியின் பிரதான அம்சம். சிந்தனையே புதிய சிந்தனைக்கு அடித்தளம், சிந்திக்க சிந்திக்க மெய்ப்பொருள் காணும் அறிவு உருவாகும். நீர் நிலையில் ஒரு கல்லை எறிந்தால் ஒன்றையொன்று உள்ளடக்கி பல அலைகள் வளையங்களாக எழுவது போல் சிந்தனையின் மூலம் வளரும் அறிவே மெய்ட்பொருளைக் கண்டறியும் ஆற்றல் பெற்றது.
அதனாலேயேவள்ளுவர், "மெய்ப்பொருள் காண்பது அறிவு' என்றார்.
S S S S S S S S S S S S SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S

Page 50
நன்றிஉணர்தல்
“பயண்துக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நண்மை கடலிற் பெரிது”
என்பது குறள் தரும் கருத்து. அதற்கேற்ப தமிழ்மணி அகளங்கன் அவர்கள் இந்நூலுக்கான அணிந்துரையை இதய பூர்வமாக வழங்கியதுடன் எனது கட்டுரைகளின் கணினிப்பதிப்பை மூலப் பிரதியுடன் ஒப்பிட்டு வழுக்களைத் திருத்தி என்னை நெறிப்படுத்தி எனக்கு நல்ல ஆலோசகராக வழிகாட்டியாக இருந்து எனது ஆக்கங்கள் வெளிவர பல வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கியமை மறக்கக்கூடிய ஒன்றல்ல. அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள், மாணவர்கள் வாசிப்பதற்கான கட்டுரைகள் எழுதப்பட வேண்டும் என்று பெற்றோர் சிலர் என்னை அன்புடன் பணித்தனர். அவர்கள் அன்புக் கட்டளையை ஏற்று கட்டுரைகள் வெளிவருகின்றன. கையெழுத்துப் பிரதிகளை திருத்தமான தமிழில் எழுதித் தந்த செல்வி.திருமகள் அவர்களுக்கும் கணினிப்பதிப்பில் திருத்தமாக இக்கட்டுரையை வெளியிட்டு உதவிய 0.1 அச்சகத்தினருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
ஆசியுரைகளை வழங்கிய ஏனைய அன்டர்களுக்கும், பலவழிகளிலும் எனக்குப் பக்கபலமாக நின்று உதவிய எனது மாணவச் செல்வங்களுக்கும் ஏனையோருக்கும்
எனது உள்ளம் நிறைந்த நன்றிகள் என்றும் உண்டு.
“ஞாலம் கருதினும் கைகட்டும் காலம்
கருதி இடத்தாற் செயிண்”
செல்வி.யோ.சோமசுந்தரம்
ܐ ܢܝ .
Gae) கட்டுரைகள்


Page 51
| _ _ _