கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அன்றில்ப் பறவைகள்

Page 1


Page 2

*/ー
அன்றில்ப் பறவைகள்
(நாடகம்)
அகளங்கன்
வெளியீடு:
வவுனியா முத்தமிழ்க் கலாமன்றம் பங்குனி 1992.

Page 3
அன்றில்ப் பறவைகள் (நாடகம்)
முதற்பதிப்பு:
பங்குனி 1992.
வெளியீடு:
முத்தமிழ் கலாமன்றம், வவுனியா,
பதிப்புரிமை:
திருமதி. பூ தர்மராஜா B, A. (Hons.)
அச்சுப்பதிவு:
புனித செபத்தியார் அச்சகம், 65, லேடி மனிங் டிறைவ், மட்டக்களப்பு. இ 065 - 2086,
விலை:
ரூபா. 4 O-OO
Antril. Paravaikal (Drama)
First Edition:
March, 1992.
Published by:
Muthamil Kalamantram, Vav aniya.
Copyright (C):
Mrs. P. Tharma rajah, B. A. (Hons )
Printers:
St, Sebastian Printers, 65, Lady Manning Drive, Batticaloa.
2065-2086.
ii

இலக்கிய ஆர்வலராக விளங்கும் அகளங்கன், இலக் கிய வானில் ஒளிவிடும் நிறை நிலாவாக வளர்ந்து வரும் சிறந்த சிந்தனையாளர். தன் சிந்தனா சக்தியின் திறத் தால் பல படைப்புக்களைக் கொணர்ந்து குவிக்கும் ஆதங் கம் உடையவர்.
வெகு அடக்கமாக, ஆனா ல் ஆணித்தரமாகக் காலூன்றி இலக்கியச் சேவைக்காகத் தன்னை அர்ப்பணித் துள்ள நல்லதொரு நாவலர். பழந்தமிழ் இலக்கியப் பயிற்சி மிக்கவர். தன் சிந்தனைகளைக் கட்டுக் கோப்புக்குள் பாய விட்டு, சிந்தனையைத் தூண்டும் விதத்தில் பல நூல்களை ஆக்கியுள்ளார்.
அவரது சிந்தனைச் சிறப்பிற்கு அவர் எ மு தி ய *வாலி* 'இலக்கியத் தேறல்' போன்ற நூல்கள் சான் றாகத் திகழ்கின்றன.
கவிதை, கட்டுரை, சிறுகதை, நாடகம், எனப் பல் துறையிலும் ஈடுபட்டு உழைத்துத், தமிழுக்குத் தொண்டு செய்து வரும் அகளங்கன், நல்ல தொரு ஆசிரியருமாவார்.
அவர் அவ்வப்போது எழுதி ஒலிபரப்பான நாடகங் களில், ஐந்தினைத் தொகுத்து, 'அன்றில்ப் பறவைகள்' எனப் பெயரிட்டுநூலுருவில் தருகின்றார். அவரது நாடகங் களை ஒலி வடிவில் கேட்டு மகிழ்ந்த பலரின் உள்ளங்களை நிறைவு படுத்து முகமாக, வவுனியா முத்தமிழ்க் கலாமன் றம், தனது மூன்றாவது வெளியீடாக இந்நூலை வெளி யிடுவதையிட்டுப் பெரு மகிழ்வு அடைகிறது.
அகளங்கனது இலக்கியப் பணிக்கு ஆதரவளித்து வரும் தமிழ் கூறும் நல்லுலகம், இந்த நாடக நூலுக்கும் வர வேற்பளிக்கும் என்பது எமது நம்பிக்கையாகும். அவரது இலக்கியப் பணி தொடர்ந்து சுடர்விட உளமார வாழ்த்து கிறோம்.
பி. மாணிக்கவாசகம் ச. அருளானந்தம்
தலைவர்,
வ|முத்தமிழ்க் கலா மன்றம். 10-2-92. வ|முத்தமிழ்க் கலாமன்றம்.
iii

Page 4
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன
தமிழ்ச்சேவைப் பணிப்பாளர்.
திரு. நா. சிவராஜா அவர்களின்
ஆசியுரை
*அகளங்கன்' என்ற புனைபெயரில் ஆ சி ரி ய ர் நா. தர்மராஜா அவர்கள் வானொலிக்கென எழுதிய நாட கங்கள், நேயர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன என்றே கூறவேண்டும்.
அவரது நாடகங்களில் மனித உணர்வுகள் பிரதி பலிக்பப்படுவதை நாம் அவதானிக்கக்கூடியதாக இருந்தது. அதுமட்டுமல்ல, அத்தனை நாடகங்களிலும் எங்கோ ஒரு கட்டத்தில் சோகம் இழையோடியதை வானொலி ரசிகர் கள் உணர்ந்திருப்பார்கள்.
இப்படியான நாடகங்களை இன்று வானொலிக் கென்று எழுதுபவர்கள் குறைவே. தரமான நாடக எழுத்
தாளர்கள் அதிகமாக உருவாகவேண்டும் என்பது எமது பேரவா.
நா. தர்மராஜா அவர்கள் நாடகங்களை மாத்திரமல்ல நல்ல உரைகளையும் வானொலிக்கென ஆற்றியுள்ளார்.
தனித்துவமான நாடகங்களை படைக்கும் அகளங்கன் தமது முயற்சியில் தொடர்ந்து ஈடுபடவேண்டும். அதற்கு எமது நல்லாசிகளும் வாழ்த்துக்களும் என்றென்றும் உண்டு.
நா. சிவராஜா. 08 - 0 1 - 92. தமிழ்ச்சேவைப் பணிப்பாளர்
iy

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ்ச்சேவை நாடகத் தயாரிப்பாளர், திரு. ஜோர்ஜ் சந்திரசேகரன்
அவர்களின்
வாழ்த்துரை
வானொலி நாடகங்கள் இலக்கிய அந்தஸ்தை மெல் லப் பெற்றுவரும் இக்கால கட்டத்தில், "அகளங்கன்' என்ற புனைபெயரில் எழுதி வரும் நா. தர்மராஜா அவர்கள், தான் எழுதிய வானொலி நாடகங்களை நூலுருவில் வெளி யிடுவது மகிழ்ச்சியைத் தருகிறது. 66 ஆண்டுகளே நிறை யப்பெற்ற எம் நாட்டு வானொலிக் குழந்தை, வாலிப மடைந்து, முதுமை பெறும்போது வானொலி நாடகங் சளுக்கு இலக்கிய அந்தஸ்து கிடைத்துவிடும் என்பதில் ஐய மில்லை. அப்போது ஒலி இலக்கிய முன்னோடிகளில் ஒருவ ராக நா. தர்மராஜா அவர்கள் ஏற்றுக்கொள்ளப்படுவார் என்பதிலும் ஐயமில்லை.
பத்திரிகையைப் போல, வானொலியும் ஒரு வெகு ஜனத் தொடர்புச் சாதனமே. ஞாயிறுதோறும் சிறுகதை களை வெளியிடுவது எமது பத்திரிகா தர்மமாகிவிட்ட இன்று, வா ர த் தி ற் கு ஒரு நாடகத்தை ஒலிபரப்புவது வானொலியின் நிர்ப்பந்தமாகிவிட்டது. பத் தி ரி கையில் வெளிவரும் சிறுகதைகளைப்போலவே, வானொலியில் ஒலி பரப்பாகும் நாடகங்கள் யாவுமே இலக்கிய அந்தஸ்தைப் பெறத் தகுதியுடையவை என்று கூற முடியாவிட்டாலும், அவ்வப்போது சில இலக்கியத் தரம்வாய்ந்த நாடகங்களும் ஒலிபரப்பப்படுவதை நமது இலக்கிய விமர்சகர்கள் ஏனோ செவிமடுக்கத் தவறி விடுகிறார்கள். தென்னிந்தியத் திரைப் படத் தாரகைகளின் புகைப்படங்களை வெளியிடுவதில் ஆர்வம் காட்டிவரும் எமது பத்திரிகைகள், வானொலி நாடக எழுத்தாளர்களுக்கோ, வானொலி நடிகர்களுக்கோ உரிய இடம் அளிப்பதில்லை "சீரியஸ் எழுத்தாளர்கள் என்று தம்மைக் கூறிக்கொள்ளும் எமது இலக்கிய ஜாம் பவான்களும்’ வானொலி நாடகங்கள் பக்கம் தலைவைத் தும் படுப்பதில்லை வானொலி நாடகங்களின் ஆயுட் காலம் முப்பது அல்லது நாற்பத்தைந்து நி மி டீ. நீங்க ளே
V

Page 5
என்பதால் ‘அற்ப ஆயுசுகள்’ என்று ஒதுக்கி விடுகிறார் களோ தெரியவில்லை.
நா. தர்மராஜா அவர்கள் எழுதிய ஐந்து நாடகங் களையும் வானொலியில் தயாரித்தவன் என்ற வகையில், அவை பற்றி சில வார்த்தைகள் கூறுவது பொருத்தமானதே என்று நினைக்கிறேன். நா. தர்மராஜா அவர்கள் எழுதிய முதல் வானொலி நாடகம் "அவர்கள் படித்தவர்கள் . இதுவே இந்த ஐந்து நாடகங்களிலும் எனக்கு மிகவும் பிடித்தமான நாடகம். ஒரு சிறுகதையைப்போல மிகவும் நேர்த்தியாக எழுதப்பட்டது. இந்த நாடகம், மனித மனங் களில் குடிகொண்டிருக்கும் போலித்தனங்களையும், போலிக் கெளரவத்தையும் அ தி ல் மிகவும் நேர்த்தியாக வெளிக் கொணர்ந்திருந்தாா.
முதல் முதலில் அந்த நாடகத்தை நான் வாசித்த போது, ஒரு நல்ல வானொலி நாடக எழுத்தாளர் உரு வாகி வருகிறார் என்பதைப் புரிந்துகொண்டேன். அதன் பின் 'அம்மா நான் வெளிநாடு போகிறேன்' என்ற உள்ளத்தை உருக்கும் நாடகத்தை எழுதியனுப்பினார் நா. தர்மராஜா. இவற்றின் மூலம் நேயர்கள் பலரின் பாராட்டையும் அவர் பெற்றார். இதன்பின் அவர் எழுதிய ‘இயந்திர இல்லற மும் முந்திய இரு நாடகங்களைப்போலவே 25, 26 நிமி டங்களே ஒலிபரப்பக் கூடியதாக அமைந்தது. இதை தர்மராஜா அவர்கள் வானொலி நிலையத்தில் என்னைச் சந்தித்தபோது கூறினேன். இதனாலோ எ ன் ன வோ * அன்றில்ப் பறவைகள்', 'உருகி எரியும் கர்ப்பூரங்கள்' என்ற இரு நாடகங்களையும், சற்றுப் பெரிதாகவே அவர் எழுதிவிட்டார். அதாவது, எமது 30 நிமிட கால எல்லைக் குள் அவை அமையாது போகவே அவற்றிலிருந்து சில காட்சிகளை நீக்கிவிடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஆனாலும் நேயர்கள் மத்தியில் அவை மிகுந்த வரவேற் பையே பெற்றன.
நா. தர்மராஜா அவர்கள் மேலும் இலக்கியத் தரம் வாய்ந்த வானொலி நாடகங்களை எழுதி, அவற்றை நூலு ருவில் வெளியிட்டு, வருங்கால வானொலி நாடக எழுத் தாளர்கள், ஒலி இலக்கியம் ப  ைடக் க வழிசமைத்துக் கொடுக்க அவரை வாழ்த்துகிறேன்.
ஜோர்ஜ் சந்திரசேகரன்
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், கொழும்பு 7. 29 - 0 1 - 92.
Vi

கிழக்குப் பல்கலைக் கழக நுண்கலைத் துறைத் தலைவர் கலாநிதி சி. மெளனகுரு வழங்கிய
அணிந்துரை
அறுபத்தி ஆறு வருட வரலாற்றைக் கொண்ட இலங்கை வானொலி, தமிழ் நாடகத் துறைக்கு ஆற்றிய பங்களிப்பு என்ன ?
இத் துறையில் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டியது முக்கியமும் அவசியமும் ஆகும்.
ஆராய்வாளர் முயற்சிகள் மேற்கொள்வார்களாக!
இலங்கை வானொலியின் தமிழ் நாடகம் என்றதும் சட்டென்று நமக்குச் சில நாடக எழுத்தாளர்களின் பெயர்கள் ஞாபகத்திற்கு வருகின்றன. - இலங்கையர் கோன், சில்லையூர் செல்வராசன், சிவத் த ம் பி, வரணியூரான், சண்முகம், அராலியூர் சுந்தரம்பிள்ளை, பெளசுல் அமீர் இவர்களின் பெயர்கள் நேயர்கள் மத்தியில் பிரபல்ய மானவை. இவர்களிற் சிலரின் நாடகங்கள் நூல் வடிவம் பெற்றது முன்டு. அவற்றுட் சில வானொலி நாடகப் பிரதிகளாக அமையா திருந்தமையும், நாடகத்திற்குரிய கட்டிறுக்கம் இன்றியிருந்தமையும் கண்கூடு,
இவ்விடத்திற் தான் வானொலி நாடகத் தயாரிப்பாளர்களின் சிறப்பு தெரியவருகிறது. சானா, சி. வி. ஆர், வாசகர், ஜோர்ஜ் சந்திரசேகரன், காவலூர் ராசதுரை போன்றோர் வானொலி என்ற ஊடகத்தின் நுட்பங்களை உள் வாங்கியவர்களாயிருந்தமையினால் சிறப்பற்ற ஒரு நாடகப் பிரதியைக் கூட கேட்கத் தகுந்த ஒரு வானொலி நாடகமாக்கும் திறன் பெற்றிருந்தனர். சிறப்பான பிரதிகள் இவர் களிடம் கிடைத்தபோது அவை அற்புதமான நாடகங்களாக அமைந் ததும் உண்மை .
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் எல்லா ஸ்தாபனங்களை யும் போல சில சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டதே. இதனால் இலங்கை வாழ் சகல தரப்பட்ட கலைஞர்களினதும் பங்களிப்பினைப் பெறுதல் சிரமமான தொன்றுதான். எனினும் எழுபதுகளில் இச்சட்ட திட்டங்கள் சற்றுத் தளர்த்தப்பட்டு நாடகத்திற்கு சிறப்புத் தயாரிப் பாளர்களாகவும், எழுத்தாளர்களாகவும், நடிகர்களாகவும் சிலரை உடுத்தாபனம் வரவேற்றது. நா. சுந்தரலிங்கம், முருகையன் தாசீசி பஸ் ஆகியோர் அக்காலத்தில் வானொலியில் நாடகத்துறைக்கு பணி யாற்ற அழைக்கப்பட்டோரிற் சிலர்.
Vii

Page 6
இத்தகையதொரு அகண்ட நோக்கும் சட்டங்களைத் தளர்த்தி, திறமைகளை இனம் கண்டு அவற்றை தம்முன் இணைக்கும் போக்கும் ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்துள் உருவாகின் வானொலி நாடகத் துறை மேலும் வளர்ச்சிபெற வாய்ப்புண்டு. இது ஒரு புறமாக.
நாடகம் என்பது ஒரு மேடைக் கலையாகும். கண் புலனாகக் காட்சி நிகழும் இடமே மேடையாகும், ஆனால் வானொலி நாடகத்தில் செவி புலனாக மனம் என்னும் மேடையிற் காட்சி நிகழ்கிறது. வானொலி நாடகத்திற்கும் மேடை நாடகத்திற்குமிடையே நிறைய வேறு பாடு களுண்டு. குரலின் ஏற்ற இறக்கமும், சொற்கள் பயன்படுத்தப்படும் விதமும், ஒலிக் குறிப்புக்களுமே வானொலி நாடகத்தின் தொடர்பு முறைமைகளாகும்.
நிகழ்ச்சி எங்கு நடக்கிறது? என்ன நேரத்தில் நடக்கிறது? என்ற மனப்படத்தைக் கட்டி எழுப்புதல், பாத்திரங்கள் இன்னார் என நேயர் மனதில் பதியும் வரை அவர்கள் பெயர் சொல்லி அழைத்தல், ஒரு பாத்திரம் அங்குள்ளது என்பதை நினைவூட்ட அப்பாத்திரம் இடை யிடையே ஒரு வசனமாவது பேசுதல், பாத்திரங்கள் மிகக்குறைவாக இருத்தல், திடீரென பிரசங்கங்களில் பாத்திரங்கள் இறங்காமல் இருத்தல், ஒவ்வொரு சொல்லையும் அளவறிந்து உபயோகித்தல் என் பன போன்ற வானொலி நாடக எழுத்து நுட்பங்களை வானொலி நாடக எழுத்தாளர் அறிந்து இருக்க வேண்டியது அவசியம். செவியும் மனமுமே ரசிகரிடம் செயற்படுகின்றன என்பதனை வானொலி நாடக எழுத்தாளர்கள் என்றும் மனதில் இருத்தல்வேண்டும்.
இன்று வானொலி நாடகம் எழுதும் இளம் தலைமுறையின ருட் பலர் இப் பிரக்ஞையுடன் எழுதுபவர்களாயில்லை.மேடை நாடகங் களாகவே வானொலி நாடகங்களை எழுதுகிறார்கள். இவ்வகையில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் இளம் எழுத்தாளர்களுக்கு வானொலி நாடக நுணுக்கங்களை விளக்கும் வகையில் நாடக எழுத் துப் பயிற்சிப் பட்டறைகளை ஒழுங்கு செய்தல் அவசியமாகும்.
ஒரு வானொலி நாடகத்தை இ ர ண் டு வகைகளில் நோக்கி அபிப்பிராயம் கூறலாம். ஒன்று அதனை செவியினால் உள்வாங்கி எழும் உணர்வுகளை அடிப்படையாகக்கொண்டு அபிப்பிராயம் கூறல், இன்னென்று அதை எழுத்துவடிவில் கண்களினால் உள்வாங்கி எழும் உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டு அபிப்பிராயம் கூறல், முன் னையதை நிகழ்வு என்றும் பின்னையதை இலக்கியம் எனவும் நாம் கூறலாம். இரண்டும் இருவேறு கலைவடிவங்கள்.
துர்அதிஷ்டவசமாக அகளங்கனின் இந்நாடகங்களைக் கேட்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. கேட்டோர் சிலாகிக்கக் கேட்டுள் ளேன். எனவே நாடகப்பிரதியே எனக்கு ஆதாரம்.
நாடகம் ஒர் இலக்கிய வடிவமாகும். மனித உணர்வுகளை அவர்களின் முரண் நிலையில் கூறுதலே நாடகமாகும்.
Viii
 

நாடகத்திற்குரிய கதையை, பிரதான உரிப்பொருளை நாடகப் பாங்கில் சொல்வது முக்கியமானது. நாடகப் பாங்கு என்றால் என்ன?
கதையின் பிரதான முரணை (Conflict) மையமாகக்கொண்டு உச்சக்கட்டத்தை நோக்கி அலம்பல் சிலும்பலின்றி தெளிவாக நாட கத்தை பாத்திர உரையாடல்கள் மூலமாக நடத்திச்செல்லுதல்.
பிரதான முரண் படிப்படியாக வளர்ந்து தீர்வு பெறுவதை, அல்லது அழிந்து படுவதைக் காட்டுதல் அதற்குத் தக காட்சி, பாத்தி ரங்கள், உரையாடல்களை அமைத்தல், எக்காட்சியாவது, வசனமாவது பிரதான முரணிலிருந்து சற்றேனும் விலகி நிற்காது பார்த்துக் கொள் ளல், பிரதான முரண் அதில் பங்கு கொள்ளும் பாத்திரங்களை எவ் வாறு பாதிக்கின்றது என்பதை உரையாடல் மூலம் விளக்கல் என்பன வற்றை நாம் நாடகப் பாங்கு எனலாம்.
இவ்வண்ணம் நறுக்குத் தெறித்ததுபோல அழகாக அமைந்து மனித உணர்வுகளைத் தட்டி எழுப்பும் நாடகங்களே இலக்கிய அந்தஸ் தைப் பெறுகின்றன.
இலங்கை வானொலி நாடக எழுத்தாளர் நூல் வரிசையில் அகளங்கனின் இந்நூல் வெளிவருகிறது. அகளங்கன் பணிவும், ஆற்ற அலும், சுறுசுறுப்பும், சமூக அர்ப்பணிப்புப் பண்பும், பல்துறைகளில் ஆர்வமும் கொண்டவராக யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவப் பருவத்தினராக அறிமுகமான காலம் தொட்டு இன்று வரை அவர் எழுத்துக்களையும், வளர்ச்சியையும் அவதானித்துள்ளேன். அவர் வளர்ச்சி மகிழ்ச்சிதருகிறது.
1987 தொடக்கம் 1991 வரை அவர் எழுதிய 5 வானொலி நாடகங்கள் இதில் இடம் பெறுகின்றன.
அம்மா நான் வெளிநாடு போகிறேன், அன்றில்ப் பறவைகள் ஆகிய இரண்டு நாடகங்களும் பிள்ளைகள் வெளிநாடுபோவதால் மனித உறவு கள், குடும்ப உணர்வுகள் பாதிப்புறுவதைக் கருவாகக் கொண்டவை. அவர்கள் படித்தவர்கள் நாடகம் பணம் மனித உறவுகளைப் பாதிப்ப தையும், இயந்திர இல்லறம் நாடகம் வாழ்க்கை பற்றிய பிழையான நோக்கும், குடியும், குடும்ப உறவைப் பாதிக்கும் விதத்தைத் கருக்க ளாகக் கொண்டவை. உருகி எரியும் கர்ப்பூரங்கள் நாடகம் ஆசிரியத் தொழிலின் மேன்மையினை கருவாகக் கொண்டுள்ளது.
சொந்த நாட்டை விட்டு இளம் தலைமுறை வெளிநாடு செல் லும் துயரம் அகளங்கனை நன்கு பாதித்துள்ளமை நாடகங்களில் தெரிய வருகிறது.
அகளங்கனின் சிறப்பம்சம் தான் வாழும் சமுகத்தைக் கூர்ந்து நோக்கி அதிற் காணப்படும் முரண்களையும் போலித்தனங்களையும்
ix

Page 7
காட்டி சமூகத்தை ஆற்றுப்படுத்த முனையும் போக்காகும். பேச்சு வழக்கினை சிறப்புறக் கையாள்வதையும் அவரின் சிறப்பம்சமாகக் குறிப்பிடலாம்.
பிரதான முரனைத் தனியாக இனம் கண்டு அதனை நாடக மாக வளர்த்தெடுக்காமையும், பாத்திரவார்ப்புகள் தர்க்கரீதியாக அமைந்து வளர்ச்சி பெறாமையும், நாடகக் கட்டிறுக்கம் சில இடங் களில் தளர்ந்திருப்பதும் இந் நாடக எழுத்துருக்களில் தவிர்க்கப்பட வேண்டிவையாகும்.
வானொலி நாடகப்பிரதி, வானொலி நாடகப் பிரதியாக அமைதலே சிறப்புடைத்து, ஒலிக்குறிப்புகள், குரலின் ஏற்ற இறக்கம், பாத்திரங்களின் செயற்பாட்டை விளக்கும் ஒலிகள் என்பனவற்றை உள்ளடக்கிய எழுத்துப் பிரதியாக இதனை வெளியிட்டிருப்பின் வானொலி நாடகம் எழுதும் இளையோருக்கு மேலும் பிரயோசன மாக இருந்திருக்கும்.
எல்லாவற்றிற்கும் மேலாக அகளங்கனிடம் நாடகம் எழுது வதற்குரிய எழுத்தாற்றல் காணப்படுகிறது. உருகி எரியும் கர்ப்பூரம் நாடகத்தில் வைத்தியலிங்கம் ஆசிரியரை குமாரதாசன் சந்திப்பதை பும், அவர் அவனை இனம் காணுவதையும் அவர் கொணரும் முறை இதற்கு ஒரு சிறு சான்றாகும்.
மேடை நாடகம், வானொலி நாடகம் ஆகியவற்றின் வடிவங் களின் நுட்பங்களை நன்கு அறிவதன்மூலமும், மேதா விலாசம் மிக்க புகழ்பெற்ற நாடக ஆசிரியர்களின் நாடகங்களை வாசித்து அந்நாடக ஆசிரியர்களின் நாடக உத்திகளை, அமைப்பை உள்வாங்கித் தன் வயப் படுத்துவதன் மூலமும் நாடகம்பற்றிய வடிவப் பிரக்ஞையை அகளங் கன் வளர்த்துக்கொள்ள வேண்டும். சமூகத்தின் முரண்பாடுகளை விஞ்ஞானபூர்வமான நோக்கில் கண்டறியும் சிந்தனைப் போக்கையும், சமூகப் பின்னணியில் பாத்திரங்கள் இயங்கும் முறையினைக் கண்டறி யும் பயிற்சியையும் மேலும் வளர்த்துக் கொள்ளில் நாடகத்தின் உள் ளடக்கம் அகளங்கனுக்கு கைவரும், இம் முயற்சிகள் நம்மிடையே ஒரு நல்ல நாடகாசிரியன் தோன்ற வாய்ப்பளிக்கும். இந்த நம்பிக்கையை அவர் நூல் தருகிறது.
அகளங்கனுக்கு என் வாழ்த்துக்கள்!
சி மெளனகுரு

முன்னுரை
வானொலியில் ஒலிபரப்பாகிய எனது ஐந்து நாடக நறுமலர்களால் தொடுக்கப்பட்ட கதம்ப மாலை இது. இங்குள்ள நாடகங்களில் அவர்கள் படித்தவர்கள் என்ற நாடகமே எனது முதல் வானொலி நாடகம். இது 1987ல் எழுதப்பட்டது. ஏனையவை 90, 91 களில், என்னால் எழுதப்பட்டவை.
இங்கு இடம்பெற்றுள்ள உருகி எரியும் கர்ப்பூரங்கள் என்ற நாடகம், சர்வதேச ஆசிரிய தினத்தையொட்டி, அகில இலங்கை ரீதியில் ஆசிரியர்களுக்கிடையே நடாத்தப் பட்ட நாடகப் பிரதியாக்கப் போட்டியில் முதற்பரிசைப் பெற்றது. பின் அதே ஆண்டில் (1991) வானொலி நாடக மாக்கினேன். ܗ
எனது பல வானொலி நாடகங்களைத் தயாரித்த, திரு. ஜோர்ஜ் சந்திரசேகரன் அவர்கள், எனது பல வானொலி நா ட கங்க ளில் நடித் து மெருகேற்றிய திரு. கே எஸ். பாலச்சந்திரன் அவர்கள், இரு வானொலி நாடக நூல்களை வெளியிட்டவரும், 150 இற்கு மேற்பட்ட வானொலி நாடகங்களை எழுதியவருமான, வானொலி நாடக ஜாம்பவான் அராலி. திரு. ந. சுந்தரம்பிள்ளை அவர்கள், ஆகியோர் எனது வானொலி நாடகங்களைப் பாராட்டி உற்சாகப்படுத்தியமையே இந்நூல் உங்கள் கைக ளில் தவழக் காரணமாகியது. அவர்களுக்கு என் மனமுவந்த நன்றிகள்.
இந்நாடகங்களை நல்ல முறையிலே ஒலிபரப்பிய இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்திற்கும், நடித்த கலைஞர்களுக்கும், தயாரித்ததோடு மட்டுமன்றி வாழ்த் துரையும் வழங்கிய திரு. ஜோர்ஜ் சந்திரசேகரன் அவர் களுக்கும். ஆசியுரை வழங்கிய தமிழ்ச் சேவைப் பணிப் பாளர் திரு. ந. சிவராஜா அவர்களுக்கும் நன்றிகள் பல.
இந்நூலுக்கு அணிந்துரை வழங்கிய திரு. சி. மெளன குரு அவர்களுக்கும், இந்நூலை வெளியிடும் வவுனியா முத் தமிழ்க் கலாமன்றத்தினர்க்கும், குறிப்பாகத் தலைவர் திரு. ச. அருளானந்தம் அவர்கள், செயலாளர் திரு. பி. மாணிக்கவாசகம் அவர்கள் ஆகியோர்க்கும்,
xi

Page 8
இந் நூ லா க் க த் தி ற் கு உத வி ய நண்பர்கள் திரு. செ. சண்முகநாதன், கவிஞர் சு. முரளிதரன், திரு. க. நடராஜா ஆகியோர்க்கும் நன்றிகள் பல.
எனது வாலி, இலக்கியத் தேறல் ஆகிய நூல்களின் வெளியீடுகளில் பெரும் பங்கு வகித்து, என்னை எனக்கு இனங்காட்டிய என் மதிப்புக்குரிய திரு. எஸ். தில்லை நடராஜா, திரு. க. ஐயம்பிள்ளை ஆகியோரை நினைவு கூர்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
என் எழுத்துலகப் பயணத்திற்குப் பாதை சமைத் துத் தந்த சிரித்திரன் சஞ்சிகைக்கும், அதன் ஆசிரியர் திரு. சி. சிவஞானசுந்தரம் அவர்களுக்கும் என் நன்றிகள் என்றும் உரியன.
இந்நூலை அச்சிடுவதில் சகல பொறுப்புக்களையும் ஏற்று, அழகாக அச்சிட்டுத் தந்த புனித செபத்தியார் அச்சக அதிபர் திரு. அ. சிவதாசன் அவர்கள், மற்றும் ஊழியர்கட்கும், அ ட்  ைட ப் படத்  ைத வரைந்து தந்த திரு. சி. வேலாயுதபிள்ளை அவர்கட்கும் நன்றிகள்.
இந்நூலாக்கத்தில் எனக்கு உற்சாகம் கொடுத்து உதவிகள் செய்த என் சகோதரர்களுக்கும், எனது ஆக்கங் கள் எல்லாம் நூலுருப் பெற வேண்டும், எனும் அவாக் கொண்டு உதவிவரும் என் தம்பி க. குமாரகுலசிங்கத்திற் கும், என் இதய ஒலியாய் இயங்கி எனக்கு எல்லா வகை யிலும் உறுதுணையாய் இருக்கின்ற என் இல்லாளிற்கும், வார்த்தைகளில் அடங்கா நன்றியை மெளன கதால் சமர்ப்பிக்கிறேன்.
என் நூல்களை விரும்பி வாசித்து என்னை உற்சாகப் படுத்தி, மேலும் பல நற்காரியங்களை நான் செய்ய வழி வகுக்கும் வாசகர்களுக்கு நன்றி கூறி இந்நூல் விருந்தை இன் முகத்துடன் படைக்கிறேன்.
நன்றி.
பம்பைமடு, இங்ங்ணம். வவுனியா, அன்பு 0 1 - 03-1992
அ களங்கன்,
xii

1.
இடம்
அகளங்கன் 'அம்மா நான்
வெளிநாடு போறேன்'
g5 T'S - 1
ഖ്,
பாத்திரங்கள் சந்திரன், அவனது தாய், தகப்பன்.
தாய்:
தகப்பன்:
தாய்:
35/Tür:
சந்திரன்:
இஞ்சேருங்கோ! அந்தப் புறோக்கரப் பாத்திட்டு வாங் கோண்டு எத்தின தரஞ் சொல்லிப் போட்டன். இருக் கிறியள் சும்மா, புடிச்சு வைச் ச புள்ளையார் போல. உனக்குச் சொன்னா விளங்கிறேல்லயே அவளுக்கு இப்ப என்ன அவசரம் கலியானத்துக்கு. இப்பதான் இருபது வயது தொடங்குது. ரிச்சர் வேலை கிடைச்சு மூண்டு மாசம் முடியேல்ல. அதுக்குள்ள என்ன அவசரம் எண்டு கேக்கிறன். என்ன அவசரமோ! பின் ன வைச்சிருந்து கிழவியாகினாப் பிறகு முடிச்சுக் குடுக்கிறதே. அவன் வரப்போறன், வரப் போறனெண்டு கடிதம் போட்டுக் கொண்டிருக்கிறான்டு இந்தாளென்னண்டா என்ன அவசரமெண்டு கேக்குது. அவன் வாறண்டா வரட்டும். அவனும் வெளிநாடு போய் ஆறு வருஷம் முடியப் போகுது. வரட்டன் காண எவள்வு ஆசையாயிருக்கு. உங்களுக் கென்ன, சொல்லுவியள். அவன் வந்திற்றா மற்றக் குமர எப்பிடிக் கரசேர்க்கிறது. அம்மா! உங்கட ஆசைக்கு ஒரு அளவில்லை. ஒரு கொட்டில் போல வீட்டில இருந்த நாங்கள் இண்டைக்கு மாளிகை மாதிரி வீடு கட்டி இருக்கிறம். அக்காக்கு வீடு கட்டிக் குடுத்து, நல்ல சீதனமுங் குடுத்து, நல்ல இடத்தில கலி யாணமுங் கட்டிக் குடுத்திற்றம். தங்கச்சி படிச்சு ரீச்சர் வேலை பார்க்கிறாள். நான் யூனிவெசிற்றியில படிக்கிறன். இப்பிடி இவளவு முன்னேற்றத்துக்கும் காரணம் அண்ணை தானே. இன்னும் காணாதே உங்களுக்கு. எனக்கிண்டா அண்ணயக் காண எவளவு ஆசையாயிருக்கு. அவருக்கும் அப்பிடித்தானே இருக்கும்.
O

Page 9
அகளங்கன்
35 srti:
சந்திரன்:
தாய்:
தகப்பன்:
35 FTulu:
தகப்பன்:
தகப்பன்:
Pi:
தகப்பன்:
5 Tull;
தகப்பன்:
O2
அவன் என்ன எங்களப் பாக்கிற ஆசையிலயே அவசரப் படுறான். அவன் அந்த வாத்தியாற்ற பெட்டயப் பாக்க இல்லோ அவசரப்படுறான். எதுக்கு வந்தாலும் நாங்கள் அண்ணயக் காணலாந்தானே. ஒவ்வொரு சாட்டாச் சொல்லிச் சொல்லி அண்ணய இஞ்ச வராமலே பண்ணிருவியள். கொண் ணயக் கண்டா உனக்கென்ன முத்தியே கிடைக்கும். நான்படுறபாடு எனக்கெல்லோ தெரியும். உங்களுக்கென்ன தெரியும்.
இப்ப என்ன பெரிய பாடு படுறாய் நீ . உங்களுக்கென்ன தெரியும், என்ர கஸ்ரம். அவன் வந் திற்றா ஆர நம்பி நான் மற்றவளக் கரசேர்க்கிறது. ஏன், அவன் அனுப்பின காசு காணாதே. இந்தப் பெரிய வீடு இருக்கு. நகை செய்து வைச்சிருக்கிறம். அவளின் ர பேரில ஒரு லட்சம் ரூபா காசு பாங்கில போட்டிருக்கு, அவளும் உத்தியோகம் பாத்துச் சம்பாதிக்கிறாள். இது போதாதே அவளின்ர கலியாணத்துக்கு, அவங்கள் (5) அஞ்சு லட்சமில்லே கேக்கிறாங்கள். ஏன் அப்பிடிக் கேக்கிறாங்கள். பின்ன ஒரு எஞ்சினியர் மாப்பிள உங்கட பிச்சக்காக ஒரு லச்சத்துக்கு ஒமெண்ணுவானே. உன்ன ஆர் எஞ்சினியரக் கலியாணம் பேசச் சொன்னது. எங்கட தகுதிக்கில்லோ நாங்கள் கலியானம் பேசோணும். உங்கட தகுதி எனக்குத் தெரியாதே. உங்கட சம்பளம் உங்கட சாப்பாட்டுக்கே காணாது. அதுக்குள்ள கதைக்க வந் திட்டியள். நீ இப்ப பேசுவாய். ஏனிண்டா என்ர உழைப்பு உனக்குத் தேவையில்லத் தானே. மகன் உழைச்சு அனுப்புறான். அதால இப்பிடித்தான் பேசு பாய், நானென்ன செய்யிறது. ஒரு கிளறிக்கல் கிளாக்குக்கு கைநிறையவே சம்பளம் குடுப் பாங்கள். என்ர சம்பளத்தத் தெரிஞ்சு கொண்டுதானே என்ன முடிச்சனி. ஒம். ஒம். உங்கட சம்பளத்த நம்பி இருந்திருந்தா இப்பவும் அந்தக் கொட்டில்ல தான் இருந்திருக்கோணும். இஞ்சே. தேவையில்லாத கதை கதைக்காத, என்னை என்ன, ஏமாத்தி, பொய் சொல்லி, லஞ்சம் வாங்கி

அகளங்கன்
உழைக்கச் சொல்லுறியே. தாற சம்பளத்தத் தானே வாங்கலாம்.
5Tu: அப்ப பேசாமல் இருக்க வேண்டியது தானே. எஞ்சினி யருக்கு முடிச்சுக் குடுத்தா என்ன, டாக்குத்தருக்கு முடிச் சுக் குடுத்தாலென்ன. நீங்களே காசு குடுக்கப் போறியள்.
தகப்பன் பின்ன ஏன் என்னை அந்தப் புறோக்கரிட்டப் போகச்
சொன்ன நீ.
தாய்: சரி சரி. இனிச் சொல்லேல்ல. திண்டு போட்டுப் பேசாமல்க் கிடவுங்கோ சந்திரன் நீ ஒருக்காப் போய்
பாத்திட்டு வாவன்.
சந்திரன் அம்மா! எனக்கு உதெல்லாம் சரிவராது. எனக்கு வேலை
இருக்கு.
தாய்: ஒரு வேலை, உன்னக் கொண்டு செய்யிறதெண்டா அது இந்த யுகத்தில முடியாத காரியம், யூனிவெசிற்றி யில் என்னதான் படிக்கிறியோ தாய், தேப்பன் சொல் லுறதச் செய்யக் கூடா தெண்டே அங்க சொல்லித் தாற
G. E. 556
சந்திரன்: அம்மா! அப்பாவையும், அண்ணையையும் ஏமாத்துறது போல, என்ன ஏமாத்தே லாது. எனக்கு விருப்பமில்லா ததை நான் செய்ய மாட்டன் .
தாய்: இந்த வீட்டில ஒரு நல்ல காரியஞ் செய்யிற தெண்டா நான் தான் நிண்டு முறியோணும். எல்லாருஞ் சோத்துக் கெண்டா நான் முந்தி நீ முந்தி எண்டு நிப்பினம் ம்
JAG IT" Gà - 2 இடம்: வீடு. பாத்திரங்கள் சந்திரன், தாய்.
சந்திரன்! அம்மோய்! அம்மோய் 1. என்னவாம் புறோக்கர்,
5u: அந்தாள் அஞ்சு லச்சத்துக்கு ஒரு சதமும் குறையாதாம்.
வீடு, நகை இதுகளில பிரச்சன இல்ல. காசுக்குத்தான் என்ன வழியெண்டு யோசிக்கிறன்.
சந்திரன் ஏனம்மா. நீங்கள் அங்க இஞ்ச வட்டிக்குக் குடுத்த காசு
களை வாங்கினாலுங் காணாதே.
GIII: அப்பிடி வாங்கி முடிச்சாலுங் காணாது மோன,
O3

Page 10
அகளங்கன்
சந்திரன் :
H5 T til
சந்திரன்:
95 TT til:
சந்திரன் :
சந்திரன்:
தாய்:
சந்திரன் :
5 Tuli:
04.
அப்ப ஏனம்மா எங்களுக்கு இப்பிடிப் பெரிய இடம், வேற எங்கயும் பாத்தா என்ன. உனக்கென்ன விசரே! நாங்கள் மாட்டமிண்டா சனம் நினைக்கும், அஞ்சு லச்சம் குடுக்க வழியில்லாமல்த்தான் கலியாணம் குழம்பினதெண்டு, பிறகு நான் ஒருத்தரிலயும் முழிக்கேலாது. அம்மா! அண்ணய வெளிநாட்டுக்கு அனுப்புறத்துக்கு ஐயாயிரம், ஐயாயிரமா, எத்தின பேரிட்ட கடன்பட்டம் அடைவு வச்சம். அதெல்லாம் மறந்து போனியளே. இப்ப பெரிய காசக் கண்டிட்டியள். சந்திரன், அப்ப அப்பிடித்தான். இப்ப இப்பிடித்தான். உனக்கு இதுகள் விளங்காது சும்மா இரு. அக்காக்குக் கலியாணம் முடிச்சு வைச்சு ரெண்டு வருசம் முடியேல்ல. அதோட தங்கச்சிக்கும் கொஞ்ச வயதுதானே. இப்ப என்ன அவசரம். அவளுக்குக் கலியா ணம் முடிச்சு வைக்கிறதச் சாட்டித் தான், குமார வெளிநாட்டில நிக்கப் பண்ணிருக்கிறன். இல்லாட்டி அவன் எப்பவோ வந்திருப்பான். இப்ப மிச் சததுக்கு எங்கயும் மாறிக் குடுத்து அவளுக்குச் செய்து வைச்சிற்றா, அந்தக் கடனை அனுப்புறத்துக்காக இன்னும் ரெண்டு வருசமெண்டாலும் அங்க நிப்பான். அம்மா! அண்ணயப் பாக்க உங்களுக்கு ஆசையில்லயே. ஏன் ஆசையில்ல. எனக்கும் ஆசைதான். ஆனா அவன் இப்ப வந்து அந்த வாத்தியாற்ற பொடிச்சியை முடிச்சுக் கஸ்டப்படுறதக் காண எனக்கு விருப்பமில்ல. இன்னும் ரெண்டு வருசம் அவன் அங்க நிண்டா அவளுக்கு எங்க யும் செய்து வைச்சிருவினம். பிறகு அவனுக்கு நல்ல இடத்தில நல்ல சீதனத்தோட முடிச்சு வைச்சா எல்லா ருக்கும் கெளரவமாயிருக்கும். அவளுக்கு எங்கயோ பேசு ற தாக் கதை, பாப்பம்,
உதுமட்டும் சரிவராதம்மா! அண்ண எல்லாத்திலயும் உங்களோட ஒத்துப்போகும். ஆனா கலியான விசயத்தில மட்டும் அண்ணெய ஏமாத்தேலாது. உங்கட இஸ்டத்துக்கு வரவே வராது.
வாறானோ. வரேல்லயோ பாப்பம். என்ர சொல்லக் கேக்காமலிருக்கிற தெண்டா அவன் எ ன க் கு முந்தி யெல்லோ பிறந்திருக்கோணும்.

அகளங்கன்
சந்திரன்: அப்ப . நீங்கள் அப்பாக்கு முந்தியே பிறந்த நீங்கள்.
*5 frti: உனக்கு வர வர வாய் நல்லா நீளுது. சந்திரன் பெல் (Beli) அடிச்சுக் கேக்குது. போய்ப்பார். கடிதம் போல கிடக்கு
சந்திரன்: ஒமம்மா. அண்ணதான் போட்டிருக்கிறார்.
தாய்: என்னவாம். காசனுப்பியிருக்கிறானே கொண்டா பாப்பம்
(பறிக்குறார்)
சந்திரன் பொறுங்கோ பாப்பம் நான் பாக்கக் குடாதே. பறிக்
கிறியள் அண்ண பதினஞ்சாந் திகதி வாறாராம். இன்
னும் மூண்டு நாள் இருக்கு.
5 Tul: கொண்டா இஞ்ச கெடுகுடி சொற் கேளாது. இப்ப
ஏன் அவசரப்பட்டு வாறான்.
சந்திரன்: அம்மா! கொழும்புக்குப் போகேல்லயே.
35 Tur: எனக்கு வேற வேலயில்ல, அவரை அழைக்கக் கொழும்புக்
குப் போறன் இப்ப,
சந்திரன் அப்ப அனுப்பேக்க மட்டும், வீட்ட இருந்து அழுதழுது எயர்போட்(Airport) வரைக்கும் போய் வழியனுப்பினியள்.
5si ti: என்ர கோ வத்தக் கிளறாத, இப்ப என்ன செய்யிற தெண்டு தெரியாமல் தவிக்கிறன் நான். நீ பகிடி விடுறாய்
ତTଜ୪r' .
gG, IT” GA - 3
இடம் வீடு. பாத்திரங்கள்: சந்திரன், குமார், தாய், தந்தை.
சந்திரன்: அம்மோய். அம்மோய். இஞ்சேருங்கோ. அன்ன
வந்திற்று. குமார்: சந்திரன்! எங்க அப்பா! அம்மா என்ன செய் பிற அம்
மோய். அம்மோய். தாய்: வாறன் பொறு. குமார் . ஏன் அவசரமா வந்த நீ .
நான் போட்ட கடிதம் கிடைக்கேல் லயே. குமார்: கிடைச்சுது. நான் முதலே வாறதுக்கு ஒழுங்கு பண்
ணிற்றன்.
05

Page 11
அகளங்கன்
5rtii:
சந்திரன்:
(э5шопії:
தகப்பன்:
குமார்:
25 Tür:
தகப்பன்:
Tu:
தி)
தகப்பன்:
இஞ்ச வந்து என்னத்த வெட்டிப் புடுங்கப் போறதெண்டு வந்த நீ. அம்மா! அண்ண வந்து களைப்பாறேல்ல. நீங்கள் அதுக் குள்ள உங்கட ஒப்பாரியத் துடங்கீற்றியள். அப்பா வாறார். அப்பா நல்லா மெலிஞ்சு போனார் இப்பானே வந்தனி குமார் எப்பிடிப் பிரயாணம். நான் போட்ட கடிதம் கிடைக்கேல் லயே. கொழும்பில ஆரும் வந்து நிப்பியளெண்டு பாத்தன். அப்பாக்குத் தான் ஏலாண்டாலும், சந்திரனையாவது அனுப்பியிருக்கி லாமே.
♔ ♔ அழைச்சுவர ஆளனுப்பேல்ல யெண்டு தான் இப்ப குறை, போ . போய் உடுப்ப மாத்திற்று குளி, இப்பதான் வந்திருக்கிறான். எங்களக் காண அவனுக்கும் எவளவு சந்தோசமாயிருக்கும். கொஞ்சம் அன்பாக் கதையன், எங்களக் காணவே அவசரப்பட்டு வந்தவன். அந்த வாத்தியாற்ற பெட்டயப் பாக்க எல்லோ அவசரப்பட்டு வந்தவன். இஞ்சே. உந்தக் கதையப் பிறகு வைச்சுக் கொள். வந்த களைப்பைவிட உன் ர பேச்சாலதான் களைப்புக் கூட.
gi, T " GA - 4
இடம்: ராணியின் வீடு, பாத்திரங்கள், ராணி, குமார், ராணியின் தாய்,
35 Tlio :
ராணி?
G51DTst
ராணி:
06
(கதவு தட்டும் சத்தம் கேட்கிறது)
பிள்ள ராணி ஆரோ கதவத் தட்டுகினம் போல.
போய்ப் பார் ஆரெண்டு. கிணத்தடியில இவளவு நேரமா என்ன செய்யிறாய்,
ஒமம்மா வாறன். ஆரது. நீங்களே. வாங்கோ.
ராணி எங்க ஒருத்தரையும் காணேல்ல. தம் பி, தங்கச்சி
யவயக் கூடக் கானேல்ல தனியவே நிற்கிறீர்.
அதுகள் எல்லாம் பள்ளிக்குடம் போட்டுதுகள்,

குமார் :
(з5upпії:
ராணி :
குமார்:
ராணி :
G51D i st :
ராணி:
gypt
ராணி:
தாய்:
ராணி:
95 In tii : ராணி :
Tül:
ராணி:
குமார்:
ராணி :
упалаfl:
குமார்!
அகளங்கன்
ஒ. பள்ளிக்குட நாளெல்லே மறந்து போட்டன். எல்லாரும் நல்லா வளந்திருக்குங்கள் என . அம்மா குசினிக்க நிக்கிறா என்ன நல்லா மெலிஞ்சு போட்டீர். சாப்பிடுறதில்லையே. சாப்பிட்டாப் போல பெருக்கலாமே. நீங்களும் நல்லா மெலிஞ்சுதான் இருக்கிறியள். அம்மா சொல்லுறா நான் நல்லாக் கொழுத்திருக்கிற னாம். நீர் சொல்லுறீர் மெலிஞ்சிட்டனெண்டு. என்ர கண்ணுக்கு மெலிஞ்சிருக்கிறது போலத்தான் இருக்கு எனக்குத்தான் ஒழுங்கான சாப்பாடில்ல. அலைச்சல், மெலிஞ்சிற்றன். உமக்கென்ன சாப்பிட்டுச் சாப்பிட்டுச் சும்மா இருக்கிறது தானே. சாப்பிட்டாலும் உடம்பில ஒட்டோனுமே கவலை ஒரு பக்கம், விரதம் பிடிக்கிறனான். ஆறு வருஷ மாச்சுது இனிப் பாருங்கே பருத்துக்காட்டுறன். ராணி '. ராணி ஆர்பிள்ள அது. கதைச்சுக் கேக்குது அதம்மா. வாறன் அதம்மா அவர் வந் திருக்கிறார்.
ஆர் பிள்ள அவர் . வெளிநாட்டில இருந்து நேற்றுத்தான் வந்தவராம். ஆர் ஆ குமாரே! நேற்று அவள் கரை வீட்டுக்கமலம் சொன்னவள் . சரி சரி ஏதும் குடிக்கிறதுக்குக் கொண்டு போய்க் குடு, ஒமம்மா. புளித்தண்ணி கரைப்பம். வெயில்தானே இந்தாங்கோ. குடியுங்கோ. {கையைப் பிடிக்கிறான்) சீ என்ன இது கைய விடுங்கோ. வெளிநாட்டுக்குப் போய் நல்லாக் கெட்டுப் போனியள். ராணி உமக்காகத்தானே அவசரப்பட்டு வந்தனான். அம்மா குசினிக்க நிக்கிறா. தம்பி, தங்கச்சி ஆக்கள் வாற நேரமாச்சு. நான் போட்ட கடிதம் கிடைக்சிருக்கும் என கிடைச்சுது. எல்லாம் விபரமா அப்பாட்டச் செ ல்லிப் போட்டன், வாற மாதம், கலியான வீடு, ஞாபகப்படுத்திவையும் நான் போட்டு வாறன். நாளைக்குக் கதைப்பம்
O7

Page 12
அகளங்கன்
இடம்:
JAG IT") - 5
வீடு,
பாத்திரங்கள்: சந்திரன், தாய்.
5 Tuli:
சந்திரன்:
தா43
25 Tuir:
சந்திரன்:
g5Tsi:
சந்திரன் !
25 TÜı:
சந்திரன்:
08
சந்திரன்! நல்ல இடமொண்டு வருகுது.நீ ஒமிண்டாச் σ ή என்னம்மா! எனக்குக் கலியாணஞ் செய்து வைக்கப் போறி யளே. தங்கச்சியை விட்டிட்டு இப்ப எனக்குப் பேசத் துவங்கீற்றியளே . உனக்கு எப்பவும் பகிடிகான், உனக்கு இப்ப கலியானந் தான் இல்லாக் குறை. வெளிநாட்டுக்கு அனுப்புற ஏஜன்சிக் காறன. நேற்றுக் கண்டன். ரெண்டு கிழமையில அனுப் புறானாம். எழுபத்தையாயிரம் தரட்டாம். பாஸ்போட் {PaSSport)விசா சகலது ம் அவன் செய்து தருவான். காசு குடுத்தாச் சரி. அம்மா! உங்களுக்கு வேற வேல இல்லயே. நான் ஏன் வெளிநாட்டுக்குப் போறன். எனக் கென்ன குற. இன்னும் ஒரு வருசத்தில என்ர படிப்பு முடிஞ்சிரும். ஒரு வேலயில சேர்ந்தனிண்டா நான் பிளைச்சுக் கொள்ளுவன். எனக் கேன் வெளிநாடு. நீ எப்பதான் திருந்தப் போறியோ. உன்ர படிப்பு முடிஞ் சாப் போல நீ என்ன பெரிய வேலை பாத்து கைநிறைய சம்பளம் வாங்கப் போறியே, எத்தின பேர் வேலய விட் டிட்டு வெளிநாட்டுக்குப் போட்டாங்கள். அம்மா..எனக்கு உது சரிவராது. உந்தக் கதைய விடுங்கோ. கொண்னனெல்லாம் தனக்காகவே வெளிநாடு போனவன். எங்களுக்காகத் தானே போனவன். நீ போனியெண் டா எல்லாக் குறையுந் தீர்ந்திடும். எங்களுக்கு இப்ப என்ன குறையெண்டு நான் வெளில போய் உழைக்கோணும். என்ன குறையோ. கொண்ணனும் வந்திற்றான். கொப் பற்ற சம்பளத்த நம்பியே நான் இருக்கிறது. ஏனம்மா! தங்கச்சி உழைக்கிறாள். வாற வருஷம் நானும் உத்தியோகம் பா ப் ப ன் தானே. அந்த ச் சம்பளம் காணாதே உங்களுக்கு,

அகளங் கன்
தாய்: சம்பளம். பெரிய சம்பளம் உழைக்கினம். அவளுக்குக் கலியாணம் பேசி வந்தாக்கள் முடிவு கேக்கினம். கலியா
ணம் முடிச்சி அடுத்த கிழமையே மாப்பிள போறாராம். நல்ல இடம் என்ன சொல்லுற தெண்டு தெரியாமல் நான் தவிக்கிறன். நீ வெளீல போக ஒ மிண் டியெண்டா உன்ன அனுப்பீற்று நான் கடன் பட்டிண் டாலும் அவளின்ர கலியாணத்த முடிச்சிருவன்.
சந்திரன் அம்மா! கலியாணம் முடிச்சு மனிசியை விட்டிட்டு அடுத்த கிழமையே வெளீல போற மாப்பிளைக்கு ஏன் கலியா ணத்த அந்த எஞ்சினியற்ற கதைய விட்டிட்டு எங்கட நிலமைக்கு ஏற்ற இடமாப் பாருங்கோ. எனக்கு வெளி நாடு போய்க் கஸ்டப்படேலாது.
25 Tü: உனக்கு உலகம் விழங்காது. சும்மா இரு. வெளில போற துக்கு ந ல் ல சந்தர்ப்பம். ம் என்ர தலையில என்ன எழுதியிருக்கோ இப்பிடிக் கிடந்து கஸ்டப்பட வேண்டி யிருக்கு,
JAG I " SG) - 6
இடம்: ராணியின் வீடு. பாத்திரங்கள்: ராணி, குமார் .
(95 LD tĩ: ராணி வீட்ட கதைச்சனரீரே. என்னவாம்.
ঢা6্যাীি: அப்பா ஒண்டுமாச் சொல்லுறாரில்ல. கலியான வீடெண்டா இப்ப கொஞ்சச் செலவே வரும். உங்கட வீட்டிலயும் அவளவு விருப்பமில்ல. சீதனம் கேட்டா என்ன செய்யிறது. இந்த ஆறுவருசமும் என்ன விட, அப்பாதான் கூடக் கவலப்பட்டவர்.
குமார் எனக்கு தேனமும் வேண்டாம் ஒண்டும் வேண்டாம். உங்
களிட்ட ஆர் சீதனம் கேட்டது.
TIT GOf: நகை மட்டுந்தான் செய்து வைச் சிருக்கிறம். நீங்கள் சீத ணங் கேக்காட்டியும், கூறச் சீல, தாலிக்கொடிக் கெண்டா லும் நாங்கள் காசு தரத்தானே வேணும். இப்ப அதுக்கே எவளவு செலவு வரும், ஆரிட்டக் கடன் படுறது. எனக் காகக் கடன் பட்டிட்டு மற்றப் பிள்ள யள என்ன செய்
பிறது.
09

Page 13
அகளங்கன்
J5 - D Tar :
ராணி:
குமாா:
இடம்:
உமக்கு என்னப் பற்றி இன்னும் விளங்கேல்ல. தாலிக் கொடியும் கூறச் சீலயும் நான் வாங்குவன். கலியான வீட்டச் சுருக்கமாகச் செய்வம், உங்களுக்கு வேற என்ன பெரிய செலவு வரப் போகுது. என்னவோ அப்பாட்ட வந்து கதச்சுப் பாருங்கோ, நான் என்னத்தக் கதைக்கிறது, நீர் கதைச்சு வையும் " பிறகு வாறன்.
AG TIGA - 7
வீடு.
பாத்திரங்கள். குமார், தாய்.
குமார்:
தாய்:
குமார்? தாய்: குமார் :
தாய்:
குமார்
*
குமார்:
5 Tui: குமார்;
10
அம்மா! கொஞ்சக் காசு தாற்றியளே ! ஏணிப்ப காசு, கனக் க வேணுமே. எனக்கு ஒரு பத்தாயிரம் தாங்கோ. ஏன் இப்ப பத்தாயிரம். வாற மாதத்தில நாள் வைக்கோணும். இஞ்சே குமார். சொல்லுறதக் கேள். நல்ல இடங்களில, நல்ல சீதணத்தோட பேசி வருகினம், கலியாணத்த முடிச் சிற்று வெளில போனியெண்டா நாலஞ்சுவருசத்தில திரும்பி வந்து நிம்மதியா இருக்கிலாம். வாத்தியாரிட்ட என்ன இருக்குத் தாறதுக்கு அம்மா! அந்தக் கதைய விடுங்கோ, உங்களுக்காக நான் ஆறு வருஷம் உழைச்சுக் கஸ்டப்பட்டிட்டன். இனி நான் வெளில போகமாட்டன். என்ர எண்ணத்துக்கு என்ன விட்டிருங்கோ. உன்னத் திருத்தே லாது. சரி எங்கேண்டாலுஞ் செய்து துலை அதுக்கேன் காசு. தாலிக்கொடி, கூறச் சில வாங்கோணும். என்னட்டக் கொஞ்சக் காசு இருக்கு. ஏன் அதுக்குக் கூட அந்தாளிட்ட வழியில்லயாமே. அம்மா! தாலி கட்டுறது ஆம்பிளதானே. ஒரு தாலிக் கொடிக்கும் கூறச் சீலைக்கும் வழியில்லாத ஆம்பிளைக்கு
 

35Tul:
குமார்:
தாய்:
குமார்:
தாய்: குமார்:
T:
<ئی
இடம்:
அகளங்கன்
கலியாணம் என்னத்துக்கு. என்ர காசில கூறச்சீலை வாங் கிக் குடுத்துத் தாலி கட்டித்தான் நான் கலியாணம் முடிப்பன். உதெல்லாம் உதவாக் கதை. இப்ப சீதனம் வாங்கி அந் தக் காசில செலவழிச் சாத்தான் மதிப்பாங்கள் . வாத்தியா ரிட்டக் குடுக்க வழியில்ல யெண்டு சொல்லு, அம்மா! ஏன் அந்தக் கதைய, நீங்கள் காசு தருவியளோ, மாட்டியளோ (கோபமாக) நீ வெளீல போறதெண்டாச் சொல்லு இப்ப தாறன், பத் தாயிரம் என்ன, ஒரு லச்சம் தாறன். அல்லாட்டி நான் சொல்லுறபடி கேள். நல்ல வீடு வளவோட ஒரு லச்சம் வாங்கித் தாறன். ஆனா அந்த வாத்தியாற்ற பெட்டைய முடிக்கிற தெண்டா ஒரு சதமும் தரமாட்டன். பிழை என்னில தான் இவளவு உழைச்சனான். கொஞ் சத்தையெண்டாலும் வேற ஆருக்கும் அனுப்பி வைச்சிருக் கோணும். ஏன் வாத்தியாருக் கனுப்பின தெல்லாம் முடிஞ்சு தாமோ . அம்மா!. உங்களோட கதைச்சாப் பிரச்சன மனிசன் வெளிலயே இருந்திருக்கிலாம். இஞ்ச வந்து ஒரு நிம்மதி யுமில்ல.
உன்ன ஆர் அவசரப்பட்டு வரச் சொன்னது.
g6 TL9) - 8
வீடு.
பாத்திரங்கள்: சந்திரன், தாய், தகப்பன்.
சந்திரன்:
தாய்:
சந்திரன்:
தகப்பன்:
அம்மா! அண்ண பாவமம்மா.அண்ண வெளிநாட்டில இருக்கு மட்டும் எல்லாரும் நல்லா நிம்மதியா இருந்தம். இப்ப அண்ணைக்கும் நிம்மதியில்ல, எங்களுக்கும் நிம்மதியில்ல. அவனால அவன் கெட்டதுக்கு நானென்ன செய்யிறது. அண்ண விரும்பிற இடத்திலயே செய்து வைப்பம். இஞ்சேரும் சொல்லுறதைக் கேளும், நாங்களே முழுச் செல வுஞ் செய்திண்டாலும் அவன் விரு ம் பிற இடத்தில செய்து வைக்கிறது தான் முறை.

Page 14
அகளங்கன்
தாய்:
தகப்பன்
35 Tur:
சந்திரன்:
தாய்:
பின்ன உங்கட உழைப்பில செய்து வையுங்கோவன். நீ வைச்சிருக்கிற தெல்லாம் உன்ர உழைப்பே. எல்லாம் அவன் உழைச்ச உழைப்புத் தானே. அதுக்கு அந்தக் காசை அழிச்சிற்றுப் பிறகு காசுக்கு என்ன செய்யிறது. மற்றப் பெட்டைய என்னத்தக் குடுத்துச் செய்து வைக்கிறது. பொம்பிளப் பிள்ள பளுக்கு லெச்சக் கணக்கில குடுத்து கலியாணஞ் செய்து வைக்கிறியள். அதை உ ைழ ச் சி க் குடுத்த ஆம்பிளப் பிள்ளைக்கு அஞ்சு சதத்துக்கும் இரங் கிறியளில்ல. சந்திரன் பேக்கதை கதைக்காத, குமாரும் ஒமிண்ணட் டும். நான் வீடு, வளவு நகை நட்டோட ஒரு லச்சம் வாங்கிக் குடுக்கிறனோ இல்லையோ பார்.
51 i g) - 9
இடம்; குமாரின் தமக்கை வீடு பாத்திரங்கள் குமார், அவனது தமக்கை.
@pr់
31 i 5 T:
(з5цртії:
3d, 35T:
குமார்:
-94 š535 TT:
குமார்:
அக்கா:
குமார்:
அக்கா:
அக்கா . அக்கா!. (கதவைத் தட்டுதல்) ஆரது. குமாரே. வா. வா..! அக்கா எங்க அத்தானக் காணேல்ல, ரமேஸ் நித்திரையே அவன் இப்பதான் நித்திரை கொள்ளுறான். எழுப்பாத . எங்க அத்தான்.
அவர் ஒபீசுக்குப் (Office) போட்டார். அம்மாட்ட ஒருக்கா கதைக்கோ னும். நீங்கள் கதைச்சாச் சிலவேள அம்மா கேப்பா. வாற மாதத்தில நாள் வைக்கோனும்,
ஆருக்கு. தங்கச்சிக்கோ. அவளுக்கு இப்ப என்ன அவசரம், ஆ உன்ர விசயமே. அதுக்கு அம்மா சம்மதிக்கா, கதைச்சுப் பிரயோசனமில்ல. நேற்று வந்திருந்து சத்தம் போட்டிட்டுப் போறா. நான் சொல்லிக் கேப்பாவே,

குமார்:
அக்கா:
குமார் :
அக்கா:
குமார்:
அக்கா:
குமார்
அக்கா:
குமார்:
அக்கா:
குமார்:
இடம்:
அகளங்கன்
அப்ப ஆர் கதைச்சு ஒழுங்கு பண்ணுறது. எனக்குத்தான் ஒரு உறவும் இல்லாமல்ப் போட்டுதே. சரி நான் கதைச்சு ஒழுங்கு பண்ணிறன். எனக்கு ஒரு பத்தாயிரம் ரூபா காசு வேணும். தாங்கோ பிறகு தாறன்.
என்னட்ட எங்க கிடக்குக் காசு தாறதுக்கு. அத்தானிட்டக் கேட்டுப் பாருங்கோவன். அவரிட்ட எங்கால காசு நான் காசு கேக்க அந்த ள் ஆளில பாயும். ஏன்! கலியாணம் முடிச்சு ரெண்டு வருசத்தில சீதனக் காசெல்லாத்தையும் அழிச்சிற்றியளே. உந்தக் கணக்கெல்லாம் எனக்குத் தெரியா, குமார். ! நீ அவரிட்டையே கேட்டுப்பார். அக்கா! நான் கேட்டு அவர் இ ல்  ைல  ெய ண் டி ட்டா ரெண்டா பிறகு எனக்கு ஒரு மாதிரி இருக்கும். நீங்கள் முதல் ல கேட்டுப் பாருங்கோ,
நான் மாட்டன் குமார். உனக்கு அவரைப்பற்றி தெரி ULIITUSI.
சரி வாறன் கதைச்சுப் பிரயோசனமில்ல.
குமார்! இரு தேத்தண்ணி குடிச்சிற்றுப் போவன். உங்களால செய்யக் கூடியது உது மட்டுந்தானே. வேண் டாம். நான் வாறன்,
JAG IT" Gr - 10
f(6.
பாத்திரங்கள்: சந்திரன், தாய்.
சந்திரன்
25 Tuli: சந்திரன்;
அம்மா!. அந்த ஏஜன்சிக் காறனிட்ட காசக் கட்டுங்கோ, நான் வெளிநாடு போறன். என்ன திடீரெண்டு உனக்கு உந்த யோசன வந்திற்று, அம்மா!. அண்ணயும் வெளிநாட்டால வந்திற்றார். இனி ஆர் இந்த வீட்டப் பாக்கிறது. நான் படிச்சு என் னத்த உழைக்கப் போறன். தங்கச்சிக்கும் கலியாணஞ் செய்து வைக்கோணும். இனி அப்பா பென்சனெடுக்கிற காலம். நான்தானே வீட்டப் பாக்கோணும்.
13

Page 15
அகளங்கன்
தாய்: இப்ப எண்டாலும் உனக்குப் புத்தி வந்துதே. நான் இண் டைக்கே ஏஜன்சிக் காறனைக் கண்டு காசு கட்டி ஒழுங்கு செய்யிறன்.
3, '9 - 11.
இடம் வீடு
பாத்திரங்கள் தாய், தகப்பன், சந்திரன், குமார்,
தாய்: வெளில எட்டிப் பாருங்கோ முழிவியளத்துக்கு உதவா
த துகள் ஆரும் வருதுகளோண்டு.
தகப்பன்: எல்லாம் நல்லாத்தான் இருக்கு. எங்க சந்திரன், வெளிக்
கிட்டிட்டானே.
35 IT tí: குமார் வெளிநாட்டால வந்திட்டான் இனிப் போகானா மிண்டு எவளவு கதைச்சுதுகள் சனங்கள். இப்ப சந்திரன் போறதப் பாத்துப் பொருமுங்கள். எனக்குக் கொஞ்ச நாள் த ல குனிவாயிருந்தது.
சந்திரன்: அம்மா ஏன் அழு றிய ஸ். நான் ஆம்பிளப் பிள்ள,
உழைக்கத்தானே போறன் . ஏன் அழுறியள்.
Tii: இண்டாலும். இனி எத்தின வருசத்தால காணுறதோ.
சந்திரன்: அம்மா! நான் வாறண்டாலும் நீங்கள் வரவிட மாட்டி யளே. எனக்குப் பிறகு வெளில போக எங்கட வீட்டில வேற ஒருத்தரும் இல்ல. அப்பா தான் போகோனும்,
தாய்: எனக்கு நெஞ்செரியுது உனக்குப் பகிடி
சந்திரன்: அப்பா! போட்டு வாறன். அண்ண போட்டு வாற ன்.
தங்கச்சிக்கு கடிதம் போட்டு விடுங்கோ. நானும் கடிதம்
போடுறணிண்டு எழுதுங்கோ அம்மா!. நான் என்ர B, A படிப்பையும் இடையில விட்டிட்டு வெளில போறன் அது உங்களுக்காகவோ எனக்காகவோ இல்ல. எங்களுக் காக ஆறு வருசமா உ  ைழ ச் சு அனுப்பி வாழவைச்ச அண்ண, பத்தாயிரம் ரூபாக்கு ஆரிட்ட யும் கடன் கேட்டு அலையுறார். அக்காட்ட இல்லாத காசே. ஏன் உங்க ளிட்ட இல்லாத காசேயம்மா. எல்லாம் அண்ணையின்ர உழைப்புத்தானே. அதாலதான் நான் வெளிநாடு போறன். நான் போய் உழைச்சு அண்ணைக்கு அனுப்பப் போறன். போட்டு வாறன்.
(முற்றும்)
14
 

அகளங்கன்
2. அன்றில்ப் பறவைகள்
g, ' G - 1
இடம் வீடு பாத்திரங்கள்: ராஜன், தாய் தந்தை.
ராஜன்: அம்மா! அம்மோய்!. எங்க அம்மாவக் காணேல்ல,
குசினிக்கயே நிற்கிறியள். *SFTü: ஓம் மோன . ராசன். இந்த அம்மியக் கொஞ்சம் அரக்கி
வைச்சிற்றுப் போ எண்டு எத்தன தரம் சொன்னனான். என்னால முடியுமே அதை அரக்கி வைக்க. நீ உன்ர LifTG ... ... எனக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குது.
ராஜன்: அம்மா!. குசினிப் பக்கம் என்னக் கூப்பிடாதேங்கோ
சாப்பிடக் கூட நான் அங்க வரன்.
95 Titill: ஏதோ வேற வேல யெண்டாலும் செய்து தாற நீயே. இல்லத்தானே சரி. என்ன விசயம் ஏதோ சொல்ல வந்தாய் .
ராஜன் அம்மா! அவுஸ்ரேலியாவிலயிருந்து கடிதம் வந்திருக்கு,
சின்னண்ண தான் போட்டிருக்கிறார்.
தாய் என்னவாம். சுகமா இருக்கினமாமே!
ராஜன்: அங்க இருக்கிற ஆக்களுக்கு என்ன குறையம்மா. நான்
கடிதம் போட்டனான்; என்ன அங்க கூப்பிடச் சொல்லி
அது சம்பந்தமாத்தான் எழுதியிருக்கிறார்.
Tüt: என்னவாம். வாசியன் மோன,
ராஜன் என்ன பாஸ்போட்(PaSSport) எடுத்து எல்லா ஒழுங்கை யும் செய்து றெடி (Ready) யா இருக்கட்டாம். தான் ரிச் கற் (Ticket) அனுப்பிறாராம்.
தகப்பன் ஆற்ற கடிதம் மோன உது பெரிய :ன்ர கடிதமோ சின்
னவன்ர கடித மோ.
ராஜன் : சின்னண்ண தான் அப்பா போட்டிருக்கிறார்.
தகப்பன் பெரியவனும் கனநாளாக் கடிதம் போடேல்ல மகளும் அங்க தானே. அவளும் கன நாளாகக் கடிதம் போடேல்ல, என்ன பிரச்சனையோ தெரியாது.
15

Page 16
அகளங்கன்
ராஜன்
தகப்பன்:
ராஜன்:
த கப்பன்:
தாய்: ராஜன்:
தகப்பன்:
ராஜன்
தாய்:
ராஜன்
தாய்:
и те бат,
16
அப்பா! பெரியண்ண, அக்கா ஆக்களுக்கு அங்க என்ன பிரச்சன. அவேக்கென்ன . கன டா வி ல சந்தோசமா இருக்கினம். அதுகள் ரெண்டு குடும்பம் கிட்டக் கிட்ட இருக்கிறதால ஒண்டுக் கொண்டு உதவியாயிருக்கும். அம்மா! உங்களுக்கென்ன விசரே .அங்க ஏனம்மா ஆளு தவி இஞ்சத்தயப் போலயே அங்க, காசிருந்தா எல்லாத் தையும் விலைக்கு வாங்கீரலாம். ராசன் . அது சரி. என்னவாம் கொண்ணன். வாசியன் பாப்பம்.
என்னத்த வாசிக்கிறது . என்னப் பாஸ்போட் எடுத்து ரெடியா இருக்கட்டாம். உங்களையும் ரெண்டு பேரையும் பாஸ்போட் எடுத்து வைச்சிருக்கட்டாம், எங்களுக்கேன் மோன பாஸ்போட் இந்த வீடு வாசல விட்டிட்டு நாங்கள் எங்க போறது.
அப்ப. தனிய இஞ்ச இருந்து என்ன செய்யப் போறியள். இந்த வீடு மட்டுமே கொக் காக்கு கலியாணம் முடிக் கேக்க வீடு கட்டித் தந்தாத்தான் முடிப்பன் எண்டு கொத்தான் ஒற்றக் காலில நிண்டார். இப்ப வீட்டயும் விட்டிட்டு கனடாக்குப் போட்டார். ம் அதையும் நாங் கள் தானே பாக்கோணும். உதுகளப் பாத்தாச் சரிவராது. பேசாமல் ஆளுக்கொரு இடமாப் போய் நிம்மதியா இருக்க வேண்டியதுதான், ஆளுக்கொரு இடமோ ஏன்ரா நாங்கள் கடைசி காலத்தில ஒண்டா இருந்து சாகிறது உனக்கு விருப்பமில் லையே, அம்மா அதன்னவோ. இஞ்ச இருந்து என்ன செய்யி
ിട്ട് ராசன்! நீயெண்டாலும் இஞ்ச இரன். நாலு பிள்ளை யளும் வெளிநாட்டில இருந்தா இஞ்சயு ள்ள சொத்துக்கள ஆர் பாக்கிறது. அம்மா. எனக்கேலாது. நான் சின்னண்ணையிட்ட அவுஸ் ரேலியாவுக்குப் போய், பிறகு அங்க இருந்து சுருஸ்(Swiss) க்குப் போகப் போறன் ஆளுக்கொரு நாட்டில இருந்தாத் தான்-மதிப்பாயிருக்கும்:

தகப்பன்:
ராஜன்
தாய்:
ឆ្នាយ៉ា
25 Tür :
தகப்பன்:
அகளங்கன்
ராசன்! உனக்கு இஞ்ச என்ன குறை, கம்மா இருந்து சுகமா வாழலாம். வீடு வாசலையும் பாத்துக் கொண்டு இருந்தியெண்டா, எங்களுக்கும் கடைசி காலத்தில ஒரு கையுதவிக்கு ஆறுதலா இருக்கும், அப்பா! உங்களுக்கு ஆறு த லா இருக்குமெண்டு நான் இஞ்ச நிண்டனிண்டா, என்ர வாழ்க்கை வீணாகீரும், அது சரி ராசன். இப்ப என்ன அவசரம், கொஞ்ச நாளைக்கு எண்டாலும் நில்லன். பிறகு பாப்பம், சில வேளை கொக்கா வந்தாலும் வரக்கூடும். ஆரி அக்காவோ! அக்கா கடைசி வரைக்கும் வரா . அவவுக்கு கனடா நல்லாப் பிடிச்சுக் கொண்டுது.
அப்ப எல்லாப் பிள்ளையளையும் வெளில அனுப்பீற்று
இஞ்சேரும், நீ ஏன் அவனை மறிக்கிறாய். அதுகள் தங்சட முன்னேற்றத்தப் பாக்கட்டும். நாங்கள் பிள்ளை யளில்ர முன்னேற்றத்துக்குத் தடையாயிருக்கக்குடாது ,
gG, IT’G - 2
இடம்: வீடு
பாத்திரங்கள் : தாய், தகப்பன்
தாய்:
தகப்பன்:
தாய்?
தகப்பன்:
இஞ்சேருங்கோ. உவன் ராசனக் கொஞ்சக் காலத்துக் கெண்டாலும் நிக்கச் சொல்லி மறிங்கோ. எனக்கும் வர வர ஏலாமலிருக்கு உங்களுக்குச் சுகமில்லத் தானே. அவ னும் போட்டானிண்டா எங்களப் பார்க்க ஆர் இருக்கினம். நான் சொல்லி அவன் நிப்பானே. அவன் எங்கட கஸ் டத்த உணந்து தானா நிண்டானிண்டா எங்களுக்கும் பிரயோசனமாயிருக்கும், நாங்கள் வலிய மறிச்சு வைச்சு என்ன பிரயோசனம், நான் நாலு பிள்ளையளப் பெத்து வளத்து ஆளாக்கி னன் கடசியில எனக்கு பால் வாக்கக் கூட ஒண்டும் இல்லா மல்ப் போப் போகுது. ஏன் அப்பிடிச் சொல்லுறாய். மூத்த மகன் கனடாவில. இளயவன் அவுஸ்ரேலியாவில, இந் த க் கடக்குட்டியும் அவுஸ்ரேலியாவுக்குப் போய் சுவிச்சலாந்துக்குப் போகப் போகுது. எங்களுக்கு என்ன குறை.
17

Page 17
அகளங்கன்
5 Tu:
L:
தாய்:
தகப்பன்:
தகப்பன்:
தாய்:
தகப்பன்:
25 U :
தகப்பன்:
தாய்:
தகப்பன்:
18
ஒரு கறண்டியச் சட்டியக் கழுவி உதவுறதுக்கு ஆளில்ல so to சும்மா. மகள் கனடாவிலயெண்டு சொல்லுற பெரு மைதான் மிச்சம் .ம். இன்னும் எவளவு காலமோ.
இஞ்சேரும். பிள்ளயளப் பெத்திற்றா, அதுகளின்ர வாழ்க்கயத்தான் பாக்கோணும். எங்கட சுகத்துக்காக அதுகளின் ர வாழ்க்கய வீணாக்கக் கூடாது. நாங்கள் நினைக்கிறது போல பிள் ளயஞம் நினைக்கோ னும் தானே. ம். இந் த க் காலத்துப் படிப்பும் பழக்க வழக்கமும், ப ண மு ம் . ம். தாய், தகிப்பன் பிள்ளை எண்டே வைச்சிருக்கு. எ ல் லா ம் ஏதோ இயந்திரக் கணக்காய் மாறிற்று பெரியவன் கனடாக் குப் போனதால தான், உழைச்சு சின்னவனை அவுஸ்ரேலியாவுக்கு அனுப்பக் கூடியதாயி ருந்தது. மகளுக்கும் வீடு சட்டிக் குடுத்து கலியாணமும் முடிச்சு வைச்சு கனடாக்கு அனுப்பக் கூடியதா இருந்துது. இனி ராசனும் போயிற்றா எங்கட பொறுப்புக்கள் முடிஞ்சு போடுந்தானே. ஒம். ஒம். எங்கட பொறுப்புச்கள் முடிஞ்சிடும். பிள் ளையளின்ர பொறுப்புக்கள் தான் இனி மிச்சம், ம். (பெருமூச்சு) நாங்களும் வெளில போவம், இஞ்ச இருந்து என்ன செய்யப் போறம், சீ. உனக்கென்ன பயித்தியமே. பொடியள் வரச் சொன் னாப் போல நாங்கள் போற நிலையிலயே இருக்கிறம். பிள் ளயள விட்டிட்டு இஞ்ச தனிய இருந்து என்ன செய்யப் போறம். இந்த வீட்ட விட்டிட்டு என்னண்டு போறது. அதோட மகளுக்குக் கட்டிக் குடுத்த வீடுமெல்லே பாக்கோணும். நாங்கள் போனா ஆர் இது களப் பாக்கிறது. மகளின்ர வீட்ட, மருமகன்ர தங்கச்சியார் ஆக்களிட்டப் பாக்கச் சொல்லுவம், அப்ப. இந்த வீட்ட என்ன செய்யிறது. வீட்டப் பாத்தமிண்டா. கடசியில எங்களப் பாக்க ஆர் இருக்கப் போகினம். பேசாமல் நாங்கள் போய் அங்க எங்கட பிள்ளையளோட இருப்பம்.
நான் எவளவு கஸ்டப்பட்டு இந்த வீட்டக் கட்டினனான். இதை விட்டிட்டு வெளிக்கிடேலுமே,
 

அகளங்கன்
இப்ப எங்கட வசதிக்கு இதப்போல பத்து வீடு கட்டிட
35Tü:
லாம். இதென்ன பெரிய சொத்தே. தகப்பன்; உனக்கு இதின்ர பெறுமதி தெரியல்லே, நான் எவளவு கஸ்டப்பட்டு இந்த வீட்டக் கட்டினனான். இப்ப நினைச் சுப் பாத்தாலும் அந்த உழைப்பும், கஸ்ரமும் ஒரு சுகமாத் தான் இருக்கு. | 25 Tui: பின்ன நீங்கள் இந்த வீட்டக் கட்டிப் பிடிச்சுக் கொண்டு
இருங்கோ. (கோபமாக தகப்பன் இஞ்சேரும் இந்த வீட்டிலதான் இந்தப் பிள்ளையள் எல்லாம் பிறந்தது, வளர்ந்தது, ஒடியாடி விளையாடினது, படிச்சது, ஒண்டோட ஒண்டு சண்ட பிடிச்சது. பிள்ள யள் என்ன விட்டிட்டு போனாலும் வீடு மட்டும் என்ர சொத்து என்னோடயே இருக்குது இதை விட்டிட்டு நான் போக மாட்டன், தாய்: அப்ப. இஞ்ச இருந்து என்னண்டு காலந் தள்ளப் போறம்3 தகப்பன்: நீ விருப்பமிண் டாப் போ நான் வரமாட்டன். தாய்: உங்கள விட்டிட்டு நான் போவனெண்டே நினைக்கிறியள்.
நான் சாகுந்தனைக்கும் உங்களோடதான் இருப்பன். தகப்பன்: நீ முதல்ச் சா கிறியோ . நான் முதல்ச் சாகிறனோ . ஆருக்குத் தெரியும், எல்லாம் கடவுளுக்குத் தான் தெரியும் தாய்: நான்தான் முதல்ச் சாகுவன், அப்பிடித்தான் சாகோணு மிண்டு எனக்கு ஆசை ஆனா நான் செத்துப் போனா உங்களைப் பாக்கிறதுக்கு ஆர் இருக்கு (அழுகிறாள்.) தகப்பன்: அழTத உதெல்லாம் எங்கட கையிலயே இருக்கு.
IgE, IT " SG) - 3
இடம்: வீடு. பாத்திரங்கள்: ராஜனின் தாய், தந்தை, குமார்.
குமார்: (தாய் இருமுகிறாள்.) பெரியம்மா. பெரியம்மா.
பெரியம்மோய் இருமிக் கேக்குது. காணேல்ல. | 35 m uiu: குமாரே. வா. இஞ்சால வாமோன.
குமார்: நல்லா இருமல் பிடிச்சுக் கொண்டுது போல .
5Td: வருத்தத்துக்கு என்ன குறை குமார் (இருமுகிறார்) குமார்: எங்க பெரியப்பரக் கானேல்ல.
19

Page 18
அகளங்கன்
5Tül: என்ன விசயம் குமார்.அவர் உதில விதான யாரிட்டப் போனார் காணேல்ல, வெயிலாப் போட்டுது. அவரால யும் ஏலாது. (இருமுகிறார்)
குமார் பெரியம்மா. ராஜனும் அவுஸ்ரேலியாக்குப் போறானாம்.
உண்மையே.
தாய்: ஒம் குமார், அவன் இஞ்ச இருந்து என்ன செய்யிறது. சின்னவன் வரச் சொல்லிக் கடிதம் போட்டிருக்கிறான்.
குமார்: அப்ப அவனும் போட்டா. உங்கள ஆர் பாக்கிறது. பெரி யப்பருக்கும் ஏலாது. நீங்களும் நல்ல-வருத்தத்தோட
X இருக்கிறியள். சமைக்கவே உங்களால ஏலாது.
g5 fruit: ராசனுக்கு எங்கள இந்த நிலமையில விட்டிட்டுப் போக கொஞ்சமும் விருப்பமில்ல. நாங்கள் தான் வற்புறுத்தி அனுப்பி வைக்கிறம்.
தகப்பன்: குமாரே.குமார்.இந்த விதான யாரக் கண்டனியே
மோன,
@០៣f அவர் காலம இஞ்சாலப் பக்கம் வந்தவர் பெரியப்பு.
பிறகு நான் காணேல்ல.
தகப்பன் அந்தாளிட்டத் தான் போனனான். அந்தாள் எங்கயோ போட்டுதாம் . என்னால நடந்து திரியேலாமல் கிடக்கு. (இருமுகிறார்)
குமார்: ஏன் பெரியப்பு. என்னண்டு சொல்லுங்கோ. நான் செய்து
தாறன்.
தகப்பன்: இந்தா இந்தப் போமில ஒரு கையெழுத்து வாங்கிக்
கொணந்து தா.
குமார்: சரி பெரியப்பு. அதிருக்கட்டும். ராஜனயும் வெளில அனுப் பப் போறியளாம். அனுப்பிப் போட்டு உங்க ளு க் கு உதவிக்கு என்ன செய்யப் போறியள்.
த ய் (மெதுவ க) அவன் நிண்டாப் போல ஏதோ உதிவியா
யிருக்கப் போகுதே.
குமார்: என்ன பெரியம்மா ஏதோ முனு முணுக்கிறியள்.
g5 fTitin: ஒண்டுமில்ல .
தகப்பன்: அவனுக்கு எங்கள விட்டிட்டுப் போக விருப்பமில்ல. நாங்கள் தான் அனுப்பிறம் அவன் அங்க போனா முன்னேறீருவான்,

35ւնIII :
தகப்பன்:
குமார் :
தகப்பன்:
தாய்: குமார்:
தகப்பன் ;
குமார்:
தாய்:
(35Lотй :
தகப்பன்:
குமார்;
இடம்:
அகவிங் கன்
இஞ்ச உங்களாலையும் ஒண்டுஞ் செய்யேலாது, மாறி மாறி வருத்தம் பெரியம்மாவும் மருந்தும் கையுமா இருக் கிறா. அவன் நிண்டா உங்களுக்கு உதவியா இருக்குமே, எங்களுக்கென்ன குறை குமார் . ம் , பிள்ளபள் நல்லா இருந்தாச் சரி. நாங்களும் வெளில போப் போறம். இந்த வீட்ட விட்டிட்டோ. எப்ப பாத்தாலும் இந்த வீடு கட்டினதப் பற்றித்தான் புழுகுவியள். குமார். இப்ப உள்ள வசதிக்கு இதப் போல எத்தின வீடு கட்டிடலாந் தெரியுமே. (இருமுகிறார்) குமார்!. இந்தா. புளித்தண்ணி குடி, ஏன் பெரியம்மா. ஏலாததோட உங்களுக்கு. குமார்! நீ ஏன் இஞ்ச இருந்து கஸ்டப்படுகிறாய். பேசாமல் நீயும் வெளீல போய் நல்லா உழைக்கலாமே. எனக்கென்ன பெரியப்பு, காசே இல்ல இப்ப நினைச் சாலும் நான் வெளீல போயிருவன். அண்ண, தம்பி தங்கச்சி எல்லாரையும் வெனீல அனுப்பீற்று நான் மட்டுந் தானே நிக்கிறன். நானும் போனணிண்டா, அம்மாவை யும் அப்பாவையும் ஆர் பாக்கிறது. ஏன் அவேக் கென்ன குறை குமார். அவே என்ன எங்க ளப் போல வருத்தக் காறரே. அவேக்கு ஒரு வருத்தமும் இல்லத்தான். ஆனா எனக் கிண்டா அவயளத் தனிய விட்டிட்டுப் போக விருப்ப மில்ல. ஒண்டில் அவயளயும் கூட்டிக் கொண்டு போகோ ணும் அல்லாட்டி அவேயோட நிக்கோணும் போல கிடக்கு. உப்பிடிப் பாத்தியெண்டா . நீ உருப்படாய். ஒரு பிள்ளையெண்டாலும் தாய் தகப்பலோட இருக் கோணும் பெரியப்பு. காசு பணத்தால பெத்த தாயை யும் தகப்பனையும் வாங்கேலுமே. சரி, சரி நான் வாறன் நல்ல வெயிலாப் போட்டுது,
3, T'S - 4
@ရှ† [[]},
பாத்திரங்கள். ராஜன், தாய், தகப்பன்.
தாய்:
இஞ்சேருங்கோ. உவன் ராசன எங்க இன்னும் காணேல்ல ஒரு சின்ன உதவிக்குக் கூட நிற்கானாம்.
2.

Page 19
அகளங்கன்
தகப்பன்:
தாய்:
தகப்பன்:
frմ: ,
甄
தகப்பன்:
35 Fruiu:
தகப்பன்:
தாய்:
தகப்பன்:
தாய்:
ராஜன்:
தாய்:
ராஜன்:
22
அவனுக்கென்ன.விளையாட்டுப்பிள்ளை, கஸ்டந் தெரியா மல் செல்லமா வளத்திற்றம். வீட்டு வேல செய்ய நிற் LIT G365T.
எனக்கிண்டா அவன வெளில அனுப்ப விருப்பமில்ல. அவனயும் அனுப்பீற்று நாங்கள் என்ன செய்யிறது. அதுக்கென்ன செய்யிற.நாங்கள் மறிச்சாப் போல நிற்கப் போறானே. நாங்கள் இந்த வீட்டுக்க செத்துக் கிடந்தாலும் தூக்கிப் போடக் கூட ஆளில்லாமல் போகப் போகுது. ம் (பெரு மூச்சு) பிள்ளயளப் பெத்தம்.வளத்தம்.என்னத்தக் கண்டம், நானும் எவளவு ஆசப்பட்டன் நாலு பிள்ள யஞம் படிச்சு, இஞ்சயே உத்தியோகம் பாத்து, கலியாணம் முடிச்சு. பிள்ள குட்டியளப் பெத்து, .இந்த வீடு முழுவதும் பேரப் பிள்ளயளால நிறையோணும் அதுகளத் தூக்கிக் கொஞ் சோணும்மெண்டு ம் நாங்கள் நினைக்கிற தெல்லாம் நடக்குமே. பேரப் பிள்ளயெண்டு பேருக்குக் கூட ஒரு பிள்ள இஞ்ச இல்ல. அதுகள நாங்கள் தூக்கினது மில்ல - கொஞ்சினது மில்ல - கண்டதுமில்ல. இனிக் கவலப்பட்டு என்ன செய்யிறது. எல்லாம் எங்கட தலைவிதி. ஆரிட்டச் சொல்லுறது. பேரப் பிள்ளயளத்தான் பாக்கல்ல கடசி காலத்தில பிள்ள யளிண்டாலும் கூட இருக்கப் போகுதுகளே, இஞ்ச கண்ணுக்க நிக்கிற பிள்ளயும் போகப் போகுது. ம் நான் இவன் ராசனப் பெத்த நேரம் செத்துப் பிளைச்சன். அப்ப புடிச்ச வருத்தம் இப்பவும் அதே வருத்தம் தான். ராசன் தான் வாறான் போல கிடக்கு எங்க மோன திரிஞ்சிற்று வாறாய்.கொஞ்சம் வெள்ளெண வரக்குடாதே. என்னம்மா நீங்கள். நானென்ன குழந்தப் பிள்ளயே. நான் உலகஞ் சுத்தப் போறன், என்னை உங்கட மடீல வைச்சிருக்கப் பாக்கிறியள். குழந்தப் பிள் ளயஞக்குத் தாய் மடிதா ன் உலகம், பெரிசா வளந்திற்றா உலகம்தான் தாய்மடி. எல்லாம் ஒண்டு தான். அம்மா.இந்தாங்கோ உங்கட ரெண்டு பேற்றயும் பாஸ் போட். பத்திரமா வைச்சிருங்கோ.

அகளங்கன்
தாய்: இதுதான் இப்ப இல்லாக் குறை. (இருமுகிறார்)
தகப்பன்: ராசன் இப்ப அவசரப்படாத மோன, இன்னும் கொஞ்ச நாள் போகட்டும். கொம்மாக்கும் கொஞ்சம் சுகமாகட்டும். பிறகு போகலாம். எனக்கும் நீ நிண்டா ஒரு பெரிய ஆறு
தலாயிருக்கும். yួចំ ៖ அப்பா அம்மாக்குச் சுகமாகட்டும் எண்டு நிண்டனிண்டா
இந்த ஜென்மத்தில நான் வெளில போகமாட்டன். : உதுகள் சொல்வழி கேளாதுகள், கனக்கப் படிச்சிற்றுதுகள் ராஜன்: அம்மா. அண்ணயாக்கள் போகேக்க மட்டும் சந்தோசமா
அனுப்பி வைக்கியள். நான் போ கேக்க தான் மறிக்கிறியள். என்னால ஏலாது. வாற வெள்ளிக்கிழம ைபிளைற். (flight)
தாய்: கொள்ளி வைக்கக் கடப் பிள்ளையில்லாமல் போகப்
போகுது. ராஜன்: அம்மா உந்த ஒப்பாரியள நான் போனாப் பிறகு வைச்
சுக் கொள்ளுங்கோ, எத்தின தாய் தகப்பன்மார் பிள்ள யள வெளில அனுப்பீற்றுச் சந்தோசமா இருக்கினம். தகப்பன் இஞ்சேரும். நீ ஏன் அவன மறிக்கிறாய். அவன் போய்
நல்லாயிருக்கோணும். தாய்: geff) es e o e o அதுக்கென்ன ராசன். (இருமுகிறார்) வெள்ளிக் கிழமையில வெளிக்கிட்டா வீடு வந்து சேரேலாது எண்டு பழமொழி. ஏன் வெள்ளில போறாய்.
ராஜன்: அதுதானம்மா நல்லது. நான் என்ன இஞ்ச திரும்பி வரப்
போறனே. தாய்: சரி. சரி. போய் கை கால் அலம்பீற்று வந்து சாப்பிடு.
g, ' ' G - 5
இடம்: வீடு.
பாத் ரங்கள் தாய், தகப்பன், ராஜன், குமார் .
தகப்பன், " ராசனக் கவனமா அனுப்பிற்று, இஞ்ச வந்திற்றுப்
LisT • • •
குமார்: ஒம் பெரியப்பு. தாய்: கவனமாப் போ மோன. (அழுகிறாள்) அங்க போய் கொண்ணனிட்டச் சேந்தவுடன கடிதம் போடு.
23

Page 20
அகளங்கன்
தகப்பன் ராசன்! அங்க உன்ர எண்ணத்துக்குச் சுத்தித் திரியாத, கொண்ணன்ர சொல்லக் கேட்டு நட, அடிக்கடி கடிதம் போடு,
ராஜன்: சரி, வாறன். அப்பா வாறன். அம்மா வாறன்.
(35 DITřir: நான் ராஜன அனுப்பீற்று வாறன்:
தாய்: (இருமிக் கொண்டு) என்ர கடக் குட்டியும் என்ன விட்
டிட்டுப் போட்டுது. (அழுகிறார்)
தகப்பன்: அழTத. ஏன் அழுறாய். அழுதாப் போல திரும்பிவரப்
போறானே. (அழுகிறார்)
தாய்: என்ன அழவேண்டாமிண்டிட்டு நீங்கள் அழுறியள்.
தகப்பன்: ம். ம். (பெருமூச்சு) எங்களுக்காக பிள்ளையன் அழாட்
டியும் அதுகளுக்காக நாங்கள் அழுவம்.
35 Tür : இனி இஞ்ச. (இருமுகிறார்). இனி இஞ்ச எவளவு பணமிருந்தைன்ன சொத்திருந்தென்ன. எல்லாம் போட் டுது இனி ஒண்டுமில்ல.
தகப்பன் இஞ்சேரும். நாங்கள் கலியாணம் முடிச்ச காலத்தில நாங்கள் தான் ஒருத்தர ஒருத்தர் பாத்துக் கொண்டி ருந்தம். இனியும் நாங்கள் பழயபடி ஒருத்தர ஒருத்தர் பாத்துக் கொண்டு இருப்பம்.
agg - 6
இடம்: வீடு.
பாத்திரங்கள்: தாய் தகப்பன், குமார் .
குமார்:
5 Tu:
குமார்
தாய்:
குமார்:
பெரியம்மா. பெரியம்மா. எங்க வீட்டுக்குப் பின்னா லயே நிக்கிறியள், வா குமார். வா. என்ன செய்யிறியள் பெரியம்மா. ஒரே குப்பையாக் கிடக்கு மோன . அதுதான் கூட்டித் துப்பரவாக்கிறன் (இருமுகிறார்) ஏன் பெரியம்மா உங்களுக்கு உந்தவேல. உங்களால நடக்கவே ஏலாது. அதுக்குள்ள கூட்ட வெளிக்கிட்டிட் டியள்.
 

g5siti. குமார்: தாய்:
குமார் :
குமார்!
25 Tü:
குமார்:
957 til:
குமார் :
5Tü:
குமார்;
தகப்பன் :
(вуцрпй:
ப்ெபன்:
அகளங்கன்
என்ன மோன செய்யிறது இப்பிடியே குப்பையா விடுறதே, இஞ்ச கொண்டாங்கோ விளக்குமாற நான் கூட்டி விடுறன் நீ ஒருத்தன் தான் எங்களுக்கு ஆறுதலுக்கு இருக்கிறாய். நீங்கள் கையக் காலக் கழுவீற்று வீட்டுக்குள்ள போங்சோ பெரியம்மா, நான் கூட்டீற்று வாறன் . தண்ணியுமில்ல மோ ன. கிணத்தில தான் அள்ளோணும்" ஏன். நேற்று ராங்கில (Tank) தண்ணியடிக்கேல்லயே. மோட்டர் பிழையாப் போச்சே . இல்ல . மோ ன . நேற்றுப் பகல் எழும்பி நடக்கேலாமல் சுகமில்ல. பின்னேரம் பாத்தா தண்ணி முடிஞ்சுது. கரண் டும் இல்ல. அப்ப ராத்திரி முழுக்க தண்ணிக்கு என்ன செய்தியள். நேற்று மத்தியானம் சமைக்கேல்ல. அவராலயும் ஏலாது. இரவில தண்ணியள்ள என்னால ஏலுமே, இரவும் சமைக் கேல்ல.
அப்ப நேற்று முழுக்கப் பட்டினிதான். ஏன் பெரியம்மா. ஆரிட்டயும் சொல்லி அனுப்பியிருக்கலாமே. நீ வருவாயெண்டு பாத்தம் நீயும் வரேல்ல, இஞ்ச ஆர் வரு கினம் சொல்லிவிட வீட்டுக்க கிடந்த எங்களுக்கு றோட் டால போற வாற ஆக்களத் தெரியுமே. வாசலுக்கு வந் தாலும் உந்தப் பெரிய மதிலால ஆக்களத் தெரியுமே, நேற்று அப்பர் பாத் ரூமில வழுக்கி விழுந்திற்றார். ஆ பெரிய காயமே. சும்மா சின்னக் காயந்தான், அவரக் கூட்டிக் கொண்டு போய் மருந்து போட்டிட்டு வந்தாப் போல வீட்டிலயும் கொஞ்ச வேல கிடந்தது. அம்மாக்கு உதவியா நிண்டாப் போல வரே லாமல் போட்டுது. (வந்து கொண்டே) குமாரே. நான் ஆரெண்டு பாத்தன். கண்ணும் சரியாத் தெரியுதில்லை. ஆர்மோன விழுந்ததோ என்னவோண்டு சொல்லிக் கேட்டுது. அப்பர் தான் பெரியப்பு, சும்மா சின்னக் காயம் தான். அவர் ஆஸ்பத்திரிக்கு வரமாட்டனிண்டிட்டார். நான் தான் கட்டாயப்படுத்தி கூட்டீற்றுப் போய் மருந்து போட்டன்.
ஏதும் பெரிய காயமே மோன
25

Page 21
அகளங்கன்
உகுமார் இல்லப் பெரியப்பு . சும்மா சின்னக்-காயந்தான். ஆனா வயது போன நேரத்தில வருத்தத்த உடன மாத்திரோ ணும். விட்டா முத்தீரும், கரைச்சல்,
தகப்ப31 ம் .ம். (இருமுகிறார்) என்னாலயம் ஏலாது. வந்து கிந்து
பாக்கிறண்டாலும் நடக்கேலாது.
(35ւք II : மெய்ய பெரியப்பு. ராஜன் கடிதம் போட்டானே.
தகப்பன்: ஒம்.ஒம். சுகமாய்ப் போய்ச் சேர்ந்திட்டானாம், எங்கள
யும் அங்க கூப்பிடப் போறானாம்.
குமார்: நீங்கள் இஞ்ச இருந்தும் கஸ்ரம் தானே. பேசாமல் அங்க
போய்ச் சேருங்கோவன்,
தகப்பன்: அப்பிடித்தான் நானும் நினைச்சிருக்கிறன். பாப்பம்.
குமார். எனக்கு. கொஞ்சம் மருந்து வாங்கோணும்.
குமார்: துண்டத் தாங்கோ பெரியப்பு. வாங்கி வாறன்.
தகப்பன் இல்ல மோன மருந்து முடிஞ்சுது. நேற்று குழிசை தானே சாப்பாடு ஒருக்கா டாக்குத்தரிட்ட நானும் போய்க் காட்டித்தான் மருந்தெடுக்கோணும்
குமார் : அப்ப காலமைக்குப் போவம் நான் வெள்ளெண வாறன்
போவம். வெளிக்கிட்டு நில்லுங்கோ.
S T UI: குமார் எங்க.போப் போறியே மோன. தண்ணி.
குமார்: ஒம் பெரியம்மா. அந்தத் தொட்டியில நிறைச்சு விடுறன்.
கானுந்தானே.
5 Juju: வாளியளுக்கயும் அள்ளிக் கொணந்து வைச்சு விட்டிட்டுப்
போ மோன. குமார்: ஒம் பெரியம்மா .எங்க வாளியள். குசினிக்கயே. இருக்கு.
குசினி கிடக்கிற கிடை, முதல் இத வெளியாக்கீற்று பிறகு தண்ணி அள்ளி வைப்பம்.
H5H I".9) - 7
இடம்: வீடு (மரத்து நிழல்) பாத்திரங்கள்: தாய், தகப்பன், குமார் .
5Tul: இஞ்சேருங்கோ.இஞ்ச இருந்தென்ன செய்யிறது. பிள்ள யளுக்குக் கடிதம் போட்டு அங்கயே போகப் பாப்பம். தகப்பன்: அங்க போனாப் போல என்ன. சும்மா வெளிநாடு, வெளிநாடு எண்டு சொல்லுறது தான். அங்க என்ன
26

தாய்:
தகப்பன்:
குமார்:
25 Tuir :
குமார்:
தகப்பன்
36 Tuir :
திகப்பன்:
5Tu
தகப்பன்:
தாய்:
தகப்பன்
35 FTulu:
தகப்பன்:
குமார்:
Tii:
அகளங்கன்
கிடக்குப் பெரிசா, பிள்ளையன் வேலைக்குப் போனா நாங்கள் தான் தனிய இருக்கோணும். எப்பிடியோ. பிள்ளையன், பேரப்பிள்ளையன் எண்டு பொழுது போகும் உதவிக்கும் ஆக்கள் இருக்கும்: சரி பாப்பம். அவங்கள் சிக்கற் அனுப்பிறதெண்டு கடிதம் போட்டாங்கள் தானே பாப்பம், (வந்து கொண்டே) பெரியம்மா. பெரியம்மா மரத்தடி யிலயே இருக்கிறியள் . ஒ நல்ல இடந்தான். குமார். உதிலபோய் அரை றாத்தல் பாண் வாங்கி வா மோன. இந்தா காசு. சரி.சரி. என்னட்டக் காசு கிடக்கு, நான் வாங்கீற்று வாறன். - குமாரும் இல்லாட்டி எங்களப் பாக்கவும் ஆளில்ல. அவனுக்குக் கொஞ்சம் புத் தி குறைவு. அதுதான் இப்பிடி வந்து உதவி செய்யிறான். ஏன் அப்பிடிச் சொல்லுறாய். பாவம் நல்ல பிள்ளை. அவனுக்குப் புத்தியிருந்தா தாய். தகப்பனப் பாக்கோ ணு மிண்டு வீட்ட நிக்கிறானே. மற்றப் பிள்ள யஸ் எல்லாம் வெளிநாடுகளில எவளவு நல்ல நிலமையில இருக்குதுகள் . அதுக்கென்ன செய்யிறது. தாய் தகப்ப ைனயும் பாக்கத் தானே வேணும். தாய் தகப்பன மட்டும் பாத்தா பறவாயில் லயே. இஞ்ச வந்து முத்தமும் கூட்டுவான். வீடும் கூட்டுவான். குசினி வேலயும் செய்து தருவான். அண்டைக்கொரு நாள், என்ர வயித்தால போன துண்டுகளக் கிணத்தடியில போட்டிருந்த நான். அவன் கண்டிட்டு, தோய்ச்சுக் காயப் போட்டிருந்தான்.
ம். பெத்த புள்ள செய்யாது. அதுதான் சொல்லுறன் . அவனுக்கு கொஞ்சம் மூளை வளர்ச்சி குறைவு. வாறான் போல கிடக்கு அவனுக்குக் கேட்டுதெண் டாச்
இந்தாங்கோ பெரியம்மா. அதுசரி பாண என்னத்தோட சாப்பிடப் போறியள். இனி ஆர் சம்பல் இடிக்கிறது. தேத்தண்ணி வைக்கிலாம் ஏலாமல் கிடக்கு,
27

Page 22
அகளங்கன்
தகப்பன்:
குமார்: தகப்பன்:
5 Iúil: தகப்பன்:
குமார்:
தகப்பன் (35 LOTři:
தகப்பன்:
தாய்:
குமார் :
தகப்பன்:
(35 DIT fi:
இடம்:
சும்மா சாப்பிடுவம், கொஞ்சம் இருங்கோ நான் தேத்தண்ணி வைச்சுத் தாறன், பாவம் போன பிறவீல என்ன கடன் பட்டானோ. உவன் உருப்படான். சீ ஏன் அப்பிடிச் சொல்லுறாய். இந்தாங்கோ தேத்தண்ணி குடீங்கோ. மெய்ய பெரியப்பு எப்ப வெளீல போறியள் பாப்பம். இன்னும் கடிதம் வரேல்ல. நீங்கள் எங்க வெளீல போறது. (சிரிப்பு) உங்களுக்கு ரெண்டு பேருக்கும் நான்தான் கொள்ளி வைக்கிறது. ஏன் குமார் அப்பிடிச் சொல்லுறாய். பெரியம்மா செத்தா நான் கொள்ளி வைப்பன். நான் செத்தா பெரியம்மா கொள்ளி வைப்பா, ஏன் புள்ளயள் வராதுகளோ, அதுகள் வந்து கொள்ளி
வைக்குங்கள் தானே.
அதென்னவோ . நீங்கள் ஒருத்தருக் கொருத்தர் வைச் சாலும் எப்பிடியும் ஒரு ஆள் மிஞ்சுவியள் தானே. ஆரோ கடசியாச் சாகிற ஆளுக்கு நான் தான் கொள்ளி வைப்பன். அதெல்லாம் ஏன் இப்ப கதைப்பான், நாங்கள் அவுஸ் ரேலியாவில சாகிறமோ, கனடாவில சாகிறமோ, இல் லாட்டி சுவீச்லாந்தில சாகிறமோ ஆருக்குத் தெரியும்.
பெரியப்பு . நீங்கள் பாருங்கோ. உங்கள் ரெண்டு பேருக்கும் நான்தான் கொள்ளி வைக்க வரும். (சிரிப்பு
ਉ-8
வீடு.
பாக் கிரங்கள் குமார், தாய், தகப்பன்,
(5 D tří:
தகப் பன்:
(35 LED FI IT :
55 CH ULI
28
என்ன பெரியப்பு கடிதத்தை வைச்சுப் பிரட்டிப் பிரட்டி வாசிக்கிறியள். என்ன விசயம். பெரியவனும், சின்னவனும் கதைச்சுப் பேசி கடிதம் போட்டிருக்கிறாங்கள்.
என்னவாம் பெரியப்பு,
ரிக்கற் அனுப்புறாங்களாம். எங்கள வரட்டாம்.
 

அகளங்கன்
(з5ьот * : அப்ப பிற கென்ன, கனடாக்கோ. அவுஸ்ரேலியாக்கோ
போறியள்.
தகப்பன்: என்னப் பெரியவன் கனடாக்கு வரட்டாம். பெரியம்மா வச்
சின்னவன் அவுஸ்ரேலியாக்கு வரட்டாம்,
குமார்: பிறகென்ன. சந்தோசமா ஆளுக்கொரு இடத்தில போய்
நிம்மதியா இருக்க வேண்டியது தானே,
தகப்பன்: ஒம். ஒம் அதுதான் பாத்துக் கொண்டிருக்கிறம்.
குமார்: பெரியம்மாக்கு என்ன கவல . உங்களுக்கு அவுஸ்ரேலி யாக்குப் போகாமல் கனடாக்குப் போக விருப்பமோ .
தாய்: எங்க போனாத்தான் என்ன. ரெண்டிடத்திலயும் பிள்ள
யள் தானே இருக்குதுகள் .
குமார்; பிறகென்ன. என்ன செய்யோனுமோ சொல்லுங்கோ. எல்லாம் நான் செய்து தாறன், வெளிநாட்டுக்குப் போற ஆக்கள அனுப்பிற தெண்டா எனக்குக் கை வந்த கலை ,
த கப்பன் : பாப்பம். ரிக்கற் வரட்டும்.
B5. T1".9) - 9
இடம்: வீடு.
பாத்திரங்கள் : குமார், தாய், தகப்பன்.
தாய்:
தகப்பன்:
5 (15ü :
தகப்பன்:
தாய்:
தகப்பன்:
5ff;
இப்ப என்ன செய்யிறது, அதுதான் நானும் யோசிக்கிறன். பிள் ளய ரூம் ஒவ்வொண்டாப் பிரிஞ்சு கடைசியில ந |ங்க ளும் தனித்தனிய (இருமுகிறார்). நாங்களும் தனித் தனிய பிரியத்தான் வேனுமோ . (அழுகிறார்) இஞ்ச இவளவு வருத்தத்திலயும், நாங்களே எங்களுக்கு ஒருத்தருக் கொருத்தர் ஆறு தலா இருந்தம். இனி அந்த ஆறுதலும் இருக்காது.
எனக்கெண்டாப் போக விருப்பமில்ல, இஞ்சயே கிடந்து சாகுவம். (அழுகிறார்.) அழாத . இப்ப என்ன வந்த தெண்டு அழுறாய். முதல் நாங்கள் போவம். பிறகு அங்க இருந்து ஒரே இடது துக் குப் (3 TuT3: சேருவம். அதுக்கு எவளவு காலம் பிடிக்குமோ. அதுக்கிடையில ஆர் சாகிறமோ. ஆர் இருக்கிறமோ.
29

Page 23
அகளங்கன்
இப்ப என்ன செய்யிறது. ரிக்கற்றும் அனுப்பீற்றாங்கள்.
தகப்பன்:
வாற கிழமை போகோனும், Յ5 iմ: ஒரே இடமாக் கூப்பிடச் சொல்லி நீங்கள் க டி த ம்
போடேல்லபோ , தகப்பன்: நான் எத்தின கடிதம் போட்டனான். தனித்தனிய வந் திருக்கேலாதெண்டு. அவங்கள் அதை விளங்கிக் கொண் _Tឆ្នាំ)$@T.
(5ւO II հ: (வந்து கொண்டே) என்ன பெரியப்பு. ரிக்கற் வந்திருக்குப்
போல, கொண் டாங்கோ பாப்பம், தகப்பன் குமார். எங்களுக்குப் போக விருப்பமில்ல. குமார் . ஏன் பெரியப்பு. நீங்கள் தானே வெளில போகோணும்,
பிள்ளபளப் பாக்கோணுமெண்டு ஆசைப்பட்டியள். }} என்ன ஆசை . அவர் கனடாவிலயும், நான் அவுஸ் ரேலியாவிலயும் போய் இருக்கவே ஆசப்பட்ட நாங்கள். குமார்: ஏன் பெரியம்மா. நீங்கள் ரெண்டு பேரும் ஒரே இட
மாய்ப் போய் இருக்கலாமே. தகப்பன் அவளவு தான் எங்கட தலை எழுத்து. குமார்: அப்ப முதல்ல ஆளுக் கொரு இடமாப் போங்கோ, பிறகு
ஒரே இடமா மாறிக் கொள்ளுங்கோ, தாய்: அப்பிடித்தான் செய்யோனும் . குமார்: எனக்கு கொஞ்ச வேலையிருக் கு. நான் வாறன், இஞ்ச ஏதும் வேலையிருந்தாச் சொல்லுங்கோ. கறிச்சா மான் எல்லாம் இருக்குத் தானே. - தாய்: ஒம் மோன நேற்றுத் தானே, வாங்கித் தந்த நீ. போட் டுப் பின்னேரமா இஞ்சாலப் பக்கம் ஒருக்கா வா வன்.
JE TIL "G) - 10
இடம்: வீடு, பாத்திரங்கள் தாய், தகப்பன்.
தகப்பன்: காலமைக்கு வெள்ளண எழும்பி வெளிக்கிடோணும்.
அப்பதான் போறதுக்கு வசதியாயிருக்கும். தாய்: ஒம்" ஓம் காலமைக்கு ஒரு வேலயுமில்ல. குமார் எல்லா
30
வேலயும் செய்து தந்திற்றுத்தான் போனவன்.
 

தகப்பன்:
355 d:
தகப்பன்:
தாய்:
தகப்பன்:
5Tü :
தகப்பன்:
தாய்:
தகப்பன்:
தாய்:
தகப்பன்:
д5пш:
தகப்பன்:
அகளங்கன்
காலம வெள்ளனக் குமார் வருவான். அவன்தான் எல்லா உதவியும். பாவம். - அவன விட்டிட்டுப் போறது தான் பெரிய கவலை, ராசன் போய் அஞ்சு வருசமாச்சுது, இவளவு காலமா பிள்ளைக்குப் பிள்ளையா அவன் தான் உதவி. அவன்; தான் தான் எங்களுக்கக் கொள்ளி வைக்கிறதெண்டு பகிடியாச் சொல்லுவான். எங்கட செத்த வீட்டுக்கும் அவனால வரேலாது. நாங்கள் அவுஸ்ரேலியாவில சாகி றமோ. கனடாவில சாகிறமோ, அல்லாட்டி ராசனோட போயிருந்து சுவிச்சலாந்தில சாகிறமோ. ஆர் கண்டது. இப்ப ஏன் சாகிறதப் பற்றிக் கதைக்கிறியள், எனக்கு பிள்ளயளப் பாக்கிற சந்தோசத்தில வருத்தமும் குறைஞ் சிற்று. எனக் கென்னவோ இன்னும் இந்த வீட்ட விட்டுட்டுப் பிரிய மனமில்ல, கொஞ்ச நாளைக்கு வெளில போய் இருந்திற்றுத் திரும்பி வந்து இந்த வீட்டில தான் சாகோ ணும் போல இருக்கு, நாங்கள் கலியானம் முடிச்சு நாப்பது வருசம் ஒண்டா இருந்திற்றம். இப்ப பிள்ள பள் எங்களப் பிரிச்சு வைக்கு துகள் (அழுகிறாள்)
அதுதான் தலை விதி. இந்தக் காலப் பிள்ள யஞக்கு இதெல்லாம் விழங்காது. குடும்பம், பாசம், தாய், தகப் பன், புருசன், மனிசி, பிள்ளை, சகோதரம் . எல்லாம் பணத்துக்குப் பிறகு தான் எண்டு நினைக்கினம். தாய் தகப்பனையும் விலைக்கு வாங்கப் பாப்பாங்கள்.
உதுகள நாங்கள் மாத்தே லாது.
இப்ப அதுகளின்ர காலந்தானே. எங்கட வாழ்க்கை இன்னும் எத்தின நாளோ.
நாளைக்குப் பிளேன் (Plane) இல ஏறிற்றா. நீ ஒரு திசை. நானெரு திசை" சிரிக்கிறதோ. அழுறதோ.
எண்டு தெரியேல்ல. (அழுகிறாள்) இனிக் கதைச்சு என்ன பிரயோசனம், படுப் பம். இந்த வீட்டில படுக்கிற கடைசி இரவு இதுதான். அதச் சொல்லேலாது. நாளைக்கும் இஞ்ச தான் கிடக்கப் போறமோ. அல்லாட்டி திரும்பி வந்து இருப்பமோ. எல்லாம் ஆண்டவனுக்குத்தான் தெரியும்.
3.

Page 24
அகளங்கன்
தாய்: எனக்கு குமார நினைச்சாப் பாவமா இருக்கு. எங்களுக்கு எவளவு உதவி செய்தான்.அவன நினைச் சாச் சிரிப்பும் வரும்.
தகப்பன்: ஏன் அப்பிடிச் சொல்லுறாய்.
தாய்: இந்தக் காலத்தில இப்பிடி ஒரு பிள்ள.ம். அவன் இஞ்ச வந்து செய்து தந்த உதவியள எப்பிடி மறக்கிறது. அவ னுக்கு நாங்கள் என்ன செய்யப் போறம்.
தகப்பன்: அவன் நல்ல பிள்ளை.
35/Tür: ஆனா. அவனுக்குக் கொஞ்சம் புத்திகுறைவு.
தகப்பன்: இண்டய இரவோட இந்த விட்ட விட்டுப் பிரிஞ்சிருவன். நாளையோ ட உன்னயும் விட்டுப் பிரிஞ்சிருவன்.
5ru: (அழுகிறாள்) இந்த நாப்பது வருச வாழ்க்கையில உங்கள விட்டுப் பிரிஞ்சிருப்பனெண்டுநான் கனவிலகடக்காணேல்ல உங்களப் பிரிஞ்சிருக்கக்குடா தெண்டுதான், உங்களுக்கு முதலே நான் சாகோணுமிண்டு இவளவு நாளா நான் எவளவு விரதம்எல்லாம் பிடிச்சன் கடைதியில (அழுகிறாள்)
தகப்பன்: சரி. சரி. நித்திர கொள். வெள்ளண எழும்போனும்,
59 - 11
இடம்: வீடு.
பாத்திரங்கள் : குமார் .
குமார்: பெரியம்மா. பெரியம்மா. பெரியம்மோவ் எங்கி
காணேல்ல. ம் . பெரியப்பு . பெரியப்பு.
32
போட்டினமோ .சீ. நான் வராமல் போக மாட்டினமே. ம். வெளில பூட்.ே டல்ல பின்னுக்குப் பாப்பம். ம். இன்னும் திறக்கேல்ல. பெரியம்மா . பெரியம்மா. இப்ப என்ன செய்யிறது. கதவ உடைச்சுப் பாப்பமோ. ஜன்னல் திறந்திருககு. அதுக் குள்ளால போய். கதவத் திறந்து பாப்பம்.
ஆ. இதென்ன இஆ. பெரியப்பு. பெரியப்பு. பெரியம்மா. பெரியம்மா. ஐயோes
பெரியப்பு. பெரியம்மா.
 

3.
அகளங்கன்
அவர்கள் படித்தவர்கள்
35ITLʻ 9F) - 1.
இடம்: வீடு. பாத்திரங்கள்: சந்திரா, தாய்.
தாய்:
சந்திரா:
தாய்:
சந்திரா:
இப்ப என்னடி செய்யிறது. நீ ஒரு எடுப்பு எடுத்துக் கொண்டு நிக்கிறாய். எங்களுக்கெல்லோ தலைவேதனை பாயிருக்கு. ஏனம்மா. என்னண்டு சொல்லுங்கோவன். அவே எழுபத்தஞ்சாயிரம் காசா வேணுமாம். வீடு, வளவு, நகை, காணியப் பற்றிப் பிரச்சனையில்லையாம். அது நாங்கள் தாறதெண்டு சொன்ன அளவுக்கு ஒருமாதிரிச் சரியெண்டு சொல்லிப் போட்டினம். இப்ப. காசுக்கு எங்கடி போறது. நீங்கள் அவேட்டக் கதைச்சுப் பாக்கேல்லயே, எழுபத்தைஞ்சுக்குக் குறஞ்சாக் கதையே வேண்டாமெண் டிட்டினம். இப்ப காசுக்கு எங்கடி போறது. (கோபமாக) என்னட்டக் கேட்டா. அதுக்கு நானென்ன செய்யிறது. நீ எல்லாத்திலயும் இப்பிடித்தான், செய்யிறதயுஞ் செய்து போட்டு நழுவிடுவாய், (கோபமாக) அம்மா!. இப்ப நீங்கள் இந்தக் கலியா ணத்தச் செய்து வைக்கப் போறியலோ, இல்லயோ, முதல் அதச் சொல்லுங்கோ. ஆரடி இப்ப மாட்டனெண்டது. உன்ர பேரில கொப்பர் போட்டு வைச்ச காசும், அவற்ற பென்சன் காசில நான் சேத்து வைச்சதுமாய் அம்பதாயிரம் தானே இருக்கு. வேற என்ன சொத்திருக்கு வித்துத்தர. வீடு வளவ அப்பிடியே தாறம். ஆறு பரப்புத் தோட்டக்காணி இருக்கு அதயும் தாறம். நகை போடுறம், வேற இனி என்ன இருக்குத் தாறதுக்கு,
33

Page 25
அகளங்கன்
, :
தா:
FišuT:
தாய்:
சந்திரா: 5 TU :
5 för TT: தாய்:
ទ្រឹs:
இடம்:
நகையோ. அது நாணில்லோ என்ர சம்பளத்தில வாங்கினனான், அதயும் நீங்கள் போடுறதாய்ச் சொல்லு
றியள். ஒரு சோடி காப்பும், ஒரு சங்கிலியும் மட்டுந்தானே நீ உழைச்சு வாங்கினது. மிச்ச நகையெலாம் ஆர் வாங்கினது சொல்லு பாப்பம். இப்ப அதையுமில்லோ கேப்பாய் போல கிடக்கு (கோபமாக) சரி. அதவிடுங்கோ. எங்கேண்டாலும் கடனாக் கேட்டுப் பாருங்கேர் வன் அம்மா. கடனோ எனக்காரடி தருவினம். எ ப் பி டி த் திருப்பிக் குடுக்கிறதெண்டு நான் கடன் கேக்கிறது. கொஞ்சக் காசே. இன்னும் இருபத்தஞ்சாயிரம் வேணும் குடுக்க பிறகு கலியாணச் செலவு வேற ..ம். எ ஸ்ன செய்யப் போறனோ.எடிபுள்ள . நீ ஒருக்கா அவரிட்டக் கதைச் சுப் பாரன். ஆரிட்டயம்மா. பெடியனிட்டதான். வேற ஆரிட்ட என்னத்தக் கதைக்கிறது. என்னத்தயோ. அம்பது தான் தருவம் வேற இல்ல பெண்டு, எங்கட நிலமயச் சொல்லிப் பாரன் , அம்மா! நான் சொல்லி அவர் கேக்கார். அவற்ற தாய் தேப்பன மீறி அவர் இதுக்கு ஒத்துக் கொள்ளார். அப்ப, தாய் தேப்பனக் கேட்டே காதலிச் சனியள். எவ ளவு சீதனம் இருக்கு தெண்டு கே ட்டே காதலிச்சவர், (கோபமாக) உ ன் ன ப் படிக்கிறதுக்கு யூனிவெசிற்றிக்கு அனுப்ப இப்பிடி ஒரு உபத்திரவத்தக் கொண்டுவந்திருக் கிறாய்.கொப்பர் இருந்திருந்தா இப்படிச் செய்திருப்பியே அந்த மனுசன் புண்ணியவாளன். போய்ச் சேந்திட்டார். நானில்லோ கிடந்து உத்தரிக்கிறன்.
gET' G - 2
பேரூந்து வண்டி நிறுத்துமிடம் (Bus Stand)
பாத்திரங்கள்: சந்திரா, ராஜன்.
ரஜன்:
34
(ராஜன் காத்து நிற்கிறான். சந்திரா வருகிறாள்) இப்ப தானே வாறிர் நான் எவளவு நேரமாக் காத்துக் கொண்டு நிக்கிறன் .
 

சந்திரா:
ராஜன்:
சந்திரா:
ராஜன்:
சந்திரா:
ராஜன்
சந்திரா:
ராஜன்:
சந்திரா:
ராஜன் :
சந்திரா:
ராஜன்:
சந்திரா:
ខ្លួន
அகளங்கன்
(அசட்டையாக) இப்பதானே ஸ்கூல் (School) விட்டது. இப்ப என்ன நேரம் பணி கூட்ட ஒழுங்காப் பாரும். இப்ப தான் ஸ்கூல்(School) விட்டதெண்டு சொல்றீர். சொறி ராஜன், மறந்திற் றன். இண்டைக்கு ஸ்கூலில ஸ்ராப் (Staff) மீற்றிங் நடந்தது. அதால கொஞ்சம் லேற் ஆப் போட்டுது.
சந்திரா. இண்டைக்குப் படத்துக்குப் போறதுக்குப் பிளான் (Plan) பண்ணி. வெள்ளண வாறதெண்டல்லோ சொன்ன நீர். உமக்கு இப்ப வரவர எல்லாம் மறந்து
போகுது. கொஞ்ச நாளில என்னையும் மறந்து போடுவீர் போல கிடக்கு. அதுதான் எனக்கும் பயமா இருக்கு (அழுகிறாள்) சந்திரா கண்ணத் துடையும். ஏன் அழுறிர். அங்க ஆக்களெல்லாம் பாக்கினம். (கண்ணைத் துடைத்தபடி) ராஜன்! நீங்கள் எங்கள இப் பிடிக் கஸ்ரப்படுத்துவீங்களெண்டு நான் நினைக்கேல்ல. என்ன சொல்லுறீர். விளங்கேல்ல. காசு எழுபத்தையாயிரம் கேட்டியளாம். நாங்கள் எங்க போறது அவளவு காசுக்கு அய்யாவும் இல்ல. அம்மா எங்க கேட்டு எப்பிடி வாங்கித் தரப்போறா, அம்பதா யிரம் தாறதெண்டு சொல்ல, அதுக்கு வேற எங்கயும் பாக்கச் செர்ல் லீச்சினமாம். உங்களுக்கு தெரியாதே எங் கட நிலமை.
சந்திரா. நானென்ன செய்ய, வீட்ட அம்மா , ஒரு லெச்சம் காசா வேணுமெண்டு கேட்டவ. நான்தான் சொல்லி ஒரு மாதிரிஎழுபத்தஞ்சாயிரம் ஆக்கினது இதுக்கே மூண்டு நாளா என்னோட அப்பா, அம்மா, ஒருத்தரும் முகங்குடுத்துக் கதைக்கேல்ல. உமக்காகத்தான் இருபத் தையாயிரம் குறைச் சது அப்11 என்ர பெறுமதி இந்த இருபத்தையாயிரம் தானோ. (கோபமாக) ஏன் இப்பிடி எல்லாம் கதைக்கிறீர். எனக்கு ஒரு லெச்சம் ரூபா காசா யும், உம் மட வீட்டப் போல ரெண்டு மடங்கு பெறுமதியான புது வீட்டயும் சீதனம் பேசி, அண்டைக்கு வந்து போச்சினம். நீரென்ன எண்டா இதுக்கே கோவிக்கிறீர். (அழுதபடி) அப்ப புதுவீட்டையும், புதுப் பொம்பிளயயும் கட்டிக் கொண்டிருங்கோ. நான் வாறன் செல்கிறாள்) சந்திரா. சந்திரா கண்ணத் துடைச்சுப் போட்டுப் போம், அழாதயும்,
35

Page 26
அகளங்கன்
g5 T 9 - 3
இடம்: வீடு, பாத்திரங்கள்: தாய், சந்திரா.
தாய்:
சந்திரா:
தாய்:
சந்திரா:
g5 ( i.
சந்திரா:
(சந்திரா களைப்போடு வந்து கதிரையில் இருக்கிறாள்) இந்தா. தேத்தண்ணியக் குடி மோன, வந்த நீ உடுப் பும் மாத்தேல்ல. கதிரயில இருந்திட்டாய். சுகமில்லயே, (கோபமாக) எனக்கொண்டுமில்ல. நீ. சும்மா இரெண .
புள்ள சந்திரா. கேட்டுப் பாத்தனியே.
அம்மா!. எனக்குக் கலியானமும் வேண்டாம் . ஒண்டும் வேண்டாம். என்ன நிம்மதியா இருக்க விடுங்கோ. (கோபமாக) இப்ப நானே உன்னக் கலியாணம் முடிக்கச் சொல்லி ஆக்கினப்படுத்தினது. நீதானே எடுப்பெடுத்த நீ. எங்கட நிலமைக் கெல்லோ நாங்கள் மாப்பிள பாக்கோணும். (கோபமாக) ஏன். அவற்ற நிலமைக்கென்ன. B. A படிச்சவர், பாங்கில (Bank) வேல செய்யிறார். அவ ருக்கு எங்களப் போல ரெண்டு மடங்கு சீதனங் குடுத்துச் செய்ய எத்தின பேர் காத்திருக்கினம். விசர்க் கதையில்லோ கதைக்கிறாய். அவேட தகுதியப் பற்றி ஆரிப்ப கதைச் சது. எங்கட தகுதிக்கெல்லோ நாங்கள் மாப்பிள பாக்க வேணும் .
பின்ன. (கோபமாக) உங்கட தகுதிக்கு ஒரு தோட்டக் காறனாப் பாத்து ஆருக்கும் கட்டி வையுங்கோ, நீ. எப்பவும் இப்பிடித்தான் எரிஞ்சு விழுவாய், போ.
போய். முகத்தக் கழுவீற்று வா. சாப்பிடுவம், (கோபமாக) எனக்குச் சாப்பாடும் வேண்டாம். ஒண்டும் வேண்டாம். கெதீல செத்துத் து ைலஞ்சாச் சரி . உன்னச் . சாகிறதுக்கே இவளவு கஸ்ரப்பட்டு வளர்த் துப் படிப்பீச்சு. இந்த நிலமைக்குக் கொண்டு வந்தது. அம்மா!. சும்மா புறுபுறுக்காதேங்கோ, கொஞ்சம் பேசா மல் இருங்கோவன். எங்க போனாலும் நிம்மதியில்ல,
 

தாய்:
சந்திரா:
இடம்:
அகளங்கன்
பிள்ள. கோவிக்காத .கொஞ்சம் சொல்லுறதுக்கேள் நீ . ஆரும் உன்னோட படிப்பீக்கிற மாஸ்ற்றர் மாரிட்ட கடனாக் கேட்டுப் பா ர ன். பிறகு உன்ர சம்பளத்தில குடுத்துக் கழிக்கிலாந்தானே.
அம்மா! உங்களுக்கேலுமெண்டா எப்பிடியெண்டாலும் செய்து வையுங்கோ இல்லாட்டி எனக்குத் தெரிஞ்ச வழியை நான் பார்க்கிறன் .
JAG IT" G) - 4
பஸ் ஸ்ரான்ட்.
பாத்திரங்கள் சந்திரா, ராஜன்.
ராஜன்: சந்திரா:
ராஜன்: சந்திரா:
ராஜன்: சந்திரா:
ராஜன்:
சந்திரா:
என்ன சந்திரா ஒரு மாதிரியாய் நிற்கிறீர் கோவமோ, கோவிச்சு என்ன செய்யிறது. நான் கோவிச்சா அந்தச் சாட்ட வைச்சு வேற எங்கயும் நல்ல சீதனம் வாங்கி கலியான ஞ் செய்யிலாமெண்டு பாக்கிறியளோ, நீர் வர வர றாங்கியாத் தான் கதைக்கிறீர்.
ராஜன். நான் ஒண்டு கேப்பன் சரியெண்டு சொல்லு வியளோ,
நீர் முதல்ல கேளும், பிறகு நான் சொல்லுறன் .
என்னோட படிப்பீக்கிற கந்தையா மாஸ்ரர்(Master) இட்ட இருபத்தையாயிரம் ரூபா கடனாக் கேட்ட னான். தாற தெண்டு சொல்லியிருக்கிறார். பிறகு நாங்கள் கலியா ணஞ் செய்தாப் போல பாங்இல (Bank) லோன் (Loan) ஒண்டெடுத்து அவருக்குக் குடுப்பம். என்ர சம்பளத்தில லோனைக் கட்டலாந் தானே. நீங்கள் தான் பாங்இல வேலை செய்யிறியளே; லோன் எடுக்கிலாந் தானே. சந்திரா! உமக்கென்ன பயித்தியமே பிடிச்சிருக்கு கடன் எடுத்து கலியாணம் முடிச்சுப் போட்டு, நீர் கடன் காசைக் கட்டிக் கொண்டிருந்தா கு டு ம் பச் செலவுக்கு என்ன செய்யிறது.
அப்ப . நான் உத்தியோகம் பாக்காமல் இருந்தா என்னை
முடிக்க மாட்டியளோ.
37

Page 27
|
அகளங்கன்
ராஜன்:
ராஜன்:
இடம்:
நீர் ஏன் உத்தியோகம் பாக்காமல் இருப்பான். B.A. படிச்ச
சுப் போட்டு ஆரும் உத்தியோகம் பாக்காமல் இருப்பி னமே. உம்ம நான் என்ன எட்டாம் வகுப்புப் படிக்கேக் கயே காதலிச்சனான். அப்ப. நான் உத்தியோகம் பாப்பன், உழைப்பன் எண்டு நம்பித்தான் காதலிச்சனியளோ. நீர் கொஞ்ச நாளா இப்பிடித்தான்; எப்பவும் விசர்க் கதை தான் கதைப்பீர். இப்ப நான் கதைக்கிற கதையெல்லாம் விசர்க் கதையாத் தான் இருக்கும். எனக்கும் மாதம் ஆயிரத்தைநூறு ரூபா சம்பளம் வருகுது. பத்து வருசம் உத்தியோகம் பாத்தா குறைஞ்சது ஒரு லச்சத்து எண்பதாயிரம் ரூபா காசாச் சேரும், இந்த இருபத்தையாயிரத்துக்கு இப்பிடி நிற்கிறி
யள்.
அப்ப நீர் அப்பிடி ஒரு வாழ்க்கையப் பாக்க வேண்டியது
தானே. பிறகேன் எங்கட வீட்ட கலியாணம் பேசுவான்
(பஸ் வருகிற சத்தம்)
3,9 - 5
மூத்த மகளின் வீடு.
பாத்திரங்கள் தாய், மூத்த மகள் ஜானகி
95 rt uit:
ஜானகி:
5 Tuius
ஜானகி:
38
ஆம்பிளப் பிள்ள இல்லாத குடும்பத்துக்கு நீ தானே மூத் தபிள்ள. நீயும் மருமோனுந்தான் இந்தக் கலியாணத்தச் செய்து வைக்கோணும். கலியாணஞ் செய்து வைக்கிறதுக்கு காசெல்லோ வேணும் காசுக்கு நாங்களெங்க போறதம்மா. அவள் தன்ர தகு திக் கெல்லோ கலியாணம் முடிக்கோணும் . பிள்ள . நீ ஒருக்கா மருமோனிட்ட கேட்டுப்பார். அவர் சில வேளை மாறிச் சாறித் தரக் கூடும். நான் என்ர பெஞ்சன் காசில கொஞ்சங் கொஞ்சமாத் தந்து முடிக் கிறன். இப்பிடியே நாங்கள் காலத்தக் கடத்த, அந்தப் பொடியன் வேற எங்கயுஞ் செய்திரும். இவள் மருந்து கிருந்து குடிச்சுச் செத்துப் போடுவாள். அம்மா. அவரிட்ட என்ன இருக்குத் தாறத்துக்கு. எங் களுக்கும் ரெ ண் டு பொம்பிளப் பிள்ளையள் இருக்கு அதுகளுக்கு வேணுந்தானே.
 
 

தாய்:
அகளங்கன்
எடிபுள்ள. நாலு அஞ்சு வயதுப் பொம்பிளப் பிள் ளய ளுக்கு நீ இப்பவே சீதணஞ் சேர்க்கிறியே.
மூ.மகள்: நீங்களும், நாங்கள் நாலு அஞ்சு வயதில இருக்கேக்க
தொடங்கிச் சீதணஞ் சேத்திருந்தா, இப்ப இந்தக் கரைச் சல் வந்திருக்காதே. ஒமடி. ஒம். உனக்கு சீதனத்தில என்ன குறை வைச்ச நாங்கள். உன்ர கலியாணத்துக்கு உன்ர கொம்மானாக் கள் கேட்ட காசை மறுபேச்சில்லாமல் ரோசத்தோட குடுத்துத் தான்ரி உனக்கு கலியாணஞ் செய்து வைச்ச நாங்கள். அப்ப கொய்யா இருந்தார். அந்தாள் ரோ சக்
காறன் . இப்ப நானென்ன செய்வன்.
g, (T"|9)- 6
இடம் வீடு. பாத்திரங்கள் தாய், சந்திரா.
சந்திரா:
5 Tui
சந்திரா;
g 5 Tuji:
சந்திரா:
தாய்:
சந்திரா:
அம்மா. நீங்கள் பெரியக்காட்ட ஒருக்கா கேட்டுப் பாருங்கோவன். சும்மா இப்பிடி இருந்து என்ன செய்யிறது. அங்க தான் புள்ள காலம போனனான். அவள் முகத் துக்கு முன்னாலயே எடுத்தெறிஞ்சு கதைக்கிறாள். அவேக்குக் குடுத்த சீதனக் காசு, அப்பிடியே பாங் (Bank) இல வட்டியோட கிடக்குதெண்டு, பெரியக் கா ஒரு நாள் சொன்னது. அது இப்ப அவேட சொத்து. தருகினமே. அவள் தன்ர சின்னப் பிள்ளையஞச்கு சீனதஞ் சேர்க்கிறாளாம். அவளின்ர கதையை விடு. மூத்த பிள்ளை ஆம்பிளப் பிள்ளையா இருந்தாலெண்டாலும் எங்களக் கவனிக்கும். ம் . ம். எல்லாம் தலை விதி. நீங்கள் அத்தா னிட்டக் கேட்டுப் பாத்தனிங்களே. அவரிட்டக் கேக்க அவள் விடுறாளே. அந்தாளும் அவளுக்கு மிஞ்சி ஒண்டுஞ் செய்யாது. எல்லாம் என்ர தலையில வந்து பொறிஞ்சிருக்கு. இந்த மூச்சுப் போச்சு தெண்டா எல்லாம் சரி. அம்மா!. சின்னக்காட்ட ஒருக்காக் கேட்டுப் பாருங் கோவன் .
39

Page 28
அகளங்கன்
தாய்: அவளிட்ட என்ன மோன இருக்குது. அதுகள் பாவம். நாங்களும் ஒண்டுங் குடுக்கேல்ல. எந்த முகத்தோட போய்க் கேக்கிறது.
சந்திரா சின்னக்காவின்ர அவர் எங்கயும் மாறியிண்டாலும் தரு
வார். நீங்கள் கேட்டுப் பாருங்கோவன்.
தாய் நாங்கள் அதுகளுக்குச் செய்த அநியாயத்துக்கு எந்த
முகத்தோட போய் உதவி கேக்கிறது.
சந்திரா பின்ன. இப்பிடியே இருங்கோ . பிறகு என்ர செத்த வீட்டுக்கு எந்த முகத்தோட போய்க் கூப்பிடப் போறிய ளெண்டு பாப்பம் (கோபமாக)
JAG IT L" GA - 7
இடம். வீடு.
பாத்திரங்கள் தாய், ராணி (2வது மகள்)
35rii: ராணி! . ராணி!. எங்க வீட்டுக்க காணேல்ல.
|্যা দুঃীি: ஆர். அம்மாவே! வாறனம்மா . இருங்கோ.
தாய்: என்ன கீரையே புடுங்கிறாய்.
ராணி: ஒமம்மா. தண்ணி இறைக்கிறது தானே. பின்ன வாய்க் கால்க் கரையில கீரை போட்ட நாங்கள். அதுதான் புடுங்கிறன்.
35 Tuin: எங்க மருமோனைக் காணேல்ல. கனநாளா அந்தப் பக்
கமும் வரேல்ல.
ராணி: அவர் சந்தைக்குப் போட்டார். கத்தரிக்காய் கொஞ்சம் கிடந்தது. கொண்டு போட்டார். ஏனம்மா முந்த நாள் மரவள்ளிக் கிழங்கும் கொ ண் டு அங்க தானே போய் வந்தனெண்டார்.
தாய ஓம் மோன . நான் மறந்து போனன். வர வர எல்லாம்
மறதியாக் கிடக்கு.
ராணி : வாங்கோ அம்மா . குசினிக்குப் போவம் . போ கேக்க
இந்தக் கீரையைக் கொண்டு போங்கோ,
தாய் புள்ள. இவளின்ர பிரச்சனையை என்னடி செய்யிறது.
ராணி என்னவாம் அவள் ,
40
 

ராணி;
தாய்:
ராணி :
தாய்:
Јтлої :
395 fruitu:
ராணி:
Tü
ராணி:
தாய்:
ராணி:
●5GTá56齿
அவே எழுபத்தைஞ்சு வேணுமாம். இப்ப அம்பது மட் டில கிடக்கு. மிச்சத்துக்கு எங்க போ ற து, அது தான் யோசனையாக் கிடக்கு.
பொடியனிட்டக் கதைச்சுப் பாக்கேல்லயாமோ.
பொடியனும் எழுபத்தைஞ்சுக்குக் கு  ைற ஞ் சா மாட்ட னிண்டு தான் நிக்கிறான்.
அதுக்கு நாங்ளென்னம்மா செய்யிறது.
அவள் சா க ப் போறதெண்டு பயமுறுத்திறாள். எப்ப பாத்தாலும் விசர் பிடிச்சது போல சீறிச் சினக்கிறாள். ஒழுங்காச் சாப்பிடுறதும் இல்லை. நாளாந்தம் எனக்கும் அவளுக்கும் சண்ட தான்.
அவள் தானே அவனை முடிக்கப் போறதெண்டு தொடங் கினவள். நல்லாப் பட்டி ழுத்துப் பாக்கட்டும்.
இப்படியே அவளைச் சும்மா விட்டு, சாகக் குடுக்கிறதே. நீ ஒருக்கா மருமோனிட்டச் சொல்லி.
அம்மா!. கழுத்தில போட்டிருந்த சங்கிலியையுங் கழட் டித் தந்திட்டு, உடுத்திருந்த உடுப்போட வந்து அவரோட வாழத் துடங்கினனான். இப்ப ஆண்டவனேண்டு சந்தோ ஷமா இருக்கிறன். உங்களுக்கு அது பொறுக்கேல்லப் போல.
எடி. எடி. அதெல்லாத்தையும் விடு. அதுக்காக உங்களை நாங்கள் கழிச்சே வைச்ச நாங்கள். இப்ப தாய் பிள்ளை எண்டு போக்கு வரத்தில்லாமலே இருக்கிறம்.
அதுக்கில்லயம்மா. எங்களிட்ட எ ங் கா ல காசு. கிடக் கிறதே இந்தத் தோட்டக்காணி ஒண்டுதான். வேற என்ன இருக்குத் தர. பெரியக்காட்ட கேட்டுப் பாருங்கோவன். அவேட்ட இருக்குத்தானே.
அவள் நாய் போல விழுறாள். அவளிட்டக் கேட்டுப்
போட்டுத்தான் உன்னட்ட வந்தனான். நீ ஒருக்கா மரு மோனிட்டச் சொல்லி விடு.
அவரிட்டச் சொல்லி என்ன செய்யிறது. நான் சொல்ல
LIDTIL "LL Gör.
4.

Page 29
அகளங்கன்
g, III " G -- 8
இடம்: ராணியின் வீடு. பாத்திரங்கள்: ராணி, குமார்.
குமார்: ராணி. மாமி நேற்று இஞ்ச வந்த வவோ.
ராணி: ஒம். நேற்றுக் காலம வந்தவ.
குமார்: ஏன் என்னட்டச் சொல்லேல்ல .
ராணி : சொல்லி. என்ன செய்யிறது. (சலிப்போடு)
குமார்: நான் இட்ப அங்க போய்த்தான் வாறன். நீ நேற்றே
சொல்லீருக்கிலாமே. -
ராணி: அம்மா வந்து ஒப்பாரி வைச்சிற்றுப் போறா. இருபத்
தையாயிரம் வேணுமாம். ஐம்பதாயிரம் காசும் வீடு வளவு காணி எல்லாம் வைச்சுக் கொண்டு இருபத்தையாயிரம் வேணுமாம்; இன்னும் குடுக்க. எங்களுக்கு ஒரு சதம்
தந்திருப்பினமே.
குமார் : அதெல்லாம் ஏன் இப்ப.நாங்களென்ன கேட்டனாங்களே
சீதணந் தா எண்டு.அதைவிடு.
ராணி: அவேதான் தரேல்ல. கேக்காமலாவது இருந்தாப் பெரும்
புண்ணியந் தானே. (சலிப்போடு) குமார்: ஒரு பெரிய அதிசயம் ராணி!. இண்டைக்கு நான் அங்க போயிருக்க, சந்திரா வந்து கதைச்சுது. நான் கலியாணம் முடிச்சு ஆறு வருசத்தில இண்டைக்குத்தான் என்னோட கதைச்சுது. முகத்துக்கு முன்னாலயே வராதவள், இண் டைக்கு முறையும் சொல்லி கதைச்சு அழுதது.
ஏதோ தேவைக்குத்தான் சும்மாவே (சலிப்போடு)
குமார்: அவளப் பாக்கப் பெரிய பாவமா இருக்குது அழுதழுது தனக்கு ஒருத்தருமில்லை எல்லாரும் கை விட்டிட் டினம், எண்டு பெரிய ஒப்பாரி. நான் கந்தப்பண்ணயிட்ட கேட்டன். அவர் காசு தாறனெண்டு சொல்லீட்டார்.
ராணி: காசு வாங்கீற்று எப்பிடிக் குடுக்கிறது.
குமார்: என்ர தோட்டக் காணிய ஒற்றி வைச்சுத்தான் கேட்ட னான். அஞ்சு வருசத்தில வட்டியோட திருப்பிக் குடுக் கோணும்.
42
 

ராணி :
ប្រypfl
ராணி:
குமார்:
இடம்:
அகளங்கன்
அப்ப காணியைக் குடுத்திற்று எப்பிடிக் கடனக் கட்டு றது. காணிய நாங்கள் செய்யிலாம். அஞ்சு வருசத்தில மீட் காட்டி காணி அவருக்குச் சொந்தம். இப்பிடி காணிய ஒற்றி வைச்சுக் குடுக்கோனுமெண்டு என்ன வந்தது. ஒ ற் றி மீட்கேலாமல் போனா . பிறகு எங்களுக்கு என்ன வழி அதப் பிறகு பாப்பம். எல்லாரும் அக்கறை இல்லாமல் விட அவள் மருந்து கிருந்து குடிச்சுச் சத்துப் போட்டா என்ன செய்யிறது. எனக்கு ஒரு தங்கச்சி இருந்து இப்பிடி ஒரு நிலை வந்திருந்தா விட்டிடுவனோ, .
I, III "GA - 9
តាល នៅលjTចំ".
பாத்திரங்கள்: சந்திரா, ராஜன்,
(ராஜன் மோட்டச் சயிக்கிளில் (Motor Bicycle) வருகிறான்.)
ராஜன் :
சந்திரா:
ராஜன்:
சந்திரா:
ராஜன்:
சந்திரா:
ராஜன்:
சந்திரா
ராஜன்:
சந்திரா:
சந்திரா. வாரும். உம்மக் கொண் டு போய் வீட்ட (Drop) றொப் பண்ணிவிடுறன்.
வேண்டாம். நான் பஸ்ஸில போறன். ஏன் கோபமே.இன்னும் கோபம் மாறல்லயோ,
(சிரிக்கிறாள்) கோபமில்ல. மோட்டச் சயிக்கிளில ஏத்திக் கொண்டு போய் விழுத்தினியளிண்டா. புதுப் பழக்கம் தானே.
எப்பிடி மோட்டபைக் (Motor bike) நல்லா இருக்கா அதுக்கென்ன குற. காசு தந்த உடன வாங்கீற்றியள்.
எத்தின நாளைக்கு பஸ்ஸில நெருக்குப் பட்டுப் பிரயாணஞ் செய்யிறது.இனி உமக்கும் பஸ்காசு செலவில்லத் தானே.
ராஜன்! .அங்க பஸ் வருது.நான் பஸ்ஸில போறன், (பஸ் சத்தம் கேட்கிறது)
அப்ப என்னோட வரேல்லயோ,
இன்னும் கொஞ்ச நாள் தானே கலியாணத்துக்குப் பிறகு ஒண்டாப் போவம்.
43

Page 30
அகளங்கன்
gG, IT” GA - 10
இடம்: மூத்த மகள் (ஜானகி) வீடு. பாத்திரங்கள்: மூத்த மகள் (ஜானகி) அவளது கணவன்.
(ராசையா)
ராசையா இஞ்சேரும். எப்ப திங்கக்கிழமயே கலியான வீடு. ஜானகி ஒமெண்டுதான் அம்மா சொன்னவ.
ராசையா; இண்டைக்கு செவ்வாயே புதன், வியாழன் வெள்ளிக்கு
லீவு போட்டிட்டு வெள்ளி காலம அங்க போவம் என அங்கயும் ஆக்கள் இல்லத்தானே. வேல வெட்டி செய்ய, ஜானகி: நான் ஞாயிற்றுக்கிழம பிள்ள யளயும் கூட்டிக் கொண்டு போறன். நீங்கள் ஞாயிறு பின்னேரம் வாங்கோ உங்க ளுக்கு (Office) ஒபீசில வேல கணக்க, லீவு போடேலா தாமெண்டு அம்மாட்ட ஒரு சாட்டுச் சொல்லுவம். ராசையா; ஏன். உம்மட கூடப்பிறந்த தங்கச்சிக்குக் கலியான வீடு
கொம்மா தனிய. கொஞ்சம் நேரத்தோட போனா என்ன.
ஜானகி: உங்களுக்கு ஒண்டும் விளங்காது. அங்க வெள்ளணப் போனா செலவெல்லாம் எங்களில தான் பொறுக்கும். அம் மாட்ட என்ன கிடக்கு செலவு செய்ய,
ராசையா: அப்ப சீதனக் காசுக்கு என்ன செய்தவ .
ஜானகி அது தங்கச்சியின்ர புருஷன் எங்கயோ மாறிக் குடுத்த
தவராம் .
ராசையா; எங்களிட்ட ஒருக்கா கேட்டிருக்கலாமே.
ஜானகி: கேட்டவ நான் தான் இல்லையெண்டிட்டன். கலியான வீடு முடிய அம்மாவ நாங் க ள் கூட்டி வந்து வைச் சிருப்பம்.
ராசையா; ஏன். இப்பிடித் திடீர்ப் பாசம் கொம்மாவில.
ஜானகி: ஏன் தாயில பிள்ளைக்கு பாசம் இருக்காதோ,
ராசையா, எனக்குத் தெரியாதே உம்மப் பற்றி சொல்லும்,
ஜானகி இஞ்ச வந்து நிண்டாவின் டா பிள்ளயளப் பாக்கவும்
உதவியா இருக்கும். பென்சன் காசும் வரும்:
ராசையா; அது தானே பாத்தன்.
44
 

அகளங்கன்
3, T'S - 11
இடம்: சந்திராவின் வீடு பாத்திரங்கள்: சந்திரா, ராஜன்,
(திருமணம் நடந்து முடிகிறது)
ராஜன். சந்திரா! நீர் ஸ்கூலுக்குப் (School) போகேல்லயோ.
வாருமன் போவம்,
சந்திரா: நான் இந்தக் கிழம முழுக்க லீவு நீங்கள் ஒபீசுக்குப்
(Office) போட்டு வாங்கோ.
ராஜன்: சந்திரா.ஏன் வீணா லீவு போட்டனீர் பிறகு நிறைய
லீவு தேவப்படுந் தானே.
சந்திர3: ஏன் நிறைய லீவு,
ராஜன் : என்ன தெரியாதது போல கேக்கிறீர். இன்னும் பத்து
மாதத்தில.
சந்திரா: அதுக்கு ஸ்பெசல்(Special) லீவு இருக்குத் தானே.
(இருவரும் சிரிக்கின்றனர்)
சரி, சரி, சாப்பிடுங்கோ.
g, FT 1" (G) - 12
இடம்: வீடு பாத்திரங்கள் குமார், ராணி,
குமார்: ராணி!. ராணி. சாப்பாட்டக் கொண்டா.நா னொருக்கா தோட்டப் பக்கமும் போகோனும், இஞ்ச கறிச் சாமா னெல்லாம் முடிஞ்சுது. வாங்கோணும். நாளைக்கு ஸ்கூல் ரீச்சேர்ஸ் பாங் இல வேல செய்யிற ஆக்கள் எல்லாரும் வருகினமாம். ஏதும் பாத்து வாங்கீற்று வாறன் .
ராணி : கலியாண வீட்டுக்கு ஒரு கிழமைக்கு முதலே வந்திற்றம். இன்னும் தோட்டத்த ஒழுங்காப் பாக்கேல்ல. என்ன பாடோ தெரியாது. போய்ப் பாத்திற்று வாங்கோ, கறிச் சாமானுக்கு கணக்க சிலவழிக்க வேண்டாம். வா றவ சில வேள சாப்பாட்டுக்கு நிக்காமல் போனாலும் போயி ருவினம் ஏன் வீண் சிலவு.
4.
5

Page 31
அகளங்கன்
குமார்: சீ. சீ.வாற எல்லாரும் சாப்பிட்டிட்டுத்தான் போகோ
ணும். நான் போட்டு வாறன் .
ராணி: இப்பவே சிலவு நல்லாப் போட்டுது.
குமார்: சரி இனியென்ன.நாளைக்கு மட்டுந் தானே. வேற ஆர்
இருக்கினம் செய்யிறதுக்கு.
ராணி : சந்திராவின்ர அவர் ஒபீசுக்குப் போறார் போல இருக்கு. கொஞ்சம் பொறுங்கோ. அவற்ற மோட்டச் சயிக்கிளில போகிலாந்தானே.
g5[Tiʼ 9F) - 13
இடம்: வீடு.
சந்திரா: ஓமக்கா ...ஏன்.
பாத்திரங்கள். ராணி, சந்திரா, ராஜன்.
ராணி: சந்திரா.சந்திரா. (கூப்பிட்டபடி வருகிறாள்) சந்திரா என்னக்கா!
ராணி: உன்ர அவர் இப்ப வேலைக்குப் போறாரோ.
ராணி : இவர் ரவுணுக்குப் போறாராம். அப்ப அவரோட மோட் டச் சயிக்கிளில போகிலாந் தானே. நாலைஞ்சு நாளா சயிக்கிளோடி இருமல் புடிச்சிட்டுது. அது தான் கேட்டன். (செல்கிறாள்) சந்திரா. கெதில சாப்பிட்டிட்டு வெளிக்கிடுங்கோ. ராஜன் ஏன் அவசரப் படுத்துறிர்.
சந்திரா: ஏனிண்டு பிறகு சொல்லுறன். நீங்கள் கெதீல வெளிக்
கிடுங்கோ.
ராஜன் சந்திரா1.நான் உம்மோட சந்தோஷமா இஞ்ச கொஞ்ச
- நேரம் நிக்கக் கூடாதோ.
சந்திரா: பின்னேரம் வந்து நிக் கி லா ந் தானே . இப்ப கெதில
போட்டு வாங்கோ,
ராஜன்: என்ன சந்திரா வெளில எட்டிப் பாத்துப் பாத்து அவ
சரப் படுத்துறிர்.
46
 

சந்திரா:
ராஜன்
சந்திரா;
குமார்:
ராணி:
குமார்:
அகளங்கன்
சின்னக்காவின்ர புருஷன் உங்களோட மோட்டச் சபிக் கிளில வரப் போறாராம்.
அதுக் கென்ன வரட்டுமன்.
உங்களுக்கு ஒண்டும் தெரியாது. நீங்கள் பாங்க்கு வேலைக்கு போறியள். அவர் வேட்டியோட பின்னால இரு ந் து வந்தா உங்களுக்குஎன்ன மதிப்பு. கெதியாப் போங்கோ, (மோட்டச் சயிக்கிள் உறுமிக் கொண்டு புறப்படுகிறது.) ராணி! அந்தச் சயிக்கிள் பம்மக் கொண்டு வா. காத்துப் போட்டுது. ஏன். நீங்கள் மோட்டச் சயிக்கிளில போகேல்லயே.
போவம் ! போவம்! அதுக்கு இன்னும் காலங்கிடக்கு.
முற்றும்.
47

Page 32
அகளங்கன்
4.இயந்திர இல்லறம்
g, ' G - 1
இடம்: கிணற்றடி. பாத்திரங்கள்: அன்ரி, ரீச்சர், அங்கிள்.
(அன்ரி கிணற்றடியில் உடுப்புத் தோய்த்துக் கொண்டிருக்கிறார்)
figgs: அன்ரி 1 அன்ரி1. எங்க காணேல்ல.
அன்ரி: ஆரது. ரீச்சரே . வாங்கோ ரீச்சர்.
ரீச்சர் : எங்க. கிணத்தடியிலேய நிக் கிறியள்.
அன்ரி: ஒம் ரீச்சர் உடுப்புத் தோய்க்கிறன் இஞ்சால வாங்கோவன்.
ரீச்சர்: என்ன அன்ரி நிறைய உடுப்புப் போல.
அன்ரி: ஒம் ரீச்சர். ரெண்டு, மூண்டு நாளாத் தோய்க்கேல்ல.
figr: அன்ரி1.அங்கிளின்ர வேட்டி சேட்டெல்லாம் நீங்கள் தானோ தோய்க்கிறது. ஏன் அவர் தோய்க்கமாட் டாரோ,
அன்ரி: தோய்க்கமாட்டாரெண்டில்ல ரிச்சர்,நான்தான் விடுறேல்ல.
ரீச்சர்: ஏன் அன்ரி. அவற்ற ஊத்த உடுப்புக்கள அவர் தோய்க்க வேண்டியது தானே. உங்களுக்கு அருவருப்பா இருக் கிறேல்லயே,
ரீச்சர். நான் சுகமா இருக்கும் வ  ைர க் கும் அவரத் தோய்க்க விடன். நீங்கள். மாஸ்ரரின்ர உடுப்பத் தோய்க் கிறதில்லயோ .
: நாங்கள் கலியாணம் முடிச்சு பதினஞ்சு வருசமாச்சுது. இன்
னும் நான் அவற்ற உடுப்ப ஒரு நாளுந் தோய்ச்சறியன் அன்ரி. அவற்ற உடுப்ப அவர் தோய்க்க வேண்டியது தானே. நானென்ன வேலக்காறியே.
அன்ரி: வேலக்காறியெண்டில்ல ரீச்சர். வீட்டில இருக்கிற நாங்கள் செய்யத்தானே வேணும். அது எங்கட கடமதானே ரீச்சர்.
fágit: கடம, கடமயெண்டு சொல்லி பொம்பிளயள ஏமாத்தி வைச் சிருக்கினம். பொம்பிளயள அடிமையா வைச்சு வேல வாங்கிறதுதான் ஆம் பிளயளின்ர வேல.
48
 
 

ரீச்சர்:
© fl:
ήό σή :
får gar:
அன்ரி:
sig gs :
அன்ரி:
fj gi:
அன்ரி:
för gFti:
அகளங்கன்
என்னவோ ரீச்சர். நீங்கள் ரெண்டு பேரும் படிச்ச பட்டதாரியள். ரெண்டு பேரும் படிப்பிக்கிறியள், எனக்கு உதெல்லாம் விளங்காது.
அன்ரி. உங்களப்போல இருக்கிற பொம்பிளயஸ்தான் ஆம்பிளயஞக்கு இடங்குடுத்தது. அதாலதான் எல்லா ஆம் பிளய ஊரும் பொம்பிளயள இயந்திரமா நினைச்சுக் கொடு மப்படுத்துகினம்.
அவர் உழைச்சுக் கொண்டு வாறார். நான் சமைக்கிறது. உடுப்புத் தோய்க்கிறது. பிள்ளயளப் பாக்கிறது. வீட்டு வேலயள் எல்லாம் செய்யிறது . இதுதானே வாழ்க்க. அன்ரி! . கன தமிழ்ப் பொம்பிளயஸ் இப்பிடித்தான் தங்களத் தாங்களே ஏமாத்திக் கொண்டு, சமூகத்தயும் ஏமாத்துகினம். சுதந்திரமில்லாமல் அடிமையாகக் கிடந்து கஸ்டப்படுகினம். ரீச்சர். என்னவோ. எனக்கு என்ர குடும்ப வாழ்க்க சுவையாயிருக்கு, சுகமாயிருக்கு. அன்ரி உது சுகமில்ல அன்ரி, சுமை. எங்கட வீட்டில சமயல் வேலயில அவரும் உதவி செய்வார். செய்வா ரென்ன (சிரிப்பு) செய்யோணும். நீங்களும் உத்தியோகம் பாத்துச் சம்பாதிக்கிறியள். அதால அவரும் உங்களோட வீட்டு வேல செய்யிலாம். ஆனா. (சிரித்தபடி) காலம வெள்ளண ஒழும்பினா சமையல் வேலயில அரவாசி அவருஞ் செய்யோனும் இல்லாட்டிச் சமைக்கமாட்டன்.
மோட்டச் சயிக்கிள் சத்தங் கேக்கிது. அவர் வாறார் போல இருக்கு . ரீச்சர். நீங்கள் சமச்சிற்றியளே. இண்டைக்குச் சனிக்கிழம தானே. சமைக்க அலுப்பாயி ருந்தது. மத்தியானத்துக்குக் கடையில சாப்பாட்டுப் பாசல் (Parcel) வாங்கி வரச் சொல்லி அவர அனுப்பீருக்கிறன் நான் சமைச்சுப் போட்டுத்தான் தோய்க்க வந்தனான்" இஞ்ச பாருங்கோ பிள்ளயஸ் உடுப்பெல்லாம் கயர் பிரட்டி வைச்சிருக்குதுகள், உடுப்புகள ஊத்த யாக்கிறதில எங்கட பிள்ளயஞக்குத்தான் முதலிடம், அன்ரி. நான் போப்போறன். உங்கட. இட்ட லிச் சட்டியத் தாங்கோ. காலமைக்கு இட்டலி அவிக் கப் போறன்
49

Page 33
அகளங்கன்
அங்க குசினீக்க கவிட்டிருக்கு போ கேக்க எடுத்துக் கொண்டு போங்கோ,
ຂຶgfi: நான் வாறன் அன்ரி. அங்கிள்தான் வாறார்.
அங்கிள் என்ன ரீச்சர் (சிரித்தபடி) மாஸ்ரர் சாப்பாட்டுக் கடைக்கு முன்னால நிக்கிறார். வீட்ட சமைக்கேல் லயோ
ffji agrir: (சிரித்தபடி) கிழமயில ஒரு நாளைக் கெண்டாலும் ஓய்வு
வேணுந்தானே அங்கிள்.
35TI i" 9A - 2
இடம்: வீடு.
பாத்திரங்கள் மாஸ்ரர், ரீச்சர், அங்கிள், அன்ரி.
ரீச்சர்: எங்க இன்னும் இந்தாளக் காணேல்ல, மூண்டு மணியாகுது.
எங்க துலஞ்சுதோ தெரியாது. ஆ வாறார் போல
கிடக்கு வரட்டும். (கோபமாக) என்ன செய்த நீங்கள் இவளவு நேரமா . மூண்டு மணியாகுது.
மஸ்ரர்; அவசரமாப் பள்ளிக்குடப் பக்கம் போக வேண்டியிருந்தது.
- - - - - அது தான் பிந்தீற்றுது.
ນີ້ບໍ: பள்ளிக்குடப் பக்கமோ பார்ப் (Bar) பக்கமோ, பன்ரெண்டு
மணியிலயிருந்து பி ள் ள ய ள் பசி பசி யெண்டு சத்தம் போட்டு என்ன க் கொல்லுதுகள், சாப்பாட்டுப் பாசல் வாங்கி வரப்போன மனிசன் வாற நேரம்.
மாஸ்ரர் இஞ்சேரும். சும்மா . கத்தாதயும். கொஞ்சம் பிந்தீற்று.
அதுக்கு. இப்ப என்ன செய்யிறது.
fje gf y பாறுக்குக் (Bar) குடிக்கப் போறதெண்டா சாப்பாட்டுப் பாசலக் கொண்டு வந்து தந்து போட்டுப் போய்த் துல யிறது தானே. இப்பிடி எங்களப் பட் டி னி போடோ ணுமே.
மாஸ்ரர் ஏன் பட்டினி கிடப்பான் நீர் சமைச்சிருக்கலாமே.
ή ά Βτή . எனக்குச் சமைக்கத் தெரியாமலே இருந்தனான். நீங்கள் மாட்டண்டு சொல்லியிருந்தா நா ன் சமைச்சிருப்பன். அல்லாட்டி ஆரையும் விட்டு வாங்கியிருப்பன்.
மாஸ்ரர்? இஞ்சேரும் . சத்தம் போடாதயும் என்னை ஏதோ கூலிக்காறன் கணக்கா வைச்சில்லோ பேசிறீர்.
50
 

fiğ gir
шпеii) Јf. :
管ág前、
DI 6iuFUT :
மாஸ்ரர்:
ரீச்சர்:
LDP16ï0jf:
Ο Πρίύ Τή :
ਯੰਤ:
LD)y:
ffiği giai:
LADIrsin) DJfr : ήό 3 ή 1
அகளங்கன்
நீங்கள் செய்யிற வேலைக்கு வேற என்ன செய்யிறது. சாராயக் கடையக் கண்டா உங்களுக்கு உலகமே மறந்திரும், பேக்கத கதைச்சு என்ர கோபத்தக் கிளறாத . நான் குடிச்சா உன்ர காசிலயே குடிக்கிறன். நான் உழைக்கிறன், நான் குடிக்கிறன். ஓம். ஓம் . குடிக்கிறது உங்கட காசிலதான். சாப் பிடுறதுதான் என்ர உழைப்பில. உன்ர உழைப்பில நான் சாப்பிடத் தேவையில்ல. என்ர சம்பளம் எனக்குப் போதும். எடுக்கிற சம்பளம் குடிக்கவும் . உங்கட வீட்ட குடுக் கவுந் தானே காணும். இஞ்ச பிள்ளயஞக்கும், உங்களுக் கும் சேத்து என்ர சம்பளந் தானே சாப்பாட்டுக்கு. நான் என்ர வீட்ட குடுப்பன். வேற எங்கயும் குடுப்பன் அதக் கேக்க உனக்கு உரிமையில்ல, பெரிய ரோசக் காறன் போல கோபம் வருது, இவளவு ரோசமிருந்தா கொஞ்சக் காசிண்டாலும் தரு லாமே. போன மாதம் வாங்கின முன்னூறு ரூபா இன்னுந் தரேல்ல. அதுக்குள்ள ரோசம் வேற. உன்ர காச நாளைக்குக் கொண்டு வந்து மூஞ்சியில எறியிறன்.
ஒ ஓ . வாங்கேக்க எவளவு பணிவா வாங்குவி யள் திருப்பித் தரேக்கதான் மூஞ்சியில எறியிறது. சத்தம் போடாமல் போய்ச் சாப்பிடு . . எனக்கு வாற
கோபத்துக்கு அடிச்சுப் பல்லுக் கொட்டிப் போடுவன். உங்கட சாப்பாடும் வேண்டாம், ஒரு மண்ணாங்கட்டி யும் வேண்டாம், நான் சமைச்சு பிள்ளயஞக்கும் குடுத்து நானும் சாப்பிடுவன். (பாசலை எறிகிறாள்) சாப்பாட்டுப் பாசவத் தூக்கி வெளில எறியிறாய் என.
உன்ர கொழுப்ப. இண்டைக்கு மாத்திக் காட்டுறன். (அடிக்கிறார்)
ஐயோ. அம்மா. விடுங்கோ. விடுங்கோ. ஆ. அம்மா - ஐயோ. (அழுகிறாள்) பொத்து வாய. உனக்கு வாய் கூடீற்று.
ஐயோ. அம்மா.
51

Page 34
அகளங்கன்
மாஸ்ரருக்கு வெறிபோல இருக்கு.ரீச்சர் கத்திக் கேக் குது. போய்ப் பாத்திற்று வாங்கோ.
அங்கிள் இஞ்சேரும். அதுகளின்ர குடும்பப் பிரச்சனையில நாங் கள் ஏன் தலையிடுவான். இண்டைக்குச் சண்ட பிடிக் குங்கள். நாளைக்கு ஒற்றுமையாப் போடுங்கள்.
pfl: (அழும் சத்தம் கேட்கிறது) ரீச்சர் அழுது கேக்கிது. அந்தாள் அடிச்சுக் கொண்டு போடும் போல கிடக்கு. போய்ப் பாத்திற்று வாங்கோ.
அங்கிள்: சரி...பாப்பம். மாஸ்ரர் மாஸ்ரர்.கைய விடுங்கோ . தலமயிர் பிஞ்சுபோடும். என்ன இது சீ. சீ.விடுங்கோ,
மாஸ்ரர்: அங்கிள். விடுங்கோ அங்கிள். அவளுக்குப் பல்லுக் கொட்
டிப் போட்டுத்தான் விடுவன். எதிர்த்து வாய்காட்டுறாள் அங்கிள்.
அங்கிள்: மாஸ்ரர் இஞ்சால வாங்கோ . ரீச்சர். உள்ளுக்குப்
போங்கோ,
ນີ້ຂຶgr: இந்தாள் இனிமேல் இந்த வீட்டுப் பக்கமே வரக்குடாது.
இந்தாளோட வாழுறதவிடச் செத்துப் போகிலாம்.
அங்கிள் ரீச்சர். சத்தம் போடாமல் உள்ளுக்குப் போங்கோ. மாஸ்ரர்.நீங்கள் வாங்கோ எங்கட வீட்ட போவம்.
மாஸ்ரர் : அங்கிள் ! அவள் என்ன அடிமையா வைச்சு வேலவாங்கப்
பாக்கிறாள் அங்கிள்.
அங்கிள் சரி, மாஸ்ரர். அதெல்லாம் வீட்ட போய்க் கதைப்பம். அங்க பாருங்கோ. பக்கத்து வீட்டுச் சனமெல்லாம் உங்கட சண்டையத்தான் பாக்குதுகள்,
மாஸ்ரர்: எல்லாம் அவளால வந்தது.
gG, IT" GA - 3
இடம்: வீடு.
பாத்திரங்கள்: அன்ரி, அங்கிள், மாஸ்ரர்.
9 is sir?
S
2
இஞ்சால இருங்கோ மாஸ்ரர். இஞ்சேரும் மாஸ்ரருக்கு. ஏதும் கூலாக் கொண்டாரும்,
அவள் .பொம்பிளயே இல்ல அங்கிள்,
 

அங்கிள்:
D1លែjf:
அங்கிள்:
LDT6ň) Uf:
Lio Tsil), Tír:
அங்கிள்:
Di):
–9 សំរើ:
அங்கிள் :
அகளங்கன்
மாஸ்ரர். நீங்கள் ரெண்டுபேரும் படிச்ச பட்டதாரியள்g ரெண்டு பேரும் படிப்பிக்கிறியள். இப்பிடிச் சண்ட பிடிச்சா எவளவு மரியாதயில்ல. அவள் மனிசன மரியாதயா இருக்க விட்டாத்தானே. இதக் குடிங்கோ. Lorrost) Trf. அங்கிள் . திங்களில இருந்து வெள்ளி வரைக்கும் விடியப் புறம் சமைச்சு ஆறின சோத்தத்தான் ரெண்டு மணிக்கு வந்து சாப்பிடுறது. சனி ஞாயிறெண்டாலும் நிம்மதியா நல்ல கறி புளியோட சாப்பிடுவமெண்டா. நடக்கிற 95 FT ffu u G3t D. மாஸ்ரர். அப்ப நீங்கள் . ரீச்சர வேலய விட்டிட்டு வீட்ட நிக்கச் சொல்லுங்கோவன். பொம்பிளயஸ் புருசன விடுண்டா விடுங்களே தவிர வேலய கடைசிவரைக்கும் விடா துகள். (சிரித்தபடி) சரியாச் சொன்னியள். அப்ப உதுக்கொண்டும் செய்யேலாது. ஏதோ சமாளிச்சு ஒத்துப் போறதுதான் வழி, ஒத்துப் போற தவிடச் செத் துப் போகிலாம் அங்கிள். (சாப்பாடு கொண்டு வந்து வைத்து) மாஸ்டர். சாப்பி டுங்கோ.
வேண்டாம் அன்ரி. போட்டுக் கொணந்தாச்சு. சாப்பிடுங்கோ. சாப்பிட்டிட்டு ஆறுதலாக் கதைப்பம்.
gE, ITI'9) - 4
இடம்: பாடசாலையில் அதிபரின் அறை. பாத்திரங்கள்: ரீச்சர், அதிபர்.
ரீச்சர் 1 . உங்களப் பற்றி கொம்ளெய்ன் (Complain) வந் திருக்கு. வகுப்பில ஒழுங்கா வேல செய்யிறதில்லயாம்: ஆ . ஆர்சேர் கொம்ளெய்ன் (Complain) பண்ணினது. நான் நல்லாத்தானே படிப்பீக்கிறன்,
53

Page 35
அகளங்கன்
அதிபர்: ரீச்சர். ஆர் கொம்ளென் பண் ணி ன ஈ என்ன, நான் உங்கட வகுப்பில (3 ப் கொப்பியெல்லாம் வாங்கிப் பாத்தனான். கொப்பிய ஒழுங்காத் திருத்துப்படேல்ல. றெக்கோட் புக் (Record Book) இலயும் சரியாப் பதியேல்ல.
sağ gńr: சேர். அது. வந்து.
அதிபர்: அட்வான்ஸ் லெவலுக்குப் படிப்பிக்கிறது. சும்மா விளை யாட்டில்ல. பிள்ளையன் நல்ல றிசல்ட்ஸ் (Results) எடுக் கோனுமெண்டா ந ல் லா, அக்கறையோட படிப்பீக்க வேணும் நீங்கள் இன்னும் சில பஸ் (Syllabus) கவர் பண் ணேல்ல. பயிற்சிகள் குடுத்ததும் காணாது.
: இல்ல சேர். நான். (அழுகிறார்)
அதிபர்: ரீச்சர் இது வீடில்ல. அழுது சமாளிக்க. நீங்கள் அழற தால பிள்ள பள் பாஸ் பண்ணப் போறதில்ல. உங்களுக்கு ஒழுங்கா வேல செய்யேலாட்டிச் சொல்லுங்கோ மாத்தி கீழ் வகுப்புக்குப் போடுறன்.
இல்ல சேர். நான் ஒழுங்காச் செய்யிறன்.
அதிபர்: பிள் ளயள் ஒழுங்காப் பாஸ் பண்ணோணும் பள்ளிக்குடத் தின்ர மானமும், பிள்ளயளின் ர வாழ்க்கையும் அதில தான் இருக்கு. உங்களுக்கு இஞ்ச வேல செய்ய விருப்ப மில்லாட்டிக் கடிதம் எழுதித் தாங்கோ. அடுத்த கிழ மையே மாற்றம் எடுத்துத் தாறன், இஞ்ச இருந்து இடத்த மினக்கெடுத்தா தேங்கோ,
ரிச்சர்: (அழுதபடி) சொறி சேர். இனி ஒழுங்காச் செய்யிறன்.
அதிபர்: ரீச்சர் இது உங்களுக்கு வீட்டுக்குக் கிட்ட உள்ள ஸ்கூல், இஞ்ச இருக்கிறதெண்டா ஒழுங்கா வேல செய்யோணும். இனி ஒரு கொம்ளெய்ன் வரக்குடாது. சரி போங்கோ,
JAG FIK ” GA - 5
இடம்: வீடு. பாத்திரங்கள்: அன்ரி, அங்கிள், ரீச்சர்.
அன்ரி. அன்ரி .
,sijTh: வாங்கோ ரீச்சர் پوهي
என்ன அன்ரி இன்னும் சாப்பிடேல்லயே.
54
 

அகளங்கன்
pfl ஒம் ரீச்சர். இன்டைக்கு விரதம். இப்பதான் சமையல்
முடிஞ்சுது. இன்னும் அவர் வரேல்ல,
fřögří: ஒரு மணியா குது. காலமயும் சாப்பிட்டிருக்கமாட்டியள்.
பசிக்காதே உங்களுக்கு.
அன்ரி: அவர் வராமல் சாப்பிடுறதே ரீச்சர்.
ரிச்சர்: அன்ரி. நீங்கள் இன்னும் பத்தொன்பதாம் நூற்றாண்டில
தான் நிக்கிறியள். புருசன் வரும் வரைக்கும் பட்டினி கிடக்கிறதப் போல மடத்தனம் வேற என்ன இருக்கு. அன்ரி: நான். வழமையா அவர் வந்தாப் பிறகுதான் சாப்பிடுற நான் இன்டைக்கு பிள்ளையன் கூடச் சாப்பிடேல்ல . அப்பா வரட்டுமெண்டு காத்திருக்குதுகள்.
fỉ#g ữ: எங்கட விட்ட உது சரிவராது அன்ரி. (சிரிப்பு) நான் சமைச்சு, பிள்ளையஞக்கும் குடுத்து நானும் சாப்பிட்டிட்டு வைச்சு மூடீருவன். அவர் வாற நேரம் வந்து தானே போட்டுச் சாப்பிட வேண்டியதுதான். என்னால காத்துக் கொண்டு பட்டினி கிடக்கேலாது.
gទចំរើពិ என்னவோ ரீச்சர், எனக்கு மனம் வராது. அவர் வந்து அவரோட சேந்து சாப்பிட்டாத்தான் சாப்பாடு இறங் கும். (சிரிப்பு)
ffiği gir: அன்ரி. நீங்கள் காத்திருந்தாலும் அங்கிள் நேரத்துக்கு வந்திடுவார். நான் காத்திருந்தா மத்தியானச் சாப்பாடு சாப்பிட அஞ்சு மணியாகும். (சிரிப்பு)
ஏன் ரிச்சர். நீங்கள் காத்திருந்து பாத்தா, சிலவேள மாஸ்டர் வெள்ளண வரவும் கூடும்:
ਸੁ உது சரிவராது அன்ரி. உதெல்லாம் அடிமைத்தனம், பொம்பிளயஞக்கும் சுதந்திரம் இருக்கு. ஆம்பிளயளவிட நாங்கள் என்னத்தில குறைஞ்சிருக்கிறம்:
அவர் வாறார் போல இருக்கு. ராஜன். போய்க் கேற் றத் துற, 管ā: அன்ரி. அப்ப, நான் வாறன். எனக்கு உங்கட தோசக்
கல்ல ஒருக்காத் தாங்கோ. அன்ரி: பிள்ள. அந்தத் தோசக்கல்ல எடுத்து ரீச்சரிட்டக்குடு: ரீச்சர்: வாறன் அன்ரி, (செல்கிறார்) அங்கிள் (வந்து கொண்டே) வெள்ளண வெளிக்கிட்டிட்டன், அதுக்
குள்ள கடையில ஒரு புதுவேல வந்திற்று,
35

Page 36
அகளங்கன்
அன்ரி:
pfl:
அங்கிள்:
அன்ரி:
©ងៃទីr
அன்ரி:
அங்கிள்:
:'1fقt sد
அங்கிள்:
அன்ரி:
øst 65ir:
இடம்:
சரி . அதுக்கென்ன குளிச்சிற்று வாங்கோ, பிள் ளயள் எல்லாம் உங்களோடதான் சாப்பிடுற தெண்டு காத்தி ருக்குதுகள். அங்க பாருங்கோ வாழையிலயும் வெட்டிக் கொணந்து வைச்சிருக்குதுகள்.
நீ தான் காத்திருக்கிறாய். சொன்னாக் கேளாய். அதுக ளுக்கும் ஏன் பழக்கிறாய் இந்தக் காலம் காத்திருந்து சாப்பிடுறதெல்லாம் சரிவராது. அதென்னவோ எனக்கு. உங்களுக்கு முந்திச் சாப்பிட மனம் வராது.
என்னவாம் ரீச்சர், அவ வந்து கதைச்சுக் கொண் டு நிண்டிட்டுத் தோசக் கல்லு வாங்கீற்றுப் போறா. அவே ரெண்டு பேரும் சம்பாதிக்கினம். மாதம் ஐயாயி ரத்துக்கு மேல சம்பளம் வரும். சொந்த மா தோசக்கல்லு இட்டலிச் சட்டி ஒண்டும் வாங்கேலாதாமே. என்ன செய்யிறது. பக்கத்து வீட்டில இருக்கிறம், நாங்கள் இந்த வீட்டுக்கு வந்து நாலு மாதம் ஆகி து எங்களோட தான் அவே நல்லாப் பழகுகினம். குடுக்கத்தானே வேணும் இனித் தோ சக் கல்லுக் கேட்டா நாங்கள் தோச சுடப் போறமெண்டு சொல்லு, அப்ப இட்டலிச் சட்டி கேட்டா. இட்டலி அவிக்கப் போறமெண்டு சொல்லு, அதென்னண்டு ரெண்டையும் சொல்லுறது. ஒ. (சிரித்தபடி) இதில்லாட்டி அது எண்டு கேட்டிருவா
@了金子。
JAG IT I GA - 6
வீடு.
பாத்திரங்கள்: அன்ரி, அங்கிள்.
அங்கிள்:
அன்ரி:
அங்கிள்:
56
என்ன முகத்துக்குக் கையக் குடுத்துக் கொண்டு ஒரு மாதிரியாய் இருக்கிறாய். என்ன பிரச் சன சொல்லன். பிரச்சன ஒண்டுமில்ல. அப்ப என்ன யோசின.

- ព្រំទឹ៩
ss fl
அங்கிள்:
அங்கிள் :
அங்கிள்:
அன்ரி:
:6iT{ہ بہت بڑے
அங்கிள் :
(3) Lib:
அகளங்கன்
இல்ல என்ர சின்னண்ணயின்ர மகன் குமார் கடிதம் போட்டிருந்தான் . அத வாசிக்கக் கவலயாயிருக்குது.
குமாரே. என்னவாம். அங்க ஏதும் பிரச்சனயாமே.
அவன் வெளில போறதுக்கு முயற்சி செய்து கொண்டிருக் கிறானாம். வாற கிழம போறானாம். ஆனா. சரி. அதுக் கென்னவாம். காசு கீசு தேவப்படுதாமே. எழுபத்தையாயிரம் காசுதேவயாம். அதுதான் கேட்டு எழுதியிருக்கிறான். இப்ப காசுக்கென்ன செய்யிறது. என்னவோ செய்யத்தானே வேணும். பாப்பம். அவனும் தகப்பனில்லாத பொடியன், வீட்டில மூத்த பிள்ள அவன் நல்லா வந்திற்றானெண்டா அந்தக் குடும்பம் வாழ்ந்து கொள்ளும்.
அதுசரி. போன மாதந்தானே அவள் கெளரி பெரிய புள்ள யா கினதுக்குப்போய் சங்கிலியும் வாங்கிக் குடுத்திற்று வந்த நாங்கள். நெடுகலும் உதவி செய்ய எங்களிட்ட என்ன கிடக்கே. இஞ்சேரும். அவன் எங்கள நம்பித்தானே கடிதம் போட்டுக் கேட்டிருக்கிறான். எண்டாலும் கொஞ்சக் காசே. அவளவு காசுக்கு எங்க போறது.
நான் கடையப் பெருப்பிச்சுக் கொஞ்சம் சாமான் வாங்கிப் போட எண்டு ஒரு சிநேகிதனிட்டக் கடன் கேட்டனான். ரெண்டு மூன்று நாளில தாறனெண்டவன். அத வாங்கிக் குமாருக்குக் குடுப்பம்.
அப்ப பிறகு கடைய. அதப் பிறகு பாப்பம். நீ அவனுக்குக் கடிதம் எழுது, வெளில
போற ஆயத்தத்தோட வந்து காச எடுத்திற்றுப் போகச் சொல்லி,
g, T S - 7
பாத்திரங்கள் மாஸ்ரர், ໃຊຸ້: .
ffiğ gir:
இஞ்சேருங்கோ. கொஞ்ச நேரமெண்டாலும் வீட்டில நிண்டு, பிள்ளயஞக்குப் பாடஞ்சொல்லிக் குடுங்கோ. அப் பிடி என்ன வேல நாள் முழுக்க,
57

Page 37
அகளங்கன்
மாஸ்ரர்:
får gar:
LDT)f:
riggs:
மாஸ்ரர்:
sfj; gir:
மாஸ்ரர்
ரீச்சர் :
LOTTibjf:
ή ά σή :
ரீச்சர்:
Lp T6ỉu!!Tử:
f5 g fr:
மாஸ்ரர்:
ரீச்சர்:
LDIT 6siu)gñr:
58
ஏன். நீர் சொல்லிக்குடுமன் , எனக்கெங்க நேரமிருக்கு, நாங்கள் ரெண்டு பேரும் படிப்பீக்கிறம். ஆனா எங்கட மகன் படிப்பில கவனமில்லயெண்டு ரீச்சேர்ஸ் ஏசுகினம் ஆர் ஏசினது. ஆனந்தன் மாஸ்ரரிட்ட ரியூசனுக்குப் போறவன் தானே. படிப்பில சரியான மோசமெண்டு அவர் சொல்ல எனக்குப் பெரிய அவமானமாயிருக்கு. அவன் ஏன் உம்மட்டச் சொன்னவன். ஏன். சொல்லக் குடாதே. அவன் என்னட்டச் சொல்லிருக்கலாமே அவனோட
உமக்கென்ன கத.
ஏன் என்னட்டச் சொன்னா என்ன நான் அவரோட ஒண்டும் கதைக்கக் குடாதோ.
எனக்குத் தெரியும். நீர் அங்க பள்ளிக் குடத்தில என்ன செய்யிற நீரெண்டு. அங்க வாற மாஸ்ரர் மாரோட கதைக் கிறது தானே உமக்கு வேல.
ஏன் நான் கதைச்சா என்ன..நீங்கள் உங்களோட படிப்பீக்கிற ரீச்சர் மாரோட கதைக்கிறதில் லயோ, நான் கதைப்பன் விடுவன். நான் ஆம்பிள. என்ன ஆர் கேக்கிறது. உது சரிவராது. பொம்பிளயெண்டா அடிமையே. உங்க ளுக்கிருக்கிற சுதந்திரம் எனக்கும் இருக்கு. நான் கதைப் பன். என்ன ஆரும் கேக்கேலாது. சுதந்திரம் இருக்கிறதா லதான் பிறின் சிபலிட்டப் பேச்சு வாங்கின நீ. அது என்ர தனிப்பட்ட விசயம். அதில நீங்கள் தலை யிடேலாது. பள்ளிக்குடத்தில பிறின்சிபல் பேசினா . த லயக் குனிஞ்சு கொண்டு, அழுது கொண்டு நிப்பாய், இஞ்ச நான் ஏதும் சொன்னாத்தான் உனக்கு வாய் நீளுறது. உங்கட கதைக்கு வாய் நீளாமல் என்ன செய்யும். உங்க
ளுக்கு ஒரு ஞாயம். எனக்கு ஒரு ஞாயமே.
அப்ப. நான் செய்யிறதெல்லாம் நீ யு ம் செய்ய ப் போறியோ.

:
மஸ்ரர் :
மாஸ்ரர் :
அகளங்கன்
உங்கள விட எனக்குச் சம்பளம் கூட. நீங்கள் ஆட்ஸ் பட் டதாரி. நான் சயன்ஸ் பட்டதாரி, உங்களுக்கு அடிமையா இருக்கிற அளவுக்கு என்ர தகுதி குறைஞ்சதில்ல. உன்னட்ட ஆர் இப்ப உதெல்லாம் கேட்டது. பின்ன. விசர்க்கதையள் கதைச்சா கோவம் வராதே,
உன்னோட கதைச்சா அடிக்கோணும். நான் வாறன்.
JAG IT" G) - 8
இடம் வீடு. பாத்திரங்கள்: ரிச்சர், மாஸ்ரர்.
LD Gh)ງ :
ਤ:
மாஸ்ரர்:
:
மாஸ்ரர் :
ນີ້ບໍ່ g):
fģgr:
1ρπου U ή και
:
LAD IT siu) Ja si :
sfj: gsr:
என்னவாம். உம்மட தம்பி வந்திற்றுப் போறான். ஏன் வரக் குடாதோ, அவன் சும்மா சொந்தங் கொண்டாட வாற ஆளில்லயே. இதென்ன கரைச்சலப்பா, என்ர தாய் தகப்பன் சகோத ரங்கள் ஒருத்தரும் இஞ்ச வரக் குடாதே.
என்ர ஆக்கள் வந்தா மட்டும் மூஞ்சய நீட்டிக் கொண்டு நிப்பாய். உன்ர ஆக்கள் வந்தா சாப்பாடு குடுத்து காசும் குடுப்பாய். நான் உழைக்கிறன், நான் குடுப்பன். உங்கட காசிலயே குடுக்கிறன். உன்ர உழைப்பெண்டாலும் என்னட்டக் கேட்டுத்தான் குடுக்கோணும். குடிச்சா. குடிச்சிற்று வந்து சாப்பிட்டிட்டுப் படுக்கிறது
தானே. ஏன் தேவயில்லாத கதைய ள நான் குடிப்பன். கூத்தடிப்பன், அது என்ர உழைப்பு நான் ஆம்பிள. என்ன ஆரும் கேக்கேலாது. நான் உழைக்கிறன். நான் வீட்ட குடுப்பன் வாங்குவன். என்னையும் ஆரும் கேக்கேலாது. நீங்க குடிச்சா என்ன . கும்மாளம் போட்டா என்ன. சாப்பாட்டுக்குக் காசுதந் திற்று மிச்சத்தில செய்யுங்கோ. ஏன் இப்ப உன்ர உழைப்பிலயே நான் சாப்பிடுறன்.
வேற ஆற்ற உழைப்பில சாப்பிடுறியள்.
59

Page 38
அகளங்கன்
மாஸ்ரர்;
sfjiges :
ஆ. அப்பிடியே உன்ர சாப்பாடும் வேண்டாம் ஒரு மண் ணாங் கட்டியும் வேண்டாம் நான் வாறன், இனி இந்த வீட்டுப் பக்கம் எட்டியும் பாக்க மாட்டன், போய்த் துலையுங்கோ.
g, 9 - 9
இடம்: கடைத் தெரு. பாத்திரங்கள்: அங்கிள், மாஸ்ரர் .
மாஸ்ரர் :
அங்கிள்:
LDTail) Jf :
அங்கிள்:
Ip TGil) J. T.:
அங்கிள் :
LDTsi):
அங்கிள்:
மாஸ்ரர்:
அங்கிள்:
மாஸ்ரர்:
60
அங்கிள். அங்கிள். ஒ.மாஸ்ரரே, எங்க உங்கள வீட்டுப் பக்கம் கானேல்ல. வழமபோலச் சண்டதான். இஞ்சால வாங்கோ அங்கிள் தனியக் கதைப்பம்.
ம்.சொல்லுங்கோ. போன வெள்ளிக் கிழம இரவு வீட்ட விட்டு வந்திற்றன். இந்தக் கிழம முழுக்க நான் பள்ளிக் குடமும் போகேல்ல. மனிசி. ஏதும் விசாரிச்சதே.
இல்லயே . ஏன் மாஸ்ரர். பாருங்கோ அங்கிள் ஏழு நாளாப் போட்டுது. நான் எங்க போனன் என்ன செய்யிறனெண்டு அவளுக்கு ஒரு அக் கறயும் இல்ல. அவவோட என்னண்டு அங்கிள் குடும்பம் நடத்திறது. மாஸ்ரர். உங்கட பிரச்சன தீருற பிரச்சனயில்ல. அது சரி மாஸ்ரர், அண்டைக்கு என்ன பிரச்சன. அண்டைக்கெண்டு எ ன் ன புதுசா. அங்கிள் மனிசன் வீட்ட வந்தா மனிசி அன்பாப் பழகோணும். சாப்பாடு போட்டுத் தரோணும். இதென்னண்டா நாய்க்கு வைக்கி றதுபோல. மேசையில வைச்சிருக்கு போட்டுச் சாப்பி டுங்கோ எண்டா எப்பிடி இருக்கும். மாஸ்ரர். நீங்கள் ஒருத்தர ஒருத்தர் விரும்பித்தானே கலியாணஞ் செய்த நீங்கள். இப்பிடி மண ஒற்றுமயில் லாத நீங்கள் எப்பிடிக் காதலிச்சியள். அதேன் அங்கிள் இளம உணர்வில நரகத்தில கால் வைச் சிற்றன். அவளுக்கு இப்ப வாழுறதுக்கு சம்பளம் இருக்கு. பாதுகாப்புக்குப் புள்ள யள் இருக்கு. என்ர தேவையே அவளுக்கு இல்ல.
 

அகளங்கன்
அங்கிள் : சரி . மாஸ்ரர். எனக்கு நேரமாகுது. இப்ப என்ன
செய்யிறது
மாஸ்ரர்: அவள் கேட்டா. என்னக் காணேல்லயெண்டு சொல்
லுங்கோ, அவள் தேடி வரட்டும். பிறகு பாப்பம்.
g, II i "g) - 10
இடம்: வீடு.
பாத்திரங்கள்: ரீச்சர், அன்ரி, அங்கிள்.
莆égf: அன்ரி. அன்ரி.
வாங்கோ ரீச்சர்,
fggit. அன்ரி, அங்கிள் வந்திற்றாரே.
அன்ரி: ஒம் ரீச்சர். இஞ்சான் இருக்கிறார். வாங்கோ.
அங்கிள் வாங்கோ ரீச்சர்.
f(j; g†: அங்கிள்! அவரக் கண்ட நீங்களே. ஒரு கிழமையாப்
போச்சுது. இன்னும் காணேல்ல.
அங்கிள்: இல்ல ரீச்சர். ஏன். எங்க போனவர்.
f5gs: போன வெள்ளி இரவு சண்ட பிடிச்சுக் கொண்டு போன வர் இன்னும் வரேல்ல. பள்ளிக்குடமும் போகேல்லயாம்.
அங்கிள் அப்ப . எங்க டோயிருப்பார்.
ນີ້ບໍ່ Gຕໍ: முந்தி இப்பிடி எத்தினதரம் போயிருக்கிறார். ஆனா ரெண்டு மூண்டு நாளில வ ந் தி டு வார். இப்ப ஒரு கிழமையாச்சு.
அங்கிள் ரீச்சருக்கு மாஸ்ரரில நல்ல அன்புதான். (சிரிப்பு)
ரீச்சர்: அன்போ அன்பில்லயோ, மரியாதயில்லத் தானே. இன் னும் ரெண்டொருநாள் போனா பள்ளிக் குடத்திலயும் கத பரவீரும்.
அங்கிள் சரி. நான் கண்டா கூட்டிற்று வாறன்.
JAG IT” GA - 11
இடம்: வீடு. பாத்திரங்கள்: ரிச்சர், அன்ரி.
sis : ήό στη 1 (ή ή στη 1
ரிச்சர்: வாங்கோ அன்ரி.
.i1 flt உலமூடிய வாங்கீற்று வந்தியள்قqع
61

Page 39
அகளங்கன்
ਲੈ: ஓம் அன்ரி மறந்திற் றன். எங்க அன்ரி. அந்த வேல இந்த வேலயெண்டு. ஒண்டும் ஞாபகத்துக்கு வரூதில்ல. இருங்கோ அன்ரி.
அன்ரி: இல்ல ரீச்சர். வேல கிடக்கு வாறன்.
ήόigή : உங்களுக்குத்தான் வேல குறையாதே.
oចំណាំ: ஒம் ரீச்சர். அக்காட மகளுக்குக் கலியான வீடு. வந்து சொல்லீற்றுப் போகினம். அவேக்கு உதவிக்கு ஆளில்ல. ஒரு கிழமைக்கு முதலே போய் நிண்டு செய்து குடுக் கோணும்.
fiğ gFİr: உங்களுக்கு எங்க போனாலும் வேல குறையாது (சிரிப்பு)
அன்ரி: ஒரு கிழமைக்கு முதலே போக வேணுமெண்டா அவருக்கு
நேரமில்லயாம்.
fégाँ : அன்ரி! ஆம்பிளயளே இப்பிடித்தான். தங்கட ஆக்களின்ர வீட்டில ஏதுமெண்டா சந்தோசமாக் கூட்டிக் கொண்டு போய் விட்டிருவினம். எங்கட ஆக்களின்ர வீடுகளில ஏது மொண் டி ன் டா பின்னடிப்பினம். எத்தின சாட்டுச் சொல்லுவினம்.
gចំណាំ: அ. அவர். அப்பிடிப் புறம்பு காட்டிற ஆளில்ல ரீச்சர்.
får gFfi: அன்ரி. உங்களுக்கு ஆம்பிள யளின்ர சுபா வஞ் சரியாத் தெரியாது. ஆம்பிளயஸ் சுயநலந்தான் பாப்பினம். மனிசி மார அடிமையா வைச்சு வேல வாங்கித் தாங்கள் மட் டும் எல்லாச் சுகத்தயும் அனுபவிச்சுக் கொள்ளுவினம்.
அன்ரி: நான் வாறன் ரீச்சர். வேல கிடக்கு.
g6 (TL’9) - 12
இடம்: வீடு.
பாத்திரங்கள்: அன்ரி, அங்கிள்.
அன்ரி:
62
என்ன. முகத்த ஒருமாதிரிப் பிடிச்சுக் கொண்டு நிக்கி றாய். என்ன பிரச்சன. சொல்லன்.
சொல்லி என்ன பிரயோசனம், எல்லாம் உங்கட எண் ணத்துக்குத் தானே நடக்குது. விளங்கேல்ல எனக்கு. புதுசா ஏதோ சொல்லுறாய்.
 

அகளங்கன்
கலியாண வீட்டுக்கு ஒரு கிழமைக்கு முதலே அங்க போகோ னும் .
அங்கிள்: நான்தான் சொன்னனே. எனக்குக் கடையில கொஞ்ச முக்கியமான வேலயிருக்கு. மூண்டு நாலு நாளைக்குப் பொறுத்துக் கொள்ளு.
அன்ரி: (மெதுவான சத்தத்தில்) ஆம்பிளயளே இப்பிடித்தான்.
அங்கிள் என்ன முணுமுணுக்கிறாய். முழுசாச் சொல்லன்.
அன்ரி: உங்கட ஆக்களின்ர வீட்டில ஏதுமிண்டா, பத்து நாளைக்கு முதலே கொண்டு போய் விட்டிடுவியள். என்ர ஆக்க ளுக்கு ஏதுமிண்டாத்தான் உங்களுக்கு நேரம் இருக்காது.
அங்கிள்: இஞ்சேரும், நான் உப்பிடியெல்லாம் பாக்கிற ஆளில்ல. உன்ர ஆக்கள் என்ர ஆக்கள் எண்டு புறம்பு காட்டிற பழக்கம் என்னட்ட இல்ல.
எல்லா ஆம்பிளயஞம் உப்பிடித்தான் சொல்லுவினம்.
அங்கிள்: சரி. இப்ப . எனக்கு விளங்குது. இப்ப கொஞ்சக் காலமாத்தான் உந்த நோய் தொத்தீருக்கு. சரி. நாளைக்குப் போவம். ஒரு கிழமையில்ல நாளையே ஒன்பது நாள் இருக்கு. நீ ஆயத்தப்படுத்து.
st 9 - 13
இடம்:
பாத்திரங்கள் அன்ரி, அங்கிள்.
கலியான வீடு முடிஞ்சு மூண்டு நாளாப் போட்டுது. நாளைக்கு வீட்ட போவம்.
அங்கிள்: இன்னும் ரெண்டு நாளைக்கு இஞ்ச நில்லு. அங்க கொஞ்சம் வேலயிருக்கு, முடிச்சிற்று வந்து கூட்டிப் போறன்.
அன்ரி: என்ன வேல. கடையில ஏதும் முக்கியமான வேல இருக்கே.
கனநாளாப் போட்டுது.
அங்கிள் கடையில ஒரு வேலயும் இல்ல, நான் வேற வீடு பாத்தி ருக்கிறன். அதுக்கு இண்டைக்கு அட்வான்ஸ் குடுத்திற்று நாளைக்குச் சாமான்கள ஏத்திக் கொண்டு போய் போட் டிட்டு வாறன். நாளேண்டைக்கு வெள்ளிக்கிழம நல்ல நாள். போய்ப் பால் காய்ச்சுவம்.
ஏன். பழய வீட்டுக்கு என்ன குற, நல்ல வசதியான வீடு தானே.
ஆஓள் வீடு வசதி தான். ஆனா அந்த வீட்டில தொடர்ந்து
இருந்தமிண்டா மாஸ்ரர் குடும்பம் மாதிரித்தான் எங்கட குடும்பமும் மாறிருமோ எண்டு பயமா இருக்கு.
(Up fibpl Lib.
63

Page 40
g. T
5. உருகி எரியும் கர்ப்பூரங்கள்
இடம்:
காட்சி - 1
LI FT LFT GINN Gnou îsi) e, 9A su u sar 9 Goog). (Staff Rocm)
பாத்திரங்கள்: கணேஸ், மாதினி.
கனேஸ்:
மாதினி:
கனேஸ்:
மாதினி: கனேஸ்:
மாதினி:
கனேஸ்:
به وییر خم) மாதினி
கனேஸ்:
மாதினி:
64
என்ன மாதினி களைச்சுப் போய் வாரீர். நல்ல வேல போல கிடக்கு. ஒம் கணேஸ் இண்டைக்கு சரியான வேல, கால முதல்ப் பாடந் தொடக்கம், எட்டாம் பாடம் வரைக்கும், ஏழு பாடமும் படிப்பீக்கிறதெண்டாக் கஸ்ரந்தானே. இப்ப எட்டாம் பாடம் என. ஏழாம் பாடம் முடிஞ்சு பெல் அடிச்சாச்சுதோ . உங்களுக்கு அதுகூடத் தெரியாதே கணேஸ்! புத்தகம் வாசிச்சுக் கொண்டிருந்ததில பெல் அடிச்சதக் கவனிக்கேல்ல சரி பெல் அடிச்சா அடிக்கட்டும். இப்ப என்ன வந்தது உமக்கு எட்டாம் பாடம் பிறியே மாதினி. (சிரித்தபடி) அல்லாட்டி பிறீ ஆக்கிற்றிரோ. பிள் ளயஞக்குப் படிப்பீக்க எவ்வளவு கிடக்கு.ம் . எனக்கு இப்ப ரைம் ரேபிளில பிறீ. அதுதான் வந்தனான். அது தானே பாத்தன். ஏன் ஏதும் வகுப்புக்கள் பிறியா இருந்தாப் போயிருப்பீரே. (சிரிப்பு) சும்மா கேலி செய்யாதேங்கோ கணேஸ். எங்களால முடிஞ்ச அளவுக்கு நாங்கள் படிப்பீச்சு விடுவம். அதுக்கு மேல பிள்ளயளின்ர பொறுப்பு. இண்டைக்கு சரியான களைப் பாயிருக்கு. அதோட வகுப்பொண்டும் பிறீயாயில்ல. ஒம். ஓம் இண்டைக்கு எல்லா ரீச்சேசும் வந்திருக்கினந் தானே. அதால தான் தப்பின நீர். (சிரிப்பு) உங்களுக்கு இப்ப பிறியோ..! பிறீ மாதிரித்தான். ஏழாம் பாடம் பிள் ளயஞக்குக் கொஞ் சம் வேல குடுத்துப் பேக் காட்டிப் போட்டு இஞ்ச வந்திற் றன். இனி எட்டாம் பாடத்துக்கு ஆர் வகுப்புக்குப் போவது.
 

மாதினி:
கனேஸ்:
மாதினி:
(3o giu:
மாதினி
கனேஸ்:
மாதினி:
அகளங்கன்
கணேஸ்! உங்கட படிப்புக்கும் அறிவுக்கும் நீங்கள் செய் யிறது சரியாத் தெரியுதே. கொஞ்சம் யோசிச்சுப் பாருங்கோ கணேஸ்.
மாதினி உமக்குச் சொன்னா என்ன..ம். எனக்கு இந்தத் தொழிலில விருப்பமே இல்ல. நான் வெளி நாட்டுக்குப் போகப் போறன். அது வரைக்கும் பொழுது போக வேணுமே இது சம்பளத் தோட,பொழுது போக்கு. (சிரிப்பு)
கணேஸ்! நீங்கள் ஒரு B. A. பட்டதாரி. நல்ல அறிவாளி. நீங்கள் மனம் வைச்சுப் படிப்பிச்சா எத்தனையோ மாண வரை நல்ல நிலைக்கு உருவாக்கலாம். ஆ.கொஞ்சம் நிப்பாட்டும். (சிரிப்பு) நீர் எப்பவும் இப் பிடித்தான் செ T ல் லு றி ர். ஆனா எனக்கு இந்தத் தொழிலே பிடிக்கேல்ல. எப்பவும் எங்களவிட அறிவு குறைஞ்சவர்களோடயே பழக வேண்டியிருக்கு அதோட. இந்தத் தொழிலில எதிர்காலமே இல்ல உ  ைழ க் கேலாது. சுதந்திரமில்ல. உண்மையில இது ஒரு தொழிலில்லத்தான். இது ஒரு சேவை. அதிகமா உழைக்கேலாதுதான். ஆனா நல்ல லீவிருக்கு.நல்ல ஒய்விருக்கு. மாதினி. நாங்கள் ரீச்சேர்ஸ் எண்டா பள்ளிக்குடத்தில மட்டுமில்ல வெளியிலயும் ரீச்சேர்ஸ் தானே. ஒரு சிகரட் குடிக்கிறதெண்டாலும் ஒளிச்சு மறைச்சுத்தான் குடிக் கோணும். ஒரு கலர் சேட்டுப் போடுற தெண்டாலும் கொஞ்சம் யோசிச்சுத் தான் போடோணும். எங்கட நடத் தைய இந்தச் சமூகம் எப்பவும் கவனிச்சுக் கொண்டே இருக்குது. அதால .நாங்கள் எப்பவும் சுதந்திரமில்லாமல், இந்தச் சமூகத்துக்குப் பயந்து நடிக்க வேண்டியிருக்கு. நீங்கள் சொல்லுறது போல தான் பல ஆசிரியர்கள் சொல்லுகினம். ஆனா .நான் உத ஒத்துக் கொள்ள மாட்டன். நல்ல ஒழுக்கமும், நல்ல சிந்தனையும் இயல்பா அமைஞ்சிற்றா நடிக்கத் தேவையில்ல கணேஸ். ஆசிரியர் கள், மாணவர்களுக்கு மட்டுமில்ல சமூகத்துக்கே முன்னு தாரணமா இருக்க வேணும். அதால நல்ல பழக்கங்கள ஆசிரியர்கள் கடப்பிடிக்கத்தான் வேணும்.
அது சரி மாதினி ஒரு நாப்பது வயதுக்குப் பிறகெண்டா நீர் சொல்லுறது போல இயற்கையாயே நடந்து கொள்
65

Page 41
அகளங்கன்
மாதினி:
கனேஸ்:
மாதினி:
கனேஸ்:
மாதினி:
கணேஸ்:
மாதினி:
கனேஸ்2
66
ளக் கூடியதா அமையக் கூடும். ஆனா.அது வரைக்கும் எங்கட ஆசாபாசங்களத் தியாகஞ் செய்ய வேண்டி யிருக்கே.அது தான் சொல்லுறன்.இது ஒரு அடிமைத் தொழில். அதால தான் நான் இந்த வேலய விட்டிட்டு வெளில போக விரும்புறன். நீர் தான் விடுறீரில்லயே. நான் தடுத்தா.நீங்கள் வேறவிதமா குற சொல்லுவியள். நான் என்ன செய்ய கணேஸ். நீர் எப்பிடியாவது ஒரு லட்சம் தாரும். மிச்சத்த நான் எப்பிடியெண்டாலும் மாறிடுவன். கலியான வீடு முடிஞ்சு நான் வெளீல போயிருவன். பிறகு நீரும் அங்க வந்திர
GROTTLD .
சரி கணேஸ். விருப்பமில்லாமல் ஒரு தொழிலில. அதுவும் புனிதமான. புண்ணியமான இந்த ஆசிரியத் தொழி
லில இருக்கிறது ஒருத்தருக்கும் பிரயோசனமில்லத்தான். ஆனா.நீங்கள் கேக்கிற காசுக்கு நாங்கள் எங்க போறது. வீட்ட.உம்மட அப்பாட்டச் சொல்லி ஒரு வழி பண்ணப் பாருமன். இந்தக் காலத்தில இது ஒரு பெரிய சீதணமே . உங்களுக்குத் தெரி யா தே கணேஸ். அப்பா ஆசிரியத் தொழிலில முப்பத்தைஞ்சு வருஷம் இருந்து இப்ப பென்சன் எடுத்துக் கொண்டிருக்கிறார். அவரிட்ட என்ன இருக்குது தாறத்துக்கு.இருக்கிற வீடும் கொஞ்ச நகையும் தான் இருக்கு.ஒரு லட்சம் ரூபா காசுக்கு அவர் எங்க போறது.
மாதினி பாத்தீரே. உம்மட அப்பான்ர நிலய, முப்பத் தைஞ்சு வருசமா ஆசிரியத் தொழிலில இருந்தவர், இப்ப அவரிட்ட தன்ர மகளுக்குச் சீதனம் குடுக்க, ஒரு லட்சம் ரூபா காசுக்கே வழியில்ல. இதுதான் ஆசிரியத் தொழி லின்ர மகத்துவம்,
என்ன செய்ய, சமுதாய முன்னேற்றத்துக்கு ஏணியாயும், தோணியாயும் செயற்படுற ஆசிரியர்கள், சொந்த வாழ்க் கையில பணமில்லாமல் நாணித் தலைகுனிய வேண்டி யிருக்கு.
என்னவோ.மாதினி.கெதீல காசுக்கு ஒரு வழி பண்
ணினா நல்லது.
 

இடம்:
அகளங்கன்
36 (T"|9) - 2
தனியிடம் .
பாத்திரங்கள்: கனேஸ், மாதினி,
கனேஸ்:
மாதினி:
கனேஸ்:
மாதினி:
கனேஸ்:
மாதினி:
கனேஸ்:
மாதினி:
கனேஸ்:
மாதினி:
என்ன மாதினி, நான் வந்து அரை மணித்தியாலமாகக் காத்திருக்கிறன். நீர் இப்பதான் வாlர். சொறி கணேஸ்! நான். நீங்கள் சொன்ன நேரத்துக்கே வந்திருப்பன். ஆனா. என்னட்டப் படிக்கிற ஒரு மான வன் வீட்ட வந்து ஒரு கட்டுரை எழுதப் பொயின்ஸ் கேட் டான். கொஞ்ச நேரம் விளங்கப்படுத்தீற்று வந்தன். அது தான் பிந்தீற்று. இப்பிடி வீட்டி லயும் ஸ்ருடன்ஸ் வந்து படிக்கத் தொடங் கினா. பள்ளிக்குடத்துக்கும் வீட்டுக்கும் வித்தியாசம் இல் லாமப் போயிரும். பிறகு நிம்மதியே இருக்காது மாதினி.
இல்லக் கணேஸ். ஆசிரியர்களின்ர வீடும் ஒரு பாடசாலை தான். உதெல்லாம் எனக்குச் சரிப்பட்டு வராது. நான் வகுப்பி லேயே ஒழுங்காப் படிப்பிக்கிறதில்ல, பிறகு வீட்ட ஏன் வாறாங்கள். (சிரிப்பு) ஒரு டொக்டர் தன்ர கடமயச் சரியாச் செய்யாட்டி அந் தத் தவறு மண்ணோட போயிரும். ஆனா ஒரு ஆசிரியர் தன்ர கடமயச் சரியாச் செய்யாட்டி அந்தத் தவறு சந்திக்கு வரும் எண்டு அப்பா அடிக்கடி சொல்லுவார். சரி மாதினி. உதெல்லாம் ஏன் இப்ப. உதவிடும். வேற ஏதும் நல்ல விசயத்தக் கதைப்பம். அப்ப. எங்கட கலியாணத்தப் பற்றிக் கதைப்பம் . (சிரிப்பு) மெய்ய மாதினி, வீட்டில கேட்டநீரே. என்ன சொல்லு றார். எனக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் வருகுது கனடாக்குப் (BLT 5. 6Ꭲ ᎧᎫᎶlᎢ 60l கெதீல நீர் 45[Tóቻr தாlரோ. அவளவு கெதீல போகலாம். கணேஸ். என்னை என்ன செய்யச் சொல்லுறியள். அப் பாவப்பற்றி உங்களுக்குத் தெரியாதே. இவளவு காசுக்கு அவர் எங்க போவார்.
67

Page 42
அகளங்கன்
கனேஸ்:
மாதினி:
கனேஸ்:
மாதினி:
கனேஸ்:
மாதினி:
மாதினி:
கனேஸ்:
மாதினி:
68
ஏன் மாதினி அவரிட்டப் படிச்ச மாணவர்களெல்லாம் பெரிய பெரிய நிலையில இருக்கிறதாப் புழுகுவீர். அந்த மாணவர்கள் ஆரிட்டயும் கடன் வாங்கித் தரேலாதே! கடன் வாங்கிப் போட்டுத் திருப்பிக் குடுக்க என்ன வழி யிருக்கு.
மாதினி ஒண்டு சொல்லுறன், ஒரு லட்சம் ரூபா இந்தக் காலத்தில ஒரு பட்டதாரிஆசிரியருக்கு பெரிய சீதணமில்ல. பிறகு நீர் கவலப்பட வேண்டி வரும். நீங்கள் என்ன சொல்லுறியளெண்டு எனக்கு விளங்குது (அழுகிறாள்) நீங்கள் காசு வாங்கிக் கலியாணம் முடிக்கக் கூடிய இடத்தில கலியாணம் முடிச்சு ச ந் தோ ச மா இருங்கோ. நான் வாறன். (அழுகிறாள்)
மாதினி. மாதினி 1. நில்லும் . நில்லும். நான் சும்மா பகிடிக் கெல்லோ சொன்னனான். எனக்கு நீர் வேணும், அதோட காசும் வேணும் நானென்ன செய்ய. கண்ணத்
துடயும். அழாத யும். இந்த ஆசிரியத் தொழிலிலயே இருந்து வாழேலாதெண்டு நினைக்கிறியளா. உங்களுக்கு வீட்டில ஒரு பொறுப்பும் இல்லத் தானே. பிறகேன் வெளிநாட்டுக்குப் போவான்.
எனக்கு வீட்ட ஒரு பொறுப்புமில்லத்தான். அம்மா மட்டுந் தானே என்னோட இருக்கிறா. அவவையும் அண்ண, அக்கா ஆரும் வைச்சுப் பாப்பினம். (கோபமாக) ஏன் அப்பிடிச் சொல்லுறியள். தாயைப் பாக்க வேற ஆக்கள் இருக்கினமெண்டு சொல்ல உங்களுக்கு எப் பிடி மனம் வருகுது. நீங்கள் படிச்சு வாங்கின பட்டத் தில என்ன பிரயோசனம் இருக்குது. எனக்கு அம்மாவை நினைச்சா இப்பவும் கவலயாயிருக்கு தாயன்பை கனடா விலயோ, லண்டனிலயோ, ஏன் சந்திர மண்டலத்திலயோ கூட வாங்கேலாது.
மாதினி!.கொஞ்சம் நிப்பாட்டும். (சிரிப்பு) இண்டைக்குத் தான் நீர் கோபமாக் கதைச்சுப் பார்த்திருக்கிறன். நீர் என்ன சொன்னாலும் சரியாத்தான் இருக்கு. ஆனா. கணேஸ்.சொறி என்ன மன்னிச்சுக் கொள்ளுங்கோ.
சொல்லும் மாதினி. ஏதோ சொல்லத் துடங்கினீர் .
சொல்லும்,
 
 

அகளங்கன்
மாதினி நாங்கள் ரெண்டு பேரும் உத்தியோகம் பாக்கிறந் தானே. எங்கட சம்பளம், எங்கட வாழ்க்கைக்குக் காணுந் தானே. உங்கட அம்மாவையும் நாங்கள் வைச்சுப் பாப்பம். நான் அவவுக்கு மருமகளாயில்ல, ஒரு மகளாயிருந்து கவனிப்பன். கணேஸ் சரி. சொல்லும். கேக்க நல்லாத்தான் இருக்கு. மா இனி நீங்கள் இன்னும் கொஞ்சக் காலத்தில ஒரு (Principal)
பிறின் சிபல் ஆகி அப்பிடியே முன்னேறலாந் தானே! கணேஸ்: ஒரு பிறின்சிபல் ஆக வந்திற்றா நல்லா உழைக்கலாந் தானே. என. பிள் ளயளச் சேர்க்கேக்க அட்மிசன் பீஸ் (Admission Fees) 6T657 Gib Spg5 ( Facilities Fees) uglassi) றிஸ் பீஸ் எண்டும் பிறகு(Exam Fees)எக்ஸாம் பீஸ் எண்டும் பலவகை வாங்கி உழைக்கலாம். சிரிப்பு. மாதினி கணேஸ்! உங்கட மூள ஏன் இந்தத் திசையிலயே வேல செய்யுது. ஒரு நல்ல ஆசிரியரா. ஒரு நல்ல அதிபரா . ஏன் ஒரு நல்ல மனிதனா இருக்கோணுமெண்டு ஒரு இலட் சியமும் இல்லையே உங்களுக்கு. கணேஸ் மாதினி1. நான் எப்பிடியானவனெண்டு உமக்குச் சரியாத் தெரியாது.ம்.சும்மா பகிடிக்கெல்லோ சொன்ன நான். மாதினி அப்ப என்ன. வெளிநாட்டுக்குப் போற ஐடியா (Idea)
வக். கைவிட்டாச்சுதே .
கணேஸ்: நீர் சொல்லுற மற்றதெல்லாம் சரி. ஆனா. வெளிநாட் டுக்குப் போறது போறது தான். நீர் காசு தராட்டி நான் எங்கயாவது வசதிப்பட்டா கடன் வாங்கிக் கொண்டு போறதாத்தான் ஐடியா இருக்கு. (சிரிப்பு)
காட்சி - 3
இடம்: வீடு. பாத்திரங்கள் குமார், மாதினி, வைத்தியலிங்கம் ஆசிரியர்.
(மாதினியின் தந்தை)
குமார்: சேர்.சேர். (கதவைத் தட்டுகிறார்) ஆசிரியர்: பிள்ள ஆரோ கதவத் தட்டுகினம்போல கிடக்கு போய்ப்
பாரம்மா.
மாதினி ஆரது .
69

Page 43
அகளங்கன்
குமார்: மாதினி:
ஆசிரியர்: மாதினி:
ஆசிரியர்:
மாதினி, குமார்: ஆசிரியர்: குமார் : ஆசிரியர்:
குமார்: ஆசிரியர்:
குமார்:
ஆசிரியர்
மாதினி: -ẹ,3ìffìuửt
(gorit:
மாதினி:
70
சேர் இருக்கிறாரோ . ஒம். வாங்கோ. உள்ளுக்கு வாங்கோ இருங்கோ. அப்பா கிணத்த டீல நிக்கிறார். வருவார் அப்பா!. ஆரோ வந்திருக்கினம்
ஆர் பிள்ள. எனக்கிண்டா எப்பவோ பாத்த மாதிரிக் கிடக்கு ஆனா அடையாளந் தெரியேல்ல. சரி.நீ. தே த்தண்ணி போட்டுக் கொண்டு போய்க் குடு, நான் சேவ் எடுத்திற்று வாறன். இருங்கோ. அப்பா இப்ப வந்திடுவார். குட் மோணிங் .சேர்.
குட் மோணிங். இருங்கோ. சேர் என்னத் தெரியேல்ல யா சேர், இப்ப பார்வையும் கொஞ்சம் குறைவு தம்பி பொறுங்கோ
கண்ணாடி போட்டிட்டுச் சொல்லுறன். என்ன சேர். கொஞ்சமும் அடையாளந் தெரியேல்லயே ம். இல்லத் தம்பி உம்மட பக்குவத்தப் பாத்தா எனக்கு என்ர மாணவன் ஒருவனைத்தான் ஞாபகம். 62.J(U5 Gğ5ğ5/1 -- • • • • ஆனா .
சேர். சொல்லுங்கோ சேர்! நிச்சயமா நீங்கள் என்னச் சரியாக் கண்டு பிடிச்சிருவியள். (மெதுவாக) என்னட்ட அட்வான்ஸ் லெவல் கிளாசில இருந்து படிச்சு. நல்ல றிசல்ஸ் எடுத்து பல்கலைக் கழகம் போன மாணவன். அந்த வருசம் அவனுக்குத் தான் நல்ல றிசல்ஸ் (Results) இந்தாங்கோ. ரீ குடிங்கோ. இஞ்சால வையம்மா. பிள்ள. உனக்கு இவர அடை யாளந் தெரியுதே.
சேர். இவ. உங்கட மகள் மாதினி தானே. நாங்கள் இஞ்ச படிக்க வந்து போன காலத்தில எங்கட கொப்பி புத்தகங்கள எடுத்து விளையாடித் திரிஞ்சவ. பழைய பேப்பரில கப்பல் செய்து குடுத்தா, டான்ஸ் ஆடிக் காட்டுவா.
அப்பா. ஞாபகம் இல்லயே. ஆர் எண்டு. என்னப்பா நீங்கள்.
 

ஆசிரியர்:
குமார்:
ஆசிரியர் :
குமார்:
ஆசிரியர்: குமார் : ஆசிரியர்:
குமார்:
ஆசிரியர்
குமார்:
ஆசிரியர்:
குமார்!
குமார்:
ஆசிரியர்:
அகளங்கன்
எனக்கு ஞாபகம் இருக்கம்மா இல்லாமலில்ல. ஆயிரம் பேருக்குள்ளயும் என்ர மாணவர்கள என்னால தனிச்சு இனங்காண முடியும். ஆனா - பெயர்தான் . ஆ குமாரதா சன். சேர்! இப்பதான் சேர் எனக்கு சந்தோசமா இருக்கு. எங்க என்ன மறந்து போனீங்களோ எண்டு கவலப்பட்டன். இப்ப என்ன செய்யிறீர் குமாரதாசன்
நான் நேற்றுத் தான் சேர் இஞ்ச வந்தனான். இண்டைக்கு வேலயப் பொறுப்பேற்கப் போறன். உங்களிட்ட வந்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டு போகத்தான் வந்தனான். இஞ்ச என்ன வேல தம்பி! உதவி அரசாங்க அதிபர், ஏ.ஜி.ஏ (A.G A) புது ஆள் வாற தாக் கதையடிபட்டது. நீர் தானே 6 சீ. என்ன இது. காலில விழுந்து . எழும்பும் தம்பி குமாரதாசன். நீர் இப்ப இருக்கிற நிலமைக்கு இது சரியில்ல. சேர். இண்டைக்கு நான் உங்கள ஒரு நல்ல காரியத் துக்குக் கூப்பிடப் போறன். மறுக்கக் கூடாது சேர் என்ன விசயம் . சொல்லும். இண்டைக்கு சரஸ்வதி பூசைக் கடைசி நாள். விஜயதசமி. எங்கட கச்சேரியில வழமையா இந்த நாளை விசேசமாக் கொண்டாடுறதாம். இண்டைக்குத்தான் நானும் வேலயப் பொறுப்பேற்கப் போறன். பின்னேரம் கலை நிகழ்ச்சிகள் சொற்பொழிவுகள் இருக்கு. நான் விளம்பரத்தப் பார்த்தனான். ஆனா.அதில ஒரு பெரிய குறை. சொற்பொழிவாளர் பட்டியலில உங்கட பெயர் இல்ல. இப்ப நான் உதுகளுக்கெல்லாம் போறதில்லத் தம்பி. கொஞ்சம் அமைதியாகக் கடவுள் வழிபாடோட காலம் போகுது. சேர்! இண்டைக்குப் பேசவாற பேச்சாளர்களில முக்கிய மானவரே உங்கட மாணவன் தான். பேராசிரியர் சோ ம சுந்தரம். ஓம். ஓம். என்னட்டப் படிச்சு பல்கலைக் கழகம் போன முதல் மாணவன். அந்தக் காலம் நான் சரியான கஸ்டப்
71

Page 44
அகளங்கன்
குமார்:
ஆசிரியர்:
குமார்:
ஆசிரியர்: குமார்:
மாதினி :
குமார்:
இடம்:
பட்டுத்தான் படிப்பீச்சனான். அப்ப அவங்களுக்கு படிக்க ஒரு வசதியுமே இருக்கேல்ல. நூலக வசதியே இல்ல. கொஞ்ச நாள் உங்கட வீட்டிலயே நிண்டு படிச் சதா அவரே என்னட்ட ஒருமுறை சொன்னவர். மிக நல்ல மாணவன். நல்லா முயற்சி செய்தான். எங்கட கையில என்ன இருக்கு. எல்லாம் அந்தக் கடவுளின்ர வேல. சேர்.கட்டாயமா நீங்கள் வந்து ஒரு அரை மணித்தியால மெண்டாலும் பேசவேணும். பின்னேரம் நான் எங்கட ஒபீஸ் (Office) ஜீப்ப அனுப்பி விடுறன். ஏன்.வீண் சிரமம் தானே.
இதொண்டும் கஸ்ரமில்லச் சேர்.வாறன் சேர்.தங்கச்சி மாதினி வாறன் அம்மா. என்ன ஞாபகம் இருக்கா. கப்பல் செய்து தாறன் டான்ஸ் ஆடிக் காட்டுறியளா. (சிரிப்பு) என்ன செய்யிறியள்.
படிப்பீக்கிறன். அப்பாவப் போல. நீங்களும்; எங்களப் போல பல பேர உருவாக்க வேணும், வாறன்.
JAG IT” SA - 4
வீடு.
பாத்திரங்கள். குமார், சந்திரன், வைத்திய லிங்கம் ஆசிரியர்.
குமார்:
சந்திரன்:
குமார்:
72
சந்திரன்!. நீ ஒரு வருசமா இஞ்ச எஞ்சினியரா வேல பார்க்கிறாய். நீ எங்கட வைத்தியலிங்கம் சேர் வீட்ட போறதில்லையே. போயிருக்கிறன் குமார்.ஏன் என்ன பிரச்சின. நான் இஞ்ச வந்து வேலயப் பொறுப் பெடுக்க முதல் அவற்ற வீட்ட போய் அவரிட்ட ஆசி பெற்றுத்தான் வேலயப் பொறுப் பெடுத்த நான். இப்பவும் இருந்திற்று ஒரு நாளைக்குப் போய் வாறனான். ஏன் அவர் இப்ப கூட்டங்கள் ஒண்டிலயும் கலந்து கொள் ளுறதில்ல.நேற்று நான் அவர வற்புறுத்தித்தான் பேச வைச்சன். எப்பேற்பட்ட பேச்சாளன். என்ன அறிவாளி அவர் இப்பிடி முடங்கிக் கிடந்தா எங்கட சமூகத்துக்கு எவளவு பெரிய நட்டம், என .
 

சந்திரன்:
குமார்:
சந்திரன்:
குமார்:
சந்திரன்:
(95ưD Tử:
சந்திரன்:
குமார்:
சந்திரன்:
குமார்:
சந்திரன்:
குமார்:
சந்திரன்:
குமார்:
சந்திரன்:
அகளங்கன்
உண்மதான் குமார் ஆனா. அவருக்கு கொஞ்சம் பிரச்சன. மகளின்ர கலியாணப் பிரச்சன எண்டு கதை, அதா ல நிம்மதியில்லாமல் இருக்கிறார். அப்பிடி என்ன பெரிய பிரச்சன சந்திரன். அவற்ற மகள் ஒரு பொடியன விரும்பிறாளாம். அந்தப் பொடியன் கொஞ்சம் காசு சீதனமாக் கேக்கிறானாம், கனக் கவாமே.
ஒரு லெச்சம் ரூபா கேட்டதாக் கதை. அந்தாளரிட்ட எங் கால அவளவு காசு. அவற்ற மனிசி செத்து ரெண்டு வருச மாகுது. அந்தச் செத்த வீட்டுச் செலவே இன்னும் குடுத்து முடிஞ்சிருக்காது. என்னடாப்பா. நீ இஞ்ச இருந்து கொண்டு, அவருக்கு உதவி செய்யாமல் விட்டனியே, உனக்கென்ன குற, யூனி வெசிற்றியில படிக்கிற காலத்தில அவரக் கடவுள் எண்டு சொல்லுவாய். இப்ப எல்லாம் மறந்திற்றியே குமார். இப்பவும் அவர் எனக்குக் கண்கண்ட தெய்வந் தான். ஆனா. உனக்குத் தெரியுந்தானே. அவரப்பற்றி. ஆற்ற உதவியயும் லேசில ஏற்கமாட்டார். என்னாலயம் வற்புறுத்திக் குடுக்க முடியேல்ல. எனக்கு இன்னும் அவரக் 956ööT LITTLI LILLI Lib.
இப்ப என்ன பயம் சந்திரன். என்னவோ. எனக்கு இப்பவும் அவரக் கண்டா ஒரு பயம் இருக்கு. அப்ப சந்திரன். அந்தப் பொடியன் அப்பிடிச் சீதனம் கேட்டா. வேற எங்கயும் செய்து வைக்கிறது தானே. குமார்.என்ன பகிடியா விடுறாய். அவள் அந்தப் பொடி யனக் காதலிக்கிறாள் எண்டு சொல்லுறன். காதலிச்சா இப்பிடிச் சீதனம் ஏன் கேப்பான். குமார்.பொடியன்ர குணத்தப் பற்றி எனக் கொண்டுந் தெரியாது. ஆனா மாதினி வைத்தியலிங்கம் சேறின்ர மகள் தகப்பன்ர கொள்கை மகளுக்கு இருக்காதே. 'கூழுக்குமாச மீசைக்கும் ஆச' எண்டா என்ன செய்யிறது. குமார் . நான் உனக்கு ஒரு கத சொல்லுறன் கேள். அப்ப நாங்கள் ஒ/எல் (O/L) வகுப்புப் படிக்கிறம் எங்கட சேர் தான் தமிழ் படிப்பீச்சவர்.
73

Page 45
அகளங்கன்
g, III " GA - 5
Li 60 pul Esri.S. (Flash Back)
இடம்: வகுப்பறை, பாத்திரங்கள்: ஆசிரியர், சந்திரன், குமார்.
ஆசிரியர்: வான்மீகி முனிவர் பாடிய இராமாயணத்திற்கும், கம்பன் பாடிய இராமாயணத்திற்கும் சில இடங்களிலே வித்தி யாசம் உண்டு. கம்பன் தமிழ்ப் பண்பாட்டுக் கேற்ப சில காட்சிகளைப் புகுத்தியும், திருத்தியும், கை விட்டும் புதுமை செய்திருக்கிறான். உதாரணமாக, கம்பனின் இராமாயணப்படி வில் வளைப்பிற்கு முன்னதாகவே இரா மனும் சீதையும் ஒருவரை ஒருவர் கண்டு காதல் கொண்டு விடுகின்றனர். இந்தக் காட்சியைக் கம்பன் மிக அருமை யாக ஒரு நாடகக் காட்சி போலக் காட்டுகிறான். 'எண்ணரு நலத்தினான் இனைய நின்றுழி
கண்ணொடு கண்ணிணை கவ்வி ஒன்றையொன்று உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்.'
இருவர் உணர்வுகளும் ஒன்றாயின. கண்களைக் கண் கள் கவ்விக் கவர்ந்தன. காதல் பிறந்தது. என்ன. பிரச்சன . சந்திரன். சந்திரன்! இல்ல சேர். ஒண்டு மில்ல. ஆசிரியர்: கேள்விய என்னட்டக் கேட்டாச் சரியான விளக்கத்தப் பெறலாம். பக்கத்தில உள்ள மாணவனிட்டக் கேட்டு அரகுறயா அறிஞ்சு பிரயோசனமில்ல. குமாரதாசன். சந்திரன் என்ன கேட்டவன் . (51Das : சேர். ஏதோ. சொன்னான். விளங்கேல்ல சேர். ஆசிரியர்: சந்திரன். என்ன பிரச்சன. கேள். சந்திரன்: சேர். வில்ல முறிக்க முதலே சீதையும் ராமரும் ஒருத்தர ஒருத்தர் விரும்பீற்றினம் எண்டு பாடினது பிழைதானே சேர். சிலவேள ராமரால வில்ல முறிக்கேலாம போயி
ருந்தா ரெண்டு பேற்ற கற்பொழுக்கமும் பிழயாகி இருக் குந் தானே சேர்.
74
 

ஆசிரியர் :
சந்திரன: ஆசிரியர்
சந்திரன் :
அகளங்கன்
நல்ல கேள்வி. கல்வியிற் பெரியவன் கம்பன். அந்தக் கம்பனிலேயே பிழை பிடிக்கிற மாணவர்கள் இந்த வகுப் பில இருக்கிறது எனக்குப் பெருமதான். ஆனால் கம்பன் பிழைவிடவில்லை. இராமனும், சீதையும் சந்தித்த அன்று இரவு இராமன் அந்த நிகழ்ச்சியைப் பற்றி இப்படிச் சிந் திக்கிறானாம். எனது மனமும் கண்களும், ஒரு பொழு துமே தவறான வழியில செல்லாதவை. அதனால் அவை இன்று சென்ற வழியும் சரியான வழியாகத்தான் இருக்க வேண்டும். எனவே நாளை நான் வில்லை வளைப்பதும் உறுதி அந்தப் பெண்ணே சீதையாக இருப்பதும் உறுதி என் கிறான கம்பன். என்ன சந்திரன் சரியா.
இராமர் வில்லை முறித்ததும் சீதை நினைக்கிறாள். வில்லை முறித்தவனும், நேற்றுத்தான் கண்டு காதலித்தவனும் ஒருவனாகவே தான் இருக்க வேண்டும். இல்லயாயின்தான் உயிர் விட்டுத் தன் கற்பொழுக்கத்தக் காப்பாற்றப் போவ தாகச் சொல்லிக் கொண்டுதான் அரண்மனைக்கு வருகி றாள் என்று கம்பன் இதனைக் காட்டுகிறான். என்ன சந்திரன் நீங்கள் மேல் வகுப்பில் ராமாயணம் படிக்கும் பொழுது இன்னும் விரிவான விளக்கம் பெறலாம்.
(பழைய காட்சி முடிவு)
g5 g) - 6
குமார். எனக்கு இப்பவும் அவர் படிப்பீச்சது ஞாபக மிருக்கு. அவற்ற மகள் ஒருத்தனக் காதலிச்சிற்று, இன் னெருத்தனக் கலியாணம் முடிகக ஒமெண்ணுவாளே. சொல்லு பாப்பம்.
உண்ம தான் சந்திரன், அவரிட்டப் படிச்ச மாணவர் களே பிழவிட மாட்டினம். அப்பிடி இருக்க அவற்ற மகள் எப்பிடி வேறு யாரையும் முடிக்கச் சம்மதிப்பாள். அவற்ற கஸ்ரத்தத் தீத்து. அவர நிம்மதியாச் சமய இலக்கியச் சேவ செய்ய ஏதாவது வழி செய்ய வேணும் குமார்.
சந்திரன். நீ பார். நான் அவரப் பழயபடி மாத்திக் காட்டு றன்.
75

Page 46
அகளங்கன்
35II ʼ 9gf) - 7
இடம்: தனியிடம் பாத்திரங்கள்: கணேஸ், மாதினி.
கனேஸ்:
மாதினி:
கனேஸ்:
மாதினி
கனேஸ்:
மாதினி:
கனேஸ்:
மாதினி:
கனேஸ்:
மாதினி:
கனேஸ்:
76
மாதினி! நீர் என்ன வெளில போக விட மாட்டீர் போல கிடக்கு. உண்மையில எனக்கு நீங்கள் வெளில போறது கொஞ் சங்கூட விருப்பமில்ல கணேஸ் இருக்கிறத வச்சு வாழப் பழக வேணும். ஆசகளக் குறச்சா சந்தோசம் பெருகும். நான் வெளிநாட்டுக்குப் போகாட்டி வேற தொழிலுக்கா வது மாறோணும் மாதினி. கணேஸ்! உங்களால ஏன் ஆசிரியத் தொழிலின்ர புனிதத் தப் புரிஞ்சு கொள்ள முடியாமலிருக்கு, எங்கட வீட்ட அப்பாட மாணவர்கள் வந்து போற நேரத்தில நான் அப்பாவ நிணச்சு எவளவு பெருமப்படுறன். பெருமப்பட்டு என்ன பிரயோசனம், வாழ்க்கைக்கு அவசியம் பணம், வீண் பெருமய வச்சு என்ன செய்யலாம்.
சரி. அந்தக் கதய விடுவம். கணேஸ், உங்களுக்கு உங்கட அம்மாவப் பாக்கிற பொறுப்பிருக்கு. அத நீங்கள் தட்டிக் கழிச்சாலும், என்ர அப்பாவ நான் தான் பாக்க வே ணும். அத என்னால தட்டிக் கழிக்கேலாது. அப்ப எங்கட கலியாணத்துக்குப் பிறகு உம்மட அப்பா, உம்மோட தான் இருப்பாரோ. என்ர அப்பாவ நான் என்னோட வச்சுப் பாக்க நீங்கள் நிச்சயமா அனுமதிப்பீங்கள் எண்டு எனக்குத் தெரியும். உங்களிட்ட எவளவு நல்ல குணங்கள் இருக்கெண்டு எனக் குத் தெரியாதே கணேஸ். (சிரிப்பு) ஐஸ் வைக்கிறிரோ. வையும். நல்லா வையும். தடிமன்
பிடிக்கப் போகுது மாதினி. (சிரிப்பு) கனேஸ் 1. நீங்கள் எந்த நாட்டுக்கு வேணுமெண்டா லும் போட்டு வாங்கோ. நான் உங்களுக்காகக் காத்திருப் பன். நீங்கள் வேற ஆரயும் கலியாணஞ் செய்தா (அழுறாள்) அப்பாவின்ர உயிர் போற அண்டக்கு என்ர உயிரும் போகும். மாதினி1. அழாத யும். கண்ணத் துடயும். நான் வெளி நாட்டுக்குப் போறதா இல்லயா எண்டு கெதில முடிவு
 

மாதினி:
இடம்:
g
செய்யிறன். ஆனா. நா ன் உம்மத்தான் கலியாணஞ் செய்வன். அந்த முடிவில ஒரு மாற்றமும் இருக்காது. கண்ணத் துடயும். எங்க சிரியும் பாப்பம்.
(சிரிப்பு) இப்பதான். வடிவாயிருக்கு (சிரிப்பு)
BITI G) - 8
வீடு.
பாத்திரங்கள்: குமார், சந்திரன், வைத்தியலிங்கம ஆசிரியர்.
குமார்:
சந்திரன்:
குமார்:
சந்திரன்:
குமார் .
சந்திரன்:
குமார்:
சந்திரன்! ஏதாவது ஐடியா (Idea) வைச்சிருக்கிறியா. என்ன செய்வம். எங்கட சேறுக்கு நாங்கள் ஏதாவது செய்யோ ணும். எனக்கு இதே யோசனயா இருக்கு.
ஏதாவது செய்யத் தான் வேணும். அவர் ஒரு ம னி த தெய்வம். என்ர வாழ்க்கயத் திசைதிருப்பி வழிகாட்டின கடவுள். அவருக்கு என்ர உயிரக் குடுத்தாலும் அது குறை வானதுதான். உனக்கு ஞாபகமிருக்கா குமார், நாங்கள் ஒ/எல்(O/L)வகுப்புப் படிக்கேக்க செய்த குழப்படியொண்டு. ஒண்டா. ரெண்டா. நீதான் சரியான குழப்படிக் காற னாச்சே, நீ செய்யாத கூத்தே (சிரிப்பு) சொல்லன். குமார் கதையக் கேள். அதுதான் நான் செய்த கடைசிக் குழப்படி. எங்கட வகுப்பில படிச்ச வதணிக்கு நான் ஒரு காதல் கடிதம் எழுதிப் பிடிபட்ட கதை உனக்குத் தெரி யுந் தானே. அத ஆரால மறக்கேலும் சந்திரன். அந்தப் பிரச்சன யில நானும் நீயும் ஒரு வருசமாக் கதைக்கேல்ல. கதைக் கக் குடாதெண்ட நிபந்தனயிலதானே எங்கட சேர் அந்த விசயத்த மூடி மறைச்சவர்.
அந்தப் பிரச்சனயில அவர் நடந்து கொண்ட விதம். ஆசிரியர்களுக்கெல்லாம் நல்ல எடுத்துக் காட்டு. இப்ப நினைச்சாலும் நடுங்குது.
சந்திரன். அதில முதல் நான் தானே அகப்பட்டனான்.
77

Page 47
அகளங்கன்
இடம்:
JAG IT” GA - 9 Li semp uu ġab f'Ta' 5g (Flash Back)
வகுப்பு.
பாத்திரங்கள்: வைத்திய லிங்கம் ஆசிரியர், குமார் .
ஆசிரியர்
குமார்:
ஆசிரியர்:
குமார்: ஆசிரியர்:
இடம்:
குமாரதாசன். எங்க கொப்பியக் கொண்டா பாப்பம். வீட்டு வேலயெல்லாம் ஒழுங்காச் செய்தனியே. ஓம் சேர். குமாரதாசன். போன கிழம எழுதச் சொன்ன கட்டுரைய எல்லாரும் எழுதிக் காடடீற்றினம். நீ ஏன் காட்டேல்ல" கொப்பீல இருக்கிற எல்லா எழுத்துக்களும் என்ர கண் ணில பட்டிருக்க வேணும் தெரியுதா, அண்டைக்கு நான் வரேல்ல சேர். அண்டைக்கு வராட்டி அடுத்த நாள் காட்டீருக்கோணும் என.. ஆ. என்ன இது. கடிதம் (மெதுவாக வாசிக்கிறார்) அலைகடல் வற்றினாலும் என் அன்புக் கடல்வற்றாத என் உயிர்க் காதலி வதணிக்கு.ம்..ம். இப்படிக்கு உன் உயிர்க் காதலன். (கோபமாக) குமாரதாசன்! என்ன வேலயிது. لی!{ = s = என்னோட ஸ்ராப் (Staff) றுTமுக்கு வா.
g5, Tʻ 9A) - 10
L i syn ypu II EASTI',9à (Flash Back)
ஸ்ராப் றும்.
பாத்திரங்கள்: குமாரதாசன். வைத்தியலிங்கம் ஆசிரியர்.
ஆசிரியர்:
குமார்:
gigslust: குமார்:
78
(மெதுவாக) ஸ்ராப் றாமில ஒருத்தரும் இல்ல. குமாரதா சன். என்ன வேல இது.
நான்.நானில்ல சேர் நான் எழுதேல்ல சேர். செய்யிறதயுஞ் செய்திற்று பொய்வேற சொல்லிறியோ. நா.ண். நான் எழுதேல்லச் சேர்.
எழுத்து வித்தியாசமாத்தான் இருக்கு. குமாரதாசன்! உண்மையச் சொல்லு, ஆரிட்டக் குடுத்து எழுதின நீ.

குமார்:
ஆசிரியர்:
குமார்:
ஆசிரியர் :
குமார்: ஆசிரியர்:
குமார்: ஆசிரியர்;
குமார்:
ஆசிரியர் :
குமார் :
ஆசிரியர் :
அகளங்கன்
இல்லசேர், நான் எழுதேல்லே சேர்.
குமாரதாசன்! என்ர கோபத்தக் கிளறாத, எனக்குத் தெரியும் என்ர வகுப்பில ஆர் ஆர் குழப்படி காறங்க
சேர் .நான்.தெரியாது சேர்.
நான் அடிக்கேல்ல. உண்மையச் சொல்லு, நீ எழுதாட்டி உன் கொப்பிக்குள்ள எப்படி வந்தது. ஆர் எழுதினது.
குமாரதாசன். சொல்லுறதக் கேள். நான் எவளவு கண் டிப்பானவனெண்டு உனக்கு நல்லாத் தெரியும். என்ர வகுப்பிலயே இப்பிடி.சொல்லு. ஆற்ற வேல இது (கோபமாக)
(Bell I i ... ...
(அமைதியாக) வதணியின்ர தாய் இந்தப் பள்ளிக்குடத்தில இங்கிலீஸ் ரீச்சர் (English Teacher) தகப்பன் பொலீஸ் () as of) (o) Ludi Tri (Police Inspector) (3) 155 6's Luh 5 T if தகப்பனுக்குத் தெரிஞ்சா என்ன நடக்கும் தெரியுமே. உன்ர படிப்பும் இதோடசரி. அதுமட்டுமே. g) - 6öô7 60) LDVLJ &# சொல்லிரு. இது.நீ எழுதேல்லயெண்டா ஆர் எழுதினது. சேர் என்ன ஒண்டும் செய்யாதேங்கோ சேர். சந்திரன் தான் எழுதின வன். என்னட்டத் தந்தான். நான் வாசிச் சுக் கொண்டிருக்கேக்க நீங்கள் வந்திற்றியள் கொப்பீக் குள்ள வைச்சிற்றன். குமாரதாசன்! (கோபமாக) நீ அவளிட்டக் குடுக்கிறதுக் குத்தானே வாங்கின நீ என.
இல்ல சேர். அம்மா சத்தியமா இல்ல சேர்.
குமாரதாசன்! இன்டையில இருந்து ஒரு வருசத்துக்கு நீ சந்திரனோட கதைக்கக் குடாது. பக்கத்திலயும் இருக்கக் குடாது. அதுமட்டுமில்ல இந்தத் தவணப் பரீட்சையில நீதான் முதலாம் பிள்ளயா வரோணும். என்ர கண் எப்பவும் உன்னில இருக்கும். நீ முதலாம் பிள் ளயா வராட்டிப் பிறகு பாப்பம். சரி போ. ஒருத்தருக்கும் ஒண்டுஞ் சொல்லாத கண்ணத்துட. போய் சந்திரன அனுப்பிவிடு.
Li Gopu stig (Flash Back) (play
79

Page 48
அகளங்கன்
gst 9 - 11
இடம்: வீடு. பாத்திரங்கள், சந்திரன், குமார்
குமார்:
சந்திரன்:
குமார்;
சந்திரன்:
இடம்:
வகுப்பில, பன்ரெண்டு, பதின்மூண்டாம் பிள் ளயா வந்து கொண்டிருந்த நான், அந்தத் தவணையில எவளவு கஸ் ரப்பட்டுப் படிச்சன். முதலாம் பிள்ள யா வந்தன். எல்லாருக்கும் ஆச்சரியம். வீட்டில கெட்டிக்காறன் எண்ட பேர் கிடைச்சுது. பிறின்சிபல் தொடக்கம் எல்லா ரீச் சேசும் என்ன அவதானிக்கத் தொடங்கிச்சினம். அந்த வருசம் ஒ|எல் இல எனக்குத் தானே பெஸ்ட் றிசல்ற்ஸ் (Best Results)
உனக்கு மட்டுமே. உனக்கு தமிழ், கணக்கு, சமயம் மூண்டிலயும் டிஸ்ரிங்சன் (Distinction) கிடைச்சுது எனக்கு கணக்கு, விஞ்ஞானம் ரெண்டிலயும் டிஸ்ரிங்சன் (Distinction) கிடைச்சுது. எங்கள் ரெண்டு பே ரு க் கு ந் த ர ன் நல்ல றிசல்ற்ஸ். அதுக்குப் பிறகு நான் ஏ | எல் படிச்சன், அவர் தான் வகுப்பாசிரியர். அவற்ற கண்ணுக்குள்ளயே நடமாடினன். அவற்ற வீட்ட போய்ப் ப டி ச் ச ன். யூனிவெசிற்றி (University) க்குப் போய் படிச்சு இப்ப இஞ்ச உதவி அரசாங்க அதிபரா இருக்கிறன். இதுக்கெல்லாம் அவர் தான் காரணம். அவர் மனித தெய்வம். தன்ர வாழ்க்கய மாணவர்களுக்காகவே அர்ப்பணிச்ச மகான். குமார்!. நீ வந்து என்ன ஸ்ராப் நூமுக்கு வரச்சொன்ன தாச் சொன்னாய். பிறகென்ன நடந்தது தெரியுமே.
JAG IT" GA - 12 L6onpu 5Ts.3 (Flash Back)
ஸ்ராப் நூம்
பாத்திரங்கள் சந்திரன், ஆசிரியர்.
ஆசிரியர்: சந்திரன்
80
(கோபமாக) சந்திரன்! இது நீ தானே எழுதினது, அது சேர். நான். இல்ல சேர். இதில பேர் இல்ல சேர்.

அகளங்கன்
ஆசிரியர்: சந்திரன் (கோபமாக) நீ எவளவு குழப்படிக் காறனெண்டு எனக்கு நல்லாத் தெரி யும், ஆனா இவளவு தூரம் போவாயெண்டு நான் எதிர்பாக்கேல்ல. சந்திரன்: சேர்.
ஆசிரியர்: இப்ப இந்தக் கடிதத்த நான் பிறின்சிபலிட்டக் குடுக்கப் போறன், அவர் வதணியின்ர தாய. அது தான். உங்கட இங்கிலீஸ் ரீச்சரக் கூப்பிட்டு, கடிதத்தக் காட்டுவார். பிறகு உன்ர அப்பாவயும் கூப்பிடுவார். வதணியின் ர தகப்பன் என்ன வேல செய்யிறார் தெரியுமில்லே. பொலிஸ் இன்ஸ்பெக்ரர். அவரயும் கூப்பிடுவார். பிறகு. என்ன நடக்குமெண்டு உனக்குத் தெரியும்.
சந்திரன் சேர். அப்பா என்ன அடிச்சுக் கொண்டு போடுவார் சேர். இனிமேல் நான் ஒரு குழப்படியும் செய்யமாட்டன் சேர். என்ன மன்னிச்சுக் கொள்ளுங்கோ சேர்.
ஆசிரியர் ஏன் காலில விழுறாய். எழும்பு, உன்ன நான் காப்பாற்
றிற தெண்டா, நான் சொல்லுறபடி கேக்கோணும். (3, L'Lut.
சந்திரன் என்ன சொன்னாலும் கேப்பன் சேர். என்ன ஒன் டுஞ்
செய்யா தேங்கோ சேர்.
ஆசிரியர்: சரி, சந்திரன்! இந்தத் தவணப் பரீட்சயில நீதான் முத லாம் பிள்ளயா வரோணும், இண்டையில இருந்து ஒரு வருசத்துக்கு நீ குமாரதாசனோட கதைக்கக்குடாது. அவ னுக்குப் பக்கத்தில இருக்கவும் குடாது.
சந்திரன்: ஒம். சேர்.
ஆசிரியர்: சரி. அழாத .கண்ணத் துடைச்சுப் போட்டுப் போ. ஒருத்
தருக்கும் சொல்லாத .
(பழைய காட்சி முடிவு)
g5, TTʻ 9f) - 13
இடம் வீடு.
பாத்திரங்கள் குமார், சந்திரன்,
சந்திரன்: அந்தத் தவண நான் பயந்து பயந்து படிச்சன். கடைசியில ஒரு மாக்ஸ் வித்தியாசத்தில நீ முதலாம் பிள் ளயா வந்திற்
81

Page 49
அகளங்கன்
குமார்:
சந்திரன்:
குமார்:
சந்திரன்:
குமார்:
சந்திரன்:
குமார்:
சந்திரன் :
குமார் :
சந்திரன்:
றாய். முந்தி வகுப்பில கடசிப் பிள்ள யாக் கூட வந்திருக் கிறன் . ஆனா. அந்தத் தவண ரெண்டாம் பிள்ள யா வந் ததுக்கே கவலப்பட்டன். அழுதன். அதுக்குப் பிறகு எனக் கும் உனக்கும்தானே படிப்பில போட்டி என. சந்திரன்! பிறகு நீ ஏன் என்னோட ஆட்ஸ் படிக்காமல் மற்ஸ் வகுப்புக்குப் போன நீ.
எனக்கு எங்கட சேறிட்டயே ஆட்ஸ் படிக்கத்தான் விருப்ப மாயிருந்தது. ஆனா அவர் தான் என்னக் கணிதத் துறை யில படிக்கச் சொல்லி சேர்த்து விட்டார்.
சிலவேள நானும் நீயும் ஒண்டா இருக்கக்குடாதெண்டோ
இல்லக் குமார். எனக்கு யூனிவெசிற்றி அனுமதி இஞ்சினி யரிங்க்குக் கிடைச்சவுடன, ஒபீசுக்குள்ள வைச்சு பிறின் சிபல்லிட்ட எங்கட சேர் என்ன சொன்னார் தெரியுமே
என்ன! உன்ர காதல் நாடகத் தச் சொல்லிற்றாரோ.
சீ சீ . தன்னட்ட இராமர், சீதை காதல் சம்பந்தமா, நுணுக்கமாக் கேள்வி கேட்ட அண்டைக்கே தனக்குத் தெரியுமாம், எனக்குக் கணிதத் துறைதான் பொருத்த மெண்டு. அதுதான் என்ன கணிதத் துறையில படிக்கச் செய்தவராம் . அவர். மாணவர்களின்ர திறமயச் சரியா எடை போட்டு அதுக்குரிய வழியில, வழி நடத்துற திறமையில அவருக்கு நிகர் அவரே தான். குமார்! அவர் என்னத் தடுத்தாட் கொண்ட கடவுள். வாழவைத்த தெய்வம், எனக்கு இன்னும் அவரக் கண் டாப் பயமும் பக்தியும் இருக்கு. பிறகும் நான் ரெண்டு வருசம் அவரிட்டப் படிச்சன். அதோட அவற்ற வீட்டபோய் சாப்பிட்டு, சிலவே ள அங்கயே தங்கிப் படி ச் ச த ர ல பயம் குறைஞ்சிற்றுது. அவர் என்ன வழி நடத்தாட்டி நான் எங்கயோ திச மாறிப் போயிருப்பன்.
அப்ப குமார் . நாங்கள் அவருக்கு என்ன செய்வம். அவற்ற கா சுப் பிரச்சனயும் தீரவேணும். அவருக்கு கெளரவத்தையும் குடுத்து திரும்ப அவரச் சமூகத்தில ஈடுபட வைக்கோணும்.
 

குமார்;
சந்திரன் :
குமார்:
சந்திரன்:
குமார்:
சந்திரன்:
குமார்
அகளங்கன்
சந்திரன், இந்த வருசம் அவருக்கு அறுபது வயது எண்டு நினைக்கிறன். அவருக்கு மணிவிழா செய்வம் அந்த விழா வில அவருக்குப் பொன்னாட போர்த்தி, பொற்கிழி வழங்கிக் கெளரவிப்பம்.
உது நல்ல திட்டம். குமார் காசு ஒரு லட்சத்துக்கு மேல சேர்ககோணும். காசு சேர்க்கிறது கஸ்டரமில்ல இப்பவே நான் பத்தாயிரம் ரூபா தாறன். சந்திரன்! இப்ப இஞ்ச உள்ள முக்கியமான பதவிகளில இருக்கிற எல்லாருமே, அநேகமா அவற்ற மாணவர்கள் தான். இலங்கை வங்கி மனேச்சர் இன்பநேசன், மாவட்ட நீதிமன்ற நீதவான் மகேஸ்வரன், டி. எம். ஒ. டொக்டர் ராஜசேகரன். இப்பிடிப் பலபேர் இருக்கினம். யூனிவெசிற்றியில பேராசிரியரா.விரிவுரையாளராக் கூடப் பலபேர் இருக்கினம். அப்ப இது நல்ல ஐடியா. மணி விழாவச் சிறப்பாச் செய்வம். எல்லாரும் பாத்து ஆச்சரி யப் படவேணும். அந்த விழாவப் பாக்கிற ஆசிரியர்கள் எல்லாம் தாங்களும் அவரப்போல வரவேணுமெண்டு ஆசப்படவேணும். உண்மை தான் சந்திரன். இப்ப பல ஆசிரியர்கள் ஆசிரியப் பண்பே தெரியாமல் இருக்கினம். இந்த மணி விழா ஒரு பெரிய விழிப்புணர்ச்சிய ஏற்படுத்த வேணும். எல்லாம் சரி குமார். ஆனா. பூனைக்கு மணி கட்டுறது யார். அவர் இதுக்குச் சம்மதிப்பாரோ. அது என்ர பொறுப்பு. ஒரு அறிவாளிய, ஒரு மகான, திரும்பவும் சமூக முன்னேற்றத்தில ஈடுபட வைச்சுக் காட்டுறன் பார்.
36 (T"|9) - 14
இடம்: விழா மேடை.
பாத்திரங்கள் குமார், பேராசிரியர் சோமசுந்தரம், மாவட்ட
சுந்தரம்:
A.
நீதிபதி, வைத்தியலிங்கம் ஆசிரியர்.
எமது ஆசிரியப் பெருந்தகையின் மணிவிழாவில் கலந்து கொள்ள வந்திருக்கும் எல்லோருக்கும் என் அன்பு வணக்
கங்கள். முதலாவதாக இவ் விழா அமைப்பாளரும், இப்
83

Page 50
அகளங்கன்
குமார் :
இடம்:
பகுதி உதவி அரசாங்க அதிபரும், எமது ஆசிரியரின் மாணவருமான திரு. குமாரதாசன் அவர்கள் வரவேற் புரை வழங்குவார். (பேசுகிறார்) எமது ஆசிரியப் பெருந்த கையின் பாதமலர் களை என் தலையில் சூடி (குனிந்து வணங்குகிறார்) இன்றைய மணிவிழாவிற்கு வருகை தந்திருக்கும். உங்கள் முன் வரவேற்புரை நிகழ்த்துவதில் பெரும் மகிழ்ச்சியடை கின்றேன். "எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்.' என் பது தமிழரின் தாரக மந்திரம் எங்கள் ஆசிரியர் அவர் கள் எங்களால் கடவுளாக மதிக்கப்படுபவர். ஆசிரிய குலத்துக்கு முன்னுதாரணமாகத் திகழ்பவர். அவருக்குப் பொன்னாடை போர்த்தி, பொற்கிழி வழங்கி மகிழும் அவரின் மணிவிழாவிற்கு வருகை தந்திருக்கும் எல்லோ ரையும் அன்புடன் வரவேற்பதில் பெருமையடைகின்றேன். கோவிலிலே உரு கி எரியும் கர்ப்பூரம் போன்றவர்கள் ஆசிரியர்கள். தொட்டுக் கும்பிடுபவர்கள் எல்லா நலமும் பெறுவார்கள். ஆனால் கர்ப்பூரம் எரிந்து அழியும். இங்கே வீற்றிருக்கும் பெருமை மிகு கர்ப்பூரத்தைத் தொட்டுக் கும்பிட்டு வாழ்வு பெற்றவர்கள் பலர். இன்றைய விழாத் தலைவர் பேராசிரியர் சோமசுந்தரம், சிறப்பு விருந்தினர் மாவட்ட நீதிபதி சுப்பிரமணியம், மற்றும் விழாக்குழு உறுப்பினர்களான மாவட்ட வைத்திய அதிகாரி, பொறி யியலாளர், உதவி அரசாங்க அதிபராகிய நான் எல்லோ ருமே அவரது மாணவர்கள் என்று கூறிக்கொள்வதில் பெருமை அடைகிறோம்.
அடுத்ததாக மாவட்ட நீதிபதி திரு. சுப்பிரமணியம் அவர் கள், பொன்னாடை போர்த்தி, பொற்கிழி வழங்கிக் கெளரவிப்பார்கள். (பொன்னாடை போர்த்தி, பொற்கிழி வழங்கிவிட்டு, காலைத்தொட்டு கும்பிடுகிறார். பல ர் தொட்டுக் கும்பிடுகின்றனர்.)
JAG IT" GA - 15
தனியிடம்.
பாத்திரங்கள்: கனேஸ், மாதினி
கனேஸ்
84
மாதினி என்ன மன்னிச்சுக் கொள்ளும், ஆசிரியத் தொழி லின்ர மகத்துவத்த இண்டைக்குத்தான் கண் கூடாக் கண்

மாதினி:
கனேஸ்:
மாதினி:
கனேஸ்:
மாதினி:
கணேஸ்:
LO ாதினி.
கனேஸ்:
மாதினி:
கனேஸ்:
அகளங்கன்
டன், எவளவு பெரிள, பெரிள மணிசரெல்லாம், அந்தப் பெரிய கூட்டத்தில உம்மட அப்பாவின்ர காலத்தொட் டுக் கும்பிட்ட காட்சி என்ர மனத்த உருக்கீற்று. கணேஸ், நான் அழுதே போட்டன். அவருக்குப் பிள்ளை யாப் பிறக்க நான் என்ன புண்ணியஞ் செய்தனோ. மாதினி எல்லாருக்கும் மெய்சிலிர்த்திருக்கும். எல்லாருக் கும் கண்ணிர் வந்திருக்கும். இப்பிடி ஒரு மகத்துவம் நிறைஞ் தொழில் உலகத்தில வேற எதுவுமே இல்ல. உண்ம தான் கணேஸ். இது புனிதத் தொழில் புண்ணியத் தொழில். மாதினி எனக்கு என்ர பள்ளிக்குட வாழ்க்கயில சரியான வழிகாட்டல் கிடைக்கேல்ல. உம்மட அப்பா போல ஒரு ஆசிரியர் கிடைச்சிருந்தா நானும் ஒரு முழு மனிசனா மாறியிருப்பன்.
th...... (சிரிப்பு). இப்ப என்ன குற. எனக்குத் தெரியும் கணேஸ்.நீங்கள் எப்பவுமே ஒரு நிறைவான குணங்கொண்ட மனிசன் தான். - இல்ல மாதினி. இண்டைக்குத்தான் எனக்குக் கல்வியையும், அதக் கற்பிக்கிற ஆசிரியர்களப் பற்றியும் சரியான, தெளி வான அறிவும் கிடைச்சிருக்கு. இனி நான் நல்லாசிரியனா. எல்லாருக்கும் உதாரணமாத் திகழப்போறன்,
அப்ப வெளி நாட்டுக்குப் போகேல்லயோ, (சிரிப்பு) "பெற்ற தாயும் பிறந்த பொன் நாடும்
நற்றவ வானிலும் நனி சிறந்தனவே" இனி என்ர நாடு, என்ர புனிதமான ஆசிரியத் தொழில்" மனிதப் பண்புகள் நிறைந்த உத்தமமான சமுதாயம் இதுகள் தான் இனி என்ர இலட்சியங்கள். அப்ப எங்கட கலியாணம் (சிரிப்பு) சீதனம்,
வெளிநாட்டுக்குப் போகத்தானே காசு கேட்டனான். இனி அது தேவயில்ல. கலியாணம் தான் நான் செய்யிற முத லாவது நல்ல காரியம். (சிரிப்பு)
முற்றும்,
85

Page 51


Page 52


Page 53
s
அகளங்கனின் C ليح وحكم يح
arro 665 m
=
(அஞ்சலிக் கவிதை
சேரர் வழியில் வீரர் க
(குறுங் காவியம் )
(அகளங்கன் ச . CUPU
( ஆய்வு நூல் )
இலக்கியத் தேறல்
( கட்டுரைத் தொகு
நளவெண்பா ( கதை )
அன்றில்ப் பறவைகள்
( நாடகம் )
പ്രേം (പോപ്പു പ്ര~പ്പ് പ്രേരിപ്പു കല്പത്തെ പ്രഭ

ട്ട്
நூல்கள்
)പ~~
ஆணையிடாய்.
T6Gutb
rளிதரன், கவிதைகள் )
ப்பு)
qTeT S SMSSSLSSSMSSSi iS SASAe SMSMM MMeS SAS AMASeqAT AMSTeAT SSL0SSS ieAT TiqAASSMSS