கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யாழ்ப்பாண வைபவ விமர்சனம் (2004)

Page 1
பதிப்பாசிரியர் கலாநிதி கந்தையா குணராச
 


Page 2

சுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமர்சனம் தமிழர் உகம்
=1928
பதிப்பாசிரியர்: கலாநிதி க. குணராசா
கமலம் பதிப்பகம், யாழ்ப்பாணம்

Page 3
:
பதிப்பு
அச்சுப்பதிவு
வெளியீடு
விலை
யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
ஜூலை 2004
கமலம் பதிப்பகம், யாழ்ப்பாணம்.
150/-
0 Swami Gnanapirakasar's
YALPPANA VAIPAVA VIMARSANAM
0 Edited by: Dr. Kandiah Kunarasa
B.A. Hons. (Cey), M.A., Ph.D., (Jaffna) SLAS (Jaffna)
0 Published by: Kamalam Pathippakam
0 First Edition: 2004, July,
விற்பனையாளர்:
பூபாலசிங்கம் புத்தகசாலை, கடற்கரை வீதி, கொழும்பு - 12
லங்கா புத்தகசாலை, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர, கொழும்பு - 12

யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
முன்னுரை
UTழ்ப்பாணச் சரித்திரத்தை விபரிக்கும் நூல்களுள் தெளிவும், ஆய்வுச் சிறப்பும், கொண்ட நூலாகச் சுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாணவைபவ விமர்சனத்தைக் கருதலாம். மாதகல் மயில் வாகனப் புலவரினர் யாழ்ப்பாண வைபவமாலை என்ற நூலை ஆராய்வதற்காக எழுதப்பட்ட நூலிதுவாகும். அதனாலேயே யாழ்ப்பாண வைபவ விமர்சனமென இந்நூலிற்குப் பெயரிடப் பட்டுள்ளது. இந்நூல் பதினைந்து அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. ஆரம்ப அதிகாரம் ஒன்றுமுள்ளது. w
ஆரம்ப அத்தியாயம்,யாழ்ப்பாண வைபவமாலையின் முதனூல்கள் பற்றியும், மாருதப்பிரவாகவல்லி-உக்கிரசிங்கன் கதைக்கும்,குளக்கோட்டன் - ஆடகசவுந்தரி கதைக்கும் உள்ள ஒற்றுமைகளையும், யாழ்ப்பாடி கதைபற்றிய சங்கதிகளையும் ஆராய்கின்றது. சுவாமி ஞானப்பிரகாசரின் முதலாவது அதிகார்ம் யாழ்ப்பாணத் தொல்குடிகள், சிங்களக்கலப்பு, பெளத்த கல்லாலயங்கள், சிங்கள் இடப்பெயர்கள் காட்டும் பழஞ் செய்திகள் பற்றி விபரிக்கின்றது. எனவே இவ்விரு அதிகாரங்களும் யாழ்ப்பாணச் சரித்திரத்தை விளக்கும் ஆரம்பநூலின் சரியிழைகளையும், யாழ்ப்பாண நாட்டின் இடப்பெயர்களின் மூலத்தையும் ஆராய்கின்றன. எனவே, அவ்விரு அத்தியாயங்களையும் தவிர்த்து யாழ்ப்பாணச் சரித்திரத்தை நேரடியாக விளக்கும் இரண்டாமதிகாரத்திலிருந்து,யாழ்ப்பாண வைபவ விமர்சனம் இந்நூலில் சேர்க்கப்படுகின்றது. மேலும், யாழ்ப்பாண வைபவ விமர்சனத்திலுள்ள அதிகாரங்கள் தனித்தனிக் கட்டுரைகளாக சன்மார்க்கபோதினிப் பத்திரிகையில் அவ்வப்போது வெளிவந்தவை. புத்தகமாக்கும் போது அதிகாரங்களாகத் தொகுக்கப்பட்டமையால், சொன்னது கூறல், காலவழு, கருத்துநிலை முரண்பாடு என்பன சுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமர்சனத்தில் ஆங்காங்கு காணப்படுகின்றன. அதனை நூலாசிரியரே பின்வருமாறு ஒப்புக் கொள்கின்றார்.
'சன்மார்க்கபோதினிப் பத்திரிகையில் அவ்வப்போது பாகம் பாகமாய் வெளிப்பட்டவைகளே இருந்தவிருந்தபடி இப்புத்தகமாக அச்சிடப்பட்டமையால், முற்ற எழுதி முடித்துப் பிரசுரஞ் செய்வதோர் நூலுக்குரிய சிறப்புக்கள் சில இதனிடம் இல்லாது கிடத்தலை வாசிப்போர் மன்னிக்குக.
சுவாமி ஞானப்பிரகாசரின் வரலாற்றாய்வின்நுண்ணிய திறன், அவர்குமார சுவாமிப்பிள்ளையின் வடமாகாணத்திலுள்ள சில இடப்பெயர்களின் வரலாறு என்ற நூலை முற்று முழுதாக ஏற்றுக் கொள்வதாலும், போர்த்துக்கேயரின் மதம்சார் குறிப்புக்களை முற்றுமுழுதாக நம்புவதாலும் சம நிலையிலிருந்து நழுவுகின்றமை
3

Page 4
யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
யைக் குறிப்பிடாதிருக்க முடியாது. யாழ்ப்பாணத்தின் ஆயிரக்கணக்கான தமிழ் இடப்பெயர்களைக் கவனத்திற்கு எடுக்காது ஒரு சில பத்து இடப்பெயர்களின் சிங்கள உச்சரிப்பையும் கருத்தையும் முதன்மைப்படுத்தி தமிழர் குடியேறுமுனர் யாழ்ப்பாணக்குடாநாட்டில் சிங்களவரே குடியிருந்தனரென்ற விபரீத முழவிற்கு வந்துள்ள குமாரசுவாமிப் பிள்ளையை சுவாமி ஞானப்Uரகாசர் அவ்வாறே ஏற்றுக்கொண்டு, தனது நூலின் முதலாம் அதிகாரத்தை வரைந்துள்ளார். ஒல்லாந்தர் காலத்தில் காணிகளைத் தோம்பில் பதிவதற்காக வரவழைக்கப்பட்ட சிங்கள் உத்தியோகத்தர்கள். தமது உச்சரிப்பிற்கு இணங்க தமிழில் பெயர்களை உருமாற்றி எழுதி வைத்தனர். உதாரணமாகச் சூறைத்தோட்டம் என்றிருந்ததைச் சூறாவத்தை எனவும், மறவன்புலவு என்றிருந்ததை மறவன்புலோ எனவும் எழுதி வைத்தனர். (புலவு என்றால் இடம் எனப் பொருள்படும்)
சுவாமி ஞானப்பிரகாசர் கத்தோலிக்கப் பாதிரியாக விளங்கியமையால், போர்த்துக்கேயரின் எழுத்துக்கள் அவருக்குச் சரியான வரலாறு ஆவணங்களாகப் பட்டுள்ளன. சங்கிலி செகராசசேகரனின் மன்னார் சம்ஹாரத்திலுள்ள அரசியல் நியாயத்தைப் புரிந்து கொள்ளாத நிலையில், போர்த்துக்கேயர் சங்கிலி செகராசசேகரனி மீது சேற்றை வாரியிறைத்துள்ளனர். அவற்றினை சுவாமி ஞானப்பிரகாசர் அவ்வாறே ஏற்று விபரித்துள்ளமை குறிப்பிடத்தக்க சமநிலை பேணாவம்சமாகும். போர்த்துக்கேய நல்லாட்சிக்கு அவர்களால் நியமிக்கப்பட்ட யாழ்ப்பாண மனினர்கள் விசுவாசமாக நடக்கவில்லை எனச் சிலவிடத்து வருத்தப்படுகிறார். போர்த்துக்கேயத்தளபதி பிலிப் ஒலிவேறா, யாழ்பUாணக் குடாநாட்டிலுள்ள சைவாலயங்களை அடி அத்திவாரத்தோடு கிளறி அழித்தமையை நியாயப்படுத்த முயல்கிறார். போர்த்துக்கேயப் பறங்கிகளினர் அரசுச்சட்டம் ஆங்கிலேயர் போல சமநீதியுள்ள தென்கிறார். என்னே விந்தை?
எவ்வாறாயினும், சுவாமி ஞானப்Uரகாசரினர், யாழ்ப்பாண வைuவ விமர்சனம" எனும் ஆய்வுநூல் மீள்பதிப்புச் செய்யப்படுவதும் மீள்வாசிப்புச் செய்யப்படுவதும் இன்றைய காலத் தேவையாகும். அக்காரியத்தை இந்தப் பதிப்பு நிறைவேற்றுமென நம்புகின்றேன். 1926 ஆம் ஆண்டு, சுவாமி ஞானப்பிரகாசரால் எழுதப்பட்ட இந்நூல், அச்சுவேலிஞானப்பிரகாசர் யந்திரசாலையில் (அச்சகத்தில்) முதனி முதல் அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளது. இன்று அந்நூலினர் முக்கிய அம்சங்களின் மீஸ்வாசிப்பினை கமலம் பதிப்பகம் வெளியிடுகின்றது. நன்றி.
75/10A பிறவுன் வீதி கலாநிதி க. குணராசா யாழ்ப்பாணம். 10.07.2004

யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
தமிழ் அரசு ஏற்பாடு
யாழ்ப்பாணநாடு இற்றைக்குப் பல்லாயிரவருடங்களாய்க் குடியேற்றம் அடைந்திருந்தது எனக் கோடலே பொருத்தமாகும். வட இந்தியாவிற் சின்னாட் களின்முன் பண்டைக்காலப் பட்டணமொன்றன் அத்திவாரங்கள், பழம்பொருட்கள் ஆதியன அகழ்ந்து காணப்பட்டன. புதையுண்டுகிடந்த இப் புராதன பட்டணம் கிறிஸ்துவுக்கு 3000 வருடங்களுக்காகிலும் முற்பட்டதாக வேண்டியதென்பதும், எகிப்திய நாகரிகத்துக்கு முன்னர் இந்தியாதான் மிக நாகரீகமடைந்திருந்த தென்பதும் பழம்பொருட் பரிசீலனர்களது கருத்தாம். (Times of Ceylon 1924) அப்பால், இந்தியகண்டம் இலங்கையையும் தன்னகத்திற் கொண்டு மேற்கே ஆபிரிக்காவரையிலும், கிழக்கே சாவகதீவுகளையுள்ளடக்கியும், விரிந்து பரந்திருந்ததெனும் அபிமதத்துக்குச் சார்பாய்ச் சமீபகாலத்தில் ஜயல்பூர் எனும் இந்திய நகர்புறத்தில் ஓர் ஏது காணப்பட்டுள்ளது. அது யாதெனில், பூமிமீது மானுடசிருட்டிக்கு முற்பட்ட ஓர் காலத்துச் சங்கமங்களுளொன்றாய், ஆபிரிக்கா கண்டத்தில் மட்டும் இதுவரை காணப்பட்டதாயுள்ள மகா முதலைவர்க்க மொன்றின் என்புகள் அங்கு வெளிப்பட்டமையாம். (Times of Ceylon 24 July 1924) இன்ன பிற ஏதுக்களாலும் பெறப்படுகின்றபடி, இலங்கைத்தீவு இந்தியா வோடு ஒரு கண்டமாய் அதன் பூர்வீக நாகரிகத்திற் பங்குபற்றியதாயிருந்தமையின்,
5

Page 5
யாழ்ப்பாண வைபவ விமர்சனம் சென்ற அதிகாரத்தில் யாம் விபரித்த சிங்களர்காலத்துக்கு முன்னரும் தமிழரை யொத்த சாதிமாக்கள் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தனர் எனக் கொள்வதற்குத் தடைப்பாடு சிறிதுமிலது.
1. தமிழர்வரவு
விசயராசன் இலங்கையைவெற்றிகொண்ட பின்னரே நம் தீபகற்பத்தில் சிங்களர் ஆட்சி நடைபெற்றது எனல் தானேபோதரும். இடைக்காலத்தில் நாடெல்லாம் சிங்களப் பெயர் அடைந்து புத்த ஆலயங்கள் மிகுந்து புத்தசமயத் தவர்களுக்கே உறையுளாகி விளங்கிற்று எனபதை முன்னர்க் காட்டினோம். ஆயின் விரைவில் சிங்களவர் ஆட்சி தளர்வெய்தலுற்றது. பெளத்த சமயத்தை இலங்கையில் நிலைநாட்டிய தேவநம்பியதீசன் மரித்து முப்பது வருடஞ் செல்லுதற்கிடையில் சேனனும் கூட்டிகனுமென்னும் இருவர் சகோதரர், தம்மவர் பலரோடு தென்னிந்தியாவினின்றும் புறம்போந்து சுரத்திசனென்னும் அரசன்கீழ் உத்தியோகத்தமர்ந்திருந்த தமிழ்வீரர்கள், தம் எசமானனைக் கொன்று, செங் கோலை அப்பிக்கொண்டு அனுராதபுரத்திருந்தரசாண்டனர். (கி.மு. 237-215) அன்னோர் காலத்தில் பெளத்தமதந் தாழ்ந்து சிவமதமே தலையெடுத்தது. அதற்பின் பத்து வருடங்களாய்ச் சிங்கள அரசு மேம்பட்டிருந்து, மீட்டும் ராஜறட்ட எனும் இலங்கையின் வடபாகம் முழுமையும் நாற்பத்துநான்கு வருடங்களாய் எலாளனென்னும் தமிழரசன் ஆட்சியிலிருப்பதாயிற்று. மனுநீதிசிறந்த இப் பெருந்தகை முப்பத்திரண்டு கோட்டைகளை ஆங்காங்கு எடுப்பித்துத் தமிழரை மிக்குக் குடியேற்றி சிவமதத்தையும் தமிழ் நாகரீகத்தையும் ஊக்கித்து விளங்கி னான். துட்டகாமினி என்னும் சிங்கள அரசிளங்குமரன் தன்தாதை தமிழருக்குத் திறைகொடுத்து ஆண்டகொண்டு வந்த றுகுணை எனும் இலங்கையின் தென்கீழ்ப்பிரிவிருந்து வெளிபட்டு ஏலாளனோடு நெடுநாட் கொடுஞ் சமர்
1. பண்டைய இலங்கைத் தீவு முழுவதும் நாகர் இன மக்கள் பரவி வாழ்ந்துள்ளனரெனினும், சிறப்பாக நாகதீவு என வரையறுக்கப்பட்ட வடபகுதியில் செறிந்து வாழ்ந்துள்ளனர். இலங்கை வரலாற்றைத் தெரிவிக்கும் நூலான மகாவம்சம், மகோதரன், குலோதரன் என்ற இரு நாகமன்னர்களின் ஆட்சி பற்றிக் குறிப்பிடுகின்றது. தேவிநுவர, நாகர் கோயில், திருக்கோயில், நனிகிரி, நாகதும, நயினாதீவு (மணிபல்லவம்), மதவாச்சி (மகாவில்லாச்சி), காங்கேசன்துறை (ஐம்புக்கோளம்) வல்லிபுரம், குருந்தன்குளம், மிகிந்தலை, நாகசதுக்கம், கந்தரோடை (கதிரைமலை), கரியாலை நாகபடுவான், மாந்தை (மகாதீர்த்தம்) என்பன நாகர்களின் குடியிருப்புகளாக விளங்கியுள்ளன. சிங்கள வரலாற்றாசிரியர்கள் நாகர்களை மனிதர்களாக ஏற்கத் தயாரில்லை. அதனைப் பின்பற்றி சுவாமி ஞானப்பிரகாசரும் தமிழரை ஒத்த சாதிமாக்கள் என்கிறார். ஈழத்தின் நாகரிக கர்த்தாக்களில் ஒரு இனமான நாகர்கள், ஆதிதிராவிடர் என இன்றைய வரலாற்றாய்வாளர்கள் முடிவிற்கு வந்துள்ளனர். மிக ஆதி காலத்திலேயே ஆரியர்கள் வடஇந்தியாவில் நிலை கொண்ட போது, திராவிடர்கள் ஆரியர்களால் நெருக்கப்பட்டு இந்தியாவின் தென்பாகத்திற்கும் இலங்கைக்கும் குடிபெயர்ந்தார்கள். அவ்வாறு இடம்பெயர்ந்த திராவிடர்களின் குடியேற்றம் நாகதீவில் மிகக் கூடுதலாக நிகழ்ந்திருக்கும். விஜயன் பிறப்பதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே வடவிலங்கையில் குடியிருப்புக்கள் விருத்தியுற்றிருந்தனவென்பது சேர், போல். பீரிஸ் கருத்து.

யாழ்ப்பாண வைபவ விமர்சனம் W முனைந்து ஈற்றில் இவனைப் புறங்கண்டு தமிழரைத் தலைநகரியினின்றும் ஒட்டியவுடனேயும், ஏலாளனின் மருகன் வல்லூகன் என்பான் முப்பதினாயிரம் வீரர்கொண்டதோர் சேனையோடு மாதோட்டத்திலிறங்கி அமராடி அபசெயப்பட்டு LDIT60irLT65.
இவற்றோடமையாது கி.மு. நூற்றுநான்காவது வருடத்தில் சோணாட்டுத் தமிழ்த் தலைவர் எழுவர், புலகத்தனை முதன்மையாய்க் கொண்டவர்கள், தஞ்சேனா வெள்ளங்களோடு கரைபுரண்டு வந்து மாதோட்டத்தையடைந்து, நகுலனெனும்
2. விஜயனின் வருகைக்கு முன்னரும், விஜயனின் காலத்திலும் ஆதிகால இலங்கையில் பல சிற்றரசுகள் இருந்துள்ளன. தென்னிந்தியாவில் கி.மு. 1000 ஆண்டளவில் தோற்றம்பெற்ற திராவிட மக்களது பெருங்கற்காலப் பண்பாட்டின் தொல்லியற் சின்னங்களான ஈழத்தாழிகள், பிராமியக்கல்வெட்டுக்கள் இலங்கையிலும் அகப்பட்டுள்ளன. அதுவரை கண்டறியப்பட்ட பிராமியக் கல்வெட்டுகளில் வரும் பருமக (பருமகன்), கமணி, அய (ஆய்), வேள (வேள்) என்பன குறு நிலத்தலைவர்களையே குறிக்கின்றன. அநுராதபுரத்தில் விஜயனும் அவன்பின் வந்த மன்னர்களும் அரசாண்டபோது, வடபகுதியில் திராவிடச் சிற்றரசுகள் இருந்துள்ளன. 3. கி.மு. 3 ஆம் நூற்றாண்டிலும் 1ஆம் நூற்றாண்டிலும் வடவிலங்கையில் பெரும்பாலும் சிங்கள மன்னர் களது ஆதிக்கம் நிலவியுள்ளது. மேலும் வட விலங்கையில் குறிப்பாக யாழ்ப்பாணக்குடாநாட்டில் தமிழ்ப்பெளத்தர்கள் வாழ்ந்துள்ளனர். நாடெல்லாம் சிங்களப் பெயர்கள் அடைந்தவென்ற கூற்று ஏற்புடையதன்று. சிங்கள மன்னர்களது ஆதிக்கத்தால் பழைய கிராமங்களுக்குரிய தமிழ்ப் பெயர்கள் சிங்கள வடிவத்திற்கு மாற்றப்பட்டன. புதிய கிராமங்கள் சிங்களப் பெயரைப் பெற்றன. சுவாமி ஞானப்பிரகாசர் யாழ்ப்பாணக் குடாநாட்டின் பெரும்பாலான பெயர்களை சிங்களப் பெயராக இனங் காண்பது சரியான முடிவன்று. பலவிடத்து வலிந்து தமிழ்ப் பெயரைச் சிங்களப் பெயராக்கியுள்ளார். 4. தேவநம்பிய தீசன் வலிமைமிக்க மன்னனாக விளங்கியமையினால் நாட்டில் அமைதி நிலவியது. கல்யாணி (களனிப்பிரதேசம்), காஜரகம (கதிர்காமம்), நாகதீவு (குடாநாடு) ஆகிய சிற்றரசர்கள் திறை செலுத்தி வந்துள்ளனர். அநுராதபுர மன்னனின் ஏகாதிபத்தியச் செருக்கும், அதற்கு மேலாக இந்துவாக விளங்கிய உத்தரதேசத்து (வடபகுதி) மக்களைப் பெளத்தராக்கும் முயற்சியும் வெறுப்பினை ஏற்படுத்தியிருக்க வேண்டும். முதலில் இந்துவாக விளங்கிய தேவநம்பியதீசனின் மேலாதிக்கத்தை ஏற்ற உத்தரதேசக் குறுநில மன்னர்களால் பெளத்த தேவநம்பிய தீசனின் வல்லாதிக்கத்தை ஏற்க முடியாது போனது. அவ்வாறு கிளந்தவர்களின் சேனன், குத்திக்கன் என்ற இரு சிற்றரசர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். அவர்கள் தென்னிந்தியாவிலிருந்து வந்தார்கள் என்பது ஏற்றதன்று. தமிழர் படையெடுப்பு ஏதாவது நிகழ்ந்தால் அதனை தென்னிந்தியாவிலிருந்து வந்த படையெடுப்பாகக் கூறுவது மகாவம்சத்தின் வழிமுறையாகும். சூரத்தீசன் என்ற சிங்கள மன்னன் (கி.மு. 187-177) அநுராதபுரத்தில் அரசகட்டிலேறிய போது, இந்தப் படையெடுப்பு நிகழ்ந்தது. இப்படையெடுப்பு தென்னிந்தியாவிலிருந்து நிகழவில்லை. உத்தரதேசத்தின் பூநகரிப்பகுதியிலிருந்து நிகழ்ந்தது. பூநகரிப் பிரதேசம் முதன்மையான ஒரு அரசாக விளங்கியுள்ளதென்பதற்கு அண்மையில் புஸ்பரட்னத்தால் கண்டெடுக்கப்பட்ட பிராமியச்சாசனங்கள் சான்று. பூநகரிப் பிராமியச்சாசனம் பற்றிக் கருத்துத் தெரிவித்த முதன்மைச் சாசனவியலாளர் ஐராவதம் மகாதேவன் இச்சாசனம் கி.மு. 3 ஆம், கி.மு. 2ஆம் நூற்றாண்டில் சங்க காலத்தையொத்த தமிழ்வேளரின் ஆட்சி வடவிலங்கையில் இருந்ததை உறுதிப்படுத்துகின்றது என்றார். எனவே சேனன், குத்திக்கன் என்போர் இங்கிருந்தே அநுராதபுர அரசின் மீது படையெடுத்தனர் எனத் துணியலாம். 5. இவர்கள் சோழ நாட்டுத் தமிழ்த் தலைவர்களல்லர். உத்தர தேசத்தின் ஏழு குறுநில மன்னர்களாவர். இவர்களில் புலகத்தன், பாகியன், பனையமாறன், பிளையமாறன், தாடிகன் ஆகிய ஐவர் அநுராதபுரத்தை முறைவைத்து ஆண்டுள்ளனர்.
7

Page 6
யாழ்ப்பாண வைபவ விமர்சனம் ஒர் தென்னிலங்கைத் தமிழரசகுமாரனை உபபலமாக்கி, சிங்கள அரசன் முதலாம் வலகம்பாகுவைச் சிங்காசதனத்தினின்றும் வீழ்த்திப் பதினைந்துவருடமளவில் தமிழரசு நடாத்தினர். அப்பால் இவ் வலகம்பாகு தமிழரைச் செயங்கொண்டு சிலகாலம் அரசாண்டு தென்புலஞ்சார, அவனைப்பின் தொடர்ந்த சோறநாகனுக்குப் பின், இவன் கைம்மை அனுலை என்பாள் அரசியாகி, இருவர் தமிழரையே தன் நாயகர்களும் இராச்சிய பாரம் வகிப்போருமாக்குகின்றவளானாள்.
கிறிஸ்தாப்தம் நானுற்றுமுப்பத்தாறில் பாண்டு எனும் தமிழ்ச்சேனாதிபதியும் பின்னும் நால்வரும் பெருஞ்சைனியங்கள் சகிதமாய் இலங்கையை அடைந்து இருபத்தேழு ஆண்டாய்ச் சிங்களத் தலைநகரியில் அரசு நிகழ்த்தினார். பாண்டு என்னும் தமிழரசனை வைபவமாலை ஆசிரியர் சிங்கள அரசனாமென மயங்கினார்போலும். குளக்கோட்டன் திரிகைலையைப் புதுக்கியது இவ்வரசன் காலத்திலாம் என்பர் அவர். குளக்கோட்டன் கந்தளாய்க் குளத்தையும் கட்டுவித்தான் எனக் கோணேசர் கல்வெட்டு கூறும். மயில்வாகணப்புலவர் குளக்கோட்டனுக்குக் கோட்டம் சீர்னோத்தாரணம் செய்தலைக் கொடுத்தோதித் குளங்கட்டுதலைக் கொடாதது யாதுபற்றியோ அறியோம். அதுகிடக்க, கந்தளாய்க் குளத்துக்கணிமையில் கண்டெடுக்கப்பெற்ற ஓர் சிலாசாசனத்தின்படி அக்குளம் கி.பி 277 க்கும் 304 க்குமிடையிலரசியற்றிய மகாசேனனால் ஆக்கப் பட்டதெனத் தோற்றும். இது உண்மையாயின் குளக்கோட்டன் அக்குளத்தைத் திருத்திப் பெருப்பித்தவன் மட்டுமாகலாம். (இது இராசநாயகமுதலியார் மதம்.)
பாண்டுவின் நாட்களுக்கப்பால் ஒரு நூற்றாண்டளவு செல்லுதலும், தமிழ்வெள்ளம் வட இலங்கையில் முன்னிலும் அதிகபெலமாய்ப் பாய்ந்த கொண்டிருந்தது. நான்கு நூற்றாண்டுகளாய்த் தமிழரே இலங்கையரசில் முக்கியமான உத்தியோகங்களையெல்லாம் வகிப்போராய், தம்மனம்போனபடி அரசர்களை ஆக்கியும், தாழ்த்தியும் வருவோராய் விளங்கினர். அதுவரையில் தமிழர் வடபாகமெல்லாம் மொய்த்து வல்லமைபடைத்து நின்றமையால், சிங்கள அரசனான ஏழாம் அக்கிரபோதி (781-7) அவர்க்குச் சமீபமாய் வீற்றிருக்கப்பயந்து தன் தலைநகரான அனுராதபுரத்தை நீக்கி பொலநறுவை எனும் புலத்தியநகரை அரசண்செய்து வதிவோனாயினான். முதலாம் சேனனின் காலத்தில் (846-66) பாண்டி நாட்டுத்தமிழர் செயசிலராய் இலங்கையுள் நுழைந்து சிங்கள அரசனைத் தமக்குக் கப்பங்கட்டச் செய்து மீண்டனர். நாலாம் மகிந்தன் அரசியறற்றுநாளிலும் (990) சேரணாட்டுத்தமிழர் படையெடுத்து இலங்கையிலிறங்கிச் சமராடித் தோற்றொடுங்கினர். மீட்டும் தலைநகராய்நின்ற அநுராதபுரத்தில் ஐந்தாம் மகிந்தன் சேங்கோலோச்சுங்கால் (1026), சேரணாட்டுத் தமிழ்ச் சேனாசமுத்திரம் திரண்டெழுந்துவந்து அரசனைக் கிளையோடும்பெயர்த்துச் சோழதேசத்திற் சிறை செய்த கொண்டு, பொலநறுவையில் சோழனின் பிரதிராசா ஒருவனை வைத்து முப்பதுவருடம்வரையிலரசாளலுற்றது.
8

யாழ்ப்பாண வைபவ விமர்சனம் இவ்வவதரத்தில், பரதகண்டத்திலே மகமதியர் இந்துமத்ததைத் துன்புறுத்திச் சேர்மாநாதர் கோவிலையும் தகர்த்தமைகண்டு உளம்வெருவிய இந்திய தமிழரும் பலர் இலங்கையைச்சேர்ந்து ஆங்காங்கு குடியேறலாயினர்.
இதற்கு ஒரு நூற்றாண்டின்பின் மகாபராக்கிரமபாகு (1164 - 1197) என்பான் ராஜறட்டமெனும் வடபாகமுட்பட இலங்கை முழுவதையுங் கட்டியாண்டானா யினும் தமிழரின்வலி வடஇலங்கையில் அழிந்தொழிந்து போயினதன்று. தமிழ்க்குடிகளே அங்கு நிறைந்து வாழ்ந்தனரென்பதற்கு நயினாதீவில் அவ்வரசன் தமிழில்மட்டும் வரைந்துவைத்திட்ட சிலாசாசனமும் சாட்சி. (அக்கல்லை இன்றைக்கும் நாகம்மாள்கோவில் முற்றத்திற் காணலாம்.) மீண்டும் அணிகங்கன் எனும் சோழசேனாதிபதி தமிழ்ப் பெரும்படையோடு வந்து தர்மாசோதன் எனும் சிங்கள அரசனைப்பொருது வாகை மாலைசூடிச்சின்னாள்மட்டும் செங்கோலோச்சிப் பொலநறுவையில் மாண்டான். (1209) அவனையடுத்து லோகேஸ்வரன் (121011) பராக்கிரமபாண்டியன் (1211-12) எனும் இருவர் தமிழ்வெற்றிவீரர், தமிழ்ப் படைகளை இட்டுக் கொண்டு வந்து சிங்களரை முறியடித்து முறையே நவமாசங்களும் மூவருடங்களும் சிங்காதனம் வகித்துத் தமிழரசைச் சிறிது சிறிதுகாலம் நிறுவி நீங்கினார்.
இலங்கைமேற் படையெடுத்து எழுந்த தமிழ்வெற்றியாளரைப் பின்தொடர்ந்த தமிழ்வீரர்களின் குடும்பங்களாலும் அன்னோருடன் குடியேறிய பரிசனங்களாலும் மட்டுமன்று, இளநாகன் (கி.பி. 38-44) லோகாரிக்கதிசன் (215-37) மொக்கல்லாளன் (497-515) இரண்டாம் சிறி சங்கபோதி (624-40) இரண்டாம் தப்புலன் (807-802) ஆதியாம் சிங்கள அரசர்கள் தத்தம் உள்ளுர்ச்சமர்களுக்கு உபபலமாகச் சோழ, பாண்டிய மண்டலங்களின்றும் அவ்வக்காலம் வரித்த தமிழ்ச்சேனைகளில் எஞ்சிநின்றோராலும் ராஜறட்டம் மலிந்து பொலிந்திருந்தது.
2. வன்னிக் குடியேற்றம்
இங்ங்னம் எஞ்சிநின்று குடியேறினோருள் வன்னியர்களையும் வைத்தெண்ணு தல் வேண்டும். வட இலங்கையில் வன்னிய அரசு ஏற்பட்ட வரலாற்றினை விளக்க எடுத்துக் கொண்ட கோணேசர்கல்வெட்டு, குளக்கோட்டு மகாராசனே ஆதி வன்னியர்களைத் தென்னிந்தியாவினின்றும் அழைப்பித்தான் எனக் கூறிப்போந்தது. குளக்கோட்டன் தன்குலத்தவர்களைத் தவிர்த்து வன்னியர்களை அரசுரிமைக்குத் தெரிந்தெடுத்தமை பொருத்தமற்றதோர் கதைருபமன்றோ? ஆயின், வன்னிய சாதியார் புகழ்படைத்த ஒரு போர்க்குலமாதலால், அவ்வக் காலத்தில் நம் துவீபத்துட் படையெடுத்து வந்தடைந்த தமிழ்ச் சைனியங்களோடு அன்னோர் வந்திருத்தலும், அரசுவளங் குன்றிக்கிடந்த பிரதேசங்களைச் சற்றுச் சற்றாக அப்பிக்கொண்டு குறுநில மன்னர்களாய் விளக்கினமையும், காலகதியில்
9

Page 7
யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
கோணேசர் கோயிலையும் செல்வம் பொழியும் அதன் மானியங்களோடு கவர்ந்து கொண்டமையுமே ஏற்புடைய சரித்திரமாகும்.
வன்னியர்கள் புராணகற்பனைகூறும் அக்கினிகுலத்தவர் என்ப, (இது வட்நி= அக்கினி என்னும் சப்தத்தை அடியாய்க் கொண்டு எழுந்த கட்டுரைபோலும்). சிலை எழுபது எனும் பத்தியம் அவர்கள் குலமான்மியத்தைக் கூறுவது இவ்வாறே ஏர் எழுபது வேளாளர் மான்மியத்தையும் சட்டி எழுபது செங்குந்தர் மான்மியத் தையும் எடுத்திசைக்கும். சிலை (வில்) வன்னியருக்குரிய சின்னமாம். வன்னியரோடு வந்தோம் யாம் எனப் பாராம்பரியக்கூறும் நம்பிகளின் சின்னமும் வில்லேயாதல் நோக்கற்பாலது. கல்லாடத்தில் வன்னியருக்குப் பன்றியுற்பத்தி கூறப்பட்டுள்ளது.
கருகுமுகிற்கணிநிறத்தழற்கட்பிறையெயிற்
நரிதருகுட்டியாயபன்னிரண்டினை.
நாற்பலம் வன்னியராக்கியபெருமாள். (866)6OTLlb 38)
இந்நவீனவுற்பத்தி வெறுங்கற்பனையன்று, உண்மைச்சம்பவமொன்று பொதிந்த உருவகமென்பர் பூரீV. குமாரசுவாமி பிரதிவத்தர் அவர்கள். (Hundu Organ8-1-23) வன்னியர்கள் பலர் பன்றிக்கொடியுடையோரான சாளுக்கிய அரசரின்கீழ்ச் சேவகத் தமர்ந்திருந்தவர்கள். பின் தெற்கின் கண்ணிழிந்து மதுரைப் பாண்டியனாகும் சோமசுந்தரனிடம், பணிவிடை பூண்டவர்களெளன்பதும் சோமசுந்தர பாண்டியனே சிவபெருமானுமாகக் கொள்ளப்பட்டமையின், இப்பெருமான் கார்நிறத்த செங்கட் பிறைஎயிற்றுப் பன்னியீன்ற பன்னிருகுட்டிகளை. நாற்படையிலும் புகழ்சிறந்த வன்னியராக்கினார் எனக் கற்பிக்கப்பட்டதென்பதும் மேற்படியாரது அபிமதம்.
வன்னியர்களுற்பத்தி ஒருபுறங்கிடக்க, கோணேசர் ஆலயக் கல்வெட்டானது அன்னோர் அவ்வாலயய சம்பந்தமாய் வந்துற்றார் எனவழுத்த வையா, அவர்கள் வரராசசிங்க மகாராசாவின் மணவாளிக்குப் பரிவாரமாய் இங்கு சேர்ந்தனர் எனப் பகரும். வன்னியர்கள் இலங்கையை நாடிய காரணத்திலுண்மை எவ்வாறா யினும், அன்னோர் பல நூற்றாண்டுகளின்முன் இந்தியாவினின்றும் வெளிப்பட்டு வட இலங்கையிற் குடியேறினர் என்பது சந்தேகமற்ற ஓர் சரித்திர அமிசமாம். வன்னியர்கள் வருகையை வையா தனக்குச் சகசமான சரித்திர மாறுபாடுகளோடு கலந்து தந்திருக்கின்றது. அம்மாறுபாடுகளின் குசமசக்கான பின்னலை வெட்டிப் பிரித்து உண்மைபகுதிகளைத் தெரிவிப்பது தற்கால சரித்திர விஞ்ஞானத்திற்கு எட்டிய கருமமன்று. ஆயினும் முற்பட அடங்காப்பற்று எனும் வன்னிநாட்டின் குடிகொண்டிருந்தோரைச் சுட்டி வையா காட்டுகின்ற விபரமும், வந்தேறுகுடிகளின் வரிசையும் - சரித்திர சம்பவங்களாகலாம். ஆதலால் பின்வரும் மேற்கோள்களை அவ்வையாவினின்றும் பெயர்த்தெழுதுவாம்.
அடங்காப்பற்றென்னுஞ் சீர்மையை இராச்சியம் பண்ணியிருந்தவர்கள்
10

யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
ஆரோவென்றால், முள்ளியவளைப்பற்று ஆன்டது சந்திரமன் என்னும் இராசாவும் அதில்வசிக்கப்பட்ட சான்றாரும். வலையருந்தான் கரிக்கட்டு மூலைப்பற்று ஆண்டது அரசன் மெச்சன் என்னும் பறையனும் அவன் படைசெனமுந்தான். மேற்பற்றுப் பகுதி தனிக்கல்லிலேயிருந்து அரசாண்டது சகரனென்றும் மகரனென்றும் இரண்டு வேடரும் அவர்கள் படையுந்தான், கிழக்குமூலையும், மேற்குமூலையுமான்டது முன் னாளையிலே இராச்சியம் பணிணிய இராவணன் கிளையிலேயுள்ள இராட்சதர்கள் இராவணசங்காரத்திலே இராமருக்குப்பயந்து ஒளித்துவந்த பூதராட்சதரும் அவருக்கு முதலாளியான மதியூகி என்னும் இராட்சதனும் படையுந்தான். செட்டிகுளம் அரசாண்டது துருட்டா என்னும் பறங்கியும் அவன் படையாகிய பறங்கிக்காரருந்தான். திருக்கோணமலைப்பற்று ஆண்டது அம்பட்ட நீலப்பணிக்கன் என்கிறவனும் அவன் படையாகிய அம்பட்டருந்தான்.* அதற்கப்புறம் தம்பலாமம் கொட்டியாரம் மட்டக்களப்பு காடுகொண்ட சீர்மை. (பக்-16-8)
மன்னார் விடத்தற்தீவு ஒரு வனமாயிருந்தது. இராவணன் கிளையிலுள்ள பெண் சனங்களுக்கு(இராமர்) தனக்குக்கடலணை அடைத்துக்கொடுத்த சாம்புவன் கிளையில்வந்த பரவரைத் துணையாகக் கூட்டிக்கொடுத்தார். அவர்கள் அந்த காட்டைவெட்டி நாடாக்கியிருந்தார்கள்.(பக்.19) (மீகாமனுக்குப்) பயந்து ஓடிப்போன வெடியரசன் என்னும் முக்கியன் மட்டக்கிளப்பு நாட்டிலே போய் அங்கிருந்த இலந்தைக் காட்டையெல்லாம் வெட்டி வெளியாக்கித் தனது நாடாக்கியிருந்தான். மீராவென்கிறவனும் அவன் செனமும் ஒளித்துவந்த விடத்தற்திவென்னும் நாட்டிலிருந்தார்கள்.(பக்.21-2)
வீரநாராயணன்செட்டி. அடங்காப்பற்றென்னும் நாட்டிலே செட்டிக்குளமென்னும் நாட்டிலே வந்திருந்தான்.(பக்.24-25)
இதுகாறும் எடுத்தோதியது வையா மேற்கோள். அப்பால் வன்னியர்கள்
தமக்குத் துணையாய் அழைப்பித்த குடிகளின் வரலாற்றினை அந்நூல்தான் வரையும் பான்மையாவது.
வன்னியமார் 59பேரும் அடங்காப்பற்றென்னுஞ் சீர்மைக்கு வந்தார்கள்.
இதிற் காட்டிய பிரிவுகள் பிற்காலத்திலிருந்தவைகளை முற்காலத்தனவாக நூலாசிரியர் மயங்கிக் கூறுகிறார். செட்டிக்குளத்தில் பறங்கியரிருந்தது உண்மை அதற்குப் பறங்கிச் செட்டிக்குளம் என்ற பெயரும் வந்திருக்கின்றது. ஆயின் அப்பறங்கியரசாட்சி கி.பி 1620இன் பின்னேயாம் சந்திரவன் ஆதியவர்கள் ஓர்காலம் அவ்வப்பற்றை ஆண்டிருக்கலாம். காலவரையறையோ வையாவிலில்லை - வையாபாடலில் வன்னியாண்ட வரசர்களின் பெயர்கள் ஒழுங்குமாறிப் பின்வருகிற படியிருத்தல்காண்க. செட்டிக்குளத்தில் திசிட்டா(34), கணுக்கேணியில் வில்லிகுலப் பறையன்(34.42) தணிக்கல்லில் சகரரும் மகரரும்(35,43), கிழக்குமூலை மேற்குமூலை நாடு, ராட்சதா(3644), முள்ளியவளையில் சந்திரவன்(42), நீல நாவிதன்(44) வையாபாடலின் விருத்தங்கள் முறைபிறழ்ந்தும் அரைகுறையாயு மிருந்ததற்கு இதுவுமொரு சாட்சி.
11

Page 8
யாழ்ப்பாண வைபவ விமர்சனம் அடங்காப்பற்று பல பல சாதியும் அரசு பண்ணுகிறபடியால் நாங்கள் தனித்து என்ன செய்வோமென்று தங்கள் சொற்கீழமைச்சலான தூதரைக்கூப்பிட்டு மதுரை, தொண்டைமண்டலம், காரைக்கால், திருச்சிலாப்பளி, கூடலூர், மருங்கூர், இந்நாடு களிலேயிருக்கின்ற வெள்ளாளர், பிராமணர், செட்டி, சக்கிலியர், அகம்படி, மலையகம், திமிலர், குயவர் இப்படிப்பட்ட சாதி பெரியவர்களிலும் எளியவர்க ளிலும் கூட்டத்தக்கன பேரையும் அழைத்துக்கொண்டு இளஞ்சிங்கமாப்பாணன், நல்லவாகுதேவன், அத்திமாப்பாணன், கறுத்தவாகுசிங்கமாப்பாணன் இவர்களை வரச்சொல்லுங்கோ வென்று தூதரையனுப்பினார்கள்.
அந்தத் தூதர்கள் போனபின்பு வாட்சிங்க ஆராய்ச்சியென்கிறவன் முல்லை மாலாணன், சிவலை மாலாணன் சருகுமாலாணன் என்கிறவர்களையும் கூட்டிக்கொண்டு திருச்சிலாப்பளியென்னும் நாட்டிலிருந்து இலங்கை நாட்டுக்கு வந்து முள்ளியவளை நாட்டிலே சான்றார் வலையருக்குரிய ஏவலுஞ் செய்துகொண்டு தாமரைக்குளமும் கட்டி இன்னமுஞ் சிறிதுகுளங்களு முண்டுபண்ணியிருந்தார்கள். வாட்சிங்க ஆராய்ச்சி என்னும் ஆளுடையமகன் நந்தி என்கிறவனுடைய மக்கள் பெண் பிள்ளைகள் ஏழுபேர் கற்பு நீதி தளம்பாதவர்களாகத் தவம்பண்ணிக்கொண்டு அறுபது தீர்த்தக்கிணறுமுண்டு பண்ணிச் சிவனையும் வணங்கி நெறியுடனே யிருந்தார்கள்.*
அது கதையிருக்க வன்னியர்மார் சொற்படிக்குப் போன தூதர்கள் சொற்படிக்கு வடநாட்டிலிருந்து வந்தவர்களை இன்னாரின்னாரென்று குறிக்கப்படுவது: அத்தி மாப்பாணன், மழுவராயன், திசைவிளங்குமழுவராயன், சேதுவந்தமழுவராயன், கறுத்தவாகு, சிங்கமாப்பாணன், இராசிங்கமாப்பாணன், இளஞ்சிங்கமாப்பாணன், நல்லவாகுமெய்தேவன், வீரசோதையன், திடவிரசிங்கமாப்பாணன், அனுராதபுரி வீரமழுவராயன், கிளைகாத்தவன், முடிகாத்தவன், சிங்கவாகு, யாப்பையினார், மூக்கையினார், கேப்பையினார், ஊமைச்சியனார், தொவ்வாணிசோனர், திசைவென்றோன், இளஞ்சிங்கவாகுதேவன், தனத்திறங்கிறீபன், வக்கிரன்மயிடன், கறுத்தவராயசிங்கமுகன், முடியிட்டான், அங்கசிங்கன், காஞ்சகட்டையன், காலிங்கன், தில்லைமூவாயிரர், சுவதிட்டராயன், கங்கைவளநாட்டான், காவேரி யடைந்தான், முல்லைமடப்பளி, குமாரமடப்பளி, சங்குமடப்பளி, சருகுமடப்பளி, அகம்படியராகிய இவர்களும் ஆரியவங்கிஷ பிராமணர்களுங் கூடிவந்து ஓடமேறிக் கடல்கடந்து இலங்கைநாட்டிலே யாழ்ப்பாணத்தில் வந்திறங்கியிருந்தார்கள்.
அப்படியே சிலநாளிலிருந்து திடவீரசிங்கமென்கிறவன் கரிக்கட்டு மூலைப்பற்றுக்கு வந்து அங்கேயிருந்து பறையரையும் சங்காரம் பண்ணி அரசுபண்ணினான். அந்தப் பறையரிலே அரசன் மெச்சன் இருபேரும்
* வாட்சிங்க ஆராய்ச்சியின் குடியேற்றத்தோடு சேர்ந்த அறுபது தீர்த்தக்கிணற்று ஐதீகமே
கர்ணபரம்பரையில் 32 குமாரத்தி என்று சொல்லப்படுகிறது போலும்.
12

யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
தேவர்களுக்கு முன்னோடியான் என்ற பேராச்சுது.
அது கதையிருக்க: சான்றாரும் வலையருமாகவிருந்து அரசு பண்ணியிருந்த முள்ளியவளை நகரிலே இளஞ்சிங்கமாப்பாணன், இராசசிங்கமாப்பாணன், நல்லவாகுமெய்தேவன், கறுத்தவாகு, சிங்கமாப்பாணன் என்னும் பேர்கள் சான்றோரையும் வலையரையுஞ் சங்கரித்துத் துரத்திப்போட்டுத் தங்கள் நாடாக்கி இருந்தார்கள். நீலயினார் திசையாண்டார் என்கிறவனும் படையும்வந்து மேல் புற்றுத் தனிக்கல்லிலேயிருந்த வேடரையுஞ் சங்கரித்துத் தமது நாடாக்கியிருந் தார்கள். கிழக்குமூலை மேற்குமூலையெனுஞ் சீமையை ஆண்ட இராட்சத பூதங்களைச் சங்கரித்துச் சிங்கவாகு என்கிற இறைவன் மேற்குமூலை பொக்கா வன்னி என்னும் நாட்டிலேயிருந்தான். தனது நாடாக்கி சுபதிட்டா என்னும் பிராமணனும் செனமும் திரியாய் நாட்டுக்குப் போய் அம்பட்ட நீலப்பணிக்கனைச் சங்கரித்து அரசு செய்தான். பின்பு தானத்தார், வரிப்பத்தார், இடக்கையார், வலக்கையார், முடியிட்டார், நிலையிட்டார், சம்புநாட்டார், மட்டைக்களப்பு தம்பல காமம் கொட்டியாரத்திலே வந்திருந்தார்கள். அதற்கப்பால் வெருக்கற்கங்கைக்கப் புறம் அங்கசன் அதிவீரதேவன் திறையிட்டான் நிலையிட்டான். இவர்கள் வந்தரசுபண்ணியிருந்தார்கள்.
இதுகதையிருக்க, மன்னாரென்னுஞ் சீர்மையிலே வீரசோதையன், கோவசிகன், வெங்கடாசலன் இவர்கள் வந்தரசுபண்ணியிருந்தார்கள்.
இப்படியிருக்க யாப்பையினார், கேப்பையினார், ஊமைச்சியார், தெல்லியென் கின்ற நாலுபேரிலே யாழ்ப்பாணநாட்டிலே தெல்லிவந்தரசு பண்ணினபடியால் தெல்லிப்பளை என்று பேராச்சு. கேப்பையினார், யாப்பையினார் கரைதுறைப் பற்றிலே யிருந்தார்கள். ஊமைச்சி யென்ற பெண்பிள்ளை கருவாட்டுக்கேணி நாட்டிலிருந்தாள். சங்குமடப்பளி, சருகுமடப்பளி, முல்லைமடப்பளி, அகம்படி, மலையகம், கைக்குளர், சான்றார் இவர்களும் அந்த நாட்டிலே இருப்பவர்களுக் குள்ள ஊழியஞ் செய்து கொண்டிருந்தார்கள். (பக். 26-33)
வன்னியர்கள் வரித்த குடிகள் நாடு கொண்டபின் வன்னிச்சிமார் தாமும் வேறு பல குடிகளோடு வந்தனர் என வையா எடுத்திசைக்கும் அவ்வரலாறு பின்வருமாறு:
வன்னிச்சிமார் கூட வந்தவர்கள் ஆரென்றால் அத்திமாப்பாணன், அட்டதிசை வென்றோன், இந்துமுடிநாதன், திசைவிளங்கன், மதிவிளங்கன், சூரியப்பிரவேசன் என்னும் வெள்ளாளரும் தில்லை மூவாயிரவரும் வருணகுலத்தார், காஞ்சிப் பதியார், இடைக்காட்டார், பாரத்துவாசப் பிராமணர், குளக்கோட்டுநாதர், குளப்புவி காத்தவர், இராசவரோதயசிங்கம், சிந்துநாட்டார், காலிங்கள், கவுசலர், கன்னடியர், ஒட்டியர், மறாடர், பரதேசி, அகம்படி, மலையகம், துலுக்கள், வீரமுட்டிகள்,
13

Page 9
யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
சங்கமத்தார், இருவிளங்குமாப்பாணன், நிலைவிளங்குமாப்பாணன், கொல்லர், கன்னார், தட்டார், கற்சிப்பர், வலையர், யாழ்ப்பாடி, எண்ணெய்விலைவாணிபர், இலைவாணிபர், விறகுவிலைகாரர், தச்சர், பள்ளுவிலி, கோவியன், புறவரோ தையர்,* குசவர், நாவிதர், வண்ணார், பறையர், நட்டுவர் இப்படிப் பதினெட்டுக் குடிமைகளும் மற்றும் வெள்ளாளருடனேயும் மதுரைநாட்டாலே எழும்பி வன்னிச்சிமார் கும்பகோணத்திலேவந்து சங்கராசாரி சாரங்க தேவரைப் பணிந்து நாங்கள் இலங்கைநாட்டுக்குப் போகிறபடியால் அந்த நாட்டுக்குக் குருக்களாக இருக்கிறதற்கு நாம் ஒரு பிள்ளை தரவேணுமென்று கேட்டபரிசால், தனது வெந்துவிற் குருக்கள் மாரிலே சயம்புநாதர், சிவதருநாதர், தருணர், திருக்கூனர், முத்திலிங்கள் என்னும் ஞானிகளும், தெசதரக்குருக்களும் பெண்சாதி வெள்ளைக் கையாச்சியும், தாண்டவராயக்குருக்களும் பெண்சாதி அலமேது என்பவளும் சங்கமர்கள் அறுபது பேரும் கத்திக்காரர் சங்குக்காரருமாக அறுபது பரதேசி வெள்ளாளரும் பாவாணர் வீரபத்திரனும் ஐயனாரும் உதித்தவளப்பமறிந்த வீரமுட்டிகள் நாற்பது பேருமாகக் கூட்டி வன்னிச்சிமாருடனே இலங்கைநாட்டுக்குப் போங்கோ என்று அனுப்பினார்கள். (பக் 36-9)
அனுப்பப்பட்டு வந்தவர்கள் குடியேறிய வரலாறும் வையாவில் பின்கண்டபடி வரைந்திருக்கிறது.
அத்திமாப்பாணன் மழுவராயன் யாழ்ப்பாணத்துக்கு அதிபதியானார்கள். வில்வராயன் நல்லூரிலே இருந்தான். கட்டையர்காலிங்கன் சாவுகச்சேரியி லிருந்தான். தில்லைமூவாயிரர்கிளையான் வெங்கடாசலம் விருதுஞானி வரணிநாட்டிலேயிருந்தான். முக்கியன் திருவாசன் வெடியரசனென்பான் பூனேரி என்னும் நாட்டுக்கதிபதியானான். சங்கமர்கள் அறுபதுபேரும் வீரமயேசுரரும் கெருடாவிலிலேயிருந்தார்கள். இதுமுகனையாகச் சான்றார், வலையர், திமிலர், கரையார், பள்ளர், நளவர், அகம்படி, மலையகம், கோவியர், மடப்பளி, புறவரோதயர், சிந்துநாட்டார், கைக்குளர், மறவர், பரவர், முனைத்தீவார், கொல்லர், கன்னார், நாவிதர், வண்ணார், தட்டார், பறையர் இப்படிப்பட்ட யாவரும் இயாழ்ப்பாணம் அறுபத்துநாலு குறிச்சியிலுமிருந்து வாழ்ந்தார்கள். இப்படியிருக்க தொடியர், கவுசலர், பரவர், மறவர், சருகுமடப்பளி, தனக்காரர், சான்றார், அகம்படி, செட்டிகள், கவறைவேட்ர் இவர்களிலே சிறிதுபேர் வன்னி அஞ்சுபற்றிலும் போய்க் கலந்திருந்தார்கள். மலையகத்தார் மாமுனையார் இவர்கள் பறங்கியரசாண்ட செட்டிகுளத்திலேயிருந்தார்கள். கன்னடர், தெலுங்கள், மறாடர், எயினர், தொட்டியர், சிங்களவர், துலுக்கள், சங்குமுனைத்தீவார்களும் சூரியசிங்கனென்கின்ற வன்னியனும் சிறிது வெள்ளாளரும் நுகரைப்பற்றிலிருந்து
* Provedor “மேற்பார்வைக் காரன்’ எனும் பறங்கிப்பாஷைச் சொல் அல்லது வேறொரு பறங்கிச்சொல்லாக வேண்டும். வையா பறங்கிக்காரர் வருகைக்குப்பின் எழுதப்பட்டதற்கு இதுவுமோர் சாட்சி.
14

யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
வாழ்ந்தார்கள். தெசரதக்குருக்களும் பெண்சாதி வெள்ளைக்கையாச்சியும் சங்குக் காரர், கின்னரசகாரர், கத்திக்காரர், குசவர், இட்டம் போன பரதேசிவெள்ளாளர் அறுபதுபேரும் முள்ளியவளை நாட்டிலே வந்திருந்தார்கள். தாண்டவராயக் குருக்களும் பெண்சாதி அலைமேதென்னும் பெண்பிள்ளையும் கண்ணடத்தாரும் கட்டுக்குளப்பற்றிலே திரியாய் நாட்டிலேயிருந்து சுவாமிமலை வள்ளிமலையென்று இரண்டு மலையு முண்டுபண்ணிக் கொண்டிருந்தார்கள். திருக்கூனர் தென்னமர வாடிப்பற்றிலே கடற்கரையோரம் சமுத்திரக்கரையிலே தனது தொண்டர் நாலு பேரும் தானுமாக ஞானச்சுரூப தெய்வமாமருங்கானார்கள். அவருடைய மகன் முத்திலிங்கரும் கதிரைமலையிலே சிவமூர்த்தியானார். (பக். 42-4)
வையாவில் அடிதலைமாறியும் காலவரம்பிகந்தும் காட்டுற்ற குடிகளுட்சில தம் பெயரை நிறுவி வைத்திட்ட இடப்பெயர்களும் கவனிக்கற்பாலன. மலையன் கடவை (புலோலி), மலையாளன் போயிட்டி, மலையாளன்வளவு (அச்செழு) மலையாளன்சீமா (அச்சுவேலி), மலையாளன் ஒல்லை (உடுவில்), மலையகன் வளவு (நீர்வேலி) என மலையகக் குலப்பெயரும், கூறியான்கடவை (கொக்குவில்) சிவியாதெரு எனச் சிவியார் குலப்பெயரும், புலிங்கதேவன்சீமா (மந்துவில்), வலதேவன்சீமா, பாகுதேவன் சீமா (வீமன்காமம்), செயபாகுதேவன்சீமா (தெல்லிப்பழை), விசயபாகுதேவன்சீமா (மல்லாகம்), மறவன்புலோ, மறவகுளம் என மறவகுலப்பெயரும்: பாணன்சீமா (கட்டுவன்), பாணன்குளம் எனப் பாணர் குலப்பெயரும், முக்குவர்சீமா, பணிக்கன்சீமா (தெல்லிப்பழை), வில்லன்சீமா (மானிப்பாய்) என அவ்வலர்குலப்பெயரும், இன்னன பல பிறவுங்காண்க, அந்நாட் பிரசித்தி பெற்றிருந்த தமிழ்த்தலைவர்கள் நாமங்களும் பதிராயன்சீமா (துன்னாலை), இராசசுந்தரப் பதிராயன்வளவு (சண்டிருப்பாய்) விக்கிரமசிங்கப் பதிராயன்சீமா (மல்லாகம்), கோழசிங்கப் பதிராயன்வயல் (அளவெட்டி), மழவராயன்குறிச்சி (வடமராட்சிமேற்கு), பாண்டிமழவராயன்வளவு (திருநெல்வேலி), வில்வராயன் தோட்டம் (சங்கானை), சேனாதிராயன்சீமா (வீமன்காமம்), சோழங்கராயன் தோட்டம், காலிங்கராயன்சீமா (கட்டுவன்), வானாதிராயன்மடத்திற்பிட்டி (மல்லாகம்), நிற்சிங்கராயன்வளவு (மாகையப்பிட்டி), இலங்கைநாராயணச் சேனாதிராயன்சீமா (மயிலிட்டி), நாயன்மார்கட்டு, பல்லவராயன் கட்டு என இன்னன பிறவிடங்களில் வழங்குவன. காங்கேயன்சீமா, கலட்டி எனவும், சித்தண்கேணி எனவும் சில அதிக விளக்கமற்றோர் தமிழ்ப்பெயர் வகித்தன இடங்களும் உள. இவற்றை “சில இடப்பெயர்களின் வரலாறு' என்னும் தங்கமான நூலினுட் பரக்கக் காண்க.
15

Page 10
யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
3. யாழ்ப்பாணத் தனிச்செங்கோன்மை
விஜய கூளங்கை ஆரியச்சக்கரவர்த்தியே வட இலங்கையில் தனிச்செங்கோ லோச்சிய அரசர்களுள் முதலானவனென யாழ்ப்பாணச் சரித்திரகாரர் இயம்புவர். ஆயின் இதுகாறும் நாம் கூறியவற்றால் இது பொருந்தாக்கதையென்று ஒதுக்கப் படும். எம் அரசர்கள் சற்றுச் சற்றாய் முதன்மை படைத்துச் சகத்ததிர்பகளாய் விளங்கிய பின்னரே சக்கரவர்த்திப் பெயருக்கருகராகியிருப்பர். முடிசூடிய அரசர்கள் தாமும் ஏற்படுமுன் செல்வாக்குமிகுந்த தலைவர்களே அதிகாரம் வகித்திருப்பர். இதனைப் பாதர் குவேறோஸ் எனும் போர்த்துக்கீச இலங்கைச் சரித்திராசிரியர் வரைந்து வைத்திட்ட ஐதீகமும் ஆதரிக்கும். அவர் கூறுகின்றபடி யாழ்ப்பாணம் ஆதியில் விதானையாராலும் அடுத்து ஆராய்ச்சிகளாலும் அப்பால் முதலியார்மாராலும் ஆளப்படலாகி அதன் பின்னரே அரசர்கள் தோற்றினார். (Oueiroz: Conquista, p.37) இவ்வாசிரியர் குறிக்கின்றவர்கள் சேனை அணிவகுப்பின் வரிசையான அதிபர்களேயாக, இலங்கையிற் படையெடுத்திறங்கிய சேனைகளுள் எஞ்சியோர்தாம் காலகதியில் வடபாக அரசுரிமையைக் கைக்கொண்டார் எனும் கொள்கை வலியுறுத்தப்படும் என்க.
ஆரியச் சக்கரவர்த்திகட்கு முற்படவிளங்கிய அரசர்கள் சில்லோரைச் சுட்டிய குறிப்புக்கள் சிங்கள சரித்திர நூலாகும் மகாவமிசத்தினுள்ளும் தென்னிந்திய சிலாசனங்களிலும் இலைமறை காய்போற் காணப்படுகின்றன. அவற்றை இனி எடுத்தோதுவாம்.
கி.பி. 614 உக்கும் 623 உக்குமிடையில் அனுரதபுரத்திலிருந்தரசு புரிந்த சீலமேகவன்னன் என்னும் சிங்கள அரசன் காலத்தில் சிறீநாதன் என்னும் தலைவன் தென்னிந்தியாவுக்குச் சென்று ஓர் தமிழச் சைனியத்தை இட்டுக்கொடு வந்து வட இலங்கையைப் பிடுங்கி அரசாள யத்தனித்தமையைக் காண்கின்றோம். (மகாவமி. 44; 70, 73) தன் நாமத்தினாற் தமிழனே எனத் தெரிகின்ற இவன்தான் யாழ்ப்பாணத் தனியரசை அடியிட எழுந்தவனாகலாம் என ஊகிக்கக் கிடக்கின்றது. இவற்றுக்குச் சைனியம் கொடுத்துதவினோன் சிங்கவிஷ்ணு எனும் (590 - 618) Lu6d6d6du SÐIJaF6ör GusT Jub. (The Pallavas, by Prof.Dubreuil. p. 73)
6. யாழ்ப்பாண இராச்சியம் முதன்முதல் 13ஆம் நூற்றாண்டிலே தோன்றியதென்ற சிங்கள வரலாற்றாசிரியர்களின் கூற்றை ஏற்று, விஜய கூளங்கை ஆரியச்சக்கரவர்த்தியே (விசயகாலிங்கன்) யாழ்ப்பாணத்தின் முதல் மன்னனென ஞானப்பிரகாசரும் கூறுகிறார். யாழ்ப்பாணத்தின் முதல் மன்னனாகக் கொள்ளத்தக்கவன் கி.பி. 785 ல் கதிரை மலையிலிருந்து (கந்தரோடை) ஆட்சி செலுத்திய உக்கிரசிங்கன் ஆவான். கதிரைமலையிலிருந்து தனது தலைநகரை பூநகரிப்பகுதிக்கு மாற்றி, புதிதாக அமைப்பித்த தலைநகருக்குத் தன் பெயரால் சிங்க(ன்) நகர் என அழைக்க வைத்தவன் இவனே. இவனின்பின் இவன் மகனான நரசிங்கன் என்ற ஜெயவீரசிங்கையாரியன் ஆண்டுள்ளான். 1242 ல் விஜய கூளங்கை அல்லது காலிங்கச்சக்கரவர்த்தி அரசகட்டிலேறும் வரை அரசர்கள் அரசுப்பிரதிநிதிகள் வடவிலங்கையை நிர்வகித்துள்ளனர்.
16

யாழ்ப்பாண வைபவ விமர்சனம் அடுத்த நூற்றாண்டில தமிழ்த் தலைவர்கள் வடஇலங்கையில் வலிமிகுத்துத் தன்னரசு நடத்தி வந்ததையும், அவ்வப்பொழுதில் சிங்கள அரசர்களால் ஒறுத்தடக் குண்டதையும் மகாவமிச நூல் காட்டும். இரண்டாம் மகிந்தன் சிங்கள அரசு கைக் கொண்ட ஞான்றில் (கி.பி.764) "வடபாகங்களின் தலைவர்களும் நாட்டாண்மை களும் அப்பிரதேசங்களைப்பலாத்காரமாய்கட்டியாண்டுகொண்டும் இறைவரிகளை அபகரித்துக் கொண்டும் இருந்தனர் (மகாவமி. 48:83) என்பது அதன் கூற்று.
யாழ்ப்பாண வைபவமாலை தந்திருக்கின்ற பூர்வகால ஆண்டுக் கணக்குகளைப் பெரும்பான்மை ஒப்புகின்றவராகியழரீ இராசநாயக முதலியார், எட்டாம் நூற்றாண்டில் உக்கிரசிங்கன் (கி.பி. 795 தொடக்கம்)கதிரைமலையிலிருந்து யாழ்ப்பாண அரசியற்றினான் எனவும், அவன் விசயராசனோடுகி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் இலங்கையை அடைந்து சிங்கபுரம் அல்லது சிங்கைநகர் என்னும் பிரதேசத்தில் வாசஞ்செய்த கலிங்கத்தேசத்துக் கங்கைகுலத்தவர்களின் வழித்தோன்றல் எனவும் ஊகிப்பர். (இது பண்டைச்சரித்திர பரிசீலனர்களுளொருவராய்த் திகழும் முதலியாரவர்கள் ஆங்கிலத்தில் இயற்றி வைத்திருக்கின்ற யாழ்ப்பாணப் புராதன சரித்திர ஆராய்ச்சிக் கைச்சரவையிற் கண்டது. அருமந்த ஆராய்ச்சிகளடங்கிய இச்சரவையை முதலியாரவர்கள் தமக்கு எம்மோடுள்ள மித்திரபாந்துவ ஆராமையினால் அச்சேற்றுமுன்னரேயும் எமதுபார்வைக்கு அனுப்பவராயினர்.) யாழ்ப்பாண அரசர்களின் ஆதி இராசதானி கதிரைமலை (அல்லது அதிக திருத்தமாய், கதுருமலை) என்னுமிடமா யமைந்தமை உண்மைப் பகுதியாகலாம். (முன் 28ம் பக்கத்திற் சொல்லியன பார்க்க) ஆயின் உக்கிரசிங்களரசுக்கு வைபவமாலை கொடுத்தோதுகின்ற 717ம் சகவருஷத் தொடக்கம் பொருந்தாது. இவன் சரித்திர சம்பந்தமானவனெனின், இவன் காலம் 13ம் நூற்றாண்டுத் தொடக்கமேயாதல் வேண்டுமென்றும் எமது கொள்கை மேல் விளக்கப்படுவது.
முதலாம் பாரந்தகன் எனும் சோழன் கி.பி. 947ல் சிங்கள தேசத்துட் படை யெடுத்துச் சென்று அதன் அரசனைச் சிரமரிந்து கொன்றனனென்னும் செய்தி தென்னிந்திய சிலாசாசனமொன்றில் பிரஸ்தாபிக்கப்படுகின்றது. (Epigr Indic. VIp.1)947ல் இலங்கையையாண்டவனான 3ம் உதயன் என்னும் சிங்களமன்னன் மாற்றரசனாற் கொல்லப்பட்டனல்லன். ஆகவே சிலாசாசனங்கூறுகின்ற துர்அதிஷ்ட முற்ற அண்ணல் யாழ்ப்பாணத்தவனேயாம் எனத் துணிய இடமுண்டு.
இப்பராந்தகனின் பின் இராசராசனும் அவன் மகனும் (கி.பி. 1001 முதல் 1004 வரை) வட இலங்கைக்கதிபர்களானார்கள். ஆகவே அந்நாளில் யாழ்ப்பாணத்திலே சுயஅரசர் விளங்கினாரில்லை. வடபாகத்தை அடிப்படுத்திய சோழர், 1012ம் ஆண்டில் தென்பாகத்தையும் தமதாக்கி 1070ம் ஆண்டளவும் இலங்கை முழுதையுங் கட்டியாண்டனர். நந்தீவு அன்னோரால் மும்முடி சோழமண்டலம் என நாமகரணஞ் செய்யப்பட்டது. புலஸ்தியநகாாகிய
17

Page 11
யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
பொலனறுவை (புலத்திநகற, புலந்தற, பொலனறுவை) ஜனநாதபுரமெனப் பெயரடைந்து முறையே முதல் இராசராசன், இரண்டாம் ராசேந்திரதேவன், வீரராசேந்திரன், அதிராசேந்திரன் என்னும் சோழ மண்டல வீரர்களின் பிரதி ராசாக்களுக்கு வாசஸ்தானமாயிற்று. மாதோட்டமும் ராஜராஜபுரம் என மறுநாமம் புனைந்து விளங்கலுற்றது. இக்காலமெல்லாம் யாழ்ப்பாணம் தனிச் செங்கோண் மையின்றிக் கிடந்ததேயாம். அப்போதைக்கப்போது தலைநிறுவிய யாழ்ப்பாணத்து அரசகுடும்பத்தவர்களும் அடக்கி ஒதுக்கப்பட்டனர். சோழ ஆணையினின்று 1070ம் ஆண்டு இலங்கையைப் பிடுங்கிக்கொண்டவனான முதல் விஜயபாகு (1065-120) வின் நாட்களிலும் யாழ்ப்பாணம் அவ்வாறிருந்தமை இவ்விஜயபாகு தன் பொலனறுவைச் சிலாசாசனத்தில்
ஐம்பத் தயப்யாணி டு இலங்கை முழுதும் ஒருகுடை நிழற்றித் திருவிராஜ்யஞ்செய்தருளி (Arch.Surv. 1911-12 p.111) எனச் சாற்றுதலினாற் தோற்றும்.
யாழ்ப்பாணம் சோழ ஆதிக்கத்தின்முன் (1001-1070) மன்னர்களொப்பிய தன்னரசாயிருந்தமைக்கு முதலாம் குளோத்துங்க சோழனை (கி.பி. 10701118) சயங்கொண்டார்பாடி கலிங்கத்துப்பரணியில் நிகழ்கின்ற பின்வரும் மேற்கொள்னறாதல் கூடும். அ.தியாதெனில்,
கேழல்மேழி கலை யாளி வீணை சிலை கெண்டை என்றினையபல்கொடி
தாழ மேருவிலுயர்ந்த செம்பியர்
தனிப்புலிக்கொடி தழைக்கவே. - (கடவுள் வாழ்த்து 18)
இதன் பொருள் பன்றி, ஏர், மான், சிங்கம், யாழ், வில்லு, மீனம் என்றற்றொடக்க மான கொடிகள்தாழவும், சோழர் மேருவிற்பொறித்துள்ள புலிக்கொடி தழைக்கவுங் கடவது என்று நீதி கூறுவது. இவற்றுள் பன்றிக்கொடி சாளுக்கியரையும், ஏர் யாதவரையும், மான்கொடி வங்காளத்துப் பலரையும், சிங்கக்கொடி சிங்களரை யும், விற்கொடி சேரரையும், மீனக்கொடி பாண்டியரையும், சூசிப்பதென்ப, ஒழிந்த யாழ்க்கொடி யாழ்ப்பாணத்தைக் குறிக்குமேயோ என்பது ஓர் கேள்வி. வைபவ மாலை சொல்லுகின்றதை ஒப்புவோமாயின், ஒர்காலம் யாழ்ப்பாண இறைவர்கள் மிதுனயாழ்க்கொடி தூக்கி ஆணை செலுத்தியதுண்டாம். ஆயின் வைபவ மாலை சுட்டுகின்ற செயவீரசிங்கையாரியன் காலத்தில் எம் நாட்டிற்கு இடபக் கொடியே உரிமையாயுள்ளது என்றல் மேல்வரும் அதிகாரங்களொன்றனுள் விளக்கப்படுமாகையால், வைபவமாலை சொல்லுகின்ற மிதுன யாழ்கொடி ஆரியச்சக்கர வர்த்திகளது உகத்திற்கு முற்பட்டதேயோ?
அப்பால் பன்னிரண்டாம் நூற்றாண்டின் முற்கூற்றில் யாழ்ப்பாணத்திற்

யாழ்ப்பாண வைபவ விமர்சனம் பரராசசிங்கனொருவன் அரசியற்றினனாகத் தெரிகிறது. சோழமண்டலசதகத்தில்:
தேனார்தொடையார் பரராசசிங்கப் பெருமான் செந்தமிழ்க்குக் கானார்நெல்லின் மலைகோடிகண்டி நாடுகரைசேரக் கூனார்கப்பலாயிரத்திற் கொடுபோயளித்த கொடைத்தடக்கை மானாகரன் சங்கரன் சடையன் வழஞ்சேர்சோழமண்டலமே.
எனவரும். (செந்தமிழ் 111 5). இச்சடையன் வெண்ணெய்ச் சடையன் என்றும் புதுவைச்சடையன் என்றும் அழைக்கப்படுவன். மூவலூர்ச் சிவன்கோயில் கோபுர வாசற்படிச் சிலாசாசனத்தில் இவன் சேதிராயர்கொன் மாமால் புதுவைச்சடையன் எனப்படுவன். (செந்தமிழ் IV 25) இவன் இராமாயணம் பாடிய கம்பரை ஆதரித்தவனென்பது பிற சாட்சிகளால் அறியப்பட்டதொன்று. ஆகவே கம்பர் காலமாகிய பன்னிரண்டாம் நூற்றாண்டின் முற்கூறே இவன் காலமாம். இனி கண்டிநாடு கரைசேர' எனப்பட்டது, வைபவ மாலை சிங்கைநகரைச் செங்கடக நகரென்றமை போன்றதோர் தடுமாற்றமேயாம். பன்னிரண்டாம் நூற்றாண்டிற் கண்டிநாடென ஓரிராச்சியமின்மை மலையில் விளக்கு. ஆதலால் பரராசசிங்கப் பெருமான் யாழ்ப்பாண அரசன் என ஊகிக்க ஏதுவுண்டாதல் அறிக.
அடுத்த நூற்றாண்டுத் தொடக்கத்திலும் ஓர் பரராசன் சிலாசனங்களில் விளங்குகின்றான். மாறவர்மன் முதலாம் சுந்தரபாண்டியன் (1216 - 1244) தன் 20ம் ஆண்டுத் திருக்கோவலூர்ச் சாசனத்திற் கூறுவது இது:
தஞ்சையுமுறந்தையுஞ் செந்தழல்கொளுத்தி
செம்பியனைச்சினமிரியப் பொருதுசுரம்போக்கி
சேராவளவனபிஷேக மண்டபத்து
வீராபிஷேகம் செய்து புகழ்விரித்து
நாடும்பரராச நாமந்தலைபிடுங்கி மூடுந்தறுகணமத யானைமேல்கொண்டு (செந்தமிழ் X11346-50)
இப்பரராசன் யாழ்ப்பாண அரசனேயாமென்பது பூரீ இராசநாயக முதலியார் கொள்கை. இவன் சோழனோடு பக்கத்துணையாகச் சென்றவிடத்துப் பாண்டியனால் தலைபிடுங்குண்டான் போலும். வெற்றியாளனின் 3ம் ஆண்டில் அப்போர் நடந்தமையைச் சாசனங் காட்டுதலால், பரராசன் மாண்டது கி.பி. 1216 உக்கும் 1218 உக்குமிடையிலாம் என்பது.
19

Page 12
யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
4. காலிங்கராசவமிசம்
இந்தியாவினின்று விசயராசனைப் பின்தொடர்ந்து வந்திட்ட கங்கை வமிசக் கிளையொன்று யாழ்ப்பாணத்தில் சிங்கபுரம் அன்றேல் சிங்கைநகரிலே நாட்டப்பட்டிருந்ததென்பது பூரீ இராசநாயக முதலியாரது அபிமதமாமென்றோம், அக்கிளையிலேதான் உக்கிரசிங்கன் தோன்றினனோ மன்றல் வினையாற்றினனோ என்பது, இனி, சிங்கள அரசர்கள் சிலர் காலிங்க அரசகுமாரிகளை மணந்தார் என மகாவமிசநூலில் வருவது யாழ்ப்பாணச் சிங்கபுரத்துக் கங்கைகுல அரசகுடும்பத்துக் குமாரிகளைச் சுட்டுவதாம் என்பர் அவர். (பின்வருவன முதலியாரது முன்கூறிய ஆராய்ச்சி நூலிலிருந்தெடுக்கப்பட்டன என அறிக)
பொலனறுவையில் சிங்காதனம் வகித்த நாலாவது மகிந்தன் என்னும் சிங்கள அரசன் (கி.பி. 975 - 991) காலிங்கச் சக்கரவர்த்தியின் புதல்வியைக் கொணர் வித்துத் தனக்குப் பட்டத்தரசியாக்கினான். (மகாவமி. 54: 9 - 10) இந்தியாவிலிருந்த கங்கர்கள் அக்காலம் கலிங்கத்திலுட்பட்டிராமையால் இக்காலிங்க இளவரசி யாழ்ப்பாணத்துக் காலிங்ககுமாரத்தியே என்பது.
சோழவரசனாகிய முதலாம் ராஜாதிராசனதுமணிமங்கலச் சாசனத்தில் (கி.பி. 1046) ஈழத்தரசர் இருவர் தோற்றும் மாண்டும் ஒடுங்கினரென வரையப்பட்டுள்ளோரும் யாழ்ப்பாணத்தரசர்களே. அச்சாசனத்தின் சில அமிசங்கள் பின்வருவன:
ஒருநனிதண்டாற்பொருநடவிலங்கையா கோமான்விக்கிரம வாகுவின்மகுடமு முன்றனக்குடைந்து தெண்டமிழ்மண்டல முழுவதுமிழந்தே கட லீழம்புக்க விலங்கேசுரராகிய விக்கிரமபாண்டியன் பருமணிமகுடமும் காண்டகுதனனதாகிய கன்னக்குச்சியினு மார்கலிபீழஞ் சீரிதென்றெண்ணி உளங்கொளதன்னாடு தன்னுற்வொடுமபுகுந்து விளங்குமுடிகவித்த வீரசலாமேகன் பொருள்கள்ததஞ்சி தன்கார்களிறிழந்து கவவையிற்றோடக காதலியொடுந்தன றவவையைப்பிடித்து தாயைழுக்கரிய ஆங்கவமானம் நீங்குதற்காக மீட்டும்வந்து விட்டொழில்புரிந்து வெங்களத்துலாந்தவச சிங்களவரசன் பொன்னணிமுடியும் கன்னரணவழிவந்
20

யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
துரைகொளிழத தரைநாகியசீர் வல்லமதனராஜனமெலலொளித தடமணிமுடியும் கொண்டு (S. Ind. Inscript, III, i, p.54)
ராஜாதிராஜனும் ராஜேந்திரனும் ஒறுத்த இருவர் ஈழத்தரசர்களுள் வீரசலா மேகன், கன்னக்குச்சியிலிருந்து தன்னுறவோடும் பெயர்ந்து குடிகொண்டிருந்தவன், சிங்கபுரியில் வதிந்த கங்கைகுலத்தவனே என்ப. அவனது ஆதிப்பிறப்பிடம் கன்னக்குச்சி எனப்பட்டது. அப்பதியார் கன்னைக்கொண்டை கட்டுவோரான வழக்கத்தை நோக்கிப் போலும், யாழ்ப்பாண அரசகுலத்தவர்களது பழம்பதி கலிங்கதேசத்துள்ள மடப்பளியாம் என்பது பின்னர்க் காட்டப்படுவது. சிறீவல்லவம தனராசன் வீரசலாமேகனுக்கு முற்படத் தோல்வியடைந்தவனெனத் தெரிகிறது.
இவர்கட்கும் முன்னர் மானாபரணனென்னும் மற்றொரு இலங்கையிறைவன், பசுந்தலைபொருகளத்தரி யுற்றவனும் யாழ்ப்பாணக் கங்கைகுலத்தவனே யென்ப. இவனையும் களத்திடைப் பிடிபட்ட இருவர் மைந்தரையும் சுட்டிய சிலாசாசனப் பகுதிகள் பின்வருவன:
பாங்குறுதென்னவாமூவருள மானாபரணன் பொன்முடிஆனாப பருமணிப்பசுந்தலை பொருகளத்தரிந்து
(ibid) தென்றிசைவயின (போர்ப்படைநடாத்திக் கார்க்கடலிலங்கையில் (விறற்படைக்கலிங்காமன வீரசலாமேகனைக் (கடற்களிற்றொடுமகபபடககடிவித திலங்கையிற்கிறைவன் மானாபரணன் காதலிலிருவரைக் களத்திடைபிடித்து (S.I, II, III, i, p. 61)
அதுமட்டா, யாழ்ப்பாணக் கங்கைகுலராசகுடும்பத்திளின்றே மகாபராக்கிரமவாகு (கி.பி. 1164-1197) எனும் சிங்களமன்னன் உதித்தானெனவும், கீர்த்திநிசங்கமல்லன் (கி.பி. 1198-1207) சாகசமல்லன் (1200-1202) எனும் சிங்கள அரசர்களின் தந்தை தோன்றினான் எனவும் இதுவரை நாம் எடுத்தோதியவைகளைக் குறிப்பிடுகின்ற முதலியாரவர்கள் மொழிவர். மகாபராக்கிரமவாகு தன் சிங்கபுர (சிங்கைநகர்) உற்பத்தியை அவன் கட்டுக்கரைக்குளத்துச்சாசனமொன்றில்
பூரீமத் சிங்ஹபுரே ஜாத பூரீ பராக்கிரமவாகு
என வரைந்துள்ளான். (Ancient Ceyl, Parke, p.250) இக்கூற்றுக்களுக்கு முதலியார் தாராளமாய் தருகின்ற ஏதுக்களையும் பின்னும் ஆங்காங்குகாட்டுகின்ற புதுப்புது ஆராய்ச்சி விநோதங்களையும் அன்னோரது மனோகரமான ஆங்கில நூலினுட் பரக்கக் காண்க.
21

Page 13
யாழ்ப்பாண வைபவ விமர்சனம் 5. விசயகூளங்கை (காலிங்க) ஆரியச்சக்கரவர்த்த (கி.பி. 1242)
வரசிங்கராயன் மகாராசராசன் நரசிங்கராச னெனுநாமத் - துரைசிங்கம்
செங்கோலரசு செலுத்துநாள் - மங்காத பாவலர்கள்வேந்தன் பகருமியாழ்ப்பாணன் காவலன் றன்மீது கவிதைசொல்லி - நாவலர்முன் ஆனகவியாழி னமைவுறவாசித்திடலும் மானபரன்சிந்தை மகிழ்வாகிச் - சோனைக் கருமுகினேருங் கரன்பரிசிலாக வருநகரமொன்றை வழங்கத் - தருநகர மன்றுமுதல்யாழ்ப்பாண மானபெரும்பெயரால் நின்றபதியி னெடுங்காலம் - வென்றிப் புவிராசன்போலப் புகழினுடனாண்ட கவிராசன்காலங் கழிய .
- விந்தை கரைசேரிம்மாநகர்க்கோர் காவலரண்செய்யுந் தரையரசனின்றித் தளம்ப .
கோலநகர்ச்
செல்வமதுரைச்செழிய சேகரன்செய்மாதவங்கள் மல்கவியன்மகவாய் வந்தபிரான் - கல்விநிறை தென்னநிகரான் செகராசன்தென்னிலங்கை மன்னவனாகுஞ்சிங்கை யாரியமால் - தன்னுழையிற் பொன்பற்றியூரன் . பாண்டிமழவன் பரிந்துசென்று - வேண்டிப் பெருகுபுகழ்யாழ்ப்பாணம் பேரரசுசெய்ய வருகுதிரியென்று வணங்க. சாற்றுமிவன்மொழியைத் தன்மனத்தோர்ந்தெண்ணிமறு மாற்றமுரையாதுநல்ல வாய்மைசொல்லி. தென்மதுரைவிட்டுத் திருநகர்யாழ்ப்பாணத்து மன்னரசுசெய்ய மனமகிழ்ந்து. மதித்தவளங்கொள் வயல்செறிநல்லூரிற் கதித்தமனைசெய்யக் கருதி - விதித்ததொரு நல்லமுகூர்த்தமிட்டு நாலுமதிலுந்திருத்திச் சொல்லுஞ்சுவரியற்றித் தூணிரைத்து - நல்ல
22

யாழ்ப்பாண வைபவ விமர்சனம் பருமுத்தரம்பரப்பிப் பல்கணியுநாட்டித் திருமச்சுமேல்வீடு சேர்த்துக் - கருமச் சிகரந்திருத்தித் திருவாயிலாற்றி மிகுசிதரமெல்லாம் விளக்கி. நகரிவலம்வந்து நானிலமும்போற்றப் புகலுமணிமாளிகையிற் போந்து - இகலரிமரத் தாங்குமணியாசனத்திற் றண்ணளியுமெய்ந்நலனும் ஓங்கரனிவீற்றிருந்து. எண்டிசையுமேற்று மிராசமந்திரி. புகனேகவாகுவென்னும் பேரமைச்சன்றன்னை நவமேவுநல்லூரில் நண்ணுவித்து.
பின்னும் பல வேளாண் பிரபுக்களைத் தென்னிந்தியாவினின்றும் வரித்துக் குடியிருத்தினன் என்பது கயிலாயமாலை. இச்செய்திகட்கு, சுட்டிய இந்நூலையே ஆதாரமாகக் கொண்டு பிறாண்டுத் தாம் கண்ட அன்றேல் தாமாய் மனோ கற்பனை செய்த வேறு செய்திகளையுங் காலஒற்றுமை நோக்காது அதனுட் புகுத்தி வைத்த வைபவமாலையுடையார் கூறியது மேல்வருவது:
செயதுங்கராசன் அரசாட்சியை நடத்தினான். அக்காலத்திலே (இரண்டு கண்ணுங் குருடனாகிய கவிவீரராகவனென்னும்) யாழ்ப்பாணன் (சோழதேசத்தி னின்று வந்து வாலசிங்க) மகராசன் பேரிற் பிரபந்தம் பாடிக்கொண்டு (செங்கடக நகரிக்குப் போய்) இராசசமுகத்தில் யாழ் வாசித்துப் பாடினான். அரசன் கேட்டுச் சந்தோஷப்பட்டு (இலங்கையின் வடதிசையிலுள்ள மணற்றிடலென்னும்) இந்நாட்டை அவனுக்குப் பரிசாகக் கொடுத்தான். அவன் பரிசு பெற்ற இந்நாட்டுக்கு யாழ்ப்பாணம் என்னும் பேரிட்டு (இவ்விடம் வந்து சேர்ந்து வடதிசையிலிருந்து சில தமிழ்க் குடிகளை அழைப்பித்து அங்கிருந்த சிங்களவருடன் குடியேறிச் சிலகாலம்) அரசாட்சி செய்து (வயோதிகனாகி) இறந்து போனான். (தன்பின் அரசாளச் சந்ததியில்லாமற் போனபடியால் அக்காலத்தில் சிங்களவரும் பிறரும் அரசாளக்கருதித் தமிழ்க் குடிகளை வருத்தினார்கள். இவ்வாறு நடந்ததனால் அநேக தமிழ்க்குடிகள் வடநாட்டுக்குத் திரும்பிப் போய்விட்டார்கள்.) இப்படி யாழ்ப்பாணஞ் சிலகாலம் தளம்பிக் கொண்டிருக்கையில் (சிங்களவருக்கு இடங் கொடாமல் சிலகாலம் விட்டுவந்து) பொன்பற்றியூர் வேளாளன் பாண்டிமழவன் என்ற பிரபு மதுரைக்குப் போய் (அங்கே சோழநாட்டிலிருந்து இராச உத்தியோகத் திற்கேற்ற படிப்புப் கற்றுக்கொண்டிருந்த திசையுக்கிர சோழன் மகன் சிங்ககேது வுக்கு மருமகனும் மாருதப்பிரவல்லிக்கு மகன் முறையும் சூரிய வம்சத்தவனு (சோழவம்சத்தவனு) மாகிய சிங்கையாரியன் என்னுமிராசகுமாரனைக் கண்டு யாழ்ப்பாணத்தின் நிலைபரத்தையறிவித்து இந்நாட்டை அரசுசெய்யும்படி வாவென்று கேட்க, உத்தண்டவீரசிகாமணியாகிய சிங்கையாரியன் மறுத்துச்
23

Page 14
யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
சொல்லாம லுடன்பட்டு (கல்வியறிவும் புத்திவிவேகமுமுள்ள வேதியர் குலோத்துங்கராகிய கெங்காதரையர் என்னுங் குரவரையுங்கொண்டு மற்றும் பரிவாரங்களுடன் பாண்டியராசன் வழிவிட்டனுப்ப) யாழ்ப்பாணத்திலே வந்திறங்கி நல்லூரிலே அரசிருக்ரக ஸ்தாபிக்கக்கருதிச் (சோதிடரை அழைத்துச் சோதிடர் சொல்லிய) நல்ல முகூர்த்தத்தில் அஸ்திவாரம் போட்டு நாலுமதிலுமொழுப்பி மாடமாளிகையும், பூங்காவும், பூங்காவின் நடுவே ஸ்நானமண்டபமும், முப்புடைக் கூபமுமுண்டாக்கிக் கூபத்தில் யமுனாநதி தீர்த்தமும் அழைப்பித்துக் கலந்துவிட்டு, நீதிமண்டபம், யானைப்பந்தி, குதிரைப்பந்தி, சோனாவீரர் இருப்பிடம் முதலிய யாவுங்கட்டுவித்து, தன்னுடன் வந்த கெங்காதரையரும் அவர் பத்தினி அன்ன பூரணியம்மாளும் வாசஞ்செய்ய அக்கிராமமுண்டாக்கி, கீழ்த்திசைக்குப் பாதுகாப் பாக வெயிலுகந்த பிள்ளையார் கோயிலையும், மேற்றிசைக்கு வீரமாகாளி கோயிலையும், தென்திசைக்கு கையிலாய விநாயகர் கோயிலையும், வட திசைக்கு சட்டநாதர் ஈசுரன் கோயிலையும், தையல்நாயகி அம்மன் கோயிலை யும் சாலை விநாயகர் கோயிலையும் இவையாவற்றையுங் கட்டுவித்துத் தானும் திலகவதியார் என்னும் பத்தினியுடன் கிரக பிரவேசஞ்செய்து வாழ்ந்துகொண்டிருக் கையில் ஒருநாட் புவனேகவாகுவுடன் (ஆலோசித்துத் தமிழ்நாமட்டரசருக்குத் திருமுகமெழுதித் தமிழ்க்குடிகளை அழைப்பிக்க அவர்கள் வந்து சேர்ந்தார்கள். - - - - - - - - - - - - O பின்) (ஓர் சுபதின்த்தில் நல்ல முகூர்த்தமிட்டு மகுடாபிஷேகம் பெற்று நகரிவலம்வந்து சிங்காசனமேறிப் பூலோகதெய்வேந்திரனாக அரசாண்டான். இவ்வரசனுக்கு ஒருகை கூளங்கையாக இருந்ததினால் இவனைக் கூளங்கைச் சக்கரவர்த்தியென்றும் சொல்லப்படும்).
பிறைக்கோட்டினுள்ளிட்ட சொற்கள் வசனங்கள் கயிலாயமாலையிலில்லாதவை. இவை மயில்வாகனப்புலவர் ஊர்க்கதை ரூபங்களினின்றோ தம்மனப்படி வருவித்தோ கூறியவைகள் போலும். கற்காதரையர் பெயர் கயிலாயமாலையிலேயே வேறொரு சந்தர்ப்பத்தில் வருவது. சிங்கையாரியன் கயிலாயநாதர் கோயிலை நிமாணித்ததன் பின்,
கேதரந்தன்னிற் கிளர்மதனார்ச்சித்துவைத்த வாதாரலிங்க மழைத்தருளி மீதாக வந்தபிரதிட்டை மகிழ்வோடு செய்தருள அந்தணருளாய்ந்திங் கனுப்பமெனச் - செந்திருவார் சேதுபதிக்குச் செழும்பாசுரமனுப்பி யாதிமறையோர்கள்புக ழாசிரியன் - வேதமுணர் கந்காதரனென்னும்பேர்க் காசிநகரோனையினி திங்கேயவனனுப்ப.
என்பது (சேதுபதிகள்காலம் 17ஆம் நூற்றாண்டுத் தொடக்கமேயாதலின் கயிலாயமாலை அதற்குப் பின்னரே எழுதப்பட்டதாகலாம் என்பதும் இங்கு
24

யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
தெரியத்தக்கது) அப்பால் வைபவமாலை மேற்கோளில் தடித்த எழுத்திலிட்டவை கள் சில ஏட்டுப்பிரதிகளில் மட்டும் உள்ளவைகள். பழைய கயிலாயமாலைக் கதைகள் வைபவமாலையில் எவ்வாறு வருணனை பெற்று விரிந்துள்ளன என்பது இதனாற்தோன்றும் பாண்டிநாட்டினின்று அப்பாண்டிநாட்டு அரசகுமாரனொருவ?ை மழவனென்போன் அழைத்திட, அக்குமாரன் நல்லூரிற் சிங்கையாரியன் எனும் பெயரோடு இராச்சியபாரம் வகித்தானென்பதும் அவனே கயிலாயநாதர் கோயிலை ஆக்குவித்தானென்பதும் கயிலாயமாலை வைபவமாலையிற் கூட்டுற்ற ஏனைய விபரங்கள் எல்லாம் ஊர்க்கதைகளையும் மனோபாவனைகளையும் ஒன்றோடொன்று காலனல்லை முரணவைத்த கோவையாம் என்க. இது மேல்வருவனவற்றால் விகCதமாகும்.
6. ஆரியச் சக்கரவர்த்திகள் யார்?
கயிலாயமாலை சிங்கையாரியனைப் பாண்டிநாட்டு இராசகுமாரனெனப் பகிர, வைபவமாலை அன்னோன் சோழநாட்டிலிருந்து இராச உத்தியோகத்திற்கேற்ற படிப்புக் கற்றுக்கொண்டிருந்த திசையுக்கிர சோழன் மகன் சிங்ககேதுவுக்கு மருமகனும் (மாருதப்பிரவல்லிக்கு மகன் முறையும்) சூரியவம்சத்தவனு (சோழவம்சத்தவனு) மாகிய சிங்கையாரியன் எனலுற்றது. வழிநூல் செய்த மயில்வாகனப் புலவர் தன் முதல் நூலின் கூற்றை ஒதுக்கி வேறுகூற எய்திய காரணம் யாது? ஆரியச் சக்கரவர்த்திகள் பாண்டிநாட்டவரல்லர். அந்நாட்டின் வடதிசைக்கண்ணின்றும் வந்தவராம் எனக்கூறிய ஐதிகமொன்றிருந்தமையாலோ? அன்றி ஆரியர் = சோழர் என்றமையும், சிங்கபுரம் அத்திசையிலிருந்தமையும் பற்றியோ? ஈற்றில், சிங்கையாரியனை உக்கிரசிங்கனோடும் மா ருதப்பிரவாகவல்லி யோடும் உறவுபூட்டக்கருதியோ? எக்காரணம்பற்றியாயினுPாகுக் சிங்கையாரியன் பாண்டியனல்லன் என்பது உண்மை. பாண்டிநாட்டின் உத்தரதிசையே அவற்றிற்கு உற்பத்திதானம் என்றிருப்பினும், அவன் சோழவம்சத்தவனல்லன் என்பதும் உண்மை. அவன் கங்கைகுலத்துக் காலிங்கனேயாம் என்பது இனி விளக்கப்படும்
யாழ்ப்பாணத்தவர்களுள் அதி கீர்த்திவாய்ந்த செதிராசசேகரன் ஒருவன் காலத்தே, செகராசசேகரமாலை எனும் சோதிடநூல் இயற்றப்பட்டது. பறங்கியர் இலங்கையில் நுழைந்த பின் ஆக்கப்பட்ட கயிலாயமாலைக்கும், ஒல்லாந்தர் காலத்தாகிய வைபவமாலைக்கும் அச்சோதிட நூல் மிக முற்பட்டதாதல் வேண்டும். இனி, அந்நூலின் சிறப்பு பாயிரத்துள் நூலாக்குவித்தோனாகிய அச்செகராசசேகரனைப் புகழுமிடத்து இராமபிரான் இலங்கை வளர்நகள் புகுந்து கும்பகன்னனை, அரக்கர்கோவினைச் செயித்து, கமலநாயகி சிறைகடிந்து, சேனைவெள்ளமுந் தானும் கந்தமால்வரைப் புறத்தணுகி,
25

Page 15
யாழ்ப்பாண வைபவ விமர்சனம் அந்தமாதலத்தி லரண்றனைத்தாபித் தருச்சனைபுரிந்துதன்னாமஞ் சிந்தையாலருளி யப்பதிதனக்குத் திருப்பெயரன்ன தேயாக்கி நந்தலில்பஞ்சக்கிராம வேதியராய் நான்மறைப்பொருளுளம்பிரியாப் பைந்தொடைப்பாசு பதர்களைஞ்ஞாற்றுப் பன்னிருவரைவரவழைத்து பூசனை செய்மி னிரெனக்கருணை புரிந்தவர்தங்களிலிருவர் காசினிதாங்கும் படிவரங்கொடுத்துக் கமழ்செந்துளபமாளிகையு மாசறுசுருதி யாரியவேந்தென் றணிமணிப்பட்டமுங்கொடுத்துத் தேசுறுகுடையு மொற்றையும்வெற்றி திகழ்விடைத்துவசமும்நல்க அன்றுமுதற்சதுர்யுகநாலாறிற் புவிபுரந்தவரசர்தம்மில் வென்றிதிகழ்மீனவன்முன் செப்பேடங்கத்தழைக்கும் வேதவேந்துஞ் சென்றுகருநாடகரை யந்தரவல்லியிற்பொருது செயித்தவேந்தும் அடற்கரிமூவாயிரத்தோ டெழுநூறுபாவலருக் களித்தகோவும் விடைக்கொடியுஞ்சேதுவுநீள் கண்டிகளொன்பதும் பொறித்து மிகைத்த கோஷம் வடக்கெழுவாடைக்குமிழந் தென்றலுக்குந்தன்குலப்பேர் வழங்குகோவும் கடக்கலுழியத்திதனை யிரவலர்தங்கட்களித்தகருணைக்கோவும் மற்றுமுளபெருந்தகைமை யிக்குலத்துப்புவிபுரந்த மன்னர்தாமும் வெற்றிதருதிருப்புயத்துப் பரித்தபடிதனிதரித்த விஞ்சைவேந்தன் . எனப் புனந்துரைக்கின்றது. கந்தமான் எனக் குறுகி நின்ற கந்ததமாதனம் புராணங்கள் கூறும் அட்டகுலக்கிரிகளுள்ளொன்றென்பதும் இராமேசுரத்துக் கணித்தாயுள்ள ஒரு மலையென்பதும் கற்பனை.
தென்பூமி - வாழவருங்கந்தமாதனம் .
சேதுவிலுஞ்செம்பொன்வரையினுஞ்சேர்கந்த
மாதனம். எனத் தேவையுலா (179-220) அதனை உயர்த்துக் கூறும் கந்தபுராணம் அதனை
அலங்கலந்திரைகொணேமியக்கன்கரைமருங்கின்மேரு விலங்கலினுயர்ந்தகந்தமாதனம்
என இசைக்கும் (மகேந்திரகாண்டம் 1 18) இந்தக் கந்தமாதனமே இராமாயணத்தில் மகேந்திரம் எனப்பட்டமை நோக்கப்பாற்று. இராமாயணக் கதையில் அனுமார் இலங்கையிற் பாயும் பொருட்டு மலையிலேறியபடி கந்தபுராணக் கதையிலும் வீரவாகுதேவர் இலங்கையிற் பாயும் பொருட்டு மலையிலேறினார். ஆதலால் இருமலையும் ஒன்றே. (இராமாயணக் கதாமிசங்கள் பல கந்தபுராணத்தில் எடுத்தாளப்படுதல் பிரசித்தம்) சிவதருமோத்தரம் என்னும் சைவ உபாகமும் இந்தியாவின் தென்கோடியிலுள்ள மலையை மயேந்திரமெனக் கூறியது காண்க.
26

யாழ்ப்பாண வைபவ விமர்சனம் உன்னததென்மயேந்திரமே யுயர்மலையஞ்சையகிரி வின்னவிலுஞ்சுத்திகமே யிருக்குமுயர்விந்தியமே பன்னுபகழ்மிகுபாரி யாத்திரமேயெனப்பகர்ந்த வின்னகிரியேழுமுதற் குமரிதலத்திசைந்தனவே
அங்கமெதிர்நிரனிறையாற் சமாக்கியமுமணிமலையுஞ் சங்கமுந்தண்குமுதமுநல் வாரமெனுந்தலந்தானுந் துங்கமலிப்பொதித்தென்பாற் றொடர்ந்தவடிவாரத்தி னங்கணகவிலங்கையுமேழ் வரைச்சாரலடித்தேசம்
(கோபுரவியல்)
இவ்வ்ரலாற்றால் இலங்கைக்குச் சமீபம் மயேந்திரமும் அதற்குமேல் பொதியமும் அப்பாற் பிறகிரிகளும் அமைந்திருந்ததால் மயேந்திரமே கந்தமாதனமாதல் விபவிஷ்டம். இங்ங்னமாதலின் இராமேசுரத்துக்கணிமையிற் சொல்லப்படும் கந்தமாதனத்தோடு சார்பு கொண்ட செய்திகளும் ஒறிசாப் பிரதேசத்திலுள்ள மகேந்திரமலையோடு சம்பந்தப்பட்ட செய்திகளும் நாளடைவில் ஐதிகங்களிலே ஒருங்கு கலந்துபோயினவாகலாம். பாசுபதர்கள் இராமேசுரத்தில் பூர்வம் குடிகொண்டிருந்தமையால் அன்னோர் இராம பிரானாலேதான் அங்கு வரிக்கப்பட்டாரென்ற கொள்கை சுலபமாய் எழுந்திருக்கலாம். தேவையுலா அப்பாசுபதர்களுக்கு வேறோர் உற்பத்தி பின்வருமாறு காட்டுகின்றது.
94. மெய்ந்நூற்றுறையின் விதிவழியேயூசிக்கும்
ஐந்நூற்றுப்பன்னிருவர் ராரியரும் - இந்நிலத்திற்
95. றேற்றுமலையத்தனையுஞ் சேதுபந்தமீதுகுடி யேற்றுலகநாதமுனி யென்போனும்.
பாசுபதர்கள் கந்தமாதனத்தோடு சம்பந்தப்பட்டிருக்க, அவர்களுள் ஆரிய வேந்தென் றணிமணிப்பட்டம் அடைந்தோர் மகேந்திர மலையோடு சம்பந்தப்பட்டவரேயாமென்பது வஜ்றஹஸ்தன் என்னும் கலிங்கதேச அரசன் செப்பேட்டுச்சாதனங்களாற் தெரியவருகின்றது. (இவ்விபரம் றி இராசநாயக முதலியாரது முன்சுட்டிய நூலினுட் கண்டது) இவன் ஆண்ட கலிங்கம் தற்காலத்து முகலிங்கம் எனப்படுவது. கி.பி.1038 ஆண்டு சிங்காசனமேறியவன். இவனது நாடகம் செப்பேடுகளில் கூறியாங்கு கங்கைவமிசத்தவர்களது கோத்திரம் ஆத்திரேய (பிராமண) கோத்திரமாம். இவர்கள் மகேந்திரமலையில் கோகர்ணசுவாமி திருவருளால் ஒற்றைச் சங்கும் பேரிகையும் பஞ்சமகாசப்தங்க ளும் வெண்கொற்றைக்குடையும் பொற்சாமரமும், விடைக் கொடியும் பெற்றுள்ளவர்களாம். வஜ்றஹஸ்தன் மதம் பொழியும் ஓராயிரம் யானைகளை இரவலர்க்களித்தனன் எனும் செய்தியும் இச்சாசனத்தில் கேட்கப்படுகின்றது.
27

Page 16
யாழ்ப்பாண வைபவ விமர்சனம் அனந்தவர்மன் சோடகங்கனது (கி.பி 1077 முதல்) விசாகப்பட்டணச் சாசனத்தில் பின்னும் சில விபரங்கள் தோன்றுகின்றன. கங்கர்கள் முன் குவலாலபுரம் (கோலார்) என்னும் நகரிலிருந்து தற்காலத்து மைசூர்ப் பிரதேசங்களையரசாண் டனர் இன்னோர் மேற்றிசைக் கங்கள் என்னப்படுவார். இவ்வரசர் ஆவலியில் ஐம்பத்தொராம் அரசனாகும் முதற்காமார்ணவன் என்பான் தன்நாட்டைத் தந்தையின் சகோதரனுக் கீய்ந்துவிட்டுத் தன் சகசரோடும் புறம்போந்து, திக்கு விசயஞ்செய்யவுன்னி மகேந்திரமலையையடைந்து கோகர்ணசுவாமியை வழிபட்டு அவரருளால் உச்சிதமான விடைத்துவசத்தைப்பெற்றுத் தனிச்சக்கரபூபதிக்குரிய வரிசைகள் அனைத்தோடும் படையெடுத்துச் சென்று பலாத்தியனென்னும் கலிங்கதேச அரசனைப் புறங்கண்டு அத்தேச செங்கோண்மையை மேற்கொண்டனன் என்பது அச்செப்பேட்டின் சாரம். இது கீழ்த்திசைக் கலிங்கரது 6JJ6oTgOJ. (Ep. Ind. IV. p. 243. Ind Antiq. XXVIII. p 170)
நம் ஆரியச் சக்கரவர்த்திகளும் கங்கைவமிசத்தவர்களேயென்பது நன்றாராயப் பட்டதொன்று.
செகராசசேகரமன்கங்கைநாடன் - செகராசசேகரமாலை, சிறப். கக மன்றுகண்டருளுங் கங்கையாரியன் - இரகுவமிசம் மாலை 107. கங்கைநாடன்கற்றவர்திலகன் - தவழிணகையிலாயபுராணம், சிறப்.
இன்னன பிறவுங் காண்க. இவ்வரசர்களது விருதும் விடைக்கொடியேயென்பது பின்வரும் மேற்கோள்களாலும் பிறவற்றாலும் விளங்கும்
சேவனிதுவசன் சிங்கையெங்கோமான் செயசெகராசசேகரமன்
- செகராசசேகரமாலை
விடலாண்வயமா விளங்கியகொடியான் - கைலாசபுராணம்
அண்டருலகநிமிர்த்தாடும்பரிசுடைத்தாய்க் கொண்டவிடைகாட்டுங் கொடியினான் - கைலாசமாலை பக் 5
வெற்றிவிடைக்கொடியார் மேலாரியர்குலத்தி னுற்றமடப்பளியிலுள்ளோரும் - கிள்ளைவிடுதூது
இவ்வாறாகக் கீழ்த்திசைக் கங்கரது உங்பத்தியாதிகளையும் ஆரியச்சக்கரவர்த் திகளது உற்பத்தியாதிகளையும் இருநிரையில் நிறுத்திக் காட்டுவாம்.
28

யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
கீழ்த்திசைக்கங்கர் ஆரியச்சக்கரவர்த்திகள்
வமிசம் கங்கை கங்கை
கோத்திரம் (ஆத்திரேய) பிராமணர் (பாசுபத) பிராமணர்
வரிசைபெற்றதலம் மகேந்திரமலை கந்தமாதனமலை =
மகேந்திரமலை
தாதா கோகர்ணசுவாமி தசரதராமர்
வரிசைகள் ஒற்றைச்சங்கம் ஒற்றை
கொற்றக்குடை கொற்றக்குடை விடைத்துவசம் விடைத்துவசம் பேரிகை பஞ்சமாசப்தம் சேது பொற்சாமரை ஆரியவேந்துப் பட்டமும்
துலபமாலிகையும்
முன்னோன் வீரச் மதம்பொழியும் அடற்கரி மூவாயிரத்தோ செய்தி ஓராயிரம் யானைகளை டெழுநூநுபாவலருக்
இரவலர்க்களித்தல் களித்தல்- கடற்கலுழியத்தி
தனையிரவலர் தங்கட்களித்தல்
இவ்வொப்புநோக்கால் ஆரியச்சக்கரவர்த்திகள் கீழ்த்திசைக்கங்கரேயென்பது தோன்றும். இக்கங்கரது தலைநகருளொன்றான சிங்கபுரப்பெயரை ஆரியச்சக்கர வர்த்திகள் தம் யாழ்ப்பாணத் தலைநகருக்கிட்டுச் சிங்கைநகரென வழங்கினா ரென்பதுமொன்று. இது மேல்வரும் அமையமொன்றில் ஆராயப் பெறும்.
7.
அடிக்குறிப்பு 6 ஐ நோக்குக.
29

Page 17
யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
7. சேதுகாவலர்
கலிங்கதேசத்தினின்றும் வந்த இவ்வாரிய அரசர்களை இராமேசுரத்தோடு சம்பந்தப்படுத்தியது யாது? இராமேசுரம் இவர்தம் ஆணைக்குட்பட்டதாய், அத்தலத்துச் சிவாலயத்தில் இவ்வரசர்கள் பக்திபூண்டோராய், சேது தீர்த்தத்தை அதி சிரத்தையோடு காவல் செய்வோராய், நங்காலத்துச் சிவபக்தர்கள் ஷதிருச்சிற்ம்பலம் எனும் மங்கள வசனத்தோடு எழுதத் தொடங்குவதற்கொப்ப ஷசேது எனும் மங்கள மொழியோடு தஞ்சாதனங்களை ஆரம்பிப்போராய் ஷசேது எனும் வாசகத்தையே தம்முத்திரைக் காசுக்கு வழங்குவோராய் இருந்தமை பற்றி எம் ஆரிய அரசர்கள் இராமேசுரத்தோடு மிகவும் சம்பந்தம் பூண்டுள்ளவர்கள். யாழ்ப்பாண அரசர்களே ஆதிச் சேதுகாவலர்களென்பதை
சேதுகாவலன் விஞ்சைவிஞ்சுசெக ராசசேகரன்மெய்திகழ்வதற் கேதுவானவரு மலர்முகத்தெரிவு . - செகராசமாலை பக். 40, சிங்கையாரியன் சேதுகாவலன் - தக்ஷிணகையிலாயபுரா. சிறப்.
என வருவனவற்றாலும் நம் அரசர்கள் எந்திரப் பறவையைக்கொண்டு நாள் தோறும் இராமேசுரத்திற் சுவாமி தரிசனஞ் செய்யப் போய்வருவார்கள் எனவும் அவ்வாலய அபிஷேகத்திற்கு நாள்தோறும் நெடுந்தீவிலிருந்து பாலும் கச்சைதீவி லிருந்து பூவும் அனுப்பப்பட்டதெனவும் வரும் ஐதிகத்தாலும் (முத்துத்தம்பிப் பிள்ளை யாழ்ப்பாணச் சரித்திரம் பக். 56) காண்க. முன்கூறியபடி சேதுபதிகள் காலம் பிற்பட்டது. யாழ்ப்பாணத்தரசர்கள் வலிகுன்றியிருந்தகாலத்தே அன்னோர் வலிபடைத்தனர். முன்னாளில் அச்சேதுபதிகள் 'தொண்டியந்துறைகாவலர்' எனவே அறியப்பட்டுள்ளனர். (செந்தமிழ் 134) என்பதுமொன்று. சேது என்னும் மொழி அரசசாசனங்களுக்கு ஆதிவசனமாய்க்கொள்ளப்பட்டதற்கு மேல் வேறொரு இடத்தில் நாம் சுட்டப்போகின்ற கொத்தகமக் கல்வெட்டுச் சான்று. செகராசசேகர னொருவன் (சங்கிலிமன்னன்) தன் வெண்சங்கக் கேடயத்தில் சேது என்னும் வார்த்தையைக் கரிய எழுத்துகளிற் பதித்திருந்தான் எனப் பாதர் குவேறோஸ் கூறுவதையுங்கவனிக்குக. (Conquistap295) அப்பால் யாழ்ப்பாணத்து அரசர்களது முத்திரைக் காசுகள் நம்மால் முதற்கண் இவையென நிச்சயிக்கப்பட்டவைகளின் மேலழுத்து சேதுவோயாம். (Ceyl. Antiq.Vpart4) அவற்றில் விடைக்கொடியும் சேதுவும் விளங்குதலை இதன்கீழ்த்தரும் படத்திற் காண்க.
30
 

யாழ்ப்பாண வைபவ விமர்சனம் சேதுக்காசுகளை சேதுபதிகளின் காசென ஓர்காலம் முத்திராவித்தையாள ரெல்லாம் மொழிவோராயினர் ஆயின் நாம் முன்குறித்த இலங்கைத் தொண்மை ஆராய்ச்சிப் பத்திரிகையில் வெளிப்படுத்திய ஆராய்ச்சியானது இவ்விடயத்தில் இனிச் சந்தேக விபரீதமில்லாதபடி முடிவுகட்டி சேதுவும் இடபமும் கொண்ட நாணயங்கள் நம் யாழ்ப்பாணக் காசுகளே எனத் தாபிப்பதாயிற்று.
யாழ்ப்பாண அரசர்கள் இவ்வாறு இராமேசுர சம்பந்தம் பூண்டு விளங்க அன்னோரது கலிங்கதேச உற்பத்தி காலாந்தரத்தில் இராமேசுரத்துள் மறைந்து, உள்ளபடி கலிங்கத்தினின்றும் ஆத்திரேய குலாங்குரர்களாய் மகேந்திர பர்வதக் கோகர்ணசுவாமி அநுக்கிரகத்தால் இராசபதவி அடைந்தோமென வந்தோர். பிற்காலத்தில் இராமேசுரப் பாசுபத கோத்திரத்தாராய் அங்கு மகேந்திரத்தோடு மயங்கிநின்ற கந்தமாதனப்பர்வ இராமசுவாமி வரத்தால் பூபாரம் தாங்குவோ ராய் மாறிவரலாயினர் என்க.
8. காலிங்கமாகனும் ஜயவாகுவும்
காலிங்க கங்காகுலதிலகர் இருவர் ஏக சமயத்தில் காசினி தாங்கும்படி வரம் அடைந்து ஆரிய வேந்து என்னும்மணிமணிப்பட்டதாரிகளாய்க் குடையும் ஒற்றையும் விடைத்துவசமும் திகழ யாழ்ப்பாண அரசு கைக்கொண்டமை பரியாலோசிக்கத் தக்கது. யாழ்ப்பாணத்துப் பழைய பாரம்பரியங்களைத் துருவியுணர்ந்த பாதர் குவேறேகூம் பின்வருமாறு கூறுகின்றார்: “குசறற் (கூர்ச்சாப்) பகுதியை உற்பத்திதானமாகக் கொண்ட ஆருக்கள் (ஆரியர்) என்றழைக்கப்படும் பிராமணர் சிலர் தாங்கள் இராசகுலத்தவர்களென்று பாராட்டுபவர்கள் வந்து மதுரை நாயக்கனின் அங்கீகாரத்தோடு இராமர் கோயில் எனும் ஆலயத்தை நிருமாணித்த வர்கள் அங்கிருந்து யாழ்ப்பாண அரசர்களோடு உறவாடத் தொடங்கியதினால் அந்த அரசர்களுள் ஒருவனுடைய குமாரத்தியை இவர்களுளொருவன் வதுவை யாற்றுவோனானான். பின் இவ (ஆரிய)னுடைய சந்ததியார் அவ்விராச்சியத்துக் குரிமைக்கார ரானார்கள்” என்பது. (Conquista p37-8) இதனையுமாராயாவாம்.
சிங்கள சரித்திரங் காட்டுகின்றபடி மகாபராக்கிரமபாகு 1186 ம் ஆண்டிங் தேகவியோகமாக அன்னோன் ஆக்கிவைத்த பரந்த இராச்சியத்தைப் பரிபாலிக்க வலியற்றோர் சில்லோர் அரசர்கள் ஒருவர்பின்னொருவராய்த் தோன்றி மறைந்தார்கள். இரண்டாம் விஜயபாகு, ஆறாம் மகிந்தன், சிசங்கமல்லன், வீரவாகு, இரண்டாம் விக்கிரமபாகு, சோபகங்கன், லீலாவதி, சாகசமல்லன் என்னும் எண்மர் இராச்சியபதிகளும் 1186 உக்கும் 1202 உக்கும் இடையில் பதினாறு வருடங்களுள் எழுந்தும் அநேகமாய் ச் சதிமானத்தினாற் தென்புலஞ்செலுத்தப்பட்டும் போயினர். மகாபராக்கிரமபாகுவின் கைமையாகிய லீலாவதிக்கு மட்டும் மீட்டும் இருதரம் இராச்சியபாரம் வகிக்கக் கிடைத்தது. இதற்கிடையில் சாசகசமல்லன் துஞ்சுத லோடு (1202 வரையில்) யாழ்பாணத்
31

Page 18
யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
தமிழ்ச் சேனாதிபதிகள் வலிபடைத்துச் சிங்களரை நெருக்கத் தொடங்கிவிட்டனர். அவ்வரசனுக்குப்பின் சிங்கள அரசு கைக்கொண்ட கல்யாணவதியாளுகையில் (1202-1208 வரையில்) புலத்திநகர் (கந்தவுற) தமிழரால் பிடிக்கப்பட்டமையும் கேட்கப்படுகிறது. (Ep.Zeyl133) இந்த அவதாரத்திலோ இதற்குச் சற்றுப்பின்னோ காலிங்கமாகனும் விஜயவாகுவும் என்னும் இருவர் தமிழரசர் கலிங்கதேசத்தினின்றும் பெரும்படையோடு வந்தவர்கள் ஒருங்கு வடஇலங்கையை ஆள்வோராய்க் காணப்பட்டனர். (மகாவமி. 82, 11-27) மட்டுக்களப்பின் சமீபம் முதல் ஊறாத்துறையீறாக புலத்திநகர் தொட்டு மன்னார் மட்டும் இத்தமிழர் பதினைந்து கோட்டைகளை எடுத்துத் தமதாணையை நிலைநாட்டியதோடு (மகாவமி. 83, 21-2) ஜயவாகு யாழ்ப்பாண நாட்டை அரசாள மாகன் 1215 ம் ஆண்டுதொடக்கம் புலத்திநகள் வீற்றிருந்து தென்னிலங்கை முழுவதையும் தனிக்குடைக்கீழ் அடக்கிச் செங்கோலோச்சினான்.
இவர் இருவருமே யாழ்ப்பாண அரசைப் பிரசித்திபெற நிலைநாட்டினோராவர். ஆதலின் காலிங்க கங்கை வமிசத்தவரான இவ்விருவருமே ’பைந்தொடைப்பாசுபதர் களைஞ்ஞாற்றுப் பன்னிருவரில்” காசினிதாங்கும்படி வரமடைந்த இருவராமெனச் செகராசசேகரமாலை கூறிற்று எனத் தெரிகிறது. இவர்களுள் ஜயவாகுதான் மாகனோடு ஏகோபித்து முதற்கண் யாழ்ப்பாணத்தனியரசுரிமை கொண்டமையி னால் பாதர் குவேறோஸ் செவிக்கெட்டிய ஐதிகமானது ஒரு ஆரியஅரசன் மட்டும் இராமேசுரத்தினின்று யாழ்ப்பாணத்துக்கேகினானென்றது போலும். அப்படியாயின் இராமேசுரமென மயங்கிக் கூறுற்ற கலிங்கத்தினின்றும் வந்த ஜயவாகு யாழ்ப்பாணப் பழைய அரச குடும்பத்தின் இளவரசியொருத்தியை மணந்திருந் தாலும் ஒக்கும். இவ்வரசி வைபவமாலையும் கல்வெட்டும் கூறுகின்ற மாருதப் பிரவாகவல்லியென்னும் ஆடகசவுந்தரியாகலாம். ஆகுங்கால் ஜயவாகுவே உக்கிரசிங்கனும் குளக்கோட்டனுமென வெளிப்பட்டு வைபவமாலை கல்வெட்டு என்னுமிருநூல்களிலும் இடியப்பச்சிக்கான பின்னல் ஒருவாறுவெட்டி உண்மை தெரிக்கப்படுத்தல்சாலும். (முன் 12 ம் பக்கத்தில் கூறியனவும் நோக்குக)
சிங்களர் தெற்கே அவ்வவ்மயத்துச் சிறிது சிறிது பாகங்களைத் தமிழரிட மிருந்து பிடுங்கிக்கொண்டவிடத்தும், நெடுங்காலம் புலத்தி நகரைக் கைப்பற்ற மாட்டாது நெட்டுயிர்பெறிந்துகொண்டிருந்தார். ஈற்றில் 1242 வரையிலேதான் மாகனை அங்கிருந்து அசைத்து வடபாகங்களைநோக்கிச் செல்லப்பண்ணுவோ ராயினர். காலிங்கமாகனுக்கு ‘செயசிங்கவாரியன்” என்னும் பெயரிருந்தது போலும், (கைலாசமாலை) இவனையே வைபவமாலையாளர் விசய கூளங்கைச் சக்கரவர்த்தி என்றார் என்க.
8. கி.பி. 785 ஆம் ஆண்டு மன்னனை ஞானப்பிரகாசர் கி.பி. 1242 கால காலிங்கச்சக்கரவர்த்தியோடு
பொருத்துவது ஏற்றதாகாது. -
32

யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
இருபத்தேழு ஆண்டாய் (1215-1242) இலங்கை முழுதிலும் தனிக்கோல் செலுத்திய இவ்வாரிய அரசன் சக்கரவர்த்தி எனும் பெயர்தாங்கியதும் இயல்பே. காலிங்க ஆரியச் சக்கரவர்த்தி புலத்தி நகரை ஒருவி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தகாலையில் முன் அவ்யாழ்ப்பாண இராச்சியத்தை மகா மன்னனோடு ஒத்து அரசாண்டிருந்த ஜயவாகு இறந்திட்டான்போலும். இறந்ததற்பின் சில்லாண்டுகளாய் அங்கு உள்நாட்டுக்கலகம் விளைந்திருந்தமையும் மாகன் களரியிற்தோன்ற அக்கலகம் நீங்கி யாழ்ப்பாணத் தனியரசு அன்னோனால் உறுதியாய் நாட்டப்பட்டமையும் சாலும். இங்ங்னமே மதுரைக்குப் பாண்டி மழவன் பரிந்துசென்றமையும், அங்கிருந்து செல்வமதுரைச் செழியசேகரன் புதல்வனான சிங்கையாரியன் பொருகுபுகழ் யாழ்ப்பாணம் பேரரசுசெய்ய வந்தமையும் மனோராச்சியத்தின்பாற் படுகின்றன. ஜயவாகு மாண்டபின் மாகன் யாழ்ப்பாண அரசிருக்கையை இனிதாய் நாட்டினான் என்பதுதான் உண்மைப்பகுதியாக எஞ்சிநிற்கின்றது. கையிலாயமாலையானது சிங்கையாரியன் ஜெயசிங்கவாரியன் என நிச்சயமின்றி மங்குளமாய்க் கூறியதை வைபவமாலை திருத்தி விசய கூளங்கை ஆரியன் என்றமை செயசிங்க காலிங்கனைச் சொல்லுதற்கேபோலும். காலிங்கச் சக்கரவர்த்தி என ஒர்வேளை கைச்சரவை களிற் கண்டதை கூளங்கைச் சக்கரவர்த்தி என அறியாதோர் மயங்கினருமாக லாம். (இது இராசநாயக முதலியாரது சாதுரியமான ஊகம்) உள்ளபடி பழைய தமிழ் லிபியில்
sòmMn''Uởh
என்றிருப்பது ’கூளங்கை” என வருவது மிகச் சுலபமேயாகும். காலிங்கச் சக்கரவர்த்தியே யாழ்ப்பாண அரசு உறுதியாய் நிலைநாட்டப்பெற்ற காலத்தில் கிரித்தீபம் போல விளங்கிய புகழாளனாதலால் அவன்தான் நம் நாட்டின் முதலாம் ஆரியச்சக்கரவர்த்தி எனக் கொள்ளுதல் எவ்வாற்றாலும் பொருத்தமுடைத்து.
9. கால எல்லை
இனி காலிங்கச்சக்கரவர்த்தி யாழ்ப்பாணத்துச் சிங்கை ஆரிய அரசுக்கடியிட்ட காலத்தை ஆராய்வாம். அக்காலமானது மாகன் பொலநறு வையை அகன்றுவந்த ஆண்டை (கி.பி. 1242ம் ஆண்டு) அடுத்ததேயாம் என்பது தேற்றம். கைலாசமாலையோடு பதிப்பித்திருக்கின்ற தனிக்கவியொன்றிற்
33

Page 19
யாழ்ப்பாண வைபவ விமர்சனம் சுட்டிய யாழ்ப்பாணநகரியென்பது சிங்கைநகராயின் புவனேகவாகுவென்பதுவும் காலகதியிற் புகுந்த வழுவாயின் அக்கவி கூறும் ஆண்டுக்கணக்கு காலிங்க சக்கரவர்த்தி சிங்கைநகரைக்கட்டிய ஆண்டாகலாம். அக்கவி பின்வருமாறு.
இலகியசகாத்தமொண்ணுரற் தெழுபதாமாண்டதெல்லை அலர்பொழிமாலைமார்ப னாம்புவனேகவாகு நலமிகும்யாழ்ப்பாணத்து நகரிகட்டுவித்துநல்லை குலவியகந்தவேட்குக் கோயிலும்புரிவித்தானே.
நல்லைக்கோயிலைப்புரிவித்த புவனேகவாகு உள்ளபடி சப்புமல்குமாரயோ எனும் செண்பகப்பெருமாளோயாம் என்பதும் அக்காலம் பதினைந்தாம் நூற்றாண்டாம் என்பதும் மேல்வரும் அதிகாரமொன்றினுள் தெரிவிக்கப்படும். ஆதலால் இத்துணை மயக்கங்கொண்டெழுந்த இக்கவி காலிங்கச் சக்கரவர்த்தி யின் நாட்களுக்குச் சமீபகாலத்தன்று என்பதுமலையிலக்கு. இதை மயில்வாகனப் புலவர் தமது வைபவமாலையில் வசனரூபமாய்ப் புகுத்தியிருக்கின்றார். ஆதலால் இது அவர் காலத்துக்கு முற்பட்டதேயாம். அவர் காலத்துக்கு ஒரு நூற்றாண்டு மட்டும் முந்தியதாகக் கூடிய கயிலாயமாலை இயற்றப்பட்டகாலத்தில், கவழங்கியதாயின் புவனேகவாகுவை முதலாம் சிங்கையாரியனின் பேரமைச்ச னாக்காட்டிய கயிலாயமாலையுடையார் அவன் நல்லூர்க் கந்தவேட்குக் கோயிலைப் புரிவித்தமையையும் தமது நூலினுட் புகுத்தாது விடார். ஆதலால் சுட்டிய தனிக்கவி முந்துராசகவிராசருக்கும் மயில்வாகனப்புலவருககும் இடைப்பட்ட காலத்திற்றான் எழுந்ததெனமுடியும். இனி, கவியிற் காட்டிய பெயர்கள் பிழையாயினும் ஆண்டுக்கணக்கு விசேஷ ஞாபகத்துக்குரிய ஓர் சம்பவத்தைப்பற்றியதாதலால் கர்ணபாரம்பரியமாய் அறியப்பட்ட உண்மையாண் டாகலாம். அங்ங்னமாயின் அவ்வாண்டு யாது?
எண்ணுாற்றெழுபது என்பது 870 அன்று ஆயிரம் ஆகிய (பேர்) எண்ணும் நூற்றெழுபதும் சேர்ந்த கணக்காகுமெனத் தோன்றும். எண்ணென்பதை ஆயிர மென்னும் பேரெண் எனக் கொள்வது எவ்வாறெனில் இத்தனிக்கவி வேறோரு கவியை அநுசரித்துச்செய்யப்பட்டது. அக்கவியில் எண் என்பது பேரெண்ணையே குறிக்கும் என்ப. அதுவும் பின்வருமாறு.
எண்ணியசகாப்தமெண்ணுாற் றேழன்மேற்சடையன்வாழ்வு நண்ணியவெண்ணெய்நல்லூர் தன்னிலேகம்பநாடன் பண்ணியஇராமகாதை பங்குனிஉத்தரநாளில் கண்ணியஅரங்கமுன்னே கவியரங்கேற்றினானே.
இக்கவியிற்சொல்லிய எண்ணுற்றேழு: எண் = 1000+107 என நின்று, சகாப்தம் 1185 ஐக்குறிக்குமென்றும், இது பிற ஏதுக்களைக்கொண்டு நிச்சயித்த கம்பர்காலத்துக்குப் பொருத்தமுடையதென்றும் கற்றோர் கழறுவர். (செந்தமிழ்
34

யாழ்ப்பாண வைபவ விமர்சனம் III 178-81) ஆகவே நம் யாழ்ப்பாணத் தனிக்கவிகூறும் ஆண்டு 1000+170-1170 எனவந்து, கிறிஸ்தாப்தம் 1248 உக்குச் சரியாகும். இவ்வாண்டு காலிங்கச் சக்கரவர்த்தி புலத்திநகரை விட்டகன்ற ஆண்டுக்கு (1242) ஆறாண்டுமட்டும் பிற்பட்டது. மாகன் வடதிசை நோக்கிய ஆறாண்டின்பின் யாழ்ப்பாண நகர் நிருமாணித்து முடிவெய்தியது என்பது மிகப்பொருத்தமுடைத்து.
10. சிங்கை நகர்
ஆதிஆரியச்சக்கரவர்த்தி எடுப்பித்த யாழ்ப்பாணநகரி யாது? அது நல்லூராதல் Gமா? கூடாது என்பர் பூரீ இராசநாயகமுதலியார். இவ்வியுற்பத்திமானின் னுமானப்படி பருத்தித்துறைக் கணித்தாய் மணல்மேடுகள் பொருந்தியிருக்கின்ற பல்லிபுரமே பூர்வகாலச் சிங்கைநகராம்? நல்லூர், பவனேகவாகுவெனப் பிற்படக் கோட்டை இராச்சியம் வகித்த செண்பகப்பெருமாள் பதினைந்தாம் நூற்றாண்டிற் கட்டுவித்ததாம். இம்மதம் எமக்கும் சம்மதம். வல்லிபுர மணற்கும்பிகளுள் காற்றுக்காலங்களில் அகப்படும் பழம்பொருட்கள் அங்கு பலவிடங்களில் குவிந்துகிடக்கின்ற பூர்வகாலக் கலவோடுகள், கீச்சுக்கிட்டம் ஆதியனவும் அங்கிருந்து கரைமார்க்கமாய்ப் போன பெரும் வீதியின் அடையாளங்களும் அது ஒர்நாள் விஸ்தாரநகராய் விளங்கியது எனக் கரதலாமலகமாய்க் காட்டும். அப்பால் ஆரியச்சக்கரவர்த்திகள் தம் செல்வாக்கு நிரம்பிய நாட்களில் பெருங்கப்பற்படையுள்ளோராய்ப் பிரக்கியாதிபெற்றுள்ளமையால் அம்மரக் கலத்திரள் ஆழியிற் சுலபமாய்ச் சென்று திரும்புதற்கு அனுகூலமான துறைமுகம் உள்ளோராய் இருந்தமை அவசியம். கேகாலைப் பகுதியிலுள்ள கொத்தகமத்திற்
விசய காலிங்கச்சக்கரவர்த்தி சிங்கைநகரிலிருந்து, யாழ்ப்பாண நகரியைக் கட்டுவித்தான் என்பது தெளிவு. யாழ்ப்பாண நகரி என்பதை விடுத்து, அது வல்லிபுரச் சிங்கைநகர் எனத் திசைமாறி ஞானப்பிரகாசர் கருத்துத் தெரிவிக்கின்றார். கதிரைமலை (கந்தரோடை)யும் வல்லிபுரமும் பெளத்த மதமக்களைக் கொண்டிருந்துள்ளன. பெளத்தம் வடவிலங்கையில் பரவியிருந்த ஒரு காலகட்டத்தில் சிங்கள ஆட்சியாளரின் ஆதிக்கத்திலிருந்து உக்கிரசிங்கன் விடுவித்திருந்தான். தீவிர சைவனாக அவன் விளங்கியுள்ளான். குடாநாட்டின் மேற்பகுதி, கிழக்குப்பகுதி என்பன பெளத்தத்தினது செல்வாக்கிலும், தென்பகுதி (யாழ்ப்பாணம்) மக்கள் விரும்பிக்குடியேறியிராத பிரதேசமாகவும், விளங்கின. இத்தகு நிலையில் தனது தலைநகரை இடம்மாற்றுவதற்கு உக்கிரசிங்கன் விரும்பினான். அவன் தெரிவு செய்த பிரதேசம் பூநகரி ஆகுமெனலாம். சிங்கைநகரைத்தன் பெயரினடியாக (சிங்க)ன் நகர் என வன்னிப்பகுதியிலேயே உக்கிரசிங்கன் நிறுவினான். அண்மைக்கால புஸ்பரத்தினத்தின் பூநகரித் தொல்லியலாய்வுகள் இதனை நிரூபிக்கின்றன. யாழ்ப்பாணக் கடனீரேரி அன்று பொங்குநீர்க்கடலாகவே விளங்கியது. சுண்டுக்குள மணல்தடை, ஆனையிறவு மண் அணை, பண்ணைப்பாலம் எதுவுமின்றி இந்து சமுத்திரத்தின் மேற்கு கிழக்கு இணைப்பு இக்கடனிரேரியைப் பொங்கு கடலாக வைத்திருந்தது. சிங்கைநகள் பூநகரியிலமைந்ததெனில், வரலாற்றில் பின்னால் வரும் பல நிகழ்ச்சிகள் தெளிவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. கலிங்கத்து சிங்ஹபுரத்தையும், சோழரின் சிங்கபுரத்தையும், வலிந்து இழுத்து முடிச்சுப் போடுவது தவறு. வைபவமாலை மயில்வாகனப்புலவரின் கருத்துக்களை விமர்சனம் செய்யும் ஆவலில், வைபவமாலையிலுள்ள சரியான தகவல்களை ஒரங்கட்டி விடமுடியாது.
35

Page 20
யாழ்ப்பாண வைபவ விமர்சனம் கண்டெடுத்த கல்வெட்டும் அன்னோரைப் “பொங்கொலிநீர்ச் சிங்கைநகர் ஆரியர்’ எனச் சூசிப்பிக்கின்றது. பெருங்கடற்சமீபமும் சிறந்த துறைப்பொலிவும் பொருந்தக்கொண்டது வல்லிபுரமே. அங்கு நற்றுறையுண்டோ என இராசநாயகமுதலியார் கொண்ட ஐயுறவு எம்மால் இனிது தீர்க்கப்பட்டது. வல்லிபுரத்துக்கு நேரேயுள்ள கடலோரம் பண்டைநாட்தொட்டுக் குடாக்கரையென் றழைக்கப்படுதலையும், வெருகமுனைக்கும் கொட்டோட்டைக்கும் இடைப்பட்ட வில்வளைவான அக்கரை ஓர் காலம் மிகச் சேமமான ஒதுங்குகுடாவாய்த் திகழ்ந்தமையையும் கடலிலேற்பட்ட பழைய வாய்க்காலொன்று கொண்டுபோய் வீழ்த்திய மணற்குவியலால் அதன் வாயிற் களங்களுண்டுபண்ணப்பட்டமையையும், பட்டகாலத்திலும் இன்றைக்கும் மரக்கலங்கள் கச்சான் ஒதுக்கைநாடி அவ்வப்போது இக்குடாவில் நிறுத்தப்படுகின்றமையையும் நாம் நேரில் ஆராய்ந்தறிந்துகொண்டோம். பருத்தித்துறைமுகம் பறங்கிக்காரரோடுதான் எழுந்ததென்பது ஓர் ஐதிகம். அவர்கள் அதை கல் செறிந்தமுனை (Pontadas Pedras) என்றார்கள். பெத்திறைத்துறையே பருத்தித்துறையென வந்ததேயோ?
சிங்கைநகர் வல்லிபுரத்திலிருந்ததெனக் கொள்ளுதல் அமைவுடைத்தாயின், பறங்கிக்காரர் கி.பி. 1590 இல் கொழும்புத்துறையிலிறங்க நல்லூரச் சருவியகாலையில் சிங்கைநகரெனும் பேரோடு ஒர் பெலத்த அரணிருந்ததென பாதர் குவேறோஸ் கூறுகின்றமை (Conquistap. 367) எவ்வாறென ஓர் ஆசங்கை நிகழும். பூர்வ சிங்கை நகர் கொழும்புத்துறைக்கும் நல்லூருக்குமிடையிலா மெனக்கொள்ள வேறுசான்றில்லாமையால் அச்சிங்கைநகள் அழிந்துபட்டு நல்லூர் தலைநகராயினபின் அப்பழைய நகர்ப்பெயரோடு ஒர் அரண் இங்கு விளங்கிய தெனக் கொள்ளலாம் என்க.
மயில்வாகனப்புலவரது உக்கிரசிங்கன், தனக்குமுன் இராசதானியாயிருந்த கதிரைமலை (கதுருமலை) யை நீக்கிச் செங்கடகநகரி (சிங்கைநகர்)* ஐத் தலைநகராக்கினான். (முன் பக். 28,48) உக்கிரசிங்கனே ஜயவாகுவாயின், இவ் ஜயவாகு முதற்கண் சிங்கைநகரை இராசதானியாக்கினானெனவும், மாகனெனும் காலிங்கச்சக்கரவர்த்தி அதனை கி.பி. 1246 ம் ஆண்டளவில் அரண் செய்து திருத்தினானெனவுங் கொள்க
11. கயிலாயமாலைக்குடிகள்
முத்துராசகவிராசர், முதலாம் ஆரியச்சக்கரவர்த்தி காலத்தவரல்லர்.
இவற்றுக்குப் பலநூறு வருடங்களுக்குப் பிற்பட்டவரே. அவர்தந்த குடியேற்றச் சரிதையும் பழஞ்சரிதையன்று. தமது காலத்தார் சொல்லக்கேட்ட பரம்பரைக்
அடிக்குறிப்பு 7 ஐ நோக்குக.
36

uuTÜur600 வைபவ விமர்சனம்
கதையேயென்று கொள்ளவேண்டியிருக்கிறது. அவ்வூரில் விளங்கிய வேளாண் குடிகளின் மகத்துவந்துலங்க அவ்வவரது மூதாதையர்களுள் பிரசித்திபெற்ற ஒவ்வொருவரை எடுத்துக்கொண்டு அன்னோரெல்லாம் முதலாம் ஆரியச்சக்கர வர்த்தியால் வரித்துக் குடியேற்றப்பட்டனர் என எடுத்திசைத்தனர்போலும். இவரது வரலாற்றையே மேற்கொண்ட மயில்வாகனப்புலவர் அதைத் தமது வழக்கப்படி சில மாற்றங்களோடு வைபவமாலையிற் பெயர்த்தெழுதியுள்ளார். எம் வாசக நேயர்கள் முதல்நூலிலுள்ள இன்பத்தைச் சுவைக்கும் பொருட்டுக் கையிலாய மாலையில் யாழ்ப்பாணக் குடியேற்றப் பாகமாயுள்ளது முழுமையையும் இங்கு தருவோம்.
புண்டரிகமார்பன் புகழுமதுராபுரியோன் தேங்கமழு எண்டிசையுமேத்து மிராசமந்த்ரி - கொண்டதொரு வேதக்கொடியன் விருதுபலபெற்றதுரை கீதப்பிரபுடிகன் கிர்பையுள்ளான் - தீதற்ற புந்தியுள்ளான் மேன்மையுள்ளான் புண்ணியமுள்ளான் புவியோர் வந்திறைஞ்சும்பாத மகிமையுள்ளான் - முந்தரிபாற் றோன்றியகிலாண்ட கோடியெலாந்தோற்றமுற ஈன்றோன்குலத்தி லெழுகுலத்தான் - சான்றோன் புவனேகவாகுவென்னும் போரமைச்சன்றன்னை நலமேவுநல்லூரி னண்ணுவித்துச் - சிவனேச னாகத்தான்றோன்று மனுஷத்தா னன்னமருள் தாகத்தான்விஞ்சுந் தருமத்தான் - சோகந்தீர் பாகிரதிகுலத்தான் பைம்பொன்மேழித்துவசன் பாகாரும்வேங்கைப் பருப்பதத்தான் - வாகாருங் கார்காத்துவிட்டதெனக் காமுறுபொன்பற்றியென்னும் ஊர்காத்துவிட்டுவந்த வுச்சிதவான் - பேர்சாற்றில் வாசவனேர்பாண்டி மழவனையுந்தம்பியையு நேசமுறுத்துன்மை நேர்ந்ததுரை - பேசுபுகழ்ச் செம்பகப்பேர்வாய்ந்த திறன்மழவனோடுமவன் நண்புபெறுதம்பியையு நானிலத்திற் - பண்புசெறி தக்கபலவளமுஞ் சார்ந்துகல்விநாகரிகம் மிக்கதிருநெல்வேலி மேவுவித்துத் - தக்கவர்கள் எல்லாருமேத்து மிரவிகுலமன்னவனார் சொல்லும்பெயர்புனைந்த சுத்தபர - நல்லபுகழ் சூழுங்கங்காகுலத்துத் துய்யதுளுவக்கூட்டம் வாழும்படிக்குவந்த மாசின்மணி - ஏழுகடல் சுற்றுபுவிமுற்றுந் துதிக்குஞ்சுகபோசன் கற்றவருங்கியுங் கனகதரு - வெற்றிதரு
37

Page 21
யாழ்ப்பாண வைபவ விமர்சனம் காவிமலர்மார்பன் கருதும்வெள்ளாமரசன் மேவுகலைஞான வினோததுரை - காவியூர்ச் செய்யநரசிங்க தேவனைநற்சீர்வளங்கள் வைகுமயிலிட்டிதன்னில் வாழவைத்து - வையகத்து முத்தமிழ்சேர்சித்தன் முகசீதளவசனன் சித்தசரூபன்மன் றிருச்சமுகன் - மெத்தியசீர் வாலிநகர்வாசன் மருள்செறிவெள்ளாமரசன் கோலமிகுமேழிக் கொடியாளன் - மூலமிகு செம்பகமாப்பாணனையுஞ் சேர்ந்தகுலத்தில்வந்த தண்குவளைதார்ச்சந்த்ர சேகரனாம் - பண்புடைய மாப்பாணபூபனையு மாசில்புகழ்காயனகர்ப் பூப்பாணனென்னவந்த பொன்வசியன் - கோப்பான சீரகத்தார்மார்பன் செறிகனகராயனையும் பாரகத்துண்மேன்மை பலவுடைத்தாய் - நீரகத்தாய்த் தொல்லுலகோர்நாளுந் தொகுத்துப்பிரித்துரைக்குந் தெல்லிப்பழையிற் றிகழவைத்து - நல்விருதாய்க் கோட்டுமேழித்துவசன் கோவற்பதிவாசன் சூட்டுமலர்க்கவித் தொடைவாசன் - நாட்டமுறு மாதிக்கவேளாள னாயுங்கலையனைத்துஞ் சாதித்தரூப சவுந்தரியன் - ஆதித்தன் ஓராயிரங்கதிரோ டொத்தவொளிர்பொற்பணியோன் பேராயிரவனெனும் பேரரசைச் - சீராருங் கன்னல்செறிவாழை கமுகுபுடைசூழ்கழனி துன்னுமினுவில் துலங்கவைத்துப் - பொன்னுலகிற் கற்பகநேர்கைத்தலத்தான் கச்சூர்வளம்பதியான் மற்பொலியுந்தோட்குவளை மாலையினான் - பொற்பார் நதிகுலவெள்ளாமரசன் வழகாளன் - நிதிபதிபோல் மன்னனிகரானமன்னன் மாமுத்திரைகள்பெற்ற தன்னிகரில்லாதவிறற் றாட்டிகவான் - இந்நிலத்தில் ஆலமுண்டகண்ட னடியைமறவாதவள்ளல் நீலகண்டனென்னு நிருபனையு - மேலுமவன் தம்பியரோர்நால்வராயுந் தான்பச்சிலைப்பள்ளியி லும்பர்தருவென்ன வுகந்துவைத்துச் - செம்பதும மாதுவளருஞ்சிகரி மாநகர்வெள்ளமரசன் சாதுரியன்காவிமலர்த் தாரழகன் - ஒதுமொழி உண்மையுள்ளான்கல்வி யுகப்புள்ளானுக்கமுள்ளான் வண்மையுள்ளான்மேலும் வளமையுள்ளான் - திண்மைபெறு மாரன்கனக மழவனைப்பின்னால்வருடன்
38

யாழ்ப்பாண வைபவ விமர்சனம் சேரும்புலோலி தகழவைத்துப் - பேரளகைக் காவலனேர்செல்வன்மலர்க் காவியணியும்புயத்தான் பாவலருக்கின்பப் பசுமேகம் - பூவில்வரு கங்காகுலத்துங்கன் கவின்பெறுமேழிக்கொடியோன் மங்காமல்வைத்த மனிவிளக்குச் - சிங்கார கூபகநாடாளன் குணராசநற்சமுகன் கூபகாரேந்த்ரக் குருசிலையுஞ் - சோபமுள நண்ணக்குலத்தி னரங்குதேவப்பெயர்சேர் புண்ணியமகிபால பூபனையும் - மண்ணினிடைப் பல்புரத்தினல்வளமு மொவ்வாப்பலவளஞ்சேர் தொல்புரத்தின்மேன்மை துலங்கவைத்து - வில்லில் விசயன்போல்வீமனுயர் வீறுகொடைக்கன்னன் இசையிற்பொறையி லியற்றமருன் - வசையற்ற புல்லூர்த்தலைவன் புகழ்செறிவெள்ளாமரசன் எல்லார்க்கும்மேலா மிரத்னமுடிச் - செல்வமுறு தேவராசேந்த்ரனெனுஞ் செம்மறனையிந்நிலத்திற் கோவிலாக்கண்டி குறிவைத்து - நாவிரியுஞ் சீர்த்தியுறுசெம்மல் செழுந்தொண்டைநாட்டரசன் கோத்தமணல்பூர்ந்தார்க் குவளையினா - னார்த்தகவிக் கம்பனுரைத்த கவியோரெழுபதுக்குஞ் செம்பொனபிஷேகஞ் செயுங்குணத்தான் - பைம்புயனேர் மண்ணாடுகொண்ட முதலியெனுமன்னவனை யுண்ணாட்டிருபாலை யூரில்வைத்து - விண்ணாட் டிறைவனிகர்செல்வ னெழில்செறிசேயூரன் நிறைபொறுமைநீதி யகலாதான் - நறைகமழும் பூங்காவிமார்பன் புகழுளவெள்ளாமரசன் நீங்காதக்ர்த்தி நிலையாளன் - பாங்காய் இனியொருவரொவ்வா விருகுலமுந்துய்யன் தனிநாயகனென்னும்பேர் தாங்கு - மினியவனை மற்றுமுளபற்று நகர்வளமைசூழ்ந்திடுதென் பற்றுநெடுந்தீவு பரிக்கவைத்துச் - சுற்றுபுகழ் வில்லவன்றன்வஞ்சி நகருறைவெள்ளாமரசன் பல்லவனோடிரண்டு பார்த்திவரை - நல்விளைவு தாவுங்களனிகளுஞ் சாற்றும்பலவளமு மேவுவெளிநாட்டில் விளங்கவைத்துப் - பூவில் தலையாரிசேவகரிற் றக்கவர்கடம்மை நிலையாகநாட்ட நினைத்துச் - சிலைதரித்த வல்லியமாதாக்கனென்னு மாசூரவீரியனைச்
39

Page 22
யாழ்ப்பாண வைபவ விமர்சனம் சொல்லியமேற்பற்றுத் துலங்கவைத்து - நல்ல இமையாணமாதாக்க னென்னுமிகலோனை அமைவாய்வடபற்றி லாக்கி - இமயமறி செண்பகமாதாக்கனென்னுஞ் சீர்விறலோன்றன்னையிரு கண்போலக்கீழ்ப்பற்றைக் காக்கவைத்து - ஒண்பயிலும் வெற்றிமாதாக்கனென்னும் வெய்யதிறலோனைமிக உற்றிடுதென்பற்றி லுகந்துவைத்த - செற்றலரை வென்றபடைவீர சிங்கனெனும்விரியனைத் தன்றிருச்சேனைக்குத் தலைமைசெய்து - துன்றிவரும் ஆனைகுதிரை யமருமிடங்கடல்போற் சேனைமனிதர் செறியிடமோ - டானவெல்லாம் அங்கங்கேசேர்வித்தனன்
ஜெயசிங்கவாரியனாம் காலிங்க (கூளங்கை) ச் சக்கரவர்த்தி என்பது. கயிலாய மாலையில் இவ்வரலாற்றினை மயில்வாகனப்புலவர் பெயர்த்தெழுதியிருக்கின்ற பான்மை கவனிக்கத்தக்கது. அது பின்வருமாறு.
(சிங்கையாரியன்) ஒருநாட் புவனேகவாகுவுடன் ஆலோசித்துத் தமிழ்நாட்டரச ருக்குத் திருமுகமெழுதித் தமிழ்க்குடிகளை அழைப்பிக்க அவர்கள் வந்து சேர்ந்தார்கள்.
அவர்களுக்குள் ஐந்து குடிமைகளுடனும் வந்த பொன்பற்றியூர் வேளாளன் பாண்டிமழவனையும் அவன் தம்பியையும் மைத்துணனாகிய சண்பகமழவனையும் அவன் தம்பியையும் சிங்கையாரிய மகாராசன் திருநெல்வேலியிற் குடியிருத்தினான்.
காவியூர்ப் பாவலாதிதேவன் (புரவலந்திதேவன்) மூத்த குமாரனாகிய நரசிங்கதேவனை மயிலிட்டியிலிருத்தினான்.
வாவிநகர் (வாலிக்கநகர்) வேளாளன் சண்பகமாப்பாணனையும் அவன் ஞாதியாகிய சந்திரசேகரமாப்பாணனையும் (காயல்நகர் வேளாளன் பூப்பாண னையும்) கனகராயன் என்னுஞ் செட்டியையும் தெல்லிப்பளையில் இருத்தினான்.
கோவலூர் பேராயிரமுடையான் என்னும் வேளாளனை இணுவிலில் இருத்தி னான். அவன் அவ்வூர் திருத்தப்படாததினால் மேலைக்கிராமத்தில் போயிருந்தான்.
இராசமுத்திரையும் பலவரிசைகளும் பெற்ற கச்சூர் வேளாளன் கனகமழவ
(நீலகண்ட) னையும் தம்பிமார் நால்வரையும் புலோலியி (பச்சிலைப்பள்ளியி) லிருத்தினான்.
40

யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
சிகாமாநகர் வேளாளன் கனகபூவ (கனகமழவ) னையும் தம்பிமார் நால்வரையும் புலோலியிலிருத்தினான்.
கூபகநாட்டு வேளாளன் கூபகாரேந்திரனையும் புண்ணியமகிபாலன் (பூபாலனையும்) தொல்புரத்திலிருத்தினான்.
புல்லூர் வேளாளன் தேவராயேந்திரனைக் கோயிலாக்கண்டியிலிருத்தினான்.
ஏரெழுபதென்னும் பிரபந்தம் (கம்பனாற்) பாடப்பெற்ற உயர்குல வேளான் மரபினான் தொண்டைமண்டலத்து மண்ணாடுகொண்ட முதலி என்பவனை இருபாலையிலிருத்தினான்.
செயப்யூர் இமரபுந் துய்ய தனிநாயகனென்னும் வேளாளனை நெடுந்தீவிலிருத்தினான்.
காஞ்சிபுரம் (வஞ்சிநகர்) பல்லவனென்னும் பிரபுவை இரண்டு துணைப் பிரபுக்களுடன் வெளிநாடென்னும் பல்லவராயர்காட்டிலிருத்தினான்.
இப்படியே அந்தந்தப் பிரபுக்களை அவரவர் அடிமைக் குடிகளுடன் அங்கங் கிருத்தினான். அதன்பின் வல்லிமாதாக்கனென்னும் பராக்கிரமனை மேற்பற்றுக் கும், செண்பகமாதாக்கனென்னும் சூரவீரியனைக் கீழ்ப்பற்றுக்கும், இமையாத (இமையாண) மாதாக்கனென்னும் உத்தண்டவீரனை வடபற்றுக்கும், வெற்றி மாதாக்கனென்னும் விசயபராக்கிரமனைத் தென்பற்றுக்கும் அதிகாரிகளாக நிறுத்தி, உத்தண்ட சிகாமணியாகிய வீரசிங்கனென்பவனைச் சேனாதிபதியாக்கி ஓர் சுபதினத்தில் நல்லமுகூர்த்தமிட்டு மகிடாபிஷேகம்பெற்று நகரிவலம் வந்து சிங்காசனம் ஏறிப் பூலோகதெய்வேந்திரனாக அரசாண்டான்.
மயில்வாகனப்புலவர் மேற்கோள் எடுத்தெழுதும் ரீதிக்கு இது ஓர் தக்க எடுத்துக்காட்டு. (அவரது வைபவமாலை பாடபேதங்கள் பிறைக்கோட்டினுள் வரைந்திருக்கின்றன) சிங்கையாரியன் புவனேகவாகுவுடன் யோசித்தமை, நரசிங்கதேவன், பாவலாதி (?) தேவனின் மூத்தகுமாரனானமை, இணுவிலில் இருத்தப்பெற்ற பேராயிரமுடையான் மேலைக்கிராமத்தில் (உடுவிலில்) போயிருந்தமை, தொல்புரத்தி னிறுத்தப்பெற்ற நரங்குதேவனை (தடுமாற்றத்தாற் போலும்) புண்யமகிபாலன் என்றமை, வெளிநாடு பல்லவராயர்காடு ஆயினமை இவைகள் மயில்வாகனப்புலவரது ஐதிகமேயோ? இவற்றுள் புவனேகவாகுவின் உண்மைவரலாறு ஆதியன பிறாண்டுத் தெரிக்கப்படல்காண்க.
கயிலாயமாலை சுட்டிய குடியேற்றம் பதின்மூன்றாம் பதின்நான்காம் நூற்றாண்டுகளில் நிறைவேறியதாகலாம் என்பர் இராசநாயகமுதலியார்.
41

Page 23
யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
பதினான்காம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மலிக்கபூர் என்னும் முகமதியனும் அவனைப் பின்பற்றிய அவன் குழுவினரும் சோழ பாண்டிய இராச்சியங்களிற் பெரும்பாகங்களை அப்பிக்கொள்ள, மதுரையிலும் தஞ்சாவூரிலும் விசுவநாத நாயக்கன் தெலுகுப் பொலிகார்களை அமைக்க, இப்பரசண்டத்தில் அல்லோல கல்லோலப்பட்ட தமிழ்ப் பெருங்குடிகள் தென்றிசைநோக்கிப்புறம்போந்து இலங்கை யிற் சிங்கள அரசர்களால் ஆதரிக்கப்பட்டனர் என்பதும் அன்னோதான் யாழ்ப்பா ணக் குலக்குடிகளாயினர் என்பதும் முதலியாரது ஊகம். போதிய சான்றுகள் ஏற்படும் வரையில் இது ஓர் மதிவல்ல ஊகமாத்திரமேயாய் நிற்கும் என்க.
12. இராசமுறை
கி.பி. 1242 வரை காலிங்க (கூளங்கை) ஆரியச்சக்கரவர்த்திதான் யாழ்ப்பாணத்து முதல் அரசனாமெனச் சாற்றியவளவில் வைபவமாலையின் கூற்று ஏற்புடைத்தாயிற்று. அப்பால் அவ்வாரியச் சக்கரவர்த்தியைத் தொடர்ந்து செங்கோலோச்சிய பண்டைத்தமிழரசர்களின் ஆவலியை அந்நூலுடையார் 'இராசமுறை” என்னும் நூலினுட் கண்டனராதல் வேண்டுமெனவும் அவ் ‘இராசமுறை” கி.பி.1467 ம் ஆண்டின்பின் சிங்காதனமேறிய பரராசசேகரன் வரையிலுள்ள அரசர்களைமட்டும் வரைந்துள்ளதாதல் வேண்டும் எனவும் ஆரம்ப அதிகாரத்தினுள் குறித்தாம்.’பரராசசேகரனுலா” சுட்டிய பரராசசேகரனது சரிதம் போலும். "இராசமுறை’ நூல் பத்தியரூபமா? கத்தியரூபமா? மயில்வாகனப்புலவர் அதனை உண்ணபடி பெயர்த்தெழுதினரா? அன்றித் தம் வழக்கப்படி சுருக்கி, கூட்டல் குறைத்தல்களோடு தந்துள்ளவரா? இவ்வினாக்கள் அப்பழையநூல்தான் அகப்படும்வரையில் விடையின்றிக் கிடக்கவேண்டியனவாம். அந்நூல் அகப்படும் வரை அதன் அங்கிரகமாய் வைபவமாலையில் எள்ளதென ஊகிக்கக்கிடக்கும் பாகமே எம்மால் சரித்திர அமிசமாகக் கொள்ளத்தக்கது. இனி அப்பாகத்தை இங்கு முழுமையாகப் பெயர்த்தெழுதி ஆராய்வாம்.
(2 குலசேகர சிங்கையாரியன்)
அதன்பின் அவன் மகன் *குலசேகரசிங்கையாரின் முடிசூடி அரசாட்சியை நடத்தி குடிகளுக்குப் பொல்லாங்கு செய்யாமல் அரசாட்சியைத் திருத்துவித்து வருமானங்களை அதிகப்படுத்தித் தன்மகன் குலோத்துங்கசிங்கையாரியனுக்கு அரசாட்சியை ஒப்புவித்து சிலகாலம் நோயினால் வருந்தித் தேகவியோகமானான்.
* காலிங்க ஆரியச்சக்கரவர்த்தியின் பின் சந்திரபானு என்ற சாவகமன்னன் ஒருவன் யாழ்ப்பாணத்தை
ஆண்டுள்ளான். பின்னால் விபரிக்கப்படும்.
42

யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
(3 குலோத்துங்க சிங்கையாரியன்)
குலோத்துங்க சிங்கையாரியன் வயல் நிலங்களைத் திருத்துவித்து, வருமானங்களை அதிகரிக்கச் செய்து, குடிகள் சந்தோஷங்கொள்ளத்தக்கதாய்ச் சமாதான அரசாட்சி செலுத்தித் தன்மகன் விக்கிரமசிங்கையாரியனுக்கு அரசாட்சியை வைத்துச் சிவபதம் சேர்ந்தான்.
(4 விக்கிரம சிங்கையாரியன்)
இவன் காலத்திலே சிங்களவருக்கும் தமிழருக்குஞ் சமயகாரியங்கள் பற்றிப் பெரும் கலகம் உண்டுபட்டு, சிங்களவர் தமிழரைக் காயப்படுத்தியும், இரண்டுபேரைக் கொலை செய்தும் இப்படியே முரட்டுத்தனங்காட்டி நின்றார்கள். அதையறிந்து விக்கிரமசிங்கையாரியன் அவர்களைப் பிடிப்பித்து விசாரணை செய்து, அக்கலகத்துக்குத் தலைவனாய்நின்ற புஞ்சிவண்டா என்பவனையும் வேறு பதினேழு சிங்களவர்களையுங் கொல்லுவித்துப் பின்னுஞ்சிலரை சிறையிலும் இடுவித்தான். அதன்பின் கலகம் அமர்ந்து சில சிங்களக்குடிகள் ஒளித்து இந்நாட்டைவிட்டுப் புறப்பட்டார்கள். அரசன் தமிழர்மேல் பட்சம் வைத்து நடந்ததினால் சிங்களவர் அவன்மேல் வெறுப்புள்ளவர்களாயிருந்தார்கள்.
(5 வரோதய சிங்கையாரியன்)
இவனுக்குப்பின் இவன் மகன் வரோதய சிங்கையாரியன் அரசாட்சியை ஒப்புக்கொண்டு மார்க்க வழிபாட்டைக்குறித்துச் சில கட்டளைகளை ஏற்படுத்தி இருதிறத்துக் குடிகளையும் சமாதானப்படுத்தி முறையான அரசாட்சிசெய்து, தன் குமாரன் மார்த்தாண்ட சிங்கையாரியனுக்கு அரசைக்கொடுத்துப் பரகதியடைந்தான்.
(6 மார்த்தாண்ட சிங்கையாரியன்)
இவ்வரசன் கல்வியும் வேளாண்மையும் விருத்தியாக முயற்சிசெய்து, வன்னியர்களால்வந்த கலகங்களையும் அமர்த்தி, தயாளகுணமுள்ளவனாய்க் குடிகளைத்தாய்போலக் காப்பாற்றி அரசாண்டதினால் இவன் மரணமடைந்தபோது இருதிறத்துக் குடிகளும் இவனுக்காக அதிகமாகத் துக்கங்கொண்டாடினார்கள்.
(7 குணபூஷண சிங்கையாரியன்)
பின்பு அவன் மகன் குணபூஷண சிங்கையாரியன் முடிசூடி அரசாட்சி செய்தான். இவன் பிதாவிலும் அதிக தாயாளகுணமுள்ளவனாய்க் குடிகளைப்
43

Page 24
யாழ்ப்பாண வைபவ விமர்சனம் பாரபட்சமின்றி நடத்தி, அரசாட்சியைத் திறப்படுத்தி, கல்வி செல்வம் பொறுமை (?) முயற்சி செலுத்திப் பூரண ஆயுளுடையவனாகித் தன்குமாரன் வீரோதய சிங்கையாரிய லுக்குச் சிங்காசனத்தை ஒப்புவித்துச் சிலகாலத்தின்பின் தேகவியோகமடைந்தான்.
(8 விரோதய சிங்கையாரியன்)
இவன் காலத்தில் சிங்களக் குடிகளாற் சில கலகங்கள் உண்டாக, அக்கலகங் களை அவன் தன் வீரத்தினாலடக்கி, அக்கலகம் வன்னியர் தூண்டிவிட்டதென் றறிந்து வன்னியர்மேற் படையெடுத்துப்போய் ஏழு வன்னியையுங் கொள்ளை யடித்து அவ்வன்னியர்கள் ஓர்போதும் இவ்வித எண்ணங்கொள்ளாது செய்து திரும்பினான். அவன் மீண்டு வந்தவுடன் சிங்களக் கலகக்காரர்கள் அவன் காலில் விழுந்து தங்களுக்குப் பொறுத்துக்கொள்ள வேண்டிக்கொண்டதினால் பொறுதி கொடுத்து நன்முகங்காட்டினான்.
அக்காலத்திலே மதுரையிலே சந்திரசேகர பாண்டியனுடன் சத்துருக்க ளெதிர்த்து யுத்தஞ்செய்து இராச்சியத்தைப் பிடித்துக்கொள்ள, பாண்டியன் ஒளித்து யாழ்ப்பாணத்துக்கு ஓடிவந்து, விரோதய சிங்கையாரிய இராசனிடம் அடைக்கலம் புகுந்தான். அப்பொழுது வீரோதய சிங்கையாரியன் பாண்டியன்கீழ்ப் பாளைக்காரனாயிருந்த சேதுபதி முதலான பல சேனைகளைக் கூட்டிக்கொண்டு மதுரையிற் புகுந்து போராடிச் சத்துருக்களைத்துரத்திப் பாண்டி இராசனுக்கு அரசாட்சியை நிலைப்படுத்தித் திரும்பினான்.
இவன் மறுபடியும் வன்னியர்களைக் கொள்ளையாடவிருக்கிறானெற்று பொய்க் கதையுண்டான போது வன்னியர்கள் பயந்து கண்டியரசனிடம்போய்த் தங்களுக்கு உதவி செய்யக் கேட்டார்கள். அதற்குக் கண்டியரசன், யாழ்ப்பாணம் எங்கள் முன்னோர் பரிசாகக் கொடுத்த இராச்சியமாயிருக்கிறபடியால் அதற்கு விரோத மாய்ப் படையெடோம். என்குல பிதாக்கள் பேருக்கு அபகீர்த்தி உண்டாக்க மாட்டேன் என்று மறுத்துச்சொன்னதினால், அவ்வேழு வன்னியர்களும் கன திரவியங் களைக் கொண்டுவந்து விரோதய சிங்கையாரியனைக்கண்டு நன்முகம்பெற்றுத் திரும்பிப்போய்ப் பயமுற்றிருந்தார்கள்.
வீரோதய சிங்கையாரியன் இளவயதிலே சடுதிமரணமடைந்தான். அவன் போசனஞ்செய்து இரவிலே சப்பிரமஞ்சத்தில் நித்திரையிலே மரணித்தபடியால், அந்த மரணத்தைக் குறித்துப் பலவகையாய்ப் பேசிக்கொண்டார்கள்.
(9 செயவீர சிங்கையாரியன்)
அவன் (மூத்த) குமாரன் செயவீரசிங்கையாரியன் சிறுவயதிலே முடிசூடி அரசனாய் வந்தும் மிகு விவேகியாய் சத்துரு பயமின்றி அரசாட்சியை நடத்திக்
44

யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
குடிகளை இரட்சித்து வெகு கீர்த்திமானானான்.
அக்காலம் கண்டிநாட்டை அரசாண்ட புவனேகவாகு முத்துச் சிலாபத்தைக் குறித்து இவனுடன் பகைத்து நெருக்கினதினால், இவன் அவனுடன் நெருங்கி யுத்தஞ்செய்து வெற்றிகொண்டு மிதுனயாழ்க்கொடி தூக்கி சாலிவாகனசகாத்தம் 1380 ம் வருஷத்திலே இலங்கை முழுவதும் ஒரே குடைக்கீழ் அரசாண்டான். பன்னிரண்டாம் வருஷத்தில் பராக்கிரமவாகுபாண்டி இராசனைப் பிணைவைத்துச் செயவீரசிங்கையாரியனிடத்தில் இராச்சியத்தை வாங்கிக்கொண்டு இவனும் இவன்பின் வந்த அரசருந் திறையிறுத்துவந்தார்கள். இவன் நெடுங்காலம் அரசாண்டு தன்மகன் குணவீரசிங்கையாரியனிடத்தில் இராச்சியப் பொறுப்பை யேற்றிப் பரலோகவாழ்வடைந்தான். இம்மன்னன் குறித்துப் பின்னால் விரிவாக விபரிக்கப்படும்.
(10 குணவீர சிங்கையாரியன்)
கண்டியரசர் கொடுத்த திறையைக் கொடாததினால், குணவீரசிங்கையாரியன் சிலபகுதியிற் தமிழ்க் குடிகளையிருத்தித் தன்னரசாட்சியாக்கினான். மதுரையை அரசாண்ட நாயக்கருக்குங் சிலபேருதவி செய்தான் தன்பிதாவைப்போலே சிறந்த அரசாட்சி செய்து வயோதிகனாகித் தன்மகன் கனகசூரிய சிங்கையாரியனுக்கு (இராச்சியத்தைக்) கொடுத்துச் சொர்க்கமடைந்தான். இம்மன்னன் குறித்தும் பின்னர் விரிவாகப் பேசப்படும்)
(11 கனகசூரிய சிங்கையாரியன்)
இவ்வரசன் சிங்களவருக்கு இட்டங்காட்டிவந்ததினால், அவர்கள் மேலாட்டங் கொண்டு வன்னியர்களின் உதவி பெற்றுக் கலகஞ்செய்தபொழுது, கனகசூரிய சிங்கையாரியன் இரவிலே தன் மனைவி மக்களைக்கொண்டு வடதேசத்துக்கோடிப் போய்விட்டான். விசயவாகுவென்னுங் சிங்களவன் தானே அரசெனத் தலைப் பட்டுத் தமிழ்க்குடிகளை ஒடுக்கித் தமிழரை உடை நடை பாவனைகளிலெல்லாம் தங்களைப்போலாகவேண்டுமென்று பலவந்தம்பண்ணி அதற்கமையாதவர்களைத் தண்டித்துப் பதினேழுவருஷம் அரசாண்டான்."
10. கனகசூரிய சிங்கையாரியன் காலத்தில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய சிங்களவன் விஜயபாகு வன்று. கி.பி. 1450 ல் பராக்கிரமபாகுவின் வளர்ப்புப்புத்திரனான சப்புமல்குமரயா என்ற செண்பகப்பெருமாள் யாழ்ப்பாணத்தின் மீது படையெடுத்துக் கைப்பற்றி, பூரீ சங்கபோதி புவனேகபாகு என்ற சிம்மாசனப் பெயருடன் பதினேழு ஆண்டுகள் அரசாண்டான். 1467 ல் கோட்டையின் அரசனாக அவன் செல்ல நேர்ந்தபோது விசயபாகு என்பவனை யாழ்ப்பாண அரசனாக்கி விட்டுச் சென்றான். அவனை கனகசூரியசிங்கையாரியனும், அவனிரு புதல்வர்களான பரராசசேகரன், செகராசசேகரன் என்போரும் வென்று, ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டனர் என்பதே சரியான வரலாறு.
45

Page 25
யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
கனகசூரியசிங்கையாரியன் தன்பிள்ளைகளாகிய பரராசசேகரனையும் செகராச சேகரனையும் திருக்கோவலூர் இராச குடும்பத்தவர்கள்பாலிற் கல்விகற்கவைத்து, யாத்திரைபண்ணும்படி மனைவியுடன் காசிபரியந்தம் திரு ஸ்தலங்கள் தோறும் சுற்றித்திரிந்து, திரும்பிக் கோகர்ண சிவாலயத்தில் வந்து அவ்விடமிருந்து சிலவருடகாலம் சிவராத்திரி விரதம் அனுட்டித்தான். அப்படி அனுட்டித்துவருங் காலத்தில் ஒருநாள் கனவிலே சுவாமி நீ மதுரைக்குப் போ. அங்கே உனக்கு சகாயங்கிடைக்குமென்று உத்தரவு கொடுத்ததினால், விரத உத்தியாபனஞ்செய்து திருக்கோவலூருக்குப்போய் அங்கே தன் பிள்ளைகளை வளர்த்தவர்களாகவும் போர்ச்சாமர்த்தியத்திலும் கல்விப்பயிற்சியிலும், சரீர அழகிலும் மதிக்கப்பட்டவர்க ளாயுமிருக்கக்ண்டு அளவற்ற சந்தோஷமுடையவனானான். பிதாவைக் கண்ட போதே பிள்ளைகள் முகங்கள் சூரியனைக் கண்ட செந்தாமரைப் புட்பங்கள் போலாயின. பிள்ளைகளிவரும் சத்துருக்களைச் செயிக்கவும் இராச்சியத்தை மீட்டுக்கொள்ளவும் பண்ணியிருந்த பிரயத்தனங்களைக் கண்டு பிதா மிகுந்த ஆச்சரியங்கொண்டு, அவர்களை முத்தமிட்டு, அங்குள்ள இராசகுடும்பத்தாருக் குத் தான் காட்டவேண்டிய நன்றியறிதலெல்லாங் காண்பித்து பிள்ளைகளையுந் தேவியையுங்கொண்டு மதுரை சேர்ந்தான். சேர்ந்தபொழுது பாண்டி நாட்டைப் பகுதி பகுதியாய் அரசாண்ட சிற்றரசர்கள் பலருஞ் சேனைகளையும் ஆயுதங் களையுங் கொடுக்க கனகசூரிய சிங்கையாரியன் போராயுதங்களுடன் யாழ்ப்பாணம் வந்து மேற்கு வாசல்வழியாய் நுழைந்தான்.
காத்திராதவேளையில்வந்து நுழைந்தபோதிலும் விசயவாகு சடுதியிற் சேனைகளைக்கூட்டி, அஞ்சாநெஞ்சனாய்நின்று பெருஞ்சண்டை பண்ணினான். செகராசசேகரன் ஓரணியில் சண்டைசெய்துநிற்க, பரராசசேகரன் விசயவாகுவின் துணிவையும் அவன் செய்யும் வீரத்தையுங்கண்டு வாட்படையுடனே அவன் பேர்ாமுனையிற் சிங்கம்போலப் பாய்ந்து சேனைகளையும் விசயவாகுவையும் வாளுக்கிரையாக்கினான். அதைக்கண்டு செகராசசேகரனுடனெதிர்த்த சேனை போர்கெட்டுச் சிதறிப்போயிற்று.
அதன்மேற் பரராசசேகரன் பிதாவை அரசாட்சியில் வைத்து நிலைப்படுத்தித் தான் தேசவிசாரணை செய்ய முயன்று விசயவாகுவின் கலகத்துக்குட்பட்ட அநேக சிங்களவரைப்பிடித்துக்கொலை செய்வித்தான். அநேக சிங்களக் குடிகள் தங்கள் குடும்பங்களுடன் யாழ்ப்பாணத்தை விட்டுக் கண்டி நாட்டின்புறத்திற் குடியேறினார்கள். ஒடிப்போகாமலிருந்த குடிகள் தமிழருக்கு மிகவும் பயந்து நடந்தார்கள். பிதாவாகிய கனகசூரிய சிங்கையாரியன் மகனுக்கு முடிசூட்டிச் சிங்காசனத்தில் வைத்துத் தான் ஆறியிருந்து சிலகாலத்தின்பின் இறந்துபோனான்.
இதுவரை'இராசமுறை என்னும் இறந்துபட்ட நூலின்சுருக்கும்போலும். ஆயினும் கனகசூரிய சிங்கையரியனாகும் 11ம் அரசன் வரலாறு மயில்வாகனப்புலவர்
46

யாழ்ப்பாண வைபவ விமர்சனம் கையில் வெகுஇடைச்செருகுதல் பெற்றுக்கொண்டதாகத்தோற்றும். கனகசூரிய சிங்கையாரியன் தோற்றோடியதற்கு முற்பட்டதே இராசமுறை போலும். பரராசசேகரன், செகராசசேகரன்* எனும் இருவரும் சகோதரர்களென்ற தப்பிதம் உண்மைச்சரித்திரமறியாதோர் காலத்தி லெழுந்ததொன்று. இது அடிக்குட் தெளிவிக்கப்படும். விசயவாகுவோடு கலந்த போரின் வரலாறுகளுக்கும் மனோகற்பனையே என்க. கனகசூரியன் கோகர்ணசுவாமி பதியிற் தவங்கிடந்து அருள்பெற்றுத் தன் சத்துருவைச் செயித்ததை, கீழ்த்திசைக்கங்கள்களது மூதாதை மகேந்திரமலையில் அச்சுவாமியிடம் அருள்பெற்று கலிங்கதேச அரசனைப் புறங்கண்ட கதையையும் அதனோடு கந்தமாதனத்திலே ‘காசினிதாங்கும்படி” வரமடைந்த இருவரின் கதையையும் பிரதிபிம்பிக்கின்றது. கீழ்த்திசைக்கங்கள் களைப்பற்றிய ஊர்க்கதைருபந்தான் செகராசசேகரமாலை ஆரியர் காலத்தில் கந்தமாதனத்திற் செருகப்பட்டும், மயில்வாகனப்புலவர் காலத்தில் கனகசூரிய சிங்கையாரியனின் படையெழுச்சி வரலாற்றிற் சுவறியும் நின்றதாமெனக்கொள்க.
13. சந்திரபானு
சிங்கள அரசனான 2ம் பராக்கிரமபாகுவின் பதினொராம் ஆண்டில் (கி. பி. 1245-47) சந்திரபாகு என்னும் ஒர் யாவகன் பெரும் படையோடு இலங்கையில் நுழைந்துள்ளன் என மகாவமிசநூல் நுவலும். (83,347) இவன் இலங்கைக் கரைகளையும் தென்னிந்தியக் கோடியையும் சுற்றித்திரிந்த ஓர் கடற்கொள்ளைக் காரத் தலைவனுமாகலாம். சடாவர்மன் 2 ம் வீரபாண்டியன் (1254-1275) தன் பத்தாவதாண்டுச் சாசனத்தில் சோழநாட்டையும் ஈழத்தையும் சாவகனின் மகுடந்தரித்த சிரத்தோடு அவன் மகுடத்தையுங் கைக்கொண்டருளினன் எனக் கூறியது இச்சாவகவீரனையேயோ? சந்திரபானுவின் கதி? எவ்வாறாயினும் அவன் சேனைவெள்ளத்துட்சிறிது யாழ்ப்பாணத்துச் சாவகச்சேரியிலும் சாவகக்கோட்டை (சாவாங்கோட்டையா?) யிலும் தங்கிவிட்டமை அறியத்தக்கது. வைபவமாலையுடையார் இவ் யாவுகரைச் சுட்டி.
முன்னாண்ட விசயவாகுவின்கீழ்ப் போர்ச்சேவகராயிருந்த யாவகச்சேனையிலே கொலைக்குந் தண்டனைக்குந் தப்பியிருந்த சிலபெயர் யாவுகக்குடிகள் சாவாங் கோட்டையிலும் சாவகச்சேரியிலுமிருந்தார்கள். சங்கிலி இவர்களையுந் துரத்திவிட்டான்.
* அடிக்குறிப்பு 13ஐ நோக்குக.
12. கி.பி. 1247 ல் நிகழ்ந்தேறிய சம்பவத்தை மீண்டும் ஞானப்பிரகாசர் நினைவு கூருகிறார். காலிங்க ஆரியச்சக்கரவர்த்தியின் பின்னர் அவன் மகன் குலசேகர சிங்கையாரியன் அரச கட்டவேறுமுன் சந்திரபானு என்ற ஒரு சாவகமன்னன் யாழ்ப்பாணத்தை ஆண்டுள்ளான். 2ம் பராக்கிரமபாகுவால் துரத்தியடிக்கப்பட்ட சந்திரபானு, யாழ்ப்பாணவரசைக் கைப்பற்றி ஆண்டானென்பது நவீன வரலாற்றாசிரியர்கள் கருத்து.
47

Page 26
யாழ்ப்பாண வைபவ விமர்சனம் என்கின்றது. ஆயின், சிங்கள வேற்றரசு காலத்துக்கு முற்பட்டதாகிய ”கடயிம்பொத்த’ எனும் சிங்கள ஊரெல்லை நூலில் சாவகச்சேரி காணப்படு கின்றது. செண்பகப்பெருமாள் யாழ்ப்பாணத்தை வெற்றிகொண்ட நாளில் அவற்கு அனுப்பப்பட்ட குயிற்றுாதாகிய ”கோகிலசந்தெசய” நூலில் சாவகக்கோட்டை யும் விளங்குகின்றது. ஆதலால் இவையிரண்டு இடப்பெயர்களுக்கும் காரணமான யாவகக் குடியேற்றம் சிங்கள வேற்றரசுக்காலத்துக்கு முற்பட்டதேயாமெனவும் சந்திரபானுவின் காலத்தோடுதான் நன்றாய்ப் பொருந்துவதாமெனவும் முடிக்க.
14. செயவீரசிங்கையாரியன் (செகராசசேகரன் 5)
இராசமுறையிற் சயவீரசிங்கையாரியன் (9) எனத் தோன்றுகின்ற இவன் பராக்கிரமச்செயல்களுள், வடக்கரைப்பொருதுவென்றமை காணப்படுகின்றது. வடக்கரென்போர் தெலுகு போர்வீரர்கள். விசயநகர் இராச்சியத்தின் படையெழுச்சிகளோடு சம்பந்தப்பட்ட அஞ்சாநெஞ்ச மறவர்கள். இக்கொற்றமிகு வடக்கரை இட்டுக்கொண்டு யாழ்ப்பாண இராச்சியத்திற் புகுவான் கச்சாய்த் துறையினில் இறங்கினோன் யாரென்பது புலப்படவில்லை. செகராசசேகரன் அன்னோன்படை, நாட்டுள் நுழைந்து விசயகெம்பீரமாய் விரைந்துவந்ததனை முதுகிடச்செய்து கச்சாய்வரை துரத்தித்தன் வெங்கண்டவாளான் வென்று தென் றிசைக்குச் செலவிடுத்த செய்திமட்டுமே கேட்கப்படுகின்றது. அருங்கலைவிநோத னாகும் இம்மன்னவனால் ஆதரிக்கப்பெற்ற வைத்தியநூலோனொருவன் தன் அங்காதிபாத அறிவுதிருந்த இது சமயமெனவுன்னி கச்சாய்ப் போர்க்களத்தில் மடிந்துவீழ்ந் துருண்டுகிடந்த பிரேதங்களுட் சிலவற்றைக்கீறி மானிட உள்ளுறுப்புகளின் விபரங்களை அளந்து பரீட்சிப் போனாயினான். அவ்வைத்தி யன் இவ்வரசர் பெருமானின் பெயர்புனைந்து தான் இயற்றிய செகராசசேகர வைத்திய நூலில் அங்காதிபாதப் பிரிவினுள் இதனைக் கூறியுள்ளான். அக்கூற்றுப் பின்வருவது.
இயம்பியடீதோலுமூணு மென்புநாடிகளுமற்று செயம்பெறுசிங்கைநாடான் செகராசசேகரன்றான் வயஞ்செறிவடக்கராகம் உருட்டியகளத்தின்மீது அயஞ்சிறிதுளதீர அளந்துகண்டறிந்ததாமே என்பது. செகராசசேகர வைத்திய நூலின் ஆக்கியோன் பெயர் தெரியவில்லை. அந்நூல் முழுமையாகக் கிடைத்தபாடுமில்லை. அகப்பட்ட சிற்சில பாகங்களைப் பழந்தமிழ் நூலபிமானமும் ஆயுள்வேத முறையை ஆராய்ந்து மெச்சும் அருந் திறனோடு அதனை முன்னேற்றமடைவிக்கமுயலும் ஊக்கமும் ஒருங்கமையப் பெற்ற 'சன்மார்க்கபோதினி ப்பத்திராதிபர் தேடியெடுத்துப் பிரத்தியுபகாரங்கருதாது அச்சிட்டு உலகிற்கு உபகரித்துள்ளார்.
48

யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
வெங்கண்டவாளை ஒச்சிய இவ்வரசன் தண்ணளியும் பெரியதேயென்பது மாறன் தன்னைக் குறையிரந்துவழுத்த அவற்கு மதக்கலுழிக்கிளையானையும் செம்பொன்னும் வழங்கியமையினால் விளங்குகின்றது. (9 ஆவது செய்யுள்) பாண்டியர்களது மதுரை அந்நாளில் கம்பன்ன உடையாரின் கீழ் விசயநகள் இராச்சியத்திற்குரிமையாகிவிட்டது. இவற்கு முன் அரசாண்ட பாண்டியனே செங்கோலிழந்து செகராசசேகரனின் தயவினைப்பெற வந்தவனாகலாம். அன்னோனைத்துரந்து இங்கு நுழைந்தோரே எம்மன்னனால் தென்புலஞ்செலுத் துற்ற வடக்கருமாகலாம். பிறஏதுக்கள் கிடைக்கும் வரையும் இவற்றைச்சுட்டி மேலொன்றும் விளம்ப அறியோம்.
தேமாலைபுனை எமத்தையர்கோன்றனக்குப் பாய்மாவும் நிதிக்குலமும் பட்டமும் நீடரசுரிமைப்பதியும் அளித்த தண்ணளிச்செயலொன்று செகராசசேகர மாலை 9 ஆம் விருத்தக் கடைப்பாதியிற் கேட்கப்படுகின்றது. தனக்கு முந்தனோன் 4ஆம் பரராசசேகரன் புசபலத்தால் அடக்கித்திறைகொண்ட வன்னியர்கள் இனிக் கர்வமின்றி ஒழுகினோருள் ஒருவற்குக் குதிரையாதிய விருதும் நீடரசுரிமையும் அளித்தனன் இச்செகராசசேகரன். அவ்வன்னியனின்பதி ஏமத்தையாயிற்று. ஏமத்தை தற்காலத்தில் ஓமந்தை என்னப்படுவது. வவனியாவுக்கு வடக்கே மூன்று நாலு மைல் தூரத்திலுள்ளது. பழைய வன்னிய குடும்பங்களோடு சம்பந்தங்கொண்ட யாழ்ப்பாணத்துத் தமிழ்ப்பிரபுவாகும் கோப்பாய் பூரீ நாகநாதமுதலியார் எமக்கறிவித்தபடி, யாழ்ப்பாண வன்னியர்குலதிலகர்கட்கு ஏமத்தையில் வெகுநிலங்கள் தற்காலம்வரையிற் பிதிரார்ச்சிதமாய்க் கிடைத்துவருகின்றன. ஓர்காலம் இங்கு பிரசித்திபெற்ற வன்னியனொருவன் விளங்கினானென்பதுவும் கர்ண பரம்பரை. எங்காலத்து ஓமந்தைப் பிள்ளையார் கோயில் ஒன்றே பூர்வகால ஏமத்தையர்கோனையும் அவற்கு அரசுரிமையளித்த கொடைவள்ளளையும் ஞாபகப்படுத்தும் தனிச்சின்னமாய் நிலைபெறுகின்றது.
15. தென்னிலங்கை அரசைத் திறைகொண்டமை
கம்பளையில் அரசிருக்கையமைத்து ஆண்ட சிங்கள அரசனான 5ஆம் புவனேகவாகுவின் காலம் நம் செகராசசேகரனின் காலத்தோடு பொருந்துகின்றது. அவனோடுதான் இவன் முத்துச்சிலாபத்தைக் குறித்து போர்முனைந்து இலங்கையின் தென்பாகங்கட்குப் படையெடுத்துச்சென்று யுத்தஞ்செய்து வெற்றி கொண்டு இலங்கைமுழுவதும் ஒரு குடைக்கீழ் அரசாண்டான் போலும், சிங்களச் சரித்திரம் இத்தமிழ் வெற்றியைக் குறித்துவையாவிடினும் அச்சரித்திரத்தினுள் ளேயே எடுத்தாளப்பட்ட வேறு சம்பவங்களால் இதனுண்மை ஒருவாறு நாட்டப் படும். சிங்கையாரிய அரசர்கள் வேறெவராயினும் சாசனங்களிற் றம்செய்தியைப் பொறித்துவிட்டுப்போகாதொழிய, இச்செகராசசேகரனின் சாசனமொன்றுமட்டும்
49

Page 27
யாழ்ப்பாண வைபவ விமர்சனம் எங்கைக்கெட்டியிருப்பதுபோற்றோன்றும். அது கேகாலைப் பிரிவிலுள்ள கொத்தகம எனும் குறிச்சியின் விகாரரையில் கண்டெடுத்ததோர் கற்சாசனம். 5 அடி7 அங்குலம், 2 அடி 8 அங்குலம் நீள அகலமும் 7 அங்குலத் தடிப்புமுள்ள ஓர் கற்பலகையில் வெட்டப்பட்ட வெண்பா. அது பின்வருவது:
செது கங்கணமவெறகணணிணையாறகாடடினா காமாவகைபபங்கயககைமெறதிலதமபாரிததாா பொங்கொலிநீரசிங்கைநகராரியனைசசெரா வனரெசாதங்களமடமாதாதாம
Arch. of Ceyl. XIX p. 72.
அலைமோதுகின்ற ஆழியருகே அமையப்பெற்ற சிங்கைநகராளும் ஆரியச் சக்கரவர்த்தியின் பக்கலைச் சென்றடையாத அனுரோசா (அநுராசர் = சிற்றறசர்) எல்லாம் அவன் பொருகளத்து மடிந்தமையால் அன்னோர் மங்கையர்கள் வேல்போன்றும் தம்மிருகண்களால் அருவிபொழிய, கையில் மாண்டோரின் அர்ப்பணத்துக்காகத் திலோதகம் கொண்டு சென்றார் என்பது இக்கல்வெட்டின் அர்த்தம். சிற்றரசர்கள் என்றது, குருநாகல், கம்பளை, ஜயவர்த்தனகோட்டை எனும் தலைநகரையாண்டோதை ஒழித்தொழிந்த பிறரைப்போலும். அன்னோரும் வன்னியரும் செகராசசேகரனுக்குத் திறையரசர்களாயினார். இச்சாசனத்தின் தலைப்பில் “சேது” எனும் மங்கல மொழியிருத்தல் கவனிக்கத்தக்கது. விடைக்கொடியும் சேதுவும்' கங்கைநாடராகும் யாழ்ப்பாணத்தரசர்களது விருதாகையால், தங்கள் சாசனங்களின் தலைப்பில் சேதுவை விடைச்சின்னத்தை இட்டுவந்தனர் என்பது தோன்றும். இன்னோரது முத்திரைக்காசில் சேது தனித்தும் goLugGogT(B (385gJLb 6(bg6b Jägögb. (ehk: Ceyl. Antiq.V. p. 172-9 go6b பதிப்பித்த சேதுகாசுப் படங்களைக் காண்க.)
16. குணவீரசிங்கையாரியன் (பரராசசேகரன்)
ஐந்தாம் செகராசசேகரற்குப்பின் சிங்காசனம் வகித்த பரராசசேகரன் நம் அரசராவலியில் பத்தமிடத்தவனாகும் குணவீரசிங்கையாரியன்போலும். இவன் மதுரையை அரசாண்ட நாயக்கருக்குஞ் சில பேருதவி செய்தான் என வைபவமாலை கூறியது மிக மங்குளமானதோர் சம்பவம். ஆயின் கண்டியரசர் கொடுத்த திறையைக் கொடாததினால் சிலபகுதியிற் தமிழ்க்குடிகளையிருத்தித் தன்னரசாட்சியாக்கினானென்பதிற் சரித்திர அமிசமொன்று தொனிக்கின்றது.
மகா செகராசசேகரனெனக் குறியீடுசெய்தற்கருகனாய் விளங்கிய ஐந்தாம் செகராசசேகரன் சிங்களவரைப் பெரிதும் வலியிழந்து வாடச்செய்திட்டான்.
50

யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
புவனேகவாகு மிக ஒடுங்கித் திறையளந்துகொண்டு கம்பளையில் இராசரிக்கம் செய்தனன். ஆரியச்சக்கரவர்த்தி மற்ற அரசர்களைக் காட்டிலும் சேனாபலத்தாலும் செல்வத்தாலும் சிறந்தவனாய், தனக்கு மலைநாடு கீழ்நாடுகளினின்றும், நவத் துறைமுகங்களினின்றும் திறைகொணர்ந்து செலுத்தப்பண்ணிக்கொண்டிருந்தான். (Rajav.p. 66) இதற்கிடையில் நிசங்க அளகைக்கோனார, அன்றேல் அளகேஸ்வரய எனப் பெயர்புனைந்த மகாமந்திரி சிங்களரின் அபசெய நிலையை நீக்கும் ஆபத்சகாயனாய்த் தோன்றினான். சிங்கள முடிபுகொடுத்து ஒதப்பட்ட இவன் பெயர்கள் அளகைக்கோனார், அளகேஸ்வரன் எனும் தமிழ்ப் பெயர்களே. அவன் தானும் காஞ்சிபுரத்தினின்றும்போந்து ஐந்தாம் பராக்கிரமவாகுவின் காலத்தே இலங்கையை அடைந்து அரசசன்மானத்தோடு இத்தீவில் றாயிகமம் என்னும் கிராமத்தை மானியமாயடைந்துகொண்ட மலயமான்வம்சத் தமிழ்க் குடும்பத்தோன்றல். தமிழ் மலயமான்குடி சமஸ்கிருத ரீதிப்படி சிங்களத்தில் கிரிவம்சம் எனப்பட்டது. நாம் சுட்டிப்பேசுகின்ற ஐந்தாம் புவனேகவாகுவின்முன் அரசுசெய்த மூன்றாம் விக்கிரமவாகுவின் காலத்திலெல்லாம் அவன்கீழ் பிரபுராசா வெனும் பதவியிலமர்ந்துகொண்டவன். (C.R.AS.XVIp283) புசவலி சிறிதுமில்லாப் புவனேகவாகு கம்பளையில் பதுமைபோல் அரசகட்டிலில் வீற்றிருக்க அளகேஸ்வரனே இராச்சியத்தினைப் புரந்து நம் ஆரியச்சக்கரவர்த்தியின் மேலாட்சியென்னும் நுகத்தைக் கழற்றியெறிந்துவிடப் பிரயசிப்போனானினான். அளகேஸ்வரன் ஜயவர்த்தனகோட்டையை நிருமானித்தமையை நிகாய சங்கிரக எனும் சககாலத்துநூல் பின்வருமாறு பிரதாபிக்கின்றது.
அளகேஸ்வரன் தன் சேனையிலமர்ந்துள்ள பிரமாணிக்கமான மண்டலீகர்கள் மூலமாய்க் கட்டளைவிடுத்துக் கொழும்பு எனும் துறைமுகத்துக்கணிமையில் ஓர் தடாகத்தின் மத்தியிலே குன்றாத சலதாரை பொருந்தியதோர் நதியினால் எப்புறமும் சூழப்பட்டதாய் விளங்கிய தறுகிராமம் எனும் ஊரை முற்றிப் பயங்கர மான காட்சியுள்ளதும் மிக அகன்றுதாழ்ந்ததுமான அகழினை வெட்டுவித்து, அவ்வகழியினடி தொடக்கம் சுவரின் கோப்பியபரியந்தம் மிக உறுதியாய்க் கல்லினாலமைந்த மதிலெடுப்பித்து, அம்மகாமதிலின் உச்சியில் பொருந்திய இடைவெளிகளில் விஸ்வகர்மாவின் சிருஷ்டியே போன்ற விவிதசூழ்ச்சியோடுகூடிய அலங்காரங்களையும் புரிவித்தான். இவ்வாறே அவன் புகழ்சிறந்த அபிநவ ஜயவர்த்தனகோட்டையை நிருமாணித்து இடங்கினி, பலிமுகம், பூமியந்தட்டு, அட்டாளை, வட்டவோட்டமெனும் அங்கங்களை ஆங்காங்கு சமைப்பித்து அரண் படுத்தினான். பின்னும் நகரின் நாற்புறத்திலும் காவல் அயரும்பொருட்டு இலங்கை யின் திக்குப்பாலகராகும் அரச தெய்வங்களான கியிரி (மரநீலவண்ணன், விட்டுணு) கற்சிகரலட்சுமணன், விபீஷணன், கந்தகுமாரன் என்போருக்கு அந்நகர மகாமதிலுச்சியில் தனித்தனி ஒவ்வோர் ஆலயமியற்றி, அவ்வாலய வழிபாடுகளும் விழாக்களும் மேளம், குழல், நடனம், கானம் என்றற்றொடக்கமான சகல நாதகிதங்களோடும் இடையறாது நடைபெறவேண்டு மென்றாக்கியாபித்தனன்.
51

Page 28
யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
நகரைப் பலவளங்களாலுஞ் சிறப்பித்ததற்பின் தொகையிறந்த குடிகளை
Đg5606ńcb35f960TT6öI. (Nikaya Sangraha p. 26)
இவ்வாறு அளகேஸ்வரனால் அரண் செய்யப்பட்டபோதிலும் கோட்டை அவனால் புதிதாய் ஆரம்பிக்கப்பட்டதன்று. அவன் காலத்துக்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்னரேயும் ஓர் நகரியாய் விளங்கிய தென்பது தெமறிஞோலி எனும் கத்தோலிக்க குருசிரேஷ்டரொருவர் 1348 ம் ஆண்டளவில் கோட்டையைத் தரிசித்து எழுதிவைத்த குறிப்புக்களாலும் தோன்றும். அளகேஸ்வரனின் யுத்தசன்னத்தங்களால் இறுமாந்துபோலும் ஆரியச்சக்கரவர்த்தியின் மேலரசுக் குள்ளமைந்த சிங்கள நாடுகள் திறையிறுக்க மறுக்கத்தொடங்கின. பரராசசேகரன் அந்நாடுகளுட் படையெடுத்துச்சென்று ஏழு சிங்களத்துறைமுகங்களை அடிமைப் படுத்தி முன்னிலும் அதிகமான வரிகளைச் சிங்களர்தலைமேற்சுமத்தித் திரும்பினான். (ValentynV,p.71) அளகேஸ்வரன் இவ்வவதாரத்தில் யாழ்ப்பாண அரசனுக்கு ஈடுசொல்ல இயலாது, தன் பிறந்தகமாகும் றாயிகமத்தையடைந்து அதனையுமோர் அரண்கொண்ட பட்டினமாகக் கட்டியெழுப்பிக் கொண்டிருந்தான்.
17. தமிழ்ப்படையெழுச்சியின் கதி
அளகேஸ்வரன் இருபது வருடம் வரையில் ஆயத்தஞ்செய்து, ஈற்றில் சேனைகளைத் திரட்டிப்பார்த்து இனி நாம் யாழ்ப்பாணத்தின்கீழ்த் திறைகொடுத் தாளுவது யுக்தமல்லவெனத் துணிந்து, ஆரியச்சக்கரவர்த்தி ஆங்காங்கு நியமித்திருந்த வரியறவிடுவோரைப் பிடித்துத் தூக்கிக்கொன்றான். இச்சமாச்சாரம் பரராசசேகரன் செவிக்கெட்டுதலும் இவன் அடியுண்ட அரசநாகம்போல்ச்சீறி 100000 பேர் கொண்டதோர் மகாசேனையைச் சோழதேசத்தினின்றும் வரித்துத் தன்யுத்தவீரர்களையுஞ் சேர்த்துக் கம்பளையையும் ஜயவர்த்தனகோட்டையையும் ஒரே சமயத்திற் தாக்குவான். இரண்டு தனிப்படைகளை அணிவகுத்து ஒன்றைக் கரைமார்க்கமாயும் மற்றதனைக் கடல் மார்க்கமாயும் அனுப்பினான். கரைப்படை கம்பளையைச்சருவுமாறு மாத்தளையையடைந்தது. அச்சமாச்சாரத்தைச் செவிமடுத்த புவனேகவாகு தமிழச் சேனாவெள்ளத்துக்கஞ்சி நடுங்கி முதுகிட்டு றாயிகமத்துக்கோடி ஒதுங்கினான். தம்மரசன் மீசைமுளையாத பேடிபோற் பதுங்கி யோடிவிட்டதனைக்கண்ட கம்பளை யிராச்சியத்தின் பஞ்சமாகாணத்தாரும் ஆபத்திற்பிறக்கும் அருந்தைரியம் பூண்டோராய்த் திரண்டெழுந்து, அந்தரங்க மாய்ச் சென்று, நள்ளிருள் இராவின்கண் திடீரெனத் தமிழ்ப்பாளையத்தின்மேற் பாய்ந்தனர். அகஸ்மாத்தாய்நேர்ந்த தாக்குதலுக்கு வகைசொல்லவியலாமல் தமிழ்ப்படைகள் அல்லோலகல்லேலமாய் அங்குமிங்குமோட எத்தனித்தவிடத்துச் சிங்களர் திரளானோரைத்துரந்து பிடித்து ஈட்டிகளாற் குத்தி எமலோகம் போக்கினர். தப்பியோடினோருள்ளும் பலர் மலைப்பிரதேசங்களில் அலைந் துலைந்து மாண்டனர். (Valentyn சுட்டியவிடம்)
52

யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
தலைநகரைக் கைப்பற்றுவான் சென்ற கரைப்படை இவ்வாறு முறியுண்டு வருந்த, கோட்டையை எதிர்க்கப்புறம்போந்த கடற்படை கொளும்பிலும்பாணந்துறை யிலும் இருபிரிவாய்யிறங்கித் தெமட்டகொடையில் கொறக்கனையெனுமிடத்தில் பாளையமிட்டது. சேனைகள் இங்கிருந்து பாணந்துறைவரையும் நிறுத்தப்பட் டிருந்தன. (Rajawp67) இவ்வெள்ளையுளன்றிவத்தளை, நீர்கொளும்பு, சிலாபமெனு மிடங்களிலும் யாழ்ப்பாணச்சேனைகள் நிறுத்தப்பட்டனவாக நிகாய சங்கிரகம் கூறும். (p. 27) வீரரெல்லாம் 'பன்னிறக்கவசம்பூண்டு ஆயுதபாணிகளாய் விசப்பெலவி, நடசால, மறாசி எனும் படைத்துணைகளோடு பொருந்தி நின்றனர் என அந்நூல் நுவலும். (விசப்பெலவி, விஷப்படலையும், நடசாலை நாடக சாலையுமேயோ?)
அளகேஸ்வரன் ஆரியச்சக்கரவர்த்தியின் வலிகெடச்செய்வதற்கு நல்லமயம் பார்த்துக்கொண்டு ஜயவர்த்தனகோட்டை மதில்களின் மறைவில் தன்சிங்கள ரோடும் கூலிக்கமைத்த தமிழ்ப்படைகளோடு மிருந்தவன் யானையிலிவர்ந்து சடிதியிற்புறப்பட்டுத் தெமட்டக்கொடைக்கு விரைந்துபோய், ஐயாயிரம் வரையிற் கொண்ட தமிழ்ச்சேனையை எதிர்த்து முதுகிடச்செய்திட்டான். ஓடியவர்கள் தம் நாட்டுக்கு மீளாவண்ணம் அன்னோரின் மரக்கலங்கள் கொளும்புத்துறை முகத்தில் நின்றவைகளை அழித்துவிட்டபின்னர், பாணந்துறைக்கும் புகைப்போலச் சென்று சக்கரவர்த்தியின் உபபலங்களைச் சின்னாபின்னமாக்கிக் கப்பல்களையுந் தகர்த் தெறிந்துவிட்டான். (Valentyn) இவ்வாறே அளகேஸ்வரன் செயபேரிகை முழங்கித் தீபாதிராஜா எனும் பட்டஞ்சூட்டப்பெற்றுத்திகழ, பரராசசேகரன் புகழிழந்து வலியிழந்து தன் இராச்சியத்தினுள் ஒடுங்கி அடங்கவேண்டியவனாயினான்.
அளகேஸ்வரன் கையிற் தோல்வியடைந்த பின்பே பரராசசேகரன் இராமேசுரக் கோயிலின் கர்ப்பக்கிரகங்களில் வேலை செய்வித்தனன்போலும். இக்கட்டடங்கள் திருகோணமலையில் வெட்டியெடுத்த கருங்கற்கள்கொண்டு பரராசசேகரனால் சகவருஷம் 1336இல் சமைக்கப்பட்டனஎன்னுஞ் சாரமமைந்த கல்வெட்டுகள் அவற்றுள் ஒருகாலங்காணப்பட்டன. சகவருஷம் 1336 கிறிஸ்தாப்தம் 1414 க்குச் சரியாகும். ஆயின் 1886ம் ஆண்டில் இராமநாதபுரச் சேதுபதிக்கும் கோயிற் பிராமணர் களுக்குமிடையில் வியாச்சியம் நடந்தபோது ஓர் கட்சிக்காரரால் குறித்த கல்வெட்டுக்கள் அழிக்கவும் மாற்றவும் பட்டொழிந்தன. (Indian Antiq.XIp.315)
18. செண்பகப்பெருமாள் 1450-1467
கோட்டையில் அளகேஸ்வரன் சிலகாலஞ் சிங்கள நாட்டுச் சர்வபெளமிய அரசனேபோன்று இராசரிக்கஞ் செய்துவந்தனன். அவன்பின்னர் பூரீ சங்கபோ எனும் ஆறாம் பராக்கிரமவாகு கோட்டையிலேதான் அரசனாயினான். இது 1415ம் ஆண்டளவிலாம். பராக்கிரமவாகுதானும் தாயான மலயமானவIசச்
53

Page 29
யாழ்ப்பாண வைபவ விமர்சனம் சுநேத்திராதேவி வழியாய் அளகேஸ்வரனின் ஞாதியும் தமிழ்க்கலப்புள்ளவனுமே யாம். இத்தமிழ்க் கலப்பை இனி ஒழிக்கும்பொருட்டுப்போலும் தான் பெலிக்கல்கோறளையிலுள்ள கீறிவல்ல என்னும் கிராமத்தில் வசித்த ஓர் சிங்கள அரசகுமாரியைக் கைப்பிடித்துக்கொண்டனன். இவளால் உலகுடைய தேவி எனும் பெண் மகவுமட்டும் உற்பவித்தது. உலகுடையதேவி சொல்கராயன் என்போனை மணந்து ஜயவீரன் எனும் குமாரனைப் பெற்றனள்.
பராக்கிரமவாகு தன் செங்கோலை ஒச்சும்படியான பெளத்திரன் பிறக்கு முன்னரே பின்னும் தமிழ்க்குலக் கலப்புள்ள இருகுமாரர்களைத் தனக்குச் சுவிகாரமக்களாக்கிக்கொண்டான். அதெவ்வாறெனில் வடக்கரையினின்று (from the hills of Malbar and from a place called Tulunar' Queiros p. 37) 6pbg, Lu60iids E66 ஒருவனை அரசன் உபசரித்து அவனது உயர்வமிசத்தையும் சாதுரிய சவுரியங் களையும் நோக்கிக் குலவதியாக ஓர் கன்னிகைக்கு அவனை மணம்முடிப்பித் திட்டான். இவ்வதுவையினாற் செம்பகப்பெருமாள் (சப்புமல்குமாரய) சயவீரன் (சிறிகுடாகுமாரய) எனும் இருவர் மக்கள் பிறந்தார். பேரனொருவன் பிறக்குமுன் இவ்விருவரும் பராக்கிரமவாகுக்குப் பிள்ளைகள்போலானார்கள். இத்தத்தயுத்திர ரிருவரும் இராச்சியவாஞ்சையுள்ளோராகி பெளத்திரனின் சீவனுக்கும் கெடுதி சூழுவதைக்கண்ட அரசன், இருவரையும் ஒவ்வோர் பணிவிடைமேற்செலுத்துவான் கருதி, மூத்தவனை யாழ்ப்பாண ராச்சியத்தைச் செயித்துவருமாறு வடபாகத்துக்கும், இளையவனை ‘கந்தவுட பஸ்றட்ட’ எனும் கண்டியிராச்சியத்தில் சுயவரசுவகிக் கத் துணிந்த ஜோதியசித்துராசன் என்பவனைப் புறங்கண்டுவரவும் அனுப்பினான்.
19. சிங்களர் படையெழுச்சி
செண்பகப்பெருமாள் பிரபலம்பெற்ற குதிரை வீரன். உருவத்தால் இராட்சதனைப்போலும் காத்திரமுடையவன். மகாபலங்கொண்டவன் (Couto in RAS 1 XXp 69) ஆயினும் யாழ்ப்பாணத்தையாண்ட கனகசூரிய சிங்கை யாரியன் எனும் ஆறாம் செகராசசேகரன் பாதி நூற்றாண்டுக்குமுன் ஓர் ஆரியச் சக்கரவர்த்தி இலங்கை முழுதினையும் தனிக்குடைக்கீழாண்டதை மறவாமல், தன் ஆணவத்தை நிலைநாட்டி இராச்சிய எல்லைகளிற் போர் தொடுத்ததனால், படையெடுத்துவந்த செண்பகப்பெருமாள் முன்னேறமாட்டாது பிராந்தக் கிராமங்களிற் கைக்கொண்ட கைதிகளோடு கோட்டைக்கு மீண்டான். போரிற் பிடித்த சிறைகளைக்கண்ட மாத்திரத்தில் இது சிங்கள அரசரின் வெற்றிச் சின்னமாமெனப் பிரசைகள் அக்களித்தபோதிலும் பராக்கிரமவாகு திருப்தி யடைந்தானில்லை. ஆதலால் விரைவில் மீண்டும் சிங்கள சேனாவெள்ளம் செண்பகப்பெருமாளையே நாயகமாகக்கொண்டு யாழ்ப்பாணத்தை நோக்கிப் பிரவாகிக்கத்தொடங்கிற்று.
54

யாழபபாண வைபவ விமர்சனம்,
சிங்களப்படை யாழ்ப்பாண ராச்சியத்தின் கடையெல்லைகளிலிருந்த அரண் களை ஒவ்வொன்றாய்க் கவர்ந்துகொண்டது. அது கரைபுரண்டு இராசதானியின் மேல் எழுந்துவருவதையறிந்த செகராசசேகரன் ‘தன் இராசபிருத்தியர்களுள் ?([b660TT60T Conta Cara Demalis 6T6õTLu660d60Tuquib î6ör Panigevorum 6T6öIGODjib ஒருவனையும் அவன்பின் Valamunivorussa என்பவனையும் போக்கி சப்பு குமாரனைத் தடுக்க எத்தனித்தான். இவன் அம்மூவரையும் சிறிதுநேரத்துட் கொன்று தன் பச்சைப்பிடர்மயிர் பொருந்திய நீலத்துரங்கத்திலிவர்ந்து பட்டிணத்தை முற்றிக்கையிடச் செல்லுந்தீர்மானத்தைக் காட்டினான். இவன் முன்னேறிவருவதைக்கண்டு சஞ்சலங்கொண்ட அரசன், Varacara எனும் வீரசூர மாவுத்தனை எதிர்போக்க, இவன் சிங்கள சேனாநாயகத்தைச் சின்னாபின்னமாய்த் துணிப்பேனென வீரங்கூறிப் போயினவனை அவன் வீரர் அவனை அணுகுமுன்னரே குத்திவீழ்த்திவிட்டனர். இவ்வளவும் வலன்றயின் எனும் ஒல்லாந்த சரிதாசிரியன் எடுத்தோதும் பழைய ராஜாவலிய நூலின்பாகம்.
இவ்வரலாற்றில் கூறப்படும் ஒல்லாந்தத்திலிட்ட நாமங்கள் தமிழ்ச்சேனாதி பதிகளின் பெயரோ அன்றிச் சேனைகளில் பெயரோ அறியோம். ராஜாவலியின் வேறொரு பிரதியில் Varacara என்பது வடக்கற என்றிருக்கிறது. (Pieris, Port. Eral) இது வடக்கராகலாம். இன்னுமொன்றில் தொசரசேனையென்றிருக்கிறது. (Gunasekara's Trans) இது வீரர்படைபோலும். அவ்வாறாயின் முன் செகராச சேகரனை போக்கியவையும் ஒவ்வோர் சேனையாகலாம். முந்தியது பண்டைக்காரத் தமிழர்போலும். பிந்திய இரண்டும் விளங்காதவையாகின்றன.
20. செகராசசேகரன் தோற்றோடல்
செண்பகப்பெருமாள் யாப்பா பட்டினத்துள் நுழைந்து அதன் வீதிகளை இரத்தவெள்ளமோடும் ஆறுகளாக்கினான் அரசனும் குடும்பமும் ஒளித்தோடிவிட, பலபிரதானிகளைச் சிறைசெய்து வெற்றிவாகைசூடித் திகழ்ந்தான். வெற்றியாளன் கைதிகளையுங்கொண்டு பராக்கிரமவாகுவின் சமூகஞ்சென்றானென்றும், இவன் AriattetOe Addum PrauWmal 6T69)JLb g96)J6öT LD([5LD35G160TIT([56)I60)60T uuITypüLI[T600T அரசனாக்கினானென்றும் வலன்றயின் கூறுவது தவறுபோலவும், செண்பகப் பெருமாள்தான் ஆரிய வேட்டை ஆடும் பெருமாள் எனும் பெயர்தாங்கி யாழ்ப்பாண அரசனானான் என்பதே உண்மையெனவுந்தோன்றுகிறது.
ஆரியச்சக்கரவர்த்தி இவ்வமரில் கொல்லப்பட்டானென கஜாவலி கூறுதல் பொருந்தாது. இந்நூல் தற்காலத்தது. ஆயின், சுட்டிய நிகழ்ச்சிகள் நிறைவேறிய காலத்திலேயே எழுதுற்றலாகிய ஓர் சிங்கள நூலால் ஆரியச்சக்கரவர்த்தி ஒளித்தோடியதை நன்றாக நிச்சயிக்கப்படுகின்றது. அந்தநூல் செண்பகப்பெருமாள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியதைக் கேட்டுச் சிங்களர் ஆனந்தநிருத்தமாடிய
55

Page 30
யாழ்ப்பாண வைபவ விமர்சனம் காலத்தில் இயற்றப்பட்டது. அதனைச் செண்பகப்பெருமாளுக்கே தேவேந்திர நகரிலிருந்துவந்த ஒரு தூதாக “கோகிலசந்தேசய’ எனப் பெயர்கொடுத்து அந்நகரத்து ‘இறுகல்குலபிரவேணி” இன் அதிபன் பாடினான். அதில்
உன் ஆறிய ஸகவதி றஜ தய்ஹய் துரட்ட தய்ன் வய்ஜம்பென யாப்பா பட்டுன திறகொட்ட நன் ஸிறியுத ஸப்புமல் றஜ குமரிந்துட்ட தென் மெஹஸின் கெனகொஸ் மிமித்துற ஸத்துட்ட (9)
அதாவது, ஆரியச்சக்கரவர்த்தியைத் துரத்திவிட்டு யாப்பாப் பட்டினத்தை (நல்லூரை)த் தன் அரணாக்கிய நாகாசு கீர்த்திபொருந்திய சப்புமல் (செண்பகப் பெருமாள்) சகுமாரேந்திரனுக்கு அக்குயிற்றுாதை அனுப்பியதாகப்பாடியிருக்கின்றது. (கோ.ச.26,322ம் காண்க) ஓடிய ஆரியச்சக்கரவர்த்தியாகும் கனகசூரிய சிங்கை யாரியனைச் சுட்டி வைபவமாலை கூறும் விர்த்தாந்தங்கள் முன்னர் எடுத்தோதப்பட்டன.
21. சிங்கைநகரும் நல்லூரும்
செண்பகப்பெருமாள் கைக்கொண்டு பிரதிராசாவாய் ஆண்டநகர் விசாலித்த தெருக்களும் உப்பரிகை பொருந்திய வீடுகளும், மாளிகைகளும், இராமன் கோயில், ‘புனால’ எனும் அரசதேவதையின் கோயில் முதலியவைகளும் உள்ளதாக குறிக்கப்பட்டுள்ளது. (கோகிலசந்தேசய) தமிழரசர்களின் சேனைகளும் அவன்கீழ்ச் சேவகத்தமர்ந்துகொண்டன.
தெமல மலல தொளுவா ஸிஹல பலய
என்றது (கோகிலசந்) தமிழர், மலையாளர் திடவிரரோடு சிங்களவரும் இவனுக்கு பலமானார் எனக் காட்டும் திடவிர நம்மரசானது மெய்க்காவலராய் விளங்கினா ரென்ப. இனி வைபவமாலை கூறும் ஆண்டுக்குச் சரியாயின் இவன் 17 வருஷம் பிரதிராசாவாக யாழ்ப்பாணத்தை அரசுபுரிந்துவருகையில் 1467ம் ஆண்டளவில் ஜயவர்த்தனகோட்டையில் பராக்கிரமவாகு துஞ்சிவிட, அவனிடத்தில் அவன் தனயன் ஜயவீரன் அரியாசனமேற, இவன் யாழ்ப்பாணத்தைவிட்டுப் படைவீரர் சகிதமாய் ஆங்குச்சென்று அன்னோனைத் தென்புலஞ்சாய்த்து புவனேகவாகு எனும் பெயரோடு கோட்டைராச்சியக் கோமானாயினான்.
செண்பகப்பெருமாளே புவனேகவாகுவாயினமையால் இருபேருடையவனான ஓர் பேரமைச்சன்தான்
நலம்மிகும் யாழ்ப்பாணத்து நகரிகட்டுவித்துநல்லைக் குலவியகந்தவேட்குக் கோயிலும்புரிவித்தானே
56

யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
என்னப்பட்டதுபோலும். செண்பகப்பெருமாள் யாழ்ப்பாணத்தை வெற்றிகொண்ட காலையில் சிங்கைநகரன்று நல்லூரே (யாப்பா பட்டுன) தலைநகராயிற்றென்பது சிங்கள நூல்களால் விகச்சிதமாகின்றது. அளகேஸ்வரன் கையில் ஓர் ஆரியச் சக்கரவர்த்தி அடைந்துகொண்ட தோல்வியின்பின் எமது கப்பற்பலம் அழிந்துவிட்டு உள்நாட்டுப்பட்டினமொன்றே எமக்கு ராசதானியாயிற்றெனத் தோன்றும். செண்பகப்பெருமாளாகும் புவனேகவாகு அவ்விராசதானியை மேலும் திருத்தி கயிலாயநாதர் கோயிலையும் நல்லைக் கந்தவேள் ஆலயத்தையும் ஆக்கு வித்தான் போலும். செண்பகப்பெருமாள் தமிழ்க்குருதி தன்நாளங்களில் ஒடக் கொண்டவனாதலாலும் தமிழுற்பத்தியாளனேயாகிய அளகேஸ்வரன் காலந் தொட்டு ஜயவர்த்தனகோட்டையிலேயும் கந்தக் குமாரனாகிய இந்துதெய்வங் களின் வழிபாடுபயின்று வந்தமையாலும் கோகிலசந்தோசமுடையார் அவனைப் புத்தமத தாபக மன்னனெனப் புகழ்ந்தோதியவிடத்தும் தமிழ்ப்பிரசைகட்கிதமாய்த் தமிழ்த் தெய்வ வழிபாடுகளையே யாழ்ப்பாணத்தில் வளர்த்திருப்பான் என்பதிற் சிறிதுஞ் சந்தேகமின்று. இப்புவனேகவாகு முரீ சங்கபோதி எனவும் அழைக்கப்பட்டான் என்பது முத்துத்தம்பிப்பிள்ளை விசுவநாதசாஸ்திரியார் குறிப்புக்களிற் கண்டதாகக் கூறுவது இவன்தான் நல்லூர்க் கந்தசுவாமி கோயிலின் கட்டியத்தில் இன்றைக்கும்
பூரீமான் மகாராஜாதிராஜ அகண்ட பூமண்டல ப்ரதியதிகந்த விச்றாந்த கீர்த்தி பூரீ கஜவல்லி மகாவல்லி சமேத சுப்ரமண்ய பாதாரவிந்த ஜநாதிரூட சோடச மகாதான சூர்யகுல வம்சோத்பல பூரி சங்கபோதி புவனேகவாகு
என்று வாழ்த்தப்படுகிறான் என்பது இராசநாயகமுதலியார் கருத்து.
22. விஜயவாகு
அங்ங்ணமாயின் ஒட்டெடுத்த கனகசூரிய சிங்கையாரியன் மட்டும் வடகரையி னின்றும் வந்து போராடி வாட்படைக்குப்பலி கொடுத்த விஜயவாகுவெனும் சிங்களவன் யாராதல் கூடும்? இவன் செண்பகப்பெருமாள் கோட்டைச் செங்கோலைக் கவர்ந்துகொள்ள விரைந்து செல்லுகையில் தனதிடமாய் விட்டுப்போன ஓர் சேனைத்தலைவனாகலாம். ஆயின் வைபவமாலையுடையாரின் கூற்றுக்கள் மிகு விமரிசையோடுமட்டும் எடுத்தாளப்படுமென்பது இதுவரையில் எம் பாராயணர்கட்கு மனப்பாடமன்றோ? அப்பால், விஜயவாகுவெனுஞ் சிங்களவன் தானே அரசனெனத் தலைப்பட்டுத் தமிழ்க்குடிகளை ஒதுக்கித் தமிழரை உடை, நடை, பாவனைகளிலும் தங்களைப்போலாகவேணுமென்று பலவந்தம்பண்ணி அதற்கிணங்காதவர்களைத் தண்டித்து பதினேழு வருஷம் அரசாண்டான். வைபவமாலை எடுத்திசைத்ததனைக்கொண்டு யாழ்ப்பாணச் சரித்திராசிரியர் சில்லோர் எம்நாட்டில் சிங்கள ஊர்ப்பெயர்கள் எழுந்தமையும்
57

Page 31
யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
எம்நாட்டில் கண்டுபிடிக்கப்படுகின்ற புத்த ஆலயங்கள் சிலைகள் அமைக்கப் பட்டமையும் அப்பதினேழு வருடங்களுக்குள்ளேயாம் என முன்பின் யோசியாது கூறிப்போந்தார். ஊர்ப்பெயர்கள்தான் சில நவமாய் எழுந்திருப்பினும், நாடெல்லா முள்ள காணிப்பெயர்கள் முன்னிருந்தவை அடியோடு மாறிப் பதினேழுவருடங் களுட் சிங்களப் பெயராகிவிட்ட புதுமையை யாரோ நம்புவர்? வெற்றியாளர்கள் தம் இராசதானியாகிய சிற்சில ஊர்ப்பெயர்களை மாற்றித் தரிப்பது ஆங்காங்கு கேட்கப்படினும் தேசம் முழுவதிலுமுள்ள இடப்பெயர்களையெல்லாம் மாற்றினா ரென்பது எங்குங்கேட்டப்படாததொன்று. அன்றியும் எம் நாட்டில் பல சிங்களப் பெயர்கள் செண்பகப்பெருமாளின் நாட்கட்கெல்லாம் மிக முற்பட்ட காலத்தாகிய மகாவமிச நூலினுள் வழங்குவனவாகவே அன்னவை பதினைந்தாம் நூற்றாண்டில் ஓர் பதினேழு வருஷம் சிங்கள அரசாட்சிக்குள் உண்டாகிவிட்டன என்னும் அசம்பதம் சமூலமாய் மறுக்கப்படும். யாம் முதலத்திகாரத்தினுட் கூறியனவற்றையும்
BT60055.
முன் எடுத்தோதியாங்கு யாழ்ப்பான வெற்றியால் ‘இந்து’ சமயச்சார்பே உடையவனெனத் தோன்றுகின்றமையால் சைவஆலயங்களையே புதுக்கியும் நவமாய் எடுத்துப்பரிபாலித்திருப்பன் தன்னோடு எம்நாட்டினுட் குடியேறிய சிங்கள ஏவலாளர் ஆதியோரின் பொருட்டுச் சிறுபான்மை புத்த விகாரைகளையும் அமைப்பித்தான் எனின் இழுக்காகாது. ஆயினும் கந்தரோடை, வல்லிபுரம் ஆதிய பழைய நகரிகளில் பெளத்த இடிகரைகள் பதினைந்தாம் நூற்றாண்டனவல்ல. அதற்கு அதிதூர புராதனமுள்ளவைகள் என்பதே பழம்பொருள் ஆராய்ச்சி வல்லோர் துணிபாம்.
23. விஜயநகர மேலாட்சி
செண்பகப்பெருமாளாகும் புவனேகவாகு ஜயவர்த்தன கோட்டை அரசுகட்டிலில் ஏறிக்கொண்ட பின்னும் யாழ்ப்பாணத்தைத் தன்கீழ்த் திறையளக்கும் நாடுகளுள் ஒன்றாக வைத்துக்கொண்டிருந்தனன். அவனைப்பின்தொடர்ந்து கோட்டைக் கடைசி அரசனான தொம்சுவாம் தர்மப்பாலன்வரை பின்னோரெல்லோரது உரித்தாடலும் அவ்வாறே ஆயிற்று. ஆயின் அளகேஸ்வரன் கையில் எம்மரசர்கள் வலியிழந்துநின்ற காலையில் சிங்கள அரசர்க்கன் விஜயநகரரசுக்கே திறையரசர் ஆயினார்களென நம்பவிடமுண்டு. செண்பகப்பெருமாள் செயித்துத்துரத்திவிட்ட 6 ஆம் செகராசசேகரனைச் சந்தேசயநூல் “கன்னடன்’ என அழைத்தமை இதன்பொருட்டேபோலும். மகமதியரின் பலத்தை அடக்குவான் 1336 ம் ஆண்டளவில் எழுந்து 1646 வரையில் சிறப்புற்றுத்திகழ்ந்த இவ்விந்திய தன்னரசு கன்னட அரசகுடும்பத்தினரான ஒய்சள அல்லது வல்லாளமன்னரின் கீழிருந்த ஐந்து சகோதரர் சேனாவீரரால் அடியிடப்பட்டமையினாலோ (VASmith p 301) அன்றி கன்னடதேசமுழுமையும் தன்பெரும் இராச்சியப்பிரிவாகக்கட்டியாண்ட
58

யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
மையினாலோ கன்னடஅரசு’ என அந்நாட் பெயரடைந்திருந்தது. யாழ்ப்பாண வேந்தன் (கனகசூரிய) செகராசசேகரனும் அதனோடு ஐக்கியம் பூண்டிருந்தமை யால் கன்னடப்பெயர் அடைந்தான் என்க. கனகசூரிய சிங்கையாரியன் மதுரையில் உதவிபெற்றது பாண்டியனிடத்தன்று. பாண்டிநாட்டைப் பகுதிபகுதியாய் ஆண்ட சிற்றரசர்கள் இடமாமென் வைபவமாலையுடையோர் வழுத்தியதிற் சிறிது உண்மையிருப்பினும் மதுரையையோ தஞ்சையையோ அந்நாளில் விஜயநகர மேலாட்சியின்கீழ் ஆண்ட நாயக்கன்தான் முதுகுகொடுத்தோடிவருந்திய எம்மரசனுக்குத் துணைபுரிந்தான் என்பதை அறியாதுபோயினர். தஞ்சைநாயக்க னது துணைவியைக் கொண்டு பிற்காலத்து யாழ்ப்பாண அரசர்கள் பறங்கியரை எதிர்த்துச் சமர்புரியலாயினமை மேல்வரும் அதிகாரங்களுட் காணப்படும்.
24. சங்கிலி எனும் ஏழாம் செகராசசேகரன்? 1519 - 1561.
ஏழாம் செகராசசேகரனின் ஆளுகைக்காலத்தைச் சுட்டி போர்த்துக்கேய நூல்களுட் பல வரலாறுகள் கிடைப்பனவாகும். போர்த்துக்கேயர் 1505 ம் ஆண்டளவில் வியாபார நோக்கமாய் இலங்கையினுட் புகுந்து சற்றுச் சற்றாக யாழ்ப்பாண இராச்சியத்தோடும் சம்பந்தம்பூண்டு ஈற்றில் அதைச்செயித்து அப்பிக்கொண்டவர்கள். அன்னோர் நேரிற்கண்டு எழுதி வைத்த பல சம்பவங்கள் உண்மைச்சரித்திரத்துக்கு உபகாரமாகின்றன.
இச்செகராசசேகரனைப்பற்றி ஒல்லாந்த அரசினர் வைத்த வியாபாரமொன்றைக் கொண்டு இவன் சிங்காசனமேறிய காலம் ஒருவாறு நிச்சயிக்கப்படும். அவ்விபரப்படி யாழ்ப்பாணமானது அரசுரிமைகொண்ட பழைய ராசகுடும்பத்தின் தோன்றலான சியங்கெரி என்னுமோர் அஞ்ஞான அரசால் 42 வருஷத்துக்குமேல் ஆளப்பெற்றிருந்தது. பறங்கியர் அதன் அரசாட்சியையும் சந்ததியையும் நிருமூலமாக்கிவிட்டனர். இவர்கள் யாழ்ப்பாணத்தை ஆண்டது 97 வருஷம் 6.160)Juligustub. (Instructions from the Governer General of India. p. 86) furt Glass என்றது சங்கிலிக்கு வழங்கும் பெயரே போலும். சங்கிலியும் சங்கரப்பெயரின் மரூஉஆகலாம். இனி யாழ்ப்பாணத்தில் பறங்கியரசு இருந்தது 1658 இல் தேலால் அவ்வாண்டினின்றும் 97 வருஷத்தைக் கழிக்க சங்கிலி மன்னன் அரசிழந்தது 1561 இல் என்றாகும். அப்பால் அவனது 42 வருட ஆட்சியை நீட்டிப் பார்க்குமிடத்து அவன் அரசுகைக்கொண்டது 1519 திதி எனவரும்.
13. கனகசூரிய சிங்கையாரியனின் முத்தமகன் சிங்கைப் பரராசசேகரனுக்குச் சிங்கவாகு, பண்டாரம், பரநிருபசிங்கன், சங்கிலி என நான்கு ஆண்மக்கள். முதலிருவரையும் வஞ்சகமாகக் கொன்று, அரசுரிமையை 1519ல் சங்கிலி கவர்ந்து கொண்டான். போர்த்துக்கேய நூல்கள் சங்கிலியைப் பற்றிக் கடுமையாகக் குறிப்பிட்டாலும், இறுதிவரை யாழ்ப்பாண அரசை போர்த்துக்கேயரின் ஆதிக்கத்தின் கீழ்ச் செல்ல விடாது போராடிய சுதந்திர வீரனாகக் கருதப்படுகிறான்.
59

Page 32
யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
சங்கிலி அரசன் போர்த்துக்கேய எழுத்துகளில் கண்முன் ஓர் கொலைப் பாதகனும் கொடுங்கோலனுமாய் வெளிப்படுகின்றான். தனக்கு முந்திய அரசனைத் தென்புலஞ்சேர்த்து அவ்வரசனது உண்மையான ஊழியர்கள் இரண்டாயிரவ ரையும் போரிற்கொன்று அரியணையில் ஏறிக்கொண்டனன் என அவன் காலத்தி லிருந்த அந்திரேதசூசா என்போனால் வரைந்து வைக்கப்பட்டது. (Cros, 1285) இவன்தான் கூறியிருக்கின்றபடி சங்கிலியன் அரசகுலத்திலுள்ளவ னல்லன். முந்திய அரசனின் ஊழியனும் மகாதந்திரியுமாம். வேறுகால் நூலாசிரியர்கள் இவனை அவ்வாறன்று, இராசகுடும்பத்தவனேயாகவும் அரசாளுதற்கோ உரிமையில்லாதவ னென்றும் காட்டுவர். இவனல்லன் இவன் தமையனே அரசுக்குரிமை பூண்டவன். அத்தமையனை இவன் கடிதில் சிறைபுகுத்து தான் ஆக்கினாசக்கரத்தை அப்பிக்கொண்டான் என்பர். (Bartoli 1154) இம்மன்னவனின் கொடுங்கோன்மை எடுத்துக்காட்டாக ஓர் போர்த்துக்கேய நூல்சொல்லும்: 1560 ம் ஆண்டு நமது சேனை யாழ்ப்பாணத்தில் உட்பட்டது. நம்மவர்கள் இவனது அரண்மனை வாசலில் ஒரு பென்னம்பெரிய கல்லு கிடக்கக்கண்டார்கள். இவன் அதில் நாள்தோறும் அநேக பிரசைகளை வெட்டுவிக்கும் வழக்கமிருந்தது. அவர்களது குற்றத்தைப்பற்றி எவ்வித விசாரணைகளாவது அத்தாட்சியாவது தேடமாட்டான். ஒரு ஊர்க்கதை அல்லது சமுசயம் அல்லது கனவிற்கண்ட காரணந்தானும் அவர்களை வெட்டுவிப்பதற்குப் போதும்.'
தன் கரைதுறைகளில் வந்தடையும் அந்நிய மரக்கலங்களைக் கொள்ளை யாடுவதும் சங்கிலி மன்னனுடைய ஒழுக்கங்களுளொன்றாகக் கூறப்படுகின்றது. இது அக்காலத்துப் பலர் அரசர்களுள் நிலையூன்றிய ஓர் வழக்கமேபோலும். 1543 ம் ஆண்டில் கோவைப்போர்த்துக்கேய கவனரான மார்த்திம் அன்பொன்சு தசூசா என்பவன் ஓர் படையெழுச்சியின் நடுவே அகஸ்மாத்தாய் நெடுந்தீவில் கரைபிடித்து அங்கு சிலநாட் தங்கியபோது சங்கிலி மன்னன் பயந்து அவனுக்குத் திறையனுப்பிவிடத்து தான் முன் போர்த்துக்கேயரைக் கொள்ளையடித்துக் கைப்பற்றிக்கொண்ட யுத்த ஆயுதங்களுக்காகவும் ஓர் பெருந்தொகைப்பணம் கட்டினான் என வாசிக்கின்றோம். (Borea)
25. மன்னார்க் கிறீஸ்தவர்கள் சம்மாரம்
தூத்துக்குடி வாசிகளான பரதவரிற் பெரும்பங்கானோர் 1534ம் ஆண்டளவிற் சத்தியவேதத்திற் சேர்ந்திருந்தனர். அர்ச்சியசிஷ்ட பிரான்சீஸ்கு சவேரியாரென்னும் அருந்தவமுனிவர் 1542ம் வருஷம் அத்திசையிலெழுந்தருளி எஞ்சியிருந்த பரதவர்களையும் அச்சமயத்தில் உட்படுத்தியமையை அறிந்த மன்னார்
14. சங்கிலி செகராசசேகரன் போர்த்துக்கேயருக்குச் சிம்மசொப்பனமாக விளங்கினான். அதனால்
அவனை அவர்கள் தம் நூல்களில் தூஷித்துள்ளனர்.
60

யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
வாசிகளான கடையரும் சத்தியவேதத்திற் சேர விரும்பி சவேரியாருக்குத் தூது போக்க, அன்னார் தாம் அவ்வேளை கைநிறைந்த வேலையோடிருந்தமை யால் வரக்கூடாமல் தமது பெயர் பூண்ட ஓர் இந்தியக் குருவை மன்னாருக் கனுப்பி வைத்தார். விரைவில் மன்னாராருள் எழுநூற்றுவருக்கதிகமானோர் ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டனர். இதனைச் செவியுற்ற செகராசசேகரன் தன் மன்னார்ப் பிரசைகள் பறங்கியரோடு தனக்கெதிராய்ச் சதிமானஞ் செய்வார்களென்று அஞ்சிப்போலும், ஐயாயிரம் பேர் கொண்ட ஓர் படையை அணிவகுத்துக் கொண்டு திடீரென அத்தீவிற் புகுந்துகிறீஸ்து சமயத்தைத் தழுவினோர் அனைவரையும் பிடித்து அன்னோரை மீண்டும் தங்குலதெய்வத் தொழும்பராகும்படி ஆக்கியாபித்தான். கிறீஸ்துவர்களோ அரசனின் மிரட்டுதலுக்காதல் தடையின்றியிடவிருந்த மரணத்துக்காதல் அஞ்சினாரில்லை. தாங்கள் ஒருபோதும் சத்தியவேதத்தை விடுவதில்லையென எல்லாரும் உறுதியாகச் சொன்னார்கள். மன்னவன் சீற்றம் மிகுந்து அன்னவரையெல்லாம் வாளுக்கிரையாக்க உத்தரவு செய்தான். ஆடவர்கள் மட்டுமல்ல, பெண்களும் வாலிபரோடு கன்னியர்களும் சிறுகுழந்தைகளுங்கூட தங்கள் சமயத்துக்காக உயிர் துறந்தனர். அன்னையர்கள் பால்குடிக் குழந்தைகளைத் தம் கைகளாலே எடுக்கிக் கொலைகாரர்களின் வாளுக்குப் பலிகொடுத்த வீரச்செயல் போர்த்துக்கேய நூல்களில் புகழ்ந்து பாராட்டப்பட்டிருக்கின்றது. அன்று மாண்டோர் தொகை அறுநூறுக்கும் எழுநூறுக்குமிடையிலென்னப்படுகிறது. அவர்களோடு மன்னார்த் தேசாதிபதியான இளஞ்சிங்கனும் அங்கு வேதத்தைப் போதித்தவரான பிரானிஸ்கு சவேரி எனுங் குருவானவரும் ஆருயிரை இழந்தோரானார்கள். (Letters of S. Fr. Xavier: Ep. Mixtae: Bartoli &c) o
மன்னார் ‘வேதசாட்சிகளின் சம்மாரம் நடந்தது கரவருஷம் ஆடி மாதத்திலா மென வைபவமாலை கூறும். ஆயின் அக்காலத்து எழுத்துக்களால் நாம் அறிகின்றபடி அது 1544ம் ஆண்டுக் கடைசியில், கார்த்திகை அல்லது மார்கழியிலாதல் வேண்டும். கொலையுண்ட தலம் தோட்டவெளியாமென்பது கர்ணபரம்பரை. அங்குப் போர்த்துக்கேயர் பின்காலம் ஓராலயங் கட்டி வைத்தனர். அவ்வாலயத்தின் இடிகரை இற்றைக்குச் சில ஆண்டுகளின் முன் ஓர் கத்தோலிக்கக் குருவானவரால் கண்டுபிடிக்கப்பட்டு அவ்விடத்தில் புதிதாய் ஓர் சத்தியவேத ஆலயம் இந்நாட்களில் நிருமாணிக்கப்பெற்று வருகின்றது.
மன்னார்க் கிறீஸ்தவர்கள் அநியாயமாய்க் கொலையுண்ட சமாச்சாரத்தைப் போர்த்துக்கேயர் அறிந்தவுடனே சொல்லவொண்ணாத கோபம் பொங்கிச்
15. மன்னாரில் மதம்மாறியவர்களையும் மதப்பிரசாரம் செய்த குழுவையும் சங்கிலி கொன்றமை மதம் பற்றியதன்று. அரசியல் பற்றியதேயெனச் சில வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். மதம் மாறியவர்கள் போர்த்துக்கேயரின் ஊடுருவல்களுக்கு வழி செய்வார்கள் என எண்ணியே சங்கிலி அவ்வாறு செய்தான். இன்றைய சமய, சமூக உறவு நிலையோடு ஆரம்ப காலகட்டத்தை ஒப்பிடமுடியாது.
61

Page 33
யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
செகராசசேகரன் மேல் படையெடுத்துவர உன்னினார்கள். அர்ச்சியசிஷட சவேரியாரும் எம்மன்னனையே அதினால் சத்தியவேதத்திற் சேர்த்துப் சேர்த்துப் போடலாமென நம்பி அப்படையெழுச்சியைத் தூண்டிவிடலானார். தாமதமின்றிப் போர்க்கப்பல்கள் ஆயத்தஞ் செய்யப்பட்டன. சேனாவீரருக்குச் சம்பளம் வழங்கப்பட்டது. கப்பற் படையை நாகப்பட்டினத்தில் அணிவகுத்துக் கொண்டு செகராசசேகரன்மேல் கதுமெனவிழ யோசித்திருந்தார்கள். ஆயின் அதற்கிடையில் பெகு நகரிலிருந்து பொன்னும் பட்டுக்களும் ஏற்றிவந்த போர்த்துக்கேய மரக்கலமொன்று சண்டமாருதத்திலகப்பட்டு யாழ்ப்பாணக் கரையையடைய, செகராசசேகரன் சரக்கு முழுவதையும் கவர்ந்து கொண்டான். நாகப்பட்டணத்தில் போர்க்கோலமாய் நின்ற சேனைத்தலைவர்கட்கும் அச்சரக்குகளிற் பங்கிருந்தது. ஆதலால் எம்மன்னனோடு அத்தருணம் பகைத்துக் கொள்ளின் தமக்குப் பெரும் பொருள் நஷ்டமாகும் எனக் கண்டு பல சாக்குப் போக்குக்களை எடுத்தோதி யாழ்ப்பாணப் படையெழுச்சியைப் பின் போட்டிட்டார்கள். சவேரியாரும் மனஞ்சலித்தத் திரும்பிவிட்டார்.
26. பரநிருபசிங்கன்
அரசாங்க அதிகாரிகளின் பொருளாசையால் அவ்வேளை யாழ்ப்பாணப் படையெழுச்சி பின்போடப்பெற்றதாயினும் போர்த்துக்கேயர் செகராசசேகரன் பேரிற் கொண்ட பகையை எளிதிற் கைவிட்டவர்களல்லர். பரநிருபசிங்கன் அன்னோரிடம் அடைக்கலம் புகுந்தமையும் அவர்களை இப்போர் முயற்சியிற் தூண்டிக் கொண்டிருந்தது. வைபவமாலை பரநிருபசிங்கன் என்றழைக்கின்ற 3Fshua66óluu6ớî6öī g56ODLDuu60D6OT LIITg5 (g5(86 JG3gp T6mid Vagru Tucuri Pandarao 6T6öraßOTs. இப்பெயர் ஓர் வேளை வரோதயசிறீபண்டாரம் போலும். (எமது Kings of Jaffna p.11 காண்க) இது அவனது அரசுக்குரிய பெயரும், பரநிருபசிங்கன் வீட்டுப் பெயருமாகலாம். மன்னாராரை அரசன் வன்கொலை செய்தபின் நல்லூர்ப் பட்டனத்தில் செகராசசேகரனுக்கு மாறாயும் உண்மையில் அரசுரிமை கொண்ட பரநிருபசிங்கனை அரியாசனத்தில் ஏற்றும் நோக்கமாகவும் உள்ளுர்க் கலகமொன்று நடந்தது. அந்நாள் யாழ்ப்பாணத்திலும் சிறு தொகையான கிறீஸ்தவர்கள் கரந்துறைந்து வந்தனர். இவர்களே மன்னார்க் கிறீஸ்தவர்களின் கொலைக்குப் பழி வாங்கும் பொருட்டுப் பரநிருபசிங்கன் பக்கமானார்களெனச் செகராசசேகரன் ஐயுறவு கொண்டு தன் கைக்கெட்டிய கிறீஸ்தவர்கள் யாவரையும் பிடித்துச் சிறையிலடைத்ததோடு தமையனையும் கைதியாக்கத் தேடினான். ஆயின் பரநிருபசிங்கன் தன்னோடு கூடிய சில்லோருடன் சூழ்ச்சமாய்த் தப்பியோடி மயிலாப்பூரை அடைந்து அங்கிருந்து கரை மார்க்கமாய்க் கோவைக்குச் சென்றான். அங்கு போர்த்துக்கேய கவனரால் அன்பாய் வரவேற்கப் பெற்று ஒருநாள் யாழ்ப்பாண இராச்சியத்தின் அரசுரிமை தனக்குக் கிடைக்குமென்ற நம்பிக்கையோடு சத்தியவேதத்தையும் தழுவிக் கொண்டான். (Du Jurric)
62

யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
இவைதாம் கண்கண்ட சாட்சிகள் வரைந்துவைத்த உண்மை வரலாறுகள். வைபவமாலை கூறும் அப்பாவின் மகள் கதை ஓர்வேளை உண்மையாகலாம். செகராசசேகரனின் தூர்த்த ஒழுக்கத்தைப் பாதர் குவேறொசும் குறிப்பிட்டிருக் கின்றார். (p298) ஆயின் தரங்கம்பாடியில் போர்த்துக்கேயர் இருந்தமை, காக்கை வன்னியன் ஊறாத்துறைக்கு வந்தமை, அப்பா அவனுக்கு ஒலை கொண்டு சென்றமை ஆகிய விபரங்களெல்லாம் தடுமாற்றமேயென்பது மேல்வருவன வற்றால் விகச்சிதமாகும்.
பரநிருபசிங்கன் யாழ்ப்பாணச் செங்கோல் கைக்கொள்வதற்கு அர்ச்சியசிஷ்ட சவேரியாரின் துணையும் தேடிக்கொண்டனன். போர்த்துக்கால் தேசப் பார்த்திபன் இவ்விஷயமாயக் கோவைத் தேசாதிபதிக்கு எழுதிய கடிதத்தை இன்றைக்குங் காணலாம். (Kings and Christians 123ம் பக்கம் காண்க) ஆயின் அந்நாட்களில் போர்த்துக்கேயருக்கிருந்த பல தொல்லைகளின் நிமித்தம் உடனே யாழ்ப்பாண அலுவலைக் கையாள முடியாமல் போய்விட்டது. செகராசசேகரனைப் புசவலியால் நெறிப்படுத்த இயலாமையைக் கண்ட சவேரியார், புத்திமதியால் வசப்படுத்த எண்ணி அவன் தலைநகரிக்கு 1548ம் ஆண்டு வந்தனரெனச் சரித்திராசிரியர்கள் சிலர் கூறுவர். ‘சவேரியான் பறங்கி வந்து கோட்டையைப் பிடித்துக் கொடுத்தான்’ எனவும், சவேரியார் எரித்த பூவரசடி’ எனவும் சொல்லப்படும் கர்ணபாரம்பரியங்களையும் நோக்குக. (Hist.ofthe Cath. Church in Ceylon 66> 67 85IT605185)
27. தமிழ்ச் சிங்கள ஐக்கியம்
செகராசசேகரன் தன்னைப் போர்த்துக்கேயருக்கும் அவரோடு ஐக்கியம் பூண்டிருந்த ஜயவர்த்தன கோட்டை அரசனான புவனேகவாகுவுக்கும் எதிராய்ப் பெலப்படுத்திக் கொள்ளுமாறு இப்பிந்தியவனின் சகோதரனும் சத்துருவுமான சீதாவாக்கை அரசன் மாயாதுன்னையின் ஐக்கியத்தைத் தேடுவோனானான். இவ்விருவரோடும் கண்டி அரசனான விக்கிரமபாகுவும் இணைந்து கொண்டனன். முன், 1545ம் ஆண்டளவில் ஐக்கிய அரசு மூன்றும் கூடியும் புவனேகவாகுவுக்கு இணை சொல்ல மாட்டாது அவ்வவர்மாட்டு ஒதுங்கிவிட்டனர். பின்பு இரண்டாண்டு பொறுத்து செகராசசேகரன் மட்டும் மாயாதுன்னையோடு சேர்ந்து கோட்டை யரசனைத் தாக்க வெளிப்பட்டான். எம்மன்னவன் தனக்கு மேலிராசனான தஞ்சாவூர் நாயக்கனிடத்திருந்தும் பெற்றுக்கொண்ட அஞ்சாநெஞ்சரான வடக்கர்களும் சோனகர்களும் கொண்ட பலத்த சேனையோடு சென்று மாயாதுன்னையின் படைஅணியை அடைந்தான். சீதாவாக்கைச் சேனையும் யாழ்ப்பாணச் சேனையும் பித்திகல், அப்பித்திகம், சியனேகோறளைகளை ஊடறுத்துச் சென்று ஜயவர்த்தன கோட்டையின் சமீபத்தில் சடுதியில் பாளைய மிறங்கியிருந்ததைக் கண்ட கோட்டைவாசிகள் வெருவிக் கலங்கினார்கள்.
63

Page 34
யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
ஐக்கியசேனையின் உத்தண்ட பலமும் முற்றுகையின் வீராவேசமும் எங்ங்ன மிருந்தனவென்றால் இதோ கோட்டை விழுந்தது, புவனேகவாகுவின் அரசு பத்தியம் தீர்ந்தது என்றபடியாயிற்று. கோட்டையினுள்ளிருந்தோர் அங்குள்ள போர்த்துக்கேயரின் உதவியோடு உயிரைத் திரணமாய் மதித்துப் போராடினர். கொழும்பிற் தங்கிய போர்த்துக்கேயரும் இனித் தாங்கள் இலங்கையில் இருந்தபாடில்லை எனக்கண்டு தீவிரித்து வந்து கோட்டைச் சேனையோடு சேர்ந்துகொள்ளவே இருபாலாரும் ஒத்து 1547ம் ஆண்டு ஆடி மாதம் 10ந் திகதியன்று அதிகாலையில் புறம்போந்து முற்றுகையிட்டிருந்த ஐக்கியசேனைத் தளங்களுள் நுழைந்து எதிர்ப்பட்டோரையெல்லாம் வெட்டி வீழ்த்தத் தலைப்பட்டனர். சத்துருக்கள் முதலாம் இரண்டாம் படையணிகளைக் கடந்து தன் பாளையத்துககு வருகின்றார்களென்பதை அறிந்த செகராசசேகரன் தைரியமாகப் போராடி எதிரிகளை முதுகுகாட்டச்செய்தான். செய்யவே கோட்டைச் சைன்னியங்களின் விக்கிரமசிங்கமாய்நின்ற வீதிராசன், (புவனேகவாகுவின் மருமகன்) வெகுண்டு தன் பலங்களை ஒருங்குதிரட்டிப் போர்தோடுத்தலும் ஐக்கியசேனை முரியடிபட்டு அங்குமிங்குமோடத்தலைப்பட்டது செகராசசேகரனும் மாயாதுன்னையும் நாணித்தலைகுனிந்து தத்தம் பதிக்குத் திரும்பினார்கள். (Conquista pp 1 12-3)
சின்னாட்களுக்குள் வேறொருகாற்று வீசுவதாயிற்று. செகராசசேகரன் மாயா துன்னைக்கு மாறாய்ப்புரண்டு புவனேகவாகுவுக்கு ஒருவாறு நண்பனாயினான். அதெவ்வாறெனில், சீதவாக்கை அரசன் 1549 ம் ஆண்டின் முற்கூற்றில் கோவையிலுள்ள போர்த்துக்கேய அதிகாரிகளுக்கு ஓர் தனாபத்தியம் அனுப்பி புவனேகவாகுவை விசுவாசத்துரோகியென அவதூறுமுடைந்தும் தன்னை அப்போர்த்துக்கேய அரசுக்கு உவந்தவனாக அதன் மேலாட்சியை ஏற்றுக் கொள்பவனாகக் காட்டியும் பகைமூட்டினமையால் அன்னோர் புவனேகவாகுவைச் சிட்சிக்கத்தேடினர். இச்சூழ்ச்சிகளைச் செவிமடுத்த புவனேகவாகு யாதுசெய்வதென அறியாமற் திகைத்து பின் இலங்கை அரசர்களைத் தன்வச மாக்கிப் போர்த்துக்கேயருக்கெதிராய்ப் பெலங்கொண்டு நிற்பதே தகைமையென்று தெளிந்து, சீதவாக்கை, யாழ்ப்பாணம், கண்டி எனும் மூன்று இராச்சியபதிகட்கும் ஒவ்வோர் தனாதிபதியைத் தூதுபோக்கினான். தனாதிபதிகள் மூவரும் இராசகுடும்பத்தைச் சேர்ந்த முதலிமார்கள். சீதவாக்கைக்கு Rata Ban என்பவனும், கண்டிக்கு Camereada என்பவனும், எம்நல்லூருக்கு VanuRaja Bau என்பவனுஞ் சென்றனர். (போர்த்துக்கேயத்தில் கண்ட இப்பெயர்கள் சிங்களத்தில் எவ்வாறு நிற்குமோ அறியோம்) மூவரசர்களுள் மாயாதுன்னையும் விக்கிரமவாகுவும் கோட்டையரசனின் தூதை அங்கீகரித்தாரில்லை. செகராசசேகரன் மட்டும் புவனேகவாகுவின் கேள்வியை ஒருவாறு ஏற்றுக்கொண்டு தான் அவ்வேளை கோட்டை மேலாட்சியை ஒப்புக்கொள்ளின் தன் மேலரசனான தஞ்சாவூர்நாயக்கன் தன்னோடு முட்டிக்கொள்ளலாகுமெனவும், ஆதலால் புவனேகவாகுவின்
64

யாழ்ப்பாண வைபவ விமர்சனம் கேள்விக்கிசையாவிடினும் ஜயவர்த்தனகோடடடைக்கெதிராகத் தான் இனிப் படையெடுப்பதில்லை எனவுஞ்கூறிச் சத்தியப்பிரமானமுஞ் செய்துகொடுத்தான். (Conquista p. 225)
28. திருக்கோணமலை வன்னியராசன்
1551-52 ம் ஆண்டில் நிறைவேறிய நிகழ்ச்சியொன்றில் யாழ்ப்பாண அரசருக்கும் திருக்கோணமலை வன்னிய அரசருக்குமிடையிலிருந்த உறவு வெளிப்படுகின்றது. கோணேசர் கல்வெட்டை நம்பலாமெனில் திருக்கோணமலை யின் வன்னியர்கள் கோணேசர் கோயிலோடு சம்பந்தப்பட்ட கிராமத்தலைவர்களே யாம். காலகதியில் சுற்றுக்கிராமங்களையுங் கட்டியாண்ட சிற்றரசர்களாயினர் போலும். இச்சிற்றரசர்கள் பிறவன்னியர்களைப்போல ஒருகால் வடதிசையின் தமிழரசர்களது மேலாட்சியின் கீழிருப்போரும் ஒருகால் சிங்கள அரசமேலாட் சிக்குப் பணிவோரும் ஒருகால் எவர்க்கும் அடங்காமற் திமிறித்திரிவோருமாய் நின்றிருப்பர். மகாசெகராசசேகரனான ஐந்தாவனது காலத்தில் திருக்கோணமலை யாழ்ப்பாண அரசுக்குள்ளடங்கியிருந்ததுபோலும். ஆயின் 1546ம் ஆண்டளவில் மட்டக்களப்பிற்போல இங்கு ஓர் சிற்றரசன் இருந்து ஆண்டமையையும், கண்டி விக்கிரமவாகுவின் இராசசபையில் இருவருடையவும் தூதர்களிருந்தமையையும் 35m 600i 356 (8pm b. (King and Christians p 132) 6idsdijLD6hurt (g 9,3535|T6)b திருகோணமலையைத் தன் துறைப்பட்டணமென உரித்தாடியதையும் அங்கு தன்னைப் பாதுகாக்கும் போர்த்துக்கேயர் ஓர் பண்டகசாலைகட்ட உத்தரவு கொடுத்ததையும் அவ்வாறே அறிகின்றோம்.
1551ம் ஆண்டளவில் திருகோணமலை வன்னியனார்க்கஞ்சிவிட அவனுடைய அரசுரிமையைப் பூண்ட குமாரன் எட்டுவயசுள்ள இளவலாயிருந்தமையால் அரசைப்பரிபாலிக்கும் பொருட்டு அக்குடும்பத்துளொருவனைத் தெரிந்தெடுத்தனர் இதனைச் செகராசசேகரனறிந்து தானே இறந்த வன்னியனாருக்கு அதிக இரத்த உரித்துக்கொண்டவனெனவும் அதனால் அத்தேசப் பரிபாலனம் தனக்குரிய தெனவும் வாதாடுவோனானான். இவ்வன்னியனார் சங்கிலியனின் பேரனான கனகசூரிய சிங்கையாரியச்சக்கரவர்த்திக்கு மகன்முறையானவனென்ப. (Courtenayp.975) அவ்வாறாயின், இருராசகுடும்பங்கட்டுமிடையில் இவ்வுறவிருந்த மையை அறிவது மனோகரமே. அதுகிடக்க, செகராசசேகரன் திருக்கோணமலை, அரசை மேற்கொண்டமையினால் அதைப் பரிபாலிக்க ஏற்பட்ட வன்னியனார் குடும்பத்தவன் அரச இளங்குமாரனையுங்கொண்டு நாற்பது மெய்க்காவலரோடுங் கோடிக்கரைக்கு ஓடி அங்கு பரதவ கிறிஸ்தவர்கள் மூலமாகச் செகராசசேகரனுக் கெதிராகப் போர்த்துக்கேயருடைய உதவியை நாடினான். நாடினவன் தூத்துக்குடியிற் சிலகாலந்தங்கிப் பரதவர்களோடு ஊடாடி அவர்களது சத்திய வேதத்திலுஞ் சேர்ந்துகொண்டபின் பரதவன்கள் கொடுத்த ஓராயிரம் போர்ச்
65

Page 35
யாழ்ப்பாண வைபவ விமர்சனம் சேவகரோடும் சில போர்த்துக்கேரோடும் திருக்கோணமலைக்கு மீண்டபோதிலும் தன் கோரிக்கையை முடிக்கமாட்டாமற்போயினான். ஆகவே பரதவ சேனை இராசகுமாரனோடு தூத்துக்குடிக்குத் திரும்பிவிட்டது. பரிபாலகனும் மெய்க் காவலர்களும் ஊரிற்றங்கியிருந்தனர். சிலநாட்கழித்துச் செகராசசேகரன் இவனையே தனக்குக்கீழ் அரசை நடத்துமாறு விட்டிட்டான். (Bartoli 11224)
இதற்கிடையில், ஞானஸ்நானத்தில் அல்பொன்சு என்னும் கிறிஸ்தநாமத்தை அடைந்துகொண்ட திருக்கோணமலை ராசகுமாரன் கோவைப்பட்டணத்துக்கு அனுப்பப்பட்டு அங்கு சம்பாவுலுகலாசாலையில் கல்விபயின்று தன் புத்திதி சணியத்தாலும் வேதவிசுவாசத்தினாலும் போர்த்துக்கேயரால் மிக விரும்பப் பட்டவனானான். அன்னோர் கலகதியில் செகராசசேகரனைச் சிங்காசனத்தால் வீழ்த்தி யாழ்ப்பாணத்துக்கும் திருக்கோணமலைக்கும் இவனையே அரசனாக்கலாம் என்று எண்ணமிட்டுக்கொண்டிருந்தனர். (Ceylon Antuq 1122) அக்காலம் பரருபசிங்கன் பரபதமடைந்துவிட்டான்போலும்.
29. விதிராஜனுக்குற்ற விபத்து
எம்மரசர் பறங்கியரில் பழிவாங்கநின்றமை பிரசித்தம். அன்னோருக்கெதிராய் யாரா வருவோரோ அவரோடு உறவு கொண்டாடுவதில் அதி ஊக்கமாயிருந்தவ னாகவே வீதிராயனென்னும்" பெலந்தாநகரத் தலைவன் வெஞ்சமரிற்தோற்றோடி வர அவனை இருகரமும் விரித்து ஏற்றுக்கொண்டான். இவன் வீதிராயன், வீதியேபண்டாரம், தெருவேபண்டாரம் எனும் மறுநாமங்களுமுடைய உத்தண்ட வீரசூரன். கோட்டைப் புவனேகவாகுவின் பெண்கொண்ட மருகன். புவனேகவாகு 1552ம் ஆண்டு குண்டுபட்டு இறந்துவிட, அவன் பேரனான இவன்மகன் தர்மப்பாலனைப் போர்த்துக்கேயர் அரசனாக்கிவைத்தனர் வீதிராஜன் முன் தன் மாமன் கீழும் பின் மகனுடைய அரசிலும் தளகள்தனாயிருந்தவன் போர்துக் கேயரோடு பிணங்கிக்கொண்டதனால் அன்னோர் இவனைத் தந்திரமாய்ப் பிடித்துச் சிறையிருத்தினர். தன் மனைவியின் உதவியால் மறியல்கூட்டத்தைச் சார்ந்தோர் தோட்டத்தினின்றும் அக்கூட்டத்தினுக்குக் கீழாய்ச் சுரங்கமறுப்பித்துத் தப்பியோடும் அவன் திட்டம் இவனுக்கு வாய்த்தது. வாய்க்கவே புறம்போந்து ஓர் பலத்த சேனையைச் சேர்த்துக்கொண்டு கொளும்புதொடக்கம் காலியீறாக போர்த்துக் கேயருடைய கோயில்களைத் தகர்த்தும் கிறிஸ்தவர்களிற் பலரை வாளுக் குணவுகோடுத்துத் துன்புறுத்தியும் தன் பகைவர்களின் மனங்கொண்டமட்டும் பழிவாங்கியபின் சின்னாட்களுக்குமுன் தன் சத்துருவாயிருந்த மாயாதுன்னை யோடு உறவாடி அவன் மகளான ஓர் கைம்பெண்ணையும் வதுவை செய்பவ னானான். அப்பால் மாமனோடு ஏதோ குடும்பவிஷயமாய்ப் பகை மூளுதலும்
16. விதியபண்டார
66

யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
மனைவியையும் மாமியையும் இட்டுக்கொண்டுபோய் பெலந்தா எனும் பட்டணத்தை அரண்படுத்தி அங்கிருந்து மாயாதுன்னையோடு கொடும்போர் நிகழ்த்தலுற்றான். இதற்கிடையில் ஒருகால் தர்மப்பாலனுக்கும் போர்த்துக் கேயருக்கும் சத்துருவாயிருந்த சீதாவாக்கை மன்னன் இப்போது அவர்களுடன் ஐக்கியமாகிவிடவே இருகன்னையும் சேர்ந்து வீதிராஜனைத் தாக்கின. பெலந்தாவின் அதிபதி அபசெய்பட்டுத் தோற்றோடிக் கண்டிராசனைச் சரணடைந்தான். மாயாதுன்னை இவன் தலைநகரிக்குப் படையெடுத்துச்செல்லுவ தென மிரட்டவே அங்குங்களை கண்ணில்லாமல் ஒதுங்கிப்பதுங்கித் தன்மனைவி மாமி ஆதியோரோடும் தான் கொண்டுசென்ற திரவியங்களோடும் சிறுப்பரிவாரத் தோடும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்து எம் அரசனின் உத்தரவுப்படி தாராக்குளத் தடியிலோ தாமரைக்குளத்தடியிலோ பாளையமிட்டிருந்தான்.
வீதிராஜனுடைய அபிலாசையாதெனில், ஓர் மகாபடையைச் சேகரித்து அணிவகுத்துக்கொண்டு, போர்த்துக்கேயருக்கும் அவரை ஆதரித்த பிற இலங்கையரசர்களுக்கும் எதிராகச் சமராடி எந்துவீபம் முழுதினையும் தானே தனிக்குடைக்கீழ் ஆளவேண்டும் என்பதாம். தான் ஆடிய போர்களிலெல்லாம் உடன்கொண்டுதிரிந்த புத்ததந்ததாது தனக்கே ஏகசக்கிரதிபத்தியத்தைத் தரும் என்ற குருட்டுநம்பிக்கையும் அவ் நெஞ்சில் உறுத்துநின்றது. போர்த்துக்கேயரை இலங்கையினின்றும் துரத்திவிடும் துணிகரநோக்கங்கொண்ட யாரசனைக்காணு தலும் செகராசசேகரனுக்கு ஒபபுசம் இருபுசமாகி உளம்பூரித்தது. இதுவே தன் உள்ளடக்கிடக்கைகளை நிறைவேற்றிக்கொள்ளுதற்கு நல்ல தருணம் என்று இவனுக்குத்தோன்றிற்று. ஆதலால் இப்பிரயத்தனத்துக்கு வீதிராஜனையே தளகர்த்தனாக்ககருதி செகராசசேகரன் அவனோடு ஓர் பொருத்தஞ்செய்து கொள்ளலாயினான்.
இருதிறத்தாருஞ் சத்தியஞ்செய்வதற்கு வீரமாகாளி அம்மன் கோயில் முன்வந்து கூடினர். செகராசசேகரன் தனது தலையாரிமார், வன்னியர்கள், முதலிமார், ஆராய்ச்சிமார், சேனாதிபதிகள் ஆகியோர் புடைசூழநின்றான். வீதிராயனும் தன் பரிவாரத்தோடு ஆலய முன்றலில் வந்தான். அவ்வேளை அகஸ்மாத்தாய் வெடிமருந்தில் தீப்பற்றிப் பளிடவே சிங்கள அதிபதி தனக்கு ஏதோ சதிமானம் இழைக்கப்படுகின்றதென்றஞ்சித் தன்வாளை உறைகழித்தான். உடனே தமிழருக்குஞ் சிங்களவருக்குமிடையில் ஆயுதப்பிரயோகம் நிகழலாயிற்று. அவ்வமரில் வீதிராயனும் சிங்களவர் சிலரும் மாண்டனர். அவனுடன் வந்த இராசகுடும்பத்தவர்களும் அவன் திரவியமுழுமையும் புத்த தசனமும் செகராசசேகரனால் கைப்பற்றப்பட்டன.
இவ்வமங்கலம் செகராசசேகரனுக்கு அடங்காத்துயர் மட்டுமன்று. பயத்தையும் விளைவித்தது. அவமிருத்தடைந்த வீதிராயனது ஆவி தன் இராச்சியத்துக்குப்
67

Page 36
யாழ்ப்பாண வைபவ விமர்சனம் பங்கம் வத்துவதுமாகலாமெ அஞ்சினான். ஆதலால் அவனை ஓர் தெய்வமாகப் பாவித்து ஆலயம் ஒன்று அவனுக்கு நிர்மாணித்தான். (Conquistap.267) நல்லூர்க் கோட்டையின் வடக்குவாசலுக்கணிமையில் காணப்படும் பூதராயர் கோயில் இச்சம்பவத்தை நினைப்பூட்டுகின்றதேயோ?
30. பறங்கிப்படையெழுச்சி
வீதிராயன் மாண்டமை பறங்கியர்க்குக் குதூகல காரணமாயிற்று. ஆக செகராசசேகரன் முன்னிலும் அதிக துணிவோடு தன் பரசைகளையும் அவர்தம்முன் கிறிஸ்தவர்களானோரையும் வருத்தியதோடு யாழ்ப்பாணத் துறைகளையடையும் அந்நியக் கப்பல்களைச் சூறையாடிக்கொண்டும் வந்தமை பறங்கியரின் பழைய கோபாக்கினியுள் ஓயாமல் நெய்வார்த்துக்கொண்டிருந்தது. இதனோடு அன்னார் யாழ்ப்பாணத்தில் படையேற்றுதற்கு இன்னுமொரு முகாந்திரம் ஏற்பட்டமை எவ்வாறெனில், விஜயநகர அதிபர்கள் தங்கீழுள்ள கிறிஸ்தவர்களை ஒடுக்கி நெருக்கிக்கொண்டு வருவோராயினர்.
அக்கிஸ்தவர்களுள்ளே அதி துர்க்கதிஅடைந்திருந்தோரான மயிலாப்பூர்ச் *சந்தோமை” கிறிஸ்தவர்களை அவ்வூராற் பெயர்த்து வேறிடத்தில் நாட்டுதல் அவசியமாயிற்று. இதற்கு வாய்ப்பான இடம் யாழ்ப்பாணமெனப் போர்த்துக்கேயரது இந்திய பிரதிராசாவான கொன்ஸ்தந்தீனு த பிறகன்சா என் போன் எண்ணினான். எண்ணி இத்தருணம் எவ்விதத்திலும் யாழ்ப்பாணத்தைசெயித்து பழம் பழியையும் முடித்து சந்தோமைத் கிறிஸ்தவர்களையும் சேமமாய்க் குடியேற்றி போர்த்துக்காலின் கடலுக்கப்பாற்பட்ட இராச்சியத்திற்கு ஓர் மத்திய மாகாணத்தை வென்று கொடுக்க எண்ணினான். விரைவிலே சகல ஆயத்தங்களும் நிறைவேற்றப்பட்டன. பிறகன்சாதனே படைத்தலைவனாகி 92 மரக்கலங்களை அணிவகுத்துக்கொண்டு 1560ம் ஆண்டு செப்டெம்பர்மாதம் 7ம் உ கோவையை விட்டுப் புறப்பட்டான். கொச்சியில் இன்னும் 7 போர்க்கப்பல்கள் படையிற் சேர்க்கப்பட்டன. அப்பாகங்களின் மேற்றிராணியாரான தெமுது என்னும் மகாகுருவும் தமது உத்தியோகமுகாந்திரமாய் யாழ்ப்பாணத்தைநோக்கி வழிகொண்டார். இன்னும் பிறகுருமாரோடு யேசுசபையின் சிரேஷ்ட குரவரும் சென்றார். செகராசசேகரனைத் தோற்கடித்தபின் யாழ்ப்பாணசிங்காசனத்தில் ஏற்றிவைக்கும் பொருட்டு பிறகன்சா இட்டுக்கொண்டுவந்த தொன் அல்பொன்சு என்னும் வன்னிய இளவரசனும் சேனாவீரர்களும் ஒருவனானான்.
கப்பற்படையானது யாழ்ப்பாணக்களப்பில்வந்து ஒக்டோபர் மாதம் 20ம் திகதி
நங்கூரம் போட்டது. பிறகன்சா கரைகளைப் பார்வையிட்டு இரண்டு நாட்களாகப்
பரியாலோசனை செய்தபின் பட்டணத்துறையில் இறங்கத் தீர்மானித்தான். இது
இக்காலம் பண்ணைத்துறையென வழங்குவது. எம்மரசனுடைய பெலம் 68

.
யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
முழுவதுமோ இத்துறையிலன்று. கொழும்புத் துறையிலிருந்தது. அங்கு 500 காற்துவக்ககளும், 40 பீரங்கிகளும் 20 ஒளிகளும் அமைத்திருந்தான். அத்துறையிலேதான் சத்துரு கரைபிடிப்பானென்றிருக்கக் காரியம் வேறுவிதமா யினமை செகராசசேகரனுக்கு நெஞ்சிடியாயிற்று. அது நிற்க, பறங்கியர் இரண்டு நாளின்பின் சிறுத்தீவிலிறங்கி அங்கு அதிகாலையில் தங்கள் சமயநிஷ்டைகளை முடித்துக்கொண்டு பின்னேரம் மூன்று மணியளவில் பண்ணைத்துறையை நோக்கி வந்தார். சத்துரு வட்டமிட்டு வருதலைக் கண்ணுறுதலும், பட்டத்துக்குமாரன் - செகரர்சசேகரனின் தலைமகன் போலும் - ஈராயிரம் பேர் கொண்ட சேனைக் கதிபனாய்சேது என்ற விருது நாமம் வரைந்த வெண்சங்கக் கேடயக் கையனாய் பட்டனத்துறையை நோக்கி ஓடிவந்தான். வந்ததும் பறங்கியரின் கப்பல்கள் ခ်ိန္တီး குண்டுமாரிக்கு ஆற்றாது பின்னிடவே சத்துருக்கள் எதிரிடையின்றி இறங்கிக் கொண்டனர்.
31. நல்லூர்ப் பிரவேசம்
பற்ங்கிப்படை 1200 பேர் மாத்திரங் கொண்டதாயிருந்தும், அணிவகுப்பாலும் புயபலத்தாலும் சிறந்து விளங்கிற்று. அதை ஐந்து சிறகுகளாகப் பிரித்து முன்னணியில் ஓர் குருவானவர் ‘கிறீஸ்துவின் கொடியைச் சுமந்து செல்ல, பிறக்ன்சா பின்னணியில் வர ஒழுங்கு செய்யப்பட்டது. சகலரும் வந்து சன்னத்தராகிய பின் ‘கிறீஸ்துவின் கொடி’ தலைகாட்டலும் சைன்னிய முழுதும் அதைத் தெண்டனிட்டு வணங்கி ‘சந்தியாகூ என்று பேர்ச்சத்தமிட்டுக் கொண்டு பட்டணத்தை நோக்கி நடந்தது. மீண்டொருகால் பட்டத்துக்குமாரன் எதிரிகட்டிப் பார்த்தும் ஆற்றாமல் சில சீவர்களையுமிழந்து ஓடி மறைந்தான். சத்துருக்கள்
ன்னேறி நல்லூருக்கப்பால் கிடந்த காட்டையும் ஊடறுத்துச் செல்லுகையில் அப்பாலும் சில அரண்கள் தோன்றின. அவற்றைக் காவல் செய்தோரையெல்லாம் /முதுகிடச் செய்து நல்லூர்ப் பட்டணத்தை நெருங்கி வரவே, தமிழ்ப்படையானது மதிலின் முன் இரண்டு அணியாக நின்று சத்துருக்களைத் தாக்கியது. கோட்டைப்புரிசை கல்லும் களிமண்ணும் சேர்ந்து எடுத்ததாய் துவக்கு வீரர்க்காகும் அகழியுடையதாய் ஏழ்ப்புழைகளில் குண்டுப் பிரயோகக் கருவிகள் அமைந்ததாய் விளங்கியது. தமிழ் முன்னணியானது பறங்கியரை வீராவேசத்துடன் தாக்கவே இவர்கள் தம் பலமெல்லாம் ஒருங்கு சேர்த்துத் தமிழரைத் தாக்க அன்னார் அபசெயப்பட்டும் பலர் உயிரிழந்துவிழ எஞ்சினோர் பின்னணியை நாடி ஓடினர். ஞாயில்களிலிருந்து குண்டுமாரி பொழிந்து இப்பின்னணியைக் காவல் பண்ணியும் பறங்கியர் எதிர் கொண்டு மதிலை அடைந்து ஒரு வாயிலை உடைத்து விட்டுப் பட்டணத்துட் சரிந்தனர். அங்கு அதன் முக்கிய தெருவில் இறங்குதலும் ஒலைகளின் கீழ் மறைத்துவைத்திருந்த மூன்று பீரங்கிகள் வெடித்துக் குண்டு சொரியவே பறங்கியரில் எண்மர் மாண்டனர். இதனைக் கண்ணுற்றவுடன் பறங்கியரின் வீராவேசம் மிகத் தூண்டப் பெற்றதினால்
69

Page 37
யாழ்ப்பாண வைபவ விமர்சனம் அன்னோர் சிங்கேறுகளெனக் குத்திதுப் பாய்ந்து பீரங்கிகளைக் கையாடிக் கொண்டு தமிழ்ப் படையின்மேல் விழுந்து பலரைத் தென்புலஞ் சாய்த்துத் துடை தட்டிக் கொண்டு நிற்கவே தமிழரும் ஊழிக்காலத் தீயெனக் கோபம் மூண்டுசமராடி முன்னணியில் நின்ற பிறகன்சாவின் குதிரையை စ္ဆိမ့် வெட்டி வீழ்த்தியும், வீடுகளிலும் தோட்டங்களிலுமிருந்து சரமாரி சொரிந்தும் எதிரிப்படையை வருத்தினர். பட்டத்துக்குமாரனின் படையிலமர்ந்து நின்றோரான வடக்கரும் சோனகரும் வெகுண்டு தங்கள் கஞ்சா மயக்கத்தின் நடுவே உயிரைத் திரணமாய் மதித்துப் போராடினர். ஆடியுமென்? பறங்கியர் தம்முயர்தரமான படைப்பழக்கத்தினுதவியால் ஒழுங்கின்றி மொய்த்துக் கொண்டிருந்த தமிழ் வீரர்களையெல்லாம் ஒதுக்கி ஓர் பக்கத் தெருவழியாய் ஓட்டம் பிடிக்கவிட்டனர். இங்கு தமிழ்ப்படை ஐயாயிரம் பேர் கொண்டதாய்த் திரண்டு சிறிது நேரம் பறங்கிப் படையின் ஓர் சிறகை நெருக்கிக் கொண்டிருந்ததை அறிந்த பிரதிராசா அவண் ஓர் படைபலம் அனுப்பித் துணைபுரியவே பட்டத்துக்குமாரன் இனி முடியாதெனக் கண்டு முதுகிட்டோடி அரசன் நின்றுகொண்டிருந்த தெரு முனைப்பினை அடைந்தான். அது கோட்டைவாயிற் தெருப்போலும்,
32. அரசன் நழுவிவிடல்
இவ்வாறு நல்லூர்க் கோட்டை புறநீங்கலாய்ப் பட்டணம் பிறகன்சா என்னும் போர்த்துக்கேய பிரதிராசா கைப்படவே போர்வீரர்கள் அங்குமிங்குமோடிச் சூறையாடத் தலைப்பட்டனர். சூறையாடிய பொருட்களில் ஒன்று வீதிராசா கொண்டுவந்த புத்தாசனமாமென்பது கவனிக்கத்தக்கது.
அன்று யுத்த மறியற்காரராய்ப் பிடிபட்ட ராசகுடும்பத்தவர்களுள்ளேபட்டத்துக் குமாரனுடைய ரூபலாவண்யமுள்ள மனைவியும் ஒருத்தியானாள். இவர்களைப் போர்த்துக்கேயர் இவர்களது பதவிக்கேற்ற மரியாதைகளோடு உபசரித்தார். அப்பால் அந்திப்பொழுதாகிவிட்டமையால், பிறகன்சா கோட்டையின் முற்றவெளிக் கணித்தாக இரவைப் போக்கி மறுநாள் உதயத்தில் கோட்டையைப் பிடிக்கும் நோக்கமாகச் சில வீடுகளைப் பிடுங்கிவிட்டுப் பாளையமிட்டுக் கொண்டான்.
நல்லூர்க் கோட்டை அக்காலப் போருக்குப் போதிய பலமுள்ளதாயிருந்த மையால் செகராசசேகரன் அதிலிருந்து போர் தொடுப்பானெனப் பறங்கியர் காத்திருந்தனர். ஆயின் அர்த்தசாமத்தில் அவன் தன் திரவியங்கள் அள்ளிக் கொண்டு அரண்மனைக்கும் நெருப்பு வைத்திட்டுக் கோப்பாய்க் கோட்டைக்கு ஒட்டம் பிடித்தான். இது சுடாத செங்கற்களால் நன்றாய்ச் சமைக்கப்பட்டுக் கொத்தளங்களோடும் உருண்டைக் கோபுரங்களோடும் கூடியதாய் நயமான பெலனுள்ளதாய் விளங்கியது. இதன் நிலையம் மானிப்பாய்க் கைதடித் தெருவும்
70

யாழ்ப்பாண வைபவ விமர்சனம் யாழ்ப்பாணப் பருத்தித்துறைத் தெருவும் குறுக்கிடும் சந்திப்பின், வடகிழக்குக் கோணத்தில் தற்காலம் பூரீவோட்ஸ்போத் குடும்பத்தினரது ஆட்சியிலிருக்கும் "பழையகோட்டை வளவாமென எம்மால் சில ஆண்டுகளின்முன் கண்டுபிடிக்கப ’பட்டது. (Ceyl. Antiq - 11 - 194) அதிகாலையில் போர்த்துக்கேயர் எரிகின்ற அரண்மனையைச் சருவ எழுந்தபோது, அது தன்னைக் காப்போரின்றி வெறிதாயிருக்கக் கண்டு அதனைக் கைப்பற்றிக் கொண்டு நகரத்தின் ‘பெரிய ஆலயத்தைச் சுத்தி செய்து அதிலோர் ஸ்தோத்திரப்பூசை செய்வித்து மகிழ்ந்தனர். இப்பெரிய ஆலயம் தற்கால நல்லூர்க் கந்தசுவாமி கோவில் இருக்குமிடத்தில் நின்றது போலும். பின்பு வீடுகளைத் துறந்து ஓடிப்போயிருந்த நகரவாசிகளுக்கு அபயங் கொடுத்துப் பறைசாற்றுவிக்க அவர்களும் சமாதானமாய் வந்து குடி கொண்டனர். அயற்கிராமத்தவர்கள் கோழி, வெண்ணெய், வாழைப்பழம் ஆகியவற்றைக் கொணர்ந்து பறங்கியருக்கு விற்கத் தலைப்பட்டார்கள். அப்பால் பிறகன்சா அரிசி கொண்டு வரும்படியும் யாழ்ப்பாணத் திற் குடியேறும்பொருட்டு சந்தோமைக் கிறீஸ்தவர்களை ஏற்றிவரும்படியும் நாகப்பட்டணக் கரைக்கு வள்ளங்கள் போக்கியும் நல்லூரைக் காத்தற்கு கப்பற்படையின் கற்பித்தான்மார் சிலரை நியமித்தும் செய்யற்பாலனவான ஒழுங்குகளைச் செய்து முடித்தபின் எம்மரசனை யாதுவிதமும் தொடர்ந்து பிடித்துக் கழைந்து போடவேணுமெனும் நிர்ணயத்துடன் கோப்பாய்க் கோட்டையை நாடி நடந்தான். அங்கு சேருதலும் அதுவும் வெறுமையாய்க் கிடந்தது. வாயிலில் மட்டும் தலைவர் பன்னிருவரின் சிரங்கள் துணித்துப் போடப்பட்டிருந்தன. இத்தலைவர்கள் தன்னைப் பறங்கியரோடு சமாதானம் கொள்ளுமாறு புத்தி கூறிய குற்றத்திற்காகச் செகராசசேகரனால் வன்கொலை யுண்டார் போலும். பிறகன்சா கோட்டையைக் கைப்பற்றிக் கொண்டு, பீரங்கிகள் குமுற வாச்சியங்கள் ஆரவாரிக்க அதனுட் பிரவேசித்தவுடன் காலதாமதமின்றி நானூற்றுவர் தெரியலான வீரர்களை அரசனைப் பின்தொடர்ந்து செல்லுமாறு பணித்தான். அரசன், சரசாலைப் பகுதியிந்போய் ஒதுங்கியவன், பின் பறங்கியர் தன்னைத் துரந்து வருவதையறிந்து, பச்சிலைப்பள்ளிக் காடுகளுட் கரந்துறைவோனாயின். பறங்கி வீரர்கள் காட்டையூடறுத்துச் செல்லுகையில் மேலும் நாற்பது ஆராய்ச்சிமாரின் தலைகள் அறுபட்டுக் கிடக்கக் கண்டனர். அப்பால் வீரசிங்கன் எனும் ஓர் தலைவன் 1500 சேவகர்களோடு அரசனை மறுத்துத் திரும்பி ஓடிவந்து பறங்கியரோடு சேர்ந்து கொண்டமையும் தமிழ்ப் படையினுள் உண்டாயிருந்த கட்சிப் பிரிவுக்கு ஓர் சான்றாயிற்று. (Queiroz296 scq) யாழ்ப்பாணவைபவ மாலையுடையார் வீரசிங்கனின் சதிமானத்தையே பரநிருபசிங்கனில் ஏற்றி வரைந்து வைத்தனர் போலும். அது கிடக்க, பறங்கியர் பலநாள் உலைந்து அலைந்தபின் அரசனின் தலைக்கறுப்பைக் கண்டலும், இவன் தந்திரமாய் துழுந்தி ஓடி ஆனையிறவுக்கப்பால் பாளையமிட்டுக் கொண்டான். பறங்கியர் விடேன் தொடேன் எனத் துரந்தனர். கார்த்திகை மாதம் 15ந் திகதி ஆனையிறவுக் கரையை அடைந்து, வாய்க்காலைக் கடக்க
71

Page 38
யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
விடாமல் மறுகரையில் நின்று தடுத்த தமிழ்ப்படையைத் தெறிகெட்டு ஓடச்செய்து அக்கரைப்படுதலுஈ அரசன் மாயமாய் மறைந்துவிட்டான். பின்னும் ஐந்துநாள் வன்னிக்காடுகளுள் உழன்றதன்மேல் ஓர் வயல்வெளியின் அடிவாரத்திலே காட்டருகில் அரசனது பாளையம் எதிர்ப்படலும் பறங்கியர் அங்கு சேருமுன், செகராசசேகரன் தன் யானை ஊர்தியின்மேல் ஏறவும் நேரமில்லாதவனாய் பாதசாரியாகத் தன் படையோடும் திருகோணமலை வன்னியன் அனுப்பியிருந்த உபபலத்தோடும் ஓட்டம் பிடித்தனன்
33. சமாதான உடன்படிக்கை
இப்போதுதான் எம் அரசனின் தந்திரபுத்தி பறங்கியருக்கு ஓடி வெளித்தது. இவன் சத்துரு படையை அங்குமிங்கும் சிதறச் செய்துவிட்டு இலேசாயிச்  ெயங் கொள்ளும் நோக்கத்தைக் கடைப்பிடித்துள்ளான் எனத் தெரியவந்தது. வன்னிக்குள் வந்திருந்த பறங்கியர் சேனையுமோ தொகையிற் சிறிது. அதிலும் நோயும் ஆயாசமும் மேலிட்ட சேவகர்களுமோ பலராயினர். உணவுப் பொருட்களுமோ அருகி விட்டன. பிரதிராசாவுமோ அதிதூரத்தில் கோப்பாயில் இருக்கின்றான். இவற்றை யோசித்துக் கொண்டு கோப்பாய்க்குச் சமாச்சாரம் போக்குவதற்கிடையில், செகராசசேகரன் திரும்பி வந்து பறங்கியரை எதிர்க்தத் தலைப்பட்டுவிட்டான். இவர்கள் துரிதம் துரிதமாய் அகழியொன்று வகுத்துக் கொண்டு அருஞ்சமராடி தமிழ்ப்படையின் தளவாய்கள் சிலரையும் திருக்கோண மலை வன்னியனின் மகனையும் வீழ்த்திவிடவே அரசன் முதுகு காட்டலாயினான்.
இவ்வமயத்தில் யேபயயெ என்னும் பிராமணன், அரசனுக்கு வேண்டியவன் எடுத்தோதிய ஆலோசனைகளால் இவன் மனம் மாறிச் சத்துருவோடு சமாதான உடன்படிக்கை பண்ண ஒருப்பட்டான். (இப்பிராமணனின் செய்தியையே வைபவ மாலைக்காரர் எலுமிச்சம்பழம் பிழிந்துவிட்ட இளநீர் கொடுத்து முதிய அரசனின் சிரசைக் கொய்த கதையாக மாற்றிவிட்டனர் போலும்) உடன்படிக்கை செய்வதற்கு அரசன் பிரதிராசாவிடம் அனுப்பிய தமிழ்ப்பிரதானிகளின் பெயர் போர்த்துக்கேயத்தில் சிறந்த தளபதியான Visiale முதலியார் என்றும், அவனுக்குப் பெண் கொடுத்த மைத்துனன் Vacu ஆராய்ச்சி என்றும் குறித்திருக்கிறது. பிரதிராசாவுக்கோ உடன்படிக்கை செய்து கொள்வது மனோகரமாயிற்று, எதுபற்றியெனில், சந்தோமைக் கிறீஸ்தவர்கள் தாங்கள் எக்கேடு கெட்டாலும் இவ்விடத்தைவிட்டு வரோமென்று சொல்லியனுப்பிய விடை இவனுக்கு இதுவரையிற் கிடைத்திருந்தது. ஆகவே காப்பாற்றுதற்கு அதி கஷ்டமான ஒரு இராச்சியத்தைத் தம் பொறுப்பில் வைப்பதனால் ஆவது யாது? அரசன் திறை கொடுத்து ஆளச் சம்மதித்துக் கொள்வதே போதும் எனப் பிரதிராசாவுக்குப் புலப்பட்டது.
ஆகவே செகராசசேகரனின் பிரதானிகளை மகிழ்வோடு ஏற்று அன்னாரோடு
72

யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
இரு வாரங்களாய்த் தர்க்கமிட்டபின் ஏற்பட்ட உடன்படிக்கையின் நிபந்தனைகள் எவையெனில்: 1வது போர்த்துக்கேய அரசு செகராசசேகரனை யாழ்ப்பாணத்து ராசாவாக அங்கீகரிக்கச் சம்மதிப்பதும், இவன் அதைத் தனக்கு மேலரசனாக ஏற்றுக்கொண்டு வருடந்தோறும் 12 கொம்பன் யானைகளும் 1200 பதக்க காசும் திறை கட்டுவதும், 2வது செகராசசேகரன் தன் இராச்சியத்தில் சமசுயாதீனம் (அதாவது விரும்பியோர் சத்தியவேதத்திற் சேர இடம்) கொடுப்பது: 3வது தான் வீதிராசாவிடம் அபகரித்து வைத்திருந்த திரவியங்களைப் போர்த்துக்கேயருக்குக் கையளித்துவிடுவது: 4வது பிரதிராசா யாழ்ப்பாணத்திற் படையெடுத்து வந்த செலவைச் செகராசசேகரன் இறுப்பது; 5வது மன்னார்த் தீவைப் போர்த்துக்கேயருக்குக் கையளித்துவிடுவது: 6வது இவைகளுக்குப் பிணையாகப் பட்டத்துக்குமாரனை இரு முதலிமாரோடும் பிரதிராசா கையில் கொடுப்பது. இவ்வாறு உடன்படிக்கை இரு பாஷைகளிலும் வரையப்பட்டுக் கைச்சாத்திட்டவுடன், பிணைகளைப் பறங்கியரின் கப்பல்களுக்கு அனுப்பி விட்டனர். பட்டத்துக்குமாரனோடு போன இருவரும் யாவரெனில் Oriculnar முதலியாரும் இவன் மந்திரியாகிய Eleagora என்பவனுமாம். இப்பெயர்கள் தமிழில் என்னாகமோ அறியேம்.
34. பறங்கியர் துரத்துண்ணல்
செகராசசேகரன் அரசாளத்தொடங்கினான். பிரதிராசாசேனையின் ஓர்பாகத்தைக் கோப்பாயிலும், ஓர்பாகத்தை நல்லூரிலும், ஓர்பாகத்தை மரக்கலங்களிலும் விட்டிட்டு ஆனையிறவுக்கு மீண்டான். ஆயின் அரசனோ இதற்கிடையில் பாவிப் பறங்கியர் அனைவரையும் அதமாக்கும் சூழ்ச்சியொன்றை ஆயத்தப்படுத்திவைத் திட்டான். அச்சூழ்ச்சியும் நன்றாய்ப் பலித்தது. சொல்லப்பட்ட ஒருநாளில் ஒரே மணித்தியாலத்தில் ஊரெங்கும் தமிழர்கள் ஆயுதபாணிகளாய் எழுந்து, பறங்கியரும் அவர்களுக்கு அனுசாராயுள்ளோரும் எங்கெங்கே கானப்பட்டனரோ அங்கெல்லாம் அன்னோரைச் சின்னாபின்னமாய் வெட்டிச்சரிக்கத் தலைப்பட்டனர். பிரதிராசா அற்புதமாய் தப்பி ஓடி ஆனையிறவுக் கடலில்நின்ற மலக்கலத்திலேறி நல்லூரை அடைந்தான். ஊருக்குள் உலாவிக்கொண்டிருந்த பறங்கிவீரர்களும் பண்டமாற்று செய்தோரும் அங்கங்கே கொல்லப்பட்டனர். சத்தியவேதத்தைப் போதித்துக்கொண்டு நின்ற குருமாருக்கும் அவர்களோடு சேர்ந்த கிறிஸ்தவர்க ளுக்கும் அக்கதியே லயித்தது. கொச்சி மேற்றிராணியாரும் வேறு சில குருமாரும் அருந்தப்பாக தப்பி மரக்கலங்களைச் சேர்ந்தனர். சடுதியில் தமிழர் கோப்பாய் கோட்டையையும் மொய்த்து வளைத்துக்கொண்டு கமுகமரங்களால் ஏணிகட்டி மதில்களால் உள்ளே குதிக்க எத்தனித்தனர். அங்கே போத்துக்கேய தளபதியும் வேறு அனேகரும் நோயுற்றிருந்தமையால் யாதுசெய்யலாம் எனக் கவன்றிருக்கும் அவதரத்தில், பிறகன்சா நல்லூரினின்று அனுப்பிய ஒரு உபபலம் சொல்லிமுடியாதகஷடத்துடன் கோப்பாய் கோட்டையில் வந்து சேர்ந்து தமிழரை
73

Page 39
யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
முறியடித்தது. அங்கிருந்து நோயாளிகளையும் யுத்த தளபாடம் முதலிய சாமக்கிரிகளையும் இழுத்துக்கொண்டு சொல்லுவதோ பகீரதப் பிரயத்தனமாயிற்று. ஆயினும் துர்அதிஷ்டகாலத்திலும் துணிவை விடாத விஷேடகுணமுள்ளோராகிய அப்பறங்கியர், தங்கள் பொருள் பண்டங்களை மட்டுமன்று, எடுத்துச் செல்லுதற்குமிக அரிதாய்ப் பளுவுகொண்டிருந்த இராச சிங்காசனத்தில் முத்துட் பந்தரையும் கவர்ந்துகொண்டு, தமிழர் வழிநீளம் பொழிந்த சரமாரி குண்டு மாரியின் நடுவே எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் போராடிப் போராடிப் பட்டினத்துறையை அடைந்தனர். தேவதீனமாய் நல்லூருக்கும் நாகப்பட்டினத்தி லிருந்து ஒரு துணைச்சேனை வந்திருந்ததனால் அங்கிருந்த பறங்கியர் தப்பிக் கொள்ளலாயிற்று.
சத்துருக்கள் கப்பல்களிலேறிப் பாய்விரிக்குமுன் செகராசசேகரன் தன் மகனைப் பிணையாலெடுக்கும்பொருட்டு பிரதி ராசாவோடு மீண்டொருகாற் சமாதானம் பேசுவித்தும் வாய்க்கவில்லை. பறங்கியர் பட்டத்துக் குமாரனைக் கையில் வில்லூர்த்திப்பட்டு மூடிய விலங்கிட்டு ஏற்றிக்கொண்டு போயினர். அக்குமாரன் பின்பு கோவையிலே கிறிஸ்தவனோடு 1571 ம் ஆண்டு மரித்தான். யாழ்ப்பாணச் சிங்காசனத்தில் ஏற்றிவைக்கும் பொருட்டு இட்டுக்கொண்டவந்த தொம் அல்பொன்சு என்னும் திருக்கோணமலை வன்னிய இளவரசனும் கோவைக்கே மீண்டு, அங்கிருந்தும் 1564 உக்கும் 1568 உக்கும் இடையில் மங்களுார் போருக்குச் சென்றவிடத்தில் உயிர் துறந்தான். யாழ்ப்பாணத்திலே பறங்கியர் கைப்பட்டிருந்த வீதிராசனின் ஸ்திரிகள் ஜயவர்த்தனகோட்டைக்கு அனுப்பப்பட்டனர். வீரர்கள் ஓர் கோயிலிற் கண்டெடுத்த புத்த தந்தத்துக்குப் பைகோவை அரசன் 4000000 ரூபா விலைபேசியும் கொடாமல், அது எக்காலத்திலாவது குருட்டு வழிபாட்டுக்கு ஏதுவாகாதிருக்கும்பொருட்டு, கோவையில் எரித்துச் சாம்பலாக்கிக் கடலுள் வீசப்பட்டது.
35. போத்துக்கேய மேலாட்சி 1561 - 1590
தான் செகராசசேகரனால் சதிமானமாய்த் துரத்தப்பட்ட போதிலும், பிறகன்சா சமாதான உடன்படிக்கைப்படியே ஒழுகுவோனாய், மன்னார்த்தீவில் இறங்கி அதனைக் கைப்பற்றலாயினான். அங்கும் அமரின்றிக் கரைபிடிக்கக்கூடாத தாயிற்று. அ.தெவ்வாறெனில் சத்தியவேதத்திற் சேர்ந்தமை காரணமாய்க் கொலையுண்டோனான இளஞ்சிங்கமென்னும் தேசாதிபதிக்குப் பின் மன்னாரை மாதோட்டத்தோடுகூடச் சிற்றரசனாய் ஆண்டுவந்த மகத்தன் (Mahata) என்போன் போத்துக்கேயர் அத்தீவை அப்பிக்கொள்ள வருதலை அறிந்து மூவாயிரம்பேர் வரையிற்கொண்ட தன் சைனியத்தோடும் அன்னோரைக் கரையிலிறங்கவிடாது எதிர்த்துநின்றான். மகத்தனின் ஆயுதபலம் இரண்டு பீரங்கிகளோடு ஒரு சில
74

யாழ்ப்பாண வைபவ விமர்சனம் துப்பாக்கிகள் மட்டுமே. அவன் வீரர்கள் பறங்கியரை அம்புப்படையினால் வெல்வவாமென்றிருந்தமை வீண் மனேராச்சியமாய் முடிந்தது. பிறகன்சாவின் பீரங்கிகள் தம் பேழ்வாயைத் திறக்கவே, தமிழ்வீரர்கள் நின்றவிடமும் தெரியாமல. ஓடி மறைந்தனர்.
36. 7 ம் பரராசசேகரன்
பின் பிரதிராசா யதேச்சையாய்த் தீவிலிறங்கி உடனே அங்கு ஓர் கற்கோட்டையைக் கட்ட ஆரம்பித்தான். சீர்ணமாய்க்கிடந்த மாந்தைத் திருக்கேதீச்சுரக் கோயிலிலிருந்தும் அதற்குக் கற்கள் கொண்டுவரப்பட்டன மணப்பாட்டுப்பகுதியில் நெருக்கிடைப்பட்டு வருந்திய கிறீஸ்த குடிகளை அழைப்பித்து மன்னாரிற் குடியேற்றுவதிலும் பிரதிராசா மிக முயன்றான். இம் முயற்சிகள் இடையூறின்றி நடைபெறுதற்கு வாய்ப்பாயிருந்த ஒரு சம்பவம் யாதெனில், யாழ்ப்பாணத்தில் அவ்வேளை நடந்து கொண்டிருந்த உள்ளூர்க் கலகமாம். பறங்கியர் அங்கிருந்து துரத்தப்பட்டபின் சனங்கள் செகராசசேகரன கொடுமைகளை இனிச் சகிக்கலாகாது என ஒர்ந்து அவனை நாட்டைவிட்டு ஒட்டி அவனின் வைப்பாட்டி மகனான புவிராச பண்டாரத்தை அரசனாக்கினர் (QuerioZ319). இவனே சக்களத்தி பிள்ளையென்றதை அறியாத வைபவமாலை யார் சங்கிலியாகிய செகராசசேகரனுக்கு அவ்வம்புப் பட்டத்தைச் சூட்டினார் என்பது இங்கு குறிக்கத்தக்கது. அப்பால் ஏழாம் பரராசசேகரனாகும் புவிராச பண்டாரத்தைப் பற்றி யாதும் அறியோம். யாழ்ப்பாணத்தில் அரசனில்லை என்றபடி சிலகாலம் நடைபெற்றது.
அதற்கிடையில் கிழட்டுச் செகராசசேகரன் ஏதோ விதமாய்ப் படைகளைத் தன்வசப்படுத்திக் கொண்டு, பிறகன்சா மன்னார்க் கோட்டையைக் கட்டிவிட்டுக் கோவைக்குப் புறப்பட்டதன் பின் அதை மிக மூச்சாய்ச் சருகுவதைக் காண்கின்றோம். கோட்டைக்குக் கற்பித்தானாயிருந்த றோத்திரிகேஸ்.
37. காசி நயினார்
சங்கிலி 1564 ஆம் ஆண்டிலும் உயிரோடிருந்தனனாகத் தோற்றுகின்றது. அவ்வாண்டில் மாயாதுன்னை என்னும் சீதாவாக்கையின் சிங்கள அரசனுக்கு சயவர்த்தன கோட்டையின் முற்றுகைக்கென வடக்கர் சேனையொன்று அனுப்பினன் என்று பாதர் குவேறோஸ் வரைகின்றார். அவன் மாண்டபின் (BLITayub 85Taybuil60 TFT (Cachim Neyra, Congi Naynar) 6Igolub g(5 3JTaf5LDITU6i அரியாசனத்தைக் கவர்ந்து கொள்ளலாயினமையால் மீட்டும் யாழ்ப்பாணத்தில் பெரும் கலிபிலிகள் எழுந்தன. எழவே பிரசைகள் சமாதானத்தைப் பெறுவிக்க வேறு வழியின்றி மன்னார்க் கற்பித்தானின் மத்தியஸ்தத்தைத் தேடினர். ஜோர்ஜ்
75

Page 40
யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
தெமேலோ எனும் அக்கற்பித்தான் இதனாற் பறங்கியருடைய மேலரசு யாழ்ப்பாண இராச்சியத்தாரால் அங்கீகரிக்கப்பட்டது போலாயினமை கண்டு மகிழ்ந்து, நல்லூருக்குச் சென்று காரியாதிகளைத் தீரவிசாரித்தலும், காசிநயினார் அரசுரிமையின்றி ஆளத் தொடங்கிவிட்டனன் எனக்கண்டு பிரசைகளது வேண்டுகோளின்படி அன்னோனைக் காராக்கிருகத்தில் அடைத்து உரிமைக்காரன் வேறொருவனை அரசனாக்கி வைத்தான். இப்புது அரசன் பெயர் எமக்கெட்டாது போயிற்று. ஆயின் தெமேலோ மன்னாருக்கு மீண்டும் மீளா முன்னரே, காசிநயினாரின் பட்சத்தவர்கள், இவனது தூண்டுதலினால், புதிய அரசனைக் கொன்று ஒழித்து, இவனையும் சிறைநீக்கிவிடவே, இவன் முன்னிலும் அதிக பொறுப்பாய்ச் சிங்காசனத்தில் அமர்ந்து கொண்டான். இது பறங்கிக் கற்பித்தானின் முகத்திற் காறியுமிழ்ந்து விட்டாற்போலாயிற்று. ஆகவே அவன் காசிநயினாரைத் தொலைக்கும் வழியை யோசித்து, ஈற்றில் ஒர் யாழ்ப்பாணத்துத் தமிழ்ச்சேவகனைக் கைலஞ்சத்தால் வசமாக்கி இவன்மூலமாய் அவனை எமலோகம் போக்கிவிட்டு இச்சங்கதி தெரிந்தவுடன் திடுமென யாழ்ப்பாணத்திற் குதித் தான் . சனங்கள் பெரியபிள்ளை என்னும் ஒருவனை அரசனாக்கவேண்டுமெனக் கோரவே, மெமேலோ அன்னவனைச் சிங்காசனத்திருத்தி மன்னாருக்கு மீண்டான்.
38. பெரியபிள்ளையென்னும்
8ம் செகராசசேகரன்
இவனது அரசைச் சுட்டிய விபரங்கள் எங்கைக்கெட்டாது போயின. இவன் தனக்குப்பின் இரண்டாவதாய்ச் செங்கோல் கைக்கொண்ட (1591 - 1619) எதிர்மன்னசிங்கனாகும் பரராசசேகரனின் தந்தை என்பதுமட்டுமே தெரிந்தது. இனி பெரியபிள்ளையுடைய அரசின் ஆண்டுக்கணக்கும் சந்தேகம். அதன் தொடக்கம் 1570ம் ஆண்டுக்குப் பிந்தியதாகாது என்பது ஒன்றுதான் நிச்சயம். ஏனெனில் இவனைச் சிங்காசனத்திலேற்றிய தெமேலோ அவ்வாண்டுவரையுமே மன்னார்க் கற்பித்தானாய் இருந்தவனும் அப்பால் பெரியபிள்ளை 1582 உக்குப்பின் அரசாளவில்லையென்பதும், அந்த ஆண்டில் புவிராசபண்டாரம் என்போன் யாழ்ப்பாண அரசை அபகரித்துக்கொண்டிருந்ததை யாம் அறிந்திருக்கின்றமையால் விளங்குகின்றது. பாதர் குவேறோஸ் சொல்லுகின்றபடி, பெரியபிள்ளையை யாழ்ப்பாணப்பிரசைகள் மன்னாரைக் கைக்கொள்ளுமாறு வாலுருவித் தூண்டிவிட, இவனும் ஒருகாற்தஞ்சாவூர் நாயக்கன் உதவிய பலத்தோடு அக்கோட்டையின்மேற் படையெடுத்துச்சென்றனன் எனவும், வீணாய்ப்பல உயிர்களையும் பெருநிதியையும் இழந்ததே அதன் பயனாயிற்று எனவும் தோன்றுகின்றது.
இவனை இதிகாசம் Pera Rajera என அழைக்கின்றமையால் தனக்குப்
76

யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
பரராசசேகப் பட்டஞ்சூட்டிக் கொண்டவன்போலும். ஆயின் இவனைப் போர்த்துக்கேயர் யாழ்ப்பாணச் சிங்காசனபதியாக ஏற்றுக்கொள்ளாமையினாலும் இவனுக்குப்பின்வந்த எதிர்மன்னசிங்க குமாரனே பரராசசேகரப்பெயர் வகித்தமையினாலும் இவன் அப்பெயர்க்குரியவன் எனச் சனாங்கீகாரம் இல்லாதுபோயிற்று போலும், புவிராசபண்டாரத்தை போர்த்துக்கேயர் ஒற்றைக்கண்ணரசன் (ReiTorto) என்றழைப்பர். (Torto என்பது ஒற்றைக்கண்ணன் என்றுமாகலாம், வாங்கலன் என்றுமாகலாம்)
இவன் 1582ம் ஆண்டில் யாழ்ப்பாணத்தை ஆள்வோனாக விளங்குகின்றான். அதை நாம் அறியவருவது யமசிங்க பண்டாரஎனும் கண்டி அரசகுமாரனின் வரலாற்றினின்றாம். அ.தெவ்வாறெனில், கறாலியட்டே பண்டார எனும் கண்டியரசனை இராசசிங்கன் எனும் சீதாவாக்கை அரசன் குடுமி கொண்டு அவன் நகர்புக, அன்னோன் வீட்டாரோடும் கரந்தோடித் திருகோணமலையை அடைந்தான். அங்கு துரதிர்ஷ்டமாய் அவனும் மனையாளும் அம்மை நோய் வாய்ப்பட்டு மாண்டனர். மாளுமுன் தன் சவலையான ஏக புத்திரியை மருமக னாகிய யமசிங்கனிடம் ஒப்புவித்து, இவன் அவளைப் பரிபாலிக்க வேண்டு மென்றும், வயது முற்றியபின் அவளையே மணந்துகொள்ள வேண்டுமென்றும் கோரிக்கொண்டனன். அக்கோரிக்கைப்படி யமசிங்கன் தன் மைத்துனிப்பிள்ளை யோடும் யாழ்ப்பாணத்தை அடைந்து, அங்கு அரசாண்டு கொண்டிருந்த புவிராசசிங்க பண்டாரத்தின் கையில் இளநங்கையை ஒப்புவித்துவிட்டுக் கோவைக்குச் சென்று போர்த்துக்கேயரைச் சரணடைந்தான். இராசகுமாரியும் பின்பு மன்னாரிலுள்ள போர்த்துக்கேயர் வசத்தில் விடப்பட்டாள். இவளே பிற்காலம் (1594) தொன்சுவான் விமலதர்மசூரியனாகும் கண்டியரசனின் மனைவியாய் வந்த நோனா கத்தறினா இராணியாம்.
புவிராசபண்டாரத்தின் பராக்கிரம செய்தியொன்று1590ம் ஆண்டில் கேட்கப்படு கின்றது மன்னாரைப் பறங்கியர் கையிலிருந்து பறித்துப் போட வேண்டுமென்பது சங்கிலியரசன் காலந்தொட்டே யாழ்ப்பாண அரசர்களின் அபிலாசையாதலால் இன்னும் அவ் அருமுயற்சியில் கையிட்டு, மூன்று ஆண்டுகளாய் அந்தரங்கத்தில் ஆயத்தங்கள் செய்துகொண்டு வந்த பின்னர்,பறங்கியர் அனேகமாய்க் கோடிக்கரைக்கு முத்துக்குளிக்கப் போயிருந்த சமயம் பார்த்துஎழுபத்தைந்து மரக்கலங்களோடும் மன்னார்க் கோட்டைக்கெதிரே வெளிப்பட்டான். அரசன் பக்கத்தில் பெருந்தொகையான காலாட்களும் கோட்டை மதில்களை உடைத்தற்கு வேண்டிய பீரங்கிகள் எந்திரங்கள் ஆகியனவும் ஆயத்தமாய் இருந்தன. அன்றியும் வேறொரு கப்பற் கூட்டத்தில் 10000 வீரர்கள் வேண்டுமானபோது ஓடிவர ஆயத்தமாயிருந்தனர். கோட்டைக்குள் இருந்த பறங்கியரோவெனில் அறுபது பேர் மாத்திரமே. இவரோடு கோட்டையின் முன்கடல் மேல் பதினேழு ஆள் மட்டும் கொண்ட ஒரு சிறு போர்க்கப்பலும்
77

Page 41
யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
நின்றது. புவிராசசேகரன் இக்கப்பலையே முன்பு தாக்க நியமித்துக் கொண்டு தன் கப்பற்சேனையிலிருந்து இரு கப்பல்களைப் பிரித்தெடுத்து அவையிரண்டும் போர்த்துக்கேயக் கப்பலின் இருமருங்கும் நின்று நிறைபூசலாய்க் குண்டுமாரி வருவிக்கச் செய்தான். ஆயின் தமிழ் வீரரின் இலக்குகள் மிகப் பிழைத்துக் குண்டுகள் நடுநின்ற எதிரிக் கப்பலில் விழாமல் அப்பால் நின்ற தங்கள் கப்பலையே சேரலாயினமையைக் கண்டு வருந்தினர். பறங்கிவருர்கள் இது தெய்வாதீனமே என்று உறுதியாய் நம்பிக் கொண்டு ஒருபுச மிருபுசமாகிச் சிங்கேறுகள் போற் குதித்துத் தமிழ்க் கப்பல்களை இனிமேல் இல்லையென்ற உத்தண்டத்தோடு தாக்க, அவை ஒடித் தங்கள் போர்க்கலக் கூட்டத்திலும் பெரும் கலக்கம் உண்டுபண்ணிவிட்டன. இக்கலக்கத்தின் நடுவே வேறொரு பறங்கிக் கப்பல் தூரத்தில் வருவதையும் அதில் போர் முரசம் முழங்குவதையும் கேட்டவுடன் இதற்கிடையில் கரையிலிறங்கி நின்ற அரசனும் காலாட்களும் பெரிய சத்துருப் படையொன்று வருகின்றதென்று நெஞ்சுட்கி, விரைந்து கப்பல்களை நாடி ஓடினர். வருகின்ற கப்பலிலுமோ நோயுற்ற ஏழெட்டு வீரரன்றி வேறொன்றுமில்லாதிருந்தும் தமிழருள் திகில் மிகுந்துவிட்டது. ஒடினோர் கப்பல்களில் குதித்தலும் சில கப்பல்கள் வற்றுநேரத்தின் நிமித்தம் நிலத்திற் பொறுத்திருந்தமையால் யாவரும் ஏறி ஓடிவிட முடியாது பலர் கடலுள் பாய்ந்து நீந்தத் தலைப்பட்டனர். இதற்குள் சத்துருக்கள் கடுகிக் கைகலக்கவே நீருள் அமிழ்ந்தினோரும் வெட்டுண்டோருமாய் இரண்டாயிரந் தமிழர் உயிர் நீத்தனர். பதினேழு கப்பல்கள் பறங்கியர் கைப்பட்டன. புவிராசபண்டாரம் தன் உயிர் தப்பியதே பேரதிர்ஷ்டம் எனப் பறந்து ஒடித் தன்பதி சேர்ந்தான்.
39. மீண்டொருகால் கோட்டையை முற்றுதல்
ஆயினும் இன்னுமொருகால் முயற்சித்து மன்னாரைப் பிடித்துப்போட வேண்டுமென்ற அவா பிடர்பிடித்து உந்த, அவன் கொட்டிமூசா மரிக்கார் என்னும் தென்னிந்திய சோனகத் தலைவனோடு பொருத்தனை பண்ணிக் கொண்டு அடுத்த வருஷம் செப்டெம்பர் மாசம் மூன்றாம் திகதி வடக்கர்கள் உள்ளிடப் பன்னிராயிரம் வீரர் கொண்ட சேனையோடும், மதிலுடைப்பதற்குரிய பீரங்கிகள் எறியந்திரங்களோடும், காற்துவக்கு, நெருப்புக்கூண்டு, ஈரரிவாள் ஆகிய தளபாடங்களோடும் மன்னாருக்கெதிரே மாதோட்டக்கரையிற் பாளைய மிறங்கினான். கொட்டி மூசாவும் மன்னார்க்கடலில் பதிவிருந்து போர்த்துக்கேய ருடைய வியாபாரக் கப்பல்களைச் சூறையாட ஆசித்திருந்தான். இதுவே அக்கடலில் முதன்மை பெறுவதற்கு உவப்பான தருணமெனத் துணிந்து தன் கொள்ளைக்கார நாவாய்ப் படையோடும் புறப்பட்டு வந்துகொண்டிருந்தான்.
இவன் மன்னாரைச் சேருவதற்கிடையில் தமிழ்ப் படைகள் வத்தைகளாலும்
78

யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
கட்டுமரங்களாலும் கால்வாயைக் கடந்து கோட்டைக்கு முற்றுகை போடத் தலைப்பட்டன. எம்மவர்கள் ஆவேசமான தீர்மானத்தோடு முதனாள் காலை தொடக்கம் மத்தியானம் வரையில் கோட்டையைத் தாக்கிப் பொருதனர். ஆயின் அதைக் காத்திருந்த வயோதிப வீரனான நூனோபேணன்டேஸ் தெ அத்தாயிட் என்னும் கற்பித்தானும் படைப்பயிற்சியில் தேர்ந்த அவன் சொளுதாதுக்களும் மிகத் தைரியமாய் எதிர்த்துநின்று தமிழர் பலரை உயிரிழக்கச் செய்துவிடவே, அரசன் பின்வாங்கி, அன்றிரவு காத்திராப்பிரகாரம் கோட்டையின்மேற் பாய்ந்து அதனைக் கைப்பற்றுவதற்கான எத்தனங்களைச் சூழ்ச்சிப்போனாயினான். அர்த்தநிசியிற் தமிழர்படை கதுமெனக் கோட்டையைத் தாக்கிற்று, ஆயின் தாக்குதல் நிகழ்வதற்கு முன்னரே ஒற்றர்கள் பறங்கிக் கற்பித்தானுக்குச் செய்தி கொண்டுபோய் விட்டமையால், இவன் சாவதானமாயிருந்து முற்றுகையிடுவோரின் பிரயத்தனங்களையெல்லாம் நிஷபமாக்கி விடுதலும், அரசன் நெஞ்சழிந்து முதுகிட்டு வந்தவழி மீண்டான். மீளுகையில் ஆற்றாமையினாலுண்டான தன் கோபத்தை மன்னார்த்தீவு வாசிகளான ஏழைப் பரதவர்களிலும் பிறரிலும் செலுத்துவோனாகிச் சிலரை சிறையாய்ப் பிடித்துக்கொண்டும் ஊரவர்களுடைய மாடாடுகளைக் கவர்ந்துகொண்டும் போய்விட்டான். இதற்குள் மாதாகோவில் முனை என்றவிடத்தில் இருபத்தெட்டு வள்ளங்களைப் பறிகொடுப்போனுமா யினான். அவற்றைக் காக்க 1400 தமிழர் குடுமி தட்டிக்கொண்டு நின்ற போதிலும், நீக்கலாம்றொத்திரிகேஸ் எனும் பறங்கிவீரன் தனது ஒரே ஒரு மரக்கலத்தின் உதவியோடு அவ்வள்ளங்களையெல்லாம் பறித்தெடுத்துக் கொண்டான்.
40. மரிக்காரின் அவமானத்தோல்வி
கொட்டிமூசா மரிக்கார் தருணத்தில் வந்து புவிராசசிங்கனுக்கு உதவமாட்டாமல் காரைதீவில் (போட்டுக்கீஸ் குடா) காற்றின்றித் தடைப்பட்டுக் கிடந்தவன், அரசன் அடைந்த அவமானத்திலும் கேடான அவமானத்துக்குள்ளானான். அதெவ்வாறெனில், யாழ்ப்பாண அரசனின் யுத்த ஆயத்தங்களைச் சுட்டியும் கொட்டிமூசாவின் துணைவலியைச் சுட்டியும் மன்னார்க் கற்பித்தான் நேரத்தோடு கோவையின் பிரதிராசாவுக்குத் தூது போக்கியிருந்தமையால், பிரதிராசா உடனே அந்திரே பூர்த்தாடு தெமென்டொன்கா எனும் வெற்றி வீரத் தளபதியை இவண் அனுப்பி இவன் மன்னாரைக் காக்க உதவி செய்தபின், யாழ்ப்பாண அரசனின் கர்வத்தையும் அடக்கிவிட்டு வரவேண்டுமெனஆக்கியாபித்தான். பூர்த்தாடு இரபது ‘புஸ்தா'க் கலங்களோடு செப்டெம்பர் மாசம் 9ந் திகதி கோவையை விட்டுப் புறம்போந்திருந்தும், எதிர்க் காற்றுக்களோடு மல்லாடிக் காலந்தாழ்த்தே கொழும்பு மார்க்கமாய் மன்னாரை நோக்கி வந்துகொண ‘டிருந்தான். வரும்வழியில் காரைதீவுக் கடலில் மரிக்காருடைய இருபத்திரண்டு மரக்கலங்கள் கொண்ட
79

Page 42
யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
படையானது நங்கூரம் போட்டுக் கிடக்கக் கண்டு உடனே அவற்றைச் சருகித் தாக்குதலும், சோனகர் கரையிற் கிடந்த தம் நாவாய்களை ஆழியிற் செலுத்திப் போராடவுன்னி அவற்றைத் தள்ளிவிட முயன்றும், அவை மணல்மேடுகளில் பொறுத்துவிட்மையால் ஆற்றாது நின்று தியங்கினர். பூர்த்தாடு இதுவே சமயமென்று அன்னாரின்மேற் பாய்ந்து துப்பாக்கியாலும் கட்கத்தாலும் சங்காரம் விளைக்கத் தலைப்படவே கொட்டி மூசாவும் அவன் ஆட்கள் சிலரும் தப்பினோம் பிழைத்தோம் என்று சல்தியிற் பாய்ந்து ஒளித்துக் கரைபிடித்து ஓடி மறைந்தனர். எஞ்சிய வீரர்களையும் மரக் கலங்கள் அனைத்தையும் பூர்த்தாடு தனது செயசின்னமாகக் கைக்கொண்டான்.
மன்னாரில் சஞ்சுவாம் கோயிலடியில் பூர்த்தாடு கரை பிடித்தபோது 12 பிரான்சீஸ் சபைக் குருமாரும் யேசுசபைக் குருமார் சிலரும் 500 சொளுதாதுக் களும் 6000 பரதவர்கள் கவுரவர்களும் அன்னவனை எதிர்கொண்டழைத்து மேலாப்பின்கீழ் நடத்தி மகா ஆனந்த வைபவங்களோடு பிரதான கோயிலுக்கு அழைத்துப்போய் அங்கு இப்பெரும் வெற்றிக்காக தேவதோத்திர நமஸ்காரங்கள் செய்தனர்.
41. யாழ்ப்பாணத்தில் இரண்டாம் படையேற்றம்
அப்பால் பூர்துதாடு முக்கியமான உத்தியோகஸ்தர்களையும் குருமார்களை யும் சபை கூட்டி யாழ்ப்பாண அரசனைத் தண்டிப்பதற்குச் செல்லவேண்டியதைக் குறித்த விபரங்களடங்கியதாய் முத்திரையிடப்பட்டதாய்ப் பிரதிராசா தன்னிடம் ஒப்பித்திருந்த கடிதத்தை அச்சபையோர் கேட்க வாசித்த பின்னர், ஒக்டோபர் மாசம் 26ந் திகதி 1400 போர்த்துக்கேய வீரர்களோடும் 3000 லஸ்கறின் எனும் இந்திய காலாட்களோடும் நல்லூரை நோக்கிப் புறப்பட்டான். அவனது கப்பற்படை 20 சவள்வலிக்கும் மரக்கலங்களும், 250 தோணிகளும் கொண்டதாயிற்று. யுத்தச்செலவுக்கென அவன் அவ்வருஷத்து முத்துக்குளிப்பால் வந்த 30000 பார்டங்காசோடு மன்னார்க் கிறீஸ்தவர்களிடத்திலும் 20000 பார்டங் கடனாக வாங்கிச் சென்றானென்பது இங்கு குறிக்கத்தக்கது.
இந்த யுத்த சன்னத்தைச் செவிமடுத்த புவிராசசிங்கனும் போருக்காயத்தமாகி SEĐứu JT60d6dä5 3560DJuî6ò (Vide Kings of Jaffna p.43. ni 81) (ObbsTibmJäbg5 G3LDÖULL தன் மரக்கலங்களைப் பொறுக்கவைத்து மணற்திடல்களையே மதிலாகக் கண்டு அவற்றின் மறைவில் காற்துவக்குகளையும் நிரைத்துக்கொண்டு சத்துருவைக் காத்திருந்தான். பூர்த்தாடு அவ்விடத்த்ை தாண்டிக் கொளும்புத்துறைக்குச் செல்லவே, அரசனும் அங்கு விரைந்து அத்துறையின் அண்மையில் நாட்டியிருந்த
80

யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
முள்ளம்வேலிமிளையில் நின்று சன்னங்களை, தீக்குண்டுகளை, அம்புகளைப் பொழிந்தனன். பொழிந்துமென்? பறங்கியர் தமிழரைக் கரைக்கு அருகாமையில் அண்டவொட்டாது பீரங்கிகளாற் குண்டுமாரி பொழிந்து இடம் பிடித்துக்கொண்டு ஒரு விக்கிரமசிங்கனோடு (தளபதி) 150 வீரர்களையும் 200 லஸ்கறின்களையும் இறக்கிவிடுதலும் இவர்கள் முன்னாடியே போய்த் தமிழரோடு கைகலந்து சமராடி வென்று முள்ளம்வேலி அரணைப் பறித்தெடுத்துக் கொண்டனர். இப்போரில் அரசனின் Brauco என்னும் முதலியாரும் 250 வீரரும் உயிர் நீத்தனர் இரு பீரங்கிகளும் 300 துவக்குகளும் வேறு பல ஆயுதங்களும் மருந்து குண்டுகளும் பறங்கியர் கைப்பட்டன. இவ்வெற்றியின் உற்சாகத்தினால் மேலும் 400 பேர் கரையிலிறங்கிவிட சற்றுக்குள் பறங்கிச் சேனை முழுதும் அவ்வாறு செய்தது.
உடனே படையெல்லாம் அணிவகுத்துக் கடற்கரை மார்க்கமாய் நடந்து குருசுக்கோயில் என்ற இடத்தைச் சேர்ந்தது. இந்த இடத்திலேயே பிற்கால் சம் துமிங்குவின் மடம் கட்டப்பட்டதென்பது பிரசித்தமாகையால், இது தற்கால புறோட்டஸ்தாந்த சஞ்சுவாங்கோயிலுக்கும் மேற்றிராசனக்கோயிலுக்கும் இடைப்பட்ட ஒரு பிரதேசமென்பது தேற்றம். சேனை இங்கு இராத் தங்கிற்று. அயலிலே, பண்ணைத்துறையிலே தம் சென்மசத்துருக்களாகிய சோனகரின் கிட்டங்கிகளிருக்கக் கண்டு அங்கு சில போர்வீரர்கள் போந்து10000 கண்டி செங்கல்லும் 400 கண்டி அரிசியும் பறித்தெடுத்துக் கொண்டனர். வைபவமாலையுடையார் சோனகரின் கிட்டங்கிகளையே பறங்கியர் சங்கிலியை அறியாமற் கட்டிவைத்த வர்த்தகசாலையென்று மயங்கி எழுதிவைத்தனர் போலும். தமிழரால் 1560ம் ஆண்டில் துரத்துண்ட பறங்கியர் மீண்டு படையெடுத்து வந்தது, சங்கிலியன் மாண்டு மண்ணாய்ப்போய் பல வருஷம் சென்றபின். அதாவது 1591ம் ஆண்டிலாம் என்பது உண்மையாயிருக்க, இவற்றை அறியாமல் அச்சங்கிலியன் துரத்திவிட்ட அடிக்குள்ளேயே காக்கை வன்னியன் அன்னோரை மீண்டும் இட்டுக்கொண்டு வந்தான் என வரைந்து வைத்தவர், வர்த்தகசாலையைப் பற்றிய மாறுபாட்டினையும் உட்கொண்டது ஆச்சரியமன்று. காக்கைவன்னியன் சங்கதி மேல்வரும்.
42. புவிராசனின் அபசெயம்
28ந் திகதி அதிகாலை பறங்கியர் தம் சமயநிஷ்டைகளை முடித்துக்கொண்டு, குருமார் ஆசி சொல்ல எழுந்து நல்லூரை நோக்கி நடத்தலும், வழியில் (யாழ்ப்பாணத்துப் பூர்வ தலைநகரின் ஞாபகமாய்ப் போலும்) சிங்கைநகர் எனப் பெயர் தரித்த முள்வேலி அரணில் தமிழர் சத்துரு படையை வீராவேசத்தோடு தாக்கிச் சமராடினர். குண்டு, அம்பு, தீக்குண்டு, கற்களின் திரள் கார்மேகம்போல்
81

Page 43
யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
நெருங்கிப் பறங்கியர் மேல் வருவழித்துக் கொண்டிருந்தது. இவர் பக்கத்து விக்கிரமசிங்கன் இராசசிங்கனிடத்தில் கவர்ந்த இளம் பச்சை வர்ண யானைக் கொடி முன்செல்ல, கையில் நெடியதோர் ஈட்டிபிடித்தவனாய் முன்னனணியை நடத்திக்கொண்டு அஞ்சாத திடவிரத்தோடு ‘சந்தியாகூ” எனப் போர்சத்தமிட்டு தமிழர்சேனையுட் புகுந்தான். பூர்த்தாடுவும் தீவிரித்துவந்து பறங்கியருக்கு உயிர்கொடுத்து ஊக்கிவிடுதலும், இரு கட்சிகளுக்கிடையில் விண் மண் தெரியாத வெஞ்சமர் நிகழ்ந்தது. முற்பகல் பத்துமணிவரையும் காடையும் புழுதியுமாய்ப் பிடிபட்டு உடைபட்டு, வெட்டுண்டு குத்துண்டு, ஈற்றில் சத்துருக்களே செயபேரிகை முழங்கலாயினர். அப்போர்க்களத்தில் ஓடாதுநின்று ஆடிய தமிழன் ஒருவனாதல் உயிர்கொண்டு தப்பினானில்லை. தமிழன் சேனாநாயகமாகிய காக்கு (Gago) என்பவன், புவிராசசிங்கனின் மருகன், பறங்கியர் சமீபித்துவருகையில் இவனிடம் சென்று இவனை ஒடித்தப்பிவிடுமாறு மிகக் கெஞ்சியும், இவன் மருகனை பேடியென்று பரிகசித்து யாதுவரினும் போரேயாடவேண்டுமெனப் போக்கிவிட்டிருந் தான். காக்கு வீரசூரமாய்ப் பொருதியும் பறங்கியருக்காற்றாத அன்னோர் கையால் இறந்தோரில் ஒருவனானான். இவனது தவசமும், மாமன் இவனுக்குச் சன்மானமாய் அளித்திருந்த சங்குக்கேடயமும் சத்துருக்கள் கைப்பட்டன.
அப்பால் பறங்கியர்கள் இருகோயில்களுக்கிடையில் (வீரகாளியம்மன் கோவிலுக்கும் கநதசுவாமி கோயிலுக்கும் இடையிற் போலும்) முன்னேறி வருதலும், அரசனின் ‘அத்தபத்து படையானது கேடயக்காரரும் வல்லையக் காரருமாய்த் திரண்டு எழுந்து, சத்துருவை அப்பாற் செல்ல விடுவதிலும் உயிரை மாய்த்தலே நன்று எனமுனைந்து எதிர்க்கலாயிற்று, அந்த மிகக் கொடுரமான போரின் கண்ணே அகப்பட்ட தமிழர் அனைவரும் மாண்டார், அன்னோரை உற்சாகப்படுத்திக் கொண்டுநின்ற யோகியும் மாண்டான். பெரிய ஆலயத்து (கந்தசுவாமி கோயில்) பிராமணனும் மாண்டான்.
காயப்பட்டு வீழ்ந்த தமிழ் வீரருள் இராசகுடும்பத்தவனான எதிர்மன்னசிங்க குமாரனும் (Hendermanacinga Cumara) ஒருவன். இவன் இரு ஈட்டிக் காயல்களால் உதிரம் பெருக, காதுகள், கடுக்கனை யாரோ பிடுங்கி எடுத்தமையினாற் கிழிந்தவனாய்ப் பாட்டத்திற் கிடந்துகொண்டு யான் பெரியபிள்ளையின் மகன் என்னைக் கொல்லாதீர்கள் எனக் குழற, சீமான்பிஞ்ங்ண் எனும் ஓர் போர்த்துக்கேய வீரன் இவனைத் தன்பக்தாரிலிருந்தும் விடுவிக்கும் பொருட்டு ஓடி வருகையில் தானும் காயப்பட்டு, குமாரன் முதுகில் மிதித்துக்கொண்டே அப்பால் வெட்டு விழாமல் பாதுகாத்திட்டான். உடனே பூர்த்தாடுவைக்கூவி அவனிடம் இராச குமாரனை ஒப்புவிக்கவே அவன் இவனுக்கு அபயங் கொடுத்து, தான் அணிந்திருந்த பொற்சங்கிலியை இவன் கழுத்திலிட்டு, முதுகில் ஓர் காப்பை (Capadogram) போர்த்து, சிரசில் அலங்காரமான இறகுகள் சோடித்த தொப்பி அணிவித்து, இடையில் வெள்ளி பதித்த கட்கமொன்றைத் தரிப்பித்து
82

யாழ்ப்பாண வைபவ விமர்சனம் உபசரித்தான். அப்பால் பூர்த்தாடு போராடுதலை நிறுத்தி, ஓர் கோயிலில் போய் ஒளிந்திருந்த அரசனை உடனே பிடிப்பித்து தன் சமூகத்திலே சிரங் கொய்வித்தான். புவிராசபண்டாரத்தின் தலை சில நாட்களாய் ஓர் ஈட்டி நுனியில் குத்தி எல்லோருங் காண நடப்பட்டது.
பின் சொளுதாதுக்கள் தம் வழக்கப்படியே அரசமாளிகையைச் சூறையாடுவோரானார். அதன் திரவியங்களோ அளவிறந்திருந்தன. கண்டெடுத்த திரவியக்கணக்கு ஒப்பித்தலைச் சுட்டி பூர்த்தாடு தன் போர்த்துக்கேய அரசனிடம் பின்னர் பெருஞ்குறை கேட்பவனுமானான். இராசகுடும்பத்தவர் அனைவரும் யுத்தமறியற்காரரானார். அவர்கள் யாரெனில் வெட்டுண்ட அரசன் மனைவியாகிய இராணியும், ஐந்து குமாரரோடும் இரண்டு குமாரத்திகளோடும் கூட மற்றொரு இராணியும், அரசனின் குமாரத்தியாகிய காக்கு குமாரனின் மனைவியோடு இரண்டு குமாரத்திகளும், சங்கிலி குமாரனோடு அவனது இரட்டையனான சகோதரனும், முற்கூறிய எதிர்மன்னசிங்க குமாரனும் அவன் தம்பியுமாம். முந்திய அரசர்களின் மக்களாகிய ஏழு குமாரரும் இவர்களோடு சேர்ந்துள்ளார். இக்குமாரருள் இருவர் காசிநயினாரின் மக்களாம். (Queiroz p. 348)
43. காக்கை வன்னியன்
வைபவமாலையின் மாறுபாடுகள் சில இங்கு குறிக்கற்பாலன. புவிராச பண்டாரம் பறங்கிச் சேனாதிபதி சமூகத்தில் கொண்டுவரப்பட்டு, இராசதுரோகத் தின் நிமித்தம் தலையிழந்து சாக, அவனுக்கு ஒர்கால் நூற்றாண்டுக்குமுன் இறந்தொழிந்தவனான சங்கிலியே வெட்டுண்டான் என்றதும், அச்சங்கிலியின் அரசையும் இவன் அரசையும் ஒன்றாக்கிக் கூறியதும் ஒரு மாறுபாடு. காக்கு எனும் சேனாதிபதி தன் மாமனான இராசனைத் தேடிப்போய்ப் புத்தி கூறியதை மாற்றி காக்கைவன்னியன் அரசனைப் பிடித்துக் கொடுத்தானென்றது மற்றொன்று. காக்கு எனப் போர்த்துக்கேயர் காட்டுவது இயற்பெயரோ அன்றிப் பட்டப்பெயரோ அறிகிலேம். Gago என்பது அவர் பாஷையில் கொன்னையன் எனப் பொருள்படும். ஓர்வேளை ‘கொன்னையன்’ எனும் பட்டப்பெயர் அரசனின் மருகனுக்கு இருந்ததேயோ? அப்படியாயின் காக்கு என்ற பரபாஷைச்சொல்லோடு தமிழ்ச் சொல்லையும் ஒட்டி யாழ்ப்பாணத்தார் பிற்காலம் அவனைக் காக்கு கொன்னையன் என்றழைத்தமையால் அதுதான் காக்கைவன்னியன் என வந்ததேயோ? எது எவ்வாறாயினும் மயில்வாகனப்புலவர் பறங்கியர் காலத்து யாழ்ப்பாண அரசர்களைப்பற்றி வரைந்துவைத்தனவெல்லாம் தலைதடுமாற்றமான தப்பறைகளேயன்றிச் சரித்திரமல்ல என்பது இதுவரையில் எம் பாராயணர்கட்கு விகசிதமாகாதிராது.
83

Page 44
யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
44. சீமான்பிஞ்ஞனும் இராசகுமாரனும்
இவை நிற்க: எதிர்மன்னசிங்க குமாரனை சீமான்பிஞ்ஞன் என்பவன் சீவமோசத்தாற் காத்த சம்பவம் எம் இலங்கையிலேயே அக்காலம் கல்லில் பொறிக்கப்பெற்றிருத்தல் அறியத்தக்கது. பிஞ்ஞன் மகாவீரன். பிரபுக்குலத்துக்குச் சேர்ந்தவன். அதனால் காலகதியில் உத்தியோகத்தில் உயர்ந்து தென்பாகங்களிலே பல போர்களிலே சேனாநாயகமாய்த் திகழ்ந்ததுமன்றி, நிகபித்தியன் எனும் சிங்கள அரசகுமாரனின் சகோதரியும் சீதாவாக்கையின் இராசசிங்க அரசனின் உரிமைக்காரியுமான தோனாமரியை எனுங் குமாரத்தியை மனைவியாக்கிக் கொள்வோனாகிச் சப்பிரகாவின் திசாவையாயும் அமர்ந்தவன். 1609ம் ஆண்டளவில் இவன் மரித்தபோது இவனுக்கு ஞாபகச் சின்னமாய் இரத்தினபுரிப்பகுதியில் நிறுவப்பட்ட ஓர் சிலையில், இவன் யாழ்ப்பாண அரசனாக வந்திட்ட எதிர்மன்னசிங்க குமாரனை மரணத்தினின்று காத்த பாவனையாய் ஓர் சித்திரமும் அதன் கீழ் ஓர் கல்வெட்டும் செதுக்கியிருக்கிறது. சித்திரம், குமாரன் தரையில் வீழ்ந்துகிடக்க, பிஞ்ஞன், வலக்கையில் ஓர் கட்கமும், இடக்கையில் கேடயமும் பிடித்து இடக்காலைக் குமாரன்மேல் வைத்துக்கொண்டு நிற்பதாகக் காட்டும். போர்த்துக்கேயத்திலுள்ள கல்வெட்டின் மொழிபெயர்ப்பு பின்வருமாறு:
இந்த வாளினால் இவனை வென்றேன். நான் இந்தியாவுக்கு வந்து 23 வருஷம் ஆயிற்று. 16 வருஷமாய்க் கற்பித்தான் வேலையில் அமர்ந்துள்ளேன். என் பாதவடியிற் கிடக்கின்றவன் யாழ்ப்பாணப் பட்டினத்து அரசன். இவனை சீமான்பிஞ்ஞன் ஆகிய யான் செயித்தேன் என்பது. பிஞ்ஞன் இறந்தபின் இந்தக் கல்வெட்டு எழுதப்பட்டமையால் அவனை மெச்சியோரால் ‘அரசனை யான் வென்றேன்’ என்று சற்றே சரித்திரத்துக்கு மாறாய் வரையப்பட்டது. இஞ் ஞாபகச்சிலை சப்பிரகமுவாவின் மகாசமன் தேவாலயத்தில் இருக்கின்றது. இதனைப்பற்றிய சகல விபரங்களையும் இதன் பிரதிமைப்படத்தையும் எமது History of the Catholic Church in Ceylon I 61g0lb b|T65g) 35605(6GET6irs.
45. எதிர்மன்னசிங்க குமாரனாகும் எட்டாம் பரராசசேகரன்.
1591 - 1616
தங்களது மேலாட்சிக்கு மாறாய்த் துரோகம் செய்து பிழைபட்ட புவிராச பண்டாரத்தைத் தொலைத்துவிட்டு யாழ்ப்பாணத்தை இரண்டாம் முறை கைப்பற்றிய சந்தோஷ சமபவத்தினுக்காகத் தேவதோத்திரங்களைச் செய்து முடித்தவுடன், பூர்த்தாடு இராச்சியத்தின் முதலிமார்களையும் பிற
84

யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
தலையாரிகளையும் ஒருங்கு கூட்டி, தாங்கள் பிரசைகளுடைய சுதந்திரங்களுக்கும் நல் ஆசாரங்களுக்கும். விக்கினஞ் செய்வதில்லையென வாக்குறுதி கூறி, இவர்களைப் போர்த்துக்கேய அரசனுக்கு இராசவிசுவாச சத்தியங் செய்யும்படி ஏவினான். அதற்கு முதலிமார் ஆதியோர் மனப்பூர்வமாய்ச் சம்மதித்தலும், சத்தியம் செய்து கொடுக்கும் சடங்கு வெகு ஆடம்பரமாய் நிறைவேறியது. அதன்மேல் பறங்கியர், யாழ்ப்பாணத்தார் தம் சொந்த அரசனில் என்றும் அபிமானமுடையோராகவே, அன்னியர்களாகிய தாங்கள் அன்னாரை அரசாள்வது நன்றன்று, தமிழ் இராசகுமாரன் ஒருவனே செங்கோலோச்ச வேண்டுமென்று சங்கத்தில் தீர்மானித்து, எதிர்மன்னசிங்க குமாரனைப் பரராசசேகரன் என்னும் சிங்காதனப் பெயரோடு திறை அரசனாக்கிவிட்டனர். முன் ஆண்ட புவிராசபண்டாரம் உரிமையில்லா அரசனாகையால் அவனை எட்டாம் பரராசசேகரன் என்று மதிக்கப்படாமல் இவனே எட்டாவதானான். இவ்வொழுங்கீடு தக்ககாலத்திலே கோவைப் பிரதிராசாவினாலும் அங்கீகரிக்கப்படலாயிற்று.
அப்பால் இராச்சியத்தில் மீண்டும் கலகம் எழுப்பக்கூடியவர்களாக எண்ணப்பட்ட எண்ணுறு வடக்கர்களுக்கும் சோனகர் சிலருக்கும் சிரசாக்கினை விதிக்கப்பட்டது. துறைகளுள் நின்ற வள்ளங்களுள், அரசனுக்கென விடப்பட்ட இரண்டு போக, மற்றவையெல்லாம் அக்கினிக்கிரையாக்கப் பெற்றன. மன்னாரிலிருந்து வந்தவர்களில் ஒரு நூறு பறங்கிவீரர்கள் மூன்று கப்பல்களோடும் யாழ்ப்பாணத்தில் தங்க ஏற்பாடாயிற்று. மீளவும் அரசன் பரிந்து கேட்டமைக்கிசைந்து அவனுக்குக் காவலாகக் கஸ்பார் றொத்திரிகேஸ் என்னும் முதலி 200 லஸ்கறின்கள் சகிதமாய் அரண்மனையில் நிறுத்தப்பெற்றான். இந்த ஒழுங்கெல்லாம் பண்ணி முடித்தபின் அந்திரேபூர்த்தாடு தெமென்டொன்சா மன்னார் வழியாய்க் கோவைக்கும் பயணமானான்.
வைபவமாலையுடையார் பறங்கியர் சிங்காசனமேறிய இவ்வெட்டாம் பரராசசேகரனையே பரராசசிங்கன் எனப் பண்ணுகின்றார் போலும். ஆயின் இவனைப் பரநிருபசிங்கனின் மகன் என்றதும் அப்பரநிருபசிங்கனே பறங்கியரால் முன்பு தம்கீழ் அரசனாக்கப்பெற்றானென்றதும் அபத்தங்களாம். பரராசசிங்கனைச் சுட்டி அவர் கூறுகின்றவை பின்வருவன:
அதன்பின் பரராசசிங்கத்தை அரசாட்சியின் ஆலோசனைத் தலைவனாக்கிச் சங்கிலி எழுதிவைத்தபடியே அவனுக்குப் பரராசசிங்கமுதலியென்றும் அவன் குலத்துக்கு மடப்பனி என்றும் பட்டஞ்சூட்டி அவனையும் பிதாவை நடத்தினது போலக் கனப்படுத்தி நடத்தி வந்தார்கள். பரராசசிங்கமுதலிக்கு மரணகாலங் கிட்டினபோது, அவன் தன் ஏழு குமாரர்களையும் வரவழைத்துத் தன் ஆஸ்தி களைப் பங்கிட்டுக் கொடுத்தான். அழகாண்மைநல்லமுதலிக்கு நல்லூரையும்
85

Page 45
யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
கள்ளியங்காட்டையும் கொடுத்து நல்லூரிலுள்ள தன் மாளிகையிலிருத்தினான். தனபாலசிங்கமுதலிக்கு மல்லாகத்தைக் கொடுத்து அதிலிருத்தினான். வெற்றிவேலாயுதமுதலிக்குச் சண்டிலிப்பாயைக் கொடுத்தான். விசயதெய்வேந்திர முதலிக்கு அராலியைக் கொடுத்தான். திடவீரசிங்கமுதலிக்கு அச்சுவேலியைக் கொடுத்தான். சந்திரசேகரமாப்பாணமுதலிக்கு உடுப்பிட்டியைக் கொடுத்தான். இராசரெத்தினமுதலிக்குக் கச்சாயைக் கொடுத்தான். இவர்களன்றி வேதவல்லி எனும் ஓர் மகளுமிருந்தாள். அவளுக்கு வேளாள குலத்தில் விவாகஞ் செய்வித்து மாதகலைக் கொடுத்தான்.
பரநிருபசிங்கன் கோவைக்குச் சென்று கிறீஸ்தவனாகி அங்கு 1560ம் ஆண்டின் முன் அதாவது பறங்கியர் யாழ்ப்பாணத்திற் கால் வைக்கு முன்னரே இறந்து விட்டான். பரராசசிங்கன் என்பவன் எதிர்மன்னசிங்ககுமாரனாகிய பரராசசேகரனே எனில் இவனுக்கு மைந்தன் ஒருவன் மட்டுமே. அவனும் பின்னர் நாம் காணப்போகின்றபடி கிறீஸ்தவ சன்னியாசியாகி அன்னியதேசம் போய்த் தொலைந் தான். ஆதலால் பரராசசிங்கனுடைய எட்டு மக்களின் கதையும் அன்னாருக்கு உபகசித்த ஊர்களின் கதையும் முயற்கொம்பாகிறது. இராசகுமாரனின் சந்ததியார் குடியேறி இருந்த அவ்வவ்வூரைக் கண்ணியப்படுத்தும் பொருட்டே பரராசசிங்கனின் மக்களைப் பற்றிய ஊர்க்கதை எழுந்தது போலும்.
46. மடப்பளிப்பட்டம்
இனி பறங்கியர் பரராசசிங்கனின் குலத்துக்கு மடப்பளி எனும் பட்டஞ் சூட்டினர் என மயில்வாகனப்புலவர் கூறுகின்றதை ஆராய்வாம். இப்பட்டத்தை ஆதியிற் சங்கிலியே பரநிருபசிங்கனுக்கும் மகனுக்கும் சூட்டி வைத்தனெனவும் இதன் பொருள் மடப்பம் + ஆளி = ஐஞ்ஞாறு கிராமத்துக்குத் தலைமையாம் எனவும் புலவர் தாமே முன்னோரிடத்திற் கூறியுள்ளார். தம்மோடு ஏககாலத்தவராகிய வரதபண்டிதர் “கிள்ளைவிடது'திலே ‘வெற்றிவிடைக் கொடியர் மேலாரியர்குலத்தி லுற்றமட்பளியிலுள்ளோரும் என்று இப்பெயரின் உண்மை உற்பத்தி விளங்கப் பாடியதையாதல் புலவர் நோக்காது விட்டமை ஆச்சரியமே. இவர் சரித்திர உண்மையை உணராமல் வலிந்து எடுத்த சொற்பொருளைக் கொண்டு ஒரு காரணம் சொல்லியதுபோல எங்காலத்தின் சரிதாசிரியரொருவரும் அரண்மனையின் மடைப்பள்ளியில் (அடுக்களையில்) வேலை செய்த உயர்குல (?) வேளாளருக்கே மடைப்பள்ளியார் (அட்டிற்காரர்) எனும் பட்டம் லபித்த தென்றும், அரசனுடைய அட்டிற்கார இராச மடைப்பள்ளியாரென்னப்பட, குமாரர்க ளுடையோர் குமார மடைப்பள்ளியாராகிவிட, மந்திரசங்கத்தாருடையோர் சங்கமடைப்பள்ளி, சர்வமடைப்பள்ளியாரென்னப்பட்டார் என்றும் எடுத்திசைப்பர். முரீ அ. முத்துத்தம்பிப்பிள்ளை; யாழ்ப்பாணச்சரித்திரம்) இவர் இருவரும் வெவ்வேறு உற்பத்தியுள்ள பதங்கள் ஒரே வடிவாய்த் தோன்றுதல் எல்லா
86

யாழ்ப்பாண வைபவ விமர்சனம் மொழிகளிலும் உண்மையை அவதானியாது தமக்குத் தோன்றிய அர்த்தத்தினின்றும் கற்பனாசரித்திரம் உருவாக்கத் தொடங்கி இடர்ப்பட்டனர்.
யாழ்ப்பாண அரசகுலத்தவர்களது மடப்பளிப்பட்டம் 600 கிராம அதிகாரப்பொருளுள்ளதுமன்று. அடுக்களைப் பொருளுள்ளதுமன்று. அது வடநாட்டிலுள்ள ஒரு ஊர்ப்பெயராம். இப்பெயர்கொண்ட ஊர்கள் தற்காலத்திலும் இந்தியாவில் இரண்டிடத்துள்ளன. ஒன்று நிசாமுடையதேச ரெயில்வே ஸ்தானங்களுள் ஒன்றாகிய மதீனாவுக்கு அணித்தாயுள்ளது. மற்றது எல்லூரின் சமிபத்திலிருப்பது. பண்டைக்காலத்து மடப்பள்ளிப்பேர்கொண் ஊரோ கலிங்கதேசத்தின் கத்தவாடிப் பிரிவிலிருந்ததாம் 1201ம் ஆண்டு ஏப்றில் மாசம் 19ந் திகதி கதிக்குச் சரியான காலத்தைக் காட்டுகிறதும் பேஸ்வாடாவிலுள்ளது மான ஓர் கல்வெட்டிலே காத்தாவாடியின் மடப்பளியூரான் மகாமண்டலேஸ்வர ருத்திரதேவராசா என்போன் ஒரு ஆலயத்துக்கு நேர்ந்த காணிக்கை குறிக்கப்பட் டிருக்கிறது. மகாமண்டலேஸ்வர ருத்திரராசாவின் புத்திரி கோடபய்யல்லமகாதேலி கத்தவாடியின் மடப்பளியில் வசித்தவளின் தூண் கல்வெட்டொன்று அமராவதியிலுமுண்டு. இவற்றால் மடப்பளி என்பது சிற்றரசர்கள் வாழ்ந்த ஓர் கிராமமென்பது வெளிப்படும். பள்ளிப்பெயர்கொண்ட வேறுபெயர்களும் பல கலிங்கதேசத்திலுள்ளன. அவை சத்தனப்பள்ளி, சிந்தப்பள்ளி, மொட்டுப்பள்ளி, (35 g5 Ju6irós (pg565u60T. (Ancient Jaffna pp. 388-9)
ஆகவே கலிங்கதேசத்து மட்ப்பளியூரிலிருந்து வந்த அரச குடும்பத்தவர்களே மடப்பளியார் என்றழைக்கப்பட்டனர் என்க. வையா அடிதலைமாற்றிக் கூறும் குழாம்பல் வரலாற்றிலே மட்ப்பளியார் குடியேறிய சாதியாக குறித்திருத்தலையும் காண்க (முன் 41ம் பக்கம்) இனி காரைக்காலினின்றும் வந்தோர் காரைக்கால் வேளாளர் எனப்பட்டவாறு இவர்களும் பிற்காலம் மடப்பளி வேளாளராயினர். அரச வமிசத்தார் பெரும்பான்மை வேளாண் குடும்பங்களில் பெண்கொண்ட போதிலும் மடப்பளிப்பட்டமே என்றும் விரும்பிக் கையாளப்பட்டது பறங்கியரோடு நம் அரசர்கள் தொலைந்து குமாரர்கள் தாம் ஆங்காங்கு கிராமத்தலைவர் களாய்க் குடியேறியமையால் குமாரர் மடப்பளி மிகுத்தது. இனி ஒல்லாந்தர் காலத்தில் மடப்பளி பட்டத்தை ஆசித்துப் பலர் பொருள் கொடுத்துப் தம்மை அவ்வரியில் எழுதிவித்தமை பிரசித்தம், மடப்பளி கலவாத சாதியும் தாளியாத கறியும்’ என்ற ஊர்ப்பேச்சையும் நோக்குக. இவ்வாறு எழுதிவித்தோரே சங்கைமடப்பளி என்றும் (இழிவுநோக்கி) சருகுமடப்பளி என்றும் பரவை வழக்கில் ஏற்பட்டனர் போலும், பிற்காலம் ‘உலக்கை தேய்ந்து உளிப்பிடியானவாறாய இராசகுலத் தளுக்கெல்லாம் இழுக்குப்படவே, வீழ்குடி உளவர் தாமும் மடப்பளியாரோடு சமனாகியதோடமையாது. இவர்களை தாழ்த்திப் பேசவும் தலைப்பட்டனர். அன்னிய அரசர் ஆட்சியின் கீழே, பிரபுத்துவ சிறப்புரிமைகள் இல்லாதுபோன காலத்திலே, இனி நாமெல்லாம் ஒத்தபுத்தியாய் வாழ்வதை
87.

Page 46
யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
யொழித்து “முந்திவந்த தீவார் பிந்திவந்த தீவாரை இகழ்ந்து” பான்மையாய் ஒருவரொருவரை யிகழாது சமாதானத்தைச் சுகிப்பதே தகுதியென்க.
47. உள்நாட்டுக்கலகம்
பரராசசேகரன் தன்னை அரசாள வைத்தோர் பேரில் மிக விநயமுள்ளவ னாயிருந்தனன் என்பது சொல்லாமலே விளங்கும். தன்னோடு ஊடாடிய பறங்கிய ருக்கெல்லாம் சன்மானங்கள் வழங்கியும் அன்னோர்க்கு இலகுவாய்ச் செவி கொடுத்தும் வருவான். இதனால் பறங்கியரும் இராச்சியத்துட் தன்மனம்போன படியெல்லாம் தாறுமாறுகள் விளைக்கத் தலைப்பட்டமை இயல்பே. இது முதலியாருக்கும் தலையாரிகட்கும் போதாததாயிற்று. நாடெல்லாம் மனப்புழுக்கம் உண்டுபட்டது. படவே, முதலியாருள் ஒருகட்சியார் பரராசசேகரனைச் சிங்காசனத்தால் அழுத்துவிழுத்தித் தஞ்சாவூரிலிருந்து அரசகுமாரனை அதிலேறச் சூழ்ச்சிசெய்தனர். சோனகரும் வடக்கரோடு மறவருஞ்சேர்ந்த சேனையொன்று அரசகுமாரனை ஆதரிக்க முற்பட்டது. தஞ்சாவூர் நாயக்கனும் கண்டியரசனான விமலதர்மசூரியனும் அவன்பரிசமாயினர். இச்செய்தி 1592 மி ஆண்டு ஆகஸ்துமாதம் 4 ம் திகதி பரராசசேகரன் செவிக்கேறவே உடனே இதனை மன்னார்க் கற்பித்தானுக்குச் தெரிவித்தலும், இவன் தாமதமின்றி மனுவேல்தெ அத்தாயிட் என்பவனது தலைமையின்கீழ் ஒரு முதலியாரைப் படைத்துணையோடு நல்லூருக்குஅனுப்பிவிட்டு, இரு போர்க்கப்பலும் ஏழு தோணிகளுங்கொண்ட கடற்படையொன்றை விரைந்து ஆயத்தப்படுத்திக்கொண்டிருந்தான்.
அத்தாயிட்டும் முதலியாரும் நல்லூரைச் சேருதலும் ஊர் முழுதும் அரசனுக்கெதிராய்க் கொதித்துக் கொண்டிருக்கக் கண்டு இவனைக் கரையூரில் அந்நால் உருவாக்கிக் கொண்டுவந்த பறங்கித்தெருவில் போய் ஒதுங்கும்படி செய்தனர். அடுத்த நாள் அரசன் தஞ்சாவூரினின்றும் புறப்பட்டுவிட்டானெனவும், பன்னிரண்டு தோணிகளோடும் போதிய வீரர்கள் யுத்தசம்பாரங்களோடும் வருகிறானெனவும் செய்தி பிறந்தது. பிறக்கவே அத்தாயிட் இதுவரையில் ஆயத்தமாகியிருந்த மன்னார்க் கப்பற்படையோடு அவனை எதிர்கொண்டு போகத் தீவிரித்தான். பிற்றைநாள் அரசகுமாரனின் கப்பற்திரள் தலைமன்னாருக் கணித்தாய்த் தென்பட்டது. அத்தாயிட் காத்திருந்து வடக்கர் கரையிறங்கியும் இறங்காமுன்னரே அன்னாரை வாளாற் சருவித் தொலைத்துவிட்டான். இறங்கியோடினோர் முதலியாரின் கையிற் சிக்கிக்கொண்டனர். அன்று 400 வடக்கர் மாள, 200 பேர் கைதிகளாக்கப்பட்டனர். இவருள் அரசகுமாரனின் மனைவியும் ஒருத்தியாயினள், வெற்றியாளர் போரிற் கைக்கொண்ட திரவியங்க ளோடும் ஒட்டோலக்கமாய் யாழ்ப்பாணத்துக்கு மீண்டு அரசனை நல்லூர் அரண்மனையில் இருக்க வைத்தனர். எழு எட்டுத் தலையாரிமாரின் தலைகளை வெட்டிவிட்டதோடு இராச்சியம் மறுபடியும் அமரிக்கை அடைவதாயிற்று,
88

யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
48. அரசனும் பறங்கியரும்
மேலாட்சியுரிமை பூண்டோரான போர்த்துக்கேயர் இவ்வாறு அரசனுக்கு என்றும் சகாயராயிருந்தபோதும் இவன் அவர்மாட்டுக் களங்கமின்றிய மனது படைத்தவனாயிருந்தானில்லைப் போலும். ஒருகால் சிங்கள அரசனான விமலதர்மசூரியனுக்கு இவன் சணுவாயிருக்கிறானென்றும், வடகரையினின்றும் போர்வீரர்கள் யாசகரான யோகி வேஷத்தோடு தன் இராச்சியத்தினு டு கண்டிக்குப் போக இடங் கொடுக்கின்றானென்றும் கதை பரம்புவதாயிற்று. இப்படிற்றொழுக்கத்தைக் கேள்வியுற்ற மன்னார்க் கற்பித்தானாகிய சில்வெஸ்டர் தெ அறேஸ் என்பவன் ‘சந்தோமைக் கப்பற்படைக் கற்பித்தான் சகிதமாய் இவனை விரட்டிக் கழற்றுதலும், இவன் பல்லைக்காட்டிக் கெஞ்சி, வடகரையி னின்றும் போர்வீரர்களொருவரும் கண்டிக்குப் போனாரில்லை, யோகிகளே யாசகத்தின் பொருட்டுச் சிவனொளிபாத யாத்திரை போகின்றவர்களென்று வகை சொன்னான். இதனால் பறங்கியர் சாந்திப்படாமை கண்டு அன்னோரைத் திருப்தியாக்கும் பொருட்டுக் குறித்த யோகிகளில் 300 பேரை முதலிமார்கள் மூலமாய்ப் பிடிப்பித்துப் பின்கட்டாய்ப் பிணித்து பறங்கி இலிகிதன் முன்னிலையில் இவர்களைக் காரைதீவிற் தோணியேற்றி வடகரைக்கு அனுப்பிவித்தான். யோகிகளும் அரசனைத் திட்டிச் சபித்துக்கொண்டு அக்கரைப்பட்டனர்.
பறங்கியரைச் சாந்தியாக்க எவ்வாறாக வருந்தியும் எம்மரசன் மீண்டும் மீண்டும் கலக்கத்துக்குள்ளானான் போத்துக்கேயக் குடிகளுக்கும் சுதேசகிறிஸ்தவர்களுக்கும் அரசன் காலத்துக்குக் காலம் நிலம் புலங்களை அளிப்பதிலும் தன்தேச பரிபாலனவிஷயங்களிலும் தன்மனம்போலச் செய்யவிடாது மன்னார்க் கற்பித்தான் ஆகியோர் நெருக்கிடை பண்ண முயன்றனர். அரசன் கொடுக்கவேண்டிய 12000 ‘பாதம் எனும் திறைக்கணக்கிலும் சோலிசெய்யலானார் ஒருகால் அப்பன்னிராயிரத்துக்குப் பதிலாய் பன்னிரு யானை கேட்பார். யானையைக் கைப்பற்றிக் கொண்டபின் அம்மிருகங்களை வைத்துக் கொண்டே காசையும் கேட் பார். இவையெல்லாம் கீழுத் தியோகத் தர்களின் திருவிளையாடல்களே என்றறிந்த அரசன் பிரதிராசாவுக்கு நிரூபமெழுதி நீதி நடைபெறச் செய்வான். உண்மையில் கிறீஸ்த சமயத்திலுன்றியதும் மிகத் திருத்தமுமான ஒரு சட்டத்தைக் கொண்டதாகிய போர்த்துக்கேய அரசன்று, அவ்வரசின்கீழ் இந்நாடுகளில் உத்தியோகம் வகித்து நின்ற குட்டிச்சாத்தான்களே பலகாலும் பலநெறிகேடுகளை இங்கு நிகழ்த்தலாயினார் என்பது நிச்சயம்.
பரராசசேகரனை சிற்சில பறங்கி உத்தியோகத்தர்கள் பகைத்து இம்சித்த காலத்திலெல்லாம் அவனுக்கு உறுதிச்சுற்றமாயும் உற்ற நண்பராயும் விளங்கினோர், அப்பறங்கிதேசப் பிரான்சீஸ்குசபைக் குருமாராம். தான் அக்குருமாரில் கொண்ட ஆராமையினால் தன் இராச்சியத்திலே மட்டுமன்று
89

Page 47
யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
அரண்மனையிலேயும் அன்னோர் தங்கள் போதகத் தொழிலை நடப்பிக்கத் தாராளமாய் இடங்கொடுத்தான். நல்லூரிலேயே அரண்மனைக் கணித்தாக அன்னோர் ‘வெற்றிமாதா கோவில்' எனும் தமது பிரதான ஆலயத்தை நிர்மாணிக்கும் பொருட்டுத் தானே போதிய நிலமும் செலவும் கொடுத்தான். வேறிடங்களிலும் கோயில், குருமனை ஆகியவற்றை உண்டாக்குதற்கு வேண்டிய உதவிகளும் குருமாரது சம்ரஷணைக்கு அவசியமான தருமமும் அரச பண்டாரத்தினின்றே வழங்கப்பட்டன. அரசன் தானும் குருமாரது சத்தியவேதத்தைத் தழுவிக் கொள்ள ஆசித்தும் கோழைத்தனத்தால் ஊருக்கஞ்சி அதனை இறுதிவரையிலும் பின்போட்டுக் கைவிட்டிட்டான்.
49. செந்தமிழ் வளர்ச்சி
எதிர்மன்னசிங்க பரராசசேகரனாகிய இவன் காலத்திலே அந்தகக்கவிவீர ராகவன் என்னும் இசைவல்லோன் யாழ்ப்பாணத்தைத் தரிசித்து அரசனைப்பாடிப் பொருள் பெற்றமையை முன்னர் குறிப்பிட்டுள்ளோம். (16ம் பக்கம்) இவ்வீரராகவன் காலம் இதற்கு முற்பட்டதாகக் கூடாதென்பது படிக்காசுப்புலவரின் ஆசிரியரும் இலக்கணவிளக்கம் செய்தவருமான வைத்தியநாத நாவலரை இவர் பாடியமையாலும், 1685ம் வருஷம் வரையும் அரசாண்ட சேதுபதியின் பேரில் ‘ஒரு துறைக்கோவை செய்த அமிர்தவீரகவிராயர் இவர் காலத்தவர் எனப்படுகின்றமையாலும் பிறவற்றாலும் பெறப்படுகின்றது. தனிப்பாடற்றிரட்டிலே கவிவீரராகவனைப் புகழ்ந்து பரராசசேகரன் பாடியனவாகச் சொல்லப்படும் பாக்களின் வரலாறு உண்மையாயின் இவ்வரசனின் தமிழ்ப் பாண்டித்தியமும் போற்றப்படுவதாகும். (இடப்பெயர்வரலாறு 125ம் பக்கம் காண்க)
காளிதாசகவியின் சமஸ்கிருத ரகுவம்ச நூலைத் தமிழில் இரகுவமிசம் என மொழிபெயர்த்துப் பாடிய அரசகேசரி (யசகேசரி) இப்பரராசசேகரனின் தமையனெனப் போர்த்துக்கேய சரிதம் கூறுகிறது. அரசகேசரி (Harique Jara Pandara)யே போலும். இவனைத் தமிழ்ச் சரிதங்கள் பரராசசேகரனின் மருகன் எனவழுத்தும். மருகனாயின் கொலையுண்ட புவிராசபண்டாரப் பரராசசேகரனே இவன் மாதுவனாகலாம். வைபவமாலையோ தன் அறியாமைக்கிணங்க 1478ம் அரியாசனம் ஏறிய 6ம் பரராசசேகரனை இவன் மாமனாக்கி வழுவுற்றது. இவன் இரகுவமிசம் பாடியது நாயன்மார்கட்டுக் குளத்தருகில் அமைந்த ஓர் மேல்வீட்டிலிருந்தாம் எனவும், அது இவன் வாலவயதிலாமெனவும் ஐதீகம் கூறும். (செந்தமிழ் VI 3) இளவயதிலாயின் புவிராசபண்டாரம் உரிமையின்றி அரசாண்ட காலத்திற்றான் அந்நூல் அரங்கேறியிருக்கற்பாலது. தன்னைப் பாடத் தூண்டிவிட்டவனெனநூலாசிரியர் கூறுகின்ற அரசன் (பாயிரம் 8,8) இவனேயுமாகலாம். இவனாயின் அந்தகக்கவிராயமுதலியாரை ஆதரித்த புகழும் இவனுடையதேயாகலாம். ‘அரசகேசரி வளவு' என நல்லூரிலுள்ளதே
90

யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
இராசபுலவனின் வாசஸ்தலமுமாகலாம். நீர்வேலியிலுள்ள 'அரசகேசரிப் பிள்ளையார் கோயிலின் பெயர்க்கும் இவன் காரணனேயோ?
50. சங்கிலி குமாரனின் தவறுகள் 166 - 1620
எட்டாம் பரராசசேகரன் இருபத்தைந்து வருடம் அரசாண்டு 1616ம் வருடம் இவ்வுலகவாழ்வையொருவினன். மரணப்படுக்கையிலே சவலைக்குழந்தையாகிய தன் ஏக குமாரனைத் தமயனாகும் அரசகேசரி பண்டாரத்தின் கையில் ஒப்பித்து அச்சிறுவன் வயதுடையவனாகும் வரை இராச்சியபாரத்தைத் தாங்கிக்கொள்ளு மாறு பிரார்த்தித்திருந்தான். அரசகேசரி பரிபாலகனாய் அரசாளுதற்குக் கோவைப் பிரதிராசாவின் அங்கீகாரத்தை எதிர்பார்த்திருந்த வேளை சங்கிலிகுமாரன் அந்தப் பதவியைத் தானே அடைந்து கொள்ளும்படி சூழ்ச்சி செய்யலானான். இச்சூழ்ச்சியில் சேர்ந்தாருள் கொலையுண்ட புவிராசபண்டாரத்தின் மகனுமொரு வன். நடக்கப்போகின்ற சதிமானத்தைச் சுட்டி அரசகேசரியும் Peleleya Pandara எனும் அவன் சகோதரனும் அறிந்திருந்த போதிலும் அதனைக் காத்திரமான கருமமாய் எண்ணினாரில்லை, ஒருநாள் நடுப்பகல், பெரிய Migapule எனும் ஆராய்ச்சி கால்வருட, அரசகேசரி சயனத்தில் சரிந்து கொண்டிருக்கையில் சங்கிலி அனுப்பிய கொலைஞர்கள் திடீரென அரண்மனையுள் புகுந்து இருவரையும் உயிர்போக்கிக் கதவுகளையும் அகலத் திறந்துவிட்டனர். விடவே, சங்கிலி தனது கூட்டாளிகளோடு அரண்மனையைக் கைப்பற்றிக்கொண்டு, அங்கிருந்த இராசகுமாரர்களையெல்லாம் வாளுக்கிரையாக்கவும் அவர்கள் வாசஸ்தலங்களை எரியூட்டி அழித்துவிடவும் கட்டளையிட்டான். அவன் மைத்துனனான Leucu குமாரன் என்பவனும் முன்குறித்த புவிராசபண்டாரத்தின் மகனுமே கொல்லாமற் காக்கப்பட்டனர்.
இவற்றைக் கண்ட பிரசைகள் கொந்தளித்து சங்கிலியை எவ்வாற்றாலும் கொன்று தொலைக்கவும் அவன் மைத்துனனைப் பரிபாலகனாக்கவும் சமயம் பார்த்துக் கொண்டிருந்தனர். கொலையுண்ட Migapule ஆராய்ச்சியின் மகனான சின்ன Migapule அரண்மனை வாயிலில் நின்றுகொண்டு, சங்கிலியை மனங்கொண்ட மட்டும் வைது திட்டியும் அவனை நோக்கி துவக்கு வெடிகள் வைத்தும் பார்த்தான். மகர்தந்திரியாகிய சங்கிலி அரண்மனைக்குள் பதுங்கிக் கொண்டமையால் ஒன்றும் பலியாமை கண்டு, ஆராய்ச்சி மகன் இராசகுமாரத்தி கள் சிலரையும் தன் பாரிசமாக்கிக் கொண்டு மன்னாருக்கு விரைந்து போர்த்துக் கேயரைச் சரணடைந்து அங்கு குருமாரை வசியம் பண்ணி தொன்லூயிஸ் எனும் நாமதேயத்தோடு ஞானஸ்நானமும் பெற்றுக் கொண்டான். இவையெல்லாம் இவனது கபடநாடகமே எனப் பின்னர் காண்போம்.
91

Page 48
யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
51. வேறு பல கொடுமைகள்
நல்லூரிலே பிரசைகள் அவ்வளவில் அமர்ந்திருந்தனர். சங்கிலி தனக்கு லபித்த அதிஷ்டத்துக்காகத் தோத்திரஞ் செய்யமாறு ஓர் ஆலயத்துக்குச் செல்ல வெளிப்படுகையில் இவன் பிராணசிநேகிதனான Andayna(ஆண்டையினார்) அமரக்கேசன் முதலியார் என்பவன் இன்னும் ஒருபுலி அரண்மனையிலிருக்கவிட்டு வெளிப்படலாமோ எனக் கூறினான். அவன் குறித்தது சங்கிலியின் மைத்துணைனையாம். உடனே சங்கிலி உள்ளே புகுந்து Loucn குமாரனின் கண்ணைப் பிடுங்கி விட்டனன். அதுமட்டுமா! பழி அஞ்சாத அப்பாதகன் சகல முதலிமார்களையும் அரசுரிமைபூண்ட சிறுவனையும்கூட நிருமூலமாக்கத் தேடியும் ஏதோ தேவசங்கற்பத்தால் மறுபடிவேறெண்ணங்கொண்டிட்டான். ஆயின் இரண்டொருமாசஞ் செல்லுமுன் தோன்லூயிசின் மாமனும் ஏலவே கிறிஸ்தவ னாகி தொம்பேதுருபெற்றன்கோர் எனும் நாமம்பூண்டிருந்தவனுமான Branco முதலி சங்கிலியின் சூழ்ச்சியால் மாண்டான். பின்னொருநாள் சங்கிலி பல முதலிமாரையும் தலையாரிகளையும் யாதோ ஓர் கொண்டாட்டத்துக்கென அழைத்து உபசரிப்பவன்போல்காட்டி, அத்துணைப்பேரையும் சதிமானமாய்க் கொல்லுவித்தான். இவ்வாறான பரசண்டாளனின் கொடுமைகள் எம்மரசு மூலமாய்த் பிறர்கைப்படுத்தற்குக் காரணமாயினமையும் ஆச்சரியமன்றோ.
1616 ம் ஆண்டு ஆகுஸ்துமாதக் கடைக்கூறாயிற்று. அப்போதுதான் மேமாதம் 13 ந் திகதி பிரதிராசா ஒப்பமிட்டனுப்பிய அனுமதியும் வந்துசேர்ந்தது. அவ்வணுமதியிலடங்கிய நிபந்தனைகளிலொன்று யாழ்ப்பாணத்தக்கு ஒரு புது அரசனை வைக்குமுன் காலஞ்சென்ற இராச்சியபதி அவ்விஷயமாகச் செய்திருக்கக்கூடிய மரணசாசனம் வெளிப்படவேண்டும் என்பது. இச்சாசனத்தைத் தேடிக் கண்டுகொள்ளுமாறு மன்னாரிலிருந்து யுவான்தகுறுாஸ் சிறம் எனும் ஓர் காரியதரிசி நல்லூருக்கு அனுப்பப்பட்டான். இவன் அரண்மனையிலே Compada Raja, Branco, Chula Elegara, Tanavala, Puvinga cinga, Alaguem, Chilva Nay எனும் பெயருள்ள முதலிமாரையும் அமரதுங்க ஆராய்ச்சியையும் ஒருங்கு கூட்டி, சங்கிலியை முன்விட்டு விளங்கி, இவன் துஞ்சிய அரசனின் மரணசாசனத்தைக் காட்டாவிடில் இராசதுரோகியாய் மதிக்கப்படுவான் எனக்கூறி பயமுறுத்தினான். சங்கிலி, அரசன் மரணசாசனம் எதுவும் எழுதவில்லையென சத்தியத்தோடு வாதித்து, தான் பிரதிராசாவின் அனுமதியிலடங்கிய மற்றச் சகல நிபந்தனைகளையும் கைக்கொள்ளச் சம்மதிகாரனாமென உறுதிமொழி கூறவே, இவ்வாறு சங்கத்தவர்களையுங் கூறி கைச்சாத்திடச் செய்துகொண்டு காரியதரிசி மன்னாருக்கு மீண்டான்.
இதற்குப்பின் சங்கிலி போர்த்துக்கேயருக்குச் செய்த ஒரு உபகாரம் அவனுக்கு நல்ல யோகத்தைக் கொண்டுவரலாயிற்று. அதெப்படியெனில்,
92

யாழ்ப்பாண வைபவ விமர்சனம் தென்னிலங்கையில் பறங்கியரசுக்குமாறாயெழுந்த ஒரு சிற்றரசன் தஞ்சாவூர் நாயக்கனோடு போர் ஐக்கியப் பொருத்தனை செய்யப்போகின்றவனைச் சங்கிலி தன்சேனையில் ஓர் ஆயிரவரை அனுப்பி மறித்தடக்கித் திருப்பிவிட்டான். இதனையறிந்த மன்னார்க் கப்பித்தான் உளம்பூரித்து, உடனே பிரான்சீஸ்குசபைக் குலவர்களும் அரச உத்தியோகஸ்தர்களுங்கூடிய ஒரு சங்கத்திலே சங்கிலியை, பிரதிராசாவின் உத்தரவு வரும்வரையில், தேசாதிபதியாகத் தெரிந்து ஏற்படுத்தினன். அடுத்தநாள் நல்லூரிலே முதலிமாருக்கும் குடிகளுக்கும்முன் சங்கிலியே தற்போதைக்கத் தேசாதிபதியாம் என வெளியிடப்பட்டது. அவ்வேளை தேசாதிபதியின் கடமைகளும் எடுத்துரைக்கப்பட்டன. அவை, சத்தியவேதம் பரம்புதலிற் தடைசெய்யாதிருத்தல், இராச்சியத்தினூடு யோகியரும் வடக்கரும் பயணஞ்செய்ய ஒட்டாது தடுத்தல், அதில் ‘கரையாரத்” தலைவன் எவ்விதத்திலாவது கலந்துகொள்ளாமலும் சோனகர் இடங்கோலாமலும் காத்துக்கொள்ளுதல், அரசிளங்குமாரனை முதலிமாரொடுகூடிப் பாதுகாத்தல், 1591 ம் ஆண்டு பூர்த்தாடு பண்ணிய நிபந்தனைகளின்படி ஒழுகுதல் என்பனவாம்.
52. புதுக்குழப்பங்கள்
கோவையிலுள்ள மேலதிகாரிகள் சங்கிலியின் அக்கிரமங்களின் நிமித்தம் அவனைத்தண்டிக்கவேண்டியமையை உண்ர்ந்தும், அப்போதைக்கு இராச்சியத்தில் மீண்டும் நெருப்பையுங் கட்கத்தையும் கொண்டுவரவிரும்பாது காரியங்களை இருந்தபடியே விட்டுவிடலானார். யாழ்ப்பாணப் பிரசைகளோ சற்றுக்குள் பொங்கிக் கொதிக்க வேண்டிய நியாயங்கள் காணப்பட்டன. சங்கிலி தன் சகோதரி மகனொருவனை அரசுரிமைக்காரனெனப் பாவித்து வந்தனன். பரராசசேகரனின் சின்னப்புத்திரனையுமோ எவ்விடமும் காணவில்லை. ஆதலால் குழந்தை அரசனை அப்பாதகன் வதைத்துவிட்டானோ எனச் சமுசயம் பிறந்தது. ஆகவே ஆயுதபாணிகளான பெருஞ் சனக் கும்பரொன்று அரண்மனையை மொய்த்துப் பிடித்துச் சங்கிலியை வெளியேவரக் கூவிக்கொண்டிருந்தது. அவனும் பயக்கிராந்தனாய் ஒரு சாளரத்தினூடாய்த் தலையை நீட்டுதலும், சனங்கள் அவன் தேசாதிபதியாயிருந்து ஆளவிரும்பின் அரசிளங் குழந்தையைத் தங்கள் வசம் ஒப்புவிக்க வேண்டுமென்றும், இராசகுமாரனைக் கொன்ற பாதகர்களைக் கையளித்துவிட வேண்டுமென்றும், தான் வைத்திருந்த தேவடியாளைத் துரத்திவிட்டு முந்திய அரசனின் இராணிகளில் ஒருத்தியைவதுவை அயர வேண்டுமென்றுங் கூச்சலிட்டுக் கொண்டு நின்றனர். சங்கிலி யாதும் செய்ய அறியாமற் கெடிமண்டினவனாய்ச்சனங்களைத் தலைகுனிந்து வணங்கினதோடமை யாது, இராச குழந்தையையுந் துரிதமாய்த் தூக்கிக் கொண்டுவந்து உயர்த்திக் காட்டினான். காட்டவே சனங்கள் தங்கள் சின்ன அரசனின் முன் சாஷடாங்கமாய் விழுந்து பணிந்தனர். ஆயின் சங்கிலி கொலைக்காரரைச் சனங்களுக்குக் கையளியாமல் கொல்லைப் புறத்தால் ஒளித்தோடச் செய்துவிட்டான்.
93

Page 49
யாழ்ப்பாண வைபவ விமர்சனம் இதனையுணர்ந்த கும்பலானது படலைகளை முறித்துக்கொண்டு அரண்மயுைட் புகுந்து ஆங்கு Leucu குமாரனின் கண்ணைத் தோண்டுவித்த ஆண்டையினார் (?) அமரக்கோன் மட்டும் இருக்கக்கண்டு, இவனைப் பிடித்துக் கழுத்தில கயிறு மாட்டித் தெருநீளம் கொற கொறவென்றிழுத்துக் கொன்று பழிவாங்கினர்.
கலகத்தில் முதலிமாரே தலைமையாய் நின்றமையால் அதனையமர்த்தச் சங்கிலியால் ஆற்றாமற் போயிற்று. மன்னார்க் கற்பித்தானும் தனது நீதிபதி ஒருவனையனுப்பி முதலிமாரைப் பயமுறுத்தியும் அன்னோர் அமரிக்கையானா ரில்லை. குருமாரும் இரண்டு மாசமாய்ப் புத்திபுகட்டிச் சமாதானம் பண்ணப் பார்த்தும் பயனின்றியதாயிற்று. ஈற்றில் சங்கிலி வலோற்காரத்தால் சித்தி அடையலாமென எண்ணி முதலிமாரைச் சிறைப்படுத்தச் சிலரை அனுப்பினான். ஆயின் முதலிமார் சண்டையிற் கைவந்தோரான ‘கரையாரைத் துணைக் கொண்டு தம்மைப் பிடிக்க வந்தோரையும் வசமாக்கியபின் ஆயுதபாணிகளாய் அரண்மனையை நோக்கி நடந்தனர். சங்கிலி தனக்கு அபாயம் வந்ததெனக் கண்டு தன் வீட்டாரோடுந் தப்பியோடி ஊறாத்துறையைச் (?) சேர்ந்து அங்கிருந்து கோடிக்கரையை அடைய ஆயத்தப்படுகையில் முன்சொல்லிய போர்த்துக்கேய நீதிபதி அவனை மறித்துக் குருமாருடைய கோயில் வளவில் தங்கும்படி செய்தனன். இங்கு அவன் 5000 பேரைச் சேர்த்து சஞ்சுவாம்வவுத்திஸ்தா எனும் ஆலயத்தையே அரணாக்கிக் கொண்டிருந்தனன். இதற்குள் முதலிமார் புவிராசபண்டாரத்தின் பெறாமகனோ மருமகனோ ஒருவனை இராச்சியத்தைக் கைப்பற்ற வருமாறு அழைத்திருந்தனர். (இவன் வடகரையில் இருந்தனன் போலும்) சங்கிலியும் தஞ்சாவூர் நாயகனுக்கு ஆளனுப்பித் துணைப்படை யொன்றை அழைப்பித்துக் கொண்டு முதலிமாரோடு போருக்கெழுந்தனன். வடக்கரையே வீரராகக் கொண்ட தஞ்சாவூர்ப்படையானது Varana Gulata (வருணகுலத்தான்?) எனும் கரையார த் தலைவன் கீழ் போராடிற்று. அப்போரில் முதலிமார் அபசெயப்படவே கலகம் ஒருவாறு அடங்கிற்று.
53. பிலிப்பனென்னும் பறங்கி
சங்கிலி தஞ்சாவூரிலிருந்து துணைப்பலம் வருவித்ததும் முக்கியமாய் வருண குலத்தான்’ எனும் தங்கள் சத்துருவையே சேனாநாயகமாக்கியதும் போர்த்துக் கேயருக்குப் பொறுக்கொணாப் புழுக்கத்தைத் தந்தது. அத்துடன் தங்களுக்கு மாறாய்க் கண்டி அரசனுக்கு உதவி செய்கிறானெனவும், திறை கொடுக்க வேண்டிய யானைகளைக் கொடாது பறங்கிக் கீழ் உத்தியோகஸ்தர்களுக்குப் பச்சை கட்டித் தப்பிக் கொள்ளுகின்றானெனவும் அறிந்தனர். இவ்வையுறவுகளின் நிமித்தமே சங்கிலியின் தேசாதிபதித்துவமும் இதுவரையில் பிரதிசாவாரால் அங்கீகரிக்கப்படாதிருந்தது.
94.

யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
அப்பால் போர்த்துக்கேயர் சிமிக்கிடாமல் தம் அலுவலை நிறைவேற்றினர். கொழும்பின் ‘கற்பித்தான் மோர் ஆகிய கொன்ஸ்தந்தீனு தெசாஇநொறொஞ்ஞா என்பவன் திடீரென பிலிப்தெஜலிவேறா எனும் வீரசூரத் தளபதியை யாழ்ப்பாணத் துக்கு அனுப்பலாயினான். இப்படையேற்றத்திற்குக் காரணம் ஊறாத்துறைக் கரைகளைச் சூறையாடிக் கொண்டு திரிந்த சோனகக் கொள்ளைக்காரரைச் சிட்சிப்பதும், யாழ்ப்பாண இராச்சியத்தால் வரவேண்டிய மூன்று வருடத் திறையை அறவிடுவதுமே என்று சொல்லப்பட்டபோதிலும், உள்ளபடி சங்கிலி குமாரன் திறைகொடாது எதிர்ப்பின் அவனைக் கொன்று அரசை அப்பிக்கொள்வதே பறங்கியரின் நோக்கமாயிற்று. ஒலி வேறா மூன்று போர்த்துக்கேய கொம்பனிகளோடும், 500 சிங்கள வீரர்களோடும் கரை மார்க்கமாய் வழிகொண்டு தண்ணீரில்லாது வறண்ட நாடுகளினூடு வெகு கஷ்டங்களோடு துரிதமாய் நடந்து பூநரியை அடைந்தான். அங்கு நின்றும் சங்கிலிகுமாரனுக்குச் செய்தி அனுப்ப இவன் தளபதிக்குத் தன் சுபசோபனங்களைக் கூறி ஓர் மரக்கலத்தை அங்கு போக்கினான். பின்பு மாதா கோயில் என்ற இடத்தில் (தற்போதுள்ள யாழ்ப்பாணக் கோட்டைப் பிரதேசத்தில்) இருந்த போர்த்துக்கேயக் குடிகள் அனுப்பிய தோணிகளில் சேனை முழுதும் இக்கரைப்பட எட்டு நாள் சென்றது. அப்பால் ஒலிவேறா காரைதீவு சென்று கொள்ளைக்காரரைப் பற்றிய அலுவல்களை முடித்துக் கொண்டு வந்து பிரான்சிஸ்குசபைக் குருமாரின் முதலாளிமாரின் மூலமாய் சங்கிலியிடம் திறை கேட்பித்தலும், இவன் இறுப்பேன் இறுப்பேனென்று சொல்லிக் காலதாமதம் பண்ணக்கண்டு மீண்டும் ஒருமுறை கேட்டனுப்பச் சங்கிலி தன்னிடம் 5000 பார்டம் நாணயம் மட்டும் அப்போது உண்னெடன்றும் தளபதி திரும்பி பூநகரிக்கப்பால் போவதற்கிடையில் திறை முழுவதையும் தீர்த்துப் போடுவதென்றும் போக்கு நியாயஞ் சொல்லியனுப்பினான்.
ஆதலால் ஒலிவேறா போருக்காயத்தமாகி வண்ணார்பண்ணையிலுள்ள பனங்கூடலருகில் தமிழ்ச்சேனை சன்னத்தமாயிருப்பதையறிந்து அதனைச் சருவப் புறப்பட்டான். போர்த்துக்கேய முன்னணி சமீபிக்கவே தமிழர் இருமுறை துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். மூன்றாம் முறை குண்டுமாரி பொழியுமுன் பறங்கிப்படை தீரமாய் எதிர்கொண்டு கைகலக்கவே தமிழர் சின்னாபின்னமாய் முதுகிடத் தலைப்பட்டார். வீழ்ந்து உயிரிழந்தோர் அநேகள். போராயுதங்களைப் பறங்கியர் கைக்கொள்ளவிட்டுட்டு ஓடித்தப்பினோர் அதிகம். ஆயின் சற்று நேரத்திக்குள் ‘கரைபாரத்தலைவன் 20,000 வீரர்கொண்ட தமிழ்ப்படைகளோடு வெளிப்பட்டுக் கொடுஞ்சமராடியும் பறங்கியரே செயபேரிகை முழக்கினார். நூறு தலைகளுக்கு மேல் வெட்டுண்டு உருளத் தமிழர் தெறிகெட்டு வந்த வழிநோக்கி விரைந்தோடினர். சத்துருக்கள் பின்தொடர்ந்து ஓடியும் அன்னோரைத் துரந்து முறியடிக்கக் கூடாததாயிற்று. அதெங்ங்னமெனில் தமிழர் செருப்பணிந்த காலினர், போர்க்களமெல்லாம் பரப்பியிருந்த பெரிய முட்களின் மேல் வருத்த மின்றி ஒடிச்செல்ல, வெறுங்காலொடு பொருதிய பறங்கியரோ கால்பாவி முன்னேற
95

Page 50
யாழ்ப்பாண வைபவ விமர்சனம் மாட்டாது வருந்தினர். இதற்கிடையில் சங்கிலிகுமாரன் வடகரைக்கு ஒளித்தோடத் தோணியேறியவன் எதிர்க்காற்றால் எத்துண்டு பருத்தித்துறையைச் சேர்ந்து, மறுநாளே வேறு தோணி பிடித்து பயணமாயினான். இதனைக் கேள்வியுற்ற ஒலிவேறா துரிதமாய் ஓடும் மூன்று மரங்கலங்களை ஆயத்தப்படுத்தி அவனைத் தொடரச் செய்தனன். இவை சங்கிலியையும் அவனோடு இருந்த இராசாத்திமார், இராச குமாரர், குமாரிகளையும் பணிவிடைகாரரையும் குடாக்கடலிலே போய்ப் பிடித்துச் சிறைப்படுத்தின. வெற்றியாளர்கள் சங்கிலியிடம் 8000 பதக்க நாணயங்கள் இருக்கக்கண்டு ஆனந்தமடைந்தனர். பணத்தை அப்பிக் கொண்டது போதாதென்று கண்ணில்லாதவனான LEUCU குமாரன் போட்டிருந்த காதணிகளைப் பிடுங்கி எடுக்கையில் அவன்காதுகளையும் கிழித்து விட்டனர். இவ்வாவேச ஒழுக்கத்தையும் இராச ஸ்திரீகளுக்கு நடந்த அவமரியாததையும் கண்ட சங்கிலி தன் காதுகளும் அறுந்துபோகாதபடிக்குக் கடுக்கண்களைக் கழற்றிக் கொடுத்து விட்டான். அப்பால் சிறைப்பட்டோரெல்லாம் யாழ்ப்பாணத்துக்குக் கொண்டுவரப்பட்டு சங்கிலி நல்லூரில் மறியல் இடப்பட்டான். இராசஸ்திரீகளும், குமாரர்களும் கல்லூரியிலும் கோயிலிலும் குருமாரது ஆதவில் வைக்கப்பட்டனர். ஏனையோர் தூக்கிக் கொல்லப்பட்டார்.
54. சங்கிலிகுமாரனின் கதி
இனிமேற் செல்லுமுன் சங்கிலிகுமாரனின் கதியைத் தெரிவிப்பாம். இவன் தன் மனைவியோடும் கூடக் கோவைக்கு அனுப்பப்பட்டான். அங்கு சிரச்சேதம் அடையத் தீர்வையாயிற்று. ஆயின் மறியல் இருக்கையில் இவன் முழுதும் மனம் மாறி தன் ஆத்துமத்தின் நித்திய கதியை நினைப்பவனாகிச் சத்தியவேதத்தில் சேர்ந்து கொள்ள ஆசித்தான். மனைவியும் அவ்வாறே விரும்பினள். இருவருக்கும் கோவையின் அதிமேற்றிராணியர் ஞானப் பிதாவாக நிற்க, இராசமரியாதைகளோடு ஞானதீட்சை கொடுக்கப்பட்டது. சங்கிலிக்கு தொம்பிலிப்பு என்றும், மனைவிக்கு தோனாமரிகரிதா என்றும் பெயராயிற்று. பின்பு மரணத் தீர்ப்பு நிறைவேறுந் தினம்வரவே சங்கிலி அத்தீர்ப்பை மனச்சாந்தியோடு ஏற்றுக்கொள்வோனாயினான். அலுப்பாந்தியின் முற்றவெளிக்கு அவனை இட்டுக்கொண்டு போகும் போது பிரான்ஞ்சீஸ்கைசபைச் சந்நியாசிகள் பலர் உடன்சென்றனர். கொலைக்களம் முழுதும் துக்கத்துக்கடையாளமான கறுப்புத்துகிலாற் பொதிந்திருந்தது. அதன் நடுவில் ஓர் கம்பளம் விரித்து சிவப்பு வில்லூர்திப்பட்டுத் தலையணையொன்று போட்டிருந்தது. குற்றத்தினுக் காகக் கொல்லும் போதும் கொலைப்படுவோனின் இராசகுலத்துக்கேற்ற மரியாதைகளைச் செய்யப் போர்த்துக்கேயர் தவறினாரில்லை. அப்பால் சிரங்கொய்யுமுன் வழக்கம் போல் கைகளைக் கட்டச் சங்கிலி சம்மதியாமல், யான் என் பாவங்களுக்காக மரிக்கின்றேனானதினால் என்மனமொப்பிக் கொண்டேன் என்றனன். பின் யேசு என்னும் திருநாமத்தை உச்சரித்துக் கொண்டிருக்கையிலேயே யாழ்ப்பாணத்தைக் கடைசியாய் ஆண்ட எம்
96

யாழ்ப்பாண வைபவ விமர்சனம் அரசதோன்றலின் சிரம் விழுந்தது. சங்கிலி ஒரேயொரு தயவைக் கேட்டிருந்தான். அதாவது தன்தேகத்திற்குப் பிரான்சீஸ்கைசபையாரின் உடுப்பாட்டிச் சேமஞ் செய்யவேண்டுமென்பது. அவ்வாறே சந்நியாசிகள் மிருத்த சரீரத்துக்குத் தம் சபையின் அங்கிகளை அணிவித்து இராச வைபவங்களோடு ஊர்வலஞ் செய்து தங்கள் சவச்சாலையில் பிரேதசேமஞ் செய்தனர். (Queiroz p. 562).
சங்கிலியின் மனைவியாகிய தோனா மரிகரிதா மனம்திரும்பினோருக்குரிய ஓர் மடத்தினில் உட்பட்டு அங்கு “பழங்கி கிறீஸ்தவர்களும் காணும்படியான உத்தம கிறீஸ்த சீவியமுள்ளவளாய் விளங்கினாள். (Far. Y Sousa).
55. பயனில்லாப் போராட்டங்கள் 1620 - 1624
பிலிப்தெ ஒலிவேறா யாழ்ப்பாண இராச்சியத்தைப் போர்த்துக்கால் மன்னனுக்குக் காக்கிவிட்டதாக மகிழ்ந்து கொண்டிருக்கையில், 1620 ம் ஆண்டுத் தபசுகாலத் தொடக்கத்தில் கரையாரத்தலைவன் மீட்டும் ஒருகால் வெற்றிமாதா ஆலயத்தின்முன் திடீரெனத் தோன்றினான். இவன் தஞ்சாவூரிலிருக்கும் ஓர் பெளத்த சேனையை இரகசியமாய் இட்டுக்கொண்டு வந்து ‘இராச்சியத்தி லெல்லாம் அதிகம் போரிடும் குணமுள்ளோரான் மீன்பிடிகாரர் சேரியில் பதிவிருந்து போர்த்துக்கேயருடைய அரண்களுள் ஒன்றாய் அந்நாளில் விளங்கிய அவ்வாலயத்தைத் தாக்க அதிகாலையில் புறப்பட்டான். முன்னணியில் ஒரு வீரன் வாளைச் சுழற்றிக் கொண்டு சத்துருக்களை ஏசிப்பேசி வந்தவனைப் போர்த்துக்கேயர் கைப்பற்றி அவன் சிரசைக் கொய்து ஆலயத்தின் புறமதிலில் உயரத் தொங்க வைத்தனர். இதைக்கண்ட தஞ்சாவூர்ச் சேனை ஒருபுச மிருபுசமாகி வெகுண்டு ஆலயத்தை முற்றிக் கொடும்போர் நிகழ்ந்துதலும், உள்ளகத்தோரான இருபது போர்த்துக்கேயரும் இடையில் ஆலயத்தின் கொல்லைப்புறத்தால் உள்நுழைந்துவந்த பட்டண வாசிகள் சிலருமாய் காலைதொடக்கம் மத்தியானவரையில் முற்றுகையிடும் சேனையைத் தாக்கி அன்னோருட் பலரைத் தொலைத்துவிடவே கரையாரத்தலைவன்’ இனியாற்றாதென்று கண்டு ஒதுங்கிப் போயினான்.
மறுநாட்காலை தமிழ்ச்சேனை நல்லூர்க்கோயிலை (கந்தசுவாமிகோயில் போலும்) அரண் செய்துகொண்டிருந்த ஒலிவேறா வைக் காத்திராப்பிரகாரம் சருவத் தலைப்பட்டது. உள்ளிருந்தோர் முப்பதுபேர் மட்டுமேயாயினும், இவ்வீரர், ஈசற்கூட்டம் போலக் கோயிலைவளைந்து மொய்க்கத் தொடங்கிய தமிழர் முன்னேற முன்னேற ஒவ்வொருவரியையுஞ் சுட்டு வீழ்த்திக் கொண்டிருந்தனர். நெடுந்தியாலமாய் இவ்வாறு போர் நிகழ்ந்து கொண்டிருக்க ஒலிவேறா கோயிலின்
97

Page 51
r யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
வாயிலைத்திறந்து வெளியேறிப் போர் தொடுக்குமாறு தன் வீரர்களை ஆக்கியாபித்தான். பறங்கியர் போர்முரசமுழக்கி வாயிலைத்திறக்கவே தமிழரும் தவில்களைச் சப்தித்துக்கொண்டு வாயிலைநோக்கி ஓடி வந்து குவிந்தனர். இதுவே பறங்கியருக்கு வாய்ப்பான சமயமாயிற்று. அன்னோர் வெளிப்படாமல் உள்நின்று கொண்டு சனத்திரளின் மேல் ஊழித்தீயென்ன நெருப்பையுங் குண்டையுஞ் சொரிந்து விட்டனர். விடவே நுளம்புத்திரள்கள் பொசுங்கி விழுவதுபோல தமிழர் எரிந்து கரிந்து வீழ்ந்தனர். எஞ்சிய தமிழ்ச்சேனை போர்க்களமெல்லாம் இரத்த வெள்ளமும் சவக்குவியலுமாய்ப் பயங்கரகாட்சி தரவிட்டு ஐந்து மணியளவில் ஒட்டம் பிடித்தது.
56. தொம்லூயிசின் தோல்வி
அப்பால் Migapule என்பவன், மன்னாரில் போர்த்துக்கேயரைச் சரணடைந்து தொம்லூயிஸ் எனத் தீட்சா அபிதானம் பெற்றவன் தஞ்சாவூர் நாயக்கனிடம் சென்று தான் நல்லூரிலிருந்து கொண்டு ஏகிய இருவர் இராசகுமாரிகளையும் அன்னோரிடம் ஒப்புவித்துவிட்டு, அவன்பேரால் யாழ்ப்பாணத்தை வென்று கைப்பற்றுதற்கு அவன்பால் கேம் நாயக்க எனும் தளபதியையும் தானைகளையும் இட்டுக்கொண்டு வந்தனன். (கேம் நாயக்க, செம்நாயக்க, ‘கரையாரத் தலைவன் வருணகுலத்தான் எனும் இவையெல்லாம் ஒருவனையே குறிக்கின்றன போலும்) பின் தோணிகள் ஒரு பகுதியைத் தொண்டமனாற்றில் இறக்கிவிட்டு மீண்டும் ஓர் அங்கத்தைக் கொண்டுவரப் போயின. இதற்கிடையில் தஞ்சாவூர் வீரர்கள் நல்லூர்க் கோயிலின் போர்த்துக்கேய காவற்சேனையை முற்றுகை போட்டுக் கொண்டிருந்தனர். ஆயின் போர்த்துக்கேயருக்கு நல்லதிஷடமாய் கொழும்பிலிருந்தும் அனுப்பப்பட்ட உபபலமொன்று அப்போதே யாழ்ப்பாணத்தைச் சேர்ந்து தஞ்சாவூரின் தாக்குதல்களை வென்று இடம்பாமல் நிலைபெறுவதற்கு உதவியாயிற்று. ஒருநாள் மாதாகோவிலின் அரணில் பறங்கியர் நடுப்பகல் நித்திரை செய்யும் அமயம் பார்த்து, தஞ்சாவூரார் கொல்லைப்புற எயிலால் ஏறி தாங்கள் கொண்டுவந்திருந்த வைக்கோலால் காவற்கொட்டிலை எரியூட்ட எத்தனித்தபோது அங்கிருந்த காவலாளர் இவர்கள்மேல் வெடிமருந்துப் பானைகளைக் கொளுத்திக் கவிழ்த்து துரத்தி ஒட்டிவிட்டனர்.
இவ்வாறாய் நல்லூரிலும் பண்ணைத்துறையிலும் பறங்கியர்கள் ஒவ்வோர் அரணத்தில் அடைபட்டவாறாய்ப் பொருதிக் கொண்டிருப்ப தஞ்சாவூர்த் தளங்கள் வலிமிகுத்துக் கொண்டு வருதலையறிந்த கொழும்புக் கற்பித்தான்மார் நான்கு கொம்பனி வீரரோடும் 500 லஸ்கறின்களோடும் லூயிஸ் தெபிக்சேறா என்னும் ஓர் தளபதியை ஒலிவேறாவுக்கு உபபலமாய் அனுப்பி வைத்தனன். இவன் கரைமார்க்கமாய் விரைந்துவர அந்திரே கோயெல்லோ என்னும் வேறொரு தளபதி கடல் மார்க்கமாய் கடுகிக் கொண்டிருந்தான். தெபிக்சேறா வரும்வழியில்
98

யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
யாழ்ப்பாணத்துப் பறங்கியரெல்லாம் வாளுக்கிரையானார் எனும் வதந்தியொன்று பிறந்தது. இதனைச் செவிமடுத்த தளபதி இனி யாழ்ப்பாணத்தாரை வேறு வகையில் அடக்குவது கூடாதெனவுன்னி வழியிலெதிர்த்த ஆடவர்களை மரங்களைப்போற் பிளந்தும், கைப்பிள்ளையோடிருந்த ஸ்திரீகளின் உதரத்தைக் கீன்று பிள்ளையை அதிற் திணித்தும் வாயினாற் சொல்லொணாப் பயங்கர நிஷடுரங்களைச் செய்துகொண்டு வழிநடந்தான். இவற்றைக் கேள்வியுற்றுத் திகலடிபட்ட யாழ்ப்பாணிகள் தெபிக்சேறா தடையின்றி ஒலிவேறாவின் அரணம் மட்டும் வர விட்டுவிட்டனர்.
இரண்டுநாட் சென்று ஒலிவேறாவும் தெபிக்சேறாவும் புறம்போந்து தஞ்சாவூர்ச் சேனையை ஓர் குளத்தருகிற் பாளையமிட்டிருப்பக் கண்டு பொருது எளிதில் வெற்றியாளராய்த் திகழ்ந்தனர்.
57. வேறொரு இராசகுமாரன்
இவ்வாறான நிகழ்ச்சிகளைக் கனவிலும் காணாமல், தமக்கே வெற்றி கைகூடுமென்றிருந்த எந்தமிழர் மொண்ணிமுதலி' எனும் பட்டப் பெயருள்ள முதலியாரொருவரை வடகரைக்கனுப்பி அங்கிருந்த ஓர் இராசகுமாரனை யாழ்ப்பாணத்து அரசு கைக்கொள்ளும்படி அழைத்துவரச் செய்தனர். இக்குமரன் யாழ்ப்பாணத்து அரசகுடும்பத்தவன் எனவும் இராமேசுரத்திற் போயிருந்தவன் எனவுந் தோன்றும். (Kings of Jaffna 69) இவன் 800 மறவரும் வடக்களின் சேனையொன்றும் புறங்காப்ப, Elaur என்னுங் கிராமத்தில் வந்திறங்கி நல்லூரின் கோயிலொன்றில் தங்கினன். ஒலிவேறா இவ்வாயத்தங்களையறிந்து இருளைத் துணையாய்க் கொண்டு அவ்விடத்துக்கு அந்தரங்கமாய்ச் சென்று பொழுது புலரும்வேளை போர்முரசம் முழக்கி எழுந்து கோயிலின் கதவுகளுக்கு அக்கினியிட்டெரித்து உள்வீதியில் நுழைந்தனன். இராசகுமாரனது பரிவாரமென அங்கிருந்த வீரர்களெல்லாம் மலாரடிபட்டு நெஞ்சழிந்து, தீரமிழந்து உன்மத்தர்கள்போல் அங்குமிங்கும் ஒட, அனைவரையும் ஒலிவேறாவின் வீரர் தென்புலம் போக்கினர். இராசகுமாரனைச் சேர்ந்தவர்களுள் ஒருவனான பிராமணன் ஒருவன் வாயிலில் ஓடிவந்து குமாரன், குமாரன் என்று கதற, இவனையும் இராசகுமாரனையும் மட்டும் கொல்லாமல் மறியற்படுத்தினர். பின்பு ஒலிவேறா தங்கும் கோயிலுக்கு இக்குமாரனைக் கொண்டு சென்று, அங்கு ஓர் சாளரத்தினருகிலே காலில் வில்லூர்திப் பட்டுப்பிடித்த விலங்குபூட்டி ஓர் கதிரையில் இருத்தி வைக்க, இவன் என்னை வீணே இங்கழைத்து இவ்விதிக் குள்ளாக்கினிரே என முதலியாரையுங் சனங்களையும் வைதுகொண்டிருந்தான். ஈற்றில் இவனை மாதா கோவில் முதன்மைக் குருவானவர் வசத்தில் ஒப்பித்துப் பின் கொழும்புக்குக் கொண்டு சென்றனர். அப்பால் இவனுக்கு லபித்தது யாதென அறியோம்.
99

Page 52
யாழ்ப்பாண வைபவ விமர்சனம் இவையெல்லாம் நிறைவேறியது 1620ம் ஆண்டு ஏப்றில் மாசத்தின் முன்னாம். தேபிக்சேறாவும் கொழும்புக்குத் திரும்பிவிட்டனன். பின்பு ஒலிவேறா நாடெங்கும் சுற்றிப் போர்த்துக்கேய அரசை ஏற்றுக் கொண்டோருக்கு மன்னிப்புக் கொடுத்தும், கொள்ள மறுத்தோருக்குத் தண்டனை விதித்துங் கொண்டுவந்தான். தமிழர் பின்னுமொருக்கால் மாதா கோவில் அரணைத் தாக்க உன்னியும் சத்துருவின் பெலத்தைக் கண்டு நெஞ்சுட்கிப் பின்னடைந்துவிட்டனர்.
58. தஞ்சாவூரரின் புதுப்படையேற்றம்
மீண்டும் அவ்வருடத்து நொவெம்பர் மாசத்தில் தொம்லூயிசும் ‘கரையாரத் தலைவனும் ஓர் புதுச் சேனையோடு தொண்டமனாற்றிற் தோற்றினார். இத்தடவை எவ்வாற்றாலும் தஞ்சாவூர் நாயக்கன் பேரால் யாழ்ப்பாணத்தை வெற்றி கொள்ள வேண்டுமென்பதே அன்னாரது தீர்மானமாயிற்று. ஒலிவேறா பட்டணத்துறையில் மாதாகோவில் அரணிலிருந்தவன் தமிழரின் வரவையுணர்ந்து அவர்க்குச் சிலேடையான ஓர் சமாச்சாரம் போக்கி நீவிர் நல்லூருக்கு அன்றேல் கரையாருடைய ஊருக்கு வருவதுண்டாயின் உமக்கு நல்லுபகாரம் கிடைக்கும் எனச் சொல்லுவித்தான். மறுநாள் போர்த்துக்கேய படைகள் நல்லூர் வரையில் செல்ல, அதற்கப்பால் நின்ற தமிழர் தாங்கள் ஸ்நானம் செய்து போசனம் அருந்தப் போவதாகக் கேலிச் சமாச்சாரம் ஒன்று அனுப்பிவிட்டு இருந்தனர். இதற்கிடையில் வெயில் மிக அகோரமாயிருந்தமையால் ஒலிவேறா தன் இருப்பிடத்துக்கு மீண்டு பசியாறிக் கொண்டிருக்கையில் தஞ்சாவூரார் வந்துவிட்டனரென்ற செய்தி கிடைத்தது. உடனே தன் வீரர் சிலரைக் கடலுள் இறங்கி அங்குள்ள ஒரு திடரினின்றும் தமிழரை முன்னேறாது தடுக்குமாறு அனுப்பிவிட்டு, தானும் மார்பளவு தண்ணிரில் இறங்கினன். இறங்கித் திட்டியில் வெளிக்கொள்ளுதற்கிடையில் நால்வர் தமிழ் வீரர் இவனையும் இவனது கேடயக்காரனையும் குடைக்காரனையும் சருவவே, இவன் தன் வாளையுறை கழித்து எதிர்த்தோருள் ஒருவனின் மார்பைப் பிளந்து மற்றொருவனின் தலையைக் கிழித்து எஞ்சிய இருவரும் முதுகிடச் செய்தான். ஆயினும் ஒலிவேறாவுக்குத் தமிழர் வைத்த ஈட்டிக்காயம் வாறானதாயிற்று. இதற்கிடையில் போர்த்துக்கேயப் படைகள் நெருங்கிவந்து தமிழ் அணிகளோடு பெரும் பூசல் நிகழ்த்தின. சிறிதுவேளை தமிழரோ பறங்கியரோ யார் வெல்வார் எனச் சொல்லக்கூடாதபடி கொடுஞ்சமர் நடந்தது. பறங்கியர் பக்கப் பெண்களெல்லாம் நடுக்குற்றுத் தங்கள் மாதா ஆலயத்தினுட்போய்த் தெய்வ உதவியையிரந்து கூக்குரலிட்டுக் கொண்டிருந்தவர்கள், அவ்வாலயத்தில் தங்கள் பக்கத்து வெற்றியைக் குறிக்கும் உற்பாதங்கள் காணப்பட்டனவாகக் கூறினர். ஈற்றில் பறங்கியர் தமக்கு அதிக சீவமோசமில்லாமலே வாகை சூடுவாராயினர்.
முதுகிட்டோடிய தமிழ்ச் சேனை நல்லூரில் போர்க்கோலங் கொண்டுநிற்ப,
100

யாழ்ப்பாண வைபவ ப விமர்சனம்
ஒலிவேறா தனது காயத்தின் நிமித்தம் அஅங்கு செல்லக்கூடாது படையை அனுப்பினான். பறங்கிப்படை தமிழரை ஒருரு சிறு கோவிலிற் கண்ணுறுதலும், அதன் தெரு முகப்பில் நின்று குண்டுமாாரி பொழிந்து அன்னோர் பலரை இறக்கக் கொடுத்து முதுகிடச் செய்தது. ஒடிய தமிழரைப் போர்த்துக்கேய வீரர் துரத்திப் போந்து ஒவ்வொருவரும் தலைக்கு இரண்டு மூன்று சிரங்களை வெற்றி விருதாகக் கொணர்ந்து ஒலிவேறாவுக்குக் காண்பித்தனர். சிங்கள லஸ்கரின்கள் மறுநாள் காலைவரை தமிழரைத் தொடர்ந்து சென்று திரளான சூறைப் பொருட்களோடு மீண்டனர். பின்னுமொருகால் போர்த்துக்கேய வீரர் தமிழரைத் தேடிச்சென்று கோப்பாய் வயல்வெளிகளில் மட்டும் போந்து பார்த்தவிடத்து அன்னோர் பின்னும் வடதிசை நோக்கிச் சரிந்துவிட்டமையால் தம்பதிக்கு மீண்டனர்.
சிலநாட்கள் சென்றொழியுமுன்னரே மறுபடியும் தஞ்சாவூர் நாயக்கன் யாழ்ப்பாணத்தை அப்பிக்கொள்ள வழிதேடினான். அவனது புதுப்படை துறையில் வந்திறங்கும்போது, யாழ்ப்பாணத்தார் வெள்ளைக் கொடி உயர்த்த வேண்டுமென்பது சங்கேதமாயிற்று. இதனைச் செவியுற்ற ஒலிவேறா மிகச் சாக்கிரதையாய் அவ்விறங்குதுறைக்குச் சமீபமாய் ஒளியொன்றமைத்து, தஞ்சாவூரர் கரையில் கால் வைத்ததும் தன் வீரர் புறம்போந்து அன்னோரை ஒவ்வொருவராயத் தொலைத்துவிடும்படி ஏற்பாடு செய்திருந்தான். இவ்வேற்பாடும் நன்றாய்ப் பலித்தது. கரைபிடித்தோரெல்லாம் வாளுக்கிரையாகினர். எஞ்சியோர் புண்பட்டோராய் கடலுட் குதித்து வந்தவழியைக் கடைப்பிடித்தனர்.
59. கடைசிப்போரின் பயன்
இச்சம்பவங்கள் கொளும்புக் கற்பித்தான் மோரின் செவிக்கேற அவன் முன் ஒருமுறை தான் இங்கனுப்பிய கல்வங் என்பவனைப் போதுமான உபபலத்தோடு ஒலிவேறாவுக்குத் துணைசெய்ய ஏவினான். கல்வங் வரவே நாடு மீண்டொருகால் அமரிக்கையாயிற்று. ஒலிவேறாவும் 1621 ம் ஆண்டு பெப்றவரி மாசம் 2ந் திகதி பட்டணத்துறையைவிட்டுப் புறம்போந்து நல்லூரைத் தன் தலைத்தானமாக்கி, ஊரவர்கள் எவ்வளவாக வருந்தி ஓலமிடவுங் கேளாமல் அந்நகரின் பெரிய ஆலயத்தை (கந்தசுவாமி கோவில் போலும்) தரைமட்டமாக்கு வித்தான். இக்கோவில் சத்துருக்களுக்கு ஒர் அரணாகாமலிருக்கும் பொருட்டு அவ்வாறு செய்தனன் எனத் தோன்றும். ஊர் அடங்கியிருந்தது. ஆயின் சின்னாட்செல்லுமுன், தஞ்சாவூர் நாயக்கன் பின்னுமொருகால் பெரும் படையொன்றை யாழ்ப்பாணத்திலிறக்கி, இத்தடவை தன் மேலாட்சிக்குட்பட்டதென அன்னோன் உரித்தாடிய இவ்விராச்சியத்தை வென்று கொள்வதோடமையாது இந்திய பிரசைகளை இங்கு குடியேற்றவுந் தலைப்பட்டிருக்கின்றனனெனச் சப்தம் பிறந்தது. இதனையுணர்ந்து, கல்வங் என்போன் பருத்தித்துறையில்
101

Page 53
யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
தஞ்சாவூராரைக் காத்திருந்தும் அன்னோர் அங்கு கரைபிடியாது மேற்குப் புறத்துள்ள வேறொரு துறையிலிறங்கிவிட்டனர். விரைவில் போர்த்துக்கேய ஒற்றர்கள் அவரை புத்துரில் ஓர் பனங்கூடலைச் சார்ந்த குளத்தருகில் பாளையமடித்திருக்கக் கண்டார். பறங்கிப்படை தாமதமின்றிப் புறப்பட்டு இராவிராவாய் நடந்து அதிகாலை நாலுமணியளவில் தமிழர் படையானது பனங்கூடற் பக்கத்தில் காவலின்றி யிருக்கக் கண்டு அப்பக்கமாய் அதனை முடுகினார். திடீரென உண்டான ஆயுதங்களின் கலகலப்பும் முரசமாதியவற்றின் அரற்றுதலும் லஸ்கறின்களின் போர்ச்சத்த ஆரவாரமும், செவியில் விழவே, துயில் கொண்டிருந்த தமிழர் கெடிக்கலங்கி எழுந்து பரபரப்பாய் யுத்தசன்னத்தராக முயன்றனர். சிலர் ஏதுசெய்வதென்றறியாது திகைக்க, சிலர் குதிரைகளிலேறிப் போர்பொருதத் தலைப்பட்டும் அந்தோ! காலந்தாழ்ந்து போய்விட்டது. போர்த்துக்கேயர் அவர் அணிகளுட்பாய்ந்து கைசலிக்கு மட்டும் தலைகளை அரிந்து கொட்டிக் கொண்டு நின்றனர். தமிழர்ப்படை வெட்கி வெருவித் தோல்வியடைந்து முதுகிட, பறங்கிவீரர் தாங்கொய்த 800 சிரங்களோடு நல்லூருக்கு மீண்டார். அவற்றுள் யாழ்ப்பாணத்துக்கு அரசனாகுவேன் என்று மனப்பால்குடித்துக் கொண்டு வந்த சேனாநாயகத்தின் தலையுமொன்று. அது முன்புறம் சவுளம் பண்ணியதும், அழகாய்ப் புரளுந் தாடியுள்ளதுமானது. பின்னும் அநேக தலைகள் மரங்களிற் தூக்கிவிடப்பட்டன. அளவிறந்த சூறை அகப்பட்டன. துவக்குகள், வாள்கள், அம்புவில்லுகள் முதலியனவும் குதிரைகளும் பல பிடித்துச் சொற்பவிலைக்கு விற்கப்பட்டன. கைதியானோர் பெரும்பாலும் பெண்களும் சிறுவருமே. இவரெல்லாம் தங்களுக்கு இனி யாழ்ப்பாணமே குடியேற்ற நாடாகுமென்னும் உறுதியான நம்பிக்கையோடு சுவநாட்டைவிட்டுத் தத்தம் ஆடவர்களோடு கூடி தங்கள் நாய், பூனை, கிளிப்பிள்ளை ஆகிய இட்டசெந்துக்களோடும் வந்தவராம். ’மொண்ணி முதலி யாரின் மனைவியோடு மக்களும் சிறைப்பட்டிருந்தனர். அம்மாதுதான் மறியலானமையைப்பற்றி எத்துணைக் கவலைகொண்டாளெனில் நாக்கையிழுத்துத் தற்கொலை செய்வாளானாள். அவள் பிள்ளைகட்குப் பறங்கியர் விடுதலை ஈய்ந்தனர். ஏனை யுத்தமறியற்காரரெல்லாம் விலைகூறி விற்கப்பட்டார். அப்பால் கொளும்பினின்றும் வந்திருந்த உபபலம் மீண்டும் போம்வழியில் Maliavale எனுமிடத்தில் தமிழ்த்தளங்களின் ஓர் அங்கம் நிற்கக்கண்டு அதனையும் முறியடித்துவிடுதலும், எந்தமிழர் பிறவரசாட்சிக்குட்படாதிருக்கும் பொருட்டு ஆடியபோரெல்லாம் விழலுக்கிறைத்த நீராகி, நாட்டைக் குடிசனமற்றதாய்ப் பாழ்பட்டதாய்ப் பண்ணுதற்கே ஏதுவாயிற்று.
60. பறங்கியரசின் பான்மை
வையாபாடல் ஆசிரியரோ மயில்வாகனப்புலவரோ அறியோம். ‘பிலுப்பனெனும் பறங்கிகிளை அரசையாண்டு குருநெறியும் மனுநெறியுமில்லாதாகிக்
102

யாழ்ப்பாண வைபவ விமர்சனம் கொடுமைசெய்து யாழ்ப்பாணத்தில் நாற்பதுவருஷம் நிலைபெற்றதெனக் கூறிய சரித்திரம் அறியாத்தன்மையம், பறங்கியரது அரசுச்சட்டம் ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆகிய mரோப்பிய கிறிஸ்த அரசுகளின் சட்டத்தையொத்த சமநீதியுள்ளதொன்றேயன்றிப் பிறிதன்று. எம்நாட்டுச் சமயங்கள் விஷயமாய்ப் பறங்கியர் செய்தது இக்காலத்தோரான எமக்குக் கொடுமைபோலத் தோன்றுவது வாஸ்தவமே. ஆயின் அக்காலத்து எவ்வெச்சமயத்தவருங் கொண்ட கொள்கைப்படி அவ்வாறு துணிதற்கிடமில்லை. அக்காலத்து அரசரெல்லாம் தாம் பிரசைகளுடைய லெளகிக சீவியகதை மட்டுமன்று வைதிக சீவியத்தையும் பரிபாலிக்குங் கடமையுள்ளோரென்று உணர்ந்து, தாம் மெய்யென நம்பிய சமயத்தையே பிரசைகளும் கைக்கொள்ளவேண்டுமென வற்புறுத்தினர். அந்நாட்களில் ஐரோப்பாவில் புறோட்டெஸ்தாந்த அரசுகள் கத்தோலிக்கரைச் சமயவிஷயமாய்த் துன்பப்படுத்தின. கத்தோலிக்க அரசுகள் புறோட்டஸ்தாந்த குடிகட்குப் பல சுதந்திரங்களை மறுத்தன. மகமதியர் கிறீஸ்தவர்களை ஒறுக்க, இவர் அவரை நாட்டைவிட்டோட்டினர். ஆசியாவிலும் இதுவே ஒழுக்கமாயிற்று. நம் இந்தியா இதற்கு மாறுபட்டதன்று. அங்கு சைவர், சமணரை கழுவேற்றிய சம்பவம் பிரசித்தம், வைஷ்ணவ அரசுயரச் சைவமும் சைவ அரசு உயர வைஷ்ணமும் துன்புற்றமை எவர்க்கும் தெரிந்தது. இலங்கையிலும் இவ்வாறே பறங்கியர் வருமுன் பெளத்தமும் இந்து சமயங்களும் அவ்வவ் அரசின் கீழ் உயர்ந்தும் தாழ்ந்தும் வந்தனவன்றோ. ஆயின் பாரபட்சமற்றோரெல்லாம் பறங்கியர் பக்கமாய்ச் சொல்லத்தக்கதொன்றுண்டு. எம்மரசர்கள் சிலரும் மகமதியரும் செய்ததுபோல இவர் எவரையாதல் தம் சமயத்தைக் கைக்கொள்ளு மாறு பலவந்தம் செய்தாரில்லை. இந்தியாவிலும், இலங்கையிலும் சிற்சில அரசர்கள் தாம் அரியணையில் ஏறிக்கொண்டபின் தமக்கு உவப்பான சமயத்தையே தம் பிரசைகள் எல்லாம் அனுஷ்டிக்கவேண்டுமென நெருக்கி ஆக்கினை பிறப்பித்ததுண்டு. மகமதியர் ஒருவகையில் குறாஅனெனும் தம் சமய நூலையும் மறுகையில் வாளையும் தாங்கி தம்மால் அடிமைப்படுத்தப் பட்டோரைப் தம் சமயத்தில் வலிந்து உட்படுத்தியதுண்டு. ஆயின் போர்த்துக் கேயர் அவ்வாறு செய்யாது தங்களோடு வந்த குருமாரே பொறுமையோடு கூடிய போதகத்தினாலும் அன்பு ஆதரவுகளாலும் சனங்களை வசப்படுத்தித் தம் சமயத்தில் உட்டுத்துமாறு விட்டுட்டார். சமயத்தில் சேருவோருக்கு விசேட உத்தியோகம் ஆதிய சணுவுகளையும் அடிமை மீட்சி ஆகிய சுதந்திரங்களையும் கொடுத்ததொன்றுமே அரசினர் சமயப்பிரவிருத்தி சம்பந்தமாய்ப் பண்ணிய உதவிப்பாடாம்.
ஆயின் பிலிப் தெ ஒவிவேறா யாழ்ப்பாண அரசு கைக்கொண்டவுடன் சைவ வைஷ்ணவ கோவில்களையெல்லாம் தகர்த்து விட்டனர் அன்றோ?. பறங்கியர் மனச்சான்றுக்கு வலுவந்தம் செய்யவில்லையெனின், ஒலிவேறாவினது இவ் ஒழுக்கம் அக்கூற்றுக்கு எதிர்மறையன்றோ? எனக் கேட்பின், இதிலும்
103

Page 54
யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
அக்காலத்துக் காணி ஆட்சி முறையை நாம் அறிந்து கொள்வதுண்டாயின உண்மை வெளிப்படும். தமிழரசர் காலத்தில் தேசம் முழுதும் அரசனுடைய காணியே என்றிருந்தது. குடிகள் அரசனுடைய வாரக்காரர் போலக் காணிகளை ஆட்சிப்பண்ணினாரன்றிச் சொந்தக்காரர் எனவன்று. இதன் நிமித்தமே அரசன் சகல நிலப்புலன்களிலும் ஆறிலொன்றிற்கு உரிமை பூண்டவனானான். வாரமாக காணியை ஆண்டனுபவித்த குடியானவன் ஆண் சந்ததியின்றி இறந்தவுடனே அக்காணி அரசனுக்குரியதாகும். சந்ததியாருள் பிறர் அதனை ஆண்டனுபவிக்க விரும்பின் அரசனுக்கு ஒருவீதம் இறுத்து அதனை மீண்டும் வாரமாகப் பெற்றுக் கொள்வது கடன். இம்முறை சிங்களத்தில் மாறாள எனப்படும். இம் மறாள ஒழுக்கம் தற்காலம் அற்றுப் போய் குடிகள் காணிகளை நிந்தமாய் ஆண்டு வரினும், முந்தி இது நின்றுபோன அடிச்சுவட்டை, உரிமைத் தத்துவத்துக்கென அரசாட்சியாருக்கு இன்றைக்கும் இறுக்கப்படும் வரியிற் கண்டு கொள்க. இவ்வாறு நாடுமுழுதும் அரசனின் நிந்தக் காணியாம் என்றிருந்த அக்காலத்தில், பறங்கியர் தங் காணியில் பிரசித்தமாய்ப் பிறர் சமய வழிபாடு நடப்பதை ஒப்பாமல் அப்பிரசித்த வழிபாட்டுத் தலங்களாகிய கோவில்களை இடித்தொழிப்பதே தக்கது என எண்ணினர். இவ்வண்ணம் அக்காலத்துப் பழக்க வழக்கங்களை ஒட்டிப் பார்க்குமிடத்து நீதியானதே எனக் காணப்படாமலிராது. இராச விசுவாசம் உள்ளவன் தன்னுடைய நிலத்திற் சத்துருவின் கோட்டையிருக்க ஒட்டான். அதுபோல்ப பறங்கியர் தம் நிலமென வெற்றி கொண்ட தேசத்திலே 'பொய்த்தெய்வங்கள்’ என்று தாங்கள் (சரியாகவோ பிழையாகவோ, ஆயின் மனதார) கருதியோரி ஆலயங்கள் இருக்கவிடாது அழிப்பது அவசியம் எனக் கொண்டார். ஆயின் மறுபக்கத்தில், எவருடைய மனச்சாட்சியையாவது நெருக்கி மாற்றுதல் அவர்களது சமயத்திற்கு மாறாய் இருந்தமையால் அவ்வாறு செய்யாது குடிகள் குருமாருடைய போதகங்களைக் கேட்டு தாங்கள் விரும்பிய காலத்தில் தம் சமயத்தைக் கைப்பற்ற விட்டுட்டார்.
81. இராசகுடும்பத்தார்
ஒலிவேறா இராச குடும்பத்தில் மீந்திருந்தோரை வெகு கண்ணியமாய் உபசரித்து நடத்தினான். கத்தோலிக்க குருமாரும் அன்னோருக்கு ஓயாது சமய உபதேசம் செய்து கொண்டிருந்தனர். இவற்றின் பயனாக காலகதியில் அவரெல்லாம் சத்திய வேதத்திற் சேர்ந்து கொண்டனர். யாழ்ப்பாண இராச்சியம் பறங்கியர் கைப்பட்டதற்கடுத்த வருஷம் (?) ஆகஸ்ட் மாதம் முதற் திகதி இராசகுமாரர், குமாரத்திகளும் பிறருமாக 300 பேர் அரச வரிசைகளோடு ஞானஸ்நானம் பெற்றார்கள். முன்பு பிரான்சிஸ்கு சபை கன்னியாஸ்திரிமாரிடம் ஒப்பிக்கப்பட்டிருந்த வாலப்பிராயமுள்ள பரராசசேகரன் மனைவிமார் இருவரும் பன்னிரண்டு பதின்மூன்று வயதுள்ள ஒரு குமாரத்தியும் பட்டுப் பட்டாவழிகளால்
104

யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
அலங்கரிக்கப்பட்டிருந்த பல்லக்குகளில் சுமந்து ஆலயத்துக்கு கொண்டு வரப்பட, ஒலிவேறா அவர்களை வாயிலில் நின்று எதிர்கொண்டு அழைத்துச் சென்று தானே ஞானத்தந்தையாக நின்று தீட்சை வைப்பித்தான். பின்பு இராணிமார்களின் சகோதரனுக்கும் அவன் மனைவி புதல்வர்களுக்கும் ஞானஸ்நானம் அருளப் பட்டது. அவ்வேளை ஆனந்தமாக வாச்சிய முழக்கம் வெடிதீருதல் ஆயுதங்களை ஒச்சுதல் ஆதிய மரியாதைகளும் மிகப் பிரபலமாய் நிகழ்ந்தன. அப்பால் முதலியார் Branco ஆகிய தொம் பேதுறு தெ பெற்றன்கோவின் மனைவியும் இருவர் புதல்வரும் ஒருத்தி புதல்வியும் பின் தொம் பிரான்சிஸ்போ தெ பெற்றன்கோ ஆராய்ச்சி அல்லது தனப்புலி ஆராய்ச்சியின் மனைவியும், நாவலியின் தலையாரியும் மனைவி மக்களும் கிறீஸ்தவரானார்கள்.
எம் நாட்டைக் கடைசியாய் ஆண்டவனான பரராசசேகரின் மகனும் அரசுரிமை பூண்டவனுமான இளவரசனும், அக்காலம் ஏழு வயதுள்ளவனை, சங்கிலிகுமாரன் கலக நாடே பிரான்சிஸ் சபைக்குருமார் காப்பாற்றி வந்தனர் எனக் கண்டோம் அன்றோ? அவனை இனி யாழ்ப்பாணத்திலே வைத்திருப்பது நன்றன்று எனத் தேர்ந்து போர்த்துக்கேயர் அவனைத் தாயாகிய இராணியோடும் கிறீஸ்தவர்களாகிவிட்ட மற்றை இருவர் இராணிமார் இளவரசி என்னும் இவர்களோடும் கொழும்புக்கு அனுப்பி விட்டனர். அங்கு அவன் சந்தத்தோனியு எனும் மடத்தில் கல்வி பயிற்றப்படலாயினர். இதற்கிடையில் செனவிராட் எனும் கண்டியரசன் யாழ்ப்பாண இளவரசியை தன் மகனாகும் ஊவா நாட்டு யுவராசனுக்கு நாயகியாக்கத் தேடித் தூது போக்கினான். இச்சம்பந்தம் தமது யாழ்ப்பாண அரசுரிமைக்குப் பங்கமாகும் என்ற பறங்கியர் இதற்கு உடன்படவில்லை. (செனவிராட்டின் முந்திய தார மைந்தர் இருவர் சின்ன Migapule தஞ்சாவூர் நாயக்கரிடம் ஒப்புவித்த இருவர் யாழ்ப்பாண இராசகுமாரத்திகளை அங்கு சென்று வதுவையுய்த்தனர் எனத் தோன்றும். Say Menezen)
பரராசசேகரனின் பாலகனது ஞானஸ்நானச் சடங்கு 1623ம் ஆண்டு யூன் மாதம் 18ம் திகதி மிகு ஆனந்தப்பிரதாப வைபவங்களோடு நடைபெற்றது. கொழும்புநகள் ஆலயமணிகள் எல்லாம் ஆராவாரிக்க, பிரான்சிஸ்சபைக் குருமார், போர்த்துக்கீய தேசர்திபதியும் சேனாதிபதிகள் படைவீரர் ஆகியோரும் சகிதமாய், நடுத்தெருவால் அணியணியாய் புறம்போந்து இளவரசன் இராணித்தாயோடும் எழுபத்தைவர் பரிவாரத்தவர்களோடும் இருந்த மாளிகையை அடைந்தனர். அங்கு இளவரசர் விலையுயர்ந்த அலங்கார ஆடை ஆபரண மேனியனாய் நிற்கத் தேசாதிபதி அவன் கழுத்தில் போர் பொச்சரப் பணியும் பதக்கமும் இட்டு உபசரித்தபின், அனைவரும் ஊர்வலம் செய்து பலவர்ணக் கம்பளங்களால் விசித்திரமாய் சோடித்திருந்த வீதிகளால் நடந்து தேசோமயமாய் ஒளிரும்படி நிர்மாணித்திருந்த சந்தத்தோனியு ஆலயபீடத்தண்டை வந்து சேர்ந்தனர். அங்கு
105

Page 55
யாழ்ப்பாண வைபவ விமர்சனம் தேசாதிபதி தன் நாமமாகிய தொம் கொன்ஸ்தந்தீனு எனும் பெயரை இராசகுமாரனுக்குச் சூட்டி அவனுக்கு ஞானஸ்தகப்பனாக நிற்க, பிரான்சிஸ்கு சபையின் முதற்குரு தீட்சையளித்தார். இராணித்தாய் தோனா கிளாறா எனும் நாமத்தைப் பெற்றாள். இளவரசியின் சகோதரிகள் இருவரும் முறையே தோனா மரியா என்றும், தோனா இசவேல் என்றும் நாமகரணம் செய்யப்பட்டன. சங்கிலியாற் கண்தோண்டப்பட்டோனான பரராசசேகரன் மைத்துனன் தொம்தியோகு என்றும், பரராசசேகரனின் சகோதரியான இவன் மனைவி தோனா மரியா என்றும் புத்திரர்கள் மூவரும் முறையே தொம் பிலிப்பு, தொம் பிரான்சிஸ்கு, தொம் பெர்ணதீனு என்றும் புத்திரி தோனா ஈனெஸ் என்றும் பெயர் தரித்தார்கள். இவர்களோடு பரிவாரம் முழுதும் ஸ்நாபிக்கப்பட்டது. இவ்வாறு அடுத்தடுத்த வருஷங்களில் முதலிமார், ஆராய்ச்சிமார், அதிகாரிகள், பட்டம்கட்டிகள், வன்னியர் ஆதியோர் சகிதமாய் இராசகுடும்பத்தோடு தொடர் புடைய குமாரர், குமாரத்திகள் பலரும் யாழ்ப்பாணத்தில் குருமாருடைய போதனைகளினால் கத்தோலிக்க திருச்சபையிற் சேர்ந்து கொள்வோரானார்கள்.
அப்பால் பரராசசேகரனின் மக்களது கதியைச் சொல்லி முடிப்போம். இராச குடும்பத்துக்குச் சேர்ந்த ஏனையோர் கொழும்பினின்றும் யாழ்ப்பாணத்திற்கு மீள, தொம் கொன்ஸ்தந்தீனு, தோனா மரியா, தோனா இசவேல் என்னும் பரராசசேகரரின் பிள்ளைகளும், தொம் பெர்ணதீனு எனும் சகோதரர் பிள்ளையும் கோவைக்கு அனுப்பப்பட்டு அங்கு இராச மான்மியங்கள் பெற்று சகல கலைக்கியானங்களிலும் தேறி பின் இராசகுமாரர் இருவரும் போர்த்துக்கல் தேசம் சென்று முடிச் சுதந்திரத்தை வெறுத்து பிரான்சிஸ்கு சபைச் சன்னியாசிகளாகி தேவ தொண்டில் ஈடுபட்டு இன்புற்று வாழ்ந்தனர். இராச குமாரத்திகள் இருவரும் கோவையிலே தானே வங்கீசபதிகளான ஐரோப்பியரும் இந்தியரும் உறைகின்ற சந்தமொனிக்கா என்னும் கன்னியர் இராச மடத்தில் உட்பட்டார். மூத்த குமாரத்தி 1637ம் ஆண்டு கன்னியாஸ்திரியாகித் தன் புண்ணிய முன்மாதிரிகைகளின் விசேடத்தால் அவ்விராச மடத்திற்குச் சிரேஷ்டையாயும் விளங்கி 1682 ம் ஆண்டு பரமபதமடைந்தனள். இளைய குமாரத்தி 1638ம் ஆண்டு பூரண துறவு பூண்டு 1645ம் ஆண்டு மரித்தாள். (HIST.da Fond. de Real Corde.S. Mon p. 232) 6TPE) (56ù55l 9Jéfl6TIS (5Df தலைவியாகி இருந்து ஆண்டதும் மூன்று மெத்தைகளோடு கூடிய அலங்கார மாளிகையுமான சாந்த மொனிக்கா மடமானது தற்காலம் கைவிடப்பட்டதால் அழிந்து விடும் நிலையிலிருக்கிறது. சங்கிலி எனும் செகராசசேகரன் காலத்தில் யாழ்ப்பாணத்தைத் தரிசித்த சவேரியார் எனும் குரு சிரேஷ்டரின் திருமேனி கோவையிலே அழியாமல் விளங்குகின்ற அற்புதத்தை யான் 1922ம் ஆண்டினிற்றிற் தரிசிக்கப் போன தருணத்திலே, வேறொரு சங்கிலியன் அபராதத்தால் அப்பட்டணத்திற்கு இட்டுக் கொண்டுவரப்படுவோராகித் தம் கன்னிகாசீவியப் பிரதாபத்தினால் அலங்கரித்து அர்ச்சித்து வைத்த அந்தப்
- 106

u II b ' l I IT 600T 6b6nu L. Ioni supri li solub பிரமாண்டமான மடத்தின் அவைகளுள் ஒன்றில் சில நாள் தங்கி எம்மரசர்கள் காலத்து உயர்வு தாழ்வுகளை உற்று நோக்கித் தியானிக்கும் சிலாக்கியம் எனக்கு கிடைப்பதாயிற்று.
யாழ்ப்பாண வைபவ விமர்சனம் தமிழரசர் உகம் முற்றிற்று.
107

Page 56