கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அக்கா

Page 1
S S S S S LSLSL LSLSL LSLSLS LL LSLS LLLSL LLLLS L LLL S L LSL L LSL L LSL L SSL L SSL L LS S LS LSL L LSL SLL LS S LSS SZ
ஈழத்தின் தஃசிறந்த சிறு கதை எழுத்தாளர் கிளுள் ஒருவரான திரு முத்துலிங்கம் (23) யாழ்ப் பானத்தைச் சார்ந்த கொக்குவிவில் பிறந்த இாேஞர். விஞ்ஞானப்பட்டம் பெற்று, "அக்கவுண்டனுகப்போகும் இவர் யாழ்ப்பானத்து மண்ணின் வனத்துடன் சிறப் பாகத் தம் சொந்தக் கிராமமான கொக்குவில், அயல்" என கோண்டாவில் இணுவில் கிராம மக்களின் வாழ்வுப் பிரச்&னகளேயும், மனிதப் பண்பற்ற, மனித நிறைவற்ற டினார்ச்சி நாடகங்களேயும் பின்னிப் பிஃனத்து கர்ே தன்மை கொண்ட சிறு இலக்கிய உருவங்களாகத் தந்துள்ளார்.
இச்சிறு கதைகள் மூலம் யாழ்ப்பானத்துக் கிராமப் புறச் சூழ்நிஃபிஜே தோன்றும் சில பாத்திரங்களின் மன நோவுகஃாயும், குமைவுகளேயும், சலனங்களேயும், கொந்தளிப்புகளேயும் கூட இலகு வில் உணர்ந்து Gas TistāTT STIE.
திரு முத்துலிங்கம் தினகரன்' தமிழ் விழார் சிறுகதைப் போட்டி கல்கியின் ஈழத்துச் சிறுகதைப் போட்டி ஆகியவற்றிலே பரிசும் பாராட்டும் பெற்றவர்.
TTLSSSLSLSSLSLSSLSLMSS MSLLLLSLLLLLSLLLMSSLLLLLLSLLLLLSLLLLLSLL LLSLSLL LLS
Jackigt Fried i file E AT E Fru Es, FML diri =
 


Page 2

அ. முத்துலிங்கம்
விற்பனை உரிமை :
L I II rf p8 2ao u I iiib
59, பிராட்வே, சென்னே-1.

Page 3
முதற் பதிப்பு: டிசம்பர் 1964
(C)
விலை : ரூ 2.50
இலங்கையில் கிடைக்குமிடம் : விஜயலட்சுமி புத்தகசாலை 248, காலி வீதி, வெள்ளவத்தை, கொழும்பு - 6.
அச்சிட்டோர் : w மெட்ரோபாலிடன் பிரிண்டர்ஸ், சென்னை-2.

அணிந்துரை
இந்நூலாசிரியர் சிறுகதைகள் எழுதத் தொடங்கிய காலத் திலிருந்தே இவரது எழுத்துக்களைக் கூர்ந்து கவனித்து வந்திருக் கிறேன். இத்தொகுதியிலிடம் பெற்றுள்ள கதைகளிற் பெரும் பாலானவற்றைக் கையெழுத்துப் பிரதிகளிலேயே படித்துப் பின்னர் அவற்றைப் பத்திரிகையில் வெளியிட்டிருக்கிறேன்; சில கதைகளை ஆசிரியர் எழுதுவதற்கு முன்னதாகவே எனக்குச் சொல்லி அவை பற்றி உரையாடியிருக்கிறர்; சில கதைகள் குறித்து என்னுடன் கடுமையாக விவாதித்து மிருக் கிறர். இந்நூற் கதைகள் உருவாகியதைக் காலவளர்ச்சியுடன் கண்டறிந்த நான், இத்தொகுதிக்கு முன்னுரை வழங்குவதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன். கல்லதொரு நூலே அறிமுகப் படுத்தி வைக்கிருேமென்ற உணர்வும் அம்மகிழ்ச்சியிற் கலக் துள்ளது என்று நினைக்கின்றேன்.
நூல் வெளியீட்டாளர்களின் விளம்பரங்கள் போல நான் எழுத விரும்பவில்லை; எனினும், இத்தொகுதியைப் படிக்கும் ” வாசகருக்குப் போதிய விருந்து காத்திருக்கிறது என்று மட்டும் துணிந்து கூறுவேன்.
சிறுகதை எழுத்தாளர்கள் பல்கிப் பெருகிவிட்ட இற்றை காளில் ஒர் இளம் எழுத்தாளர் பற்றிச் சிறப்பாகக் கூற என்ன இருக்கிறது என்று சிலர் எண்ணவும் கூடும். திரு. முத்துலிங்கம் சிறுகதை எழுதத் தொடங்கிய நாட்களில் எனக்கும் அத்தகைய ஐயம் இருந்தது. அப்பொழுது பத்திரிகாசிரியராக இருந்த நான், 15கைச்சுவைச் சித்திரங்கள் சிலவற்றை எ முது ம் ப டி திரு. முத்துலிங்கத்திற்கு ஆலோசனையும் கூறினேன். எனினும், அவர் எழுதிய இரண்டொரு கதைகள் எனது ஐயங்களை நீக்கின. தனக்கென ஒரு நடையையும் போக்கையும் வகுத்துக் கொண்டு எழுதி வந்தார் அவர். தொகுதியிலடங்கியுள்ள கதைகள் எனது கூற்றுக்குச் சான்று விடறு மி ,

Page 4
6
*அக்கா” என்னும் தலைப்புப் பெயரைப் பார்த்துவிட்டு வாசகர் எந்த விதமான அவசர முடிவுக்கும் வந்துவிடக் கூடாது, காதல், சகோதர பாசம், குடும்பச் சச்சரவு முதலிய வழக்கமான 'பல்லவி இங்கு பாடப்படவில்லை. காதல் போயிற் சாதலென்றே, சமூகத்தின் கொடுமை என்னே என்றே, வஞ்சனை செய்யும் மனிதரைப் பாரீர் என்ருே, கதாசிரியர் எம்மை நோக்கிக் கூறவில்லை. அதற்கு மாருகச் சர்வசாதாரணமான மனித உணர்ச்சிகளும் மனித உறவுகளும் கிராமப்புறச் சூழலில் எவ்வாறு தோன்றி இயங்குகின்றன என்பதை உணர்த்துகிருர் ஆசிரியர். நேர்ம்ை, எளிமை, நுட்பம், விளக்கம், ஆகிய பண்புகள் பசுமை குலையாத ஒருள் ளத்திலிருந்து வந்து எமக்குப் புத்துணர்ச்சி யளிக்கின்றன. நமது உணர்வைத் தொட்டுத் தடவிச் செல்கின்றன.
திரு. முத்துலிங்கம் பல்கலைக் கழகத்திலே விஞ்ஞானம் படித்த பட்டதாரி. கணிதத்தையும், பெளதீகவியலையும் இரசாயனவியலையும் படித்த அளவிற்குத் தமிழ் இலக்கண இலக்கியங்களைப் படித்துள்ளார் என்று கூறமுடியாது. அது காரணமாகத் தற்காலத் தமிழ் இலக்கியங்களைப் படித்துவிட்டு, அவற்றினல் கவரப்பட்டு, அவற்றின் வழிநின்று எதிரொ லிக்கும் பண்பு அவரிடம் காணப்படவில்லை. இது மகிழ்ச்சிக் குரிய நிலைமையாகும். இலக்கியங்களிலிருந்து இரவல் அனு பவமும், போலி யுணர்ச்சியும் பெற்றுக் கொள்ளாத அவர், தனது சொந்த அனுபவ உணர்வையே அடிநிலையாகக் கொண்டு, எழுதி வருகின்ருர், இலக்கிய அறிவும், நூற் படிப்பும் எழுத்தாளனுக்கு ஆகாதன என நான் கூறுவதாக எவரும் கருத வேண்டியதில்லை. ஏட்டுச் சுரைக்காய் கறிக் குதவாது என்னும் பழமொழியையே நான் இலக்கிய சிருட்டித் துறைக்கு ஏற்றிச் சொல்கின்றேன்; அவ்வளவுதான்.
தனது அனுபவத்தையே ஆதாரமாகக் கொண்டு திரு. முத்துலிங்கம் எழுதிவருவதினுல் அவர் எழுத்துக்களில் பலமும் பலவீனமும் விரவிக் காணப்படுகின்றன. எனினும் தராசில் பலம் தாழ்ந்தே காணப்படுகின்றதென்பதில் ஐயமில்லை. சிறு கதை, நாவல் ஆகியவற்றில் அடிக்கடி காணப்படும் கைந்து

7
போன சொற்ருெடர்களோ, கதை நிகழ்ச்சிகளோ, பாத்திரங் களோ இக்கதைகளில் காணப்படா; அதே சமயத்தில் பிரச்சினைகளும் காணப்படா. ஆனல், ஆசிரியர் திறம்படச் சித்திரிக்கும் யாழ்ப்பாணத்துக் கிராமப்புறச் சூழ்நிலையிலே தோன்றும் சில பாத்திரங்களின் மன நோவுகளையும், குமைவு களையும், சலனங்களையும், கொந்தளிப்பையும், நாம் இலகுவில் உணர்ந்து கொள்கிருேம்.
தன்னுடைய தங்கை "பெரியபிள்ளை' யாகியும் தான் *சும்மா” இருக்கும் நிலையைத் திடீரென உணர்ந்து கொள்ளும் ஒரு சிறு பெண்ணின் மனக்கோலத்தை, “பக்குவம்” எமக்குக் காட்டுகின்றது. காலந்தாழ்த்தியொரு பெண் பருவமடைவது ஒரு பிரச்சின்ன என்பதில் ஐயமில்லே. ஆனல், அதனைப் பிரச்சினை என ஆர்ப்பரிக்காமற் பாத்திரத்தின் உணர்ச்சி வெளிப்பாடு வாயிலாக நுணுக்கமாக உணர்த்தி விடுகின்ருர் ஆசிரியர். இந்தப் பிரச்சினையை எழுதியதல்ல ஆசிரியரின் திறமை; பலர் முகத்தைச் சுளிக்கக் கூடிய பொருளை ஒரு கிராமப்புற வீட்டிலே சர்வசாதாரணமாகக் காணப்படும் நிகழ்ச்சியாக மாற்றிவிட்டதுதான் ஆசிரியரின் சிறப்பியல்பு. இவ்வெற்றிக்குத் துணை செய்யும் அமிசங்கள் சிலவற்றையும் குறிப்பிடல் வேண்டும். யாழ்ப்பாணத்திலே கொக்குவில்கோண்டாவில் - இணுவில் - பகுதியே ஆசிரியரது பெரும் பாலான கதைகளின் களம். அப்பகுதியிலுள்ள வீடுகள், தெருக்கள், ஒழுங்கைகள், கோயில் ஆகியன உயிர்த்துடிப் புடன் கதைகளில் இடம் பெறுகின்றன; மக்களின் ஊண், உடை, பழக்கவழக்கங்கள், கம்பிக்கை முதலியன பாத்திரங் களின் சூழலுக்கு வரம்பு செய்கின்றன; அவ்வரம்பிற்குள் ளேயே மனித உணர்ச்சிகள் தோன்றி மறைகின்றன; அவ்வுணர்ச்சிகள் தாம் பிறந்த சொல் வடிவிலேயே எமக்குப் பொருள் விளக்கஞ் செய்கின்றன; நுணுக்கமான ஒலியலை களைப் பதியும் நுண் கருவிபோலத் தன க் கு நன்கு தெரிந்த உணர்ச்சிமயமான அநுபவத்தைத் திரிக்காமலும், விகாரப்படுத்தாமலும், கெடுக்காமலும் அமைதியான முறை யில் சொற்களிலே தேக்கியுள்ளார் திரு. முத்துவிங்கம்.

Page 5
8
அவரது கதைகளிலே (பக்குவம், அக்கா, இருப்பிடம்) தோன்றும் பிரச்சினைகள் சமூகவியலாரும், உளத்தத்துவ நூலாரும், “பிரச்சினை”களாக ஆராயும் பிரச்சினைகளே. ஆனல், சூழலை விட்டுப் பிரச்சினைகளைப் பிரித்தெடுத்துப் பொதுப்பட ஆராய்பவர்களின் ஆய்வின் விளைவு அவ்வாய்வு. திரு. முத்துலிங்கமோ உணர்ச்சி நிறைந்த ஒர் இளம் உள்ளத் தில் அவை எவ்வாறு மண்டிக்கிடக்கின்றன என்பதனையே எமக்குக் காட்டுகின்ருர், அந்த வகையிலே இத்தொகுதியி லுள்ள சில கதைகள் மனக் குகை ஓவியங்களே.
திரு. முத்துலிங்கத்தின் கதைகளிலே பாத்திரங்களின் புறத் தோற்றத்தைவிட அக உணர்வே கூர்மையாகத் தீட்டப் பட்டுள்ளது. “அழைப்பு” என்னும் கதையில் இவ்வுண்மை யைக் கண்டு தெளியலாம். சுருட்டுத் தொழிலாளியான கந்தப்பு இக்கதையில் அற்புதமான பாத்திரமாகப் டைக்கப் பட்டுள்ளார். யாழ்ப்பாணப் பகுதியிலே வாழும் சுருட்டுத் தொழிலாளியை இலக்கியப் பாத்திரமாக்கி வெற்றியும் கண்டுள்ளார், திரு. முத்துலிங்கம். ஆனல், கந்தப்புவின் மன உணர்வுகளைத் திறம்படக் காட்டும் ஆசிரியர், அப்பாத்திரம் வாழும் புறவுலகிற் காணப்படும் சிக்கல்களைப் போதியளவு காணத் தவறிவிட்டார் என்றே கூறத் தோன்றும். எனினும் இத்தொகுதியிலுள்ள சிறந்த கதைகளில் அதுவுமொன்று என்று நான் கருதுகின்றேன்.
ஆசிரியரது கதைத் தொகுதியை இப்பொழுது நான் படிக்கும்பொழுது அவர் தனது குழந்தைப் பருவ வாழ்க்கை நினைவுகளையும், உணர்வுகளையும் இறுகப்பற்றிக் கொண்டுள் ளார் என்பது புலனுகின்றது. இலக்கிய கர்த்தாக்கள் பலர் இளமைக்கால வாழ்க்கையை எழுத்தோவியமாக்கியுள்ளனர். தமக்கு நன்கு தெரிந்த, தம்மை யறியாமலே தம்முடன் ஒன்ருகி விட்ட உணர்வுகளையே பல எழுத்தாளர் தமது சிருட்டியின் ஒரு பகுதியாக அமைத்துக் கொள்கின்றனர். அவ்வுணர்வுகள் செம்மைப்படுத்தப் படும் பொழுது நேர்மையும், எளிமையும் பெற்று விளங்குவதில் வியப்பெதுவுமில்லை.

9
திரு. முத்துலிங்கத்தைப் பற்றித் தனிப்பட்டமுறையில் இவ்வளவு கூறும்பொழுது எனக்கு இன்னுெரு எண்ணமும் தோன்றுகிறது. கடந்த சில ஆண்டுகளாக ஈழத் தமிழிலக் கியத்திலே காணப்படும் புத்தொலியின் ஒரு குரல்தான் திரு. முத்துலிங்கம். தேசீயப் பண்பிற்கும் பிரதேச இலக்கிய வளர்ச்சிக்கும் நமது பாரம்பரியத்திற்கும் கொடுக்கப்பட்டு 'வரும் முக்கியத்துவமே, யாழ்ப்பாணத்தின் ஒரு சிறு பகுதியை உணர்ச்சி வடிவிற் கண்டுணர்ந்து எழுதும் முத்துலிங்கம் துரிதமாக வளரக்கூடிய வாய்ப்பையும், அவ்வளர்ச்சியின் சின்னங்களாகிய கதைகளுக்கு நிரம்பிய ஆதரவையும் அளித்தது. உதாரணமாகச் 'சங்கல்ப நிராகரணம்' என்னும் கதை 1958-ம் ஆண்டு இலங்கையில் நிகழ்ந்த கலவரங்களே படுத்த காலப்பகுதியிலே உருவாகியதாகும். கணவனைப் பிரிந்து யாழ்ப்பாணத்திலிருக்கும் ஒரு பெண்ணின் மனத்திலே ஏற்படும் சலனத்தை நுட்பமாகச் சித்தரிக்கும் அக்கதை சூழ்நிலையால் சிறப்புப் பெற்றது என்று துணிந்து கூறலாம். எந்தச் சந்தர்ப்பத்திலும் அத்தகையதொரு கதை பொருத்த முள்ளதாகச் சிலர் கருதக் கூடுமாயினும், பிரிவு ஒரு சமுதாயப் பிரச்சினையாக இருந்த காலத்தில் அக்கதை அவ்வுணர்ச்சிக்குக் கொடுத்த அழுத்தத்தை நான் வற்புறுத்த வேண்டியதில்லை. கத்தியின் கூர்ப்பாகத்தில் நடப்பது போன்ற சிரமமான காரியத்தை எளிமையும் நேர்மையுந் துலங்கச் செய்து முடித்துள்ளார் என்றே நான் கருதுகிறேன். அக்கதையும் பலராற் புகழப்பட்டுள்ளது. மனவுணர்வுகளைச் சிதறலான, ஆனல் சங்கிலித் தொடர்பான ஒவியங்களாகத் திரட்டிப் பூரணமாக ஓர் உயிரோவியத்தைப் படைத்துள்ளார் ஆசிரியர். அக்கதையில் ஆசிரியர் காட்டும் கலை நுணுக்கமும் கற்போர் கண்டுணர்ந்து சுவைக்கத் தக்கதே. அந்த வகையில் தனது குழ்நிலையால் தான் சக்திபெற்று, தனது சக்தியை மீட்டும் தனது சூழ்நிலைக்குக் கொடுத்துள்ளார் அவர். இவ்வாறு கூறுவதனல், நான் முத்துலிங்கத்தின் தனிப் பண்பையோ, திறமையையோ குறைவாகக் கணக்குப் போட்டதாக எவரும் எண்ணவேண்டியதில்லை. ஏனெனில், திரு. முத்துலிங்கம்

Page 6
O
தமிழ்ச் சிறுகதையுலகிற்கு அறிமுகஞ் செய்யப்பட்டால் இடம் பிடிக்கத் தக்கவர் என்ற நம்பிக்கை எனக்குத் தொடக்கத் திலேயே இருந்தது. அந்த நம்பிக்கையும் வீண்பேர்கவில்லை. ஆயின் நாட்டிலே தோன்றிய பல்வேறு விதமான மாற்றங்கள், வளர்ச்சிப் போக்குகள், புதிய கண்ணுேட்டங்கள், ஆகிய வற்றின் உந்துதலினலேயே முத்துலிங்கத்தின் திறமை மெருகு பெற்றது என்பதை நாம் ஒரு கணமாவது நினைவு கொள்ளுதல் தகும்.
கடந்த பத்தாண்டுக் காலத்திற்குள் ஈழத்திலே தோன்றிய தரமான சிறுகதை எழுத்தாளர்களுள் திரு. முத்துலிங்கமும் ஒருவர். அத்தகைய எழுத்தாளர் ஒருவரை ஆரம்பத்திலேயே அட்ையாளங் கண்டு கொண்டதில் நான் எப்பொழுதுமே பெருமைப் படுவதுண்டு. வயதில் எனக்கு இளைஞரான ஆசிரியர் கடந்த சில ஆண்டுகளாக என்னுடன் நெருங்கிய கட்புறவு கொண்டுவந்துள்ளார். அவரது சில கதைகள் பற்றி எனக்குக் கருத்து வேறுபாடுண்டு. ஆனல், அவரது இலக்கிய ஆர்வமும், திறமையும், மென்மையான உளப்பாங்கும் வேற்றுமையைக் குறைத்து ஒற்றுமையையே வளர்த்து வந்துள்ளன. எனவே, நண்பனுெருவனைப் பற்றி அதிகம் எழுத நான் விரும்பவில்லை. நூலைப்பற்றி வாசகர் நல்லெண்ணங் கொள்வராதலின் ஆசிரியரைப் பற்றியும் நல்லெண்ணங் கொள்வர் என்று நினைக்கிறேன். நான் திரு. முத்துலிங்கத்தின் கதைகளை இங்கே விமரிசனஞ் செய்யவில்லை. அப்பணியை விமரிசகருக்கே விட்டுவிடுகின்றேன்; ஏனெனில், வாசகரும், விமரிசகரும் ஏமாற்றமடையமாட்டார் என்ற நம்பிக்கை எனக்குண்டு. ஆசிரியர் மேலும் பல சிறுகதைகளை எழுதி வெற்றி காணவேண்டும் என்று ஆசைப்படுகின்றேன். எழுத்துலகில் அவருக்கு நல்ல எதிர் காலமுண்டு.
தமிழ்த்துறை, பல்கலைக்கழகம், க. கைலாசபதி,
பேராதனை.

என் கதைகள்
கன் கதை எழுதுவது ஒரு தனிக் கதை. கதை எழுத வ்ேண்டும் என்று தோன்றியவுடனேயே இருந்து பக்கம் பக்க மாக எழுதிவிடும் ஆற்றல் எனக்கு இல்லை.
எங்கோ, எப்போதோ மனதில் முளைத்த கருவொன்று மனதைச் சிராய்த்தபடியே இருக்கும். அதன் உருவம் சரியாகக் கவனம் செய்யப்பட்டதும், எழுத உட்காருவேன்; கதை முடிவடைய ஒரு மாத காலமோ, அதற்குக் கூடவோ ஆகும். அதற்குப் பின் திருத்தங்கள்; திருத்தத்திற்குத் திருத்தம். இப்படியாகவே போகும். எனக்குப் பிடித்த உருவம் இறுதி வரை என் கைக்குள் அகப்படாமல் எட்டியே கிற்கும்.
இதன் காரணமாகத்தான் கடந்த காலு வருடத்து அறு வடை இவ்வளவு சொற்பமாக இருக்கிறது.
1958ம் ஆண்டு, நண்பர் கைலாசபதி அப்போது 'தினகரன்’ பத்திரிகாசிரியராக இருந்தார். ஒரு நாள் தற்செய லாக என்னே எழுதிப் பார்க்கும்படி” கூறினர். அதன் விளைவு தான் என்னுடைய முதற்கதையான "ஊர்வலம்'. என் அதிர்ஷ் டம், அவருக்கு அது பிடித்துக் கொண்டது. நான் எழுத ஆரம்பித்து விட்டேன். என் வாழ்க்கையில் நான் இரு நண்பர்களுக்கு மிகவும் கடைமைப் பட்டிருக்கின்றேன். ஒருவர் திரு. க. கைலாசபதி. மற்றவர், திரு. கா. சிவத்தம்பி. முன்னேயவர் என் கதைகளை, என் முன்னிலையிலேயே பிய்த்து, அவற்றின் குறைகளைப் பற்றியே என்னிடம் விவாதித்து, என்னை *நிறை” செய்தவர். நண்பர் சிவத்தம்பியோ என் நிறைகளையே பேசிப் பேசி என் உற்சாகத்தை அதிகரித்து விட்டவர்.
இருவருடைய அறிவுரைகளுமே என் கதைகளில் அவ்வப் போது எவ்வளவோ மாற்றங்களைப் புகுத்தியிருக்கின்றன.

Page 7
12
வாசகர்கள், என் முதற் கதைகளான “ஊர்வலம்” "உன்மத்தராயிருந்தோம்","கடைசிக் கைங்கரியம்”முதலியவற். றிற்கும், பிந்திய கதைகளான "அழைப்பு”, “ஒரு சிறுவனின் கதை", "இருப்பிடம்” ஆகியவற்றிற்குமிடையே காணும் வித்தியாசமே இதற்குப் போதிய சான்று கூறும்.
நண்பர் திரு. கைலாசபதி தமது அணிந்துரையில் குறிப் பிட்டிருப்பது உண்மைதான்; சமுதாயத்தைச் சீர்திருத்தவோ, பிரச்சினைகளைப் பிட்டுக்காட்டவோ, எழுந்தனவல்ல என் கதைகள்.
நான் கண்ட, கேட்ட, அனுபவித்த, சம்பவங்களை, உணர்ச்சிகளை என் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளு கிறேன்; வேறென்றுமில்லை.
கதையைப் படித்து முடிந்ததும் வாசகனிடத்து ஒரு பூரண நிறைவு நிலவ வேண்டும்.
வாசித்ததை நிதானிக்கக்கூடிய ஒரு பக்குவம், தன் சுற். ருடலை ஒரு புதுக் கோணத்தில் கண்டுவிட்ட திருப்தி, படித்த பொருளின் மீது ஒரு லயிப்பு, இவை என் வாசகனுக்கு ஏற் பட்டால் அதுவே எனக்குப் போதுமானது.
என் கதைகளில் சமுதாயத்தின் ஊழல்கள் தொனிக்க. லாம்; தொனிக்காமல் விடலாம்.
சமூகக் குறைபாடுகளை நான் கிர்மூலம் செய்யப் புறப்பட வில்லை; நான் பிரசாரகனும் அல்லன். ஆனல், என்னைச் சுற்றிலும் நான் காணும் மனிதப்பண்பற்ற, மனித நிறைவற்ற நிகழ்ச்சிகளைச் சொல்லாவிட்டால், சொல்லிப் பகிர்ந்து கொள்ளாவிட்டால், என்னில் எனக்கே திருப்தி ஏற்படுவ: தில்லை.
என்னுடைய கந்தப்பு, பாவம் அவரைப் போலவே தான் கானும்.
விடியாத அவருடைய இன்னல்கள் அவருக்குத் தெரியும்; எனக்குத் தெரியும்; என் மூலமாக வாசகனுக்கும் தெரியும்.

13
இதற்கு மிஞ்சி நான் கந்தப்புவிற்கு வேறு ள்ன்ன செய்து விடமுடியும்?
இன்னென்று கூற வேண்டும். இணைவிழைச்சு சம்பந்தமாக நான் எழுதுகிறேன் என்பது ஒரு பொதுக் குற்றச் சாட்டு. என்னைப் பொறுத்தவரையில் அப்படி எழுத வேண்டும் என்ற ஆர்வம் எனக்குச் சிறிதும் கிடையாது. ஆனலும், நான் சொல்ல வந்த கருத்தை சிந்தித்த முறைப்படியே வார்த்தைகளில் வடிப்பதற்கு, சில விவரங்களே அரணுக அமைக்க வேண்டியிருக்கிறது. அவ்வளவுதான். " . . . ;
இத் த்ொகுதியிலுள்ள கதைகளில் முதற் சொன்ன மூன்றும் 1958ல் வெளிவந்தன; 1959, 1960, 1961ல் மிகுதிக் கதைகளை எழுதினேன்.
இக் கதைகளில் “அனுலா” கல்கியிலும், "கோடை மழை” சரஸ்வதியிலும், “ஒரு சிறுவனின் கதை” வீரகேசரியி லும் வந்தன. மிகுதிக் கதைகள் 'தினகரனில்" வெளியாயின. இவற்றின் ஆசிரியர்களுக்கும், இச்சிறுகதைகளைப் புத்தக உருவில் வெள்யிடுவதில் மிகவும் ஆர்வம் காட்டி இந் நூலைச் சிறப்புற வெளியிடும் விஜயலட்சுமிபுத்தகசாலையினருக்கும் அவ் வப்போது அரும் ஆலோசனைகள் தந்து என்னை ஊக்குவித்த கண்பர் திரு. காவலூர் ராசதுரைக்கும் என் 2ன்றி என்றும் உரியது. v. , \,
15, சென்ற் லோறன்ஸ் வீதி, O
கொழும்பு-6. அ. முத்துலிங்கம்

Page 8
கதைகள்
கோடை மழை அழைப்பு
T660)
ஒரு சிறுவனின் கதை
gigst சங்கல்ப நிராகரணம்
உன்மத்தராயிருந்தோம் இருப்பிடம்
கடைசிக் கைங்கரியம்
பக்குவம்
அக்கா
lT
3O
44
54
68
82
95
O9.
121
134
46

சமர்ப்பணம்
என் ரஞ்சனிக்கு

Page 9
s:
淡

கோடை மழை
இலங்கை 'மாப்பை விரித்து வைத்து அதன்
தலையில் யாழ்ப்பாணத்தைத் தேடிப் பிடித்து, சிகப்பு பென்சிலால் பெரியதொரு புள்ளி போட்டு, 'இதுதான் கொக்குவில்" என்று பீற்றிக் கொள்ளும் அளவிற்கு பிரபலமானதல்ல எங்கள் உளர்.
ஆனல் 'மாப்பை" எடுத்துப் பிரிக்காமல், பென்சி லால் கோடு இழுக்காமல், இது கொக்குவில் என்று சொல்லாமல் விடக்கூடிய அளவிற்குப் பிரபலமற்றது என்றும் கூறிவிட முடியாது.
அர்த்த காரிசுவரர் போன்று, கொக்குவில், ஒரு பக்கத்திலும் சாயாமல், தனித்து, தனக்கென்றெரு ாகாகரிகம் வைத்துக் கொண்டு இருப்பதாகத்தான் சொல்ல வேண்டும்.
கொக்குவில் என்றவுடன் சிலருக்கு ‘காணு, சேன? வின் கோடாபோட்ட கல்ல பளபளப்பான நாட்டுப் புகையிலைச் சுருட்டு ஞாபகத்திற்கு வரலாம்; சிலருக்கு முறைப்படி காய்ச்சிய காரசாரமான கள்ளச் சாராயத் தின் நெடி நினைவுக்கு வரலாம். இது இரண்டிலும் அனுபவமில்லாத துர்ப்பாக்கியசாலிகள் Լե60)ւքա } பிரபலகொ2லக் கேஸ0கள் சிலவற்றை ஞாபகத்திற்குக் கொண்டு வந்து அனுபவித்து ரசிக்கலாம்.
ஆனல் கொக்குவில்லுக்கு விஜயம் செய்த யாரா வது அது மேற்கூறிய ஒன்றிலேதான் பிரபலமா

Page 10
18
யிருக்கவேண்டும் என்று கூறினல், அவருக்குக் கண் பார்வை “கிராமப்போன் பிளேட்டா, அல்லது கிடாரச் சட்டியா என்று வித்தியாசம் கண்டு பிடிக்கும் அள விற்காவது இருக்குமா என்பது சந்தேகக் தான்.
ஒழுங்கைகளுக்குப் பேர் போனது கொக்குவில். அவற்றில் தான் எத்தனை ரகம்? வண்டிப் பாதை, மணல் பாதை, மக்கி ரோட்டு, கல்லு ரோட்டு, முடுக்குத் தெரு, மூலைத் தெரு, குச்சு ஒழுங்கை, குறுணி ஒழுங்கை, ஒற்றையடிப்பாதை, ஒன்றரை யடிப் பாதை இப்படியாக இன்னும் பலப்பல.
இப்படிப்பட்ட ஒழுங்கைகளோ, புழுதிக்குப்பேர் போனவை. அது மாத்திரமா? பிறந்த நாள் தொடங்கி மேற்கூறிய ஒழுங்கைகளோடு பழகியவர்களையே சிற் சில சமயங்களில் இவை ஏய்த்து விடுவதும் உண்டு. கெர்ஞ்சம் அசந்து போனுல் சரி, பழையபடி புறப் பட்ட இடத்துக்கே கொண்டு போய்ச் சேர்க்கும் அசாத்தியத் திறமை படைத்தவை.
இந்த ஒழுங்கைகளில் சைக்கிள் சவாரி செய்வ தற்கு, அபூர்வப் பழக்கம் வேண்டும். கொக்குவிலைப் பிய்த்துக் கொண்டு போகும் கே. கே. எஸ். ரோட்டி லிருந்து இறங்கிய ஒருவர், புகையிலைக் காம்பு கெட்டி போல் பின்னிப் பின்னிக் கிடக்கும் இந்த ஒழுங்கைகள் வழியாகப் பிரயாணம் செய்து, மறுபடியும் பலாலி ரோட்டில் மிதிப்பாரானல், அவர் புறப்பட்ட முகூர்த் தத்தில் ஒரு சுவீப் டிக்கெட் எடுத்திருக்கலாம் என்று துணிந்து கூறலாம்.
இப்படிப்பட்ட கிராமத்தில் சுரம் வந்தவனுடைய "டெம்பரேச்சர் சார்ட் போல இடைக்கிடை ஏறி இறங் கும் நாகரிகத்தில், சமீபத்தில் கொழும்பில் இருக் து இறக்குமதி செய்யப்பட்ட நாகரிகமானது ஒரு திடீர்

19
வளர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனுலும் பொது வாகப் பெண்களுடைய நாகரிகமானது, பின்னேரம் ாகாலு மணியானதும் சே8லயைக் க2ளந்து விட்டு *கிமோனு' அணிந்து படலைக் காலைப் பிடித்துக் கொண்டு நிற்பதும், வெள்ளைக் கால் கந்தையருடைய படலையடியில் யாராவது 'இளவட்டம் சைக் கிளில் திரும்புவது தெரியத் தொடங்கும் போதே, உள்ளே ஒடி ஒளிந்து கொள்வதும் என்ற அளவிற்கு வளர்ந் திருக்கிறது.
அவசரகாலச் சமயத்தில் சட்டத்தை மீறி, மதகுகள் மீது குர்தியபடியே அரட்டை அடிக்கும் ஆண்கள்,அரை மைல் தூரத்தில் பட்டாளத்து ‘வான்’ முகப்பு 2லட் மின்மினி போலத் தெரியும் போதே அந்தர்த்தியான மாகும் அளவிற்கு வீரமும், தைரியமும் படைத்திருக் தார்கள்.
குழந்தைகளைப் பற்றியோ கூறத் தேவை
கர்ப்பத்தடையைப் பற்றிய ஞாபகமே இல்லாமல் தாராளமாகப் பெற்றுப் போட்ட குழந்தைக் கணங்கள் ஒழுங்கைகள் எங்கும் நிறைந்திருக்கும்.
தாய்மார்களுடைய கையில் ஆறு மாதக் குழந்தை ஒன்று இருக்கும் போதே, வயிற்றில் இரண்டு மாதத் தில் ஒன்று விண்ணப்பித்துக் கொண்டு இருக்கும். ரெயில்வே லைன் கரை தான் குழந்தைகளுடைய விளையாட்டு மைதானம்.
தண்டவாளத்தின் மேல் வரிசையாக சோடா முடியை அடுக்கிவிட்டு “யாழ் தேவி வரும்போது ஒளித் திருந்து வேடிக்கை பார்ப்பதுடன் அவர்களுடைய ஆரம்ப விளையாட்டு முடிவடைந்து விடும்.
秦 米

Page 11
2Ο
கொக்குவிலுக்குப் புதிதாக வரும் வாசகர்களுக்கு, கொக்குவில் எங்கே ஆரம்பமாகிறது என்ற சந்தேகம் எழலாம்.
காலை 6-20 க்கு யாழ்ப்பாணத்தை விட்டுப் புறப் படும் கொழும்புப் புகை வண்டியில் பிரயாணம் செய் திருக்கும் அன்பர்கள், புகை வண்டி, அடுத்து வரும் சுட2ல ஒன்றைக் கடக்கும் போது, கெடி துயர்ந்த ப2னகளின் பின்னல், சுகாதார இன் ஸ்பெக்டரை நாளது வரை ஏய்த்து வந்த நூற்றுக் கணக்கான தலைப்பாகைகள் மிதப்பதைக் காணத் தவறியிருக்க மாட்டார்கள்.
சந்தேகமின்றி, கொக்குவில் அங்கேதான் ஆரம்ப மாகிறது.
கொக்குவிலின் மேலான கைத்தொழில் சுருட்டுத் தொழில்தான் என்றலும், சுருட்டுத் தொழில் செய்து, பணக்காரரானவர்களே விரல் விட்டு எண்ணுவதானல் கைகளே தேவையில்லை.
கல்வியும் இதே நிலைதான். * கிளறிக்கல்’ ஒவ்வொருத்தருடையதும் மகோன்ன தமான லட்சியம். தட்டித் தவறி யாராவது ஒருத்தர் எஸ். எஸ். சி. பாஸ் செய்து விட்டால் நல்லூர் கந்த சாமியாருக்கு ஒரு சங்கரார்ச்சனை லாடம் என்று அர்த்தம்.
ஆண்களின் கதியே இப்படி என்றல் பெண்க2ளப் பற்றிக் கூறவே தேவையில்லை.
குறைந்தது நாலு பிழைகளுடன், விலாசதாருக் குக் கிடைக்காத வகையில், ஆங்கிலத்தில் தந்தி எழுதும் அளவிற்கு, அவர்களுக்கு அமோகமான கல்வி அறிவு இருக்கிறது.

21
இருக்தும் என்ன? நாகரிகக் கண்கொண்டு பார்க்கும் பேர்வழிகள் கொக்குவிலின் பிரபல்யத்தை மாத்திரம் எப்போதும் ஒப்புக் கொண்டதே கிடை ԱյT 3)].
米 来源
சின்னச்சிக் கிழவி, ஒன்றரை சஷ்டியப் த பூர்த்தி மதிக்கக்கூடிய தோற்றம். எனினும் அந்த நாட்களில் ஆயிரம் புகையிலைக் கன்றுக்குப் பட்டை பிடித்த தேகக்கட்டு இன்னமும் குலைந்துவிடவில்லை. தொழில் ஊர் வம்பு; "பார்ட் டைமாக' பலாவிலை குத்தல். “தொண தொணப்பு? ஈச்சரிப்பு, கருமித்தனம், 'பஞ்சம் கொட்டுதல்’ போன்ற கிழவிகளுக்கு இயல்பான லட்சணங்களுக்குக் குறைவில்லை.
கோச்சி வரும், கவனம்" எச்சரிக்கையை லட்சியம் செய்யாமல் எதிரே வரும் ரயில்வே கடவையைக் கடந்து இடது சந்தியில் திரும்பினுல், “இங்கே ஆர்மோனியத்தை ரிப்பேர் செய்யப்படும்’ என்ற போர்டு பலகை ஒன்று பயங்கரமாகத் தமிழுக்கு ரிப்பேர் பார்த்தபடியே தொங்கும்.
அதற்கு எதிர்ப்புறம் ஒரு குச்சு ஒழுங்கை,
பகல் பன்னிரண்டு மணிக்குக்கூட தனியாகப் போவதாக இருந்தால் கெஞ்சம் ‘படக் படக்" என்று இடிக்கும். ஜனப் புழக்கம் இல்லாத படியால் பாதை கடுவே அங்கங்கே இக் கிரியும் காகதாளியும் சுகம் விசாரிக்கும்.
தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மேலும் போனேமென்றல் பிரமாண்டமான கள்ளி மரம் கொக்குவில் பசுக்களின் அன்றைய சந்ததி விருத் தியை உமல்களாகக் காய்த்து, கணக்குக் காட்டிக் கொண்டிருக்கும்.

Page 12
22
கைக்குட்டை வைத்திருப்பவர்கள் ஒரு கையால் முக்கிற்கு அபயம் அளித்தப்படி, மறு கையால் உயிரைப் பிடித்துக் கொண்டு, இன்னும் பத்தடி போவார்களானல் 'அட்டாளை முருகேசர் கொலை யுண்ட புனித ஸ்தலம் தென்படும். இந்த மேட்டு நிலத்தில் நின்று கிழக்குப் பக்கமாகப் பார்த்தால் தெரிவதுதான் கிழவியின் பொத்தல் குடிசை.
ஆனல் இப்போது அங்கே இந்த வழியா போக முடியாது. புளியமர உரிமை வழக்கொன்றில் தாய்க் கும் பிள்ளைக்கும் ஏற்பட்ட தகராறில் “கவுண்மேக் து? தலையிட்டு, குறுக்கு வேலி ஒன்று தற்காலிகமாகப் போட்டிருப்பதால், கேயர்கள் தயவு செய்து சிரமத் தைப் பாராது, வர்ந்த வழியில் திரும்பி, கிழவி வழக்க மாகப் போகும் பிள்ளையார் கோவில் ஒழுங்கையால் வருவார்களாக !
எலக்சன் சீசனில் யாரோ ஒட்டிவிட்ட கோட்டிஸ் ஒன்று இன்னமும் கிழவியின் பட2லயில் விசுவாசத் துடன் ஒட்டிக் கொண்டு இருக்கிறது.
அந்தப் படலையை இழுத்துப் பிடித்தபடி பாருங் கல் ஒன்று. கையை விட்டவுடன் படலை படாரென்று சத்தத்துடன் மோதிக் கொள்ளும். ஆனல், இதில் ஆச்சரியம் என்னவென்றல் இதைத் தான் ஆங்கிலத் தில் “ஆட்டோமெட்டிக் ஷட்டர்’ என்று கூறுவார் கள் என்பது கேவலம், கிழவிக்கோ அல்லது பட2லக்கோ தெரியாததுதான் !
சிறிது கடகடத்த அந்தப் படலை மீது நமக்கு இலகுவில் நம்பிக்கை பிறப்பதாகத் தெரியவில்லை. ஆன படியால், கிழவி, வழக்கமாகப் போகும் பொட்டு வழியாக நாமும் குனிந்து உள்ளே போவோம்.

23
சுளகு ஒன்றிலே ஒடியற் கிழங்கு காய்ந்து கொண்டிருக்கிறது. பக்கத்திலே ஈர்க்கிலே ஜம்மென்று குந்தியிருந்த பழ மிளகாய் ஒன்று காக்கைகளை எ ல் ல |ா ம் விரட்டியடித்துக் கொண்டிருக்கிறது. வாசலுக்குக் கொஞ்சம் தள்ளி ஆடு கட்டியிருக்கிறது. பக்கத்தில் ஒரு உழவாரப் பிடியும் கொஞ்சம் புல்லுக் கட்டும்.
ஆடோ, உழவாரமோ புல்லைக் கவனிப்பதாகத் தெரியவில் 2ல.
அரைச் சாக்கு கெல்லு காயப் போடக் கூடிய அளவிற்கு ஒரு குந்து. அதை ஒட்டியபடி கிடக்கும் மண் சுவரில் கரிக் கணக்கு எழுதாத இடமாகப் பார்த்து, ஒரு தேதியில்லாத முருகன் காலண்டர், பரிதாபகரமாகத் தொங்குகிறது. வள்ளியம்மை தெய்வாணையருடைய டிரஸைப் பார்த்த அளவில் “பொங்கு கை" பாஷன் பிரபலமாயிருந்த காலத்தில் காலண்டர் அச்சாகி இருக்க வேண்டும் என்று தோன்றியது.
கிழவி, கோடிப் பக்கத்தில் இருல் கோண்டிக் கொண்டிருந்தாள். பக்கத்தில் இருபது வயது மதிக் கக்கூடிய இளைஞன் ஒருத்தன் சோகம் ததும்ப நின்று கொண்டிருந்தான்,
“எட பாவி! உன்னைப் பெத்த வயிறு கெருப்பாய் எரியுமேடா ? எப்படித்தான் உ ன க் கு மனசு வந்தது "
'கான் என்ன2ண ஆச்சி செய்ய ? கொழும்பிலே வேலை ஒண்டுக்கு கட்ட வேணும். அந்த மனுஷிக்கு எப்பிடிப் போட்டு விளங்கப்படுத்தியும் ஏறுதில்லை. என்னை வேறை என்ன செய்யச் சொல்லுறப் ? வேலை

Page 13
24
யானதும் முதல் சம்பளத்திலேயே மீண்டு போடுறன். இப்ப மாத்திரம் என் 2னக் கை விட்டிடாதேய2ண ! வீட்டிலே பொலிசெல்லாம் வந்து சோ தி 2ன f'5 L-ó5 Ġg5 ġbi.''
“என்ன . . ! பொலிசுக்கும் சொல்லிப் போட்டே என்னட்டை வந்தனி எனக்கு வேண்டாம் ராசா இந்தச் சள் 2ள ! நாளைக்கு பொலிசுக்காரன்கள் வந்து என் 2னப் பிடிச்சு நாலு கேள்வி கேட்க . .ாகான் தறதற வென்று முழுச. . 9 y
இ2ளஞன் கொஞ்சம் உலக சம்பிரதாயம் தெரிந்த வணுகக் காணப்பட்டான்.
“எ2ண ஆச்சி ! நீ பயந்து சாகிருய் ? இப்ப நான் உதைப் பெரிய கடையிலே கொண்டு போய் வைக்க மாட்டேனே. உன்னட்டை என் டால் அயலுக் 60) ტნ . . . ... ஏதோ.. அஞ்சு . . பத்து. உனக்கும்?
'அஞ்சு பத்து மாத்திரம் உடனே பலித்தது ! கிழவி இற2லக் கழுவி எடுத்துக் கொண்டு உள்ளே போனுள். இவ்வளவு நேரமும் காத்திருந்த காகத்தின் வாயில் மண்ணைப்போடுவதற்கென்று எங்கிருந்தோ ஓடி வந்த கிழவியினுடைய வாடிக்கை காய், அரிவாளே நக்கி எடுத்து, கிழவிக்கு ஒத்தாசை செய்தது.
முந்தானையால் கையைத் துடைத்தபடி “எங்கை எடு பாப்பம்’ என்று கையை நீட்டினுள் கிழவி.
ால்ல கனம். குறைஞ்சது கானுாறு மதிக்கலாம் என்று கிழவியின் அனுபவக் கை கூறியது.
'இது என்ன இரண்டரைப் பவுனும் தேறது போஜலக் கிடக்கு ? எவ்வளவு கேட்கிருய் ??
"ஒரு முன்னுாறு!...”

25
'இப்ப உங்கை ஆரிட்டை மாறிறது ? செல்லாச் சியும் முத்த மோலின்ரை பிள் 2ளப் பெத்துக்குச் சிலவழிச்சுப் போட்டு நிற்கிறள், சின்னமோனை படுத்த படுக்கையாய் கிடக்கிறன் . . * இன்னும் என்னவோ எல்லாம் கிழவி முணு முணுத்தாள். காதில் விழ
மடியை இறுக்கிக் கட்டிக் கொண்டு, இறப்பிலே சொருகியிருந்த தடுக்கை இழுத்துத் தட்டி, குக்திலே போட்டாள் கிழவி. ‘உதி2ல இரடா மேனை அஞ்சு நிமிட்டிலை வந்திடுறன் . . உந்தக் கட்டயிலே போற வன் ரை மாடு வந்திடும் . . ஒருக்கால் பார்த்து கொள் .." என்றபடி பிலாவிலைக் கம்பியையும் தூக்கிக் கொண்டு முனு முணு" என்று தன் சொர்ந்த பாஷை யில் ஏதோ பேசியபடி புறப்பட்டாள் கிழவி.
**டெத்த தாயிட்டைக் களவெடுத்துக் கொண்டு வந்திருக்கு முதேவி! என்னெண்டுதான் உருப்படப்
போகுதோ! லோகம் கெட்டுப் போச்சு . . கனகத் தின் ரை மூத்தவன் ஒரு போங்கு. . அவளுக்கும் வேணும் . . கொக்குவில்2ல தன்னட்டைத்தான் கல்லட்
டியல் கிடக்கு என்ற கெறுக்கு. . முத்தாச்சியின் ரை செத்த வீட்டுக்கு வந்த இடத்திலே என்னுேடை கட்டிப் பிடிச்சு அழக்கூட இல்லை!"
ாகாலு வீட்டுக்கும் போய் கிழவி வருவதற்கிடை யில் இளைஞனுடைய முக்கால் வாசிப் பிராணனும் போய் விட்டது. தடுக்கில் இருந்த hெட்டியெல்லா வற்றையும் பிய்த்துப் பிய்த் துப் பல்லைக் குத்திய படியே இருந்தான்.
சமய சந்தர்ப்பம் தெரியாமல், நிரை விட்டுப்போன கொள்ளி எறும்புகள் வேறு இடைக்கிடை அவன் காலை உருசி பார்த்தன.

Page 14
26
புல்லுக்கார மனுஷி ஒன்று, என்ன இழவோ சமுசயப்பட்டு, திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே போனுள் .
அவள் அந்தப் பக்கமும் வருகிறவள்.
கால்சட்டை போட்டபடி குந்தில் இருக்க வெட்கம் பிடுங்கித் தின்றது.
பன்னிரண்டு மணிபோல கிழவி யார் யாரையோ திட்டிக்கொண்டே அவர்கள் ஏழேழு தலைமுறை யும் என்னென்ன வியாதி வந்து சாக வேண்டு மென்று ‘லிஸ்டு தயாரித்தபடியே, வங்து கொண் டிருந்தாள்.
பிலாவிலை நிரம்பி வழிந்தது.
வந்தவள் வெகு சாவகாசமாகக் குந்தி இருந்து ஒவ்வொரு இலையாகக் கிழித்து ஆட்டுக்குப் போட்ட படியே இருந்தாள்.
இ2ளஞன் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தான். கிழவி பேசுவதாய்க் காணுேம்! நெருப்புமேலே இருப் பதுபோல் இருந்தது அவனுக்கு.
“என்ன2ண ஆச்சி. போன விஷயம்? "கான் என்னத்தைச் செய்ய?. எல்லா வேசை யளும் பஞ்சம் கொட்டுறளவை . . உனக்குத் தெரி யுமே. முளிக்கார கங்தையற்றை பேத்தி. . இப்ப அவள் தான் புதுப்பணக்காரி...சாதிக் குணத்தை என் னிலே எல்லே காட்டுறள். கேளடா மோனை. கண்டறி யாத பூனை கமுகிலை ஏறி.?”
அவனுக்குப் பொறுமையில்லை. "அபப நான் வரப்போறேன். நீ அதை. எடு!”
"என்னடா அதுக்கிடையிலே கோவிக்கிறப்1 ஆக கொக்குவில்லை அவள் ஒருத்திதானே பணக்கார்.

27
மற்ற எல்லோரும் செத்துப் போனளவையே? இந்தா. இவ்வளவுதான் தேறிச்சு து. ஒருத்தியிட்டையும் இந்த கேரம் இல்லை!"
"எவ்வள வெனே கிடக்கு?
'எண்ணிப் பாரேன்! இருபத்தேழு தந்தாள் பாவி. ாகான் ரெண்டு எடுத்திட்டன். மிச்சம் இருநூற். றம்பது இருக்குது. மாதக் கடைசியிலே மீண்டு GLITG.'
‘எம காத கி’ என்று முனு முணுத்தபடியே கால் சட்டை பைக்குள் காசை வைத்துக்கொண்டு புறப் பட்டான் இளைஞன்.
கச் சான் காற்று அடித்து ஒய்ந்து, மறுபடியும் சோளகம் வீசத் தொடங்கிவிட்டது.
கொழும்புக்குப் போனவன் திரும்பி வந்த ஒரு அசு கை, அசுமாத்தத்தையும் காணவில்லை.
கிழவி எதிர்பார்த்ததுதான்.
கிழவிக்கு என்ன பைத்தியமா, நல்ல பெறுமதி யான நகையைக் கொண் டுபோய் வேறு யாரிடமும் வைப்பதற்கு? ககையை வாங்கி வைத்துக்கொண்டு "வாயைக் கட்டி வயித்தைக் கட்டி சேர்த்த தன்னுடைய காசைத் தான் கொடுத்திருந்தாள்.
மறுபடியும் வந்து கேட்டால் ‘கண்டது ஆர், கேட்டது ஆர்' என்று அடிச்சு மூடி விட்டால் போகிறது.
அன்றைக்கென் று கிழவியினுடைய முத்த மகள் வந்திருந்தாள்.

Page 15
28
*எ2ண ஆச்சி என்ரை மோளின் ரை சாமத்தியச் சடங்கை கொஞ்சம் பப்ளிக் காய் நாலு பேருக்கும் சொல்லிச் செய்யப் போறன். சிலவுக்கு ஒரு நானூறு எங்கையாலும் மாறித் தாவன், சடங்கு முடிஞ்ச கையோட திரும்பித் தந்திடுவன்.?
"இதென்னடி நீ! 'சுடுகுது மடியைப் பிடி? எண்டால் ஆர் தருவினம். அதுவும் ஆரெண்டாலும் சும்மா தாறண்டவளவையே..??
“என்ன2ண ஆச்சி உளரி2ல கான் குடுத்த காசெல் லாம் நிக்குது. பொடிச்சியின்ரை சடங்கோட ஒரு ஐந்நூறு அறுநூறவது சேரும் . உன்ரை காசு எனக் கென்னத்துக்கு, அஞ்சு சத வட்டியோட அப்பிடியே தந்திடுறன்.?
“சரி, ரீக் வீட்டை போ! நான் உங்கி2ணக்கை பாத் திட்டு வாறன்’ என்று கிழக்குப் பக்கம் கையைக் காட்டினுள் கிழவி.
பாக்கியமும் கிழவியினுடைய மகள் தானே. கிழக்குப் பக்கம் கையைக் காட்டினல் மேற்குப் பக்கத்தில் தான் எங்கோ மாறப்போகிறள் என்று அர்த்தம்.
*சீனியற்றை செல்லாச்சியாக இருக்குமோ? என்று ஊகித்தபடியே எழுந்து புறப்பட்டாள் பாக்கியம்.
sh
வெய்யில் காய்ந்துகொண்டு தானிருந்தது. எனி னும் கிழவியினுடைய தீட்சண்ய புத்தியிலே மழை பெய்யும் போலப்பட்டது. w
அப்படியே காயப்போட்ட விறகுகளை அவசர அவசரமாக அள்ளி 'அசைவிலே அடுக்கினுள்.

29
பிலாவி2லக் கம்பியையும் தூக்கிக்கொண்டு, அடிக்கடி மடியைத் தொட்டுப் பார்த்தபடியே புறப் பட்டாள் கிழவி.
சொந்த மகளிடமே வட்டிக்குக் கொடுக்கும் சுவா ரஸ்யத்தை இதற்கு முன்பு அவள் அனுபவித்தது. கிடையாது.
செல்லாச்சியிடம் கொடுத்தால் கண்ணை முடிக் கொண்டு கானூறு தருவாள்.
கிழவிக்கு என்னவோ ஞாபகம். மடியானைப் பிரித் துப் பார்த்தாள். ஏதோ மாதிரி இருக்தது.
வெளிச்சத்தில் எடுத்து உற்றுப் பார்த்தாள். வயிறு பகீரென்றது! கண்னெல்லாம் சுழட்டிக்கொண்டு வந்தது. நடு வழியில் கிழவி பொத்தென்று குந்திவிட்டாள்.
நடுங்கும் அந்தக் கையிலே கிடந்த ககை அவ8ளப் பார்த்து இளித்தது.
என்ன இருந்தாலும் பித்தளை பித்த8ள தானே! எங்கோ சேவல் ஒன்று பட படவென்று செட் டையை அடித்துக் கொண்டது.
மின்ன வில்2ல! முழங்கவில்2ல! “Li L e t l ue fi” என்று தடித்த மழைத்துளிகள் அங்கும் இங்கும் பொட்டுப் பொட்டாக விழுக்து தெறித்தன.
கிழவியின் வரண்ட கண்ணிர் விழுந்த இடம் தெரியவே இல்2ல!
இயல்பான கொக்குவில் புழுதியின் வாச2ன கம்மென்று வீசியது.

Page 16
II
அழைப்பு
2தல் காற்று உடலைக் கிழித்தது. விறுக்கு விறுக்கென்று கைகளை வீசியபடி வேகமாக நடந்து கொண்டிருந்தார் கந்தப்பு. அர்த வெற்று உடம்பில், இணுவிலின் பேர் போன செம்மண் புழுதியை அள்ளித் தெளித்துக் கொண்டிருந்தது காற்று. கூடுவிட்டுப் போன மார்பும் அதற்குமேல் ஒட்டிவைத்தார் போன்று உடலுக்குச் சற்றே பெரிதான தலையும், குழி விழுந்த கண்களும், கவுண்மேக் து உத்தியோகத்தனுக இருக் தால் எந்த நேரமும் 'மெடிக்கல் சர்டிபிககெட்" எடுக்கக் கூடிய தேகக் கட்டுமாக, அந்த நிர்மானுஷ்ய மான ரோட்டிலே, கந்தப் புவின் வீச்சு கடை சிறிது பயங்கரத்தை வி 2ள வி க் க க் கூடியதாகத்தான் இருந்தது.
தூரத்தில் அதிசயமாக பஸ் ஒன்று வந்து கொண் டிருந்தது. ‘இன்று மட்டும் பஸ்ஸிலே போனல்? என்ற சபலம். அவரையும் அறியாமல் அவருடைய கைகள் மடியைத் தொட்டன. மு ன் று காளாகச் சுருட்டியபடி கிடந்த அந்தப் பதினேழு சதம் வியர்வை மணத்துடன் காட்சியளித்தது.
-இண்டைக்காவது முதலாளி கணக்குத் தீர்த்தா ரெண்டால் . . உந்தச் சில்லறைக் கடன்களை ஒரு மாதிரி சரிக்கட்டலாம். சுப்பையாவின் ரை கடைக் காசை இண்டைக்கு குடுத்திட வேணும். அவன் வீட்டிலை பழி கிடப்பன். இப்ப காலு நாளாய் விரதம்

31
.ம். அவள் பொடிச்சியைத் தனிய கடன்காரருக்கு வகை சொல்ல விட்டிட்டு நான் என்ரைபாடு. சீ. என்ன புழைப்பு.
-காலம்பறவும் தேத்தண்ணிக்குச் சீனியில் 2ல. பனங்கட்டியோட எத்தினை நாளைக்குச் சரிக்கட்டிறது ...ம். வரவரப் பிலயினம்தான் கூடி விட்டது. டிஸ் பென்சரியி2ல இரும்புச் சத்து மருந்து வாங்கிக் குடிக்க வேணும் . முன்னேயெல்லாம் கை என்ன கெச் சிதம் . . இப்ப வயது போகப் போக கையும் பிரண்டு கொடுக்குதில்லை.
முனியப்ப கோயில் வந்ததும் கர்தப்புவினுடைய கை தானகவே மேல் துண்டை அகற்றியது. ஈடை யைத் தளர்த்தாமலே உரோமமில்லாத அந்த மார்பிலே கையை வைத்து 'அப்பனே முனியப்பா’ என்று வாய் விட்டு அரற்றிக் கொண்டார்.
-ஏன் இண்டைக்கும் எனக்கொரு பெடியன் கட்டி ஞனெண்டால் கரைச்சலில்லாமல் அறுபது, எழுபது கட்டு கணக்கெழுதலாம். . சின்னவனேக் கூட்டிக் கொண்டு வரலாம். மனம் கேட்டால் தானே. அவன் ஒருத்தன் எண்டாலும் நாலு எழுத்துப்படிச்சு. மூதேவி .கேற்று சிலேட்டுத் துண்டை உடைச்சு போட்டு வந்து நிக்குது. அது எங்கை படிக்கப் போகுது. . இழுத்துக் கொண்டு போய் இதைப் பழக்கிவிடலாம். வேண்டாம் . இந்த காத்தல் தொழில் அவனுக்கு வேணும். செத்தாலும் பரவாயில்லை . இந்த காசமாய்ப் போற தொழிலைப் பழகினல். கடைசியில் இதுதான் கதி எண் டு கிடந்திடுவன்.
. ச்சீ! அந்தக் காலத்திலை றயில் கதவு சாத்திற வேலை எனககும் கிடைச் சதுதானே. கானும் என்ரை முதேவியின்ரை சொல்2லக் கேட்டு அந்தக் கவுண்

Page 17
32
மேந்து வேலையை வேண்டாமெண்டேனே! என்னைச் செருப்பாலே அடிக்க வேணும்.
ராஜாமில் ஒழுங்கை தாண்டியவுடனே, கர்ந்தப்பு வின் கண்கள் அவரை அறியாமலே தூரத்து கோட்டம் விட்டன. மரவள்ளிக் கிழங்குக்காரி ஒருத்தி சந்தி யடியில் வந்து கொண்டிருந்தாள். “அவளுக்குத் தெரியவா போகிறது' என்று கக்தாவில் தோட்டத்து மதகடியின் பக்கலில் குங்தினர். நாயுண்ணி மர மொன்று தொடையிலே குத்தியது. தொட்டாச் சிணுங்கி இலைகளைத் தொடுவதும் விடுவதுமாக இருந்தார்.
எதற்காகவோ தேகம் கடுங்கியது. பரியாரி வீட்டைத் தாண்டும்போது மனுஷியின் ஞாபகம் மறுபடியும் வந்தது. "ஆஸ்பத்திரி மருந்துத் தண்ணியிலே அவளுக்குச் சு கமில்லை. வேலனைப் பரியாரியிட்டை தான் காட்ட வேணும் .?
த2லயெல்லாம் ஒரு மாதிரிச் சுற்றிக்கொண்டு வந்தது. கல்லும் மக்கியுமான அந்த மாத்தனை ஒழுங் கையில் இறங்கிய போதுதான் தார் ரோட்டின் அருமை தெரிந்தது. துரையப்பாவும் கங்தையாவும் முன்னே, ஒரு சைக்கிளிலில், போய்க் கொண்டிருக்தார்கள். 'மனுஷி படுக்கையிலை விழுந்திருக்காட்டில் என்ரை சைக்கி2ள வித்திருக்கத் தேவையில்லை. இனி அப்பிடி ஒன்று எப்ப அவிழ்க்கப் போறனே?
"என்ன மாணிக்கம் இன்னும் கடை திறக் கேல்லைப் போல கிடக்கு.?
*ஒமண் 2ண . இண்டைக்கு எழும்பக் கொஞ்சம் செண்டு போச்சு? மாணிக்கத்தினுடைய முத்த மகள் முற்றத்தைக் கூட்டிக்கொண்டு நின்றள்-என் ரை

33
பூரணத்துக்கும் இவளோட்டை வயதுதானே! ஆனல், அவள் ஒரு விரல் கடை உயரம். மாணிக்கமும் ஒரு மாதிரி பொடிச்சியின் ரை விஷயத்தை ஒப்பேற்றிப் போட்டுது. . Tானும் அவள் பூரணத்துக்கு எங்கை யாலும் பார்க்க வேணும் . . எண்டால் என்னத்தை அள்ளிக் குடுக்கிறது. அது.அது பிறக்க வேண்டிய இடத்தலை பிறக்க வேணும் . அவன் சண்முகம் இப்ப கார்விடப் பழகி இருக்கிறன் . . அவனுக்குப்
பேசலாம்தான் . . வயிரவன் எவ்வளவு கேக்கிருனே?
R
2
கொக்குவில் சுருட்டுக் கொட்டில்கள் எதற்காவது பிரமாண்டமான போர்டு பலகை தொங்க விடுவதில் யாரும் காசு செலவிடாமல் இருந்தும் கூட, அனுபவஸ் தர்களுக்குச் சுருட்டுக் கொட்டில்களை இனம் கண்டு பிடிப்பதில் எப்பொழுதும் சிரமம் இருந்தது கி.ை யாது. ஒழுங்கைக் கரையோடு சோர்வு தட்டி நிற்கும் கதியால்களின் வரிசையில் இருந்து முக்கைத் தாக்கும் ஒரு கெடி புறப்படுமாயின், வெகு சமீபத்தில் கொட் டில் ஒன்று இருக்க வேண்டுமென ஊகித்து விடலாம்.
கதவைத் தள்ளியபோதே கோண்டாவில் முருகேசு வின் குரல் கேட்டது. .ம். இண்டைக்கும் செண்டு போச்சு போல கிடக்கு. துண்டை உதறிக் கொடியிலே போட்டு விட்டுத் தூளை அள்ளி வைத்துக் கசக்கத் தொடங்கினர். கெட்டியும் முட்டியுமாகத் தூள் கர கரத்தது. கோடாத் தண்ணிர் சிறிது தெளித்து, பதம் படுத்தலாம் என்றல் நிறை கூடிவிடும் என்ற பயம் வேறு.
"என்ன முருகேசு . . இண்டைக்கு 'டைமன்' ፰T {865I ?”
2 .}9قى

Page 18
34
'இல்லையண்ணன்! இப் ப 'பிறிவியனுக்கு கொஞ்சம் பிறியம் வந்திருக்கு; இண்டைக்கு உங்க ளுக்கும் அதுதான். py
கந்தப்புவுக்குப் பகீரென்றது. வால் பருத்த அந்தப் புதிய சைஸ் சுருட்டு எப்பொழுதுமே அவருக்கு ஒத்து வந்ததில்லை.
. . . . . . தம்பி, சுப்பிரமணியம். . ஒரு றில் கட்டை எறி மேனை . . y yo
*இந்தா கந் ப்பு. . இண்டையான் சைஸ் கொஞ்சம் கவனம் . . கையை இழுத்துப் போடும். காப்பி2ல நாலுக்கு வச்சிருக்கிறன் . . கேற்றைக்கு இருப்பு அடுக்கிற போதுதான் பார்த்தன் . . உன் ரை கட்டி2ல இரண்டு த2லப்பாலே பிரிஞ்சு போச்சுகொஞ்சம் கண்ணேத் திறந்துவைச்சுப் பிடி காணும்.”
முதல் சுருட்டைச் சுருட்டி வாலைக் கட்டுவதற்கு நூலே வலது தொடையில் தடவியபோது கை மறு படியும் நடுங்கியது. . கந்தப்புவின் வாய் எதையோ முனு முணுத்தது.
பன்னிரண்டு மணிக் கோச்சுப் போனபோது கூட கந்தப்புவின் கை படியவில்லை. தூள், வெயிலுக்குக் கர கரவென்று முறுக்கேறிக் கிடந்தது. உள்ளிலை, விரித்த உடனேயே ஒடிந்தது, காப்பிலே, பிசு பிசு வென்று, தலைப்பைப் பூட்டிய மறுகணமே பிரிக் து கொடுத்தது. நூற்று முப்பது, நூற்று நாற்பது தேறும்போலக் கிடந்தது.
வெட்டுக்கார ஆள்-பொடி யன்தான்-கொஞ்சம் வேலை தெரிந்தவன்-முதலாளியின் வலது கை-வந்து வெட்டத் தொடங்கியபோதே கந்தப்புவுக்கு உள் நடுக்கம் ஆரம்பித்து விட்டது.

35
"இதென்ன காணும் தேங்காய்ச் சாக்குப்போல -கண்மண் தெரியாமலே தூ2ள அள்ளி வைக்கிறீர்என்ன தொங்கல். இதை ஒருக்கால் பாரும் . . கந்தப்புவின் சுருட்டு எல்லோருடைய கண் பார்வைக் கும் அனுப்பி வைக்கப்பட்டது. hாக்கைப் பிடுங்கிக் கொண்டு செத்து விடலாம் போல் தோன்றியது.
tib..... ...... மானங்கெட்ட சீவியம் !
மத்தியானம் பாண் காரன் வந்தபோது கந்தப்பு வழக்கம்போல் அரை றத்தல் பாண் வாங்கி, முதலாளி வீட்டுக் கோடியில் இரகசியமாகப் பிடுங்கிய இரண்டு மிளகாயுடன், உறைக்க உறைக்கக் கடித்து மென்றர். அந்த வரண்ட தொண்டையில் மிகச் சிரத்துடன் அந்த முறுகிய பாண் இறங்கிய போது ஏனே அக்தப் பல வீனமான கண்களில் நீர் துளித்தது.
கந்தப்புவால், பசித்தும் கூட, அந்தப் பாண் முழுவதையும் உண்ண முடியவில்லை. அன்றைக்குப் பாரதத்தில் அபிமன்யு வதைப் படலம் வாசிப்பு ாகடைபெற்றது. அந்தச் சிறுவன் அபிமன்யுவைச் சக்கரவாகமாக எல்லோரும் சுற்றி வளைத்து நின்ற அந்த கேரத்தில் அவன் ‘தங்தையே’ என்று பரிதாப மாக ஒலமிட்ட இடம் வந்தபோது, கக் தப்புவுக்கு உண்மையிலேயே அழுகை வந்தது. உலகத்திலே எல்லோருமே கெளரவர் போலவும், தான் நிர்க்க தியாகத் தன்னந்தனியாக நிற்பது போலவும் மன ஆழத்தில் நிழலாடியது.
மனத்திலே பிழியப் பிழிய வேதனை கொப் பளித்தது.
பின்னேரம் முதலாளியிடம் கணக்கெழுதுவ தற்காக நின்றர் கந்தப்பு.

Page 19
36
“என்ன காணும் கந்தப்பு, இதைப் பாரும் . . . இப்படிப் பிசைஞ்சு வைச் சால் இதை எவன் ரை த?லயிலே கட்டிறது. . ாகாலு நாளிலே எனக்குத்தான் திருப்பி அனுப்புவங்கள்.'
முதலாளி சுருட்டை இருப்புடன் கலந்த போது, மெதுவாக ஆணுல் கந்தப்புவின் காதில் விழக்கூடிய விதமாக,
'ஊரி2ல மற்றவன்ரை கொட்டிலெல்லாம் எரிஞ்சு போச்சோ. . . என்னுேடைதான் ஒட்ட வேணு மெண்டால் . .
முப்பது வருஷமாய்ப் பழக்கப்பட்டுப் போன அந்தக் கொட்டில் கால், புகையிலைப் பாடம், இருப்புப் பெட்டி, காம்புக் குவியல் எல்லாம் அவருடைய கண் களுக்கு மங்கலாகத் தெரிந்தன.
யந்திரம் போல், காப்பிலே கெட்டியை வீசுவதற் காக எழுந்தபோது, சுருட்டுக் கட்டும் நூல் அவர் வேட்டி நுனியில் வைராக்கியத்துடன் ஒட்டிக் கொண்டு இழுபட்டது-அவருடைய விசுவாசத்தை ாைகயாண்டி செய்வது போல.
படலையைத் திறந்து கொண்டு வெளியே வந்த போது,
*நாளேக்கு மறுபடியும் இந்தக் கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே வரவா ? இனியுமா ?? என்ற வேதனை ஒலம்தான் ஓங்கி நின்றது.
இரண்டு கிழமைக் கூப்பன் இன்னமும் வெட்ட வில்லை . . மயிலன் வீட்டிலை வந்து பழிகிடக்கப் போருன் . .
வாசிக சாலை கழிந்ததும் நாகம்மாக் கிழவி வழக்கம் போல் 'குடி சுத்துக்கு’க் காத்துக் கொண்

37
டிருந்தாள். காதிலேயிருந்த காட்டுப் புகையிலைச் சுருட்டை நீட்டி விட்டு வீட்டுப் பக்கம் வந்ததும் அவரையறியாமலே கால் உள் வாங்கியது.
உள்ளே சின்னச்சி இருமும் சத்தமும் பூரணம் ஒலை கிழிக்கும் சத்தமும் தெளிவாய்க் கேட்டன.
கிணற்றடியில் கால் கையைக் கழுவிப் போட்டுக் குந்திலே சாய்ந்தார். சின்னச்சியை ‘எப்பிடி இருக்குது' என்று கேட்கவே பயமாயிருந்தது. ஒரே பயங்கரமான மெளன அமைதி அவரை உலுப்பியது.
பசி வயிற்றைக் குடைந்தது. பூரணத்தில் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. அப்பு வந்து இவ்வளவு ாேகரமாச்சே என்று எட்டிப் பார்த்தாளா ? அவ்வளவுக்குத் திமிர். . . ம்.
பசியின் உத்வேகத்தில் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்தார்.
"அப்பு சாப்பிடவானே"
ஆர்வத்துடன் திரும்பிப் பார்த்தார்; யாரும் இல்லை; வெறும் மயக்கம்.
இவள் எங்கே போட்டாள்; அவ்வளவு இளக்கார மாகிவிட்டேன ?
கிணற்றடியை எப்படிப் பார்த்ததுதான் தாமதம்; ஸ்தம்பித்து விட்டார். கோபம் எல்லையைக் கடந்து விட்டது.
“என்னடி சனியன்-கிணத்தடி க்கு வந்தால் ஏனடி இவ்வளவு நேரம் . . அங்காலை ஆரையடி பார்த்து இளிக்கிற யப் . . கிசு கிசு எண்டு வளர்ந்திருக்கும் மூதேவி. "அந்தக் குடத்தைத் தூக்கி அவளுடைய

Page 20
38
மெலிந்த இடுப்பிலே பலம் கொண்ட மட்டும்
இடித்தார் கந்தப்பு.
"ஐயோ அப்பு’ என்று கத்தினுள் அவள். “தொம் தொம்’ என்று அதைத் தொடர்ந்து அவள்
முதுகிலே அடி உரத்து விழுந்தது.
உள்ளுக்குப் படுத்திருந்த சின்னச்சி, "ஐயோ ஏனப்பா அவளைப் போட்டுக் கொல்லுகிறப்" என்று ஈனஸ்வரத்தில் முனகினுள்.
* சனியன்கள். பிசாசுகள் ...!" *நீ எங்கேயடா போட்டு வாறயப்’ சின்னவனுக்கு வார்த்தை வரவில்லை. நடுக்கத் திலேயே பாதிச்சொற்கள் செத்துவிட்டன. 'அக்கா. பெரியம்மா. வீட்டை. ஆ!”
“முதேவி. இரவு இர வாய் வீட்டுக்கு வீடு. சுத்து றயோ. விளக்கு வைச்சு இவ்வளவு கேரம். படிச்சி uj (TL. T... (35) 5 T 63r உன்றைப் படிப்போ. . டேய் இப்படித்தான் படிச்சுக் கொட்டப் போறியோ ...”
சின்னவனுடைய பிஞ்சு முதுகு சிவந்து கொண் டிருந்தது.
"அப்பு. என்ரை அப்பு. என்ரை அப்பு ஆணை அடியாதே. ஐயோ. கோகுது. அப்பு. ஆணே அடி யாதே. ஐயோ.. கோகுது. அப்பு. என்றை அப்பு எல்லோ. அப்பு. உன்றை வேட்டி தோச்சு போட்ட னன் அப்பு. உன்ரை வேட்டி தோச்சுப்போட்டனுன் அப்பு.’
அவன் இவ்வளவு நேரமும் கையிலே மறைத்து வைத்திருந்ததைக் கீழே தொப்பென்று போட்டு விட்டான்.

39
பெரியம்மா வீட்டிலே அப்புவுக்கு வாங்கி வந்த மீன்கறி மண்ணுேடு கலந்து கொண்டிருந்தது.
带 举 豪
8 உள்ளேயிருந்து பெரிய விக்கலும் சின்ன விக்கலு மாக மாறி மாறி வந்து கொண்டிருந்தது. வெளித் திண்ணையில் வியர்வையைத் துடைத்தபடி இருந்த கந்தப்புவுக்கு ஒவ்வொரு விக்கலும் ஈட்டி முனையைப் போல் குத்தியது. உள்ளத்தில் பொங்கிய வேதனை பசியின் வேதனையைக்கூட மறக்கடித்து விட்டது.
சந்திரன் ஏறிக்கொண்டே வந்தான். "மோனை கொப்புவைக் கூப்பிட்டு ஏதாலும் குடன்’ சின்னுச்சி சிரமத்துடன் முனகினுள்.
உள்ளே பேச்சு மூச்சில்2ல. *எல்லோரும் வர்மம் சாதிச் சால் ஆர் ஆரைக் கேக்கிறது. உங்களைத்தான்.போய்ச் சாப்பிட்டிட்டு விடுங்கோவன். அவளும் சாப்பிடாமல் கிடக்கிருள்."
கர்த்தப்பு போய்ப் பலகையை இழுத்துப் போட்டுக் குந்தினர். பேச்சு முச்சில்லாமல் சட்டின்யக் கழுவிக் கொண்டு வந்து அவர் முன்னே வைத்தாள் பூரணம். அடியிலே ஒட்டிக்கொண்டிருந்த மயிரை எடுத்து அவளுக்குத் தெரியாமல் வெளியே வீசினர் கர்தப்பு.
இன்னுெரு காளாயிருந்தால் எத்தனை அடி விழுங் திருக்குமோ.
சோறு நல்ல கணக்காய்ச் சுட்டுக் கொண் டிருந்தது. "இதுக்கு மாத்திரம் அக்த மீன் குழம்பு
இருந்தால் .” கந்தப்புவுக்கு மனதைப் பிழிந்தது. பூரணம் உடனுக்குடன் அரைத்த மாங்காய்ச் சம்ப

Page 21
40
லுடன் சோற்றைப் பிடித்துச் சாப்பிட்டார்; வாய்க்கு இதமாயிருந்தது."பானையிலே சோறு இருக்கிறதா? என்று கேட்க விருப்பமாய்த்தானிருந்தது. ஆனல், பூரணத்தின் முகத்தை நிமிர்ந்து பார்க்கும் அளவுக்கு தைரியம் பிறக்கவில்லை.
வாயைக் கொப்பளித்து நாலு மிடறு தண்ணிரும் குடித்துவிட்டுச் சுருட்டைப் பற்ற வைத்துக் கொண்டு காற்று வாங்க வெளியே போனுர், ப2ன மட்டை வரித் துப்பிடித்த அந்தக் குசனியில், மண்ணெண்ணெய் விளக்கின் மங்கிய ஒளியில் அவள் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
கர்ந்தப்புக்கு பகீரென்றது. பகல் சாப்பிட்டாளோ என்பது கூடச் சந்தேகம்தான். அவள் மறுபடியும் சின்னவன் மத்தியானம் பள்ளியிலிருந்து வாங்கிவந்த பாண் துண்டைத்தான் கண்ணிருடன் மென்று கொண்
டிருந்தாள்.
அன்று இரண்டாவது முறையாகக் கங் தப்புவின் கண்களில் நீர் துளித்தது.
水
4 வெளிக் குந்தில் பாயைக் கொண்டு வந்து போட்ட பூரணம் விர்ரென்று உள்ளே போனுள். அந்த மெளனமே கந்தப்புவைத் தின்றுவிடும் போல இருந்தது. அவர் வாய்விட்டுக் கேட்பதற்கு முன் பாகவே பூரணம் செம்பும் தண்ணிரும் கொண்டுவந்து
குந்தின் ஒரமாக வைத்தாள்.
சின்னவன் வாசல் திண்ணையிலே குப்புற படுத் தவன் அப்படியே அழுத கண்ணீர் கன்னத்தில் காய்ந்த படியே நித் திரையாய்க் கிடந்தான். அவனைத் தூக்கிப்

41
பாயிலே கிடத்தினுள் பூரணம். கையோடு படலையை
யும் கட்டிவிட்டு வந்து கை விளக்கைத் தூக்கி மாடா விலே வைத்தாள். அப்படி வைத்தபோது எதற்காகவோ கந்தப்பு இருந்த பக்கமாகத் திரும்பி பரிதாபத்துடன் பார்த்தாள். அப்பு படுக்கிறன்' என்ற அர்த்தம் அதில் தொனித்தது.
நா?லந்து முறை கதைக்க உன்னிய கந்தப்பு கதைக்க முடியாமல் தவித்தார்.கொடியிலே சீலையொன் றும் காயப்போட்டு இல்?ல. இருந்தாலும் “கொடியிலே போட்ட சீ2லயை எடுத்து உள்ளுக்கு வை மேனை" என்று கூறுவமா? எதற்கும் காளைக்கு விடியட்டும்மனதைத் தேற்றிக்கொண்டார்.
பாயைப் பின்பக்கம் விரித்தாரோ என்னவோ முது
கெல்லாம் குத்தியது. அது போதாதென்று தேக மெங்
கும் புழுங்கி அவிந்தது . இடையிடையே, வீசிய காற்று தாராளமாய்ப் புழுதியை அள்ளி இறைத்தது. மண் ணெல்லாம் தேகத்தில் ஒட்டிக்கொண்டு பிசுபிசு வென்றது.
இந்தப் "பிசு பிசு' நினைவு நல்லூரில் பிரதட்டை பண்ணியதைத் தான் ஞாகப்படுத்தியது.
'சின்னவனுக்காக எத்தனை நேர்த்திக் கடன் செய் திருப்பன் . பாவம் பிசாசு போல கண்மண் தெரியாமல் கொருக்கிப்பொட்டனே. அந்தப் பிஞ்சு முதுகிலே கை விரல் அவ்வளவும் .போய் அவனைத் தடவி. விட் டால். பாவம். வெறும் மேலுடன் . அந்தப் பொத் தான் பூட்டாத கால் சட்டையுடன் அவன் வாசலில் கிடந்த விதம் .'
பெரியதொரு பெருமூச்சு பீறிக் கொண்டு புறப் பட்டது. அன்று விடியத் தமக்கையிடம் தன்னுடைய ஊத்தை படிந்த ஒரே சேட்டைத் தூக்கிவைத்து

Page 22
42
*அக்கா உள்வளமோ, பிறவளமோ? என்று கேட்டது ஞாபகத்திற்கு வந்தது.
அடுத்த கணக்குத் தீர்வையுடன் ஒரு சேட் அவனுக்குத் தைக்க வேணும்.
குந்தில் மேல் சப்பனம் கட்டியிருந்து உள்ளே எட்டிப் பார்த்தார். பூரணத்தின் கால்கள் வாசலையும் தாண்டி வெளியே நீட்டிக் கொண்டிருந்தன. அவளை ஒரு நல்ல இடத்திலே கட்டிக் கொடுத்தால்தான் மனசு கொஞ்சம் ஆறும் . . . பிறந்த காளிலே இருந்து என்ன2ல அவளுக்கு என்ன சுகம் . . . மாடாவிளக் கின் ஒளியில் அவள் நித்திரை கொள்ளும் போது அவளுடைய முகம் எப்படி இருக்கும் என சிக்தித்துக் கொண்டிருந்தது அவர் மனம்.
"சின்னவன் மாத்திரம் ஒரு எட்டாவது பாஸ் பண்ணினன் எண்டால் கனகுவைப் போல சங்கக் கடையிலேயாவது சேர்த்து விடலாம். . .” பூரணம் புரண்டு படுக்கும் சப்தம். என்ன மாதிரி அந்த மெலிஞ்சு போன இடையிலே இ டி ச் ச ன் பாவி!. . . நாரி முறிஞ்சிருக்குமோ என்னவோ. . . குமர் எண்டும் பாராமல். எவ்வ ளவு வேலையென்று ஒரு நாளைக்கு பார்க்கிறள். காலமை வெள்ளன எழும்பி இரண்டு வாளி தண்ணி சுடவைச் சுக் குடுப்பம். குளிச்சால் தேக கோவு கொஞ் சம் குறையும்.
காற்று மறுபடியும் புழுதியை அள்ளி இறைத் தி து.
ஒருவாளி தண்ணி அள்ளித் தெளித்தால் . . இக்த எண்ணத்துடனேயே கந்தப்பு கித் திரை யாகி விட்டார்.

43
5
"அப் |''
திடுக்கிட்டு விழித்தார் கந்தப்பு. அந்தத் தீனமான குரல் யார் கூப்பிட்டது? சின்னவன? அந்தக் குரலின் உருக்கம் கந்தப்புவை என்னவோ செய்தது; கந்தப்பு இறந்து போய்க் கிடப்பது போலவும், சின்ன வன் கதறுவது போலவும் ஒரு காட்சி. அடுத்து - தனி ரோட்டிலே தோளிலே ஒரு துண்டைப் போட்டுக் கொண்டு சின்னவன் விறுக் விறுக்கென்று நடக் கிறன் - சுருட்டுவதற்குத்தான்.
எங்கோ காய் ஒன்று ஊ2ளயிட்டது.
ாகாய் உளளே யிட்டால் யமன் வருவானுமே! தேகம் நடுங்கியது. இருட்டைத் துழாவினர்; அந்த வளைந்த மாங்கொப்பின் அடியில் நிழல் தட்டி மறைந்தது.
மேலே சந்திர ஒளியில் திட்டுத் திட்டாகத் தெரிந்த மாங்கொப்பு காற்றிலே மெதுவாக அசைந்து கொடுத் தது.
அது அவரை ‘வா வா’ என்றது.
ாகான் . . Bான் செத்துப் போனல் சின்னவன் . . பூரணத்தின் கதி. .
அன்று மீதி இரவு அவர் உறங்கவே இல்லை; அந்த மாங்கொப்பையே இமைகொட்டாமல் பார்த்தபடி கிடந்தார்.
அது அவரை அன்புடன் "வா வா’ என்று அழைத் துக் கொண்டிருந்தது போலப் பட்டது.

Page 23
III
ஊர்வலம்
“கொஞ்சம் கெதியாய் நடக்கட்டும்" என்றர் ாநமசிவாயம். அவர் மனைவி பார்வதி, ஆலத்தி எடுப்பதற்கு இன்னுெரு ஆளைத் தேடி உள்பக்கம் ஒடினுள்.
இராகவன், சாந்தினியின் கைகளைப் பற்றிக் கொண்டான். அவள் தனது உடமை என்பதைப் பகிரங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு அவன் அந்த மெல்லிய பூப் போன்ற கரத்தைத் தன் கையினுள் அடக்கிக் கொண்டது போலப் பட்டது.
சார்ந்தினியின் விரல்கள் அவன் விரல்களுடன் பேசவில்லை. அவற்றிலே துடிப்பில்2ல. உணர்ச்சி இல்லை.
ஏனே தெரியவில்லை; உணர்ச்சியில்லாத மரக் கட்டைபோன்று அவள் நின்று கொண்டிருந்தாள்.
ஜன அலையின் மத்தியிலே, அன்னம் போன்று அலங்கரிக்கப்பட்ட அந்த வண்ணக் கார், மெதுவாக ஊர்ந்து வந்து நின்றது. உண்மையிலேயே அன்னப் பட்சி ஒன்று நீக்தி வருவது போன்று அழகாக இருந்தது அது.
சாந்தினி மெதுவாகத் தன் கண்க2ள வலது பக்கம் ஒட்டினுள், இராகவனுடைய தோற்றம் வெகு இரம்மியமாக இருந்தது. அவள் நினைத்ததுபோலவே,

45
பட்டு வேட்டி சால்வையில் அவன் வெகு கம்பீரமாக இருந்தான். காதிலே போட்டிருந்த கடுக்கன் அவளுக் குச் சிறிது சிரிப்பை வரவழைத்தாலும், அவனு டைய தோற்றம் அவளுக்கு மிகவும் பிடித்துக் கொண்டது.
மணவறையில், ஒமப்புகையின் மத்தியில் அவ. ளால் எங்கே அவனைப் பார்க்க முடிந்தது?
ஆணுலும் என்னவோ அவளுக்கு உற்சாகம் கரை புரண்டு ஒடவில்லை. “ஊர்வலம், ஊர்வலம்’ என்று எதை ஆவலுடன் எதிர்பார்த்தாளோ, அது இல்லாம லேயே போயிருக்கலாம் என்றுதான் அவளுக்கு இப்பொழுது தோன்றியது.
கேற்றுக் காலை கூட அவள் எவ்வளவு கவலைப் பட்டாள். ஊர்வலத்தில் கணவன் பக்கத்தில் எப்படி எப்படியெல்லாம் உட்காரவேண்டும், எப்படி எப்படி யெல்லாம் நடக்கவேண்டும் என்று எவ்வளவு கனவு கண்டாள்!
மாப்பிள்ளை காரில் ஏறி உட்கார்ந்து கொண்டார்.
சாந்தினியும் அவர் பக்கத்தில் முட்டியதும் முட்டாததுமாக உட்கார்ந்து கொண்டாள்.
அதைத் தொடர்ந்து வழமைப்படி அந்த ஊர்க் "குஞ்சுகுருமன்’ எல்லாம் மாப்பிள்ளை பெண்ணுேடு சம உரிமை கொண்டாடிக் காரை நிறைத்துக் கொண் டனர். நமசிவாயம் பட்ட பாடு! அப்பப்பா! குழந்தை களா அவை? குட்டி எமன்கள்.
எப்படியோ, கடவுள் அனுக்கிரகத்தினல், அவர் கள் மத்தியில் கசுங்கியும் நசுங்காமலும், பிராணு யாமம் செய்துகொண்டு "புதுத் தம்பதிகள்? ஊர்வலத் திற்குப் புறப்பட்டார்கள்.

Page 24
46
சாரதி பெருமிதத்தோடு வேக வளர்ச்சிக் கருவி யில் காலைப் பதித்தான். அவ்வளவுதான் அந்தப் பிரமாண்டமான ஊர்வலமே நகரத் தொடங்கியது.
இதோ முதல் திருப்பம். இந்த வீடுதானே கமலா வீடு; சாந்தினியின் உயிர்த் தோழி.
சாந்தினியின் கண்கள் மெதுவாக மேலெழும்பி, வேலியில் தெரியும் அடுக்கடுக்கான பொட்டுகளேத் தேடின. கமலா அங்கே தான் நிற்பாள். பாம்பின் கால் பாம்பறியுமல்லவா? ஒரு கண கேரம் சாந்தினி யின் கண்களில் ஒளி.
மறுபடியும் பழைய உணர்ச்சியற்ற பார்வை, கலாசாலையிலே இராகவனுடன் பழகியபோது வெறும் கட்பு என்றுதான் நினைத்தாள். ஆனல் அதுவே இப்படிக் காதலாகித் தம்பதிகளாக்கியும் விடும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.
இராகவனிலும் பார்க்க இராகவனுடைய அறி வைத் தான் அவள் காதலித் தாள். ஆனல் இப்போது இராகவனே அவளுக்குச்  ெசா ங் த ம் -அவள்
32 - 60) f).
ஏதோ சிரிப்பொலி. குனிந்த தலையைச் சற்றே நிமிர்த்தினுள் சார்ந்தினி. மணியண்ணை தான் ஏதோ “பகிடி பண்ணிக் கொண்டிருந்தார். ஆனல் அவள் கண்கள் எதிரே இருந்த அரச மரத்தில் போய் நிலை குத்திக் கொண்டன. அதே அரசமரம்! ஆனல் அப் போது மரத்தின் கீழே வெறுமனே தான் பிள் 2ளயார் இருந்தார்; இப்போது போன்று சிறு கோவில் இல்லை.
இதே கோவிலில் பத்து வருடங்களுக்கு முன்னர் அவளும் அவள் மச்சான் மாணிக்கமும் "மாப்பிள்ளை

47
-பொம்பிளை' விளையாட்டு வி2ளயாடி இருக்கிறர் கள். இன்று
"சீ! இது என்ன நினைவு? எப்பொழுதோ வயது தெரியாத காலத்தில் பைத்தியக்காரத்தனமாக ஏதா துெ விளையாடி இருக்கலாம். அதை வைத்துக் கொண்டு. 罗多
“என்ன? வயது தெரியாத காலமா? ஏன்? இரண்டு வருடங்களுக்கு முன்புகூட, நீ கலாசாலையி லிருந்து விடுமுறைக்கு வந்தபோது உன்னுடைய மர் சான் அந்தத் தபால் கார மச் சான்-உன்னைப் பார்க்க வந்தானே.
உனக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல் அவன் எட்டி எட்டி நின்றபோது அவனை $தானே இழுத்து வைத்துப் பேசிய்ை!
“என்ன ஒன்றும் கதைக்கிறீர்கள் இல்லை. நான் ஏதோ படிக்கப்போனுல் போல உங்களை மறந்து விட் டேன் என்பது அர்த்தமா?”
"முன் 2னயப் போல 'சாந்தா” என்றுதான் நீங்கள் கூப்பிடவேண்டும் நீங்கள் என்னேடு வித்தியாச மாகப் பழகினல் எனக்குப் பிடிக்கவே பிடிக் காது? என்று சொன்னயே. அது ஒன்றும் மடைத்தனம் இல்லையா?
“என்ன சாந்தி எவ்வளவு நேரமாக மாப்பிள் 2ள இறங்கி நிற்பார். நீ இந்த உலகத்திலே இருந்தால் yhm(860T!”
திடீரென்று சாந்தினி நினைவு வந்து, இறங்கிக் கொண்டாள். இராகவன் கடைக்கண்ணுல் பார்த்துச் சிரித்துக் கொண்டான்.

Page 25
48
அதே அரசமரத்தடிப் பிள்ளையாரைத்தான் தன் மணவாழ்வில் உறுதியோடு இருக்க அருளும்படி வேண்டிக்கொண்டாள் சார்ந்த னி.
என்றும் இல்லாமல் அன்றைக்கு அவளுக்கு மச்சானின் நினைவு அடிக்கடி தோன்றிக் கொண் டிருந்தது. அதுவும் அன்பைக் கொட்டும் கணவன்இன் பத்திலும் துன் பத்திலும் பங்கெடுக்கும் கணவன் -பக்கத்திலிருச்ரும் போதே இந்த நினைவா ?
அவள் அந்த நினை வைத் தள்ளித் தள்ளி விட்டாள். அரச மரத்தைச் சுற்றி வந்தார்கள் இருவரும். அதைச் சுற்றி வரும்போதே இனிமேல் அந்த நினைவே வேண்டாம் என்று சங்கற்பமும் எடுத்துக் கொண்டாள்.
ஆனல், அவளுடைய சங்கற்பத்துக்கு முதற் சோதனையொன்று உடனேயே ஏற்பட்டு விட்டது.
அரச மரத்தின் மூன்றவது திருப்பத்தைக் கடந்த போது அவள் உடம்பில் இரத்தம் எல்லாம் பனிக்கட்டி யாக மாறி விட்டது.
அப்படியே திகைத்து விட்டாள். “காஸ்லேட்'டின் வெளிச்சம் திட்டுத் திட்டாக விழுந்திருந்த அந்த அரச மரத்தின் அடிப்பாகத்தில் “மாணிக்கம்-சார் திணி" என்ற எழுத்துக்கள் தெளி வாகத் தெரிந்தன.
அவள் அதை வாசித்தாள். தேகத்தில் ஏதோ உதிருவது போன்ற நினைவு. கைகள் கடுங்கின. கெஞ்சை அழுத்திக் கொண்டாள் அவள்.
அந்தச் ச ம் ப வ ம் ஞாபகத்துக்கு வந்தது. மாணிக்கம் தன்னுடைய பெயரை மட்டும் பொறித்து

49
விட்டுச் சார்ந்தினிக்கு அதைக் காட்ட ஒடோடியும் வந்து அவளை இழுத்துக் கொண்டு போனன்.
"மாணிக்கம்’ என்ற பெயரைக் கண்டதும் தன் னுடைய பெயரையும் பக்கத்திலேயே எழுத வேண்டும் என்று அழத் தொடங்கி விட்டாள். ஆனல், சாக்தினி யின் முதல் எழுத்தான "சா’ என்பதைச் செதுக்கியது தான் தாமதம் அவனுடைய பேனக் கத்தி உடைந்து விட்டது.
அப்பப்பா! அதற்குப் பிறகு அவள் படுத்திய பாடு. அவளுடைய கரைச்சல் தாங்காமல் எப்படியோ மாணிக்கம் மற்றெரு கத்தி சம்பாதித்து வந்து மீதி எழுத்துக்களையும் செதுக்கினன்.
அப்பொழுது அவள் அடைந்த ஆனந்தம்! "சீ இந்த அரசமரத்துக்கு இருக்கும் நன்றி உணர்ச்சியில் நூறில் ஒரு பங்கு எனக்கு இருக்கிறதா? அன்று எழுதியதை, எழுத்துப் பிசகாமல் இன்றும் வைத்துக் காட்டுகிறதல்லவா? 5ான் அ ன் று சொன்ன வார்த்தையை. . sy
'கடவுளே, கடவுளே, மறுபடியும் மறுபடியும் இதே நினைவுதான?.
'பொட்’ என்று என்னவோ முதுகில் விழுந்தது சார்ந்தினி திடீரென்று விழித்துக் கொண்டாள். திரும்பிப் பார்த்தாள். காருக்குள் ஏறியிருந்த குழந்தைப் பட்டாளம் அயரத் தொடங்கியிருந்தது. அவள் மேல் ரவியன் தான் விழுந்திருந்தான்.
இராகவன் சிரித்துக் கொண்டே "பயப்பட்டாயா?? என்றன். மணப் பெண்ணும் பதில் பேசுவதா? அதைச் சாக்காக வைத்துக் கொண்டு சாந்தினி கீழே குனிந்து கொண்டாள்.
ژ ۰{9

Page 26
5O
4.
சந்தியிலே கார் நின்றது. பிரதான சந் தி யல்லவா? அதிலே ஒரு திறம் ‘சமா? வைக்கா விட்டால் ஊர்வலத்துக்கு என்ன மதிப்பு? அதிலும் மணியம் அண்ணை முக்தா நாள் சாந்தினி வேண்டி வேண்டிச் சொன்னபடி ஒன்றையாவது தவற விடாமல் அப்படியே செய்து வந்தார்.
ஆனல், உண்மையில் சாங்தினிக்கு இ  ைவ யெல்லாம் இப்போது தேவையாக இருந்தனவா?
ாகாகசுரத்தில் இராகவர்ணனை தொடங்கியது. காட்டைக் குறிஞ்சி இராகம் அந்த காகசுரக் குழாய் வழியாகப் பிய்த்துக் கொண்டு வந்தது. ஆனல் இந்த இராகத்துக்கு எங்கிருந்து இவ்வளவு சோகத் தன்மை வந்தது? உலகத்துச் சோக இசையை யெல்லாம் பிழிந்து பிழிந்து சேர்க்கிருனே?
போயும் போயும் இந்த நேரத்தில் இப்படி மனதை உருக்கும் இசையையா இவன் வாசிக்க வேண்டும்?
கணவன் பக்கம் திரும்பினுள் அவள். ஆனல், அவனே வெகு அமைதியாக, ஆனந்தமாக இராகத்தை இரசித்துக் கொண்டிருந்தான்.
மனம் ஒரு கணம் ‘திக்’ என்றது. இந்தச் சிறு விஷயத்தில்கூட எங்களிடையே வேற்றுமையா!
'தவில் கொஞ்சம் கெதியாய் முடியட்டும். மணி பதினென்று ஆகிறது” என்றர் மணியம் அண்ணை.
அவளுக்கு ம ணி ய ம் அண்ணையை வாழ்த்த வேண்டும் போலத் தோன்றியது.

51
தூக்கக் கலக்கம். ஜனங்கள் எட்டி கடை போட் டார்கள். சாந்தினி மெதுவாகத் தலையை நிமிர்த்தி ஆகாயத்தைப் பார்த்தாள். மழை வரும் போல் இருந்தது. கட்சத்திரங்கள் அங்கொன்றும் இங் கொன்றுமாகத் தெரிந்தன.
அருந்ததி நட்சத்திரம் எந்தப் பக்கம் இருக்க வேண்டும். வடக்குப் பக்கம் தானே. ஐயர் அருந்ததி காட்டுவதாகச் சொல்லி வெறும் கூரை முகட்டைத் தானே காட்டினர்.
அதோ தெரிகிறது தூரத்தில் நான் படித்த பாட சாலை. இதோ இந்த வழியால் தானே கான், கமலா, மனேன் மணி எல்லோருமாகப் புத்தகப் பையைத் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு போவோம். அந்த மணல் மேடு இப்பொழுதும் இருக்கிறதா? அதில்தானே நானும் மச் சானும் ஒட்டியபடியே இருந்து கணக்குப் போடுவோம், படம் வரைவோம்;
வீடு கட்டி விளையாடுவோம்.
மறுபடியும் அப்படி விளையாட முடியுமா!
திடீரென்று அவள் மனது கனக்கத் தொடங் கியது. அந்த கன்னங்கரிய இருளில் அவள் மச்சானின் உருவம் வந்து முன்னே நின்றது. “சாங்தினி பத்து வருடங்களுக்கு முன்பு எனக்குக் கணக்கு வருகு தில்2லயே’ எ ன் று நான் அழுதபோது, என் கண்ணீரை உன் சின்னஞ் சிறு விரல்களால் துடைத்து விட்டு 'நான் காட்டித் தாரேன்” என்றயே; நீ எனக்கு எத்தனை தரம் தான் கணக்குச் சொல்லி யிருப்பாப்.
ஆனல், என் முளையில் எதுவுமே ஏறவில்லை.
"அப்பொழுது நீ, "ஐயோ ஐயோ உங்களுக்கு ஒன்றுமே தெரியாது" என்று என் கழுத்தைக் கட்டிப்

Page 27
52
பிடித்துக் கொஞ்சு வாயே-உன்னுடைய அந்த அன்
பெல்லாம் எங்கே ஒழிந்து விட்டது?
'இன்று எங்களைப் பிரித்தது என்ன? உன் பீ. ஏ.
பட்டம்.”
"இந்த ஏழைத்தபாற்காரனை நீ ஏன் நினைக்கிறப்?
இது என்ன ? இந்த ஊர்வலம் மணியக் காரத் தெருப்பக்கம் திரும்புகிறதே ! எ ன் ன ? அந்த வீதியாலா போகிறது ?
சாந்தினிக்குத் திக்கென்றது.
அந்த மூலை திரும்பியதுமே அந்த ஒ?ல வீட்டுக் கூரை, கால் ஒடிந்த படலை தெரிகிறதா என்று பார்த்தாள்.
ஜீ அவர் ஏன் அங்கு நிற்கிறர் ? கல்யாண வீட்டுக்கே வரமாட்டேன் என்றவர். இந்த ாகட்டாகடு நிசியில் நான் ஊர்வலம் போகும் மகத்தான காட் சியைக் கண்டுகளிக்க வந்து நிற்கிறராக்கும்.
கார் அந்தக் குடிசையைத் தாண்டும் போது அவள் மனம் படபடத்தது. ஆவலை அடக்க முடியாமல் திரும்பிப் பார்த்தாள்.
அவள் எலும்புக் குருத்துகள் எல்லாம் உறைந்து போய்விட்டன.
துTணுேடு துணுய் அவளையே பார்த்தவாறு,-அவன் தான்-அவள் மச்சான் தான் ஒரு அகம் பாவம் பிடித்த பெண் 2ணப் பார்க்கிறேமென்ற நினைப்பே இல்லாமல், நின்று கொண்டிருக்தான்.
சொற்ப கேரம்தான்.
இருந்தும் அந்தக் கண்களில் இரண்டே இரண்டு சொட்டுக்கண்ணீர் பளபளத்தது போன்று அவளுக்குப்
• الزكى سL-"الL

53
சாந்தினியின் கழுத்தைத் திடீரென்று காகப்பாம்பு ஒன்று இறுக்கத் தொடங்கியது. திடுக்கிட்டுக் கீழே பார்த்தாள்-இல்லை அது அவளணிந்திருந்த பூமாலை தான். தலையை மெதுவாகக் கீழே குனிந்து கொண்டாள் கண்ணிரை மறைக்க.
ஆனல் இராகவன் கண்டு விட்டான்: கண்ணிரை மட்டும்தான்.
"ஏன் ! சாந்தினி காஸ் 2லட் கண் 2ணக் குத்து கிறதா ? முன்பே சொல்வதற்கு என்ன ??? என்று செல்லமாகக் கடிந்து கொண்டான்.
“வேலு, இந்த லேட்டை தூரக் கொண்டு போ' 6ான்று மாப்பிள்ளை அதிகாரத்தோடு சொன்னன்.
அவனுக்குத்தான் எவ்வளவு அன்பு ! “காஸ்2லட்” வெளிச்சம் தூரப் போகப்டோக, அதன் இரைச்சல் அதிகமாகிக் கொண்டே வந்தது.
அவளால் அந்த இரைச்சலைத் தாங்க முடிய வில்லை,
“சி ! இது என்ன பிரமை ? இந்தப் பேரிரைச்சல் காங்கிருந்து வருகிறது ??
*ஒருவேளை, ஒருவேளை இது என் மச்சான் விடும் பெருமூச்சோ ???
அவளால் நினைக்கவே முடியவில்லை. நெஞ்செல்லாம் கனத்தது. அப்படியே கெஞ்சை அழுத்திப் பிடித்துக் கொண்டாள்.
கையிலே ஏதோ தட்டுப்பட்டது. அது இராகவன் கட்டிய புத்தம் புதுத் தாலி.
事 * 米

Page 28
IW
ஒரு சிறுவனின் கதை
தூரத்திலே குரல் கேட்டது : கண்ணுடே, கரையாரே, காக்கணவம் பூச்சியாரே, முன்னுாறு முழங்காலைத், தட்டிக் கொண்டு
6) . . . . . . ரட்.டோ ! அவர்கள் கூகூவென்று சத்தமிட்டார்கள். சிறிக்கு உடம்பெல்லாம் சிலிர்த்தது. அவனும் கூவென்று குரல் கொடுத்தான். அவன் குரல் சன்ன மாகத்தான் ஒலித்தது. குறுக்கும்மறுக்குமாக எல் லோரும் ஓடினர்கள்.
கைகள். இரண்டையும் கோத்தபடி, சிறி, பெரு விர2ல நிலத்திலே ஊன்றி, எம்பிப் பார்த்தான்.
ஒருவரையும் காணவில்லை. அவனுக்குப் பயமாயிருந்தது. அவனும் விரைவில் ஒளித்துவிட வேண்டும். தேகமெல்லாம் மெல்லிய கூதல் ஒடியது. அவன் மெதுவாகக் குதித்தான். அவன் கண்கள் மலர்ந்து பார்த்தன. யாருமே அவனுக்குத் துணையாக இல்லை.
சிறி ஓடினன். திரும்பிப் பார்த்துக் கொண்டே ஒடிஞன். அவனுக்கு இளைத்தது. அண்ணுந்து பார்த்தான். கொத்துக் கொத்தாக காவல் பழம் காய்த்துக் கிடந்தது.

55
அவன் காவல் பழம் சாப்பிடமாட்டான். சாப் பிட்டால் பல்லிலே சூத்தை அரிக்கும். ரவியனுக்கு அப்படித்தான் பல்லிலே சூத்தை வந்தது.
சிறீயின் அம்மாதான் அப்படிச் சொன்னுள். அவசரமாய் அவன் பொட்டுக்குள் குனிந்தான். குனிந்த போது அவன் சட்டை இறுக்கியது. அது வார்ச் சட்டை.
அவனுக்கு எரிச்சலாக வந்தது. புறங்கையால் கண்ணை உரசிவிட்டான். அது எரிந்தது. -கட் கடா, கட்கடா, கட்கடா. சரசக்கா தைத்துக் கொண்டிருந்தாள். அவள் தைக்கும் போது குனிந்தபடி இருப்பாள் ; அவனை அவள் பார்க்கவில்லை.
அவன் மார்பு நடுக்கத்துடன் அடி த் து க் கொண்டது.
முழங்கைகள் இரண்டையும் மெஷின் தட்டில் ஊன்றி நாடியைத் தாங்கியவாறு, அவன் சரசக் காவையே உற்றுப் பார்த்தான்.
சரசக்காவின் கழுத்திலே பவுடர் இன்னும் அழியா மலேயே கிடந்தது. அது குட்டிகுற பவுடர். அவனுக்கு அந்த மணம் பிடிக்கும்.
அவனுடைய அம்மா பவுடர் டின்னை எட்டாத உயரத்தில் வைப்பாள். அவனுக்கு கைாகிறையப் பவுடர் பூச ஆசை.
சரசக்கா தைப்பதை நிறுத்திவிட்டு அவனைப் பார்த்துச் சிரித்தாள்.
அவன் சொன்னுன்:

Page 29
56
-சரசக்கா, சரசக்கா, எனக்கு ஒளிக்கிறதிற்கு ஒரு இடம் காட்டுங்கோ:
சரசக்கா அவன் தலையைத் தடவிவிட்டாள். மெஷினுக்குக் கீழே அவனை ஒளிக்கச் சொன்னுள்.
அவனை அவர்கள் கண்டு பிடிக்கவே மாட்டார்கள். அவர்கள் வந்து தேடினுலும் அவன் சத்தம் போடக் கூடாது. இருமல் வந்தாலும் இருமக்கூடாது.
சரசக்காவின் கால்கள் ஆடுவதை அவன் பார்த் தான். அவள் அணிந்திருந்த கிமோன விலகிய போதெல்லாம் அவளுடைய பாதங்கள் தெரிந்தன. அவை வெள்ளை வெளேரென்று இருந்தன.
அவர்கள் கேட்டார்கள்: -சரசக்கா, சிறீ வந்தவனே? அக்கா சொன்னுள்: ر-அவன் இஞ்சை வரேல்லை. சிறீ மகிழ்ச்சியில் அக்காவின் கால்களைக் கட்டிக் கொண்டான். அக்காவின் கால்கள் ஆடாமல் ாகின்றன.
கீழே குனிந்து அக்கா அவனை எடுத்தாள். அக்கா ஒரு கை நிறையச் சிவப்புக் காப்பும், ஒரு கை நிறையக் கறுப்புக் காப்பும் போட்டிருந்தாள். அந்தக் கைகள் மெத்தென்று இருந்தன. அந்தச் சிவந்த உள்ளங் கைகளைத் தொட்டுப் பார்க்க அவனுக்கு ஆசையாக இருந்தது.
அதிலே பிரம்பால் அடித்தால் நீலமாகக் கன்றிப் போகும். வாத்தியார் அடிப்பதற்கு கையை ஓங்கும் போது அவனுக்கு நடுக்கமாக இருக்கும்.

57
ஆனல் அவன் கையை அரைவாசியில் இழுக்கக் கூடாது. அடி விழுந்த பிறகு கையைக் கால் சட்டை யில் துடைத்துக் கொண்டு மறுகையை நீட்ட வேண்டும்.
வாத்தியார் முக்குக் கண்ணடியை நிமிர்த்தி விட்டு
S SL00LLLSLLLSLLY 0LL LL S S zLLLLLL LL LYLLS
என்றலும் அவன் சொக்குலட் சாப்பிடுவதை அவர் காண மாட்டார். பாதிச் சொக்குலட்டை அவன் ரவியனுக்குக் கொடுத்து விடுவான். சட்டையை வைத்துக் கடித்துத்தான் கொடுப்பான். வெறும் வாயால் கடித்தால்தான் எச்சில்.
அவன் அப்பாவுக்கு கடிதம் எழுதுவான்: -எனக்கு ஒரு கலப் பெஞ்சில் வேணும், சொக்கு லட் ரெண்டு பெட்டி, காய்ப் படம் போட்ட கலப் பெஞ்சில், வேறெண்டுமில்2ல.
அவனுடைய அப்பா யாழ்தேவியில் வருவார். அவனுக்கு அது தெரியாது. ஏனென்றல் யாழ்தேவி rbடுச் சாமத்திலேதான் வரும்.
அவன் விழிக்கும் போது அம்மா அவனைத் தனியே கிடத்தியிருப்பாள்.
தனியாகப் படுக்கிற தென்றல் அவனுக்குப் பயம். பேய் இல்லையென்று அவனுக்குத் தெரியும். வாத்தி யார் சொல்லியிருக்கிறர்.
முருக்கமர நிழல்தான் சில வேளைகளில் பேய் போல ஆடும். ஆனல், உண்மையில் அது நிழல் தான்.
இரவில் கடிகாரத்தின் சப்தம் மட்டும்தான் கேட்கும்:
-டக் டிக், டக் டிக், டக் டிக்.

Page 30
58
இருட்டிலே இரண்டு கம்பிகள் மாத்திரம்தான் தெரியும். ஒன்று பெரியது, மற்றது சிறியது. இரண் டும் மினுங்கிக் கொண்டிருக்கும்.
மகேனுக்கு கேரம் பார்க்கத் தெரியும். அவனுக் குத் தெரியாது. அவனும் மூன்றம் வகுப்புக்குப் போனவுடன் கேரம் பார்ப்பான்.
k E
பாண் காரன் வருவான். அம்மா பாண் வாங்கு வாள் , சிறீ பக்கத்திலேயே போய் நிற்பான். பாணை அடிக்கடி தொட்டுப் பார்ப்பான். அது மெல்லிசாகச் சுட்டுக் கொண்டிருக்கும். அவனுக்கு அந்த மணம் பிடிக்கும். சரசக்கா வீட்டுப்பானையும் அவன்தான் கொடுப்பான்,
அம்மா சொல்லுவாள்: -இதைச் சரசக்கா வீட்டிலே கொண்டேய் குடு. அம்மா மீண்டும் கத்துவாள்: --குடுத்திட்டு அங்கை நில்லாமல் கெதியிலை வா, அவன் விரைவிலே திரும்ப மாட்டான். அவனுக்கு சரசக்காவை நிறையப் பிடிக்கும். அவளுடைய முகம் வட்டமாக இருக்கும்.
அதிலே கருத்தப் பொட்டு போட்டிருப்பாள்; பெரிய பொட்டு.
அம்மா அவனுக்கு கறுத்தப் பொட்டுத்தான் போடுவாள். போடும் போது கன்னத்தை ஆட்டாமல் இருக்க விரல்களால் இறுக்க அழுத்துவாள். அவனுக்கு வலிக்கும்.
பென் சிலைத் தீட்டி விட்டு கூர் பார்ப்பதற்கு கன்னத்தை உப்பி வைத்து, குத்திப் பார்க்க வேண்டும்.

59
கல்லுப் பென்சில்தான் நல்லது, உடையாது. மாக்கட்டிப் பென்சில் உடைந்து போகும்.
சோதனைக்கு அப்பா கல்லுப் பென்சில்தான் வாங்கி வருவார். அவன் அதனுல்தான் எழுதுவான்.
அவன், தலைக்குமேலே பாணைத் துக்கிக் கொண்டு ஒடினன். துள்ளித் துள்ளி ஒடினன். அவன் போட் டிருந்த சட்டையின் வார் தோளை விட்டு விழுந்தது. அவன் திரும்பவும் எடுத்துவிட்டான்; அது மறுபடி யும் விழுந்தது.
சரசக்காவைக் கூப்பிட்டுக் கொண்டே ஓடினன்.
பொட்டுக்குள் அவன் குனிந்தான். ஒரு கையை மண்ணிலே ஊன்றிக் கொண்டு அவன் கூப்பிட் டான்.
-சரசக்கா!
அவன் மறுபடியும் கத்தினன்.
-உந்த நாயைப் பிடியுங்கோ!
முழங்காலில் குறுணிக் கற்கள் குத்தின.
கம்பளப்பூச்சி, சிவப்பாக, அழகாக இருக்கும். அதைப் பிடித்துவைத்து விளையாட அவனுக்கு ஆசை. ஆனல் கூடாது. அது சிவபெருமானுடைய எச்சில்" பன்ன வேலை அக்காதான் அப்படிச் சொன்னுள்.
-ரத்-தி-னேஸ்-வரி.
-ரத்தினேஸ்வரி.
ரத்தினேஸ்வரி அக்கா கேட்டாள்:
-உன்ரை பேரென்ன?
அவன் சொன்னன்:
-சிறீ.

Page 31
6O
ரத்தினேஸ்வரி அக்கா அவனை வியப்புடன் பார்த் தாள். மறுபடியும் அவள் கேட்டாள்:
-நீ எங்கை இருக்கிறனி.
அவன் சொன்னன்:
-தலை வாசலுக்கை.
அவர்கள் எல்லோரும் சிரித்தார்கள். ரத்தினேஸ் வரி அக்காவும் சிரித்தாள்.
சிறியும் அவர்களுடன் சேர்ந்து சிரிக்க முயன் றன். அவனுக்கு அழுகைதான் வந்தது.
-அவர்கள் எதற்காகச் சிரித்தார்கள்?
ரவி கீச்சுக்குரலில் கத்தினன்:
-கொக்குவில்.
அவர்கள் ஒருவரும் சிரிக்கவில்லை.
ஏன்?
சரசக்கா காயைப் பிடித்துக் கொண்டு அவனைக் கூப்பிட்டாள். அவன் எழும்பி (கின்று முழங்கால் மண்ணைத் தட்டிவிட்டான்.
சரசக்கா பாடம் சொல்லித் தருவாள். அவ ளுடைய உதடுகள் அசைவதையே அவன் பார்த்துக் கொண்டிருப்பான். றம்புட்டான் பழத்தோலை எடுத்து விட்டதுபோல, அவளுடைய கண்கள் குளுமையாக இருக்கும்.
அவனுடைய தலை பொலிஸ் குறப்பாக வெட்டி இருக்கும். அக்கா மெல்லக் குட்டுவாள். அவன்கணக்கு பிழை விட்டால்தான் குட்டுவாள்.
அவர்கள் பாடுவார்கள்.
மொட்டைப் பாப்பா,
சட்டி உடைப்பான்.

6.
மூண்டு பானை கூழ் குடிப்பான்.
அவன் தொண்ணுறு பலாவிலை கூழ் குடிப்பான்; அண்ணை ஆயிரம் பலாவிலை குடிப்பான்; அப்பா தொளாயிரம் பலாவிலை குடிப்பார்.
சரசக்கா திருப்பித் திருப்பிக் கேட்பாள்:
-இருபத்திரண்டிலே ஒம்பது போனுல் எத்தி2ன?
அவனுக்கு நித்திரையாக வரும்.
கைவிரல்களைப் பிடித்துப் பார்ப்பான்; கால்விர2ல யும் சேர்த்தால் கூட இருபத்திரண்டு வராது போல இருக்கும்.
சரசக்காவைப் பார்த்து அவன் மெல்லச் சிரிப் பான். கை விளக்கை வாயினுல் ஊதி விடுவான்.
அது மெளனமாக அணைந்துவிடும். சரசக்கா குனிந்து அவனை முத்தமிடுவாள்.
அவன் கையால் முகத்தை மூடுவாள்; அவனுக்கு வெட்கம். தங்கையைத் தான் முத்தமிடலாம்; ஏனென் றல் அவள் அரிவரி; அவன் இரண்டாம் வகுப்பு: அவனை முத்தமிடக்கூடாது. என்றலும் அவனுக்கு சரசக்காவைப் பிடிக்கும். ஆணுல், கார்த்திகேசு மாஸ் டரைத்தான் அவனுக்குப் பிடிக்காது. அக்கா கார்த்தி கேசு மாஸ்டரைத்தான் சடங்கு முடிப்பாள். அவர் அக்காவிடம் அடிக்கடி வருவார்.
事 4 来 毫
சர சக்கா முன்பென்றல் யாரைக் கண்டாலும் ஒளிப்பாள்; எழுத்துக்குப் பிறகு அவருடன் மாத்திரம் கதைக்கலாம். அவன் பெரியவன் ஆனலும் சரசக்கா வைத்தான் சடங்கு முடிப்பதாக இருந்தான்.
இனிமேல் அவன் முடிக்கமாட்டான்.

Page 32
62
நாவல் பழம் என்றல் அக்காவுக்கு ஆசை. அவன் கல்ல பழமாகப் பொறுக்கிக் கொண்டு போவான். அவனுக்கு உள்ளே போக வெட்கமாக இருக்கும்.
கார்த்திகேசு மாஸ்டர் உயரமாய், கறுப்பாய் இருப்பார். அக்கா அவரோடுதான் கதைத்துக் கொண்டு இருப்பாள்.
சிறி கையைப் பின்னுக்கு மறைத்துக் கொண்டு வாசலிலே நிற்பான். கதவு நீக்கலுக்குள்ளால் பார்ப்பான்.
அக்கா அவனைக் கையைக் காட்டி கூப்பிடுவாள். ஒரு பழத்தை மாத்திரம்தான் எடுப்பாள்.
-எனக்குக் காணும் சிறி. நீ கொண்டேய் சாப்பிடு. அவனை மடியிலே இருத்தக் கூட இல்லை; கன்னத் திலே கிள்ளக்கூட இல்லை.
அவனுக்கு அழுகை அழுகையாக வரும். காவல் பழத்தை அவர்கள் வீட்டுக் குங்திலேயே விட்டெறிவான்.
அக்காதான் அவனுக்கு அளவெடுத்தாள். அது வார்ச் சட்டை. அக்காவுடைய சடங்கு வீட்டுக்கு அதைத் தான் போடுவான். அதிலே சிவப்புப் பொத் தான் எல்லாம் நிறைய வைத்திருக்கும்.
அக்கா அவனுடைய கண் இமையை நிமிண்டிப் பார்த்தாள்; சிறி அவளை வியப்புடன் அண்ணுந்து பார்த்தான்.
அக்கா அவனுடைய அம்மாவை வேலிக்கு மேலால் கூப்பிட்டாள்.
அவள் சொன்னுள்"

63
-இவன் சிறியைத் தொட்டுப் பாருங்கோ, தேக மெல்லாம் ஒரு மாதிரி இருக்கு.
அம்மா அவனுடைய சட்டையைக் கழற்றிப் போட்டு முதுகையெல்லாம் தடவிப் பார்த்தாள். அவ ளுடைய முகம் கறுத்தது.
சிறிக்குச் சோர்வு சோர்வாக வந்தது. அம்மா அவனைத் தூக்கிக்கொண்டு போய்ப் பாயிலே கிடத் தினள். பாயிலே பழைய சீலையெல்லாம் விரித்திருந் தது. சிறி கால்க2ள முடக்கிக்கொண்டு கிடந்தான்; அவனுக்குப் படுக்கை கதகதப்பாக இருந்தது.
மறுபக்கம் திரும்ப அவனுக்கு ஆசையாகத்தான் இருந்தது. தேகமெல்லாம் கோவாக கொர்ந்தது. அம்மா அவனே ஆட அசையாமல் கிடக்கச் சொன்னுள்.
அப்படிக் கிடந்தால் அவனுக்கு வருத்தம் மாறி விடும். சர சக்காவுடைய சடங்கு வீட்டுக்கு அவன் போவான். புது வார்ச் சட்டை போட்டுக்கொண்டு போவான்.
சரசக்கா அளவு சட்டை கொண்டு வந்து அவ னுக்கு போட்டுப் பார்ப்பாள். ஆனல் இப்போது அவனுக்குக் கிட்ட ஒருவரும் வரக் கூடாது. அம்மா மாத்திரம் வரலாம். அம்மா அவனுக்குக் கொதிக்கும் இடங்களில் எல்லாம் வாயால் ஊதி விடுவாள்; அவ னுக்கு சுகமாக இருக்கும்.
முகட்டிலே வேப்பமிலைக் கொத்து சொருகியிருக் கும். அது அவனுடைய தலைக்கு நேரே இருக்கும். அம்மாதான் அதை அங்கே வைப்பாள். அவன் அதையே பார்த்துக் கொண்டிருப்பான். அது கண் ணுக்கு வெகு வெகு சமீபத்தில் இருக்கும். அவன்

Page 33
64
கையை நீட்டுவான்; அது எட்டாது. அது எங்கேயோ தூரத்தில் தெரியும்.
ஒரு மைல், இரண்டு மைல், பத்து மைல், ஆயிரம் மைல், தொள்ளாயிரம் மைல், கோடி 6R) 3- L D 60) D GRO .
அவன் கஞ்சிதான் குடிப்பான்; அவனுடைய பீலிஸிலேதான் குடிப்பான். அவனுடைய பீலிஸ் பச்சை. அண்ணையினுடையது சிவப்பு. அதன் ஒரம் உடைந்திருக்கும். தங்கச்சியினுடையதும் பச்சை; ஆணுல் அதிலே வெள்ளைக்கோடு போட்டிருக்கும்.
தங்கச்சி அவனுடைய பிலிஸை எடுத்தால் அவன் சண்டை பிடிப்பான்.
மணவறையில் இருக்கும் மணியெல்லாவற்றை யும் அவன் தங்கை பிடுங்குவாள்; அவனிலும் பார்க்க அவள் கூடச் சேர்த்துவிடுவாள்; அவனும் சேர்ப்பான் தான். தங்கைக்குத் தெரியாமல் சேர்ப்பான்.
அக்கா மணவறையில்தான் போய் இருப்பாள். சே2ல எல்லாம் உடுத்துப் பெரிய பொம்பி?ள போலத் தான் இருப்பாள். ஆனல் உண்மையில் அவள் சின்னப் பொம்பிள்ளை தான்.
பக்கத்தில் கார்த்திகேசு மாஸ்டர்தான் உட்காரு வார். உயரமாய் கண்ணுடி போட்டுக் கொண் டிருப்பார்; பெரிய ஸ்டைல்; அவனுக்கு எரிச்சலாக வரும்.
மாப்பிள்ளைக் கார் சோடித்து அலங்காரமாக வரும். அதிலே பச்சை, நீலம், சிவப்பு விளக்குகள் எல்லாம் பூட்டியிருக்கும். மாப்பிள்ளைக் காரிலேதான் அவன் ஏறுவான். அக்கா அவரோடு ஒட்டிக்கொண்டு தான் உட்காருவாள்.

65
சரசக்காவிடம் ஒட அவனுக்கு ஆசையாக இருந் தது. அங்கே நிறைய ஆட்கள் எல்லாம் இருப்பார் கள். சரசக்கா சிறியை இழுத்து மடியிலே வைத்துக் கொள்ளுவாள்; அவனுக்கு வெட்கமாக இருக்கும். பறித்துக்கொண்டு ஓடுவான்.
அம்மாவுக்குத் தெரியாமல் அவன் அக்காவிடம் போய்விடுவான். ஆனல், அவனுக்குப் பயமாயிருக் கும். அவன் ஈரத்துக்குள் இறங்கக்கூடாது. அம்மா கண்டால் அடிப்பாள்.
அவனுக்கு ஒன்றுமே இல்?ல. மறுபக்கம் திரும்பிப் படுத்தான். கோகவே இல்லை.
ஆனல் அவன் அம்மா இப்படித்தான் காளைக்கு காளைக்கென்று சொல்லுவாள். அவனை எழும்பவே விடமாட்டாள்.
எல்லாம் பொய்; மேளச் சத்தம் கூட அவனுக்குத் தெரியும். 2லட்மிஷின் சத்தம் கூட அவனுக்குத் தெரியும்.
அவனுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வரும். அவன் ஒன்றும் கூடப் பார்க்கவில்லை. புதுச் சட்டை கூடப் போடவில்லை.
அவனுக்கு அம்மா முழுக வார்ப்பாள். கோயி லிலேதான் வார்ப்பாள். அதற்குப் பிறகு அவன் மீன் கறி சாப்பிடுவான்; ஈரத்துக்குள் இறங்குவான்.
அவன் எழுந்து உட்கார்ந்தான். இலையான் எல்லாம் அவனைச் சுற்றிச் சுற்றி மொய்த்தன. அவன் அவற்றையே உற்றுப் பார்த்தான். அவை சத்தம் போட்டன. -hொன, வொன, கொண, அ. 4

Page 34
66
சிறி தன்னுடைய சிறிய கைகளால் அவற்றை விரட்டினன்; அவை திருப்பித் திருப்பி வந்தன.
அவனுக்குக் களைப்பாக இருந்தது. அவன் அக்கா விடம் ஒடுவான்; அம்மாவுக்குத்தெரியாமல் போவான்; அக்காவின் மடியில் ஏறி இருப்பான்; அக்கா சங்கி லியை வாய்க்குள் கடித்துக் கொண்டிருப்பாள், சிறீ இரண்டு விரல்களால் அதைப் பிடுங்குவான்.
பாண் காரனின் மணிச் சப்தம் கேட்டது. காய் குரைத்துக்கொண்டு ஓடியது.
சிறியின் கெஞ்சு படக் படக்கென்று அடித்தது. சன்னலுக்குள்ளால் எப்டிப்பார்த்தான்; அம்மா குழை ஒடித்துக் கொண்டிருந்தாள்.
சிறீ மெதுவாகச் சொன்னன்:
-ஒரு றத்தல்.
நிலத்திலே கால் ஊன்ற அவனுக்குக் கூச்சமாக இருந்தது. ஒரு கையிலே பாணை வாங்கிக்கொண்டு அவன் ஒடினன்; திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டு ஓடினன்.
தூரத்திலே அம்மா கொக்கைத் தடியைப் போட்டு விட்டு ஓடி வந்தாள்.
அவள் கத்தினுள்:
டேய் சிறி!
அவள் மேலும் மேலும் கூப்பிட்டாள்:
ஈரத்துக்கை ஒடாதை, இஞ்சை வா!
அவன் கவனிக்காமல் ஓடினன். களைக்கக் களைக்க ஒடினன்.
ஒரு கையால் நிலத்தை ஊன்றிப் பொட்டுக்குள் குனிந்தான்.

67
அவனுடைய வெறும் முதுகில் சுரீர் என்றது. குழைக் கம்புடன் அவன் அம்மா நின்றள்; அவள் மெதுவாகத்தான் தொட்டாள்; அவனுக்கு உயிர் போவது போல இருந்தது.
அழுகை பொங்கிப் பொங்கி வந்தது. கீழே விழுந்த பானை முகர்ந்து பார்த்து விட்டு காய் திரும்பி ஓடியது.
来源 泰 来源
விம்மி விம்மி அவன் அழுதான்; அவன் மெலிந்த முதுகு எழும்புவதும், விழுவதுமாக இருக்தது. முது கெல்லாம் எரி எரியென்று எரிந்தது.
அவனுக்கு விக்கல் மாறி மாறி வந்தது. அப்பா வந்ததும் அவன் கட்டாயம் சொல்லுவான்.
கஞ்சி மணம் அவனுக்குத் தெரியும்; ருசிதான் அது. அவனுக்கு வேண்டாம். அம்மா வந்தால் அவன் குப்புறப் படுக்க வேண்டும்.
விம்மல் படிப்படியாகக் கு றை ந் து வந்தது. இன்னும் சிறிது கேரத்தில் அவனுக்கு விக்குவது நின்று விடும்.
அம்மா குசினிக் கதவைச் சாத்தும் ச த் தம் கேட்டது. மறுபடியும் அடக்க முடியாமல் அவனுக்கு விம்மல் பொங்கி வந்தது.
சடக் சடக்கென்று புடவைச் சத்தம் கேட்கும். அவன் திரும்பவே மாட்டான்.
女

Page 35
W
அனுலா
நான் ஒரு கர்வியாவதற்குக் காரணம் அவள் தான்; மண்டைக் கர்வம் பிடித்து கான் அ2லந்தேன் என்று கூற முடியாது. ஆனல், அகம் பாவம் என்னும் திரை என் கண்களை மறைத் திருந்தது.
என் முகத்திலே கோபத்தைக் கண்டால் அவள் பயப்படுவாள். கண்கள் அங்குமிங்கும் அ2ல பாயும்.
எனக்கு அதிலே பெருமை கூட. காதலில் எனக்கு நம்பிக்கை இல்லை, ஆணுக்கும், பெண்ணுக்குமிடையில் இனக் கவர்ச்சி ஏற்படுவது உண்டுதான்-ஆனல் காதல் என்ற தன்மையை நான் என்றுமே நம்பியது கிடையாது.
காதல் சுழலின் மத்தியில் சிக்கி கான் திணறிய போது கூட ‘இது காதல் தான? என்ற சக்தேகம் எனக்குக் கடைசி வரையில் இருந்துகொண்டுதான் வங்தது.
ஆனல் அனுலாவுக்கு அப்படிப்பட்ட சந்தேகம் ஒரு போதும் இருந்ததாகத் தெரியவில்2ல. என் ஜன மனமார அவள் கே சிக்க விரும்பினுள்; நேசித்தாள். அதனல் ஏற்படக்கூடிய பலாபலன்களைப்பற்றி அவள் சிந்தித்ததாகவே தெரியவில்லை.
எனக்கு மாற்றல் கிடைப்பதற்கு இ ன் னு ம்
இரண்டு மாதங்கள் தான் இருந்தன. அதன் பிறகு நான் இலங்கைத் தீவின் ஏதாவதொரு மூஜலயில்

69
கிடக்கும் போஸ்டாபீஸில் போய் முடங்கி விடுவேன். இன்று நான் குடியிருக்கும் இந்த அறையும் காலியாகி விடும்.
அனுலாவின் மனம்? அந்தப் பிஞ்சு உள்ளத்தோடு நான் வி2ளயாடி னேன். புதிய சோதனைக்கு என்2னத் தயாராக்கிக் கொண்டிருந்தேன்.
காதல் எப்போது உதயமாகிறது என்று யாராலும் கூற முடியாது என்று சொல்வார்கள். இரவிலிருந்து பகல் பிறப்பது போல் ஏதோ ஒரு கணத்தில் அதுவும் பிறந்து விடுகிறது.
ஆனல் எங்களுடைய காதல் எப்பொழுது பிறந்த தென்று என்னல் கூற முடியும்போல் தோன்றுகிறது.
மத்தியானச் சாப்பாட்டுக்கு மாத்திரம் சில்வா என்னுடன் உட்கார மாட்டார். நான் தனியாகத்தான் உட்காருவேன். எனக்கெல்லாம் அப்போது அவர் களுடைய உணவு கன்ற கப் பழகிப் போய் விட்டது. அனுலா தன்னுடைய கையால் போட்டு வைத்த ‘அச்சாறு? இல்லாமல் என்னுல் சாப்பிடவே (LDLQ ULU Tigh.
மேஜையிலே வைத்த பீங்கான் தட்டிலே, அவள் ஒவ்வொன்ற க எனக்குப் பரிமாறினுள். நின்றபடியே அவள் கரண்டியால் எடுத்து வைத்தாள். குனிந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவன், என் உள்ளுணர்ச்சி ஏதோ கூறவே, திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தேன்.
வைத்த கண் வாங்காமல் அவள் என்னையே பார்த்துக்கொண்டு நின்றள். அவளுடைய கண்களில் அன்று என்றைக்குமே இல்லாத ஒருவிதக் கவர்ச்சி ஆட்சி புரிந்து கொண்டிருந்தது.

Page 36
7O
அவள் மெதுவாகச் சிரித்தாள். அந்தச் சிரிப்பு எனக்குப் புதியதாக இருந்தது. அவ்வளவு காலமும் அவள் ஒரு சிறுமி. திடீரென்று அன்று, அவள் இளமையின் வாயிலில் ாகின்று என்னை ஆகர்ஷிப்பது போல் பட்டது.
அந்தச் சிரிப்பில் நிறைய அர்த்தமிருந்தது.
率 来 来
காளுக்கு நாள் அவளுடைய அழகு விபரீதமாக அதிகமாகிக் கொண்டே வந்தது. எப்பொழுது பார்த் தாலும் அவள் ஏதாவது ஒரு புது விதத்தில் தன்னை அலங்கரித்துக் கொண்டு என் முன்னே தோன்றுவாள். சில வேளைகளில் அவளுடைய அலங்காரம் சிறு பிள்ளைத்தனமானதாகக்கூட எனக்குப்படும்.
ஆனலும், அதைக் கூட கான் மகிழ்ச்சியுடனேயே ரசித்தேன். என்னை யறியாமல் என் மனம் அவளைப் பற்றிச் சிந்திப்பதை கான் உணரலானேன்; என் அன்பு நிதானமாக வளர்ந்தது.
அப்பொழுதுதான் அவள் அந்தத் தவறைச் செய் தாள். அவளுடைய அன்பு நிதானம் தவறிவிட்டது. ஒரு கணமாவது என்னேப் பிரிந்திருக்க அவளால் இயலவில்லை. தன் தகப்பனருக்குச் செய்ய வேண்டிய கடமைக?ள க் கூட மறக்து அவள் என்னுடனேயே ஐக்கியமாகிவிட்டாள்.
என்னுடைய அன்பிலும் பார்க்க அவளுடைய அன்பு அதிகம் என்பதை நான் உணரலானேன். அப் போதுதான் என்னிடத்தே கர்வம் பிறந்தது.
கான் இல்லாமல் ஒரு கண மாவது அவள் வாழ முடியாது என்று நிதர்சனமாக எனக்குத் தெரியத்

71
தொடங்கியதும், சிறிது சிறிதாக அவளை உதாசீனம்
செய்யத் தலைப்பட்டேன். '
அவளிடமுள்ள சிறிய குறைகள் கூட எனக்குப்
பூதாகாரமாகத் தெரியத் தொடங்கின.
பூப்போன்ற அவளுடைய இதயத்தை அடிக்கடி கொடுரமான வார்த்தைகளால் புண்படுத்தினேன். வேண்டுமென்றே அவள் நெஞ்சம் நோகப் பேசி, அந்த முகம் படும் வேதனையை ரசிக்கத் தலைப்பட்டேன். ஏதோ ஒரு மகிழ்ச்சி எனக்கு அதனல் ஏற்பட்டது போலத் தான் தெரிந்தது.
அவளுக்கு என் போக்கு விசித்திரமானதாகப்
uLG6ుడిaు. 6TGOT சுபாவம் அதுதானென்று எண்ணினள் போலும்; ஒரு குறையையும் அவள் உணர்ந்ததாகத் தெரியவில் 2ல. கிடைப்பதோடு
திருப்தி யடைந்தாள்.
என்னை ாேக சிக்காமல் ஒரு கணமும் வாழ முடியாது என்பதை வெளிப்படையாகக் காட்டவும் செய்தாள்.
率 秦
சில்வாவுக்கு, படங்களுக்குச் சாயம் பூசி விற்ப து தான் தொழில். சில வேளைகளில் அனுலாவும் தகப்ப ஞருக்கு உதவியாகச் சாயம் பூசுவது உண்டு. அன்றைக்கும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். ாகான் வரும் நேரமானதும் உள்ளே சென்று கைக2ளக் கழுவிவிட்டு எனக்காகக் காத்திருந்தாள்.
எப்படித்தான் கழுவினலும் அந்த நிறம் கையி லிருந்து இலகுவில் போய்விடுமா?
அவள் வாசல் வரையில் ஒடோடியும் வந்து என் முன் வந்து நின்றள்; என்னைப் பார்த்துத் தன்னுடைய

Page 37
72
மகிழ்ச்சி முழுவதையும் கொட்டிப் புன்னகை பூத்தாள்.
நான் கண்களைக் கடுமையாக வைத்துக் கொண்டு, “இது என்ன நாற்றம்-சாயம் பூசினயா? என்று அருவருப்புடன் கேட்டேன்.
அவள் முகம் கூம்பிச் சிறுத்தது. அந்த மெல்லிய இருதயத்தை வேதனை செய்வதில் ஏனே எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
ஆனல் அவளுடைய துக்கம் என்றுமே நிலையான தல்ல. என்னிடமிருந்து ஒரு சிறு புன் சிரிப்புக் கிடைத் தாலும் போதும், அவள் தன் கவலைகள் எல்லாவற்றை யும் உதறிவிட்டு என்னிடமே சரண் புகுந்துவிடுவாள். காணப்படக் கூடத் தெரியாத அவள், தன் குழந்தைப் பிள்ளை சுபாவத்தினல் மாத்திரம் என்னைக் கவர்ந்து விட்டாளா?
率 掌 来
நான் சாய் மனையில் படுத்து ஏதோ படித்துக் கொண்டிருந்தேன். அவள் வந்து ஒரு பக்கத்துச் சட்டத்தில் சாய்ந்து கொண்டு, தானும் ஏதோ வாசிப் பதுபோல் தனக்குத் தெரிந்த ஒன்றிரண்டு தமிழ்ச் சொற்களையே திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண் டிருர் தாள். அவள் தமிழ் பேசுவது அழகாக இருக் கும். ஆனலும் அவள் அடிக்கடி அப்படிக் குனிந்து வாசித்தபோது, அவளுடைய நீண்ட பின்னல்களி லொன்று என் மார்பில் விழுந்து கூச்சத்தைக் கொடுத்தது.
எனக்கு அவளைக் கோபமாகப் பார்க்க விருப்பம் வரவில்2ல. நிமிர்ந்து அவளைப் பார்த்தேன், அவள் பயந்துவிட்டாள். அவள் பயப்படும் போதுகூட ஒர்

73
அழகு. அந்த அழகை ரசிப்பதற்குத்தான நான் அவளை அடிக்கடி கோபித்திருக்கிறேன் என்றே நான் நினைப்பதுண்டு.
பயத்துடன் அவள் என்னையே பார்த்துக்கொண் டிருந்தாள். தன் கண்களே அவள் எடுக்கவே இல்லை.
'அனு போகிறயா, இல்லையா?? அவள் என்னைப் பரிதாபமாகப் பார்த்தாள். கண்கள் குளமாகின. எனக்கு இரக்கமாக இருந்தது. என்ன நினைத்துக் கொண்டேனுே, “அனு, ஒரு பாட்டுப் பாடு’ என்றேன்.
ாகான் எதற்காகப் பாடச் சொன்னேன் என்று எனக்கே தெரியாது. டாடச் சொல்லிக் கேட்டதும் அவள் வெட்கத்துடன் மெளனம் சாதிப்பாள் என்று தான் நினைத்துக்கொண்டேன்.
ஆனல், நான் சொல்லி வாய் மூடு முன் திடீரென்று அவள் பாட ஆரம்பித்தாள். அவ்வளவு காளும், எனக்கு, அவளுக்குப் பாட்டு வரும் என்றுகூடத் தெரிந்திருக்கவில்2ல.
எனக்கு முன்னல் நிமிர்ந்து நின்று, பள்ளிப் பிள்ளைகள் வாத்தியாருக்குப் பாடம் ஒப்பிப்பதுபோல, அடக்க ஒடுக்கமாக, அவள் பாடிக் கொண்டிருந்தாள். 'கான் ஒரு ராசா மகள்’ என்று ஆரம்பிக்கும் ஒரு சிங்களப் பாடல் அது.
‘எங்களிடம் ஆயிரம் யானைகள் இருந்தன. ஆயிரம் குதிரைகள் இருந்தன. ஏராளமான செல்வம் இருந்தது. எங்கள் புகழ் எங்கெல்லாமோ பரவியது; இருந்தும் என்ன?

Page 38
74
இன்று எங்கள் செல்வமெங்கே, புகழ் எங்கே?* என்று தொடர்கிறது அந்தப் பாட்டு.
என்னுடைய மனமானது அனுலாவை ராசா மகளாகக் கற்பனை செய்து பார்த்தது. கான் அந்தச் சிந்தனைகளில் மூழ்கியிருந்த போது, பாட்டு முடிந்தது கூட எனக்குத் தெரியவில்லை.
அவள் ஒர் அடி முன்னுக்கு வந்து 'பாட்டு எப்படி இருந்தது? என்ற பாவனையில் நின்றள்.
கான் திடுக்கிட்டு விட்டேன்.
அவளுடைய கன்னத்தை மெதுவாகத் தட்டி *உன்னைப்போலவே உன் பாட்டும் அழகாக இருந் தது' என்றேன்.
அவள் மனம் சங்தோஷப்படும்படியாக நான் செய்தது அது ஒன்றுதான். மகிழ்ச்சியால் அவள் பூரித்துப்போனள்.
மாற்றல் உத்திரவு வந்துவிட்டது. சில்வாவிடம் அதைக் கூறும்போதே அனு லா கேட்டிருக்க வேண்டும்.
'அனு?
அவளைக் காணவில்லை. வெளியே வந்து தேடி னேன். எதிர் பார்த்தபடியே அவள் அந்த “மொற’ மரத்தின் கீழிருந்து அழுதுகொண்டிருக்தாள். அந்த மரம் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறைதான் காய்க்கு மாம். அடுத்த வருடம் அது காய்ப்பதாக இருந்தது. எனக்கு அந்தப் பழத்தைப் பறித்துத் தர வேண்டு மென்று அவளுக்கு எத்தனே ஆசை.
அனுவை அழவேண்டாம் என்று நான் சொல்ல வில்லை. அப்படி கான் கூறியிருந்தால் ஒருவேளை உடனேயே அழுகையை நிறுத்தியிருப்பாள். அழுவ

T5
தற்குக்கூட அவள் என்னிடம்தான் உத்தரவை எதிர் பார்த்தாள்.
*அனு’ முகத்தை முடியிருந்த கைகளை மெதுவாக நீக்கி அவள் என்னைப்பார்த்தாள்.
"அணு, நான் எப்படியும் போகத்தானே வேண் டும்."
*அப்போ கானும் வருகிறேன்.”
·“吊山m?”” 'ஏன், வந்தால் என்ன? அனு விளையாடவில்2ல; உண்மையைத் தான் பேசினள்; "வா’ என்றல் வரத்தான் செய்திருப்பாள்.
'அனு, நீ என்ன குழந்தையா? அப்போது அவள் தன் முகத்தை நிமிர்த்தி என்னைப் பரிதாபகரமாகப் பார்த்தாள். அந்தப் பார்வையில் அடக்கமுடியாத துயரம் தொனித்தது. 'உண்மையிலேயே என் 2ன விட்டுப் போகி றிர்களா?’ முதன்முறையாக அவள் விக்கி விக்கி அழலானுள்.
அவளுக்கு என்னுடைய முடிவு மிக மிக ஆச்சரி யத்தைக் கொடுத்திருக்கவேண்டும்.
என்னுடன் அதற்குப் பிறகு அவள் பேசவே இல்லை; நேரே போய்ப் படுத்துக்கொண்டாள்.
அடுத்த நாள் காலை பெட்டி படுக்கைகளை நான் அடுக்கிக்கொண்டிருந்தேன். அனுலா 'கைகள் இரண் டையும் பின்னுக்குக் கட்டியபடி மெதுவாக நடந்து வந்தாள். ரகசியமாக என் பெட்டிக்குள் எதையோ வைத்துவிட்டு என் முகத்தையே ஆர்வத்தோடு பார்த்தபடி நின்றள்.

Page 39
76
“அனு, இது என்ன?” போன கண்டிப் பெரஹராவின்போது அவள் வாங்கிய ஒரு சிறிய புத்தர் சிலை; யானைத் தந்தத்தி ணுல் செய்தது. எவ்வளவு ஆசையாக அதை வாங்கி ஞள். எனக்கு அதைப் பெற்றுக்கொள்ள மனமே இல்லை; ஆனல், அவளுடைய கண்களைப் பார்த்ததும் என் முடிவை மாற்றிக்கொண்டேன்.
"இனிமேல் இங்கே வரவே மாட்டீர்களா? எனக்கு அவள் முகத்தைப் பார்க்க இரக்கமாக இருந்தது.
"அனு, உன்னைப் பார்க்காமல் இருப்பேணு-நீ *கிரிபத்' செய்து தருவாயல்லவா?
ாகான் கடைசியாக விடைபெற்றபோது அவள் திக்கித்திக்கி, என் காதோரமாக முகத்தை வைத்து “என்னிலே உங்களுக்கு ஆசையில்லையா? என்று கேட் LT GiT.
அப்போதுகூட அவள் முகததில் நான் ஈகாணத் தைக் காணவில்லை.
அவளுடைய அன்பு ஆழமானதில்லையா? இல்லா விட்டால் எப்படிச் சிரித்தபடியே அவளால் விடைகூற முடிந்தது?
ஆனல் அவளை விட்டுப் பிரியவேண்டும் என்ற விசித்திரமானதோர் ஆவல் என் அடிமனத்தில் கெடுநாளாக உறைந்துகொண்டுதானிருந்தது. பிரிவின் வேதனையை உண்மையிலேயே கான் அனுபவிக்க வேண்டுமென்ற தணியாத ஆசையாகத்தான் இருக்க வேண்டும்.
ஆனல், ஆசை இருந்த அளவுக்கு அதைத் தாங்கும் சக்தி எனக்கு இருக்ததாகத் தெரியவில்2ல.

77
எங்நேரமும் என் மனத்தை அனுலாவின் வேத2ன நினைவுதான் நிறைத்துக்கொண்டது. ஒரு காரியமும் என்னல் செய்ய இயலவில்லை. பைத்தியம் பிடித்து விடுமென்ற நி2லயில் இருந்தேன்.
என் வேதனையே இப்படியென்றல்-அனு-அவள் பிஞ்சு உள்ளம் இதைத் தாங்குமா?
நானே ஏற்றுக்கொண்ட சுமையை நான் சுமக்க முடியாமல் தவித்தேன்.
அனுலா துTனே டு உட்கார்க் து முழங்காலைக் கட்டிக்கொண்டு, பாடிக்கொண்டிருக்கிறள்.
'நான் ஒரு ராசா மகள்' மிரண்டு பார்க்கும் அவளுடைய விழிகள் என் முன்னே வந்துநின்றன. பயத்தைத் தவிர அவள் என்னிடம் வேற எதைக் கண்டாள்?
என் நீண்டகால வாழ்க்கையில் அனுலா ஒரு குமிழ் என்று ஒதுக்கிவிடத்தான் நான் நினைத்தேன். ஆனல், என்னுடைய வாழ்க்கையே அவள் என்று நிலைமை மாறிவிட்டது. அனுலா இல்லாத ஒவ்வொரு கணமும் வேதனைதான் என்பதை உணரலானேன். "அணு", "அனு” என்று என் மனம் அவ8ளயே நி2னத்துக்கொண்டது. தோல்வியை ஒப்புக்கொள்ள அவமானமாக இருந்தது.
என்னுடைய கர்வமெல்லாம் எங்கே?
秦 米
மனத்திலே மிகப் பெரிய பாரம் அழுத்திக்கொண் டிருந்தது.
தூரத்தில் வரும்போதே, ஆவல் தேம்பிய என் கண்களில் அனுலா தென்பட்டு விட்டாள்.

Page 40
78
கால்கள் இரண்டையும் மடித்து, உட்கார்ந்திருந் தாள்! என் நிழல்தான் முதலில் விழுந்திருக்கவேண் டும்; திடுக்கிட்டுத் திரும்பிய அவளுடைய கண்கள் அப்படியே நிலைக்குத்தி நின்றன. அடுத்த கணம் இனந்தெரியாத சோகம் அந்த முகத்தைக் கப்பியது.
அவள் உள்ளே ஒடி விட்டாள்.
ஏற்கனவே சாயம் பூசிய படங்கள் சில வெய்யி லிலே காய்க்து கொண்டிருந்தன. தூரத்திலே, எமக்கு மிகவும் பழக்கமான அந்த “மொற? மரம் ஒன்றிரண்டு பூக்களை உதிர்த்தபடியே நின்று கொண்டிருந்தது. கொடியிலே சில்வாவின் சாரம்-அதே பழைய சாரம் தான்-காய்ந்து கொண்டிருந்தது.
அனுலா வரவில்லை.
*அனு?
என் குரலில் அப்போது கூட, அன்பிலும் பார்க்க அதிகாரந்தான் நிமிர்ந்து நிற்பதாகப்பட்டது. உள்ளே போனேன். அவள் கையிலே உள்ள சாயத்தை மண் தேய்த்துக் கழுவிக் கொண்டிருந்தாள்.
' 'goيږي ،
அவள் (நிமிர்ந்து கூடப் பார்க்கவில்2ல.
'அனு, கோபமா?
அவள் மெதுவாகத் தலையை நிமிர்த்தி அசைத் தாள் அவளுடைய இயல்பான புன்னகை அப்போது கூடத் தோன்றவில்லை.
"அப்பா எங்கே?"
*புது டவுனுக்குப் போயிருக்கிறர்’
கேள்வியும் பதிலுமாகத் தான் இருந்தது. பழைய பிடிப்பு இப்பொழுது இல்லை.

79
என்னுடைய அந்தப் பழைய அனுலா எங்கே? "கிரிபத்தின் நறுமணம் மெதுவாக மிதந்து வந்தது. நாலு தாள்கள் கிழிக்கப்படாமல் காலண்டர் தொங்கிக் கொண்டிருந்தது. அந்தப் புத்தர் சிலை இருந்த இடம் இப்போது வெறிச்சென்றிருந்தது.
மேசையிலே, சில்வாவுக்கு வந்த கடிதம் ஒன்று, உடைக்காமலே கிடந்தது.
“அனு, விளக்கைக் கொளுத்த வில்லையா?..??
கை விளக்கை ஏற்றிக்கொண்டு வந்து மேசை மேலே வைத்துவிட்டு, அவள் தூரப் போய் நின்றள்.
சிறிது அழுக்குப் படிந்த மேற்சட்டை, இடையிலே விசிறிக் கொய்யகம் வைத்து உடுத்திய சேலை; சோகம் கவிந்த முகம்; அந்த நிலையிலுங் கூட அவள் சிகிரியா சித்திரத்தைத் தான் எனக்கு நி2னவூட்டினுள்.
முதன் முறையாக அனுலாவின் முன்னிலே யில் ாகான் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தேன் என்னுல் அதிகாரம் செய்யவும் முடியவில்லை; பணி ந் து போகவும் இயலவில்லை.
பரிதாபமாக அவளையே பார்த்தபடி யிருந்தேன். அவள் முகத்தைப் பார்க்கக் கூடியதாக விளக்கை எடுத்து வைத்தபோது ஏனே எனது கை சிறிது ாகடுங்கியது.
'நான் வந்தது உனக்குப் பிடிக்கவில்2லயா?? அவள் முகம் சிறுத்துக் கறுத்தது; மெளனமாகக் குனிந்தாள்.
"அப்பா என்?னப் பியதாசாவுக்குப் பேசுகிறர்..??
என் மனமானது இதற்கு முன் ஒரு போதும் அடைந்திராத ஒரு வேதனையை அந்தக் கணத்தில்

Page 41
80
அனுபவித்தது. அனுலா இன்னெருவனுக்கு வாழ்க் கைப் படுகிருள், என்பதையே என்னுல் நினைக்க முடியவில்லை. எ ன் ரு லும் கூட அடிமனத்தின் தளத்திலே ஒருவித நிம்மதி நிலவியதையும் என்னல் உணர முடியாமல் போகவில்லை.
அனுலாவைப் பார்த்தேன். மங்கிய விளக்கின் ஒளியிலே அவள் கண்கள் பளபளத்தன. அவள் பொல பொலவென்று கண்ணிர் உகுத்த நாட்க2ளப் போல் இதையும் என்னுல் உதாசீனம் செய்ய முடிய வில்லை. அந்த ஒரு சொட்டுக் கண்ணிரே என் இதயத் தைத் தகர்த்து விடும்போலப்பட்டது. அ வ ள் அழுவதை நான் விரும்பவில்லை. பழைய அனுலாவா யிருந்திருந்தால் அந்தக் கண்ணிர் என் 2ன ஒன்றும் செய்திருக்க முடியாது.
ஆனல், என் முன்னே நி ன் ற அனுலாவின் கண்ணிரைத் தாங்க என்னுடைய இதயத்தில் வலுவில்லை.
* அனு! அந்தப் பாட்டைப் பாடுகிறயா??
அவள் மெளனமாக இருந்து விட்டாள். அந்தப் பிடிவாதமான மெளனத்தை என்னல் தாங்க முடிய வில்2ல.
நான் பாடச் சொன்ன போது முழு மனத்தோடு அவளைக் கேட்காது போனலும் கூட என் வேண்டு கோ2ள அவள் நிராகரித்தாள் என்றிருக்க என் மனம் ஒப்பவில்லை.
"அனு எனக்காகப் பாடமாட்டாயா..??
அவள் ஏதோ சொல்ல விரும்பினுள்; உதடுகள் மாத்திரம் படபடவென்று துடித்தன.

8.
"இன்னும் எத்தனை நாளைக்கு உன்னிடம் இப்படி யாசிக்கப் போகிறேன்??
அவளுடைய வலது கையின் நீண்ட விரல்கள் என் வாயை மெத்தென முடின.
சாயத்தின் மெ ல் லி ய காற்றம் முக்கிலே இலேசாகப்பட்டது.
படங்கிலே இருந்து இழையை ஒவ்வொன்ற கப் பிய்த்தபடி அவள் மெதுவாகப் பாடத்தொடங்கினுள்.
*நான் ஒரு ராசாமகள்!" அவள் பாடிக்கொண்டு போகும்போது து டி க் கின்ற விளக்கின் ஒளியில் அவள் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் பாடலின் இறுதி வரிகளுக்கு வந்தபோது உலகத்துச் சோக இசையெல்லாம் அவள் குரலில் இழைந்து விட்டதாகத் தான் எனக்குப்பட்டது.
'கான் அணியும் நகையெல்லாம்
பித்தளைதான்-பொன்னல்ல; நான் உடுத்தும் சேலையெல்லாம் கிழிந்தவைதான் - பட்டல்ல
என்ருலும் கூடஎன்னைப் பார்த்து சிரிக்காதே,
தெருவிலே பொறவனே! நான் ராசா மகள் -
9s
நான். Ib fT6öT....... அந்தக் கடைசி வரிகளே அவள் பாடவே இல்2ல. அதற்குப் பதில் ஒரு மெல்லிய விக்கல் தான் அவளிட மிருந்து வெளிப்பட்டது.
விளக்கு எப்போது அணைந்தது? ஒரு துளிகூட காற்று வீசவில்லையே,
* 本 水
5 ۰{9نى

Page 42
WI
சங்கல்ப நிராகரணம்
*சனி, ஞாயிறுடன் ஒட்டிக் கொண்டு எங்கே ஒரு விடுமுறை தினம் வரும், யாழ்ப்பாணம் போய் வருவதற்கு’ என்று கொழும்பில் இருந்து ஏங்கும் அநேகரில் நடேசனும் ஒருத்தன். பிரிவென்னும் கொடிய வேதனையின் எல்லைக் கோட்டிலே அவன் நின்று கொண்டிருந்தான். இப்படியான வேதனையை அவன் இதற்கு முன் அநுபவித்தது கிடையாது.
கடிதங்கள் எழுதத்தான் செய்தான். கடிதங்களா அவை? அவ்வளவும் கண்ணிரின் கருவூலங்கள்; இதயத்தின் துடிப்புகள்.
ஆனல் கடிதத்தில் மாத்திரம் காதல் வாசகம் எழுதி மனைவியை எத்தனை நாளைக்குத்தான் திருப்தி செய்ய முடியும்?
"அவள் பேதை, மணம் முடித்து எதைத்தான் கண்டாள்; கனவுலகில் நிழலுருவத்தின் அசைவு போன்று எங்கோ அரையும் குறையுமாகப் பழகிக் கொண்டோம்; மனம் விட்டு எங்கே பேசினுேம்.”
ாகாணத்துடன் அவன் முன்னே நின்று, பின்ன2ல வாயினுல் கடிக்கும் அவள் இப்படியெல்லாம் எழுத எங்கே கற்றுக் கொண்டாள்?
“உங்கள் முகத்தை நான் பரிபூரணமாக ஒரு முறை கூடப் பார்த்தது கிடையாது; நீங்கள் சிரிக்கும் போது உங்கள் கன்னங்களில் அழகுக் குழி விழுமாமே

S3
அதைக்கூட நான் ஆசை தீர அநுபவித்தது கிடை யாது; இருந்தும்.
"நான் உங்கள் மனேவி, ஊரார் முன் உங்கள் உடைமையென்று பகிரங்கப் படுத்தப்பட்டவள்நினைக்கவே எனக்கு வெட்கமாயிருக்கிறது.”
ஒவ்வொரு வார்த்தையும் பழுக்கக் காய்ச்சிய fFLQ-60)uJ இதயத்தில் சொருகுவது போன்று இருக்கும்.
ஆனலும் என்ன, அவன் அதிர்ஷ்டம்!
அதிர்ஷ்டம் எத்த2னயோ பேருக்கு, எத்தனையோ உருவங்களில் எதிர்ப்படுகிறதுதான். ஆனலும் அவனுக்கு அடித்த அதிர்ஷ்டம்
மனம் முடித்த மறுகாளே, ஆங்கிலத்தில் அழகாக உச்சரிக்கப்படும் "ஹனி முன் உல்லாசப் பிரயாணத்திற்குப் புறப்பட்டான்.
ஆனல், கொழும்பில் அவர்கள் கால்வைத்த போது அது கொழும்பு b கரமாகவே இல்லை. எங்கும் ஒரே கலவரம்; வெறி, இனவெறி.
மக்களை மக்கள் அடித்துக் கொன்று கொண்டிருக் தார்கள். பூமிதேவி இந்த அக்கிரமம் சகியாது மனம் கொந்து உதிர்த்த கண்ணிர்த் துளியே போன்று கொழும்பு மாாக கரத்தின் தெருக்கள் எல்லாம் இரத்தத் துளிகள் சிந்தின.
கீழே ஒரே கரடு முரடான தரை; மேலே அகன்று விரிந்த வானம். யாரும் அத்துமீறி உள்ளே பிரவே சித்து விடாதபடி பலமான பொலீஸ் பந்தோபஸ்து.
சுற்றிலும் ஒரே 'ஜே. ஜே’ என்ற ஜனக் கூட்டம்; அவர்கள் மத்தியில் அவளும் அவனும், கவிகளால்

Page 43
84
வர்ணிக்கப்படும் அந்த முதல் இரவும், உள்ளத்தை ஊடுருவும் பார்வை ஒன்று அவன் இதயத்தின் ஆழத்தில் இருந்து புறப்படும்.
சிரமத்துடன் வெளிவரும் ஒரே ஒரு நீர்த்துளி அவள் இதயத்துக் கனவுகள் அனைத்தையும் நிர்மூல மாக்கும்.
தொடர்ந்து பத்து நாட்கள். அகதிகளுடன் அகதி களாக அவர்கள் செத்தார்கள்.
அரைகுறைத் தாடி மீசையுடன் அவனும் சிக்குப் பிடித்த தலையுடன் அவளுமாக, மறுபடியும் கப்பல் வழியாக யாழ்ப்பாணத்திற்குப் புறப்பட்ட போது, காதல் செய்ய வேண்டும் போலவா தோன்றியது!
வெட்கத்துடன் ஊர் மண்ணிலே கால்வைத்த போது வேலைக்கு வந்து விடும்படி ஒர் அவசரத் தந்தி ஏற்கனவே வந்து கிடந்த து.
மறுபடியும் கொழும்பு மாாககரம்!
2
கமலிக்கு இருட்டியது கூடத் தெரியாது. மார்பிலே, நடேசனுடைய கடிதம். அந்த நீண்ட கடிதம் விரித்தபடி கிடந்தது.
பார்த்தது, பார்க்கிறது எல்லாமே சோகத்தின் பிரதிபலிப்புகளாக, துடிப்புகளாகவே அவளுக்குத் தென் பட்டன.
இதயத்தில் எல்லாமே இழந்துவிட்டது போன்ற ஏதோ ஒரு வேதனே. அதன் ஊடே நிழலாடியது இனக்

85
தெரியாத ஏதோ ஒரு இன்பத்தை இழந்து விட்டோ மென்ற துடிப்பு.
*விமலா சொன்ன தெல்லாம் உண்மையா?!
““垒.....。 இப்பிடித்தான் எல்லோரும் வாய்விட்டுப் பேசுவினமாக்கும்!
*கமலி உண்மையைச் சொல்லு. கடந்து வரும் காலடி ஒசை ஒன்றை வைத்தே உன்னுடைய கணவரை * தெரிந்து கொள்ள ஏலாதா?
'விமலா என்னைப் போல மடைச்சி இல்லை; கான் தான் இருக்கிறனே, பேருக்குக் கல்யாணம் என்று பண்ணிக் கொண்டு.
“அவளேப் பார்! அவளுக்கு என்ன வயது? கான் சேலை உடுத்த ஆரம்பித்த போது அவள் பாவாடை கூடக் கட்டவில்லை.
'கால் பெருவிரல் மாத்திரம் போதுமாமே அவரை இனம் கண்டுபிடிக்க, அவருடைய சுவாசம் கூட எவ்வளவு கதகதப்பாக இருக்குமென்று தனக்குத் தெரியுமாமே. . சுவாசம் மாத்திரமா?.சே.இன்னும் அவள் கித் திரையாக இருந்தால் அவளை அவர் தொட்டு எழுப்புவதே கிடையாதாமே. குனிந்து. உதட்டிலே. ச் சீ . .
“என்னைப்பற்றி அவள் என்ன நினைத்திருப்பாள்வேறு என்ன நினைத்திருப்பாள்-ப ரி தா ப ப் பட் டிருப்பாள்.??
掌,举 米
பாலனுடைய விக்கல் இன்னமும் கேட்டுக்கொண்டு தானிருந்தது. ஏற்கனவே இருண்டு விட்டது. கைவிளக்கை ஏற்றி மேசைமேலே வைத்தாள் கமலி.

Page 44
86
"தலையைத் தூக்கு பாலன்; அழுதது போதும். மண்ணெண்ணெய் விளக்கு தட்டுப் பட்டுதெண் டால் போதும்.”
“மாட்டன். அப்படித்தான் கிடப்பன்!? பெற்றேர் கல்யான வீட்டுக்குத் தன்னை அழைத்துப் போகாமல் கமலிக்குத் துணையாக விட்டுப்போன ஆத்திரம் அவனுக்கு முற்றிலும் தீரவில்லை. r
கமலி குடத்தைத் தூக்கி இடுப்பிலே வைத்துக் கொண்டு கிணற்றடிக்குப் புறப்பட்டாள். அந்த மெல்லிய இருளைப்போலவே அவள் மனத்திலும்'இருள் பரவிக்கொண்டு வந்தது. எதற்கென்று தெரியாத ஏதோ ஒரு வேதனையின் மெலிந்த கீறு அவள் உள்ளத் தின் அடிவாரத்தில் படர்ந்து கொண்டிருந்தது.
யாரோ குளித் துக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டது.
கமலி திடுக்கிட்டுப் போனுள்.
*அதார து?
*நான் தான்?
'ஆர் ராசனே? என்ருள் பயம் தெளிந்த குரலில்.
"ஏன் அக்கா, பயந்து போனிங்களோ? அவன் விழுந்து விழுந்து சிரித்தான்.
*இல்2ல, நான் ஆரோ எண்டெல்லோ கி2னச்சு.” "இதுக்கை இரண்டு வாளி தண்ணி ஊத்து
*ராச2னக் கண்டு கூடப் பயந்து போனனே! முன்னையெல்லாம் இந்தளவாய் இருந்தவன். y jy
"ஆம்பி2ளயளுடைய வளர்த்தியே இப்பிடித்தா ஞக்கும்!”

87
"ஏன் ராசன், உங்கடை அம்மா ஆக்கள் எல்லா ரும் கலியான வீட்டுக்குப் போட்டினமோ??
“அவையோ? அவை அப்போதையே போட் டினமே!’
*அப்ப வீட்டிலே ஒருதரும் இல்லையாக்கும்!” 'இல்லையக்கா, கான் மாத்திரம்தான்!” குடத்தை எடுக்க அவள் குனிந்தபோது அவளை யறியாமலே மேல் தாவணி மெதுவாகக் கீழே விழுந்தது.
அவசர அவசரமாக அதை அள்ளிமேலே போட்டுக் கொண்டாள். மங்கிய நிலவொளியில் அவன் தன்னை உற்றுப் பார்க்கிறன் என்று மட்டும் அவளுடைய உள்ளுணர்ச்சி கூறியது. அவளுக்குப் பெருமையா யிருந்தது.
நிமிர்ந்தபோது அவள் திடுக்கிட்டாள். தலையிலே ஈரம் சொட்ட, முன் மயிர் நெற்றியை மறைக்க அவன் ஸ்தம்பித்து நின்ற தோற்றம்-அவளுக்கு எதையோ நினைவூட்டியது.
“இப்படித்தான், இப்படித்தானே அவரும் . . இரண்டாவது முறையாக அவள் கிணற்றடிக்கு வந்தபோது 'ராசன் போய்விட்டிருப்பானே’ என்று அவளுடைய உள்மனம் பட படவென்று அடித்துக் கொண்டது.
"ராசனுக்கு வயது என்ன இருக்கும்? பதினறு இருக்குமா?
'போன வருஷமே 'எஸ். எஸ். சி. எடுத்து CLLT36:UT{**

Page 45
88
சோப்புப் போட்டுத் தேய்த்துக்கொண்டிருந்தான் ராசன்.
"ஏன் ராசன்! அப்ப வீட்டுக்குக் காவல் நீ தானே?
“ஒ. ம் அக்கா, சோதினை கிட்டுது. . எதற்காகவோ அவன் உதடுகளிலே குறுஞ்சிரிப்பு ஒன்று கெளிக்தோடியது.
அவன் கன்னங்களிலே குழி-அழகுக் குழி. "அந்தக் கன்னங்கள் - உரோமமே இல்லாத அந்தப்பட்டுக் கன்னங்கள்-அதை யுக யுகாந்திர மாகப் பார்க்கவேண்டும் போல் தோன்றியது.
அந்தக் கன்னத்துக் குழியிலே பட்டுத் தெறித்த நிலவின் நீள் கரங்கள், காரணமில்லாமல் விம்மித் தணியும் கமலியின் மார்பகத்தை நாணத்துடன் தொட்டன.
திடுக் கிட்டுத் தன் நினைவு வந்தவளாய்த் துலாக் கொடியைப் பற்றினுள் கமலி.
'தண்ணிதானே! நான் அள்ளித்தாறன் அக்கா.?? 'இல்லைத் தம்பி; நீ த2லயைத் துடை, ஈரஞ் சுவறிப்போகும்.”
"அது கிடக்கு. இந்த இருட்டிலே நீங்கள் அள்ளக் கூடாது"
கமலிக்கு மனத்தை என்னவோ செய்தது, 'ராசன்” என்று ஆசை தீர அழைக்க வேண்டும்போல் பட்டது.
அவன் பறிப்பதுபோல் வாளியைத் தன் கையிலே எடுத்துக்கொண்டான். அப்படி அவன் செய்தபோது

89
அவனுடைய சோப்புக்கை கமலியின் மெலிந்த கரங் களில் ஒரு கணம் பட்டது.
கமலியின் மனத்தில் கட்டுமீறி நுறை தள்ளியது. ஒரு புத்துணர்ச்சி.
ராசன் தண்ணீர் அள்ளியபோது ஏனே அவன் கரங்கள் அவனையும் அறியாமல் நடுங்கின.
முன்றவது தடவையாகக் குடத்துடன் அவள் புறப்பட்டபோது சுயமாக கடந்தவளாகவே தெரிய வில்2ல. ஏதோ பிசாசு அவள் உள்ளே புகுந்து அவளை உந்தித் தள்ளுவது போலிருந்தது.
“எதற்காக, எதற்காக? “அவன் சிரிப்பதைப் பார்க்கவேண்டும், ஒரே ஒரு தடவை' என்ற ஆவலே பரந்து, விரிந்து அவள் சிந்தை முழுவதையும் வியாபித்து நின்றது. எங்கே மனது மாறிவிடுமோ என்ற பயத்தில் அவள் இன்னும் பரபரப்புடன் கடந்தாள்.
ராசன் தலையைத் துவட்டியபடியே நின்று கொண்டிருந்தான்.
'இன்னமும் தண்ணி வேணுமா?-அவன் குரல் ஏனே கரகரத்தது.
"இன்னும் ஒரு குடந்தான்?-எங்கோ ஆழத்தில் இருந்து பதில் கிடைத்தது.
é...... கா’-அவன் எதற்காகவோ குழறி ... ... {9ع‘‘ ணுன்; தடுமாறினன்.
கமலி பேசவில்2ல. அவனையே பார்த்துக்கொண்டு மெளனமாக நின்றள்.

Page 46
90
*កំfក់. កំ. . ஒண்டும் அம்மாட்டை சொல்ல LDITL Le sñJ5G367’
அவளுக்கு என்ன வந்தது? அப்படியே சி2லபோல நின்றள். வானத்து நட்சத்திரம் ஒன்று இடம் பெயர்க் து விழுந்து கொண்டிருந்தது.
மறுபடியும் அந்தக் காலிக் குடத்தைத் தூக்கி இடையிலே வைத்துக்கொண்டு அவள் போனபோது, அது பாராங்கல்லாகக் கனத்தது.
வீட்டில் உள்ளே இன்னமும், பாலனின் விக்கல் கேட்டுக்கொண்டு தானிருந்தது.
4.
*கனவுலகம்” என்பார்களே, அந்த ரீதியில் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது. கமலிக்குத் தன்னிலை முற்றிலும் விளங்கியது போலுமிருந்தது. விளங்காதது போலுமிருந்தது. தனிமையில் இருக்கும் போதெல்லாம் மனத்தை எவ்வளவோ திடப்படுத்தித் தான் வைத்திருந்தாள். ஆணுலும் .
ஏதோ ஒரு துடிப்பு, ஏதோ ஒரு ஆவல், மறுபடி யும், மறுபடியும் அவளை அந்தப் பாவப் படுகுழியில் கொண்டுபோய்த் தள்ளியபடியே இருந்தது.
கமலி, வெறும் கடைப் பிணம். சில வேளைகளில், அவள் கணவன் எழுதும் கடிதம் வெகு உருக்கமாக இருக்கும். ஒடோடிச் சென்று அவன் காலில் விழுந்து கதறிக் கதறி அழ

91.
வேண்டும்போல் தோன்றும்; அன்றெல்லாம் வெகு வைராக்கியத்துடன் இருப்பாள்.
ஆனல், பொழுது சாய்ந்து, விளக்கு வைக்கும் அந்த கேரத்தில், சந்தியில் திரும்பும் ராசனுடைய சைக்கிள் "பெல்'லின் கணிரென்ற ஒலி அவளுடைய உறுதி எல்லாவற்றையும் கொடிப் பொழுதில் சிதறடித்து விடும்.
5
கமலி, கையிலே கொக்கைத்தடி ஒன்றை வைத் திருந்தாள். முருங்கை மரத்தில் அபூர்வமாகக் காய்த்த முருங்கைக் காய் ஒன்றைக் குறி வைத்துஅவள் குதித் துக்கொண்டிருந்தாள்.
அவளுக்குத் தெரியும் அவள் கணவனுக்கு அது பிடிக்கும் என்று; எப்படியும் இன்றைக்கு அவருக்கு அதைச் சமைத்துவிடுவாள்.
ாகடேசன் இந்தக் காட்சியை ரசித்தபடி நின்று கொண்டிருந்தான். நாளைக்கெல்லாம் அவன் இப்படி யான காட்சிகளைக் காண முடியாது. அவனுடைய லீவு அன்றுடன் முடிவடைகிறது.
அவன் மன அடி வாரத்தை என்னவோ செய்தது. *கமலி-என் அன்புக் கமலி-அவளை மறுபடியும்
Gifugit?'
க2ளத்து, வியர்வை கோத்து நின்ற அவளுடைய முகம் வெகு ரம்மியமாக இருந்தது.
*கமலி’ என்று ஆசை பொங்க அழைத்தபடியே அவளுடைய கதகதப்பான கன்னத்தை தன் பக்கம் திருப்பினுன் அவன்.

Page 47
92
“இச்? 'ஆக்கள் பா க் கி ன ம் ? என்றள் கூச்சத்துடன்.
கிடுகு வண்டியின் உச்சியில் இருக்து போன இருவர், வேலிக்கு மேலால் தங்கள் சுதந்திரத்தைக் கொஞ்சம் அளவுக்கு அதிகமாகவே அனுபவித்தபடி சென்று கொண்டிருந்தார்கள்.
6
அவன் புறப்பட்டு விட்டான். அவளுக்கு உலகமே அஸ்தமித்துவிட்டது போன்ற உணர்ச்சிதான் எஞ்சி நின்றது.
அவனுடைய மூச்சின் ஒவ்வொரு இழையும் அவ ளுக்கு இப்போது விளங்கியது. அவனுடைய இதயத் தின் ஒவ்வொரு துடிப்பும் அவளுக்குப் புரிந்தது. பிரிவு என்பதன் முழு அர்த்தத்தையும் இப்பொழுது தான் அவள் உணர்ந்தாள்.
நடேசன் கமலியின் இடது கரத்தை மெதுவாக எடுத்துக் கொண்டான்; கமலிக்குச் “சுரீர்” என்றது.
ராசன் சோப்புப் போட்டுக்கொண்ட கையினுல், தட்டுத்தடுமாறிப் பிடித்ததும் இதே கையைத் தான்.
'சீ'-வெட்டி எறிந்தாள் அந்த எண்ணக்குப்பை களே. அவையோ மறுபடியும் மறுபடியும் பூதா கார மாக எழுந்து அவளை வதைத்தன .
கமலி அழுதாள்; அழுதாள். எதை நினைத்தோ அழுதாள்.
ாகடேசனுடைய கண்களும் கண்ணிரைக் கக்கிக் கொண்டுதானிருந்தன.

93
'நீங்கள் ஏன் அழுறிங்கள்? விக்கினள் அவள், தன் பிஞ்சு விரல்களால் அவன் கண் ணிரைத் துடைத்தபடியே.
"நீ ஏன் அழறய், அதுதான்!”
"இனி எப்ப வருவீங்கள், அத்தான்?
ஒரு மெளனம்தான் அதற்குப் பதில்.
கமலியினுடைய சூடான வேதனை ஊற்றுகள் இரண்டு, அவனுடைய துடிக்கும் உதடுகளில் சங்கம மாய்க் கொண்டிருந்தன.
அவளுடைய உள்ளத்திலே அப்போது அவளை அறியாமலே ஒரு சங்கல்பம் உருவாகிக் கொண் டிருந்தது.
அன்று ஞாயிற்றுக் கிழமை. போர்டிங்கில் கண் பர்கள் யாருமே இல்2ல. எல்லோரும் படம் பார்க்கப் போய்விட்டார்கள். கமலிக்கு நிம்மதியாக ஒரு கடிதம் எழுதுவதற்காக அமர்ந்தான் நடேசன்,
'கமலி! இந்தக் கணத்தில் எனக்கு இறகு முளைத் தால் நான் அப்படியே உன்னிடம் பறந்து வந்துவிட மாட்டேனு? உன் நடை, உன் அலங்காரம், உன் பேச்சு, உன் இதழ்க் கடையோரத்தில் தோன்றும் அக்தக் குறுஞ் சிரிப்பு இவற்றை அணு அணுவாக அனுபவித்து இரசிக்க மாட்டேன?
"அன்டே, கான் இக் கடிதம் எழுதும் இந் நேரம் நீ அங்கே எமக்குப் பழக்கமான அக்த ஒரே மல்லிகைப் பந்தரின் கீழ்நின்று கொண்டிருப்பாய்; உன் எண்ணம் எங்கெல்லாமோ தாவும். அந்த எண்ணக் குவியல் களுக்கே . . ys

Page 48
94
மேற்படி கடிதத்தை கடேசன் எழுதிக் கொண் டிருந்த அதே hாள் அதே  ோக ர ம் எத்தனையோ மைல்களுக்கப்பால்
கமலியின் தகப்பனர் தான் புதிதாகக் கொழும்பி லிருந்து வாங்கி வந்த 'வயிற்லகூன்’ கோழிகளே மரத்தின் மேல் ஏற்றி விட்டுக் கொண்டிருந்தார்.
உள்ளே அவருடைய மனைவி புகை பிடித் துப் போன அரிக்கன் லாங் தரைத் துடைத்துச் சுத்தம் செய்து கொண்டிருந்தாள்.
பாலன் தன்னுடைய புத்தகத்தை தூக்கி, விரித்து வைத்து, வேண்டாத உரத்த குரலில், *உள் ளக் கமலமடி கிளியே
உத்தமஞர் வேண்டுவது' என்று விபுலானந்தருடைய பாடலைப் பாடுவதும், தமக்கையை நிமிர்ந்து பார்ப்பதுமாயிருந்தான்.
இரவுச் சமையலுக்காக வாழைக்காய் வெட்டிக் கொண்டிருந்தாள் -கமலி.
அவள் ஒன்றையுமே கவனிக்கவில்லை. வாழைக் காய் வெட்டுவதில் கூட அவள் கவனம் இருந்ததாகத் தெரியவில்லை.
மனத்திலே அவளுக்கு ஒரே இருள்-கனம்! தூரத்தில் புளியடித் திருப்பத்தைத் தாண்டுகிற ராசனுடைய சைக்கிள் பெல், அவசியமில்லாமல், இரு முறை விட்டு விட்டு ஒலித்தது.
அதன் எதிரொலி கமலியின் ரத்தம் சிந்தும் விரல்களில் பட்டுத் தெறித்தது:
本 米 潮

WII
உன்மத்தராயிருந்தோம்
“கச்சி ஏகம்பனே?
முறையிட்டுக் கொள்வதற்கு அவரை விட வேறு யார் இவ்வளவு மலிவாக அகப்படுவார்கள்.
ஏகம்பனும், ஏகம்பன்!
பக்திப் பெருக்கினல் கண்ணீர் சொரிய, மயிர்க் கால்கள் எல்லாம் குத்திட்டு நிற்க, உணர்ச்சி வசப் பட்டு 'கச்சி ஏ கம்பனே? என்று அழைக்க வேண்டிய அந்தப் புனிதமான திருப்பெயரை, உம்முடைய உளத்தை வாயால் வெறுமனே உச்சரிக்கிறீரா?
சீ, துப்பிவிடும், அந்த வார்த்தையை. பிரலாபிக்கிறராம்! துக்கப்படுகிறராம்!
கள்ளிப் புதரும், கருவேலஞ் செடியும் மண்டிக் கிடக்கும் காடு பக்கத்தில் ஒரிடமும் இல்லையா? இருந்தால் அ த ற் கு முறையிடும்! உம்முடைய கண்ணிரை அதற்குச் சொரியும்!
விழுந்த பிறகு, வேதாந்தம் பேச மாத்திரம், அற்புதமாக வருகிறது-எல்லா ஆண்களையும் போல; ஆனல், உம்மில் உயிரையே வைத்திருந்த அவள் - அவள்தான் சரசா - அவளுடைய மனசை ஒரு கண மாவது அறிய, அறிய முற்பட, முயன்றிருக்கிறீரா?
கை கூசாமல் பேணுவைத் தூக்கி எழுத மாத்திரம் தெரிகிறது. ஆனல், இதை அவள் - அந்தப் பட்டுப்

Page 49
96
போன்ற உட2லப் போலவே மென்மையான உள்ளம் படைத்த அவள் - பார்க்க நேரிட்டால் ...!
நீர் அதைப்பற்றி ஏன் கவலைப்படுகிறீர்?
2
சரசா என்னுடைய பள்ளியிலே சேர வந்த போது, நான் திடுக்கிட்டு விட்டேன்.
இப்படியும் ஒரு அழகா? சாதாரண புடவைதான் உடுத்திருந்தாள். அவள் உடல் அழகை, அந்த மெலிந்த சிவந்த இடையை, முற்றிலும் மறைக்க முடியாது சிரமப்பட்டுத் திணறியது அ ங் த ச் சாதாரண சேலை.
அந்த மார்பிலே, வெகு கூச்சத்தோடு புரண்டு, மேலும் கீழும் நெளிந்தபடி, பெருமையோடு கிடந்தது அவளுடைய அடர்த்தியான கேசம்.
அந்தக் கண்கள் - அந்த நீல விழிகள் - அதன் வி2லயை அவள் முற்றிலும் உணர்ந்திருந்தாள் போலும். எந்தச் சந்தர்ப்பத்திலும் அந்தக் கண்களை நிமிர்த்தி அவள் யாரையும் பார்ப்பது கிடையாது. ாநிலமகள் ஒருத்திதான் அந்தப் பார்வையைத் தாங்கும் முழு ஆற்றல் படைத்தவள்.
பாவம், அவளுக்கு எப்போதுமே சே2ல உடுத்தத் தெரியாது. சிறு பெண் தானே!
'சடக், சடக்" என்று சேலை சத்தம்போட வெகு சிரமத்துடன் அவள் கடப்பாள்.
சிறு குழந்தைகள் 'குறு குறு'வென நடை பழகும் போது, எங்கே விழுந்து விடுமோ என்று பயத்தினல் அள்ளி அனைத்துக் கொள்வோமே, அத்தகைய

97
வேட்கைதான் அவள் ாகடையைக் கா னும் போதெல்லாம் தோன்றும்.
அந்த சிவந்த பாதங்கள் நிலத்தை மிதிக்கும் போதெல்லாம் எத்தனை ஆயிரக்கணக்கான இதயங் கள் அக்தப் பாதங்களின் கீழ் துடித்த வண்ணம் ாகசிகின்றனவோ என்று கான் வியப்பதுண்டு.
பொருமை யாரைத்தான் விட்டது! *சரசா, இரவு வேளைகளில் எங்கோ போகிறள் போல் இருக்கிறது” என்று மற்ற மாணவிகள் வந்து என்னிடம் முறையிட்டபோது நான் திகைத்து Gal GL65T.
சரசாவா? என்னுல் கம்பவே முடியவில்லே. ஆனல், அன்றிரவு, அக்தப் பாவக் காரியத்தை நான் செய்ய வேண்டியதாகி விட்டது.
3
மறுநாள் காலை அழுத கண்ணுடன் குனிந்தபடியே அவள் வர்ந்தாள். அவள்  ைக யி லே கனத்த சூட்கேஸைக் கண்டவுடன் என் மனதை என்னவோ செய்தது.
'மிஸ்! நான் போகத்தான் வேண்டுமா?
*சரசா. விடுதி முழுவதும் கதை எப்படியோ பரவிவிட்டது. *பிரின் சிப்பல்? கூட “Lq 6fu) Lb{ ۃio” பண்ணும்படி உத்தரவு கொடுத்துவிட்டார். எனக்கும் தான் பரிதாபமாக இருந்தது. ஆணுல் நான் என்ன செய்ய முடியும்!”
"மிஸ்! சொல்லுங்கள், மிஸ். நான் என்ன அவ் வளவு பெரிய குற்றம் செய்துவிட்டேன்?
6 • ||9ے

Page 50
98
*என்2ன விரும்பினர் அவர்; எனக்கும் அவர்மீது அன்பு இருக்கத்தான் செய்தது. 'குற்றம்" என்று உணர்ந்த பின்புகூட எம்மால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நாம் எம்மை மறந்து இருந்தோம். சுய புத்தியுடன் இருந்திருந்தால் இப்படி நடந்திருப் போமா? ஏதோ உன்மத்தம் பிடித்ததுபோல் கடந்து கொண்டோம்.
"மிஸ், இது மன்னிக்க முடியாத அளவுக்கு பெரிய குற்றமா? எவ்வளவு சுலபமாக என் 2னப் பள்ளியை விட்டு நீக்குகிறீர்கள். .
'ஆனல். -- யோசித்து பாருங்கள் மிஸ். ா2ளக்கு சமுதாயத்தில் என்னே, காறி உமிழ்ந்த எச்சிலில் நெளியும் புழுவிலும் கேவலமாக கடத்தப் போகிறர்களே, அது பரவாயில்லையா?
'நீங்களும் ஒரு பெண் தான். உங்களை விட யார் என் குறையை நன்றக உணர முடியும்?
அவள் கடைசியாக கேட்ட கேள்வி, என்னையே திடுக்கிட வைத்தது
'குற்றம் செய்தவர்களை நீக்குவதற்காக ஏற்பட் டதுதானு பள்ளிக்கூடம்? அவர்களை (bல்வழிப்படுத்து வதற்காகவல்லவா?”
நான் என்ன பதில் கூற முடியும்?
"சரசா, உள்ளதைச் சொல்லு. இது எப்படி கடந்தது?”
வெள்ளம் பிய்த்துக்கொண்டு வந்தது. உள்ளத்தில் கிடந்த எல்லாவற்றையும் அப்படியே கொட்டினுள் அவள்,
நான்தான் திணறிப் போனேன்.

99
"மிஸ், கான் பள்ளியை விட்டுப் போவதைப் பற்றியே கவலைப்படவில்லை . . ஆனல், இன்னும் மூன்று நாட்கள். முன்றே நாட்கள் மாத்திரம் நீங்கள் பொறுத்திருக்கக் கூடாதா?
அவள் விம்மி விம்மி அழுதாள். "இதோ. இந்த "ஸ்வெட்டர் இதை எதற்காகப் பின்னுகிறuப்? என்று நீங்கள் முன்பே என்னிடம் பல முறை கேட்டிருக்கிறீர்கள்; கான் மறைத்துவிட்டேன். அவருடைய பிறந்த தினம். அது இன்னும் முன்றே ாகாளில் வருகிறது. ஆசையோடு என் உள்ளத்துக் கனவுகளெல்லாவற்றையும் கோத்துப் பின்னிவைத்த இதை இனிமேல் யாருக்குக் கொடுப்பேன். அந்தப் பரந்த மார்பைத் தவிர வேறு யாருக்கு இது பொருந்தப் போகிறது?
"இனிமேல் கான் அவரை எப்படிக் காண்பேனே? என்று அவள் விம்மியபோது என்னல் அவளைத் தேற்றக்கூட முடியவில்லை.
4
ஈர்ஸ் படிப்புக்குப் போனலும் அவள் என்னே மறந்துவிடவில்லை. அடிக்கடி எழுதுவாள். அதிலும் அவள் எழுதிய முதல் கடிதம் . .
"எதிர்காலம் இருள்; மனத்திலே இருள்; வழியிலே இருள்; என் தங்தை முகத்தில் எப்படி விழிப்பது!
“உலகத்தையே ஒரு கையால் தள்ளுவதுபோன்று பட8லக் காலைத் தள்ளினேன்.
'வாசல் திண்ணையிலே என் தந்தை-அந்தக் கண் பார்வை இழந்த எலும்புக் கிழவர்-சாப்பிட்டுக் கொண்டிருந்தார். பக்கத்தில் பன்னிரண்டு வயதே

Page 51
1OO
ஆணி என் அருமைத் தங்கை. அக்கா படிக்கவேண்டு மென்பதற்காகச் சமையல் பொறுப்பைத் தன் பிஞ்சுக் கரங்களில் ஏற்ற அந்த உத்தமச் சிறுமி-அவருக்குச் சோறு பிசைந்து கொடுத்துக் கொண்டிருந்தாள்.
"சரசாவா, என்ன இவ்வளவு வெள்ளென?* என்று குரல் தழதழக்கக் கேட்டபடி கைகளே என் பக்கம் நீட்டித் தடவினர்.
"ஐயோ! எதற்காகத் திடீரென்று மாரடைத்து அப்போதே, நான் சாகவில்லை? எதற்காக என்னுடைய கெஞ்சம் சுக்கு நூறகிச் சிதறி கான் மாண் டு போக
ി & ?
* மூன்று மாதத்தில் சரசாவும் ஒரு கெசவு ஆசிரியை ஆகிவிடுவாள்; அப்புறம் கஷ்டமெல்லாம் கரைந்துவிடும்” என்று இரவும் பகலும் கனவுகண்டு வந்த அந்தக் குருட்டுத் தந்தையிடம் கூறத்தான் செய்தேன் -வெட்கமில்லாமல்-என் குற்ற மெல்லா வற்றையும்.
"அடித்து உதைத் திருக்தால் சிறிதாவது ஆறுதல் அடைந்திருப்பேன்.
‘கையிலே பிசைந்து வைத்த அந்தப் பழைய சோற்றிலே கண்ணிர்த் துளியையும் கலந்து அவர் உண்ட அந்தக் காட்சி-அதையும் சகித்தேன்.
“என் தங்கை -அந்தச் சிறுமி-காரணம் விளங் காமலே என் கால்களேக் கட்டி அழுதபோது-அதை பும் அந்தச் சிறுமியின் விலையில்லாத கண்ணிரையும் சகித்தேன்!
உயிரைப் போக்கிக் கொள்ள எனக்குத்தெரியாம

101
‘கேணிக்கரையில், ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு யுகயகாந்திரமாகக் களித்த அந்த இன்ப நாட்களே நினைக்கையில் என் மனதில் ஏதோ ஒரு கம்பிக்கை துளிர்த்தது.
'ஒரே முறையில் இருவரும் கேணியில் தெரியும் பூரண சந்திர2ன எட்டிப் பார்ப்போம்.
'கூழாங்கற்களை வீசி, அந்தப் பூரண சந்திரனை ஆயிரம் பிம்பங்களாகச் சிதறடித்துவிட்டுக் கலகல வென்று காரணமின்றிச் சிரிப்போம்.
'திடீரென்று அவர் என் மடியிலே படுத்துக் கொள்வார். வானத்து நட்சத்திரங்களை யெல்லாம் ஒன்று, இரண்டு, மூன்று என்று கணக்கில்லாமல் எண்ணுவார். -
*அந்த வானத்து மீன் மேலும், பூரணச் சந்திரன் மேலும் எத்தனை உறுதிகள், எத்தனை சத்தியங்கள்.
*உறுதிகள் கோடி செய்தோம். உன் மத்தராயிருந்தோம்.?? "ஆமாம்-உன்மத்தர்தாம். "இந்தப் பூரண சந்திரனும், இந்த லட்சோப லட்சம் கட்சத்திரகூட்டங்களும் இன்னும் எதற்காக வானத்தில் ஒட்டிக்கொண்டு கிடக்கின்றன?
"ஓ கட்சத்திரமே நீ அவருடைய உறுதி மொழியை இன்னமும் நம்புகிறயா?
'ஏ, பூரண சந்திரனே நான் அப்படி என்ன பாபம் இழைத்து விட்டேன், அவர் இவ்வளவு சீக்கிரம் என்னை மறந்துவிட?
"அந்த இராஜ0-இந்தப் பேதையை மறந்துவிட் டாரா! உலகத்துத் துன்பங்களையெல்லாம் யாருக்காக சகித்தேனே, உலகத்து அவதூறுகளையெல்லாம்

Page 52
O2
எவருக்காக ஏற்றுக்கொண்டேனே, அவருக்குச் சரசா? என்பவள் உயிரோடு இருக்கிறள் என்ற நினைவுகூட அற்றுப்போய்விட்டதா?
*கண்ணிரால் கான் வரைந்த அத்தனை கடிதங்களுக் கும் அவர் பதிலே எழுதவில்லை.
*காரணம் என்ன தெரியுமா?
"மிஸ். எழுதவே கை கூசுகிறது.
'எனக்கு ஏற்பட்ட அவதூறுகளைக் கண்டு அவர் பயப்படுகிறராம். உளரிலே என் பெயர் கெட்டுப் போய்விட்டதாம்.
“ஒரு பேதைப் பெண்ணுடைய காதல் அவ்வளவு இளக்காரமானதா? இவ்வளவு சீக்கிரத்தில் மறந்து விடக்கூடியதா?
5
பயிற்சி முடிக் ததும், யாழ்ப்பாணம் பெரிய ஆஸ் பத்திரியிலேயே அவளுக்கு வேலை கிடைத்தது. இனி மேலாவது அவள் அவனே மறந்துவிடுவாள் என்று எதிர்பார்த்த நான் ஏமாந்து போனேன். உண்மை யிலேயே அவள் ஒரு பேதை. இன்னமும் கூட ஏதாவது நடக்கும் என்று ஏங்கிக் கொண்டிருக்தாள். அவள் சொன்ன செய்தி.
"நான் நர்ஸ் வேலை பார்க்கத் தொடங்கி ஆறு மாதம் ஆகிவிட்டது மிஸ். இத்தனை நாளில். இத்தனை நாளில், என்னை ஒரு முறை கூட அவர் சந்திக்கவில்லை. முயற்சி செய்யவும் இல்லை. நான் பெண். இதயத்து உணர்ச்சிகளை அடக்கி வைக்க மட்டுமே பழகியவள். ாகான் வேறு என்ன செய்ய முடியும்?

103
"அவர் ஆண் நினைத்திருந்தால் ஆயிரம் சந்தர்ப் பங்கள் உண்டாக்கி இருக்கமாட்டாரா? சொல்லுங்கள் மிஸ்!
அவள் விசித்து விசித்து அழுதாள், என்னைத் தன்னுடைய சினேகிதி போல் நினைத்து ஒளிவு மறைவின்றி அவள் கூறினுள்.
“என்னுடைய இந்த விரல்களைத் தன்னுடைய கையில் அடக்கிக் கொண்டு 'இந்த விரல்களின் ஸ்பரி சத்திற்காக ஊழி ஊழிக் காலம் காத்திருப்பேன். சரசா' என்று கூறியவர் கேவலம் இரண்டரை வரு டத்திற்கிடையில் மறந்துவிட்டாரா?
இன்னெரு நாள் வியர்க்க, வியர்க்க அவள் வங் திருந்தாள். "ஏது இந்த கேரம்? என்றேன்.
“டாக்டர் சந்திரசேகரை உங்களுக்குத் தெரியுமா? அவர் இன்று மாற்றலாகிப் போகிறர்; அவருக்குப் பிரியா விடை கடந்தது; இடையிலே வர முடிய வில்லை’ என்று கூறிவிட்டு, அவள் பெரியதொரு பெரு மூச்சு விட்டாள்.
தேர்தல் சமயம் அது; ஒரு காளைக்குக் குறைந்தது ஒன்பது பத்து ஆப்பரேஷன் கேஸ்களாவது வந்த வண்ணம் இருந்தன. சரசாவுக்கு ஒய்வே இல்லை. அன்றைக்கென்று தலைமை டாக்டர்கூட லீவு போட்டு விட்டார்.
இரவு ஒரு மணி இருக்கும். பதினுெராவது ஆப்ட ரேஷன் கடந்துகொண்டிருந்தது. ஆயுதங்களை ஒவ் வொன்றக நீட்டிய வண்ணம் இருந்தாள் சரசா. டாக்டர் முகத்திலே முத்து முத்தாக வியர்வை துளிர்த் திருந்தது. கடமையைச் செய்ய வேண்டு மென்று “லின்ட்' துணியினல் அவர் முகவியர்வையை ஒற்றி எடுத்தாள் சரசா.

Page 53
104
ஏனே விளங்கவில்லை. ஆயுதத்தை வைத்துவிட்டு கூர்மையான பார்வை ஒன்றை வீசினர் அந்த டாக்டர். அதே துணியால் அவளுடைய முக வியர்வையைத் துடைத்து விட்டார்; ஒரு கணந்தான்! ஒருவருமே பார்க்கவில்லை.
சரசாவுக்கு உடம்பெல்லாம் புல்லரித்தது! அன்று தான் அந்த “டோம்? விளக்கின் நடுவிலே அவர் கேட்டார். அவள் வாழ்வில் கற்பனை கூடச் செய்து பார்த்திராத ஒரு சந்தர்ப்பத்தை அளித்தார். அவள் நிராகரித்து விட்டாள்; ஒரு கணம் கூடத் தயங்க வில்லை. தான் இன்னெருவரின் உடைமை என்பதில் அவளுக்குச் சிறிது கூடச் சந்தேகம் ஏற்படவில்லை. அவள் நினைத்திருந்தால் . . ஒரு உதட்டின் அசை
லே. . ஆனல் அவள் அதை விரும்பவில்லை.
இன்று டாக்டர் சந்திரசேகர் மாற்றல் வாங்கிப் போகும் காரணம் ஒன்றே போதாதா, அவள் காதலின் ஆழத்திற்கு சாட்சியம் கூற?
ஆனல் அவளுக்கு அதை விளம்பரம் செய்யத் தெரியவில்2ல. பெண் பேதையென்பதற்கிணங்க, ாகம்பிக்கையின் கீற்றைப் பிடித்தபடி அவள் காட்களை எண்ணிக் கொண்டிருந்தாள்.
6
வழக்கம்போலப் பருத்தித்துறை பஸ் அவளைக் கல்வியங்காட்டுச் சந்தையடியில் இறக்கிவிட்டுச் சென்றது. அதிலே இருந்து அவள் வீடு வெகு சமீபத் தில்தான் இருந்தது. செங்குந்தான் பாடசாலைக்குப் போகும் அந்தக் குறுக்கு வீதி வழியாகப் போனல் ஒரு திருப்பம்; அடுத்து அவளுடைய வீடுதான். ஆனல்,

105
அந்தப் பூனைக் கண் இரட்டையர்களின் கடை வாயில்அதில் எப்போதும் ஒரு கூட்டம் நிற்கும்.
அதை அவள் கடக்கும் போதெல்லாம் ‘விசில் சப்தமும், விர சமான வார்த்தைகளும் காதிலே வந்து தெறிக்கும்; அந்த ஒரு கணத்தில் கூனிக் குறுகி உள்ளம் எல்லாம் வெதும்பி விடும் சரசாவுக்கு.
இதற்காகவே அவள் இரண்டு வீதி சுற்றிச் சங்கி லியன் தோப்பு தென் கோடிப் பக்கமாகப் போவாள்.
அன்றும் அப்படித்தான். பிலாவடிப்பரியாரி வீடு கழிந்ததும் யாரோ எதிரா கச் சைக்கிளில் வருவது தெரிந்தது நெஞ்சம் ஒரு கணம் 'திக்’ என்றது.
அவன் தான். இராஜ தோன். சந்தி கழித்து அவன் சமீபமாக வரும்வரைக்கும் பட க் படக்கென்று இதயம் வேகமாக அடித்துக் கொண்டது. உள்ளத்திலே ஆயிரமாயிரம் எண்ணக் குமுறல்கள். "எப்படி ஆரம்பிப்பார், என்ன கதைப் பார், யாராவது பார்த்து விட்டால்,’ என்ன எண்ணங் கள் அவளே நிறைத்தன. நடையைத் தளர்த்திக் கொண்டு ஆசையோடு நின்றள்.
"இதோ இராஜூ வந்து விட்டான். உற்றுப் பார்க் கிறன்” என்று அவளுடைய உள்ளுணர்ச்சி கூறியது. எவ்வளவோ எதிர்பார்த்தாள்.
ஆணுல் அவன் நிற்கவில்லை. போயே போய் விட்டான் !
அப்படியே போயிருந்தாலும் பரவாயில்லை. தூரத்து சைக்கிள் கடையில் அவன் நின்றது தெரிந்தது. மறுபடியும் திரும்பி வந்தான். தனியாக

Page 54
106
வல்ல; பின் சீட்டில், பீடி (கடிக்கும் ஒரு அருமையான நண்பனை ஏற்றிக் கொண்டு.
"உன்னே நான் அடையாளம் கண்டுவிட்டேன்! இருந்தும் என் மன உறுதியைத் தளர விடவில்லை, பார்த்தாயா? என்று பெருமை அடிக்க வருவது போல் வந்தான். அந்த உதடுகளில் நெளிந்த அரை குறைச் சிரிப்பில் இவ்வளவு வஞ்சனை எப்படி ஒட்டிக் கொண்டது?
சைக்கிள் மின் வேகத்தில் அவளைக் கடந்தபோது “கேர்ஸ் உடுப்பிலே சோக்காயிருக்கடா!' என்று அந்த "அழகான? கண்பன் சொல்லியது காராசமாய்க் காதல் விழுந்தது. "கொல்’ என்ற சிரிப்பு அதற்கு சுருதி கூட்டியது.
“அருமை இராஜு! நீ எப்போது இந்தக் கூட்டத் திற்குப் பலியானுய்?
"மிஸ், என்னுடைய இராஜூ, அந்த அருமை இராஜூ, அவர் எப்போதோ இறந்து விட்டார். . என்று அவள் சொன்னபோது யார்தான் அழாமல்
இருக்க முடியும்?
7
பல நாட்களாக அவள் வரவில்லை. நானே ஆஸ் பத்திரிக்குப் போயிருந்தேன். கர்ஸ் உடுப்பிலே அப்போதுதான் அவளை முதன் முறையாகப் பார்த் தேன். இளமையிட்ட கோலங்கள் இன்னமும் கூட அவள் ஒவ்வொரு அங்கத்திலும் பூரணமாக நிறைக் திருந்தன. “கடமை, கடமை என்று ஓடியபடியே அவள் கதைத்தாள்.

1 O7
"மிஸ் இராஜ0 வந்திருந்தார். சாதாரண காய்ச்சல் தான். என்ன நோக்கத்தோடு வந்தாரோ, தெரியாது. ஆனல். . ஆனல். . நிரம்பவும் மாறிவிட்டார்.
*ஈர்ஸ்" என்றல் அவள் பெண்ணே அல்ல. காதலிக்கக் கூடிய பொருளே அல்ல என்றெரு துர் எண்ணம் எப்படியோ அவர் மனதில் ஊன்றி விட்டது.
"கர்ஸ்" என்றல் அவ்வளவு இளக்காரமா? சொல்லுங்கள் மிஸ்;
"அவருடைய அந்தப் பார்வை. அன்பு வழிந்த பார்வையிலே ஆசை பீறிட்டது. காதல் கனிந்த பார்வை யிலே, காமம் தெறித்தது; வாஞ்சை பொங்கிய பார்வையிலே-இன்று வெறி-ஒரே வெறி. சொல்லவே கூசுகிறது. அந்தப் பார்வையில் என் ஒவ்வொரு அங்கத்தையும் சுவைத்து வீசவேண்டும் என்ற நெருப்புத்தான் எஞ்சி நின்றது.
*உள்ளத்தை அறிய முடியாதவர் உரிமை வேறு கொண்டாடினர். மற்ற கோயாளிகளைப் பார்க்க வேண்டாமாம். பேச வேண்டாமாம்.
'ஈர்ஸ் வேலைக்குப் போவது பிடிக்கவில்லையானல் ஒரு சொல் , ஒரே யொரு சொல் அப்போது கூறியிருக் கலாமே. உடனே நின்றிருப்பேன். இன்று, நோயாளி கள் எல்லாரும் என்னுடைய குழந்தைகள் மாதிரி.
“கான் அவர் சொல்லியபடி எப்படி கடக்க முடியும்?
சரசா! அவளுடைய அந்தப் பால்போன்ற உள்ளத்தை என்னை விட வேறு யார் கன்ற க அறிய முடியும்? அவள் என்ன சொன்னுள்? அது எனக்குத் தான் தெரியும். "மிஸ்? கான் இப்படித்தான் இருப்பேன்.

Page 55
O8
என்னை எவராலும் கரைக்க முடியாது. மணம் முடித் தால் என் கணவராக அவர் ஒருத்தரைத்தான் கான் கற்பனை செய்ய முடியும். ஆனல் . . ஆனல். என் பழைய ராஜ 9 எனக்குக் கிடைக்கவே மாட்டார்.”
அதற்குப் பிறகு கண்ணிர்தான் அவள் உள்ளக் கிடக்கையை எனக்குக் கூறியது.
அவள் இனிமேல் பணமே செய்து கொள்ள மாட்டாள். அது எனக்குத் தெரியும்.
மற்றவர்களுக்கு எங்கே தெரியப் போகிறது?
கச்சி ஏகம்பனே! என்று முறையிட்டுக் கொள்ள மட்டும் தெரிகிறது.
ஏகம்பனும்! ஏகம்பன் விழுந்த பிறகு வேதாந்தம் பேச மாத்திரம் அற் புதமாக வருகிறது.
சரசாவின் மனதை ஒரு கணமாவது அறிய, அறிய முற்பட முயன்றீரா?
இப்பொழுது கவலைப்பட்டு என்ன ஆகப் போகிறது?
女

WII
இருப்பிடம்
'ஒலையை வெட்டுவதும் கத்திதான இந்த ஓவர்சிர் சொல்லுதும் புத்திதானு? கத்தரிக்காய் வெட்டுவதும் கத்திதாஞ? இந்தக் கங்காணியார் சொல்லுவதும் புத்திதாஞ? புடலங்காயை வெட்டுவதும் கத்திதான?.
. ... ?
'வயிரவநாதா. வயிரவ நாதா. ..இறங்கு G3.260T ''
"ஒ8லயை வெட்டுவதும் கத்திதான ?
*சொன்னுல் கேள் மே2ன. இறங்கு. ம். ஆ’
அவள் கத்திக் கொண்டே இருந்தாள். வட்டிலில் போட்ட சோறும் குழம்பும் குழைத்தபடி அப்படியே கிடந்தன.
அவனுக்குத் தான் சாப்பிடுகிறேமென்ற பிரக்ஞை இருந்ததோ என்னவோ, அந்தத் தாயை அவன் கவனித்ததாகவே தெரியவில்லை.
ஆனல் அவன்தன் பாட்டுக்கு உரல்மீது நின்ற கொண்டிருந்தான். கையிலே ஒரு பிடியில்லாத பெரிய கொடுவாக் கத்தியை ைவத்து, முன்னுக்கும் பின்னுக் குமாகத் தாளக் கட்டுக்குச் சரிவர, ஆட்டிக் கொண் டிருந்தான்.
இடைக் கிடை உரல் அசையும் போது, எங்கே விழுந்து விடுவானே என்று கெஞ்சம் துணுக்குறும் ;

Page 56
110
ஆணுல் அவன் துளிகூட அச்சமின் றிப் பாடிக் கொண்டேயிருப்பான்.
சாப்பிடவேண்டுமென்று தோன்றிய போதெல்லாம் குனிந்து, மெல்லவாயைத் திறப்பான்.
அப்போது அ வ ள் அவனுக்கு ஊட்டிவிட வேண்டும்.
மறுபடியும் அவன் தொடங்கி விடுவான். 'ஒ2லயை வெட்டுவதும் கத்திதான ?-இந்த ஒவர்சியர் சொல்லுவதும் புத்திதான ?..?
தினசரி, இந்தக் கைங்கர்யம் முடிவடைய, மூன்று மணி நேரமாவது ஆகிவிடும். அந்தத் தாயோ ஒரு பொழுதாவது சிறிதேனும் சலிப்படைந்தவளாகக் காணப்படமாட்டாள்.
இவ்வளவிற்கும் அவனை முழுப்பைத்தியம் என்று எல்லோரும் ஒதுக்குவது போல் அந்தத் தாயாரால் மட்டும் ஒதுககிவிட முடியவில்லை. அவளுக்கு அவன் ஒரே மகன்; செல்ல மகன்; சித்த சுவாதீனத்தில் இம்மியும் பிழையில்லாத அருமை மகன்.
ஆனல், அவனுக்கு என்னவோ, தாய், வீடு உலகம் என்ற வேறு பாட்டைக் கிரகிக்கும் அளவுக்குப் புத்தி வளர்ச்சியடைந் திருந்ததாகக் கூடத் தென்பட வில்லை. பசித்தால் அம்மா தர வேண்டும் என்ற ாகம்பிக்கை, அதற்கும் அப்பால் சிந்திக்க வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லை; தேவையும் இல்லை.
பதினேழு, பதினெட்டு வயதுக்கு ஏற்ற வளர்ச்சி; சிறிது அசிங்கமாக உப்பிய வயிறு; ஆனல் பத்தே வயது மதிக்கக் கூடியதாக, உரோமமே இல்லாத முகம்

11
அவன் பள்ளியில் படித்த காலங்களில் அவ8ரைக் காலையிலே கூட்டி வந்து பள்ளியில் விடுவாள் அந்தத் தாய். அதற்குப் பின் பகல் எல்லாம் காவல் கிடந்து, பின்னேரம் மூன்று மணிக்குப் பள்ளி விட்டதும், சே2லத் தலைப்பால் அவன் தலையை முடிக் கவனமாக வீட்டுக்கு அழைத்துச் செல்வாள்.
ஆனல், அவனுடைய படிப்பு என்னவோ அரிவரி வகுப்பில் நாலு வருடம் தொடர்ச்சியாக இருந்ததோடு முடிவடைக் துவிட்டது.
*செயன்ன, வான, இல்லன்ன-கோழி என்று படத்தைப் பார்த்துக் கூறும் அளவிற்கு அவனுக்கு மு2ள விசாலமடைந்ததும், ஒருங்ாள்.
'கந்தையா வாத்தியார்
கிந்தையா வாத்தியார்
கல்லுக்கு மேலே
குந்தையா வாத்தியார்."
என்று கூறிவிட்டு ஒட்டம் பிடித்து விட்டான்.
அத்துடன் செல்லம்மாவுக்கும் தன்னுடைய மகனின் பள்ளிப் படிப்பைப் பற்றிய திருப்தி ஏற்பட்டு விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
2
ஒரு மணியிருக்கும். மத்தியானச் சாப்பாட் டிற்காக வீட்டுக்குப் போய்க் கொண்டிருந்தேன்.
*எ2ன அம்மா. . 罗翼 "எடி செல்லம்மா.. இஞ்ச வாடி; வாத்தியார் போறரெல்லோ . . . . இங்த வேட்டியைக் கட்டி
விடன்டீ".

Page 57
112
அப்போதுதான் கான் அவனைக் கவனித்தே ன் குளித்த உடம்போடு, உயர்ந்து கெடுக நின்று கொண் டிருந்தான்.
தாய் வேட்டி கொண்டு வர உள்ளே போயிருக்க வேண்டும்.
"வாத்தியார் : பாண் மணி அடிச்சிட்டுதே...?? ாகான் ஒமென்று தலையை அசைத்தேன். உடல் வளர்ச்சியடைந்திருக்கிற அளவுக்கு அறிவு வளரவில்லை. இருக்தாலும் வாத்தியாருக்கு முன்னல் நிர்வாணமாக நிற்கக் கூடாது என்று படுகிறது அவனுக்கு.
சொந்தமாக எதையும் செய்யும் திறமையே அவனுக்கு இல்லையா ? என்னுடைய மனமானது செல்லம்மா என்ற உயிருடன் பிணைந்து ஒன்றி நிற்கும் வயிரவாகாதன் உருவத்தை தனித்து, இழுத்து நிறுத்திக் கற்பனையிலே பார்க்க முயன்று கொண் டிருந்தது.
“6 L)... ..... செல்லம்மா. முதேசி வேட்டியைக் கொண்டாடி. வாத்தியார் பாக்கிறர். .
மெதுவாக நான் நடந்தேன். பைத்தியம் என்று அவனை அப்படியே ஒதுக்கிவிட என்னுல் முடியவில்லை எவருமே வியக்கத்தக்க அபூர்வ சாதுர்யத்தோடு அவன் சில வேளைகளில் கடந்திருப்பதை கானே பார்த் திருக்கிறேன். இனங் தெரியாத, கோபித்துப் பேச முடியாதபடி, பயத்தினுள் கலந்திருக்கும் ஒருவித அபூர்வக்கவர்ச்சியையும் நான் அவனிடத்தில் கண் டிருக்கிறேன்.
இருந்தும், ஏதோ ஒரு குறைபாடு எல்லாவற்றை யும் மீறி இயங்கிக்கொண்டு தானிருப்பதாக எனக்குப் . رانی سامالا

113
8
திருவிழா என்று வந்தால் அவனுடைய உற்சாகத் திற்குச் சொல்லவேண்டியதில்லை. புது வருடத்தன்று வழமைபோல் அம்மன் புறப்பாடு கடைபெறும்.
கரடுமுரடான கந்தாவில் ஒழுங்கை வழியாக, சகடை மீது உயர்ந்து நிற்கும் சிவப்புக் குதிரையில் கம்பீரமாக அம்மன் வலம் வருவாள்.
அந்தக் காட்சியே, ஒரு தனி அழகு!
சுவாமி திரும்பவும் கோயில் போய்ச்சேரும்போது, இரவு இரண்டு மூன்று மணியாவது ஆகிவிடும்,
சகடையின் ஒரு முலையில் பந்தத்தைப் பிடித்த படி, கால்களைக் கீழே தொங்கப் போட்டுக் கொண்டு, சாவதானமாக அவன் உட்கார்ந்திருப்பான்.
அரையில் ஒரு பழைய பட்டுவேட்டி; அதை இறுக்கியபடி ஒரு சிவப்புத் துண்டு, சந்தனம் அப்பிய வெறும் உடம்பு, அடிக்கடி அதிகாரம் செய்யும் வாய்இதுதான் அவனுடைய தோற்றம்.
சகடை மேலும் கீழும் ஏறிக் குலுக்கும்போ தெல்லாம் எங்கே விழுந்து விடுவானே என்று பார்ப்ப வர்கள் கெஞ்சமெல்லாம் திடுக்கிடும். ஆனல், அவனே முழங்கை மட்டும் வழிந்து நிற்கும் எண்ணெயை அரைத் துண்டினுல் துடைத்தபடி “ஆ. ரத்தினண்ணை ...கொஞ்ச எண்ணெய் விடு' என்று அதிகாரம் செய்த படியே கவலையின்றிக் காட்சி அளிப்பான்.
விடியுமட்டும், சிறிதாவது தூக்கம் என்பது இல்லாமல், பயங்கரமான பொறுமையுடன் அவன் காத்துக்கிடப்பான்.
7 .|9قے

Page 58
114
அந்த நிலையில் அவனைப் பார்க்கும் போதெல்லாம் பயப்படுவதற்கு வேண்டிய அறிவுகூட அவனிடம் இல்லையா என்றுதான் தோன்றும்.
திருவிழா என்று மாத்திரம் இல்லை. எந்தக் கல்யாண வீடு, செத்தவீடு என்றலும் சரி, அழைப் பில்லாமலே அவன் வந்து சேர்ந்துவிடுவான்.
யாராவது "வயிரவாகாதா! இந்த வெத்திலே எல் லாத்தையும் தட்டத்திலை அடுக்கி விடு' என்று சொல் வார்கள். ஒருவித களைப்போ, வெறுப்போ இன்றி, சப்பாணி கட்டியபடி ஆயிரக் கணக்காக வெற்றிலே யைத் தட்டங்களில் பொறுமையுடன் அடுக்கியபடியே அவன் இருப்பான். மறந்தும் கூட, அவனுக்கு முகம் சுளிக்க மட்டும் தெரிவதில்லை.
எனக்கு வியப்பு மேலிட்டு நிற்கும்.
4
மஞ்சவனப்பதி தேர்த்திருவிழாவுக்காக பள்ளியை அரை நேரத்தோடு முடிவிட்டார்கள். கொக்குவிலுக்கே பெருமை தரும் அந்தப் பிரம்மாண்டமான செய்கைத் தேரைப் பார்க்க ஊரடங்கலும் இருந்து ஜனங்கள் வருவார்கள்.
மத்தியானம், மணி இரண்டிருக்கும். வெயில் கொதித்துக் கொண்டிருந்தது. வழக்கம் போல அந்த வடக்கு வீதி முலையில், ஜனத்திரளின் மத்தியில், தேர் நின்று கொண்டிருந்தது.
நிமிர்ந்து தேரைப் பார்த்தேன். முச்சுத் திணற வைக்கும் அந்த ஜன வெள்ளத்தில்-அந்தச் சிறு மனிதர்களின் மத்தியில்-உயர்ந்து, மலை போல, ஆடாது அசையாது, தேர் நின்றுகொண்டிருந்தது.

15
பகல் பத்து மணிக்கு அந்த இடத்திற்கு வந்த தேர் அதற் கப்பால் ஒரு சாண் கூட அசைய மறுத்து நிமிர்ந்து நின்றது; மேலும் மேலும் ஜனங்கள் இழுக்க சில்லு கீழே கீழே புதைந்துகொண்டிருந்தது.
ஜனங்கள் எல்லோரும் சுருண்டு சுருண்டு நின்றனர்.
உள்ளத்தில் வலுவில்லை; உடம்பிலே தென் பில் 2ல.
எல்லோருமே விரதகாரர்-பசி வேறு உபாதை கொடுத்தது.
'அரோஹரா?
'மஞ்சவனப்பதி முருகனுக்கு
'அரோஹ ரா?
எண்ணிலடங்கா மனிதர்களின் ஆரவாரத்துக்குத் தேர் சிறிது நெளிந்துகொடுக்கும்; அதில் அமைந்திருக் கும் ஆயிரக் கணக்கான வெண்கல மணிகள் கல கல
வென்று ஜாலம் செய்யும். முருகன் நம்மை யெல்லாம்
பார்த்து வாய்விட்டுச் சிரிப்பது போலிருக்கும்.
ஆனலும் தேர் என்னவோ நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருந்தது.
வலுவிழந்து கிடந்த ஜனங்கள் எல்லோரும் மறு படியும் மறுபடியும் புதுப்புது உற்சாகம் கொண்டு இழுப்பார்கள்.
எல்லாமே வியர்த்தம்.
"என்ன குறைபாடோ? என்று எல்லோரும் அங்கங்கே பேசிக்கொண்டார்கள்.
'முருகா, முருகா" என்று அவன் திருவடி களிலேயே குறையிரந்தனர்.

Page 59
116
அப்போதுதான் அவனைப் பார்த்தேன். உள்ளம் குன்றி, உடலம் குன்றி, களைத்து, வலு விழந்து நெளிந்த அத்தனை ஆயிரம் ஜனங்களின் மத்தியிலும் அவன் முகத்தில் சோர்வென்பது ஒரு சிறிதுமின்றி ஏதோ ஒர் அபூர்வ உற்சாகத்தோடு நின்று கொண் டிருதங்ான்.
அதே பழைய வேட்டி, அதை இறுக்கியபடி ஒரு சிவப்புத் துண்டு; சந்தனம் பூசிய மார்பு.
'அரோஹரா.ம். மஞ்ச வனப்பதி முருகனுக்கு.?
'அரோஹரா? '.ம். கந்தையாண்ணை ஒருகைபிடி.அரோகரா.?? உற்சாகமாக மேலும் கீழும் கடந்து ஜனங்களை ஊக்குவித்துக்கொண்டிருந்தான். கம்பிக்கை எல்லாமே இழந்து, என்ன செய்வதென்று தெரியாமல் எல்லோ ரும் மனம் குன்றிக் கிடந்த அவ்வேளையிலும் கூட அவன் அதே சிரித்த முகத்துடன் தான் காணப் பட்டான்.
அவனுக்குக் களைப்பே இல்லையா? உண்மையி லேயே கடினமான ஒரு காரியத்தைக் கடினம்’ என்று உணரும் அளவிற்கு அவனுக்கு அறிவு இல்லையா?
வெயில் கீழே இறங்கத் தொடங்கி விட்டது. ஜனங்களிடம் எஞ்சி இருந்த அற்ப சொற்ப ாகம்பிக் கையும் சிறிது சிறிதாக மங்க ஆரம்பித்து விட்டது.
எல்லோருமே தேர்வடத்தை தொப் தொப்பென்று போட்டு விட்டுக் கீழே குந்தி விட்டார்கள்.
ஒருவருக்குமே ஒன்றும் தோன்றவில்லை; எப்படி யாவது தேரை இருப்பிடத்துக்குச் சேர்த்தாக வேண்டுமே . .

117
மறுபடியும் மறுபடியும் தேரை இழுப்பதற்காக வடத்தைத் தொடுவார்கள்- ஆனல், அடுத்த கணம் செய்வதறியாது வடத்தைப் போட்டு விட்டுக் குங்தி விடுவார்கள்.
“முருகன் பலி கேட்கிறன், முருகன் பலி கேட் கிறன்”, கர்பூரச் சட்டி எரித்துக் கொண்டிருந்த கதிர்காமத்தாச்சி சன்னதம் வந்து ஆவேசத்துடன் கூவினுள்.
நான் கீழே பார்த்தேன். ஏற்கனவே, குங்குமம் சிந்தி வெட்டியபடி மூன்று பூசணிக்காய்கள் காட்சி அளித்தன.
"இணுவிலுக்குப் போய் யாராவது இரண்டு டிராக்டர் எடுத்து வந்தால். . தேரைப் பூட்டி ...”
66 60?'
எல்லோருக்குமே அந்த யோசனை அருவருப் பாகவும், அவமான மாகவும் பட்டது.
பக்தி வெள்ளப் பெருக்கினல் கட்டி இழுக்க வேண்டிய முருகனுடைய தேரை டிராக்டர் கட்டி இழுக்கவா?
“கந்தையாண்ணை. நீ முண்டியைஎடு. இன்னுெரு கை பார்ப்பம்."
*டேய் விசரா. தள்ளி கில்’
கங்தையாண்ணைக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது.
'எனக்கு நீ சொல்லித்தாருய். என்ன?
வயிரவாாதனுடைய முகத்தை நான் கூர்ந்து கவனித்தேன். அந்த முகத்தில் ஒரு துளி வெறுப் பாவது தென்படவில்லை. கங்தையாண்ணையின்

Page 60
18
சொற்கள் அவன் காதில் பட்டதாகக் கூடத் தெரிய வில்லை.
அதே உற்சாகத்துடன் அவன் சிரித்துக் கொண்டு தான் நின்றன்.
வடத்தில் பிடிக்க இடம் இல்லாமல் ஜனங்கள் கெருக்கி அடித்தார்கள்.
'அரோஹரா??
*வாத்தியார் . . ம். ஒரு கை பிடியுங்கோ-'
மறுத்துக்கூற முடியாத கவர்ச்சி. நானும் அரையிலே சால்வையை இறுக்கிக் கொண்டு அவனுடைய சொல்லுக்குக் கீழ்ப்படிக்தேன்.
'அரோஹரா?
கண்கள் தாமாகவே மூடின. எல்லோரும் மனதை ஒன்றுபடுத்திக் கடைசி வலுவையும் சேர்த்து இழுத்தோம்.
“முருகனுக்கு?
'அரோஹரா?
“மஞ்சவனப்பதி முருகனுக்கு”
'அரோஹரா?
உற்சாகத்தோடு குதித்தபடி வேகத்தோடு தேர் கிளம்பியது. புறப்பட்ட கணத்தில் எங்கே போகிறே மென்றே ஒருவருக்கும் தெரியவில்லை.
திடீரென்று என்ன நடந்ததோ.
எல்லோரும் தேர் வடத்தைப் பொத்தென்று போட்டுவிட்டுப் பின்னேக்கி ஒடிஞர்கள்.
நானும் ஒடினேன்.

19
வெந்து கொண்டிருக்கிற மணலில், இரத்த வெள்ளத்தில் வாயிலும் முக்கிலும் உதிரம் வடிய அவன் குப்புறக் கிடந்தான். வலது கை மணலை இறுக்கிப் பிடித்தபடி கிடக்தது.
ாகான் ஜனக்கூட்டத்தின் மத்தியில் புகுந்து சிரமத்துடன் எட்டிப் பார்த்த போது. அவனுடைய இடது காலும், இடது கையும் தொப் தொப்பென்று தரையை அடித்தன.
அதன் பிறகு அந்த அசைவும் இல்லை.
5
குனிந்து, தார் ரோட்டை பார்த்தபடியே நான் ாகடந்து கொண்டிருக்கிறேன்.
ஜனங்கள் முன்னுக்கும் பின்னுக்குமாய்ப் போய்க் கொண்டிருக்கிறர்கள்.
"தேர் இருப்பிடத்துக்கு போட்டுதாமே? ஒ மென்று என் தலை என்னை அறியாமலேயே அசைகிறது!
-புறப்பட்ட எதுவுமே திரும்பவும் இருப் பிடத்தை அடைந்துதானே ஆக வேண்டும்.
-ஆனல் இருப்பிடத்தை அடைவதுதான் முக்கி шцот? எப்படி அடைவதென்பது முக்கியமே யல்லவா?
ஒரு கணம் கதிர்காமத்தாச்சியும், அவளுடைய வெறிப் பார்வையும் என் மனதில் உராய்கின்றன.
கெஞ்சம் கனக்கிறது. -வாத்தியார், என்ன பார்த்துக் கொண்டு நிக்கிற யள். ஒரு கை பிடியுங்கோ.

Page 61
120
அவன் சிரித்துக் கொண்டு நிற்கிறன். முகத்திலே பயங் கலந்த கவர்ச்சி. மறுத்துக்கூற மனசு வர முடியாத அளவு கவர்ச்சி.
"ஆராம் வாத்தியார் தேரடியி2ல செத்தது."
நான் வாயைத் திறக்கிறேன்.
சொற்கள் கெஞ்சிலேயே குமைந்து கொள்ளு கின்றன.
பின்னுக்கு யாரோ பதில் கூறுகிறர்கள்.
"அது ஆரோ விசர்ப் பொடியன்’
காலில் தடுக்கிய வேட்டியைச் சிறிது தூக்கிய படியே கான் நடந்து கொண்டிருக்கிறேன்.
வெறும் பாதத்தில் பட்ட குறுணி மண் வேதனையைக் கிளறுகிறது.

IX
கடைசிக் கைங்கரியம்
அழடா, தணிகாசலம், அழு. மரம் போல மெளனம் சாதிக்காதே! உன் சொந்த மனேவி, உன் இன்பத்திலும் துன்பத்திலும் பங்கெடுப்பதற்கு உன் தாலிக்கயிற்றுக்குத் த2லயை நீட்டிய உத்தமி, இதோ பிணமாய்க் கிடக்கிருள்.
நீயானல் மெளனமாக, தூரத்து வெளியைப் பார்த்துக்கொண்டிருக்கிருயே. உன் நெஞ்சம் என்ன இரும்பாகிவிட்டதா அல்லது நீதான் என்ன சிலையாகி 6íìL'_L-TuJT?
மனிதப் புழுவே, நீ அழு; அழத்தான் வேண்டும். கண்ணிரே, நீ பொங்கிவா; மரத்துப்போன அவன் கண் வழியாகப் பொல பொலவென்று ஊற்று.
அவன் அழத்தான் வேண்டும். தணிகாசலம் அடித்த மரக்கட்டை போன்று கிழக் குப் பக்கத்துத் தூணுேடு சாய்ந்தவாறு இருக்கிறன் . அவனுடைய இடது கை மடிந்து காடிக்குத் தாங்கல் கொடுத்துக்கொண்டிருக்கிறது. கண்கள் எல்லாம் கோவைப் பழம்போல் சிவந்து, மயிர் கலைந்து கருகிப் போய்க் காட்சி அளிக்கிறன்.
யார்தான், மனைவியைப் பறிகொடுத்து விட்டுப் பெருமையோடு உட்கார்ந்திருக்க முடியும்?
அதோ கட்டிலிலே எலும்பும் தோலுமாக இருக்கும் கமலாவை -இல்லை, பிணத்தைக் கிடத்தி யிருக் கிறர்கள்.

Page 62
122
வெள்ளை வெளேரென்று சீ2ல போர்த்தி இருக். கிறது. கண்களிலே சந்தனம்! நெற்றியிலே உலர்ந்த திருநீறு; அதன்மேல் குங்குமம்; இன்னும் பெரிய இடத்துப் பிணத்துக்கு வேண்டிய மரியாதைகளெல் லாம் குறைவில்லாமல் செய்திருக்கிறர்கள்.
கால்கள் இரண்டையும் கூட யாரோ பாதகர்கள் சணல் கயிற்றல் வரிக் து கட்டியிருக்கிறர்கள்.
எத்த கேரத்திலும் அணைவதற்குத் தயாராய்க் குத்துவிளக்கு ஒன்று படபடவென்று அடித்து வாழ்வின் அங்த்தியத்தைக் காட்டியபடி அவள் தலைமாட்டில் ஒளிவிட்டுக் கொண்டிருக்கிறது.
இவ்வளவு "கோலாகலங்களும்’ அவளுக்குத் தெரியாது.
அவள் பினம்!
*அண்2ண, அறைச் சாவி எங்கே?
தணிகாசலம் தன் பரட்டைத் த2லயை நிமிர்த்தி எதிர்மாடத்துத் தூணைப் பார்த்தான்.
திறப்பு அங்கே பத்திரமாக இருந்தது.
“டீ, கமலா! அந்தத் திறப்பை நீ அங்கே வைத்த போது உனக்குத் தெரியுமா, அதை மறுபடியும் நீ எடுக்கப் போவதில்?லயென்று?
எந்த நோயாளிதான் தான் இறக்கப் போவதாக எண்ணுவான். எல்லோருமே 'பிழைத்துவிடுவோம்’ என்றுதான் நம்புகிறர்கள்!
சாம்பசிவம் வந்தார். 'GT 6ät Got தணிகாசலம் அப்படியே இடிந்து போயிருக்கிறய. இருந்தாப்போல
கடந்த காரியமே; எத்தினைநாள் அவளும் பாயோடு பாயாய். . . p

23
*என்ன செய்கிறது; ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போனபோது கொஞ்சம் தென்பாய்த்தான் இருந். தாள். . ம். இந்த கசமே இப்படித்தான்.”
யார் சொன்னது கச மென்று? அவள் இறந்த காரணம் எவருக்குத் தான் தெரியப்போகிறது?
கமலாவைப் பார்த்தான்; பக்கத்திலே வாயை அகலமாகத் திறந்தபடி கிடக்கும் பிரம்மாண்டமான முதிரைப் பெட்டியைப் பார்த்தான்.
அது அவளை "வாவா’ என்று அழைத்துக்கொண் டிருந்தது.
அவளுடைய வெடித்த உதடுகள். ஒரு காலத்தில் கோவைப் பழம்போல் சிவந்திருந்த உதடுகள்தான் للاG (960ے
எங்கிருந்தோ ஒரு இலையான் வந்து அந்தக் கீழ் உதட்டிலே உட்கார்ந்தது. அதைத் தொடர்ந்து பக்கத் திலே வந்து ஒட்டிக்கொண்டு உட்கார்ந்தது மற்றேரு இலையான்.
வழக்கம்போல அவளுடைய மெலிந்த விரல்கள் மெதுவாக அசைந்து அவற்றை விரட்டவில்2ல. அல்லது "இஞ்சை ஒருக்கால் வந்து கொஞ்சம் விசிறுங்கோவன்;என்னை ஏன் இப்ப கவனிக்கிறியள்!” என்று கண் கலங்கவுமில்லை.
அவள் தன் பாட்டுக்குச் செத்துப் போய்க் கிடந்தாள்.
வருத்தம் என்று அவளுக்கு வந்ததும்தான் அவள் எவ்வளவு மாறிவிட்டாள். எப்பொழுதும் சிடுசிடென்று கிட்டவே போக முடியாது. எந்த நேரம் அவன்மேல் எரிந்து விழுவாள் என்று சொல்ல

Page 63
124
வும் முடியாது. "என் 2னச் கொல்லுங்கோ, நான் செத்துப்போறன்’ என்று கத்துவாள்.
அவள் பாதிப் பிராணன் இப்படிச் சத்தம் போட்டே போய்விட்டது.
ஏன் இப்படி அவளுடைய தேகம் எல்லாம் மெலிந்து, பலமே இல்லாத நிலையில் அவளுக்கு இவ்வளவு முன்கோபமும், சந்தேகமும்? விடியற்காலை எழுந்ததும் அவளுக்கு பல் விளக்கி விடுவதிலிருந்து இரவு அவளுக்கு நித்திரை மாத்திரைக் கொடுத்துக் கால்பிடித்து விடும்வரை எல்லாவற்றையும் அவன் தான் செய்தான். கங்தோரில் வேலை பார்க்கும் ாேகரத்தில் மட்டுமே அவனுக்கு அவளின் பணிவிடை செய்வதி லிருந்து ஓய்வு.
ஆனல், அவளுக்கு என்னவோ அவனைக் கண்டாலே பிடிக்கவில்லை.
ஏன்? ஏன்?
அன்று தணிகாசலத்திற்கு கங்தோரில் ஓயாத வேலை. அன்று மாத்திரமென்ன ? தொடர்ந்து ஒரு மாதகாலமாகவே, கம்பெனிக்கு வந்திருந்த புதிய மானேஜர் பழைய மானேஜரைத் திட்டியபடியேபழைய பைல்களை எல்லாம் புரட்டி ஆபிஸை ஒழுங்கு படுத்து வதாகப் பேர்பண்ணிக் கொண்டிருந்தார்.
அவருடைய மியூரியல் அம்மையார் ‘டார்லிங், இட்ஸ் டு லெட் டுடே' என்று அழைக்கு மட்டும் ஆபீசை விட்டு அவர் அகலவே மாட்டார். அவருக்கு எங்கே தெரியப் போகிறது தணிகாசலத்தையும், அவன் கட்டிக் கொண்டிருக்கும் அருமை மனைவியை யும், அவள் கட்டிக் கொண்டிருக்கும் அபூர்வ வியாதியையும் ?

125
தணிகாசலம் வீட்டுக்குள் அடியெடுத்து வைத்த போது அவனுடைய மனைவி-அப்போது மனைவியாக, இல்லே-பேயாக நின்றள்.
"ஏன் இவ்வளவு நேரம் ???
இப்படித்தான் அவள் கேட்டாள். வெறும் வார்த் தைதான். ஆனல், அதை அவள் உச்சரித்த தொனி மூன்று உலகத்தையும் கடுங்கவைக்கப் போதுமான தாயிருந்தது.
தணிகாசலத்துக்கு கெஞ்சில் யாரோ இரும்புலக் கையால் அடித்தது போலிருந்தது.
'நீங்கள் ஒண்டும் சொல்ல வேண்டாம். எனக்குத் தெரியும் உங்கடை சங்கதி, ஊர் முழுக்கச் சிரிக்குது. கான் என்ன சாகப்போறவள்தானே . . நீங்கள் அந்த மேரியோடை...”
"5 O Glyt ''
"ஏன் வெரு ட்டிறியள் . . கேட்பன், அப்படித் தான் கேட்பன்’’.
அவள் பிசாசுபோலக் கத்தினுள்.
தணிகாசலத்திற்குக் கோபம் வந்தால் என்ன செய்திருப்பானே தெரியாது. ஆனல், அவன் மனத் தைக் கட்டுப்படுத்திக் கொண்டான். மெதுவாக அவள் தோளைத் தொட்டு *கமலா, கத்தாதே, கமலா 1 கத்திக் கத்தித்தானே உன் ரை உடம்பு இப்பிடியாய் போட்டுது. டொக்டர் எத்தினை தரம் சொன்னவர். படு கமலா. என்ரை கமலா எல்லே.?? என்று என்னென்னவோ சொல்லித் தேற்றினன்.
ஆனல், அவள் சக்தேகம் என்னவோ தீரவே யில்லே.

Page 64
126
தணிகாசலம் ஏதோ துரோகம் செய்து விட்ட தாகவும் அதை மறைக்கத்தான் அவன் மாய்மாலம் செய்கிறன் என்றும் அவள் திடமாக நம்பினுள்.
அவள் நினைத்ததில் என்ன தவறு ? ஆண்களின் மனதை வெகு துருட்சுமமாக அளந்து வைத்திருக் கிருள்.
அடி கமலா, நீ நினைத்ததில் எள்ளளவும் பிழை யில்2ல. முற்றிலும் சரி. நான் தான் துரோகி, பெரிய துரோகி
“டம் டம் டம்” என்று பறை முழங்கியது. தணிகாசலத்தின் மனத்தில் யாரோ சம்மட்டியால் அறைவது போன்று இருந்தது. அவனுக்கு, அந்தப் பறை மேளக்காரர்களைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ள வேண்டும் போலிருந்தது.
இன்னமும் கூட தன் வீடு "செத்த வீடு” என்று ஒப்புக்கொள்ள அவனுக்குத் துணிவு பிறக்கவில்லை.
கமலா உண்மையிலேயே இறந்து விட்டாளா ? இனிமேல் விழிக்கவே மாட்டாளா ?
திடீரென்று ஏதாவது அற்புதம் நிகழ்ந்து அவள் எழுந்து விட்டால்?
“என்ன மாமி, எத்தனை நாளைக்கெண்டு அந்த மனுசனும் அலேயிறது; தொழிலைப் பார்க்கிறது எங்கே, வீட்டைப் பார்க்கிறது எங்கே . . அந்த மனுசன் பட்ட பாட்டுக்கு ஒரு வழியாய் செத்ததுதான் நல்லதாய் போச்சு . . y y
"எண்டாலும் குடுத்து வைக்க வேணும். தாலி யோட சாகிறது எல்லாருக்கும் ஆகிற காரியமே ??
4ஒரு மாதம் இரண்டு மாதமே ? ஒரு வருஷம்என்னென்ன கஷ்டத்தை அனுபவித்தாளோ ?

127
"உனக்குத் தெரியாதே ? என்றபடியே தணிந்த குரலில் "சாதகம் கொ ஞ் ச மு ம் பொருத்தம் இல்லையாம்.'
'காதல் கலியாணத்தாலே வந்த வினை. . 2 ,
தணிகாசலத்திற்கு ஆத்திரம் பொங்கியது. அந்த உளத்தை வாயை அப்படியே பிடித்துக் கிழித்துக் கண்ட துண்ட மாக்க வேண்டும் போல் இருந்தது.
“என்னைப் பெத்த ராசாத்தி, நீ என்னை விட்டுப் போட்டியோனே? என்று தனிக் குரல் ஒன்று பிலாக் கணம் வைப்பது கேட்டது. தணிகாசலத்தின் கெஞ்சம் திக்கென்றது.
அழுவது எதிர் வீட்டு இராசம் தான்.
இப்பொழுது மாத்திரம் கமலா உயிரோடு இருங் திருந்தால் . .
அன்று அவனுக்கு லீவு. தணிகாசலம் வீட்டிலேயே நின்றன். கமலாவுக்கு அப்போது வருத்தம் சிறிது சுகமாகி வந்தது. காலையில் கொடுக்க வேண்டிய மருந்தைக் கொடுத்து உள் கூடத்தில் படுக்க வைத்து விட்டுத் தணிகாசலம் வெளி மண்டபத்தில் உலாவிக் கொண்டிருக்தான்.
திடீரென்று அவன் உள் உணர்ச்சி அவனுக்கு எதையோ அறிவித்தது. திடுக் கிட்டுத் திரும்பியவன் அப்படியே திகைத்து விட்டான்.
ஜன்னல் கம்பியைப் பிடித்தவாறே, த2ல விரி கோலத்துடன், மகா பயங்கரமாகக் காட்சியளித்தபடி நின்றள் கமலா.
“என்ன அங்கே பார்த்து இளிக்கிறியன்? என்றள் கோபாவேசத்தோடு. திடுக்கிட்டுத் திரும்பியவன் அப்பொழுதுதான் பார்த்தான்.

Page 65
128
எதிர் வீட்டுத் திண்ணையில், முழுகிய தலைமயிரைச் சிக்கெடுத்தபடி தன் பாட்டுக்கு, சுயாகினை வின்றி நின்று கொண்டிருந்தாள் இராசம்.
தணிகாசலம் என்ன சத்தியம் செய்தும் கமலா கம்ப மறுத்தே விட்டாள்.
கமலா படுத்த படுக்கையாகிச் சரியாக ஒரு மாதம் கூட ஆகவில்லை. திடீரென்று ஒரு நாள் வேலைக்கார மனுஷியை விரட்டி விட்டாள். அவளே "மனுவி" என்று சொல்வதுகூட உயர்வு நவிற்சி.
அவள் கிழவி. *கமலா இந்தச் சந்தேகப் பிசாசு உன் களங்க மில்லாத இதயத்தில் எப்படிக் குடிபுகுந்தது? என்னைப் பார்க்க அவ்வளவு இழிந்தவனுகவா தெரிகிறது? அவ்வளவு கேவலமானவனுகவா கான் தோற்று கிறேன்?
நீ, பிழைவிடவில்லை, கமலா. நீ நினைத்தது முற்றிலும் சரிதான். கான் பாபி மன்னிப்புக்குத் தகுதியில்லாத பாபி: நான் இன்றைக்கு உணரு கிறேன். நீ என்றைக்கோ உணர்ந்து விட்டாய். நீ கெட்டிக் காரி, பெரிய கெட்டிக்காரி.? செத்த வீடு களை கட்டி விட்டது. புளியமரத்தின் கீழே ஒரு துண்டை விரித்துவிட்டு ‘வெட்டு, இறக்கு” விளையாடிக் கொண்டிருந்தார்கள் புருஷர்கள்.
அந்த விளையாட்டுத் தெரிந்தவர்கள், அல்லது விளையாட இடம் கிடையாதவர்கள் சுற்றிவர நின்று அவ்வப்போது இலவச ஆலோசனைகள் கூறிக் கொண்டிருந்தார்கள்.
"இதென்ன சுருட்டப்பா, இது? குடித்தால் குடிக்க வேணும் வான காணுவின் ரை. . என்ன

129
கைச்சல்” என்று அபிப்பிராயம் கூறியபடியே, வீட் டுக்கும் இரண்டு சுருட்டு மடியில் வைத்தபடி, புகை பிடித்தார்கள் வயதில் சிறிது முதிர்ந்தவர்கள். வேறு சிலர் நாவிதனிடம் தங்கள் மோவாயை கீட்டி சவரம் செய்து கொண்டிருந்தார்கள்.
இன்னும் சிலர் கோடிப்பக்கத்துக்குப் போய்விட்டு வாயைச் சப்புக் கொட்டிக்கொண்டே, கால்கள் ஒன்றையொன்று உள் வாங்க வந்து கொண்டிருந் தார்கள்.
பெண்கள் பகுதியில், வெற்றி2லத் தட்டமும், பழங் கதைகளும் அவர்களுடைய வாயை, இடை விடாமல் ஆடவைத்துக் கொண்டிருக்தன.
ஊரே பிரமிக்கும்படியாக அலங்காரமான தண் டிகை வாசல் புறத்தில் உருவாகிக் கொண்டிருந்தது. மாணிக்கம்-பிரேதமாய்க் கிடப்பவளின் தங்தையாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தார். ஊரைப் பிரமிக்க வைப்பதற்கு இதைத் தவறவிட்டால் அவருக்கு வேறு ஏது சக்தர்ப்பம்?
ஒப்பாரி கானம் வர வர உச்ச நிலையை அடைந் தது. கோஷ்டி கானங்களும், தனி ஆவர்த்தனங் களும் மாறி மாறி ஒலித்தன.
பெண்களில் சிலர், உளர்ச் சில்லறைத் தகராறு க2ள எல்லாம் தங்கள் கவிகளில் வைத்துப் பாடிக் கொண்டிருர்தார்கள். இன்னும் சிலர் இறந்துபோன எந்த மூதாதையரையாவது நினைத்து கண்ணிரை வரவழைக்கக் குறுக்கு வழிகளைக் கையாண்டனர். சுட்டுப் போட்டாலும் கண்ணிர் வராத சிலர், அதைப் பற்றிக் கவலையே படவில்லை. ஒப்பாரி மாத்திரம் சொல் பிசகாமல் அடுக்கடுக்காய் வந்தால் போது மென்பது அவர்கள் கட்சி.
8 . بلاوے

Page 66
130
தணிகாசலத்தைக் கவனிப்பார் இல்லை. அவனு டைய மனைவியின் அருமையை உள்ளபடி உணரக் கூடியவன் அவன் ஒருத்தன் தான்.
அதிலும், அணு தரவான நிலையில் அவள் இறந்த கொடுமையை அவனையன்றி வேறு யார்தான் அறியக் கூடும்?
举 举 米
ஆஸ்பத்திரியில் கமலாவைச் சேர்த்த போதே எப்படிக் காலம் தள்ளப் போகிருேமோ என்று பதைத் தான் தணிகாசலம். ஆன) ல், ஆஸ்பத்திரியில் அவன் நினைத்ததற்கு எதிர்மாறக நிகழ்ச்சிகள் நடக்கத் தொடங்கின. அவன் மேல் அவள் எரிந்து விழ வில்லை; மெளனமாகி விட்டாள். தன்னுள் நிறைந்த ஒரு மோனத்தில் அவள் ஆழ்ந்துவிட்டாள் போலும்.
கர்ஸ்மார் படுக்கைக்குக் கிட்ட வரும்போது தணிகாசலம் காத தூரத்தில் நிற்பான். எங்கே, சமய சந்தர்ப்பம் தெரியாமல் கமலா ஏதாவது உளறி விடுவாளோ என்று அவன் பயந்து செத்தான். ஆல்ை, கமலா வழக்கம் போல் சந்தேகப்படவே இல்லை. ஏனே, கொடுரமான மெளனத்தைக் கடைப் பிடித்தாள்.
65 LD6UsT. . . ... S99- é5LD6Us ... ... உன்னுடைய அக்த அரிய குணத்தை எதற்காக மாற்றினய், என்னுடைய கடத்தையில் திடீரென்று உனக்கு பரிபூரண கம் பிக்கை ஏற்பட்டு விட்டதா? .
என்னைக்கூட கம்பினுயா?
k
"நைட் டியூட்டிக்கு வந்த அந்தப் புதிய கர்ஸைப் பார்த்தபோது ஏனே தணிகாசலத்துக்கு கெஞ்சம்

31
திக்கென்றது. அநாவசியமாக அவள் சிரித்தாள். அவசியமில்லாததற்கெல்லாம் பேசினுள்.
coi L-, (LDL-TT, தணிகாசலம்! அப்போதாவது உணர்ந்தாயா?
டொக்டர் வந்து கமலாவைப் பரிசோதித்தார். அன்று இராத்திரி பன்னிரண்டு மணி மட்டும் கவனத்துடன் இருக்கவேண்டும் என்று சொன்னர்.
இன்று இரவு பன்னிரண்டு மணிக்கு, ஜெர்மனியி லிருந்து பெறப்பட்ட அந்த அரிய மருக்தை கமலா வுக்கு "இஞ்செக்ட்” பண்ணுவார்கள். அதை ஏற்றி னல் அநேகமாக அவள் பிழைத்து விடுவாளாம்.
தணிகாசலத்திற்கு ாகம்பிக்கை மறுபடியும் துளிர்த்தது. இரவு; தணிகாசலம் மனம் குழம்பித், தவித்தான்.
கர்ஸைக் காணவில்லே. தணிகாசலம் அவளைத்தேடி உள்ளே போனன். அவள் நின்று கொண்டிருந்தாள். சிரித்தபடியே சொன்னுள்; “மறந்துவிட்டேன் என்று பயந்து விட் டீர்களா? இந்த மருங்தைப் பையிலே வையுங்கள். சிறிஞ்சையும், பஞ்சையும் எடுத்துக்கொண்டு வந்து விடுகிறேன்.?
அவள், ஏதோ சொன்னுளே தவிர, அவள் கையில் இருந்த ஊசிபோன்று அந்தச் சிரிப்பு அவனைக் கொன்றது.
'சிஸி, நீங்கள் என்ன சொல்கிறீர்கள், அவள் தப்புவாளா?
அவன் நிர்க் கதியாக நின்றன் ; கண்கள் நீரைக் கோத்து கொப்பளிக்கத் தயாராக நின்றன.
ஒரு குழந்தையைப்போல, யார் தன்னை அணைத்து, ஆறுதல் சொல்வார் என்று ஏங்கி நின்றன்.

Page 67
132
தேறுதல் என்ற பனித்துளிக்கு அவன் தாகமாய் தவிப்பது வடிவாகத் தெரிந்தது.
"நீங்கள் ஆண்; இதற்கே இப்படிக் கலங்கினல். உங்களைப் பார்க்க எனக்கும்தான் மனது கலங்கு கிறது. இதோ. இங்கே பாருங்கள்-?
அவள் அப்படிக் கூறியபோதே அவளுடைய கரங்கள் அவனைப்பற்றி இருந்தன.
அவன் என்ன பேசினன்; அவள் என்னகேட்டாள்? மந்திரத்தில் கட்டுண்ட சர்ப்பம் ஆனன். கால வெள்ளம் வரையரையின்றி யுக யுகாந்திர மாக ஓடி, வடிந்தது.
வெளிச்சம் கண்ணே உறுத்தாதபடி முடிய அந்த 'டோம்?? விளக்கு, அதுதான் முதலில் கண்ணில் பட்டது-எங்கோ வெகு வெகு தூரத்தில்.
அவன் உள்ளுணர்வு எதை உணர்த்தியதோ, அவன் திரும்பிப் பாராமல் ஒடினன். ஆணுல் மனம் மாத்திரம் வேகமாக அடித்துக் கொண்டது.
அவன் நினைத்தது நடந்துவிட்டது; அவள் அலங் கோலமாகக் கிடந்தாள். அரைவாசி படுக்கையிலும், அரை வாசி கீழேயுமாக அாாதரவாகத் தொங்கிக் கொண்டு கிடந்தாள்.
அவளுடைய மெலிந்த கைகள் கேட்பாரற்று நீண்டு கிடந்தன.
2 sk sk ஒமப் புகை கண்ணை மறைத்தது. சுண்ணம் இடிக்க வைத்திருந்த பிரம்மாண்டமான உலக்கையையும் உரலையும் பார்த்து தணிகாசலத் திற்கு இரத்தமெல்லாம் உரைக் து விட்டது.

133
சுண்ணம் இடிக்கும் அந்த உரிமை அவனுக்கு இருக்கிறதா?
கமலாவை கேரத்தோடு சுடுகாட்டிற்கு அனுப்பி வைக்க ஆர்வம் கொண்டிருந்த இரண்டொருத்தர் ஐயரை அப்படியும் இப்படியும் "அஸிஸ்ட்' பண்ணிக் கொண்டிருந்தார்கள்.
"தணிகாசலம் எங்கே?
அவன் அசையவில்லை.
'எட தம்பி, தணிகாசலம், இரண்டு வாளியைத் தலையி2ல ஊத்திக்கொண்டு வா; ஐயர் காத்துக்கொண் டிருக்கிறர்.”
வெளித் தோற்றத்திலாவது புனிதமாக இருக்க வேண்டுமாக்கும்.
அவன் சி2லயாக நின்றன்.
'எழும்பு தம்பி, சவம் காறப்போகுது.”
தணிகாசலத்திற்கு அவருடைய பல்லை அப்படியே பெயர்த்துவிடலாம் போலிருந்தது.
சவமா? காறப் போகுதா?
அவனுக்கு அழுகை அழுகையாக வந்தது.
"சட்டையைக் கழட்டு தணிகாசலம்."
மெதுவாக அசைந்தான்; மேற் சட்டையை வேண்டா வெறுப்பாகக் கழற்றினன்.
அவன் காலடியில் ஏதோ விழுக் து உடைந்தது.
வேறென்றுமில்லை. முதல் காள் இரவு கர்ஸ் கொடுத்தாளே-அந்த மருந்துச் சீசா, பிரபலமானபோகும் உயிரைப் பிடித்து வைக்கும்-ஜெர்மன் மருந்து.
மறுபடியும் அவன் சிலையாகி விட்டான்.

Page 68
X
பக்குவம்
*கந்தர் மடம் செல்லம்மா?
*அஞ்சு?
"கொட்டடி ஆச்சிப்பிள் 2ள?
'அஞ்சு?
“கொக்குவில் வேலாயுதபிள் 2ள?
'பத்து’
*சீட்டுக்கார கல்லாம்பிப் பகுதி"
'இருபது?
'சங்கக்கடை ரத்தினம் பெண் சாதி”
ஒவ்வொருவரும் வந்து காசைப் போடப்போட, சின்னத்துரை கொப்பியில் எழுதிக் கொண்டே வந்தார். துரையப்பாதான் பெயர்களை உரக்கச் சொல்லிக் கொண்டிருந்தார்.
குனிந்த த2ல நிமிராமல், வெற்றி2லச் கரு2ளக் கையிலே ஏந்தியபடி நின்று கொண்டிருந்தாள் அவள். அந்தச் சின்னஞ்சிறு உடலை எட்டுமுழச் சேலை ஒன்று ஈவு இரக்கமின் றிச் சுற்றிக் கொண்டு கிடந்தது.
சாமர்த்தியப்பட்ட பெண்ணுக்கு இயல்பாகவே ஏற்படும் புது காணம் முகத்தைப்பூச, கவிதை ாகிழலாடும் கண்களால் சிரமத்துடன் அவள் நிமிர்ந்து பார்த்தாள்.
பாவமாக இருந்தது.

35
சிறிய சிறிய கனவுகளுக்கெல்லாம் உயிர்கொடுக்க முனைந்து நிற்கும் அவள் முகத்தில் வியர்வை முத்து முத்தாகக் கோத்து நின்றது.
"சரி. சரி. சின்னத்தங்கச்சியை உள்ளே கூட்டிக் கொண்டு போங்கோ’-வெள்ளித் தட்டத்தில் கிடந்த காசை எண்ணி அடுக்கியபடியே குரல் கொடுத்தார் சின்னத்துரை.
நின்று கொண்டிருந்த அந்தப் பெண் குழந்தை யின் சிறிய மார்பு மகிழ்ச்சியால் ஏறி இறங்கியது.
ராசாத்தி இன்னமும் அங்கேதான் நின்றள். அந்தக் குசினிக் கதவின் பக்கத்தில், ஆடாமல் அசை யாமல், வைத்த கண் வைத்தபடி, இவ்வளவு கேர மாக அவள்ாகின்று கொண்டிருந்தாள்.
மனத்தின் வேதனைக் குழம்பில் அழுந்தி அழுந்தி, ஆற்றமையுடன் வெளி வந்தது, ஒரு துருடான பெரு &pở ởr.
குனிந்து, பொலிவிழந்து கிடக்கும் தன் அங்கங் களை ஒரு முறை பார்த்துக் கொண்டாள். மறுபடியும் புதுச்சே2ல சரசரக்க அசைந்து செல்லும் தன் தங்கையைப் பார்த்தாள்.
எங்கோ, தூரத்தில், முன்பு எப்போதோ கேட்ட சோகாநாதம், விரிந்து விரிந்து, கற்பனைக் கெட்டாத தூரம் வியாபித்து, தன்னை விழுங்குவது போலவும், அதனுள்ளே தான் ஒடுங்கி ஒடுங்கித் துரும்பளவாகி அமிழ்ந்து விடுவது போலவும், அவளுக்குப் பட்டது. w அந்த நினைவு அவள் மனத்தை என்னவோ செய்தது.
எப்பிடி இது கடக்கும் ?

Page 69
36
அந்தச் சின்னஞ் சிறு உள்ளத்தை இந்தக் கேள்வி தான் நிறைந்து நின்று இம்சைப் படுத்தியது.
எப்பிடி நடக்கக் கூடும் ?
நான் தானே. அவளுடைய அக்கா. . நான் ... கான் தானே வயதுக்கு முத்தவள். . அப்ப. . நான் இன்னமும் ஏன் இப்படி . . இருக்கிறன் . . எனக்கு. ஒரு வேளை . . . . ஒரு வேளை . . ஏன் . .
அறிவுக்கும், சிங் த 2ன க் கு ம் அப்பாற்பட்ட, கற்பனையின் பிடிக்குள் வளையாத, அகப்படாத ஒரு பொருளுக்குக் காரணம் கண்டு பிடிக்க முயன்றது அந்தப் பிஞ்சு உள்ளம்.
மெலிந்திருந்த தன் கைகளை முகத்தின் முன்னே நீட்டி ஒரு முறை பார்த்துக் கொண்டாள் ராசாத்தி. ஒட்டியிருக்கும் தன் மார்புச் சட்டை மீது நுல்போல ஊர்ந்து கிடக்கும் பின்னலைப் பார்த்தாள். மெல்லிய உரோமம் படர்ந்து வெளிறிக் கிடக்கும் கால்களை நோக்கினுள்.
அவளுக்குத் தன் மீதே அளவற்ற வெறுப்புப் பீறிட்டது.
குத்து விளக்கில், எண்ணெய் வ ற் றி த் திரி மாத்திரம் எரியும் மணம் அடங்கலும் பரவியது.
அப்படியே தலையை மயக்கிக் கொண்டு வந்தது சுவரிலே ஆத்திரம் தீரத் தலையை முட்டி, இரத்தம் கக்கிச் செத்து விடலாமோ என்று கூட அவள் மனம் எண்ணியது.
எவ்வளவுதான் முயன்றும், கண்களில் பொங்கும் நீரை மாத்திரம் அவளால் அடக்க முடியவில்லை.
本 棒

137
கன கம்மா, ஆலாத்தித் தட்டத்தை எடுத்துக் கொண்டு வீட்டுக்குள் விரைந்தாள்; போகும் போது ாகின்று, ராசாத்தியைப் பார்த்து ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டே உள்ளே போனுள்,
‘என்னத்துக்கு என்னை எல்லாரும் இப்பிடிப் பார்க் கினம்; ஏன் என்னைப் பார்த்துவிட்டு காறிக் கிடக்கிற பிணத்தைப் பார்க்கிறது போல முகத்தைத் திருப் .1960τιο 2
அம்மாதான் இப்படி என்றல் அப்பு. ம்
என்னைப் பெற்ற அம்மாவுக்கே என் 2ன விளங்க வில்லை என்றல் அவர். . அவருக்கு என் வேதனை என்ன தெரியப் போகுது'
‘எங்கை உன்ரை முத்தவள் ?-குஞ்சியாச்சிதான் விசாரித்தாள்.
“உங்கினைதான் நிண்டு து?-விரக்தியில் தோய்ந்து புறப்பட்டது அந்தப் பதில்
ராசாத்தியின் கைகள் க த  ைவ இறுக்கிப் பிடித்தன.
சின்னத் தங்கச்சி இராமநாதன் கல்லூரியில் சேர்ந்து விட்டாள். அவள் இனிமேல் பையன்கள் படிக்கும் பள்ளியில் படிக்கக் கூடாதாம். ஆனல், ராசாத்தியின் பள்ளியை மாற்றத் தேவையில்லே. அவளுடைய படிப்பைத்தான் எப்போதோ நிறுத்தியாகி விட்டதே.
சின்னத் தங்கச்சி சனி ஞாயிற்றுக் கிழமைகளில் வீட்டுக்கு வரும் போதெல்லாம் அம்மா பம்பரம் போல் சுழல் வாள்; ராசாத்தி தான் ஒடி ஆடி, முழு வேலையையும் பார்ப்பாள்-சந்தோஷமாகத்தான்.

Page 70
138
எப்போதாவது, சின்னத் தங்கச்சி, குளித்து விட்டு ஈரச் சே2ல தடக்க குனிந்து வரும் போது மாத்திரம், ராசாத்தி தன்னை யறியாமலே தன்னுடைய மேனியை யும் ஒரு முறை பார்த்துக் கொள் வாள்.
அப்போதெல்லாம் ஆழ்ந்த ஒரு பெருமூச்சு அவள்
மனக்கிடங்கின் மறைவில் இருந்து வெளி வரும்.
:
ஞாயிற்றுக் கிழமை பின்னேரமே சின்ன தங்கச்சி விடுதிக்குத் திரும்பிவிட வேண்டும். வழக்கமாக அவளுடைய தாயார்தான் கொண்டுபோய் அவளே பஸ்ஸிலே பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி விட்டு வருவாள். ஆனல், அன்று தாயாருக்கு கையிலே வேலை கிடந்தது. துணைக்கு ராசாத்தியை அனுப்பி வைத்தாள்.
மக்கியும் புழுதியும் நிறைந்த ஒழுங்கையில் இரு வரும் பக்கத்திற்குப் பக்கமாக ஈடந்து கொண்டிருக் தார்கள். ராசாத்தியின் கையில் மட்டும் சின்னத் தங் கச்சியின் ‘சூட் கேஸ் கனத்துக் கொண்டிருக்தது.
சனசமூக நிலையத்தை ஒட்டியிருந்த கைப்பர்க் தாட்ட மைதானத்தைக் கடந்த போது ஆயிரம் இளம் கண்கள் தங்களையே உற்றுப் பார்ப்பதை ராசாத்தி உணர்ந்தாள்.
அவளுக்குத் திகைப்பாக இருந்தது.
இப்படியான ஒர் அநுபவம் அவளுக்கு அதற்கு முன் ஏற்பட்டது கிடையாது; திரும்பித் தன் தங்கையைப் பார்த்தாள். ஒன்றுக்குமே பணியாத மிடுக்குடனும், அலட்சிய பாவத்துடனும், நிலத்தின் மேல் கண்களைப் பதித்தபடியே, அவள் கடந்து, கொண்டிருந்தாள்.

139
மறுபடியும் நிமிர்ந்து பார்த்தாள். அத்தனை கண் களும்-அவ்வளவும்-அவளைத்தான், சின்னத் தங்கச் சியைத் தான், பார்த்துக் கொண்டிருந்தன.
மறுபடியும் தனியே அவள் திரும்பி வந்தபோது, எவருமே பார்த்ததாக, தற்செயலாகக் கண்ணிலே பட்ட தாகக் காட்டிக்கொள்ளக் கூட, முன் வரவில்லை.
அவளுக்குத் திடீரென்று எல்லாமே விளங்கியது. சங்கக் கடையில் கூப்பன் எடுப்பதற்கு அம்மா ராசாத்தியைத் தான் அனுப்புவாள்; சின்ன தங்கச் சியைத் தட்டித் தவறி ஒரு முறையாவது அனுப்பிய ஞாபகம் அவளுக்கு இல்லை.
கூப்பன் கடகத்தைத் த2லயிலே வைத்துக் கொண்டு, வாயிலே இரண்டு அரிசியை மென்று கொண்டு, பேர் பெற்ற கொக்குவில் புழுதியைக் கால் களினல் அளந்தபடி அவள் போய் வந்த இததனை நாட்களிலும் ஒருமுறையாவது அவளுக்கு இந்த மாதிரி நூதனமான அநுபவம் ஏற்பட்டது கிடையாது.
எண்ணெய் படிந்த அந்தத் தலையணையில் முகத்தைப் புதைத்தபடி விம்மி விம்மி அழுதாள். எதற்காகவோ அழுதாள். எதை நினைத்தோ அழுதாள். என்னைப் பார்க்கிறதற்கு அவ்வளவு அருவருப்பா யிருக்கா? பார்த்தவுடனேயே திரும்புற அளவக்கு நான் வடிவில்லையா?
சின்னக்கா சொன்னவ தானே என்ரை முகவெட்டும், சின்னத் தங்கச்சியின்ரை முகவெட்டும் ஒரே மாதிரி எண்டு, சின்னத் தங்கச்சி அப்பிடி என்ன திறம்?
பெண்மை அவளைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே இருந்தது.

Page 71
140
அன்று கனகு வந்திருந்தான்! எப்பொழுதுமே அவன் அப்படித்தான்; வந்தவுடனேயே போக வேண்டுமென்று துடிப்பான்.
ராசாத்திக்கு அவனிலெ எப்போதுமே கொஞ்சம் விருப்பம்.
அவசர அவசரமாய் அடுப்பை முட்டி, கோப்பி போட்டுக்கொண்டு வந்தாள். அவன் மெளனமாக அதை வாங்கிக் குடித்தான்!
ஆனல், கண்கள் மாத்திரம் அடிக்கடி, உள்ளே சாய்மனேயில் சாய்ந்து ஏதோ படித்துக்கொண்டிருந்த சின்னத் தங்கச்சியின் பக்கமே திரும்பின.
கோப்பி குடித்து முடித்ததுதான் தாமதம், அவன் எழும்பி நின்று போகவேண்டும் என்றன்.
"சின்னத் தங்கச் சி?-அம்மாதான் கூப்பிட்டாள். *வர் றன் 9 LoL DIT” 'சின்னத் தங்கச்சி’ அவள் வரவேயில்லே! “ராசாத்தி! சின்னத் தங்கச்சி ஏதோ படிக்கிறள் போலை கிடக்கு. கோடியிலே இரண்டு மாதாளம்பழம் உன்றை மச் சானுக்கு ஆஞ்சிகுடு பாப்பம்.”
துள்ளிக்கொண்டு ஒடிஞள் ராசாத்தி; காலே நிமி டத்தில் பருத்துச் சிவந்திருந்த இரண்டு பழத்தை ஆய்ந்துகொண்டு வந்து, மச்சானிடம் தானே ாேகரிலே நீட்டினுள்.
ஒடிய களைப்பில் அவளுக்கு மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்கியது.
சைக்கிளிலே ஏறியிருந்த கனகு 'மாமி போட்டு வாறன்’ என்றன்; அப்படியே உள்ளே எட்டிப்

141
பார்த்து மற்றுமொருமுறை "வாறன்’ என்று கையை ஆட்டினன்.
சின்னத் தங்கச்சியும் சாய்ம2னயில் இருந்தவாறே சிரித்தபடி கையை அசைத்தாள்.
கரடும் முரடுமான பூவரசங் கப்புடன் ஒட்டிக் கொண்டு நின்ற ராசாத்தியின் கண்களுக்குக் கனகுவின் உருவம் மங்கலாக-வெறும் மங்கலாகத் தான்-தெரிந்தது.
豪 来 米
ாடு மத்தியான வெயில். ராசாத்தியின் கடையில் வேகத்திலும் பார்க்க அவளுடைய நெஞ்சர் தான் 'பக்பக்கென அடித்துக்கொண்டது. பயமும் மகிழ்ச்சி யும் போட்டி போட்டு அவள் கடுக்கத்தை அதிகரித் தன. கால் வேகும் சுடு மணலில் அவள் ஒட்டமும் ாகடையுமாக வீட்டை கோக்கிப் போய்க்கொண்டிருந்த போது திருப்பித் திருப்பி ஒரே ஒரு முகம்தான் அவள் மனக்கண் முன்னே சுழன்றுகொண்டிருந்தது.
என்னத்துக்கு தேகம் இப்பிடி இரைக்குது; ஏன் என்ரை கை இப்பிடி ஈடுங்கு து?
சற்று நின்று, தன்னை ஆறுதல்படுத்தி, திரும்பிப் பார்த்தாள். தூரத்தே, ஒழுங்கைத் திருப்பத்தில், சங்கக் கடையின் ஒரு பகுதி மாத்திரம் தெரிந்தது.
சற்று முன்பு, கூப்பன் கடகத்தைத் த2லயில் வைத்துக்கொண்டு முடிக் துவிட்ட மார்புச் சட்டையுட னும், ஊத்தைப் பாவாடையுடனும், அவள் புறப்பட்ட போது, இப்படி ஒன்று நடக்கும் என்று, அவள் கனவி லும் நினைக்கவில்லை.
அதை நினைக்கவே அவளுக்கு என்னவோசெய்தது. -ாகம்டவே முடியவில்லை; ஒருவேளை இதுவெல்லாமே ஒரு கனவாக இருக்குமோ?

Page 72
142
--95 60T GJIT?
அவள் கைகள் அவளை யறியாமலே போய்க் கன்னத்தைத் தொட்டன. கையிலே இன்னமும் எச்சில் பட்டதுபோல் குளிர்ந்தது.
அவளுக்கே கூச்சமாக இருந்தது. ச் சீ. என்ன மாதிரி இருந்தது. வெக்கமில்லை. “ராசாத்தி, நீ என்ன வடிவாய்!?? இருக்கிருய்-அவ ளுடைய வாழ்க்கையிலேயே இப்படியான ஒன்றை அவள் கேட்டதில்லை; அப்படிப்பட் . ஒரு புகழ்ச்சி யைக் கேட்டது அதுதான் முதற்தடவை. கான் கூட வடிவாக இருப்பேனு? அவளால் கம்பவே முடியவில்லை. அரிசி அளந்து அளந்து த விடு படிந்த அந்தக் கையினுல் அவளுடைய தலையைத் தடவியபடியே அவன் சொன் ன்ை. "ராசு . . fỗ ........ ஏன் உன் ரை தலையை இழுத்து ரட்டைப் பின்னல் போடக கூடாது. உனக்கு எவ்வளவு வடிவாய் இருக்கும். தெரியுமே!’
அவளுக்கு வெட்கம் கவிந்தது. குனிந்த அவள் கண் களில் மார்புச் சட்டைமீது குத்தியிருக்கும் புது ஊசி இரண்டும்தான் தட்டுப் பட்டன.
இரத்தினண்ணை தான் அதைக் குத்திவிட்டார். *ராசு . உனக்கு சட்டையை முடிஞ்சு விட வெட்க :! Égbége u., T?”
அவளுக்கு எவ்வளவு கூச்சமாக இருந்தது. *ரத்தினண்னே?
அதில்தான் என்ன இனிமை!

143
ஆட்கள் இல்லாத இடமாகப் பார்த்து, தனிமையில் அந்தப் பெயரை இன்னெருமுறை, உரக்க, ஆசை தீரச் சொல்லிப்பார்க்க வேண்டும்போலத் தோன்றியது.
-விட்டிலே இன்றைக்கு மண்ணெண்ணை முடிக் திருக்குமா? முடிந்தால் இன்னுெரு முறை கடைக்குப் போகலாம்:
'ராசு; பேணியைக் கொண்டுவா. இந்த அரிசியை அளந்து பாப்பம்."
பேணியைத் தேடிப் பார்த்துவிட்டு அம்மா. ரத்தினண்னே யை காணேல்2ல என்றஸ் ராசாத்தி.
ஐமிச்சத்தோடு தாயார் அவளைத் திரும்பிப் பார்த்த போது, அவள், வெகு அக்கறையாக, கண்ணு டியின் முன்பு நின்று தலைக்கு இரட்டைப் பின்னல் போட்டுக் கொண்டிருந்தாள்.
இரவு.
சுவர் ஒரமாகப் போட்டிருக்த ஒ?லப் பாயில் புரண் டு கொண்டிருந்தாள் ராசாத்தி,
ஒரு கனம் கனவு போலப்பட்டது; மறுகணம் யுகயகாந்திரத்து கனவாகவும் தோன்றியது.
. அகன்ற மார்பு-அதை மறைத்து அடர்த்தி யான உரோமம்-பச்சை குத்திய கைகள்-வெற்றி 2லச் சிவப்பு உதட்டில் கூடிய சிரிப்பு-சுருள் சுருளான கேசம் .
*ரத்தின எண்ணை'
அடிவயிற்றில் இருந்து உணர்ச்சிக் குழம்பு ஏறி மார்பை நிறைத்தது- என்னவென்று தெரியாத ஏதோ ஒர் உணர்ச்சி தேகம் அடங்கலும் கிளுகிளுப்பை உண்டு பண்ணியது.

Page 73
144
இரத்தினண்ணையின் மார்பில் அவள் படுத்துக் கிடக்கிறள். அதில்தான் எத்தனை சுகம்.
*ராசு . எங்கை என்னைப்பார். நீ என்ன வடிவாய் இருக்கிறப்.’
மறுகணம் இனம் தெரியாத பீதி இதயத்தைக் கெள வியது.
உணர்ச்சிக் கொப்புளங்கள் எல்லாம் ஒன்றை யொன்று விழுங்கி அவளை மேலே தள்ளின.
தேகமெல்லாம் மெல்லச் சிலிர்த்தது; குளிர்ந்தது. அவள் மேலே மேலே போய்க்கொண்டிருந்தாள்.
: R
தாயின் முகத்தில்தான் எத்தனை மகிழ்ச்சி. எவ்வளவு பெருமை. எங்கிருந்துதான் ராசாத்தியின் முகத்த ல் இந்தத் திடீர்க் கவர்ச்சி பிறந்ததோ.
வெற்றிலைச் சுருளை ஏந்தியவாறு குனிந்தபடி அவள் நின்று கொண்டிருந்தாள்.
**நாச்சி மாகோவில் அன்னப்பிள் 2ள?? *பத்து’’ 'ஆ2னப்பர்க்தியடி சுப்பிர மணியம் பகுதி?? 'அஞ்சு? *கொத்தாரிஸ் சபாபதிப் பிள்ளையும், மகளும்? *பதி2னஞ்சு? "சங்கக் கடை ரத்தினம் பெண் சாதி”
உள்ளம் ஒரு கணம் பொங்கி அவிழ்ந்தது. தூரத்தில், நி2லப்படிக்கு அருகில் சிரித்தபடியே கதைத்துக் கொண்டு அவன் நிற்கிறன் என்றது உள்ளுணர்ச்சி.

145
'பார்க்க வேண்டும்-ஒரு முறை ஆசை தீரப் பார்க்க வேண்டும்’ என்று உந்தித் தள்ளியது மனம்.
மிக்க சிரமத்துடன் கனத்துப்போன இமைகளைத் தூக்கி வைத்து நிறுத்த, அவள் எவ்வளவோ முயன்று பார்த்தாள்.
இருந்தும் முடியவில்லை!

Page 74
XIII
அக்கா
நாங்கள் எல்லாரும் வெறும் மேலுடன் தான் திரிவோம். எனக்கு வெறும்மேல்தான் பிடிக்கும்; சட்டையே பிடிக்கா. கிட்ணனும் அப்பிடித்தான்; வெறும் மேலுடன்தான் வருவான். ஆன கிட்ணன் கல்ல வடிவு. வெள்ளையாய் இருப்பான். ஏனெண்டால் அவன் அம்மா நல்ல வெள்ளை; என்னுடைய அம்மா கூட நல்ல வெள்ளே; அப்பாதான் கறுப்பு; பல்லுத் தீட்டுவமே கரி. அதைப் போல.
ச னி க் கி ழ  ைம அம்மா முழுக வார்ப்பா. அம்மாவுக்கு ஒண்டுமே தெரியா.இவ்வளவு எண்ணெய் வைப்பா. கண்ணெல்லாம் எரியும். அக்கா எண்டால் ஒரு சொட்டுச் சொட்டாய் வைப்பா, எரியவே மாட்டுது.
ராசா என்னேடு ஒட்ட ஒட்ட வாறன், தள்ளடா எண்டாலும் தள்ளுறன் இல்லை; ராசாவும் இண்டைக்கு முழுகுவான்; அவனுக்கு முழுகவே பிடிக்கா. 'கெற்றப் போல்” அடிக்கத்தான் அவனுக்குப் பிடிக்கும்; கல்லா லெக்கு வைச்சு அடிப்பான்; எண்டால் நானும் கூட அடிப்பன்; அப்பா கண்டால் முதுகுத் தோலை உரிச்சுப் போடுவாராம்; அக்காதான் சொல்லுரு.
அப்பாவுக்கு ஒண்டுமே தெரியா; காலம் பற காலம்பற புதுப்புது பிளேட்டால் 'சேவ்? எடுத் திட்டு பிளேட்டை எறிஞ்சிடுவார். நான் எல்லா பிளேடும் சேர்ப்பன்; விக்னவிட்டை குடுத்தால் புதுப்

47
புது முத்திரை எல்லாம் தருவன். அவனிட்ட முத்திரை ஒரு தொகை இருக்கு. அமேரிக்கா, இங்கிலண்டு, லண்டன், எல்லா முத்திரையும் வைச்சிருக்கிறன். விக்கினுவின் ரை அப்பாவிட்டை கார் இருக்கு; பெரிய கார்; அவன் சொல்லுருன் தான் கார் விடுவாணும். அவன் அப்பிடித்தான்; எல்லாம் பொய் பொய்யாச் சொல்லுவான்.
2லசென்சு ஒண்டும் எடுக்காமல் எப்பிடியாம் கார் விடுறது.
அக்கா வந்து முழுகவார்க்கக் கூப்பிட்டா, "பேந்து வாறன்’ எண்டு சொன்னன்; அக்கா அப்பி டியே 'அறுங்ாக் கொடியில் பிடித்து கொற கொற எண்டு இழுத்துக் கொண்டு போனு, கான் அழவே இல்லை. எனக்கு அக்கா எண்டால் விருப்பம்.
அக்காதான் த2லயிலே சீயாக்காய் பிரட்டினு; நான் அக்காவையே அண்ணுந்து பார்த்துக் கொண் டிருந்தன்; அக்கா நல்ல வடிவு. நல்ல சிவப்பு" அக்காவின் ரை கண் வட்டமாய் பெரிசாய் இருக்கும். அதைத்தான் கான் உத்துப் பார்த்துக் கொண்டே இருப்பன். அக்கா ஏண்டா அப்பிடிப் பார்க்கிறயப் எண்டா. எனக்குக் கூச்சமாயிருந்தது. கண்ணுக் குள்ளே சீயாக்காய் போட்டுது எண்டு கத்தினேன், சும்மாதான்; அக்கா கெதி கெதியாய் தண்ணி அள்ளித் தலையிலே உளத்தின. தண்ணி சில்லெண்டு இருந்தது; ாகான் குதி குதி எண்டு குதிச்சன்.
அம்மா பவுடர் போடவே மாட்டா ஒரு கொஞ்சம் தான் போடுவா. அக்கா எல்லா இடமும் பவுடர் போட்டா. தலையெல்லாம் கூடப் போட்டா. நல்ல வாசமாயிருக்கு. கான் சிரிச்சன்; அக்கா குனிஞ்சு கொஞ்சிணு .

Page 75
148
. கிட்ணன் வந்து விளையாடக் கூப்பிட்டான்" *நான் மாட்டன் நீ போ' எண்டு சொன்னன். அவன் போக இல்லே. "நீ போடா? எண்டு நான் உள்ளே வர்கதிட்டன். கிட்ணன் அப்பிடித்தான் “போடா? எண்டால் போகவே மாட்டான்.
கிட்ணன் ரை அக்காவும் வர்தா. எங்கடை அக்காவோடை அவ கனேக்க கேரம் கதை கதை எண் டு கதைச் சா. மெதுவாத்தான் கதைச் சினம். என்னைக் கண்ட உடனே கதைக் கிறதை கிப்பாட் டினம். அக்கா "நீ போய் வெளியி2ல விளையா டென்டா? எண்டு என்னேக் க2லக்கிற. எனக்கு கோவம் கோவமாய் வரும்.
கிட்ணன் ரை அக்கா கூடாது. வந்தா போகவே மாட்டா. ரெண்டு பேரும் சேர்ந்து சிரி சிரி எண்டு சிரிக்கினம். சிரிச்சிட்டுப் போகட்டும்; எனக்கென்ன. கிட்டிணன்ரை அக்காவின்ரை நகையெல்லாத்தை யும் அக்கா போட்டுப்போட்டு பார்த்தா, அம்மா வின் ரை சீலையெல்லாம் அலுமாரியிலை இருந்துஎடுத்து அக்சா உடுத்துப் பார்த்தா. கண்ணுடியிலே அக்கா தன்?னப் பார்த்துக் கொண்டேயிருந்தா. ஏனெண்டு கேட்டன், 'அப்படித்தான்’ எண்டு சொன்ன.
இந்த அக் காஇப்படித்தான்; கிட்டணன்ரை அக்கா வர்தா என்னுேடை கதைக்கவே மாட்டா. நான் குசி னிக்குப் போய் குஞ்சியாச்சியை கேப்பன்.
குஞ்சியாச்சி குசினியிலே பலகாரம் சுட்டுக் கொண்டு இருந்தா. எனக்குச் சாப்பிட இவ்வளவு பல காரம் தந்தா. கான் இதை அம்மாவிட்டை சொல்லமாட்டன். குஞ்சியாச்சியை எனக்கு பிடிச்கும்; எனக்கு கேக்கிறது எல்லாம் சொல்லுவா. அக்காவை

149
பொம்பிளை பார்க்க வருகின மாம். இந்தப் பலகார மெல்லாம் அவைக்குத் தானும்!
குஞ்சியாச்சி நல்லவ. என்னைக் கொஞ்சிறபோது மாத்திரம் கூடாது. அவ வாயெல்லாம் வெங்காயம் மணக்கும். அக்கா மெதுவாய்த்தான் கொஞ்சு வா. கன்னம் பட்டுப்போல இருக்கும். ஆன அப்பா முகம் குத்தும். சொர சொர எண்டு இருக்கும். பள்ளிக் கூடத்திலே சிலேட்டுப் பெஞ்சில் தீட்டுவமே சீமெந்து படி, அதைப் போல.
எனக்கு அப்பாவை பிடிக்கா. வெள்ளிக்கிழமை மாத்திரம் பி டிக்கும். ஏனெண்டால் என்?னக் கோயி லுக்கு கூட்டிக்கொண்டு போவார். கனேக்க கடலையெல் லாம் வாங்கித் தருவார்.
. இண்டைக்கு எனக்கு புதுச் சட்டையெல்லாம் அக்கா போட்டுவிட்டா. புழுதியி2ல இறங்கி விளை யாடினுல் கால் முறிச்சிப் போடுவன் எண்டு அக்கா சொன்ன.
எல்லாம் பொய். அக்கா அடிக்கவே மாட்டா; மெதுவாத்தான் அடிப்பா.
அக்கா, அச்சா அக்கா எல்லே, குஞ்சியாச்சி யிட்டை கொஞ்சம் பலகாரம் வாங்கித்தா எண் டு கேட்டன். அக்கா, இப்ப வேண்டாம். அவையெல்லாம் வந்து போனப் பிறகு சாப்பிடலாமெண்டு சொன்னு. ஆரெல்லாம் எண் டு கேட்டன். அக்காவுக்கு முகம் எல்லாம் சிவந்து டோச்சு.
அக்கா புதுச் சீ2லயெல்லாம் கட்டிக் கொண் டிருக்தா, அக்கா கல்ல வடிவு. கான் கட்டிப் பிடிச்சு அக்கா கழுத்திலே கொஞ்சினன், சீ. அப்படி நீ கொஞ்சக் கூடா தெண்டு சொன்னு.

Page 76
150
குஞ்சியாச்சி எண்டா அப்பிடிச் சொல்லவே l drti L T.
லெச்சுமி இண்டைக்கு வர இல்லை.
ஏன் குஞ்சியாச்சி லெச்சுமியைக் கூட்டிக்கொண்டு வர இல்லை, எண்டு கேட்டன். உண்மையாகத்தான் கேட்டேன். குஞ்சியாச்சி சிரிச்சா, ஏன் நீயும் பொம்பிளை பார்க்கப் பொறியோ எண்டுகேட்டா.
பொம்பிளை பார்க்கிற தெண்டால் என்ன?
புதுப்புது ஆக்களெல்லாம் வந்தினம்; ஒரு பென்னம் பெரிய கார்லே அவ்வளவு பேரும் வந்திருக் தனம். நான் அம்மாவின் ரை சீ2லயைப் பிடிச்சுக் கொண்டு நிண்டன்.
அம்மா பறிச்சுக் கொண்டு போய் அவை எல்லாரை யும் கூப்பிட்டு உள்ளுக்கு இருத்தின. ஒரு மாமி கூட வந்திருந்தா. கான் அக்காவோடை போய் இருந்தன். அக்கா என்னைத் தன்னேடு இழுத்து வைச்சுக் கொண்டா.
அக்கா புதுசு புதுசாய் 75 கையெல்லாம் போட் டிருந்தா-'இதெல்லாம் ஆற்றை ககையக்கா எண்டு கேட்டன்; மெல்லத்தான் கேட்டன், "சீ பேசாமல் இரடா எண்டா அக்கா. அந்த மாமி என்னை என்னை உத்து உத்துப் பார்க்கிற,
அந்த மாமி கூடடாது. ஆணு அக்கா அவளோடை தான் கதைச்சா; கணநேரம் கதைச்சா. பலகாரம் எல்லாம் கொண்டுபோய் வைச் சா.
முன் வீட்டிலே இருக்கிறரே கொணமாமா, அவரைப் போல ஒரு மாமாவும் வந்திருக்கிறர். ஆம்பி2ளயள் எல்லாரும் தலைவாசலிலேதான் இருக் கினம்; அந்த மாமாவின்ரை அப்பாவும் அங்கைதான்

5.
இருக்கிறர். அவைக்கும் அக்காதான் பலகாரம் குடுத்தா. அந்த மாமா அக்காவையே பார்த்தார். அக்கா ஓடிவந்திட்ட T.
அந்த மாமா என்னைக் கூப்பிட்டார். கை காட்டித் தான் கூப்பிட்டார். கான் போகவே இல்லை. அப்பா, வாடா எண் டு உறுக்கினர். நான் பயந்திட்டன்.
அப்பாவும், அக்த மாமாவின் ரை அப்பா, அவரும் கதைச்சினம். இருந்திட்டு ரண்டு பேரும் பிலத்து சத்தம் போட்டினம். கடைசியாய் அப்பா கோபமாய்ப் பேசினர். அம்மா அப்பாவை பேசவேண்டாம் அப்படி எண்டு சொன்ன. அக்கா அழுகிறது போலே சோர்ந்து போய் இருந்தா. பாவம் பாவமாயிருந்தது.
நான் முறுக்கை எடுத்துக் கடிச்சன்; மெதுவாத் தான் கடிச்சன். படக்கெண்டு சத்தம் போட்டது. அந்த மாமா திரும்பிப் பார்த்தார்; எனக்கு வெக்க மாய்ப் போச்சு .
.இண்டைக்கு வகுப்பு வாத்தியார் வர இல்2ல. எல்லாரும் சத்தமாய்ப் போட்டம். பற்பன் தான் கூடச் சத்தம் போட்டான். ஆன தலைமை வாத்தியார் எல் லாரையும் தான் வாங்கு மேலே ஏத்திவிட்டார்; காலெல் லாம் வலிச் சுது. தலைமை வாத்தியார் உயரமாய் இருப்பார். பிரம்பு வைச்சிருப்பார்: அவருக்கு ஒண்டுமே தெரியாது.
பள்ளிவிட்ட நேரம் மழை எல்லாம் தூறிச்சு. *மழையே மழையே மெத்தப் பெய், வண்ணங் கல்லு தூரப் பெய்’ எண்டு நானும் கிட்ணனும் பாடினுேம்; மழை பெய்யவே இல்லை. & "கொக்குவில் கிராமச் சங்கம் எண்டு பலகையிலே எழுதி வைச் சிருக்குது. ஏண்டா கிட்ணு, கிராமச் சங்கம் எண் டா என்னடா எண் டு கேட்டன். அவன்

Page 77
152
தனக்குத் தெரியாது எண்டு சொல்லிப் போட்டு ஓடி விட்டான். கிட்ணனுக்கு ஒண்டுமே தெரியா.
வீட்டிலே அம்மா அப்பாவோடு சண்டை பிடிச்சா. அப்பாவும் பெலத்துச் சண்டை பிடிச் சார். எனக்குப் பயமாயிருந்தது. அக்காட்டை ஒடினேன்; அக்கா கூடத்திலே இருந்து அழுதுகொண்டு இருந்தா. 'அக்கா, அக்கா எண் டு கூப்பிட்டன்; அவ பேசவே இல்?ல. சீதனம் சரியாய் பேசாமல் ஏன் பொம்பி2ள பார்க்க ஆக்களை கூப்பிடுவான் எண்டு அம்மா கத்தின. அப்பாவும் என்னவோ கத்தினர்.
எதுக்குத் தான் சண்டை எண் டு ஒண்டு இருக்குதோ?
A மண்ணெண்ணெய்க்காரன் வந்தான். கூ கூ எண்டு ஊதினுன். நான் அவனைப் பாக்கத்தான் ஒடினேன். ஒழுங்கையிலே கொண மாமாவும் நிண்டார்; என் 2னப் பார்த்துச் சிரித்தார்; கொண மாமா நல்ல வடிவாய் இருக்கிறர்.
கொண மாமா, நீ என்ரை வீட்டுக்கு வாறியா எண்டு கேட்டார். நான் ஒம் எண்டு தலை ஆட்டினன்.
கொண மாமா பெரிய பெரிய புத்தகமெல்லாம் படிக்கிறர். எல்லாம் இங்கிலீசு பொத்தகம். எல்லாமும் கூடாது. ஒரு படம் கூட இல்லை.
படம் ஒண்டுகூட இல்லையா எண்டு கேட்டன். படமா எண்டு கேட்டு கொணமாமா சிரிச் சார். புதுசு புதுசா படம் எல்லாம் காட்டினர். அந்தப் பெட்டி நிறையப் படம் படமாய் வச்சிருக்கிறர். மாடு படம், குதிரை படம், ஏரோப்பிளேன் படம் எல்லாம் கூட
கீறி வச்சு இருக்கிறர். என்ரை படம், அக்கா படம் கூடக் காட்டினர்.

153
அக்கா படத்தை அக்காவுக்கு காட்டி போட்டு வரட்டா எண் டு கேட்டன். ஒ. .வேணுமெண் டால் கொண்டு போய் காட்டு; ஒரு கடுதாசியும் தாறன் அதையும் காட்டுறியா எண்டார்.
நான் "ஒ எஸ்’ எண் டன்.
a e > e so அம்மா வெங்காயம் வெங்காயமா உரிக்கிரு. அவவுக்கு கண்ணிரே வர இல்லை. நான் ஒண்டுகூட உரிச்சு முடியல்லை. அழுகை அழுகையா வந்தது. அப்பா இஞ்ச வாடா எண்டு கூப்பிட்டார். நான் கிட்டப் போனேன். முதுகிலே 'பளார்’ ‘பளார்? எண்டு அடிச்சார். அதுக்கிடையிலை அம்மா ஒடி வந்து அப்பாவை மறிச்சா. அப்பா, நீ தான் பிள்ளையை கெடுக்கிறப் எண்டு பேசினர்; அம்மா, அவனுக் கென்ன தெரியும், குழந்தைதானே எண் டா. இனிமேல் மாமா வீட்டை போவுயாடா போவுயாடா எண்டு உறுக்கினர். நான் இல்லை இல்லை எண்டு பயத்தி2ல கத்தினன். அப்பா உடனே போட்டார். அம்மா முதுகைத் தடவி விட்டா, பலகாரம் எல்லாம் கூடத் தர், தா.
நடுச்சாமம் போல அப்பா அடிக்க வந்தார். ாநான் திடுக்கிட்டு முழிச்சுப் பார்த்தன், ஒண்டுமே தெரிய இல்லை. எனக்குப் பயம் பயமாய் வந்தது. இருட்டிலே அக்காவிட்டை தடவி தடவிப் போனேன். அக்கா தலைகாணி எல்லாம் ஈரமாயிருந்தது. அக்கா விக்கிவிக்கி அழுகிற சத்தம்தான் கேட்டுது. எனக்குப் பயமாயிருந்தது.
அக்காவைத் தொட்டுப் பார்த்தன். அக்கா முகத்தைக் காண இல்லை. ஏன் அக்கா அழுகிறய எண்டு கேட்டன். அக்கா கதைக்க இல்2ல. அக்கா, என்ரை அக்கா எல்லே. இனிமேல் அந்த மாமாட்டை

Page 78
154
யிருந்து ஒரு கடுதாசியும் வாங்கியர மாட்டன்; என்ரை அக்கா எல்லே.
அப்பவும் அக்கா கதைக்க இல்லை. 'எனக்குப் பயமாயிருக்கு அக்கா. . என்னைக் கட்டிப்பிடி அக்கா
"எண்டு சொன்னன். அக்கா குப்புறப்படுத்துக் கிடந்தா; திரும்பவே இல்லை. தடவிப் பார்த்தன்; முகமெல்லாம் கனேஞ்சு கிடந்தது.
*அக்கா, நீ என்னுேடை கோவமா? எண் டு கேட்டன்.
அக்கா அப்படியே என்னைக் கட்டிப் பிடிச்சுக் கொஞ்சின. கன்னத்திலைதான் கொஞ்சின. கொஞ்சம் கொங்தது.