கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: குமரன் 1973.02.15

Page 1
O
GLDTLG FF
தொண்டைக் கரப்ப
கவிதைாடும் வானம் ஜெயகாந்தனின் பாத் சோஷலிசமும் கம்யூன் al திரைப்படமும் அரசிய குடும்பத்தின் தோற்ற யாருக்காக? கேள்வி??? பதில்
பெப்ரவரி 15, 1973
விலை 30 சதம்
 
 
 
 

JL flலிசமும்
வீரவரலாறு புதியவை படைப்போம் பாடிகள் - 2 திரங்கள் ரிசமும் பலும் Lib

Page 2
=-----
1971 ஏப்ரல் கிளர்ச்சியின் பின்னர் பல புதிய நடவடிக்கை கள் அரசினல் எடுக்கப்பட்டன. அவற்றில் ஒன்று 6ஆம் வகுப்பி லிருந்து புதிய பாடத்திட்டங்களை செயற்படுத்துவதாகும். ஒன்றரை ஆண்டு முயற்சியின் பின் அண்மையில் வெளிவந்த 6ஆம் வகுப்புக் குரிய தமிழ் 6 என்ற நூல்பற்றி தற்போது பரவலாக ஆராயப் பட்டு வருகிறது. பல்வேறு எதிர்ப்புகளும் கண்டனங்களும் இப் பாடநூல் பற்றிக் கூறப்படுகின்றன.
*அபிவிருத்தியடையும் நாடுகளின் புதிய தேவைகளுக்கு ஏற்ற வாறு, நமது கல்வி முறை புதுக்கி அமைக்கப்பட்டுள்ளது. என்ற நூன்முகத்துடன் தமிழ் 6 ஆரம்பிக்கிறது. உண்மையில் நாம் எதிர்பார்ப்பது சோஷலிச அரசு முறை; அதைக் கட்டி எழுப்பத் தக்க சரியான அறிவு ஆகியவையாகும்.
அதற்கு இப்பாட நூல் பயன்படுகிறதா?
கல்வியின் நோக்கம் பற்றி நாம் எதிர்பார்ப்பது இரண்டு. ஒன்று சரியான அறிவைப் போதிப்பது இரண்டாவது நாட்டின் உற்பத்தியை உயர்த்தத்தக்க கல்வி.
சரியான அறிவு என்பது வரலாற்று விஞ்ஞான ரீதியான அறிவாகும். சமுதாய வளர்ச்சி, தேய்வு ஆகியவற்றைப் பிரித் தறிந்து மனித சமுதாயத்தை பொதுமை நோக்கோடு வளர்க்கும் அறிவாகும். அக்கல்வி உற்பத்தியை உயர்த்தும் நோக்கோடு இயல் பாக அமையும்.
இன்று தமிழ் 6 பற்றி கண்டிப்போர் யாவரும் கவனிப்பது மொழி நடை, சொற்பிரயோகம் போன்ற உருவம் பற்றிய பிரச்சனை, பிற இன, மத, மொழி ஒருமைப்பாடு பாட நூலில் அவசியமா என் பனவாகும். இத்தகைய ஆராய்ச்சி எல்லையற்றது. கற்பணு வாதிகள் சரி, தவறு என்று முடிவின்றி விவாதித்துக் கொண்டே யிருப்பர். இது குண்டுசட்டியில் குத்துக் கரணம் போடும் முயற்சி யாகும். இம்முயற்சியே தற்போது நடைபெறுகிறது; இது தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டேயிருக்கும்.
எம்மைப் பொறுத்த வரையில் இந்நூலிலுள்ள பாடங்கள் சோஷலிச சமுதாயத்தைக் கட்டிஎழுப்பத் துணைபுரிகின்றனவா என் பதே. சோஷலிசம் என்றதும் மாணவருக்கு அரசியலா என்று ஆத்
- 2 -

திரமடையக்கூடிய ஆசிரியர்கள் உள்ளார்கள். இவர்கள் இதுவரை காலமும் தனியுடைமையை அடிப்படையாகக் கொண்ட நிலவுடை மைக்கும் முதலாளித்துவத்திற்கும் சேவைசெய்தவர்களாவர். அவர் கள் புதிய கல்வி, புதிய சமுதாயத்திற்கு அத்திவாரமிடும் கல்வியை எதிர்க்கவே செய்வர்.
பாடநூலின் ஆரம்பப் பகுதியில் தமிழ், சிங்கள, இஸ்லாமிய விகடக்கதைகளுக்கு (நாட்டார் கதைகள்) அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளன. அத்தோடு இந்து புத்தம், இஸ்லாம், கிறிஸ் தவம் ஆகிய மதங்களுக்கும் இடம் தரப்பட்டுள்ளன. மதவிளக்கங் களும் இடம் பெற்றுள்ளன. இவை தேசிய இன, மத ஒருமைப் பாடு என்ற கொள்கையின் அடிப்படையாகும். இலங்கையில் பாட நூலில் இம்முறை கையாளப்பட்டது இதுவே முதல் தடவையாகும். சிங்கள கமரால, அந்தரே, பஞ்சதந்திரம், தெனலிராமன் கதைகள் ஆரம்பத்தில் இடம்பெற்றுள்ளன. இவ்விகடக் கதைகள் நாடோடியாக வந்த நிலவுடைமைச் சமுதாயக் கதைகள். இளம் சிருருக்கு ஆர்வமூட்டும் கதைகளே. ஆயினும் இக்கதைகள் மாண வர்களின் எண்ணத்திலேயோ சிந்தனையிலோ எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்திவிடமாட்டா. எவ்வித சமுதாய வாழ்வுமுறை, அறிவை இவை போதிக்கின்றன என்ற விளக்கமே அடிக்குறிப்புகளில் தரப் படவில்லை. வெறும் ஆர்வமூட்டும் விகடக்கதைகள் சரியான அறி வுக்கோ, உற்பத்தியைப் பெருக்குவதற்கோ, அல்லது அபிவிருத்தி யடையும் நாடுகளின் தேவையை எவ்வாறு பூர்த்தி செய்கின்றனவோ என்பதுதான் தெரியவில்லை.
மதக் கட்டுரைகளில் மதங்கள் பற்றி ஆழ்ந்த தத்துவங்கள் கூறப்படுகின்றன. பத்துவயதான பாலகர்கள் இவற்றை எவ்வாறு கிரகித்துக் கொள்வரென்பது எடைபோட வேண்டிய வினவாகும்.
இத்தகைய மத தத்துவங்களிலும் பார்க்க சோஷலிசத்தைக் காட்டும் மார்க்சிச தத்துவம் மிக எளிதானதாகும். இது கற்பனை யானதல்ல. வரலாற்று விஞ்ஞான ரீதியானதாகும்; உலக யதார்த்த உண்மைகளை அடிப்படையாகக் கொண்டது. இத்தத்துவம் இது வரை காலமும் பாடசாலைகளிலே போதிக்கப் படவில்லை. அதனல் ஆசிரியர்களே அறியார்.
தன்னல மறுப்பு" என்ற சீன நாடோடிக் கதை மட்டும் ஒரளவு உண்மையைக்கூறி நிற்கிறது. தவறுதலாக இக்கதை இந்நூலில் இடம்பெற்றுளதோ தெரியவில்லை!
மேற்றிசைக் கடவுளிடம் கடுமையாக உழைத்தும் ஏன் ஏழை யாக இருக்கிறேன்?’ என்ற விஞவுடன் செல்லும் இளைஞன் அருள் பெற்றுவந்து "பணக்காரர் இல்லாவிட்டால், ஏழைகள் கொடு மைக்கு ஆளாகமாட்டார்கள்" என்று முடிவுசெய்து பணக்காரர் களை செத்தொழியச் செய்கிருன். அதன்பின் "ஏழை மக்களின் வாழ்க்கை தேன் போன்று இனித்தது".
எமது ஆசிரியர்களுக்கு இக் கருத்து கசக்கலாம். எப்படி? என்று கேட்கும் மாணவர்களுக்கு சரியான விளக்கம் கூறமுடியாதும் போக லாம். es

Page 3
அச்சுக்கலேயில் 60 ஆண்டுகள் அனுபவம் பெற்ருேர்
* அழகான
* அவசர
* வர்ண
அச்சுவேலைகளுக்கு
எம்முடன் உடனே தொடர்புகொள்ளுங்கள் !
குமரன் அச்சகம்
201, டாம் வீதி : ; கொழும்பு-12.
தொலைபேசி : 21388

ஒரு குளத்தங் க்ரையில் ஒரு தவளை தன் நீண்டநாக்கை வெளியில் நீட்டிக் கொண்டு மெளனமாக இருந்தது.
அந்த இடத்தில் ஈக்கள் ஏராளமாகப் பறந்து திரிந் தன. சந்தோசமாகப் பறந்து வந்த ஈ ஒன்று அந்தத் தவளையின் நாக்கில் விழுந்துவிட்டது. அது உடனே எழுந்து இறக்கைகளை அடித்துப் பறக்க முயற்சித்தது. தவளையின் நாக்கில் உள்ள பசை அதை எழும்ப விடவில்லை.
Gıcı"G, T
- பாலன் -
*மோசக்காரத் தவளையே! நீ என்னைக் கபடத்தனமாகப் பிடித்து விட்டாய்! நீ செய்வது அநீதி' என்று ஈ கோபத்தோடு
கத்தியது. . .
அதற்குத் தவளை, "நான் என்ன அநீதி செய்துவிட்டேன்? உன்னை என் நாக்கில் வந்து விழும்படி கூறினேனே? அல்லது உன் இறக்கைகளை வெட்டி, உன்னை என் நாக்கில் விழுத்தினேனே? நீ தானே பறந்துவந்து என் நாக்கில் விழுந்தாய்?" என்று அமைதி யாகக் கூறியது. V "நீ ஏன் உன் நாக்கை நீட்டிக்கொண்டிருந்தாய்?' என்று
ஆத்திரப்பட்டது ஈ.
**மோட்டு ஈயே! நீான் என் இடத்தில், என் விருப்பப்படி இருக்க உரிமை இல்லையா? சுதந்திரம் இல்லையா? நீ இந்த வான் வெளியெல்லாம் பறக்க எவ்வளவு சுதந்திரம் உண்டோ, அவ்வளவு சுதந்திரம் எனக்கும் உண்டு. இது சனநாயக நாடு, ஒவ்வொரு உயிரும் தன் விருப்பப்படி வாழச் சுதந்திரம் உண்டு இதை மனித வார்த்தையில் கூறினல் ஒவ்வொருவனுக்கும் தனி மனித சுதந்திரம் உண்டு. எனக்கும் தனித் தவளைச் சுதந்திரம் உண்டு. நீதான் என் தனித் தவளைச் சுதந்திரத்தில் வந்து தலையிட்டு விட்டாய். நீதான் குற்றவாளி' என்று மிக நிதானமாகக் கூறியது. * அந்த மோட்டு ஈ யோசித்துப் பார்த்தது. தவளை கூறியதில் உண்மை இருப்பதுபோல் பட்டது.
**அதற்கு நீ என்னைத் தண்டிக்கப்போ கிருயா?" என்று ஸ் கேட்டது. *
'இல்லை, இல்ல, ஆனல் என் நாக்கை மட்டும் உள்ளே இழுக் கப் போகிறேன்" என்று கூறி பதிலுக்குக் காத்திராமல் தன் நாக்கை சுதந்திரமாக உள்ளே இழுத்துக்கொண்டு, சற்று நேரத் தில் திரும்பவும் வெறும் நாக்கை வெளியே நீட்டிக்கொண் டிருந்தது.

Page 4
- பெருமாள் -
வியத்நாம் யுத்த நிறுத்த உடன்படிக்கை வீர வியத்நாமியரின் வெற்றியே. பத்து ஆண்டுகள் உலகின் மிகப் பெரிய ஏகாதிபத்தியத் துடன் வியத்நாம் மக்கள் போரிட்ட வீர வரலாறு உலக வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்.
ஏகாதிபத்தியம் என்பது முதலாளித்துவத்தின் உச்சக்கட்டமா கும். அது ஒரு தனி நபரல்ல. ஏகாதிபத்தியம் என்பது ஒரு சமூக அமைப்பு. சுரண்டிக் குவித்து உற்பத்திச் சாதனங்களை லாப நோக் கோடு ஒன்று திரட்டும் அமைப்பு. அதற்கு மனிதாபிமான உணர் வுகள் கிடையாது. கொன்று குவிப்பதையும், பிறரது சொத்து, பொருட்களையும் உற்பத்திச் சாதனங்களை அழிப்பதையுமே தொழி லாகக் கொண்டது. வெளிநாட்டில் மார்க்கெட் தேடுவதும் உள் நாட்டு தொழிலாளரின் உழைப்பைச் சுரண்டுவதுமே இந்த ஏகாதி பத்திய அமைப்பின் தொழிலாகும்.
வடவியத்நாமில் குண்டு பொழியச் சென்ற விமானங்கள் சுட்டு வீழ்த்தப்படுவதைப் பற்றி ஏகாதிபத்திய ஆளும் வர்க்கத்தவர் கவலைப் பட மாட்டார்கள். புதிய விமானங்களை உற்பத்தி செய்ய உடனே ஒடர் கிடைக்கும் என்று மகிழ்வர். இறக்கும் விமானமோட்டிகள் கூலிப் படைகளே.
கல்லைத்தூக்கி தம்காலில் போடுவதே ஏகாதிபத்திய, முதலாளித் துவத்தின் செயலாகும். இவர்கள்'நாள்தோறும் தேய்ந்துவருவர்.
வியத்நாம் யுத்தம் ஏகாதிபத்தியத்திற்கும் சோஷலிசத்திற்கும் இடையில் நடந்த வர்க்கப் போரே. இப்போரில் வளரும் சக்தியான சோஷலிசத்தின் வெற்றி மனித வரலாற்றின் வளர்ச்சியைக் கோடிட் டுக் காட்டுகிறது. v
வியத்நாம் போர் பல உண்மைகளைக் காட்டி நிற்கிறது: (1) எப் பெரிய ஏகாதிபத்தியத்தாலும் ஒரு சிறிய நாட்டு மக்களது விடுதலைப் போராட்டத்தை நசுக்கிவிட முடியாது. (2) அமெரிக்க ஆளும் வர்க் கம் எத்தனை பலம் வாய்ந்ததாயினும் உள்நாட்டு மக்களது குரலை

அடக்கிவிட முடியாது (3) மக்கள் யுத்தத்தின் முன் எத்தகைய பலம் வாய்ந்த ஆயுதமும் போர்முறையும் நிற்க முடியாது. போர் நிறுத்த உடன்படிக்கையால் ஏகாதிபத்தியம் முற்ருக வீழ்ந்து விட்டது என்று நம்பிவிடப்படாது. அவர்கள் பல்வேறு தந்திரங்களையும் போர்முறை களையும் கையாண்டுகொண்டேயிருப்பர். மீண்டும் வியத்நாமில்யுத்தம் ஆரம்பிக்கப்படினே, அல்லது மற்றேர் இடத்தில் தொடங்கப்படினே ஆச்சரியப்படுவதற்கில்லை. 2வது உலக யுத்தம், கொரியப்போர் வியத்நாம் ...!
வர்க்கப் போராட்டம் கூர்மையடையும்போது யுத்தம் தவிர்க்க முடியாததாகிறது. ஆயினும் இவற்றிடையே ஓர் பெரிய உண்மை மறைந்திருக்கிறது. ஒவ்வொரு யுத்தமும்-வர்க்கப் போரிலும் உலகப் பாட்டாளி முன்னேறி வருகிருன். நிலப்பிரபுத்துவம் முதலாளித்து வம் ஆகிய தளைகள் அறுபட அவன் சோஷலிசத்தை நோக்கி ஏறுநடைபோடுகிருன், is
ஜெயகாந்தனின் பாத்திரங்கள்
கலை, இலக்கியம் மக்களுக்காகவே என்ற கருத்தை எதிர்ப்பவர் கூட்டம் இப்பொழுது வலிவிழந்துவிட்டது. மக்கள் என்பவர் யார்? வர்க்க வேறுபாடு உள்ள சமூகத்தில் எல்லோரையும் மக்கள் என்ற வார்த்தையில் குறிப்பிட்டுவிட முடியாது; மனித இனம் முழுவதிற் கும் பொதுவான இலக்கியம் படைக்கவும் முடியாது.
எழுத்தாளன் தன் மன உளைச்சலை எழுதுவதுதான் இலக்கியம் என்று கருதும் ஜெயகாந்தன் போன்றவர்கள் வர்க்க வேறுபாடுகளை கவனியாமல் மனிதர்களின் குண இயல்புதாம் தமது கதைகளில் பிர தானம் என்று கூறினும் அவர்கள் படைக்கும் வெவ்வேறு வர்க்க நிலையில் உள்ள கதாபாத்திரங்களிலும் தம்மையே பிரதிபலிக்கிருர் கள். இதனல் கதாபாத்திரங்களுக்கிடையில் வேறுபாட்டைக் கான முடிவதில்லை. - ❖፡
ஜெயகாந்தனின் தற்போதைய படைப்புக்களில் ஜெயகாந்த னின் இயல்புதான் வெவ்வேறு கதாபாத்திரங்களிலும் தோன்று கிறது. உதாரணமாக, 'ஒரு நடிகை நாடகம் பார்க்கி(?ள்’’ என்ற கதையில் வரும் நடிகையின் இயல்பிலும் அவள் கணவனின் இயல் பிலும் அதிக வேறுபாடு இல்லை. இவ்விரு கதாபாத்திரங்களில் மட்டு மில்லாமல் ‘ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம் கதையில் வரும் பாத்திரங்களில் கூட ஜெயகாந்தனே தோன்றுகிருர் அல்லாமல் ஒரு வீடோ, ஒரு உலகமோ அவதிபுறும் மக்களோ அங்கே தெரியவில்லை.
-வி, ஆனந்தராம்

Page 5
சோசலிசமும் கம்யூனிசமும்
YLLLLLLLLLLLLLLLLYLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
அன்பின் சுகுணுவிற்கு,
உனது கடந்த கடிதத்தில் சோசலிசம் என்ருல் என்ன? கம்யூ னிசம் என்ருல் என்ன? இவையிரண்டும் வேறுபட்ட அமைப்புகளா? இவற்றிற்கிடையிலுள்ள ஒற்றுமை வேற்றுமையென்ன? எனப்பல கேள்விகள் கேட்டிருந்தாய்.
சோசலிசத்தையும் கம்யூனிசத்தையும் ஒரு கரும்புத் தடிக்கு உவமானமாகக் கூறலாம். ஆச்சரியமாக இருக்கிறதா? கரும் பின் நுனிப்பகுதி சிறிது கசக்கும்; ஆனல் அடிப்பகுதியோ நன்ரு க இனிக்கும். நுனிப்பகுதிதான் சோசலிசம். அடிப்பகுதிதான் கம்யூனிசம்! இரண்டும் ஒரே அடிப்படையிலிருந்து தோன்றி யிருந்தாலும் அடி நுனி போன்று ஒருசில வித்தியாசங்கள் இருக்கவே செய்யும். இதனுல்தான் கம்யூனிசதத்துவத்தின் தந்தையர்களான கார்ல் மார்க்சும் ஏஞ்சல்சும் கம்யூனிசத்தின் ஆரம்பநிலையே சோலிசம் எனக்கூறி வைத்தார்கள். அதாவது சோசலிசத்திலிருந்து கம்யூனிசம் பிறக்கிறது.
சோசலிசமும் கம்யூனிசமும் ஒரு பொருளாதார அடிப்படை யில் தோன்றுபவையாகும். அதாவது உற்பத்தி செய்யும் சக்திகள் தனிப்பட்ட முதலாளிகளினதும், நிலவுடைமையாளர்களினதும் கைகளிலிருந்து தொழிலாளி விவசாயிகளின் கைகளுக்கு மாறு கின்றன. முன்னரது செல்வாக்கு சரிய தொழிலாளி விவசாயின் கை ஓங்குகிறது. இருப்பினும் சகலரினதும் தேவைகளை உடனடியாகப் பூர்த்தி செய்யமுடியாதல்லவா? எனவே சோசலிசத்தில் திறமைக்கு முதலிடம் கொடுக்கப்படுகிறது; தேவைக்கல்ல. திறமையான, கஷ்ட மான, அதிக ஊக்கம் தேவையான உற்பத்தி உழைப்பிற்கு அதிக சம்பளம் கொடுக்கப்படுகின்றது.
ஆல்ை கம்யூனிசம் மலரும் போது இவ்வேறுபாடு மறையும். கம்யூனிசத்தில் ஒவ்வொருவரது தேவைக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. மக்களின் தேவை முற்றுமுழுதாக பூர்த்தி செய்யப்படுகின்றது. எனவே வியாபாரம், கடன் பணம் என்பவை மறைந்து விடும்.
சோசலிசத்தில் ஒரு குறிப்பிட்ட சமுதாய பொருளாதார கலாச்சார சமவுடமையின்மை தவிர்க்க முடியாதது. இதனல்
سیہہ ، 8۔ -------

சோலிசத்தில் வர்க்கங்கள் தொடர்ந்தும் இருக்கும். இவற்றை மேலும் ஆராயும் போது தொழிலாளர், விவசாயிகள், கல்விமான்கள் (புத்திசீவிகள்) என மூன்று வர்க்கங்களாகப் பிரிக்கலாம். இருப்பினும் இவ்வர்க்கங்கள் மத்தியில் குழப்பங்களோ, வேறு புதுப்பிரச்சினைகளோ தோன்றுவதில்லை. ஏன் தெரியுமா? இவர்கள் யாவரும் ஒன்று சேர்ந்து தோளோடு தோளிணைந்து புதிய ஒரு சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதே இவர்கள் தலையாய பணியாக அமைவதால்தான். அத்துடன் கிராப்புற உடல் உழைப்பிற்கும், நகர்ப்புற அறிவின் உழைப்பிற்கும் இடையில் பேதம் இருக்கும். பெண்களுக்கு அளவிற்கதிகமான வீட்டு வேலைகளிருப்பதால் ஆண் பெண் சமவுடமை கூட இருக்காது. ஆனல் கம்யூனிசம் மலரும் போது இவையாவும் இருந்த இட்ம் தெரியாமல் மறைகிறது.
சோசலிச சமுதாயத்தில் அரசு அதிகாரம் பிரதான பங்கை வகிக்கும். அது சோசலிசத்தை உள்நாட்டு வெளிநாட்டு எதிரிகளிட மிருந்து பாதுகாப்பதுடன் மக்களின் சகல தேவைகளையும் பூர்த்தி செய்யும் பொருளாதாரத்தை வழிநடத்தும் கம்யூனிஸ்ட் கட்சியுடனும் தொழிற்சங்கங்களுடனும் மக்கள் இயக்கங்களுடனும் இணைத்து, புதியவொரு சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதில் முழு மூச்சாக ஈடுபடும்மேற்குறிப்பிட்ட அரசு அதிகாரம் மறைந்துவிடும். சோசலிசத்தின் கீழ் மக்கள் மத்தியில் தொடர்ந்து தற்பெருமை, அவா, தந்நலம், பிறர் செலவில் வாழமுற்படல் ஆதியன தொடர்ந்து இருந்து கொண்டேயிருக்கும். ஆனல் கம்யூனிச சமுதாயத்தில் ஒவ்வொரு தனிமனிதனின் சகல தேவையும் பூர்த்தி செய்யப் படுதலால் இவை அற்றுப்போய்விடும்.
பதில் போடு
அன்புடன் ஜெயம்
சுரண்டும் கூட்டம் "ஒன்றுண்டு பிரண்டு போகணும் அக்கூட்டம்." வயல்தனில் உழுதே அலுத்தாய் நீ இந்தக் கயவர்கள் இதயத்தை உழுதே பார் இர்க்கம் என்பது அங்கில்லை இரத்தம் உறுஞ்சும் அக்கூட்டம் பாட்டாளி வர்க்கம் வீறுடன் எழுந்தால் r பாரினில் ஏதடா தறிகெட்ட கூட்டம் -பாலச்சந்திரன்
, 9 ജ്ഞ

Page 6
a
வசந்த மாளிகையின் வரட்சி
(வெறும் கலை அழகு மூலம் மக்களை எத்தனை தூரம் மயக்கி, பணம் பறித்து, பிற்போக்கான கருத்துக்களைத் திணிக்கலாம் என் பதற்கு வசந்த மாளிகை என்ற திரைப்படம் அரிய எடுத்துக் காட் டாகும். . -
கவர்ச்சியான காதலர், ஆடம்பர உடை, மாளிகை, பாட்டு,
நடனங்கள், கலர், படப்பிடிப்பு நுட்பங்கள் . இவைதான் சிறந்த திரைப்படத்தின் லட்சணங்கள் என்ற தவருன கருத்து மக்களி டையே முதலீடு செய்யும் முதலாளிகளால் பரப்பப்படுகின்றன.
கூலியை உயர்த்தும்படி கேட்டும் விவசாயிகள் சவுக்கால் அடிக் கப்படுகின்றனர்; நாய்களால் விரட்டப்படுகின்றனர்; குடிசைகள் தீக்கிரையாக்கப்படுகின்றன. விமானத்தில் கதாநாயகன் பயணம் செய்யும் இக்காலத்தில் இப்படிக்காட்டுவது இன்றைய இந்திய விவ சாயிகளின் புரட்சிகர் உணர்வை வேண்டுமென்றே இழிவு படுத்துவ தாகும். பின்னர் ஜமின்தாரகதாநாயகனின் இரக்க சுபாவத்தா லேயே கூலி உயர்வு கிடைக்கிறது என்று காட்டுவதும் அவர்களைக் கேலிசெய்வதாகும். இந்திய ஜமின்தாரர் ஒழிக்கப்பட்டு, நிலவுடை மையாளர் விவசாயிகளின் புரட்சிகர எழுச்சியால் அஞ்சிவர் ழ்ந்து, இந்திய இராணுவத்தின் தயவை நாடும் இக்கால கட்டத்தில் வசநத மாளிகை கட்டமுயல்வது கேலிக்கூத்தாகும்.
கதையில், பாத்திரங்களிடை முரண்பாடுகள் அளவற்றவை. ஜமின் தாரிணி ஏழை வீட்டிற்கு பெண்கேட்டு சீர்சுமந்து செல்வது, 'உனக்காக மாளிகை" என்றதும் தூயகாதல் பேசுவது வேருேரு சாதாரணமானவனைத்திருமணம் செய்ய உடன்படுவது, தடைப்பட்ட தும் பழைய காதலனிடம் செல்வது, விவசாயிகளை அடிமையாக்கு வது, காமு கணக வாழ்ந்தவன் ஒரு பெண்ணுக்காக நஞ்சுண்பது, காதலனின் சிறுசொல் பொறுக்கமாட்டாது வசந்த மாளிகை ய்ையே துறந்து சாதாரண் பெண் ஒடுவது. இவ்வாறு பல.
அழகான செட்டுக்கள் ஆடம்பரமான கற்பனை வாழ்வு, வாணி பூரீயின் பல வர்ண உடைய ங்காரம், விளம்பரத்தில் பயன்படுத்திய காதல் உணர்வைக் காட்டும் கழுத்தில் உதடு பதிக்கும்போஸ், ஆப்ாச நடனங்கள், வழமையாக தமிழ்ப் படங்களில் அமைக்கப் படும் நாடக பாணிப்பேச்சுக்கள், ஆர்வம்தரும் அதீதக் கற்பனைகள் ஆகியவற்றின் மூலம் மயக்கமூட்டி மக்களிடம் பணம்பறிக்க கையா ளப்பட்ட ஏமாற்றுப்பொறியே வசந்த மாளிகை என்ற திரைப்பட மாகும். தொழிலாள, விவசாயிகள் இத்தகைய கலைஉருவ ஏமாற் றுக்களில் தொடர்ந்து விழந்து விடாது விழிப்பாக இருக்க வேண்டும், - ஆனந்தி
iO -
 

திரைப்படமும் அரசியலும்
போலிஷ் நாட்டு திரைப்பட விழா சென்ற மாதம் கொழும் பில் நடந்தது. அத்திரைப் படங்களைப் பார்த்தவர் வியப்படைந்தி ருப்பர். படங்கள் யாவும் ஒரு சோஷலிச நாட்டுத் திரைப்படங்க ளாகத் தெரியவில்லை. அமெரிக்கப் படங்கள் போலவேயிருந்தன. முதலாளித்துவ நாடுகளில் வெளிநாட்டுச் செலாவணிப் பணம் உழைப்பதற்காகத் தயாரிக்கப்பட்டவையாகவே தோன்றின.
அத்திரைப்படங்கள் மக்கள் வாழ்வைப் பிரதிபலிப்பவையாக அமையவில்லை. யாவும் கற்பனைப் படங்கள். தொழிலாள, விவசாயி களின் வாழ்வுப் போராட்டங்களை (படம்பிடிப்பவையாக இருக்க வில்லை. வெறும் வரட்டுக் கற்பனையாக, சூனியத்தைக் காட்டுவன வாகவே இருந்தன. எல்லாப்படங்களையும் பார்த்த நண்பர் ஒருவரி டம் விழாப்படங்கள் பற்றி தனித்தனியே கேட்டேன். படங்கள் யாவும் ஒருமுகமாக இருந்ததினுல் அவரால் தனித்தனி படங்களைப் பற்றி நினைவில் வைத்துக்கூற முடியவில்லை.
காதல், காமம், பாலுறவு ஆகிய மேல்மட்ட உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தன. அழகான பெண்களை கதைக்கு அவசியமின்றி நிர்வாணமாகப் பல இடங்களில் காட்டி னர். அண்மைய அமெரிக்கப் படங்கள் போல பாலுறவுச் செயல் களை தயக்கமின்றித் திரைப்படத்தில் காட்டுகின்றனர். திரைப்பட நுணுக்கங்களில் காட்டப்பட்ட கவனம் எதுவும் கதையமைப்பில், கருத்தில் செலுத்தப்படவில்லை. "விளையாட்டு" என்ற படத்தில் கண வனும் மனைவியும் தனித்தனியே ஒழுக்கக் கேடாக நடக்கின்றனர். இறுதியில் இவற்றைத் தெரிந்துகொண்டே ஒருவரை ஒருவர் மன் னித்து குடும்பமாக வாழ்கின்றனர். இப்படத்தை சோஷலிச நாட்டுப் படம் என்று கூறின் நிச்சயமாக அந்த அரசியல் அமைப்பில் ஏதோ தவறு இருக்கவேண்டும். -
அண்மையில் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்துவிட்டு அமெரிக்கா திரும்பிய செனட்டர் ஒருவர் கூறினர்: “சோஷலிச நாடுகள் என்று கூறப்படுபவை தற்போது தமது கருத் தைமாற்றி தனிஉடைமை, தனியார் உற்பத்தி ஆகியவற்றிற்கு இடம்தரத் தொடங்கிவிட்டனர்",
இத்திரைப்பட விழாவைப் பார்த்தவர் அந்நாட்டினரின் அரசி யல் மாறுதலையும் எளிதில் உணர்ந்துகொண்டிருப்பர். - தியாகு
lv 11 مسس

Page 7
Gs, அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசிகள்கூட அடிக்கடி
.
உயர்த்தப்படுவதேன்?
ம. உசெய்வின், பதுளே.
முக்கிய காரணங்கள் வருமாறு:
1) எமது சமுதாய அமைப்பில் அத்தியாவசியத் தேவையை
ஒட்டி உற்பத்தி செய்யப்படுவதில்லை லாபத்தைக் குறிக் கோளாகக் கொண்டே உற்பத்தி நடைபெறுகிறது. 2) முதலாளித்துவ நாடுகள் அதிக லாபம் சேர்க்க (தொழி லாளருக்கு தமது சுரண்டலில் பங்குகொடுத்து மட்டுப்படுத் தவும் தமது ஏற்றுமதிப் பொருட்களின் விலைகளை உயர்த் துகின்றன. 3) சுவெஸ் கால்வாய் மூடியதாலும் கப்பல் முதலாளிகளின் ஒற்றுமையாலும் ஏற்றியிறக்கல் செலவுகள் அதிகரிக்கின்றன. 4) உள்நாட்டுக் கடன்களுக்கு வட்டி 5) வெளிநாட்டுக் கடன்களின் வட்டி 6) உற்பத்திச் சாதனங்கள் தனியார்கையில் இருப்பதால்
பத்துலட்சத்துக்கு மேற்பட்ட உழைப்பாளிகளின் உழைப்
பைப் பயன்படுத்தத் தவறுகிருேம்.
7) அத்துமீறிய அரசின் வரிவிதிப்புகள் (அடுத்த பதிலையும் படிக்க).
கே. முதலாளிகள்மீது அதிக வரிவிதிப்பது பொதுமக்களைப் பாதிக்
குமா?
சி. பொன்மலர், கண்டி.
. முதலாளிகள்மேல் அதிக வரிவிதிப்பதை மேலெழுந்தவாரி
யாகப் பார்க்கும் பொதுமக்கள் பாராட்டவே செய்வர். முதலாளித்துவ பொருளர்தார நிபுணர்கள் கூட அரசுக்கு அரசிரை சேகரிக்க இவ்வாறே அறிவுரை கூறுவீர். உண்ம்ை யில் முதலாளித்துவ அரசியலமைப்பு நிலவும்வரை தொழி லாள, விவசாயிகளுடன் சமரசம் காக்கும் அரசு செய்யும்
நடவடிக்கைகளை முதலாளிகள் முற்ருக எதிர்க்கமாட்டார்
கள். சட்டங்களுக்கு கீழ்ப்படிவர். உண்மையில் நடைபெறு வது யாதெனில் முதலாளித்துவம் தன்மீது விதிக்கப்படும்
வரியை தொழிலாள, விவசாயிகளின் தலையிலேயே கட்டிய
us
سست 12 سسس
sM,
WYS
3.
霍
6N
e

SSSSSSSSSSSSSSSSSiSSSSLSL SSSSSSSLSLSSLSLSSLSLLLLSSSL ܫܳܢܐ
* டித்துவிடுகிறது. விலைவாசிகள் ஏறுவதற்கு இதுவும் ஓர் கார ணமாகும். மிஸ் ரொபின்சன் போன்ற ஒரு சில பொருளா தார நிபுணர்களே முதலாளித்துவ பொருளாதார நிபுணர் களிடை இந்த உண்மையைத் தயங்காது கூறி, நிரூபித்து வருகின்றனர். முதலாளிகள் தமது வரிப்பழுவைப் பொது
* மக்கள்மேல் சுமத்துவர் என்பதை முதலாளித்துவ பொரு ளாதார பண்டிதர்கள் மறைத்தும் மறுத்தும் விடுவர். ஏனெ னில் பொருளாதாரக் கல்விகூட வர்க்க நலனுக்கு சார்பா கவே கற்பிக்கப்படுகிறது.
9ܓ
S& கே. அதிக வரி விதிப்பதன் மூலம் முதலாளித்துவத்தை அளித்து
சோஷலிசத்தை நிலநாட்ட முடியாதா? -
க. சின்னத்துரை, யாழ். ப. மேலே உள்ள கேள்வி, பதிலையும் படிக்க, மார்க்ஸிச சித் தாந்தப்படி இது சாத்திய மற்றதாகும். எந்நாட்டிலும் இது as நடைமுடைச் சாத்தியமானதும் கிடையாது. ஆயினும் இலங் கையில் முன்னர் மார்க்ஸிசம் பேசிய சிலர் இப்போது இவ் வாறு பேசிக் கொள்கிருர்கள். முதலாளித்துவம் என்பதும் ஒருவித சித்தாந்தமே. இச்சித்தாந்தத்தின் கரங்களில் ஆயுத பலமிருக்கும் வரை சோஷலிசத்தை நிலைநாட்ட முடியாது. * உடைமையும், மூலதனமும் குறையலாம்; தனியுடைமையைப் பேணும் எண்ணமும் கருத்தும் நீலைத்தேயிருக்கும். சோஷலி சத்தைக் கெர்ண்டு வருவதாகக் கூறிக்கொண்டு எடுக்கும் ஒவ் வொரு நடவடிக்கைக்கு எதிராகவும் இருவர்கள் செயலாற்று வர். பாராளுமன்ற அமைப்பு சமரசத்திற்கு பயன்படாத * போது தமது சர்வர்திகாரத்தை நிலைநாட்டவும் தயங்கார். சீனுவில் உடைமைகள் பறிக்கப்பட்ட பின்னரும் பூஷ்வா சிந்தனையை மழுங்கடிக்க ஒரு கலாசாரப் புரட்சியே நடத்த நேரிட்டதை யாவரும் அறிவர்.
墨
శకి, G: - பத்திரிகைச் சட்ட மூலம் பற்றி என்ன கூறுவீர் ? .
இ. கந்தசாமி, அட்டன். ப. மக்களிடையேயுள்ள பல தொல்லைகளையும் நெருக்கடிகளை யும் மறைக்க ‘பத்திரிகைச் சுதந்திரம்" என்ற இப்பொய் மைக் கூப்பாடு தற்போது அரசுக்கும் அவர் காக்கும் முத லாளிகளுக்கும் பயன்படுகிறது.
۔--۔ 13]. --س۔

Page 8
தொண்டைக் கரப்பன்
(SÚgŜîuu T —— Diptheria) -
Ar L-fatt Lif Galea) sör
தொண்டைக் கரப்பன் பெரும்பாலும் பதினைந்து வயதிற்கு உட்பட்ட பாதிப்பின்மை பெருத பிள்ளைகளைத் தாக்கும் நோய். இது இங்குமங்கும் தாக்கும் நோயாகவோ அல்லது பரவலாகவோ காணப்படலாம். இலங்கையில் இது பெரும்பாலும் இங்குமங்கும் தாக்கு நோயாகவே காணப்படுகின்றது. இது நகரப்புறத்தே கூடு 'தலாகவும் கிராமங்களிற் குறைவாகவுந் தாக்கஞ் செய்கின்றது. இற் றைக்கு ஐந்து வருடங்சளுக்கு முன்னர் வருடாந்தம் 1500 பேர்கட்கு மேல் இலங்கையில் இந்நோயால் தாக்க முற்றனர். சென்ற வருடத் தில் இத் தொகை 700 ஆகக் குறைவுற்றது, முப்பால் (Triple Vaccine) உள்ளீட்டம் இளம்பிராயத்தினருக்குப் பெருமளவில் வழங்கப்படுவ தன் பெறுபேருகும்.
இந்நோய்க்குக் காரணம் தொட்சின் (நச்சுப் பொருள்) வெளி யீட்டஞ் செய்யுங் கொறைணி, பற்றீரியம் டிப்தீரியே எனப்படும் பட்டீரியமாகும். இது மனிதனைத் தரிப்பிடமாகக் கொண்டுள்ளது.
ஒரு நோயாளியிடமிருந்தோ இன்றேல் கிருமிகாவியிடமிருந்தோ அல்லது இவர்களின் மேல்சுவாச உறுப்புக்களின் கழிபொருட்களா லுஞ் சருமத்தினுலும் அழுக்கேற்றப்பட்ட பாவனைப் பொருட்களா லும் இந்நோய் பரிமாறப் படுகின்றது. காய்ச்சப் படாத பால் மூலம் சில சமயங்களில் இந்நோய் பரிமாறப்படுவதும் உண்டு. இதற் குக் காரணம் பால் கறப்போர் கிருமி காவிகளாய் அமைதலே.
கிருமி சார்ந்து இரண்டு முதல் ஐந்து நாட்கள் சென்றபின் இந் நோயின் குணங்கள் தோன்றும்.
இந்நோய் தொண்டை முளை (Tonsis), தொண்டை, குரல்வளை, மூக்கு முதலிய உறுப்புக்களைக் கடிந்துறுத்தும் நோயாகும். சில சம யங்களிற் கண், காது, சருமம் மற்றும் ஏனைய சீதச்சவ்வு பொருந் திய உறுப்புக்களையுந் தாக்குவதாயமையும். குரல்வளைத் திப்தீரியா பாலருக்கும் இளஞ்சிருருக்கும் பேராபத்தைத் தருவதாகும். சுவாசக் குழாய் அடைபடுவதனலேயே ஆபத்துநிலை ஏற்படுகின்றது. இவற் றைவிட திப்தீரியா தொட்சின் நரம்புகளையும் இதயத் தசையங் களையுந் தாக்கியும் ஆபத்து ஏற்படுத்துகின்றது. இந்நோயின் மரண வீதம் சென்ற ஐம்பது வருடங்களில் எவ்வித மாற்றமுமடையாது 5% - 10% ஆகவே இருக்கின்றது.
இந்நோயை நிரூபிக்க, தக்க உறுப்புக்களிலிருந்து ஒற்றங்கள் எடுக்கப்பட்டு, ஊடங்களில் செய்கை பண்ணப்படுகின்றன. பின்னர்
- 14 ܚ

இவற்றில் கொறைணி பற்றீரியம் திப்தீரியே வளரின், இது தொட் சின் வெளியீட்டஞ் செய்கின்றதா என ஆய்வு மூலம் அறியப்படு கின்றது. -
ஒரு நோயாளியிடமிந்து தொட்சின் வெளியீட்டும் திப்தீரியா பசிலசு நீங்கும்வரை பிறருக்கு அவர் இந்நோயைப் பரிமாற முடியும், இக் காலம் பொதுவாக இரண்டு வாரத்திற்கு உட்பட்டதே எனினும் சில சமயங்களில் நாலு வார காலஞ் செல்லலுமுண்டு.
பாதிப்பின்மை பெற்ற தாய்மாரின் சிருர் கூடியபட்சம் 6 மாத காலம் வரை பாதிப்பின்மை பெறுவர். நோயிலிருந்து குணமானேர் இயல்பாக நீண்டகாலம் பாதிப்பின்மை பெறுவர். தோற்றப் பாதிப் புப் பலருக்குப் பாதிப்பின்மையைக் கொடுக்கின்றது.
இந் நோயின் தடைப்பொருட்டு முக்கியமாகக் கையாளப் பட வேண்டியது பாதிப்பின்மை பெறுதலே. பாதிப்பின்மை பெறும் சிறந்த ஒரே வழி திப்தீரியா தொட்சோயிட் உள்ளிட்டம் பெறுதலே சாதாரணமாக திப்தீரியா தொட்சோயிட் தெத்தன சு தொட்சோ யிட்டுடனுங் குக் கல் வச்சீனுடனுங் கலக்கப்பட்டு முப்பாலாகத் தடைமுறையின் பொருட்டு. * வழங்கப்படுகின்றது. மூன்ருவது மாத வயதுப் பிராயத்தில் முதல் உள்ளிட்டஞ் செய்யப்பட்டு 4 அல் லது 6 வார இடைக்காலத்தின் பின்னர் இரண்டாவது உள்ளிட்ட மும் இதே காலவெல்லை கடந்ததும் மூன்ருவது உள்ளிட்டஞ் செய் யப் படல் வேண்டும் இதன்பின்னர் பாடசாலைக்குச் செல்லுமுன்னர் பிறிதோர் உள்ளிட்டஞ் செய்யப்படல் வேண்டும். 6 வயதிற்கு மேலானேருக்கு திப்தீரியா தொட்சோயிட்டுடன் தெத்தனசு தொட்சோயிட் மட்டுஞ் சேர்ந்த ஈரிணைத் தொட்சோயிட் வழங்கல் 6Qu yp68) uD. . . . .
நோயாளி மாற்ருற்குத் தொற்று விக்காவண்ணம் இருத்தற் பொருட்டு அவரின் மூக்குத் துவாரங்களிலும் தொண்டையிலும் மற் றும் நோய் கண்ட பாகங்களிலும் இருந்து எடுக்கப்பட்ட ஒற்றல்கள் தொடர்ந்து இருமுறையாவுதல் திப்தீரியாக் கிருமிகள் செயர்க்கைக் குக் கொடாதிருக்கும் வரைத் தனியாக்கப்படல் வேண்டும். நோயாளியின் பாவனைப் பொருட்கள் கிருமி நீக்கஞ் செய்யப்படல் வேண்டும். தொடர்பாளிகள் பாதிப்பின்மையற்ருேரெனின் இவர் களும் முற்கூறப்பட்ட பாதிப்பின்மை பெறும் முறைகளைக் கையாள வேண்டும். தொடர்பாளிகளின் ஒற்றங்களும் பரிசோதனை செய்யப் படல் வேண்டும், இவரின் நடமாட்டமும் தவிர்க்கப்படல் வேண்டும்.
நோயின் ஆபத்துப் பெரிதானபடியர் ல் விழிப்புடனிருந்து வைத் தியர் உதவியைத் தேடல் வேண்டும். நோய் குணமாக வைத்தியர் முக்கியமாக திப்தீரியாத் தொட்சின் "எதிரிகளையும் பெனிசிலினையும் நோய் வேகத்திற் கேற்ப வழங்குவர்.
--سس۔ 15 مسیح۔

Page 9
மனிதகுலத்தின் வரலாறு
8. குடும்பத்தின் தோற்றம்
புராதன குடும்பம் பிறந்த அமெரிக்காவில், குடும்பத்தின் பிறப்பைப் பல வருடங்கள் நுணுக்கமாக ஆராய்ந்தார், மார்கன் என்பவர். குடும்பம் என்றும் ஒரே விதமாகத்தான் இருந்ததா என்னும் கேள்வியுடன் அவர் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டார். உலகில் உள்ளவை எல்லாம் மாறுவதைப் போன்று குடும்ப அமைப் பும் மாறுகிறது என்றும், குடும்பம் என்னும் அஸ்திவாரத்தின்மீது சமுதாயம் என்னும் மாளிகை கட்டப்படவில்லை என்றும், அதற்கு மாருக வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட நிலையில்தான் குடும்பம் வளர்ந் தது என்றும் மார்கன் கூறுகிருர், குடும்பமே இல்லாதிருந்த காலம் ஒன்று இருந்தது. மனிதன் குடும்ப வாழ்க்கையின் அவசியத்தை உணராது மனம் போன போக்கில் வாழ்ந்த காலமும் இருந்தது. வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட நிலையில் குடும்பம் அவசியமாயிற்று. எனவே குடும்பம் பிறந்தது. வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களில் குடும்ப அமைப்பும் மாறித்தான் தீரவேண்டும்.
மனிதன் மிருக சாம்ராஜ்யத்தில் வாழ்ந்த காலத்தில்-வாழ்க்கை முறையிலும் பழக்க வழக்கங்களிலும் மனிதனுக்கும் மிருகத்திற்கும் பிரமாதமான வித்தியாசம் இல்லாதிருந்த காலத்தில் குடும்பத்தின் அவசியத்தை அவன் உணரவில்லை. அன்று அவனுக்குக் குடும்பம் தேவையாய் இருக்கவில்லை. இயற்கை உணர்ச்சியைத் திருப்தி செய்து கொள்வதற்காக மாத்திரமே ஆணும் பெண்ணும் கலந்த னர். உலகில் உள்ள பெண்கள் எல்லாரும் உலகில் உள்ள ஆண்க ளின் மனைவிகள் என்னும் நியதி அன்று நடைமுறையில் இருந்தது. சகோதரன் சகோதரி, தாய் புதல்வன், தகப்பன் மகள் வித்தியா சத்தை அன்றைய மனிதன் பாராட்டவில்லை. புணர்ச்சியை அவன் ஒரு தேவையாகக் கருதிஞன்-அவ்வளவுதான். மனித சமூகம் வளர்ந்த தைத் தொடர்ந்து மனிதனின் வாழ்க்கை முறையும் வளர்ந்தது. நாகரீகமற்றவர்களின் கால இறுதியில் 'கூட்டு மணமுறை" தடை முறைக்கு வந்தது. இத்துடன் ' குடும்பத்தின் முதல் வடிவம் பிறந்தது
குடும்பத்தின் முதல் வடிவத்தை 'இரத்தக் கலப்புள்ள குடும் பம்" என்று அழைக்கிருர் மார்கன். அந்தக் காலத்தில் மக்கள்
6 -

தலைமுறை தலைமுறையாகப் பிரிக்கப்பட்டனர். முதல் வரிசையைச் சேர்ந்தவர்கள் தாத்தாக்களும் பாட்டிமார்களுமாவர். இந்த வரி சையைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் கணவர்களாகவும், மனைவி களாகவும் பிரிக்கப்பட்டனர், இந்த வரிசையைச் சேர்ந்த பெண் கள் எல்லாரும் இந்த வரிசையைச் சேர்ந்த ஆண்களின் பொது மனைவிகள். முதல் வரிசையைச் சேர்ந்தவர்களின் புதல்வர்களும் புதல் விகளும் இரண்டாவது வரிசையைச் சேர்ந்தவர்கள். இந்த வரிசையி லுள்ள ஆண்ஞம் பெண்களும் பொதுக் கணவர்களாகவும் பொது மனைவிகளாகவும் விளங்கினர். இவர்களுக்குப் பிறந்தவர் மூன்ரு வது வரிசையைச் சேர்ந்தவர்கள். இவர்களில் ஆண்களும் பெண்க ளும் பொதுக் கணவர்களாகவும் பொது மனைவிகளாகவும் விளங்கி னர். இவர்களுக்குப் பிறந்தவர்கள் நான்காவது வரிசையைச் சேர்ந் தவர்கள். இந்த முறைப்படி பெற்ருேர்களும் குழந்தைகளும் மணம் செய்வது தடுக்கப்பட்டது. ஆனல் சகோதரியும் சகோதரனும் மணம் செய்துகொள்ளும் வழக்கம் தடுக்கப்படவில்லை. அதற்கு மாருக சகோதரன் சகோதரியை மணந்துதான் தீரவேண்டும் என்ற நியதி அமுலுக்கு வந்தது. அன்று ஒருத்திக்குப் பல கணவர்கள் இருந்தார்கள்; அதே போன்று, ஒரு ஆணுக்கு பல மனைவிகள் இருந்தார்கள். இதைத்தான் "கூட்டு மணமுறை' என்கிருர் மார்கன். கணவர்களும் மனைவிகளும் பொதுவாக இருந்ததால் குழந்தையின் தந்தை யார் என்று சொல்லமுடியவில்லை. ஆனல் குழந்தையின் தாய் யார், என்பதைத் திட்டமாகச் சொல்லிவிட முடியும் அல்லவா ? எனவே, குழந்தை ஆண்கள் எல்லோரையும் “அப்பா" என்று அழைத்தது; ஆணுல் ஒரு குறிப்பிட்ட பெண்ணை மாத்திரம்தான் 'அம்மா' என்று அழைத்தது. தாய்வழிக் குடும் பம் பிறக்க இது இடம் அளித்தது.
கூட்டு மணம்
முதல் குடும்ப முறை பெற்றேர்களும் குழந்தைகளும் மணப் பதைத் தடுத்தது என்ருல், இரண்டாவது மணமுறை சகோதர னும் சகோதரியும் மணப்பதைத் தடுத்தது. புதுமணமுறை சுயகுல மணத்தைத் தடுத்தது. ஒரு குலத்தைச் சேர்ந்தவர்கள் இன்னுெரு குலத்தைச் சேர்ந்தவர்களை மணந்தனர். இதைத்தான் ‘குலமணம்' என்கிருேம். அந்தக் காலத்தில்தான் சிறை பிடிப்பதன்மூலம் மணர் கும் முறை நடைமுறைக்கு வந்தது. இது ஏகதார மணத்திற்கு அத்திவாரமிட்டது என்கிருர் எங்கெல்ஸ். М
ஒரு பெண்ணை ஒரு வாலிபன் சிறை பிடிப்பதாகவும், இந்த முயற்சியில் அவனுக்குச் சில வாலிபர்கள் துணை புரிவதாகவும்
نسبت 17 حس=

Page 10
வைத்துக் கொள்வோம். முதலில் சிறை பிடிக்கப்பட்ட பெண்ணை அந்த முயற்சியில் ஈடுபட்ட அனைவரும் பொதுவாக அனுபவித்த னர். ஆனல் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அவளைச் சிறைப்பிடிக்கத் திட்டமிட்ட வாலிபனின் மனைவியாவாள் அவள். இதஞல் அவன்மீது கணவனுக்கு பரிபூரண ஆதிக்கம் இருந்தது என்பது பொருள் அல்ல. கணவனை அவள் பிரிந்து சென்ருல் பிறகு அவனுக்கு அவள்மீது எத்தகைய உரிமையுமில்லை. கூட்டு மண முறை எங்கும் இயங்கின. அதே சமயத்தில் இணைப்பு மணமுறை சமூகத்தில் மெதுவாக இடம்பெற்றது.
- இனட்பு மணம்
ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் ஆணும் பெண்ணும் கூடி வாழ்வதை 'இணைப்பு மணம்' என்கிருர் மார்கன். மிருகத்தனத் தையும் நாகரிகமற்றவர்களின் காலத்தையும் பிரிக்கும் எல்லைக் கோடாக விளங்குகிறது. இணைப்பு மணம் கூட்டுமணம் மிருகத் தனத்தின் விசேஷ அம்சம் என்ருல் இணைப்பு மணம் நாகரிகமற்ற வர்களின் காலத்தின் விசேஷ அம்சம் என்கிருர் எங்கெல்ஸ். அந்தக் காலத்தில் பெண் பரிபூரண சுதந்திரத்துடன் விளங்குகிருள். எப் பொழுது வேண்டுமானலும் கணவனைப் பிரிந்து செல்ல மனைவிக்கு அதிகாரமிருந்தது. w − புதிய முறைப்படி இரத்தக் கலப்பற்றவர் மணம் செய்து கொண்டனர். இதனுல் இவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் தே கா ரோக்கியம் படைத்தவர்களாகவும், புத்திகூர்மை படைத்தவர்களா கவும் இருந்தார்கள் என்று மார்கன் கூறுகிறர்.
குடும்பம் தேங்கி நிற்கும் தண்ணிர் அல்ல. 'குடும்பம் ஒரு நிர்ணயமான கொள்கையைப் பிரதிடலிக்கிறது. அது தேங்கி நிற்க லில்லை; ஆனல் சமூகம் கீழ்நிலையிலிருந்து மேல் நிலைக்குச் செல்வ தைத் தொடர்ந்து குடும்பமும் கீழ்நிலையிலிருந்து மேல் நிலைக்குச் செல்கிறது' என்ருர் மார்கன்,
கூட்டு மணமுறை ""ஜென்' என்னும் சமூக அமைப்புக்கு அத்தி வாரம் அமைத்தது. இணைப்பு மணம் அமுலுக்கு வந்ததும் ஜென் மலர்ந்தது. ஜென் சமூகத்தில் பெண்தான் குலவிளக்கு. பெண்வழி யில்தான் ஜென் நிர்ணயிக்கப்பட்டது. ஒரு குறிப்பிட்ட ஜென்னில் வாழ்ந்த பெண்களின் குழந்தைகள் அந்த ஜென்னில் அங்கம் வகித் தனர். அன்று சுய கோத்திர மணம் தடுக்கப்பட்டிருந்ததால் அது ஜென்னைச் சேர்ந்த ஜனங்கள் வேறு ஜென்னைச் சேர்ந்த பெண்களை மணந்தனர்.
---- 18 -س-

பழையவை களைந்து புதியவை படைப்போம்!
* மா த வ ன் *
அரசியலும் கலையும் இணைய வேண்டும்; பொருளும் உருவமும் ஒன்றிணைய வேண்டும்! புரட்சிகர அரசியல் கருத்தும் பூரணத்துவ கலை உருவ அமைப்பும் இரண்டறக்கலக்க வேண்டும்’’.
கலைக்கும் அரசியலுக்கும் உட் பொருளுக்கும் உருவத்திற்கும் இடையில் இருக்க வேண்டிய உறவை மாவோவின் இம்மொழி தெளிவு படுத்துகிறது.
தொழிலாள, விவசாயிகளைப் பொறுத்த வரை, தம்வர்க்க நலன்பேணும் கருத்துக்களைப் பிரதிபலிக்க கலை உருவங்களைப் பயன் படுவதேயல்லாது கலை உருவங்களுக்காக கருத்துகளல்ல.
காலத்தின் தேவைகளை, கருத்துக்களின் தேவைகளை ஒட்டி கலை உருவங்கள் பிறக்கின்றன. அவ்வக் கால கருத்துகளை இவை பிரதிபலிக்கின்றன. எவையும் நிலையானவையல்ல, கருத்துகள் மாற கலை உருவங்களும் மாற்றமடையும். சோசலிச, கம்யூனிச சமுதாயங்களில் இன்றைய கலை உருவங்கள் மாற்றமடையவே செய்யும். முதலாளித்துவ சமுதாயக் கருத்துகளிலும் கலை உருவங் களிலும் நீந்திக் கொண்டிருப் போரால் சோஷலிச சமுதாயத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்களை நன்கு உணர்ந்தறிய முடியாது. சீனத் திரைப்படங்கள், நாடகங்கள், நாட்டிய நாடகங்கள், நாவல். சிறுகதை, கவிதைகளைப் பற்றி எம்மில் பலர் தவருக மதிப்பிடுவதன் காரணம் இதுவேயாகும்.
"ஆயிரம் மலர்கள் மலரட்டும் பழமையை களைந்து புதியதைக் கொணர்வோம்' என்ற மாவோவின் கூற்றையும் எம்மில் பலர் தவருகப் புரிந்து கொள்கின்றனர். பழைமையை களைவது என்ருல் பழமையைப் போற்றுவதோ, பழையவற்றை நிலை நிறுத்துவதோ அல்ல. புதியதைக் கொணர்வதே எமது பணியாகும். நிலவுடைமைச் சமுதாயம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நிலவியதாகும். முதலாளித்துவம் அண்மையில் தோன்றி, நாம் சோஷலிசத்தை விரைவிலேயே நோக்கிக் கொண்டிருக்கிருேம். ஆகவே நிலவுடைமை காத்த கலை, இலக்கியங்களை சோஷலிசம் அமைக்கும் கண்ணுேட்டத் துடன் கற்கவேண்டும். சோஷலிசக்கண்ணுேட்டம் எனபது பொருள் முதல் வாத, வர்க்கப் போராட்ட கண்ணுேட்டமாகும். இதை நாம் என்றும் மறந்து விடப்படாது.
ஆகவே பொருள் முதல் வாதம் வர்க்கப் போராட்டம் என்ற இரண்டு கண்களின் ஊடாகவே பழைய கலை, இலக்கியங்களை நாம் பார்க்க வேண்டும். இதுவே மார்க்ஸிசப் பார்வையாகும்,
- 19 -

Page 11
திருக்குறளையும் கம்பராமாயணத்தையும் சிலப்பதிகாரத்தையும் பிற பண்டைத் தமிழ் இலக்கியங்களையும், நிலவுடைமையையும் முதலாளித்துவத்தையும் பேண விரும்புவோர் போற்றிப்பாராட்டிக் கொண்டேயிருப்பர்.
நாமும் கண்மூடித்தனமாக பாராட்டவேண்டுமா? நாம் பழைய வற்றைப் பழைய சித்தாந்தத்துடன் பார்க்க வேண்டாம்: புதிய சித்தாந்தத்துட்ன் பழைமையைப் பார்க்க வேண்டும். பொருள் முதல்வாதம், வர்க்கப் போராட்டம் ஆகியவற்றை முன்வைத்து இவ்விலக்கியங்களை களையவேண்டும். அந்த அனுபவ உணர்வை முன்வைத்து புதியவற்றைப் படைக்கவேண்டும். இதுவே எமது குறிக்கோளாகும்.
முதலாளித்துவ சமுதாயம் முகிழ் விடத்தொடங்கியதும் நிலவு டைமைக் காலத்திய மரபுகள் யாவும் சரிந்துவிட்டன. இது இயல்பே. இன்று நாவல், சிறுகதை, நாடகம் போன்ற புதிய கலை உருவங்கள் தோன்றியுள்ளன. காவியம், தனிப்பாடல், உரையிடைப்பட்ட செய்யுள் ஆகிய உருவங்களின் வளர்ச்சியே மேற்கூறிய புதிய கலை உருவங்களாகும். முதலாளித்துவம் வளர்ந்து வரும் இன்றைய அமைப்பில் செய்யுளில் காவியம் எழுத முயல்வது விடுபடா நிலவுடைமைச் சமுதாயக் குளும்சமாகும்; தேயும் சக்தியைக் கட்டிக் காப்பதாகும். எம்நாட்டுப் புகழ்பெறும் பல கவிஞர்கள் இன்றும் இம் முயற்சியில் ஈடுபடுவது படு பிற்போக்கான முயற்சி.
பொருள் முதல் வாதம், வர்க்கப் போராட்டம் என்ற இரு கண்களைக் கொண்டு பண்டைய கலை, இலக்கியங்களைப் பார்வையிடும் கட்டுரைகளை குமரன் வெளியிடுவான். (ஆர்வமுள்ளோரின் கட்டுரை கள் வரவேற்கப்படுகின்றன, ஆ+ர்)
போரிடுங்கள் !
உழைத் துழைத்து ஏக்கப் பெருமூச்சே உடம்பும் எலும் பாகி எங்களுக்கு மிச்சமென்று
நீண்ட நெடுநாளாய் கண்ணிரைச் சிவப்பாக்கி
நினைத்திருந்த ஆசையெல்லாம், காலத்தை முடித்துவிடும் கண்ணிரில் நனைந்து உழைப்பாளி மக்களே! காற்றேடு கலந்துவிட ஊண், உறக்கம் உடைதாறும் கூனிக் குறுகி நின்று வானை நிதம் நோக்கி வழிகேட்டது காணும் நெஞ்சு நிமிர்த்தி நேர் நின்று போரிடுங்கள்! நம்பிக்கை eta ere, நெஞ்சு நிமிர்த்தி சவமர்கும் போதினிலே நேர் நின்று போரிடுங்கள்!
- மகாவலிதாசன்
உலகத்தின் சக்திகளே!
உருப்படியாக கிடையாமல் கிடைக்கும் கிடைக்குமென்ற நம்பிக்கை தனக்கொண்டு

“யாருக்காக?”
- இரா -
அந்தத் தொழிற்சாலைக் காவல்காரன் தொங்கிக்கொண்டிருந்த இரும்பில் ஐந்து தரம் தன் பலம் கொண்டமட்டும் ஓங்கி அடித்துவிட் டுத் தொழிற்சாலையைச் சுற்றிவரத் துவங்கிஞன். இது அவன் தூங் காமல் தொழிற்சாலையைக் காக்கவேண்டும் என்பதற்காக நிர்வாகத் தினரால் வழங்கப்பட்ட பல வேலைகளுள் ஒன்று. இச் சத்தம் பக் கத்தில் உள்ள லயங்களில் வாழும் தொழிலாளர்களுக்கு நேரத்தை யும் காட்டி அவர்களின் தூக்கத்தையும் இடையிடையே பறிக்கத் தவறுவதில்லை.
மார்கழி மாதப் பணியோடு எதிர்த்துப் போராடமுடியாமல் ராமு தன்மீது கிடந்த கிழிந்த சாக்கை விலக்கிவிட்டு அடுப்புக்குப் பக்கத்தில் வந்தான்.
'ராமு, தூங்குடா, இன்னும் விடிய நேரம் இருக்கு' அடுப்பிற் குப் பக்கத்தில் உட்கார்ந்து உடம்பைச் சூடாக்கிக்கொண்டிருந்த கந் தன்தான் பேசினன்.
'குளிருதப்பா! தூங்க முடியல* ராமு நடுங்கிக்கொண்டே அம் மாவுக்கும் அப்பாவுக்கும் இடையே அடுப்படியில் உட்கார்ந்தான்.
சில நிமிடங்கள் அமைதியாகக் கழிந்தன. "அம்மோ! தேத்தண்ணி ஊத்தம்மா குடிப்போம்" ராமு ஆவ லுடன் தாயிடம் கேட்டான். s
“தேத் தண்ணிக்குத் தூள் இல்லேடா உங்க அப்பாவும் கேட் டார்" தாயின் பதில்.
'ஏம்மா நம்ம வீட்டிலே தூள் இல்லே, நீயும் தேயிலேத் தோட் டத்திலே தானே வேலை செய்யிற. அப்பாவும் ஸ்டோரிலேதானே வேலை செய்யிருரு. அப்பா! நீங்க கொஞ்சம் தூள் கொண்டார்தா என்னப்பா’ ராமு கூறிவிட்டு அப்பாவின் முகத்தைப் Litrff i as ar air. *ராமு நான் கொஞ்சம் தூளைக் கொண்டாந்தா, தூள் Dog Lgl-L -- டேன்னு வேலையை நிப்பாட்டி பொலிசிலேயும் புடிச்சுக் கொடித் இC) வாங்க" கந்தன் கூரையைப் பார்த்துக்கொண்டேட் சொன்றன்.
'அப்போ நீங்களும் அம்மாவும் உழைக்கிறது யாருக்கு’ ராமு தான் கேட்டான். - w
நீறுபூத்த நெருப்பாக கந்தனின் மனதில் இக்கேள்வி எரித்து கொண்டேயிருந்தது!
"நாங்க உழைக்கிறது யாருக்காக' ★。
ــ - 21 ــ ..

Page 12
حه rة قة هة على
s ぐ。
மாதவன் வானம்பாடிகள்-2
விேதை மரபுகள் உடைந்துவிடாமல் கட்டிக்காப்பதற்காக இன்று பல முயற்சிகள் கையாளப்படுகின்றன. இவர்கள் புதிய மாற்றங்கள் கண்டு சினக்கின்றனர். பெயர்களைக்கூறி அவர்தான் கவிஞர், இவர் தரம் குறைந்தவர் என்று பிரிக்கின்றனர். திராவிட நாடு வேண்டிப் பாடியவர்கள் அரசியல் பேசியபடியால் கவிஞரல்ல என்று கூறுகின்றனர். எவ்வித அரசியலும் கூருது சீர்திருத்தம் வேண்டிய மஹாகவி போன்றவர்களை உயர்த்துகின்றனர்.
தாம்பாடும் கவிதைகளிலேயே அரசியல் தொக்கி நிற்பதை இவர் அறியாமையே இவர்களது சூனியத்தைக் காட்டுவதாகும். தம் கவிதையில் அரசியல் இல்லை என்று பாடுவோர் நிலவுடைமை, முத லாளித்துவ சமுதாயங்களை கவிதை என்ற கலை உருவங்கொண்டு கட்டிக் காக்க விரும்புபவர்களாகும். அவர்கள் தொழிலாள, விவ சாயிகள் வேண்டும் சோஷலிச அரசு பற்றி என்றும் பாடமாட்டார். அவர்கள் காதல், தென்றல், வானம், சூரியனின் அழகு, வெப்பம், சந்திரனின் குளுமை பற்றியே பாடிக்கொண்டிருப்பர். சிலர் சீர்திருத் தமும் மனமாற்றமும் கூறுவர்.
கண்ணதாசன் கவிதைகளைக் குறைகூறும் எமது கவிஞர்கள் ஒரு உண்மையை மறந்துவிடுகின்றனர். அவரது பாடல்கள் சமுதாய மாற்றத்திற்காக எழுதப்பட்டவையல்ல. மெல்லிசை பாடுவதற்காக எழுதப்பட்டவையாகும். கருத்தளவில் எமது பிரபல கவிஞர்களும் இந்த நிலையிலேயே நிற்கின்றனர். இசைக்கா கவாயினும் கண்ண தாசன் பாடல்கள் பயன்படுகின்றன. எமது கவிஞர்களின் கவிதை களை சில கவிஞர்களும் வாசகர்களும் மட்டும் படித்துச் சுவைக்கின் றனர்! யார் இந்த வாசகர்கள்?
கவிதைக்கு வளர்ச்சி நாட்டம் இருக்கவேண்டும்; ஒசையாப்புகளை கண்மூடிப் பின்பற்றவேண்டியதில்லை; வாசகர்கள் சுவைக்கவேண்டும் என விதிகள் செய்து கவிதைக்குப் புத்துயிர் ஊட்ட முயல்வோர் கவிதை மரபில் புதிய, புதிய உருவங்கள் தோன்றுவதையும் அவை தொழிலாளி, விவசாயிகளின் வர்க்க நலனுக்குப் பயன்படுத்தப்படு வதையும் இவர்களால் தடைசெய்துவிட முடியாது; தோன்றும் புதிய உருவங்களுக்கு புதிய இலக்கணம் எழுதலாமே தவிர விதிகள் விதிக்க முடியாது.
தனியொருவனுக்கு உணவில்லையெனில் சகத்தினை அழித்திடு வோம்" என்ற கொதிப்பான எண்ணத்தை மட்டுமல்ல சகத்தினை மாற்றிடுவோம்’ என்ற குரல் புதுக்கவிதையில் தோன்றின் அதுவே தொழிலாளிக்கும் விவசாயிக்கும் விடிவு காட்டும் கவிதையாகும். இக் கருத்தைப் பாடுபவன் பாரதியிலும் சிறந்த கவிஞனுவான். ()
ー22ー
 

வெளிவந்துவிட்டன!
நவீன இரசாயனம் பகுதி II
க. பொ. த. (சாதாரண) இறுதி ஆண்டுக்குரியது. ஆக்கியோர் :- பரமானந்தன் & பாலசுந்தரம்
e LuíT 8/75 O 1965-1971ம் ஆண்டு அரசாங்கத்தின் க.பொ.த. (சாதாரண)
வினக்களையும் விடைகளையும் கொண்டுள்ளது.
நவீன உயிரியல் பகுதி II
இராஜசேனன், பரமானந்தன் & குலேந்திரன்,
eunt 6/5O
விநியோகிப்பவர்: விஜயலட்சுமி புத்தக சாலை 248, காலி வீதி, - கொழும்பு-6-
ஜனவரி 73 முதல் குமரன் விலை :
தனிப்பிரதி சதம் 30 அரைஆண்டுச் சந்தா 6 இதழ்கள் ரூ. 2/- ஆண்டுச் சந்தா 12 இதழ்கள் ரூ. 4/- ஒர் ஆண்டிற்கு 6 சந்தா e5. 20/-
ஐந்து பிரதிகளுக்குமேலாக ஆங்காங்கே வரவழைத்து விற்பனை செய்ய விரும்புவோர் உடன் தொடர்பு கொள்க. இவர்களுக்கு வாய்ப்பான விசேட சலுகைகள் உள்ளன.
"குமரன்” கலண்டர் கிடைக்காத விற்பனையாளர்கள் உடன் எழுதுக.
நிர்வாக ஆசிரியர், குமரன், 201, டாம் வீதி, கொழும்பு-12.
سس 23 حسيد

Page 13
ஜி. சி. ஈ. (உயர்தர
உயர்தர இரசாயனம் தாவரவியல்-பரமானந் விலங்கியல் - சங்கரஐயர் விலங்கியல் பயிற்சிகள் திருத்தொண்டர் புராண இரட்சணிய யாத்திரிகம் A CONCISE ATLAS
- Foreword by Prof. K
ஜி. சி. ஈ. (சாதாரண 6
நவீன இரசாயனம் 1
இரசாயனம் 11 பரமானந்தன் & பாலசுந்த 3, நவீன உயிரியல் 1 4. நவீன உயிரியல் 11
பரமானந்தன், இராஜ
(திருத்திய 5. நவீன பெளதிகம் 1
தமிழ் இலக்கிய விளக்கம்
க. கி. நடராசன்
:
6,
விரைவில் G புதிய தமிழ் இலக்கியத்
டத்திற்கு தமிழவேள் நய விஞவிண்டகள்.
கிடைக்குமிடம்: '
விஜயலட்சுமி 248, காலி வீதி, கொழு
இப்பத்திரிகை கொழும்பு 12, •ri விதி, அதே முகவரி யிலுள்ள "குமரன் நிருவாக ஆசிரியர்: மீ. கணேசலிங்கன்.

வகுப்பு) :
- கணேசர் &சிவபாலன் 36/سة
தன் 2 பகுதிகள் 28/- 4 பகுதிகள் 25/75
3/-.
to 3/- - சிலுவைப் பாடு 2/- GEOGRAPHY OF CEYLON . Kularatnan 5/-
பகுப்பு) பாட நூல்கள்:
4/50
- 8.75 ரம் (திருத்திய பதிப்புகள்
5/00 6/50 சேனன் & குலேந்திரன் பதிப்புகள்
/50 3/00
& இரத்தினசிங்கம்
வளிவருகிறது!
தொகுப்பு 'அ' பாடத்திட் ம்பட எழுதிய விளக்கவுரை,
புத்தகசாலை வெள்ளவத்தை, ம்பு-6.
தொலைபேசி: 88930
01ல் வசிக்கும் s. தியாகராசா அவர்களால், ச்சகத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.