கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: குமரன் 1978.11.15

Page 1
| 臀 莓 Q | SIPTA, IBFILLI சர்வதேச கம்பனிகள் நம் பகைவர் நாமறி ஆளும் வர்க்கமும் எங்கள் இதயங்களி கேள்வி பதில்
 
 
 
 
 

*。 蠶
5ܘܼ ܠܐ .
விதம்

Page 2
குமரன் சந்தா விபரம்
1 ஆண்டு es. 7-50 6 மாதங்கள் . ரூ. 4-00 தனிப்பிரதி . சதம் 60
பழைய சந்தாதாரர் தபாலட்டை எழுதி தமது பிரதிகளைப் பெற்றுக்கொள்ளலாம்
201, டாம் வீதி, கொழும்பு-12, @LDJ60T ठीकाका ’×3
பூ ம ர ன் இதழ்களை விற்பனை செய்ய இலங்கையிலும் தமிழ் நாட்டிலும் ஏஜெண்டுகள் தேவை. உடனே விண்ணப்பிக்க.
தக்க கமிஷன் வழங்கப்படும்.
நிர்வாக ஆசிரியர், "குமரன்’, ...'
201, LTD வீதி, கொழும்பு-12. தொலைபேசி ; 2 1 3 8 8

குமரனின் கு றிப்புகள்
சென்ற மூன்று ஆண்டுகளாக குமரன் இதழ்களை தொடர்ந்து வெளியிட முடியாது நேர்ந்தது வருத்தமே. -- •
சென்ற 6 மாத காலமாக “குமரன் எப்பொழுது வெளிவருவான்? என்று ஆர்வத்தோடு விஞவி வந்த நண்பர்களின் ஊக்கமே குமரன் 50ஆவது இதழ் இன்று உங்கள் கரங்களில் தவழ்வதற்கு காரண மாகும். இனிமேல் குமரன் இதழ்கள் ஒழுங்காக வெளிவரும் என் பதையும் கூறிக்கொள்ள விரும்புகிருேம்,
தமிழ்நாட்டு நண்பர்களிற் சிலர் தொடர்ந்து ஆய்வுக் கட்டுரை களை எழுத இசைந்துள்ளனர். ஈழத்திலுள்ள பழைய நண்பர் களையும் தொடர்ந்து எழுதும்படியும் விமர்சிக்கும்படியும் வேண்டுகிருேம். குமரன் வியாபாரத்திற்காக வெளியிடப்படும் இதழல்ல. அது மார்க் ஸிய அரசியல், கலை இலக்கியத்தில் ஆர்வமுள்ள அனைவரிடமும் பரவ வேண்டும் என்பதே எமது குறிக்கோள். குமரன் இதழ்களே நன்கு விநியோகிக்கத்தக்க வாணிப அமைப்பு எம்மிடமில்லை, ஆகவே தொடர்ந்து இதழ்களைப் பெற விரும்புவோர் சந்தா அனுப்பிவிடு வது நல்லது. முன்போலவே ஆங்காங்கே குமரனை வரவழைத்து விநியோகிக்க விரும்புபவர்களையும் எம்முடன் தொடர்புகொள்ளும் படி வேண்டுகி3ரும். -
குமரன் பழைய இதழ்களை இன்னும் தேடிவருவோர் பலர் உள்ளனர். சில இதழ்களில் பிரதிகள் உள்ளன. அவற்றை பழைய விலையிலேயே பெற்றுக்கொள்ளலாம். -
இன்று அரசியல், கலை இலக்கியங்கள் தேக்கமடைந்திருப்பதாக பல நண்பர்கள் கருதுகின்றனர். சரியான அரசியல் இல்லாதபோது கலை, இலக்கியங்களும் சோபைதட்டிப்போவது இயல்பே.
பல்வேறு பிரச்சனைகளோடு வளர்ந்துவரும் இளைஞர்களுக்கும் சரியான அரசியல், கலை இலக்கியப் பார்வையை முன்வைப்பதும் குமரனின் ஒரு பணியாகும்.
கட்டுரைகளை மிக எளிமையாகவே எழுத முயல்கிருேம். ஆரம் பத்தில் முழுமையாக கிரகிப்பதில் இளைஞர்களுக்கு சிரமம் இருக் கலாம், அவர்கள் எம்முடன் தொடர்புகொள்வது நல்லது. பின்னர் வரும் கட்டுரைகளில் அவற்றை தெளிவுபடுத்த வாய்ப்பாக இருக்கும். (i.

Page 3
கலையும் சமுதாயமும்
செ. க. --
*ஆகா! என்ன அழகு!’ மாலை வானத்தைப் பார்த்து மயங்கி நிற்கிறீர்கள். செக்கர் வானத்தின் அழகு உங்கள் உணர்வை தாக்கிவிட்டது. புதிய அனு பவ உணர்வு. அதன் வெளிப்பாடு வார்த்தைகளாக வெளிப்படு கிறது. სა,
ஆயினும் வானத்தில் நீங்கள் கண்டு சுவைத்து மகிழ்ந்தது கலை யல்ல; அது இயற்கை இயற்கையின் புறத்தோற்றத்தின் ஒருநிலை,
கலை என்பதன் முதல் இலக்கணம் அது மனிதனுல் படைக்கப் படுவதாகும்.
செவ்வானத்தைப் பார்த்து ஏற்பட்ட உணர்வுகளை - அனுபவ உணர்வுகளை - நீங்கள் ஒரு கவிதையாக பாடலாம்.
அல்லது வண்ண ஒவியமாக தீட்டலாம்.
காமரா கொண்டு படம் பிடித்து போட்டோவாகவோ, திரைப்பட மாகவோ காட்டலாம்.
கட்டுரையாக எழுதலாம்,
புதுக்கவிதையில் வடிக்கலாம்.
மேற்கூறிய கவிதை, ஓவியம், போட்டோ, திரைப்படம், கட்டுரை, புதுக்கவிதை ஆகியவற்றை யெல்லாம் கலை வடிவங்கள் என்று கூறு கின்ருேம். இவை யாவும் மனிதனுல் படைக்கப்பட்டவையாகும்.
தற்போது நீங்கள் வானத்தைப் பார்க்க வில்லை.
ஒரு கவிதையைப் படிக்கிறீர்கள் வண்ண ஒவியத்தைப் பார்க் கிறீர்கள். போட்டோவில் ஒரு காட்சி; திரைப் படத்தில் ஒரு காட்சி; செக்கர் வானத்தை வர்ணிக்கும் ஒரு கட்டுரை: புதுக் கவிதையில் செவ்வானத்தின் அழகு. -
பல்வேறு கலை வடிவங்களினூடாக அந்த இயற்கைக் காட்சியை பார்க்கிறீர்கள். அவை எவ்வித உணர்வுகளை ஏற்படுத்துகிறது? ஆகா! மாலைநேரத்து இயற்கைக் காட்சி எத்தனை அழகாக இருக்கிறது என ரசிக்கீறீர்களா? அவ்வேளை அக் காட்சியை கலை வடிவத்தில் படைத்தவனுக்கு செக்கர் வ்ானத்தைப் பார்த்த போது ஏற்பட்ட அனுபவ உணர்வை நீங்களும் பகிர்ந்து கொள்ளுகிறீர்கள்.
4

தான் அனுபவித்த அழகுணர்வில் எத்தனை விகிதத்தை கலைஞன் தன் படைப்பின் மூலம் வெளிப்படுத்தி பிறரோடு பகிர்ந்து கொள் கிருன்? அதில் தான் அவனது வெற்றி உள்ளது. இது அவன் கலை வடிவத்தைக் கையாளும் சிறப்பை ஒட்டியது. தான் கண்டதை அப்படியே கலை வடிவம் மூலம் வழங்குகிருன் அல்லது அதற்கு மேலாக சில சமுதாய உண்மைகளையும் தெரிவிக்கிருன என்பதே கேள்வி. அவ்வாறு தெரிவிப்பதற்கு அவனுக்கு உரிமை உண்டு. 8
முன் கூறியவை மட்டுமல்ல கூத்து, நடனம், இசை சிற்பம், சிறுகதை, நாவல், நாடகம். இவ்வாருக கலைவடிவங்கள் பரத் து உள்ளன.
இவற்றின் மூலமெல்லாம் மனிதன் தன் அனுபவ உணர்வுகளை வெளிப்படுத்துகிருன் என்று கொள்வோம். ஏன், எதற்காக வெளிப் படுத்த முயல்கிருன் என்பது அடுத்ததோர் வினுவாகும்,
கலைஞன் தன் ஆத்ம திருப்திக்காகப் படைக்கிருன் என்பது ஒரு விடை. இது வெறும் பொய்மை, ஏமாற்ருகும். இவ்வாறு கூறிக் கொள்ளும் கலைஞர்களும் தம்மை தாமே ஏமாற்றிக் கொள்ளும் சுய நல வாதிகள். இவர்கள் படைத்து விட்டு தாமே கட்டி வைத்து sí Levtrh.
தன் படைப்பை மற்ருெருவருக்கு காட்ட முயலும் போதே கலைஞன் சமுதாயத்தோடு தொடர்பு கொள்ளத் தொடங்கி விட் டான். என்று கூறலாம். இந்நிலை தவிர்க்க முடியாதது.
மனிதன் ஒரு சமுதாயப்பிராணி, தன் தேவ்ைகளுக்காக கூட்டாக, சமூகமாக வாழ வேண்டிய கட்டுப்பாட்டில் உள்ளவன். அவன், தான் கண்டு, கேட்ட அனுபவங்களை சமுதாயத்தோடு பகிர்ந்து கொள்ளு கிருன் கற்பனை, சிந்தனை, செயலாற்றல் திறமை உள்ளவனும் மனிதனே, விலங்குகளல்ல. தன் அனுபவங்களை சமுதாயத்தோடு பகிர்ந்து கொள்வதன் மூலமே வான மண்டலங்களை ஆராயும் அள விற்கு மனிதன் இன்று வளர்ந்து வந்துள்ளான்.
ஒவ்வொரு மனிதனிடமும் படைப்பாற்றல் உள்ளது. அது அவனது உழைப்போடு ஒன்றியது. தன் உள்ளுணர்வுகளுக்கு - அனு பவம் மூலம் ஏற்பட்ட உணர்வுகளுக்கு - வடிவம் தரும் ஆற்றல் அவனுக்கு உண்டு. அதே வேளை மற்றவர்களது படைப்புகளை புரிந்து சுவைக்கும் அழகுணர்வும் மனிதனிடம் மட்டுமே உள்ள குணும் ச மாகும்.
கலை வடிவங்களை நாம் பல்வேறு வகையாக பிரிக்கலாம். (1) கண்களால் கண்டு சுவைக்கும் கலை வடிவங்கள் ஆதியானவை. ஓவியம், சிற்பம், கூத்து ஆகியன முதன்மை பெற்றவை.
(2) செவியினல் கேட்டு மகிழும் கலைவடிவங்களும் மனிதனேடு தோன்றி வளர்ந்தவையே. மேளம், புல்லாங்குழல், வீணை முதலிய
5

Page 4
தரம்புக் கருவிகள் முதலியன யாவும் செவியிஞல் கேட்டு சுவைப் usupa Guu.
(3) சைகையாலும் கண்களாலும் ஒலியாலும் சமூகத்தோடு தொடர்பு கொண்ட மனிதன் காலப்போக்கில் குகைகளில் கீறிய வடிவங்களை எழுத்தாக மாற்றிப் பிறருக்கு அறிவிக்கும் அளவிற்கு தொடர்பு கொள்ளத் தொடங்குகிருன், கவிதைகள். காவியங்கள், கிட்டுரைகள் ஏடுகளில் எழுதப்பட்டன.
இது மனிதன் மிகவும் வளர்ச்சியடைந்த ஒரு கட்டமேயாகும். பிறரின் உணர்வுர்களை, அனுபவங்களை தானே படித்து அறிந்து பயன் பெறும் நிலையாகும். இதை எழுத்து வடிவக் கலை என்று பிரிக்கலாம். கவிதை, இலக்கியங்கள் யாவும் இவ்வகையைச் சார்ந்தவையே.
(4) இணைந்த கலைகள் நடனம், ஒப்பரா, நாடகம், சினிமா ஆகிய யாவையும் தனித்தனி கலைவடிவங்களாக நாம் கொண்ட போதும் பல்வேறு கலை வடிவங்கள் இங்கு ஒன்றிணைவதைக் காண லாம், பார்வையாலும் செவியாலும் பார்த்தும் கேட்டும் இக்கலைகளை நயக்கிருேம். உதாரணமாக நாடகத்தில் வசனம், கவிதை, இசை, நடிப்பு, ஓவியம் (செட்டுமுதலியன) யாவையும் ஒரே வேளையில் கண்டு, கேட்டு ரசிக்கிருேம், சினிமாவும் அவ்வாருனதேயாகும்.
மீண்டும் நான் ஆரம்பத்தில் கூறிய காட்சிக்கு வருவோம்" இயற்கையின் தோற்றத்தை, நிலையை பல்வேறு கலை வடிவங்களில் கலைஞர்கள் தருகிறர்கள்; கலைஞர்களது உள்ளுணர்வில் ஏற்பட்ட தாக்கத்தை அனுபவ உணர்வை கலைவடிவங்களில் படைத்து தருகிருர்கள் என்று கொள்வோம்.
ஆகவே நாம் காண்பதோ, கேட்டு உணர்வதோ நிஜமான, உண்மையான செல்வானத்தின் அழகையல்ல, அதன் பிரதிபிம்பத்தை அல்லது அதன் மற்றேர் தோற்றத்தையே வெவ்வேறு கலைவடிவ மூலம் கண்டோ, கேட்டோ உணர்ந்து கொள்கிருேம்.
ஆகவே செவ்வானத்தின் ஒவியத்தை பார்த்து நீங்கள் நயக்கும் போது செவ்வானத்தைப் பார்த்து ரசிப்பதாக ஒருபோதும் மயங்கி விடப்படாது. அப்படி மயங்குவது வெறும் ஏமாற்றமே. கலையின் பயன், கலைதரக்கூடிய சமூகப்பணி அதுவல்ல. கலையின் பணி அல்லது கலைஞர்களின் தொழில் மக்களை ஏம்ாற்றி விடுவதல்ல.
ஒரே செவ்வானத்தை பல்வேறு கலைஞர்கள் வெவ்வேறு உணர் வும் உண்மையும் வெளிப்படக்கூடிய வகையில் படைத்துவிடலாம். செவ்வானத்தை பல்வேறு ஒவியர்கள் வண்ணக் கலரில் தீட்டலாம். அவையாவும் ஒரே வசையாக அமைவதில்லை. ஒவ்வொரு ஓவியனும் தத்தமது உள்ளுணர்வுகளை வெவ்வேறு வகையாக தீட்டிவிடலாம். அவை வெவ்வேறு செய்திகளே வெளிப்படுத்துவதையும் நாம் அவ
Jrrassifis Ganruh. r
அதே போலவே செவ்வானத்தைப்பற்றி கவிதை எழுதுவோரது படைப்புகளும் வெவ்வேருக இருப்பதைக் காணலாம். செவ்வானத் திற்கு வெவ்வேறு அர்த்தம் தொனிக்கும்படி ஒவ்வொரு கவிஞனும் கவிதை எழுதலாம்.

ஒரு க்விஞன் மாலை வானத்தில் தெய்வத்தின் அற்புதத்தை கம் பனையாகக் காண்கிருன், மற்ருேர் இளங் கவிஞன் தன் காதலியின் சிவந்த கன்னத்தை அதீதக் கற்பனையாகக் கண்டு கவிதை படைக்கி ன். வேருெருவன் மாலை வானத்தின் தற்காலீகமான பொய்மைத் தாற்றத்தை காதலோடு ஒப்பிட்டு கலை படைக்கிருரன். இன்னுெரு வன் சூரிய ஒளியின் ஏழாவது நிறமாகிய சிவப்பு நிறத்தின் வெளிப் பாட்டை பாடுகிருன்.
இவ்வாறு ஒரே காட்சியின் கலைவடிவில் பல்வேறு உணர்வுகளையும் உட்பொருள்களையும் காண்கிருேம். இவற்றில் சிறப்பானது எது, சமுதா யத்திற்கு பயனுடையது எது என்பதையும் நாம் பிரித்துக் காண்க் தக்கவர்களாக இருக்கவேண்டும்.
கலைஞன் எத்தனை அதீதக் கற்பனையாகப் பாடினும் சமுதாயத்தி லிருந்து அவன் ஒரு கணமும் பிரிந்துவிட முடியாது. அவன் தனது படைப்பின்மூலம் தனது வர்க்க சாயலை அல்லது தான் சார்ந்திருக் கும் வர்க்கத்தை தெளிவாகக் கூறிவிடுகிருன். தன் கலைப்படைப்பின் மூலம் தன் அக உணர்வுகளை அப்பட்டமாகத் தெரிவித்து விடுகிருன். சமுதாயத்தின் தேயும் பக்கம் நிற்கிருணு அல்லது வளர்ச்சிக்கு உந்து சக்தியாக நிற்கிருன என்பதை தன் தலைப்படைப்பின் செய்தியாகவும் கூறிவிடுகிருள். -
ஒரு கலைப் படைப்பை தரம் பிரித்துப் பார்ப்பது எவ்வாறு? மீண்டும் நாம் ஓர் உதாரணத்தை எடுத்துக்கொள்வோம்.
ஒரு அப்பிள் மரத்திலிருந்து அல்லது மாங்காய் மரத்திலிருந்து புழம் வீழ்வதை மூன்று கலைஞர்கள் வரைகின்றனர். மூன்று ஓவியங்கள். (1).முதலாவது கலைஞனின் ஒவியத்தில் காய்கள் குலுங்கும் அப்பிள் மரம். ஒரு பழம் கீழே விழுவதாக, அரை வழியில் அந்தரத்தில் பழம் கீழ் நோக்குவதுபோல வரையப்பட்டுள்ளது. வண்ணங் கள் தீட்டிய முறையில் யாவரும் "ஆகா! என்று ரசிக்கக்கூடிய தாகவே உள்ளது. - (2) இரண்டாவது ஒவியன் பழம் கீழே விழாது மேலே போவுது போல வரைந்துள்ளான். அதுவும் கவர்ச்கியாகவே வரையப் பட்டுள்ளது. பார்ப்பவர் வியப்படைவதாகவும் உள்ளது. பழம் மேல்நோக்கி செல்கிறது. இயற்கைக்கு முரணக இருப்ப தும் புதுமையாக இருக்கிறதல்லவா? 'ቊ”k.• ̆* ~ - (3) மூன்ருவது ஒவியத்தில் அப்பிள் பழம் கீழே விழுந்துகொண்டு தான் இருக்கிறது. ஆயினும் ஒரு சிறு மாற்றம், பழம்.கீழே *விழுவதை ஒரு மனிதர் கூர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிருர்; மேல்நாட்டு உடை சிறிய தாடி அந்த மனிதர் நியூட்டின் ப்ோல காட்சியளிக்கிருர்,
மேற்கூறிய மூன்று ஒவியத்தையும் தனித்தனியாக பார்ப்போம்.
7

Page 5
முதலாவது ஒவியம் இயற்கை நிகழ்வை அப்படியே பிரதிபலிக் கிறது. அப்பிள் பழம் கீழே விழுவதில் எவ்வித வியப்புமில்லை. அப் ஆட்டமின்றி இயற்கை நிலையை அப்படியே ஒவியக் கலை வடிவத்தில் தரப்பட்டுள்ளது. இவ்வித கலைப்படைப்பை இயற்பண்புவாதம் (Naturalism) 6T657 sprit furt. w
இரண்டாவது ஓவியம் நடைமுறைக்கு முரளுனது வியப்பூட்டுவ, தாகவும் தர்க்க நியாயங்களுக்கு அப்பாற்பட்டதாகவும் உள்ளது. இதி காசங்களில் வரும் நெல்லிக்கனிமேலே சென்று ஒட்டிக்கொண்டது போன்ற கதையை நினைவுபடுத்துகிறது. இது வெறும் கற்பனையே. அதீதக் கற்பனை. இப்படியான கற்பனைப் படைப்புகளை கற்பனவாதம் (Romantism) 6 TG107 #ngpy Girt. ^.
மூன்ருவது ஒவியம் புதிய உண்மைகளைக்கூறி நிற்கிறது. நியூட்டன் அப்பிள் பரத்திலிருந்து பழம் வீழ்வதைப் பார்த்தே, சிந்திக்கத் தொடங்கி, பூமி தன்னைத்தான் சுற்றுவதால் ஏற்படும் ஆகர்ண சக் தியை கண்டுபிடித்தான் என்பதை யாவரும் அறிவர்.
'மூன்ருவது ஒவியத்தின் மூலம் பெரியதோர் விஞ்ஞான உண்மை கூறப்படுகிறது. அப்பிள் பழம் பூமியின் ஆகர்ண சக்தியாலேயே (ம்ேலே போகாது) கீழே விழுகிறது என்ற உண்மையும் வெளிப்படு கிறது. இயற்கையுள் மறைந்திருக்கும் உண்மைகளை மனிதன் கண்டு பிடிப்பதன் மூலமே இயற்கையை அவன் வெற்றிகொள்ளவும் கற்றுக் கொண்டான். நியூட்டன் கண்டுபிடித்து, ஆகர்ண சக்தியையின் வேகத்தை அளந்ததை தொடர்ந்தே இன்று மனிதன் வானத்தில் பறக்கவும் சந்திர மண்டலத்தை எட்டவும் முடிந்தது. இயற்கையின் செயல்களை கண்டு அஞ்சி நடுங்கிய மனிதன் இயற்கையை தொடர்ந்து வென்றெடுப்பதன் மூலம் வளர்ந்து வருகிறன்.
மூன்ருவது ஒவியம் இயற்கைபற்றிய ஒரு விஞ்ஞான உண்மையை யும் மனித சமுதாயத்தின் வளர்ச்சியையும் கூறி நிற்கிறது. இதையே நாம் யதார்த்தவாதம் (Realism) என பிரிக்கிருேம்.
ஆகவே மூன்று ஓவியங்களேயும் ஒப்பிட்டு பார்க்கும்போது மூன்ற வது ஓவியமே சிறந்து விளங்குவதைக் காண்கிருேம், முதலாவது ஒவி யம் இரண்டாவதாக சிறப்படைகிறது. அது இயற்கை நிலையை அப் படியே காட்டுகிறது. இரண்டாவது ஓவியம் வெறும் கற்பன வாதமே; சிறுபிள்ளைத்தனமானது.
கலைஞனுக்கு ஒரு சமுதாயப்பணி உள்ளது. சமுதாய வளர்ச்சியை நோக்கி அவன் ஆக்கபூர்வமாக தன் அனுபவ உணர்ச்சிகளை வெளிப் படுத்தும்போது அவன் உயர்வடைகிருன். கல் அதன் பணியையும் ஆற்றுகிறது.

சுதந்திர வர்த்தக வலையம் (சுவவ) - டாக்டர் சுசியா -
சுவவ என்றல் என்ன ?
சுதந்திர வர்த்தக வலையம் (க வவ) என்பது ஒரு நாட்டினுள் மற்ருேர் நாடு நிறுவுவது போன்றது. முள்ளுக்கம்பியாலோ, கற் சுவராலோ நாட்டின் மறு பகுதியை பிரிப்பர். அப்பகுதியை காவல் காக்க தனி பொலிசார் இருப்பர். நாட்டின் பிற பகுதிகளிலுள்ள சுங்க வரி, விற்பனை வரி, இறக்குமதி - ஏற்றுமதி வரிகள், பிற சட்ட விதிகள், கட்டுப்பாடுகள் இப்பகுதிக்கு தனிமையாக - வேருக இருக்கும். வெளிநாட்டாரின் மூலதனத்திற்கு உதவுவதாக ஏற்று மதி இறக்கும்தி சுங்கவரி, வருமான வரி முதலியன வாய்ப்பாக வழங்கப்படும். இப்பகுதியிலுள்ள உற்பத்திப் பண்டங்கள் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படும். (நாட்டின் மறு ப்குதி உட்பட) இப்பகுதி யில் உழைக்கும் தொழிலாளர்களுக்கும் தனியான சட்ட விதிமுறை கள் அமைக்கப்படும். தொழில் தகராறுகளில் அரசு தலையிடா முறையில் விதிகள் இருக்கும். தொழிலாளர் இப்பகுதியில் நுழை வதற்குக்கூட அடையாள அட்டை காட்டப்படவேண்டும். நாள் உழைப்பு முடிந்து வெளியேறும்போது தொழிலாளர் பரிசோதனைக்கு உள்ளாவர். இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பண்டங்கள் தொழிலாளர் வாழும் சொந்த நாட்டிற்கு கடத்தப்படாதிருப்ப தற்கே இப்பரிசோதனைகளாகும். ་ འ་
சுவவ என்பது அண்மைக் காலத்தில் ஏற்பட்ட அமைப்பேயாகும். சுதந்திர துறைமுகங்கள், சுதந்திர வியாபார நிலையங்கள் நீண்ட காலமாக உலகில் இருந்துள்ளன. இங்கு சுங்க வரியின்றி பண்டங் களை (றக்கி மீண்டும் ஏற்றுமதி செய்யத்தக்க வாய்ப்பு இருந்தது விநியோகம், மீள் ஏற்றுமதி நிலையங்களாகவே இவை டான் பட்டன; சுங்கவரி சலுகை மட்டும்ே கிடைக்கும் நிலையம்ாகும்.
சென்ற 10 வருடங்களில் சுதந்திர வர்த்தக வலையம் பற்றிய புதிய கோட்பாடு தோன்றியது. இங்கு வெளிநாட்டாரை தமது யந்திரங்களை வரவழைத்து பண்ட உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. சுங்க வரி சலுகை மட்டுமன்றி பல புதிய சலுகைகளும் வெளிநாட்டு முதவாளிகளுக்கு வழங்கப் படுகிறது.

Page 6
சுவவ உள்ளே பண்ட உற்பத்தி செய்வதற்கு வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன. யந்திரங்கள், உதிரிப்பாகங்கள், மூலப்பொருட் கள் யாவும் சுங்கவரியின் றி இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப் படுகிறது. வருமான வ்ரி சலுகையும் லாபத்தை எடுத்துச்செல்ல வரி விலக்கும் உட்பட மேலும் பல சலுகைகளும் வாய்ப்புகளும் வழங்கப்படுகின்றன:
தை வானில் 1965இல் முதலாவது சுவவ ஆரம்பிக்கப்பட்டது. 1970இல் மேலும் இரு சுவவ ஏற்படுத்தப்பட்டது. தென் கொரியா விலும் 1970இல் ஒரு சுவவ ஏற்படுத்தப்பட்டது 1972இல் só 'n பையினிலும் மலேசியாவிலும் சுவவகள் ஆரம்பிக்கப்பட்டன.
சுவவ இரு வாய்ப்பு:ளைக் கொண்டது : (1) வலையத்தை ஏற் படுத்தும் நாடு நிலம், தொழிற்சாலைகள் கட்டும் இடம், L6lair dy rr rrih, நீர், தெருக்கள், முதலிய வாய்ப்புகளை அரசு மூலதனத்திலிருந்தே ஏற்பாடு செய்து உதவுகிறது. மற்றது அப்பகுதி ஒரு சுதந்திர வர்த்தக வலையம் ஆகிறது; முதலாளிகளுக்கு சுதந்திரம் யாவும் வழங்கப்படும் தனி நாடு; நாட்டுக்குள்ளே மற்றேர் நாடு ஆகும்: தேசிய நாட்டில் ஓர் அந்நிய நாடு, அரசு உள்நாட்டிலிருந்து மலிந்த விலையில் கூலி உழைப்பாளரையும் வழங்குகிறது. இவ் வாய்ப்புகள் வெளிநாட்டு முதலாளிகளை கவர்வது வியப்பில்லை. சர்வதேச மூல தனத்திற்கு இவ்வலையம் ஒரு சொர்க்கமாகும்.
சுவவ தனிமைப்படுத்தப்பட்ட அமைப்பல்ல. 1960ன் பின் மூன்றுவது உலக நாடுகளால் ஊக்கப்படுத்தப்பட்ட ஏற்றுமதி ஒட் டிய யந்திரத் தொழிலாகும். உண்மையில் யந்திர உற்பத்தியினல் செழுமை பெற்ற முதலாளித்துவ நாடுகள் மூன்ருவது உலக நாடு களில், உள்நாட்டுச் சந்தைக் காகவும் உலகச் சந்தைக்காகவும் ஏற் படுத்திய உற்பத்தி நிலையங்களாகும். ஏகாதிபத்திய நாடுகள் 1960ன் பின் மூன்ருவது உலக நாடுகளில் ஏற்படுத்திய சுவவே உடனேயே பெருவளர்ச்சியடைந்து வருகின்றன. .
சுவவ ஏற்படுத்தும் நாடுகள் பின்வரும் காரணங்களை முன் வைக்கின்றன: (1) ஏற்றுமதியை உயர்த்தி வெளிநாட்டு செலா வணியை சேகரிக்க முயலுதல் (2) உள்நாட்டு கூலி உழைப்பாள ருக்கு புதிய வேலை வாய்ட்புகள் (3) தம் நாட்டிற்கு தொழில் நுட் பத்தை பெறும் முயற்சி.
சுவவ. அமைக்கும் நாட்டிற்கு உதவுகிறதா என்பது ஒரு விஞ? உள்நாட்டில் ஆளும் வர்க்கம் ஏற்படுத்திய நெருக்கடிகளுக்கு தீர்வு காணவே இம்முயற்சிகளில் நாடுகள் முயல்கின்றன. அவை: (1) வெளி
O

நாடுகளிலிருந்து வாங்கியவற்றிற்கு பணம் கொடுக்க முடியா நிலை (ஏற்று மதிக்கு மேலாக இறக்குப்தி செய்யும் முயற்சி) (2 வேலையில்லா திண்டாட்டம். (3) தொழில் நுட்ப அறிவின் கீழ்நிலை, ஏகாதிபத்திய தொடர்புகளாலேயே இந்நிலைகள் 3வது உலக நாடுகளில் ஏற்கெனவே ஏற்பட்டன. . w VM
பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதும் அரசியல் சுதந்திரத்தை யும் காப்பாற்றுவோம் என்ற முயற்சியுடன் இறக்குமதிக்குப் பதிலான உற்பத்தி (Import Substitution) என்று தொழில் களை ஆரம்பிப்பர். அதாவது, வெளிநாட்டு செலாவணியை மீதப்படுத்துவதற்காக ஏகாதி பத்திய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்த பண்டங்களை, உள்நாட் டுத் தேவைக்காக உற்பத்தி செய்வர்.
ஆனல் இம்முயற்சி தோல்வியடையவே செய்யும். தச்சு நிலச் சீர் திருத்தத் திட்டம் இன் மைய்ால் ஏற்படும் விவசாயிகளின் வறுமை, உள்நாட்டு சந்தையின் விரிவை கட்டுப்படுத்துகிறது; இத இல் Hதி தாக தொடங்கிய யந்திர உற்பத்தியின் வளர்ச்சி தேக்கமடைகிறது. அத்தோடு உள்நாட்டு யந்திர உற்பத்தி மூலம் முதலாளித்துவ நாடு களுடன் போட்டியிட்டு வெளிநாடுகளுக்கு பண்டங்களை ஏற்றும்தி செய்யமுடியா நிலையிலும் உள்ளது. அரசு சுங்க வரிமூலம் வெளி நாட்டு பண்டங்கள் றக்குமதி செய்வதை கட்டுப்படுத்துகிறது. ஆனல் வெளிநாட்டு முதலாளிகள் உள்நாட்டு சந்தையில் நுழைவ தற்கு பல்வேறு தந்திர வழிகளை கையாண்டு வெற்றிபெற்று விடுகின் றன. (தரகு முதலாளிகளுடன் கூட்டாக இணைதல், உதிரிசளாக வர வழைத்து பொருத்துதல் முதலியன)
இவ்வெளிநாட்டுக் கம்பனிகள் இறக்குமதிக்கு பதிலான உள் நாட்டு உற்பத்திகளையே (பிடலை போன்ற 1ண்டங்கள்) சில வேளை களில் அப சரித்துக்கொண்டு விடுகின்றன. ஆத்தோடு கொக்கோ கோலா போன்ற தேவையற்ற பண்டங்கஃ:யும் உற்பத்தி செய்கின் றன. யப்பானியரின் மொழியில் ஆசியாவில் 'இறக்குமதிக்கு பதிலான உற்பத்தி என்பது உண்டல மயில் ‘ஏற்றுமதிச்கு பதிலான உற்பத்தி' ஆகும். யப்பானிலிருந்து ஏற்றுமதி செய்வதற்கு பதிலாக ஆசிய நாடுகளிலேயே பண்டங்களை உற்பத்தி செய்து விற்று விடுகின்றனர்.
36 Gl திட்டங்கள் ஏகாதிபத்திய ஏக:ோக உற்பத்தியுடன் போட்டி போடத்தக்க நிலையில் ஏற்படுவதில்லை எதிர்மறையாக முன் னர் கைபிடித்த கொள்கை வின் தோல்வியே புதிய நடைமுறைக்கு வழி வகுக்கிறது உலகச் சந்தைக்கு உற்பத்தி என்பது வெளிநாட்டு மூலத53 க்தின் குவியலால் மட்டுமே முடியும். இதனுல் வெளிநாட்டு

Page 7
மூலதனத்தின் ஆதிக்கம் வலுவடைகிறது. அவற்றை வரவழைக்கும் நாடுகள் மலிந்த கூலியில் உழைப்பு, வரி சலுகைகள், குறைந்த விலை யில் தொழிற்சாலை கட்ட நிலங்கள் மட்டுமல்ல மிக கீழ்த்தரமான அடக்குமுறை மூலம் அரசியல் அமைதி”யையும் நிலைநாட்டவேண்டும்.
சுவவ ஒரே முடிச்சில் இவையாவையும் கொண்டிருக்கும். இச்சர் வாதிகார ஆட்சிகளை தொழிலதிபர்கள், அரச உத்தியோகத்தர், ஏகாதிபத்திய முதலாளித்துவ பொருளாதார நிபுணர்கள் ஆர்வத் தோடு வரவேற்பர்.
ஐ நா. யந்திரத் தொழில் அபிவிருத்தி அமைப்பின் அறிக்கை ஒன்றின்படி ஏறக்குறைய 30 அபிவிருத்தி அடைம் (3வது உலக) நாடுகள் சுவவ ஏற்படுத்துவதை விரும்புகின்றன.
இந்த ஐ. நா. சார்ந்த அமைப்பே சுவவ ஏற்படுத்துவதில் உதவி முன்வருகிறது.
சுவவ என்பது மூன்ருவது உலக நாடுகளில் ‘ஏற்றுமதிக்காக Li பத்தி" என்ற பொருளாதார அமைப்பிற்காக ஏகாதிபத்திய நாடு களால் உருவாக்கப்படும் மேடைகளாகும். நவீன ஒன்றிணைந்த ஏகாதி, பத்திய அமைப்பின் புது வடிவம் இதுவாகும். ஏகாதிபத்திய சுரண் டலை உணர்ந்த மக்கள் இதற்கு எதிராக போராடுவதும் தவிர்க் 1 முடியாததாகும்.
ஏகாதிபத்திய மூலதனத்திற்கு கவவ கடற்கரை முகாம்களாகும் காலப்போக்கில் நாட்டின் முழுப் பொருளாதாரத்தையும் நுழைந்த ஏகாதிபத்திய மூலதனம் கட்டுப்படுத்தும். எகிப்து, காம்பியா, ஐவரி கோஸ்ட், கென்யா, செனிகல், இலங்கை, ஜமைக்கா, லிபேரியா, சிரியா, றினிடாட், ரொபே கா, சூடான் ஆகிய நாடுகளும் சுவவ அமைக்க ஐ. நா. யந்திரத் தொழில் அபிவிருத்தி அமைப்பை உதவும் படி வேண்டியுள்ளன. ஏ சாதிபத்திய நாட்டவர் இன்று மூன்றுவது உலக நாடுகளில் உற்பத்தி செய்த பண்டங்களையும் வாங்கிப் பயன் படுத்துகின்றனர்; ஏழை மக்களின் மலிந்த உழைப்பைக்கொண்டு உற் பத்தி செய்யப்பட்ட பண்டங்கள் அவர்களுக்கு மலிவாக கிடைக் கின்றன.
சு வவ போன்ற நவீன ஏகாதிபத்திய வடிவங்கள் மூலதனத்தை மிக வேகமாக சர்வதேசமயப்படுத்துகின்றன. உலகத் தொழிலாளி வர்க்கத்தின் ஐக்கியத்திலும் வேகமாக இவை வளர்கின்றன் வா என் பது நினைவு பூர்வமாக கற்கவேண்டியதாகும். ●
2

இரு நாடுகளால இரு மாவட்டங்கள் 1. இந்தியா - தஞ்சாவூர்
காவிரிக் கரையில் உள்ள தஞ்சாவூர் மாவட்டத்திற்கும் வட வியத்நாமில் செந்நதி தீரத்தில் உள்ள தை பின் மாவட்டத்திற்கும் உள்ள ஒற்றுமைகள் வருமாறு:
(1) இரு மாவட்டங்களும் நெல் விளைப்பன் வ, அரிசி குறைவுள்ள
பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்பவை.
(2) 1965ன் பின் ஏற்பட்ட பசுமைப் புரட்சிக்கு சாதகமான உயர்ந்தரக விதை நெல், இரசாயன உரம், கிருமிநாசினி, பம் செட், ஒரளவு டிராக்டர் ஆகியவை பயன்படுத்தப்பட்டன.
A
இரு அரசுகளினதும் விவசாயம் பற்றிய கொள்கைகள், விளைச்சல் உலக பொருளாதாரத்துடன் ஏற்பட்ட தொடர்புகள் ஆகியவை வருமாறு :
1947ல் இருந்து 1960 வரை இந்திய அரசு இந்திய பூர்ஷ்வாக்கிளை
யும் நவீன நிலப்பிரப்புக் களையும் கொண்டிருந்தது. படித்த குட்டி
பூர்ஷ்வாக்களும் பணக்கார விவசாயிகளும் தேர்தலை தீர்மானிக்கும்
செல்வாக்குப் பெற்றவராவர். இவர் கள் 1942 ன் பின் வேலை நிறுத்
தம், புரட்சிப் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். தஞ்சாவூரும் இதற்கு விதி விலக் கல்ல. இவர் களை பூர் ஷ்வாக்களும் நிலப்பிரபுக்
களும் சாந்தப்படுத்தினர். நிலச் சீர்திருத்தம், உச்சவரம்பு, உழுப பனுக்கு நிலம், உயர்ந்த கூலி, சுட்டுறவு போன்றவை முன்வைக் கப் பட்டன. அரசின் பிரசாரப்படி 1956ல் நிலக்குத்தகை 60 சத வீதத்
திலிருந்து 40 சத வீதத்திற்கு குறைக்கப்பட்டு 1961 ல் உச்ச வரம்பு
30 ஏக்கர் எனக் கூறப்பட்டதோடு கூலி விவசாயிகளது கூலியும்
அடிக்கடி உயர்த்தப்பட்டது. w
தஞ்சாவூர் மாவட்டத்தில் 1951-1961ல் நெல் உற்பத்தி 65% உயர்ந்தது. உண்மையான காரணம் நெல் சாகுபடி நில விஸ்தீரண மும், இருபோக விளைச்சலுமாகும், 1960 வரையில் நிலப்பிரபுக்களும் பணக்கார விவசாயிகளும் நிலச் சீர் திருத்த சட்டங்களிலிருந்து விடு படக்கூடிய விதமாக நிலங்களை உறவினரிடமிருந்து பிரித்து எழுதி, பொய் பெயர்களில் நிலங்களை பதிந்து ரிஜிஸ்டர் செய்து) தப் பிக்கொள்ளும் புது வழிகளை தேடிக்கொண்டனர். தஞ்சாவூர் சந்
13

Page 8
தைப்படுத்தும் கூட்டுத்தாபனம் பெரு நிலப் பிரபுக்களின் ஆதிக்கத் தில் வந்தது; நெல் விற்பனை மூலம் கொள்ளை லாபம் பெற்றனர்,
1960ல் வரட்சி, சீரற்ற பங்கீட்டுமுறை, தவருண அமெரிக்க தானிய இறக்குமதிகளால் உணவு நெருக்கடி ஏற்பட்டது. 1965 ல் பசுமைப் புரட்சிக்கு தஞ்சாவூர் மாவட்டம் உட்பட பல மாவட்டங் கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. மூன்ருவது உலக முதலாளித்துவ நாடு களில் நடைபெற்றது போலவே தஞ்சாவூரிலும் நடைபெற்றது. 1961-1976 காலகட்டத்தில் 45% உற் பத் தி உயர்ந்தது. (1951 - 61லும் குறைவே) விள்ைநிலம் விரிவடையாது வலுவான சாகு படியே உற்பத்தி உயர்வுக்கு காரணமாகும். -
1976ல் நெல் உற்பத்தி, 1951லும் பார்க்க 5 மடங்கு உயர்ந்தது.
ஆயினும் நிலச்சீர்திருத்தமும் பசுமைப் புரட்சியும் நடுத்தர விவசாயி களுக்கும் எவ்வித பயனும் அளிக்கவில்லை. மாருக பெரு வியாபாரி கள், நிலப்பிரபுக்கள் வளர்ச்சியடைய பணக்கார விவசாயிகள் பெரிய வளர்ச்சியடைந்தனர். 1974ல் உச்ச வரம்பு 15 ஏக்கராக்கப்பட்ட போதும் பல குடும்பங்கள் 100-200 ஏக்கர் வரையிலும் சிலர் 1 000, 5000 ஏக்கர் வரையும் நெல் சாகுபடி செய்கின்றனர். நடுத்தர விவ சாயிகள் தமது நிலங்களை பணக்கார விவசாயிகளுக்கு விற்கும் நிலை ஏற்பட்டது. 1951ல் 30 வீத விவசாயிகள் நிலமுள்ள விவசாயிகளாக இருந்தனர். இன்று 20% மானவர்களுக்கே நிலமுண்டு. கிராமங்களில் நிலச் சொந்தக்காரர் இல்லாதவரது நிலங்களின் தொகை அதிகரித் துள்ளது. 1951ல் இத்தொகை 41 வீதமாக இருந்தது. இன்று 67 வீத மாக உயர்ந்துள்ளது. நடுத்தர் விவசாயிகள் இன்று 25% மட்டுமே உள்ளனர். 1951 ல் இருந்த குத்தகை விவசாயிகள் தொகை இன்று பாதியாக குறைந்துவிட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தின் முழுப்பரப் பில் கால்பங்கு நிலமே குத் தகை விவசாயிகளின் செய்கையில் உள்ளது. 1951 ல் 40% மாக இருந்த கூலி விவசாயிகளின் தொகை 75% மாக இன்று உயர்ந்துள்ளது. கூலிகூட உயரவில்லை. 1951ல் 120-180 நாள் வரை கூலி வேலை கிடைத்து வந்தது. இன்று 90-140 வரையே வேலை கிடைக்கிறது. 1971ல் எடுத்த கணக்கின் படி நெற் களஞ்சிய மான தஞ்சாவூர் ம்ாவட்டத்தில் வாழ்பவரில் 35% குடிமக்கள் (பெரும்பகுதி அரிஜனர்) ஒருவேளை உணவுடனேயே வாழ்கின்றனர். மற்றவர்களது வாழ்க்கைத்தரமும் உயரவில்லை. நிலப்பிரபுக்கள், வியாபாரிகளது வாழ்நிலை மட்டும் மிகவும் உயர்ந்துள்ளது.
இந்நிலைக்குரிய காரணம் சோஷலிசம்' பேசிக்கொண்டே இந்தியா
அரசமுதலாளித்துவ அபிவிருத்தியில் இறங்கியுள்ளதாகும். அரசைகட்டி ஆளும் சொத்துடையவர்கள் தேசிய மூலதன வளர்ச்சியை ஏற்படுத்த
14

தயாராக இல்லை. இந்தியா உலகின் யந்திர உற்பத்தி நாடுகளுக்கு "அடிமைப்பட்டு விட்டது. இதனல் அந்நாடுகளுக்கு சலுகைகள் வழங்கு கிறது. பிறநாட்டு கம்பணிகள், அரசுகள் தமக்கு லாபகரமாக தொழில் செய்து, லாபங்களை எடுத்துச் செல்ல வழிவிடப்பட்டுள்ளது. மிகவும் மோசமான பாதிப்பு ஏற்படுவது சமனற்ற பரிவர்த்தன (Unequal Exchange of trade) வாணிபத்தாலாகும். (இந்தியா மூலப்பொருட் களையும் உற்பத்திக்கு உழைப்புக் கூடிய சிறுயந்திரப் பண்டங்களையும் ஏற்றுமதி செய்து கனர கயந்திரங்களையும், உணவு, தொழில் நுட்பம் ஆகியவற்றையும் இறக்குமதி செய்கிறது. இதன் மூலம் இந்தியாவின் ஒரு பகுதி செல்வம் யந்திர உற்பத்தி நாடுகளால் அபகரிக்கப்பட்டு விடுகிறது.)
5% மான பூர் ஷ்வா பெருநிலப் பிரபுக் கள் மேல் நாட்டவரோடு ஒட்டிய வாழ்க்கைத் தரத்தை அனுபவிக்கின்றனர் இந்திய யந்திர உற்பத்தி இந்த வர்க்கத்திற்கே பயன்படுகிறது; அத்துடன் பணக்கார விவசாயிகள், குட்டி பூர்ஷ் வாக்களுடன் இராணுவ அமைப்பினருக்கும் பயன்படுகிறது. பெரும்பாலான மக்கள் மிகக்குறைந்த யந்திர உற் பத்திப் பண்டங்களையே வாங்கமுடியாதளவு வறுமையில் உள்ளனர்; ஒரு பகுதியினர் வாங்க முயன்று மேலும் வறியவராகின்றனர்.
தஞ்சாவூர் சுரண்டலின் அடிமட்டத்தில் உள்ளது. அங்கு உற் பத்தியாகும் நெல்லின் மூன்றில் இரண்டு பகுதிகளை அயல் மாவட்டங் களுக்கு ஏற்றிவிடுகிறது. 1976ல் நெல் ஏற்றும் தடைகள் நீங்கியபின் பெரிய நிலப்பிரபுக்களும் வியாபாரிகளும் மேலும் லாபமீட்டினர். இந்தியா போலவே தஞ்சாவூரும் குறைந்தளவு யந்திரப் பண்டங் களையே இறக்குமதி செய்கிறது. 90% மக்களால் இவற்றை வாங்க முடிவதில்லை. .
கம்யூனிஸ் கட்சியும் (வலது) அதன்பின் மார்க்ஸிஸ்டுகளும் கடந்த 30 ஆண்டுகளாக ஏழை, கூலி விவசாயிகளின் போராட்டங்களை நடாத்துகின்றனர். 1968 டிசம்பரில் காங்கிரஸ் பிரமுகர் ஒருவரது தலைமையில் நிலப்பிரபுக்கள் ஒன்று சேர்ந்து 44 அரிசன பெண்கள், குழந்தைகள் முதியவர்களை கூலி டிராக்டர் தகராறில் எரித்துவிட்ட னர் முக்கியமாக கிழக்கு தஞ்சாவூரில் இதே போன்ற கொலைகள், கொடுமைகள் 1966-70ல் நடைபெற்றன. மார்க்ஸிஸ் கட்சி தேர்தல் களில் அதிகம் ஈடுபட்டபின் விவசாயத் தொழிலாளர் சோர்வடிைந்து
நம்பிக்கையிழந்துள்ளனர்.
15

Page 9
1975-76ல் இந்தியாவில் ஏற்பட்ட அவசரகால நிலைமைக்குரிய காரணங்கள் : யந்திர உற்பத்தி,விவசாயஉற்பத்தியின்தேக்கம்,தேக்கத் தால் ஏற்படும் நெருக்கடி, தனியார் சராசரி வருமானம் வளர்ச்சி படையாது தேங்கியவை ஆகும், இந்நிலைகள் ஊழலுக்கு வழிவகுத் தன; ஆளும் வர்க்கம் உட்பட எல்லா வர்க்கங்களிடையும் முரண்பாடு கள் ஏற்பட்டன. அவசரகால நிலைமை தொழிலாள, விவசாயிகளை மேலும் அடக்குமுறைக்கு உட்படுத்தி அவர்களது வருமானத்தையும் குறைந்தது. தஞ்சாவூரில் காங்கிரசை எதிர்த்த பலநூறு எதிர் கட்சியினர், கம்யூனிஸ்டு தொழிற் சங்கத் தலைவர்கள் சிறையில் தள் ளப்படடனர். கிராம பஞ்சாயத்துகளின் அதிகாரங்கள் கட்டுப்படுத்
தப்பட்டன.
தடை செய்யப்பட்டிருந்த நெல் ஏற்றுமதி 1976ல் நீக்கப்பட்டது, நிலப்பிரபுக்கள், வியாபாரிகளுக்கு வாய்ப்பாக இருந்தது. காங்கிரஸ் ஆட்சி தேர்தலில் தோற்றுவிட்டது. ஆயினும் பிரச்சனைகள் அப்ப டியே உள்ள்ன. எதிர்கால பூர்ஷ்வா அரசு எதுவும் புதிய அடக்குமுறை
யின்றி ஆட்சிப் பீடத்தில் இருக்கமுடியாது. - ܓܚ
(அடுத்த இதழில் முடிவுறும்)
w இந்தியாவிலுள்ள 9 மாநிலங்களிலுள்ள அடிமை உழைப்பாளரின் தொகை 23லட்சமாகும். விவசாயக் கூலிகளில் 63.5 வீதமானவராவர். மொத்த அடிமைகளில் 84.2% அரிஜனராவர். தமிழ் நாட்டிலுள்ள அடிமை உழைப்பாளர் தொகை 250,000. விவசாயத்தில் நவீன தொழில் நுட்பம் (டிராக்டர், உரம், கிருமி நாசினி, பம் செட் முதலியன) புகுத்தப்பட்டதே நிலைமை மோசமடைவதற்கு காரண மாகும் - காந்தி சமாதான கழகத்தின் மதிப்பீட்டு அறிக்கையின் ւյգ, (ஆதாரம் : இந்து)
(உயிர் வாழ்வது தவிர உபரி உழைப்பு முழுவதும் பறிக்கப்படும் நிலையே அடிமையாகும்.).
16.

சர்வதேச கம்பனிகள்
LLLLSLLLSLLSLLLkeSSSkSLLSLkLLMLkLkL ELSLkLLLSLSEEECSLSLE
சர்வதேச கம்பனிகள் என்பவை ஏகாதிபத்தியத்தின் நவீன அமைப்பும் அதன் சுரண்டும் யந்திரங்களுமாகும். ஆரம்பத்தில் எண் ணெய் கம்பணிகளே உலகநாடுகளில் பரந்து சுரண்டின. உதாரணமாக அமெரிக்க ஸ்ராண்டட் ஆயில் கம்பனிக்கு 300 கிளைகள் 50 நாடு களில் இருந்தன.
இரண்டாவது உலக யுத்தத்தின் பின் சர்வதேச கம்பனிகள் வேக வளர்ச்சியடைந்தன. ஏற்றுமதி சந்தையுடன் ஒரு கம்பனி ஆரம்பிக்கும் பின் அந்நாட்டில் உதிரிகளாக வரவழைத்து கார், யந்திரங்களை முழுமையாக பொருந்தி விற்பனை செய்யும் அதன் பின் அங்கு உற்பத்தியையே ஆரம்பிக்கும். போட்டியைத் தவிர்த்து இவை ஏகபோக உற்பத்தி, சந்தையைக் காப்பாற்ற கைக் கொள்ளும் வழி யாகும். இதன் மூலம் அந்நாட்டின் மலிந்த விலையில் உழைப்பையும், மூலப் பொருட்களையும் பெறுவதோடு இறக்குமதிக் கட்டுப்பாடுகள், வரிகளிலிருந்தும் தப்பிக் கொள்கிறது.
மிகப் பெரிய கம்பனிகள் சர்வதேச அரங்கில் பணபலம், நிர் வாகத் திறமைகளுடன் சுதந்திரமாக இயங்கி வருகின்றன. சிறு கம்பணிகளால் அவ்வாறு வளர முடியவில்லை. ஏகாதிபத்திய வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திலேயே சர்வதேச கம்பனி களின் ஏகபோக முதலாளித்துவம் நிலைபெற முடிந்தது.
இரண்டாவது உலக யுத்தத்தின் பின் அமெரிக்கக் கம்பனிகளா லேயே சர்வதேச ரீதியில் விரைவாக பரவ முடிந்தது. பிற முத லாளித்துவ நாடுகள் யுத்தப் பாதிப்புகளிலிருந்து மீட்சி பெறுவதிலும் தம் நாட்டை கட்டி எழுப்புவதிலும் ஈடுபட்டிருந்தன. அமெரிக்க கூட்டுக் கம்பனிகள் ஐரோப்பாவிலும் நுழைந்தன. பின்னரே பிற ஐரோப்பிய நாடுகளும் யப்பானும் உலக நாடுகளில் ஊடுருவத் தொடங்கின.
மூன்றுவது உலக நாடுகளில் இன்று சர்வதேசக் கம்பனிகள் முழுமையாக ஊடுருவி விட்டன; இந் நாடுகளில் உதிரிகளை வர வழைத்து இணைத்தல், உற்பத்தி ஆகியவற்றில் ஈடுபட்டு விட்டன இது முன்ன்ர் என்று மில்லாத போக்கு ஆகும். இது ஏகாதிபத்தி யத்தின் நவீன போக்கு என அவதானிகள் கூறுகின்றனர்.
7

Page 10
சர்வதேசக் கம்பணிகள் மூன் ருவது உலக நாடுகளில் நவீன உற்பத்தியை ஆரம்பித்துள்ளன என்பது உண்மையே. இவை ஏன் ஆரம்பித்தன? முதலாவதாக உள்நாட்டு பூர்ஷ்வா, நிலப் பிரபுக்கள், அரசியல் ஆதிக்கம் பெற்ற உயர்மட்ட வருமானம் உள்ளவர்களது தேவைகளை பூர்த்தி செய்வதாகும். முன் இவர்களது தேவைகள் இறக்குமதி செய்யப்பட்டன. இரண்டாவதாக முதலாளித்துவ, பிற நாடுகளுக்கு உற்பத்திப் பண்டங்களை ஏற்றுமதி செய்வதாகும். இதன் மூலம் உள்நாட்டு உழைப்பையும், மூலப் பொருட்களையும் மலிந்த விலையில் அபகரிக்க முடிகிறது. இவற்ருல் மூன்றுவது உலக நாட்டு மக்களை உயிர் வாழும் நிலையில் விட்டு உபரியாவும் சுரண்டப்பட்டு விடுகிறது. இத்தகைய பொருளாதார அமைப்பை நிலைநாட்ட மிருகத்தன இராணுவ பொலிஸ் சர்வாதிகார அரசியல் முறைகள் ஆசியா, ஆபிரிக்கா, லத்தீன் அமெரிக்க நாடுகளில் வழமையாகி வருகின்றன.
ஏகாதிபத்திய, முதலாளித்துவ நாடுகளில் உற்பத்தி கன ரக உற்பத்தியாக உள்ளன. மூன்முவது உலக நாடுகளில் ஆடம்பர பாவனைப் பொருட்களின் உற்பத்தியே நடைபெறுகின்றன. உற்பத்தி 3-வது உலக நாடுகளின் தேவையை ஒட்டியல்ல, 3-வது உலக நாடு களின் ஆளும் வர்க்கத்தவரும் கலாசார ரீதியிலும் (தொழில் நுட்ப அடிப்படையாக) ஏகாதிபத்திய தாசர்களாகவே உள்ளனர். விமான சேவை, நட்சத்திர ஓட்டங்களின் வளர்ச்சி சுற்றுலா பிரச்சாரம் யாவும் கலாசார முறையில் நாடுகளை அடிமைப்படுத்துவதற்கு ஏற் பட்ட புதிய அமைப்புகளாகும்.
3-வது ഖ് நாட்டு ஆளும் வர்க்க பூர்ஷ்வாக்கள் தேசீயத் தன்மையை இழந்து பிறநாட்டு பூர்ஷ்வாக்களுக்கு தரகர்களாகவும் சேவை செய்பவர்களாகவும் மாறி விடுகின்றனர். லாபம், பிறநாட்டு கடன், வட்டி, தொழில் நுட்பத்திற்கு ருேயல்டி, ஏற்றுமதி இறக்கு மதியில் திருட்டு விலைப்பட்டியல், சுவிஸ் வங்கிகளில் கள்ள கணக்கு என வாழ்ந்து நாட்டு மக்களை ஏமாற்றுகின்றனர்.
இந் நவீன ஏகாதிபத்திய்ப் போக்குகளால் 3-வது உலக நாடு களுக்கு விமோசனம் உண்டா? ஆம். அத்துமீறிச் சுரண்டப்படுவதால் வர்க்க அரசியல் உணர்வு, மார்க்சிய சித்தாந்த அறிவு வளர்வதும் புரட்சிக்கு வழி தேடுவதும் கூட தவிர்க்க முடியாதவை. பழைய அமைப்புகள் உடைத் தெறியப்பட்டு ஆக்க பூர்வமாக கட்டி எழுப்பும் புதிய அமைப்புத் தோன்றுவதும் உறுதியே. --8635 --س
18

நம் பகைவர் நாம் அறிவோம் - விந்தன் -
-க்டர் அழைப்பை எதிர்பார்த்து நெடுநேரமாகக் காத்துக் கொண்டிருந்த என்னல் நிலைகொள்ள முடியவில்லை வானே அண்ணுந்து பார்க்கிறேன். அவர் வீட்டுக்கு முன் அமைந்துள்ள முல்லைப் பந்தல் கதிரவனின் கைகளைத் காணத்துடிக்கும் எனது விழிகளுக்குத் திரை போட்டுவிட்டது. சுவரிலுள்ள அந்த எழுத்துகளைப் பார்க்கிறேன்.
காய்ச்சல் தலைவ்லி, லொக். லொக். நாய்ச் சங்கீதம் வேறு. அதுதான் இருமல், வேண்டாத சனியனை விலை கொடுத்து வாங்கிவிட் டேன். 'ஒ. தூஉ.', துப்பிய கோழையில் மண்ணைத் தள்ளி மூடுகிறேன். ரயில் எஞ்சின் கூட தோற்றுப் போகும். அத்ைக் குடிக் காமல் இருந்திருந்தால். "கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா!' என்கிறது மனம். -
டாக்டர் அறையை ஒட்டியுள்ள சிமெண்ட் பெஞ்சியில் முல்லைப் பந்தலுக்கீழ் அமர்ந்திருக்கிறேன். இன்னும் நாலைந்து பேர் போன பிறகுதான் டாக்டரைப் பார்க்க வேண்டும். மருத்துவமனைச் சுவரைச் சுற்றிப் பார்க்கிறேன். அறிக்கைப் பலகை, அதில் ஒன்றுமில்லை. இவ் வாரத்தில் டாக்டர் வெளியூர் போகவில்லை போலிருக்கிறது. அதுக்கு மேலே இரண்டு வரிகள் எழுதப்பட்டுள்ளன. 'நாடு மொழி இனம். ' 'லொக். ஒ . . . வாசகங்களில் என்னல் கவனஞ் செலுத்த முடியவில்லை. ஆயினும் அவற்றை மனனம் செய்ய முயல்கிறேன். w
டாக்டர் உள்ளே நோயாளியைப் பரிசோதிக்கிறர் . அவர் அறை பக்கத்திலேயே இருக்கிறது. நோயாளிகளோடு உரையாடுவது வெளியே அமர்ந்திருப்பவர்கள் விரும்பாவிட்டாலும் அவர்கள் காதில் வந்து விழும். எங்கள் காதிலும் வந்து விழுகின்றன.
‘என்ன, இப்போ உடம்பு தேவ லைதானே?
99.
“கொஞ்சந் தேவலை. “பயப்பட வேண்டாம் எல்லாம் குணமாகிவிடும். வேறு மருந்து தருகிறேன். என்ன பீடியை மறக்க மருந்து கொடுத்தேனே சாப் பிட்டீங்களா . பீடியை விட்டிடணும். இல்லேன்ஞ. மருந்து சரியா .வேலை செய்யாது' v
19

Page 11
* நோயாளியோடு உரையாடிக் கொண்டிருக்கும் பொழுதே தன் ஹோமியோ பதி மருத்துவத்தின் பத்திய முறைகளை நோயாளிகள் பின்பற்றுகிறர்களா இல்லையா என்பதைக் கவனிப்பதிலும் வலியுறுத்து வதிலும் டாக்டர் தன் கவனத்தைத் தவறவிட்டுவிடுவதில்லை.
பீடியை விட்டிட்டாரா என்று டாக்டர் கேட்டதுதான் தாமதம் நோயாளிகூட வந்த மனைவி “நல்லா உரைக்கிழுப்பிலே கேளுங்கய்யா. பீடியெ ஊதியூதி காசுக்கு காசும் போயி தூணு இருந்த மனுசன் துரும்பாப் போயிட்டார். . ' கணவனது செயல்களினல் உண்டான வெறுப்பு, அவளது வார்த்தைகள் நெருப்பாய் விழுகின்றன.
“உங்களுக்கு எத்தனை தடவை சொல்லுறது. வெத்திலை பீடி : . காபி. டீ. பொயிலை. நம்ம மருந்துகிட்டே ஆகவே ஆகா தென்று. ஒன்று மருந்து சாப்பிடுங்க. இல்லே பீடியைச்
சாப்பிடுங்க’ குழந்தையைக் கடியும் அன்னைபோல நோயாளியைக் கடியும் டாக்டரின் வார்த்தைகள், நோயாளியின் மூளையைச் சலவை செய்கிறன போலும். அதனுல்தான் அவன் மறுமொழியின்றி மெளனி .நிற்கிமுன் וש זחנL)
'அம்மா ஒன்றும் கவலைப்பட வேணும். பீடியையும் விட்டிடு
வார். நோயும் குணமாகிவிடும். சுவரை வச்சுத்தானே சித்திரம், குழந்தைகளெல்லாம் செளக்கிந்தானே.” - நோயாளி
களின் நோயோடு நின்றுவிடாமல் அவர்களது வீட்டுப் பிரச்சினை களோடும் ஐக்கியமாகி விடுவது டாக்டரின் வழக்கம். வெளியே காத்திருப்பவர்களுக்கு இது பெரிய சுமை. உள்ள்ே இருப்பவர்களுக்கு அது டானிக், டாக்டரால் இந்த பிரச்சினையை நெடுகிலும் சமாளிக்க முடியவில்லை. -
டாக்டர் ம்ணியடிக்கிருர், உள்ளே இருந்தவர் வெளியேறுகிருர், வெளியே இருந்து ஒரு பெரியவர் உள்ளே செல்கிருர், இம். இவர் போன பிறகுதான் நான் டாக்டரைப் பார்க்கமுடியும். சிமெண்ட் பெஞ்சியில் கொஞ்சம் வசதியாக நிமிர்ந்து உட் காருகிறேன். N
"வாங்கைய்யா . . வணக்கம். இப்படி அமரலாம்ய்யா. உடம்புக்கு என்ன'
**வணக்கம் காம்ரேட். ஒண்ணுமில்லே. கொஞ்சம் நெஞ்சு வலி.. இருமல். கிறு கிறுப்பு. அலைச்சலும் சாஸ்தி'
20

“ஒன்றுங் கவலைப்பட வேண்டாம். எல்லாம் குணமாக்கிட லாம். உங்க மில்லிலே போராட்டம். என்னைக்கு முடியும்?. . போராட்டத்திலே உங்க சங்கமும் சேர்ந்திருக்கா'
‘ஆமங்கைய்யா ... பட்டினிபோட்டு தொழிலாளர்களை பணிய வைச்சிடலாமென்று முதலாளி நினைக்கிருன், நாங்க விட்டிடுவோமா . இல்லை மற்ற தொழிலாளிகள் தான் விட்டிடுவாங்களா?' டாக்டர் நோயாளியின் நோயோடு நின்று விடாமல் அவர்களைச் சார்ந்துள்ள பிரச்சினைகளையும் எடுத்து அலசுவதில் கெட்டிக்காரர். உள்ளிருக்கும் நோயாளி தொழிற்சங்கத் தலைவராகவோ அல்லது தொழிலாளியாக வோ இருக்கவேண்டும். அதனுல்தான்*உங்கசங்கமும் சேர்ந்திருக்கா...' என்று கேட்கிருர் . அவரவர் துறைகளைப்பற்றிய பிரச்சினைகளைத் தனது பரத்துபட்ட அறிவோடு டாக்டர் அலசி ஆராயத் தொடங்கும் போது நோயாளியின் நோய் பாதி குணமாடுவிடுகிறது.
“மருந்து சாப்பிடும் போது. சிகரட், பீடி, காபி. டீ ‘எங்களுக்குள்ள ஒரே இன்பம், அவைகள்தான். வேணுமின்ன காபி டீயைக் கூட விட்டிடலாம். ஆஞ சிகரட்... நானே செயின் சுமோக்கர். நாலைஞ்சு பாக்கட் நாளைக்குக் குடிச்சவன் . வேணு மின்ன ரெண்டைக் குறைச்சுக்கிடலாமா தோழர். y
“என்ன ! சிகரட் பிடிக்கிறீங்களா . என்னலே நம்பவே முடியலையே. நீங்களோ தொழிற்சங்க முழுநேர ஊழியர். . நிதி நிதின்னு அடிக்கடி மக்களிடம் போநீங்க . ஆளு எவ்வளவு நிதியை நீங்க தினம் கரியாக்கிறீங்க. ’ டாக்டரின் கபடமற்ற
தர்க்கப் பேச்சு நோயாளி மனதில் சிலேடை போல் சுருக்கென்று தைத்திருக்க வேண்டும், அதனுல்தான் மறு மொழியின்றி மெளனமாய் இருக்கிருர் போலும், டாக்டர் மருந்து எடுக்கிருர்,
*சிகரட், பீடி பிடிப்பதில்லை யென்ருல் தான் இனிமேல் இங்கு மருந்துக்குவரலாம்."
டாக்டரின் குரல் அழுத்தமாக தொனித்தது.
'சிகரட், பீடி பிடிப்பது நீண்ட காலமாக பழகிவிட்டது. ஆதை எப்படி. காம்ரேட் திடீரென நிறுத்திவிட முடியும்?"
இடையே இருமலும் ஒலித்தது. w 'உங்க உடம்பையே கெடுக்கும் இந்த சிறிய பழக்கத்தையே விட முடியாது என்று நீங்க சொல்லுறீங்க, அப்போது பரம்பரை

Page 12
பரம்பரையாய் சொத்துச் சேர்த்து வைக்கிறவனிடம் மட்டும் சொத் தைக் கொடுத்துவிடு, கொடுத்துவிடு என்று எப்படிக் கேட்டுவிட முடியும்? அவனும் எப்படித் தருவான் என நீங்கள் எதிர்பார்க்க Փւգ պւb.''
N அது .” பதில் கூற திணறும் வேளை மீண்டும் இருமல் . . . ... [تنNفک ‘‘ வந்து அவரைத் தலைகுணிய வைத்தது.
'அதனல் தான் சொத்துகளை பறித்தெடுப்போம் என்று கூறு கிருேம் ; அதனல் மட்டும் அவர்கள் உங்கள் நண்பர்கள் ஆகார். அவர்கள் சிந்தனையை வென்ருெடுக்கும் வரை ஆபத்து உண்டு. அவர்கள் நம் பகைவர்கள் என்பதை நாங்க மறந்து விடப்படாது. அதற்காக உங்கள் உழைப்பெல்லாம் நாட்டுக்குத் தேவை. உங்கள் உடம்பே சமுதாயத்தின் சொத்து. அதை நீங்க விரும்பியபடி நீங்களே அழித்து விட முடியாது. சிகரெட், பீடி உங்க உடலின் பகைவர். உடலையும் கெடுத்து உங்க நண்பர்களான பாட்டாளிகளின் போராட்டத்திற்குப் பயன்பட வேண்டிய பணத்தையும் சூரியாக்குகிறது. காம்ரேட் என என்னை இனிமேல் அழைப்பதானுல் இப்பழக்கங்களை முற்ற க விட்ட பின்வாருங்கள்.' w
டாக்டரின் பேச்சில் கண்டிப்பும் உயர்ந்த மனிதாபிமான உணர்வும் ஒலித்தது, அவர் கூறிய கருத்து என் இருமலையும் நிறுத்தி விட்டது. -
உள்ளே ஒரேமெளனம்.மீண்டும் ம்ணியடிக்கிறது.நான் எழுகிறேன்.
வெளியே வந்த தோழரின் முகத்திலே புதிய ஒளி. நெற்றியிலே சிந்தனையின் சுருக்கம். −
என் இருமல் மாறிவிட்டது போன்ற தென்பு. சோர்வு நீங்கிய உணர்வுடன் உள்ளே நுழைகிறேன். என் செவியில் புதிய அர்த்தத் துடன் சுவர் பலகையில் பொறித்திருந்த வார்த்தைகள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
'நம் தோழர் நம்பகைவர் நாமறிவோம்'
விஞ்ஞான முறையும் கலைப் படைப்பும் சமூக அமைப்புகளின் உ!ர்ந்த வடிவ்ங்களாகும் நாளாந்த உறுதியான வாழ்வின் சார மும் இவையே. - கால்டுவெல்

ஆளும் வர்க்கமும் ஆளும் கட்சியும்
Naam மாதவன் ---
*ஐக்கிய தேசிய கட்சியே சிறந்த கட்சி”. 'இல்லை, சுதந்திரக் க்ட்சிதான் உயர்ந்தது'. *ஜனதா தான் நல்ல கட்சி'.
'அல்ல, இந்திரா காங்கிரஸ் கட்சியே சிறந்த கட்சி'.
பாராளுமன்றம், தேர்தல் முறை, அரசியல் கட்சிகள் (பூர்ஷ்வா), ஜனநாயகம் என்பவற்றை ஏற்றுக்கொண்டு, அரசியல் க்ட்சிகளே வைத்து ‘நல்ல கட்சி கூடாத கட்சி" என்று அரசியல் பேசுவது விஞ்ஞான பூர்வமான ஆய்வு முறையல்ல; ஒருவித கற்பனவாதமே யாகும,
ஆளும் வர்க்கமே அரசியல் கட்சிகளாக பிரிந்து நிற்கிறது. ஆளும் வர்ச்கத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதே ஆளும் கட்சியின் முதற் கடமையாகும். ஆளும் கட்சி இக் கடமையிலிருந்து தவறும் போது ஆளும் வர்க்கம் வாய்ப்பு ஏற்படும் வேளையில் வேண்டிய மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்கிறது.
ஆளும் கட்சிபரவலாக இருந்தபோதும் அதிகாரத்துவம் அமைச்சர வையுள் குறுகி, பின் அவற்றிற்குள் தலையாய ஒரு சிலரின் சர்வாதிகார ஆட்சி ஏற்படுகிறது. இந்தியாவிலும் இலங்கையிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆட்சி ஊழல் பற்றிய விசாரணைக் கமிஷன்கள் இதற்கு நல்லதோர் எடுத்துக் காட்டாகும்.
இலங்கை சுதந்திரம் பெற்று விட்டதாகக் கூறப்படும் 1948ம் ஆண்டிலிருந்து ஏற்பட்ட ஆளும் வர்க்க மாறுதல்களை முதலில் கவனிப்போம்.
ஆங்கிலேயரின் வருகையின் பின்னரே இலங்கையின் பொருளா தார அமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படத் தொடங்கியது. முக்கியமாக ஆங்கிலேய பூர்ஷ்வா 1840 - 50 ல் ஏ சாதிபத்திய நிலையை அடைந்த போது இலங்கையிலும் பொருளாதார மாற்றங்கள் வேக மடைந்தன. (ஏகாதிபத்தியம் என்பது (1) மூலதன ஏற்றுமதி (2) ஏகபோக உற்பத்தி (3) வுங்கி மூலதனமும் யந்திரத் தொழில்
23

Page 13
மூலதனமும் ஒன்றிணைதல் என லெனின் விளக்கினர்) இலங்கையில் கோப்பி தோட்டங்கள், புகை வண்டிப் பாதைகள் 1840ன் மேல் ஆரம்பிக் கம்பட்டன. 1870 வரையில் கோப்பித் தோட்டங்கள் நோயிஞ ல் அழிந்து விட சிங்கோன பின் தேயிலை, றப்பர் பெருக் தோட்டங்கள் வேக வளர்ச்சியடைந்தன. இலங்கை, ஏகாதிபத்தி யத்தின் தேயிலை, ரப்பர் தோட்டங்களாக மாறியது. இவற்றில் உழைக்க நிரந்தர கூலிகள் தேவைப்பட்டனர். இத் தோட்டங்களில் அடிமைகளாக உழைப்பதை சிங்கள மக்கள் மறுத்தனர். வெள்ளை முதலாளிகள் தம் ஏகாதிபத்தியத்தின் கீழ் ஒடுக்கப்பட்டிருந்த இந்தியத் தமிழ் கூலிகளை நிரந்தரமாக இறக்குமதி செய்து குடியேற்றினர்.
தேயிலை, நப்பர், தேங்காய் இலங்கையின் முக்கிய ஏற்றுமதிப் பண்டங்கள் ஆயின. மலைநாடுகளிலிந்து தேயிலை, றப்பரை வர வழைத்து கொழும்பு துறைமுகம் மூலம் ஏகாதிபத்திய, முதலாளித்துவ நாடு சளுக்கு ஏற்றுமதி செய்ய நேரிட்டது. அத்தோடு இலங்கையி லுள்ள பூர்ஷ்வா வர்க்கத்தினருக்கும் குட்டி பூர்ஷ்வாக்களுக்கும் தேவையான உணவு, யந்திர உற்பத்திப் பண்டங்களை இறக்குமதி செய்வதற்கும் பல புதிய கம்பணிகள் தோன்றின. مح۔
ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகமே கொழும்பில் பெருந் தொழி லாக வளர்ந்தது. துறைமுகத்தில் உழைக்கும் பாட்டாளிகள் பெரு கினர். வர்த்தக நிலையங்களிலும் அரசிலும் குட்டி பூர்ஷ்வாக்கள் பெருகினர். இவ்வர்க்கத்தவருக்கு வேண்டிய பண்டங்கள் யாவும் (அரிசி உட்பட) இறக்குமதி செய்யப்பட்டன. உள்நாட்டு விவசாயம், கைத்தொழில் உற்பத்தியில் ஆளும் வர்க்கம் சிறிதும் கவனம் எடுக்க வில்லை.
இத்தகைய காலணி ஆதிக்க பொருளாதார அமைப்பால் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகமே செழிப்புற்று வளர்ந்தது. இவ் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தவரே அரசியல் ஆதிக்கம் பெற்று வந்தனர். ஆளும் வர்க்கத்தவராகவும் மாறினர்.
வ்ெளிநாட்டுக் கம்பனிகளோடு இணைந்தவர்கள், அவற்றிற்கு கமிஷன் ஏஜெண்டுகளாக உள்நாட்டில் இருந்தவர்கள், இறக்குமதி ஏற்றுமதி வியாபாரத்தில் பணம் சேர்ந்தவர்கள், கண்டிராக்காரர் ஆகியோர் 1947ன் பின் அரசியல் ஆதிக்கம் செலுத்தினர். யு. என். பி. கட்சி இவ்வ்ர்க்கத்தவருகே சேவை செய்து வந்தது. கொரிய யுத்தம் தேயிலை, ரப்பரின் விலையை ஏற்றியது. ஆளும்வர்க்கம் சில வருடங்கள் வாணிபம் மூலம் அதிக லாப மீட்டியது. யுத்தம் முடிந்ததும் தேயிலை, ரப்பரின் விலைகள் சரியத் தொடங்கின.
24

1958ல் பலங்குன்றிய தேசீய முதலாளிகள் (பணக்கார முத லாளிகள்) குட்டி பூர்ஷவாக்கள் ஒன்று திரண்டு அரசியல் ஆதிக்கத் தைக் கைப்பற்றினர். தேசீய மயக் கொள்கை, தேசீய மொழிக் கொள்கை குட்டி பூர்ஷ் வாக்களுக்கு வாய்ப்பளித்தது. ஏகாதிபத்தியச் ‘சுரண்டலில் வெளிநாட்டுச் செலாவணி கரையத் தொடங்கியது. இறக்குமதிக்காக உற்பத்தி" எனற கோட்பாடு 1962ல் இருந்து கடைப்பிடிக்கப்பட்டது. -
உள்நாட்டு பணக்கார முதலாளிகளுக்கு இது வாய்ப்பாக இருந்தது. ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் பல்வேறு கட்டுப்பாடுகளால் பல மிழந்து வந்தனர். 1965ல் யு. என். பி மீண்டும் ஆட்சிக்கு வந்தது. ஏற்றுமதி இறக்குமதியாளர்கட்கு ஓரளவு சலுகை செய்தது.
இவற்றின் மூலம் ஓர் உண்மை தெளிவாகத் தெரிகிறது.
ஆளும் வர்க்கம் தொடர்ந்து இரு கூருக பிரிந்து வந்துள்ளது. ஒன்று; ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தில் செழித்த தரகு முதலாளிகள். இரண்டு: யந்திர உற்பத்தி மூலம் செழித்த தேசீய தரகு முதலாளிகள். −
1970 6υ சுதந்திரக் கட்சி ஆட்சிக்கு வந்ததோடு வந்திர உற் பத்தியில் ஈடுபட்டிருந்த தேசீய தரகு முதவாளிகள் மேலும் பலம் பெற்றனர்.
1972-73ல் ஏற்பட்ட எண்ணெய் விலை ஏற்றத்தோடு ஏகாதி பத்தியச் சுரண்டல் மேலும் வலுப்பெற்றது. தேயிலை, ரப்பரின் விலை நிலையாயிருக்க இறக்குமதிப் பண்டங்களின் வில்கள் அதிகரித்தன. இந்த டவடிக்கைகள் ஆளும் வர்க்கத்தின் இரு பகுதியினரையும் பாதிக்கத் தொடங்கியது. ஏற்றுமதி, இறக்குமதியில் ஈடுபட்டிருந்த reர்த்தகர்களை பல்வேறு வகையான கட்டுப்பாடுகள் கட்டுப்படுத்தின யந்திர உற்பத்தியில் ஈடுபட்டிருந்தவர் போதிய மூலப் பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலையில் பாதிக்கப்பட்டனர்.
இரு முக ஆளும் வர்க்கத்தவரும் ஒன்றிணைந்து 1977ல் யு.என். பி. கட்சியினரை ஆட்சிக்கு கொண்டு வந்தனர். எதிரெதிர் முகாமிலுள்ள இரு பகுதியினருக்கும் சேவை செய்யும் பொறுப்பு புதிய ஆட்சி யாளருக்கு ஏற்பட்டுள்ளது. இது நடைமுறையில் சாத்தியமாகக் கூடியதா?
யு.என். பி 1947ல் இருந்தே ஏற்றுமதி இறக்குமதி வாணிபத்தில் உள்ளவர்களுக்கே சேவை செய்து வந்தது. ஏகாதிபத்தியத்தின்
25

Page 14
பீடியிலிருந்து பூர்ஷ்வா ஜனநாயகம் பேசும் எந்த மூன்ருவது உலக் நீாட்டாலும் விடுபட்டு விட முடியாது.
மேலும் மேலும் உலக வங்கியிலேயே இன்றைய அரசு, அது சேவை செய்ய வேண்டிய ஆளும் வர்க்கம் தங்கியுள்ளது. உலக வங்கியின் திட்டப்படி இறக்குமதி, ஏற்றுமதி விதிகளெல்லாம் உலகின் ந்ே நாட்டிலும் (அமெரிக்கா உட்பட) இல்லாதவாறு தளர்த்தப் பட்டுள்ளன. யந்திர உற்பத்தியாளர்களுக்கு சுங்கவரி மூலம் ஒரளவு பாதுகாப்பு தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ளது. உங்கள் திறமையை காட்டுங்கள் அல்லது மூடுங்கள் என நிதிமந்திரியே எச்சரித்துள்ளார்.
*உலக வங்கியின் ஆணைப்படி*உணவுப் பொருட்களின் மானியங்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன.
150க்கு மேற்பட்ட கூட்டுத் தாபனங்களின் ஆதிக்கங்கள் அதி காரத்து முதலாளித்துவமாக வளர்ந்து வந்த நிலே - குறையத் தொடங்கியுள்ளன.
ஏகாதிபத்தியத்தின் நவீன போக்கில் ஒன்று, "மூன்ருவது ஊக்க நாடுகளில் சுதந்திர வர்த்தக வலையங்களை ஏற்படுத்துவதாகும்,
1956ல் பிரிட்டிஷ் இராணுவத் தளங்கள் இலங்கையிலிருந்து அகற்றப்பட்டன. 1978ல் ஏகாதிபத்தியங்கள் நமது யந்திரங்களேயும் தொழில் நுட்பத்தையும் கொண்டு வந்து உள்நாட்டு மக்கள் உழைப் பையும் மூலப் பொருட்களையும் சுரண்டுவதற்கு புதிய பொருளாதார தளங்கள் வழங்கப்படுகின்றன. சுதந்திர வர்த்தக வ்லேயங்கள் என்பவை ஏகாதிபத்தியங்கள் மூன்ருவது உலக நாடுகளை நவீன முறையில் சுரண்ட அமைக்கும் புதிய தளங்களாகும். இத்தளங்களுக்கு வேண்டிய பாதுகாப்பு, பிற பொருளாதார வசதிகளை உள்நாட்டு அரசு செய்து வழங்கும்.
இன்றைய ஆளும் வர்க்கத்தால் தன்காவில்நின்று தனித்துஇயங்க முடியவில்லை. ஏகாதிபத்தியங்களில் தங்கிக்அவர்களின் தரகர்களஈகவே வாழ்ந்து, மக்களை அடக்கு முறையின் கீழ் ஆள விரும்புகின்றனர். *இது இங்கு மட்டும்ஸ்ல, மூன்ருவது உலக நாடுகள் எங்கும்; நிலவும்
ரிலையாகும்,
சுரண்டப்படும் வ்ர்க்கங்கள் என்றும் தூங்கி விடுவதில்லை, இத்திலை “என்றும் நீடிக்கும் என்று எண்ணுபவர்கள்"விஞ்ஞான பூர்வமாககளித வரலாற்றை அறியாதவர்களேயாகும். *
26

எங்கள் இதயங்களில். - காருமதி -
சிறைக் கூடங்களில் Gisi G
வாழ்கின் Lib சிந்தனைகள் (ዐ፻ சுதந்திரத்தைத் தேடுகின்றன
வறுமைச் சங்கிலியில் வயிற்றுப் பசி விலங்கிட்டு கரண்டல் பொருளாதாரச்
சுவர்களுக்குள்
aupas Sasarfruiù förtid
வாழ்கின்ருேம் சிந்தனைகள் சுதந்திரத்தைத்தேடுகின்றன
ஆத்மா அழுகிறது சித்திரவதைகள்
தாங்க முடியவில்லை
பிரச்சனைகளில் தான்
எத்தக்ன வகைகள் எங்கள் குடிசைகளுக்குள் சோக தேங்களே சாசுவதமான சங்கீதங்கள்
கடல் வேலிகளின் நடுவேதான் எங்கள் சிறைக் கூடம்
எங்கள் தீவு இனங்களின் சிறைக்கூடம் எங்களின் தீவு இல்லாதோரின் சிறைக்கூடம்
தேர்தல்கள் கண்டதுண்டு தெருக்களில்
துப்பாக்கிக் குண்டுகள் தந்த
சாதல் பரிசுகளும் கண்டதுண்டு
இங்கோன மோதல்கள் நிகழ்கின்றன.
இன்னும் இன்னும்
வர்க்க முரண்பாடுகள்
வளர்கின்றன
ஆண்ட பரம்பரைகள்
அழுகின்றன
அவர் தமது [ன வேஷங்கள் தான் மாறுகின்ற
ஆலயங்களுண்டு அடியார்களுமுண்டு
அறம் சொல்லும் தாபனங்களும் உண்டு ஆளுல் வேர்வ்ை சொரிவோர்க்கு விடிவு இல்லை அன்ருடம் காய்ச்சிகளுக்கு அமைதி இல்லை.
என்ருே இந்த
அடிமை விலங்குகளின் ஆட்சி முடியும்?
அந்த நாள் எப்போ..?
அந்த நாள் எப்போ..?
வியட்னும் போல். 95ublG3urrug Lur Glurr6ño»... எத்தனை நாளுக்குத்தான் வெளியே பார்த்துப் பாடுவது
எங்கள் இதயங்களில் நெருப்பு எரிகிறது!
எங்கள் இத யங்களில் நெருப்பு எரிகிறது!!

Page 15
கே:
கே:
கே:
கே:
கேள்வி பதில்
- வேல் -
சுதந்திர வர்த்தக வலையங்கள் பற்றிய உங்கள் கருத்து என்ன?
(up. Fis 5urprits st, urb. ஏகாதிபத்தியமும் தரகு முதலாளிகளும் சுதந்திரமாக சுரண்டு வதற்கும் மறைமுகமாக மூன்ருவது உலக நாடுகளை அடிமைப் படுத்துவதற்கும் ஏற்படுத்தும் நவீன வலைகளாகும்.
செப்டம்பரில் நடைபெற இருந்த வேலைநிறுத்தம் பின் வாங்கப் பட்டதேன்? க. நடேசன், கண்டி. குட்டி பூர்ஷ்வா வர்க்கத்தையே முழுமையாகக் கொண்ட சங்கங் களும் தலைவர்களும் அரசின் பயமுறுத்தல்களுக்கு அஞ்சிவிடு வதில் ஆச்சரியம் எதுவுமில்லை. ‘நாம் போராடிப் பெற்ற தொழிற் சங்க உரிமைகள்’ என்பவை ஆளும் வர்க்கத்தின் சலுகைகள் என் பதை யாவும் உணர்ந்திருப்பர். புரட்சிகர அரசியல் விழிப்புணர் வில்லாது கூலி உயர் விற்கு போராடுவதாக உள்ள குட்டி பூர்ஷ் வாக்களின் சங்கங்கள் பின்வாங்குவதன்மூலம் தப்பிக்கொண்டன. பாட்டாளி வ்ர்க்கத்தால் மட்டும்ே தீவிரவாதமற்ற நிலையெடுத்து போராட முடியும்.
இந்தியாவிலிருந்து சஞ்சிகைகள் வந்து குவிவதை அரசு தடை செய்யமாட்டாதா? எஸ். சண்முகநாதன், கொழும்பு. அரசு சஞ்சிகைகளுக்காக மட்டும் தனி விதிகள் போட்டு கட்டுப் படுத்தப்போவதில்லை. ஆங்கில நூல்களும் வருகின்றனவே, இங் கிருந்து ஏற்றுமதி செய்ய இந்திய அரசு வழிவகுக்கவேண்டும் என் பதும் கலை இலக்கியம் பண்டமாகி சந்தை தேடும் நிலையேயாகும். இவை யாவும் பூர்ஷ்வா வ்ர்க்க கலை, இலக்கிய பரிவர்த்தனை பற் றிய விவகாரங்கள். புரட்சிகர கலை, இலக்கிய பரிவர்த்தனைக்கு அனுமதி வழங்குவார்களா? -
கதாழிலாளி என்பதற்கும் பாட்டாளி என்பதற்கும் வேறுபாடு 2. Fin L-fr? க. செல்வராசா, கொழும்பு. நிச்சயமாக உண்டு. தொழிலாளி என்பது பொதுமையான சொல்லு. தம் உழைப்பை விற்று வாழ்பவர்களையெல்லாம் பொதுவாக தொழிலாளி என்கிருேம். பாட்டாளி என்பது விஞ் ஞானபூர்வமான வார்த்தையாகவே பயன்படுத்துகிருேம். பாட் டாளி மூன்று குணம்சங்களைக் கொண்டவன்: (1) ஒரு சொத்து
28

கே:
கே:
மில. தவன்; (2) உழைப்பை விற்பதன் மூலம் மட்டுமே வாழ் பவம்) (அதனல் உபரி உழைப்பு முருவதையும் பறிகொடுப்ப வன்) (3) எதிரியை இனங்காணக்கூடியவன். பாட்டாளிகளை தொழிலாளர் எனலாம். தொழிலாளர் எல்லாம் பாட்டாளி களல்ல. சொத்துள்ள தொழிலாளர் குட்டி பூர்ஷ்வா வர்க்கத் தவர் என்கிருேம். பிச்சைக்காரர் சொத்தில்லாததினுல் பாட் டாளியாகார், உழைப்பை விற்று சுரண்டப்படுவதினலேயே (உபரி உழைப்பு அபகரிக்கப்படுவதனுல்) வர்க்க உணர்வு பெற்று எதிர் வர்க்கமான முதலாளி வர்க்கத்துடன் பகைமை உறவு ஏற் பட்டு, அவ் வர்க்கத்தை அழித்தொழிப்பதன் மூலம் மட்டுமே பாட்டாளி பகைமையைத் தீர்த்துக்கொள்வான். தனிச் சொத்து எதுவுமில்லாத உன்னத வர்க்கத்தைச் சேர்ந்தவனே பாட்டாளி. எதிர்கால உலகை சிருட்டிப்பவனும் ஆளப்போகிறவனும் அவனேதான்,
ஈழத் தமிழரின் வகுப்புவாதக் கூக்குரல் தற்போதைய நிலை மையை மேலும் மோசம்ாக்கிவிட்டதா?
த, செல்வராசா, கொழும்பு.
வகுப்புவாதக் கூக்குரல் எனக் கூறுவது தவறு. தீர்க்கப்படாத தேசிய இனப் பிரச்சனையின் குரல்களையே நாம் கேட்கிருேம். பூர்ஷ்வா ஜனநாயக அரசியலமைப்பாலோ, ஆளும் வர்க்கத்தின் நயமான பேச்சுகளாலோ இப் பிரச்னை தீர்க்கப்படம்ாட்டாது அவர்கள் நிலைமையை மேலும் ம்ேலும் மோசம்ாக்கிக்கொண்டே யிருப்பர். 1958லும் பார்க்க 1977 மோசமாக இருந்தது என் பதை ஆளும் கட்சியே சன்சோனி கமிஷன் விசாரணைமூலம் நிரூ பிக்கிறது. லெனின் சோவியத் ரஷ்யாவில் தேசிய இனப் பிரச் சனையை தீர்த்ததுபோல வேறு எந்த நாட்டிலும் தீர்க்கப்பட வில்லை. ஒரு சோஷலிச அமைப்பின் கீழேயே தேசிய இனப் பிரச்சனைகள் யாவும் தீர்க்கப்பட முடியும். ஒரு தேசிய இனத்த வரை ம்ற்றேர் தேசிய இன இராணுவம், பொலிசாரால் அடக்கி ஆள்வதை உலகிலுள்ள பூர்ஷ்வா ஜனநாயக நாடுகளில் மட்டுமே காணமுடியும்.
கண்ணதாசன் கவிதைகளில் அளவுக்கு மீறிய காமரசம் சொட்டு கிறது, அதை எல்லோரும் சினிமாப் பாட்டில் கேட்டு ரசிக்கிருர் களே, ஏன்? ம. நளாயினி, கொழும்பு.
கிராமங்களில் குடும்பங்களோடு வாழ்ந்து உண்ர்வுகளைப் பகிர்ந்த வர்கள் தற்போது நகரங்களில் குடியேறி, அந்நியப்படுத்தப்பட்டு, தனிமையாக அறைகளிலே வாழ்ந்து கூலியடிமையினராக பெருகி உழைத்து வருகின்றனர். இக் குட்டி பூர்ஷ்வாக்களது உணர்வுத் தேவைகளை கண்ணதாசன் காமரச பாடல்கள்மூலம் தந்து, பூர்த்தி செய்ய முயலுகிருர். இதுவே அவரது வெற் றிக்கு காரணமாகும்.
29

Page 16
க. பொ. த. (சாதாரண) பாட நூல்கள்
நவீன இரசாயனம் I - பரமானந்தம் გენ. 4.50 நவீன பெளதிகம் 4.00 இலகு பெளதிகம் 5.50 தமிழ் பயிற்சி - தமிழவேள் 5, 00 தமிழ் இலக்கிய விணுவிடை - தமிழவேள் 5.75 சைவ சமயம் - தமிழவேள் 8.00 புதுக்கணிதம் 9 - 1 5.00 பிற பாட நூல்கள்
பொது விஞ்ஞானம் 8 - 3.75 சுகாதாரக் கல்வி 8 - 6.50 புதுக் கணிதம் 8 - 2 4.75 புதுக்கணிதம் 7 - 1 3.00 y 3 7 = } 3.00 தேசப்பட புவியியல் 3.75 கவிதை நயம் - Dr. க. கைலாசபதி 3.00 கொடுமைகள் தாமே அழிவதில்லை - செ. கணேசலிங்கன் 3.00 அக்கினிப் பூக்கள் - ஈழவாணன் з.oо தோத்திரமாலை - இரத்தினம் 5.00 தாய்லாந்தின் தலைநகரிலே-கமால்தீன் 3.00 TAMIL WRITINGS IIN SRII ILANKA 5.75
ATLAS GEOGRAPHY OF CEYLON 5.00
மற்றும் தமிழ், ஆங்கில மொழிகளில் பாட நூல்கள், இலக்கிய நூல்களுக்கு எழுதுங்கள்,
வி. பி. பி. கவனிக்கப்படும்.
விஜயலட்சுமி புத்தகசாலை 248, காலி வீதி - வெள்ளவத்தை,
கொழும்பு-6,
-தொலைபேசி: 88930
30

தேசிய இனங்களின் ஒற்றுமை பல்லவி நாடும்ொழி இனவெறி நாம் மறப்போம் - நாம் நம்தோழர் நம்பகைவர் நாமறிவோம்.
சரணங்கள் தேசிய இனங்கள் பலநூறு - நாம்
அனைவரும் ஒற்றுமையாய் வாழ்ந்திடவே தோழர்களே பாட்டாளிச் சோதரரே - நாம்
ஒன்றெனவே உலகிற்கு உணர்த்திடுவோம். திராவிடன் ஆரியன் வேற்றுமையேன் - அங்கு
சிங்களன். தமிழன் பகைமையுமேன்? தேவை யில்லா இனச் சண்டை - சில
தேசத்தில் மட்டும் இருப்பதுமேன்? சண்டையிட்டார் தென்னிலங்கைத் தீவினிலே - இன்று
சோதரராம் -சிங்களரும் தமிழர்களும் மண்டையுடை பட்டதெலாம் யார் யாரு? - ஒ.
இருபுறத்தும் பாட்டாளி வர்க்கமன்றே? (நாடுமொழி) இனச்சண்டை எங்கேயும் நடந்தாலும் - அதில்
அழிந்ததிலை முதலாளி எப்போதும் அழிந்ததெலாம் பாட்டாளி சிறுவுடைமை - இதை
உணர்ந்தாலே ஓங்கிடும் நம்ஒற்றுமையே! (நாடுமொழி)
- கோவி -
జ_--
ܚܝܝܫܫܫ
திருவிழாவிற்குத் திருவிழா எத்தனை சிக்கல்கள்
எத்தனை காட்சிகள் மக்களே சக்திகள் மீண்டும் மீண்டும் மக்களே சரித்திரம் கதைகள் ஒன்றே தோல்விகள் வெற்றியின் காட்சியே மாறின. சாதனைப் படிகள் வடித்த கண்ணிரின் சோர்ந்தவர் நிமிர்வார் கண்கள் வறண்டன செத்தவர் பிறப்பார் இட்ட முடிச்சுக்கள் கனவுத் திரையில் மேலும் இறுகின. ஏங்கிய நிகழ்வுகள்
நனவு உலகில்
பட்ட மரத்தினில் பசுந்துளிர் காத்தவர் கொட்டாவி விட்டபின் குற்றுயிர் ஆயினர்.
நிதர்சனமாகிட இரத்தக் களரிகள் நிட்சயம் உதிக்கும், புரட்சி என்பது அழிவுமல்ல.
தத்துவம் பேசியோர் புரட்சி என்பது தத்துவோர் ஆகினர் அமைதியுமல்ல. விடிவைக் கேட்டவர் முட்டை உடையக் இருளில் நடந்தனர். குஞ்சு ஜனிக்கும் காலக் கடலில் பழையதின் அழிவில் ஒடும் படகுகளின் புதியது பிறக்கும். ஓட்டை அடைப்பதில் -ழாருமதி
3.

Page 17
KUMARAN 5O - 20
வெளிவந்துவிட்டன !
சங்கர ஐய
புதிய உயர்தர விலங்கி
9 9
99 多擎
தயாளன் கணிதம் 1 i கணிதம் 2 விஞ்ஞ
அரசின் க.பொ. த. (சாதா தாள்களுக்கு அமைய எ விளக்கம்ான விடை
தமிழவேள் LSui 636) g fu
6mg 6uơ tềuử0 $. G
தமிழ்ப் பயிற்சி க.
மற்றும் தமிழ், ஆங்கில சிங்கள்
வியாபாரிகளுக்கு
விஜயலட்சுமி
விதி
கொழு
இப்பத்திரிகை :ெம்-12, 201, டாய் : ஆளால், அே லுள்ள புதிய ' 8ள் ẩnra Tar - g - EfaixaTux
 

DAM STREET, COLOMBO-12.
ர் எழுதிய L6) - பகுதி l e5 12.00 பகுதி I (அச்சில்) பகுதி II (அச்சில்)
தயாரித்த
| eb. 3.75 2 ent, 3.75
நானம் ாரணம்) புதிய மாதிரி விஞத் ழுதப்பட்ட விளுக்களும் களுடனும் கூடியது.
ா எழுதிய
பாடம் 8. e5. 3.75 Lu T. 5. - e5. 8.00 பொ. த. - ரூ. 5.00
ா நூல்கள் யாவும் கிடைக்கும். வணிக்கப்படும்.
கழிவு உண்டு.
புத்தகசாலை, வெள்ளவுத்தை, tքւկ-6 *
தொலைபேசி : 8 8 9 30
இல் வசிக்கும் செ. கணேசலிங்கன் அவர் அச்சகத்தில் .ே பட்டு வெளியிடப்பட்டது,