கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: போது 2001.03-04

Page 1
! sae -**)!*s.|×疆|- ¿¿.*密 §§§±s.*)* ()
%%%%%%%%%%%%%%%%%%%%%%%% :
---
ஜீழ்னின்
}¿*sae-配*)|-}·s:!”.|%)毒|- s.澎 |- ***露|-
畫畫書書量醫量醫真真實真實醫醫醫醫醫醫醫實醫畫畫聲擊聲畫畫畫麗屬
 
 
 
 
 
 

*劑*****『』真真會**************遭 ------|-ጛ፡ I፡ ?:闇)}*|×-!|-*...*|-- --*|-|-·-----· ----*!----- -· ----".sae".-o.----·".!”.- ----'.o.* |-·'.-|- ----፱..............ኺ፡ ̈....‛፡|------* ...)„“-|-;!----- ·|-·|-----|---|-- - - -------·|-... •!|------ !!!!!!***|- '''-، ،io:----:·sae",}**,|-|-s',|-sos;, !i)sae*:- - - - - - -|-|-s.o.!',!'.|-|-'.· -s., !-! !! * |-|-·},". -()!s',■■|- ! 毒----}§§*,|-sae *)|-soos•s',.*sae----|- ...|-'.|-----':... ... --· *...*----.* -".'.s.'.---- |-sae... --}}}:'',s.**};}!'.}§§s.*}}¿},)s',!
+ ----
E.
s
గ్నా
!!!!!!!!!!!!|--
·|----------|-------|-----------
*--------------------- -|--sae so-----·|- - - - - - -----.*¿¿.*km §§----|-osoɛ o.¿*%%%%%%%%******** **
కికి
"
." 3.
...
قی" Şද්ඨ
"""
"
------
-*) *ae.s'!s!!!飓"*No. %臺竇憲
§§§§§
- "ت ଝ୍")
逸 == E """ E ::-:-:
**
FF3FF;
§
...
3. FFFF"
===
ථූ
వ్లో
"""ථූ ே
క్ల్లో இ?
2
3
}登家釜!km|-:|-|-s',}','','',}; -----|-**§§&용
s': '...ooo..ooo.•Ķ ! !! !!! --o--o--o--:-)|- ********「· ********的*...*
|-- -·so;**:så*藏|-警so : ***.*¿.* |--_- _ --**±(√)· *)*
fini
_ܕܠܐ
;"" يEa

Page 2
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்.
- ZDô5írô56bil utJgól
 

போது
பங்குனி - சித்திரை 2001 தோற்றம் 5-5-1998.
冰冰冰冰
ஆற்றுப்படுத்துநர்: தவத்திரு.
போல் சற்குணநாயகம் யே.ச.
ஆசிரியர்: வாகரைவாணன்
ஆசிரியர்குழு: து. நகுலேஸ்வரன் திருமதி கே. சண்முகநாதன் ଗ୍ରା. ଗ୫[Ii%ରୀ
நிர்வாகம்: சி. எம். ஒக்கஸ்
Uങ്ങിഥങ്ങിങ്ങT: ஜெஸ்கொம் அச்சகம், இல, 1, இயேசு சபை வீதி, மட்டக்களப்பு
தொலைபேசி:
O65 - 23822
O65 - 28442
LIGIDItirLIIT6 asITIGLIIITib
பண்படுத்தப்பட்ட பூமியில்தான் பயிர்கள் நன்கு செழித்து வளரும். இது போன்றே பக்குவப்பட்ட மனங்களில் தான் உயர்ந்த எண்ணங்களும் சிந்தனைகளும் பரிபூரணம் பெறும். இத்தகைய எண்ணங்களும் செயல்களும் - அவற்றின் வழிவருவனவுமான செயற்பாடுகளுமே பண்பாடு அல்லது கலாசாரம் (Culture) என்று போற்றப்படுகின்றது.
ஆயினும் குறிப்பிட்ட ஒரு நாட்டில் - பிரதேசத்தில் வாழும் மக்களின் பழக்கவழக்கங்கள் - ெெதய்வ நம்பிக்கைகள் - கலைகள் என்பனவும் பண்பாடு என்றே குறிக்கப்படுகின்றது. இதிலிருந்து கலைகள், பண்பாட்டின் ஓர் அம்சம் என்பது தெளிவு.
இதனை அறியாதவர்கள் - அல்லது அறிந்தும் அவமரியாதை செய்பவர்கள் - உலகின் பல பாகங்களிலும் சிலை உடைப்பு - வணக்க ஸ்தலங்களைத் தகர்த்தல் போன்ற இழி செயல்களில் ஈடுபடுகின்றனர். இது நிச்சயமாகக் கண்டிக்கப்பட வேண்டியதொன்றாகும்.
பண்பாட்டின் அம்சங்களை - அடையாளங் களை - அழித்துவிடுவதால் பண்பாடு இல்லாமல் போகும் என எண்ணுவதும் பேதைமையே!
மனித இனம் இன்னும் உயிரோடு வாழ்வதற்கு அது காலம் காலமாகக் கட்டிக் காத்துவரும் மனிதப் பண்பாடுதான் காரணம் என்பர். பொய்யா மொழிப்புலவர் திருவள்ளுவரும் -
பண்புடையார் பட்டுண்டு உலகம் அது இன்றேல் மண்புக்கு மாய்வது மன். என்றுரைத்தார்.

Page 3
வள்ளுவர் மட்டுமன்றி வணக்கத்துக்குரிய புத்தர், யேசு, முகம்மது நபி முதலான ஞானியரும் மனிதப் பண்பாட்டின் மிக முக்கிய கூறுகளான அன்பு, அகிம்சை, கருணை என்பவற்றையே தம் போதனைகளின் அடிநாதமாகக் கொண்டிருந்தனர்.
இன்றைய நாகரிகச் சூழலில் நாம் இதையெல்லாம் எண்ணிப் பார்த்திட வேண்டும்.
உலகம் எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறது. மனிதப் பண்பாட்டுக்கெதிரான போக்கே அனைத்து நாடுகளிலும் தலைதூக்கி வருகின்றது. இதற்கு இன்றைய விஞ்ஞான தொழில் நுட்பங்கள் - மனிதனின் அளவுக்கதிக உலகியல் ஈடுபாடு - வெறும் புத்தகப் படிப்பு -
பெரிதும் துணைபுரிகின்றன.
மனிதப் பண்பாட்டை நேசிப்பவர்கள் - இந்தப் போக்கை தடுத்து நிறுத்த முன்வர வேண்டுமென்று “போது” மெத்தப் பணிவோடு வேண்டிக்கொள்கிறது. அதே நேரம் -
பண்பாடு இல்லாத மனித வாழ்க்கை - பயங்கரமான அழிவுக்கே இட்டுச் செல்லும்
என்று எச்சரிக்கவும் செய்கின்றது.
அன்பன் வாகரைவாணன்
A ༄༽ இந்தியாவே முதல் அதை சுத்தம் செய்யாமல்
இந்தியாவே , அடுத்தவர்களிடம் நீ"எங்களைப் அப்படி என்ன அக்கறை? Uந்தாடவா பார்க்கின்றாய்
Ո)ՈԱյ உன் காலின் கீழ் தென் கிழக்கு ஆசியாவில் நாங்கள் இருக்கினிறோம் ரீமட்டும் தான் உண்மை தான் ஒரு தேசமn? அதறகாக உன் சக்தியை எங்களிடமா உதைத்து விளையாட எண்ணமா? உராய்ந்து பார்க்கிறாய்
потш? ஈழ இயக்கங்களுக்கு இந்திராவினர் பாதையை நீதான் எலலாம. விட்டுவிட்டுரீ ஆளவும் நீதான் சந்திரிகாவுக்கு உதவுவது ஆசீர்வாதம் பண்ணினாய் grfgstsOTIT? ஆனால் இப்போது
விழவும் உனக்குள்ளே எத்தனையோ ஜூஜை U ஊத்தைகள் து என " - தானி - )

மழலைகள நாங்கள்
- ஆரணி - புத்தாயிரத்தில் பூத்துக் குலுங்கிடும் புதுமலர் நாங்களே முத்தாயிரமாய் முறுவல் செய்திடும்
மோகனம் நாங்களே.
இனமொழி பேதம் எங்களுக்கில்லை எடுத்து நாம் சொல்வோமே
மனமது ஒன்றிய மழலைகள் நாங்கள் மாநிலம் அறியாதோ?
அன்பு ஒன்றே எங்களின் அணியாம்
அழகதற் கிணையுண்டோ?
வன்பு என்னும் வார்த்தையை அறியோம்
வாழ்வது சொர்க்கமே.
நாளைய உலகை நாமே அமைப்போம் நாயகர்கள் நாங்களே
வேளையும் ஒருநாள் விரைந்தே தோன்றும்
விடியலும் நாங்களே.
புதியதோர் உலகைப் பூமியில் காண்போம்
போரது இருக்காதே
விதியினை நாங்கள் மாற்றியே அமைப்போம்
வெற்றியே சூடிடுவோம்.

Page 4
O LografieDITTáil
% vs.
திருக்குறள், எண் வாழ்வில் இணைந்த மிக முக்கிய வாழ்க்கைச் சித்தாந்தம். மாணவப் பருவத்தில் நான் அறிந்த திருக்குறள் என்னுடைய வாழ்வில் s மிக முக்கிய அங்கமாகி என் மனதில் இ இலட்சியப் பொறிகளை உருவாக்கியது. ܥ ܝ ܧ
1946இல் ஸ்வோர்ட்ஸ் உயர் நிலைப் பள்ளியில் படிக்கும்போது என்னுடிைய தமிழ் ஆசிரியர் திருமலைக் கண்ணன் வினைத்திட்பம் 67 ஆவது அதிகாரத்திலிருந்து 666ஆவது திருக்குறளைப் பாடிப்பாடி பரவசப்படுத்தினார். அன்று மனத்தில் பதிந்த குறள் என் வாழ்வில் இலட்சியங்களைக் கொண்டுவரும் விண்கலம் போன்றதோர் சக்திமிக்க குறளானது.
“எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்”
இக் குறள் தான் என் வாழ்வின் அத்திவாரமானது. எனது விஞ்ஞானப்பணியில் ஒவ்வொரு காலகட்டத்திலும் சோதனைகள் சோர்வுறச் செய்தபோது உள்ளத்துக்கு உரமூட்டிய குறள் இது. நம் நாடு பல துறைகளில் தன்னிறைவு பெற்றுத் திகழ்கிறது. செயலில் உறுதி இருந்தால் வெற்றி நிச்சயம்.
நான் படித்த திருச்சி ஜோசப் கல்லுரிக்கு கடந்த புதன்கிழமை போயிருந்தேன். ஒரு மாணவன் என்னிடம் ஒரு வினா எழுப்பினார். செய்தித் தாள்களிலும் தொலைக்காட்சியிலும் உங்களைப் பார்க்கும்போதெல்லாம் சிரித்துக்கொண்டிருக்கிறீர்களே, வாழக்கை எப்போதும் இனிப்பாக இருக்க முடியுமா? என்று அவர் கேட்டார்.
நான் சொன்னேன் ஒவ்வொருவரின் வாழ்விலும் பல புயல்களையும் மிகச் சில தென்றல்களையுமே எதிர்கொள்ள நேர்கிறது. ஒரு தென்றலின் சுகத்தை
 
 
 
 
 

நோக்கிச் செல்லும்போது பல புயல்களைக் கடக்க வேண்டியிருக்கிறது. தோல்வியில்லாமல் வெற்றியில்லை. கண்ணிர் எப்போதும் உயர்வாகவே இருக்கும் ஆனாலும் ஓரிரு சமயங்களில் அது இன்பமாகவும் இருக்கும். அந்த இன்பம் பெற வேண்டுமானால் பல புயல்களைக் கடக்கும் உறுதியைப் பெறவேண்டும். நம் எண்ணங்கள் உறுதியானால் அவை உழைப்பாக மாறி நாம் எண்ணிய இலட்சியத்தை அடையலாம். இக்கருத்தைப் பலவிதங்களில் தெளிவு உரைகளில் மறைநூல் திருக்குறள் உணர்த்தக் காணலாம்.
கூட்டு முயற்சியின் பலனாகப் பத்து ஆண்டுக் கனவை நனவாக்கிய ‘தமிழ்மறை திருக்குறள்’ நூலைப் படித்தேன். என் கையிலிருக்கும் இந்தப் புத்தகம் எவ்வாறு உருவாயிருக்கும் என்ற சிந்தனையில் ஆழ்ந்தேன். அந்த நூலைப் படிக்கப்படிக்க எனக்கு வேண்டிய பதிலும் கிடைத்தது. இப்புத்தகம் ஒரு இலட்சியத்தால் உருவாக்கப்பட்டிருக்கிறது. இலட்சியமே உழைப்பாக மாறி பல நல்ல உள்ளங்கள் ஒன்றுகூடி உருவாக்கி அமைத்த இலட்சிய வெற்றி இது. பத்து ஆண்டுத் தவப்பயன் நான் காண்பது.
என் வாழ்க்கையில் ஓர் அரும் பெரும் விஞ்ஞானியுடன் பணி செய்யும் வாய்ப்புக் கிடைத்தது. அந்த விஞ்ஞானி 'உள்ளுவதெல்லாம் உயர்வு உள்ளல் என்ற குறளுக்கு ஓர் உதாரணமாக இருந்தார். 1963இல் இந்தியா எந்தவித விஞ்ஞான வளர்ச்சியையும் பெறும் முன்பே எப்படி இந்தியாவை வளமான நாடாக மாற்றமுடியும் என்ற எண்ண எழுச்சியைப் பரப்பினார். அவரின் ஒவ்வொரு எண்ணமும் மூச்சும் விஞ்ஞானத்தையும் தொழில்நுட்பத்தையும் சுற்றியே இருக்கும். அவர் பெயர் விக்ரம் சாராபாய். அவர் இஸ்ரோ என்ற இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பை இந்த நாட்டுக்குக் கொண்டுவந்தார். •፥
1969இல் கொம்யூனிக்கேஷன் சற்றலைட் எனப்படும் தொடர்புசாதன செயற்கைக் கோள்களை எந்த நாடும் வான வெளியில் ஏவி விடவில்லை. அந்தக் காலகட்டத்திலேயே இந்தியா எப்படி பெரிய ரொக்கட்டுக்களைக் கொண்டு தொடர்புசாதன செயற்கைக் கோள்களை ஏவ வேண்டும் என்ற வான வெளி ஆராய்ச்சித் திட்டத்தை வெளியிட்டார். அந்த மாபெரும் விஞ்ஞானியின் தலைமையில் எங்களுக்குப் பணிபுரியக் கிடைத்தது பெரிய வாய்ப்பாகும். விக்ரம் சாராபாயின் எண்ணங்களில் உருவான வான்வெளி ஆராய்ச்சித்திட்டம் 25ஆம் ஆண்டுகளில் பல ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் நாட்டில் தோன்றக் காரணமானது. இன்று நம் நாடு பலவிதமான செயற்கைக் கோள்களை உருவாக்கி மிக முக்கியமான
C03)

Page 5
வான்வெளித் தொடர்புச் சாதனங்களை ஏற்படுத்தி அது வானவெளி ஆராய்ச்சிக்கும் பொருளாதார மேம்பாட்டுக்கும் அடிக்கல் லாக அமைந்துள்ளது.
விக்ரம் சாராபாய் ஒரு தொலைநோக்குக் கொண்ட விஞ்ஞானி. அந்த விஞ்ஞானிக்கு அணிவிக்க மலர் மாலையாக 60ஆவது அதிகாரத்திலிருந்து 595ஆவது குறளைக் கூற விரும்புகின்றேன்.
“வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத்து அணையது உயர்வு”
விக்ரம் சாராபாய் 30 ஆண்டுகளுக்கு முன் உயர்ந்த இலட்சியத் திட்டங்களை வெளியிட்டார். அப்போது அது ஒரு கனவாகத் தோன்றியது. அந்தக் கனவு எண் ணங்கள் உயர் வான இலட்சியங் களாக மாறி விண்
திட்டமாகி இன் ாள் கள் ஒவ்வொரு நாளும், சில நிமிலி 5 கொண்டிருக்கின்றன. இந்தத் தொலை இந்திய விஞ்ஞானத் தின் வெற்றி. இந்த தலைமை விஞ்ஞானி ந்துகொள்ளக் காரணம் நம் ஒவ்வொருவ கே. அப்துல் கலாம் . இக்குறள் ஒலித்துக் கொண்டிருக்கவே C களாக மாற்றி உள்ள உறுதியைக் கொ ಗ್ಯೋ ளய தலைமுறைக்குத்
S
ܔܐܠܠ
தூண்டுதலைக் ெ ষ্ট্ৰ
திருக்குறள் காட்டும் அறம், பொருள், இன்பம் என்ற மூன்றும் வாழ்வில் முக்கிய அம்சங்களைக் கொண்ட கையேடு. இப் புத்தகத்தின் மூலம் ஆயிரக்கணக்கானோர் மென்மேலும் குறள்களை ஆராய்ச்சி செய்து பல புதிய எண்ணங்களை உலகிற்குக் கொடுக்க வேண்டும். திருக்குறள் ஒரு கடல் போன்றது. அதில் எல்லா செல்வமும் உள்ளது.
பயனில சொல்லாமை என்ற அதிகாரத்தில் கடைசிக் குறளைப் படிக்கும்போது என் உள்ளத்தில் எழுச்சி ஏற்பட்டது. இக்குறள் படித்தவுடன், திருவனந்தபுரத்தில் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் இருந்த பேராசிரியர் பிரம்ம பிரகாஷ் நினைவுக்கு வந்தார். 1972இல் இந்தியாவின் முதல் ரொக்கட் அமைக்கும் திட்டத்தை நிறைவேற்றும் தலைமைப் பொறுப்பு எனக்குக் கொடுக்கப்பட்டது. அப்போது எனக்கு இயக்குநராக இரந்த பேராசிரியர் பிரம்ப பிரகாஷ் என் வாழ்க்கை நெறிக்கு வழிகாட்டிய
C040
 

இக்குறளுக்கு முன்மாதிரியாக இருந்தார். அக்குறள்,
*சொல்லுக சொல்லிற் பயனுடைய
சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல்”
இந்த நாட்டுக்குத் தேவையான மிக முக்கியமான அணுஉலை உலோகப் பொருட்களை ஆராய்ச்சி மூலம் உருவாக்கி உற்பத்தி செய்து கொடுத்தவர் அவர், உலோகப் பொருட்களை உற்பத்தி செய்யும் விஞ்ஞானத்தில் தலைசிறந்த விஞ்ஞானி. எவ்வளவு பெரிய திட்டமானாலும் சிறந்த ஆராய்ச்சி விளைவுகளானாலும் அவர் சக விஞ்ஞானிகளை, குறிப்பாக இளம் விஞ்ஞானிகளைப் பேசத்துாண்டி அவர்களது எண்ணங்களைக் கேட்கத் துடிப்பார். எந்தவொரு விஞ்ஞானக் கலந்துரையாடலிலும் அவர் பேசுவது ஒரு சில வார்த்தைகளே. இதனால், பலர் தங்களது எண்ணங்களைத் தங்குதடையின்றி வெளிப்படுத்தவும் தங்களது திட்டங்களை உறுதிபட விளக்கவும் வாய்ப்பைத் தந்து அதேநேரத்தில் தனது முடிவை வெகு விரைவாகக் கூறி அதற்கான வழிமுறைகளைச் சொல்லுவார். இப்படியாக அவர் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் ஓர் ஆழ்ந்த கருத்தைக் கொண்டதாக இருக்கும், கேட்பது அதிகம் பேசுவது குறைவு. இதனால் குறைந்த நேரத்தில் முடிவெடுக்க முடியும். அந்த மகானின் அரும்பெரும் குணம், அவரிடத்தில் பணிசெய்த ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் அடிநாதமாக அமைந்து எப்போது பயனுடையதாகவே பேசவும் எண்ணவும் செயல்படவும் செய்தது. ஒரு விஞ்ஞானியோ தொழில் தலைவரோ அல்லது ஆசிரியரோ தன் வாழ்வில் உயர உயர, பயன் இலாச் சொல் சொல்லாமை என்ற குணத்தை வளர்த்து இளைய தலைமுறையினரின் கருத்துக்களை வெளிவரச் செய்ய வேண்டும். அவர்களுக்கு ஊக்கமளித்து பயனுள்ள சொற்களையே சொல்வதற்கும், சிந்திப்பதற்கும் செயற்படுவதற்கும் வழிகாட்டி வாய்ப்புக்களை அளிக்க வேண்டும். இக்குறளின் சாற்றை ஒவ்வொரு குடும்பத்திலும் பெற்றோர்கள் குழந்தைகளுக்குப் புகட்ட வேண்டும். கல்வி பயிற்சி நிலையங்களில் ஆசிரியர்கள் இதை மாணவர்கள் மனதில் பதியச்செய்து எல்லோர் வாழ்விலும் மலர்ச்சியை ஏற்படுத்தவேண்டும். இதன்மூலம் மக்களின் சக்தி பன்மடங்காக வளரமுடியும்.
2200ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவரால் அளிக்கப்பட்ட திருக்குறளில் ஒரு இடத்திலாவதழரு நாட்டைப்பற்றியோ, ஒரு

Page 6
மதத்தைப்பற்றியோ, தாய் மொழி தமிழைப்பற்றியோ, எந்தக் கடவுளைப் பற்றியோ ஒரு சொல் கூடக் கூறப்படவில்லை. திருவள்ளவர் ஒரு நாட்டின் தத்துவஞானி அல்ல. உலகத் தத்துவஞானி. அவர் மதங்கள் மார்க்கங்களுக்கு அப்ப்ாற்பட்டவர். எந்த மொழிக்கும் அப்பாற்பட்டவர். அப்பெரும் மகான் தந்துள்ள உலகத்தின் மறைநூலை, அவரின் சிந்தனைகளை, எண்ண எழுச்சிகளை என்றென்றும் நினைவுகொண்டு ஆய்வுப் புத்தகங்கள் பல தோன்றி மக்களின் வாழ்வைச் சிறப்பபுச் செய்யட்டும்.
இவ்விழா, ஒரு புதிய கூட்டு வழிபாடு. இச்சூழ்நிலையில் எனது பிரார்த்தனையைச் சொல்லுகிறேன்.
இறைவா, நல்வாழ்வு ஈன்ற இறைவா, உன் அருளை எண்ணி எண்ணி தொழுகிறேன். இறைவா என் பெற்றோர்களுக்கும், என் ஆசிரியர்களுக்கும் மற்றும் எல்லோருக்கும் என்றைக்கும் பெருவாழ்வு கொடுத்து ஆசீர்வதிப்பாயாக. இறைவா, என் நாட்டு மக்கள் ஒன்றுபட்டு வாழ நல்ல எண்ணங்களை உற்பத்திசெய்வாயாக. இறைவா மதங்கள் மக்களைப் பிளவுபடுத்தாமல் அவர்களை இணைக்க மதத் தலைவர்களுக்கு நல்லருள் புரிவாயாக.
இறைவா, என் நாட்டு மக்களுக்கு உள்ள உறுதியைக் கொடுத்து கல்வியிலும், தொழிலிலும், விவசாயத்திலும், கணனிப் பொறித்துறையிலும்
உயர்ந்த நாடாக உழைத்து முன்னேற அருட்கொடையைக் கொடுப்பாயாக.
(நன்றி தினமணி)
இலங்கையில் நடைபெறும் யுத்தத்திற்கு வருடந்தோறும் 6500 கோடி ரூபா செலவாகின்றது. யுத்தத்தில் இறந்தோர் தொகை 60 ஆயிரம். இடம்பெயர்ந்தோர் 7லட்சம். வெளிநாடுகளில் குடி பெயர்ந்தோர் 5 இலட்சம்.
- (øskavassøyaÚ 3o -ol-2ool)

இலங்கைத் தேசத்தின் கிராமங்களின் புழுதிமண் வாசனையையும், நகரங்களின் அழுகிய நாற்றத்தையும் நன்றாகவே அனுபவித்துவிட்ட அருளானந்தம் மாஸ்ரருக்கு இப்போது வயது அறுபத்து இரண்டு. சரியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமது ஆசிரியப் பணியிடமிருந்து பிரியாவிடை பெற்றுக்கொண்ட அவர், தமது ஓய்வூதியத்தைப் பெறுவதற்காக இந்த வயதிலும் “மரதன்' ஓடிக்கொண்டே இருக்கிறார். ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொள்வதற்காகக் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த யுத்த பூமியில் மரதன் ஓடிக்கொண்டிருக்கும் மாஸ்ரர், அது பற்றிச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஏன், மாண்புமிகு கல்வி அமைச்சருக்கும் கடிதத்திற்கு மேல், கடிதம் எழுதிக் களைத்தே போய்விட்டார். அவரைப் பொறுத்த வரையில் தாம்
bII ( 5 ) u u இந்த நாட்டில அரசாங்கக் க டி த ங் க ள (36ssiss6 肇 5 GUUGU . எல்லாம் குப்பைக் 55 ಗೆಯಿರಿ! ಲಲಿರಿ! /9ಿಲ್ಲೆ கூ  ைட க' கு ள g5 (T60T. 6) Ostglod5 656 5Bidb
கிடந்து தம்மைப் grungseong 6)aEU UU
பார்த்தச் சிரிப்பது UடாதUாடுபட வேண்டியிருக்கு. போல ஒரு பிரமை,
அதற்கும் ஏதாவது கொடுக்க இந த ப வேணும். இல்லை எனர்றால் பிரமையில் இரண்டு எதுவுமே நடக்காது. எங்கும் ஊழல்
ஆணர்டுகளையும்
நகர்த த வரி ட் ட 06@ ಆ ತಿ೦ಗಲೆ ಆ. இந்த நாட்டுக்கு மா ஸ ர ரு க' கு எதிர்காலமே இல்லை.” இப்போது பித்தம் த ைலக கே றரிய நிலை. மாத வருமானத்தை மட்டும் முதலாகக் கொண்டு எவ்வித ஆடம்பரமும் இன்றிக் குடும்பம் நடத்திப் பழக்கப்பட்ட மாஸ்ரருக்கு இப்போது அந்த வருமானமும் இல்லை என்றால், பித்தம் தலைக்கேறாமலா இருக்கும்?
அது ஒரு பங்குனி மாதம். வெயிலரசன் உள்ளும் புறமும் வெற்றிக் கொடி நாட்டிக்கொண்டிருக்கிறான். தார் றோட்டுக்கள் உருகி வழிகின்றன. வெறுங்

Page 7
காலோடு நடக்கமுடியாத அந்த றோட்டில் ஆடி அசைந்து புகை கக்கியபடி நகரத்தின் ஒரு பக்கமாக உள்ள பஸ் ஸ்ராண்டில் கோழிக்கூடு போன்ற ஒரு வான் வந்து நிற்கிறது. அதிலிருந்து அவசர அவசரமாக இறங்கிய மாஸ்ரர் ‘போதும் இந்த பிரயாண அவஸ்தை' என்று குமுறியவராய் கல்வித் திணைக்களத்தை நோக்கி நடக்கின்றார். ஏற்கனவே அந்தக் கோழிக்கூடு வேனில் அடிபட்டு மனித வெக்கையில் வெந்துபோன அவர் உடம்பில் இப்போது இவேசாக மெல்லிய காற்று வந்து விழுகிறது. அதனால் ஏற்பட்ட அற்ப சுகத்தினாலோ என்னவோ மாஸ் ரர் தம் கால களை, சற்று எட்டி வைக்கின்றார்.
நகரத்தில் இருந்து சற் று ஒதுக் குப் புறமாக அ  ைம ந’ த ரு க” கு ம கல்வித்திணைக் களத்தின் வாயிற்படியில் மாஸ்ரரின் கால் தடம் பதியும்போது நேரம் பதனொரு ம ண ய ரு க கு ம . கைக்கடிகாரத்திலிருந்து தன் கவனத் தைத் திருப்பிய மாஸ்ரர் கழுத்தில் கிடந்த சால்வைத் ၅ခ့ဲခ်ိန္နီမျိုll தன் முகத்தில் வழிந்த வ ய ர்  ைவ  ைய த' துடைத்தபடியே தாம் К. -- தேடி வந்த சப்ஜக்ட் கிளார்க்கை அலு வலகத்திற்குள் துழாவு கின்றார். அந்தத் துழாவலில் கூடியிருந்து சல்லாபித்துக் கொண்டிருக்கும் இரண்டொரு பெண்பால் உத்தியோகத்தர்களைத் தவிர வேறு யாரையுமே காணோம். மாஸ்ரர் அதிர்ந்து போகின்றார்.
அலுவலகப் பணி எக்ஸ்பிரஸ் வேகத்தில் நடைபெறவேண்டிய அந்த முற்பகல் வேளையில், அலுவலகத்தின் பெரும்பாலான மேசை, கதிரைகள் அநாதைகளாகக் கிடக்க, அவற்றின் எஜமானர்கள் வெளிவிறாந்தாவிலும், மரத்தின் கீழும் கூடி நின்று பெரிய கூட்டமே நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மாஸ்ரரைப்போல பல சோலிகளொடு அங்கு வந்த ஆசிரியர்களுக்கும் அந்தக் காட்சி அதிர்ச் சியையே தருகின்றது. அதுவும் அது ஒரு புதன்கிழமை. ஆசிரியர்
GE)
 
 
 
 
 

களுக்கென்றே ஒதுக்கப் பட்ட நாள். அந்த நாளிலாவது கிளார்க் இருப்பார் என்ற நப்பாசையில்தான் அருளானந்தம் மாஸ்ரர் புறப்பட்டு வந்திருந்தார். காலை ஏழரை மணிக்கே பாடசாலைக்குப் புறப்பட்டுச் சென்று, குறிப்பிட்ட நேரத்தில் வகுப்பறைகளில் தமிழ் இலக்கியத்தில் ஒரு பிடி பிடித்துப் பழக்கப்பட்ட மாஸ்ரருக்கு இந்த அலுவலக உத்தியோ கத்தர்களின் பொறுப்பற்ற போக்கு அதிர்ச்சியை ஊட்டியது ஒன்றும் ஆக்சரியமல்ல. நல்ல காலம் அந்த இடத்திலேயே மாஸ்ரர் மயங்கி விழுந்து விடாமல்விட்டது அவரது அதிஸ்ரந்தான்.
‘இந்த நாட்டில அரசாங்கக் கந்தோர்கள் எல்லாம் இப்ப இப்படித் தான். பொதுமக்கள் தங்கட காரியங்களைச் செய்யப் படாதபாடுபட வேண்டியிருக்கு. அதற்கும் ஏதாவது கொடுக்க வேணும். இல்லை என்றால் எதுவுமே நடக்காது. எங்கும் ஊழல் மலிஞ்சி போச்சு. இந்த நாட்டுக்கு எதிர்காலமே இல்லை.
சினத்தால் மாஸ்ரரின் மனம் சீறுகின்றது. அப்போது ஒரு பெரிய அட்டகாசச் சிரிப்போடு அந்த சப்ஜெக்ட் கிளார்க் அலுவலகத்துக்குள் நுழைகின்றார். அதைக் கண்ட மாஸ்ரர், ஒரு துள்ளுத் துள்ளிக் கொண்டு அவரை நெருங்குகின்றார். கிளார்க்கின் மூக்கின் நுனியில் கோபம் வந்து குந்திக்கொள்கிறது.
என்னையா நீங்கள் எங்களை விட மாட்டீங்க பொலிருக்கு. இப்பத்தான் ரீ குடிச்சித்து வாறன். அதுக்குள் வந்து கழுத்தை அறுக்கப் பாக்கிறீங்க.
கிளார்க்கின் நுனி மூக்குக் கோபம் மாஸ்ரரைத் தலைக்கு விஷமேறியவன் போலாக்குகிறது.
நீங்க என்ன கதைக்கிறீங்க. இப்ப நேரம் என்ன. பதினொன்றரை. ஆனா கந்தோர் வெறுமையா இருக்கு. நீங்க உத்தியோகம் பார்க்கிற லட்சணம் இதுதானா?. நாங்க எத்தனை நாளைக்கு இப்படி நாயா அலையிறது. மனச்சாட்சி இல்லாத மனிசரா இருக்கிறீங்களே.
மாஸ்ரர் போட்ட சத்தத்தினால் அந்தக் கிளார்க்கின் மூச்சே நின்றுவிடும் போல இருந்தது. அதைக் கவனித்ததாலோ, அல்லது மாஸ்ரரின் சத்தத்தால் நிலை குலைந்ததாலோ என்னவோ அங்கு ஓடிவந்த ஒரு பெண் கிளார்க் கெஞ்சும் குரலில் குழைந்தார்.
'அய்யா. இப்படிச் சத்தம் போடாதீங்க. எங்களுக்கும் எவ்வளவோ வேலை. நாங்க இங்க சும்மா இருந்து கொண்டு சம்பளம் வாங்கல்ல. இருங்க. இருந்து விஷயத்தை ஆறுதலாச் சொல்லுங்க. நீங்க ஒரு றிற்றயர் ரீச்சர்.
C09)

Page 8
இப்படி எல்லாம் கதைக்கக்கூடா.
‘அம்மா. உங்கட அட்வைஸ் எனக்கு வேணாம். நான் இரண்டு வருஷமா இந்தப் பென்ஷனை எடுக்க அலையிறன். பதிவுக் கடிதம் அனுப்பினாக் கூடா உங்களிடமிருந்து பதில் இல்ல. நான் மட்டுமல்ல. ஒரு சின்ன விஷயத்துக்குக்கூட ரீச்சர்ஸ் படுற பாடு எனக்குத் தெரியும். நீங்க உங்கட கடமையைச் செய்தாப் போதும். எங்களுக்காக ஸ்பெஷலா ஒண்டும் செய்ய (8660öLITb.....
தனது உள்ளக் குமுறலைக் கொட்டிக் கொண்டிருந்த மாஸ்ரருக்கு எந்தவித பதிலும் சொல்ல முடியாமல் திணறிய கிளார்க் மீண்டும் அவரை ஆசுவாசப்படுத்த முயல்கின்றார். மாஸ்ரர் ஒரு மாதிரியாகக் கதிரையில் அமர்கின்றார்.
சப்ஜெக்ற் கிளார்க்கிற்கு இப்போதுதான் போன உயிர் திரும்பி வந்திருக்க வேண்டும். அவரும் ஒருவித அசட்டுச் சிரிப்போடு மாஸ்ரரைச் சமாளிக்கப் பார்க்கிறார்.
மாஸ் ராரின் ஆத்திரமும் ஆவேசமும் எல்லா வழிகளிலும் நியாயப்படுத்தக்கூடியவையே. கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ஐந்தாறு பாடசாலைகளில் தம் ஆசிரியப் பணியைத் தொடர்ந்து நிறைவு செய்த ஒருவர் தம் வயதான காலத்தில் அதன் பயனை அனுப வரி க க முடியவில்லை என்றால்
ஆ த’ த ர ம’ 5芷 மட்டு மல் ல இரத் தக்  ெகா த ப பே উHIJ |Եֆ வந்துவிடும். அதுவும் தமது LO T 莎 வருமானத்தை மட்டுமே
ஆதாரமாகக் கொண்டு குடும்பம் நடத்திவந்த மாஸ்ரரை நம்பி இரண்டு மூன்று உயிர்கள் உள்ளன. அந்த உயிர்களோடு தனது உயிரையும் இணைத்துக் கொண்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக இல்லாமை எனும் பயங்கரவாதத்தை எதிர்த்து அவர் நடத்திக்கொண்டிருக்கும் இந்தப் போராட்டம் யாருக்குத் தெரியும்? தெரிந்தாலும் யார்தான் உதவப் போகிறார்கள்? அதுவும் ஒருவனை ஒருவன் முழுமையாகவே விழுங்கத் துடிக்கும் காட்டுமிராண்டித்தனம் நிறைந்த இந்தக் காலத்தில்?
மாஸ்ரர் பழைய தலைமுறையைச் சேர்ந்தவராக இருந்தாலும் இந்தக் காலத்தின் விலங்குத்தனத்தை அவர் நன்றாகவே அறிந்து வைத்திருக்கின்றார். அதனால்தான், இந்த இரண்டு வருடமாக எதிர்நீச்சல் அடித்துக் கொண்டிருக்கிறார். வயதானாலும் இந்த நீச்சலில் அவர் சளைக்கவேயில்லை.
 

போராட்ட்த்தின் தாக்கத்தினால் தான் எப்போதுமே உயர்த்திப் பிடித்தக் கொண்டிருக்கும் மானம், ரோசம் என்பவற்றைக் கூட கொஞ்சம் இறக்கி வைத்துவிட்டு தன் நிலையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் தெரிவித்த பின்பும், அவர்கள் கண்ணை மூடிக்கொண்டிருக்கிறார்கள் என்றால் பாஞ்சாலி சபதத்தின் வீமன் போல ‘இனி இது பொறுப்பதில்லை தம்பி, எரிதழல் கொண்டு வா’ என்று தானே சொல்ல வேண்டிவரும். ஆனாலும் மாஸ்ரர் இன்னும் அந்த நிலைக்குப் போகவில்லை. அறிவும் அனுபவமும் அவரை நிதானத்திற்குள்ளேயே வைத்திருக்கின்றன.
'அய்யா குறை நினைக்காதீங்க. உங்கட நிலமை எங்களுக்கு நல்லா விளங்குது. நிர்வாகத்தில் எங்கேயோ தவறு நடந்து போச்சு. இண்டைக்கு டி. ஈயும் இல்ல. எப்படியும் இன்னும் இரண்டொரு கிழமைக்குள் உங்கட விஷயத்தை முடித்துத் தாறம். ஒன்றுக்கும் யோசிக்காதீங்க.
மாஸரருக்குக் கொஞ்சம் நம்பிக்கை பிறக்கிறது. ஆனாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அழுத்தம் திருத்தமாகவே சொல்கிறார்.
தம்பி. இந்த வயதில இந்த கந்தோருக்கு எத்தனை தடவை வந்திற்றன். எத்தனை கடிதங்கள் போட்டுத்தன். எண்டு யோசிச்சுப் பாருங்கோ. நாங்க எடுக்கிற பென்ஷன் ஒண்டும் யாருடைய சொந்தக் காசும் இல்ல. இது எங்கட உழைப்பின்ர பயன். இந்தப் பயனை அரசாங்கம் தான் கொடுக்குது. இதை இந்த டிப்பாட்மெண்டில வேல செய்யிற எல்லோரும் எண்ணிப்பார்க்கணும்.’
மாஸ்ரர் இன்னும் அதே ‘மூட்டில்தான் இருக்கிறார் என்பதை உணர்ந்து கொண்ட கிளார்க், அய்யா, நீங்க போய் வாங்க. இன்னும் இரண்டு கிழமைக்குள்ள எல்லாம் சரியா வரும். போய் வாங்க.’ என்று அழாக் குறையாகவே சொல்கிறார்.
இனியும் அந்தக் கிளார்க்கோடு எதுவும் பேசவிரும்பாத மாஸ்ரர் எழுந்து நின்று அவருக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு வேகமாக அலுவலகத்தை விட்டு வெளியேறுகிறார். அவர் கால்கள் பஸ் ஸ்ராண்டை நோக்கி நடக்கின்றன.
வளர்ந்துவரும் நாடுகளில் இன்று பத்துப்பேரில் ஐந்து பேருக்கு குறைவானவர்களே, தொற்றாத நோயால் இறந்து போகிறார்கள். ஆனால் 2020ம் வருடத்திற்குள் இந்த இறப்பு எண்ணிக்கை பத்துக்கு ஏழு பேராக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
(~ உலகளாவிய நோய் பிரச்சினை ஹவார்ட் யூனிவேர்சிற்றி பிரஸ். 1996 - ஆங்கிலம்)

Page 9
பூத்தது காலை பொன்னிறம் பரவும் கூத்தது ஆழக்குவலயம் களிக்கும் மூத்தது போகும் முகிழ்த்திடும் புதிது பார்த்தவர் கண்ணில் பரவசம் பொங்கும்
புள்ளினம் பாடும் பூபாளம் இசைக்கும் நல்லினம் பசுக்கள் நறும்பால் சொரியும் புல்லினம் Uஞ்சுப் பொதியென ஆகும் கல்லினம் தானும் கனகமாய் ஒளிரும்.
வாசலில் மாவிலை வனப்புறு தோரணம் ஊசலாடும் ஒவ்வொருவர் மனத்திலும் ஆசையைத் தூண்டும் அணங்கவள் மீது வாசமலர்கள் வைத்த விளக்காகும்.
காற்றவளோடு கடும் போட்டி போடும் தோற்றது யாரோ? தோகைகள் கண்டு ஆற்றல் இல்லை, அழமைகள் ஆனோம் சாற்றிடும் உண்மை சகலமும் கேட்கும்.
எங்கும் மகிழ்சி எளிதில் பரவும் தங்க வண்ணம் தாரணி பூணும்
மங்கை சித்திரை மனமது வைத்தாள் பொங்கும் உலகம் புகழ்ச்சிகள் பாடும்.
- சிவந்தி.

தமிழ் இலக்கியப் பணியில்
மு. வி. என்ற இரு எழுத்துக்கள் இன்றும் இலக்கிய உலகில் பசுமையாக உள்ளன. இந்த இரு எழுத்துக்கள் குறிக்கும் டாக்டர் மு. வரதராசன் ஒரு பல்கலைக்கழகப் பேராசானாக வாழ்ந்தார். பண்டைத் தமிழ் இலக்கியத்திலும், நவீன புனைகதை இலக்கியத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அவர் இலக்கிய ஆய்வுக் கட்டுரைகளை எழுதியதுடன் நின்றுவிடாது சிறுகதை, நாவல் நாடகம் முதலியவற்றையும் எழுதியுள்ளார். இவ்வாறு ஆக்க இலக்கியத் துறையில் அவர் காட்டிய கரிசனை ஏனைய சர்வகலாசாலைப் பேராசிரியர்களுக்கும் கலாநிதிகளுக்கும் ஒரு கண்திறப்பாக அமைந்தது எனலாம்.
அவர் எழதிய நூல்களை பின்வருமாறு தொகுத்துக் கூறலாம் - நாவல்கள் 13, சிறுகதைத் தொகுப்பு 2, சிந்தனைக் கதைகள் 2, நாடகம் 6, கட்டுரைகள் 11, இலக்கிய நூல்கள் 24, சிறுவர் இலக்கிய நூல்கள் 4, கடித இலக்கியம் 4, பயண இலக்கிய நூல் 1, இலக்கிய வரலாறு 1, மொழியியல் 6, வாழ்க்கை வரலாறு 4, ஆங்கில நூல்கள் 2, சிறுவர் இலக்கணம் 2, மொழிபெயர்ப்பு நூல் 2.
இவரது நூல்களைப் பற்றிய சிறப்பம்சங்களைப் பின்வருமாறு குறிப்பிடலாம்:-
(i) இவரது நூல்கள்ல் பிறரது மதிப்புரை, அணிந்துரை, முன்னுரை போன்ற
எதுவும் இடம்பெறுவதில்லை.
(ii) இவரது நூல்களில், 10 நூல்கள் இந்திய சாகித்ய அகடமி சென்னை அரசாங்கம், தமிழ் வளர்ச்சிக் கழகம் முதலிய நிறுவகங்களின் பரிசைப் பெற்றுள்ளன.
(i) இவரது நூல்களில் 12, ஆங்கிலம், ரஷ்ய மொழி, சிங்களம், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் முதலிய மொழிகளில் பெயர்க்கப் பட்டுள்ளன.
C13)

Page 10
(iv)
(v)
இவரது நூல்களை வெளியிடுவதற்கு பிரச்சார நிறுவகங்கள் போட்டி போட்டுக் கொள்ளும்.
62 வயதில் 85 நூல்களை வெளியிட்ட பெருமை இவருக்குரியது (பிறப்பு: 25-04-1912 - இறப்பு: 10-10-1974)
இவரது நூல்களைப் பற்றிய ஒரு கண்ணோட்டம், இவரது இலக்கியப்
பங்களிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்ளப் பெரிதும் உதவும்.
(i)
(ii)
(iii)
(iv)
(V)
(vi)
(vii)
இலக்கிய நூல்கள்:- பழந்தமிழ் இலக்கியங்களை ஆய்வுசெய்து எழுதப் பட்ட இவ்வகை நூல்கள், இவரது தனித்துவமான ஆற்றலுக்குச் சான் றானவை. இனிய தமிழ் மொழிநடை இந்நூல்களின் சிறப்பம்சமாகும்.
நாவல்கள், சிறுகதைகள்:- இவை மனித விழுமியங்களை கருப்பொரு ளாகக் கொண்டவை. ஆனாலும் இவை புனைகதைகளுக்கு ஏற்ற யதார்த்த வகையில் அமையாது, செம்மொழியில் எழுதப்பட்டதால், விமர்சகர்கள் அதை ஒரு குறையாக கொள்கின்றனர்.
நாடக நூல்கள்:- இவையும் இலட்சிய நோக்கில், எழுதப்பட்டடிருப்பதுடன், உரையாடல்கள். பேச்சுத் தமிழில் அமையாது இலக்கணத்தமிழில் அமைந்திருப்பது. விமர்சகர்களுக்கு ஒரு நெருடலாகவே உள்ளது.
கட்டுரை நூல்கள்:- இந்நூல்கள் இவரது சிந்தனை ஒட்டத்தை பிரதி பலிப்பதுடன், பல்வேறு பொருள்களில் இவருக்குள்ள ஈடுபாட்டையும் எடுத்துக்காட்டுகின்றன.
சிறுவர் இலக்கியம், கடித இலக்கியம்:- இவை இளைஞர் மத்தியில் மனித விழுமியங்களை வலியுறுத்தும் வகையில் அமைந்துள்ளன.
மொழியியல்:- இவை, மொழி நூல், மொழியின் கதை, எழுத்தின் கதை, சொல்லின் கதை, மொழி வரலாறு, மொழியியல் கட்டுரைகள் என்ற தலைப்பில், இளைஞர்களுக்கு தமிழிலக்கண அறிவை ஊட் டும் வகையில் சிறுசிறு நூல்களாக எழுதப்பட்டுள்ளன.
வாழ்க்கை வரலாறு:- அறிஞர் பெர்னாட்ஷா, காந்தியண்ணல், கவிஞர்
தாகூர், திரு. வி. க. பற்றிய இந்நூல்கள் இவரைக் கவர்ந்த பெரியார் கள் பற்றி மறைமுகமாக நமக்குச் சொல்கின்றன.
C14)

(vi) ஆங்கில நூல்கள்: இவர் எழுதிய இரு ஆங்கில நூல்கள் சங்க இலக் கியத்தில் இயற்கை, இளங்கோ அடிகள் என்னும் தலைப்புகளில் வெளிவந்துள்ளன. இவை இவரது ஆங்கிலப் புலமையை வெளிப்படுத் துகின்றன.
பரிசு பெற்ற இவரது 10 நூல்களும், ஏனைய சில நூல்களும் விசேடமாகக் குறிப்பிடப்படவேண்டியவை. இவற்றுள் அகல்விளக்கு, கள்ளோ காவியமோ, கரித்துண்டு, ஒவச்செய்தி, தமிழ் நெஞ்சம், இலக்கியக் காட்சிகள், நெஞ்சில் ஒரு முள் முதலியவை வாசகர்களை மிகவும் கவர்ந்த நூல்களாகும்.
இவ்வாறு இவர், பல்துறை நூல்களை எழுதியிருப்பதைக் கொண்டே இவரது பல்துறை ஆற்றலையும், அனுபவங்களையும் நாம் ஒருவாறு ஊகித்துக்கொள்ளலாம்.
1961 முதல் 1971 வரை (பத்து வருடங்கள்) சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்துறைத் தலைவராகப் பணிபுரிந்த இவர், 1971 முதல் 1974 வரை மதுரைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகவும் பணிபுரிந்தார். அதன்பின் தமிழகத்தில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டக் குழுவிலும் பணியாற்றியுள்ளார். அதுமட்டுமல்லாது, புதுடில்லி சாகித்திய அக்கடமி, பாரதிய ஞானப்பீடம், தேசிய புத்தகக் குழு, இந்திய மொழிக் குழு போன்ற பாரிய இலக்கிய அமைப்புகளின், விசேட அழைப்பின் பேரில், தனது பங்களிப்பை வழங்கியுள்ளார்.
தமிழ்நாடு புத்தக வெளியீட்டுக் கழகம், ஆட்சி மொழிக்குழு, தமிழ் வளர்ச்சிக் கழகம், தமிழ் கலைமன்றம், தமிழிசைச் சங்கம், மாநில வரலாற்றுக் கழகம், தமிழ்க் கலைக் களஞ்சியம், தமிழகப் புலவர் குழு, உலகத் தமிழ் ஆராய்ச்சிக் நிறுவகம் முதலியவற்றில் நிறைவான பங்களிப்புச் செய்துள்ளார்.
டாக்டர் மு. வ. ஒரு பன்மொழிப் புலவர் என்பதையும் இங்கு குறிப்பிட்டு ஆகவேண்டும். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி முதலிய மொழிகளைக் கற்று அவர் அம்மொழிகளில் மிகுந்த அறிவு பெற்றிருந்தார். “கல்வி கரையில, கற்பவர் நாட்சில”, என்ற முதுமொழியைக் கருத்திற் கொண்டு அவர் தனது வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொண்டேயிருந்தார். ஒரு தனி மனிதனாக இவ்வளவு சாதனைகளைச் செய்த அவரை ஒரு தனித்துவ நிறுவகம் என்றே கூறலாம்.
டாக்டர் மு. வரதராசன் நடைபோட்ட இலக்கிய வழியும் நம் சிந்தனைக்குரியது. தமிழகத்தில் டாக்டர் உ. வே. சாமிநாதையர் ஆறிறிய

Page 11
தமிழ்ப்பணி யாவரும் அறிந்தது. ஏட்டு வடிவிலிருந்த பல பழந்தமிழ் இலக்கியங்களை நூல்களாகப் பதிப்பித்தவர் அவர். அவரது மாணவர் வி. க. என்னும் திரு. வி. கல்யாணசுந்தரர் இவரது மாணவர் போன்றவர் டாக்டர் மு. வரதராஜன். டாக்டர் முவவின் மாணவர் “தமிழ் இலக்கிய வரலாறு” நூல் எழதிய திரு. சி. பாலசுப்பிரமணியம் ஆவார். இவ்வாறு இந்த இலக்கியப் பரம்பரை உ. வே. சா. திரு. வி. க., மு. வ, பாலசுப்பிரமணியம் என ஒரு சங்கிலித் தொடராக வந்திருப்பதும் நாம் மனங்கொள்ளத்தக்கது.
டாக்டர் மு. வ. பெற்ற பட்டங்கள் பல. பி. ஒ. எல். (1939), எம் ஒ. எல். (1944), சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதல் தமிழ் டாக்டர் பட்டம் (1948), அமெரிக்காவிலுள்ள ஊஸ்ரர் கல்லுரியில் டி லிற். (இலக்கியப் பேரறிஞர் (1972) முதலியன அவர் பெற்ற பட்டங்கள். d
இவ்வாறு அவர் தேடிப்பெற்றப் பட்டங்களும் அவரைத் தேடிவந்த பட்டங்களும் வீண்போகாது தான் பெற்ற இலக்கிய இன்பத்தை மற்றவருக்கும் வழங்கினார். டாக்டர் மு. வ. அவர் பெற்ற பாட்டங்கள், கடிதத் தலைப்பை (Letter Head) மட்டும் அலங்கரிக்கப் பயன்படாது, சமூகத்திற்குப் பயன்பட்டது.
அவர் தனது வாழ்நாளில், ரஷ்யா, மலேசியா, சிங்கப்பூர், பிரான்ஸ், இலங்கை, இங்கிலாந்து, ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி, கிரேக்கம், எகிப்து, ஆபிரிக்கா, அமெரிக்கா முதலிய நாடுகளுக்கு பயணம் செய்தார். அவர் பெற்ற பயண அனுபவங்களும், அவரது இலக்கியப் பங்களிப்புக்கு வளம் சேர்த்தன 6T60TGlorTD.
உலகில் எத்தனையோ பேர் டாக்டர் பட்டம் பெறுகிறார்கள். ஆனால் அவர்கள் மத்தியில் துருவ நட்சத்திரமாக இன்றும் விளங்குபவர் டாக்டர் மு. வ. என்றால், அது மிகையாகாது.
தொழில்மயமாக்கப்பட்ட நாடுகள் பூகோள அளவில் சுற்றுச் சூழலை அழிக்கின்றன. தூய்மைக் கேட்டைப் பரவச் செய்கின்றன. சூழலியல் அமைப்பைப் பாதிக்கின்றன. இதே நிலை தொடர்ந்தால் “இயற்கைச் சூழல் அதிவிரைவில் அழிந்துவிடும்”
( பூகோள சூழியல் நோக்கு - 2000. ஐக்கிய நாடுகள் சூழியல் திட்டம் - ஆங்கிலம்)

ஒரு நிகழ்வின் போது.
24-02-2001 அன்று மாலை மன்ரேசா வயல்வெளிப் பூங்காவில் பெற்றோர் தின நிகழ்வுகள் ஆரம்பமாயின. முதலாவத நிகழ்வாக “பிள்ளைகளின் உரிமை' எனும் தலைப்பைக் கருப்பொருளாகக் கொண்டு ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றத. இக்கலந்துரையாடலில், வண. பிதா போல் சற்குணநாயகம் அவர்கள், “பெற்றோர் தம் பிள்ளைகளை எவ்வாறு பராமரித்த வளர்த்தெடுக்க வேண்டும் என்பன போன்ற விடயங்களை ஆழமாக பெற்றோருடன் பகிர்ந்த கொள்ள, அவரைத் தொடர்ந்த “பிள்ளைகளின் உரிமையும் பெற்றோரின் கடமையும்” என்ற தலைப்பில் மாணவன் நிசாந்தன் அவர்கள் சில கருத்துக்களை எடுத்துக்கூறி விடைபெற, மாணவன் நிக்கலஸ் “கல்வியின் சிறப்பு, முக்கியத்தவம், பயன்பாடு அவசியம்” என்னும் பொருளில் சாதாரண வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உரையாற்றினார். இதையடுத்து சாந்தி பவான் பிள்ளைகள் கலந்துரையாடலைத் தொடர்ந்தனர், “பிள்ளைகளை வேலைக்கு அமர்த்தினால்.” என்னும் தலைப்பில் ஒரு நாடகமும் நடித்தக் காண்பிக்கப்பட்டது. இதையடுத்து திரு. மெக்சி ஒக்கஸ் அவர்களின் நன்றி உரையும், சர்வமத வழிபாடும் இடம்பெற்றன.
வண. பிதா போல் சற்குணநாயகம் அவர்கள் தன்னுடைய பிறந்த நாளை ஒட்டி கேக் வெட்டினார். இத்ை தொடர்ந்து அனைவருக்கும் கேக், சிற்றுண்டிகள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு வீட்டுப் பிள்ளையும் தம் அன்பை வண. பிதா போல் சற்குணநாயகம் அவர்களுக்குத் தெரிவிக்குமுகமாக, தங்களின் திறமைகளை வெளிக்காட்டி அவர்களின் கைவண்ணத்தாலான பல கவிதைகளையும், வாழ்த்த அட்டைகளையும், சித்திரங்களையும் அவருக்கு வழங்கி வாழ்த்தினார்கள். வண. பிதா போல் சற்குணநாயகம் அவர்கள் பிள்ளைகளுக்கு உதவி செய்யும் நிறுவகத்தின் இலச்சினை அச்சிடப்பட்ட ரீ சேட்டுக்களைப் பிள்ளைகளுக்கு வழங்கி மகிழ்ந்தார்.

Page 12
குன்றில் ஒரு குறிஞ்சி மலர் நெடுங்கவிதை - 02
மலைப் பாறை மீது
மாதரசி ஏறி இலை யது கொய்வாள்
இளைஞரது காணில் சிலையது ஒன்றின்
செயலது என்பார் இலை அவள் போல
இன்னுமோர் அழகி
நனி இளங் காலை
நங்கை அவள் மலையில் பனி யெனக் குளிர்வாள்
பாத மலர் பட்டு கனி என வாகும்
கல் மலை தானும் தனி அவள் தோற்றம்
தங்க ரதம் போல.
குன்றதிலே சிரிக்கும்
குறிஞ்சி மலரோடு
ஒன்றெனவே வைப்பார்
உவமையறி புலவர்
நன்று என வளர்ந்த
நளினக் கொடி போல
நின்ற வளும் அசைவாள் நிகரில்லா வாசம்
துரை யவனின் கண்ணில்
தோகையிவள் வீழ இரை யெனக் கிவளே
என்றவனும் நினைந்தான் கரையில்லை அவனின்
காமம் ஓர் கடலே நரையது எழுந்தும்
நாய் போலும் மனிதன்.
வாயெல்லாம் சிவப்பு
வைகறையில் பருகும் தேயிலையைப் போல
தேனாக இனிக்கும் ஆயிரமாய் எண்ணம்
அலை மோதச் செய்யும் ஆயிழையாள் தோற்றம்
அச்சடித்த பதுமை,

இனித்த பெண் அதனால்
எசமானும் ஒரு நாள் தனித்து வா என்று
தையல் தனை அழைப்பான் கணித்தவளும் அதனைக்
கண்ணகியைப் போல குனித்த தலை நிமிர்ந்து
கொட்டுவாள் நெருப்பு
கூலி நான் உண்மை
குணமெல்லாம் கெட்ட காலி நீ அறிக
காசுக்கு மயங்கேன் வேலி நான் பாயேன்
வேறாளைப் பாரும் சோலி நீ தந்தால்
சுடுகாடே கிடைக்கும்.
எந் தமிழர் பண்பு
இக மெல்லாம் அறியும் வந் தவனே உனக்கு
வரலாறு தெரியா விந்தையிலை நீயும்
விலை பேசல் எனக்கு சந்தையிலே வாங்கும்
சரக்கல்ல பெண்கள்
வணிகன் நீ அதனால்
வாங்கிடவோ எண்ணம்
கணிகை நான் அல்லள்
கண்ணகியின் வடிவம்
அணி யொன்றைத் தகர்த்து
அரசனையே மாய்த்த
மணி போலும் இந்த
மலை நாட்டை எரிப்பேன்
என்றவளும் சீறி
இடம் விட்டுச் செல்வாள் நின்றவனும் அதிர்ந்து
நெஞ்சுடனே சொல்வான் இன்றல்ல, நாளை
இனியவளே உன்னை நன்று நான் சுவைப்பேன்
நடக்கும் இது என்பான்.
அந்தி மலர் குவிய
அடர்ந்த இருள் பூக்கும் வந்த வளும் வீடு
வாசல் தனில் இருப்பாள் நொந்தவளிள் நெஞ்சில்
நூறு என எண்ணம் பந்தமுள கணவன்
படரும் அவன் நினைவு.
குடருள்ளே கள்ளை
குறைவின்றி ஊற்றி
இடறியவன் வருவான்
எங்கெங்கோ வீழ்ந்து

Page 13
உடன் வாழும் மனைவி
உள்ளமது கிடந்து
படும் பாடு அறியான்
பாவம் அவள் பேதை,
நாளெல்லாம் உழைத்து
நாமென்ன கண்டோம்? ஆள் பாதி ஆனோம்
அது போதாதென்று நீள் துயரம் தொடரும்
நெறியில்லா ஆட்சி ஊழ் வினையா இல்லை!
ஊராள்வோர் வினையே!
ஒப்பந்தம் செய்து
ஓடு எனப் பலரை
கப்பல் தனில் ஏற்றி
கடல் மீது விட்டார்
எப்போதோ வந்தோம்
இன்னும் நாம் இங்கே
ஒப்புக்கே வாழும்
உயிரில்லாச் சடமே!
தோட்டத் துரை அவனும்
தோகை அவள் நெஞ்சில் ஆட்டமது காட்டி
அச்சம் மிகத் தருவான் நாட்டை விட்டோட்ட
நல்ல தொரு சாட்டு கூட்டுக் கிளி அவளும்
குமுறி மனந் துடிப்பாள்.
(இன்னும் வரும்)
குஜராத் பூ கம்பத்தில் இறந்தோர் எண்ணிக்கை 30 ஆயிரத்துக்கு அதிகம் - என்கிறார் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ச்
பெர்னாண்டஸ்
மேற்படி பூ கம்பத்தில் படுகாயம் அடைந்தோருக்கு (பெரும்பாலானோர் இந்துக்கள்) முஸ்லிம் இளைஞர்கள் 100 பேர் இரத்தம் அளித்துக்
காப்பாற்றினர்.
(இலங்கை வானொலlச் செய்தி)
(தினக்குரல் - 30-01-2001)

go)L|li 860)g, Slsló0)g - O5
ஆபிரகாமுக்கு மிகவும் முதிர்ந்த வயது. அவர் மனைவி சாராயும் முதியவளே. பிள்ளைப் பேறில்லாத அவர்கள் மீது ஆண்டவரின் கருணைப் பார்வை விழுகிறது. ஆபிரகாமுக்கு ஒரு மகனைத் தருவதாக ஆண்டவர் வாக்களிக்கிறார்.
அதிசயிக்கத்தக்க விதத்தில் அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். ஆண்டவரால்
அருளப்பட்ட இம்மகனுக்கு ஈசாக்கு எனப்
பெயரிட்டனர். மகிழ்ச்சிக் கடலில் திளைத்துக் கொண்டிருந்த மகேல்ഖുf; 4átus ரத்தினம்)
நேரத்தில், அதே வீட்டில் ஆபிரகாமுக்கு - சாராயின் வேலைக்காரி ஆகார் மூலமாகப் பிறந்த மகன் இஸ்மயேலும் விளையாடித் திரிவது சாராயுக்குப் பிடிக்கவில்லை.
“இந்த ஆகாரையும் மகனையும் எங்காவது துரத்திவிடும். என்மகனுக்குப் போட்டியாக இஸ்மயேல் இருக்கக்கூடாது. அவன் வேலைக்காரியின் மகன் தானே?. என்னால்தானே நீர் ஆகாருடன் உறவு கொண்டீர். இப்போதும் நான் சொல்கின்றேன். அவளையும், அவள் மகனையும் துரத்திவிடும்.”
“சாராயி திரும்பத்திரும்ப வற்புறுத்திக்கொண்டே இருந்தாள். அவளது நெஞ்சில், ஆகார் அன்று சிரித்த ஏளனச் சிரிப்பு கனன்று கொண்டிருந்தது. அன்று நான் மலடியாக இருந்த நேரத்தில் உம்மூலம் கருவுற்று இருந்த வேளையிலும் இஸ்மயேலைப் பெற்ற வேளையிலும் அவள் என்னை ஏளனத்துடன் நோக்கியதையும் ஏளனமாகச் சிரித்ததையும் என்னால் மறக்க முடியாது. இன்று ஆண்டவர் என்னைக் கருணையுடன் நோக்கியதால் நான் இந்த மகனைப் பெற்றெடுத்தேன். இப்போது இவளையும் இவளது மகனையும் துரத்திவிடும்.”
சாராயி திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே இருந்தாள்
நேரம் போய்க்கொண்டே இருந்தது. ஆபிரகாமால் எதுவுமே முடியவில்லை. அவருக்கு மிகவும் வேதனையாக இருந்தது. சாராயியோ தனது பிடிவாதத்தைத் தளர்த்துவதாகவே இல்லை.
இரவு. ஆபிரகாமுக்குத் தூக்கம் வரவில்லை. அவர் எழுந்து குறுக்கும் நெடுக்குமாக

Page 14
நடந்து கொண்டிருந்தார் அவரது மனம் அமைதியின்றித் தவித்துக்கொண்டிருந்தது. அவர் வழமைபோலவே ஆண்டவரைக் கூவி அழைத்தார்.
ஆண்டவர் ஆபிரகாமை நோக்கி, “ஆபிரகாம், நீ வேதனைப்படாதே. ஆகாரையும் அவள் பெற்ற மகனையும் குறித்து நீ கவலைப்படாதே. நீ, சாராயி சொல்வதைப் போலவே செய். ஏனெனில் ஈசாக்கின்மூலமே எனது திட்டம் நிறைவேறும். உனது வழிமரபினர் பெருகுவர். ஆனாலும் இஸ்மாயேலும் உனது வித்து என்றபடியால் இஸ்மயேலிடமிருந்து ஒரு பெரிய இனம் தோற்றம் பெறும்; பொலிவு பெறும்.” என்றார்.
ஆண்டவரின் வார்த்தையால் மனம் தெளிந்த ஆபிரகாம், காலையில் எழுந்ததும் தோற்பை நிறையத் தண்ணிரையும் அப்பத்தையும் எடுத்து ஆகாரின் கையில் கொடுத்து, பையனையும் ஆகாரையும் வெளியே அனுப்பி வைத்தார்.
வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட ஆகார் குழந்தையுடன் பாலைநிலத்தில் அலைந்து திரிந்தாள். அவள் கையிலிருந்த நீரும் முடிந்துவிட்டது. குழந்தையும் அவளும் தாகத்தால் தவித்தனர். குழந்தை தண்ணிருக்குத் தவிப்பதைப் பொறுக்காத ஆகார், ஓர் புதரின் அடியில் குழந்தையைக் கிடத்திவிட்டு, தான் சற்றுத் தூரத்தில் போய் இருந்து கொண்டாள். அவளது கண்களிலிருந்து நீர் வழிந்தது. அவள் கதறிக் கதறி அழுதாள்.
“ஆண்டவரே எனது குழந்தை தாகத்தால் தவிக்கிறானே. என்னால் பொறுக்க முடியவில்லையே. இப்படியே இவன் சாகவேண்டியது தானா..?
ஆகாரின் கதறல் ஆண்டவரின் செவிகளுக்கு எட்டியது.
“ஆகார். நீ எங்கே இருக்கிறாய்?” ஆண்டவரின் குரல் ஆகாருக்குக் கேட்கிறது.”
“ஆண்டவரே என் மகனைக் காப்பாற்றும் ஆண்டவரே. அவள் கதறுகிறாள்.”
ஆகார். பயப்படாதே. உனது மகனை நான் காப்பாற்றுவேன். எழுந்து உன் மகனின் கையைப் பிடித்துக்கொள். இதோ பார். அங்கே தெரிகிறது தண்ணீர் போய் எடுத்துக்கொள். உன் மகனைப் பார். அவனை எனது பாதுகாவலில் வைத்திருப்பேன். அவனிடமிருந்து ஒரு இனம் தோன்றும்.
ஆண்டவரின் வர்த்தைகளைக் கேட்டுக் கண்களைத் திருப்பிப்பார்த்த ஆகாருக்குப்
பொங்கி எழும் நீருற்றுத் தென்படுகிறது. அவள் ஆண்டவரைப் போற்றித் துதிக்கிறாள்.

முற்போக்குக்காரர் பற்றி வ. அ.
எழுத்தாளன் எப்போதும் முற்போக்குவாதியாகத்தான் இருக்க வேண்டும்; இருப்பான். உதாரணமாக, "ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும் அவர் கண்டீர் தாம் வணங்கும் கடவுளாரே என்று தேவாரம் பாடியவரும் ஒரு முற்போக்குவாதிதான். நானும் இப்படியானவற்றைத் தான் எழுதுகிறேன். அதனால் ஒரு முற்போக்குக்காரன் என்றுதான் என்னை நம்பினேன். நான் எழுதத் தொடங்கிய காலத்தில் முற்போக்கு என்ற வார்த்தையே வரவில்லை. 1956ம் ஆண்டு பண்டாரநாயக்கா ஆட்சிக்காலத்தில் வந்ததுதான் இந்த முற்போக்கு அறுபதாம் ஆண்டிலே தான் அது காலூன்றியது. அதற்கு முன்னரே இந்த முற்போக்கு எழுத்தாளர்கள் சொல்கிறவற்றையெல்லாம் நான் எழுதிவிட்டேன். ‘நீங்கள் முற்போக்கு என்று சொல்லுவதெல்லாவற்றையும் நான் எப்போதோ எழுதிவிட்டேன். என்று எனது ‘தோணி’ சிறுகதைத் தொகுப்பின் முன் னுரையில் குறிப்பிட்டிருந்தேன். அது இவர்களுக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் தான் முதலில் சொல்லவேண்டும். என்பதுதான் அவர்களுடைய எண்ணம். அப்படியென்றால் நான் அவர்களுடன் ஒட்டுறவாக இருக்கமுடியுமா? இருக்க முடியவில்லை. எஸ் பொன்னுத்துரைக்கும் நடந்தது இதுதான். பொன்னுத்துரைக்கும் எனக்கும் எத்தனையோ அபிப்பிராயபேதங்கள் இருந்தன. இருந்தாலும்கூட நான் அவருடைய மேதைமையை மதிக்கிறேன். அதனால் நான் அவரோடு நண்பனாக இருக்கிறேன். | முற்போக்காளர்கள் இரண்டு மூன்று கலாநிதிகளை வைத்துக் கொண்டு “சில்விட்டான்’களை மேய்க்கிறார்கள். அப்படியான மேய்ச்சலுக்கு நாங்கள் எடுபடவில்லை. அதனால் அவர்கள் கோபித்துக்கொண்டார்களே தவிர நான் அவர்களோடு கோபப்படவில்லை.
- நன்றி - ஞானம்’ ஒக்டோபர் 2000.

Page 15
LDLähGITûsîai
இரு மாத
ஒர் இதழின் ரூபா பத்து (10/-)
வாங்குங்கள்.
வாசகர் ஆகு
ஆண்டுச் ருபா நாறு
ஆறு மாதச் ரூபா ஐம்பத்தை
ରାଗili
Professional Psychologic Battica
Printed by: Jes.com Printers, Batticaloa.
 
 
 
 
 
 
 
 
 
 

ந்து வெளிவரும் இதழ்.
விலை மாத்திரந்தான்.
வாசியுங்கள் 1ங்கள்.
சந்தா (IOO-)
சந்தா ந்து (55/-)
G:
all Counselling Centre 10a.
ー」 El