கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: போது 2004.11-12

Page 1
ଽ :ଞ && 3 233 23.-3-3-2-22-X2:_X-23-233 3333333 332 333 33: 3-3, 3-3, 3; ჯ. ჯ. ჯ. ჯ. ჯ. 3 8क्षं83-888-8&
அருள் வெள் அவதாரம்
 
 

ஜ்இ

Page 2
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்.
மகாகவி பாரதியார் _
( டுைச் சந்தா 100/ ) 6) گB
வெளியீடு : PROFESSIONAL PSYCHOLOGICAL COUNSELLING CENTRE
BATTCALOA.
 

懿
கார்த்திகை-மார்கழி 2004 தோற்றம் 5-5-1998
நிர்வாக ஆசிரியர் (Managing Editor) * சுவாமிஜி
if Guri6ö சற்குணநாயகம்.யே.ச.
辫
棒
ஆசிரியர் (Editor)
攀 Ꭷ1ᎥᎢ éᎫ, 6Ꮘg Ꭷ] ᎥᎢ 6ᎫᏘ 601 捻
* நிர்வாகம்:
(Management) 教 சி.எம்.ஒக்களில்
普 t ] Ꭷ0fltᏝ 6Ꮘ 60I :
ஜெஸ்கொம் அச்சகம், ,இல, 1, யேசுசபை வீதி ܝܼܲܰ * i iÖto _ dä 856 til !.
* தொலைபேசி:
065-2223822. O65-2222983 葵
釁
E-mail / ppccGediamond.lanka.net 餐
is a is a is a
:
ஆசிரியர் பக்கம்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பலஸ்தீனத்தின் ஒரு குக் கிராமத்தில் பிறந்த யேசு கிறிஸ்து உலக வரலாற்றையே இரண்டாகப் பிளந்த சிறப்பிற்குரியவர். இந்தச் சிறப்பே, வரலாற்றின் மையமாக அவரை உலகம் ஏற்றுக் கொள்ளச் செய்தது.
யேசு கிறிஸ்துவை இத்தனை ஆண்டுகளாக இரக்கம் நிறைந்தவர், அன்பு மிகுந்தவர் பக்திமான், ஞானி, புதுமை புரிபவர், என்றே நாம் பார்த்து வந்திருக் கின்றோம்.ஆனால் இந்தப் பண்பு நலன்களை விட இன்னும் அதி சக்தி வாய்ந்த அபார மான குணாதிசயங்களை நாம் அவரிடம் காணத் தவறிவிட்டோம்.
அடுத்தவனுக்கு நீ எப்படித் தீர்ப்பிட லாம் ? என்ற அவரது அழுத்தமான கேள்வி . ஒடுக்கப்பட்டோர் உரிமைபெறவே நான் அவதாரம் எடுத்தேன் என்று ஓங்கி ஒலித்த அவரது குரல்.பரிசேயரின் வெளிவேடத் தைப் பகிரங்கமாகவே விமரிசனம் செய்த அவரது அஞ்சாமை. கோயில் வியாபாரி களை விரட்டியடித்த அவரது கோபாவே சம்..ஏழைப் பெண்ணின் அற்ப காணிக் கையை இதய பூர்வமாக ஏத்திப் போற்றிய

Page 3
அவரது பெருந்தன்மை. அனைத்து மக்களையும் ஈர்த்த அவரது ஆளுமைமிக்க தலைமைத்துவம். நீதிக்காகவும், சமாதானத் திற்காகவும் பாடுபடுவோர் நிச்சயம் பேறுபெற்றோர் என்னும் அவரது உலகப் பிரகடனம். இறுதிநேரம்’ நிர்ணயிக்கப்பட இருந்த வேளையில் பிலாத்துவிற்கும் மூப்பர்களுக்கும் அவர் நிதானமாகச் சொன்ன பதில் யேசுவின் வியக்கத் தக்க இன்னு மொரு பக்கமல்லவா? இந்தப் பக்கம் தான் இன்றைய மனித இனம் பார்க்கவும் படிக்கவும் வேண்டியது !
ஏழை, எளிய மக்கள் எல்லாவகையிலும் சுரண்டப் படுதல், நீதி, நியாயம் “பெரிய இடத்து மனிதர்களாலும் நிர்மூலமாக்கப்படுதல், அடிப்படை உரிமைகளையே ஒரு சமூகத்திற்கு ஆதிக்க வர்க்கம் அளிக்க மறுத்தல், அடிமைத் தனத்தையும், நவகாலனித்துவத்தையும், அதே வர்க்கம் மீண்டும் அறிமுகம் செய்தல்.
இந்த நூற்றாண்டில் யேசுகிறிஸ்துவின் இந்த மறுபக்கத்தைப் பார்க்கும் தேவையை அதிகப்படுத்தியுள்ளன.
யேசுகிறிஸ்துவின் இந்த மறுபக்கமே இன்றைய மக்களிடம் எடுத்துச் செல்லப்பட வேண்டும். அப்போதுதான் அவர் சரியாக எல்லாத் தரப்பினராலும் விளங்கிக் கொள்ளப்படுவார். ஆனால், இந்த யதார்த்தத்தை நம்மில் எத்தனைபேர் கருத்தில் கொள்ளப் போகிறார்கள்? இதுவே நமது ஆதங்கம் !
அன்புடன் வாகரைவாணன்
சில சொற்களும் அவற்றின் பொருளும் மரைக்காயர் -மரக்கலம் ஒட்டுபவர் லெப்பை(அரபிச் சொல்) ஆசிரியர் சாகிப் (அரபுச் சொல்) தோழன் துருக்கர்(துருக்கி நாட்டில் இருந்து வந்தவர்கள்)முஸ்லிம்கள்
Zص

சிறுவர் சிந்தனைப் பாட்ரு (பு)
சததுணவு
சத்துள்ள உணவே
சாப்பிருதல் வேண்டும்
நித்தம் இதை உந்தன்
சிநஞ்சில் நீ வைப்பாய்
காய், கறி, கீரை
கலந்துண்ண வேண்ரும்
ஆயிரமாய்ச் சத்து
அவற்றில் மிக உண்ரு
பால், முட்டை நல்ல
பயனுள்ள உணவாம்
நாள்தோறும் உண்ணல்
நண்மைமிக வளிக்கும் !
உணவின் பின் பழங்கள்
உட்கொள்ள வேண்ரும்
தினமும் இதைச் செய்தால்
தேகம் வலுப் பெறுமே !

Page 4
கொழுப்புள்ள உணவைக்
Φωοβαυ/τα, ο αστώ υιτώ
இழப்பு மிக அதிகம்
இவ்வுணவு வகையில் 1
ஊண் உணவு வகையில்
உயர்ந்த பயண் அளிக்கும் மீண் உணவு ஆகும்
மிக விரும்பி உண்போம் !
நீர் நிறைய அருந்தல்
நிச்சயமாய் நண்மை
வேர்வையதன் இழப்பை
விரைந்து நிறைவாக்கும் !
உண்ணும் நம் உணவே
உருவாக்கும் நம்மை
6vað aðrtib, óloFuM6 warequid இதனாலே ஆகும் !
உணவு வகை இரண்டு
அதில் ஒண்று சைவம்
தினமும் இதை உண்போர்
சிறந்த பயண் அடைவார் !
 
 

நெல்சன் மண்டேலா)
நாடு, இனம், நிறம், மொழி என்று எத்தனை வேற்றுமைகளையும் மீறி எல்லோராலும் நேசிக்கப்படுகின்ற தலைவர்கள் வெகு சிலரில் நெல்சன் மண்டேலா குறிப்பிடத்தக்கவர்.
இருபத்தேழு ஆண்டுகள் சிறையிருந்த நெல்சன் மண்டேலா, 1990ம் ஆண்டு விடுதலை ஆனபோது, தங்களுக்கு நெருக்கமான ஒருவர் விடுதலையான மாதிரி உலகத்தில் உள்ள ஒவ்வொருவரும் உணர்ச்சிவசப்பட்டார்கள். இவரின் தியாகத்திற்கு உலகமே எழுந்து நின்று சல்யூட் அடித்தது.
1918ம் ஆண்டு நெல்சன் மண்டேலா பிறந்த போது தென் ஆபிரிக்காவில் நிறவெறி உச்சத்திலிருந்தது. மண்ணின் மைந்தர்களான கறுப்பு இனத்தவர்கள்தான் தென் அமெரிக்காவில் பெருமளவில் இருந்தார்கள் என்றாலும் 17ம் நூற்றாண்டுக்குப் பிறகு இங்கே வந்து குடியேறிய டச்சு , பிரஞ்சு மற்றும் ஆங்கிலேய இன மக்களின் வம்சாவளியான வெள்ளையர்கள் நாட்டில் கணிசமான அளவு பெருகியிருந்தனர். அப்போது அதிகாரத்தில் இருந்து செயற்பட்டது வெள்ளையர்கள் என்பதால் அவர்கள் கறுப்பர் இனத்தவர்களை நாய்களை விடக் கேவலமாக நடத்தினர்.
வெள்ளையர்களுக்கான மருத்துவமனை, பள்ளிக்கூடம், நூலகம், போன்ற எந்த இடமாக இருந்தாலும் சரி, கறுப்பு இனத்தவர்க்கு அங்கே அனுமதி இல்லை. கறுப்பர்கள் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட மருத்துவமனைக் குத் தான் செல்ல வேண்டும். தங்களுக்கான பள்ளிக்கூடத்துக் குத் தான் பிள்ளுைகளை அனுப்ப வேண்டும்

Page 5
வெள்ளையர்கள் வாழும் பகுதிகளில் நடக்கக்கூட கறுப்பர்களுக்கு அனுமதியில்லை. நாட்டின் ஜனத்தொகையில் 80 சதவீதம் இருந்த கறப்பர்களுக்கு வெள்ளையர் ஒதுக்கிய நிலப்பகுதி வெறும் 13 வீதம்தான். இந்தக் கொடுமைகளை எதிர்த்துப் போராட முடியாதபடி கறுப்பர்களை மொழிகளின் பெயரால் பிரித்து வைத்திருந்தனர்.
இத்தனையும் மீறி அப்போது ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் மகாத்மா காந்தி காட்டிச் சென்ற அகிம்சை வழியில் வெள்ளையர்களை எதிர்த்துப் போராடி வந்தது. இதுபோன்ற சூழ்நிலையில்தான் கல்லூரி மாணவனாக இருந்த நெல்சன் மண்டேலா ஆபிரிக்க தேசிய காங்கிரசின் இளைஞர் பிரிவைத் தொடக்கினார். மண்டேலாவின் வருகைக்குப்பிறகு வெள்ளையரின் நிறவெறிக்கு எதிராக சத்தியாக்கிரகப் போராட்டங்கள் தீவிரமடைந்தன. 1960ம் ஆண்டு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்த கறுப்பர் மீது பொலிஸ் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட, கறுப்பு இனத்தவர் 69பேர் கொல்லப்பட்டனர். சுமார் 20,000ம்பேர் கைது செய்யப்பட்டனர். இக்கொடுமையைச் சகிக்கமுடியாமல் நாடெங்கும் கறுப்பு இனத்தவர் பொங்கி எழ அரசாங்கம் பூட்ஸ் காலால் அமுக்கியது. ஆபிரிக்க தேசிய காங்கிரஸஉம் தடைசெய்யப்பட்டது. அதுநாள்வரை அகிம்சைவழியில் போராடிய மண்டேலாவுக்கும் அவரது சகாக்களுக்கும் வேறு வழியில்லாமல் போகவே ஆயுதப் போராட்டத்துக்குத் தங்களைத் தயார் செய்ய நாட்டைவிட்டு ரகசியமாக வெளியேறினர்.
1962ம் ஆண்டு மண்டேலா ஆயுதப் பயிற்சியை முடித்து தென் ஆபிரிக்கா திரும்பியதும் கைது செய்யப்பட்டார். தகுந்த ஆவணம் இல்லாமல் நாட்டைவிட்டு வெளியேறினார் என்பதில் தொடங்கி, அரசுக்கெதிராகக் கலகம் செய்த வரை மண்டேலாமீது அடுக்கடுக்காக குற்றம் சுமத்த அவருக்கு ஆயுள் தண்டனை கொடுத்து தீவுச் சிறையில் அடைத்தது.
இனிப் போராட்டம் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்து கொடு. உடனே உன்னை விடுதலை செய்கின்றேன் என்று நாட்டின் ஜனாதிபதியே இவருக்கு ஆசை காட்டினார். ஆனால், மண்டேலாவின் மன உறுதிமுன் அடக்குமுறையும் ஆசை வார்த்தையும் தோற்றுப் போயின.
 

இதைப் பார்த்து நெகிழ்ந்து போன கறுப்பின மக்கள் மெள்ள ஒன்றுபடத் தொடங்கினர். நாடெங்கும் போராட்டங்கள் வெடித்தன. சர்வதேச நாடுகள் அனைத்தும் மண்டேலாவை விடுதலை செய்யச் சொல்லி தென் ஆபிரிக்க அரசை நிர்ப்பந்தித்தன. அது அந்தக் கோரிக்கைக்கு மறுப்புச் சொல்ல , தென் ஆபிரிக்கா மீது உலக நாடுகள் கடுமையான பொருளாதாரத் தடையை விதித்தன.
கடைசியில் வேறு வழியின்றி 1990ம் ஆண்டு தென் ஆபிரிக்க ஜனாதிபதியான எ.ட்ப் டபிள்யூ. டி. கிளார்க், மண்டேலாவை விடுதலை செய்தார்.
அதை அடுத்து அமுலில் இருந்த நிறவெறிச் சட்டங்கள் அனைத்தும் திரும்பப் பெறப்பட்டன. கறுப்பின மக்களுக்கு வோட்டுரிமை வழங்கப்பட்டது. 1994ம் ஆண்டு நடந்த தேர்தலில் மண்டேலா தென் ஆபிரிக்காவின் ஜனாதிபதியானார். இவரது ஆட்சியில் தென் ஆபிரிக்கா பல துறைகளிலும் முன்னேறியது.
வயது காரணமாக ஓய்வை விரும்பிய மண்டேலா இப்போது பொது வாழ்விலிருந்து விலகிக் கொண்டார். 27 ஆண்டுகள் தான் சிறையிருந்த தீவுச் சிறைமீது என்ன பற்றுதலோ தெரியவில்லை. இப்போது தான் வசிக்கும் வீட்டையும் தீவுச் சிறை மாடலிலே அமைத்திருக்கிறார் மண்டேலா.
(வாவ் 2000)
மாவீரன் நெப்போலியன் வடக்குப் பக்கம்தான் தலைவைத்துப் பருப்பானாம்.

Page 6
A/6) ன்னவாகும் 2
நாடெண்ணாவாகும் 2
நடப்பதெல்லாம் இங்கே 6alass 6saias 2
கிளைவிட்ட தருவை 6ass-fu stats 612 bub
கொருமைதான் நிகழும் ! வேடர்களின் வலையில்
வீழ்ந்ததுவோ புநாவும் !
அதிகாரம், பதவி
அதற்காகச் சண்டை சதி செய்தல், சூழ்ச்சி
osaiuaji siltb ! விதியெல்லாம் மீறி
வினை ஒன்றே சிசய்யும் பதி எண்ண பதியோ ?
பரிதவிப்பார் மக்கள் !
 

இந்நாட்டின் உயர்வு
எதிர்காலம் பந்நிச் சிந்திப்பார் உண்டோ?
சீரழிவே நோக்கம் ! விந்தைமிகு மனிதர்
வெங் கொடிய மிருகம் அந்த வீதம் போல
69Grassóriása ustruủSA jardi !
தேசமதைக் காக்கத்
சிதய்வமது வருமோ ? நாசமது சிதாடரும்
நரகம்போல் ஆகும் நீசரவர் மனிதர்
நிம்மதியைக் கெருத்தார் on-orbug 6louaissa
கொஞ்சமல்ல கோழ !
போதனைகள் நித்தம்
புரிந்தெண்ன லாபம் 2 சாதனைகள் லண்ன ?
சரித்திரம்தாண் சிசால்ஆம் ! வேதனைகள் நெஞ்சில் ώαυαυ/ταδύ υιταγώ ஆதரவே இல்லா
அநாதைகளா மக்கள் ?

Page 7
விதானையார்
పట్టభ్ని * ఓడ چھیجنیلی” ہمیگھینیچے *سیب శ్య* بیجریه خ۶ مجھنجھوڑن
முப்பது ஆண்டுகள் தனது கிராமத்தின் அதிகாரியாக கோலோச்சிய சூசைமுத்து விதானையார் அப்பதவியில் இருந்து ஐம்பத்தைந்து வயதில் ஒய்வு பெற்றபோது அவரது முகத்தில் எவ்வித சலனமும் இல்லாதது பலருக்கும் பெரும் ஆச்சரியத்தைத் தருகின்றது.
இடமாற்றம் என்ற பேச்சுக்கே இடமின்றி, ஒரு குறுநில மன்னன்போல் தன்னந்தனியாக தனது கிராமத்தைப் பரிபாலித்த விதானையார் அந்த அரச அதிகாரங்களை எல்லாம் விட்டு விலகுவதென்றால் சாதாரணமானதா? ஆசைமுத்து விதானையாரைப் பொறுத்தவரையில் அது சாதாரணமானதுதான். ஏனென்றால் அவரது சுபாவம் அப்படி,
ஆரியன் அஸ்தமிக்காத சாம்ராச்சியத்தின் ஏகாதிபத்திய ஆட்சிக்காலத்தில் தன் தந்தையின் பின் அரச உத்தியோகத்தில் அமர்ந்து “அப்பே ஆண்டுவ முழக்கத்தின் மத்தியில் அதில் இருந்து விதானையார் இறங்கியபோது ‘இனி இந்த நாட்டை சனியன்தான் ஆளப்போகுது. அதற்கு முன்னால நாம றிற்றையர் ஆனது எவ்வளவோ நல்லது. என்ற எண்ணமே அவர் உள்ளம் முழுவதும் நிறைந்து நிற்கின்றது.
வழக்கம்போல குட்டானை அவிழ்த்து பாக்கு வெட்டி வாய் சிவக்க வெற்றிலை போட்டுக் கொண்ட விதானையார் தனக்குப் பின் தற்காலிக அதிகாரியாகப் பொறுப்பு ஏற்க வந்திருந்த தனது பட்டங்கட்டிமாரில் ஒருவரான பொன்னையாவிடம் முக்கிய பைல்களையும் சில பொருட்களையும் ஒப்படைத்தபோது அவரது வாழ்க்கைத் துணைவி செல்லம்மாளின் கண்கள் கலங்குகிறன.
 

இந்த உத்தியோகமும்,உடையாரின் மகன் என்ற பேரும்தான் நமக்கு ஊரில் நல்ல மதிப்பையும், மரியாதையையும் தேடித்தந்தது. உடையாரும் கண்ணைமூடி ஒரு வருமாகித்து. இப்ப உத்தியோகமும் போயித்து. இனியார் மதிக்கப் போறாங்க. ? என்று தனக்குள் முணுமுணுத்த செல்லம்மா சேலைத் தலைப்பால் கண்களைத் துடைத்து மூக்குச் சீறியபடி அடுப்படிக்குள் நுழைவதைக் கண்ட விதானையாரின் நெஞ்சம் நெகிழத்தான் செய்கிறது. ஆனாலும் சுயமரியாதைக் காரரான சூசைமுத்து விதானையார் தனது மன உணர்வை வெளிக்காட்டிக் கொள்ளாமல் வீட்டிற்கு வந்தவர்களோடு அதே மிடுக்கோடு கதைத்துக் கொண்டிருக்கின்றார்.
விதானையார் பென்சன் ஆகின்றார் என்று கேள்விப்பட்டதும் அவரது ‘குடிமக்கள்’ எல்லோரும் நிலம் தெளிவதற்கு முன்பே அவரது வீட்டிற்கு வந்து முற்றத்தில் குந்திக் கொள்கின்றார்கள். முகங்களில் கவலை முழுமையாகக் குடியிருக்கின்றது.
சிறுகதை
வீட்டிற்கு வந்த தங்கள் குடிமக்களுக்கு செல்லம்மா தன்கையாலே சுடச்சுட தேத்தண்ணி பரிமாறுகின்றாள். வேலைக்காரி மாரிமுத்து வெற்றிலை வட்டாவைக் கொண்டுவந்து வைக்கின்றாள்.
தேத்தண்ணி குடித்துவிட்டுத் தாம்பூலம் தரித்துக் கொண்ட குடிமக்கள் தனது கணவனிடம் ஏதோ சொல்லிக் கொண்டு புறப்பட ஆயத்தமாவதைக் கவனித்த செல்லம்மா, இப்ப என்ன அவசரம் ? இருந்து சாப்பிட்டுத்துப் போங்க என்கிறார். குரல் தழுதழுக்கின்றது.
செல்லம்மாளின் இந்த அன்புச் சொற்கள் வழக்கமான அவளின் விருந்தோம்பும் பண்பைக் காட்டி நின்றாலும் அவற்றில் அன்று ஊடுருவியிருந்த ஒருவித சோகம் இந்த அப்பாவி குடிமக்களை நிலைகுலையச் செய்கிறது.

Page 8
விதானையாருக்குச் சூழ்நிலை நன்கு விளங்குகின்றது. ஆனாலும் அங்கு நிலவும் மெளனத்தை அவர் அறவே விரும்பாததால் தனது குடிமக்களோடு, தனக்கே உரிய பாணியில் கதையை ஆரம்பிக்கின்றார். தோட்டம், மாடு, கன்று மட்டுமன்றி அவர்களின் குடும்பங்கள் பற்றிய மிகுந்த அக்கறையும் அவரின் பேச்சில் தெரிகிறது.
விதானையாரின் அக் கறையினால் உச்சியிலிருந்து உள்ளங்கால்வரை குளிர்ந்துபோன வயிரமுத்து, கறுவல், குமாரமுத்து, வேலன், சின்னவன், நல்லான் என்றந்த அன்புக் குடிமக்கள் தாழ்ந்த குரலில் தங்கள் முதலாளியோடு இரண்டொரு வார்த்தைகள் கதைத்துவிட்டு மற்றதுக்கெல்லாம் வழக்கம்போலத் தலையாட்டுகிறார்
g56T.
சற்று நேரத்தில் பாற்சோழன் மாப்புட்டும், எருமைத் தயிரும் அவர்கள் வயிற்றையும், மனத்தையும் ஒரே நேரத்தில் குளிர்விக்கின்றன. இந்தக் குளிர்ச்சி போதாதென்று எண்ணியோ என்னவோ செல்லம்மா இரண்டாம் எலிசபெத் மகாராணியின் முகம் பதித்த இரண்டு மூன்று பத்துரூபா நோட்டுக்களை எடுத்து வந்து ஒவ்வொருவர் கைக்குள்ளும் வைக்கின்றாள். அதனைப் பெற்றுக் கொண்ட அந்த வாய் பேசாப் பூச்சிகள் ஏதோ சொல்ல வாய் எடுக்கின்றார்கள். தொண்டைக்குள் மீன் முள்ளைப் போல் சொற்கள் சிக்கிக் கொள்கின்றன.
சூசைமுத்து விதானையார் அவரது தந்தையார் போல கம்பீரமான தோற்றம் உடையவர் அல்ல. உயரமும் சராசரி அளவும்தான். ஆனால் அகன்ற நெற்றியும் தீட்சண்யமான கண்களும், எடுப்பான மூக்கும் அவரது விசேட அடையாளங்கள். இவற்றைவிட அவர் எப்போதும் அணியும் நான்குமுழ வேட்டியும், தோளில் புரளும் துண்டும் விதானையாரை ஒரு வித்தியாசமானவராகவே பிரகடனஞ் செய்யும்.
விதானையார் உண்மையிலேயே வித்தியாசமான மனிதர்தான். ஏனென்றால் அவர் ஒரு திரித்துவம். அதில் ஒருவர் கிராம அதிகாரி.
 

மற்றவர் ஆயுள்வேத வைத்தியர். இன்னுமொருவர் ஒரு நல்ல கவிஞன். இந்த மூன்று பேரையும் ஒருவராகவே காணும் மக்களுக்கு அவர் வித்தியாசமான மனிதராகத் தோற்றம் தந்ததில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?
விதானையாரின் இலட்சணமே எளிமைதான். ஆனால் அவரது பாரம்பரியப் பெருமை, குடும்ப கெளரவம் என்றால் உயிர் போனாலும் விட்டுக் கொடுக்க மாட்டார். இந்த விடயத்தில் எப்போதும் அவர் ஒரு கவரிமான்தான். சந்தேகம் இல்லை.
விதானையார் எல்லோரிடமும் நன்றாகப் பழகுவார். அதிலும் உறவினரைவிட அயலவரோடுதான் அவருக்கு நெருக்கம் அதிகம். வாழைச்சேனை, ஒட்டமாவடி, காத்தான்குடி, மூதூர், ஆகிய இடங்களில் இருந்து சைக் கிளில் புடைவைக் கட்டுகளோடும், பானை சட்டிகளோடும்தமது ஊருக்கு வந்து சோழம், இறால் கருவாடு, முருங்கைக்காய், முதலானவற்றை பண்டமாற்றமாகப் பெற்றுக் கொண்டு செல்லும் முஸ்லிம் வியாபாரிகளை விதானையார் வீட்டின் பின்புற விறாந்தை அல்லது “புரை” தான் வரவேற்று தங்க இடம் கொடுக்கும்.
வியாபார நோக்கில் ஊருக்கு வரும் முஸ்லிம் வியாபாரிகளை வெறுமனே வியாபாரிகளாகக் கருதாமல் சகோதரர்களாக நினைத்து அவர்களோடு உரையாடி மகிழும் விதானையார் இனம், மதம், என்னும் எல்லைகளைக் கடந்தவர். பழைய தலைமுறையைச் சேர்ந்த ஒருவரிடம் காணப்படும் இந்தப் புதிய போக்கு உண்மையிலேயே அந்த முஸ்லிம் சகோதரர்களைப் பரவசப்படுத்தும்.
இப்படி ஒருநாள் விதானையார் அந்த முஸ்லிம் வியாபாரிகளில் ஒருவரான மம்முறாயன் காக்காவோடு உரையாடிக் கொண்டிருக்கையில் அவர்கள் பேச்சு நாட்டுப் பாடல் பக்கம் திசைமாறுகிறது. விதானையாருக்கு நாட்டுப் பாடல், நாட்டுக் கூத்து என்றால் சோறு தேவையில்லை. இந்த ரசனை உணர்வால் உந்தப் பட்ட விதானையார் மம்முறாயன் காக்காவிடம் ஒரு கவிபாடும்படி கேட்கின்றார்.

Page 9
மட்டக்களப்பில் கவிகளை நினைத்தவுடன் மேகம்போல பொழியும் ஆற்றல் பெற்ற முஸ்லிம்களில் ஒருவரான மம்முறாயன் காக்கா, விதானையாரின் கோரிக்கையைத் தட்டமுடியாமல் தனது மொட்டைத் தலையைத் தடவியோசித்தபடி ஓர் அருமையான சிருங்காரச்சுவைப் பாட்டைப் பாடுகின்றார். விதானையார் அதில் சொக்கிப் போகின்றார்.
55
புரை” இலக்கியக் களமாகின்றறு.
வாகரை வாணன்,
பிறவிக் கவிஞரான விதானையாருக்குத்தான் ஊரில் கூத்து அரங்கேற்றம் என்றதும் முதல் அழைப்பு வரும். மிகுந்த சந்தோசத்தோடு களரியில், தேசிய உடையோடு தோற்றம் தரும் விதானையாரின் கையில் வெள்ளிப் பூண்போட்ட கருங்காலித்தடி இருக்கும். அதுதான் அவரின் செங்கோல். அந்தக் கோலின் ஆட்சிதான் கூத்துக் களரியில் அன்றிரவு முழுவதும் நடைபெறும்.களரிக்குள்ளே ஓரமாக விரிக்கப்பட்டிருக்கும் பன்பாயில் அமர்ந்து கொள்ளும் விதானையார் கட்டியக்காரன் வரவில் இருந்து, கடைசியில் “ ஆலிலை மேலிலை அமர்ந்தாய் இருந்தாய்” என்ற பாட்டுப்பாடி களரியைத் தொட்டுக் கும்பிட்டு, அண்ணாவியாரும், நடிகர்களும் விடைபெறும்வரை அந்த இடத்திலிருந்து அசையமாட்டார். அடிக்கடி வெற்றிலைபோட்டுக் கொண்டு நடிகர்களின் ஆடல்பாடல் பற்றி பக்கத்தில் இருக்கும் நண்பர்களுடன் இரசனை விமரிசனம் செய்வார். இந்த இரசனை உணர்வும், இயல்பாகவே விதானையாரிடம் இருந்த கவித்துவமுமே அவரை இரண்டு மூன்று நாட்டுக் கூத்துகளின் ஆசிரியராக்கின. அவற்றில் ஒன்று அரங்கம் கண்டபோது விதானையார் ஒரு குழந்தையைப் போல குதூகலம் அடைந்தார்.
மகாபாரதப் பாத்திரங்கள் விதானையாரைப் பொறுத்தவரையில் என்றோ அத்தினாபுரத்திலும் இந்திரப் பிரஸ்தத்திலும் உயிரோடு உலவியவர்கள். துவாரகைக் கிருஸ்ணனின் கார் வண்ணத்தில் அவ ருக்கு ஒரு ஈடுபாடு. கண்ணனின் சங்கும், சக்கரமும் விதானையாரின் கண்ணுக்குள்ளேயே இருக்கும்.
விதானையார் ஒரு நல்ல ஆயுள்வேத வைத்தியர் என்பதை
 

ஒரு குழந்தைகூட நன்கறியும். அவர் வீட்டின் புறாக்கூட்டு மேசையின் உள்ளே இருக்கும் வாகடக் கட்டுகள்தான் அவரது வைத்திய நூல்கள்.
நோயாளியின் நாடியைப் பிடித்துப் பார்த்து இதுதான் நோய் என்று அறிந்ததும் அந்த நோயை உணர்த்தும் பாடலை வாகடத்தில் உள்ளபடியே மனப்பாடமாகச் சொல்லி, வியாதியை மட்டுமன்றி, அதன் குணம் குறிகளையும் எடுத்துக் கூறும் விதானையாரின் ஆற்றல் உலகப் பிரசித்தம்.
விதானையாரின் ஆற்றலைப் பரீட்சிக்கும் ஒரு களமாக அவரின் சகோதரிமுறையான ஒருவரின் குழந்தை இருக்குமென்று அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார். ஆனாலும் எழுந்து நடக்க முடியாமல் படுத்த படுக்கையாகக் கிடந்த அந்தக் குழந்தைக்கு அவர் உயிர்ப் பிச்சை கொடுத்தபோது ஊர் முழுவதுமே ஆச்சரியத்தில் அவரை அண்ணாந்து பார்த்தது. இந்த அதிசயத்துக்குப் பிறகுதான் அவரை ஒரு மருந்து மரமாக ஊர் கொண்டாடத் தொடங்கியது. அந்த மரம் தங்கள் நடுவில் இருக்கும்வரை எந்த நோயும் தங்களை எதுவும் செய்யாது என்ற நம்பிக்கை ஊரவர் ஒவ்வொருவரின் மனத்திலும் பெரிதாக ஊற்றெடுக்கின்றது.
விதானையார் தமது உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்று ஒரு மாதமாகின்றது. ஆனாலும் அவரது தோற்றப் பொலிவில் காலம் தனது கைவரிசையைக் காட்டமுடியவில்லை. அதே மிடுக்கு. அதே அதிகாரத் தோரணை ஆளுமை எல்லாம் அப்படியே இருக்கின்றன. உத்தியோகம் இல்லையென்றாலும் விதானையார் விதானையார்தான் என்பதை அவரது சொல்லும் செயலும் ஊருக்குச் சொல்லிக் கொண்டிருக்கின்றன.

Page 10
அலைபாடும் அழகிய கிராமம் چقعقینگ کی مچی پیچیق جج۔ مختحسیسی جھی۔ வேப்பமரம், வெயிலில்
விரித்த குடையாகும் காப்பு அது நோய்கள்
கண்டவுடன் விலகும் தோப்பு என வளரும்
தூய்மை அது கண்டு கூப்பும் Nகை ! அம்மன்
கோயிலெனத் திகழும் !
மண் தன்னை வாகை
மரம் அழகு செய்யும்
விண் பொழியும் காலம்
۹۰۰ விரும்பியதன் மேலே
பொன் வண்டு கூடும்
பூங்கொத்து , காய்கள்
கண்னெல்லாம் நிறையும்
கார்காலக் காட்சி !
இந்த மரப் பெயரை
எங்கள் ஊர் அன்று
சொந்தமெனக் கொள்ளும்
சொல்லின் பொருள் உணர்த்தும்
விந்தையதில் இல்லை
விருட்சங்களைக் கொண்டும்
அந்த நாள் ஊர்கள்
அமையும் இது அறிவீர் !
 
 

இடுகுறிப் பெயராய்
எம் தமிழ் இலக்கணம் எடுத்துரை செய்யும்
இப்பெயர்ச் சொல்லை ! தொடும் நம் நெஞ்சை
தொல் தமிழ் அறிஞர் கொடுத்த நல் விளக்கம்
கொடுமுடி போலாம் !
‘வில்” என்று சொல்லும்
விரிந்த பெரும் குளத்தில் நில் என்று யாரோ
நிறுத்தியது போல சொல்லரும் கமலம்
சுடர் விளக்காகும் நல்லிருள் நேரம்
நண்பகல் போலாம் !
விளக்கதன் ஒளியில்
விழிபோலத் தோன்றும்
அழகான குவளை
அணி செய்யும் ஆம்பல் குளமதன் கரையில்
குடை போலும் கோடை இளங்காலைப் போதில்
இயற்கை அரசாங்கம் !

Page 11
பொய்கை தனில் மேதி
போய்க்குளிக்கும் ! ஆங்கே பைய அதன் மேலே
பனையான்கள் பாயும் செய்ய மலர் கமலம்
செய்கை இது கண்டு அய்யய்யோ என்று
அச்சம்மிகக் கொள்ளும் !
மருந்து மரம், செடிகள்
மற்றும் பல மூலிகை செறிந்து வளர் பூமி -
சித்தாயுள் வைத்தியம் அறிந்தவருக் கெல்லாம்
அரியதோர் கிராமம் வருந்து நோய் யாவும்
வந்த வழி போகும் !
முள்முருக்கை; நொச்சி
முடக் கொத்தான், ஆமணக்கு
வெள்ளெருக்கு, ஊமத்தை
வெண், கரிய துளசி
நல்ல சிறு குறிஞ்சா
நலம் தரும் தூதுவளை
வல்ல நோய் தீர்க்கும்
வளரும் ஒரு கிராமம் !
இரண்டடி நீளம்
இலை, குழைகளோடு முருங்கைக்காய் தூங்கும்
முற்றமெலாம் நின்று ஒரு பெரும் மரமாய்
ஓங்கியது வளரும் இரும்பதன் சத்து
இதில் மிக வுண்டு !
(இன்னும் பாடும்.)
 

திக்கற்றவர்கள், எத்திசை போவது எனத் தெரியாத ஏதிலிகள், தாயகத்திலேயே அகதிகள் ஆனவர்கள், முன்பின் தெரியாத, உறவினர்கள் இல்லாத ஒரு திசைக்குப்போய் வாழ முயற்சிப்பதையே புலம் பெயர்வு எனச் சொல்வர். அவ்வகையில் இலங்கையில் இருந்து தமிழர்கள் கடல் தாண்டி, கண்டம் தாண்டி, பல்வேறு நாடுகளில் காலூன்றத் தொடங்கினார்கள். அவர்கள் இவ்வாறுதாயகம் விட்டு வேறு தேசங்களுக்கு வாழ்வு தேடிப் போனதற்கு இலங்கையில் தோன்றிய ஆயுதப் போராட்டமே காரணமாகும். இந்த முடிவை ஈழத்துத் தமிழ் மக்கள் 1983ஆம் ஆண்டில் நடந்த தமிழர்களுக்கெதிரான திட்டமிட்ட இனப்படுகொலைகள் அடங்கிய மிக மோசமான இனக்கலவரங் களுக்குப் பிறகே எடுக்கிறார்கள். 1983ம் ஆண்டிலிருந்து 1993ம் ஆண்டுவரையான பத்து ஆண்டுகளில் ஐரோப்பாவின் எல்லா நாடுகளிலும் கனடா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, போன்ற நாடுகளிலும் லட்சக் கணக்கான தமிழர்கள் அதிகமாகப் புலம் பெயர்ந்திருக்கின்றார்கள்.
1983ம் ஆண்டிலிருந்து 1993ம் ஆண்டுவரையான பத்து ஆண்டுகளில் ஐரோப்பாவின் எல்லா நாடுகளிலும் கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, போன்ற நாடுகளிலும் லட்சக் கணக்கான தமிழர்கள் அதிகமாகப் புலம்பெயர்ந்திருக்கின்றார்கள்.
1983க்குப் பிறகு இன்றைக்குவரை இருபத்தொரு ஆண்டுகால வரலாற்றில் புலம் பெயர்ந்த தமிழ்ச் சாதியினர் தமது அடையாளங்களைக் காக்க பலவேறு துன்பங்களை, சுயத்துக் கெதிரான கருத்தியல்களை, தொடக்கத்தில் அனுபவித்தனர். பிறகு அவற்றையெல்லாம் ஒரம் கட்டியது போல் புகுந்த நாட்டில் வீட்டிற்குள் தமிழர்களாகவும், வெளியில் வெள்ளைக் காரர்களாகவும் வாழ்ந்தனர்.
புலம் பெயர்ந்த தமிழர்களைப் பார்க்கின்றபோது தமிழும் ஆங்கிலமும் அல்லது வேறு மொழியும் இரட்டைமொழியாகவும், தமிழ்ப்பண்பாடும் புகுந்த பண்பாடும் இரட்டைப் பண்பாடாகவும் அமைகின்றன. இது தவிர்க்க முடியாததாகும்.

Page 12
இலங்கையில் ஒரு தமிழர் சிங்களம் கற்பதற்கும் ஆங்கிலம் கற்பதற்கும் புலம் பெயர்ந்த நாடுகளில் அந்நாட்டு மொழிகளைக் கற்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. இலங்கையில் தமிழ் மொழி, பண்பாடு ஆகியவற்றின் அடித்தளம் இல்லாத ஒரு வேற்றுமொழி பண்பாடு கொண்ட ஒரு நாட்டில் இருந்து கொண்டு தாய் மொழியான தமிழைக் கற்பதற்கும் மிகப் பெரிய இடைவெளிகள் இருக்கின்றன.எனவே இரட்டைமொழிப் பண்பாடு அல்லது இரு வேறு அடையாளங்களை புலம் பெயர்ந்த தமிழர்கள் ஏற்க வேண்டும்.
அவ்வாறு செய்தபோது ஒற்றை அடையாளத்துடன் அந்த நாடுகளில் எதிர்கொள்ள வேண்டிய சந்தர்ப்பங்களை சூழ்நிலைகளை அவர்கள் இழக்கவேண்டிவரும். எனவே எதிர்காலத்தையும் நிகழ் காலத்தையும் கருத்தில் கொண்டு இரட்டை அடையாளங்களைச் சமநிலையாகப் பேணவேண்டியிருக் கின்றது. அதே நேரத்தில் இந்த இரட்டை அடையாளங்களில் ஒன்றான தாய்மொழித் தமிழ் கற்பதில்தான் மிகப் பெரிய சவால்களைப் புலம் பெயர்ந்த இளைய தமிழ் சமுதாயம் எதிர் நோக்குகின்றது.
புலம் பெயர்ந்த தமிழர்கள் புகுந்த நாட்டிற்காக ஆங்கிலம், பிரஞ்சு, J ஜேர்மனி, டேனிஸ், நோர்வேஜியன், எனப் பல மொழிகளைக் கற்றாலும் இவர்களை நாட்டிற்கு அப்பால் அடையாளத்தோடு இணைக்கிற மொழிதான் தாய்மொழியான தமிழ்.
மாத்தளை சோமு *சக்தி தீபாவளி மலர்
2004
ஆங்கில மொழி இலங்கையில் இருந்து புலம் தேடிப் போன மக்களுக்குப் பரிச்சமான மொழி என்பதாலும், ஆங்கிலேயரின் ஆட்சிவிட்டுப்போன முடிச்சுகள், அங்கு இருந்தமையாலும், ஆங்கில மொழி பேசும் நாடுகளின் வாழ்க்கைமுறைகளில் முற்றுமுழுதான அன்னியத் தன்மையை அவர்கள் எதிர்நோக்கவில்லை.
ஆனால் ஆங்கில் மொழி அல்லாத வேற்றுமொழி நாடுகளுக்கு போனவர்கள். மொழி. பண்பாடு என்பவற்றில் ஓர் அன்னியத் தன்மையை அவர்கள் எதிர் நோக்க வேண்டி வந்தது. எனவே 1983ல் இருந்து 2004 வரை உலகின் பல்வேறு நாடுகளுக்குப் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களின் தொகையை இரு பிரிவுகளாகப் பார்க்கலாம்.
 
 

ஆங்கில மொழி பேசும் நாடுகளில் அமெரிக்காவில் 50,000 பேர், ஆஸ்திரேலியாவில் 60,000பேர் கனடாவில் 2,50000 பேர் நியூசிலாந்தில் 30,000பேர் பிரிட்டனில் 1,00,000 பேர்.
ஆங்கிலம் அல்லாத நாடுகளில் ஜேர்மன் - டச்சு 75,000பேர், பிரான்ஸ்பிரஞ்சு 80,0000பேர், சுவிஸ்லாந்து - பிரஞ்சு டச்சு 40,000பேர், டென்மார்க் - டேனிஸ் 35,000பேர், நோர்வே - நொஸ்கி 40,000பேர், சுவீடன். சுவீடிஸ் 5000 பேர், நெதர்லாந்து - நெதர்லாந்திக் 4000பேர், இத்தாலி - இத்தாலியன் 5000பேர், பெல்ஜியம் - டச்சு, பிரஞ்சு 5000பேர், கிரீஸ் - கிரீக் 1000 பேர், அயர்லாந்து - ஐரிஸ் 1000பேர், பின்லாந்து - பின்னிஸ் 1000 பேர், போர்த்துக்கல்போர்ச்சுக்கேஸி 500 பேர், ஸ்பெயின் - ஸ்பானிஸ் 500 பேர், ஆஸ்திரேலியாஜேர்மன் 500 பேர்.
இந்த விவரங்களின் படி பார்த்தால் 20ற்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 7 லட்சம் இலங்கைத் தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழ் கின்றார்கள்.அவர்களையே புலம் பெயர்ந்த தமிழர்கள் (DIASPORA) என்று அழைக்கிறார்கள்.
குடி பெயர்வுக்கும், புலம் பெயர்வுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. குடி பெயர்வு என்பது வாழும் நாட்டைவிட அதிகமான வருமானம் உயர்ந்த வாழ்க்கை என்பன எதிர்பார்த்து மேற்கொள்ப்பட்டது. ஆனால் சொந்த நாட்டிலேயே வாழமுடியாத அச்சுறுத்தலால் ஏதிலியர்கள் கால் ஊன்ற திசை தேடிப் போனவர்களையே புலம் பெயர்ந்த தமிழர்கள் என அழைக்கின்றனர்.
ஓர் இனத்தின் அடையாளம் தாய்மொழியில் இருக்கின்றது. என்பதை புலம் பெயர்ந்த தமிழர்கள் அனுபவபூர்வமாக உணர்ந்தார்கள். பல்வேறு மொழிகள் பேசுகிற பல்வேறு நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து வாழுகிற புலம் பெயர் தமிழர்களுக்கு பல மொழிகள் தெரிந்தாலும் தாய் மொழி தமிழ்தான் அவர்களின் முதன்மை அடையாளமாகும். அவர்கள் பல மதத்தவராய் (இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம்) இருந்தபோதிலும் தமிழே அவர்களது பொது அடையாளமாக இருந்தது.
அதே நேரத்தில் அவர்களின் தாய் மொழி அடையாளத்திற்கு அரசுகள் ஆதரவு தெரிவித்தன. தமிழைக் கற்கவும், தமிழின் பெயரால் கூடவும், கதவுகள்

Page 13
திறக்கப்பட்டன. இது புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு ஊக்கமாக அமைந்தது. இதனால் அவர்கள் புலம் பெயர்ந்து 21 அண்டுகளே ஆனபோதும், மகாகவி பாரதி சொன்ன தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும். என்பது உயிர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழர்கள் தாய்மொழி கற்க ஆஸ்திரேலியாவிலும், பிரிட்டனில், கனடா மற்றும் பல நாடுகளில் அரசு பள்ளிகளை சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் அனுமதித்தும்- புலம் பெயர்ந்த நாட்டுச் சூழலுக்கேற்ப தமிழ் பாட நூல் எழுதவும் அதனை நூலாக்கவும் அரசு மான்யம் கொடுத்ததும் - கனடா ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் மானில அரசுகள் தமிழை உயர் கல்விக்கான தேர்வில் ஒரு பாடமாக அங்கீகரித்ததும் தமிழில் வானொலி, தொலைக் காட்சி என்பன தொடங்க அனுமதித்ததும் புலம் பெயர்ந்த தமிழரின் உச்சங்களாகும்.
சிற்றிதழ் துறையில் 1995 வரை மிகத் தரமான இலக்கிய இதழ்கள் புலம் பெயர்ந்த தமிழர்களால் வெளியிடப்பட்டன. இன்றைக்கும் மிகச் சில அதே தரத்தில் இலக்கிய இதழ்களாக வெளிவருகின்றன. புலம் பெயர்ந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள், அறிஞர்கள், ஆகியோரால் எழுதப்பட்ட தனித்துவத்தால் உலகத் தரத்தைத் தன்னகத்தே கொண்டதால் அவை புலம் பெயர் தமிழ் இலக்கியமாக உருவாகின.
நாடகத் துறையில் நவீன முயற்சிகளைப் புலம் பெயர்ந்த தமிழர்களால் முன்னெடுக்க முடிந்தது. கனடா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் தனித்துவமான பெரும்படம், குறும்படம் போன்ற முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. உலகின் முதலாவது 24 மணிநேர தமிழ் வானொலியைக் கனடாவில் தமிழர்கள் தொடங்கினார்கள். நோர்வே நாட்டில் தமிழ்க் கல்விக்காக ஒஸ்லோ நகரில் சொந்தக் கட்டிடமே வழங்கப்பட்டிருக்கிறது. சமய வழிபாட்டுக்காக ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளன. தமிழில் கிறிஸ்தவ ஆராதனை நடக்கின்றன. கனடாவில் இன்றையத் தமிழர் தொகை 2,50,000 ஆகும். இத்தொகை அங்கு ஒரு அரசியல் சக்தியாக எழுந்துள்ளது, அதனால் தமிழின் பேரால் பல்வகைப் பணிகள் அங்கு நடந்து வருகின்றன.
இந்தியாவின் பல்வேறு மானிலங்களில் இருந்து போனவர்கள் மேற்கத்திய நாடுகளில் இந்தியர்கள் என்ற அடையாளத்தின் கீழ் நில்லாது தாய்மொழி ரீதியாகத் திரண்டிருந்த காட்சி புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு அனுகூலமாக இருந்திருக்கலாம். 1983க்கு முன் இலங்கை சங்கம் - சிலோன் சங்கம் என அமைப்புக்கள் வைத்திருந்தவர்கள் 1983ற்குப் பிறகு ஈழத்
 

தமிழர்கள் எனத் தனித்துவமாய்த் திரண்டார்கள். இதற்கு அடிப்படை மொழியே என ஆகியது.
அதே நேரத்தில் ஆங்கில மொழி சார்ந்த நாடுகள், பிறமொழி சார்ந்த நாடுகள், எனப் புலம் பெயர்ந்து வெவ்வேறு மொழிகள் பேசுகிறவர்களாக வாழ்ந்த இந்தத் தமிழர்களை தாய்மொழி தமிழே இணைக்கிற மொழியாக, இணைப்பு மொழியாக, ஆக்கியது. ஆங்கிலம் இணைப்பு மொழி என்பது இவர்களைப் பொறுத்தவரையில் சரியானது அல்ல. அவ்வாறு இருந்தாலும் அதில் அந்நியத் தன்மையே மேலோங்கி நிற்கும்.
பிரிட்டனில் வாழ்கிற தமிழ்ச் சிறுவர்களுக்கு ஆங்கிலமே கல்வி மொழி. பிரான்ஸில் வாழுகின்ற தமிழ்ச் சிறுவர்களுக்குப் பிரஞ்சு மொழியே கல்வி மொழி. இதே போல் ஜேர்மன், சுவிஸ், டென்மார்க், நோர்வே, போன்ற நாடுகளில் கல்வி மொழியே வேறு. எனவே புலம் பெயர்ந்து ஆங்கில மொழி பேசும் நாடுகளிலும் ஆங்கில மொழி பேசா நாடுகளிலும் வாழ்கிற தமிழர்களுக்கு ஆங்கிலம் இணைப்பு மொழியாக முடியாது. ஆனால் இவர்களை உணர்வு பூர்வமாக, மரபு அடையாளத்தோடும் இணைக்கிற மொழியாகத் தமிழர்களின் பொதுமை அடையாளமாக தமிழே இருக்கிறது. அவ்வாறு தமிழை முன்னிறுத்துவதால் அவர்கள் தாங்கள் புலம் பெயர்ந்து வாழுகிற நாடுகளுக்குள்ளேயே கண்டியத் தமிழர், என்றும் பிரித்தானியத் தமிழர் என்றும் நோர்வேத் தமிழர் என் றும், ஜேர்மனியத் தமிழர் என்றும் அடையாளப்படுத்த முடிகிறது.
பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவுக்கு குடியேறிய கறுப்பு ஆபிரிக்கர்கள் இன்றும் நீக்கிரோக்கள் என்றும் கறுப்பு அமெரிக்கர்கள் என்றும் அடையாளப்படுத்தப் படுகிறார்கள். ஆனால் அவர்களுக்குத் தனித்துவ மொழி இல்லாததால் அவர்கள் பலவீனமடைந்த தேசிய இனமாக இருக்கிறார்கள். பீஜித் தீவுகள், தென் அமெரிக்கா, ரியூனியன், ஆகிய நாடுகளில் குடியேறிய தமிழர்கள் இந்தியர்கள் என்றும் இந்துக்கள் என்றும் மாயமான் வேட்டையில் நலிந்து போனார்கள். அதனால் தமிழ் மொழி தொலைத்த குடிகளாக நிற்கிறார்கள்.
அதே நேரத்தில் தமிழை முன்னிறுத்தியதால் மலேசியாவில் மலேசியாத் தமிழர் என்றும், சிங்கப்பூரில் சிங்கைத் தமிழர் என்றும், இலங்கைத் தோட்டப் பகுதிகளில் மலையகத் தமிழர் என்றும், தனி இனமாய் இருக் கின்றார்கள்.

Page 14
ஒரு சீக்கியனுக்கு புற அடையாளமாய் இருக்கின்ற தலைப்பாகை போன்ற புற அடையாளங்கள் தமிழர்களுக்கு இல்லாததால் தமிழே அவர்கள் அடையாளமாகிறது. தமிழ் மொழி தெரியாத தமிழரை எந்த இனத்தில் சேர்ப்பது ? மதங்களுக்குள் திணிக்கப்பட்டால் அவர்கள் காணாமல் போய்விடுவார்கள். அதே போன்று ஒரு நாட்டுக்குள் திணிக்கப்பட்டாலும் ஒரம் கட்டப்படுவார்கள். ஆகவே, தாய்மொழித் தமிழே உறுதியான அடையாளமாகும். இதனைப் புலம் பெயர்ந்த தமிழர்கள் நம்புகிறார்கள். ஆகவேதான், இன்று வட தென்துருவங்களிலும் தமிழ் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்றது.
மூன்றாவது உலகத் தமிழ் மகாநாடு மலேசியாவில் நடந்தபோது இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் மட்டுமே தமிழ் ஒலித்தது. ஆனால் இன்று புலம் பெயர்ந்த தமிழர்களால் 20 நாடுகளில் அரசியல் சக்தியாக உருவெடுத்து தமிழை உலக மொழியாக முன்மொழியப்பட்டுள்ளது.
புலம் பெயர்ந்த தமிழர்கள் பெரும்பான்மையோர் வறுமைக் கோட்டைத் தாண்டி பொருளியல் கோட்டுக்குள் இருக்கிறனர். அவாகளுக்கு இருக்கிற ஒரே ஒரு பிரச்சனை அடுத்த தலைமுறையினர்.தமிழைத் தாய் மொழியாக அடையாளப்படுத்துவார்களா என்பதுதான். ஆயினும் அதற்கான தீவிரமான முயற்சிகளில் முனைந்துள்ளார்கள்.
மூத்த தலைமுறையினர் புலம் பெயர்ந்த நாடுகளில் வளர்ந்த பிறந்த இளைய தலைமுறையினரை புகுந்த தேச கலாசாரக் காற்றுக்குள் சிக்காது தாய் மரபுவழிப் பண்பாட்டோடு உணர வைத்தால் அடுத்த நூற்றாண்டிலும் அவர்கள் எழுப்புகின்ற தமிழ் முழக்கம் புலம் பெயர்ந்த தமிழரின் தமிழ் முழக்கமாக ஒலிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்
-LJT15- 少
 

புயல், மழைப் பொங்கல்
மழைப் பொங்கல் பொங்கும்
மட்டக் களப்பெங்கும் 6l6oo6TT ólsoub 6T6ò6uomTb
விரிந்து அது பொங்கும் தழை, மரம், செடிகள்
தடவியது பொங்கும் களைப்பின்றி எங்கும்
கடல் போலப் பொங்கும்
பொங்கல் இது போலப்
பூமியிதில் இல்லை எங்கும் இது நடக்கும்
ஏழையவர் வீட்டில் தங்கியது இருக்கும்
தரையெல்லாம் நிறையும் கங்குகரை மீறிக்
கணப்போதுள் பொங்கும்
இன்னுமொரு பொங்கல்
இது போலப் பொங்கும் மண்ணுலகம் கலங்க
மரம் செடிகளெல்லாம் கண்முன்னே பிடுங்கி
கலகலத்துப் பொங்கும் விண்ணுலகம் தானும்
விறைத்துப் போய் நிற்கும்

Page 15
இப்பொங்கல் என்ன ?
என்று பலர் கேட்பார் அப் பொங்கல் பற்றி
அழகாகச் சொல்வேன் எப்பக்கம் இருந்தும்
இது பொங்கி வழியும் அப்போது யாவும்
அஞ்சி மிக நடுங்கும் !
சூறாவளி என்று
சொல்லுமிதை நாடு நீறாகிப் போகும்
நிமைப்போதுள் யாவும் கூறாக்கி வைக்கும்
குவியலாய் எங்கும் ஆறாத துன்பம்
அளிக்குமொரு பொங்கல் 1
பொங்கல் இது கிழக்கில்
புகழ் பூத்ததாகும் வங்கம் அது போல
வளி பொங்கி வழியும் பங்கம் இது செய்தும்
பல தடவை முன்பு மங்கவில்லை எங்கள்
மட்டு நன் நாடு !
 

அரபாத் - பலஸ்தீன மக்களின் படைக்கலம்
மேற்குஆற்றங்கரையின் ரமல்லா நகரில் உள்ள தனத தலைமையகத்தில் இருந்த இரு வாரங்களுக்கு முன்னர் அவசர சிகிச்சைக்காக பாரிசுக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது ‘ஆண்டவர் கிருபையால் நான் திரும்பி வருவேன்’ என்று கூறிச்சென்ற பாலஸ்தீன ஜனாதிபதி யாசிர் அரபாத் சடலமாகவே 13.11.2004 சனிக்கிழமை அன்று தனது மண்ணுக்குத் திரும்பிச் சென்றார்.
ܢܠ
தலைமையகத்தில் இருந்து வெளியேற முடியாமல் இஸ்ரேலியப் படைகளினால் சுமார் இரண்டரை வருடங்களாக முடக்கிவைக்கப்பட்டிருந்த 75 வயதான அரபாத் மீண்டும் தன்னை மேற்கு ஆற்றங்கரைக்கு வருவதற்கு இஸ்ரேல் அனுமதிக்கும் என்ற உறுதிமொழியைப் பெற்றுக் கொண்டதன் பின்னரே பாரிசுக்குக் கூட்டிச் செல்லப்படுவதற்கு இணங்கினார்.
தனத உயிரைவிட தாயக மண்ணை நேசித்தமாபெரும் போராளிக்கு அவர் பிறந்ததாகக் கூறப்படும் கெய்ரோவில் இராணுவ மரியாதைகளுடன் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. பாலஸ்தீனத் தாயகத்தின் தலைநகரமாக அரபாத் கனவு கண்ட ஜெருசலத்திலேயே தன்னைப் புதைக்க வேண்டுமென்பதே அவரின் விருப்பமாக இருந்தது. ஆனால், ரமல்லா தலைமையகத்திலேயே அவரத சடலம் புதைக்கப்பட்டது.
பாலஸ்தீன மக்களின் தாயக மீட்புப் போராட்ட இலட்சியத்தை உருவக்ப்படுத்தி நின்ற அரபாத், தங்களின் சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்பதற்காக மூன்றாம் உலக நாடுகள் பலவற்றில் போராடிவரும் இனங்களுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிவந்தார்.

Page 16
1969 ல் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவராகத் தெரிவானபோது ‘எமக்கு ஒரு தத்துவம் இல்லை. அவசியமான எந்த வழியில் என்றாலும் எமத தந்தையர் தேசத்தை விடுதலை செய்வதே எமது குறிக்கோள்.’ என்று பிரகடனம் செய்த அரபாத்தை உலகில் ஒடுக்கப்பட்ட மக்களின் மீட்சிக்கான போராட்டத்தில் பல்வேறு வகைப்பட்ட தத்துவங்களையும் தங்களுடன் வரித்துக் கொண்டு நின்ற அரசியல் இயக்கங்களும் தலைவர்களும் உறுதியாக ஆதரித்தார்கள். அரபாத் உருவகித்து நின்ற பாலஸ்தீன தேசியவாத இலட்சியத்துக்கு உலகம் காட்டிய ஒருமைப்பாட்டுக்கான பிரகாசமான சான்று இது.
அரபாத்தின் மரணத்தால் பாலஸ்தீன மக்களும் அவர்களின் போராட்டத்துக்கு ஒருமைப்பாட்டை வெளிக்காட்டி நிற்கும் நாடுகளின் மக்களும் சோகத்தில் ஆழ்ந்திருக்கின்றார்கள். மேற்கு ஆற்றங்கரையிலும் காசா பள்ளத்தாக்கிலும் பாலஸ்தீன அதிகாரசபை 40 நாள் தக்க அனுஸ்டிப்பைப் பிரகடனம் செய்திருக்கின்றத. உலகத் தலைவர்கள் அனுதாபத்தைத் தெரிவித்தவண்ணம் இருக்கின்றார்கள். 40 வருடகாலமாக தனது போராட்ட வாழ்வில் எண்ணற்ற சவால்களுக்கு முகம் கொடுத்த நின்ற அரபாத்தின் தணிச்சலையும் தாரதிருஷ்டியையும் தலைவர்கள் புகழ்ந்து செய்தி அனுப்பிக் கொண்டிருக்கின்றார்கள். அரபாத்தை பலஸ்தீன் அரசியலில் இருந்து ஓரங்கட்டுவதற்கு இஸ்ரேல் மேற்கொண்ட பிரயத்தனங்களுக்கு உறுதணையாக நின்ற அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ். சமாதானத்தையும் சுதந்திர அரசையும் அடைவதற்கான பாலஸ்தீன மக்களின் முயற்சியில் ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தருணம்’ என்று அரபாத்தின் மரணத்தை வர்ணித்திருக்கின்றார்.
கடந்த பல வருடங்களாக பாலஸ்தீன ஜனாதிபதியின் அணுகுமுறைகள் சியோனிஸ்டுகளுக்கு வாய்ப்பாக அமைந்திருந்ததாக கண்டன விமர்சனத்தை பல பாலஸ்தீன தீவிரவாத இயக்கங்கள் தெரிவித்து வந்திருக்கின்றன. ஆனால், பாலஸ்தீன மக்களின் போராட்டத்தைப் பயங்கரவாதமென்றம் அரபாத்தை சமாதானத்தக்கான முட்டுக்கட்டை என்றும் வர்ணிக்கும் இஸ்ரேல் பிரதமர் ஏரியல் சரோனும் ஏகாதிபத்திய ஆசான் புஷ்ஷம் அவரைக் கர்ணகடூரமாக எதிர்த்து நின்றதற்கு அந்தப் பலஸ்தீன இயக்கங்கள் என்ன வியாக்கியானத்தை அளிக்கின்றனவோ எமக்குத் தெரியவில்லை.
1947 இல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரையாற்றிய வேளை 'ஒரு கையில் ஒலிவ் கிளையுடனும் மறுகையில் விடுலைப்போராளியின் துப்பாக்கியுடனும் வந்திருக்கின்றேன். எனது கையில் இருந்து ஒலிவ் கிளையை விழவிடாதீர்கள்’. என்று உலகிற்குக் கூறிய அரபாத், தனது வாழ்வின் இலட்சியம் நிறைவேறாமலேயே
 

உலகிற்குப் பிரியாவிடை கொடுத்துவிட்டார். அவரைப் பீடித்த நோயின் மர்மமும் தலங்கவில்லை. பாலஸ்தீன ஜனாதிபதிப் பதவிக்கான அதிகாரப் போட்டி மேற்கு ஆற்றங்கரையிலும் காசாவிலும் பெரும் குழப்பநிலையைத் தோற்றுவிக்கும் என்று அஞ்சப்படுகின்றது. ஒரு அமைதியான அதிகார மாற்றத்தைச் செய்த தனத மக்களின் இலட்சியம் நிறைவேற பாலஸ்தீனத் தலைவர்கள் விவேகத்துடனும், தாரதிருஷ்டியுடனும் செயற்படுவதே மறைந்த தலைவருக்குச் செய்யக்கூடிய அதியுயர்ந்த கெளரவமும் அஞ்சலியுமாகும்.
தங்களது போராட்டத்தில் கடந்த 4 தசாப்த காலச் சின்னத்தை பாலஸ்தீன மக்கள் இழந்த நிற்கிறார்கள். பாலஸ்தீனத் தேசியவாதப் பெருமையைப் பேணிக் காத்த அரபாத், பிரதான விவகாரங்களில் ஒருபோதும் விட்டுக் கொடுக்கவில்லை. அவர் கீறிய அந்தக் கோட்டை அவரின் இடத்தக்கு வரக்கூடிய எந்தவொரு பாலஸ்தீனத் தலைவருமே கடக்க முடியாதது.
(12.11.2004வெளிவந்த தினக்குரல் ஆசிரியத் தலையங்கம்.)
இருவேறு சிந்தனைகள்
வாழ்க்கை என்பது போராட்டம் - இதில் வலிமையானதே வாழும்.
- L/Tisikof
மென்மையானவையே நீண்ட காலம் வாழும்.
-சீன ஞானி கன்ஃ பூவழியஸ்

Page 17
பேசுவதற்கும் தன்னம்பிக்கையை வளர்ப்ப தற்கும் பயிற்சி என்பது அவசியமா என்று அலட்சியமாக இருந்த காலம் மலையேறி விட்டது. சரியான வார்த்தைகளைச் சரியான தொனியில் சரியான நேரத்தில் சரியான அணுகுமுறையோடு பேசமுடிகின்றவர்கள் மட்டுமே இந்த உலகில் ஜெயிக்க முடியும் என்ற நிலை தோன்றியுள்ளது.
ஒருவருடன் பேசுகின்றீர்கள். அவருக்கு உடன்பாடு இல்லாத விசயத்தை வாழைப்பழத்தில் ஊசி இறக்குவதுபோல் வலிக்காமல் ஏற்றுக் கொள்ளவைப்பது உங்களால் சாத்தியமென்றால் எண்ணற்ற நட்சத்திரங்களாக போட்டியாளர்கள் நிறைந்த வானில் நிலவாக உங்களால் ஒளிவீசிப் பிரகாசிக்கமுடியும்.
வார்த்தையைத் தேர்ந்தெடுத்து உச்சரிக்கும் நேர்த்தி, முகபாவம், அங்க அசைவுகள், (Body Language) எல்லாம் ஒரு செயலை சாதனைக்கு இட்டுச் செல்லும்.
சரியாகப் பேசத் தெரியாதவர்கள் கடும் உழைப்பாளிகளாக இருந்தாலும் அவர்கள் வெற்றி நிச்சயம் தாமதப்படும். சொல்ல நினைப்பதை எதிரில் இருப்பவர்கள் ஏற்றுக் கொள்கிறபடி தெளிவாக பேசுகின்ற வித்தையைக் கற்றவரை யாராலும் புறக்கணிக்க முடியாது. ஆளுமை அபிவிருத்தியில் முதலில் சொல்லித்தருவது யாரிடம் எப்படிப் பேசுவது என்பதைத்தான். வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என்பதைவிட வாயுள்ள பிள்ளை சாதிக்கும் என்பதே சரி.
ஒருவரின் வளர்ச்சி தடைப்படுவதற்குக் காரணம் அவரேதான். ஆரோக்கியமான சிரிப்பு அளவில்லாத அன்பு, எல்லோரையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம், எதற்கும் அசைந்து கொடுக்காத ஆக்கபூர்வமான சிந்தனை இவையே நல்ல ஆளுமைக்கு அடிப்படையாக
960)LDU60)6).
 
 

ஆளுமை அபிவிருத்தி என்றால் தோற்றம் சம்பந்தப்பட்டது என அனேகர் கருதுகின்றார்கள். முகம் பளிச்சென்று ஆவது மட்டுமே நல்ல ஆளுமை என்பதில்லை. அது புறத்தோற்றத்திற்கானது. உள்ளத்தின அழகுதான் நீங்கள் யார் என்பதை உலகிற்குகாட்டும். வெளி அழகை அதிகப்ப டுத்த எல்லா வசதிகளும் வந்துவிட்டன. உள்ளழகை வளர்த்துக் கொள்வது எளிதல்ல. ஆனால் அது முடியாத காரியம்அல்ல. இது முழுக்க மனப் பயிற்சியை அடிப்படையாகக் கொண்டது. ஒரு வார்த்தை பேசவும் ஒரு செயலைச் செய்யவும் நூறு தடவை சிந்தித்து ஒழுங்குபடுத்த வேண்டிய சிரமம் இதில் இருக்கிறது. அதுதான் மாபெரும் சவால்.
நாலுபேர் முன்னால் எப்படிப் பேசுவது? கூச்சமாக உள்ளது. சபை நாகரிகம் தெரியவில்லை/ நேர்முகத் தேர்வில் ஜெயிக்கமுடியவில்லை என்று கவலைப் படுபவர் நீங்கள் எனின், இக்கவலைக்கு முற்றுப்புள்ளிவைத்துவிட முடியும். மனப் பயிற்சியின் மூலம் உங்களை நீங்களே மாற்றிவிட முடியும். உள்ளே பொங்கி எழுகிறது சாதிக்கும் ஆவல். மேகமாய் அலைகின்றன வெற்றி பற்றிய உச்சபட்சக் கனவுகள், வானம் விரிந்து கிடக்கிறது. உச்ச நிலைக்கு உயரவேண்டும் என்ற ஆசை. இந்நிலையில் சாதிப்பதற்கு நாம் எம்மைத் தயார்படுத்துவது அவசியம்.
ஆளுமை அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டமானது சாதிப்பதற்கான பயிற்சியை அளிக்கின்றது.
தொடர்பாடல் திறமை, தொடர்பாடல் கலை, என்று மேலைநாடுகள் இந்த ஆற்றலை வெகுவாக வளர்த்துக் கொள்வதில் அக்கறை காட்டுகின்றன. நடைமுறைவாழ்க்கையில் நாம் இந்தக் கலையில் அதிக கவனம் செலுத்துவது இல்லை. சொல்ல வந்த விசயத்தை பிறர் புரிந்து கொள்ளும்படி சொல்வது உன்னதமான கலை.
தோற்றம் குறித்து பெரும் சிரத்தை எடுத்துக் கொள்கிறவர்களில் எத்தனைபேர் மனம் மற்றும் குணத்திற்கும் வெளிப்பாடு குறித்து அதேபோன்று அக்கறை எடுத்து கொள்கிறார்கள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எமது உணர்வுள் எமது ஆளுமையை தீர்மானிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. நம்மில் அனேகருக்கு எந்த நேரத்தில் எதற்காகக் கோபம் வருகிறது என்றே கண்டுபிடிக்க முடியாது. சூழ்நிலை மறந்து அநாகரிகமாக நடந்து கொள்கிறோம்.
திறமையால் ஒருபடி மேலே ஏறினால் கோபத்தால் நான்குபடி சறுக்கிவிடுகிறோம். கோபக்காரர்கள் என்றுமே நல்லபெயர் வாங்கமுடியாது. கோபம் முன்வாசல்வழி முரசு கொட்டி உள்ளே நுழைய சந்தோஷம் பின்வாசல் வழி சத்தயிேல்லIல் வெளியேறுகின்றது. கோபத்தால் பிறரை ஒருபோதம் மகிழவைக்கமுடியாது. ஆறாத தீராத காயங்களை அது உண்டாக்கிக் கொண்டே இருi't'

Page 18
கோபம் வந்தால் தெளிவாக திறமையாக, நிதானமாக காட்டிவிடுங்கள். ஒருவர் மேல்காட்டும் கோபத்தை எல்லோர் மேல்காட்டுவது என்பது பொதுவாக எல்லோரும் செய்யும் தவறு. வீடோ அலுவலகமோ எங்கும் நிகழாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
கோபம் உங்களை அநாகரிகமாக பேசவைத்து பதற்றத்தை ஏற்படுத்தி, மற்றவர்கள் முன் உங்கள்மதிப்பையும் ஆளுமையையும் குறைக்கும்.
சூழ்நிலையையும் உணர்ச்சியையும் கையாளத் தெரிந்தால் தெரிந்தவர்கள் என்றுமே உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்க மாட்டார்கள். மனிதர்களை சூழ்நிலைகளை எளிதாகச் சமாளிக்கமுடியும் என்று நம்புங்கள். அதற்கான வழிகளைக் கண்டுபிடிக்கவேண்டியது உங்கள் கடமை.
மற்றவரைப்பற்றிப் புறம்பேசுவது என்பதும் ஒருவரின் ஆளுமையைக் குறைக்கும் அம்சமாக உள்ளது.
ஒவ்வொருமுறையும் மற்றவரைப்பற்றிப் புறம்பேசும்போதும் வெற்றி என்ற படியில் இருந்து ஒருபடி கீழே இறங்குகின்றோம் என்று மறவாதீர்கள். வேலை வெட்டியே இல்லாதவர்கள் வேலையை ஒழுங்காகச் செய்யாமல் தட்டிக் கழிப்பவர்களுக்கு மட்டுமே அடுத்தவர் பற்றி சாவகாசமா கதையளக்க நேரம் இருக்கும். இலக்கைக் குறிவைத்து ஓடுகின்றபோது பிறர் என்ன செய்கின்றார்கள் என்று திருப்பிப் பார்ப்பது சாத்தியமாகாது.
வம்பு பேசாமல், கடமைகளை மட்டும் செய்பவர்கள் மட்டுமே ஆயிரம்பேர் இருக்கும் இடத்தில் மொத்தக் கவனத்தையும் தன்பக்கம் திருப்பும் ஆளுமை ஆற்றலைப் பெறமுடியும்.
நிறுவகங்களில் தொழில் புரியும் பல பெண்கள் வீண் வதந்திகளைச் சமாளிக்கமுடியாமல் வே3ை)யைத் துறந்து செல்லும் நிலை காணப்படுகின்றது. எங்குமே நம்மைத் தொந்தரவு செய்பவர்கள் நிறைந்திருக்கின்றார்கள்? அவர்களைச் சமாளித்து எப்படி உயரப்போகின்றோம் என்பதுதான் சவால். வம்பளப்பது எவ்வளவு அசிங்கமோ அதேபோலத்தான் தன்னைப் பற்றிய வதந்திகளுக்கு செவிசாய்ப்பதும். நல்ல ஆளுமை உள்ளவர்கள் இவற்றால் ஒருபோதும் சோர்ந்துபோவதில்லை.
மன்னிப்பு சிறந்த ஆளுமைக்கான ஓர் அம்சம் மன்னிக்கும் குணமுடை யவர்கள் மனதில் சோகமோ, பாரமோ அவ்வளவு எளிதில் தங்கிவிடாது. குடும்பத்தினரால், நண்பர்களால் சக ஊழியர்களால் உண்டான அழுத்தங்களை அகற்றி மனதை அவர்கள் எப்போதும் இலகுவாக வைத்திருப்பார்கள். மன்னிக்கத் தெரிந்தவர்கள் மகிழ்சியானவர்கள் மட்டுமல்ல, மகத்தானவர்களும் கூட கோபமும் வேதனையும் ஏன் உண்டாகின்றன என்று கணித்து அதற்குச் சரியான தீர்வை பெறுவது இவர்களுக்கு மட்டுமே சாத்தியமாகும்.ஒருவர் தன்னுடைய ஆளுமை ஆற்றலை வளர்த்து வெற்றிகரமான மனிதராகத் திகழ்வதில் இதுபோன்ற பல அம்சங்கள் செல்வாக்குச் செலுத்துகின்றன. (தினக்குரல் 7.11.2004)
 

memas
mannimas
Mw =
www.goo
pa
Mwynw
❤
a
a
+=e
ബ
numana
^_
N
ܓܠ
e
wo
s
will
æmaa
e
man
unan
unama
awan
anvenman
sæn
annunnas
umann
anuar
vnamenn
ScIöS60601 -- GéSSoso----
எத்தனை முகங்கள்
இந்த மனிதனுக்கு?
அத்தனை முகத்திலும்
அபூர்வ 'பாவம்’
எத்தனை நாக்கு
இந்த மனிதனுக்கு ?
அத்தனை நாக்கிலும்
அமுதமும் விஷமும்
sysos Downasch
இந்த மனிதனுக்கு 2
(Mae Loonasegb
அடிக்கடி புரளும் !
abbaunaw dolaysirguib
இந்த மனிதனுக்கு ?
Olapaan Olasiryopib
Laa asub
săses estGassi
இந்த மனிதனுக்கு ?
அத்தனை ஆண்டுகளும்
அவன் ஒரு நடிகன் 1

Page 19
ஏறு.முன்
முயற்சி ஒரு ஏணி அதில் ஏறு முன்னேறு தி_ார்ச்சி உன் சொத்தாதும் !
தேனி போல் பற தேன் என்னும் திரவியம் நிதிரட்டலாம் !
எறும்புபோல் திரி இரை என்னும் பிராருக்கி
Tổ ஈட்டாம் !
சுறுசுறுப்புத் திரில் உண் éilifIIIIIIimillid; சுட்டுப் பொசுக்த !
உதயகாலம் நீ இனவிரல்லாம் எழுப்பு !
சூரியன் உன்னைக் கண்டே சுடர் முகம் காட்டட்டும் காகங்கள் சுற்றிச் சுற்றிக் கரையட்டும்.
GągoriosclaĦT Lb - LDLL

க்களப்பு.