கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: போது 2006.03-04

Page 1
நாளும் சிபாழுது நாட்டை வாழ சூழும் பகைமை, 4
சுக்கு நூநா
 
 

----
---- *』『』鬥轟』』『』』 』』- - - - - - - --±,±,±,±,_,_,_,_,_,_, S★★★★★★★シシシ 渝)
(τώ
P &04JUU பஞ்சம்
'ய்ச் சிசப்வே
ம் உழைப்போம்
ώδυ (τώ
மலரட்ரும்

Page 2
:
-
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
தெளிந்த நல் வேண்டும்.
- மகாகவி பாரதியார்
Alaaf: PROFESSIONAL PSYCOLOGICAL COUNSELLING CENTRE
Misi ANTICALOA
:
 

போது -7 a. テー
பங்குனி - சித்திரை 2006 தோற்றம் 5-5-1998
நிர்வாக ஆசிரியர் (Managing Editor) சுவாமிஜி போல் சற்குணநாயகம்யேசு
ஆசிரியர்
(Editor)
வாகரைவாணன்
நிர்வாகம்: (Management) சி.எம்.ஒக்களம்
Jørfroama: உளநல உதவிநிலையம், 15, வெபர் வீதி, மட்டக்களப்
தொலைபேசி:
O65-2222842
E-mail ppcc palGestmetik
(தாத்தம் سوسoشه«
ஒழுங்கான பொருளாதார வளர்ச்சியே ஒருநாட்டில்உந்துசக்தி . இது இல்லாத நாட்டின் எதுவுமே இல்லையென்றுதான் அர்த்தம்.
இலங்கை இத்தகைய தொரு நாடாகவே இருந்து வருகின்றது. காரணம் - இந்த மண்ணில் ஆழமாக வேகுன்றி விட்ட தமிழர் பிரச்சினை. ஐம்பது ஆண்டுகளுக்கு Coansuytö இப்பிரச்சினையைத் தீர்க்க எந்த அரசும் முன்வரவில்லை. இதன் விளைவுதான் இன்றைய அவலம்.
இத தகையதொரு சூழ்நிலையில் இந்த நாடு எங்கே முன்னேறப் போகின்றது? உள்ளூர் உற்பத்தியை நினைத்துக் கூடப்
களெல்லாம் விருட்சங்கள் நிறைந்த சோலையாகி விட்டன. பயிர்த்தோட்
uăanioanuă atra piguialăana. மொத்தத்தில் வட கிழக்கு வரண்ட பாலைவனமாகிவிட்டது.

Page 3
w 侃 என்ற R O di ஏறி
விலைவாசி
மக்கள் தினமும் பயன்படுத்தும்மாவு, அரிசி, சீனி, மண்ணெண்ணெய் முதலான பொருட்களின் விலை விண்ணளவு உயர்ந்து விட்டது. இதனைக் கட்டுப்படுத்த வேண்டிய அரசு வேறு ஏதோ செய்கின்றது. ஜனாதிபதியைச் சுற்றி ஆலோசகர்கள் என்ற பெயரில் ஒரு பெரும் குழுவே அமர்ந்திருக்கின்றது. ஆனால் நல்லது எதுவும் நடப்பதாகத் தெரியவில்லை.
வெளிநாட்டுக் கடனை - நன்கொடையை நம்பியே இந்த அரசு இருப்பதாகத் தெரிகின்றது. இது எவ்வளவு காலத்திற்கு? அந்நிய நாடுகள் நம் நாட்டின் மீது காட்டும் அக்கறையில் ஏதோ அர்த்தம் இருக்கவேண்டும். இல்லையென்றால் அவர்கள் இங்கு ஏன் அடிக்கடி பறந்து வரவேண்டும்? அதிலும், அமெரிக்காவின் கழுகுப் பார்வை ஆபத்தானது.
நாம் நம் காலிலேயே நிற்க வேண்டும். அதற்குப் புறச் சூழ்நிலை மிக முக்கியம். நிரந்தர அமைதி நிலவ வேண்டும். இன முரண்பாடுகளுக்கிடையில் புதிய இலங்கையைக் கட்டி எழுப்ப முடியாது. பெரும்பான்மை - சிறுபான்மை என்ற பேதம் இருக்கும் வரை சமாதானம் கை கூடப் போவதில்லை. சமத்துவம் தான் சமாதானம்.
இன்றைய ஆட்சியினர் இதனை உணரும் வரைவிமோசனம் வெகு தூரத்திலேதான் நின்று கொண்டிருக்கும். இதுதான் இன்றைய யதார்த்தம். அன்புடன் வாகரைவாணன்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவது உம் . . . .
«b, d د - ۳۴-----------------اً

கவிதை பற்றி
கவிதை என்பது கற்பனையின் ஊற்று என்பார்கள், ஜான்ஸன் கூறுகிறார் “ கவிதையாவது பாமுறையில் அமைந்த ஒன்று, அறிவின் உதவிக்கு கற்பனையைத் துணையாகக் கொண்டு உண்மையை மகிழ்ச்சியூட்டும் வண்ணம் கலந்து வழங்கும் கலை' எனப்படுகின்றது. ‘மில்' என்பவர் கூறுவது சிந்தனையிலும் சொற்களிலும் உணர்வு பொங்கித் ததும்புவது அன்றி வேறு எது கவிதை? "மெக்காலே கூறுகிறார் ஓவியக் கலைஞன் வண்ணங்களின் துணைகொண்டு எதைச் செய்கின்றானோ அதைச் சொற்களின் துணை கொண்டு செய்யும் கலையே கவிதையாகும்.
ஷெல்லி பொதுவாகக் கவிதை என்பதனைக் கற்பனையின் வெளியீடு என்று குறிக்கலாம் என்பார். நன்னூலார் இன்னது எனச் சொல்லும் முகத்தால் கவிதை இன்னது எனக் காட்டியுள்ளார். கவிதை பல்வேறு விடயங்களைச் செய்கின்றது. உணர்ச்சி, ஒலிநயம், இசைநயம், நகை, அழுகை, இழிப்பு, மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்பன அமையும். புதிய சொற்றொடர்களையும் , சொல்லாட்சிகளையும் உருவாக்கித் தந்து மொழிக்குப் புதியதொரு பொலிவையும் வளத்தையும் தரும். இயற்கைக் காட்சிகளையும், நிகழ்ச்சிகளையும் கவிதை ஒவியமாக்கிக் காட்டும். சில கவிதைகள் சாதாரண சொற்களால் செய்திகளையே எழில் படக்காட்டும். கவிதையின் கூறுகளில் மிக முக்கியமானது ஒலிநயம் (Rhythm) இது இல்லாத கவிதை உயிர் அற்ற உடம்பானது. ஒலி நயம் நல்ல இலக்கியப் படைப்பின் விதியாகும். தமிழ் மொழியில் அசை, சீர்,தளை , அடி, தொடை என வெண்பா, ஆசிரியப்பாவில் ஒலிநயம் அடிப்படையாக
வரும்.
கவிதையின் சுவைக்கும் பெருவாழ்விற்கும் உரிய பல்வேறு காரணங்களுள் ஒன்று அதன் ஒலி இயைபுடன், யாப்பு அமைப்பும் ஆகும். யாப்பு என்பது ஒரே மாதிரியான ஒலி ஓட்டங்களின் வண்ணங்களை உயிராகக் கொண்டு இயங்கும் ஒரு கட்டுக்கோப்பாகும். வகைவகையான சீர்களின் அமைப்பின் அடிப்படையில் உருவாக்கியிருக்கும் சீரான ஒலி நயம் எனலாம். யாப்பு நல்ல கவிதைக்கு ஓர் இன்றியமையாத இலக்கணம்
1

Page 4
யாப்பு முறையில் கவிதை அமையும் பொழுது அக்கவிதை உரைநடை, புதினம், சிறுகதை எனும் பல்வேறு இலக்கிய வகைகளில் இருந்து வேறுபடுகின்றது. o
திருமதி.P. அன்ரனி
விரிவுரையாளர்
கல்வியியல் கல்லூரி தாழங்குடா
கவிதையின் கலை நுணுக்கத்திறன் சொல்லாட்சி. அதாவது மொழியை அற்புதமாகக் கையாளல். இங்கு சொல்விளையாட்டும் இடம் பெறும். சில சொற்களைச் சிலேடை அணியாகத் தொடுப்பதன் வாயிலாக கவிஞர் சிலர் சொல் விளையாட்டு ஆடுவது உண்டு. சொல்விளையாட்டு இல்லை என்றால் கவிதையில் சுவையிருக்காது. கவிதையில் உவமை அணி பற்றிப் பார்க்கும் பொழுது கவிஞன் கண்ட காட்சியை மற்றவர் அவனது கற்பனை எல்லைக்குள் மிக நெருங்கிச் சென்று உள்ளபடி கண்டு கொள்ளத் துணைக் கருவியாக இருக்கும். இது பாட்டின் பொருளுக்கு புத்துயிரும் புதுமெருகும் அளித்து பயில்வார் உள்ளத்தே பசுமைபடரச் செய்யும்.
இவ்வாறாகக் கவிதைக்குப் பல்வேறு விதமான விளக்கங்கள் மேலும் கொடுக்கப்பட்டுள்ளன.
31-10-1931 ல் முதல் தமிழ்த் திரைப்படம் வெளிவந்தது மதுர பாஸ்கரதாஸ் என்பவரே தமிழ்த்திரைப்படவுலகின்
முதலாவது பாடலாசிரியராவார்.
 

அரனவன் அமர்ந்து
அருள் மழை மொழியும் திருகோணமலை
திராவிடர் பூமி
குணமலை என்பார்
குறித்தது ஆன்றோர்
வணமலை! கடலும்
வந்ததில் அடங்கும்!
ஞானசம்பந்தன்
தாவத வாழ்த்திய வான சம்பத்து
வழிபடுவோம்!
கிழக்கின் உரோமாபுரி
கிரி அத கைலை
விளக்கத நமக்கு
வீழ்ந்து வணங்குவோம்
புத்தரவர் இந்தப்
பூமியில் வருமுன் அத்திருமலையை
ஆண்டவர் தமிழர்
3

Page 5
ஆசியாக் கண்டம் ஆன்மீக உணர்வின் இருப்பிடம். ஏனென்றால் இந்த மண்ணில் தான் கெளதம புத்தர், மகாவீரர், கொன்பூ சியஸ், இயேசுநாதர், முகம்மது நபி முதலான ஞானிகளும் தீர்க்கதரிசிகளும் அவதரித்தார்கள்.
இந்த ஞானிகள் மட்டுமன்றி சாதாரண மனிதன் கூட ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டிருப்பதை இன்றைய அறிவியல் யுகத்திலும் நாம் அவதானிக்கலாம். இதன் பொருட்டே ஆசியாவின் குரல் எப்போதும் சமயத்தின் குரலாகவே இருந்து வருகின்றது என்றார் சுவாமி விவேகாநந்தர்.
ஆசியாவின் ஒளி விளக்குகளான இந்த ஞானிகளின் போதனைகளை அடித்தளமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட மதங்கள் இன்று உலகின் மூலை முடுக்கெல்லாம் வாழும் மக்களின் வாழ்வோடு ஒன்றிக் கலந்து உணர்ச்சிபூர்வமான அமைப்புக்களாக விளங்குகின்றன.
இந்தச் சந்தர்ப்பத்தில் மதம் என்றால் என்னவென்று ஒரு கேள்வி எழலாம். தமிழர்களைப் பொறுத்தமட்டில் மதம், சமயம் எனும் சொற்கள் கி.பி இரண்டாம் நூற்றாண்டின் பின் தோன்றிய தமிழ் இலக்கியங்களிலேயே காணப்படுவதாக அறிஞர் கருதுவர்.
அவ்விதமாயின் அதற்கு முன்பு வாழ்ந்த தமிழ் மக்கள் மதம், சமயம் பற்றி அறியவில்லையா எனின் இதற்கும் அறிஞர் இல்லை என்றே பதில் சொல்வர். ஏனென்றால் பண்டையத் தமிழர் வாழ்க்கை பெரும்பாலும் உலகியலையே (Materialsm) நோக்கமாகக் கொண்டிருந்தது. உலகியலுக்குள் ஆன்மீகம் நுழையாது என்பது உண்மை.
ஆங்கில மொழியில் சமயம் (Religion) எனப்படும். இது Religio எனும் இலத்தீன் சொல்லில் இருந்து பிறந்ததாகும். இதற்கு மனச்சாட்சி (Conscientious) LD60158FsTl'afoul LD5g5956) (Respect for Conscience) 6T6irg
4
 

பொருள். இதன்படி சமயி என்பவன் மனச்சாட்சியாகின்றான் அல்லது அதனை மதிப்பவன் ஆகின்றான். அதாவது எது சரி எது பிழை என்று எடுத்துச் சொல்லும் நீதிபதிதான் மனச்சாட்சி. ஆனால் இந்த நீதிபதியின் தீர்ப்பிற்கு செவிமடுக்காமல் விடும்போதே பிரச்சினை ஆரம்பமாகின்றது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மத்திய கிழக்கில் தோன்றிய கிறிஸ்தவத்தை ஆரம்பத்தில் பின்பற்றிய ஆதிக்கிறிஸ்தவர்கள் தமது மனச்சாட்சிக்குப் பெரும் மதிப்புக் கொடுத்து வாழ்ந்தமையை பின்வரும் பைபிள் வாசகம் எடுத்துக்காட்டும்.
"அவர்கள் எல்லா உடைமைகளையும் பொதுவாக வைத்திருந்தனர். நிலபுலன்களையும் பிற உடைமைகளையும் கொண்டிருந்தவர்கள் அவற்றை விற்று அனைவருக்கும் அவரவர் தேவைக்கேற்பப் பகிர்ந்தளித்தனர் . . . . பேருவகையோடும் எளிய உள்ளத்தோடும் வீடுகள் தோறும் அப்பத்தைப் பிட்டு உணவைப் பகிர்ந்து உண்டு வாழ்ந்தார்கள்’.
கிறிஸ்தவத்தின் மிகச்சிறந்த விழுமியங்களில் ஒன்று பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதுல் என்னும் பண்பாடு என்பது இதிலிருந்து தெரிகின்றது. இந்தப் பண்பாட்டின் அடித்தளமாக விளங்குவது பிறர்சிநேகம். இதைத்தான் இயேசு கிறிஸ்து உன்னைப்போல் உன் அயலவனை நேசி என்றார்.
இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை அணி பை, பிறர்சிநேகத்தை, மனிதாபிமானத்தை இரக்கத்தை, அடித்தளமாகக் கொண்டது. இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக இருப்பது அவர் சொன்ன நல்ல சமாரித்தன் உவமை. இந்த உவமையில் பிறர்சிநேகத்தை மட்டுமன்றி சமூகத்தில் இருந்து ஒதுக்கிவைக்கப்பட்ட சாதாரண மனிதன் கூட உயர்ந்த உள்ளத்தின் சொந்தக்காரனாக இருக்கமுடியும் என்பதையும் அவர் எடுத்துக்காட்டியுள்ளார்.
பிறர்சிநேகம் எனும் பண்பின் உச்சமாக இருப்பது ஒருவர் செய்த தீமையை மன்னிக்கும் உளப்பான்மையாகும்.இயேசு கிறிஸ்துவின்
5

Page 6
வாழ்க்கையில் இந்தப்பண்பு நரமபி வழிந்தது.
மூன்றாண்டுகள் தன்னோடு வாழ்ந்த நண்பன் இறுதி நேரத்தில் தன்னை முத்தமிட்டுக் காட்டிக்கொடுத்தபோது, மற்றுமொரு நண்பன் மறுதலித்த போது - இயேசு அவர்கள் மீது தமது அருட்பார்வையைச் செலுத்தினார். இவை மட்டுமல்ல! இயேசு சிலுவை மரத்தில் அறையப்பட்டிருந்த வேளை அவருக்குப் பக்கத்தில் சிலுவையில் அறையப்பட்டிருந்த இன்னொருவன் மீது அவர் காட்டிய இரக்கம் . . இறுதியாக உயிர்விடும் போது இவர்கள் செய்வது என்னவென்று அறியார்கள்: இவர்கள் பாவங்களை மன்னியும் என்று இறைஞ்சினாரே . இதுதான் பிறர்சிநேகத்தின் உச்சம், அன்பின் கொடுமுடி!
இயேசு கிறிஸ் துவரின் மனத் தை அழகாக எடுத்துக்காட்டுவது அவரது மலைப்பிரசங்கம். எதிரியை நேசி . . . இரண்டு அங்கி உன்னிடம் இருந்தால் ஒன்றை இல்லாதவனுக்குக் கொடு . . . கோயிலுக்குச் சென்று கும்பிடுவதைவிட உன்சகோதரனோடு சமாதானமாக இருப்பதுதான் முக்கியம் . . பிறர் உன்னை எப்படி நடத்தவேண்டும் என்று நீ விரும்புகின்றாயோ அப்படி நீ அவர்களை நடத்து . . ஒரு கன்னத்தில் உன்னை ஒருவன் அறைந்தால் மறுகன்னத்தையும் காட்டு . . அடுத்தவர்கள் பாராட்ட வேண்டும் என்பதற்காக நீ யாருக்கும் உதவாதே
இயேசு கிறிஸ்துவின் உள்ளத்தில் உதித்த இந்த வார்த்தைகள் அவர் உண்மையிலேயே வித்தியாசமான ஒரு மனிதன் என்று எடுத்துச்சொல்லும். மகாத்மா காந்தி இந்த மலைப்பிரசங்கத்தால் பெரிதும் கவரப்பட்டவர் என்பது வரலாறு.
கிறிஸ்தவத்தின் இன்னுமொரு மிகச்சிறந்த விழுமியம் நீதி. உரோமப் பேரரசுக்கு எதிரியாக உரக்கக் குரல்கொடுத்தவர் இயேசு கிறிஸ்து. ஆயினும் சீசருக்குரியதை சீசருக்கும் இறைவனுக்குரியதை இறைவனுக்கும் கொடுங்கள் என்று இயம்பியவர். ஓய்வுநாளில் கதிர் கொயப்யலாமா? நோயாளிகளை குணப்படுத்தலாமா? என்று கேள்வியெழுப்பிய பரிசேயரிடம் சட்டத்திற்காக மனிதன் அல்ல:
6

மனிதனுக்காகத்தான் சட்டம் என்று உணரும் வண்ணம் கதிர்கொய்த சீடர்களின் செயலை நியாயப்படுத்தியவர், நோயாளியைக் குணப்படுத்தியவர்.
நீதியின் பக்கம் நின்றவர் இயேசு கிறிஸ்து. அதனால் தாழ்த்தப்பட்ட மக்களோடு தாமாகவே சென்று உரையாடிவர். தண்ணிர் கேட்டு அருந்தியவர், விருந்து உண்டவர். சமத்துவத்தைச், சகோதரத்துவத்தை வலியுறுத்தியவர்.
ஒழுக்கம் தவறிய ஒரு பெண்மீது சிலர் கல்லெறிய முற்பட்டபோது குற்றம் இழைக்காதவன் இந்தப் பெண்மீது முதற்கல்லை எறியட்டும் என்று மொழிந்தவர்.
இந்த எடுத்துக்காட்டுக்கள் எல்லாம் நீதியின் மீது - நியாயத்தின் மீது இயேசு கிறிஸ்துவிற்கிருந்த அளவு கடந்த பற்றைச் சொல்லப் போதுமானவை.
இனி றைய உலகம் இனி நு வேணி டிநிற்பது மனிதாபிமானமும் நீதி நியாயமும் தான். நேற்றைய உலகம் இன்று இல்லை. இது தனிமனிதப் பிரச்சினைகளின் களம்: சமூக முரண்பாடுகளின்
8 slab DLb.
வாகரைவாணன
இந்த முரண்பாடுகளும் பிரச்சினைகளும் இற்றுப்போக வேண்டுமானால் நாம் ஒருவரை ஒருவர் உளமார நேசிக்க வேண்டும். எல்லோருக்கும் நீதி நியாயம் கிடைக்கச் செய்ய வேண்டும். இந்த இரண்டு விழுமியங்களையும் ஒவ்வொரு மனிதனும் அனுபவிக்கும் நிலை ஏற்படுமானால் இந்த உலகம் உண்மையான சொர்க்கமாகிவிடும்.
கிறிஸ்தவம் தனது இரண்டாயிரம் ஆண்டுகால வரலாற்றில் இந்த இரு விழுமியங்களுக்கும் மிக உயர்ந்த இடத்தை அளித்து வருகின்றது. அதனுடைய பணி, குறிக்கோள் அனைத்தும் இந்தப் பண்புநலன்களையே மையமாகக் கொண்டுள்ளது என்பது வெளிப்படை.

Page 7
விடைத் தாள்களுக்கும் இப்படி ஒரு விபரீதம்
ஆசிரியச் சூரியண்கள் லீப்போது ልቦpጡጫሠጠrጨpÖቻugጠrልመrጦሉöጫኝ ?
வசீட்டர்களும் துரோணர்களும் வழுத்தி வீழலாமா?
கண் போன்நது கடமை, அதனைக் காலால் மிதிப்பதா?
სარჯნრ சீடர் மூன் தலை குனிவதா?
நிதி மண்நத்தின் மூன்
*g一gr.
uDramorejstabana
நிந்த விருதல்
என்ன நியாயம் ?
நிறுக்கும் தராசுகள் நிலை விருழ்வதா ?
tigioueang asl இது
 

மாணவர்களுக்கு basis 61ufus Arg,
stfuar asapuசிதரியாதவர்களை ஆசிரியர்கள் என்பதே அபச்சாரம்
சிசய்யும் சிதறில்
சிதம்வம்
அதனைத் சிதருவில் சிகாண்டு வந்தா நிறுத்துவது ?
விழுத்தறிவித்தவன் இறைவன் இதந்கு எப்போது இறுதி மரியாதை சிசஆத்தப்பட்டது ?
இதுதான்
கதை லீனிநால் எதிர்காலச் சந்ததியின் நிலை விண்ணாவது 2
தகுதி அந்நவர்களால் தான் இண்று
இந்தத் தேசமே தள்ளாருகின்றது
ஆசிரிய உலகமும் éüue Abasas rupar o
9

Page 8
அறிய வேண்டிய அரிய மனிதர் - 22
தனிநாயகம் அடிகளார்
தனிநாயகம் அடிகளார் ஊர்காவற்றுறை கரம்பன என்னும் கிராமத்தில் 1913 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 2ம் திகதி பிறந்தார். இவரது தந்தையார் சப்த தீவுகளுள் ஒன்றான நெடுந்தீவைச் சேர்ந்தவர். ஹென்ரி ஸ்தனிஸ்லாஸ் கணபதிப்பிள்ளை என்னும் பெயரைக் கொண்டவர். தாயார் செசில் இராசம்மா வஸ்தியாம்பிள்ளை. பெற்றோர் இவருக்கு இட்ட பெயர் சேவியர் என்பதாகும்.
இவர் தனது ஆரம்பக் கல்வியை யாழ். பத்திரிசியார் கல்லூரியில் கற்றார். தொடர்ந்து கொழும்பு புனித பெர்னாந்து குருத்துவக் கல்லூரியில் கற்றுத் தமது 21வது வயதில் 1934ஆம் ஆண்டு ரோமாபுரி உர்பன் பல்கலைக்கழகத்தில் கல்வியைத் தொடர்ந்தார்.
1939 இல் இவர் இறையியல் ‘கலாநிதி' எனும் பட்டத்தைப் பெற்றுக்கொண்டார்.
ரோமாபுரியில் உர்பன் பல்கலைக்கழகத்தில் 5 ஆண்டுகள் கல்வி கற்ற பொழுது 43 நாடுகளைச் சேர்ந்த 250 மாணவர்களுடன் சேர்ந்து கல்வி கற்றதன் பயனாக இவருக்குப் பரந்த மனப்பான்மை உண்டாயிற்று. வெவ்வேறு நாடுகளைப் பற்றியும் இலக்கியங்களைப் பற்றியும் அறிந்துகொள்ள பல்கலைக்கழகம் அரியதொரு வாய்ப்பினை இவருக்கு அளித்தது. தனிநாயகம் அடிகளார் இளமையில் தானாக சமயப்பணியினை ஏற்கவில்லை. இவரது தாயார் மரணப்படுக்கையில் இருந்தபொழுது அவருடைய விருப்பத்திற்கிணங்கவே இவர் அதனை ஏற்றுக் கொண்டார். இவர் பாடசாலையில் கல்வி கற்கும் பொழுது ‘லியோ டால்ஸ்டாய்” எழுதிய “புத்துயிர்ப்பு’ என்ற நூலைப் படித்ததன் பின்பே இறைபணியில் தன்னை முழுமனதுடன் ஈடுபடுத்திக் கொண்டார். இவர் வேறுபட்ட சூழலில் வாழ்ந்ததனால் நற்குண , நற்செயல்களைக் கற்றுக்கொண்டார். பல அனுபவங்கள் பெற்றதன் விளைவாக பரந்த நோக்கு உடையவராகத் திகழ்ந்தார்.
10
 

கலாநிதிப்பட்டம் பெற்றபின்னர் இவர் இந்தியாவுக்கு வந்து நெல்லை மாவட்டத்திலுள்ள வடக்கன் குளப்பிரதேசத்தில் ஆசிரியராகப் பணிபுரியத் தொடங்கினார். அங்கு பண்டிதர் குருசாமி சுப்பிரமணிய ஐயரிடம் நான்கு வருடங்கள் தமிழ் கற்றார். அப்பொழுது, தான் ஒரு தமிழ் பெயரைச் சூட்டிக்கொள்வது நல்லதென்று “ரோச் ஆண்டகை” கேட்டுக் கொண்டதற்கிணங்க தனிநாயகம் முதலி பரம்பரையில் தான் தோன்றியவர் என்பதை அறிந்து தனக்குச் சேவியர் ஸ்தனிஸ்லாஸ் தனிநாயகம் என்ற பெயரைச் சூட்டிக்கொண்டார். 1945 ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தமிழ் முதுநிலை மாணவனாகச் சேர்ந்தார். தமிழ்த் துறைத் தலைவராகத் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் பணியாற்றிய பொழுது அவரிடம் தமிழ் கற்கும் வாய்ப்பு இவருக்குக் கிட்டியது. அடிகளார் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம், உலகத் தமிழ் ஆராய்ச்சிமன்றம் ஆகிய அமைப்புக்களை நிறுவி முதன்மை ஆசிரியராக இருந்து Tamil Culture என்ற ஆங்கில முத்திங்கள் ஏட்டினை நடாத்தி வந்தார். உலகளாவிய ரீதியில் பல ஆய்வுகளைச் செய்தார். 17 ஆங்கிலப் புலமையாளர்களுக்கும் 20 தமிழ் புலமையாளர்களுக்கும் முன்னுரிமை கொடுத்து ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார். சென்னைப் பல்கலைக்கழக அகராதி ஆக்கக் குழுவின் உறுப்பினராயும், யாழ்ப்பாணத்தில் நடந்த 4 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மகாநாட்டின் சிறப்பு மலர் வெளியீட்டின் செயலாளராகவும் பதவி வகித்தார்.
மரகதா சிவலிங்கம்
அடிகளார் ஒரு கிறிஸ்தவப் பாதிரியாராக இருந்தபோதிலும் 1947 ஆம் ஆண்டு தமிழ் ஆராய்ச்சித் துறையில் முதுகலைமாணி (M.A) பட்டத்தைப் பெற்றார். தொடர்ந்து 1949ம் ஆண்டு தமிழ் இலக்கிய முதுகலைமாணி (MLit) பட்டத்தையும் பெற்றுக் கொண்டார். இவர் திறனாய்வு செய்த பழந்தமிழ் இலக்கியத்தினைப் பார்வையிட்ட பேராசிரியர் “கபில் சுவலபில்” பழந்தமிழ் இலக்கியங்களைப் பற்றி இதுவரை எழுதப்பட்ட அனைத்திலும் இந்நூல் சிறந்து விளங்குகிறது என்று போற்றியுள்ளார். இவர் வீரமாமுனிவர் பால் ஆரா அன்பு கொண்டவர். அவரது நூல்களைத் தேடி வாசிப்பதில் ஆர்வம் காட்டினார். பல்வேறு நாடுகளுக்குச் செல்லும் பொழுதெல்லாம் இலக்கியச் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். “தேம்பாவணி ஆராய்ச்சி” , “திருக்காவலூர்க் கோயில்” , “யேசுநாதர்” , “பத்துப்பாட்டு” , “ஆங்கில மொழி பெயர்ப்பு”, “திராவிடர் வரலாறு’ எனப்பல நூற்பதிப்புக்களை தூத்துக்குடியில் தாம் தோற்றுவித்த தமிழ் இலக்கியக் கழகம் ஊடாக வெளியிட்டார்.
11

Page 9
தமிழின் சிறப்பை தனித்துவத்தை உலகறியச் செய்யவேண்டும் என்று அடிகளார் ஆசைப்பட்டார். அதற்காக அவர் சென்ற நாடுகள் ஏராளம். மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து, இந்தோனேஷியா, கம்போடியா தாய்லாந்து, வியட்நாம், கனடா, ஜேர்மன், அமெரிக்கா, இத்தாலி, ரஷ்யா ஸ் கன் டிநேவியா என்று எலி லா நாடுகளுக்கும் சென்று தமிழ் விரிவுரைகள் ஆற்றித் தமிழுக்குப் பெரும் தொண்டாற்றினார். அடிகள ஆய்வு செய்த “தமிழ்த்தூது திறனாய்வுக் கட்டுரைகள்” 1951ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
1955 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 2 ஆம் திகதி கொழும் தமிழ்ப் பண்பாட்டுச் சங்கம் ஏற்பாடு செய்த கூட்டத்தில் , “இலங்கையுட தமிழ்ப் பண்பாடும்” , "நேற்றும் இன்றும் நாளையும் " என்னும் தலைப்பில் உரை நிகழ்த்திய அடிகளார் “பழங்காலத்தில் தமிழரும் சிங்களவரு இன, மத,மொழி வேறுபாடின்றி ஒற்றுமையாக வாழ்ந்தார்கள். இன்று இனவாதம் தலைதூக்கி ஆடுகின்றது. இந்த இனவாதத்தினை ஒழிக்க தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகளும் ஆட்சி மொழியாக விளங் வேண்டும் என்று கூறினார். 1956 ஆம் ஆண்டு ஆனி மாதம் 15 ஆ திகதி சிங்களம் மட்டும் ஆட்சிமொழியானதை அறிந்து கொண்ட அடிகளா மொழி உரிமைகளை மறுப்பது தீய விளைவுகளுக்கு வழிகோலும் என்று * இலங்கையில் மொழி உரிமைகள்” என்ற கட்டுரையில் குறிப்பிட்டுள்ள இந்தக் கட்டுரை 1956 ஆம் ஆண்டு ஆடி மாதம் 10 திகதி வெளியிடப்பட் தமிழ்க் கலாசாரச் சஞ்சிகையில் வந்துள்ளது.
அடிகளார் 1955 ஆம் ஆண்டு இலண்டன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து 2 ஆண்டுகள் கல்வி கற்று கலாநிதிப் பட்டம் பெற்றார். 195 ஆம் ஆண்டு கலாநிதிப்பட்டம் பெற்று இலங்கை வந்த பொழுது இவரது தமிழ்ப் பற்றினை அறிந்த இலங்கையரசு இவரைக் கைது செய்யும்ப ஆணை பிறப்பித்தது. இதனால் மனமுடைந்த அடிகளார் மலாய் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து “தமிழ் எங்கள் உயிர்” என்ற இயக்கத்தி6ை ஆரம்பித்தார். மேலும் சென்னைப் பல்கலைக்கழக அகராதி ஆக்க குழுவில் உறுப்பினராகவும் விளங்கினார். 4வது உலகத் தமிழராய்ச் மாநாட்டின் சிறப்பு மலர் வெளியீட்டின் செயலாளராக இருந்: ஆக்கபூர்வமான பல ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டார். தன் இறு: மூச்சு வரை தமிழுக்குத் தொண்டாற்றிய அடிகளர் 1980 ஆண்டு இவ்வுல வாழ்வை நீத்தார்.
12

சாவுக்கொரு சாவு
சாவுக்கொரு சாவு
தரணிதனில் தந்தான்
கூவி யிது சொல்லு
குதித்து நீ ஆடு
இருள் ஓடிப்போகும்
இரவி என எழுந்தான்
அருள் வெள்ளம் யேசு
அகங் குளிரப்பாடு
பொய் மாண்டு போகும்
புனிதனவன் எழுந்தான்
கை கொட்டி ஆடு
கடவுளவன் பாடு
சொன்னபடி செய்தான்
சோதி என ஒளிர்ந்தான்
அண்ணலவன் யேசு
அலையெனவே ஆடு
மூநாளில் உயிர்த்தான்
முழுநிலவாய் நின்றான்
பூஅள்ளித் தூவு
புகழ்க் கீதம் பாடு
சரித்திரத்தில் இது போல்
சாதனையும் உண்டோ?
திரித்துவத்தில் ஒருவன்
தேவனவன் அல்லோ

Page 10
s 9 <கோணமலை யான குணமலை
தென்னிந்தியர்கள் மேற்குத்திசை நாடுகளோடும். தென்கிழக்காசிய நாடுகளோடும் நடத்திவந்த வர்த்தகம் இன்று நேற்று நடந்துவந்ததல்ல. மிகப் புராதன காலத்திலிருந்தே நடந்து வந்திருக்கிறது.
“முத்து, பொன், தந்தம், அரிசி, மிளகு முதலியவைகளும் thயில்களும் , குரங்குகளும் கூட பபிலோன், எகிப்து, கிரிஸ் ஆகிய நாடுகளுக்கும், பிறகு ரோமாபுரிக்கும் அனுப்பப்பட்டன. இவைகளுக்கு முன்பே மலையாளக் கரையிலிருந்து தேக்கு மரம் சால்டியாவுக்கும் பபிலோனுவுக்கும் அனுப்பப்பட்டு வந்தன.
திராவிடர்களால் ஒட்டப்பட்ட இந்தியக் கப்பல்களிலே இப்பொருட்கள் அனைத்தும் அல்லது பெரும்பாலும் கொண்டு போகப்பட்டன. புராதன உலகத்தில் தென்னிந்தியா எத்தகைய உன்னத ஸ்தானம் வகித்து வந்ததென்று இதனால் தெரிந்து கொள்ளலாம்.”
“வட இந்தியாவை விடத் தென்னிந்தியா கடலோடு அதிக உறவு கொண்டாடியது. வெளிநாட்டு வியாபாரம் பெரும்பாலும் தென்னிந்தியாவுடன் தான் நடைபெற்று வந்தது. பழந்தமிழ்ப் பாடல்களிலே யவனர்களைப் பற்றிய குறிப்புக்கள் மிகுந்து காணப்படுகின்றன. யவன தேசத்து மதுவகைகள், பூந்தாழிகள், அணிவிளக்குகள் முதலியவற்றைப் பற்றித் தமிழ்நூல்கள் கூறுகின்றன. யவனர் என்ற சொல் முதலில் முக்கியமாக கிரேக்கர்களைக் குறித்து நின்றது. பிறகு அந்நிய நாட்டவர் அனைவருக்கும் அப்பெயர் பொதுவாக வழங்கலாயிற்று.”
கிழக்குத் தேசங்களில் இந்தியக் குடியேற்றங்கள் ஏற்படுவதற்குக் காரணமாயிருந்த பெருமுயற்சியில் தென்னிந்தியாவே வழி காட்டியாக இருந்தது. வெளிநாடுகளில் குடியேறும் நோக்கத்துடன் பலர் புறப்பட்டுச் சென்றார்கள். இது கி.பி. முதல் நூற்றாண்டில் ஆரம்பித்துப் பல நூற்றாண்டுகள் வரையில் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. மலாய் நாட்டுக்கும் கம்போடியாவுக்கும், யாவா, சுமத்திரா, போர்னியோ முதலான தீவுகளுக்கும் அவர்கள் சென்று குடியேறினார்கள். அவர்கள் தங்களோடு
14

கூடவே இந்தியக் கலைநாகரிகங்களையும் கொண்டு சென்றனர்.”
“இத்தகைய ஆற்றல் வாய்ந்த தென்னிந்தியக் கடலோடிகள் மிகவும் குறுகலான கடலைக் கடந்து தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்குச் சென்றது பெரிய காரியமல்ல” என்று ஜவகர்லால் நேரு தமது உலக சரித்திரத்தில் கூறியுள்ளார்.
தென்னிந்திய மக்களின் நீண்ட கடல் கடந்த பெரும் பிரயாணங்களை நோக்கும்போது மிக அண்மையிலுள்ள இலங்கையோடு கிறிஸ்துவுக்கு முற்பட்ட பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தென்னிந்தியர்கள் தொடர்பு கொண்டிருக்க வேண்டுமென்பது தெளிவாகின்றது.
இலங்கையில் வட பகுதியோடு சிறப்பாக வடகிழக்கு, வடமேற்குப் பகுதிகளோடு முதன் முதல் தொடர்பு கொண்டவர்கள் தென்னிந்தியர்கள் என்று கூறின் அதில் தவறிருக்க நியாயமில்லை.
தென்னிந்தியக் கடலோடிகளுக்கு இலங்கையின் வடகிழக்கில் உள்ள துறைமுகமும் வடமேற்கில் இருந்த துறைமுகமும் இலங்கையில் வந்து இறங்குவதற்கும் மிக வாய்ப்பாக இருந்தன. அதன் காரணமாக வடகிழக்கிலுள்ள திருகோணமலைத் துறைமுகமும் வடமேற்கில் இருந்த மாதோட்டம் என்னுந்துறைமுகமும் அவற்றைச் சூழ்ந்துள்ள பின்னிலங்களும் மிகப் பழங்காலத்திலிருந்தே இன்று வரையும் இந்து சமயத்தைச் சார்ந்த தமிழர் வாழ்ந்துவரும் பிரதேசமாகக் காட்சியளிக்கின்றது.
இன்று நடைபெறும் குடியேற்றத் திட்டங்கள் மூலம் மற்றைய இனத்தவர்கள் பெருந்தொகையாகக் குடியேற்றப்பட்டுக் கொண்டுவந்தாலும் புராதன காலந்தொட்டு இன்றுவரை திருகோணமலைப் பகுதியில் இந்து மதத்தைச் சேர்ந்த தமிழ்மக்கள் தொடர்ச்சியாக இடையீடின்றி நிலையான குடிமக்களாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என்பதில் ஐயமே இல்லை.
கோணமலையின் பின்நிலம் வளம் வாய்ந்த பூமியாக இருந்தமையும் மகாவலிகங்கையின் நீர் வளமுள்ள நிலப்பகுதிகள் அண்மையில் இருந்தமையும் தென்னிந்தியத் தமிழர்கள் இங்கே தங்கி குடியேற்றங்கள்
15

Page 11
அமைப்பதற்குச் சாதகமான காரணிகளாக இருந்தன. எனவே, காடாகக் கிடந்த இப்பகுதிகளை அழித்து நாடாக்கினர். காடுகள் இருந்த இடங்களில் கழனிகள் தோற்றம் பெறலாயின.
அத்தோடு இங்கிருக்கும் இயற்கைத் துறைமுகமும் அவர்களின் வர்த்தகத்துக்கும் தாய்நாட்டோடு தொடர்பு கொள்வதற்கும் உதவியாக இருந்த காரணத்தால் ஓர் நிலையான பழந் தமிழ்க் குடியேற்றம் இங்கு ஏற்படலாயிற்று. இது மட்டுமன்றி இப்பகுதி உப்பு விளையும் பிரதேசமாகவும், முத்துக்குளிப்பதற்கேற்ற இடமாகவும் இருந்த காரணத்தால் தென்னிந்திய வர்த்தகர்களின் வர்த்தகத்துக்கு இத்துறைமுகப் பட்டினம் சாதகமாகவே இருந்திருக்க வேண்டும்.
ஆரம்பத்தில் குடியேற்ற வாசிகள் வான் மழையையும் ஆற்று நீரையும் நம்பியே வேளாண்மையில் ஈடுபட்டிருந்தனர். தாம் வாழும் இத் திருகோணமலைப் பகுதியில் வழிபாடு செய்வதற்காகக் கோயிலொன்றையும் அமைத்தார்கள். கோயிலைச் சூழ்ந்துள்ள வேளாண்மை செய்யும் நிலங்களையெல்லாம் கோயில் நிலங்களாகவே கருதப்பட்ட வந்தன. அவர்கள் அமைத்த கோயிலைச் சுற்றியே அவர்கள் வாழ்க்கை அமைந்தது.
(கழகப் புலவர் பெ. பொ.சிவசேகரம்)
இவ்வாறு கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே திருகோண மலையில் தோற்றம் பெற்ற கோயிலே கோணேசர் கோயிலாகும். இதுவே திருகோணமலையரில் தோன் றிய முதற் கோயரிலுமாகும் .
மரக்கலத்தில் செல்லும்போது கடலிலிருந்தே பார்த்து வணங்கக் கூடியதாக ஆழமான கடலுள் நீண்டு வளைந்து கிடக்கும் மலை உச்சி யில் இக்கோயிலை அமைத்தார்கள்.
இலங்கையின் குணதிசையில் இம்மலை அமைந்திருந்த காரணத்தினால் இதனைக் குணமலை என்று பெயரிட்டு அழைத்தார்கள். குணமலை என்னும் பெயர் நாளடைவில் மக்கள் நாவில் பயின்று திரிபு பெற்றுக் கோணமலை என்னும் உருவத்தைப் பெற்றுவிட்டது.
16

கிழக்குத் திசையைப் பழந்தமிழர்கள் குணதிசை என்றே அழைத்து வந்தனர். மேற்குத் திசைக்குக் குடதிசை என்ற பழந்தமிழ்ப் பிரயோகம் இருப்பதையும் காணலாம். கிழக்கு, மேற்கு என்ற இரு சொற்களுமே முறையே கீழ், மேல் என்ற இடப்பொருளில் வந்தள்ளனவே தவிர திசைப்பொருளில் வரவில்லை.
அவ்விரு திசைகளும் முறையே குணக்கு, குடக்கு என்ற சொற்களால் குறிக்கப்பெற்றுள்ளன. என்று டாக்டர் செ.வை.சண.முகம் அவர்கள் “ சங்க இலக்கிய மொழி அமைப்பு” என்னும‘கட்டுரையில் எடுத்துக் காட்டியிருப்பதையும் கண்டு தெளிக. குணகடல், குணவாயில், குனதிசை முதலிய இலக் கிய வழக்காறுகளும் இதனை உறுதிப்படுத்துகின்றன.
இக்கோயில் மிகப் பழமையானது என்பதைக் குணமலை" என்னும் இவ்வூர்ப் பெயரே எடுத்துக் காட்டி நிற்கின்றது. கோணேசர் கோயில் இலங்கையிலுள்ள கோயில்களுக்குள் மிகப் புரதானமான கோயில் என்னும் எண்ணமும் மக்கள்மத்தியில் உலாவுகின்றது. வட கயிலையின் சிகரங்களுள் ஒன்றாகக் கூறப்படும் கதையும், இராவணனால் வணங்கப் பெற்ற கோயில் என்றும் சொல்லப்படும் இக்கோயிலின் பழமையைப் பற்றி மக்கள் கொண்டிருந்த எண்ணத்தைப் பிரதிபலிப்பனவாகவே இருக்கின்றன.
(silfig6f 13-04-2006)
விஜயன் இலங்கைக்கு வருவதற்கு முன்பே இங்கு ஐந்து சிவாலயங்கள் இருந்தன. அவற்றில் ஒன்று திருக்கோணேஸ்வரம்.
- வரலாற்றாசிரியர் பீரிஸ் -
17

Page 12
签滚
“இருளினில் தேசம், ஏற்றுக தீபம்’ என்ற அர்த்த புஷ்டியுடன் அமைக்கப்பட்ட வாசகத்தை அட்டையில் தாங்கி வெளிவந்த போது' இதழ் 45 இன் ஆசிரிய தலையங்கம் என் மன உணர்வுகளுக்கும் ஒத்துப்போவதால் - அப்பட்டமாக எனது சிந்தனையை வேறொரு கோணத்தில் பிரதிபலிப்பதால் - இந்தத் திறந்த மடல்!
'ஆறாம் அறிவு’ என்ற பகுத்தறிவு மனிதனுக்கு இருப்பதாற்றான் போலும் அவன் மிருகங்களை விடக் கொடியவனாக மாறுகின்றான். அதன் உச்சபலம், அதிகாரக் குவிப்பு மையம்!
ஆழ் மனதினுள்ளே மறைந்திருக்கின்ற உணர்வுகளெல்லாம் ஒருவன் அதிகாரத்திற்கு வரும்போதே அம்பலத்துக்கு வருகின்றது. நேற்றுவரை நண்பனாய் - தோழனாய் - “மச்சான்’ உறவு போட்டு வாய்க்குவாய் - சொல்லுக்குச் சொல் இனிமையாய் நடந்தவன் ஒரு பதவி உயர்வென்று வந்தபோது, அந்த நண்பர் மீதே அதிகாரத்தைப் பிரயோகிக்க முயல்வது நாம் அன்றாடம் காணும் நிதர்சனமல்லவா? சாதாரணன் ஒருவனின் உத்தியோக பதவியுயர்வே இந்தளவுக்கு இட்டுச் செல்லுமென்றால் அதிகார உச்சங்கள் எந்தளவிற்கு ஏறும் என்பதை விளக்க வார்த்தைகளே தேவையில்லையல்லவா?.
கூடப் பிறந்தவர்களே சொத்து விவகாரத்தில் அடித்து மோதிக் கொள்கிறார்கள். அல்லது அமைதியாக இருப்பவனை ஏமாற்ற முனைகிறார்களே.
இந்த லட்சணத்தில் 'நிறைவேற்று அதிகாரமும் கிடைக்கப் பெற்றால் அதன் விளைவு என்னாகும்? உண்மையில் நிறைவேற்று அதிகாரம் என்ற பதத்தை அர்த்தபுஷடியுடன் பயன்படுத்துவதாயின், யதார்த்த்ததை உணர்ந்து நியாயமற்றவற்றைப் புறந்தள்ளி, தனது அதிகாரத்தின் வல்லமையை நியாயத்தின் பால் நிலைநாட்ட முயல்தல் வேண்டும். அதற்கு மாறாகத் தமது சிந்தனைகளில் உதிக்கும் அற்பத்தனங்களையெல்லாம் வலிந்து திணிக்கும் முயற்சிகளுக்கு தீனிபோடுவதற்கான சர்வதிகார
18
 

முத்திரையைப் பொறிப்பதற்காக இந்த அதிகாரக் குவிப்பின் உச்சம்? தமது பதவியைத் தக்கவைத்துக்கொள்ள - அல்லது பழிவாங்கவா அடக்கி ஒடுக்கப்பட்டுள்ளவர்களை மேலும் அதிகாரபூர்வமாக ஒடித்து முடக்கவா இந்த நிறேவேற்று அதிகார மையங்கள்-?
இந்த நாட்டின் நிறைவேற்று அதிகாரங்கள் கொண்டு பதவிக்கு வந்தவர்களையெல்லாம் ஒரு கணிப்புக்குள் கொண்டுவர சிறு
உதாரணங்களே போதுமானவை.
1970 முதல் 1977 வரையான ஆட்சியில் வெறுப்புக்கொண்ட பெரும்பான்மைச் சமூகம், மாறி மாறி ஆட்சிக்கு வரும் அதிகாரபூர்வமான கட்சிகளில் ஒன்றைப் பெரும் பின்னடைவுக்குள் தள்ளி, மாற்றுக்கட்சியிடம் அதிகாரத்தைக் கொடுத்ததன் விளைவு எதிர்க்கட்சி' என்ற ஸ்தானத்தையே பறிக்க - பறக்க வைத்தது.
அதன் மறு விளைவு சிறிய பெரும்பான்மையுடன் - தமது இனத்தின் ஒட்டுமொத்தமான ஆதரவுடன் தமிழர்களுக்கு எதிர்க்கட்சி’ என்ற அந்தஸ்து கிடைத்தது. அப்போதுதான் பெரும்பான்மைச் சமூகம் விழித்துக் கொண்டது. அதிகாரத்தைக் கைப்பற்றினாலும் தமது இனம் பின்னடைவு கண்டதைச் சகிக்க முடியாமல் “ பாராளுமன்றத் தேர்தல் தெரிவு முறையையே மாற்றியமைத்து விகிதாசார தேர்தல் முறையை - அதிக பலம் கொண்ட ‘முதல் நிறைவேற்று அதிகாரம் நிறைவேற்றியதன் மூலம் சிறுபான்மைக்கு எக்காலத்திலும் எதிர்க்கட்சி ‘அந்தஸ்துக் கிடைக்காமல் காப்பாற்றிக்கொண்டது.
அடுத்த நி.அ கொண்டவரோ அந்நியத் தலையீட்டுக்கு ஆப்புவைக்கும் முயற்சிக்காக மட்டுமே தன் ஆதர்ச தலைவரையே எதிர்த்து , தமிழர் தரப்பைக் காப்பாற்ற முயலும் நல்ல தலைவர் போல் நடித்து, மறுபுறம் ஒடுக்குமுறையையும் சமாந்தரமாக மேற்கொண்டார்.
அன்னாரின் அகால இழப்புடன் “திடீர்’ கதிரை சுகம் பெற்று வந்த நிஅகொண்டவரோ மரம், செடிகொடிகளென்றும் குருவிச்சை என்றும் வர்ணித்துக் தன் பதவியைத் தானே கவிழ்த்துக்கொண்டார்.
19

Page 13
“நி.அ.ஒழிப்பேன்’ என்று இடிமுழக்கம் செய்து சமாதான தேவதையாக வந்தவரோ, உலக வரலாற்றில் ‘சமாதானத்திற்கான யுத்தம்’ என்ற வார்த்தைப் பிரயோகத்துடன் நி.அ. குவிப்பை ஒழிக்க மறந்தார்.
அடுத்து அதே அதிகாரத்தைக் கைப்பற்றியவருக்கு, தனது பதவிக்கு ஒத்துழைப்புத் தர மறுத்த தமிழர் தரப்பின்பால் எப்படிக் கழிவிரக்கம் ஏற்படும்?
இருளினில் உழல்கின்ற இந்தத் தேசத்திற்கு தீபம் ஏற்றிவைப்பார் யார்?
சிந்திப்போம்; “திருவிடம் சிறக்க தெய்வமே அருள்க!” என்ற தங்கள் கோரிக்கையையே நாமனைவரும் திருமந்திரமாகச் செபிப்பதைத் தவிர வேறு வழியில்லை.
அதர்மம் அழிந்து தர்மம் ஒரு நாள் தலைதுாக்கும் என்ற கீதையின் போதத்தையும் நம்புவோமாக! அன்றைய ‘மகாபாரதம் இன்றைய தமிழினத்தின் தீர்க்க தரிசனமோ?
பாவம் , சிறுவர்கள்
* இலங்கையில் சுமார் 5 லட்சம் சிறுவர்கள் வேலைக்காரர்களாகப்
பயன்படுத்தப்படுகிறார்கள்.
* 1 லட்சம் சிறுவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படு
கின்றார்கள்.
* பத்தாயிரம் சிறுவர்கள் (வயது 6. 14) விபச்சார விடுதிகளிலும் 2 ஆயிரம் பேர் (வயது 10 - 18) உல்லாசப் பயணிகளின்
பிரதேசங்களிலும் தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றார்கள்.
(giLigóf 3/04/2006)
2O

சண்டையுடன் சச்சசரவு தொல்லைகள்
சகத்தினிலே சங்கிலியாய்த் தொடர்வதனால்
நிம்மதியாய் இருந்தயிள் நீணிலமே
நிம்மதிதனை இழந்தேதான் போனதடா?
கண்ணுக்கு இமைபோல வாழ்ந்தோரும்
கல்பினிலே கறையற்று வாழ்ந்தோரும்
வந்திட்ட கலகத்தால் வையகத்தில்
வாஞ்சையினை இழந்தேதான் துடிக்கின்றார்!
எல்லோரும் ஒன்றென்று கைகோத்து
இன்புற்று வாழ்ந்தனரே அன்று
எல்லாமே இன்றிந்த இகமீதில்
இல்லாமல் போச்சுதடா இறைவா!
மண்ணினிலே மகிழ்வற்று வாழ்கையில்
வறுமையது வந்தெமது வாழ்க்கையிலே
துண்பத்தை துயரத்தை தருவதனால்
தொல்லைகள் தரணியில் கூடுதடா
இவ்வாறு எங்களது வாழ்விந்த
இகத்தினிலே இண்பற்று போச்சுதடா:
வெவ்வேறு வழியினிலே தொல்லைகள்
வையத்தில் கொள்ளையாய்க் குவியுதடா
எம்.ரி.எம். யூனுஸ் காத்தான்குடி
21

Page 14
(மதம் இல்லாத பழந்தமிழர் வாழ்க்கை)
"மதமாற்றம்’ எனும் தலைப்பில் கவீரன் எழுதியுள்ள கட்டுரையில் (தினக்குரல் 26/3/2006) காணப்படும் கருத்துக்கள் சில விவாதத்திற்கும் சர்ச்சைக்கும் உரியவை. எனவேதான் அவை தொடர்பான கருத்துக் கள் சில இங்கே முனி வைக் கப் படுகின்றன.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஈழத்திலும் தமிழகத்திலும் வாழ்ந்த தமிழ்மக்கள் இயற்கையோடு ஒன்றிவாழ்ந்தவர்கள். மத உணர்வோ ஆன்மீகச் சிந்தனையோ தோன்றாத காலம் அது. தாம் வாழ்ந்த நிலங்களின் (முல்லை, குறிஞ்சி, நெய்தல், மருதம்) தன்மைக்கேற்ப தமது வாழ்க்கையை அமைத்துக் கொண்ட தமிழர்கள் அவர்கள். தம்மை வந்து சேரும் தீமைகளுக்கும் நன்மைகளுக்கும் தமது செயல்களே காரணம் என்று தத்துவ விளக்கம் தந்தவர்கள் . புகழுக்காக உயிரே போகட்டும் என்று புகன்றவர்கள்.
இந்தத் தமிழர்களுக்கு இயற்கை மீது அதீத ஈடுபாடு இருந்தது. இதன் விளைவாகவே முருகன் (அழகின் தெய்வம்) கொற்றவை (வீரத்தின் தெய்வம்) ஆகிய தெய்வ வணக்கம் அவர்களிடையே உருவாகியது. வேலன் என்பவன் வேல் ஏந்திய வீரனேயாவான்; வேறு ஒருவனல்ல. அவன் - அன்றையத் தமிழரின் புறவாழ்க்கையான போரின் நாயகன்.
அற்புதமான இந்த வாழ்க்கையைப் பற்றிப் பேராசிரியர் ஆவேலுப்பிள்ளை அவர்கள் இவ்விதம் எழுதுவார்.
இலக்கியம் வாழ்க்கையைச் சித்தரிப்பது என்பதை ஏற்றுச் சங்ககால இலக்கியத்தை ஆராய்ந்தால் அக்காலத்தில் மக்கள் வாழ்க்கையில் சமயம் முக்கிய இடம் பெறவில்லை என்பது பெறப்படும் வைதீகம், சமணம், பெளத்தம் என்ற வட இந்தியச் சமயங்கள் தமிழ் நாட்டிற்கு வரு முன்பு தமிழ் மக்கள் வாழ்க்கை ஆன்மீக ஈடேற்றத்தை நோக்கமாகக் கொண்டிருந்தது என்று கருத அக்கால இலக்கியச் சான்றுகள் இடந் தீரவில்லை. . . . தமிழ் மக்களுடைய வாழ்க்கை தமிழ் நாட்டின்
22

சூழலுக்கேற்ப அமைந்ததென்றும் பிற நாட்டினர் செல்வாக்கு தமிழ் மக்கள் வாழ்க்கையில் சிறப்பிடம் பெறவில்லையென்றும் உலகியல் வாழ்க்கையில் பூரண நம்பிக்கை தமிழ் மக்களிடையே நிலவியதென்றும் கூறலாம். (தமிழ் இலக்கியத்தில் காலமும் கருத்தும் பக்கம் 9-18)
இன்றைய மேலை நாட்டினர் போல உலகியலை (Materialism) இலக்காகக் கொண்டு வாழ்ந்த அன்றையத் தமிழர்கள் சமயம், மதம் எனும் சொற்களை அறிந்திருக்கவில்லை என்று கூறும் மறைமலையடிகள் இச்சொற்கள் (சமயம்,மதம்) தொன்மை மிகு நூலாகிய தொல்காப்பியத்திலும் இடம் பெறவில்லை என்பார். (தமிழர் மதம் பக்கம் - 46)
அடிகளார் கருத்துப்படி கி.பி 2ம் நூற்றாண்டிற்குப் பின் தோன்றிய நூல்களிலேயே இவ்விரு சொற்களும் குறிக்கப் பெற்றுள்ளதாகத் தெரிகின்றது.
அடிகளாரின் இக்கூற்று உண்மையாயின் தமிழகத்திற்குள் சமயங்களையும் மதங்களையும் கொண்டு வந்து சேர்த்தவர்கள் யார்? தமிழர் பண்பாட்டையும் அவர்தம் உலகியல் நோக்கத்தையும் தகர்த்து தமது நான்கு வேதங்களையும் வர்ணாச்சிரமக் கோட்பாடுகளையும் அவர்கள் மீது மெல்ல மெல்லத் திணித்தவர்கள் யார்? இந்தக் கேள்விகளுக்கு ஒரே ஒரு பதில் ஆரியர்கள் என்பது தான்.
கடைச் சங்ககாலத்தின் ஆரம்பத்திலேயே தமிழ் நாட்டில் காலடி எடுத்து வைத்த படித்து ஆரியர் கூட்டம் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த தமிழர் வாழ்க்கையில் பெரும் பாதிப்பை உண்டாக்கியதோடு அழகின் தெய்வமான முருகனை ஆறுமுகனாகவும் வீரத்தின் தெய்வமான கொற்றவையை காளி, துர்க்கையாகவும் உருமாற்றி அதில் வெற்றியும் பெற்றது. இவ்வுரு மாற்றம் பற்றி அறிஞர் டாக்டர் மா.இராசமாணிக்கனாரும் அவர் போன்ற அறிஞர் பெருமக்களும் ஆராய்ந்து கூறியிருக்கின்றமையை தமிழுலகம் அறியும்.
உண்மை இவ்விதம் இருக்கையில் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு “எமது இயற்கையோடு ஒன்றிய பண்டைய பாரம்பரிய வாழ்க்கையைப்
23

Page 15
போர்த்துக்கீசரும் டச்சுக்காரரும் பாழ்படுத்தி விட்டனர்’ என்று கவீரன் ஆதங்கப்படுகின்றார்.
கவீரனின் இந்த ஆதங்கத்தில் ஓரளவு உண்மை இருப்பினும் தமிழர்களை முதன் முதலாக மூளைச் சலவை செய்தவர்கள் வட இந்திய ஆரியர்கள் அல்லவா? இதனால் உண்டான விளைவை இன்று கூட தமிழ் நாடு அனுபவித்துக் கொண்டிருக்கின்றது. ஈ.வே.ரா.பெரியார் இந்த அந்நிய கலாசாரத்திற்கெதிராகத்தானே அன்று போர்க் கொடி தூக்கினார்? இந்த வரலாறு கவிரனுக்குத் தெரியாமல் போனது எப்படி?
இந்து மதம் என்பது இந்திய மதம் என்றே பொருள்படும். இந்து மதத்தின் உண்மையான ஸ்தாபகரும் ஆரியர்கள்தான். அதன் காரணமாகத்தான் இந்து மதத்தின் தாய் வீடாக வட இந்தியாவை அறிஞர் குறிப்பிடுவர்.
ஆனால், சைவ நெறி அப்படிப்பட்டதன்று. அது பழந்தமிழர் நெறி: தமிழகத்திற்கு மட்டுமே உரிய நெறி. இந்த உரிமையின் காரணமாகவே மாணிக்கவாசகர் ‘தென்னானுடைய சிவனே’ என்று மனமுருகப் பாடினார். இத்தகு சிறப்புக்குரிய தமிழர் நெறியை இந்துமதத்தின் பிரிவுகளில் ஒன்று என கவீரன் எப்படிச் சொல்லலாம்?
மேலும், சிவநெறி என்பதே ஒரு வகையில் பழந்தமிழரின் முருக வழிபாட்டையே பற்றி நிற்கும். ஏனெனில் சேயோன் (முருகன்) என்னும் சொல்லின் திரிந்த வடிவமே சிவம் எனும் சொல் என்பார் அறிஞர் மறைமலையடிகள் (தமிழர் மதம் பக்கம் - 145) ஈழத்தின் தமிழ் அறிஞர் பண்டிதர் வி. சீ. கந்தையா அவர்களும் இதே கருத்தையே எடுத்துரைப்பார்.
கவீரன் தமது கட்டுரையில் போர்த்துக் கசருக்கும் டச்சுக்காரருக்குமிடையே நடைபெற்ற சமயப் போர் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். இப்படிப்பட்ட போர்கள் தமிழ் நாட்டில் இடம் பெறவில்லையா? இன்று கூட அங்கு சைவமும் வைஷ்ணவமும் எலியும் பூனையுமாகத்தானே இருக்கின்றன.? சைவம் வளர்த்த சோழ மன்னர்களின் சமய நிலைப்பாடு கவீரனுக்குத் தெரியாதா?
24

மத்திய கிழக்கில் தோன்றிய மதங்களிடையே ஒற்றுமையில்லை என்றும் கவலைப்படும் கவீரன் இந்தியாவில் தோற்றம் பெற்ற வைதீகம், சமணம், பெளத்தம், சைவம் என்னும் மதங்களிடையே முழு அளவில் ஒற்றுமை இருக்கின்றது என்றா கருதுகின்றார்?
ஒவ்வொரு மதத்தவனும் தனது மதத்தில் ஏதோ ஒரு சிறப்பு உள்ளது என்று கூறுதல் ஆச்சரியத்துக்குரியதல்ல. ஏனென்றால் காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு. தமிழகத்தில் தமது வைதீக நெறியைப் பரப்ப முற்பட்ட ஆரியப்பிராமணரும் பெளத்த சமண துறவிகளும் தமது சமயங்களின் சிறப்புப் பற்றி கூறித்தானே தமிழர்களைத் தம் வயப்படுத்தியிருப்பார்கள்.?
ஓர் இனத்தவன் அல்லது மதத்தவன் ஏனைய இனத்தவனை, மதத்தவனை காட்டுமிராண்டி, மிலேச்சன் என்று கதைப்பது சர்வ சாதாரணமான சங்கதியே! ஆரியர்கள் திராவிடர்களை அமானுஷ்யர், அரக்கர், தாசர், அசுரர் என்று பழித்துரைக்கவில்லையா? அற்பத்தனமான இந்த சமாச்சாரங்களையெல்லாம் கவீரன் அரங்கேற்றலாமா?
இயேசுநாதர் இந்தியாவிற்கு வந்ததாகவும் கவிரன் எழுதியிருக்கின்றார். இப்படிக் கதைவிடும் கட்டுரைகளை நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே படித்திருக்கின்றேன். சரித்திர விடயங்கள் எழுதும்
போது சான்றுகள் வேண்டாமா?
gibi வாகரைவாணன
கற்றறிந்த கவீரன் இரண்டு ஆங்கிலச் சொற்களுக்குத் (BELIEF, FATH) தந்துள்ள விளக்கமும் ஏமாற்றத்தைத் தருகின்றது. ஏனென்றால் (Oxford Dictionary உட்பட) ஆங்கில அகராதிகள் இவ்விரு சொற்களையும் ஒத்த கருத்துடைய சொற்களாகவே குறிப்பிட்டுள்ளன. பேச்சு வழக்கில் கூட BELIEF குருட்டு நம்பிக்கையாகக் கொள்ளப்படுவதில்லை. இதற்குரிய ஆங்கிலச் சொல் Superstition என்பதாகும். இதனையே மூட நம்பிக்கை என்றும் சொல்வர்.
உண்மையில் சமய நம்பிக்கை என்பதும் கடவுள் நம்பிக்கை என்பதும் வேறு வேறானவை. இவற்றில் சமய நம்பிக்கையை குருட்டு நம்பிக்கை என்று கவீரன் கருதுவாராயின் அவரைச் சங்ககால தமிழன் என்று பாராட்டலாம். ஆமாம் கவீரன; நாம் ஏன் சங்ககாலத் தமிழர்களாக மாறி அவர்கள் வாழ்க்கை நெறியை மேற்கொள்ளக் கூடாது?
25

Page 16
1978களில் ஆரம்பமான மட்டக்களப்பு உளநல
உதவி நிலையப் பணிகள்
தற்போது மட்டக்களப்பில் தொழில்சார் உளநல நிலையம் (Professional Psychological Counselling Centre) 6T6örgi Guusso Susilio (5tb நிறுவனம், ஏறக்குறைய கால்நூற்றாண்டிற்கு மேலான நீண்ட வரலாற்றுப் பாதையை தாண்டி வந்திருக்கின்றது. 1978 களின் பிற்பகுதியில் திருகோணமலை, மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் வளாச்சிப் போக்கினை செம்மைப்படுத்தி வீரியமிக்கதாக்கும் நோக்குடன் அப்போதைய மறைமாவட்ட ஆயரின் தலைமையில் மறைமாவட்டத்திற்குரிய அருட்பணியாளர்கள் அனைவரும் இணைந்த வரலாற்று முக்கியத்துவம் மிக்க மாநாடு ஒன்று நடைபெற்றது. அம்மாநாட்டில் இளைஞர்களது உருவாக்கற் பணிகளுக்கென்று ஒரு ஆணைக்குழு உருவாக்கப்பட வேண்டுமென்ற ஒருமித்த கருத்து முனைப்புப் பெற்றதால் இளைஞர் 9,60) 600T d5 (5 (Lg (Youth Commission) 6I 6oi 3 69 (5 960) LDti உருவாக்கப்பட்டது. இதனைச் செம்மையாகவும் ஆக்கபூர்வமாகவும் ஸ்திரமாகவும் வழிநடத்தக் கூடிய ஒருவரைத் தேடியபோது அக்காலப்பகுதியில் தனது உளவியல் சார் கற்கைநெறியினை வெளிநாட்டில் நிறைவுசெய்துவிட்டு நாடுதிரும்பியிருந்த அருட்தந்தை போல் சற்குணநாயகம் அவர்களை இதற்குரிய இயக்குநராக நியமித்தனர். அன்றிலிருந்து இன்றுவரை அப்பணியினை ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட நடைமுறைகளுடாக ஒழுங்கமைவாக செயற்படுத்தி வருபவர் அருட்தந்தை போல் சற்குணநாயகம் அவர்களாவார்.
19ம் திகதி மாசி மாதம் 1978ம் ஆண்டு எமது நிறுவனம் இளைஞர் ஆணைக்குழு என்ற பெயரில் தன்னார்வத் தொண்டு அடிப்படையில் பணியாற்ற முன்வந்த சில இளைஞர் யுவதிகளைத் தனது அங்கத்தவர் குழுவாக அமைத்து (Team work) சூழல் செயற்பட்டதாகச் செயற்படுத்த, அக்குழு அங்கத்தவர்களுக்கு அருட் தந்தை அவர்களாலும் , வெளிநாடுகளிலும் பயிற்றுவிப்பாளர்களிற்கான பயிற்சிகள் (ToT) வழங்கப்பட்டு வந்தன. இவர்களுடாக அருட்தந்தையின் தலைமையில் திருகோணமலை, மட்டக்களப்பு மறைம்ாவட்டத்திலுள்ள பங்குத் தலங்களிலுள்ள அனைத்து இளைஞர்கட்கும் உளவியல் சார் தலைமைத்துவப் பயிற்சிகள்
26

வழங்கப்பட்டு வந்தன. இப்பயிற்சிகள் ஒருநாள் செயலமர்வாகவும் மூன்றுநாள் வதிவிட செயலமர்வுகளாகவும் நடைபெற்றதுடன் “இலட்சிய இளைஞன்” என்ற சஞ்சிகை ஊடாகவும் விழிப்புணர்வு ஆக்கங்களும் வெளிப்பட்டன. இதே காலப்பகுதியில் மறைமாவட்ட சமூகத் தொடர்பு நிலையத்தினால் மாதாந்த வெளியீடாக வெளியிடப்படும். “தொண்டன்’ சஞ்சிகையிலும் 'இளைஞர் அரங்கம்’ என்ற பகுதியினூடாக எமது நிலையம் விழிப்புணர்வு ஆக்கங்களை எழுதி வந்தது. இந்த ஆக்கங்களுக்கு சர்வதேச ரீதியில் பிரேசிலில் நடைபெற்ற இளம் பத்திரிகையாளர் மாநாட்டில் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
காலத் தின் தேவைக் கேற்ப தன் னுடைய கொள் கைகளையும், பணியரின் வீச்சு எலி லைகளையும் உருமாற்றிக்கொள்ளாத எந்த அமைப்பும் உறுதியுடன் நிலைத்து நிற்பது கடினம். இதனடிப்படையில் நாம் பெற்றுக்கொண்ட அனுபவமும் எமது நிலையத்தின் பணியினுடைய காத்திரமான போக்கும், இலங்கையிலுள்ள கத்தோலிக்க சமயத்தினருக்கு மாத்திரமன்றி ஏனைய சமூகத்திற்கும் வழங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதால் 1991ம் ஆண்டு இயேசுசபை இளைஞர் ஆய்வு நிறுவகம் என்ற பெயரில் இவ் ஆணைக்குழுவை விரிவுபடுத்தி இதனூடாக இலங்கையிலுள்ள எல்லா மாவட்டங்களிலும் எமது சேவைகள் விரிவுபடுத்தப்பட்டன. பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், இளைஞர் கழகங்கள், பங்கு இளைஞர் குழுக்கள், அரச, அரசசார்பற்ற நிறுவகங்களில் பணிபுரிவோர், கிராம அபிவிருத்திக் குழுக்கள், முன்பள்ளி ஆசிரியர்கள், பாடசாலை ஆசிரியர்கள் என்று எமது பயனாளிகளின் இலக்கும் குழுவும் விரிவடைந்து சென்றது.
இதே காலப்பகுதியில் எமது இயக்குநரான அருட்தந்தை போல் சற்குணநாயகம் அடிகளாரின் நேரடி வழிகாட்டலில் அவரது ஆக்கங்களையும் தாங்கிய தரிசனம்' என்ற முழு உளவியல் சார் சஞ்சிகை இரண்டு மாதத்திற்கொருமுறை எமது நிலையத்தால் வெளியிடப்பட்டது. இச் சஞ்சிகையின் ஒவ்வொரு இதழும் முக்கியமான பொருத்தமான ஒரு கருப்பொருளை மையமாக வைத்து வெளிவந்தது. இச் சஞ்சிகை இலங்கையில் மாத்திரமன்றி வெளிநாடுகளுக்கும்
27

Page 17
வினியோகம் செய்யப்பட்டது. இச் சஞ்சிகையில் வெளிவந்த சிறுகதைகளுக்கு அவுஸ்திரேலிய தமிழ்ச் சங்கத்தால் விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இவ் அனுபவங்களின் அடிப்படையில் அப்போதையப்
போர்க்காலச் சூழலும் எமது சமூகத்திற்கு முழுநேர உளநல உதவியை வழங்க வேண்டிய தேவையை உணர்த்தியது . அதன் அடிப்படையில் உளநலம் என்ற அமைப்பின் கீழ் அருட்தந்தை அவர்களால் முழு நேர உதவி வழங்கும் சேவை விஸ்தரிக்கப்பட்டது. இவ்வமைப்பின் கீழ் அருட்தந்தை அவர்களின் அனைத் துப் பணிகளும் ஒருங்கிணைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இயேசுசபை இளைஞர் ஆய்வு நிறுவகம் : இளைஞர், மாணவர்களுக்கான மனித உருவாக்கற் பயிற்சிப்பாசறை.
சிறுவர் சிறுமியர் இல்லம் : யுத்தத்தினாலும் ஆழிப் பேரலையினாலும் குடும்ப அங்கத்தவர்களாலும் அனாதரவாக்கப்பட்ட சிறுவர் சிறுமியர், மற்றும், சிறுவர் பாலியல் துஷபிரயோகத்திற்கு உள்ளான சிறுவர், வீதியோரச் சிறார்கள் போன்றோரை இல்லக் கட்டுப்பாடு என்ற வரையறை இன்றி தமது சொந்த வீட்டில் வசிப்பது போன்ற யதார்த்த சூழ்நிலையுடன் பராமரிப்பதுடன் அவர்கட்குத் தேவையான கல்வி, சுயதொழிற் பயிற்சி என்பவற்றையும் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
நந்தவனம் :
அதீத மன அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்டு, வீட்டு அங்கத்தவர்களாலும் ஒதுக்கப்பட்ட நிலையிலுள்ள நபர்களை அவர்கள் குணமடைந்து வீடுசெல்லும் சூழ்நிலையினை ஏற்படுத்தி வழிகாட்டும் ஒரு இடைத்தடங்கல் இல்லமாக அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றது.
வண்ணத்துப்பூச்சி சமாதானப் பூங்கா : யுத்த அனர்த்தத்தால் உளரீதியாகப் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களை நகர, கிராமிய ரீதியாக அடையாளம் கண்டு அவர்களது
28

மனநிலையில் உற்சாகத்தையும் சந்தோஷத்தையும் ஏற்படுத்துவதுடன் சாதி, மத பேதமின்றி ஒற்றுமையையும், சமாதானத்தையும் சிறுபருவம் முதற்கொண்டு ஏற்படுத்தப் பாடுபடுவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
போது” :
1998ம் ஆண்டு “போது” எனும் இச் சஞ்சிகை உளநல உதவி விழிப்புணர்வையும் உதவிக் கருத்துக்கள் பற்றிய அறிவையும் எல்லா மக்களுக்கும் பொதுவாகச் சென்றடைய வைக்கும் நோக்குடன் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வெளியிடப்படும் ஒரு வெளியீடாக எமது நிறுவகத்தினூடாக வெளியிடப்பட்டு வருவது ஒரு விசேட அம்சமாகும்.
திருமதி ஆர். தர்சினி
PPCC, LDL disas6T
மற்றும் எமது உளநல நிலையத்தில் தற்போதைய காலத்திற்கும் 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினாலும் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் பல்லாயிரக் கணக்கானோர் தமது உடைமைகளை, உறவினர்களை, சொந்தக் கிராமங்களை இழந்து உடல், உள பாதிப்புக்குள்ளாகிய வேளை அவர்கட்கு உடனடியாக உளநலத் தேவையினை வழங்கவேண்டிய அவசியத்தை உணர்ந்து தன்னார்வத் தொண்டு அடிப்படையில் சேவைபுரிய முன்வந்த கிட்டத்தட்ட 50 இளைஞர் யுவதிகளுக்கு உளவியல் பயிற்சி நெறிகளை அவர்களுடாக அளித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உளநல உதவிவழங்கி வந்த முதலாவது நிறுவகம் எமது நிறுவகமே என்பது மிகவும் பெருமைக்குரிய விடயமாகும்.இவர்கள் தொடர்ந்து தமது உளவியற் பணிகளை அம்பாறை, மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு வழங்கி அவர்கள் ஓரளவு குணமடையும் வரை தமது பயனாளிகளுக்குத் தொடர்ந்தும் உளநல உதவி வழங்கி அவதானித்து வருவது குறிப்பிடத்தக்கது.
எனவே மட்டக்களப்பு மாவட்டத்தில் பொருளாதாரத்தை ஈட்டுவதைக் கருத்தில் கொள்ளாமல் தன்னார்வத் தொண்டு அடிப்படையில் உளவியல் ரீதியான ஆர்த்மார்த்தமான சேவையினை எமது உளநல உதவியாளர்கள் ஆற்றிவருதல் குறிப்பிடத்தக்கது.
29

Page 18
உளநல உதவி நிலையத்தினால் 2006ம் ஆண்டில் வழங்கப்பட்ட உளநல மனித உருவாக்கற் பயிற்சிகள்
நடாத்தப்பட்ட பங்குபற்றியோர் பயிற்றப்பட்ட திகதி தொகை குழுவினர்
ஆண்/பெண்
19.02.2006 13 14 பேராதனைப் பல்கலைக்கழக
மாணவர்கள்
02.03.06-09.03.06 06 15 உளநல உதவி நிலைய வெளிக்கள
உளவளத்துணையாளர்கள்.
12.03.06-1403.06 89 − மட்/ புனித மிக்கேல் கல்லூரி தேபா
மாணவத் தலைவர்கள்.
24.03.06-25.03.06 06 21 உளநல உதவி நிலைய வெளிக்கள
உளவளத்துணையாளர்கள்.
04.04-06-05.04.06 24 புனித ஜோன் இல்லப் பெண்
ouTallust GTsiboil
07.04.06 06 19 உளநல உதவி நிலைய வெளிக்கள
உளவளத்துணையாளர்கள்.
30

வாழ்க்கை என்பது . . .
ஒவ்வொரு உயிருக்கும் வாழ்க்கை ஒரு போராட்டம்
புழு பூச்சிக்குக் கூட இது பொருந்தும்
சாவதற்கு எதுவும் சம்மதிப்பதில்லை
வாழ்க்கையின் இரகசியம்
இதுவே
‘சுயம்’ தான் 岛津 ஒரு மனிதனின் s
சுத்தமான அடையாளம்
இதனை இழந்தவன் இறுதி வரை அடிமைதான்
9 foot O ஒருவனின் பிறப்போடு ஒட்டி வருவது
இறைவன் கூட மீண்டும் இதை எடுத்துக்கொள்வதில்லை!

Page 19
மாளிகைை மணி குடின
புத்தரின் ம குருதிப் புை
மன்னராட்சி அங்கு மரணப்படுக்
சர்வதிகாரத் சனநாயகம் FTSE LDF f
(քLգLITEե அங்கு முடி குடியரசு கோலோச்சு
உயிர்ப்பவியீ மக்களர்
உரிமைக்காக ஒரு பெரும்
இந்த யாகம் அருகில் உ இமயமலை
அதிர்ந்து டே
 

Ᏹ YᏱᏉᎫ *Ꮑ Ꮩ" 三ー
U/7677 4//2 ===_—
V/1/Vへへss干 பில்
கின்றது!
ய எதிர்த்து ச யுத்தம்
ண்ணில் ால் வெள்ளம்
கையில்
திற்கு
அடிக்கும் இது
வுறும்
ந்து
நடத்தும் பாகம்
கண்டு உள்ள