கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தொடர்பு 1992.06-07

Page 1


Page 2
நுகர்வோரின் வசதிக்காக . .
suub Uddsú
* பெற்றோரின் பொறுப்புக்களும் பெலவீனங்களும் AXA 9.
米 பெற்றோரும் பிள்ளைகளும். _ы__ 6
* உலகம் ஒரு குடும்பம். _ы_ 9
* வேதாகமம் பயில்வோம். 14
* திருமண சேவை. - 19
* சாத்தானும் குடும்பத்தில் ஒர் அங்கத்தவனா? mus 20
* திருச்சபையும் கிறிஸ்தவ குடும்பமும், ~ 25
* கவிதைக் களம்: ακ 28
* பைபிள் கொர் - லங்கா’ 30
* அன்பார்ந்த வாசகர்களே தலைப்பு "வாசகர் தொகுப்பு ஆகும். எனவே
அடுத்த இதழுக்கான இன்றைய சிந்தனைகள் - தேவைகளுக் கேற்ற உங்கள் கதை - கவிதை - கட்டுரைகளை மிக விரைவில் எதிர்பார்க் கிறோம் . ஏற்றவை பிரசுரிக்கப்படும். gr(G3 g55r Gohn Rev. R. Thurairajah, 6. Balahenamulla Lane, Colombo 6, என்ற முகவரிக்கு M. O. மூலமாகவே அனுப்பி வையுங் கள். காசு பெறும் தபாற் கந்தோர் வெள்ளவத்தை எனக் குறிப்பிட ճւյւ0. மற்றும் சஞ்சிகை சம்பந்தமான விடயங்கள் வினாக்கள் போன்ற gas a Qart-ril 3,625th THE EDITOR, THODARPU, DASON'S -90 KANDY ROAD, KENGALLA GTGÖTSDJub Glav T 75 Sfd5 ayy'ı9 Gauji கப்படல் வேண்டும்.
தயவு செய்து இவ் விரு விலாசங்களையும் ஞாபகத்திற் கொள்ளவும்,
* உங்கள் ஆண்டுச் சந்தாவை செலுத்திவிட்டீர்களா? நாமதிக்காமல் ஓர் அங்கத்தவராகி கிறிஸ்துவுக்கும் மக்களுக்குமான தொடர்பை வலுப்படுத்திக் கொள்ளும் பணியில் இணைந்து கொள்ளுமாறு நேசக் கரம் நீட்டுகிறோம். .67flurř
Thodarpu (magazine) - Chiristian Communications
Director – Rev. R. Thurairajah
Editor - Devadas an Jeyasingh
Printers - New Ferrine Printers, Dehivela. Te: 727204
4th ISSUE RS, 10/- 25th JUNE 1992

அன்பார்ந்த வாசகர்களே!
எல்லாம் வல்ல இயேசுவின் இனிய நாமத்தில் உங்களை வாழ்த்து கிறேன்.
அநேக வாசகர்கள் காட்டிவரும் ஆர்வமும், ஊட்டி வரும் ஊக்க மும் நாலாவது இதழை ஏற்றிவைக்கும் நற்பணிக்கு அடி கோலியுள்ளன. இறைவனுக்கும் எனக்கும் உள்ள "தொடர்பு இடையிலே தடைப்பட்டு விடக்கூடாதென பிரார்த்திக்கிறேன்" என எத்தனையோ பேர் எழுதி யிருந்தீர்கள். அறுபதுக்கு மேற்பட்டோர் இம்முறை ஆண்டுச் சந்தாவை அனுப்பி அங்கத்தவராகியுள்ளிர்கள். அனைவருக்கும் எமது பாராட்டுக் கள். ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக்.
அச்சகச் செலவுகள் அதிகரித்திருக்கும் இக்காலகட்டத்தில் உங்கள் ஒவ் வொருவரது ஒத்துழைப்பும் "தொடர்பு" க்கு அத்தியாவசியம் என்பதை நினைவு படுத்த அவசியமில்லை. என்றாலும் ஏற்கனவே சந்தா செலுத் தியவர்களுக்கும் இம்முறை சந்தாதாரர்களாக இணைந்து கொள்பவர்களுக்கு மட்டுமே அடுத்த (ஐந்தாவது) இதழை அனுப்ப உத்தேசித்துள்ளோம்.
எனவே, தொடர்பை தொடர்ந்தும் பெற விரும்புவோர் சந்தாப் படி aufs60er frü1 a-flu G),5me)SuL6är Rev. R. Thurairajah, Director, 6, Balahenamula lane, Colombo. 6. srašr Ap 6ílav Tyš8 bg5 Jugpů வையுங்கள். சற்தா விபரம் கடைசிப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது:
மேலும் நீங்கள் ஒவ்வொருவரும் ஏதாவது எழுத வேண்டுமெனவும் எதிர்பார்க்கின்றோம், கிறிஸ்துவுக்குச் சாட்சியாக உங்கள் ஆக்கங்களை எழுதி காலம் தாழ்த்தாது ஆசிரியருக்கு அனுப்பி வையுங்கன். இச் சஞ் சிகை பற்றிய கருத்துக்கள் - உங்கள் சந்தேகங்க்ள் போன்றவற்றையும் அனுப்பி வையுங்கள்.
இச் சிறிய சஞ்சிகை மூலம் தூவப்படும் வித்துக்கள் நன்னிலங்களில் விழுந்து நற்பலனைத் தர, விசுவாசமுள்ள உங்கள் வேண்டுதல்களினாலும் தாராளமான உதவிகளினாலும் இக் கைங்கரியத்துக்குக் கை கொடுக்க வருமாறு மாசற்ற இயேசுவின் மாண்புறு நாமத்தால் அழைக்கின்றேன்.
இச் சஞ்சிகை உங்களுக்கு ஆசீர்வ்ாதமாய் அமைவதாக, கிறிஸ்துவின் பணியில், தேவதாசன் ஜெயசிங்

Page 3
பெற்றோரின் பொறுப்புக்களும்
பெலவீனங்களும்.
அருட்திரு. ஆர். துரைராஜா
பணிப்பாளர்
தம்மைத் தாமே கவனித்துக் கொள்ளும் பருவத்தை அடையுமுன்னரே பிள்ளைகள் கஷ்டப்படுவது குறித்து உங்கள் உள்ளம் வேதனையடைந்த துண்டா? உங்களுக்கு ஒரு பிள்ளை இருப்பின் நிச்சயமாக இவ் அணுப வத்தை நீங்கள் பெற்றிருக்கக்கூடும்.
எந்தவொரு பிள்ளையும் தன் இளவயதில் தனித்தியங்க முடியாதென் பதால் அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியது பெற்றோ ரின் பொறுப்பாகும். இளைஞரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு இறைவனை நாடும் வழிகளுக்கூடாக அவர்களை நடத்திச் செல்வதும் அவசியமாகும். கர்த்தருடைய கிருபையின் ஆட்சியின் கீழ் இளம் மந்தை யினர் வந்து சேரும் வரை பெற்றோர் கடவுளின் இடத்திலிருந்து வழி நடத்திச் செல்ல வேண்டியது இங்கு கட்டாயமாகின்றது.
பொறுப்பு
பழைய ஏற்பாட்டின் காலத்திலே ஆசாரியனாகிய ஏலியுடன் கர்த்தர் பேசிய வார்த்தைகளைக் கவனியுங்கள். "நீ என்னைப் பார்க்கிலும் உன் குமாரரை மதிப்பானேன்? என்னைக் கணம் பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்; என்னை அசட்டை பண்ணுகிறவர்கள் கனவீனப் LuG69aumtrifasshʼ (1 «Fmtoyp 2:29, 3 0)
"அவன் குமாரர் தங்கள் மேல் சாப்த்தை வரப்பண்ணுகிறதை அவன் அறிந்திருந்தும் அவர்களை அடக்காமற் போன பாவத்தினிமித்தம் நான்" அவன் குடும்பத்துக்கு என்றும் நீங்காத நியாயத்தீர்ப்புச் செய்வேன்" ( 1 Frtop 9:13) −−
அதே வேளை, யோபு என்னும் நீதிமான் தனது பொறுப்புக்களைச் செவ்வனே நிறைவேற்றினான் எனப் பார்க்கின்றோம். (யோபு 1:5) அவன் தனது வீட்டிலே ஒரு ஆசாரியனைப் போல இருந்து சகல பாவங்களுக் காகவும் தொடர்ச்சியாக சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தி வந்தான். தனது ஏழு குமாரர்களும் மூன்று குமாரத்திகளும் ஒற்றுமையுடனும் அன் புடனும் வாழ்வதைக் கண்டு களிகூர்ந்தான் என்பதில் சந்தேகமேயில்லை. "இதோ குடும்பங்கள் ஒருமித்து வாழ்வது எத்தனை நன்மையும் எத் துனை இன்பமுமானது? ஆனால் அது யோபுவுக்கு மனநிறைவை அளிக்க
2

வில்லை. அவன் ஒரு பக்தியுள்ள தந்தையாக இருந்தமையால் தனது பிள் ளைகளுடைய ஆவிக்குரிய ஜீவியமே அவனது முதல் விருப்பாகவும் முக்கிய தெரிவாகவும் இருந்தது.
இதோ குடும்பங்கள் ஒருமித்து வாழ்வது எத்தனை நன்மை ? எத்துணை இன்பம்?
O பிரதம கவனம்
தனது குமாரர் தத்தமது குடும்பங்களோடு கூடி விருந்துண்டு மகிழ்ந் திருக்கும் வேளைகளிலே தவறுகள் ஏற்பட்டிருக்கலாம்; அவர்களின் எண் ணங்களிலேனும் பிழைகள் நேரிட்டிருக்கலாம்; அயோக்கியமான நடத்தை க்ளில் அவர்கள் ஈடுபட்டிருக்கலாம்; மாம்ச சிந்தையின் போக்கில் அவர் கள் கர்த்தரை மறுதலித்திருக்கலாம் என்ற எண்ணமே யோபின் இதயத் தில் பிரதம கவனத்திற்குள்ளாகியது.
குடும்ப வழிபாட்டு வேளைகளிலே அவர்கள் ஒழுங்காக ஒன்றிணைந்து வருகை தர வேண்டும்" என்பதில் அவன் அதிக அக்கறை காட்டினான். அவர்களின் நன்மை கருதி அவர்கள் மீது தனக்கிருந்த பொறுப்பை நடை முறைப்படுத்தினான். ஆயினும், அவனது பிள்ளைகள் வெவ்வேறு இல்லங் களில் தனித்தனி குடும்பமாக வாழ்ந்த போதிலும் கூட தந்தையின் விருப் புக்கு ஏற்ப செயற்பட்டார்கள் என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டிய தொன்றாகும். அவர்களனைவரும் ஒன்றிணைந்து வரும்படி அவன் அழைக் கும்போதெல்லாம் அவர்கள் எல்லோருமே சேர்ந்து வந்தார்கள். தன்னு டைய மக்கள் திருமணம் செய்து தனித்தனி குடும்பங்களாக வெவ்வேறு வதிவிடங்களைக் கொண்டிருந்த போதிலும் போபு அவர்களின் ஆன்மீக ஜிவியத்தில் அதிகாரமும் பொறுப்பும் மிக்கவனாகக் காணப்பட்டதை இங்கு அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. அப் பொறுப்பான ஆளுகைக்கு வளர்ந்த அப் பிள்ளைகள் மதிப்பளித்தமை இங்கு கோடிட்டுக் காட்ட வேண்டிய ஒன்றாகும்.
இறைவனோடு நாம் சரியாக இணைந்திருப்போமாயின் எமது பிள்ளை களுக்கான அதிகாரத்தோடு அவர் முன் நிற்க எமக்கும் உரிமை உண்டு என்பதை உணர எம்மில் அநேகர் தவறிவிடுகிறோம்.
இன்றைய காலகட்டத்தில் மேற்கத்திய நாகரீக தாக்கத்தினால் பிள் ளைகள் தன்னிச்சையாக விடப்பட வேண்டும் என்ற கொள்கை மேலோங் குவதன் பெறு பேறாக நடை முறையில் உள்ள எம் வாழ்க்கை முறை மாறுபடுவது மட்டுமன்றி, பெற்றோர் தம்மை அறியாமலே பிள்ளைகளில் பொறுப்பற்ற தன்மைக்குத் தள்ளப்படுகிறார்கள். அநேகம் பெற்றோர் தம் பிள்ளைகள் மீது அக்கறை செலுத்துவது கொடூரமானதென எண்ணி அதி னின்றும் தம்மை விலக்கிக் கொள்வதும் உண்டு.
3.

Page 4
O சமாதானத்தின் கிரயம்
வேலட்ை பளு நிமித்தமாக சிரமத்தோடு ஜீவிக்கும் ஒருவன் தனதில்லத் தில் சமாதானத்தையே நாடுகிறான், உலகப் பிரகாரமான பொறுப்புக்களி னின்றும், போட்டிகளினின்றும் விடுபட்டு வீட்டில் ஒய்வு பெற விளை இன்றான். உடல் - உள சமாதானத்தை அவன் நாடுகிறான். இதன் கார ணமாக குடும்பப் பொறுப்புகளுக்குத் தோள் கொடுப்பதிலிருந்து அவன் தவற வேண்டிய நிலை ஏற்படுகிறது, உண்மையில் அதுவே அவனது முதன் மையானதும் பெரிதானதுமான பொறுப்பாகும். அகனால் அவன் எவ்வ ளவு விலை கொடுத்தும் சமாதானத்தைப் பெற வேண்டும் என விரும்பு கிறான். தனது பொறுப்பை 'தாயின் பொறுப்பு' என அவன் கருத லாம். பொறுப்புக்களை ஏற்று ஆளுகை செய்ய சிலர் விரும்புகிறார்கள் சாதாரண வாழ்விலே சிலர் தலைவர்களாக ஆவதுண்டு; சிலர் ஆக்கப் படுவதுண்டு. ஆனால், குடும்ப ஜீவியத்திலே இது மாறுபட்டுக் காணப் படுகிறது. தகுதியுண்டோ - இல்லையோ ஒவ்வொரு தகப்பனும் குடும் பத்தை ஆளுகை செய்த தீர வேண்டும். அவனது திறமையின்மை அவ னுக்குரிய பொறுப்புக்களிலிருந்து அவனை விலத்தி விட மாட்டாது. தனது பொறுப்பினின்று தவறும் தந்தை அத்தவறின் பிரதிபலன் எதிர் காலத்தில் தன் மீதும் தனது பிள்ளைகளின் மீதும் ஏற்படுவதை அவதா னிக்கலாம். எனவே, பொருத்தமோ - பொருத்தமில்லையோ,தற்காலிகமாக வேனும் தலைமைப் பொறுப்பினை தந்தை ஏற்றுத்தான் ஆக வேண்டும்:
இறைவன் எனக்குக் கட்டளையிட்டிருக்கும் எனது கடமை
யாது? எம்மில் எழ வேண்டிய ஒரு வினா இது. . .
எமது பெலவீனம்
நமது தவறுதல்களுக்கான பிரதான காரணிகளையும் நமது பெலவீனங் களையும் பற்றிச் சிந்திக்கத்தான் வேண்டும். பொறுப்புக்களினின்றும் தவ றுதல் பற்றிப் பார்த்தோம், ஆனால் எமது பெலவீனங்கள்...? 'விசு வாசத்திற்கான இறுதிப்பரீட்சை இது” என நான் கூறுவேன்.
ஏலி என்பவனை நோக்குவோம். அநேக வழிகளால் அவன் நம்பிக்கை உள்ளவனாயிருந்தான். ஆனாலும் தன் பிள்ளைகளை அடக்கியாள இய லாத ஒரு பொறுப்பற்ற தந்தையாக அவன் இருந்தான். தாவீதை எடுத் துக் கொண்டோமானால், தேவனிடத்தில் முக்கிய இடத்தைப் பிடித்துக் கொண்டிருந்தவன்தான். ஆனால் அவனும் வழுவி விட்டான். சாமுவேல் அற்புதத்தால் கிடைக்கப்பெற்ற ஒரு மக்ன்தான். அவனது வாழ்க்கையிலும் வழுவுதல் ஏற்படத்தான் செய்தது. இறைவனோடு இணைந்து வாழ முய லும் எல்லாருடைய வரலாற்று வழிகளிலும் இத்தகைய நிகழ்வுகளை காணக்கூடியதாகவே இருக்கின்றது.

சிலவேளை, பரிபூரணமற்ற (ஆவிக்குரிய) விசுவாசம், இறைவனுடைய மக்களாக ஜீவித்தலின் குறைபாடு போன்றவை இத்தகைய பலவீனங் களுக்குக் காரணமாய் இருக்கலாம். இறைவனைவிடச் சிறந்த ஆளுநர் யார்? அவரைவிடவும் உயரிய உபாத்தியாயர் யார்? பயிற்சியளிப்பதிலும் ஒழுக்கத்திலும் அவரைவிடச் சிறந்தவர் யார்? .
"கர்த்தர் எவனிடத்தில் அன்பு கூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து தாம் சேர்த்துக் கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார்.” எனது சொந்த ஜீவியத்தில் நான் கர்த்தரின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமற் போனேனேயாகில் எனது பிள்ளைகளின் மீது அதிகாரம் செலுத்தும் உரி மையை நான் வைத்துக்கொண்டிருக்க முடியாது. “கர்த்தருக்குப் பயப்படு தலே ஞானத்தின் ஆரம்பம்" இதுவே குடும்பத்தை ஆளுகை செய்யும் தொழிலுக்கும் அதற்கான ஞானத்திற்கும் ஆரம்பமாகும்.
தனிப்பட்ட இறைபக்திக் குறைபாடும் ஒரு முக்கிய காரணி
urg5ib.
கர்த்தர் மேல் கொண்டுள்ள தனிப்பட்ட பக்தியிலுள்ள குறைபாடு
களே இப் பலவீனங்களுக்கும், தவறுக்ளுக்கும் ஆணிவேர்களாக அமைகின் றன எனவும் கூறலாம். பக்திக் குறைவுடனே கூட இன்னொன்றையும் இங்கு குறிப்பிடலாம். அதுதான் 'கருணை" என்ற பதத்தினால் தவறாக அழைக்கப்படும். "நற் சுபாவம் கொண்ட் பெலவீனம்" அது ஒரு குழந்தை யைக் கொல்லக்கூடியது. ‘அபரிமிதமான அன்பு" அவனை மரணப் பிடிக்குத் தழுவிச் செல்கிறது. அத்தகைய பாசம் எம்மில் இருக்குமாயின், பிள்ளை களைக் கண்டிக்கவோ - தண்டிக்கவோ எம்மால் இயலாது. சுருக்கமாகச் சொல்லப்போனால் இது ஒரு மென்மையின் உருவும் சொம்பலின் கருவு
மாகும். பெற்றோர் வேதனயடைவர் என்ற காரணத்தால் இத் தன்மை கள் தண்டனையால் வரும் வேதனைகளை மறுத்து நிற்கின்றன. ஒழுங் கீனமாக வளர்க்கப்பட்டும் உருப்படியற்ற பயிற்சியளிக்கப்பட்டும் வரும் குழந்தையின் பரிதாப நிலையைப் பற்றி இம் “மென்மைகள் உணர்வதே யில்லை. பாவம் அக்குழந்தை. பெற்றோர் தூவிய விதைகளை ஈற்றில் அவனே அறுவடை செய்ய வேண்டியதாகிறது.
சுயவெறுப்பும் தியாக சிந்தையும் அற்ற நிலையில் சிறந்தவொரு திறிஸ்தவ ஜீவியத்தை அமைத்துக் கொள்ள முடியாதென்பதை நாம் உடனே உணர்ந்தாக வேண்டும். எமது பிள்ளைகளை இறைவனின் வழியில் நடத்தும் உன்னதமானதும் தூய்மையானதுமான கடமைக்கு சுயவெறுப்பு அல்லது திய்ாகவுணர்வு அத்தியாவசியமானதாகும். அதிக விடாமுயற்சியும் அளவுக்கதிக கவனம் செலுத்துதலும் இப் பணிக்குச் சிலவேளை அதி முக் கியமானதாக அமையலாம். w (18 ம் பக்கம் பார்க்க)

Page 5
பெற்றோரும் பிள்ளைகளும்
Rev. D. T. Niles W
‘பிள்ளைகளே உங்கள் பெற்றோருக்குக்
கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள்' (εται 6: 1-14)
கர்த்தருக்குள் என்ற சொல் இப்பகுதியில் நோக்கற்பாலது. கிறிஸ்த வப் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் உள்ள உறவை விளக்குகையில் பவுல் இயற்கையான உறவை வலியுறுத்தவில்லை. ஆனால் கிறிஸ்தவ பெற் றோரும், அவர்களுடைய பிள்ளைகளும் இயேசுக்கிறிஸ்துவினால் ஒருவருக் கொருவர் உறவினர் என்கிறார்.
கொரிந்தியருக்கு அவர் எழுதிய நிருபத்தில் இக் கருத்தை விளக்குகி றார். இயேசுக்கிறிஸ்துவில் பங்குபெறுகிறவர்கள், அவருடைய மரணத்திலும் பங்கு பெறுகிறார்கள். அதன் விளைவாக உலக உறவு உலர்ந்து, கிறிஸ்து வுக்குள் புதிய உண்மையான, உள்ளான உறவு உருவாக்கப்படுகிறது. ஆகவே பெற்றோரும் பிள்ளைகளும் கர்த்தருக்குள் ஒருவருக்கொருவர் உற வினர் என்பதின் கருத்து, கிறிஸ்துவின் அன்பினால் அவ்வுறவு உய்த்துண ரப்படுகிறது என்பதாம். (2 கொரி 5:14-16)
விருத்தசேதனம் என்ற சின்னம் இஸ்ரவேல் மக்களுக்குத் தாங்கள் கர்த்தருடையவர்கள் என்பதற்கு அடையாளமாய் அமைந்திருந்தது. விருத்தசேதனம் செய்துகொண்டவர்களின் வம்ச உற்பத்தி அவனுடைய விருப்பத்திற்குட்பட்டதல்ல். ஏனெனில் அவனுக்குப் பிறக்கும் பிள்ளைகள் அவனுக்கு அல்ல, கடவுளுக்கே உரியவர்கள்,
பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமுள்ள இந்த உறவில் முதல் கடமை யாகப் பவுல் குறிப்பிடுவது, பெற்றோருக்குப் பிள்ளைகள் கீழ்ப்படிய வேண் டுமென்பதாகும். பத்துக்கட்டளைகளின் பிற்பகுதி மனித உறவைப் பற்றி யது. "உன் தகப்பனையும் தாயையும் கணம் பண்ணுவாயாக" கனம். பண்ணவேண்டுமென்பதே அப்பகுதியின் முதல் கட்டளை என்பதைப் பவுல் வலியுறுத்துகின்றார். “கனம் பண்ணுவது வேறு; கீழ்ப்படிதல் வேறு ஒருவனுடைய அன்புக்கும் ஆதரவுக்கும் பெற்றோர் உரிமையுள்ளவர்கள் என்பதை ஏற்றுக்கொள்வதே கனம் பண்ணுவதாகும். எடுத்துக்காட்டாக தங்கள் பெற்றோருக்குப் பிரியமில்லாதவைகளைப் பிள்ளைகள் இரகசிய மாகச் செய்வது கனவீனமாகும்.
பிள்ளைக்குப் பிரியமானதைச் செய்ய அதற்கு உரிமையுண்டு. ஆனால் அதை இரகசியமாகச் செய்ய அதற்கு உரிமையில்லை. ஏனென்றால் பவுல்

பயன்படுத்தும் "கீழ்ப்படிதல்" என்ற பதம் கர்த்தருக்குள் என்ற சொல் லுடன் த்ொடர்புபடுத்தப்பட்டிருக்கிறது. ஆகவே கீழ்ப்படிதல் என்பது கிறிஸ்துவின் அன்பினால் உந்தப்படுவதன் விளைவாக உண்டாகும் பண் பாகும்,
பழைய ஏற்தாட்டுக் கட்ட்ளையுடன் இணைக்கப்பட்டிருக்கும் “நீ நன் றாயிருப்பதற்கும், பூமியிலே நீ நெடுநாள் வாழ்வதற்கும் என்ற வாக் குறுதியையும் பவுல் நீனைவூட்டுகிறார், கீழ்ப்படியாமை சமூகத்தைச் சீர் குலைக்கும் தீமைகளுள் ஒன்று என ரோமா 1:30 இலும் 1 தீமோ 3:2லும் சொல்லப்பட்டிருக்கிறது. அநுபவ ஞானம் இளைஞருக்கு கிடைக்கும் பேறு; அதை உதறித் தள்ளுவது கேடு.
பிள்ளைகளைக் கோபப்படுத்த ராவண்டாம் என்று பெற்றோருக்குப் பவுல் அறிவுரை வழங்குகிறார், தவறிழைத்த பிள்ளை தன் தவறை உணர்ந்தபின் அதையே சுட்டுவது சரியல்ல. பிழை புரியாமலிருக்க விழை யும் விருப்பத்தைப் பாராட்ட வேண்டும் குறை கூறிக்கொண்டேயிருப்பது கேடு விளைவிக்கும்.
பவுல் கொலேசேயருக்கு எழுதின நிருவத்தில் "பிதாக்களே உங்கள் பிள்ளைகள் மணற்தளர்ந்து போகாதபடி அவர்களை எரிச்சலாக்கா திருங் கள்" என்று எழுதுகிறார். சில பெற்றோர் பிள்ளைகள் பிற்காலத்தில் எப்படிப்பட்டவர்களாக விளங்க வேண்டும் என்ற தங்கள் விருப்பத்தின் படியே தங்கள் பிள்ளைகளைத் திருத்த முயலுகின்றனர். தன்மகன் மருத் துவராக வரவேண்டுமென விரும்புகிறார் பேரவாமிக்க தந்தை. தாயோ தன் மகளுக்கு விரைவில் திருமணமாகிவிட வேண்டுமென விரும்புகிறாள். ஆனால் முக்கியமான கேள்வி பிள்ளைக்கு ஏற்றது எது? பிள்ளை ஆண் டவருக்குள் வளர்வது எப்படி என்பதுதான். பிள்ளையைத் திருத்தும் முயற் சியில் அதன் ஆன்மீக வாழ்வு வளம்பெற வில்லையாயின் அது சோர்வுறும்.
பவுல் எபேசியர் நிருபத்தில் தரும் எச்சரிக்கை மிகவும் கண்டிப்புள்ள ளதாக இருக்கிறது. பெற்றோர் பிள்ளைகளைச் சோர்புக்கு மட்டுமின்றி கோபத்திற்கும் ஆளாக்கலாமென்கிறார். பிள்ளையைத் திருத்தும் முயற்சி பெற்ாேறருக்கும் பிள்ளைகளுக்குமுள்ள உறவின் முறிவுக்குக் காரணமா யிடுந்தால் அதனால் பயனில்லை. பிள்ளைகளுக்குத் தங்கள் மீது வெறுப்பு ஏற்படாதபடிக்குப் பெற்றோர் பார்த்துக்கொள்ள வேண்டும்.
பெற்றோர் மூலமாகவே கடவுள் பிள்ளைகளை நேசிக்கிாார் என் பதைப் பெற்றோர் நினைவில் வைக்க வேண்டும்.
பெற்றோர் மூலமாகவே கடவுள் பிள்ளைகளை நேசிக்கிறார் என்
பதைப் பெற்றோரி நினைவில் வைக்க வேண்டும். தங்களுடைய மாறாத அன்பை அவர்கள் காணும்படிச் செய்வது பெற்றோர் கடமை.

Page 6
பெற்றோரைப் பற்றிப் பொதுவாகவும், GsólúL1/rs Sheme tDnsng', பற்றியும் பேசினோம். இதை இத்துடன் விட்டுவிடலாகாது.
தாய்மாரைக் குறித்துப் பவுல் திட்டவட்டமாக எதுவும் சொல்ல வில்லை. எனினும் தாய்மாரின் தனிப்பட்ட பணி பற்றிக் கூறித்தானாக வேண்டும். பிள்ளை பல சமயங்களில் தாயைத் தனக்குச் சமமாகக் கரு துகின்றது. குறிப்பாக இளம் பிராயத்தில் தன் விருப்பத்தை தாயின் விருப் பத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கிறது.
இவ்விதமாகப் பிள்ளையின் தனித்தன்மை வளர்ச்சி பெற்று தானும் ஓர் ஆள் என்ற உணர்வு உண்டாகிறது. அவ்விதமாகத்தான், அதற்கு அதள் உரிமையின் அளவு எவ்வளவு என்பதும் புலப்படும். இந்த உரிமை யின் அளவு பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் இயேசு கிறிஸ்துவில்அவர் களுக்காக வெளிப்பட்ட கடவுளின் அன்பினால் அளவிடப்படும்,
நீன்றி. வாழ்க்கையில் வல்லமை
சிந்தனைச் சிதறல்கள்
என் மகனே உன் தகப்பன் புத்தியைக் கேள்; உன் தாயின் போத கத்தைத் தள்ளாதே. அவைகள் உன் சிரசுக்கு அலங்காரமான முடியும், உன் கழுத்துக்குச் சரப்பணியுமாயிருக்கும்.
- நீதி. 1:8,9.
* குணசாவியான ஸ்திரீ தன் புருஷனுக்குக் கிரீடமாயிருக்கிறாள்; இலச்சை உண்டுபண்ணுகிறவளோ அவனுக்கு எலும்புருக்கியாய் இருக் கிறாள்,
17:1 .B50 --س- தன் தகப்பனையும் தன் தாயையும் துஷிக்கிறவனுடைய தீபம் காரிருளில் அணைந்து போம்.
-- Ss) 20:20
கு வருந்துகிறோம்
ஏற்பட்டி எதிர்பாராத அசெளகரியங்கள் எம்மி
டிையேயுள்ள தொடர்பின் இடைவெளியைச் சற்று அகல
மாக்கி விட்டிமை குறித்து வருந்துகிறோம்.

உலகம் ஒரு குடும்பம் எல்லோருமே இறைவனின் மக்கள்
குடும்பத்தின் உறுப்பினராக உள்ள ஒவ்வொருவரும் உழைக்க வேண் டும். அதுதான் நல்ல குடும்பம், சிலர் உழைக்க, சிலர் உழைக்காமலே அவர்களின் உழைப்பின் பயனை உண்டு சோம்பலாக இருப்பதால் அது போற்றத்தக்க குடும்பம் ஆகாது, உலகம் பெரிய குடும்பம். அதிலும் எல் லோரும் உழைக்க வேண்டும். உழைக்காமல் உயிர் வாழ எவருக்கும் உரிமை இருக்கக் கூடாது. திருடன் உழைக்காமல் பிறருடைய உழைப்பின் பய னைப் பெற்று வாழ்கிறான். அதனால் தான் அவன் சமுதாயத்தால் வெறுக் கப்படுகிறான். எதிர்காலத்தில் உழைக்காமல் உயிர் வாழ்வோர் எவரும் வெறுக்கப்படுவார்கள்.
உடம்பால் - கைகலால் - உழைக்கலாம். அறிவால் - மூளையால் உழைக்கலாம். சமுதாயத்தில் வாழ உரிமை பெற்றதற்காக எந்த வகை யிலாவது உழைத்து அந்த உழைப்பைக் காணிக்யைாகத் தர வேண்டும். உழைப்பில் உயர்வு தாழ்வு கருதக் கூடாது. பிறப்பால் உயர்வு தாழ்வு கருதுவது ஒரு காலத்தில் நாகரிகக் கொள்கையாக இருந்தது. இப்போது அது குற்றமாகக் கொள்ளப்படுகிறது. அதுபோலவே உயர்ந்த வேலை என் றும் தாழ்ந்த வேலை என்றும் உழைப்பால் வேறுபாடு செய்வதும் எதிர் காலத்தில் குற்றமாகக் கொள்ளப்படும். நிலத்தில் பயிரிடக் கைகளால் உழைக்கும் உழைபபும் நகரத்தில் மாவட்ட அலுவலகத்தில் மூளையால் உழைக்கும் உழைப்பும் ஒரேவகையான மதிப்பு உடையவனாகக் கருதப் படும் க்ாலம் வந்து கொண்டிருக்கிறது. பெறும் ஊதியத்தைக் கொண்டோ அல்லது அதிலிருந்து சேர்த்து வைத்த செல்வ வளர்ச்சியினைக் கொண்டோ இன்றைய சமுதாயத்தில் பெருமையும் சிறப்பும் தரப்படுகின்றன. அவை யும் மெல்ல மாறிவிடும். உழைப்பதில் என் பங்கைச் செய்கிறேன். சமுத யம் தரும் பயனைப் பெற்று வாழ்கிறேன்" என்று ஒவ்வொருவரும் உணர் வதற்கு மட்டுமே எதிர்காலத்தில் இடம் இருக்கும். அப்படிப்பட்ட மாறு தலை வரவேற்கும் மனப்பான்மை வேண்டும். கடவுளின் படைப்பில் எல்லாச்செயற்கை வேறுப்ாடும் மறைந்து சமுதாயத்தில் உறுப்பினராக வாழும் ஒத்த உரிமை உணர்ச்சி மட்டுமே நிற்கும் என்பதைத் தெளிய வேண்டும்.
புது உலகம் புகட்டி வரும் பாடம் 'மனிதர் யாவரும் சமம்" என் பதே. அறிவியலின்படி நோக்கினாலும் மனிதர் யாவரும் ஒரே நிலை

Page 7
யினரே. அந்தந்த நாட்டுத் தட்ப வெட்ப நிலையால் நிறத்தாலும், உட லமைப்பாலும் வேறுபாடுகள் சில அமைந்துள்ளன. ஆனாலும் அவைகளும் நிலையான வேறுபாடுகள் அல்ல. இடம் சூழ்நிலை முதலியவை மாறி னால், சில தலைமுறைகளில் நிறமும் அமைப்பும் மாறக் காண்கிறோம். நிறமும் உடல் அமைப்பும் கடந்து உடலின் உறுப்புகளின் இயல்பும் அமைப்பும் நோக்கினால், இதயம், நுரையீரல், மூளை முதலியவை வேலை செய்யும் பான்மையை நோக்கினால் மக்களிடையே வேறுபாடு இல்லை. இரத்தத்தின் சூடும் ஆராய்ந்தாலும் அவை எல்லோருக்கும் ஒரே வகை யாக இருத்தல் காணலாம். இந்தியன், சீனன், நீக்ரோ, வெள்ளையன் எஸ்கிமோ முதலான எல்லோருடைய உடம்பின் சூடும் 98.4 டிகிரி என் னும் அளவினதாகவே இருத்தலும் காணலாம். இன்ப துன்பங்களும், சினம் உவகை முதலிய உணர்ச்சிகளும் எல்லோருக்கும் பொதுவாக அமைதி திருத்தல் காணலாம்.
சமய நோக்கின்படி ஆராய்ந்தாலும் மக்கள் எல்லாரும் ஒரு கடவுளின் ஆட்சிக்கு உட்பட்ட குடும்பத்தினர் என்பதே முடிந்த முடிவாகும். எந்த வகையான வேறுபாடு கருதுவதும் இந்த நோக்கிற்குப் பொருந்தி வரா ததே ஆகும். நிறம் உடலமைப்பு முதலியவற்றை எந்தச் சமயநெறியும் உடன்படுவதில்லை. எல்லாரும் கடவுளின் மக்களே என்பதைச் சான்றோர் களின் அருள்மொழிகள் வலியுறுத்துகின்றன. நடைமுறையில் மக்கள் எல் லோரையும் தம்மவர் என்று கருதும் மனப்பான்மை வளர்ந்தால், அதுவே போதும். அது உலக வாழ்க்கைக்கு பெரு நன்மையாக முடியும். அதற்கு அடிபபடையாகவே உயிரிரக்கம் (சீவகாருண்யம்) முன்னோர்களால் அறி வுறுத்தப்பட்டது.
ஆகவே எந்தக் காரணத்தாலும் உயர்வு தாழ்வு கற்பிக்கும் மனப்பான் மையை ஒழிப்பது நல்லது. உலகம் அந்தக்கொள்கையை ஏற்று நடக்கும் போக்கில்தான் முன்னேறிவருகிறது. எத்தனை தடைகளும் தயக்கங்களும் இன்று காணப்பட்டாலும் எதிர்காலத்தில் அதைக் கடந்து ஒருவகை சமத் துவ நிலை ஏற்பட்டே தீரும். அதை இன்றே உள்ளத்தின் அளவில் உணர்ந்து மாறுதல்களுக்கு ஆயத்தமாக வாழுவது ஒரு நல்ல தொண்டு ஆகும்.
இது சமுதாயத்தின் அமைதிக்குத் தேவையாக இருக்கலாம். தனி மணி தரின் நல்வாழ்வுக்கும் இது தேவையா எனக் கேட்கலாம். சமுதாயம் எப் படி இருந்தாலும் அதன் தாக்குதலைக் கடந்து தனிமனிதர் தம் நல் வாழ்வுக்கு வேண்டிய வழியை வகுத்துக் கொண்டு அமைதியாக வாழ முடி யும். வாழ்வு என்பது பெரும்பாலும் ஒருவரின் மனத்தைப் பொறுத்தது என்பது உண்மைதான். பழங்காலத்தில் துறவிகள் தனியே ஒதுக்கிடம் தேடி அமைதியாக வாழ்ந்தது போல இக்காலத்திலும் ஒருவர் துறவி ஆகாமலே பற்றுகளைக் குறைத்துக் கொண்டு அமைதியாக வாழமுடியும் ஆனாலும் சுற்றுப்புறத்தோடு ஓரளவு போராட்டம் இருந்தே தீரும்.
O

அந்தப் போராட்டங்களைப் புறக்கணித்து ஒரு சிலர் புறத்தே என்ன இடையூறு வந்த போதிலும் உள்ளத்தில் அமைதியைக் காக்க முடியும். ஒரு சிலரே அவ்வாறு வாழ முடியும். அவர்களும் சில இன்னல்களை எதிரிட் டுப் போராட நேர்கிறது. பலர், சமுதாயச் சிக்கல்களால் தாக்குண்டு கலங்கவே நேரிடுகின்றது.
சமுதாயம் நல்ல வகையில் அமைந்து விட்டால் அந்த இடையூறு களும் இன்னல்களும் பலர் நல் வாழ்வு வாழ முடியும். ஆகவே, சமுதாயம் சீர்ப்படுதல் தனி மனிதனுக்கு எவ்வளவோ நன்மை ஆகும். அதனால் நல் வாழ்வை நாடும் ஒவ்வொரு நெஞ்சமும் சமுதாய நல்லமைப்பையும் நாடு வது கடமையாகும்.
சிலர் சீரும் சிறப்புமாக வாழ பலர் அவர்களைப் பார்த்து ஏங்கும் நிலைமையும், எதிர்க்கும் நிலமையும் சமுதாயத்திற்கு நல்லவை அல்ல. அவற்றால் ஏற்றத்தாழ்வும் பகை பூசலும் இருந்து வருதலால் சமுதாயத் தில் அமைதியாக வாழும் வாய்ப்பு இருப்பதில்லை, அதனால் நல்வாழ்வு வாழ வேண்டும் என்று விரும்புவோருக்குப் பல இடையூறுகள் நேர்கின் றன. அவற்றைக் கடப்பதில் முயற்சியும் ஆற்றலும் வீனிலே செலவாகின் றன. ஆகவே கூடிய வரையில் ஏற்றத் தாழ்வுகளைக் குறைத்து உழைப் பால் வாழ முடியும் என்ற நம்பிக்கை அளிக்கும் சமுதாயம் அமைந்தால் நல் வாழ்வு வாழ்தல் எளிதாகும்.
உலகத்தில் இப்படிப்பட்ட சமத்துவத்தை - பொதுமையை விரும்பும் ஒருவரின் நெஞ்சில் மற்றவர்களைவிட உயர்வாக விளங்க வேண்டும் என்ற ஆசை அரும்பாது. மற்றவர்களை விட மிகுதியாகப் புகழ் பெற வேண்டும் என்ற ஆர்வம் எழாது. மற்றவர்களை விட வளமாக வாழ வேண்டும் என்ற முயற்சியும் தோன்றாது. தாம் பெற்ற அமைதியின்பத்தை மற்றவர்களும் பெற வேண்டும் என்ற ஆசையே விளங்கும். அடுத்து உள்ளங்களை இந்த உயர் நெறிக்குத் திருப்ப வேண்டும் என்ற ஆர்வமே தோன்றும். அதற்கு உரிய வழியில் அவர்களுக்காகப் பாடுபட வேண்டும் என்ற முயற்சியே மிகுந்திடும். 'ஆசையறுமின்கள் ! ஆசை யறுமின்கள் ! என்று அவர்களுக்கு அறிவுரைகூறத் தேவையில்லை. இயல்பாகவே அவர்களின் நெஞ்சம் தன்னல ஆசை அற்றதாய்த் திகழும். ஆடம்பரத்தைச் சிறிதும் நாடாமல் எளிய வாழ் வையே நாடுவதாய் விளங்கும். குழந்தையைப் பெற்ற தாயின் மனம் இயல்பாகவே தன்னலம் துறந்து அன்புருவாய்த் திகழ்வது போல் இத் தகைய நெஞ்சம் பெற்றவர்கள் உயர்ந்த அறவோராய்த் திகழ்வார்கள். புலனடக்கம், எளிமை முதலியன இயல்பாகவே அவர்களுக்கு அமைந்து விடும். மற்றவர்களைவிடச் செல்வ வளம் காட்டித் திரிந்து பகட்டாக வாழ் வதை வெறுத்து கூடிய வரையில் எளிய உடை நடைகளை மேற்கொண்டு வாழ்வதையே விரும்புவார்கள்.
விரும்பியதைப் பெறுவதற்காகப் பலவகையாலும் முயன்று அலையும் அலைவு அவர்களின் வாழ்வில் இருக்காது. விரும்பியது கிடைக்காவிட்
Η

Page 8
டால், கிடைத்தது விரும்பி அமைதி அடையும் மனநிறைவு அவர்களிடம் காணப்படும். "செல்வம் - என்பது சிந்தையின் நிறைவே' என்று போற்றப் பட்ட அந்த நிலையான செல்வம் அலைவும் கவலையும் தராத உயர்ந்த செல்வத்தை அவர்கள் வாய்க்கப்பெறுவார்கள்.
படைப்பில் சில விந்தைகள் உள்ளன. சிலருக்கு அளவு கடந்த நினை வாற்றல் அமைந்துவிடுகிறது. அவர்கள் கணக்கு முதலிய சில துறைகளில் மேதைகளாக விளங்குகின்றார்கள். ஒரு சிலருக்குப் பிறருடைய எண்ணங் களை - மன அலைகளை - உணரும் ஆற்றல் அமைந்து விடுகிறது. அவர் கள் பிறரைப் பார்த்தவுடன் அவர்களின் நினைவுகளை அளந்து கூறித் திகைக்க வைக்கிறார்கள். ஒரு சிலருக்கு எங்கிருந்தோ கண் காணாமல் பொருள்களைத் தருவித்துக் கொடுக்கும் ஆற்றல் அமைந்து விடுகிறது. அவர்கள் வெறுங்கையால் பெற்றுத் தரும் பொருள்களைக் கண்டு மக்கள் மருண்டு போற்றுகிறார்கள். பாம்பின் நஞ்சு முதலியவற்றை மாற்றுவதி லும் சில நோய்களைத் தீர்ப்பதிலும் ஒரு சிலருக்கு ஆற்றல் கிடைக்கிறது. எல்லாம் ஒரு சிலருக்குச் ஒருசில காலத்திற்குக் கிட்டும் விந்தையான ஆற் றல் ஆகும். இவற்றை இயல்பானவை என்றோ நிலையானதென்றோ எண்ணி மருள்வதில் பயன் இல்லை. இயற்கையின் விந்தைகளாகக் காணப் படும் அவற்றால் மருண்டு போய் உயர்யு தாழ்வுகளைப் படைத்துக் கொள்ளக்கூடாது. அவ்வாறு அற்புதங்கள் செய்வோரும் கடவுளாட்சியில் அமைந்த சிறு கருவிகளேயென்று உணர்ந்துவிடவேண்டும். முயற்சியால் பெற முடியாத அந்த அற்புத ஆற்றல்களைப் போற்றுவதை விட்டு முயற் சியால் பெறக்கூடிய அறிவையும் பண்பையும் பெற்று வளர்வதையே குறிக்
கோளாகக் கொண்டு அமைதியுற வேண்டும்.
இவ்வாறு ஏற்றத்தாழ்வுகளும் அவற்றால் விளையும் பகை பூசல்களும் இல்லாத நல்ல சமுதாயத்தை விரும்புவோர் தாம் எதிர்பார்க்கும் அள விற்கு வேகமாக உலகம் மாறவில்லையே என்று கவலைப்படல் ஆகாது. தாம் கருதுவது போல் நடக்கவில்லையே என்று ஏமாற்றமும் வெறுப்பும் கொள்ளக்கூடாது. ஆத்திரமும் கொதிப்பும் அடைவதும் ஆகாது. - பத்து இருபது ஆண்டுகளோ ஒரு சில நூற்றாண்டுகளோ இந்த உலகத்தின் வர லாற்றில் மிகச் சிறிய பகுதியே ஆகும். செயற்கையாகப் பெரிய கட்டிடத்தை ஏழு எட்டுத் தினங்களில் அல்லது இரண்டு மூன்று ஆண்டுகளில் கட்டி முடித்து விடலாம். ஆனால் ஒரு ஆலமரத்தையோ வேப்பமரத்தையோ என்ன பாடுபட்டாலும் அப்படி இரண்டு மூன்று ஆண்டுகளில் வளர்த்து விட முடியாது அவை படிப்படியாக வளர்வதே இயற்கை பத்துப் பதினைந்து ஆண்டுகள சென்றால்தான் அவை அடர்ந்து படர்ந்த மரமாக வளர முடி யும். அதுபோலவே சமுதாய வளர்ச்சிக்கும் காலம் தேவைப்படும். அது வரையில் பொறுமையாக இருந்து நம் பங்கைச் செய்து முடித்துச் செல்ல வேண்டும்.
அவ்வாறு கடமைப் பங்கைச் செய்யும் பொறுமை குன்றாமல் வாழ் வதற்காக சில உண்மைகளை மறவாமல் நினைவில் வைத்துக் கொள்ள
2

வேண்டும். வேறுபாடுகள் எல்லாம் வெளித்தோற்றத்தை ஒட்டியவை. வாழ்க்கை என்பது வெளியே தோன்றுவது மட்டுமல்ல. பெரும் பாங்கான வாழ்க்கை மனத்தை ஒட்டியதே. மனதின் கவலைகளும் இன்ப துன்பங் களும் எல்லோருக்கும் பொதுவாக உள்ளன. செல்வருக்கும் கவலை உண்டு. துன்பங்கள் உண்டு; இன்பமும் உண்டு. வறியவர்க்கும் இன்பம் துன்பம் எல் லாம் உண்டு. உயர் பதவியில் உள்ளவர்க்கும் அவர்களின் நிலைக்கு ஏற்ற வாறு பெரிய அளவில் கவலைகளும் இன்ப துன்பங்களும் உண்டு. சிறிய தொழில் செய்து வயிறு வளர்ப்பவர்களுக்கும் சிறிய அளவில் அவை உண்டு. இன்ப துன்பத்தின் வரவு செலவுக் கணக் கைப் பார்க்க வல்லவர்களுக்கு எல் லாருக்கும் பொதுவான ஒரு நிலை இருப்பது புலப்படும். சிலருக்கு வரவு செலவு பெரிய அளவின. பலருக்குச் சிறிய அளவின. முடிவில் எல்லாருக்கும் கணக்கு இருப்பு ஒரே வகையில் உள்ளது. உறக்கமும் பசியும் அவ்வாறே பொதுவாக உள்ளன. மூப்பும் மரணமும் பொதுவாகவே உள்ளன. ஆகவே கடவுளின் படைப்பில் பொதுமை நிலவுவதை உணர்ந்து ஆறுதல் அடைய வேண்டும்.
"இன்னா செய்யாதீர்கள்; பிறர் பொருள் கவராதீர்கள். பொறாமை பொய் அகற்றுங்கள்; பற்று விடுங்கள்; ஆசை நீக்குங்கள், என்றெல்லாம் முன்னோர்கள் அறிவுரை கூறி வந்தார்கள். சிலர் அம்முயற்சியில் ஈடுபட் டார்கள். ஒரு சிலர் வெற்றி பெற்றார்கள். ஆனால் சமுதாயம் பழைய படியே இருந்து வருகிறது. நாகரிக உலகில் இந்தத் தீமைகள் நாகரிகமான புது வடிவங்கள் கொண்டு இருந்து வருகின்றன. ஊரெல்லாம் சாக்கடைத் தேக்கங்களை பெருக விட்டு விட்டு, கொசு மருந்து பூசிக்கொள்ளுங்கள்: கொசு வலைக்குள் உறங்குங்கள்; மலேரியாவுக்கு இடம் கொடுக்காதீர் கள், என்று அறிவுறுத்தி வருவது போன்ற நிலை இது. அதனால் முயற்சி போதிய பயன் தரவில்லை. லாழ்க்கையின் அடிப்படையான அறம் என்பது எல்லோரும் கடவுளின் மக்கள்; கடவுளின் குடும்பத்தினர் என்று உணர் வதுதான். அந்தப் பொதுமை அறம் சமுதாயத்தில் விளங்குமாறு செய் வதே நல்வாழ்வுக்குத் தேவை. அவ்வாறு செய்து சமுதாயம் திருந்துமாறு செய்துவிட்டால் தனி மனிதரின் மனங்கள் உயர்ந்து விடும்; பொறாமைக் கும் பொய்மைக்கும் இடம் குறைந்து விடும்; பற்றும் ஆசையும் குறைந்து விடும்; நல்வாழ்வு வாழ்தல் எளிதாகும். உலகம் கடவுளின் ஆட்சிக்கு உட் பட்டது என்று பிறந்த ஒவ்வொருவரும் தத் தம் கடமையைச் செய்து சமுதாயத்தில் தமக்குள்ள பங்கை நிறைவேற்ற வேண்டுமென்ற தெளிவு பிறந்த நெஞ்சில் தவறான ஆசை வளர இடம் இல்லை. வீணான பற்று மிகுவதற்கும் இடமில்லை. 'பொய்மையாலும் பொறாமையாலும் ஒரு பயனும் இல்லை எள்று அவை கைவிடப்படும். அந்த நல்ல நிலை வந் தால் தனி மனிதர் நல்வாழ்வு வாழ்தல் எளிதாகும் அந்த நிலை வரும் வரையில் தனி மனிதர் தத் தம் நெஞ்சில் அந்தப் பொதுமைப் பன்மை யை வளர்த்துக்கொண்டு நல்வாழ்வு வாழ முயல வேண்டும். உலகம் இப் படி இருக்கிறதே என்று வெறுத்து காட்டுக்கு ஒடும் துறவு தேவையில்லை. உலகம் இப்படித் திருந்த வேண்டும் என்ற ஆசையை உள்ளத்தில் கொண்டு நல்வாழ்வில் பற்றுக் கொண்டு வாழ்தல் வேண்டும்.
(டாக்டர் மு. வ. னரின் நல்வாழ்வில் இருந்து ரசித்தவை)
夏岛

Page 9
- அருட்திரு. ஆர். துரைராஜா
ரூத் - சென்ற பாடத் தொடர்
(கர்த்தருடைய வார்த்தைகளிலிருந்து அதிகமானவற்றைப் பயில் வதற்கு உதவியாக ஒவ்வொரு வெளியீட்டிலும் வெவ்வேறு வித மான கதாபாத்திரங்களின் விறுவிறுப்பான கதைகளைத் தருவது இப்பகுதி. ஒவ்வொரு இதழிலும் வெளிவரும் வேத வசனங்களைப் படித்து - குறிப்பெடுத்து ஆக்கியோனின் குறிப்புகளையும் வாசிக் கவும். பின்னர் உங்களுடைய ஜீவியத்தில் இவ் வார்த்தைகளின் செயற்பாடுகள் என்ன? என்பதை ஆராய்ந்து பார்க்கவும்)
O கரித்தரிடம் அடைக்கலம் புகுந்து கருணை பெற்றவள்
இந்த ரூத்.
ரூத்தின் வேண்டுதல் - போவாஸைத் திருமணம் புரிதல் * மனன வசனம்
*நீ யார்” என்று அவன் கேட்டான். அவள் "நான் உம்முடைய அடியாளாகிய ரூத்; நீர் உம்முடைய அடியாள் மேல் உம்முடைய போர் வையை விரியும். நீர் சுதந்திரவாளி’ என்றாள். ரூத், 3:9 இதன் பொருள் யாது?
இந் நாடகத்தின் மூன்றாம் அங்கத்திலே நகோமி என்பவள் ரூத் - போவாஸ் இருவருக்குமிடையிலான தொடர்பினை ஏற்படுத்தும் தரகராக நடிக்கின்றாள். போவாஸ் எலிமலேக்கின் சகோதரனாக இருந் திருப்பானாயின் சட்டபூர்வமாக ரூத்தை மணமுடிக்க அவன் கட்டாயப் படுத்தப்பட்டிருக்க முடியும். அவ்வாறு இல்லாத பட்சத்திலும் கூட ரூத்தின் நெருங்கிய ஓர் உறவினன் என்பதனால் அவளை அவன் மீட்டிருக்கலாம். சொத்துக்களைக் கொள்வனவு செய்து குடும்பத்திற்காக அவற்றைச் சேக
14
 

ரித்திருக்கலாம். மேலும், போவாஸ் - ரூத் திருமணத்தின் மூலமாகவே எலிமலேக்கின் வாரிசு ஏற்பட முடியும்.
ஸ்நானம் செய்து உடுத்து - வாசனைத் திரவியமிட்டு, வயல்வெளிக்குச் சென்று, வாற்கோதுமையைக் காவல் காக்கும் போவாஸ் படுத்திருக்கும் வேளையில் அவனது போர்வைக்குள்ளாகி அவன் காலடியில் ரூத் படுத்துக் கொள்ள வேண்டும் என்பதாக நகோமி கற்பிக்கின்றாள். அவளும் அவ் வாறே செய்கிறாள். நள்ளிரவிலே பாதத்தண்டை படுத்திருக்கும் பாவை யவளைக் கண்ட போவாஸ் பதறி எழும்புகிறான், அவ்வேளையிலேதானே அவள் தன்னை அவனுடைய அடியாள் என அறிமுகம் செய்து 'உம் முடைய போர்வையை என் மீது விரியும்; நீர் சுதந்திரவாளி” என்கிறாள்.
ரூத்தின் இந்தச் செய்கையிலே தவறான எதுவும் காணப்படவில்லை. "போவாஸ் தன்னைத் திருமணம் புரிவதா த வாக்குறுதியளிக்க வேண்டும் என்ற கோரிக்கையே அங்கு முன் வைக்கப்படுகிறது.
ரூத்தின் நேர்மையைப் புரிந்து கொள்ளும் போவாஸ் அவளது சீரிய பண்புகளுக்காக நகோமிக்கும், தனக்கும் ஆசீர்வாதங்கள் அருளப்பட வேண் டும் எனப் பிரார்த்திக்கின்றான். அவளது வேண்டுதலை அங்கீகரித்ததுடன் "அவள் சிறந்த குணவதி' எனவும் குறிப்பிடுகின்றான்.
ஆயினும், அவர்களிருவரும் திருமணம் செய்து கொள்ளுமுன்னர் தீர்க்கப்படவேண்டிய சட்டரீதியான பிரச்சினை ஒன்று இருந்தது. எலிம லேக்கின் சொத்துக்களுக்குச் சுதந்திரம் கோர போவாஸை விட நெருங்கிய உரிமையாளன் ஒருவனும் அங்கு இருந்தான். விடியும் வரை காத்திருந்து அவனிடம் இவ் வேண்டுகோளை விடுப்பதெனவும், அவன் அதை ஏற்க மறுப்பின், போவாஸ் ரூத்தை மனந்து நகோமியின் சொத்துக்களைப் பராமரிப்பதாகவும் போவாஸ் ரூத்திடம் வாக்குறுதியளிக்கின்றான்.
ரூத் பெற்ற வெகுமதி - விசுவாசத்தின் விமோசனம்
* மனன வசனம்
"அப்பொழுது ஸ்திரீகள் நகோமியைப் பார்த்து ‘சுதந்திரவாளி அற் றுப் போகாதபடிக்கு இன்று உனக்குத் தயை செய்த கர்த்தருக்கு ஸ்தோத் திரம். அவன் பேர் இஸ்ரவேலிலே பிரபலமாகக்கடவது" ரூத். 4:14 இது எவற்றைக் குறிக்கின்றது?
நாடகத்தின் நாலாம் கட்டத்திலே ரூத்தின் வரலாறு உச்ச கட் டத்தை அடைகிறது, வியாபார செயற்பாடுகள் நடைபெறும் பட்டண வாசலுக்கு வரும் போவாஸ் அங்கே ரூத்தின் சுதந்திரவாளிகளின் முன்ன ணியிலுள்ள குறிப்பிட்ட அந் நபரைச் சந்திக்கின்றான். பட்டணத்து மூப் பர் பதின்மர் முன்னிலையில் நகோமியின் கணவனது சொத்துக்கள் விற் கப்பட இருப்பதாகவும் அதற்கு முதல் உரித்துடையவன் அவனே என்றும்
Fí

Page 10
அவற்றை ஏற்பதற்கு அவன் பின் வாங்கினால், அடுத்த சுதந்திரவாளி யான அவனே அவற்றை ஏற்கத் தயாராக இருப்பதாகவும் கூறுகின்றான். முதல் சுதந்திரவாளியானவன் இப் பிரேரணையை அங்கீகரிக்கின்றான்.
இங்கே போவாஸ் சொத்துக்களைப் பற்றி முன் குறிப்பிடுவதிலிருந்து அவன் ரூத்தை விவாகம் செய்ய விரும்புகிறான் என்பது வெளிப்படை. அத் தோடு அச் சட்டபூர்வமான உரித்தாளி ரூத்தை மணமுடிப்பதால் மரித் துப் போனவனின் பெயருக்கும் அவனே உத்தரவாதி என்பதையும் ஞாப கப்படுத்துகின்றான். இக் காரணத்தினாலேயே அவன் (ரூத்தை மன முடிக்க) மறுக்கின்றான். சொத்தை வாங்குவதால் ஏற்படும் நிதி நெருக் கடியும் ரூத்தை விவாகம் செய்வதால் விளையும் குடும்பப் பாரமும் அவ னது பரம்பரைச் செயற்பாடுகளுக்குச் சிக்கலை ஏற்படுத்தும் என்பது அவனது எண்ணம்.
எனவே இப்பொழுது சொத்துக்களை உரிமையாக்கவும், ரூத்தை திருமணம் செய்யவும் போவாஸ் சுதந்திரவாளியாகின்றான். பட்டன வாசலில் கூடி வந்த மக்களும் அம் மூப்பர்களும் இணைந்து போவாஸ் - ரூத் இருவருக்கும் - வரப்போகும் அவர்களது வாரிசுகளுக்கும் ஆசீர்வாதம் வேண்டி பிரார்த்திக்கின்றார்கள். அத்தோடு அக்கிராமத்துப் பெண்களும் நகோமியை ஆதரவற்றவளாக விட்டுவிடாத கர்த்தரை மகிமைப்படுத்து கிறார்கள்.
போவாஸுக்கும் ரூத்துக்கும் பிறந்த குமாரன் ஒபேத். இவனே தாவி தின் தகப்பனான ஈசாயைப் பெற்றவன். க்ாலம் நிறைவேறின போது கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்து (தாவீதின்) ராஜவம்சத்தில் பிறக்கின்றார். அவரே தாவீதின் சிங்காசனத்திற்குச் சட்டரீதியான உரித்தாளியாக இருக் கின்றார்.
தேவனுடைய தெய்வீகத் திட்டம் இந்த ரூத்தின் வரலாற்றிலே தெளி வாக்கப்படுகின்றது. ரூத்தின் திட விசுவாசம் வெற்றி மிகுந்த பலனை அடைகின்றது. தேவனிடம் அடைக்கலம் புகுந்த அவள் திடமான ஒரு நன்மையைப் பெறுகின்றாள். அவளுடைய குமாரனாகிய ஒபேத்தின் மூலம் இயேசுக்கிறிஸ்துவின் இவ்வுலக வருகை உதயமாகின்றது. இவ்வுலகைப் பாவ வழியினின்று இரட்சிக்க இறைவன் மனுவுரு வெடுத்தார். மன்னன் தாவீதின் வழிவந்த அக் குமாரனே எமது மாபெரும் மீட்பர். இது விசு வாசத்தின் வழிவந்த பேரும் கிருபையாகும். இயேசுக் கிறிஸ்துவை விசு வாகிக்கும் எவழுக்குல்ம இந்த இரட்சிப்பு உண்டு,
வேதாகமத்திலிருந்து இவற்றைக் கண்டு பிடியுங்கள். 1. ரூத்தின் சரித்திரத்தில் உள்ள நாலு அதிகாரங்களையும் கருத்துடன் வாசித்து ரூத்தின் குணநலன்களை வெளியிடும் பகுதிகளைத் தெரிவு செய் யுங்கள்.
6

(குடும்பம் இதழுக்கான விசேட் கட்டுரை)
இளம் நெஞ்சங்களின் இதயக் குமுறல்கள்
பெற்றோரிடம் எதிர்பார்ப்பதென்ன ?
- அருட்திரு ஆர். துரைராஜா -
8 8 w Y "என் அன்னை என்னைப் புரிந்து கொள்ளாத காரணத்தால் அவருடன் நான் தர்க்கிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அவரை நான் அதிகமாக நேசிப்பதால் இச்சம்பவம் எனக்கு அதிக மனவேதனை யைத் தருகிறது. அவருடன் நெருக்கமான உறவுடன் ஜீவிக்கவே நான் விரும்புகிறேன். ஆனால், எவ்வாறு ஒருமனப்படுவது? என்பதுதான் புரியு தில்லை".
· · · a · · "எனது பிரச்சினை என் தந்தையுடன் தொடர்புகொள்வ தாகும். அவருடன் உரையாடுவதில் எனக்கு ஆறுதல் இருப்பதாக நான் உணர்வதில்லை. எனது பிரச்சினைகள் பற்றித் தன்னுடன் நான் பகிர்ந்து கொள்வதில்லை என்பது குறித்தே அவர் வேதனைப்படுகிறார் என்பதை நான் அறிவேன். எனது பிரச்சினைகள் பற்றி நான் அவருடன் பேசுவதும் இல்லைதான். என் எண்ண அலைகளை எவ்வாறு வெளிப்படுத்துவது என்பதும் புரியுதில்லை. அதே வேளை அறிவுரைகளும் ஆர்வமூட்டலும் எனக்கு அவசியமாகவும் இருக்கின்றன.”.
நெட்டையாகவோ, குள்ளமாகவோ - பணிவுள்ளவராகவோ, கீழ்ப் படியாதவராகவோ - கட்டுடலுடனோ, மெலிந்தோ - ஆற்றலுடையவ
(i)

Page 11
ராகவோ, அறிவிலியாகவோ இவை அனைத்துக்குமே அப்பாற்பட்டவ ராகவோ ஒருவர் இருப்பினும் இளைஞர் இளைஞர்தான். பொதுவாக, இளைஞர்கள் இப்பருவத்திலே குழந்தை நிலையிலிருந்து யெளவன நிலைக்கு நகர்வதற்கான ஒரு சுரங்கப் பாதையைக் கடக்க வேண்டிய வர்களாக இருக்கின்றார்கள் என்பதை மறுக்கமுடியாது. அவ்வமயங்களில் ஏற்படக்கூடிய எதிர்பாராத சில அதிர்வுகள் முழுக் குடும்பத்தையுமே பாதிக்கவும் கூடும்.
வயது வந்த இளைஞர்கள், அல்லது வாலிபப் பருவத்தை அண்மிக் கும் பிள்ளைகளை வைத்திருக்கும் எந்தவொரு பாசமுள்ள பெற்றோரும் அவர்கள் என்ன நினைக்கிறார்கள்? எம்மிடமிருந்து எதை எதிர்பார்க் றார்கள்? என்பதை அறிய விரும்புவது இயல்பு.
கிறிஸ்தவ தொடர்புகளின் பணிப்பாளர் என்றவகையிலும், இரு வாலிப்ப் பிள்ளைகளின் தந்தை என்ற முறையிலும் 1979 ஆம் ஆண்டு தொடக்கம் எனது இதயத்தை சுக்கு நூறாக்கக்கூடிய பல அனுபவங்களை நான் பெற்றிருக்கிறேன். எத்தனையோ பிரச்சினைகளைத் தாங்கிய பல மடல்களை நான் படித்திருக்கிறேன். வேதாகம வகுப்பு மாணவர்கள் அநேகர் எனக்கு எழுதுவதுண்டு. ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இரு வாசகங்களும் அத்தகைய அஞ்சல்களில் காணப்பட்டவையாகும், அவற்றிற் கூடாக நான் பெற்ற அனுபவங்களை படிப்பினையாகக்கொண்டு, இளம் நெஞ்சங்க்ளின் இதயக் குமுறல்களை ஒரளவு இனம் கண்டு - அவற்றுக்குப் "பரிகாரம்" என்னும் தலைப்பில் அவர்கள் தம் பெற்றோரிடத்தில் அதிக மாக எதிர்பார்க்கும் சில ஆக்க பூர்வமான காரியங்களை வாசகர்களின் சிந்த னைக்காக இங்கு கோடிட்டுக் காட்ட் விழைந்துள்ளேன்.
எனது வாஞ்சை . . . .
கூ "எனது பெற்றோர் எனக்குச் செவிசாய்க்க வேண்டும். என்பதே
எனது விருப்பமாகும்."
"எனது இதயக் கிளர்வுகள் பற்றி என் அன்னையுடன் உரையாட அநேக தடவைகள் நான் முயன்றும் என்னை அமர்ந்திருந்து அவதானிக்க அவருக்கு கணமேனும் நேரமில்லையே."
என் மாணவி ஒருத்தியின் இதய ஒலம் இது.
இளைஞர்கள் எப்போதுமே தைரியமான அரவணைப்பை எதிர் பார்ப்பவர்கள் எனக்கூறலாம். 'எப்பொழுதும் என் பெற்றோர் என் உணர் வுகளுக்குச் செவிசாய்க்க வேண்டும்” என்பது அவர்களுடைய எதிர்பார்ப்பு மாகும். தம் பெற்றோரின் கவனிப்பு - ஆதரவு - அரவணைப்பு, தமக் கில்லையென்ற உணர்வு அவர்களுக்கு ஏற்படும்போது அவர்கள் அயலிலே o ♦ fo o 0 07 நண்பர்களை நாடிச் செல்லும் நிலை உருவாகிறது.
(i)

"என் தந்தையார் வேலை முடிந்து வீடு திரும்பியதும் அவருடன் உரையாடுவதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருத்தேன். ஆனால் அவரோ. பத்திரிகை வாசிப்பு. உணவருந்துதல். தொலைக்காட்சியென தொடராக இருந்து விடுகிறார். இதனால் எனது பிரச்சினைகள் பற்றி அவருடன் கலந்துரையாட எப்பொழுதுதான் நேரம் கிடைக்குமோ தெரிய வில்லை.
தொழில் - வீட்டு விவகாரங்கள் - சமூக அமைப்பு - ஆலய செயற் பாடுகள் போன்றன எமது காலத்தையும் நேரத்தையும் விழுங்கிவிடுகின் றன. பொறுப்பற்றதும், முக்கியமானதுமான தரக்குறைவான செயற்பாடு கள் நமது பிள்ளைகளிலும் பார்க்க முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்து விடாதபடி நாம் கவனமாக இருத்தல் அவசியமாகிறது.
'எனது பெற்றோர் தம் முழுமையான கவனத்தையும் என் மீது செலுத்தாதிருப்பதோடு என்னைத் தரக்குறைவாய் மதிப்பிடும் போது அது எவ்வளவாய் என்னை வேதனைப் படுத்துகிறது என்பதை அவர்கள் அறிகிறார்கள் இல்லையே..."
வாழ்க்கையில் ஏமாற்றமடைந்த இளைஞர் ஒருவரின் இதயக் குமு றல் இது.
"தொடர்பு" வாசகர் ஒருவர் எழுதுவதையும் பாருங்கள்.
*எனது தந்தையிடம் ஏதேனும் அறிவுரையொன்றினை நான் எதிர் பார்க்கும் போதெல்லாம் நீண்டதொரு பிரசங்கத்தையே நிகழ்த்திவிடுகி றார். தெளிவான பதில் தருவதற்குப் பதிலாக புறநடையான விரிவுரை களையும், புதுப் புதுக் கதைகளையும் கூறி காலத்தைக் கடத்தி விடுகிறார், என்னத்தை நான் சொல்லட்டும்?. எனக்குத் தேவையானவை அறிவுரை களும் வழிகாட்டலுமே ஒழிய இவ்வித உபந்நியாசங்கள் அல்லவே."
பிள்ளைகளுடைய கருத்துக்களுக்கு பெற்றோர் மனந்திறந்து செவி சாய்க்க வேண்டும். தம் இளமைக்கால செயற்பாடுகளை உதாரணங்க ளாக்கி - கதைகளினாலும், புத்திமதிகளினாலும் அவர்களது எண்ணஅலை களை இடைமறிப்பது பொருத்தமானதல்ல. தங்கள் உள்ளத்தில் தோன்றும் உணர்வுகள் ஒவ்வொன்றையும் வெளிக்காட்ட பிள்ளைகளுக்குச் சந்தர்ப்பம் வழங்கப்படல் வேண்டும்.
அநேக பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் கருத்துக்களை அங்கீகரிப்ப தில்லை. அவர்களைப் பரிபூரணமாய் அவதானித்த பின்னர் பயனுள்ள அறிவுரைகளைக் கொடுப்பது பொருத்தமானதாக அமையும். அல்லது அவர்களது கருத்துக்கு மாறாக எடுக்கப்படும் தீர்மானங்களுக்கான கார ணங்களை அவர்களுக்குத் தெளிவுபடுத்துதல் வேண்டும். இவ்வாறான காரியங்கள் அவர்களுக்காகச் செய்யப்படும் போது அவர்கள் ஆவலுடன், நம் பிக்கையான உணர்வுகளோடு தம் பெற்றோரை அவதானிக்க ஆரம்பிப் பார்கள்.
( iii )

Page 12
இத்தகைய தொடர்புகள் அவர்கள் நல்ல தீர்மானங்களை மேற் கொள்ள வழிவகுக்கும். எனவே பெற்றோர் தம் விழிகளால் மட்டுமல்ல செவிகளாலும் அவர்களை அவதானிக்கவேண்டியது அத்தியாவசியமாகிறது. அவர்களுடைய உலக்த்தைப்பற்றி அறிந்துகொள்ள ஒரு சந்தர்ப்பத்தை ஆக்கிக்கொள்ள வேண்டும். அவர்கள் எவற்றை வாசிக்க விரும்புகிறார் கள். அவர்களுக்குப் பிடித்தமான இசை - பாடல்கள் எவை? அவர்களது நண்பர்கள் யார்? அவர்களால் வெறுக்கப்படுவன யாவை? அவர்களது மனப்பான்மை என்ன? அவர்களை மகிழச் செய்வன எவை? இவற்றை யெல்லாம் ஆராய்ந்து பார்க்கவேண்டியது பெற்றோரின் கட்டாய கடமை யாகும்.
என் பெற்றோர் எப்போதும் என்னில் குறைகாண்பதைவிடுத்து என்னில் அக்கறை காண்பிக்கிறவர்களாகவும் என்னை உற்சாகப்படுத்துகிறவர்களாகவும் இருக்கவேண்டும் என்பதே என் அவ்ா
“இப்பொழுதெல்லாம் எனது பெற்றோர் என்னை ஒரு மாறுபட்ட நோக்கிலேயே பார்க்கின்றனர். அவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக எத் தனையோ காரியங்களை நான் செய்தும் கூட என்னில் ஏதேனும் ஒரு குறையைக் காண்பதிலேயே அவர்க்ள் இருக்கிறார்கள் என்பதாக ஒருவர் எழுதுகிறார்.
*நான் எதைச் செய்தபோதிலும் எனது பெற்றோர் திருப்தியட்ைவ தில்லை. நான் சிறிய தவறொன்றைச் செய்துவிட்டால் அவர்கள் அதை மிகவும் பெரிதுபடுத்தி என்மீது எரிந்து விழுகிறார்கள். அதுமட்டுமல்ல; நான் தவறே செய்யாத வேளைகளில் கூட என்னைக் குற்றப்படுத்துகிறார்கள். இது ஏன்? என்பதே எனது ஒரே கேள்வி."
இன்னொரு வாசகர் எழுப்பும் வினா இது,
நான் எதைச் செய்தபோதிலும் எனது பெற்றோர் திருப்தியட்ைவதில்லை. நான் ஒரு சிறிய தவறை இழைத்துவிட்டால் கூட அவர்கள் என்மீது சிறிப்பாய்ை றார்கள் !
அநேக இளைஞர்கள் உண்மையாகவே தம் பெற்றோரை நேசித்து அவர்களைத் தயவுபண்ண எத்தனிக்கிறார்கள், ஆனால், தங்களுடைய இயல்புகள் ஏற்றுக்கொள்ளப்படாமை காரணமாக அவர்கள் ஏமாற்ற மடைகிறார்கள். பெற்றோரின் அன்பையும் ஆர்வமூட்டலையுமே அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
( iv )

நான் சுயமாக வளருவதற்கு எனது பெற்றோர் இடமளிக்க
வேண்டும் என்பதே என் அவா
"உண்மையிலேயே என்னில் அளவுகடந்த பாசத்தை அள்ளிக் கொட்டுகிறார்கள் என் பெற்றோர்கள். நான் என்ன செய்ய வேண்டும்? எங்கு போக வேண்டும்? என்பதைப்பற்றியெல்லாம் (நான் விரும்பியோ/ விரும்பாமலோ) அவர்களே தீர்மானித்து விடுகிறார்கள். இவை தொடர் பாக நான் அவர்களுடன் பேச விரும்பினாலும் எனது உணர்வுகளை அவர் கள் புரிந்து கொள்கிறார்கள் இல்லையே 1. அவர்கள் என் மீது கொண் டிருக்கும் அளவுகடந்த பாசத்தால்தான் அவ்வாறு செய்கிறார்கள் என்ப தையும் நான் அறிவேன். என்றாலும் நான் சற்று சுயமாக சிந்தனை செய்து சிறிது வளர்ச்சியடைந்து எனது சுய விருப்பின்படி சில கருமங் களைச் செய்ய விரும்புகிறேன்.'
இவையெல்லாம் "இன்றைய இளசுகளின் சிந்தனைகள்; எண்ண அலையதிரிவுகள்' எனலாம்.
பாதுகாப்புணர்வை அளிக்கக்கூடிய சட்டங்களையும் வழிகாட்டல் களையுமே இளைஞர்கள் விரும்புகிறார்கள். ஆனால், பிள்ளைகள் வளரி ந்த வாலிபப் பருவத்தினை அடையும் சந்தர்ப்பங்களில் அதிகமான பெற் றோர் தங்களுடைய ஆதிக்கத்தையும் அதிகாரத்தையும் தளர்த்த வேண் டியதற்கு மாறாக இறுக்கிப் பிடிக்கத் தொடங்கிவிடுகிறார்கள். அதே வேளை, இளைஞர்கள் தமது திறமைகளை நிரூபித்துக் காட்டுவதில் அதிக அக்கறை காட்டுபவர்களாகையினால், புதிய பொறுப்புகளும், போதிய சுதந்திரமும் அவர்களுக்கு அவசியமாகிறது.
*"பாலியல், போதைவஸ்துக்கள் போன்ற உலகியல் விவகாரங்கள் இன்றைய இளைய தலைமுறையினரை எதிர்நோக்கும் பெரும் பிரச்சினை களாக இருப்பதனால் அவற்றைப்பற்றி எனது பெற்றோர் என்னுடன் பேசவேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன்." இன்றைய உலகின் சலன் நிலையை நான் விளங்கிக் கொள்வதற்குக் கால மாற்றங்கள் எனக்குக் கைகொடுக்கும்" என்பதை எனது பெற்றோர் உணர்ந்து கொள்ளல் வேண் டும்.’’. இப்படிக் கோருகிறார் ஒருவர்.
"எனக்கு வயது பதினேழு. இரவில் தீய கனவுகளைக் காணக் கூடிய அளவுக்கு வெறுக்கத்தக்க விடயங்களை தினமும் சந்திக்கிறேன். முழுநாளும் பாடசாலையில் நேரத்தைச் செலவிட்டு வீடு திரும்பும் போது தலைவெடிக்கக்கூடிய அளவு களைப்புடனும் மனத்தளர்வுடனும் நான் காணப்படுவதுண்டு. இன்றைய உலக இயல்பு பற்றி என் பெற்றோர் இன்ன மும் சிந்திக்கிறார்களில்லை. தங்களது ஆளமைக் காலம் போலவே இன் றைய நாட்களையும் பற்றி அவர்கள் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். அநேக மாறுதல்கள் இன்று ஏற்பட்டுள்ளமை பற்றி அவர்கள் யோசிப்பதே
( v )

Page 13
யில்லை. அனைத்து இளைஞர்களின் சார்பிலும்தான் நான் இதனை எழுது கிறேன். அவர்கள் தம் கண்களைத் திறந்து சூழலைச் சற்று நோக்கவேண் டும். அதுமட்டுமல்ல; எம்மைக் குறைகூறுவதைவிடுத்து எம் பின்னணியில் இருந்து அவர்கள் எமக்கு உதவி புரியவேண்டும். இதுவே எமது தேவை. இவ்வுதவிகளை நாம் பெறாவிடில் நமது ஆர்வம், விவேகம் ஆகியவற்றை வெளிக்காட்ட நாம் என்னதான் செய்வது?".
இது ஒரு இள நெஞ்சின் அபிலாஷை.
"எமது குடும்பத்தில் பாலியலையும் மரணத்தையும் பற்றிப் பேச எவருமே விரும்புவதில்லை. இவ்விரு காரியங்களைக் குறித்தும் நான் வெளிப் படையாகத் தெரிந்துகொள்ள ஆவலாயிருக்கிறேன்".
இவ்வாறாக எழுதுகிறார் இன்னொருவர்.
எனவே, இத்தகைய நிரந்தர பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண பெற் றோர்களால் முடியும் என பிள்ளைகள் கருதுகிறார்கள். தமது நிலையைப் பற்றிப் பெற்றோர்கள் கொண்டுள்ள உறவுகள் எத்தகையன? என்பதை அறிந்து வைத்திருக்க அவர்கள் ஆவல் கொண்டுள்ளார்கள். ஆதலால் இவ் வாறான விடயங்களைத் தெளிவுபடுத்தக்கூடிய கலந்துரையாடல்களுக்கு ஏற்ற சந்தர்ப்பங்களை ஆக்கிக் கொள்வதில் பெற்றோர் அக்கறை காட்டு தல் வேண்டும். முன்னர் குறிப்பிட்ட அப் பாடசாலைச் சம்பவத்தையும் தொலைக்காட்சி/பத்திரிகைகள் போன்றவற்றுக்கூடாக அறியக்கூடிய விட 'யங்கள் பற்றியும் சம்பாஷித்தல் அவசியமாகும்.
மாணவி ஒருத்தியின் மனவுணர்வுகளைப் பார்ப்போம்.
"இம்மறை எனது தேர்ச்சி அறிக்கையிலே அதிகமாக நான் "ஏ" பெற்றிருக்கிறேன். இது எனக்கு மட்டுமல்ல; என் பெற்றோருக்குமே பெரு மையாக இருக்கிறது. ஆனால், இதேபோல் அடுத்த முறையும் என்னால் இதேயளவு ‘ஏ’ பெறமுடியுமா? என்பதை நினைக்கும்போது சற்று அச்ச மாகவே இருக்கிறது. இதையிட்டு நான் வேதனையடைகின்றேன். எப் பொழுதுமே நான் திறமையாய்ப் படிப்பவள் என்பதை எவ்வாறு என் பெற்றோரை நம்பச் செய்வது? எல்லாச் சந்தர்ப்பங்களிலுமே என்னால் ‘ஏ’ எடுத்துவிட முடியும் என உறுதி கூறிவிடவும் முடியாதே."
எதிர்கால நிகழ்வு ஒன்றினைக் குறித்தும் அதையிட்டுத் தன் பெற் றோரைத் திருப்திப்படுத்துவது எவ்வாறு எனவும் எண்ணி அவதியுறும் இந்த யுவதியின் அவல நிலையினை இங்கு காண்கிறோம்.
'கடந்த காலங்களில் பல தவறுகளை நான் புரிந்தது என்னவோ உண்மைதான். என்றாலும் தற்பொழுது நான் நற்பிரஜையாக வாழ முய லுகிறேன். எனது பெற்றோரோவென்றால், எனது முந்திய தவறுகளை இன்னமும் அசைபோட்டவர்களாய் என்னை எங்குமே செல்ல விடுகிறார்
( vi.)

களில்லை; எதுவும் செய்யவும் விடுகிறார்களில்லை. அவர்களை நம்பச் செய் யக்கூடிய வழிகள் ஏதேனும் உண்டா?". என அங்கலாய்க்கிறது இன் னோர் இள மனசு.
இளைஞர்கள் தவறு செய்வது இயல்பே. எவருமே பூரண பரிசுத்த ராய் இருக்க முடியாது. எனவே, தவறு ஒன்றினைத் தடயமாகக் கொண்டு அவர் நடப்பதெல்லாமே அவ்வழிதான் என எடை போடுதல் தவறு. அது மடமைத்தனமும்கூட, எதற்கும் இதயபூர்வமான மன்னிப்பளித்து அது தண்டனைக்குரிய குற்றமா? என ஆராய்ந்து, இளைஞர்களின் இயல் பூக்கங்களுக்கும் மதிப்பளித்தல் வரவேற்கத்தக்கவையாகும்.
'எனது பெற்றோர் தவறிழைக்க நேறிடும் வேளைகளில் அவற்றை அவர்கள் ஏற்றுக்கொள்ளல்வேண்டும் என்பதே என் அவா’
சரியானதோ? தவறானதோ? ஆனால் உறுதியான ஓர் உணர்வு இன்றைய இளைய சமுதாயத்தின் ஒரு மலிவுச் சரக்காகும். பிள்ளைகள் நேரடியாக அவதானித்தும் கூட தாம் செய்யும் தவறுகளை உணராத, பெற்றோர் தமது பிள்ளைகளை ஏமாற்றும் உதாரணர்களாக இருப்பதோடு தவறான வழிகாட்டிகளாகவும் இருக்கிறார்கள்.
எனது பெற்றோர் எனது பிரச்சினைகள், இலட்சியங்கள் அபிப்பிராயங் கள் அனைத்தையுமே அலட்சியம் செய்யாமல் இருக்க வேண்டும்
பிள்ளைக்ளின் கனவுகளையும் இலட்சியங்களையும் அலட்சியம் செய் யாதபடி அவற்றிலே அக்கறை காட்ட பெற்றோர் முன்வருதல் வேண்டும். அதைவிடுத்து, "நீர் அதிகமே கனவு காண்கிறீர்; என்ன கேட்கிறீர்? என்பது உமக்கே தெரியுதில்லை" போன்ற வாக்கியங்களைப் பயன்படுத்துவது ஆழ்ந்த வேதனையை அளிக்கக்கூடும். இளைஞரின் பிரச்சினைகள் முதியவர் களுக்குப் பெரிதாய்த் தோன்றுவதில்லை. மாறாக, இளைஞர்கள் குறைந்த அனுபவம் கொண்டவர்களாதலால் அவர்களுக்கு அவை பெரிதாய் தோற்ற மளிக்கின்றன.
உங்களுடைய இளைஞரின் வாஞ்சைகள் எவை?
உங்களுடைய குடும்பத்தின் இளைஞர்கள் அடிக்கடி உங்களால் பாராட்டப்படுவதனால் அவர்களால் உங்களுக்குப் பிரச்சினைகள் இல்லா திருக்கலாம். அநேக இளைஞர்கள் தம் பெற்றோருடன் தமக்கு நல்லுறவு இருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
(vii)

Page 14
"உங்களை எனது பெற்றோராக நான் கொண்டிருப்பது கர்த்தர் எனக்குத் தந்த பாக்கியமே. இறையியலிலும் - இல்லற ஜீவியத்திலும் நீங் கள் இருவருமே சிறந்த முன்மாதிரிகளாகத் திகழுகின்றீர்கள். உங்களு டைய நன்மாதிரியின் வழியிலேயே தானும் நடக்க முடியும் என நம்புகி றேன்." என்பதாக அண்மையில் ஒரு இளைஞன் தன் அன்புப்பெற்றோ ரிடம் கூறியுள்ளான்.
இப்ப்ொழுது . . .
உங்களது வாலிபப் பிள்ளைகள் உங்களிடம் அதிகமாக எதிர்பார்ப்
பது என்ன? என்பது பற்றி அவர்களிடமே கேளுங்கள். அவர்களது மறுமொழிகளினால்.
. . . ஆச்சரியமடிைவீர்கள்
( viii )

2. ரூத் 1:8-18 ஐ வாசித்து அங்கே மோவாபிய ஸ்திரீயான ரூத்தைப் பற்றிக் கூறப்பட்டவற்றிலிருந்து அவளது தீர்மானங்களைத் தெளிவு படுத் திக் கொள்ளுங்கள். மத்தேயு 1:1-6 ஐ வாசித்து கர்த்தர் ரூத்தை வழி நடத்தி அவள் தன்னை நகோமிக்கு அர்ப்பணித்து - அதற்கூடாக இஸ்ர வேலின் தேவனை மகிமைப் படுத்தியதை அவதானியுங்கள். இந்த ஆசீர் வாதம் புலப்படுத்தும் உண்மை யாது? எனக் கவனியுங்கள்.
3. ரூத் 2:12 அவள் . தேவனுடன் கொண்டுள்ள தொடர்பைத் தெளிவு படுத்துகின்றது. 91 ம் சங்கீதத்தையும் இதனுடன் தொடர்பு படுத்தி தேவ னிடம் அடைக்கலம் புகுதல், என்பதை ஆராய்ந்து பாருங்கள்.
ரூத் 2:1 - 23 ஐயும் வாசித்து விமர்சியுங்கள்.
போவாஸ் ரூத்துக்கு மிகப் பொருத்தமான ஒரு சுதந்திரவாளியா?
பெயரிடப்படாத முதல் சுதந்திரவாளியிடமிருந்து போவாஸ் வேறு படுகின்றானா? (ரூத் 4:1-8) இயேசுக்கிறிஸ்து எமது மீட்பராக எவ்வாறு ஒப்பிடப்படுகின்றார்? பின் வரும் பகுதிகளையும் வாசிக்கவும். (Gum. 1:10-14, 10; 14-18, se llu. 4:12, 2 Glasmf. 5:21 கலா, 4:-9, 1 பேது. 1:18-21)
ரூத். 119 - 22, 4:13 - 22 ஆகியவற்றை வாசியுங்கள். ரூத்தின் ஜீவியம் நகோமியின் வாழ்வில் ஏற்படுத்திய விளைவு யாது?
6. ஆதி. 12:3 ல் அளிக்கப்பட்டுள்ள வாக்குத்தத்தம் ரூத்தின் வாழ்க்கை
யுடன் எவ்வாறு பொருந்துகிறது?
7. ரூத் எவ்வாறு நகோமிக்கு ஆசீர்வாதமாக இருந்தாளோ, அவ் வண் ணமே நாமும் நம்மைச் சூழவுள்ளவர்களுக்கு அமைய முடியுமா? சோதித்தறியுங்கள். 1 யோ. 3:1 - 18, 417 - 21
O அன்பின் அடிப்படை யாது? யோ. 18:34 ல் தரப்பட்டுள்ள கட்டளைக்
கேற்ப ஜீவிப்பது எப்படி?
நிறைவுச் சிந்தனைக்கு.
ரூத். இது வெறும் காதல் காவியம். இது வேதாகமத்தில் ஏன் இடம் பெற வேண்டும்? என்ற விதண்டாவாத வினாக்கள் எழுப்பப்பட லாம். எனினும் இச் சரித்திரம் ஒரு "மீட்பரின் மீட்பு பற்றி எடுத்துரைப் பதனால் இது தீவிரமடைவதற்கும் இடமுண்டு, ஆகவே, இக் கதையின் மூலமாக மீட்பரின் சரித்திரம் ஓர் அன்பின் காவியமாகவே ஆரம்பமாகிறது என்பது வெளிப்படை. எங்கள் ஆத்ம மீட்பரான ஆண்டவர் இயேசுக் கிறிஸ்துவின் அன்பே எமது விடுதலைக்காக தமது இரத்தத்தைக் சிந்த அவரைத் தூண்டியது எவருமே கொண்டிராத உன்னத அன்பை அவர் எம்மேல் ஏற்படுத்திய காரணத்தினாலேயே அவரது உள்ளத்திலும், இல் லத்திலும் நாம் அழைக்கப்பட்டுள்ளோம். -முற்றும் .
7

Page 15
5 ம் பக்கத் தொடர்ச்சி
சுவர்க்கத்திற்குக் கீழ் இதுவே இன்றைய காலகட்டத்தின் முக்கியத்துவம் வாய்ந்த விஞ்ஞானவியலும் கடினமான பணியுமாகும்
பெற்றோரின் தவறுதலுக்கும் பெலவீனத்துக்கும் பின்னுமொரு பெருங் காரணம் அவர்களிடத்திலே உள்ள "ஒழுக்கமின்மை"யாகும். நாளாந்த நடைமுறை என்ன ? இலகுவானவவை எவை? இயலுமானது என்ன? போலியாகத் தோன்றுபவை யாவை? என்பதை எந்தவொரு பெற்றோ ரும் கேட்கக் கூடாது. குறிப்பாக “கிறிஸ்தவன்' என்று தன்னைக் காட்டிக் கொள்கிற ஒருவன் இவற்றைப்பற்றிச் சிந்திப்பதே தவறாகும். இவற்றை விட மேலான கற்பனைகளும் கட்டளைகளும் அவனுக்கு உண்டு என்ப தால் எனது கடமை என்ன? கர்த்தரின் கட்டளைகள் யாவை? எனது பிள்ளைகளின் ஜீவியத்தைப் பொறுத்தவரை இறைவனின் ராஜ்ஜியத்துக் கான வரையறைவுகள் எத்தகையன என்ற வினாக்களைத் தனக்குள் தானே கேட்க வேண்டும்.
குடும்பத்தை ஆளுகை செய்வது அல்லது வழி நடத்துவது என்பது கீழ்ப்படிய வேண்டிய ஒரு கட்டளையும் நிறைவேற்ற வேண்டிய கடமை யுமாகும் என்பதை கிறிஸ்தவ பெற்றோர்கள் கூட சில சமயங்களில் உண ரத் தவறி விடுகின்றனர். ஒரு கட்டளை அல்லது கற்பனை என்பது கீழ்ப் படிவதற்குரிய ஒன்றாகும். எனவே பெற்றோரின் முதுகெலும்பற்ற தன்மை அநேக பிள்ளைகளைப் பாழாக்கிவிடக்கூட சூழ்நிலையை உருவாக்கி விடு கிறது என்று கூடக் குறிப்பிடலாம். ஒரு பிள்ளையின் வாழ்வைப் பொறுத்த விடயங்களை இறைவன் பெற்றோர் மீது சுமத்தியிருப்பதால் பிள்ளை களை நல்வழியில் நடத்திச் செல்லாமல் விடுவது கர்த்தரின் கட்ட ளையை அவமதிப்பதற்குச் சமமாகும்.
உங்களிலும் பார்க்க உங்கள் பிள்ளைகளை இறைவன் அதிகமாக நேசிப்பதால் அவர்களைத் தமக்கென பயிற் றப் படுவதையே அவர் விரும்புகிறார்.
"உங்களைப் பார்க்கிலும் உங்கள் பிள்ளைகளை இறைவன் அதிகமா நேசிக்கிறார். அவர்கள் தமக்கென வளர்க்கப்படல் வேண்டும், என்பதே அவருடைய எதிர்பார்ப்பு, எம்மால் சாதிக்க முடியாதவற்றையும் அவர் நிறைவேற்றுவார் என்பதை நம்புவோமாக. எச்சந்தர்ப்பத்திலும் எமக் கிடப்பட்டுள்ள பணியைச் செவ்வனே நிறைவேற்றுவோம் என அவருக்கு நாம் உறுதி கூறுவோம். 'இறைவா, இப்பிள்ளைகள் உமக்காகவே ஜீவிக்க வேண்டும்.; அவர்கள் எமக்காக வாழவேண்டும் என நான் கருதவில்லை” என்பதாகவே எமது தீர்மானம் அமையவேண்டும்.
இத்தகைய காரியங்களில் இறைவனின் ஒத்தாசை எமக்கு உண்டு; நாம் மனம் தளர்ந்துவிடக்கூடாது. இறைவனடி சேர்ந்து சகலவற்றிலும்
(22 lub uś4 h பார்க்க 18

தொடர்பு திருமண சேவை
* மணமகன் தேவை
l. சொந்த இடம் மலையகம். உயரம் 5 - 4' வயது 90 அழகான வர். கொழும்பிலுள்ள கம்பெனி ஒன்றில் வேலை செய்கிறார். வீடும் வீட்டுக்குரிய பொருள்களும் நகையும் சீதனமாகக் கொடுக்கப்படும். 35 வய துக்குட்பட்ட நிரந்தரத் தொழில் புரியும் கிறிஸ்தவப் பண்பும் ஒழுக்கமும் உடையோர் விரும்பப்படுவர். இல: 101
2。 சொந்த இடம் மலையகம். வயது 32. உயரம் 5 - 8" அழகானவர். திருச்சபை முழுநேர ஊழியர். மணமகன் இரட்சிக்கப்பட்ட திருச்சபை ஊழியராக இருந்தால் மிக நன்று. நல்ல கிறிஸ்தவப் பண்பும் ஒழுக்கமும் உள்ள நிரந்தர உத்தியோகமுடையோரும் விரும்பப்படுவர். சீதனம் பேசிக் கொள்ளலாம். இல: 102
. தமிழ் தாதி (NURSE) வயது 40. சுமாரான உயரமும், அழ கும் உடையவர். தொழில் திறமைக்காக, நைற்றிங்கேல் விருதும் ஐ. சி. ஆர். கி யின் பாராட்டும் பெற்றவர். 45 வயதுக்குட்பட்ட நிரந்தர தொழில் புரியும் நல்ல கிறிஸ்தவப் பண்புடையோர் விரும்பப்படுவர். இல; 103. 4. சொந்த இடம் மலையகம். வயது 32. உயரம் 5 - 3' அழகானவர். பாலர் பாடசாலை ஆசிரியை. திருச்சபை ஊழியரின் மகள். 38 வயதுக்குட் பட்ட நிரந்தரத் தொழிலுடைய அரச, கூட்டுத்தாபன தோட்ட உத் தியோகத்தர் விரும்பப்படுவர். மற்றவை பேசிக்கொள்ளலாம். இல: 104. 5. அவுஸ்திரேலியாவில் நிரந்தரத் தொழிலுடைய இரு சகோதரிகள் அழகுடையோர். வயது 35. உயரம் 5 - 2’ மணம் முடித்து மணமகனையும் அழைத்துச் செல்லும் உரிமையுடையோர். நல்ல கிறிஸ்தவப் பண்புடைய அரச, கூட்டுத்தாபன, வங்கி ஊழியர்கள் விரும்பப்படுவர். இல: 105.
மணமகள் தேவை
I. யாழ் வாசி. நிரந்தர அரச ஊழியர். வயது 26. உயரம் 5 - 6’ நல் லொழுக்கமுடைய அழகானவர். 23 வயதுக்குட்யட்ட அழகும், பண்பு முடைய நிரந்தரத் தொழிலுடையோர் விரும்பப்படுவர் இல; 106. (29 ம் பக்கம் பார்க்க)
9

Page 16
சாத்தானும் குடும்பத்தில்
ஓர் அங்கத்தவனா?
திருமதி. J. P. ஜேசன்
இது உண்மைதானா? என்பதைச் சிறிது சிந்தித்துப் பார்ப்போம். "உடன் பிறந்தே கொல்லும் வியாதி’ என்பார்களே. இவனோ உடன் இருந்தே கொல்பவன். சிந்தனைக்குள் சிந்தனையாகச் செயல்படுபவன்,
"இருதயமே எல்லாவற்றிலும் திருக்குள்ளதும் மிகுந்த கேடுள்ளதுமாயிருக்கிறது"
என்று வேதத்தில் பார்க்கிறோம். இந்த முக்கியமான ஸ்தலத்திலிருந்து தீய எண்ணங்களை உருவாக்கி ஆத்துமாக்களை பாவக் கறையில் ஆழ்த்திவிட்டு வேடிக்கை பார்க்க ஆவலோடு இருக்கிறான். இதன் நடை முறையைப் பார்ப்பதற்கு சங்கரனின் வீட்டில் நடந்த ஒரு சம்பவத்தைக் கவனிப்போம்.
சங்கரனின் தம்பி ஒரு பட்டதாரி. வேலை எதுவும் கிடைக்கவில்லை. அண்ணாவின் செலவிலே படித்துப் பட்டம் பெற்று விட்டான். தம்பியும் நன்றியுடன் அண்ணாவுக்குக் கீழ்ப்படிந்து நடந்து வந்தான். சங்கரனின் உழைப்பில் இன்னும் இரு தங்கைகள் படித்துக்கொண்டிருந்தனர். சிந்தனை கள் சுடர்விட்டன. சங்கரனுக்கு ஒர் நல்ல எண்ணம் தோன்றியது. தான் திருமணம் செய்து கொண்டால் மனைவி எல்லாவற்றையும் கவனித்துக் கொள்வாள். தங்கைமாரி படிக்கத் தடைகள் ஏற்படாது என எண்ணித் திருமணம் செய்து கொண்டான். நால்வரும் புதிய அங்கத்தவருடன் இனிதே வாழ்ந்தார்கள்.
சிந்தை உறங்கவில்லை. ஐவரின் இதயங்களிலும் சிந்தனைகள் சிற கடித்துப் பறந்தன. நேரத்துக்கு நேரம் சமைத்துப்போட நான் என்ன வேலைக்காரியோ என்ற எண்ணம் மனைவிக்கு உண்டானது. இதனால் வேலைகளில் கவனக்குறைவு - உபசரிப்பில் உற்சாகமின்மை வாய்த் தர்க்கங் கள் முதலியன தலை தூக்கின. இதனைப் பார்த்த சங்கரனுக்கு சகோ தரர் மீது பரிதாபம். மனைவி மீது கோபம். தங்களின் அண்ணாவையும் அண்ணியையும் இவ்வளவு காலமும் மதித்து வந்த மூவருக்கும் மனதுள்ளே வெறுப்பு ஏற்பட்டது. தம்பி தனக்கொரு வேலை தேடும் முயற்சியில் நண் பர்களை நாடினான். வீட்டுப் பிரச்சினைகளை நண்பர்களிடம் கூற பலரும் பல யோசனைகளைக் கூறினார்கள். தங்கை இருவருக்கும் கவலையினால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் பின் தங்க நேரிட்டது. பாடசாலை பிலிருந்து புகார்கள் வந்தன. சங்கரன் மிகுந்த கோபம் அடைந்தான். இனி சங்கரன் வீட்டில் என்ன நடக்கும் என்பதைப் பார்த்தா தெரிய வேண்டும்? குடும்பங்களில் சாத்தான் எத்தகைய அங்கம் வகிக்கிறான் என்று இப்போது பார்த்தீர்களா?
20

புதிய எண்ணங்கள் தோன்றி நாம் ஒரு தீர்மானத்துக்கு வரு முன்னர் ஆவியின் சிந்தையா? மாம்ச சிந்தையா? என ஆராய வேண்டும். மாமிச சிந்தை மகா மரணம்: ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமும். சித் தனைகள் கிரியைகளாக மாறுகின்றன. மாம்சத்தின் கிரியைகளிலே அடங் கியுள்ள பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண் டைகள், பிரிவினைகள் பொறாமைகள் போன்றவைகள் சங்கரனின் குடும் பத்தில் சாத்தானின் மூலம் சிந்தனைகளாகி கிரியைகளாக மாறியதைப் பார்த்தீர்களல்லவா? மாமிசத்தின் கிரியைகளைச் செய்கிறவர்கள் தேவ னுடைய இராட்சியத்தைச் சுதந்தரிப்பதில்லை என்று வேதம் கூறுகின்றது. ஆவியின் சிந்தைைைய என்ன வகையில் அறியலாம் என்று பார்ப்போம். ஆவியின் கனிகளோ அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்.
சங்கரனின் குடும்பத்தில் மாம்சத்தின் சிந்தை செயல்பட்டதால் பிரி வினை உண்டானது. குடும்ப சமாதானம் இல்லை. சந்தோஷம் இல்லை.
சங்கரன் நினைத்ததும் சரிதான். மனைவியும் எல்லாரையும் போலவே நினைத்தாள். பிள்ளைகளும் சரியாகத்தான் நடத்து கொண்டார்கள். சங் கரனுக்கு கோபம் வர வேண்டிய சந்தர்ப்பம்தானே. இதில் என்ன தவறு இருக்கிறது? தம்பி எவ்வளவுகாலம் வேலையில்லாதிருப்பான்? வேலைக் காகவே நண்பர்களை நாடினான். இவைகள் உலக நியாயம். "உங்கள் நினைவுகள் என் நினைவுகள் அல்ல" என்று கர்த்தர் கூறுகின்றார். அப் படியானால் சற்று நழுவி ஆவியின் சிந்தனைக்கு வருவோம். சங்கரன் அன்புடன் புத்திமதிகள் கூறி எல்லோரையும் நல்வழிப்படுத்தியிருந்தால் வெற்றிக்கு அறிகுறியாக அமைந்திருக்கும். அப்படி அவர்கள் கேட்டிரா விட்டாலும் பொறுமையைக் கடைப்பிடித்திருக்க வேண்டும். மனைவியும் அன்பு, சாந்தம், தயவு, நற்குணம் ஆகியவற்றைப் பற்றி மறந்திருக்கக்
கூடாது. அப்போது சகோதரருக்குள்ளும் பிளவு ஏற்பட்டிருக்காது.
எனவே எம்மையும் அறியாமல் எம்மிடையே அங்கத்துவம் வகிக்கும் சாத்தானை ஒதுக்கி வைத்து இராட்சியத்துக்குள் அடங்கி வாழ முற்பட வேண்டும்.
சிந்தனைச் சிதறல்
அன்னையின் நல்வாழ்வுக்கு நங்கூ என் உக்கிர கோபத்தின் படியே
ரம் அவள் குழந்தைகளே. நான் செய்யமாட்டேன்; ஏனெனில்
(சோஃபாக்வீஸ்) நான் கடவுள்; மனுஷனல்ல.
(חdar uק6)
பிரவித்திறமையை வளர்ப்பதற் காகவே கல்வி அறிவு பயன்படுத் தப்பட வேண்டும்.
அன்னை என்றும் அன்னைதான்; உயிரனைத்திலும் மிக்க புனிதம் அன்னை தான்
(பிளேட்டோ) (சேம்யவ் கோல்ரிட்ஜ்)
21

Page 17
(18 ம் பக்கத் தொடர்ச்சி) அவரையே முன்நிறுத்திச் செயற்படும்போது அவரே காரியத்தை வாய்க்கப் பண்ணுவார். Y O நான் இறைவனின் சாயலாக படைக்கப்பட்டேனா? () எனது குடும்பத்தை நான் ஆளுகை செய்கிறேனா? O என் பிள்ளைகளுக்குக் கட்டளையிட நான் ஆபிரகாமைப் போல வல் லவனா? கர்த்தர் கட்டளையிட்ட ஆசீர்வாதங்கள் எனக்குப் பின்னர் என் வழித்தோன்றல்களுக்குக் கிட்டுமா?
'ஆபிரகாம் தன் பிள்ளைகளுக்கும் தனக்குப பின்வரும் தன் வீட் டாருக்கும் கட்டளையிடுவான்' என்பதாக கர்த்தர் சொன்னதை ஆதி யாகமம் 18:19 இல் வாசிக்கலாம்.
கரித்தருக்குக் கீழ்ப்படியும் பிள்ளைகளாக அவர்கள் வளர்க்கப்படுதிற திலேயே இத்தகைய ஆசீர்வாதங்கள் தங்கியுள்ளன. “எங்களுடைய பிள்ளை கள் இரட்சிப்படைய வேண்டும்" எனக் கூறிவிடுவது எவ்வளவு இலகுவானது? ஆயினும், அதை அடைவதற்கு பக்திவிருத்திக்கேற்ற காரியங்களைச் செயற் படுத்துவது எவ்வளவோ முக்கியம் என்பதை எவரும் எண்ணுவதில்லை,
ஒரு வயோதிப மாது ஒரு நாள் சமையலறையிலே, அழுதுகொண்டு பூன்றாள். அவ்வமயம் அங்கு வந்த குருவானவரிடம் தனது கண்களைத் துடைத்தவாறே அவள் பின்வருமாறு கூறினாள்.
"நான் இயேசுவுக்காக சிறியதோர் அளவே பணிபுரிந்துள்ளேன். அத னால் நான் மிக மிக வேதனையடைகிறேன். நான் சிறுமியாக இருந்த காலத்தில் கர்த்தர் என்னுடன் பேசினார். நான் அவருக்காக வாழ முயன் றேன். மிகக் குறைந்த அளவே அவருக்கு நான் பணிவிடை செய்தேன். அவருடைய சேவையில் நான் பெரும் பங்கை வகிக்க வேண்டும் என விரும்புகிறேன்" w
'அவ்வாறாக நீங்கள் என்ன சேவையைச் செய்கிறீர்கள்?' எனக் கேட் டார் குருவானவர்.
"ஓ! அவருக்காகவே இவ் இல்லத்தில் நான் பணியாற்றுகிறேன். மூன்று வேளை சமைத்தல், பாத்திரம் கழுவுதல், வீட்டைத் துப்புரவு செய்தல் பிள்ளைகளைப் பராமரித்தல், ஆடைகளைக் கழுவுதல் போன்ற இன்னோ ரன்ன பணிகளை இங்கு செய்கிறேன்"
இது அந்த அம்மையாரின் பதில். குருவானவர் மீண்டும் கேட்டார். "உங்களுடைய குமாரர் எங்கே?" 'மகன் மாற்குவுக்கு தாங்கள் தானே பட்டமளித்தீர்கள். அவன் தற் போது சீனாவில் பணி புரிகிறான். மகன் லூக்காவும் உங்கள் சபையில் இருந்து தானே ஆபிரிக்கா சென்றான். அவன் ஊழியம் செய்யும் இடத் திலே ஒரு மலர்ச்சி ஏற்பட்டுள்ளதாக எழுதி புள்ளான். மகன் மத்தேயு
22 (29 ம் பக்கம் பார்க்க)

* தொடர்பு சஞ்சிகை உண்மையிலேயே பலருக்கு நன்மை தரக்கூடியதாக அமையும் கிறிஸ்துவை அறிந்தவர்கள் இன்னும் அவருக்குள் நெருங்கி ஜீவிக்கவும், கிறிஸ்துவை அறியாதவர்கள் அவரை அறியத்தக்கதாகவும் மிகவும் எளிமையான நடையில் எல்லாரும் விளங்கிக் கொள்ளக்கூடிய வசன அமைப்பில் காணப்படுகிறது. இச்சஞ்சிகை இந்நாட்டில் வாழும் சகல மக்களின் ஆன்மீக உணவாக அமையக் கடவுளைப் பிரார்த்திக்கிறேன்.
- J. செல்லையா, வாழைச்சேனை.
* பரமானந்த இயேசுவின் தயாள பாசத்தால் "தொடர்பு புகழ் மல ராக ஜொலிக்க எனது தினசரி திவ்யபலிப்பூசையில் மன்றாடுகிறேன். தொடர்பு' இதழ் கிறிஸ்துவின் மகிமைப் பிரலாபங்களை எட்டுத்திக்கும் கொட்டும் முகமாகச் செயல்படவேண்டுமென இயேசுபிரானை மனம் உருகி மன்றாடும் ஜீவன் - சகோ. ஜோசப் நசரேயன் - கொட்டாஞ்சேனை
* "தொடர்பு கிடைக்கப் பெற்றேன். நல்ல முயற்சி. இன்றைய கால கட்டத்தில் கிறிஸ்தவ சமூகங்களுக்கிடையே தேவையான முயற்சி.
தாகம்" சஞ்சிகை - திருகோணமலை Be Sure of my prayers for the Success of Magazine
-- Fr. H. N. Abrahams, Nuwara Eliya * தங்களது இலக்கிய முயற்சிகளுக்கு என்றும் எமது ஆதரவு உண்டு. - மன்றாடல் சஞ்சிகை - கொழும்பு * தொடர்பின் அனைத்து விடயங்களும் மனதைத் தொடுவனவாக அமைந்திருந்தன. "இயேசு எம்மோடிருக்கிறார்" என்னும் விசுவாசத்துடனே இதழை வாசிக்கத் தெர்டங்கிய போது ஏற்பட்ட உணர்வு சஞ்சிகையைப் பூரணமாக வாசித்து முடித்த பின்னரும் நிலைத்திருக்கும் வண்ணம் தர மான ஆக்கங்களாக இருந்தன. 'கவிதைக் களம்" சிறந்த சிந்தனைக் களம்" பிரார்த்தனைகளுடன் வாழ்த்துகிறேன்.
செல்வி. S. E. மொனிக்கா கோமஸ் பத்தனை
* ஒரு மலராய் ஜெபமலராய் முகை நெகிழ்ந்துமணம் பரப்பிய தொடர்பு நறுமலராய், செண்டாய், சரமாய், கொத்தாய், மாலையாய், சோலை பாய், மணம் பரப்பட்டும் தொடர்ந்து - திருமதி R. S தேவதாஸ்
பதுளை
* ஏப்றில் - மே தொடர்பு இதழில் அனைத்து அம்சங்களும் அருமை.
29

Page 18
சிலுவை சுமந்த போது கண் கலங்காத இயேசு". என்னும் கட்டுரை யும் இயேசு காவியக் கவிதையும் என்னை அப்படியே அசைத்து விட்டன
- S. தேவா அப்புத்தளை
* கிறிஸ்து பெருமான் போதித்த உண்மைகளை கதைகள், கருத்துக்கள் சிந்தனைகள், வேதபாடங்கள் முலம் தூய தமிழ் நடையில் 'தொடர்பு" வாசகர்களுடன் தொடர்பு கொள்ளுகிறது. "பெரிய வெளளிக்கிழமை என்ற கடடுரை சிறந்ததோர் ஆன்மீக உணவாகும். "அன்பிற்கோர் ஆண் டவர்' என்ற கவிதை நயம் - கருத்துக் கனிந்து வீறுநடை போடுகிறது. "வேதாகமம் பயில்வோம்" மிகவும் பயனுள்ள அம்சம். மொத்தத்தில் முழு நிறைவு பெற்ற ஒரு கிறிஸ்தவ சஞ்சிகை "தொடர்பு" -
- திருமதி C. தியாகராஜா - இலங்கை வேதாகமச் சங்கம்
* தொடர்பு இதழ்கள் கிடைத்தன. நல்ல பணியில் ஈடுபட்டிருக்கிறீர் கள். வாழ்க, வளர்க. என்று வாழ்த்துகிறேன். சஞ்சிசையில் இரட்சண்ய யாத்திரீகம், தேம்பாவணி, இயேசு காவியம் போன்றவற்றிலிருந்து ஒரு சிறிய இலக்கியக் கட்டுரையாவது வெளியிடுங்கள்.
சிந்தாமணி ஆசிரியர் S. T. சிவநாயகம்.
* மனச்சஞ்சலத்தோடு வாழும் மக்கள் கடவுளோடு கிட்டி நெருங்க
"தொடர்பு' வழி வகுக்கிறது, நல்ல அமைப்போடு வெளி வருகிறது
தொடர்ந்து விடாது வளர ஜெபிக்கிறேன்.
- திருமதி G. பொன்னையா - கொட்டாஞ்சேனை,
Thodarbu Magazine is very useful and interesting. We praise God and thank God for your ministrial work. May God bless you
-- Miss Nirmala Paul, Haputale
* நீங்கள் கர்த்தரோடு வைத்திருக்கிற ஆவிக்குரிய 'தொடர்பு' என்றும் ஞ்சிகை தொடர்பாக வெளிவர எமது இயேசு நேசிக்கிறார் தேவ அன் ஒன் சபை' யில் தொடர்ந்தும் ஜெபித்து வருகிறோம். தேவாவியின் தொடர்பை யாரால் தடை செய்ய் முடியும்? கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்து தொடர்பு சஞ்சிகை மூலமாக சகல மக்களோடும் வைத்திருக்கும் தொடர்பு என்றும் நிலைநிற்க எம் ஆசிகள்.
சகோ. G. அம்புறோஸ் - திருகோணமலை
* தொடர்பு சஞ்சிகையில் செந்தமிழ் வடிவில் - இலக்சியப் பாணியில் தங்கள் சொல் வண்ணமும் கை வண்ணமும் கலந்து வேத ஆதாரங்களு டன் வெளிவரும் தனிப்பாங்கு என்னை மிகவும் கவர்ந்தது. 'தொடர்பு?? சங்கிலியாய்த் தொடர என் ஜெபமும் வாழ்த்துக்களும்’
திருமதி. ஹெலன் ஜெபமணி - பதுளை
24

திருச்சபையும் கிறிஸ்தவ குடும்பமும்
- சகோ. இ. என்: லோரன்ஸ் -
* கிறிஸ்தவ குடும்பத்தின் ஆராதனை
நமது கிறிஸ்தவ குடும்பங்களில் ஆராதனைகள் அவசியம். ஆபிரகாம் விசுவாசிகளின் தகப்பன். ஆபிரகாம் கூடாரம் போட்டு அங்கே கர்த்தருக்கு ஒரு பலி பீடத்தைக் கட்டி கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொண் டாள் என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆபிரகாமின் இருப்பிடத்திலே ஆரா தனை நடந்தது. தேவன் தமது ஒரேபேறான குமாரனை நாசரேத்தில் ஒரு குடும்பத்தில் ஜீவிக்கும்படி அனுப்பினதால் குடும்பத்தை ஆசீர்வதித்தார்3 அச் சிறு வீட்டில் தேவ ஆராதனை நடந்தது.
ஆதிக்கிறிஸ்தவ சபைகள் துவக்கத்தில் ஆராதனைக்கு வீடுகளில்தான் கூடினார்கள். “அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நி யோன்யத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம் பண்ணுவதிலும், உறுதி பாய்த் தரித்திருந்தார்கள்" வீடுகளே ஜெப ஆராதனையின் இடங்களாக இருந்தன.
இந்நாட்களிலும் கிறிஸ்தவ குடும்பங்களில்தான் ஆராதனை தொடங்க வேண்டும். தனித் தியானத்துடன் ஜெமுபம் அவசியம் தேவை. ஒவ்வொரு அங்கத்தினரும் தனித்தனியாகத் தியானம் செய்யும் அப்பியாசம் உண்டிாக வேண்டும். தினமும் நடத்தப்படும் குடும்ப ஜெபத்தில் பெற்றோரும் பிள் ளைகளும் பங்கெடுக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒரு நாள் குறிக் கப்பட்டு அவரவர் மனதில் எழும்பினவண்ணம் குடும்ப ஆராதனையை நடத்தலாம். இந்தச் சமயத்தில் பரிந்து பேசும் ஜெபம் மிக முக்கியமானது. வீட்டில் உள்ளவர்களுக்காகவும், தூரத்திலிருக்கிறவர்களுக்காகவும், உற வினர், சிநேகிதர், திருச்சபைக்காகவும், குடும்பத்தில் உள்ளவர் கள் சேர்த்திருக்கும் பக்திக்குரிய சங்கங்களுக்காகவும், வியாதியஸ்தருக்கா கவும் வேண்டிக்கொள்ள வேண்டும். பெற்றோருடைய ஜெபங்களையும் முன் மாதிரியையுந்தான் பிள்ளைகள் அதிகமாக நினைவு கூருவார்கள். மிஷனெரி ஊழியத்துக்காக தன்னை ஒப்புக் கொடுத்த ஒரு அம்மாள் தான் கடவுளுடைய ஊழியத்துக்காகத் தன்னை ஒப்புக் கொடுக்க ஆவல் உண் டாக்கினது தன் குடும்பத்தின் கிறிஸ்தவ ஜீவியமே என்று சாட்சி கொடுத் தார்கள். பெற்றோரும் பிள்ளைகளும் சேர்ந்து ஜெபிக்கும்போது பிள்ளை கள் பெற்றோரின் ஜெபத்தின் வல்லமையை உணர்ந்து கொள்ளுகிறார்க்ள். நாம் தூரத்திலிருக்கும்போதும் நம்மைக் கூட்டிச் சேர்ப்பது குடும்ப ஆரா தனையே யாகும்.
25

Page 19
ஹபற்றோரின் பரஸ்பர அன்பும் குடும்பத்தின் பொறுப்பும்:-
கடவுளால் இணைக்கப்பட்ட தகப்பனும் தாயும் உள்ளன்புடன் ஒருவரை யொருவர் நேசித்து ஒருவருக்கொருவர் மரியாதையளித்து ஒருமனப்பட்டு வாழும் சிலாக்கியத்தைப் பெற்றிருக்கிறார்கள். அவரவர் தம் சுய இலாபத் தையும், வசதியையும் தேடாமல் குடும்பத்தின் சிறந்த வளர்ச்சிக்காகப் பாடுபடுவாரிகள்.
ஒரு குடும்பத்தில் அநேக பிள்ளைகள். வருமானமோ குறைவு. என்ற போதிலும் உணவுக்காவது, உடைக்காவது அநாவசியமான கவலைகள் உண்டானதில்லை. ஒவ்வொருநாளும் வேலை ஒய்த்த போது பெற்றோர் சம்பாஷிம்பார்கள். அந்த உரையாடலைக் கவனித்தால் அவர்கள் மத் தியில் மூன்றாவது ஆள் (ஆண்டவரே) இருப்பதை உணரலாம்" பிள்ளை கள் ஒவ்வொருவரைப்பற்றியும், அவர்களது கல்வி, ஊழியம், சுகம், குடும்ப ஜீவியம், விவாகம் முதலியவைகளை நன்கு பேசியபின் அயலகத்தார், கடவுளின் ஊழியக்காரர் விடயங்களைப்பற்றியும் பேசி முடித்து உடனே தங்கள் குடும்ப ஜெபத்தை நடத்துவார்கள். ஆகையால் அவர்கள் பேசிய விடயங்கள் ஜெபத்துக்கு ஆயத்தம் அல்லது முன்னுரை என்று சொல்ல லாம். அந்தக் குடும்பத்தில் தாயார் ஜெபிக்கும்போது அவர்களுடைய பக்தி யையும் விசுவாசத்தையும் உணராமல் இருக்க முடியாது.
குடும்பம் நன்றாகச் செழித்து வளரவேண்டுமானால் அதன் விஷேஷித்த ஆள் தாய்தான். 'புத்தியுள்ள ஸ்திரி வீட்டைக் கட்டுகிறாள். புத்தியில்லாத ஸ்திரியோ தன் கைகளினால் அதை இடித்துப் ாோடுகிறாள்." புத்தியுள்ள மனைவி கர்த்தர் அருளும் ஈவு. மனைவி புருஷனுக்குக் கீழ்ப்படிய வேண்டும். பவுல் அப்போஸ்தலன் கூறுகின்றார். இது "அடிமையின் ஆவியல்ல. பக்தி யினாலும், அன்பினாலும், உண்டாகிற ஆவியே. கணவனும் மனைவியும் ஒருவர் வார்த்தையை ஒருவர் கேட்டு கவனித்து நடக்கும் போது நல்ல ஆலோசனைகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு தீர்மானம் செப் யும் போது ஒத்துழைப்பும் அன்பும் நிறைவாக இருக்கும் நேரச் செலவும் வீணாகாமல் பார்த்துக்கொள்ள முடியும். பணத்தை உபயோகிப் பதிலும் இருவரும் சேர்ந்து செய்யும்போது பிரச்சினைகள் வராது இருக்க அது உதவியாக இருக்கும். பிள்ளைகளும் குடும்பத்தின் நிலமையை உணர்ந்து ஜீவிக்க இது உதவியாக இருக்கும்.
பெற்றோர் பிள்ளைகள் - சம்பந்தம் பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படிய வேண்டும். "அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்” என்பது ஒளவை வாக்கு, "உன் தகப் பனையும் தாயையும் கனம் பண்ணுவாயாக’ என்பது ஆண்டவரின் அருள் கட்டளை. பெற்றோர் மூன்று விடயங்களைக் கவனிக்க வேண்டும்.
1) அன்பு பாராட்டுதல்
கோபத்தின் மூலமாக அடக்கிப் பயப்படுத்தி கீழ்ப்படியச்செய்தால் பிள் ளைகள் மனதைக் கடினப்படுத்திக் கொள்ளுவார்கள். அல்லது அதைரியப்
26

பட்டுப் போவார்கள். அன்பான வார்த்தைகள் ஆசையை அதிகரிக்கும் என் பதை உணர்வோமாக.
2) சிட்சை
பிள்ளைகள் தவறுகளைச் செய்யும்போது அவர்களைக் கண்டிக்காத தகப்பன் பிள்ளைகளைப் பகைக்கிறான். அவர்களுக்கு மோசம் செய்யக் கூடிய பொருட்களைக் கொடுக்கிற பெற்றோர் பிள்ளைகளை நேசிக்க வில்லை. ஆனால் நமது கோபத்தை தீர்த்துக் கொள்ளவோ பழி வாங்கும் மனதோடு சிட்சித்தால் அது தவறு.
3) எச்சரிப்பு
போதனை சிட்சைக்கு அவசியமானது. பிள்ளைகள் விளங்கிக் கொள்ள வேண்டிய விதமாய் அவர்கள் குற்றங்களை எடுத்துக்காட்டுதல் நல்லது ஜெபத்தின் மூலமாய் அவர்களை நல்வழியில் திருப்புதலே நல்ல முறை. எல்லாவற்றிற்கும் மேலாக பெற்றோருடைய பேச்சும், குணமும் நடத்தை யுமே பிள்ளைகளுக்கு முன்மாதிரி.
பிள்ளைகள் பெற்றோருக்குப் 'பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக்கன்று கள்" என்றும் வாலவயதின் குமாரர் பலவான் கையிலுள்ள அம்புக்கு ஒப்பா யிருக்கிறார்கள் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. பிள்ளைகள் பெற்றோ ருக்குச் சந்தோஷத்தையும் பெருமையையும் ஆறுதலையும் கொடுக்கிறவர் களாய் இருத்தல் வேண்டும். விசேஷமாய் பெற்றோர் முதிர்வயதடையும் போது பிள்ளைகள் மேல் சார்ந்திருக்க நேரிடும். இது பாரமல்ல. சிலாக் கியம். சிறுவர்களாக நம்மை நமது பெற்றோர் அரவணைத்துக் காப்பாற் றியதை நினைவு கூருவோம். ஒரு தாயின் சந்தோஷம் யாதெனில் அவ குடைய பிள்ளைகள் எழும்பி பிரகாசிப்பதைப் பார்த்து மற்றவர்கள் அவளைப் பாக்கியவதி என்பதே;
"மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என்ளோற்றான் கொல் என்னும் சொல்"
"தந்தை மகற்கு ஆற்கும் உதவி அவையத்து
முந்தி இருப்பச் செயல்" (திருக்குறள்)
குறிப்பு
கொலோசேயரி 8 16, 17 Gasit GSan GBeruri 3 : 18 - 25 编引 எபேசியர் 6 : 1 - 0 4 ஆகிய பகுதிகளை வாசிக்கவும்
கொலோசேயர் 3 12 - 15 J
27

Page 20
கவிதைக் களம்
பாடுகிறேன் இறைவா!
- ராணி ஜோசப் -
பாடுகிறேன் இறைவா உன்னிடத்திலே நான் சோகமாகப் பாடுகிறேன்; உருக்குலைந்த உயிர்களுக்காய் உறவிழந்த மனிதனுக்காய் பாதை மாறும் பக்தனுக்காய் பாசமென்பதொன்றறியா பதர்களுக்காய் உன்னிடத்தில் பக்தியோடு பாடுகிறேன். இறைவா !
அழிந்துவிட்ட குங்குமத்தை ஆசையோடு நினைத்தேங்கும்
syLeeovákesmů, கிறிஸ்து என்று சொல்லிக்கொண்டு கீழ்த்தரமாய் வாழுகின்ற கிறிஸ்தவனுக்காய் சேவை என்று வேஷம் காட்டி சேற்றினுள்ளே அமிழ்ந்து போகும் சேவகனுக்காய் உன்னிடத்தில் பரிதாபத்துடன் பாடுகிறேன்.இறைவா !
தூய்மை என்று கூறிக்கொண்டு துடிப்புடனே வதைக்கின்ற துஷ்டனுக்காய்
வாய்மையோடு வாழ்வதாக வார்த்தை ஜாலம் காட்டுகின்ற வெள்ளை நிறக் கல்லறைகளுக்காய் வேதனையுடன் பாடுகிறேன். இறைவா !
28
 

2. யாழ் வாசிகள் இருவர். சுவிஸில் நிரந்தரத்தொழிலுடையோ, வயது 32, 30. உயரம் 5 - 6" நல்ல ஒழுக்கமுடையவர்கள். 28, 26 வய துக்குட்பட்ட அழகும், கல்வியும், கிறிஸ்தவ ஒழுக்கமும் உடையோர் விரும் பப்படுவர். இல . 107 முதற் கடிதத்திலேயே சகல விபரங்களையும் தருக.
(22 ம் பக்கத் பொடர்ச்சி)
வும் தன் அண்ணனுடன் சேர்ந்து சீனாவில் தேவ ஊழியம் செய்கிறான். என் இளைய மகன் யோவான்; அவனுக்கு வயது பதினெட்டு, அவனும் நேற்றிறவு ஜெபத்தில் கர்த்தர் என்னை என் அண்ணனுடன் ஊழியம் செய்ய ஆபிரிக்காவுக்கு வரும்படி அழைத்தார் என்றாள்.
சொல்லிக் கொண்டே போன அந்த அம்மையாரை ஆச்சரியத்துடன் நோக்கிய குருவானவர் 'அம்மா நீங்கள் இறைவனுக்காக எதையுமே செய்யவில்லை என ஏங்கினிர்களே! வீட்டுக் கடமைகளிலேயே காலம் போவதாகக் கலங்கினிர்களே! உங்களுக்கு நிச்சயமாகக் கிடைப்பது மகிமை யின் மாளிகை அல்லவா என்றார்?
O பொறுப்புக்களை உணர்ந்து செயற்படுவோர் கு பெலவீனங்களை தைரியமாய் மேற்கொள்வோர் O தேவனுடைய வாக்குத்தத்தங்களை விசுவாசிப்போர்.
(இவர்களுடைய ஜெபங்கள் இவ்வாறாகவே பலன் தரும்.)
ஒல்லாந்த சீர்திருத்த வுல்வெண்டால் தமிழ்ச்சபையின் வாலிபமே நீ வாழ்க
இருபத்தைந் தாண்டுகள்ாய் ஈண்டு வளர்ந்து நற்பேருடன் புகழ்பெற்று வீறுடன் செயலாற்றி ஆண்டவர் அருளோடு அரும்பணி ஆற்றின்று வெள்ளிவிழாக் காணுகின்ற வாலிபர் கலகமதை வாழ்த்துகிறோம். வாழ்க 1 வென
தொடர்பின் வழிமுறையால்.
29

Page 21
“பைபிள்கொர் - லங்கா'
எமது பைபிள்கொர் லங்கா குடும்பத்தில் நீங்களும் ஓர் அங்கத்தவராக இணைந்து கொள்ள விரும்பினால் 1992 - ஜூலை மாதத்திற்கு முன் எமக்கு எழுதுங்கள்.
* இதற்கு அங்கத்துவக் கட்டணம் அறவிடப்பட மாட்டாது.
* நீங்கள் 18 வயதுக்கு மேற்பட்டவராய் இருத்தல் அவசியம்.
* ஒர் அங்கத்துவ அட்டையும், "ஷேட் அல்லது "பிளவுஸில்' அணியக்
கூடிய இலச்சினையும் (Badge) உங்களுக்கு வழங்கப்படும்.
தகைமைகள்
‘புதுவாழ்வு உமக்கு’ என்னும் எமது பாடநெறியை நீங்கள் பூர்த்தி செய்திருக்க வேண்டும். '
* இப் பாட நெறியில் சேரக்கூடிய புதிய மாணவர்களின் பெயர் விலா சங்களை (அவர்களுடைய அனுமதியுடன்) எமக்கு அனுப்புதல் வேண் டும்.
* தொடர்பு சஞ்சிகையின் சந்தாதாரராக இணையும் ஒவ்வொருவரும் கடவுளுக்குச் சாட்சியாகவும். மறுபடியும் பிறந்த ஒரு திருச்சபை அங் கத்தவராகவும் ஜீவிக்கிறார்.
* குறைந்தபட்சம் ஐந்து சந்தாதாரரையேனும் "தொடர்பு' டன்
இணைக்க முயலுங்கள்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
“BBLECOR” 6, Balahenamulla Lane, Te 554009 Colombo - 6.
30

"தொடர்பு சஞ்சிகை
அங்கத்துவ விண்ணப்பம்
gwmp=r
asrtrifluunt 6a) au Luntenu RD6Cr
"தொடர்பு
பணிப்பாளர் அவர்களுக்கு
கொழும்பு 6
ஐயா, மேற்படி சஞ்சிகையின் சந்தாதாரராக இணைந்து கொள்ள விரும்பு கிறேன். 199. ஆம் ஆண்டுச் சந்தாவான.ரூபாவை ...இலக்க காசோலையாக காசுக்கட்டளையாக
முத்திரைகளாக அனுப்பி வைக்கிறேன்.
சஞ்சிகையை கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். ADDRESS IN ENGLISH
. . . . . . . g . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . e.
Y C 0LSLL L 0L L 00 LL 0L L L S L C C LL LLL LL 0 LL LL 0 L L L L L L S SL S S LLL LLLLLL
CC C CC 0 00 0 0 0 0 L CL CCCC LCL C C 00 0C C SC LL LLLL LLLL S S S L L SSL L S LS S SS L LLLL LCC L LL 0 000 0L0L CC CL
கையொப்பம்
THODARPU 6 BALAH ENAMULLA LANE COLOMBO 6
திரு திருமதி / செல்வி. 9 s . . . . . . .
உங்களது தொடர்பு பதிவெண்
ஒவ்வொரு சஞ்சிகையும் ஒழுங்காக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் மற்றவர்களுக்கும் இதை அறிமுகப்படுத்தி இறைவனுக்கும் அவர்களுக்கும் இடையே தொடர்பு ஏற்பட வழி செய்யுங்கள்.
க்ர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
நன்றி
- ஆசிரியர் -

Page 22

இத் தொடர்பு'.
இயேசுக் கிறிஸ்துவை அறியாதவர்கள் அவன்ரப் பற்றி அறிந்து
கொள்வதற்கும்,
இயேசுக் கிறிஸ்துவை அறிந்து கொண்டவர்கள் விசுவாசத்தில் வளர்ச்சி பெறுவதோடு, அவருடைய சாட்சிகளாக விளங்கு வதற்கும்,
இயேசுக் கிறிஸ்துவை அறிந்து கொண்டு, அவரைப் பின்பற்றி சமூகத் திற்குப் பயன்படும் நற்பிரஜைகளாகப் புறப்படுவதற்கும்,
எமது ‘இலவச வேதாகம அஞ்சல் வழிக்கல்வி’ நிலைய, BBLECOR - மாணவர்களுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக்கொள் வதற்குமாகும்.
* தொடர்பு - சந்தா விபரம்
தபாற்செலவுடன் உள்ளூரில் இந்தியாவில் வெளியூரில்
ஆண்டுச் சந்தா (6 பிரதி) ரூ. 50/- ரூபா 100/- US$ 251
தனிப் பிரதி &101 . ש- இலங்கை ரூபா இலங்கை ரூபா
2001- 1000/-
அன்பார்ந்த நேயர்களே,
சஞ்சிகையை வாசித்து விட்டீர்களா?
望
பலருக்கு இதை அறிமுகப்படுத்துவதன் மூலம் இவ்வூழியத்துக்கு
உதவி புரியுங்கள்.
உங்களுக்குத் தெரிந்தவர்களின் விலாசங்களை அனுப்பிவையுங்கள்.
சஞ்சிகை பற்றிய கருத்துக்களோடு உங்கள் கட்டுரை, கதை,
கவிதைகளையும் ஆசிரியருக்கு அனுப்பி வையுங்கள்.
- நன்றி

Page 23
"தொடர்பு அன்
。苯
பிறந்த நாள் * திருமண * ஞானஸ்நானம் * இரட்சி
* திடப்படுத்தல் / பகிரங்க விச தினங்களின் ஞாபகா தொடர்புக்கான அன்பளி
ரூ 40/- ஐ உங்களுடைய:-
家 பிள்ளைகளுக்காக
பெற்றோருக்காக * * போதகருக்காக
* சபை அங்கத்தவருக்கா
அல்ல நீங்கள் விரும்பும் எவருக்காகவும் செலு வழி செய்யுங்கள்.
Printed and Published by Bro. Devadason ل Kengalla for Rev. R. Thurairajah, Director, at New Ferrine Printers, 6914 Kadawatha Roa
 

ーアー O 6 فلم • O
பளிப்புத் திட்டம்
நாள் " கிறிஸ்மஸ்/
ப்பின் தினம்
சவாச அறிக்கை போன்ற
ர்த்தமாக
'ப்புச் சந்தா
* நண்பர்களுக்காக
ஆசிரியர்களுக்காக மாணவருக்காக
"க புதிய விசுவாசிகளுக்காக
5 அத்தி அவர்கள் "தொடர்பு பெற
eyasingh of Dason's - 90. Kandy Road,
No 6. Balahenamulla Lane, Colombo 6. Id, Dehiwela on 25. 06.. 92.
g