கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலைமலர் 1976-1977

Page 1
ழ்ெ-துெக்கல்லூரி உலர்தர மாணவர் ஒன்றில் முதலாம் வருடம்
1976-77
 
 

()X
(O
C ா Ve,
CiteA 62
A. }/
୫ । |-S

Page 2
கலை விழ
of 26 5s 00 - 5s (0.5
pgడి) 5-05 - 5 = 4వీ
upTశీ వీ ఆ శ్రీ నీ కా లో = ! నీ
ຂຶ0 ຄົນ
靈『á1
ལྷོ་༽g h |
இரவு
7 s60)
亨。30
8 e 2 (t)}
9. ()

ாக் கோலம்
மங்கள விளக்கேற்றல்
தேவாரம்
மங்கள இசை
வரவேற்புரை
ஆசியுரை
கவியரங்கு
நாட்டிய அரங்கு
வழக்காடு மன்றம்
நன்றியுரை
நாடக அரங்கு
கல்லூரிக் கீதம்
தேசிய கீதம்

Page 3
இதழ் 2
 

ழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ர்தர மாணவர் ஒன்றியம் முதலாம் வருடம்
விழாச் சிறப்பிதழ் -
இதழாசிரியர்
எழுவை மகேசன்
*upmmg 1977°

Page 4
COLOMBO M.
Dealers in all kinds of Moter Spa
பூனி லங்கா அரச வர்த்
தாபன மோட்டார்
விற்பனைய
מ - - אז ܐ ܝ ܚ ¬ ÷. A . . . . .
*ऽऽ و" يعني " :
తో
கொழும்பு GuDTI
மோட்டார் வாகன உதிரிப்பாகங்களு
,。
இல. 37, ஸ்ரான்லி வீதி,
யாழ்ப்பாணம்.
 

OTOR STORES
e París, Accessories and Paints,
த8 (பொது) கூட்டுத் வாகன உதிரிப்பாக TGT fir 356ñT.
G_mi ດh6gTT.
ம், திந்தை வகை விற்பனையாளர்களும்
No. 37, Stanley Road,
JAFFNA.

Page 5
@手。
உயர்திரு. பொ.
 
 

卯国G们
குமாரசுவாமி

Page 6

திபர்

Page 7
யாழ்நகர் இந்து வருட ஒன்றியம் எடுக்கு னையும் வாழ்த்துவதில் கடந்த ஆண்டிலே முத கியது. எல்லோரும் பார பெற்றது. இவ்வாண்டிலு 65%ుas&r வளர்க்கவும், தம் நிற்கின்றது. மலர் வெளி கருத்துத் திறனை மாணவ உதவும், என்ற நம்பிக்கை (65 F601 அறிவினைப் பயன் மாணவரொன்றியம் பெரி. பரியப் பண்பாட்டிஜன்ட் நினைந்து என்னுள்ளம் ம ரொன்றியத்தின் ஆக்க ே மார வாழ்த்துகின்றேன். வீசட்டும் என என்னுள்ள
வாழிய செந்தமிழ், கல்லூரி,

எமது அதிபர் வாழ்த்துகிறர் !
கல்லூரி உயர்தர மாணவர் முதல் b கலைவிழாவினையும் அவ்விழா மலரி ான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்: முதலாக இக்கலைவிழா ஆரம்பமா ட்டும் வகையில் விழா இனிது நடை ம் இம்மாணவர் ஒன்றியம் சுதேசிய மறிவினை விருத்தி செய்யவும் முனைந்து பீடு இவ்வாண்டிலும் நிகழவிருக்கிறது. ர் வெளிப்படுத்த இம்மலர் பெரிதும் எனக்குண்டு வளர்ந்து வரும் விஞ் படுத்தவும் நுண்கலைகளே வளர்க்கவும் தும் பாடுபடும் வேளையில் நமது பாரம் பேணி வளர்க்கவும் முன்னிற்பதை கிழ்ச்சியடைகின்றது, உயர்தர மாணவ வலைகள் சிறந்து விளங்குக, என மன விழாமலர் இனிது மலர்ந்து மணம் ங்கலந்த ஆசியினைக் கூறுகின்றேன்.
வாழ்க நம்கலைகள், வளர்க இந்துக்
பிென் சகுேமாரசாமி

Page 8
கே. (3.
யாழ்ப்பாணம்
தங்க, வைர நல
N
82/4 கஸ்தூரியார் வீதி
தங்கப் பவுண் 6 எங்களிடம் பெற்று
V. P. P உடன்
AXS s؟..بِگ بیبر "";
ܐܠܠܔܓܵܵ
ஒடர்கள் குறித்த தவணையில் சிறந்த
K. K. V. Jaffn
82/4. Kasturiar Road,
 
 
 

தொலைபேசி 362
நகை மாளிகை
A35 6in uu IT LI IT Jiżb
யாழ்ப்பாணம்.
வைர நகைகள் றுக்கொள்ளலாம்.
கவனிக்கப்படும்.
த முறையில் செய்து கொடுக்கப்படும்,
a Jewel House
JAFFNA.

Page 9
இலங்கை, யாழ்ப்பா வர் ஒன்றியத்தினரால் க3 படவிருக்கிறது என்ற செ வெளிவரவிருக்கிறது
கலைவிழா இனிது சிறந்த கட்டுரைகாேத் த வேண்டும் எனவும், விழா ரும் கட்டுப்பாட்டுடனும் முதல் வகுப்பில் வெற்றிெ ளுக்கும் நற்ருெண்டு புரிந் முழுமனதுடன் வாழ்த்துகி
திருச்சிராப்பள்ளி - 8. 29-22-76.

முத்தமிழ்க் காவலன் வாழ்த்துகிறர்!
ணம் இந்துக் கல்லூரி உயர்தர மாண லவிழா ஒன்று அண்மையில் நடாத்தப் ய்தியும், அதன் நினைவாக மலர் ஒன்று செய்தியும் என்னை மகிழ்விக்கின்றது.
நடைபெற வேண்டும் எனவும், மலர் TÅG வெளிவந்து தமிழ்மணம் வீச க் கொண்டாடும் மாணவர்கள் அனைவ ஒழுக்கத்துடனும் நடந்து, நன்கு கற்று பற்று, நாட்டுக்கும் மொழிக்கும் மக்க து நல்வாழ்வு வாழவேண்டும் எனவும்
ਹੈ।
தங்களன்புக்குரிய
கி. ஆ. பெ. விசுவநாதம்

Page 10
Šasi Oslas
Eswar C
18, STANLEY
T phone
தந்தி2 வைரம்
95 FEN 355 Li
NA
வைர ந
எங்க
பெற்றுக்ெ
பொ. அம்பு
தங்க, வைர நி 19, கஸ்தூரியார் வீதி,

oporation
ROAD, JAFFNA.
Λ 3 Ο Ε
தொலைபேசி 7 1 g g
கைகள்
』爾豪亡 5 JT6j, 6IT GUI Lb.
6) 6A u 60505 T fi
யாழ்ப்பாணம்.

Page 11
ஆசிரியத்
" எண்ணித் துணிக
எண்ணுவம் என்ப
இது வள்ளுவன் வாக்கு எமது ஒரு பெருவிழாவாக எடுக்கத் தீர்மானி கலைமலரையும் வெளியிடுவதென்று எ ணத்தைச் செயலாக்குவதற்கு முயற் வொன்றிய மாணவர்களின் உழைப்பின் என்பதில் ஐயமில்லை.
ஈழவள நாட்டில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி புகழெனும் கிளைபரப்பு விருட்சம். அவ்விருட்சத்திலே 1976-ம் ஒன்றியம். அம்மலரின் ஒரு இதழ்த தவழ்ந்து இனிய சுகந்த மணத்தைப் யும், மலரின் மணத்தையும் மாநிலம் ஆ சொல்லட்டும்!
ஆக்கங்கள் படைத்து இதழுக்கு ஊக்கங்கள் அளித்து இளைஞர் சிறுமை வழங்கிய அறிவுச் செம்மல்களுக்கும், வர்த்தக விளம்பரங்களை நல்கிய வணி களை எடுத்துத்தந்த பேரன்பர்களுக்கும் செம்மையாய் எமக்களித்த செட்டியார் ணப்படத்தை வரைந்துதவிய ஓவியர், மற்றும் இலைமறை காயாக இம்மலர்ப் ப புடையோர்க்கும் யாழ். இந்துக் கல்லூ றியத்தின் சார்பில் இதழாசிரியனின் இ
கசடறக் கல்வி தந்து காரியத்தி தந்து காசினியில் கருணை மழை டெ இம் மலரைக் காணிக்கையாக்குகின் ருே
●』○エ

தலேயங்கம்
கருமம் துணிந்தபின் து இழுக்கு.?
ஒன்றிய மாணவர்கள் இக் கலைவிழாவை த்தபோதே, அவ்விழாவையொட்டி ஒரு ண்ணித் துணிந்துவிட்டோம். இந்த எண் Pத்து, அதில் வெற்றியும் பெற்ற இவ் பெருமையை இம்மலர் பிரதிபலிக்கிறது
என்பது ஒரு கற்பகச்சோலை அதில் ஓங்கி வளர்ந்திருக்கும் அறிவுப் பெரு ஆண்டு மலர்ந்த அழகிய மலர் 6TLD تيy[ ான் இப்பொழுது உங்கள் கரங்களில் பரப்புகின்றது. மரத்தின் பெருமையை அறிந்ததே இதழின் சிறப்பை இதழே
;ப் பெருமையூட்டிய நண்பர்களுக்கும், போக்கிய பெரியோர்களுக்கும், ஆசி கூசி நின்ற வேளையிலே குதூகலத்தோடு கப் பெருமக்களுக்கும், அவ்விளம்பரங் செந்தமிழ் மணக்கும் இம் மலரைச் அச்சகத்தினருக்கும், மேலட்டை வண் ஆசிரியர் குணசிங்கம் அவர்களுக்கும் டைப்புக்கு உதவிய மறக்கமுடியாத மாண் ரி உயர்தர முதலாம் வருட மாணவர் ஒன்
னிய நன்றிகள்
繫 ல் சித்தி தந்து பேனையிலே தமிழைத் ாழிகின்ற, கலைமகளின் காலடிகளுக்கு
rší stř

Page 12
ܦ
உயர்தர மான
முதலசீம்
黏 திரு. 酸、 புரவலர்கள் திரு
திரு. ది.
· ტ.
துனத் த்லைவர் செல் செயலாளர் செல் துன்ச்செயலாளர் பொருளாளர் செல் பத்திராதியர் செல்வ வகுப்புப் பிரதிநிதிகள்
蠶置義 செல்வன் தா. மனுேகரன் 18 செல்வன் சு. கதிர்காமநாதன்
10 செல்வன் இருந்ஞேகரன்
இருபத்தொரு (1) பொதுக் நடைபெற்றன.
ஏழு (7) செய்ற்குழுக் கூட்டங்கள் ప్డేట్టు ఇupTజొద్ది (psörgfir G நிதியுத படமாளிகையில் வெற்றிகரமாக ந் சிறப்புச் சொற்பொழிவாளராக செ ஒ. 2ம் வருடம்) கலந்து கொண்டு என்னும் தலைப்பில் உரையாற்றினு
* இன்றைய இளேஞர்களின் டேக் ஆக்கப்பாதைக்கா? அல்லது அழிவு வாலிபர்கள் அந்நிய நாட்டுக்குச் வரவேற்க முடியாததா?' 'பெண் அல்லது அவசியம்ற்றதா? ஆகிய ஒன்றிய அங்கத்தினரிடையே நடா * கம்பராமாயணத்தில் கதாநாயகனுக அன்றி தகுதியற்றவணு' என்பதை தொடர்ந்து இரு தினங்களாக நட இணையற்ற தமிழ் எழுத்தாளர்கள் வெளியேற்றம் ஆகிய தலைப்புக்கள் எமது ஒன்றிய மாணவர்கள் கலந்து - 12 - 76 இல் பரியோவன் கல்லூரி துபசார வைபவத்தில் வை. யோதே யோர் எமது ஒன்றியத்திலிருந்து

வர் ஒன்றியம் f வருடம்
பொ. 3. குமாரசுவாமி (அதிபர்)
|-
Gitar. மகேஸ்வரன் , சு சண்முகராஜா
ਰੈ in. பாலரவி வன் செ. வெற்றிக்குமாரன்
ma யோகேஸ்வரன் ། ສຸຂທັຍ ຫຼື, இராஜேந்திரன்
பன் ஆ லிங்கநாயகம்
1D செல்வன் ச. விமலராஜ்
1E செல்வன் வை. கருணைநாதன்
உங்களும் ஒரு சிறப்புக் கூட்டமும்
நடைபெற்றன. விக் காட்சி ஒன்றை 14-11-76 ல் சாந்தி டர்த்தி முடித்தேன்ம் ல்வன் இ. ஜெயராஜ் (தலைவன். உ. மா. "சமுதாயத்தில் சமயத்தின் பங்கு" 斯。 莓、
க்கு சமுதாயத்தை இட்டுச் செல்வது |ப்பாதைக்கா?' 'இலங்கையில் படித்த சல்வது வரவேற்கத்தக்கதா? அல்லது
sਟੋਲ தலைப்புக்களில் மூன்று விவாதங்கள் த்தப்பட்டன. 5 இருக்க இராமன் தகுதியுடையவனு? ஆராய வழக்காடு மன்றம் ஒன்று rத்தப்பட்டது. a
இலங்கையில் இருந்து புத்திசாலிகள் 1ன் கீழ் நடைபெற்ற கருத்தரங்குகளில் து சிறப்பித்தார்கன்.
மாணவர்கள் நடாத்திய சமூக விருந் 6) ਹੈ। வேணுகோபன் ஆகி கலந்து கொண்டனர்.

Page 13
|-đò@@maes)- 000S000 LLL LLLLL S LLLLLS 0LL 0LL KSLLZYYYK LLLLL
 

SYY LL 000SLLL YLLLSYK LLS 0S 0L0L0 LLLLLLL S SYY LS00K S
**』屬QQQT。環。"(4n隱44@*n)4%粵)q。• 1996 ugon uso sgïo (o os soudernaee, n-a) 1991 gossos) u so oso -: (rts ~ $) soos ronggi
SLLLYLLS LLLL LL L L0 S00ZSLL LLLLLLS LLLLLL L SY SLLLLLLLS0LL 00LLZLL S00 00Y LLLYYSLLLLL L SLL SLLLLL LLSLLLLLL LLLYSYSYY SLLLLLS 0L LLZLL0 S00Z S000YY
: (to · @) lygoston,No

Page 14


Page 15
* தரமான ஜவுளி
责 றெடிமேட் உை
மற்றும்
* அழகுசாதனப்
ராஜ்கே
47, பெரியகடிை,
போன் 28 G
 

த் தினுசுகளுக்கும்
டகளுக்கும்
பொருட்களுக்கும்
| L ITT GD Giu)
யாழ்ப்பாணம்.
அழகிய |ண் நகைகளுக்கும்
ரங்களுக்கும்
த ஸ்தாபனம் ,
ஜப வல்லர் ஸ்
r Slum LITyüd
కొల్యాకాలాలా-కాగితాలోలాలా
-ses யாழ்ப்பாணம்,

Page 16
CMS):44, ke Šas,
εί
C H E L.
4 / 1 , STA
т» phone }
όό 4
A. N. A. L L
Sjeve allers & ( 75, KANNATHID
தொலைபேசி
6 6 4.
ஆ. நல்லதம்பி
75. கன்னதிட்டி

A P P A & C O.
IN LEY ROA ED9 = JAFF NA
To gram KAMA A LA JA
T H A BY
DY - JA FIFINA.
தந்தி:
நகை வைர வியாபாரம்
s யாழ்ப்பாணம்.

Page 17
தலைவர்
*வெஞ்சிலேயே கோடுவன,
அஞ்சிலம்பே வாய்விட் ட
ழேந்தி இன்றிருந்தால் கோடிய நீதிை நெஞ்சங்களைக் கண்டு, வெந்து மடிந்தி என்று பாடிய வள்ளுவப் பெருந்தகை அரசியற் செயற் கோடுகளுக்குள் செ நம் தமிழ் மக்களுக்குத் தமிழ்த்தாய் ஒரு நல்விழா !
பழைமையை மறந்து புதுமை இளைஞர்களுக்குப் பழைமை ஒரு கயை பயனையும் சிந்திக்க வைப்பதுதான் இ
இவ்வாண்டு ஒன்றியத்தின் இளந் கருத்து, வழக்காடு அரங்குகள் ஆர்வு டையே எழுந்துள்ள மொழியார்வத்து கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் உட்பட்டு எம்பணியைத் தொடரவேண்
கல்வி கல்வியாகப் பரிணமிப்பது லும் காலத்தே இக் கலைவிழாவைக் க3 மிகவும் பெருமைப்படுகின்ருேம்.
நெஞ்சிலுரமும், நேர்மைத் திறனு பணி, சமூகப் பணியாக ஒரு தெய்வி ஒன்றிய அங்கத்தினர் காலத்துக்குக் நிலைநின்று செயலெனும் மூலவளத்ை அர்ப்பணிப்பார்களாக !

தகவுரை
மென்குழலே சோருவன ாற்றுவன' எனும் அடிகள் தந்த புக யக் குன்றிய குணங்களைக், குமுறும் ருப்பார். 'நாடென்ப நாடா வளத்தன்' இன்றிருந்தால். பொருளாதார, சமூக யற்பட்டு, உழன்று தளர்ந்து நிற்கும் தரும் தாலாட்டுத்தான் இக் கலைவிழா !
புடன் இன்பமனுபவித்திடும் இக்கால ம எனினும் பழைமையின் பண்பையும் க் கலைமலர் !
தலைமுறையினுல் நடாத்தப்பட்ட, கவி, மிகுதியுற்றுக் காணப்பட்டவை எம்மி க்கோர் எடுத்துக்காட்டு எம்மவர் கற்றவர் வழங்கிய கோட்பாடுகளுக்கு டும் என்பது எமது பேரவா.
பாடசாலைகளில்தானுகும். கல்வி பயி லமகளுக்கு விழாவாக எடுப்பதில் நாம்
ம் கொண்ட எமது மாணவ மணிகளின் கப் பணியாக மலர வேண்டும், எம்
கணக்குக் கொடுத்துச் செயலுநரின் த ஆக்கப்பணியெனும் திருப்பணிக்கு
B nr. Cu Fr Guðgreifi ஒன்றியத் தலேவர்

Page 18
பொருளாளரி
யாழ் இந்துக் கல்லூரி உயர்தர யம் வெற்றிகரமாகக் கலைவிழா ஒன்ை மலர் ஒன்றையும் வெளியிட இருக்கும் பிப்பதில் மிகவும் பெருமையடைகின்றே சிறப்பான நிகழ்ச்சியாகக் கார்த்திகை மாளிகையில் ஒரு நிதியுதவிப் படக்காட் தவிக் கனட்சியின் பிரதான நோக்கம் யான நிதியைச் சேகரிப்பதாகும்.
எமது ஒன்றிய மாணவர்களின் முழு ரிக்கெற்றுக்களேயும் இரு வாரங்க ருந்தது. மேற்படி நிதியுதவிக் காட்சியி ust be) ਪੇਰ காட்சியை ஏற்பாடு செய்வதற்கு எமக்கு 呜雪卯 于霹雳口 ஆணையானர் இலங்கை பிலிம்ஸ் லிமிட்டெட் ஆகியோருக்கும் 6 விற்று எமக்கு நிதியுதவி செய்த பெற்ே யர் ஆள், அன்பர்கள், ஆதரவாளர்கள், தின் சார்பில் எமது மனமார்ந்த நன்றி

ன் அறிக்கை
(முதலாம் வருடம்) மாணவர் ஒன்றி றயும் அதனே முன்னிட்டு கலைவிழா இவ்வேளையில் இவ்வறிக்கையைச் சமர்ப் ன் கடந்த வருடம் எமது ஒன்றியம் மாதம் 14ம் திகதி யாழ். சாந்தி பட சியை நடாத்தி முடித்தது. இந்நிதியு கலேவிழாவை நடாத்துவதற்கு தேவை
விடாமுயற்சியும், அயராத உழைப்பும் ளூக்கிடையில் விற்பதற்குக் காரணமாயி ல் நாம் திரட்டிய நிதி 2650 ரூபா. தாகை 690 ரூபா. மேற்படி நிதியுதவிக் உறுதுணை புரிந்த அதிபர், கல்வி அதிபதி, த் திரைப்படக் கூட்டுத்தாபனம் சாந்தி சமது நிதிஉதவிக்காட்சி ரிக்கெற்றுக்களை ருர்கள், பழைய மாணவர்கள், ஆசிரி நண்பர்கள் அனைவருக்கும் ஒன்றியத் யைத் தெரிவித்துக் கொள்கின் ருேம்.
அ. லிங்கநாயகம்

Page 19
தேசிது ஒருமைப்ப பூரண சுதந்திர தமிழ் வாலிய முன்னணிக
ஒரு நாட்டின் பண்பும், கலாச்சாரப் பெருமையும் ஒரு சந்ததியுடன் நின்று விடுவதில்லை. தொடர்ந்து கொண்டே செல்கிறது. நம்மூதாதையர்களின் பெரு மைகளைக் கட்டிக்காத்து புதிய உலகத் தின் போக்கைப் புரிந்து, அதற்கேற்பப் பழைமையின் வே ரி ல் வாழ்வது தான் சிறந்த இளைஞர்களின் பண்பாக அமைய வேண்டும். சிறிய விகையிலேயே கால் கொண்டு கிளைபரப்பிச் செழித்து வளர்ந்த ஆலமரம் பலவாண்டு காலமாக நிலைத் துத் தளிர் பரப்பித் தனது பொலிவை இழக்காக அழகோடு நிற்பதற்கு அடிப் படையாக அமைவது அதன் விழுது களே! அதனை ஒப்ப நாட்டின் எதிர்கா லத்தை நிர்ணயிப்பவர்களான இளைஞர் கள் ஆலம் விழுதுகள்போல் தமது சமுதா யத்துக்கு உறு தி  ைய க் கொடுக்க வேண்டும்.
இன்றைய பெரியவர்கள் நா 2ள முதிர்ந்துவிட, நேற்றைய இளைஞர்கள் நாளைய பெரியவர்களாகின்றனர். இது நியதி. இந்நியதியை மாற்ற முடியாது. எனவே இளைஞர்கள் எதிலும் உற்சாக மும், உறுதியும் பண்புங் கொண்டவர் களாகத் தம்மை உயர்த்தி வெற்றியடைய வேண்டும். வெறும் உணர்ச்சியை விட்டு காரிய சாதனையை அவர்கள் மேற்கொள்ள வேண்டும். உலக சரித்திரத்தைப் புரட் டிப் பார்ப்போமானுல் எங்கும் சுதந்தி ரம் ஓங்கி உறுதி பெறுவதற்கு இளைஞர் கள் நல்கிய உழைப்பும் தியாகமும் சீர் படச் செயற்பட்டிருக்கின்றன. இளைஞர் கள் இயற்கையாகவே உற்சாகம் உடைய வர்கள். இளம் உள்ளத்தில் இருந்து பிறக் கின்ற வீர உணர்ச்சி நற்பயனைத் தரும், எனவே ஒவ்வொரு இனமும் தன் பூரண விடுதலைக்காக வீர இளைஞர் களை யே வேண்டி நிற்கின்றது.

16 R. மகேந்திரன் (ԼpLD 11 E ளும்
இளம் உள்ளத்து வேகத்தைத் தடுத்து நிறுத்திவிட வேண்டும். எம்மைச் சிலர்
மிகவும் இலகுவாக மயக்கித் திருப்பி விடு வார்கள். அவர்களுடைய மயக்க மொழி களுக்கோ போலிவார்த்தைகளுக்கோ பலியாகாது சுய சிந்தனை மூலம் ந ம து நாட்டின் இனத்தின், பொது நலத்தை உயர்த்துவதற்கு உகந்த முறையில் சிந் திக்க வேண்டும். இந்நாட்டில் பெயரைப் பெற்றிருக்கும் அரசியற் கட்சிகள் யாவும் தங்களுடைய வளர்ச்சிக்கு அங்கமாக வாலிப முன்னணியினரையே நம்புகின் றன. அவர்களைத் தமது அங்கமாக இணைத்துச் செயற்படுத்துகின்றன. ஒவ் வொரு கட்சியின் கொள்கைகளும் குறிப் பிட்ட வாலிப இயக்கத்தின் உத்வேகத்தி ஞல் ஓங்கவே செய்கின்றன. எனவே இளைஞர்களாகிய நாங்கள் எமது சிந்த னேயைக் கடிவாளம் அற்ற குதிரையைப் போல் தனது போக்குக்கமைய ஒடவி டாது நிதானத்துடனும் புத்திசாதுர்யத் துடனும் செலுத்த வேண்டியவர்களா கின்ருேம்.
இலங்கையில் பல்வேறுபட்ட இனத் தவர்கள் வாழ்கின்றனர். ஒவ்வொரு இனத்தவர்களுக்கும் தனிப்பட்ட பண் பும் க்லாச்சாரப் பெருமையும் உண்டு
பெற்ற நற் தாயும் பிறந்த பொன்னுடும் நற்றவானிலு நனி சிறந்தனவே” என்கின் ருன் உலகப் பெருங்கவிஞன் பாரதி தேசிய உணர்ச்சியோடு நாட்டிற்கு உழைக்கவேண்டும் என்பதை நெஞ்ச கத்தே கொண்டு அவர் இதனை யாத்துள் ளார். யாம் இதன் உள்ளர்த்தத்தைப் புரிந்து செயற்படவேண்டும்.
இளைஞர்களுக்கு நிதானமான சிந் தனே வேண்டும். சிறந்த தகைமையுடைய தலைவனேயே நாடவேண்டும் உணர்ச் சியை இலகுவாகத் தட்டி யெழுப்பிவிடச்

Page 20
1 ܠܵܐ ܗܣܡܗ
சிலரால் முடிகிறது. ஆணு ல் அந்த உணர்ச்சியைச் செயல்படுத்த முடியாது போனுல் அதல்ை பலன் கிட்டிவிடுமா? எமது நாட்டில் வாழ்கின்ற பெரும் பான்மை மக்கள் சிங்களவர். தமிழ் மக் கள் விகிதாசாரத்தில் குறைந்தவர்கள் எனினும் இந்நாட்டின் ஒவ்வொரு அங் குல நிலத்திலும் வாழத் தமிழ்பேசும் மக் களுக்கு உரிமையுண்டு. அந்த உரிமை யின் அடிப்படையில் அவர்கள் ஈழம் எங்கும் பரந்து செறிந்து வாழ்கின்ருர் கள், வடக்குக் கிழக்கு மாகாணங்களை மட்டும் நம்பிக்கொண்டு நம் முன்னுேர் இருக்கவில்லை. பல கஷ்டங்களுக்கூடே நாட்டின் பல பாகங்களிலும் தம்மை மற் றவர்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும் தம்மை உயர்த்திக் கொண்டனர். இன் றைய இளைஞர்களாகிய நாமும் ஒரு குறு கிய இடத்துக்குள் முடங்கி விடாது எல்லே கடந்து எங்கும் பரந்து நல் வாழ்க்கை வாழவேண்டும். எமது மாகாணங்களோ பல துறைகளில் பின் தங்கியுள்ளன. பல முன்னேற்றத் திட்டங்களைப் போட்டு நம் பகுதியை வளம்படுத்தினுலும் ஏ னை ய பகுதிகளைப் புறக்கணித்து வாழமுடியாத வர்களாய் இருக்கின் ருேம். ஆகையால் இனத் துவேஷத்துக்குள்ளாகாத தேசிய ஒருமைப்பாட்டுணர்ச்சியை வ ள ர் க் க வேண்டியது எ ங் கள் கடமையாகும்.
இன்றைய மாணவன் தனது கல்வியி நிலையை விரும்புகிறன். இக்கல்வி மு)ை னேறும் ஒரு சமூகத்தின் சிறப்பான நிலையை அடையும் வகையிற் புதிய கல்
- றி எம். பிற பண்டிட் அவர் விஜவம் செய்தபோது ஆற்
உலகமே ଉଓ நாடகமேடை அதி

நேர்மையான கொள்கையை நெஞ் சில் நிறுத்தி அதன் இலட்சியங்களுக்காக உழைத்து வெற்றிகாண வேண்டிய இளை ஞர்கள் பலர் தமது உற்சாகத்துக்கும் முயற்சிக்கும் தகுதியான பெறுபேறுகள் பெறமுடியாதவர்களாகிவிட்டனர். இதற் கெல்லாம் அடிப்படைக் காரணம் என்ன? ஸ்திரமான கொள்கை வலுவும் திறமை щ в இன்மையேயாகும். இளைஞர்களின் உள்ளத்தில் எழுகின்ற நல்லுணர்ச்சியை வெளிப்படுத்தி ஆக்கபூர்வமான காரியங் களில் அவர்கள் இயங்குவதற்கு வழிய மைக்க வாலிப முன்னணிகள் இன்று காத் திருக்கின்றன. வாலிப முன்னணி உற்சா கமுள்ள இளைஞர்களால் இயக்கப்பட வேண்டிய ஒன்று. இன்று இளைஞர்களாக விருந்து எதிர்காலத்தில் பொறுப்புள்ள பிரஜைகளாக விளங்கப்போகும் நாம் எம்மை உயர்த்தி ஆக்கங்காண வாலிப முன்னணிகளில் உழைத்து வெற்றிகண்டு பூரண சுதந்திரத்துடன் வாழ்வோமாக,
வாழ்க தமிழ்மொழி
வளர்க வாலிப முன்னணி
ன் மூலம் ஒரு பதவியை உயர்ந்த ற மாற்றப்படவேண்டும். அவன் முன் அங்கத்தினனுக இருக்கத் தகுதியான ஸ்விமுறைகள் அமையவேண்டும். கள் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு றிய உரையிலிருந்து.
ல் நாம் அனைவரும் பாத்திரங்கள்.
- சேக்ஸ்பியர்

Page 21
பிட்டதாரி வகுப்புக்கள் வ6 உபகரணங்கள், புதினப் ப பிரபல ஆங்கில, தமிழ் எழு சமய, சோதிட வைத்திய,
முதலியவற்றுக்கு
சிறந்த ஸ்தாபனம்
பூபால சிங்
பஸ்தரிப்பு நிலையம் =
புகையிரத நிலையம்
இன்றே விஜயம் செய்யுங்கள்!
ராஜா கி
(நவீன ஐஸ்
36. கஸ்தூரியார் வீதி.
函sLOTé画
* ஐஸ் கீறீம் வகைகள் " குளி * ஐஸ் பழம் * ஐ
ஸ்பெஷல் ஒ5 சொக்லேட்
மற்றும் விழாக்கள், களியாட்டங்க குறித்த நேரத்தில்

ரையிலான ாேடப் புத்தகங்கள், த்திரிகைகள், சஞ்சிகைகள், த்தாளர்களின் நூல்கள்,
அரசியல் நூல்கள்
கம் புத்தக சாலை
4. ஆஸ்பத்திரி வீதி = யாழ்ப்பாணம்,
யாழ்ப்பாணம்.
தொலைபேசி 7 4 30
D ធ្លាញតាល
கிறீம் ஸ்தானம்)
64, ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம்.
== GF GGSN siji f'6ŐT
பிர்பானங்கள் * சிற்றுண்டி வகைகள் ஐஸ் சொக் 4 ஐஸ் ஜெலி
கிறிப்ஸ் 3 ஸ்ரோமறி கிறீம்
1ள் அனைத்துக்கும் தேவையானவற்றை
பெற்றுக்கொள்ளலாம்.

Page 22
ih arath
fΟΥ
Ouality Phot
and Personal Att
T''' phoine: 2 -5 2 821,
Tour & Trawel 0
For your y rayel documen Passports, Visa, Air tick other formalities
Please contact
Head Officer 91, Chatham Street, P. O. Box 95, Colomabo ].
Cable KAVITH
Of Telephone :
Res
 
 
 

இ
O
Dgraph
ention
Kasturiar Road, Jaffna.
perators
真g 『
ίς αηα
Branch Office 126, K. K. S. Road, Jafna
A, Colombo.
○e 。 29?91
dence: 2803

Page 23
வசந்தங்கள் தொடரட்டும்.
உமா விடுவிடுவென ஒரு கையி "ஹான்ட் பாக்கையும் குடை  ைய யு எடுத்துக்கொண்டு மறுகையில் "பை26 யும் எடுத்துக்கொண்டு "அப்பா போ விட்டுவாறன்’ என்று கூறியவாறு ஒ வீசுக்குப் புறப்பட்டாள்.
அன்று அவளுக்குத் தலைநிறைந் வேலே, நேரம் போனதே தெரியவில்லை அன்று அரை நாள் லீவு போட்டுவிட் பிரண்ட் ஜெயாவுடன் புதிய சினிமாவு குப் போவதாக ஏற்பாடு. சரியாக பன்னிரெண்டு மணியளவில் ஜெயா உம வுக்குப் போன்' பண்ணினுள், "எ6 னடி உமா! உனக்கு மறந்துபோச்ச இன்டைக்குச் சினிமாவுக்குப் போசே ணுமே" "ஒம்டீ, அதுக்குள்ளாகவே ம ற ந் விடுமா? கட்டாயம் வர்றேன். கலாை யும் வரச்சொல்லடி" என்று கூறி ெேட போனே? வைத்துவிட்டுச் சிறிது நேர கதிரையிலே களேப்புடனே சாய்ந்திரு தாள். பின் பரபரவென்று மேசையி கிடந்த 'பைல் கட்டுக்கள் எல்லான றையும் எடுத்து டிராயரில் இழுத்து பூட்டிவிட்டு, அரை நாள் லீவு கோரி ஒ தாளில் குறிப்பிட்டுவிட்டு மேசைய இருந்த மணியை அடித்தாள். முன் ஞ வந்து நின்ற "பியோனிடம் "லிவு ெ டரை ஜி. எம் மிடம் கொடுக்கச் செ லிவிட்டு வெளியே வந்தாள். வெளி வெயில் சுள்ளென்று எறித்துக்கொண் ருந்தது. கூலிங் கிளாசை" மாட் கொண்டு குடையை விரித்தவாறு ,ெ வில் இறங்கி "பஸ்ராண்டை நோ நடந்தாள்.
பேஸ்சில் செல்லும்போது அவ6 கடந்த காலச் சீவியம் மனதில் திை
莒

சோம. வேணுகோபின் 星卫C
படம் போன்று ஓடியது. பத்து வருடங் களுக்கு முன் நடந்த சங்கதி அது அப் போது அவளுக்கு வயது பதினெட்டு. அவள் வீடு கடனிலே மூழ்கி இருந்தது. இந்தக் கவலையிலேயே அ வ ள் அம்மா நோய்வாய்ப்பட்டுப் போய் விட்டாள். தந்தையும், தம்பியும் அவளும் தான் வீட் டிலே, கடன் காரன் வீட்டை ஏலம்போடப் போவதாகக் கூறிவிட்டுப் போய்விட் டான். அவளாலே சிந்திக்க முடிந்தது. ஆணுல் எதையும் சாதிக்க முடியவில்லை. தம்பியோ சிறுபையன். நோயாளியான அப்பாவையோ நம்ப முடியாது. வீட் டிலே கிடந்த தட்டுமுட்டுச் சாமான்கு அம்மா விட்டுப்போன சேலைதான் பெரிய சொத்து, இந்த நிலையில் என்னதான் செய்வது ? அவள் தடுமாறினுள்.
இந்தச் சமயத்திலேதான் அப்பா விடம் அவர் வந்தார். அப்பா முன் வேலைபார்த்த கொம்பனியின்?ஜெனரல் மனேஜராம். வந்தவரும் அப்பாவும் நெடு நேரம் ஏதோ பேசினுர்கள். கடைசியாக அவர் வெளியே வந் த அவளிடமும் ஏதும் பேசாமல் அவள் தம்பியின் கைகளில் எதையோ கொடுத்தார். அவர் சென்றபின் அவள் அப்பாவைப் பார்த் தான். அவர் கையில் ஒரு தோல்பை இருந்தது. அவள் அது என்னவென்று கேட்கவும் இல்லை. அவர் சொல்லவும் இல்லை. பின்னேரம் அவள் தனியாக அம்மாவின் நினைவிலே கரைந்து கொண் டிருந்தபோது அப்பா செருப்பை வாச லில் கழற்றி வைத்துவிட்டு கை நிறைய சிற்றுண்டிப் பொட்டலங்களுடன் உள்ளே நுழைந்தார். திண்ணையில் ஆயாசத்து டன் சாய்ந்த அவருக்கு கைகால் அலம்பு வதற்காக செம்பிலே ஜலம் கொண்டு வந்து வைத்துவிட்டு அவள் கதவருகே

Page 24
Il. بیبیسی.
ஒருக்களித்து நின்று கொண்டாள் அப்பாதான் முதலில் பேச்சைத் தொடங் கினர். "தங்கச்சி இப்ப உனக்குத் தெரி யும் எங்கட நிலமை நாள் விடிஞ்சதும் விடியாததுமாக கடன்காரன் வீட்டைக் காலிபண்ணச் சொல்லிவந்திடு வான். இந்த நிலை  ைம யி ல் நான் யாரிடம் போவது? எங்க போறது என்ன பிள்ளை பேசாமல் நிற்கிருயே? என்றவாறு வெற் றிலையைக் குதப்பி வெளியே துப்பினுர், அவளுக்கு எல்லாம் புரிந்தது. இருந்தும் அவன் ஒரு பெண். அவள் மெளனமாக நின்ருள். அப்பா வெற்றிலையைத் துப்பி விட்டு விஷயத்தை மெதுவாகச் சொல்லத் தொடங்கினர். அப்போது வந்தாரே *அவரைப்பற்றிச் சொல்லிவிட்டு அவர் எங்களுக்கு உதவி பண்றன் என்கிருர், நமக்கு ஏற்பட்டிருக்கிற நிலமை அவ ருக்குப் புரிகிறது" என்று தொடர்ந்த வரை இடைமறித்து அவள் "நான் என் னப்பா செய்யோணும்?" என்று கேட் டாள். ஒண்ணும் இல்ல; அவருக்கு உன் னைப் பிடிச்சிருக்காம். நல்ல LDs நம்ம ஜாதியும் தான் ' என்றவர் அவஜ ஆராய்ந்து பார்த்தார். அவள் கண்களல் ஜலம் கொட்டத்தொடங்கியது. அப்பா வின் முகத்தைப் பார்க்கும் போதே -鸚魯』 ளுக்குப் புரிந்தது. அவருக்கும் மனதுக் குக் கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனல் இந்த நிலையில் வேறு என்ன செய்வது. அவள் வெகுநேரம் அழுதுவிட்டு ஒரு முடிவுக்கு வந்தவள் போல் சேரி நட3) வற்றைக் கவனியுங்கோ? ព្រោះ នៅr. அப்பா எதிர்பார்க்கவில்லை. அவருக்கு உதடுகள் துடித்து, கண்ணுல் 3g 6ù Lỗ கொட்டத்தொடங்கியது. மேல்துண்டால் கண்களைத் துடைத்துக் கொண்டு பே தைப் பார்க்க அவளால் சகிக்கமுடிய வில்லை. அவளும் அழுதவாறே உள்: போனுள். அவளுக்குப் புரிந்த அளவில் பெரிய தியாகம் செய்கின் ருேம் என்ற நினைப்பில் தன்னைச் சமாதானப் படுத் திக் கொண்டு அழுதாள்.
அதற்கப்புறம் என்ன ஊரே மூக்
கில் விரல் வைக்கும் அளவுக்கு கல்ய
நி3
T|
-

னம் தடயுடலாக நடைபெற்றது. அவள் நனக்குள் கற்பனை பண்ணியபடிதான் ல்யாணம் நடந்தது. ஆனல் கற்பனை பண்ணிய மணமகன் தான் பக்கத்தில் பந்து அமரவில்லை. அதையிட்டு அவ ால் விதியை நொந்து சிரிக்கத்தான் மடிந்தது. நடுத் தர வர்க்கத்துக்கே பண்கன் ஒரு சாபக்கேடு போலும் பண்ணேயும் கொடுத்து அதற்கீடாக பான்னையும் கொடுக்கவேண்டும். இல் ாவிடின் சந்தர்ப்பம் பார்த்து பெண் ணயே மலிந்த விலேக்கு வாங்கி விடு ார்கள். நடுத்தரவர்க்கம் என்ற தள ாடியில் தெரியும் சமூகம் மிகவும் சீர் கடாகத்தான் தெரிகிறது5 பிறந்த வீட் லும் அழுகின்றனர் புகுந்த வீட்டிலும் அழுகின்றனர். இதையெல்லாம் பார்த்து 1ணமென்னும் பிசாசு பல்லை இளிக்கி து. உமா மூன்று நாட்கள்தான் கண னுேடு இருந்திருப்பாள். அவளுடைய 1ணவன் மூன்ரும் நாளே நெஞ்சு வலிக் 1றதென்று படுத்துவிட்டார். ஐம்பதைத் ாண்டியவராயிற்றே கல்யாணத்தால் யதைக் குறைக்கமுடியாதே இன னம் என்று ஒருவரும் இல்லை அவருக்கு து உறவான உ மா வுக் கே தனது சாத்து முழுவதையும் எழுதிவிட்டு மண் டயைப் போட்டுவிட்டார். அவளது துத்தாலியின் மஞ்சள் காயமுன்னரே ாரியங்கள் அனைத்தும் மள மளவென்று டந்து முடிந்தன.
தகப்பனின் அனுமதியோடு உமா com வரையும் படித்து விட்டாள். தம் யையும் M. B. B. S உக்கு படிப்பித்து ட்டாள் வாழ்க்கையில் எல்லாவற்றை ம் இழந்து வைராக்கியத்துடன் அவள் ன்னேறி இப்போது ஒரு பொறுப்பான தவியில் இருக்கின்ருள். தியேட்டருக்கு ன்னுல் பஸ் நின்றவுடன் அவளது டந்த கால நினைவுகளும் தடைப்பட்டு ன்றன.
தியேட்டர் வாசலில் கலா உமாவுக் க காத்திருந்தாள். உமாவைக் கண் தும் ஓடி வந்தாள். “உமா இப்பதான்

Page 25
ஜெயா ரிக்கெற் எடுக்க உள்ளே போ! ருக்கா. உன்னைக் கண்டாக் கூட்டி கொண்டு போகத்தான் நான் நின் ஞன். இருவரும் தியேட்டருக்குள் செ6 ருர்கன். நாம் வாழ்க்கையை மேலோ டமாகப் பார்க்கும் போது பலர் ச தோஷமாக வாழ்கின்றனர். பலர் சோ மாக வாழ்கின்றர்கள். உள்ளம் அழு போது உதடு சிரிக்கும். உதடு அழு போது உள்ளம் சிரிக்கும். உமா ஜெய கலா இம் மூவரையும் சமுதாயம் பார் கிற போது நிச்சயமாகத் தப்புக் கண குத்தான் போடும் நல்ல உழைப்பு வித விதமான உடுப்புக்கள், அடிக்கடி சினிம ஆல்ை உள் வாழ்க்கையில் இசைக் மறந்த பாடல்களே யாருமே கவனிப் தில்லை. அந்த வகையில் சொல்ல போனுல் உமாவின் வாழ்க்கை நமக்கு தெரியும் தானே ஜெயா பாவம் கா லித்து ஏமாந்தவள். காதலன் கைவிட் ஓடி விட்டான். அதனுல் ஊர் அ வ வாழ்க்கையையும் குறைவா கத் தா கனம் செய்கிறது. கலாவின் வாழ்க்ை யில் எது நடக்கக் கூடாததோ அ நடந்தது. அவள் வாழ்க்கையைய ஒருவன் பலவந்தமாகப் பறித்து வி டான். அவள் இன்னமும் வாழ்ந் கொண்டிருப்பதே உமா, ஜெயா இ களின் நட்புப்பிணைப்பினுல் தான். நெ துபோன அம்மூவரின் வாழ்க்கையிலு நட்பு எனும் சங்கிலியால் தம்ை பிணைத்துக் கொண்டு வாழ்கின்றன
தியேட்டருக்குள் லே ட் அணை படம் தொடங்கியது. இந்த நாளி சினிமா எடுக்கிாேம் என்று சொ விட்டு ஏதோ, ஏதோ எடுத்து பன் தையும், மனத்தையும் பாழாக்குக் கள். அப்படிப் பார்க்கிற போது
தச் சினிமா? ரொம்பவும் பரவாயில் அப் படத்தின் கதை யதார்த்த வ கைக்கு ரொம்பவும் ஒத்து அமைந்தி தது. படம் முடிந்து மூவரும் வெளி வந்தார்கள் கலாதான் முதலில் தெர

- gܐ
கினுள் “ஏண்டி உமா, யாருடீ டைரக் ரர்? உண்மையை அப்படி புட்டுப் புட்டு வைக்கிருன்டீ" மூவரும் அந்த டைரக்ரரை மானசீகமாகப் шту тl“ 19. ஞர்கள். காரணம் அப்படம் அவர்கள் வாழ்க்கையோடு மிகவும் ஒத்திருந்தது
உமா இப்போதெல்லாம் அலுவல கம் விட்டதம் நேரே விட்டுக்குப் GUTS.j தில்லை. தனது சக ஊழியனை ரவி சங்கருடன் மாலை இ2ளகளில் பார்க் கில் நேரம் போவதே தெரியாமல் பேசிக் கொண்டிருந்து விட்டுத்தான் ா வான். அவனும் அவளேயும் அவளது க கொள்கைகளையும் புரிந்து வைந்திருந் தான். அவளும் அவனைப் பற்றித் தெரிந்து ப் வைத்திருந்தாள். அவள் மனதில் சலனங் தீ ஆள் இல்லை. அவன் மனதில் அபலங்கள் த இல்லை. ஆனல் இந்த நரகலோக േ டு பில் ஒரு பெண்னை அவளால் எவ்வ ள் வரவு காலம் தனியாக நடக்க முடியும். ன் ஆகவே அவளுக்கு ஒருவனின் நிழல் தேவைப்பட்டது. ஆனல் பல ஆண் து கள் காதல், கத்தரிக்காய் எனத் திரிந்து 蚤。áL@幸 ட்ைசியில் செய்தவையைப் பற்றி அவள் கதை கதையாகக் கேட்டி து ருக்கிருள்: அவளுக்கு ரவிசங்கரைப் பற் வர் றித் தெரியும் என்ருலும் துணிந்தவள் சந் தயங்கினுள். ஒருநாள் ரவிசங்கர் எதிரு லும் மணங்கள் எல்லாம் சொர்க்கத்தில் ਉ ப்ெ பிக்கப் படுகின்றன என்று ார். சொல்கிருர்கள். ஆனல் பலபேரின் சீவி யத்தைப் பார்க்கும் போது அங்கே ந்து சொர்க்கத்தின் ஒவட்டையே காணமுடி டூ வில்லை. விதி ஆட்டிப்படைக்குது. அதுக் ல்லி கேற்பத்தான் மனிசனும் ஆடுகின்றன் னத் எதற்கெடுத்தாலும் ஆண்டவன் மேல் ருர் பாரத்தைப் போட்டே பழகி விட்டார்கள். இந் இண்  ைடக் கு நம் ம சமுதாயத்திலே லை. உணர்ச்சி பூர்வமாக வாழுறவங்கள் ாழ்க் தான் அதிகம். அறிவு பூர்வமாக வாழ்ப ருந் வர்கள் மிகக் குறைவு உணர்ச்சி பூர்வ Pயே வாழத்தான் வே னும் நான் ாடங் வேணும் எண்டு சொல்லவில்லை. ஆனல்

Page 26
90 ܕܡܫܒܗ
அதே வாழ்க்கையாகக் கூடாது உணர்ச்சி மனிதனே அழிக்கின்ற கேவலம் @鳶委 நூற்றண்டில்தான் பெருகி விட்டது" என்றவன் தொடர்ந்து 'உமா நீ எத் தனை காலம்தான் தனியாக இருப் பாய். நாம் நமது மனத்துக்குச் சரி யென்று படறதை பட்டென்று செய்தி டோணும். அதற்குப் பிறகு சமூகம் நம் மைப் பற்றி என்ன நினைக்கும். என்ன சொல்லும் என்று நிஜனக்குப் LJU big காரியத்தைத் தள்ளிப்போடறது நம்மை நாமே அழிக்கிறதுக்குச் éFLDFr607 Le Pr(e) Lè’
Tនាំប្រចាំ
இப்போது ஜெயாவின் வாழ்க்கை யில் ஒரு திருப்பம். அவளை உணர்ந்த அவள் ஒவ்வீசு" ஜி.எம் அவளே மணக்க முன்வந்து விட்டார், சமூகத்தில் நிச்ச யம் நல்லவர்களும் இருக்கத்தான் செய் கின்றர்கள், கலாவை உமாவின் தம்பி டொக்டர் சிறீதரன் மணக்க விரும்பி ஞன். அவர்களின் கள்ளமில்லா அன்பை உணர்ந்த உமா அவர்களின் திருமணத் திற்குச் சம்மதித்தாள். எல்லோருடைய திருமணங்களும் முடிந்த பின்னர் ரவி சங்கர் உமாவைப் பார்க்கில் சந்தித்
With the Best Compliments
frem
4.
Lingams Silk House 18, Model Market, Jaffna.
f'phone; 76.84
& Sothy Textiles
14, Model Market, Jaffna.
T'phone: 7562
蠶
岛岛岛

ான். “உமா நீ எத்தனை நாட்களுக்குத் ன் இப்படி இருக்கப் போறே? என் காம்பனி எனக்கும் என் மனைவிக்கும் வளிநாடு போவதற்கு ரிக்கெற் தருகி து. உன் இறுதி முடிவென்ன? "எனத் fக்கமாக கேட்டான், உமா மெளன ாக வெகுநேரம் அப்பூங்காவில் வினை ாடிக் கொண்டிருந்த சிறுவர்களையும் த்துக் குலுங்கிய மலர்களையும் நெடு நரம் பார்த்தவண்ணம் இருந்தாள். பின் அந்த ரிக்கெற் உங்கள் மனைவிக்குப்
பன்படும்.' என்றவ8ள ரவி சங்கர் டைமறித்து "அது உன் னை த் தவிர வறுயாருக்கும் பயன் படாது." என்
ன். அவன் கண்கள் உணர்ச்சியால் oங்கின. உமாவின் கரம் அவனுக்காக ண்டது. இருவரும் பிரிக்க முடியாத ந்தத்தால் கரங்களைப் பிணைத்தவாறே வளியே நடந்தனர். பார்க்கில் சிறுவர் ள் நீ தான் எனக்குச்சோடி' இல்லை ான் உனக்குச் சோடி' எனக் கூவி விளை டிக் கொண்டிருந்தனர் அ வள து ாழ்க்கையில் வ ச ந் த ம் ஆரம்பித்து ட்டது. அது தொடரட்டும். .
(யாவும் கற்பனே 鬱
காலை, மாலை, மதிய, இரவு போசனங்களுக்கும் வையான சிற்றுண்டி வகைகளைச்
சுவைத்தின்புறவும் சிறந்த சைவ போசனசாலை
ஜீ தாமோதர விலாஸ்
1. கே. கே. எஸ். வீதி, யாழ்ப்பாணம்.

Page 27
வெட்கமில்லையா ? . கதிர்ச் செல்வன்
வேற்று நாட்டுக் கரிசி ஏற்றி
வேண்டும் மட்டும் உண்ட நாம்
சோற்றுக் கரிசி இல்லை யென்று
ஈழம் நிறையக் குளமிருந்தும்
இயற்கை தந்த நிலமிருந்தும்
வாழ வழி இல்லே என்று
வருந்தி வாடும் மாந்தரே!
நாட்டைச் சுற்றி வேலை தேடி |B് "ി ബ്(്ഞT Murഥൺ
காட்டை வெட்டிக் களனி செய்தால்
g. Ar Guo QLD diÒ GIÙ AT LÈ 2 GRĂIT GOOTSINDANT Lð.
வாடும் உள்ளம் மலர்ந்திடும்
வறுமைப் பேயும் அகன்றிடும்
நாடும் உன்னைப் புகழ்ந்திடும்
நலமாய் வாழ்வும் அமைந்திடும்!
米
மோட்டார் உபகரணங்கள்
W
து  ைர ஆர் . ஜி. பில்டிங்"
6ே ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம்.

ബങ്വേ
சிறந்த குணங்களையுடையவர்கள் அத்த கைய குணங்கள் இல்லாதவர்களைப் பார்த்து வெறுப்பது மனித சுபாவம் ஆனுல் உண்மை வீரனும், மகாத்மாவு மாகிய அர்ச்சுனன் உத்தரனுடைய கோழைத்தனத்தை இகழவில்லை. அவ னுக்குத் தைரியம் கூறிப் புகழ் சம்பா தித்துக் கொடுத்தான். இதுவே தனஞ் சயனுடைய தனிச்சிறப்பாகும்.
வியாசர் விருந்தில் மூதறிஞர் ராஜாஜி
實
TTLTLTMTeLMTeLeLeeLeLeeLeLTLS
கடற்கரைக்குப் போனுேம் கரையில் நின்று பார்த்தோம் அடிக்கும் அலைகள் கண்டோம் ஆனந்தம் கொண்டோம்.
- கவிஞர் நீலாவணன்
ஆதிதிரிசில்
Phone 7152.
S. Muttukumaru & Son
Prop: S. M. KANAGARATNAM
MANUFACTURING JEW ELLERS
175, K. K. S. Road is Jaffna.
Your Orders Promptly Executed
ஒடர் நகைகள் குறித்த தவணையில் செய்து கொடுக்கப்படும். சி. முத்துக்குமாரு அன் சன்
நகை வியாபாரம்
175, காங்கேசன்துறை ருேட், யாழ்ப்பாணம்.

Page 28
With the Best Compliments
from
M. Nagaratnam & Co.
62, Stanley Road, Jaffna.
Space Donated By
Sri Lanka Book Depot &
Sri Lanka Printing Works
284, K. K. S. ROAD, JAFFNA.

Space Donated
By
S. Sivagadadcham & Co. 2, STANLEY ROAD, JAFFNA.
Space Donated Bர
Yarl Metal Industries
250, 254, K. K. S. Road, JAFFNA
T* pohne 7049

Page 29
திரை மறைவில்
இல உண்மைகள்
காலைப் பொழுது கலகலத்து மகி வில்லை. கனத்துடனே அழுதது. காக கள் வைகறையை நோக்கிக் கரை வில்லை. வரப்போவதை எண்ணிக் க றின. தரையிலே தளிர் விட்டிருந்த பு களின் நுனிகளில் அரும்பியிருந்த பணி துளிகள் பரவசப்படுத்தவில்லை பரி பத்துக்குரிய சோகக் கண்ணிர்த் துளி ளாகவே தென்பட்டன.
இந்த இயற்கையின் வனப்புக்க: காத்தாயி கண்குளிரப் பார்க்கவில்ை கண்ணிரோடுதான் பார்த்தாள். எஸ்டே டின் சாதாரணப் பெண் தொழிலாளி ளில் அவளும் ஒருத்தி, இரண்டு நாட் ளாக தேயிலைக் கொழுந்து நுள்ள அவ போகவில்லை. இன்றைய சாப்பாட்டை கூட அவளால் நினைத்துப் பார்க்க மு யாது. பக்கத்துக் காம்பருக்களில் வா கிய கடனை இன்னும் திருப்பிக் கொடு கவில்லை. இந்த நிலையில் அவள் மீண்டு ஒரு பேணி அரிசி கடன் கேட்டா காம்பரு வாசிகளுக்கே உரித்தான "செ தமிழில்" உபசாரம் (அபசாரம்) நட கும். அதுவும் பக்கத்து வீட்டுச் செல்ல வாய் திறந்தால் எஸ்டேட் சங்கு ஊது 6J 600 BT (LDL-TTg.Jiu
அவள் பெருமூச்சுடன் உள் அறை பக்கம் தனது பார்வையைச் செலுத் ள்ை. அவளுடைய மகன் டாலன் பர விட்ட பழந்துணிகளுள் கிழிந்த துன் யாகக் கிடந்தான். இர வு சாப்பிட மயக்கம் அவனை இன்னும் சில மணி தியாலம் உறங்கவைக்கும் அதன் பி அவன் எழுந்து அம்மா பசிக்கிறது எ ருல் அவள் என்ன செய்வாள் பக்கத்

ரித்
لقیق i
I C
ஆற்றில் ஒடுகின்ற தண்ணீரைக் குடிக் கலாம் எ ன் ரு ல் அங்குள்ளோருக்குக் கொலராவாம். அவள் புருஷனும் பாலன் பிறந்த வருஷமே அக்கொலராவுக்குப் தான் பலியானுன், கொலை நடந்தால் கூட காத்தாயி பயப்படமாட்டாள். கொலரா என்ருல் அவளுக்குக் குலைப்பனே வந்து விடும். தன் மகன் பாலன் அந்தப்பக்கமே போகக்கூடாது என்பதற்காக அவனை தோட்டப்பள்ளிக்கு அனுப்புவதையே நிறுத்திவிட்டாள்.
அவள் இலங்கைக்கு வரும் போது அவளுக்குப் பத்து வயது. பத்து வயதி லேயே அவள் பல ஆகாசக் கோட்டை களை பாக்கு நீரிணையிலேயே கட்டிவிட் டாள். அவை அனைத்தும் அக்கடலிலேயே கரைந்துவிட்டன. எங்கே இன்பம் இருக் கும் என அவள் நம்பிவந்தாளோ அவ் வின்பத்தை எல்லாம் இக்குறிஞ்சிமண் உறிஞ்சிவிட்டது. துன்பத்தைத் தவிர அவள் வேருெரு இன்பத்தையும் காண வில்லை. துன்பமயமான வாழ்விலே துன் பமும் இன்பமும் உணரமுடியாத பொருட் கள்தானே! இந்நிலையில் தான் அவள் ஒரு முடிவுக்கு வந்தாள் பாலன் இங் கிருந்தால் பசிக்கு உணவும் கிடையாது பாழாய்ப்போன கொலராவும் அவன்மீது பாய்ந்துவிடும். பக்கத்துக் காம்பருப் பரமலிங்கண்ணை அடிக்கடி யாழ்ப்பாணம் சென்று வருகிறவர். அவர் அவ்வப்போது யாழ்ப்பாணத்தவரைப்பற்றி நிறையச் சொல்லுவார். யாழ்ப்பாணத்துச் சனங் கள் மிகவும் நல்ல சனங்களாம். தோட் டத்தொழிலாளிக்காக அவர்கள் போராடு கிருர்களாம்! இதையெல்லாம் கேட்டபிற குதான் காத்தாயிக்கு அந்த யோசனை

Page 30
see
உதயமாகியது பாலனேயும் யாழ்ப்பா
ணத்துக்கு அனுப்பிவைத்தால் என்ன?
இதைப்பற்றிப் பரமலிங்கண்ணையிடமும் சொல்லிவைத்தாள் போனகிழழை யாழ்ப் பாணம் சென்ற அவர் இன்று தோட்டத் துக்குத் திரும்புகின்றர். அவர் வருகை யைத் தான் காத்தாயி எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவள் எதிர்பார்த்தது வீண் போக வில் லே தூரத்தில் பரமலிங்ககண்ணே தான் வந்து கொண்டிருந்தார். அவர் வந்ததும் வராததுமாக அவள் கேட்கின் ருள். "என்னண்ணே விசாரிச்சேங் களா? பரமலிங்கத்தார் திண்ணையில் அமர்ந்து கொண்டார். "ஆம்மா! விசா ரிச்சேன் நல்லூருக்குப் பக்கத்தில ஒரு மாஸ்ரர் வீடு வேலைக்காரப் பொடியன் தேவையாம். நாளேக்கே கூட்டிக்கொண்டு வரட்டாம்,
காத்தாயிக்குத் திடீரென்று பயம் உண்டாகியது. "என்ணண்னே அவங் கள் நல்ல சனங்களா?"
அருமையான சனம், அந்த வாத் தியார் ஊரிலேயே நல்லவரென்று பெய ரெடுத்தவர் தங்கமான மனசு, கனக லிங்கமெண்டு பெயரு'
காத்தாயி சொந்த மண்ணிலும் வந்த மண்ணிலும் தன்னைத் துன்புறுத்திய கடவுளையே இன்னமும் நம்பினுள். இவ் வளவு நல்லவனென்று பரமலிங்கண்ணே யாரால் வர்ணிக்கப்பட்ட கனகலிங்க மாஸ்டரை கடவுளுக்கு மேலாக நம்பி ள்ை. அவள் நம்பித்தானே ஆகவேண் டும். கணக்கை எழுதியவன் அக்கணக் கைமுடிக்குமுன்னர் காற்றினில் கலந்து விட்டான் எந்த நம்பிக்கையில் அவள் இப்போது வாழ்கின்ரு ஸ் ஏழைகளிடம் இருக்கும் ஒரேயொரு செல்வம் நம்பிக் கைதானே அந்தச் செல்வம் மட்டும் இல்லாதிருந்தால் அவர்கள் எப்போதோ

霹=
மண்ணுேடு மண்ணுகி இருப்பார்களே. அவர்கள் அவ்வாறு மண்ணுேடு மண் ணுகியிருந்தால் வெறும் வாயை மெல் லும் அரசியல்வாதிகளுக்கு ஏழைகள் என்ற அவல் கிடைத்திருக்காதே!
காத்தாயி சுறுசுறுப்புடன் காரியங் களைக் கவனித்தாள். பரமலிங்கத்தார் கொடுத்த இருபது ரூபாவை வாங்கும் போது அவரை ஒரு தெய்வமாக நினைத் துக் கொண்டு பயபக்தியுடன் வாங்கிக் கண்களில் ஒற்றிக் கொண்டாள். ஆணுல் அந்தத் "தெய்வம் கனகலிங்கம் மாஸ் டரிடம் அட்வான்சாக வாங்கிய ஐம்பது ரூபாயில் முப்பது ரூபாவை கொமிஷ கை அடித்து கொழும்பு சாரயக் கடை களில் கரைத்துவிட்டு வ ந் த வரலாறு @(f L15] ୯5uff ଓଡ଼ି) ଥି! 6 ਸੰਸ਼ੇਡ (Gar6 காத்தாயிக்கு தெரியாதே! LuMr Gao 250T எழுப்பி முகம் கழுவி உடை அணிவித்து பரபரப்புடன் சமையல் செய்து அவனை வயிருர உண்ணச் செய்தான். பிரயாணத் தின் போக சாப்பிடுவதற்கும் கட்டிக் கொடுத்தாள். மிகுதிப் பணத்தையும் அவ னது பிரயாணச் செலவுக்காக பரமலிங் கண்ணையிடமே கொடுத்து விட்டாள். பாலனுக்கு அம்மா தன்னை யாழ்ப்பா ணத்துக்கு அனுப்புகின்ருள் என்பதில் மட்டற்ற சந்தோஷம் ஆணுல் அந்தச் சந்தோஷம் அம்மா தன்னை எதற்காக யாழ்ப்பாணம் அ னு ப் பு கி ரு ள் எனத் தெரிந்தால் உண்டாகியிருக்குமா?
பெற்ற வயிறு பற்றி எரிய, பொங்கி வரும் கண்ணிரை அடக்கிக் கொண்டு தன் மகன் நன்ருக இருக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன் விடை கொடுத்து அனுப்பினுள் அந்த அபலேத் தாய் தன் ம க னே போர்க்களத்துக்கு அனுப்பிய வீரத்தாயைப் பற்றிப் பாடிய பாவலர்கள் ஏன் இந்தத் தாயைப் பற்றிப் பாடுவதில்லை?

Page 31
பஸ் உறுமலுடன் புறப்பட்டது. பாலன் தன்னுடைய பெட்டியை இறுக் கிப் பிடித்த வண்ணம் பஸ்சில் இருந்த வர்கள் மீது பயத்தோடு தன் பார்வை யைப் படரவிட்டான். முன் பின் தெரிந் தவர்கள் யாருமே அப் பஸ்சில் இல்லை. நிம்மதியுடன் பெருமூச்சு வி ட் டா ன். பெருமூச்சு விட்டதனுல் அவன் மார்பு எழும்பி சட்டைப்பையில் இருந்து கனத் துக் கொண்டிருந்த பொருளில்" முட்டி யது. அவன் மனம் திக்கென்று அடித் ஆக் கொண்டது. பஸ்சின் வேகத்தோடு போட்டி போட்டுக் கொண்டு அ வ ன் நினைவுகள் பின்னுேக்கி ஓடின.
பரமலிங்கண்ணே பாலனே கனகலிங் கம் மாஸ்ரர் வீட்டில் கொண்டு போய் விட்ட சில நாட்கள் அவன் சந்தோஷ மாகத்தான் இருந்தான். உற்சாகத்துடன் வீட்டு வேலைகளைச் செய்தான். ஆனல் நாளா வட்டத்தில் வேலேக்காரன் என்ப தால் விதிக்கப்பட்ட சட்ட திட்டங்களும், கட்டுப்பாடுகளும், மற்றைய அவன் வய தொத்த சிறுவர்களுடன் பாரபட்சமாக நடத்தப்படுதலும், அவனுக்கு வீட்டு நினைப்பையும், தாயின் கள்ள மில்லா வெள்ளையுள்ளத்தின் பரிவையும் நினைப் பூட்டிக் கவலையை உண்டாக்கியது. அந்நினைப்பால் வீட்டையும் அம்மா வையும் நினைத்து அவன் கரைய, அதனுல் அவன் வேலைகளில் தவறுகள் ஏற்பட, அதனுல் வீட்டுக்காரர்களால் தண்டிக் கப்பட, இந் நிகழ்ச்சிகள் நாட்செல்லச் செல்ல நித்தியமாகி விட்டன. தனது தவறுகளுக்காக த ர ன் தண்டிக்கப் படுவதை அவன் குழந்தை மனம் கிர கிக்க மறுத்தது. இவ்வாறு ஒரு வருடம் உருண்டோடியது.
நேற்று அவன் ஒரு முடிவுக்கு வந்து
விட்டான். இனியும் இங்கிருந்து அடி
வேண்டக்கூடாது. வீட்டிற்கு ஓடிவிட
வேண்டும் வீட்டுக்குப்போவதற்கான பிர
யாணச் செலவுக்கான பணத்தை அவன்
இநற்றே எஜமானர் ஐயாவின் சட்டைட்

ܡܚܒ 5
பையில் இருந்து எடுத்துவிட்டான் எஜ மாணரும் எஜமானியும்,பிள்ளைகளும் பள் ளிக்குக் கிளம்பிவிடவே அவனும் தனது பெட்டியுடன் கிளம்பிவிட்டான். அப்பிர யாணத்தின் முடிவை அவன் அடையப் போகிறன் . இப்போது தனது ஊருக்குச் செல்லும் ப ஸ் சி ல் அவன் சென்று கொண்டிருக்கின்றன். இ ன் னு ம் சில மணிநேரத்தில் அம்மாவைக் காணலாம். 'அம்மா நீ எப்படியிருக்கின்ருய்?" உன துமகன் உன்னிடம் திருடகை ஓடி வரு கின்றன். ஒரு பாவமும் அறியாத அவன் விதியின் கொடுமையால் சமுதாயத்தின் கண்ணுேட்டத்தில் ஒரு திருடன்!
பஸ்சின் பெரியதொரு குலுக்கல் அவனை இவ்வுலகுக்குக் கொண்டுவந்தது. பக்கத்தில் இருந்தவர் கையில் அன்றைய தினசரிப் பேப்பரை மடித்து வைத்திருந் தனர். அவன் தயக்கத்துடன் கையை நீட்டினுன் அவர் அவனை மேலும் கீழும் பார்த்துவிட்டு வேண்டா வெறுப்பாகப் பேப்பரைக் கொடுத்தார். படபடக்கும் இதயத்தின் திருட்டுத்தனத்தை மறைத்த வண்ணம் பேப்பரை படிக்க ஆரம்பித் தான். ஆம்! கனகலிங்கம் மாஸ்ரர் வீட்டில் இருக்கும் போதே அவ ன் எழுத்துக் கூட்டி வாசிக்கப் பழகிவிட்டான்.
பேப்பரில் முன்பக்கத்தில் ஒரு அறி வித்தல். "எமது வீ ட் டி ல் வேலைக்கு நின்ற கம்பளையைச் சேர்ந்த ப ா ல ன் எனும் இந்திய வம்சாவளிச் சிறுவன் நேற்று முன்தினம் வீட்டில் உள்ள பெறு மதிமிக்க பொருட்களேயும், பணத்தையும் எடுத்துக் கொண்டு தலைமறைவாகி விட் டான். கீழ்க்கண்ட அடையாளங்கள் உடைய அவனைக் கண்டவர்கள் எமது விலாசத்துக்கோ அ ல் ல து பக்கத்தில் உள்ள பொலிஸ் ரேசனிலோ அறிவிக்க வும். கனகலிங்கம், நல்லூர்" கண்க லிங்கம் மாஸ்ரர் மிகவும் கெட்டிக்காரர். உடனே யே பத்திரிகைக்கு அறிவித்தல் கொடுத்து விட்டார். பத்திரிகையில் செல் வாக்கான எழுத்தாளர் தானே அவர்.

Page 32
அவன் இதயம் படபடத்தது. பக்கத்தில் இருப்பவர் தன்னை அடையாளம் கண்டு கொள்வாரோ? முகத்தில் துளிர்த்த வேர் வையை கைகளால் துடைத்துக் கொண் டான். அந் த அறிவித்தலுக்குக் கீழே இன்னுேரு செய்தி. 'கம்பளையிலே மண் சரிவு. ஒரு சங்கக் கடையின் முன்னுல் பொருட்களை வாங்குவதற்காக நின்றி ருந்த அனைவரும் இம்மண் சரிவில் அகப் பட்டுக் கொண்டனர். மரணமடைந் தோர் விபரம். காத்தாயி இராமசு வாமி.? ஐயோ! அம்மா! நீயும் போயிட் டியா?"
அவன் பத்திரிகையை பக்கத்தில் இருந்தவரிடம் திருப்பிக் கொடுத்தான். அவனுல் அழமுடியவில்லை. எதிரே ஓடிக் கொண்டிருந்த காட்சிகள் நிலையில்லாத வாழ்க்கையின் நித்தியமற்ற நிழல்களாக அவனுக்குத் தெரிந்தன. இ த ய மே நொருங்கிப் போனதைப் போன்ற ஒரு உணர்ச்சி! அவன் மெதுவாக பஸ்சின் ஜன்னலோடு சாய்ந்து உட் கா ர் ந் து கொண்டான்.
அவன் என்ன செய்வான்! யாரிடம் செல்வான் தி ரு டி ய குற்றத்திற்காக என் ருே ஒரு நாள் பொலிசாரிடம் பிடி படத்தான் போகின்றன். அவர்களிடம்
சிறைகள் பூட்டம் படுவன மட்டுமல்ல. இல்லையெனில் அவை தகர்க்கப்பட்டுவிடு
"என்னுடைய பேணுவில் எத்தனையோ திரிகள், எல்லோரும் அகப்பட்டுத் த உயர்ந்த பதவியில் இருக்கும் என்ன எ ஏன் இழுக்கிறீர்கள்" என்று தம்மைத்
யவர்களிடம் பேரனசிரியர் அமரர் கல்கி

5 -
சித்திரவதை வாழ் க்  ைக யில் அவன் செய்த தவறுக்காக வன்மையாகத் தண் டிக்கப்படுவான். அந்தத் தண்டனைகளி ஞல் அவனது உள்ளம் மேலும் உறுதி யடையும். பாவ, புண் ணிய உணர்ச்சி கள் சிறிது சிறிதாக அவனிடம் அற்றுப் போகும். மேலும் அவன் குற்றங்களைச் செய்வான்; இப்படி இந்நாட்டில் எத்தனை சிறுவர்கள் இவர்கள் நாட்டின் சமுதா யத்தின் எதிர்கால மன்னர்கள் இ வர் களே அங்கத்தவராக கொண்ட சமுதாயம் படிப்படியாக தேய்ந்து. தேய்ந்து.
எந்த மண்ணில் பிறந்தார்களோ அந்த மண்ணில் வாழவில்லை. வந்த மண்ணில் வசதியில்லை. அந்தரத்தில் சுழல்கின்றனர். வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போன்ற கொடுமைகள். இவர்களே . இவர்களை வஞ்சிக்கும் அர சாங்கத்தாலோ, வாழ்த்துகின்ற வாய்ப் பேச்சு அரசியல்வாதிகளினலோ, திறமை மி க் க ச மு தாயச் சிற்பிகளினலோ தொழில் நிபுணர்களாலோ, விஞ்ஞானி களாலோ தத்துவஞானிகளாலோ, ஏழை கள் . ஏழைகள் என்று வெற்றுத்தாளில் பேணு முனையால் கண்ணிர் விடும் எழுத் தாளர்களாலோ காப்பாற்ற முடியுமா? இப்போது இந்த பஸ்வண்டி எங்கு சென்று கொண்டிருக்கின்றது என்பது
உங்களில் யாருக்காவது தெரியுமா?
(யாவும் கற்பனை)
அவை திறக்கப்படவும் வேண்டும். ம். - ஜெயகாந்தன்
ஜனுதிபதிகள், சர்வாதிகாரிகள், மத் த்தளித்திருக்கிறர்கள். இத்தகைய ம். எல். ஏ. என்ற தாழ்ந்த நிலைக்கு தேர்தலில் போட்டியிடுமாறு கூறி திருப்பிக் கேட்டாராம்.
- சாண்டில்யன்

Page 33
TT —
9 (18), Grand
WORK SHOP,
Η IT
 
 

| Bazaar, Jaffna.
Γ EXT

Page 34
срае (8
2O5, K. K. S. ROAD
யாழ்நகரில் நம்பிக்கைக்குரிய ஸ்தா
?? 61 4
பலசரக்கு
280, (102) கஸ்தூரியா
எம்மிடம்: பலசரக்கு சாமான்கள் குழைந் சாதனப் பொருட்கள் பிஸ் கட், ! யனப் பொருட்கள், பாடசாலை 4 வாழ்த்து இதழ்கள், சாய்ப்புச் ச கொள்ளலாம்.
II YNKARA)
 

s U AFFIN A.
l:ưTử !
急 b U 6)
ιΟΠ δή5υ 3ς
ர் வீதி, யாழ்ப்பாணம்,
தைகளுக்கான வால்மா வகைகள் அழகு சொக்லேட் வகைகள், விவசாய உபகரணங்கள் புதினப் பத்திரிசைகள், ாமான்கள் நிதான விலையில் பெற்றுக்
N - Jaffna

Page 35
சேர். பொன். இராமநாதனின் கல்வித் தொண்டு
1890 ம் ஆண்டில் சேர். பொன். இர மநாதன் அவர் க ள் கொழும்பில் ஒ( தேசிய - இந்துக் கல்லூரியை நிறு விரும்பினுர், இக்கல்லூரி ஏனைய கல்லூ களுக்கு வழிகாட்டியாகத் திகழ வேண் டும் என்பது அவர் விருப்பமாகும். இ வாருன, கல்லூரிகள் பெளத்த - இந்த கலாச்சாரங்கள் சங்கமிக்கும் இடமா அமைய வேண்டும் என அவர் எண்ண ஞர். இளம் மாணவர் தம் காலத்தி சுதந்திர ஒற்றுமையான இலங்கைக்கா6 அத்திவாரத்தை கல்லூரிகளில் பெற். தேசிய ஒற்றுமைக்கும், வளத்துக்கு உதவுபவர்களாக விளங்கவேண்டும் எ விரும்பினுர், இந்த முயற்சியின் ஆர பத்தில் சிங்கள - தமிழ் பிரமுகர்க: கூட்டி தம் விருப்பத்தைத் தெரிவித்தா
இதற்காக நன்கொடையையும் வழங்
ஞர். ஆணுல் சிங்கள - தமிழ் அறிஞர் ளுக்குள் நிகழ்ந்த அபிப்பிராயபேத
காரணமாக இத்திட்டம் நிறைவே
வில்லை. மேலும் பெளத்தர்கள் தமக்கெ
ஒரு கல்லூரியை நிறுவும் நோக்கமாக
தற்போதைய 'ஆனந்தாக் கல்லூரியை நிறுவினர்கள். தமிழர்கள் வேறுவழியின் விலகிஞர்கள். சேர். பொன். இராம தன் ஏற்கனவே நன்கொடையாக வழ கியதை கொழு ம் பு சைவ பரிபால சபைக்கு மாற்றினர்.
1890 ம் ஆண்டு யாழ்ப்பாணத்துக் விஜயம் செய்த போது யாழ்ப்பாண வட்டத்தின் நாலா பக்கமும் இரு ந் வந்த மக்கள் மத்தியில் அவர் உரையா றும் போது சைவ பரிபாலன சபையி கல்வி நோக்கங்கட்கு அதிக ஆ த ர அளிக்க வே ண் டு ம் எனக் கேட்( கொண்டார். இந்துக்களுக்கென சைவ பாடசாலையொன்றை (தற்போதைய து துக் கல்லூரி) உருவாக்க தம்மால் ஆ

இ
அ, லிங்கநாயகம் 11 A
உதவியை செய்வதாகவும் வாக்களித்தார். மேலும் ந ன் கொ  ைட வழங்கி ஒரு நிதியை ஆரம்பித்தார். இன்றைய யாழ்ப் பாணம் இந்துக் கல்லூரி அவரது அபி லாஷைக்கும், அவாவிற்கும் நிலைபேருன நிலையமாக அமைந்துவிட்டது. குடா நாட்டில் உள்ள அநேக இந்துப்பாட சாலைகள் அவரது வழி கா ட் ட லா ல் தோன்றியவையே.
கொழும்பில் தேசியக் கல்லூரி ஸ்தா பிப்பதில் எடுத்த முயற்சி பலிக்காது போகவே யாழ்ப்பாணத்தில் பெண்களுக் கான உயர் கல்வி நிலையமொன்றை நிறுவ பெருமுயற்சி எடுத்தார். இவரி டம் பெண்கல்விக்கான ஈடுபாடு பிரமிக் கத்தக்க அளவில் விளங்கியதனுல் பெண் கல்விக்காக தொண்டாற்றிய நிறுவனங் களுக்குப் பொருள் உதவியும், ஆன் மீக வலுவும் கொடுக்கத் தவறவில்லை. ஆண்களிலும் பார் க் க கூடியளவான சமய ஒழுக்க நெறி படைத்த பெண் கள் தேசிய புத் துணர்வைத் தூண்டுவ தில் மேம்பாடுடையவர்கள் என்ற அசை யாத நம்பிக்கையை இராமநாதன் அவர் கள் கொண்டிருந்தார்கள். 'ஒரு ஆண் மகனுக்கு கற்பிக்கும் போது அது ஒரு தனியொருவனுக்கு கற்பி ப் ப தா கும். ஆல்ை பெண்ணுக்குக் கற் பி க்கு ம் போது அது ஒரு முழுக்குடும்பத்துக்கும் கற்பிப்பதாகும்” என்ற உண்மையை உணர்ந்த அவர் இந்தப் பெண்பிள்ளைகள் இந்துச்சூழலில், இந்து கலாச்சாரப் பின் னணியில் இந்து வாழ்க்கை முறையைக் கைக் கொண்டவர்களாக, வளரவேண் டும் என்ற பேரவாவின் இலக்காக இராம நாதன் பெண் கள் கல்லூரியை நிறு வினுர், ஆண்களுக்கென அநேக கல்லூரிகள் இருந்தும் பெண்களுக்கென ஒரு கல்லூரியேனும் இல்லாத குறை

Page 36
= 8) {
அவரை இத்துறையில் அதிக கவனஞ் செலுத்தத் தூண்டியது. இக்கல்லூரியை ஆரம்பித்தபோது மி ச ன ரி மாரி டம் இருந்து வந்த எதிர்ப்புகளைச் சமாளிக்க வேண்டியிருந்தது. ஏராளமான பணம் செலவழித்து நவீன கல்லூரிக்கான வசதிகளுடன் உறுதிவாய்ந்த கட்டிடத் தை அன்றே அமைத்தது அன்னுரு டைய தீர்க்க தரிசனத்தைக் காட்டுகிறது. 1913-ம் ஆண்டு யூன் மாதம் 20-ம் திகதி இக் கல்லூரி ஆரம்பமாகியது. அன்றைய தினம் யாழ்ப்பாண மக்களின் ஏகோ பித்த களிப்பு நாளாகும். அன்று தொட்டு இன்று வரை இக்கல்லூரி அவ்வாறே விளங்கிவருறது.
பெண்களுக்கென இராமநாதன் கல் லூரிபோல் ஆண்களுக்குப் பரமேஸ் வரக் க ல் லூ ரி அமைக்கப்பட்டது. அன்று கல்லூரியாக அரும்பிய அவர் முயற்சி இ ன் று பல்கலைக்கழகமாக மலர்ந்து விட்டது. இவ்வேளையில் அவர் தம் பெருந்தொண்டை நினைவு கூராமல் விட முடியுமா?
இராமநாதன் கல்லூரி சேர். பொன். இராமநாதன் அவர்கள் பெண்களுக்கென ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியையும் நிறு வினுர். இது ஆசிரிய பயிற்சிக்காக மிச
சத்தியத்தின் பாதை எவ்வாறு நேரா இருக்கிறது. அகிம்சையின் பாதையும் அ பக்கமோ சாய்ந்துவிடாமல் வாளின் மு: கயிற்றின் மீது நடப்பவன் தன் கவனத் செய்வதால், அந்த வித்தையில் வெற்றிபெ இவற்றின் பாதையில் நடப்பதற்கு அன வேண்டும். சிறிதளவு கவனக்குறைவாக விட நேரும் இடைவிடாது பாடுபட்ட யையும் ஒருவர் அடையமுடியும்,
- அகிம்சை அல்லது அன்
s

னறிமாரிடம் அறிந்தவர்களுக்கு ஒரு நற்செய்தியாக இனித்தது. இராமநா தன் அவர்கள் தனது கல்லூரிகளுடன் சமயவழிபாட்டிற்கென கோயில்களையும் அமைத்தார். மாணவர்களுக்கு கல்வியை மட்டுமன்றிச் சமய அறிவையும் சமய வழிபாட்டையும் கலந்து இக்கல்லூரிகள் மூலம் ஊட்டினுர். இக்கல்லூரிகளில் போதனைக்காக தமிழும் ஆங்கிலமும் இருந்த போதிலும், தமிழில் உயர்ந்த கல்வியை பெறும் நோக்குடன் மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் அனுசரணையுடன் எடுக்கப்பட்ட பாடவிதானம் பின்பற்றப் ULL-5).
இராமநாதன் அவர்கள் தமது சொந் தப் பாடசாலைகள் மட்டுமன்றி வேறு பாடசாலைகளை உருவாக்கவும் உறுதுணை புரிந்தார். கல்வித் துறையில் மட்டுமின்றி சமூக சமய, கலாச்சார துறைகளிலும் நாட்டின் சுதந்திரத் ச க்கும், மற்றும் பல முறைகளினுலும் தனது ஈழவழத் திரு நாட்டுக்கு பெருந்தொண்டாற்றினர். அன்னுரின் பூதவுடல் அழிந்து விட்டா லும் அவரது செயற்கருஞ் செயல் களால் உருவாகிக் கொண்ட புகழுடம் பானது இலங்கை வாழ் மக்களின் நெஞ் சங்களில் என்றென்றும் நிலைத்து நிற்கும் வாழ்க! அவர் நாமம்.
னதோ அவ்வாறே குறுகியதாகவும் ரப்படிப்பட்டதே. அப்பக்கமோ இப் னயில் நிற்பதைப் போன்றதே இது. தையெல்லாம் ஒரிடத்தில் நிலைக்கச் |றுகிறன். ஆனல் சத்தியம், அகிம்சை தவிட இன்னும் அதிகளவு கவனம் இருந்து விட்டாலும் கீழே விழுந்து ால்தான் சத்தியத்தையும், அகிம்சை
பு" என்ற கட்டுரையில் மகாத்ம்ா காந்தி

Page 37
யாழ். நகரிலே சிறந்த அச்சுவேலைகளே
தமிழ்
ஆங்கிலம்
gåJE 5mTúto
ஆகிய மொழிகளில் அழகுறச் செய்து தருபவர்கள்
யாழ். தங்கராஜா அச்சகம், 39/9, மாணிப்பாய் வீதி, யாழ்ப்பாணம்.
With the Best
Compliments
from
R A G U IN A TT H A N PATHIPPAHAM
& deal. Callar.
903, Galle Road Colombo - 3.

Space Donated
By
MALAYAN RECORDING SERVICE
121, Maripay Road, | Jaffea.
With Best
Compliments
from
Mills. Ranajna Stores
52, Bankshall Street,
Colombo 11.

Page 38
நவீன மின்சார உபகரணங்கள், மின் சார மண்ணெண்ணையில் இயங்கும் நீர் இறைக் கும் இயந்திரம், எவரெடி பற்றரிகள், šQ、Jä孟月jr<ör。明、ó。F Sär பல்புகள், லோட்டஸ் ரயர் ரியூப்
இவைகளுக்கு
விஜயம் செய்யுங்கள்
நியூரோன் எலெக்ரிக்கல்ஸ் 141, 143, ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம்.
இளே 440, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம் தொலைபேசி- 7610
ஆடவர் விரும்பும் அழகிய சேட்டிங், சூட்டிங் வகைகள் குழந்தைகளுக்கான ཉི་ றெடிமேட் உடைகள்
மற்றும் அழகுசாதனப் பொருட்கள் யாவும் நிதான விலையில் பெற்றுக்கொள்ளலாம்.
மணியம் ரெக்ஸ்ரைல்ஸ் நவீன சந்தை, மின்சார நிலேய வீதி, யாழ்ப்பாணம்.
தொலைபேசி 7545
 

C. S. F. TEXT Tip Top Tailoring
18, JUMMAH, MOSQUE LANE, JAFFNA.
சுவையான சிற்றுண்டி வகைகளுக்கு இன்றே விஜயம் செய்யுங்கள்!
பத்மா ஹோட்டல் PA HVA HOTEL
உரிமையாளர்:= J. குணரட்னம்.
489, கே. கே. எஸ் வீதி, யாழ்ப்பாணம்,

Page 39
நாயகன் நந்தி
மூன்றம் நந்திவர்ம பல்லவனை நாய கணுகக் கொண் டு நந்திக்கலம்பகம் பாடப்பட்டது. இவ்வரசன் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு கி. பி. 847 முதல் கி. பி. 872 வரை ஆட்சி செய் தான் எனச் சரித்திர ஆசிரியர்கள் குறிக் கின்றனர். இவன் தமிழகம் முழுவதை யும் தனது ஆட்சியின் கீழ் கொண்டு வந்ததுடன் வடநாட்டையும் ஆண் டான். இவன் சிவபக்தியிலும் கல்வியி லும் போர்த்திறனிலும் வள்ளல் தன்மை யிலும் சிறந்து விளங்கினுன், நந்திவர் மன் தெள்ளாறு என்னும் இடத்தில் பாண்டியரை வென்றதை பாரதம் பாடிய பெருந்தேவனுர் புகழ்ந்து பாடுகிறர்.
இவேண்மையால் இல்வியால்
மாபலத்தா லாள் வினேயால் உண்மையற் பாராளுரிமையால் - திண்மையால் தேர்வேந்தர் வானேறத் தெள்ளாற்றில் வென்றைேடு யார் வேந்தர் ஏற்பார் எதிர்?"
நந்திவர்மனின் பா  ைற கடுவாய் எனப் பெயர் கொண்டது.
திருமங்கை ஆழ்வார் பெரிய திரு மொழியில்
*கரையுறை வாண்மற மன்னர் கெடக்கடல் போல் முழங்கும் குரல் கடுவாய் பறையுடைப் பல்லவர் கோன்" எனக் சிறப்பிக்கின்ருர் இ னி நந்திவர்மனைப் பற்றி நந்திக்கலம்பகம் கூறுவதைப்
பார்ப்போம்.
நந்தியின் வீரம்: நந்திவர்மனின்
அழகான நீண்ட கண்கள் (கோபத்தால்)
சிவக்குமாயின் பகையரசர்களின் ஊர்கள்
9

ம. ஜெயகுமாரன் Η Ε.
(தீயினுல்) சிவக்கும் அவனுடைய ஒளி யுடைய புரு வ ங் கள் துடிக்குமாயின் அவனை வணங்காத அரசர்களுக்கு இடப் புறம் துடிக்கும். நந்தியின் வாள் உறை யில் இருந்து நீக்கப்படுமாயின் பகை வரது மனைவியர் தாலியை இழப்பர். நந்தியின் சங்குக் கடுவாய்ப் பறை போல் முழங்குமாயின் அவனேடு சேராத மன்னர்களின் மனம் பதைபதைக்கும். நந்தியின் போர்யானை அலங்கரிக்கப் படுமாயின் அவனை எதிர்த்த பகைவரது உடலில் உதிரம் உண்டாகும்.
15B50 1506èrء ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ح معنے معمہ திருவருள் நெடுங்கண் சிவக்குமாகிற் செருநர் சேரும் பதி சிவக்குமே நிரங்கினர் புருவம் துடிக்கின் நின் சுழல் இறைஞ்சா மன்னர்க்கு இடந்துடிக்குமே மையல் வாள் உறை கழிக்குமாயின்
T-அடங்கார் பெண்டிர் புணர் முலை முத்தப் பூண் கழிக்கும்மே.
கடுவாய் போல்வளை அதிர நின்னெடு
மருவா மன்னர் மனந்து டிக்கும்மே
மாமத யானே பண்ணின்
உதிர மன்னு நின் எதிர் மலைந்தோர்க்கே
(மை-இல் - குற்றமற்ற, வளை - சங்கு) நந்தியின் கால்களில் யானையின் பிடர் பட்ட சுவடுகள் உண்டு. அச்சுவடுகளின் கீழ் பூவுலகத்தில் உள்ள அரசர்கள் நாள் தோறும் வந்து வணங்கும் போது அவர்கள் முடிகள் ஏற்படுத்திய வடுக்கள் உண்டு.
குழிவன் மதயானையின் பிடர்பட்டு சுவடினவை; சுவட்டின் கீழ் வாழியிந்நில மன்னர் வந்து அனுதினம் இறஞ்சிய வடுக் கண்டோம்"
நந்திவர்மன் மூவேந் த  ைர யு iħ Lino l' (6) மின்றி வடநாட்டில் உள்ள வரையும்

Page 40
as 3.
வெற்றி கொண்டு யானே, குதிரை என்பன வற்றை திறையாகப் பெற்ருன் என்பதை
.ே சேர சோழருந் தென்னரும் வடபுலத்து அரசரும் திறை தந்த வீர மாமத கரியிவை பரியிவை?
என்பதால் அறியலாம்.
நந்தியின் கொடைச்சிறப்பு:-
புரவலர் எல்லோரும் நந்திவர்மனே ப் பாடி பொருள் பெற்று பூமியை அரசா ளத் தொடங்கிவிட்டனர். ஆகவே அவன் ஆட்சியில் இரவலர் யாருமில்லை. அப் படியே உண்டென்று கூறினுலும் அது இரவில் மலரும் குமுத ம ல  ைர யே குறிக்கும்.
"இந்தப் புவியில் இரவலரி
உண்டென்பதெல்லாம் அந்தக் குமுதமேயல்லவோ - நந்தி தடங்கைப் பூ பாலன் மேற்
தண் கோவைபாடி படங்கப் பூ பாலராஞர்."
நந்தியின் அரண்மனை முற்றத்தில் பகை யரசர்களிடம் வெற்றி கொண்ட அவரது நாட்டையும், வீரமிக்க செல்வத்தையும், நந்தியை வணங்கும் அரசர்களைப் பெற் றுக் கொள்ளும்படி கடுவாய் முழங்கிக் கொண்டிருக்கும்.
"கொற்ற வாயின் முற்றத்தே விண்ட வேந்தர் தன் நாடும் வீரத்திருவும் எங்கோனைக் கண்ட வேந்தர் கொண்மின் என்னும் கன்னிக் கடுவாயே?
நந்திவர்மன் ‘செருவென்ற பாரி' எனச் சிறப்பிக்கப் படு கி ரு ன் கடையேழு வள்ளல்களில் ஒருவனுய பாரியை மூவேந் தர் போரில் வென்றனர். நந்தி மூவேந் தரை வென்றமையால் "செரு வென்ற பாரி" யாகின்றன்.

அரண் மனே வாயில் வழியே பரிசு பெற்றுச் செல்லும் புலவர்களின் நிலையை வர்ணிப்பதன் மூ ல ம் ந ந் தி யி ன் LD வெளிப்படுத்தப்படு கிறது. அப்புலவர்கள் பல குதிரைகளோ டும், யானைகளோடும், மயிலிறகால் ஆன குடையின் கீழ் அமர்ந்து வெளி யேறினர். அவர் க ள் புலவர்களோ அன்றி அரசர்களோ? அரசர்கள் நந்தி யின் வாயிலில் குடைவிரிக்க மாட்டார் கள். ஆகையால் இவர்கள் புலவர்கள் தான்
* பாடிய நாவலரோ, வேந்தரோ,
Lore பீடு இயல் மா களிற்ருர் பிச்சத்தார்" நந்தியின் கொடைச் சிறப்பானது:- *மண்னெல்லா முய்ய மழைபோல்
வழங்குகரத் தண் உலா மாலேத் தமிழ் நந்தி" என்னும் வரிகளில் பூரணமாக விளக்கப் பட்டுள்ளது.
வேறு சிறப்புக்கள்:-
நந்திவர்மன் க ல் வி யிற் சிறந்து விளங்கினன் . இதல்ை தொல்லை நூல் வரம்பு கண்டான்" எனவும் நூற்கடற் புலவன் எனவும் புகழப்படுகின்றன். அவ்வாறே அவன் சிவபக்தியும் மிகுந் தவன். பிறை தவழ் செஞ்சடைப் பிறங் கல் நாரணன் அறைகழல் முடித்தவன் அவனி நாரணன்" எனச் சிறப்பிக்கப் ப டு கி ன் ரு ன். அதாவது பிறையை அணிந்த சிவபெருமானது திருவடியை திருமுடிமேற் கொண் ட வன் நந்தி. சிவனே முழுதும் மறவாத சிந்தையான்" என இவன் நூலாசிரியரால் புகழப்படு கின்றன்.
நந்தியின் ஆட்சித்திறனை நோக்கு வோமாயின் அவன்- திருவும், செம்மை பும், நில மகள் உரி ைம யு ம் பொது வின்றி (தனக்கே உ ரி  ைம ய ர க் கி க்

Page 41
கொண்டு) ஆண்டான். அவனுடைய நாடு செந்நெற் பயிரையுடைய வயலிலே சென்று விழுகின்ற காவிரியாறு சூழ்ந்த நாடு. அவனது வெண் கொற்றக் குடை யானது துன்பத்தின் நிழலானது குடி களின் மேல் விழாமல் மறைக்கும் குடை நந்தியின் படை வீரர்கள் விளங்குகின்ற கடல் போன்ற படை நந்தியின் படை யில் உள்ள யானைகளுக்குப் போர் செய் யாத நாள் வினை நாளாக சினத்தை யூட்டும்.
நந்திவர்ம பல்லவன் இறந்த போது அவனது குளிர்ந்த தன்மை நிலவை அடைந்தது. அவனது பெருமை கடல் சூழ்ந்த உலகத்தில் பரவியது. அவன் சீற்றம் காட்டில் உள்ள புலியினுள் புகுந் தது. அவனது வள்ளல் தன்மை கற்பக
அவுட் போட் மோட்டர்,
மின் இணைப்புச் சாதனங்கள்,
மற்றும் தண்ணீர் இறைக்கும் இயந்திரம்
திருத்துவதற்கு மிகச்சிறந்த இடம்
事
கி, பேரின்பமூர்த்தி
நரரந்தனே வடக்கு ஊர்காவற்றுறை

35 =
விருட்சத்தை அடைந்தது. அவனிடம் குடி கொண்டு இருந்த திருமகள் திரு மாலை அடைந்தாள். அவ ன து உடல் தீயினுள் புகுந்தது. (அதாவது அவன் உடலில் உள்ள ஒளி தீயினுள் புகுந்தது) ஆசிரியர் இறுதியில் தன்னுடைய நிலை யையும் கூறுகின்றர். "நந்தியே எந் தையே! நானும் எனது துன்பமும் இனி எங்கே சென்று தஞ்சம் புகுவோம்."
வோனுறு மதியை அடைந்ததுன் தட்பம் மறிகடல் புகுந்ததுன் பெருமை கானுறு புலியை அடைந்த துன் சீற்றங் கற்பக மடைந்ததுன் கொடைகள் தேனுறு மலராள் அரியிடம் புகுந்தாள் செத்தழ லடைந்த துன் மேனி யானுமென் கலியும் எவ்விடம் புகுவோம் நந்தியே! எந்தை பிரானே!
வெறியினுல் ஒரு லொறி விபத்து !
மதுபோதையில் வீ தி ய ர ல் சென்று கொண்டிருந்த ஒருவர் மீது லொறியால் மோதியதாக லொறிச் சாரதி குற்றஞ் சாட் டப் பட்டு நீதி மன்றத்தில் நிறுத்தப் பட் டார். விபத்துக்குள்ளான மனிதர் நீதிபதி யின் கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில் பின்வருமாறு நடந்த சம்பவத்தை விளக் கினுர்,
'ஐயா நான் அன்று இரவு வீதிவழியே வந்து கொண்டிருந்தபோது விளக் கை ப் போட்டவண்ணம் பக்கம் பக்கமாக இரண்டு மோட்டார் சைக்கிள்கள் வந்து கொண்டி ருந்தன. வீதியின் இரு புறமும் அவை வந்து கொண்டிருந்தபடியால் நான் இரண்டிற்கும் இடையில் சென்றேன். திடீரென்று என்ன ஏதோ ஒன்று மோதித்தள்ளியது. அப்போ துதான் விளக்கைப் போடாமல் அவ்விரு மோட்டார்ச் சைக்கிள்களுக்கும் இடையில் இன்னுெரு மோட்டார்ச் சைக்கிளில் ஒரு மடையன் வந்திருக்கிருன் என்பது எனக்குப் புரிந்தது. -நன்றி:- விகடகவிட

Page 42
அன்பளிப்பு
முருகன் எலக்றி
மின்சார ஒப்பந்தகார
618, ஸ்ரான்லி வீதி,
தந்தி 'கறன்ட்"
Wasanthas Mot
De a lears in Spares Faxa,

க்கல் ஸ்ரோர்ஸ் நம், விற்பனையாளரும்
ബ யாழ்ப்பாணம்.
or Mart
Scooter and Water Pumps
N. M. W. BUILDING, 44, STANLEY ROAD, JAFFNA

Page 43
நவீன சந்தையில்
ஆண்மை
சந்தையில் ஆண்மை என்று கூறு மிடத்து சமுதாயம் என்னும் சந்தை யையே குறிக்கிறது. ஏனெனில் எமது நாட்டின் நிலை  ைம  ைய ச் சிந்திக்குப் போது சந்தையின் நிலையும் ஆண்மை யின் விலையும் நன்ருகப் புரியும். அவர் றிற்கும் இடையில் உள்ள தொடர்பும் புலனுகும். நமது நாட்டில் இப்பொழுது சீதனக் கொடுமை தலை விரித்து ஆடுகின் றது. இந்தச் சீதனக் கொடுமைக்குப் நாட்டின் பொருளாதார விருத்திக்கும் ஏதாவது தொடர்பு இருக்கும் என்று கரு தினுல் அதில் பல உண்மைகள் புலப்படு கின்றன. மேலை நா டு களி ல் பருவம் அடைந்தவுடன் மணமக்களின் விருப்பத் திற்கமைய திருமணம் நடைபெறுகின் றது. அந்தத் திருமணங்களை பெற்ருே களால் தடுக்கவோ, அன்றி நிறுத்தவே முடியாது சீதனப் பிரச்சனை இல்லாதது அந்நாடுகளின் பொருளாதார வளத் துக்கு ஒரு காரணமாக அமைகிறது.
எமது நாட்டில் உள்ள ஒர் கற்றறிந்த உயர் பதவியில் உள்ள ஆண் ஒரு இலட் சம் ரூபாய் முதல் பல இலட்சம் ரூபாய் வரை விற்கப்படுகின்றன் எ ன் ப து யாராலும் மறுக்கமுடியாத ஒரு உண்மை யாகும். ஒரு சாதாரண படித்த குடும்ப தில் இருக்கும் பெண்ணின் தகப்பணு டம் ஒரு இலட்சம் ரூபாய் ஏது? எனே அவர் எங்ங்ணம் தனது மகளுக்கு ஒரு உயர்ந்த தகுதியான மணமகனைத்தே கொடுக்க முடியும். ஆகையால் ஏை தனது தகுதி க் கே ற் ற வா றே வி2 கொடுத்து இன்னெரு ஏழையையே பெ றுக்கொள்ள முடிகிறது. செல்வந்தன்
- Η 0

கு. றிஇரத்தினகுமார் II麗
தனது செல்வத்தின் மூலம் இன்னுெரு செல்வந்தனையே வாங்கி விடுகின்றன். சீதனப் பிரச்சனை ஒழியும்வரை ஏழை, பணக்காரன் பாகு பாடு தொடர்ந்து கொண்டேயிருக்கும். ஏழை ஏழையாகவே தன்னுடைய வாழ் க்  ைக  ைய தொடர் கிருன் பணக்காரன் பணக்காரணுகவே பகட்டாக வாழ்கிருன் நாட்டின் பொக ளாதாரம் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்
குள் ஏழைகளினுல் தொய்வடைந்தும்,
செல் வந்தர்களுக்குள் பலமடைந்தும் ஆனல் பயன்படுத்தப்படாது காட்சியளிக் கின்றது. ந எ ட் டி ன் பெரும்பான்மை மக்களாக ஏழைகள் உள்ள எமது தேசத் தின் பொருளாதாரம் இதல்ை வெகுவா கப் பாதிக்கப்படுகிறது.
குணம் பந்தியிலே பணம் குப்பை யிலே' என்ற நிலைமாறி இன்று "பணம் பந்தியிலே குணம் குப்பையிலே என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு வி ட் டோ ம். அன்று ஏழையாகிய அம்பிகாவதி; அரச னின் செல்வ மகள் அ ம ரா வ தி  ைய அடைவதற்கு ஆயிரம் பாடல்களை காமக் குறி இன்றிப் பாட வேண்டியிருந்தது. இன்றிருந்தால் இலட்சம் ரூபாய் இனும் கேட்டிருப்பார்கள். செல்வம் வறுமை இரண் டி ற் கு மி  ைட யி ல் இடப்படும் பாலத்தைத் தகர்க்க அந்நாளிலே அத்தி வாரமிடப்பட்ட சட்டதிட்டங்கள் தானு இன்று இந்தச் சீதனப் பேயை உருவாக் கின. இச்சீதனக் கொடுமைக்கு மூலம் எது? உரம் எது? பரிகாரம் எது? என நாம் ஒவ்வொருவரும் மனிதாபிமானத்துடன் சிந்தித்து விடையறிந்து செயற்பட வேண்டும்.

Page 44
ஏன்? பெண்ணிற்கு ஆண் தட்சணை கொடுத்தால் என்ன? கட்டில்லாத ஆன் மையை அளக்க அளவு கோல் இல்லை ஆனல் கற்பை அளக்க மட்டும் அள கோல் உண்டு. ஒரு ஆண் எத்தனை த மும் தவறு செய்யலாம். ஆனல் ஒ( பெண் ஒரு முறை தவறிவிட்டால் அ6 ளுக்கு பின் வாழ்வேயில்லை. பெண்ை யின் இப்பலவீனத்தை மறைக்க சீதன அவசியம் தே  ைவ ப் பட்ட து என் வார்த்தை முழுவதும் உண்மையல்ல என்ருலும், ஒரளவு உண்மை இருக்கின் தென்பதையும் இதில் சீதனப் பேயின் முக்கியத்துவத்தையம், சுட்டிக்காட்டுச் றது. கேவலம் இன்றைய இளஞர்கள் பணத்திற்காகவே திருமணம் செய்கிற கள். ஒரு பெண்ணும், அவளது இளடை யும் போதாதென்று, பணமும் வேண்டு
தமிழர் அனைவரும் பண்டுபோல் மூர்களுக்கும், பிறவற்றிற்கும் எல்லாம் வேண்டும்.
காதலுக்கு ஏற்ற மனநிலை வளர்வதற்கு தவறு செய்யத் தூண்டுதல் ஏற்படுகிறது.

岛& 一
மென நிற்பவர்கள் எவ்வளவு பேராசைக் காரர்கள்
சமுதாயச் சந்  ைத யி லே விலை உயர்ந்த வைரங்கள் போல் ஆண் கள் விற்கப்படுகிறர்கள். இது எமது சமுதா யத்திற்கு, பாரம்பரியம் மிக்க இனத் துக்கு ஒரு இகழ்ச்சி நாட்டின் வளத் துக்கு ஒரு வீழ்ச்சி உயர்ந்த வர் க ள் உயர்த்தப் படுகிறர்கள். தாழ்ந்தவர்கள் தாழ்த்தப் படுகின்றனர். இந்நிலை ஒழிக் கப்படவேண்டும். இனி மேல் சீ த ன ம் வாங்குவதில்லை என ஒவ்வொரு இளைஞ னும் திடசங்கற்பம் கொண்டு, ஒரு திருத் தமான, புரட்சிகரமான சமுதாயத்தை கட்டி யெழுப்ப முழு மூச்சுடன் போராட வேண்டும்.
தமக்கும் தம் இல்லங்களுக்கும், தம்
தூய தமிழ்ப் பெயர்களையே அமைத்தல்
- மறைமலையடிகள்
முன்னமே உடல் நிலை வளர்ந்து விடுகிறது: வற்றிற்கு ஏற்ற தண்டனையும் கிடைக்கிறது. - டாக்டர் மு. வரதராசனுர்

Page 45
இயற்கை
நிய
வேனிற் கால ே வேப்ப மரத்தி காலைக் ஆகிரின்
இாகக் கூடொ கூடி இருந்த கு ಆಣಾ...! _ 5Tir ஓடிவந்த தாய்க் ஒருகணக் நில கோபத்தோடு ெ கொல்ல எண், உயிரைக் கையி ஒடித் தப்பிய பறந்து வந்த
பலா மரத்தில் பதறிய அந்தக்
பார்த்து இப்ட "இனிய குஞ்சே இயற்கையின் குதூகலத் தோ
கூ! கூ! என்று
ஞானம் என்ற மூலத்தில் இருந்து டுமே தோன்றின. இரண்டுமே ஒரு யாதவன் எதையும் நிர்மூலம் என் சியமான பரிணும வளர்ச்சிகளைத்த மூலத்தைக் காணவில்லை. அறிவு ஆ கையாகும். ஆழமில்லாத முடிவு ஆ

வின்
தி தென்றல்?
ன் உச்சியிலே
ஒளியினிலே ன்றைக் கண்டேனே! நஞ்சுகளில் றது ஒரு குஞ்சு 1
srsü rறது திகைப்போடு ! காத்தியது னித் துரத்தியது! ல் பிடித்தபடி து அக்குஞ்சு ஒரு குயில்
அமர்ந்தது! குஞ்சிடம் டிச் சொன்னது! F பதருதே
நியதி இதுதானே!?? நி குயிற் குஞ்சும் று கூவியது!
掌米事
தான் விஞ்ஞானம், மெஞ்ஞானம் இரண் மூலத்தை நம்புகின்றன. ஒருமூலமும் அறி றே கருதுவான். மூலவித்து ஒன்றின் ரக ான். விஞ்ஞானம் கண்டுபிடித்ததே தவிர, ஆழமாக ஆழமாக முடிவு தெய்வ நம்பிக் த்திரத்தில்பெற்ற குழந்தையே நாஸ்தீகம் !
= கண்ணதாசன்

Page 46
குமாரன் டு
Kumaran
வாழ் நகரில் சகல நவீன வசதிகளு
குறைந்த செலவு - நிறைந்த உப
இன்றே விஜயம்ெ
67, ஸ்ரான்லி வீதி,
சிறந்த புகைப்படங்களுக்கு
பிரபாபோட்டோ
108, ஸ்ரான்லி வீதி,
யாழ்ப்பாணம்

றி ஸ்ட் (9) Gör
Tourist Inn
டனும் தங்கும் அறை வசதிகள்
- 24 மணிநேர சேவை
Fரிப்பு - ஸ்பெசல் உணவு வகைகள்
ஈய்ய மறவாதீர்கள்
- யாழ்ப்பாணம்,
c3pace CDanated
(8)
Victor & Sons
100, Stanley Road, Jaffna.

Page 47
G. C, E, (A/L), Rio G. C. E. (O/]
ஆறம் ஏழாம்
கலை, விஞ்ஞா
விசேட ஆங்கி
திறமைமிக்க சிறந்த ஆசிரியர்
சித்தி விநாயகர்
தலைமையகம் அச்சுவேலி
கிளை 1 : ஆடியபாத
2 : யாழ்ப்பாண
at G. C. E. (A/L), ay G. C. E. (OI
24ஆரும் 4 ஏழாம் எட்டாம் கலை, விஞ்ஞ விசேட ஆங்கில வகுப்
தொடர்புகளுக்கு G. M. ராஜ்குமார்,
யுரேனஸ் இ
15, ஸ்ரேசன் றேட்,

D,專N C.G. E. \H N,C,E
எட்டாம் வகுப்புக்கள் ன பிரிவுகள்
வகுப்புக்கள்
களால் நடாத்தப்படுகின்றன.
சயன்ஸ் சென்ரர் பஸ் நிலையம், அச்சுவேலி,
வீதி, கல்வியங்காடு.
TD
1), AAN. C. G. E, y H. N. C. E.
வகுப்புக்கள் ஆரம்பமாகின்றன,
ான பிரிவுகள்
புக்கள் நடைபெறும்.
18. ஸ்ரேசன் ருேட், கோண்டாவில்,
இன்ஸ்ரிரியூட்
- கோண்டாவில்,

Page 48
யாழ்ப்பாணம் g
உயர்தர மாணவர் ஒன்றி
கொண்டாடும்
அவர்க
அறிவு, திறன், செம்மை,
உயர் வி
-3}} &0) ।
வாழ்த்து
፵®5 -©!

இந்துக் கல்லூரி
luiĝo (முதலாம் வருடம்)
கலைவிழா
لکڑی 67T
இரசனை பிரதிபலிக்கும்
jQt Qu ୩୮୫
நல்கும்
SIš R6ğT

Page 49
இன்றைய மாணவ மன்றங்களும்
அவற்றின் எதிர்காலமும்
மாணவர்கள் நாட்டின் பயன்தரு செல்வங்கள். இவர்களே நாடிப் பற்பல பணிகள் எதிர்நோக்கியுள்ளன. இப்பணி களைச் செயலாக்குமிடத்து மாணவர்கள் சமூகம், அரசியல், தொழில்நுட்பம் மனித ப் பெறுமதியாகியவற்றுடன் சேர்ந்து இயங்கவேண்டும். அத்துடன் இவர்கள் பல்வேறு செயன்முறையான வளங்களே ஒருங்கே பயன்படுத்தித் தத் தம் குறிக்கோளை அடைய வேண்டியவர் களாகவும் இருக்கின்றனர். எ ன வே மாணவர்கள் காலப்போக்கில் நாட்டின் பணிகளைச் செவ்வனே ஆற்ற மாணவ மன் றங்கள் நல்லதொரு பயிற்சியை அளிக்கின்றன. மாணவ மன்றங்களின் குறிக்கோன் நாட்டுப்பணியாளரின் திசை யினின்றும் வேறுபட்டதாயினும் மாண வர்களிடையே திட்டமிடல், ஒழுங்கமைத் தல், தலைமைவகித்தல், ஒன்று படுத்தல் கட்டுப்படுத்தல், தூண்டுதல் ஆ கி து முன்மைப் பிரிவுகள் உள்ளடக்கிய அபு சங்கள் உள்ளீடாகத் தோன்றி மலர்ந்து அவர்களது எதிர்காலக் கடமையை சீர்ட் படுத்துகின்றது.
匿D 霄”6T Q川 மன்றங்களின் வளர்ச்சி அம்மன்றங்களின் குறிக்கோள், உறுட் பினரின் நேர்மை, உண்மை, செய்திறன் தியாகம், முதலியவற்றில் தங்கியுள்ளது மாணவ மன்றங்களின் குறைபாடுகள் அவை இயங்கும் பாடசாலை களேப் பாதிட் பதால் மாணவர்கள் மனுேபலத்துடன் செயற்பட வேண்டும். மாணவர்களுள் அடங்கியிருக்கும் சக்தி வலிமை வாய் தது. இச்சக்திகள் ஒன்றுபட்ட மன்றா கள் என்ருல் அவற்றின் வலுவையிட்டு பேசவும் வேண்டுமோ மாணவ மன்றா களில் உருவாகும் மனுேபலமும் செய
2

L.A. Lifraðu af I. I. A
திறனும் கா ல க தி யி ல் மாணவர்களை தொழிற்சங்க உறுப்பினர்களாகவோ ஏ ன் ந எ ட் டி ன் தலைவர்களாகவோ ஆக்குகின்றன.
இத்தகைய மாணவ மன்றங்களின் எதிர்காலம் சுபீட்சமாக அமையுமா என் பது ஒரு கேள்விக்குறி. காரணம் சீரற்ற உயர்கல்வி வாய்ப்புக்கள், திட்டமிடப் பட்ட புறக்கணிப்பு என்பனவாகும் இச் செயல்கள் மக்கள் மத்தியில் ஒரு பீதியை ஏற்படுத்தியுள்ளன. இதற்கூடாக உற்று நோக்கின் மாணவ மன்றங்கள் சமுதாயத்தில் நிலவும் தீய பழக்க வழக் கங்களைக் கட்டுப்படுத்தவும் ஆராய் வின் றிக் கைக்கொள்ளப்படும் சம்பிர தாயச் செயல்கள், சாதி மத பேதம் சீதனக் கொடுமை என்பனவற்றிற்கு எதிராகப் போர்க் கொடி தூக்கும் ஒரு களமாக அமைகின்றன.
இவ்வாருயின் மாணவ மன்றங்கள் தத்தம் குறிக்கோளை வரையறுத்து, தமக் குள்ளே எழும் விரோத குரோதங்கட்கு இடங்கொடாது இணைந்து செயற்பட்டு, குணம் நாடிக் குற்றமும் நாடி, அவற் றுள் மிகைநாடி மிக்க கொள்கின்ற பண்பு படைத்து இயங்கவேண்டும். உயர் நீதி யுடையவரே உற்ருர் என்று கண்டு, தன் னினத்தான் வேறினத்தான் தன் பகை வன் தன் நண்பன் எவனுயினும் அன்ன வணின் அருஞ்செயற் பாராட்டும் பண்பு கண்டு மன்றத்தின் நோக்கமது, ஏற்ற மது மாற்றமுருவகையே நாடி, குயிலினம் போல் ப ற ந் தா டி சேவைசெய்வதே மாணவ மன்றங்களின் த லை ய ர ய
கடனுகும்.

Page 50
* நன்றி மறப்
எந்நன்றி கொன்ருர்க்கு செய்நன்றி கொன்ற மக
என்னும் பொய்யா மொழிப்புல விழாக்கண்டு களிப்புடன் மீளும் உங்க களைத் தெரிவிக்கும் அதே வேளையில் க நோக்கினையும் ஒருமுறை ஆராய்வோம்
நாம் வாழ நமது இன்பம் நம்மொழி வாழக் கலை க லா சா வளர்ந்து, தமிழ்ப் புலவர்கள் அறிஞர் மொழி செழிப்பிழந்து அதன் பொலிவி அன்றி மறுக்கப்படும் ஒன்ருகி விட்ட g கலாசாரம் மறந்து அந்நிய மோகம் Gនាfier, அணங்குகளின் நிலைகண்டு தமிழ் மணக்கும் இக்கலைவிழாவை ஏற்ப வதையிட்டுப் பெருமைப்படும் நாம் இ நல்கிய உங்கள் அனைவருக்கும் 6 TLD,5) கொள்கின் ருேம்.
இந்த இனிய விழாவிற்கு பல்சுை மாணவ மணிகளுக்கும், இவ்விழாவை சிறப்புடைய ஆக்கங்கள் அளித்து, ஊ விளம்பரங்கள் நல்கிய வணிகப் பெருமக் முயற்சியில் மாணவர்கள் மட்டுமின்றி கொடுத்து நின்ற மதிப்புக்குரிய பெற்றேர் அச்சிட்டும் மற்றும் பல எ மது ஒன் உதவிய செட்டியார் அச்சகத்தினருக்கு கடமைப்பாடுடையோம்,
இவை எல்லாவற்றிற்கும் மேலாக அனுமதி அளித்ததுடன் ஆக்கமும், அ அதிபர் அவர்கட்கும், மற்றும் பல்வேறு கள், ஆசிரியர்கள், ஆகியோருக்கும் எ மரநிழலில் எம்பிரானிடம் நன்றி சொல்லி நவில்கின்ருேம். மலர்ந்திருக்கும் புத்த எதிர்நோக்கி, மீண்டும் உளம்நிறைந்த
 

து நன்றன்று '
நம் உய்வுண்டாம் உய்வில்லை ற்கு
வரின் மெய்வாக்கை அனுசரித்து తొడిషు ளுக்கு கரம் கூப்பி சோலாகல வந்தனங் டந்துவந்த மைல் கற்களையும் கலைவிழா
வாழ, நம் மொழி வாழ வேண்டும். ர ம் வாழவேண்டும். சங் கத் தி ல் களினுல் காக்கப்பட்ட நம் செந்தமிழ் ழந்து இன்று பாரினில் மறைக்கப்படும் நிலை பற்றி ஆராய்வோமாயின் நம் கலை
கொண்டு அலையும் நந்தமிழ் ஆடவர் நாணிநிற்கும் அதேவேளை கன்னித் பாடு செய்து உங்கள் முன் அரங்கேற்று ப்புனிதமான எம்முயற்சிக்கு பேராதரவு மனங்கனிந்த நன்றிகளைத் தெரிவித்து
வயூட்டும் நிகழ்ச்சிகளைத்தந்து உதவிய யொட்டி வெளியிடப்பட்ட 'கலைமலர் க்கங்கள் கொடுத்தவர்கட்கும், வர்த்தக களுக்கும், அவ்விளம்பரங்களை எடுக்கும் தோள் களுக்கும், இம்மலரை குறுகிய காலத்தில் ਘਸੁੰਨੂੰ ਰੰ ఆతతా(కిమిడిమికొటిaTu செய்து ம், மீண்டும் மீண்டும் நன்றி சொல்லக்
இவ்விழாவை கல்லூரியில் நடாத்த றிவுரையும் ஊக்கமும் நல்கிய உயர்திரு முறைகளில் உதவிபுரிந்த உபபுரவலர் மது பணிவான நன்றிகளைக் குருந்த |ய மாணிக்கவாசகரின் நிலையில் இருந்து ாண்டின் ஒளி மயமான எதிர்காலத்தை நன்றிகளுடன் விடை பெறுகின்ருேம்.
வை. யோகேஸ்வரன் (ஒன்றியச் செயலாளர்)

Page 51
யாழ்ப்பாணம் இந்துக்
உயர்தர மாணவர் ஒன்றியம் (மு.
காணும் கலைவிழா
அவர்களது
சிந்தனையும் செயலும் க
w பரிணமிக்கும்
உயர் விழாவாக
460 LDL
D
வாழ்த்து
432,

கல்லூரி
தலாம் வருடம்)
லந்து
g៩r
ட்டியார் அச்சகம் காங்கேசன்துறை வீதி,
யாழ்ப்பானம்

Page 52
கல்லூ
வாழிய யாழ்நகர் இந்து வையகம் புகழ்ந்திட என்
இலங்கை மணித்திரு நா இந்து மதத்தவர் உள்ள இலங்கிடும் ஒருபெருங் இளைஞர்கள் உளம் மகிழ்ந்
கலே பயில் கழகமும் இது கலைமலி கழகமும் இது தலைநிமிர் கழகமும் இது
எவ்விட மேகினும் எத்து எம்மன்னை நின்னலம் ம என்றுமே என்றுமே என் இன்புற வாழிய நன்றே
இறைவன தருள் கொடு ந
ஆங்கிலம் அருந்தழிழ் ஆ
R
அவைபயில் கழகமும் இ
ஓங்குநல் லறிஞர்கள் உ6 ஒருபெருங் கழகமும் இ ஒளிர்மிகு கழகமும் இது உயர்வுறு கழகமும் இது உயிரண கழகமும் இது
தமிழரெம் வாழ்வினிற் த தனி ப் பெருங் கலையகம்
வாழ்க ! வாழ்க வாழ்க தன்னிகர் இன்றியே நீடு தரணியில் வாழிய நீடு.

ரிக் கீதம்
க்கல் லூரி
றும் - வாழி
ட்டினில் எங்கும் b கலையகம் இதுவே * தென்றும்
வே - பல வே - தமிழர்
யர் நேரினும் றவேம்
நன்றே !
ஆரியம் சிங்களம் துவே !
ப்பொடு காத்திடும் துவே !
36
1 ܘ؟
T GILLIGOT Befiត្វ
வாழ்க !

Page 53
இம் மலர்ப் படைப்புக்கு
ஆக்கங்கள் தந்தவர்க
ஊக்கங்கள் அளித்தவ
வினம் பரம் தந்துதவிய
அச்சு வேலைகளைக் குறி செட்டியார் அச்சகத்தி
விழா சிறப்புற அமை மாணவர்கள் மற்றும்
சுவைஞர்களுக்கும்
எமது உளம் கனிந்த
யா. இ. க. உயர்தர ம (முதலாம் வ
வாசித்துவிட்டீர்களா ?
விக
நகைச்சுவை இல - சிரிகதை சிறு கதை, கவிதை இன்றைய ஸ்பெசல் சிரியாக
மற்றும்
மஞ்சளடிக்கும் மார்
*விகடகவி வீற்றிருக்கும் இடம்
 
 

ர்களுக்கும்
நிறுவனங்களுக்கும் த்த காலத்திற் செய்துதவிய னருக்கும்
யச் செயற்பட்ட ஆசிரியர்கள், ஆதரவாளர்களுக்கும்
நன்றிகள்
T60816). Iñr ஒன்றிய பருடம்)
டகவி
9க்கியத் திங்களிதழ்
$கள், திரைப்பட விமர்சனங்கள், aர் பல்சுவைத் துணுக்குகள்
முத்தண்ணர்
இன்னும் பல.
யாழ் இந்துக் கல்லூரி நூல்நிலையம்

Page 54
நாட்டுக்கு நலம்புரிதல் நமது
நம்பியரும் நங்கையரும் வீட்டுக்கொரு பசு வளர்த்து
விதம் விதமாய்க் காய்கறி காட்டிலுள்ள் வெறுந்தரையில்
கண்டநின்ற இடமெல்லாம் ஏட்டில் உள்ள சுரைக்காய்கள்
இதை அறிந்து செய்திட்ட
பஞ்சமில்லை பசியில்லை பிணியி பாதகமும் வன்செயலும் ! எஞ்சியுள்ள அருங்கலைகள் எம் எதிலும் வல்ல இளைஞர்களே பஞ்சுவிதை நாம்தருவோம் பச பகலுறக்கம் விடுத்திவற்றை
நெஞ்சிலுமை நாம் வாழ்த்த நா
நெடுங்காலம் வாழஉமை
மில்க்வைற் 王6ufā臺
யாழ்ப்பாணம்.
கிளை 79, மெசன்ஜர்
தொலேபேசி :
செட்டியார் அச்சகம், 492 காங்கே
 
 
 

நாகரிகம்
நல்ல பணி புரிவீர். வேண்டுவன் பெறுவீர் 5ள் விட்டோரம் வளர்ப்பீர் கற்பகமாம் பனையை
கலகலக்க நடுவீர் , கறிக்குதவ மாட்டா ம் செயற்றிட்டம் செய்வீர்,
ல்லே மூப்பும்
நாட்டில் வாழ
எழுந்துகை கொடுப்பீர் ளைவிதை தருவோம் ப் பயிர் செய்திடுவீர் ட்டுப்பணி செய்ய மணவாளன் காக்க,
美下
ாரத் தொழிலகம்
வீதி, கொழும்பு - 12
3 6 O 6 3
s
சன்துறை வீதி, யாழ்ப்பாணம்,