கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சாயி மார்க்கம் 2003.07-12

Page 1


Page 2


Page 3
ஒம்
இலங்கை முந் சத்திய
ÓS 60S
ஜூலை =
 

பூgசாயிராம்
ஆம்-ஆடி.
۔۔۔۔تحت --~~~~--------
O ィظله به مهم Saleh var.&# ܓܠ \6)9 IDO)T ལ་7 ༽ངེད།
Wk நத Lug
DITIfluloi)
1 4 : 53ܢ *彗盘 priorasad, 09
ܢ ܢܝ . اس حصص حصصحساب سے --~~~~~~~ محمحصحیاتہیمییجی مییجی جیپیج-یہ-- **
| situ), පිෂ්ofit நிறுவனம் ண்டு இதழ் υρσώυή 2003

Page 4
8,
9,
a FTTLIG DET Sa Mla
மலர்: 10 ஒரே ஒரு மதம் இதழ்: 29 அது அன்பு எ;
6hl II.6
உங்கள் தெய்வீகப் பணி
பெற்றோரியல்
பெற்றோரியல் பற்றி . பகவானின் கூற்றுக்கள்
பெற்றோரிடம் குழந்தைகளின் வேண்டுகோள்கள்
எங்கள் அம்மாக்கள்
வள்ளுவர் குறளில் பெற்றோரியல்
வடபிராந்திய நிலையங்களின் நிகழ்வுகள்
கிழக்கு பிராந்திய நிலையங்களின் நிகழ்தகவுகள்
ஆசிரியருக்கான மனித மேம்பாட்டுக் கல்விப் பட்டன
10.தெய்வீக ஞாபகங்கள்
11. சுவாமி யிடம் கேள்விகள்
12. ஆபிரஹாம் லிங்கனின் வேண்டுகோள்
இலங்கையில் தனிப்பிரதி
வருட சந்தா ( 4பிரதிகள் தபால் செலவு உட்பட)
வெளிநாடு வருட சந்தா
காசோலை பணக்கட்டளைகளை ஆசிரியருக்கு அனுப்பி
ஆசிரியர்: பேராசிரியர் செ. சிவஞானசுந்தரம் (நந்தி)
துணை ஆசிரியர்கள் : nj.S.R JFJ 6)J 600TU6)J6or nj.V.K நிருவாக அலுவலகம் :
681/2,
நல்லு
s

ரிக்கறி
Plika)
ணும் மதம் ஜூலை - டிசெம்பர் - 2003
டக்கம்
Ol
O2
09
2
3
14
5
றைகள் 6
17
19
22
ரூபா 25/-
ebuT 100/=
US Gulguj 10 வைக்கவும் தபாற் கந்தோர்! நல்லூர்
பாரத்தினம் “ சத்தியம்
பருத்தித்துறை வீதி,
லூர், யாழ்ப்பாணம்.

Page 5
ஒர் பெற்றோர்களுக்கு.
உங்கள் 6
பிள்ளைகள் உங்களிடம் இருந்து வரவில்லை; அவர்கள் உங்கள் முலம் வந்தவர்கள்
(பகவான் பாபா) மேலும் பாபா கூறுகிறார்: 'பிள்ளைகளின் செயற்பாடுகளும் ஒழுக்கமும் கெட்டுப் போவதற்கான காரணங்களில் தொண்ணுைாறு சதவீதம் பெற்றோர்களையே சாரும். அவர்கள் மிகவும் புத்தியீனமான பாசம் காட்டுவதோடு, பிள்ளைகளுக்கு கண்டுறடித்த னமான சுதந்திரத்தைக் கொடுக்கிறார்கள்.”
இந்த உலகின் எதிர்காலம் இளைஞர் களின் கைகளிலேயே இருக்கிறது, என்று கூறப்படுவது உண்டு. உண்மையில் அவர்களின் தாயும் தகப்பனுமான உங்கள் கைகளிலேயே உலகின் எதிர்கால நலன் உண்டு. உங்கள் பிள்ளைகளை நீங்கள் நல்லவர்களாக, ஒழுக்கமுடையவர்களாக வளர்க்காவிடில் அவர்கள் எப்படி எதிர் காலத்தை வழிநடத்த முடியும்? நல்லவர் களாலல்லவா நல்லது நடக்கும்? கெட்ட வர்கள் குடும்பத்தை, சமூகத்தை, நாட்டை,
இந்த உலகை சீரழித்து விடு வார்கள்.
ஆகவே பிள்ளைகளை வளர்ப்பது ஒரு

odnђTITITITITIђ
தய்வீகப் பணி
கலை, அது எமது கலாசாரத்தினி தொடர்ச்சி; அது ஒரு விஞ்ஞான இயல், அதற்கு அறிவும் ஆற்றலும் வேண்டும்; அது ஒரு தெய்வீகப்பணி, அதனைப்
புரிவது ஒரு சாதனை. இதனையே பெற்றோரியல் என்று கூறுகிறோம்.
இந்த விசேஷ இதழ் பெற்றோரியல் பற்றியது. ஒரு நல்ல தாயும், தகப்பனும் எப்படித் தமது பிள்ளைகளை வளர்க்க வேண்டும் என்று கூறுகிறது. ரு சத்திய சாயி நிறுவனத்தின் மனித மேம்பாட்டுப் பட்டறைகளிலும், கருத்தரங்குகளிலும் பெற்றோரியல் என்ற மகத்தான பணிபற்றி எப்போதும் கூறி அதற்கு அழுத்தம்தரும் வைத்திய கலாநிதி இ.கணேசமூர்த்தி அவர்கள் இந்த இதழினி அதிதி
ஆசிரியராக கடமையாற்றி யிருக்கிறார்.
அவரினி கட்டுரையை புல் அவர் தொகுத்து அளிக்கும் அற்புதமான செய்திகளையும் எமது வாசகர்களான பகவானினி அடியார்கள் படித்துப் பயன்பெற வேண்டுகிறோம்.
வணக்கம்
O1

Page 6
2?Ii) dıöʻJ*:T"Iil;
வபற்றோ
வைத்திய கலாநிதி. இ (இளைஞர் பிரிவு இணைப்பு முரீசத்திய சாயி சேவ
பெற்றோரியல் என்றால் என்ன?
பிள்ளையினுடைய வளர்ச்சியைப் பற்றிய அறிவும், பிள்ளைகளை எவ்வாறு வளர்க்க வேணர் டுமென்ற அறிவும் , பெற்றோர்கள் எவ்வாறு வாழவேண்டும் என்ற அறிவும் சேர்ந்ததே பெற்றோரி யலாகும். பெற்றோரியலில், வளர்ச்சி, வளர்த்தல் வாழ்தல் ஆகிய மூன்றும் அடங்கியுள்ளன.
பெற்றோரியல் அவசியமானதா?
விலங்கினங்கள் குட்டிகள் ஈன்று, குட்டிகள் இயற் கையாகவே வளர் கினி றன. எமது மூதாதையர்கள் பிள்ளைகளைப் பெற்று வளர்த்ததில் குறைவில் லையே! இப் படியாயினி , பெற்றேரியல் தற்காலத்தில் அவசியமா வென்று கேள்வி எழத்தான் செய்யும். தற்போதைய பிள்ளைகளின் விவேகம் கூடியிருந்தாலும், வக்கிரமும் அடாவடித் தனர் மையும் கூடியுள்ளதுடனர் பணி பு மிகவும் குறைந்துள்ளது. இதற்குப் பல காரணங்கள் உள. அவற்றுள் சில
பின்வருமாறு:
1) பரந்த குடும்பம் குலைந்து குறுகியுள்ள தினால், மூத்தவர்களின் உதவியும் மேற்பார்வையும் இல்லாத நிலை,
2) போர்ச் சூழலினால் ஏற்பட்ட நகர்வு,

TTIi)
ரியல்
.கணேசமுர்த்தி, /ாளர், வடபிராந்திய ா நிறுவனம்)
உயிர், உடமை, இழப்பு, நிச்சயமற்ற தன்மை, கட்டுக்கோப்பற்ற நிலை; மேற் படிப் புச் சந்தர் ப் பங்களும் , வேலைவாய்ப்பும் குறைந்துள்ளமை; அதிதீவிரப் போட்டி, தேவை அதி கரிப்புடன் வளங்கள் குன்றியுள்ளமை; எமது கல்வித்திட்டம், பிள்ளைகளின் ஆக்கத்திறன், அறிவுத்திறன், செயற் திறன் எல்லாவற்றையும் வெட்டுப் புள்ளியின் மூலமே நிர்ணயிக்கிறது. இது எமது கல்வித்திட்டத்தின் ஒரு பெரிய குறைபாடு. மேலும்; மேற் படிப்பு பரவலாக்கப்படாமை, தொழிற் கல்வி விரிவாக்கப்படாமை, முதி யோர் கல்வித்திட்டமில்லாமை, ஒரு சர்வதேச பாஷை க்கும் முன்னுரி மையில்லாமை, தகமை, மனப்பாங்கு, பண்பு சமூகவிழிப்புணர்வு ஆகியவற் றிற்கும் முக்கியத்துவம் கொடுக்கப் படாமை என்பன மற்றைய குறை பாடுகள்; சுருங்கக் கூறின் அழுத்தம், வேகம், அபிலாசை, போட்டி மிகுந்த வாழ்வு நிலை; மூத்தவர்கள், பெற்றோர்கள், தலை வர்கள் ஆகியவர்கள் வெளிக்காட்டும் இரட்டை வேடமும் பணி பற்ற வாழ்வும் முக்கிய காரணிகளாகும். தொண்ணுாறு சதவீதமான பிள்ளை
களின் அடாவடித்தனத்திற்குப் பெற் றோர்களே காரணமென்று பகவான் சிறீ

Page 7
சத்தியசாயி பாபா கூறியுள்ளார். இது தான் உளவள நிபுணர்களின் முடிவு மாயிருக்கிறது. ஆகவே பெற்றோரியல் அறிவு, தற்காலத்தில் மிகவும் அவசிய மென்பதில் ஓர் ஐயமுமில்லை.
இத்தசாப்த்தத்தை தகவல் நெடுஞ் சாலை யெனர் று வர் னிக்கிறார்கள் . தகவல் தொடர்பு சாதனங்களில் ஒன்றான தொலைக்காட்சியின் தாக்கம் மிகவும் தீயதாகவும் , பார துTரமானதாகவும் உள்ளது. பகவானும், “டெலிவிசனை’ “டெலிவிஷம்" என்றே கூறியுள்ளார். பிள்ளைகளின் வண் மைத்தனத்திற்கு ஊடகம் முக்கியமான காரணியாகும். இதற்குப் பரிகாரம் தெரியாது பெற்றோர் கள் தத்தளிக்கிறார்கள்.
பெற்றோர்களுக்குப் பிள்ளைகளின் பிற் காலத்தைப் பற்றிய கரிசனை மேலோங்கியிருந்தாலும், அளவிலா அன்பிருந்தாலும், இக்கரிசனையையும், அண்பையும் எவ்வாறு பிள்ளைகளிடம் காட்ட வேண்டுமென்பதைத் தெரியாது பிழைவிடுகிறார்கள். பிள்ளைகளும் இப் பெலவீனத்தைத் தமக்குச் சாதகமாக்கிப் பெற்றோர்களின் அதிகாரத்தை ஒடுக்கிக் கொள்கிறார்கள். ஆகவே பெற்றோரி யலின் விளக்கம் தற்காலத்தில் மிகவும் அவசியமென்பது புலனாகின்றது.
பெற்றோர்களால்தான் சமூகத்தைப் பெருக்கவும் முடியும், பெருமையாக்கவும் முடியும். தலைசிறந்த பணி புள்ள வருங்காலச் சமுதாயத்தை உண்டாக்கு வதில் பெற்றோர்களுக்குப் பெரும் பங்குண்டு. இதைப் பெற்றோர்கள் தங்களினி தர் மீகக் கடமையெனர் று உணர்ந்து செயற்படவேண்டும்.
பெற்றோரியலைப் பற்றி எப்போது சிந்திக்க
வேண்டும்?
பிள்ளை பிறந்ததற்குப் பின் பா?
அல்லது பிள்ளை வளர்ந்து விடத்தல்

03
பருவத்தையடைந்த பிறகா? இல்லவே
இல்லை. இளம் சந்ததியினர் எப்போது விவாகம் செய்யத் தீர்மானிக்கிறார்களோ அப்போதே பெற்றோரியலைப் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டும்.
பிள்ளையின் வளர்ச்சி: கருவிலிருந்து விடத்தல் பருவம் வரை வளர்ச்சியைப் பற்றிய அறிவில் உடல், உள ஆண்மீக ரீதியான வளர்ச்சியைப் பற்றிய அறிவு இதில் அடங்கும். பிள்ளைகளின் நடத்தை வயதிற்கேற்ப எவ்வாறு இருக்குமென்றும், நடத்தையை எவ்வாறு மேம்படுத்தலாம் என்றும் தெரிந்து
கொள்ள வேண்டும்.
கர்ப்பிணி காலத்தில், தாயின் சிந்தனை, சொல், செயல் உணர்வுகள், எல்லாம் வளரும் சிசுவைப் பாதிக்கும். ஆகவே தாய் இக்காலத்தில் ஆசாபாசமான படங்களை யும் , நாவல களையும் க ல ந து  ைர யா ட ல க  ைள யு ம தவிர்க்கவேண்டும். உணர்வுகளினாலும் (அதாவது கோபம், மோகம், பொறாமை, வெறுப்பு, அங்கலாய்ப்பு) வளரும் சிசு பாதிப்படையலாம். உண்ணும் உணவும், ஆரே T க கரி ய மா ன தா கவு ம . தூய்மையானதாகவும் இருக்க வேண்டும். மனம் எப்போதும் மகிழ்ச்சி யாகவும், திருப்தியாகவும், இறைசிந் தனையில் ஆழ்ந்தும் இருக்க வேண்டும். தாயை மகிழ்ச்சியாகவும் , திருப்தியாகவும் வைத்திருப்பது தகப்பனின் தர்மீகக் கடமையாகும். மேற்கூறியதை ஆன்மீக மகானி கள் மாத்திர மனி றி உளவள நிபுணர்களும் கூறியுள்ளார்கள். இந்த உண்மையை மகாபாரதத்திலும் காண லாம். அபிமன்யு தாயின் வயிற்றில் இருக்கும்போதே, பத்மவியூகம் என்ற படை அமைப்புக்குள் எவ்வாறு புகலா மென்று அர்ச்சுணன் தாய்க்குக் கூறும் போதே கேட்டுத் தெரிந்து செயலிலும் காட்டியுள்ளான். துர்வதிஷ்டமாக வெளி

Page 8
யே வரும்முறை சொல்லப்படாததால், வெளியே வரமுடியாமல் போரில் மாள நேர்ந்தது. கர்ப்பகாலத்தில் தாயில் மனிதமேம்பாட்டுக் குணங்கள் மிளிர்ந் தா ல சிசு வும் நல ல பணி புளர் ள பிள்ளையாகப் பிறக்கும்.
பிறந்து இரண்டு வயதுவரையான காலத்தில், தாயின் மடியே பிள்ளையின் பாடசாலை, தாயின் அரவணைப்பு, தாய்ப்பால் இவை இரண்டும் பிள்ளையின் வளர்ச்சிக்கு முக்கியமானவை. தாய்ப்பாலுக்கு ஒரு மாப்பாலும் நிகராகாதென்பது விஞ்ஞான முடிவு. தாயின் அரவணைப்பின் மூலமே பிள்ளையின் தன்னம்பிக்கை வளரத் தொடங்கும். இக்காலத்தில் தொழில் செய்யும் தாய் மாருக்குத் தொழிலா? அல்லது பிள்ளையின் வளர்ப்பா? முக்கிய மென்று தீர்மானிப்பதில் தெளிவின்மை ஏற்படலாம். பகவான் தாய் மைக்கு நிகரானது எதுவுமேயில்லையென்றும் அதனை மதிப் பிட முடியாதெனி றும் வலியுறுத்தியுள்ளார்.
இரண்டு தொடக்கம் ஐந்து வயது வரை பெற்றோர்கள் இருவரினதும் பங்கு முக்கியம். இவ்வயதில், பிள்ளையை ஒரு அரசகுமாரன் அல்லது அரசகுமாரி போல் பராமரிக்க வேண்டுமென்று உளவள நிபுணர்கள் கூறுகிறார்கள். உளவளர்ச்சி, மூளைத் திறனி கடுகதியில் ஏற்படும் காலம். பிள்ளையின் மனச்சாட்சி பரிண மிக்காத காலம். பெற்றேர்களின் மனச் சாட்சியே பிள்ளையின் மனச்சாட்சி யாகும். பெற்றோர்களே நல்லது, தீயது, சரி எது பிழை எது என்று சொல்லிப் பழக்கவேண்டும். பிள்ளையின் ஆக்கபூர்வ மான செயல்களுக்கு ஊட்டுதல் கொடுக் கும் அதேவேளையில் பிழையானதைச் செய்ய விடக்கூடாது. இவ்வயதில் தாய் தான் சரி என்று அடம் பிடிப்பார்கள். பெற்றோர்களின் நடத்தை மிகவும் உண் னிப்பாகக் கவனிக்கப்பட்டு உள்ளெடுக்
04

கப்படுகிறது. சிறார்களின் மனம் உடன் போட்ட சிமெந்து மாதிரி யானது. இதில் எதைப் போட்டாலும் ஆழமாகப் பதிந்து நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.
ஆறு தொடக்கம் பன்னிரண்டு வயது வரை பள்ளிப்பருவமாகும். பள்ளிக்குப் போகத் தொடங்கிய பின்பும் குடும்பத்தில் நில வும் பெற்றோரிணக்கம், பிள்ளையினு டைய வளர்ச்சியில் தொடர்ந்து செயற் படும். இந்தப் பருவத்தில் பிள்ளைகள் ஆசிரியர், பெற்றோர் சொல் வதை ஏற்றுக்கொள்வார்கள். “ஆசிரியரே சரி' என்று அடம்பிடிப்பார்கள். ஆகவே ஆசிரியர் முனி மாதிரியாக விளங்க வேண்டும். இப்பருவத்திலும் பிள்ளை களின் மனச்சாட்சியோ அல்லது பகுத்தறி வோ முழுமையாகப் பரிணமிப்பதில்லை. ஆகவே ஆசிரியரும் பெற்றோருமே பிள்ளையின் மனச்சாட்சி. இவர்களே பிள்ளைக்கு நல்லது, தீயது, சரியானது, பிழையானது எது என்று சொல்லிக் கொடுக்கவேண்டும். பிள்ளைகளின் சிந்தனை சொல், செயற்பாடுகளை உபகாரம், புகழ்ச்சி மூலமும், தண்டனை அல்லது தடை மூலமுமே மேம்பாடடையச் செய்யலாம். இப் பருவத்தில் நல்ல குணாதிசயங்களை மேலோங்க வழி வகுத்தும், வழிகாட்டியாகவும் பெற்றோர் வாழவேண்டும். அல்லாவிடில் அடுத்த பருவத்தில் பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டி வரும்.
பன்னிரண்டு தொடக்கம் பதினெட்டு வயது வரை விடலைப் பருவமாகும். இது மிகச் சங்கடமான பருவம், உடலும், உளமும், சிந்தனையும் கடுகதி வேகத்தில் வளர்ச்சி யுறும் காலம். உடலில் மாற்றங்கள் ஏற்படும். தேக உணர்ச்சியுடன், சமூக விழிப்புணர்வு, தியாக உணர்வு மேலோங் கும் காலம். சுயசிந்தனை, சுயபோகம், சுயகெளரவம் தலைதூக்கும் காலம்.
பெற்றோரிலும் , ஆசிரியர்களிலும் ,

Page 9
சமூகத்திலும் குறைகாணும் காலம். மற்றையவர்களின் இரட்டை வேடத்தை உடனே சுட்டிக் காட்டும் காலம், தனக்குப் பிடித்ததையே செய்ய வேண்டுமென்று அடம் பிடிக்கும் காலம். தன்னைச் சுற்றியுள்ளோர் தன்னைச் சந்தோசப் படுத்தவேண்டுமென்று நினைக்கின்ற காலம். தனது இச்சைகளை அடக்கத் தெரியாத காலம், பெற்றோரின் கஷ்டங் 566) 6T உணராத காலம் , ഖ് ' ( வேலைகளில் பங்கு கொள்ள வேண்டு மென்ற கடமையைத் தெரியாத காலம். வருங்காலத்தைப் பற்றி கற்பனையில் சஞ்சரிக்கும் காலம். எதையும் சரியான விளக்கம் கொடுக்கப்படாவிட்டால் ஏற் காத காலம். சகபாடிகளின் அபிப்பிரா யமே சரியென்று அடம் பிடிக்கும் காலம். விளையாட்டு வீரர்கள், சினிமா நட்சத்தி ரங்கள், பொப்இசைப் பாடகர்கள் தான் இவர்களின் வீரர்களாக இருப்பார்கள். பெற்றோர்களினர் , ஆசிரியர்களின் கடட் டு ப் பா ட் டை மீறும் கால மி , சுயசுதந்திரம், கட்டுப்பாட்டிலும் பார்க்க மேலானது என்று நினைக்கும் காலம். ஐம் புலன்களின் கட்டுப்பாட்டில் தான் சுதந்திரம், வளர்ச்சி, முன்னேற்றம் எ ல லாம் தங் கி யுள்ள தெனி பதைத் தெரியாத காலம். இதனால் தான் பெற்றோர்களிடமிருந்து பெறும் உணவு, உடை, அறிவுரை, மற்றைய வசதிகள் ஆகியவற்றில் குறை காணர் பார்கள். சிறிய நேர மகிழ்ச்சிக்காக வீட்டை விட்டு வெளியே போய் சிநேகிதர்களுடன் அரட்டை அடிப்பதில் விருப்பம் கொள் வார்கள். இவர்களுக்குத் தாக்கம் மிகுந்த காலம், அதிக சித்தி சோதனையில் பெறவேண்டும் மென்று பெற்றோர்கள் கொடுக்கும் தாக்கம் , இத்துடனர் வருங்கால நிச்சயமற்ற தன்மை, போர்ச் சூழல், ஊடகங்கள், 3.5L TL356f ஆகியவை யும் தாக்கங்களைக் கொடுக்கின்றன. இப்பருவத்தில் எவ்வளவு குறைபாடுகள் இருந்தாலும், இலட்சியத்திற்காக உயிரை

05
யும் தியாகம் செய்யத் துணிவார்கள். வாழ்க்கையின் இடை நோக்குகளையே கருத்திற் கொண்டு தூர நோக்கை மறந்து விடுகிறார்கள். வாழ்க்கையில் ஏற்படும் சவால்களைத் துணிவுடன் எதிர்கொள் ளத் தெரியாமல் திணர் டாடுவார்கள். இவ்வயதில், தீய பழக்கமுள்ள சிநேகிதர் களால் உந்தப்பட்டு புகைப்பிடித்தல், மது அருந்துதல், மாணவர் மாணவிகளுக்கு இம் சை கொடுத் தல ஆகிய தீய
பழக்கங்களில் ஈடுபடுவார்கள்.
பிளி  ைளகளினி மூளைத் திறனி , நுண்ணறிவு இரண்டு வயது தொடங்கி பதினாறு வயது வரை வளரும் . மூளைத்திறன் பரம்பரையில் 50%மும், சூழலின் உந்துதலில் மிகுதி 50%மும் தங்கியுள்ளது.
வளர்த்தல்:
ஐந்து வயது வரை பெற்றோர்களே பிள்ளைகளை வளர்க்க வேணர் டும். பெற்றோரிருவரும் தொழில் செய்ய நேர்ந்தால், அன்பும், நம்பிக்கையுமுள்ள ஒருவர் வீட்டில் பிள்ளைகளைப் பரா மரிக்க இல்லாவிடில், பெற்றோரில் ஒருவர் விசேடமாகத் தாய், தாய்மைக்கு முன் னுரிமை கொடுக்க வேண்டும்.
பிரச்சனை மிகுந்த விடத்தல் பருவ காலத்தில், பிள்ளைகள் பெற்றோரின் நேரடிக் கண்காணிப்பில் வளரவேண்டும். அநேக குடும்பங்களில், தாய் அல்லது தகப் பன், பணம் சம்பாதிப்பதற்காக வெளிநாடு போக நேரிடுகிறது. இதனால், வீட்டில் பணம் செளகரியங்கள் மித மிஞ்சினாலும் உளவள உதவி பிள்ளை களுக்குக் கிடைக்கா மற் போவதால் உளவளத் தாக்கம் ஏற்படலாம். பன்னிரண்டு வயது வரை பெற்றோரும் ஆசிரியருமே பிள்ளையின் மனச்சாட்சி. இவர்கள்தான் பிள்ளைக்குச் சரி, பிழை, தீயது, நல்லது, எதுவென்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.
།
ܥܬ¬

Page 10
பன்னிரண்டு தொடக்கம் பதினெட்டு வயது காலத்தில் மனச்சாட்சி, சுய சிந்தனை வெளிப்படும். ஆகவே இவர் களுக்குச் சரி, பிழை, தீயது, நல்லதை விளக்கிக் கொடுக்கவேண்டும். விளக்கம் கொடுக்காவிடில் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. இப்பருவத்தில் பிள்ளைகள் பெற்றோரிடமிருந்து பணம் வசதிகளிலும் பார்க்க, அன்பு, புரிந்துணர்வு முனர் மாதிரி முதலிய
வற்றையே எதிர்பார்க்கின்றார்கள்.
பிள்ளைகளின் அடிப்படைத்தேவைகளைப் பூர்த்தி செய்வது பெற்றேரின் கடமை. சாதாரணமாக இது உணவு, உடை, வீடு, ஆரோக்கியம், கல்வியைத்தான் குறிக்கிறது. நாம் இவற்றுடன் மனிதநேயத்தையும் ஆன்மீக வளர்ச்சியையும் சேர்த்துக் கொள்ள வே ணர் டும் உணவு அளவானதும் சத்துள்ளதாகவும், துப்பரவாகவும் இருக்க வேண்டும். கடையுணவைவிட, வீட்டில் இறை நாமத்துடன் சமைத்த உணவே சாலச் சிறந்தது. உணவுடன், உடல் ஆரோக்கி யத்தையும் பேணவேண்டும் அடிப்படை சுகாதார விதிகளைச் சொல்லிக் கொடுத்தும், தடுப்பூசி மருந்துகளை உரிய காலத்தில் கொடுத்தும் ஆரோக்கியத்தைப் பேண வேண்டும். உடை சுத்தமானதாகவும், எளிமையானதாகவும் கலாசாரத்துக்கு ஏதுவானதுமாகவும் இருக்கவேண்டும். அளவுக்கு மிஞ்சிய உடை அல்லது உடுப்புத் தேவையில்லை, மிதமிஞ்சியதை வறியவர் களுக்குக் கொடுத்துக் காட்டவேண்டும். புதுப்புது சட்டைகள் போடவேண்டுமென்ற ஆசையைக் கட்டுப்படுத்த வேண்டும். அநாவசியமான செளகரியங்களை அதாவது; மோட்டார் சையிக்கிள், செல்தொலைத் தொடர்பு சாதனம் ஆகியவற்றைக்கொடுத்துக் கெடுக்கப்படாது.
வீட்டில் பிள்ளை படிப்பதற்கும், அவருடைய ஆளுமையை வளர்ப்பதற் கேற்ப சூழலை ஏற்படுத்தவேண்டும். வீடு, சூழல் சுத்தமாகவும், அமைதியாகவும்,
06

காற்றோட்டமுள்ளதாகவும், வெளிச்ச முள்ளதாகவும் அமைய வேணர் டும். பிள்ளைகளிடம் அன்பாயும், சிநேகித பூர்வமாயும் பழகும் அதே வேளையில், அதிகாரத்தைக் கைவிடாமல் கட்டுப் பாட்டை நிலைநிறுத்த வேண்டும்.
அன்பையும் கட்டுப்பாட்டையும் எவ்வாறு இணைப்பதென்று பல பெற்றேருக்குத் தெரியாது. அன்பு காட்டவேண்டு மென்பதில் ஒரு ஐயமுமில்லை. பிள்ளைகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது? என்ன தண்டனை? எவ்வாறு தண்டிக்கவேண்டும் என்பதில் பலருக்குத் தெளிவின்மை இருக்கின்றது. மேல்நாட்டு உளவள நிபுணர்களும், சிறு பிள்ளை வைத்தியர்களும், தண்டனை கொடுப்பதாலும், கட்டுபாட்டு இறுக்கத்தி னாலும், பிள்ளையின் ஆளுமை வளர்ச்சி குன்றலாமென்றும், உளவள வடு ஏற்படலா மென்றும் கூறுகின்றார்கள். மேல்நாடுகளில் பெற்றோர்கள் பிள்ளைகளைத் தண்டித்தால், சிறுவர் துஷ்பிரயோகமென்று பெற்றோர் கண்டிக்கப்படுகிறர்கள். இதன் விளைவாகப் பிள்ளைகளின் நடத்தை கெட்டுப்போய் விட்டதென்று மேல்நாட்டு ஆய்வுகள் தற்போது ஏற்றுக் கொள்ளுகின்றன. பிள்ளைகள் விடும் பிழையை பிழையென்று விளக்கி, தண்டனை கொடுக்க வேண்டுமாயின் கொடுக்கத்தான் வேண்டும். இவ்விடயத்தில் பகவான் சிறீ சத்திய சாயி பாபாவின் கூற்றை அவதானிப் போம் “கமக்காரன் எவ்வாறு புடலங்காய் நேரே வளர்வதற்கு அதன் பருமனுக்கேற்பக் கற்களை கட்டி வளர்க்கின்றானோ, அதேபோலப் பிள்ளையின் வயது, பிழை யின் தன்மை, சூழலைப் பொறுத்துத் தண்டனையை வழங்கவேண்டும்.' கல்லுக் கட்டாவிடில், புடலங்காய் நேரே வளராது. அதேபோலப் பிள்ளையும், தண்டனை யில்லாவிடில் நேர் வழியிலிருந்து தவறி விடும்.
பிள்ளைகளுக்கு சரி, பிழை, நல்லது. தீயது ஆகியவற்றைச் சுட்டிக்காட்டுவதில்,

Page 11
பெற்றோர் தளர்வடையாது, இறுக்கமாகச் செயற்படவேணர் டும். தணர் டனையும் அன்பின் நிமிர்த்தமே என்று பிள்ளை களை உணரவைக்க வேண்டும். இயற்கை யினர் செயற்பாடுகள் , தேச, இன, குடும்பம், தனிமனிதன் ஆகிய எல்லா வற்றின் முன்னேற்றமும் கட்டுப்பாட்டின் விளைவே என்று விளக்கிச் சொல்ல வேண்டும்.
மகாத்மா காந்தி, ‘சுயகட்டுப்பாட்டில் தான் சுதந்திரம் தங்கியுள்ளது' என்று வலியிறுத்தியுள்ளார். “சுதந்திரம் எண் றால் பூரணமான ஐம்புலனடக்கம்' என்று பகவான் சத்திய சாயிபாபா கூறியுள்ளார். சுதந்திரம் என்றால் தான் நினைக்கின்ற மாதிரி தனக்கு விருப்பமான மாதிரி நடப்பதல்ல என்று பிள்ளைகளுக்கு விளக்கவேண்டும்.
பெற்றோர்கள், போதியளவு பணம், வேறுபல வசதிகளைக் கொடுத்துப் பிள்ளைகளைத் திருப்திப் படுத்தினால் போதுமென்று நினைக்கிறார்கள். இது மிகவும் தவறான எண்ணம். அத்துடன் இது மிகவும் இலேசானது. பிள்ளை களுடன் எவ்வாறு பழகவுேண்டுமென்பதில் பெற்றோர்கள் அக்கறை கொள்ள வேண்டும். பிள் ளைகள் யாருடனர் சிநேகிதம் கொள்கிறார்களென்று அறிய வேண்டும். நல்ல சிநேகிதர்களை வீட்டுக்குள் கூட்டி வந்து உரையாட உதவவேண்டும். இக் காலத்துப் பிள்ளைகள், பெற்றோர்கள் கண்டித்தால், படிப்பை நிறுத்துவதாகவும், விடுதலை இயக்கத்தில் சேரப் போவதாகவும், வீட்டை விட்டுப் போய்விடுவதாகவும் தற்கொலை முயற்சி மூலமும் பெற்றோர்களைப் பயமுறுத்துகின றார்கள் . இதனால பெற்றோர்களும் பிள்ளைகளின் போக்கைப் பற்றி ஒன்றும் சொல்வதில்லை. ஏதோ படித்துச் சோதனை எடுத்தால் காணுமென்று செயற்படுகிறார்கள். இது விரும்பத்தகாதது.

07
~~
பிள்ளைகளை எப்படி வளர்க்கின்றார்க ளென்பதின் அடிப்படையில், பெற்றோரை மூன்று வகைப்படுத்தலாம். அவையாவன: 1. எதையும் அனுமதிக்கும் பெற்றோர் (Permissive parent) 9.g5 6s (55 பத்தகாதது. 2. சர்வாதிகாரப் பெற்றோர் (Autocratic
parent) இதுவும் விரும்பத்தகாதது. 3. புரிந்துணர்வுடன் அதிகாரம் செலுத்தும் Gup (3 prTij (Authoritative parent). இதுதான் விரும்பத்தக்கது.
வாழ்தல் :
பெற்றோர்களிலிருந்து பிள்ளைகளுக்குத் தகவல் பரிமாறல் சொல் செயல் மூலம் வெளிப்படையாகவும், மெளனமாகவும் நடைபெறுகிறது. மெளனத் தகவல் பரிமாறலே மிகவும் முக்கியம். பிள்ளைகள்; பெற்றோர்கள் சொல்வதைக், கேட்பதி லும் பார்க்க, பெற்றோர் எவ்வாறு வாழ்கின்றார்கள் என்று அவர்களின் முழு நடத்தையையும் உன்னிப்பாக் கவனித்து ஆழமாக மனதில் பதித்தும் விடுவார்கள். பெற்றோர்கள் மற்றவர்களுடன் எவ்வாறு பழகிறார்கள், வாழ்க்கைச் சவால்களை எவ்வாறு சமாளிக்கிறார்களெனி பது, பிள்ளைகளால் கவனிக்கப்படும். முதலில் பெற்றோர்களிடையில் கருத்து ஒற்றுமை, அதிகார ஒழுங்கமைப்பு நிலவ வேண்டும். பிள்ளைகள் முன் வாக்குவாதம் அடி பிடியில் ஈடுபடக்கூடாது. ஒருவரைத் தாழ்வு படுத்தி மற்றவர் வெற்றியடைய நினைக்கக் கூடாது. இப்படியான பெலவீனத்தைப் பிள்ளைகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கெட்டுப்போகலாம், அல்லது உளவளரீதியாகப்பாதிப்படையலாம் குடும்பத்தில் தகப்பனாரின் தலைமைத்துவத்திற்கு மதிப்புக் கொடுக்கவேண்டும். தகப்பனார் தாயின் உள்ளுணர்வுக்கும், தியாகத்திற்கம் தலை பணியவேண்டும். கட்டுக் கோப்புகளை நிர்ணயப்படுத்துவதில், தாயும் தகப்பனும் ஒருமித்துத் தேவையாயின் பிள்ளைகளுடன்

Page 12
கலந்தாலோசித்துச் செயற்படவேண்டும். பிழையைச் சுட்டிக் காட்டுவதில் தயக்கம் கொள்ளாதும், மன்னிப்புக் கேட்பதிலும் முன்மாதிரியாகப்பெற்றோர்கள் வாழவேண்டும் வீட்டு வேலைகளில் பிள்ளைகளைப் பங்கு கொள்ள வைக்கவேண்டும். உழைக்காது எதையும்ஏற்பதுதகாததென்றுசிறுவயதிலிருந்தே அறிவுறுத்த வேண்டும் பெற்றோர்கள், தமது பெற்றோர்களை வணங்கியும், ஆசிரியர்கள், மூத்தவர்களை மதித்தும் முன்மாதிரியாக வாழவேண்டும் இதைப் பார்த்தே பிள்ளை களும் பின்பற்றுவார்கள். தினமும் இறை வணக்கம், தியானத்தில் ஈடுபடுவதோடு பிள்ளைகளையும் ஈடுபடச்செய்யவேண்டும். கிழமையில் ஒரு தடவை குடும் பப் பிரார்த்தனை நடத்துவதில் தவறக்கூடாது. நாளாந்தம் குடும்ப அங்கத்தவர்கள் ஒரு வேளை உணவையாவது ஒன்றாக இருந்து உண்ண வேண்டும் நாம் குடும்பத்திலும், சமூகத்திலும் ஒரு கூறேயென்ற உணர்வை விருத்தி செய்ய சமூக சேவையிலும் ஈடுபடவேண்டும் ஐம்புலன்களை அடக்கி, ஆசைக்கு வரம்பு வைத்து எளிமையாகவும், உயர்ந்த சிந்தனையுடனும் வாழவேண்டும் பெற்றோர்கள் தமது வாழ்வில் அன்பு, சத்தியம், தர்மம், சாந்தி அகிம்சை ஆகிய மனித மேம்பாடுகளை மிளிரச் செய்ய வேண்டும் எண்ணம், சொல் செயலில் தூய்மையும் ஒருமையும் இணையவேண்டும். வீட்டை விடுதியாக்காமல், சாந்தி மகிழ்ச்சி மிகுந்த தேவாலாயமாக்கவேண்டும்
எப்போதும் எதைச் செய்யாதே என்று பிள்ளைகளுக்குச் செல்லுகிறோமோ. அதை நாமும் செய்யக்கூடாது. உதாரண மாக தொலைக்காட்சியைப் பார்க்க வேண்டாமென்று சொன்னால் நாமும் பார்க்கக்கூடாது. படிக்கும் நேரத்தில்
உசாத்துணை நூல்கள்
1. பகவான் பூரீ சத்திய சாயி பாபாவின் அருளுரைக 2. "Dynamic Parenting" - Dr. Pal Dhall 3. "Sathya SaiParenting"- Rita Bruce.
O8

தொலைக்காட்சியைப் பார்க்கக்கூடாது. தொலைக் காட்சியே இனி று சமூகச் சீரழிவிற்கு முக்கிய காரணம். பகவான் சிறீ சத்திய சாயி பாபா "டெலிவிசனை’
"டெலிவிஷம்" என்றே கூறியுள்ளார்.
பெற்றோர் மனம் தளர்ந்தோ அல்லது திக்கற்ற வர்களாகவோ காணப்படக்கூடாது. பெற்றோர் இறைபக்தியுடன் தன்னம்பிக்கை யுள்ளவர்களாக, வாழ்க்கையின் சவால்களை எதிர் நோக்குவதன் மூலம், பிள்ளைகளிலும்
தன்னம்பிக்கை இறைபக்தியை வளர்க்கலாம்.
பெற்றோர் ஸ்தானம், ஆன்மீக ஈடேற்றத் திற்கு உதவும் ஒருபயிற்சிக் கூடமென்று உணரவேண்டும் பிள்ளை பரமாத்மாவி லிருந்து, பெற்றோர் ஊடாக இவ்வுலகி ്ദ്ര வந்துள்ளார்களென்று விளங்கவேண்டும் ஆகவே பெற்றோர்கள் பிள்ளைகளின் காப்பாளர்களாகச் செயற்பட வேண்டும்.
பெற்றோரியல் எப்போது முடிவடைகிறது?
பிள்ளைகள் இருபத்தைந்து வயதைத் தாண்டிலிட்டால் அல்லது படிப்பு முடிந்து வேலைபார்க்கத் தொடங்கி விட்டால், அல்லது விவாகம் செய்து விட்டால், பெற்றோர் பார்வையாளர்களாக இருக்கப் பழகவேண்டும். வளர்ந்த பிள்ளைகளின் வாழ்க்கையிலோ அல்லது அவர்களின் பிள்ளைகளின் வளர்ப்பிலேயோ அநாவசி யமாகத் தலையிடக்கூடாது. பிள்ளைகள் விரும்பினால் அல்லது கேட்டால், புத்திமதி சொல்லலாம். பெற்றோரியல் பொறுப்பு முடிந்ததும், பெற்றோர் தமது ஆன்மீக வளர்ச்சியிலும், சமூக சேவையிலும், முழு மூச்சாக ஈடுபடவேண்டும். -
ஜெய் சாயி ராம்
ளின் பதிப்பீடுகள்.

Page 13
வயற்றோ
Uaiaffair unurraf
'பிள்ளைகளின் அடாவடித்தனத்திற்குத் தொண்ணுறு வீதமான குற்றம் பெற்றோர் களையே சாரும் பெற்றோர் பிள்ளைகளின் மேல் வைத்திருக்கும் கண்முடித்தனமான பாசமும், பிள்ளைகளுக்கு அளவுக்கு மீறிய சுதந்திரம் கொடுப்பதுமே பிள்ளைகள் கெட்டுப்போவதற்குரிய காரணங்கள்"
SS January 1994. P. 24.
"ஆத்மாதான் உண்மையான தாய். ஆகவே இத்தாயை மறப்பது தர்மமல்ல. பிள்ளைகள் நரி, நாய் என்றால் எவை என பதை, இவற்றினர் படங்களைப் பார் தீ த பிறகே அறிகிறார் களர் . இதேபோலப் பெற்றோர்களைப் பார்த்த பிறகே கடவுள் இருக்கிறார் என்பதைப் புரியலாம். பெற்றோர்களை நேசிப்பதன் மூலமும், கனம் பண்ணுவதன் மூலமுமே தெய்வீகத்தைப் பற்றி விளங்கலாம்"
SS June 1999. P. 142.
“தங்களுக்குப் பிறக்கும் பிள்ளைகளைப் பராமரிக்க ஆண்டவரால் தேர்ந்தெடுக் கப்பட்ட சேவகர்களென்றே பெற்றோர் உணரவேண்டும் தோட்டக்காரன் தோட்டத் திலுள்ள மரங்களையும், செடிகளையும் எவ்வாறு பராமரிக்கிறானோ, அப்படியே ஆண்டவனின் தோட்டத்திலுள்ள இச்
சிறார்களையும் பராமரிக்கவேண்டும்”
SS S Vol 1. P. 70
“பிள்ளைகள் பணத்தைச் சிக்கன மாகவும், சிறந்த வழிகளிலும் செல வழிக்கப் பழகவேண்டும். பணத்தை விரயம் செய்யாது, வாழக் கற்றுக்

u பற்றி.
ன் சில கூற்றுக்கள்
09
கொண்டால் எதிர்காலம் ஒளிமயமான தாயிருக்கும்'
SSS Vol 7. P. 146
"முழு உலகமுமே டெலிவிசனின்
தாக்கத்தால் துன்புறுகின்றது. இதுவே உலகில் மனவிரக்திக்கும் ஒழுங்கின்
மைக்கும், முரண்பாட்டிற்கும் முக்கிய
காரணமாகும்”
SS Jan 15, 1996.
“பெற்றோர்கள் வாக்குவாதத்தில் இறங்கினால் பிள்ளைகள் கைகலப்பில்
இறங்கிவிடுவார்கள்'
S SMay 1996.P.119
“ஐந்து வயதுவரை பிள்ளை தாயுடனே வளர வேண்டும் - இக் காலத்தில் பிள்ளையைப் பணியாட்களிடம் கொடுப் பது நல்லதல்ல. பிள்ளையைப் பணியா ளரின் பராமரிப்பில் விட்டால், பிள்ளை பணியாளரின் சொற்கள், நடத்தை பழக்க, வழக்கம், சிந்தனை. எல்லா - வற்றையுமே கற்றுக்கொள்ளும். இது உகந்ததல்ல"
Discourse May 5 - 1962
* பிறந்தவுடனிருந்தே தாய் தானி பிள்ளையின் முதல் ஆசிரியர். ஆகவே தாய் தொழிலுக்காக வீட்டை விட்டுப் போனால்
பிள்ளைக்கு யார் படிப்பிப்பார்கள்”
S.S Dec 1996. P334
* சில சமயங்களில் பிள்ளைகள் உங்கள் சொல் லைக் கேட்பதில்லை யென்று கலங்குகிறீர்கள். நீங்கள், உங்கள் பெற்றோரின் சொல்லைக்கேட்டு நடந்தீர்
།འབངས་
s

Page 14
t
களா? எதை எதைச் செய்தோமே, அதே அதே திரும்பிவரும். உங்களின் ஆசை களை அடக்கி கட்டுப்பாட்டுடன் வாழ வேணர் டும். அப்படி வாழ்ந்தால் தான் பிள்ளைகளையும் கட்டுப்பாட்டுக்குள் கொணர் டுவரலாம். இக் காலத்தில் தகப்பன் பிள்ளையைத் திருத்த முயலு வதில்லை. பிள்ளையோ தாயின் சொல் லைக் கேட்பதில் லை. பிள்ளைகள் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டாலும்
தகப்பண்மார் ஊக்கம் கொடுப்பதில்லை”
'நாலு முக்கியமான வேதக் கூற்றுக்
ബ്,
தாயைத் தெய்வமாகக் கனம்பண்ணு தகப்பனைத் தெய்வமாகக் கனம் பண்ணு குருவைத் தெய்வமாகக் கனம் பண்ணு விருந்தாளியைத்தெய்வமாகக்கனம்பண்ணு'
"கட்டுப்பாடுதான் எனது இரண்டா வது பெயர்" (முதலாவது பெயர் அகம்)
"மகனே தெய்வீகத்தை உணர்வாயாக, என்று சொல்லும் தந்தையே உண்மையான தந்தை சீடனைத் தெய்வீக உணர்விற்கு வழிகாட்டுபவரே உணர்மையான குரு. இம் மாதிரியானவர்களைக் காணர் பது
இப்போது அரிது’
“பிள்ளைகளைச் சரியான பாதையில் சிறு வயதிலிருந்தே பெற்றோர்கள் வளர் க்கவேணர் டும் , பிழை விடும் பொழுது சுட்டிக்காட்டவோ, திருத்த வோ, தண்டனை கொடுக்கவோ பின்னிற் கக்கூடாது. பிள்ளைகளை சத்திய தர்ம
10

வழியிலே வளர்வதற்கு ஏதுவான சகல வசதிகளையும் கொடுப்பதுதான் பிள்ளை களில் மேலுள்ள தூய அன்பின் பரி ணமிப்பு. இக் கடமையைச் செய்யும் போது பிள்ளை திருந்தாவிட்டால் கடைசியில் பிள்ளையைக் கைவிடவும் தயங்கக்கூடாது. பல கெட்ட பிள்ளைகளிலும் பார்க்கப் பண்புள்ள ஒரு பிள்ளையை வைத்திருப்பதே மிகவும் மேலானது'
S. S. March 1984. P 62 - 63
"கடின உழைப்பின் மூலமே தமக்குத் தேவையானதைப் பெறப் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்கவேண்டும். சும்மா ஒன்றையும் பெறக்கூடாதெனி பதை அறிவுறுத்த
வேண்டும்'
SS S. Vol 2. P. 192
"பிள்ளைகளுக்குப் பணம், நேரம், சக்தி, நீர், உணவு ஆகியவற்றை வீண் விரயம் செய்யக் கூடாதென்பதைக் கற்றுக் கொடுக்கவேண்டும்"
* பெறி றோர் பெரி யார் களினி வாழ்க்கையை கதை போலச் சொல்வதன் மூலம், பிள்ளைகளில் அன்பு, தர்மம், சத்தியம் ஆகிய குணங்களை மேலோங்கச் செய்யலாம். முன் னைய காலத்தில் முதியோர்கள் இவ்வாறு கதைகளைப் பிள்ளைகளுக்கு ருசியாகச் சொல்வார்கள்.
இப்போது இது நடப்பதில்லையே’
S. S. Dee 1996. P. 335
[S.S: SANATHANA SARATHI S.S.S:SATHYASAISPEAKS.

Page 15
எபற்றோரிடம் வேண்டு
உங்கள் மன உணர்வுகளை அறிந்து கொள்ளும் திறன் எனக்குண்டு. நிச்சயம்ாகக் கலங்காத உள்ளம்
உங்களுக்கு இருக்க வேண்டும்.
குடும்ப உறவு ! உங்களுக்கிடையில் நிறைவான நல்லுணர்வு இருக்க வேண்டும் உங்களில் ஒருவர் மற்றவரின் மனதைப் புண்படுத்து வீர்களாகில் நிச்சயமாக நான்பாதிப்படைவேன்.தகாத வார்த்தைப் பிரயோகம் என் மனதில் ஆழமான வடுவைஏற்படுத்திவிடும்
நீங்கள் ஒருவருக்கு ஒருவர் இதமாகவும் சந்தோசமாகவும் கலந்துரையாடுவதைக் கேட்கப், பார்க்க, யாண் மட்டற்ற மகிழ்ச்சி அடைவேன்.
எனக்குப் போதிய ஆகாரம், 966) L வசதி, கற்கும் வசதி செய்து தருகின்றீர்கள், ஆனால் உங்கள் அன்பு, அரவணைப்பு, வழிகாட்டல் இல்லாமல் என்னால் வாழ முடியாது.
இப்பொழுது உன் தாய் தந்ை நாளை உை உன்னைக் கண்க

குழந்தைகளின் கோள்கள்
()
உங்களை முனி உதாரணமாகக் கொண்டதே எனது வாழ்க்கை.
அக்கா, தம்பி முதலானோரை ஒருவருடன் ஒருவர் ஒப்பிட்டுக் கதைக் கா தீர்கள் . ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானவர் என்பதை மறந்து விடாதீர்கள்.
தேவைக்கு அதிகமாக எனக்குத் தரவேண்டாம். கேட்பதை எல்லாம் கொடுக்கத் தேவையில்லை.
பிழையைப் பிழையென்று கூறவும். தணர் டனை தரவும் . ஆனால மற்றவர் களர் முனி னிலையில என்னைத்திருத்த முற்படவேண்டாம்.
நான் கேள்வி கேட்டால் அதற்குரிய பதிலை விளக்கத்துடன் தரவும். தட்டிக் கழிக்க வேண்டாம்.
ஆதாரநூல் : ‘குழந்தைகளின் வேண்டுகோள்"
ஆசிரியர் முரீகார்த்திகேசு வைத்தீஸ்வரன்.
தயரை கண்கலங்கச் செய்தால், ர் பிள்ளைகள் லங்கச் செய்வார்கள், !
11
དེ་

Page 16
எங்கள் அப்
தாய்லந்தின் தலைநகரான பாங்கொக்கில் இயங்கும் ச
பயிலும் மாணவர்கள் தாய் தங்களுக்குச் செய்யும் விருப்ப
வினாக்கொத் ஆய்வு.)
9.
அவர் எண்ணிடம் அன்பாகவிருக்கிறார். அவர் என்னைப் பராமரிக்கிறார். அவர் நல்லதையே கற்பிக்கிறார் அவர் மிகவும் ருசியான உணவு சமைத்துத் த அவர் எனக்குக் கதைகள் கூறுகிறார். அவர் நான் சுகவீனப்பட்டால் கவனிக்கிறார். அவர் எனது உடுப்புகளைத் தோய்த்துத் தருச் வீட்டில் செய்து கொண்டுவரும்படி, பா செய்வதில் அவர் உதவுவார். அவர் தேவைப்படும்போது, எனது பக்கத்தில
10. அவர் நான் பிழைசெய்யும் பொழுது ஏசித்தி
(தொகுத்தவர் : பூரீ KV, சிவநேசன் பாங்கொக் நீ
'பிறந்த மண்ணுக்கு மதிப்பளி உன் தாயை விட வேறு ஒரு தாய உன் தாயை விட்டு வேறு ஏற்பாயா?”
தாய் தந்தையரது அண்பைப் ( இறைவனின் அன்பை எள்
12

DI Dmråš656ir
த்தியசாயி மனித மேம்பாட்டுக் கல்வி நிறுவனத்தில் மான செயல்களை நிரைப்படுத்திக் கூறியவை : ஒரு
ருகிறார்.
கிறார்.
டசாலையால் தந்த அப்பியாசங்களைச்
விருப்பார். ருத்துவார்.
றுவனத்தில் டிப்ளோமா பயிற்சி பெற்றபோது)
*க வேண்டும்
அழகு மிக்கவள் என்பதால் ஒருவரை பெற்ற தாயாக
பெறத் தகுதியற்றவர்கள் வாறு பெற இயலும்,

Page 17
வள்ளுவர் குற6
தந்தை மகற்காற்று நன்றி யவையத்து முந்தியிருப்பச் செயல் தகப்பன் மகனுக்கு செய்ய வேண்டிய நல்ல காரியம் என்னவென்றால், தன் மகனி கற்றவர் சபையில் முதல் வரிசையில் சிறப் புடையவனாக விளங்கும்படி (கல்வி கேள்வி அறிவு டையவனாகச்) செய்து வைக்க
வேண்டும்.
ஈன்ற பொழுதிற் பெரிதுவக்குந் தன் மகனைச் சான்றோனெனக் கேட்டதாய்
(தனி ம கன அறிவுடையவனாக விளங்குகிறான் என்பதைவிடத்), தன் மகன் மிக உயர்ந்த குணமுடைய நல்லவனாக இருக்கிறான் என்று மற்றவர் புகழ்வதைக் கேட்கிறபோது
“பகவானின் அருள் மழைை உள்ள மாகிய பாத்திரத் 6 எப்போதும் வைத்திருந்தா எப்போதும் இருந்துகொண்
பார்வை எவ்வண்ணமோ ப உன் கண்ணாடியின் நி நிறத்திலேயே எல்லாம் கா
உண் பார்வையில் தான் அட

ரில் விபற்றோரியல்
ஒரு தாய், தன் மகனை அவள் பெறி றெடுத் தபோது அடைந்த மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சி
அடைவாள்.
மகன் தந்தைக்காற்று முதவி யிவன் தந்தை யென்னோற்றான் கொல்லென்னுஞ் சொல் (தனி னைப் பெற்று வளர்த்துக் கல்வியறிவூட்டிச் சிறப்படையச் செய்த பெற்றோருக்கு) மகன், தந்தைக்குச் செய்ய வேண்டிய நன்றி என்ன வென்றால், இப்படிப்பட்ட அறிவும் நற்குணமும் உள்ள மகனைப் பெற இவன் தந்தை என்ன தவம் செய் தானோ? என்று உலகத்தார் சொல்
லும் புகழுரைதான்.
யை வேண்டுபவர்கள், அவர் தம் தை பகவானை நோக்கியே ல் அருளாகிய நீர் நெஞ்சில் டேயிருக்கும்’
டைப்பும் அவ்வண்ணமே.
றம் எப்படியுள்ளதோ, அந்த ணப்படும் . எனவே சகலதும்
ங்கியுள்ளது.
13

Page 18
வட பிரா O ழுநீ சத்திய சாயிசே
O நிகழ்வு
& வையகம் துயர் தீர்கவே 45 நாள் சாதனை 9.10.2003 - 22.11.2003, பகவானின் பெரும் கருணையால் இந்த 45 நாள் சாதனை பக்திபூர்வமாக நிறைவுபெற்றது & அன்பு வாரம்: ஒக்ரோபர் 20 - 26 6J (Լք நாட்கள் புனிதமான காருண்ய உணர் வுகள் நிறைந்த அன்பு வாரமாகக் கொணர் டாடப்பட்டது. பின் வரும் நிகழ்வுகள் நடைபெற்றன. & பாடசாலைகளில் அணி பு வாரம் கட்டுரை, கவிதை போட்டிகள், சம்பந்தமாக தொடர்பு கொள்ளப்பட்ட UTL5 Te0)6u) 56it : 410 - பங்கு பற்றிய மாணவர்கள்: 838 - மாணவருக்கு கருத்துரைகள்:
நயினாதீவு, வட்டுக் கோட்டை, பருத்தித்துறை, கொக்குவில் ஆகிய இடங்களிலுள்ள பாடசாலைகளில் கருத்துரைகள் வழங்கப்பட்டன - 23 ஆம் திகதி கொக்குவில் சி. சி. த. க. UT LJ T 60) 6) LD IT 600T 6). If s 6i 6 பேருக்கு கொக்குவில் சத்திய சாயி நிலையத்தால் பால் வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. & பகவான் விரைவில் பூரண சுகம்பெற பகவானிடமே பிரார்த்தனை - 20.11. 2003 20 ஆம் திகதி வியாழக்கிழமை சத்திய சாயி நிலையங்களில் மாலை 4.00 மணிமுதல் 6.00 மணிவரை பிரார்த்தனை நடைபெற்றது. மன ஒருமைப்பாட்டைக் கருத்தில் கொண்டு பின்வரும் முறை பேணப்பட்டது. ஓங்காரம் 3 தடவைகள், காயத்திரி மந்திரம் 108 தடவைகள், அஷ்டோத்திரம், பஜனை, நாம ஓங்காரம்
14

ந்திய வாநிலையங்களின் கள்.
108 தடவைகள், தியானம் (10 நிமிடம்), பேச்சு ( 10 நிமிடம்), சர்வமத பிரார்த்தனை, மங்கள, ஆரத்தி. இந்த பிரார்த்தனையை விளக்கும் முகமாக வட பிராந்திய தற்காலிக ஆன்மீக அமைப்பாளர் பூரீ.எஸ்.ஆர். சரவணபவனி பின்வரும் செய்தியை நிலையங்களுக்கு அனுப்பியிருந்தார்.
பகவானி பாபா அவர் களுக்கு சிறுவிபத்து நேரிட்டு அவர் நடக்கமுடியாது இருப்பதும், பிறர் உதவியுடனேயே தரிசனத்திற்கு வரவேண்டி உள்ளதையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
“சுவாமி, இதனைக் குணப்படுத்த உங்களால் முடியாதா?’ என ஒரு பக்தர் வினவியதற்கு சுவாமி விடையளிக்கையில், “எனது சங்கற்பத்தினால் ஒரு நொடியில் குணமாக்க முடியும். ஆனால் நான் சங்கற்பிக்கப்போவதில்லை. நான் இவ்வள வாவது நடமாடமுடிவது பக்தர்களின் பிரார்த்தனை மூலமே. நான் குணமாக வேணர் டுமென நீங்கள் கருதினால் பிரார்த்தனை செய்யுங்கள் என்று கூறி
னார்.
ஆகவே, 20.11.2003 வியாழக்கிழமை மாலை 4 மணி முதல் 6 மணிவரை பகவான் பூரண சுகமடைய வேண்டுமென அவரையே பிரார்த்திக்கும் ஒரு விசேட நிகழ்ச்சியொன்றை எல்லா சாயி நிலையங்களிலும் நடாத்த வேண்டுமென இணைப்புக்குழுக் கூட்டத்தில் தீரமானிக்கப்பட்டது.

Page 19
கிழக்குப் முநீ சத்திய நிலையங்கள்
& 5lb 561656), UITG) 6lassror) (5.5LDT if
பயிற்சி தம்பிலுவில் நிலையத்தில் நவம்பர் 1 - 2 திகதிகளில் 11 சேவா நிலையங்களிலும் 2 மண்டலிகளிலும் இருந்து வந்த 65 குருமாருக்கு பயிற்சி நடைபெற்றது. இருநாட்களும் அங்கேயே தங்கி கலந்துரையாடல்கள், கல்வி வட்டம் ஆகியவற்றிலும் பங்கு பற்றினர். அவர்க ளுக்கு பல பிரசுரங்கள் வழங்கப்பட்டன. தம்பிலுவில் நிலையத்தினர் பயிற்சி முகாமை நடாத் துவதற்கு சகல விதத்திலும் உதவினர். நாம் அவர்கள் விருந்தினர் ஆனோம். பயிற்சியாளர் மிகவும் திருப்தியுடன் சென்றனர். பார்வையாளராக வந்திருந்த கல்வி இலாகா விரிவுரையாளர்கள் வியந்து கூறினார்கள். மன நிறைவு அளித்த இந்த பயிற்சி முகாம் சுவாமியின் கருனைதான். டொக்டர். R. சிவ அன்பு, தலைவர், கிழக்கிலங்கை சத்திய சாயி சேவா நிலையங்களின் இணைப்புக்குழு
n
'உண்மையான மகிழ்ச்சி உளமாரச் செய்வதில் இரு யெல்லாம் செய்வதில் இல்ை

O
பிராந்திய
aruī (Bar6)
N. O. O O
iன் நிகழ்வுகள்
s365, L 6), TT b : Ib Glitbust 24 - 30 ஏழு நாட்கள் புனிதமான காருண்ய உணர்வுள்ள அணி பு வாரமாகக் கொணர்டாடப்பட்டது. பின் வரும் நிகழ்வுகள் நடைபெற்றன.
* அன்பின் பெருமையினை உணரத்தக்க
விதமான - பஜனை முடிவில் உரைகள் - கல்வி வட்ட கலந்துரையாடல்கள்
- பாலவிகாஸ் வகுப்புகளில் எடுத்துரைத்
தாங்கள்
* பாடசாலை மாணவரிடையே மூன்று, வயதுப் பிரிவுகளாக கட்டுரை, கவிதைப் போட்டிகள்,
* சாயி பக்தர்கள் தமது இல்லங்களில், சாயி நிலையங்களில், வேலைத் தளங்களில், சமூகத்தில் அன்பைத் தீவிரமாக மற்றவர்களுடன் பகிர்ந்து
கொண்டமை.
என்பது உனது கடமைகளை
|க்கிறது. நீ விரும்புவதை
''
15
༽

Page 20
C
ஆசிரியர்களு மேம்பாட்டுக் கல் (ஜூன் - ஒக்ரே
யாழ் தேசிய கல்வியற் கல்லூரி இக்கல்லூரியில் ஆசிரியர்களாகப் பயிற்சி பெறும் 90 சத வீதத்தினர் அதாவது 443 மாணவர்கள், 11 இரண்டு நாள் பட்டறைகளில் பயிற் றப்பட்டனர். அவர்களின் சராசரி வயது 23. அதில் தமிழ் மொழியில் பயிலும் எல்லா சமயத்தினரும் அடங்குவர். பட்டறை ஏற்பாடு கல்லூரியின் பீடாதிபதி கலாநிதி, S.கமலநாதன், பூரீ K.V சிவநேசன், வடபிராந்திய ம.மே.க. இணைப்பாளர். பயிற் சி யாளர் : பேராசிரியர்
C.சிவஞானசுந்தரம், வைத்திய கலாநிதி. R.கணேசமூர்த்தி, பூறி, S.R.சரவணபவன்,
பூரீ ம தரி , M , ச ர வ ண ப வ ன ,
பூரீ.K.V.சிவநேசன், பூரீமதி Rசிவபாலன், மதிய போசனம் தேனீர் உபயம் : யாழ்
தேசிய கல்வியற் கல்லூரி
சாவகச்சேரி கல்வி வலயத்தில் 35 பாடசாலைகளிலிருந்து 59 ஆரம்ப வகுப்பு ஆசிரியர்களுக்கு 3 பாட சாலைகளில் பட்டறைகள் நடை பெற்றன
உடுவில் கல்வி வலயத்தில் 34 பாடசாலைகளிருந்து 40 ஆரம்ப வகுப்பு ஆசிரியர்களுக்கு இராம நாதன் மகளிர் கல்லூரியில் 3நாள் பட்டறை நடைபெற்றது. மதிய போசனம் தேனீர் உபயம் : தாவடி சத்திய சாயி சேவா நிலையம்
முல்லைத் தீவு கல்வி வலயத்தில்
16

க்கான மனித விப்பட்டறைகள் rпuй 2oоз)
மா மூலையில 30 பாடசாலை ஆசிரியா களு கீ கு பட்ட  ைற நடைபெற்றது.
ஏற்பாடு : பூரீ.ரகுநாதபிள்ளை உப தலைவர், வட பிராந்தியம் தலைவர். சத்திய சாயி நிலையம் வவுனியா பூரீ.செ.சிவராசா பிரதி கல்விப் பணிப்பாளர், முல்லைத்தீவு
பயிற்சியாளர் : பேராசிரியர். செ. சிவஞானசுந்தரம் பூரீ புவனேந்திரன் மதிய போசனம் உபயம். வற்றாப்பளை கண்ணகை அம்மண்பரிபாலன சபை,
米米米米
இசை அமுத நிகழ்ச்சி :
18 - 10 - 2003 Ls. Lus 65 4.00 மணிதொடக்கம் மாலை 6, 30 மணிவரை யாழ், திருநெல்வேலி சத்திய சாயி சேவா நிலைய திறந்த அரங்கில் நடைபெற்றது. அடியார்களும், பொது சனங்களுமாக எண்ணுறுக்கு அதிகமானோர் மகிழ்ந்து பயனடைந்தார்கள்: இனிய பக்தி ப் பாடல்களை, நவீன இசைக் கருவிகளுடன், அன்பண் பூரீ.கண்ணண் அவர்கள் நெறிப் படுத்த, அன்பண் பூரீ.சிவபாலன்பாட்டுக்களின் கருத்துக்களை இடையிடையே விளக்கத்துடன் கூறினார். இந்நிகழ்ச்சியின் நோக்கு இசை மூலம் ஆண்மீக வளர்ச்சியும், மக்களுக்கு பகவானைப் பற்றிய தகவல்களைக் கொடுப்பதுமேயாகும். இளைஞர் அணி யின் இம்முயற்சியைப் பலரும் பாராட்டி
யுள்ளார்கள்.
இசையால் மயங்காதவர் யாருமுளரோ?

Page 21
சென்ற இதழின் தொடர்ச்சி
தெய்வீக (
அந்தக் காலத்தில் எங்கள் பாடசாலையின் தலைமை ஆசிரியரின் அன்பு வேண்டு கோளுக்கு இணங்க பாடசாலைப் பிரார்த்தனையை நான் நடாத்துவேன். அவர் கூறுவார், “ராஜ" நீ இளைஞனாக இருக்கலாம், ஆனால் உனது பிரார்த் தனை எங்கள் இதயங்களை உருக வைக்கின்றன. நான் பாடசாலையை விட்ட பின்பு, எனக்குப் பக்கத்திலிருக்கும் பையனர் பிரார்த்தனையை நடாத்தப் பணிக்கப்பட்டான். அவன் மேடைக்குப் போனது ம் , எ ன  ைன நினைத் து அழுதானாம். ஆசிரியர்கள் மாணவர் அனைவரும் அழுதார்களாம். அன்று பிரார்த்தனைக் கூட்டம் நிறுத்தப்பட்டது.
அவர்கள் என்னுடன் புட்டபர்த்தி வர விரும்பினார்கள். ஆனால் அத்தனை பேருக்கும் கிராமத்தில் எப்படி இடம் கொடுப்பது? நான் காமேஸ்வர் ராவ் அவர்களிடம் பையன்களை என்னுடன்
வரவேண்டாம் என்று அறிவுறுத்தும்படி
வேண்டினேன்.
நாண் உறவகொண்டாவை விட்டு இங்கே வந்ததும், பலர் மைசூரிலிருந்தும் பங்களூரிலிருந்தும் தங்கள் கார்களில் இந்த இடத்துக்கு வந்தார்கள். மைசூர் மகாராணி, கோப்பி தோட்டக்காரர் சாக்கம்மா, மைசூர் மகாராஜாவின் தாய் மாமனி தேசராஜ அரசு ஆகியோர் வந்தவர்களில் சிலர் ஆவர். ஒருநாள் வணங் கிக் கேட்டார்கள் : “இங்கே அடிக்கடி வருவது கஷ்டமாக உள்ளது. தயைசெய்து மைசூர் வந்து இருங்கள். நாங்கள் உங்களுக்கு ஒரு அருண்மனை

ஞாபகங்கள்
17
கட்டித்தருவோம்.' நான் கூறினேன், “எனக்கு அருண்மனைகள் வேண்டாம். நான் இங்கேயே இருக்க விரும்புகிறேன்.” அன்று இரவு, ஈஸ்வரம்மா கண்களில் கண்ணிருடன் என்னிடம் வந்து கூறி னார். “சுவாமி, பலர் உங்களை தங்கள் சுயநலத்திற்காக அங்கும் இங்கும் அழைத் துப் போக இருக்கிறார்கள். நீங்கள் புட்டப் பர்த்தியை விட்டுப் போனால் நான் உயிர் விடுவேன். தயை செய்து புட்டபர்த்தியை என்றுமே விடமாட்டேன் என்று எனக்குச் சத்தியம் செய்யுங்கள்.” நான் என்றுமே புட்டபர்த்தியை விட மாட்டேன் என்று வாக்களித்தேன். இதற் காகத்தான் நாண் இங்கே ஆச்சிரமத்தில் எனது பக்தர்களுக்காக பல கட்டி டங்களைக் கட்டியுள்ளேன்.
நாண் பக்தர்களுக்கு கொடுக்கும் வாக்குறுதிகளை எப்போதும் நிறை வேற்றுவேன். நான் சொல்வ தெல்லாம் பக்தர்களின் சந்தோஷத்திற்காகவே. எனக் காக ஒன்றும் இல்லை. எனக்கு விருப்புகள் இல்லை.
நான் புட்டப்பர்த்தியில் இருக்கப் போவதாக கூறியதும் மைசூர் மகாராஜா விண் தாய்மாமன், சக்கம்மா எனக்கு இங்கே ஒரு மந்திர் கட்டுவதற்கு தீர்மானித்தார்கள். பத்து ஏக்கர் நிலத்தை வாங்கி கட்டிடவேலை தொடங்கினார் கள். ஒரு அன்பான பக்தரும் முன்னைய காட்டுவேலை உத்தியோகத் தருமான (FOREST OFFICER) 6L6) J T6) is LL வேலையை மேற்பார்வை செய்தார். இவர் ஐயம்மாவின் (பேராசிரியை ஜெயலஷ்மி

Page 22
கோபினாத்) தகப்பனார் ஆவார்.
ஜெயம்மா தகப்பனுடன் என்னைப் பார்க்க வருவா. விட்டல் ராவ் பங்களூரில் இருந்து தனக்கு உணவு கொணர்டு வருவார். அப்போது எனக்கு 17 வயது. ஜெயம்மா கடந்த 60 வருடங்களாக எனக்கு சேவை செய்திருக்கிறா. பல தடவை பிரசாந்தி நிலையம் வந்து சுவாமியின் பஜனை பாடுவார். சுவாமி யின் புனிதமான பக்தை ஆனார். தெய்வீ கத்தின் மிக நெருங்கிய அனுபவத்தைப் பெறுவதற்கு பிராத்தி வேண்டும். கேட்ட தும் கிடைப்பதல்ல அது. அதைக் கொடுக் காமலும் இருக்க முடியாது. முன்னைய வாழ்வுகளின் பலன்களால் அது கிடைக் கின்றது. -
வெங்கம்மா (சுவாமியின் மூத்த சகோதரி) சுவாமிக்கு உணவு சமைப்பா. ஜெயம்மா அவவுடன் இருந்து சமைக்கப் பழகுவா, அத்தனை நட்பு. பினர் பு பர்வதம்மாவும் (சுவாமியின் இரண்டாம் சகோதரி) இங்கே வந்தா, அவர்கள் மாறி மாறி சுவாமிக்கு உணவு தயாரிப்பார்கள், ஒருவர் காலையில் மற்றவர் மாலையில். மற்றவர்கள் சுவாமிக்கு உணவு சமைப்பது பாதுகாப்பு இல்லை என்று நினைத் தார்கள். தாங்கள் சமைக்கும் உணவையே உணர்ணும் படி எண் ணிடம் சத்தியம் வாங்கினார்கள். அவர்களின் கடைசி மூச்சுவரை எனக்குச் சமைத்துப் போட் டார்கள்.
வெங்கம்மா இங்கிருந்து சுய அறிவு இல்லாத நிலையில் பங்களூர் மணிப்பால் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டா.
18

கணி களைத் திறக்கவில்லை. நான் செனி று வெங் கம் மா என றதும் , கணர் களைத் திறந்து சுவாமி யைப் பார்த்தார். எனது கைகளை வாங்கி நமஸ்காரம் செய்தா, அழுதா, மனித உடலை விட்டுச் சென்றா. இதேமாதிரித் தான் பர்வதம்மாவின் வாழ்வும் நிறை வுற்றது. அவர்கள் வாழும்போது சுவாமி யுடன் நெருங்கிய தொடர்பு வைத்தி ருந்தார்கள். இது அவர்களின் பூர்வீக நன்மைகளினால் வருவது. இவ் வாழ் விலும் அவர்கள் தமது நோய்களைக் கவனியாது சுவாமிக்கு அன்புடன் சேவை செய்தார்கள். அவர்கள் வாழ்வு புனித மாக்கப்பட்டது.
இப்போதும் அவர் வீடுகளிலிருந்து தானி உணவு வருகிறது. சேஷ ம ராஜூவின் (பாபாவின் தமையன்) மகன் அங்கே இருக்கிறான். ஜானகிராமை யாவும் (சுவாமியின் இந்த உடலின் தம்பி) அங்கே வாழ்கிறான். அவனுடைய மனைவி எனக்கு உணவு தயாரிப்பாள். அதேபோல் பர்வதம்மாவின் மகளும் பகலில் உணவு கொண்டு வருவாள். சுவாமி இரவில் உணவு அருந்து வதில்லை. இந்த விதத்தில் சுவாமி தனது குடும்பத்துடன் தொடர்பு வைத்திருக் கிறார். சில அவதாரங்கள் அவர்கள் பெற்றோரின் பிரார்த்தனை வேண்டு கோள்களால் தோன்றுகின்றன. சுவாமியைப் பொறுத்தவரை அப்படி அல்ல. நான் இவர்தான் எனது தகப்பனரக வேண்டும், இவர்தான் எனது தாய் என்று தீர்மானித் தேன். இந்த உடல் சாதாரண முறையில் தோன்றியதல்ல.
(அடுத்த இதழில் முடியும்)

Page 23
சென்ற இதழின் தொடர்ச்சி
சுவாமியிடம் கே பதில்
12. கேள்வி : Ha
நான் ஏன் தனிப்பட்ட சேவை செய்யக் கூடாது?
பதில் -
தனி மனிதனால் சாதிக்க முடியா ததை கட்டுக் கோப்பான ஒரு சங்க அமைப்புக்களால் எதையும் சாதிக்க முடியும். ஒருவன் தனிமையாக 5 மைல் தூரம் நடப்பது களைப்பாக தோன்றும். அதேவேளை 10 பேருடன் நடக்கும்போது களைப் புத் தோன்றாது. அன்பினால் சமூகத்தை மேன்படுத்துவதன் மூலமும், சேவை மனப்பான்மை மூலமாகவுமே மோட்சத்தை அடைய முடியும். ஆகவே சத்திய சாயி நிறுவனங்கள் இதய பூர்வமான உற்சாகத்துடன் சேவை செய்ய
வேண்டும்.
13. கேள்வி : -
சேவாவில் உள்ள பஞ்ச புராணங்கள் என்ன?
பதில் - அர்ப்பணித்தல்
நாம் செய்கிற ஒவ்வொரு செயல் களும் கடவுளுக்கே சமர்ப்பணம். இதை செயல்படுத்த கூடிய, முதல்வழி நம் முடைய கர்வத்தை அவரின் தாமரை மலர்ப் பாதங்களில் வைத்து நம் அகங் காரத்தை விட வேண்டும். கர்வத்தை நாம் விட்டுவிட்டால் தான் சேவை செய்யும்
மனப்பான்மை வரும்.

கள்விகளும் அவர் களும்
பக்தி
நம் சுய கர்வம் அகன்றாலே பக்தி தன்னால் வளர்ந்து விடும். இரண்டாவது வழி சேவைக்கு - பஜன் அல்லது நாம சங்கீர்த்தனம், கூட்டுப் பஜன் எண்பது மனம், குரல், எண்ணம் எல்லாம் ஒன்றி செயல்படுவது. அந்தக் கூட்டுவழிபாடு பரிசுத்தத்தையும் பக்தியையும் வளர்க்கும்.
ஒழுங்குமுறை
சமூக வேத முறைகளின் பாது காப்புக் கட்டுப்பாடுகளும் வரை முறை களும் ஆகும். வரை முறைகளை மீறினால் கவர் டங்கள் தானி வரும். அனி பை பிரகடனப் படுத்த வேணர் டுமானால் ஒழுக்கமும் நாமும் நிழல் மாதிரி பிரியாமல் இருக்க வேண்டும்.
பாரபட்சமற்ற தன்மை - (பிரித்து உணரும் தன்மை)
நம்முடைய ஒவ்வொரு செயல் களையும் நல்லதா, கெட்டதா, சுவாமி விரும்புவாரா, மாட்டாரா என்று யோசி த்து பார்க்க வேண்டும். அறிவையோ, புத்தியையோ கேட்காமல் மனசாட்சி, நம் ஆத்மாவை கேட்க வேணும். அதுதான் நம் குரு. பாரபட்சமினி மை தானி சுய நம்பிக்கை, சுய திருப்தியை தரும். சுய நம்பிக்கை தியானந்தான் நம்மை கடவுளி டம் சேர்ப்பிக்கும்.
தீர்மானம்
மேலே குறிப் பிட்ட நாணி கும் ஒன்றுடன் ஒன்று சம்பந்தப்பட்டு பிரிக்க முடியாது. இந்த நான்கையும் சரியானபடி செயல்படுத்தினால் நல்ல முறையில் சிந்திக்கலாம்.

Page 24
14. கேள்வி :-
சுவாமி சில பேர்கள் கூறுகிறார்கள் நீங்கள் அவர்கள் முலமாக கதைப்பதாக அது 2 6ör6oLDuT?
பதில் :-
சில மனிதர்கள் தங்கள் மேல் நான் வந்து ஆட்கொண்டதாகவும், உடம்பை அசைத்து முறுக்கிக் கொண்டு நான் அவர்கள் மூலமாக பேசுவதாகவும் அவர்களை நான் எண் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாகவும் சத்தியம் செய்தே உறுதியாக சொல் வார்கள். கேள்வி களுக்கு பதில் சொல்வதன் மூலமாகவும் நிறைய மந்திர தந்திரங்கள் செய்து காட்டி பணம் பறிப்பதாகவும், என்னை யும் எண் உணர்மையை உணராதவர் களையும் ஏமாற்றுவார்கள். அது நோ யைப் போல பரவி கொண்டு வருகிறது. பாபா என் கனவில் வந்து அதை இதை செய்யச் சொன்னதாகச் சொல்லி பணம் வசூலிப்பார்கள். அவர்களை அவர்கள் வழியிலேயே தணர் டித்து அவர்களை விலகி நடவுங்கள்.
இன்னும் சிலர் நான் அவர்கள் மூலமாக பேசுவதாகவும் கேள்விகளுக்கு பதிலளிப்பதாகவும் கூறி ஏமாற்றுகிறார் கள். உண்மையில் ஆவியின் அடிமைப் பட்டவர்களோ, அல்லது புத்தி சித்தமில் லாதவர்களாக இருக்க வேண்டும். நான் அவர்கள் மூலமாக பேசவில்லை எனக்கு பிரதிநிதிகளோ, உதவியாளர்களோ தேவையில்லை. எண் பக்தர்கள் பல இடங்களிலும் பெருகியிருப்பதால் , தனியாக நிர்வகிக்க சிரமப்பட்டு அவர்கள் எண் பிரதிநிதிகளாக ஏற்படுத்தியி ருப்பதாக பொய் கூறித் திரிகிறார்கள்.
என னை உணர கவர் டமாக அவர்களுக்கு இருக்கும்போது, உண்மை யான பக்தி என்ன என்று தெரியாத இந்த

இழிந்த எண்ண முடையவர்கள் என்னால் எ ப் படி ஆசீர் வதிக் கப் படுவார்கள் . உடையிலோ, பாவனையிலோ என்னை மாதிரி மாறி விட முடியாது. அப்படி கூறிக்கொண்டு திரிவதற்கு அவர்கள்
அவமானப்பட வேண்டும்.
15. கேள்வி :- உங்களுடைய சில பக்தர்கள் உங்களுக் காக மந்தீர் கட்டுவதற்காக காசு சேர்க்கி
றார்கள் இது சரியா? அல்லது பிழையா?
பதில் -
சாயி பாபா இருப்பதாக நம்புங்கள். உங்கள் ஆத்மாவில் அசைக்க முடியாத அன்பினால் இருப்பதாக எண்ணுங்கள். இழிந்த எண்ணங்களுடன் எனக்கு மந்தீர் கட்டுவதற்காக என்று வசூலிக்கும் மக்களை ஊக்கப்படுத்தாதீர்கள். எனக்கு வேண்டிய ஒரே ஒரு மந்தீர் உங்கள் இதயங்கள் தான். அப்படி கூறிக்கொண்டு வருபவர்களுக்கு ஒரு சதமேனும் கொடுக்க வேண்டாம். புதிதாக கோயில் எழுப்பு வதும், பழையவற்றை இடிப்பதும் பணம் வசூலிப்பதற்கான வழிகளாகி விட்டது. மனதை, இதயத்தை சுத்தமாக வைத்தி ருங்கள். நான் அங்கு வாசம் செய்ய
அதுவே போதும்.
பணமே உலகத்தின் பிரதானமாகி விட்டது. அப் படிப் பட்ட பக்தர்கள் பட்டியலை கொண்டுவந்து நீட்டினாலும் ஒரு சதமேனும் கொடுக்க வேண்டாம். அதைவிட வீட்டையே மந்திராக மாற்றி உங்கள் பூஜை அறையிலேயே தியானம் செய்யுங்கள். உங்கள் வீட்டிலேயே பஜன் பாடி மற்றவர்களுக்கு உங்கள் இன்பமான, சுகமான பேச்சுக்களாலும், செயலாலும்,
பெரியோர்களிடமும் நண் முறையில்

Page 25
பழகும் விதத்திலும் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருங்கள்.
இதுவரையும் என்னை வழிபடுவதை பற்றி நான் வலியுறுத்தவேயில்லை. ஆனால் அதேசமயம் எனக்கு கோயில்கள் எழுப்புவதை நான் விரும்பவில்லை. இது ஒரு இலாபகரமான தொழிலாகிவிட்டது. இப்படி கேட்கும் ஆட்கள் கூடிவிட்டது.
16. கேள்வி -
சுவாமி நாங்கள் அடிக்கடி உச்சரிக்க
வேண்டிய மந்திரம் என்ன?
பதில் :~
உங்களின் உள் உணர்வாகிய
பரமாத்மாவை புரிந்துகொள்ள உங்களுக்
காகவே மூன்றாவது கண்ணைப் போல்
கொடுக்கப்பட்டது காயத்திரி மந்திரம்.
காயத்திரி மந்திரம் வாழ்நாள் பூராவும் பாதுகாக்கப்பட வேணர் டிய மந்திரம், மற்ற மந்திரங்களை அலட்சியப் படுத்தலாம், சொல்ல மறக்கலாம் ஆனால் ஒரிரு தடவையாவது கட்டாயம் காயத்திரி
“உலகியல் வாழ்க்கையை
இன்னும் தவறாகவே
உலகியல் வாழ்வின் மீது (பற்றுதலை)த் தான் விட்டு

மந்திரத்தை சொல்ல வேண்டும். வீட்டில் இருக்கும்போது, பயணங்களின் போ தோ, தீமைகளிலிருந்து, துன்பங்களி லிருந்து நம்மை காப்பாற்றும்.
மேல் நாட்டவர்கள் இம்மந்திரத்தின் மகிமையையும் அதை உச்சரிக்கும்போது உணர் டாகும் ஒலி அலைகளையும் , வேதங்களில் கூறப்பட்டபடி சரியான உச்சரிப்புடன் ஒலிக்கும்போது அந்த சூழ்நிலையே ஒளியூட்டப்பட்டதாக கண்டு பிடித்துள்ளார்கள்.
அதனால் அம்மந்திரத்தை உச்சரிக் கும் போது நம்பாதையும் நல்வழிப்பட்டு, ஒளியுடையதாக நல்வழியாக மாறும்.
காயத்திரி என்பவள் அணி னபூரணி
உலகத்தின் - வாழ்வின் தேவையான சக்தி தருபவள். அன்னை, அதனால் அலட்சியப்படுத்த வேண்டாம்.
நம்முன்னோர்களின் வழக்க நெறி
களை பண்புடனும், பக்தியுடனும் பாது காப்பதே நம் கடமை.
(முற்றும்).
விட்டுவிடக்கூடாது. L6) st
5ருதிக்கொண்டிருக்கின்றனர்.
து கொண்டுள்ள நாட்டத்தை
விடவேண்டும்.'
21

Page 26
அன்பு மகனின் ஆபிரஹாம் லிங்கன
எண் அன்புப் பிள்ளையின் ஞானத்தந்தையே என் இளம் செல்வத்திற்கு. புத்தகங்களின் அற்புதங்களைக் கற்பியுங்கள்! கூடவே - வானத்துப் பறைவைகளையும் ரீங்காரமிடும் தோட்டத்து வண்டுகளையும் மலர்கள் சூடிய பசுமை போர்த்திய மலைகளையும் இயற்கையின் மருமங்கள் அனைத்தையும் நின்று. ரசித்து. உணர்ந்து மகிழப் பயிற்றுவியுங்கள்.
ஏமாற்றிப் பெறும் வெற்றியை ഖിL கண்ணியமான தோல்வி உன்னதம் எனக்கற்றுக் கொடுங்கள். இழப்புக்களைத் தாங்கிக் கொள்ளவும் வெற்றியில் களிக்கவும் சமமாகக் கற்றுக் கொடுங்கள். தன்மீது உயர்ந்த நம்பிக்கையும் மனிதகுலத்தின் மீது மாறாத அன்பும் கொண்டவனாக மாற்றுங்கள் . தன் இதயத்திற்கும் - ஆன்மாவுக்கும் விலை சீட்டு ஒட்டாதனவனாக வாழக்கற்றுக் கொடுங்கள். அவன் உழைத்துப் பெறும் ஒரு ரூபாய் கண்டெடுக்கும் ஐந்தை விட உத்தமம் என்பதை ஆழப் பதிப்பியுங்கள். துன்பத்திலும் சற்றே சிரிக்கக் கற்பியுங்கள். அவனிடம் அன்பு காட்டுங்கள் ஆனால் கண்டிப்பைச் சற்றும் குறைக்க வேண்டாம் . நெருப்பின் நாவுகளே இரும்பிற்கு வலுவேற்கிறது என்பதை நானறிவேன். ஓர் நீண்ட வேண்டுகோள் பட்டியலை உங்கள் முன் நீட்டி விட்டேன். ஆனால் இயன்ற சிலதைத் தேர்ந்து புகட்டுங்கள்
என் அன்புப் பிள்ளை சிறுவண் தானே!

ஆசிரியருக்கு ரின் வேண்டுகோள்
Teach him if you can
the wonders of books.
But also give him quiet time Toponder the eternal mystery of birds in the sky
bees in the Sun- and
flowers on the greenhillside.
In Schoolteach him
It is far more honourable
to fail than to cheat.
Teach him
to learn to lose
and also to enjoy winning. Teach him always to have
Sublime faith in himself
and faith in mankind.
Teach him neverto puta pricetagon his heart and soul. Teach him if you can
A dollar earned is
more valuable than five found.
Teach him if you can how to laugh when he is sad. Teach him gently but do not cuddle him,
Because only touch offire .
makes fine steel.
This is my big order But see what you can.
He is such a little fellow
My son!

Page 27
பிரசாந்திநிலைய
ஜனவரி Ol ஜனவரி 5 பெப்பரவரி 18
LDT jj= 2.
LDTjö 30
ஏப்ரல் 13
மே O6
யூலை 02 யூலை 20 ஒக்கஸ்ட் 28
செப்டெம்பர் 06 செப்டெம்பர் 18
ஒக்டோபர் 23 நவம்பர் 3 நவம்பர் 19 நவம்பர் 23 டிசெம்பர் 25
σΠυή IDΠ
சந்தாதாரருக்கு
எமது சஞ்சிகை காலாண்டு இ இரண்டாவது இதழாகவே மலர் அனுப்பியவர்களுக்கு அத்ெ அனுப்பப்படும் என்பதைத் தெரி:
வாசகர்கள், முக்கியமாக பக்தர்கள் அல்லாத, ஆனால் மணி சிந்தனை உடைய பெரியோர் தருமாறு வேண்டுகிறோம். நா பெறவேண்டும்.

நிகழ்வுகள் - 2004
புத்தாண்டு விழா தைப்பொங்கல் மகா சிவராத்திரி
உகாதி
ரீஇராம நவமி தமிழ் புத்தாண்டு ஈஸ்வரம்மா தினம்
குரு பூர்ணி LDs T உலக வலுக்குறைந்தேர் தினம் ஓணம் பண்டிகை ரீ கிரு\ண ஜென்மாஷ்டமி கணேச சதுர்த்தி விஜயதசமி தீபாவளிப் பண்டிகை மகளிர் தினம் சுவாமியின் பிறந்ததினம் கிறிஸ்மஸ் பண்டிகை.
ர்க்கம்
fiñe SorafalsiaböSUþës(Uõib
தழானாலும் இவ்வாண்டும் இது கின்றது. ஆண்டு சந்தா ரூபா 100 தாகைக்கு நான்கு இதழ்கள் விக்க விரும்புகிறோம்.
இளைஞர்களை இதுவரை சாயி த பண்புகளை விரும்பும், சர்வமத 5ளை சந்தாதாரராகச் சேர்த்துத் ம் பெற்ற இன்பம் மற்றோரும்
ஆசிரியர் குழு

Page 28
Harikanan Printers,424, K.K.S

Road, Jaffna, T.P:O21-2222717
ད། ཉི་ ... لاتي.\i
懿