கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சாயி மார்க்கம் 2005.01-03

Page 1


Page 2
19.
20.
FTuol Llo Sai Ma
ഥ6):12 ஒரே ஒரு மதம் இதழ் 33 அது அன்பு 3ெ
பொருள
பன்முக சாயி (ஆசிரியர்)
பன்முக சாயி
சாயி என்ற தாய்
சாயி என்ற தந்தை
சாயி என்ற மகன்
சாயி என்ற மாணவன்
சாயி என்ற மருத்துவர்
சாயி என்ற கல்வியாளர்
சாயி என்ற பாடகர் சாயி என்ற சிற்பக்கலைஞர், சாயி என்ற சீர்திருத்த சாயி என்ற மீட்பர், சாயி என்ற கருணையாளன். ச சாயி என்ற உயிர் கொடுப்பாளர் சாயி என்ற இறைவன் தீவிரப் பணியாளர்களாகிய நாம் தெரிந்து கொள்ே பாலவிகாஷ் கல்வி ஒரு உபதேசம் சுனாமி அனர்த்தம், அனர்த்தங்களும் ஆன்மீகமும் சுனாமி அனர்த்தமும் சாயி நிறுவனத்தின் உடனடி கிழக்கு பிராந்திய பூரீ சத்திய சாயி சேவா நிலையங் சுனாமி அனர்த்த சேவைப் பணிகள் சுனாமி கடல் அனர்த்தம் வடபிராந்திய சேவைகள் பூரீ சத்திய சாயிசேவா நிறுவனச் செய்திகள்
இலங்கையில் தனிப்பிரதி e5UT 30/-
வருட சந்தா (4 பிரதிகள்) ரூபா 120/-
வெளிநாடு வருட சந்தா U.S டொலர் 10
ஆசிரியர் வைத்திய கலாநிதி இ.கணேசமூர்த்தி
தொ.பே 2222832 / 222 5580
துணை ஆசிரியர் திரு.S. R.சரவணபவன்
தொலைபே. 222 5442

ார்க்கம் arkam
ஜனவரி - மார்ச் 2005
றும் மதம்
டக்கம்
5வாதி i ாயி என்ற நகைச்சுவையாளர் 12
வாம் 18
21 ப் பிரதிபலிப்பும் 22 பகளின்
23
25
27
(சந்தா அனுப்பும் முகவரி: ஆசிரியருக்கு)
G5T(BGHT6O6U: Sathya Sai SeVa Org (NZ) A/NO. 4023 HNB, Uaffna.
இல. 659, நாவலர் வீதி,
யாழ்ப்பாணம்,

Page 3
“ஓம் பூரீக
பன்முக சாய
“கடவுளை விபரிக்க முனைபவனும் மூடன் கடவுளை விபரிக்கக் கேட்பவனும் மூடன்’ என்பது சுவாமி யின் கூற்று. எப்படியென்றாலும், எமது மனம் முக்கியமாக கொஞ்ச விஞ்ஞானம் அறிவியல் அறிவு கொண்ட மனம், கடவுள் எப்படிப்பட்டவர் என்பதை விபரிக்கத்தான் செய்யும். எமது புலன்கள் மூலம் கிடைக்கும் தகவல்களைக் கொண்டும் எமது அனுபவத்தைக் கொண்டும் பிறரின் கூற்றுக்களின் மூலமும் கற்பனா சக்தியைக் கொண்டும் அறிய முற்படுவோம். எமது புலன்களால் கிரகிக்கக் கூடிய ஸ்தூல ரூபங்களுக்கும் ஆதாரம் சக்தி என்பதை விஞ்ஞானமும் போதிக்கின்றது. g6ivTsiv6MIJGT 6îế5GBTGufufisT sing "Matter and energy are interconvertible" fö5uSlsócsig Giugirsui பொருட்கள் தென்படலாம். எல்லாவற்றிக்கும் அடிப்படை சக்தி என்றால் கடவுள் சக்தியாகத்தான் இருக்கவேண்டும். சக்தியும் பலவகைப்பட்டது. ஒரு சக்தியிலிருந்து இன்னொரு சக்தி விளையலாம். என்பது விஞ்ஞானம் அறிந்ததே. அப்படியென்றால் கடவுள் எல்லாச் சக்திகளுக்கும் அடிப்படையானதொரு சக்தியாகத்தானி ருக்க வேண்டும். இதுவும் உண்மைதான். இதற்கு மேல் விஞ்ஞான அறிவு விளக்கம் கொடுக்க முடியாது திணறுகின்றது. கடவுள் என்ற அடிப்படை மகா சக்திக்கு விழிப்புணர்வு இருக்கிறதே. அது என்றும் எங்கும் ஊடுருவியிருக்கிறதே. அந்நிலையை எட்டினால் பரவசம் இருப்பதை அனுபவிக்கலாமே. இதைத்தான் ஆன்மீக மகான்கள் கடவுள் சத்சித் ஆனந்தம் என்று விபரித்துள்ளார்கள். விபரிக்க முனைந்த ரிஷிகளும் கூட மிகவும் வில்லங்கத்துடன் பின்வருமாறு விபரித்துள்
ளார்கள்.

9 Tull Jr.
பி சூசிரியற்
“தத் துவம் அசி” “அகம் பிரம்மாஸ்மி” “அயம் ஆத்ம பிரம்மர்” “பிரக்ஞானம் பிரம்மா” இக் கூற்றுக்களை புத்தி மூலம் ஓரளவுதான் விளக்கலாம். முழுமையான விளக்கத்தை அனுபவ மூலமே அடையலாம்.
கடவுள் என்ற தமிழ்ச் சொல்லின் அர்த்தம் உள்ளத்தில் இருப்பவனும் உள்ளத்தைக் கடந்திருப்பவனுமென்பதே யாகும். கடவுட் தன்மையை எங்கும் உள்ளவர், எல்லாம் அறிபவர். எல்லாம் வல்லவர் என்றே கூறப்படுகின்றது. திருமூலர் “அன்பே சிவம்” என்று பாடியுள்ளார். கடவுட் தன்மை அன்பு மயமே என்று பகவானும் அடிக்கடி கூறி யுள்ளார். இந்தத் தெய்வீக அன்பு தான் சத்தியமாகவும் தர்மமாகவும் சாந்தியாகவும் அகிம்சையாகவும் பரிண மிக்கின்றது.
அன்பு மயமான எல்லாம் வல்ல இறைவன் மணி தனை மேம்படுத்த பல விதமாக பல பாத்திரங்களாகச் செயற்படுகின்றார். இதை விளக்குமுகமாகவே இவ் விதழில் “பன்முகச் சாயி’ என்ற தலைப்பில் வெளியிடப் பட்டுள்ளது.இதன்மூலம் அளக்க முடியாத, விளக்க முடியாத, விபரிக்க முடியாத ஒன்றைப் பற்றி ஒரளவாவது தெரிந்து கொள்வோமாக.
மேலும் யுகப் பேரழிவு என வர்ணிக்கக் கூடிய சுனாமி அலைத்தாக்கத்தினால் இலங்கையில் ஏற்பட்ட அழிவுகளில் சாயி நிறுவனங்கள் எந்த அளவில் பங்கு பற்றின என்ற விபரத்தையும் பதிவுசெய்ய வேண்டுமென்ற நோக்கில் சுனாமி அனர்த்தங்களில் ஒரு ஆன்மீகக் கண் ணோட்டம் என்ற ரீதியில் அவைபற்றிய விபரங்களையும் சேர்த்துள்ளோம்.
- ஆசிரியர் -

Page 4
"gh
பன்மு
இந்தப் பிரபஞ்சம் என்கின்ற பிரம்மாண்டம் என்ப தில் ஒவ்வொரு தனிப்பட்ட உயிரும் ஒரு சிறிய அண்டமே என்று பாபா சொல்வார். அதாவது ஒவ்வொரு உயிரும் ஒரு சிறிய பிரபஞ்ச அமைப்பே ("அண்டப்பகுதியின் உண்டைப் பிறக்கம்'- திருவாசகம்) இந்தப் பேரண்டத் தின் ஒரு சிறு பகுதியாக இருக்கும் ஒவ்வொரு உயிரும், இந்தப் பேரண்டத்தில் உள்ள ஒவ்வொன்றையுமே தன்ன கத்தே நுணுக்கமாகக் கொண்டிருக்கிறது. ஆகவே ஒரு சில பகுதிகளில் முழுமைகளில் மலரும் போது அந்தத் துறைகள் அதில் பரிணமிக்கும். ஆனால் சில துறைகள் மறைமுகமாக இருந்து கொள்ளும். முழுமையாகப் பரிண மிப்பவை பாடலாகவோ, சிற்பக்கலையாகவோ, மருத்துவத் துறையாகவோ, பொறியியல்துறையாகவோ, ஒவிய மாகவோ, கவிதைத் தன்மையாகவோ, விஞ்ஞானத்தன்மை யாகவோ, தத்துவத்துறையாகவோ, ஞானியாகவோ இருக்கலாம். பழைய கர்மமும் பெற்றோருடைய கர்மமும் சூழ்நிலையும் தனிப்பட்டவருடைய ஆளுமைகளை அபி விருத்தி செய்வதில் பங்களிக்கின்றன என்று கருதிக் கொள்ள வேண்யுள்ளது.
ஆனால் அவதாரத்தைப் பொறுத்தவரையில் பிரபஞ்சத்தின் எல்லாத் தன்மைகளும் அதில் பூரணத் துவம் பெற்றிருக்கும். இன்னும் வேறு வார்த்தைகளில் சொல்வதானால் எல்லாத்துறைகளும் அவற்றின் அதீத மான தன்மையையும் பூரணத்தன்மையின் முழுப் பரி மாணத்தையும் மனித வடிவுள் பொதிந்திருக்கும். தன்னு டைய எங்குமான தன்மையைப் பற்றி சுவாமி விபரிக்கும் போது, ஒருவர் தனது உடலில் சிறு எறும்பு ஊர்வதையும் தெரிந்திருப்பது போல பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அசை வையும் என்னால் அறிந்து கொள்ள முடியும் என்பார். நான் கடவுள் அதேபோல் நீயும் கடவுள் தான் என்ற பொதுக் கொள்கைகள் இதற்குப் போதிய அத்தாட்சியாக இருக் கின்றன. ஆம் இந்த முழுப் பிரபஞ்சமுமே அவருடைய திரு வுடல். அந்தத் திரு உடலின் உயிர், அவருடைய மூச்சுக் காற்று. மனித முயற்சியின் ஒவ்வொரு பகுதியும், அதனுடைய நிறைவும் அவருடைய பிரம்மாண்டமான ஆளுமையின் ஒருமுகம். ஒவ்வொரு துறையிலும் பகவானு டைய அதி நுட்பமான முன்மாதிரி அப்படியே பின்பற்றக் கூடியது. "என்னுடைய வாழ்வே எனது செய்தி” என்று

HTuຫຼື prth
efnruff
சொல்லப்படும் போது அவருடைய அன்பை ஒழுங்கை அவை அவரில் தானாகவே மலர்வதை நாங்கள் அறிந்து, தெளிந்து மிகுந்த ஆர்வத்துடன் பின்பற்றக்கூடியது. அவருடைய அமைதியான மனித குலத்திற்குகந்த மாட் சிமை தங்கிய தோரணைகள் அவருடைய சமநிலையை யும், அமைதியையும் பற்றி விபரிக்கக்கூடியவை.
"கலைக்களஞ்சியத்தை நிகர்த்த அவருடைய அறிவு வியப்படைய வைக்கக்கூடியது. பெயர்சொல்லக் கூடிய அளவுக்கு அவர் எந்தப் பாடசாலையிலும் கற்க வில்லை. மாவோயிசம் என்ன, லெனினிசம் என்ன எதனுடைய தத்துவங்களையும், வேறுபாட்டையும் அவர் விபரிக்கக்கூடியவர். வேதவிற்பன்னர்கள் வேதம் ஒதும் போது அவருடைய உச்சரிப்பைத் திருத்துவார். கல்வியாளர்களுடன் கல்வியைப் பற்றியும் அரசியற் தலைவர்களுடன் அரசியற் திறமைகளையும், பொறியியலாளர்களுடன் கட்டட அமைப்புகள் பற்றியும், சிற்ப வல்லுனர்களுடன் மாடமாளிகைகளின் அலங்கார அமைப்புக்களையும், எண் சாஸ்திர நிபுணர்களுடன் எண்களைப் பற்றியும், மனித இன ஆராய்ச்சியாளர் களுடன் விடுபட்டுப் போன தொடர்புகள் பற்றியும், மருத்துவ நிபுணர்களுடன் நுண்ணங்கிகளின் சிக்கலான தாக்கங்கள் பற்றியும் விலா வாரியாக வியளிப்பார். அவர் உளவியல் வல்லுனர். குழந்தைகளின் மன ஓட்டத்தையும் யோகிகளின் சிக்கலான பிரச்சினைகளையும் ஒன்றாக அறிந்தவர். மனித உணர்வுகளின் எல்லையற்ற நெகிழ்வுத் தன்மையை அறிந்தவர். அந்த அறிவின் வீச்சு அதன் ஆழம் ஒரு விடயத்திலிருந்து இன்னொரு விடயத்திற்கு ஒருவித மனித உணர்விலிருந்து, இன்னொரு மனித உணர்வுக்கு மாறுகின்ற இலாவகத்தன்மை, அவர் மனித இனத்தின் ஆத்மாவாக இருந்தாலொழிய, வேறொருவரின் எல்லை களுக்கு அப்பாற்பட்டது. அவர் கடவுள். அரச கம்பீரத் துடன் “ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு மர்றக்கூடிய வர்”
இந்த வார்த்தைகள் சிறந்த கல்வியாளரும் பிரசாந்தி நிலையத்திலுள்ள சத்தியசாயி பல்கலைக்கழகத்தில் முதலாவது உபவேந்தருமாக இருந்த விநாயக்கிருஷ்ணா கோக்கக் அவர்கள் ஒரு உலகக் கல்வியாளர்கள் நிறைந்த
2

Page 5
ஒரு மாநாட்டில் பகவானின் பன்முகத்தன்மை பற்றிச் சொன்ன வார்த்தைகள்,
கீழே தரப்படுவது உலகப் பேர்பெற்ற இந்திய விஞ்ஞானியான காலஞ்சென்ற கலாநிதி S. பகவந்தம் அவர்கள் பகவானைப் பற்றிச் சொன்ன வார்த்தைகள்.
“இந்த உலகிலுள்ள பலர் பல பொருட்களைப் பற்றி யும், பல சூழ்நில்ைகளைப் பற்றியும் பெற்ற அனுபவங்கள் அவர்களால், அவர்களுக்குள் மட்டுமே அனுபவிக்கக் கூடியது. இந்த அனுபவங்களைப் பெற்றிருக்காத மற்ற
afnuf 66
முழுமையான அன்பின் உருவமே சாயி மாதா அவருக்குப் பிறருடைய பிழைகளை மறந்தும், மன்னித் தும் - அவர்களைத்திருத்தி, உயர்த்தி நல்வழியில் சேர்க்க மட்டுமே தெரியும். அன்புக் கோலினாற்றான் தண்டிப்பார். அகப்புற அழுக்குகள் யாவும் அவரது தூய்மையான அன்புப் பெருக்கினால் அடித்துச் செல்லப்படுகின்றது. தன் குழந்தைகளின் பராமரிப்பில் மிகவும் நுணுக்கமான கவனத்தைச் செலுத்துவாள்.
தன்னுடைய ஒரே ஒரு சொத்தாகக் கருதும் மாண வர்களை சாயி மாதா கவனிக்கும் முறையைப் பார்த்தால், இவ்வுலகில் வாழும் உலகியல் தாய்மார்கள் - கூட வெட்கித் தலைகுனிய வேண்டும். அவருடைய பார்வையும் புன்னகையும் உண்மையான உள்ளங்கனிந்த அன்பினால் அவர்களை அரவணைக்கும் அவருடைய அன்பின் பிரகாசத்திலும், ஞான ஒளியிலும் திளைத்த மாணவர் களும் அம்மாதிரியாகப் பகவானின் அன்புக்கு இணை யானது என்று கூறமுடியாது. பகவானின் அன்புக்கு இணையான அன்பைப் பொழிய யாரால் முடியும்? ஒரு பெருமையுடைய தாய் போலிருந்து தமது பிள்ளைகளின் வேதபாராயணத்தையும், உரையாற்றுவதையும் கேட் கின்றார்.
ஏனைய வயது வந்தவர்களின் விடயத்திலும் அவர்களுடைய உண்மைத் தாய் அல்லாத போதும் அதேயளவு சிறந்த அன்பைப் பொழிகின்றார். அவருடன் பயணஞ்செய்தவர்கள் இதற்குச் சான்று பகர்வர். நல்லதிஷ்டம் வாய்க்கப் பெற்ற கஸ்தூரி அவர்கள்,

வர்கள் நன்மைக்காக போதுமான அளவு விளங்கப் படுத்தவோ விபரிக்கவோ முடியாதது. பூரீ சத்தியசாயி பாபாவினுடைய நேர்முகச் சந்திப்பு மிகக் குறுகியதாக இருந்தாலும், அதுவும் முன் சொன்ன அனுபவத்தை நிகர்த்ததே. அவருடைய பேரறிவும், இன்னொருவர் பெற்றுக்கொள்ள முடியாததொன்று. அவர் அந்தப் பேரறிவுடனேயே இந்த மண்ணுலகத்திற்கு வந்துள்ளார். வியாபாரத்திலிருந்து ஆத்மீகம் வரைக்குமான அவரு டைய அறிவுரைகள் அவருடைய ஞானத்தை வெளிப் படுத்தக் கூடியவை.
ன்ற தாய்
சுவாமியுடன் பல தடவைகள் பயணஞ்செய்த பாக்கிய சாலி, ஆகையால் சுவாமியின் சரிதத்தை எழுதும் பாக்கியம் பெற்றவர். தனது சுயசரிதையில் நேசமுள்ள பகவான்’தானே தன் கைகளினால் வெந்நீர்ப்போத்தலில் உள்ள காப்பியைப் போட்டார். வண்டி நின்றதும் பக்தர் களுக்கு கோப்பியை ஊற்றிப் பகிர்ந்தளிப்பார். மதிய போசனமும் இவ்வாறே பகிர்ந்தளிக்கப்படும். அன்பான தாயார் தமது பிள்ளைகளுக்கு ருசிக்க உணவுப் பதார்த் தங்களை அதிகம் உண்ணும்படி தெண்டித்துக்கொடுப்பது போல சுவாமியும் பக்தர்களுக்கு உணவை மேலும் உண் ணும்படி உவகையுடன் வழங்குவார். குறிப்பாகச் சில உணவு வகைகள் சில பக்தர்களுக்குத் தீங்கானது என் றால் மட்டுமே அவற்றை அவர்களுக்கு வழங்கமாட்டார்.
கஸ்தூரி அவர்கள் தமது அன்புத் தெய்வத்தை தானே விபரிக்கும் முழுமையான விபரணத்தைக் கேட்போம். தரையிற் பிரயாணம் செய்யும் போது சுவாமி அவர்கள் தமது மோட்டார் வண்டியில் காலை, மதிய, இராப் போசனங்களையும், இடை நேரங்களில் உண்ணக்கூடிய சிற்றுண்டி வகைகளையும், பழங்களையும், நிறைத்துக் கொண்டு வருவார். நிழல் நிறைந்ததும் பூக்கள் பூத்துக் குலுங்கும் இரம்மியமான இடத்தைத் தேர்ந்து அந்த இடத்திலே கம்பளத்தை விரித்து, உணவு பரிமாறுவதற் கான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்வார். சாயி மாதா அனைவருக்கும் மத்தியில் அமர்ந்து விடுவார். பலமான குரலில் நயமான வார்த்தைகளைப் பேசுவார். பிள்ளை களாகிய நாங்கள் கோப்பைகளை நீட்டிய வண்ணம் இருப் போம். உணவின் ஒவ்வொரு வகையையும் கோப்பையில்
3

Page 6
வைப்பார். பக்தர்கள் சுவாமி வழங்கும் உணவுகளை சமிபாடு கருதியோ, ஒவ்வாமை கருதியோ, விருப்பு, வெறுப்பு, வேறு ஏதும் கருதியோ போதும் என்றோ, வேண்டாம் என்றோ கூறமாட்டார்கள். தெய்வீகக் கரங்களால் வழங்கப்படும் உணவுமுழுவதையும் மட்டில்லா மகிழ்ச்சியோடு உண்டு விடுவார்கள். எனவே பாபா யாருக்கு என்ன உணவு, எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதைத் தீர்மானித்தும், தவிர்க்க வேண்டியவற்றைத் தவிர்த்தும், உற்சாகப்படுத்தியும் ஊட்டுவார். "உனக்குச் சிறிது நீரிழிவு இருக்கிறது"உனக்கு எண்பது வயதுக்கு மேலாகிவிட்டது” “இவ்வூறுகாய் உன்னுடைய இடத்தில் பிரபல்யமானது” இவ்வகையாக விளக்கமளித்தபடியே உணவைப் பரிமாறுவார். பகவான் எம்முடனேயே காலை உணவையோ, மதிய போசனத்தையோ சேர்ந்து உண்ணு வார். தான் அளித்த உணவை நாம் உண்ணும் விதத் தைப்பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைவார். மோட்டாரில் பயணஞ்செய்யும் பொழுதுகூட தனது பையிலிருந்து பிர காசிக்கும் அப்பிள் பழங்களை ஒவ்வொன்றாக எடுத்துச் சிறுதுண்டுகளாக வெட்டி ஒவ்வொருவருக்கும் தன் கையி னாலேயே வழங்கி உண்ணும்படி உற்சாகமூட்டி ஆனந்தம் அடைவார். நான் செயற்கைப் பற்களால் அப்பிள் தோலைக் கடிக்க முடியாது சங்கடப்படும் நிலையை அவ தானித்த சுவாமி அவர்கள் அப்பிளின் தோலை நீக்கி எனக்குத் தந்தார்.
இன்னும் ஒரு சந்தர்ப்பத்தில் பகவானும் வேறு சிலரும் திருச்சிராப்பள்ளியிலிருந்து பல்லாமன்னாரூடாக பங்களூருக்கு மோட்டார் வண்டியிற் சென்றனர். வனத் திலுள்ள ஒரு வாடிவீட்டை அண்மிக்கும் போது இரவு பத்து மணியாகிவிட்டது. அத்துடன் அவர்கள் அந்த உணவு விடுதியிலேயே இரவு உணவை உட்கொள்ள வேண்டியிருந்தது. அதிஷ்டவசமாக அவ்வுணவு விடுதி பூட்டப்படவில்லை. அங்கு கடுமையான குளிரிலிருந்து அவர்களைப் பாதுகாக்க போர்வை வசதிகள் இல்லாமலே இருந்தது. ஒரு சாயி அடியாரான பொறியியலாளரால் வழங்கப்பட்ட சால்வையை உபயோகிக்கும்படி சுவாமியை எல்லோரும் வேண்டினோம். அமைதியான சூழ்நிலையில் துயில் எம்மை ஆட்கொண்டுவிட்டது. அதிகாலையில் வெறும் நாணற் புல்லினால் செய்யப்பட்ட பாயிலிருந்து நித்திரை விட்டெழுந்த பொழுது அச்சால்வை எனது உடலில் தலையிலிருந்து கால்வரை போர்த்தப்பட்டு எனது உடலின் உஷ்ணத்தைக் காப்பாற்றியதை உணர்ந்தேன். தாயாகிய பாபா என்னுடைய உறக்க வேளையில்

சத்தஞ்செய்யாது வந்து மெதுவாக அந்தப் போர்வையை என்மீது போர்த்துவிட்டார். நான் கண்ணிர் சிந்தி எனது அதிஷ்டத்தையும் நன்றியையும் தெரிவித்தேன். அவர் எமக்கு கற்பித்த பாடத்திற்கு வேறு எப்படி நாம் எமது நன்றியைத் தெரிவிக்கலாம்.
1982இல் சுவாமி போபாலுக்கு (மத்திய பிரதேசம்) விஜயஞ்செய்த பொழுது அவர் அங்கிருந்து திரும்பிய நகரூடாகப் பெங்களூருக்கு வருவதற்கு வாடகைக்கு ஒரு விமானம் அமர்த்தப்பட்டது. இந்திய விமானப் படையிலிருந்து இளைப்பாறிய பூரீமான் R.C. சொந்தி என்பவரை அவ்விமானத்தின் விமானியாகக் கடமையாற்றும்படி மத்திய பிரதேசத்தின் சத்திய சாயி சேவை அமைப்பு ஏற்படுத்தியிருந்தது. அவ்விமானத்தில் பகவானையும், விமானியையும் தவிர ஏழுபேர் இருந்தனர். விமானம் பறக்கும் பொழுது சுவாமி விமானியின் அருகிலிருந்து தோடம்பழத்தை உரித்து விமானிக்கு ஒவ்வொரு சுளையாக மிக அன்போடு கொடுத்தார். ஆனால் சொந்தி அவர்கள் மரியாதை காரணமாக ஒன்று இரண்டு சுளைகளுடன் பெற மறுத்துவிட்டார்கள். அதன் பின்பு கழிவிரக்கத்தினால் கண்ணிர் விட்டார். பகவான் திடீரென்று நவரத்தினக் கற்கள் ஒன்பதும் பதித்த, எவராலும் விலை மதிக்க முடியாத தங்க மோதிரம் ஒன்றைச் சிருஷ்டித்து வழங்கினார்.
ஒருவர் சுகவீனமுற்றவேளை அல்லது காய மடைந்த வேளை அவருடைய கருணையுள்ள கவனமான பாதுகாப்பு ஒரு பறவை தன்குஞ்சை சிறகில் வைத்துக் காப்பதை ஒக்கும். 1969 ஆம் ஆண்டு ஆபிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பொழுது மோட்டார் வண்டியில் திரு.கஸ்தூரியும், திரு.ராஜா ரெட்டியும் இருந்தனர். அப்பிராயணத்தில் சிறு விபத்து ஏற்பட்டு திரு.கஸ்தூரிக்குச் சிறுகாயங்கள் ஏற்பட்டன. இதுபற்றி திரு. கஸ்தூரி அவர்கள் தனக்கே உரிய பாணியிற் கூறுவதாவது:"கிழக்கு ஆபிரிக்க சுற்றுப்பயணம் எனக்கு இரண்டு விலைமதிக்க முடியாத நல்லருளைப்பொழிந்தது. முதலாவதாக நான் பயணித்த மோட்டார் வண்டி விபத்து - அதில் சிறுகாயங்கள் ஏற்பட்டு அதனால் சாயிமாதாவின் கருணை என் மேல் ஏழு நாள்கள் முழுமையாகப் பொழிய ப்பட்டமை. எனது நீண்ட நாள் ஆவல் நான் சுகவீனமுற்று சாயி மாதாவால் பராமரிக்கப்படவேண்டும் என்பது இவ்விரண்டையும் ஆபிரிக்கக் கண்டம் அவ்வரப்பிரசாத த்தை எனக்களித்தது. இது சாயியின் தாய் என்ற முகம்.

Page 7
“ஓம் பூரீக
asmusĩ 6d
தந்தை என்ற முறையில் சாயிபாபா மிகவும் கட்டுப்பாடு, ஒழுங்குகளைப் பின்பற்றுபவர் ஆவார். கட்டளைகளை மீறுபவர்களைச் சிறிதும் சகிக்கமாட்டார். அவர்கள் சாயி அமைப்பில் இருந்தாலும் சரி, வெளியே இருந்தாலும் சரி, "தடையின்றி எனது கட்டளைகளை நிறைவேற்றுதல் சேவையில் ஈடுபடும் போது கீழ்த்தரமான அடங்காத ஆசைகளுக்கு இடங்கொடுத்தல் மிகவும் பிழையான செயல். மரியாதைக் குறைவான சொற்களை, தற்செயலான உரையாடலில் கூட நான் விரும்பவில்லை. ஆண்களும், பெண்களும் குழுக்களாகக் கூடிக் கதைப்பதைத் தவிர்க்கவேண்டும். முக்கியமாக ஆன்மீக சாதனைகள் நடைபெறும் போது இதை முக்கியமாகக் கவனிக்கவேண்டும்”. நீங்கள் நேர்மை, மரியாதை போன்றவற்றிக்கு உதாரண புருஷர்களாக விளங்க வேண்டும். என்று பாபா வழி காட்டுகிறார்.
திரு. கஸ்தூரி அவர்கள் “மடையன்” என்ற வார்த்தையைத் தமது விருப்பவினத்தைக் காட்ட அடிக்கடி பழக்க தோஷத்தில் பேசி வந்தார். பாபா ஒருமுறை “தெரிந்தோ, தெரியாமலோ ஒருவருடைய சுய மரியாதையைப் பாதிக்குமளவிற்கு கூடாதென்று மிகக் கடுமையாகக் கடிந்து கொண்டார். அத்துடன் திரு.கஸ்தூரி அந்தப் பழக்கத்தை மாற்றிக் கொண்டார்.
பகவான் தந்தை என்ற ரீதியில் தனது கிட்டவுள்ள தொலைவிலுள்ள இரு சாராரையும் நன்கு கவனித்துக் கொள்கிறார். ஒரு பக்தருடைய வீட்டில் விருந்தினராக இருந்த சமயம் ஒரு விருந்தாளி, விருந்தளிப்பவரை ஒரு குவளை மோர் கேட்டு வாங்கி உண்டார். எதிர்பாராத விதமாக பாபா அவ்வறைக்குச் சென்று யன்னலருகே இருந்து குவளையைக் கண்டு விசாரித்தார். அப்போது அவர் ஒரு தகப்பனுக்குரிய அதிகாரத்துடன். அப்பிழை யைச் சுட்டிக் காட்டி, விருந்தளித்தவருக்கு கூடிய மனக் கஷ்டத்தை, வசதியீனத்தை உண்டுபண்ணாமல் அளிக்கப்பட்டவற்றுடன் மனத்திருப்தியுடன் ஏற்கவேண்டு மெனவும், மனதை அடக்கிக் கொள்ள வேண்டுமெனவும் கூறினார். பகவான் அவருக்கு விருந்து ஒழுங்குகளையும்

Fாயி ராம்”
ற தந்தை
சொல்லி, இரண்டாவது முறை எதையும் கேட்காமல் தவிர்க்க வேண்டுமெனவும் கூறினார்.
அவருடைய பக்தர்களிடையே உள்ள பழக்க தோஷ குறைபாடுகளை அவர்களின் காதுகளுக்கு எட்டும்படியாக முதல் முறை சொல்லுவார். அப்படி மாற்றிக் கொள்ளாது விட்டால், நேரடியாக அழைத்து ஆவன செய்து திருத்துவார்.
திரு.கஸ்தூரி அவர்கள் 30 வருடங்களாக மூக்குத்தூள் பாவிக்கும் பழக்கம் உடையவர். அவர் பாபாவுடன் ரிஷிகேசத்திற்கும் அது போன்ற ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கும் பயணத்தை மேற்கொண்டார். எனவே அவர் தமக்கு தேவையான அளவு மூக்குத் தூளைச் சேமித்துக் கொண்டார்.
சுவாமி சிவானந்தருடைய ஆச்சிரமத்தில் பாபா வும், கஸ்தூரியும் தங்கியிருந்தபோது, ஒரிரவு நித்திரைக்கு ஆயத்தம் செய்யும் போது பாபா தனது குடிசையிலிருந்து திரு.கஸ்தூரியும் வேறு ஐவரும் படுக்கையை ஆயத்தம் செய்யும் இடத்திற்குப் போனார். அவரைத் தொடர்ந்து சுவாமி சதானந்தரும், சுவாமி சச்சிதானந்தரும் அங்கு வந்தனர். பாபா, கஸ்தூரியின் படுக்கை அருகே சென்று அவருடைய தலையணையை உயர்த்தி அங்கிருந்த மூக்குத்துள் குப்பியைக் காண்பித்தார். பாபா அவரைக் கடுமையாக நோக்கி ஒரு சொல்லுச் சொன்னார். “அசுத்தம்” இது திரு.கஸ்தூரிக்கு பெரும் மனச் சங்கடத்தை ஏற்படுத்தி விட்டது. அதை எடுத்து தூரவீசி எறிந்து விட்டு "இனிமேல் அதனைச் செய்யமாட்டேன். இந்தக் கணமே அதனை விட்டுவிடுகிறேன்.” என்று பணிவுடன் கூறினார். உடனே கைமாறாகச் சுவாமி அவரை மிருதுவாகத் தட்டிக் கொடுத்தார். பாபாவின் நேசம் அல்லது கடுமை எவரையும் திருத்தி நல்வழிப் படுத்தி நிரந்தரமான பெருநன்மையை உண்டுபண்ணும்.
இது பாபாவின் கண்டிப்பும், வழிகாட்டலும் நிறைந்த தந்தையின் முகம்.

Page 8
“ஓம்
aru 6
சாயியை மகன் என்ற நிலையில் வைத்து ஒரு மகன் எப்படி இருக்கவேண்டுமோ அப்படி வாழ்ந்து காட்டினார். அவர் தனது உலகப் பற்றுக்களை சிறு வயதிலேயே விட்டுவிட்டாலும் தனது பெற்றோரின் தேவைகளைக் கவனிக்கத் தவறவில்லை.
இளம்பிராயமான 3 வயதிலேயே மனிதர்களின் கஷ்டங்களைக் கண்டு பாபாவின் இதயம் உருகும். பிச்சை எடுப்பவர்கள் வாசலில் வந்து குரல் எழுப்பினாலும் சத்தியா விளையாட்டைவிட்டு உணவோ அல்லது அரிசியோ கொடுத்துவிட்டுத்தான் செல்வான். இதற்காக தனது உணவைக் கூடத் தியாகம் செய்துள்ளான்.
ஈஸ்வரம்மாவிற்கும் மற்றைய தாய்மார் போல, உயர்ந்த இந்து ஸ்தலங்களை தரிசிக்கவேண்டுமென்ற ஆசையை வைத்திருந்தார். ஆனால், தன்மகன் யாரென்று உணர்ந்திருந்த அந்தத் தாய் இந்த ஆசையை வெளிப் படுத்தவில்லை. ஆனால் எல்லாவற்றையும் தெரிந்திருந்த கடவுளான சாயி. அவரை 1960ஆம் ஆண்டில் அயோத்தி, காசி, பிரயாகை போன்ற இடங்களுக்கும் 1961இல் பத்திரிநாத்திற்கும் கூட்டிச் சென்றார்.
அன்னையின் புனிதமான எண்ணங்களை நிறை வேற்றிவைத்தவர். ஒரு முறை தாயிடம் அவருடைய விருப்பங்கள் ஏதாவது உண்டா என்று கேட்டார். அவர் கூறினார் "புட்டபர்த்தி ஒரு குக்கிராமம். இங்கு பள்ளிக் கூடம் இல்லை. குழந்தைகள் பக்கத்துக்கிராமங்களுக்கு
தமது பெற்றாரை வணங்கிக் கொள்ளுதலும் அவ்வாறே ஒவ்வொரு நாட்டு மக்களினதும் பண்பாட்டுப்பின்புலம் என்பவற்றை நயப்புற்று வேண்டும். உண்மையில் தனது நாட்டின் செல்வங்களையும் அறியாதவன் தனது தாய் த
-

Fru ymh”
புற மகன்
வெகுதூரம் செல்லவேண்டியுள்ளது. இங்கு ஒரு பள்ளிக்கூடம் கட்டித் தாருங்கள் என்றார். சுவாமியும் அவ்வாறே செய்தார். “இன்னும் ஏதாவது ஆசை இருந்தாலும் கூறிவிடு” என்று சுவாமி கேட்டார். கோடைகாலத்தில் குடிநீர்ப்பஞ்சம். கிராமத்தில் சிறு கிணறுகள் வெட்ட ஏற்பாடு செய்யுங்கள் என்றார். சுவாமியும் அவ்வாறே செய்தார். அதேபோல் மருத்துவ மனை இல்லை. இங்கு மருத்துவமனை கட்டவேண்டும் என்று கேட்டு அதனையும் நிறைவேற்றி வைத்தார்.
அந்தப் புனித எண்ணங்களுடைய தாயின் விருப் பங்கள் மூன்றும் இன்று பிரம்மாண்டமான வளர்ச்சியை அடைந்துள்ளன. பாடசாலைகள் பல்கலைக் கழகங்களாகவும், தண்ணீர்த் திட்டம் ராயல்சீமா, ஆந் திரப் பிரதேசம் முழுவதுக்குமான பாதுகாக்கப்பட்ட குடிநீர்த் திட்டமாகவும், மருத்துவமனை உலகத்தரம் வாய்ந்த அதிவிசேட மருத்துவமனையாகவும் வளர்ச் சியடைந்துள்ளன. “பாலுக்குப்பாலகன் வேண்டி அழு திடப் பாற்கடல் ஈந்த பிரான்” என்ற பாடலே ஞாபகம் வருகிறது. 1972 ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் திகதி ஈஸ்வரம்மா உயிர் பிரியும் வேளை அருகில் இருந்து அவருடைய கண்ணெதிரிலே உயிர்விட்டார்.
இவ்வாறாக ஒரு மகன் தனது பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டுமென்பதை உல கிற்குக் காட்டியுள்ளார்.
மதிப்பளித்தலும் ஒவ்வொருவரின் கடமையாகும். கடமை. அந்த நாட்டின் வரலாற்றுப் பின்புலம், அவ்விரண்டையும் தாய் தந்தையராகக் கொள்ள வரலாற்றுச் செல்வங்களையும், பண்பாட்டுச் தந்தையரை அறியாத மூடனுக்குச் சமனானவன்.
TT

Page 9
“ஓம் பூரீ
asmusĩ 6rdir
அடுத்ததாக நாம் சாயி எப்படி ஒரு இலட்சிய மாணவனாக விளங்கினார் என்பதைப் பார்ப்போம்.
சத்தியாவின் மாணவப் பருவத்தில் தனது வகுப்பில் முதல் மாணவனாகத் திகழ்ந்தான். சத்தியா தான் வகுப்பு “மொனிற்ரர்’ ஆகவும் நியமிக்கப்பட்டான். ஒருமுறை தவறுசெய்த மாணவர்களைத் தண்டிக்கும் பொறுப்பு “மொனிற்ரர்’ இடம் கொடுக்கப்பட்டது. தண்டனை கொடுப்பது சத்தியாவுக்கு முடியாத காரியம். அடிக்கும் போது ஓங்கிக்கையை உயர்த்தி கையில் மெதுவாகத் தட்டுவார். இதனை அவதானித்த ஆசிரியருக்கு கோபம். சத்தியாவிடமிருந்து பிரம்பைப் பறித்து எப்படி அடிப்பது என்பதை சத்தியாவிலேயே செயல்முறை விளக்கம் கொடுத்தார். எல்லா அடிகளையும் சத்தியா புன்முறுவலுடன் ஏற்றுக் கொண்டான். தான் எவ்வளவு துன்பப்பட்டாலும் மற்றையோர் துன்பப்படக்கூடாது என்பதிலும், மற்றையோரின் துன்பங்களைத் தான் ஏற்றுக் கொள்கின்ற பண்பும் மாணவப் பருவத்திலேயே அமைந்திருந்தது என்பதனை இச்சம்பவம் எடுத்துக் காட்டுகிறது.
அடுத்து மாணவனாக இருக்கும்போது புஸ்பக கிரி ஆலயத் திருவிழாவுக்கு சத்தியாவின் பாடசாலை சாரண மாணவர்கள் சேவைக்காக செல்ல இருந்தனர். சத்தியாவும் சாரண இயக்கத்தின் உறுப்பினராக இருந்தார். சாரண மாணவர்கள் எல்லோரும். சத்தியாவும் தங்களுடன் வரவேண்டுமென அடம்பிடித்தனர். சத்தியாவுக்கோ எதுவுமே கூற முடியாத நிலை. ஒன்று அவரிடம் இருந்தது பாடசாலை உடுப்பு ஒன்று தான். சாரண உடுப்பு இல்லை. மற்றது செல்லும் மாணவர்கள் போக்குவரத்துச் செலவுக்காக 12 ரூபா செலுத்த வேண்டும். மேலதிகமாக சாப்பாட்டுச் செலவையும் அவரவரே பொறுக்கவேண்டும். இவ்வளவு பணம் அவரிடம் இல்லை. இவற்றை வெளியே சொல்லி அவர் குடும்ப கெளரவத்தைக் குறைக்கக்கூடாது என்ற பிடிவாதம் வேறு.

5 சாயி ராம்”
மாணவன்
சேவைக்குச் செல்லும் நாள் வந்தது. மாணவர்கள் வீட்டுக்கு வந்து வரும்படி வற்புறுத்தினார்கள். அப்போது தனக்கு வயிற்றுவலி என்றும் தன்னால் வரமுடியாது எனவும் படுக்கையில் புரண்டபடி கூறினார். வேறு வழி இன்றி அவர்களும் சத்தியாவை விட்டுவிட்டுச் சென்று விட்டனர். உடனே அவர் தனது புத்தகங்களை ஒரு ஏழை மாணவனுக்கு அரை வாசி விலைக்கு விற்க முற்பட்டார். அது கூட அந்த ஏழை மாணவனினால் கொடுக்க முடியவில்லை. ஏதோ தரக் கூடியதைத் தாவென்று கேட்டு வாங்கினார். அவர் ஐந்து ரூபாய் மட்டும் உள்ளதென்றும் அதையும் சில்லறையாகக் கொடுத்தான்.
சில்லறைக் காசுகளை ஒரு பழைய துணியில் கட்டி பொட்டலமாக வீடு கொண்டு சென்றபோது அந்தத் துணி கிழிந்து சில்லறைக் காசுகள் நிலத்தில் விழுந்தன. சத்தம் கேட்டுப் பெரிய தாயார் வந்து தங்கள் வீட்டுக் காசைத்தான் இவன் திருடிவிட்டான் என்று சத்தம் போட்டு பகிரங்கப்படுத்தி உரிய தண்டனையும் வழங்கிப் பணத்தையும் பறித்துவிட்டார். கையிலிருந்த காசும் போய் விட்டது. சேவைக்காக கால் நடையாகக் கிளம்பினான் சத்தியா. வழியில் தண்ணிரை மட்டும் அருந்தி இரண்டு நாளுக்குப் பின் புஸ்பகிரி ஆலயத்தை அடைந்து அங்கு மற்றைய மாணவர்களுடன் இணைந்து சேவைப்பணி யாற்றினான். உணவு இல்லை. தான் சாப்பிட்டு விட்டதாக மற்றைய மாணவர்களுக்கு பாசாங்கு செய்வார். கடைசி நாள் சக மாணவர் ஒருவரிடம் 50 பைசா கடனாக வாங்கி வீட்டில் உள்ளவர்களுக்கு இனிப்பு வகைகளும், பழவகைகளும் வாங்கிக் கொண்டு சென்றார். வீடு சென்றதும் இவ்வளவு நாளும் தண்ணீர் அள்ளித் தரவில்லை என்ற ஆத்திரத்தில் பெரியப்பாவிடம் அடியும் வாங்கிக் கொண்டார். அந்தச் சந்தர்ப்பத்திலும் எதுவும் பேசாது நிதானமாக நடந்துகொண்டார்.
இன்னும் பல சம்பவங்கள் உண்டு. இவை ஒரு மாணவன் எப்படி இருக்கவேண்டும் என்ற போதனையாக அமைந்துள்ளன. இது பகவானின் இன்னொரு முகம்.

Page 10
“olha சாயி என்ற
16-12-1995 இல் பிரசாந்தி நிலையத்தில் நடைபெற்ற இதய மருத்துவ நிபுணர்கள் மகாநாட்டில் பகவான் ஆற்றிய உரையின் ஒரு பகுதி.
உணவும், நீரும், பழக்கங்களும், கேள்விகளும், எண்ணங்களும் எல்லாம் ஒரு மிதமான கட்டுப்பாட்டிற் குள் மனிதனால் அடக்கி வைத்திருக்க முடியுமானால் அவனுக்கு மகிழ்ச்சி அளவின்றிக் கிடைக்கும். வாழ்க்கை முழுவதும் கட்டுப்பாட்டிற்குள் இருப்பது தான் நல்லது. இந்த வாழ்க்கையில் நாம் உண்ணும் உணவும் அளவோடுதான் உண்ணவேண்டும். BE ALWAYS MODERATE NEVER GO TO EXCESSES.
மனித வாழ்க்கை மிகவும் மதிப்பு மிக்கது. உடல் பல விசித்திரங்கள் கொண்டது. இந்த உடல் என்ற இயந்திரத்தில் இதயம் என்பது மிகவும் விசித்திரமானது. இதன் இரகசியத்தை இதுவரைக்கும் எந்த விஞ்ஞானியாலேயோ அன்றி இன்ஜினியராலேயோ கண்டுபிடிக்க முடியவில்லை.
இதயம் ஒரு நிமிடத்திற்கு 70-75 முறை துடிக் கிறது. ஒவ்வொரு முறை துடிக்கும் போதும் ரத்தம் 12,000 மைல் தூரம் பயணம் செய்கிறது. இதயத்திற்குச் செல்லும் இரத்தம், அங்கிருந்து நுரையீரல்களுக்குச் சென்று அங்கு பிராணவாயுவின் சேர்க்கையால் பரிசுத்தப்படுத்தப்பட்டு அங்கிருந்து உடலின் பல பாகங்களுக்கும் அனுப்பப்படு கிறது. இரத்தக் குழாய்கள் இந்த ரத்தத்தை 12,000 மைல் தூரம் எடுத்துச் செல்கின்றன. இத்தகைய ஆச்சரியமான இரகசியத்தை இதுவரை எவருமே விரிவாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதெல்லாம் கடவுளால் உருவாக்கப்பட்டவை. அவரது அருள், அது மட்டுமல்ல அவரது சங்கல்பம்.

Tu mມ່”
O மருததுவர்
ஆரோக்கியமான தேகத்தில் 5 முதல் 7 லீற்றர் வரை ரத்தம் இருக்கிறது. ரத்த ஓட்டமும், ரத்தத்தின் சுழற்சியும் சரியாக இருக்கும்வரை இதயத்தின் இயக் கத்திற்கு எதுவும் ஆபத்துக் கிடையாது. அப்படியின்றி ஏதாவது மாற்றம் ஏற்பட்டால் ரத்தத்துடன் நீர் கலந்து ரத்தம் தன் அடர்த்தியை இழக்கிறது. ஒரு மில்லி லீற்றர் ரத்தத்தில் 5 மில்லியன் ரத்த அணுக்கள் இருக்கின்றன. இவ்வாறாகப் பலவகையில் உடல் பாதுகாக்கப்படுகிறது. U55á5565) IORN, HEMOGLOBIN GuIT6örp6062 யெல்லாம் இணைந்து பரிசுத்தமானதாக ஆக்குகின்றன. இவற்றைத்தவிர வெள்ளை அணுக்கள் நிறைந்திருக் கின்றன. இவை உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் கிருமிகள் உடலில் பிரவேசிக்காமல் எதிர்க்கின்றன. இவற்றைத்தவிர “பிளேட் செல்கள்” என இருக்கின்றன. அவை உடலில் ஏதாவது காயமோ, புண்ணோ ஏற்பட்டால் அங்கு சென்று அவற்றைச் சரி செய்கின்றன. மனித உடலில் 250,000 “பிளேட் செல்கள்” இருக்கின் றன. "பிளாஸ்மா” என்பது இரத்தத்தில் 50 சதவீதம் இருக்கும் ஒரு அங்கம் இது வாயு, இரும்பு, கொஞ்சம் புரதம் இவை கலந்த கலவை. இத்தகையரத்தம் மனித உடலில் இருப்பது இறைவனின் சங்கல்பத்தினா லேயே தவிர வேறெதாலும் இல்லை. இதனை எவ்வகையிலும் புரிந்து கொள்வது மனிதனால் இயலாத காரியம்.
இவ்வாறு இருதய மருத்துவ நிபுணர்களுக்கே இதயத்தின் இயக்கம் பற்றி எடுத்துக்கூற இறைவனைத் தவிர வேறெவரால் முடியும்? இது தவிர உலகம் முழுவதும் கூப்பிட்ட குரலுக்கு ஒடிச் சென்று வேண்டிய கிசிச்சை செய்து, அது மகப் பேறாகவோ, அல்லது ரண கிசிச்சையாகவோ, உடல் நோயாகவோ எந்த நோயானாலும் மாற்றிய பல சம்பவங்களை நாம் நேரடியாகக் கண்டிருக்கிறோம். அல்லது கேள்விப்பட் டுள்ளோம். இது பகவானின் மருத்துவர் என்ற முகம்.

Page 11
“olho e
Frusĩ 6'ergo
இதுவரை காலமும் உலகம் கண்டிராத மிகச் சிறந்த கல்வியாளராவார். ஏற்கனவே இன்றைய சீரழிக்கும் கல்வி முறை பற்றிக் கூறியுள்ளார். இதனை மாற்றி அமைக்கும் செயன்முறையாக 1968 ஆம் ஆண்டில் “ழரீ சத்திய சாயி பால விகார்" என்ற கல்வி முறையை
பெயர் மாற்றம் பெற்றது. 1981இல் இது "லோக விகாஷ்" (மனித மேம்பாட்டுக் கல்வி) முறையாக மலர்ந்தது. உலகளாவிய ரீதியில் கல்விக் கொள்கையிலுள்ள பாரிய இடைவெளிகள் பற்றி ஆராய்வதற்குப் பல ஆணைக் குழுக்கள் நியமிக்கப்பட்ட போதிலும் விளைவு எதுவுமே இல்லை. ஆனால் பாபா அழகாக ஒரு வசனத்தில் இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகில் எந்தப் பகுதிக்கும் கல்வி மனித குலம் முழுவதும் ஒரு சமூகம் என்பதை உணர்த்த வேண்டுமென வெளிப்படுத்தினார்.
“ஒரு நாட்டின் கல்வி முறை என்பது ஒரு வங்கி, நாடு ஒரு காசோலையை எழுதும் போதெல்லாம். உறுதியான, நம்பத்தகுந்த, செயற்திறன் மிக்கவர்களையே எதிர்பார்க்கிறது. வங்கியானது வங்குரோத்தாகிவிட்டால் அது ஒரு பெரிய தேசிய அனர்த்தம். இந்த முறைமையானது செம்மையாகப் புதுப்பிக்கப்பட்டு, கவனித்து வந்தால் அடுத்த தலைமுறையினருக்கு நல்ல
எத்தகைய கல்வியை நீங்கள் கற்றாலும் கட நம்பிக்கையைக் கைவிடல் வாழ்க்கையைக் ை உண்மையே கடவுள். நீங்கள் மனிதமேம்ட கடவுளுக்குத்தரும் காணிக்கையாகும். ம6 பாடப்புத்தகங்கள் ஆகியவற்றிலிருந்து கற்கமு
s

象勢勢
Tul TT
கல்வியாளர்
தலைவர்களை உருவாக்குவதற்கு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. அதேயளவு நிச்சயம் வந்தது எதுவெனில் இதனைத் தொடர்ந்து எடுத்துச் செல்லும் நெறியாளர்களே”
இன்றைய கல்வி முறையில் தலைக்கும், உடம்புக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஆனால் இதயம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இங்குதான் பாபாவின் கல்வி முறை உலகத்திற்குக் கைகொடுக்கிறது. தலை, இருதயம், உடம்பு மூன்றும் (எண்ணம், சொல், செயல்) ஆகியவற்றை இணைக்கும் அற்புதமான கல்வித்திட்டமாகும்.
பாபாவின் பாலவிகாஷ் திட்டமும், E.H.Vதிட்டமும் கல்விப் புலத்தில், நாட்டுக்குள்ளேயும், வெளியேயும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எளிதில் வளையும் வயதினராகிய 6 தொடக்கம் 15 வயதுடைய பிள்ளைகளை கையகப்படுத்தும் பாபாவின் கோட்பாடு மிகவும் சிறந்த பலாபலன்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இன்று உலகின் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் பாபாவின் கல்விக்
ஈடுபட்டிருப்பதே பகவான் பாபாவை ஒரு கல்வியாளர் என்ற கோணத்தில் பார்ப்பதற்குச் சிறந்த சான்றாகும்.
வுள் நம்பிக்கையைக் கைவிடாதீர்கள். கடவுள் கவிடுதலுக்கு ஒப்பானது. வாழ்க்கையே கடவுள். பாட்டுக்கான விழுமியங்களைக் காட்டுதலே விரிதமேம்பாட்டு விழுமியங்கள் விரிவுரைகள், pடியாது. அவற்றை வாழ்ந்து காட்டவேண்டும்.
Tal

Page 12
"ஓம் ரீ
auford
சாயி ஒரு பெரும் பாடகர், பாடல் ஆசிரியர், சங்கீத விற்பன்னர், நடனகாரர் இவை எல்லாம் அவரிடம் பூரணத்துவம் பெற்றுள்ளது. சிறுவனாக இருக்கும்போதே பாடல்களை இயற்றி தன் தோழர்களுக்கு கற்பித்து வந்தார். இன்றைய பஜனை அமைப்புக்கு மூல காரணமாக இருந்தது அவருடைய பால்ய வயதில் ஆரம்பமான “பண்டரி பஜனைக் குழு' அமைப்பேயாகும். இந்தக் குழுவினர் புதிய புதிய பாடல்கள் பாடி மக்களைக் கவர்ந்திழுத்தனர். இந்தப் பாடல்களை இயற்றி, இசையமைத்து, பாடியவர் சிறுவன் சத்தியாவே. சத்தியா 11, அல்லது 12 வயது சிறுவனாக இருக்கும் போதே கோட்டே சுப்பண்ணா கடையில் உள்ள பொருட்களை விளம்பரப்படுத்துவதற்காகப் பாடல்களை இயற்றித்தன் நண்பர்களுடன் தெருத்தெருவாகப் பாடி வந்தார். அத்துடன் சில தீயகுணம்படைத்தவர்களைத் திருத்தவும் பாடல்கள் இயற்றி பொது இடங்களில் பாடுவதன் மூலம் அவர்கள் திருந்தி வாழ வழி செய்தார்.
அவர் இளைஞனாக இருக்கும்போது அவருடைய பாடசாலை விழா ஒன்றிற்கு அழைக்கப்பட்டிருந்த, புகழ் பெற்ற நாட்டிய விற்பன்னர் ரிஷியேந்திர மணி என்பவர் வரமுடியாதிருந்த வேளையில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், நண்பர்களின் வேண்டுகோளை ஏற்று நாட்டிய விற்பன்னர் ரிஷியேந்திரமணி போலவே நடன மாடி வியக்க வைத்தார். போத்தலைத் தலையில் வைத்தபடி, இசைக்கேற்ற நடனமாடியபடி நிலத்தில் குனிந்து நிலத்திலிருந்த கைக்குட்டையை எடுக்கும் சிரமமான நடனத்தை ஆடியபின் மேலும், நிலத்தில் உள்ள ஊசியை தனது கண் இமைகளினால் எடுத்து வியப்படைய வைத்தார். நடனத் தலைவன் நடராஜனை யார் தான் வெல்ல முடியும்?
சுமார் 22 வயதில் குப்பம் என்ற கிராமத்தில் தனது நெருங்கிய பக்தனின் திருமண விழாவில் சுமார் 3
“ஆன்மீக இசை இதயத்தின் பிரபஞ்சபா ஆன்மாவை இலேசாக்கி, தளர்ச்சியுற்ற
-U


Page 13
“ஓம் பூரீ :
சாயி என்ற சி
இந்தப் பிரபஞ்சத்தையே படைத்த சிற்பக்கலை ஞனான இறைவன் பூமியில் அவதரித்து எல்லோரையும் அதிசயிக்க வைக்கும்படியான பல புதிய கட்டடங்களைக் கல்விச் சாலைகளாக நிர்மாணித்துள்ளார்.
பாபாவின் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடத்தை 08-10-1981 அன்று அடிக்கல் நாட்டிவிட்டு பூர்ணச் சந்திரா மண்டபத்தில் வைத்து அந்த அழகிய கட்டடம் இன்னும்
கட்டட மாதிரிப்படத்தை சிருஷ்டித்து அதனை கேர்ணல் யோகா ராவ் என்பவரிடம் கையளித்து அதனை மேற்பார்வை செய்யும்படி கேட்டுக்கொண்டார்.
சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட அதிநவீன மருத் துவ நிலையக் கட்டடம் ஒரு வருடத்தில் பூர்த்தியான அதிசயம் எம் எல்லோருக்கும் தெரியும். 3% லட்சம் சதுர அடி நிலப்பரப்பைக் கொண்ட இந்த மருத்துவ நிலையம் 760 கோடி ரூபா செலவில் 5 மாதங்களில் பூர்த்தியானது உலக அதிசயம். பக்கிங்காம் அரண் மனையின்
சாயிஎன்ற சீ
அவருடைய ஒரு பார்வை, ஒரு வசனம், ஒரு புன்னகை, ஒவ்வொருவரிலும் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு அவை எத்தனையோ பேரில் அவர்களின் கூடாத பழக்கங்களை விரட்டியுள்ளது. மாமிசம் உண்பவராக தொடர்ந்தும் புகை பிடிப்பவராக, மதுபானம்பாவிப்பவராக இருந்த எங்கள் பெருந்தலைவர் சிவஞானம் ஐயா அவர்களுக்கு பகவான் தனது விருப்பத்தைச் சூசகமாக அறிவித்தபோது ஒரே நாளில், ஒரே நிமிடத்தில் இன்று முதல் நான் இவற்றைக் கைவிடுகிறேன் என்று சொல்லி அன்று முதல் அனைத்தையும் துறக்க வைத்தார். இப்படி நம்மில்

ாயி ராம்”
bபக்கலைஞர்
தோற்றமுடைய இந்தக் கட்டடத்தில் வரைபடத்தைத் தயாரிக்கவே இந்தக் கால அவகாசம் போதாது.
மும்பாயில் அமைந்த தர்ம ஷேத்திரக் கட்டடம் வட்டவடிவமான பிரம்மாண்ட மண்டபம் 108 நாட்களில் கட்டி முடிக்கப்பட்டது. இக்கட்டடத்தின் விசேடம் என்னவெனில் கதவுகள், யன்னல்கள். படிகள் எல்லாம் பிரம்ம இலக்கமாகிய ஒன்பதின் பெருக்கமாகவே அமைந்திருக்கிறது.
ஹைத்ராபாத்தில் அமைந்துள்ள சிவம் கட்டடம் சிவலிங்க வடிவில் அமைந்துள்ளது. அவருடைய இசைக் கல்லூரிக் கட்டடம் இசைக்கருவிகளின் அமைப்பைக் கொண்டதாக உள்ளது.
இவ்வாறு பகவானின் நிர்வாகத்திலுள்ள கல்விச் சாலைகளும் மற்றும் நிர்வாகக் கட்டடங்களும் தனி அழகு கொண்டவை பத்தர்கள் அல்லாதவர்களையும் கவர்ந்து இழுக்கக் கூடியது. இக்கட்டடங்களூடாக சாயி என்ற சிற்பக்கலைஞனாகத் தரிசிக்கின்றோம்.
ர்திருத்தவாதி
பலருடைய வாழ்க்கையில் பல மாற்றங்களை அவர் கொண்டு வந்துள்ளார். இப்படிப்பட்ட இந்தத் தெய்வீகக் குறுக்கீடு இல்லாமல் இருந்திருந்தால். இது எந்த வகையிலும் சாத்தியமாக இருந்திராது. இந்த மூன்றையும் கைவிடுங்கள் என்று ஒரு பிறந்த தினத்தில் பகவான் இதனைச் சொன்ன போது முழு உலகிலுமுள்ள சாயிபக்தர்கள் இன, மொழி, கலாசாரம் இவற்றிற்கு அப்பாற்பட்டு, மதுஅருந்தல், மாமிசம்புசித்தல், புகைத்தல் என்பவற்றை ஒதுக்கியுள்ளார்கள். இவற்றை விட்டவன் தான் சாயி பக்தன் என்ற நிலைமை இன்று ஏற்பட்டுள்ளது. இந்தச் சீர்திருத்தத்தை ஒரு தெய்வம்தான் செய்திருக்க முடியும்.

Page 14
"ஒம் ரீ
asmusĩ 6re
இராமபிரான் இராவணனையும், வாலியையும் மீட்டார். கிருஷ்ணர் கம்சன், சிசுபாலன் என்ற இரு வரையும் மீட்டார். அவர்கள் இறைவனின் கையால் மடிந்தார்கள். அதனால் இந்தக் கலியுகத்தில் எங்கள் பாவங்களைச் சாதுரியமாக மூடி மறைத்துள்ளோம். ஆனால் சாயியிக்கும், அதனைச் செய்பவருக்கும் அது தெரியும். ஆனால் அவரைக் கொல்லாமல் அவற்றைத் திருத்தக்கூடிய உடல், மன வேதனைகளை அவர் கொடுக்கிறார். எல்லாவற்றையும் அறியும், கடவுளின் கண்களிலிருந்து எதுவும் தப்ப முடியாது. திருத்தும் வழி மேலதிகமான அளவற்ற கருணையும், அன்பும் நிறைந்த
சாயிஎன்ற க
"அன்புடனே ஒரு கணம் நினைத்தாலே
எங்கிருந்தாலும் ஓடோடி வரும் பாதம்” பக்தரின் குரலை எங்கிருந்தாலும் எப்படி இருந்தாலும் கேட்டு அருள்வதற்கு அவர் தவறுவதில்லை. எங்களில் ஒரு பக்தருக்கு இரண்டாவது தடவை இருதய நோய் வந்த போது "சாயி" என்று அந்த வலியில் அலறிய போது தான் சாயியின் அருகாமையில் இருப்பதை உணர்ந்தார். “இந்த
சாயி என்ற நை
பகவான் பாபா ஒரு சிறந்த நகைச்சுவையாளர் என்பதையும் நாம் கவனிக்கவேண்டும். தனது நகைச் சுவைகள் மூலம் ஒருவரின் தவறான பழக்கங்களைத் திருத்தவும், தங்களைப்பற்றி உள்நோக்கிச் சிந்திக்கவும் வைப்பார். ஆத்மீக சாதனையில் ஈடுபடும் சாதகர்களின் மன இறுக்கத்தைத் தளர்த்துவதற்கு அவருடைய நகைச் சுவைகள் அருமருந்தாகிறது.
புட்டபர்த்தியில் சிவராத்திரி விழாவை முடித்துக் கொண்டு பெங்களூருக்கு பகவான் வருவது வழக்கம். ஒருமுறை10 நாட்களாகியும் அவர் வரவில்லை. பெங்களூர்

rus rri"
p ຕົ້ນຕໍ່
பாவங்களை எல்லாம் கழுவி, சுய சோதனையினாலும் குற்றத்தை நினைந்து வருந்துவதாலும் நீக்கப்படுகிறது. கொலைகாரர்கள், குடிகாரர்கள், அகங்காரம் பிடித்தவர்கள், திருடர்கள் என்று எத்தனையோ பேரை மாற்றியுள்ளார். எங்களுக்குத் தெரிந்த எத்தனையோ பக்தர்கள் நான் எப்படி இருந்தேன் என்று என் வீட்டின் அருகில் உள்ளவர்களைக் கேட்டுப் பாருங்கள். நான் இன்று எப்படி இருக்கிறேன் என்று நீங்கள் என்னைப் பாருங்கள். சாயி என்ற பெருங்கருணை வெள்ளத்தின் வலிமையையும் இவற்றின் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம்.
கருணையாளன்
உணர்வுக்காகவே எனக்கு மீண்டும் இருதய நோய் வந்தாலும் பரவாயில்லை. அப்போது நான் சாயியின் அரு காமையை உணர முடியும்” என்று அவர் கூறினார். எங்களில் ஒவ்வொருவரும் சாயியின் கருணையைப் பூரணமாக அனுபவித்திருப்போம். ஏனெனில் சாயியின் கருணையை ஏற்றுக்கொண்ட உணர்வுதான் எங்களைச் சாயியுடன் வைத்திருக்கிறது.
கச்சுவையாளர்
மாணவர்களுக்கு ஏக்கம் பிறந்தது. என்ன காரணத்தால் வரவில்லை? என்று பலவாறாக சிந்தனை செய்தனர். ஈற்றில் மார்ச் மாத முடிவில் சுவாமி பெங்களூர் வந்தார். மாணவர்களுக்கோ ஒரே உற்சாகம். சுவாமியை வரவேற்க பெரிய ஆயத்தங்களைச் செய்தனர். பாபா வந்தார். மாணவர்கள் பாடல்பாடி ஆரத்தி செய்தனர். பகவான் யாருடனும் பேசவுமில்லை. புன்சிரிப்பும் இல்லை. முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டார். மாணவர் களுக்கோ ஒரே குழப்பம். ஒவ்வொருவரும் தாம் தாம் என்ன பிழை செய்தோம் என்று தங்கள் மனதையே ஊடுருவி சல்லடைபோட்டனர்.ஒருவராலும் விடைகாணமுடியவில்லை.
2

Page 15
சுவாமி பக்தர்களுக்குத் தரிசனம் கொடுத்தார். பின்னர் தனது இருப்பிடத்திற்குத் திரும்பும் போது இரண்டு கரைகளிலும் நிற்கும் மாணவர்களைப் பார்ப் பதைத் தவிர்ப்பதற்காகத் தலையைக் குனிந்தபடி சென்று விட்டார். தாங்கள் செய்த பிழையைக் கூறும்படி மாண வர்கள் செய்த பிரார்த்தனை பலனளிக்கவில்லை. இது பல்கலைக்கழகம் முழவதும் ஒரே சோகமயமாக இருந்தது. மாணவர்கள் எல்லோரும் தாம் செய்யாத தவறுகளுக்காக மன்னிப்புக் கோரிப் பிரார்த்தனை செய்தனர். அவர்களின் கண்கள் கண்ணிரால் நிறைந்தது. பலனில்லை. அவர் களின் பிரார்த்தனை கண்ணிர் நிரம்பியதாகவே இருந்தது. அடுத்த நாள் தரிசனம் நடந்தது. பகவான் தனது இருப் பிடத்திற்குத் திரும்பிய போது மாணவர்கள் அனைவரும் பகவானைச் சூழ்ந்து கொண்டுதம்மை மன்னிக்கும்படி அழுதழுது வேண்டினர். ஒன்றும் நடக்கவில்லை. பகவான் நிலத்தைப் பார்த்தபடியே நின்றார். சில வினாடிகள் ஒரு மயான அமைதி நிலவியது.
திடீரென்று அவர் ஒரு சிறந்த நடிகராக மாறி "APRILFOOL" (ஏப்பிரல் முட்டாள்கள்) என்றார். சிரிப்பு அலை பல்கலைக்கழகம் முழுவதும் பரவியது. சுவாமியும் மாணவர்களுடன் இணைந்து கொண்டார்.
இந்த"APRILFOOL"என்றவார்த்தையைச்சொல்ல முன் மாணவர்கள் அனைவரையும் உள்நோக்கி தமது குற்றம் குறைகளை ஆராய வைத்துவிட்டார். தங்கள் செய்கைகள், சிந்தனைகள், நடவடிக்கைகள் எல்லாவற் றையும் மதிப்பீடு செய்ய வைத்துவிட்டார். அதில் ஆன் மீகமும், நகைச்சுவையும் கலந்தது.
ஒருமுறை பகவானின் “இன்ரவியூ" அறையில் கிப்பித் தலையுடன் ஒரு இளைஞன் அமர்ந்திருந்தான். சுவாமி கேட்டார். “நீ ஏன் இந்த தலை மயிரைச் சுமந்து கொண்டு திரிகிறாய்? அதை வெட்டி விடமாட்டாயா? என்றார். அதற்கு அந்த இளைஞன் “ஆம் பாபா, நீங்கள் ஒரு மயிரைக் கத்தரித்து விடுங்கள். நான் ஏனைய

வற்றைக் கத்தரிக்கிறேன் என்றான். அதற்கு பாபா “நாள்
ITUT, LITurf gia" Tsirport.
கஸ்தூரி அவர்கள் தனது"LOVING GOD’ என்ற நூலில் ஒரு சம்பவம் எழுதியுள்ளார். கஸ்தூரியை உடனே வரும்படி பாபா ஒருவரை அனுப்பிவிட்டார். வந்ததும் பாபா கூறினார். கஸ்தூரியின் புகைப்படம் ஒன்று அவசரமாகத் தேவையென்றும், 30,000 பிரதிகள் விற்பனையாகும். ஒரு புகழ் பெற்ற பத்திரிகைக்கு அதனை உடனே அனுப்பவேண்டு மென்றும் கூறினார். கஸ்தூரிக்கும் ஒரே ஆனந்தம் தனக்கு பெயரும், புகழும் பரவப் போகிறது என்ற பெருமிதத்தில், முகச்சவரம் செய்து, உடம்பைக் கழுவிச் சில நிமிடங்களில் திரும்பிவந்தார். பாபாவோ புகைப்படக் கருவிக்குப் பக்கத்தில் ஆயத்தமாக நின்றார். uTur u605tuLi கருவியூட்ாகக் கஸ்தூரியைப் பார்த்து, கஸ்தூரியின் முகத்தை "புகைப்படத்திற்கு ஏற்றமுகம்" என்று கூறி அவரின் தற்பெருமையை இன்னும் ஊத வைத்துவிட்டார். “றெடி' என்று கூறி ஆழியை அமுக்கினார். திடீரென்று ஒரு பஞ்சாலான எலி புகைப் படக் கருவியினுள் இருந்து பாய்ந்து வெளியே வந்து கஸ்தூரியின் முகத்தில் விழுந்தது. கஸ்தூரி பயத்தால் நடுங்கியவாறு அறையின் மூலையுள் பதுங்கிக் கொண் டார். அது உண்மையான எலிதான் என்று நம்பி அவர் கண்களையே திறக்கவில்லை. பாபா பெரியதாகச் சிரித்த படி கஸ்தூரிக்கு எலியைக் காட்டினார். சிரிப்பில் கஸ்தூரி யும் இணைந்து கொண்டார்.
கடவுளுக்குச் சேவை செய்வதன் மூலம் நீண்ட காலப் புகழைச் சம்பாதிக்கலாமென்றும் பத்திரிகையில் செய்தி, படம், வருவதன் மூலம் நீண்டகாலப் புகழைச் சம்பாதிக்க முடியாதென்றும் கூறி இன்றைய பத்திரிகை Braoru Usoglu ugifflans "TODAY'S PAPER, TOMORROW'S WASTE PAPER'' Tsiro aggotsri. இன்னும் எத்தனையோ நகைச்சுவைகள். இது பக வானின் இன்னொரு முகம்.

Page 16
"phs ormuli ordiip 9u
கர்ணம் சுப்பம்மா என்ற பெயர்சாயிபக்தர்களுக்கு அறிமுகமான பெயர். சத்தியாவின் இளமைக் காலத்தில் தாயைவிட இவரையே நேசித்தவர். பக்கத்து வீடாக அமைந்ததால் சத்தியா அவருடனே தாவர உணவு சமைத்து உண்பார். சிலவேளைகளில் அங்கேயே உறங்கு வார். சத்தியா சுப்பம்மாவிற்கு ஒரு வரம் கொடுத்தார். அதாவது அவருடைய உயிர் பிரியும் நேரத்தில் தான் வந்து “துளசி தீர்த்தம்" தருவதாக,
சுப்பம்மாவின் கடைசிக்காலம் வந்தது. அவரும் இறந்துவிட்டார். ஆனால் சத்தியா அப்போது புட்டப்பத்தி யில் இல்லை. சத்தியாவை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். அவர் வரக்கூடிய அறிகுறி இல்லை. சத்தியா தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என அயலவர்கள் பேசிக் கொண்டனர். காலம் போய்க் கொண்டிருப்பதால் இனியும் காத்திருக்க முடியாதென நினைத்து இறுதிக் கிரியைகளுக்கு ஆயத்தமானார்கள். எல்லாம் அறிந்த சாயி அப்போது அங்கு பிரசின்னமானார். நேராக சுப் பம்மாவின் உடலுக்கு அருகே சென்று "சுப்பம்மா பார் நான் வந்துவிட்டேன்' என்று கூறினார். உடனே சுப்பம்மா கண்களைத் திறந்து ஆனந்தக் கண்ணிர் சொரிந்தார். பாபா உடனே கையசைப்பில் துளசி தீர்த்தம் வரவழைத்து அவருடைய வாயில் பருக்கிவிட்டார். அவர் மிக்க ஆனந் தத்துடன் கைகளைக் கூப்பி வணங்கித் தன் நன்றி களைத் தெரிவித்தபடி கண்களை இறுதியாக மூடினார்.
சேஷிகிலி ராவ் என்பவர் பகவானின் நம்பிக்கை யான ஒரு ஊழியராக பிரசாந்தி நிலையத்தில் 14 வரு டங்களுக்கு மேல் பணியாற்றி வந்தார். பழைய மந்திரப் பூசகராக கடமையாற்றினார். ஒரு நாள் நிலத்தில் தவறி விழுந்துவிட்டார். தனது மரணத்திற்கு சமீபமாக வந்துவிட்டதாகவும், மனதளவில் அதற்கு தயாராகவும் இருந்தார். ஆனால் அவர் நினைத்தபடி நடக்கவில்லை. பாபா ஒருநாள் திடீரென அவருடைய அறைக்கு வந்துவிட்டார். “என்ன துணிவாக இந்தப் பயணத்தை என்னிடம் ஒரு ரிக்கட் வாங்கிக் கொள்ளாமல் புறப்பட்டு விட்டாய்?’ என்று கேட்டு “கீழே வா, உனக்கு ஒதுக்கப்பட்ட வேலையைச்செய். இன்று மத்தியானப் பூசைக்கு பூசை மண்டபத்தில் நீதான் தீபம் காட்டவேண்டுமென்று கட்டளையிடுகிறேன்” என்றார். சேஷகிரியும் அதன்படி தன் பணியை மீண்டும்
-

FITLSITTh"
பீர் லகாடுப்பாளர்
ஆரம்பித்தார். ஆறு மாதங்கள் தொடர்ந்தது.
ஆறு மாதத்தின் பின் மீண்டும் சுகவீனமுற்றார். இந்தத் தடவை மிகவும் கூடுதலாக கஷ்டமடைந்தார். சத்திய சாயி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நிலைமை மோசமடையவே அவரது சகோதரர் அவரை பெங்களூரில் பெரிய மருத்துவமனையில் சேர்க்க பாபாவிடம் அனுமதி கேட்டார். அதற்கு பாபா, "அவருடைய தற்போதைய நிலைபற்றிக் கவலைப்பட வேண்டாம். அவர் அனுபவிக்கவேண்டிய துன்பங்களைக் குறைத்து அவரை அமைதியாக உயிர் பிரிய அனுமதிக்கிறேன். இன்னும் சில காலம் அவர் தனது வேலையைச் செய்யட்டும் இல்லாவிடில் நான் அவரை முன்பு விழுந்தபோதே எடுத்திருப்பேன்ே” என்று கூறினார். விரைவில் சேஷகிரிகுணப்பட்டார். வீடுதிரும்பி மீண்டும் ஆறு வாரங்களாக தனது கடமையைச் செய்தார். படிப்படியாக அவரின் உடல்நலம் குறைந்தது. படுக்கையில் விழுந்தார். அவருடைய மகன் அவருடைய வேலைகளைச் செய்து வந்தார். ஒருநாள் பாபா திடீரென அவருடைய அறைக்குள் சென்றார். அருகிருந்த கஸ்தூரியிடம் ஒரு கப் சூடான பால் கொண்டு வரும்படி கேட்டார். புாலைக் கரண்டியால் மிகுந்த அன்புடன் பருக்கிவிட்டார். “உன்னுடைய பாபா பால் தருகிறேன்.” என்று கூறி ஊட்டிவிட்டார். எழுந்து நின்று “சரி நீ இப்போது செல்லலாம்' என்று கூறிப் போய்விட்டார். அடுத்த மணித்தியாலயத்துள் அவர் உயிர் நீத்தார். உயிர் கொடுப்பவரும் எடுப்பவரும் அவரே.
தற்போதைய பிரசாந்திக் கவுன்சில் தலைவர் டாக்டர் மைக்கல் கோல்ட் ஸ்ரெயின் அவர்களின் ஒரு அனுபவம். ஒருநாள் கோல்ட் ஸ்ரெயின் அவர்களை பாபா தனது காரில் ஏற்றி புட்டப்பர்த்தி அலுவலகங்களைப் பார்வையிட்டு வந்தார். கோகுலத்திற்கு கார் மெதுவாக வந்ததும் பாபா முகத்தைக் கடுமையாக.வைத்தபடி “உன் னைக் கடைசி முறையாகப் பார்க்கிறேன்.” என்று கூறி னார். இப்படியான ஒரு கூற்று தெய்வீகத் தலைவரிடம் இருந்து வந்தமையால் கோல்ட் ஸ்ரின் அதிர்ச்சியடைந்து விட்டார். “அப்படி நடக்கக் கூடாது சுவாமி, எதிர்வரும் தங் கள் அவதாரதின விழாவில் நான் கலந்து கொள்ள அனுக்கிரகம் செய்யுங்கள் சுவாமி என்று மன்றாடினார். ஆழ்ந்த யோசனையுடன் சுவாமி சில விநாடிகள் பார்த்தார்.
4一

Page 17
பின் “ஆம் நீ வரலாம்." என்று கூறினார். தொடர்ந்து வந்த நிகழ்ச்சி கோல்ட் ஸ்ரெயின் மரணத்தில் வாசலிலிருந்து மீண்டார். என்று உறுதிப்படுத்தியது.
கோல்ட் ஸ்ரெயினும் அவரது மனைவியும் ஒரு விமானத்தில் தமது நாட்டிற்கு திரும்புவதற்காக ஏறினார். அந்த விமானம் கராச்சி விமான நிலையத்தில் சில தீவிர வாதிகளால் கைப்பற்றப்பட்டது. அவர்கள் அதிநவீன ஆயு தங்களுடன் எல்லாப் பயணிகளையும் பணயக் கைதி களாக்கினர். ஒருவன் விமானப்பணிப்பெண்ணைச் சுட்டு வீழ்த்தினான். அருகில் இருந்த திருமதி கோல்ட் ஸ்ரெயி னுக்கு இன்னொருவன் இலக்கு வைத்துக் கொண்டிருந்த போது திடீரென வேறு பக்கம் திரும்பினான். திருமதி கோல்ட் ஸ்ரெயின் கைகளைக் கூப்பியபடி "சாயிராம்" என்று உரத்த குரலில் கண்களை மூடிப்பிரார்த்தனையைச் செய்தார். திரு.கோல்ட் ஸ்ரெயின் எந்த வித காயமுமின்றி ஒரு கதவின் பக்கத்தில் நின்றார். திடீரென அந்தக் கதவு திறந்து கொண்டது. திறந்த கதவு வழியாக இருவரும் தப்பி வெளியேறினர். பல பிரயாணிகள் மரணமடைந்தனர். கோல்ட் ஸ்ரெயின் தம்பதிகள் கலிபோனியா திரும்பி மீண்டும் சில மாதங்களில் பிரசாந்தி நிலையம் வந்தனர்.
சுவாமி தரிசனத்தின் போது கோல்ட் ஸ்ரெயின் முன் வந்து நின்றபோது கண்களில் நீர் சொரிந்தபடி தனது நன்றிகளைத் தெரிவித்தார். பாபா கூறினார், தான் கோல்ட் ஸ்ரெயினை விமானக் கடத்தல்காரர் சுட்டுக் கொன்றதைக் கண்டதாகக் கூறினார். பின்னர் அவர் கூறினார் "நான் அந்தப் படத்தை மாற்றிவிட்டேன்.” என்று. கடவுள் தான் இப்படியான மாற்றங்களைச் செய்யமுடியும்.
அடுத்த 20ஆவது அஸ்ரோத்திரமான “ஜோடி ஆதிப்பள்ளி சோமப்பாவைப் பார்ப்போம். 1958 நவம்பர் 26 பிரசாந்தி நிலையத்தில் அவதார தின விழாவைப் பார்த்து விட்டு ஒரு குழுவினர் பெங்களூர் திரும்பினர். ஒரு கார் நிறைய பெண்கள். அதில் ஒரு இரண்டு வயதுப் பிள்ளை யும் இருந்தது. அடுத்த காரில் ஆண்கள். ஆண்களின் கார் வேகமாக முன்னே சென்றுவிட்டது. பெண்களின் கார் மெதுவாகச் சென்று கொண்டிருந்தது. திடீரென குழந் தைக்கு வலி ஏற்பட்டுவிட்டது. சில நிமிடங்களில் மூச்சு நின்றுவிட்டது. பிள்ளை மயங்கி விழுந்துவிட்டது. ஆண் களின் கார் பல மைல்கள் முன்னே சென்றுவிட்டது. பெண் கள் செய்வதறியாது அழுது புலம்பினர். தெருக்கரையில் எவரும் உதவிக்கு இல்லை. பிள்ளை நீலநிறமேறி விறைத்துப்போய்விட்டது. விரைவாகச் சென்ற கார்கள் எதுவும் உதவிக்காக நிற்கவில்லை. பெண்களால்

உதவியின்றி அழுவதற்கு மட்டுமே முடிந்தது. அந்த நேரத்தில் ஒரு வயதான கிராமத்தவரும் ஒரு இளைஞனும் ஒரு இளம் பெண்ணும் வந்தனர். ரன் அழுகிறீர்கள் என்று கேட்டனர். இறந்த குழந்தையைக் காட்டிய போது, அந்த இளைஞர் கூறினார், தன்னுடன் இருந்த அந்த முதியவர் ஒரு வைத்தியர், அவர் இறந்தவர்களையே எழுப்பக் கூடியவர் என்றும் கூறினார். அப்போது அவர்களுடன் வந்த இளம் பெண் காரில் இருந்த பெண்களிடம், தயக்கமின்றி அந்தப் பிள்ளையை வைத்தியரிடம் கொடுக்கும்படி கூறினார். அவர்கள் சம்மதித்து பிள்ளையை வைத்தியரிடம் கொடுத்தனர். அவர் குழந்தையைத் தன் மடியில் வைத்து, அவர்களிடம் விபூதி இருக்கிறதா? என்று கேட்டுப் பெற்றுக் கொண்டார். குழந்தையின்கிட்டிப் போயிருந்த பற்களை நீக்கி சில துளி விபூதியை உள்ளே செலுத்திவிட்டார். பிள்ளை திடீரென கண்களைத் திறந்தது. திடீரெனப் பெரிதாக அழுதது. பெண்கள் மகிழ்ச்சியுடன் சிரித்தனர். இதற்கிடையில் ஆண்களின் கார் இவர்களைத் தேடி திரும்பிவந்துவிட்டது. பிள்ளையின் தகப்பன் வைத்திய ருக்கு பணம் கொடுத்தார். அவர் மறுத்துவிட்டார். திரும்ப முன் வைத்தியருடைய பெயர் என்ன என்று கேட்டனர். அவர் “ஜோடி ஆதிப்பள்ளி சோமப்பா" என்று கூறினார்.
அன்று மாலை பிரசாந்தி நிலையத்தில் பாபாவை எதிர்பார்த்து கஸ்தூரியும் ஏனைய பிரமுகர்களும் காத்திருந்தனர். அப்போது பாபா கஸ்தூரி"நேற்றுப்பார்த் தாயே. அந்தக் குழந்தை பெங்களூர் வழியில் இறந்து விட்டது என்றார். கஸ்தூரி அதிர்ந்துவிட்டார். நேற்றுத் துள்ளி விளையாடி, எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்த அந்தப் பிள்ளையா? இல்லை சுவாமி அப்படி நடக்கக் கூடாது” என்றார் சோகமாக, சுவாமி கூறினார், “நான் அப்படி நடக்க அனுமதிப்பேன் என்று நினைக்கிறாயா?” என்றார். பாபா முழுவிபரத்தையும் கூறினார். கஸ்தூரி குறித்துக்கொண்டார். தான் மூன்று உருவங்களை எடுத்ததாகவும். ஒன்று வைத்தியர், மற்றது இளைஞர் வைத்தியரின் தகுதியை விளக்கவும், அவரிடம் குழந்தை யைக் கொடுத்தார். இறந்தவரையும் எழுப்புவார். என்று கூறவும், அடுத்து இளம் பெண்ணாக ஏனெனில் காரில் இருந்த எல்லோரும் பெண்களென்றும் அவர்களுக்கு ஒரு நம்பிக்கையையும், துணிவையும் ஏற்படுத்தவுமே என்றார். தான் முதல் நாள் கெர்டுத்த விபூதி அவர்களிடம் உண்டு என்று தெரிந்து அதைக் கேட்டு வாங்கியதாகவும் தான் விபூதியை சிருஷ்டித்தால் அவர்கள் தன்னை அடையாளம் கண்டு கொள்வார்கள் என்றும், பிள்ளைக்குத் தனது உண்மையான உருவத்தைக் காட்டியதால் அது அழுதது என்றும் கூறினார். சுவாமி உங்களுக்கு நீங்களே கொடுத்த
5

Page 18
பெயரின் அர்த்தமென்ன என்று கேட்டார். ஜோடி என்றால் இரண்டு, ஆதிப்பள்ளி - கைலாசம், சோமப்பா சோ +உமா
உமா மகேஸ்வரன் கைலாசத்தில் ஜோடியாக வீற்றிருக்கும் உமாமகேஸ்வரன் என்பதே அர்த்தம் என்றார்.
அடுத்து குப்பம் ராதாக்கிருஷ்ணனின் கதையைப் பாருங்கள். அவருடைய குடும்பமே.சுவாமியின் பக்தர்கள். அவர்களுக்கு சுவாமி பிரசாந்தியில் ஒரு சிறு வீடு கொடுத்திருந்தார். ஒருநாள் ராதாக்கிருஷ்ணனுக்கு தீராத வயிற்றுவலி, மருத்துவ சிகிச்சையும் பயனளிக்கவில்லை. பாபாவையே நம்பினார். 1953 ஆகஸ்ட் 5ஆந் திகதி வயிற்றுவலி தாங்க முடியாமல் பாபாவின் அறைக்குச் சென்று அவரின் கால்களில் விழுந்து மன்றாடினார். பாபா அவரைத் தேற்றி அனுப்பிவிட்டார். அடுத்தநாள் சலம் வெளியேறாது நோய் தீவிரமடைந்தது. மாலை 6 மணி இரத்தத் துடிப்பு ஒழுங்கில்லாமலும், சுவாசம் சீரில்லாமலும் வந்தது. வைத்திய சாலைக்குக் கொண்டுசெல்ல பாபாவிடம் அனுமதிக்காகச் சென்றனர். பாபா மறுத்துவிட்டார். உடல் கறுத்துவிட்டது. நகங்கள் நீலமாகிவிட்டது. சுவாமியின் விருப்பப்படியே அவரின் மனைவி விட்டுவிட்டார். அதிகாலை 4 மணிக்கு உயிர் பிரிந்துவிட்டது. பாபாவை வரும்படி பல தடவைகள் அழைத்தும் அவர் வரவில்லை. உறவினர்கள் இறுதிக் கிரியைக்காக ஆயத்தப்படுத்தினர். சுவாமி திடீரென வந் தார். இராதாக் கிருஷ்ணன் வைக்கப்பட்ட அறைக்குச் சென்றார். எல்லோரையும் வெளியேறும்படி கூறினார். அங்கு என்ன நடந்தது என எவருக்கும் தெரியாது. உள்ளே சென்று பார்த்தபோது இராதாக்கிருஷ்ணன் கட்டிலில் அமர்ந்திருந்தார்.தனக்கு என்ன நடந்தது எனக் கேட்டார்.
மனைவியிடம் பாபா கூறினார், “உன்னுடைய தாலியை நான் காப்பாற்றுவேன் என்று கூறியதை நீ மறந்திருக்கலாம். நான் மறக்கமாட்டேன். இன்று உனது மாங்கல்யத்தைக் காப்பற்றி உனது கணவரை உயிருடன் தந்துள்ளேன்” என்று கூறினார். திரு. கஸ்தூரியிடம் பாபா கூறினார். அவனுடைய பிள்ளைகள் சிறுவர்கள். அவனுக்கு ஒரு சொத்தும் இல்லை. அவனுடைய பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். அதனால் தான் அவனை நான் மீட்டுக் கொண்டு வந்தேன். இந்த மேலதிக ஆயுட்காலத்தை அவனுடைய அடுத்த பிறப்பில் கழித்துவிடுவேன் என்றார்.
இன்னும் திரு கவண் என்பவரின் உயிரை மீட்டது பற்றி Dr. ஹிஸ்லொப் விரிவாக எழுதியதைப் பார்ப்போம்.
-

திரு. திருமதி ஹிஸ்லொப் அவர்களும் திரு. ருமதி கவண் அவர்களுமாக அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு வந்து கன்னிமாரா ஹோட்டலில் தங்கியிருந்தனர். 1971 டிசம்பர் மாதம் கிறிஸ்மஸ் தினத்திற்கு சிலநாட்கள் முன்பதாக ஒருநாள் அதிகாலை தரிசனத்திற்காக ஹிஸ்லொப் தம்பதிகள் புறப்பட்டு கவண்தம்பதிகளை எழுப்பினர். ஆனால் திருமதி கவண் கூறினார் திரு. கவண் அவர்களுக்கு சுகவீனமாக இருப்பதால் தாங்கள் வரவில்லை என்று ஆகவே ஹிஸ்லொப் தம்பதிகள் சென்றுவிட்டனர். தரிசனத்திற்கு இருந்த வேளை யாரோசிலர் “கன்னிமாரா ஹொட்டலில் ஒரு அமெரிக்கர் இறந்துவிட்டார்” என்று பேசியது திரு. ஹிஸ்லொப்பின் காதுகளில் விழுந்தது. உடனே அவர் ஹோட்டலுக்குச் சென்றபோது திருமதி கவண் வெளியே இருந்து அழுதுகொண்டிருந்தார். செய்தியை உறுதிப்படுத்தினார் அத்துடன் தானும் உடனடி உதவிக்கு வந்த திருமதி ரற்ரன்லால் என்பவரும் சுவாமியிடம் சென்றதாகவும் அவர் 11மணிக்கு ஆஸ்பத்திரிக்கு வருவதாகக் கூறினார். ஆகவே சுவாமியின் வருகையை எதிர்பார்த்து இருப்பதாகத் தெரிவித்தார் அவர்கள் காலை 11 மணிக்கு சென்று ஆஸ்பத்திரி பிரேத அறையைத் திறந்து பார்த்தார்கள் திரு. கவண் எழுந்து தனது கட்டிலில் இருந்தார் எல்லோருக்கும் அதிசயம் என்ன நடந்தது? என்று கேட்டார் திரு. ஹிஸ்லொப் அவர் கூறினார் “நான் அதிகாலை 5 மணிக்கு இறந்தேன்" (இப்படி எவருக்கும் சொல்லவராது) சுவாமி வந்து என்னை உயரமான ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு கணக்காளர் போல் ஒருவர் காணப்பட்டார். அவர் முன் பாபா என்னை அழைத்துச் சென்றதும் எனது பழைய வரலாறுகளைப் படித்தார். பின்னர் என்னை தன்னுடன் அனுப்பும்படி பாபா அவரைக்கேட்டார் அவரும் சம்மதித்தார் நாங்கள் திரும்பிவந்தோம். என்னை மீண்டும் இறந்த உடலுக்குள் செல்லும்படி கூறினார் ஆனால் எனக்கு விருப்பமில்லாமல் இருந்தது. உடலுக்கு வெளியே சுதந்திரமாக உலாவக்கூடியதாக இருந்தது. ஆனால் பாபாவின் கட்டளைப்படி விருப்பமில்லாது உடலுக்குள் புகுந்தேன். எழுந்து இருக்கிறேன் என்று தனது கதையைக் கூறி முடித்தார். இரண்டு வைத்தியர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்த அத்தாட்சிப்பத்திரத்துடன் அவர் வெளியே வந்தார். யேசுபிரான் லாசறஸ் என்பவரை எழுப்பினார். திரு. கவண் நவீன லாசரஸ்ஆக படைக்கப்பட்டார். இப்படி எத்தனையோ உதாரணம் கூறமுடியும். இங்கு சாயியை உயிர் கொடுப்பவராகப் பார்க்கிறோம்.
6

Page 19
“ஓம் பூரீ சாயி என்ற
சாயியின் பல முகங்களுள், சில முகங்களையே இங்கு, சில சம்பவங்களை மட்டும் கூறி, அவருடைய முழுமையயைச் சிந்திக்க வைக்க முயன்றுள்ளோம். அவருடைய ஆற்றல் எல்லை இல்லாதது. அதனை ஒரு எல்லையுள் காட்ட முயன்றுள்ளோம். இதில் நாங்கள் வெற்றியடைய முடியாது. இவை ஒரு SAMPLE மட்டுமே.விஸ்வரூபதர்சனத்தை உங்களிடமே விட்டுவிடு கிறோம்.
முத்தொழிலையும் செய்கின்ற இறைவனே சாயி என்பதற்கு ஒரு சம்பவத்தை மட்டும் கூறி நிறைவு செய்கிறோம்.
ஒருமுறை பகவானின்"இன்ரவியூ"அறைக்கு ஒரு வெளிநாட்டவர் வந்திருந்தார். அவர் பாபாவில் நம்பிக்கை இல்லாதவர். அவரைப் பரிசோதிக்க எண்ணியே அவர் புட்டப்பர்த்திக்கு வந்தார். அவரிடம் பாபா, “உமக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார். அவர் உடனே “உயிரற்ற பொருட்களைப் படைத்து என்னை ஏமாற்ற முடியாது. உயிருள்ள ஒன்றைப் படைக்கவேண்டும்” என்று கூறி னார். உயிருள்ள எதனைப் படைக்க வேண்டுமென பாபா வினவினார். அதற்கு அவர் பகவானை நையாண்டி செய்யும் விதத்தில் குரங்கு ஒன்றைப் படைக்கும்படி கூறினார். உடனே பாபா தனது இருகைகளையும் சேர்த்து மூடி வைத்துக்கொண்டார். பின் அந்தக் கைகளை சிறிது உயர்த்தினார். சிறிய குரங்குக் குட்டி ஒன்று காணப் பட்டது. கேட்ட வெளிநாட்டவர் வாயடைத்து நின்றார். பகவான் மேலும் கைகளை உயர்த்தினார். குரங்குக் குட்டி வளர்ந்து பெரிய குரங்காக மாறியது. கேட்டவர் சாட்ஷாங்கமாக பகவானின் பாதங்களில் விழுந்தார். நீங்கள் கடவுள் தான் என்றும் கூறினார். அந்தக் குரங்கு பகவானின் கைகளிலிருந்து தாவி பக்கத்திலிருந்த அலுமாரி மேல் ஏறி இருந்தது. பகவான் தனது

FTuS Trub”
இறைவன்
கையசைப்பில் சில வாழைப் பழங்களை வரவழைத்தார். அதனைக் குரங்கிற்கு நீட்டினார். அது வந்து வாழைப் பழங்களைப் பெற்றுச் சென்று சுவைத்துச் சாப்பிட்டது. பின் அதனை வரும்படி அழைத்து தனது கைகளில் இருத்திக் கொண்டு அதன் தலையில் மற்றக் கையை வைத்து மெதுவாக அமுக்கினார். குரங்கு சிறிது சிறிதாகத் தேய்ந்து ஈற்றில் மறைந்துபோனது.
இதன் மூலம் பகவான் ஒரு உயிரைப் படைக்க முடியும் என்றும், அதனைக் காக்கவும் முடியும் என்றும் காட்ட, சில வாழைப்பழங்களை வரவழைத்து அதனை உண்ணக் கொடுத்தார். அதனை இல்லாமற் செய்து அழித்துக் காட்டினார். ஆகவே படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலையும் செய்யும் இறைவனே சாயி என்று தெளிவோமாக,
குறிப்பு: இந்த இதழை “பன்முக சாயி’ என்ற அடிப்படை யில் தயாரிப்போம் என்று எமது “ஆசிரியர் குழு' தீர்மானித்தது. அதன்படி ஆசிரியர் அவர்கள் முகவுரை எழுதிவிட்டு புட்டபர்த்திக்குச் சென்றார். அங்கு சிவராத்திரிக்கு மறுதினம் ஒருவர் புட்டபர்த்தியில் உரையாற்றினார். அவர் தமது உரையில் பகவான் தமக்கு இன்ரவியூ வில் கூறியதைக் குறிப்பிட்டார். அதாவது," AM A MULTI FACETED DIAMOND PEOPLE ARE USING ME AS A PAPER 翌房 ሥj ጎ`”
“நான் பல முகங்களைக் கொண்ட வைரம். என்னை மக்கள் பத்திரிகை பறக்காது வைக்கும் பாரக் கல்லாகப் பயன்படுத்துகின்றனர்.”
இதனை அவர் எமது ஆசிரியர் அங்கிருக்கும் போதே பேசியது எமது முயற்சிக்கு பகவானின் அங் கீகாரமே என்று கருதுகிறோம்.
ஜெய் சாயிராம்.
தொகுப்பு எஸ்.ஆர். சரவணபவன்
17

Page 20
GGஒம் தீவிரப் பணியாளர்களாகிய
சாயி சேவாநிலையப் பணியாளர்கள் சமித்தி மட்டத்தில் தெரிவு செய்யப்படினும் சுவாமியின் சேவைக்காக. சுவாமியினால் தெரிவு செய்யப்பட்டவர்களாக நினைக்க வேண்டும்.
அவர்கள் தமது குடும்பத்திலுள்ள எல்லோருக்கும் சுவாமியின் எதிர்பார்ப்பினை எடுத்துச் சொல்லி வைப்பதனால் சுவாமியின் சேவைகளை மிகவும் சுலபமாக செய்து முடிக்கலாம்.
குடும்பத்திலுள்ள சகலரையும் முழுக்க முழுக்க சுவாமியின் சேவையில் ஈடுபடுத்த வேண்டும்.
உங்களுக்கு பல உருவங்களில் சுவாமி தோற்றமளிப்பார். அந்த திருக்காட்சியோடு நின்று விடாதீர்கள் உங்களது சாயி சேவையை இடையறாது தொடருங்கள்.
சாயி நிறுவனங்களில் பதவி வகிக்கும் ஒருவர் தனது பதவியை சுவாமியே தேர்ந்தெடுத்துத் தந்துள்ளார் என நினைத்து அவர் சேவையில் ஈடுபடுங்கள்.
மனத்தாக்கங்கள் ஏதாவது வந்தாலும் அவரது சேவையில் இருந்து விலகிவிடக்கூடாது.
“சேவையிலிருந்து விலக விலக என்னிலிருந்து விலகிக் கொள்கிறீர்கள்’ எனச் சுவாமி சொல்கிறார்.
சாயி நிலையங்களின் தொழிற்பாடுகளுக்கு முன் உரிமை கொடுங்கள், அது உங்கள் மூச்சாக எண்ணுங்கள், இதுவே உண்மையான சாயி சேவையாகும்.
பதவிவகிப்போர் எப்போதும் தங்களைத் தாங்களே சுயபரிசீலனை செய்து கொள்ளுதல் வேண்டும்.
உங்களது செயற்பாடுகளில் உள்ள மாற்றங்கள் என்ன என்பதை அறியுங்கள், அவை சரியானதா?
- I

FITuS TITħ”
நாம் தெரிந்துவகாள்வோம்.
அல்லது பிழையானதா? என்பதை அறிந்து மாற்ற முயற்சி செய்யுங்கள். இதன் மூலம் நீங்கள் விடும் தவறுகளைப் படிப்படியாக திருத்திக் கொள்ள (փկչպth,
மற்றவர்கள் உங்களைப்பற்றி என்ன அபிப்பிராயம் கொண்டுள்ளனர் என்பதை அறியுங்கள். ஏன் எனில் உங்கள் நடத்தையை வைத்து சுவாமியை எடை போடுவார்கள்
சுவாமியின் பெயரால் இயங்கிவரும் சாயிஸ்தாபனங்களுக்கு கூடாத பெயரைத் தேடிக் கொடுக்காதீர்கள்.
உங்களிடம் சுமத்தப்பட்டிருப்பது நீங்கள் செய்து கொண்டு இருப்பது தெய்வீகப்பணி அதனால் மிகவும் அவதானமாகச் செயற்படுங்கள்.
ஒவ்வொரு தீவிர பணியாளர்களும் வாசகர் வட்டம், கல்வி வட்டம், E.H.V போன்ற கல்வி நடவடிக்கைகளில் பங்கு கொள்ள வேண்டும்.
பகவான் உங்களை வருத்திச் சேவை செய்யும்படி கூறவில்லை அதனால் சுயவிருப்புடன் சேவை செய்யுங்கள்.
நிலையில்லாதவற்றிலெல்லாம் பற்று வைக்க நேரத்தை செலவிடுவது வீண்விரயமே. சாயி சேவையில் செலவிடப்படும் நேரம் சேமிக்கப்பட்ட நேரம் என்பதை உணருங்கள். அதனால் சாயி சேவைக்கு நேரமில்லை என்று கூறி ஒதுங்கி விடாதீர்கள்.
சுவாமிமேல் உண்மை அன்பு வைப்பதாயின் அந்த அன்பை பக்தியை மக்களிடம் காட்டுங்கள், அவர்களின் நன்மதிப்பைப் பெற்றுக் கொள்ளுங்கள் சுவாமியின் விருப்புக்கு புறம்பானவற்றையும், சுவாமி விரும்பாதவற்றையும் மற்றவர்களின் விருப்பு வெறுப்புகளுக்காக செயல்படுத்தாதீர்கள்.

Page 21
சந்தேகங்கள் உண்டாகுமாயின் உடனே தீர்த்துக் கொள்ளுங்கள் மனதில் வைத்துக் கொண்டு சிந்திப்பதால் வீணான நோய்களைத் தேடிக் GerrsTaTTiTifsir.
உங்கள் இதயம் தூய்மை அடைய வேண்டும். அப்போது தான் சுவாமியின் அர்த்தமுள்ள வார்த்த்ைகள் தெளிவாக உங்களுக்கு விளங்கும். அப்போதுதான் நீங்கள் சார்ந்துள்ள சேவா நிலையங்களை சரியான பாதையில் சுவாமியை நோக்கி செலுத்துவீர்கள்.
ஏனைய இடங்களில் செய்யப்படும் சேவைக்கு சம்பளம் வழங்கப்படும் அல்லது பெறப்படும். ஆனால் இறை தொண்டு இலவசமானதென எண்ணாதீர்கள். இறை தொண்டுக்கு வழங்கப் படும் கூலிக்கு நிகரில்லை. அது “முக்தி” எனப்படும் கூலியே முக்தி இன்பம். இன்பங்களிலும் பெரியது. அரியது அதனால் சுவாமியின் தொண்டு செய்ய முன்வாருங்கள் பற்றுடன் பணி செய்யுங்கள் அவர் பாதக்க மலத்தில் உறையும் பாக்கியத்தை அடையுங்கள்.
உங்களுக்குப் பதவி கிடைத்தாலும், அல்லது கிடைக்காவிட்டாலும், தீவிர அங்கத்தவர்கள்
ஜெய் ச

Tullyпо
இராமனின் நிலையில் இருக்க வேண்டும். என்று சுவாமி கூறுகின்றார். பூரீ இராம பிரான் தனக்குப் பட்டாபிஷேகம் நடக்க இருப்பதையெண்ணி ஆரவாரிக்கவுமில்லை பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செய்ய வேண்டும் என்பதையெண்ணி மனம் சோரவுமில்லை.இவை இரண்டையும் ஒன்று போல் எடுத்துக் கொண்டார். சுவாமியின் சேவையில் உள்ளவர்கள் பலனை எதிர்பார்க்காமல் சேவை செய்ய வேண்டும் புகழை விரும்பக்
ön-L-srg].
“தீவிர பணியாளர்களே, பக்தர்களே உங்கள் தேவைகளை எனக்குக் கடிதம் மூலம் எழுதி நேரத்தை வீணாக்காதீர்கள். ஒவ்வொருவரையும் நான் அறிவேன். உங்கள் சேவைப் பணிகளையும் நான் அறிவேன். எனது உண்மையான பக்தர்களுக்கு அவன் தேவைகளை அறிந்து நானே அருள்புரிவேன்” இது சுவாமியின் அருள்வாக்கு. எனவே சுவாமியின் மேல் மேலோட்டமான அன்பையன்றி, ஆழமான அன்பைச் செலுத்துங்கள். நீங்கள் சுவாமியின் கண்ணில் படுவீர்கள்.
பக்தர்கள் குடிவகை, புகைத்தல்,போதைப்பொருள் பாவனையை உடன் நிறுத்த வேண்டும். மச்சம், மாமிசம் ஆகியவற்றை விலக்கி நடத்தல் வேண்டும்.
தொகுப்பு - டாக்டர் பூரீ நபிறேமதாசன், கிழக்குப் பிராந்திய இணைப்புக் குழுத்தலைவர்,

Page 22
"gths யாலவிகாஷ் கல்
“இளமையில் கல்வி சிலையில் எழுத்து", “ஜந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?” என்பதெல்லாம் ஆன்றோர் வாக்கு. அற்புதமான இப்பிரபஞ்சம் பஞ்சபூதங்களின் சேர்க்கையால் உருவானது. இப்பிரபஞ்சத்தை உருவாக்கியவன் இறைவன். இப் பிரபஞ்சத்திலே அற்புதமான சிருஷ்டியாக மனிதன் உருவாக்கப்பட்டிருக்கிறான். இம் மனிதனுள் எம்மைச் சுற்றியிருக்கும் ஜம்பூதங்களும் ஐம்புலன்களாக செயல்படுகின்றது. இச் செயல்ப்பாட்டை வெளிக் கொணர்வதற்காக மனிதனில் ஐம்பொறிகள் (மெய், வாய், கண், மூக்கு, செவி) படைக்கப்பட்டிருக்கின்றன. இம் மனிதனிடம் வெளிஉலகுக்குத் தெரியாத வகையில் தான் மட்டும் அறியக் கூடியதான அதி அற்புதமான ஒரு உண்மையை இறைவன் புதைத்து வைத்திருக்கிறான். அதுதான் மனம் எண்ணங்களின் தொகுப்பாகவே மனம் படைக்கப்பட்டிருக்கிறது. அது நல்ல எண்ணமா? கெட்ட எண்ணமா? என்பது அவனது பகுத்தறிவுக்கே வெளிச்சம்.
உலகிலே படைக்கப்படும் எல்லாக் குழந்தைகளும் உருவத்தில் ஒரே மாதிரியே தோற்றமளிக்கின்றன. படைக்கப்படும் குழந்தையின் மனம் வெறுமையாகவே இருக்கின்றது. அவனது வளர்ப்பில் ஏற்படும் மாற்றமே அவனது மனமாற்றத்துக்கும் காரணமாகிறது. அதுவே அவனது வாழ்க்கையாகிறது. பெரும்பாலும் குழந்தைகள் ஐந்து வயதுவரை வீட்டிலேயே வளர்க்கப்படுகிறார்கள். பெற்றோரே அவர்களுக்கு முதல் குருவாக அமைகின்றனர். அன்பான பெற்றோரிடமிருந்து குழந்தை அன்பைப் பெறுகின்றது. வளரும் போது குழந்தை அன்பை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்கிறது. இதனால் குழந்தையின் அடி மனதிலே அன்பு என்ற பண்பு நிலைநாட்டப்படுகின்றது. இதற்கு மாறாக வேலைப்பழுவுடைய பெற்றோர் வேலையாட்களின் பராமரிப்பிலேயே குழந்தையை விட்டுவிடுகிறார்கள். சில பெற்றோர் பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவதில்லை. சில குழந்தைகள் தாயை இழந்தவர் களாகவும் தந்தையை இழந்தவர்களாகவும் காணப்படுகிறார்கள். இப்படியாக வளர்க்கப்படும் சில குழந்தைகளில் நல்ல பண்புகளை எதிர்பார்ப்பது கடினமாக உள்ளது. இப்படிப் பலவித காரணங்களினால் மனித சமுதாயமே அழிவுப் பாதையில் செல்ல நேரிடும். இதனைச் சீர் செய்வதற்காகவே “பூீசத்தியசாயி கல்விச் சேவை”உருவானது. அதன் ஒரு பகுதியாக “பாலவிகாஷ்

FTST" விஒரு உபதேசம்
திட்டம்" நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இதில் 6 வயது தொடக்கம் 14 வயது வரையிலான குழந்தைகள் பயிற்றப்படுகிறார்கள் இது மூன்று பிரிவாக இயங்குகிறது. பகுதி I 5-8 வயதுவரை உள்ள பிள்ளைகள் பகுதி 118 - 11 வயது வரை உள்ள பிள்ளைகள் பகுதி II 11 - 14 வயது வரை உள்ள பிள்ளைகள் இம் மூன்று பிரிவுப் பிள்ளைகளுக்கும் ஐந்து கற்பித்தல் முறை மூலம் பயிற்சி அளிக்கப்படுகின்றது.
i அமைதி இருக்கை i பிரார்த்தனை i கதை கூறல் iv குழுப் பாடல் V குழு முயற்சி
இவ் ஐந்து பிரிவின் முழுநோக்கமும் குழந்தையில் உள் இருக்கும் தெய்வீகத்தை வெளிக் கொணர்வதாக அமைய வேண்டும். சத்தியம், தர்மம், சாந்தி, பிரேமை, அகிம்சை என்னும் மனிதமேம்பாட்டுக் குணங்களால் குழந்தைகளின் உள்ளம் நிரப்பப்பட வேண்டும். உள்ளத்தில் நல்ல எண்ணங்கள் உருவாக நல்ல செயல்களை அவன் நாளாந்த வாழ்க்கையில் பழக்கப்படுத்திக் கொள்கிறான். எண்ணம், சொல், செயல் மூன்றும் ஒன்றாகும் பொழுது அவன் சமுதாயத்தில் ஒரு நம்பிக்கையான மனிதனாக மிளிர்கிறான் பால விகாஷ் கல்வித் திட்டத்தினால் ஒரு மனிதனின் தலை விதியே மாறுகின்றது எனலாம்.
சமுதாயத்தில், ஒருமைப்பாடு, தூய்மை, தெய்வீகம் என்ற மூன்று தெய்வீகக் குணங்களையும் கட்டி எழுப்பும் பொறுப்பு பாலவிகாஷ் குருமாருடையது. குருமாரினால் குழந்தையில் அவனுக்கு உபதேசிக்கப்பட்ட கருத்துக்கள் அவனது மரணபரியந்தம் வரை மறக்காமல் அவனுள் இருந்து செயல்படச் செய்ய வேண்டும். ஒவ்வொரு குருமாரும் தெய்வீக அன்புடனும், தூய்மையாகவும் மானசீக உணர்வுடனும் செயற்படவேண்டும் இப்படியான நல்ல தன்மை உள்ளவர்களையே குரு என்று சுவாமி அறிமுகம் செய்துள்ளார். குருவின் உபதேசம் எக்காலத்திலும் மறக்க முடியாதவை. ஒரு ஆன்மீக சமுதாயத்தை மிளிரச் செய்யும் பொறுப்பை சுவாமி பாலவிகாஷ் குருமாருக்கு அளித்திருக்கின்றான். இப் பணியை தெய்வீகப் பணியாக ஏற்று உலகில் நிலையான சாந்தியை எற்படுத்துவோமாக.
ஜெய் சாயிராம்
திலகவதி ஆறுமுகம் சுண்டிக்குளி பஜனை நிலையம்

Page 23
“ஓம் பூரீ
affairlf
எமது வாழ்நாளில் நிகழ்ந்த பேரழிவு இந்த சுனாமி அனர்த்தம் என்று கொள்ளலாம். இயற்கையின் மாபெரும் சக்தியை நேரடியாகப் பார்க்கக்கூடிய ஒரு சந்தர்ப்பம். உலகின் பலபாகங்கள் கடலுள் அமிழ்ந்து அழிந்துபோயின என்று நாம் உலக சரித்திரத்தில் படித்துள்ளோம். சங்க காலத்தில் சொல்லப்பட்ட நகரங்கள் பல இன்று கடலுக்கடியில் சென்றுவிட்டது என அறிந்ததை அது எப்படி நடந்திருக்கலாம் என்று பல விதங்களில் கற்பனை செய்து செய்திகள் வந்துள்ளன. ஆனால் இவற்றை நேரடியாகப் பார்த்து உறுதிப்படுத்தக் கூடியதாக இயற்கை
அனர்த்தங்களு
இந்த மாபெரும் பேரண்டத்தில், மனிதன் ஒரு தூசு போன்றவன் அடிப்படையில் மனிதனுக்கும், படைப்பிற்கும் இடையே போராட்டம் எதுவுமில்லை அன்னையிடமிருந்து பாலைப் பருகக் குழந்தைக்கு உரிமையுண்டு. மலரிலுள்ள தேனைப் பருகிடத் தேனிக்குச் சுதந்திமுண்டு, அது போல இயற்கையின் வளங்களை அனுபவித்து மகிழ மனிதனுக்கு ஒர் தடையுமில்லை. ஆனால் அடக்க இயலாத ஆசைகள் காரணமாகவும், பொறுப்பில்லாது இயற்கையின் வளங்களை கொள்ளையடித்ததாலும் இயற்கையில் பீதியளிக்கும் கோளாறுகள் ஏற்படுகின்றன. பூகம்பங்கள், எரிமலை வெடிப்புகள், கடல் கோள்கள், வறட்சி, வெள்ளம் இவையனைத்தும் இயற்கை வளங்களைப் பொறுப்பற்று கொள்ளையடித்ததால் இயற்கையின் சமநிலை குலைந்ததன் விளைவாகும். தான் உட்கார்ந்து கொண்டிருக்கும் கிளையின் அடிப்புறத்தைக் கோடரியால் வெட்டத் துணியும் மூடன் போல மனித சமுதாயம் செயல்படுகிறது. (13.1.1997 சொற்பொழிவு)
நுட்பமான அணுவிலிருந்து மிகப் பெரும் நட்சத்திரம் வரையில் இந்த பிரபஞ்சம், படைப்பில் உள்ள ஒருமையினைப் பற்றிய பேருண்மையைத் தெரிவிக்கும் வகையில் உருவாகியிருக்கிறது. இந்தப் பேரண்டம்
- 2

Fாயி ராம்”
அனர்த்தம்
எமக்கு ஒரு படிப்பனவைத் தந்துள்ளது. உலகம் முழுவதும் சுமார் பல இலட்சம் மக்கள் இரண்டு அல்லது மூன்று நிமிடங்களில் அழிக்கப்பட்டுவிட்டனர். பல இலட்சம் வீடுகள், உடமைகள் எல்லாம் சில நிமிடங்களில் இருந்த இடம் தெரியாமற் போய் விட்டன.
இந்தத் தண்ணிருக்கா இவ்வளவு பலம் இந்தப்பலத்தை யார் கொடுத்தது? எல்லாம் இறைவன் சங்கற்பம் இந்தப் பேரழிவை ஒரு ஆன்மீகக் கண்ணோட்டத்திற் பார்ப்போம்
நம் ஆன்மீகமும்
முழுவதும் ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், மண் ஆகிய பஞ்ச பூதங்களால் ஆனது. ஒலி,தொடுதல், வடிவம், சுவை, மணம் முதலியன. அவற்றின் தன்மைகள். இவை அனைத்தும் "சச் - சித் - ஆனந்த” த்திலிருந்து வெளிவந்தவை. என பகவான் பூரீ சத்ய சாயி பாபா
கூறுகிறார்.
மனிதனுக்கும் பஞ்சபூதங்களுக்கும் இடையே உள்ள இந்த தெய்வீகத் தொடர்பினை வெளிப்படுத்தியதன் மூலம், u56)JT6öT uTun. இயற்கையிலுள்ள உயிருள்ள,உயிரற்ற அனைத்தினையும் புனித நிலைக்கு உயர்த்தியுள்ளார். நாம் இயற்கையின் பல்வகைத் தன்மையின் வளத்தினை உணர்ந்து, அதைப் பாதுகாத்து, வளப்படுத்தி இயற்கையை நேசிக்கி வேண்டும். (15.05.2000 சொற்பொழிவு)
அனர்த்தம் பற்றி பகவானின் னச்சரிக்கை
கர்மா என்கிற தலைவிதிக்கு, கால்களோ, கண்களோ, அன்றி வாயோ கிடையாது. ஆனால் மனிதன் அந்தக் கர்மாவின் விளைவுகளிலிருந்து மனிதனால் தப்பமுடியாது அதனால் தான் நம் முன்னோர்கள் எவரும் கர்ம விளைவுகளிலிருந்து தப்ப முடியாது என வலியுறுத்திச் சொல்லியிருக்கிறார்கள் உங்களது விருப்பு
El -

Page 24
வெறுப்புகளுக்கு ஏற்றவாறு உங்கள் கர்ம வினைகள் அமைவதில்லை அதனால் தான் உங்களது விருப்பத்திற்கு ஏற்ப சில நடப்பதில்லை. அதைப்போல உங்களுக்குத் தேவை என்று நினைக்காதது சில நடக்கும். அவற்றை உங்களால் தடுக்க முடியாது. கர்மா அதன் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. உங்கள் எண்ணங்களும் மாயையும் தான் நடப்பவை எல்லாம் உங்களது விருப்பப்படி நடப்பதாக என்ன வைக்கின்றன.
இந்த உலகம் முழுவதும் மர்மமும் ஆச்சரியமும் நிரம்பியது. பஞ்சபூதங்களினால் உருவானதே இவ்வுலகம். காலம் செல்ல செல்ல அது மாறி வருகிறது. அதைப்போலவே தான் பெளதிகமான இந்த மனித உடலும் பஞ்ச பூதங்களால் உருவானதால் மாறுதலுக்குட்பட்டதே. ஆனால் தேகத்தின் உள்ளுறைபவர் நிரந்தரமானவரே.
இறைவனின் சங்கல்பத்திற்கு எதிராக எவராலும் போக முடியாது. அவை மனிதனின் அறிவுக்குப் புலப்படாது, அப்பாற்பட்டவை. உண்மையை சொல்வதானால், இவ்வுலகில் இல்லாத எதையும் கூட நேரடியாகத் தோன்றச் செய்ய முடியும். அதைப்போலவே கண்ணெதிரே இருக்கும் எதுவானாலும் அதையும் கண்
சுனாமி அனர்த்தமும் சாயி நிறு
சுனாமிப் பேரழிவு இலங்கையின் கடற்கரைப் பகுதியையும் தெற்கு ஆசிய நாடுகளையும் கடந்த டிசம்பர் 26ஆம் திகதி தாக்கி நாசம் செய்தது.நாசத்தை அளவிடமுடியாது இலங்கை பூரீ சத்திய சாயி சேவா நிறுவனம் உடனடியாக செயலில் இறங்கியது. பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதையும், புனரமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லவும், எல்லா பணப்பரிமாற்றங்களை மேற்பார்வை செய்வதற்காகவும் மத்திய இணைப்பாளர் சாயி சகோதரர் M. வன்னிய சேகரம் அவர்கள் தலைமையில் பல அனுபவம் வாய்ந்த பெரியோர்கள் கொண்ட ஒரு குழு நியமிக்கப்பட்டதும் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் குறிப்பாக அமெரிக்க சாயி நிறுவனங்களிலிருந்தும் உதவிகள் பெருமளவில் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிதிகளை சரியான முறையில் செலவு செய்வது இந்தக் குழுவின் முக்கிய பொறுப்பாகும்.
- 2

சிமிட்டும் நேரத்தில் காணாமல் போகச் செய்ய முடியும். எல்லாம் இறைவனின் சங்கல்பமே, இந்த உடல் அழிந்து விடும் எவரும் இறப்பை தடுக்கமுடியாது. அது பிறக்கும் போதே தீர்மானிக்கப்பட்டு விடுகிறது. இந்த உலகத்தை விட்டு நீங்கும் தேதி இந்த உடலின்மேல் உலகத்தில் பிறக்கும் போதே எமுதப்பட்டுதான் வருகிறது. ஒவ்வொன்றும் தெய்வீகத்தின் சங்கல்பத்தின்படியே. அவரது கட்டளைப்படியே நடக்கிறது, மனிதனுடைய முதற்கடமை தெய்வத்தின் கட்டளையை எந்த ஒரு தயக்கமுமில்லாமல் அப்படியே ஏற்று பணிந்து நடப்பதுதான். தெய்வத்தின் கட்டளையை வார்த்தையும், அதன் பொருளும் தவறாது. இடையே கமா முற்றுப்புள்ளி எதுவும் சேர்க்காமல் அப்படியே பின்பற்ற வேண்டும். நீ மிகவும் நுணுக்கமாக கவனித்தால் அவற்றை நிகழ்த்தும் கண்ணுக்கு தெரியாத இறைவனின் திருக்கரங்களின் செய்பாடுகளை உணரமுடியும்.
தெய்வீகத்தின் கட்டளையை முழுமையான
நம்பிக்கையுடனும், எந்தவித தடங்கலுமின்றி வரும்
விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் அப்படியே ஏற்று
அடிபணிய வேண்டும். (19.10.2004 சொற்பொழிவு நவம்பர் 2004 का. फ्राण्ठ)
தொகுத்தளித்தவர்
சி. முத்துலிங்கம்
வனத்தின் உடனடிப்பிரதிபலிப்பும்
சாயி நிறுவனங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக் கான இளைஞர்கள் பேரழிவு நிகழ்ந்த இடங்களுக்கு பல லொறிகள் நிரம்பிய அத்தியாவசியப் பொருட்கள், சமைத்த உணவு, மருந்துவகைகள், உடுப்புகள், தற்காலிக தங்குமிடங்களை அமைக்கத் தேவையான கூடாரங்கள் ஆகியவற்றை உடனடியாக எடுத்துச் சென்றனர். கொழும்பு சாயி நிலையம் இரவுபகலாக இயங்கும் ஒரு சேவை நிலையமாகக் காணப்பட்டது. பாதிக்கப்பட்ட வர்களுக்கு வழங்குவதற்காக சாயிபக்தர்கள் தங்களால் இயன்ற உதவிகளைக் கொடுத்து உதவினர் சாயிபக்தர்கள் அல்லாதோரும், நம்பிக்கை கொண்டு பெருமளவில் உதவினர். இரவுபகலாக வந்த உதவிப்பொருட்களை தொண்டர்கள் பொதிசெய்து, வடக்கு, கிழக்கு, தெற்கு என்று இலங்கையின் எல்லாப் பகுதிகளுக்கும் அனுப்பிக் கொண்டிருந்தனர்.
2

Page 25
டாக்டர் உபாத்தியாய, என்பவர் பாதிக்கப்பட்ட இடங்கள் எல்லாவற்றிற்கும் சென்றதுடன் சத்திய சாயி நிறுவன உத்தியோகத்தருடனும் கொழும்பில் விசேட கூட்டமொன்றில் சந்தித்தார். அதிர்ச்சியடைந்து இருப்பவர்களுக்கு சுவாமியின் சொற்படி அன்புகாட்டி அவர்களை அதிர்ச்சியிலிருந்து மீளச் செய்வது அவசியம் என வலியுறுத்தப்பட்டது. இங்கிலாந்திலிருந்தும் ஒரு மருத்துவக் குழுவை, விசேடமாக கண் சம்பந்தமாக சிகிச்சை அளிப்பதற்கு வரவழைப்பதுபற்றி ஆலோசிக்கப் பட்டது. சிகிச்சை முகாம்களுக்கு அருகில் நாராயண சேவை நடாத்துவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. அரச இயக்கத்துடன் இணைந்தே சாயிநிறுவனம் பணியாற்ற வேண்டுமென்பது வலியுறுத்தப்பட்டது.
கிழக்கு பிராந்திய முநீ சத்திய சா அனர்த்த சே
esboslugsbassab (Counseling)
1) 26.12.2004 அன்று ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தால் கிழக்கு மாகாணத்தின் ஏனைய பகுதிகளிலிருந்து முற்றாக சகல வழிகளிலும் தொடர்புகள் துண்டிக்கப்பட்ட தம்பிலுவில், திருக்கோவில் கிராமங்களுக்கு கிழக்கு பிராந்திய இணைப்புக்குழுத் தலைவர், ஆன்மீக இணைப்பாளர் மண்டூர் சாயி நிலையத் தலைவர் உள்ளிட்ட 8 பேர் கொண்ட குழுவினர் பல சிரமத்தின் மத்தியில் 28.12.2004 அன்று மேற்படி பகுதிக்குச் சென்று அப்பகுதி சாயி அங்கத்தவர்களையும் பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்து ஆறுதல் வார்த்தை கூறி நலன் விசாரித்தார்கள். இவ் விஜயமானது பல வழிகளிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உளரீதியான ஆற்றுப்படுத் தலாக அமைந்தது (Counseling)
2) கொழும்பு சத்திய சாயி சேவா நிலையத்தினரின்
βωΜΠΠΟΙΟΙ βασΟω கொழும்பு சத்திய சாயி சேவா நிலையத்தின் இளைஞர் அணியினால் உடனடியாக எடுத்து வரப்பட்ட புளிச்சாதப் பொட்டலங்கள், உலர் உணவுப் பொருட்கள், அடிப்படைத் தேவைகளான பாய், சுடுநீர் போத்தல்கள், சமையல் பாத்திரங்கள் உடுதுணிகள்,

பிரசாந்திக் கவுன்சில் தலைவரி
Dr.மைக்கேல் கோல்ஸ்ரெயின் பிரசாந்திக் கவுன்சில் அங்கத்தவரும் பிரசாந்தி மருத்துவக் கவுன்சில் தலைவருமான Dr. நரேன் ரெட்டி ஆகியோர் கடந்த ஜனவரி 8ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்தனர். இங்கு பாதிக்கப்பட்ட இடங்களை நேரடியாகப் பார்வையிட்டு சர்வதேச சாயி நிறுவனங்கள் எவ்வாறு உதவமுடியும் என்பதைக் கண்டறிந்தனர். இலங்கைப் பிரதமர் கெளரவ மகிந்தராஜபஷ்ஷவுடனும் கலந்துரை யாடினர். பிரதமரும் சாயி நிறுவனங்களின் உதவிபற்றித் தாமும் அறிந்துள்ளதாகவும் கூறினர். தொடர்ந்து Dr.கோல்ட்ஸ்ரெயின் Dr. ரெட்டி ஆகியோர் கொழும்பில் சாயிமந்திரில் அனுபவம் வாய்ந்த சாயி நிறுவன உத்தியோகத்தர்களுடன் உடனடித் தேவைகள் பற்றியும் நிவாரணப் பணிக்கான செயற்திட்டம் பற்றியும் 56.5560) JuJITly 60Tf.
யி சேவா நிலையங்களின் சுனாமி
வைப் பணிகள்
குழந்தைகளுக்கான பால்மா, பால் போத்தல்கள், நுளம்புத் திரிகள் போன்றவை தம்பிலுவில், திருக்கோவில், கோமாரி, கல்முனை, அக்கரைப்பற்று பாடசாலையில் தங்கியுள்ள நிர்கதியான 1500 குடும்பங்களுக்கு 3 இலட்சம் பெறுமதியான பொருட்கள் விநியோகிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கிழக்கு பிராந்திய இணைப்புக்குழுத் தலைவர் 3 நாட்கள் கலந்து கொண்டார்.
3) அவமரிக்க நாஉடைச் சேர்ந்த 14 வைத்தியர்கள்
roof a Bafoosbaugb மத்திய இணைப்புக்குழுவின் அனுசரணையுடன் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த 14 வைத்திய நிபுணர்கள் T&Lř Ln(8356ňumpulum 6ño (Makeshghuyos) தலைமையில் 01.02.2005 முதல் 06.02.2005 வரை மிக மோசமாக பாதிக்கப்பட்ட தம்பிலுவில், திருக்கோவில், கோமாரி மக்கள் தங்கியிருந்த முகாம்களில் வைத்திய சேவையை ஆற்றியதுடன் அந்த வைத்திய குழுவினரால்
குழந்தைகளுக்கான புத்தகம், பென்சில்
9 200 குழந்தைகளுக்கான பாடசாலை சீருடைகள்
23

Page 26
9 நாளாந்த தொழில் செய்யும் தங்கள் துவிச்சக்கர வண்டிகளை இழந்தவர்களுக்கு 7 புதிய துவிச்சக்கர வண்டிகள்
9 3 தையல் இயந்திரங்கள் - 200 அரிக்கன் லாம்புகள் வழங்கப்பட்டதுடன் தொழில் வாய்ப்புகளுக்கான உபகரணங்களான மேசன், தச்சுத்தொழிலாளர் களுக்குரிய கருவிகளும் வழங்கப்பட்டது.
0 உயிர்நீர்த்த பாலவிகாஷ் மாணவர்கள் குருமார்களுக்கான பொதுமக்களுக்கான 41فاريو நாள் நினைவஞ்சலியில் கலந்து கொண்டு அவர்களது செலவிலேயே முகாம்களில் உள்ள சகல குடும்பங்களுக்கும் உணவு வழங்கப்பட்டது மேலும் பலதரப்பட்டவர்களையும் சந்தித்து அவர்களுக்கு ஆற்றுப்படுத்தல் (Counseling) நிகழ்வுகளையும் நடத்தி வைத்தனர்.
0L CCLTaaTMTLLLLLTT S LLGLTC SLLGGLGGTTTTLLG T
ஆறிறப்பட நிவாரண சேவைகள்
A) மட்டக்களப்பு சேவா நிைைய சுனாமி நிவாரணம்.
9 தங்கள் சொந்த ஊர்களுக்கு போக முடியாமல் இருந்த கிழக்கு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 38 மாணவ மாணவிகளுக்கு 27, 28ஆம் திகதிகளில் தங்குமிட, உணவு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது.
9 2 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள்
விநியோகம்
9 சமையல் பாத்திரங்கள், மண்ணெண்ணை
அடுப்புக்கள்
0 பாடசாலை உபகரணங்கள் கொப்பிகள்
9 மாணவிகளுக்கான கோலவுடைத்துணி
9 மாணவ மாணவிகளுக்கான சப்பாத்துக்களும் கால் உறைகளும் குழந்தைகளின் தேவைக்கான பால்மா, நுளம்பு வலை, சுடுநீர் போத்தல்
B) தொழில் வாய்ப்புகளுக்கான உபகரணங்கள், மேசன் தொழிலுக்கான கருவிகள், தச்சுத் தொழிலுக்கான கருவிகள்,மீன்பிடி தொழிலுக்கான, பெற்றோல்மாக்ஸ், வியாபாரத் தொழிலுக்கான தராசு, படிகள் மற்றும் பாத்திரங்கள். மட்டக்களப்பு சேவா நிலையத்தில் வைத்து வழங்கப்பட்டன.

5)
sdboop, ஆரையம்பதி, கலுதவாடுகிக்குடி, ofurpoao Bara T 16ooooouurfina56an Gibsdnu
6avo Luogh
சடலங்கள் மீட்புப் பணி
உலர் உணவுப் பொருட்கள் (அரிசிமூடை, பருப்பு)
தொடர்ச்சியாக 10 தினங்களுக்கு பொதுமக்களிடம் இருந்து உணவு பொதிகள் சேகரிக்கப்பட்டு
முகாம்களுக்கு வழங்கியது போன்ற பல சேவைகள் இந் நிலையங்களால் செய்யப்பட்டது.
எ) கிழக்கு பிராந்தியத்திற்கு மத்திய இனைப்பா
()
Gc Guld மத்திய இணைப்பாளர் திரு M. வன்னியசேகரம் அவர்களுடன் திரு.S.R.நாராயணசாமி, திரு. A.புலேந்திரன், திரு. ஜெகத்குணசேகர ஆகிய உள்ளிட்ட குழுவினர் 03.02.2005 முதல் 05.02.2005 வரை கிழக்கு பிராந்திய சுனாமி அனர்த்தத்திற்கு உள்ளான இடங்களான நாவலடி, பெரிய கல்லாறு, கல்முனை, காரைதீவு, தம்பிலுவில், திருக்கோவில் போன்ற பகுதிகளை நேரடியாகச் சென்று பார்வையிட்டனர்.
மட்டக்களப்பு சேவாநிலையம், ஆரையம்பதி சேவா நிலையம், அக்கரைப்பற்றுசேவா நிலையம், மண்டூர் சேவா நிலையங்களுக்கும் விஜயம் செய்தனர்.
முற்றாக அழிந்து போன தம்பிலுவில் சேவாநிலையத்தையும் சிதைவுற்ற பெரியகல்லாறு சேவா நிலையத்தையும் மத்திய இணைப்புக் குழுவால் மீளக்கட்டியெழுப்புவதற்கான உத்தரவாதம் மத்திய இணைப்பாளரினால் வழங்கப்பட்டது.
திருமதி Mதருமரெட்ணம் அவர்களால் நன்கொடை செய்யப்படவுள்ள 100ஏக்கர் காணியையும் மத்திய இணைப்புக் குழுவினர் சென்று பார்வையிட்டனர்.
திருக்கோவிலில் நடைபெற்ற 41ஆம் நாள் நினைவஞ்சலியில் மத்திய இணைப்புக் குழுவினரும் கலந்து கொண்டு அனுதாப உரையாற்றினர்.

Page 27
“ஓம் பூரீ 8
சுனாமி கடல் அனர்த்தம்
26.12.2004 அன்று கடல் அனர்த்தம் பற்றிக் கேள்வியுற்றதும் அன்று மாலை 4 மணிக்கு இணைப்புக் குழுத் தலைவர் திரு. இ.வசந்தசேனன் தலைமையில், உப.தலைவர், செயலாளர், சேவை இணைப்பாளர் கொண்ட குழு உடனடியாக சேவையை ஆரம்பித்தனர் அந்த நேரத்தில் யாழ்ப்பாாணத்தில் மா தட்டுப்பாடான நேரத்திலும் 25 றாத்தல் பாண் மட்டுமே கொள்வனவு செய்யக்கூடியதாக இருந்தது அத்துடன் 25 கிலோ பிஸ்கட்டு வாங்கிக் கொண்டு உடனடியாக பருத்தித்துறை சாயி மந்திருக்கு சென்று அங்கிருந்த உறுப்பினர்களையும் சேவையில் ஈடுபட உற்சாகப்படுத்திவிட்டு மந்திகைப் பாடசாலைக்குச் சென்று அங்கிருந்த சுமார் 5000 அகதிகளாக்கப்பட்ட மக்களைச் சந்தித்து தேவையான அவசர உதவிகள்பற்றி ஆராயப்பட்டது. அன்று காலை தொடக்கம் உணவோ தண்ணிரோ இன்றி இருந்த மக்களுக்கு பிஸ்கட்டுகளைப் பகிர்ந்து கொடுக்கப்பட்டது. உறுப்பினர்களை இழந்து கதறிக் கொண்டிருந்த குடும்பங்களுக்கு ஆறுதல் கூறி பாணும் வழங்கப்பட்டது. இதேவேளை 26.12.2004அன்று ஞாயிறு மாதாந்த சாதனையில் பங்கு பற்றுவோருக்காக சமைத்த உணவு எல்லாவற்றையும் பருத்தித்துறை நிலையம் பார்சல்களா க்கி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கினர். இவர்கள் தொடர்ந்து இந்த சேவையை 12 தினங்களுக்கு 3 நேர உணவுகளைச் சமைத்து வழங்கினர் சுமார் 2500 பேருக்குத் தேவையான உணவு வழங்கப்பட்டது.
அடுத்தநாள் தொடக்கம் யாழ்ப்பாண நிலையத் தின் இளைஞர் பிரிவினரும் உறுப்பினர்களும் முழு மூச்சாக சேவையில் இறங்கினர். உணவு உடைகள், பால்மா, பிஸ்கட் போன்றவைகளைச் சேகரித்து வழங்கினர் 7 நாட்களுக்கு யாழ் நிலையத்தில் உணவு சமைத்து அவற்றைக் கொண்டு சென்று விநியோகித்தனர். சுமார் 5 லட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் வழங்கப்பட்டன.
முல்லைத் தீவிலிருந்து இடம்பெயர்ந்து சாவகச் சேரி புனித லிகோரியர் தேவாலய முகாமில் இருந்த 26 குடும்பங்களுக்கு உடனடி மருத்துவ முகாம் நடாத்தப் பட்டது. அத்துடன் அவர்களுக்கு தலையணைகள், சாப்பாட்டுக் கோப்பைகள், டம்ளர்கள், சூட்கேஸ்கள்,
2

ாயி ராம்”
வடபிராந்திய சேவைகள்
அலுமினிய சமையல் பாத்திரங்களும் வழங்கப்பட்டது பருத்தித்துறை வேலாயுதம் மகா வித்தியாலயத்தில் தங்கியிருந்த சுமார் 400 மக்களுக்கும் தண்ணீர் தொட்டி அமைத்து தேவையான பைப் வசதியும் செய்து கொடுக்கப்பட்டது.
குடத்தனை அன்னை வேளாங்கன்னி ஆலயத்தில் இருந்த 136 குடும்பங்களுக்கு சுடுநீர் போத்தல் (FLASK), பாடசாலை உபகரணங்களும் குடத்தனை பாடசாலை முகாமில் இருந்த 78 குடும்பங்களுக்கு பால்மா, சவர்க்காரம், பாடசாலை உபகரணங்கள், என்பவை வழங்கப்பட்டன.
30,31ஆம் திகதிகளில் தமது உடைந்த வீடுகளைப் பார்க்க வந்த மக்களுக்கு, அவரவர் வீடுகளில் வைத்து குடிதண்ணிர் போத்தல்கள், பிஸ்கட் பனடோல் என்பன வழங்கப்பட்டது. சுமார் 2% இலட்சரூபாவுக்கு இந்த உதவிகள் கரையோரப்பகுதி பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது.
இவற்றைத்தவிர உடனடி உதவித்தேவைகருதி எல்லா நிலையங்களும் தனித்தனியாக உதவிகளில் ஈடுபட்டன. ஒவ்வொரு நிலைய அங்கத்தவர்களும் தமக்குள் நிதி சேகரித்து அத்தியாவசியப் பொருட்களை விநியோகித்தனர், யாழ்ப்பாணம், மானிப்பாய், தாவடி, கோண்டாவில், கோப்பாய், மந்திகை, கொக்குவில் ஆகியவையின் சேவை விபரங்கள் கிடைத்துள்ளன.
இதன்பகுதி சேவைகள்
தென்பகுதியிலும் பாரிய உதவி வேலைகள் நடைபெற்றன என அறியக்கூடியதாக உள்ளது. பாண்ஸ் பிளேஸ் பஜனை நிலையம் சேவைக்கான மத்திய இடமாகக் காணப்பட்டது. இரவுபகலாக அங்கு சேவைகள் நடைபெற்றதாக அறியக்கூடியதாக உள்ளது. அங்கிருந்து காலி, மாத்தறை போன்ற தென்பகுதி மக்களுக்கு உடனடி உதவிகள் அனுப்பப்பட்டதாகவும், கிழக்குப் பிராந்தியத் திற்கும் அவசர உதவிகள் அனுப்பப்பட்டதாகவும் அறியக் கூடியதாக உள்ளது. முழுவிபரங்களும் பெற்றுக் கொள்ள முடியவில்லை.
25

Page 28
சுனாமி அனர்த்தங்கள் வரலாற்றில் கண்டிராத பேரழிவுகளையும் உயிர் இழப்புக்களையும் தந்துவிட்டுச் சென்றுள்ளது. நினைக்க முடியாத பேரழிவுகளை சில நிமிட நேரத்தில் சாதித்துவிட்டது. பஞ்சபூதங்களில் ஒன்றாகிய தண்ணிரின் பலம் எப்படிப்பட்டது என நாம் நேரடியாக அனுபவப்பட ஒரு சந்தர்ப்பம் உலகில் பல இலட்சக்கணக்கான உயிர்களையும் இலங்கையில் சுமார் 32ஆயிரம் உயிர்களையும் காவு கொண்ட இப்பேரழிவுக்கு மனிதனுடைய பேராசையே காரணம். நிலத்திற்குக் கீழுள்ள கணிப்பொருட்களை பேராசைகொண்டு சுரண்டுவதால் இயற்கை சீற்றமடைந்து இப்படிப்பட்ட அழிவுகளை நிகழ்த்துகிறது என பகவான் கூறியுள்ளார்.
பலவித அழிவுகளை ஏற்படுத்தியுள்ள இந்த யுகப் பேரழிவு ஒரு சில நல்ல விடயங்களையும் ஏற்படுத்தியுள்ளது. என்பதையும் நினைத்துப்பார்க்கக் கூடியதாக உள்ளது.
கடல் அனர்த்தத்தைப் பற்றிக் கேள்விப்பட்டதும் எமது சாயி நிறுவனங்களின் பிரதிபலிப்பைப் பார்க்கும் போது, சேவைபற்றி பகவான் அடிக்கடி கூறிவரும் போதனைகள், எவ்வளவுதூரம் அவர்களின் அடிமனத்தில் இருந்து ஒரு சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தனர் என்பதை அறியக் கூடியதாக இருந்தது. இலங்கையில் சாயி நிறுவனங்கள் தான் முதலில் சேவையில் இறங்கின என்ற பெயர் எமக்குண்டு. அது வடக்கென்றால் என்ன. கிழக்கென்றால் என்ன, தெற்கு என்றால் என்ன எங்கும் சாயி அடியார்களின் உணர்வு செயற்பாடு ஆகியன பாராட்டத்தக்கவையாக அமைந்தன. ஒவ்வொருவரும் தங்கள் ஆத்மதிருப்திக்காக செய்த சேவைகளுக்கு பாராட்டுகள் அவசியமில்லை. ஆயினும் சாயிபக்தர்களின் ஆன்மீக வளர்ச்சிக்கு ஒரு உதாரணம்.
Ggić

அறிமுகமே இல்லாத மக்கள், எங்கோ கஷடப்படுகிறார்கள் என்று அறிந்ததும், சாயி நிலையங் களுக்கு வந்து குவிந்த உதவிப் பொருட்கள் உடுப்புகள் சமையற் பாத்திரங்கள், படுக்கைகள், பால்மாவகைகள், தண்ணிர்ப்போத்தல்கள் ஏராளம். அது அவர்களின் தியாக சிந்தையையும், தாராள மனப்பாங்கையும் எடுத்துக் காட்டின. “அவசர தீஜோ பகவான்’ என்று ஒரு பஜனைப்பாடல் வரி வருகிறது. அதாவது சேவை செய்ய ஒரு சந்தர்ப்பம் தாருங்கள் என்பதே அதன் கருத்து.
சாயி நிலையங்கள் எதிலும் உறுப்பினரல்லாத மக்களும், நம்பிக்கை காரணமாக சாயி நிலையங்களுக் குச் சென்று தமது உதவிப்பொருட்களை வழங்கியது ஒரு சிறப்பம்சம்.
பகவானின் 80ஆவது அவதார தினக் கொண்டாட்டக் கருப்பொருள் UNITY - PURITY - DIVINITY (Gibson - தூய்மை - தெய்வீகம்) என்பதாகும் இந்தக் கடல் அனர்த்தம் இந்தக் கருப் பொருளை நோக்கி எம்மை நகர்த்தியுள்ளது. உலகம் முழுவதுமுள்ள சாயி உறுப்பினர்கள் ஒற்றுமையுடன் தூய மனத்துடன், எல்லோரிலுமுள்ள தெய்வீகத்தை உணர்ந்து அவர்களுக்கு தம்மாலான உதவிகள் செய்து ஆன்மீகத்தில் ஒரு படி உயர்ந்து காணப்படுகிறார்கள்.
“கர்மண்யேவாதிகாரஸ்தேமாபலேஷ"கதாசன மாகர்மபல ஹேதுர்பூமாதேஸங்கோஸ்த்வகர்மணி!" கீதை 471
உனக்குவினையாற்றுவதற்கு, ஒரு காரியம் செய்வதற்கு மட்டும் அதிகாரம் உண்டு. அதன் விளைவுகளின் மேல் ஒருபோதும் இல்லை. கர்மபலனை நோக்கமாகக் கொண்டு அதன் பொருட்டு மட்டும் காரியம் செய்பவளாகி விடாதே. காரியம் செய்யாமல் வெறுமனே இருப்பதிலும் விருப்புக் கொள்ளாதே”
muÚJTub
6

Page 29
"Qh go
φή σόδιu σπιά (3σωI
கிழக்குப் பிராந்திய செய்திகள் இலவச கண்சிகிச்சை முகாம்
கிழக்குப் பிராந்திய இணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் 7.2.2005 முதல் 12.2.2005 வரை களுவாஞ்சிக்குடி, ஒந்தாச்சிமடம், கல்முனை மகிழுர், மண்டூர் ஆகிய இடங்களில் கண்சிகிச்சை முகாம்கள் நடாத்தப்பட்டன. இம் முகாங்களில் 1024 நோயாளிகள் பரிசோதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது 279 பேருக்கு மூக்குக் கண்ணாடிகள் இலவசமாக வழங்கப்பட்டது மேலும் தெரிவு செய்யப்பட்ட 26 பேருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த சிகிச்சை முகாம்கள் கண் சத்திரசிகிச்சை நிபுணர். லுச.கூ. மகேந்திரராஜாவினால் நடாத்தப்பட்டது.
இரத்ததானம்
கல்முனை, மண்டூர், திருக்கோவில், கல்லாறு,
வந்தாறு மூலை சேவா நிலையங்களைச் சேர்ந்த 31
உறுப்பினர்கள் இரத்ததானம் செய்தனர்
வெள்ள நிவாரணம்
கொழும்பு சத்தியசாயிசேவா நிலையத்தினால் அனுப்பப்பட்ட உலர் உணவுப் பொருட்கள், பால்மா, உடுப்புவகைகள், போன்றவை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மண்டூர், கல்முனை ஆகிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. மண்டூர் கல்முனை ஆகிய இடங்களிலுள்ள சத்தியசாயி நிலையத் தொண்டர்கள் கிழக்குப் பிராந்திய இணைப்புக் குழுவின் வழிகாட்டலில் இப் பணியில் ஈடுபட்டனர்.
வட பிராந்திய செய்திகள் தற்காலிக வீடு
கந்தரோடை பிள்ளையார் முகாமில்,
காங்கேசன்துறை, மயிலிட்டி பகுதியிலுள்ள மக்கள் இடம் பெயர்ந்து வசிக்கிறார்கள். இங்கு தாயை இழந்த ஏழு பிள்ளைகள், உடல் நலம் பாதிக்கப்பட்ட தந்தையுடன் வசித்து வருகிறார்கள். கூரை வேய வசதியில்லாமையால் மழை ஒழுக்கில் வாழ்ந்துவந்த இவர்களுக்கு வீட்டைத்திருத்திக் கொடுக்க 11.11.2004 இல் தீர்மானிக்கப்பட்டு 21.11.2004 வீடு திருத்திக் கையளிக்கப்பட்டது. அத்துடன் அங்கு ஒரு முன் பள்ளியும்

99
Tul TT
நிறுவனச் செய்திகள்
ஆரம்பிக்கப்பட்டு அங்கு வசிக்கும் சுமார் 200 பேருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.
மூன்றாவது வீடு கையளிப்பு
சுவாமியின் 80ஆவது அவதார தினத்தை முன்னிட்டு வடபிராந்திய இணைப்புக்குழுவினால் தீர்மானிக்கப்பட்ட 8 வீட்டுத் திட்டத்தின் 3ஆவதுவிடு சாவற்காடு கிராமத்தைச் சேர்ந்த 5பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு வழங்கப்பட்டது. இவர் ஒரு பாரிசவாத நோயாளி. மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டதால் தொழில் செய்ய முடியாதநிலை. குடும்ப வருமானம் இல்லை. மழை வெள்ளத்துள்ளும் வேறு வசதியின்றி ஈரத்தில் நிலத்தில் படுத்திருந்த பரிதாப நிலையைக் கண்டு, உடனடியாக வீடுகட்டிக் கொடுக்கத்தீர்மானிக்கப்பட்டது.11.2004இல் இனம் காணப்பட்டு தீர்மானம் எடுக்கப்பட்டது. 22.12.2004இல் வீடு கையளிக்கப்பட்டது. அத்துடன் அன்றையதினம் அக்கிராமத்தைச் சேர்ந்த 150 சிறுவர்களுக்கு பாடசாலை உபகரணங்களும் சிற்றுண்டி வகைகளும் வழங்கப்பட்டன. வீடு அமைக்க மொத்தச் செலவு 3,03240 : ரூபா (மலசலகூட வசதியுடன்)
நான்காவது வீடு அத்திவாரம்
நான்காவது வீடு பருத்தித்துறைக் கிராமத் திலுள்ள சாளம்பை என்ற கிராமத்தில் அமைகிறது. இதற்கான அத்திவாரக்கல்லை மத்திய இணைப்பாளர் M. வன்னியசேகரம் அவர்களும், சத்திய சாயி அறக்கட்டளை உறுப்பினர் செல்வி மாலா சாபாரட்ணம், வடமத்திய மாகாண இணைப்புக்குழுத் தலைவர் பூரீ ந.புகேந்திரன் ஆகியோர் 25.03.2005 அன்று நாட்டினர்.
இக்குடும்பத்தில் 7 அங்கத்தவர்கள், தகப்பன் காலமாகிவிட்டார், தாயும் கணவன்மாரை இழந்த 3 பெண்பிள்ளைகளும் இக்குடும்பத்தில் அடங்குவர். சித்திரைப் புத்தாண்டுக்கு முன்கையளிப்பதற்காக முழு வீச்சில் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அன்புவார நிகழ்வுகள்
அன்புவாரம் வடபிராந்தியத்திலுள்ள பாடசாலைகள், அரசாங்க காரியாலயங்கள் வங்கிகள் மற்றும் பொது இடங்களில் கொண்டாடப்பட்டது. பாடசாலைகளில்
27

Page 30
பிரார்த்தனையின் பின் ‘அன்பு பற்றிய சொற்பொழிவுகள் நடைபெற்றன. மற்றும் பொது இடங்களில் அன்பு சம்பந்தமான சுவரொட்டிகள் மற்றும் பிரசுரங்கள் விளம்பரப் படுத்தப்பட்டிருந்தன."அன்பு சம்பந்தமான போட்டி நிகழ்வு ஒன்று இடம்பெற்றது கட்டுரைப் போட்டி, கவிதைப்போட்டி, சித்திரப்போட்டி, கதை எழுதும் போட்டி (அன்பை அடிப்படையாக வைத்து) என்பன இடம்பெற்றன கட்டுரைப்போட்டியில் 606 மாணவர்களும் கவிதைப் போட்டியில் 312 மாணவர்களும், சித்திரப் போட்டியில் 75 மாணவர்களும் கதை எழுதும் போட்டியில் 46 மாணவர்களும் பங்குபற்றினர். மொத்தம் 1039 மாணவர்கள் 380 பாடசாலைகளிலிருந்து பங்குபற்றினர். இவற்றைத்தவிர 120 பொதுநிறுவனங்களும் பங்கு கொண்டன.
தலைமைத்துவத்தை மலரச்செய்யும் மனிதமேம் பாடுகள் பயிற்சி
பத்துப் பாடசாலைகளிடையே இருந்து 5 மாணவர்கள் வீதம் ஒரு தடவைக்கு 50 மாணவர்கள் என்ற முறையில் மாணவர்களை அதிபர்களுடாகத் தெரிவுசெய்து அவர்களுக்கு ஒரு முழுநாள் பயிற்சி வழங்கும் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் முதலாவது பயிற்சி 18.03.2005 அன்று கோப்பாயிலுள்ள மனிதமேம்பாட்டு கல்வி பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது காலை 9 மணி தொடக்கம்
பகவானின் 80ஆவது அவதார தின விழா தொ நிவையத்தில் நடைபெற பகவான் பாபா தங்கள் அ 1. புத்த பூரணை மே 23 - 24 2. சாயி நூல் ஆசிரியர்கள், பிரசுரிப்பாளர்கள் மகா 3. சாயி சர்வமத மகாநாடு - "அன்பு எனும் மதம்” 4. சர்வதேச மருத்துவ மகாநாடு செப்ரம்பர் 3 -4 5. பூரீ சத்திய சாயி நிறுவனங்களின் 8ஆவது உல.

மாலை 3.30மணி வரை நடைபெற்ற இப்பயிற்சியை மமே.கல்விப் பணிப்பாளர் பூரீ.K.V.சிவனேசன் அவர்கள் நெறிப்படுத்தினார். தொடர்ந்து இப்பயிற்சிகள் நடைபெற உள்ளது.
மனித (3LDuburricssa5bsuadeUT μDπ6 αστελή சமூகத்திற்கு எடுத்துச் செல்வது தொடர்பான கலந்துரையாடல்
மேற்படி விடயம் தொடர்பான ஒரு கலந்துரையாடல் 26.03.2005 காலை 10மணிமுதல் 1மணிவரை யாழ். பல்கலைக்கழக வணிகத்துறை மண்டப இல. 2இல் நடைபெற்றது. இணைப்புக்குழுத் தலைவர் திரு.இ. வசந்தசேனன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மமே.க.பணிப்பாளர் பூரீ.K.V சிவனேசன், மேல்நீதிமன்ற நீதிபதி உயர்திருவரதராஜா அவர்கள் வடமத்திய மாகாண இணைப்புக் குழுத்தலைவர் பூரீ நபுகேந்திரன் மேன்மை தங்கிய ஜனாதிபதியின் ஆலோசகர்.ழரீ. சு. சிவதாசன ஆகியோருடன் மத்திய இணைப்பாளர் பூரீ.Mவன்னிய சேகரம் அவர்களும் கலந்துகொண்டார். யாழ் பல்கலைக்கழக பேராசிரியர்கள், பிரிவுத்தலைவர்கள், விரிவுரையாளர்கள் யாழ் கல்வியற்கல்லூரி, கோப்பாய், பலாலி ஆசிரியர் கல்லூரிகளின் விரிவுரையாளர்கள், பிரபல கல்லூரிகளின் அதிபர்கள் கல்விமான்கள் ஆகியோர் கலந்து கொண்டு பயனுள்ள பல ஆலோசனைகளை வழங்கினர்.
டர்பாக பின்வரும் விசேட நிகழ்வுகள் பிரசாந்தி ருளாசிகளை வழங்கியுள்ளார்
நாடு -யூலை 19 - 20 - யூலை 22 - 23
க மகாநாடு நவம்பர் 20, 21, 24

Page 31
பஞ்சபூதங்க
ஈஸ்வரனின் தேகமாக கடவுளுக்கு நன்றி செலு மனிதனுக்கு உண்டு. கடவுே எனும் சித்தம் அவனிட எண்ணங்களில் முதலிடத்தை
அவரை முழுமையாக புற செயல்களில் அவன் ஈடுபட்டு
கடவுள், இயற்கை, மணி கவனம் செலுத்துவதற்குப் பதி இயற்கை மேல் குறைவாகவும் சிரத்தை வைத்திருப்பது கt கர்த்தாவின் சொத்தே இ விளைவிப்பது கடுந்தண்ட நிந்தனை என்பதனைப் சுரண்டுவது, களங்கப்படுத்து காலை முதல் மாலை வரை
மறைந்து விடும் சுகபோகங்க
L56|T LITLITតាទាំT அன்பு மடல்களிலிருந்து
កាg — 1996
 
 
 

鬱 鬱 ள் தெய்வம்சமே
B இயற்கையைக் கருதி ஏற்று பத்தும் அபூர்வ நல்லதிர்ஷ்டம் ள மூலகாரணமும் போஷிப்பவனும் முண்டா? கடவுளுக்கு தனது அவன் அளிக்கின்றானா? அல்லது க்கணித்து விட்டு 6. ਲੰ60) ਚੰ
TTTTT?
தன் எனும் வரிசைக் கிரமத்தில் லாக, மனிதன் தன்மீது அதிகமும், கடவுள் மீது மிகக் குறைவாகவும் வலைக்குரியது கடவுள் அல்லது யற்கை அதற்கேதேனும் ஊறு னைக்கு ஆளாக்கும். தெய்வ பொருட்படுத்தாது அதனைச் வது, அழிப்பது என்பவை ஊடாக, பிறப்பு முதல் இறப்பு வரை ஒடி ளின் பின் மனிதன் செல்கிறான்.
-பகவான் பூரீ சத்திய சாயி பாபா -

Page 32
“I AM MULTI FA
PEOPLE ARE
A PAPE
நான் பல முகங்கை
மக்கள் என்னை
(Paper wait
yr Aifft
 
 
 
 

CETED DIAMOND
USING ME AS R wAT” yw2=/27/77 "
-BABA
)ளக் கொண்ட வைரம்
Q(5 பாரக் கல்லாக
} பாவிக்கிறார்கள் 今々の人
- TLIT