கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வாழ்வியல் வசந்தங்கள்:சிந்தனை வரிகள்

Page 1

வயிரவநாதனின்

Page 2

சிந்தனை வரிகள்
பருத்தியூர் பால, வயிரவநாதன்
வாழ்வியன் வசந்தங்கள்- பாகம் 78

Page 3
நூல் தலைப்பு :
ஆசிரியர் :
மொழி :
பதிப்பு ஆண்டு : பதிப்பு விபரம் :
9D jfl60)LD :
தாளின் தன்மை : நூலின் அளவு:
அச்சு எழுத்து :
மொத்த பக்கங்கள் :
அட்டைப்படம் :
நூல் விபரம்
சிந்தனை வரிகள் வாழ்வியல் வசந்தங்கள் பாகம் - 18 பருத்தியூர் பால. வயிரவநாதன்
தமிழ்
2012
முதல் பதிப்பு
ஆசிரியருக்கு
70 கிராம் பாங்க் கிரெளன் சைஸ் (12.5 x 18.5 செ.மீ)
13
66
அஸ்ரா பிரிண்டர்ஸ்
கணனி வடிவமைப்பு : அஸ்ரா பிரிண்டர்ஸ்
அச்சிட்டோர் :
நூல் கட்டுமானம் :
வெளியிட்டோர் :
நூலின் விலை
அஸ்ரா பிரிண்டர்ஸ்
பெர்பெக்ட்
வானவில் வெளியீட்டகம்
: 150/=
ISBN: 978-955-0469-19-2
- 2 -

அணிந்துரை
பால, வயிரவநாதனின் சிந்தனை வரிகள் என்ற நூலைக் கையெழுத்துப்படியாகப்படித்தேன். எமது பண்பாட்டிலேகாலத்துக்குக் காலம் நீதிபோதனை செய்யும் மரபு நிலவி வந்துள்ளமை ஆய்வாளர்கள் நன்கு அறிவர்.
அறிஞர்கள், பெரியோர்கள், புலமையாளர்கள் மாத்திரமன்றிச் சாதாரண மக்களும் தமது பட்டறிவில் அனுபவத்தின் சாயல்களை உள்வாங்கிச் சில நீதிக் கருத்துக்களைக் கூறிப் போயுள்ளனர். நீண்ட கால அனுபவத்தினாலே கண்ட உண்மைகளைத்தமது குரும்பத்திற்கு, சமூகத்திற்கு, ஏன் உலகத்திற்கே சொல்லிப் போயுள்ளனர். தமிழிலே வழங்கும் பழமொழிகளைப் பார்க்கும் போது இந்த உண்மை புலனாகும்.
எல்லா மனிதர்களுக்கும் சிற்சில வேளைகளிலே நல்ல சிந்தனைகள் தோன்றுவதுண்டு. ஆனால் எல்லோரும் அந்தச் சிந்தனைகளைப் பதிவு செய்து வைப்பதில்லை. ஆனால் பால. வயிரவநாதன் தனது சிந்தனைகளாகச் சிறு சிறு வாக்கியங்களாகப் பதிவுசெய்து வைத்துள்ளமை பாராட்டிற்குரியது.
இந்த உலக வாழ்விலே மனிதன் காணுகின்ற இன்ப துன்பம்
அனைத்திற்கும் அவனது செயற்பாடுகளே காரணம் என்கின்ற
உண்மையைப் பலர் உணர்வதில்லை. அந்த உண்மையை நன்கு
உணர்ந்த இந்த நூலாசிரியர் தனது சிந்தனைகளை வரி எனக்
- 3 -

Page 4
குறிப்பிடுவது மிகவும் பொருத்தமானது." இரண்டடி, மூன்றடி, நாலடி என எமது நீதி போதனை மரபு நீண்டு தொடர்கின்றது உலகத்திற்கு நீதி புகட்டிய குறள் இரண்டடிகளைக் கொண்டது, சமண முனிவர்கள் நாலடியிலே நீதி சொன்னார்கள். பால வயிரவநாதன் ஒரு வரியிலே (சிந்தனைவரி) உலகத்துக்கு நீதி சொல்கின்றார்.
இன்றைய கமூகத்திற்கு நீதி போதனை மிகவும் அவசிய மானது என்ற கருத்தினை மறுதலிப்பவர்கள் இரார் என்றே நம்புகி றேன். நீண்ட கதைகள் மூலமாகவோ செய்யுள்கள் மூலமாகவோ நீதி போதனை செய்தால் இன்றைய இளையவர்கள் பொறுமையாகப் படிக்க மாட்டார்களி. திருக்குறளையே படிக்க விரும்பாத தலை முறையினர் எவ்வாறு சிலப்பதிகள்ரத்தை, கம்பராமாயணத்தைப்படிக்கப் போகின்றார்கள். அவர்களைப் படிக்கச் சொன்னாலே அது பாரிய தவறாகிவிடும். இத்தகைய சூழலிலே பால வயிரவநாதன் தனித்தனியாக அற்புதமான அற நீதிக் கருத்துக்களைச் சொல்லி யுள்ளார். அவற்றை இன்றைய தலைமுறையினர் படிக்க வேண்டும் என்பதே எமது வேணவா.
ஆத்திசூடி முதல் சிந்தனை வரிகள் வரை எமது சமூகத்திற்கு நீதி முறைகளையே சொல்லுகின்றன. இவற்றைப் படிப்பதும் பாதுகாப்பதும் கடைப்பிடிப்பதும் நமது கடமையாகும். பால வயிரவ நாதனுக்கு எனது பாராட்டுக்கள்.
பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா தமிழ்த்துறை யாழ்ப்பான பல்கலைக்கழகம்
- 4 -

முகவுரை
பருத்தியூர் பால, வயிரவநாதன் பழகுதற்கினிய பண்பாளர். அவர் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் பிரதம லிகிதராகக் கடமையாற்ற வந்தநாள் முதற்கொண்டு அவரை நன்கு அறிவேன். திணைக்களம் நடத்தும் கலை விழாக்கள், ஆய்வரங்குகள் முதலான நிகழ்ச்சிகளில் தன் கடமைப் பொறுப்புகளுக்கு அப்பாலும் ஈடுபாட்டோரு பணியாற்றுவதைக் கண்டுள்ளேன்.
பால, வயிரவநாதனின் எழுத்துக்கள் - மனித வாழ்வியல் தொடர்பான எழுத்துக்கள் - கவர்ச்சிகரமான படங்களோடு பத்திரிகைகளில் வெளிவரத் தொடங்கியபோது தான் அவரது மற்றுமொரு பரிமாணத்தை என்னால் கண்டு கொள்ள முடிந்தது. பத்திரிகைத் துறையோடு அவருக்குள்ள தொடர்பு புலனாகியது. பல பத்திரிகை நிறுவனங்களில் செய்தி நிருபராகக் கடமையாற்றிய செய்தியை அண்மையில் தான் அறிந்தேன்.
கவிதை,சிறுகதை, ஓவியம் முதலான கலைத்துறைகளிலும் ஆர்வம் கொண்டு ஈடுபடுபவர், எழுதுவதில் சலிப்பில்லாதவர், எதையாவது எழுதவேண்டும் என்ற எண்ணம் அவரைப் பிடித்து உந்திய வண்ணமேயுள்ளது. அப்படிப்பட்ட அயராமுயற்சியின்பயனாக 'கலாபூஷணம்’ விருது உட்படப் பல பரிசில்களையும் பால வயிரவநாதன் சுவீகரித்துள்ளார்.
மனித சமுதாயம் எப்போதும் நெறிப்படுத்தல்களின் வழியே
- 5 -

Page 5
முன்னேறி வந்துள்ளது. நீதி நூல்கள் அறநூல்கள் மனித சமுதாயத்துக்கான பொதுவான அறங்களைக் கூறிவந்துள்ளன. ஆயினும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு பிரச்சினை, ஒரு மனிதனது வாழ்கைச் சிக்கல்போல் மற்றவனின் வாழ்கைச்சிக்கல் இருப்பதில்லை. நவீன காலத்தில் போட்டிகளின் மத்தியில் வாழ்க்கை நடத்தவேண்டிய சூழலில் வாழ்க்கைச் சிக்கல்களும் அதிகரித்த வண்ணமேயுள்ளன. நவீன தொழில்நுட்பயகம் மனித வாழ்கையைப் பெருமளவு வசதிப்படுத்திய அதேவேளை அதைவிட அதிக அளவில் சீரழிக்கவும் செய்கின்றது. தொழில் நுட்பம் சிக்கல்களை வீட்டுக்குள் ளேயே கொண்டுவந்து விடுகின்றது.
போட்டிப் பொருளாதாரச் சந்தையில் ஊடகங்களும் தமது பொறுப்பை மறந்தவையாய் வியாபாரத்தில் முன்னணியில் நிற்பதற்கே முயலுகின்றன. தொலைக்காட்சிகள் அபத்தமான நெருந்தொடர்களை எந்த வித விவஸ்தையும் அற்று ஒளிபரப்புகின்றன. அவை கொலை சதிகள் முறைகேடுகள் யாவும் வாழ்கையில் சாதாரணமானவை போல அவற்றையே வாழ்வின் இயல்புகளாகக் காட்டுகின்றன. விளம்பரங் களிலும் ஆபாசங்களாலேயே சம்பாத்தியம் நடத்தப் படுகின்றது. ஒரு பெண்ணும் ஒரு ஆணும் நெருக்கமாக நிற்கும் காட்சிகள் போல் ஒரு பெண்ணோடு ஒரு ஆண் என்று நெருக்கம் காட்டும் விளம்பரங்கள், தொலைக்காட்சிகளிலும் வீதிதோறும் தொங்கும் பதாகைகளிலும் காட்சியளிக்கின்றன. அவை இயல்பான வாழ்கையின் ஒரு அம்சம் என்பதுபோற் சொல்லாமற் சொல்லி வாழ்வியல் நெருக்கடிக்குத் தூபம் இடப்படுகின்றது. இவற்றின் விளைவு குடும்பச்சிதைவில் ஆரம்பித்து சமூகச் சீர்கேடாக முடியப்போகின்றது.
- 6 -
 

இவற்றுக்கு மேலாக நம் நாட்டில் ஏற்பட்ட 'சுனாமி என்னும் இயற்கை அனர்த்தமும் உள்நாட்டு யுத்தமும் பல சமூகச் சீரழிவுக ளுக்குள்ளாய் அமைந்தன. அவற்றால் உளவளத் துணையின் தேவை அதிகரித்தது.
சமுதாயச் சீரழிவுகளின் போது ஒழுக்கத்தை வலியுறுத்த வேண்டிய தேவை ஏற்படுதல் இயல்பே தனிமனித உளத்தாக்கங்கள், குரும்பச் சிதைவுகள், சமூகச் சீரழிவுகளுக்கு நிவாரணமளிக்கும் ஒளடதமாக, ஒத்தடமாக அமையும் எழுத்துக்கள், கலைகள் அவசியமா கின்றன. அதனால்தானோ என்னவோ பால வயிரவநாதன் வாழ்வியல் தொடர்பான விடயங்களை எழுதத் தொடங்கினார். அவரது அத்தகு எழுத்துக்களின் ஒரு பகுதி பொன் மொழிகளின் தொகுப்புப்போல் அமையும் சிந்தனை வரிகள் என்னும் இந்நூல் வெளிவருகின்றது.பால வயிரவநாதனின் எண்ணங்கள் ஈடேற் வாழ்த்துக்கள்.
க. இரகுபரன்,
மொழித்துறை, தென்கிழக்குப் பல்கலைக்கழகம்,

Page 6
எனதுரை
சிந்தனை என்பது பரந்து விரிந்தது. இதற்கு ஏது எல்லை? பண்டைய காலத்திலிருந்து இன்று வரை ஒானிகளும் அறிஞர்களும் தாம் சார்ந்த சகல மக்களையும் சிந்தனைக்குத் தூண்டினார்கள்.
காலம் காலமாகத் தொடரும் இப்பணி இயன்றளவும் மக்கள் செயல்களை உயிரோட்டமாக வைத்திருக்கின்றது.
சிந்திக்கத் தெரிந்தவன் மனிதன் எண்பதால் அவனது இந்த வளர்ச்சி காரணமாகவே தொடர்ந்து கலை, கலாச்சார, வித்ளுான கண்டு பிடிப்புக்கள், புத்தகங்களாக எத் திக்குகளிலும் சுற்றிச் சுற்றி வருகின்றன.
எனினும் மனிதன் எவ்வளவு முன்னேறினாலும் கூட அவனது பயணங்கள் எல்லாமே ஒழுக்க நெறியில், பிறழாமல் செல்கின்றனவா என்பதே கேள்விக்குரிய ஒன்றேயாம்.
காலத்திற்குக் காலம் எமது முன்னோர்கள் மூதுரைக ளையும் ஒழுக்கத்தைப் போதிக்கும் எத்தனை எத்தனையோ சிந்த னைப் பொக்கிஷங்களையும் தந்து விட்டார்கள். உலகின் சகல நாடுகளிலும் தோன்றிய சிந்தனையாளர் ஈந்த இவைகள் யாவர்க்குமே பொதுவான அதி அற்புதக் களஞ்சியங்கள்.
இவை அள்ள அள்ள குறையாத அட்சயபாத்திரமாய் தெள்ளிய அறிவூட்டல்களை, நிறைவாய் தந்த வண்ணமுள்ளன.
- 8

வள்ளுவரின் திருக்குறள், ஒளவையாரின் ஆத்திகடி இவை களுடன் நன்நெறி, கொன்றை வேந்தன், நாலடியார் எனப்பல ஒழுக்க சாஸ்திரங்கள் எம் கைவசம் உள்ளன.
மேலும் எமது புராண இதிகாசங்கள் புகல்வன யாவும் மனிதன் வாழ்வாங்கு வாழும் முறைமை பற்றியதேயாம்
மத வேறுபாடு களைந்து அனைத்து மத நூல்களினூடாக நாம் அறிய வேண்டியன எண்ணிலடங்காதன. இயம்பிடவியலாதன.
பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த சோக்கிரட்டீஸ், அரிஸ்ரோல்ட், பிளாட்டோ குறிப்பிடத்தக்கவர்கள். தொடர்ந்து இவர்களின் பின்னர் ரஸ்ஸல்,பெர்னாட்ஷா, டால்ஸ்ராய், காண்டேகர், எமர்சன், சிற்மண்பிரைட் ஆகியோர் மிகப்பிரபல்யமான சிந்தனை UIIIGITst856st.
எனினும் இந்தியத் திருநாடு தான் சிந்தனையாளர்களில் முன்னயவர்கள் என்கின்றார்கள். புத்தர், மாவீரர் உட்பட சித்தர், ஏஞானிகள்,போன்ற சிந்தனையாளர்களே முன்னயவர்கள் என்பதை உலகறியும். பகவத்கீதைபைபிள் , திருக்குர்ரான் எல்லாமே மனிதர் வாழும் வழிகளையே சொல்லி, ஆன்ம விழிப்பூட்டல்களை எருத்தியம்புகின்றன.
கவிஞர், புலவர்கள், எழுத்தாளர்கள் எல்லோரும் தமது படைப்புக்களின் நோக்கமாக மனித வாழ்வியல் முறைகளையே நிறைவாகத் தந்தார்கள்.
- 9 -

Page 7
எக்காலத்திலும் எவர் நற்சிந்தனைகளைச் சொன்னாலும் அவைகளை ஏற்பது எம் கடமை.
கடுகளவு சொற்களிலும், மலையளவிற்கு மேலான சிந்தனை களை சிறப்பாகச் சொல்ல முடியும். ܗܝ
ஒன்றே முக்கால் வரியில் நின்று நிலைக்கும் பொன்னிலும் மேலாம் வாழ்வியல் நெறிகளை அள்ளி ஈந்தார்.வள்ளுவப்பொருமான்.
திருக்குறளால் தனிப் பெருமை பெற்றது தமிழ்க் குலம்.
ஒரே வரியில் அமைந்த ஆத்திசூடியைச் சிந்தையில் ஏற்றி னால் இந்தப் பிறப்பைப் புனிதமாக்கிய முழுப்பயன் பெறுவோம்.
எளிய முறையில் தனி வழியில் ஒரே வரியில் எழுத ஆவலுற்று சிந்தனை வரிகளை ஆக்கினேன்.
வீரகேசரி சங்கமப் பகுதியிலிருந்த சிந்தணைவரிகள். மக்க ஒருடன் சங்கமிக்க என்னாலானவற்றை இறைவன் துணையுடன் அளித்தேன். இதனை "சங்கமம்" பகுதிக்குப் பொறுப்பான வீரகேசரி ஆசிரியர் பீடத்தின் மூத்த சிரேஷ்ட உதவி ஆசிரியர் திருமதி அன்ன லட்சுமி இராஜதுரை அவர்கள் வெளியிட துணை நின்றார்.
பிரபல பெண் எழுத்தாளர்களில் திருமதி அன்னலட்சுமி
இராஜதுரை அவர்களுக்குத் தனி இடம் உண்டு. எனது எழுத்துப்பணி
யினை ஆர்வத்துடன் ஊக்கமளித்த இவர்களுக்கு எனது நன்றிகள். - 10 -

சிந்தணைவரிகள் தொகுப்பு நூலுக்கு அணிசெய்த அணிந் 4)IG0)JUÖla))GOT, UJITLipL'ILJTGOOT பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் திரு. சிவலிங்கராஜா அவர்களின் கருத்துக்கள், எனக்கு அளிக்கப்பட்ட நல் விருந்து ஒரு தமிழ் மகனுக்கேயுரிய பொலிவும் செறிந்த பேச்சும் சபையை ஈர்க்கவல்லது. பல இலக்கிய சமய ஆய்வாரங்குகளில் அயராதுஈடுபட்டு வருபவர்.
மேலும் இவரது குரல் தமிழ் பேசும் எமது ஊர்களில் அடிக்கடி ஒலிதந்து வருகின்றது. நல்ல பல மாணவர்களை உருவாக்கி வருகின்ற திரு.சிவலிங்கராஜா அவர்கள். நான் பயின்ற பருத்தித்துறை வேலாயுதம் மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தின் நிறுவுனர்.திருவேலாயுதம் பிள்ளை அவர்களின் ஏநாபகார்த்த ஆண்டு விழாவின் பிரதம விருந்தினராக கலந்து இவர் ஆற்றிய பேருரையை எவரும் மறக்க முடியாது. இவரது தன்னலமற்ற சேவையினைத் தமிழ் உலகம் என்றும் போற்றும். அவருக்கு எனது அன்பார்ந்த நன்றிகள் இவர் பணி மென்மேலும் சிறக்க இறைவனை இறைத்சுகின்றேன்.
எனது நீண்ட நாள் அன்பர் திரு.இ. இரகுபரன். இவர் தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்டதமிழ்த்துறை விரிவுரையாளர். தமிழ், இந்து சமய ஆய்வில் தன்னை அர்ப்பணித்தவர். எமது வரலாற்றுத்துறை பேராசிரியர் திரு எஸ்.பத்மநாதன் அவர்களின் தலைமையில் இணைந்து பல்வேறு ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருவதுடன் இப்பணியில் சகல தமிழ் ஆய்வுத் துறையினரும் இணைந்து கொள்வது வரவேற்கத்தக்கது.
மேலும் பேராசிரியா திரு. எஸ்.பத்மநாதன் இந்து சமய
- 11 -

Page 8
கலாசார அலுவல்கள் திணைக்களமூடாகப் பழைமையான பெறுதற் கரிய நூல்களை வெளியீடு செய்வதிலும் பதிப்பித்தலிலும் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது இந்து சமய கலாசாரம் தொடர்பான பல நூல்களை வெளியிட்டு வரும் பேராசிரியரின் பணி மகத்தானது.
இந்தப் பணிகளுக்கு திரு.இரகுபரன் ஒத்துழைப்பு நல்குவதுடன் நூல் பதிப்பித்தலிலும் தம்மை ஈடுபடுத்தி வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கதேயாம். இவர் எனது நூலுக்கு மதிப்புரை வரைந்துள்ளார். திரு.இரகுபரன் அவர்களுக்கு எனது உளமார்ந்த நன்றிகள்.
இச்சந்தர்ப்பத்தில் கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் முன்னால் செயலாளராக இருந்த எனது அன்பு நண்பர் திரு ஆழ்வார்பிள்ளை கந்தசாமி அவர்கள் எனக்கு வழங்கிய ஊக்கத்திற்கும், ஒத்துழைப் பிற்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். இவர் ஏற்கனவே எனது இரு நூல் வெளியீட்டுக்கும் முன்னின்று உழைத்தவர். பிரபல ஊடகவியவாளரும் என் அன்பு நண்பருமான திரு.ந. வித்தியாதரன் அவர்கள் எனக்கு உரிமையுடன் வழங்கிய ஒத்துழைப்பு மேலானது. நன்றி!
எனது நூல் வெளியீட்டுப் பணிக்காகப் பல விதமான உதவிகளை நல்கிய திரு.க.சுதர்சன், முனைவர் செல்வி சு. நந்தினி, உட்பட் எனது மனைவி திருமதி வ. சரஸ்வதி அவர்களுக்கும் எனது உளமார்ந்த நன்றிகள்.
மேலும் எனது பணியில் இவர்கள் சிறப்பான முறையில்
- 12 -
 

செவ்வை செய்வதில் ஆற்றிய பங்கு மிகப்பெரியது.செல்விஅ.வளர்மதி அவர்கள் கணினி மூலம் நூற்பதிவுகளை ஆழகாகச் செய்தமைக்கு எனது அன்பார்ந்த நன்றிகள்.
எனது வாழ்வியல் வசந்தங்கள் நூல் தொகுதிகள் அனைத்திலும் இடம் பெற்ற எனது புகைப்படங்களை எடுத்த எனது மருமக்களான திரு.ந.குமரருபன், நராகுலரூபன் அவர்களுக்குப் பாராட்டுக்களும் நன்றியறிதலும் உரித்தாகுக!
புத்தகங்களை வெளியீடு செய்த திரு.எஸ். சிவபாலன் அவர்களின் பரந்த நெத்சத்தை நானும் எனது துணைவியாரும் என்றும் நன்றியுடன் நோக்குகின்றோம்.திரு.எஸ் சிவபாலன் அவர்கள் அஸ்ரா பிரிண்டர்ஸ் பிரைவேட் லிமிடட், றெயின்போகிராபிக் பிறைவேட் லிமிடெட் ஆகியவற்றின் அதிபருமாவார்.இவரது ஊக்குவித்தல் எனது நூல் உருவாக்குதல் எனும் எண்ணத்தினை வலுப்படுத்தியது.இந்தச் சந்தர்ப்பத்தில் சிவபாலன் அவர்களின் துணைவியார் திருமதிசிசுமதி அவர்களின் கனிவான ஒத்துழைப்பிற்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். இவர்கள் குரும்பத்திற்கு என்றும் இறைவன் நல்லாசி உண்டு மேலும் அஸ்ரர் பிரிண்டர்ஸ் பிரைவேட் லிமிடட் நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களுக்கும் எமது அன்பார்ந்த நன்றிகள்
எனது ஆக்கங்களை வெளியீடு செய்த தினக்குரல்,வீரகேசரி, தினகரன், சுடர்ஒளி நிறுவனங்களின் ஆசிரிய பீடங்களுக்கு எனது நெற்சார்ந்த நன்றிகள்!
எனது வாழ்வியல் வசந்தங்கள் சிந்தனைத் தொடர்களை
- 13 -

Page 9
உருவாக்குவதற்கு அருள் செய்த சகல சித்திகளை நல்கும் புற்றளை சித்திவிநாயகரின் திருவருள்துணையின்றி என்னால் எதுவும் செய்ய முடியாது, விநாயகருடன் உடன்நின்று அருள் செய்யும் பருத்தித்துறை குருமணல் கந்த சுவாமி சமேத வள்ளி தெய்வானையும் இணைந்து என்றும் எம்மை வழிநடத்துவார்கள். -
பிள்ளையார் சுழிபோட்ட மறுகணமே அவர் என் சிந்தையில் புகுந்து எனது விரல் வழியாக எழுத்துருவில் வரைந்து கொள்கின்றார். இது எனது அனுபவ பேரின்ப நிகழ்ச்சியாகும்.இந்த இன்ப பேரூற்றை அனுதினம் நுகரும் பாக்கியம் பெற்றவன் யான். என்னுள் என்றும் உறைந்திருக்கும் தும்பிக்கை ஏநானவள்ளலை என்பிள்ளை போன்றே நான் எண்ணி வழிபாடு செய்கின்றேன். இவர் அருளால் இந்த நூல்களை நான் அவன் திருப்பாதங்களில் சமர்ப்பிக்கின்றேன்.
எவ்வித இன, மத மொழிபேதமற்ற"வாழ்வியல் வசந்தங்கள்",
வெறும் பொழுது போக்கு ஆக்கம் அல்ல. சிந்தனைச் செறிவுகளை
சகலருக்கும் தருவதற்கு என்னால் இயன்ற வ்ரை முயன்றுள்ளேன். - ஆதரவு நல்குமாறு வேண்டி நிற்கின்றேன்.
என்றும் உங்களுடன் பருத்தியூர் பால. வயிரவநாதன்
மேரு இல்லம்"
36-2/1 ஈ.எஸ் பெர்னாண்டோ மாவத்தை
கொழும்பு 06. தொபே இல - 01236|012
O744.023O3
O774.38768
- 14
 

O O O efLDTLIL6OOTLD
மேலான ஏகப்பரம்பொருளாம் இறைவனுக்கும் பிரபஞ்சங்கள் அனைத்திலும் வாழ்ந்துகொண்டிருக்கும் அனைத்து ஜீவராசிகளுக்கும் எனது ஆக்கங்கள் சமர்ப்பணம்
- ஆசிரியர் -
- 15 -

Page 10
10.
11.
12.
நூலாசிரியர் பருத்தியூர் மால, வயிரவநாதன் எழுதி வெளியிட்ட "வாழ்வியல் வசந்தங்கள்"
நூற் தொகுதிகள்
. உண்மை சாஸ்வதமானது . SlubLDT
. சுயதரிசனம்
கோழைகளாய் வாழுவதோ? . ஞானம்
. கணப்பொழுதேயாயினும்
யுகப்பொழுதில் சாதனை செய்!
. சும்மா இருத்தல் . உண்மைகள் உலருவதில்லை!
. உண்னோடு நீ பேசு!
நான் நானே தான்! வெறுமை
காதலும் கடமையும்
அக ஒளி
14.
15.
16.
17.
18.
உன்னை நீ முந்து சுயபச்சாதாபம் மெளனம் மரணத்தின் பின் வாழ்வு சிந்தனை வரிகள்
- Lustablf - 01
LIT&Blf - 02
LT35lb - 03
LTaSLb - 04
பாகம் - 05
பாகம் - 06
பாகம் - 07
பாகம் - 08
LIT35lb - 09
- Listasif - 10
பாகம் - 11
- LIFT85lb - 12
- LITBLb - 13
பாகம் - 14
LITEBLib - 15
- பாகம் - 16
- LITE5Lib - 17
- Tsib - 18
- 16 -
 

சிந்தனை வரிகள்
அன்பு இன்பம் அளிக்கும். அன்புக்கு முன் ஆணவம் ஒடுங்கும். அன்பினுள் உலகே அடக்கம். அறியாமை நீக்க, அறிவைத்தேடு அறிந்ததைத் தெளிவதே, சிறந்தது. அறம், செய்வோர்க்கு அகங்காரம் இல்லை. அமைதியின்றேல், துன்பம் தொடரும். ஆயிரம் கோவிலிலும், மேலாம் அன்னை உள்ளம். ஆசையை உடைத்தவன் ஆனந்த ரூபி. *ஆனந்தம்” ஆண்டவன் திருவடி ஆயிரம் பொய்களிலும், ஒருபொய்யும் பெரும்பாவம்.
- 17

Page 11
பருத்தியூர் பல. அவிருைதஷ்
இயன்றதைக் கொடு ஆண்டவன் கொடுப்பான்! இன்று வழங்குவதை நாளைக்கு ஒத்திவைத்தல் தப்பு. இயல்பாய்ச்சிந்திக்க வருந்திச் சிந்தனை வளர்ந்திடாது. இன்றைய பணி, நாளைய முதலீடு. இன்றைக்கு மட்டும் என்று ஒரு பாவம் செய்யாதே இயலாது என்று சொல்லி, உன்னை இகழாதே
இயலாமை பயன்தராது. முயற்சி முன்னேற்றும்.
“இகழ்ச்சி செய்து, இதயத்தை கருக்காதே. இறைவன் இல்லம் தொண்டன் இதயம். இறைவன் படைப்பை, நிந்திக்காதே ஈதலுக்கு அளவே இல்லை, ஈசனுக்குப்பிடித்தது இதுவே! ஈகை செய்தவர் சாவதே இல்லை ஈன்றதாய் தான் ஈசனிலும் பெரியவள். ஈசன் அருளினால் தாய் உயிரைப் படைக்கின்றான். உலகை நோக்கு உண்மையைத் தேடு உலகம் உனக்காக, அதற்காக உழை! உலகம் என்றும் புதிதாய் இருக்க, புதியன செய்! உண்மை உன்னைக் காட்டும். உண்மையை விட்டால் துன்பம் அணைக்கும். உயிரை விட உண்மையை மதி உண்மையாய் வாழ்ந்தால், உயிர் உயிர்க்கும். ஊரோடு உறவாடு மக்களுக்காய் போராடு ஊருக்கு ஞானி, வீட்டினுள் அஞ்ஞானியா? ஊருக்கு ஊன்று கோலாகு பாரமாய் இருக்கவேண்டாம்.
- 18 -
 

:
:
சிந்தனை வரிகள் எளிமையான வாழ்வில், ஆனந்தம் அதிகம். எல்லாமே இறைவனுள் அடக்கம். எல்லாமே தெரியும் என்போர், அறிவதில் விருப்பு அற்றோர். “எமக்கு என்ன” என விலகிவாழ்ந்தால் உலகம் அவரை விலக்கி வீழ்த்தும். “எனக்கு", "நான்”, “எனதே" என்றால் அடுத்தவனுக்கு எங்கே இடம்? ஏதுமற்றவர்க்கு இறைவன் கொடை கிடைத்தேதீரும். ஏன் என்று கேட்பவனால், கேட்காதவனும் பயன் பெறுகின்றான். ஏமாற்றுபவன் வாழ்வு இழிவாய் தோற்றுப்போகும். ஐக்கியப்பட்டவர் அழிந்ததேயில்லை. ஐயப்பாட்டின் அன்பினுள் நுளைக்காதே ஐயப்பட்டால் எல்லாமே பொய்தான் ஒரு பொழுதும் இறைநாமம் மறவாதே ஒரு சிறு தவறுக்கு வருந்தித் திருந்து. ஒப்பனை செய்தால், உள்ளம் திருந்துமா? ஒருவன் கூட அழக்கூடாது. ஒருவர் துயரையும் உலகு ஏற்பதாக ஒவ்வொருவர் உழைப்பும் உலகை உயர்த்தும். ஒரவஞ்சனை தன் நெஞ்சிற்கே வஞ்சனை. ஓராயிரம் எண்ணங்கள் இருந்தாலும் வருந்தி உழை ஓ. இறைவா உன் எண்ணம் என்றும் நிலைக்க வை! ஓசையில் இசையே வேண்டும். வசை வேண்டாம்!
- 19 -

Page 12
achig ango. bójoggé
来
ஓசைகள் மாசின்றி அமைந்தால் மனித மனம் இசைந்து பாடும். ஒளடதம் இன்றி வாழ்வதே சந்தோஷம். தூக்கிய ஏணியை தூர எறியாதே தாக்கிய எதிரியைதயவுடன் நோக்கு பழகிப்பார்த்தால் பார்த்தவை அனுக்கும். அழகியும் கிழவியாவாள். அழகுக்கு ஏதுநிரந்தரம்? அழகிற்கு அடிமைப்பட்டால் நல்லதையும் நழுவவிடுவாய். உள்ளத்தைத் தேடினால் நல்லதைக் காண்பாய். பள்ளிப்படிப்பு வாழ்க்கையைப் பண்படுத்தும். கள்வனுக்கு இரும்புக்கோட்டை மணல்திட்டு உலகிற்கு வெளியே ஆயிரம் உலகங்கள். உலக வாழ்வு அனுபவம் பல யுகங்கள் நிலைக்கும். கனவை நம்பிக் கரைந்தே போகாதே! நனவின் துன்பம் நற் கனவில் தீரட்டும். கனவில் கூடச் சுகங்கள் உண்டு. வாழ்வே கனவு, நிகழ்வுகளே நிஜங்கள் வாய்விட்டுக் கேள், இறைவன் தடையின்றித் தருவான். கடுமையான தவம் சிரமம், மென்மையான அன்பு அமிர்தம். பொருந்தாத மார்க்கங்களைவிட இயல்பான அன்பு (8 D6drool D.
படிப்படியாக வளர்வது இலகு. மனசின் விசாலம் வானிலும் பெரிதே
- 20 -
 

சிந்தனை வரிகள் குழப்பத்தைத் தன்னுள் வைத்து உலகத்தைக் குறை G3 G386.pl
எமக்குள் அமைதி, அது உலகத்திற்கே பரவும். பொருந்தாத உடுப்பு, செருப்பு, தூக்கிவீசு ஐக்கியப்படாதவன் சமாதானம் பேசக்கூடாது. உலகம், ஜீவிதம், மரணம் எல்லாமே அற்புதம் அற்புதம்! உண்மையை ஏற்றுக் கொள்ளாதவரை நியாயம் கிட்டாது. கூட்டிப் பெருக்கிச்சுத்தம் செய்தபின் குப்பை போடுதல் மனித வழக்கம். நல்ல உடையுடுத்திநறுமணப் பூச்சுப்பூசிபன்றியை
el6oo6OOTä5856DIT DIT?
சோறு சாப்பிடுமுன் அதை அளித்தவனை ஞாபகப்படுத்து படுக்கைக்குப் போகும்போது பழைய பிணக்கை நினையாதே கிடைத்த வெற்றிகளால் அடுத்தவனை அமுக்காதே! தோல்விகளை எதிர்கொள்ளு பின்னடைவைப் புறம் தள்ளு. கோபமான வேளையில் முடிவுகளை மேற்கொள்ள
(36.60drLIT b. காதலில் காமம் ஒளிந்திருக்கும். காமம் காதலை வலுவுட்டும். காலம் புதிய புதிர்களை தானாய் பூக்கவைக்கும்.
காதலே இன்பம், காதலே துன்பம்.
- 21 -

Page 13
மருத்திபூர் முழு. ஹபிறருந்தர்
米
:
காதலிப்பவன் தைரியசாலி, அதனுள் வசப்பட்டவன் கோழையாகின்றான். வங்கியில் காசைப் போடு, நிலத்தில் விதையைப் போடு. திரைப்படங்களால் அரைக்கிறுக்கனாகாதே! சரியான பாதைதான் சுருக்கமான வழி. பிரச்சினைகளைத் தீர்த்துவை, அதனை உருவாக்கி முதலீடு செய்யாதே. இறைவனைக் காண்பதற்கு "பொய்' உறையைக் கழற்று அவசரத்தின் பெயர் சுறுசுறுப்பு அல்ல! அவசரம் புத்தியை அஸ்தமனமாக்கும். இயற்கையுடன் சீவிப்பதும் கஷ்டமாய்த் தோன்றும். காரிய சித்திக்குநிதானம் அவசியம். அவசரம் அநாகரீகம். ஆசை, வேட்கை, அவா, துன்பத்தின் உறவுகள். கிடைத்த வீட்டிற்கு வெள்ளையடிக்கக் காசு இல்லை. அடுத்தவன் பேனாதான் எழுதும் என எண்ணவேண்டாம். தெரியாதவனுக்கு எதைக் கொடுத்து எழுதச்சொல்ல? ஒப்புக்கொள்ளப் படாதவையெல்லாம் புறக்கணிக்கப்பட்ட வையல்ல.
பாவிகள் ஆலோசனை சொல்கிறார்கள். தற்காலிக சந்தோஷங்கள் திருப்தியானது அல்ல. மற்றவர்களைப் பற்றிப்பேசிகுப்பைகளைச் சேர்க்காதே நிர்ப்பந்தத்தில் ஏற்கப்படும் கருத்துக்கள் அநாதரவற்றுப் போகும்.
- 22 -
 

来
சிந்தனை வரிகள் காசு கொடுத்து ஆலோசனை பெறுகின்றோம், தெய்வக் குரலைக் கேட்கநேரமில்லை. நடிப்புக்கூட நிஜத்தை வென்றுவிடுகின்றது. கல்லூரிக்குப் போகாதவன் அதன் "வழி"யையே மறந்து. விடுகின்றான். மது மயக்கத்தைவிட அறியாமை மயக்கம் கொடியது. துணிச்சலைக் காட்டப் பாம்பைப் பிடிப்பதா? அசட்டுத் துணிச்சல் வீரம் அல்ல. மனப்பக்குவம் வாழ்க்கைக்கு உயர்ச்சி. உடைகளைக் குறைத்துநாகரிகம் தேடுகின்றார்கள். தேவைகளைக் குறைத்தால் தொல்லைகள் ஏது? குரங்குடன் நட்புக் கொண்டால் சொறிவதும், இளிப்பதும் பழக்கமாகும். அழகானது என்றாலும் சிங்கத்தைத் தழுவமுடியாது. கறுத்த வானம்தான் மழையைப் பொழியும். அழகிய மின்னலையும் பார்ப்பது கூடாது. பொய் எதுவெனப் புரிய வேண்டும். மெய் எதுவெனத் தெளிதல் வேண்டும். அறியாமைக்கு பல்ஆயிரம் குணங்கள். "தெளிவு" ஒன்றே உரக்கச் சொல்லும். பொருந்தாதார் இல்லத்தில் நீர் கூட அருந்தவேண்டாம். பரந்த உலகில் படுக்க இடமில்லையா? லஞ்சம் பெற்றவர் நொந்து கெடுவர். கஞ்சனிடம் கறவைப்பசு கேட்க முடியுமா?
- 23 -

Page 14
dobbyist da9.939949*
நாகரிகமாகப் பேசிநயவஞ்சகம் கலப்பவர் உண்டு. பார்வைக்கு முரடரும் பண்பாளராய் இருக்கலாம். சாதனையாளர் ஓய்வடைவதில்லை. சும்மா உறங்குபவர் காலத்தின் சத்துரு. தன்னை விரும்பாமல் அவனியை அரவணைக்கவியலாது. உன்னைத் தெரிந்துகொள்வதே உயர்ந்த பாடம். கண்ணிரைக்காட்டினால் உண்மையாகுமா? உப்புக் கண்ணி உலகையே ஆட்டும். தவிப்பவர் கண்ணிரைதுடைத்தல் தர்மம். கண்ணிருக்குள் கனகதைகள் அடக்கம். உண்மைக் கண்ணிரால் பெற்றபயன்நிலைக்கும். தியாகிகள் கண்ணி தேசசுதந்திரம். ஒருவர் தியாகம் ஓராயிரம் நன்மை ஜனனம். உள்நோக்குடன் வைக்கும் நட்புநிலைக்காது. ரோசம் கெட்டவனுக்கு எல்லாமே எளிது. முரண்பாடு அற்றநிலையில் சகலரும் வசியமாவர். பேதங்கள் உள்ளவரை பிரச்சினைகள் தீர்வதில்லை. கோபத்தினை உள்நிறுத்தி வெளியே சிரிக்காதே! வக்ர புத்திக்காரனின் புன்னகை, செந்தனல். பாதகம் செய்பவனும் இறைவனைத்திட்டுவான். கத்தியால் குத்திக் கொலைசெய்பவனும், முள் குத்தினால் ©ന്ധ്രഖങ്ങി. கல்வியைத் திணிக்கவியலாது, மனமுவந்து ஏற்க வேண்டும், நிலைக்கும்.
- 24
 

来源
:
சிந்தனை வரிகள் சத்தியத்தைச் செல்வம் கொடுத்து வாங்கமுடியாது. எத்தனை தரம் செப்பிடினும் பொய் பொய்தான். சத்தம் போட்டுப்பேசினால் "பொய்", "மெய்" ஆகாது. ஒருதரம் சொல்லப்படும் உண்மையும்நிலைக்கும். உண்மை அமைதியானது, வேகமானது, உள்நின்று உணர்த்தும். ஏன் என்று கேட்காதுவிட்டால் எதையும் செய்துவிடுவார்கள். வேண்டப்பட்டவர்களுக்காக வேண்டப்படும் உண்மையை இழக்க முடியாது. தூண்டப்படாததிரியும், தெளிவிலா கல்வியும் ஒளிபெறுமா? கண்டிப்புக்குள்ளும் அன்பு உள் இருத்தல் வேண்டும். வேண்டப்படாதவனையும் விரும்பி அன்பு செலுத்து, திருந்துவான். பாதிக்கப்பட்டவன் உதிர்க்கும் கண்ணி தண்டனை கொடுக்கும். பிறரைச் சோதனைப்படுத்தும் அதிகாரம் மனிதர்களுக்கு இல்லை. தண்டனை கொடுப்பதால்தலைவனாக முடியாது. வலிந்து திணிப்பதால் கொள்கைகள் ஏற்கப்படுவதில்லை. மெலிந்தோரையும் இளப்பமாகக் கருதேல் வலிமை கொண்டதோற்றம் கொண்டால் மனவலிமை பெற்றவர்களா? கோவில் எலிக்கு உணவுப் பஞ்சமில்லை.
- 25 -

Page 15
பருத்தியூர் பால, அவிழ்வருந்தர்
来
来源
来源
:
:
பொய் முகங்கள் கூட அழகாக உலா வருகின்றன. செய்கின்றதவறுக்குச் சாட்டுதல் கூறவேண்டாம். குற்றத்தை வருத்தமுடன் ஒப்புக்கொண்டவன், மன்னித்தல் கேட்க அருகதை உள்ளவன். அனுபவ அடிகள் இறைவன் கொடைகள். நியாயங்களை எடைபோட்டு அளவிட முடியாது. நியாயங்களை நிறுத்திவைக்க இயலாது. உனக்கு நோய்தீர்வதற்குப்பிறருக்காகப்பிரார்த்தனை செய், ! உண்மையை உன்னுள் ஏற்காதவரை உனக்கு நியாயம் கிட்டாது. விரும்பாததை வலுக்கட்டாயமாக ஏற்பது கடினம். உன்னால் முடிவதை பிறர் மூலம் செய்வித்தல் தகாது. "முடியாது” என்பது எம்மை நாமே வேதனைப்படுத்தலாம். தனக்கே பிரச்சினை ஆயிரம். பிறர்க்கு என்ன ஆலோசனை?
தமக்குப்புரியாததை உபதேசம் செய்கின்றார்கள். கஷ்டப்படுகின்றோம், நல்ல முடிவு கிடைக்கும் தருணம் தூங்குகின்றோம். இறைவனிடம் கேட்பதற்கு என்ன கூச்சம் ஐயா? நிஜத்தை விட நடிப்பு பெரிதல்ல. நல்லதை எண்ணும்போதே நல்ல காலம் பிறந்துவிட்டது. துன்பத்தை இன்பங்களில் வேர்களாக்க வேண்டாம். சந்தேகம் நீங்க அனுபவப்படுங்கள்.
- 26 -
 

米
:
சிந்தனை வரிகள் நல்ல நோக்கங்கள் உங்கள் அந்தரங்க ஆன்மாவைச் சுத்தப்படுத்தும். நல்ல எண்ணங்கள் இன்றி மக்கள் முன் அரங்கேற ന്ധ്രങ്ങങ്ങu 8ഖങ്ങLib. ஞானம் மாயையை அசைக்கும், முடிவில் வீழ்த்தும். கோழைகள் தமக்குள் செத்துப் பிறரையும் சாகவைக்க முயலுகின்றார்கள். பொய்யான வாழ்வுக்கோட்டை, கனவுகளால் தோரணங்கள். நனவு வாழ்வில் நிஜமாய் வாழ்ந்தால் வாழ்வு சாஸ்வதம். சஞ்சலம் தவிர்த்துநின்றால் நிர்மல வாழ்வு நிச்சயம். மலிந்த பொருளில் மருண்டு விடாதே. விலை உயர்ந்த பொருளிலும் ஏமாற்று உண்டு. கண்ட பொருளிலும் ஆசைப்பட்டால் சேமிப்புசேதமாகும். ஒளிந்து வாழப் பழகிக் கொள்ளதே. நிமிர்ந்துநின்று பேசப்பழகு. குனிந்தவன் கோழை, அழுபவன் ரோகி, சிரிப்பவன் உல்லாசி.
"ஏன் இந்த வாழ்வு" என்று வேதாந்தம் பேசாதே, வாழ்ந்து பார் கலையாத உறுதியை நெஞ்சில் நிறுத்து சிலை போல் நிற்காதே, சீறி எழு, நட, ஒடு கறையான் கூட உறவுடன் வாழும். அறியாமல், தேடாமல், கேட்காமல் வாழாதே!
- 27

Page 16
பருத்தியூர் 00.9பிறருடி
来
来源
:
தன் குறையினை உணராமல் பிறரை விமர்சனம் செய்யாதே தேவையானதைத் தெரிந்து தேவையறிந்து எடு நிலையற்ற வாழ்வு என்று சிலைபோல நிற்காதே. கடல் அலைகளை எண்ணலாம். மன அலைக்குக் கணக்கு இல்லை. தொலைந்த பொருளுக்காய் துன்பம் தேடாதே தெரியாத விஷயத்தைத் தெளிவின்றிப் பேசாதே முறையான கல்வியை முழுமூச்சுடன் படி, தெரியாத விஷயத்தைத் தேர்ந்து படி எடுத்த கடனைக் கொடுக்க வேண்டும். படுத்துக் கிடந்தால் மண்புழுவும் மிதிக்கும். கொடுப்பவர்களைத்தடுப்பது அடுக்காத செயல். மெளனம் பேசா மொழி, கேட்க இயலாத கீதம். அநீதியைக் கண்டும் மெளனம் காப்பதே அநீதி மெளனம், தெரிந்தமையைக் காட்டும், தெரியாமையையும் காட்டும். மெளனமாய் பேசினாலும் பத்துப்பேர் பார்ப்பார்கள். மெளன அதிர்வுகள் முனிவன் விழியை அசைக்கும். மெளனத்தால் வேதனையை வழங்கலாம். கோபத்தைக் காட்டலாம். சம்மதம் சொல்லும் மெளனங்கள், வாசகங்களிலும் வலியது. பெண்களின் மெளனத்தில் அர்த்தம் தேடாதே
- 28 -
 

சிந்தனை வரிகள்
கண்கள் மெளனத்தின் நண்பன். விழிகள் பேசினால் வாய்கள்மூடிக்கொள்ளும். மெளனம், காதலர்க்குப்பாடம் சொல்லும். மெளனமே காதலை வளர்க்காது, வாயால் சம்மதம் கேள். எல்லாவேளையும் மெளனம் பயன்தராது. பேச்சின் தெளிவிற்கு நெஞ்சில் உறுதி வேண்டும். பிச்சை கேட்பவனுக்கும் ஏற்ற தோற்றம் வேண்டும். இச்சைப்பட்டு ஏங்குவது பிச்சைக்காரத்தனமானதே அளவான ஆசைகளை அடைவதில் தப்பில்லை. ஆசைகளை அடையத் தகுதியை உயர்த்து சட்டம், நல்ல மனிதரைச் சாப்பிட்டுவிடக் கூடாது. சட்டங்கள் மாறும், மனித நீதிநிலையானது. சட்டங்கள் மனித வாழ்வுடன் ஒட்டியதல்ல. சட்டத்தை மதி, மனித நீதியைத் துதி. சட்டத்தை வைத்து மனிதனை மட்டம் தட்ட எண்ண
(86)6OdrLIT b.
சட்டத்தின் துணை ஏழைக்கும் எட்டவேண்டும். படித்ததன் பெருமை பண்போடு பழகுதல். அடுத்துக் கெடுபவனை அயராது துரத்தி அடி உடுக்க வழியில்லை, படுக்க பஞ்சணை கேட்பதா? படிப்படியாக முன்னேறினால் இடையூறு பொடியாகும். கல்லால் எறிந்து நாயுடன் விரோதம் எதற்கு? நல்லோரைக் கண்டால் வாழ்த்தி வழிபடு! கெட்டவரைக் கண்டால் ஒதுங்கி வழிகொடு
- 29 -

Page 17
aருத்திர் 04ல. ஹவிவரர்
来源
来
படித்த படிப்பை பிறருக்கு கொடுத்து மகிழ். அழித்தல் என்பது தீயதைத் தொலைப்பதாம். பிறரைப் பழித்து, மகிழ்வடையாதே நல்லோரைப்பழித்தல் கவலையைக் கொடுக்கும். அநீதியைக் கண்டால் நழுவி ஓடாதே கலையைக், கலைஞரை, விலைபேசல் தகாது. கலைகளை ரசித்தால் கவலைகள் ஏது? பல்கலை பயில்வதால் ஆன்மாதுயில் எழும். கலை, ஞானம், ஞாலத்தை ஒளியாக்கும். வயசான காலத்தில் இளையோரை வெறுக்காதே! தீய பழக்கம் கலைஞர்க்கு விரோதி. கயமை கண்டு மிரண்டு ஓடாதே, விழித்து ஒடுக்கு மூலையில் படுத்து முடங்குவது அழகா? பழிக்கு அஞ்சியவன் பாவம் செய்யான். தெரியாதவனும் விமர்சனம் செய்வான். தொழிலில் தோற்றவனும் விமர்சனம் செய்வான். ஒருவனை அழிக்க ஒத்து ஊதாதே
பொல்லாத மனிதனை உருவாக்க வேண்டாம். இதயம் மரத்தவர்க்குப் பாவம், புண்ணியம் என்ன? சோர்வு அடைந்தால் நல்லது நழுவும். சோம்பல் சுற்றினால் சுற்றம் வெறுக்கும். சோம்பலை பற்றினால் சேர்ந்தபொருள்கரையும். சோம்பேறியை சிற்றெறும்பும் மதிக்காது. சோம்பேறிக்கு அவமானம் அலங்காரம்.
س- 30 -
 

சிந்தனை வரிகள்
米
:
சோம்பேறிக்குத் தூக்கம் சொர்க்கம், அதனால் நரகம். சொகுசாய் வாழப் பிறரைப் பிழியாதே. யாசகம் பெற்றுச் சொகுசைத் தேடாதே காசைக் கண்டால் ஆசைகள் கோடி. குரைக்காதநாய், கதைக்காத மனிதர், பார்த்து விலகு eleo வேக்காடுகளும் அறிஞராய்நடிக்கும். தயவு, தாட்சண்யமே அருட்கடாட்சம். நியமம் தவறாது இறைவனை வழிபடு. கருமங்கள் செய்கையில் கண் அயராதே சுய விளம்பரம் பிறர் விமர்சனம் பெறும். சகலமும் தெரிந்ததாக, காட்டிக்கொள்ளதே,
மாட்டிக்கொள்வாய். g மிருகத்திற்கும் ஆற்றல் உண்டு. மரத்திற்கும் வைரம் உண்டு.
எல்லாப் பொருளும் இறைவ்ன் சொத்து, உனக்குச் சொந்தம் என்ன உண்டு? நலிவாய் எண்ணினால் நசிந்தே போவாய். வறுமை என்பது தகுதியின்மை அல்ல. மலையைப் போல உறுதியாய் நில்.
கடுகைப் போல காரம் கூட்டு சிந்தனை என்பது மாந்தர்க்கு அருங்கொடை சிந்தனையின்றி நொந்து வாழாதே கொஞ்சம் கூட அதிர்ந்து பேசேல்! உந்தன் துன்பத்தை உலகிற்குச் சொல்லாதே
- 31 -

Page 18
பருத்தடி அல. அவிநாதன்
நல்ல கனிபோல் இனிக்கப் பேசு. கரிைவாய் பழகினால் குவலயம் உன்னிடம். உறுமுதல், சீறுதல், கறுவுதல் மிருகச் செயல். புன்முறுவல், கனிவோடு நோக்கல் சிறந்த செயல்கள். கன்ைகளில் கணிவைத்தேக்கு, இதழ்களில் முறுவல் காட்டு. குருவிபோல் சேர்த்துவை, வளமாக வாழ்ந்து காட்டு. அருவிபோல் அன்பைக் கொட்டு உன்னை உன் பண்பால் உயர்த்து அனைத்து இயற்கையை அரவணைக்க வேண்டும். வனமும், கடலும், மலையும், வளமும் இருந்தும் எதற்கு வருத்தம்? ஒரே குடையின் கீழ் உலகை அடக்கலாம். - குணமும், கொள்கையும் கோணாமல் பேணுக. பனத்தைப் பெருக்குதலே வாழ்க்கையாகாது. சினத்தைத் தணித்துச் சீராக வாழ்வோம். சுெத்தபிணத்திற்கும் செலவுகள் அதிகம், Ga56ITU6)|Lib 2 60õGB. துடிப்பான உழைப்பே உலகிற்கு வேண்டும். கொள்கை இழந்தவன் தன்னை விற்றவன். பள்ளத்தில் வீழ்தல் இயல்பு, எழுதலே சிறப்பு எழுவதற்குப் பயந்தவன் உயர்வுக்கு ஆகாதவன். துணிந்து எழுந்தால் குவலயம் தூசு. உள்ளதைக் கொண்டு உவகையாய் வாழு. பலதையும் பார்த்து அள்ள எண்ணாதே.
- 32
 

சிந்தன்ை வரிகள் உணவைப் பகிர்ந்து அனைவர்க்கும் ஊட்டு. மனத்தைக் கடிக்கும் செயலை மறப்போம். செய்கையில் தூய்மை, பயன்கள் மிகுதி. இருக்கும்போதே கொடுக்கும் குணத்தைக் காட்டு. துணிவு என்பது சும்மா மோதிச் சாவது அல்ல. துணிந்தவன் முன் அனலும், புனலும் கரைந்துபோகும். ஒழுக்கம் கெட்டவன் வேதம் ஓதலாமா? கழுத்தில் கத்தி ஏறுமுன் துணிந்து எழுந்து தாக்கு. நிலத்தின் மேல் நிமிர்ந்து நட, பார்வையை நேரே வை. குலப் பெருமை பேசிகண்டபடி நடவாதே. கலவர நேரத்தில் குதூகலமாய் பார்ப்பது தப்பு. விரியாத குடை, அறுந்த செருப்பு, இருந்து என்ன? கீழ்ப்படிவில்லா மாணவன் தோற்பதுநிச்சயம். சிரத்தையுடன் செய்யும் செயல்கள் இரட்டிப்பு வருமதி கருத்து மோதலால் அடுத்தவனைப் பகைக்காதே. கோபித்துக் கொள்ளலாம், அதற்காக வெறுக்காதே! எந்த மனிதனும் விரோதி அல்ல, நீவிரோதிக்காதவரை. ஒருவர் செயல்கள் தவறு எனினும் அவரை ஒதுக்காதே! கனிவாகப் பேசினால் கெட்டவனும் திருந்துவான். இனிக்கப் பேசு, இழிவாக நடக்காதே பழி எனத் தெரிந்தும் பாவம் செய்பவன் பாவி. கழிவுப்பொருட்களையும் காசாக்க முடியும். மதியாதவருடனும் மோதுவது பேதமை. அதிகம் படித்தவர் அடங்கிநடப்பர்.
- 33

Page 19
பருத்திபூர் பல. வயிறுகுழர்
来
来
போதையில் உள்ளோருடன் வாதம் புரிவதா? கதைகளைப் படித்துக் கலங்குதல் உள்ளத்திற்குக் கெடுதல். செடிகளை நட்டால் தண்ணி ஊற்று. அரைகுறை வேலை, ஆரவாரம் எதற்கு? கற்பனைக் கதைகளில் கருத்தினைப் புகுத்தி வெறுப் பேற்றவேண்டாம். அற்புதமான கற்பனை ஆற்றல், புதியன படைக்கும் திறனை வளர்க்கும். குருவிக்கும் அருவிபோல் பாசம், தாய்மை, அன்பு எவ்வுயிர்க்கும் பொதுவே! பயந்தவன், துணிந்து இயங்கத் துணைசெய்க! தொழிலாளிக்கு வியர்வை அழகு படித்தவன் போதிப்பது சிறப்பு. உடைந்த உள்ளத்தை அன்பு ஒட்டவைக்கும். கடிந்து பேசிடினும் காரணத்துடன் பேசு, வெறுப்பை நீக்கு உள்ளக் கோவிலில் உண்மையே கடவுள். கள்ளமில்லா உள்ளத்தில் கடவுள் சஞ்சரிப்பார். பிள்ளை மனது எல்லோரையும் விரும்பும். நல்லோர் ஒருவர் நானுகோடி பேர்களின் பலம். வல்லமை பெருக உள்ளத்தில் கள்ளம் நீக்கு உன்னிலும் பார்க்க உயர்வைத் தேடு
உன்னை நீவெல்க!
-34
 

சிந்தனை வரிகள்
இன்றைக்கும் நாளைக்கும் என்றென்றும் புது மனிதனாய் இரு புதுப் பொலிவை மழுங்க விடாதே இதைவிட இன்னும் முடியும் என எண்ணுக! கண்ணிரோடு கரைந்து போதல் சிறப்பா என்ன? துன்பத்தில் அழுதாலும் எழுதல் வேண்டும். அழுது தீர்ந்த பின் உள்ளத்துப் பாரம் போகும்! அன்புக்கு ஏங்காதோர் எங்கே உண்டு? துன்பம் வந்ததேயென்று துன்பப்படாதே. கவலை வலை போன்றது, விலகி வீழ்த்து நல்ல காரியங்ளை இளப்பமாக நோக்குதல் பலவீனம். பெண்கள் பேதைகள் அல்லர், சாதனை செய்பவர். மனம் கலையும், இழுத்து நிறுத்துக - தலை போனாலும் துணிச்சலும், தூய்மையும் பெரிது. பணத்திற்கே அடிமைப்பட்டர்ல் சுகத்தைக் கெடுக்க வேண்டும். இனத்தோடு வாழா விட்டால் தனித்தே சாகவேண்டும். நற்குணத்தை இணைத்தவன், இறையோடு அடிமைப்
பட்டவன்.
மருந்து கசந்தாலும் உடலைத் தேற்றும். எரிக்கும் மது “குடிக்கே” கேடு. விஷம் இனிப்பேயாயினும் உயிரைக் குடிக்கும். எடுத்த எடுப்பில் கண்டதும் பேசேல். தொடுத்த சுடுமொழியை திருப்பிஎடுக்க இயலுமோ?
- 35 -

Page 20
பருத்தியூர் அல. ஆயிற்றருதம்
அடுத்தவன் துன்பத்தைக் களைவதே இன்பம். நாடி, ஓடி, நல்லதைச் செய். குடிப்பழக்கம் வாழ்க்கைக்கு முடிவிடம். எடையில் அளவாக உடம்பைப் பார்த்துக்கொள். கடை, கடையாய் கடன் கேட்காதே. உடையில் எடுப்பு, மனசில் கறுப்பு, தப்பு. நடைபாதையில் நளினமாய் நடந்து செல். புதுக்குடை என்பதால் பெட்டியில் பூட்டலாமா? கால் செருப்பைக் கைப்பைக்குள் செருவலாமா? நாய் வால்கூடப் பல தொழில் செய்யும். மீசையை வளர்த்தால் வீரனாக முடியுமா? ஆசையை வளர்த்துச் சாமி வேஷமா? ஆசையை அடக்கினால் அனைத்தும் அடங்கும். பேசாமல் இருப்பவன் பயந்தவன் அல்ல. வேசி என்பதால் கூசாமல் கைநீட்டாதே! உடலை வளர்க்கக் கெடுதல் புரிதல், கேடு. கடை தெரியாமல் கண்டதை உண்ணேல். நடக்கும் பழக்கம் தினசரிசெய்க நன்நடத்தையே உன் உடமை. கொடுக்கும் பழக்கத்தினால் கோடி கிடைக்கும். பிறர் பொருளை எடுத்தவன் நடுத்தெருவிற்கு வருவான். நடப்பது விதி எனச்சோர்ந்து போகாதே! கொடுப்பான் இறைவன், நம்பினால் நல்லது. அசைக்க முடியாத நெஞ்சம் வாழ்வைப் பிழைக்க வைக்கும்.
- 36 -
 

சிந்தனை வரிகள் நடிப்பாகக் கூடப்பொய் பேசாதே. துடிப்பின்றி இருந்தால் மனிதன் நடைப்பினம். இரக்கமற்றவன் அருள் சுரப்பை விரும்பாதவன். முழுமை இன்பம், துன்பத்தைக் கண்டவனுக்கே தெரியும். விருப்பப்படு, அதை அடைவதற்கு முயற்சி எடு. தர்மம் செய்யக் கடன் கேட்கக் கூடாது. உழைத்துக் கொடுப்பதே தர்மம். அற்புத அமுதமேயாயினும் மொத்தமாய் சாப்பிடவேண்டாம். உனது விருப்பை பிறரிடம் திணிதல் அருவருப்பு. கனவில் கண்டகாசு காரியத்திற்காகுமா? கனவு வாழ்வே கனவாகிப் போகும், நிலையானதை நோக்கிவாழ்வாய். கீழ்ப்படிந்தவனுக்கே தலைமைப்பதவிபொருத்தம். பணிதல் என்பதே பெரிய வீரம். தன் முனைப்புடன் வாழ்தல் வீழ்தலாகும். அறிவும், மனமும் இசைந்தால் நல்வாழ்வு. அறிவும், ஆன்மாவும் இறையுடன் கலந்தால் ஞானம். மனத்துடன் ஆன்மா ஒத்திசைய வேண்டும். எதிர்மறை உணர்வுகள் ஆன்ம விரோதம். கொடுத்தவனுக்கே பெறுகின்ற உரிமை. பெற்ற உதவியை நிறுத்து நோக்காதே! நூற்றுக்குநூறு, தெரிந்தவர் இலர். அளவான ஓய்வு, மிகையான பயன் அளிக்கும்.
கலைகள் கற்றால், உனக்கே முதலிடம்.
- 37

Page 21
பருத்தியூர் பால, ஒலிவருபரர்
அழிவு என்பது, தீயதைத் தொடுவது. அநீதியை அழிக்க, நாட்களை எண்ணேல். இடர்கள் எதனையும், உடைத்திட இயலும். "கொள்கை" என்பது, நல்லன புரிதல். அள்ளக் குறையாதது. அன்பும், கல்வியும். குணத்தை இழந்தோர், பிறர் சினத்தை ஏற்பர். நரித்தனமான நயவஞ்சனை, குரூரமாக அவரையே தாக்கும். பல்லியை, பாம்பை வருத்தித் திருப்திப்படுவதா? கருமம் இன்றி, உட்பிரவேசிப்பதா? தெரிந்ததாய் காட்டினால், சுயஉருவம் கருகும். உள்ளதைப் பேசினால், நம்பிக்கை மேலோங்கும். நல்லதைச் செய்ய, நாள் பார்க்காதே! தொல்லைகள் கொடுப்பதை, இல்லையென்று ஆக்கு எல்லா உயிர்க்கும், வல்லமையுண்டு. எதையும் ஏற்கும், இதயத்தை உருவாக்கு கதையில் கேட்டதை, நிஜத்தில் எதிர்பார்க்காதே! L9560LD, பழமை எல்லாமே இயற்கை. மாறுதல் என்பதே சாஸ்வதமானது. நிரந்தர இருப்பிடம், இறைவன் திருநிழல். சுதந்திர ஜீவனம், பேரின்பம் எதுவெனச் சொல்லும். கல்லுக்குள்ளே, கலைகளைப் படைக்கலாம். "புல்” என, இகழவேண்டாம், நெல் புல் இனம்தான். உதவாத பேச்சை, உதறித்தள்ளு!
- 38 -
 

சிந்தனை வரிகள்
செய்வதன் முன் சிந்திக்க வேண்டும். சிந்தித்த பின்னர், சொல்லுதல் நன்றே கருணையாய் பார்த்தால், கல்லும் கரையும். எதற்கும் தயாரானவனை பயப்படுத்த இயலாது. தோற்கத் தயாரானவர்க்கு, வெற்றிநிச்சயம். “ஆற்றாமை" காரணமாக பிறரைப் பழி வேண்டேல் கோழையை, அடித்தே வந்தால், வீரனாகிப் போவான். சாதனையாளன், ஓய்வு எடுப்பதில்லை. மாடு மேய்ப்பது எளிதுமல்ல, இழிவுமல்ல. "திருப்தி கண்டோர்க்கு, மரணபயம் ஏது? பேனா முனை, நாட்டின் விதியை வரையும். பேனா அழுதால் துன்பம், சிரித்தால் அவனிவாழும். பேனாவின் கூர்கள், நெஞ்சைப் பிளக்கும். பேனை பிடிப்பவர், நேர்மையுடன் வாழவேண்டும். கருமங்களை ஆற்றாவிட்டால், சிரமம். விரும்பிய பொருளை இழந்தால் துன்பம். இழக்கத் தயாரானால், அழுகை ஏது? துளையாத இடத்திலும், வதந்தி உலாவரும். வதந்திகள் வாழ்வை முடிக்கலாம். வதந்திச் சிலந்தியிடம் வதைபடாமல் தப்ப வேண்டும். வதந்தி, பொய், அதனால் பல முகங்கள். கலியுகத்தில் காண்பதில், பல பொய்முகங்கள். பொய் முகம் போட்டால் அதுவே நிரந்தரம். “சுதந்திரம்” பேசியே தந்திரமாய் வாழலாமா?
- 39 -

Page 22
கருத்திபூர் 04ல. ஆயிரவருடிஷ்
来
எதனையும் செய்வது சுதந்திரமல்ல. தேசத் துரோகிகள் பாசமுடன் "சுதந்திரம்” பேசலாமா? மண்ணை மறந்தவர் பெற்ற அன்னையைத் துறந்தவர். எல்லாமே மண்ணுக்குள் என்னத்தைத் தேடுகிறாய்? எல்லாமே எனக்கு என்றால் மண் என்ன நினைக்கும்? மண்ணுக்குரியதை மனிதன் எடுக்கின்றான். தாய் மண்தான் சுதந்திர பூமி. வரண்ட மண்ணை வெறுக்காது வளமாக்கு, போற்று மண்ணுக்கு உதவுதல் மரங்களைக் வளர்த்தல். பிள்ளை பெறுதல்விட விருட்சங்களைப் பெறுதல் பேறு. இளமைப் பருவத்தில் எல்லாமே அழகு குழந்தை மனத்தோடு வாழ், கோடி சுகம்! குழந்தைபோல் மனதை வைத்திரு, குழந்தைத்தனமாய் நடந்து கொள்ளாதே பிறரை ஏமாற்றுதல் தன்னைத் தூற்றுதலாம். நோகடிப்பவன் நொடிந்து போவான். கிடைத்த வாழ்வில் திருப்தி கண்டால் அடுத்த உயர்வு தானாய்க்கிட்டும். எளிமையான வாழ்வு பல கோடியிலும் பெறுமானம். உள்ளம் செல்லும் வழியில் உலா வராதே! நல்லது செய்மின் நட்டம் வராது கள்வர் என்றும் பிச்சைக்காரனிலும் இழிந்தோன். இரப்பதும் பிறர் பொருள் கவர்வதும் அவர் ஆன்மாவை
வருத்தும்.
- 40 -
 

:
பொறுப்புக்களை வெறுப்புடன் நோக்காதே பொறுப்புக்கள் வலிமையைக் கூட்டும். பொறுப்புக்களை நிறைவேற்றியவன் தன்னை நிலை நிறுத்துகின்றான். பொறுப்புகளை அறுத்தவன் வாழ்க்கையை நிறுத்தியவன். கறுப்பு மனதுடையோர் தனது பொறுப்பை பிறர் தலையிலேற்றுவர்.
பொய்யான நடிப்பு மெய்யாக வருத்தும். நடிப்பு வாழ்வுநீடிக்காது. நடிப்பான குணத்தை நீடிக்கக் கூடாது. கெட்டவர் நல்லோரிடம் நடிப்பதில் சிரத்தை காட்டுவர். நெருப்பும் அழகே அணைக்க முடியுமா? தங்கக் கத்தி என்றால் தேகத்தைக் கீறலாமா? பசிக்குத்தங்கம் உணவாகாது. தங்கத்தைச் சேர்த்தால் உள்ளம் வெள்ளையாகுமா? காரியத்திற்காக கனம் பண்ணாதே காரியம் பெற வளைந்து நெளிபவன் காரியம் முடிந்தால்
சரீரம் உள்ளவரை தைரியம் தேவை. சரீரம் பொருந்தாத வேலை எதற்கு? கருத்தே இல்லா கவிதை எதற்கு? மனப்பொருத்தம் இல்லாதாம்பத்தியம், தொந்தரவு.
- 41 -

Page 23
பருத்தில் பால. அவிழ்வருவதன்
உயிரிலும் மேலாம் வைராக்கியம். சரித்திரம் படைக்கும் ஆற்றலை வளர்த்திடு கரித்துக் கொட்டிப் பேசுதல் கெடுதல். உணவு பரிமாறித்திட்டுதல் கெட்டசெயல். ஊதாரித்தனம் உனக்கே கெடுதல். கதையை வளர்த்துக் காரியம் ஆற்றேல். நோய் கண்டு அஞ்சினால் அதுவே கொல்லும். காயத்தை வளர்ப்பதே காரியமாகாது. சாயம் தீட்டினால் தேகம் வெளுக்காது. நியாயம் கேட்பவர், அநியாய ஆதாயம் கேட்கலாமா? கோபம் நியாயத்தை மறைக்கும். அதர்மத்தைக் கண்டும் அடங்கிப் போகாதே உபாயமின்றி உள்நுளையாதே சபலப்பட்டு வாக்குக் கொடுக்காதே! கவலைப்பட்டுக் காரியத்தைக் கெடுக்காதே உரிமையின்றிதலையைக் காட்டாதே. எடுத்தெறிந்து பேசுதல் தலைக்கணத்தைக் காட்டும். கடுகடுப்பான்வரை கடவுளும் நோக்கார். தொடர்ந்துவரும் இன்பத்தினை அழுத்தமாய் நம்பாதே. ஒரு பருக்கை உணவையேனும் குருவிக்கும் கொடு. நீதிக்குப்புறம்பானால் தீரமுடன் எதிர்கொள்க! சுற்றி நடக்கும் சலசலப்புக்கு முக்கிமூழ்குதல் கூடாது. விரும்பாத விஷயத்தில் ஒதுங்கு தீராத பிரச்சினைக்கும் காலம் பதிலிறுக்கும்.
- 42 -
 

சிந்தனை வரிகள்
எந்த வயதிலும் சந்தோஷமாய் வாழலாம். வெறுப்புணர்வு இன்பத்திற்கு வேட்டு. வாழ்வைச் சுவைக்க துன்ப அனுபவம் அவசியம். அடிமையாய் வாழ என்ன தகுதி வேண்டும்? கஞ்சியை அருந்தினாலும் காந்தர்வனாய் வாழு பொய்யாய் நடித்தால்களிப்பு வராது. சலனம், சபலங்களைச் சிரசில் ஏற்றால் கவலை. மதிக்காதவரைத் துதிபாடிநடிப்பது கோழைத்தனம். பெரும் சபையில் முன் ஆசனம் தேடாதீர். விவேகத்தைக் கைவிட்டு வேகத்துடன் இயங்க முடியாது. தேகநிலை மன இயல்பைப் பாதிக்கும். ஆதாரத் தொழிலை அந்தரத்தில் கைவிடுதல் கூடாது. பிடிக்காத உரையாடல் மனத்தைக் குடையும், வேண்டாம்! உயிரை விடக் கழிக்கும் காலம் பெறுமதி. உனக்குநீஎஜமானன், அடுத்தவன் அடக்க உரிமை கொடுக்காதீர். படைத்தவனை விட நடிப்பவனை நம்புபவன், முட்டாள், கொடையாளிடம் பெற்றதைக் கேளிக்கைக்கு ஆக்காதே! நன்மை செய்யாதவன் நடைப்பிணம். எமக்குப் பிடித்தவைதான் நல்லன அல்ல. பிடிக்காத எதுவும் கெட்டவையல்ல. பாம்பு சீறாது போனால் சும்மா போனவன் துரத்தியடிப்பான். வீம்புக்கான வீண்சண்டைதண்டனையாகும். கண்டனம் செய்தவன் மண்டியிடுவதா?
- 43 -

Page 24
பருத்திபூர் முழு. ஆயிரவநாதர்
:
来源
தொண்டுகள் செய்தோனை இறைவன் அண்டுவான். அதிர்ந்து மிரட்டினாலும் உண்மை சரிந்திடாது. உண்மைக்கு ஒரே முகம் தெளிவே அதன் வடிவம். ஒருநாள் வாழ்வையும் உவப்புடன்களிப்போம். சுயமாய் வளர்ந்தவன் சுயபுராணம் பேசமாட்டான். தன்னை வளர்க்காதவன் குலப்பெருமை பேசுவான். பழம் பெருமையினால் உன் குலம் தளைக்குமா? எல்லோரும் உயர்ந்தோரே, உன்னை மட்டும் உயர்த்த வேண்டாம். தள்ளாத வயதிலும் தாழ்வாய் எண்ணல் தகாது. புல்லும் வாழ்ந்தே தீரும். கல்லின் கீழும் தண்ணி ஓடும், பொல்லாதவனிடமும் பாசம் பற்றும். தொல்லை கொடுப்பவர் தோற்றுப் போவர். இல்லை என்று சொல்லாதவன் செல்வந்தன். இருந்தும் ஈகை செய்யாதவன், ஏழை. நல்ல சந்தர்ப்பங்களை அள்ளு முன், கண் அயரேல் தேவைகள் ஆசைகளாகி மனிதனை இயக்கும். ஆசையின்றி வாழ்தல் அரிது. வெறுப்பின் மத்தியில் வாழ்வது எப்படி? ஆசையைத் துறத்தல் வெறுப்பினால் அல்ல, உள் உணர்த்தலால். வெறுப்பு உணர்வுஞானம் நல்காது. நிறைந்த களிப்பினால் ஞானம் மல்கும்.
- 44
 

சிந்தனை வரிகள்
来源
எல்லோருக்கும் வல்லமை உண்டு. இன்று நான் என்ன செய்தேன், முடித்தேன்,
உன்னையே கேள். கனவும் கூட வாழ்வின் திசைதிருப்பும். உள்ளதை வைத்து வாழ்ந்தால் என்ன வெட்கம்? களவு செய்து வாழ்வதை விட கஞ்சிகுடித்துநிம்மதியாய் வாழு. பொழுதைப் போக்காதேநல்லதாய் ஆக்கு காதலும், காமமும் இணைந்து இயங்கும். தெரியாமை தவறு அன்று அறியாமை, அறிய முற்படாமை தவறு. கருணை கடவுள்தரும் அமிர்தம். சமய ஒற்றுமை சமாதானம் நல்கும். கடும் சொற்கள், கொடும் கூற்றுவன். வன்சொற்களை நீபேசினால் உன்மனம் ரணமாகும். கண்ணிரை மட்டும் சொரிந்தால் காரியமாகுமா? ஏழ்மை உணர்வே ஏழையாக்கும். தாய்மையின் தூய அன்பை அளவிட எண்ணேல். தனிமையை நன்கு பயன்படுத்து. இயலாது எனும்போதேவிரக்தி துரத்த ஆரம்பிக்கும். கனிவாகப்பேசிக்கவிழ்க்க எண்ணுபவர் கவிழ்ந்தேபோவர். அதிக இனிப்பும்போதை. கனவில் பொய்பேசினாலும் வருந்து. தேறுதலை அளிப்பவன் தனக்கும் இன்பம் அளிப்பவன்.
- 45

Page 25
பருத்திy 00:அறிவரச்
ஊரைக் கூறுபோட்டால் உன் வீட்டில்உலை பொங்குமா? இன்பமே என்றும் என்று எண்ணுதலே இன்பம். சகலதும் தெரிந்ததாய் காட்டுதல் பேதமை மரத்திற்கும் உணர்வு உண்டு, அதை வருத்தவேண்டாம். எல்லாமே இறையோனுக்கே அர்ப்பணம். சொர்ப்பனத்திலும் சோர்வுகாட்டாதே நலிவாய் வாழ்ந்து நசிவது அழகா? பொலிவாய் தோற்றம் காட்டினால் போதுமா? சிந்தனை மாந்தர்க்கு அழகு. சொந்தம் என்பதால் "சொந்தம்" அல்ல. அறிமுகம் இல்லாநல்லோர் பெறுமதிவாய்ந்த பயன்களை நல்குவர்.
சருகும், பசளையாகும். சருகாய் உலராது பசுமையாய் உயிர்த்திரு குருவிக்கும் கூடு உண்டு, மனிதர் எல்லோர்க்கும் வீடு உண்டா? அருவியெனக் கொட்டிசிலிர்த்து எழில் காட்டு. அனைத்து இயற்கையை அரவணைப்பாய் தோழா? புனலும், அனலும், பூமியும் நமதே தனமும், வளமும், காட்சியும் நமதே குணமும், கொள்கையும் பேணுதல் சிறப்பே பழம் கதைபேசுதலைப் பழக்கமாக்காதே! நிலத்தைச் சும்மாவைத்திருந்தால் நிலம் வளம் இழக்கும்.
- 46
 

சிந்தனை வரிகள் பணத்திற்கு அடிமைப்பட்டவன், மன அமைதியைக் கெடுத்துக் கொண்டவன். உள்ளத்தோடு உரை செய்யும் போது தனிமை வேண்டும். நீரிலும் சிறந்த அமிர்தபானம் இனிமேலும் கிட்டாது. காழ்ப்பைநீக்கின் சகலதும் கிட்டும். மோட்சம் தேட கடவுளுக்கு லஞ்சம் கொடுக்க முடியாது. தாட்சண்யம் பாராது துரோகிகளை ஒதுக்கு போரை விலக்கினால் நாடு சிறக்கும். சோர்வை அகற்றினால் வாழ்க்கை சிறக்கும். படித்தும் பயன்பெறா கல்வி எதற்கு? கொடுத்தலே மனதுக்கு நிறைவு. மனத்தைக் கெடுத்தலால் அவருக்கே அழிவு. சோடனைப் பேச்சு நல் வாழ்க்கையாகுமா? சின்னச் செயலையும் விருப்புடன் செய்வாய். பாரிய, வேலைக்கும், பயப்படல் வேண்டாம். படிப்படியான வேலை அளப்பரிய ஆற்றல். பொடிப் பொடியாக மண் எடுத்தானும் நிலம் பெரும் குழியாகும். அடிமேல் அடி எடுத்தும் உலகை அளக்கலாம். நடைபெற்ற நிகழ்விற்கு வேதனை எதற்கு? கடைசியில் இருந்தவரும் முதலிடம் எடுக்கலாம். தொடைநடுங்கிகள் தலைமைக்கு ஆசைப்படக்கூடாது. அடிவருடிகள் எடுக்கும் பதவி எவர்க்கும் கேடு. சுவையான உணவையும் அளவோடு அருந்துக!
- 47

Page 26
பருத்தியூர் பல. அவிவரக்
来源
来
来
கசப்பான உணவிலும் நல்ல மருத்துவம் உண்டு. பொறுப்பில் விலகுதல் வீர்யம் அல்ல. பொறுப்பை ஏற்றல்தியாகம். தியாகம் செய்தலே யோகம். தனக்காய் வாழ்பவர் தனிமைப்படுவர். குரோதம் கொண்டோர் தமக்கே விரோதி சரீரம் சோர்வடையினும் இரத்தல் இழிவு. தயை புரிதல் தர்மம். சோம்பேறிக்கு தினசரி இருட்டு. சந்தோஷம் பெற பொய்பேசிச் சிரிக்காதே காரியம் முடிந்தபின் அனுபவங்களை மறவாதே. சிறு துரும்பு உதவிபெற்றாலும் பெரும் உதவி உடன்செய். அறியாதவனின் அலட்டல் அசிங்கம். அதிகம் தெரிந்தால் பேச்சுக் குறையும். அறிந்தவன் சொன்னால் கேட்க வேண்டும். சரிந்தவன் எழுந்தால் அவன் விஸ்வரூபி. படுத்துக் கிடந்தால் எதை எடுப்பாய்? துடுப்பைத் தொலைத்து படகு ஓட்டலாமா? விடுப்புப் பேசினால் வீட்டில் சமையல் நடக்குமா? கடுகடுப்பான மனைவி, வெறுப்பூட்டும் கணவன், வீடு வேதனை. ஒத்திவைத்தல் செய்தொழிலை நிறுத்திவைத்தல். ஒத்திவைத்தல் மறுக்கப்பட்ட கருமம்.
- 48 -
 

சிந்தனை வரிகள்
கருமங்களைப் பின்போடலால் சோம்பல் முதிர்வடையும். இலகுவான செயல்களை ஒத்திவைக்க வேண்டாம். நற்கருமத்தை ஒத்திவைத்தல், அதைத் தடுத்து வைத்த பழியைச் சேர்க்கும். அவசர முடிவு எடுத்தலை ஒத்திவைத்தல் தடுக்கும். காதலர் பாதையில் இடைநிறுத்தம் ஏது? தேடிய பொருளைக் காப்பாற்றத் தெரியவேண்டும். சந்தோஷமான அனுபவங்களே செளக்கிமானதல்ல. ஏழ்மைநிலை இழிவானதல்ல. செல்வந்தர்கள் எல்லாமே பெற்றவர்கள் அல்லர். முன்னேறும் சந்தர்ப்பங்களில் முடங்காது விழித்து இயங்கு “தத்துவம்” பேசினால் சாப்பாடு கிடைக்குமா? உணராதவன் தத்துவத்தில் விற்பன்னர் ஆகமுடியாது. உணர்ந்த ஒருவன் பேசுதலைக் கைவிடுவான். வாழத் தெரியாதவர்களும் தத்துவம் பேசுகிறார்கள். கோழைகள் கூட வீரனாக வழிசொல்கிறான். பழைய பொருட்களால் வீட்டை நிரப்பாதே முதியோருக்கே வீட்டிலும், நாட்டிலும் முதலிடம் கொடு
முதியோர் பேச்சுகள் அனுபவக் காட்சிகள்.
முதுமையைப் பழித்தவர் பின்பு பழிக்கப்படுவார். முதுமையின் பலம் அனுபவத்தினால் மிளிரும். முதுமையுடன் வாழ்வது பலருக்கும் கிடைக்காத சந்தர்ப்பம். முதியவர் இன்றிப் புதுமை உலகு உதிக்காது. இப்போது கற்றவை எப்போதும் தொடரும்.
- 49

Page 27
பருத்தி அல. அவிழ்வரர்
来
விதியை நம்பிமோசம் போகாதே! விதியை வெல்வது மனித முயற்சி. விதியும், மதியும் இரட்டைக் குழந்தைகள். விதியை வெல்லவே மதி உருவானது. விதி துரத்துகிறது, மதியைக் காட்டு, அது பின் வாங்கும். நல்நடத்தை மனிதனுக்கான உடமை. விரும்பியபடியே இருந்தால் பெறுவது எப்போது? மரணம் சின்ன விஷயம், வாழ்வதே பெரிய விஷயம், நன்றாய் வாழ். என்றோவரும் இறப்பிற்காய் இன்றைய வாழ்வை இழப்பதா?
பயம் மரணத்தை விடக் கொடியது. சிந்தனையைத் தூய்தாக்கு, செயல் சிறக்கும். பயப்படும் விஷயங்கள் உங்களைக் கண்டு பயப்படட்டும். பயப்பட்டால் செயல் சுருங்கும். நல்ல மாற்றங்களை, ஏற்கப்பழகு அதை உருவாக்கு வருந்தி உழைத்த செல்வம் நிலைக்கும்.
ỡLĐLDIT எடுத்த பொருள் சொல்லாமல் போகும். மதியாதவர் வீட்டில் செல்வம் தங்காது. பிறர்க்குநீகொடுக்கும் கெளரவம்,
மனிதனாக இருப்பதற்கான சாட்சியம். கெளரவத்தைக் கேட்டுப் பெறுதல், தகுதியற்றவனின் யாசகம். கெளரவம் கிடைக்கலாம், பெற்றதை பேணுதல் சிறப்பு.
- 50 س
 

சிந்தனை வரிகள்
米
கற்றதைக் கொண்டு வீரியம் பேசற்க. பொறுமையாய் இருப்பவன் பலவீனன் அல்லன். சுதந்திரம் எமக்கு மட்டுமல்ல எல்லோருக்குமானது. அடுத்தநாட்டு அவலங்களுக்கு மகிழ்வெய்தல் தகாது. சுரண்டும் நாடுகளும் "சுதந்திரம்" பேசும். ஆயுதம் விற்றுப் பின்ழப்பது தேசத்தை விற்கும் பரத்தைத் தொழில். அதிகார வர்க்கம் கெளரவம் பார்ப்பதில்லை. அதிகார வல்லரசுக்கு அழித்தல் இலகுவானது, ரசனைக்குரியது.
அழிக்கும் கொடுங்கோல் அரசும் “ஞானம்" பேசும். பழிக்கு அஞ்சுபவன் அரசியலுக்குள் உட்பிரவேசிப்பானா? அரசியலுக்குள் அஞ்ஞானிகள் அதிகம். உழைத்தல் மக்கள் லட்சணம், பதவிபிடித்தல் இழிந்தோர் இலட்சியம். வளைந்து நெளிந்து பொய் புனைந்து ஆடும் அரங்கம், eigéfugio. சேமித்தல் சிரமமாயினும் கடைசிக் காலத்தில் வருமானம். மெளனம் கூட உண்மையை உணர்த்தும். இல்லாதவனை ஒன்றும் செய்ய முடியாது. "இருக்கிறவன்” பிரச்சினைகள் ஓயப்போவதுமில்லை. எழுந்தவனைத் துன்பம் துரத்துவதுமில்லை. பரதேசிகள் கூடப் பாக்கியவான்களே.
- 51 -

Page 28
பருத்தியூர் பால, லுயிர்வரன்
来
来:
பிச்சைக்காரனும் கடன் கொடுப்பான்,
உலோபிகள் ஈவதில்லை. பிச்சைக்காரர்களின் மொத்தப் பிரதிநிதிஏழ்மை அரசுகள். தெருவில் இருப்பவனுக்கு நுளம்பே உறவு. தனிமையில் திரிபவனை கெட்டவன் நண்பனாக்குவான். கற்பனையில் கூடக் கெட்டதை நினைப்பவன் கெட்டழிவான். சத்தியத்திற்குச் சோதனை அதிகம், வெற்றியும் மிகுதி. அத்தனை உயிரும் வளரவே நினைக்கும். அரசியல்வாதிதிருந்தி வாழ லஞ்சம் கேட்பான். கொஞ்சநாள் திருந்தி வாழ்ந்தால் மிகுதிநாட்கள் நல்லோனாய் மாற்றும். கழுகுப்பார்வையை விடக் கள்வர் பார்வை, தீட்சண்யம். அழுது பழகினால் ஆனந்தம் தெரியாது. அடிமைப்பட்டே வாழ்ந்தால், சுதந்திரத்தின் சொர்க்கம் புரியாது. நுளம்பை அடிக்க வாளைத் தூக்கலாமா? கனவில் அடித்தவனை நனவில் கண்டு தாக்கலாமா? குழந்தைகளுடன் போட்டியிட்டுதோற்பதும் சந்தோஷம். அழுதலும் தொழுதலும் ஆண்டவர்க்கு மட்டும். தொழுதலில் சில நொடியாயினும் சிறப்பாக்கு யாகம் செய்தானும் பாவத்தைக் கழுவ இயலாது. யோகம் உள்ளவன், பாதாளத்தில் விழுந்தும் செல்வம் அள்ளுவான்.
- 52
 
 
 

சிந்தனை வரிகள்
சோகத்தைச் சொல்லியேயாசகம் கேட்பது பலவீனம். வரவைச் செலவை எழுதி எண்ணிச் செலவுசெய்க அறியாத அறிவு அநேகம், அறிந்ததை உணர்வதே
6Lld B60)LD. புகழ் இறுமாப்பைக் கொடுத்தால் துன்பம் ஆரம்பம். புகழைப் பெறுபவர் சவால்களைச் சந்திக்கலாம். பருவத்தே திருமணம் செய். இறக்கும் தறுவாயில் பேசும் ஞானம், சூன்யமானது. நல்லோர் நட்பைக் கெட்டியாய் பற்றுக! விட்டுக் கொடுத்தால் நட்புநிலைக்கும். அடுத்தவன் அழுதால் சிரிக்காதே! கட்டளை இடுபவர் கனம் பண்ணத் தெரியவேண்டும். உற்பத்தி பெருகினால்தான் எலிகளுக்கும் நன்மை. களை ஒன்றும் முளைக்காமல் நெல் முளைக்காது. விளைநிலத்தில் விதைக்காதவன், துரோகி உழைத்து முன்னேறியவன்களைப்படைவதில்லை. நோயைக் காட்டி அனுதாபம் தேடற்க பயப்படுபவனுக்கு, மண்புழு நாகபாம்பு. துயரப்படுபவர்க்குத்துயரங்கள் உதவாது. உடலும் மனமும் நிமிர்ந்துநிற்பதாக பணிவு என்பதுதலைகுனிவு அல்ல. துணிவு உள்ளவனின், பணிவுமேன்மையளிக்கும். பணிவுகூட வீரம்தான், ஆணவம் இல்லை என்பதால். பயத்தினால் உருவாகும் பணிவு மனிதரைத் தாழ்த்தும்.
- 53 -

Page 29
மருத்தியூர் பால, அவிவரம்
米
ஜெயம் கொண்டோர் மனித இதயத்தில் இணைய வேண்டும்.
அடக்கிஒடுக்கி அன்பு காட்ட முடியாது. பண்புள்ளவர்க்கு அன்புதானாய் சுரக்கும். வேண்டப்பட்டவர்க்கு மட்டும் ஈந்திடும் அன்பு சுயநலம். அனைவர்க்கும் கருணை கூர்தல் இறை குணம். தண்ணி கொடுக்காதவன்தானதர்மம் செய்வானா? அன்புக்கு உரிமை அதிகம். நூல்களைப் படிக்காமல் நூல் விமர்சனம் செய்யலாமா? கயவர்கள் பிறர் துன்பம் அறியார். பகைவன் நட்பு நோக்கிவரும் போது யோசித்து முடிவெடு அடுத்துக் கெடுப்பது பகைவர் குறிக்கோள். கோபப்படலாம் எவரையும் வெறுக்காதே அறிவுள்ளவனுக்கு நூறு கண்கள், அனுபவசாலிக்கு ஆயிரம் கண்கள். அனுசரித்துப்போதல், அடங்கிப் போதல் அல்ல. உரிமை கொண்ட உறவுகளை உதாசீனம் செய்ய (866OdrLIT b.
நல்லதைச் செய்யாது விடுதலே கேடு. எல்லா உண்மையையும் சொல்ல முடியாது. உண்மை பேசியதால் நல்லோர் பங்கமடையக்கூடாது. பிறர் பசிக்குதவாத பெருஞ்செல்வம் இருந்தென்ன சொல்? நண்பனால் வரும் துன்பத்தை ஏற்றுக்கொள்!
- 54
 

சிந்தனை வரிகள்
வெந்நீரும் தீயை அணைக்கும், தண்ணிரும் மூச்சை
நிறுத்தும். Fa தேவையற்ற கண்ணிருக்குப் பெறுமதியில்லை. நியாயமான ஆசைக்கு ஏங்காதே, அடைந்தே விடு பசுவைக் கூட மிரட்டாதே சுருண்டு விழுவாய். ஆசைஉறங்குவதுபோல்காட்டும். பின்பு எழுந்துவருத்தும். கொடுக்கும் போது உனக்கும், வைத்துக்கொள். நல்லவன் குறைகள் பெரிதாகத் தோன்றும். பொல்லாதவன் நல்லது செய்தாலும் நம்புவாரில்லை. கள்ளிச் செடியும் மருந்துக்குதவும். இனிப்பான மருந்தும் தேகத்தைக் கெடுக்கலாம். பல் இல்லாதவனுக்கு முறுக்கைக் கொடுக்காதே! படித்தவன் உண்மையை இடித்துரை செய்யாதுவிடின் படித்தவை வீண்.
மறதிபகையை மறக்கும்.
கல்விக்கு மறதி எதிரி. நல்லதை நினை, அல்லாதவை மற. நன்றி மறத்தல், அறத்தை வெறுக்கும் செயல். துன்பங்களைத் தூக்கித்திரியக் கூடாது. சோகத்தை உள் அழுத்திவைக்காது அழுது தீர்த்து எழுந்து
ଗରj60&b!
சோகத்தைப் பாரமாக்காதே எரித்துநீறாக்கு சோகத்திற்குப்புதுவர்ணம் தீட்டாதே எல்லா ஜீவனும் உலகின் சொத்து.
- SS.

Page 30
பருத்திடிர் 04று. ஆயிற்றுருதம்
米
உபகாரம் செய்பவர்க்கு ஊரெல்லாம் நட்பு. உபகாரம் செய்பவர்தம் வறுமை உணரமாட்டார். கடிந்து கொள்ளும் பெரியோரையும் விட்டு விலகாதே! பெரியவர்கள் கோபத்தை, எள்ளிநகையாட வேண்டாம். கொஞ்ச வயதில்தான் நிறையப் படிக்க முடியும். கல்விகற்கும்போது கூச்சம் வேண்டாம். ஐயம் தெளிந்தாலே அறிவு வளரும். தெளிவற்ற அறிவு மனக்குழப்பத்திற்கு வழிகாட்டும். விளங்காததை விளங்கினால் பேரின்பம். கருதிய பணியை உடன் செய்ய விழைக இயற்கை இலவசமாகக் கொடுக்கும். குடிக்கும் நீருக்கும் காசைப்பிடுங்குவான் மனிதன். உயர்ந்த மாந்தரை எளிதினில் புரிந்திடலாம். நயவஞ்சகள் நடிப்பைப் புரிதல் கடினம். நட்பைத் தேடின் விரக்தி இல்லை. நடந்த தவறுக்கு சமாதானம் பூசாதே அறிவுமட்டுமல்ல செய்ததவறுகள் கூட அனுபவம் நல்கும். கோழைகள்தான் வீரமாகப்பேசி நடிக்கிறார்கள். ஏழைகளுடன் தோழமை கொள்பவன் பரோபகாரி நடிக்கத் தெரிந்தால், நல்ல கணவன் என்ற பெயர் 6TC6556DITI b.
காதலும், காமமும், பிறவித் துன்பம். கருத்தைச் சொல்பவர் பிறர் கருத்தையும் கேட்க வேண்டும். உள்ளம் விரும்பிடின் எல்லாமே அழகு.
- 56 -
 

சிந்தனை வரிகள்
முதுமைக் காலத்தில் முதிர்ச்சியும் அழகு. பண்பு இல்லா அழகியும் அசிங்கம். "நான்” எல்லோருக்குமானவன் என எண்ணுக! உலோபியிடம் பணம் பெருக இதயம் சுருங்கும். நல்ல கலைஞனை விலைக்கு வாங்கினால் கலை அழும். படுக்க இடமில்லா ஏழை. நாடு அவனுக்கு அந்நியம் வாழ்கின்ற வாழ்வும் நிஜம், வருகின்ற மரணமும் நிஜம்! மரணத்தினாலேயே பல நல்லவைநடக்கின்றன. தெரிந்து கொண்ட பின்னரும் மரணபயம் அநாவசியம். மரணம் கருணையோடு எம்மை அணைக்கின்றது. மூச்சுநின்ற பின் வேந்தனாவது பரதேசியாவது. பல லட்சம் உயிர்களை அழித்தவன், தன் உயிர் காக்க அழுது அரற்றுவான். மரணத்தை உணர்ந்தவன் நல்லவன்ாகிவிடுவான். பலசாலிகளின் பேச்சேநீதியாகிவிடுகின்றதே வலிமையற்றவன் சொல்லும்நீதியைக் கேட்க ஆளில்லை. நீதியை வளைக்க, ஆயுதங்கள் உதவுகின்றன. ஒருவர்க்குச் செய்யும் அநீதிஉலகிற்குச் செய்யும் துரோகம். பயமற்றவனே நீதி வழங்கத் தகுதியுடையவன். நீதிக்குக் குறுக்குப் பாதை கிடையாது. காலம் தாழ்த்தி நீதி வழங்கேல். பெண்கள் பேச்சைநம்புவதுபோல்நடி, தப்பில்லை. பலமும் இனிமையும் கொண்டவனை துணிவற்றவன் ஆக்குதல் துரோகம்.
- 57 -

Page 31
பருத்திபூர் பல. ஆயிறுகுழர் * கண்ணிமைக்கும்பொழுதில் கரையும் உலகம், வேண்டாம்
6ioOor Gudb6OLD? * காசுக்காரன் தன்வீட்டுநாய்க்குப் பிறர் வாலாட்ட
(36)6OdrG6LD60TLJIT60s. * பணக்காரனைக் கண்டால் படித்தவனும் பல்
இளிக்கின்றானே? * சுனைக் கெட்டவனுக்கு அகெளரவம், கெளரவம்.
* பெருங்கடலை அள்ளலாம் மனம் ஒப்பா பெண் இதயத்துள்
இறங்க இயலாது. * ஒருவரையும் அறியாமல் இருப்பதைத் தெரியாமல்
வாழ்பவன், எதிரிகளற்ற மனிதன். ரோசம் கெட்டவனுக்கு எல்லாமே எளிதுதான். பாசம் உள்ளவன் பலதையும் யோசிப்பான். காதல் விலை கொடுத்து வாங்கும் இன்பச்சுமை. பணத்தைத்திட்டிக்கொண்டே அதைப் போற்றுகிறார்கள். கூலிக்கு வேலை செய்து கோட்டை கட்ட முடியாது. புழுதியில் புரண்டாலும் குழந்தை அழகுதான். கரிசனையுடன் விசாரியுங்கள், பொல்லாதவனும்
புல்லரித்துப்போவான். * ரசனையற்றவனுக்கு நிலவும், பூவனமும் வெற்றுக்
காட்சிதான். * ரசனை உணர்வு இன்றி வாழ்வுருசிக்காது. * அழகை ரசிக்கத் தெரியாதவனுக்கு
அழகிய மனைவி எதற்கு?
- 58 -
 

சிந்தனை வரிகள்
குதிரைகனைப்பது குதிரைக்கே புரியும். எலிக்குப் பயந்தவன் புலியோடு பொருதினானாம். பெரும் பகையை எதிர்ப்பது சுலபம், குள்ளநரிகளைப் L605556) g560TLILD. கரும் குரங்கும் தன் இனத்திற்கு அழகு.
frilabb, "சுண்டெலியைப் பிடிக்க முடியாது. மனிதனுக்குள்ள பெருமையைவிட சின்னக் குருவி தரம் தாழ்ந்தது அல்ல. தன்னை வைத்துத்தரம் நோக்குபவனிடம், நியாயம் கேட்க (Up12||-|LDIT? திருமணம் என்கின்ற சந்தோஷத்தில் இருந்து துன்பம் என்கின்ற உறவுகள் முகிழ்கின்றன. பெரும் துன்பங்களைக் கண்டவனுக்கு மனைவி ஒரு பிரச்சனையே அல்ல. உழைத்து வைத்தவன் பிள்ளைகளுக்கு அஞ்சான். குடிக்கக் கூழ் இல்லாதவன் முன் கோட்டைவிருந்து பற்றிச் சொல்லக்கூடாது. அழகைத் தேடிதம்மை மாற்றி அவலட்சணமாகிறார்கள். பக்கத்துவீட்டுச்சண்டையால் வீட்டுச்சண்டையை மறந்தார்கள். எதிர் வீட்டுச்சத்தம் மட்டும், பெரியதாய்க் கேட்கும். அருவியின் நீரை யார் கொடுத்தது? வருகின்ற நீரை யார் தடுப்பது?
ஏழ்மையிலும் தன்னை இழக்கலாகாது.
- 59 -

Page 32
கருத்திபூர் அல. ஆயிரவருதச்
来源
米
来源
米
வருந்தி இழுக்கும் நட்புப் பொருந்த வருமா? சீதனம் வாங்கியவன் சீதனம் கொடுக்க வேண்டும். பெண்ணையும் கொடுத்து, பொன்னையும் மண்ணையும் கொடுப்பது என்ன நீதி? திருமணச் சந்தையில் ஆண் ஆதிக்கம் அடாவடித்தனம். திருமணத்தில் சீதனத்ததைக் கொடுத்தவள் அதிகாரியாகிறாள்.
பயந்தாலும் மரணம் விட்டு விடுமா? மரணத்தை நினைத்து மரணிப்பதா? இயற்கை வழங்கும் நித்திய ஓய்வு மரணம். மரணத்தினால் புவனம் புதுமனிதரைப் புது இளமையைச் சந்திக்கும். வாழ வழியற்றுச் செத்த ஏழைக்கு மரணம் வாழ்வளிக் கின்றன. வாழத் தெரியாமல் சாக எண்ணுபவன் மரணத்தை இழிவு
படுத்துகின்றான். மரணங்கள் எல்லாமே மாந்தர்க்குத் துரோகமிழைப் பதில்லை. எம்மை அணைக்கும் கடைசிக் காதல் "மரணம்” மரணம். எமக்காகப் பொறுமை காக்கின்றது. மரணமேநிஜம் என்பதால் துணிவுதானாக வரவேண்டும். நாக்கினால் நோக்கமறிந்து பேசு.
பேச்சை சுவையைநாக்கினால் கட்டுப்படுத்து.
- 60 -
 
 

米
米
சிந்தனை வரிகள் நயமாய் பேசும் நாவினை சுயமாய் பேசவிடாதே சயனிக்கும் போதும் பயமின்றித் தூங்கு. குழப்பத்தை மனதில் கொண்டால் எல்லாமே தவறாய்த் தோன்றும், தெளிவற்றநிலையில் முடிவெடுக்க வேண்டாம். படிக்காதவனிடமும் அனுபவ அறிவைப் பெறலாம். “அனுபவங்கள் நல் அறிவாகும். புத்தகத்தைப் படித்தால் மட்டும் புத்திமான் என்பதா? உணராத கல்வியால் ஏது உபயோகம்? உதவி புரியாதவன் புதையல் காத்த பூதம். கள்வர்களுக்கு களவு காலனாகும். சொற்ப கால வாழ்விலும் சாதனை படைக்கலாம். வாழ்வதற்கே காதல், சாவதற்கு ജ്ഞ. காதலில் தோற்கலாம், வாழ்க்கையில் தோற்கலாமா? இளமைக் காதலில் தோற்றதை எண்ணிமுதுமை நினைந்து சிரிக்கும். சில காதல் தோல்விகள் அதிஷ்டத்தைத் தருகின்றன. தொண்டனாக இருக்கத்தயங்குபவன் தலைவனாக
(UplрШП85). வார்த்தைகளில் வாலிபமும் இருக்கும், முதுமையும் தொனிக்கும். ஒரு வார்த்தையையும் உலர்ந்து சொல்லாதே ஒரு வார்த்தை போதும், பல மாற்றங்களைக் கொண்டு வர. நல்ல பல செயல்களை தீய ஒரு சொல் மறக்கடிக்கும்.
- 61 -

Page 33
பருத்தியூர் 04ல. உயிர்வரர்
来源
来
来
நல்ல சொற்கள் வஞ்சனை செய்வோரை மாற்றும். துர்மதியாளர் உதிர்க்கும் வசனம் விஷம். காலத்தைப் பொருளை இழந்தும் அனுபவம் கிடைக்கின்றது. அனுபவம், துன்பம் கொடுத்து வருமதியை நல்கும். அழகான குடைதான் தொலைந்து போகிறது. பழஞ்சோறும் பழைய கறியும் உடனுக்குத் தென்பு. தினம் தினம் அழுகின்ற பெண்ணுடன் வாழ்வதெப்படி? புழுவிற்குத்தான் புரியும் அதன் வலியின் தாக்கம். காற்றை கைக்குள் அடக்கலாம். வீண்பேச்சை அடக்குதல்
dfJLDL b. நோஞ்சானையும் சீண்டினால் ஆபத்து. காதல் பேச்சு என்றும் எடுபடுமா? நண்பன் என்பதால் சவாரி செய்யக்கூடாது. கதைப்பதால் மட்டும் கடமை நிறைவேறாது. கடிக்காத பாம்பை அடிப்பது எளிது. அழுது தீர்க்காத சோகம் நிலைத்து விடுகிறது. உறக்கத்திலும் விழிப்புடன் இருப்பவன் ஞானி. விழித்தபடியும் உறங்கியபடி இருப்பவன் சாமான்யன். கவலைக்கு மருந்து அழுகையாகாது. வேலை செய்தால் கவலை விலகும். துகூழ்டர்களுடன் முரண்படவும் வேண்டாம். உடன்பாடும் (8ഖങ്ങLib. அழகிய பெண்ணிடம் விலகுவது நல்லது.
- 62 -
 

சிந்தனை வரிகள் கெட்டவன் நிழலும் மனிதனை அரிக்கும். கோழைகள் சந்தோக்ஷங்களை இழக்கிறார்கள். அறிவு சந்தேகங்களை சந்திக்கின்றது.
ஞானம் தெளிவோடு ஒளிர்கின்றது.
கல்விக்கு இழுக்கு கற்றதை மறத்தல். நல்ல மனைவி ஒப்பீட்டுக்கு அப்பாற்பட்டவள். பொல்லாதவனுக்குப் பூமி எதிரி. தங்கத்தில் மோகம் திருடனுக்கு யோகம்.
வாழ்த்துங்கள் நன்றே வாழ்வீர்கள் நயம் பட நேரத்தை பயன்படுத்துக. ஒரு பொழுது அசைவிலும் ஓராயிரம் சாதனை செய்! காசுக்காரன்லேசுப்பட்டவன் அல்ல. ஆற்றல் உள்ளவனிடம் கூற்றுவனும் அஞ்சுவான். எத்தர்கள் தர்க்கத்தில் வித்தகர்கள். எத்தர்கள் உலகின் சத்துருக்கள். சந்திச் சண்டியன் சக்கரவர்த்தி போல் பேசுவான். எடைபோடும் போது தராசைக் கவனி! நைந்த உடனுக்குள்ளும் வர்மம் இருக்கும். அடைத்து வைத்து அழகு பார்க்கவேண்டாம். கொடுக்காதவனுக்கு எடுக்க அதிகாரம் இல்லை. எடை போடத் தெரியாமல் கடைபோட முடியாது. வேலியில்லா வீடு ஆடையில்லா தேகம் போலிருக்கும். கிண்டலுக்கும் கேலிக்கும் ஓர் எல்லையுண்டு. தொண்டு செய்பவர்க்குச் சிரமம் தோன்றாது.
- 63 -

Page 34
பருத்திபூர் 00, வயிறுத்தர்
来
来
来
米
来
来
来
来
来源
米
米
米
来源
来
来源
来源
米
米
米
米
来
来
米
来
கண்டதையும் உண்டு களித்தால் தேகம் ரோகம். காசு இல்லாமல் கடைப்பக்கம் போகாதே. கனவுக் கோட்டைக்குள் வாழமுடியாது. சினத்தை அடக்காமல் சீவிக்க இயலாது. பணத்தைக் காட்டி மருட்ட எண்ணாதே! நற்குணங்களே அபார சக்தி! வெற்றுப் போத்தலிலும் காற்று குடியிருக்கும். நேற்றைய கனவுகள் இன்றைய யதார்த்தங்கள். காந்தியை ஹிட்லரைக் கடவுள்தான் படைத்தார். காரணம் இன்றிப் உயிர்கள் உற்பத்தியாவதில்லை. பாசமேலீட்டாலும் தவறுகள் அனுமதிக்கப்படுகின்றன. நீதியாளன், பெற்ற மகனுக்கும் பக்கம் சாரமாட்டான். ஏளனம் செய்பவர் எதனையும் செய்யாதவர். விரும்பி செய்யும் பணிக்கே நிரம்பப் பயன்கள்.
ள்.
வைக்காத இடத்தில் தான் பொருட்களைத் தேடுகிறார்க கொடுத்த கடன் கிடைத்தாலே லாபம். கசப்பை விரும்புபவனுக்கு இனிப்புக் கசக்கும். நடிப்புக்குச் சொன்ன பொய்கூட கடித்துக்குதறிவிடும். அதிகம் படித்தவர்களும் தடுமாறிதடம் மாறுகின்றார்கள். உட்கார நிலமில்லை ஊர் நிலத்தை விலை பேசலாமா? பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களும் படிக்கின்றார்கள். நேரம் தவறுபனுக்கு கடிகாரம் எதிரி. அரைநிமிட வீண்தூக்கம் பலகோடி ஆக்க இழப்பு. ஆசைப்படு, அதற்கு முன்தேகத்திற்கு வேலைகொடு.
- 64
 

来
:
சிந்தனை வரிகள் கூசாமல் யாசகம் கேட்பவன் நன்றாக பேசுவான். வேசியிடம் போவது யாசகத்தை விட மோசம். வெட்கத்துடன் கடன் பெற்று திருப்பிக்கேட்டால் வாய்வீச்சு! ஊள் மேய்பவனுக்கு அரண்மனையும் சிறைதான். நோயாளி சாகும்போது, வைத்தியன் அனுபவம் பெறுகின்றான் μ மதுப்போத்தலுக்குள் குடிகாரன் குடித்தனம். மிருகங்கள் அழுவதில்லை சவால்களுக்கும் அஞ்சுவதுமில்லை. கருமேகங்கள் அழுவதை மனிதன் எதிர்பார்க்கிறான். மனிதன் அழுவதை விதிபார்த்து சிரிக்கும். உடலுக்குள் ஆண்மா வசிப்பதை மனிதன் மறக்கின்றான். பாவம் செய்யமுன் உயிரை உற்றுநோக்கு. கருமம் செய்ய பிறர் மீது பாரம் ஏற்றாதே. அழுவதற்காக வாழ்க்கையை இழக்கிறார்கள். தொழுது அழுது இறைவனை வேண்டிட ஆலயத்தினுள்ளே இடித்து நுழைவதா? பாவங்களைச் செய்து சமாதானம் வழங்க முடியாது. பல்வலி வரும் போதுதான், பற்கள் இருப்பது தெரிகின்றது. வலிமையுள்ள ஆண்களும் அன்பான பெண்கள் முன் அடிமையாகின்றார்கள. உணவுவிடுதிக்குப் போகு முன் பணத்தை எண்ணிப்பார். நல்ல உடை உடுத்தினால் நாட்டாமை
செய்யவேண்டுமா?
- 65 -

Page 35
பருத்திபூர் படி. ஆயிற்றுருதேஷ்
来
来
:
எடையைக் குறைக்க நடையை கூட்டு. சுருக்கமாக பேசினால் செறிவு அதிகம். வெறுப்புடன் நோக்கினால் நல்லவை புரியாது. பிறப்பும் இறப்பும் பெறுமதிமிக்கது. கடவுளிடம் நடிப்பவர் மூடர். பாவிகள்.
இயற்கையுடன் போராட முடியாது. இணைந்து இயங்கு.
எதிர்ப்பினை எரி 1 பகைவரை மதி ! சென்ற நாளை மட்டும் பேசேல்! இந்நாளில் வாழ்ந்து காட்டு. வருந்தி நொந்து நோயை வரவழைக்கிறார்கள். அடங்கிப் போதல் அவமானப்படுத்துதலை ஏற்பதுபோலாகும். புரிந்து வாழ்ந்தால் இல்லம் தேவர் உலகிலும் பெரிது. அறியாமையின் முன் அறிவு இயங்கத் தயங்குகிறது. மது அருந்தினால் மன்மத நினைப்பு. காலம் செய்யும் அற்புதங்கள் கோடான கோடி. பகைவனை உருவாக்காதவன் வீரன். துரோகம் இராஜதந்திரமாகிவிட்டது. இறையோன் சந்நிதி என்றுமே நிம்மதி. இல்லறம், துறவறம் இரண்டுமே இறைவரம். உறவுகளை உதறிநிறைவு பெற முடியுமா? இறைவன் எண்ணுவதை மனசாட்சி சொல்லும். வெறுப்பை சிரிப்பால் மறைக்க முடியாது. மலையை அளந்தவனும் தாழ்வாரத்தில் தடுக்கி விழுவான்.
- 66 -
 

சிந்தனை வரிகள் * அழுது நொந்து கிடப்பதை விட எழுவது சுலபம். * நிலையான வாழ்விற்கு உலகோடு உறவாடு. * பழகிப் பார்த்தால் சிங்கமும் சிறு குழந்தையாகும். * இளகிய நெஞ்சம் இறைவனிடம் சாஸ்வதம்.
வீரகேசரி
"FlasLDLib" தொடராக வெளிவந்தவை
- 67 -

Page 36


Page 37
ளுக்கு நிவாரணமளிக் இ அவசியமாகின்ற
 

சொன்னார்கள், பால
திற்கு நிதி சொல்கின்றார்.
லியுறுத்த வேண்டிய தேை
குடும்பச்சிதைவுகள்
ற, தென்கிழக்குப்பல்கலைக்கழகம்
ISBN 978 955 O469-19-2
9目ア3 5 9
955 Oil 4, 69 192