கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: திருவருள் 1981.02.28

Page 1
  

Page 2
காரிய சித்தியும்
அருள * திருவருளே’ வேண்டுகிறேம்
திரிகரண சுத்தியும்
» :
312, நீர்கொழும்பு வீதி
பேலியா கொடை
தொலைபேசி எண் : 070 - 284
K. Lina 50566)1651
 

திருவருள்
- அவனருளாலே அவன்தாள் வணங்கி வாழ்வோம் -
MMMMMM மலர் 1 / இந்துசமயச் சஞ்சிகை இதழ் 2
பொருளடக்கம்
இலக்கம் இக்கல்
1. நன்றியும் நம்பிக்கையும் glM) 2. திருவருள் இதழின் வெளியீட்டு விழா. a e. 4. 3. சிவன் ராத்திரி se ஆங்கில மூலம், கவனமி சின்மயானந்தர். 4: வேண்டுவார் வேண்டுவதை ஈயும் பிரான். ஆரி.வி. 8
5. சிவனே வணங்குவோம் P-Orr 10 சிவஞான வாரிதி, சைவசித்தாந்தக் காவலர், குமாரசுவாமி
குருசுவாமி3 6. தமிழ்ச்சமய நெறி Oee 2.
தவத்திரு குன்றக்குடி அடிகளார். 7. நம்மைப்பற்றி “ ” “ 27 8. நவக்கிரக தோத்திரம் to go 盛9 9 நமது பாரம் பரியம் ΦαφΦ @@

Page 3

وہنھیمی
* நன்றியும் நம்பிக்கையும் *
ise is fir, le seo is seoses ',
* அரியது கேட்கின் வரிவடிவேலோய், அரிது அரிது மானிடராதல் அரிது’ என்பது ஒளவை மூதாட்டியின் அருள்வாக்கு. முருகப்வெரு மானிடம் கனிந்த பக்திகொண்ட இந்த அம்மையார், "அழகு பொருந்திய வேலையுடைய முருகா! உலகத்தில் பெறுவதற்கு முடியா தது எது? " எனக்கேட்டு அதற்கு விடையாக மானிடப்பிறவி எடுப் பது மிகவும் கஷ்டமானது எனவுள்ள கூற்று, வின விடையாகி அமைந்ததொரு திருவாக்காகும். அப்படியெனின் இந்தச்சரீரம் எவ்வாறு நமக்குக் கிடைத்திருக்கிறது என்பதற்கு "திருவருள் இரக்கத்தின் பெறு பேறே இந்தச் சரீரம், என்றும் எதற்காக இது நமக்குக் கிடைத்திருக் கிறது என்பதற்கு மாந்தர்களாகிய உயிர்களுக்கு உயிரைத் திருவருளோடு தொடர்புபடுத்துவதற்கு இச்சரீரம் கிடைத்திருக்கிறது எனவும் இதனை எவ்விதம் தொடர்புபடுத்துதல் வேண்டும் என்பதற்கு, பேணுகிற முறை யில் பேணித் திருவருளுக்குப் பாத்திரமாதல் வேண்டும் எனவும், பேணு கிற முறைகளே உபகரித்து திருவருள்? பரோபகாரம் புரிவதாக என்ற தூய உள்ளத்தெழுந்த பிரார்த்தனை உரையும், இன்றைய உலகில் இந்து இாேஞர் மத்தியில் இறை நம்பிக்கிையுடைய பக்தி விழிப்புணர்ச்சியோடு பரவச் செய்தல் வேண்டும் எனவும் தேஜஸ்சோடு வளர்பிறைபோல் வளர்ந்துவர ஊக்கமும் ஆக்கமும் அருள எல்லாம் வல்ல இறைவனை வேண்டி உள்ளத்துறுதியூட்டும் ஆசியுரையும், இந்துக்கள் மட்டுமல் லாத பிறமதத்தவர்களையும் இந்துதர்மத்தின் விலே மதிக்கமுடியாத இரத்தினங்கள் பேசன்ற பல ஆன்ம இரகசியங்களையும் மறைமுக தத் துவங்களையும் புரிந்துகொண்டு அதன்படி நடந்து உள்ளத்தில் உறை நிலையில் செயலற்றுக் கிடக்கும் உயர் ஆத்ம சத்தியைத் தட்டி எழுப்பி இறையின்பத்தைத் தொட்டு அநுபவித்து அமைதி ஆநந்தம் நிறைந்த அருள் இாழ்வாம் பெருாைழ்வு வாழவும், அழிவுப்பாதையை நோக்கி வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் மக்களின் அறியாமை இருளை அகற்றும் அருளொளியாக எமது திருவருள் பிரகாசிக்க விளையும் திரிகரண சுத்தின் பிரார்த்தனையும் இம்மூன்றும் செயற்கரிய செய்யும் பெரியார்களிள் உள்ளத்தூய்மையினையும் உயர்வினையும் ஒளியினையும் காட்டும் சீரிய சிறந்த வாக்குகள் ஆகும்.
திருவருள் மலரை அழகு மலராக என்றென்றும் நிலைத்திருக்கச் செய்ய வேண்டுவன கூறி வாழ்த்துகின்ற இப்பிரார்த்தனைகள் எமக்கு மட்டற்ற மகிழ்ச்சியையும், தளராத உற்சாகத்தினையும், விடாமுயற்சி,

Page 4
sa 2 =
பொறுப்புணர்ச்சியினையும் தருவன ஆகும். இவர்களும் எம்முடன் ஒன்றினேந்து, புறம் புறம் திரிந்து திருவருள்" மலரின் ஏற்றத்துக்கு வேண்டத்தக்க தறிந்து வேண்ட முழுதுத்தந்து நமக்கு உறுதுணையாசி இருப்பதனை வேண்டுகின்ருேம், அந்தமில் அமிழ்தம் இயைவதாயினும் இனிதெனத் தாம் மாத்திரம் உண்டிலராய பிறர்க்குரிய இம்மேன் மக்களுக்கு உளங்கனிந்த நன்றி.
நவராத்திரி நாட்களில் வரப்பெற்ற சரஸ்வதிஞானதேவதை என்ற கட்டுரை வாயிலாக அருள்திரு. சுவ9மி சின்மயானந்தா அவர்கள் இந் நாட்களில் நாம் வணங்கும் மூன்று சக்தித்தெய்வங்களுள் ஒன்ருகிய அறுபத்துநான்கு கலைகளையும் எமக்கு உரைக்கும் சரஸ்வதித் தாயின் தோற்றத்தைக் குறிக்கும் தத்துவ விவரங்களை எடுத்து இருப்பது காலத்திற்கேற்ப கருத்தறியத தவிக்கும் இக்கால இளைஞர்களுக் கும் சமய அடித்தளத்தில் வாழுகின்ற, இடைவிடாமல் கேள்வி கேட் கின்ற பள்ளிச் சிறுவர்களுக்கு எடுத்துக்கூறக் கருத்துத் தெரியாமல் அங்கலாய்க்கின்ற பெற்றேர்களுக்கும், ஐயங்களை நீக்கும் உள்ளத்தெளி வினயும் மனத்திருப்தியினையும் கருத்தறிந்து இலயித்துப் பிரார்த்தனை செய்யும் மனப்பக்குவத்தையும் தந்து அவரவரைத் தத்தம் பக்திநெறிப் படுத்தி முக்திநெறி காட்டுவதாகும். இத்தகைய தத்துவங்களே விளக் கிக் கூறும் கட்டுரை கிளேத் தொடர்ந்து தந்தருளும்ாறு சுவாமிகளேப் பணிவன்புடன் கேட்டுக்கொன்கின்ருேம். அவர்களுக்கும் எமது நன்றி.
சிங்கப்பூர்க் கடிதத்துக்குரியவர் நாட்டுப்பற்று, மொழிப்பற்று, சம யப்பற்றுக்கு ஒர் எடுத்துக்காட்டாக உள்ளார்கள். தாம் செய்ய வேண் டியனவற்றி வரிசைப்படுத்திக் கூறும் ஒரு சிறந்த கடிதம், செய் வன திருந்தச் சேய்யின் சிங்கப்பூரிலுள்ள எமது சமயத்தவர்களை அணுகி, பணஞ்சேர்ப்பதில் கஷ்டமிராது என்ற ஆக்கம் தரும் உறுதி மொழி, எமக்குப் போதிய நல்லாதரவைத் தருகிறது. முயற்சிகள் தூய்மையாகவும், குறிக்கோள்கள் செம்மையாக நல்வழிச் செல்வனவா யும் இருப்பதையே விரும்புல் திருவருளினர் மத்தியிலும் தங்கச் சுரங்கமென, இலைமறைகாய் போலுள்ள, வரையாது வழங்கும் வள்ளல் களும் இல்லாமலில்லே. இத் திருவருள் வாடாமலராக நிலைத்திருக்க நிதி மிகுந்தவர் பொற்குவை தந்த, நிதிகுறைந்தவர் காசுகள் தந்து, அதுவு மற்றவர் வாய்ச்சொல் அருளி நமது முயற்சிக்குப் பக்க பலமாக நின்று ஆதரவு தருவர் என நம்புகிருேம்.
இத்திருவருள் "மலர்' களிப்பூட்டும் அழகிய வண்ணத்தால், ஈர்க்கும் தன் நறுமணத்தால், சுவைக்குல் நறுந்தேனினல் வண்டுகளாகிய எமது வாசகர்களையும் மேலும் பல இHசகர்களையும் விரைந்து பற்றிப்பிடிக்
 

ܩܚ- 3 ܡܫ
கிறது - பிடிக்கும் என்ற அறிகுறிகள் காணப்படுகின்றன. இதுவும் திருவருளின் பெறுபேருகும். திருவருள் வழிச்செல்லும் நல்லாதரவு
தரும் நல்லுள்ளங்கள் உள்ளவரை நமக்இென்ன குறை!
* நம்பினுற் கெடுவதில்லை நான்குமறை தீர்ப்பு அம்பிகையைச் சரண்புகுந்தால் அதிகவரம் பெறலாம் "
என்பது கவி சுப்பிரமணிய பாரதியாரின் கூற்று.
வாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.
==C-CO-e-
LSLSLSAT A eMAM AMSMSAAM MMMSAAMMSES ALLAqSASASALLLS AAALS AAALLMASMMSAeLLLAAAASLLLL LLALALSLAL AAMSMLMASAALSAeLALSMSMLMLALqS ASMLAeSLALSLATMMA
புதன்கிழமை மகா சிவராத்திரி தினமாகும். திருக் கேதீச்சுரத் திருத்தலத்திலுள்ள திருவாசக மடத்தில் ஈழத்துச் சிவனடியார் திருக்கூட்டத்தினரது சார் பில், பூர் சரவணமுத்து சுவாமிகள் அனுமதியுடன் பிரபல வழக்கறிஞரும், சைவப்பெரியாருமாகிய திரு. சி. சிவசுப்பிரமணிய ஐயா அவர்களின் ஆசி யுடன், பலகாலமாக (காலஞ்சென்ற) சிவத்தொண்டர் திரு. E. M. ரெங்கநாதபிள்ளே அவர்கள் புரிந்து வந்த அன்னதானப் பணியில் இவ்வாண்டு திருவருள் இயக்கத்தினர் பங்குகொள்ள உள்ளனர். உதவி புரிய விரும்பும் அன்பர்களே திரு. ? வைத்திமா நிதி அவர்களுடன் தொடர்பு கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளுகிருேம்.
c
வருகின்ற மாசி மாதம் 2/-ந்திகதி (4.3-8/)
طعمی

Page 5
திருவருள் இதழின் வெளியீட்டு விழா
10-12-80-ல் கொழும்பு பண்டாரநாயக்கா மாவத்தை ரீ சிவசுப்பிரமணியசுவாமி கோவிலிலும், 12-12-80-ல் யாழ்ப்பாணம் நல்லூர் பூரீ ஞானசம்பந்தர் ஆதினத்திலும் நடைபெற்றன.
இரு நிகழ்ச்சிகளிலும் ஆதீனகுரு மகாசந்நிதானம் பூரீலழரீ ஸ்வாமிநாதஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தலைமை தாங்கி ஆசியுரை வழங்கினர்கள். அவர்கள் கூறியதாவது: *தானங்களிற் சிறந்தவை அன்னதானமும் ஞானதான முமாகும். இவற்றுள் ஞானதானமே மிகச்சிலாக்கியமானது. ஏனெனில் இறைவனின் திருவருள் நலத்தினை ஆய்ந்துணருந் தன்மையை ஞானமே நல்குகிறது. "
அகஇருளைப் போக்க வல்லது திருவருள். இன்று வெளி யிடப்படும் திருவருள் என்னும் சமயசஞ்சிகையும் அதே போன்று மக்களின் அகவிருளைப் போக்கவல்லதாகும்.
இன்றைய உலகில் சைவ இளைஞர் மத்தியில் இறை நம்பிக்கையையும் பக்தியையும் விழிப்புணர்ச்சியோடு பரவச் செய்வது சைவப்பெரியார்களினதும், வர்த்தகப் பெருமக் களினதும் கடமையாகும் "
建 责 ★
சிவநெறிக்காவலர் திரு. க. கனகராசா பேசுகையில் "சைவம் தழைக்க ஒரு பத்திரிகை தேவை. அப்பத்திரிகை யின் மூலம் சைவத்தின் பெருமையை உலகறியச் செய்ய வேண்டுமென நாவலர் பெருமாஞர் ஆசைப்பட்டார். அவ ரது ஆசையை ‘திருவருள்' பூர்த்தி செய்யும் என்பதில் எமக்கு எவ்வித ஐயமுமில்லை" என்ருர், (நன்றி : ஈழநாடு)
责 ★

aa 5 m
கொழும்பு விழாவில் வர்த்தகப் பிரமுகர் திரு. K. குமார சுவாமி அவர்கள் முதற்பிரதியைப் பெற்ருர், சிவஞான வாரிதி கு. குருசுவாமி, திரு. சிவராஜசிங்கம், திரு. 8. நவ ரத்தினம், திரு. நாராயணசுவாமி ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர், பெருந்திரளான வர்த்தகப் பெருமக்களும் ஆலய தர்மகர்த்தா சபையினரும் பங்குபற்றிச் சிறப்பித்தனர் திரு ஆ கந்தையா அவர்களின் உதவியால் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பெற்றது.
举 ¥.
யாழ்ப்பாண விழாவில் சிவநெறிச்செல்வர் திரு. க. கனகராசா அவர்கள் முதற்பிரதியைப் பெற்றுக் கொண்டார் பிரபல சமயப்பெரியார்களான திரு. சின்னையா, திரு. க. சி. குலரட்ணம், திரு. மு. கந்தையா, திரு. கார்த்திகேசு ஆகியோ ரும் வர்த்தகப் பிரமுகர்களும் பங்குபற்றினர் பூரீலபூரீ ஆறுமுகி நாவலர் சபை உறுப்பினருள் ஒருவராகிய திரு. க. இளைய தம்பி அவர்கள் விழா ஒழுங்குகளைச் செய்ததுடன் அன்பர் களுக்குப் பிரசாதமும் வழங்கினர்.
ר
ኑ** ܕܙܓܣܝ
வாழ்த்து திருவருள் முதல் மலரைப் படித்து மகிழ்ந்தேன். சிறந்த ஆன்மீகக் கட்டுரைகளைத் தாங்கிவரும் இந்நூல் எல்லோருடைய ஆதரவையும் அன்பையும் பெற்று மிகச் சிறந்த இதழாக இலங்கைவாழ் தமிழர்களின் உள்ளத் தைக் கவர இறைவனை வணங்துகிறேன்.
நலம் நல்க இறைவனேப் பிரார்த்தித்து 3 சின்மயா மிஷன், தங்கள் சேவையில், கொழும்பு - 7. (பிரம்மச்சாரி) வியக்த சைதன்யா
திருவருள் இதழுக்கு நன்கொடையாக ரூபா 15/- க்குக் குறையா மல் அனுப்பி உதவும் அன்பர்களுக்கு : * திருவருள் இதழ்கள் ஓராண்டுக்கு அனுப்பிவைக்கப்பெறும். * இயக்க இலவச வெளியீடுகள் தவருது கிடைக்க ஒழுங்கு
கள் செய்யப்படும், * மற்றும் எமது பிரசுரங்கள் மலிவு விலைகளில் விற்பனை
செய்யப்படும்.
தி - 2

Page 6
சிவன்"ராத்திரி
ஆங்கில மூலம் : சுவாமி சின்மயானந்தர் தமிழாக்கம் ; பிரம்மச்சாரி வியக்தசைதன்யா
f seo sea,
சத்தியம் என்றைக்கும், எல்லோருக்கும் புதுமையானது! அளவில் பெரியதாலும், தன் ஸ்வரூபத்தில் ஒன்ருயும் இருக்கும் சிவம் மனித மனம் வளர, வளர என்றைக்கும் புதியதாகவே தோன்றுகிறது! இதனுல் நம் சான்றேர்கள் 'சிவனைக் கண்ட வர் விண்டதில்லை, விண்டவர் கண்டதில்லை என்பர் 1 இதற்கு மாறக, ஜட ரூபமான இந்த உலகும், அதில் தோன்றும் சம்பவங்களும் வரலாற்றிற்கு கருப்பொருளாகின்றன. அதனுல் வரலாறு என்பது என்றைக்கும் பழமையான தாக அல்லது கடந்த காலத்தைச் சார்ந்ததாகத்தான் இருக் கிறது! இருக்கவேண்டும். இப் படிப்பட்ட வரலாற்றுச் சம் பவங்களைத் துணையாகக்கொண்டு என்றென்றும் புதுமை யாகத் தோன்றக் கூடிய சிவத்தை உணர்த்துவது சிவபுரா ணம் எனப்படும்! புராணம் என்ற சொல்லுக்கு பழமையும், புதுமையும் கூடியது என்று பொருள் ! இப்புராணங் களுக்கு கர்த்தாவான வியாசருக்கு புராணமுனி என்று ஒரு பெயரும் உண்டு. இப்புராணங்கள் அழகிய போதனு முறைகளைத் தன்னகத்தே கொண்டவை. ஜடத்திற்கு அப் பாற்பட்ட சத்தியத்தை - ஜடத்தின் நிகழ்வுகளைக்கொண்டு உணர்த்தும் ஒரு உயர்ந்த முயற்சி. இம்முயற்சிகள் ஞான ரூபமாகவும், கிரியா ரூபமாகவும் உணர்த்தப்பட்டுள்ளன! விரதங்கள் கிரியாரூப முயற்சிகளில் அடங்கும்! சிவன் ராத் திரி விரதம் ஒரு பெரும் உண்மையை உணர்ந்து கொள் வதற்காக வியாசரால் நமக்கு அருளப்பட்டுள்ளது. இதன் உண்மையறிந்து இவ்விரதத்தைக் கடைப்பிடிப்போமாயின், சிவ உணர்வு நம் உள்ளத்தில் தோன்றுவது திண்ணம்.
 
 
 
 
 
 

7 s
இருளை மட்டும் கொண்ட காலத்தை இராத்திரி என்கி ருேம்! இருளிற்கு ஒரு விசித்ர தன்மை உண்டு. எந்தப் பொருளையும் அழிக்காமல், அதை மறைத்து பொருளே இல்லாதது போல் தோன்றச் செய்வது இருளின் தன்மை ! இருள் என்பது ஒரு தனிப்பொருளல்ல! அது தனியாய் இருப்பது போல் தோன்றும் ஆனல் அது தனித்து நிற்க முடியாது! ஏதேனும் ஒன்றைச் சார்ந்தே இருக்க வேண் டும்! உதாரணமாக நம் வீட்டில் உள்ள ஒரு அறையில் புகுந்து, அந்த அறையையே தனக்கு இருப்பிடமாகக் கொண்டு, அதே நேரத்தில் எதைச் சார்ந்திருக்கிறதோ அந்த அறையையும் அதில் உள்ள பொருட்களையும் மறைக் கும் விசித்ர வல்லமை கொண்டது இருள்! ஆனல் எவ்வளவு காலம் இந்த இருள் அறையில் குடிகொண்டிருந்தாலும் ஒளி தோன்றிய உடனேயே, அந்த அறையை விட்டு விலகி விடும்! அறையும் அதில் உள்ள பொருட்களும் நம் புலன் களுக்கு எளிதில் புலணுகும்!
'சிவம்" என்ற சொல்லுக்கு 'அழியாதது" என்று பொருள்! எது அழிவதில்லையோ அதில் அச்சத்திற்கு உண் டான காரணமில்லை. சுருக்கமாக சிவம் இருக்கும் இடத்தில் பயமில்லை. இதனுல் சிவனை நம்பின பெரியோர் நாமார்க்கும் குடியல்லோம் என் பர்! ஒவ்வொரு மனித மனமும் அச்ச மில்லாமல் வாழ விரும்புகிறது. மாற்றிச் சொன்னுல் எல்லா மனங்களும் சிவனுக்கு அடிமை சிவனை விரும்புகின் றன! சிவன் எங்கிருக்கிருன்! நம் உள்ளத்தில் மெய்யறிவு வடிவாய், ஒன்ருய் இருக்கிருன்! இருந்தும் ஏன் நாம் பார்க்க வில்லை! சிவனிருந்தும் நம்மனதில் அச்சமா? ஆம் - இருப் பதை மறைக்கும் இருளும் நம்முள் உண்டு. அந்த இருளை நீக்கி ஒளியைக்காணும் விரதம் " சிவன் ராத்திரி’ விரதம்! கடைப் பிடிப்போம்! அவன் கழல் பற்றுவோம்!! ()
தவத்திரு சுவாமி சின்மயானந்தா அவர்கள் இவ்வாண்டு மே மாதம் 9-ம் நாள் தொடக்கம் 19-ம் நாள் வரை இலங்கையில் இருப்பார்கள். அப்பொழுது கீதா யக்ஞச் சொற்பொழிவுகளும் ( கீதுை : 3-ம் அத்தியாயம் ) * ஆத்ம போதம் " என்ற நூல் பற்றியும் விளக்குவார்கள்.
இலங்கை சின்மயா மிஷன் 7, இராணி வீதி, கொழும்பு - 7

Page 7
வேண்டுவார் வேண்டுவதை ஈயும் பிரான்!
SAASAASSLLAASAASAASAASALASLLALASASASALSqeqSqAqAAS
米 சென்ற ஆண்டு எனது வாழ்வில் ஓர் அற்புத நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை நினைக்குந் தோறும் எனது உள்ளம் புளகாங்கிதம் அடைவதுடன், உடம்பும் புல்லரிக்கின்றது.
எனது வீட்டிற்கு அருகிலுள்ள ஆலயத்தில் பூசை, திரு விழாக்களில் ஒன்றை நமது பெயரில் செய்யப்பெறுவது பெரும் பாக்கியமாகும். ஏனெனில் இங்குள்ள அன்பர்கள் "நான்முந்தி நீழுந்தி' என்று அவற்றைப் பதிவு செய்து கொள்வார்கள். விசேஷ நாட்கள் என்ருல் கேட்கவும் வேண் (Buon ?
எப்படியோ தெரியவில்லை, திருவெம்பாவை பத்து நாட்களில் ஒரு நாள் உற்சவ நிகழ்ச்சி எனது பெயருக்குப் பதிவு ஆகியது. இஃது இறைவன் திருவருளே என்றல் மிகையாகாது.
ஒரு புறம் மகிழ்ச்சிதான் என்ருலும், எனது சிந்தனை யாவும் சிறிது காலத்துக்கு முன் சிவபதம் அடைந்த எனது தந்தையைப்பற்றிச் சென்றன. அவர் இருக்கும்பொழுது பூசையைப் பெறும் பாக்கியம் கிட்டவில்லை. அப்பேறு பெற்ற நேரத்தில் அவர் இல்லை. அவர் இருந்திருந்தால் திருவெம் பாவைப் பாக்களைத் தமது கணிரென்ற தெளிவான குரலில் ஒசை நயத்துடனும் பக்திப் பெருக்குடனும் பாடி யிருப்பாரே! இப்பொழுது வழக்கமாகக் கோவிலில் பாடும் அன்பரைத்தானே பாடச்செய்ய வேண்டும்! இவ்வெண்ணம் எனக்குக் குறிக்கப் பெற்றிருந்த பூசைநாளில் முதல் நாளி ரவே எனது மனதை உறுத்திக் குழப்பிக் கொண்டிருந்தது.
அதிகாலையில் வெளித்தோற்றத்தில் ஒரளவு உற்சாகத் துடன் கோவிலுக்குச் சென்றேன். ஆரம்ப பூசைகளைச் செய்த அர்ச்சகர் " திருவெம்பாவை " பாடப்பெறும் என் பதைக்கூறி நின்ருர்,

- است 9 هست.
என்ன ஆச்சரியம்! எனது தந்தையைப் போன்ற உருவ அமைப்புள்ள ஓர் அன்பர் அங்கு வந்து பாடத் தொடங்கினர். எனது அப்பா வைப் போன்ற மெல்லிய நடுத்தர வயது கடந்த தோற்றம், தீட்சை பெற்றேர் இடும் பட்டை பட்டையான திருநீற்றுக் குறிகள், சற்று வழுக் கையான முன்தலை, பின்பக்கம் இருந்த சிறிது முடியுடன் அமைக்கப் பெற்ற ஒரு சிறு குடுமி, அவரது குரலும் எனது தந்தையின் குரலொப்பவே இருந்தது. என் கண்களை என்னுல் நம்ப முடியவில்லை. எனது பக்திப் பரவசத்திற்கும் அளவேயில்லை. எனது தந்தையே திருவெம்பாவைப் பாடல் களைப் பாடுகிருர் என்ற நினைப்பில் என்னை மறந்த நிலையில் இருந்தேன்.
அன்று திருவெம்பாவைப் பாடல்களைப் பாடிய அன்பர் வெளியூரிலிருந்து முதல்நாள் வந்ததாகக் கூறிஞர்கள், வழ மையாகப் பாடுபவருக்கு உடல் நலமில்லையாதலால் இவ ரைப் பாடும்படி கேட்டுக் கொண்டார்களாம். அவரும் நிலை மையை அறிந்து சம்மதித்தாராம்.
ஆனல் புதுஅன்பர் அன்று மட்டுந்தான் பாடினுர். அதனை அடுத்த திருவெம்பாவை நிகழ்ச்சிகளில் வழமையான கோவில் அன்பரே பாடினுர், என் தந்தையை ஒத்த அன் பரை அதற்குப்பிறகு நான் பார்க்கவும் இல்லை.
எனது உள்ளக்கிடக்கையை அறிந்து எனக்கு மன அமைதியைக் கொடுக்கும் வண்ணம் அருள் சுரந்த ஐயனின் திருவருள் இருந்தவாறு என்னே இத்ணுலன் ருே இறைவனை வேண்டுவார் வேண்டுவதை ஈயும் பிரான் என்று பக்தர்கள் கூறுகிருர்கள்.
= ஆர்வி, கொழும்பு.

Page 8
jaI2)r வணங்குவோம்
சிவஞானவாரிதி, சைவசித்தாந்த காவலர், குமாரசுவாமி குருசுவாமி
இந்த உலகம் சிவன் இருக்கும் உலகம் என வலியுறுத் திக் கூறுவது திருவாதவூரடிகள் புராணம். சிவனை வழிபடு வோர் தமிழர் என அறுதியிட்டு உரைப்பது மொகஞ்ச தாரோ ஹரப்பா நாகரிககாலம். அதாவது கி. மு. 5000 ஆண்டுகட்கு முற்பட்ட நாட்களிலே சிவபெருமானல் அரு ளிச் செய்யப்பட்ட சிறப்பினை உடையது சிவாகமநால்கள், அவை 28. அவையாவன,
1. காமிகம்
2. யோகஜம் ஐந்து ஆகமங்களும் கெளசிக 3. சிந்தியம் முனிவருக்கு உபதேசிக்கப் 4. காரணம் பெற்றன. - 5. அசிதம்
6. தீப்தம் 7. சூக்குமம் ஐந்து ஆகமங்களும் காசிப 8. சகச்சிரம் முனிவருக்கு உபதேசிக்கப் 9. அஞ்சுமான் பெற்றன.
19. சுப்பிரபேதம்
11. விசயம்
12. நிசுவாசம் ஐந்து ஆகமங்களும் பரத்து 13 சுவாயம்புவம் வாச முனிவருக்கு உபதேசிக் 14. ஆக்கினேயம் கப் பெற்றன.
13. வூரம்
 
 
 
 

سے 11 سے ہے
16. இரெளரவம்
O
7. மகுடம் ஐந்து ஆகமங்களும் கௌதம 18. விமலம் - முனிவருக்கு உபதேசிக்கப் 19. சந்திரஞானம் பெற்றன. 20. முகவிம்பம்
21. புரோற்கீதம் 22. இலளிதம் - 23. சித்தம் எட்டு ஆகமங்களும் அகத் திய முனிவருக்கு உபதேசிக்
சாவோாததம o ற் mன. 26. பாரமேசுவரம் கப் பெற்றன 27. கிரணம் 28. வாதுளம், J
இச்சிவாகமங்கள் சிவபெருமானல் அருளிச்செய்யப் பெற்ற சிறப்பினை உடையன, ஆன்மாக்கள் அறவாழ்வை மேற்கொண்டு உலகியல் இன்பங்களை அனுபவித்து அவை யாவும் சிற்றின்பம் என அனுபவ வாயிலாகக் கண்டு ணர்ந்து மேலான பேரின் பத்தை நாடி மனத்தூய்மை பெற் றுப் பிறவிப் பிணியிலிருந்து விடுதலை அடையும் நெறியினை எடுத்துக்கூறுவன சிவாகமங்கள். இச்சிவாகமங்கள் சித் தாந்தம் எனவும் அழைக்கப் பெறுவன. சிவாகமங்கள் ஒவ் வொன்றும் தனித்தனியே சரியை, கிரியை, யோகம்,ஞானம் என நான்கு பாதங்களாக வகுக்கப்படும். நாம் எமது வாழ்விலே என்றும் இன்பமாக வாழ்வதற்கு ஏற்ற வழியை வகுத்துத்தருவன. சிவாகம நூல்களிலே கூறப்பட்ட உண் மைகளை நன்ருக அறிந்து கொள் ன வேண்டும் என்னும் ஆர்வம் நாளடைவிலே குறையத்தொடங்கி விட்டது. கார ணம் சிவாகமங்களின் ஞானகாண்டம் முப்பொருளின் உண்மையை வலியுறுத்தியமையாகும். முப்பொருளின் உண் மையிலே சிவன், ஆன்மா, பாசம் மூன்றினையும் தெளிவாக விளங்கப்படுத்தப்பட்டிருப்பதை நாங்கள் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. சிவனும், ஆன்மாவும், பாசமும் என்றும் அழியாத தன்மையின என்று எடுத்துக் காட்டப்

Page 9
பட்டுள்ளன. ஒன்று மற்ருெண்ருக மாறுவதில்லை. ஒன்றி இனஅ அனுபவத்தை மற்றது பெறுவதில்லை. ஐம்புல வழக் கின் அருஞ்சுவை அறியாச் செம்பொருட் செல்வனுகவே சிவன் இருக்கின்றன். அவன் விருப்பு வெறுப்பு அற்றவன். இயல்பாகவே அவன் பாசங்களிலிருந்து நீங்கியவன். அவ னைப்பாசம் பற்றுவதில்லை ஆனல் ஆன்மா இயல்பாகவே பாசத்துடன் பற்றியது. பாசம் செழிம்பு போல்வது. ஆன்மா செம்பு போல்வது, செம்பிலே செழிம்பு நீங்காதிருப்பது போல ஆன்மாவிடத்திலே ஆணவமலம் நீங்காதிருப்பது; மலசம்பந்தமான ஆன்மா மலரகிதராகிய சிவனுவதில்லை என்னும் உண்மையினை வலியுறுத்திக் கூறுவன சிவாகம நூல்கள். அனுதியாகவே நித்தியமாயுள்ள முப்பொருள் உண்மையினை எடுத்துக் கூறிய சிவசகம நூல்கள் ஆன்மா சிவனுவதில்லை எனத் தெளிவுபடுத்தியதுடன் அமையாது ஆன்மா பிறவி எடுப்பது, அனுபவிக்கும் இன்பதுன்பநிலை முத்தியின் பமாகிய பிறவிப் பெருங்கடலிலிருந்து கரை ஏறும் வழியாவற்றையும் மிக இலகுவான முறையிலே எமது நல் லறிவு வளர்ச்சிக்காகவே எடுத்துக் கூறுகின்றன.
நரம் எப்படிப் பிறக்கிருேம் என்பதிலே பலவித மான கருத்துக்களும் பலராலும் தெரிவிக்கப்படுகின்றன. இறைவன் என்னை இப்படியாகப் பிறக்கும்படி செய்தான், என்று ஒரு சிலர் தம்மை இறைவன் படைத்தான் என்று கூறிக் கொள்ளுவர். தமக்கு ஏதாவது துன்பம் நேர்ந்த தென்றவுடனே இறைவன் இப்படியாக என்னை வருத்துகின் ருனே என்று இறைவனையே நொந்து கொள்கின்றனர் வேறு சிலர் இறைவனையே திட்டுகின்றனர். தம்மை வேதனை அடையும்படி விட்ட சிவன் உயிருடன் இருக்கிருணு என்றே கேட்கத் துணிந்து விடுகின்றனர். ஒளவையாரே கேட்டு விட்டாரே 'இட்டமுடன் என்தலையில் இன்னபடி என்றெழுதி விட்ட சிவனுமென் செத்துவிட்டானே? " என்று தமது முதற் பாட்டிலேயே கேட்டு அதற்குவிடை கூறுவது போல. * முட்ட முட்டப்பாரம் அவனுக்கன்னுய் - நெஞ்சமே அஞ் சாதேநீ" எனத் தாய்க்கு ஆறுதல் கூறியதான செய்தி

جیسے 3 1 ----- (بم
எமக்குத் தெரிந்ததே. இந்தச்செய்தியில் சைவசித்தாந்த உண்மைக்குப் புறம்பான செய்தி தெரிவிக்கப்பட்டிருப்பதை நாம் அவதானிக்கலாம். " இட்டமுடன் எழுதினுன் என்று கூறும்போதே இறைவன் விருப்பு வெறுப்பு உள்ளவன் ஆகிறன். பற்றுடையவன் என்ருல் அவனுக்கும் மனிதனுக் கும் வித்தியாசம் இல்லை என்று கூறுகின்ற ஏகாத்மவாதம் புகுந்து விடுகிறது. உண்மையிலே ஏகாத்ம வாதம் வைணவத் அ-அம் மகாப்ாரதத்துடனும் தோன்றிய விதண்டாவாதக் கொள்கையாகும். இந்த ஏகாத்மவாதக் கொள்கை பிழை "அ என்று காலத்தால் மகாபாரதத்திற்கு முற்பட்ட தொன்மையான சைவசித்தாந்தம் வலியுறுத்திக் கூறுகிறது. விஷ்ணுவும் பிரமாவும் அடிமுடி முறையே தேடிக் காணுெ ணுதவன் சிவன் என்ற கருத்துத் தெரிவிக்கும் போதே சைவ சித்தாந்தம் ஏகாத்மவாதத்தை முற்ருகக் கண்டிக்கிறது. ஜீவாத்மா பரமாத்மா ஆகிறது என்ற கருத்தைக் கூறு வது ஏக ஆத்ம வாதம், இதனுல் உலகிலே நாத்திகவாதம் தோன்றிப் பரவலாயிற்று. நீ அதுவாகிருய் என்னும் போது நீயே அது. ஆதலினல் அது என்று ஒன்று இல்லை, எனக் கூறுவது நாத்திகம், மாணிக்கவாசகசுவாமிகள் ஆத்தமானுர் அயலவர் கூடி நாத்திகம் பேசி நாத்தழும் பேறினர் என்று குறிப்பிடுவது ஏகாத்மவாதத்தின் விளைவே என்பதை அறியலாம்.
“என்று நீ அன்று நான் உன்னடிமையல்லவோ" என மணிவாசகசுவாமிகள் கேட்டு சைவசித்தாந்த முப்பொருள் உண்மை விளக்கத்தைச் சுருக்கமாகக் கூறி விடுகிருர், இறைவன், ஆன்மா இரண்டும் நித்தியம் என்பதையும் , ஒன்று மற்ருென்ருவதில்லை என்பதையும், ஆன்மா இறைவனது திருவருளிலே தங்கியிருக்கிறது என்பதையும் திருவாசகம் சந்தேகவிபரீதமின்றித் தெளிவு படுத்துகின் றது.
தி - 4

Page 10
--س......... | 4ھ | 1 --
* திருவருள் ' என்ருல் என்ன என்று மாணிக்கவாசக சுவாமிகள் விளக்கம் கூறுகின்றர். ' உணர்ந்தார்க்குணர் வரியன் தில்லைச்சிற்றம்பலத்தான் குணந்தான் வெளிப்பட்ட தோர் கொவ்வைச் செவ்வாய் இக்கொடியிடை" எனப் பொன்னம்பலத்திலே அனவரதமும் ஆனந்தத்தாண்டவம் செய்து ஆன்மாக்களுக்கு முத்தியின்பம் கொடுக்கும் நட ராஜப் பெருமானது அருகே வீற்றிருக்கும் சிவகாமசுந்தரி யம்பாளை வருணிக்கும்போது, உலகனைத்திலும் உள்ள ஆன் மகோடிகளைப் பெருது பெற்றும் என்றும் கன்னியாகத் திகழும் அம்மையார் என்றல் அவளே உலகமுதல்வராய், ஒன்றாய், உடனுய், வேருய் அனைத் துலகையும் இயக்கி நின்று கருணை பாலித்தருளும் நடராஜப் பெருமானது குணமே பெண் உரு வாக வெளிப்பட்டு அவன் அருகே நின்று அவனது அருளா டலை ஆமோதித்துக் கொண்டிருக்கும் அருட்சத்தி என்று குறிப்பிட்டுக் காட்டுகின்றர்,
அந்தத் திருவருளைப் பெறுவதற்குச் சிவனை வணங்க வேண்டும். சிவனை வணங்கித் திருவருளைப் பெறுவதற்கு எவருமே காட்டுக்குப் போகவேண்டியதில்லை. கடமைகளை, பொறுப்புகளைக் கைவிட வேண்டியதில்லை. யாரையுமே பகைக்க வேண்டியதில்லை எவரையுமே வெறுக்க வேண்டியதில்லை. திருவருளைப் பெறுவதற்கு முதல் வேண்டியது மனத்தூய் மையே எனத் திருவள்ளுவப் பெருந்தகையார் குறிப்பிட்டுள் ளார். மனத்தூய்மை பெறுவதற்கு ஆணவ வலி கெடுதல் வேண்டும். ஆணவ வலி கெட மனதைப் பக்குவப்படுத்துதல் வேண்டும். மனப்பக்குவம் அடைவதற்கு நான்கு வழிகள் சைவ மார்க்கங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றுள் முதலா வதாகச் சொல்லப்பட்டது சரியை நெறியாகும். சரியை நெறி யில் நிற்பவர்கள் வாழ்க்கையில் தமது கடமைகள் யாவற்றை யும் செய்துகொண்டு இறைவழிபாட்டிலும் ஈடுபடக் கூடியதாக அமைந்திருப்பதை யாவரும் அவதானிக்கலாம். அப்பரடிகள் சரியைத் கொண்டுபற்றி ஒரு தேவாரத்திலே அழகாக எமக்கு எடுத்துக் காட்டியிருக்கின்றர். " நிலைபெறுமா றெண்ணுதி யேல் நெஞ்சே நீவா நித்தலும் எம்பிரானுடைய கோயில்
 

ܚܗ 5 1 ܝܼܚܣ
புக்கு புலர்வதன் முன் அலகிட்டு மெழுக்குமீட்டுப் பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பரடித் தலையாரக் கும் பிட்டுக் கூத்துமாடிச் சங்கரா சய போற்றி போற்றி ' என்றும் "அலைபுனல்சேர் செஞ்சடையெம் ஆதீ” யென்றும் “ஆரூரா என்றென்றே அலரு நில்லே" என்றும் தேவாரத்திலே ஆலயத்திற்குச் செல்லுதல், ஆலயத்தைச் சுத்தம் செய் தல், மெழுகிடல், அலகிடல், நந்தவனம் அமைத்தல், மலர்கள் பறித்தல், மாலை கட்டிக் கொடுத்தல், ஆண்டவ னுடைய புகழ் பாடுதல், வணங்குதல், இறைவனது பெயர் களைச் சொல்லித் துதித்தல், பல அற்புதங்களைச் செய்வதற்கு உதவிய இறைவன் திருவருளுக்கு அடிமையாயிருந்த அடிய வர்களான நாயன்மார்கள் எமக்காகப் பாடியருளிய தேவாரத் திருப்பதிகங்களை அன்போடு ஆலயத்தில் கூட்டுப் பிரார்த் தனை செய்து பாடுதல், ஆடுதல், பரவசமாக நிற்றல் இவை எல்லாம் சரியைத் தொண்டாக அமையும். யாவராலும் இலகு வில் செய்து கொள்ளக்கூடியது, சரியைத் தொண்டு செய்வ தற்கு மனம் மட்டுமே வேண்டும். ஆலயத்திற்குப் போகவும் இறைவன் பெயர் பாடவும், தேவஸ்தானத்திலே வழிபாடு செய்யவும், கூட்டுப் பிரார்த்தனையிலே பங்கு பற்றவும் எமக்கு மன விருப்பம் இருத்தல் வேண்டும், மனம் உண்டேல் இடம் உண்டு. அறம் செய் என்று கூறுவதற்குப் பதிலாக ஒளவைப் பிராட்டியார், "அறம் செய்ய விரும்பு' என்று மட் டுமே கூறினர். அறம் செய்ய விரும்பினுல் தானுகவே அறம் செயற்பட்டுவிடும் என்னும் உண்மையைத் தெளிவுபடுத்தும் விதமாக விருப்பத்தைக் கூறி விரும்பினுல் செயல் தானுக நிகழும் என்பதை உய்த்துணர வைத்த பெருமை ஒளவை Lju FT (5 @LULU g5!
ஆலயத்திற்குப் போக விரும்புவது ஒன்றுதான் எமக்கு முதலில் தேவையானது. விருப்பம் வந்து விட்டால் ஏனை யவை தானுகவே நிகழ்வனவாம். அருணகிரிநாதர் முருகனை வணங்கி இகபரசெளபாக்கியம் அருள்வாயே எனக் கேட் கிருர், இந்த உலகத்தில் வாழும் காலத்திலே மேலான சுக மும், உலக வாழ்வு முடிந்தபின் முக்தியின்பமும் கிடைக்க

Page 11
வேண்டும் எனக்கேட்கும் நிலை எமக்கு மிகவும் பொருத்த மானதாகும்.
எமது பிறவி எப்படி அமைகிறது என்று எம்மை நாமே கேட்டுத் தெளிவு பெறுதல் அவசியம். எமது செயல்களே எமது பிறவிக்குக் காரணம். நற்செயல்களால் நற்பயனும் அதன் விளைவால் நற்பிறவியும் எமக்குக் கிடைக்கும். இவ் விதமாக எமது பிறவிக்கு ஏதுவாக அமைவது நாமே செய்து கொண்ட பிராரப்த கர்மவினை. பிராரப்த கர்மவினை என ஒன்று அமைந்து எமக்கு தாய் தந்தை, கருவி, கரணங்கள், அனுபவிக்கும் சுகதுக்கb ஆகிய அனைத்தையும் எமக்கு ஏற் படுத்திக் கொடுக்கின்றதை நாம் அறியாத காரணத்தினுலே நாம் கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என வாழ முயல்கிருேம். மற்றவர்களை ஏமாற்றிப் பிழைப்பதை எமது சாமர்த்தியமாக நாம் கருதி விடுகிருேம். இதனுலேயே உல கத்திலே கொலே, களவு, விபசாரம், பொய் முதலான தீய செயல்கள் நிகழ்கின்றன. இதனைக் கண்டிக்கும் வகையிலே திருவள்ளுவர் " தன்னெஞ்சறிவது பொய்யற்க, பொய்த்த பின் தன்னெஞ்சே தன்னைச் சுடும் ' என அறிவுரை கூறு கின்ருர்,
எமது பிறவிக்கு நாமே காரணமாகிருேம். ' தினை விதைத்தவன் தினை அறுப்பான் " என்ற முதுமொழியும் இதே கருத்தினை எடுத்துக் கூறுவதை நாம் காணலாம். இறைவன் எமக்கு அருள் பொழிவதற்குக் காத்திருக்கிருன் , எமக்கு நன் மைசெய்யக் காத்திருக்கும் இறைவனைச் சரி யாக உணர்ந்து கொள்ளாது அந்த இறைவனையே குறை சொல்லித் திட்டி எமது தீயவினைப்பயனகத் துக்கம் அனு பவிக்கும்போது யாரோ எமக்குத் துன்பத்தைச் செய்கிறர்கள் எனத் தவருகக் கற்பித்து அதிலே ஒரு நிம்மதி பெறுவ திலே திருப்தி அடைந்து விடுகிருேம்.
* தீதும் நன்றும் பிறர்தர வாரா " என்னும் புறநானூற் றுப் பாடலைச் சிறிது கருத்தூன்றிக் கவனித்தால் எமக்கு உண்மை கெற்றெனப் புலப்படும். எமக்கு உரிய நன்மை, தீமை இரண்டையும் நாமே தேடிக்கொள்கிருேம், என்றும்

-- Il 7 aus
சுகத்தை அனுபவிக்கவே எவரும் விரும்புவர். எனினும் பிறருக்குத் தீமை விளைவிக்கும் செயல்களைச் செய்து அதில் தனியான சுகத்தை அனுபவிப்பதாக எண்ணிக் கொள்ளும் போது "பிறர்க்கின்னு முற்பகல் செய்யின் தமக்கின்னு, பிற் பகல் தாமே வரும் ” என்னும் வள்ளுவனுரது வாக்கினை மனதிலே நிறுத்தினுல் யாருக்குமே தீங்கு செய்ய மனதினு லும் நினைக்காத தூய உள்ளத்தை வளர்த்துக் கொள்ள வேண்டியதின் அவசியத்தை நன்கு தெரிந்தவர்களாவோம். * எல்லோரும் இ ன் புற் றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேருென்றறியேன் பராபரமே " என்ற தாயுமானுர் பாடல் எமது சிந்தனைக்கு நல்விருந்து.
மனம் தூய்மை பெறுதற்கு மனம் எதையாவது தியா னித்தல் அவசியம். அப்படித் தியானிப்பதற்கு மிக உகந் தது என்றும் இன்ப வடிவினனுக ஆன்மாக்களுக்கு என் றும் முத்தியின் பத்தை வழங்கக் காத்திருப்பவனுகிய சிவன் கழலே என அறிந்து கொண்டால், அவன் கழல் வணங்கும் நெறியில் நாம் ஒழுகுதலே பிறவிப் பெரும் பயன் என நாம் அறிந்து கொள்வோம். சரியைத்தொண்டு அதனையே எடுத்து விளக்கிக் கூறுகின்றது. இல்வாழ்க்கையில் ஈடு பட்டு உலகியல் கடமைகள் அனைத்தையும் எவ்வித குறை பாடுகளுமின்றி நிறைவாகச் செய்து கொண்டு சிவன் கழலே சிந்திக்கும் சிவநெறிச்சீலராக வாழ் முயலுதலே எம்மை மேலான தவநெறியில் உய்த்துவிடும். இந்தச் சிறந்த வழி யைச் சிவபெருமானே திருவாதவூரடிகளுக்குக் குருவடிவாக எழுந்தருளிவந்து திருப்பெருந்துறையிலே குருந்தமர நிழ லின்கீழ் இருந்து உபதேசம் செய்யும் போது விரிவாக எடுத்து உரைக்கினருர்,
ஆவ லாலெமக் காமலர் மரங்க
ளாக்கலக்மலர் பறித்தலம் மலராற் ருவி லா வகை தார் பல சமைத்த
றணப்பி லெம்புகழ் சாற்றலன்புடனு மேவு மாலய மலகிடன் மெழுகல்
விளங்க நல்விளக் கிடுதலெம்மடியார்க் கேவ லானவை செய்தலிச் சரியை
யியற்ற வல்லவர்க் கெம்மூலகளிப்போம்.

Page 12
-- & 1 || سحس۔
பூந்தோட்டம் அமைத்தல், பூ எடுத்தல், மாலை தொடுத் தல், சிவன் கழல் துதித்தல், ஆலயத்திற்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தல், அலகிடல், மெழுகுதல், விளக்கு ஏற்றல், இவற்றுடன் சிவனடியார்களுக்கு வேண்டிய தொண்டு செய் தல் ஆகியன சரியை நெறியில் அடங்கும். இச்சரியைத் தொண்டு செய்வோருக்கு சரலோகவாழ்வு கிடைக்கும் என இறைவனே அருளிச் செய்வாராயினர்.
இறைவனை வழிபாடு செய்வதற்கு அதற்கென வமைந்த ஒரு நேரத்தைக் குறிப்பிட்டு அதன்படி வழிபாடியற்றுதல் சிறந்தது. ஆயினும், ஆண்டவனை வழிபடுவதற்கு ஒரு நேரத்தை வகுத்து ஒதுக்க முடியாதவர்களது நிலையினையும் கருத்திற்கொண்டு சிவஞான சித்தியார் என்னும் நூலிலே “நின் றும், இருந்தும், கிடந்தும், நடந்தும் என்றும் சிவன் தாள் நினை' யெனக் குறிப்பிடப்பட்டிருப்பதும், அபிராமிப்பட்டர் அபி ராமி அந்தாதியிலே
' நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும்நினைப்பதுன்னை
என்றும் வணங்குவ துன் மலர்த்தாள் எழுதாமறையின் ஒன்றும் தரும்பொருளே யருளே உமையேயிமையத் தன்றும் பிறந்தவளே அழியா முத்தி ஆனந்தமே ” எனவும் கூறியிருப்பது எம்மை நல்வழிப்படுத்துவதற்கே.
சரியைத் தொண்டிலே முதலாவதாக விளங்குவது ஆல யத்திற்குச் சென்று இறைவழிபாடியற்றுதலே. சிவஞான போதம் 12-ம் சூத்திரத்திலே இக்கருத்து மேலும் தெளிவு படுத்தப்படுகிறது.
" செம்மலர் நோன் ருள் சேர லொட்டா அம்மலங் கழிஇ அன்பரொடு மரீஇ மாலற நேய மலிந்தவர் வேடமும் ஆலயந் தானு மரனேனத் தொழுமே "
எனக்கூறுவதனுலேயே, ஆன்மா மலசம்பந்தமுடையது. ஆதலினலே பசு என அழைக்கப்படுகிறது. இறைவனது பாதாரவிந்தங்களைச் சேரவிடாது தடுத்து ஆன்மாவைப்

سے 19 سے
பிறவி ஆக ஆற்றிலே உழல விடுவது ஆணவமலம், அந்த மலத்தின் தீநெறிப்பட்டு வாழ்வை அவமாக்காது தவநெறிப் பட்டு இறைவனது கழலிணைகளைப் பற்றி நிற்கும் அன்பர் களது கூட்டத்திலே சேர்ந்து கண்கள் இரண்டும் அவன் கழல் கண்டு களிப்பன ஆகி என்றும் நினைத்தொறும், காண் தொறும், பேசுந்தொறும் எப்போதும், அனைத்திலும் ஆன ந் த த் தே ன் சொரியும் குனிப்புடையான் கழல் இறைஞ்சி உலகியல் மயக்கம் பொருந்தி அதிலேயே கிடந்து அழுந்தும் நிலை நீங்கிய சிவன் கழல் சிந்திக்கும் சீர் மையுடைய அன்பர்களது தவவேடப்பொலிவினைக் கண்டு சிவனடியார்களை, விபூதி, உருத்திராக்கம் முதலிய சிவசின் னங்களைத் தாங்கியிருக்கின்றவர்களைக் கண்டு, சிவனுகவே அவர்களை வணங்கி, உபசரித்து, அன்பு பூண்டு மெய்நெறி நிற்கும் அடியவர்களையும், சிவாலயங்களையும் சிவனுகவே வழிபடுதல் சரியை நெறியின் தன்மைகளாகும்.
இவ்விதமாகச் சரியை நெறி நின்று வழிபடுபவர்கள் ஆணவமல இருளை நீக்கியவர்களாவர். உருப்பெலாதவர், இழி குலத்தவர், நல்ஒழுக்கம் இல்லவர் என்றும், நம் அளவில் விருப்பிலாதவர் எனினும், மெய்நீறு மிக்கசாதன வேடமுங் கண்டால் தரிப்பிலாது சென்று எதிருற வணங்கித் தக்க பே ஈ ன க ம் அளித்து, அவர்க்கெளிதாய் இருப்பர் தாம் அவர் அடியவர்க்கடியர் என்பர். யான் என தெனுஞ் செருக் கறுப்பர். ( திருவாதவூரடிகள் புராணம்) என இறை வனே திருவாதவூரருக்குக்கூறியதிலிருந்து, சரியைவழிநின்று இறைவனை ஆலயங்களிலே வழிபடுவதும், சிவனடியார்களை யும், சிவசின்னங்களாய விபூதி, உருத்திராக்கம் முதலியன தரித்த அடியவர்களேயும் கண்டால், அவர்களையும் சிவன் எனவே வழிபாடு செய்வதும், அவர்களுக்கு உணவு முத லான உபசரணைகள் செய்வதும் சரியைத்தொண்டின் கீழ் அமையும். அவ்விதமாகச் சரியைவழி நிற்பவர்கள் ஆணவ மலத்தின் வலிகெடுத்தவராவர். ஆணவமல வலிகெட்ட நிலை முத்திநிஆலயாகும். முத்திநிலை எய்தியவர்கள் மீண்டும் மாதா

Page 13
as 2.0 -
உதரத்திலே புகுந்து பிறவி எடுப்பதில்லை. இதனையே திரு வருட்பயன் என்னும் நூலிலே உமாபதிசிவா சாரியார் அரு ளது நிலையில்
தன்னிலைமை மன்னுயிர்கள் சாரத்தரும் சத்தி
பின்னமிலான் எங்கள் பிரான் '
என எடுத்து ஒதினர். இறைவனது நிலை பிறப்பு இறப்பு அற்ற நிலை. ஆன்மாக்கள் பிறப்பு, இறப்பு அற்ற நிலையினை அடைவதற்கு அருள் புரியவே இறைவன் திருவ ருட் சக்தியுடன் பிரியாது இருக்கின்ருன், அவன் அருளாலே அவன்தாள் வணங்கி நிற்கும்போது, தானே வந்து எம்மைத் தலையளித் தாட்கொண்டருளும் வான் வார் கழல் உடன் நிலந்தன் மேல் வந்தருளி நீழ்கழல்கள் காட்டி உலகியலி லிருந்து பேதித்து நம்மை வளர்த்தெடுத்து உய்யுநெறி காட்டு வான் இறைவன். உய்யுநெறி தந்த பித்தனுக அவன் இருக்கின்றன். அவனை வணங்குவது எம்மை நன்னிலைப் படுத்தற்கே,
எனவே, சிவன் கழல் வணங்கிச் சரியை நெறி நின்று
திருவருள் கைவரப்பெற்று இகபர செளபாக்கியம் பெறு வோமாக,
AMNMNMMNMNMMMMNNMMWorMM MMMMMMYMNA^-
" இவ்வருட மார்கழி மாதம் திருவெம்பாவை நிகழ்ச்சிகளில் பங்குகொண்ட அன்பர்களுக்கு உதவும் பொருட்டு திருவெம்பா வைப் பாடல்களை ஒரு கையடக்க நூலாகி அச்சிட்டு, திருவருள் இயக்கத்தினர் இலவசமாக விநியோகஞ் செய்தனர். கொழும்பில் பஜனை நடந்த பல இடங்களுக்கும், வாழ்ப்பாணத்திலும் இம் மலர் கொடுக்கப்பட்டது. அடுத்து வரும் திருவெம்பாவைக் காலத்தில் பயன்படுத்த இம்மலரை எம் இயக்க விலாசத்தில் இல வசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.
*NWANY
ALALALAMLAS LA

S 35tôpở 3FLDu Gabrió S- தவத்திரு குன்றக்குடி அடிகளார் ம
தமிழ், காலத்தால் மூத்தமொழி; கருத்தாலும் முதிர்ந்த மொழி தமிழில் இன்றுள்ள முதல் நூல் தொல்காப்பியம் என்ற இலக்கண நூல். தொல்காப்பியர் காலம் இற்றைக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியது. இலக்கியம் தோன்றி வளர்ந்த பின்புதான் இலக்கணம் தோன்றும் என்பது மொழி நூற் கொள்கை. தொல்காப்பியம் போன்ற சிறந்த இலக்கண நூலைத் தரத்தக்க அளவுக்குத் தொல்காப்பியத் திற்கு முன் இலக்கிய உலகம் சிறந்து விளங்கி இருக்க வேண்டும். மிகச்சிறந்த இலக்கியங்களைக் காணக்கூடிய அள வுக்குத் தமிழ்மொழி சிறந்திருந்ததென்றல், அம்மொழியைப் பேசி வாழ்ந்த மக்கள் சிந்தனையிலும் செயலிலும் மிக வளர்ந் திருக்க வேண்டும் என்பது உய்த்துணரத்தக்கது. உலகி லுள்ள எல்லா மொழிகளுமே எழுத்துக்கும் சொல்லுக்கும் மட்டுமே இலக்கணம் பெற்றுள்ளன. அவற்றுள்ளும் எழுத்து, சொல்லிலக்கணங்களிற் கூட முழுநிலை பெற்று விளங்கும் மொழிகள் சிலவே. எழுத்துக்கும் சொல்லுக்கும் மட்டுமல் லாமல் வாழ்க்கைக்கும் இலக்கணங்கண்ட பெருமை உலக மொழிகளில் தமிழுக்கே உண்டு
வாழ்வதெல்லாம் வாழ்க்கை அல்ல. வாழ்க்கை அருமை யானது; பயனுடையது; இன்பத்திற்குரியது என்ற உணர் வுகளுடன் நெறிகளோடு இசைந்து வாழ்தலே வாழ்க்கை என்று தமிழ் வற்புறுத்துகின்றது. ஒருவனும் ஒருத்தியும் கூடி வாழ்கின்ற காதல் வாழ்க்கையும், அவர்களே சமுதா யத்திற்குப் பயன்படுமாறு வாழும் கற்பு வாழ்க்கையும் அக வாழ்க்கை, சமுதாய வரம்புக்குள் அடங்கி, அரசு வகுக்கும் சமுதாயப் பொதுவிதிகளுக்கு இணங்க வாழும் வாழ்க்கை புறவாழ்க்கை. சுருங்கச் சொன்னுல் சமுதாயமாக வாழ்வது புறவாழ்க்கை. சமுதாயத்திற்கு உறுப்பாகச் செய்வன செய்து, துய்ப்பன துய்த்து வாழும் வாழ்க்கை அகவாழ்க்கை.
தி - 6

Page 14
de 22 a
இது, தொல்காப்பியம் காட்டும் முடிவு; இவ்விலக்கண நூல் தோன்றுவதற்கு முன்பே, தமிழ்மொழி பேசும் மக்கள் சிறந்த வாழ்க்கை உடையவர்களாக இருந்திருக்க வேண்டும். ஆயினும், காலத்தின் விளைவுகளால் இங்கும் அங்குமாகத் தவறுதல் தலைகாட்டத் தொடங்கிய உடனேயே வாழ்க்கை யைச் செப்பம் செய்யுங் கவலை தமிழ்க் குடியினருக்குத் தோன்றியதன் விளைவு, தொல்காப்பியத்தின் பொருளதிகாரம்.
வாழ்க்கை, நெறிமுறைகளுக்கு இசைந்தவாறு அமைய வேண்டும் என்ற கவலை அரும்பும் நிலையே சமயத்தின் தோற் றம். இந்நிலையிலேயே சமயம் கால்கொள்ளுகிறது. அங்ங்ன மாயின் தொல்காப்பியத்திற்கு முன்பு, தமிழர்க்குச் சமயமில் லையா? என்ற விஞத் தோன்றும், தொல்காப்பியத்திற்கு முன் பும் தமிழ்மொழி பேசிய மக்கள் இறைவழிபாடு செய்து வந்துள்ளன்ர். அவர்களுடைய வாழ்க்கையில் ஒழுங்குகளும் ஒழுக்கங்களும், சமயநெறிக் கோட்பாடுகளும் இருந்தன. ஆயினும், செப்பமாக வடிவமைப்புப் பெற்றது தொல் கசப் பிய காலத்திலேதான். சமயம் என்பதற்குச் செப்ப முறச் செய்யப்பெற்றது, சார்ந்து நின்று ஒழுகுவோரை செப்பமுறச் செய்வது என்பது விளக்கம். சமயம் என்பது கடவுளை வழிபடும் நிலையை மட்டும் வற்புறுத்துவது அன்று ; வாழ்க்கை முழுவதையும் தழுவி நிற்பதே சமயம்.
தமிழ்மொழி, வாழ்க்கையை அணுகி ஆராய்ந்த முறை நம்பிக்கைக்குரியது. நல்லெண்ணத்தின் பாற் பட்டது; அறி வார்ந்தது. தமிழ்ச்சமயத்தில் நம்பிக்கைக் கொள்கை உண்டு. ஆனல் நம்பிக்கை மட்டுமேயன்று. தமிழ்ச் சமய நெறி உலகை உயிர்க்குலத்தை, வாழ்க்கையை அணுகி ஆராய்ந்து கண்டு காட்டும் முடிவுகள் சிறப்புடையன; அறிவிற்கு விருந்தாய் அமைவன. உயிர்கள் அறியாமையிலிருந்து விலக, துன்பத் தொடக்குகளில் இருந்து விலக, சமயம் துணைசெய்வது தமிழ்ச்சமயம் உயிரை நம்புகிறது. உயிர், இல்பொருள் அன்று. உயிர் பிறிதொன்றன் விளைவுமன்று, உயிர், கட வுளுமன்று; கடவுளின் ஒரு பகுதியுமன்று, உயிர் கடவுளின் பிரதிபலிப்பு, உயிர் கடவுளாற் படைக்கப்பட்டதுமன்று.

= 23 -
அழிக்கக்கூடியது மன்று. உயிர் கடவுளின் கைப்பாவையு மன்று. உயிர் அறிவுப்பொருள். ஆயினும் உயிர் முற்முக அறிந்த அறிவுப்பொருளுமன்று. உயிர் ஒன்றல்ல, பலப் பல. அதன் பொதுவ்கை ஆறுவகையே! இப்பாகுபாடு அறிவின் அடிப்படையில் அமைந்தது. உயிர்கள் தோன்றி யனவுமல்ல; அழியக்கூடியனவுமல்ல, உயிர்களுக்குப் பிறப்பு மில்லை; இறப்புமில்லை. உயிர்கள் கடவுளாவதுமில்லை. உயிர் கள் உடலைத்துணைக் கொண்டு அகக்கருவிகள், புறக்கருவிகள் வாயிலாக உலகத்தோடு தொடர்பு கொள்ளுதலேயே பிறப்பு என்கின்ருேம். இது தமிழ்ச் சமயத்தின் உயிரைப் பற்றிய உயர் தனிக் கொள்கை,
உயிரின் இயற்கை வளர்தல்; மாறுதல், உயிர்களின் அடிப்படை இயல்பு துய்ப்பது, துய்த்தலும், இன்புறுதலும் அவ்வழி வளர்தலும், அன்பு நிலையை எய்துதலும் உயிர் களின் பிறப்பு வழிப்பட்ட நோக்கம், உயிர்கள் பிறத்தல், இறத்தல் என்பது நேரடியாக உயிர்களைப் பற்றியதல்ல. உயிர், தன்னுடைய வளர்ச்சிக்குத் துணையாக உடலைத் துணைகொண்டு அறிகருவிகள், செய்கருவிகள் வாயிலாக உலகத்தோடு பொருந்துதலும் நீங்குதலுமே பிறப்பு, இறப்பு ஆகும். இங்ங்னம் அறிகருவிகளையும் செய்கருவிகளையும் உடைய உடம்பினுேடு உயிரைப் பொருத்திப் பிறப்பு வாழ்க்கையோடு இணைத்தலே படைத்தலாகும். உடலைப்பெற்ற உயிர்கள் துய்ப்பனவும் உய்ப்பனவும் பெற்று வளரச்செய்தலே காத்தலாகும். வாழ்க்கையில் துன்பச்சுமை குறைவதற்காகவும், புத்துணர்ச்சியோடு வளர்வதற்காகவும், மறைக்கத்தக்கன வற்றை மறைத்தலே மறைத்தலாகும். உயிர்களின் இன்ப வாழ்க்கைக்கு ஒவ்வாத தீமையை அழித்தலே அழித்தலாகும். வளர்ந்துவரும் உயிர்கள் என்றும் இன்ப நிலையில் அமர்ந்து வாழச் செய்தல் அருளுதல் ஆகும். இவ்வாறு உயிர்களின் வாழ்நிலைகளே ஐந்து நிலைகளாகவும், இவ்வைந்து நிலைகளி லும் உயிர்களுக்குத் துணைசெய்யும் ஐந்தொழில்களே கடவு ளின் ஐந்தொழில்கள் என்றும் தமிழ் கூறும்.
உயிர்கள் உய்யும் நலன் நோக்கி உடுத்துக் கொண்டதே உடம்பு, உடு என்ற முதனிலையிலிருந்தே உடம்பு என்ற

Page 15
சொல் பிறக்கிறது. உயிர் அறியும் இயல்பினது, உயிர் ஓர் அறிவுப்பொருளே ! ஆயினும் இயற்கையிலேயே அறியாமை யில் உயிர் இணைந்து இருக்கிறது. உயிர், அறியாமையி னின்றும் விலகி அறிவைப் பெறுதலே வாழ்க்கையின் நோக் கம். உயிர், அறிவு மயமாதலே உயிரின் முதிர்ந்த வளர்ச்சி நிலை. உயிர், அறியாமையை நீக்கிக் கொண்டு அறிவைப் பெறுவதற்கே பேரறிவாகிய கடவுளை நாடுகிறது; துணையா கப் பெறுகிறது. வளர்ந்த அறிவின் இயல்பு வாழ்வித்தலே. வளர்ந்த அறிவு, சிற்றெல்லைகளைக் கடந்தது. அதற்குத் தற் சார்பான குறிக்கோள் இராது. எனவே உலகுயிர்கள் அனைத் தையும் தழுவிநின்று மெல்ல அவற்றை அறியாமையி லிருந்து நீக்கி அறிவில் பூத்துக்குலுங்கச் செய்தலும் அறி வில் இன்புற்று அமரச்செய்தலுமே இறைவனின் குறிக்கோள். இது தமிழ்ச்சமயத்தின் சாரம். தமிழர் சமயம், இன்று தோன்றி வளர்ந்துள்ள பொருள்முதல்வாதக் கொள்கைக் கும் ஈடுகொடுக்கும் வகையில் அமைந்த சமயமாகும்; ஏன் ? அககிலேக்கருத்துமுதல்வாதம் என்று சொல்லப் படுகின்ற கொள்கை, தமிழ்ச் சமயத்திற்கு முரணுனது. இக்கொள்கை யுடையார் பொருள்களே இல்லை; எல்லாம் கருத்துகளின் பிரதிபலிப்பே என்பர். இது நடைமுறைக்கு ஒத்து வராத ஒன்று. அடுத்து, புறநிலைக்கருத்துமுதல்வாதக்கொள்கை. இக்கொள் கையுடையார் உயிர் என்று ஒன்று இல்லை; "பரமான்மா' என்று சொல்லப்படுகின்ற கடவுளின் ஒரு பகுதியே ஆன்மா என்பர். பரவெளியாகிய ஆகாயத்தையும் குடத்திற்குள் உள்ள ஆகாயத்தையும் ஒப்புமை காட்டுவர். இவ்விரண்டிற்கும் பொருள் வேறுபாடு இல்லாதபோதும் குடத்திற்குள்ளிருப்பதன் காரணமாக ஏற்பட்ட தன்மை வேறுபாட்டை அவர்கள் அறிகிலர். இக்கொள்கையினுல் அவர்கள் 'நானே கடவுள்' என்று தருக்கித்திரியம் இயல் பினராகின்றனர், அது மட்டுமா ? உலகம் என்ற ஒன்று இல்லை. துய்ப்பனவும் இல்லை; உய்ப்பனவும் இல்லை; எல்லாம் வெறும் மயக்கம் என்பர். உலகம் பொய்யன்று; உயிரும் பொய்யன்று. எனவே இந்தப் பொய்மைக் கொள்கை மயக்
கத்தில் பிறந்தது; மயக்கத்தில் ஆழ்த்துவது, இக்கொள்கை

anama 25 --
பொருள் முதல் வாதத்தின் முன்னும் தமிழ்ச் சமயத்தின் முன்னும் நிற்க முடியாது புறநிலைக் கருத்து முதல் வாதி கள் கடவுளை நம்புகிறவர்கள்.
உலகிற்கும் உயிர்களுக்கும் புறத்தே கடவுளுண்டு; அது முன்னே தோற்றியது; உயிர் உலகம் எல்லாவற்றையும் அக் கடவுளே படைக்கிறது என்ற கொள்கையினர் இவர்கள். இவற்றுள் கடவுள் உண்டு என்ற கொள்கையையும், அது வளர்ந்த அறிவினது என்பதையும் தமிழ்ச் சமயம் ஒத்துக் கொள்ளுகிறது. ஆனல், உயிர்களும் உலகமும் கடவுளால் படைக்கப்பட்டன அல்ல; உயிர்களும் கடவுளைப்போல் என் றும் உள்ளவை. உலகு இறைவனின் இயக்கவியல் செயல் வழியது. உலகு, முகிழ்த்து விரிவதற்குக் காரணமாக - முதற்
களமாக அமைந்துள்ள மாயையிலிருந்து முகிழ்த்ததேயாம். அதாவது தோன்றியதேயாம் என்பது தமிழ்ச் சமயம், உயிர்கள், கடவுளால் படைக்கப்பட்டன என்ருல், உயிர் களின் குறைநிறைகளுக்கும் இன்ப துன்பங்களுக்கும் யார் பொறுப்பு ? குறைவிலா நிறைவு, கோதிலா அமுது, நன்று
டையான், தீயதில்லான், இன்பமுடையான், துன்பமில்லான்
என்று விளங்குகின்றவனுகிய பரம் பொருளால் குறைகளு டைய பொருள் - உயிர் படைக்கப்பட்டது என்று கூறுவது கடவுட் கொள்கையையே குறைபடுத்துவதாகும். இயற்கை யின் பரிணும வளர்ச்சி, குறைகள் நிறைகள் ஆவதேயாம். நிறைகள் குறைகளாவதல்ல. எனவே உயிர்கள் கடவுளால் படைக்கப்பட்டன அல்ல என்ற தமிழ்க் கொள்கை - உயிர் கள் உற்று அனுபவிக்கும் இன்ப துன்பங்களுக்கும் கடவுள் பொறுப்பாக மாட்டார். அவைகளின் செயற்பாடே அவற்றுக் குக் காரணம் என்ற தமிழ்க் கொள்கை - பொருள் முதல் வாதத்தினை ஈடுகொடுத்து நிற்கின்ற சிறப்புடைய கொள்கை.
தமிழ்ச் சமயம் வாழ்க்கையை பொய்மை என்றும் கூறு வதில்லை; வெறுத்து ஒதுக்குவதுமில்லை; ஒதுங்குவதுமில்லை. தமிழ்ச் சமயம் வாழ்வாங்கு வாழ வலியுறுத்துவதேயாம். தமிழ்ச் சமயத்தின் கொள்கை, செயல்கள் மட்டுமே பயன் தருவன அல்ல; சிந்தனை இன்றியமையாதது; செயல்களின் நோக்கமே அளவைக்குரியது என்பதாகும். தமிழ்ச் சமயம் இயற்கையோடு இசைந்தது. அது இல்லற வாழ்க்கை தான் உயர்ந்தது என்றே, துறவற வாழ்க்கைதான் உயர்ந்தது
தி - 7

Page 16
سی۔ 26 ہے۔
என்ருே பறை சாற்றுவதில்லை. எந்த வாழ்க்கை யாயி னும் நெறி முறைகளிற் சிறந்து வாழ்வாராயின் இன் புறுவர் என்பதே தமிழ்ச் சமயக் கொள்கை. எந்நெறியில் நின்ருலும் எத்தொழிலைச் செய்தாலும், சிந்தனையும் செய லும் சிறந்திருக்குமானுல் சிறப்புடையதேயாம். செம்பொரு ளைக் காணத்துணை செய்வதேயாம். துய்த்தல், தூய இன்பத் திற்குத் தடையன்று. ஆனல், மற்றவர் துய்த்தலுக்கு இடையூ ரூரக மற்றவர் துய்க்க வழங்காமல் தானே துய்க்க ஒருப்படுதல் தமிழ்நெறிக்கு முரணுனது. ஏந்த வகை வாழ்க்கையாயினும் துய்ப்பித்தல் குறிக்கோளாக இருக்கவேண்டும். அங்ங்னம் வாழும் வாழ்க்கை தமிழ் வாழ்க்கை. இம்மண்ணிலேயே வளர்ந்தநிலையில் இன்ப அன்பினைத் துய்த்து வாழமுடியும் என்ற நம்பிக்கை உடையது தமிழ்ச் சமயம், உயிர்கள் ஞானமயமாகி இன்ப அன்பினில் தங்கி திருவருளேத்துய்த்து இன்புறுதலே வீடு
இங்ங்ணம் வளர்ந்த தமிழ்ச் சமயம் இது வரையில் உல கில் தோன்றிய தத்துவ இயல்களில் சிறந்ததாக, முடிந்த முடிவாக விளங்கி வருகிறது.
இச்சமய நெறியை, நாம் தமிழ்ச் சமயம் என்று குறிப் பிட்டாலும் இந்நெறி உலகப் பொதுநெறி. தமிழ் மொழிச் சிந்தனையாளர்களிடம் தோன்றி வளர்ந்ததால் தமிழ்ச் சமய மாகின்றது. ஆனல், தத்துவச் சிறப்புகளாலும் கொள்கை உயர்வாலும், நடைமுறை வாழ்வியலுக்கு இசைந்து இருப்ப திாலும், எல்லா வேறுபாடுகளையும் கடிந்து ஒதுககுதலா ஆலும் இத்தமிழ்ச் சமய நெறி உலகப் பொது நெறியா தற்குத் தகுதியுடையது. இந்நெறி உலகப் பொது நெறியானுல் கடவுள் நெறியின் பெயரால் ஒருகுலம் தோன்றும்; சமநிலைச் சமுதாயம் மலரும்; வாழ்க கை, தன்மைபக கையால் ஆள் வினையால் விரிவடையும். இன்பமே எந்நாளும் துன்பமில்லை என்று முழங்கி மக்கள் வாழ்வர். பெண்மை பெருமிைப் படுத்தப் பெறும், வழுவிலா மனையாம் சிறந்து விளங்கும்.
பாரம் ஈசன் பணியே எனக்கொண்டு அந்தணர் வாழ்வர்.
தமிழ்ச் சமயநெறி கால்கொள்ளும். திசையெல்லாம் ஒரு புதிய சமுதாயம் அமைந்து விளங்கும்.
(நன்றி: ஐந்தாம் உலகத் தமிழ் மகாநாடு விழா மலர், 1981)

நம்மைப் பற்றி .
சமய வாழ்க்கை
if (e.g., உலகில் நிலவும் பழைமையான ஃஞ்சிந்து சமயமும் ஒன்றெனப் பெருமையுடன் நாம் கூறிக்கொள்ளுகிருேழ்
//
இப்பெருமை நமது முன்ஞேரிகளுக்கே பெரிதும் உரித்தாகும். ஏனெனில் அவர்களே இறைவனின் இயல்புகளே ஆராய முற்பட்டனர். ஆன்மாக்களுக்கும் ஆண்டவனுக்கும் உள்ள தொடர்பையும், உயிர்கள் உண்மைப்பொருளைச் சேருவதற்குத் தடையாக உள்ளவை என்ன, சேருவதற்கு உரிய வழி, அதாவது உலகிலே நாம் வாழும் முறைகள் என்ன என்பவற்றை எல்லாம் எண்ணத் தொடங்கினர்கள் தமது ஆப் வின் முடிவுகாே பல அனுபூதி நூல்களாக, எமது பரம்பரைச் சொத் தாக வைத்துச் சென்றுள்ளார்கள்,
அன்ருடச் சமய வாழ்க்கையில் நாம் செய்ய வேண்டியவை என அறிவுசால் பெரியோர்கள் கூறியவை:
(அ) சமயநூல்களை ஓதுதல். (ஆ) இறைவனை வணங்குதல். (இ) நல்லோர் நட்பு
(ஈ) தர்மம்.
சமய நூல்களைச் செம்மையாகக் கற்பதால் கொள்கைகளும் வாழ் வின் இலட்சியங்களும் புலணுகின்றன. விளக்கமில்லாத சமயக்கிரியை கள் மூடப்பழக்கங்களுக்கு வித்திடும். அதுபோல நடைமுறைக்கிரி யைகளைப் போற்ருத சமய அறிவுவிளக்கம் வீண் வாதங்களையே உண் டாக்கும். எனவே இவை இரண்டும் அவசியற் தேவை.
சமய அறிவும் கிரிகைகளும் எவ்வளவுக்குத்தான் இருந்தாலும் வேண்டாத ஆசைகள் உள்ளத்தைக் கீழ் நிலைக்குக் கொண்டுசெல்ல முயலும். ஆனல் பண்பும் ஆன்மீக ஆர்வமும் உள்ள பெரியோர்களு -ன் நட்புக் கொள்ளுவதால் நேர்வழியிலிருந்து நாம் விலகாதபடி சீதா விழிப்புடன் இருக்கலாம்.

Page 17
ಅ– 28 semua
* ஒவ்வொருவரதும் ஆன்மா சிறப்படைய முதல் மூன்று செய்ன? களும் போதுமானவை. ஆனல் மனிதன் தனித்து வாழும் பிராணி அல்ல. அவன் ஒரு சமுதாது விலங்கு?. எனவே தனது சத்திேேசிற பச் சமுதாயத்தில் வாழும் வசதி குறைந்தோருக்கு உதவி புரிந்தி வாழக் கடமைப்பட்டவன்.
இன்றைய நிலையில் நம்சமயத்தவர்களுக்கு இவற்றைக் கூறினல் "இது எல்லாம் அந்தக் காலத்திற்குச் சரி. எங்களுக்கு இவ்வாறு ஒழுக நேரம் எங்கே? பொருள் வசதி எங்கே??’ என்கிருர்கள். மேலும் சமயவாழ்க்கை என்பது ஒர் "ஓய்வுக்காலப்பணி" எனப்பலரும் கூறு வார்கள் மனிதன் இவ்வுலக வாழ்வை நீங்கும் நேரத்திலேயே நீர மன நினைத்தல் வேண்டுமென்பது பலருடைய நம்பிக்கை போலிக் காணப்படுகிறது: என்னே அறியாமை! சமயம் என்பது அன்ருடம் வாழவேண்டிய ஓர் அம்சமல்லவா?
தேவையற்ற உலகியல் விடயங்களுக்கு எவ்வளவு நேரத்தையும் செலவிடத் தயாராக இருக்கும் நம்மவர் அண்டங்கள் அனைத்திற்கும் நாயகனம் இறைவனை நினைக்கவும் வணங்கவும் நேரமில்லை என்கிருர் கள். இடாம்பீக வாழ்க்கைக்கும் மனம்போன போக்கிற் கெல்லாம் கூசாமல் பொருளை வாரி இறைக்கும் நாம் என்றென்றும் நமக்குப் பெருமைவையும் நிம்மதியையும் கொடுக்கும் தர்மகாரியங்களுக்குச் செலவிடப் பணமில்லை என் கிருேம்,
உலகவாழ்க்கையில் நம்சமயத்தவரை விடப் பிறசமயத்தவர் சமூ கப் பொருளாதாரநிலைகளில் சிறந்து விளங்குவதேன்? அவர்களைப்போல நம்மவர் உண்மையான தெய்வவழிபாடு செய்யாமல் இருப்பது ஒரு காரணம். நம் சமயத்தவருடன் ஒற்றுமையின்றி, ஒவ்வொருவரும் சியே நலப்போக்கில் வாழ முற்படுவது இன்னுெரு காரணம். இவ்வாரு தீப்
is era -
சமயத்தை நாம் அணுகும் முறையில் உடனடியாக ஒரு நன்மாற் றம் தேவை. பல துறைகளிலும் நிர்வாகத்திறமை கொண்ட நாம் சம யத்துறையில் சோர்ந்து காணப்படுவது ஏன்? நம்மவர் மீது ஏதும் சாபக்கேடா? அவ்வாருக இருப்பினும் உடனே அதனை நீக்கிச் சிறப் புக்களை நிலை நாட்டுவோம் வாரீர்ஐ
- சத்யம் ?
(சென்ற இதழில் வெளிவந்த குறிப்பில் இலங்கையின் சனத்தொகை
12 கோடி எனவும் இந்துக்கள் 22 கோடி எனவும் இருக்கவேண்டும்? பிழையைக் காட்டிய அன்பளுக்கு நன்றி.)

எமது சமயத்தில் நவக்கிரகங்களை வழிபாடு செய்தலும் உண்டு. அன்ர்கள் ாயணஞ் செய்யும் பொருட்டுக் கீழே நவக்கிரக தோத்திரம் கொடுக்கப்படுகிறது. அன்பர்கள் இதனைப் பாராயணஞ் செய்து பயனடைவார்களாக!
சீலமரத வாழ சீர் அருள்புரியும் ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி! சூரியா போற்றி சுதந்திரா போற்றி வீரியா போற்றி விஜ களே வாய் போற்றி! எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும் திங் இளே போற்றி திருவருள் தருவாய் சந்திரா போற்றி சத்குரு போற்றி சங்கடந் தீர்ப்பாய் சீதுரா போற்றி, சிறப்புற மணியே செவ்வாய்த் துேவே குறைவில7 திருள் வாய் குணமுடன் ՓՍf tք மங்களச் செவ்வாய் மலரடி போற்றி ஆங்காரகைேர அவதிகள் நீக்கு. இதமுற வாழ இன்னல்கள் நீக்கு புத பகவானே பொன்னடி போற்றி புதந்தரு தருள்வாய் பண்ணுெலி யானே உதவியே அருளும் உத்தம போற்றி. குணமிகு வியாழ குரு பகவானே :ணமுடன் வாழ மகிழ்வுடன் அருள்வாய் பிரகஸ்பதி வியாழப் வரகுரு நேசா கிரஹ தோஷமின்றி கடாகநித் தருள் வாய். சுக்கிரனே புத்தி சுகமிக ஈவாய் வக்கிரமின்றி இர மிகத் தருாேய் வெள்ளிச் சுத்திர வித்தக வேந்தே அள்ளிக் கொடுப்பாய் அடியார்க் கருளே, சங்கடந் தீர்ப்பாய் சனிபக வானே மங்களம் பொங்க மனம் ைேவத்தருள் வாய் சச்சர வின்றிச் சாகர நெறியில் இச்செகம் வாழ இன்னருள் தாத்ா. அரவெ னும் ராகு ஐயனே போற்றி கரவா தருள்வாய் கஷ்டங்கள் நீக்கி ஆக அருள்புரி அனைத்திலும் வெற்றி ராகுக் கண்ணியே ரம்மிய்ா போற்றி, கேதுத் தேவே கீர்த்தித் திருவே பரதம் போற்றி பாவம் தீர்ப்பாய் வாதம் வம்பு வழக்குகள் இன்றி இேதுத் தேவே கேண்டிைவ: ரசுழி,

Page 18
நமது பாரம் பரியம்
நம்மிற் பலரும் தத்தமக்குள் பின்வரும் கேள்விகளைக் கேட்பதுண்டு. 'நான் எங்கு உள்ளேன் ?' 'நான் எங்கு செல்கிறேன்?' 'நான் என்னவாக இருக்கிறேன் ?” “எம்மைச் சுற்றி நிகழும் பலவிதமான நிகழ்ச்சிகளும் அர்த்தமின்றி தற்செயலாக நடக்கின்றனவா ? அல்லது இவற்றிற்கு எல் லாம் ஒர் உட்பொருள் உள்ளதா ?”
தமக்கென குறிக்கப்பட்டுள்ள வான் பாதைகளிற் செல் லும் கிரகங்களும், ஒருவித இலயபாவத்துடன் ஒழுங்காக நடைபெறும் இரவு, பகல், பருவகாலங்கள் ஆகியவற்றிற்கு ஒரு நியதியை ஏற்படுத்தியது யார்? நாம் வாழும் பூமியா கிய கிரகத்தின் வயது என்ன? இது போன்ற வேறு பல கோளங்கள் உள்ளனவா? அவற்றின் உருவ அமைப்புகள் என்ன? மனிதன் இயற்கையின் அடிமையா அல்லது எச மானஞ? அவனுக்கும் அவனைச் சூழ்ந்து கிடக்கும் உலகப் பொருள்களுக்குமிடையே உள்ள உறவு என்ன? இவை யாவும் தற்செயலாகவும், குழப்பான முறையிலும் ஏற்பட்ட னவா? அல்லது உலகியற் பொருள்களை நடப்பிக்கும் நியதி ஒன்று உள்ளதா? மனிதனின் செயல்களைக் கட்டுப்படுத்தும் ஒரு நியதி அல்லது பல நியதிகள் உள்ளனவா? அப்படியா யின் அவனுக்கும் அதே நியதிகளுக்கும் உள்ள தொடர்பு
என்ன ?
இவ்வாருன பொருள் பொதிந்த கேள்விகள் காலத்திற் குக் காலம், கிழக்கு நாடுகளிலும், மேற்கு நாடுகளிலும் வாழ்ந்து வந்த நம்முன்னுேர்களாலும் கேட்கப்பட்டன; அவற்றின் உண்மைகள் அவர்களால் ஆராயவும் பட்டன. அவர்களின் கண்டுபிடிப்புகளாகிய அறிவுத் தொகுப்பிற்கு அவர்களின் சந்ததியினராகிய நாம் உரியவராகிருேம்.
மனிதனுள் மறைந்து கிடக்கும் இயல்பு பொருள்கள், இடங்கள் ஆகியவற்றைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற உந்து முனைப்பாகும். மேற்கு நாடுகளில் மனிதன் தனது

- 31 ---
மனதை உலகியற் பொருள்களின்மீது செலுத்தினன். அதன் பயனுக பெளதிகம், இரசாயனம், தாவரவியல், விலங்கியல், மருத்துவம், மின் சக்தியியல், பொறியியல் என்னும் பெரும் விஞ்ஞானத்துறை இயல்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. தான் ஆராய்ச்சி செய்து கண்டு பிடித்த இயல்புகளே நியதிகள் எனப் பெயரிஃடு அழைத்தான். மேலும், இயற்கை நியதி களுக்கு ஒர் எல்லையில்லை என்பதையும் கண்டறிந்தான். தான் கண்டு அறிய அறிய மேலும் மேலும் கண்டு அறி வதற்குப் பல விட யங் கள் இருக்குக் தன்மையை அவன் உணரத் தொடங்கினன்.
உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி ஈன் ஸ்றினைப் பற்றி ஒரு நிகழ்ச்சியைக் கூறுவார்கள். ஒரு முறை யாரோ ஒருவர், அவரைப் பார்த்து, தாங்கள் மிகப் பெரிய கணித மேதை' எனக் கூறியபொழுது, அவர் கடற்கரையிலுள்ள சிறிது மணலை எடுத்துத் தமது உள்ளங்கையில் வைத்தவாறு, தான் அறிந்தயாவும் கையில் உள்ள சிறிதளவு மணலைப் போலவும், அறியாத எல்லாம் தனது முன்னே பரந்து கிடக்கும் சமுத் திரத்தின் மணல் போன்று மிகுந்து இருப்பதாகக் கூறினராம்.
இயற்கையின் ஒவ்வொரு நிகழ்ச்சியும் ஒரு நியதிக்குட் பட்டே காணப்படுகிறது எடுத்துக்காட்டாக இரசாயனத்தில் ஒருபங்கு பிராணவாயுவும், இருபங்கு ஹைரோஜனனும் ஒன்ருகும்பொழுது நீர் ஏற்படுகிறது. இந்த நியதி முன் பும் இப்படியே இருந்தது. இப்பொழுதும் இப்படியே இன் னும் ஒரு கோடி ஆண்டுகள் கழிந்த பின்னும் இவ்வாறே இருக்கும்.
நாம் வாழும் பூமி ஒரு கன வட்ட வடிவம் கொண்டது. இது ஒவ்வொரு 365 நாட்களுக்கு ஒரு முறை சூரியனை ஒரு நீள்வட்டமாகச் சுற்றி வருகிறது. மேலும், இதே வேளே யில் தனனைத்தானே 24 மணித்தியாலங்களுக்கு ஒரு முறை சுற்று கிறது. இதனுல் அழகான பகற்பொழுதும் அமைதியான இரவுப் பொழுதும் மாறி மாறி நிகழ்ந்த வண்ணம் இருக் கின்றன.
ஆகாய வெளியில் இயங்கியபோதும் பூமி எப்பொழுதா
வது தனது சூரியனை வலம் வரும் நீள்வட்டப்பாதையி
லிருந்து விலகியது கிடையாது. கடந்த காலத்திலும் இன்

Page 19
a 32
றும் இவ்வாறே, எதிர்காலத்திலும் இவ்வாறே, கன வட்ட வடிவமாக ஒரு தோடம்பழம் போல பூமி இருப்பினும் தனது ஆகர்ண சக்தியால் அது உங்களையும் என்னையும் தன்னகத்தே உள்ள எல்லாப் பொருள்களையும் கவர்ந்து வைத் துள்ளது.
எங்கெங்கு திரும்பினுலும் பரிபூரண கியதிகள் நின்று நிலவுவதைக் காண்பதால் மனிதன் மிகுந்த பணிவுடன் இந்த நியதிகளை உருவாக்கிய பேரறிவுக்குத் தலைவணங்குகிருன் , அண்ட சராசரங்களே இயக்கும் நியதிகளின் ஒரு சிறு பகுதி யையே மனிதன் இது காறும் அறிந்து இருக்கிருன் இன் னும் அறிய வேண்டியவை மிகப்பலவாகும்.
கிழக்கு நாடுகளில் மனிதன் தனது ஆராய்ச்சியை உள் நோக்கி தன் அனயே அறியும் பாங்கிற் செலுத்தினுன் அவ னது உந்து உணர்வு தன்னுள் மறைந்து கிடக்கும் பெருஞ் சக்தியைத் தேடலாயிற்று. இவ்வாராய்ச்சியின் பலனே மாபெரும் சமயங்களான இந்து சமயம், புத்த சமயம், கிறித் துவம், இஸ்லாம் மற்றும் உலகில் நிலவும் சமயங்கள், ஆன் மீக ஆராய்ச்சியில் ஈடுபட்ட பெரும் அறிஞர்கள் , தமது ஆய் வின் பலணுக மனிதனின் சுயமான சமூக ரீதியான இயக்கத் தையும் இலட்சியங்களையும் மனிதனின் பிறப்பு, இறப்பு பற் றிய நியதிகளே யும், வாழ்வில் காணப்படும் ஏற்றத் தாழ்வுக ளுக்குரிய காரணங்களை யும் மனிதனுக்கும் அவனையும் பிற வற்றையும் படைத்தவருக்கும் உள்ள தொடர்பு பற்றியும், என்னும் சாசுவதமாக நிலவும் இன் பத்தைப் பெறும் வழி வகைகளையும் அறிய முற்படலாயினர்.
"உலகியல் வாழ்வில் நாம் அனுபவிக்கும் எல்லா நன்மை களையும் கண்டுபிடித்த விஞ்ஞான மேதையர்களுக்கும், ஆன் மீகத்துறையில் முயன்று நமது உள்மன அமைதிக்கு வழி காட்டிய ஞானிகள் - முனிவர்களுக்கும் எமது மனநிறைவு டன் கூடிய நன்றியைச் செலுத்துவோமாக!
ஆங்கிலத்தில் : எம். முத்துபாலசூரியர், கொழும்பு - 4:
(மொழி பெயர்ப்பு : திருவருள் ஆசிரியர் குழு. )
28,281

qSqqSqSqSqSqSqSqSqSqSqSqSqSqSqSqSqLALSLASLLALALAMSLLLSAMSALASqMSqMAMSAMASqSMAMMALSAAMAASASAA S MSMSMMMMAMSAMMqqS S AAASAASSASSASSASSASSAASqSqSAASAASAASqqSAAASMAAMAqSASqSqqASASqASqSSMSSSMSeSeSeBSBSeSkeSeLSSSeSqSqqeSSSSSS
12-12-89-ல் யாழ்ப்பாணத்தில் திருவருள் முதற்பிரதியை பூநீலபரீ ஸ்வாமிநாதஞானசம்பந்த பரமாசார்ய ஸ்வாமிகளிடமிருந்து * சிவநெறிக் காவலர் "
திரு. க. கனகராசா அவர்கள் பெற்றுக்கொள்ளுகிருர்,

Page 20
*激發*
磐 幕
磐 " திருவருள் " சஞ்சிகை திருவருள் 懿 割 நோக்குடன் வளர வேண்டுகின்ருேம். 靈
喙
* அலுமினியம் அடிசட்டிகளுக்கு ( வட்டச்சட்டி ) 激。 } தேவையானுேர் எங்களுடன் தொடர்பு கொள்ளலாம்.
நியாயமான விலையில் செய்து கொடுக்கப்படும் 霹 * அத்துடன் அலுமீனியம் வார்ப்புச் சாமான்களும் * பெற்றுக்கொள்ளலாம், 霧 * *
* 喙状 哆 喙
ਅੰ
*. ફ્રેંમ .
攀 န္ဒုန္နီစ္ 8 O 曦 K. K. இன்டஸ்றிஸ்
48. பழைய சோனக தெரு
န္ဒမ္ပိန္နီ၊ 割 கொழும்பு-12 靈 喙 婷 * Ꮆ Ꭿ5mr8ᏍᏣt ] Ꭿ : 35331 發
* ခန္တီစ 爱 哆 * 。劉
*發‧發*瀏
 
 

g(xxxx xxxxx xxxx xxxxx xxxxee
உழவுக்கும் தொழிலுக்கும் இவ8ஆழ幕”
※
வந்தனை செய்வோம்
★
3ERókíó í öBøs
Importers, Exporters & Manufacturers of Aluminiumwares
170, 172, Old Moor Street
(OLOMB-12
Telephone: 35679
※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※
※

Page 21
熟
风风=xx=x易國因劑懷劑員劑*獻±),
} |
| 徽
凶山濱濱則濱濱劃嬪隨劃轉瞬間轉隨劇例劑則員員圓國劑以圓賴圓以團員園劑博劑博以以圓轉駁=以|
| 如, 既į 研)|
~–| * 育
| | | | | |
கட்டுப்பாடு.
அவர்களுக்கு
| |
|
|
கண்ணியம்
மெது
| | |
|-關劑圓以園園以團員以圓以以圓隨團以以圓以劑團以1以圓以以圓嶼以圓以圓關斑)|
85 L60s)
திரு. S. செல்வவிநாயகம்
என்ற கோட்பாடுகளுக்காக வாழ்ந்த

L TTSLGO MTSTSLSe OLLMLMLeYLTqLeeLLLGSYLqSqqSLeYL qSLLLeSeeYLLTqeLeYLq qLSe0iLLeSLeeeLeSeSYLTSLSLBe
கற்றதன லாய பயனென்கொல் வாலறிவன்
நற்குள் தொழாஅ ரெனின்,
( கல்வியின் பயன் இறைவனை வணங்குதலாம்.)
KÁ SUNDARA ỳ & βΟθO,
DAWEES ENTERPRISE
No. 83, MIHINDU MAWATHA,
COLOMBO - 12.
Κ

Page 22
※※※
மெர்க்கன்டைல் கிறெடிட் லிமிட்டெட்டில் உங்கள் சேமிப்பினை முதலீடு செய்து
ஒரு வருட வைப்பு/த் திட்டத்தில்
22 % வருட வட்டியையும்
இரு வருட வைப்பு/த் திட்டத்தில்
27x வருட வட்டியையும் பெறலாம்.
மேலதிக விபரங்களுக்கு : மெர்க்கன்டைல் கிறெடிட் லிமிட்டெட்
51 - 53, ஜனதிபதி மாவத்தை,
கொழும்பு - 1. என்ற விலாசத்தை நாடுங்கள் . தொலைபேசி : 2661 - 19,
இளைகள் :
யாழ்ப்பாணம் - 11/8, ஸ்ரான்லி வீதி, தொலைபேசி : 321
N
மாத்தறை - 27.1/1, தர்மபால மாவத்தை, தொலைபேசி: 2466
※ அனுராதபுரம் - 2, ஹரிச்சந்திரா மாவத்தை, தொலைபேசி: 534 ண்டி - 901/A, பேராதனை வீதி, தொலைபேசி: 4196
※ ※ ”ܐܝܼ,1 *******寝

அன்பும் பண்பும் நிறைந்த
சேவைசெய்து தங்களை
மகிழ்விப்பதே எமது நோக்கம்
YA
VENGAFESWAARJA
93, Keyzer Street COLOMBO-11
Telephone : 24588
 ெவங்க டேஸ் வரா 93, கெய்ஸர் வீதி கொழும் பு-11

Page 23
உங்கள் மகிழ்ச்சிதுே
எங்கள் சேவையின் நோக்கம்
நியூ கிருபா ஸ்ரோர்ஸ்
23, கபோஸ் லேன்,
கொழும்பு -
தொலைபேசி : 27900,
*
爱※爱爱爱
 
 

- எல்லோருமி இன்புற்றிருக்க
வேண்டுகிருேம்,
MEENAMBIKAI OIL MILLS
KELANNYA
Telegrams Telephone No.
as AREMPIE " O75 - 321
O75 - 322
R.M.P. PULAMADANChetty & Sons Ltd.
s
:
MMAAMMMMALMLMLMLMLSMMSMMSMSMLSMSMSeMMMMMSMMSLLSMS SLLSLLLSMeMLMLMqeLeMLqe eMeLLMAeLMLMLMLSS eeLS SLeL AMM LA SASAASAAS

Page 24
மேன்மைகொள் சைவ நீத
எனப் பிரார்த்
நீநிவாசன்ஸ் ே
- ஏற்றும
102, குமார வீதி
தபாற்பெட்டி எண் = டெஇெக்ஸ் 鑫
திருஇருள் இடைக்குமிடங்கள்
ஷாழ்ப்பாணம் - எண் 3118 ெ
சிங்கப்பூர் - திரு. . அம்பலவ 1011, G. Lan,
Printed at Vipulananda Press, Published by Mr. R. Vaithamanit Colombo - 13, for and behal Chief Editor: My
 

毒
J(DGIT
விளங்குக உலகமெல்லாம்
Longs
திக்கின்ருேம்,
竇
கா, லிமிற்றெற்.
யாளர்கள் - ܨ ܟ̣ܬܐ.
* ଜିଞ୍ଜି ୩୯gibl4 = 11
தொலேபேசி: 2484
雳75
========్వపతాపత్రి== 藝
பரிது இடைத் தெரு, ஜாழ்ப்பாணம்
ானர் அவர்கள் ge Road. Singapore 19 - 54 , *
-ബ ہے۔ صبر
248/5, K. K." S. Road, Jaffna & hy of No. 5. Brassfounder’s Street f of Thiruvarul Association.