கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நாங்கள் 1986.06

Page 1


Page 2
蒿、 韃
· ჯეიკ V ་་་་ ་་་་་་་་་་་་་་ ვაკე. 鬱
、
A.
' '
、。
,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மாணவர் சமுதாயம் கடந்த காலத்தில் நோக்கிய இடர்பாடு கள் மிகப்பல. பாடசாலை வசதியின்மை, போக்குவரத்து சீர்கேடு, குடும்ப வறுமைகள் என்பன போன்ற பலகாரணிகள் ஆர்வமும் விவேகமும் உள்ள மாணவர்கள் பலரை தொடர்ந்தும் கல்விகற்க விடாது முட்டுக்கட்டையாய் இருந்தது-இருந்து வருகிறது. இதை விட மிகமோசமான இனஒடுக்குமுறை காரணமாக பறிக்கப்பட்டு தங்கள் கல்வி வாய்ப்பை இழந்தவர்கள் மிகப்பலர்.
அரசு ரீதியான திட்டமிட்ட இன ஒதுக்கல்களின் காரணமாக எமது சமுதாயத்தில் கல்வி வாய்ப்புகள் சீரழிக்கப்பட்டிருப்பது ஒன் றும் புதிய விடயமல்ல. 70-ம் ஆண்டின் தரப்படுத்தலில் ஆரம் பித்த சீரழிப்பு இன்று பாடசாலை மாணவர்கள் கைது செய்யப் படுவது, பாடசாலைகள் இராணுவ முகாம்களாக மாறுவது வரை விரிவுபட்டுச் சென்றுள்ளது. இந்த வகையில் மிகமோசமாக பாதிக் கப்பட்டிருக்கும் திருமலை மாவட்டமும், அங்குள்ள மாணவர் நிலை குறித்தும் இவ்வெளியீட்டின் சிலபக்கங்களில் காணலாம்.
நிகழ்கால சமுதாயக் கொந்தளிப்பின் தாக்கத்திலிருந்து மான வர் சமுதாயம் தப்பித்து விடவில்லை. விடுதலை கோரிப் போராடு
கின்ற எமது இனத்தின் இன்றைய நிலையில் கல்வி சீரழிக்கப்படு
வது எதிர்காலத்தில் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது நிட்சயமானது. ஒருபுறத்தே பெற்ருேர்களுடன் அகதிமுகாம்களிலே தங்கியிருக்க வேண்டிய சூழ்நிலையும், எந்நேரம் அரசின் சந்தே கக் கண்களுக்கு விருந்தாவோம் என்ற ஏக்கமும் சூழ பள்ளிப் படிப்பில் மட்டும் கவனம் செலுத்த ஏவரால் முடியும்? மறுபுறத்தே பாடசாலைகளே இராணுவமுகாம்களாகவும், அகதிமுகாம்களாகவும் மாறிக்கொண்டிருக்கையிலும், பாடப்புத்தகங்கள், தளபாடப்பற்ருக் குறையினுலும் எம்மவர் கல்வி வேண்டுமென்று இருட்டடிப்புச் செய்யப்படுவது எவரும் புரிந்துகொள்ளாமல் இருக்கமுடியாது.
எனவே இன்றைய மாணவர்களாகிய எம்மை பெரும் பொறுப் புகள் சூழ்ந்துள்ளது. விடிவுக்காகப் போராடும் ஈழத்தின் சமகால அரசியல் போக்குகளை தெட்டத்தெளிவாக விளங்கிக்கொண்டு புதிய சமுக அமைப்பொன்றின் அவசியத்தை உணர்ந்து போராட்டத்து
டன் தன்னை ஐக்கியப்படுத்திக்கொள்ளும் அதேவேளை எதிர்கால

Page 3
நலன் கருதியதான அறிவுத்தேடலில் கவனம் செலுத்தவேண்டிய தேவை ஒவ்வொரு மாணவனுக்கும் உள்ளது. பயந்தாங்கொள் ளித்தனமாக ஒதுங்கிக்கொள்வதோ, அல்லது பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் தப்பி ஓடுவதோ வரவேற்கக் கூடிய தல்ல, எமது சமுதாயத்தின் நலன்களுக்கு உகந்ததும் அல்ல.
இடர்பாடுகள் தொடர்கின்றபோதிலும், கல்விக் கண்களை மூடி விட ஆட்சியாளர் சதிசெய்கின்ற போதிலும், இவற்றை முறிய டித்து வெறுமனே சான்றிதழ்களை பெற்றுக்கொள்வதை மட்டும் நோக்கமாகக் கொள்ளாமல் சமுதாயத்தின் தேவை கருதி சமூக உணர்வுடனும். நாட்டுப்பற்றுடனும், கல்வியைத் தொடரவேண் டும். எமது மக்களுக்கு சேவையாற்றுதலே எமது முதற்கடன் என் பதை மனத்திலிருத்தி, தொடருகின்ற அடக்குமுறைகளுக்கு முற் றுப்புள்ளி வைக்கவேண்டும், என்னும் மூர்க்கத்துடன் சமுதாயம் எமது தோள்களில் சுமத்தியுள்ள பொறுப்பை உணர்ந்து நிதானத் துடன் எதிரியின் எதிரில் போரொன்றைப் பிரகடனம் செய்யும் வீரத்துடன் கல்வி தொடரப்படல் வேண்டும். அப்போதுதான் எமது பரம்பரை எம்மால் பெருமை பெறும். சுருக்கமாகக் கூறி ணுல் பண்டைய வரலாறுகளைப் படிப்பது மட்டுமல்ல எமது வேலை, வரலாற்றைப் படைக்கவும் வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் உணரவேண்டும். அதாவது 'கற்பதற்காகப் போராடுவோம். போராடுவதற்காகக் கற்போம்' என்பதை மனத்தில் இருத்தி எமது ஆளுமையையும் ஆற்றலையும் வளர்க்கும் விதத்தில் மண் ணின் மீதான பாசத்தை வெளிப்படுத்தும் வகையில் போராட்டப் பாதையின் ஊடாக கல்வி வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் உழைக்க உறுதிபூண்டு செயற்படவேண்டியது இன்று மாணவர்களினதும் இளைஞர்களினதும் மாபெரும் கடமையாகும்.
‘நாங்கள்? வாசகர் மனங்களில் ஒரு சிறிய இடைவெளியை ஏற்படுத்தி மனம் வருந்த வைத்த மைக்கு "நாங்களும் அந்தக் கவலையில் கலந்து கொள்கின்றது. மீண்டும் தன்னை வெளிக்கொணர் வதன் மூலம் அந்த இடைவெளியை நிரப்புமென ‘நாங்கள்' நம்பிக்கை கொண்டுள்ளது. தொடர்ந்து நாங்களே செழுமைப்படுத்த மாணவர்களது கருத்து வெளிப்பாடுகளே ஆக்கங்களாக நாங்கள்? எதிர் பார்க்கின்றது.
 
 

திருகோணமலை மாவட்டமும்,
IDFGYG) i f2; IIIíb.
பெரும் சான்மை இனத்தினரின் அடக்கி ஒடுக்குதல் என்ற இரும்புச் சங்கிலியை உடைக்கப் புறப் பட்டுள்ளார்கள் எமது மக் கள். இந்தவகையில் ஈழப்போராட்டத்திலே இன்று முக்கிய பிரச் சினையாகவும், கேந்திர ஸ்தானமாகவும், விளங்குவது திருகோண மலே நகரும், மாவட்டமுமாகும். அதிகாரத்தில் இருப்பவர்கள் எமக் கான சுயநிர்ணய உரிமையை வழங்குவதற்கு திருமலையை எண் ணிப்பார்க்க வேண்டியவர்களாயுள்ளனர். இந்நிலையம் வல்லரசு சளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே திருமலை நகரிலும், அதனைச் சூழவுள்ள கிராமங் களிலுமுள்ள தமிழர்களை வெளியேற்ற முயல்கின்றனர். இதனைக் கருவாகக் கொண்டே நடந்ததும், நடந்துகொண்டு வருவதுமான வன்முறைச் சம்பவங்கள் அமைந்துள்ளன. இங்குள்ள தமிழர்களை
வெளியேற்றுவதன் மூலம் இம் மாவட்டத்தினை ஒரு தனிச் சிங்
கள மாவட்டமாக மாற்றுவதுடன், திருமலை நகருக்கென தனி யானதொரு நிர்வாகத்தினை மேற்கொள்ளவும் அரசு திட்டமிட்டு இயங்கிவருகிறது. கடந்த வன்முறைச் சம்பவங்களால் பல கிரா மங்களிலிருந்து மக்கள் வெளியேறியுள்ளார்கள். அந்த நிலையில் மக்களோடு மாணவர்கள் அகதிகளாகவும், பாடசாலைகள் இயற் கையின் உறைவிடங்களாகவும், அகதிகளை நிரப்பியுள்ள கட்டிடங் களாகவும் காணப்படுகின்ற துர்ப்பாக்கிய நிலை என்றுதான் மாறும்.
திருமலை மாவட்டத்தில் நடந்த இராணுவக் கெடுபிடிகளால் முற்ருக அழிக்கப்பட்டு மக்கள் வெளியேற்றப்பட்ட கிராமங்கள் மூடப்பட்டுள்ள பாடசாலைகள், அகதி முகாமாகவுள்ள பாடசாலை கள், அகதி முகாமாக இரு தும் பகுதிநேரமாக இயங்கும் பாட சாலைகள் என்பன பற்றிய லிபரங்கள் கீழுள்ள அட்டவணை மூலம் அறிந்து கொள்ளலாம்.

Page 4
ngig) gora
心g@(ஜeகுgp羽†T-Tfto(g)yog og I | @@@Q29领g)41 LIÊqøgĪ “Z I Q2宿领q,s)=g)hosē Ģųoove · 91 g)g7%z7홍=pfīqī£ o gr Q2密密gp?g7羽seo eo posso@-ię - ot qısẽg7羽@g@1țeos@s@ra aeg - gfīlnogog) og 1 qiseg7羽总g@Apogora aeg – golofsson-Two-Too og 1 耐腐蚀Q心電@qiffesfio) (ps)(? - II C心磅6@@@g7)Ķī£ 49 voiți so o or Q心暗{@@@@ Q的宿每 sĩ sir-III-a - 6 q sẽ qs=尉官@Ļoøog)ņidos, o ç @2宿领qis,á劑19egori aeg - gigi uogorgio · ... | Q2宿命@@@gn羽 -que@ișori og Q%官@*匈g)¿irmų99 soo og qs=ரயில்网)ựsones@udess of @@@qs=g)googo@rı (logo - †1775īITIÚŤhqi@ og 德g@耐9密p羽 si urnų, og 念g@@@@qiffe†i urođơn 109 gosto) or (logijo-ilir.*轉硫的可*sesijoillae --Tarī£đứrī£ųoreo poșta

·恩7归5岛
LLLLSY LLLLLLLLS0LL 0L0YSL0 L0KTY LLL0 KZ LL0K LK LSZS YY0 SLKYY LLLL LLL LL 0 SLL0YSL0L0
Apologorie) șaseti@ano) “qirmao urm&###eofī) iego o dogans)g
égö Q29@ Q29盆 (ஜ(தஞ் gogosố
dog số Q) %g@ Q2宿画 Q姆9领 Q姆9@ (eggplő Q2督佥 @@@ 心(g@
愈演愈 心g@ Q2演愈 8%) 总览领
羽
qisa
Q)
C恩g@ agosố ao?qosố (ogąosố ao gồ Q%9@ R2宿愈
o se o qī Ļfìsı sog)
g7羽 qae qiff= qs= qisē q sẽ qs= qisqisắ>
qoffe qisa qī£e qiso qafïa g)
* ( ur. ‘o ‘o ‘ko) HQs)Ųnthoggolpo
* Igogoșae soustri ogg 10.ogog soso), f) * #g qiri urtessos (f) qo osíðnetop g g q7-7, illuosog)? Öffego uso - g g quae uerosofi,asoos os too sao@%i ç's kmgたも*『s 0g 4, gifī - 6 g afgø@ri qiego:) og qi11t, rī£ © ® ° Z.z. qo- (g ști-Țiri - 9g Ļorto(o)fTŲJITQ) * g g se@@owego, Ti • Þz 4yogī orķī£ ogg gogogo uo@) o 8 g og g qiqalo 1990-ig) o Ig sooftog)ŵrgio o 0:3 || gogostolioso) & * 8. *TI 6 I

Page 5
மேற்குறிப்பிட்ட விபரங்களின் மூலம் திருமலை மாவட்ட மாணவ சமூகம் தங்களது ஒருநேர உணவுக்காக அகதிகள் முகா மை எதிர்பார்க்கும் சோகமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதை அறிகிருேம். இந்நிலையில் மாணவர்கள் படிப்பதற்காகப் போரா டுவதா? ஒருநேர உணவுக்காகப் போராடுவதா? என்ற நிலையும், வாழ்வே சோக வரலாருக மாறியுள்ள நிலையையும் நாம் எப் போது மாற்றப்போகிருேம். இந்த நிலைக்கு தமிழ் பேசும் மாண வர்கள் எல்லோரும் மாறுவோமா? அல்லது அதை மாற்று வோமா? என்பதை காலந்தான் பதில் கூறியாக வேண்டும்.
இந்த நெருக்கடியான காலகட்ட க்தில் ஒரளவுக்கு இயங்கு கின்ற பாடசாலைகளிலும் ஆசிரியர் பற்ருக்குறை, மற்றும் அசெள கரியங்கள் காணப்படுகின்றன ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் இராணுவத்தினரால் தாக்கப்பட்டும் தொடர்ந்து பிரச்சினையான இடங்களில் கடமைபுரியப் பயந்தும் இடமாற்றங்களை வேண்டி நிற்கின்றனர். மேறகுறிப்பிட்ட இடங்களில் தொடர்ந்தும் மாண வர்கள் துன்புறுத்தப்பட்டுக்கொண்டு வருகின்ருர்கள்.
மக்கள் அகதிகளாக்கப்பட்ட நிலையிலுர், மாணவர்கள், இளைஞர்கள் இராணுவத்தினரால் கைது செய்யப்படுகிருர்கள். அவர்களின் கையில் அகப்படாமல் தப் வதற்காக சாடுகளைத் தங்களது அரண்களாக தேர்ந்தெடுத்துள்ளார்கள். இந்த துர்ப் பாக்கிய நிலையில் மாணவர்கள் உண வு, உடை, மருத்துவம் போன்ற இன்னபிற வசதிகள் ஒன்றுமில்லாமல் அஞதைகளாக கல்வி கற்க முடியாமல் உள் ளார்கள்
தொடர்ந்து பாடசாலைகள் மூ ப்ப ம்ே, அகதிகள் முகாம் களாக மாறிவருவதும், ஆசிரியர்கள் பற்ருக்குறையும், ஆசிரியர், மாணவர்கள் கைது செய்யப்படுவதும், பாடசாலை செல்லமுடி யாதநிலையில் ஆசிரியர்கள். மாணவர்கள் இருப்பது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்தும் இடம் பெற்றுக்கொண்டு வருகின்றன. குறிப்பிட்ட ஒரு காலத்தின் பின் னர் திருமலை மாறட்டத்தி லுள்ள தமிழ் பேசு ம் மாணவர்கள் கல்வி பயில இ ய லா த நிலை க் கே கள்ளப்படுவார்கள். மாணவர்கள் என்ற ரீதியில் நாமும், தமிழ் பேகம் மக்களின் நலனில் அக்கறையுள்ள எவரும் இந்த நிலையினைக் கண்டு மெளனமாக இருக்கமுடியாது. நாளை நாட்டை வழிநடத்தும் இன்றைய மாணவர்கள் நவபா சிச அர சால் திட்டமிட்டு “பகடைக் காய்களாக' ஆக்கப்படுகின் ருர்கள். இந்க நிலையில் இன்றைய மாணவர்கள் தங்களுக்கு எதிரான சக்தியோடு போராடிக்கொண்டு படிக்கவேண்டிய நிலைக்குத் தள் ளப்படுகின்ருர்கள்.

ஆத்ம
என் சிந்தைகள் என்ன குற்றம் செய்தன?
நானே அவற்றைச் சிறையிலிட:
களிமண்ணுற் செய்த விளையாட்டு வாள் என்ருல் அவற்றைக் கண்ணுடிப் பெட்டியுள் காட்சிக்கு வைக்கலாம் கூரியவாளாய் மின்னுகின்றபோது.! என் சிந்தைகள் என்ன குற்றம் செய்தன?
நானே அவற்றைச் சிறையிலிட!
HO
உலக வீதிகளில் உலவ விடுவதற்காக என் சிந்தைகளுக்கு எழுத்துக்கால் பூட்டுகிறேன் அநீதிகள் நுண்ணுயிர்க்சிருமிகளாய் பல்கிப் பெருகுகின்றன.
தாகம்
அவற்றை அழிக்கத் துடிக்கின்ற ஆதர்ஷ இலக்கை நோக்கி என் சிந்தனைக்கு முகவரி எழுதுகிறேன்.
-O- நாளை. என்னை நோக்கி
எறியப்படும் கூரிய கற்கள்
நிச்சயம் மலையாக உயரும்
என் நெஞ்சத்தின் உறுதியான கால்கள் அந்த மலைமீது நிதானத்துடன் நிமிர்ந்து நிற்கும். அப்போது கிடைக்கின்ற கரகோஷங்கள் என் ஆத்மாவின் தாகத்திற்கு நீராகும்.
بیسO
7 -

Page 6
IDGDI GIIIG5 fo EFD) பொருளாதார சும்ையைத் தாங்குமா?
நீர்வளம்
(2) புத்தளம் - வனத்தவில்லு பிரதேசம்
புவிப் பெளதிகவியல் தொழில்நுட்ப முறைகளையும், புவிக் காந்தவியல் நுட்பமுறைகளையும் பயன்படுத்தி சமீபகாலத்தில் இப் பகுதியின் தரைக்கீழ் பாறைப்படைகளின் இயல்புகள் ஓரளவுக்கு அறியப்பட்டுள்ளன. இவற்றுடன் இப்பாகங்களின் விமானப்படங் களை ஆராய்ந்தவிடத்து தரைக்குக்கீழ் பாறைப்படைகளின் தன்மை இவற்றிலேற்பட்டுள்ள பிளவுகள், மேலுயர்த்துகைகள் என்பன பற்றியும் புவிவெளியுருவவியல் பற்றியும் தகவல்கள் பெறப்பட் டுள்ளன. தரையின் கீழுள்ள இத்தகைய அமைப்பின் காரணமாக இப்பாகத்தில் சிறந்ததொரு நிலநீர் தாங்குவடிநிலம் அமைந்து காணப்படுகின்றது.
இப்பாகத்தின் மேல் மண்படையில் ஓர் நிலநீர்வலையம் . அமைந்து காணப்படுகின்றது. எனினும் இது தரத்தில் குறைந்த நீர்த்தன்மையுடையதாயும் மழைப் பருவத்தின் பின் விரைவாகக் குறைவடைந்துவிடக் கூடிய தன்மையையும் கொண்டுள்ளது.
மேற்பரப்பின் கீழ் ஏறத்தாழ 50 மீற்றர் ஆழத்திற்கு அப் பால் இப்பாகத்தில் காணப்படுகின்ற ஜாராசிக் காலத்துக்குரிய (URASSLC) மன்னுர் மணற்கற்படைப்பாறை அமைப்புத்தான் சிறந்த நிலநீர்த்தாங்கு குகைகளை (AQUIFERS) உடையதாகக் காணப்பருகின்றது. இதுவரை இப்பாகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலிருந்து, ஏறத்தாழ 200 அடி ஆழத்தில் ஆட்டீசியன் (ARTESIAN) தன்மையான நிலநீர்த்தாங்கு குகை அமைந்தி ருப்பதை அறியமுடிகின்றது. இப்பாகத்தில் அமைக்கப்பட்ட சில குழாய்க்கிணறுகளில், மேற்குறித்த ஆழத்திலிருந்து தரையின் மேற்பகுதிவரை நீர் மேல்நோக்கி உயர்ந்து வந்ததைக் காணக் கூறியதாயிருந்தது. ஆழத்திலிருந்து மேல்நோக்கி உயர் ந் து வந்த நீர் இலவன்குளம், காரைதீவு போ ன் ற பகுதிகளில் குழாய்க்கிணறுகள் அமைக்கப்பட்டபொழுது பெ ரும ள வுக் கு 2-Li if ibg 6 lib5g. (OVERFLOW)
ഇ. 8 മ്മ

இவ்வாறு அமைக்கப்பட்ட குழாய்க்கிணறுகளில் குறிப்பாக இப்பிரதேசத்தின் வடகிழக்குப் பாகங்களில் அமைக்கப்பட்ட கிண றுகளிலிருந்து நிமிடத்திற்கு 300 கலன் நீரை வெளியேற்றக் கூடியதாயிருந்தது. பொதுவான ஒரு மதிப்பீட்டின்படி இப்பாகத் தில் 20,000 ஏக்கர் அடி நீர் கிடைக்கக் கூடியதாயிருக்குமென்று மதிப்பிடப்பட்டுள்ளது.
வனத்தவில்லு பிரதேசத்திற்குத் தெற்காயுள்ள மதுரங்குளி என்னுமிடத்திலும் நிலநீர்த்தேட்டம் சம்பந்தமான முயற்சிகள் வெற்றியளித்து, இன்று பல அலுவலகங்கள் குழாய்க்கிணறுக ளின் மூலம் இந்நீரைப்பெற்று பயன்படுத்துகின்றன. ஏறத்தாழ 120 அடிக்கும் 230 அடிக்குமிடைப்பட்ட ஆழத்திலேயே இப்பா கத்தில் தரத்தில் சிறந்த நன்னீர்ப்படை காணப்படுவதாகவும், இதற்கு மேலும் கீழும் உவர்நீர்ப்படை அமைந்திருப்பதாகவும் அறியப்பட்டுள்ளது.
(3) மன்னுர் - பூநகரி
ஏறத்தாழ வனத்தவில்லு பாகத் தி ன் பாறையமைப்பை ஒத்த தன்மையே இங்கும் காணப்படுகின்றபொழுதிலும், இங்கு ஆட்டீசியன் தன்மையான நிலைமைகளைக் காணக்கூடியதாயில்லை. வனத்தவில்லுக்கு வடக்காகவுள்ள இக்கரையோரப்பிரதேசத்தில் ஏறத்தாழ 600 சதுர மைல் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளையும், 17 நீர்த்தேட்டக் கிணறுகளையும், 23 பரீட்சார்த் தக் கிணறுகளையும் பயன்படுத்தி இப்பாகத்தில் நிலநீர்த்தாங்கு குகை பற்றியும், பெறக்கூடிய நீர்பற்றியும் அறியப்பட்டது.
இவ்வலையம் கடல்நீர் ஊடுருவலினுல் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலைமைக்கு இப்பாகத்தின் நீர்ப்புவிச்சரிதவியற் காரணிகளே (HYDROGEOLOGIC F A C T O RS) e qu'il 160DLULI TG566ir GMTGOT. எனினும் முருங்கன், முழங்காவில் ஆகிய பாகங்களிலுள்ள நில நீர் விருத்தி செய்யப்பட்டு நீர்ப்பாசனத்திற்கு இன்று பயன்படுத் தப்படுகின்றது. முருங்கனில் அமைக்கப்பட்ட 8 அங்குல விட்டத் தையும் 200 அடி ஆழத்தையுமுடைய 12 கிணறுகள் நிமிடத்திற்கு 100 - 200 கலன் நீரை வெளியேற்றக் கூடியனவாயிருக்கின் றன. இப்பிரதேசத்தில் நீர்ப்புவிச்சரிதவியல் நிலைமைகள் இன்னும் அதிகளவு நிலக்கீழ் நீரைப்பெறக்கூடிய சாதகமான நிலைமைகளைக் கொண்டுள்ளன.
r 9 ம

Page 7
(4) பரந்தன் - முல்லைத்தீவு வலையம்
சமீப காலத்தில் பரந்தன் தொடக்கம் புதுக்குடியிருப்புப் பகுதிவரை மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளிலிருந்து ஏறத்தாழ 200 தொடக்கம் 800 அடி ஆழம் வரையிலான தடிப்பையுடைய கரையோர அடையற்பாறைப் படை இருப்பதாக அறியப்பட்டுள் ளது. புதுக்குடியிருப்புக்கு வடக்காக இரு இடங்களில் மேற்கொள் ளப்பட்ட இருதுளைகள் (DRILL HOLES) 750 அடி ஆழத்தி லேயே அடித்தளப்பாறையை அடைந்துள்ளன. மே ற் குறித்த அடையற்பாறைகள் உயிர்ச்சுவடுகளைக் கொண்டுள்ள சுண்ணும்புக் கல் லி னு லும், மணற்கல்லினுலும் சேர்ந்தமைந்துள்ளமையினுல் தரைக்கீழ் நீர் வாய்ப்புகளைப் பெருமளவுக்குக் கொண்டுள்ளது. பரிசோதனை முறையில் மேற்கொள்ளப்பட்ட 22 துளைகளிலிருந்து (37 விட்டமுடைய) மேற்பரப்பின் கீழ் 450 அடிக்கும் 580 அடிக் குமிடைப்பட்ட ஆழத்தில் மிகப்பரந்த ஓர் நீர் வடிநிலம் (EXTENSIVE BASIN) இருப்பதாக அறியப்பட்டுள்ளது. மேற்படையி லுள்ள பாறைப்படைகளின் அமுக்கத்தின் காரணமாக மேற்குறித்த ஆழத்திலுள்ள நீர் மே ற் ப ர ப் பு வரை எழுவதையும் காண முடிந்தது.
மேற்குறித்த பிரதேசங்களில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள் நிலநீர் பற்றி பரந்தளவிலான ஓர் நிலைமையையே தெரிவிக்கக் கூடியனவாக இருக்கின்றன. இத்தகைய ஆராய்ச்சி கள் எங்கெங்கு நிலநீர் அமைந்து காணப்படுகிறது என்பதையும், பிரதேச ரீதியில் எவ்வாறு அமைந்து காணப்படுகின்றது என்ப தையுமே தெளிவுபடுத்துவனவாக உள்ளன. எனினும் இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து மேலும் விரி வான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. இத்த கைய ஆராய்ச்சியில் ஈழப்பகுதியிலுள்ள ஆறுகளிலிருந்து வருடாந் தம் வெளியேற்றப்படுகின்ற நீரினளவு, வருடாந்தம் பயன்படுத் தப்படுகின்ற நீரினளவு, ஊடுவடிதலின் மூ ல ம் நிலத்தின் கீழ் சென்றடையும் நீரினளவு, ஆவியாக்கம் ஆவியுயிர்ப்பு மூலம் இழக் கப்படுகின்ற நீரினளவு என்பன பற்றி தரவுகள் இனறியமையா தன. இத்தகைய தரவுகளைப் பெறுவதற்கு மேலும் அதிகளவு பரிசோதனைக் கிணறுகள் அமைக்கப்படுவதும், இவற்றிலிருந்து நீர்மட்டம், நீரின் தரம் பற்றி ஒழுங்கு முறையான தரவுகள் பெறப்படுவதும் அவசியமாகும். இத்தகைய தரவுகளைப் பெறுவ தன்மூலமே அவ்வப்பகுதிகளின் நிலநீர் இருப்புபற்றி மதிப்பிடவும், இதனை வருடாந்தம் எந்தளவுக்குப் பயன்படுத்தமுடியும் என்னும் அளவீடுகளை மேற்கொள்ளமுடியும். (தளிர் டிசம்பர் 85 இதழிலும் இக்கட்டுரை பிரசுரமாகியுள்ளது.)
- 10 aliua

தியாகங்கள்
திசைமாறின
"ஒரு ரத்தப்புரட்சி வெடிக்கும் - வறுமைத்துயரைத் துடைக் கும்' எங்கோ தூரத்தில் எழுந்த பாடல் ஓசை என்னைச் சிறைப் படுத்தியது. பாடலைத் தொடர்ந்து வந்த அறிவித்தலை கிரகிக்க முடியாதளவுக்கு நண்பன் தயாளனின் நினைவுகள் அலையாய் மோதின. அநீதியைக் கண்டு சகிக்கமாட்டாத இதயம்; ரொம்பவும் இளகின மனசு, உடல் உழைப்பொன்றையே உயிர்வாழ்க்கைக்கு ஆதாரமாகக் கொண்ட குடும்பத்தில் பிறந்த அவன் இயல்பாகவே ஒரு சமத்துவ சமதர்ம சமுதாயமொன்றைக் கனவாக வளர்த்து வந்தான். அவன் வளர்ந்த சூழல் முற்றிலும் மாருனதாகவே இருந்தது. அவனது தந்தைக்கு மட்டுமே வேதனம் வழங்கும் மில் முதலாளி தயாளனையும் ஒரு அடிமையை நடத்துவதுபோல தொட் டாட்டு வேலைகள் செய்விப்பார்,
திருகோணமலையில் அரச கூலிப்படைகளின் துப்பாக்கிச் சூட் டுக்குப் பலியான அவனது தந்தையின் இழப்பை எண்ணிக் குழம் பியிருந்த அவனின் தாய்க்கு; அவனது செய்கை மேலும் அதிர்ச் சியைக் கொடுத்தது. திடீரென ஒரு நாள் சுற்றுலா ஒன்றிற்காக யாழ்ப்பாணம் போகிறேன் என்று போனவன் அதே போக்குத் தான்! விடுதலை இயக்கமொன்றின் ஆயுதப் பயிற்சிக்காகவே செல் கிறேன் என்று உண்மையைச் சொல்லிப் பிரியவும் மனவலிமை யின்றி, சொல்லாமல் விட்டோடவும் முடியாமல் தவித்தபோது தான் எனது உதவியை நாடினன். தனது நிலையைத் தெளிவாக எழுதி என்னிடம் தந்து; தாயினதும், சகோதரியினதும் மனதைத் தேற்றிச் சமாதானப்படுத்தும் சிரமமான பொறுப்பை என்னிடம் ஒப்படைத்துவிட்டு நெஞ்சை உரமாக்கிக்கொண்டு பிரிந்து சென் ருன், கண்ணிரில் நனைந்த அந்தக் கடிதத்துண்டும்; அவன் அடிக் கடி அபிநயித்துப் பாடும் அந்தப்பாடலும் என்கண்முன்னே அவனை நிற்கவைக்கும்.
தயாளன் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவனது தாயைச் சந் தித்த நான்: ஈற்றில் அவனின் குடும்பத்தோடு ஒன்றித்துப்போ னேன். தயாளனைத் தொடர்ந்து நானும் யாழ்ப்பாணத்திலேயே தங்கவேண்டியிருந்த போதிலும்; திருகோணமலைக்குப் போகும் போதெல்லாம் அவனது வீட்டுக்கும் போவது என் வழக்கமாகி, விட்டது.

Page 8
சமூகத்தில் இன்னும் சில இடங்களில் காணப்படுவதுபோலவே யாழ்ப்பாணத் தெருக்களிலும் ஏற்றத்தாழ்வுகள் அதிகம். பட்ட ணத்துக்கே உரிய பாணியில் 'நான் முந்தி நீ முந்தி' என்று வாகனங்கள் போட்டியிட்டுக்கொண்டு செல்லும்.
**வர வர இந்தப் பள்ளிக்கூடப் பொடியள் வலுமோசம் பாருங்கோ உதுகளோடை மணிசர் சைக்கிலோட ஏலாது - குறுக் கும் மறுக்குமா ஓடுவாங்கள்’’ என்று ஒரு வயோதிபர் கூறக் கேட்டேன். அதைப்பற்றி எனக்குள்ளேயே விமர்சித்துக் கொண்டு வந்த எனது சைக்கில் திடீரென்று பள்ளமொன்றினுள் விளவே சைக்கில் ரயரும் வெடித்துவிட்டது.
ரயர் வெடித்த சத்தம் அவ்விடத்தைப் பெரிதும் அமர்க்களப் படுத்திவிட்ட்து. தெருவில் ஆங்காங்கே நின்று பலர் சம்பவங்களை அரசியல்மயப்படுத்திக்கொண்டு நின்ருர்கள்.
**இது ஏ. கே. சத்தம்தான்' என்று கைரேகைபார்த்த சாத் திரி மாதிரி அடிச்சுச் சொல்லிவிட்டு ஓடிய ஒரு சிறுவனத் தாய் தூக்கி முத்தமிட்டாள்.
**வித்தியாசமா ஒண்டுமில்லைப் பாருங்கோ. சும்மா ரயர்தான் வெடிச்சது' என்று நாணிக் குறுகி நிற் க வேண் டி ய தாய் ப் போயிற்று.
*குஞ்சு குருமானிலையிருந்து குமருகள் கிழடுகள் வரைக்கும் ஆயுதங்களைப்பற்றி - அதுகளின்ர பிரயோகங்களைப்பற்றி இருக்கிற அறிவு; அரசியல் சமூகக் கருத்துகளிலை இல்லை. இதாலைதான் எங்கடை சமுதாயம் இன்னும் பின்னுக்கு நிக்கிது. ' என்று தலை யங்கம் சொல்லாமல் பிரசங்கம் வைத்தார் ஒரு பெரியவர்.
'இதிலை நிண்டால் ஆளுக்கு என்ன நடக்குமெண்டு சொல் லேலாது. அடுத்த சந்தியிலை நிண்டு கதைப்பம் - ஏதும் பிரச்சனை யெண்டால் ஒடவசதியாயிருக்கும்' என்று வீதியின் மறுபகுதி யைப் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தினர் பேச்சாளர்க ளில் ஒருவர்.
'ஏன் ஆமி வந்திட்டிதே'
கம்பீரமாகப் பேசிக்கொண்டு நின்ற ஒருவர் சுருதியை நன்ரு கக் குறைத்து 'இயக்கப் பொடியளுக்கை ஏதோ பிரச்சினையாம். சந்தையடியிலை சுடுபட்டவையாம். நாலு பிரேதமும் கிடக்கு தெண்டு கேள்வி. சத்தஞ்சந்தடி குறைஞ்சு மெல்லப்போய்ப் பாப் பமெண்டு வெளிக்கிட உம்மட ரயர் வெடிச்ச சத்தத்திலை மருண்டு போனம்' இரகசியமாகச் சொன்னூர்.
- 12 ar

'உந்த ரோட்டின்ர விசித்திரத்துக்கு ரயர் வெடிக்காமல்தான் என்ன செய்யும். தூரமெண்டாலும் பரவாயில்லை மெயின்ருேட் டாலை போயிருக்கலாம்' என்று ஒருவர் அபிப்பிராயம் தெரிவித் தார்.
'ஆர்பெத்த பிள்ளையளோ - கடவுளே! எனக்கு வயிறு பத்தி யெரியிது. எனக்கே இப்பிடியிருந்தால் அதுகளைப் பெத்ததுகளுக்கு எப்பிடியிருக்கும்' என்று ஒப்பாரி வைத்தாள் சந்தைப்பக்கமிருந்து வந்த ஒருத்தி,
"அவங்களும் என்ன அநியாயம் செய்தாங்களோ- ஆருக்குத் தெரியும். உப்பிடிப் பிலத்துக் கதைச்சா எங்களுக்கும் ஆபத்து' என்ருர் ஒருவர்.
'உங்களுக்கு என்ர மனம் படுகிற பாடு எங்கை தெரியப் போகுது. பாம்பின் காலைப் பாம்புதானறியும். ஒரு தாய்க்கு குளப் படிக்காரப்பிள்ளையும் பிள்ளைதான். என்னதான் அநியாயஞ் செய் தாலும் மரணந்தான் தண்டனையே’’ அந்தத் தாய்மையின் தவிப்பு என் நெஞ்சை நெருடியது. இப்படியான குற்றச்சாட்டுக்களைப் பகி ரங்கப்படுத்துவதினுல் ஏற்படும் விளைவுகளையிட்டுச் சிந்தித்த சிலர் நழுவத்தொடங்கினர்.
நானும் சைக்கிளை இழுத்துக்கொண்டு வந்தபாதை வழியே திரும்பினேன். அறைக்கதவைத் திறந்தபோது கசங்கியதோர் கடி தத்துண்டு காலுக்குள் கிடந்தது. யன்னலூடாக எறியப்பட்டிருக் கலாம். சாதாரண கடிதங்களிலிருக்கும் சம்பிரதாயச் சோடனைகள் இன்றிய அக்கடிதத்தைத் திரும்பத்திரும்ப வாசித்தேன்.
'அன்புத் தோழா !
இயக்க மோதலுக்குப் பலியாகாமலிருப்பதற்காக நாம் இடம்பெயர வேண்டியுள்ளது. இராணுவத்துடனுன மோதலில் ஏற்படும் எங்கள் ஒவ்வொருவரினதும் மரணமும் எம் இன ஒற் றுமைக்கும் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற் கும் ஒரு உந்து சக்தியாகும் என எண்ணி இறுமாந்திருந்தோம். ஆனல் இன்று எம்மிடையேயான அக முரண்பாடுகளையும் ஆயுத முனையில் தீர்க்க முற்படும் போக்கு மக்கள் மனதில் மாறுபா டான கருத்துக்களை விதைத்து விளைவாக மக்களை வெறும் பார் வையாளராக்கும் நிலையையே ஏற்படுத்தும்.
உமக்கு அதிர்ச்சியாகத்தான் இருக்கும்! சாந்த ன் இறந்து விட்டான். தனது குடும்பச் சுமையையும் சுகங்களையும் ஒன்ருகவே துறந்துவிட்டு தன் தாய் தந்தையர் அன்புடன் அழைக்கும் தயா

Page 9
ளன் என்ற பெயரையும் சாந்தன் என்று மாற்றிக்கொண்டு எம் முடன் இணைந்த அவன் சகோதர இயக்கத்தின் இராணுவ நட
வடிக்கைக்குப் பலியாகிவிட்டான்.
அவன் அராஜகவாதத்திற்குப் பலியானன் என்பதை அந்த வீரத்தாய்க்குத் தெரியப்படுத்தக்கூடாது. இதுதான் அவனின் இறுதி ஆசை அவனது தந்தை திருகோணமலையில் அரசசுடிலிப் படைகளின் தும்பாக்கிச் சூட்டுக்குப் பலியாகிய அந்த உணர்ச்சி யில் தயாளன் சாந்தணுகி எம்முடன் இணைந்தான். ஆணுல் தயா ளனின் உயிரைப் பறித்தவர்களை தாய் தெரிந்து கொண்டால் அவளது உணர்ச்சிக்கு - ஆக்ரோஷத்திற்கு வடிகால் தான் என்ன? என்னுல் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.
எமது சமுதாயத்தின் இன்றைய யதார்த்தநிலை ஒரு சோஷ லிசப் புரட்சியின் அவசியத்தினை உணர்த்தப் போதியதாக இருப் பினும் கூட, மார்க்ஸ்சையும் லெனினையும் பெயரளவில் மட்டும் தெரிந்துகொண்டு மார்க்சிய - லெனினிய சித்தாந்தத்தில் தெளி வின்றி; துப்பாக்கி முனையால் மட்டும் அரசியல் வரலாறு அமைப் போம் என எண்ணியிருந்தோம். சுயவிமர்சனம் செய்வது கால விரயத்தையேற்படுத்தும் எனவும், அரசியல் மயமாக்குதல் என் பதை அவசியமில்லாத அலட்டல் என்றும் எண்ணியதால் இன்று பெறுமதிமிக்க உயிர்களை இழந்து நிற்கிருேம்.'
வாசித்து முடித்தபோது முகம் தெரியாத - அனுபவங்களால் முதிர்ந்துவிட்ட ஒரு இளைஞன் என்முன் தெரிந்தான். இந்தச் சுடலை ஞானம் ஒரு யுகப்புரட்சிக்கான வித்தாகட்டும்! பொருத்த மில்லாத பாதை என்று தெரிந்திருந்தும் பாதித்தூரம் வந்துவிட் டேனே என்பதற்காக மீதிதூரத்தையும் கடக்க எண்ணி இடையில் ரயர் வெடித்ததால் பாதையை மாற்றிய சம்பவத்தை இந்த நண் பர்களின் நிலையை ஒப்பிட்டுப்பார்த்தேன். பாவம்! தயாளனுக்குத் தான் தன் பாதையை மாற்றக்கூட ஒரு சந்தர்ப்பமில்லாமல் போயிற்று,
சில தோழர்கள் அக, புற நிலைமைகளைப் புறக்க னித்து, புரட்சியில் அவசரத்தன்மை என்ற நோயால் பீடிக்கப்படுகின்றனர். இவர்கள் பொதுமக்கள் மத்தியில் சிறிய, நுணுக்கமான வேலைகளைச் செய்ய முயற்சி எடுக்க மாட்டார்கள். மாருக பெரியவிசயங்களை மாத்திரம் செய்ய விரும்புகின்றனர். அவர்கள் பிரமைகளை மிகுதியும் கொண் டிருக்கின்றனர். இது கண்மூடித்தன வாதத்தின் மிச்ச சொச்சமாகும். - Lor ge -
مناسب 4 || || -سسس

சர்வதேச அரங்கில் GUYS
ஈழத்தின் மாணவ இளைஞர் பொதுமன்றமானது (GUYs) ஈழத்திற்கு வெளியேயும் தனது செயற்பாடுகளை துரிதப்படுத்தி வருகின்றது. குறிப்பாக இந்தியாவிலுள்ள பாடசாலைகள், கல்லூ ரிகளிலும், இந்தியாவிலுள்ள பிறநாட்டு மாணவர் ஸ்தாபனங்க ளுடனும் சேர்ந்து பலவேலைத்திட்டங்களை நிறைவேற்றி வருகின் றது. இவற்றைவிட ஆசிய மாணவர் ஒன்றியத் (ASA) தில் உறுப் புரிமை பெற்றுள்ளது. மேலும் பாலஸ்தீன் மாணவர் பொதுமன் றம் (GUPS), பாலஸ்தீன இளைஞர் ஒன்றியம் (PYO), சூடா னிய மாணவர் ஜனநாயக முன்னணி (D. P. S. S.), பிலிப்பினே மாணவர் சங்கம் (LFS) போன்ற நிறுவனங்களுடனும் தனது இணைப்பை வலுப்படுத்திக் கொண்டுள்ளது. தொடர்ச்சியாக பிற நாட்டு மாணவ அமைப்புகளின் மகாநாடுகளிற் கலந்து கொள் ளவும், உறவுகளைப் பலப்படுத்தவுமான அழைப்புகள் வந்துகொண் டிருக்கின்றன. இத்தகைய தொடர்புகளைக் கொண்டு சர்வதேச அரங்கில் ஈழவர் போராட்டம் பற்றியும், பூரீலங்கா அரசின் ஒடுக் குமுறை பற்றியும் பிரச்சாரங்களை மேற்கொள்வதனுல் பூரீலங்கா அரசிற்கு பிறநாட்டு அமைப்புக்களின் எதிர்புக் கடிதங்கள் குவிந்து கொண்டேயிருக்கின்றன. வெளிநாட்டு பிரசாரங்களின்போது கருத் தரங்குகளும் இராணுவ அடாவடித்தனங்கள் சம்பந்தமான வீடியோ கண்காட்சிகளும், GUYS ன் வெளியீடுகளும், ஏனைய ஆவணங்க ளும் விநியோகிக்கப்படுகின்றன.
கடந்த தைமாதத்தில் சென்னையில் நடைபெற்ற பாலஸ்தீன் மாணவர் பொதுமன்றம் (GUPS) நடாத்திய பாலஸ்தீனப் புரட் சியில் 21 வது ஆண்டுவிழாவில் GUIY8 உம் கலந்துகொண்டது. இந்நிகழ்ச்சியில் ஈழப்போராட்டத்தில் மாணவர் பங்களிப்பையும் பொது எதிரியை நோக்கிய ஈழவர்களினதும், பாஸ்தீனியர்களின தும் போராட்டம் பற்றியும் பல ஆய்வுகள் நடாத்தப்பட்டன. இந்நிகழ்ச்சியில் திரு. ஜெனுர்த்தனன் பிரதம விருந்தினராக அழைக்கப்ப்ட்டிருந்தார். அவர் பேசுகையில் ஈழப்போராட்டத்திற் கும், பாலஸ்தீனியப் போராட்டத்திற்கும் உள்ள தொடர்பையும் குறிப்பிட்டு, அந்த மேடையிலேயே ஈழவர்களின் போராட்டத் திற்குத் தனது ஆதரவைத் தெரிவித்ததோடு, எல்லோரும் அவ தானிக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். மேலும் பாலஸ் தீனிய தூதரக உயர்ஸ்தானிகரும், பாலஸ்தீனியத் தூதரகத்தில் பணியாற்றிய இந்திய உயர்ஸ்தானிகரும் உரையாற்றியமை குறிப்
a 15 .

Page 10
பிடத்தக்கது. விழாவில் GUYs இனுல் வாழ்துச் செய்தியும் வாசிக் கப்பட்டது. அங்கு விநியோகிக்கப்பட்ட GUYS ன் VICTORY TO PALESTINE EELAM 56ðsTGŮ GT3, Tüb 167e5fb5 6 TG86) u jib புப் பெற்றது. அத்துடன் GUYS ற்கு UேPS ற்குமான நட்புறவை மேலும் பலப்படுத்துதற்கான வழிவகைளும் ஆராயப்பட்டது.
அண்மையில் சென்னையில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினுல் ஒழுங்கு செய்யப்பட்ட ஏகாதிபத்திய எதிர்ப்பு- லிபிய ஆதரவு ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் GU S உம் கலந்துகொண் டது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து லிபிய போராட் டத்தை ஆதரித்தும், ஏனைய போராட்டங்களை ஒப்பிட்டும் அச்சி டப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் பல இங்கு GUYS இனுல் விநியோ கிக்கப்பட்டது.
கடந்த தை மாதத்தில் சென்னை பச்சையப்பன் கல்லூரியின் தமிழ்ப் பேரவையின் ஆதரவில் GUIYS இனுல் கருத்தரங்கு ஒன்று நடாத்தப்பட்டது. பல புகைப்படங்கள், இராணுவ அட்டூ ழியங்களைச் சித்தரிக்கும் வீடியோ கண்காட்சி, எமது வெளியீடுக ளின் விநியோகம் ஆகியனவும் இடம்பெற்றன இறுதியில் மாண வர்களினுல் ஈழப்போரட்டம் பற்றிய பல கேள்விகள் எழுப்பப்பட்டு அவற்றிற்கு விடையளிக்கப்பட்டது. பொதுவாக முஸ்லிம் - தமிழ் கலவரங்கட்கு காரணமென்ன? விடுதலை இயக்கங்கள் ஒன்றுபடா மைக்கு காரணமென்ன? இந்திய மாணவர்களின் பங்கு என்ன? பேச்சுவார்தையைவிட்டு ஆயுதபோராட்டத்தை ஏன் தேர்ந்தெடுத் தீர்கள்? போன்ற விஞக்கள் எழுப்பப்பட்டன. UேYS ன் துரித நடவடிக்கைகள் காரணமாகவும் அடிப்படைக் கருத்து ஒற்றுமை காரணமாகவும் PY0 - பாலஸ்தீன இளைஞர் ஒன்றியம் GUYS உடன் இணைந்து சில வேலைத்திட்டங்களை மேற் கொள்ளவிரும்பி அண்மையில் PYO - GUYS சந்திப்பு நடைபெற் றது. இதில் பல ஆக்கபூர்வமான விடயங்கள் செய்வதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டன. இதனைவிட சூடானிய மாண வர் ஜனநாயக முன்னணியின் (D. P. S. S.) 32 வது ஆண்டு விழாவில் GUIYS உம் கலந்துகொண்டது. இங்கும் ஈழம் சம்பந் தமான புகைப்படங்கள் வெளியீடுகள் GUYS இனுல் விநியோகிக் 65 LJ LJL LL6OT ,
GUYS ன் இந்நடவடிக்கைகளானது சர்வதேச அரங்கில் ஈழப் போராட்டத்தைப்பற்றிய பரிமாணங்களை வெளிக்கொணர்வதோடு, ஈழப்போராட்டத்திற்கான சர்வதேச அங்கீகாரத்தைப் பெறுதற்கும் பங்காற்றிவருகிறது. அதுமட்டுமல்ல ஏனைய ஒடுக்கப்படும்மாணவ சமுதாயத்தினதும், மக்களினதும் பிரச்சனைக்காகக் குரல் கொடுத்து வருகின்றது. இப்பணிகளை செவ்வனே செய்துமுடிக்க தொடர்ந் தும் GUYS தனது திட்டங்களை வகுத்துள்ளது.
i 16 i

lfdúÉGI) IDIIII í Féld;ú (LFS)
பிலிப்பைன்சிலுள்ள மாணவர் இயக்கங்களிலும், ஜனநாயகத் திற்காக போராடும் துறையிலும் இப்பிலிப்பினுே மாணவர் சங் கம் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. அண்மையில் இச்சங்கம் தனது எட்டாவது வருடாந்த மகாநாட்டைக் கொண்டாடியது. இன்று உலகிலுள்ள மாணவர் சங்கங்களுள் பிலிப்பினுே மாணவ சங்கம் அதிக பலமுள்ளதும் செல்வாக்குள்ளதாகவும் இருக்கிறது. பின்வரும் பேட்டி இம்மாணவ மன்றத்தின் நோக்கம், அரசியல் நிலைப்பாடு, கொள்கை விளக்க ம் போன்றவற்றை விரிவாக விளக்கும்.
* பிலிப்பினுே மாணவர் சங்கம் என்றல் என்ன?
(LEAGUE OF FILIPINO STUDENTS இது ஒரு தேசிய வெகுஜன ஸ்தாபனம். இது மாணவர் மத்தியில் அதாவது ஆரம்ப, மத்திய மேல் மாணவர்களது ஸ்தா பனமாக விளங்குகின்றது. இது கல்விக் கூடங்களில் 231 கி2ள களை ஸ்தாபித்துள்ளது. 1985 மே மாதத்தில் மாத்திரம் இதன் அங்கத்தவர்கள் 20,000 ஆகும். இப்போது வெளிநாடுகளிலும் கிளைகளை ஆரம்பித்துள்ளது.
* இச்சங்கத்தின் நோக்கம் என்ன?
0 அமெரிக்க சார்பு ஆட்சிக்கெதிராக மக்களை ஆயத்தப்படுத்தி அரசியல் உணர்வை வளர்த்து முதலாளித்துவ அமைப்புக்கு எதிராக போர் தொடுத்து ஒரு சமதர்ம சமுதாயத்தை அமைப்பதேயாகும்.
8 மாணவர் உரிமைகளை வலியுறுத்தல், நாட்டிற்கேற்ற - கல்வி முறையினை புகுத்துதல், இலவசக் கல்வி முறையைப்புகுத்தி எல்லோரும் கல்வியை சமமாகப்பெறும் வாய்ப்பை ஏற்படுத்தல்,
e கல்வி நிறுவனங்களில் நிர்வாகப் பகுதியில் அங்கம் வகித்து
நெறிப்படுத்துதல்.
0 பிலிப்பைன்சிலுள்ள கல்விப்பாடத்திட்டத்திலுள்ள அமெரிக்க சார்பு தாக்கத்தை அகற்றி ஓர் தேசிய சார்புக்கல்விமுறை யை வளர்த்தல்.
0 ஆசிரிய சமுதாயத்தின் அடிப்படை உரிமைகளுக்குக் குரல்
கொடுத்தல்.

Page 11
O இளம் வாலிபர்களது உடல், உளவளர்ச்சிக்கு ஏற்ற கல்விப்
பாடவிதானத்தை உருவாக்குதல்.
o சர்வதேச ரீதியில் மாண வர் மத்தியில் ஒற்றுமையையும்
போராட்ட உணர்ச்சியையும் தூண்டுதல்.
சுருக்கமாகச் சொல்லப்போனுல் அமெரிக்க சார்பு அரசிற்கு எதி ராகப் போர் தொடுத்தல் மற்றும் இவ்வுலகின்கண் உள்ள சகல இன, மத, ஏகாதிபத்திய அடக்குமுறைகளுக்கெதிராக போ ர் தொடுத்தலாகும். இக்கண்ணுேட்டத்துடன்தான் இந்தப் பிலிப் பினுே மாணவர் சங்கம் இன்று ஆசிரிய மாணவர் சங்கத்துடன் இணைந்துள்ளது. இணைந்ததுமட்டுமல்ல -- Student Education Commision of Asia -- SECA 5&ND GOLDI'I LJ5666'DALI 6TGjög5 2áis கபூர்வமான வேலைகளைச் செய்துவருகின்றது.
வருடத்தில் இருதடவை விளக்க வெளியீடுகளை பிரசுரிக்கிறது. பொதுவாக ஆசிய மக்கள் மத்தியில் வளர்ந்து வந்த மேற்கத் தைய, அமெரிக்க சார்பு கல்விமுறையை மாற்றி நாட்டிற்கேற்ப கல்வி வளர்ச்சி முறையைப் புகுத்த இந்நிறுவனம் அரும்பாடு பட்டு வருகின்றது.
விடியலைத் தேடும் முகப்பு
அங்கே. பறவைகளின் கூடு பத்திரமாய் உண்டு
மானவன் வீடோ மயானக் காட்சி கலைக் கூடங்களோ காடையர் முகாம்கள் விளை நிலங்களோ வீண் தரிசு நிலங்கள்
என்ன செய்வேன். 2
என் அகதி நிலை
எப்போ. மாறும்.?
H-O Hmg
ഞ 18 -

எரிந்து கொண்டிருக்கும் நேரம் . ܢ
இன்று வாய்திறவாதே மொளனம் கொள்; இன்று மட்டும்.
நம் வாயிலிருந்து வருகிற ஒவ்வொரு உண்மைக்கும் ஒவ்வொரு துப்பாக்கிக் குண்டு பரிசாகக் கிடைக்கிற காலம் ஒன்று வருமோ? அல்ல எனில் ஏனிந்த அவலம்? முச்சந்தி மாமரத்தின் கீழ் எரிந்தன உடல்கள்; எழுந்த சுவாலைகளில் கருகின குருத்துக்கள்
ᏞᎻ6Ꮱ éᏂ ;
அச்சம்; கொடுமை
துயரம்; பீதி: அனைத்துமே கறுப்பு
அசுர நிறம்
துர்க்குறிகள் விரவி இருளின் நிழல்கள் கவிய உடல்களும் மனமும் எரிந்து கொண்டிருக்கும் இந்நேரம் -
குரல் ஒடுங்கிப் பாடல் இழந்தன குயில்கள் மிரட்சி தெறித்த விழிகள் நகர்த்தி அலற மறந்தனர் சிறுவர்
சாம்பலைக் காற்றுக் கொண்டு போயிற்று; எலும்புகளை நாய் கொண்டு போயிற்று மனிதத்தை
துப்பாக்கி முனையில் நடத்திச் சென்று புதைகுழி விளிம்பில் வைத்துச் சுட்டுப் புறங்காலால்

Page 12
மண்ணைத் தள்ளி மூடிவிட்டு வந்து, தெருவோரச் சுவரில்
குருதியறைந்து நியாயம் சொல்கிருர்கள். நியாயம்!
யார் கேட்டார் உம்மிடத்தில்
நியாயத்தை?
எச்சிறு புல்லும் எச்சிறு தளிரும் எச்சிறு புள்ளும்
நம்பிக்கைகளின் உயிர்மூச்சுடனேயே மலரும்;
வளரும்; முதிரும்;
LDiqugh
என நான் அறிவேன்
எனினும்,
சாபங்கள் சூழ்ந்த தாய்நாடு எமதெனத் துயரில் புலம்பும் முதியோர் சிலருக்கு
இக்கணம், உடல்களும் மனமும் எரிந்து கொண்டிருக்கும் இக்கணம் நம்பிக்கையை எப்படி உரைப்பேன்?
புதை குழிகளுக்கிடையில் பிணங்களுக்கிடையில் குருதி படிந்த உடைகளுக்கிடையில் புத்திர சோகத்தில் நெஞ்சு பிளந்த அன்னையர் கண்ணிர்த் துளிகளுக்கிடையில் 'துர்ப்பாக்கியம் தற்காலிகமானது' என்று குரலெழுப்ப மெலிந்த உடலும் வளர்ந்த தாடியும் உடைந்த மனமும் குழம்பிய தலையுமாய் வார்த்தைகளுக்கு அலைகிறேன் நான்.
20 به تسمیه

இன்றைய மாணவர்கள் நாளைய வழிகாட்டிகளாக மாறும் நிலைமையை ஏற்படுத்துவதற்காக "நாங்கள்' மாணவர்கள் மத்தியிலும், இளைஞர்கள் மத்தியிலும் எமது போராட்டம் சம்பந்தமான அறிவை வளர்க்க மேற் கொண்ட ஒரு நடவடிக்கையே மாணவர் ஆக்கங்களை உருவாக்குவதாகும். சென்ற இதழில் கொடுக்கப்பட்டிருந்த "இன்றைய போராட்ட முன்னெடுப்புக்கு அத்தியாவசியமானது அரசியல் முதிர்ச்சியா? ஆயுதங்களா? என்ற விவாதம் பற் றிய ஆய்வுகள் பல நாங்களுக்கு வந்து சேர்ந்தன. அவற் றிற் சிலரின் கருத்துக்களை இங்கு தருகிருேம். "ஈழப்போராட்டத்தில் அந்நிய தலையீடு நன்மை பயக்குமா? தீமை பயக்குமா?’ என்பது பற்றிய கருத்துமோதலை நாங் கனி அடுத்த இதழுக்காக எதிர்பார்க்கின்றது.
S66)puI (IIIIII L (p6 GGISIIi j3 9 jjLII TQI FALLIID TOT 5
அரசியல் முதிர்ச்சியா? ஆயுதங்களா?
கருத்து மோதல் 1
ஆயுதங்கள் SMMSLLLSLSLSSqSMLSLSLCSLSLSLS
இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு சிலகாலங்களுக்கு முன்ன ரேயே தமிழர்கள் மீதான இனப்பாகுபாடு இலங்  ைகயி ல்
தொடங்கிவிட்டது. இது பிரஜாவுரிமைச்சட்டம், தனிச்சிங்களச்
சட்டம், இனக்கலவரங்கள், குடியேற்ற , தரப்படுத்தல் போன்ற நடவடிக்கைகளால் மேலும் கூர்மையடைந்து இன்றைய ஆயுதப் போராட்ட நிலைக்கு வளர்ச்சியடைந்துள்ளது. இவ்வாருன, இன ஒடுக்கல் நடவடிக்கைகளுக்கெதிரான அன்றைய தமிழர் தலைமை கள் அரசியல் ரீதியில் அகிம்சை வழியின் துணை கொண்டு பேr ராட்டங்கள் நடத்தினர். ஆணுல் 1972 இன் பின்னர் குறிப்பாக 1977ம் ஆண்டு இனக்கலவரத்தின் பின் தமிழர் மீது வன்முறை நடவடிக்கைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. இக்கால த் தி லே தமிழ் மக்கள் அ ர சி யற் கூத்தாடித் தனத்தில்ை ஏமாற்றப் பட்டு ஆயுத ரீதியான போராட்டத்தை முன்னெடுக்கத் தொடங் கினர். தமிழர்களைப் பொறுத்தவரை முன்னைய காலகட்டத்தில் அரசியல் வாதிகளால் ஏமாற்றப்பட்டமையால் வெ றும் அரகியல்
- 2

Page 13
நடவடிக்கைகளில் வெறுப்யினைக்கொண்டனர். இன்னும் இவ் வ ளவு இழப்புகளுக்கும், எரிப்புகளுக்கும், அழிப்புகளுக்குப் பின்னரும் வெறுமனே பேசிக்கொண்டிருப்பதைவிட செயலில் இறங்குவ தையே மக்கள் விரும்புகின்றனர். இன்று அரசியல் பேசுவோர் அரசியல் மயப்படுத்தப்படலென்ற போர்வையில் தேவையற்ற உண்ணுவிரதங்கள், ஊர்வலங்கள் நடாத்தி மக்களுக்கு ‘கானிவல்? காட்டுவோர், தமது சிம் மக்குரல்களால் மக்களைப் பரவசமடை யச் செய்து கைதட்டுதலை பெறுவோர், பழைய ஏமாறறுக்கார ரின் புதிய விம்பங்களாவார்கள். இப்படியான அரசியல் பம்மாத் துகளில் மக்களை இறக்கி இதுதான் போராட்டம் உங்க ள |ா ல் இப்படி குடைபிடித்து ஊர்வலம் செல்லுதல், மறியல் நடாத்துவது தான் போராட்டத்தில் உங்கள் பங்களிப்பென மக்களை சோ ம் பேறியாக்குகிருர்கள். பாவம் மக்களும் தாமும் வீதியிலே கோ சங்களைச் சொல்லிவிட்டால் ஊர்வலம் சென்றுவிட்டால் தானும் போராளி போராட்டத்தில் தம்பங்கு முடிந்துவிட்டதாக எண்ணி ஏமாந்துபோகின்றனர்.
அக, புறசூழல்களினல் எமது போராட்டம் மேலும் நெருக் கடிக்கு உள்ளாகி வருகின்றது, எது எதிரி அரசியல் மாயை யைக் காட்டி தன்னைப் பலப்படுத்தலில் முழுமுயற்சியில் ஈடுபட் டுள்ளான். பல நவீன ஆயுதங்களை இறக்குமதி செய்துள்ளான். இதற்கு ஏற்ப நாமும் எம்மைப் பலப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதற்காக 'மரம் பழுத்தால் வெளவால் வரும்" என ஏனைய நாடுகளும் வெளிநாட்டுத் தாபனங்களையும் எதிர் பார்த்து காலத்தை விரயமாக்காது எமது பலத்தில் எமது திற மையைப் பயன்படுத்தி ஆயுதங்களைப் பெற அல்லது உற்பத் தி யாக்க முயற்சி செய்தல்வேண்டும்.
இன்று மேடை போட்டு பத்திரிகையில் எழுதி மக்களுக்குப் போராட்டத்தில் நம்பிக்கையூட்டலாமென்பது மடத்தனம், மாருக எமது வீதிகள் வழியாக ஆயுதந்தாங்கிய எமது போராளி க ள் ரோந்து வருவதே மக்களுக்கு நம்பிக்கையூட்டுவதாக அமைகின் றது. இன்று குறிப்பாக யாழ்குடாநாட்டிலே இராணுவத்தினரை முகாம்களை விட்டு வெளியேருது பூட்டி வைத்திருப்பது எ ம தி அரசியலின் திறனு? ஆயுத பலத்தின் திறன? இதே நிலை நாளை ஈழத்தின் ஏனைய பகுதிகளிலும் தோன்றும். அன்று அப்பிரதே சங்களை எங்களது பா தி வி டு த லைப் பி ர தே சமாக ப் பிரகடனப்படுத்தப்பட முடியும். இதனை பேச்சுவார்த்தை மூல மோ பத்திரிகை விற்பனை மூலமோ மேடைகள் போட்டு கூட்டங் கள் நடாத்துவதன் மூலமோ பெறமுடியாது. இன்று இயக்கங்க
: 22 ജ

ளுக்கு இடையேயும், இயக்கங்களுக்கு உள்ளேயுமுள்ள மோதல் கள் பெருகுவதின் காரணமே பேச்சுவார்த்தையும், போர்நிறுத் தமும் ஆகும். இக் காலகட்டத்திலேயே பலர் இயக்கங்களை விட்டு வெளிநாடு செல்வதும், பல கொள்ளைகள் இடம் பெற்றமையும், பழைய சமுதாய பிணக்குகள் கிளறப்படுவதும் நடைபெறுகிறது. ஆயுதப்போராட்ட வெம்மைதான் ஒருவர் மற்றவரை நேசிக்க வேண்டிய தன்மையும் இயக்கங்களுக்கு இடையேயான ஒற்றுமை யையும் தீர்மானிக்கும் முக்கிய காரணியாகும். மாருக திம்பு செல் வதற்காக ஒன்று சேர்ந்த விடுதலை முன்னணி வெறும் பம்மாத்து. அம்முன்னணியமைப்புகளுக்கு இடையேயுள்ள பூசல்களும் தவறு களும் செய்துவிட்டு தலைமறைவாகவும், கூட்டுமுன்ணனி பாவிக்கப் படுதலும் அரசியல் போலித்தனத்தைக் காட்டுகிறது.
எமது எதிரி எங்கள் அரசியல் இராஜதந்திரத்திற்கு பணிந் ததாக எந்தச் ச1ான்றுகளுமே கிடையாது. தொடர்ந்தும் நாமே ஏமாற்றப்பட்டுக்கொண்டு வருகின்ருேம் மாருக போராளிகளின் வீரஞ் செறிந்த பல தாக்குதல்கள் அரசினை நடுங்கச் செய்தமை யும், அரசின் பொருளாதாரத்தில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தி யமையும் பல சம்பவங்களே உதாரணம் கூறலாம்.
- 12ம் வகுப்பு மாணவன் -
அரசியல்
எந்தவொரு குறிக்கும் ஒரு குறிக்கோள் இருக்கவேண்டும் குறிக்கோள் பிழைக்குமாயின் குறியினல் கேடுதான் விளைவு. இக் குறிக்கோளை செழுமையாக வளர்த்தெடுப்பதே ஒழுங்கான அரசி யற் சிந்தனையாகும். ஆயுதமென்பது அரசியல் வேலைத்திட்டத்தை இலகுவாக செய்து முடிக்கப் பாவிக்கப்படும் வெறும் கருவிகளுள் ஒன்று மட்டுமே. இவ்வேலைத்திட்டங்கள் முடிந்த பின்னர் அவை கீழே வைக்கப்படவேண்டியது அவசியமே. ஆயுதத்தினை கையில் ஏந்த முன்னர் அவ்வாயுதம் யாருக்கு எதிராக? எப்போது? ஏன்? பாவிக்கப்படவேண்டுமென்ற அறிவு இருக்கவேண்டும். இதனை வழங்குவதே அரசியலும், அரசியல் வேலைத்திட்டங்களும் ஆகும். அரசியல் மயப்படுத்தல் என்பது வெறுமனே அரசியல் புத்தகங்களை வாசித்தல், கூட்டங்கள், சொற்பொழிவுகள் நடாத்துவது மட் டுமல்ல. மாருக ஒர் அரசியல் வேலைத்திட்டத்தை செய்து முடிப்ப தற்கான மனத்தைரியமும் பயிற்சியும் பெறுதலாகும்.
மக்களையும், மக்களிற்காக போராடும் போராளிகளையும் ஒன் றிணைக்கும் பாலமாக விளங்குவது அரசியலும், அரசியல் வேலைத் திட்டங்களுமாகும். வெகுஜன போராட்டங்கள் இன்றேல் ஆயு தங்கள் மக்களிடமிருத்து அந்நியப்பட்டுவிடும். மக்களைப் பிரிந்த துப்பாக்கிகள் அவை A, K - 47 ஆயினும் ஏது அர்த்தம்,
ഞ 23 -

Page 14
இன்றைய காலகட்டத்தில் அர சி ய லி ன் தேவையானது நான்கு வகைப்படும். 1. மக்களுக்கும் - போராளிகளுக்குமிடையிலான அரசியல் தேவை 2. இயக்கங்கள் - இயக்கங்களுக்கு இடையிலான அரசியல் தேவை 3. இயக்கங்களுக்கும் - எதிரிகளுக்குமிடையிலான அ ர சி ய ல்
தேவை 4. இயக்கங்களுக்கும் - சர்வதேச அமைப்புகள் அண்டை நாடுக
ளுக்கிடையிலான அரசியல் தேவை.
மக்களுக்கும் போராளிகளுக்குமிடையிலான புரிந்துணர்வை வளர்ப்பதற்கு அரசியல் போராட்டங்கள் உதவும். உதாரணமாக போராளிகள் இறக்கும்போது மக்கள் அஞ்சலி செலுத்துதல். சிறைகளில் போராளிகள் கொல்லப்படும்போது அல்லது போராட் ட்ங்கள் செய்யும் போது அவற்றுக்கு ஆத 6 க மக்கள் போராட் டங்களில் ஈடுபடுதல், போராளிகளின் உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுதல், கலாச்சார நிகழ்ச்சிகளோடு மக்களை அணுகுதல் என் பன மக்களைப் போராளிகளுடன் ஒன்றிணைக்கும் செயலாகும். சில சமயங்களில் மக்களுக்கு எதிராக போராளிகள் ஆயுதம் பாவிப்பதும் அரசியல் வரட்சியேயாகும். இரண்டாவது எதிரி எமக்கு எதிராக திட்டமிட்ட ஆக்கிரமிப்பை நீண்டகாலமாக மேற் கொண்டு வருகிருன். அவனின் மூல உபாயங்களையும் திட்டங்களை யும் புரிந்துகொள்ள அரசியல் ஆய்வுகள் மிக அவசியமாகும். எதிரியின் மூல உபாயங்களைப் புரிந்துகொண்டு எமது போராட் டப்பாதை வகுக்கப்படாவிடின் நவீன ஆயுதங்களை நாம் கொண் டிருந்தாலும் கூட எதிரியினை வெல்வது கடினமாகிவிடும். சர்வ தேச உறவுகள் பற்றிய ஆழ்த்த அரசியல் கலிளுேட்டம் இன் றைய காலகட்டத்தில் மிக அவகியமானது. இயக்கங்களின் சர் வதேச உறவைப் பேணிப்பாதுகாப்பதற்கும் அரசியல் முதிர்ச்சி என்பது தவிர்க்கமுடியாத ஒன்ருகின்றது. நாம் ஒட்டுமொத்தமா கப் பார்க்கின்றபோது இன்று எந்த ஒரு நாட்டின் போராட்ட முன்னெடுப்பிற்கும் அரசியல் முதிர்ச்சி அவசியம் என்பதை யாரும் மறுக்கமுடியாது.
- Luftbass2M) disas pas limfir 60PUT AJøčir - கருத்து மோதல் 2
அரசியல் രuള്ളnംബങ്ങത്ത
இன்றைய நம்நாட்டு சூழ்நிலையில் விடுதலைப்போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு மிகவும் அவசியமானது. அரசியலா அன்றி ஆயுதமா என்பது பற்றி ஆராய்வது மிகவும் பொருத்த முடையதே உலக நாடுகளின் விடுதலேப்போராட்ட வரலாறுகளை
= 24 =

யும், அரசியற் சம்பவங்களையும் துணைகொண்டு இவ்விடயத்தை நோக்குமிடத்து தனித்து ஆயுதம் என்பது விடுதலைப்போராட்டத் தினை எந்த வகையிலும் முன்னெடுத்துச் செல்வதற்கு உதவாது என்பதனைப் பலரும் ஏற்றுக்கொள்ள வேண்டியதாகின்றது.
உலகின், குறிப்பிட்ட சில மக்களின் உரிமைகள், சுதந்திரங் கள் என்பவை மறுக்கப்படும்போது அல்லது நசுக்கப்படும்போது விடுதலையுணர்வுடன் கூடிய போராட்டங்கள் பரிணமிக்கின்றன. இவ்வகையிற் தோன்றுகின்ற தேசவிடுதலைப்போராட்டம், வர்க்க விடுதலைப்போராட்டம் ஆகிய இரண்டினையும் 'விடுதலைப்போராட் டம்' என்ற வகையில் அடக்கிக்கொள்ள முடியும்.
எந்த ஒரு விடுதலைப்போராட்டமும் மக்கள் போராட்டமாகச் செயற்படாமல் வெற்றிகாண முடியாது. போராட்டக் குழுக்கள் மக்களினின்று அந்நியப்பட்டு ஒரு உண்மையான விடுதலையை எந்த நிலையிலும் பெற்றுவிட முடியாது. மக்கள் போராட்டத்தில் இணைக்கப்படுவதற்கு, அவர்கள் அரசியல்மயப்படுத்தப்படுவது இன் றியமையாததாகின்றது. அரசியலறிவோடு மக்கள், போராட்டத் தில் ஈடுபடும்போதே அவர்கள் உண்மையான போராளிகளாகின்ற னர். போராட்டமும் மக்கள் போராட்டமாகின்றது. இதனைவிடுத்து ஆயுதத்தில் மட்டும் நம்பிக்கைகொண்டு 'மக்கள் போராட்டம்?? என்ற கருத்தில் அரசியலறிவு ஊட்டப்படாத நிலையில் மக்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டால் விளைவு? எவ்வாறு இருக்கும் என்ப தனைச் சொல்லவேண்டியதில்லை.
பிரிட்டிஷ் காலணித்துவ ஆட்சியிலிருந்து இந்தியா சுதந்தி ரம் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட இந்திய விடுதலைப் போராட் டத்தில் ஆயுதநடவடிக்கைகளைவிட அகிம்சை நடவடிக்கைகளே அதிகமாக இருந்தன. அரசியலறிவோடு போராட்ட நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டதன் விளைவே இறுதியில் இந்திய சுதந் திரத்தைச் சாத்தியமாக்கியது எனலாம். ஆணுலும் ஆயுதபலங் கொண்ட தற்கால அடக்குமுறையில் 'அகிம்சை' என்பது அதிக பயனளிக்காது என்னும்போது 'அரசியல்' என்பது முக்கியமா னதாக, பயன்பாடுடையதாக விளங்குவதனை மறுக்க முடியாது.
விடுதலைப்போராட்டத்தை முன்னெடுக்கும் மக்கள் அமைப்பு எதுவும் ஆயுதத்தை மட்டும் நம்பியிருக்க முடியாது. இவ்வாறு ஆயுதரீதியில் மட்டும் ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்பாக ஒரு விடு தலையமைப்பு காணப்படும் பட்சத்தில் அங்கு ஜனநாயகப் பண்பு கள் எதுவும் இல்லாத நிலையே ஏற்படும். இவ்வாருன, ஜனநாய கப் பண்பற்ற ஒரு அமைப்பினுல் எந்த வகையிலும் மக்களுக்குச்
 ை25 கன

Page 15
சேவை செய்யமுடியாது. இதனல் மக்களுக்காகப் பெறுகின்ற விடு த8ல என்பது அர்த்தமற்றதாகிவிடுகின்றது. அரசியலறிவற்ற ஒரு நிலையில் ஆயுதங்களின் துணையோடு அடக்கு முறையாளர்களை வெற்றிகொள்ளினும் அதனை உண்மையான விடுதலை எனக் கூறி விட முடியாது. இந்நிலைமை தொடரும் காலத்தில் ஓர் சர்வாதி காரத்துக்கோ அல்லது இராணுவ ஆட்சிக்கோ தான் நாட்டினை இட்டுச்செல்லும் எனச் சந்தேகமின்றிக் கூறலாம்.
ஒரு விடுதலையை நோக்கிப் பயணிக்கும்போது ஆயுதபலம் மட்டும்தான் இடைமறிக்கின்றது எனக்கொள்ளமுடியாது. எதிரி (அடக்குமுறையாளர்) அரசியற் தந்திரோபாயங்கள் பலவற்றைக் கையாண்டு விடுதலைப்போராட்டதினைச் சிதைக்க முயலுதல் கூடும். இந்நிலையில் ஆயுதபலம் எவ்வளவுதான் இருந்தும் ஆகப்போவ தென்ன? சில சமயங்களில் எதிரியின் அரசியற்தந்திரங்கள் இருக் கின்ற ஆயுதங்களைக்கொண்டு தம்மைத்தாமே அழிக்கக்கூடிய நிலை மைகளை உருவாக்கலாம். இங்கு அரசியற்தீர்வு, வரலாற்று அனு பவங்கள் என்பவை மிகவும் அவசியமானவையாகின்றன.
இந்த நூற்ருண்டிலே வெற்றிபெற்ற சிறந்த ஒரு வர்க்க விடு தலைப் போராட்டத்திற்கு உதாரணமாக சோவியத் ரஷ்யாவில் (1917 October Revolution) Bl-ibas 9&G LTL if Diélug. 2.0Tá. குறிப்பிடலாம். இங்கு மக்களுக்கும் போராளிகளுக்குமிடையிலான உறவையும், அரசியலறிவையுமே லெனின் முக்கியமாக வலியுறுத் தியிருந்தார். ஆயுதம் இப்புரட்சியிற் பயன்பட்டபோதிலும் அரசி யற் சித்தாந்தமே புரட்சியில் முக்கியம் பெற்றிருந்ததை காண முடிகிறது.
வர்க்கவிடுதலைக்கு வழிகாட்டும் மார்க்சிச சித்தாந்தம் ஓர் அறி வியல் சார்ந்த அரசியற் சித்தாந்தம் என்பது இங்கு கவனிக்கப் படவேண்டியது. மாக்சிசம் என்பதற்கு விளக்கம் கொடுக்கும்போது Marxisum is a theory and practice for revolutionary Scien tific Socialism எனக் கூறப்படுகிறது. இதினின்று மாக்சிசம் என் பது ஓர் அறிவியல்வாதம் என இனங்காணலாம். அஃது ஆயுத ரீதியான ஓர் வாதமன்று என்பது இங்கு மனங்கொள்ளத்தக்கது. தனித்து ஆயுதரீதியான வாதங்கள் சர்வாதிகார மானதாகவே காணப்படும் என்பதில் ஐயமில்லை.
ஓர் விடுதலைப் போராட்டத்தில் ஆயுதம் கணிசமானளவு பங் களிப்பினை அரசியலறிவு உள்ள நிலையில் மட்டுமே ஆற்றமுடியும். இல்லாத நிலையில் தனித்து ஆயுதபலம் என்பது போராட்டத்தை முன்னெடுப்பதற்கோ, வெற்றிபெறுவதற்கோ ஒருபோதும் துணை
-, 26 ജ
 

நின்றதுமில்லை, துணைநிற்கப்போவதுமில்லை. இந்நிலையில் ஒரு விடு தலைப் போராட்டம் வெற்றி பெறுவதற்கு அரசியல் ஞானம் என் பது மிகவும் முக்கியமானது என்பது கூருமலே அமையும். குறு கிய நோக்கில் ஆயுதத்தை மட்டும் கொண்டு உண்மையான விடு தலையைப் பெறமுடியும் என்பது வெறும் கற்பணுவாதமே. எனவே விடுதலைப் போராட்டங்கள் வெற்றிபெறுவதற்கு அரசியலே அவ
சியமானது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வர்.
● - பல்கலைக்கழக மாணவன் - ஆயுதம
விடுதலைப்போராட்ட முன்னெடுப்பிற்கு அவசியமானது ஆயு தம் என்ற வகையில் நோக்குவோம். விஞ்ஞானம் உச்சநிலைக்கு வளர்ந்துள்ள இந்த நூற்ருண்டில் சாதாரண ஒரு மனிதனைக் கொல்வதற்கு எவ்வளவோ பாரிய, பெறுமதி வாய்ந்த ஆயுதங் களை இன்று மனிதன் கண்டுபிடித்துள்ளான். ஒரு நாட்டிலுள்ள மனிதர்களைப் பாதுகாப்பதற்கும், அர  ைச பாதுகாப்பதற்கும், சொத்துக்களைப் பாதுகாப்பதற்குமே முக்கியமாக இவை உருவாக் கப்பட்டன. இந்த வகையில் ஒரு போராட்டம் என்பது இன்னு மொரு மனிதனுடனுே, அல்லது இனத்துடனுே அல்லது நாட்டு டனுே செய்துகொள்ளும் எதிர்நடவடிக்கைகளாகும். இந்த வகை யில் எந்த ஒரு நாடோ, இனமோ தங்களது பலமாக ஆயுதத்தை வைத்திருப்பதை யாரும் மறுக்க முடியாது.
உலக நாடுகளைப் பொறுத்தளவில் இன்று வர்க்கப்போராட் டங்கள், எல்லைப் போராட்டங்கள், நிறவெறிப் போராட்டங்கள், ஆதிக்கப்போராட்டங்கள், இனவிடுதலைப்போராட்டங்கள் என்பன நடைபெறுகின்றன. இவை யாவும் ஆயுதம் என்ற நம்பிக்கையை வைத்துக்கொண்டே போராட்டத்தை ஆரம்பிக்கின்றன. ஏன் இன் றைய எமது இயக்கங்கள் கூட தமிழர் விடுதலைக் கூட்டணியின ரின் அரசியல் போராட்டம் வெற்றியளிக்காது என்ற நிலையில், நாம் ஆயுதப் போராட்டத்தின் மூ ல ம் தா ன் எமது விடுத லையை நிர்ணயிக்கலாம் என்று தோற்றம் பெற்ருர்கள். இன்று நாம் ஈழத்தின் பல பாகங்களில் ஆயுதத்தின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்கிருேம்.
விடுதலைப் போராட்டத்துக்கு அரசியல்தான் முக்கியத்துவம் வகிக்கிறது என்று கூறிக்கொண்டு புத்தங்களைப் படித்து, தத் துவவாதிகளாகவும், 11 வரட்டுச் சித்தாந்த வாதிகளாகவும் இருந்து கொண்டு போராட்டம் நடத்துபவர்கள் விடுதலைப் போராட்ட வர லாற்றில் மக்களால் தூக்கி எறியப்படுவார்கள். போராட்டத்தில் அரசியல் தந்திரோபாயங்கள், அரசியல் முதிர்ச்சிகள் காணப்படு
ܣܘܼܪܝ 27 ܕܕܗ

Page 16
வதுடன், அவற்றுக்கேற்ப போராட்டத்தை முன்னெடுப்பதற்கும் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் விதத்திலும் எமது போராட்டத்தை செய்துகாட்ட வேண்டியவர்களாக உள்ளோம். இந்த நிலையில் ஆயுதம் முக்கியம் பெறுவதை சொல்லாமலே புரியும், எங்களு டைய போராட்டத்தைப் பொறுத்தவரையில் புறச்சூழ்நிலைகள், காரணிகளின் தாக்கம் கூடுதலாக இருந்தபோதும், ஆயுதப்போ ராட்டத்தின் மூலம் எமது விடுதலையைப்பெற தோன்றிய நாங்கள் எமது தந்திரோபாயங்களைப் பயன்படுத்தி நிலமைகளுக்கேற்ப 6TLD5 போராாட்டத்தை செழுமைப்படுத்துபவர்களாக இருக்க வேண்டும். போராட்ட செழுமைக்கு ஆதாரமாக இருக்கும் முக் கிய காரணி ஆயுதம் என்பதை யாரும் மறுக்க முடியாது.
- 11ம் வகுப்பு மாணவன் -
na O ang
O நிறம் மாறிகள்
தாராளவாதிகள் மார்க்ஸிஸ்த்தை அங்கீகரிக்கின்றனர். ஆணுல் மார்க்ஸிஸ்க் கோட்பாடுகளை சூட்சுமமான வரட்டுத் தத்துவமாகக் கருதுகின்றனர். இவர்கள் மார்க்ஸிஸ்த்தை அனுஷ்டிக்க அல்லது பூரணமாக அனுஷ்டிக்கத் தயாராக இல்லை. தமது தாராளவாதத்துக்குப் பதிலாக அதன் இடத் தில் மார்க்ஸிஸத்தை வைக்கவும் அவர்கள் தயாராக இல்லை. அந்த நபர்களிடம் மார்க்ஸிஸம் இருக்கும் அதேவேளையில், தாராளவாதமும் இருக்கிறது. அவர்கள் மார்க்ஸிஸம் பேசு கின்றனர். ஆணுல் தாராளவாதத்தை அனுஷ்டிக்கின்றனர். பிறருக்கு மார்க்ஸிஸத்தையும், தமக்குத் தாராளவாதத்தை யும் பிரயோகிக்கின்றனர். தாராளவாதம் குட்டி பூர்சுவா வர்க்கசுயநல உணர்விலிருந்து தோன்றுகிறது. இது சந்தர்ப் வாதத்தின் ஒரு வெளிப்பாடாகும்.
- LDT 32 -
--سید 28) ........................

0 அபிவிருத்திக் கண்காட்சி 0
ooo shofra'60T to OOO
யாழ். பல்கலைக்கழக இயற்கைவிஞ்ஞான மன்றத்தினுல் மாசி
மாதம் 22, 24, 25 ஆம் திகதிகளில் யாழ். சென் ஜோன்ஸ் கல் லூரியிலும், பங்குனி மாதம் 1ம், 2ம் திகதிகளில் நெல்லியடி மத் திய மகா வித்தியாலயத்திலும் "அபிவிருத்திக் கண்காட்சி ஒன்று நடாத்தப்பட்டது. இக்கண்காட்சியிலே ஈழப்பிரதேசத்தின் முக்கிய பொருளாதார துறைகளாகிய விவசாயம், மீன்பிடி, கைத்தொழில், மருத்துவம், இலத்திரனியல், மற்றும் இயற்கை வளங்கள் சம்பந் தமான விடயங்கள் முக்கிய இடத்தைப் பெற்றுக்கொண்டன. பெருந்திரளான மக்கள் இதனைப் பார்வையிட்டனர்.
மலரப்போகும் ஈழம் பொருளாதாரச் சுமையைத் தாங்குமா? என்ற கேள்வி பலர் எண்ணத்திலும் உதயமாவது இயற்கையே. ஈழப்பிரதேசம் வெறும் வரண்ட பிரதேசம். இது பூரீலங்காவி லேயே பல தேவைகளுக்குத் தங்கியுள்ளது என குருட்டுத்தன மாக வாதிடுவோரும் உண்டு. இக்கேள்விக்கு ஓரளவு விடைபகரு வதாக இந்தக் கண்காட்சியை கருதமுடியும். ஆயினும், ஒட்டு மொத்தமாக முழுவிடயங்களும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு இந்தக் கண்காட்சி ஒழுங்கு செய்யப்படவில்லை. அப்படிச் செய்வதாயின் பல ஆண்டுகள் தேவைப்படும். குறுகிய காலத்தில் இவ்வளவு சிறப்பான கண்காட்சியொன்றை ஒழுங்கு செய்தோரின் முயற்சி பாராட்டத்தக்கதே.
இக்கண்காட்சியினுள் நுழைந்தவுடனேயே "அபிவிருத்தி பற் றிய சிந்தனை” என்ற இலங்கையின், குறிப்பாக ஈழப்பிரதேசத்தின் மாதிரியமைப்பு சிந்தனைக்கு பெருவிருந்தாய் அமைந்தது. இங்கு ஈழப்பிரதேசத்திலுள்ள அபிவிருத்தித் திட்டங்களின் மந்தநிலையும் இராணுவ அபிவிருத்தியின் பாரியவளர்ச்சியும் ஒப்பிடப்பட்டிருந்த தன்மை பலரினதும் பாராட்டினைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து ஈழப்பிரதேசத்தின் பெரும்பான்மையான வளங்களையும் உள்ளடக் கியதான வரைபடங்களும் புள்ளிவிபரங்களும் சிறப்பாக அமைந் திருந்தன. பல இடங்களுக்கும் அலைந்து திரிந்து பெறவேண்டிய புள்ளிவிபரங்கள் இங்கு பெறக்கூடியதாயிருந்தமை ஆய்வாளர்கள் மாணவர்களுக்கு பேருதவியாயமைந்தது. அடுத்து இடம்பெற்றி ருந்த விவசாயப்பகுதியும் நன்ருகவிருந்தது. ஈழத்தினைக் கட்டி யெழுப்ப ஆரம்பிக்கும்போது எமது பிரதேசங்கட்கு உகந்ததான
سی۔ 289، سی۔

Page 17
ஒருங்கிணைக்கப்பட்ட கூட்டுப் பண்ணே யின் (INTEGRATED
ARM) மாதிரியமைப்பும், விவசாய மாதிரிக்கிராமமும், வீட்டுத் தோட்ட மாதிரியும் மிகவும் நன்ருகவும் பயனுள்ளதாயுமிருந்தன. இவற்றைவிட மின்சாரமற்ற பிரதேசங்களிற்குகந்த நீர்ப்பாசன முறைகளும் பீடைகள் பற்றிய விரிவான விளக்கங்களும் நன்ருக இருந்தன. அடுத்து இடம்பெற்றிருந்த மீன்பிடித்துறையில் மீன் பிடி முறைகள், அவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், இருல் வளர்ப்பு முறைகள், கடலட்டை பிடித்தலும், பதனிடுதலும், சங்கு ஏற்றுமதி, திட்டமிடப்பட்ட மீன்பிடி கிராமம், ஏற்றுமதியாகும் அழகான மீனினங்கள் என்பன காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. ஓரளவு மீன்பிடிவளங்கள் சம்பந்தமான புள்ளிவிபரங்களும் காணப் பட்டன. மீன்பிடி, ஈழத்தின் பிரதான பொருளாதாரத்துறையாக விளங்குமென்பது ஓரளவு தெளிவுபடுத்தப்பட்டதுடன் இன்னும் விருத்தி செய்யப்படவேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டி ருந்தது.
மருத்துவத்துறையில் மேல்நாட்டு | LD(5 த்துவமும், ஆயுள்வேத மருத்துவமும் இடம்பெற்றிருந்தன. மேல்நாட்டு மருத்துவத்துறை யில் இன்றுள்ள அவசர நிலைமைகளுக்கேற்ப தேவைப்படும் சமூக மருத்துவவியலும், ஓர் அகதிகள் முகாமின் மாதிரியும், முதலுதவி முறைகள், குண்டு வீச்சிலிருந்து தப்புதல் போன்றவையும் சிறப் பாகவிருந்தன. ஆயுள்வேத மருத்துவத்துறையும் மிகச் சிறப்பாக அமைத்திருந்தது. இதனை நன்கு விருத்தி செய்தலும் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற வைத்தலும் மிகமிக அவகியமென
காட்டப்பட்டது.
அடுத்து இடம்பெற்றிருந்த தொழில் நுட்பப்பகுதி மிகமிக சிறப்பாகவும் பலருடைய சிந்தனைக்கு விருந்தாயும் அமைந்தது. தகுந ல் தொழில்நுட்பம் ( APPROPRIAT TECHNOLOGY) முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது. பெற்ருேலிய எரிபொருட்களில் மட்டும் தங்கியிராது வேறு சக்தி மூலங்களையும், சூரிய சக்தியை பயன்படுத்துதல் சம்பந்தமான மாதிரிகள் மிக எளிதாகவும் வியப் பிற்குரியதாயும் அமைந்திருந்தன. சில கைத்தொழில்களை உதா ரணமாக மட்பாண்டத்தொழிலின் தொழில்நுட்பத்தினை எவ்வாறு எளிதாயும், வினைத்திறனுள்ளதாயும் மாற்றலாமென்ற ஆலோசனை கள் நன்ருயிருந்தன. ஈழத்தில் மின்சாரம் எங்கிருந்து பெறப்படும் என்ற கேள்விகளுக்கெல்லாம் விடையாக பல மாதிரிகள் வியக்கத் தக்க முறையில் அமைக்கப்பட்டிருந்தன. உயிரியல் வாயுத்தொகு திகள், சூத்திரங்கள் நன்ருக செய்யப்பட்டிருத்தன. இவற்றுடன் பனம்பொருள் உற்பத்திப் பொருட்களும், ஏனைய கை ப் பணி வேலேகளும் சிறப்பாக அமைந்திருந்தன.
...............88 30 سب سے

இவற்றைவிட ஈழம், விஞ்ஞான யுகத்தினை நோக்கி முன்னேறி இலத்திரனியலிலும் சாதனைகளைப் படைத்து ஈழவர்களை வாழ வைக்கவேண்டும் என்பதுபோல இலத்திரனியல் பகுதியும் சேர்க் கப்பட்டிருந்தது. இது கண்காட்சியின் கவர்ச்சிக்காக சேர்க்கப்பட் டதுபோல் தோன்றினும், எமது அபிவிருத்தி நவீன விஞ்ஞா னத்தை நோக்கியதாக இருக்கவேண்டுமென வலியுறுத்தியதாகத் தோன்றியது.
உள்ளூர் உற்பத்திப்பொருட்களுக்கென இப்பகுதி ஒதுக்கப்பட்ட போதும் இப்பகுதி வரண்டு காணப்பட்டது. கலை இலக்கிய வெளியீடுகள் பார்வைக்கு வைக்கப்பட்டமையும் சிறப்பாயிருந்தது. ஈழவர் அவலங்களும், அவர்தம் எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்க ளும், பூரீலங்கா அரசின் போலி ஒப்பந்தங்கள் பற்றிய காட்டூன்" பகுதியும், ஈழப்பகுதியின்மேல் செய்தித்தாள்களை ஒட்டி உண்டாக் கப்பட்ட படமும் நன்ரு கவிருந்தன. அங்கு வழங்கப்பட்ட விளக் கங்களும் தர்க்க ரீதியாயமைந்திருந்தன.
மிக முக்கிய குறைபாடாக மலையகம் ஒதுக்கப்பட்டிருந்ததை குறிப்பிடலாம். அங்குள்ள வளங்கள், அபிவிருத்தி பற்றிய மாதி ரிகள் மருந்திற்கும்கூட காணப்படவில்லை. இனிமேலாவது இவை கவனிக்கப்படுமென எண்ணுகின்ருேம்.
இக்கண்காட்சியானது 'அபிவிருத்திச் சிந்தனை'யின் தொடக் கமாகவே நாம் கருதுகின்ருேம். இச்சிந்தனையை வளர்த்தெடுத் தல் ஈழவர் ஒவ்வொருவரினதும் கடமைப்பாடாகும். வெறுமனே ஆயுதந்தாங்கியவர்கள் மட்டும் போராட நாமெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாமென புத்திஜீவிகள் நினைத்துக் கொண்டிருக்க முடியாது. உங்கள் நிலைகளில் இருந்து கொண்டே உங்கள் துறைகளில் போராட்டத்திற்கான பங்களிப்பினைச் செலுத்துங்கள். அபிவிருத்தி பற்றிய ஆய்வுகளும் போராட்டத்தின் அங்கமே என உணர்ந்து கொள்ளவேண்டும். இதுபோன்ற கண்காட்சி வருடா வருடம் நடைபெறவேண்டும். தனித்தனியே ஒவ்வொரு துறைக ளுக்கும் விரிவான முறையில் கண்காட்சிகள் ஒழுங்கு செய்யப்பட வேண்டும். இதற்கு தனித்து சில மாணவ இளைஞர்கள் மட்டும் பங்களித்தால் போதாது. பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், ஆய்வாளர்கள், நிர்வாகத்துறையிலுள்ளவர்கள், திட்டமிடல் பிரி விலுள்ளவர்கள், திணைக்களங்கள் யாவும் முன்னின்று இப்படியான கண்காட்சிகளை நடாத்தவேண்டும். ஆணு லும் கண்காட்சிகளை நிகழ்த்துவதால் மட்டும் இதன் நோக்கங்கள் நிறைவேறிவிட்ட தாகக் கருதமுடியாது. இவற்றை பொருத்தமான இடங்களில்
31 -

Page 18
பிரயோகிப்பதே முழுவெற்றியாயமையும். அல்லாவிடின் ஏட்டுச் சுரக்காயாக மாறும். வெறுமனே பரீட்சைகளுக்குப் படித்த படிப் பினையும், எழுதுவினைஞர்களையும், இயந்திரங்கள் போன்ற வேலை யாளர்களும் உருவாக்கிய கல்வி முறையினை நிராகரித்து அபிவி ருத்திக் கல்வியினையும் பயில மாணவர்கள் முன்வரவேண்டும். கிடைக்கும் நேரங்களை பாடசாலைகளிலே உள்ள வளங்களை உப யோகித்து ஆக்கபூர்வமான வேலைகளில் ஈடுபடவேண்டும். இவற் றிற்கு இக்கண்காட்சி வழிவகுத்துள்ளது என்பதை யாரும் மறுக் 35(typ L-1 Tģ5.
پOیس
 

இரத்ததானம் - ooo GLI"Lq ooo
ஈழப்பிரதேசமெங்கும் பூரீலங்கா இராணுவத்தினது அடாவடித்தனங்கள் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டு வருகின்ற ன. நாளுக்கு நாள் சூட்டுக்காயங்களுடனும், 'ஷெல்' தாக்குதல்களால் காயமடைந்தும், கூரிய ஆயு தங்களினல் வெட்டிக் காயமடைந்தும் விமானங்களிலி ருந்து குண்டுத் தாக்குதல்களினல் காயமடைந்தும், வேறும் பல விபத்துக்களால் காயமடைந்தும் வைத்திய சாலையில் அனுமதிக்கப்படும் ம க் கள் தொகை அ தி க ரி த் து க் கொண்டே வருகின்றது. இப்படியான சந்தர்ப்பங்களில் இவர்களின் உயிரைக் காப்பதற்கு இரத்தம் வழங்குதல், அவசியமாகின்றது. ஆனலும் பலர் இரத்தம் வழங்குவது பற்றி பல தப்பபிப்பிராயங்களை கொண்டிருக்கின்றனர். இத்தப்பபிப்பிராயங்களைப் போக்கும் நோக்குடனும் மேலும் இரத்ததானம் வழங்குதலைத் தூண்டுமுகமாகவும் "நாங்கள்' சஞ்சிசை வெளியீட்டுக்குழுவினர் வைத்தியரொருவருடன் நடாத்திய பேட்டியினை இங்கு தருகிருேம்.
கேள்வி:- இரத்ததானம் பற்றி சில வார்த்தைகள் கூறமுடியுமா?
பதில் :- எல்லாத் தானங்களிலும் சிறந்தது இரத்ததானம். உயிர்காக்கும் தானமிது. அஞதைகளாகப் போகும் பல பிள்ளைகளினுடைய தாயையோ, தந்தையையோ அல் லது விதவையாகப்போகும் உங்கள் சகோதரியுடைய கணவனையோ, அல்லது உங்கள் தோழனையோ உங் கள் இரத்தம் உயிர் கொடுத்து காக்கலாம். உங்கள் அயலவன் வாழ, உங்கள் இனம் வாழ.
"செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்ற லரிது. என்ற வள்ளுவன் கூற்றுக்கிணங்க இரத்ததானம் செய்வீர்களாக,
கேள்வி: இரத்ததானம் பற்றியும் அதன் தன்மைகளைப் பற்றியும்
கூறமுடியுமா?
- 33 =

Page 19
பதில் : உடலுடன் உயிரைப் பிணைத்து வைப்பது இரத்தம்
கேள்வி:
பதில் :-
கேள்வி:-
பதில் :-
என்ற உயிர்த்திரவமே. இது இதயம், நாடி, நாளம், மயிர்த்துளைக்குழாய் என்பவற்றிற்கூடாக தொடர்ச்சி யாக ஓடிக்கொண்டிருக்கும். ஒவ்வொரு முறையும் இத யம் அடிக்கும்போது கலங்களுக்கான உணவுப்பொருட் களையும் பிராணவாயுவையும் உடலில் எல்லா பாகங்க ளுக்கும் கொண்டு செல்லும் . அத்துடன் சிறுநீரகங்க ளுக்கு கழிவுகளையும் , சுவாசப்பைக்கு காபனீரொட்சைட் வாயுவையும் எடுத்துச் சென்று அங்கிருந்து வெளி யேற்ற உதவும். ஒரு கன மீ ற் ற ர் இரத்தத்தில் 5,000,000 செங்குருதிச் சிறுதுணிக்கைகளும், 8,000 வெண்குருதிச் சிறுதுணிக்கைகளும், 200,000 - 500,000 வரையான குருதிச்சிறுதட்டுக்களும் காணப்படும். செங் குருதிச் சிறுதுணிக்கைகளில் இரத்தத்தின் சிவப்புநிறத் திற்குக் காரணமான 'ஹிமோ குளோபின்' காணப் படும். சாதாரண ஆரோக்கியமுள்ள மனிதனின் இரத் தத்தில் 80% ஹீமோ குளோபின் காணப்படும்.
ஒரு சாதாரண மனிதனது உடலில் எவ்வளவு இரத் தம் காணப்படும்?
சாதாரணமாக 150 ருத்தல் நிறையுடையவரிடம் சுமார் 15 போத்தல் இரத்தம் காணப்படும்.
பொதுவாக ள்ந்தெந்த சந்தர்ப்பங்களில் இரத்தத்தை இழந்தால் இரத்தம் வழங்கவேண்டி நேரிடும்?
1. துப்பாக்கிச் சூட்டுக்காயங்களால் பெருமளவில் இரத் தமிழந்தால் அல்லது வெடிகுண்டினுல் பாதிக்கப் பட்டு இரத்தமிழந்தால் 2. பெரிய ஆயுதங்களால் வெட்டுண்டு இரத்தமிழந்தால் 3. சத்திர சிகிச்சைகளின்போது -
கடும் நெருப்புக்காயத்தின் பின் காயங்களிலிருந்து அதிக ஊனம் வடிவதாலும் 5. பிரசவத்தின்போது அதிக இரத்தப்பெருக்கு ஏற்படின் 6. இரத்தச்சோகையால் ஏற்படும் இரத்தக்குறைவை நிவர்த்தியாக்கவும் இரத்தம் வழங்கவேண்டி ஏற் படும் ,
4.
கேள்வி: இழந்த இரத்தத்தை எப்படி ஈடுசெய்யலாம்?
- 34 -

பதில் :-
பதில் :-
பதில் :-
கேள்வி:
பதில் :-
*
இரத்தம் இழந்தவருக்கு இரத்தத்தையே அளிக்கவேண் டும். இத்தறுவாயில் இதுவே தனிச்சிகிச்சையாகும்.
யார் யார் இரத்ததானம் செய்யலாம்?
18 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட ஆரோக் கியமுள்ள கயரோகம், நெருப்புக்காய்ச்சல், செங்கமாரி மலேரியா, மேகரோகம் ஆகிய நோய்களால் பீடிக்கப் படாத ஆண்களும் பெண்களும் இரத்ததானம் செய்
. uu 6a)FTiíb.
ஒருவர் எவ்வளவு காலத்திற்கொருமுறை இரத்ததானம்
செய்யலாம்?
மூன்று மாதத்திற்கொருமுறை இரத்ததானம் செய்ய 6) fTub ,
இரத்ததானம் செய்வதால் ஒருவருக்கு எதாவது தீங்கு ஏற்படுமா?
இல்லை. யாதொரு தீங்கும் ஏற்படாது. இரத்தம் வழங் கமுன்பு வயிருர உணவுண்டிருந்தால் போதுமானது. இரத்தம் பெறும்போதுகூட கடும் வலியேற்படாது. இரத்தம் வழங்கிய அன்று மட்டும் ஓய்வெடுத்தால் போதுமானது.
இரத்ததானம் செய்பவர்களுக்கு எவ்வித நன்மைகள் ஏற்படும்?
இரத்தம் வழங்கும்போது உடலில் புதிய இரத்தம் உருவாகும். அத்துடன் இரத்தத்தை உற்பத்தியாக்கும் உறுப்புக்களும் நன்கு செயற்படுவதால் மேலும் உடல் நலமேற்படும். அத்துடன் வைத்தியசாலையில் இரத்த தானம் செய்பவருக்கு ஏதாவது நோயிருப்பின் வைத் திய பரிசோதனை செய்து தகுந்த சிகிச்சையும் உடனடி யாக வழங்கப்படும். இரத்தம் வழங்கியபின் சன்மான மாக 10/- வழங்கப்படும்.
இரத்ததானம் செய்பவர்கள் இழந்த இரத்தத்தினை எவ்வளவு காலத்துள் திரும்பப் பெற்றுக்கொள்கின்றனர்?
வழமையான உணவுகளை உண்டுவந்தால் இருவாரங்க ளில் மீண்டும் பழைய அளவு இரத்தத்தைப்பெறலாம்.
- 35 ആ

Page 20
கேள்வி: இரத்ததானம் செய்தவர்களுக்கு வைத்தியசாலையில் ஏதாவது சலுகைகள் செய்யப்படுகின்றனவா?
பதில் :- ஆம். இரத்தம் வழங்கியவர்களுக்கு இதற்கான சான் றிதழ் ஒன்று வழங்கப்படுகிறது. இதை வைத்திருந் தால் எல்லா வைத்தியசாலைகளிலும் மருந்தகங்களிலு முள்ள வெளிநோயாளர் பகுதிகளில் சிகிச்சை பெறுவ தற்கு முதலிடம் கொடுக்கப்படும். இவரின் குடும்பத்தில் யாருக்காவது இரத்தம் தேவைப்படின் மு த லி ட ம் கொடுக்கப்படும்.
கேள்வி: யாழ்ப்பாண வைத்தியசாலையில் மட்டும் ஒரு நாளைக்கு சராசரி எத்தனை போத்தல் இரத்தம் தேவைப்படுகிறது?
பதில் - 30 போத்தல் இரத்தம் தேவைப்படுகிறது.
கேள்வி: இரத்ததானம் செய்வதற்கு யாருடன் தொடர்பு கொள்
ளவேண்டும்?
பதில் :- உங்களுக்கு அண்மையிலுள்ள வைத்தியசாலையிலுள்ள - இரத்தவங்கிக்குப் பொறுப்பான வைத்தியரிடம் சென்று தனித்தனியே வழங்கலாம். அல்லாவிடின் பாடசாலைகள், வேலைத்தளங்கள், பல்கலைக்கழகங்களில் பலர் குழுவாக இரத்ததானம் செய்யமுன்வந்தால் இரத்த வங்கியிலி ருந்து வைத்தியர்கள் உங்களிடம் வந்து இரத்தத்தைப் பெற்றுக்கொள்வார்கள்.
GUIYS - ASA 3.26753 5L(155úo
மாநாடு
ܘܚܓܖܢܗܙܙܗܐܗܓܡ ܓܗܢܐ
மாணவர் இளைஞர் பொதுமன்றமும், ஆசிய மாணவர் கழகமும் இணைந்து சென்னே நகரில் எதிர் வரும் 28-06-86 - 04-07-86 ந் திகதிகளில் மாண வர் மாநாடு ஒன்றை நடாத்த ஒழுங்கு செய்துள் ளது. இம்மாநாட்டுக்கு பல நாடுகளிலிருக்கும் மாண வர் அமைப்புக்கள் கலந்து கொள்கின்றன.
= 36 =
 

தகுநல் தொழில் நுட்பமும் # அதன் முக்கியத்துவமும் :
ஈழத்தின் பல பகுதிகளிலும் சுயஉற்பத்தி பற்றியும், அபிவிருத்தி பற்றிய சிந்தனைகளும், அவற்றிற்கான சில முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றின் வெளிப்பாடாகவே பல இடங்களில் அபிவிருத்திக் கண்காட் சிகளும், கருத்தரங்குகளும் நடாத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறே மாணவர்களிடையே அபிவிருத்தி பற்றிய சிந்த னையை வளர்க்குமுகமாக தொடர்ச்சியாக மலரப்போகும் ஈழம் பொருளாதாரச் சுமையைத் தாங்குமா? என்ற கட்டுரையை வெளியிட்டு வருகின்ருேம். அதனைச் செழுமைப்படுத்துமுக மாக தொடச்சியாக தகுநல் தொழில்நுட்பம் சம்பந்தமான கட்டுரைகளை வெளியிட ஆரம்பித்துள்ளோம். இக்கட்டுரை கள் தொழில்நுட்பம் பற்றிய அறிவினை ஒரளவு தர முயற் சிகளை செய்யும். தொடர்ந்து இவற்றினை பற்றிய அறிவினை தம்முள் வளர்ப்பது ஒவ்வொரு பாடசாலைகளிலுள்ள மாண வர் மன்றங்களினதும், தனித்தனியே மாணவர்களதும் கட மையாகும். தொழில்நுட்பம், அபிவிருத்தி பற்றி கட்டுரைக ளைச் சேகரித்தல் கருத்தரங்குகளை ஒழுங்கு செய்தல் மான வர்கள் தம்மை இத்துறையில் வளர்த்துக்கொள்ள உதவும். எனவே இக்கட்டுரை அபிப்பிராயங்களும், இதற்கான ஆக் கங்களும் மாணவர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மலரப்போகும் ஈழத்தினை தன்னிறைவுப் பொருளாதாரமுள்ள சமதர்ம நாடாக கட்டியெழுப்ப முற்படும்போது பூச்சியத்திலி ருந்தே ஆரம்பிக்க வேண்டியிருக்கும். பொதுவாகவே அபிவிருத் தியடைந்துவரும் நாடுகளிலிருந்து ஏற்றுமதி மூலம் பெற்றுக் கொண்ட நேரடி மூலவளங்களையே விளைவுப்பொருட்களாக்கி அபி விருத்தியடைந்த நாடுகள் மீண்டும் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கு விற்று பெருமளவு இலாபத்தினைப் பெற்றுக்கொள் கின்றன. எனவே தொழில்நுட்ப முறைகளை எமது நாட்டிற்கு பொருத்தமான விதத்தில் மாற்றியமைப்பது அவசியமாகிறது. இவ்வாருன தொழில்நுட்பம் பற்றி அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இவ் வாருக உருவாக்கப்பட்ட தொழிற்நுட்பமே தகுநல் தொழில்நுட்
ഷം 37 =

Page 21
Lib (Appropriate Technology) 6T60T 96ttpá as 'Lil' G 6 (54.05. இத்தொழில்நுட்பம் அநேக அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வெற்றி காணப்பட்டுள்ளது.
இவ்வகைத் தொழில்நுட்பமானது மேலைத்தேய தொழில்நுட் பங்களின் அடிப்படைத் தத்துவங்களைக்கொண்டு எமது நாட்டின் மூலவளங்களுக்கும் தொழில்நுட்ப அறிவிற்கேற்பவும் சிறிய இயந் திரங்கள், குடிசைக் கைத்தொழில்மூலம் பொருட்களை உற்பத்தி செய்யவும், வேலைகளை இலகுவாக்கவும் உதவுகின்றது. இத்தொ ழில்நுட்ப மூலம் தயாரிக்கப்படும் கருவிகள் அபிவிருத்தியடைந்த நாடுகளின் இயந்திரங்களுக்கு ஒப்பானவையாக இருப்பதுடன் அவற்றின் வேகத்துடன் போட்டிபோட்டு வருகின்றது. இத்தொ ழில்நுட்பம் பற்றியும் அதன்மூலம் தயாரிக்கப்பட்ட கருவிகள் பற் றியும் அதன் மூலம் தயாரிக்கப்பட்ட கருவிகள் பற்றியும் அறிய வேண்டிய தேவையை இக்கட்டுரைகள் சிறிதளவாவது பூர்த்திசெய் யுமென நம்புகின்ருேம்.
கீழே தொடரும் கட்டுரையானது குறிப்பிட்ட ஒரு தகுநல் தொழில்நுட்ப அடிப்படையிலமைந்த, எமக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் பொருட்களின் உற்பத்திபற்றி அடிப்படையிலிருந்து தெளிவாக எடுத்துரைக்கின்றது.
குப்பை களிவுகளிலிருந்து வீட்டுக் கூரைத்தகடுகள் தயாரித்தல்
தற்போது எமது நாட்டில் பரவலாக பயன்பட்டுவரும் அஸ் பெஸ்ரஸ் (ASBRSTUS) கூரைத்தகடுகள் பற்றி அறிவீர்கள். மிக எளிதாக கூரை அமைப்பதற்கும் வீட்டுக்கூரையின் உட்பகுதிக ளில் பாதுகாப்பு, அலங்காரம் போன்றவற்றுக்காக மூடி அமைப் பதற்கும் அஸ்பெஸ்ரஸ் தகடுகள் உதவுகின்றன. பெருமளவில் இவை தேவைப்பட்டபோதிலும் மக்களின் நிதிநிலமைக்கு இவற் றின் விலை உயர்வாக காணப்படுகிறது. எனவே இவ்வாருன தக டுகளுக்கு பதிலீடாகவும் ஆணுல் அவற்றின் வலிமைக்கு ஒப்பான தாயும் மிகவும் மலிவானதாயும் கூரைத்தகடுகள் தயாரிக்கப்படின் அவை மிக உபயோகமாகவிருக்கும். எனவே நாம் தேவையற்ற தென சழித்துவிடும் குப்பையில் காணப்படும் பொருட்களிலி ருந்து இவ்வாருன, கூரைத்தகடுகளை தயாரிப்பது மிக வசதியான தாகும் .
அஸ்பெஸ்ரஸ் (கன்னர்) கூரைத்தகடுகள் பாளுங்கற்களினி டையில் புவியின் ஆழத்தில் புதைந்துகிடக்கும் சில கனியங்களி
حساس 38 است.

லிருந்து தோன்றும் ஒருவகை நார்ப்பதார்த்தமான கன்னர் (ASBESTUS) எனப்படுவதை அடிப்படையாகக்கொண்டு தயாரிக் கப்படுகின்றன. இவற்றினை பெறுவதற்காக நிலத்தைத்தோண்டி பாறைகளை உடைத்து இவ்வகை நார்கள் பிரித்தெடுக்கப்படுகின் றன. இவ்வேலையானது 'கல்லிலிருந்து நாருரிக்கும் வேலை’ ஆதலினுல் மிகக்கடினமானது. ஏறக்குறைய 100 கனமீற்றர் கற் களை உடைத்து பெறப்படும். இக்கல் நாரானது 18 கூரைத் தகடுகள் செய்வதற்கே போதுமானதாகும். எனவே இவற்றின் விலை உயர்வாகவிருப்பது வாஸ்தவமே. இதனுல் இவற்றிலிருந்து தயாரிக்கப்படும் கூரைத்தகடுகள் விலையுயர்வாகவே காணப்படும்.
கன்னுர் பெறப்படும் முறையில் காணப்படும் கடினத்தைத் தவிர அதிலுள்ள கதிரியக்க மூலங்களாலும், அக்கூரைத்தகடுகளி லிருந்தும், கன்னுரிலிருந்துவரும் தூசிகளிலிருந்தும் புற்றுநோய் (Canser) போன்ற நோய்கள் தோன்றுமென்பதும் அதணுெரு குறைபாடாகும். இதனுல் இக்கூரைத்தகடுகள் அமெரிக்கா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளன. எனவே கூடுதலாக அபிவிருத்தியடையும் நாடுகளுக்கு ஏற்றுமதிசெய்யப்படு கிறது. இதனுல் இந்நாடுகளில் வாழும் மக்கள் பாதிப்புக்குள்ளா கின்றனர்.
எனவே மொத்தத்தில் இவ்வகை கூரைத்தகடுகள் அபிவிருத் தியடைந்துவரும் நாடுகளுக்கு பெருமளவு உபயோகமற்றதாகவே காணப்படுகின்றது. எனவே இவற்றிற்குப் பதிலான புதுவகை கூரைத்தகடுகள் மிகவும் பிரயோசனமுள்ளவையாகும்.
புதியவகை கூரைத்தகடுகளில் கன்னுருக்குப் பதிலாக குப்பை காகிதம் விவசாயகழிவு போன்றவற்றிலிருந்து பெறப்படும் நார் கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை மலிவாகக் கிடைப்பதணு லுல் இவற்றில் நோயேற்படும் சாத்தியம் குறைவானதாலும் இதி லிருந்து தயாரிக்கப்படும் கூரைத்தகடுகள் மிகவும் பலனளிப்பவை யாகும.
தயாரிப்பு முறைகள் இவை பின்வரும் படிகளினடிப்படையில் தயாரிக்கப்படுகின்றன. O குப்பைகூளங்களை சேகரித்தலும், தூய்தாக்கலும்
மக்கள் பெருமளவு பொருட்களை உபயோகமற்றதான குப்
பையாக வீசுகின்றனர். இவை மாநகரசபை போன்ற நிர்வாகப் பிரிவுகளின் கீழியங்கும் நகரசுத்தி தொழிலாளர்களால் சேகரிக்
- 39 -

Page 22
கப்படுகின்றன. இவற்றினைத்தவிர வயல்கள் தோட்டங்கள் போன் றவற்றில் கழிவுகளாக அகற்றப்படும். விவசாயக் கழிவுகளும் பெருமளவில் நார்பொருட்களைக் கொண்டவையாகும். காகிதக் குப்மைகள் சில வியாபாரிகளின் கீழ் நகரின் பல பகுதிகளிலி ருந்து சேகரிக்கப்படுகின்றன. இவ்வாறு கிடைக்கும் குப்பைகளில் நார்த்தன்மையுடையவற்றை பிரித்தெடுத்து சேர்த்தல் வேண்டும். பின் இவற்றுடன் காணப்படும் கல், மண், வேறு பொருட்களை நீக்கி நார்த்தன்மையுடைய பொருட்கனை மட்டும் தூய்தாக்கி பிரித்தெடுக்கவேண்டும்.
o நார்களைப் பிரித்தெடுத்தலும் தயாரித்தலும்
இவ்வாறு தூய்தாக்கப்பட்ட நார்த்தன்மையான பொருட்களை ஓரளவு சிறுதுண்டுகளாக வெட்டி ஓரிரு நாட்களுக்கு ஊறவிட வேண்டும். இதனுல் இவை தனித்தனியே நார்களாகப் பிரிந்து விடும். தேவைப்படின் இவற்றைப் பிரியச்செய்யவல்ல இரசாய னப் பொருட்களைச் சேர்க்கலாம்.
விவசாயக் கழிவுகளை நன்கு காயவைத்த பின்னரே ஊறவிட வேண்டும். இவற்றிற்கும் புல் போன்றவற்றையும் பிரிப்பதற்கு இரசாயனப் பொருட்கள் தேவைப்படலாம். இவ்வாறு ஊறவிடப் பட்ட நார்களை நீருடன் நன்கு கலக்குவதன்மூலம் பிரியச்செய்ய லாம். பின் இவற்றை நீரிலிருந்து நீக்கி காயவிடவேண்டும். காயவைத்தபின் நார்களை மீண்டும் தூய்தாக்கவேண்டும்.
நார்களை ஊறவிடும்போது நொதித்தலால் நார்கள் பாதிக்கப் படாது பார்த்தல் வேண்டும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட நார்க ளில் பலதரப்பட்டவையும் கலந்து காணப்படும். முதலிரு செயல் முறைகளையும் பெருமளவில் செய்வதன்மூலம் நார்ப்பொருட்களை தேவையானளவு முன்கூட்டியே தயாரித்து வைத்தல் வேண்டும்.
O சீமெந்துக்கூழ் தயாரித்தல்
தயாரிக்கப்பட்ட நார்கள் மணல், சீமெந்து, நீர் ஆகியவற்றை தகுந்த விகிதத்தில் கலப்பதன்மூலம் சீமெந்துக்கூழ் பெறப்படும். இவ்வாறு கலக்கப்பட்ட கலவையை கலவையாக்கி (Miker) ஒன் றினுள் இட்டு நன்ருகக்கலக்கும்படி செய்தல்வேண்டும். இது இயந் திரந்தால் இயக்கப்படுவதாகவோ, கையினுல் இயக்கப்படுவதா கவோ இருக்கலாம். நன்ருகக் கலக்கப்பட்ட கலவை மிகஇறுக் கமானதாகவோ ஐதானதாகவோ இருக்காது. ஓரளவு இறுகிய பதமாக இறுக்கும்படி பார்த்துக்கொள்ளல் முக்கியமானது. அத்

துடன் இக்கலவையில் வளிக்குமிழிகள் இல்லாது பேணுதல் சிறந்த கூரைத்தகடுகளைப் பெறுவதற்கு அவசியமானதாகும்.
O தகடுகள் தயாரித்தல்
குறிக்கப்பட்ட அகல நீளமுள்ளதும் மெல்லியதும் சீரான தடிப்புடையதுமான மரத்தினுல் செய்யப்பட்ட நீள்சதுர கூடங்களை சீரான இரும்புத்தகட்டின்மேல் வைத்து அதனுள் சீமெந்துக் கூழினை ஊற்றி சமனுக பரவவிடுதல் வேண்டும். இவ்வாறு பரவ விடும்போது நார்கள் சீராகப்பரவுவதை கவனித்துக் கொள்ள வேண்டும். இதனை இரண்டு, மூன்று படைகளாக இடையில் நார்களை தூவி அமைப்பதும் வலிமையைக் கூட்டும். இதனை சில மணிநேரம் இறுகவிடவேண்டும்,
O அச்சிடல்
கூரைத்தகடுகள்போல் நெளியுடைய அச்சுக்களைத் தயாரித் துக்கொள்ளவேண்டும். இதற்காக கூரைகளுக்குப் பயன்படும் பெரிய நெளிவுகளையுடைய கல்வனைசுப்படுத்தப்பட்ட தகடுகளையும் (G Sheets) பயன்படுத்தலாம். இவ்வாறு தயாரித்த அச்சின்மீது முன்பு தயாரித்த சீமெந்து கூழுடன் கூடிய இரும்புத்தகட்டினை அச்சின் மடிப்புகளுக்கு நேராக விளிம்பு வரும்வண்ணம் முதலா மடிப்பை எடுத்துவைத்து சரிவாகப் பிடிக்கும்போது சீமெந்துத் தகடு மெதுவாக நழுவி அச்சில் விழும். இப்போது இரும்புத்த கட்டை அச்சின் நெளிவுகளுக்குக் குறுக்காக மெதுவாக இழுப் போமாயின் சீமெந்துத்தகடு அச்சில் படிப்படியாக விழுந் து படிந்து கொள்ளும்,
O காயவிடில்
இவ்வாறு அச்சுகளில் படிந்துகொள்ளும் சீமெந்துத்தகட்டை அச்சுடன் ஒர் பக்கமாக வைத்து இரண்டு நாட்களுக்கு இறுக விடவேண்டும். இடையிடையே தண்ணீர் தெளித்து வரவேண்டும். இவ்வாறு உருவாக்கப்பட்ட தகடுகள் இரண்டு நாட்களின் பின் பாவனைக்குத் தயாராக இருக்கும். இவற்றை மேலும் வலிதாக்க 7 நாட்கள் நீர் தெளித்து காயவிடலாம்.
O மெருகிடல்
தேவைப்படின் ஒரு நாள் கழிந்தபின் இத்தகடுகளுக்கு சோடியம் சிலிக்கேற்றினுலான பூச்சினேப் பூசுவதன்மூலம் இதனை மெருகிட

Page 23
  

Page 24
கேள்வி: பெண்களின் நிலை ஆதிகாலந்தொட்டே, இப்படித்தான்
இருக்கிறதா?
ஸ்டாலின்:-
ஏங்கெல்ஸ்:-
கேன்வி:
ஏங்கெல்ஸ்:-
கேள்வி:
ஏங்கெல்ஸ்:-
இல்லை. வரலாற்றில் தாய்வழி சமுதாயம் என்ருெரு காலகட்டம் இருந்தது. அப்பொழுது பெண்கள்தான் உற்பத்தியைக் கட்டுப்படுத்துபவர்களாக இருந்தார் கள். புராதன விவசாய முறை நிலவிவந்த அந்தக் காாலகட்டத்தில் பெண்களுக்குத்தான் உற்பத்தியில் பிரதான பங்கு இருந்தது. அப்போது ஆண்கள் காடுகளில் அலைந்துதிரிகிறவர்களாக இருந்தார்கள். பிறகு தந்தைவழிச் சமுதாயம் தோன்றியபோது உற் பத்தியின் பிரதான பங்கு பெண்களிடமிருந்து ஆண் களுக்கு வந்துவிட்டது.
இப்போது ஆண் பிரதானமானவனுக மாற்றப்பட்ட தும், அவனது உயர்ந்த நிலையை நிறுவுவதில் இருந்த தடைகள் எல்லாம், விழுந்துவிட்டன. தாய் வழி உடைமையை, தந்தை வழி உடமையாக மாற் றியதன் மூலமும் ஒரு தார மணமுறையை படிப்ப டியாக உருவாக்கியதன் மூலம் இச்சர்வாதிகாரம் நிறுவப்பட்டுவிட்டது.
தாய்வழிச் சமுதாயம் தந்தைவழிச் சமுதாயமாக மாற்றப்பட்ட காலம் எதுவென்று சொல்ல முடியுமா?
அது எப்போது நடந்தது என்பது பற்றி நம்மிடம் தகவல்கள் இல்லை. வரலாற்றுக்கு முந்திய காலகட் டத்தில் இது நடந்திருக்கிறது. ஆனல் இந்த மாற் றம் நடந்துள்ளது என்பதற்கு மட்டும் திட்டவட்ட
மான சான்றுகள் உள்ளன.
இந்த மாற்றத்துக்கும் பெண்ணினத்தின் அடிமை நிலைக்கு என்ன தொடர்பு என்பதை விளக்கிச் சொல் லுங்களேன்?
தாய்வழி உரிமை தூக்கிஎறியப்பட்டது என்பது உல கவரலாற்றில் பெண்ணினத்துக்கு ஏற்பட்ட தோல்வி ஆகும். ஆண் இப்பொழுது வீட்டையும் ஆள்பவனுக மாறிவிட்டான். பெண்ணின் நிலையோ தாழ்வுபட்டு அடிமை நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது. அவள் ஆணின் போகப்பொருளாக மாற்றப்பட்டாள். வெறும்
- 44 -

கேள்வி:-
லெனின்:-
கேள்வி.
LDT frish):-
பிள்ளை பெறும் இயந்திரமாக மாற்றப்பட்டாள். இவ் வாறு பெண்கள் இழிவான நிலையில் வாழ்ந்தது என் பதை கிரேக்கநாட்டு வரலாற்றில் மிகத்தெளிவாகப் பார்க்கமுடியும். இன்றைய சமூகத்திலும் அந்த இழி நிலை என்பது மாற்றப்படவேயில்லை.
முதலாளித்துவ சமுதாயத்தில் பெண்கள் எவ்வாறு சுரண் டப்படுகிருர்கள் என்பதை சொல்ல முடியுமா?
நவீன முதலாளித்துவ சமுதாயத்தில் எண்ணற்ற குடும்பங்கள், விவரிக்கவொண்ணுத அளவு ஏழ்மையில் உள்ளன. இத்தகைய குடும்பங்களில் கோடிக்கணக் கான பெண்கள் வீட்டுவேலை செய்யும் அடிமைக ளாக வாழ்கின்றனர். எப்படியோ உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு காலம் தள்ளுகின்றனர். ஒருசில காசுகளைக்கொண்டு தங்கள் குடும்பங்களுக்கு உண வும், உடையும் அளிப்பதற்குப் படாதபாடு படுகின் றனர். தங்கள் சொந்த உழைப்பைத் தவிர மற்ற யாவற்றிலும் சிக்கனத்தைக் கடைப்பிடிக்கின்றனர். இந்தப் பெண்களிடமிருந்துதான் குறைந்த கூலிக்கு ஆட்களைப்பிடிக்க முதலாளிகள் மிகவும் ஆவலாய் உள்ளனர். ஏனென்ருல் இந்தப்பெண்கள்தான் தங் கள் குடும்பத்திற்கு ஒரு கூடுதல் துண்டு ரொட் டியை சப்பாதிப்பதற்காக கொடூரமான அளவு குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்வதற்கு தயா ராக இருக்கின்றனர்.
பெண்களின் உரிமை பற்றியும், சமத்துவம் பற்றியும் பேசும்போது 'கம்யூனிஸ்டுகள் பெண்களை எல்லாம் பொதுவாக்கி விடுவார்களே' என்று சிலர் கூக்குரலிடு கிருர்களே?
(பலமாகச் சிரிக்கிருர்) பெண்களை எல்லார்க்கும் பொது வாக்கும் கைங்கர்யத்தை கம்யூனிஸ்டுகள் செய்யத்தே வையில்லை. நெடுங்காலத்திற்கு முன்பிருந்தே இது செய்யப்பட்டு வருகின்றது. கம்யூனிஸ்டுகள்மீது இப்
படிபுரளி பண்ணிவிட்டு முதலாளிகள் நல்லொழுக்க சீலர்களாக சீற்றம் கொள்ளுகிருர்களே அதைக்காட்டி லும் நகைக்கத்தக்கது வேறு எதுவும் இருக்கமுடியாது,

Page 25
Y
இேன்வி:
(ម្ភៃឆ្នាំនោះ –
/
பெண் விடுதலே ளன்பதைப் பெண்களைப் பொதுவாக்கு வது என்று இவர்கள் கொச்சையாய் புரிந்துகொள்வது 6Tsir?
முதலாளியாய் இருப்பவர் தனது மனைவியை வெறும் உற்பத்திக் கருவியாகவே பார்க்கிருர், உற்பத்திக் கரு விகள் எல்லோர்க்கும் பொதுவாக்கப்பட்டு பயன்படுத் தப்படப்போவதாய் கேள்விப்பட்டதும் இதே கதிதான் பெண்களுக்கு ஏற்படப்போகிறது என்று இயற்கையா கவே முடிவு செய்து கொள்கிருர், பெண்கள் வெறும் உற்பத்திக் கருவிகளின் நிலையில் இருத்தப்பட்டிருப்பதை
ஒழிக்க வேண்டுமென்பது நமது நோக்கம் என்பது அவ
ருக்குக் கனவிலும் கருதமுடியாத ஒன்ருகும்.
பெண்ணினத்திலேயே கூட அதிகமாக இழிவுபடுத்தப் படும் விலைமகளின் நிலை, இந்தப் பிரச்சனையின் தீர் வைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்.
விலைமகளிர் பரிதாபத்திற்குரியவர்கள்! முதலாளித்துவ சமுதாயத்திற்கு இரு வழிகளில் பலியானவர்கள். முதலாவதாக, இச்சமுதாயத்திற்குரிய கேடுகெட்ட சொத் துரி  ைம அமைப்பிற்கும், இரண்டாவதாக அதன் கேடுகெட்ட தார்மீக கபடத்தனத்திற்கும் பலி யானவர்கள். இவை மிகத் தெளிவாகத் தெரிபவை. உணர்ச்சிப் பண்பாடில்லாத குருட்டு ஆளால்தான் மறக்கமுடியும். விலைமகளிரைப் பயனுள்ள உற்பத் திப் பணிகளுக்குத் திரும்பும்படி செய்தாக வேண் டும்; சமுதாயம் பொருளாதாரத்தில் அவர்கள் தமக் குரிய இடங்களைப் பெறும்படி செய்தாக வேண்டும்.
அப்படித் திரும்பச் செய்வது சோசலிச சமுதாயத்தில் தானே சாத்தியம். அப்படித்தானே?
ஆம். முதலாளித்துவ பொருள் உற்பத்தி அமைப்பு ஒழிக்கப்படும்போது இந்த அமைப்பிலிருந்து எழும் பொதுப்பெண்டிர் முறையும் - அதாவது பகிரங்கப் பொது விபச்சாரமும், இரகசியத் தனி விபச்சாரமும் கூடவே ஒழிக்கப்பட்டுவிடும்.
பெண்கள் இயற்கையிலேயே உடல்ரீதியாக பலவீன மாக படைக்கப்பட்டிருக்கிருர்கள். அதனுல் ஆண்களுக்கு
يعسوب 446 حساسي.

ஈடாக அவர்களால் வரலாற்றுக்கடமை ஆற்றமுடியாது என்கிருர்களே.
அடிமைகளின் போராட்ட வரலாற்றில்கூட ஆயிரக்க ணக்கான பெண் வீராங்கனைகளும் பெண் தியாகிக ளும் பங்குபற்றியிருக்கிருர்கள். தொழிலாளி வர் க் கத்திலோ புரட்சி இயக்கத்திலோ பல லட்சக்கணக் கான பெண்கள் விடுதலைக்காக போராட முன்வரு கிருர்கள். ஒடுக்கப்பட்டவர்களின் வரலாற்றில் எந்த வொரு இயக்கமும் பெண்களின் பங்வேற்பு இல்லா மல் வெற்றி பெற்றதில்லை,
கேகவி புரட்சியில் பெண்கள் பங்குகொள்ளமுடியுமா? இதுவரை அவர்கள் புரட்சியில் ஆற்றிய பணி என்ன?
லெனின்:-
பெண்களின்றி புரட்சியில் நாங்கள் வெற்றி பெற்றி ருக்க முடியாது. அவர்கள் காட்டிய வீரதீரத்தை இன்றும் அவர்கள் புரியும் வீரச்செயல்களை என்
னென்பது!. அவர்கள் ஏற்றுச் சகித்துவரும் இன்
னல்களையும் இழப்புகளையும் கொஞ்சம் எண்ணிப் பாருங்களேன். ஆணுல் சிறிதும் தளராத உறுதியுடன் நிற்கிருர்கள். நம்முடைய தொழிலாளிப் பெண்கள் அதியற்புதமானவர்கள், வர்க்க உணர்வு கொண்ட போராட்ட வீராங்கனைகள் - 1906 ம் ஆண்டு டிசெம் பர் - 23ந் திகதி பிரேஸ்னயா மாவட்டத்தில் நடந் தது ஒரு நிகழ்ச்சி. 10 ஆயிரம் பேரைக்கொண்ட ஒரு மக்கள் கூட்டத்தை தாக்குவதற்கு கசாக்கியப் படையினர் வந்தனர். அப்போது அந்த மக்கள் கூட் டத்திலிருந்து இரண்டு உழைக்கும் பெண்கள் செங் கொடி ஏந்தி முன்னுல் வந்தனர் "ஏ கசாக்கியர் களே, எங்களை வேண்டுமானுல் கொன்று போடுங் கள், ஆனுல் எங்களுக்கு உயிர் இருக்கும் வரை எங் கள் கொடியினை சரணடைய அனுமதிக்கமாட்டோம் என்று சவால்விட்டுப் பேசினர். எதிர்பாராத இந்த வீரப்பேச்சினுல் திகைப்படைந்து நின்றனர் கசாக்கி யர்கள், உடனே ? கசாக்கியர்கள் வாழ்க’ என முழக் கமிட்டு அவர்களை நண்பர்களாக்கிவிட்டனர் மக்கள். பெண்கள் காட்டிய இதுபோன்ற துணிச்சலும் வீர மும் நமது நெஞ்சத்தில் என்றென்றும் நிலைத்திருக்கும்.
ܚ- 47 ܢ

Page 26
கேள்வி- புரட்சியில் அத்தனை ஆர்வம் கொண்டிருந்து பெண்க ளைப் பற்றிக் குறிப்பிட்டீர்கள். புரட்சிக்குப் பிந்திய சமு தாயத்தைக் கட்டி நிறுவுவதில் பெண்களின் பங்கு பற்றி சொல்லுங்கள்.
மா சே துங்:-
கேள்வி:
ஒரு மகத்தான சோசலிச சமுதாயத்தை கட்டி நிறு வுவதற்கு பெண்களை அமைப்பாக்குவதும் அவர்களை உற்பத்திச் செயலில் ஈடுபடச் செய்வதும் மிக முக் கியம். உற்பத்தியில் ஆணும் பெண்ணும் சம ஊதி யம் பெறுவதாக இருக்கவேண்டும். ஆணுக்கும் பெண்ணுக்குமிடையே உண்மையான சமத்துவமென் பது முழு சமூகத்திலும் சோசலிச மாற்றம் ஏற்ப டும்போதுதான் உணரப்படும் ,
ஒரு புரட்சிகர அரசு அமைக்கப்பட்டதன் மூ ல ம் பெண்களின் நிலையில் ஏற்படும் மாற்றத்தை நீங்கள் கண்கூடாகப் பார்த்திருக்கிறீர்கள். அதைப் பற்றி சொல்லுங்களேன்.
சோவியத் வடிவ ஆட்சி உழைப்பாளி மக்கள் ஆட்சி. அது தோன்றிய துவக்க மாதங்களில், பெண்கள் சம்பந்தப்பட்ட சட்டத்தில் மிகவும் திட்டவட்டமான ஒரு புரட்சியை நடத்தியது, பெண்களின் நிலையை பயன்படுத்தி அவர்களை அவமானகரமான நிலைக்குத் தள்ளுகிற சட்டங்களை துடைத்துத் துப்பரவு செய் தது. பெண்களே சமத்துவமற்ற நிலையில் வைத்து விவாகரத்து உரிமையைக் கட்டுப்படுத்து வது அத ணைச் சுற்றி வெறுப்படையச் செய்யும் சம்பிரதாயங் களை ஏற்படுத்துவது முறைப்படியற்ற திருமண ங் க ளின் பயனுய் பிறந்த குழந்தைகளை அங்கீக ரிக்க மறுப்பது, அந்த குழந்தைகளின் தந்தையரை கண்டு பிடிக்கும் முயற்சியை அமுலாக்குவது போன்ற சட் டங்கள் நடைமுறையில் தரைமட்டமாக்கப்பட்டன. உண்மையான ஜனநாயகத்தைக்கூட இன்னும் சாதிக் காத எமது நாட்டில் பெண் விடுதலையின் அவ சி யத்தை நன்கு உணர்கிருேம். உங்களுடன் வி வா தித்து பெண்ணுரிமை பற்றிய பல்வேறு விஷயங்க ளில் தெளிவை ஏற்படுத்தியுள்ளது. மிக்க மகிழ்ச்சி கடைசியாக ஒரு வேண்டுகோள். பெண்ணினத்திற்கு நீங்கள் விடுகிற அறைகூவல் என்ன? உங்களால் போராடமுடியும் என்பதைக் காட்டுங்கள்,
(தொகுப்பு மன ஓசை)
ജ് 48 i

போதைவஸ்துo000 அபாய ம்
உலகிலே மனித வாழ்க்கையைப் பாதித்துவருகின்ற காரணி களில் முக்கியமானதாக போதைவஸ்து இன்று காணப்படுகிறது. அந்தக் கொடிய நோய் எமது மக்கள் மத்தியிலும், குறிப்பாக இளம் சந்ததியினர் மத்தியில் தற்போது பரவிக்கொண்டுவரும் செய்தியைக் கேட்டதும் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்வ தோடு, ஆழ்ந்த கவலையையும் உண்டுபண்ணச் செய்துள்ளது.
ஈழப்போராட்டம் கூர்மையடைந்து வருகின்ற இக்காலகட் டத்தில் எமது போராட்ட சக்தியை திசைதிருப்தி, போராட்டத்தை மழுங்கடிக்கச் செய்யும் திட்டமிட்ட சதியாகவும் இச்செயல் அமை யலாம். மாணவர்கள், இளைஞர் மத்தியில் போதைவஸ்து பழக் கம் பரவுமாயின் எமது பரம்பரையே அழிக்கப்பட்டுவிடும் என்ப தில் சந்தேகமில்லை. இப்பழக்கம் எமது சமூகத்தில் வேரூன்றுமா யின் நாமே எம்மை அழித்து, எமது பொது எதிரிக்கு உதவுவ தாக அமையும். ஒருபோதும் இந்நோய் பரவ நாம் அனுமதிக்க முடியாது.
ஹஷிஸ், கஞ்சா, LSD மாத்திரைகள், ஹிரோயின் போன்ற போதைவஸ்துக்கள் யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்யப்படுவதாக அண்மைச் செய்திகள் கூறுகின்றன. யாழ்ப்பாணம், தெல்லிப் பளை வைத்தியசாலைளில், பலர் போதைவஸ்துக்கு அடிமையாகி சிகிச்கை பெற்றுள்ளார்கள். சில மாதங்களுக்கு முன்னர் ஒரு வயது நிரம்பாத பச்சக்குழத்தை ஒன்று ஹீரோயின் உண்டதால் யாழ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற சம்பவம் அதன் பாவனையின் நிலையை எமக்கு எடுத்துக்காட்டுவதோடு, அதிர்ச்சியுறவும் செய் கிறது.
போதைவஸ்து பாவிப்பதால் உண்டாகும் பலாபலன்களையும் அதன் அறிகுறிகளையும் பார்ப்போம். ۔
fő(Byrru gör - BROWN SUGAR
1. சம்பந்தப்பட்டவரின் உணவு, உறக்கம் என்பவற்றில்
மாற்றம் காணப்படும்.
2. பசி இருக்காது
3. உடை உடுக்கும் முறையில் மாற்றம்

Page 27
10.
4.
இனிப்புக்களில் கூடுதலான நாட்டம் ஒரு கணம் கலகலப்பாக இருப்பவர்கள், திடீரென மெளனிப்பர். கண்களில் இலேசாகத்தொய்வு, வாய் கொஞ்சம் திறந்தே இருக்கும். இலேசாகத் திக்குவதோ, குரல் பிசிறப்பதோ இருக்கக் கூடும்.
நிறை விரைவாகக் குறையும். அடிக்கடி தனி அறையில் தன்னைத் தனிமைப்படுத்தில்
கொள்வர்.
வீட்டில் பணம், பொருட்கள் காணுமல் போகும்.
Ο விளைவுகள் Ο பாவித்த உடனேயே விசம் காரணமாக இறப்பர்.
உபயோகிக்க ஆரம்பித்த நாலு நாட்களில் ஒருவரை தன் வசப்படுத்திவிடும். -- இந்தக் கொடிய விசம் விரைவிலேயே இருமல், சளி, சளியில் இரத்தம், நுரையீரலில் ஓட்டைகள், கசம் போன் றவற்றை ஏற்படுத்தும்.
நிபுணர்கள் கூற்றுப்படி மரணத்தை உண்டுபண்ணும்.
assisir - MARIJUANA
.
இதயத்துடிப்பின் வேகம் கூடும்.
கண்கள் சிவக்கும். தொண்டை வரண்டு, வேதனைக்குள்ளாவர். உணர்ச்சி வசப்படுவது குறையும். ஐந்து அல்லது ஆறு மணித்தியாலங்களுக்கு அதன் தொழிற்பாடு மனிதனை சமநிலைக்கு கொண்டுவரவிடமாட் டாது. தொடர்ந்தும் அதில் நாட்டத்தை ஏற்படுத்தும் . தொடர்ந்து பாவித்தால் நிரந்தரமாகவே கஞ்சாவின் துணை தேவைப்படும்.
Ο விளைவுகள் Ο
எதிலும் பற்றில்லாத அசமந்த நிலக்கு மனிதனைக் கொண்டுவிடும். - பிரதான குணமாகக் கொள்ளலாம்.

உலகையே அதிரவைத்தது.
2. வேண்டாத சந்தேகம், பொய்யான கற்பனைகளைத்
தோற்றி மனதை தன்வயப்படுத்தும், 3. மூர்க்கத்தனம் தோன்றும்.
மாத்திரைகள் - LSD
1. உபயோகித்த 20-30 நிமிடங்களில் மனநிலையையும் மூளை
யையும் பாதிக்கும்.
2. இல்லாததை இருப்பதுபோன்று கற்பனை பண்ணவைக்
கும்.
O விளைவுகள் Ο 1 இல்லாத கற்பனையைத் தருவதன் மூலம் தற்கொலை செய்யத் தூண்டும். மாடியில் இருந்து குதிக்கவும் பல ரைத் துண்டியிருக்கிறது என்பது நிபுணர்களின் ஆராய்ச் சியில் இருந்து தெரியவந்துள்ளது.
எக்காரணங்களுக்காகப் பழகுகிருேம் என்று தம்மை நியாயப் படுத்திக்கொண்டாலும், இவர்களில் 90 வீதமானவர்கள் இப்பழக் கத்தில் இருந்து மீளமுடியாது என்பது ஆய்வாளர்களின் கருத்து. அமெரிக்காவில் 1970-ம் ஆண்டு போதைவஸ்துக்கு அடிமையாகி அதிலிருந்து தம்மை மீட்டுக்கொள்ளமுடியாத இரண்டு பதிஞறு வயது நிரம்பிய பிள்ளைகள் 'திருந்தமுடியாத தங்கள் வாழ்வில் அர்த்தம் இல்லை’ என்று தற்கொலை செய்துகொண்ட சம்பவம்
போதைவஸ்து பழக்கத்துக்கு அடிமையானவர்கள் பணக்கஷ்
ரம் ஏற்படும்போது பிழையான வழிகளைக் கையாண்டு இறுதியில் தங்களை அழித்துக் கொள்பவர்களாகவே ஆகிவிடுகின்றனர்.
இன்றைய காலகட்டத்தில் எமது உடல், உளரீதியான வலி மையில் இருக்கவேண்டிய தன்மையிலிருந்து எம்மை பாதுகாத்துக் கொள்வது ஒவ்வொருவரது கடமையுமாகும். தீமை தருவனவற்
றைத் தவிர்த்து எமது மாணவச் செல்வங்களையும், இளைஞர்களை
யும் பாதுகாப்பது நமது மக்களின் கடமையுமாகும்.
-ܚ- 51 -

Page 28
மீண்டும் அது எப்போது வரும்?
(சிறுகதை)
ஊர் உறங்கி நிசப்தமாக இருந்தது. இரவு 9-30 மணியிருக்கும். கிருபா 9-ம் தர பரீட்சைக்காகப் படித்துக்கொண் டிருந்தான். அப்போது பேரிசைச்சலுடன் தகரப் படலையடியில் வந்து நின்றது ஒரு வாகனம். திடீரெனப் பாய்ந்து ஒடும் சத்தம் கேட்டதும் கிருபாவும் அம்மாவும் வெளியில் பார்ப்பதற்காக வந் தோம் வெளியில் வரும்பொழுது வீட்டைச் சுற்றிப் பலர் ஒடு வதை இருவரும் காண்கிருர்கள். உடனே கிருபா 'அம்மா கள் ளன், அம்மா கள்ளன்' என்று அலறியவாறு தாயைக் கட்டிப்
பிடித்தான். அம்மாவோ செய்வதறியாது திகைத்து நின்ருள்.
"நாங்கள் பொலிஸ் உங்களுடைய மகன் சிவலிங்கத்தைப் பிடிக்க வந்திருக்கிறம்' என்று பருத்த உருவமுடைய ஒருவர் கையில் சுழல் துப்பாக்கியுடன் முன்னுக்கு வந்து அம்மாவிடம் கூறினுர்,
அதே நேரம் திடு திடு என்று சிலர் வீட்டுக்குள் சென்றதை அவதானித்தான் கிருபா, அவர்களும் பொலிஸ்தான் என்பதை தனக்குள் கூறிக்கொண்டான். வீட்டில் அப்பா, இரண்டு அக்கா மார், அம்மா இவர்களுடன் கிருபாவும், அண்ணன் சிவலிங்கம் இருந்துவிட்டு எப்பவும் ஒருநாள் வீட்டில் தங்குவது வழக்கம். அன்று வீட்டில் அண்ணன் தங்கவேயில்லை, கிருபா தாயிடம் கேட் கும் போதெல்லாம் அண்ணன் வயலுக்குச் செல்வதாக கூறு வது வழக்கம்.
வீட்டுக்குள் சென்றவர்கள் வெளியில் வந்ததும் 'சிவலிங்கம் ன சேர்' என்று ஒருவன் கூறினன்.
அப்பாவும், அக்காமாரும் அந்த அமளிக்குள் எழுந்து வெளி
யில் வந்தார்கள்.
முன்னுக்கு நின்ற பருத்த உருவமுடையவர் 'அம்மா சிவ லிங்கம் எங்க' என்று உரத்த குரலில் கேட்டான். அதற்கு அம்மா 'ஐயா வயலுக்குப் போயிற்ருன்’ என்ருர்,
அப்போது அப்பாவை ஒருவரும், கிருபாவை வேருெருவரு மாக தனியாகக் கூட்டிச் சென்ருர்கள். -
= 52 =

கிருபாவிடம் "அடேய் உண்ட அண்ணன் எங்கடா' என்று உறுமிஞன். ஒருவன். 'வயலுக்கய்யா' என்று தளதளத்த குர லில் கூறி நடுங்கிக்கொண்டு நின்ருன். 'உண்ட அண்ணன் புலி புலி என, கொட்டியா, கொட்டியா' என்று கேட்டான். கிருபா **இல்லை ஐயா, இல்லை. அண்ண வயலுக்க' என்ருன்.
பக்கத்தில் நின்ற மற்றவன் எதிர்பார்க்காமல் பளபள என கன்னத்தில் அறைந்தான். பாவம் கிருபா அப்படியே சுருண்டு கொண்டு கீழே விழுந்து அலறிஞன். ' அந்த சத்தத்தில் அக்கா மாரும், அப்பாவும் 'தம்பி., மகனே. என்றவாறு ஒலமிட்ட 6.
அப்போதுதான் அண்ணனை ஏன் பொலிஸ் பிடிக்க வந்தது என்பதை உணர்ந்தான். வீட்டுக்காரருக்கு வேளைக்கே தெரிந்தி ருந்தது.
* மகனை நாளைக்கு ஸ்ரேசனுக்கு கூட்டி வாங்க' என்று கூறி விட்டு வந்தவர்கள் சென்ருர்கள்.
எல்லோரும் ஒருவரை ஒருவர் சோகமாக நோக்கிக்கொண்டு அச்சமும், கவலையும் கொண்டவர்களாக நித்திரைக்குச் சென்ருர் கள். இரவு நடந்த சம்பவம் கிருபாவை அதிரவைத்தது. நித்தி ரையே வர இயலாமல் இருந்தது. நடந்த சம்பவத்தை நினைவு படுத்தியும், அண்ணனின் தியாக நிலைப்பாட்டையும் பற்றி சிந்த னையை ஒடவிட்டான். -
நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன அப்போது இராணுவத்தின ரும், பொலிசாரும் அடிக்கடி அண்ணனைத் தேடி அலைந்து வீட் டுக்கு வந்து சென்ருர்கள். 9-ம் தர படிப்பை முடித்த கிருபா அப் போது 10-ம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான்.
ஒருநாள் அண்ணனை பிடிக்கவந்த இராணுவத்தினர் கிருபா வைப் பிடித்துச் சென்றனர். முகாமுக்குச் சென்றதும் பலரின் மிரு கத்தனமான தாக்குதலுக்கு தாங்கமுடியாத அவன் இறந்து விடு வது நல்லது என்று நினைத்தான், மானிதாபிமானத்தை தெரியா
தவாகளாக அநத காடையாகள நடந்துகொண்டார்கள்.
கிருபாவை இராணுவம் கொண்டு சென்றதையும் அவர் கடு மையாகத் தாக்கப்பட்டதையும் அறிந்தபலர் கவலைப்படாமல் இருக் 4.676)2u).
கிருபாவிடம் கேட்ட விடயம் முழுவதும் தனது அண் ண ன் இயக்கத்தில் இருப்பதைப்பற்றியே.
ܚܕ 53 1 ܕܚܢ

Page 29
ஒரு வாரத்தின் பின் விடுதலை செய்யப்பட்டான் கிருபா, அவ னுடைய மனநிலையும், உடல் நிலையும் நொந்துபோய் இருந்தது. ஊரில் ஒரே பரபரப்பு. பாடசாலையில் ஆசிரியர், மாணவர்கள் எல் லோரும் கிருபாவின் துயர நிலையை அறிந்தாலும், அங்கு பகிஸ் கரிப்போ, ஊர்வலமோ செய்யமுடியாத இராணுவ அடா வ டி த் தனம் அதிகமாயிருந்தது. துன்பத்தில் அனைவரும் பங்குகொண்டு
ஒரளவு அவனது கவலையை குறைத்தார்கள்.
10 ம் தர பரீட்சைக் காலமாக அது இருந்தது. தன்னுடைய குடும்ப நிலையையும் எதிர்காலத்தையும் பற்றி சிறிது உணர்ந்து கொண்ட அவன் தனது படிப்பு விடயத்தில் மனம் தளராதவனுக இருந்தான்.
ஈழத்தை மீட்டெடுப்பதற்காகப் போராடிக் கொண்டிருக்கும் 'பொடியள்' அங்கு இராணுவத்தினர் மீது நடத்திய தாக்குத லின் விளைவாக அப்பிரதேசத்தில் வாழ்ந்துகொண்டிருந்த தமிழர் கள் நினைக்க முடியாதளவு இன்னல்களை எதிர்நேக்கியும், நோக் கிக் கொண்டும் வருகிறர்கள். கிருபா பரீட்சையில் சித்தியடைந் ததாக முடிவும் வந்தது.
இராணுவத்தினர் ஆடு, மாடுகளைப்போல் சுட்டார்கள். அக்கா மார், தங்கைகள், அம்மா மார் பலரின் கற்பைச் சூறையாடி களங் கத்தை ஏற்படுத்தினர்கள். எமது கறைகளை நாங்களே இல்லாமல் செய்யும் நிலைக்கு எங்களைத் தயார்படுத்திக் கொள்வோம்.
காட்டு மிராண்டித்தனமான அந்த நிகழ்ச்சியில் கிருபா LDu? ரிழையில் தப்பினுன் கிராமங்கள் முற்ருக அழிக்கப்பட்ட நிலையில் அப்பிரதேச மக்களுடன் கிருபாவும், குடும்பத்தினரும் உயிர்களை மட்டும் தங்களுக்குச் சொந்தமாக்சிக் கொண்டு அண்மையில் உள்ள கிராமங்களின் பாடசாலைகள், கோவில்களை அகதிகள் முக T ம் க ளாக மாற்றினர்கள். ,
சில நாட்களுக்குப் பின் அகதி முகாம்களுக்கு மிக அண்மை யில் ஒரு இராணுவ முகாம் ஒன்று உருவாகியது. ஒரிரு நாட்க ளின் பின் திடீரென ஒரு அகதி முகாமுக்குச் சென்ற இராணுவத் தினர் அங்கிருந்த இளைஞர்கள் பலரைப் பிடித்துச் சென்ருர் கள் அவர்களின் நிலையோ? மிகவும் பரிதாபம். கை உடைந்தவர்களும் கால் நடக்கமுடியாதவர்களும், பல் இல்லாதவர்களும், முகத்தை ஒருபக்கம் பெரியதாக மாற்றியவர்களுமாக சிலர் விடுவிக்கப்பட் டனர். இன்னும் சிலர் இராணுவ முகாமில்,
1 14 : 54 14 ܘܬܐ ܐ
 


Page 30
தொடர்பு:
66 r r tul?
bᎢᎬIᎭ
蜀
காழ்ப்பான
 

و في ولاة
is still