கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நாங்கள் 1986.11

Page 1
GUYS DIET50:2
 


Page 2
" | ''': :
 
 
 
 
 

இதழ்: 10
கார்த்திகை 1986
தமிழ்பேசும் மக்களிடையே 1947 ஐ அடுத்து மேற்கொள்ளப் பட்ட திட்டமிட்ட குடியேற்றங்களும், 1947, 48களில் கொண்டு வரப்பட்ட தொழிலாளர் வர்க்க உரிமை பறிப்புகளும், 1958இல் ஏற்பட்ட இன அழிப்புக் கலவரமும், 1960களை அடுத்த திட்ட மிட்ட வேலைவாய்ப்பு குழிபறிப்புகளும் (சிங்களத் தேர்ச்சி) ஏற்ப டுத்தத் தவறிய ஒரு எழுச்சிப் போராட்டத்தை 1970 இன் தரப்படுத்தல் ஏற்படுத்தி விட்டதெனில் அதன் சக்தியை நாம் உணரத்தான் வேண்டும். இந்த எழுச்சி கற்பவர் மத்தியில் எழு வதால் சரியானதைக் கற்று இந்த சமூக அமைப்பினை மாற்று வதாக அமையும்போதுதான் சரியானதைச் செய்ய முன்வந்த தாக 'நாங்கள்" கருதலாம்.
மாணவர் கற்கும் பாடப்புத்தகங்களின் பாடவிதானங்களில் கூறப்படுகின்ற, இன வரலாற்றுப் பிதற்றல்கள் - மோசடிகள், நகர எரிப்புகள், நூல்நிலையம், கல்விக் கூடங்கள் எரிப்பு போன்ற நிகழ்வுகள் ஒரு இனத்தின் கலாசாரத்தை அழிக்க எடுக்கும் முயற்சியாகும். இதன் தொடர்ச்சி அந்த இனத்தின் கல்வியை சீர்குலைக்கும் இதன்மூலம் அந்த இனம் முற்முக அழிக்கப்பட்டு விடும். இந்த அடிப்படையில்தான் பேரினவாத சோவனிச அரசு திட்டமிட்டு இயங்கிவருவதை நாங்கள் உணருகின்ருேம் கல்வியை தம் மூலதனமாகக் கொண்டு இயங்கும் ஈழவரை அழிப்பதற்கு இதுவே சிறந்த வழியெனவும் அரசு கருதுகின்றது. வெறுமனே அத்தாட்சிப் பத்திரம் பெறுவதற்கான படிப்பாக, அல்லது தனது குடும்பத்தின் உயர்வை மட்டும் கருத்தில் கொண்ட கல்வியாக மாணவர் தமது தரத்தினை குறைத்துக் கொள்ளாது இருப்பது டன், கல்வியில் மேல்நிலைபெற குதிரை ஒடல், பார்த்தெழுதல், களவான அத்தாட்சிப் பத்திரம் பெறல் போன்ற வக்கற்றதும் நம்மை நாமே ஏமாற்றுவதும், நமது இனத்துக்கே நாம் குழி பறிப்பதுமான இந்த சுயநல நிகழ்வுகளை கண்டித்து செயற்படுவ தும் மாணவர் எழுச்சியின் சரியான வடிவங்களாகும்.

Page 3
அரசின் திட்டமிட்ட நடவடிக்கையை மட்டுமன்றி சமுதாயத் தின் தேவையையும் உணர்ந்து மாணவர் சமுதாயம் செயற்படத் தொடங்கிவிட்டது. படிப்பதற்காய் போராடி போராடுவதற்காய் படிக்கும் ஒரு வளர்ச்சிப் போக்கினைக் கொண்டு முன்நகர்ந்து செல்கின்றது. மாணவர் சமுதாயத்தின் குறைகளை, கஷ்டங்களை, திட்டமிட்ட அடக்கு முறைகளை மாணவர் சச்தி மாபெரும் சக்தி என்ற வீராவேசத்துடன் உடனுக்குடன் வெளிப்படுத்தத் தொடங்கிவிட்டனர்.
தலவாக்கொலை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை விரிவுரையா ளர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளமை, மாணவரிலிருந்து ஆசிரியர் களையும் இணைத்துக் கொண்டதாக பிரச்சினைகள் வளர்ந்து செல் வதையே காட்டுகின்றது. இதன் அடுத்த கட்டம் இன்று கைது செய்யப்பட்டும், கொல்லப்பட்டும் வரும் பல்கலைக்கழக மாணவர் களிலிருந்து, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பக்கம் திரும்ப லாம். உடமைகளும், கல்வியும் பறிபட்டிருந்த ஆசிரிய, மாண வர் சமுதாயம் இன்று உயிரையும் பறிகொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அக்கரைப்பத்தனை தோட்டப் பாடசாலை இளம் ஆசிரியை பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பூர் மகாவித்தியாலய இளம் ஆங்கில ஆசிரியர் கைது செய் யப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கைகள் கல்வியைச் சீர்குலைக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்படுகின்ற திட்டமிட்ட நடவடிக்கை களே. இதனை மாணவர் சமுதாயம் இன்று உணரத் தலைப்பட் டுள்ளதன் விளைவுதான் மாணவர்கள் ஆசிரியர்களை விடுவிக்கக் கோரி ஊர்வலம் நடத்தி இராணுவ முகாமை முற்றுகையிட் டமையும், மலையக மாணவர் மன்றம் பாடசாலைகளைப் பகிஸ்க ரித்து இளம் ஆசிரியை விடுவிக்கக் கோரியும் கிளர்ந்தெழுந்துள் ளமை வெளிப்படுத்துகின்ற தாக்கங்களாகும்.
திரியாய் பாடசாலை அதிபரும், அகதிகளாயிருந்த அப்பாவி பொது மக்களும் பாடசாலையில் வைத்தே சுட்டுக் கொல்லப்பட் டமை, சம்பூர் மகாவித்தியாலய ஆசிரியர் பாடசாலையில் கைது செய்யப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டமையும், கறுக்கா மு?ன பாடசாலை அதிபர் தெருவில் வைத்து கோரமாக கொலை செய்யப்பட்டமையும், இன்று ஆசிரியர் சமுதாயம் தம்மைப்பற்றி சிந்திக்கும்படி தூண்டிவிட்டுள்ளது. இவை மட்டுமன்றி பாடசா லைகள் அகதிமுகாமாவதுடன், இராணுவ முகாம்களாகவும் மாறி
2

வருகின்றன. வசாவிளான், திரியாய், தம்பலகாமம், கதிரவெளி போன்ற பாடசாலைகள் இராணுவ முகாமாக்கப்பட்டு கல்விக் கூடங்கள் கொலைக் கூடமாக மாற்றப்பட்டுள்ளன. இத்தகைய ஒவ்வொரு நடவடிக்கையும், ஈழவர் சமுதாயத்தை திட்டமிட்டு அழிப்பதற்கு எடுக்கும் முன் நிகழ்வுகளாகும்.
இந்த உண்மைகளை உணர்ந்து ஈழத்தின் அனைத்துப் பிராந் திய அனைத் து பாடசாலைகளின் ஆசிரியர், மாணவர்கள், மற்றைய ஒவ்வொருவரினதும் பிரச்சினையை எமது பிரச்சினை யாக ஏற்று, எதிர்காலத்தில் ஒரு உன்னத சமுதாயம் ஒன்றை உருவாக்க ஒன்றிணைய வேண்டும். மாணவர் சக் தியை நாம் ஒன்றிணைந்து செயற்படுத்துவ கன் மூலம் உறுதிப் படுத்தலாம். வடக்கு, கிழக்கு, மலையகம் என்ற வேறுபாடின்றி மாணவர் சமுதாயத்திற்கு ஏற்படும் அனைத்து அடக்கு முறைகளை 4ம் உடைத்தெறிய ஒன்றுபட்டு ஒரே குரலில் இறுதிவரை உறுதியுடன் போராடுவோம்.
மலையக மாணவர்களுக்கு ஆதரவு வழங்குக!
அப்பாவி இளம் ஆசிரியையும் அவரின் சகோ தரியும் தகப்பனரும் பயங்கரவாதிகளெனக் கூறி கைது செய்ததற்கெதிராக மலையகத்தில் 25 பாட சாலையின் மாணவர்களும் ஆசிரியர்களும் பாட சாலைப் பகிஷ்கரிப்பினை மேற் கொண்டனர். இதற்கு ஆதரவாக 25 ஆயிரம் தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தினை மேற் கொண்டனர். இதற்கு ஆதரவு வழங்குமாறு கேட்டுக் கொள்கிருேம். 70- 0-86.
பாடசா8லப் பகிஸ்கரிப்பு
படுவான்கரைப் பகுதியில் அண்மையில் நடந்த படுகொலை களைக் கண்டிக்குமுகமாக மட்டுநகரில் எம்மால் பாடசாலைப் பகிஷ்கரிப்பு ஒழுங்கு செய்யப்பட்டது. இதனுல் 24-10-86 அன்று பாடசாலைகள் முழுவதும் வெறிச்சோடிக் கிடந்தன.

Page 4
மலரப்போகும் ஈழம் பொருளாதார
சுமையைத் தாங்குமா?
ஈழத்தில் கடல்வளம்
இக் கட்டுரையானது மீன்பிடியைப் பற்றிய விரிவான ஆய்வினை உங்களுக்குத் தரப்போவதில்லை. மாறக ஈழத்திலுள்ள மீன்பிடி வளங்கள் எவ்வளவு? இவை ழரீலங்காவுடன் ஒப்பிடும்போது எவ் வளவு பங்கினை வகிக்கின்றது? ஈழத்தின் சனத்தொகை எவ்வளவு? ஒரு மனிதனுக்குத் தேவையான மீன் உணவு எவ்வளவு? எனவே ஈழத்தின் கடல்வளங்கள் எமது பொருளாதார சுமையை நிவர்த்தி செய்யுமா? போன்ற கேள்விகளிற்கு ஆனவிடைகளாகவே இக் கட்டுரை அமைகின்றது. எனவே ஈழத்தின் பொருளாதார செழிப் பினைப்பற்றிச் சந்தேகம் கொள்பவர்களுக்கு நீங்கள் தெளிவான விளக்கமொன்றைக் கொடுக்கக்கூடியவர்களாக மாறுவீர்கள் என
நம்புகின்றேன்.
ஈழத்திலே மிக மலிவானது இலகுவில் பெறக்கூடியதுமான புரத உணவாக மீன் கருதப்படுகிறது. மருத்துவ ஆய்வுகளின்படி ஒரு தனி மனிதனுக்கு வருடத்திற்கு 12 K விலங்குப் புரதம் தேவைப்படுகிறது. ஈழத்தின் பெரும்பகுதி கடலினுல சூழப்பட் டுள்ளது. இவற்றில் மலையகம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்க ளான யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னர், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை கடல் மீன்பிடி மாவட்டங்களாயும் வவுனியாவில் உள்நாட்டு மீன்பிடி (Island Fisheries) மாவட்ட மாகவும் காணப்படுகின்றது. ஈழத்தின் மீன்பிடி முறைகள் பிரதா னமாக நான்கு வகைப்படுத்தலாம். 1. கரையோர மீன்பிடித்தல் 2. ஆழ்கடல் மீன்பிடிப்பு 3. தூரக்கடல் மீன்பிடிப்பு 4. உள்நாட்டு மீன்பிடிப்பு என்பனவாகும். ஈழத்தில் கரையோர மீன்பிடிப்பே பிரதானமா கும் ஈழத்தின் வடபகுதியில் கண்ட மேடைகள் காணப்படுகின் ApGOT. GGJ og? (WADGE BANK) i ffib CDT (PEDRO BANK) பேள் (PEARL BANK) என்பன அக்கண்டமேடைகளாகும். கடலிலேயே மிகவும் உற்பத்திகூடிய பகுதிகளாக கண்டமேடை களே காணப்படும். இக்கண்ட மேடைகளே ஈழத்தின் மீன்பிடி வளத்தின், முக்கிய மூலங்களாகும். இக்கண்ட மேடைகளில் 110 தொன் மீன்வளம் காணப்படுகின்றது. 93% மீன்பிடி கரையோர
鑫

மீன்பிடியாகும். இங்கு பாவிக்கப்படும் மீன்பிடி முறைகள் யாவும் பாரம்பரிய மீன்பிடி முறைகளாகும். இவை விஞ்ஞான ரீதியாக மாற்றப்பட வேண்டும். தூரக்கடல், ஆழ்கடல் மீன்பிடித்தல் ஈழத்தில் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. இப்பிரதேசங் களில் உள்ள வளங்களை நாம் இன்னும் பாவிக்கத் தொடங்க வில்லையென்றே கூறவேண்டும். ஆழ்கடல் மீன்பிடியை விருத்தி செய்ய கூடிய தொழில்நுட்ப அறிவும் விஞ்ஞான ஆய்வும் தேவைப்படுகிறது. இவற்றினைத் தவிர உள்நாடுகளில் காணப்படும் குளங்கள், நீர்த்தேக்கங்களில் நன்னிருக்குரிய மீன்களை வளர்க்க முடியும். இவை மாங்குளம் போன்ற பகுதிகளிலும் ஏனையகிழக்கு மாகாணத்தில் உள்ள நீர்ப்பாசன திட்டங்களுடன் இணைந்து மேற்கொண்டால் மேலும் மீனின் உற்பத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். இவற்றினைத்தவிர கடற்கரையை அண்டிய பகுதிகளில் மீன்களைச் செயற்கை முறையில் வளர்த்தால் குறைந்த பிரதேசத்திற் கூடிய உற்பத்தியினை பெற முடியும். இத் துறைக்குத் தேவையான கடல் பிரதேசங்கள் யாழ் குடா நாட்டில் பரந்து காணப்படுகின்றது.
ஏனேய கடல் உற்பத்திகள்
மீன்களைத் தவிர ஏனைய விலை உயர்ந்த பலராலும் விரும் பப்படுகின்ற கடல்படு திரவியங்கள் எமது கடற் பிரதேசங்களில் காணப்படுகின்றது. வெளிநாடுகளுக்கு பெருமளவு ஏற்றுமதி செய்யப்படும் கடலட்டை இதில் முக்கியமானதொன்ருகும். மன் னர், யாழ்ப்பாண குடாக்களில் காணப்படுகின்றது. இன்னும் பாரம்பரிய முறைகளைக் கொண்டே கடலட்டை பிடித்தல் மேற் கொள்ளப்பட்டு வருகின்றது. திட்டமிட்ட முறையில் இதனை Gj6Trigjigj (BE ACH D8. ME R CULTURE) Légj55 Lavëror பெற்றுக் கொள்ளலாம். இதனைத்தவிர பூரீலங்கா அரசினல் ஏனைய பிரதேசங்களில் இருல் வளர்ப்புகள் திட்டமிட்டு மேற்கொள்ளப் பட்டு வருகின்றது. ஆனல் ஈழப்பிரதேசங்களில் இது புறக்கணிக் கப்பட்டுள்ளது. இருல் வளர்ப்பதற்கு மிக பொருத்தமான இடங் கள் யாழ் குடாக்கடலிலும் விசேஷமாக முல்லைத்தீவுக் குடாக்க ளிலும் மன்னர், திருமலைப்பகுதிகளிலும் காணப்படுகின்றது. திட்டமிட்டு ஆய்வு செய்து இருல் வளர்ப்பினை மேற் கொண் டால் பெருமளவில் ஏற்றுமதி வருமானத்தினைப் பெற்றுக்கொள்ள முடியும். இவற்றினைத்தவிர மட்டிகள், சங்குகள் வளர்ப்பதற்கான சிறந்த பிரதேசங்கள் ஈழப்பகுதிகளில் காணப்படுகின்றது. சங்கு கள் ஈழத்திலிருந்து ஏற்றுமதியாகும்.

Page 5
முக்கிய பொருளாதாரம்
திருமலையிலும் யாழ்ப்பாண குடாக்கடலிலும் பெருமளவில் கிடைப்பதற்கு அரிதான அழகுக்காக வளர்க்கப்படும் மிகுந்த கிராக்கியுள்ள கடல்படு திரவியங்களான கடற்தாமரை, பலநிற மீன்கள், கடல் அணிமனி, கடல் மரங்கள், ஏனைய சீலந்திலேற்று விலங்குகள் காணப்படுகின்றன. எமது கடற்பிரதேசங்களிலிருந்து கிடைக்கப்படும், சங்குகளிலும், சிற்பிகளில் இருந்தும், முருகைக் கற்களிலிருந்தும் பெருமளவில் சுண்ணும்பு - கல்சியம் காபனேற் பிரித்தெடுக்கலாம். இவற்றினைக் கொண்டு கல்சியம் காபைட் உற்பத்தியையும் வெளிற்றும் தூள் உற்பத்தியினையும் பெருமளவில் மேற்கொள்ளலாம். சங்குகள் சிற்பிகளிலிருந்து பல குடிசைக் கைத்தொழில்களை விருத்தி செய்யலாம். இதனைத்தவிர சுருவின் செட்டைகள் மட்டி போன்றவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மன்னர் பகுதியின் மறிச்சுக்கட்டுப்பகுதி, முத்துச்சிலாபம் போன் றன முத்துக்களுக்குப் பெயர்போன பிரதேசங்களாகும். பூரீலங்கா அரசால் திட்டமிடப்பட்டே இப்பிரதேசங்களில் முத்துக்குளித் தல் தடை செய்யப்பட்டுள்ளது. ஈழத்தில் இப்பிரதேசங்களை வளம்படுத்தல் மிக அவசியமாகும். ஈழத்தில் ஆழம் குறைந்த கடற்பகுதிகளில் பெருமளவில் கடல் பாசிகளெனப்படும், அல் காக்கள் காணப்படுகின்றது. இவற்றிலிருந்து பலவகையாக மருந் துப் பதார்த்தங்களும் ஏகார், அல்ஜின் போன்ற பதார்த்தங்கள் பிரித்தெடுக்கலாம் இவை கைத்தொழில்களில் மிக உபயோக
ዚ[)IT 6∂I6Ö)6ሏ! •
இனி ஈழத்தின், சனத்தொகை வீதத்தினையும், அதில் எமது கடலுணவு உற்பத்தியினையும், பூஜீலங்காவுடன் அதன் பங்கினையும் நோக்குவோம். 1981ம் ஆண்டின் கணிப்பின்படி இலங்கையின் மொத்த சனத்தொகையில் 17.7% அதாவது 26,75,000 பேர் ஈழப்பிரதேசத்தில் வாழ்ந்தனர். ஆனல் ஈழத்தின் மீன்பிடி 1981ல் 56.85% அதாவது 99,543 மெற்றிக் தொன் களாகும். எனவே ஈழத்திலுள்ள எல்லா மனிதர்களும் சராசரி யாக 37.21&g மீனுணவு வருடத்திற்குக் கிடைக்கக்கூடியதாக இருக்கும். ஆனல் ஒரு மனிதனின் சராசரி மீன்நுகர்வு 18 &g ஆக மட்டுமே உள்ளது. எனவே எமது பாவனை தவிர இன்னு மோர் மடங்கு மீன் உணவு மிகுதியாகக் காணப்படுகிறது. இதி லிருந்து எமது மீன்வளத்தின் மிகுதியினை நாம் கண்டு பெருமைப்
GITubs
6

ஆனல் 1983ம் ஆண்டிற்குப்பின்னல் ஈழத்தின் மீன்பிடி முற்ருக வீழ்ச்சியடைந்து விட்டது. கொடிய கடலடங்குச் சட்டங்களின லும், பாதுகாப்புவலய பிரகடனங்களாலும் ஈழத்தின் மீன்பிடி முற்ருகத்தடை செய்யப்பட்டுவிட்டது. மீனவர்கள், ஒருவேளை கஞ்சிக்கும்கூட அவலமுறும் நிலை இ ன் று காணப்படுகின்றது. ஆனலும் மலரப்போகும் ஈழத்தில் இவர்கள் வாழ்வு வளமுறுவது என்பது திண்ணம்.
1978 1979 1980 1981 முழு இலங்கையின் 1 196900 | 14885 165224 175074
மீன்பிடி ஈழத்தில் மீன்பிடி 73586 | 81788 93394 1 99543 நூற்றுவீதம் 53.75% 54.94% 57.53% 56.85%
(அளவீடுகள் - மெற்றிக் தொன்னில்)
ஈழத்தின் விவசாயம், ஒரளவு ஆய்வுக்குட்பட்டு வளர்ச்சி கொண்டுள்ளது. ஆனல் மீன்பிடியோ, கடல்வளமோ இன்னமும் விஞ்ஞான ரீதியாக ஆய்விற்கோ, வளர்ச்சிக்கோ உட்படவில்லை. இன்னும் ஆதி மனிதர்கள் மிருகங்களை வேட்டையாட அலைந்தது போலவே மீன்பிடிக்கவும் அலைய வேண்டியுள்ளது. தோட்டங்கள், மந்தைகள், வளர்ப்பதுபோல கட்டுப்பட்ட நிலையில்; மீனையும் மீன் வளர்ப்புத் திட்டங்களுக்கு ஊடாக, வளர்த்தெடுக்க வேண் டும். ஈழத்தின் மீன்பிடி இன்னும் பல நூற்றண்டுகளுக்கு முற் பட்டதாகவே காணப்படுகிறது. காரணம், மீன்பிடியை ஆய்வு செய்வதற்கு இலங்கையிலோ, ஈழத்திலோ எந்தப் பல்கலைக்கழ கங்களும் கிடையாது.
மீன்பிடிக்கென தனியான பீடம் பல்கலைக்கழகங்களில் இல்லை. ஈழத்திலும், விரல்விட்டு, எண்ணக்கூடிய சிலரே மீன் பிடியில் ஆய்வாளர்களாக உள்ளனர். இங்குள்ள மீன்பிடி விரி வாக்க அலுவலகங்களும் குழம்பிக் கிடக்கின்றன. இன்றைய நெருக்கடியான சூழ்நிலையில் பெருமளவில் விரிவாக்கம் செய்ய முடியாவிடினும் மீன்பிடி பற்றிய ஆய்வுகளையும் சில மீன்வளர்ப் புத் திட்டங்களையும் செய்ய வேண்டியுள்ளது.
மலரப்போகும் ஈழத்தில், திட்டமிட்ட சோசலிச கட்டு மான அமைப்புகள் கூட்டுறவு அடிப்படையிலான மீன்பிடித் திட் டங்களை அமுலாக்க வேண்டும். இவைகள் இன்றுள்ள சம்மாட்டி முறைகளை தகர்த்து சுரண்டலை நீக்கும் மலரப்போகும் ஈழத்தில் திட்டமிட்டு விஞ்ஞான ரீதியில் மீன்பிடியை அபிவிருத்தி செய் தால் மீன்பிடி மட்டுமே ஈழத்தின் முழுப் பொருளாதாரத்தை யும் தங்கிநிற்க போதுமானதாகும். இதன்மூலம் ஈழம் செழிப்பு றும் ஈழவர் களிப்புறுவர்,

Page 6
GLIr Ljóì
மாணவ இ8ளஞர்கள்
அக்டோபர் புரட்சியின் மூலம் உழைக்கும் மக்களின் முதலா வது சோசலிச அரசை நிறுவியதில் லெனின் பங்கு முக்கியமானது. இவர் ஒடுக்கப்படு/ மக்கள் எல்லோருக்கும் வழிகாட்டியாக விளங்கி ஞர். இவரது போதனைகள், அறிவுரைகள் இளைய தலைமுறையின ருக்கு பேருதவியாக அமைகின்றன, கலந்துரையாடல் ஒன்றை லெனினுடன் நடத்தினுல் என்ன என்று ஆசைப்பட்டோம். இவரை எமது தோழர் ஒருவர் நூல்நிலையம் ஒன்றில் சந்தித்தார். கேள் விகள் தோழருடையவை. பதில்கள் லெனினுடையவை.
கேள்வி:- மாணவ, இளைஞர்கள் எவ்வாறன ஸ்தாபனங்களில்
தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும்?
லெனின்:- மார்க்சீய கட்சியின் சித்தாந்த தலைமையின் கீழ்சுயேச் சையான இளம் மக்கள் ஸ்தாபனம் அமைப்பு ரீதி யாக திரட்டப்படுவது அவசியம் மேலும் இளம் புரட் சியாளர்கள் காணும் கூட்டணி பொதுவானதாக இருக் கக் கூடாது அவர்கள் தரும் உதவி என்பது பொத் தாம் பொதுவில் இருந்து விடக்கூடாது. மிக முன் னேறிய வர்க்க இலட்சியங்களை கொண்ட மார்க்சீய சிந்தனைகள், இலட்சியங்கள் அடிப்படையில் ஒரு ஸ்தாபனம் மூலம் அது செயல்பட வேண்டும்.
கேள்வி:- இத்தகைய ஸ்தாபனங்களின் மூலம் இளம் தலைமுறை கள் தமது புரட்சிகர கடமைகளை நிறை வேற்றுவதற் காக எவ்வாறு தயார்படுத்தப்பட வேண்டும்?
லெனின்:- சோசலிச உலகப் பார்வை இவர்கள் மனதில் நன்கு ஆழமானதாகவும், வலுவாகவும் பதியச் செய்து மார்க்சீயம் பற்றிய தெளிவை ஏற்படுத்தி சந்தர்ப்ப வாதங்களை நன்கு புரிந்து கொள்ளும்படி செய்ய வேண்டும். மேலும் இளைய தலைமுறையினரை அணிக்கு வலு சேர்க்கும் புதிய சக்தியாகவும் அன் ருட இயக்க வேலைகளை நிறைவேற்றுபவர்களாகவோ, அ ல் ல து வெறும் பிரச்சார கருவிகளாகவோ, கருதாது; மிகப் பரந்த அரசியல் பார்வை கொண்டவர்கள், புரட்சி கர மரபுச் செல்வம் படைத்தவர்கள், எண்ணற்ற புரட்சிகர நடவடிக்கையில் பங்கேற்றவர்கள், சுரண்

3366:
லெனின்:-
டலிற்கும் ஒடுக்கு முறைக்கும் எதிராக போராடியவர் கள் ஆகிய முதிய போராட்ட வீரர்களின் அனுபவங் களை எடுத்துக்கூறி சின்ன வயதில் இருந்தே புரட்சிகர கடமையின் மீது ஒரு மிக உயர்ந்த பொறுப்புணர்வை அவர்களிடத்தே ஏற்படுத்த வேண்டும். orida, LG Lift ராட்ட களங்களில் சரியான பயிற்சி அனுபவம் இல் லாதவர்கள் என்ருே; அவர்களிற்கு பக்குவம் இல்லை, அனுபவக்குறைவு என்ருே கருதவேண்டாம் அவர்களேத் திரட்டி ஒழுங்கமைத்து நடவடிக்கையில் இறக்கிவிடா விட்டால் அவர்கள் பிற்போக்கு வாதிகளின் கருத் தைப்பின்பற்றத் தொடங்கி விடுவார்கள்
'மாணவர் அமைப்பின் சுதந்திரம் மாணவர் அமைப் பானது கட்சி சார்பற்ற பொதுவானதாக இருக்க
வேண்டுமென்று கோஷம் எழுப்புபவர்களைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்?
இந்தக் கோஷம் மாணவர்களே െT്ട്ര, 'ET) இயக்கங்களிடம் இருந்து பிரதானமி' தொழிலாளி வர்க்க மற்றும் இடதுசாரிகளின் ஸ்தாபனங்களிடம் இருந்து தனிமைப் படுத்துவதற்கான முயற்சியே தவிர வேறில்லை. புரட்சிகர முகாமின் உன் கட்சி வேறுபாடு களில் இருந்து விட்டுவிலகி வருக' என்றும், பொது வான அரசியல் இயக்கத்தில் தங்காது @@LGš乌马凸 ரவை அறிவித்திடுக என்றும், இவர்கள் ఇb (32) GTS கோளானது இளைஞர்களேப் பின் னுக்கு இழுக்கும் வேண்டுகோளே தவிர வேறில்லே. அதே நேரத்தில் அரசியல் ரீதியாக விரும்பத்தகாத குழுக்களே ଜୁ ଜଙ୍ଘ (b! கண்டு வரையறுத்துக் கொள்வதும், உணர்வு நிலையில் இருந்து ஒதுக்குவதும், உறுதியா தும் ஒவ்வொரு சோசலிஸ்டுகளின் கடமை. மேலும் இ வ ர் க ள் இப்படியாகவிடும் வேண்டுகோளானது இளைய தலைமுறையினரின் பால் நீண்ட காலத்திட்டங் களிற்கு ஏற்ப நடைமுறைத்திட்டங்களே வகுக்காமலும் மாணவர் இயக்கத்தின் சொந்த வரலாற்று அனுபவத் தையும், முதிய தலைமுறையினரின் அனுபவத்தையும் புறக்கணித்து விட்டு அவசதி பிரத்தினேக எளி ன் பா ல் தமக்குத் தாமே முடிவுகளைமேற்கொள்ளுதல் என்கின்ற அவர்களது அபிலாசைக்கு வழிகோலுகின்றது. ggår றைய மாபெரும் பிரச்சினைகளில் இருந்து மாணவர்க
9

Page 7
ளின் கவனத்தைப்பெரும்பாலும் திசை திருப்புவதோடு மாணவர்களிடையே நிலவுகின்ற அரசியல் உறுதியற்ற நிலைப்பாடுகளையும், ஊசலாட்டங்களையும் தமது சுய லாபத்திற்குப் பயன்படுத்திக் கொள்ள பூர்சுவா க் க ளிற்கு இடமளிக்கிறது. இது பெரும்பாலும் முதலா ளித்துவ ராணுவ, தொழிற்துறைக் கூட்டுக்கு சேவை செய்கின்ற ஒரு சுதந்திரமான மேல்த்தட்டு உதிரிக் குழுக்களின் அமைப்பாக மாணவர்களை மாற்றுவதற்கு இந்தக் கோஷம் பயன்படுகிறது.
கேள்வி: - நடைமுறை அனுபவங்களின் ஊடாக இளம் தலை முறையினர் விடயத்தில் நீங்கள் கண்ட தவறுகளைச் சுட்டிக் காட்டி அதனுல் ஏற்படும் விளைவுகளையும் கூற முடியுமா?
லெனின்:- குறிப்பாக பொறுமையின்மையாலும், முந்திச் செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தாலும் தவறுகள் உண்டா கலாம். என்ன விலை கொடுத்தாவது வெற்றியை விரைவுபடுத்தி விடவேண்டும். எந்த உன்னத நோக்கங் களிற்காக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறதோ அவற்றை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரமாக அடைந்துவிட வேண்டுமென்ற விருப்பம் தான் தவறுகளிற்கு காரணமாக அமைகின்றது. இவர் கள் பகுத்தறிவு பூர்வமான அணுகுமுறையைக் காட்டி லும், உணர்ச்சி பூர்வமான அணுகுமுறையையே கையாளுகின்றனர் புறச்சூழ்நிலையையும், சமூக வளர் ச்சிப் பாதையையும், கருத்திற் கொள்ள மறுப்பது; நேரடி நடவடிக்கைகளின் விளைவுகளை கண்மூடித்தன மாக நம்பிக்கை கொண்டிருப்பது ஆகியவை அதிதீவிர சாகஸவாதிகளேயே உருவாக்கக்கூடும். மேலும் இவர் கள் புரட்சிகர பதப்பிரயோக மயக்கத்திற்கு இரை யாகி விடக்கூடும். புரட்சிகர பதங்களிற்கு சரணுகதி அடைவது குட்டி பூர்சுவா உணர்ச்சி வெளிப்பாட்டின் ஒரு தடயமாகும்.
கேள்வி: இத்தகைய தவறுகளிற்கு உள்ளாகாமல் இருப்பதற்கும், பிற்போக்கு வாதிகளின் வார்த்தைகளினல் மயங்கா மல் இருப்பதற்கும் இவர்களுக்கு நீங்கள் கூறும் அறி வுரைகள் என்ன?
10

லெனின்:-
G366rofil: -
லெனின்:-
இவர்கள் தவறுகளைப் பெரும்பாலும் தெரிந்துகொண்டு விடுவதில்லை. இவர்களை விரைவில் சரிப்படுத்தி விட லாம். எந்தவிதமான ஆழ்ந்த தத்துவ ஞானமும், நடைமுறை அனுபவமும் இல்லாமல் இருக்கும் இளம் தோழர்களிடம் பொறுமை கண்டிப்பாக இருக்க வேண்டும். இளைய தலைமுறையினரின் புரட்சிகர அதி வேக ஆவேச உணர்வைக் கவனமாகப் பராமரிக்கும் அதே நேரத்தில் அவர்களை விமர்சிக்கவும் தயங்கக் கூடாது. தவருன வெளிச்சத்தில் பிரச்சினையை பார்த் துக் கொண்டிருக்கும் அவர்கள் அவற்றின் சாராம் சத்தைப் புரிந்து கொள்வதற்கு உதவவேண்டும்.
புரட்சிகர வெற்று சவடால் வார்த்தை ஜாலங்களில் அவர்களை மயக்கும் தவருண போக்குகளைக் கண்டு இவர்களை எச்சரிக்கையோடு இருக்கும்படி செய்ய வேண்டும். வெறுமனே பேசிவிட்டுப் போகிறவர்களைக் கண்டு விழிப்பிடன் இருக்கும்படி செய்ய வேண்டும். பிற்போக்கு வாதிகள் பெரும்பாலும் புரட்சி க ர பணியைப்பற்றி கோட்பாடற்ற,அக்கறையில்லாத அனு குமுறையைப் பரப்பி புரட்சிகர பயிற்சியில் இருந்து இவர்களைத் திசைதிருப்புகின்றனர். இவற்ருல் இவர்கள் திசைதிருப்பப்படாது இருப்பதற்கு சித்தாந்த தெளி வின் ஊடாகவும், நடைமுறை வேலைத் திட்டங்களின் ஊடாகவும் வளர்த்து எடுக்கப்பட வேண்டும்
இளம் தலைமுறையினரிடத்தில் நீங்கள் கொண்ட ஆழ்ந்த அக்கறை, நம்பிக்கை ஆகியவற்றிற்கான கார ணங்களைக் கூற முடியுமா?
இவர்கள் பரந்துபட்ட மக்களிடையே புரட்சிகர கருத் துக்களைத் திறமையுடன் பரப்புவார்கள். சமூகத்தின் சோசலிச மாறுதலிற்கான போராட்டத்தில் ஒரு புதிய ப ரி னு ம த்  ைத முதிய தலைமுறையினரைத் தொடர்ந்து இவர்கள் கொண்டுவந்து சேர்ப்பார்கள்:
*நாம் நமது தந்தையரைவிட நன்கு போராடுகிருேம். நம்மை விட நமது குழந்தைகள் சிறப்பாகப் போராடுவார்
கள். வெற்றியும் பெறுவார்கள் , '

Page 8
அறிவுச் சுரங்கம்
கேள்விகள் :
1. தொலேக்காட்சிப் பெட் டிவைக் கண்டுபிடித்தவர்
山方行?
டைனமைற்றைக் கண்டுபிடித்தவர் யார்? 3. துவீச்சக்கர வண்டியைக் கண்டுபிடித்தவர் யார்? ஈழத்தில் தமிழில் வெளிவந்த முதற்பத்திரிகை எது? 5. யாழ்ப்பானத்தில் முத ன் மு த லி ல் தமிழ்
அகராதி: தொகுத்தவர் யார்? 8. ஐ நா ஸ்தாபனம் உருவாக்கப்பட்ட ஆண்டு
எது? 7. இலவசக் கல்வி புகுத்தப்பட்டது எப்போது? 8. தனிச்சிங்களம் சட்டபூர்வமாக்கப்பட்டது எப்
(3 т.д.? 9. P. L. 486 என்ருல் என்ன? 19. சூயேனுக்கும் பூமிக்கும் இடையிலுள்ள தூரம்
ଖୁଁ ଖୁଁ ଖୁଁ ?
11. முதன்முதலில் விண்வெளிக்கு பயணம் சென்றவர்
龜「行?
12. முதன் முதலில் சந்திரனில் காலடி வைத்தவர்கள்
āJ青編f? 13. நியூத்ஜேன் குண்டினை கண்டுபிடித்த விஞ்ஞானி
醒J莒? 14. SWAPO Grafii apsi Sirsi; GOT? 25, ஆெள்ளைப் பிரம்பு தினம் என்ருல் என்ன?
葱象
(விடைகள் 17ம் பக்கம் பார்க்க)

முல்லைத்தீவு கல்விநிலே
கடல்வளம், தென்னவளம் ஆகியவை ஒருங்கிணையப் பெற்ற தும்,கூடியளவு விவசாய உற்பத்திகளை மேற்கொள்ளும் மாவட்டமு மாகவே முல்லைத்தீவு காணப்படுகின்றது அதிகமாக சிறுகிராமங் களை உள்ளடக்கிய மாவட்டமாக முல்லைத்தீவு காணப்படுவதால் இக்கிராமங்களிலே அதிகமாக 5ஆம் வகுப்பு வரையுள்ள ஆரம்ப பாடசாலைகளே காணப்படுகின்றன. உயர்கல்வி கற்கும் பாடசா லைகளாக இம்மாவட்டத்தில் காணப்படுபவை விரல்விட்டு எண் ணக் கூடியவையே. முல்லைத்தீவு ம, வி, புதுக்குடியிருப்பு ம வி, முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரி, மாங்குளம், ஒட்டுசுட் டான், மல்லாவி ம. வி. ஆகியனவே. உ+மாக குமுளமுனேயி லுள்ள ஒரு மாணவன் முல்லைத்தீவிற்கு அல்லது முள்ளியவளைக்கு தனது உயர்கல்வியை கற்க வருவதற்கு பலத்த கஸ்டங்களை அவன் எதிர்நோக்குகிறன். ஏறத்தாள 7 மைல் தூரத்தை அவன் நடந்தே முடிக்க வேண்டும் பே T க் கு வ ரத் து வசதியின்மையும், அவர்களது பொருளாதார நிலையும் இதற்குக் காரணமாகும், அபிவிருத்திப் பாதையிலே அடியெடுத்து வைக்கும் மாவட்டத்தின் முன்னேற்றம் கல்வி வளர்ச்சியிலேயே தங்கியுள் ளது. இந்த நிலையில் முல்லே மாவட்டத்தின் கல்விநிலையானது மிகவும் பின்தங்கிய நிலையிலேயேயுள்ளது.
முல்லைமாவட்டத்தின் பலபகுதிகளில் காலத்துக்குக் காலம் கடற்தொழிலுக்காக தென்னிலங்கையிலிருந்து பல சிங்கள மீன வர்கள் வந்து மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதும், இக்காலகட் டம் முடிவெய்தியதும் திரும்பவும் தமது சொந்த இடங்களுக்கு செல்வதுமே வழக்கம், காலப்போக்கில் இந்நிலையைமாற்றிக் கொக் கிளாய், நாயாறு, கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி, தண் ணிமுறிப்பு போன்ற கிராமங்களை சிங்கள மீனவக் குடியேற்ற மாக்கும் நடவடிக்கையை எடுக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடு பட்டிருந்தது.
குறிப்பாக 1983ஆம், 84ஆம், 85ஆம் ஆண்டுகாலப்பகுதியில் நடந்த அரச இராணுவத்தினரின் அடாவடித்தனங்களால் எல்லைப் புறக் கிராமங்கள் பல பாதிக்கப்பட்டன. 1984ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் எல்லைப்புறக்கிராமங்க ளிலே அதிகமாகிறது எனக்குறிப்பிட்ட இலங்கையரசு குறிப்பிட்ட சிலமணிநேரத்திற்குள் தமது அராஜக செயல்களில் ஈடுபட்டு:
is

Page 9
அளம்பில், செம்மலை, மூன்றுமுறிப்பு, ஆறுமுகத்தான்குளம், குமுழ முனை, கொக்கிளாய், நாயாறு, கொக்குத்தொடுவாய், கருநாட்டுக் கேணிதண்ணி முறிப்பு போன்ற பல கிராமங்களிலுள்ள மக் கள் அனைவரையும் வெளியேற்றியதைத் தொடர்ந்து முல்லைத்தீவி லுள்ளபல பாடசாலைகள் (கள்ளப்பாடு, முஸ்லீம் பாடசாலை கரைச்சிச்குடியிருப்பு, வட்டுவாகல் போன்ற பாடசாலைகளிலும், மற்றும் தேவாலயங்கள், சினிமாத்தியேட்டர்கள், போன்ற வற்றிலும், தண்ணீரூற்றில் பல பாடசாலைகளிலும், முள்ளியவளை வித்தியானந்தாக்கல்லூரி மற்றும் அருகிலுள்ள ஆரம்ப பாட சாலைகள் பலவும், வற்ருப்பளை பாடசாலைகளும்) அகதிமுகாம்கள் ஆக்கப்பட்டன.
இதே காலப்பகுதியில் திருமலை மாவட்டத்திலிருந்து தென்ன மரவாடி, திரியாய், குச்சவெளி போன்ற இடங்களிலிருந்தும் அகதி களாக்கப்பட்டு இங்குவந்த அநேகமக்கள் முல்லைமாவட்டப் பாட சாலைகளிலேயே முகாமிட்டிருந்ததை காணமுடியும்.
மேற்குறிப்பிட்ட பாடசாலை மாணவர்கள் தம் சொந்தக் கிராமங்களிலிருந்த பொழுதே ஆரம்பகல்வியை ஒழுங்காக கற்க முடியாமல் கஸ்ரங்களை அனுபவித்தனர். இதற்குக் காரணம் நகர்ப் புறங்களிலிருந்து சிறுகிராமங்களுக்கு போக்குவரத்து வசதியின்மை காரணமாக வெளிமாவட்டங்களில் இருந்துவரும் ஆசிரியர்கள் தம் வசதிகருதி நகர்ப்புற பாடசாலைகளிலே கல்விகற்பிக்க அனு மதி பெறுவதே. இதனுல் இக்கிராம வாழ்மாணவர்களின் ஆரம் பக்கல்வியே சீர்குலைந்த நிலையினை நாம் காணமுடியும்.
இவ்வாறு ஆரம்பக்கல்வியையே ஒழுங்காக தொடரமுடியாத அபாக்கிய நிலையிலே, அரச இராணுவ கூலிப்படைகளின் அராஜக நடவடிக்கைகளினல் அகதிகளாக்கப்பட்ட இவர்கள் பாடசாலை களிலே அடைக்கலம் புகுந்தனர். இதனுல் பாடசாலைகள் பல மாதங்களாக இயங்காத நிலமையினையும் இங்கு காணமுடியும். முல்லைத்தீவு, முள்ளியவளை, தண்ணிரூற்றுப் போன்ற இடங்களி லுள்ள பாடசாலைகள் கூட அகதிமுகாம்கள் ஆக்கப்பட்டதன் காரணமாக மேற்படி பாடசாலைகளில் கல்வி பயின்ற பல ஆயிரம் மாணவர்களின் கல்விநிலைகூட பாதிக்கப்பட்டது.
இந்தவகையில் 1984ஆம் ஆண்டிலிருந்து முல்லைமாவட்ட மாணவர்களின் கல்விநிலை மிக மோசமான நிலையிலே பின்தங்கிச் செல்வதை காணமுடியும் இம்மாவட்டத்தைப் பொறுத்தவரை யில் ஆரம்பப்பாடசாலைகளே அதிகம் காணப்படுகிறது.
4.

குறிப்பாக இன்று இலங்கைஅரசினல் தடைசெய்யப்பட்ட பிரதேசமாக கணிக்கப்படும். தண்ணிமுறிப்பு, கொக்கிளாய், நாயாறு, போன்ற கிராமமக்கள் தம் சொந்த இடங்களை யிழந்து அயற்கிராமங்களிலும், அகதிமுகாம்களிலும் தங்கியிருக் கும் நிலையினல், இக்கிராமம் வாழ் மாணவர்களின் ஆரம்பக் கல்வியே மிகவும் மோசமாகப்பாதிக்கப்பட்டுவிட்டது. இவர்கள் அகதிகளாக தஞ்சமடைந்துள்ள இடங்களிலுள்ள பாடசாலைகளில் கூட இடநெருக்கடி காரணமாக இம்மாணவர்களுக்கான அனுமதி மறுக்கப்படுகிறது. இதனல் இம்மாணவர்களின் கல்விநிலை கேள்விக் குறியாகவேயுள்ளது. அகதிகளுக்கு தஞ்சமளித்த மு ல் லை த் தீவு மாவட்டத்தின் பல பாடசாலைகள், அகதிகள் வேறு இடங் களுக்கு இடமாற்றப்பட்டபின்னரும் ஒரு சில பாடசாலைகள் இராணுவ முகாமுக்கு அண்மையில் இருப்பதனுல் அடிக்கடி ஷெல் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதால், அவை இயங்க முடிவ தில்லைஅண்மையில் ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்திற்கு இரா ணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட ஷெல் தாக்குதல்களினல் பல மாணவர்கள் படுகாயமடைந்ததுடன், ஒரு வாரமாக பாட சாலை இயங்கவும் இல்லை. இதேபோல பழம் பா சி எ ன் ற கிராமத்திலுள்ள உயர்தர வகுப்பில் கல்விபயின்ற மாணவன் ஒருவன் இராணுவக் கூலிப்படைகளினுல் சுட்டுக்கொல்லப்பட் டுள்ளான். மாணவர்கள் கைது செய்யப் படு வ த ன் கா ர ன மாகவும் பல பாடசாலைகளின் ஆசிரியர் பற்ற க் குறை யும். தொடர்ச்சியான இராணுவக் கெடுபிடிகளினல் தம் சொந்த இடங்களுக்குச் சென்ருல் ஆசிரியர்கள் திரும்பிவராத தன்மை யினையும் காணமுடியும். இக்காரணங்களினுலும் இந்த மாணவர் களின்கல்விநிலை மிகவும் பாதிப்படைந்த தொன் ருகவே காணப் படுகிறது.
இவை மட்டுமன்றி இம்மாவட்டத்தின் கல்வியை சீரழிக்கும் முகமாக அரசினல் ஒதுக்கப்பட்ட நிதி கட்டிடங்கள், தளபாடங் கள் என்பனவற்றுக்கும் மற்றும் முல்லை மாவட்டத்திற்கு ஒதுக் கப்பட்ட இலவசபாடநூல்கள், அதற்குரிய நிர்வாகிகளினுல் பொறுப்பேற்கப்படாத சம்பவங்களும்கூடஉண்டு. இதனுல் இயங்கு கின்ற படசாலைகள்கூட இத்தகைய நிர்வாகச் சீர்கோட்டினுல் மாணவர்களுக்கான தவணைப்பரீட்சைகள்கூட 1984ம் 85ம் 86ம் ஆண்டுகாலப்பகுதியில் ஒழுங்காக நடைபெருததன்மையினையும் இங்கு காணமுடியும்,
5

Page 10
'இன்றைய சிருர்கள் நாளை இந்நாட்டு மன்னர்கள்" என்ற முது மொழிக்கிணங்க இம்மக்கள் தலைநிமிர்வு கல்வியிலேயே தங்கியுள்ளது என்பதும், இவ்வரசின் இராணுவ அடாவடித் தனங்களால் இன்றை மாணவர்கள் நாளாந்தம் போராடியே தம் கல்வியைத் தொடரவேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப் பட்டுள்ளார்கள்.
1984ஆம் ஆண்டு மக்கள் வெளியேற்றப்பட்டு அரசினுல் தடை செய்யப்பட்ட பிரதேசமாக கணிக்கப்படும் கிராமங்கள்.
மக்கள் மவலயேற்றபபட்ட மூடபபடட பகுதி நேர கிராமங்கள்_ பாடசாலே அகதிமுகாம்பாடசாலை கொக்கின: ப் ஆம் இல்லே ( நாயாறு ஆம் இல்லை இல்லை கொக்குத் தொடுவாய் ஆம் இல்லை இல்லை கருநாட்டுக்கேணி ஆம் @మేడి) இல்லை தண்ணி முறிப்பு ஆம் இல்லே 3)ούδου ஒதியமலை ஆம் இல்லை 4. பெரியகுளம் - ஆம் இல்லை 3) ουόου
Gift Sib,
கடலின் ஒரு மூலே யில், பெரிய மீன்கள் சிறிய மீன் களேப் பிடித்துத் தின் றுகொண்டிருந்தன.
அதைத் துர ரத்தில் இருந்து சிறுமீன்களின் கூட்டம் ஒன்று பார்த்துக்கொண்டிருத்தது.
அக்கூட்டத்தில் இருந்த சிறிய மீன் ஒன்று நான் எப்போது பெரிய மினுக வரப்போகிறேனே" என்று கவலைப்பட்டது.
ஏன் அப்படிக் கவலைப்படுகிறப்" என்று மற்றச் சிறிய மீன்கள் கேட்டன.
சிறிய மீன்களைப் பிடித்துத் தின்னத்தான்’ என்றது சிறிய மீன்,
- குட்டிக்கதை
(34 UT. (3)
16
 

அறிவுச் சுரங்க விடைகள்
10.
11.
12.
13.
1.
15.
ஜோன் லோஜிபெயர்ட் - 1925
அல்பிரட் நோபல்
கேர்க் பற்றிக் மக்மில்லன்
உதய தாரகை
பீற்றர் பெசிவல் பாதிரியார்
1945-10-24
1945- 0-01
1956 - 06 0,
அமெரிக்காவினுல் பின்தங்கிய நாடுகளுக்கு உணவு
போன்ற பொருட்களை நல்கும் திட்டம்
14, 880, 000 km
மேஜர் யூரிககாரின் (ரஷ்யா)
நீல் ஆம்ஸ்றேங் எட்வின் அல்றின்
21.07.1969 (அமெரிக்கா)
சாமுவேல் கொஹென்
தென்மேற்கு ஆபிரிக்காவில் விடுதலைக்காகப் போரா
டும் நமீபிய நாட்டை அமைப்பதற்கென முன்னெ டுக்கும் ஸ்தாபனம், இதன் தலைவர் சாம் நூஜோமா
அகில உலக கண்பார்வை அற்றேரின் தினம்,
'கருத்து மோதல்' பகுதி இம்முறை தவிர்க்க
முடியாத காரணத்தினுல் இடம் பெறவில்லை என் பதை வாசகர்களுக்குத் தெரியப்படுத்துகிறேம்.
17

Page 11
ஆயுதங்கள்
குட்டிக்கதை
தம்நாட்டை ஆக்கிரமித்த ஏகாதிபத்திய நாட்டின் கூலிப் படைகளுடன் மக்கள் விடுதலைப் படையினர் ஆயுதமேந்திப் போரிட்டுக் கொண்டிருந்தார்கள், ஒரு நாள் ஆக்கிரமிப்புக் கூலிப் படைப் பிரிவினரை நிர்மூலமாக்கிய மக்கள் விடுதலைப்படை யினர் வெற்றிப் பெருமிதத்துடன் நடந்து வந்து கொண்டிருந் தார்கள்.
அவர்கள் ஒவ்வொருவர் தோள்களிலும் துப்பாக்கிகள் இருந் தன. அவை அவர்களாற் செய்யப்பட்டவை. அவற்றை அவர் கள் தம் கைகளால் பிடித்திருந்தார்கள் அப்படையணியின் தள பதி முன்னே நடந்து கொண்டிருந்தான். அவன் தோளில் இருந்த துப்பாக்கி 'நீங்கள் பெருமிதமடைய நியாயமில்லை, போரைத் தீர்மானிப்பவர்கள் நாங்களே! நாங்கள் இன்றி உங்களால் என்ன சாதிக்க முடியும்? நீங்கள் எங்களைத்தான் கெளரவப்படுத்த வேண்டும் முதன்மைப்படுத்த வேண்டும்' என்று கூறிக் கொண் டிருந்தது.
தளபதி மெளனமாக நின்று தோளில் இருந்த துப்பாக்கி யைத் தூக்கி நிலத்தில் எறிந்தான்.
ஒரு அணுவும் அசைய முடியாமல் எறிந்த இடத்திலேயே துப்பாக்கி கிடந்தது.
தளபதி நடந்தான், படையணியும் நடந்து கொண்டிருந்தது. துப்பாக்கி ' என்னைத் துக்குங்கள் என்னைத் தூக்குங்கள்!' என்று கத்தியது. விடுதலைப்படையினர் திரும்பிப் பார்க்கவில்லை. 'எனக்கு உயிர் கொடுங்கள்! என்னைத் தூக்குங்கள்' என்று துப்பாக்கி கெஞ்சியது.
அவர்கள் நடந்து கொண்டேயிருந்தார்கள். 'மக்களே! மக்கள் படையினரே! எனக்கு உயிர் கொடுங்கள்' என்று மன்ருடியது. உடனே தளபதி நின்றன். படையணியும் தரித்தது. தளபதி துப்பாக்கி அருகில் வந்தான் ‘உன்சக்தி இவ் வளவுதான். மக்களே போரைத் தீர்மானிப்பவர்கள். நீங்கள் அல்ல' என்று கூறிவிட்டு துப்பாக்கியைத் தூக்கி தோளில் போட்டுக் கொண்டான்.
GunT , QL-u
18

ஒரு சின்னஞ் சிறிய பூச்சி
- சிறுகதை -
மாலை நாலு மணி இருக்கும், நான் எனது வீட்டு விருந்தை யில் பாய் விரித்து அதில் நீட்டி நிமிர்ந்து படுத்தவாறு அன் றைய பத்திரிகைகளை வாசித் துக் கொண் டி ரு ந் தே ன். எனக்கு அருகில் எனது மகன் விவேகன் விளையாடிக் கொண் டிருந்தான். அவனிற்கு ஐந்து வயது முடிந்து ஒருமாதம் பத் திரிகைகளை வாசித்து முடித்த எனக்கு நித்திரை இமைகளைப் பிடித்து இழுத்தது. அந்த நேரம் நான் நித்திரைகொள்ள விரும்பவில்லை. அதனுல் நித்தி ரையை முறிக்கப் பத்திரிகை களை மடித்துப் பக்கத் தி ல் வைத்துவிட்டு மகன் இருக்கும் பக்கமாக உடம்பைத் திருப்பி இடது கையை முண்டு கொடுத் துத் தலையை உயர்த்தி மகன் விளையாடுவதை பார்த் துக் கொண்டிருந்தேன். அவனிற் குக் காலையிலே கொய்யாத் தடியில் ஒரு அம்பும் வில்லும் செய்து கொடுத்திருந்தேன். அவன் அந்த அம்பையும், தடி யையும் கையில் வைத்திருந் தான். அந்தத்தடி ஒரடி நீள மிருக்கும். மறுகையில் ஒரு சோக்குத் துண்டு இருந்தது. அந்த சோக்குத் துண்டால் ஏதோ வட்டமும், சதுரமுமாக நிலத்தில் விரித்து நீட்டிய தன் கால்களிற்கு இடையில் கிறுக் கிக் கொண்டிருந்தான். அந்த
நேரம் சின்னப் பூச்சி ஒன்று அவன் கிறு க் கிக் கொண்டி ருந்த இடத்தைநோக்கி அவ சர அவசரமாக ஊர்ந்து வந்து கொண்டிருந்தது. அது நல்ல சுறுசுறுப்பான பூச்சி. அதைச் சற்று நேரம் உற்றுப் பார்த் துக் கொண்டிருந்த அவன் ஏதோ ஒரு யோசனை தட்டித் தன் கால்களிற்கு இடையில் ஒரு வட்டம் கீறினன். பின் னர் அந்தப் பூச்சியை அம்புத் தடியின் கூர் முனையால் தட் டித் தட்டி அந்த வட்டத்தின் மத்தியில் கொண்டு வந் து விட்டு அதையே அவதானித் துக் கொண் டி ரு ந் தா ன். நானும் அந்தப் பூச்சியைப்பார் த்தேன். பப்பாளி விதையளவு உடம்பு. அதன் உடல் மட்டும் சிவப்பு நிறம். மற்றைய உறுப் புக்கள் எல்லாம் கறுப்பு நிறம். குண்டூசியின் குண்டுப் பருமன் தலையும், கடைக்கண் இமை மயிர் போன்ற சுக்குட்டிக் கால்களும். இதற்கு முன்னர் நான் அப்படியொரு பூச்சி யைப் பார்த்ததில்லை.
அது அவன் விட்ட இடத் தில் நிற்கவில்லை. ஊர்ந்துவந்த வேகத்திலும் அதிக வேகத்தில் வெளியே வந்து கொண்டிருந் தது. அவனே அதை விட்ட பாடில்லை. அம்புத்தடியால் தட்டித்தட்டி வட்டத்தின் நடு
19

Page 12
வில் விடும்போதெல்லாம் அது புரண்டு நெளிந்து மீண்டும் மீண்டும் வெளியே வரத்தான் முயற்சித்துக் கொண்டிருந்தது நான் ம க ரிை ன் பிடரியில் கையால் த ட விக் கொண்டு 'என்ன மகனே செய்கிருய்'?
என்று கேட்டேன். 'நான் இந்தப் பூச்சியை சிறையிலை
வைக்கிறன், அந்தச் சனியன் ஒடி ஒடி வெளியில் வருகிறது' என்று கூறி விட்டு அந்தப் பூச் சியை தன் வட்டத்துள்ளேயே தள்ளித்தள்ளி விட்டுக் கொண் டிருந்தான். அவன் சொன்ன தைக் கேட்டு எனக்கு சிரிப்பு வந்தது 'இங்க பாருங்கப்பா என்ரை அ ம்  ைப கடிக்குது, பொல்லாத சனியனுய் இருக் கும் போல' என்று என்னைத் திரும்பிப் பார்த்து சொன் ஞன், தலையைச் சற்று முன் னிற்கு குனிந்து பார்த்தேன். அந்தப் பூச்சி அம்பின் கூர் முனையை கால்களால் வளைத் துப் பிடித்துக் க டி த் து க் கொண் டு தா ன் இருந்தது. சிறிது நேரத்தில் திரும்பவும் வெளியை நோக்கி ஊர்ந்து வந்தது. எனக்கு அப் பூச்சி யைப் பார்க்க ஆச்சரியமகா இருந்தது. எனது மகன் அப் பூச்சியைப் பார்க்கிலும் பல் லாயிரம் மடங்கு பெரிய உரு வம். அவனுடைய அம்பு அப் பூச்சியை விட எத்தனையோ மடங்கு பெரியது. அதற்கு இரு சிறிய கண்கள் உண்டு.
மகனின் பூதா கார உருவத் தையும், அம்பின் பா ரிய தோற்றத்தையும் அது நிச்ச யம் கண்டிருக்கும். அது சற் றேனும் பயம் கொண்டதாக தெரியவில்லை. அதன் ஒரே குறிக்கோள் எனது மகன் இட்ட சிறை வட்டத் துள் இருந்து வெளியேறித் தன் வழியே போவதுதான். அது சளைக்கவில்லை; ஒய வி ல் லை; அஞ்சவில்லை, மகன் தட்டித் தட்டி விட விட அது இன் னும் வேகாரம் கொண் டு இயங்கியது. எனது மகன் களைத் துப் போய் விட்டான். தன் நோக்கம் சரிப் போக வில்லை என்று உணர்ந்தான். அப்பூச் சியின் மேல் அவ னி ற் கு சொல்ல முடியாத ஆத்திரம், அது அவனது முகபாவனையில் தெரிந்தது. 'இது ஒரு பொல் லாத சனியணுய் இருக்கு" என்றுகூறிய அவன் பற்க ளால் கீழ் உதட்டைக் கடித் துக் கொண்டு தன் இறுதி முயற்சியாக அதை அம்பினுல் வட்டத்தின் நடுவில் த ட் டி விட்டான்.
'இதில் கிட இல்லாட்டி உன்னை கொண்டு போடுவன்" அ தை ப் பயமுறுத்திவிட்டு இராட்சதன்போல் அதைப் பார்த்துக் கொண்டிருந்தான். அப்பூச்சி வெளியேதான் வந்து கொண்டிருந்தது. 'சனியன் மூதேசி' என்று திட்டினுன்,

அதை மீண்டும் த ட் டி க் கொண்டுபோய் வட்டத்தின் நடுவில் வைத்து அம்பின் கூர் முனையால் தன் பலமெல்லாம் கூட்டி நசித்தான். 'துலைஞ்சு போ' அதன் வயிறு பிய்ந்து சதை நிலத்தோடு ஒட்டிக் கொண்டது. ஆ ன ல் அது சாகவில்லை. தன் மரணத் தறுவாயிலும் வெளி நோக்கு கால்களை எட்டி வ லி த் து ஊர முனைந்தது. நான் மெளனமாக அப் பூச்சியை உற்று நோக்கினேன் அந்த அற்ப உயிரிற்குள் எவ்வளவு தீட்சயமான வைரம் கொண்ட நெஞ்சு என் மகன் அதன் எதிரி, அம்புத்தடி, பாரிய ஆயு தம் எதிரியின் பேருருவத்தை யும் பாரிய ஆயுத பயங்கரத் தையும் கண்டு சிறிதேனு ம் வெருண்டு கொள்ளாத ம ன உறுதி! அதன் உதிரத்திலும் தசையிலும் அடிமை கொள்ள முடியாத வீருந்த உணர்வுகள் எங்கிருந்து வந்தனவோ? நான் பிரமித்துப்போனேன். 'செத் துப்போ' அவன் அதை தன் அம்பினுல் குத்தி ந சித் து கொன்றுவிட்டான் அது உருக் குலைந்து போயிற்று. ஏன் தம்பி அதைக்கொண்டனி? அதப்பா நான் வைத்த சிறைக்க கிடக்க வில்லை. ஒரு பொல்லாத பூச்சி. சனியன்' அவனிற்கு ஆத்தி ரம் தணியவில்லை. 'யா ரு க் கு
வெற்றி? உனக்கா பூச்சிக்கா?' 'எனக்குத்தான். நான் அதை நசித்துக் கொண்டு போட் டனே' நான் சிரித்தேன். "ஏனப்பா சிரிக்கிறீங்க? அவன் கோபம் முகத்தில் கொப்ப ளிக்க என்னைத் திரும்பிப் பார்த்தான். 'உனக்கெப்படி வெற்றி?' 'நான் அ  ைத க் கொண்டு விட்டன் தா னே, பேந்தென்ன?' 'அ  ைத க் கொண்டாப் போல உனக்கு வெற்றியா?" எனக்குவெற்றி தான்' அவனிற்கு தி மிர். 'இல்லை மகனே! உன் ன லை அதை உன்ரை சிறைக்குள்ளை வைக்க முடியேல்லை. அதனலை கொண்டாய். "இந் த ப் பூச் சிக்கு மீண்டும் உயிர் வந்தால் என்ன செய்யும்?' 'வெளி யிலே தானப்பா அந்தச் சனி யன் போகும்.' 'அதுதான் சொன்னன் உனக்குத்தான் தோல்வி.' 'இல்லை அப்பா எனக்குத்தான் வெற்றி" என்று கூறிக்கொண்டு எழுந்து வெளியே ஓடி விட்டான்.
நான் கொலையுண்டு கிடந்த அந்தப் பூச்சியை மெளனமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். நீண்ட நேரம் அந்தச் சின்னஞ் சிறிய பூச்சி உயிர் பெற்று என் நெஞ்சுக்குள் ஊரத் தொடங்
கியது. இன்னும் ஊர்ந்து கொண்டே இருக்கிறது.
யோ. பெ.
霹雳

Page 13
முதலாளித்துவம்
சமுதாயத்தில் உற்பத்தி சாதனங்கள் யாவும் தனியாரின் உடமையாகவும், தொழிலாளர்களின் கூலி, உழைப்பு அவர்க ளால் சுரண்டப்பட்டும் வருகின்ற சமதையற்ற ஒரு சமூக அமைப் பைக்கொண்டதே முதலாளித்துவமாகும். இவ்வமைப்பில் தொழி லாளர்களின் உழைப்பின் பெறுமானம்; உற்பத்திச் சாதனங்களின் உடமையா ள களால் தொடர்ந்து இலாபமாக திரட்டப்பட்டுக் கொண்டே இருக்கும்.
நாவலீசர்
இது ஒரு நாட்டினர், ஒரு இனத்தினர் மேன்மையுள்ள மானிடர் எனற கோட்பாட்டினைக் கொண்டு ஜனநாயகம், மணி தத்துவம் போன்றவைகளை மதிக்காமல் தனிமனித ஆளுமையி னைக் கொண்டுவர வகுக்கப்பட்ட நாகரிகமற்ற இரத்த வெறிக் கொள்கையின் அதிகாரமாகும். (கிற்லர் - யேர்மனி)
மனிதனை மனிதன் சுரண்டி வாழ்வதை அகற்றி, பெரும் பான்மைப் பாட்டாளி வர்க்கத்தினுல் ஆட்சி அதிக ரம் கொண்டு வரப்பட்டு, தனிச் சொத்துடமை ஒழிக்கப்பட்டு மக்கள் அனைவரி னதும் நலனுக்காக உற்பத்தி சாதனங்கள் பொது உடமையாக் கப்பட்டும், ஆண் - பெண் பேதமற்ற தொழில்துறை விருத்தி யுற்ற சமத்துவ சமூக அமைப்பையே சோசலிசம் குறித்து நிற்கி றது இது முதலாளித்துவத்திற்கு முடிவு கட்டவும், கம்யூனிசத் திற்கு நோக்கிப் போகவும் வழிகாட்டுகிறது.
குடிமக்களில் இருந்து அரசு மேம்பட்டதென்றும் அதிலிருந்
தும் ஆள்பவர் உயர்ந்தவரென்றும் , அவரின் செயல்கள் நாட்
டையோ மக்களையோ பாதித்தாலும் ஆள்பவரை மக்கள் கேள்வி
கேட்க முடியாத சர்வாதிகாரமாகும். இது ஜனநாயாக, கம்யூ னிச விரோத கொள்கையின் செயற்பாடாகவும் உள்ளது.
(முசோலினி - இத்தாலி)
霧2

ஜனதாயகம்
சமூக அமைப்பில் நீண்ட நெடுநாள் நிலைத்திருந்த குடும்ப ஆட்சியுரிமையை நிராகரித்து சுதந்திரம், சமத்துவம் சகோத ரத்துவம் என்னும் கோசத்துடன் ஆட்சியமைப்பில் கொண்டு வரப்பட்ட மாற்றமே ஜனநாயகம் ஆகும். இந்த ஜனநாய கப்புரட்சி உண்மையில் மக்களுக்காக மக்களால் முன்னெடுக்க வேண்டியது காலத்தின் நியதியாகும். இ ன் று நாட்டுக்கு நாடு வெவ்வேறு அர்த்தங்கள் ஜனநாயகத்துக்கு சூட்டப்பட்டாலும் வர்க்க வேறுபாடற்ற சமூக அமைப்பில் தோன்றும் மக்கள் ஆதிக்கமே ஜனநாயகமாகும்.
* வெளிப்படுத்துவோம் A
24-10-86 அன்று யாழ் நகரில் ஈழவர் முண்ணணி யால் ஒழுங்கு செய்யப்பட்ட எ தி ர் ப் பு ஊர்வலத்தில் மாணவ இளைஞர் பொது மன்றம் (GUYS) உம் கலந்து கொண்டது. பெருமளவில் மாணவர்கள் இவ் ஊர்வலத் தில் கலந்து கொண்டார்கள். ஈழத்தில் வெவ்வேறு மாவட் டங்களிலும் மாணவர்களுக்கெதிராகவும், ஆசிரியர்களுக் கெதிராகவும் பூரீலங்கா அரசு மேற்கொண்ட அடாவடித் தனங்களைக் கண்டிக்குமுகமாக மாணவர்கள் இவ் ஊர் வலத்தில் கலந்து கொண்டனர். இது தொடர் பாக * வெளிப்படுத்துவோம்' என்ற தலைப்பில் GUIYS துண் டுப் பிரசுரமொன்றையும் வெளியிட்டிருந்தது.

Page 14
நிறவெறி எதிர்ப்பில் மாணவர்கள்
6)) θου (7 (2)
ஆபிரிக்கா முன்னர் இருண்ட கண்டமென அழைக்கப்பட் டது. அந் நாட்களில் ஐரோப்பிய வெள்ளேயர்கள் ஆபிரிக்காவில் குடியேறி கறுப்பின மக்களை அடிமைகளாக நடாத்தி வந்தனர். இன்று தென்னுபிரிக்கா என அழைக்கப்படும் அஸ்ஸானியா வெள்ளையர் குடியேற்றம் நிகழ்ந்த இடங்களில் ஒன்ருகும். இன் றும் தென்னுயிரிக்காவிலுள்ள 28 மில்லியன் கறுப்பின மக்கள் இனவெறி பிடித்த சிறு பான்மையினரான வெள்ளேயர்களால் அடக்கி ஒடுக்கப்பட்டு வருகிருர்கள். இவ் அடக்கு முறைக்கு எதிரான கறுப்பின மக்களின் தியாகம் மிக்க போராட்டங்களினுல் உலக அரங்கில் தென்னுபிரிக்கா இன்று முக்கியத்துவம் வாய்ந்த நாடாகிவிட்டது.
1652ஆம் ஆண்டிலேயே வெள்ளையர் முதன்முதலில் தென்னு பிரிக்காவிற்கு வந்து சேர்ந்தனர். அன்று தொடக்கம் கறுப்பின மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு அ வ ர் க ள் அடிமைகளாக நடாத்தப்பட்டனர். பெருந்தோட்டங்களிலும், சுரங்கங்களிலும், தொழிற்சாலைகளிலும் கடுமையாக வேலே செய்யும் படி கட்டாயப் படுத்தப் பட்டனர். 19ஆம் நூற்ருண்டின் நடுப்பகுதி தொடக்கம் கறுப்பின மக்கள் ஆயுதமேந்திப் போராடத் தொடங்கி சில சந் தர்ப்பங்களில் குறிப்பிடத்தக்க வெற்றியும் அடைந்தனர். பின்னர் 19ஆம் நூற்ருண்டின் பிற்பகுதியில் அரசியல் ரீதியாக தமது உரி மைகளைப்பெறவும் முனைந்தார்கள். ஆணுல் அவை வெற்றியளிக்க வில்லை. தொடர்ந்தும் தீவிர இனவாதிகளே ஆட்சியைக் கைப் பற்றி மோசமான ஒடுக்குமுறைகளைச் செய்தார்கள், ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் (A. N. C) எனும் பிரதான கறுப்பின மக்க ளின் கட்சி ஐரோப்பிய வெள்ளையர்களுடன் ஒத்துப் போய்க் காரியமாற்ற முனைந்த போதும், தோல்வியையே கண்டனர். எனவே இளைஞர்கள் வன்முறைப் போராட்டங்களையே நாடிநின் றனர். இவ் வன்முறைப் போராட்டம் மக்கள் மத்தியிலும் செல் வாக்கைப் பெற்றது. இதன்பின் மேலும்பல பயங்கர சட்டங்களை வெள்ளையர் ஆட்சி உண்டாக்கியது, இதன் பின் 1960இல் சாதா ரண வன்முறைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக தென்னு பிரிக்காவில் உருவெடுத்தது.
1976இல் இப்போராட்டத்தில் பல புதிய வடிவங்கள் வெளிக் கொணரப்பட்டன, இவ்வாண்டில், சொவிட்டோ எனும் கறுப்பின
4.

மக்கள் நிறைந்து வாழும் சேரிகளையும், அழுக்கடைந்த வீதிகளை யும், கொண்ட தென்னுபிரிக்க நகரத்தில் ஓர் பாரிய கிளர்ச்சி யொன்று நடைபெற்றது. இக்கிளர்ச்சி இனவெறி அரசினை தடு மாற வைத்தது. 1960இல் ஓரளவு உத்வேகம் அடைந்த போராட் டம் பின்னர் ஓர் வகையான அமைதி நிலையிலிருந்த பின் மீண் டும் 76இல் பூதாகரமாக வெடித்தது. இக் கட்டத்தில் கறுப்பின மக்களின் போராட்ட அணிகள் அரசினுல் தடை செய்யப்பட்டன.
தென்னுயிரிக்க போராட்டத்தில் மாணவர் இளைஞர் பங்கு
தென்னுபிரிக்க போராட்டத்தின் போது பெருமளவில் தொழிற்சாலைகளை மையப்படுத்தித் தொழிலாளர்களும், வேறுபல வெகுஜன குழுக்களும், சமய நிறுவனங்களும் கூட வேலை நிறுத் தங்கள், ஊர்வலங்கள், கூட்டங்களை நடாத்தி கறுப்பின உணர் வினைத் தோற்றுவித்தனர். ஆயினும் இவ் உணர்வுகள் கறுப்பினப் பல்கலைக் கழகங்களையும், பாடசாலைகளையும் மையப்படுத்திய போராட்டங்கள் மூலமே செழுமைப்படுத்தப்பட்டன. மாணவர் கள் இளைஞர்களின் போராட்டங்கள் போராட்ட வளர்ச்சிக்கு தூண்டுகோலாயமைந்தன. மாணவர்கள் இளைஞர்களின் கறுப் பின உணர்வானது தனித்து இனவெறி வெள்ளையர் ஆட்சிக்கு எதிராக மட்டுமல்ல, அவர்களுடன் சமரசங்கள், பேச்சுவார்த்தை கள் நடாத்தி வந்த பழந்தலைமுறைக் கெதிராகவும் வளர்க்கப் பட்டது.
மாணவர்களின் போராட்ட மையக்கருவாக 1976இல் அவர்கள் மீது திணிக்கப்பட்ட கல்வித் திட்டங்கள் அமைந்திருந் தன. தென்னுயிரிக்க பாடசாலைகளில்; குறிப்பாக கறுப்பின மாண வர்கள் உள்ள பாடசாலைகளில் குடியேற்ற வாதிகளின் அந்நிய மொழி மூலம் சில பாடங்களைக் கற்க வேண்டுமென நிர்ப்பந்திக் கப்பட்டனர். தூயகணிதம், சமூகக்கல்வி, சரித்திரம், புவியியல் போன்ற பாடங்களை அந்நிய மொழியில் கற்கும்படி திணிக்கப் பட்டது. சமயம், சங்கீதம், உடற்பயிற்சி போன்ற பாடங்களே தாய் மொழியில் கற்க கறுப்பின மாணவர்கள் அனுமதிக்கப்பட் டனர், இது கறுப்பு மாணவர்கள் மத்தியில் பெரும் கிளர்ச்சி யினை ஏற்படுத்தி விட்டது. மாணவர்கள் புதிய கல்வித்திட்டத் தினை எதிர்த்து மாபெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலங்களை நடத்தி ஞர்கள். இவ் வூ ர் வ ல ங் களுள் ஒன்று நடந்த இடத்திற்கு வந்த பொலிசார் கூட்டத்தினரிடையே துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். ஆயினும் அவர்களின் சுதந்திர தாகம் துப்பாக்கிக் குண்டுகளை துச்சமென மதித்தது. இதனுல் துப்பாக்கி முனைமூலம்
25

Page 15
அவர்களை அடக்க முடியவில்லை. அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்பதற்கேற்ப பெருந்தொகையான மாணவர்கள் கற் கள், தடிகளை வீசியே அரசின் கூலிப்படைகளை பின்வாங்கச் செய் தனர் இக்கிளர்ச்சிகளில் கறுப்பின தொழிலாளர்களும் பங்கெ டுத்துக் கொண்டார்கள்.
இவ்விதமாக இனவெறி அரசின் அடக்குமுறைக்கெதிராகக் கிளர்ந்தெழுந்த மாணவர், தொழிலாளரின் ஒன்றுபட்ட போராட் டமே, அதுவரை தென்னுபிரிக்காவைச் சுரண்டி வந்த முதலாளித் துவ உலகைக் கதிகலங்க வைத்தது. தென்னுயிரிக்கா மிகஅதிக மான தங்கத்தைப் பெறும் நாடாக இருப்பதால் தொழிலாளர் கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டு முற்ருக வேலைத்தளங் களில் குவித்துச் சுரண்டப்பட்டனர். சுரண்டப்படுகின்றனர். இத் தொழிலாளர்கள் 50% நாட்டின் அந்நிய செலாவணியை, பெற் றுக் கொடுக்கின்றனர். எனவே இத்தொழிலாளர்களின் கிளர்ச்சி தென்னுயிரிக்க ஆதிக்கவாதிகளை நிலைகுலையச் செய்துள்ளது. மேலும கறுப்பின தொழிலாள மக்களை பிரதிநிதித்துவப்படுத் துவதும், தொழிற்சங்கத்தின் வளர்ச்சியும் ஒரு புதிய போராட்ட முனைப்பிற்கு அழைத்துச் சென்றுள்ளது. அனைத்துலகின் கண்டனத்தில் தென்னுயிரிக்கா
ஆபிரிக்க கண்டத்தில் ஐரோப்பியக் குடியேற்ற வாதத்திற்
குச் சாவுமனியடிக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பைத் தென்னுபிரிக்கா பெற்றுள்ளது. ஏற்கனவே குடி யேற்றவாத ஒடுக்கு முறையின் பிடியிலிருந்து விடுபட்ட சிம்பாபே அணிசேரா நாடுகளின் தலைமைத்துவத்தைப் பெற்றமையும், தென்னுயிரிக்க கறுப்பின மக்களின் விடுதலைக்கு ஒரு ஊன்று கோலாகிறது. இப்போராட்டத்தினை துரிதப்படுத்துவதில் மாண வரின் பங்கு முதன்மையானது. மேலும் ஒன்றுபட்ட தொழிலா ளர் சக்தியும் பிரதான பங்கை ஆற்றுகின்றது.
அண்மையில் தென்னுயிரிக்க அடக்கு முறையாளர்களை ஆட்டம்காண வைத்த சொ வீட்டோ கிளர்ச்சியின் பத்தாவது வரு டாந்த தினம் விடுதலை வேண்டிநிற்கும் தென்னுயிரிக்க கறுப்பின மக்களால் கொண்டாடப்பட்டது. இதனை ஜீரணிக்க முடியாத வெறிபிடித்த வெள்ளையர் ஆட்சி நினைவு தினத்திற்கு மூன்று நாட்கள் முன்னரேயே அவசர காலச் சட்டத்தைப் பிறப்பித்து கறுப்பினத் தலைவர்கள், தொழிற்சங்கத் தலைவர்களை கைது செய்து சிறையில் இட்டது. அத்துடன் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் உறுப்பினர்கள் 2000 பேர் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார்கள். இதில் 79 பேர் பாடசாலை, பல்கலைக்கழக
26

மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் தடை செய்யப்பட்டதுடன் பத்திரிகைத் தணிக்கை தீவிரமாய் அமுல்படுத்தப்பட்டது. இருப்பினும் மக்களின் எதிர்ப் புணர்வை நிறவெறி அரசினுல் தடுக்க முடியவில்லை. இந்நேரத் தில், மாணவர் கிளர்ச்சியின் 10வது வருடாந்ததினம் பாரீசி லும் கொண்டாடப்பட்டது.
கறுப்பின மக்களின் ஏகோபித்த குரல் உலகத்தின் மன சாட்சியை உலுக்கியது. ஸிம்பாபேயின் தலைநகரில் நடைபெற்ற 101 அங்கத்துவ நாடுகளைக் கொண்ட அணிசேரா நாடுகளின் இயக்கத்தின் உச்சி மகா நாட்டின் இறுதி நாளன்று தென்னுபி ரிக்கா மீது கட்டாய பொருளாதார தடை விதிப்பதென்று தீர் மானம் நிறைவேற்றப்பட்டது. இவ்வாறே கிரேக்கில் கூ டி ய ஐரோப்பிய பொருளாதார அமைப்பு தென்னுயிரிக்காவிற்கு எதி ரான பொருளாதார தடை பற்றிய தீர்மானத்தை நிறைவேற்றி யது. இவ்வாருண தீர்மானத்தைப் பொதுநல அமைப்பில் பிரே ரித்தபோது பிரிட்டன் இணங்க மறுத்ததை ஆட்சேபித்து அங்கு நடைபெறவிருந்த விளையாட்டுப் போட்டியை 34 நாடுகள் பகிஸ் சரித்தன. இறுதியில் பிரிட்டனும் தென்னுயிரிக்காவுக் கெதிராக பொருளாதார தடை கொண்டு வருவதற்குச் சம்மதித்தது.
ஆபிரிக்கக் கண்டத்தையே அழித்தொழிக்க வல்ல நாச கார ஆயுதங்களும், ஏகாதிபத்திய வெறிபிடித்த வல்லரசுகளின் ஆதரவும் இருந்தும் கூட, சர்வதேச நிறுவனங்களின் எதிர்ப்பை சமாளிக்கத் தென்னுபிரிக்க அரசினுல் முடியவில்லை. தங்கம், வெள்ளி, வைரம், அணுகுண்டு உற்பத்திக்கான யுரேனியம் போன்ற அரிய திரவியங்களைப் பெற்று சுரண்டலில் இன்பசுகம் கண்ட அமெரிக்கா, பிரிட்டன், போன்ற வல்லரசுகள் பிற சமூக நிறுவனங்களின் வற்புறுத்தலின் பேரிலாவது இனவெறி அரசின் கட்டுமீறிய அடாவடித்தனங்களை கண்டிக்கத் தலைப்பட்டுள்ளன.
அண்மைக் காலங்களில் தென்னுபிரிக்கப் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த கறுப்பின மாணவர் அணிகள் தொழிற்சங் கங்களோடு இணைந்து பெரும் வெகுஜனப் போராட்டங்களிலும், சட்டமறுப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர் பத்து வருடங்களுக்கு முன்னர் அடக்குமுறைக் கல்வித் திட்டத்தினை எதிர்த்துக்கிளம்பிய மாணவர் எழுச்சி இன்று ஒரு மக்கள் போராட் டமாக பரிணமித்துவிட்டது. அண்மையில் லண்டனில் நடை பெற்ற பொதுநல அமைப்பின் உச்சி மகாநாட்டில் உரையாற் றிய பாரதப் பிரதமர் ராஜீவ் 'தென்னுபிரிக்க நாட்டுக் கல்வி
(36-ம் பக்கம் பார்க்க)
27

Page 16
சிரித்தன
Gattoosh)
மானிடம் அன்ருெருநாள் விழித்தெழுந்தது. யுகத்தின் எழுச்சிக்கு துயில் எழுப்பிய பூபாளத்தின் அதிர்வுகள் விண்ண முட்டியது! சில்லென்ற உணர்வுகள். இதுவரை பூமியை அபிஷேகித்த குருதி வானில் வரவேற்பு கீதம் பாடின. செங்கொடிகள் கரமசைத்து காற்றில் மிதந்தது!
வர்க்க விடுதலைக்கு வழி திறந்தது தனியுடைமைச் சொர்க்கம்
தகர்ந்தது. - அக்டோபர் புரட்சியின் வெற்றிகள் புதுவசந்தத்தின் பிறப்புக்கு முன்னுரை எழுதிற்று!
நேயத்தை நேசித்த மானிடச் சோலையெங்கும் சிரித்தன செம்மலர் வியர்வையின் ஊற்றிடங்கள் விழுமியம் பெற்றது. புரட்சியைக்காவிய புயலின் வேகம் திசையினைக் கடந்து செல்லச் செல்ல
மாளிகை மேடுகள் சிதைந்து போக உழைப்பவர் குடிசைகள் உயர்ந்து தோன்றின.
GUYS அமைப்புப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திச் செயற் பட்ட தோழர் மோகன்ராஜ் மின்சார விபத்தில் இன்னுயிர் ஈந்தார்.

மனித சமுதாயத்தின் ്ഞ് - 1
மாணவத் தோழர்களே!
நீங்கள் பள்ளிகளிலே சரித்திரப் பாடங்களைப் படித்திருக்கி நீர்கள் அல்லவா? அப்போதெல்லாம் இந்தப் பூமியிலே நமக்கு முன்னர் வாழ்ந்த மனிதர்களையும், அவர் க ளி ன் வாழ்க்கை முறைகளையும் பற்றி ஓரளவு தெரிந்து கொண்டிருப்பீர்கள் என நம்புகின்றேன். ஆனல் "நாங்களின் இந்தப்பகுதியிலே மனித சமுதாயங்களின் கதையினை மேலும் ஆழமான, இலகுவான, விஞ்ஞான ரீதியிலான பார்வையை உங்களுக்குத் தரலாமென விரும்புகின்றேன்.
நாம் எதற்காக இந்த மனித சமுதாயங்களின் வரலாற்றி னைக் கற்றுக் கொள்ள வேண்டும்? அவையெல்லாம் நடந்து முடிந்தவைதானே இப்போது எதற்கு? என நம் முன் பல கேள்வி கள் எழுவது இயல்பே. ஆம்; நமது ஈழப்போராட்டமானது வெறு மனே சிங்கள இனவெறி அரசின் அடக்குமுறைகளுக்கு எதிரா னது மட்டுமல்லாமல், அனைத்து அடக்குமுறைகளுக்கும் எதிரா னதே. மனிதன் மனிதனை சுரண்டாத, "எல்லா உயிர்களும் இன் புற்றிருக்கின்ற ஒரு சமுதாயத்தினை அமைக்கவே நாம் போராடு கின்ருேம். இது ஒரு சமுதாய மாற்றமாகும். எனவே தோழர் களே சமுதாய மாற்றத்தினைக் காணத்துடிக்கும் நாம் நமக்கு முன்பிருந்த மனித சமுதாயங்களின் மாற்றங்களை அறிவது மிக அவசியமாகிறது. ஏன் மனித சமுதாயங்கள் மாறிக்கொண்டு வந்தன? அவற்றை மாற்றமடையச் செய்த காரணிகள் எவை? அவ்வப்போது தோன்றிய சமுதாயங்களின் அநுகூலங்கள் என்ன? பிரதிகூலங்கள் என்ன? என அறிவதன் மூலம் நாம் காணவிளை யும் சமுதாய மாற்றங்களை இயல்பானதும், விஞ்ஞான ரீதியான தெனவும அறிந்து கொள்ளலாம்.
மனிதன் குரங்கிலிருந்து தோன்றினன் என்பதை அறிவதன் நோக்கம் மீண்டும் குரங்காய் மாறுவதற்கல்ல. அதன் வளர்ச்சி முறைகளை விளங்கிக்கொண்டு மேலும் வளர்வதற்கே.
"நாங்களின்" இந்த இதழிலே நாம் உயிர்கள் எவ்வாறு தோன்றின என்பதற்கான விஞ்ஞான ரீதியான விளக் க ங் க ள் எவை? அவ்விளக்கங்கள் கொடுக்கப்படுவதற்கு முன்பு மக்களால் நம்பப்பட்ட மூடத்தனமான கொள்கைகள் எவை? என நாம்
露拿

Page 17
ஆராய்வோம். அரிஸ்ரோட்டல் (கி. மு. 384-322) என்ற விஞ்ஞா னியின் காலத்திற்கு முன்பிருந்தே தன்னியல் தோற்றம் என்ற கொள்கை உயிரின் தோற்றத்திற்குக் கொடுக்கப்பட்டுவ ந் த து. இக்கொள்கையின்படி அழுகுகின்ற இறைச்சியிலிருந்துதான் புழுக் கள் தாமாகத் தோன்றுகின்றன, சேற்றிலிருந்து தாமாகவே தவளை கள் உண்டாகின்றன. அழுகும் பழங்களிலிருந்துதான் ஈக்கள் உருவாகின்றன என்றெல்லாம் நம்பினுர்கள். இவற்றைக் கேட்டு நீங்கள் வாய்விட்டுச் சிரித்திருப்பீர்கள். பரவாயில்லை அக்காலத் திலே இன்றுள்ள விஞ்ஞான வசதிகள் அவர்களுக்கு இல்லை. பின் னர் இலை யான்கள் இறைச்சியை உண்டபின் அதன்மேல் இடும் முட்டை பொரித்தே புழுக்கள் உருவாகின்றன என சில விஞ்ஞா னிகள் நிரூபித்தனர். இதன் பின் இந்தக் கொள்கை "செல்லாக் காசாக மாறியது.
அடுத்த கொள்கை வேருெரு கிரகத்திலிருந்து ஓர் உயி ருள்ள வித்து பூமிக்கு வந்து அது வளர்ந்து விருத்தி ய ர கியே இங்கு உயிர்கள் வந்ததெனவும் பலர் நம்பினுர்கள். இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? இந்தப்பெரிய அண்டவெளியி னைத் தாண்டி ஓர் மென்மையான உயிர் பூமியை அடைவது சாத் தியமேயில்லை. எனவே இந்தக்கொள்கையும் நிராகரிக்கப்பட்டது. அடுத்து வேதாக மகளிலும், சமயங்கள் மூலமாகவும் கூறப்படும் சிறப்புப்படைப்புக் கோட்பாட்டினைக் கூறலாம். ஏதோ ஒரு மிக ப் பெரிய சக்தி தன்சாயலையொத்த மனிதனையும் மற்றும் உயிர்களை யும் உண்டாக்கியது எனக்கூறப்படுகிறது. இப்படியான சக் தி யொன்று இருப்பதாக நிரூபிக்கப்படவில்லை. எந்தவொரு பொருளை யும் உண்டாகுக’ எனக்கூற அது உண்டாகியது என்பது சாத் தியமற்றது. இக்கொள்கையும் விஞ்ஞானரீதியாக நிராகரிக்கப்படு கின்றது.
அடுத்து நாம் நோக்கப்போவது விஞ்ஞானரீதியான பல பரி சோதனைகளைச் செய்து நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆயினும் இன்னும் இதனை விஞ்ஞானிகள் ஆராய்ந்துகொண்டேயிருக்கின்றர்கள். இவ்விளக்கங்களின்படி ஆதியில் பூமியின் மேற்பரப்பில் எந்தவித மான உயிர்சளும் இருக்க வில்லை. பூமியின் வளிமண்டலத்திலே மீதேன், அமோனியா, நீராவி, ஐதரசன், ஐதரசன் சயனைட் போன்ற வாயுக்களே பெருமளவில் காணப்பட்டன. நீங்கள் பள்ளிக்கூடங் களில் ஆரம்ப விஞ்ஞான வகுப்புகளில் இவ்வாயுக்களைப்பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள் என நம்புகின்றேன்.
30

இந்த வாயுக்களின் மீது சூரியகதிர் வீசல்களும் நடைபெற்ற தனுல் இவ்வாயுக்களிலிருந்து நீங்கள் விஞ்ஞானபாடங்களில் படித்த புரதம் சமிபாடடையும் போது தோன்றும் அமினுே வ மி ல ங் க ள் உண்டாகின இவை பின்னர் உங்கள் உடலில் காணப்படும் மிகச் சிறிய கலங்களில் காணப்படும் ஏனைய பதார்த்தங்க ளாயும் மாறின. கடலினை அடைந்த இப்பதார்த்தங்கள் அங்கு ஒர்வகையான கூழ் நிலை கோளங்களாக மாறின. இவையே பின்னர் உயிருள்ள கல மொன்ருக விருத்தியடைந்தது. இதைப்பற்றி நான் உங்களுக்குப் புழுகுகின்றேன் என் ருே, இது என் கற்பனை என் ருே நீங்கள் கருதிவிடாதீர்கள். இவையெல்ல ம் விஞ்ஞானிகளால் பல பரிசோத னைகள் மூ ல ம் நிரூபிக்கப்பட்டுள்ளன. நீங்க ள் விஞ்ஞான பாடத்தில் படித்த உயிருள்ள கலத்தினை ஞாபகப்படுத்திக் கொள் ளுங்கள். அதில் கரு குழிவுரு போன்ற பகுதிகள் இருப்பதனை நீங் கள் அறிவீர்கள். இக்கலத்தின் பகுதிகளில் இருக்கின்ற பதார்த் தங்கள் ஆதிப்பூமியில் காணப்பட்டன. அவை கடலில் ஒன்ருக சந்தித்து சிக்கலடைந்தபோதே ஓர் உயிருள்ள இப்போ நமது உடலிலுள்ள கலத்தினைப் போன்ற ஒரு கலம் உருவாகியது. இவ் உயிருள்ள கலமே பின் வளர்ச்சியடைந்து பலகலங்களாகின. இன்று பல ஒரு கலத்தினையுடைய உயிர்கள் காணப்படுகின்றன. பல நோய்க்கிருமிகள், கள்ளினை உருவாக்கும் மதுவக்கலங்கள் அவற்றுட் சிலவாகும். இவ் ஒருகல உயிர்கள் பின்னர் பல கலங் களைக்கொண்ட உயிர்களாகின. இன்னும் எளிய பல கலங்களைக் கொண்ட உயிரினங்களை நாம் காணக்கூடியதாயிருக்கிறது. இவை விருத்தியடைந்தே இன்றுள்ள தாவரங்களும், விலங்குகளும் தோன் றின. இவ்விலங்குகளிலிருந்கு சிறப்பாக பாலூட்டும் விலங்குகளி லிருந்தே மனிதன் தோன்றினுன். எனவே தோழர்களே உயிரின் தோற்றம் பற்றி ஓர் மேலோட்டமான பார்வையை நீங்கள் அறிந் திருப்பீர்கள். அடுத்த நாங்கள் இதழில் மனிதன் எவ்வாறு தோன் றினுன் அவனின் ஆதிகால சமூகவாழ்க்கை எப்படி இருந்தது என்பது பற்றிய மடலில் சந்திப்போம்.
நாம் ஈழவர் நமது மொழிதமிழ் நம் நாடு ஈழம்
9

Page 18
கையினுல் காகிதம் தயாரித்தல்
தகுநல் தொழில் நுட்பம்
எமது நாட்டில் தற்போது காணப்படும் பிரச்சினைகளுள் காகித தட்டுப்பாடு மிகமுக்கியமான இடத்தை வகிக்கின்றது. தற்போது எந்த வே லை யும் காகிதத்துடன் சம்பந்தப்பட்டே காணப்படுகிறது. பாடசாலை ஆரம்பக்கல்வி முதல் பட்டப்படிப்பு வரை, குடிசைக்கைத்தொழில் முதல் பாரிய கைத்தொழில் வரை, குடிசை வீடு முதல் மாடி கட்டிடங்கள் வரை காகிதம் பல்வேறு தேவைகளுக்காக, பல்வேறு அமைப்புகளில் ப யன் படுத் தப் படுகிறது. குறிப்பு புத்தகங்கள், பதிவேடுகள், தட்டு எழுத்து காகிதம், அச்சுவேலைக்கான காகிதம், சுவரொட்டிகள், காசோலை கள், காகிதப்பைகள், போன்ற ப ல் வேறு தேவைகளுக்காக பல்வேறு ரகங்களில், காகிதங்கள் தயாரிக்கப்படுகின்றன. ஒவ் வொரு ரகமான காகிதங்களும் வெவ்வேறு ரகங்களில் காணப் படுகிறது காகிதத்தயாரிப்பு என்பது மிக வும் மு க் கி ய மானதும், அவதானத்துடன் தயாரிக்கப்படவேண்டிய தயாரிப்பும் ஆகும். எனவே காகித தயாரிப்பானது பெருமளவில் தொழிற் சாலைகளிலும், சிறிய அளவில் குடிசைக்கைத்தொழில் ஆகவும், தயாரிக்கப்படமுடியும். இதற்குரிய மூலப்பொருட்கள் காகிதம் தயாரிக்கப்படும் இடத்தைப் பொறுத்து இடத்துக்கிடம், அவரவர் வசதிக்கு ஏற்றபடி தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம். ஆரம்பத்தில் பழைய காகிதங்களில் இருந்தும் பின் வேறு மூலப்பொருட்களில் இருந்தும் தயாரிப்பது மிகவும் வசதியானதாகும்.
மூலப்பொருள்
காகிதம் தயாரிப்பதற்கு தேவையான மூலப்பொருட்கள், நார்த்தன்மை பொருந்தியவையாகும் இவற்றிலிருந்து பெறப் படும் நார்களின் கூழ்க்கரைசல், கொண்டுள்ள நுண் நார்களின் அழுத்தப்பட்ட விளைவே காகிதமாகும். எனவே உங்கள் பிரதேசங் களில் இருந்து பெறப்படும் கழிவு நார்ப்பொருட்களை பயன்படுத்தி காகிதங்களை தயாரிக்கலாம். பொதுவாக காகித உற்பத்தியில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள்; புற்கள், பழையகாகிதம், நாணல், மூங்கில், கரும்புச்சக்கை, கந்தல்துணிகள், பருத்தி, வைக்கோல், கோதுமைபயிரின் கழிவு, சணல், போன்றவையாகும். இவற்றில் பழைய காகிதங்களில் இருந்து காகிதம் தயாரிப்பது,
2

ஆரம்பத்தில் எளிதாகவும், அரிதாகவும் இருந்தது பழைய காகி தங்கள்ே பழைய காகித வியாபாரிகளிடமிருந்தும், கா கி தம் பொறுக்குவோரிடமிருந்தும், பெருமளவில் தொகையாக பெற்றுக் கொள்ளலாம். தேவைப்படின், வீடுகளில் இருந்தும், அலுவலகங் களில் இருந்தும் தவணை முறையில் பெறுவதற்கு ஏற் பாடு செய்துகொள்ளலாம். விவசாய கழிவுகளான நார்ப்பகுதிகளை விவசாய நிலங்களில் இருந்தும், விவசாயிகளிடமிருந்தும் பெற்றுக் கொள்ளலாம், மற்றும் சண்ல், புல் போன்றவற்றை தேவையற்ற நிலப்பகுதியில் பயிரிட்டு அறுவடைசெய்து பெற்றுக்கொள்ள லாம். உமி, பருத்தி, கரும்புச்சக்கை போன்றவற்றை ஆலைகளில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.
துப்பரவு செய்தல்
பெறப்பட்ட காகிதங்களில் இருந்து தூசு, மண், தேவையற்ற பொருட்கள், போன்றவற்றை வேருக பிரித்தல் வேண்டும். பின் இவற்றை வர்ண காகிதம், வெள்ளைக் காகிதம், அச்சிட்ட காகிதம், என வேறு வேருக பிரித்தல் வேண்டும். வி வ ச |ா ய கழிவுகளும், ஏனையவையும், தூசு, மண், வேறு பொருட்கள், போன்றவற்றில் இருந்து வேருக்கப்படவேண்டும். இவற்றை தூயதாக்க, ஒடும் நீரோ, அல்லது தேங்கப்பட்ட நீரில், அதனை நனைத்து எ டு த் தலோ மிகவும் இலகுவானதாகும் பின் அவற்றில் காணப்படும் கடினமான் பகுதிகளை பிரித்தபின், இவை ஒரே குவியலாக சேர்க்கப்படும். இவற்றை காய்ந்தவை, பச்சையாக உள்ளவை, கடினமானவை, மென்மையானவை, என தரம்பிரித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு தரம் பிரிக்கப்பட்ட மூலப்பொருட்கள் சிறுதுண்டுகளாக்கப்படல் வேண்டும். பின் அவை தரையில் போடப்பட்டு தடிப்பான தடிமூலம், பலமுறை அடித்து நசிக்கப் படவேண்டும்.
காகித கூழ் தயாரித்தல்
1 கிலோ காகிதத்திற்கு அல்லது வேறு மூலப்பொருளிற்கு
20 கிராம் எரிசோடா (Caustic soda) அல்லது 50 கிராம் சுண் ணும்பு (நீருதது) எனக் கணக்கிட்டு தேவையான அளவு எரிசோடா சுண்ணும்பின் நீருடன் கலந்து அக்கரைசலை தெளிய விட்டு எடுத்துக்கொள்ளவேண்டும். மூலப்பொருட்களை ஒரு தொட் டியில், நீரினுள் ஊறவிட்டு அத்துடன் தயாரிக்கப்பட்ட கரைசலை சிறிது சிறிதாக சேர்த்து கலக்கவேண்டும். இவ்வாறு கலக்கும் போது மிகவும் அவதானமாக இருக்கவேண்டும். இவ் இரசாயன பொருட்கள் நீருடன் சேரும்போது மிகவும் குடுதோன்றும். எனவே
ቆ88

Page 19
இவை கவனமாக கலக்கப்படவேண்டும். விவசாய மூலப்பொருட் களை 12 மணிநேரம் சுண்ணும்பு நீருடன் வேகவைத்தபின் ஊற விடுதல் மிகவும் சிறந்த பலனை கொடுக்கும். 24 மணிநேரத்தின் பின் இப்பொருட்களை எடுத்து கருங்கற்தரையில் இட்டு மிகவும் நன்ருக அடிப்பதன் மூலம் நன்முக கூழ்போல் வரச்செய்ய வேண்டும். இவற்றை பலமுறை அடித்தபின் நீரை வடியவிட வேண்டும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட காகிதக்கூழ் சரியா எனப் பரிசோதிக்க, ஒரு கிளாஸ் நீரினுள் இக்கூழின் சிறிதளவை எடுத்து நள் ருக கலக்கவேண்டும். கலவை நீரினுள் கரைந்து பல நு ன் நார்கள் கூழ்போன்று மிதக்கவேண்டும். இவை இணைந்து காணப் படி ன் கூழ் சரியானதல்ல. தனித்தனியே காணப்படின் கூழ் சிறந்த நிலையில் உள்ளது. இப்பரிசோதனை கூழின் பலபகுதிகளை எடுத்து செய்யப்படவேண்டும். -
வெளிற்றுதல்
இவ்வாறு தயாரிக்கப்பட்ட காகித கூழ் (Paper Pulp) பழுப்பு நிறமாக இருக்கும். இதனை வெளிற்றுவதற்கு நூற்றிற்கு நான்கு பங்கு வீதம், வெளிற்றும் தூளை (BLEECHING POWDER) நீரு டன் கலந்து அதனுள் வடிக்கப்பட்ட காகித கூழை இட்டு கிளறி 2 மணி நேரம் ஊற விடவேண்டும். பின் நூற்றிற்கு ஆறு பங்கு சலவைச் சவற்காரம், கலக்கப்பட்ட தொட்டியில் இட்டு நன்கு கழுவ வேண்டும். இவ்வாறு கழுவப்பட்ட காகித கூழை வெள்ளை துணியில் இட்டு அதன் மேலாக லேசாக ஒடும் நீரை ஊற்ற வேண்டும். அதில் காணப்படும் இரசாயன பொருட்கள் சலவைச் சவற்காரம் போன்றனவும், கழுவப்பட்டு செல்ல கூழ் சுத்தமாகும். சுத்தமாக்கப்பட்ட கூழ் உடனடியாக பயன்படுத்தப்படவேண்டும். இவ்வாறு இல்லாது போனல் மீண்டும் அசுத்தமாகும். அசுத் தமான கூழில் இருந்து தயாரிக்கப்படும் காகிதம் எளிதிற் பழு தாகும்.
காகிதம் தயாரித்தல்
தேவையான காகிதத்தின் அளவிலும் 8 செ.மீ பெரிதாக ஒரு சீமெந்துப் பெட்டி தயார் செய்யவேண்டும். இது ஏறத் தாழ 90 செ.மீ அகலமுடையதாக இருக்க வேண்டும் (பொது வாக 135 x 185x90 செ.மீ தொட்டி போதுமானது) இது சுத் தமாக சீமெந்து பூசப்பட்டு நீர் கசியாது இருக்க வேண்டும். இதன் அடிப்புறத்தில் தரையை ஒட்டி ஏறத்தாழ ஒரு செ.மீ அளவில் துவாரம் செய்து கொள்ள வேண்டும். இதனை அடைப்பதற்கு அளவாக அடைப்பான் ஒன்று தேவைப்படும். காகிதம் தயாரிப் பதற்கு காகிதத்தின் அளவிலும் 4 செ.மீ பெரிதாக ஒரு மரச்
岛盘

சட்டம் தயாரித்து 1.5 x 3 செ.மீ அளவுள்ள (தேக்கு மதச்சட் டங்கள் விரும்பத்தக்கது) அதன் அடிப்புறம் சிறிய துவாரம் உடைய, இரும்பு அல்லது பித்தளை வலையை இணைக்க வேண்டும். வலையை வாங்குவதற்காக குறுக்கு சட்டங்களையும் இணைக்கவேண் டும். இதனுள் 3x3 செ மீ அகலமுள்ள இன்னுமோர் சட்டத்தை அதன் உட்புறம் படியுமாறு செய்து உள்ளே வைத்துக் கொள்ள வேண்டும். இதன் வெளிச்சட்டத்துள் காகிதக்கூழ் படியாது தடுக்க உதவும், ". . 泛、“ .
தேவையான காகிதத்தின் அளவு வெள்ளைத்துணித் துண்டு (குறைந்தது நூறு) வெட்டி நீரில் நனைத்து வைத்துக் கொள்ள வேண்டும். தொட்டியினுள் முக்கால் பங்கிற்கு நீரைவிட்டு அதில் சுத்தம் செய்யப்பட்ட காகிதக்கூழை கொஞ்சம் எடுத்து கரைத்துக் கொள்ள வேண்டும். பின் இரு சட்டங்களையும் ஒன்றினுள் ஒன்று பொருத்தி அதனுல் காகிதக் கூழினை அள்ள வேண்டும். கூழ் சீராக படியும்படி சட்டத்தை ஆட்டி அள்ளியபின் அதன் மேல் துணித் துண்டினை சுருக்கமில்லாதபடி போட்டு சட்டத்தை சுத்தமான மேசைமேல் கவிழ்க்க துணியுடன் காகிதக்கூழ் ஒட்டியபடி வந்து விழும். இவ்வாறு ஒன்றன்மேல் ஒன்ருக கா கிதத்தை ஒரம் வில காது வைத்து உலரவிடவேண்டும். ஒரளவு உலர்ந்த காகிதத்தினை கொடியில் காயவிட வேண்டும். பின் நன்கு காய்ந்தபின் காகி தத்தை உரித்தெடுத்து பத்திரமாக அடுக்கி வைத்து கொள்ள வேண்டும். பச்சரிசி அல்லது சோளம் மா கஞ்சியுடன் சிறித ளவு படிகார தூள் கலந்து ஒரு மட்டமான பலகையில் காகி தத்தை வைத்து மெல்லியதாக கஞ்சி பூசி உடனடியாகக் காய விட வேண்டும். -
மெருகிடல்
காகிதத்தினை மெருகிடுவது அதன் தரத்தினை உயர்த்துவது டன் உறுதியையும் கொடுக்கும். இதற்காக மட்டமாக, மளமளப் பாக்கப்பட்ட பலா மரக்கட்டை ஒன்றைச் செய்து கொள்ளவேண் டும். அதனுல் காகிதத்தினை சிறிதளவு நீர் தெளித்து மட்டமாக மெருகிடல் வேண்டும். மேலும், மெருகிடுவதற்கு மட்டமான மள மளப்பான கல்லில் சிறிதளவு ஆமணக்கு எண்ணையை பூசி அத ஞல் மளமளப்பாக்குவதனுல் சிறந்த முறையில் மெருகிடலாம். பின் அளவாக வெட்டும் கருவியினல் (CUTTING MACHINE) வெட்டிக்கொள்ளலாம்.
Seqqqq qq qqALiLLSqLSAS Lq SALAAS LLLSSS SS SSAAASq AAqqSaSAA Aq SAASAA SAAAAAAAAqAAAAAAAASSSA AAAASAAAeAeAAiSi AqAA qiAAA AAA

Page 20
தொழில் துட்பங்கள்: *. *. * : . ... పై இத்தொழிலை பாரிய அளவில் செய்வதற்கு (PAPERFUIP காகித கூழினை எடுத்தல், மெருகிடல், காயவைத்தல், போன்ற வற்றை செய்வதற்காக உள்ளூரிலேயே சில இயந்திரங்களைச் செய்துகொள்ளலாம். இது குடிசைக்கைத்தொழிலாகவோ அல்லது பாரிய தொழிலாகவோ மேற்கொண்டு ஈழத்தின் கடதாசித் தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாம்.
(27-ம் பக்கம் தொடர்ச்சி )
முறை இன்னமும் இனப் பாகுபாட்டுக் கொள்கையை வளர்ப்ப தாக உள்ளது. இதனை மாற்றினுல் ஒழிய உண்மை மாற்ற மெதையும் ஏற்படுத்த முடியாது’ எனக் குறிப்பிட்டார். இனியும் அற்ப சொற்ப சலுகைகளைக் காட்டி கறுப்பின மக்களை திருப்திப் படுத்த முடியாது. ஏனெனில் தற்போது அவர்கள் போராடுவது சலுகைகளுக்காகவல்லாமல், வெள்ளையர் நிறவெறி குடியேற்ற வாதிகளின், சகல அடக்குமுறைப் பிடியிலிருந்தும் தம்ம்ை முற் ருக விடுவித்துக் கொள்ளவேயாகும். வரலாறு அவர்கள்ை நிட்
சயம் விடுவிக்கும்.
"நாங்கள்? மாணவர்களுக்கு உரிய வெளியீடு இதற்கான ஆக்கங்கள் மாணவர் மத்தியிலிருந்து வர வேற்கப்படுகின்றன.
உங்கள் ஆக்கங்கள் மாணவர் மத்தியில்,
இ அரசியல் தெளிவை ஏற்படுத்தட்டும்.
8 பிற்போக்கான எண்ணங்களிலிருந்து மாணவர்களை விடுவிக்
கட்டும்.
இ இந்த மண்மீது ஒரு பற்றை உண்டாக்கட்டும்.
e எதிர்காலத்தை பற்றிய நம்பிக்கையை வளர்க்கட்டும்.
இவை நாங்கள் வந்த வழியிலேயோ அல்லது உங்க ளுக்கு தெரிந்த மாணவர் இளைஞர் பொதுமன்ற அங்கத்
தவர் மூலமோ எம்மை வந்து அடையட்டும்.
臀


Page 21