கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சோஷலிஸம் தத்துவமும் நடைமுறையும் 1982.03

Page 1
تقاقزة قي .
බ96ෆ්TL-6f6ර්(Libෂ බඛefiඛgt; CUDتق
 

ல் ஆத்மீகக் காலாண்டிதழ் 50

Page 2
புத்தாண்டு பிறக்கட்டும்
யுவனன்னும் புத்தாண்டு இனிமையுடன் றக்கட்டும்
ബ് ബോള கருணை ISOTG) ġbi சிறக்கட்டு
ற்ெறாத நதிகளிங்கு வழிந்தோடிப்
முத்திரனின் கண்களிலும் அன்புமுகம்
ஷண்முகனின் ருவருளால் தமி மாழிதான்
 

ܝܘܼܬܼܵܐ ܡܐܲܕܕ
ܪ ܬ .
܀ܚ ܥܡ 8 ܀ ܀

Page 3
ஈசன் நெறி பரப்ப இன்த
66)
சித்திரை-வைகாசி
ஆசிரியர்: திரு மு. நற்குணதயாளன்
துணை ஆசிரியர் திரு க.ஜெகதீஸ்வரன்
நிர்வாகப்பொறுப்பு: திரு வ. இ. இராமநாதன்
ஆசிரியர்குழு
திரு சிவ. அசோகன் - சந்தாப் பொறுப்பு திரு மாணிக்கம் சுரேஷ் -பொதுமக்கள் தொடர்பு திரு இ.முருகதாசன் - விற்பனை விநியோகம் திருமதி தமிழரசி சிவபாதசுந்தரம் -மகளிர் பகுதி
திரு ந.சிவராஜன்
-விளம்பரப் பொறுப்பு
வெளியீடு: சைவ முன்னேற்றச் சங்கம் (U.K) அச்சமைப்பும் வடிவமைப்பும்: சைவ முன்னேற்றச் சங்க பதிப்பகம் அச்சுப்பதிப்பு:
செல்வம் அச்சகம்
தொடர்பு முகவரி:
"KALASM" 2 SALISBURY ROAD ΜΑΝΟP PARK
LONDON E12 6AB ENGLAND
அட்டைப்படவிளக்கம்: சைவ முன்னேற்றச் சங்கத்தின் புதிய கட்டிடப் புகுவிழாவின்போது நடைபெற்ற வைபவக் காட்சி
தாண்டவமா( ஆஹாஒஹே எங்களுககாக என்பதை நி சத்தம்போட்டு பாரதி பாடிய கால்கள் நி மறுக்கின்றன ஓ! நெஞ்செ நாங்கள் இனி இந்த மண்ட சங்கத் தொன் தொடர்ந்தும் எடுப்போம்.
இந்த இனிய
Զ fեlՑԵ 6II Ց56Ն)*
ஆதரவுக் கர பூர்வமான ந6 இந்தக் கலச அரங்கேறிக்
மேலும் மேலு உங்கள் வாழ நாட்டிலே பே அமைதிப்புற அமைதிப்புற நாமும் எம்ம எல்லாம் நன்
ஓம் நமசிவா
மு.நற்குணத
 

தமிழ் வளர்ப்போம்
~ஆனி 1995
ஒலி 10
மனதக்குள் மத்தாப்பு !
போது மனம் துள்ளிக் குதிக்கிறது.
ன்று சொல்லி நாம் துள்ளிக்குதிக்க ஒரு மண்டபம் ட்டதே என்பதை நினைக்கும் போது இதயம் ஆனந்தத் டுகிறது. ா என்று சொல்லி ஒடித்திரிய வேண்டும்போல் இருக்கிறது. சைவ முன்னேற்றச் சங்கம் இதனைச் சாதித்து விட்டதே னைக்கும்போது ஆண்டவா நீ இருக்கிறாய் என்று க் கத்தவேண்டும்போல் இருக்கிறது. கும்மிப் பாட்டைப் பாடி ஆடவேண்டும்போல் இருக்கிறது! லைகொள்ள மறுக்கின்றன! கண்கள் இமைக்க மனதுக்குள் நிறைந்த துயரங்கள் தூரவிலகி ஓடுகின்றன! மல்லாம் இனிப்பு!!
மேல்தான் இயங்கவேண்டும்! எங்கள் எதிர்காலச் சந்ததி பத்தால் பெரும் பயனுற வேண்டும். சைவ முன்னேற்றச் ண்டர்களுக்கு இதுவரை நாளும் கை கொடுத்ததுபோல் கை கொடுத்து ஆவன புரிவோம் எனச் சங்கற்பம்
நினைவுகளுடன் இன்னுமொரு பெருமிதச் செய்தி இது சத்தின் பத்தாவது இதழ் இது. ம் தந்து ஆதரவுபுரிந்த அன்புக் கரங்களுக்கு எம் இதய ன்றிகள். த்தை நீங்கள் பார்க்கும்போது முத்தமிழ்விழா முன்னே கொண்டிருக்கும். ம் பல ஆண்டுகள் கலசம் வெளிவர வாழ்த்துங்கள்! ம்த்துக்கள் தானே எங்கள் வளர்ச்சி! ார்மேகங்கள் விலகிப்போய்க்கொண்டிருக்கின்றன. ா சிறகடித்துப் பறந்து கொண்டிருக்கிறது. ாவை யாரும் சாகடித்து விடக்கூடாது. ல் முடிந்தளவுக்கு ஆண்டவனுக்கு ஆராதனை புரிவோம்! மையிலேயே முடியும்.
L!!
LLJT6776i
ர்புநிறைந்த எம் இனிய வாசகர்களுக்கு இதயம் நிறைந்த புதுவருட வாழ்த்துக்கள்

Page 4
| ॐ
grtus
உமாமகேஸ்வரன்
பூதராயர் வழிபாடு யாரைக்குறித்த வழிபாடு? இது சைவசமயிகளுக்குரிய வழிபாடுதானா? அதற்கான ஆதாரம் ஏதேனும் உண்டா? இல்லையேல் இது வெறும் சிறுதெய்வ வழிபாடு தானா? பூதராயர் என்ற தெய்வத்தின் தோற்றம் எவ்வாறு நிகழ்ந்தது-இவை சுவாரஸ்யமான வினாக்கள். ராஜா என்பது ஆரியச்சொல். ராயர் என்பது அது தமிழுருவம் பெற்றதால் ஆனசொல்-வடசொல். எனவே பூதங்களின் தலைவர் என்பதே பூதராயர் என்ற தொடரின் பொருளாம். பூதராயர் என்ற மறக்கருணை நதியினுடைய மூலம் கந்தபுராணம், என்ற மேருமலையிலே தான் உள்ளது. அது இது. சிவனை வழிபடக் கயிலையங்கிரி சென்றான் இந்திரன். அவனுக்கோ உள்ளங்காலிலிருந்து உச்சிபரியந்தம் அகந்தை.
 
 
 
 
 
 
 
 
 

BIS-gsf
பொக்கம் மிக்கவர் பூவும் நீருங்கண்டு அவர்தமை நாணி நக்கு நிற்பவன் அல்லவா சிவன். அவன் பூதவடிவம் எய்தினான்
, கயிலையங்கிரியின் முதற்பெருந்தோரணவாயில் முகப்பில் நின்றான். விரைந்து உள்ளே புகவென வந்த இந்திரன் புதியதோர் பூதம் குறுக்கே நிற்பது கண்டான். மிகுந்த அலட்சியத்தோடு
"யார்நீ?, அருள்வள்ளலாகிய சிவனைத்தொழவந்தேன், சொல்
பெருமானைத் தொழற்கான தக்ககாலம் (செவ்வி) தானே இது." என்று உறுமினான். பூதமோ பதில் எதுவுமே கூறவில்லை.
அளவிறந்த வன்மை படைத்தவன் தான் என்ற தருக்கினால் வச்சிராயுதத்தை ஏவினான் இந்திரன். அப்படைக்கலமோ நுண் துகள்களாக்கிச் சிதறியது. பூதம் நின்ற இடத்திலே உருத்திரன். இந்திரனது அகந்தைத் தீயை அணைக்கவெனச் சிவன் சடைக் கங்கைதான் பிரவாகித்ததோவென உருத்திரனின்
உரோமத் துவாரம் தோறும் வியர்வை பொங்கியது. இந்திரன் உயிரைக் கொள்வேன் என உள்ளுறு காற்று எழுந்ததோவென மூச்சுக்காற்றுப் புகையோடும் எழுந்தது. நெறித்த புருவங்கள் நெற்றியைச் சேர்ந்தன. மதனனை எரித்த விழித்தீ இதுதான் எனும்படி விழிசிவந்தன. உருத்திரன் நின்ற இடத்திலே அய முதலிய தேவர் அனைவரும் அஞ்சி நடுங்கும் வண்ணம் பேருரு ஒன்று எழுந்தது. அஞ்சி நடுங்கிய இந்திரன் உண்மையை உணர்ந்தவனாய்
அகந்தை ஒழிந்தவனாய், "எனக்குள் மாயம் தெரியுமோ? அயனும் அரியுமே இன்னுந் தெரிந்திலரே! மேருவை வில்லாய் வளைத்தவரே செய்பிழை பொறுத்தருள்க!" என்று பலவா துதித்தான். காலில் வீழ்ந்து கதறினான். இந்திரன் பன்முறை இவ்வாறு பணிந்தெழலும் தன் சீற்றமாகிய தீயைத் திரட்டித் கடலிலே வீசினான் சிவன். மேற்கிலே அஸ்தமிக்கும் சூரியனோ இதுவெனும்படி கடலிலே வீழ்ந்தது அது. அஞ்சல் 516 அன்புடன் இந்திரனுக்கு அபயமளித்து, விடையளித்து, "செல் என்ற பின. கயிலை புக்குக் கெளரியொடும் வீற்றிருந்த கண்ணுதல். சிவனது சீற்றம் வருணனை அடைந்ததும் சிறுவனான அந்தச் சிறுவனைத் தன் திரைக்கரங்களாலே வருணன் தழுவினான், 'யான் அலாது யார் தவம் செய்தார்?" மகிழ்ந்தான், ‘உலகு பேரினும் ஊழி நீ வாழ்க!"என்று தன் வாயார, மனமார வாழ்த்தினான். அந்தச் சிறுவனோ அ ஆரம்பித்தான். விண், மண், எண்டிசை என்று எல்லாமே அதிர்ந்தன. செவி படைத்தவை செவிடுபட்டன. அ குரலோசை ஒன்று வானளாவுகின்றதே! எங்கிருந்து இவ்ெ வருகுவதோ! என்று நூலறிவுமிக்க நான்முகனே திகைத்த கடலிலே இருந்து தான் இந்தக் கத்துங்குரலோசை வரு தென்பது புரிந்ததும் கடலை நோக்கி ஓடினான். கடலைப் பிரமன் அடைதலும் வருணன் மிக்க அன்போடு
ஆசனம் ஒன்றை இட்டான். இவ்வாசனத்திரு பாலன்

Page 5
கலசம் சித்திரை-வை:
இவனைப் பார்" என்றான். கையிலச் சிறுவனை ஏந்தி
நீட்டினான். நீட்டுதலும் பிரமன் விரைந்து வாங்கினான, மடி மீது கிடத்தினான். பிரமனின் தூயபுல்லொத்த தாடிகளைக் கடலின் புதல்வன் ஒவ்வொன்றாய்த் தொடர்ந்து பற்றினான்.
நான்கு தாடிகளையும் நாரைத்தொடுத்தது போலாக்கினான்.
அவற்றைப் பற்றித் தொங்கினான். நான்முகனின் புகழே கீழிறங்குவது போல அவன் கண்களினின்றும் நீர் கீழே வழிந்து பெருகியது. மற்றொரு கடலாகிக் கடலுட் கலந்தது. முக்கண்ணன் கோபம் புகுந்ததும் கடல் வெப்பமுற்று வற்றியது. நான்முகன் கண்ணிர் புகுந்ததும் தான் முன்புற்ற வறுமையின் நீங்கியது, வளமுற்றது. சிறுவனின் கைகளில் நின்றும் மிகுந்த சிரமத்தின் பின் தன் தாடிகளை விடுவித்துக்கொண்டான் பிரமன், மெல்லச் சிறுவனைக் கடலுள் விடுத்தான். வருணனை நோக்கி, கொன்றைசூடிய சிவனின் கோபத்திலே தோன்றியவன் இவன். ஒருவரையும் ஒரு பொருட்டாய் இவன் மதியான. வரபலம் என்று எதுவும் இவனுக்கு வேண்டாம். எவராலும் இவன் அழிவும் எய்தான். தீயும் நின் சேயின் வெம்மையாலே தீயும். அங்ங்ணமாயின் தேவரின் சாபம் இவனுக்கு எம்மாத்திரம். இவனை நானும் அஞ்சுவேன்.மாலும் அஞ்சும், யமனும் அஞ்சம், உலகும் அஞ்சும். இந்திரன் முதலிய தேவர் இவன் முன் நிற்கவும் வல்லரோ? நீண்டகாலம் இவன் கொடுங்கோல் செலுத்துவான். ஈசன் அன்றி யார் இவனை வீட்டுவார்?" என்றான். பிரமன் இவ்வாறு கூறியதும் "இவனுக்கோர் பேர் சூட்டு" என்றான் வருணன். "இவன் பேர் சலந்தரன் என வழங்கட்டும்" என்றான் பிரமன். சலத்திலே(கோபம்)தோன்றியவன் இவன், சலத்திலே (நீர்) வளர்பவன் இவன் என்றெல்லாம் எண்ணித்தான் பிரமன் அவ்வாறு பேரிட்டான் போலும், பாலகனான சலந்தரன் வளர்ந்தான். காளைப்பருவம் எய்தினான், உலகின் திசையனைத்தும் வென்றான். 'அமராவதி (இந்திரன்நகர்)அனையதொரு நகர் அமை! எனத் தானவர் (அவுணர்)தச் சனைப் பணித்தான். தச்சனும் அமைத்தான். காலநேமி என்ற அவுணன் புதல்வி விருந்தை. அவள் அழகிலும் கற்பிலும் அறிவிலும் சிறந்தவள். சலந்திரன் விருந்தையைத் திருமணம் புரிந்தான். தன் தலைநகரில் இருந்து ஆட்சி புரிந்தான. தேவரை வெல்லும் ஆசை எழுந்தது. போர் புரியப் புறப்பட்டான். போருக்கு வந்தான். சலந் தரண் என்றதும் தேவர் அரி ஏறு கணிட ஆனையாயினர்.பாற்கடலிலே துயிலும் பரந்தாமனைச் சரண்புகுந்தனர். கருடன் மீது இவர்ந்து கண்ணெதிரே தோன்றினான் கரிய திருமால். சலந்தரனுக்கும் ஜனார்த்தனுக்கும் போர் தொடங்கியது. இருபதாயிரம் ஆண்டுகள் இப்போர் நீடித்தது. இத்தனை ஆண்டுகளின் பின்பும் திருமால் சலந்தரனைப் புறங்கண்டிலன். போருக்காற்றாது இளைத்துச் சலந்தரனைப் போற்றிப் புகழ்ந்தான். புறமுதுகிட்டான்.

ாசி-ஆனி 1995 3
கொண்டல் வண்ணன் கொடியவனான சலந்தரனோடு
போரிடத்தொடங்கிய போதே அஞ்சிய அமரரனைவரும் கயிலையங்கிரிச் சாரல் புக்கு ஒளித்தனர். கற்றோரேத்துங் கயிலயங்கிரி க்கார் தேவர் என்று அறிந்ததும் சலந்தரன் அங்கே செல்லத்துணிந்தான். சேனையொடும் இவன் எழுதலும், "வேண்டாம்! வேண்டாம் நித்தனுடன் போர் செய்தால் மாண்டாய்! மாண்டாய்" என்று அவன் மனையாள் விருந்தை தடுத்தாள். குலந்தனில் வந்தாள் கூறிய மாற்றங் குறிக்கொண்டான் அல்லன் சலந்தரன். சோனா மாரிபோற் படை மாரி சொரிகின்ற சேனாயூகம் சூழச்சலந்தான் தெண்கயிலைப் புறம் வருதலும் இந்திரன் அஞ்சினானேனும் இவன் நன் உயிர் முடிவுறவே இங்கு வந்தான் என்றெண்ணிக் களிப்பும் ாய்தினான். கயிலையங்கிரியின் வாயிலை எய்தி நந்திதேவரை வணங்கித் தன் பரிதாபநிலையை உரைத்தான். நந்திதேவர் இரங்கி இந்திரன் டள்ளே புக அநுமதித்தார். உட்புகுந்த இந்திரன், தன் உள்நடுக்கத்தை உலக காரணனான உமாபதிக்கு உரைத்தான். சலந்திரனுக்கு அஞ்சி மேருமலை புக்கேன், அங்கும் வந்துவிட்டான். திருமாலிடம் தஞ்சம் புகுந்தேன், திருமாலோ தோற்றோடி விட்டார். Fங்கு வந்தெய்தினேன், இங்கும் வந்துவிட்டான், என் துயர் தீர்த்தருள்" என்று கயிலைக்கிறைவனைக் கைகூப்பி இறைஞ்சினான் இந்திரன். உன் துயர் ஒழிதி" என்று இந்திரனுக்கு அபயம் அளித்த அரன் நிருவிளையாடல் ஒன்றை நிகழ்த்தத் திருவுளம் கொண்டான். ஒரு நாமம் ஒருருவம் ஒன்றுமிலான் குண்டிகையும் விசிறியும் கோலும் ரந்திய முனிவனாய்க் கயிலையின் புறத்தே வந்து தோன்றினான். சலந்தரனை நோக்கி "எங்கிருப்பவன் நீ, இங்கு நீ எய்திய காரணம் என்ன?" என்றான். நிலத்தில் வாழ்பவன். சலந்தரன் என்பேர். தேவர் அனைவரும் தோற்றோடினர். நுதல்விழியோனுடன் போரிடவென வந்தேன்."என்றான் Fலந்தரன் உன்னெண்ணம் அருமையானது! அற்புதமானது! என்னதான் நடையிருக்கப்போகிறது இதற்கு? என்று புகழ்வதுபோலக் கூறி இகழ்ந்தான் அந்தணமுனிவனான அரன். " கயிலை யங்கிரிப் பிரானோடு போர்புரியின் நீ தொலைந்தாய், வேண்டாம், மிண்டுவிடு" என்று Tச்சரிக்கையும் விடுத்தான். அவ்வளவுதான், எளியவன் என்றெனை எண்ணிவிட்டீர். இன்னும் சிறிதுநேரம் இங்கே நிற்பீரானாற் போதும் என் வன்மை எத்தகையதென்று தெரிந்துகொள்வீர் ான்று நெருப்பெழச் சீறினான் சலந்தரன். நானும் உன் வன்மை காணவே வந்தேன்" என்ற சிவன் தன் நிருவடியினாலே சக்கரம் ஒன்றைத் தரையிலே கீறினார், தலையினாலே இந்தச் சக்கரத்தைத் தாங்கவல்லையோ?" என்று கேட்டார். "புங்கவர் ாவரையும் புறங்கண்டேன்! கங்கையை அடைத்தேன்! கடலின் டுவிலுள்ள வடவாமுகாக்கினியை அவித்தேன்! அரியை வென்றேன்! இந்தச் சக்கரத்தைத் தாங்குவதரிதோ? என்று எள்ளிநகையாடிய சலந்தரன் னமிக்க அந்தச் சக்கரத்தை கைகளினால் எடுத்து மார்பிலும் புயத்திலும் பருமூச்செறிந்து தாங்கிப் பின்பு தலையிலே வைத்தான். சக்கரம் லையிலே ஏறியதுதான் தாமதம் உச்சிமுதல் உள்ளந்தாள்வரை அவன் உடலை இரு கூறாகப் பிளந்தது, பின் இறைவனிடம் சென்று சேர்ந்தது. ம் விழிபொழி கனலால் அவுணன் சேனையை அழித்தொழித்த பின் ந்தொன்மைத் திருக்கோலத்தைச் சிவன் காட்டியருளினார். அரி, பிரமன், ந்திரன் முதலாந்தேவர், "எம்துயர் துடைத்தாய் என்று நெக்குருகிச் வனைத் துதித்தனர்.
இந்திரனது அகந்தையை ஒழிக்கவெனச் சிவன் தாங்கிய ருவுருவே பூதராயர் என்னுந் திருவடிவாம் . எனவே, பூதராயர் சிவனே! வபூதராயர் என்ற வழக்கும் இங்கே நினைவுகூரத் தக்கது. வபூதராயரெனுந் திருவடிவிலே எழுந்தருளும் சிவபெருமானை வழிபடும் பறு படைத்தோர் அகந்தையெனும் ஆணவம் ஒழிந்து பேரானந்தப் பருவாழ்வெய்துவர் என்பதே கந்தபுராணம் நமக்குணர்த்தும் செய்தியாம்.

Page 6
æíä சித்திரை-வை
அன்பே சிவம்
O Guast
g.ोल சகல நற்குணம் சிறந்தது. அன்பினாற் சாதிக்கக்கூடா எவையுமில்லை என்று துணிந்து கூறலாம். எல்லா மதங்களும் அன்பாய் இருங்கள் எ
செய்கின்றன. 33 தன்னைத்தான் நேசிக்காத மனிதன் இவ் அதே நேரத்திற் பிறரும் தன்னை நேசிக் விரும்புகின்றான். ஆனால், தன்னைப்ே நேசிக்கத் தவறிவிடுகின்றான். இவற்றினாற் பல
சுருக்கமாக, அதே ே
க. அதே நேரம் ஆழ்ந்த கூறியிருக்கின்றார்.
இன்று நாம் பார்ப்போமானாற் கணவனு
மனைவிக்குமிடையிற் பிரிவினை, உட இடையில் ஒற்றுமை இல்லாமை, வேலை (ി#
ன்றுபட்டு உழைக்கமுடியாமை, நாட்டுக்கு ளுக்குத் தேசம் சண்டை முதலானவைகள் நடப்பதைக் காண்கின்றோம். காரணம் என்ன? யாவற்றிற்கும் அன்பு இல்லாமையே ஆகும். அன்புக்கு யாவையும் சகித்துக் கொள்ளும் தன்மை உண்டு. அதுவு மன்றி உண்மையான அன்பு உள்ளவர்கள் தன்னலம் சிறிதும் இன்றிப் பிறரின் நன்மைக்காகவே வாழுகின்றார்கள். அதனாற்றான் வள்ளுவரும், அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அண்புடையார் எண்பும் உரியர் பிறர்க்கு
என்று அன்பைப்பற்றி மிகவும் அழகாகக் கூறியிருக்கின்றார். அன்றியும் பரி வேதாகமும், அன்பு நீடிய சாந்தமும் பொறுமையும் உள்ளது. அன்புக்குப் பொறாமை இல்லை. சினம் அடையாது. தீங்கு நினைக்காது. தற்புகழ்ச்சியை விரும்பாது. அநியாயத்திற் சந்தோஷப்படாமற் சத்தியத்திற் சந்தோஷப்படும் என்று இப்படியாக அன்பைப்பற்றி அநேக காரியங்களைச் சொல்லிக் கொண்டே போகின்றது. ஆம். அன்புள்ளம் கொண்டவர்கள் மற்றவர்களுக்குத் தீமை விளைவிக்கும் காரியங்களைச் செய்யவேமாட்டார்கள். அதனாற்றான் பாரதியாரும் உயிர்களிடத்தில் அன்பு வேணும் என்று பாடியுள்ளார்கள். இவற்றையெல்லாம் நோக்குமிடத்து அன்பே சிறந்தது என்பது தெளிவாகின்றது.
அன்பு செலுத்துவதிலும் பல தன்மைகள் இருப்பதைக் காண்கின்றோம். தாய் தன்பிள்ளையிடத்திற் காண்பிக்கும் அன்பு, சகோதரர்களுக்கு இடையில் உள்ள அன்பு, கணவன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து
உணவுப் பண்டங்கள் மரக்கறிவகைகள் ஒடியோ, வீடியோ, சிடி ஆகியவற்றை மலிந்த விலையில் பெற்றுக்கொள்ள நாடவேண்டிய
ம்பிக்கையான ஸ்தாபனம்
73 FOR EST ROAD WALTHAMSTOW

Page 7
கலசம் சித்திரை-வைகாசி
சொல்லிய பாட்டின்
சொல்லுவார்
-மு.நற்குணதயாளன்
(கலசம் ஒன்பதில் ஆரம்பமான இக்கட்டுரை சம்பந்தமாக பலவிதமான அபிப்பிராயங்கள் பலவித கோணங்க ளிலிருந்து தெரிவிக்கப்பட்டன. அபிப்பிராயம் தெரிவித்தவர்களுக்கு எனது நன்றிகள். இக்கட்டுரை இரண்டு நோக்கங்களுக்காக எழுதப்படுகின்றது. ஒன்று திருவாசகத்தை இலகுவாகப் புரிந்து கொள்ள இலகு தமிழில் விளக்கங் கூறுவது. மற்றது திருவாசகத்தை ஆய்வுக் கண்ணோட்டத்தில் பார்ப்பதுநான் ஆரம்பத்தில் சொனர்னதுபோல் மாணிக்கவாசகரை ஒரு புதரிய கோணத்தில் பார்க்கப்புறப்பட்டிருக்கின்றேன். ஆதலால் இதன் கணி வரும் சகல விடயங்களும் தகுந்த ஆதாரங்களுடனேயே புகுத்தப்பட்டுள்ளன. இது ஒரு தொடர்கட்டுரையாதலால் முடிவின்போது ஆதாரங்கள் எங்கிருந்து எடுக்கப்பட்டன என்ற விவரங்களையும் இது சம்பந்தமாக நீங்கள் தெரிவிக்கும் அபிப்பிராயங்களையும் வெளியிடுவேன். ஆதலால் கட்டுரையின் ஓட்டத்தோடு உங்களையும் தொடர்ந்து வருமாறு அணி போடு வேண்டிக்கொள்கிறேன்.)
இரண்டு
முதலாவது கட்டுரையின்போது மாணிக்கவாசகள் எப்படி இறைவனுக்கு வாழ்த்துத் தெரிவித்தார் என்பதனை சிவபுராணத்தின் முதல் 15 வரிசைகளைக் கொண்டு விளக்கி இருந்தேன். தொடர்ந்து மாணிக்கவாசகர் சிவபுராணத்தை யார் சொல்கிறார் என்பதையும் எதற்கு இதனைச் சொல்கிறார் என்பதையும் அடுத்த நான்கு வரிகளில் மிகத் தெளிவாகக் கூறுவதை நாம் காணலாம். இந்த நான்கு வரிகளிலே மாணிக்கவாசகரின் கவிதைத் திறமையையும் நாம் கண்டு நுகரலாம்.
சிவன் அவன் எண் சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை
முந்தை வினைமுமுதும் ஒய உரைப்பன் யான்
s

சி-ஆனி 1995 5
இந்த நான்கு வரிசைகளில் மூன்று தடவை 'அவன்' என்ற சால்லை மாணிக்கவாசகள் பாவித்ததையும் முடிவில் 'யான்' ான்று முடிப்பதையும் அவதானிக்கலாம். அவன்' என்பது தமிழ் இலக்கணத்தில் படர்க்கை ஆகும். 2தாவது 'அப்பால் இருப்பவன்' என்பது பொருளாகும் . ஆக எந்தத் தெய்வத்தைத் தொழுதாலும் அதுவே அவனாம் ான்ற பொருள்படவே கூறினார் எனக் கொள்ளலாம்.
சிவனாகிய அவன் என்னுடைய மனதினுள் புகுந்துவிட்டமையால், அதனால் ஏற்பட்ட அவனுடைய அருளைக் கொண்டு அவனுடைய திருப்பாதங்களை வணங்கி மனமானது மகிழ்ந்து பூரிக்க, என்னுடைய முற்பிறப்பு ஊழிவினைகள் எல்லாம் எண்னைவிட்டகலவும் (ஒய-விட்டகல எனக் கொள்ளலாம்.) சிவபுராணத்தை சொல்லுகிறேன் என்கிறார்.
லைத்துறையில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர்கள் அவை அடக்கம் என்ற ஒன்றை தம்முடைய படைப்புக்களில் குத்துவது மரபு. அவை அடக்கம் என்று சொல்லும் பாது கலைஞன் ஆணவம் இல்லாமல் தன்னைச் றியவனாக பிரகடனப்படுத்திக் கொள்ளல் எனலாம். ரபுக்கூத்து ஆரம்பமாகுமுன் திரைக்குப் பின்னிருந்து லைஞர்கள் பாட்டைப் படித்தறியோம், பாடும் பகையறியோம் என்று பாடுவார்கள். இதே போல் ஒவ்வொரு லைஞனும் தன் தன் பாணியில் தம்மைத் தாழ்த்தி தம் சிகர்களை உயர்த்தி கூறுவது வழமையாகும். இதனை ஆன்றோர் அவை அடக்கம் என்பர். இதனை மாணிக்கவாசகள் ான்கிற நம் கவிஞரும் சிவபுராணத்தில் கொண்டிருப்பதை அடுத்துவரும் ஐந்து வரிகளில் காணலாம்.
கண்நுதலான் தன்கருணை கண்காட்ட வந்து எய்தி எண்ணுதற்கு எட்டாஎழில் ஆர் கழல் இறைஞ்சி விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய் விளங்கு ஒளியாய் எண் இறந்து எல்லை இலாதானே நின்பெரும் சீர் பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன்
துதல் என்றால் நெற்றி எனப்பொருள்படும். ஆதலால் கண்
துதலான் எனும் போது நெற்றிக்கண்ணையுடைய சிவ
பருமானே எனலாம். அதாவது
நெற்றிக்கண்ணையுடைய சிவபெருமானாகிய நீ உன்னுடைய கருணை ஒளியைக் காட்ட என்னிடத்தில் வந்தாய் எண்கிறார். உண்னுடைய, சிந்தைக்கும் எட்டாத அழகுமிக்க கழல்களைக் கொண்ட உன் திருவடிகளை வணங்குகிறேன். இங்கு இறைஞ்சி என்றால் தொழுது அல்லது வணங்கி எனப்பொருள் கொள்ளலாம்.
விண்ணும் மண்ணும் நிறைந்து அவற்றுக்கு

Page 8
வினா. அடுத்து சிவனுடைய பொன்னடிகளைக் காணப்
சித்திரை-வை
தொகையைக் கடந்து எல்லாமாகி நிற்பவனே
தீவினை உடையவனாகிய நான் எப்படி புகழ்வது என்றே அறியாதவண் அன்றோ! ప్త
இந்த அவை அடக்கத்திலும் ஒரு புதுமை இருப்பதைக் கா அதாவது எப்படிப் புகழ்வது என்றே அறியாதவன் என்று கூறிக்கொண்டு முதல் நான்கு வரிகளிலும் இறைவனைப்
எவ்வளவு அழகான அவையடக்கம்
புகழ்வதைக் காணலாம்.
கடவுள் வாழ்த்துடன் ஆரம்பி
பிரகடனப்படுத்தி தன்னைத் தாழ்த்தி அவை ம் செய்த
து சொல்பவனாகிய த
மாணிக்கவாசகர் அடுத்து என்ன செய்யப்போகின்றார் என்து
பெற்றதில் பெற்றபேறினை கூறுவதைக் காணல
புல்ஆகிப் பூடாய்ப் புழுவாய் மரம் ஆகிப் பல்விருகம் ஆகிப் பறவையாய்ப் பாம்பு ஆகி கல்லாய் மனிதராய் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய் செல்லா அ நின்ற இத்தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான் மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்.
- - - - - - - - - - - - -
WARSH'S FOOD STORE
ஒரு தமிழ்க்
3 خلاچ؟
இலங்கையிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து உணவுப் பண்டங்களுடன, மரக்கறிவகைகள் பத்திரிகைகள், சஞ்சிகைகள், ஒடியோ, வீடியோ, சீடி ஆகியவற்றுக்கு நாடவேண்டிய தரமான
நம்பிக்கையான ஸ்தாபனம்
VARSH's FOOD STORE
103 BURLINGTON ROAD
NEW MALDEN, SURREY KT3 4LR
(Near Burlington Junior School) TE : 9181 - 336 90261
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

--------------------
Certified Accountants &
Registered Auditors
84 ILFORD LANE
LFoRD ESSEX IG12LA
TEL: 0181553.5876 FAX: 0181553.3721 ຢູ່່ : 0956 277112
PLEASE CONTACT TWIGNESWARA F.C.C.A

Page 9
கலசம் சித்தினை
2) شکلاڑی
g ॐ
'S క్రి
وصندوق لا***
சிவபூனர் நாகநாதசிவம் குருக்கள்
கோயில் வழிபாட்டின் தத்துவம் என்ன?
நமது இந்துமதத்திலே அதுவும் குறிப்பாகச் சைவமதத்திலே இரண்டு விதமான பூசைகள் உண்டு. ஒன்று ஆத்மார்த்த பூசை, மற்றது பரார்த்த பூசை. ஆத்மார்த்த பூசை என்பது தனக்காகவும் தன்னைச் சார்ந்துள்ள தனது குடும்ப நலத்திற்காகவும் செய்யப்படுவது. பரார்த்த பூசை என்பது உலக நன்மைக்காகவும் எல்லா சீவராசிகளுக்காகவும் செய்யப்படுகின்ற விசேட பூசை. வீட்டிலே சிறிய விக்கிரகங்களை வைத்து நாம் எல்லோரும் இயன்ற அளவு பூசை செய்யவேண்டும். இதற்கு ஆத்மார்த்த பூசை என்று பெயர். இதைத் தினந்தோறும் செய்ய முடியாதவர்கள் இருக்கிறார்கள். அதோடு மனிதர்களைத் தவிர இதர சீவராசிகளுக்காகவும் இந்தப் பூசை செய்யவேண்டிய காரணத்தினாலே ஊருக்கு ஒன்று அல்லது ஒரு குறிப்பட்ட இடத்துக்கென்று ஒரு பெரிய கோயில் அமைத்து, அதிலே அதிக அளவிலே பூசைகளை விரிவாகச் செய்து அதன்மூலமாக உலகத்துக்குச் சில நன்மைகள் கிடைக்கவேண்டும் என்பதற்காகச் செய்கிறோம். ஆத்மார்த்த பூசையிற் செய்யமுடியாத பல காரியங்களைப் பரார்த்த பூசையிற் செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. திருவிழாக்கள் போன்றவற்றைப் பரார்த்த பூசையில் மட்டுமே செய்யமுடியும். ஆத்மார்த்த பூசை சிறிய அளவில் மட்டுமே செய்யமுடியும். பரார்த்த பூசைக்காகவே கோயில்கள் தேவைப்படுகின்றன. மேலும் கோயிற் பூசையிலே அபிஷேகம் திருவிழா என்று பல அம்சங்கள் உள்ளன. புதிதாக ஒரு கோயில் கட்டினால் அங்கே வழிபாடு தொடங்குமுன் தெய்வ உருவங்களைப் பிரதிஷ்டை செய்து, கும்பாபிஷேகம் செய்கிறோம். இதுவே ஆகமமுறை.

காசி- ஆணி 1995 7
கும்பாபிஷேகம் என்றால் என்ன? அதன் நோக்கம் என்ன?
முதலிலே குறிப்பிட்டபடி பரார்த்த பூசை செய்யக் கோயில் அமைக்கவேண்டும். அதற்கான சாஸ்திரங்கள் விரிவாக உள்ளன. இதைக் கரிஷணாதி பிரதிஷ்டாந்தம், பிரதிஷ்டாதி உற்ஸவாந்தம், உற்ஸவாதி பிராயச்சித்தாந்தம் என மூன்று பிரிவுகளாகப் பிரித்திருக்கிறார்கள். கரிஷனாதிபிரதிஷ்டாந்தம் என்பது, கோயில் கட்டுவதற்கு ஒரு பூமியைத் தேர்ந்து எடுத்து அதை உழுது அதிலேயிருக்கும் தீயவைகளை நீக்கிக் கோயில் கட்டத் தொடங்கு வதிலிருந்து தொடங்கி விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்வது வரையிலான முதற்படியிரதிஷ்டாதி உற்ஸவாந்தம் என்பது பிரதிஷ்டை தொடங்கிய நாளிலிருந்து நித்திய நைமித்தியப் பூசைகள் திருவிழாக்கள் முதலியன செய்யும் இரண்டாம்படி, அந்தக் கோயிலில் நமக்குத் தெரிந்தோ தெரியாமலோ நேருகின்ற தவறுகளுக்குப் பிராயச்சித்தம் செய்வது உற்ஸவாதி பிராயச்சித்தாந்தம் எனப்படும் மூன்றாம்படி, இந்தமுறைகளுக்கமையக் கட்டப்பட்ட கோயிலில் விக்கிரகங்களைப் பிரதிஷ்டை பண்ணிச் செய்வதுதான் கும்பாபிஷேகம். கோயில்கள் சிற்பிகளினாலே கட்டப்பட்டு எந்த இடத்திலே எந்த விக்கிரகம் பிரதிஷ்டை பண்ணவேண்டும் என்று செய்துமுடிந்தபின் சுவாமிக்கும் பூமிக்கும் ஒரு சம்பந்தத்தை ஏற்படுத்துவதற்காக பொன்னாலோ அல்லது தாமிரத்தினாலோ ஆன தகட்டில் அந்தச் சுவாமியின் மந்திரங்களை எழுதி சுவாமிக்கும் பீடத்துக்குமிடையில் வைத்து அஷ்டபந்தன மருந்து எனப்படும் மருந்தைச் சாத்துவதுதான் முக்கியமான பணி அதற்குப் பின் எந்தச் சுவாமியைப் பூசை செய்கிறோமோ அந்தச் சுவாமியின் மந்திரமயமான வடிவம் வரவேண்டும் என்பதற்காக யாகசாலை அமைத்து, அதிலே யாகங்கள் செய்து, விசேஷ கும்ப பூசைகள் செய்து, அந்தக் கும்பத்திலுள்ள தீர்த்தத்தை நிக்கிரகத்தின் மேல் அபிஷேகம் பண்ணினாற்றான் பரார்த்த பூசைக்குரிய சாந்நித்தியம் அந்த இடத்திலே இருக்கும். அதற்காகத்தான் இந்தக் கும்பாபிஷேகம் செய்கிறோம். சூக்குமலிங்கம் எனப்படும் உள்ளே இருக்கும் சுவாமிக்கு அபிஷேகம் செய்ததுபோல தூலலிங்கம் எனப்படும் வெளியிலமைந்த விமானம், கோபுரங்களுக்கும் கும்பாபிஷேகம் செய்ய வேண்டும்.
எத்தனை வருடத் துக் கொருமுறை இப் படிக் கும்பாபிஷேகம் பண்ணவேண்டும்?
கும்பாபிஷேகம் 12 வருடங்களுக்கு ஒரு முறை

Page 10
apap சித்திரை- ை
பண்ணவேண்டும். கும்பாபிஷேகத்தில் மொத்தம் நான்கு வகைகள் இருக்கின்றன. ஆவர்த்தம், புனராவர்த்தம், அநாவர்த்தமதிஸ்பிரதம், பஸ்சாதுஆந்திரிஞ்சிவ என்பன அவையாகும். ஆவர்த்தப்பிரதிஷ்டை, அநாவர்த்த னப் பிரதிஷி டை, புனராவர்த்தனப் பிரதிஷ்டை, ஆந்தரிதப்பிரதிஷ்டை என்று நாலு பிரதிஷ்டைகள் இருக்கின்றன.
கோயிலே இல்லாத இடத்திலே கோயில் புதிதாகக் கட்டிப் பண்ணுவது ஆவர்த்தனப்பிரதிஷ்டை புனராவர்த்தனம் என்பது, கோயில் இடிந்திருந்தாலோ அல்லது செடிகள் முளைத்திருந்தாலோ வர்ணவிகினமாயிருந்தாலோ அதைத் திருத்தி அஷ்டபந்தன மருந்து சேதப்பட்டிருந்தால் தைத் திருப் பிச் சாதி திப் பணி னுவது. அநாவர்த்தனப்பிரதிஷ்டை ஒரு சாந்திபோலச் செய்யப்படுவது. சில காரியங்கள் கோயிலுக்குள் நடக்கக் கூடாது. உதாரணமாக ஒரு திருடன் கோயிலுக்குள் போய்விட்டால் ஒரு சாந்தி பண்ணுகின்றோம் அல்லவா அதற்குப் பெயர்தானி ஆநீதரிதம். தென்னாட்டுக்குப் படை எடுத்தபோது முகமதியர் க்கிரகங்களை உடைத்தனர் அல்லவா? அதை சரியாக்கிப் பண்ணுவது தான் ஆந்ததப்பிரதிஷ்டை கோயில் எல்லாம் நன்றாக இருக்கும் ஆனால் உள்ளே உள்ள விக்கிரகங்கள் மாத்திரம் உடைந்து இருந்தால் அதை யாக்கிப்பண்ணுவது ஆந்தரிதப்பிரதிஷ்டை நல்ல நிலையில் நடந்துகொண்டிருக்கின்ற ஒரு கோயிலில் எந்தவிதமான சேதமும் இல்லாத போதும் கூட அஷ்டபந்தனம் சாத்துவதன் வீரியம் 12 ஆண்டுகளுக்கு ட்டும் தான் இருக்கும். அதனாலே 12 ஆண்டுகளுக்கு முறை மஹாகும்பாபிஷேகத்தைச் செய்வது வழக்கம்.
சாதாரணமாக நித்திய நைமித்தியப் பூசைகளிலே அபிஷேகம் செய்வதன் தத்துவம் என்ன?
பொதுவாகப் பரார்த்தப் பூசைக்காகத்தான் ஆலயம் மைக்கின்றோம் இந்த ஆலயத்திலே பஞ்சபூதங்களுடைய சம்பந்தம் இருந்துகொண்டே இருக்கின்றது. அது மிகவும் முக்கியம். இந்த உலகத்திலே மனிதனுடைய றப்பை எடுத்துக்கொண்டாலும் சரி, பிராணிகளுடைய வாழ்க்கையை எடுத்துக்கொண்டாலும் சரி, கோயில்
நடைமுறையை எடுத்துக்கொண்டாலும் சரி, இயற்கையை எடுத்துக் கொண்டாலும் சரி, எல்லாம் இந்தப் பஞ்சபூதங்களுக்குள்ளேதான் அடங்கி இருக்கின்றன. இந்த
ஞ்ச பூதங்களில் இருந்து தான் மற்றைய எல்லாத் தத்துவங்களும் வெளியாகின்றன. ஆதாரமான தத்துவம்
 
 

1995
பிருதிவி தத்துவம், அப்தத்துவம் வாயுதத்துவம், அத்தினிதத்துவம், ஆகாசதத்துவம், என்கின்ற ஐந்தில் இருந்துதான் உண்டாகின்றது. ! ! ! ! ! ! — –ა - ა.
கோயிலில் நடக்கின்ற எல்லாவற்றிலும் இந்த பஞ்சபூதச் சேர்க்கை இருக்கும். உதாரணமாக கும்பத்தை எடுத்துக்கொள்வோம். அதிலே தண்ணீர் உண்டு யாகம் வளர்க்கின்றோம். அதிலே நெருப்பு உண்டு. மந்திரம் சொல்கின்றோம். அதிலே ஆகாசம் உண்டு உபசாரம் செய்கின்றோம். விசிறி வீசுகின்றோம். சாமரம் வீசுகின்றோம். அதிலே காற்று உண்டு. அதே மாதிரி பூசைகளைப் பார்த்தீர்களானால் சுவாமிக்கு அபிஷேகம் பண்ணுகிறோம். புஷ்பம் முதலிய மலர்கள் வாசனைகள் சாத்துகின்றேம், மந்திரம் சொல்கிறோம், உபசாரங்கள் செய்கின்றோம், சுவாமிக்குப் பக்கத்திலே எப்பொழுதும் தீபம் எரிய வேண்டும் என்று சொல்லுகிறோம். இப்படி ஒவ்வொன்றிலும் பஞ்சபூதச் சம்பந்தங்கள் இருக்கும். அந்த பஞ்சபூத சம்பந் தத்திலுள்ள ஜல தத்துவத்தினுடைய அடையாளம் தான் அபிஷேகம். ஜல தத்துவத்தினுடைய சம்பந்தம் எப்பொழுதும் சுவாமிக்கு இருந்துகொண்டிருக்கும் என்பதால் தானி அபிஷேகம் முக்கியமாகப் பண்ணவேண்டும்.
அபிஷேகம் முடிந்து திரைபோட்டிருக்கும் போது சுவாமி தரிசனம் பண்ணலாமா?
நாம் சுவாமியைத் தரிசனம் பண்ணுவது எதற்காக என்று சிந்தித்தால் திரை போட்டிருக்கும்போது தரிசனம் பண்ணலாமா கூடாதா என்பது விளங்கும். கோயிலில் சுவாமியை உள்ளே வைத்திருக்கும் அறையை கருவறை என்று சொல்லுகின்றோம். கருவறை என்பதற்கு உண்மையான அர்த்தம் என்ன? பெயருக்கேற்றமாதிரி குழந்தை உண்டாகும் இடம். கருவறை போல நாலுபக்கமும் மூடப்பட்டு சிறிய வழிவழியே அந்த அருள் வெளியாகக்கூடிய அளவில் அமைக்கப்பட்டிருக்கின்ற அந்த இடத்திற்குப் பெயர் தான் கருவறை. இது கரப்பக்கிரகம் என்றும் சொல்லப்படுகின்றது. அந்த இடத்திலே நாம் ஏன் போய் நின்று தரிசனம் பண்ணுகின்றோம் என்றால் விக்கிரஹ வடிவிலே பஞ்சபூதங்கள் சம்பந்தத்தை எப்பொழுதும் ஏற்படுத்திக்கொண்டிருக்கின்ற நம் பூசை முறைகளாலே அங்கேயிருந்து ஏற்படுகின்ற சக்தி ஒரு அருள் ரூபமாக நமக்குப் படவேண்டும் என்பது தான். கோயில் தரிசனத்தினுடைய முக்கியத்துவம் இதுதான். சுவாமியின் எதிரே போய் நின்று அந்த சுவாமியிடம் இருந்து வருகின்ற சக்தி நம் உடம்பிலே படவேண்டும் என்பதற்காகத் தான் வழிபாட்டு முறையையே வைத்திருக்கின்றார்கள். சுவாமியினுடைய சக்தி வெளியே வரமுடியாதபடி ஒரு திரை இருக்கும்போது தரிசனம் பண்ணுவதிலே பலனில்லை.
தொடரும்.

Page 11
கலசம் சித்திரை-ை
வேண்டத் தக்கது
வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது
என்பது குறள். விதியின் வலிமையை எடுத்துச் சொல்ல இதைவிட மேலான மேற்கோளோ அல்லது உதாரணமே வேண்டியதில்லை. நமது வாழ்க்கை நமது விதிப்படி தான் நடக்கும். இந்த விதியை மதியால் வெல்லலாம் என்று சிலர் சொல்வார்கள். விதியை வெல்லவல்ல மதியை நமக்கு அளிப்பதும் அந்த விதிதான் என்பதை நாம் மறந்துவிடுகிறோம். அதுதான் உண்மையுங்கூட.
இராமனை க் காட்டுக்கு அனுப்புகிறாள் கைகேயி. "தந்தையின் பணியன்றா கில் நும் பணி மறுப் பனோ?’’ எனிறுமி "தந்தையுந் தாயும் நீரே தலைநின்றேன் பணிமின்' என்றும் கூறி
இராமன் காட்டுக்குப் புறப்பட ஆயத்தமாகிறான். இலக்கு வனோ கொதரிக்கிறானி , குமுறுகிறான். இது என்ன நியாயம்? என்கிறது அவன்
மனம் . அனைவரையும் அழிக்கவேண்டும் என்கிறது அவன் கோபம். இராமன அவனை அந்த இடத்திலே தேற்றுகிறான். இராமனின் கூற்றை இங்கே கம்பனின் கண் ஊடாகப் பார்ப்போம்.
நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை அற்றே பதியின் பிழையன்று பயந்து நமைப் புரந்தாளர் மதியினர் பிழையன்று மகன்பிழை யன்றுமைந்த விதியின் பிழையிதற்கு நீஎன்னை வெகுண்ட தென்றான்
நான் காடு போவது விதியின் பிழை. இதற்குக் கோபப்பட்டு ஒரு சுகமுமில்லை என்கிறான் இராமன். இறைவனின அம்சமெனக் கருதப்படும் இராமனுக்கே இந்தச கதியென்றால் நாம் எம்மாத்திரம்?
 
 

வகாசி-ஆனி 1995 9
எனவே நமது நன்மை தீமைகள் நமது விதிப்படி, வினைப்பயன்படியே நடக்கின்றன என்பது புலனாகின்றது. சைவ சமயமும் நல்வினை, தீவினைப் பயன்களை வலியுறுத்தியே சொல்கிறது. மறுபிறப்பு என்பதும், அது விளைவது நமது வினைப் பயனால் என்பதும் சைவசித்தாந்தத்திலே சொல்லப்பட்டது. இதை நாம் மறுக்க முடியாது. ஆகவே நமது பொருட் செல்வம், வளம் முதலானவையெல்லாம் இப்பிறப்பில் நமக்குக் கிடைப்பது நமது முற்பிறப்பின் வினைப்படியே. இந்த முன்வினையால் ஏற்பட்ட பலனை, நமது விதியை நாம் மாற்ற முடியுமா? அல்லது மாற்றும்படி இறைவனைக் கேட்கலாமா? என்பது
ஆராயப்பட வேண்டியது.
நமது தலையெழுத்தை மாற்ற ஒரு வழி இருப்பதாகக் கந்தர லங்காரப் பாடல் ஒன்று சொல்கிறது. 'அவன் கால் பட்டு அழிந்தது என் தலைமேல் அரண் கையெழுத்தே' என்பது அந்த வரி. ஆக இறையருளால் மட்டுமே நாம் எதையும் அடைய
முடியும்.
சமயகுரவர் நால்வர், காரைக்கால் அம்மையார், அருணகிரியார் போன்ற அருட்செல்வர்கள்
ணிந்தது பொருள் பெற அன்று, அருள் பெறவே.
Lu J L D 6ØD GOT Li பாடிப் ப
அவர்கள் பிறவிப் பிணி தீரவேண்டும் என்று பாடினார்கள். இறவாத இனி பவனி பு கேட்டுப்பாடிய அம்மை இறைவனை மறவாமை வேண்டும் என்றும் அடியின் கீழ் இருக்க என்றும் பாடினார். தேவாரம் பாடிய மூவர் இறைவனிடம் பொருள் கேட்டுப் பாடியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தமக்காகப் பொருள் கேட்கவில்லை. மற்றவர்களுக்காகவே கேட்டார்கள். அவர்களை அப்படிக் கேட்க வைத்தவனும் அவனே! வேண்டத் தக்கது அறிவோய் நீ வேண்ட முழுதும் தருவோய் நீ என்றார் மணிவாசகர். இறைவனே அவர்களை அப்படி வேண்ட வைத்தார், இறைவனே அவர்களுக்குக் கொடுத்தார்.

Page 12
கலசம் சித்திரை-வைக
ஆனால் சுந்தரர் "ஒழுக்க எண்கணுக் கொருமருந்து உரையாய்' என்றபோதும் "ஊன்றுகோல் எனக் காவதொன்றருளாய்' என்றபோதும் இறைவன் அவருக்கு ஏதும் கொடுத்தார் இல்லை என்பதனை "மகத்திற் புக்கதோர் சனியெனக் கானாய்’என்று சுந்தரர் திட்டுவதன் மூலம் நாம் அறியமுடிகின்றது. பின்னால் அவருக்கு கொடுக்கவேண்டிய நேரம் வந்த போதே இறைவன் கொடுத்தான்.
நாம் கோயிலுக்குப் போகிறோம். அல்லது வீட்டில் இறைவனை வழிபடுகிறோம். வழிபடும்போது நமக்காகக் கேட்கிறோம், நமது மனைவி மக்கள், சுற்றத்தாருக்காகக் கேட்கிறோம். ஆனால் ஒன்றை மட்டும் நாம் அறிந்துகொள்ளவேண்டும். ஒரு தாய் இருக்கிறாள். அவளுக்கு ஒரு குழந்தை. அந்தக் குழந்தைக்குத் திடீரென்று நோய் வருகிறது. சில நாட்களுக்கு அதற்குச் சில சாப்பாடுகள் கொடுத்தால் "அலர்ஜி என்கிறார் டாக்டர். அந்தத் தாய் அந்த உணவுகளை அந்தக் குழந்தைக்குக் கொடுப்பாளா? அன்பு மிகுதியால் அந்தக் குழந்தை விரைவில் முழுமையாகக் குணமடையவேண்டும் என்றுதான் நினைப்பாள். அதுபோலத்தான் எமது நன்மை கருதி அம்மையப்பன் ஆன ஆண்டவன் நம்மைக் காக்கிறார். தாயைப் போலவா காக்கிறார்? இல்லை. அதைவிடச் சிறப்பாகக் காக்கிறார் என்கிறார் மணிவாசகர். பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து காக்கிறார். தாயிலே பலவகை. குழந்தை அழும்போது, நன்றாக அழவிட்டு, தனது வேலைகளை முடித்துவந்து பாலூட்டுவாள் ஒரு தாய். குழந்தை அழுதவுடன் இருந்ததை இருந்தபடி போட்டுவிட்டு ஓடிவந்து பால் ஊட்டுவாள் இன்னொரு தாய். குழந்தைக் குப் பசிக்குமேயென்று நேரமறிந்து முன்னதாகவே வந்து நினைத்துப் பால் ஊட்டுவாள் மூன்றாவது தாய். இந்த மூன்றாவது தாய்தான் உத்தமமான தாய், பால் நினைந்து ஊட்டும் தாய். இவளைவிட உயர்ந்தவன் இறைவன் என்று காட்ட உயர்வுசிறப்பு உம்மையை உபயோகிக்கிறார் மணிவாசகர்.அன்பர் ஒருவர் நோய்வாயப்படுகிறார். அவருக்கு அது கஷ்டமான நோய். மருத்துவர்கள், விசேட மருத்துவர்கள் என்று ஒவ்வொருவராகப் பார்த்துக் கை விரித்துவிடுகிறார்கள். அந்த அன்பர் ஆண்டவனை நாடுகிறார். விநாயகரையும் முருகனையும் சிவனையும் முறையே ஒவ்வொருவராக நாடுகிறார். பலன் இல்லை. எல்லா வழிகளையும் பார்த்து முடிந்தபின் இன்னொரு நண்பரின் அறிவுரையில் வேறு பக்திமார்க்கத்தில் செல்கிறார். அவருக்கு நோய் குணமாகிறது. உடனே விநாயகர்

ாசி-ஆனி 1995 10
முதலான அத்தனை தெய்வங்களையும் ஒதுக்கிவிட்டு நண்பர் காட்டிய வழியில் அந்த அன்பர் நடக்கிறார். இதிலே முக்கியமாகச் சில கருத்துகளை நாம் கவனிக்க வேண்டும். அந்த நண்பரின் நோய் காலத்தாற் காய்ந்ததா? அல்லது அவரின் வழிமாற்றத்தால் மாறியதா? என்பது ஒரு கேள்வி. ஒரு வழியில் இது காகம் இருக்கப் பனம்பழம் விழுந்த நியாயம் ஆகும். அன்பரின் வினைப் பயனால் அவர் தமது வினைகளை அனுபவித்து முடிய அவருக்கு நோய் மாறியதே உண்மை. இந்த உண்மை மறைக்கப்பட்டுவிட்டது. மற்றைய கேள்வி நாம் நமது வழியை மாற்றலாமா? என்பது. "மனதில் உறுதி வேண்டும்’ என்றார் பாரதியார். சுந்தரர் சரித்திரத்தையே பாருங்கள். இறைவனை "மகத்திற் புக்க சனி' என்று வைதபின்னரும் அவர் அதே இறைவனையே பாடிப் பரவினார். விட்டுச் சென்றாரில்லை. எனவே மன உறுதிகொண்டு இறைவனைப் பாடிப் பரவி வந்தால் நமது இடர் தீரும். பழவினை தீரும் என்பது புலனாகின்றது. சைவ சித்தாந்தத்தைப் பின்பற்றுவோர்
சிவனை வழிபடக் கடமைப்பட்டவர்கள். ‘சிவ சிவ என்கிலர் தீவினையாளர்’ என்பார் திருமூலர். அன்புறு சிந்தையராகி நாம் இருக்கவேண்டும். அன்பு வழிநின்று மன உறுதியோடு இறைவனை வழிபட்டால் நமது இடர் தானே நீங்கும். சிவன் என்னும்போது சிவனின் மறு தோற்றங்களான ஐங்கரன், ஆறுமுகண் போன்ற தெய்வங்களும் அடங்குவர். இந்த வழியில் நமது ஆன்றோர் நமக்கு ஆக்கிவைத்த தெய்வங்கள் நமது வழிபாட்டிற்கும் நமது இடர் தீர்க்கவும் போதுமானவை. நதியின் பிழையன்று நறும் புனல் இன்மை என்பதுபோல இறைவன் பிழையன்று எமது புண்ணிய பாவ பலன்கள். இனி, நாம் கேட்கும் வரம் கிடைக்காவிட்டால் என்ன செய்யலாம்? என்று சிந்திப்போம். "வேண்டுவார் வேண்டுவதை ஈவான் கண்டாய்" என்றும், "வேண்டத் தக்கது அறிவோய்" என்றும் பல அருளாளர்கள் பாடிப் போந்தார்கள். நமக்கு வேண்டியதை வேண்டிய நேரம் வேண்டிய அளவு தருபவன் இறைவன். தரவில்லையாயின் நமக்கு அது வேண்டாதது என்பதுதான் பொருளன்றி அதற்கு மேல் இறைவனை நாம் கேட்கக் கூடியது ஒன்றுதான். அது, நமக்கு நமது நோய்களை, பிணிகளை, துன்பங்களைத் தாங்கும் சக்தியைக் கொடு என்பதுதான். அந்த சக்தியோடு வாழ்க்கை ஒட்டத்தில் எதிர்நீச்சல் அடிக்க நம்மால் முடியும் என்ற மனவுறுதி நமக்கு வந்துவிடும்.
வேண்டத் தக்க தறிவோய்நிவேண்ட முழுதுந் தருவோய்நீ வேண்டும் அயன்மாற் கரியோப்நி வேண்டி என்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீயா தருள்செய்தாய் யானும் அதுவே வேண்டின் அல்லால் வேண்டும் பரிசொன் றுண்டென்னில் அதுவும் உன்றன் விருப்பன்றே

Page 13
கலசம் சித்திரை-வைக
தொடர்கட்டுரை இந்துசமயம்
க. குணரத்தினம்
சைவநெறி
சைவநெறி சிவனை வழிபடுவதற்கென்று அமைந்த நெறி. இந்தியாவிலே தோன்றிய மற்றைய சமயநெறிகளிற்
தொண்மையானது. சிந்துவெளிநாகரீக காலத்தே இருந்தது. இராமாயணத்தில் இராமரும் இராவணனும் சிவனை வழிபட்டதாகக் கூறப்படுகின்றது. மகாபாரதத்திலும் சிவவழிபாடு பற்றிக் காணலாம். புத்தர் சைவக்குடும்பத்திற் பிறந்தவர். அவர் உரையாடல்களில் சைவமுனிவர்களைப் பற்றிய குறிப்புக்கள் உண்டு. சைவநெறி இந்தியாவிற் தோன்றிப் பழங்காலத்தில் இலங்கை சாவகம்பாலி, சம்பா, கம்போடியா போன்ற நாடுகளிலும் பரவியிருந்தது. சிவனுக்கென்று ஏற்பட்ட கோவில்களை எங்கும் ஏராளமாகக் காணலாம். மேற்கு இமாலயப்பகுதியில் அமர்நாத், கேதாரிநாத், நேபாளத்தில் பசுபதிநாத், இந்தியாவிற் காசி, அவந்திகை, உஜ்ஜயினி, சோமநாத், பூரீசைலம், காஞ்சி, சிதம்பரம், திருவானைக்கா, தஞ்சை, இலங்கையிற் திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம் போன்ற புராதன இடங்களிற் காணலாம். சைவநெறியைப் பின்பற்றுவோர் உலகில் நாநூறு "மில்லியன் உள்ளனர். சைவநெறியிற் பல கிளைகள் உள்ளன. அவற்றுள் முக்கியமானவை சைவசித்தாந்தம், வீரசைவம், காசுமீரச்
9
 

சி-ஆனி 1995 11
சைவம் என்பவை.
சைவசித்தாந்தநெறி. . . சைவரிற் பெரும்பாலானோர் சைவசித்தாந்தத்தைத் தம் நெறியாகக் கொள்கின்றனர். சைவசித்தாந்தம் ஒரு மதமாகத் தமிழ்நாடு, இலங்கை மலேசியாவாழ் தமிழ்மக்களிடையே மிகவும் வழங்குகின்றது. இதனை ஆதிகாலந்தொட்டுத் தமிழரு க்கேயுரிய தத்துவமென்றும் தமிழரின் சமயமென்றுங் கூறலாம்.
சைவசித்தாந்தக் கருத்துக்களின் மூலம்
சங்க இலக்கியங்களில் இடையிடையே சைவசித்தாந்தக் கருத்துக்கள் காணப்ப டுகின்றன. புறநானூறு போன்ற பழந்தமிழ் நூல்களிற் சிவனைக் குறிக்கும் சொற்கள் உள. பத்தாந் திருமுறையாகிய திருமந்திரத்திற் சைவசித்தாந்தக் கருத்துக்கள் பல விளக்க மாகப் பேசப்படுகின்றன. திருமூலர் (கிபி 400) திருமந்திரத்தை ஆக்கியவர். நரசிம்ம பல்லவன் (கி.பி.700) கல்வெட்டில் நான் ஒரு சைவசித்தாந்தி என்று காணப்படுகின்றது. கி.பி.600-900 வரை சமயாசாரியர்கள் சைவத்தைத் தமிழர் பெரும்பா லானோரின் சமயமாக நிலை நிறுத்தினார்கள். முதலாம் இராசராசன் காலத்து நம்பியாண்டார் நம்பி(கி.பி.1010) தேவாரங்கள், திருவாசகம், வேறு அடியார் பலர் பாடிய பாடல்கள் என்பவற்றைத் தேடித் தொகுத்துத் திருமுறைகளாக வகுத்த மைத்தார். அவையாவும் சைவசித்தாந்தக் கருத்துக்களை விளக்குவன, சைவசித்தாந்த உண்மைகளை அநுபூதிமான்களுடைய அநுபவவாயிலாகக் கூறுவன. சோழச்சக்கரவர்த்தி இரண்டாங் குலோத்துங்கனின் (கி.பி1133-1150) முதன் மந்திரியாகவிருந்த சேக்கிழார் அறுபத்துமூன்று சைவ நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றை 4286 பாடல்கள் கொண்ட பெரியபுராணமாக வெளியிட்டார். இது 12ஆம் திருமுறையாகும். சைவசித்தாந்த உண்மைகள் பலவற்றை நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றிற் காணலாம். திருவள்ளுவர்(கி.மு200) ஆக்கிய நிருக்குறள் சைவசித்தாந்தக் கருத்துக்களைப் பெற்றுள்ளது. சைவஆகமங்கள் மிகவும் தொன்மையானவை. கி.மு1500 இல் அவை நூல்வடிவில் வந்தன. அவை கருத்து வடிவில் இதற்கு எவ்வளவோ காலம் முந்தியவை. ஆகவே ஆகமங்களை மூலமாகவுடைய சைவசித்தாந்தக் கருத்துக்கள் பழையன.
4 சாத்திரங்கள் தோன்றிய காலம் சைவசித்தாந்தத்தின் முதல் நூல் சிவஞானபோதம். இதனை இயற்றிய மெய்கண்ட தேவர்(கி.பி.1300) வேளாளர். 28 ஆகமங்களிலுள்ள முரண்பாடுகளை நீக்கி ஆகமக் கருத்துக்களை ஒழுங்குபடுத்தித் தமிழ் மொழியில் 12 சூதி திரங்களாக வெளியிட்டார் . பல லவர் கால தீ தமிழகத்திலேற்பட்ட சைவசமய மறுமலர்ச்சி சைவசமயத்தின் பொற்காலமாக விளங்கிய சோழர்காலம் ஆகியவை

Page 14
கலசம் சித்திரை-வை
சிவஞானபோதம் எழுந்தகாலத்தின் தமிழ்நாட்டுச் சூழ்நிலை. சோழர்காலப்பிற்பகுதி, பாண்டியப்பேரரசு காலத்திற் சைவசித்தாந்த நூல்கள் 14 தமிழில் எழுந்தன. (கிபி 1300-1400முற்பகுதி) ஆதீனங்கள் மடங்கள் எழுச்சி பெற்ற நாயக்கர் காலத்திலும் சைவசித்தாந்தத்தை விளக்கும் நூல்கள்பல தோன்றின. விஜயநகர நாயக்கர் கால, ஐரோப்பியர் காலத் தமிழ் இலக்கியங்களிற் சைவசித்தாந்தக் கருத்துக்கள் மலிந்து காணப்படுகின்றன. சைவசித்தாந்த சாத்திரநூல்கள் 14. அவற்றை ஆக்கிய அறுவர் சந்தானகுரவர்கள் என அழைக்கப்படுவர். இவர்களுள் முக்கியமானவர்கள் மெய்கண்டதேவர், அருள்நந்தி, உமாபதி, மனவாசகம்கடந்தார் ஆகியோர். 14 நூல்களில் 11 சிவஞானபோதத்தையொட்டி ஆகி கப்பட்டவை. இவற்றுள் முகி கியமானவை சிவஞானசித்தியார், சிவப்பிரகாசம், திருவருட்பயன் என்பன.
சைவசித்தாந்தம் தமிழர்கண்ட நெறியே.
வடமொழியிலுள்ள இரெளரவ ஆகமத்திற் பாவ விமோசனப்படலத்திற் சிவஞானபோதத்திலுள்ள தமிழர் சூத்திரங்களுக்கு நேரிடையான வடமொழிச்சூத்திரங்கள் காணப்படுகின்றன. மெய்கண்டார் அவற்றைத் தமிழில் மொழி பெயர்த்தாரெனக் கூறுவோர் ஒருசிலர் உண்டு. இல்லை, அவை நேரே தமிழிலேயே முதன்முதலாக ஆக்கப்பட்டவை என வாதாடுவோரும் உண்டு. நால்வர் பக்தி மார்க்கத்தில் நின்று இறைவனைப் பாடியபோதும் ஒவி வொரு வரும் ஒவி வொரு படியில் நின்று இறைவனையேத்தினர். ஆன்மா இறைவனையடைவதற்குக் கடக்கவேண்டிய படிகளைக் கூறுவதில் (சரியைகிரியை, யோகம்,ஞானம் )மெய்கண்டாருக்கு இது துணை செய்துள்ளது. சைவசித்தாந்தத்துக்கு மூலம் எனக்கூறக்கூடிய திருமுறைகள் போல் வடமொழியில் எதுவுமில்லை. சிவஞானபோதத்தைத் தொடர்ந்து தமிழிற் பல சைவசித்தாந்த நூல்கள் எழுந்தன. வடமொழியில் அப்படியும் ஏற்படவில்லை. சைவசித்தாந்தம் வடஇந்தியாவிற் செல் வாக்குப் பெறவுமில்லை.ஆகவே சைவசித்தாந்தம் தமிழர்கண்ட நெறி எனக் கூறலாம்.
சைவசித்தாந்தக்கொள்கைகள்.
பதி, பசு, பாசம் மூன்றும் உண்மைப்பொருட்கள். இயற்கையாகவே உள்ளன. பதி என்றாற் தலைவன், இறைவன், கடவுள். கடவுள் தனித்தமிழ்ச்சொல். சங்க நூல்களிற் காணப்ப டுவது. பசு என்றால் ஓரறிவு முதல் ஆறறிவுவரையுடைய உயிரினங்கள். பசுவெனினும் ஆன்மாவெனினும் ஒன்றே. பசு என்பதற்குக் கட்டுண்டது என்று கருத்து. பாசம் என்பது உலகிற்காணப்படும் பற்பல அறிவற்ற பொருள்களின் தொகுதியாகிய ஜடப்பொருள். இதுவே உலகம். மேலும் பாசம்

* 1995 12
என்பது ஆணவம், கண்மம், மாயை ஆகிய மூன்று பொருள்களைக் (மும்மலங்கள்)குறிக்கும்.
கடவுள்(பதி) உலகை இயக்குபவர், உலகெங்கும் நிறைந்தவர், உலகைக் கடந்து நிற்பவர், முடிவான உட்பொருளாகிய சிவன் , உண்டாக்கப்படா தவன், எல்லா ஆற்றலும் நிறைந்தவன், எல்லாம் அறிந்தவன், உயர்வானவன், தூய்மையானவன், என்றும் தளைகளிற் சிக்காதவன் படைத்தல்,காத்தல்,அழித்தல், மறைத்தல், அருளல் அவன் தொழில்களாகும். தனது சித்சக்தியைக்கொண்டு மாயையைத் தொழிற்படுத்துகிறான். மாயையிலிருந்து தான் உலகம் உற்பதியாகின்றது. சிவன்வேறு, சக்தி வேறல்ல, சிவனும் சக்தியும் சூரியனும் அவனது ஒழிக்கதிர்கள் போன்றவை. சூரியனின்றி ஒளிக்கதிர்கள் இல்லை. ஒளிக்கதிர்கள் தான் சூரியன் என்று கொள்வதில்லை. அவன் உடல்களையும் நுகர்ச்சிக்கேற்ற பொருள்களையும் ஆன்மாக்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்து அதன் வழி ஆன்மாக்கள் அஞ்ஞானத்தின்று விடுபட்டு அவற்றின் உண்மையான தன்மையை அடையச் செய்கின்றான். அவன் செயல்கள் யாவும் ஆன்மாவை பாவவழியில் நின்று மாறச்செய்வதாகும். படைப்பின் நோக்கம் இதுதான்.
9,65i LDIT-LIJr. என்றுமுள்ளது, அழிவில்லாதது, படைக்கப்பட்டதல்ல. ஆன்மா என ஒன்று உண்டா? என்று எது கேட்கிறதோ அதுவே ஆன்மா. ஆன்மா ஒன்றல்ல, பல. அவற்றுள் ஒன்றாவது இன்னொன்றின் தோற்றமன்று. யாவுமே உண்மை. ஒவ்வொரு உடலோடுமுள்ள ஒவ்வொரு ஆன்மாவும் உண்மையானது. ஆன்மாக்களுக்குக் கிடைக்கும் உடல் வேறுபாட்டிற்கு அவை தத்தம் முற்பிறவியிற் செய்த கண்மமே காரணம். ஆன்மா என்ற சொல்லுக்குப் பொருள், எங்கும் பரவியுள்ளது, என்றுமுள்ளது.அறிவுடையது என்பதாகும். இத்தகைய இயல் புடைய ஆனி மாவைச் செம்பைக் களிம்பு பற்றியிருப்பதுபோல் ஆணவம் என்னும் மலம் (அழுக்கு) அநாதி தொட்டே பற்றி நிற்கின்றது. ஆணவம், ஆன்மா பரந்து நிற்கும் நிலையைத் தடுத்து அணுவாக்கி, அது இயல்பாகவுடைய அறிவைக் கெடுத்து, அறியாமையில் அமிழ்த்துகிறது. ஆன்மா ஒருபோதும் தானாகவே தனித்து நிற்பதில்லை. எப்போதும் ஏதாவதொன்றைச் சார்ந்தே நிற்கும். பெத்த நிலையில் அதாவது கட்டுணர்ட நிலையில் ஆணவத்தைச் சார்ந்து நிற்கும். ஆன்மா எதைச் சார்கிறதோ அதன் தன்மையை அடையும். ஆணவத்தைச் சாரும்போது ஆணவத்தின் இயல்பாகிய அறியாமையுள் அமிழ்கிறது. இறைவனைச் சாரும் போது இறைவனது இயல்புகளைப் பெற்றுநிற்கும். ஆனி மா, உணர் தீத உணரும் சிற்றறிவுடையதாதலினி ஆனி மாவுக் குக் குரு தேவைப்படுகின்றது.
தொடரும்.

Page 15
365m)gFLib சித்திரை-வை
அறம் என்றால்.
விமால் பூபாலசிங்கம்.
அறம் என்ற சொல்லைச் சிறுபிராயம் முதற் கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால் அதற்கு வரைவிலக்கணம் தரமுடியுமா என்றால் திகைக்கிறோம் வரைவிலக்கணத்தை ஒரு வரியிலே தருவதென்றால் அது மிகக் கடினம். பண்டிதர்களோ அதற்கு ஒரு நூலே எழுதிவிடுவார்கள்.
நாம் பெறவேண்டிய பெறுபேறுகளான அறம், பொருள், இன்பம், வீடு என்பனவற்றில் அறத்தையே முதலில் வைத்தார்கள் பெரியேர்கள். காரணம் அறத்தை முதல் அறியவேண்டும் என்பதே சான்றோர் கருத்து. தரும நெறிகளை அறிந்தாற்றாண் பின்பு அடைய வேண்டிய பொருள், இன்பம், வீடு என்பனவற்றை அறவழி நின்று பெற முடியும். அறவழி நின்று பெறுவனவே நித்தியமானவை ஆகும்.
'அறம் செய விரும்பு' என ஆத்திசூடியில் ஒளவையாரும் எடுத்துச் சொல்கிறார். வள்ளுவரும் திருக்குறளில் அறத்துப்பாலை முதற்பகுதியாக வைத்திருப்பதைக் காண்க. அறத்தைப் பற்றிக் கூறவரும் இடத்தில் அறண்வலியுறுத்தல் என்று அழகான தலைப்புக் கொடுத்திருக்கிறார்.அறனைக் கூறலோ விளக்குதலையோ விட அதனை வலியுறுத்திச் சொல்லுதலே சாலச் சிறந்தது என அவர் எண்ணினார் போலும். வலியுறுத்திச் சொல்வதிலிருந்து அதன் சிறப்பும் முக்கியத்துவமும் நன்றாகப் புலப்படுகின்றது.
உயிர்க்கு உறுதிபயக்கும் நல்லொழுக்கமே அறமென ஆன்றோர் வலியுறுத்துகின்றனர். கற்பிற் சிறந்த மனையாளுடன் மனமொத்திருந்து, செல்விருந்தோம்பி, வருவிருந்து காத்திருந்து தருமநெறிகளை இம்மியளவும் பிசகாமல் ஒழுகுவதே சிறந்த அறமாகும். அறத்தின் நுட்பங்களை நன்கறிந்து உலகினர்க்கு விளக்கிய தெய்வப்புலவரும் 'அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை'என வலியு றுத்தினார்.
"சத்தியம் வத, தர்மம் சர' என்கிறது வேதம். உண்மையைப் பேசு, தருமத்தைச் செய் என்பதே இதன் கருத்தாகும் உள்ளதை உள்ளபடி சொல்வதா உண்மை? என்றால் அதற்குப் பதிலாக அல்ல என்றுதான் கூறவேண்டி
 

காசி-ஆனி 1995 13
உள்ளது. உள்ளதை உள்ளபடி சொல்வது உண்மையின் ஒரு பகுதியே. சொல்வதனால் மற்றவர்கட்கு தீங்கு விளையாமல் இருப்பின் மட்டுமே அது உண்மையின் பரிபூரண வடிவம்பெறும். "வாய்மையெனப் படுவது யாதெனில் யாதொன்றும் தீமை இலாத சொலல்’
பிறர்க்குக் குற்றமற்ற நன்மையைத் தருமானால் பொய்மைச் சொற்களும் உண்மையின் இடத்தில் வைத்து மதிக்கப்படும் என்கிறார் வள்ளுவர். "பொய்மையும் வாய்மை இடத்த புரைதிர்ந்த
நன்மை பயக்கும் எனின்’ தீமை இலா சொலல் உடன் தீமையிலாச் செயலும் வேண்டும். பிற உயிர்கட்குத் துன்பம் விளைவிப்பது அறத்திற்கு ஒவ்வாத செயல். அறவினை யாதெனின் 'கொல்லாமை கோறல்' என்கிறது குறள்.
ஒர் உயிரையுங் கொல்லாது புலாலையும் உண்ணாது அறநெறி நின்றோனை எல்லா உயிர்களும் கை கூப்பித் தொழும் என வலியுறுத்துகிறார் வள்ளுவப் பெருந்தகை. "கொல்லாண் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிருந் தொழும்’ மகாபாரதத்தில் ஆரண்ய பர்வதத்தில் தர்மன் யட்சனைச் சந்திக்கும் காட்சி வருகின்றது. யட்சன் தர்மனைச் சோதிக்கும்பொருட்டு பல கேள்விகளைக் கேட்கிறான். அதில் ஒன்று “உலகத்திலேயே அதிசிறந்த தர்மம் எது' என்பது. தருமங்களுக்கெல்லாம் தலையாய தர்மம் 'கருணை' என விடை பகர்கிறான் தருமன்.
எனவே உயிர்களுக்கு இடர் புரியாமல் அன்பு செலுத்துவதே சிறந்த அறமெனத் தெளிவாகின்றது. அருட் பெருஞ ஜோதி இராமலிங் க அடிகள் இறைவனிடத்தில் ஒரு வரம் கேட்கின்றார். என்னவரம் அவர் கேட்கின்றார்? தனக்கு முத்தியையோ, சித்தியையோ கேட்டாரில்லை. "அப்பாநான் வேண்டுதல்கேட்டருள்புரிதல் வேண்டும். ஆருயிர்கட் கெல்லாம்நாண் அன்பு செயல் வேண்டும்'
அடிகள் வேண்டுவதெல்லாம் அன்பு செய்யும் மனம், விரதங்களுக்கெல்லாம் தலையாய விரதம் கொல்லா விரதமே. அகிம்சாதர்மமே மிக மேலான அறமென அறநூல்கள் பறைசாற்றுகின்றன.

Page 16
தர்மவினை என்பது பிரதியுபகாரத்தை எதிர்பார்க்காது செய்யும் செயல். தனது சுயநலனைக் கருத்திற் கொண்டு ஆற்றும் செயல் தர்மம் ஆகாது. தர்மம் வேறு, தானம் வேறு. பிரதியுபகாரம் வேண்டிச் செய்வது தானம். அர்ச்சுனனின் பாணங்களிலிருந்து கர்ணனின் உயிரைக் காப்பாற்றியது அவன் செய்த தர்மங்கள். இறுதியில் அவன் செய்த புண் ணிய பலனி கள் அனைத்தையும் பெற்றுக்கொள்கிறான் கண்ணன். தர்மங்களிலெல்லாம் சிறந்த தர்மம் ஒருவன் தான் செய்த புண்ணியங்களைத் தர்மம் செய்வது. அப்படிப்பட்ட பெருந்தர்மம் செய்த கொடைவள்ளலின் உயிரை ஏன் தர்மதேவதை காப்பாற்றத் தவறினாள் என்ற சந்தேகம் எழும். அங்கு கர்ணன் செய்தது தர்மம் அல்ல, தானமே. புண்ணிய பலன்களைத் தானம்செய்து, அதற்குப் பிரதிபலனாக மோட்சத்தை கண்ணனிடமிருந்து பெற்றான் குந்திபுத்திரன்.
நன்றே செய்யின் அன்றே செய்க என்றனர் பெரியோர்கள். வெள்ளம் வருமுன் அணைகட்டுவது போல இறப்பு வருமுன் அறத்தை விரைந்து செய்க என்கிறார் ஒளவையார் நன்னெறியில், *கொள்ளுங் கொடுங்கூற்றங் கொல்வான் குறுகுதன்முன் உள்ளங் கனிந்தறஞ்செய் துய்கவே- வெள்ளம் வருவதற்கு முன்னர் அணைகோலி வையார் பெருகுதற்கண் எண்செய்வார் பேசு' அதர்மத்தின் வழிநின்று வெற்றியும் புகழும் ஒருவன் அடைந்தாலும் அது தற்காலிகமானதே எனப் புராணங்களிலும் சரித்திரங்களிலுமிருந்து அறிகிறோம்.
தர்மத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும், பின்னொருகால் தர்மம் வெல்லும்' என்று பாஞ்சாலி சபதத்தில் பாரதியார் கூறுகிறார். "சத்தியமேவ ஜயதே' (சத்தியமே வெல்லும்) என்ற கூற்றையுங் கவனிக்கவும்.
தர்மோ ரட்சத ரட்சதக’ என்பது வேதவாக்கு. எவன் ஒருவன் தர்மத்தை இரட்சிக்கின்றானோ அவன் தர்மத்தால் இரட்சிக்கப்படுவான் என்பது கருத்து. இதைத்தான் தர்மம் தலைகாக்கும் என்று சொல்வார்கள்.
எங்கெல்லாம் அறச்செயல்கள் நடக்கின்றதோ அங்கெல்லாம் இறைவன் பிரத்தியட்சமாக இருக்கிறான் என்பது உணமை. மகாபாரத ததில முகி கியமான சம்பவங்களின்போது கண்கூடாக இருந்த கண்ணபிரான் சூது நிறைந்த சதுரங்க ஆட்டத்தின்போது சமுகம் அளிக்காதது கவனிக்கத்தக்கது. அதர்மச்செயல்களில் தெய்வானுகூலம் இல்லாமற்போகும் என்பதற்கு இது ஓர்
莎 ாட்டு. X.X
 
 
 
 

ഉണ அறத்தின் வடிவாக விளங்குகிறான். சிவபெருமானுக்கு "அறவன்' என்றொரு திருநாமம் உண்டு. காரைக்கால் அம்மையார் கயிலை நாதனை வணங்கி "அறவா நீ ஆடும்போதுன் அடியின் கீழ் இருக்க'என்று கேட்கிறார். சிவபெருமானின் வாகனம்
அறத்தின் வடிவம். அதற்குத் தருமவிடை என்று பெயர். அத்தகைய அறமே உருவான ஆண்டவனை அடைதற்கு அறத்தினை மறவாது ஒதல்வேண்டும். 'அறனை மறவேல்' என்ற திருவாக்கினையும் உற்று நோக்குக.
அறத்திற்கு வரைவிலக்கணம் ஒரு வரியிற் தரமுடியுமா எனப் பார்ப்போம். முடியும் என்று சொல்லுகிறார் தெய்வப்
புலவர். அறம் எனப்படுவது மனதின்கணி குற்றம் இல்லாதிருதிதல். அறம் அவ்வளவேதானென ஆணித்தரமாகக் கூறுகிறார். அப்படியாயின் மற்றச் செயல்கள் எம்மாத்திரம் என்றால் அவைகள் எல்லாம் வெறும் ஆரவாரந்தான் என்று வலியுறுத்துகின்றார்.
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறண் ஆகுல நீர பிற'
é i
நம்பிக்கை, நம்மிடத்தில் நம்பிக்கை கடவுளிடத்தில் நம்பிக்கை இதுவே மகிமை பெறுவதன்இரகசியமாகும். உங்கள் முப்பத்துமூன்று கோடிப் புராண தெய்வங்களிடத்தும் மேலும் அவ்வப்போது உங்களிடையே அன்னியநாட்டவர் புகுத்தியிருக்கும்இதர தெய்வங்களிடத்தும் உங்களுக் நம்பிக்கை இருந்து, ஆனாலும் உங்களிடத்தே உமக்கு நம்பிக்கை இல்லாவிட்டால் உங்களுக்குக்கதிமோட்சமில்லை. ஆன்மாவால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே. அப்படி நினைப்பது சமயத்திற்கு மிகப்பெரிய முரண்பட்ட கருத்தாகும். பாவம் என்பது ஒன்று உணர்டு என்றால் அது "நான் பலவீனமானவன், மற்றவர்கள் பலவீனமானவர்கள்"என் சொல்வது ஒன்றுதான் பாவம்.
உபநிஷதங்களிலிருந்து வெடிகுணர்டைப் போலக் கிளம்பி அறியாமைக் குவியல்களின் மீது வெடிகுண்டைப் போன்று வெடிக்கும் சொல்ஒன்றை நீ காணர்பாயானால் அந்தச் சொல் அஞ்சாமை என்பதுதான். உனக்குள் இருக்கும் ஆற்றல் புறத்தில் வெளிப்படும் வகையில் நீ வளர வேண்டும். வேறு எவரும் உனக்குக் கற்பிக்கவும் முடியா ன்னை ஆன மிகவாதி ஆக்கிவிடவும் முடியாது. உனது - ஆன்மாவைத்தவிர வேறு ஆசிரியர் யாருமில்லை. -

Page 17
கலசம் சித்திரை- 6ை
6ð0&FS, LANGð SGØR
இவ்வாண்டு மார்ச்மாதம் மூன்றாம் திகதி சைவ மு சொந்தமாக வாங்கியுள்ளமையை மகிழ்ச்சியோடு ெ தெருவில் அமைந்துள்ள இந்தக் கட்டிடம் இரண்டு : சுமார் 8400 சதுரஅடிகளாகும். இந்தக் கட்டிடம் ஒரு ஆயிரம் பவுண்களாகும். உடனடியான உபயோகத்திற்கு ஏற்ற வகையில் கட் திருத்தங்கள் செய்யப்படவேண்டியுள்ளன. அதற்கு என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் 500பேர் கல்யாணம் மற்றும் பிற வைபவங்களுக்கு உரிய மணி கட்டிடம் வாங்குவதற்கான செலவின் பெரும்பகுதி மிகுந்த மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்ளுகிறோம். பெறப்பட்டது. இந்தக் கட்டிடம் சைவ முன்னேற்றச் சங்கத்தின் ெ மக்களுக்குப் பயன் அளிக்க வேண்டும் என்பது எங் உங்களுக்குக் கிடைப்பதற்கு, சைவ முன்னேற்றச் 8 பேருதவிகளை தொடர்ந்து நாடி நிற்கிறோம்.
நிதி மிகுந்தவர்
நிதி குறைந்தவ சைவ முன்னேற்றச் சங்கச் செயற்குழுவும் அறங்காவலர் சபையும்
 

2012-- ஆணி 1995 15 ற்றச் சங்கத்தின் bň SMK iš
ண்னேற்றச் சங்கம் தனக்கென ஒரு கட்டிடத்தை தரியத் தருகிறோம். கிழக்கு இலண்டனில் சலிஸ்பதி தளங்களைக் கொண்டுள்ளது. இதன் பரப்பளவு
வர்த்தக இடமாக இருந்தது. கட்டிடத்தின் விலை 120
டிடத்தின் ஒரு பகுதியைத் தரமானதாக்கப் பல ச் சுமார் 50 ஆயிரம் பவுண்கள்வரை செலவாகலாம்
அமரக்கூடிய நவீன வசதிகளோடு கூடிய ண்டபமாக 80 ஆயிரம் பவுண்வரை தேவைப்படுகிறது. அன்பர்களாகிய உங்களின் அண்பளிப்பு என்பதை
மிகுதிப் பணம் வங்கியிலிருந்து கடனாகப்
சாத்தாக இருந்து பல்லாண்டுகளாகச் சைவத் தமிழ் பகளது பேராவல் ஆகும். அந்தச் சேவை மக்களாகிய Fங்கம் சமூகசேவை செய்வதற்கு உங்கள்
பொற்குவை தாரிர்!
ர் காசுகள் தாரீர்!

Page 18
கலசம் சித்திரை-ை
யுவ வருடப்பலன்கள் சிவநீ நாகநாதசிவம் குருக்கள்
யுவ வருடம் பூவுலகிலுள்ளோர்கனோயான் றவ வருந்து வார் பசுமாதங்கும்-நலமாக வாழும் பரிவார மாரியுண்டு நெல்வினையும் தாழ்வான தொன்று மில்லைதான்
தமிழ் மக்கள் அனைவரின் பல்வேறு நல்ல எதிர்பார்ப்புக்களிடையே பிறக்கின்றது யுவ என்னும் தமிழ்ப் புத்தாண்டு . சனிபகவானை ராஜாவாகவும் சுக்கிரனை மந்திரியாகவம் கொண்டு விளங்கும் இவ்வாண்டில் கணிதத்துறையும் இரும்பாலான லோக உற்பத்தியும் பஞ்சை தானியங்கள் அபிவிருத்தியும் கண்டமும் ஜனங்களுக்கு மேன்மை கிடைத்தலும் உயர்வு பெறுமென்று கூறப்பட்டுள்ளது. அதே சமயம் உலகில் ஆயுதங்களாட்சியும் பலம்கொண்டோர் உயர்வும் இயற்கையின் சீற்றமும் தவிர்க்க முடியாதவை. ஆயினும் இறையுணர்வின் ஏற்றத்தினால் உலகில் அமைதியும், மக்களுக்கு மகிழ்ச்சியும் பொருளாதார சீர்திருத்தமும் தாய்மொழி கலை சமய சமூக ஈடுபாடும் ஏற்படவேண்டி எல்லாம் வல்ல இறைவனை
வேண்டுவோமாக,
ஆதாயவிரயம் ஆ வி ஆ வி
மேஷம் 14 14 துலாம் 8 8 ரிஷபம் 8 8 விருச்சிகம் 14 14 மிதுனம் 11 5 தனுசு 2 8 கடகம் 11 II மகரம் 2 8 சிம்மம் 8 14 கும்பம் 5 2 கன்னி II 5 மீனம் 2 8
மேஷம்
பிறக்கின்ற புதுவருடமாகிய யுவ ஆண்டில் மேஷ ராசிக்காரராகிய உங்களுக்கு முற்பகுதியில் சுமாரான பலன்களும் பிற்பகுதியில் மிக நல்ல பலன்களும் நடைபெறும். அட்டமத்து வியாழனால் அவதிப்பட நேர்ந்தாலும் 11 இல் உள்ள சனியினாலும் முன்னேற்றம் காணப்படும். சித்திரை மாதத்தில் செவ்வாய் நீசமாக இருப்பதால்

வகாசி-ஆனி 1995 16
ரத்தம் சிந்த நேரிடலாம். உடல்நலக்குறைவு உண்டாகும். அக்டோபருக்குப் பிறகு எதிர்பாராத வகையில் வாழ்க்கையில் சந்தோஷமும் நினைத்தபடி கல்யாண காரியங்கள் நிறைவேறுதலும் காரிய வெற்றியும் கிடைக்கும் புத்ரபாக்கியங்களும் ஏற்படும் பொதுவாக நன்மை தருகின்ற வருடமே இது.
ரிஷபம்
சென்ற ஆண்டில் அதிகம் சிரமப்படாத நீங்கள் இந்த ஆண்டு நடுப்பகுதி வரை காரியத்தில் கண்ணாக இருப்பீர்கள். எதிர்கால நல்வாழ்க்கைக்கு அஸ்திவாரமிடுவீர்கள். வியாபாரம் முதலியவை தொடங்க நல்லநேரம் இருந்தாலும் பிற்பகுதியில் அஷ்டமத்து வியாழனால் அல்லல் தொடங்கும். உத்தியோக இடங்களில் அலுப்பும் சலிப்பும் தோன்றும் முடிவு நல்லதாக இருந்தாலும் விரக்தி ஏற்படும். பிரயாணத்தினால் பொருள் இழப்பு ஏற்படும் . ஆண்டு முடிவில் சந்தோஷ செய்திகள் வரும் சிநேகிதர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. பொதுநலவாழ்வில் பெருமை பெறுவீர்கள். பொதுவில் பிரச்சனை கொண்ட வருஷம் இது.
மிதுனம் கல்வி மேல் காதல் கொண்ட உங்களுக்கு நிஜக்காதல் ஏற்படலாம். கோர்ட் கேஸ் விஷயங்கள் நன்மையாக முடியும். தொழில்துறை மேன்மை அடையும் . கொடுக்கல் வாங்கலில் நஷ்டம் ஏற்பட்டாலும் முதலுக்கு மோசமில்லை. பேராசை பேராபத்தில் முடியும். பிரயாணங்களால் நன்மை உண்டாகும். தெய்வ தரிசனங்கள் கிட்டும். ஆண்டு முடிவில் உத்யோக மாறுதல் உண்டாகும். மாணவர்கள் படிப்பில் கவனம் தேவை. சொந்தக்காரர்களிடத்தில் அதிக நெருக்கம் வேண்டாம் . புதிய ஆராய்ச்சிகளில் நல்ல பலன்
கிடைக்கும். பொதுவாக முன்னேற்றமான வருடமே இது.
6L6 D
அஷ்டமத்துச் சனியினால் அல்லல்படும் உங்களுக்கு புத்தாண்டின் முற்பகுதி சந்தோஷம் தரும். காரிய வெற்றிகளும் தொழில் துறையில் முன்னேற்றமும் ஊக்கம் தரும். எதிர்பாராத
பொருள் உதவிகள் வந்து சேரும். ஆண்டின் பிற்பகுதியில் தேக்க நிலை ஏற்படும். உழைப்பும் பொருளும் முடங்கி நிற்கும். எதற்கெடுத்தாலும் எரிச்சல் படுவீர்கள். இதனால் அவமரியாதை கிடைக்கும். இல் வாழ்க்கையில் சலிப்பு உண்டாகும். காதலர்களுக்குள் பிரிவு ஏற்படலாம். கவனம் தேவை. ஆண்டின் இறுதியில் பிரயாணத்திற்கு வாய்ப்பு உண்டு. பொதுத் தொண்டினால் மனச்சாந்தி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியின் மேல் வெறுப்பு உண்டாகும். பொதுவாக உங்களுக்கு சலிப்புத் தரும் வருடம்
இது.
சிம்மம்
எதற்கும் கவலைப்படாமல் சுற்றிவரும் உங்களுக்கு ஆண்டின் முற்பகுதியில் பலன்கள் சாதாரணமாக இருக்கும். மனதில் புதுப்புதுத் திட்டங்கள் உருவாகும். புதிய தொழில் துறையில் இறங்குவீர்கள். ஆரம்பத்தில் சிரமம் இருந்தாலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பொருளோடு கெளரவமும் கிடைக்கும். பெரியவர்களின் ஆதரவும் ஆசியும் கிட்டும். இடையில் உடல்நலப்பாதிப்பு உண்டு. பிரயாணங்களினால் அலுப்பும் சோர்வும் தளர்ச்சியும் உண்டாகும்.

Page 19
கலசம் சித்திரை-6ை
ஆண்டின் முடிவில் சில நல்ல செய்திகள் கிடைக்கும். அதோடு பண நெருக்கடியும் எதிர்பாராத தொல்லைகளும் ஏற்படலாம். மறைமுக எதிர்ப்புக்களும் உண்டு. பொதுவாக நல்லவிதமான ஆண்டே இது.
கன்னி
சென்ற ஆண்டில் மிகவும் சிரமப்பட்டு பிரச்சனைகளை சமாளித்து வெற்றிகண்ட உங்களுக்கு புத்தாண்டு சற்று நிம்மதி தரும். ஒய்வும் மனச்சாந்தியும் கிட்டும். பழைய உறவுகள் புதுப்பிக்கப்படும். காதல் மற்றும் திருமண விஷயங்கள் கைகூடும். கல்வியில் நல்ல தேர்ச்சி உண்டு. உத்தியோக உயர்வு கிடைக்கும். சிலர் சாதனைகள் புரிவார்கள். ஆண்டின் இறுதியில் உடல்நலப்பாதிப்பும் குடும்பத்தில் கசப்பும் ஏற்படும். எதிலும் அனுசரித்துப் போவது நல்லது. பிறருக்காகக் கஷ்டப்படவேண்டி வரும். பொருள் வரவு மிதமாக இருந்துவரும். தொழில்துறையில் மந்த நிலை ஏற்படும். பொதுவாக சாதாரணமான ஆண்டு தான் இது.
துலாம்
நிம்மதியாக காலத்தைக் கழித்துவரும் உங்களுக்குப் பிரச்சனைகள் தலைதூக்கும் வருடம் இது. பிள்ளைகளினால் தொல்லை உண்டாகும். சில சமயம் மானம் போகும். ஆனால் தலை தப்பிக்கும். நண்பர்களின் உதவி உண்டு. ஆண்டுத் தொடக்கத்தில் பணவரவு இருந்தாலும் இடையில் கஷ்டப்பட நேரிடும் பெண்களினாலும் மறைமுக எதிர்ப்பு உண்ட சிலருக்கு ஆதாயம் ஏற்படலாம். படிப்பில் தடை ஏற்படும். மனம் குழம்பும். சிலர் வலியச்சென்று வம்பில் மாட்டுவீர்கள். நண்பர்களிடமும் சுற்றத்தார்களிடமும் கவனம் தேவை. கலைத்துறை விளையாட்டுத்துறை மேன்மையடையும் பொதுவாக சற்றுச் சோதனையான வருடமே இது.
விருச்சிகம் சென்ற ஆண்டு கட்டிப்போட்டதைப் போன்ற உணர்வுடன் இறுக்கமாக இருந்தீர்கள். இந்த ஆண்டு சற்று ஆறுதலாக இருக்கும். குடும்ப விஷயங்களில் சண்டைகள் தீர்ந்த மகிழ்ச்சி உண்டாகும். உங்களுடைய பலம் பிறருக்குத் தெரியவரும் காலம். சந்தோஷத்தில் தாராளமாகச் செலவு செய்வீர்கள். புத்திரபாக்கியமும் உண்டு. பிரயாணங்களால் உடல் நலப்பாதிப்பும் பொருள் இழப்பும் ஏற்படும். சிலருக்கு சமூகசேவையில் நாட்டம் அதிகமாகும். கல்வித்துறையினர் மேன்மையடைவார்.வாகன ஓட்டுதலில் அதிக கவனம் தேவை. விபத்திற்கு வாய்ப்பு உண்டு.
பொதுவாக நல்ல ஆறுதலான வருடம் தான் உங்களுக்கு.
தனுசு
எதையும் தாங்கும் இதயம் கொண்ட உங்களுக்கு வருடப்பிறப்பில் நாட்டமில்லை. வெறுப்பின் உச்சியில் இருக்கின்றீர்கள். அதனால்

பகாசி-ஆனி 1995 17
நல்லது நடந்தாலும் ஏற்கமாட்டீர்கள். ஆரம்பத்தில் செலவுகள் அதிகமாயிருந்தாலும் போகப்போக பணவரவு ஏற்படும். மனதைத் தளரவிடாதீர்கள். இந்த நேரத்திலும் தானம் தருமம் பிறருக்கு உதவி செய்ய நேரிடும். ஆண்டின் பிற்பகுதியில் எதிர்பாராத உதவிகளும் ஆலோசனைகளும் கிட்டும். உடல்நல முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களால் உதவிபெறுவீர்கள். கணவன் மனைவி பிரிவு ஏற்படலாம். பிரயாணங்களினால் இன்பமும் தெய்வதரிசனமும் கிடைக்கும். பொதுவாக துன்பமும் இன்பமும் கலந்த ஆண்டே.
மகரம்
பொறுமையால் பல காரியங்களை சாதிக்கும் உங்களுக்கு புத்தாண்டு பிரகாசமானதாகவே இருக்கும். பணவசதி தாராளமாக இருந்துவரும். வெகுநாளைய திட்டங்கள் நிறைவு பெறும். தொழில்துறை வியாபாரம் அபிவிருத்தியாகும். கண்திருஷ்டி பொறாமைகளால் சிறிய விபத்துக்களை சந்திப்பீர்கள். ஆண்டின் பிற்பகுதியில் செலவீனங்களும் பொருள் இழப்பும் ஏற்படும். கல்வி, கலைத்துறையில் மேன்மை உண்டாகும். சிலருக்குப் பட்டங்களும் பாராட்டுதல்களும் கிடைக்கும். குடும்பத்தில் சிறிய குழப்பங்கள் ஏற்பட்டாலும் முடிவு சுபமாக அமையும். சிலருக்கு வம்ச விருத்தி ஏற்படலாம். பொதுவாக சந்தோஷமான வருடமிது.
(U5LDLILD சென்ற ஆண்டு உடல்நலத்தாலும் பொருளாதாரத்தாலும் பாதிக்கப்பட்ட நீங்கள் சற்றுத் தெளிவு பெறுவீர்கள். முறையான ஆலோசனையுடன் யோசித்து செயல்ப் பட்டால் பல சாதனைகளைச் செய்யக்கூடிய வருடமிது. ஆரம்பத்தில் தடுமாற்றமாக தெரிந்தாலும் போகப்போக உற்சாகமடைவீர்கள். பணவசதியும் கூடிவரும். பிரயாணத்தால் சுகமுண்டாகும். சமூக சேவைகளில் மறைமுக எதிர்ப்புக்களை சந்திக்க வேண்டிவரும். நம்பிக்கை நன்மை தரும். ஆண்டின் பிற்பகுதி பிரகாசமாக விளங்கும். தொழிலில் வெற்றியும் உத்தியோக உயர்வும் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் பெருகும். பொதுவாக நல்ல சுகமான வருடம் தான் இது.
மீனம்
ஏழரைச்சனித் தொடக்கத்தினால் கலக்கமடைந்த உங்களுக்கு புத்தாண்டு புத்துணர்ச்சி தரும். உத்தியோகம் வியாபாரங்களில் தேக்கநிலை தடங்கல்கள் இருந்துவரும். குடும்பத்திலேயே மறைமுக எதிர்ப்பு உண்டு. குழந்தைகளினால் சந்தோஷம் பெருகும். படிப்பு பயிற்சிகள் முன்னேற்றம் காணும். உடல்நல பாதிப்பு உண்டு. தனக்கு எல்லாம் தெரியும் என்று இருக்காமல் நல்ல ஆலோசனைகேட்டு நடப்பது நலம். பிரயாணத்தினால் பொருள் விரயமும் மனக்கசப்பும் உண்டாகும். கணவன் மனைவி உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்புண்டு. எதிலும் கவனமாக இருப்பது நல்லம். பொதுவாக சுமாரான வருடம் தான் இது.

Page 20
கலசம் சித்திரை-வைக
சிவமயம்
பூணி மீனாட்சி சுந்தரேஸ்வராள் துணை இலண்டன் பூரீ முருகன் துணை
பூனி மீனாட்சி அம்மன் கோவில்
மந்திரமாவது நீறு வானவர் மேலது நிறு சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு செந்துவர் வாயுமை பங்கண் திருவாலவாயான் திருநீறே
கோவில் நகரம் என்றால் அது மதுரையைக் குறிக்கும். மதுரமான நகரம் மதுரை. நடுவில் கோவில் அமைந்திருக்க அதனைச் சுற்றி சதுரமாக அமைந்திருக்கின்றது மதுரை. கோவிலைச் சுற்றி ஆடிவிதி, சித்தரைவீதி, ஆவணிமூலவீதி, மாசிவீதி, என்று தமிழ் மாதங்களின் பெயரால் வீதிகள் அமைந்துள்ளன.
நகரில் எங்கு இருந்து பார்த்தாலும் வானுயர உயர்ந்து நிற்கும் கோபுரங்கள் காஞ்சிக்கு காமாட்சியும், காசி நகருக்கு விசாலாட்சியும், மாநகர் மதுரைக்கு அன்னை மீனாட்சியும் அருள்புரியும் முப்பெரும் தேவியராக திகழ்கின்றனர். அதிலும் அன்னை மீனாட்சி மன்னன் மகளாய் மதுரை மண்ணில் அவதரித்து மாந்தர் குலம் உய்விக்க வந்த மாணிக்கம்.
அன்னை மீனாட்சி அரசோச்சும் மதுரை நகரிற் பன்னிரண்டு மாதங்களும் திருவிழா தான். இங்கு அம்மனுக்கு தான் முதலில் பூஜை, சித்திரை மாதம் முதல் ஆவணிமாதம் வரை மீனாட்சி செங்கோல் பிடித்து ஆட்சி செய்கின்றாள். ஆடி முளை கூட்டு உற்சவம், நவராத்திரி, கோலாட்ட உற்சவம் என்று அம்மனுக்கு தனியாக உற்சவங்கள் உள்ளன. இங்கு ஒவ்வொரு தமிழ் மாதப்பிறப்பன்றும் அம்பாள் தங்கரதத்தில் பவனி வருகின்றாள். ஒவ்வொரு திங்கட்கிழமையும் வயிரகிரியிடம் தங்கப்பாவாடையில் காட்சி தருகின்றாள். அதைக் காண கண் கோடி வேண்டும். சிவபெருமானின் அறுபத்து நான்கு திருவிளையாடல்களும் இடம் பெற்ற திருத்தலமாக மதுரை கருதப்படுகின்றது. சுவாமிக்கு சுந்தரேஸ்சுவரர் , சொக்கநாதர், ஹாஸ்சியநாதர்
 

ாசி-ஆனி 1995 18
என்ற சிறப்புப் பெயர்கள் உண்டு. சுவாமியின் விமானம் அஷ்டகஜ விமானம், சுவாமி அம்மன் இருவிமானங்களும் தங்கத்தினால் ஆனவை. பாண்டியனுக்காக நடராஜன் கால்மாறி ஆடிய சிறப்புப் பெற்றது மதுரை. வெள்ளி அம்பலம் என்றும் அழைக்கப்படுகின்றது.
இங்கு நடைபெறும் திருவிழாக்களில் சித்திரைத் திருவிழா, ஆவணி மூல உற்சவம், தைப்பூசத் தெப்பத் திருவிழா, மாசி மகோற்சவம் ஆகியவை சிறப்பானவை. சித்திரைத் திருவிழாவில் மீனாட்சி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கின்றது. கருங்குருவிக்கு உபதேசம், நாரைக்கு முத்தியளித்தல், பாணனுக்கு அங்கம் வெட்டுவது, வளையல் விற்றது பிட்டுக்கு மண் சுமந்தது, நரியைப் பரியாக்கியது, விறகு விற்றது, போன்ற திருவிளையாடல்கள் ஆவணிமூல உற்சவத்தில் நடைபெறுகின்றன.
யூனி M.Ks கல்யாணசுந்தரபட்டர்
லண்டன் யூரீ முருகன் கோவில்
இக்கோயிலில் தினமும் திருவனந்தல் காலசந்தி, திருகாலசந்தி, விலாபூஜை, உச்சிக்காலம், சாயரட்ஷை அர்த்தசாமம், பள்ளியறை, ஆகிய பூசைகள் நடைபெறுகின்றன. திருவனந்தளில் ஞானப்பால் கொடுப்பதும் பள்ளியறையில் மூக்குத்தி தீபாராதனையும் மிக சிறப்பானவை. மதுரைக்கோயிலில் நூற்றுக்கால் மண்டபம், ஆயிரங்கால் மண்டபம் சிறப்பு வாய்ந்தவை. இக்கோயிலில் உள்ள முக்குறுணி விநாயகர் ஏழு அடி உயரம் கொண்டதும் ஒரே கல்லினாலான விக்கிரமும் ஆகும். விநாயகருக்கு விநாயகசதுர்த்தி மிகச்சிறப்பானது. சதுர்த்தி அன்று முக்குறுணி கொழுக்கட்டை, நெய்வேத்தியம் வைக்கப்படும். இத்தலம் நால்வரால் பாடப்பட்ட சிறப்பையுடையது. மதுரையின் தலவிருட்ஷம் கடம்பமரமாகும். மீனாட்சி சுந்தரேஸ்வரர் பெருமைகளை சொல்வதானால் எவ்வளவு வேண்டுமானாலும் எழுதலாம். தெரிந்த சிலவற்றை இங்கு எழுதியிருக்கின்றேன்.

Page 21
கலசம் சித்திரை-ை
கொழும்பு மாநகரில் 33 குண்டபகஷ மஹா கும்பாபிஷேகப் பெருவிழா காணர்போரைக் கவர்ந்த கப்பித்தாவத்தை குடமுழுக்குவிழா
துண்னையூர் ராம் தேவலோகேஸ்வரசர்மா
இ லங்காபுரித்தீவின் தலைநகரம் குபேர பத்மம் என்ற கொழும்பு மாநகரின் மத்தியில் மருதானை எனும் பதியில் கப்பித்தாவத்தையிற் பல நூற்றாண்டு காலமா வீற்றிருந்து அருளாட்சி புரியும் ஆலயங்களான ழ
 
 
 
 

ысырға-осы, 1995 19
லோக பிதாவாகிய அந்த அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயக கைலாசநாத சுவாமிகோவில் முன்றலிலே சப்ததள ராஜகோபுரம் கம்பீரத்துடன் காட்சிதருகின்றது. அருகருகே மணிக்கோபுரமும் கல்லினாற் கட்டி அமைக்கப்பட்ட அழகிய சித்திரத்தேரும். அந்தச் சித்திரத் தேரிலே பிரதிஷ்டை செய்ய இருப்பது அருள் மிகு பூரீ கண்ணகை அம்பாள் (பஞ்சலோக விக்கிரஹம் ) கற்பு நெறியால் மதுரை மாநகரையே எரித்துச் சாம்பலாக்கிய அந்தக் கற்புடைய பத்தினியின் விக்கிரகம் பார்ப்பவரை மீண்டும் பார்த்துக் கைகூப்பி வணங்க வைக்கும் அழகு. சுமார் 5 அடி உயரமுள்ள இந்த விக்கிரகத்தை அமைத்த ஸ்தபதி தமிழ்நாடு சுவாமிமலை தேவசேனாதிபதி அவர்களை உண்மையிற் பாராட்டவேண்டும். அவ்வளவு கலைத் திறனி உடையதாய் மிளிர்கின்றது. ஆலயத்தின் உள்ளே சிற்பவேலைப் பாடுகள் அனைத்தும் அந்த ஆனந்தக் கூத்தின் அற்புதத் திருவிளையாடல்களைப் பிரதிப லிக்கின்றன. பரிவார மூர்த்திகளாக விநாயகர், மகாவிஷ்ணு, பூரீதேவி கருமாரி, சுப்பிரமணியர், பைரவர் சனீஸ்வரர், சூரியசந்திரர், நவக் கிரகம் எனத் தனித்தனி ஆல யங்களாக மிளிர்கின்றன. காண்போரைக் கவர்ந்திழுக்கும் வகையில் ஆலயத்தின் ஒவ்வோர் சித்திர வேலைப்பாடுகளும் மிக 篷 நேர்த்தியாகவும் அழகாகவும் மிளிர்கின்றன. கொழும்பு மாநகரினிலே இதுவரைகாலமும் நடைபெறாத வண்ணம் கும்பாபிஷேகவிழாச் சிறப்பாக நடந்தேறியது. மாபெரும் யாகசாலை அமைக்கப்பெற்று
அங்கே 33 குண்டபசஷங்கள் நிறுவப்பட்டு 33
சிவாசாரியர்கள் அமர்ந்து ஹோமம் செய்தது பார்ப்பவரைப் பரவசப்படுத்தியதில் வியப்பில்லை. கும்பாபிஷேக தினத்தன்று சூழ்ந்து நின்ற மெய்யடியார்கள் கூட்டத்தினரின் அரோகரா
ஒலியும் சிவாசாரியப் பெருமக்களின் வேதமந்திரமும் நாதஸ்வர வித்துவான்களின் கான மழையும் எல்லோர்
மந்திரகேளம் கிரியகேளம் பக்தகேளம் இந்த மூன்று
நிலையையும் அன்று யாக சாலையிற் காணமுடிந்தது. சர்வசாதகாசிரியர் மந்திரத்தால் மனமுருகி அழைக்க
மெய்யடியர்கள் பக்தி பரவசத்தால் மனமுருகி இறைவனை

Page 22
et disé)3Flf சித்திரை அழைக்கத் தன் பக்தர்களுக்காகத் தீய நஞ்சை எடுத் அமிர்தமாக உண்ட அந்த நஞ்சுண்டகண்டன் இந் அழைப்புக்கு வராமல் இருக்கமுடியுமா? அதுமட் மல்லாது யாக பூசைகளிலே ஒரு தனிச்சிறப்பைக் கான முடிந்தது. அலங்கார சோடஷ உபசார பூசை வே தோத்திர பஞ்சபுராண பாராயணங்கள் திருமந்திர நாதாஞ்சலி கீதாஞ்சலி தவில் மிருதங்கம் வீணை பர நாட்டியம் என ஒவ்வொன்றாகத் தனித்தனியே இசைத் மெய்சிலிர்க்க வைத்தார்கள். தனது சிரசையும் கையையு கொய்து வீணாகானம் இசைத்து இறைவனை மயக் னான் இராவணன். அவன் ஆண்ட இந்த இலங்காபுரியிே இப்படியோர் கும்பாபிஷேகத்தைக் கிரியா வைபவங்களை சிறப்பாக நடாத்திய சிவாசாரியார்கள் உண்மையிலேே பாராட்டப்படவேண்டியவர்கள்.
இந்தக் கும்பாபிஷேகக் கிரியாவைபவங்களைச் சிறப்பா நடாத்திவைத்த பிரதம குருமார்கள் இராமலக்குமண சகோதரர்போன்ற யாழ் சுன்னாகமண் தந்த சிவாக ஞானசேகரம் சோமாஸ்கந்தசிவாசரியார்முத்தமிழக்குருமண நா. சர்வேஸ்வரக்குருக்கள் தலைமையில் இந்திய
பாரதி விலாஸ்
BARAH Y WAS
CATERING FOR ALL OCCASIONS
RESTAURANT AND TAKEAWAY Srilankan-South Indian Cuisine
சுத்தமாகவும், சுவையாகவும் தரமாகவும் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளுக்கு நீங்கள் நாடவேண்டிய ஒரே இடம் 134 HO E STRE ET WALTHAMSTOW LONDON E17 4 Q R
TE : O 181 521 3011 O181 52O 2546
oPEN NooN Tro MIDNIGHT SEVEN DAYS AWEEK
 
 
 

வைகாசி-ஆவி-1 20
இலங்கை சிவாசாரிய பெருமக்கள் பலர் கலந்து கொண்டனர். நாதஸ்வர கான மழைபொழிந்த தவில் நாதஸ்வர வித்துவான்கள் யாழ் அளவையூர் எம் பி பாலகிருஸ்ணன் யாழ் நாச்சிமார் கோவில் கணேச பிள்ளை(காஞ்சி காமகோடி ஆஸ்தான வித்துவான்) முதலி யோருடன் வேறு குழுவினர்களும் கலந்து சிறப்பித்தனர். ஆலய சிற்ப கட்டிட வேலைப்பாடுகள் தமிழ்நாடு எஸ்.ரி.எம் கண்ணன் ஆச்சாரி, யாழ் அராலி எஸ் மகேஸ்வரன் குழுவினர் ஆகியோர். இந்தக் கும்பாபிஷேக விழாவை இவ்வளவு சிறப்பாக நடாத்திக் கொழும்பு மாநகர மக்களை வியக்கவைத்த ஆலய நிர்வாகிகள், இறைவன் பணிக்கெனத் தம்மை அர்ப்பணித்த திருவிளங்க நகரத்தார் அறங்காவலர் சபையை எவ்வளவு பாராட்டினாலுந் தகும். அனைவருக்கும் அந்தக் கைலாசநாதர் கருணை கடாசஷம் கிடைப்பது திண்ணமாகும். இந்த மாபெரும் கும்பாபிஷேக விழாவோடு இலங்கை நாட்டிற்கும் சுபீட் ஷமீ கிடைக்கவேண்டுமென, அப்பனும் அம்மையுமாய் அனைவரையும் காக்கவென, எப்போதும் இந்த இலங்காபுரியையும் காத்தருள வேண்டுமெனச் செப்புகிறோம். உமைத் தொழுகிறோம். கருணா கடாசவியுடன் கப்பித்தாவத்தைப் பதியுறை கைலாசநாதரே நிண் தாள் சரணம் என மனமுருகிப் பிரார்த்தித்து அந்த முக்கண்மூர்த்தி கைலாசநாதரின் திருப்பாத கமலங்களைப் பணிந்து சரணடைந்து சாந்திதனைப் பெறுவோமாக!
HAR DRESSING |
& MAKE UP
for Weddings & other occasions சிகையலங்காரமும் ஒப்பனையும்
திருமணவைபவங்களுக்கும் இதர வைபவங்களுக்கும் உங்களை
அலங்கரிக்க நாடவேண்டிய இடம்
MRS SHAYANTHISRITHARAN
97 SPRING FIELD DRIVE BARKINGSIDE ILFORD ESSEX G26GRT
TEL: O181 252 2920

Page 23
கலசம் சித்திரை- ன
அணங்கினர் ජිට{!
அணங்கினர் அவையை இறையருள் அருட்கனிவில் திளைத்தும் நம்மவர்கள அவற்றுடன் பெண்கள் விரும்பும் ச பெண்டிரும் பாடல்களும் சி
FT
பொங்குருச் செல்வங் கல்வி பொ இங்கெமக்கருள வல்ல இணையி பங்கயத் தடஞ்சூழ் கூடற் பவளம அங்கயற் கணிணி மங்கை அடி -திருவிளையாடற் புராணம்
மனைவியெனும் அ உலகுயிர்கள் யாவற்றிற்கும் அம்மையாகவும் அப்பனாகவும் வி: அழைத்த பெருமை பெற்றவர் காரைக்கால் அம்மையார். கண
ஈங்கிவன் குறித்த கொள்கையிது தாங்கிய வனப்புநின்ற தசைப்பொத ஆங்கு நின்றார்கள் போற்றும் பேய் பங்குற வேண்டு மென்று. இறைவனிடம் பேய்வடிவு வேண்டிப் பெற்றவர் ஏன் இந்த நிை புனிதவதி என்னும் பெயரைப்போல் அவளும் புனிதமானவள். இ அழகுக்கு இலக்கணம் அவளே காரைக்காலில் வாழ்ந்த தன6 நாகப்பட்டினத்தைச்சேர்ந்த பெரிய வணிகனான பரமதத்தனுக்கு பணமும் பணமும் சேர்ந்தது. ஆனால் அவனோ பணமே விளக்காகின. தன்னிலை எண்ணிக் கலங்கினாள் புனிதவதி. .ை இவற்றை சேக்கிழார்
தகைப்பில் பெருங் காதலினால் தங்கு என்று பரமதத்தன பொருள்மேல் காத பூங்குழலார் அவர் தாமும் பொருவி ஓங்கிய அணிபுறுகாதல் ஒளிவினர்றி ! பாங்கில் வரும் மனையரத்தினர் பணி என்று புனிதவதியார் தனக்கு தகுதியில்லாத கணவனோடுகாதல எண்ணியே காலம் கழித்தார் எனவும் கூறுவதாய் அறியலாம். ஒருநாள் பரமதத்தன் தனது கடைக்கு வந்தவர் கொடுத்த மா புனிதவதியிடம் உணவுகேட்டு வந்தார் ஒரு சிவனடியார். சமை சோறும் கொடுத்தாள். சிவனடியாரும் அதனை மகிழ்வோடு உ உணவு கொடுத்து மாங்கனியும் கொடுத்தாள். பழம் நல்ல சுை கனிகள்அல்லவா அனுப்பினேன் மற்றது எங்கே? கொண்டு வா என்ற எண்ணத்தில் தானே சிவனடியார் உண்ண அக்கனிை

வைகாசி- ஆணி 1995 21
பெற்ற மகளிரும், இறையடியார்களின் ால் அறியப்படாத மாதரும் பொலிவிப்பர். கலைகளும் அதில் சிறந்து விளங்கிய |றுகுறிப்புகளும் பரிமளிக்கும்.
லினி
ருவிலா வாய்மை, துய்மை லா எம்பிராட்டி ால் வரையை நீங்கா க்கமலங்கள் போற்றி
(B6CLp 25 D ளங்குபவன் இறைவன். அந்த இறைவனே 'அம்மையே என்று வனால் கைவிடப்பட்ட நிலையில் துன்பத்தின் எல்லையில் இனியவனுக்காகத்
தி கழித்திங்குன்பால்
வடிவு அடியேனுக்கும்
ல? இளவயதில் பலகலையும் கற்றுத் தேர்ந்த ஓர் அறிவுப் பொக்கிஷம். வந்தர் தனதத்தனின் ஒரே செல்வமகள். அவளை மணமுடித்து வைத்தனர் பெற்றோர்.
குறியென வாழும் உலோபி. அவள் கற்ற கலைகள் குடத்துள்
கலாயநாதரே கதி என வணங்கினாள்
மனை வளம் பெருக்கி லீ கொணர்டு அதனை பெருக்கினானர் எனவும் டயர் திருவடிக்கீழ்
மிகப்பெருக
வளாமையில் பயில்வார் ால் வாழாது கடமைக்காக வாழ்ந்த கொண்டு சிவனின் திருவடியை
ங்கனிகள் இரண்டை வீட்டிற்கு அனுப்பி வைத்தான். அன்று யல் முடியாத காரணத்தால் அவள் அவருக்கு மாங்கனியும் ண்டார். சிவனடியார்சென்ற பின் வீட்டிற்கு வந்த கணவனுக்கு வயாக இரப்பதைக் கண்ட பரமதத்தன் இரண்டு
என்றான் சினத்துடன். இரண்டு கனிகளில் ஒன்று தன் பங்கு பக் கொடுத்தாள். கணவனோ கனியைக் கேட்கின்றான்.

Page 24
கலசம் சித்திரை աճԾՈ61
அவனோ உலோபி.சிவனடியாருக்கு சோறும் கனியும் கொடுத்தேன் என்று சொன்னால்அவன் மூர்க்கத்தனமாக நடந்துகொள்வானே என்ற பயத்தினால் கைலாயநாதரே கதியென வேண்டி நின்றாள். அவளுக்கு ஒரு அற்புத மாங்களி கிடைத்தது. இறையருளால் கிடைத்த கனியின் சுவையில் மயங்கிய பரமதத்தன் இது நான் அனுப்பிய கனி இல்லை ஏது இது என்றான்? புனிதவதி நடந்ததைச் சொன்னாள். அவன் அவளைநம்பவில்லை. இறைவன் தந்த கனியா? எங்கே இன்னொன்று வாங்கித் தா என்றான். கணவனின்சந்தேகக் கண்களின்முன் துடித்து நின்று இறைவனை வேண்டினாள்.மீண்டும் மாங்கனி பரமதத்தன் கையில் வாங்கிய மறுகணமே அக்கனி மறைந்தது. அவன் பயத்தினால் புனித வதியாரை விட்டுப் பிரிந்து வேறொருத்தியை மணந்துகொண்டான்.புனிதவதியாரின் சுற்றத்தார் அவளைச்சிவிகையில் ஏற்றி பரமதத்தனிடம் சேர்ப்பிக்கச் சென்றனர். அவனோ தன்இரண்டாவது மனைவிமக்களுடன் வந்து அவள் கால்களில் வீழ்ந்து வணங்கினான். அவளின் தெய்வீகத் தன்மையைக் கண்டு அவன் அஞ்சினான். அப்பொழுது தன் சுற்றத்தாரை நோக்கி ஒன்றே நினைத்திருந்தேன் ஒன்றே துணிந்தொழிந்தேன் ஒன்றே என் உள்ளத்தின் உள்ளடைந்தேன்.
-ஒன்றெ காண் கங்கையான் திங்கட் கதிர்முடியான் பொற்கொளிர்சேர் அங்கையார்க்கு ஆளாம் அது. என்று அற்புதத்திருவந்தாதி மூலம் தான் இறைவனுக்கு ஆளாய் இருப்பதை எடுத்துரைக்கின்றார் அந்த அருட்செல்வி. தன்கையில் மனைவி எனும் அருளமுதம் இருந்தும் அதன் தன்மை அறியாதுஓடினான் பரமதத்தன். அற்றதலை போக அறாத்தலை நான்கினையும் பற்றித்திருகி பறியேனோ-வற்றல் மரம் அனையானுக்கிந்த மானைவகுத்திட்ட பிரமனை யான் காணப்பெறின். எனும் ஒளவையார் பாடல் இவர்களுக்கு எவ்வளவு பொருத்தமாக அமைகின்றது.
பிரதோஷவிரதம் முக்கண்ணனான சிவன் நந்திதேவரின் இரு கொம்புகளுக்கு மத்தியில் நின்று நடனம் செய்து தேவர்களுக்கு காட்சி கொடுத்தருளிய காலமே பிரதோஷ காலம் எனப்படும் . இப்பிரதோஷ காலம் வளர்பிறை, தேய்பிறைகளில் வரும் திரயோதசி தினத்தில் மாலை 4. 30 மணி முதல் 8.00 மணி வரை இருக்கும். இக்காலத்தில் சிவாலயத்திற்குச் சென்று நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையே தீபஒளியில் சிவனை தரிசிக்க வேண்டும் பிரதோஷ விரதம் இருப்போர் மேற்கூறியவாறு
சிவனை வணங்கினால் எல்லா இன்பங்களும் பெறுவர்.

sobi o 22
ஈழத்தத் திருக்கோயில்கள்
எடுப்பு
இராவணன் ஆண்ட ஈழநனிநாடு-சைவ ஆகமம் கண்ட கோயில்கொள் நாடு (இரா)
தொடுப்பு
சூழ்கடல் அலைக்கரம் தொழுதுநின்றேத்த நால்வகை வேதமும் நவின்ற நம்நாடு
முடிப்பு
ஒரு தனி வேலோனி கதிர்மலைமீது உவந்தருள் புரியும் கதிர்காமம் திருமலை கோணேஸ்வரமென ஞானப் பெருமை கொள் பாடல்பெறும்நாடு
மன்னிய மாதோட்டனணி நகரில் மருவிய கேதீச் சரநாடு புணர்ணிய நல்லுர் மாவிட்டபரம் புகழ்பெறு கீரி மலைநாடு (இரா)
பலவினை நீக்கம் சந்நிதிமுருகன் பலர்தொழும் முன்னிஸ் வரக்கோயில் சிவனொளி பாத மலைமிசையப்பன் திருவடி பெற்ற திருநாடு (இரா)
தொண்மையிற பல்புகழ் தோன்றிட நயினை துறையமர் நாக பூசணியம்மை புணர்னிய நெறியிற் புகழ்பெறு நாவலன் போற்றிய சீலம் பொலிநாடு (இரா)
-நயினைக்கவிஞர் நா.க.சண்முகநாதபிள்ளை
சப்தவிடங்க தலங்கள்
திருமறைக்காடு- ஹம்சபாத நடனம்(அன்னம் நடப்பதுபோல ஆடுவது திருவாரூர் - அஜபாத நடனம்(மந்திர உச்சாடன நடனம் ஆடுவது) திருவாய்மூர் -கமல நடனம்(தாமரை காற்றில் அசைவதுபோல் ஆடுவது) திருக்கோளிலி-பிருங்க நடனம் (வணிடு மலரைச் சுற்றுவது போல் ஆடுவது) திருநாகை-தரங்க நடனம் (கடல் அலைபோல் ஆடுவது) திருநள்ளாறு-முண்மத்த நடனம்(பித்தனைப்போல் ஆடுவது) திருக்காறாய்-குக்குட நடனம்சேவல்போல் ஆடுவது)

Page 25
356)3Flf
/4/241 baba
ATATAVA KUMARANS
d
VAVIJAV NZ
KUMA RA ||
தயாரிப்புகளின் அரிசிமா, குத்தரி லீலா தயாரிப்புக்
எம்மிடம் மொத்த பெற்ற பெற்றுக்கொள்ள6 விநியோகஸ்தர்கள்
அங்கீகாரம்
TILL அரசியல்
பொருளாதார புத்
தமிழ்
ரபல எழுததான கதைப்புத்தகங்களு விற்பை
மேலதிக விபரங்க
42-44. He LONDON E TE : O 18'
哥=AX :@18°
 

ர-வைகாசி-ஆணி 1995 23
MARANS,
தமிழ்க்கடை
N BOOK CENTRE
சி, மிளகாய்த்துள், மற்றும் பல
OT மாகவும், சில்லறையாகவும் [fוחטה
தகங்களோடு பெருமளவிலான ார்களின் நம் கிடைக்கும்
ளுக்கு தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி
DE STREET, WALTHAMSTOW, 17
52 4.955 /O 81 52' 441
521. 94-82

Page 26
கலசம் சித்திரை-வைச
கணபதியும் தமிழும்
உம்பர்தருத்தேனுமணிக் -கசிவாகி
ஒண்கடலிற்றேனமுதத் -துணர்வூறி இண்பரசத் தேபருகிப் -பலகாலும்
என்றனுயிர்க் காதரவுற் -றருள்வாயே தம்பிதனக் காகவனத்- தணைவோனே
தந்தைவரத் தாலருள்கைக்- கனியோனே அன்பர்தமக் கானநிலைப் -பொருளோனே ஐந்துகரத் தானைமுகப் -பெருமாளே
-அருணகிரிநாதர்கலாசாரத்திற் பாஷை முக்கியம். அதைவைத்துத்தானே சமய சம்பந்தமான நூல்கள், அறிவை வளர்த்துக்கொடுக்கும் நூல்கள், மனதுக்கு ரஞ்சகமான கதை, கவிதை, காவியம் எல்லாம் அமைந்துள்ளன. அப்படிப்பட்ட தமிழ்ப்பாஷைக்கு விக்நேச்வரர் ரொம்ப முக்கியம்.
எது ஒன்றை ஆரம்பித்தாலும், கடைக்குப் போகுமுன் சிட்டைத்துண்டு எழுதினாற்கூட முதலில் என்ன பண்ணுகிறோம்? பிள்ளையார்கழி என்று தானே போடுகின்றோம்? எடுத்துக்கொண்ட காரியம் சுழித்துப்போகாமல் இரட்சித்துக் கொடுப்பதற்காக முதலிற் பிள்ளையார் சுழி. வேறு எதிலும் இப்படி மங்களாரம்பம் ஒன்றுமில்லை இது தமிழ் மொழியின் பாக்கியம்.
முத்தமிழை அவர் ஆதியிலேயே மேருமலையில் எழுதியிருக்கிறாரென்று ஒரு அபூர்வமான தகவலை அருணகிரிநாதர் கொடுத்திருக்கின்றார். திருப்புகழ் பாட் ஆரம்பித்த்போது பாடும் கைத்தல நிறைகனி என்ற பாட்டில் முத்தமிழ் அடைவினை முற்படுகிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனே என்று ஒரே மு மயமாக மோனை வைத்துப் பாட்டுப்பாடியிருக்கின்றார். ஆக வியாசர் பாரதம் எழுதுவதற்கு முன்னமே முற்பட என்று பாட்டில் வருகிறதற்கேற்பப் பிள்ளையார் இயல் இசை நாடகம் என்ற முத்தமிழ் நூல்களை எழுதியதாக ஏற்படுகின்றது.
படிக்க ஆரம்பித்தவுடனேயே நாம் கற்றுக்கொள்வது ஒளவைப்பாட்டி உபதேசங்களைத்தானி. அந்தப்பாட்டி யாரென்றாற் பிள்ளையாரின் பரமபக்தை. வாக்கு உண்டாவதற்கே பிள்ளையார் பாதத்தைத்தான் பிடித்தாகவேண்டும் என்கிறாள் அவள். அவள் கற்றுக்கொடுத்ததைக் குழந்தையாயிருக்கும் போதே பாடம் பண்ணுகிறோம். வாக்குமட்டுந்தானா? நல்ல மனதும் பெற்று, நல்ல எண்ணங்கள், கருத்துக்கள் வாக்கில் வந்தால் மட்டுமே நமக்குப் புண்ணியம்.
இனி னும் பாடிக் காட்டும் ஒளவைப் பாட்டி, விநாயகப்பெருமானின் பாதத்தைப் புஷ்பார்ச்சனை பண்ணிப் பிடித்துவிட்டவர்களுக்கு எப்படியான பலன்கள் கிடைக்குமென்பதே இந்தப் பாட்டு. வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது- பூக்கொண்டு

ாசி-ஆனி 1995 24
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம் தப்பாமற் சார்வார் தமக்கு. மேனி நுடங்காது என்றால், சரீரத்தைக் கஷ்டப்படுத்திக்கொள்ளாமலே என்று அர்த்தம். பிள்ளையாரை உபாசிக்கிறதற்குப் பெரிதாக ஒன்றும் யோகம், பட்டினி, உபவாசம் செய்யவேண்டாம். உடம்பைச் சிரமப்படுத்திக் கொள்ளாமல் நாலு பூவைப் பறித்துப் போட்டுவிட்டாலே போதும் என்கிறாள். துப்பார் திருமேனி என்றால், பவளம் மாதிரிச் செக்கச்வேலென்று அவர் சரீரம் இருப்பதாக அர்த்தம். பவளம்போல் மேனியென்று அப்பர் ஸ்வாமிகள் நடராஜப்பெருமானைச் சொன்னார். அந்த அப்பாவைப்போலப் பிள்ளையும் இருக்கலாம். ஆனாற் தாயைப்போலப் பிள்ளை என்று தான் வசனமென்றால் அந்தத்
தாயாரும் நம்முடை காமாட்சியாயிருக்கிற போது செக்கச் செவேல்
செல்வநாயகி முத்தையா
பலியாகொடை சைவ முன்னேற்றச் சங்கம்
தான். இலட்சக்கணக்கான ஜீவராசிகளைச் ஸ்ருஷ்டித்த இறைவன் இந்த மனித இனத்தினருக்கு மட்டுமே கொடுத்துள்ளார் வாக்கை. அந்த வாக்கை உண்டாக்குகிறவர் விநாயகப்பெருமானே என்றே தமிழிப் பாட்டி தமிழ் கி குழந்தைகளுக்குச் சொல் லிக் கொடுத்திருக்கின்றார். வாக்குண்டாம் என்று அவர் ஆரம்பித்ததே அந்த நூலுக்குப் பெயராகிவிட்டது. புலவர்கள் மட்டும் அதை மூதுரை என்கிறார்கள். வாக்குமாதிரியே நல்ல மனது கெட்டமனது என்று பிரிக்கமுடியாமல் ஏதோ ஒரு உள்ளுணர்ச்சி. ஒவ்வொரு இயற்கை வேகங்கள், அவற்றின்மேலேயே மீதி அதி தனை பிராணிவர் கீ க மும் வாழி கீ கை வாழ்ந்துகொண்டிருக்க, மனிதன் மாத்திரமே நல்லது கெட்டது என்று பாகுபடுத்திக்கொள்ள, அதிலே ஏதோ ஒரு சுதந்திரமும் படைத்தமனதை ஈஸ்வரன் கொடுத்திருக்கின்றார். இதில், மனது நல்லதிலேயே போகும்படியாக நல்ல மனம் உண்டாம் எனும்படி அநுக்கரகிக்கின்றவர் விக்னேசுவரர்தான் என்றுகுழந்தைப்ப ருவத் திலேயே தமிழ் மக்களுக்கு ஒளவைப் பாட்டி காட்டிக்கொடுத்திருக்கின்றாள். நல்லதாக நம்முடைய மனது உருவாகி அது நல்லவாக்காகவே பேசவேண்டுமானால், அதற்கு மனோவாக்குகள் போகவேண்டிய நல்ல வழியைத் தெரிவிக்கவேணும். அந்த நல்ல வழிக்குத்தான் தர்ம மார்க்கம் என்றும், நல்வழி என்றும் ஒரு உபதேச நூல்ை அந்தப் பாட்டி கொடு த திருக கினிறாள். அதிலேயும் ஆரம ப த தில் விக்னேசுவரரைத்தான் பிரார்த்தித்திருக்கின்றாள். பாலும் தெளிதேனும் பாடலில் நான் உனக்கு நாலுந்தருவேன், பதிலுக்கு எனக்கு நீ மூன்று கொடுத்தாற் போதும். பால் தேன், பாகு பருப்பு நாலையும் கலந்து உனக்கு நான் தருவேன், நீ, நான் நல்லவழியை எடுத்துச் சொல்வதற்கு உபாயமாக இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்கிற மூன்றுங் கொடுத்தாற் போதும் என வேடிக்கையாகப் பாடியிருக்கிறாள். இங்கே அவள் பிள்ளையாரிடம் முத்தமிழ் யாசிக்கிறதற்கு அவர் மேருமலையில் முத்தமிழ் எழுதிவைத்தாரென்று அருணகிரிநாதர் சொல்வது ஒத்துப்போகிறது. ஆகையினால் நல்வழி என்பது தான் "ஸத்கதி என்கிறது. உலக வாழ்க்கையை நல்லபடியாக நல்வழியிற் போய் வாழ்கிறதோடு ஸத்கதி முடியவில்லை.

Page 27
பிரார்த்திக்கின்றார்களே! அந்த சற்கதி என்பது தான் ன ஸத்கதி- மோட்சமார்க்கம், தர்மஅதர்ம, காம மோஷம்
கடைசியாகப் பதினோராம் திருமுறையிலேதானி , நம்பியா டர் நம்பி தாமே பொல்லாப் பிள்ளையர் மேற் பாடியிருந்த இரட்டைமணிமாலை அதிராவடிகளுடைய "மூத்தபிள்ளையார்
மும்மணிக்கோவை முன்னே குறிப்பிட்டதுபோல "ஒரு கோடு,
ல் இருக்கா.இரட்டை மணிமாலையில் இரண்டு தமான சந்த களிலுள்ள பாக்கள் மாற்றி மாற்றி வரும். னியில் மூன்றுவித சந்தங்களில் அமைந்த பாடல்கள் துபோலவரும். பரம்ேசுவரனின் புத்திரருக்கு விதவிதமான
மாலைகள். னிரண்டு அடியர்களுடன் நம்பியாண்டர் நம்பி முடித்தாரென்றால்
கிழாரின் பெயரும் அருண்மொழிதான். தமிழ் அருள்மொழிகளை எல்லாம் ஒரு அருண்மொழி ந்தார். இன்னொரு அருணி மொழி அந்த 5 g. த்திரங்களைப் படைத்துக் கொடுத்தி ருக்கின்றார். அருளியவர் விக்நேக்வரர். தமிழ் மக்களுக்கு இஹம், ரம்,இரண்டும் கிடைப்பதற்கு அவர் செய்திருக்கிற உபகாரம் வேறு ாருக்கும் செய்யவில்லை. இது ஜகத்குரு யூனிசந்திர சேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய - வாமிகள் அருளுரையிலிருந்து தொகுக்கப்பட்டது.
-
திருமண வைபவங்களுக்கும் ஏனைய வைபவங்களுக்குமான
சிகையலங்காரம்
மணப்பெண்ணை அலங்கரித்தல்
பூமாலை புனைதல் ஆகியவற்றுக்கும்
வீணை வகுப்புகளிற்கும்
திருமதி வாமன்
TEL: O181220 38.10
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காத்தருளும் தெய்வம் கந்தனவன் கையில்
காத்திருக்கும் திரு வேல்- இங்கு பூத்த சுகஅல்லல் துயரம் அறுத்திடப்
பாய்ந்துவரும் கந்தவேல்
ஆணவச் சூரனின் அங்கம் அறுத்திட
அனலொடு வந்திட்ட வேல்- எங்கள்
ஆணவப் பேயினை அறவோடொழித்து
அன்பு தரும் கந்த வேல்
வெற்றிவேல் என்றாடிப் பாடிடும் அடியார்
வெற்றிக்குக் கைதரும் வேல் - வேல வீரவேலைச் சொல்லி வேண்டி வணங்கிட
வேதனை தீர்த்திடும் வேல்
ஆறுமுகன் எங்கள் கந்தன் குமரனின்
அண்பினைத் தாங்கிய வேல் - அந்தப் பார்வதி மைந்தனின் கருணை மழையினை
பக்தருக் உவந்திடும் வேல்
தீய குணமெமைத் தாக்கி நின்றால் அதைத்
தீர்த்து ஒழித்திடும் வேல் - மனத் | துய்மை வளர்த்துச் சாந்தம் அளித்திடும் |
தங்க முருகனின் வேல்
முக்தி அழித்திடும் வேல்-மயில் சுந்தரக் கந்தனைச் சிந்தையில் வைத்திடச்
சுகமளிக்கும் வெற்றி வேல்
முந்தைவினை முடிபிறப்பு) இறப்பு:அழி |

Page 28
கலசம் சித்திரை-வை
அன்பு என்றால் என்ன? என்ற கேள்விக்கு அன்பு என்ற சொல்லின் பொருள் யாது என்ற கேள்விக்கும் பதில் தெரிந்துகொண்டு தான் எல்லோரும் அன்பு செய்கின்றார்கள் என்று எண்ணுவது தவறு. அன்பு என்ற தமிழ்ச் சொல் தருகின்ற பொருள் வெளிப்பாட்டையே பிற மொழிகளும் தத்தமது சொற்களால் தருகின்றன. இவை எவ்விதம் இருப்பினும் அன்பின் வெளிப்பாடு செய்கைகளினாலே வெளிப்படுத்தப்படுவதால் அன்பின் பொருளை உணர்த்து வதற்கு ஒரு ஊடகமாக உபயோகிக்கப்படுகின்ற மொழி முக்கியமானதாகாது. எனவே தான் இறை அன்புக்கு எல்லா மொழியும் ஒன்றே என்றாகிவிட்டது.
அன்பு என்பது உயிரினங்களுக்கு எல்லாம் பொதுவானதோர் உணர்வு என்ற போதும் இந்த அன்பு மானிடர்களிடையே அதிகம் பேசப்படுவதால் இது விலங்கு ணர்வாகிவிடுமா? இல்லை. மனித உணர்வு என்று கொண்டால் மட்டும் போதுமா? உயிரினங்கள் ஒவ்வொன்றும் தம்மைத் தாம் அன்பு செய்வதுடன் மற்றைய உயிரின ங்களையும் அன்பு செய்கின்றன. மேலாக அவையும் இயற்கையை இறைவனாக எண்ணி இறையன்பு செய்கின்றன. இங்கு உண்மை அன்பு வெளிப்படுகின்றது.
மானிடர்களிடையே அன்பு பலவகைப்பட்டதாக மாற்றமடைகின்றதைக் காணலாம். அவை உண்மை அன்பு, பொய் அன்பு , பேரன்பு, சிற்றன்பு எனலாம். மேலும் உண்மை அன்பு உள்ளன்பு , வெளிஅன்பு என்று இருபிரிவாகும் போது பொய்யன்பு தனியே வெளியண்பு என்ற வடிவத்தை எடுத்து விடுகின்றது. அது மட்டுமன்றி பொய்யன்பு போலியன்பாகவும் நடிப் பாகவும் வெளிப்படுவது இயல்பு. அனி பை அதைக்காட்டுபவர் காட்டப்படும் தன்மையைக் கொண்டு நுட்பமாக அளவிட முடியாதெனினும் உள்ளுணர்வால் ஓரளவு அன்பின் நிலையை அறியுமாற்றல் உயிரினங்களுக்கு உண்டு. உயிரினங்களிடையே காட்டப்படுகின்ற அன்பு எத்தன்மை யதாயினும் அவை சிற்றன்பு என்றே கொள்ளவேண்டும். இவை எல்லாவற்றிற்கும் மேலாக இறைவனை அன்பு செய்வதை பேரன்பு என்று கொள்ளவேண்டும். பேச்சிற்காக பேரன்பு என்று எல்லோராலும் பேசப்பட்டாலும் அது பேச்சளவிலேயே நின்று இறவைனுடன் உயிரினங்கள் காட்டுமன்பு குறிப்பாக மானிடர் காட்டுமன்பு பேரன்புநிலையை அடைவதற்கு பல தியாகங்கள் வேண்டும். எல்லோராலும் அந்தப் பேரன்பு நிலையை அடையமுடியாது. அதற்காக அதையடைய முயற்சிக்காமல் இருந்துவிடுதலும் நல்லதன்று. அன்பின் உயர்நிலையை இறைவனுடன் காட்டும் பேரன்பு நிலையே காட்டுமாதலால் அந்நிலையை அடைவதே மானிடரின் பெருநோக்காக
 

காசி-ஆனி 1995 - 26
இருக்கவேண்டும். அணி பினி தோற்றம் அல்லது அதனி வடிவமே உயிருடலெடுத்தல். அன்பு கொண்ட இரு உயிர்களின் உடற்சேர்க்கையால் புதிய உயிர் உடலெடுப்பதியல்பு . இதனை அன்பின் வடிவம் என்பதோடு அதுவே இறைவனின் விருப்பாகும் என்போம். உயிரினங்கள் தம்மைத்தாமே அன்பு செய்தல் முதன்மையானது. ஆயினும் தம்மையன்பு செய்வதோடு பிற உயிர்களையும் அன்பு செய்வது தான் அண்பென்றாகி விடுகின்றது.
அன்புடையவராதலும் அன்பிற்குரியவராதலும் அன்பின் இருவேறுபட்ட நிலைகள். அன்புடையவராதல் எனும்போது தம்மீதும் பிற உயிர்களின்மீதும் காட்டப்படுகின்ற அன்பு நிலையைக் குறித்து நிற்கும். ஆனால் அன்பிற்குரியவராதல் என்ற நிலையை அடைவது இலகுவானதாகுமா? இந்நிலை யானது உயிர்கள் மற்றவுயிர்கள் இடத்தும் இறைவனிடத்தும் எதிர்பார்க்கின்ற அன்பாகும். அன்பிற்குரியவராதல் என்ற நிலையில் பொய்யன்பும் இடம்பெறும். அது போலியாகவும் நடிப்பாகவும் இருப்பது உணரற்பாலது. இந்தப் பொய்யன்பில் மயங்கித் தவறுதலாகவோ அறியாமையினாலோ அன்பிற்குரிய வராதல் நிலையைக் கொடுக்கும் போது இந்நிலையில் நிலையற்ற தன்மை எளிதில் உணரப்படும் . இதனால் இந்தப் பொய்யன்பு நிரந்தரமான நிலையை அடைய முடியாது போவதுடன் முறிவடைகின்றது. இத்தகைய செயற்பாடு மனித சமுதாயத்தில் பெரிய அழிவுகளையும் தாக்கங்களையும் உருவாக்கிவிடுவதால் அன்பிற்குரியவராதல் என்ற நிலையை அன்பு செய்கின்றவர் செய்யப்படுகின்றவரின் உண்மை நிலை பினைச் சோதனை செய்து அதில் வெற்றி கொள்பவருக்கே வழங்குதல் பொருத்தமானது. இறைவனும் தன்னன்பிற்காக ஏங்கித் தவங்கிடக்கும் அடியவர்கள் மீது எண்ணற்ற சோதனைகளைக் கட்டவிழ்த்துவிடுவதுடன் இறுதி மட்டும் போராடி அதில் வெற்றி கொள்ளும் நிலையினை அடைபவரையே தமது பேரன்பிற்குரியவராக்கின்றார். மானிடத்தில் அன்பிற்குரியவராதல் நிலையை இலகுவாக அடைய முடியுமா? என்ன? பெற்றதாயிடமிருந்து தன் பிள்ளைக்குக் கிடைக்கின்ற அன்பிற்குரியவராதல் நிலை அந்தப்பிள்ளை வளர்ந்து வரும் காலத்தாலும் அந்தப் பிள்ளையின் குணத்தாலும் பழக்கவழக்கங்களினாலும் பாதிக்கப்ப டுவதுண்டு. சில சமயங்களில் முற்றாகத் துண்டிக்க ப்படுவதுண்டு நண்பர்களிடையேயும் இந்நிலை அடிக்கடி முரண்பட்டுப் போவதையும் முறிவடைந்து போவதையும் காணமுடியும். மாறாக வாழ்வியல் காலம் வரை மாறாத நிலையையும் அந்த உண்மையண்பினால் அவர்கள் பல நன்மைகளைப் பகிர்ந்துகொள்வதும் உணர்தற்குரியது. காதலர்களிடையேயும் இந்த நிலையை அடைய பல தியாகங்கள் செய்து நிரூபித்துக்காட்ட வேண்டிய தேவை ஏற்படுவதையும் நிரூபித்தாலும் நிராகரிக்கப்படும் நிலையில் மனமுடைந்து வாழ்வை அழித்துக்கொள்ளும் நிலையும் ஒரு தலைப்பட்ட

Page 29
றினாலும் இந்த அன்பு நோயால் பாதிக்கப்படுகின்ற இன்றும் இருக்கவே செய்கின்றார்கள். இத்தகைய ப அடைவதற்கே இத்துணை தொல்லை
றையன்பை, அந்தப் பேரன்பை அடைய எத்தனை |தியாகங்கள் செய்யவேண்டும். அத்தனையும் உண்மை |யன்பாகவே செய்யப்படல் வேண்டும் என்கின்ற உண்மை ன்பை பெறுதல் அத்துணை இலகுவானதல்ல
உணர்த்துகின்றது.
அன்பிற்குப் பலமுண்டா? கண்ணாற் பார்க்கமுடியாத காதலை கேட்டுணரமுடியாமல் உடலாலே தீண்டியும் முடியாத இந்த அன்பு எப்படி பலமுள்ளதாகும். ::::::: இப்படியான இறைவனது சக்தியைக்
பதனாலேயே சைவசமயத்தினர் "அன்பே சிவம் - - - - ழகாகக் கூறி இறைவனை நினைவுபடுத்து கின்றார்கள். தமக்கென்று வாழாப் பிறர்க்குரியராய் வாழ்ந்த
ன் அன்பின் பலத்தால் அவர்கள் சாதித்தது ULIMIT தாயன்பு தாய்மொழியண்பு தாய்நாட்டின் மீது ட அன்பு தன் மக்கள் மீது கொண்ட அன்பு அதன் ம் தன்னையே இழுத்து கொடுமை புரிவோரை
ர் உறங்கார் ஒரு நிலைத்திருப்பார்
லையெண்ணார் பேதமுற்றிருப்பார்-ஒன்றும்
சொல்லினும் தன்நிலை பெரிதுணர்வார்
3. நினைத்து நிலைத்திருப்பார் பெருமூச்சிடுவார்
உடல் இழைத்திடுவார்.
வெளிப்பாடுகள் உண்மையன்பு கொண்ட ாதலாகள காதலி நிலையினரிடம் காணமுடியும். இதனை அன்பு நோய் பிடித்ததனால் அருகியது எனலாம். மாறாக ன்பு கொண்டோர் அவ்வாறு காணப்படார். அன்பு ாண்டேர் பிரியும்போது பிரிவுத்துயரால் அழுதலும் புலம்பலும் நேரும்போது ஆனந்தமிகுதியால் அழுதலும் தன்னை மறந்து கதைத்தாலும் இயல்பாகும். இவை அன்பின் வெளிப்பாடு
綫 சக்தி மிகப்பெரியது. தூய்மையான உள்ளன்பு கொண்டவர்களை எந்தச்சக்தியாலும் பிரிக்கமுடியாது. மாற்றவும் இவ்வன்பு உயிரினங்களிடத்திலோ அல்லது ளிடத்திலோ மேலாக இறைவனிடத்திலோ தாக இருக்கலாம். எது எவ்வாறாக இருந்தபோதும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எத்தனை வந்தபோதும் அன்பின் பலத்தால் அ basis அவற்றை எல்லாம் இறுதியில் வெற்றி கொள்ள முடிகின்றது உண்மையான அன்பால் எதனையையும் வெற்றி கொள் முடியுமென்பது உறுதி. அதிலும் இந்த உண்மையன்பு நிலையை அடைந்துவிட்டால் அந்தப்பேரன்பினைப் பெறும் பாக்கியமே இந்த மானிடப் பிறவிக்கு மகத்தானது. உண்மையன்பினால் உயிர்கள் நன்மைபெறும் மக்கள்
நன்மையடையவர். எனவே இந்த உண்மையன்பைக்
கைக்கொண்டோராகி வாழ்ந்து அன்பின் பேரின்பநிலையான
இறையன்பை அடைவதே மானிடவாழ்வே பூரணப்படுத்தும் "அன்பே சிவம்
கோபுர வழிபாடு
இந்துக்கள் வழிபடும் கோயி
முக்கியமானவை. கோயிலில் நுழைவதற்குப் பல வாசல்கள் இருக்கும். இவற்றில் பிரதான வாசலில் உயர்ந்த கோபுரம்
இருக்கும். ஒரு கோயிலில் பல
இராஜகோபுரம் என்று சொல்லுவார்கள் இராஜகோபுரம் பல அடுக்குகளாய் அமைந்தி ருக்கும். பல நூறு சிற்பங்கள் அதில் இருக்கும். இராஜகோபுரம் ஏன் உயரமாகக் கட்டப்படுகின்றது? கோயில் என்பது இறைவன் குடியிருக்கும் இடமாகும். இறைவன் இந்த உலகத்தையே ஆளும் பேரரசர் அல்லவா? எனவே அவர் குடியிருக்கும் இல்லம் மிகப் பெரிதாக இருக்க வேண்டும் என்று நமது முன்னோர் கள் எண்ணினார்கள். அவ்வாறே செய்தார்கள். கோபுரம் உயரமாக இருப்பதால் வெகு தொலைவில் இருப்பவர்க்கும் கோயில் இருக்கும் இடம் எளிதாய் புலப்படும். வெகு தொலை விலிருந்தும் விரைவாய்க் கோயிலுக்கு வந்துவிட முடியும். இறைவனின் பெருமையை கோயில் கோபுரம் உணர்த் துவதாய் (35 Tura கோபுரத்தைக் கண்டவுடன் அதை வணங்க வேண்டும் என்று விதி வைத்திருக்கின்றார்கள். ஆலய வழிபாட்டில் முதலில் செய்யப்படுவது
கோபுர வழிபாடேயாகும்.

Page 30
ᏧᏏᏛuᏪᎭᏞf சித்திரை-வைச
பணிவின் பெருமை
-கா.சிவரூபன்
அகங்காரமும் ஆணவமும் மிகுந்துள்ள தற்போதைய காலகட்டத்திலே பணிவு, அடக்கம், என்பது பற்றிச் சற்று சிந்தித்தல் சாலச்சிறந்ததாகும். நான், நான் என்கின்ற எண்ணம் தான் அகப்பற்று ஆகும். நான் எல்லோரையும் காப்பாற்றினேன், நான் சமர்த்தன் என்ற எண்ணங்கள் எப்போது நிற்கின்றதோ அன்று பணிவும் தன் அடக்கமும் நம்முள் குடிவந்துவிடும். இன்றைய உலகில் இத்தனை அவலங்களுக்கும் அவதிகட்கும் காரணம் மக்களிடம் அடக்கம் பணிவு ஆகியன இன்மையே. மனிதனுடைய நற்குணங்களில் மிகவும் சிறந்து விளங்குவது பணிவு ஒன்றே ஆகும். ஒருவனிடம் கல்வி, செல்வம் பெரிய பட்டம், பதவி முதலியன இருப்பினும் பணிவு ஒன்று இல்லையானால் அவன் சிறப்படையமாட்டான். எல்லோரும் ஏகோபித்து அவனை மதித்து மரியாதை செய்ய மாட்டார்கள். உணவுக்கு உப்பு இன்றியமையாதது போல் வாழ்வுக்கு பணிவு இன்றியமையாததாகும். தெய்வப்புலவர் திருவள்ளுவர் தனது 1330 குறள்களில் அடக்கமுடமை என்ற அதிகாரத்திற்கு பத்து குறட் பாக்களைப் பாடி இருக்கின்றார். பணிவு என்கின்ற இந்த அரிய குணம் அனேகருக்கு இருப்பதில்லை. பணிவு டையார் தமது வாழ்வில் பெரும் சிறப்புக்களை அடைகின்றார்கள். ஆசிரியரிடம் பணிவுடன் நடப்பதனால் அவர்கள் தம்மிடம் உள்ள கல்விச் செல்வத்தை அள்ளி வழங்குகின்றார்கள். இதில் மிகவும் சிறந்து விளங்கியவன் அருச்சுனன். இவன் தனது குருவான துரோணரைப் பணிந்ததனால் அவரிடம் உள்ள வில்வித்தையை நன்கு கற்று, வில்லுக்கு விஜயன் என்ற பெயரைப் பெற்றான். பணிவு அடக்கம் என்ற பதங்களை கேட்டறியாத ஆணவமும் அகங்காரமும் மமதையும் கொண்ட துரியோதனனும் தம்பிமாரும் வசதியோடு வாழ விரும்பி இருந்தும் தம் குணத்தினால் அவமதிப்புக்கு ஆளானது மட்டுமன்றி அநியாயமாகக் குலத்தோடு மாண்டு ஒழிந்தனர். நன்கு முற்றிய நெற்கதிர் சாய்ந்து வளைந்து தலை குனிந்து நிற்கும். பதர் உள்ள கதிரோ நிமிர்ந்து நிற்கும். நிறையப் பழங்கள் உள்ள கிளை தாழ்ந்து பதிந்து இருக்கும். இதனால் உயர்ந்து நிமிர்ந்து நிற்பதற்கு சிறப்போ மதிப்போ கிடையாது. அதுபோலவே பணிவு டையவர்க்கு என்றும் சிறப்புண்டு . அனுமார் மிகுந்த வலிமையுடையவர். ஆனாலும் அவர் ராமபிரானிடம் பேசும்போது வணங்கிய உடம்புடன் கையினால் வாயை மறைத்து
பயபக்தி விசுவாசத்துடன் நிற்பார்.
வணங்கிய மேனியன் மறைத்த வாயினன். நுணங்கிய கேள்வியன் நுவல்வதாயினான்.
அறிவு உயர உயர அடக்கம் உயரவேண்டும். அடக்கம் அறிவின் மிகுதியைக் காட்டுகின்ற ஓர் கண்ணாடி போன்றது. வெறும் குடம் தளம்பும் வெண்கல மணி கூடுதலாக ஒலிக்கும். தங்கமணி ஒலிப்பதில்லை. அதனால் தங்கமணிக்கே பெருமை அதிகம்.
கம்பர், ஒட்டக்கூத்தர், புகழேந்தி பொன்ற பெரிய புலவர்களும் திருநாவுக் கரசர் போன ற நாயன மார் களும் எத துணை அடக்கமுடையவர்களாக இருந்தார்கள் என்பதற்கு அவர்களுடைய பாடல்கள் இன்றும் சான்று பகர்கின்றன. ஒருசமயம் திருநாவுக்கரசரை காணி பதற்காக ஞானசம்பந்தர் அவர் வாழும் பதிநோக்கி வந்துகொண்டிருந்தார். அவரை அடியவர்கள் பல்லக்கில் இருத்தி தோள்மீது காவிக் கொண்டு வந்தனர். நாவுக்கரசர் வதியும் பதியை அண்மித்ததும் சம்பந்தப்பெருமான் அப்பர் எங்குற்றார் என வினாவினார்.

ாசி-ஆனி 1995 28
உடனே பல்லக்குக் காவிக்கொண்டு வருபவர்களில் ஒருவரிடம் இருந்து தங்களைத் தாங்கும் பேறு பெற்று அடியேன் இங்குற்றேன் என்ற பதில் வந்தது. இக்கூற்றைக் கேட்டுத் திடுக்குற்ற சம்பந்தப்பெருமான் நாவுக்கரசரை வணங்குமாறு செல்ல நாவுக்கரசர் சம்பந்தப்பெருமானை ஆரத்தழுவி ஆனந்தக்கண்ணிர் சொரிந்த காட்சி அன்றோ அப்பரின் வயதிற்கும் பழுத்த ஞானத்திற்கும் எத்துணை இறுமாப்பும் இல்லாமல் பரிவும் பாசமும் பணிவும் மேலிட உருகுகின்றார்கள். காரணம் அவர்கள் ஒருவரில் ஒருவர் தம்மை ஆட்கொண்ட ஆதிமூலமான ஆண்டவனைக் கண்டார்கள். அதனால் பண்போடும் பணிவோடும் வாழ்ந்தார்கள். நம்மில் பலர் அப்பெருந்தகைகள் காட்டிய வழியில் செல்ல இயலாமல் இறுமாந்திருக் கிண் றோம். இப் பிறவி கிடைத்ததன் பயனை அடையமுடியாது அலைகின்றோம்.
முன் ஒருபோது சோழமன்னன் பொய்யா மொழிப் புலவரைச் சந்தித்தபோது புலவரே என்று மன்னன் விழித்தான். அதுகேட்ட பொய்யாமொழிப் புலவர் உடம்பிலே மின்சாரம் பாய்ந்தது போல் திடுக்கிட்டு உள்ளமும் உடலும் நடுங்கிப்பதறினார். மன்னவன் தாம் ஏதோ தவறாக அழைத்துவிட்டோமோ? புலவர் மனம் புண்பட்டதே எனக் கருதினான். புலவரை பூபாலன் தொழுது என்னை மன்னிக்கவேண்டும் புலவரேறே என்றே அழைத்திருக்கவேண்டும், நான் அடை இன்றி வெறும் புலவரே என்று அழைத்துவிட்டேன் மன்னித்தருள வேண்டும் எனப்பணிந்தான்.
பொய்யாமொழிப்புலவர் முன்னைக் காட்டிலும் பன்மடங்கு நடுக்கமுற்றார். மன்னர் பெருமானே இன்னுமொரு முறை இப்படி அழைக்க வேண்டாம் இப்படி அழைப்பது எனக்கு மிகுந்த வேதனை தருகின்றது என்றார். சோழமன்னனுக்குப் புலவருடைய சொற்பொருள் விளங்க வில்லை. அவருடைய கருத்தும் தெளிவாகவில்லை. "புலவரே! தாங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதை விளக்கமாகக் கூறுங்கள் என்றான். மன்னரே மறுபடியும் மறுபடியும் என்னைப் புலவரே என்று அழைக்கிறீரே அறம் என்ற மகாபாரதத்தைப் பாடிய பெருந்தேவனாரையும் புலவர் என்று கூறி அறம்பொருள் இன்பம் என்ற முப்பாலையும் கூறிய திருவள்ளுவரையும் புலவர் என்று கூறி அகத்தியரையும் புலவர் என்று கூறி அடியேனையும் புலவன் என்று கூறியதனால் இந்த உலகம் பொறுக்குமா என்று கூறிக்கண்கலங்கி நின்றார். இதைப் பின்வரும் பாடல்களால் புலவர் கூறுகின்றார்.
அறம் உரைத்தானும் புலவன் முப்பாலின் திறம் உரைத்தானும் புலவன் -குறுமுனி தானும் புலவன் தரணி பொறுக்குமோ யானும் புலவன் எனில்
சாபாநுக்கிரக சத்தி உடைய அப்பெரும் புலவருக்கு இத்துணை அடக்கமும் பணிவும் இருந்தது. இப்பாடலைப் படித்த பின்பும் கூட நம்மில் எத்தனை மாந்தர்கள் தமது நிலையை உணர்ந்து தமது நிலை தடுமாறாது நடக்கின்றார்கள். சிறிய வெற்றிலைபாக்குக்கடை வைத்திருப்பவரும் பெரிய மொத்த வியாபாரியும் முதலாளி என்றே கூறிக் கொள்ளும் காலம் இது. இக் கேட்டை உணர்ந்திருந்த வள்ளுவப்பெருந்தகை
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்துவிடும் என்றார்.
மனிதகுலம் வள்ளுவர் காட்டிய வழிநின்று பண்போடும் பணிவோடும்
பல்லாண்டு இன்புற்றுவாழ இறைவனைப் பிரார்த்திப்போமாக

Page 31
எத்தனையோ தமிழ்ச் சிறுவர்கட்கு தமிழையும் சை எவ்வளவோ கஸ்டத்தின் மத்தியிலும் அரும்பணியா சொந்தமாக ஒரு கட்டிடம் பங்குனி இரண்டாந் திகத அதுவும் புண்ணிய பூமியாம் மனோபார்க்கில் இச்சங்கத்தின் சேவைகளும் தொண்டுகளும் மேலு தமிழிற்கும் சைவத்திற்கும் சேவையாற்ற வேண்டுெ வாழ்த்துகிறேன்.
தர்சன் தர்மசேனா நால்வர் தமிழ்க் கலை நிலையம்
VHO IS SIVA ?
Lord Siva is God, the uncreated Supreme Bei The universal One is Siva. That without place Siva." Lord Siva, God, was never created. H including everybody's individual Soul. God S perfections. Parasiva, Absolute Reality, time perfection.His second perfection, Pure Consc and is found in every action and particle of Paramesvara, is our personal Lord and Ruler Lord Siva is the Divine Father/Mother. That great God Siva
-Sivaya Subramuniyaswar
 
 
 

லும் ஒரு மாணவன். என்னைப் போன்ற வத்தையும் புகட்ட வேண்டும் என்ற நோக்கத்தோடு ாற்றி வந்த சைவ முன்னேற்றச் சங்கத்திற்கு 3. தி கிடைத்ததையிட்டு பெரும் மகிழ்ச்சி அடைகி
ம் மேலும் விரிவடைந்து பல்லாயிரம் ஆண்டுக மன இலண்டன் முருகப் பெருமானை வேண்டி
ng. My Satguru, Sage Yogaswami, proclai
or name is Siva. The splendour known as C e has existed forever and has created a
less, formless, spaceless, is His unmanifest firs iousness or Parasakti, is all-pervasive, infinitive, His creation. His third perfection, Primal Soul of all three worlds. It is comforting to know that close to us, that watchful and that loving is ou

Page 32
கலசம் சித்திரை-வைகாசி-ஆ
Contact us for all legal matters. We have in various fi Espec * Civil & Criminal Litigat
* Matrimon
* Person
* Commerci * Conve
ALL LEGAL AID WC
K. Pathmanathal
(Master of Law in
 
 
 
 

a large number of SolicitorS Specialising
lds of law,
ially:
ial matters
al Injury
al Litigation
yancing
ity & Welfare Benefits )RK UNDERTAKEN
ܠܐ 고,
h L.L.M (Bristol)
ommercial Law)

Page 33
சித்திரை -வைகா
RAJU PAT
tgs 26of
Experts in exqu Tamils' traditi
ZSZSZS L S ZSL S S LLLSSZSS LLSS LLLSS T SLLLSS LS SLL SLL S S0 L LL SLL L L S L0 S L S LS SL S LSLSSL L S SLLLSSSZSSLLLSSZSZSZS
 
 

சி-ஆனி 1995 t
rNI & son
LLLL L LL LLL LLL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LLLL LLLL LLL LLLL LL LL LLLL 0 SZ LL Z L Z 0 LL LS L LL LLL
isite modern & Onal jeWellery
L L L L L SLL L L S L L L S L LLLL S LLL LLLL LLLLL Z LLL SLLLLL LL0 S Z S L S L S L S Z Z ZSZ L S L SL S LLLL L LL
நியாய விலைக்கு லண்டனில் நீங்கள் நாடவேண்டிய ஒரே தங்க மாளிகை உங்களுக்குத் தேவையான jrTajl, blu girIJair, eSILLy2uGi) பதக்கம், மோதிரம், காப்பு தாடு, நெக்லஸ், சங்கிலி ஆகியவற்றுக்கு நீங்கள் விரைந்து செல்லவேண்டிய
ஒரே இடம்
RA U PATTIN & SON PATTNI HOUSE, 58-6O EALI NG ROAD, WEMBLEY, MDDX HA O 4 TGA TEL:O1819O3 6677/2859
08 90 20577 FAX: 0181 903 4887
பொன்னுருக்கலுக்கு வேண்டிய வசதிகள்
நிறைந்தது எமது ஸ்தாபனம்

Page 34
கலசம் சித்திரை-வைக
TE : O 18 1 884 4979 249-251 FOR
SR KANN. பூனி
D566)
WHOLE SALE- REAL-AFRO CARBBEAN-ASAN 8 CONTIN:
2ஓடியோ கசட்டுகள்
தமிழர் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு பூணி கண்ணன் ஸ்ரோர்சில் 25 பவுண்களுக்கு மேலாக ஒரேதடவையில் கொள்வனவு
செய்வோருக்கு தமிழ்ப் பாட்டுகள் அடங்கிய 2 ஓடியோ கசட்டுகள் இலவசமாக வழங்கப்படும்.
இவ்வரிய சந்தர்ப்பம் 30-04-1995 வரை மட்டுமே,
25 , புதுக்கடை , பல
 
 
 
 
 

ாசி-ஆனி 1995
32
E STREET FAX:
AN SUORES
6 or 6)GJf6)
ENTAL MNMARKET GUALITY MEAT&ASIAN SEAFOOD CENTRE
O181 345 6317
རྒྱལ་མི་" " ་ w ****** **
FAX, TOCOPY e 4p Only
லி வீதி , திருநெல்வேலி , யாழப்பாணம் , இலங்கை

Page 35
SHIPPING - AIR F
UNACCOMPANIED BAGGAGE - PERSC VEHICLES, MA
Y7. TO COLOMBO AND OTHERW
MAN A GENT
A R
LONDON - COL ( March - 4 April £430
18 April - 01 July £410 II July - 22 July £555* 01 Aug - 10 Aug £555
01 Sept - 3. * Advance Purchase - shou
LONDON - MADRAS - TRWE
0I MAY - 06 JULY & I8 AUC (No Stop over 0I MAY - 0 1 JULY & 01 SEPTE (With stop ove 02 JULY – I0 JULY & II A II JULY - 22 JULY & I A 23 JULY TO (£10 Airport tax will be charge BAGGAGE ALLC
உங்கள் விமானப் பயண ஒழுங்கு
பூனி லங்காவிற்கு அனுப்புவதற்கும் சேவையினைப் பெறுவதற்கும் ந
GLEN CARRIE
14, Allied Way of warple Wa
Telephone : 0181-7408 Fax : 011811 - 740 41229) Te
BONDED W LAKSIRISEVA, 253/3 Avissawe
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

s LUMITED
R E G H T - TRAWE
ONAL EFFECTS, HOUSEHOLD GOODS,
CHINERY ETC.
WORLD WIDE DESTINATIONS 7 FOR ARLANKA
ANKA
OMBO -- LONDON 05 April - 17 April £485 02 July - 10 July £445* 23 July - 31 July £600* * III Aug - 3 I Aug £445 () Noy £430 ld be ticketed by 30th April
NDR U M - TRICH Y - L O NDON GUST - 30 NOVEMBER £4 I ()
in Colombo) EMBER - 30 NOVEMBER {460 'r in Colombo) UGUST -31 AUGUSTE495 JGUST - 10 AUGUST £620
I JULY £665 d in addition to the above fares) )WANCE 40 KGS
ONDED WARE HOUSE IN COLOM Bo
களுக்கும் உங்களின் பொருட்களை ) குறைந்த கட்டணத்தில் நிறைந்த நீங்கள் நாடவேண்டிய ஸ்தாபனம்,
RS VED)
y, Acton, London W3(ORQ
379 / 0181-749 (595 Ilex : 929657 Glenca G
AREHIOUSE
la Rd, Colombo 14, Tel: 575576

Page 36
BH EYE СЈЕМ
பகவான்ஜி
first 944 tara Tsavs III
5.
DISCOUNT WOUCHER FOR PURCHASE OVER
E5OOOO
“BHAG
48 EALIN(
OFFERENDS MIDDL UNE 95 TEL: O1819O FAX:
| OPEW7
சைவ முன்னேற்றச் சங்க பதிப்பகத்தில் அச்சமைப்பும் செல்வம் அச்சகத்தினரால் அச்சிடப்பட்டு சைவ முன்ே
 
 
 
 
 
 
 

AGWAWW /ELLERS Ltd
சி. ஜீவர்லர்ஸ்
shop for / fixed CDias
அம்மன் தாலி தாலிக்கொடி பெண்ரன் அட்டியல் பதக்கம் மோதிரம் காப்பு தோடு நெக்லஸ் சங்கிலி
உங்கள்
స్తే வசதிக்கேற்ப பொன்னுருக் கலுக்கான
வசதிகள்
J. C. JEWELLERS
WANUI HOUSE' G ROAD,WEMBLEY, ESEX HAO 4TGQ 3 OO33/ O181903 4.723
O1819 OO O215
DAYSA WEEK
வடிவமைப்பும் செய்யப்பட்டு, ஐரோப்பாவில் தரமான னற்ற சங்கத்தால் 1 4.1995 அன்று வெளியிடப்பட்டது.