கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சோஷலிஸம் தத்துவமும் நடைமுறையும் 1979.06

Page 1
லண்டனிலிருந்து வெளிவரும் முத
 

曼
ஈசன் நெறி பரப்ப இன்தமிழ் வளர்ப்போம்"
sešās Terešo e.00
Z

Page 2

縱Ɔ縱
※
ATD
திண்டு
ாழததுக்களை Giž 「 徽
துக் air,
*

Page 3
ஈசன் நெறிபரப்ப இன்
Lοσυσή
சித்திரை - வைகாசி
இங்கும் போர் 11
கலசத்தினுடைய பதினான்காவது இதழ் இது கலசம் பத் செய்துவிட்டது என நாம் இறுமாப்படைந்து கொண்டி மாதாந்தபூசைகள் தேவைதானா? சிறுவர்கள் தேடி செய்யப் போகிறார்கள்?- இவற்றுக்குச் செலவாகு பிரயோசனமாக இருக்கும் என்று சில அன்பர்கள் இவர்களுக்குப் பதில் சொல்லியாகவேண்டிய நிலைை ஏற்பட்டுள்ளது. ஒரு இனம் அரசியல் ரீதியாகப் பாதிக் இரு பிரிவினராகப் பிரிந்து விடுகிறார்கள். இவர்களில் அக்குணத்தினின்று விலகியவர்களாகவும் தோற்றுகி பெரும்பான்மையாக வெளிநாடுகளில் வதியும் தமிழ் மக் தம்மை இழந்து முகம் தெரியாத மனிதர்களாகி விடு " தவிர்க்கமுடியாத' என்கின்ற நிலையை இல்லாதெ கொண்டவர்களது முக்கிய கடமையாகும். நாட்டிலே அளவு வெளிநாடுகளில் argii năsa5 sepasar மிக அவசியமாகும். நாட்டிலே மக்கள் உயிரை இழந் கலைகலாசாரங்களைத் தாரைவார்த்து நடைப்பினங்கள் தான். இந்த நிலையிலிருந்து மக்களைக் காப்பாற்றும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இங்கு சைவ ( நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. நாட்டில் துப்பாக்கி ஆய ஆயுதங்களாக மாதாந்த குருபூசைகளும் கலசம் சஞ் வினாத் தொடுக்கும் நண்பர்கள் புரிந்து கொள்ளுதல் நண்பர்கள் ஒருவகையான தழுவல் தன்மை கொண்ட உதவிசெய்யும் பணியில் இருந்து தப்பிக் கொள்ை எனக்குப்படுகிறது. நண்பர்களே நம்மைநாம் புரிந்து கெ சிறுவர்களுக்கும் ஆனவற்றை நாம் புரிய துணை தி ஓம் நமசிவாய
மு. நற்குணதயாளன்
ஆசிரியர்: திரு மு. நற்குணதயாளன்
நிர்வாகப் பொறுப்பு: திரு வ.இ. இராமநாதன்,
நிர்வாகக்
திரு மாணிக்கம் கரேஷ், திரு இ. மு திருமதி தமிழரசி சிவபாதகந்தரம், திரு சி. அ KALASAM, 42 Stoneleigh Road, Cla
Te1 : DB
 

தமிழ் வளர்ப்போம்
சம்
- Regaf 1»
அங்கும்போர் 11 LLLTLLLL LL L LLTTTT GTCTLLTTTTT CLG GCLTTLTTTLCL டிருக்கும் இந்நேரத்தில் கலசம் இப்போ அவசியமா? பார திருவாசகங்களை மனனம் செய்து எணர்ன ம் பணத்தை வருக்கு அனுப்பினால் எவ்வளவு தமிழ்விரும்பிகள் என்னை நேரேயே கேட்டார்கள். ம கலசத்தின் ஆசிரியர் என்ற முறையில் எனக்கு ப்படும்போது அவ்வின மக்கள் தவிர்க்கமுடியாமல் ஒருசாரார் போர்க்குணமிக்கவர்களாக்வும் மறுசார் ன்றனர். இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவர்களே காவர். இவர்கள் வெளிநாட்டு கலாசார மோகத்தில் வதும் தவிர்க்க முடியாததாகிறது. ஆனால் இந்த ாழிப்பது இனத்திலும் மதத்திலும் மிகுந்த பற்றுக் விடுதலைக்குப் போர் எவ்வளவு அவசியமோ அதே சார மத உணர்வுகளைக் காப்பாற்றிக்கொள்வதும் து கொண்டிருக்கிறார்கள். வெளிநாடுகளில் மக்கள் rras alaba aprisdir-Qguayó ஒருவகை மரணம் உன்னத பணியில்தான் சைவ முன்னேற்றச் சங்கம் முன்னேற்றச் சங்கமும் ஒருவித யுத்தத்தையே புதமாகிறது. இங்கு சைவ முன்னேற்றச் சங்கத்தின் சிகையும் பயன்படுகின்றன. இதனை அர்த்தமில்லாமல் மிக நன்று என நினைக்கின்றேன். இப்படியான வர்களே. ஏனென்றால் இவர்கள் இருசாராருக்கும் தற்காக இப்படியான நாடகங்களை ஆடுவதாக ாண்டு தம் இனத்துக்கும் தம் இனத்தின் வருங்காலச் biasarras,
ணை ஆசிரியர்: திரு க. ஜெகதீஸ்வரன் துணை நிர்வாகம்: திரு. சிவ. அசோகன்
*ԾԱ9
ருகதாசன், திரு ந. சிவராசன் ற்புதானந்தன், திரு பொ. கந்தரலிங்கம்
yhall, Ilford, G5 OJO. England 24 B5

Page 4
கலசம்
கோயில் இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம் என்பது ஆன்றோர் மொழி. இம் முதுமொழிக்கிணங்கவோ என்னவோ இப்போ லண்டனில் பல ஆலயங்கள் தோன்றிக் கொண்டிருக்கின்றன. இத்தோற்றங்களின் வரிசையில் ரூட்டிங் நகரில் பூரீ மஹா முத்துமாரியம்மன் ஆலயம் ஒன்றை தோற்றுவித்துள்ளனர். சிவயோகம் என்ற ஒரு அமைப் மினி ஆலயப் பணியாக இக் கோயில் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இவ்வாலயத்தின் கும்பாபிஷேகம் ஏப்பிரல் மாதம் ஐந்தாம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நகரின் பிரதான வீதியில் உள்ள மாடிக் கட்டிடம் ஒன்றில் இந்த ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகக் கிரியைகளை இலண்டன் பூரீமுருகன் ஆலய பிரதமகுருக்கள் பூரீ நாகநாதசிவம் குருக்கள் திறம்பட நடாத்தினார். ஆலயத்தின் அர்ச்சகராக சிவாச்சாரியார் சங்கரக் குருக்கள் இருக்கிறார்கள். இந்தக் கும்பாபிஷேகம் பார்க்கக்கிடைத்தது என் பாக்கியம் என்றே கருதுகிறேன். அன்னையின் அழகைக்கான கண்கோடி வேண்டும். சிலை அமைப்பு அத்தனை அழகு உள்ளே நுழையும்போதே காதிலே விழுந்த மந்திர உச்சாடனமும் மணி ஒலியும் மனதைப் பக்திப் பரவசமாக்கின. பக்தர்களின் அரோகரா கோஷமும் வேதியரின் மந்திர ஒலியும் ஒருங்குசேர அன்னைக்கு அபிஷேகம் நடந்தது. பால், தயிர் பஞ்சாமிர்தம் என்று பஞ்ச பூத சம்பந்தமான சேர்க்கை இறைவழிபாட்டில் ஒரு அம்சம் என்பதை நினைவுறுத்த அடுத்தடுத்து நடந்த அபிஷேகம் கண்ணுக்கு அழகையும்
 

1996 சித்திரை - வைகாசி- ஆனி ية
DIflining) dba

Page 5
கலசம்
*Caseg
கருத்துக்கு அமைதியையும் அணித்துக் கொண்டிருந்தது. சைவ முன்னேற்றச் சங்கத் தொண்டர்களும் சிவதொண்டன் நிலைய தொண்டர்களும் சிவயோக நிலைய தொண்டர்களும் திருப்பணிகளில் துரிதமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இது பார்க்கக் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. கோயிலில் விநாயகர் இடப்புறமும் சிவலிங்கம் வலப் புறமுமாக அமைய நடுவே அணி னை காட்சிதருகின்றான். இதற்கு முன்னாலும் நெஞ்சுவரையான அம்மன் சிலையொன்று கண்னைப் பறித்துக் கொண்டிருந்தது.
 

H சித்திரை - வைகாசி- ஆணி 1996
அபிஷேகத்தைத் தொடர்ந்து பூசை வழிபாடு நடைபெற்றது. பக்திமயமான பஜனை பக்தர்களை பக்தி லாகிரியில் மிதக்கச் செய்து கொண்டிருந்தது.வழிபாட்டின் முடிவில் பிரசாதம் வழங்கப்பட்டது. மனம் நிறைந்த வழிபாட்டுக்குப்பின் வாய்க்குச் சுவைநிறைந்த பிரசாதம். இவற்றை முடித்து வெளியே வரும்போது கால்கள் வீடு செல்ல மறுத்தன. ஏன்? எனக்கே புரியவில்லை.I
நடைசியந்ந கும்பாபிஷேகத்தைத் சிதாடர்ந்து டி3 நாட்களுக்கு மண்டலாபிஷேகம் நடைசியறுகின்றது.
இதனில் பங்குபற்ற விரும்புவோர் அஆவலகத்துடன் சிதாடர்பு சிகாள்ளவும்
TEL (DB 767 BB
கலசத்தின் புகைப்படப்பிடிப்பாளர் பா.
(Singam photo studio)

Page 6
கலசம்
මජ්(0]
இ. கட்டுரைத்தொடரின் இரண்டாவது அம்சமாக திருவெம்பாவையைத் தேர்ந்தெடுத்துள்ளேன். முதலாவது அம்சமாக சிவபுராணத்துக்குக் கருத்துக் கூறியபோது பலருடைய அறிவுரைகளும் பாராட் டுக் களும் கிடைத்திருந்தன. தேவார திருவாசகங்கள் அவசியமா என்று வினா எழுப்ப்பபட்டு ஒரு சாராரால் முற்றாக அவை ஒதுக்கப்பட்டும் ஒரு சாராரால் நன்கு பாராயணம் செய்யப்பட்டும் வருகின்ற காலமிது. இதற்கு நாம் யாரையும் குற்றம் சொல்லமுடியாது. இப்படியான இந்த சூழ்நிலைக்கு பாடல்களின் கடுமை முன்வைக்கப்படுகின்றது. இதை நாம் எந்த வகையிலும் ஏற்றுக் கொள்வதற்கில்லை. ஏனென்றால் இவர்கள் தமிழ்மொழி அறிவை காலத்துக்குக் காலம் சுய தேவைகளின் பொருட்டுக் குறைத்துக் கொண்டு வருகின்றார்கள். அரசியற் சூழ்நிலைகளும் கலை கலாசார மறுமலர்ச்சிச் சிந்தனைகளும் உலோகாயத வாத சிந்தனைகளும் இவர்களுக்குத் துணை நிற்கின்றன. இந்த நிலை மாறியாகவேண்டும் என்பது என் அவா. ஒரு பண்டம் சுவையானது என அறிந்து கொண்டால் மனிதன் அதனைப் பெற்றுக்கொள்ள பணத்தை முன்வைப்பதில்லை பதிலாக அதனை எவ் விலை கொடுத்தும் வாங்கி விடுகின்றான். இதைப் போலவே எமது தேவார திருவாசகங்களின் உட்பொருள்களை இலகு தமிழில்
 

வைகாசி- ஆனி 1996
சித்திரை -
மு. நறகுனதயாளன

Page 7
கலசம்
a
புரிந்து கொள்ள வைத்துவிட்டால் சுவைக்காக தாங்கனாகவே காலப்போக்கில் இவற்றை நாடுவார்கள் என்பது என் ஆதங்கம். இந்த ஆதங்கத்தினால் தான் மாணிக்க வாசகளினது சமூகப் பார்வையினை அவரது பாடல்களினுாடாக உங்களுக்குத்தர முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். உங்களது அபிப்பிராயங்களை எழுதி அனுப்புங்கள். இம்முறை மாணிக்கவாசகர் சக்தியை வியந்து மனமுருகிப்பாடிய திருவெம்பாவைப் பாடல்களைப் பற்றிக் கூறவுள்ளேன். இது இருபத்தொரு பாடல்களைக் கொண்டுள்ளது. மொத்தமாக 18 வரிகள்.
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியை யாம்பாடக் கேட்டேயும், வாள்தடங் கண் மாதே! வளருதியோ?வண்செவியோ நிண்செவிடதாண்? மாதேவன்வார்கழல்கள் வாழ்த்தியவாழ்த்துஒலிபோய் வீதிவாய்க் கேட்டலுமே, விம்மி விம்மி மெய்ம்மறந்து போதுஆர் அமளியின் மேல் நின்றும் புரண்டும் இங்கண் ஏதேனும் ஆகாள், கிடந்தாள், எண்னே? எண்னே? ஈதே எம்தோழிபரிசு? ஏல்ஓர் எம்பாவாய்
ஆண்டவன் எப்போதோன்றினார் எப்போ மறைவார் என்று யாருக்குமே புரியாது தெரியாது. இதனால் தான் மாணிக்கவாசகர் இறைவனை அரும் பெரும் சோதி என்றும் ஆதியும் அந்தமும் அவருக்கு இல்லை என்றும் கூறுகிறார். இப்படியான இந்த சோதி வடிவான இறைவனை நினைந்து நாங்கள் பாடிக் கொண்டு வரும்போது( வான்தடங்கண்-ஒளியுமிழும் அகன்ற கண்கள்) ஒளியுமிழும் அகன்ற கண்களையுடைய பெண்னே இன்னும் நீ துரங்குகிறாயா? உன் செவிகள்தான் என்ன செவிடா பெருமைக்குரிய எம் இறைவனின் திருவடிகளை நாம் வாழ்த்திப் பாடிய வாழ்த்து ஒலிகள் கேட்டு ஒருத்தி பட்டபாடு உனக்குத் தெரியுமா? விம்மிவிம்மி மலர்ப்படுக்கையிலே புரண்டு புரண்டு துடித்தாள். தன்னை மறந்தாள் நிலைகுலைந்து தவிக்கிறாள் இத்தகைய அனுபவத்தை நீயும் பெற மலர்ப்படுக்கையை விட்டு எழுந்தோடிவாவேன்? இங்கு இறைபக்தியின் உணர்வுநிலை தெளிவாகக் கூறப்பட்டுள்ளதைக் காணலாம், இறைவனது நாமம் எம் செவிவழி புகுந்துவிட்டாலே நாம் பரவசநிலையை அடைந்துவிடுகிறோம் என்பதை ஒரு பெண்ணை உவமையாக்கிக் கூறியுள்ளார்.

சித்திரை - வைகாசி- ஆனி 1996 **
“பாசம்பரஞ்சோதிக்கு" எண்ாய், இராய்பகல் நாம் பேசும்போது: எய்போது இப்போது ஆர் அமளிக்கே நேசமும்வைத்தனையோ?நேரிழையாய்!-நேரிழையீர்! சீசீ இவையும் சிலவோ? விளையாடி ஏகம் இடம் ஈதோ? விண்னோர்கள் ஏத்துதற்தக் கடகம் மலர்iபாதம் தந்தருள வந்தருளும் தேசண், சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள் ஈசனார்க்கு அண்டி ஆர்?யாம் ஆர்?-ஏல் ஓர் எம்பாவாய்
இப்பாடல் இருவருடைய உரையாடலாக அமைகிறது. ஒருத்தி படுத்திருக்கிறாள். ஒருத்தி விழித்திருக்கிறாள். விழித்திருப்பவள் படுத்திப்பவனைப் பார்த்துக் கூறுகின்றான். நல்ல அணிகள் பூண்டவனே நாம் பேசிக்கொண்டிருக்கும் எந் நேரமும் என் காதல் இறைவன்மீதுதான் என்று கூறுவாய். எப்போ நீ இந்தப் பஞ்சனைமீது காதல் கொண்டாய் படுத்திருப்பவள் உடனே எழுந்து விடுகிறாள். நல்ல அணிகள் பூண்டவர்களே சீச்சி இப்படியெல்லாம் பேசலாமா? ஏசி நாம் விளையாட இதுவா நேரம் இதுவா இடம் தேவர்களே பரமன் அடிகனை வணங்குவதற்கு தாம் கண் தகுதியுடையவர்கள் அல்ல என்று வெட்கப்படுகின்றார்கள். ஆனால் சிவலோகத்தில் எழுந்தருணியிருக்கும் ஒளிமயமான இறைவன் தன் திருவடிகணை எமக்குத் தர வந்திருக் சின்றான். அவி வளவுக்கு நாம் தகுதியுடையவர்களா? இதைப்பற்றியல்லவா நாம் சிந்திக்கவேண்டும் என்கின்றாள். ஞான மாாக்கத்தில் செல்கின்ற மனிதர்களுக்கு விளங்காத இறை தத்துவம் பக்திமார்க்கத்தில் போகின்றவர்களுக்கு விளங்குகின்றது. இவ் அரிய கருத்தை எவ்வளவு அழகாக மாணிக்கவாசகர் இரு பெண்களின் உரையாடல் மூலமாகக் கூறியிருக்கிறார். இப்படி எத்தனை எத்தனை பொக்கிஷங்கள். (இன்னும் வரும்.)
ஒன்று தீயதை அழிக்கவும் இன்னொன்று
நல்லதைக் காப்பாற்றவும் தனது - சக்தியைப்பயன்படுத்துகிறது. இரண்டும் ஒன்றுக்கொன்று நேர்மாறாய்த் தோன்றினாலும் இறுதியில் நல்ல பயன் விளைகிறது. இதைப் பராஸ்பர என்றும் குறிப்பிடுவார்கள். சிவபெருமான் துஷ்டசக்திகளைத் துாண்டிவிடுவதும், விஷ்ணு தலையிட்டுக் காப்பாற்றுவதும் இந்தத்தத்துவத்தையே விளக்குகிறது.

Page 8
கலசம்
சிவதொண்டு எனும் பதத்திற்கு முழுமையானதொரு வரைவிலக்கணத்தைக் கூறுதல் இயலாது. அதன் பொருளைப் பரந்துபட விரித்துரைக்கும் கட்டுரைகளும் அதன் பல்வேறு அம்சங்களை விளக்குவனவேயன்றி அதன் திரண்ட பொருளைக் கூர்ந்து நோக்கி இலயித்து நிற்கத் துணைநில்லா. இவ்வரைவிலக்கணம் கட்டுரை என பன வினும் தனி ஒரு மொழியாகவே நின்று தன் உரிய பொருளை உணர்த்தும் ஆற்றல் சிவதொண்டு எனும் ஒரு மொழிக்கு உண்டு. இதுவே மந்திரச் சொல்லின் இயல்புபோலும்.
சிவதொண்டு எனும் மந்திரச் சொல்லை ஒருவாறு விளங்க நாடுவோர்க்குச் சிவதொண்டரின்
வாழிவும் வாக்குமே தக்க இடங்களாகுமீ. ஈணி டு சிவதொண்டர்களின் வாழ்க்கைச் சம்பவங்கள் சிலவற்றையும் உபதேச மொழிகள் சிலவற்றையும் சான்றுகளாகக்கொண்டு சிவதொண்டின் மூன்று முகங்களாகக் கொண்டு கூறும் முயற்சி மெற்கொள்ளப்படுகின்றது. இம்மூன்று முகங்களும் மேல்வருமாறு: 1. சிவதொண்டு என்பது சிவபிரானுக்குச் செய்யும் தொழும்பு. 2. சிவதொண்டு என்பது வாழ்க்கையிலே விதி வசத்தாற் பொருந்தும் கருமங்களைச் சிவார்ப்பணமாகச் செய்யும் கருமயோகம் 3. சிவதொண்டு என்பது சும்மா இருத்தல் என்னும் பெரிய வேலை.
சிவபிரானுக்குச் செய்யும் தொழும்பு
1. தொழும்பின் அடிப்படை
சிவபிரான் தேவையேதுமில்லாத பெரிய பரிபூரணமான பொருள். அவருக்கு எமது சேவகம் வேண்டுவதின்று. அன்றியும்
 
 

சித்திரை - வைகாசி- ஆனி 1996
சிற்றறிவும் சிறு தொழிலுமுடைய நாம் முற்றறிவும் முழுத்தொழிலுமுடைய பெருமானுக்கு தக்கனவற்றை எவ்வாறு செய்தல் இயலும்? ஆயினும் பெருமான் எம்மை வளர்த்தெடுப்பதற்காக எமது சேவகத்தை நாடுபவர்போல நாடக மாடுகிறார். எம்மிடம் ஈதலறத்தை வளர்ப்பதற்காக
அவரே ஓடேந்திப் பிச்சாடனராக வருகிறார். எம்மையாளும் அக்கருணைப்பிரானே எமக்கு நல்லவர். அவரே எமக்கு எம்மினும் இனியவர். அவரே எமக்கு அருந்துணை, பெருந்துணை, நற்றுணை. அவர் காரிட்ட ஆணவ அறைக்குள் கணிணிலி லாத குழவிபோற் கேவலமாகக் கிடந்த எம்மீது கருணை கூர்ந்து இரவிருள் வேளையில் விடிவிளக்கேற்றி வைததது போல தநுகரண புவனபோகங்களைத் தந்தனர். எமது நலம் பற்றி ஏதும் அறியாது மூலையில் கிடந்த எம்மை முற்றத்தில் விட்டனர்.இவ்வண்ணம் எல்லை யில்லாக் கருணைகூர்ந்த பெரு மானுக்கு நாம் செய்யும் கைமாறு யாது? "குரங்குகள் மலையை நுக்கக் குளித்துத்தாம் புரணர்டிட்டோடி தரங்கந ரடைக்கலுற்ற சலமிலா அணிலும் போலேர்ை' எனத் தொண்டரடிப் பொடியாழ்வார் ஏங்கியது போல எம்மாலியன்ற தொழும்புகளைச் செய்வதே கைம்மாறு. பெருமானது கடன் என்னைத் தாங்குவதாக உளது. ஆகவே ' என்கடன் பணி செய்து கிடப்பதே இதுவே தொழும்பு எனும் சிவத் தொணி டினி அடிப்படையாகும். இவ்வடிப்படையினின்றே "வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும் தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனை'
எனவும்
"எங்கை உனக்கல்லா தெப்பணியும் செய்யற்க"
'கங்குல் பகல் எங் கணர் மற்றொன்றும் காணற்க'
எனவும் சமய குரவர்கள் பாடினர்.
யோகர் சுவாமிகளின்
ඊරීඡඉෂ්ඛ Jථූ] குருபூசைத
தினத்தை யொட்டி இக்கட்டுரை வெளியிடப்படுகிறது

Page 9
கலசம்
ஒல்லாந்த அதிகாரிகளுக்குப் III–Id 6rGöBlå Bjr Ligu நாகதம்பிரான்
கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து சுமார் 50 மைல் தொலைவில் உள்ள கரைச்சி புளியம் பொக்கணை எனும் கிராமத்தில் சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க பூரீ நாக தம்பிரான் ஆலயம் இன்றும் அதே சிறப்புகளுடன் மிளிர்கின்றது. போர்த்துக்கேயர் ஆட்சிக்காலத்தில் இங்கு ஓர் அதிசயம் நிகழ்ந்தது. இந்த ஆலயத்திற்கு வருடத்திற்கு ஒரு முறை பொங்கல் எடுப்பது வழக்கம். அது சாதாரண பொங்கல் அல்ல. பண்டம் எடுத்து ( பொருள்கள் ) வந்து பொங்குவார்கள். சுட்டிபுரம் கண்ணகை அம்பாள் ஆலயத்தில் இருந்து இந்த ஆலயத்தின் பரம்பரை தொடர்புடைய பூசகர் வழித்தோன்றல்கள் இருந்து வரும் இடம் வரணி சுட்டிபுரம். இங்கிருந்து பண்டங்கள் எடுத்து நடைபவனியாக ஆலயத்திற்கு செல்வது வழக்கம் புளியம் பொக்கனை நாகதம்பிரான் பண்டம் என்றால் எல்லா இடங்களிலும் பயபக்தியோடு அடியார் கூட்டம்
 
 

鱼 சித்திரை - வைகாசி- ஆணி 1996
7 இருக்கும். காணிக்கை பொருள்கள் என எண்ணில் அடங்காத நன்கொடைகள் வந்து குவிந்த வண்ணம் இருக்கும். நடை பவனியாக இந்தப் பணிடம் மேளதாளவாத்தியங்களோடு ஆலயத்தை அடைய சுமார் ஐந்து, ஆறு நாட்கள் எடுக்கும்.இடையிடையே வழியில் வரும் ஆலயங்களிற் தங்கி களைப்பு நீங்கி மீண்டும் பயணத்தை
துன்னையூர் ராம்
தேவலோகேஸ்வரசர்மா தொடர்வது வழக்கமாகும். இப்படியாகப் பண்டங்கள் எடுத்துக்கொண்டு வரிசை வாத்தியங்களோடு வரும் நேரம். மடுக்கரை எனும் இடத்தில்( தற்போதய ஆனையிறவு தடை முகாம்) ஒல்லாந்த அதிகாரிகள் பண்டத்தை இடைமறித்துத் தலைமை தாங்கிவந்த பூசகரை மிரட்டி இப்படியான காரியம் செய்தால் உம்மையும் உம் கூட்டத்தினரையும் சுட்டுக்கொல்லுவோம் என எச்சரித்தனர். இவற்றை நிறுத்தித் திரும்பிச் செல்லுங்கள் என்றும் கூறினார். அத்தருணம் பூசகர் ஐயா எங்கள் முன்னோர்கள் செய்த வழக்கப்படியே நாமும் செய்தோம். எங்கள் குலதெய்வத்தின் கட்டளைப்படியே தான் செய்கிறோம் என்றும் பணிவாகக் கூறினார். உடனே

Page 10
அதிகாரிகளில் பெரியவன் குலதெய்வம் என்றால் என்ன? என்று கேட்க, பூசகர் " அது ஒரு பாம்பு எனக் கூறினார். அப்படியானால் அந்தக் குலதெய்வத்தை உம்மாற் காட்டமுடியுமா? காட்டினால்தான் உம்மையும் உம் கூட்டத்தையும் போகவிடுவேன் எனக் கூறினான்.
அதற்கு இசைந்த பூசகர் உடனே சமுத்திரத்தில் நீராடி நாகதம்பிரானை நினைத்து ஒரு வளத்தை எடுத்து ( மண்பானை) அதனுட் பூசை செய்து தூபங்காட்டி ஒரு வெள்ளைப் புடவை எடுத்து பாம்புபோல் முறுக்கி பானைக்குள் போட்டு நாகதம்பிரானே உனது சக்தியையும் பெருமையையும் இநீத அதிகாரிகளுக்கு காட்டியருளவேண்டும் எனக் கண்ணீர்மல்கப் பிரார்த்திக்க, தனது அடியாருக்காக "பிட்டுக்கு மண்சுமந்த திரிகன் மூர்த்தி இதற்கா இரங்க மாட்டார்? என்னே அதிசயம் பானையில் இருந்து பேரிரைச்சலுடன். வெள்ளைநிற ஐந்து தலைநாகம் படம் எடுத்தாடியது. ஒல்லாந்த அதிகாரிகள் நடுநடுங்கி
கையெடுத்து வணங்கி பண்டத்தை வழிவிட்டனர். மறுநாள் பொங்கல் தினத்தன்று அதிகாரிகள் அனைவரும் தாங்கள் கண்ட அதே நாகம்போல் வெள்ளியில் செய்து ஆலயத்தில் கொண்டு வந்து கொடுத்து வணங்கிச் சென்றனர். இன்றும் அவர்கள் கொடுத்த வெள்ளிநாகம் ஆலயத்தின் கருவறையில் உள்ளது. ஆலயத்தின் தல விருட்சமான அரச மரத்திலே வெள்ளை நாகம் இன்றும் உள்ளது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பூசகர் வைக்கும் பாலை பக்தர்கள் பார்க்கும் வண்ணம் அருந்திச் செல்கின்றது. எந்தவிதமான விஷக்கடிகளுக்கும் அரசமரத்தடிப் புற்று மண்தான் இவ்வூர் மக்களின் மருந்தாகும். தற்பொழுது பாலஸ்தானம் செய்யப்பட்டு புனருத்தாரண வேலைகள் யாவும் பூர்த்தியாகி மஹா கும்பாபிஷேக விழாவை ஆலயம் எதிர்நோக்குகிறது. இங்கு நித்திய பூசையை பரம்பரை பூசகரும் விஷேட பூசையை பரம்பரை அந்தணரும் அவர்கள் வழித்தோன்றல்கள்மூலம் செய்து வருகின்றனர். எத்தனையோ அனர்த்தங்கள் இந்த நாட்டு நிலைமையால் ஏற்பட்டபோதும் இந்த ஊருக்கும் இவ்வாலயத்திற்கும் எந்தவொரு இடையூறும் இதுவரை நடைபெறாதது வியக்கத்தக்கதாகும். " mm umm um mm mm um mmm . இப் பகுதிக்கு வாசகர்களிடமிருந்து ஆக்கங்களை எதிர்பார்க்கிறோம். தரமானவைகள் பிரசுரிக்கப்படும். ஆக்கங்கள் அனுப்பப்படவேண்டிய முகவரி Editor "KALASAM" 42 Stoneigh Road Clayhall llford, Essex
G5 00

பொன் மொழிகள்
திருமுருக கிருபானந்த வாரியார்
அவர்கள்
வருவதும் போவதும் இன்பமும், துன்பமும்
வந்தால் போகாதது புகழும், பழியும் போனால் வராதது மானமும், உயிரும் தான்ாக வருவது இளமையும், மூப்பும்
நம்முடன் வருவது பாவமும், புண்ணியமும் அடக்க முடியாதது ஆசையும், துக்கமும் தவிர்க்க முடியாதது பந்தமும் பாசமும் அழிவைத் தருவது பொறாமையும்,
கோபமும் எல்லோருக்கும் சமமானது பிறப்பும், இறப்பும்.
படித்து மகிழ்ந்தவர்: அமுதா
- hUចំណាយ
நம்பிக்கை, நம்பிக்கை, நம்மிடத்தில், நம்பிக்கை நம்பிக்கை கடவுளிடத்தில் நம்பிக்கை- இதுவே மகிமை பெறுவதன் இரகசியமாகும், உங்கள் முப்பத்து மூன்று கோடிப் புராண தெய்வங்களிடத்தும் உங்களுக்கு நம்பிக்கை இருந்தது. ஆனாலும் உங்களிடத்தே உங்களுக்கு நம்பிக்கை இல்லாவிட்டால் உங்களக்குக்
கதிமோட்சமில்லை, ஆன்மாவால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே. அபபடி நினைப்பது சமயத்திற்கு மிகப் பெரிய முரண்பட்ட கருத்தாகும். பாவம்
என்பது ஒன்று உண்டென்றால், அது நான் பலவீனமானவன், மற்றவர்கள் பலவீனமானவர்கள்'
என்று சொல்வது ஒன்றுதான் பாவம்,
-ஸ்வாமி விவேகானந்தர்

Page 11
கலசம்
ஒரு வாசகரின் டே திருமிகு ஆசிரியர் கலசம்
அன்புடையீர்
வணக்கம். நலம் நலமறிய விழைகிறேன்
கலசம்" மகரம், மீனம், கும்ப மாதங்களுக்கான இதழ் கன் வெளியிடுவது தொடர்பான அனைவரும் பாராட்டுக்குரியர்
இப்போது என்ன செய்யப்போகிறோம் என்ற ஆசிரியருரை தமிழினத்தையே அழிக்க முனைந்துள்ளது போல் இடர்கள் பலவகை வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட்டுச் செயற்ப்பட முருகன் நீல வண்ணத்தவர் என்று திரு பார்த்தசாரதி செவ்வண்ணத்தவர் என்பர். செவ்வேள் என்ற அவர்த இல்லார்க்கு ஆயிரம் திருநாமம் பாடித் தெர்கோணம் ெ பாடியது போல இறைவன் எல்லா உருவங்காயும் உ கட்டுப்பாட்டுக்கும் உள்ாடங்காதவராயும் காட்சி தர வல்லவ உலக நீதியைத் திரு சிறீகந்தராசா ஆங்கிலத்தில் மொழிபெ இராமகிருட்டினரின் வாழ்க்கையை ஓவிய வடிவில் ஆ இராமகிருட்னர், யாழ்ப்பாணம் ஆறுமுகநாவலர்,வடலூர் மெய்யான இறையன்பில் திாைத்தவர்கள். இறையன்பில்
ஆறுமுக நாவலர் மனம் புரிந்துகொள்ளாமலே வளர்ந்து தமிழறிஞர்களையும் உருவாக்கியவர். பாடசாலைகள் தோற் நூற்களை அச்சேற்றியவர். இராமலிங்க அடிகளாரோ மணம் : உண்மையான இறையன்பு கமிழும் திருவருட்யாவை தாயுமானவர் போன்ற மெய்யுணர்வறிந்த தமிழ்ச் சித்தர்க புரிந்துகொண்டவர் எனினும் மனைவி சாரதாமணி அம்மை மூவரும் இறைவழிபாடு பற்றிய கோட்பாடுகளிலும் இறைவன் சளைத்தவர் அல்லர். எனினும் உலகினரும் தமிழரும் இராம அல்லது இராமலிங்கஅடிகாரைப் பற்றியோ அறிந்திருக்கவி தமிழர்கள் எங்கு சென்று குடியேறினாலும் அங்கெல்லாம் அப்பெருமகனாரின் சிவத்தமிழ்த் தொண்டினை நினைவு கூர் இங்கு லண்டனிலும் கடந்த பற்பல ஆண்டுகளாகத் தொடர்ந், சைவ முன்னேற்றச் சங்கம் மற்றும் பல அன்பர்களிலு கொண்டாடிவருகிறார். அவ்வம்மையாருக்கு நன்றி செலுத்தக் பற்றி உலகினருக்கு விளக்கிச் சொல்லத் தமிழ்நாட்டுச் சென் அறிந்துகொள்ள வழிவகை செய்ததாகச் சொல்வதற்கில்லை. ஆ அடிகாரைப் பற்றியும் சித்திரவடிவில் ஆங்கில விளக்கங்க பல அரிய தத்துவக் கோட்பாடுகளை உள்ளடக்கிப் பாடல் வடி கலசம் வெளியிட வேண்டுமென்று எதிர்பார்க்கின்றோம்.
தங்களின் நற்பணி தொடர்க.பயன் வினைப்பதாக
தய்க்ள் அன்புள்ள
அரங்க முருகையன் (மொழித்துறைத்தலைவர்)

蚌 சித்திரை - வைகாசி- ஆனி 1996
பனா எழுதுகிறது.
கண்டேன். சிறப்பாய் பொலிவுடன் வெளிவந்துள்ளது. இதழ்
பகமரத்தானி போல் நெஞ்சில் பதியத் தக்க முறையில் நம் நம்மைச் சூழ்ந்துள்ள நிலையில் நாம் நம்மிடையே உள்ள வேண்டுமென வலியுறுத்துவதாய் உள்ளது.
(பக்கம்13) எழுதியுள்ளார். முருகன் சிவனாரைப் போலவே ம் சிறப்புப் பெயரை ஒப்புநோக்குக, ஒரு நாமம் ஒருவரும் காட்டோமோ" என்று மாணிக்கவாசகப் பெருமான் வியந்து ருவமின்றியும் பல்வேறு வண்ணத்தவராயும் எவ்வண்ணக் ர் என்று மெய்யுணர்வார்கள் கூறுவர். பர்த்துள்ார் பாராட்டப்பட வேண்டிய நற்பணி. பூங்கில விளக்கங்களோடு வெளியிட்டுள்ளார்கள். வங்காளத்து இராமலிங்க அடிகார் ஆகிய மூவரும் சமகாலத்தவர்கள். தங்களுக்குரிய சிறப்பான இலச்சினைகளைப் பொறித்தவர்கள். இறைத்தொண்டாற்றியவர். பற்பல சிவத்தொண்டர்களையும் றுவித்தவர் பனையோலைகளில் எழுதப்பட்டிருந்த அருந்தமிழ் புரிந்தும் தனித்து வாழ்ந்து உள்ளத்துணர்வை வெளிக்கொட்டி இயற்றியவர். திருவள்ளுவர், மாணிக்கவாசகர், திருமூலர், ரின் வழித்தோன்றல் என்பர். இராமகிருட்டினர் மனம் யாரையே அம்மன் உருவில் வழிபட்டார் என்பர். மேற்கண்ட னைப் பற்றிய மெய்யுணர்விலும் ஒருவருக்கொருவர் எள்ளவும் கிருட்டினரைப் பற்றி அறிந்த அளவு ஆறுமுகநாவலரையோ வில்லை என்பது வருந்தத்தக்க உண்மையாகும்.
ஆறுமுகநாவலருக்கு ஆண்டு தோறும் குருபூசை நடத்தி ந்து வணக்கம் செலுத்துவது தொன்றுதொட்ட வழக்கமாகும். து திருவாட்டி தங்கரத்தினம் முத்துக்குமாரசாமி அம்மையார் ம் ஒத்துழைப்போடு ஆறுமுக நாவலரின் குருபூசையைக் நடமைப்பட்டுள்ளேம், இராமலிங்க அடிகாரின் கோட்பாடுகளைப் னையில் இராமலிங்கர் அடிகளார் பற்றி இளந்தலைமுறையினர் ஆறுமுகநாவலர் தொண்டு வாழ்க்கையைப் பற்றியும் இராமலிங்க ளோடு வெளியிடுங்கள். ந்த தாயுமானவரின் பாடல்களைத் தக்க ஆங்கில விளக்கங்களோடு

Page 12
மகாதேவ கோவிந்த ரானடே ( 1842 - 1901) மகாராஸ்டிரத்தில் பரதான சமாசம் என்ற ஸ்தாபனத்தை ஆரம்பித்தார். இதற்கும் பாரத சமாசத்திற்கும் தொடர்பு இருந்தது. மகாராஷ்டிரத்தில் இருந்த பக்தி இயக்கத்தின் தொடர்ச்சியாக அவர்களின் தெய்வ வழிபாடு இருந்தது. உருவ வழிபாடு, வேதத்தின் அதிகாரம் அவதாரக் கொள்கை என்பவற்றை அவர்கள் ஏற்கவில்லை. சமூகச் சீர்திருத்தம், சமூக நலவிருத்தி என்பவற்றிற்குப் பாடுபட்டார். முக்கியமாகத் தாழ்ந்த சாதியினர் என்று கருதப்பட்டோர் நலன்களுக்குப் பெரிதும் பாடுபட்டு சாதனைகளை நிகழ்த்தினார்.
 

சித்திரை - வைகாசி ஆனி 1996
தயானந்த சரஸ்வதி ( 1824- 1883)
ஆரிய சமாசம் என்ற ஸ்தாபனத்தை குஜராத்தில் ஆரம்பித்தார். இவர் வேதங்களை அதிகாரமுடையவை என்று ஏற்றார். வேதங்கள் கூறும் தூய சமயத்துள் பல கடவுட் கொள்கை, உருவ வழிபாடு, சாதி நடைமுறைகள் என்ற தப்பான வெளிச் சேர்க்கைகளினால் சீர்கேடு அடைந்து விட்டது என்ற முடிவுக்கு வந்தார். துதிப்பாடல்களில் வரும் பல்வேறு கடவுள்களின் பெயர்கள் எல்லாம் ஒரே கடவுளைத்தான் குறிப்பிடுகிறது என்றும், மிருகப்பலி பற்றிய குறிப்புகள் சில கருத்துகளைத் தெரிவிக்க பயன்படுத்தப்பட்ட குறியீடுகள் எனவும் விளக்கம் கொடுத்தார். இஸ்லாம் கிறித்துவ சமயங்களை தீவிரமாக எதிர்ததார்.

Page 13
கலசம்
*码 இச்சமயங்களுக்கு மதம் மாறியவர்களில் பெரும்பாலானவர்கள் தாழ்ந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள்மதம் மாறியவர்களை இந்து சமயத்தில் மீண்டும் சேர்க்கும் பணியில் ஈடுபட்டார். தாழ்ந்த வகுப்பினருக்கும் பூனூல் அணியும் வைபவங்களை நடாத்தினார். ஆரிய சமாசம் சமூகச் சீர்திருத்தங்களுக்குப் பாடுபட்டது. சிறு பிள்ளைத் திருமணத்துக்கு எதிராக இயங்கினார். விதவை மறுமணம், பெண் கல்வி, கல்வி முடிந்ததும் பெண்கள் தாமே. வரனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை என்பவற்றை ஆதரித்தனர். கல்லூரிகள் ஆரம்பித்தனர். பஞ்சாப்பிலும் வட இந்தியாவிலும் அவர்களுக்கு ஓரளவு வெற்றிகிட்டியது. ஜீ ராமகிருஷ்ணர் ( 1836 - 1886)
வங்காளத்திலுள்ள ஒரு சிற்றுரில் இவர் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தார். கதாதரர் அவருக்குப் பெற்றோர் இட்டபெயர். கல்கத்தாவிலுள்ள காளி கோவிலில் பூசகராக கடமையாற்றினார். அப்போது அவர் வயது 20. அவரது மதகுரு வாழ்க்கை தகுந்த ஆசாரங்களோடு தொடங்கியது. விரைவில் அவர் ஆன்மீகப் புயலில் சிக்கிக் கொண்டார். இது அவரைச் சாதாரண மனிதர்களுக்குக் கிட்டாத அநுபவ மண்டலங்களுக்குள் இழுத்துக் கொண்டு போயிற்று. அவருக்குக் காளியின் உருவம் ஒரு கற்சிலையாகத் தென்படவில்லை. தெய்வீகத்தின் உயிருள்ள வடிவமாகவே காட்சியளித்தது. அவர் வழிபாடு நடத்த அமரும்போது மறதிநிலை ஒன்று அவரைப் புறவுலகத்தினின்று பித்துவிடும். வழிபாடு நேரத்தில் அண்மையிலுள்ளவர்களைப் பற்றிய கொஞ்சமும் நினைவில்லாத முழு நனவிலி நிலையை எய்தினார். சிலநேரங்களில் மணிக்கணக்காக அசைவற்று அமர்ந்திருப்பார். அவர் வழிபாட்டில் சடங்குகளை அவ்வளவாகப் பயன்படுத்தவில்லை. உலகத்தாய்க்கு அவர் செய்ததெல்லாம் இதயவழிபாடுதான். பற்பல வழிகளில் தெய்வீகத்தை அநுபவிக்கத் தணியாத ஆர்வத்துடன் அவர் உள்ளக்கனல் பொங்கி எழுந்தது.
ஆன்மீக வழிகளில் தாந்திரிக ஆசார முறைகள் மிகவும் கடினமானவை, மிகவும் ஆபத்தானவையும்கூட. அப்பழுக்கற்ற தூய்மையாளரான குரீ ராமகிருஷ்ணர் தொந்தரவு எதுவும் தமக்கு நிகழாதவகையில் தாந்திரிக சாதனங்கள் வழிச்சென்று அதனின்று வீரராய் வாகைசூடி வெளிவந்தார். வைராக்கியத்துடன் வலுப்படுத்தப்பட்டுத் தந்திரயோகப்பயிற்சியன் பயனாகப் பெற்ற அமானுஷ்ய சக்திகளையெல்லாம் தெய்விகத் தாயின் ஆணை கேட்ட்தும் வெறுத்து ஒதுக்கினார். தமது உடல் பெற்ற பொன்னிறத் தேஜஸைக்கூட அவர் விரும்பவில்லை. தாயே புற அழகினை என்னிடமிருந்து பறித்துவிடு. அதற்கு மாறாக உன் அக எழிலை ஆன்ம சுத்தியை எனக்குத் தந்துவிடு என்று

& சித்திரை - வைகாசி- ஆணி 1996
些
பிரார்த்திப்பது அவர் வழக்கம். இறைவனிடம் ஒவ்வொருமுறையும் அவர் கடைப்பிடித்த எல்லா மனளழுச்சி நிலைகளிலும் அவருடைய ஆணி மப்பசி எதை உட்கொண்டாலும் ஆறாமல் அதிகரித்துக் கொண்டே போயிற்று. இந்துசமய வழிகள் யாவற்றிலும் சொல்லப்பட்ட எல்லாவகைகளிலும் அவர் தனியியல் கடவுளாக ஈஸ்வரனைத் தம்முள் உணர்ந்தார். தோத்தாத்திரி என்ற ஒருவர் பல ஆண்டுகளாகச் செய்து வந்த கடினமான சாதனப் பயிற்சிகளுக்குப் பின் நிர்விகல்ப சமாதிநிலையை அடைந்தார் என்று சொல்லப்படுகிறது. பூரீ ராமகிருஷ்ணர் இவரைத் தம் வழிகாட்டியாகக் கொண்டு பெயர் உருவம் என்னும் திரைகளைக் கிழித்து, தம்முடைய தனிப்பண்பு எல்லையற்ற ஆன்மீக ஒளிவெள்ளத்தில் கரைந்து போவதைக் கண்டார். இந்த இருமைமில்லாத உள் பொருள் அநுபவத்தில் எவ்வித வேறுபாடும் இல்லை. தியானம் செய்பவர் தியானம் செய்யப்படும் பொருள் என்னும் வேறுபாடு கூடஇல்லை. இருமைத் தத்துவ மொழியில் கூறுவதாயின் குரீராமகிருஷ்ணர் இவ் வநுபவத்தைத் தம்முள் கொணடிருந்ததால், இவ்வருபவத்தில் மூன்று நாட்கள் இருந்தார். பின்பு அந்நிலைத் தொடர்புடைய தம் உணர்வு நிலைக்குத் திரும்பினார். நமது கருத்துப்படி அவர் ஜீவன் முத்தன் நிலையை அடைந்தார். பரமான்மாவின் மிகவுயர்ந்த இவ்வநுபவத்தை அடைந்தபின் பூரீராமகிருஷ்ணர் சாதாரணச் சார்பு நிலைக்கு இறங்கி வந்து இஸ்லாம் கிறித்துவம் போன்ற மற்றச் சமயங்களில் செய்யப்படும் முறைகளில் கவனம் செலுத்தினார். இஸ்லாமிலும் கிறித்துவத்திலும் வகுத்துத் தரப்பட்டிருக்கிற சமய ஒழுங்கு முறைகளை அவர் தொடர்ந்து அவையும் இறைவனை அறிந்துணர்வதற்கே வழிசெய்கின்றன எனக் கண்டார். அவர் பெற்றிருந்த அத்துவைத அநுபவ உணர்வு எல்லாச் சமயங்களையும் ஒரு இலட்சியத்தை அடையப் பயன்படும் வெவ்வேறு பாதைகளாக எண்ணுவதற்கு உதவிற்று. அவரது பொதுமைக் கொள்கை பகுத்தறியும் முறையின் விளைவாகக் கிடைத்ததன்று. அது அநுபவத்தில் பிறந்த துணியாகும். நான் இந்துமதம் , இஸ்லாம் கிறிஸ்துவம் ஆகிய சமயத்தின் பல உட்கிளைகளையும் தொடர்ந்து சென்றேன். வெவ்வேறு வழிகளில் ஏகினாலும் மனிதர் யாவரும் ஒரே கடவுளை நோக்கியே வழி நடக்கின்றனர் என்பதைக் கண்டேன் என்கிறார் ராமகிருஷ்ணர். கடவுள் மட்டுமே உள்ள பொருள். மற்றவை இல்லாத பொருளே என்ற வேதாந்த உண்மையின் மேம்பாட்டினை
வெளிக் கொணர்ந்து அவ்வுண்மையை மனிதவர்க்கத்துக்குச் சேவை செய்து வருவதன்மூலம் அடையும் வழியையும் அவர் காட்டினார். ஆன்மாவை அதன் இலட்சியத்தை

Page 14
கலசம் 詹
அடையச் சீரிய முறையில் தயார் செய்வது பயன் கருதாப் பணியாகும். இதுவே கர்மயோகம் ஆகும். தன்னுடன் வாழும் உயிர்களின் தேவைகளைப்பற்றியும் இன்னல்களைப்பற்றியும் சிறிதும் கவலையின்றி இருப்பவன், பரமாத்மாவை நோக்கிச் செல்லும்பாதையில் சிறிதும் முன்னேற இயலாது. சத்தியத்தைத் தேடுபவர் அடைய முயலும் ஆண் மா என்பது தனிமனிதனுடைய எண்பதன்று, அது எல்லாவற்றிலும் ஒன்றாக அமையும் ஆண்மாவாகும். அந்தப் பொதுமைப் பேராண்மாவில் பிரிவுகள் இல்லை. மனித வர்க்க்த்துக்குச் சேவை செய்வதன் மகிமையை குரீ ராமகிருஷ்ணரின் பின்வரும் கூற்று வலியுறுத்துகிறது. ஒரு மனிதனுக்கு உதவுவதற்காக நான் இருபதாயிரம் பிறவி எடுக்க நேரிடினும் எடுக்கச் சித்தமாயிருக்கிறேன். ஒரு மனிதனுக்கு உதவும் பேறு அத்துணை மேன்மையானது என்கிறார்.
அவரது ஆழ்ந்த ஆன்மீகம் அவருடன் தொடர்பு கொண்டோரிடம் சக்திமிக்க தாக்கத்தை ஏற்படுத்தி ஆன்மீக அநுபவத்தைப் பெறச்செய்தது. அவரின் மெய்யுணர்வு ஒவ்வொரு மனிதனிடத்தும் கடவுளைக் காண உதவியது.அவரது முதல் சிஷ்யை அவரது மனைவி சாரதாதேவி என்று கூறலாம். பூரீ ராமகிருஷ்ணர் 23 வயதாக இருக்கும்போது 6 வயதுள்ள சாரதாதேவியை பெற்றோர்
岑
Open
VARSILI'S FC
நியூமோல்ட
Speci
En
C
We stock all v Larics, I Magazines
 
 

திருமணம் செய்து வைத்தனர். பல வருடங்களின் பின் கணவனிடம் வந்தார். அப்பொது பூஜீ ராமகிருஷ்ணர் அன்னை பராசக்தியை தன் மனைவியின் வடிவத்தில் கண்டார்.
அவருடைய ஆன்மீகம் சாரதாதேவியில் தாக்கத்தை ஏற்படுத்தியது. உபதேசங்களும் செய்தார். சாரதாதேவி துறவியாகி அன்னை சாரதாதேவியானார். பூரீ ராமகிருஷ்ணரின் அந்திம காலம் சீடர்களின் ஒரு குழுவிற்கு பயிற்சி அளிப்பதில் கழிந்தது. அவருள் பலர் இளைஞர். அவர்கள் பூரீ ராமகிருஷ்ணரின் போதனைகளை உலகெங்கும் பரப்பினர்.
சித்திரை - வைகாசி ஆனி ик
வாரியார் அருள் மொழிகள் மண்ணாசை பெண்ணாசை பொன்னாசை என்று மூன்று சங்கிலியால் நாம் கட்டுண்டிருக்கின்றோம். அதிலிருந்து விடுபவனே ஜீவன் முக்தன். வயது தளர்ந்த காலத்தில் மற்றவர்கள் படும் துன்பத்தைச் சிந்தித்துப் பார்த்து வாழவேண்டும். மரத்தை நேராக்குவதும் நூல். மனதை நேராக்குவதும் நூல. மனதை நேராக்கியவர்கள் ஞானிகள்.
DOD STORE
னில் ஒரே ஒரு தமிழ்க் களஞ்சியம்
ality in All Srilankan, Indian and
glish Product Under one Roof
)aily 8.00 am - 11 pm Nell known products like Global, Samco
Leela and YKDALL Newspapers &
including Asian Papers & Magazines
9 BURLINGTON ROAD EW MALDEN SURREY T3B 44 LR lear Buurlington Junior School) EL 3 (DB - 336 006

Page 15
புத்தாண்டில் பொலி அத்தனே! அருள் மன
நம்பிக்கை இது தான் நமது மதத்தின் அடிப்படை தனிப்பட்ட சிறப்பு. நம்பிக்கை தான் நம் வாழ்க்கையையும் நடத்திச்
செல்கிறது. நாம் வாழ்கின்றோம். தமிழ்ப்புத் தாண்டு மிறந்திருக்கரின்றது. இந்தப் புத்தாண்டிலிருந்து சீரும் சிறப்பும் பெற்று வாழ்க்கையில் நலமெல்லாம் பெற வாழ்த்துக்களை பரிமாறிக் கொள் சின்றோம். வாழ்த்துக்களைச் சொல்லும் பொழுது சொல்லுபவர் உள்ளத்திலும் கேட்பவர் இதயத்திலும் நம்பிக்கை ஆழமாக இருப்பதால் தான் அந்த வாழ்த்திற்கு வலிமை அதிகமாகின்றது. இதற்குக் காரணம் நம்மையும் இந்தப் பிரபஞ்சங்களையும் படைத்து இயக்கி வரும் சர்வேஸ்வரன் மீது நமக்கிருக்கும் உறுதியான பற்று. இந்தப் பற்று எப்படி வந்தது? இதற்குக் காரணம் என்ன?
 

வு சேர்ப்பாய்
fUBш! ешћбошDJÜшт!
நமக்குத் தேவையான அனைத்தையும் அருள் அந்த அம்மையப்பன் ஆங்காங்கே எழுந்தருளியிருக்கின்றான். லோக நாயகரியும் கயிலை நாதனுமாக பல திருவிளையாடல்களை நடத்திய புராண வரலாறுகளும் இந்தப் புண்ணிய பூமியில் பல வடிவங்களுடன் பல நாமங்களுடன் எழுந்தருளியிருக்கும் கோலங்களும் நமக்கு அசைக்க முடியாத பற்றினை ஏற்படுத்தி விடட்டன. அப்படி என்ன தான் நடந்தது அந்த அற்புதங்கள் தான் என்ன?
மனிதர்கள் விரதம் இருக்கலாம். ஆணி பெண்ணிடமிருந்தும் பெண் ஆணிடமிருந்தும் விலகி வாழலாம். அதனால் எவ்வித பாதிப்பும் மற்றவர்களுக்கு ஏற்படாது.
அதையே சிவசக்தியார் செய்தால், இந்த விசித்திர நிலைக்கு தேவ தேவியரும் ஆளானாலும் நான்மாடக் கூடலில் ஆடலரசன் பிட்டுக்கு மண் சுமந்த போது பட்ட அடி இந்த மண்ணிலே இருந்த மாந்தர் அனைவர் முதுகிலும் விழுந்தது. அனைவரும் அந்த வேதனையை உணர்ந்தனர். அது போல் பருவ ராஜகுமாரியாக தவமிருந்த போது அம்பிகை ஈசனை பாராதிருக்க நேர்ந்ததல்லவா. அப்போது தான் அந்தப் பிரிவு உலகத்தோர் அனைவரையும் பாதித்தது. உமையவளைப் பிரிந்து ஈசன் தவக்கோலத்துடன் இருந்ததால் உலக மாந்தர் அனைவரும் இல்வாழ்வில் நாட்டம் இல்லாதவராக இயந்திரம் போல் ஆயினர் எல்லாமே நின்று போய் உலகம் வெறுமையாகிவிட்டது. ஜீவகோடிகளின் வாழ்வில் பசுமை அழிந்து போயிற்று. அனைவரும் கலங்கினர். மகாவிஷ்ணு பிரம்மா போன்ற தேவ தேவர்களும் திகைப்புற்று செய்வதறியாது சோர்ந்தனர். இந்த நிலையின் மாற்றத்துக்கு வழி என்ன? சிவ சக்தி இணைய வேண்டும் அதை யாரால் நிறைவேற்ற முடியும். அனைவரும் மன்மதனிடம் வேண்டுகோள் விடுத்தனர். அவன் பயந்து நடுங்கினான். அனைவரும் வற்புறுத்தவே வேறு வழியின்றி அவன் கிளம்கினான். தென்றல் என்னும் ரதத்திலேறி மன்மதனும் ரதியும் இறைவன்

Page 16
国
அமைந்திருந்து தவம் இயற்றும் இடம் வந்து சேர்ந்தனர். சர்வேஸ்வரனை மனதில் வணங்கி மன்மதன் தன் மலரம்பைத் தொடுத்தான். தவாக்னியில் ஜொலித்துக் கொண்டிருந்த தேவ தேவனின் திருமார்பில் மலரம்பு பனிமலர்க் கோலமாய் தாக்கியது. திடுக்கிட்டு கண் விழித்தார். கைலைநாதன், அடுத்தகணமே கயிலை எங்கும் அக்னிப் பொறி பறந்தது. அதற்கு இரையாகி மன்மதன் வெந்து நீரானான். வெந்து சாம்பலாகிக் கிடந்த தன் நாயகனை உறுத்து நோக்கிய ரதி ஏறு கொண்ட பார்வையுடன் எரித்தனல் விழி வீச்சுடன் எழுந்து நின்ற ஈசனிடம் நீதிகேட்டான். Senlig sed L-ULI வார்த்தைகளில் இருந்த நியாயம் மகேசனையே மெளனமாக்கியது. அந்த ஈசனின் மெளனத்தில் மன்மதனின் வெற்றி மின்னியது, பிறகென்ன? பார் வதி பரமேஸ் வரன் திருக்கல்யாணம் நிச்சயமாகியது. முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் மூவுரைகளுக்கும் ஜீவகோடிகளுக்கும் காணக் கிடைக்காத திருக்காட்சியல்லவா அது அதைக் காண சர்வலோக ஜீவாத்மாக்களும் கயிலையில் கூடுகின்றனர். மூவுலகமும் பூகண்டத்திலுள்ள ஒரு மூலையில் கூடியதால் பாரம் தாங்காது கயிலை சரிந்து ஆட்டம் காண்கின்றது. வட பகுதியில் குவிந்திருக்கும் பாரத்தை தென் பகுதிக்குச் சென்று சமனப்படுத்தாவிட்டால் கயிலையில் கூடி இருக்கும் ஜீவகோடிகள் காண முடியாது இதை சமனப்படுத்தும் வல்லமை யாருக்கு உண்டு. கேள்வி பிறக்கிறது. அனைவரும் அகத்திய முனியை நாடுகின்றனர். "அருந் தவ முனிவர் நீவிர் அருன் புரிந்து தென்திசைசென்று இந்தச் சரிவை சமணப்படுத்துக" என்று வேண்டுகின்றனர். "அம்மையப்பனின் மனக் கோலத்தைக் காண நான் மட்டும் அருகதையற்றவனா? அனைத்துயிர்களும் பெற்ற பேற்றினை நான் பெறாது ஒழிய அத்துணை பாவம் என் செய்தேன், என்று அகத்தியர் பதறினார். அகத்தியா நீ செய்த புண்ணியத்தினாலேயே இப்பேறு உன்னை நாடி வந்திருக்கின்றது என்றார் சர்வேஸ்வரன்,
நமது மதத்தின் மூக்கியமான இரண்டு பீரி2 அவர்கள் இருபாலாரும் வழியரும்படியாக, நமசிவாய எண்ற மந்திரத்தையும் வைணவ மந்திரத்தையும் கடைப்பிடிக்கலாம்.
 

தயாபரனே நீவிரும் இதற்கு உடந்தையோ என்று புலம்பினார் அவர், அகத்தியர் நின் சைவப் பெருமையையும் நீ காக்கும் தமிழன் பெருமையையும் உலகுக்கு உணர்த்தவே இத்தருணத்தை யாம் பயன்படுத்துகிறோம். நீ ஒருவன்'இங்கு கூடியிருக்கும் தேவாதி தேவர்கள் அண்டகோடியிலுள்ள அனைத்து
மட்டுமல்ல இந்த ஜீவாத்மாக்களுடன் இங்கு தம்கி மனக்கோலத்தில் காட்சி தரும் எங்களையம் சேர்த்து இங்குள்ளோர் அனைவருக்கும் இணையானவன் நீ என்றே பொருள். ஆம் உன் அம்மையப்பர்கான யாமும் தேவியருங்கூட உனக்கு இணையல்ல எண்ணிலும் சக்தியால் உயர்ந்தவன் நீ எனவே எம் திருவுளத்திற்கு உடன்படுவாய் என்று கட்டளையிட்டான் லோகநாயகன்,
அகத்தியர் கூறினார். தேவா நீவிரும் இங்கிருப்பதால் உமது பாரத்தையும் சேர்த்து சமனப்படுத்தும் சக்தி எனக்கிருப்பதாகக் கூறுவது எப்படி பொருத்தமாகும். நான் தெற்கே செல்வதானால் நான் மட்டுமா செல்வேன். என் மனத்துள் நிறைந்திருக்கும் தேவ தேவியரான தாங்கள் இருவரும் சேர்ந்தல்லவா என்னோடு உடனிருப்பீர்.
தமிழ் மொழி ஏது அவற்றைப் பற்றி நிற்கும் நானும் ஏது அடியேனுடைய கோரிக்கை ஒன்றை நீவிர் நிறைவேற்ற வேண்டும், எம் திருமணக்கோலக் காட்சியினை நீ தெற்கிலிருந்தே காண வேண்டும். அவ்வளவு தானே? அது மட்டுமல்ல தேவா இங்கு நடக்கும் தங்கள் திருக்கல்யாணத்தை எங்கேயோ நின்று தானே காணப் போகிறேன். அதனால் தென்புலத்தில் நானிருக்கும் இடத்திற்கு நீ வந்து எனக்காக என் முன் ஒரு திருக்கல்யாணத்தை செய்து கொள்ள வேண்டும். அந்த திருமண வைபவத்தை நானும் என் துணைவியும் முன்னின்று நடத்த வேண்டும். அவரை ஆரத் தழுவி அப்படியே ஆகட்டும். உன் விருப்பப்படியே எனக்காக ஓர் உன்னதத் திருத்தலத்தில் மீண்டும் திருமணம் செய்து கொள்கின்றோம். என்றார் விடையொரு பாகர், தன் வார்த்தையை லோக நாயகியின் துணையுடன் நிறைவேற்றிக் காட்டினார் சர்வேஸ்வரன்.
நன்றி : ஞானவழி
கள் சைவமும். வைணவமும் சைவர்களுக்கு ஒம் நமோ ர்களுக்கு ஓம் நமோ நாராயணாய என்ற

Page 17
சிறுவர் கலசம்
சிறுவர்
The following pages cor cles for children and by c in the middle of the mag dren to remove those pa they could eventually bi booklet. It is our desire pages in children section
depends on the enthusias wish to know the views ( this matter. We wish our
artists a prosperous T Editori
 
 

ஆனி 1996
கலசம்
taining features and artihildren. Hence are placed azine so as to enable chilges and save them so that ind them in the form of a o increase the number of from eight to twelve. This sm the children show. We of children and parents on young readers, writers and amil New Year 1996.
al Board

Page 18

ஆனி 1996

Page 19
சிறுவர் கலசம்
In devotion to the Guru, Appoothi Naayanaar excelled. He was an ardent Siva Bhakta. He was leading the ideal householder's life. He belonged to a Brahmin family in Thingalur in the Chola Kingdom. Apoothi had heard the glories of Thirunavukkarasar or Appar. He had heard of how the God's grace made the stonefloat and how Apparrode on it and floated on the sea and went to a place of safety. Even though he had not seen Appar, he had taken him as his Guru, and literally worshipped Appar. He knew that Lord Siva himself, out of compassion for the spiritual aspirants, appeared as the Guru. He meditated on the lotus feet of the Guru. He had named all his children." Thirunavukkarasu', and all the household articles had also been named after the Guru. He had erected a number of watersheds, for the service of pilgrims, and had named all of them after the Guru. Thus had he ensured that he would constantly remember the Guru, and experience his grace. Appar himself passed through Thingalur one day. He went into one of the water- sheds. He was surprised to se his own name everywhere. He found out from some other pilgrims that the shed had been erected by Appoothi and went to meet him. Appoothi received the Siva Bhakta (though he did not know who it was) with great devotion. Appar said, " Oh noble soul, I have heard a lot about your greatness and glory. I wanted to pay my respect personally to you. Please tell me, why have you named the water-shed after somebody, and not yourself?' Appoothi was upset at this casual reference to the blessed name of his Guru. He said, “Oh friend, though you appear to be a Siva Bhakta, you do not seem to know Thirunavukkarasu Swamigal, who through the grace of the Lord withstood successfully all the persecutions of the Pallava King and re-established Saivaism. Have you not heard how the King tied him to a stone and threw him into the sea, and how he floated back to the shore? Who are you?' Appar was very much moved by Appoothi's devo

சித்திரை - வைகாசி- ஆணி 1996
tion and replied: "I am that humble soul who fell a victim to severe colic and then took shelter under the Lord's feet. I am that humble soul who, due to the grace of Lord Siva, got cured of that disease and returned to Saivaism." Look at the difference between the two descriptions. Appoothi remembers the glory of Appar, whereas Appar chooses to recall his own failing (to preserve his humility) and the Lord's Supreme saving grace. As soon as he heard this, Appoothi understood that the Siva Bhakta vas none other than Appar and was overjoyed. He worshipped Appar, along with his wife and prayed to Appar to accept his Bhiksha (food). While their had gone to the garden to bring abanana leaf, for Appar to use as his plate, the boy was bitten by a cobra. The son of a Naayanaar, he was also a great devotee of the Lord! He ran to his mother eager to fulfil his duty. He handed the leaf to his mother and immediately fell down dead. Appoothi did not want to let this disturb his worship of Appar Swamigal, and therefore hid the corpse. He invited Appar to have his meal. Appar sat down and blessed Appoothi and his wife with Bhasma, and then called for their son. Appoothi tactfully replied, he is not in a position to come. Appar sensed that there was something wrong and asked Appoothi to tell him the truth. Appoothi informed him of what had happened. Immediately Appar got up and asked Appoothi to lay the corpse in front of the temple, and he himself sang a song. A miracle took place. The boy got up, as if from sleep. All were happy except the parents of the boy. They regretted that this incident had caused some delay in Appar having his meals. Such is the nature of true devotion. Appar immediately took his meals and blessed the family.
Appar lived in Appoothi Adigal's house for some time. Appoothi gained the grace of the Lord, by his wonderful devotion to his Guru, Appar Swamigal.

Page 20
|staess藏藏藏藏藏藏FF藏 soooooooooooooaes )
No
ΑΕΚ 3
NIGHT AND DAY, HE
妃 Łls. ŁŁs 立帮 LĻs
■匪 [...] }, 门 Laes + →
DAYS ROLLED ON. SRI RAMA KRIS
MOTHER KAL.
R. R.
gaaawakasinagbuo Nat
HEMEBITATED ON THE MOTHER.
EWAN
S
H
 

-- a
I Conti in lation l'Iron | NNA S . las Kallislinn.
Is NoTHING Eur r:= XTRAORONARY OVINE GRACE OF THE MOTHER ON
.
HNA LOST HMSELF N THE WORSHIP OF MEDITATED ON THE MOTHER ANO CREO.
OREAT ALL THROUGHNIGHT AND DAY

Page 21
ஜ்ெ
TO THE NORTH OF THE TEMPLE THERE FIVE TREES CALLED PANCHAVAT, ATN WENT THERE ALONE AND MEDTATED,
oh
HE HA
THE THRST TO SEE THE OVINE MOTHE CREO, N THE EVENINS HE WOU.D RS ROLL THERE ON THE MU), HE WEPT A HAS PASSEO ANO HAVE NOT SEEN YO
 
 
 
 
 

சித்திரை - வைகாசி- ஆனி 1996
ل
WASA JUNGLE NIT WAS A GROUP OF IIGHT, WHENEVERYBODYELSESLEPT, HE DAYS AND NIGHTS PASSED IN THIS WAY.
HES INSEARCHOF GOO AND HE IS DEEP IN
DON'T TALK LIKE THAT. ii
MEDITATION
was Not quENCHED. He crisp and SH TOTHE BANKS OF THE GANGES AND ND SAD. "Oh MOTHER ANOTHER DAY
HS SO83 Ng : PATHE C TO KEA

Page 22
  

Page 23
சிறுவர் கலசம்
L
, தர்சனா நவேந்தி மேற்கு இலண்டன் தமிழ்ப் ப
...--A அன்புமிகு இப் பகுதிக்கு உங்கள் பின்ளைகள் பட அதே நேரம் வரையும் படத்தைப்பற்றி ஆக |) அனுப்பினால் எவ்வளவு நன்றாக
 

苦 சித்திரை - வைகாசி - ஆனி 1996
ரன் ( 7 வயது) ாடசாலை கிங்ஸ்பரி பிரிவு)
Guppirirascarl ம் வரைவதையிட்டு மனம் மகிழ்கிறோம்.
$க் குறைந்தது ஐந்து வசனங்கணாவது எழுதி இருக்கும்/ முயற்சித்துப் பாருங்களேன்.

Page 24
சிறுவர் கலசம்
திருமுனைப்பாடி நாட்டுத் திருவாழுரில் ே என்ற அண்ணலுக்கும் மாதினியார் என்னு
மகளும் மருநீக்கியா என்ற மகனும் பிறந் என்பரை திலகவதிக்கு மனமகனாகத் தோ
 

சித்திரை - வைகாசி - ஆனி 1996
பளனர் குடியில் புகழனார்
அம்மைக்கும் திலகவதி என்னும்
து வளர்ந்து சிறந்தனர். கலிப்பகையார்
ཆེད་ཀྱིས་ 02
TÓT ತ್ರಿಕಾ ಆLLQ: ဗြုံး ன மணமுடிக்க முடிவெடுத்துள்ளனர்.
அவர் நல்ல உள்ளம்

Page 25
கலசம்
©Iយោសិd
அணங்கினர் அவையை இறையடியார்களின் அருட்கனி அறியப்படாத மாதரும் பொலிவிப் கலைகளும் அதில் சிறந்து விளா அலங்
9.
பொங்குருச் செல்வங் கல்வி இங்கெமக் கருள வல்ல இை பங்கயத் தடஞ்சூழ் கூடற் பர் அங்கயற் கண்ணி மங்கை அ -திருவிளையாடற்
மனைவி என்னு
வசிட்ட மகரிஷி பத்திர தேசத்து அரசி மாலதிக் (மாளவிதேவி) சாவித்திரிதேவியின் ஆராதனை மந்திரத்ை உபதேசித்தார். அவளும் பல காலம் அம்மந்திரத்தை ஜெபித் வந்தாள். அவளுக்கு குழந்தை இல்லாததால் மனம் மிக
 

墨 சித்திரை - வைகாசி- ஆணி 1996
لکی
Oriñ SÐIGO)6OJ
இறையருள் பெற்ற மகளிரும் வில் திளைத்தும் நம்மவர்களால்
ர். அவற்றுடன் பெண்கள் விரும்பும்
கிய பாடல்களும் சிறு குறிப்புகளும் கரிக்கும்.
ாலினி
பொருவிலா வாய்மை, தூய்மை னயிலா எம்பிராட்டி
வளமால் வரையை நீங்கா டிக்கம லங்கள் போற்றி
புராணம்
றும் அருளமுதம்
வருந்தினாள். இதனால் மன்னனான அஸ்வபதியும் குழந்தைவேண்டி சாவித்திரிதேவியை வணங்கி வந்தான். அங்கே வந்த பராசரமுனிவர் " காயத்திரி மத்திரத்தை மனச் சுத்தியுடன் பத்து லட்சம் தரம் ஜெபித்தால் சாவித்திரிதேவி காட்சி கொடுப்பாள். " எனக் கூறிச் சென்றார். அவர் கூறியபடி காயத்திரி மந்திரம் சொல்லி வணங்க சாவித்திரி தேவி பிரசன்னமாகி
அரசே! உன் மனைவி பெண் குழந்தை வேண்டும் எனவும் நீ ஆண்குழந்தை வேண்டும் எனவும் கேட்கிறீர்கள். உங்கள் இருவர் விருப்பமும் நிறைவுபெறும் என அருளிச் சென்றாள். அஸ்வபதிக்கும் மாலதிக்கும் ஓர் அழகிய பெண் குழந்தை பிறந்தது. சாவித்திரிதேவி அருளால் பிறந்த குழந்தையாதலால் சாவித்திரி எனப் பெயரிட்டு அழைத்தனர். அந்தக் குழந்தையும் வளர்பிறையென வளர்ந்து கன்னியானாள். ஒருமுறை அவள் தன் தோழியருடன் வசந்தவனத்திற்கு (பொழுது போக்கிற்காக வசந்த காலத்தில் காட்டிற்குச் செல்லல்) சென்றாள். அங்கே கண் பார்வையற்ற தன் தாய்தந்தையருக்கு காய், கனி பறித்துக் கொண்டிருந்த சத்தியசேனனைக் கண்டாள். காதல் கொண்டாள். தன் விருப்பத்தை தந்தை அஸ்வபதிக்குச் சொன்னாள். அவனும் சாலுவதேசத்து அரசன் துயுத்மசேனனின் மகன் சத்தியசேனன்

Page 26
கலசம்
என்பதை அறிந்து மகிழ்ந்து சாவித்திரியை சத்தியவானுக்கு மணமுடித்து வைத்தான். சாவித்திரியும் தன் கணவன் சத்தியவானுடன் காட்டிலே
மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தாள். ஒரு நாள் காட்டில் மரம் வெட்டிக் கொண்டிருந்த சத்தியவான் மயங்கி வீழ்ந்து உயிர் துறந்தான். அதனைக்கண்ட சாவித்திரி கதறி அழுதாள். அவள் காயத்திரி மந்திர பலத்தாலும் சாவித்திரிதேவி அருளாலும் பிறந்தவளாதலால் ’ சத்தியவான் உயிரைக் கொண்டு செல்லும் எமனைக் கண்டாள். பின் தொடர்ந்தாள். அவனை வணங்கினாள். எமனும் " தீர்க்க சுமங்கலியாயிரு” என ஆசி கூறினான். அவனின் ஆசிச் சொல்லில் மகிழ்ந்த சாவித்திரி ஜீவன்களுக்கு பிராணன் ஏது? ஏன் மானுட உடல் அழிகின்றது. கர்மம் என்றால் என்ன? அது எதனால் தோன்றுகின்றது? எனப் பல கேள்விகளைக் கேட்டாள். அவளின் அறிவாற்றலைக் கண்ட எமனும் விடை பகர்ந்து உனக்கு என்ன வரம் வேண்டும் எனக் கேட்டான்.
என் தகப்பனாருக்குப் புத்திரரும் மாமண் மாமிக்கு கணி பார்வையும் அவர்கள் இழந்த ராஜ்யமும் கிடைக்கவேண்டும் என்றாள். எமனும் அவள் கேட்டவற்றை கொடுத்துச் சென்றான். சாவித்திரி மீண்டும் தொடர்ந்தாள். மீண்டும் கேள்விகள் - பதில்கள் - வரங்கள் - திரும்பத் திரும்ப தொடர்ந்தன. முடிவாக சாவித்திரி எமனை யமாஷ்டகம்" கூறித் துதித்து, தனக்கு புத்திர வரம் வேண்டினாள். எமனும் சாவித்திரியிடமிருந்து தப்புவதற்காக
MARKAN DAN AN
Empowered to Ad
M. MARKA * ALL ASPECT OF IMMIGRATION MATTERS HUMAN RIGHTS*ALLTYPES OF CONVEYANCINC * LANDLORDSITENANTMATTERS*MAT * ALL.D.S.S AND HOUSI * FREE ADVICE FOR 15 MINUTE
LEGA WE ARE ALWAYS FRIENDLY EAS
TEL 2 (DKB 54 BBB
 
 

சித்திரை - வைகாசி- ஆனி 1996 . வரம்" என்றான். குழந்தை வரம் கொடுத்த பின்னும் சாவித்திரி தன்னைத் தொடர்ந்து வருவதைக் கண்ட எமன் ஓடினான். அவளும் அவனைப் பின் தொடர்ந்து ஓடிச் சென்று வழிமறித்து எனக்கு புத்திர வரம் தந்த தர்மராஜனே! நீர் தர்மத்தின் தலைவன் அல்லவா? வரம் தந்த நீரே அதை அழித்தல் அழகா? கொஞ்சம் சிந்தனை செய்து பாரும், நான் உம்மை முதன் முதல் வணங்கியதும் தீர்க்க சுமங்கலியாயிரு என ஆசி கூறினீர். இப்போ குழந்தை வரமும் தந்தீர். பின்னர் எப்படி என் கணவர் உயிரை நீர் எடுத்துச் செல்ல முடியும். என கேள்விக் கணைகள் தொடுத்தாள். அவளின் கேள்விகளின் கருப் பொருளை உணர்ந்த எம தர்மராஜனும் அவள் வேண்டிய வரங்களையும் சத்தியவானின் உயிரையும் கொடுத்து மாயா பீஜமான தேவியின் மகாமந்திரத்தையும் உபதேசித்துச் சென்றான். சத்தியவான் தன் மனைவியெனும் அருளமுதத்தின் வாதத் திறமையால் தன் உயிரை மீண்டும் பெற்று வாழ்ந்தான்.
பின்குறிப்பு
சாவித்திரி சத்தியவானை எமதர்மனிடமிருந்து மீட்ட நாளை காரடையார் நோன்பு என்ற பெயரில் இந்தியாவில் இன்றும் கொண்டாடுகின்றனர். இந்த நோன்பு மாசிமாதம் முடிந்து பங்குனி மாதம் தொடங்கும் முன்னர் ( அதாவது மாசி -
பங்குனி மாதங்கள் கூடும் நேரம் ) அநுஷ்டிக்கப்படும்.
CD SOLICTODES minister of Oaths
Tamil House 720, Romford Road Manor Park London E126BT
NDAN LL: H3 S TO APPEALS TO EUROPEAN COURT OF GLITIGATION ALL COURTS CIVIL CRIMINAL RMONIAL POLICE STATION ADVICE NG BENEFIT MATTERS S ON THE FIRSTATTENDANCE
L AD SY TO TALK AND KEEN TO HELP
FAX (DB 54 B38(D33

Page 27
கலசம்
&
8Ꮥ8 প্ত
क्षे
& S ଽ
உண்மை எது என்பதை விளக்குவதே விளக்காகும். அதாவது என்ன என்று அறிய முடியாத (அறியாமை என்னும் இருளால்) ஒன்றை இன்னது என்று அறியத்தருவது விளக்காகும். நெருப்பைக்கண்டு பயந்த மனிதன் அதை வழிபடத்
 

- சித்திரை - வைகாசி- ஆனி 1996 蚤广
தொடங்கினான். அதுவே அக்கினி வழிபாடு தீய வழிபாடுதிருவிளக்கு வழிபாடுகளுக்கு வழிகாட்டியானது. கார்த்திகைத் தீய வழிபாடும், தீபாவளி (ஆவளி- வரிசை) - தீபங்களை வரிசையாக ஏற்றும் பண்டிகையும் தீய வழிபாட்டிற்கு நாம் கொடுத்த முதன்மையைக் காட்டுகின்றன. தீப விளக்குகள் - திருவிளக்கு, அகல் விளக்கு, அன்ன விளக்கு, கலங்கரை விளக்கு, பாவை விளக்கு எனப் பலவகைப்படும். விளக்கு இருளை நீக்குவதால் இலட்சுமி கடாட்சமாகக் கருதப்படுகினறது. எனவே திருவிளக்கு என அழைக்கப்பட்டது. மின்மினிப் பூச்சிபோல் விட்டுவிட்டு பிரகாசிக்கும் விளக்கே அன்னவிளக்காகும். 'வேள்வித் துணத் தசைஇ யவனர்
ஓதிம விளக்கின் உயர்மிசைக் கொண்ட வைகுறு மீனின் பைபயத் தோன்றும்
வேள்வித்துணின் உச்சியில் வைக்கப்பட்டிருந்த அன்னவிளக்கு (ஓதிமம்- அன்னம்) விடிவெள்ளி(வைகுறுமீன்) போல் விட்டு விட்டு பிரகாசித்ததாம் என பெரும்பாணாற்றுப்படை கூறுகின்றது. பல சங்க இலக்கியங்கள் பாவை விளக்கைப்பற்றிச் சொல்கின்றன. பொன்னால் செய்யப்பட்ட பாவை விளக்குகள் அழகுக்காக திருவிழாக்களில் வைக்கப்பட்டிருந்ததாக முல்லைப்பாட்டு செப்புகின்றது.
இடம் சிறந்து உயரிய ஏழுநிலை மாடத்து பாவை விளக்கில் பரூஉ சுடர் அழல என நெடுநல்வாடை பாவை விளக்கை விளக்குகின்றது. ( பரூஉ சுடர் அழல - பெரிய தீச்சுடர் எரிய) பெண் உரு (பாவை) விளக்கினை ஏந்திய நிலையில் இருப்பதால் பாவை விளக்கு என அழைக்கப்பட்டது. இன்று செம்பினால் செய்யப்பட்ட பாவைவிளக்கினையும் கோயில்

Page 28
கலசம்
துTணிகளில் கற்சிற்பங்களாக இருக்கும் பாலை விளக்குகளையுமே காணக்கூடியதாகவுள்ளது. பாலை விளக்கை தீப இலட்சுமி, தீய நாச்சியார் என்றும் கூறுவர் ஆண்பாவை விளக்குகளும் உண்டு. இதனை பூரீ விளக்கு சீலர் என்பர். கோயில்களுக்கு தம் வேண்டுதல் நிறைவு பெறுவதற்காக பாவை விளக்குகளை செய்து கொடுத்திருக்கின்றார்கள் பெண்களே இதனை செய்திருப்பதாகக் கல் வெட்டுகளும் பாவை விளக்கின் படிமத்தின் பீடத்திலுள்ள குறிப்புகளும் கூறுகின்றன. திருவாரூர் கோயிலுக்கு பரவை நங்கை என்ற பெண் பல பாவை விளக்குகளை செய்து கொடுத்திருப்பதாக கல்வெட்டு அறியத்தருகின்றது. "அம்முனா அம்மணி" எனும் மராட்டிய இளவரசி திருவிடைமருதூர் கோயிலில் தன் காதல் நிறைவேறினால் இலட்சம் பாவைவிளக்கு ஏற்றிக் கொள்வதாக வேண்டிக் கொண்டாள். அவள் காதல் நிறைவேறியதும் (பிரதாப சிம்மனை மணந்ததும்) கோயிலில் இலட்சம் பாவை விளக்குகளை ஏற்றி அப் பாவை விளக்குகளுக்கிடையே தானும் ஒரு பாவை விளக்காக அகல் விளக்கேந்தி நிற்கின்றாள். திருவிடைமருதூர் கோயில் சந்நிதி முன் இன்றும் தீப ஒளி ஏந்தி நிற்கும் பாவை விளக்கின் பீடத்தில் இச் செய்தியினைக் காணலாம். இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாக பாவையர் ஏற்றிடும் பாவைவிளக்கு, சோதி வடிவான இறை- அருளொளி விளக்காக - அறிவொளியாக நம் மனத்தில் சுடர் விடுவாள் என்பதையே விளக்குகின்றது. 'மனத்து விளக்கினை மாண்பட ஏற்றிச் சினத்து விளக்கினை செல்ல நெருக்கி அனைத்து விளக்கும் திரியொக்கத் துண்ட மனத்து விளக்கது மாயா விளக்கே என்கின்றது திருமந்திரம். மனத்தின் விளக்கை பெருமை கொள ஏற்றி ( மாண்பட) கோபமெனும் விளக்கை வெறுத்து அழித்து ( செல்ல நெருக்கி) மற்றைய ஐம்புலவிளக்குகளையும் ஒரே நேரத்தில் தூண்டினால் மனத்து உள்ளொளி விளக்கானது மறையாத விளக்காக நின்று சுடர்விடும்.
மனிதனுக்கு நுரை வருகின்றதே அதுதான் மனிதனுக்கு இயமன் விடுகின்ற அந்திம அறிவிப்பு. நாம் இதுவரையும் முன்னேறாமல் இருப்பதற்குக்
காரணம் நல்லவர்களோடு பழகவில்லை.பணம் சேரச் சேர சாப்பாடும் குறையும் . துக்கமும் குறையும் ஒழுக்கமும் பக்தியும் கூடக் குறையும்.
 

鼻一 - افتتح
சித்திரை - வைகாசி- ஆணி 1996
குறித்து வைக்கவேண்டிய தினங்கள்
15-4-96
936حہ۔ 4 - 124
936 --4 سے 15
17-4-96
996-- 4ے --- 2Oڑت
9365--4 س- 521
25一4一96
O-5-96
O2-5-96
O3-5-96
O9-5-96
15-5-96
65ڑتS-- ,5- ,14
9965 -- 5 س-15
936ت:5-- .165
5-9965"س- 17
936 -سست: 5 - {3ی
965 --5-35ی
936-س 5-س%9ت52S
96 س-5 س- 3O
96 ------5 سے 51
Ol - 6-96
9365-س--6-- 11
19-6, -96
9365 است 63 - 15
5-6-96
20-6-96
936 ---6--/g1ت
936 -- 6 س25gی
S235|-6|-96
924 - 6-96
27- 6-96
28-6-96
51-6, -96
Il-7-96
13-7-96
5-7-96
6-7-96
19 - 7-96
SO-7 -96
2 - 7-96
S36 - 7-- اخت
தாது வருடப் பிறப்பு ஏகாதசி விரதம் பிரதோஷவிரதம் அமாவாசை விரதம் கார்த்திகை விரதம் சதுர்த்தி விரதம் ஷஷ்டி விரதம் பிரதோஷ விரதம் சித்திரை சித்திரை சித்திரா பூரனைவிரதம் நடேஷர் அபிஷேகம் ஏகாதசி விரதம் வைகாசி மாதப் பிறப்பு பிரதோஷ விரதம் (3UIT II LeOI estLOIT6 JIT60)&F அமாவாசை விரதம் சதுர்த்தி விரதம் ஷஷ்டி விரதம் ஏகாதசி விரதம் பிரதோஷ விரதம் வைகாசி விசாகம் பூரனை விரதம் ஸ்மார்த்த ஏகாதசி வைஷ்ணவ ஏகாதசி கார்த்திகை விரதம் ஆனி மாதப் பிறப்பு அமாவாசை சதுர்த்தி விரதம் ஸ்கந்த பஞ்சமி குமார ஷஷ்டி விரதம் நடேஷர் அபிஷேகம் ஆனி உத்தரம். சயன ஏகாதசி விரதம் பிரதோஷ விரதம் பூரனை விரதம் ஏகாதசி விரதம் சனிப் பிரதோஷ விரதம் அமாவாசை விரதம் ஆடிச் செவ்வாய் சதுர்த்தி விரதம் ஆடிப் பூரம் ஷஷ்டி விரதம் ஆடிச் செவ்வாய்
தொகுப்பு : அமுதா

Page 29
CANON F
CO
SALES KAR
N EAMW KY | R E
SA S BUSNES
28 AMBERLEY GAEROENS TELEPHONE OB BS BOB E-MAIL I MANO @ M)
MMOHBI L Erg (
 
 
 
 

YSTEMs LIMITED
PRINTERS
)MPUTERS
SERVICE
FU RIHBISHED
S SYSTEMS TD
EPSOM SURKEY, KTI9 ONIH 3 FACSM LE t (DB 224 523
A PRO-NET COUK 36O 904467

Page 30
as). Fib
ഞ്b மாதத்துக் காலை இளம் குளிர் சற்றுங் குறைந்துவிடாத அதிகாலைப்பொழுது அந்தக் கிராமத்தில் ஜனநடமாட்டம் ஆரம்பித்திருந்தது. மர உச்சிகளில் கட்டப்பட்டிருந்த ஒலிபெருக்கிகளின் வழியாகக் குருஜி ஹரிதாஸ்கிரி அவர்கள் கனிரென்ற குரலிற் பாடிய பல நூற்றுக்கணக்கான பாடல்களில் ஒன்று காற்றில் வந்து பக்திப் பரவசமூட்டிக் கொண்டிருந்தது. அந்தக்கிராமத்தில் முதல் நாளிரவு தங்கியிருந்த இருபதாயிரம் பக்தர்களும்
 
 
 
 
 
 


Page 31
காலையில் எழுந்து நீராடி புத்தாடை அணிந்து கோயிலை
நோக்கி நடக்கலானார்கள்.
அது என்ன கோயில்? அது எந்தக் கிராமம்? வைபவம் என்ன? தமிழ்நாடு காஞ்சிபுரம் நகருக்குத் தெற்கே 30 கிலோமீட்டர்
தொலைவிலுள்ள தென்னாங்கூர் என்ற கிராமந்தான் அது.
மதுரை பாண்டிய மன்னன் மீனாட்சி அம்பாளைக் குழந்தை உருவிற் சந்தித்து அழைத்துச் சென்ற ஆன்மீக வரலாறு நிறைந்த தென்னாங்கூரில் எழுந்துள்ள அந்தக் கோயில் வளாகம் பாண்டுரங்கன் ருக்மாயி, மீனாட்சி சுந்தரேசர் சுவாமி ஞானானந்தர் ஆகியோருக்கான மூன்று மாபெரும் கலைக் கோயில்களை உள்ளடக்கியது. அந்த வைபவம், இந்த மூன்று ஆலயங்களுக்கும் மஹா சம்புரோக்ஷணம்' அதாவது மகாகும்பாபிஷேகம் செய்து வைக்கப்படும் புனித நன்னாள் . மஹா புருஷர்கள் மஹான்கள் புனிதர்களுக்குத் தட்டுப்பாடே இல்லாத தமிழ் நாட்டில் இந்தக் கும்பாபிஷேக வைபவத்திற்கு தமது நல்லாசிகளை வழங்க ஏராளமான ஆன்மீகப் பெரியர்கள் ஜபதபம் முடித்து விரைந்து வந்திருந்தது அதிசயமல்ல. அதிகம் சொல்வானேன்? எங்கள் இந்து மதத்தின் ஒளிவிளக்காய் வழிகாட்டியாய் இன்று திகழும் காஞ்சி g சங்கராச்சாரியார் மடத்தின் பீடாதிபதி தற்போதய பெரியவர் ஜகத்குரு யூனி ஜெயேந்திர சரஸ்வதி அவர்களும் முதல்நாள் வந்து ஆசி வழங்கினார்கள். காஞ்சிப்பெரியவர் தென்னாங்கூர்
 

சித்திரை - வைகாசி- ஆனி 1996
ஆலயத்துக்கு வந்தபோது, தமக்கே உரிய பாணியில் காரில் வராமல் சங்கரபீடத்தின் மோட்டார் வான் ஒன்றில் ஒலிபெருக்கிகள் " ஜெய ஜெய சங்கர. என்று ஒலிமுழங்க தமது பரிவாரங்களுடன் வந்து இறங்கினார்கள்.
கும்பாபிஷேக வைபவத்தைத் தரிசித்தாற் கோடி புண்ணியம்
சேரும் என்பார்கள். அதை உணர்ந்தோ என்னவோ குருஜி Lரிதாஸ்கிரி அவர்களினால் ஆன்மீக வழியில் ஈக்கப்பட்ட வெளிநாட்டுப் பக்தர்கள் நூற்றுக்கணக்கில் வந்திருந்தார்கள். சிங்கப்பூர், மலேஷியா, ஜப்பான், இலங்கை மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளிலிருந்து சிலர் முதற்தடவையாக இந்தியாவுக்கு வந்தவர்கள்." இந்தியா என்றால் காஞ்சிபுரம் சாறி அல்லது புதிய சினிமாப்படம் இவற்றைத்தவிர வேறு எதையுமே சிந்திக்கத் தெரியாத சில வெளிநாட்டவர்கள் தென்னாங்கூர் மண்ணில் கால்பதித்ததும் தம் உடம்பில் மின்சாரம்போல் பக்தி உணர்வு பரவுவதாகவும் பிரமாண்டமான ஆலயத்தையும் வளாகத்தில் உள்ள மற்ற கட்டடங்களையும் பார்த்தபின் பேசாமல் இங்கேயெ தங்கிவிடலாமா என்று தமக்கு தோன்றியதாகவும்" என்னிடம் குறிப்பிட்டார்கள்.
வெளிநாட்டவர்கள் தங்குவதற்கென வெளிநாட்டுப் பாணியில் "கொட்டேஜ்"பல நவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இவற்றோடு பிரமாண்டமான சமையற்கூடத்துடன் கூடிய மூன்றுமாடி அன்னதான மண்டபம், முதியோர் "இல்லம், நாமசங்கீர்த்தன மண்டபம், கலாமண்டபம், சிறுவர்களுக்கு வேதம் கற்பிக்கும் வேதபாடசாலை, கிராமம் முழுவதற்கும்

Page 32
&söSið
தூயகுடிநீர் வழங்கும் நன்னீர்க்கிணறு ஆகியவையும் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த நீரைச் சேமித்து
வைத்திருக்கும் மஞசள்நிற குடவடிவத்தில் நீர்த்தொட்டி தொலைவில் இருந்து பார்ப்போருக்கும் தெரியும்படி அதில் எழுதப்பட்டுள்ளது ராதே கிருஷ்ணா” என்ற வாசகம்,
திருப்பதியில் வெங்கடாஜலபதி ஆலயமும் அதன் சுற்றுப்பிரகாரமும்போலத் தமிழ்நாட்டில் எழுந்துள்ள இந்த ஆலய கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்திவைக்க திருப்பதி வெங்கடாஜலபதி ஆலய பிரதம பட்டர் மாடம்பாக்கம் பூரீநிவாசர் அவர்களையே நேரில் அனுப்பித் தமது மரியாதையைத் தெரிவித்திருந்தது திருப்பதி தேவஸ்தான நிருவாகம். தைமாதம் 28ம் திகதி வெள்ளிக்கிழமை சுயவேளை காலை 8.45 மணிக்கு சற்குருநாதர் ஞானானந்தகிரி சுவாமிகளின் ஆணைப்படி குருஜி ரிெதாஸ்கிரி சுவாமிகள் அவர்கள் நீண்டகாலமாக பல நாடுகளிலும் நாமசங்கீர்த்தனைகளை நடத்தி பக்தர்களிடம் திரட்டிய நிதியில் உருவான மூன்று ஆலயங்களின் கும்பாபிஷேக வைபவம் கோலாகலமாக நடந்தேறியது. மீனாட்சி சுந்தரேசுரர் ஆலயம் சிவ ஆகம முறைப்படி நடத்தப்பட்டது தனிச்சிறப்பு. மூன்று ஆலம் கோபுர கலசங்களின் அபிஷேகங்கள் பூர்த்தியடையும் வேளையில் வெண்ணிறக் கருடன் ஒன்று அந்த ஆலயத்தை வட்டமிட்டுப் பறந்ததை பலர் கண்டார்கள். முறைப்படி நீங்கள் செய்த இந்த யாகங்களை பூசைகளை நான் ஏற்றுக் கொண்டேன் " என்று கருட வாகனனே நேரில் வந்து சொன்னது போலிருந்தது. கும்பாபிஷேகம் பூர்த்தியானதும் அன்னதான மண்டபத்தில் இருபதாயிரம் பேருக்கு உணவு வழங்கப்பட்டது. கும்பாபிஷேகம் பூர்த்தியடைந்து தொடர்ந்து மறுநாள் 40
 

சித்திரை - வைகாசி- ஆணி 1996
நாட்களுக்கு மண்டலாபிஷேகம் நடைபெற்றது. மாலையில் சென்னையிலிருந்து வந்திருந்த கலைஞர்கள். குருஜியின் அடியர்களின் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சிக்கில் சகோதரிகள் புல்லாங்குழல், பம்பாய் சகோதரிகள் பாடல், டாக்டர் பத்மா சுப்பிரமணியம் அவர்களின் மீனாட்சி கல்யாணம் நாட்டிய நாடகமி நாடக மேதை மனோகரின் திருநாவுக்கரசர் நாடகம், gநிவாசின் மான்டலின் ஆதியன குறிப்பிடக்கூடியன. லண்டனிலிருந்து கொண்டுவந்திருந்த மனச்சுமைகளை இறக்கிவிட்டு உள்ளங்களில் ஆன்மீக பலத்தை நிறைத்துக் கொண்டு மீண்டும் லண்டன் புறப்பட்டோம். கும்பாபிஷேகத்தின்போது எங்கள் குருஜியை நாம் நேரில் காணமுடியவில்லை என்ற ஏக்கம் எம் மனதில் இருந்தாலும் நாம் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து அருள்புரிய அவர் எங்கும் இருக்கிறார் என்று எம்மை ஆறுதல் செய்து கொண்டு தென்னாங்கூரிலிருந்து விடைபெற்றோம்.
நீ கடவுளை இடணரவேண்டுமா?
அன்பாயிரு. உண்மையே சொல். அறிவாளியாயிரு.ஆண்டையோடிரு சுறுசுறுப்பாயிரு ஆனால் படபடப்பாயிராதே. பொறுமையாயிரு. ஆனால் சோம்பேறியாயிராதே. சிக்கனமாயிரு. ஆனால் கருமியாயிராதே. அன்பாயிரு ஆனால் அடிமையாயிராதே. இரக்கங்காட்டு ஆனால் ஏமாந்து போகாதே. கொடையாயியாயிரு. ஒட்டாண்டியாயிராதே. பற்றற்றிரு ஆனால் போக்கிரியாயிராதே.
-ழரீ ஞானானந்தகிரி சுவாமிகள்
உனக்குள் இருக்கும் ஆற்றல் புறத்தில் வெளிப்படும் வகையில் நீ வளரவேண்டும். வேறு எவரும் உனக்குக் கற்பிக்கவும் முடியாது. உன்னை
ஆன்மீகவாதி ஆக்கிவிடவும் முடியாது. உனது சொந்த ஆன்மாவைத்தவிர வேறு ஆசிரியர் யாருமில்லை. -ஸ்வாமி விவேகானந்தர்

Page 33
கலசம்
சிவபூனி நாகநா
கடவுளர் படம் போட்ட நாளர் காட்டிகளை (கலண்டர்) வாங்குகிறோம். கோயில்களிலே விபூதி குங்குமப் பிரசாதம் முதலியன கொடுக்கிறார்கள். முடிந்த நாள்காட்டிகளையும் மீதமாகினிற கோயிற் பிரசாதங்களையும் எறிந்துவிட முடியாமல், வீட்டில் வைத்திருக்கவும் இடம் இல்லாமல் மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இதற்கு வழி சொல்ல முடியுமா?
வழிபாட்டிலே பல வகையுண்டு. உருவ வழிபாடு, அல்லது சூலம் வேல் முதலியவற்றை வைத்து வழிபடுவது, கும்பத்தை வைத்து வழிபடுவது என்று இருக்கிறது. அதுபோல படதீதை வைத்து வழிபடுவதும் உண்டு. முந்தைய கலசம் இதழ்களில் நான் குறிப்பிட்டது போல உருவ வழிபாடுகள் பஞ்ச பூத சம்பந்தமானவை. கோயில்களிலே கல்லினால் ஆன சிலைகளை வைத்து வழிபடுகிறோம். அதற்கு தத்துவம் சொல்கிறோம். கல்லினால் ஆன சிலைகளிலிலே மண், நீர், வாயு, நெருப்பு ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்கள் உண்டு. அதனாலேதான் கல்லிலே சிலை செய்கிறோம். வைத்து வழிபடும்போது இந்தச் சிலைகளில் விஞ்ஞான மெஞ்ஞான சம்பந்தம் ஏற்படுகிறது. படங்களை வைத்து வழிபடுவதால் இந்தமாதிரி சக்தி வருமா என்று கேட்கலாம். பூசைகளில் ஆத்மார்த்த பூசை பரார்த்த பூசை என்று இருவகை உண்டு. தனக்கும் தன் குடும்பத்துக்கும் நலம் வரவேண்டும் என்று செய்வது ஆத்மார்த்த பூசை மிக ஆசாரமாக இருப்பவர்கள் வீட்டிலே ஆத்மார்த்த பூசையிலும் சிவலிங்கம் போன்ற
 

ー1 சித்திரை - வைகாசி- ஆணி 1996
Y
മജ്ഞശ്
தசிவம் குருக்கள்
உருவங்களை வைத்து வழிபடலாம். அவ்வளவு தூய்மை எல்லாருடைய வீட்டிலேயும் இருப்பதில்லை. அதனால் வீட்டிலே சிலைகளை வைத்து வழிபடுவது எல்லோருக்கும் முடியாத காரியம். பதிலாக வீடுகளிலே படங்களை வைத்து வழிபடுகிறோம். வழிபாட்டின்
முக்கியமான நோக்கம் மனதிலே ஒரு தெளிவை ஏற்படுத்துவதே. தெய்வசிந்தனை மனதிலே வருவதற்காகத்தான் இந்த உருவ வழிபாடுகளே!
இனி படத்தைப் பார்க்கும்போது உதாரணமாக, சரஸ்வதி படத்திலே கையில் வீணையோடு பார்க்கும்போது படிப்புக்குரிய தெய்வம் என்ற அறிவும், வழிபடுவதால் நமக்கும் படிப்பு வரும் என்ற நம்பிக்கையும் வரும். அதுபோல லக்ஷமியை வழிபடும்போது செல்வம் வரும் என்ற நம்பிக்கை வரும் நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் எனிறு சித் தர்கள் பாடியிருக்கிறார்கள்தான். அவர்களுக்கு உருவ வழிபாடு தேவையில்லை. ஆனால் அந்த உயர்ந்த நிலை வரும்வரைக்கும் உருவ வழிபாடு நமக்குத் தேவைப்படுகிறது. மாயா பந்தங்களுள் கட்டுப்பட்ட நமக்கு உருவ வழிபாட்டைத் தவிர வேறு வழியில்லை. இதற்கு இந்தப் படங்கள் உதவுகின்றன. ஆனால் அதையே வியாபார நோக்காக்குவது தவறு. ஒரு வீட்டிலே நாலைந்து பிள்ளையார் என்பது தேவையில்லை. ஆனால் ஆணி டாணி டு வாங் கும் காலணி டர்களை என்னசெய்வது? என்பது நியாயமான கேள்விதான். மேலதிகமாக இருக்கும் படங்களை கோயிலிலே கொண்டு சென்று கொடுத்தால் நாங்கள் அவற்றை வாங்கி இல்லாதவர்களுக்குக் கொடுப்போம். அதுதவிர சிதிலமாக

Page 34
கலசம் -
莒 அதாவது கிழிந்துபோன அல்லது கால் கை உடைந்த சிலைகளை வழிபடக்கூடாது, கடலிலே வீசிவிட வேண்டும் என்று விதி இருக்கிறது. ஆகவே பொது இடங்களிலே, கோயில்களிலே தேவையற்றவற்றைக் கொடுக்கலாம். கெட்டவைகளைக் கடலிலே எறிந்துவிடலாம். விபூதி குங்குமம் முதலிய பிரசாதங்களை எப்போதும் தரிக்கும் வாய்ப்பு கட்டாயமாக இருக்கும். அவற்றை வீட்டிலே ஒரு சிறிய கிண்ணத்தில் அல்லது டப்பியிலே போட்டுவைத்து, தினமும் உபயோகிப்பது சிறந்தது. விபூதி குங்குமத்தைத் தூக்கி எறிவது சரியல்ல.
இருதயம், சிறுநீரகம் என்று உறுப்புகளைத் தானம் செய்கிறோமே! இது சரியா? சாதாரணமாக உயிர் உடலை விட்டுப் பிரிந்தபின் உடலுக்கும் உயிருக்கும் சம்பந்தமில்லை. ஆகவே உயிருக்கு உடலைத் தானம் பணிண யோக்கியதை இருக்கிறதா என்ற கேள்விக்கே இடமில்லை. அந்தக் காலத்திலே உடல் உறுப்புகளை பேணிப் பாதுகாத்துத் தானம் பண்ண வசதிகளோ சந்தர்ப்பங்களோ இருக்கவில்லை. அதனால் இந்தக் கேள்விக்கு ஆதாரத்துடன் பதில் கொடுக்க முடியாது. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் விஞ்ஞான வளர்ச்சியோடு வைத்துப் பார்க்கும்போது தானம் செய்வது சரியென்றே படுகிறது. இறந்த பிறகு நமது உடல் ஒருவழியில் உபயோகப்படுமானால் அதனாலே தவறு இல்லையென்றுதான் நினைக்கிறேன். ஆனால் உயிரோடு இருக்கும்போதே பணத்துக்காக கிட்னி போன்ற உறுப்புகளைத் தானம் செய்வது தவறு. ஆண்டவன் நமது உறுப்புகளை, சிலவற்றை ஒன்றாகவும் சிலவற்றை இரண்டாகவும் தேவையுடனேயே படைத்திருக்கிறான். சில உறுப்புகள் இல்லாவிட்டாலும் ஓரளவு உயிர் வாழலாம். சில உறுப்புகள் இல்லாவிட்டால் உயிர் வாழவே முடியாது. தனது உயிருக்குப் பங்கம் வருவதுமாதிரித் தானம் செய்வது தவறு. உயிர் போனபின் தானம் செய்வதால் தவறே இல்லை. பணத்துக்காகத் தானம் செய்வதும் தவறு. பணம் வந்துவிட்டால் அது தானமாகாது, அது வியாபாரம், இரத்ததானம் செய்வது தவறல்ல. கர்ணன் கவச குண்டலங்களைத் தானம் செய்தான், மகாவலிச் சக்கரவர்த்தி தனது உடலையே தானம் செய்தான் என்றேல்லாம் புராணக் கதைகள் பலவுண்டு. எனவே தானம் செய்வது தவறல்ல.
உங்கள் ஐயங்களை எழுதி அனுப்பு
 
 

黑一 சித்திரை - வைகாசி- ஆணி 1996
நமது சமயத்திலே சிவபதம் அடைந்தவர்களின் உடலை எரிப்பது வழக்கம்.ஆனால் அவர்கள் சிறுவர்களாக இருந்தால், பதினாறு வயதுக்கு உட்பட்டவர்களாக இருந்தால் புதைக்கிறோம். இந்த வேறுபாடு ஏன்?
இறப்பு எந்தவயதிலும் வரக்கூடியது. இதை யாராலும் தவிர்க்க முடியாது. இறந்தவரது உடலை ஒன்றில் எரிக்கவேண்டும் அல்லது புதைக்க வேண்டும். இந்த இரண்டு வழிகளைத் தவிர வேறு வழிகள் இல்லை. ஆனால் சில சந்தியாசிகளுக்கு மட்டும் ஜல சமாதி உண்டு. அவர்களது உடலைக் கல்லோடு கட்டிக் கடலிலோ நீர் சிலைகளிலோ போட்டுவிடுவார்கள். அந்த உடலை மீன் போன்ற ஜீவராசிகள் உண்ணும் அவர்களுடைய தத்துவம் என்னவென்றால், தாம் இறந்தபின் தமது உடலும் வேறு உயிர்களுக்குப் பலனளிக்க வேண்டும் என்பதே. அதை எல்லோரும் பின்பற்றி தமது உடல்களை அப்படிப்போட ஆரம்பித்தாலி நீர்நிலைகள் கெட்டு சுகாதாரம் பாழடைந்துவிடும். எனவே எல்லோரும் அப்படிச் செய்வதில்லை. நமது வழக்கத்தில் உடலை எரிப்பதுதான் சரியானது. வழிபாடு, தெய்வசிந்தனை முதலியவற்றுடன் தூய வாழ்வு வாழ்பவர்களின் உடலும் தூய்மை அடையும். திருநீறு அணிவதாலும் தருமங்களைச் செய்வதாலும் உடல் புனிதமாக இருக்கும் அதை எரித்துப் பஸ்மம் ஆக்குகிறோம். ஆனால் இள வயதினர் இவையெல்லாவற்றையும் செய்ய அவர்களுக்குச் சந்தர்ப்பம் கிடையாது. நல்லது செய்ய அவர்களுக்குக் காலம் போதாது. அதோடு அவர்கள் மண்ணில் மீண்டும் சீக்கிரமாகப் பிறக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அதனாலேயே மண்ணிற் புதைக்கிறோம். அதனால் அந்த உடல் மற்றைய ஜீவராசிகளுக்குப் பயன்பட்டு அதன்மூலம் அந்த உயிருக்கு ஈடேற வாய்ப்புண்டு. ஆண்டு அநுபவித்த உடம்பை எரிப்பதே முறை. சிறு குழந்தையாக இருந்தால் எங்கள் ஊரிலே அந்தக் குழந்தையின் காலில் எண்ணெய் தடவி வீட்டுச் சுவரிலே சுவட்டைப் பதிப்பார்கள். சிலர் வீட்டுக் கொல்லைப்புறத்திலேயே புதைப்பார்கள். குழந்தை அழிந்துபோகாமல் புழுவாகவோ, செடியாகவோ முளைத்து என்றும் நினைவில் இருந்து மனச்சாந்தி அளிக்கும் என்பது காரணம். இந்தப் பதிலை நான் கேட்டறிந்ததை வைத்தே சொன்னேன். ஆதாரங்கள் இல்லை. வேண்டுமாயின் ஏதாவது நூல்களைப் படித்தறிந்தே
சொல்லவேண்டும்.
கள். முகவரி முன்பக்கத்தில் உள்ளது

Page 35
கலசம் 一批 தமிழ்ப் புதுவருட்
சிவழி நாகநாத
៣ចាgh
முதல் ராசியை தங்கள் ராசியாகக் கொண்ட உங்களுக்கு சென்ற ஆண்டு பல காரியங்களை தொடங்கும் வாய்ப்பு இருந்தது. ஆனால் யோசிப்பதிலேயே காலங்கடத்தி அதனால் கவுர்டங்கள்தான் அதிகம், அதன்வழியே கடன்களும் பெயர் கெடுதலும் ஏற்படக்கூடும் ஆனால் திடிர் பணவரவும் பிரயாணங்களால் நன்மையும் உண்டாகும். கணவன் மனைவி உறவு சுமுகமாக இருக்கும். தொழிலில் முதலீடு செய்தால் அடுத்து வரும் ஆண்டுகளில் நல்ல லாபம் வரும் இடையிடையே உடல் நல பாதிப்பு உண்டு விருந்து கேளிக்கைகளில் கவனம் தேவை. உல்லாச விரயங்கள் ஏற்படலாம். உத்தியோக இடங்களில் அனவோடு பேசுவது நல்லது.
ரிஷபம்
அஷ்டமத்து வியாழனும் அவதிப்படும் தங்களுக்கு வருடம் பிறந்ததும் சனிமாற்றத்தினால் கொஞ்சம் நல்ல பலன்கள் தெரியக் கூடும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாவிட்டாலும் சமாளிப்பீர்கள். டிசம்பருக்குப் பிறகு தொழிலில் தைரியமாக முதலீடு செய்யலாம். பிரயாணங்களால் விரயமும் நிம்மதிக்குறைவும் ஏற்படும், பிள்ளைகளால் மனக்கலக்கமும் கவலையும் ஏற்படும் உடல் நலம் வெகுவாகப் பாதிக்கப்படும். உணவிலும் மருந்து வகைகளிலும் மிகக்கவனம் தேவை உறவின் வருகையால் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் விரைவில் மனக்கசப்பும் பகையும் வர வாய்ப்பு உண்டு மாறுதலாக தெய்வ தரிசனங்களும் பெரியோர் ஆசியும் கிடைக்கும். எட்டு மாதங்கள் பொறுமை காத்தால் பொருளாலும் புகழாலும் பெருமை அடைவீர்கள்
மிதுனம்
தான் உண்டு தங்கள் வேலையுண்டு என்றிருக்கும் உங்களுக்கு அனாவசிய பிரச்சினைகள் தலைதுாக்கும். எளிதில் உணர்ச்சி வசப்படுவீர்கள், திருமணம்
 

சித்திரை - வைகாசி- ஆணி 1996
ராசி பலன்கள்
gÁGI குருக்கள்
பின்னைப்பேறு உத்யோக வாய்ப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. படிப்பு விடயத்தில் தடை ஏற்படக்கூடும், கவனம்தேவை. சென்ற ஆண்டு ஏற்பட்ட உடல்நல பாதிப்பு சீராகும். தொழிலால் புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். யோசித்துப் பழகவும், பொருள் வரவு சீராக இருக்கும். பல நாடுகளுக்கு சென்றுவர வாய்ப்பு உண்டு குடும்பத்தில் சிறிய குழப்பங்கள் ஏற்படலாம் . கூட்டு வியாபார விடயங்களிலும் சிந்தித்து செயல்படவும். ஆண்டின் பிற்பகுதியால் இறுக்கமான சூழ்நிலை ஏற்படும். புதிய ஏற்பாடுகளை தவிர்ப்பது நல்லது.
கடகம்
அஷ்டமத்து சனியினால் அலுத்துப்போன தங்களுக்கு தலைக்குமேல் பிரச்சனைகள், ஆனால் மனதில் தெளிவு உண்டு கடுமையான பொருள் விரயம் ஆனாலும் பலன் கிடைக்கும், பயம் வேண்டாம். உடல் நலத்தில் மிக கவனம் தேவை. உடலில் கத்திபட வாய்ப்பு உண்டு பொது விடயங்களில் விரக்தி ஏற்படும். கணவன் மனைவி உறவில் அதிருப்தி உண்டாகலாம். வெகு நானாக எதிர்பார்த்த பொருள் வரவும் கடிதங்களும் வந்து சேரும். திருமண விடயங்கள் நினைத் தபடி கைகூடும். உறவினர்களில் சிலர் பகையாவார்கள். சகோதரர்கனிடம் கொடுக்கல் வாங்கல்களில் கவனம் தேவை. தொழிலில் போட்டு இருந்தாலும் மேன்மை காணப்படும். கலைத்துறையிலும் ஈடுபாடு ஏற்படும்.
ifihmh
எதற்கும் அஞ்சாத தங்களுக்கு சோதனையான காலம். ஆனாலும் வெல்வீர்கள். தெய்வமும் பெரியோர்களும் துணை நிற்பார்கள். ஆயினும் பொறுமையும் நிதானமும் மிக அவசியம், தொழிலில் சங்கடங்கள் ஏற்படும் எதிரிகள் பலம் பெறுவார்கள், கல்வியில் தடங்கல் உண்டாகும். குடும்பத்தில் அமைதிகுறையும் பிரயாணங்களால் அலுப்புத் தோன்றும். ஆண்டின் பிற்பகுதியில் உடல்நல பாதிப்பு

Page 36
கலசம்
–
உண்டு. பொருளாதாரம் தாராளமாக இருந்து வரும், புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். பொதுநலத் தொண்டில்
புதிய பதவிகள் கிடைக்கும். அரசாங்க கெளரவம் கிடைக்கும், எதிலும் நிதானித்து செயல்பட்டால் பிரச்சினைகள் குறையும்,
கள்ளரி
சென்ற ஆண்டில் எதிலும் வெற்றி கண்ட உங்களுக்கு கொஞ்சம் தடுமாற்றம் ஏற்படும், கல்வியில் குழப்பமும் நண்பர்களிடத்தில் சந்தேகமும் தோன்றும் எதையும் எளிதில் நம்பமாட்டிம்கள். தடைப்பட்ட திருமணங்கள் நிறைவேறும், திருமண விடயங்களால் தாய் தந்தை மகன் மகள்களிடையே கருத்து வேறுபாடும் அதிருப்தியும் தலைதுாக்கும். தனித்திருந்து படிப்பவர்கள் கவனமாக இருக்கவேண்டிய நேரம். தொழிலில் ஏற்றம் உண்டு. எதிரிகள் சமாதானத்திற்கு வருவார்கள். உத்தியோக உயர்வு ஏற்படும் சிலருக்கு புத்திர பிராய்தி கிடைக்கும் ஆண்டின் இறுதியில் பிரயாண சுகமுண்டு. திடீர் பொருள் வரவும் சுபபோக வாழ்க்கையும் அமையும்,
துலாம்
மதில்மேல் பூனையாக நடுநிலை வகிக்கும் தங்களுக்கு கொஞ்ச நாட்களாக பெருங் குழப்பங்கள், யோசிக்க நேரமில்லாமல் பிரச்சனைகள், ஆனால் வருடம் பிறந்ததும் நல்ல தெளிவு கிடைக்கும். முன்னேற்றம் தெரிகின்ற காலமிது. வழக்கு விவகாரங்களில் வெற்றி உமதே, எதிரிகள் ஓடி ஒளிவார்கள். சகோதரர்களுக்குள் மனஸ்தாபம் உண்டாக வாய்ப்பு உண்டு. கல்வி விஷயத்திலும் தடங்கல் உண்டு. பிள்ளைகளால் மனச் சந்தோஷம் கிடைக்கும், பிரயாணங்களால் உடல் நலம் கிடைத்தாலும் மனதிற்கு அமைதி கிட்டும். வியாபாரத்தில் கடுமையான போட்டி நிலவும், சிலருக்கு பட்டங்களுடன் பதவி கிடைக்க வாய்ப்புண்டு,
விருச்சிகம்
எப்போதும் சுறுசுறுப்பான நீங்கள் அசந்து போய்உள்வீர்கள். காரியங்கள் நடந்தாலும் பலணி கைகூடாது. கவனமில்லாவிடில் கைநழுவும் பெரியோர் சொல் கேட்டு

3.
t
À சித்திரை - வைகாசி- ஆனி 1996
೩
நடப்பது நல்லது கணவன் மனைவி உறவிலும் அதிருப்தி ஏற்படக்கூடும். எதிரிகள் பலம் அடைவார்கள். சுப காரியங்களால் பன விரயம் உண்டு, தொழிலில் மந்தமான சூழ்நிலை நிலவும். பிரயாணங்களில் நன்மை நடக்கும், இடமாற்றத்திற்கும் இடமுண்டு. பிள்ளைகள் மேன்மை அடைவார்கள், வருட மத்தியில் சந்தோஷ அநுபவங்கள் கிடைக்கும். கற்றகல்வி கை கொடுக்கும், உயர் பதவிக்கும் வாய்ப்பு உண்டு. பொதுநலத் தொண்டினால் புகழ் கிடைக்கும்.
நீர்னுள்
பிறருக்கு உதவுவதில் ஈடுபாடு கொண்ட தங்களுக்கு உங்கள் வீட்டை கவனிக்க வேண்டிய நேரம், தடைப்பட்ட திருமணங்கள் கூடிவரும். சிலர் காதல் வசப்படுவார்கள், சொல்லிலும் செயலிலும் மிகக் கவனம் தேவை. சுற்றமும் நட்பும் கசக்கும் காலம். தொழிலில் முன்னேற்றம் as Tsorú u(9|Lň, s(9eoLourer al-aopúLfipĎe5ú uvai கிடைக்கும். துாரதேச பிரயாணத்தைத் தவிர்க்கவும், வாகனம் ஒட்டுதலில் கவனமாக இருக்கவும், கல்வியில் முன்னேற்றம் காணப்படும். ஆண்டுக் கடைசியில் அதிஷ்டம் கதவைத்தட்டும். பொதுநலத் தொண்டர்கள் புகழ்பெறும் காலம்இது, சிலருக்கு புண்ணியத்தல யாத்திரை ஏற்படும்,
Indijih
வெகுநாட்கள் கழித்து உங்கள் முகத்தில் சந்தோஷ சிரிப்பு மலர்கின்றது. பிரச்சனைகள் தீரும் காலம், ஏழரைச்சணி நிறைவு பெற்று எதிர்பார்த்த காரியங்கள் கைகூடும். நல்ல செலவுகளால் பணநெருக்கடி தோன்றினால் விரைவில் சரியாகும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். பிரயாணங்களால் நன்மையுண்டு. தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆண்டின் பிற்பகுதியில் உடல் நல பாதிப்பு உண்டாகும், குடும்பத்தில் சிறுசிறு சண்டைசச்சரவுகள் நடைபெறும், மன அமைதிகெடும். இடமாற்றமுண்டு. பொறுமை தேவை. எதிரிகளால் மறைமுக தொல்லைகள் ஏற்படும்.

Page 37
கலசம்
-
:p கும்பம்
மனதில் இருப்பதை வெளிக்காட்டாத தங்களுக்கு சற்று இறுக்கமான சூழ்நிலை ஏற்படும். ஆனாலும் சமாளிப்பீர்கள். குடும்பத்தை விட்டுக் கொடுத்து அநுசரித்து நடத்துவது நல்லது உடல்நல பாதிப்பினால் எல்லோரிடத்தும் எரிந்து விழுவீர்கள். உறவுகள் பாதிப்படையும், μοσατσισό தாராளமாக இருக்கும். திடீர் அதிஷ்டங்களால் பணம் வரும், பெரிய மனிதர்கள் நாடிவருவர். தொழிலில் மேன்மை தெரிந்தாலும் நடத்த முடியாத இயலாமை தோன்றும், கல்வியில் குழப்பம் ஏற்படும், தடுமாற்றம் அடைவீர்கள். வாகனயோகம் உண்டு. பட்டம் வாங்க பதவி கிடைக்க வாய்ப்புண்டு. குழந்தைகள் நன்கு செயற்பட்டு முன்னேறுவார்கள்.
மீனம்
அமைதியை காத்துவரும் தங்கள் தோற்றத்தில் ஆவேசம் தெரிகிறது. எடுத்தகாரியத்தை நிறைவேற்றுவீர்கள், எதிர்ப்புக்கனை சமானித்து வெற்றிக் கொடி நாட்டுவீர்கள். காரிய வெற்றி உண்டு. ஆனாலும் பலன் பெரிதாகத் தெரியாது. புகழ் கிடைக்கலாம். பொருள் வந்து சேராது. கணவன் மனைவி உறவினால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் குழந்தைகள் சிறப்பு பெறுவார்கள், புதிய நண்பர்களிடம் கவனம் தேவை. மனதை கவனமாக பாதுகாக்கவும். இல்லாவிடில் மிக விரைவில் கெட் டிமேனம் தான் வம்ச விருத்தரியும் உண்டு. பிரயாணத்தால் நஷ்டம் வந்தாலும் மனது திருப்தி ஏற்படும், கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்,
கலசம் சந்தா
அன்புடையீர், கலசம் சஞ்சிகையைத் தொடர்ந்து இரண்டு 6 இத்துடன் அதற்கான (பவுண்கள்) பெ
Name................................................ Address.............................................
(காசோலைகள் SMS(UK) என்ற பெயருக்கு எழுதப்படுத
 

35
சித்திரை - வைகாசி- ஆனி 1996
பூசையின்போது கூறப்படும் ராஜாதி ராஜாய என்ற மத்திரத்தின் உட்பொருள்
மதம் என்றாலே " மோட்சத்துக்கு வழிகாட்டுவது". உலக வாழ்வைத் துறப்பது என்ற ஒரு மேலோட்டமான கருத்து உண்டு. ஆனால் நம் இந்து மதம் வித்தியாசமானது. பல பிறவிகள் தோறும் செய்து வந்த பாபச் சுமைகளைக் களைந்து இறுதியில் மோட்ச சாம்ராஜ்யத்தை அடைவது என்பது தான் பிறவி எடுத்த ஜீவாத்மாக்களின் ஆன்மீக இலட்சியம், நமது பிறவிப் பாவங்களை எப்படிக் களைவது. அதற்கும் பகவானே வழிகாட்டுகிறார். * நீ உனது கடமையைச் செய். பிரதிபலனை நான் தருகிறேன்." என்று கீதையில் வழிகாட்டுகிறார் பகவான். அப்படிக் கடமையைச் செய்வதற்கு இம்மையில் பலமாய் அமைந்திருக்கவேண்டியது என்னதொல்லையில்லா வாழ்வு: ஆரோக்கியமான உடம்பு தெளிவான உடம்பு; இவற்றை இந்தப் பூமியில் நாம் பெற வேண்டுமானால் இதற்குத் தேவையான அளவு செல்வமும் தேவை. அதை நமக்கு அளிக்க வேண்டியவனும் இறைவன் தானே அவரை essy s gis as Tas வேண்டுவதற்குமி மந்திரம் காை உருவாக்கியுள்ளார்கள் நம் மகான்களும் ஆச்சாரியார்களும் , அவற்றில் முக்கியமான மந்திரம் இது, " ராஜாதி ராஜாய ப்ரலக்ய சாஹினி
நமோவயம் வைஸ்ரவநாய குர்மஹே ஸ்மேகாமான் காமகாமாய மஹ்யம் காமேஸ்வர வைஸ்ரவனோ ததாது குபேராய வைஸ்ரவநாய மஹா
ராஜாய நம"
- இந்த மந்திரத்தை நாம் அனைத்து ஆலயங்களிலும்
கேட்டிருக்கிறோம்.தீபாராதனை செய்யும்போது இதைச் சொல்லுவார்கள். இது குபேரனை நோக்கி நாம் வேண்டிக் கொள்ளும் மந்திரம், நமக்குச் செல்வங்களை அணிக்கவேண்டும் என்று குபேரனைத் துதித்து வேண்டுகின்றோம், இறைவனே குபேரனாய் நமக்குச் செல்வமருள நாம் துதிக்கும் மத்திரம் இது,வழிபடுகிற பக்தர்கள் அனைவரும் அனைத்துச் செல்வங்களும் பெற்று நீடுவாழவேண்டும் என்பதுதான் இதன் உட்பொருள்.
ப் படிவம்
New/Renewal
வருடங்களுக்குப் பெற்றுக்கொள்ள விரும்புகின்றேன்
றுமதியான காசோலையை அனுப்பி வைக்கின்றேன்.
- - - - 2 Years; glo).00 (UK)
2
Year . El 4.00 (Europe)

Page 38
Subgro
249-25. Fore Street,
Te + O3BI 884 4979
25 புது கடை, பலாலி யாழ்ப்பாண
 
 
 
 

சித்திரை - வைகாசி - ஆனி 1996
* 。
in stores"
EFEFEFErrefTEBen frametr 776AirTY MEAra AŞLAN SEA Food gecəsi
உங்களுக்குத் தேவையான தமிழ், ஆங்கிலசஞ்சிகைகள் தமிழ், ஹிந்தி, ஆங்கில,வீடியோ, ஓடியோக்கள் மற்றும் இலங்கையிலிருந்து தருவிக்கப்பட்ட உணவுப் பண்டங்கள் உடன் மரக்கறிவகைகள் ஆகியவற்றை மலிவு விலையில் மொத்தமாகவும் சில்லறையாகவும் கொள்வனவு செய்வதற்கு நம்பிக்கையோடு அணுகவேண்டிய ஒரே ஸ்தாபனம்
Edmonton London N18 Fax 08' 345 637
வீதி, திருநெல்வேலி,
ாம், இலங்கை

Page 39
AR LANKA
COLOMIH8O (ao keelana„)
20 April - 30 June 冕$$● Validity - 1 Month To: 31 May - Validity 3 Months 症410
Summer Advance Purchase Fares To be Ticketed by 30-04-1996
1 June - 14 July 还445 15 July - 22 July 还555 23 July - 31 July E605
LLLL LL LLLL LL LLLLLL LLLL L LLLLL LLLLLL SEASON A. R.S.
Singapore / KL / Bangkok 菇395 l March To 30 June (No stop CMB) With Stop in Colombo 王435 BOMBAY / DELHI (WITHSTOPIN COLOMBO) 1 May to 30 June E440 1 July to 14 July 王490 5 July to 22 July E615 'll Aug to 14 August 蛇615 23 July to 31 July £660
MADRAS / TRIVANDRUM / TRICHY (40 KG Baggage Allowance)
To - 30 June - No Stop in Colombo E375 1 May to 30 June 証420 1 July to 14 July 球460 15 Aug to 13 September £460 15 July to 22 July E610 23 July to 31 July £650 THE MOST TRUSTED ANDRE
LA BAN CAVARRER
Allied Way, of Warp A
TELEPTIONE : (DFB
AVAY
 
 
 
 
 
 
 

LIABLE NAME IN THE TRADE
S LIMITED
Every third week we have a sailing to Colombo YOUR GOODS GO TO OUR BONDED
WAREHOUSE IN COLOMBO * Tea Chest - £12.50 * Per cu ft i E250
GULF AIR 01 Mar - 30 June 01 July - 10 July 11 July - 15 August KUWAIT AIR 01 Jan - 30 June 0 1 July - 31 August 01 Sept - 30 Nov ROYAL JORDANIAN Ol Jan - 30 Mar Ol Mar - 30 June 01 July - 15 July 16 July - 15 August BRITISH AIRWAYS
05 Apr - 14 June 15 June - 10 Dec
all your excess luggage by air)
E380 还390
E560
母425 E530 还425
E45)
母420 症435 蛇495
球440 乐495
COLOMBO MADRAS Minimum Charge £30 Minimum Charge £5.5 for 10 Kg for 25Kgs Additional £1.40 per kg | Additional £1.40 per kg
Y - Arton. Iabalon W: O
DEBS). DB-79 (5.5
DB 7, 22

Page 40
UNOUE RENT GUARANT FULLY COMPUTERISED QUALITY TENANT
TENANTS
PROFESSIONALS - STUDENTS - DSS WELCOME LOW DEPOST IF REFERENCE IS GOOD
0ዟR SIAHFAR£ D፱ሀ)/0AI£D I0 PROVIDIMGA
FIRST CLASS SERVICE TO YOU
ATALA VIMMES
சைவ முன்னேற்றச் சங்க் பதிப்பகத்தில் செல்வம் அச்சகத்தினரால் அச்சிட்ir
 
 
 
 
 
 
 
 
 
 

LOROS
EED SCHEME AVAILABLE
MANAGEMENT SYSTEM S ALWAYSWAITING
ESTATE & LETTING AGENTS
NO EXTRA OR HIDDEN FEES
CALL US NOW ON
0181 475 0015 (4 Lines) 297 High Street North Manor Park