கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உந்தூழ் 2011

Page 1
}
No No.S S S
|-- ae
│ │ │ . .
... . .
 


Page 2


Page 3

- are
|\!en) t; 2 Cl' ٢٦ : دا “ مار : چم
ཕྱིafia ཅིའི་3 ༣ Tའི་
} :""' * * * تجمع مسجع ......AC , :{{Y;
öちら
Cags Ni
Sonool

Page 4


Page 5

ག་ན་གཅིག༽ང་ ہے (موک کے د ---- 4 - مہک ਅਦ <چل سکا سحفں لائی دا و/ وكر. J\ح سے ہیط

Page 6
செஞ்சொற்செல்வரி
Ս}\}:1:: - .‘‘ اہم : ب. ! “ ۔ م
7 1 3 غلط لفظ ؛ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ . حسی۔ ۔ ۔ ۔ ۔ ۔ عب۔ ۔ "N A؟........... ف', Ct:3', f\ . . . م - - - - Date:. : 27. JUl 2nt:-:
ஆசிரியப்பணி ஒளி ஏற்றும் பணி. மகத்தான பணி. இருள் நீக்கும் இறைபணி பாக்கியசாலிகள். ஆசிரியர் வாழ்வு நிலைய உருவாக்கப்பட்டவர்களுக்குள் வாழ்ந்து கெ சொன்னவர்கள் இறப்பதில்லை. அதனால் வாழ்கிறார். அரிஸ்ரோட்டில் வாழ்கிறார், சேக்
ஆசிரியர் சரவணமுத்து அவர்கள் வாழ்ந்தவர். அன்னாரின் அருமை மகள்கலா பாடசாலையாகிய வேம்படி மகளிர் கல்லூரி மாட்டி கல்விப்பணியை கடவுள் பணியாக மதிப்பார்ந்த ஆசிரியராக பெருமை பெற்று பத்தினி மருத்துவபீட மாணவன் அருமை நிலையில் அம்மையாருக்கு இறை அழை வென்றார்கள். துன்பக் கடலில் கணவனும் ை முடியாத துன்பம்.
கல்விப்பணி செய்த பெருமாட்டியை களைத் தொகுத்து"உந்தூழ்” என்ற பெயரில் 6 அறிவுலகுக்கு பயன்தரும் பயனுள்ள கட்டுரை விடயமாகும். அன்னாரின் ஆத்மா திருப்திய ஆற்றுவது மெச்சத்தக்கது. இந்நால் என் பிரார்த்தித்து அமைகிறேன். என் இனிய உற தெளிந்து ஆறுதல் பெறத்துர்க்காதேவியை ே
"யாவர்க்குமாம் {

ன் பிரார்த்தனையுரை
ஆறு.திருமுருகன் தலைவர், ருநீ துர்க்காதேவி தேவஸ்தானம்,
... . . . . தெல்லிப்பழை,
- சிவபூமி அறக்கட்டளை, கோண்டாவில்.
t. -la-apä-A-h
இவ்வுலகில் மனிதர்களை புனிதப்படுத்தும் I. இப்புனித பணி கிடைக்கப் பெற்றவர்கள் ானது. ஆசிரியர்கள் இறப்பதில்லை அவரால் ாண்டே இருப்பார்கள். உலகுக்கு அறிவுரை ல் வள்ளுவர் வாழ்கிறார். ஒளவையார் ந்ஸ்பியர் வாழ்கிறார்.
ர் நல்லாசிரியப் பண்புடன் இறுதிவரை தேவி நடராசா புகழ்பூத்த ஆசிரியர். தேசியப் யில் நட்சத்திர ஆசிரியராக விளங்கிய பெரு கச் செய்தவர் யாழ் மத்திய கல்லூரியில் று விளங்கிய நடராசா அவர்களின் பிரிய ப் பிரபுவுக்கு தாய். எவரும் எதிர்பாராத pப்புக் கிடைத்து விட்டது. விதியை யார் மந்தனும் சகோதரரும் துடித்தனர். ஈடுசெய்ய
நினவிைல் இருத்திப் பயனுள்ள கட்டுரை வெளிவரும் நூல் சிறக்கப் பிரார்த்திக்கிறேன். கள் இந்நூலில் வெளிவருவது சிறப்புக்குரிய படையக் கூடிய பணியை குடும்பத்தவர்கள் றும் பயன்தர இறையருளை வேண்டிப் வான நடராசா அண்ணை, மகன் பிரபு மனம் வண்டிநிறைவு செய்கிறேன்.
இன்னுரைதானே"

Page 7
9.
தலைப்பு
வெளியீடு : d
பக்கங்கள் 1
முகவரி 66
 

உந்துTழ்
ஆனி 2011
தடும்பத்தினர்
16 + Vi
சாந்தி நிலையம்”
பாற்பதி வீதி,
காக்குவில் கிழக்கு,
212226436
மதி கலர்ஸ் பிறிண்டேர்ஸ்,
முருகேசர் லேன்,
நல்லூர்.
21 2229285

Page 8
මෙI6m)||5
கலாநிதி
ജ്ഞ -
『リ
கல்வியுலகம் போற்றுகின்ற நல்லாசிரிை இந்த மண்ணில் விளங்கிக் கடந்த 02:07 அகவையில் இறைவனுடன் இரண்டறக் கலந்: அவர்களது மறைவு குறித்த ஓராண்டுமனநிறைவைத் தருவதாகும். தமது செய மாணவச் செல்வங்களை அரவணைத்து, அறி நலன்கள் பற்றியும், அவர் அல்லும் பகலு பன்முகப் பரிமாணங்கள் பற்றியும் ஆய்விய நோக்கிலும் அமைந்த இருபத்தொரு வி காணப்படுகின்றன. அமரருடன் அவர் கற்பித்தவர்களும், அவரிடம் தமிழ், இந்து பயனடைந்த மாணவர்களும் பெருமள படைத்தளித்துள்ளனர். அத்துடன் அவரை ந6 ஆக்கங்களைத் தந்துள்ளனர். பொதுவாக உருவாக்கப்பட்டதும், தமிழியல், கழலியல், ! வர்த்தகம் முதலான துறைகளுடன் சம்பந்த அணி செய்கின்றன. மேலும் சிறுகதையெ கவிதைகளின் தொகுப்பும் நூலின் பொருட் ஆசிரியத்துவத்துக்கு இலக்கணமாகத் தனது தாய்மையின் சிறப்புக்கள் இந்த அரிய அ பிரகாசிக்கின்றன.
ஆசிரியன் என்பவன் நந்தவனத்தின் ெ நீர்வார்ப்பவன் போலவும் மென்மையும், அழ திகழ வேண்டுமெனவும், நல்லாசிரியர்க்கை எடுத்துக்காட்டி, அவற்றின் நெறி விலகா நிை "கல்வியியலாளர்களது பெருமதிப்பைப் பெற் புலப்படுத்துகிறது. இந்நூலின் முதற்கட்டுை உள்ளத்தின் நினைவுகள்” பற்றிய சக ஆசிரிை உயர்தரப் பாடசாலை அதிபரின் நினைவோ தேவைக்கேற்ப எட்டுக்கவிதைகள் இங்கு இ கல்லூரிக்காலம், வெஞ்சிறை உடைத்திட விட அகிய தலைப்புகளைப்பாடு பொருள்களாகக் விழிப்புணர்வுட்டும் சமூக அக்கறையின் படுகின்றன.
ii

துறை
,ெ பண்டிதர், சைவப்புலவர், கலைவாரிதி செ. திருநாவுக்கரசு
="}i += 'if : تیہ2 =
>யயாகவும், அன்பு சுரந்தூட்டும் தாயாகவும் '2010 அன்று தமது ஐம்பத்துநான்காவது து விட்ட அமரர். திருமதி கலாதேவி நடராசா நினைவு-மலர் "உந்தூழ்” வெளிவருவது ற்கரிய செயல்களால் தன்னை நம்பிவந்த வொளிபரப்பிய அந்த நற்றாயின் சீரியகுண லும் அயராதுழைத்திட்ட கல்வித்துறையின் பல் நோக்கிலும், அன்பை வெளிப்படுத்தும் டயங்கள் இப்பெறுமதி வாய்ந்த நூலில் கற்பித்த பாடசாலைகளில் ஒரு சேரக் நாகரிகம் முதலான பாடங்களைக் கற்றுப் ாவில் இந்நூலுக்கான ஆக்கங்களைப் ன்கு அறிந்த கல்வியியலாளர் ஒரு சிலரும்
அறிவுபூர்வமான நுண்ணாய்வுகளுடன் மருத்துவவியல், கலை, சமயம், விவசாயம், முடையதுமான கட்டுரைகள் இந்நூலினை ான்றும், சிறியதும் பெரியதுமான எட்டுக் செறிவையும் கனதியையும் கூட்டியுள்ளன. து பணியை மேற்கொண்டபெண்மையின், ஆக்க முயற்சியினூடு பாவிடை நூலாகப்
|சாந்தக்காரன் போலவும் பூச்செடிகளுக்கு கும், பரிவும் கொண்ட இதயமுள்ளவனாகத் )மவான குணவியல்புகள் எவையெனவும் *ற ஆசிரியை அமரர் கலாதேவி என்பதை ற நல் ஆசிரியை" என்ற கட்டுரை தெற்றெனப் ரயும் இதுவேயாகும். "பள்ளித்தோழியின் யயின் நினைவலைகளும், வேம்படி மகளிர் ட்டங்களும் குறிப்பிடத்தக்கவை. காலத்தின் டம் பெற்றுள்ளன. புதுமைப்பெண், அம்மா, றித்திடு, நெய்தல், தேசம், தமிழ்ச்சாதி, பறை கொண்டு வீரியம் மிக்க சொல்லாட்சியுடன் சித்திரங்களாக இக்கவிதைகள் காணப்

Page 9
"நேற்றைய நாள்வரை என் வாழ்வியற் சித்தி நீயே எழுதினாய் நிறையவே அ
இன்று கையில்தூரிகையுடன் நான்
உன் கனவுகளையும் சேர்த்தெழு
இது "அம்மா" வைப்பற்றியது. ஒரு பானை ே இந்நூலிலுள்ள ஒரேயொரு சிறுகதையா காலமாற்றத்தினால் தமிழர் அசைவியக்கத்தில் ஏ தகனக்கிரியைகளின் போது கூடச் சமத்துவம் 8 சமுதாயம் மாற்றியமைத்த முற்போக்கினைச் சுட்
இவை தவிர தமிழ் எழுத்துக்களும் அதன் கேயர் - ஒல்லாந்தர்கால ஈழத்தமிழ்நூல்கள், பாடுகளும் போன்ற பாடசாலை மாணவர் பயன் உள, இவற்றோடு மாணவரின் நெறிபிறழ்வு நடத் பங்களிப்பு, குழந்தைகள் பிரச்சினைக்குரியவி சமுதாயமும் சிறுவர் உரிமைகளும், பரீட்சைே மகிழ்ந்திருப்பதற்கான காரணிகள் என்றவாறு கண்டு சிந்திக்கவும் தெளிவடையவும் முடிகி படைக்கப்பட்ட ஆக்கங்களாக இவை விளங்குகின் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பல அலசப்பட்டுள்
இன்னுஞ்சில கட்டுரைகளை நோக்கும் டே கட்லட்,றோல், பற்றிஸ்முதலான உணவுகள் சீனி பற்றியும், மண்புழுவின் உதவியினால் வீட் தயாரிப்பது பற்றியும், பெண் இனப்பெருக்கத் தெ புற்றுநோய்கள் ஏற்படும் சாத்தியங்கள் பற்றி தகவல்கள் மூலம் கட்டுரையாக்கங்கள் உரு நிலைமாற்ற விளைவுகள், கோளமயமாக்கல், வ முதன்மை போன்ற சமகால எரியும் பிரச்சினைக் அமைந்துள்ளன.
தமக்கென வாழாப் பிறர்க்குரியாளர்" ப கூறுவதைப் போல, தான் வரித்துக்கொண்ட அ சேவையாக உண்மையுள்ளத்துடன் கருதி உன் இம்மண்ணில் நிலை நிறுத்துவதாக இப்புனித கனிகளால் அறியப்படும்" என்பதுபோல, நல்ல அறியப்படுவார்கள் என்பதை அமரர் கலாே எழுத்துக்களே இங்கு சான்று பகருகின்றன.
iii

ரங்களை ழகாயிருந்தது.
தும் கடும்பணியில்."
சாற்றுக்கு ஒரு சோறு பதம் போன்றது. ாகிய "இனி விடிஞ்சிடும்” என்பது ரற்படும் சாதீய உடைவுகளைப் பற்றியது. காணமாட்டாத சனாதனர்களை இளைய
டுவது.
வகைகளும், தமிழின் சிறப்பு, போத்துக் வயலின் வாத்தியமும் அதன் செயற் பெறத்தக்க எளிமையான கட்டுரைகளும் நதைகள், மாணவர் கல்வியில் பெற்றோர் வர்களா என்பது பற்றிய விசாரணை, நேரப் பதற்றத்தைத் தணிக்கும் வழிகள், படைப்புகள் பலவற்றையும் இந்நூலிற் றெது. ஒரு வரையறையினுள் நின்று ன்றன. இவற்றினூடு பாடசாலை மாணவர்
6T60.
ாது, சோஸ், இஞ்சிச்சோடா, பேஸ்ட்ரி, மட்டத்தை உடலில் அதிகரிக்கச் செய்வது டுக்கழிவுகளிலிருந்து சேதனப்பசளை ாகுதியில் கருப்பை, கருப்பைக் கழுத்துப் யும் அறியமுடிகிறது. ஆதாரபூர்வமான ருவாக்கப்பட்டுள்ளன. நகர நுண்கால ருமானத்திட்டமிடலில் பங்கு முதலீட்டின் கள் பற்றிய கட்டுரைகளும் இந்நூலினூடு
ற்றிப் புறநூனுாற்றுப் புலவன் எடுத்துக் பூசிரியத்தொழில் மூலம் அதனையொரு ழைத்திட்ட நற்சேவகியின் நினைவினை மான நூற்பணி அமைந்துள்ளது. "மரம் )ாசிரியர்கள் அவர்தம் மாணவர்களால் தேவியின் மாணவர்கள் படைத்துள்ள

Page 10
நன்னூலாசிரியர் கூறும் ஆசிரியத்து சிறந்த தமிழறிஞர், பட்டதாரி, பயி மகளாரையும் வழிநடத்தியவர். அடுத் விடயங்களுக்கான முழு ஆயத்தங்க6ை காட்டித் திருப்தியடைந்த முறைமையில் படாத, சொல்முட்டு ஏற்படாத, மாணவ: அமரரால் திகழ முடிந்துள்ளது. பேரா யான அவர், தேசிய கல்வி நிறுவகத்தி பூநகரி ம.வி, பளை ம.வி, ஆகியவற் வகுப்புகளிலும், உயர் வகுப்புகளிலும் பாடங்களை கற்பித்தவர். 1992-2010 உயர்தரப் பாடசாலையில் பணிபுரிந்து வாய்ப்பிருந்தும் இடையில் இறைவன் பொறுப்பாசிரியராகப் பலகாலம் முன்ே தனது வீட்டிலேயே தங்கியிருந்து கற்பத் அமைதிமனம் படைத்தவர். தமது ஏக புத் திருவருளென வியந்து கூறியவர். பாட போக்கினால் வெற்றிகளைத் தமத போய்விட்டார். பாசமிக்க கணவன், நண்புடையோர் எனப் பலரையும் ஏமாற்
இவ்வளவு தகவல்களையும் அன்ன எம்மால் தரிசிக்க முடிகிறது. இவ்வரிய நினைவுகளைப் போற்றுதற்கும், கல்வி சார்ந்த விடயங்களையும் அறிவதற்கும் காலத்தினாற் செய்த இப்பணிக்குரித்தா6 இவைபோன்ற முன்மாதிரிகள் எமது என்பதில் ஐயமில்லை.
“பெருமைக்கும் கருமமே கட்டன

துக்கமைவான உயர்திரு. சரவணமுத்து அவர்கள் ற்றப்பட்ட ஆசிரியர், தம்மைப்போலவே தமது த நாள் பாடசாலையில் கற்பிக்கப்போகும் பாட ளயும் இரவிரவாக வீட்டில் செய்து தந்தையாரிடம் ண்ால், வகுப்பறைக் கற்பித்தலில் என்றும் சோர்வு ரை வெகுவாக ஈர்த்துக் கொண்ட ஆசிரியையாக தனைப் பல்கலைக்கழகக் கலைத்துறைப்பட்டாரி ல் பட்டப்பின் கல்வி டிப்ளோமாவில் தேறியவர். றில் ஏழு ஆண்டுகளுக்கு மேலாக இடைநிலை தமிழ், சைவசமயம், இந்துநாகரிகம் முதலான வரையிலான 18 ஆண்டுகள் வேம்படி மகளிர் , இன்னமும் ஆறாண்டுகள் பணிபுரியக் கூடிய னால் அழைக்கப்பட்டவர், அங்கு தமிழ்மன்றப் னற்றகரமாகச் செயற்பட்டவர். மாணவர் பலரைத் நற்கு உதவியவர். எவருடனும் அன்போடு பழகும் திரன் மருத்துவத்துறையில் கற்பதனை இறைவன் டசாலையிலுஞ்சரி, வீட்டிலுஞ்சரி மென்மையான ாக்கியவர். இருந்தும் காலனிடம் தோற்றுப் பற்றுடைய மகன், அன்புடைய உறவினர்கள், றிவிட்டு இவ்வுலகை நீத்துச் சென்றுள்ளார்.
Tரது நினைவு நூலின் இன்னுமொரு கோணத்தில் நூல் முயற்சியானது அமரர் கலாதேவியின் சீரிய சார் தகவல்களையும், நாம் வாழும் உலகியல் ) பெருமளவு துணை செய்யுமென நம்புகிறேன். ன அமரரின் குடும்பத்தினரைப் பாராட்டுகின்றேன்.
சமூகத்துக்கு வழிகாட்டுதல்களாக அமையும்
ஏனைச் சிறுமைக்கும் தத்தம் 0ளக் கல்”
- குறள்
iV

Page 11
என்னு
நேற்றைய நாள் வரை என் நீயே எழுதினாய் நிறை இன்றுகையில் தூரிகையுட உன் கனவுகளையும் ே
இன்றைய காலப்பகுதியில் யாழ்ப்பா ஈடுபடுபவர்களின் தொகை அருகி வரு பொதுவாசிப்பிற்குரிய கட்டுரைகளிலும் எழுத்தாளர்களின் பற்றாக்குறையை வலைத் ஈடு செய்கின்ற போதிலும் வலைத்தள எழுத் சென்றடையக் கூடிய நிலை இருப்பதில்லை.
முன்னைய காலங்களைப் போ வளர்த்தெடுப்பதில் அதிக கவனம் காட்ட முடி அவற்றின் ஈடுபாடு வேறு திசைகளிற் இளைஞர்களுக்கு பயனுள்ள தகவல்களை அறிவியற் சஞ்சிகைகளும் இன்று இல்ை செய்திகளையே இணையச் செய்தித் தள அப்படியே பிரசுரிப்பதைக் காணலாம். நாளா எழுத்துலகிற்கு என அவர்களிடமிருந்து பெ இன்றைய இளைஞர்கள் தங்கள் தொழில் நி எழுதுவதற்கே இன்னொருவரின் உதவிை இன்றைய இலகுபடுத்தப்பட்ட தமிழ்மொழிப் கற்றல் கற்பித்தல் போன்றன இந்நிலைக்குக்கா
ஒருவரின் மறைவைத் தொடர்ந்து ம மண்ணில் பணக்காரர் முதலாய் பாமரர் வ நினைவு மலரில் நண்பர்களின் உள்ளட் பாமாலைகளைத் திரும்பத் திரும்ப எல்லோ சில அச்சகங்கள் ஒருபடி மேலே சென்று இறந்தவரின் பெயரையும் திதியையும் கொ( தயாரித்து முடிக்குமளவிற்கு வியாபார ரீதி பயனற்ற ரீதியில் செயற்படுவதை விடுத்து சமூ வெளியிடும் செயற்பாட்டினை மாற்ற 6ே சரவணமுத்து அவர்கள் கருதி வந்தார். அ முயற்சியே இன்று உங்கள் கைகளிற் தவழும்"

துறை
6.5LT3T
வாழ்வியற் சித்திரங்கள் யவே அழகாயிருந்தது -ன் நான் சர்த்தெழுதும் கடும்பணியில்
ணத் தமிழ்ச் சமூகத்தில் எழுத்துப் பணியில் கிறது. துறைசார் எழுத்துலகிலும் சரி
இந்நிலமை பொதுவானது. மரபுவழி தள எழுத்தாளர்கள் (bloggers) ஓரளவிற்கு துக்கள் சமூகத்தின் சகல மட்டங்களையும்
ன்று பத்திரிகைகள் எழுத்துலகினை வதில்லை. வியாபாரப் போட்டி காரணமாக பயணிக்கிறது. மாணவர்கள் மற்றும் வழங்கக் கூடிய நுண்ணறிவியல் போன்ற pல. பத்திரிகைகள் தங்கள் நாளாந்தச் ங்களிலிருந்து ஒரு வரி கூட மாறாமல் ந்தச் செய்திகளை இந்நிலை என்கிறபோது ரிதாக ஒன்றையும் எதிர்பார்க்க முடியாது. மிர்த்தமான தேவைகளிற்காக ஒரு கடிதம் ய நாடுகிற நிலையில் இருக்கிறார்கள். பாடப்பரப்பு, பரீட்சையை மையப்படுத்திய TJ600TLDIT35 col60DLDUGUITLň.
லர் வெளியிடுகிற வழக்கம் இன்று எங்கள் 1ரை பொதுவாகி வருகிறது. இவ்வாறான பகிர்வுகளோடு தேவாரங்கள், பக்திப் ரும் பயன்படுத்துவது வழக்கமாகிவிட்டது. ஒரு பொதுவான மாதிரியைப் பின்பற்றி டுத்தால் தாமே முழு நினைவு மலரையும் யிற் செயற்பட்டு வருகின்றன. இவ்வாறு pகப் பயன்மிக்க வகையில் "நினைவு மலர்” வண்டும் என அமரர்.திரு.அருணாசலம் வரது கனவினை நனவாக்கும் எங்களின்
உந்தூழ்”

Page 12
எங்கள் குடும்பக் கூட்டில் ஒன்றா மறைந்த அமரர்கள் திரு.அ.சரவணமுத் மகேஸ்வரன் மூவரும் கற்பித்தலைத் தங் வர்கள். மகேஸ்வரன் அவுஸ்திரேலியாவி இருந்தபோதே உயிர் துறந்தார். அதுபே மகளிர் கல்லூரியில் தமிழாசிரியராகக் பிரிந்தார். சாவின் இறுதி மூச்சுவரை தம் இவர்களது ஆன்மாவும் தம் மாணாக் பெருமகிழ்வெய்தும் என்ற தெளிவோ கட்டுரைகளை அவர்களின் நினைவாகத் ே
இந்நூலின் கட்டுரையாளர்கள் இர பதித்த துறைசார் விற்பனர்கள். பிறர் எழு பருவத்தினர் ஆனால் இங்கு கட்டுரை நண்பர்கள் மற்றும் கலாதேவி ஆசிரியரின்
எங்களின் இக்கனவினை நனவா நண்பரும் முன்னாள்த் துணைவேந்தரும தாயார் மற்றும் தந்தையாரின் நினைவி அமைந்த நூல்களை எடுத்துவந்து க அவ்வகையில் மாணவச் சமூகத்திற்குப் பய வேண்டும்" என ஊக்குவித்தார். அவருக்கு கொள்கின்றோம்.
இந்த நூலுக்குக் கட்டுரைகள், பல்வேறு பணிகளில் எந்நேரமும் ஈடுபட் கென நேரமொதுக்கித் தம் ஆசிரியர் அ6 களை எழுதி அனுப்பி வைத்திருக்கிறார் பணிக்கு நாம் என்றும் நன்றி உடையவ பிழைகள், இலக்கணப் பிழைகள் இன்றி ஒத்துழைத்த நண்பர்கள் திரு.விநாசித்தம் மிக்க திருமதி.பத்தினியம்மாதிலகநாயக கலாது. மற்றும் இந்நூலை அழகுறச் ச பிறிண்டேர்ஸ் அவர்களுக்கும், மற்றைய நன்றிகளைகரம்கூப்பித் தெரிவித்துக் கொ
நேர்வழியில் நின்று வளர்ந்து புல்லாங்குழல்களை ஆக்குவதற்கு மூலப திக்குகளிலும் மேலெழக் காரணமாகிறது களில் அறிவுதிறன் மேலுந்தப்படக் காரண பொருளில் இந்நூல் "உந்தூழ்” என்று பெரு வருகிறது.

க வசித்து சமீப காலத்தில் எங்களைப் பிரிந்து து மற்றும் அவர்தம் பிள்ளைகள் கலாதேவி கள் நாளாந்தக் கடமையாக வரித்துக் கொண்ட ல் இயற்பியல் விரிவுரையாளராக கடமையில் ால அவரது தமக்கையாகிய கலாவும் வேம்படி
கடமையாற்றிய போதே எங்களை விட்டுப் மாணவர்களின் முன்னேற்றம் பற்றியே சிந்தித்த கர் எதிர்காலத்தில் சிறப்படைதல் கண்டே டு அவர்களின் மாணவர்கள், நண்பர்களின் தாகுத்தோம்.
"ண்டு வகையினர் சிலர் எழுத்துலகில் முத்திரை த்துலகில் தம் முதற் காலடி பதிக்கும் மாணவப்
வரைந்துள்ள அனைவரும் எங்கள் குடும்ப மாணாக்கர்களே.
க்கத் தூண்டியாக இருந்தவர். எங்கள் குடும்ப ாகிய திரு.சண்முகலிங்கன் அவர்கள் அவர் தன் பாய் வெளியிட்ட இரண்டு புதிய பாணியில் ாட்டி "நீங்கள் எல்லோரும் ஆசிரியர்கள் பனுள்ள வகையில் உங்கள் செயற்பாடு அமைய இந்த நூலில் எங்கள் நன்றியைத் தெரிவித்துக்
மற்றும் உள்ளப் பகிர்வுகளைத் தந்தவர்கள் டிருப்பவர்கள். ஆனாலும் கட்டுரை வரைவதற் bலது நண்பரின் நினைவாகச் சிறந்த கட்டுரை கள். அவர்களின் இந்தப் பயன்மிக்க சமூகப் ர்களாக இருக்கிறோம். இந்நூலை எழுத்துப் ச்ெ சிறப்பாக வெளியிடச் செவ்வை பார்த்து பி ஆசிரியர் திரு.சிவகுமாரன் ஆசிரியர் மதிப்பு ம் அவர்களின் உதவி என்றும் எம் மனதை விட்ட சிறப்பாகப் பதிப்பித்து உதவிய மதி கலர்ஸ் எல்லோருக்கும் எமது உள்ளம் மகிழ்ந்த ள்கின்றேன்.
வளம் பெற்ற பெரு மூங்கில் பலதுறை )ாகிறது. இதன்மூலம் இனிய இசை எல்லாத் . இவ்வகையில் சமூகத்தின் பல்வேறு மட்டங் மாக இருப்பவர்கள் ஆசிரியர்கள் என்ற கருப் நமூங்கிலின் பழந்தமிழ்ப் பெயர்தாங்கி வெளி
நன்றி"
vi

Page 13
O O
ഉർaസ്ത്രഞ്ഞീ
 ിനrളഞ്ഞ്ഞമ്പുഞ്വ
அணிந்துரை என்னுரை
கல்வியியலாளர்களது பெருமதிப்பைப் பெற்ற மானவர்களின் நெறிபிறழ்வு நடத்தையைக் மானவர் கல்வியில் பெற்றோர் பங்களிப்பு
உங்கள் சீனி மட்டத்தை அதிகரிக்கும் நீங்கள்
கருப்பை பற்றி ஓர் விழிப்பு நீங்கள் உடற்பருமன் கூடியவரா?
பிரச்சினை குழந்தைகளா? ஒரு கல்விச் சமூக சமுதாயமும் சிறுவர் உரிமைகளும்
வீட்டுக் கழிவுகளிலிருந்து சேதனப் பசளை தய நகர நுண்காலநிலை மாற்றமும் அதன் விை
கோளமயமாதலும் தகவல் தொழில்நுட்பமும்
எதிர்கால வருமானத்திட்டமிடலில் பங்கு முத
மகிழ்ந்திருப்போம் பரீட்சை நேரத்துப்பதற்றத்தை தணிக்க சிறந்த
6uLu665edir - gefr (9f5Cypa51b
எழுத்துக்களும் அதன்வகைகளும் தமிழின் சிறப்பு அன்னியர் ஆட்சிக் காலத்திற் பிறந்த அரிய து
இoைரி விடிஞ்சிடும்.
புதுமைப்பெண்

96.66m
பக்கம்
ii-iv
நல்லாசிரியர் 1-3
கையாளுதல் 4-8
9-11
எதிர்பாராத உனவுகள்! 12-13
14-17
18-2O
Ilesilueð eilgrimreoetoror 21-25
26-29
பாரித்தல் 3O-37 Dளவுகளும் 38ー43
4,448
தலீட்டின் முதன்மைத் தன்மை 49-54
55ー56
5 வழிமுறைகள் 57-58
59-74
75-78
79-8O
மிழ் நூல்கள் 81-82
83-85
86

Page 14
கல்லூரிக் காலம் வெஞ்சிறை உடைத்திட விழித்திடு நெய்தல்
தேசம்
தமிழ்ச்சாதி
L6ODOD
PUBLIC HEALTHASPECTS OF ON-SI
தனித்துவமும் தன்னாற்றலும் மிக்க த
கலாநிதி சரவனமுத்து மகேஸ்வரன்
மல்லிகைப் பூப்போன்ற வதனமும் புை தவழும் அன்பு உள்ளம் கொண்ட ஆசி
அகத்தூய்மையுடன் ஆசிரியப் பணியா
பள்ளித் தோழியின் உள்ளத்தின் நீங்க
இன்பத்தமிழ் பெருவிருட்சம் எங்கள் கல இரிைய இளம் விழுதுகள் எங்கள் மான
காலத்தால் அழியாத கலைக் காவியம
கலாதீபம்
நினைவின் நிழல்கள்

TE SANITATION
£5\l5 මාර්mගත්r
(1959-2OO5)
*சிரிப்பு fleOuu
ற்றிய தமிழ் ஆசான்
ா நினைவலைகள்.
DITébérferou Si6aufgô Tவியர் குழாம்
ாய் எமது கலா ஆசிரியர்
87
88
89
89
89
S9
90-94
97-1OO
101-105
106-111
112
113
114
115
116

Page 15
கல்வியியலாளர்களது பெருமத
ஆசிரியர் ஒரு மாணவனை திறமையா அன்றும் இன்றும் கருதப்படுகின்றது. ஒரு ட் விருப்போடு புறப்பட்டுச் சென்று அன்றைய நா கழித்து பாடசாலையை விட்டுச் சென்றதும் ம வரவேண்டும். இது ஆசிரியருக்கும் பொருந்து
வழிவகுக்கின்றது.
அன்று ஆசிரியரின் அறைக்கு, வீடடுக் காலம் மாறி இன்று மாணவர்களின் இடத்தி காலமாக மாறிவிட்டது. உலக நடைமுறைக்கு களை உருவாக்கும் முறைமையின் கீழ் கல்வி விருத்தியடைந்து வரும் நாடுகளின் கல்வித் வதும் உலக வங்கியின் செயற்றிட்டமாக மாறிலி கிறதாம். பழைய பாடத்திட்டம் இப்பொழுது { எம்மை பேசவைத்து விட்டு அதைப்பற்றி ே கேட்டால் அதற்குப் பெயர் உலகமயமாதல் என்
கெட்டிக்காரர்களையும், அறிவாளிகை பாடசாலைகள் இயங்க வேண்டும். பாடசாை போல மனதுக்கு ரம்மியமானதாக மாற்ற வே6 ஆசிரியர் மாணவர் உறவு முறை பிரம்புக்குக் உண்மையில் ஒவ்வொரு பிள்ளையும் மதிக் மரியாதையையும் வழங்குவதன் மூலம் அவர் யடையச் செய்ய முடியும்.
பிள்ளைகளுடன் அப்படிப் பழகினால் போய்விடும் என்று ஆசிரியர்களும் தலைடை பிள்ளை விரும்புகிற எல்லாவற்றையும் ஆசிரிய வேண்டும். அப்போதுதான் அப்பிள்ளை மனது கின்றது என்பதனை ஆசிரியர் புரிந்து, அதன்படி (ԼՔւՁեւվԼԻ.
-உந்தூழ்

ப்ெபைப் பெற்ற நல்லாசிரியர்
திரு.கு.சிவாந்தன் கோட்டக்கல்வி அலுவலர், தென்மராட்சி, சாவகச்சேரி.
னவன் என்று வாழ்த்துவது பெரும் பேறாக பிள்ளை காலையில் பாடசாலைக்கு மிக ளை அப்பிள்ளை மகிழ்ச்சியான நாளாகக் றுநாள் பாடசாலைக்கு மிக உற்சாகமாக தும். இதுதான் பாடசாலையின் வெற்றிக்கு
கு மாணவர்கள் கல்வியைத் தேடிப் போன ற்கு ஆசிரியர் வந்து கல்வி கற்பிக்கும் ம் உலகத்தின் தேவைக்குமான அறிவாளி வந்து நிற்கின்றது. இலங்கை போன்ற அபி திட்டத்தினை மாற்றுவதும், நெறிப்படுத்து விட்டது. புதிய பாடத்திட்டம் (சிலபஸ்) மாறு இல்லையாம் என்ற அறிவோடு மாத்திரம் யாசிக்கவே உலகவங்கி விடுவதில்லை. பார்கள்.
ளயும் உருவாக்கும் ஆரம்ப இடங்களாகப் லகளை எப்பொழுதும் ஒரு நந்தவனம் ண்டும். இன்றும் எமது ஆசிரியர் மத்தியில் கீழ்த்தான் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. கப்பட்டு, அவர்களுக்கான மதிப்பையும், களை மகிழ்வடையச் செய்து, மேன்மை
ஆசிரியர்களுடன் மரியாதையில்லாமல் ம ஆசிரியர்களும் பயப்படக்கூடும். ஒரு பரோடு பகிர்ந்து பேசச் சந்தர்ப்பம் வழங்க க்குள் எதனை விரும்புகின்றது; நினைக் நடந்து மாணவர் மனதை வெற்றிகொள்ள
1N C 01)

Page 16
தலைமையாசிரியர் ஒரு அதிக சுப்பிரண்டன் போலவோ செயற்படாது. அல்லது நீர் தெளிப்பவன் போலவோ நல்லாசிரியர்கள் "உலகை உருவாக்கும் சி
சிறுவர்கள் மிக்க ஆர்வமுடைய நிறைந்தது. விஞ்ஞான விந்தைகள் நிறை நிலையில் உலகத்தை அறிய அவாவும் பெரியோரின், ஆசிரிய உலகத்தின் கட நாள்களில் மனித உணர்வுகளை, நல்ல ப வளர்த்துக் கொள்ள வேண்டும். சிறுவ மகிழ்வினையும், ஏற்படுத்துவதோடு அவர் செய்தல் ஆசிரியர், பெற்றோர் ஆகியோரி போக்கு, உள்மன ஆசைகள், வயதுத்தேை யெல்லாம் பரிச்சயப்பட்டு அவர்களுக்கேற் மகிழ்வடையச் செய்வது அக்கறை கொண்
ஒரு சமூகம் உயிர்ப்புடன் திகழ்வ தாகும். சமூகத்தின் எழுச்சிக்கும் வீழ்ச்சிக் யும் காரணமாக அமைந்து விடுகின்றது. புனிதத்தன்மையைப் புரிந்து கொள்ள ே சீராக்கிக் கொள்ளல் வேண்டும். வெற்றி உன்னதமான ஆளுமையும், உள்ளார்ந்த அ
கடந்தகால யுத்தச் சூழ்நிலையா பாதிக்கப் பட்டு, துன்பப்பட்டுள்ளார்கள். டெ துன்பம், கடுமையான நோய்கள், வீட்டுச்க வெளிநாட்டு மோகம், கட்டுப்பாடற்ற 8 தொலைபேசி போன்ற இன்னோரன் பட்டுள்ளவர்களை நற்பிரசையாக்குவது பெரியோர்கள் ஆகியோரின் பொறுப்பாகு நம்பிக்கையை ஊட்டித் தெய்வீக அருள் ஆசிரியர்களதும் பெரியோர்களதும் இன்றி

ாரியாகவோ அல்லது கடுமையான ஜெயில் ஒரு நந்தவனத்தின் சொந்தக் காரனாகவோ இருக்க வேண்டுமென விரும்பப்படுகின்றது. ற்பிகள்” எனவும் புகழப்படுகின்றார்கள்.
வர்கள், அவர்கள் வாழும் கழல் புதுமைகள் ந்தது. நவீன தொழில் நுட்பங்கள் கழ்ந்தது. இந் குழந்தைகளுக்கு நல்வழி காட்ட வேண்டியது மையாகும். “றோபோக்கள்” உலாவரும் இந் )னப்பாங்குகளை குழந்தைகளின் உள்ளத்தில் ர்களின் மனங்களில் புத்துணர்வையும், புது களை வேகமாகச் செயற்படவும், சிந்திக்கவும் ன் பாரிய பொறுப்பாகும். சிறுவர்களின் மனப் வகள் முரண்பாடான இயல்புகள் இவை பற்றி ற, இரசனை மிக்க படைப்புக்களை உருவாக்கி ட அனைவரதும் பொறுப்பாகும்.
தற்கு ஆசிரியர்களின் பங்களிப்பு அளப்பரிய கும் ஆசிரியரின் நேர் மனப்பாங்கும், நடத்தை ஆசிரியத் தொழிலில் ஈடுபடுபவர்கள் அதன் வேண்டும். அதற்கேற்பத் தமது நடத்தையைச் கெரமான கற்பித்தலுக்குத் தெளிந்த மனமும், ர்ப்பணிப்பும் அவசியமாகின்றது.
ல் எமது மாணவச் செல்வங்கள் பெரிதும் பற்றோரை இழந்த நிலை, வறுமை, பயஉணர்வு, ழல், குடும்பத் தகராறு, வழிநடத்துனர் இன்மை, சூழ்நிலை, நவீன சாதனங்கள், கையடக்கத் ன காரணங்களால் பெரிதும் பாதிக்கப் அதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், ம். அத்துடன் சமயச் சிந்தனைகள் மூலம் இறை கிடைக்க வழிநடத்த வேண்டிய பொறுப்பும்
Nu J60DLDU JITg5 35L6ODLOU JITG5L b.
உந்தூழ்

Page 17
ஆசிரியப்பணியில் சிறப்பு இதுதான்
திருமதி. கலாதேவி நடராசா அவர்க கடமையாற்றிய காலத்தில் கூடவே இருந்து தேன். உண்மையில் மேலே கூறப்பட்டிருந்த களையும் கொண்டிருந்தார். மாணவர்களது
ஆசிரியர்களதும் அன்பையும் பெருமதிப்ை யமையை யாராலும் மறக்க முடியாது.
ஒரு தடவை கிளிநொச்சி கல்வி வ6 பார்வைக்கு வருகைதந்திருந்த போது, அவர் ஓர் ஆசிரியராக இவர் திகழ்ந்தார். எமக்கும் ( பின்னர் நாம் கலா ஆசிரியரை அணுகி இரகசியத்தை அறிய முயன்றபோது அவர் கூ
"எனது அப்பா ஓர் ஓய்வு பெற்ற முதிர்ந்தவர். நான் ஆசிரியராகக் கடமையாற் தந்தையாருக்கு மறு நாள் நான் பாடசாலை
பாடக்குறிப்புக்கள். செயற்பாடுகள் போன்றவ படுக்கைக்குச் செல்ல முடியும். இதனைத் தி பின்னர் அன்றாடக் கடமையாகக் கொண்டிரு தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றேன். விடயங்களைக் கட்டாயம் இன்று இரவு பூ வெற்றிக்கான காரணம்" என்றார். எல்லோரு ஒரு சிறந்த ஆசிரியராகப் புகழ்பூத்த ஓர் ஆசிர முடியாத ஒர் ஆசிரியராக அவர் விளங்கியுள்
-உந்தூழ்

ாக செயலாற்றும் வழி 亦 O O O
ளுடன் நான் பளை மத்திய கல்லூரியில் கடமையாற்றும் வாய்ப்பைப் பெற்றிருந் ஆசிரியர்களுக்கான அத்தனை நற்பண்பு தும், அதிகாரிகளதும், ஏனைய சகபாடி பயும் பெற்றுச் சிறப்பாகக் கடமையாற்றி
Uயத்திணைக்கள அதிகாரிகள் குழ மேற் கள் எல்லோராலும் பாராட்டுக்குப் பெற்ற பெருமையாக இருந்தது. அவர்கள் சென்ற இவ்வாறான சிறப்பான செயற்பாட்டின் றினார்.
ஆசிரியர். வயதிலும் அனுபவத்திலும் றத் தொடங்கிய காலத்தில் இருந்து எனது யில் கற்பிக்க உள்ள பாட ஆயத்தங்கள் 1ற்றைக் கட்டாயம் காட்டிய பின்னர் தான் னமும் எனது வீட்டு வேலைகள் முடிந்த நந்தேன். அதே பழக்கத்தை இன்று வரை அதாவது நாளை கற்பிக்க உள்ள ரணப்படுத்தி விடுவேன். இதுதான் என் ரும் மகிழ்ச்சி கொண்டோம் அப்படியாக ரியராகப் பளை மண்ணில் என்றும் மறக்க
TTÜ.
Co3)

Page 18
மாணவர்களின் நெறிபிறழ்
(Dealing With
வகுப்பறையில் வினைத்திறனுள்ள கான ஆசிரியரின் ஆற்றலைச் செயலிழக் ளப்படுகின்ற எந்த நடத்தையும் மாணவ ரெ மாணவ நெறிபிறழ்வானது, ஒருவர் நே பிறழ்வாக அமைகின்றது என்பது பற்றி ஒ னைக் கொண்டிருப்பர். நெறிபிறழ்வின் சில பெருமளவு கருத்தொற்றுமை காணப்படு செய்வதற்கு மறுத்தல், வேறொரு மாண என்பனவாகும். ஆயினும் ஆசிரியர்களுக் களும் உண்டு. இதற்கும் கூடுதலாக, ஒரு கு வகுப்பு மற்றும் ஒரே வகுப்பிலுள்ள ம வேறுபடக் கூடும். அதே போன்று சிறந்த L ஒவ்வொரு ஆசிரியரும் கொண்டிருப்பர்.
பொதுவாக மாணவர்களது நெறிபி எச்சந்தர்ப்பத்தில் நிகழும் என்பதை ஒ6 கொள்ள முடியும் என்பதையும் தெரிந்திரு விற்கு எந்தளவிற்கு நடவடிக்கை தே6ை வேண்டும். எனவே இங்கு தெளிவற்ற இரு L 1. நெறிபிறழ்வு நிகழ்ந்ததாகக் கருதப்படுகி 2. அவ்வாறான நெறிபிறழ்விற்கு நடவடிக்ை ஏனெனில் நெறிபிறழ்வு என்ற கருத்து இ திறனுள்ள கற்பித்தலின் ஓர் அத்தியாவசிய பார்ப்புகளும் தேவைகளும் வெளிப்படை தனாலாகும். நெறிபிறழ்வு பற்றிய ஆசிரி நிற்கின்றோம் என்பதைச் சரியாக அறி விரும்புகின்றனர். நியாயமான எச்சரிக்ை ஆசிரியரின் நடவடிக்கை எப்பொழுதும் எத
( 04)

வு நடத்தையைக் கையாளுதல் Pupil Misbehavior)
திருமதி.ஜெயமலர் தியாகலிங்கம் உய பீடாதிபதி (கல்வியும் தரமேம்பாடும்), யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி, GaBITĩILIITtiI.
T கற்றல் அனுபவங்களை நிறுவிப் பேணுவதற் கச் செய்கின்ற. ஒரு மாணவனால் மேற்கொள் நறிபிறழ்வாகும். மிக முக்கியமான அர்த்தத்தில் நாக்கும் விதத்தில் தங்கியுள்ளது. எது நெறி }வ்வொரு ஆசிரியரும் தமது சொந்தக்கருத்தி O வடிவங்கள் தொடர்பாக ஆசிரியர்களிடையே கின்றது. உதாரணமாக, எந்த வேலையையும் வனை அடித்தல் குழப்பங்களை ஏற்படுத்ததல் கிடையில் அதிகளவு வேறுபாடுள்ள பல பகுதி றிப்பிட்ட ஆசிரியரின் மதிப்பீடுகள், வகுப்பிற்கு ாணவனுக்கும் மாணவனுக்கும் இடையிலும் மாணவன் பற்றிய தமது சொந்தக் கருத்தினை
றழ்வுகள் (பொருத்தப்பாடற்ற செயற்பாடுகள்) வ்வொரு ஆசிரியரும் எந்தளவுக்கு சகித்துக் க்க வேண்டும். மேலும் அவ்வாறான நெறிபிறழ் வ என்பதையும் ஆசிரியர் மதிப்பீடு செய்ய பகுதிகள் உள்ளன.
ன்ற கட்டம்
கைதேவையான கட்டம் }வ்வாறான தெளிவற்ற தன்மையில் வினைத் பமான அம்சம் யாதெனில், ஆசிரியரின் எதிர் பாக்கப்பட்டுத் தொடர்ந்து பிரயோகிக்கப்படுவ யரின் மதிப்பீடுகள் தொடர்பாக, தாம் எங்கு ந்து கொள்வதற்கு மாணவர்கள் யாவரும் )கயற்றதும் மாறும் தன்மை கொண்டதுமான நிர்ப்பை ஏற்படுத்தும்.
உந்தூழ்

Page 19
மாணவரின் நெறிபிறழ்வானது, நடத்தைவரையானதாக இருக்கும். இவ்வாற கள் கவனம் கொள்வதற்கு உடனடியான வினை அதிகரிக்கச் செய்வதற்கு வகுப்பிற்கு உள்ளேயான காரணிகளும் உள்ளன. குடும் நடத்தையில் பங்களிப்புச் செய்கின்ற அதே6ே மானதாக உள்ளது. பாடசாலையைப் பொறு யான நடத்தைகளால் மாணவர்கள் நெர படுகின்றனர். அவையாவன, * சலிப்பை ஏற்படுத்தும் ஆசிரியர்கள் * கற்பித்தலை மேற்கொள்ள முடியாத ஆசிரி * ஒழுக்கக்கட்டுப்பாடு குறைவாக உள்ள ஆச * நியாயமற்ற ஒப்பீடுகளை மேற்கொள்கின்
இவ்வகையான ஆசிரிய நடத்தைகள் பிழ்வானது தமது சுயகெளரவத்தைப் பேணு கருதுகின்றனர். எனவே ஆசிரியர்களின் யாக்குவதற்குப் பதிலாக, அதற்கு இடையூ வேண்டும்.
அதாவது, மாணவரின் சுயமரியாதை களை எதிர்கொள்வதில் இருந்து மாணவநெற வான காரணமாக உள்ளது. மாணவன் வேை யும் தோல்வியையும் எதிர்கொள்கின்றா ஆசிரியரின் அதிருப்தியைச் சம்பாதித்துப் பா இருப்பதைக் காண்கின்றான். இவ்வாறான நி மற்றும் பாடசாலைக்குச் செல்லாது விடுத கவனத்தை நாடுகின்ற ஓர் அம்சமாக உள்ளது.
இந்தவகையில் நெறிபிறழ்விற்கான க மாணவனின் நோக்கம் எதுவாக இருக்கும் இருக்கும் என Robertson (1996) என்பவர் கு நோக்கங்களை இனங்கண்டுள்ளார். அவைய
* கவனத்தை ஈர்த்தல் * பரபரப்பை ஏற்படுத்தல் * வேண்டுமென்று கேலிசெய்தல் * வேலையைத் தவிர்த்தல்
-உந்தூழ்

கீழப்படியாமையிலிருந்து சீர்குலைக்கும்வி ான சீர்குலைப்பு நடத்தையானது ஆசிரியர் காரணத்தை ஏற்படுத்துகின்றது. நெறிபிறழ் 5 வெளியேயான காரணிகளும் வகுப்பிற்கு )பமும் அதன் சூழ்நிலைகளும் மாணவரின் வளை ஆரம்பக்கல்விக் காலமும் மிக முக்கிய த்தவரையில் ஆசிரியர்களின் நான்கு வகை றிபிறழ்வுகளில் ஈடுபடுவதற்குத் தூண்டப்
uLIfাg56া
சிரியர்கள்
ற ஆசிரியர்கள்
ர் தம்மை அவமதிப்பதாகவும், தமது நெறி றுவதற்கான முயற்சி எனவும் மாணவர்கள் நடத்தையானது நல்லொழுக்கத்தை வசதி றாக அமைகின்றதென்பதை அறிந்திருக்க
நக்கு அச்சுறுத்தலாக உள்ள கற்றற் கஸ்டங் Sபிறழ்வு தூண்டப்படுகின்றது என்பது பொது ல செய்ய முயலும் போது அவன் விரக்தியை ன். தவிர்க்க முடியாதவாறு சலிப்புற்று டங்கள் அதிகரித்த அளவில் கடினமானதாக லையில் ஏற்படுகின்ற சீர்குலைப்பு நடத்தை 5ல் ஆகியன ஒருவகையில் ஆசிரியரின்
ாரணங்களைக் கருத்திற் கொள்ளும் போது
என்பதை இனங்காண்பது பயனுள்ளதாக றிப்பிட்டுள்ளார். அவர் பொதுவான நான்கு
T6)60T,
GoB)

Page 20
இவ்வாறான மாணவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதாக இரு மானதாகும். அவ்வாறான தேவைகளை நெறிபிறழ்விற்கான விளக்கத்தினைநிறு
எனவே நெறிபிறழ்வுகளிலிருந்து களைப் பின்வருமாறு நோக்க முடியும்.
1. நெறிபிறழ்வினை முன்கூட்டியே தடு வகுப்பினை நன்கு கண்காணி தெளிவான விதிகள் மற்றும் எதிர்பார்ப்பு பொதுவான சில விதிகளை அறிவுறுத்திக் வகுப்பறையில் பின்வருமாறு விதிகளைட் * வகுப்பறையினுள் ஒழுங்கான முறை * ஆசிரியர் பேசும் போது பேசாதிருத்த க்கு விடையளிக்கையில் செவிமடுத்த விவேகத்துடன் செயற்படுதல் உணவை மெல்லாதிருத்தல். அங்கீகரிக்கப்படாத உடையைத் தவிர் கவனத்தை ஈர்ப்பதற்குக் கையை உயர்
ஒழுங்காக வகுப்பில் இருந்து வெளிே
மேற்கூறப்பட்ட சந்தர்ப்பங்களில் அனுட குறித்து மிகவும் தெளிவாக உள்ளனர். இ பும் விரைவாக நிறுவப்பட்டு ஏற்றுக்கொ: சுலபமாகிவிடுகின்றது.
2. கண்டித்தல்களும் தண்டனைகளும் நெறிபிறழ்வுகளிலிருந்து மாணவர்கை இது அமைகின்றது.
அதாவது நெறிபிறழ்வுகள் தொடர்பா (1984) என்பவர் பின்வருமாறு வகைப்படு: * கண்டித்தல், தண்டனை வழங்கப்படுே
மற்றும் வேலையை ஊக்கப்படுத்தும்
மொழிமூலமான தகவல்கள்.
—Сов)

கல நெறிபிறழ்வுகளும் உளவியல் ரீதியான ப்பதை ஆசிரியர் அறிந்து கொள்வது முக்கிய க் கருத்திற் கொண்டால் மட்டுமே அத்தகைய ] (ԼՕւջԱվԼԻ.
மாணவர்களைத் தவிர்ப்பதற்கான வழிமுறை
ந்தல்: பதுடன், வகுப்பறை நடத்தை தொடர்பாகத் க்களை நிறுவுவது ஆசிரியரின் பொறுப்பாகும். காட்டு வதே சிறந்த அணுகுமுறையாகும். ஒரு
பட்டியற்படுத்தலாம். பிலும் நேரம் தவறாமலும் பிரவேசித்தல். ல். அல்லது மாணவன் ஒருவன் வினாவொன்று ᏚᏓᎧ.
த்தல். த்துதல். பறுதல்.
வம் வாய்ந்த ஆசிரியர்கள் வகுப்பறை விதிகள் ச்செயற்பாடுகளினால் ஆசிரியரின் எதிர்பார்ப் ர்ளப்பட முடிந்தால் நெறிபிறழ்வைத் தடுப்பது
ாத் தவிர்ப்பதற்கான வழிமுறைகளில் ஒன்றாக
ஆசிரியர்களின் பிரதிபலிப்புகளை Wragg தியுள்ளார்.
மன அச்சுறுத்தல், விதியைத் தெரிவித்தல், கூற்றுக்கள் என்பவற்றை உள்ளடக்கிய வாய்
உந்தூழ்

Page 21
* முகபாவனை, துர்ரம், தொடுகை மற்றும்
மூலமல்லாத சைகைகள். * மேலதிக வேலை, மாணவனை நகர்த்ததல், ! செய்தல் ஆகியவை உட்பட்ட தண்டனைகள். இவ்வாறான நிலைமைகளில் ஆசிரியர்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலிரு களிடம் இருக்க வேண்டுமென்பதை மாணவர்
UsT6).J60T, * அமைதி - மாணவர்களைக் கண்டிக்கும் ே யாகத் தெரிவிப்பதால் சங்கடம் குறைக்கப்ப( விதியின் தெளிவும், நியாயத்தன்மையும் * பொருத்தமான தண்டனை - தீவிரமான த பிறழ்வுக்குப் பொருத்தமற்ற தண்டனைகளை நீதியான தன்மை. பொறுப்பினை ஏற்றுக் கொள்ளுதல்.
3. மோதல்களைக் கையாளுதல்
வகுப்பறையில் நிகழக்கூடிய மிகவும் கச ஒன்று ஆசிரியருக்கும் மாணவருக்குமிடையில் மோதலாகும். இவ்வாறான மோதல்களைத் தடுக் மொன்றைக் கையாளுவது. ஒழுக்கக் கட்டுப்ப க்கு மிவும் முக்கியமானதாகும். ஆசிரியரின் அ மாணவர்கள் மீது தனது எண்ணத்தை செயற்படு விளைவுத்திறனுடைய பிரயோகமாகும். ெ பிரச்சினைகள் எதனையும் ஏற்படுத்துவதில்லை அதிகாரம் பிரயோகிக்கப்படும் விதமானது மா மோதலுக்கு வழிவகுக்கிறது.
ஒரு மோதலைத் தூண்டிவிடக்கூடிய ஆசி பிரதான அம்சங்கள் இருப்பதாகத் தோன்றுகின்ற * உடல்ரீதியான அல்லது வார்த்தை ரீதியான ( * கேலிசெய்தல், வகுப்புக்கு முன்னால் மாண
பகிரங்கச் சங்கடங்கள். * மாணவனைக் கோபாவேசத்துடன் கையாளு * ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள்.
எனவே ஆசிரியர்கள் தமது முதிர்ச்சி மற் மோதலைச் செயலிழக்கச் செய்ய வேண்டும்.
-உந்தூழ்

ha. T
8 17 4
திடீரென நிறுத்தம் ஆகிய வாய்மொழிவி
பறிமுதல் செய்தல், தடுத்து வைத்தல், கேலி
ர் குறித்து, மாணவர்களது கருத்துக்கள் நந்து, பின்வரும் ஐந்து பண்புகள் ஆசிரியர் கள் விரும்புவதாக அறியப்பட்டது. அவை
பாது உரத்தகுரலில் சத்தமிடாது அமைதி டுகிறது.
ண்டனைகள் வழங்கப்படுவதையும் நெறி Tயும் தவிர்க்கும் ஆசிரியர்கள்.
ப்பான துயரமளிக்கும் நிலைமைகளுள் ) ஏற்படுகின்ற சூடான உணர்ச்சி ரீதியான $கும் திறமை அல்லது அவ்வாறு உருவாகு ாட்டின் வினைத்திறனுள்ள கையாளுதலு திகாரம் எதிர்க்கப்படும் போது ஆசிரியர், டுத்தக் கூடியதாக இருப்பது, அதிகாரத்தின் பரும்பாலான சந்தர்ப்பங்களில் இது ). எவ்வாறாயினும் சில சந்தர்ப்பங்களில் ணவரது உளவியல் நிலையுடன் சேர்ந்து
ரியரின் கட்டுப்பாட்டு வகையில் நான்கு
Dது.
கோபமூட்டும் நடவடிக்கைகள். வனைத் தலைகுனியச் செய்தல் போன்ற
தல்.
றும் சமூகத்தேர்ச்சிகளைப் பயன்படுத்தி
Go)ৈ

Page 22
4. நடத்தையை மாற்றியமைத்தல்
வகுப்பறையில் முன்னேற்றகரமான ந ரீதியான உளவியலில் இருந்து பெறப்பட தையை மாற்றியமைத்தலாகும். வகுப்பன பாடானது, சில விரும்பத்தக்கதும் விரும் கொண்டிருக்கும். இவ்விரு விடயங்க நடத்தைகளுக்கு வெகுமதி வழங்குவதா படாது விடுவதாகவும் இருக்கும். இத்தை களை மாற்றியமைப்பது பின்வருவனவற்ற * இலக்கு நடத்தைகளை கவனமாகக் கண * விரும்பத்தக்க நடத்தைகளுக்க ஒழுங்க * விரும்பத்தகாத நடத்தைகளை கவனிக்
வகுப்பறையில் பொதுவாக மாணவரி ஆசிரியரின் கவனத்தை ஈர்க்கக்கூடிய கொள்கின்றனர். அதாவது பாராட்டு மூல லைப் பெறுவதன் மூலம் கவனத்தை ஈர்க் சுமுகமாக நிலவாது விடுமாயின் நடத்தை வெற்றியை மட்டுமே கொண்டிருக்கும்.
எனவே மாணவர்களின் நடத்தைை ஆசிரியர்கள் பரந்தளவில் கையாள்வதற் களின் நிலையறிந்து தகுந்த திட்டங்களைத் பிரயோகிப்பதன் மூலமும் அவர்களைத் கணிப்பீடு செய்வதன் மூலமும், அவர்களது சமூகப் பொருத்தப்பாடுடையவர்களாக சங்கற்பம் பூணுதல் பொருத்தமுடையதாகு
மனதில் நிழலாகும்
அமரத்துவம் அடைந்த திருமதி. கலாதே ஆத்மார்த்த நண்பியாவார். 1985ஆம் ஆ ஆசிரியப்பணியில் ஈடுபட்ட போது எமக் அந்நாட்களில் பூநகரியில் ஓர் அறையில் பாடசாலை சென்று வந்த அந்த மகிழ்ச்சி நிழலாடுகின்றது. "மானிலத்தில் நாம் போ
பூண்ணிய ஆத்மாவின் நினைவாக இக்கட்டு
/1SN Q08)

டத்தையைக் கொண்டு வருவதற்காக நடத்தை ட்ட கோட்பாடுகளின் ஒரு வெளிப்பாடே நடத் றையில் நடத்தையை மாற்றியமைப்பதன் பயன் பத்தகாததுமான நடத்தைகளை வழமையாகக் எரிலும் பரிகாரக்கட்டமானது விரும்பத்தக்க கவும் விரும்பத்தகாத நடத்தைகள் கவனிக்கப் கய சந்தர்ப்பங்களில் வகுப்பறையில் நடத்தை நில் தங்கியுள்ளது.
ர்காணித்தல்.
5ாக வெகுமதிகளை வழங்குதல்.
காது விடுதல்.
ன் நடத்தைகளைக் கவனிக்காது விடுவதனால், நடத்தைக்கு மாணவர்கள் விரைவில் மாறிக் Dம் அதனைப் பெற முடியாவிட்டால் கண்டித்த கின்றனர். ஆயினும் ஆசிரிய - மாணவ உறவு யை மாற்றியமைப்பது மட்டுப்படுத்தப்பட்ட ஒரு
ய மாற்றியமைக்கும் தந்திரோபாயங்களை கு முன்வர வேண்டும். அதற்கேற்ப மாணவர் 5 தீர்மானித்து, அவற்றைப் பொருத்தமானவாறு } தொடர்ந்து கண்காணித்து மாற்றங்களைக் து நெறிபிறழ்வு நடத்தைகளை மாற்றியமைத்து,
உருவாக்குவதற்கு ஒவ்வொருவரும் திட
5LO.
மறையாத நிகழ்வுகள் .
நவி நடராஜா அவர்கள் எனது வாழ்வில் சந்தித்த ஆண்டு கிளி/பூநகரி மகா வித்தியாலயத்தில் 5கிடையில் நெருக்கமான சந்திப்பு ஏற்பட்டது.
இருவரும் இருந்து உணவு உண்டு, கதைத்து, சியான நாட்கள் இன்றும் பசுமையாக மனதில் ம் அளவும்" இந்நினைவு மறையாது. இத்தகைய }ரையை சமர்ப்பிப்பதில் நிறைவடைகின்றேன்.)
உந்தூழ்

Page 23
மாணவர் கல்வியில் டெ
இன்று உலகில் பல முதலீடுகள் தொடர் மனமும் வாழ்க்கையின் முனைப்பான, நீண்ட அலைந்து தேடிக் கொண்டிருக்கிறது. அந்த 6 காலமாக கூறிவரும் முதலீடுதான் கல்வியாகுப் கிக் கொள்பது என்பது சற்று சிரமமாக காணப்ப கள் அதனை அமுல்படுத்துவது என்பதும் முழு "பிள்ளைக்கல்வி என்பது" அதுவே உண்மைய முதலீடு எனக் கல்வியியலாளர்கள் குறிப்பிடுகி
எனவே இன்று கல்வி என்பது பொருள மயமாக்கல், ஆங்கிலக் கல்வி என்னும் இரு காணலாம். இதனால் பெருகி வரும் கல்வி நிறு ஊடாக கணினிக் கல்வியும் இணைந்து (Infor) பிள்ளையை எத்திசையில் நகர்த்துவது என அங்
இருப்பினும், இவற்றை அனைத்தையும் கொண்டு அவனது வளர்ச்சி விருத்திப் படி பெற்றோர் தெரிந்து கொண்டு அம்மாணவனு பெற்றோரினால் மட்டுமே இன்றைய காலச் சுழற வெற்றி கொள்ள முடிகின்றது. அதனால் பிள் உன்னிப்பான கவனமும் இக்காலத்தில் வேண்ட
எனவே பிள்ளையின் கல்வியில் பெற்ே நோக்குவோமாயின், 1. பிள்ளையின் இளமைக்கால செயற்பாடுகள் வெறுப்பு உதாரணமாக அவனது சிறுவயது அடியொற்றியதாகக் காணப்பட்டது. (Fanta தொழில் தெரிவுக்கு அவசியமாகின்றது.
2. அவனது ஒழுக்க வளர்ச்சி எப்படியானது ஈடுபடுகின்றானா கடைப்பிடித்து ஒழுகுகின சீரான உண்மைப்பாட்டுடன் கூடிய நடத்
-உந்தூழ்

பற்றோர் பங்களிப்பு
திரு.அ. முரளிதரன் ஆசிரிய ஆலோசகர்.
பாகப் பேசப்படுகின்றது. ஒவ்வொருவரின் கால உண்மையான முதலீடு எது? என வரிசையில் என்றும் மெளனமாக காலம் ம். ஆனால் யாரும் சரியாக அதனை விளங் டுகிறது. கல்வி முதலீட்டை விளங்கியவர் ழமை சாத்தியம் அற்றதாகி விடுகின்றது. பான வாழ்நாள் முதலீடு. பரம்பரையான ன்றனர்.
ாதாரப் பண்டம் என்னும் நிலையில் உலக தளங்கள் ஊடாக நகர்த்தப்படுவதைக் றுவனங்கள் தனியார் கல்வி நிலையங்கள் mation Education) Glufi C&DITGOU GT6015) பகலாய்க்கச் செய்கின்றன.
) கடந்து பிள்ளையைச் சரியாகப் புரிந்து களையும் விருப்பு வெறுப்புக்களையும் றுக்குரிய அரவணைப்பைக் கொடுக்கும் ற்சியின் வெளிப்பாடான கல்வி முதலீட்டில் ளைகள் தொடர்பாக பெற்றோரின் மிக ப்படுகின்றது.
றோர் எவ்விதம் பங்கு கொள்ளலாம் என
, அவனது தொழில் தொடர்பான விருப்பு து விளையாட்டுக்கள் கூடுதலாக எதனை Sy Period) Eg5 LÖG5ITGDġ566ð 96J60Tg5
எனவும் சமய, பழக்க வழக்கங்களில் *றானா? எனப் பார்ப்பதுவும் அதற்குள் தை மாற்றம் உள்ளதா? என்பதையும்
C O9 )

Page 24
பெற்றோர் கவனிப்பதனால் அவனது 2 Batance) பாட விடயக் கிரகிப்புக்கு உ
3. எனது பிள்ளை எனக்குத் தெரியாம எதையும் செய்யக்கூடாது, எனவும் e6).j60)60TGuJIT / 36.6061TGuJIT Gé அவதானிப்பது போல் அவதானிப்பது என் பிள்ளை ஒரு போதும் தவறு பொருந்தாது. எனவே மாணவ நண் எங்கும் அழைத்துச் செல்லும் போது போதும் கேட்டறிதல். அதில் ஏதும் த6 பெற்றோர்களின் கடமையாகும்.
4. பாடசாலையில் பிள்ளைகளின் கற்ற வைபங்களுக்கு பெற்றோர் சென்று சந் மீதான அக்கறையை ஊட்டப்படுவதுட “எங்கள் பாடசாலை" என்னும் எண்ணக்
மேலும், வீடு என்பது மாணவர் ஒவ்வொரு பெற்றோர் மனங்களிலும் நிை வரும் விடயம் யாதெனில் என்னால் கல் எனது பிள்ளை சாதிக்க வேண்டும் என்னு ஆனால் வீட்டினைக் கற்றலுக்கு சாதகம தொலைக்காட்சி, தாய்தந்தையரின் பிரச் தினர்களுடன் உரையாடல் போன்றவற்ற கல்வியினையும் கற்கும் நேரத்தையும் வன
பிள்ளைகளிடம் அன்பைக் காட்ட காட்டல் என்பது அத்தியாவசியமானதாக அசிரத்தை கொண்டு காணப்பட்டாலும் அ கண்டிப்பதற்கும், வேலையை கல்வியைப் பாசத்தின் பேரால் அதனை மறைக்கவே வளர்க்கும்.
மேலும் முடியுமான வரை பெற்ே ஒழுக்கம் உள்ளவராக இருப்பது சிறந்தது. விடயங்கள் என்பவை பிள்ளைகளின் மு உரையாட வேண்டுமே அன்றி இழிவாக
(10)

-600Ts63 FLDéléOGD35(5Lb (Emotional Control தவியாக அமைகின்றது.
ல் எந்த இடத்திற்கோ செல்லக்கூடாதெனவும்,
இவற்றை விட எனது பிள்ளையை நான் சல்லும் இடம் எல்லாம் சென்று கைதியை அப்பிள்ளை விரும்பும் செயல் அன்று அதற்காக
இழைக்காது என அவதானிக்காது விடலும் "பர் நண்பிகளை உணவு உண்ணும் போதும் ம் சுமுகமாக அல்லது மகிழ்வுடன் உரையாடும் பறான நடத்தைகள் காணப்பட்டால் சீராக்குவது
ல் தொடர்பான வேலைத்திட்டம் விழாக்கள் திப்பது, கலந்து கொள்வது பிள்ளைகளின் கல்வி -ன் மாணவர் உள உரமும் மேம்படும் மேலும் க்கருவும் மேம்பட வாய்ப்பாக அமைகின்றது.
கற்றலை வளப்படுத்தும் ஒரு கழல் என்பது லைத்திருக்க வேண்டும். பெற்றோர் மனங்களில் வியில் சாதிக்க முடியாது போன விடயங்களை லும் எண்ணப்பாங்கு இருப்பதில் தவறு இல்லை ான வீடாக மாற்ற வேண்டும். உதாரணமாக, சினைகளைக் கையாளுதல், உறவினர் விருந் றின் போது மாணவர்களின் (பிள்ளைகளின்) Dரயறுத்துக் கொள்ளல் வேண்டும்.
ல், அரவணைத்தல், தட்டிக் கொடுத்தல், ஆதரவு இருந்தாலும், பிள்ளைகள் தங்கள் பணிகளில் Hல்லது புறக்கணித்தாலும். உடன் அவர்களைக் பற்றிச் சுட்டிக்காட்டவும் தயங்கவோ, அன்பின் ா வேண்டாம். இதுவே அவன் ஆளுமையை
றார் பிள்ளையின் முன்பாக வெளிப்படையான சமூகச் சீர்கேடு,மது மற்றும் ஒழுக்க இழுக்கான ன்பாக பெற்றோரைப்பற்றி மேலாக, மதிப்பாக ஒரு போதும் கதைக்கவோ அன்றி செயற்
உந்தூழ்

Page 25
பாட்டால் மதிப்பிழப்பாக பிறர் நடக்கக் கூடாது. தொடர்பான உயர் எண்ணக்கரு சிதைக்கப்படுe ஆக்கப்படும். எனவே, இவற்றை சீராக, தியாக இலட்சியக் குடும்பம் உருவாகும். அக்குடு திகழ்வார்கள்.
அத்துடன் மாணவர் களிடம் அவர்களு உயர்வான எண்ணக்கருக்களையும் மதிப்பு யெழுப்புவது குடும்பத்தின் பங்களிப்பு என்பது சகோதரிகளுடன் மாணவர்கள் உரையாடுவன் பான மதிப்பீடு அறிந்து சீராக்கம் செய்வதும் குறிப்பிடலாம்.
மேற்குறிப்பிடப்பட்ட விடயங்களுடன் விடயங்களை உதாரணமாக பூங்கா, நாடகம், நிகழ்வுகளை குடும்பமாக சென்று பார்வையிட aaUaab 2 aetUä85G)T85 Uäg) GöTeie ஆனந்தத்தையும் கொடுக்கும். எனவே இவற்றி FT5aca GasTeffelTGOTub.
கிராமத்தின் ஆசிரியராகப் ஆசிரியத் து
கிராமப்புற மாணவர்களிடம் தனியா தலூடாக படைப்பாற்றலும் ஆளுமை விருத இடர் மிகுந்த காலத்திலும் அயராது உடை பாளராக காலத்தால் அழியாக் காவியமா6 பூநகரி மகா வித்தியாலயத்தின் பழைய காணிக்கையைச் செலுத்துகின்றேன்.
-உந்தூழ்

இதனால் பிள்ளையின் மனதில் பெற்றோர்வி
வதுடன். தாழ்வு மனப்பாங்கு மாணவரிடம் மனப்பாங்குடன், செயற்படும் போது தான். ம்பப் பிள்ளைகளே செயல்வீரர்களாக
க்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் தொடர்பாக க் கொடுக்கும் கலாசாரத்தையும் கட்டி டன் தமது ஆசிரியர் தொடர்பாக சகோதர தை செவிமடுப்பதுடன் ஆசிரியர் தொடர்
பெற்றோர் மூத்த உறுப்பினர் பணியாக
மாணவர்களின் மனதினை மகிழ்விக்கும் நடனம் சங்கீதக் கச்சேரி என்பன போன்ற ல், கோயில் திருவிழா மற்றும் சுப கருமம் ாலும், மாணவர் விருத்தியையும், மன ன் மூலம் “இலட்சிய முதலீடாக" கல்வியில்
பூநகரிக்குக் கிடைத்த திலகம்
ான விருப்பத்தையும் தனது கற்பித் த்தியும் மிக்க மாணவரை உருவாக்க pத்த போற்றுதலுக்குரிய யுகப்படைப் ண் எம் ஆசிரியருக்கு நன்றி மறவாத
மாணவனான என் இதய பூர்வக்
G1D

Page 26
உங்கள் சீனி மட்டத்ை எதிர்பாராத
தக்காளி சோஸ் சாப்பிட்டால் சீனி கேட்கும் நோயாளிகள் பலரை எனது ம இனிக்க இனிக்க தரப்படும் சோஸ் சீனிவிய மிக ஆச்சரியம் தரும் விஷயமாக இருக்க இனிக்கிறதா? அது சீனிவியாதிக்கு உதந்தத போலவே மற்றொரு உணவு இஞ்சிச் சேr முதலியவற்றில் உதவும் அருமருந்து என்ப சேர்ந்திருப்பது தான் பிரச்சினையாகிறது கொள்கிறோமோ அதே உடல் நன்மைக் கடையில் இஞ்சி விற்பவருக்கா இஞ்சிச்ே கிடைக்கிறதென்று பார்த்தால் இஞ்சிச்ே ஏனென்றால் இஞ்சி வியாபாரி இஞ்சியை கொட்டிச் சேர்த்து விற்பதில்லை. ஆனால் சீனியை இட்டு தயாரித்து விற்பதால் இவ தக்காளியை விற்பவருக்கு லாபம் அதிகமிc மிக அதிக லாபம் கிடைக்கிறது. இது வியா இன்றைய உலகில் கண்ணில் மண்ணை தூ முயற்சிக்கு நாம் இரையாகக் கூடாது. சந் திருகுதாளங்களில் சிலதான இஞ்சிச் சோட உள்ளன. சாதாரண மென்பானங்களை வி என்பது போன்ற தோற்றத்தை இவர்கள் வி மென்பான வகைகளும் சீனி கொண்டவை அளவில் சீனியைக் கொண்டதுதான். என6ே
இவ்வாறு சீனியளவை அதிகரிக்கு வேறுபல உணவுகள் உள்ளன. பேஸ்ட்ரி, க யினவே. இலங்கையில் நடத்தப்பட்ட ஒரு அ களில் பேஸ்ட்ரி, ரோல், பற்றிஸ் வகைகள் பட்டுள்ளது. ஏதாவது வியாபாரம் செய்ய ெ விட்டு பேஸ்ட்ரி செய்யும் அல்லது விற்கும்
1N C 12 )

த அதிகரிக்கும் நீங்கள் த உணவுகள்!
வைத்தியகலாநிதி எஸ். சுரேந்திரஜித்
மட்டம் அதிகரிக்குமா என ஆச்சரியத்துடன் ருத்துவ தொழிலில் அடிக்கடி காண்கிறேன். ாதிகளுக்கு ஆபத்தானது என்பது பலருக்கு மிக கிறது. எந்த உணவாவது நாக்குக்கு ருசியாக 5ல்ல என்பதே சரியான முடிவு. சோஸ் (Sauce) ாடாவாகும். இஞ்சியானது உடலுக்கு ஜீரணம் தில் ஐயமில்லை. ஆனால் அதனுடன் சீனியும் எதை உடல் நன்மை கருதி நாம் கூறிக் கு அதே சோடாவிலுள்ள சீனி எமனாகும். சாடா விற்பவருக்கா அதிக விற்பனை லாபம் சாடா விற்பவருக்கே அதிக லாபமுண்டு. மட்டும் தான் விற்கிறார். அதற்குள் சீனியை இஞ்சிச்சோடா இஞ்சிக்குள் மிஞ்சிய அளவு பருக்கு விற்பனை அதிகம். இதுபோல் தான் ல்லை. ஆனால் தக்காளி சோஸ் வியாபாரிக்கு பார வியூகத்தினால் விளைந்த தீமையாகும். வி வியாபாரம் செய்யும் நிறுவனங்களின் சதி தையைப்பிடிக்கும் நோக்கிலான இவர்களின் ாவும் சோசும். இவை போலவே இன்னும் பல ட இஞ்சிச்சோடா உடல் நலத்துக்கு உகந்தது ளம்பரம் மூலம் ஏற்படுத்துகின்றனர். ஏனைய வ தான், இஞ்சிச்சோடாவும் கிட்டதட்ட அதே வ இரண்டுமே ஆபத்துத்தான்.
நம் மக்கள் பார்வைக்கு மறைவாக உள்ள ட்லட், ரோல், பற்றீஸ் முதலியனவும் இத்தகை ஆய்வில் மிக அதிக விற்பனை உள்ள பண்டங் முதலிடத்தில் உள்ளன எனக் கண்டுபிடிக்கப் தாடங்கப் போகிறீர்களா? அதை இதைவிட்டு
வியாபாரம் தொடங்குங்கள். ஓரிரு மாதங்
உந்தூழ்

Page 27
களில் கோடீஸ்வரராகிவிடலாம். அந்தளவுக்கு
உண்கிறார்கள். கெளட்பி கெளரவக் குறைவான : முதலியனவுடன் ஒப்பிடுகையில் இவை மிக அதி க்கு பிள்ளை கொண்டு செல்லும் சிற்றுண்டிப்
வைப்பது பெற்றோரின் அந்தஸ்தை உயர்த்திக்க நீரிழிவு நோய் வந்ததும் "கெளட்பி சாப்பிடுங்கள் வேண்டா வெறுப்பாக டாக்டரை முறைத்துப் L கடலை உண்டு பழகினால் பின்னாளில் நீரிழ மாற்றங்களைச் செய்ய வேண்டிய அவசியம் ஏற்
பிஸ்கட் வகைகளும் சீனி வியாதிக ஆச்சரியமாகத் தோன்றலாம். இதில் இனிப்ே உடலினுள் இது மாற்றமடைந்து சீனி அளவை எனவே கருப்பட்டி, சர்க்கரை, கற்கண்டு, கி நோயாளிகள் நினைக்கிறார்கள். இதுவும் நோயாளர்கள் ஐஸ்கிறீம் உண்ணக் கூடாதா கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். பழச்சாறு, கோ சீனியை மிக அதிகளவில் கொட்டித்தயாரிக்கப்ட எதுவாயினும் அது சீனி வியாதிக்காரருக்கு கென்றே விசேடமாகத் தயாரிக்கப்படும். சில ெ விதி விலக்கு அவற்றினை வேண்டுமானால் பயன்படுத்திதமது இனிப்பாக உண்ணும் சிறப்ை
γ எழுத்துலகில் இன்றுவரை இழு
பாடசாலை நாட்களில் என் தமிழைப் தமிழாசிரியர் திருமதி க.நடராஜா முக்கியமா ஆக்கம் தருவதில் அவருக்கு நிகர் அவரே. ப செய்யாது தூர இடத்திலிருந்து கல்வி கற்க வ தங்கிக்கற்க வசதியளித்தும் பல உதவிகள் ந6 மரணம் அதிர்ச்சியும், ஆறாத்துயரமும் தருவ பிறகும் பேனா முனையை மறந்து விடாம தமிழாசிரியை போன்றோரின் ஊக்கம் தான் ! குறிப்பிட்டே ஆக வேண்டும். அவர் தம் ஆன்ம மாணாக்கனாக எனது கட்டுரையை அவருக்குக்
-உந்தூழ்

மக்கள் விழுந்துவிழுந்து இவற்றை வாங்கி
உணவாகக் கருதப்படுகிறது. பயறு, கெளட்பிரு களவில் வாங்கப்படுகின்றன. பாடசாலை ië
" என வைத்திய ஆலோசனை சொன்னால் பார்க்கிறார்கள். சிறுவயது முதல் கெளடபி, ஜிவு வரும் போதும் உணவில் பெரிதாக
}படாது.
ளுக்கு உகந்ததல்ல என்பது பலருக்கு ப இல்லை என நினைக்கலாம். ஆனால் ப அதிகரிக்கும். சீனி தான் பொல்லாதது. த்துள் பாவிக்கலாம் என பல சலரோக தவறான சிந்தனையாகும். சலரோக என அப்பாவிகள் போல் பலர் இன்னும் "டியல் முதலானவையும் சோஸ் போலவே பட்டுள்ளன. அனேகமாக இனிக்கும் உணவு உகந்ததல்ல. சலரோக நோயாளிகளிற் சயற்கை இனிப்பூட்டிகள் மட்டுமே இதற்கு சலரோக நோயாளிகள் இடையிடையே பத்தணித்துக் கொள்ளலாம்.
நக்கக் காரணமானவர். ཡོད༽
புடமிட்டு ஒளிரச் செய்தவர்களில் என் ன ஒருவர். மாணாக்கரை ஊக்குவித்து ாடசாலை ஆசிரியராக மட்டும் சேவை ரும் தனது மாணவர்களை தன் வீட்டில் ஸ்கியும் வாழ்ந்திருந்த பெருந்தகையின் தாயிற்று. மருத்துவராகத் தகுதி பெற்ற }ல் எழுத்தில் இன்பம் காண இந்தத் பிரதான உந்துசக்தி என்பதை இவ்விடம் சாந்திக்காக பிரார்த்திக்கும் அவர்களது Fசமர்ப்பிப்பதில் மகிழ்வடைகிறேன்.
一ノ
C-13)

Page 28
கருப்பை பற்
நவீன விஞ்ஞான உலகில் நாளு ஏற்பட்டு வருகின்றது. மருத்துவ உலகமும் கின்றது. ஆனாலும் அதற்கு சவால் விடும் உலகத்திற்குச் சிம்ம சொப்பனமாக விள நோயாகும். இதன் போது உடற்கலங்கள் காட்டுகின்றன.
பெண் இனப்பெருக்கத் தொகுதியா கருப்பைக் கழுத்து, யோனிவழி என்பவற்ை கருப்பைக் கழுத்து என்பவற்றில் ஏற்படும் போம்.
கருப்பையில் ஏற்படும் புற்றுநோய மேலணி இழையத்திலேயே (Endome Endometrial adenocarcinoma 6T60T 91 காணப்படுகின்றன. இந்தப்புற்று நோயா தொடர்பான புற்று நோய்களில் இறப் வகிக்கின்றது.
கருப்பைப் புற்று நோயானது ெ ஏற்படுகின்றது. சில காரணிகள் கருப் கூட்டுகின்றன. சார்பளவில் நீண்டகாலம் ஈ உடலில் காணப்படுமிடத்து, புற்றுநோய் ஏற் சந்தர்ப்பங்களில் உடலில் ஈஸ்தரோஜன் ஒ( o fg)6Juglað ÜLu6ODLg56ð (Early menar * காலதாமதமாக மாதவிடாய் நிற்றல் (L * கருத்தரிக்காமை * உடற் பருமன் அதிகரித்தல்
மேலும் சில நோய்களும் கருப்Lை கின்றன. அவையாவன:- * உயர்இரத்த அழுத்தம்
o geoGBUTELb
1N ( 14. )

றி ஓர் விழிப்பு!
மவத்தியகலாநிதி.ரஜந்தி இராமச்சந்திரன்
நக்கு நாள் பல துறைகளிலும் முன்னேற்றம் தினம் தினம் புதிய கண்டு பிடிப்புகளைக் காண் வகையில் சில நோய்கள் இன்றும் வைத்திய ங்குகின்றன. அவற்றுள் முக்கியமானது புற்று கட்டுப்பாடற்ற அபரிமிதமான வளர்ச்சியைக்
ானது கலகம், கருப்பைக் குழாய்கள், கருப்பை, றை கொண்டதாகும். இவற்றில் கருப்பை மற்றும் புற்றுநோய் பற்றிய சில தகவல்களைப் பார்ப்
ானது கருப்பையின் உட் சுவரில் காணப்படும் trium) பிரதானமாக ஏற்படுகின்றது. இது ழைக்கப்படும். இதனிலும் பல உட்பிரிவுகள் னது, பெண் இனப்பெருக்கத் தொகுதியுடன் பை ஏற்படுத்துவதில் மூன்றாவது இடத்தை
பாதுவாக 55- 65 வயது காலப்பகுதியில் |பை புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பினைக் ஸ்தரோஜன் (Oestrogen) எனும் ஒமோனானது படும் சந்தர்ப்பமும் அதிகரிக்கின்றது. கீழ்வரும் மோன் அதிகமாகக் காணப்படும்.
che)
ate menopause)
புற்றுநோய் ஏற்படும் சந்தர்ப்பத்தை அதிகரிக்
ܨܘ.
உந்தூழ்

Page 29
* சூலகப் புற்றுநோய் * மார்ப்புப் புற்றுநோய் மற்றும் அதற்கு சிக்
எனும் மருந்தும்.
புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே மாக்கும் சந்தர்ப்பங்களை அதிகரிக்கச் செய் மிடத்து மருத்துவ ஆலோசனையை நாடுதல் வே
* மாதவிடாய் நின்ற பெண்களுக்கு மீண்டும் இ * மாதவிடாய் வருகின்ற பெண்களுக்கு
ஏற்படுதல் * அதிகளவு மற்றும் கூடிய நாட்களுக்கு இரத்த * நீர்த்தன்மையான திரவம் யோனிவழியாக * அடிவயிற்றில் வலி மேற்கூறிய குணங்குறிகள் காணப்படுமிடத்து
* உடற்பரிசோதனை * ஸ்கானிங்முறை * கருப்பை மாதிரி பரிசோதனை
என்பன மேற்கொள்ளப்பட்டு நோய் நிe நோயானது பரவியிருக்கும் தன்மையைக் பிரிக்கப்படும். இதனடிப்படையிலேயே சிகி புற்றுநோயானது கருப்பையை விட்டு வெளிய முற்றாக அகற்றுவது உயிர் வாழ்வதற்கான ச பரவியிருக்கும் தன்மைக்கு ஏற்றவாறு சத்திரசி ஆகிய சிகிச்சை முறைகளும் வழங்கப்படுகின்ற
இனி நாம் கருப்பை கழுத்துப் புற்றுநோ கருப்பைக் கழுத்தானது, கருப்பை நோயாளிய இவ்வமைப்பிற், கருப்பைக்கு அண்மித்ததாக கலங்களும், யோனிக்கு அண்மித்ததாக இருக்கு மேற்பரப்பை மூடிக் காணப்படுகின்றன. பெரும்பான்மையாக தட்டையான மேலணி இ பெண்களில் ஏற்படும் புற்றுநோய்களில் மூன்றா
-உந்தூழ்

5360), FuGifhid, UugöTUGLib Tamoxifen
கண்டறிவது அதனை முற்றாக குண யும். பின்வரும் அறிகுறிகள் காணப்படு
1ண்டும்.
இரத்தப்போக்கு ஏற்படுதல்.
திடீரென ஒழுங்கற்ற இரத்தப்போக்கு
ப்போக்கு ஏற்படுதல். வெளியேறுதல்
லைமையானது அறியப்படும். அத்தோடு கொண்டு பல்வேறு நிலைகளாகப் ச்சை முறைகளும் தீர்மானிக்கப்படும். பில் பரவியிராத நிலையில் கருப்பையை ந்தர்ப்பத்தினை அதிகரிக்கின்றது. நோய் சிகிச்சையுடன் கதிரியக்கம், மருந்தேற்றல்
5.
ய் பற்றிய சில தகவல்களைப் பார்ப்போம். பினுள் திறக்கும் ஒடுங்கிய பகுதியாகும். 5 இருக்கும் பகுதியில் கம்பவுருவான ம் பகுதியில் தட்டையுருவான கலங்களும் இங்கு ஏற்படும் புற்று நோயானது இழையங்களிலேயே ஏற்படுகின்றது. இது வது இடத்தை வகிக்கின்றது.

Page 30
கருப்பைக் கழுத்துப் புற்றுநோய்க் Papilloma Virus (HPV) 6TGOJLb FÜ 6ODGOJU நுண்ணங்கியாகும்.
* இளவயதில் ஆரம்பிக்கப்படும் பாலியல் * பலருடன் பாலியற் தொடர்பு வைத்திரு. * வாழ்க்கைத்துணை பலருடன் பாலியற் * பாதுகாப்பற்ற பாலியல் தொடர்புகள் ே அதிகரிக்கின்றன. இதனைத் தவிர நீண் கருப்பை கழுத்து கலங்களில் மாற்றத்ை
இந்தப் புற்றுநோயானது 6 பின்பே (20 வருடங்கள்) ஏற்படுகின்ற முன்னான நிலை எனப்படும். (Premaligr அறிகுறிகள் ஏதும் காணப்படாது. புற் அறிகுறிகள் காணப்படும்.
மாதவிடாய் நின்ற பின்பு மீண்டும் இரத் வெள்ளைபடுதல்.
மாதவிடாய் மிக அதிகளவு இரத்தப் பே மாதவிடாய் நாள்களுக்கு இடையில் இ உடலுறவின் போது கடுமையான வலி,
நோயின் பிந்தைய நிலைமைகளில்
* முதுகுவலி சி கால் வீக்கம் * எலும்புமுறிவுகள் ** LJðfluflaö60LD, G38-ITú6) ebólu.
கருப்பை கழுத்துப் புற்று நோயான தடுக்கப்படக் கூடியதாகும். தகுந்த மருத்துவ நிலை கண்டுபிடிக்கப்படுமிடத்து, அக்கலங் உட்பட பல நாடுகளில் கருப்பை கழுத்து மேற்கொள்ளப்படுகின்றது.
இலங்கையில் ஒவ்வொரு சுகாதார GUGOdrasair b6) d56floofdsdai) (Well Woman
G16)-

கு ஏதுவான காரணியாக அமைவது Human ஸ் ஆகும். இது ஒரு பாலியல் ரீதியாக பரவும்
உறவுகள்
த்தல்
தொடர்பில் இருத்தல். பான்ற சந்தர்ப்பங்கள் HPV கிருமித்தொற்றை டகால கருத்தடை மாத்திரையின் பயன்பாடும் )தக் கொண்டு வருகின்றன.
வைரஸ் தொற்று ஏற்பட்டு, நீண்டகாலத்திற்கு து. இக்காலப் பகுதியானது புற்றுநோய்க்கு hant Condition) @56ÖT (BUITg5 CbITUJT6fë5G5 று நோயின் ஆரம்ப நிலையில் பின்வரும்
தப்போக்கு ஏற்படுதல்.
ாக்குடன் இருத்தல். ரத்தப்போக்கு ஏற்படுதல். உடலுறவின் பின் இரத்தப்போக்கு
அறிகுறிகள் காணப்படும்.
து சரியான மருத்துவ கண்காணிப்பின் மூலம் பரிசோதனையால் புற்றுநோய்க்கு முன்னான பகள் முற்றாக அகற்றப்படுகின்றன. இலங்கை மாதிரிப் பொருட் (Pap smear) பரிசோதனை
ர வைத்திய அதிகாரி பிரிவிலும் நடாத்தப்படும் Clinic) Pap smear LufG3FIT56O)60T 8Go66LDIT5
உந்தூழ்

Page 31
மேற்கொள்ளப்படுகின்றது. இதன் போது திரு வருடங்களுக்கு ஒரு முறையும் சோதிக்கப்ப பரிசோதனையின் போது அசாதாரண கலங்க dag|U(35560)u Gol L2 GTG.55 (Cone biopsy) படும். இதனடிப்படையிற் புற்றுநோய்க்கு முன்ெ லேசர்கதிர், Cryo முறை என்பனவற்றின் மூ குணமாக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது.
தற்காலத்தில் HPV கிருமிக்கெதிரான வரப்பட்டுள்ளது. அத்தோடு பாதுகாப்பான பா பெருமளவிற் தடுக்கும்.
மேற்குறிப்பிட்ட இருவகையான புற் எல்லாப் புற்றுநோய்களுமே, நோயின் ஆரம் குணமாக்கும் சந்தர்ப்பங்கள் அதிகரிக்கின்றன ஏதேனும் வேறுபாடுகள் காணப்படுமிடத்து : நாடுதல் நன்மை பயக்கும்.
/ அறிவொளி ஊட்டிய
எங்கள் ஆசிரியை திருமதி கலாதேவி
அறிவொளியினால், இன்று நாம் நற்பிர8ை
களைத் தாங்கி வரும் இந்நூலில் பெண் இனட்
மான இரு புற்றுநோய்களைப் பற்றித் தகவல்
நாம் செய்யும் கைம்மாறாகும்.
ܢܠ
உந்தூழ்

நமணமான பெண்கள் ஒவ்வொரு ஐந்து
o டுகிறார்கள். இவ்வாறான தொடர்ச்சியான ரு
5ள் காணப்படுமிடத்து, கருப்பைகழுத்தின் 5 நுணுக்குக்காட்டியினூடாகப் பரிசோதிக்கப் னான நிலை காணப்படுமிடத்து, மின்சாரம், }லம் அக்கலங்கள் அழிக்கப்பட்டு, 100%
தடுப்பு மருந்தும் பாவனைக்கு கொண்டு லியல் செயற்பாடுகளும் HPV தொற்றை
றுநோய்கள் மட்டுமல்லாது, பொதுவான )ப நிலையில் கண்டுபிடிக்கப்படுமிடத்துக் . ஆகவே ஒவ்வொருவரும் தமது உடலில் உடனடியாக வைத்திய ஆலோசனையை
N
எம் ஆசிரியர்.
நடராஜா அவர்கள் எமக்கு ஊட்டிய
ஐகளாக உள்ளோம். அவரது நினைவு
பெருக்க தொகுதியில் ஏற்படும் முக்கிய
களைப் பகிர்ந்து கொள்வது அவருக்கு
ノ

Page 32
நீங்கள் உடற்ப
அமெரிக்கா போன்ற அபிவிரு காணப்பட்ட உடற்பருமன் இன்று இலங் களிலும் பாரிய சிக்கலாக உருமாறி வ( சலரோகம் போன்ற தொற்றல்லா நோய் அதிகரித்துச் செல்கிறது. தொற்றல்லா நே ஆனவை தவிர்க்கப்படக் கூடியவை என உ6
பார்த்த மாத்திரத்திலேயே ஒருவ விடமுடியுமெனினும் உடற்பருமனினால் சரியானதொரு அளவுகோல் அவசியமாகு அழைக்கப்படும். BMI பெரிதும் பயனுள்ள மற்றும் உயரத்தினைக் கொண்டு இது கணி மனிதனின் சாதாரண நிறை வேறுபடுகிறது 90Kg நிறை என்பது அவரது சாதாரணம குள்ளமான ஒருவரில் 90Kgநிறையானது
இவ்வாறே ஆண் பெண் பால் வேறுபடுகிறது. உதாரணமாக ஆணொரு நிறை அதே உயரமுள்ள பெண் ஒருவருக்கு ஆகவே ஒருவரின் உடல்நிறையினை ம எதிர்வுகூறாது அதனுடன் தொடர்புடைய க
நன்கு மூக்கு முட்டச் சாப்பிடுபவ உண்மையாயினும் பெரும்பாலானவர்க நோய்களே காரணமாக அமைகின்றன. குறைவதால் உடற்பருமன் ஏற்படலாம். உடையவர்களை பட்டினி போட்டு எந்தட் சிகிச்சையை அணுகுதலே பயனுள்ளது.
உடற்பருமனானவர்கள் சிலர் தம்! பின்னரும் நிறைகுறைகிறதில்லையே என்
G18)

ருமன் கூழயவரா?
வைத்தியகலாநிதி.சகிலா பரமநாதன்
த்தி அடைந்த நாடுகளில் பிரச்சினையாக கை போன்ற வளர்ச்சியடைந்து வரும் நாடு ருகிறது. இதன் காரணமாக இரத்த அழுத்தம், 5ளால் மத்திய வர்க்கத்தினர் பாதிக்கப்படுவது ாய்கள் (NCD) ஏற்படும் சந்தர்ப்பங்களின் 80% லக சுகாதார ஸ்தாபனம் தெரிவிக்கிறது.
ர் உடற்பருமன் அதிகமானவர் எனச் சொல்லி ஏற்படும் பாதிப்புக்களை எதிர்வு கூறுவதற்குச் 5ம். அவ்வமைப்பில் “உடற் திணிவுச் சுட்டி" என ாதாக அமைகிறது. ஒரு மனிதனுடைய நிறை க்கப்படுகிறது. ஏனெனில் உயரத்திற்கேற்ப ஒரு 1. உதாரணமாக நன்கு உயரமான ஒரு ஆணின் ான நிறையாகக் கொள்ளப்படும் அதேநேரம் மிகுந்த ஆபத்து விளைவிப்பதாக இருக்கும்.
வேறுபாட்டிற்கு ஏற்ப சாதாரண நிறையும் வரின் சாதாரணமானதெனத் தெரிவிக்கப்படும் த ஆபத்தானதாக அடையாளம் காணப்படலாம். ட்டும் கருதி நோய்கள் தாக்கும் வாய்ப்பினை ாரணிகளையும் கருத்தில் எடுத்தல் வேண்டும்.
ர்களின் உடற் பருமன் அதிகரிக்கும் என்பது ளில் உடற்பருமன் அதிகரிப்பிற்கு பல்வேறு உதாரணமாக தைரோயிட்ன் சுரப்பு உடலிற் இவ்வாறான சந்தர்ப்பங்களில் உடற்பருமன் பயனும் இல்லை. மாறாக உரிய மருத்துவ
மால் முடிந்தளவு உடற்பயிற்சி செய்து பார்த்து ற கவலையில் உடற்பயிற்சி செய்வதை நிறுத்தி
உந்தூழ்

Page 33
விடுவார்கள். ஆனால் உண்மையில் ஒழுங்கான அளவு குறையாவிடினும் இதய நோய்கள்
பெருமளவு குறையும். எனவே நிறை குறைவு உடற்பயிற்சியைத் தொடர்வது நல்ல பயனைத்த
இனி அதிக உடற் பருமன் காரணம எவ்வகையில் பாதிப்படைகின்றன என்பதைப் ப அ. உடற்பருமன் அதிகரிப்பதனால் ஏற்படும் சுவ நெஞ்சறைக் கூட்டின் அளவு குறைவு அணி வடையும். இதனால் நுரையீரலின் O, (; சாதாரண வேலைகள் செய்யும் போதே ( விடுவார்கள். (அதாவது சாதாரண உடற்பருட
இவர்கள் அடிக்கடி அதிகமாக மூச்சு விடுவதன் செல்வதற்கு வாய்ப்புகள் அதிகம் அது மட்டு வேலைகளைக் கூடச் சில சமயங்களில் ( நித்திரையின் போது குறட்டை விடுவதனால் யில் குழப்பம் ஏற்படும். இதன் காரணமாக ம6
ஆஉடற்பருமன் அதிகரிப்பதனான் ஏற்படும் கு
பிரச்சினைகள் குருதி கொலஸ்ரோல் (Serum Cholestr Cholesterolaemia) &J355 ∪55 (8.5 Tu () விளைவிக்கக் கூடிய இதய நோய்களும் ஏற்ப
as
. உடற்பருமன் அதிகரிப்பதனால் ஏற்Uரும் உ
பிரச்சினைகள் வயிறு எரிவு நோய் (அல்சர்) உணவு சமிபாட பிரச்சினைகளாகும். மேலும் இரைப்பையிe மீளக் களத்தினூடாக வாய்க்குழியினுள் நு வருவதுபோன்ற உணர்வு என்பன ஏற்படும்.
வயிற்றுக் குழியினுள் அழுத்தம் அதிகரி இரைப்பையின ஒரு பகுதி நெஞ்சறைக்
உட்செல்லும். இதனால் வயிறு எரிவு, நெ உட்கொள்ள விருப்பமின்மை என்பன ஏற்படு

உடற்பயிற்சி செய்தால் நிறைபோதுமான
|தைப் பற்றிக் கவலைப்படாமல் தினமும்த் iருகம்.
ாக உடலின் ஒவ்வொரு தொகுதிகளும் TfTLIG3LJITL b. சத்தொகுதிசம்பந்தமான பிரச்சினைகள் டெவதால் நுரையீரலின் அளவும் குறை ஒட்சிசன்) கொள்ளளவு குறைவடைந்து, இவர்கள் விரைவில் களைப்பு அடைந்து Dன் உள்ளவர்களுடன் ஒப்பிடும் போது)
எால் களைப்பு அடைந்து மயக்க நிலைக்கு மன்றி இவர்களால் இலகுவான நாளாந்த செய்ய முடியாமல் இருக்கும். இவர்கள் சுவாசம் தடைப்படும். அதனால் நித்திரை  ைஅழுத்தம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
ருதிச் சுற்றோட்டத்தொகுதி சம்பந்தமான
ol) eH6IT6J seigšla5rflÙuĝ56OTITGö (Hyper Hypertension) LDpgDILD LDU6001ğ605 2. L6öT LGDIT).
னவுக் கான்வாய்த்தொகுதி சம்பந்தமான
உடையாத் தன்மை என்பவை பொதுவான ம் உள்ள உணவு அமிலத்துடன் சேர்ந்து ழையும். இதனால் நெஞ்செரிவு, வாந்தி
ப்பதனால் வயிற்றுக் குழியில் உள்ள கூட்டினுள், பிரிமென் தகட்டின் ஊடாக ஞ்செரிவு, அசாதாரண நிலை, உணவு ம்.
( 19 )

Page 34
ஈ. உடற்பருமன் அதிகரிப்பதனான்ஏற்படும் நீரிழிவு நோய் - உடல் ஓமோன் அசாத நோய் ஏற்பட அதிக வாய்ப்புண்டு. இவர் நீரிழிவு நோய் வரும் சாத்தியக் கூறு யளவை சீர்செய்யும் தன்மை பாதிக்கப்
பெண்களில் ஏற்படும் பிரச்சினைகள் கொழுப்புள்ள உணவை சாப்பிடுவ இப்படிப்பட்டவர்களுக்கு பருவம் அை வயது 10 ஆகியுள்ளது. இதன் காரணம விரைவாக நடந்து விடுவதாக விஞ் இருப்பவர்களுக்கு பூப்பெய்துவது வி கருப்பை நோய், மலட்டுத்தன்மை மற் கூடவே பின் தொடர்ந்து வருவதாக
பருவம் அடைவதால் மனரீதியான பாதி
உ உடற்பருமன் அதிகரிப்பதனான் சத்த
பிரச்சினைகள் மேற்குறிப்பிட்ட வகையில் உடற் பரு ஏற்படும் இதய, சுவாச சமிபாட்டுத் பிரச்சினைகள், அவர் சத்திர சிகிச்சைச் யின் போது வழங்கப்படும் பொது மய உருவாக்கலாம்.
இவர்கள் சத்திர சிகிச்சைக்குப் பின் அன்றாட இலகு வேலைகளைச் செய் இருப்பதனால் இவர்களது நாளங்களி குறைவு அடையும் (DVT) இதனால் இற
"நோயற்ற வாழ்:ே

ர்உடற் ஓமோன் சம்பந்தமான பிரச்சினைகள் 5ாரண தொழிற்பாட்டினால் இளவயதில் நீரிழிவு ர்கள் சிகரெட் புகைப்பிடிப்பவர்களாக இருப்பின் றுகள் அதிகம். அத்தோடு குருதியில் சர்க்கரை ULGOTLb.
- தற்போதுள்ள பெண் குழந்தைகள் அதிக தால் உடல் பருமன் பிரச்சினை வருகிறது. டயும் சராசரி வயது 13இல் இருந்து குறைந்து ாகவே இப்போது பெண்கள் பூப்பெய்துவது அதி ஞானிகள் கூறுகின்றனர். பருமனான உடல் விரைவில் நடைபெறுவதோடு மட்டுமல்லாமல், றும், மார்பகப் புற்றுநோய் ஏற்படும் அபாயமும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இளம் வயதில் ப்ெபுகள் ஏற்படும்.
திரசிகிச்சைக்கு உட்பகும் ஒருவரின் ஏற்படும்
மன் கூடிய ஒருவருக்கு சாதாரண நிலையில் தொகுதிகளிலும், ஓமோன்களிலும் ஏற்படும் 5கு உட்படுவதனாலோ அல்லது சத்திர சிகிச்சை க்கமருத்தினாலோ கூடுதலான பாதிப்புக்களை
னர் விரைவில் தங்கள் உடலை அசைத்தல், தல் அவசியமானதாகும். தொடர்ந்து ஓய்வில் னுள் இரத்தம் கட்டி அடைந்து குருதி ஓட்டம் ப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு.
வ குறைவற்ற செல்வம்"
உந்தூழ்

Page 35
பிரச்சினை குழ ஒரு கல்விச் சமூகவி
எல்லாச் சிறுவர்களும் மகிழ்வோடு 6 மேசையில் தலையை வைத்துப் படுத்திருக்கி வில்லை. தோழர்கள் அனைவரும், ஆசிரியருப வகுப்பின் பிரச்சினைக் குழந்தையாக அடையா
இன்னொரு பள்ளியிலே செய்யக்கூடா பிடிவாதம் கொண்ட சில பிள்ளைகள் அந்த வகு கின்றார்கள்.
இவ்வாறாக பல்வேறு முரணான ே பிள்ளைகளின் வளர்ச்சிப்பாதையின் மிக முக்கி முன்பள்ளிப்பருவ நடத்தைகளாகப் பதிவு பெ என்று அடையாளப்படுத்துகின்ற அல்லது ஒதுக்கு யின் வேர்களை இனங்கண்டு அவர்களை வழி சிந்தனையாகவே இக்குறிப்பு அமைகின்றது.
இந்த விடயம் தொடர்பான விழிப்பினை நடத்தை உளவியல், சமூகவியல் முதலாய அறிவி
பிரச்சினைக் குழந்தைகள் தொடர்பாக வைக்கப்பட்டுள்ளன. தன்மீதும் தன்னைச் சார்ந்த ஏற்படுத்தும் வகையில் கணிக்கப்படுகின்ற பிள்ை எனப்படுகின்றார்கள்.
துடுக்குத் தனம், கீழ்ப்படியாமை போன் சினை நடத்தைகளாக பெரும்பாலான ஆசிரிய இதனை வழிமொழிகின்றனர். ஆனால் பிறருடன் பிள்ளைகளின் பின்வாங்கும் நடத்தையையே எாளர்கள் நோக்குகின்றனர். தனித்து அமைதிய காலத்தில் விரக்தியான வாழ்விலோ அன்ற

ந்தைகளா? யல் விசாரணை
பேராசிரியர் என.சண்முகலிங்கன் யாழ்ப்பாணய் பல்கலைக்கழகம், திருநெல்வேலி.
விளையாடும் வேளை. ஒருவன் மட்டும் மூ
ாப்படுத்தப்படுகின்றான்.
து என்று சொல்பவற்றையே செய்கின்ற ப்பின் பிரச்சினைகளாக இனங்காட்டப்படு
காலங்கள், மேற்கண்ட அவதானங்கள் ய கால கட்டமாக இனங்காணப்படுகின்ற ற்றவை. பிரச்சினைக்குரிய பிள்ளைகள் தகின்ற நிலையினைதவிர்த்து பிரச்சினை ப்படுத்துவதற்கான வழிவகைகள் பற்றிய
யும் அடிப்படை அறிவினையும் இன்றைய யல்துறைகள் எங்களுக்காக்கியுள்ளன.
பல்வேறு வரைவிலக்கணங்கள் முன் 5வர்கள் மீதும் பிழையான தாக்கத்தினை pளகளே பிரச்சினைக்குரிய குழந்தைகள்
றவற்றினையே மிக முக்கியமான பிரச் ர்கள் கூறுகின்றார்கள். பெற்றோர்களும் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியிருக்கும்
முக்கிய பிரச்சினையாக உளநலவிய ாய் ஒதுங்கியிருக்கும் பிள்ளைகள் எதிர் விலகலான நடத்தைகளுக்குள்ளோ
C2)

Page 36
தொலைந்து போகின்ற அவதானங்களை கழமைவிற்கு தான் இக்குழந்தைகள் ! பாடும் அவசியமாகின்றன.
உண்மையில் பிரச்சினைக் குழ யுடைய குழந்தைகள் என்று இவர்க6ை அக உலகப் போராட்டங்களின் விை பிரச்சினை நடத்தைகள் வெளிப்படுகின் கோணங்களிலிருந்தும் நோக்கி விள பாடுகள், உளம்சார் குறைபாடுகள் என பிள்ளைகளை வாழும் சமூகத்தின் உறு நிறுவமைப்புக்களை ஆராய்வதன் வழி மூலங்களைக் காணமுடியும் என்கின் உளவியல் முழுதளாவிய நோக்கில் நோக்குகின்றது. இந்தவகையில்இரண்( வாக்கங்களை எமதாக்குகின்றன. உள என்பன இந்நிலைமை பற்றிய விரிவு கின்றன. உளத்தொழிற்பாட்டுக் கொள் தினை, அதன் இயக்கவிசையான மனவெ
அம்மாவின் அன்பிலே தங்கி நி அதன் நடத்தை முரண்பாட்டின் அடிப்பe என்ற உளவியலாளர். போரின் கொடு பிள்ளையைத் தான் இந்தக் கட்டுரையி அவதானித்தமையை இங்கு மனதில் கெ குழந்தைகள் தங்கள் உறவு நிலைகe இழப்புகள் மட்டுமன்றி இருப்பும் கூட சி. விடுகின்றமையை காணலாம். சதா ச6 சார்வது என்பதே ஒரு பிள்ளை மனச் அப்பால் சாதி, சமூக அந்தஸ்து என்ப கின்ற குழந்தைகளும் இதற்குள் அகப்ப களுக்கு காலாகின்ற இந்த சூழல் நிே செயற்பாட்டில் பாரிய தாக்கத்தினை ஏ போன்றோரின் கருத்தாக்கங்கள் இ6 கட்டுப்பாடு, சுதந்திரம் ஆகியன பற்றிய
Саво

ா இவர்கள் நினைவூட்டுகின்றனர். இத்தகைய ஒரு பற்றிய அறிவார்ந்த நோக்கும் அன்பான செயற்
ஆந்தைகள் என்பதிலும் பார்க்க பிரச்சினைகளை ா அழைப்பதே பொருத்தமானது. பிள்ளைகளின் ளவான பொருத்தப்பாடற்ற நடத்தைகளாகவே ாறன. இவை பற்றி பல ஆய்வாளர்கள் பல் வேறு ாக்கத்தைத் தருகின்றார்கள். உடல்சார் குறை தனித் தனியாக நோக்கிய காலம் மாறி இன்று ப்பினர்களாக்கும் பயில்களமான சமூகமயமாக்க தான் இவர்களின் நடத்தைக் கோலங்களுக்கான ாறனர் சமூகவியலாளர்கள். இன்றைய கல்வி இந்த அம்சங்கள் அனைத்தையும் இணைத்து டு கோட்பாடுகள் மிகப் பயனான எண்ணக் கரு த்தொழிற்பாட்டுக் கொள்கை, கற்றல் கொள்கை ான அறிவின் அவசியத்தினை தெளிவுபடுத்து ர்கையானது நடத்தையின் உளம்சார் இயக்கத் பழுச்சியின் பாங்கினைத் தெளிவுபடுத்துகின்றது.
ற்கும் பிள்ளை மனம் எதிர்கொள்ளும் தோல்வி, டையாக வெளிப்படுகிறது என்பார் வினிக்கோட் முகத்தில் தன் அன்னையைத் தொலைத்த ஒரு lன் தொடக்கத்திலே தனித்த குழந்தையாக நாம் ாள்ளலாம். கவலையுடன் தனிமையை நாடுகின்ற ளில் தோல்வி கண்டவர்கள். பெற்றோர்களின் ல வேளைகளில் பிள்ளை மனமுறிவுக்கு காலாகி ண்டையிடும் பெற்றோரிற்கு மத்தியில் யாரைச் சிதைவின் மூலமாகி விடலாம் குடும்பத்துக்கு வற்றினடியான புறக்கணிப்புகளுக்குள் வெதும்பு டலாம். பிள்ளைகளின் மனவெழுச்சிக் குழப்பங் லமைகள் அனைத்துமே பிள்ளைகளின் கற்றல் ற்படுத்துகின்றன். கற்றல் தொடர்பான ஸ்வின்னர் வற்றினை தெளிவாக உணர்த்தி நிற்கின்றன. ஒரு குழந்தையின் மனப்பாங்கு அப்பிள்ளையின்
உந்தூழ்

Page 37
குடும்பச் சூழல் அதற்கு வாய்க்கின்ற முன்பள் யுள்ளமையினை கற்றல் தொடர்பான ஆய்வுகள்
இந்நிலையில் பிள்ளைகளின் பிரச்சி6ை என்பது பெற்றோர்களின் பிரச்சினைகளை, ஆ கொள்ளுதலின் அவசியத்தினை எங்களுக்கு இருப்பது - விரைவிலேயே பொறுமை இழப்பது உற்சாகம் இழப்பது என தளம்புகின்ற மனவெழு களின் மனதைப் புரிந்துகொள்ள முடிவதில்ை ஆளுமைகளாக வளரவேண்டும் என விரும்ட எல்லையுண்டு என்றும் இந்த எல்லையை ஏற்படுவதாகவும் இந்தப் பெற்றோர்கள் கூறுகி நோக்குகுன்ற பெற்றோர்கள் கோபப்படுவதி வளர்ச்சிக்கு உதவுகின்ற பெற்றோரை நாம் இ இவர்கள் என்றும் மகிழச்சியுடன் குழந்தைகளுட
ஆரம்பகால ஆய்வாளர்களில் ஒருவர பெற்றோர்களின் இயல்புகள் சிலவற்றை இ கொள்ளலாம். அடிக்கடி பிள்ளைகளின் மேல் கு காட்டுவது, பிற குழந்தைகளோடு ஒப்பிட்டு ஏ விடுவதாகப் பயமுறுத்துவது, அறையிலே பூட் இயல்புகள் இல்லாத பெற்றோர்களினாலேயே கொள்ள முடியும். பிரச்சினை இல்லாத பிள் பெற்றோர்களைப் போலவே ஆசிரியர்களின் ம
முக்கியத்துவம் பெறுகின்றன.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தண்ட அடைவதைக் காணமுடியும். எதிர்ப்பு நடத்ை காரணத்தினால் பிள்ளகைள் தமது முரண் நட சைந்தர்ப்பங்களில் பிள்ளைகளை ஆக்க
ன்படாது என்ற கருத்து நிலையையே ஆ உண்மையில் பிள்ளையின் நடத்தை முரண்ப நீக்கும் செயற்பாட்டின் வழியே தான் இத்தகைய முடியும் சங்கதியல்ல. அந்தப் பிள்ளையின் கு அறிதல் இல்லாமல் சாத்தியமாகாது.
-உத்துரிழ்

Tளிப் பருவச் சூழல் என்பவற்றில் தங்கி
பலவும் வெளிப்படுத்துகின்றன.
ன நடத்தையினை விளங்கிக் கொள்ளுதல் சிரியர்களின் பிரச்சினைகளை விளங்கிக்
த புலப்படுத்துகின்றன. பொறுமையாக
elp
I, உற்சாகமாக இருப்பது - விரைவிலேயே ழச்சி கொண்ட பெற்றோர்களின் பிள்ளை வி }ல. தங்கள் பிள்ளைகள் தனித்துவமான |கின்ற அதேவேளையில், அதற்கும் ஒரு மீறும் போது தமக்குப் பெருங்கோபம் ன்றனர். பிள்ளைகளைப் பிள்ளைகளாக ல்லை. பிள்ளைகளின் பொருத்தமான லகுவில் இனங்கண்டு கொள்ள முடியும். -ன் பழகுகின்றனர்.
ரான பிப்ஸ் சைமன் எதிர் நிலையான னங்காட்டுகின்றமையை இங்கு மனங் தறை சொல்வது, வேண்டும் என்றே பயம் ளனம் செய்வது, வீட்டை விட்டு துரத்தி டி விடுவது என நீளும் கொடுமையான பிள்ளைகளின் பிரச்சினைகளைப் புரிந்து ளைகளாக அவர்களை ஆக்க முடியம். )னவெழுச்சி, சமூக வளர்ச்சி என்பனவும்
னை முறையிலேயே ஆசிரியர்கள் தஞ்சம் தைக்குத் தண்டனை கிடைக்கும் என்ற த்தைகளைக் கைவிடக்கூடும். ஆனாலும் முறையில் மேம்படுத்த இவ்வழிமுறை ய்வுகள் எமக்கு உணர்த்தி நிற்கின்றன. ாட்டிற்கான காரணங்களை கண்டறிந்து நிலைமைகளிலிருந்து அவர்களை மீட்க டும்பச் சூழல், சமூகச் சூழமைவு பற்றிய
(23)

Page 38
இந்தவகையில் முன்பள்ளிப் பரு தரிசனங்கள் நாளைய மேம்பாட்டுக்கான
"நல்ல பெற்றோர்களாக இருப்பது திட்டங்கள் வகுக்கப்பட்டு உலகளாவிய நீ மையைக் காண்கின்றோம். நல்ல ெ பெற்றோரெனும் பாத்திரத்திற்கான இயல் பெற்றோரின் பணியாக அமைய இதற்கா வழங்குதல் கல்வியாளர்களின் பணியா இத்தகைய அனுபவங்கள் எங்களுக்காவது
ஆக்கத்திறன் கொண்ட பெற்றே என்றென்றும் மதிக்கின்ற, வளர்க்கின்ற பெறவேண்டியுள்ளது. நவீன வாழ்வின் அ களுக்கிடை பிள்ளைகளோடு உறவுகொ நிற்கின்ற அவலம் கொடியது. இந்நிலை இருக்கிற பொழுதுகளையும் கூட தொ6ை இன்றைய நிலைமைகளிருந்து ஒவ்வெ அவசரமானது. தொலைக்காட்சி போன் தவிர்த்தல் என்பது அசாத்தியமானது. அே சரியான முறையில் பயன்படுத்தும் ஊடக மன மேம்பாட்டுக்கான நல்ல பொழுதுகள காலத்து அம்மா, அப்பா போல நீண்ட ெ முடியாத நிலைமைகளில் உறவாடக் கி. நிறை வாக இருக்க வேண்டும் எனும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். "ெ ஆனால் சுகமானதல்ல" எனும் சமூக பெற்றோருக்கான பொறுப்புக்களையும் யினையும் வேண்டிநிற்பன.
இவ்வாறே ஒவ்வொரு ஆசிரியரு தேடும், வசமாக்கும் பெருவிருப்பங் கொ ஒரு வகுப்பிலிருக்கும் பிள்ளைகள் ஒவ்ெ எண்ணம் ஆசிரியர் மனதிலே இருக்க ே அனைவரையும் பாரபட்சமின்றிப் பேணு வேண்டும்.
(24)

ருவ கல்வி மேம்பாடு தொடர்பான இன்றைய வழித்துணைகளாகின்றன.
எப்படி" என்பது பற்றியே இன்று பல நிகழ்ச்சித் ைெலயில் அதன் பயன்கணிகள் அனுபவமாகின்ற பற்றோராக இருப்பதற்கான அறிவு, தங்கள் புகளை, முக்கியத்துவத்தினை உணர்தல் என்பது ன தரவுகளை, தகவல்களை, ஆலோசனைகளை Tக இப் புலங்களிடை விளங்கக் காணலாம். து எப்போ..?
றார்களாக பிள்ளைகளின் ஆக்கத்திறன்களை
பெற்றோர்களாக அனைவரும் உருமாற்றம் |வசரங்களிடை பொருளிட்டலுக்கான அழுத்தங் ள்வதற்கான பொழுதுகளை பெற்றோர் இழந்து D பற்றிய விழிப்புணர்வு அவசியமானது. கூட லக்காட்சி போன்ற மாய இருப்புக்களாக்கிவிடும் ாரு பெற்றோரும் சுய உணர்வுக்கு மீளுதல் ற இலத்திரனியல் ஊடகங்களை முற்றாகத் தேவேளையில் அந்த ஊடகத்தின் வல்லமையை 5 அறிவு பெற்றோர் வசமாகின்றபோது பிள்ளை ாக கூட அவற்றினை மாற்ற முடியும். முன்னைய பாழுதுகளைப் பிள்ளைகளோடு செலவு செய்ய டைக்கின்ற பொழுதுகளின் செறிவும் ஆழமும்
இன்றைய உளவியலாளர்களின் கருத்துகள் பற்றோராகக் கிடைத்த வாழ்வு அற்புதமானது, 5 உளவியலாளரின் கருத்தியல் இன்றைய அதனை எய்தலுக்கான அவர்களின் பற்றுறுதி
5ம் நல்லதொரு ஆசிரியருக்கான பண்புகளைத் ண்டவர்களாக விளங்குதல் இன்றியமையாதது. வாருவரும் தனித்தனியான ஆளுமைகள் என்ற வண்டும். அதேவேளையில் இந்தப்பிள்ளைகள் கின்ற பக்குவத்தினையும் அவர் கொண்டிருக்க
உந்தூழ்

Page 39
பிள்ளைகளைக் கேட்கின்ற ஆசிரியர களில் அவர்களோடு சேர்ந்து மகிழ்கின்ற, இ களைப் புரிந்து பகிர்கின்றவராக விளங்குத மன்னித்தல், எல்லையில்லாத பொறுமை பிள் asp empathic mind, fairé061T656flatt Feup85 - எடுத்துரைப்புக்களை மேற்கொள்ளல் என நல்6
ஒவ்வொரு வகுப்பறை அனுபவங்களு தலின் அவசியமும் இங்கு கவனத்தில் கொள்ள பிள்ளைகளோடு ஆசிரியர் செலவு செய்கி பிள்ளைகளின் திறன்கள், அடைவுகள், தேை
பிறந்ததான"உணர்வுடன் ஆசிரியர் செயற்பாட்
பிள்ளைகளின் மலர்ச்சி தொடர்பா6 மேம்பாடு என்பவற்றுக்கப்பால் முன்பள்ளிப் விழிப்பும், உரிய கல்விக் கொள்கை - நடைமு: களும் சாத்தியமாகின்ற போதே பிரச்சினைக்கு
இப்பொழுது சொல்லுங்கள். பிரச்சினை குழந்தைகளா?
இன்பந்தரும் து
ஒருதாய் தன் குழந்தைகளை வளர்க்க இன்பவூற்றாகவே உள்ளன. ஒருவன் படிப்பி விரும்பி மேற்கொள்வன. ஒரு நண்பர் தம் கண்டுவிட்டதால், இரவும் பகலும் கடைே கடுமையானவை. ஆனால் இவை எல்லாம் இல்லையென்றால் இவை விரும்பிஏற்கப்படா. என்பது தான் விரும்பி வருவது. அவ்வகைய இன்பந்தரும் ஒருவகை முயற்சித்துன்பங்கள் எ
 
 
 
 

ாக, அவர்களது மகிழ்ச்சியான பொழுது வ்வாறே ஏனைய மனவெழுச்சி நிலைமை ல் வேண்டும். பிழைகளைப் பொறுத்தல், ளைகளின் வலிகளை தன்வலியாக உணரு சட்ட - சுகநல உரிமைகளுக்கான சமுதாய ல ஆசிரியருக்கான பண்புகள் நீள்கின்றன.
ாப்பட வேண்டும். பெற்றோரைப் போலவே ன்ற நேரத்தின் அளவும் முக்கியமானது. ]வகள் பற்றிய முழுமையான புரிதலுக்கு ஒவ்வொரு வகுப்பிலும் “இன்று புதிதாய்ப் டில் ஈடுபடுதல் இன்றியமையாதது.
ன பெற்றோர், ஆசிரியர் விழிப்புணர்வு பருவம் - கல்வி தொடர்பான சமுதாய றை மாற்றங்களும் அறிவார்ந்த செயற்பாடு 5ழந்தைகள் பற்றிய எங்கள் வலிதீரும்.
பண்பங்கள்
ப்படும் துன்பங்கள், அவள் ஆழ்மனத்தில் ல் முன்னேற்றப்படும் துன்பங்கள் அவன்
தொழிலில் “இலாபம்” என்ற உருசி ய கதியாய்ப்படும் துன்பங்கள் மிகக் துன்பம்போல் தோற்றும் இன்பங்களே. தொல்காப்பியர் சொன்னதுபோல், இன்பம் பில் துன்பமாய்த் தோற்றுமிவைகளையும் ன்று கூறலாம்.
’’ fị •"c' t+ính: School
All
G25)
27 JULI 2011
am=vaumas-une
.ܝܚ... ܦܫ* ܚ* SLeLSLSS qqSSLSLSSLSLeTSLLSLSLLSS

Page 40
சமுதாயமும் சிறு
ஒரு நாட்டினை வளம் கொழிக்க சிறுவர்களே முதுகெலும்பு போன்றவர்கள். “நல்ல நல்ல பிள்ளைகளை இந்த நாடே இருக்குது த சின்னஞ் சிறு கைகளை ந ஒரு சரித்திரம் இருக்குது என்ற பாடல் கூட இன்றைய சி என்பதை விளக்குகின்றது. இச் சிறுவர்கள் எல்லோர் உள்ளங்களையும் கொள்ளை ெ பிஞ்சு உள்ளத்தவர்கள். துள்ளித் திரியும் து தமது எதிர்காலம் எப்படியானது? அதற்கு சிந்திக்க முடியாத சிறகடித்துப் பறக்கும் ! பற்றிச் சிந்திக்க வேண்டிய பொறுப்பு பெற் மல்ல அனைத்துநாடுகளுக்குமே உரித்தான
மானிட வாழ்வில் சிறுவர் பருவம் பிள்ளை அனைத்து உரிமைகளையும் டெ அடிப்படையில் பிள்ளைகள் கொண்டுள்ள உரிமைகள் அவர்களுக்குக் கிடைக்காமல் அத்தகைய உரிமைகள், பெற்றோர், சகே பலதரப்பட்டவராலும் மீறப்படுகின்றன. இ6 வேலைத்தளத்தில், பாதையில் இன்னும் பல் தெரிந்தோ தெரியாமலோ உரிமைகள் மீ இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.
இன்றைய சிறுவர்கள் எதிர்காலத்த வலிமை மிக்க தூண் போன்றவர்கள். எனே அறிவு, ஆற்றல், வீரம், ஒழுக்கம் என்பவற்ே வகுப்பது கல்வியாகும். ஒரு சிறுவன் கல்வி ஆனால் இக்கல்வி எல்லாச் சிறுவர்களுக்கு
。--** 1N C26)

பவர் உரிமைகளும்
செல்வி. சோபிகா முரீதரன் கல்வியமைச்சு, வடமாகாணம்.
ச் செய்யும் பெரும் பணியைச் செய்வதற்கும்
r Btörf tbtif)
tñtíì
stôtf" றுவர்களே நாளைய நாட்டின் தலைவர்கள் ர் எப்படியானவர்கள்? சிறுவர்கள் என்றாலே காள்ளச் செய்யும் பருவத்தினர். கள்ளமில்லா துடிப்பு மிக்கவர்கள். நன்மை எது? தீமை எது?
யாது செய்ய வேண்டும்? என்பதைப் பற்றிச் பறவை போன்றவர்கள் எனவே இவர்களைப் ற்றோருக்கு மட்டுமல்ல, சமுதாயத்துக்கு மட்டு ாதாகும்.
ஒரு முக்கிய கால கட்டமாகும். எனவே ஒரு ற்று, நற்பிரஜையாக வளர வேண்டும். இதன் உரிமைகள் பல உள்ளன. ஆனால் அத்தகைய மீறப்படும் சந்தர்ப்பங்களே அதிகம் உள்ளன. ாதரர், உறவினர் ஆசிரியர் அயலவர் எனப் வர்களின் உரிமைகள் வீட்டில், பாடசாலையில், வேறு இடங்களில் பறிக்கப்படுகிறது. இவ்வாறு றப்படுவதால் சிறுவர் பலவாறான உடல் உள
நில் ஒரு ஸ்திரமான நாட்டைக் கட்டி எழுப்பும் வநாடு போற்றும் ஒரு உத்தமனுக்கு வேண்டிய றை அவன் பெற்றிருக்க வேண்டும் இதற்கு வழி Iயைப் பெறும் உரிமையைப் பெற்றிருக்கிறான். நம் கிடைக்கிறதா? கிடைப்பதில்லை. இதற்குப்
உந்தூழ்

Page 41
பெற்றோர் தான் முக்கியகாரணமாகின்றனர். அன் போது தம் பிள்ளையை கல்வி கற்க வைப்பது எ புசிக்க ஏதும் கிடைத்தால் போதும் என்ற எண்ண களை வேலைக்கு அனுப்புகின்றனர். இன்னும்
மானம் பெற முயற்சிக்கின்றனர். இதனால் சிறுவ
வேலை செய்யும் வீட்டில் சிறுவன் படும்ட ஒரு பக்கம். அடி உதை இன்னொரு பக்கம். எ அரவணைப்பில் வளர்ந்து சிறந்த முறையில் உ செல்ல இச்சிறுவன் மன ஏக்கத்துடன் பார்த்து அரவணைப்புக் கிடைக்காதா? தானும் பள்ளி செ
இதற்காகத்தான் ஏழைச்சிறுவனும் கல்வி அரசாங்கம் சீருடை, புத்தகம் என்பவற்றை இலவ கல்வியை எல்லோருமே பெற்றிருக்க வேண்டு சிறுவரை வேலைக்கு அமர்த்துவோர் மீது கடும் விடாது சமுதாயத்தில் உள்ள அறநெறிப்பாடச மான்கள் அனைவரும் இந்த ஏழைச் சிறுவருக் இதனால் கற்கின்ற உரிமை ஏழை, பணக்கா
af
டைக்க வாய்ப்புண்டாகிறது.
சில பெற்றோர் தாம் வேலைத்தளம் செய்வதற்காக தம் பிள்ளைகளைப் பாடசாலை தொழிலையே பிள்ளைகள் பின்பற்ற வேண்டு நிறுத்திவிடுகின்றனர். உதாரணமாக உழவுத்ெ வயதில் சிறுவன் தன் தந்தையுடன் வயலில் வேை தால் விவசாயத்தில் ஏற்படுகின்ற தொழில்நுட்ப மேம்படுத்த முடியும் என்பதை அவர்கள் அறிய கல்விமான்கள் கல்வியின் முக்கியத்துவத்தை எடு சனை கூற வேண்டும். இதனால் சிறுவன் கற்குட தொழிலையும் உன்னத நிலைக்குக் கொண்டு வர
சில பெற்றோர் சிறுவரின் கல்வி விடய கொண்டுள்ளனர். ஆனால் சிறுவர்கள் யாரு திரிந்து தாம் விரும்பிய நேரத்தில், விரும்ட
as

ாறாட வாழ்வுக்குப் பெற்றோர் தத்தளிக்கும் ப்படி முடியும்? எனவே பசித்த வாய்க்குப் ாத்தில் பணக்கார வீடுகளில் தம் பிள்ளை பல வழிகளில் பிள்ளைகள் மூலம் வரு ரின் கற்கும் உரிமை பறிபோகின்றது.
பாடு சொல்லில் அடங்காது. வேலைப்பளு
ஜமானன் வீட்டுப் பிள்ளை பெற்றோரின் வி உணவு உண்டு, சீருடை அணிந்து பள்ளி புத் தவிக்கிறது. தனக்கும் பெற்றோரின் ல்ல முடியாதா? என ஏங்குகிறது.
வி பெற வேண்டும். என்ற நல்மனத்துடன் வசமாக வழங்குகிறது. அத்துடன் ஆரம்பக் டும். என்றும் வலியுறுத்துகிறது. மேலும் நடவடிக்கை எடுக்கிறது. இத்துடன் நின்று ாலைகள் பொது ஸ்தாபனங்கள் கல்வி 5கு கல்வி வழங்க முன் வர வேண்டும். ரன் என்ற பேதமின்றி எல்லோருக்கும்
செல்வதற்காக வீட்டு வேலைகளைச் க்கு அனுப்புவதில்லை, சிலர் தம் குலத் }ம் என்பதற்காக இடையில் கல்வியை தாழிலைப் பார்த்தால் கற்க வேண்டிய )ல செய்வான், கல்வி கற்றல் விஞ்ஞானத் மாற்றங்களை அறிந்து தமது தொழிலை மாட்டார்கள். இத்தகைய பெற்றோருக்கு }த்துக்கூறிகற்க அனுமதிக்கும்படி ஆலோ ம் உரிமையைப் பெறுவதுடன் தன் குலத் (1ՔIջեւյւb.
த்தில் மிகவும் கண்டிப்பும் கட்டுப்பாடும் டைய கட்டுப்பாடுமின்றி சுதந்திரமாகத்
பிய பாடத்தைக் கற்கவே விரும்புவர்.
C27)

Page 42
பெற்றோரோ தம்பிள்ளைகள் மாமேதைக படிக்கும்படியும், தாம் சொல்லும் பாடத்ை இதனால் சிறுவருக்குப் பள்ளிப் படிப்பு
பரீட்சைக்கு செல்கின்றனர். இதன் விளை கிறது. எனவே பெற்றோர் பிள்ளையின் சு பிள்ளைக்கு இத்தகைய சுதந்திர உரிை கொள்வான். கல்வியும் முழுமை அடைகிற
வீட்டில் மட்டுமல்ல பாடசாலையி: சிறுவர் தமது எண்ணத்தைச் சொல்ல, விரும்பாமல் ஓடித் திரியவே விரும்புவான போல அன்பான வார்த்தை போல் ஆக் பார்ப்பான். ஆனால் ஆசிரியரோ கண்டிப் சுதந்திரப் போக்குக்கு இடம் கொடுக்க வெறுக்கின்றனர். சிறுவர் விளையாட்டு மூ அரசாங்கமும் ஆரம்பக்கல்வியானது வி கற்பிக்கப்படவேண்டும் என்று பாடத்திட்ட
சிறுவர்கள் வாழும் உரிமையைப் தாமும் தற்கொலை செய்து, பிள்ளைகை பங்களில் வேலைக்கு அமர்த்தப்படும் சிறு சூடு என்பவற்றால் இறக்கின்றனர். தெரு அகப்பட்டும், தோட்டங்களில் வேலை செய சாலையில் சுழலும் இயந்திரத்தில் அக நேரிடுகிறது. இத்தகைய அனர்த்தங்களில் அரசின் கடமையாகும்.
மேலும் சுகாதார வசதிகளைப் வேண்டிய உதவிகளைச் செய்தல் வேண் வரை வாட்டும் நோய்களைக் கண்டறிந்து உண்டு என்பதை இன்று எல்லோரும் வர6ே யுனிசெப் போன்றவை சிறுவயது முத6ே கொள்ளக் கூடியதாக வைத்தியசாலைகள் நடைமுறைப்படுத்துகின்றன. அரசாங்கமுL யால்சிறுவர் போலியோ, போன்ற கொடிய
C2s)

ளாக வளர வேண்டும் என்பதற்காக எந்நேரமும் தையே கற்க வேண்டும் என்றும் வற்புறுத்துவர்.
பாகற்காய் போல் தோன்ற கசப்புடன் கற்று ாவு என்ன? பரீட்சையில் தோல்வியே கிடைக் தந்திரமான ஆற்றலுக்கு அனுமதிக்க வேண்டும். )ம கிடைத்ததும் விருப்புடன் கற்றலை மேற்
D5).
லும் சிறுவரின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. எழுத விரும்புவான். ஒரே இடத்தில் இருக்க ன். அன்னையிடம் கிடைக்கும் அரவணைப்பைப் சிரியரிடமும் கிடைக்க வேண்டும் என எதிர் பும் கடுகடுப்பும் கொண்டு சிறுவரின் பேச்சுக்கு, மாட்டார். இதனால் சிறுவர் பாடசாலையை முலம் கற்பதையே விரும்புவர். இதனால் தான் விளையாட்டு மூலம் சுதந்திரமான முறையில் ங்களை அமைத்துள்ளது.
பெற்றவர்கள், பெற்றோர் வறுமை காரணமாகத் ளையும் கொன்று விடுகின்றனர். சில சந்தர்ப் |வர் எஜமானனின் கடுமையான அடி, தீயினால் நவில் செல்லும் வாகனங்களினால் விபத்தில் ப்யும் போது கிருமிநாசினி தெளித்தல், தொழிற் ப்படுதல், போன்ற அனர்த்தங்களால் இறக்க b இருந்து சிறுவரைப் பாதுகாக்க வேண்டியது
பெற்று நோயற்ற வாழ்வு வாழ சிறுவர்க்கு டும். புதிய விஞ்ஞான நுட்பங்கள் மூலம் சிறு அவர்கள் தேகாரோக்கியத்துடன் வாழ உரிமை வற்கின்றனர். இதனால் உலக சுகாதாரஸ்தாபனம், ல தடுப்பு மருந்துகளைச் சிறுவர்கள் பெற்றுக் ர், பாடசாலைகள் போன்றவற்றில் சிலவற்றை ம் இலவசமாக இதனைச் செய்கிறது. இந்த உதவி நோய்களிலின்றும் பாதுகாப்பும் பெறமுடிகிறது.
உந்தூழ்

Page 43
வறுமை காரணமாகப் பெற்றோர் பிள் பெற்றோருடன் வாழும் உரிமையை இழக்கி வேலைகளுக்கும் விபசார விடுதிகளுக்குமே வாசிகளே உடந்தையாக இருக்கின்றனர். இத் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டியது அ பெற்றோரின் தூண்டுதலினால் பிச்சை எடு; செய்கின்றனர். வறுமையே இதற்குக் காரண படைத்தவர்கள் இத்தகையோருக்கு உதவ6ே சிறுவரைச் சமுதாயத்தினின்றும் ஒதுக்கிவிடா நிலையங்கள் என்பவற்றின் மூலம் இவர்கள் தி செய்தல் வேண்டும்.
எமது நாட்டில் மட்டுமல்ல, உலகின் தனத்தால் சிறுவர், பெற்றோர், உறவினர், ! அனைத்தும் இழந்து விரக்தியுடன் வாழ்கின்ற நிர்ப்பந்தப்படுத்தப்படுகின்றனர். இதனால் பய போன்றவை சிறுவரிடம் தோன்றுகின்றன. அங்கவீனராகி அல்லல்படுகின்றனர். எனவே நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தி, அனைத்து வாழ எல்லோரும் முன்வர வேண்டும்.
இப்போது சிறுவரை வாட்டி வதைப்பது சிறுவர் உரிமையுடன் சுதந்திரமாக தெருவில் உல்லாசப் பயணிகளைக் கவருவதற்காக, பணி செயல் நடைபெறுகின்றது. இவர்களை பாதுகா பட்டு, சிறுவரை மீட்டு அவர்கள் வாழ்வு வளம் ெ
எனவே பெற்றோர் மட்டுமல்ல, அ நிலையங்கள், கல்விமான்கள் அனைவரும் அனைத்தும் பெற்று ஒரு நாட்டின் நற்பிரஜைக கொடுத்து உதவினால் ஒளிமயமான எதிர்கா சிறிதும் ஐயமில்லை.
-உந்தூழ்
 

ளைகளை விற்கின்றனர். இதனால் சிறுவர் lன்றனர். பிள்ளைகள் அனேகமாக வீட்டு
அனுப்பப்படுகின்றனர். இதற்கு உள்ளூர் தகையவர்களைக் கண்டுபிடித்து அவர்கள் 1னைத்து மக்களின் கடமையாகும். சிறுவர்
த்தல், திருடல் போன்ற பழக்கங்களைச்
மாகும். எனவே சமுதாயத்திலுள்ள வசதி வண்டும். திருட்டுத் தொழிலில் ஈடுபடும்வி து சிறுவர் நிதியங்கள், சிறுவர் பராமரிப்பு, ருெந்தி நாட்டின் நற்பிரஜையாக வாழ வழி
பல நாடுகளிலும் யுத்தம் என்ற அரக்கத் உறைவிடம், கல்வி, செல்வம், மகிழ்ச்சி, ]னர். சில சிறுவர் யத்தத்தில் ஈடுபடும்படி
உணர்வு, பட படப்பு, கிளர்ச்சி செய்தல் அத்துடன் தமது அங்கங்களை இழந்து இத்தகைய சிறுவர்களையும் பாதுகாத்து, சிறுவர்களும் சகல உரிமைகளும் பெற்று
| பாலியல் துஷ்பிரயோகமாகும். இதனால் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. Tம் ஈட்டுவதற்காக இத்தகைய அநாகரிகச் "ப்புப் பிரிவினர் தகுந்த முறையில் செயல் பற உதவ வேண்டும்.
ரசாங்கம், பொது ஸ்தாபனங்கள், அற ஒன்று திரண்டு, சிறுவர் உரிமைகள் 6|TT85, நாட்டின் தலைவர்களாக வரக் கை Uம் அவர்களுக்குக் கிடைக்கும் என்பதில்
-G29)

Page 44
வீட்டுக் கழிவுகளிலிருந்து
பேரா
வீட்டுக் கழிவுகள் உரிய முறையில்
கும் அயலவர்களுக்கும் பலவிதமான அ இருக்கும் இடங்களில் இலையான், எலி,
அழையா விருந்தாளிகள் அயலெங்கும் ( சுற்றுச் சூழலில் தேங்கும் நீர் நுளம்புகள் விருப்பத்தகாத துர்மணத்தைக் கிளப்புகிற உரங்களுக்கான செலவினங்களையும் எ யாக்கம் (Compositing) மூலம் சாத்தியட் குறித்து இந்தக் கட்டுரை பேசுகிறது.
மரக்கறி, உணவுக் கழிவுகள், இ பக்ரீறியா (Bacteria) மற்றும் பங்கசுக்கள் ( செயற்பாடுகளின் மூலம் உக்கி அழிவன கொள்வதன் மூலமும் உகந்த கழல் நிலை மந்த கதியில் நடைபெறும். இந்த இயற்ை சேதனப் பசளையாக்கம் (Composting) எ6 வெப்பத்தின் மூலம் ஏற்படும் உகந்த வெப் களஞ்சியப்படுத்தவும் கழலுக்குப் பாதிப்புச மான அளவுக்குச் சமநிலைப்படுத்தப்பட்ட பாடு" என்று சுருக்கமாக விபரிக்கப்படலாம்.
பின்னணி
இலங்கை போன்ற அபிவிருத்திய புறங்களில் சேதனப் பொருட்களைக் குழிக உக்க வைப்பதன் மூலம் கூட்டுப்பசளை த. செயற்பாடாகும். அபிவிருத்தி அடைந்த நா தன் மூலம் வீசப்படும் கழிவுகளின் அள கொண்டே சேதனப் பசளையாக்கம் கைக்ெ
இயந்திரங்களின் முழுமையான நாடுகளில் சேதனப் பசளையாக்கம் ந செயற்பாடுகளின் உயர் செலவினங்களை
CзоD—

சேதனப் பசளை தயாரித்தல்
சிரியர். சரவணமுத்து விக்கினேஸ்வரன்
அப்புறப்படுத்தப்படாமை வீட்டில் உள்ளோருக் செளகரியங்களை ஏற்படுத்துகிறது. குப்பை பூச்சி, காகம் போன்றன கூடுகின்றன. இந்த நோய்கள் பரவக் காரணமாய் இருக்கின்றன. T பரவக் காரணமாகிறது. அழுகும் குப்பை து. இவ்வாறான சிக்கல்களையும், செயற்கை திர்கொள்ளும் வகையில் சேதனப் பசளை படத்தக்க இலகுவான பொதுத் தீர்வு ஒன்று
லை-குழை போன்ற சேதனப் பொருட்கள் Fungi) போன்ற நுண்ணுயிரிகளின் உயிரியற் டைகின்றன. உரிய ஊக்கிகளைச் சேர்த்துக் மைகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலமும் கக் செயற்பாடுகளைத் துரிதப்படுத்த முடியும். ன்பது "உயிரியற் செயற்பாடுகள் உருவாக்கும் பநிலையின் கீழ் சேதனப் பொருட்கள் உக்கி, 5ள் ஏற்படாதவாறு பயன்படுத்தவும் பொருத்த ஒரு விளைபொருளை உருவாக்கும் செயற்
டைந்துவரும் விவசாய நாடுகளின் கிராமப் ளில் ஒன்று சேர்த்து இயற்கையான வழிகளில் பாரிப்பது பாரம்பரியமாக நடந்து வரும் ஒரு டுகளில் பொருட்களை மீள் பயன்பாடு செய்வ வைக் குறைப்பதைப் பிரதான நோக்கமாகக் காள்ளப்படுகிறது.
பயன்பாடுகளுடன் அபிவிருத்தி அடைந்த
டைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. ஆயினும், 5 கருத்திற் கொண்டு, இயந்திரங்களின் உதவி
உந்தூழ்

Page 45
யின்றி உக்குதலைத் துரிதப்படுத்தும் உத்திக அவசியம் ஏற்பட்டது.
பாரம்பரிய முறைகளில் சிறிய அளவில் ஒன்றாக இருக்கின்ற போதிலும் நெருக்கமா பற்றாக்குறையும் குளிர் மற்றும் மழைக்கால களும் வீட்டுக்கு வீடு பசளையாக்கம் செய்வதற் மண்புழுக்களைச் சேதனப் பசளையாக்கத்திற் இலகுவாக எதிர்கொள்ள முடியும்.
மண்புழு
மண்புழு நீளமான உடல் தோற்றத்ை கூர்மையான தலையையும் கொண்டது. வை மென்மையானதுமான உடலைக் கொண்ட மணி தால் இலகுவாக தனது உடலை நீட்டவும் சுருக்க முடிகிறது. உண்மையான கால்களைக் கொண களின் துணையுடன் உடலை முன்னும் பின்னு தனது தோலினூடாக சுவாசிக்கும் மண்புழு வாய வயிற்றுப் பாகத்தில் வைத்து அரைக்கப்பட்டு குட
சேதனப் பசளையாக்கத்தில், மண்புழுவி அதன் வயிற்றுப் பாகத்தில் செறிந்து காணப்ப முழுமையாக உருமாற்றம் அடைகின்றன. உண வாசிக்கு மேலானவை சமிபாடு அடைய, மிகுதி றப்படுகிறது. இவ்வாறு வெளியேற்றப்படும் பத கொண்டதாகக் காணப்படுகிறது. இவ்வகையில் வேளை செறிவாக்கப்பட்ட பயன்படு பதார்த் பெறப்பட முடிகிறது. மண்புழு கழிவாக வீசப்பட் சிறிய துணிக்கைகளைக் கொண்ட பதார்த் பயிர்களுக்குப் பசளையாகச் சேர்க்கப்படும் செயற்பாட்டின் பின் கிடைக்கும் விளைபொருள் படத்தக்கதன்மை உடையதாகக் காணப்படுகிறது
சேதனப் பசளையாக்கத்திற் பொதுவா Worms – Eisenia Fetida; Red Worms - Lun சிyைA Excavatus) விரும்பப்படுகின்றன. ம வல்ைைமயும் கழிவுப் பொருட்களைத் துரிதமா ஆற்றலும் அவை தெரிவு செய்யப்படுவதற்கான I

8
r
5ள் அடையாளம் காணப்பட வேண்டிய
) கூட்டுப்பசளை செய்வது சிரமம் குறைந்த ன வீட்டுத் தொகுதிகளில் உள்ள இடப் ங்களில் எதிர்கொள்ளப்படும் பிரச்சனை ]குப் பிரதான சவால்களாக இருக்கின்றன. பயன்படுத்துவதன் மூலம் இச்சவாலினை
தயும் வட்டமான குறுக்கு வெட்டையும் ளயங்களால் கழப்பட்ட ஈரப்பதமானதும் ர்புழு முள்ளந்தண்டைக் கொண்டிருக்காத வும் வளைக்கவும் திருப்பவும் முறுக்கவும் ர்டிருக்காத மண்புழு தடித்த தசைக் கால் ம் இழுப்பதன் மூலம் ஊர்ந்து செல்கிறது. ப் மூலம் உண்கிறது. இந்த உணவு மண்புழு லில் சமிபாடு அடைகிறது.
வால் உண்ணப்பட்ட சேதனப் பொருட்கள் டும் பக்ரீறியாக்களின் செயற்பாடுகளால் *ணப்பட்ட சேதனப் பொருட்களின் அரை மண்புழுவின் உடலிலிருந்து வெளியேற் ார்த்தம் செழுமையான நைதரசன் வளம் , கழிவுகளின் கனவளவு குறையும் அதே தம் மண்புழுக்களின் அனுசரணையுடன் ட பொருட்களைச் சிதைத்து உட்கொண்டு தத்தை விளைவிப்பதால் நேரடியாகப் போது கிடைப்பதை விட மண்புழுவின் ர் நீரில் இலகுவாகக் கரைந்து உறிஞ்சப்
l.
ாக மூன்று மண்புழு இனங்கள் (Tiger nbricus rebellus, Indian blue Worms - ாறுபடும் கழலில் தாக்குப்பிடித்து வாழும் கப் பெறுமதி மிக்க பசளையாக மாற்றும் பிரதான காரணிகள் ஆகும்.
1N C 31)

Page 46
சிறிய அளவிலான மண்புழு வழிசேதனப் ஒரு சேதனப் பசளையாக்க அல இலகுவாகப் பெறப்படத்தக்கவையும் செ மண்புழுக்கள், ஒரு சிறு தொட்டி (அல் உணவுக் கழிவுகள் என்பனவாம்.
பசளையாக்கத்தொட்டி
பசளையாக்கத் தொட்டியானது இ மரப்பலகைகளால் இலகுவாகச் செய்யப்ட பெட்டிகளும் இத் தேவைக்காக உபே வெளியில் வைத்துச் செய்யப்படும் என்றா பெட்டி கடும் வெப்ப நேரத்திலும் தொட் வீட்டினுள் வைத்திருக்கும் தொட்டி எனின மூலம் நீர்க் கசிவுகளைத் தவிர்ப்பதுடன் நகர்த்துவதும் கையாள்வதும் இலகுவா பசளைத் தொட்டி பயன்படுத்தப்படுமிடத்து மிகவும் சுத்தமாகக் கழுவப்படவேண்டும்.
பசளைத் தொட்டியின் அளவு வீட்ட லேயே தீர்மானிக்கப்படும். அனுபவ அடி கொண்ட ஒரு வீட்டிலிருந்து நாளுக்கு அ கழிவு வருகிறது. அவ்வாறான ஒரு வீட்டு கொண்ட பெட்டி பொருத்தமானதாகும் அண்மையில் உணவுக்கு வருவதாலும் இடங்களை விரும்புவதாலும் தொட்டி பொருட்டு தொட்டியின் ஆழம் அரை மீற் மேலே காற்றோட்டத்தை வசதி செய்யும் ( துவாரங்கள் துளைக்கப்பட வேண்டும். நீரைக் கசிய விடுவதற்காகவும் தொட்டிய வது அவசியமாகும். நல்ல காற்றோ துர்மணத்தைத் தவிர்க்க வழி செய்யும் செயற்பட நாட்டம் கொண்டிருப்பதால், மூடப்பட்டிருக்க வேண்டும். தொட்டியின் திருக்கும் வண்ணம் தொட்டியானது நிழெ தாகும்.
1N (32)

பசளையாக்கச்செயற்பாட்டை ஆரம்பித்தல்
கை அமைப்பதற்குத் தேவையான பொருட்கள் சலவு குறைந்தவையும் ஆகும். அவையாவன, லது பெட்டி), மென்படுக்கை, நீர், சமயலறை
ரசாயனச் செயற்பாடுகளுக்கு உட்படுத்தப்படாத பட முடியும். பிளாஸ்டிக் கொள்கலன்கள் அல்லது யோகிக்கப்படலாம். சேதனப் பசளையாக்கம் ல் மரப்பெட்டியே சிறந்ததாகும். பலகையாலான டியைக் குளிர்மையாக வைத்திருக்க உதவும். ன் பிளாஸ்டிக் கொள்கலத்தை உபயோகிப்பதன் ர், பாரம் குறைந்த காரணத்தால் தொட்டியை கச் செய்யப்படலாம். பிளாஸ்டிக்கில் செய்த து, படுக்கை அமைக்கப்படுவதற்கு முன்னர் அது
ஓலிருந்து உருவாகும் கழிவுகளின் அடிப்படையி ப்படை விதிப்படி நாலிலிருந்து ஆறு பேரைக் அரை முதல் ஒரு கிலோ வரை சமையலறைக் டுக்கு அரைச் சதுர மீற்றர் தரைப் பரப்பளவைக் ). மண்புழுக்கள் பொதுவாக மேற்பரப்புக்கு அவை காற்றோட்டத்துடன் ஈரப்பசுமையான காற்றோட்டமாக இருப்பதை உறுதி செய்யும் றருக்கு மேல் இருப்பது விரும்பப்படுவதில்லை. பொருட்டு தொட்டியின் சுவர்களில் போதியளவு இவ்வாறே, காற்றோட்டத்துக்காகவும் மேலதிக பின் அடித்தளத்திலும் துளைகள் ஏற்படுத்தப்படு "ட்டம் பசளைத் தொட்டியில் ஏற்படத்தக்க ). மண்புழுக்கள் இருளான இடங்களிலேயே தொட்டியின் மேல்வாய் மூடி ஒன்றினால் வெப்பநிலை 30-35 பாகைக்கு மேல் போகா Dான இடங்களில் வைக்கப்படுவது முக்கியமான
உந்தூழ்

Page 47
படுக்கை அல்லதுதளம்
மண்புழுக்கள் வளைகளை ஏற்படுத்து புதைப்பதற்கு வசதியாகவும் பசளைத் தொ வேண்டும். இப்படுக்கையானது நச்சுத் தன்பை கொண்டதுமான பொருட்களால், நீரைக் கெ வைத்திருக்கத் தக்கதும் காற்றோட்டத்துக்கு வ வேண்டும். இதற்குப் பொருத்தமான பொருட் பட்ட) கடதாசி (புதினப் பத்திரிகைகள், அட் காய்ந்த இலைகள், வைக்கோல் போன்ற கடதாசியாலான படுக்கை தயாரிக்கப்படுமிடத் கிலோ) சேர்த்துக் கொள்ளப்படலாம். படுக்ை சேர்த்துக் கொள்வது படுக்கை கொஞ்சம் மண்புழுக்களுக்குத் தேவையான கல்சியத்ை தன்மையைக் குறைக்கவும் உதவுகிறது.
நீர்
நீர்ப்பதனுள்ள மண்புழுக்கள் சுவாசிப்ட ஈரலிப்புடன் வைத்திருக்கப்படுவது அவசியமா யினுள் நீர் விசிறப்படுவது அவசியமானதாகு நீரைக் கொண்டிருப்பதால், படுக்கையை ஈர போதிய நீர் தவிர மேலதிக நீர் சேர்த்துக் கெ மழை நீர் தொட்டியுள் வீழ்ந்து அடிப்பாகத்ை சாகடிக்கும் ஆபத்தைக் கருத்திற் கொண்டு, மை பார்த்துக் கொள்வது முக்கியமானதாகும்.
Danloup
மண்புழு - சேதனப் பசளையாக்க தொட்டியினுள் சேர்த்துக் கொள்ளப்படுவது அவ வளர்ந்து சேதனப் பொருட்களைத் திருப்திகரம ஆற்றலுள்ள மண்புழுக்களே தொட்டிக்காகத் 6 எனப்படும் இனப்பிரிவே பசளையாக்கத்துக்கு கானப்பட்டுள்ளது. இவ்வகையில், அவற்றைே
க்கு உணவுட்டல் மாமிசத்தைத் தவிர்த்து பழங்கள், கோப்பிக்கொட்டை, துவைக்கப்பட்ட தோட்டத்து விளைச் சேதனப் பொருட்களும் மண்புழுக்க
-உத்துரிழ்

ம் வண்ணமும் சமயலறைக் கழிவகளைப் ட்டியில் படுக்கை ஒன்று அமைக்கப்பட ) அற்றதும் இறுக்கமற்ற தளர்ந்த தன்மை Tள்வதன் மூலம் ஈரலிப்பைத் தொடர்ந்த |சதியானதுமான விதத்தில் அமைக்கப்பட களாக, வெட்டப்பட்ட (அல்லது கிழிக்கப் டைப்பெட்டி போன்றன) கூட்டுப்பசளை, வை அடையாளம் காணப்பட்டுள்ளன. து கொஞ்சம் மணல் அல்லது மண் (1-2 கயில் உடைந்த முட்டைக் கோதுகளைச் சூ சொரசொரப்பானதாக்க உதவுவதுடன், ழ தையும் வழங்கி தொட்டியின் அமிலத்லி
பதை வசதி செய்யும் படுக்கை எப்போதும் ான தாகும். எனவே, எப்போதும் தொட்டி 5ம். மரக்கறி, பழங்கள் போன்றவையும் லிப்பாக வைத்திருப்பதற்கான அளவுக்கு ாள்ளப்படக் கூடாது. அளவுக்கு மேற்பட்ட த நிரப்பி மண்புழுக்களை மூழ்கடித்துச் ழ நீர் மழை நீர் தொட்டியினுள் போகாது
கத்தில் பொருத்தமான மண்புழுக்கள் சியமானதாகும். தொட்டியினுள் சிறப்பாக ாக சிதைத்துப் பயன்தரு பசளையாக்கும் தெரிவு செய்யப்பட வேண்டும். மூழுமூழு தப் பொருத்தமானது என அடையாளம் ய பசளையாக்கத்துக்கு தெரிவு செய்வது
மரக்கறி, முட்டைக்கோது, தேயிலை, துக் கழிவுகள், காய்ந்த இலைகள் போன்ற 5ளுக்கு உணவாகத் தரப்படலாம். மண்
(188)

Page 48
T
புழுக்கள் வத்தகைப் பழம், பூசணி பே பட்டுள்ளது. எலுமிச்சை, தோடை, நாரத் விலக்கி வைப்பது தொட்டியில் அமில ப எல்லாக் கழிவுகளையும் வெட்டி அல்ல போடுவது மண்புழுக்கள் அவற்றை இல வழி செய்யும். மாமிசம் போன்றே, மீன் பொருட்கள், புகையிலைக் கழிவுகள், ந மனிதக் கழிவுகள் போன்றனவும் பசளை
பூச்சிகள், இலையான்கள் போன் கழிவுகளைத் தொட்டியில் சேர்க்கும் டே கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும் தட்ட 1-2 கிலோ கழிவு உணவுப் பொருட்
மண்புழுக்களால் உண்ணப்படத் தொட்டிக்குள் சேர்க்கப்படுமிடத்து, அலை உள்ளாகி, விரும்பத்தகாத மணம் கிள தொட்டியிலிருந்து அழுகிய மணம் எ ஏற்கெனவே சேர்க்கப்பட்ட உணவு மண் அவசியமாகும்.
மண்புழு வழிசேதனப்பசளையாக்கச் ெ
மண்புழு வழி சேதனப் பசளைய முதலாவதாக பசளையாக்கத் தொட்டிை வேண்டும். நிழலான கூரை உள்ள இடடே அடுத்தபடி தொட்டிக்கான படுக்கை தயாரி படுத்தப்படுமிடத்து, அவை 2 சதம மீற்றர் வேண்டும்.
கிழிக்கப்பட்ட கடதாசிப் பட்டிகள் மேலதிகமாக இருக்கும் நீர் போகும் பிழியப்பட்ட கடதாசிப் பட்டிகள் தளர் படுக்கையானது சமமான மட்டத்துக்கு கிட்டத்தட்ட முக்காற் பங்களவு தொட்டி இ மண்புழுக்களின் சமிபாட்டுக்கு உதவ தொட்டியில் உள்ள படுக்கையில் தூவப்ப
C8ᏎᎼ

ான்றவற்றை விரும்பி உண்பதும் அவதானிக்கப் தை போன்றவற்றை மண்புழுத் தொட்டியிலிருந்து Dட்டத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும். து துவைத்து சிறு துணிக்கைகளாக தொட்டியில் குவாக உட்கொண்டு பயன்தரு பொருளாக மாற ா, கொழுப்பு மற்றும் எண்ணெய்த் தன்மையான ாய் - பூனை போன்ற பிராணிகளின் கழிவுகள், த் தொட்டிகளுக்குப் பொருத்தம் அற்றவை.
றவை அண்டாது தவிர்க்கும் பொருட்டு, உணவுக் ாது அவை முழுமையாகப் படுக்கையில் புதைக் . ஒரு கிலோ அளவிலான மண்புழுக்கள் கிட்டத் களை ஒரு வாரத்தில் உட்கொள்ளும்.
நதக்க உணவுக்கு மேல் சேதனப் பொருட்கள் வ பக்ரீறியத் தாக்கங்களால் நிகழும் அழுகலுக்கு Tம்புவதுடன் மண் புழுக்களும் பாதிக்கப்படும். ாழுமிடத்து, உணவு சேர்த்தல் தவிர்க்கப்பட்டு, புழுக்களால் உண்ணப்படும் வரை காத்திருத்தல்
சயற்பாட்டை ஆரம்பித்தல்
பாக்கத்தை ஆரம்பப்பதற்கான செயற்பாடுகளில் ய வைப்பதற்கு உகந்த இடம் தெரிவு செய்யப்பட ம இதற்கான விரும்பத்தக்க தெரிவாக அமையும். ரிக்கப்பட வேண்டும். புதினப்பத்திரிகைகள் பயன் அகலமான பட்டிகளாகக் கிழித்துக் கொள்ளப்பட
நீரில் சில நிமிடங்கள் நனைக்கப்பட்டு, அவற்றில் படி பிழிந்து எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு வாகத் தொட்டிக்குள் வைக்கப்பட வேண்டும். இருக்குமாறு உள்ளடக்கங்கள் பரவப்பட்டு, இவ்வாறு படுக்கையினால் நிரப்பப்பட வேண்டும்.
வல்ல நுண்ணுயிரிகளைக் கொண்ட மண் ட வேண்டும். இப்படுக்கையானது மண் புழுக்கள்
உந்தூழ்

Page 49
வாழும் நிலைமைக்கு இசையும் வரை சில ஒவ்வொரு வாரமும் படுக்கை கிளறப்பட்டு தண நீர்ப்பிடிப்பும் இருக்குமாறு தளர்த்தப்படவேண்டுL
பின்னர், மண்புழுக்கள் படுக்கையின் ே பகளையாக்கத் தொட்டியின் மூடி சில நாட்களுக்கு வெளிச்சத்தில் இருத்தி விலகி இருளான இடத்து படுக்கையில் வளைகளை அமைத்து உள்ளே போ
தொட்டிக்கு மேலே வெளிச்சமாக இருக்கு தொட்டிக்கு வெளியே ஊர்ந்து போகாது உள்ளே களை காகங்கள் மற்றும் பறவைகள் கொத்திப் பே
மண்புழுக்கள் தொட்டிக்குள் சமநிலைப்ப நோக்கில் சேதனக் கழிவுகள் சேர்த்துக் கொள்ள பொருட்டு படுக்கையில் ஒரு பகுதி ஒரு புறத்துக்கு துளைக்கப்படுவதும் நல்லம். சேதனக் கழிவு கு குறையாது படுக்கையின் மேற்பரப்புக்குக் கீழே உணவூட்ட ஆரம்பித்த பின்னர் ஒரு வாரத்து காத்திருக்க வேண்டும். படுக்கைக்கான தண்ணிர்
- یہسیرحم-تسم^5 === حیرت ۔ سم == تو مجھےبرے SSLSLLLS LLLLMMMLLLLLL TTTTTT TL L LLTLTLTLTTT LTTT L
மண்புழுக்களுக்கான உணவு நாளின் சேர்க்கப்படலாம். பசளைத் தொட்டியினுள் பல்( பங்கசு போன்றவைகளும் காணப்படலாம். இ6ை சிதைத்து பயனுள்ள விளைபொருளாக ம அனுமதிக்கப்படலாம்.
மண்புழுக்களைத் தவிர்த்துசேதனப்பசளையை கிட்டத்தட்ட ஆறு வாரங்களின் பின்னர் ம அவற்றின் உடலிலிருந்து வெளிவரும் மண் ே காணப்படும். இப்பதார்த்தம் நைதரசன், பொசுட செழுமை பெற்றுக் காணப்படுவதால் தாவர இவ்வாறான விளைபொருள் 3-4 மாதங்களில் நன்று மண்புழுக்களின் உடலினுடாக வந்த பத

வாரங்களுக்கு விடப்பட வேண்டும். ர்ணிர் தெளிக்கப்பட்டு காற்றோட்டமும் b.
மல் பக்குவமாக விடப்பட வேண்டும். த மூடப்படாமல் விடப்படுவவதன் மூலம் க்குப் போகும் நோக்கில் மண்புழுக்கள் கும்.
மிடத்து மண் புழுக்கள் வெளியே வந்துது
யே இருக்கும். இதேவேளை, மண்புழுக்டி ாகாதுகாத்து வைப்பது அவசியமாகும். லி
ட்ட பின்னர் அவற்றுக்கு உணவூட்டும் ப்படலாம். இக் கழிவுகளைச் சேர்க்கும் த் தள்ளப்பட்டு ஒரு வகையான பொந்து 5றைந்தது 2-3 சதம மீற்றர்களுக்குக் இருக்க வேண்டும். முதல் முறையாக க்காவது அடுத்த உணவுட்டலுக்காகக் கிரமமாக விசிறப்படுதலும் அவசியம். குதிகளில் சேர்த்துக் கொள்ளப்படலாம்.
எந்த வேளையிலும் தொட்டியினுள் வேறு சிறு புழுக்களும் பிராணிகளும் வ பொதுவாக சேதனப் பொருட்களைச் ாற்றுவதால் இவை தொட்டியினுள்
ச்சேகரித்தல் ண்புழுக்களின் கழிவுப் பொருட்களாக போன்ற பதார்த்தம் படுக்கை எங்கும் ரசு போன்ற ஊட்டப் பொருட்களால் வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்கும். படுக்கையிலிருந்து சேகரிக்கப்படுவது நார்த்தம் படுக்கையின் துகள்களையும்
Cas)

Page 50
முழுமையாகச் சிதைவடையாத மரக் மண்புழுக்களும் இவற்றுடன் காணப்ப எல்லாம் சேர்ந்து மண்புழு வழி சேத பெறும்.
மண்புழு முட்டைகள் மண் பு( மில்லிமீற்றர் அளவுள்ள சளித் தள்பை லிருந்து 3 வாரங்களில் குஞ்சுகள் ெ நீளத்தில் ஒளிபுகவிடும் தன்மை செ புழுக்கள் நான்கிலிருந்து ஆறு வாரங்க
சேதனப் பசளையைத் தொட் தவிர்த்து எடுக்க வேண்டும். இவ்வா முறைகள் கைக்கொள்ளப்படுகின்றன.
முதலாவது முறையில், மண் L பசளைத் தொட்டியின் ஒரு பக்கத்துக்( படுக்கையையும் புதிய உணவுப் ெ வகையில், மண்புழுக்கள் சேதனப் ப இதன் பின்னர், முன்னரே தள்ளி விடட் எடுக்கப்படலாம்.
இரண்டாவது முறையில், சே கொண்ட சல்லடை மூலம் அரித்து எடுக் யின் ஊடாக இலகுவாகக் கீழே செல்லு பெரிய பசளைத் துணிக்கைகளும் அடு படும் நோக்கில் பசளைத் தொட்டியின்
மூன்றாவது முறையில், வெ புழுக்களிலிருந்து பிரித்து எடுக்கப்ட புழுக்களுடனான சேதனப் பசளைக் க இருளை நாடும் மண் புழுக்கள் குவிய6 நிமிடங்களின் பின் குவியலின் மேற்பு பசளை வழித்து எடுக்கப்படும். இவ் புழுக்கள் மட்டும் ஒன்று திரண்டிருக்க, (
G3G`)

க்கறிக் கழிவுகளையும் கொண்டிருக்கும். மேலும் டும். படுக்கையில் இருக்கும் பயன்தரு பொருட்கள் 560TŮ UGF6O6IT (Vermi Composting) 6T6ÖTAD GILJU JÜ
ழவினால் சுரக்கப்படும் மென் மஞ்சள் நிறத்தில் 3 Dயான கூட்டுக்குள் அடங்கியிருக்கும். முட்டைகளி வளிவரும். சிறு மண்புழுக்கள் 2-3 சதம மீற்றர் காண்டு வெண்ணிறத்தில் காணப்படும். இம்மண் 5ளில் முழுமையான வளர்ச்சி பெறும்.
டியிலிருந்து எடுக்கும் பொது மண்புழுக்களைத் ாறு தவிர்த்து எடுப்பதற்காக பொதுவாக மூன்று
புழுக்களால் உருவாக்கப்பட்ட சேதனப் பசளையை குத் தள்ளி விட்டுக் கொண்டு மறு பக்கத்தில் புதிய பாருட்களையும் சேர்த்துக் கொள்ளலாம். இவ் சளையிலிருந்து விலகி உணவு நோக்கி நகரும். ப்பட்ட பக்கத்திலிருந்து சேதனப் பசளை வெளியே
தனப் பசளை 5 மில்லி மீற்றர் துவாரங்களைக் $கப்படுகிறது. சேதனப் பசளைத்துகள்கள் சல்லடை Iம். சல்லடையில் தங்கியிருக்கும் மண் புழுக்களும் }த்த சுற்றுப் பசளையாக்கத்துக்காக உபயோகிக்கப் படுக்கையில் சேர்த்துக் கொள்ளப்படும்.
ளிச்சத்தின் உதவியுடன் சேதனப் பசளை மண் படுகிறது. வெளிச்சம் நிறைந்த இடத்தில் மண் லவை பிளாஸ்டிக் விரிப்பொன்றில் குவிக்கப்படும். மின் மேற்புறத்திலிருந்து கீழ் நோக்கி நகரும். பத்து றத்திலிருந்து 2-3 சதம மீற்றர் ஆழத்துக்கு சேதனப் வாறு தொடர்ச்சியாகச் செய்வதன் மூலம் மண் சேதனப் பசளை தனிக் குவியலில் சேர்க்கப்படும்.
உந்தூழ்

Page 51
மண்புழுக்கள் சேதனப் பசளையிலிரு அவதானிப்பத்ன் மூலம் மென்மஞ்சள் நிறம மண்புழுக் குஞ்சுகளையும் சேர்த்து எடுத்து குஞ்சுகளும் சேதனப் பசளைத் தொட்டியில் பசளையாக்கம் மீண்டும் ஊக்குவிக்கப்படலா
முடிவுரை
is செயற்கையாகத் தயாரிக்கப்படும்
உரங்கள் இலகுவாக நீரில் கரையும் இயல்ட ஊடாக நிலத்தடிநீரைச் சென்றடைவது இலங் பட்டு வருகிறது. இவ்வாறான மாசுபட்ட நீர் கொண்டது. குடிநீரில் காணப்படும் அளவு களுக்கும் முதியவர்களுக்கும் மிகுந்த பாதி கூடியது என்று ஆராய்ச்சிகள் உறுதிசெய்திரு
கழிவுப் பொருட்களாக வீசப்படும் கழிவுகள் சேதனப் பசளையாக்கம் மூலம் பெறு செறிவான நைதரசன் மற்றும் பொஸ்பரசு மூ மண்ணில் தங்கியிருந்து பயிர்களுக்கு ஊட்டத்
இவ்வகையில் சேதனப் பசளையா குறைக்கும் அதேவேளை செயற்கை உரங்க சுகாதாரச் சீர்கேட்டையும் தணிக்கிறது. சே திறனை அதிகரிப்பதுடன், காற்றோட்டத்தை பெறும் செயற்பாடுகளை உரிய முறையில் பெறுமதி மிக்க அனுகூலங்களை விளைவி நல்லதோர் உதாரணமாகும்.
 
 

ந்து பிரித்து எடுக்கப்படும் போது கவனமாக ான மண்புழு முட்டைக் கூடுகளையும் சிறு க் கொள்வது அவசியம். இம்முட்டைகளும் ) மீண்டும் இடப்படுவதன் மூலம் சேதனப்
s).
நைதரசன் (யூரியா) மற்றும் இரசாயன |ள்ளன. இவை நீருடன் சேர்ந்து மண்ணின் கையின் பல பிரதேசங்களில் அவதானிக்கப்
பல நோய்களை உருவாக்கும். வல்லமை டி க்கு அதிகமான நைத்திரேற்று குழந்தை லி நிப்புகளையும் மரணத்தையும் ஏற்படுத்தக் க்கின்றன.
மரக்கறி, பழங்கள் மற்றும் சமையலறைக் றுமதியான பசளையாக மாற்றப்பட முடியும். pலகங்களைக் கொண்ட இப்பசளையானது
தைத் தொடர்ந்து வழங்கும்.
னது கழிவுப் பொருட்களின் அளவைக் 3ளுக்கான செலவினங்களையும் குறைத்து தனப் பசளை மண்ணின் நீர் கொள்ளும் யும் கூட்டுகிறது. இயற்கையாகவே இடம் அறிவுரீதியாக ஒருங்கிணைப்பதன் மூலம் க்க முடியும் என்பதற்கு சேதனப் பசளை
G৪z)

Page 52
நகர நுண்காலநிலை மாற்
01. நகராக்கமும் நுண்காலநிலையியலும் இயற்கைச் சூழலை மாற்றியமைக் இதனைப் போலவே சூழலை மாற்றிய மனிதனையே பாதிப்படையச் செய்கின்ற கழலைத் தனக்குப் சாதகமாகவும் அபரிமித நகரங்களின் வளர்ச்சியை இனங்கான நகரங்களின் தோற்றம் பற்றி நோக்கின் ந என்பவற்றினைத் தொடர்ந்து வர்த்தக நகரங் இதன் அடுத்தப்படியாக நவீன அல்லது அவதானிக்கலாம். இவ்வாறு வரலாற்று ரீத போலவே நகரக் காலநிலையும் பல்வேறு குறிப்பிடத்தக்க அம்சமாகும். ஆனால் அ6 பட்டனவாகவே இருந்துள்ளது.
நகரங்களின் வளர்ச்சியின் அடி நடவடிக்கைகளும் இன்றைய நவீன போக் நன்கு காணக்கூடியதாக உள்ளது. இன்றைய மக்கள் நகரங்களிலேயே வசிக்கின்றனர். தாண்டியுள்ளது. 1900 ஆம் ஆண்டில் 14 வீத இல் 45 வீதமாக அதிகரித்தனர். பல நடவடிக் நகரப்பகுதி உயர்ந்தளவில் சக்தியை நுக முடியாத அளவில் அவற்றுக்கான சக்தி நியூயோர்க் நகரில் மாரிகாலத்தில் எரிபொ வெப்பத்தின் அளவானது அதே காலப்பகுதி வெப்பத்தின் 21/2 தடவைகளுக்கு சமனா அர்த்தப்படுத்துவது என்னவெனில் தொழ என்பவற்றில் இருந்து வளிமண்டலத்திற்கு வெப்பத்துடன் சேர்க்கப்படுகின்றது என்ட வீதத்திற்கும் அதிகமாகும் என எதிர்பார்க்க கும் சனத்தொகையானது குறித்த நகரங்கள்
G38)-

றமும் அதன் விளைவுகளும்
செல்வி. வி.சுகன்யா LI60)gpLLI LDIT@IOT6íñ, (ошђШр шњofiТ 9 Lштртi ШТLJITapa).
கும் திறன் மனிதனிடமே காணப்படுகின்றது. பமைப்பதனால் ஏற்படும் விளைவுகளும் து. நவீன உலகில் ஒவ்வொரு மனிதனும் மாகவும் பயன்படுத்திவரும் வகையில் பாரிய லாம். வரலாற்றுக் காலங்களின் ஊடாக நீரியல்கால நகரங்கள். விவசாய நகரங்கள், கள் துறைமுக நகரங்களின் வளர்ச்சியையும், தொழினுட்ப நகரங்களின் வளர்ச்சியையும் தியாக நகரங்களில் ஏற்பட்ட மாற்றங்களைப் று மாற்றங்களுக்கு உட்பட்டு வந்துள்ளமை வ்வாறான மாற்றங்களின் தன்மைகள் வேறு
ப்படையில் நகரை அண்மித்த மனிதனது கிற்கேற்ப முன்னேற்றமடைந்து வருவதனை உலகக் குடித்தொகையில் சுமார் 50 வீதமான சில நாடுகளில் இந்நிலமை 80 வீதத்தையும் மாக இருந்த நகரப் பிரதேச வாழ்மக்கள் 1993 கைகளின் ஒருமித்த பகுதியாகக் காணப்படும் ரும் இடமாகக் காணப்படுகின்றது. அளவிட உள்ளெடுக்கப்படுகின்றது. உதாரணமாக Tருட் பாவனை காரணமாக வெளிவிடப்படும் யில் சூரியக்கதிர் ஊடாகக் கிடைக்கப் பெறும் கும். இவ்வதிகரித்த சக்திப் பாவனையானது ஜிற்சாலைகள், கட்டடங்கள், போக்குவரத்து வெளிவிடப்படும் வெப்பக் கழிவுகள் நகர தாகும். 2O3Oம் ஆண்டளவில் இது 60 ப்படுகின்றது. இவ்வாறு நகரங்களில் அதிகரிக் ாது விருத்தி மற்றும் வளர்ச்சியினை வேண்டி
ഉ_gr് -

Page 53
நிற்பதன் காரணமாக துரித நகராக்கப் போக்கு யினை மாற்றியமைக்கும் பல்வேறு காரணிகளு
உலக நாடுகளுள் ஒவ்வொன்றிலும் ந நவீன தொழில்நுட்ப பயன்பாடுகள், அதிகரித்த எரிபொருள் நுகர்வு என்பன சனத்தொகைச் ெ யில் நகரை அண்டிய திறமுறைமைகள் மனித ந வெளியிடப்படும் மாசுக்கள் என்பன நகர நுை விடுகின்றன. நகர்கள் தமக்கென விசேடமானதெ இருக்கின்றன. அவை நகரின் புறப்பகுதிகளில் தன்மையினைக் கொண்டனவாகக் காணப்படுகி நிலை மாற்றத்தின் போக்கின்படி பிற்காலத்தி உருவெடுக்கும் என ஐயமின்றிக் கூறமுடியும்.
நகரநுண் காலநிலையில் மாற்றத்தை ஏற்ப நமது நுண்கால நிலையில் மாற்றத்த பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம். தாவரப் ே களின் மேற்பரப்புடன் ஒப்பிடும் போது நகரின் ெ வற்றாலான கட்டமைப்பு சக்தியின் பண்புகளில் கிறது. நகரின் பெரும்பாலான பகுதிகள் நகரல்ல அளவிலான அல்பீடோக்களையும், அதிகளவான வெப்பத்தினை சேர்த்து வைக்கும் களஞ்சியமாக நகர மேற்பரப்பானது வெப்பத்தினை இலகுவில் சத்தின் பின்னரும் வெப்பமானது தாமதமாக வெப்பநிலை அதிகமாகக் காணப்படும். இவற்று சக்திப் பாய்ச்சலானது மேலும் மாற்றியமைக்கப் விட நகர்ப்பகுதிகளில் சுவர், கூரைகள், மற்று பல்வகைப்பட்ட மேற்பரப்பு சூரியக் கதிர்களுக்கு மானைப்பொழுதுகளில் சூரியன் கீழ்வானத்தில் குறைவான சக்தி உறிஞ்சல் நிகழ்கிறது. ஆனால் ஆரியக் கதிர்களின் மொத்த தாக்கத்தினையும் உ பொழுதுகளிலும் நகரமானது சூழவுள்ள கிராட பினை உறிஞ்சுகின்றது, நீரியியல் வட்டத்தில் ம பதைரப்பட்ட மேற்பரப்பானது நகரின் சக்தி கிை நகர் மற்றும் நகரல்லாத பகுதிகளின் மழைவீழ்ச்

5 ஏற்படுகின்றது. அது நகரக் காலநிலை க்கும் அடிப்படையாக அமைகின்றது.
கரை அண்டிய கைத் தொழில் விருத்தி, வாகனங்களின் பாவனைகள், அதிகரித்த சறிவையும் அதிகரிக்கின்றன. இவ்வகை டவடிக்கைகள், இவற்றால் நகரச்கழலுக்கு ன்காலநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி ாரு காலநிலைத்தன்மையினைக் கொண் இருந்து முற்றிலும் வேறுப்பட்டதொரு ன்றமை குறிப்பிடத்தக்கது. நகர நுண்காலடி ல் அதுவொரு பாரிய பிரச்சினையாகலி
டுத்தும் காரணிகள்
தினை ஏற்படுத்துகின்ற காரணங்களில் பார்வையால் மூடப்பட்ட கிராமப் பகுதி காங்கிறீட், எஸ்பஸ்ட், கண்ணாடி என்பன ள் முக்கிய அடிப்படையாகக் காணப்படு 0ாத ஏனைய பகுதிகளைவிடக் குறைந்த வெப்பத்தினையும் கொண்டிருப்பதுடன் வும் காணப்படுகிறது. பகல் வேளைகளில் உறிஞ்சிக் கொள்வதுடன் சூரிய வெளிச் இழக்கப்படுவதனால் இரவிலும் இங்கு |டன் நகரங்களின் கட்டிட வடிவமைப்பில் படுகிறது. விருத்தியடையாத பகுதிகளை ம் பாதைகள் என்பவற்றினால் ஏற்படும் வேறுபட்ட தன்மையினை அளிக்கின்றது. 5ாணப்படும் வேளை மட்டமான நிலத்தில் பல அமைப்பிலான நகரின் கட்டடங்கள் ணர்கின்றன. அதிகாலையிலும் மாலைப் Oப் பகுதிகளைவிட அதிகளவான சக்தி ாற்றத்தை ஏற்படுத்துவதனூடாக நகரின் டப்பனவில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. சிப் பாங்கினை வரிசைப்படுத்தும் இடத்து
(39)

Page 54
சற்று வித்தியாசம் காணப்படுகிறது. கிர தடுத்துவைக்கப்படுகின்றது. இம்மூலங்கள் நீரைப் பெற்றுக் கொள்வதுடன் ஆவியுய படுகின்றது. ஆவியாக்கம், ஆவியுயிர்ப்ட சக்தி மிக அவசியமாகும்.
நகரங்களில் வரையறைக்குட்பட் தன்மை என்பவற்றுடன் அங்கு காண மண்ணில் நீர்புகுவதைத் தடைசெய்கின் பெரும்பாலான நீர் உடனடியாக கான்கள் இதன் விளைவாக ஆவியாதலுக்கான நீ ஆவியாதல் மற்றும் ஆவியுயிர்ப்பு என முறைக்காகக் கிடைக்கப்பெறும் சூரிய சச் வெப்பப் பாய்ச்சலில் மறைவெப்ப ஒ தரப்படுகின்றது. உதாரணமாக பாலை காரணமாக உயர்வான அதாவது ஏறக் கின்றது. அதிகளவு தாவரப் போர்வை க மதியில் காணப்படும். ஆனால் நகரங்களி மறைவெப்ப சக்தி மாற்றத்தில் பெரிய அளவில் வெப்ப அதிகரிப்பு ஏற்படுவத6ை ஏனையவற்றால் கிடைக்கக் கூடியசக்தி மடையச் செய்யும்.
பல நடவடிக்கைகளின் ஒருமித்த வில் சக்தியை நுகரும் இடமாகக் கா அவற்றுக்கான சக்தி உள்ளெடுக்கப்படு மாரிகாலததில் எரிபொருட் பாவனை ச வானது அதே காலப்பகுதியில் சூரியக்கதி தடவைகளுக்குச் சமனாகும். இவ்வதிகரி என்னவெனில் தொழிற்சாலைகள், கட்ட வளிமண்டலத்திற்கு வெளிவிடப்படும் ெ படுகின்றது என்பதாகும்.
கிராமப் பகுதிகளுடன் ஒப்பிடும் மிகவும் உயர்வாகக் காணப்படுகின்றது.
/12. N. (40)

Tமப் பகுதிகளில் மேற்பரப்பு மண்ணில் நீரானது ரில் இருந்து தாவரங்கள் அவற்றின் தேவைக்காக பிர்ப்பின் மூலம் வளியில் ஈரப்பதனாகவும் விடப் ஆகிய இவ்விரு செய்முறைகளுக்குமே கரியச்
ட தாவரப் போர்வை, குறைவான ஊடுபுகவிடும் ப்படும் கட்டடங்கள், நடைபாதைகள் என்பன றன. நகருக்குக் கிடைக்கப் பெறும் மழைநீரில் ரின் ஊடாக சாக்கடைக்குள் பாய்ச்சப்படுகின்றது. ர்கிடைப்பனவு அதிகளவில் குறைக்கப்படுகிறது. ன்பனவற்றின் அளவு குறைவதுடன் இச்செயன் 3தியானது நகர மேற்பரப்பினை சூடாக்குகின்றது. ழுங்கிற்கான சக்திவீதம் BOwen விகிதத்தில் போன்ற பகுதிகளில் குறைவான நீரின் அளவு குறைய 20 ஆக BOwen விகிதம் காணப்படு ாணப்படும் இடத்தில் 1 ஐ விடக்குறைவான பெறு Iல் இவ்விகிதம் 4.0 ஆகக் காணப்படுகின்றது. இது 1ளவு குறைவினைக் காட்டுவதுடன் சிறப்பான னயும் காட்டுகின்றது. மீண்டும் இவ்விளைவானது யிலிருந்து நகர வாயுமண்டலத்தினை வெப்ப
பகுதியாகக் காணப்படும் நகரப்பகுதி உயர்ந்தள ாணப்படுகின்றது. அளவிட முடியாத அளவில் }கின்றது. உதாரணமாக நியூயோர்க் நகரில் 5ாரணமாக வெளிவிடப்படும் வெப்பத்தின் அள ர் ஊடாகக் கிடைக்கப் பெறும் வெப்பத்தின் 21/2 த்த சக்திப் பாவனையானது அர்த்தப்படுத்துவது -டங்கள், போக்குவரத்து என்பவற்றில் இருந்து வப்பக் கழிவுகள் நகர வெப்பத்துடன் சேர்க்கப்
போது நகரங்களில் வளி மாசடையும் மட்டம் நகரங்களில அதிகளவில் எரிபொருட் பாவனை
உந்தூழ்

Page 55
நிலவுவதே இதற்கு காரணமாகும். வளிமா வெளிப்படை யாதெனில் நகரங்களுக்கு மேெ காணப்படுதல் ஆகும். இத்தூசு மற்றும் புகையா காலநிலையை மாற்றியமைக்கின்றன. உள்வரு துணுக்குகளை நிலை நிறுத்துவதுடன் வெளிக் றது. சில தூசுத் துணிக்கைகள் முகில்களிலி கின்றது. லண்டன் நகரிலிருந்து பெறப்பட்ட தி களை விட நகரப் பகுதிகள் முகில் நிறைந்த
மான சூரிய வெளிச்சம் கிடைக்கப் பெறும் L போது வருடத்தின் அனேகமான காலப்பகுதியி மணித்தியாலங்களுக்கு குறைவாகவே பெறுகி
நகரப் பகுதிகளில் தூசுக்கள், முகில்க காணப்படுவதன் காரணமாக சூரியசக்தி உ காரணமாக நகரங்களில் வெப்பநிலை அச்சந் இக்குறைபாடு ஏனையகாரணிகளின் மூலL மாசாக்கிகள் தெறிப்படையும் சக்தியை உறி வெளிக்கு இழக்கப்படும் சக்தியின் அலை நீள நகரக் காலநிலையை தீர்மானிப்பதில் மு. நீரியலிலும் அதிகமான தாக்கத்தினைச் ெ வழிகளில் செயன்முறைகள் நீரியல் வட்டச் செய
* தாவரப் போர்வையுடன் கூடிய மண்ணைக்
வகையில் மாற்றியமைக்கப்படல்.
நிர்மாண வேலைகளுக்கான செய்முறைகள்
ஆற்றின் வாய்க்காலின் மேல் அத்துமீறிய ச அமைக்கப்படல். நகரப்பகுதிகளின் காலநிலை தன்மைகள் ம விசேடமாக கோடைக்காலத்தில் அதிகளவ மழை என்பவற்றுக்கு வழிவகுக்கின்றது.
இவ்வாறு, நகர நுண்காலநிலையில் ஏ மயமாதல் தாக்கத்தினை ஏற்படுத்துவதுடன், உ6 கும் வழிகோலுகிறது. அதிகளவில் நகர நுண்க
விளைவே நகர வெப்பத்தீவுகளின் உருவாக்கம

சடைதலின் விளைவாகக் காணக்கூடிய )ாகக் குவிந்த கூரை வடிவில் தூசி படிந்து ர்ந்த மூடுபனி என்பன பல வழிகளில் நகரக் நம் சூரியக்கதிர்கள் சில காற்றில் சில தூசுத் கு மீண்டும் தெறிக்கப்படுவதையும் தடுக்கி ருந்து நீராவியாக ஒடுங்குவதற்கு உதவு தரவுகளின் அடிப்படையில் கிராமப் பகுதி இடங்களாகக் காணப்படுகின்றன. பிரகாச மணித்தியாலங்களை ஒப்பிட்டு நோக்கும் ல் கழவுள்ள இடங்களை விட நகரம் 270ஐ ன்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
ள்ளீடு மிகவும் குறைவாக இருப்பதன் தரப்பத்தில் தாழ்வாகக் காணப்பட்டாலும் ம் சீர்படுத்தப்படுகின்றது. மாறாக சில ஞ்சிக் கொள்வதுடன் முகிலற்ற தன்மை த்தையும் குறைக்கின்றது. இது மட்டுமன்றி க்கியமானதொரு பங்கினை வகிக்கும் சலுத்துகின்றது. நகரங்களில் பின்வரும் பன்முறையினை மாற்றியமைக்கின்றன.
கொண்ட மேற்பரப்புநீர் ஊடுருவ இயலாத
T.
ாலைகள், அணைகள், பாதைகள் என்பன
ாற்றியமைக்கப்படுவதன் காரணமாக அது ான மழைவீழ்ச்சி, மற்றும் இடியுடன் கூடிய
ற்படுத்தும் விளைவுகள் பூகோள வெப்ப லகில் சூழல் தொடர்பான பிரச்சினைகளுக் லநிலை மாற்றத்தின் முக்கியமானவொரு Tகும.
GD

Page 56
1.2நகரநுண்காலநிலைமாற்றத்தினால்
நகர வளிமண்டல காலநிலை மா காலத்தில் ஏற்படுவதுடன் எதிர்காலத்திலு நகர வளிமண்டலத்தில் வெப்பநிலையை இ மூலம் சூழல் மாசடைதல் புறஊதாக்கதிர்க வெப்பமாதல், வானிலை, காலநிலைத் காட்டுத்தீ போன்றன மூலம் வெளிப்படும் உயிர்ச்கழல் ஒழுங்குகள் பாதிப்படைெ ஏற்படுகின்றன.
வளிமண்டலத்தில் காபனோரொட் உயிர்ச்கழலுக்கு நச்சு விளைவை ஏற்ப( LDITJIBG5Uğš5f66d 440.P.P.M (PARTS PER ஒட்சைட் காணப்படுகின்றது எனக் குறிப்பு களில் அதிக இயந்திரப் பாவனைகளால் ( (Nitric Oxide) அதிகளவு சேர்க்கப்படுவது கபிலநிற வாயுவான நைதரசனீரொட்சைட் வெப்பத் தீவுகளில் எரிதலின் விளைவு (Sulphor Dioxide - SO.) 60b35JEF6T FFGU வளி மண்டலத்தில் நீருடன் தாக்கம் புரிந் 60dpb55flis 5Lsal Lib (Nitric Acid) 6T6óTU6) be அளவில் எட்டும் போது அமில மழையாகச பிரதான நகரமாசாக்கிகளு
மாசாக்கிகளின் வகை Suspendedநுணுக்கமானப் பொருட்கள்
சல்பர் டயொக்சைட் (SO)
ஒளிரசாயன ஒக்சிடன்ட்ஸ் ஒசோ6 மற்றும் பெராக்சைட்ல் (PAN)
1N C 42)

ஏற்படும் விளைவுகள்
ற்றத்தினால் பல்வேறுபட்ட பாதிப்புக்கள் நிகழ் ம் பல பிரச்சினைகளுக்கு வழிகோலுகின்றது. இயல்பு நிலைக்கு மாறாகக் கொண்டு செல்வதன் ளின் (ஓசோன்துவாரம் மூலம்) தாக்கம், கோள தாக்கங்களினால் இயற்கையாக எரிமலை, வாயுக்கள் வளிமண்டலத்தில் பரவுதல் மூலம் துடன் கழலுக்குப் பெரும் அச்சுறுத்தலகள்
சைட்டின் அளவு அதிகரிக்கும் பொழுது அது டுத்துகின்றது. கணிப்பொன்றின்படி கொழும்பு MILLION) &guib eliss6T66) SITUG60TTE பிடப்பட்டுள்ளது. பொதுவாக நகர வெப்பத்தீவு வளிமண்டலத்தில் நைதரசன் ஒட்சைட்டு வாயு துடன் இவ்வாயு ஒட்சிசனுடன் சேர்ந்து மஞ்சள் (B (Nitrogen dioxide) g (56)||Tö565856örpg). b35U வாக வெளிவிடப்படும் கந்தகவிரொட்சைட்டு IT 603, (B (Nitrogen Dioxide - NO.) 6T66TU60T து முறையே சல்பூரிக்கமிலம் (Sulfuric Acid) றை உருவாக்குகின்றன. இவ்வமிலங்கள் கூடிய ைெடக்கப் பெறுகின்றன. நம் அவற்றின் விளைவுகளும்
சில விளைவுகள் மூடுபனி, சுவாசப் பிரச்சனைகள், கட்டடங்
களில் கறைபடிதல், கார்சினோஜன்ஸ்.
சுவாசப்பிரச்சினைகள், அஸ்துமா, தாவரங் கள் பாதிக்கப்படல், தோல் நோய்கள், நகரக் கட்டடங்கள், மற்றும் ஏனைய பொருட்கள் துருப்பிடித்தல், மங்கல நிலை, அமில மழை உருவாக்கம். ன் தலைவலி, கண்ணெரிவு, இருமல், நெஞ்சு வலி, பொருட்களின் உடைவு, உதாரணம் இறப்பர் இயற்கைத் தாவரங்கள் மற்றும் விளைச்சல் பாதிப்பு, புகையார்ந்த மூடுபனி
உந்தூழ்

Page 57
நைட்ரஜன் ஒக்சைட்டு (NO) 696 தல்
துர
29HLک 5Tuar GLOITG160TTg560)&L GB (CO) இத நச்சுப் பொருட்கள்: காரியம் நச் 56 ரீதி நச்சு இரசாயனங்கள் டயொக் சின் etc. Iநச்
ஐக்கிய அமெரிக்க நகர்ப்பகுதிகளில் உற் பாவிக்கப்படும் மின் இயக்க இயந்திரங்கள் மு இவை 70% கந்தகவிரொட்சைட்டையும் 1/3 ட விடுகின்றன. இவ்விரு ஒட்சைட்டுக்களையும் ( உயரத்திற்கு ஏற்படுத்தப்பட்டதெனினும் இவை செறிவுள்ள அமில மழையாகப் பொழிந்தன. களிலும் பரவின் நகர வளிமண்டலத்தில் வெளி பரவினால் ஏனைய அயல் நாடுகளும் பாதிட் இட்டுச்செல்கின்றன. இதனால் கடல் மட்டம் மாற் வெப்பநிலை மாற்றங்கள் காலநிலை ரீதியாக விளைவிக்கின்றன.
ஒசோன் படையில் துவாரம் புற ஊதா பல்வேறு வகைத் தாக்கங்களுக்கு உயர்ச் சூழல் கைத்தொழில் மயமாக்கப்பட்ட ஐக்கிய அமெரி அவதானிக்கப்பட்ட சூழல் பாதுகாப்பு நிலைய ஒட்சைட் மாசும் சேர்ந்து கடல் வாழ் உயிரினங் திற்குஉட்படுத்துகின்றன.
எனவே இவ்வாறான தாக்கங்களிலிருந் நிகழ்ச்சித்திட்டங்கள், மாநாடுகள் மற்றும் விழிப்
அன்றும் இன்றும் என்றும் என் உள்ளத்தில் அன்புக்கேர் அணிகலமாகிய அறிவு சேர்த்தவர்
sigriġ

8 17 A
ளிரசாயன எதிர்விளைவுகளைக் காட்டு ), கட்டடங்கள் வானிலையாலழிதலைத் ரிதப்படுத்தல், மங்கல் நிலை மற்றும் மிலமழை என்பவற்றை ஏற்படுத்தல்
நய நோய்கள்,தலைவலி, சோர்வு
சுத் தன்மையடைதல், சிறுவர்களிடையே )வி அடைவு மட்டம் மற்றும் நடத்தை
யான இயலாமைகளை ஏற்படுத்தல்.
சுத் தன்மையடைதல், கான்சர்
பத்தியாளர்களாலும் பொதுமக்களாலும் ழதற்தர மாசுக்களை ஏற்படுத்துகின்றன.வி Iங்கு நைதரசன் ஒட்சைட்டையும் வெளிய வெளியகற்ற புகைத்தடுப்பானது 300M s உயர் மட்டத்தில் ஒன்றாகக் கூடி அதிக இவை கனடாவில் மக்கள் வாழ் பகுதி யிடப்படும் நச்சு வாயுக்கள் மாசடைதல் படைவதுடன் கோள வெப்பமாதலுக்கு றமடைதல், சமுத்திரங்களின் அசாதாரண எல்நினோ, வாநினோ தாக்கங்களை
க்கதிர்களின் உள் வருகை நோய்களின் ) உள்ளாக்கப்படுகின்றது. உதாரணமாக க்காவின் கரையோரங்களில் 1988 இல் த்தினால் அமிலமழையுடன் நைதரசன் களையும், சமுத்திர கழலையும் தாக்கத்
து புவியைப் பாதுகாப்பதற்காக பல்வேறு புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்
நின்று நின்று அறிவினைப் புகட்டிய
மலரடி ஏத்துவேன்!
1N C 43 )

Page 58
கோளமயமாதலும் த
கோளமயமாதல்
தொலைத்தொடர்பு, போக்குவரத் வளர்ச்சியினால் உந்தப்பட்டு உலக சமூ பையும் ஒருவரில் ஒருவர் தங்கியிருக்கு கோளமயமாதல் என்பதாகும்.
கோளமயமாதல் என்பதற்கு அ மாதல், புவி மயமாதல், எனவும் அை நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சி இத எனும் செயன்முறை ஆரம்பத்தில் பொரு சமூக, கலாசார, அரசியல் ரீதியில் ஊடு மயமாதல் என்பது பயன்படுத்தப்பட்டது. வளத்தை அதிகரிப்பதற்காக மேலைத்தே ஒரு சிலர், சமூக, பொருளாதார, கலாச மேலலைத்தேய அதிகார வர்க்கத்தின் ந6 விமர்சனம் செய்கின்றனர்.
உலகவங்கி, சர்வதேச நாணயநி அமைப்புகளும் இணைந்து இதனை செய வரும் நாடுகள் இதனால் பெரும் பயன் அமெரிக்க கலாசாரம் பரப்பும் ஓர் செயன் விப்பதற்கான செயன்முறையாக இது க இந்தியா போன்ற நாடுகள் முன்னேற்ற தெற்காசிய நாடுகள் அதிகமாக பாதிப்பை
கோளமயமாதல் உலக சமூகங்கள் உதவிகள், ஆலோசனைகள் பெற்றாலும் கருதப்படுகின்றது. பல தேசிய கம்பனிக சமத்துவமின்மை, சூழல் பாதிப்புக்கள், 8
C4ᏎᎼ

தகவல் தொழில்நுட்பமும்
திரு.இ. நாகேஸ்வரன் யா/அத்தியார் இந்துக் கல்லூரி, நீர்வேலி.
து, தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளின் முகங்களிடையேயான நெருக்கமான தொடர் ம் நிலையினையும் ஏற்படுத்தும். செயன்முறை
கலமயமாதல், பூகோளமயமாதல், உலகமய ழக்கும் வழக்கம் உள்ளது. தகவல் தொழில் 5னை துரிதப்படுத்தியுள்ளது. கோளமயமாதல் |ளாதாரத்துறையில் பிரயோகிக்கப்பட்டு இன்று }ருவியுள்ளது. 1981ஆம் ஆண்டுகளில் கோள
வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதார ய நாடுகளால் முன்னெடுக்கப்பட்டது. எனவும் ார ரீதியில் விரும்பத்தகாத செயல்களையும், வ காலனித்து தன்மையினையும் கொண்டதாக
தியம், உலகவர்த்தக அமையம் எனும் மூன்று பற்படுத்தி வருகின்றது. அபிவிருத்தி அடைந்து அடைந்து வருகின்றது. உலகம் முழுவதும் முறையெனும், உலக ஒற்றைச் சமூகம் தோற்று ருதப்படுகின்றது. இச்செயன்முறையால், சீனா, ம் பெற்றாலும் அமெரிக்க நாடுகள், ஏனைய டந்து வருவதாக கூறப்படுகின்றது.
ளை ஒருங்கிணைத்து பொருளாதார, அரசியல்,
எதிர்மறை விளைவுகளையும் கொண்டதாக ளின் ஆதிக்கம், மரபுரிமைகள் அழிக்கப்படல், கீழ் உழைப்புக்களின் பெருக்கம் அதிகரித்தல்,
உந்தூழ்

Page 59
அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் தனித்து நிறைவேற்ற முடியாமை போன்ற விளைவுகை
கோளமயமாதல் செயன் முறையிை சமூகங்கள் எதிர்நோக்கி பிரச்சினைகளிலி அமைப்பு காணப்பட்டாலும். அபிவிருத்தி அ6 அதிகமானது. ஒவ்வொரு தனி மனிதனும் ஒருங்கிணைந்து இதனை கண்காணித்து கட்டு உலக வர்த்தக நிறுவனத்திற்கு எதிராக பல லட்ச
கோளமயமாதலில் தகவல்தொழில்நுட்பத்தி
தொடர்பாடல் சர்வதேச வர்த்தகம் சமூக, கலாசாரம் அரசியல்
கல்வி, மருத்துவம்
ஆகிய துறைகளின் விரைவான ெ பங்களித்துள்ளது. தொலைவில் உள்ள மக் பூராவும் நடைபெறும் நிகழ்வுகளை உடனுக்கு வியாபாரம் தொடர்பான தகவல், நாணயமா பமைப்பினுாடாக வர்த்தகம் பொருட் தெரிவு 6 கோளமயமாதலில் தாக்கம் செலுத்துகின்றது. பரவும் சமூக ஒருமைப்பாடு, மொழிப்பிரயோ அரசியல், தீர்மானங்கள் எடுத்தல், ஐனநாயக இணையத்தளததின் ஊடான உயர் கல்வி வ விளையாட்டு, தகவல் உடனடியாக பெற மு மருத்துவ ஆலோசனை, மருந்து கருவிகள் என் படுத்தப்பட்டுகோளமயமாக்கலை தூண்டியுள்c
தகவல்தொழில்நுட்பம்
பூகோள ரீதியாக எல்லைப்படுத்த சமூகங்களை சமூக, பொருளாதார, அரசியல் ஏற்படுத்துவதற்கு பல்வேறுபட்ட இலத்திரவிய தகவல் தொழில்நுட்பம் எனப்படுகின்றது. உ

|வமாக இயங்க முடியாமை, தீர்மானங்கள் ள எதிர்நோக்கிவருகின்றது.
ன உரியவாறு நிர்வகிப்பதால் நாடுகள், ருந்து விடுபடலாம். பலமான நிறுவன டைந்துவரும் நாடுகளின் மக்கள் தொகை b, சிறு நிறுவனங்கள், சமூககுழுக்கள் ப்படுத்த முடியும். உதாரணம் அண்மையில் Fகணக்கானோர் நடத்திய ஆர்ப்பாட்டம்.
ன்செல்வாக்கு
சயன்முறைக்கு தகவல் தொழில்நுட்பம் களுடன், தொடர்பாடலினையும் உலகம் டன் அறிய கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ற்று விகிதம், பங்குச்சந்தைகளை வலை ான்பன இடம்பெற தகவல் தொழில்நுட்பம் உலக பண்பாட்டுக் கலாசாரம் விரைவாக கம், என்பன அறியக் கூடியதாகவுள்ளது. 5ம், மனிதஉரிமை பற்றி அறிய முடியும். ாய்ப்புக்கள் பெறல், சுகாதார, மருத்துவ, டிகின்றமை, இணையற்றது. மருத்துவம், ாபன தகவல் தொழில்நுட்பத்தால் விரைவு
ாது.
ப்பட்டு வேறு படுத்தப்பட்ட இவ்வுலக நிலையில் நெருக்கமான தொடர்புகளை ற்சாதனங்கள் பயன்படுத்தும் நுட்பமுறை லகம் இன்று தொடர்பாடல் புரட்சியில்
/17 G`N (45)

Page 60
ஆட்பட்டு விட்டது. மக்களின் வாழ்க்கைய தொழில்நுட்ப சாதனங்கள் மாறிவிட்டன புரட்சியாக இது கொள்ளப்படுகிறது. இச்சா சுருங்கிவிட்டது. எனக்கூறப்படுகின்றது.
1950 இல் கணனி கண்டு பிடிக்க வளரத் தொடங்கியது. 1990களில் இத மாயமாதலை விரைவுபடுத்தியது எனலாட தகவல் சேகரித்தல், களஞ்சியப்படுத்தல் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. இதில் 8 தொடர்பான, தொலைபேசி, செய்மதி, பெக்
தகவல்தொழில்நுட்பத்தினால் ஏற்படும்
* உலகம் தொடர்பான சகல தகவல்க6ை * சேகரித்த தகவல்களை நீண்ட காலL
பகுப்பாய்வு செய்யலாம். * தீர்மானங்களை விரைவாகவும்,துல்ல * தரவுகளையும், படங்களையும் ஒருங் வெளியீடுகளை பெற்றுக் கொள்ளலா * வெளிநாட்டவர்களுடன் நேரடியாக மு * அன்றாட உலக மாற்றங்களை அறிந்
அரசியல, சூழல்) * கல்வி, மருத்துவம், வர்த்தகம், நிர்வ
உயர் பங்களிப்பு வருகிறது. * பன்னாட்டு சமூக, கலாசாரங்களை அழ
தகவல்தொழில்நுட்பத்தினால் ஏற்படும்பி
* இணையத்தளங்களை முறைகேடாக சி விரைவாக தகவல்கள் பரவுவதால் தவ * மொழி, கலாசாரம், பழக்கவழக்கம்,
இழத்தல். * அபிவிருத்தி அடைந்து வரும் நாடு
வித்தல்.
உதாரணம் வேலை வாய்ப்பின்மை
C46)

பில் மிக அவசியமான சாதனங்களாக தகவல் . உலகில் ஏற்பட்ட புரட்சிகளில் மூன்றாவது தனங்களின் பயன்பாட்டால் உலகம் கிராமமாக
ப்பட்டதனை அடுத்து தகவல் தொழில் நுட்பம் ன் பிரயோகம் அதிகரித்தமையால் பூகோள ம். அனேக இலத்திரனியற் சாதனங்கள் ஊடாக விநியோகித்தல் என்ற செயன்முறையூடாக கணனி, கணனி வலையமைப்பு, கணனியுடன் ஸ் பயன்படுத்தப்படுகின்றது.
அனுகூலங்கள்
ளயும் விரைவாக பெற்றுக் கொள்ளலாம். ம் பாதுகாத்து தேவைப்படும் சந்தர்ப்பங்களில்
மியமாகவும் எடுக்கலாம் உதாரணம் GIS
|கிணைக்க முடியும், அதன் மூலம் தேவையான
Lp (GIS)
)கம் பார்த்துகதைக்க முடியும் (Skype)
3து செயற்பட முடியும் (சமூக, பொருளாதார,
ாகம், இராணுவம் போக்குவரத்து துறைகளில்
றிய முடியும்.
ரதிகூலங்கள்
JuJ66TUGB556b (Facebook)
பறாக பரவக் கூடிய வாய்ப்புள்ளது.
விழுமியங்கள் விரைவாக தனித்துவத்தினை
களில் புதிய பிரச்சினை பலவற்றை தோற்று
, கீழ் உழைப்பு.
உந்தூழ்

Page 61
மனித ஆராக்கியத்திற்கு கேடாக அமைதல். அபிவிருத்தி அடைந்த நாடுகளில் அபிவி யிருக்க வேண்டிய நிலை.
கணனி தொகுதிகளுக்கு ஏற்படும் வைரஸ் பி
அபிவிருத்திஅடைந்துவரும்நாடுகளில் கோள
இரு வேறுபட்ட தாக்கங்கள் உணரப்பட்டு: வங்கி மூலம் கடன், ஆலோசனைகளை உதவியருக்கின்றது. உதாரணம் இலங்கை வெளிநாட்டு முதலீடுகள், முதலீட்டாளர்க கைத்தொழில் அந்நிய செலாவணி வருகை நிபுணத்துவ ஆலோசனைகள், நன்கொடை கிடைக்க அதிக வாய்புக்கள் இருத்தல். கோளமயமாக்கல்நன்மையான செயற்பாடு செயற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றது. அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் ச உதாரணம் பல்தேசிய கம்பனிகளால் இந்நாடுகளின் நிதிச் சந்தைகள் தாராள ஏற்படும் பொருளாதார அதிர்ச்சிகளுக்கு ( வாகுதல். உதாரணம் USA நிதிநெருக்கடி புதிதாக உருவாக்கப்பட்ட உலக வர்த்தக ந பலம் வாய்ந்த நாடுகளுடன் போட்டியிடவே வெளிநாட்டு உதவியின் தன்மைகள் மா பொருளாதாரங்களை தாராளமயப்படுத்தே
அவங்கையில் தகவல் தொழில்நுட்பம்
21ஆம் நூற்றாண்டில் தகவல் தொழில்நுட்
பரிமாற்றரீதியில் செலவாக்கு பெற்று வருகின்ற இடங்களிலும் மிக வேகமாக பரவிவருகின்றது. Gurgatá6TD5).
-உத்துரழ்
விவசாயத்துறையில் பிரயோகிக்கப்பட்டு பயிர்ச்செய்கை உத்திகள் விவசாயிகள், வர் ஏற்படுத்திவருகின்றது.

ருத்தி அடைந்து வரும் நாடுகள் தங்கி
ரிரச்சினை.
மயமாதலின் தாக்கங்கள்
ள்ளன. சர்வதேச நாணயநிதியம், உலக பெற்று பொருளாதாரத்தை பலப்படுத்த
ள் உள் வருகையால், தொழில்நுட்பம், கிடைத்து வருகின்றது. கள், பாதுகாப்பு, வர்த்தக ஒப்பந்தங்கள்
}கள் இருந்தாலும் தீங்கான பின்வரும்
க்தியும் செல்வாக்கும் பலவீனமடைதல்.
மயப்படுத்தப்பட்டதால் வெளிநாட்டில் முகம் கொடுக்க வேண்டிய நிலை உரு
நிறுவனத்தின் பல்பக்க வியாபார முறை ண்டிய நிலை உருவாகுதல். றி வருதல் இன்று அந்நாடுகள் தமது வே உதவி செய்கின்றன.
பம் இலங்கையில் சமூக, பொருளாதார, து. கிராம, நகர வேறுபாடின்றி அனைத்து இது பின்வரும் துறைகளில் செல்வாக்கு
வருகின்றது. இணையத்தளம் ஊடாக ாத்தகர்கள், இடையில் பரிமாற்றத்தினை
1N C. 47)

Page 62
உதாரணம்: சந்தைவிலை
ஆய்வுகள் பரிசோதனைகள் வளமாக்கி, கிருமி சேவைத்துறையில் முன்னேற்றம் பெ உதாரணம்: வங்கி,காப்புறுதி, அரசியல் நடவடிக்கைகளை மேற்கொ கொள்கையாக்கம் -E.Srilankaதேர்த கலாசார பரவலாக்கம், கிராம, சாதனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகி உதாரணம்: விளையாட்டு கலைநிகழ்வு சமய நிகழ்வு தொலைக்காட்சி உலகில் ஏற்பட்டு வரும் அளவிற்கு டாலும் அதன் தாக்கம் காணப்படுகின் தகவல் தொழில் நுட்பம் இலங்கையி நேரடியாக செல்வாக்கு செலுத்துவ தேவையுள்ளது.
பேரறிஞர் பெர்னாட்ஷா, “துன்பத் இரகசியம் என்னவென்றால், நாம் என்பது பற்றிக் கவலைப்பட நேரம் இவண் நினைதற்பாலது. எனவே நாம் கொண்டேயிருந்தால், துன்பப்பட ே இருப்பதே துன்பம் துடைக்கும் மருந்து
QasD

நாசினிகள்
]று வருகின்றது. கலவி, சுகாதாரம், போக்குவரத்து ள்ள வாய்ப்பாக காணப்படுகிறது. ல் நடவடிக்கை நகர வேறுபாடின்றி தகவல் தொடர்பாடல் றது.
நிகழ்ச்சி
துரிதமாக தகவல் தொழில்நுட்பம் வளரவிட்
றது. பின் பண்பாட்டு விழுமியங்களைப் பாதிப்பதில் தால் அவதானத்துடன் பயன்படுத்த வேண்டிய
தில் உழல்கிறோம் என்று சொல்வதன்
இன்பத்தில் மகிழ்கிறோமா, இல்லையா கிடைப்பதுதான்? என்று கூறிய கருத்தும் ) தொடர்ந்து ஏதாவது பணிகளில் ஈடுபட்டுக் நரமே இராது. எப்போதும் சுறுசுறுப்பாய்
எனலாம்.
உந்தூழ்

Page 63
எதிர்கால வருமானத்திட்டட முதன்மைத்
இலங்கையில் வாழ்க்கை செலவு செல்கின்றது. ஒரு தனி மனிதனுடைய வாழ் வாழ்க்கை செலவின் உயர்வு அளவிட முடியா ஒரு இறாத்தல் சீனி 58 சதத்திற்கு விற்கப்பட் ரூ1OOற்கு வாங்க வேண்டியுள்ளது. இதனால் வாழ்க்கைத்தரம் மேலும் மேலும் பின்நோக்கிச்
மத்தியதர வருமானம் உள்ளவர்களி தனிநபர் வருமானம் அதிகரிக்காவிட்டால் வா கின்றது. தனிநபர் உழைப்பு வருமானத்தின் மூ முடியாமல் உள்ளது. பல்வேறு வருமான வழி தள்ளப்படுகின்றனர்.
முன்னைய காலங்களில் மக்கள் வ வங்கிகளில் வைப்புச் செய்து வட்டி வருமான களின் வட்டி வீதம் மிகவும் தாழ்நிலையில் உள் புதிய வருமான வழிகளைத் தேடவேண்டியுள்ள
இன்றைய அரசாங்கத்தின் பொருளா கொண்ட சிறிய, நடுத்தர கைத்தொழில்கை உருவாக்குதல் ஆகும். இதற்கு ஏற்றவாறு வங் வட்டி வீதத்தில் கடன் வழங்க ஊக்குவிக்கப்படுகி
தனிநபர்கள் எதிர்காலத்தில் பன்முகப்ப மானால் பங்கு முதலீடு, கடன் முதலீடு என்பவழ அமையும்.
உலகப்பங்குச் சந்தை தரப்படுத்தல்
உலக பங்குச் சந்தை தரப்படுத்தின் படி ெ
1. ஆசியப் பிரந்தியத்தில் முதன்மையானதாகக
இதன் செயல்திறன் உயர்மட்டத்தில் உள்
-உந்தூழ்
 

மிடலில் பங்கு முதலீட்டின்
தன்மை
8.5LT3T ஓய்வு நிலை ஆசிரியர்.
எதிர்பார்க்கப்படாத அளவில் உயர்ந்து ாளில் அதாவது 60 வருட வாழ்கையில் மல் உள்ளது. உதாரணமாக ஆரம்பத்தில் டது. இன்று ஒரு கிலோ சீனி கிட்டத்தட்ட வறுமைக் கோட்டிற்கு உட்பட்டவர்களின் செல்கின்றது.
ன் நிலையும் அவ்வாறே அமைகினறது. ழமுடியாத அபாயகரமான நிலை ஏற்படு pலம் வாழ்க்கைச் செலவை கட்டுப்படுத்த களைத் தேடவேண்டிய நிலைக்கு மக்கள்
ருமானத்தில் சிறு பகுதியை சேமித்து த்தைப் பெற்று வந்தனர். தற்போது வங்கி
து.
தாரக் கொள்கை நீண்டகால நோக்கம் 1ளயும், பாரிய கைத்தொழில்களையும்
கிகளும் நிதி நிறுவனங்களும் குறைந்த lன்றன.
டுத்தப்பட்ட வருமானத்தைப் பெறவேண்டு ]றில் முதலீடு செய்வது புத்திசாதுரியமாக
காழும்பு பங்கு பரிவர்த்தனை நிலையம் ாணப்படுகின்றது. ௗது என்பது இதிலிருந்து புலனாகின்றது.
1N ( Ꮞ9 )

Page 64
கொழும்புபங்கு பரிவர்த்தனை நிலையம்
பங்குச் சந்தைக்குப் பொறுப்பாக : மாகும். பிணைகள் பரிமாற்று ஆணைக் இலங்கையில் உள்ள ஒரே ஒரு பங்குச்சர துக் கம்பனிகளின் பங்குகளை வாங்குவத கின்றது. பதினைந்து உறுப்பினராக பங்குத்
முதலீட்டாளர்கள் இந்நிறுவனங்க இலகுவாக நடைமுறைப்படுத்தலாம்.
இலங்கை பிணைகள் பரிமாற்று ஆணைக் 1. பங்குப் பரிவர்த்தனையில் பட்டியல்படு யாவும் மத்திய வைப்புத்திட்டமுறைக்கு 2. பட்டியல்படுத்தப்பட்ட அனைத்து பினை செயல் ஒழுங்கிற்கு உள்வாங்கப்படும் பிணைப் பத்திரங்களை இலத்திரனிய மாற்றியமைத்தல். 3. பிணைப் பத்திரங்கள் யாவும் மத்திய 6 Lîl6OD600TuusĖJ856T 3560OTä5d66ð (CDSA/C) Lu, 4. 2012ம் ஆண்டு ஜனவரி 1ஆம் திக ஆவணங்களும் இலத்திரனியல் பிணை உ-ம்: பங்குப் பத்திரங்கள் போன்றவை
மேற்கூறிய செயற்பாடுகளின் மூ வழங்கப்பட்டுள்ளது.
பங்குகள் என்றால் என்ன?
ஒரு தொழில் முயற்சியில் பகு மூலதனத்தில் சமவளவு கொண்ட பகுதியே உ-ம் 1,00,000 ரூபா மூலதனத்தை 10/ பங்குகளாக வகுக்கப்படும்.
இதில் 1OO பங்குகளை கொ உரிமையைப் பெறுகின்றார்.
(so)

I (CSE) உள்ள நிறுவனம் பங்குப் பரிவர்த்தனை நிலைய தழுவினால் அங்கீகரிக்கப்பட்ட கம்பனியாகும். ந்தை இதுவாகும். விலைகோரிப்பெற்ற அனைத் 5ற்கும், விற்பதற்கும் ஏற்ற மையமாக செயற்படு தரகர் நிறுவனங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
ளை அணுகி தமது கொடுக்கல் வாங்கல்களை
குழு அறிவித்தல் த்தப்பட்ட கம்பனிகளின் பங்குபதப் பத்திரங்கள் ந உட்படுத்தப்பட வேண்டும். 0ாயங்களும் முழுமையான ஆவண முறையற்ற (Dermaterilization) SST6)g) 5|Télg56)IL26îleoff60I Iல் அல்லது காகித முறைமையற்ற நிலைக்கு
வைப்புத் திட்டத்தில் உள்ள பங்குத்தாரகர்களின் திவு செய்யப்படவேண்டும். திக்கு முன்பாக காகிதங்களில் உள்ள சகல களாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
).
முலம் பங்கு முதலீட்டுக்கு உச்சப்பாதுகாப்பு
ததியளவான உரிமையே பங்கு எனப்படும்.
பங்காகும். = பெறுமானம் கொண்ட பத்தாயிரம் (10,000)
ள்வனவு செய்பவர் 1000/= பெறுமதியான
உந்தூழ்

Page 65
பங்கு முதலீடு இலகுவானதா? இலகுவானது (3.bjjig (p565(B (Direct Investment) LD60sDcup85 cupg565GB (Indirect Investment)
நேரடி முதலீடு
கணனிப் பொறியின் உதவியுடன் பட்டிய சந்தை விலை, எதிர்காலச் சந்தை வாய்ப்பு போ தாம் விரும்பிய கம்பனிor கம்பனிகளில் பங்குக குறைவானது, குறிப்பிட்ட முதலீட்டாளரால் ம சந்தையின் உத்தியோக பூர்வமான இணையத கொள்ளலாம். இணையதளம்: WWWCSc.lk
மறைமுக முதலீடு
பங்குப் பரிவர்த்தனை நிலையத்து
நிறுவனங்கள் மூலம் பங்குகளைக் கொள்வன
நடைமுறைப்படுத்தல் என்பனவாகும்.
பன்முகப்படுத்தப்பட்ட முதலீடு (Diversification)
நடைமுறையில் எந்தக் காரணியின்
னையோ அல்லது குறைவடைதலையோ கொண
இறக்கம் கொண்ட தளம்பல் பல நிலை கொண்ட
சொத்தில் முதலீடு செய்யாமல் பல்வேறு வகை
பன்முக முதலீடாகும்.
1. பங்கு முதல்
2. கடன் முதலீடு
பங்கு முதல்
ஒரு கம்பனியின் அல்லது கம்பனிகளில் முதலாகும்.
கடன் முதல்
திறைசேரியின் கடன் பத்திரங்களை அல் செய்தல் கடன் முதலாகும். பங்கு முதலீட்டின் சிறப்பியல்பு
மத்திய வங்கி (CBSL) தனது பொருள அல்லது 6 வீதமாக பேணக்கூடிய முறையில் 6 ஏற்படுத்துகின்றது.
-உந்தூழ்
 

பிடப்பட்ட கம்பனிகளின் பங்குப் பெறுமதி ன்ற பல்வேறு தகவல்களை இனம் கண்டு ளைக் கொள்வனவு செய்தல். இது செலவு ட்டும் நடைமுறைப்படுத்தப்படும். பங்குச் ளத்தில் இருந்து தகவல்களைத் திரட்டிக்
|டன் இணைக்கப்பட்ட பங்குத்தரகர் வு செய்தல். கொடுக்கல் வாங்கல்களை
) விலையும் தொடர்ச்சியான அதிகரிப்பி
ர்டிருக்கமாட்டாது. இதன் விலைகள் ஏற்ற
வை. முதலீடு செய்பவர் ஒரே வகையான iš
5யான சொத்துக்களில் முதலீடு செய்தல்த
s
பங்குகளை கொள்வனவு செய்தல் பங்கு
}லது தொகுதிக் கடன்களை கொள்வனவு
ாதாரக் கொள்கையில் பணவீக்கத்தை 5 தாடர்சியான முறையில் மாற்றங்களை
-G5).

Page 66
பங்குகளில் முதலீடு செய்வதன் கிடைக்கிறது. இதனால் முதலீட்டின் பெறு ஏற்படுகின்றது. அத்துடன் முதலீடு அதிக வ
பல தொகுதிப் பங்குகளில் இருந் பின்வரும் காரணிகளை கவனத்தில் கொ
1. கம்பனிகளின் வியாபாரத் தன்மைக s516060ULib (CSE) (colombo Stock Excl கம்பனிகள் வெளியிடும், நிதிக்கூற்று பகுப்பாய்வு செய்து முதலீடு செய்தல் அ பகுப்பாய்வு அறிக்கைகளை அவதானி முதலீடு பல்தொகுதிப் பங்குகள் செய்ய
2. GlobLoIT60T Ustig556ft (Income Shares)
பங்குச் சந்தையில் வங்கித்துறை சார்ந் அதிக பங்குத் தாரர்களாக கொண்ட வழங்குகின்றன.
அனுகூலங்கள் 1. நட்ட அச்சம் குறைவு 2. முதலீட்டுச் செலவு குறைவு
பங்குப் பெறுமானம் அதிகரிக்கும்
. பங்குக்கான கேள்விகூடும்
5
. உபகாரப் பங்கு கிடைக்கும்
“1OOO பங்குகளை வைத்திருக்கி முறையில் உபகாரப் பங்கு வழங்க இய குறிப்பிட்ட நபருக்கு 20 பங்குகள் உபக பங்குகளை வைத்திருப்பார். மிலங்கா கம்பனிப்பங்குகள் (Milanka C
இக்கம்பனிகள் நீண்டகாலம் நிை கைத்தொழில்களில் முதலீடு செய்தி வருமானமும் கொண்டவை, திரவத்தன்ன தரக்கூடியவை. பங்குச் சந்தையில் பங்குக இக்கம்பனிகளில் முதலீடு செய்வது இலாப
G52)

மூலம் வருமானம் அதிகரிக்க மூலதன இலாபம் றுமதி அதிகரிப்பதுடன் மீள் முதலீட்டிற்கும் வழி |ளர்ச்சி அடைகிறது.
நது பங்குகளைச் கொள்வனவு செய்யும் போது ள்ளுதல் வேண்டும்.
ளுக்கேற்ப கொழும்பு பங்குப் பரிவர்த்தனை hange) இருபது துறைகளாக வகுத்துள்ளது. இக் ]கள், ஆண்டறிக்கைகள் கடன் தகமைகளை அல்லது பங்குத் தரகர்களினால் வெளியிடப்படும் ரித்து அல்லது பங்குத் தரகர்களின் உதவியுடன் JGOTIb.
3த கம்பனிகள், வெளிநாட்டு முதலீட்டாளர்களை - கம்பனிகள் கூடுதலான பங்கு இலாபத்தை
ன்ற ஒரு நபருக்கு 5 பங்குக்கு 1 பங்கு என்ற பக்குனர் சபை தீர்மானிக்கிறது” இதன் மூலம் ாரமாக கிடைக்கும். தற்பொழுது அவர் 102O
ompanies) )லத்திருக்கும் நோக்கம் கொண்டவை. பாரிய ருக்கின்றன. கூடுதலான அபிவிருத்தியும் மை கூடியவை தொடர்ச்சியாக பங்கு இலாபம் ளின் விலை, நிதானமாக அதிகரித்துச் செல்லும். கரமானதாகும்.
உந்தூழ்

Page 67
சுழற்சிப் unlig566i (Cyclical Shares)
நாட்டின் பொருளாதார போக்க்கு ஏற் பொருளாதார வளர்ச்சியேற்படும் காலங்களில் பொருளாதார வளர்ச்சி குறைவடையும் அல் இலாபம் குறைவானதாக அல்லது வருமானமற்ற
வளர்ச்சிப்பங்குகள் (Growth Shares)
சில கம்பனிகள் அதிவேகமான வளர்ச்சி லாபம் வழங்கப்படமாட்டாது. அல்லது குறை இலாபம் முழுவதும் மீள் முதலீட்டிற்கு அபிவிருத்தியடையும் நீண்டகாலத்தின் பின்பு இலாபத்தையும் வழங்கும்.
urgessfuurligasoir (Defensive Shares)
அத்தியாவசிய பொருட்கள், சேவைக பங்குகளைக் குறிக்கும். பொருளாதார மந்த விலைகள் குறைவடையமாட்டாது. தொடர் வருமானம் தரக்கூடிய பங்குகளாக காணப்படுகி உ-ம்: உணவுப் பொருட்களை உற்பத்தி ( காப்புறுதிக் கம்பனிகளையும் குறிப்பிட
பங்குகளை விற்பனை செய்யத் தீர்மானிக்கும் வேண்டியவை
பங்குகளை விற்பனை செய்யத் தீர்மா6 கவனிக்க வேண்டியது முக்கியமானதாகும். 1 முதலீடு எதிர்பார்த்த வருமானத்தை உழைத் 2. பங்குச் சந்தையில் பங்கின் விலை தொடர்ந்
மூலம் அறிந்து கொண்டதும்
கம்பனிகள் நீர்ணயிக்கப்பட்டகுறிக்கோள்களி 1 அரசின் பொருளாதாரக் கொள்கையில் மாற் 2. கம்பனிகளின் கொள்கையில் மாற்றங்கள் ஏ 3. பணவீக்கம் மாற்றமடையும் போது
4 வட்டிவீதங்கள் தாழ்நிலையில் இருக்கும் சந்
-உந்தூழ்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

றவாறு மாற்றமடையக் கூடிய பங்குகள் ) அதிக வருமானம் தரும் பங்குகளாகும். லது மந்தமடையும் காலங்களில் பங்கு றதாக காணப்படும்.
வீதத்தை வெளிப்படுத்தும் ஆனால் பங்கு ந்த வீதப் பங்குலாபம் வழங்கும் மிகுதி பயன்படுத்தப்படும். இதனால் கம்பனி அதிக மூலதனத்தையும் கூடுதலான பங்கு
ளை உற்பத்தி செய்கின்ற கம்பனிகளின் காலத்திலும் இக் கம்பனிப் பங்குகுளின் ந்தும் சமகாலத்திற்கும் பாதுகாப்பான ன்ெறது. செய்கின்ற கம்பனிகளாகும். அத்துடன் லாம்.
ம் போது கவனத்தில் கொள்ள
pl
罗 罗
b
Eக்கும் போது பின்வரும் காரணிகளை
ததும்
து அதிகரிக்க மாட்டாது என ஆய்வுகளின்
ன் இருந்துவிலகும்போது றம் ஏற்படும் போது ற்படும் போது
தர்ப்பத்தில்
-G58)

Page 68
5. கம்பனிகளின் மீள் முதலீட்டுக் கொள்
அடையும் நிலையில்
6. அரச வரி, மானியம், செலாவணிக்க
நிலையில்
மீள்முதலீட்டு வாய்ப்பு(Remevestment O எதிர்காலத்தில் இனங்காணப்பட்ட டிலும் பார்க்க சிறந்ததும், கூடிய வருமானப்
பங்குகளின் விலைகள் மிகைப்படு குறைந்த பெறுமதியுடையவை என அவதா
எதிர்காலத்தில் குறித்த பங்கு செய்யலாம் என இனங்காணப்பட்டால்
எதிர்கால வருமானத் திட்டமிடலி கொண்டது எனவும் பங்கு முதலீட்டிற்கு உ அவதானித்தோம்.
பன்முகப்படுத்தப்பட்ட வருமான வருமானப் பங்குகளில் எப்படி முதலீடு அவற்றின் வளர்ச்சிப் போக்கின் மீள் முத போன்ற விடயங்கள் தெளிவாக கூறப்பட் களை அறிந்து கொள்ளக்கூடியதாக உள்ள
ஆதாரம்:- கொழும்புப் பங்கு பரிவர்த்த6ை
G52)
 

கை பங்குலாபம் பங்கும் கொள்கை மாற்றம்
ட்டுப்பாடு என்பவற்றில் மாற்றங்கள் ஏற்படும்
pportunities) - முதலீடுகள் நடைமுறையில் உள்ள முதலீட் b தரக் கூடியவை எனத் தீர்மானிப்பதன் மூலம்
நித்தப்பட்ட பெறுமதி உடையதாகவோ அல்லது னித்ததும்
களை குறைந்த விலையில் கொள்வனவு
ல்ெ பங்கு முதலீடு எத்தகைய சிறப்பு தன்மை உச்சப்பாதுகாப்பு எப்படி இருக்கின்றது எனவும்
ம் எப்படிக் கிடைக்கின்றது. பங்கு இலாப செய்வது எவ்வகை பங்குகளில் முதலிடுதல் லீடு வாய்ப்பு. பங்குகளை விற்பனை செய்தல் ட்டுள்ளது. பங்கு முதலீட்டின் இலகுத் தன்மை
ğ5l.
TOT É6l6ODGDuu SM60D60OTUJu 56TLb www.cse.lk
உந்தூழ்

Page 69
மகிழ்ந்திருப்
இன்றைய இளைய சமுதாயம் மகிழ்ச்சி மகிழ்ச்சியான சம்பவங்கள் என்று அவர்கள் எ6 தருணங்கள் என்று அவர்கள் கருதுவது எ விளையும் போது சில வேளைகளில் ஆழ்ந்துசி
நாம் எபபோது மகிழ்ச்சி அடைகிறே எந்நாள் எதிர்பார்ப்பு மட்டத்தை விட அ இருக்கின்றதோ அத்தருணமேயாகிறது. எப்பெ அடைவு மட்டத்தை எதிர்பார்ப்பு மட்டமாக வ6 நாம் மகிழ்ச்சி உள்ளவர்களாகின்றோம். இ மட்டங்கள் வரையறை செய்யப்படவேண்டும் எ எதிர்பார்ப்பு மட்டங்கள் வரையறை செய் அடைவதற்காக உங்கள் சகல செயற்பாடுகளை முயற்சி எதிர்பார்ப்பு மட்டங்களை காட்டிலும் அ அமையும்.
அடைவுமட்டம் -> எதிர்பார்ப்
அண்மைக் காலங்களில் நாம் காலச் சு மிக அதிகமாகும். சில வேளைகளில் நாம் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறோம் என்பது எதிர்பார்ப்புக்களை ஒன்றன்பின் ஒன்றாக அ அடைவுகளை நின்று நிதானித்து அனுபவிக் ஒவ்வொரு மகிழ்வான தருணங்களையும் ந மறைந்துள்ள உங்களின் அடைவுக்காய் சிறி அனுபவியுங்கள் அவற்றை அளித்த இறை மனோபாவம் மீண்டும் இன்னோர் அடைவை நே
தனி மனித வளர்ச்சியுடன் அவனது 6 பூர்த்தி செய்யக் கூடிய ஆற்றலும் வளர்கின்றது
-உந்தூழ்
 

செல்வி.இ.மேனகா
LIGIDŲpuu DTTØT6î,
G6IDLI! Da56fhĩT OLULITBITI LIITILFITEM)6M).
யான தருணங்களை அனுபவிக்கின்றதா?
தை வரையறுக்கின்றனர்? தன்னிறைவான
தனை? இக்கேள்விகளுக்கு விடைகான ந்திக்க வேண்டியுள்ளது.
ாம் என்று அவதானித்தால் எத்தருணம் திக அடைவு மட்டத்தை உடையதாக ாழுது எங்களால் திருப்தி செய்யக் கூடிய ரையறை செய்கின்றோமோ அப்பொழுது தற்கான பொருள் சிறிய எதிர்பார்ப்பு ன்பதல்ல உங்களால் அடையப்படக் கூடிய யப்பட வேண்டும் என்பதே அவற்றை பும் ஒருமுகப்படுத்துங்கள். உங்களுடைய 9திக அடைவு மட்டத்தை ஈட்டித்தருவதாய்
புமட்டம் -> மகிழ்ச்சி
ழற்சியுடன் ஓடிக்கொண்டிருக்கும் வேகம் எதற்காக, எதனை நோக்கி அவ்வளவு து எமக்கு புரியாத புதிராக உள்ளது. டுக்கிக்கொண்டு செல்கின்ற போது எம்
கும் மகிழ்ச்சியை தொலைக்கின்றோம். தினைவு கூருங்கள். அவற்றின் பின்னே ய பெருமிதத்தை உங்களுக்குள்ளேயே வனுக்கு நன்றி தெரிவியுங்கள். இம் ாக்கிஉழைப்பதற்கு சக்தியைத் தரும்.
திர்பார்ப்புக்களும் வளர்கிறது. அதனை . எனவே ஒருவன் வயதுடன் வளர்கின்ற
Cass)

Page 70
எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யும் வ ஆற்றல் வேறுபட்டவை. எனவே தட எதிர்பார்ப்பு மட்டங்களினை அடைய
எட்டக்கூடியனவாக அமையும் இதன் மூல
தனி நபர் ஆளுமை, ஆற்றலி அடைவதற்கான வினைத்திறன் வேறுப( எட்டுவதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட வழிக தேர்வு செய்கையில் தன்னைப் பற்றி சுயம அறிவும் பயன்படுவது சாலச் சிறந்தது.
பிறருடைய அடைவு மட்டங்க தொலைக்கக் காரணமாகலாம். எனவே ஒப்பீடுகளைத் தவிருங்கள்.
உங்கள் எதிர்பார்ப்புக்கள் எட அவ்வாறு தவறும் பட்சத்தில் அவை உ அதிகரிக்கும் படிப்பினைகள் என்ற அள6 உங்கள் வாழ்வியல் சமநிலையை அதிக வாழ்க்கைச் சக்கரம் மகிழ்ச்சியாகவும் தன மகிழ்ச்சியான மனோபலம் பொருந்திய திருப்போம் மகிழவைப்போம்.
“கடலில் நீர்நிறை
அக் கடல் மேன்மேலும் அ
அசையா நிலைகொண்டிருப்பு
புகும்போது, அவற்றால் அை
6T6IGøOTIT, O6IGT IDØT

ல்லவனாகின்றான். இருந்த போதும் தனிமனித மக்குரிய தனித்திறமைகளின்அடிப்படையில் முயலும் போது அம் மட்டங்கள் இலகுவில் ம் மனமகிழ்ச்சி ஏற்படும்.
lன் அடிப்படையில் ஒரே அடைவுமட்டத்தை டுவதற்கான வாய்ப்பு அதிகம். ஒரே இலக்கை ளைப் பின்பற்ற முடியும். ஆதலால் அவற்றைத் )திப்பீடும் தமக்குச் சாதகமான வளங்கள் பற்றிய
களின் ஒப்பீடுகள் உங்கள் மகிழ்ச்சியைத் நமது வாழ்க்கையை இனிமையாக்குவதற்காக
ப்பொழுதுமே அடையப்படும் என்பதில்லை. ங்கள் எதிர்கால திட்டமிடலின் எதிர்பார்ப்பை வில் உள்வாங்கப்படுமேயானால் அவற்றிற்கான ம் குழப்பமடையாது தவிர்க்க முடியும். எனவே ர்னிறைவாகவும் அமைவதற்காய் உழைப்போம். சமுதாயத்தின் ஓர் அங்கமாவோம். மகிழ்ந்
அயூறுகள் வந்து விழும்போது,
வற்றால் நிரப்பப்படற்கு ஏற்றதாய்
து போல, விருப்பங்கள் தன்னுள்ளே
சவற்றவனாய் இயல்பாக இருப்பவன்
அமைதியை அடைகின்றான்.”
(கீதை)
ノ
உந்தூழ்

Page 71
பரீட்சை நேரத்துப்பதற் dinosis5 6pop
தேர்வு என்று சொன்னாலே பதற்ற
அதிகமானதும் படித்தது மறந்து விடும். புடித்ததெ பயம் வந்து விடும். தேர்வுக்கு பயந்தால் நினை தேர்வு நேரத்தில் குழம்பினால் நன்கு படித்திரு இயலாத நிலையே ஏற்பட்டு விடுகிறது.
தேர்வு நேரங்களில் ஏற்படும் குழப்ப
அறிந்திருத்தல் பயனுள்ளதாகும்.
-உந்தூழ்
படித்த பாடங்களைத் திரும்பத் திரும் நினைவில், எளிதில், மனதில், பதிய வைக் அவற்றை உபயோகித்துக் கொள்ள முடியு தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்பே ஏற்கன அவசியம். நேரத்திட்டம் ஒன்றை வகுத்துக் கொண் நேரம் ஒரு பாடத்தை படிக்க வேண்டும் கொள்ளவேண்டும். நேரமிருந்தால் கடந்த ஆண்டு நடந்த தேர் கேள்விகளுக்கான விடைகளை நாமே வழங்கலாம். முன் கூட்டியே திட்டமிடாமல் தேர்வுக்கு மு விழித்துப்படிக்கக் கூடாது தொடர்ந்து திடீரென அதிக நேரம் கண் விழித்துப் தலைவலி, காய்ச்சல், ஏற்படலாம். எனவே நாம் கற்கும் பாடசாலை வெகு தூரத்தில் போது புத்தகத்தை எடுத்துப் படிப்பது முடிய படித்த விடையங்களை மீளவும் ஞாபகப்ப தேர்வில் அதிக புள்ளிகள் பெற நாம் ஒt எடுக்க, சிந்திக்க தகுந்த நேரத்தை ஒதுக்கா
 

8 17 4
றத்தை தணிக்க றைகள்
செல்வி.அனுசிதா இரவீந்திரன்
உயிரியற் பிரிவு -2012, (oobig ID56f pig IITLITa)6).
ம் தானாகவே வந்து விடும். பதற்றம் ல்லாம் மறந்த பின் தேர்வு எழுதும் போது, ாவிலுள்ள தகவல்கள் கூட மறந்து விடும். ந்தும், தேர்வைச் சிறந்த முறையில் எழுத
ங்களைத் தவிர்க்கும் முறைகளை நாம்
பப் படிப்பதன் மூலம், அந்தப்பாடத்தை ந்கலாம். எமக்குத் தேவையான நேரத்தில் b.
வே படித்த பாடத்தை திரும்பவும் படிப்பது
டு ஒவ்வொரு நாளும் எவ்வளவு மணி ) என்பதை முன் கூட்டியே திட்டமிட்டுக்
ாவின் கேள்வித் தாள்களில் இடம் பெற்ற எழுதி, நாமே திருத்தி மதிப்பெண்
ன்பு இரவு நேரங்களில் வெகு நேரம் கண் அதிக நேரம் கண்விழித்துப்படிக்காது. படிப்பதால் உடலில் பல பிரச்சினைகள் நேரத்திட்டம் அவசியமானது. இருக்கலாம். பஸ்ஸில் பயணம் செய்யும் ாத காரியம். எனவே நாம் அந்நேரத்தில் டுத்தலாம். ப்வு எடுக்காமல் படிக்கக் கூடாது. ஒய்வு விடின் படிக்கும் போது குழப்பம் ஏற்படும்.
/1N C 57 )

Page 72
எனவே தூக்கத்தைத் தியாகம் செய்வ வேண்டும்.
பரீட்சைக் காலங்களுக்கு முை மாற்றங்களையும் எம்மிடையே ஏற்படுத் ஏறபடக்கூடிய பதற்றத்தைத் தவிர்த்து உய
“தனது வாழ்வே தீ என வாழ்ந்தவர்
நான் கற்ற காலத்தில் உங்களி உங்களிடமிருந்த பொறுமை, சாந்தம், போன்ற நல்ல பண்புகள் என்னை மிக அறியாமலே என் ஆளுமையில் பதித்து
நீங்கள் எனக்குச் சரியான ப வற்றிற்குமான நன்றிக்கடனை என்6 துர்ப்பாக்கிய நிலையே. நீங்கள் நோய் முடியாது போனதுயரம் என் நெஞ்சை வ
ஓராண்டென்ன ஓராயிரம் ஆ விளக்காக என்றும் ஒளிர்வீர்கள். உங் இணைந்து இறைவனை வணங்கி விடை
G58)

1தை விடுத்துத் தேவையான அளவு தூங்குதல்
ள்பே நாம் உடற்பயிற்சிகளையும் மேற்கூறிய நதிக் கொள்ளவோமானால் பரீட்சை நேரங்களில் பர் புள்ளிகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
நான் கற்றுத்தரும் பாடம்"
எண் அன்பு ஆசிரியை
ரிடம் இருந்து கற்றுக் கொண்டவை ஏராளம். பணிவு, ஆன்மீகப்பற்று, பிறர்க்கு உதவுதல் கவும் கவர்ந்திருந்தன. அப்பண்புகள் என்னை க் கொண்டேன்.
ாதையையே காட்டியிருக்கின்றீர்கள். எல்லா னால் தீர்க்க முடியாது போனமை எனது வாய்ப்பட்ட நிலையில் உங்களை வந்துபார்க்க பதைக்கின்றது.
ண்டு சென்றாலும் நீங்கள் எமது வாழ்வின் கள் ஆன்மா சாந்தியடைய குடும்பத்தினருடன் பெறுகின்றேன்.
உந்தூழ்

Page 73
வயலின் - ஓர் அற
நரம்பு வாத்தி வில்லின் துணை கொண் உள. இதில் வயலின் என் கொண்டு வாசிக்கப்படும் இசைக் கச்சேரிகளி இன்றியமையாத பக்கல்
நாடகம், நாட்டிய நிக பங்கினை வகிப்பதுடன் தனிக்கச்சேரி (Solo) பெற்றுள்ளது. எளிமையான சிறிய அமைப்ை உண்டாகும் தெளிவான இனிமையான வெளிப்படுவதால் பெரிய அரங்குகளில் தனியா பாடுவோரின் குரலுடனும் மிகவும் ஒருங்கிை உள்ளதால் கர்னாடக இசையில் தனிச்சிறப்பு வாய
வயலின் வாத்தியத்தின் சிறப்பியல்புகளாகப் பின் 1. தந்திகளின் மேல் வில்லினால் இழைத்து வ
ஸ்வரங்களுடன் கூடிய இனிய நாதம். 2. நீளமான வில் கொண்டு வாசிக்கப்பதனால்
நாதம். 3. எந்த சுருதிக்கும் சுலபமாக சுருதிசேர்த்துவாக 4. மெட்டுக்கள் இல்லாத விரற்பலகையைக் கெ
களை வாசிக்கக்கூடிய வசதி. 5. 4 ஸ்தாயிகளிலும் தேவைக்கேற்ப பிரயோ
வசதி. 6. வெவ்வேறு இடங்களுக்கும் இலகுவாக எடுத்
இருத்தல். 7. மிகவும் தெளிவாக சாகித்தியங்களை உண
கூடிய வசதி 8. எல்லாவிதமான இசைநுணுக்கங்களையும் எ
9. பாடகர்கள் பாடுவதற்கேற்ப வாசிக்கக்கூடிய வி 10. பாடகர்களுக்கு அனுசரணையாகப் பக்கல்
-உந்தூழ்
 
 
 

ma ' l -
றிமுகம்
செல்வி.பிரவீனா ஆனந்தகுமாரசாமி உதவி விரிவுரையாளர், நுண்கலைத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
பங்களில் மீட்டி வாசிக்கப்படுபவை, டு வாசிக்கப்படுபவை என இருவகைகள் ற இசைக்கருவியானது வில்லின் துணை ) ஒரு இசைக்கருவி ஆகும். கர்னாடக லி வயலின் இன்று ஒரு சிறந்த வாத்தியமாகத் திகழ்கின்றது. பஜனை, ழ்ச்சிகளிலும் இவ்வாத்தியம் முக்கிய நிகழ்கச்சிகளிலும் முக்கிய இடத்தைப் பக் கொண்ட இவ்வாத்தியத்திலிருந்து நாதம் அதிக அதிர் வலைகளுடன் ாகவும் ஏனைய இசைக்கருவிகளுடனும், ணந்து, இணைந்து செல்லும் பாங்கில் ப்ந்து விளங்குகின்றது.
வருவன அமைகின்றன. ாசிக்கும் போது உண்டாகும் ஸ்வயம்பு
அதிலிருந்து உண்டாகும் கார்வையான
சிக்கும் தன்மையுடையது. ாண்டிருப்பதால் ஜாரு போன்ற கமகங்
கங்களைத் துரிதமாக வாசிக்கக் கூடிய இ
துச் செல்லக் கூடிய அமைப்புடையதாய்
ர்த்துமளவில் வில்லை உபயோகிக்கக்
ளிதாக வெளிப்படுத்தும் ஆற்றல். சதி. வாத்தியம் வாசிப்பதற்கு இவ்விசைக்
Q59)
8 17 4

Page 74
2.
கருவியில் உள்ள தனித்தன்மைகள். 11. பஞ்சம சுருதியிலும் மத்திம சுருதியி 12. பல விதமான இசை முறைகளை
வெளிப்படுத்தும் தன்மை.
மறுமலர்ச்சியின் பின் தோன்ற வயலின் வாத்தியம் மேலே கூறப்பட்ட ச கர்னாடக இசையில் நன்கு இடம்பெற்று யாததாயும், தலைசிறந்த வாத்தியமாகவ புகழுடன் விளங்குகின்றது.
வயலினின் வகைகள் வயலின் படுகிறது. இவ்வாத்தியங்கள் ஒரே கொண்டிருக்கும்.
இவ்வயலினின் குடும்பவகைகளாவன: வயலின் செல்லோ
6) G3U JT6)T
6)(3UITGDITUITLb(3UITGUIT
வயோலா டி-ஆமோர் லிரா-டா-ப்ராக்சியோ
பேஸ் வயோல் -
லிராவயோல் வயோலெட்டா மரீனா
வயோலெட்டா பிக்கால்லோ -
> வயலினின் வகை
1. பாம்பூவின்வயலின்
பிலிப்பைன் தீவுகளின் தலைநகரா வயலினை வாசிக்கின்றனர். இவ்வயலி வில்லை உபயோகிக்கின்றனர். இந்த வில் பயன்படுத்துகின்றனர். இதற்குப் பாம்பூவி மூங்கிலால் செய்த பெட்டியும் உண்டு.
2. (SLIII.Gao II alusbajr (Phono Violin)
இது சமீப காலத்தில் அமெரிக்காவில்
Сво)

லும் வாசிக்கத்தகுந்த வசதி. பும் அவற்றின் நுணுக்கங்களையும் தெளிவாக
லிய ஐரோப்பிய இசைக்கருவியான இன்றைய ாரணங்களினால் இந்திய இசையில் குறிப்பாகக் இவ் இசையுலகில் மேம்பட்டதாயும், இன்றியமை ம், இசைக் கருவிகளில் மிகவும் சிறந்தது என்னும்
குடும்பம், வயோல் குடும்பம் என்றும் அழைக்கப் அமைப்புடன் வித்தியாசமான அளவுகளைக்
(Violin Cello) (Viola) (Viola Pomposa) (viola d'amore) (Lira-da-braccio) (Bass Viol) (Lyra Viol) (Violetta Marina) (Violetta Piccolo)
கிய மணிலாவில் மூங்கிலால் செய்யப்பட்ட னை வாசிப்பதற்கு மூங்கிலால் செய்யப்பட்ட லின் உரோமத்திற்குப் பதிலாகப்பட்டு நூலையே ன் என்று பெயர். இந்த வயலினை வைப்பதற்கு
செய்யப்பட்ட ஒரு வித வயலின். இதில் உடலுக்
உந்தூழ்

Page 75
குப் பதிலாகக் கூம்பு வடிவத்திலுள்ள ஒரு கு! கிறது. இதில் கேட்கும் நாதம் சற்று மங்க வாசிப்பவர்கள் இந்தக் கருவியை வாசிக்கலாம்
3. LIII is 6.ILLIsfajr (Bharat Violin)
இது அமைப்பில் சாதாரணமான வயலினை நீண்டு சதுர மரத்துண்டுகளில் இருந்து மேல் குடையப்பட்டு விலாப்பக்கத்தில் நடுமையாக விலாப்பலகைகள் இதில் கிடையாது. மேல் பல பாகத்தை விட்டுக் குடையப்படுகின்றது. ஆக ஒட்டப்படாமல் மேற்பலகையுடனேயே சேர்ந் கருவியில் அதிகமாகப் பழுது வருவதில்லை. வயலினைப் போலவே இருக்கும்.
4. ஏழுதந்திவயலின்
தற்காலத்தில் தந்திகள் கொண்ட வயலினை நீங்கலாக மற்ற மூன்று தந்திகளும் இரட்டிக்கப்பு மேல் ஸட்ஜம், கீழ் பஞ்சமம், மேல் பஞ்சமம் வாசிக்கப்படும். உதாரணமாக பிரபல வயலின் மாணவன் வயலின் வித்துவான் சேதுராமையான
-உந்தூழ்
 

8 17 4
ழாய் நாதப் பெருக்கியாக உபயோகப்படு லாகவே இருக்கும். சாமானிய பிடிலை
ப் போலவே உள்ளது. ஆனால் இதன் உடல்
பாகமும், அடிப்பாகமும் சம அளவாகக் ஒட்டப்பட்டுள்ளது. சாதாரண பிடிலிலுள்ள கை குடையும் போதே Bass bar பலகைப் வே இதில் Bass bar சட்டம் தனியாக துள்ளது. இந்த அமைப்பினால் இந்தக்
மிகுதிப் பாகங்கள் எல்லாம் சாதாரண
ன சிலர் வாசிக்கின்றனர். இதில் 4" தந்தி பட்டிருக்கும். இந்தத் தந்திகள் கீழ் ஸட்ஜம், என்று வித்தியாசத்துடன் சுருதி சேர்த்து கலைஞர் மைசூர் செளடையா அவரது
வைக் கூறலாம்.

Page 76
வயலினின்தோற்றம்
உலகின் பல பாகங்களில் இருந்து யான வில்லின் உதவியுடன் வாசிக்கப்ட முதன் முதலாகத் தோன்றியிருக்க வே அரங்குகளில் வாய்ப்பாட்டிற்கும், வாத்தி விளங்கும் வயலின் வாத்தியத்தின் பிறப் (Leonard Richard) GT60TU6)ld 5Lb, (36)gDé கொண்டுள்ளதுடன் இது இந்தியாவில் ஐரோப்பாவில் பரவியிருக்கலாம் என்றும்
தற்காலத்தில் வழக்கில் இருக் முற்காலத்தில் இந்தியாவில் இருந்த கர்ப பி.வஜ்ரவேலு முதலியார் ஆணித்தரமாகக் வாசிப்பது போன்று சித்தரிக்கப்பட்ட சி திருமகடலு என்னும் ஊரில் உள்ள ஆல மிகச் சிறந்த பக்கவாத்தியமாக விளங்கும் கருவிகளின் சிற்பங்கள் மேற்கிந்தியாவி இசைக்கருவிகளின் சிற்பங்கள் வங்கா உள்ளன.
இன்று வயலின் என வழங்கட் இருந்ததாகத் தெரிகிறது. இது நாளடைெ
நூற்றாண்டின் முற்பகுதியில் என்றும் அறியப்படுகின்றது.
பரிமாண வளர்ச்சி
வயோல் என்ற வாத்தியம் வயெ மாகப் பார்க்கும் போது வயலினைப் போe அம்சங்களை உள்ளடக்கியது. வயோல் யானதும் மண்டபங்களில் பயன்படுத்துவ படுத்தப் பொருத்தமானதாகும். வயோல் புழக்கத்தில் இருந்துள்ளன. வயலின் 1 மேலோங்கியது. 13" நூற்றாண்டில் வே வயலின் உருவானது.

தும் ஆராய்ச்சியாளர்கள் வயலினின் முன்னோடி Iட்ட இசைக் கருவியானது இந்தியாவில் தான் ண்டும் எனக் கருதுகின்றனர். கர்னாடக இசை யங்களுக்கும் மிகச் சிறந்த பக்கவாத்தியமாக பிடம் இந்தியாவே என்று லியோனாட் ரிச்சர்ட் சில மேல்நாட்டு ஆராய்ச்சியாளர்களும் ஒப்புக் இருந்து அரேபியா, பாரஸிகம் மூலமாக கூறுகின்றனர்.
கும் வயலின் வாத்தியத்தின் தோற்றத்திற்கு 0வீணை என்ற வாத்தியம் வழிவகுத்தது என்று க் கூறியுள்ளார். இக் கர்மவீணையை ஒரு பெண் சிற்பம் ஒன்று மைகர் மாநிலத்தைச் சேர்ந்த யத்தில் உள்ளது. இன்று வடஇந்திய இசையில் ஸாரங்கி போன்ற தோற்றத்தை உடைய இசைக் வில் பல ஆலயங்களிலும் ஸரிந்தாவை ஒத்த ாளத்திலுள்ள விக்ஷனுபுரம் ஆலயங்களிலும்
படும் இசைக்கருவி கி.பி.13 நூற்றாண்டில் வில் பல்வேறு பரிமாண வளர்ச்சிகளை பெற்று தற்போதைய வடிவத்தினை அடைந்துள்ளது
லினுக்கு முந்தய காலத்தது ஆகும். மேலோட்ட Uத் தோற்றமளித்தாலும் வயோல் பல வேறுபட்ட இன் தொனி மென்மையானதும் இனிமை பதை விட வீடு, அறை போன்றவற்றில் பயன் வாத்தியமும் வயலினும் 16 நூற்றாண்டில் 700 ஆண்டு வயோல் வாத்தியத்தை விட யால் வாத்தியத்தை முன்னோடியாக வைத்து
உந்தூழ்

Page 77
மேலே காட்டப்பட்டுள்ள படம் வயே வயலின் இரண்டிற்குமிடையிலான வேறுபாட்ை காட்டுகிறது. வயோலின் பிற்பகுதி தட்டைய அமைய வயலினின் பிற்பகுதி வெளிப்புறம் நோ வளைந்ததாகக் காணப்பட்டது. வயோல் இன் உ பகுதி தடிப்புக் கூடியதாகவும் வயலினின் உடற் ப தடிப்புக் குறைவாகவும் காணப்பட்டது. வயோ மேற்புற வளைவு வயலினை விட சரிவு கூடிய உள்ளது. ஒலி அதிர்வுதுளை வயோல் இற்கு வடிவமானதாகவும் உள்ளது. வயோல் இன் அகலமானதாகவும், விரற்பலகை இழைகளால் சு பட்டது. வயோல் 6 மெல்லிய தந்திகளை உடைய தடித்த 4 தந்திகளைக் கொண்டு
அருகே வயோல், வயல பட்டுள்ளது. வயோல் இன் பா யானதாகும். இது ஒரே நேரத் மீட்ட உதவுகிறது.
அருகே உள்ள படம் முற்கால வயோல் இ வில்லின் தோற்றமாகும். இது தற்கால வயல வில்லை விட அகலமானதாகும். வில் போடும் வேறுபடுகிறது.
13", 14 நூற்றாண்டு பிடில் வாத்தி அம்சங்களைக் கொண்டதாக உள்ளது. முக்க வளைவுப் பகுதி, ஒலியதிர்வுத் துளை ஆகியன ஒத்
இடது காலத்து களையும் தொடக்கப் படுகின்றன பயன்படுகி
-உந்தூழ்
 
 

ால்,
DL35
T55
ாக்கி
-டற் குதி லின்
5T85
C வடிவமானதாகவும் வயலினிற்கு S கழுத்துப் பகுதி வயலினை விட ற்றப்பட்டுப் பிரிக்கப்பட்டதாகவும் காணப் தாகவும் இருக்க வயலின் அதனை விடத் |ள்ளது.
லின் இரண்டினதும் பாலங்கள் காட்டப் லம் வயலினின் பாலத்தை விட தட்டை தில் எல்லாத் தந்திகளையும் வில்லால்
) முறையும் மேலே காட்டப்பட்டவாறு
யம் தற்கால வயலினின் பல்வேறு கியமாக இதனுடைய உடற்பாகத்தின் த்து அமைகின்றன.
பக்கத்தில் உள்ளவை Medieva வெவ்வேறு வடிவங்களையும், அளவு
உள்ள பிடில்கள் ஆகும். இவை 3 ம் 5 தந்திகள் உடையவையாக காணப் எ. அவற்றில் ஒரு தந்தி சுருதிக்காகப் றெது.
(33)
1 DE

Page 78
முற்காலப் பிடில் இன் வில் சுலப வளைத் துக் குதிரை மயிரினா ஆக்கப்பட்டதாகும். இது தற்கால வில்லி நீளம் குறைந்ததாகவும் காணப்பட்டது.
இந்த லைறா B பரிமாணம் ஆகும். வாத்தியத்தில் இரு வளைவையும் அகல வாசிக்கும் தந்திகளு ஒலியதிர்வுத் துளை முடையதாகவும் மா முன்னோடியாக அை
வயலின் 16"நூற்றாண்டின் நடுட் பிறக்கியோ ஆகியவற்றிலிருந்து உரு 4 பிரடைகள், உள்வளைந்த உடற்பகுதிய இருந்தது. இந்த வடிவம் 400 ஆண்டுக றாண்டில் இத்தாலியில் உருவாக்கப்பட்( மெருகூட்டப்பட்டது. 18" நூற்றாண்டில் ராட்டினி ஆகியோர் வயலின் வாசிப்பதி 19" நூற்றாண்டில் வில்லின் வடிவம் சி பாவனை மேலும் அதிகரித்தது.
அருகில் காட் வயலின் 1709 ஆண் ரோணியோ ஸ்ராடிவார ரால் உருவாக்கப்பட்டது டைய அலங்காரச் சுருள் மான வேலைப் பாட் தொழில்நுட்பத்திறனை
18", 19" நூற்றாண்டுகளில் வய பட்டமையால் மேலும் மிகத் துல்லியமா6 உருவாக்கப்பட்டுள்ளது. இதனுடைய தந்
Св4D
 
 

த்தில் வளையக் கூடிய தடியை லி இறுகக் கட்டப் பட்டு னை விட அகலமானதாகவும்
பிறக்கியோ மத்திய காலப் பிடில் இன் உடைய
இது 15 நூற்றாண்டின் பிற்பகுதியில் பிடில் நந்து கூர்ப்படைந்தது. இது மெல்லிய உள் ன்ற விரற்பலகையையும் கொண்டது. இதற்கு 5 நம் 2 சுருதி தந்திகளும் உண்டு. ஆரம்பத்தில் கள் C வடிவம் உடையதாகவும் பின்னர் f வடிவ ற்றப்பட்டது. இதுவே வயலினுடைய மிக முக்கிய Dமந்தது.
பகுதியில் மத்தியகாலப் பிடில் றிபெக், லைறா டீ வானது. ஆரம்ப கால வயலின் 4 தந்திகள், பும், 2க வடிவநாதத்துளைகளையும் கொண்டதாக ளில் சிறிய மாற்றமடைந்தது. வயலின் 16 நூற் டு ஸ்ராடிவாறி, குவர்நேறி ஆகியோரால் மேலும் வயலின் இசையமைப்பாளர்களால் விவல்டி, ல் புதிய நுட்பங்களை அறிமுகப்படுத்தினார்கள். சிறந்த முறையில் அமைக்கப்பட்டதால் வயலின்
ہانا لالاہا ۔
டில் அன்
றி என்பவ து. இதனு * நுணுக்க டைக் கொண்டதாகவும் அக்காலத்
ப் பறைசாற்றுவதாகவும் உள்ளது.
பலினின் முக்கியத்துவம் உணரப் ன தொனி உடையதற்கால வயலின் திகள் பழைய வயலின்களை விட
உந்தூழ்

Page 79
மெல்லியதாகவும் அழுத்தம் கூடியதாகவும் வன மாக வில் போட சுலபமாக உள்ளது.
* பாகங்களும் அதன் பயன்பாடும்
வலது பக்கத்திலுள்ள படம் வயலி உட்பகுதியைக் காட்டுகிறது. a) நாதத்தூண் - பாலத்தின் வலது அடிப்ப
பட்டிருக்கும். இது ஒலி பிற்பகுதிக்கு அனுப்புகிறது. b) பேஸ் பார் - வயலினுடைய உடற்பகுதி பட்டுள்ளது. இது அதன் 2 வைத்திருப்பதுடன் ஒலியதி இந்தப்பாகங்கள் இல்லாவிட்டால் எதி குழப்பமடையும்.
வாசிக்கும் முறை
பெருவிரல் சிறிது வளைந்து வில்லின் மயிருக்கும் இடையில் இழை இழுதாணிக்கு விரல்களுக்கு எதிராக மேற்கண்டவாறு ை போடுவதில் வெவ்வேறு முறைகளைக் கண்( வெவ்வேறு பாணிகளை ஏற்படுத்தலாம். சாதா பான முறையில் மேல்நோக்கியும் கீழ்நோக்கியு யில் இருந்து வில்லின் நுனிவரை தந்தியில் போ
வயலினின் அமைப்பு
இன்றைய வயலினின் பல்வேறு பரிமாணங்
பகுதிகளால் இதன் வடிவம் உருவாக்கப்படுகிற
அழுத்தமாகவும் கெட்டியாகவும் அமைந்து இருக்
வயலினின் உடலானது மேல்ப்பலகை, கீழ் இணைக்கப்பட்டுள்ளது. விலாப்பலகைகள் சும வயலின் தயாரிப்பதற்கு உபயோகிக்கப்படும் ப உலர்த்திப் பதப்படுத்தப்படும். இப் பதப்படுத்தப்ப வையாக, அழகான சாரல்களைக் கொண்ட விரற்பலகை, பிரடைகள், செருகாணி, தந்திதா
-உந்தூழ்

ளைவான பாலத்தைக் கொண்டதால் சுத்த
னுடைய உடற் பகுதியின்
ாகத்தின் கீழே பொருத்தப் அதிர்வுகளை வயலினின்
பின் பின் பகுதியில் ஒட்டப் உடற்பாகத்தை விறைப்பாக ர்வைப் பரிமாற்றம் செய்கிறது.
ரொலி குறைக்கப்படுவதுடன் தொனி
குச்சிக்கும் வில் இருகில் 3°, 2° வக்கப்படும். வில் டுபிடிப்பதன் மூலம் ரணமாக வழவழப் ம் இழை திருகாணி டப்படுகிறது.
களைக் கொண்ட பல்வேறு மரங்களின் து. இவ்வாத்தியத்தின் அடிப்பலகை சற்று கும்.
ப்பலகையை ஆறு விலாப்பலகைகளால்
ார் 1% அங்குல உயரம் உடையவை. ]ரக்கட்டைகள் பல ஆண்டுகள் நிழலில் ட்ட மரங்களில் கணுக்கள் முடிச்சுகளற்ற வையாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. ங்கி, மேல்மெட்டு என்பவை கருங்காலி
-C65)-

Page 80
மரத்தினால் செய்யப்படுகிறது. வில் பிறேசில்வுட் (Brazil Wood), ஸ்னேக்வுட் மரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
வயலின் தயாரிப்பதற்குப் பின்வரும் மரங் 1. 60)LJ66T (Pine)
2. GBLDLí6řT (Maple)
3. flöbel pü (Syhamore) 4. GróleÓlo).j gpös (Silverook) 5. 6m5LIT (Codar Red & Whito)
மேற்குறிப்பிட்ட மரங்களினால் உரு பாகமும் எடை குறைவானதாகவும், உறு னின்று எழும் இனிமையான நாதத்திற்கு இன்றியமையாதது.
வயலினின் பாகங்களும் அவற்றின்செய வயலின் பல்வேறு பாகங்களைக் கொ மரங்களில் இருந்தும் தயாரிக்கப்படுகின்ற தாயும் அதே சமயம் எடை குறைவானதாய வெவ்வேறு மரங்களில் செய்யப்படுகின்ற உலோகத்தால் ஆனவை.
t e o
siji tasoi,
திருகனிண தந்தித்தாங்கி
 
 
 

செய்வதற்கு பேணம்புகோ (Pernambuco), (Snake Wood), 536, (Beach Wood), (3UIT6TD
கள் பயன்படுத்தப்படுகின்றன. GrðÜlebGrid (Spruce) கருங்காலி (Ebony)
53 (Beach) 6sfuo TGOUJ60TLuj (himalayanfir)
5வாக்கப்படும் இவ்வாத்தியத்தின் ஒவ்வொரு றுதியாகவும் இருக்கும். வயலின் வாத்தியத்தி உருவாக்கப்படும் மரத்தின் தன்மை மிகவும்
ற்பாடுகளும்
"ண்டு அமைந்துள்ளது. இப் பாகங்கள் பல்வேறு ன. ஒவ்வொரு சிறிய பாகங்களும் உறுதியான பும் இருப்பதற்காகவே ஒவ்வொரு பாகங்களும் ன. தந்தியும் உலோகத் திருகாணியும் மட்டுமே
& &x&\;&&#jằ đặ}ắỉt
O * të jax si
។ ខ្លះböវិuxy
கழுத்தும் தலைப்பகுதியும்
உந்தூழ்

Page 81
உடல், விலாப்பலகை, இடை, கழுத்தும் தை விரற்பலகை, பிரடைப்பெட்டி, பிரடைகள், ஸ்வர காணி, தந்தித்தாங்கி நாண், தந்தித்தாங்கி இரு சட்டம், மோவாய்தாங்கி, உள்வரி இணைப்பு, ஒலி
* வயலின் வில்லின் பாகங்களாக;-
isixx:
༡. s ఖభ్యర్ట్కోజీ
வில்குச்சி, இழைகள்,திருகாணி, வில்முனை, கட்டை என்பவை காணப்படுகின்றன.
l. 9 Li (Body)
6). UJ65g)60)LU) g LGD60)Ls பலகை, கீழ்ப்பலகை, பக்கப்பலை மேற்பலகையும், கீழ்ப்பலகையு களால் இணைக்கப்பட்டன. பக்கப் இணைக்கப்பட்டது. மேற்பலகை என்னும் மரங்கள் பயன்படுத்தப்
உள்ளதாக இருக்க வேண்டும். அ படுத்தப்படும். இம்மரப் பலகை குறுக்குச் சாரல்க வயலின் உடற்பகுதியின் பின்புறத்தில் இரு சம பட்டிருக்கும். சில வயலினின் அடிப்பலகை ஒரே ப
2. விலாப்பலகை (Rib)
இவை மேற்பலகையும் கீழ்ப்பல6 பலகைகளால் ஆக்கப்பட்டது. இது பக் ஸிகமோர், பைன் போன்ற மரங்களினின்று பலகை, கீழ்ப்பலகைகளின் விளிம்பிற் ே பக்கவாட்டில் சுவர் போன்ற நிறுத்தி ஒட்டட் யாக அமைந்துள்ளது.
-உந்தூழ்
 
 
 

8 1 74
லப் பகுதியும், நாதத்துளைகள், குதிரை, க்கட்டை, தந்திகள், தந்தித்தாங்கி, செரு க்கை, நாதக்குச்சி, திருகாணி, மந்திரச் யடக்கி.
འོང་།། }tజ#####'జాః
திருக**
* முத்துச்சிற்பித்தகடு
முத்துச்சிற்பித்தகடு, பூண், நாணிறுக்கிக்
>ப்பு நீள்வட்ட வடிவமானது. இது மேற் கை என்று மூன்று பிரிவுகளாக உள்ளது. ம் இரண்டிரண்டு தனித்தனிப் பலகை பலகை வளைந்த 6 தனிப்பலகைகளால் க்கு பைன், ஸ்ப்ரூஸ், ஹிமாலயன்பர் படுகின்றன. மேற்பலகை நெடுஞ்சாரல் டிப்பலகைக்கு மேபிள் மரம் உபயோகப் ளைக் கொண்டதாக இருக்க வேண்டும். அளவுள்ள பலகைகள் சேர்த்து ஒட்டப் லகையாகவும் இருக்கும்.
கையும் இணைக்கும் வளைந்த 6 தனிப் கப்பலகை எனப்படும். விலாப்பலகை றும் உருவாக்கப்படுகின்றன. இவை மேற் கற்றவாறு வளைத்துப் பின் வயலினின் பட்டு உடற்பகுதி அழகான நாதப் பெட்டி

Page 82
3. 660L (Waist)
இது வயலினின் உடலின் வளைந்து காணப்படும். இதனா கொண்டு உள்ளது. முதலாவது, ந வயலின் உடல் பகுதியில் பட்டு
காணப்பட்டது.
4. கழுத்தும் தலைப்பகுதியும் (Neck
இது திட்பம் வாய்ந்த ம Silver Wood), fa5e pjÜ (Syc கின்றன. கழுத்து என்று அை சுருள் (Scrol) ஆகும். தண் பகுதியுடன் இணையும் வரை
கீழ்ப்புறம் உருண்டையானது விரற்பலகை நன்கு பதிவதற்கு மேற்பலன்
5. Big55grap6trasoi (Sound Holes)
இவை வயலிலு களிலும் ஞ வடிவத் அமைக்கப்பட்டுள்ளன நாதத்தை இத் துளை கிறது. உடலினுள் அ6 நிறுத்துவதற்கும் இை
6. g5d5og (Bridge)
தாங்கி இது மி ujac G3 இருப்பதனால் வில் வீச்சின் செயலாற்றி:
போன்ற மரங்களில் செய்யப்படுகிறது.
Cij8Y
 
 
 
 

நடுப்பகுதியில் இரு விளிம்புகளிலும் உட்புறமாக ல் உடற்பகுதியானது ஒரு சிறிய இடையைக் ான்காவது தந்திகளில் வில்லால் வாசிக்கும் போது இடையூறு விளைவிக்காமல் இருக்க இவ் இடை
& Head) ரமான சிவப்பு நிறம் கொண்ட சில்வர் மரம் (Red amore) ஆகிய மரங்களில் இருந்து செய்யப்படு ழக்கப்படுவது தண்டி. தலை எனப்படுவது தண்டிச் டியின் அகலம் தலைப்பகுதியில் இருந்து உடற் விரிவடைந்து செல்லும். பின் கழுத்துப் புறத்தில் து. இது கை சுலபமாக செயலாற்ற உதவுகிறது. கை தட்டையாக அமைக்கப்பட்டுள்ளது.
னுடைய மேற்பரப்பில் பாலத்தின் இருபக்கங் துவாரங்கள் ஒன்றையொன்று பார்த்த வண்ணம் I. இது உடலின் உட்புறப் பகுதியில் பரவும் களின் வழியாக சீராக வெளிக்கொணர உதவு மைந்துள்ள நாதக்குச்சியைச் சரியான இடத்தில் வதுளைவாயிலாகப் பயன்படுகின்றன.
ளைந்த வயலினின் மேற்பரப்பின் குவிந்த பகுதி நடுவில் நாதத் துளைகளிற்கிடையே தந்தி க்கும் விரற்பலகைக்கும் இடையே காணப்படும். கவும் நுட்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது. குதிரை மற்பாகம் மிகவும் மெல்லியதாகவும் வளைந்தும் ) எளிதாக அமைகிறது. இது புங்கமரம், ஸ்ப்ரூஸ்,
உந்தூழ்

Page 83
7. GiulibuGogoas (Finger Board)
இது தண்டியின் மேற்பரப்பில் ஒட் (Ebony) மரத்தினாலே செய்யப்பட்டுள் சற்று வளைந்தும் இருக்கும். வேகமாக வி இவ்விரற் பலகையின் மெட்டுக்கள் இல்ெ வாசிக்கக்கூடியதாக உள்ளது.
8. úīUGODLů6huiup (Peg Box)
*xx. தண்டியின் மேற்புறத்த o இடையில் ஒரு சிறிய பெட்டி பக்கங்களிலும் 2 பிரடைகள் வீ;
9. úga)L856ír (Pegs)
கருங்காலி மரத்தால் கரியது ஆகையால் நூ
AAA தாங்கிப்பிடிக்கும் பிரை ク* முனையில் விரலால் ட
அமைக்கப்பட்டுள்ளன. த
r
இவை உதவுகின்றன.
IO. GiborgiasiaDL (Top Nut)
இது விரற்பலகைய பொருத்தப்பட்டுள்ளது. பிரடைகளில் பிணைக் குதிரை மீது சென்று நகராமல் இருக்க இதன் கட்டை விரற்பலகையின் இது தந்தியை அழுத்தி வாசிக்கவும் ஸ்வரங்கள் கிறது.
II. g55a56 (Strings)
வயலினில் 4 தந்திகள் உள்ளன. இ6 கொண்டுள்ளவை. உயர்ந்த சுருதியில் ( அதற்கு அடுத்த சுருதியில் சேர்க்கப்படும் சுருதியில் சேர்க்கப்படும் தந்தி 3"தந்தி தந்தி 4"தந்தி என்றும் அழைக்கப்படும்.இ
-உந்தூழ்
 
 
 
 
 

டப்பட்டிருக்கும். விற்பலகை கருங்காலி ளது. இதன் மேற்பரப்பு வழவழப்பாகவும், ாசிக்க இவ்வமைப்பு உதவியாக இருக்கும். ாததால் அதிதுரித காலத்தில் கமகங்களை
தில் கழுத்திற்கும் அலங்காரச் சுருளிற்கும் போன்ற அமைப்புடையது. அதன் இரு நம் 4 பிரடைகள் காணப்படுகின்றன.
ஆனவை. தற்போது கருங்காலி கிடைத்தற் க்கமரத்தில் செய்யப்படுகிறது. தந்தியைத் டகள் நீண்ட உருண்டையான குச்சியின் பிடித்துத் திருகுவதற்கு ஏற்ற வகையில் ந்திகளின் சுருதியைக் கூட்டிக் குறைக்க
பின் மேல் தண்டியின் தொடக்கப் பகுதியில் கருங்காலி மரத்தால் ஆனது. தந்திகள் கப்பட்டு ஸ்வரக் கட்டையின் மீது படிந்து தந்திதாங்கியை அடையும். தந்திகள் மேல் ஒவ்வொரு வெட்டு உள்ளது. ஸ்வரக் ர் மட்டத்திலிருந்து சற்று உயர்ந்து உள்ளது. ரின் ஒலி வேறுபாட்டை உயர்த்தவும் உதவு
வை சுருதிக்கேற்ப வெவ்வெறு பருமனைக் சர்க்கப்படும் தந்தி முதல் தந்தி என்றும் தந்தி 2"தந்தி என்றும் அதற்கு அடுத்த என்றும் தாழ்ந்த சுருதியில் சேர்க்கப்படும்
podup60pGuЈЕ, А„D, GebфLib.
Св9)

Page 84
12. g655Ind5(Tailpiece)
வயலின் உடலின் கீழ்ப்பு
பைக் கொண்ட பகுதி இதுவாகும்
கள் பிணைப்பதற்காக நான்கு துை
13. 6hro585Iaff (End Plug)
இது வயலினில் கி
இடத்தின் நடுவில் ெ
கருங்காலி மரத்தால்
பிணைக்கப்பட்டிருக்கு
14. 565Mäieß BMCör (Tail Piece Chor தந்திதாங்கியின் நாண் ஆகும். இதற்கு
15. 5.55uids&gios (Tail Piece S
G3LO துள்ள சிறிய தந்திதாங்கியி காணியில் ெ இருந்து சிறிது உயர்ந்து இப்பகுதி காணப்ட
16. Bg5 is g3df (Sound Post)
நாத
U6060D5560
குச்சியா மரங்களி
மெட்டின்
வயலினு உயிர் போன்றது. தந்திகளினின்று உண் பரவி, உடலினுட்புறத்தில் சுழன்று, அலை சீராகச் செம்மையாக ஒருங்கிணைத்து
Gzo)
 
 
 
 
 
 

பகுதியில் காணப்படும் முக்கோண வடிவமைப் இது கருங்காலி மரத்தால் ஆனது. இதில் தந்தி ளகள் மேற்புறத்தின் ஓரத்திலுள்ளன.
ழ்ப் பக்கத்தில் இரு விலாப்பலகைகளும் சேரும் Fருகப்பட்டுள்ள மர ஆணியாகும். செருகாணி ) ஆனது. தந்திதாங்கி நாண் இப்பகுதியில் ம்.
d)
கீழ் உள்ள துளையில் வைத்துக் கட்டியுள்ள 5 நரம்பு அல்லது உலோகக் கம்பி பயன்படுகிறது.
addle) ல் பலகையின் கீழ் விளிம்பின் நடுவில் பதித் மரத்துண்டு. இது கருங்காலி மரத்தால் ஆனது. ல் கட்டியுள்ள நரம்பு இதன் மேல் சென்று செரு பாருத்தப்பட்டிருக்கும் விளிம்பின் மட்டத்தில் படுகிறது.
5க் குச்சி வயலினின் மேற்பலகையையும் கீழ்ப் )யயும் இணைத்துக் கொண்டிருக்கும் ஓர் சிறிய கும். இது எடை குறைந்த பைன், ஒக் போன்ற ல் செய்யப்படுகிறது. இந்த நாதக்குச்சி பால கீழ் அமைக்கும் விதத்தில் எத்தகைய சாதாரண ம் சிறந்த நாதத்தைத் தரும். இது வயலினில் டாகும் நாதம் அதிர்வடைந்து உடல்முழுவதும் ந்து விரிவடையும் போது அவ் அதிர்வலைகள் வெளியேற்றுவது நாதக்குச்சியாகும். இது
உந்தூழ்

Page 85
(5560) Jujab 6JGug|UT5556T 1mm-2mm 6)6OULL வேண்டும். இது 2% அங்குல உயரமுடையது.
17. d5cab6frgof (String Adjuster)
உலோகத்தாலான இத் யின் மேல் உள்ள துவாரத் கும். இது சுருதியினை நுட் தாகச் சேர்க்க வழிவகுக்கிறது
18. Db5rðasti Luib (Bass Bar)
மேற்பலகையின் அடிப்பாகத்தில் குதிரையி ருக்கும் மரச்சட்டம். இது 9 அங்குல நீளமானது, ! பைன், மேபிள் மரத்தால் ஆனது. மேற்பலகை அழிந்துவிடாமல் இது பாதுகாக்கிறது.
19. GILDIGTmuůIgGmref5 (Chin Rest)
மேற்கத்திய முறை
பட்டது. இது தோள் மீது
அல்லது நாற்காலியில் இ
அமைக்கப்பட்டது இப்பகு தந்திதாங்கியின் அருகில்
18. உள்வரிஇணைப்பு (Linings)
வயலினின் உட்பகுதியில் விலாப்பலகை
ஓரங்களில் ஒட்டப்பட்டிருக்கும் நாடா போ
இடைவெளி ஏற்படாமல் தடுக்கவும் பலமானதாக
19. g65uILids (Mute)
வாசிக்கும் போது வயலினில் உண்டாகும் ஒ வெளிப்படுத்தும் கிளிப் போன்ற கருவியாகு வாசிக்கப்படுகின்றது. ஒலியடக்கி மரத்தினால், செய்யப்படுகிறது.
-உந்தூழ்
 
 

ான தூரத்திற்குள் நாதக்குச்சி நிறுத்தப்பட
திருகாணி தந்திதாங்கி தில் பொருத்தப்பட்டிருக் பமாக அதேசமயம் எளி
5l.
ன் இடது பாதத்திற்குக் கீழ் ஒட்டப்பட்டி இதனை மந்திரஸ்தாயிசட்டம் என்பர். இது 3யில் ஏற்படும் அழுத்தத்தினால் பலகை
யில் வாசிப்பவர்களுக்காக உண்டாக்கப் சார்த்திக் கொண்டும், நின்று கொண்டும் இருந்து கொண்டும் வாசிக்க பள்ளமாக நதி. இது கருங்காலி மரத்தால் ஆனது. மோவாய்தாங்கி காணப்படும்.
களும் உடற்பலகைகளும் இணையும் ன்ற 12 சட்டங்களாகும். கரைகளில் இருக்கவும் இவை ஒட்டப்படுகின்றன.
ஒலியினை மிதமாக்கி, குறைந்த ஒலியை ம். இது குதிரையின் மேல் பொருத்தி கொம்பினால் அல்லது உலோகத்தால்
G710

Page 86
20.6fig3df (Bow Stick)
2
இந்தியா தயாரிக்க புகோ, ை இது உரு (53d e காணப்படுகின்றது. குச்சியின் அடிப்பகுதி வதற்கென ஒரு செவ்வகத் தகடும் சுரக் வதற்காக குச்சியின் கீழ்முனையில் ஓர்
21. 6aopaioi (Bow Hair)
இ அமைந்த 10
உரோம இன ரோசனம் எ குச்சியின் கூ பசை வைத் மெருகூட்டிய கிளிஞ்சல், பளபளப்பா6 பெருமை வகுத்தவர் ஸ்ப்ராங்காயிஸ்டே
22. d5(565saf (Screw)
இப்பகுதி ( பிணைக்கப்பட்டிரு தளர்த்துவதற்கும் இ
G2)
 
 
 
 

% அங்குலம் வரையுள்ள இந்த வில் தற்போது வில் ரோஸ்வுட் என்கின்ற நூக்கமரத்திலேயே ப்படுகிறது. மேலை நாட்டில் செடார், பெருநாம், பன் மரங்களே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. ண்டை வடிவம் கொண்ட மரக்குச்சியாகும். இக் டிப்பாகத்தில் இருந்து முனைவரை சிறுத்துக் யில் நாணிறுக்கிக் கட்டை, இரு பக்கமும் நகர்த்து 5ட்டையுடன் இயங்கும் திருகாணியை பொருத்து அகழ்வும் உண்டு.
தில் குதிரை முடி அல்லது செயற்கைப் பட்டினால் O முதல் 120 வரை உரோம இழைகள் உள்ளன. ழைகளின் உராய்வுத் தன்மை அதிகமாக இருக்க ன்ற பொருள் இதன் மீது தடவப்படுகிறது. வில் ம்புப் பகுதியில் உரோம இழைகளின் ஒரு முனை து அழுத்தமாக ஒட்டப்பட்டு அதன் மீது தந்தம், ன பிளாஸ்ரிக் மூடப்பட்டிருக்கும். வில்லுக்குப் ார்ட் (குசயஉெழளைநவழரசவந).
குச்சியின் அடிப்பாகத்தில் உள்ளது. குச்சியில் க்கும் இழைகளை முறுக்கி ஏற்றுவதற்கும், து பயன்படுகிறது.
உந்தூழ்

Page 87
வயலின் வாசிக்கும்முறையும் சுருதிசேர்க்கு
வாசிப்பு முறையில் நின்று வாசிப்பது, நாற் இருந்து வாசிப்பது எனப் பலவகை உண்டு. பே இருந்தும் வாசிக்கும் முறை கையாளப்படுகிறது.
கர்னாடக இசை நிகழ்ச்சிகளில் இவ்வாத்தி வலது காலை முன்னே நீட்டி, குதிக்காலின் பக்க (Scrol) பகுதியை அழுத்தி மார்பில் வயலினின் பிடித்துக் கொள்ள வேண்டும். வில்லினைப் பிடி மேலாக ஆள்காட்டி விரலும், அதனையடுத்து ம வேண்டும்.
வயலின் வாசிப்புமுறையில் 2வகை உண்டு. அ6 1. பிடி வாசிப்பு. 2. ஜாரு வாசிப்பு.
என்பனவாகும்.
பிடி வாசிப்பில் விரலடியே பிரதானமாகக் அசைவின்றி ஸ்வரஸ்தானங்களில் வைத்து அனுஸ்வரங்கள் கூடுதலாக இடம் பெறும். பிடி ( கூடுதலாகக் காணப்படும்.
ஜாரு வாசிப்பில் ஸ்வரங்கள் இழைத்து வ கமகத்துடன் காணப்படும். வாசிப்பவர் ஒரு ஸ்த அதற்குரிய கமகத்துடன் அசைத்து வாசிப்பர். பல முறையில் ஸ்வரங்களை நன்றாக வாசிக்க முடியு
குதிரைக்கும் விரற்பலகைக்கும் இடையே போது எழும் இனிமையான நாதம் குதிரையின் முழுவதும் பரவி, தொடர்ந்து விலாப்பலகை முழுவதும் பரவி உடல் முழுவதும் பரவுகின்றது போது குச்சி மேலும், கீழும், நகராதபடி நே மிருதுவாகவும் ஒரே நேர்கோட்டில் வைத்தும் போது வலக்கை மணிக்கட்டு வளைந்தும் த6 லாவகத்தில் வில்லில் எல்லா அம்சங்களையுL
-உந்தூழ்

ம்முறையும் காலியில் இருந்து வாசிப்பது, தரையில் லை நாடுகளில் நின்றும், நாற்காலியில்
யத்தை வாசிப்பவர் தரையில் அமர்ந்து த்தில் இருக்கும் குழியில் சுருள் போன்ற உடல் பாகத்தின் மேற்புறத்தை அழுத்திப் க்கும் போது வலது கை கட்டை விரலின் ற்ற 4 விரல்களும் படிப்படியாக அமைய
D6L660 -
கையாளப்படுகிறது. இதில் விரல்களை து வாசிப்பர். இவ்வகை வாசிப்பில் வாசிப்பில் வரும் ஸ்வரங்களில் அதிர்வு
ாசிக்கப்படும். இதில் ஸ்வரங்கள் வரிக் ானத்தில் இருந்து மறு ஸ்தானம் வரை ஆண்டுகள் பயிற்சியின் பின்னரே ஜாரு b.
உள்ள பகுதியில் வில்லினை உராயும்
இரு பாதங்கள் ஊடாக மேற்பலகை
நாதக்குச்சி மூலமாக அடிப்பலகை . வில்லைத் தந்திகளின் மேல் போடும் ாகவும், வில்லைத் தந்திகளின் மேல் வாசிக்க வேண்டும். அப்படிச் செல்லும் டையில்லாமல் எளிதாகவும் செல்லும் ) பெற முடியும். வில்லைத் திடீரென
حمى ومصر C 73 )

Page 88
முற்றிலும் நிறுத்தவும் நாதம் மெதுவாக விடவும் கற்றுக் கொள்ளுதல் அவசியம
* வில்லிசைக்கும்முறைகள்
இவை பலவாகும். தேவைக்கேற்ற6 1. சாகித்திய முறையில் வாசிக்கும் (
இசைத்து வாசிப்பது நன்று. 2. ராகம் வாசிக்கும் சந்தர்ப்பங்களில் ஸ்வரங்களில் கார்வையுடன் நீ கொடுக்கும். 3. தானம் வாசிக்கும் போது வில்லை
கவர்ச்சிகரமாக இருக்கும். 4. ஸ்வரவில் வாசிக்கும் முறையில்
வாசிப்பதாகும்.
0.
சுருதிசேர்க்கும்முறை வயலினில் உள்ள 4 தந்திகளும் முe * 1 ஆம் தந்தி மத்தியஸ்தாயி பஞ் * 2 ஆம் தந்தி மத்தியஸ்தாயிகூடி * 3 ஆம் தந்தி மந்தரஸ்தாயி பஞ் * 4 ஆம் தந்தி மந்தரஸ்தாயிகூடிட் எனச் சுருதி சேர்க்கப்படுகின்ற ஸபரித (EADG) என்ற முறையில் சேர்ச்
தமிழ்த்தினப் போட்டிக சாதனையாளர்க
வேம்படி மகளிர் கல்லூரியின் தமிழ் கடமையாற்றிய ஆசிரியர் இயல், இை பெறச் செய்து தமிழ்த்தினப் போட்டிகளி வழி சமைத்தவர். எனது முன்னேற்றத்தி ஆசிரியர் அவர்களின் நினைவாக அ இந்நூலுக்கு கட்டுரையை வரைவதில் ம
 
 

5க் குறைந்து ஒன்றுமில்லாது போகும் வரை விட்டு ' ாகும்.
வாறு பயன்படுத்தப்படும். அவையாவன:- போது சாகித்தியத்திற்குத் தகுந்த மாதிரி வில்லை
வில்லை நீளமாகப் போட்டுக் கொண்டு முக்கிய றுத்தி வாசிப்பது கேட்பதற்கு இனிமையைக்
க் குதிப்பு முறையில் போட்டு வாசிப்பது மிகவும்
ஒவ்வொரு ஸ்வரத்திற்கும் ஒரு வில் போட்டு
றையே,
சமம் (ப)
ட்ஜம் (ஸ)
சமம் (ப)
ஐம் (ஸ) து. மேல்நாட்டு இசை முறையில் பரிதக அல்லது 5கப்படுகின்றது.
ளில் தேசிய மட்டம் வரை ளை உருவாக்கியவர்
மன்றப் பொறுப்பாசிரியராக பல ஆண்டுகள் ச, நாடகம் மூன்றிலும் மாணவர்களைத் தேர்ச்சி ல் தேசிய மட்டம் வரை சிறந்த அடைவுகளை பெற ற்கு என்றும் ஆக்கமும் ஊக்கமும் அளித்த எனது அவர்களின் குடும்பத்தினரால் வெளியிடப்படும் கிழ்ச்சி அடைகின்றேன்.
உந்தூழ்

Page 89
எழுத்துக்களும் அத
திரு
தமிழ் இலக்கண நூலில் எழுத்து என்ற குறிக்கவும். அவ்வொலிக்குரிய வரிவடிவத்தை ஒவ்வொரு எழுத்துக்கும் ஒலிவடிவம், வரிவடிவ எழுத்தை உச்சரிக்கும் போது எழும் ஒலியைய எழுதப்படும் வடிவத்தையும் குறிக்கும்.
தமிழ் எழுத்துக்களை முதலெழுத்து, படுத்துவர். முதலெழுத்து என்பது 12 உயிரும் 1 மொழிக்கு அடிப்படையான ஒலியைக் குறிக்கா மெய் எழுத்துக்களையும் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப நீ களையும். குறிக்கும். 1. முதலெழுத்து
இது உயிர் எழுத்து மெய் எழுத்து என இருவ 1. உயிர்னழுத்து:
அ,ஆ.இ.ஈ.உஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஒள இவை பி தனியாக ஒலிக்கலாம். கால அளவைபப் ெ
படும்.
1. குறில் எழுத்து
அ,இ.உ,எ,ஒ இவை ஐந்தும் குறில் எழு அளவு ஒரு மாத்திரை. i. நெடில் எழுத்து
ஆஈ.ஊ.ஏ.ஐ.ஓ,ஒள ஆகிய ஏழு எழுத்து எழுத்துக்குரியகால அளவு இரண்டுமா
மேலும் கூட்டு உயிர் அல்லது சந்திய அவை ஐ,ஒள ஆகிய இரண்டுமாகும்.
11. மெய்எழுத்து
க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்.ல்,வ்,ழ்,ள்,ற்,ன் அ களாகும். உயிர் ஒலிகளின் துனையின்றி இவற்
-உந்தூழ்

தன்வகைகளும்
மதி.ஜெயமாலினி சிவானந்தமூர்த்தி ஆசிரியர் , கிளி/பூநகரி மகா வித்தியாலயம், பூநகரி.
சொல் மொழியில் வழங்கும் ஒலியைக் ந குறிக்கவும் பயனபடுத்தப்பட்டுள்ளது. ம் இரண்டும் உண்டு. ஒலி வடிவம் என்பது பும், வரிவடிவம் என்பது ஒரு எழுத்தின்
சார்பெழுத்து என இரண்டாக வகைப் 8 மெய்யுமாகும். சார்பெழுத்து என்பது து இரண்டு ஒலிகளைக குறிக்கும். உயிர் *ண்டோ, குறுகியோ ஒலிக்கும் எழுத்துக்
கைப்படும்.
ற எழுத்துக்களின் துணையின்றி தனித் பாறுத்து குறில் நெடில் என இரு வகைப்
த்துக்களாகும் இவ் எழுத்துக்குரிய கால
துக்களும் நெடில் எழுத்துக்களாகும். இவ் த்திரை.
க்கரம் எனப்படும் எழுத்துக்களும் உள
ஆகிய 18 எழுத்துக்களும் மெய் எழுத்துக் றைத் தனியே ஒலிக்க முடியாது. மெய்
(75 )

Page 90
எழுத்துக்களை அவற்றின் உச்சரிப்பு
இடையினம் என மூன்று தொகுதிகளாக 6
1. வல்லினம்
வெடிப்பொலி அல்லது தடைஒலிகள் 6
i.வமல்லினம்
ங்,ஞ்,ண்,ந்,ம்,ன்,ஆகிய எழுத்துக்க6ை களை நாம் உச்சரிக்க முடியாமையின கூறுவர்.
i.இடையினம்
ய்,ர்,ல்,வ்,ழ்,ள், வல்லினம், மெல்லினம் இண்டிற்கும் இவை இடையினம் எனப்படுகிறது.
மேலே குறிப்பிட்ட எழுத்துக்களைத் களும் உள்ளன. ஜ,ஸ,ஷ,ஹ போன்றவை
சார்பெழுத்து
12 உயிர் எழுத்துக்களும் 18 ே படையான எழுத்துக்கள். அதனால் அை வகைப்படுத்தப்பட்டன. இவை தவிர உயிர் சூழ்நிலைக்கேற்ப தமக்கு உரிய மாத்தி சார்பெழுத்துக்களை நன்னூல் 10 வகைய
1. உயிர் மெய் எழுத்து
ஆய்தம் உயிரளபெடை ஒற்றளபெடை ஐகாரக்குறுக்கம் ஒளகாரக்குறுக்கம் மகரக்குறுக்கம் ஆய்தக்குறுக்கம் குற்றியலுகரம் 10. குற்றியலிகரம்
முதல்நிலை எழுத்துக்கள்
முதல் நிலை என்பது ஒரு எழு
குறிக்கும்.
12 உயிரும் சொல்லின் முதலில் வரும்
1N (76 )

முறையினை ஒட்டி வல்லினம், மெல்லினம், வகைப்படுத்துவர்.
நம் வன்மை ஒலியைக் கொண்டவை. இவற்றை Tனவும் கூறுவர்.
ா மூக்கினைப் பொத்திக் கொண்டு இவ்வொலி ால் இவ் எழுத்துக்களை மூக்கொலிகள் எனவும்
இடைப்பட்ட வகையில் உச்சரிக்கப்படுவதால்
5 தவிர தற்காலத்தில் தமிழில் கிரந்த எழுத்துக் பாகும்.
மெய் எழுத்துககளும் தமிழ் மொழிக்கு அடிப் வ முதலெழுத்துக்கள் என இலக்கணக்காரரால் மெய் எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் சந்தர்ப்ப ரையை விட நீண்டு அல்லது குறுகி ஒலிக்கும். ாக கூறுகிறது.
2த்து சொல்லின் முதலில் இடம் பெறுவதைக்
உந்தூழ்

Page 91
வல்லின மெய் எழுத்துக்களில் க,ச, மொழிக்கு முதலாகி வரும்.
மெல்லின எழுத்துக்களில் நம ஆகி மொழிக்கு முதலாகிவரும்.
வகரம் உஊ,ஒ.ஓ ஆகியவை தவிர்ந்த உயிர்களு
யகரம் அ, ஆ, உ, ஊ, ஒ, ஒள ஆகிய உய வரும்.
ஞகரம் ஆகாரத்துடன் மட்டுமே மொழிக்கு முதல்
ட, ற, ர, ல ஆகிய மெய் எழுத்துக்கள் தமி நிலையில் வருகின்றது.
உ-ம்: டாக்டர், றைவர், லட்டு, ருசி
ஜ, ஷ, ஸ, ஹ ஆகிய கிரந்த எழுத்துச் சொற்களில் மொழிக்கு முதலாகிவருகின்றது.
உ-ம்: ஜனாதிபதி, ஷரத்த, ஸாத்திரம், ஹர்த்தால்
ங், ண், ன், ழ், ள் ஆகிய மெய் எழுத்துக்கள் 8ெ எனினும் தத்தம் பெயரைச் சுட்டும் போது அவை உ-ம்:ங்கரம், ணகரம், னகரம், ழகரம், ளகரம்,
உயிர் மெய் எழுத்துக்கள் போன்று வருவதில்லை. எனினும் பிறமொழிப் பெயர் மெய்களும் மொழிக்கு முதலாகிவருகின்றன. உ-ம்: ஸ்பானியா
இறுதிநிலை எழுத்துக்கள்
இறுதி நிலை என்பது ஒரு எழுத்து சொc பெறுவதைக் குறிக்கும்.
-உந்தூழ்

த,ப ஆகிய நான்கும் 12 உயிருடனும்
ய இரண்டும் 12 உயிருடனும் சேர்ந்து
நடன் மொழிக்கு முதலாகிவரும்.
விர்களுடன் இணைந்து மொழிக்கு முதலில்
0ாகி வரும்.
விழில் வந்து சேர்ந்த பிற சொற்களில் முதல்
5கள் தமிழில் வந்து சேர்ந்த பிறமொழிச்
Fால்லின் முதல் நிலையில் வருவதில்லை பும் மொழிக்கு முதலாகி வருகின்றது.
று தனிமெய்கள் மொழிக்கு முதலில் கள் சிலவற்றை எழுதும் போது தனி
ஸ்லாக்கத்தில் சொல்லின் இறுதியில் இடம்
○

Page 92
எ, ஒ, ஒள தவிர்ந்த ஏனைய : நிலையில் வருகின்றன.
மெய் எழுத்துக்களில் ண, ம, ன அ ஆகிய ஐந்து இடையினங்களும் சொல்லா
வல்லின மெய்கள் இறுதிநிலையில் சொற்களையும், இடப்பெயர், ஆட்பெய வருகின்றன. உ-ம்: ஈராக், ஜோசப், லெனின்
பிறமொழிப் பெயர்களைத் தமிழி எழுத்துக்கள் தற்காலத் தமிழில் இறுதியில்
இந்துநாகரிகம் கற்று பூநகரி மகா வித்தியாலயத்தில் எமக்கு உ
கற்பித்த ஆசிரியப் பெருந்தகையும், எம: ராகவும் இருந்து எம்மை நெறிப்படுத்திய நடராஜா ஆசிரியை அவர்களை நினை
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய
பிள்ளையாரை வேண்டுகின்றோம்.
2; ܥ

உயிர் எழுத்துக்கள் சொல்லாக்கத்தில் இறுதி
ஆகிய மூன்று மெல்லினங்களும் ய, ர, ல, ள, ழ க்கத்தில் இறுதிநிலையில் வருகின்றன.
ல் வருவதில்லை.தற்காலத் தமிழில் பிறமொழிச் ர்களை எழுதும் போது இறுதி நிலையில்
ல் எழுதும் போது ஜ், ஷ், ஸ், ஹற் ஆகிய கிரந்த வருகின்றன.
த் தந்த இனிய ஆசிரியை
யர்தர வகுப்பில் இந்து நாகரிகப் பாடத்தினைக் து உயர்தர மாணவ ஒன்றியத்தின் காப்பாள ஆசிரிய மாமணியுமான திருமதி.கலாதேவி வ கூர்ந்து இவ் ஆக்கத்தினை எழுதியதோடு எல்லாம் வல்ல இணுவை பரராஜசேகரப்
ഉ_gr് -

Page 93
தமிழின் சிற
இன்றைய உலகம் இமாலய அளவில் இவற்றிலே தொடர்பாடல் என்னும் துறையி கண்டுவிட்டது. ஆயினும் தொழில்நுட்பத்தைத் மொழி என்னும் கருப்பொருளிலேயே உள்ள குழந்தையாய் நாம் இருந்திருப்பின் தொழில்நு அனைத்தும் மொழியிலிருந்தே வளர்ந்தன. இ வாய்ந்தது எம் தாய் மொழியாம் தமிழ்மொழி.
தொன்மை என்னும் பதத்திற்குத் த கூறிடலாம். அத்தனை பழைமை வாய்ந்தது. முன்னோர் "கல்தோன்றி மண்தோன்றாக் கால எனப் “புறப்பொருள் வெண்பாமாலை" என்னும்
லத்தீன், கிரேக்கம், ஆரியம் போன்ற ( பழைமை வாய்ந்தனவாக இருந்த போதிலும் ஆ உள்ளன. சில அத்தகைய வடிவத்தைக் கூட எழுத்துருவிலும் பேச்சுருவிலும் காணப்படுகின் தமிழுக்கும் உள்ளது. ஆனால் அதன் அழிவு அறிந்தில்லை. அதற்குக் காரணம் நம் மொழி பாரதி ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி என்றான். இவ்வார்த்தை அவர் புகழ்ச்சிக்காய் சு கூறிய உத்தம வார்த்தைகள்.
தமிழ் மொழியின் சிறப்புக்கு வித்திட்டன மூன்றையும் முத்தமிழ் என்பர். தமிழ் மொழியி இயல் அதாவது இலக்கியங்கள் இவற்றின் பங் முதல் இன்றைய கவிஞர்கள் வரை எத்தனை இ அன்றைய காலங்களில் தோன்றிய இலக்கியங் என்று வருணித்தனர். அதாவது இலக்கியங்கள் சேர்ப்பன என்பதே இதன் பொருள் இதில் ஐம்(
-உந்தூழ்

றப்பு
செல்வி.கீர்த்தனா இரவீந்திரன்
IT Gamblg D6ff prori IITLITa)6). தொழில்நுட்ப ரீதியில் வளர்ந்துள்ளது. ல் தொழில்நுட்பமோ அதீத வளர்ச்சி தாண்டியும் தொடர்பாடலின் அடிப்படை து. ஆதிமனிதன் போல் மொழியறிவில் நுட்பம் ஏது? தொடர்பாடல் சாதனம் ஏது? த்தகைய மொழிகளிலே மிகவும் சிறப்பு
மிழ் மொழியை எடுத்துக் காட்டாகக் நம் தாய்மொழி இதனாலன்றோ நம்
த்தே, வாளொடு முன்தோன்றி மூத்த குடி”
நூலில் கூறியுள்ளனர்.
மொழிகளும் தமிழ் மொழி அளவிற்குப் அவை இன்று ஏட்டுருவில் மாத்திரமேயே டப் பெறவில்லை. ஆனால் நம் தமிழ் றது. மேற்கூறிய மொழிகளின் தொன்மை ஆரம்பப்புள்ளி என்ற இடத்தைக் கூட கொண்டுள்ள இனிமை இதனாலன்றோ போல் இனிதாவது எங்கும் காணோம்" sறிய வார்த்தைகளன்று உள்ளம் பூரித்துக்
வை இயல், இசை, நாடகம் என்பன. இவை
罗 ன் சிறப்பு இவை மூன்றுமேயாகும். இதில் மி
கு மிக முக்கியமானது. அன்றைய கம்பர் லக்கியப் படைப்புக்களைத் தந்துள்ளனர். வ்கள் தமிழ் அன்னையின் ஆபரணங்கள் ர் எம் தமிழ் மொழிக்கு மேலும் அழகு பெரும் காப்பியங்களான சிலப்பதிகாரம்,
වේ

Page 94
மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளை களாக குறிப்பிடப்பட்டன. சங்ககால சோழர்காலம், போன்ற ஒவ்வொரு வளர்க்கப்பட்டது. முத்தொள்ளாயிரம், போன்றன எல்லாமே தமிழில் இக்காலகட்
இசை வடிவிலும் தமிழ்மொழி அ என்று கூறும் அளவிற்கு பக்திப்பாக்கள் L ஆழ்வார்கள் தேவாரங்கள் மற்றும் பாசுர அவை இன்று வரை எமக்கு தெவிட்டா இ6
இன்று நாடகம் என்னும் வடிவம் தந்த கூத்தேயாகும். கூத்துக் கலையா களிக்கும் கலையின் வடிவமான சினிமா தாய் மொழியாம் தமிழில் தோன்றிய கூத்
இவ்வாறு இயலும், இசையும், ! இன்னும் அழகு சேர்க்கின்றன. "தமிழுக்கு எங்கள் உயிருக்கு நேர்” என்றார் பா வருணித்துள்ளார். அத்தனை சிறப்பு கிடைத்தமை அதன் பெருமையைப் பை புகழ்ந்து இன்று வரை வளர்த்து விட்ட ( முறையும் என்றும் அழியாது வளர்த்திட காலம் மலர்ந்துவிட்டது.
- சென்றதினி மீளாது, மூ எப்போதும் சென்றதை கொன்றழிக்கும் கவ6ை குமையாதீர்! சென்றதன இன்று புதிதாய்ப் பிறந் எண்ணமதைத் திண்ண தின்று விளையாடி இ6 தீமையெல்லாம் அழிந்து
\ -
G8O

யாபதி, குண்டலகேசி என்பன அவ் ஆபரணங் ம், சங்கம் மருவியகாலம், பல்லவகாலம், காலத்திலும் தமிழானது இலக்கிய ரீதியில் தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு டங்களில் வடிக்கப்பட்ட நூல்களேயாகும்.
>ழகுற வளர்க்கப்பட்டது. தமிழைப் பக்திமொழி Iல தமிழ்மொழியில் தோன்றின. நாயன்மார்கள், "ங்களைத் தமிழ் மொழியில் எமக்காய் தந்தனர். ன்பத்தேனை எம் காதினில் பாய்ச்சுகின்றன.
பெற்றவை அனைத்தும் அன்று எம் தமிழ் தாய் னது தோன்றியிராவிடின் நாம் இன்று கண்டு ந்துறை என்பதே இருந்திரா. நாடகங்களுக்கு நம் தே அடிப்படையாய் அமைந்துள்ளது.
நாடகமும் இணைந்து எம் இனிதான தமிழுக்கு 5ம் அமுதென்றுபேர் அந்தத் தமிழ் இன்பத் தமிழ் ரதிதாசன் தமிழை அவர் உயிருக்கு நிகராய் மிக்க தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்தும் றசாற்றி நிற்கின்றது. மூவேந்தர் தாம் போற்றிப் எம் தமிழன்னையை இனிவரும் இளையதலை . வேண்டும். கணனியிலும் தமிழ் வளர்ந்திடும்
முடரே நீர் யே சிந்தை செய்து மயெனும் குழியில் வீழ்ந்து னக் குறித்தல் வேண்டா! தோமென்று நீவீர் முற இசைத்துக்கொண்டு ர்புற்று இருந்து வாழ்வீர்! துபோம்! திரும்பி வாரா!
பாரதி)
உந்தூழ்

Page 95
அன்னியர் ஆட்சிக் காலத்திற்
புராணம் பள்ளு அம்மானை
புராணம்
பள்ளு
காவியம்
அந்தாதி
தூது
அம்மானை
வைத்தியம் சோதிடம்
-உந்தூழ்
போர்த்துக்கேய
ஞானானந்தபுராணம் ஞானப்பள்ளு அர்ச்சயாகப்பர் அம்மா
O O O ஒலலாந்தர கா
ஏகாதசிபுராணம்
யோசேப்புப்புராணம் சிவராத்திரிபுராணம்
பறாளை விநாயகர் பள் தண்டிகை கனகராயன்ப
திருச்செல்வர்காவியம்
மறைசயஅந்தாதி புலவர் அந்தாதி கல்வளையந்தாதி
கண்ணியவளைகுருநா
பஞ்சவன்னத்தூது
அர்ச்யாகப்பர் அம்மாை திருச்செல்வர் அம்மாை
அமுதசாகரம் சந்தானதீபிகை

பிறந்த அரிய தமிழ் நூல்கள்
திருமதி.கலிஸ்ரா லங்காரூபன் அபூசிரியை, கிளி/வன்னேரிக்குளம் மகா வித்தியாலயம். கால நூல்கள்
- தொம்பிலிப்பு - தெரியாது னை - தெல்லிப்பழை பேதுறுப்புலவர்
O O ல நூல்கள்
பரத பண்டிதர் கூழங்கைத்தம்பிரான் வரதபண்டிதர்
(Gib நல்லூர் சின்னத்தம்பிபுலவர்
|ள்ளு சின்னக்குட்டிப்புலவர்
பூலோகசிங்க முதலியார்
நல்லூர் சின்னத்தம்பி புலவர் மாதகல் மயில்வாகனப்புலவர்
நல்லூர் சின்னத்தம்பி புலவர்
தசுவாமிகிள்ளைவிடுதூது
சுண்ணாகம் வரதபண்டிதர் இணுவில் சின்னத்தம்பி புலவர்
罗 50T தெல்லிப்பளை பேதுறுப்புலவர் மி 50T பூலோகசிங்க முதலியார்
வரத பண்டிதர் இராமலிங்க முனிவர்
Cs)

Page 96
G885T60)6)
பிள்ளைத் தமிழ்
காதல்
OT60)6)
ஊஞ்சல்
சோதிடம்
காவியநூல்
புராணம்
வரலாற்றுநூல்
கரவை வேலன்சே
சிவகாமியம்மை ட
வெருகல் சித்திர ே
யாழ்ப்பாண வைட
வட்டுக்கோட்டைட் பத்திரகாளியம்பை
ஆரியச்சக்ரவர்
சரசோதிமாலை செகராசசேகரமT6
கண்ணகி வழக்குனி இரகுவம்சம்
தட்சிண கைலாசபு திருக்கரைசை புரா வியாக்கிரபாதபுர
606)JuJTUTLGb
கோணேசர் கல்6ெ
60556)TULOT606)
"உடம்பெடுத்து உலகில் பிறந்
செயல் முயற்சிகளை முழுவது
தன் செயல் முயற்சிகளில் பய
தியாகி எனப்படுவான்.”
-G82)-

ST606) நல்லூர் சின்னத்தம்பி புலவர்
பிள்ளைத்தமிழ் இணுவில் சின்னத்தம்பிபுலவர்
வலாயுதரர்காதல் தம்பலகாமம் வீரக்கோன்
G)JLDT60OQD மாதகல் மயில்வாகனப்புலவர்
ரிட்டியம்பதி • மஊஞ்சல் கணபதிஐயர்
த்தி கால நூல்கள்
(BLUTFUTF UJ60ÖTIę5Ü
O6) (83FITLDöffTLDT
ரை காதை சகவீரன்
அரசகேசரி
ராணம் பிரம்மருநீபண்டிதர்
ாணம் கரசைப்புலவர்
T600TL b வைத்தியநாத தம்பிரான்
வையாபுரி ஐயர்
வட்டு கவிராஜ ஐயர்
முத்துராசக் கவிராஜர்
தவனால் கடமையாற்ற வேண்டிய
மாக விட்டுவிட முடியாது. எவன்
னைத் துறக்கின்றானோ, அவனே
கீதை
உந்தூழ்

Page 97
இனி விடிஞ்சி
இருபது வருசமாய் பூட்டிக் கிடந்த பிள்ை சனம். உடைந்து உருக்குலைந்துபோன வீடு பற்றைக் காடாய்க் கிடக்கும் தோட்டம் துரவுகை என்றைக்குமே திரும்பப் போவதில்லை என்று சந்தோசமும் கலந்த முகத்தோடு நிறைகிற மக்க
"இவ்வளவு காலமும் பூட்டிக்கிடந்த ே செய்து கும்பாபிசேகத்தையும் சீக்கிரம் முடிச்சு திரும்பிவிடும்” இது கோவிற் குருக்களின் கு பெட்டையளோட ஒருவேளைச் சாப்பாட்டுக்கே மீண்டும் கொண்டுபோக மாட்டார் என்ற ந திருக்கிறது.
ஒற்றை இரவில் ஊரை விட்டுப்போன ஊர்ப் பெரிய மனுசன் கணக்கர் கந்தையாவை பிடித்து கோயில் அலுவல்களை அவரிட்டையே ஒப்பேத்திப்போடும்" ஊர்மக்கள் கந்தையா நின்றிருந்த ஒருவரின் குரலாய் ஒலித்தது.
ck ck
கந்தையர் பெரிசாப் படிச்சவரில்லாட் கோலோச்சி வந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். சொத்தும் கணக்கர் வேலையில் அவர் சேர்த்த மனுசராக அடையாளப்படுத்தின. கோவில் த தலைவர், சுடலை நிர்வாகக் குழுச் செயலாளர் ஏராளம். ஆடிக் கூழ் ஊத்துவது, திருவிழா நே பணிகளால் அவர் மதிப்பு ஊரில் மேலும் உயர்ந்
கந்தையாவின் தோற்றத்தினைப் பார் அவர்தான் என்பதை ஊருக்கும் புதிதாக வரும் நெற்றியிலே திருநீற்றுப்பட்டை, மத்தியிலே ெ கீழாகத் தொங்கும் சங்கிலி, பட்டுவேட்டி சால் கந்தையா.
-உந்தூழ்

8 17 4
டும். OOO
о5ЛСЕсілтmт
ளையாற்ற வாசல்ல இண்டைக்கு ஏகப்பட்ட வாசல்களையும், புதர் மண்டிப் போய்ப் ளையும் பார்க்கும் போது வரும் துக்கமும், எண்ணியிருந்து ஊருக்குத் திரும்பிய
6T.
காயில் எண்டதால பாலஸ்தாபனத்தைச் சிட்டால் எங்கட வாழ்க்கை வழமைக்குத் ரல். இவ்வளவு காலமா இரண்டு குமர்ப் வழியற்றுத்தவித்த வாழ்க்கைக்கு கடவுள் ம்பிக்கை அவரிடம் இப்போது துளிர்த்
நேரம் கோயில் தர்மகர்த்தாவாக இருந்த அங்க காணேல்ல "கந்தையாவைத் தேடிப் ஒப்படைச்சிட்டால் மனுசன் வலுதிறமா மீது கொண்டிருந்த நம்பிக்கை அங்கு
ck
டியும் பரம்பரை பரம்பரையாக ஊரில் தலைமுறை தலைமுறையாகக் கிடைச்ச காசும் சேர்ந்து ஊரில் அவரைப் பெரிய 5ர்மகர்த்தா, கிராம முன்னேற்ற சபைத் என அவர் ஆற்றி வந்த சமூகப்பணிகள் ரத்தில் அன்னதானம் போடுவது போன்ற தது.
த்தே அந்த ஊரின் "பெரிய மனிதர்" எவரும் இலகுவாகத் தெரிந்து கொள்வர். பரிய சந்தனப் பொட்டு, தொப்புழுக்கும் வை என எடுப்பாகவே உலா வருபவர்
C8з`)-

Page 98
ஊரில் எத்தனையோ சேவை ெ கந்தையா. வெளுக்கப் போட்ட வேட்டி போடுவார்கள். என்ற சந்தேகத்தில் :ெ இருக்கிறதா எனத் தேடிக்கண்டு பிடித்து 6 வீட்டுத்துணி வெளுக்க எவருமே முன்வர
தன் தென்னந்தோப்புகளில் உ வைத்திருக்குமளவுக்குத் திறமையான கை கூடத் திருடி விடாதபடி செய்ய அவர் தி அவரைக் கடுமையான மனிதர் என்று இளசுகள் அடித்து வழிபட என்றே தேங்காய்களாவது குவித்து வைக்கிற இ6 அதில் அனுதினமும் சோறு போட்டதும் அ மற்றவர்களை உள்ளே விடாட்டியும் வழியாகக் குடுத்துவிடும் நல்ல குணத்திற்
"ஐயோ! ஐயா எங்களை மே வாழ்ந்திருந்த முச்சந்தி மாடிவீட்டு முன் ஒருகால் உள்ளேயும் இன்னொன்று வெ கந்தையா. நாடி பிடித்துப் பார்த்ததில் ஊன என்பது தெரிந்தது. வளமாக வாழ்ந்திருந் ஒருவேளை இவர் இதயத்துடிப்பினை நிர
கந்தையற்ற வீட்டுக்கு அருகாக பள்ளக் காணியில் சிதைந்து கிடந்த சின் “என்னைப் பெத்த ராசாவே! இப்பிடி கந்தையற்ற வேட்டி வெளுத்த செல்லன் அ ஒற்றை மகனைத் தனிமரமாக தவிக்க கொடுக்க எண்டு நினைச்சிருந்த அந்தச் உயிரைப் பிரித்திருக்கலாம். காலம் ை இன்னும் எத்தனையோ இழவுகள் இந்த ஊ
米
செல்லன்றர செத்தவீட்டில ஒரு எரிக்கிற இடத்துக்குப் போக இன்னும் ஆ எண்டது விளங்காது அவன் எல்லாரு
-G84)-

Fய்தாலும் காசு விசயத்தில் சாதாரண மனிதர் யை வெள்ளை கட்டப்பாவித்துப் பழுதாக்கிப் வள்ளை கட்டிய இடங்களில் தன் வேட்டியும் விடுவார் கந்தையா. இந்த வில்லங்கத்தால் இவர் Tதது பின்னர் நடந்த சம்பவம்.
உள்ள தேங்காய்களை எண்ணிக் கணக்கு ணக்கர் அவர். தேங்காய் பிடுங்குபவன் ஒன்றைக் ட்டிய திட்டங்கள் ஊர் அறிந்தவை. அதற்காக சொல்லி விட முடியாது. தேர்திருவிழாவில் ஒவ்வொரு வீதியிலும் குறைந்தது நூறு ரிய மனிதர் அவர். அன்னதான மடம் கட்டியதும் வர் பரம்பரை செய்து வந்த அருமையான பணி, சொப்பின் பாக்கில் சோறள்ளிப் பின்வாசல் குச் சொந்தக்காரர் அவர்.
ாசம் பண்ணிற்றுப் போட்டாரே” கந்தையர் றலில் இருந்து அலறல் சத்தம் எடுத்து வைத்த ளியேயுமாக வாசற்படியில் வீழ்ந்து கிடக்கிறார் ரவிட்டென்ன உலகத்தை விட்டே போய்விட்டார் த வீடு இன்று வானம் பார்த்துக் கிடக்கும் நிலை ந்தரமாக நிறுத்தி இருக்கலாம்.
ப் போற ஒழுங்கையின்ர முடிவில் இருக்கிற ன வீடொன்டில இருந்து இன்னுமொரு அலறல் த் தனியாத்தவிக்க விட்டிட்டுப் போட்டியே!” Hவர் போன அதே நேரத்திலேயே அவனும் தன்ர விட்டிட்டுப் போட்டான் மகளுக்குச் சீதனமாகக் சிறிய வீடும் சிதைந்துவிட்ட அதிர்ச்சி அவன் 5களில் மீதியாய்த் தந்ததை ஏற்க முடியாமை ாரில் இனிவரும் நாட்களில் தொடரலாம்.
ck ck பிரச்சினை வழக்கமாக அவன்ர ஆக்களை மி விடேல்ல ஆழிக்கு அந்தாக்கள், இந்தாக்கள் நம் ஒரே ஆக்கள் எண்டு நினைக்கிறதால
உந்தூழ்

Page 99
அவனிட்டைக் கதைத்து வேலையில்லை. இர் வேகிற இடத்தில் செல்லனையும் எரிக்கிறது த பெடியள் பெரிசுகள் இதை ஏற்கிறதாகத் தெரிய போச்சே? ஒருக்காலும் அங்க விடேலாது நேரத்தில இப்பிடிச் செய்யிறது அவருக்குச் செ பியார் சாம்பசிவம். "காலம் மாறிக் கலி முத்திட் விசர்க்கதை எல்லாம் கதைக்கினம். இப்போ வெறுங்காணியில எரியுங்கோ அடுத்த இழவு பழைய இடத்தை எடுத்துத்தாறம்" என்கிறார்சி
எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் பேசிப் பிரயோசனமில்லை" என்று திரும்பிப்ே ஒழுங்கையாலை செல்லன்ர உடல் ஊர்வலமா இனியும் பேசுவதற்கு அவர்கள் தயார்இல்லை எ
கந்தையர் வீட்டுக்கு முன்னால் நின்றி நோக்கி நகர்கிறார். அகிம்சையும் துப்பாக்கிய அரிவாள்கள் ஒருவேளை வென்று விடக்கூடுெ
"இனி விடிஞ்சிடும் பிள்ளையார் கோய கேட்கிறது. கந்தையர் எவற்றையும் கவனியாம
துன்பத்தையும் இவ்வாறு ஓர் உயிருள்ள ஒ அத்துன்பமும் தனக்கேற்ற ஆளையே தேடு ID@Tid (BFITribji, “GLITT BL6G6IT! 4 வருந்துபவனைக் கண்டால் அது உடனே பற் கண்டதுபோலவே காட்டிக் கொள்ளாதவன நெருங்கத் தயங்குமாம் - அஞ்சுமாம். *ஐ செய்யப் போகிறோம்? நம் வீறாப்பு இ6 5L"GiLILIDITILITëa)T! 666Jflub GLITi போவதேமேல்” என்று அத்துன்பம் விலகிப்ே
-உந்தூழ்

ந்தப் பிரச்சினைக்கு கந்தையான்ர கட்டை நான் தீர்வு எண்டு நினைக்கிறார்கள் ஊர்ப் பலை "உங்களுக்கென்ன கொழுப்பு முத்திப் அதுவும் கந்தையர் செத்துப்போயிருக்கிற ய்யிற பெரிய துரோகம்" என்கிறார் சட்டம் ப்போச்சுப் பாருங்கோ! இதாலதான் இப்பிடி ாதைக்குச் செல்லன் வீட்டுக்குப் பக்கத்து பு விழுறதுக்குள்ளே ஆமியிற்றை கதைச்சு ன்னர் வேலாயுதம்,
இளைஞர்கள் ஏற்பதாயில்லை. "இனியும் பாகிறார்கள். இரண்டொரு மணி நேரத்தில் ாக வருகுது முன்னால அதே இளைஞர்கள் ான்பது முக இறுக்கத்தில் வெளிப்பட்டது.
ருந்த கம்யூனிஸ்ட் கந்தசாமி ஊர்வலத்தை பும் முயன்று தோற்றுப்போன விடயத்தில் மன்று அவர் ஆழ்மனது சொல்கிறது.
பில் வாசலில் எவரோ உரக்கச் சொல்வது ற்கனத்துக்கிடக்கிறார்.
ன்றாக உருவகப்படுத்திக் கொள்வோம். கிறது. காலில் சிறுமுள் குத்தியதற்கே உனக்குக் கண்ணில்லையா? என்று றிக் கொள்ளுகிறது. தன்னைக் கண்டும் னக் கண்டால், அத் துன்பம் அவனை யோ, இவனை அடைந்து நாம் என்ன வனிடம் பலிக்காதே! இவன் நமக்குக்
மூக்கு உடைபடுவதைவிட, விலகிப் பாய்விடுமாம்.

Page 100
புதுை
கண்களில் வீரத்தின் தேக்கம் - கலி
காலத்தை மாற்றிடும் ஊக்கம் பெண்னெனச் சொல்லி ஓரத்தில் - வெ பேதையாய் ஒதுங்கிடா மாற்ற எண்ணியன முடித்திடும் ஏற்றம் - எதிர் எழுந்தவரைச் சாய்த்திடும் சீர் பண்ணும் தொழில்களில் மாற்றம் - பய எண்ணத்தில் புரட்சியின் தோ புயலென எழுகிற பூட்கம் - பாரிற்
புதுவழிபுனைந்திடும் தீர்க்கம் பண்ணினில் பாரதி கண்ட - அந்தப்
பைந்தமிழ்ப் பெண்ணையேக
இடுக்கணி வருகிறது
நகுதல் - கிண்டலாகச் சிரித் நகுதக்கனரே நாடுமீக் கூறுநர்? மேம்பட்டவர்களாகக் கருதிக் கொள்ளு கருத்து. துன்பம் வரும்போது, அது நம் உணர்ந்து அதற்கு எதிராகத் துன்பப்பட அத்தகைய மன உறுதியுடையவரை அ என்றார். இங்கு அதனிலும் மேலான ஒரு
GO

மப்லிபன்
ற்றுப்
றம் த்(து) ]றம்
பில்
ற்றம்
ாதல் செய்வேன்.
விறலி
தா அதைப் பார்த்துருகுக!
தல், பிறரை ஏளனமாக நகைத்து எள்ளுதல். என்ற புறநானூற்று அடிக்கு, “தங்களை நம் பகைவர்கள் சிரிக்கத் தக்கவர்கள்” என்பது மைத் துன்பப்படுத்தத்தானே வருகிறது என்பதை Iமலிருந்துபார்க்குமாறு கூறிய தெய்வய்புலவர், |டைந்த துன்பம் தான் துன்பப்பட்டுத் தோற்கும் நயோசனையைக் கூறுகிறார்.
உந்தூழ்

Page 101
கல்லூரிக்
செந்தமிழ் யாழெடுத்து அதிற் சீர்மிகும் சிந்தையில் நிறைகின்ற நினை "கவி விந்தை" செய்திட நானோர் விற்ப முந்தை நினைவிசை மீட்டும் மு
நீடும் பனங்கூடல் எழில் நிறையும் நிலL கூடும் நிகழ்வில் வாழ்வில் கொ ஞானம் நிறைகின்ற நாட்டில் நாற்றிசை காலம் வென்ற எங்கள் நட்பின்
மேகப் பந்தலிட்டு மின்னற் தோரணம் ெ தாகம் தணித்திடவே தானே அன கடல்கள் தாண்டி இங்கு நட்பைக் கண்டி காலங்கள் தாண்டிச் சென்றுகள்
கல்லூரிக்காலமதில் வேறு கவலையற்ற வில்லூன்றி முதற்கொண்டு-ந பட்டாம் பூச்சிகளின் பாதைதனைத் தொ விட்டிற் பூச்சிகளாய்ச்சிலர் விழு
கைநீட்டிக் கதைத்ததுண்டு பின் கட்டி அ6 மெய்வருத்தம் தீர்க்கும் மிக்கது கண்முன் விரியும் உலகைக் காற்றுாசாக எண்ணியது முடிப்போமென்ற இ
பண்ணைக் கடலருகில் பகலில் காற்றுவி வண்ணை ஈஸ்வரத்தில் வடிவா திண்ணையில் சென்றமர்ந்து தேவையற் எண்ணை விளக்கினிலே இரவி
சோளகக் காற்றிங்கே சுழன்றடித்து சுற்றி மாரிகால மழையிருட்டில் மனா காவோலைகள் சலசலப்பாய் கதைகள்
காக்கைகளாய் கரைந்து காற்றி
உள்ளக்கரை உடைத்து எங்கோ ஓடுகிற மெள்ள எழும் நினைவை மீண் சிந்தையிலே அத்தனையும் கவிச்சித்திர செங்கவியில் நன்றி சொல்லிச் (
-உந்தூழ்

காலம்
கவி தொடுத்து வு சிலை சித்திரம் போல் வடித்து னை இல்லை அன்றில் ழு முயற்சியிற் தொடருது என்கவி
ம் மீதில் ண்ட இன்பங்கள் பகிர்வோம் யினின்றும் ஒன்று சேர்ந்தே கதைகள் பேசி மகிழ்வோம்
தாடுத்து
மைந்திட்டநாளிதுவே - ஓடி வந்தோம் ரித்திடுவோம் முந்தை கதைகளிலே
ற வேளைகளில் ல்ல விடுப்புப் பார்த்துண்டு ாடர்ந்து pந்தும் எழுந்ததுண்டு
ணைத்ததுண்டு |ணையானதுண்டு நினைத்ததுண்டு இறுமாப்பில் திரிந்ததுண்டு
uTilds ப் வணங்கிச் சென்று ற வம்பளத்து - பின் ரவாய் படித்தோம் அன்று
வர ங்கள் மிக மகிழ்வுகாண்டோம் JGD G8Uefaj
ல் காவியங்கள் பாடிவந்தோம்
வெள்ளமதில் டும் பதிவு செய்தேன் DTÜ ölup6OTL சேர்கிறேன் என் இருக்கை

Page 102
வெஞ்சிறை உ
விட்டில் பூச்சி விளக்கி கட்டிற் கதைக காலத்ை
தொட்டாற் சுரு தோள்க பட்டி மாடுகள பாதை (
பெட்டிதூக்கிய பின் தெ வட்டவரன்மு வாழ்ை
“வேலை செய் விருப்ப வீடுதான் வாழ் வெஞ்சி
பெண்ணென்று (3Udiggi மண்ணினில் 8 மலர்ந்தி
G88)

டைத்திட விழித்திடு
களாய்
னை அணைக்காதே 36ITITL-9) 60T தைத் தொலைக்காதே
நங்கியதாய் 5ள் இளைக்காதே ாய் - ஆணின் தொடராதே
பாய்த் தினம் ாடர்ந்தலையாதே றைக்குள் - உன் வத் தொலைக்காதே
தல்" அவரவர் மென்றுரைப்பாயே )வென்னும் - கொடு |றை உடைப்பாயே
று ஏளனம் சொல்லி ) எதிர்ப்பாயே மத்துவம் - நாளை டெ உழைப்பாயே.
விறலி
உந்தூழ்

Page 103
வநய்தல்
மங்கு கதிரவன்
பொங்கு கடலலை தெங்கம் பொழிலெழில்
வங்கக் கடலதில் எங்கும் கிளர்ந்தெழும்
ஏகாந்தத்தினில் உயிர்மை உணர்ந்தேன்
உணர்விழந்தேனே
தமிழ்ச்சாதி
அறமும் அன்பும்
அகத்திற்கொண்டவர் விறலும் வெற்றியும்
விளைந்த மரபினர் - என்ற சாதி ஒன்றொழிய
வேறில்லை சாற்றுவோம் உண்டென்று சொல்லி
உளறும் பேய்களை உடனே கொணர்ந்து
கழுதணில் ஏற்றுவோம்
]
GT6
L6
U6
LUT
5Ls
 
 

தேசம்
மிர்ந்திடும் பனைவெளி
நிறைகிற புல்லினம்
ருகிற வான்வெளி
கலக்கிற மழைத்துளை
)க்கிற புள்ளினம்
பாங்கான பெண்ணினம்
ன்னே அழகு என் தேசம்
னெடுங்காலமாய்ப் றயனைத்தாழ்த்தினாய் ரடா மூடனே
ழ்க்கலையையே வீழ்த்தினாய்

Page 104
PUBLIC HEALTHASPEC
Introduction: The first world pandemi 1817 and reached Western Europe in extremely fatal impact of the disease ol and John Snow (founders of epidemic relationship between polluted water ar time, Edwin Chadwick was campaignin quality and quantity, to the growing W( supply improvements and sanitation was Water-related diseases caused by pathc The disease-causing pathogens in hum anus of a person to the mouth of anot fingers, on food and utensils, through w excreta to be ingested.
Public health and sanitation aspects are the design and implementation of exc countries. The importance of proper S methods to ensure complete pathogen
reuse, is strongly being felt. Design of among other things, an adequate unders and health. Information on health impact and other measures such as immuniza health. Data on health impact also enabl Supply, sanitation and hygiene education
Factors Affecting Transmission of infection being transmitted depends on from the excreta of a person, vector or ar. entryway of a susceptible person. Spreac excreted, upon how these numbers char and upon the dose required to infect a nev transmission route, the excreted pathoge for another is dependent on three factorsl:
1N ( 90
 

TS OF ON-SITE SANTATION
Prof. Saravanamuthu Vigneswarn Faculty of Engineering, University of Technology, Sydney, Australia.
c of Asiatic cholera began in Bengal, India in 1831 and North America a year later. The n world populations inspired by William Farr )logy) are the first to bring attention to the ld disease in their studies. Around the same gfor increased provision of water, adequate in orld populations. The need to integrate water sincreasingly being felt. gens include typhoid, filariasis and malaria. an excreta (feces and urine) travel from the her in a variety of wayssometimes on dirty ater or by any other routethat allows infected
increasingly assuming central importance in reta treatment and disposal projects in all anitation, coupled with effective treatment destruction in excreta prior to disposal and an effective excreta disposal system needs, standing of the relationship between excreta thelps to allocate resources between projects tion programs designed to improve public es review on resource allocation in the Water
SectOrS.
Diseases: The probability of an excreted various factors. An infective dose has to pass eservoir of infection to the mouth or any other l will depend upon the numbers of pathogens ge during the particular transmission route, w individual. The probability that, for a given ns from one host will form the infective dose atency, persistence, and multiplicity.
உந்தூழ்

Page 105
Pathogens in Excreta: The four groups of predominantly responsible for the cause of di protozoa, and helminths.
Bacteria: The feces of a healthy individua populations of many species. The species of relative numbers of different species, will vary bacteria found in the excreta are pathogenic. are Campylobacter fetus spp. Jejuni which can human; Pathogenic Escherichia Coli (includes from human; Salmonella S. typhi, S. paratyph typhoid and paratyphoid fever, food poisoning animals and human; Shigella spp. which ca human; Vibrio V cholera which causes Cholt Yersinia enterocolitica which causes Diarrhea and human. Bacteria usually enter a new ho fingers, in dirt), but some may also enter thro droplets) or through the eye (rubbing the eye some time during the course of an infection, la in the feces, thus allowing the spread of infectic
Иtiruses: Humans are known to excrete well ovi are yet to be characterized and new viruses viruses infect the intestinal tract and are excre other healthy human hosts by ingestion or previously described. One gram of human f particles, regardless of whether the individual or not. Concentrations of 10 infectious partic reported in literature. Viruses cannot multiply few weeks. The enteroviruses are a large grou important) causing a wide variety of diseases. hepatitis and occurs endemically in all parts of infection may lead to jaundice, especially in c stools of children with diarrhea from developi arguably more universally distributed than th have been associated with respiratory diseas isolated from a large range of animal species about the diseases or symptoms caused by them
Protozoa: Many species of disease-causing
which are harbored in the intestinal tracts Infective worms of these protozoa are often
ingestion causes infection. Of the human inti pathogenic: Giardia lamblia, Balantidum coli, is a term used to describe an infection by a histolytica. Giardiasisisan infection of the sma protozoon Giardia lamblia. Amebiases anc
-உந்தூழ்

pathogens found in excreta that are seases in humans are: bacteria, viruses,
l contain large numbers of bacterial bacteria found in the excreta, and the among different communities. Notall The common bacteria excreted in feces ses Diarrhea coming from animals and E. coli) which causes Diarrhea coming i, and other Salmonellae which causes and other salmonelloses coming from uses Bacillary dysentry coming from 2ra Diarrhea coming from human; and and septicemia coming from animals st by ingestion (in water, on food, on ugh the lungs (by inhalation of aerosol with fecally contaminated fingers). At urge numbers of bacteria will be passed on to new hosts.
er 100 different viruses. Several viruses are constantly being discovered. Most ted in the feces, whereupon they infect inhalation or any other mechanism eces may contain 10 infectious virus is experiencing any discernible illness les per liter of raw sewage have been outside a cell host, but may survive for p of viruses (polioviruses are the most The Hepatitis A virus causes infectious the world. It is excreted in the feces and hildren. Rotavirus has been isolated in ng and developed countries alike. It is e Hepatitis A virus. The adenoviruses se in children. Reoviruses have been , but there is not enough information l.
protozoa can infect humans, most of of human beings and other animals. passed as cysts in the feces and their estinal protozoa, three are considered and Entamoeba histolytica. Amebiasis ny of the ameba, chiefly Entamoeba all intestine of humans by the flagellate giardiasis are major public health
-C 91 )

Page 106
concerns in many developed and devel the large intestine caused by Balantidum
Helminths: Helminthic diseases diff diseases in an interesting way. Viruses, and in diseases caused by them, the seve the infecting dose of organisms. On th number of parasitic worms or helmint determine the severity of the infection worm countin an infected person.
Environmental Classifications of Disi of the diseases caused by various dist biological classification of pathogens w sanitation planner. A classification that aspects of alternative approaches to exc a public health aspect, an "environmer transmission routes and life cycles is ne related and excreta-related diseases serv the efficiency of different preventive me
Fecal-oral Diseases: These are essent from the anus to the mouth, whilst inha occur. These include diseases that requir diseases that require a high infective do Fecal-oral diseases may be either wa disease is one that is transmitted when th human or animal, which may then becon due to lack of adequate quantity of water
Water-washed Diseases: These include significantly reduced by increased dor sepsis, scabies and cutaneous fungal inf an extremely prevalent cause of mor trachoma may lead to blindness. Since water available, water-washed diseases personal hygiene rather than the quality. a large extent, by increasing the quantity
Water-based Diseases: These diseas invertebrate animal, and are those in whi in the invertebrate animal, which acts a diseases can be transmitted by the penet of polluted water. In some places, water which the schistosome larvae develop a These re-infect humans through the s
C 92 )

oping countries. Balantidiasis, an infection of
Coli, is relatively rare.
:r from other viral, bacterial and protozoal bacteria and protozoa multiply within the host, 'rity of the infection cannot be easily related to e other hand, with helminthic infections, the hs within the infected person would greatly l, which generally increases with increasing
eases: In the previous section a classification inct groups of pathogens was made. Such a ould be interesting, but not very helpful to a
would help him in understanding the health reta disposal would be more helpful. So, from ntal classification" of infections, based upon eded. Environmental classifications of watere to group infections in a way that makes clear 2SUCS.
ially diseases in which the pathogens travel lation by dust and aerosol droplets may also 'e a low infective dosecholera and typhoidand Sebacillary dysentry and infectious hepatitis. ter-borne or water-washed. A water-borne he pathogen is in water that is then drunk by a he infected. A water-washed disease is caused for personal hygiene.
infections of skin and eyes, which may be nestic and personal hygiene. Bacterial skin :ctions are some of the skin infections that are bidity in hot climates. Eye infections like personal hygiene is linked to the quantity of depend on the quantity of water available for Water-washed infections can be prevented, to of water used for personal hygiene.
es are generally transmitted through an ich the pathogen spends a part of its life cycle Is an intermediate aquatic host. Water-based ration of skin by the pathogen or by ingestion polluted by excreta contains aquatic snails, in ld infective cercariae are shed into the water. kin causing schistosomiasis. Guinea worm
உந்தூழ்

Page 107
larvae are transmitted by infected humans develop in small aquatic crustacea and inge results in infection.
Water-related Insect Vectors: This category breed in water orbite near water. Insects tha fever, dengue and onchocerciasis. Trypanos transmitted by the riverinetsetse fly, which b
Environmental Classification of Excr diseases can be classified into seven main c; oral diseases; (2) Bacterial fecal-oral disease Water-based helminthiases, (6) Excreta-rel related rodent-vector diseases. The Fecowater-washed diseases (Skin infections an improving water quantity, availability, and ri improving water quality (waterborne dis Geohelminthiases such as hookworm infec proper sanitation; and effective treatment ( Water-based diseases can be controlled by water; improving domestic plumbing; dryir education. Insect-vector diseases such as n decreasing passage through breeding site application; use of mosquito netting and imp water drainage,
Pathogens in the Environment: The presel matter of great concern and their adverse eff Considering their overwhelming impact ovel to possess detailed information about the p wastewater, their mode of survival, methods (
Detection of Pathogens: The presence of p, environment is well known and documented health by these organisms, it is extremely im detection to ensure public health safety. Hur been shown to be involved in the outbreak c should be testing the water bodies for the pr impractical to do so owing to time and financi to test for select indicator organisms, whichi contamination of Some sort, and subsequer destroy these microorganisms. Although th concerns have generally been very well st
-உந்தூழ்

through cuts in their skin. These larvae stion of water containing these crustacea
of diseases is spreadby insects that either t breed in water transmit malaria, yellow omiasis or Gambian sleeping sickness is tes nearwater.
eta-related Diseases: Excreta-related tegories, namely (1) Nonbacterial fecals(3) Geohelminthiases, (4) Taeniases, (5) ated insect-vector diseases, (7) Excreta)ral and non-feco-oral waterborne and d Eye infections) can be controlled by liability (water-washed disease control); ease control); and hygiene education. tion and Taeniasis can be controlled by of excreta or wastewater prior to reuse. decreasing contact with contaminated ng of flood-damaged homes, and public halaria and dengue can be controlled by S; destroying breeding sites; larvicide regnated bed nets; and improving storm
nce of pathogens in the environment is a ects on public health need no reiteration. the field of public health, there is a need athogens usually found in excreta and fdetection and removal.
athogens in water and wastewater in the Considering the danger posed to public portant to have reliable methods of their dreds of different microorganisms have f diseases worldwide. While ideally we sence of all these microorganisms, it is alconstraints. So, it has been the practice present, would imply definite microbial t treatment steps can then be taken to s practice is not perfect, public health it rved thus far. Some of the indicative

Page 108
microorganisms are fecal coliforms (the enterococci, pseudomonas spp,
Septic Tanks Aseptic tank is a waterproofrectangula the Solids settle to the bottom of the t forming sludge that accumulates at the b top. The effluent from the septic tank i health point of view. The partly treated c treatmentor sent to a common effluents to a Soil absorption system. Septic tanks The solids that settle down in the sept septage. The effluent from a septic t treatment in a wastewater treatment sy System. Both Septic tanks and aquaprivi settling outpathogens depends on their with respect to baffles or compartments and to create quiescent conditions.
Poorly maintained and inadequately des pathogen removal capacities. A proporti tank will settle with the solids and so fre: pathogenic bacteria, viruses, cysts and C inevitable that some sludge will be fre treated by proper composting or digesti being disposed in a landfill or used as fer pathogenic. If it flows to Soakaways, a untreated or poorly treated effluent is dis the effluent might percolate downto the
The movement of protozoal cysts and h because their size will most certainly ca viral and bacterial movement and su movement through soil and rock indica 30 m in sand and fine soils and up to se rock. Viruses, despite their tendency to through soil for longer distances thanba sandy soils for up to 60 m, and throug recorded. Also, there is a possibility ( discharge of these effluents on mou methemoglobinemia or blue baby syndro
C94)

rmotolerant coliforms), fecal streptococci and
chamber usually located below ground level; ank where they are anaerobiccally degraded bottom of the tank and Scum layer forms at the S as dangerous as raw sewage from a public bdorous effluent has to undergo further on-site ystem, a holding tank for pump-out or directly have atypical liquid retention time of 13 days. ic tank undergo anaerobic digestion to form ank is sometimes made to undergo further /stem or is pumped out to a Soil adsorption tes act as settling tanks and their efficiency at retention times and their designs, particularly designed to prevent hydraulic short-circuiting
sludged septic tanks will have especially poor on of all pathogens in the influent to the septic sh septage will contain significant numbers of va. Whenever a septic tank is desludged, it is sh and therefore hazardous. They should be on, either aerobically or anaerobically before tilizer. The effluent from septic tanks is highly a groundwater pollution hazard exists. If an scharged on mound systems, the pathogens in ground water.
elminth eggs are expected to be very limited ause them to be retained. Therefore, only the rvival pose problems. Studies on bacterial te normal maximum travel distances of up to veral hundred meters in gravel and fractured be adsorbed onto soil particles, may travel cteria. Instances of viruses travelling through h fissured rock for up to 1600 m have been of nitrate contamination of groundwater by nd systems or soakaways. Nitrate causes ome in infants.
ഉ_ഇr് -

Page 109


Page 110


Page 111

வதந்தசித்தாந்த வித்தகராய்
திற 緩 னுறத் தமிழ் கற்பித்த கம்பராய்
ந்து அடங்கிய லகாள்கைச் சான்றோனாய்”
ந்து மறைந்த எங்கள் மதிப்பிற்குரிய
ரர். திரு. அருணாச்சலம் சரவணமுத்து ர்களிற்கு இந்நூல் காணிக்கையாகிறது.

Page 112


Page 113
| }
உற்ே
 


Page 114


Page 115
தனித்துவமும் தன்னாற்றலு (9ftopf (95600TTofou
பிறந்தோம், வாழ்ந்தோம், மரணித்தே பயன்மிக்கவராக வாழ்ந்தவர் அருணாசலம் ஆண்டில் அளவெட்டி என்னும் கிராமத்தில் பிற களும் ஒரு சகோதரனும் இருந்தனர்.
இளைஞனாக இருக்கும் பொழுது ஆ தனது இருபத்திரண்டாவது வயதில் ஆசிரி வித்தியாலயத்தில் ஆரம்பித்தார். கொக்குவில் தர்மதுதுக் கல்லூரி, யாழ்ப்பாணம் வைத்தீள யாற்றிய சரவணமுத்து அவர்கள் 1977ஆம் ஆ வைத்தீஸ்வரா கல்லூரியில் மட்டும் சுமார் இரு யுள்ளார்.
கற்பித்த இடமெல்லாம் மாணவர்களாலு பட்டவர் சரவணமுத்து ஆசிரியர் என்று சொல்
புலக் காட்சி
“வெள்ளை வெளேர் என்ற பரமாஸ் வேட்டி வெள்ளை நாஷனல், மடிப்புக்கலையாதஉ; என்பவற்றுடன்அவர்தின்
தமிழ் கற்பித்தலில் தனித்துவம் மிக்கவ தன்மை கொண்டவர். பாத்திரப் படைப்புக்கு சிந்தனையையும் இணைத்துக் கற்பிப்பார். இ "கம்பர்” என அழைப்பார்கள்.
கற்பித்துக் கொண்டிருக்கும் காலத்திே கற்பித்தல் துறையில் டிப்ளோமாவை நிறைவு கழகத்தின் செனற் மண்டபத்தில் சைவ சமயத்ை பிரார்த்தனைப் பாடல்களை இசைக்கும் வழக் ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து வெளிவாரி கலைத்துறையில் கலைமாணிப் பட்டப் படிப்பை
-உந்தூழ்

8 7
றும் மிக்க தமிழ் ஆசான்
ம் சரவணமுத்து
சரவணமுத்து விக்கினேஸ்வரன் சரவணமுத்து குமரேசன்
நாம் என்று இல்லாது தன் சமூகத்திற்குப் சரவணமுத்து ஆசிரியர். இவர் 1919ஆம் ந்தார். இவருக்கு துணையாக இருசகோதரி
சிரியர் பயிற்சிக் கல்லூரிக்குச் சென்றார். யப் பணியை அளவெட்டி சதானந்தா
இராமகிருஷ்ண வித்தியாலயம், பதுளை ல்வராக் கல்லூரி போன்றவற்றில் சேவை ண்டு பணியிலிருந்து ஓய்வுபெற்றார். இவர் ருபத்தைந்து ஆண்டு காலம் சேவையாற்றி
லும் சக ஆசிரியர்களாலும் மிகவும் மதிக்கப் லும் பொழுது மாணவர்களுக்கு ஏற்படும்
2, த்தரீயம்' ாமும்தோன்றும்தோற்றமாகும்.
ர், தன்னாற்றல் நிறைந்தவர், தளம்பலற்ற ஏற்ப மாறி கவிஞர் சிந்தனையுடன் தன் இதனால் மாணவர்கள் இவரை அன்பாக
லயே பேராதனைப் பல்கலைக்கழகத்தில் செய்தார். இந்தக் காலத்தில் பல்கலைக் தைச் சேர்ந்த மாணவர்கள் ஒன்றிணைந்து கத்தினை திரு. சரவணமுத்து அவர்கள் மாணவராக இப் பல்கலைக் கழகத்தில் யும் முடித்தார்.
1N C 97 )

Page 116
மூத்த கல்விமான்களான பேராசி செல்வநாயகம், பேராசிரியர் வித்திய கைலாசபதி பேராசிரியர் சண்முகதாஸ் ம வர்களுடன் காலத்தால் தேயாத நேசத்ை இளம் பட்டதாரி மாணவர்களுடன் தம் சீ நட்பு என்றும் உயிர்ப்புடன் இருந்தது.
இந்திய செம்மொழிகளில் ஆற்றல் மற்றும் பாளி மொழிகளில் பெற்றிருந்த பா கால ஏடுகளைப் பொருள் உணர்ந்து படிக்கு
தரும்பம்
தமது சிறு வயதிலிருந்தே திரு ச கருமங்கள் தவிர்ந்த நேரத்தில் தமது கொண்டிருந்தார். இரண்டு அக்கா (கால மற்றும் திருமதி கனகசபை) மற்றும் அ ஆகியோருடன் அன்பும் அரவணைப்புமா திரு சரவணமுத்து அவர்கள் ஒரு பண்பட் இட்டது எனலாம். அண்ணன் தம்பிகளுக்கி நாள் வரை செழிப்பாக நிலைத்திருந்தது.
திரு சரவணமுத்து அவர்கள்
கோப்பாயைச் சேர்ந்த செல்வராணியை இல்வாழ்வின் அடையாளமாய் திரு சரவ6 (பேராசிரியர் விக்னேஸ்வரன் - அவுஸ்( வரன் - அவுஸ்ரேலியா, குமரேசன் - இா யாழ்ப்பாணம்) பிறந்தனர். தமது கு எஸ்நடராஜாவை மருமகனாகக் கொண்ட பத்மினி, சிவதிலகா என மூன்று மருமகள் இணைத்துக் கொண்டார். தமது மார்பில் 6 ஐந்து பேரக்குழந்தைகளான அபிராமி, ! வைஷ்ணவன் ஆகியோரின் அன்பிலும் உகந்த மருமகனின் இல்லத்திலேயே தமது வாழ்ந்தார்.
NحSسمبر C 98)

ரியர் கைலாசநாதக் குருக்கள், பேராசிரியர் ானந்தன், இளையவர்களான பேராசிரியர் ற்றும் பண்டிதமணி கணபதிப்பிள்ளை போன்ற )தக் கொண்டிருந்தார். மேலும் அப்போதைய ரிய பண்புகளூடாக அவர் வளர்த்துக் கொண்ட
மிக்க இவர் தமிழ் புலமையுடன் சமஸ்கிருதம், ாண்டித்தியமும் சுலோகங்கள் மற்றம் பண்டைக் தம் வல்லமையும் பிரபலமாயிருந்தன.
ரவணமுத்து அவர்கள் கல்வி மற்றும் பக்திசார்
தந்தையாருக்கு உதவுவதை வழக்கமாகக் ஞ்சென்றவர்களான திருமதி சுப்பிரமணியம் 1ண்ணா (ஓய்வுபெற்ற அதிபர் விசுவநாதன்) க அமைந்த அவர் தம் குடும்பப் பின்னணியே ட வாழ்க்கையை வாழ்ந்து முடிக்க அத்திவாரம் ைெடயிலான நெருக்கம் அன்னார் அமரர் ஆன
தமது வாழ்க்கைக்கு உற்ற துணையாய் பக் கரம் பிடித்தார். இவர்கள் 38 வருட ணமுத்து தம்பதியினருக்கு மூன்று மகன்களும் ரேலியா, காலஞ்சென்ற பேராசிரியர் மகேஸ் ங்கிலாந்து) ஓர் அன்பு மகளும் (கலாதேவி - டும்பத்திற்குப் பொருத்தமானவராக திரு தில் அமரர் நிறைவு கண்டார். கூடவே சாந்தி, களையும் தமது குடும்பத்தில் பெருமையுடன் செல்ல உதை கொடுப்பதற்காய்ப் பிறந்து வந்த பிரபு, செல்வராணி ரூபா, அபர்ணா மற்றும் திரு சரவணமுத்து திளைத்தார். தன் மனதுக்கு மகளுடன் இறுதி இருபது ஆண்டுகளும் அமரர்
உந்தூழ்

Page 117
குடும்பத்துக்கான அர்ப்பணிப்பு
திரு சரவணமுத்து அவர்கள் தனது அறி டாகத் தனது பிள்ளைகளுக்கு நல்ல ஆரம்பக் காற்றும் நன்றி அவயத்து முந்தியிருப்பச் செ பிள்ளைகள் தம்மை வளர்த்துக் கொள்ளத் தன் உரிய வசதிகளையும் உகந்த கழலையும் அமை
நிலையற்றதும் சவால்கள் நிறைந்தது விசாலமான உலக அறிவையும் தேடுவதுடன் நீ அவர்கள் தெளிந்திருந்தார். அதனாலேயே மா யத்தையும் ஆத்மீக நெறிகளைக் கைக்கொள் களுக்கு அவர் உணர்த்தியிருந்தார். மேலும், ளான தன் பேரக்குழந்தைகளுக்கும் பக்தி மார் யிருந்தார்.
ஆத்மீக ஈடுபாடு
திரு சரவணமுத்து அவர்கள் வேதா ஈடுபாடு கொண்டிருந்தார். சிவதொண்டன் போன்றனவற்றுக்கு ஒழுங்காகச் சென்று வரு அமரர் திவ்விய ஜீவன சங்க நிகழ்வுகளிலும் இராமகிருஷ்ண மட நிகழ்வுகளில் அவருக் நிலையங்களிலும் பொது நிகழ்ச்சிகளிலும் ப செய்திருந்தார்.
அமரர் சைவநெறியையே கடைப்பிடித் களையும் மதித்தார். "எப்பொருள் யார் யார் பொருள் காண்பது அறிவு” என்ற தெளிவுடன் உள்ள நல்ல கருத்துக்களைக் கற்றுப் புரிந்து குடும்பம், மாணவர்கள் மற்றும் நண்பர்களுடன்
திருகோணமலையைச் சேர்ந்த "கார் திருவாளர். முத்துக்குமாரசாமி அவர்களுடன் அத்துடன் காந்திய சேவாசங்கத்தின் செயற்பாடு
எளிமை
திரு சரவணமுத்து அவர்கள் ஓர் வாழ்க்கையை நடாத்தினார். தமது உலகார்ந்த
-உந்தூழ்

lவுத்திறன் மற்றும் வசீகரமான வழிகளினூ கல்வியைத் தந்தார். மேலும் "தந்தை மகற் யல்" என்ற வள்ளுவர் வாக்குக்கிணங்க, னால் இயன்ற எல்லாவற்றையும் செய்தார். த்துத் தந்தார்.
மான இந்த உலகில் கல்வி அறிவையும் ற்ெபது போதாது என்று திரு சரவணமுத்து னிட தர்மங்களைப் பராமரிப்பதன் அவசி வதன் தேவைகளையும் தனது பிள்ளை இருபத்தோராம் நூற்றாண்டின் குடிமக்க க்கம் பற்றிய ஆரம்ப அறிவையும் ஊட்டி
ந்தத்திலும் சித்தாந்தத்திலும் ஆழமான நிலையம் மற்றும் வேதாந்த மடம் நவதை வழக்கப்படுத்திக் கொண்டிருந்த ஒழுங்காகப் பங்கு பற்றினார். மேலும், கு மிகுந்த ஆர்வம் இருந்தது. கல்வி ல ஆத்மீகப் பிரசங்கங்களையும் அமரர்
நதிருந்தாலும், மற்றைய மத நம்பிக்கை வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப் வேறு சமயங்களிலும் போதனைகளிலும் வைத்திருந்ததுடன், அவற்றைத் தனது பகிர்ந்து கொண்டார்.
தி வாத்தியார்” என அழைக்கப்படும் நீண்டகால நட்பினைப் பேணி வந்தார். களிலும் ஆர்வமாகப் பங்கெடுத்தார்.
எளிமையானதும் நிறைவானதுமான தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும்
一○○ー

Page 118
அவர் குறுக்கிக் கொண்டார். கற்பிக்கும் ஞானத்தை வளர்ப்பதே தம் பணி எனக் ெ அவருக்கு நாட்டம் இருக்கவில்லை. அ இருக்கும் என்றே அமரர் கருதினார். களோடும், இளையவர்களோடும் ஒரே திருந்தார்.
தனது வாழ்வின் எல்லா வளங்க பயன்படுத்திய போதிலும், அம்முயற்சிகளு தாரல்லர். அவர்கள் முன்னேற்றம் கண்டு யோராக இருக்க வேண்டும் என்பதே அம பயணம் கூட இருப்போர்க்கு ஒரு சுLை அவதானமாகவே இருந்தார். 2006ஆப் இறைபதம் எய்தினார்.
நிறைவு
திரு சரவணமுத்து அவர்கள் ப யானதும் நிறைவானதுமான வாழ்க்கை அவரவர் எச்சத்தால் காணப்படும்" என்ட குடும்பம், மாணவர்கள், நண்பர்கள், சே6 சுட்டி நிற்கின்றன. தனிப்பட்ட மற்றும் ெ பாங்கு மற்றவர்கள் முன்மாதிரியாகப் மில்லை. அமரர் விட்டுச் சென்ற காலடிச் மார்க்கத்தைக் காட்டிநிற்கின்றன.
வையத்துள் வாழ்வாங் தெய்வத்து
டு)

காலத்தில் மாணவர்களின் கல்வி மற்றும் உலக கொண்டிருந்தார். உயர்ந்த நிர்வாகப் பணிகளில் து இலகுவான கற்பித்தலுக்கு ஒரு தடையாக
தமக்கு வயதிலும் அநுபவத்திலும் மூத்தவர் வகையான அன்பையும் நட்பையும் வைத்
ளையும் தனது பிள்ளைகளின் நலன் கருதியே ளூக்குப் பிரதிபலனாக அவர் எதையும் எதிர்பார்த்
சிறப்படைவதுடன் பணிவும் ஒழுக்கமும் உடை ரர் தம் ஒரே விருப்பாக இருந்தது. தமது இறுதிப் D ஆகிவிடக் கூடாது என்பது குறித்தும் அமரர் ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம் நாளன்று
மற்றவர்கள் பின்பற்றத்தக்கதான ஓர் எளிமை கயை வாழ்ந்தார். "தக்கார் தகவிலர் என்பது பதற்கு அமைய திரு சரவணமுத்து அவர்களது வைநலம் போன்றன அமரர் தம் தகைமையைச் பாதுவாழ்வு அம்சங்களில் அன்னார் வாழ்ந்த
பின்பற்றுவதற்கு உகந்தது என்பதில் சந்தேக சுவடுகள் வாழ்வு முறைக்கான ஒரு தெளிவான
கு வாழ்பவன் வான் உறையும் ள் வைக்கப்படும்.
உந்தூழ்

Page 119
கலாநிதி சரவணமுத்து மே
"உனக்கு ஒரு பிறந்த தின வாழ்த்துமடல் அல் பத்திரம் எழுதப்பட வேனிடிய இந்த இளவயது வாழ்க்கைச்சரிதத்தை நாம்எழுத நேரிட்டிருத்த
வாழ்க்கையில் எப்போதாவது ஒரு மு சந்திக்க முடிகிறது. சரவணமுத்து மகேஸ்வரன் ஒருவர். தமது துறையிற் சிறந்து விளங்கிய தமக்குக் கொடையாகக் கிடைத்தவற்றை அ அதற்கான காரணமாகும். தமது நேரத்தையோ எதிர்கொண்ட நிலைமைகளையும் சவால்களை
கர்வம் கலவாத அவர்தம் பெருமை. சேர்ததுதக் கொண்ட மதிப்பு, மிகுந்த அடக்க தன்னம்பிக்கையும் மகேஸ்வரன் வசமிருந்த சிற
இலங்கையிலுள்ள கொக்குவில் கிராம (வைத்தீஸ்வரா வித்தியாலயம்) திருமதி செ மூன்றாவது குழந்தையாக மாசி 11, 1959 அ விக்னேஸ்வரன், அக்கா கலாதேவி (நடராஜா) எளிமையான ஒரு சைவக் குடும்பம் ஒன்றில் ம(
மகேஸ் என்று எல்லோரலும் அ6 இளவயதிலிருந்தே புத்திக் கூர்மையும் துணி இருந்தார். அவர் தமது பாடசாலைக் கல்வியை (1963-68), வைத்தீஸ்வரா வித்தியாலயம் (1 கல்லூரி (1975-77) என்பவற்றில் கற்றார். கையாளும் முறை, தன்னலம் கருதாது சேவை ( ஆசிரியர்கள், சக மாணவர்கள், நண்பர்கள் மதிப்பை மகேஸ் எப்போதும் பெற்றிருந்தார்.
-உந்தூழ்

கஸ்வரன் (1959-2005)
சரவணமுத்து விக்கினேஸ்வரன் சரவணமுத்து குமரேசன்
லது நீ சாதித்தவைக்காக ஒரு பாராட்டுப் ல்ெ உனக்குப் பிரியாவிடை கூறி உனது ஸ்ஒந்த உலகின் துர்ப்பாக்கியம்"
மறை தான் உன்னதமான மாந்தர்களைச் நிச்சயமாய் அவ்வாறான மாந்தர்களில் மை மட்டும் அதற்குக் காரணம் ஆகாது. அவர் எவ்வாறு கையாண்டார் என்பதே வல்லமைகளையோ வீணடிக்காது தாம் ாயும் சந்தித்தவர் மகேஸ்.
, தாமாகத் தேடிச் செல்லாமலே அவர்
த்துடன் அவர் கொண்டிருந்த உறுதியும் றப்பம்சங்களுட் சில.
த்தைச் சேர்ந்த ஆசிரியர் A.சரவணமுத்து ல்வராணி சரவணமுத்து தம்பதியினரின் அன்று மகேஸ்வரன் பிறந்தார். அண்ணா தம்பி குமரேசன் என மகிழ்ச்சி நிறைந்த கேஸ்வரன் வளர்ந்தார்.
ன்புடன் விழிக்கப்பட்ட மகேஸ்வரன் ச்சலும் நேர்மையும் மிக்க மாணவராக ப கொக்குவில் நாமகள் வித்தியாசாலை 969-74) மற்றும் யாழ்ப்பாணம் இந்துக் நேர்மை, நேர் நின்று விடயங்களைக் செய்யும் பாங்கு என்பவற்றுக்கூடாக தமது என எல்லோரிடமிருந்தும் ஓர் உயர்ந்த
(1o)

Page 120
மிகுந்த இறையன்பு கொண்டவ என்பது தேவை கொண்ட மக்களுக்கு எ எல்லா மக்களிலும் காண்பதுவுமே ஆகு வெள்ளம் போன்ற இடர்களால் மக்கள் வகையில் உடை மற்றும் உணவுப்பொ LOG3856).
மகேஸ் எப்போதும் தமது நண்பர் உதவுவதையும் இயல்பான வழக்கமாகக் உறுப்பினர்களுக்குச் சமமாகவும் மே தரப்பினரிடமிருந்தும் பெருமதிப்பை மே ஓர் அன்புசால் நண்பனாக எங்கள் குடுL பாடம் சொல்லித்தந்தவனாக என்றெல்லா
1979இல் இலங்கைப் பேராதை பெளதீகப் பாடநெறியை முதல்வகுப்புச் ச கூடவே அதி சிறந்த பெறுபேறுகளுடன் தம கலாநிதி C.A.ஹேவவிதாரண ஞாபகார் Hewavitharana Memorial Prize for மேற்படிப்புக்காக ஒரு வாய்ப்பு வரும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் உத6 இந்தக் காலத்தில், பல்கலைக்கழக வளி குமரன் ஆலயம் சுத்தமாகவும் ஒழுங் அவசியத்தை மகேஸ் அவதானித்தார். நடவடிக்கைகளில் உதவி செய்யும் நோ குறிஞ்சிக் குமரன் கோயிலிலேயே அவர்சி
ஆராய்ச்சிக்கான புலமை நிதிய நகரத்திலுள்ள சைமன் பிறேஸர் பல்கலை Canada) பட்ட மேற்படிப்பை ஆரம்பிக் கிடைத்தது. மகேஸ், உயிரியல் - பெளதி 1985இலும் கலாநிதிப் பட்டத்தை 1989 சிறப்பான செயற்திறனின் விளைவாக அவ (1983 மற்றும் 1984) பல்கலைக்கழக மு பட்டன. கலாநிதிப் பட்டத்துடன் தம் ஆய்
M1N Q02)

ர் மகேஸ். அவரைப் பொறுத்தளவில் சமயம் bலா உதவிகளையும் செய்வதும், தெய்வீகத்தை ம். தமது பாடசாலை நாட்களின் போது கூட, அல்லலுற்றபோது அந்தரித்தோார்க்கு உதவும் ருட்களை உடனடியாகச் சேர்த்து உதவியவர்
களை ஊக்குவிப்பதுடன் கற்கை விடயங்களில் கொண்டிருந்தார். நண்பர்களைத் தமது குடும்ப லாகவும் மதிக்கும் அவர்தம் பாங்கு இரு கஸ்வரனுக்குச் சம்பாதித்துக் கொடுத்திருந்தது. ம்பத்தில் ஒருவனாக கூடவே இருந்து எமக்குப் ம் அவரது நண்பர்கள் மகேஸ் பற்றிச் சொல்வர்.
னப் பல்கலைக்கழகம் புகுந்த மகேஸ் தமது சிறப்புச் சித்தியுடன் 1981இல் நிறைவு செய்தார். து பீடத்தின் முதல் மாணவராக வந்த அவருக்கு த்த பெளதிகத்துக்கான பரிசில் (The Dr CA Physics) எனும் விருதும் வழங்கப்பட்டது. வரை, இரண்டு ஆண்டுகளுக்கு (1981-82) வி விரிவுரையாளராக மகேஸ் பணிபுரிந்தார். Tாகத்தினுள்ளே அமைந்திருக்கும். குறிஞ்சிக் காகவும் பாதுகாப்பாகவும் பேணப்படுவதன் நாளாந்த சுத்திகரிப்பு மற்றும் பாதுகாப்பு க்கில், சாதாரண உலக சுகங்களைத் துறந்து, றிது காலம் தங்கியுமிருந்தார்.
பம் ஒன்றுடன் கனடாவிலுள்ள வான்கூவர் 55-p3555ci) (Simon Fraser Uiversity, Vancouver, கும் வாய்ப்பு 1982இல் மகேஸ்வரனுக்குக் கத் துறையிலான தமது முதுமாணிப் பட்டத்தை இலும் பெற்றுக் கொண்டார். மகேஸ்வரனின் ருக்குப் பட்டதாரிகளுக்கான புலமைப்பரிசிலும் தல்வரின் ஆய்வு உதவியும் (1987) வழங்கப் வை வெற்றிகரமாக நிறைவு செய்த பின்னர்,
உந்தூழ்

Page 121
மகேஸ் ஓர் ஆய்வாளராக 1990 வரை சை புரிந்தார்.
வழமை போலவே, வான்கூவரிலும் 8 பட்டிருந்த மகேஸ்வரன், அவை மூலம் வான் தினரின் பெருமதிப்புக்குப் பாத்திரமானவராக ஆம் ஆண்டு கொக்குவிலைச் சேர்ந்த பத்மி மகேஸ் இலங்கைக்கு வந்தார். அவரது குறுகிய காரணமாக, திருமணப்பதிவை மட்டும் செr வான்கூவரில் நிகழ்த்தவும் முடிவாயிற்று. மகேலி பத்மினிக்கும் வெகு விமரிசையாக வான்கூவரி சைவத் திருமணச் சடங்கு மகேஸ்வரனும் அ6 நட்பின் ஒரு சிறு வெளிப்பாடாக இருந்தது.
மகேஸ்வரனும் பத்மினியும் 1990ஆ வந்தனர். அவர்களது அன்பின் வடிவமாய் 199 அணு விஞ்ஞானம் மற்றும் தொழினுட்ப நிறுவ Technology Organisation) 85 e60öT(856T Lue U6b5606055up555ci) (University of Technology முதல் வருட பொறியியல் துறை மாணவர் மாணவர்களுக்கும் கற்பித்த மகேஸ், ெ நுணுக்கங்களை அறிமுகம் செய்வதிலும் மிகு தொழினுட்பப் பல்கலைக்கழகத்தில் "பல்கை ஆராய்ச்சியும்" எனும் ஓர் உயர்மட்டக் கற்கை 6 செய்து கொண்டு கற்றமை மகேஸ்வரனின் அர்ப்
மகேஸ்வரன் 1998இல் ஒரு பெளதி LJ6ò56ODGDä55p5ĝ566ð (University of Weste மென்மனம் கொண்ட மகேஸ் தமது மாணவர் முழுமனத்துடன் உதவும் இயல்பைக் கொண்டிரு எவ்வித தயக்கமும் இன்றித் தமக்கு மேலான எடுத்துச் சொல்லும் பக்குவமும் அவருக்கு இ எடுக்கப்படுமிடத்து எல்லோருடனும் சேர்ந்து முழுமையாகும் ஒரு பக்குவத்துக்கும் மகேஸ் புரியக் கிடைத்தமை தமக்கு ஏற்பட்ட ஓர் அr விரிவுரையாளர்கள் கருதினார்கள். அவர்கள் “L
-உந்தூழ்

)ன் பிறேஸர் பல்கலைக்கழகத்தில் பணி
மூகம் சார்ந்த பணிகள் பலவற்றில் ஈடு கூவரில் அவரைச் சுற்றியிருந்த சமூகத் இருந்தார். மேற்படிப்புக்கு நடுவில் 1987 Eயைத் திருமணம் செய்யும் நோக்கில் நாட் பயணமும் அப்போதைய கழலும் ாந்த ஊரில் நடாத்தவும் திருமணத்தை ஸ்வரனின் நண்பர்கள் சேர்ந்து அவருக்கும் ல் நடாத்தி வைத்த சம்பிரதாய பூர்வமான வர் நண்பர்களும் கொண்டிருந்த கட்டற்ற
ம் ஆண்டு அவுஸ்ரேலியாவுக்குக் குடி 1இல் அபர்ணா பிறந்தார். அவுஸ்ரேலியா 60T556b (Australian Nuclear Science and ணிபுரிந்த மகேஸ், சிட்னி தொழினுட்பப் Sydney) விரிவுரையாளராகச் சேர்ந்தார். "களுக்கும் சிரேஷ்ட பெளதிகத் துறை பளதிகத்தைக் கற்பித்தலிலும் புதிய நந்த அக்கறை கொண்டிருந்தார். சிட்னி லைக்கழக மட்டத்திலான கற்பித்தலும் நெறியில் தம்மையே மாணவராகப் பதிவு பணிப்புக்கு ஓர் எடுத்துக் காட்டாகும்.
க விரிவுரையாளராக சிட்னி மேற்கு rn Sydney) பதவியேற்றார். என்றும் களுக்கும் சக விரிவுரையாளர்களுக்கும் ந்தார். தமக்குச் சரி என்று தோன்றியதை
அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும்கூட ருந்தது. அதே வேளை, ஒரு தீர்மானம் | அத்தீர்மானத்தின் வெற்றி நோக்கி
சொந்தக்காரர். மகேஸ்வரனுடன் பணி ய வாய்ப்பு என்று மகேஸ்வரனின் சக ]கேஸ் மிகுந்த வல்லமை கொண்டவரும்

Page 122
ஆர்வம் மிக்கவரும் புத்துணர்வு தரு சொல்வார்கள்.
மகேஸ் பெளதிகத்துறையில் பல மேற்பரப்புக்களின் தன்மைகளை முறைய களையும் மேற்கொண்டார். இவற்றுக்க தொழினுட்ப நிறுவனம், மற்றும் பல சர் இணைந்து கூட்டு முயற்சிகளை அவர் முன
ஒரு பெளதிக விரிவுரையாளராக 2003 வரை பணியாற்றிய மகேஸ் 2004 (Nanotechnology) எனும் ஒரு புதிய துை விரிவுரையாளராகவும் பொறுப்பேற்றார் படி, பல்கலைக்கழகத்தில் இப்புதிய நனோ கொண்ட பொறுப்புகளில் மிகச் சிறப்பா பிரதிபலிப்பேயாகும். தமது சக விரிவுரை வளர்ச்சிக்காகப் பல திட்டங்களை வகுத்து
அண்மையில் (ஜூன் - ஜூலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முதுமான மேற்பரப்புகளின் தன்மைகளின் விப செய்ததுடன் இலங்கை விஞ்ஞானநிறுவக ஒரு பயிற்சிப் பட்டறையயும் நடாத்தினார் வசதிகளுடன் ஓர் உண்மைத் தொண்ட பல்கலைக்கழக விஞ்ஞான பீடத் தலை தொடர்புகளை இன்னும் விருத்தி செய்து இடப்பட்டிருந்த திட்டங்கள் எல்லாம் போயிருக்கின்றன.
பல்கலைக்கழகக் கல்வியியல் ( பரிமாணங்களில் ஒன்று மட்டுமே. அவ விசுவாசம் மற்றும் நம்பிக்கைக்குரிய நை கொண்ட சமூக சேவையாளனும் ஆவார் வாழ்ந்த மகேஸ் தம் வாழ்வின் கடை நிமிடத்தையும் தம் குடும்பம், சக வேை ஆலயத்துடனும் களிப்புடன் பகிர்ந்து
ᏩoᏱ

நபவருமான ஒரு விரிவுரையாளர்” என்று
) பாடங்களை விருத்தி செய்து கற்பித்ததுடன், பாக விபரிக்கும் நோக்கில் விரிவான பல ஆய்வு ாக அவுஸ்ரேலிய அணு விஞ்ஞானம் மற்றும் வதேச நிறுவனங்களின் ஆய்வுகூடங்களுடனும்
னெடுத்தார்.
சிட்னி மேற்கு பல்கலைக்கழகத்தில் 1998 முதல் இல் அதே பல்கலைக்கழகத்தில் நனோ நுட்பம் றயின் கற்கைநெறி இணைப்பாளராகவும் மூத்த . அவரது சக விரிவுரையாளர்களின் கணிப்புப் நுட்பக் கற்கைநெறியின் பெருவெற்றி, எடுத்துக் கப் பணிபுரிந்த மகேஸ்வரனின் பேராற்றலின் யாளர்களுடன் சேர்ந்து நனோ நுட்பத்துறையின் விட்டுத்தான் மகேஸ் போயிருக்கிறார்.
2004) இலங்கைக்குச் சென்றிருந்த மகேஸ் 0ணி மாணவர்களுக்கு நனோ நுட்பம் மற்றும் ரணம் உட்பட்ட தலைப்புகளில் விரிவுரை கத்துக்காகக் கொழும்பில் நனோ நுட்பத்திலான 1. மிகவும் குறுகிய கால அவகாசத்தில் மட்டான ராக இரவு பகலாக உழைத்த மகேஸ்வரனை வரும் மாணவர்களும் பாராட்டினார்கள். இத் து தாயகத்து அறிவு வளத்தைப் பெருக்க என
மகேஸ்வரனின் மறைவால் தடைப்பட்டுப்
என்பது மகேஸ்வரனின் வாழ்க்கையின் பல பர் ஒரு பொறுப்பான குடும்பத் தலைவனும், ண்பனும், தாராளமனமும் தன்னலமற்ற பண்பும் . இறைவன் காட்டிய வழியில் மின்ரோ நகரில் -சிப் பதினான்கு வருடங்களின் ஒவ்வொரு லயாளர்கள் மற்றும் நண்பர்களுடனும் சிவன்
கொண்டார். அவர் உதவி யாருக்காவது
உந்தூழ்

Page 123
தேவைப்பட்ட போதெல்லாம் எந்தப் பிரதி மகிழ்வுடன் உதவி செய்தார் மகேஸ்.
தாம் எடுத்துக் கொண்ட குறிக்கே சென்றடையப்பட வேண்டும் என்பதில் ம:ே தம்மால் முடிந்த அளவுக்கு முழுமையாக அர்ப் எல்லோரும் ஒரே மாதிரியாக இருக்க முடிய புன்னகையுடன் எல்லோருடனும் சேர்ந்து பணி
மகேஸ் குறித்து எம்மால் வரைய முடி தெய்வ சந்நிதியில் செய்ய முடிந்த நற் கா
வைப்பானாக.
மகேஸ்! நீ தொடரும் எம் பிறப்புகளில் ஆத்மா. நல்ல ஒரு தேவைக்காகப் பயன்படுத்து தேடிக் கொண்டிருந்த இறைவன் தன் சந்நித என்றெண்ணிஆறுதல் கொள்ளலன்றியாது செ
நெருநல் உளனொருவன் இன்றில்லை யென் பெருமை யுடைத்திவ் வுலகு
-உந்தூழ்

பலனையும் எதிர்பாராது மிகுந்த மன
ாள் தரம் குறையாது வெற்றிகரமாகச் 5ஸ் கவனமுடன் இருந்தார். எப்போதும் பணிக்கும் பழக்கம் கொண்டிருந்த மகேஸ், ாது என்றும் தெளிந்திருந்தாா. ஓர் இனிய புரிவது மகேஸ்வரனின் இயல்பு.
ந்த சிறு வரலாற்றுப் பதிவு இது. அவரால் ரியங்களை இனிமேல் இறைவன் வரவு
கூட ஈடு செய்யப்பட முடியாத ஓர் உன்னத ம் நோக்கில் வல்ல ஒரு சேவையாளனைத் நிக்கு உன்னை எடுத்துப் போய்விட்டான் ய்ய வல்லோம் யாம்?
னும்
GoB)

Page 124
மல்லிகைப் பூப்போன் தவழும் அன்பு உள்ள
எப்போதும் எம் நினைவுகளில் இருக்கும் பார்த்துக் கொள்கிறோம். அவளது மறை போன உணர்வைத் தந்தது உண்மை தா இப்படிப் பல உறவு வடிவங்களை எடுத்த வகுக்கும் வகையில் இருக்கும் எமது அன் உறுதியே எம்மைநிலைக்குக் கொண்டு வ
எங்கள் வீடு கச்சிதமான ஒரு குழு கொண்ட கொக்குவில் ஆசிரியர் அ.சரவ அப்பாவுக்கு ஏற்ற அம்மாவாக எமது குடுL சூழலில் பண்பட்ட சைவத் தமிழ்க் குடும் கூட்டைக் கட்டி வளர்த்தார்கள். ஐம்பத்து கலுக்கு சில தினம் முன்பு எம் குடும்பத்ை கலா. அப்போதே அவரது தமையன் விக்ே உரிமைப் பிடிப்புடன் பெருமையாக எல்ே அம்மா சொல்லக் கேட்டிருக்கிறோம். பி மகேஸ்வரனும் குமரேசனும் வந்து சேர்ந்தா
கிரமமாக நீரும் பசளையும் சேர் வளர்கிற ஒரு மல்லிகைக் கொடியைப் ே மலர்ந்த மல்லிகைப் பூப்போல எப்போதுே இடரினும் தளரினும் அவள் மலர்ச்சியே எங் என்ன உடையிலும் மிகக் கச்சிதமாக இ இலட்சுமி பெயருக்கே பொருத்தம் கூ செல்லத்தைக் கண்ணுறுபடுத்தி விடுவார்: எமக்கு மட்டுமே தெரிந்த இரகசியங்கள். ச போதிலும் அவளது மலர்ந்த முகமும் வெ எங்கள் வீட்டின் கலகலப்பான கழலுக்கு கல
வீட்டுக்கு அருகிலிருந்த கொக்கு அவள் பின்னர் படித்த வேம்படி மகளி ஆசிரியர்களின் அபிமான மாணவியாக அ
(106)

ற வதனமும் புன்சிரிப்புத் மும் கொண்ட ஆசிரியை
குடும்பத்தினர்
எமது கலாவை மீண்டும் ஒரு முறை மீட்டுப் வுச் செய்தி இந்த அகிலமே சில கணம் நின்று ன். ஆனாலும் சகோதரி - மகள் - ஆசிரியை ாலும் அவற்றுக்கெல்லாம் வரை விலக்கணம் பின் கலா அவ்வாறே என்றும் இருப்பாள் என்ற நதது.
நவிக் கூடு போன்றது. அளவெட்டிப் பின்னணி ணமுத்து ஊரில் எல்லோர்க்கும் தெரிந்தவர். ம்பம் அமைந்திருந்தது. எளிமையான குடும்பச் பமாக அப்பாவும் அம்மாவும் எமது குருவிக் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் தைப்பொங் த மகிழ்விக்கும் பெண்பிள்ளையாக சேர்ந்தார் னஸ்வரன் தனது அன்புத் தங்கச்சி என அவரை லார்க்கும் அறிமுகம் செய்து வைப்பார் என்று பின்னர் எமது குருவிக் கூட்டுக்குப் புதிதாக
fireb6ft.
க்கப்பட்ட செழிப்பான மண்ணில் வேர்விட்டு பால கலாவின் வளர்ச்சி இருந்தது. அப்போது ம அவள் முகத்தில் ஒரு புன்முறுவல் இருக்கும். பகள் குடும்பத்தை உற்சாகமாக வைத்திருந்தது. ருக்கும் கலாவுக்கு சரஸ்வதி பெயரை விட 2யவள் என்று உற்றவர் கேட்பதும் எமது 5ளோ என்று அம்மா உள்ளுக்குள் பயந்ததும் லாவுக்கு வயதும் அனுபவ முதிர்ச்சியும் வந்த ளிப்படையான புன்சிரிப்பும் மாறவே இல்லை. ாவே எப்போதும் வித்தாக இருந்தாள்.
வில் நாமகள் வித்தியாலயம் என்றாலும் சரி கல்லூரி என்றாலும் சரி - எப்போதும் அவள் இருந்தாள். வகுப்பில் ஆசிரியர்களுக்கு
உந்தூழ்

Page 125
உதவி செய்வது மட்டுமன்றி நேர்மை, பணி பழக்கங்களும், சக மாணவிகளுக்கு உதவுவது ளைத் தீர்த்து வைத்தலும் அவளை எப்போதும் அவளுக்குக் கிடைத்த சிநேகிதிகள் ஒரு தலைமு பேணிவந்ததை நாம் அறிவோம்.
பெற்றோரினதும் சகோதரர்களினதும் அப்போது தனது ஒரே இலட்சியமாகக் கொ விநாயகன் என்றும் துணை இருப்பான் என்று பிரார்த்தனைகள் மூலமும் நோன்பு மூலமும் பலப்படும் என்ற நம்பிக்கையும் கலாவுக்கு வளர்ந்தால் நான் வளர்ந்தது போலத்தானே என என்றும் எமது நினைவில் இருக்கும்.
வீட்டில் மூன்று ஆண் பிள்ளைகள் என் கலா எப்போதும் துணை வருவாள். கிரிக் பின்வளவு விளையாட்டுகளுக்கு எங்களுடன் உனக்கு எதற்கு இதெல்லாம் என்று அம்மா கண் ஆண்பிள்ளையாக நான்கு பேரைப் பெற்றுக் குறை சொல்கிறீர்கள் என்று ஒரு மல்லிகைச் 8 அம்மாவின் கோபம் காற்றோடு போய்விடும் ஒட்டுவதில் அவளுக்கு ஒரு தனி விருப்பம் இ தாகவும் வருவாள். பின் ஒரு நாளில், எனக்கா என்று கேட்டு எங்கள் குட்டையும் உடைத்தாள்.
ஆயினும், குடும்ப நிகழ்ச்சிகள் என்று வ பொறுப்பையும் எடுத்துக் கொள்வாள். அடுப்பு எண்ணெய் என்றும் பார்க்காது சமைப்பதும் பா தீபாவளி, புதுவருடம், நவராத்திரி என்று நா பண்டிகை இருந்திருக்கலாம் என்று தோன்று இருக்கும். புத்தாடை அணிந்து கோயிலுக்கு அதேவேளை தனிப் பெண்பிள்ளை என்ற அவளிடம் இருக்கவில்லை. வீணாகச் செலவு 6 உதவலாமே என்ற அவளது கருத்தை ஆதரித்த உணவும் உடைகளும் தருவதற்கு அப்பா வசதி பெருமையும் இருந்தது.
gy
-உந்தூழ்

ரிவு, தன்னலம் கருதாமை போன்ற நற் துடன் அவர்களிடையே எழும் பிரச்சனைக ஏற்றியே வைத்திருந்தன. அந்த நாட்களில் முறைக்குப் பின்னரும் அத் தொடர்புகளைப்
கல்வி மற்றும் வளர்ச்சியையே கலா ண்டிருந்தாள். குலதெய்வமான பொற்பதி தெளிவுடன் இருந்த போதிலும், கிரமமான நமது குடும்பத்தின் உறுதியான வளர்ச்சி த இருந்தது. அண்ணனும் தம்பிகளும் ன்று அப்போதே அவள் அடிக்கடி சொல்வது
பதால் இரண்டு அணிகளாகப் பிரிப்பதற்கு கெற், உதைபந்தாட்டம் என்று நடக்கும் இணைந்து கொள்வாள். பெண்பிள்ளை - ாடிப்பாகக் கேட்டாலும் நீங்கள் இன்னொரு கொள்ளாமல் விட்டு விட்டு என்னை ஏன் சிரிப்புப் பளிச்சிட அவள் கேட்டிடும் போது - சகோதரர்களுடன் வேகமாக சைக்கிள் நிருந்தது. அடிக்கடி அவள் தான் முதலாவ க நீங்கள் எல்லாம் விட்டுத் தருகிறீர்களா
பந்து விட்டால் அவள் வீட்டின் பெண் என்ற என்றும் புகை என்றும் நெருப்பு என்றும் ரிமாறுவதும் அவளது உரிமை. பொங்கல், லு மட்டுமே இல்லாது மாதத்துக்கு ஒரு றும் அளவுக்கு கலாவின் கைவண்ணம் தப் போவது தவறவிடப்படாத அம்சம். மிதப்போ ஆடம்பரத்திலான நாட்டமோ செய்வதை விட வசதி குறைந்தவர்களுக்கு து மட்டுமல்லாது அவ்வாறானவர்களுக்கு செய்தும் கொடுத்ததில் அவளுக்கு ஒரு
(107)

Page 126
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு வாய்ப்புக்கள் கிடைக்கும் போது மட்டும சுற்றத்தாரையும் உறவினர்களையும் சே உபசரிப்பதில் அவளுக்கு ஒரு தனித் தி வரும் போதெல்லாம் அட்டவணை தயாரித் எப்போது போவது என்று ஒரு ஏற்பாடு குடும்ப உறவுகளை உயிர்ப்புடன் வைத் செயற்பட்டாள். தம்பிகளின் நண்பர்களு ஆகிவிட்டிருந்தாள்.
தம்பி குமரேசனுக்கு ஒரு பாடசாை போது, அவனது பெயருக்கேற்ப அவை மானித்தாள். அவனை முருகனாய் அலங்க நடனம் முடியும் வரை பெற்ற தாயின் ட நிகழ்ச்சி. பேராதனையிலிருந்து நான் ஊர் வந்து சேர முடியவில்லை. 1971இல் நாட்டி அது அந்த மூன்று நாட்களும் உணவு விடுத் மற்ற கடவுள்களையும் வணங்கி - தன் அ அடுத்த வேலை என்று போன கலாவை எப்
சகோதரர்களுக்குக் குடும்பங்கள் ( பிறக்காத அவளுக்கு மைத்துணிகள் சகோதரர்களின் குழந்தைகளையும் தனது தனது கைப்பட உணவு சமைத்து - ஊட்டி ( இட்டு அழகு பார்த்து மகிழ்ந்தாள் கலா. எ பிள்ளைகள் தனக்குக் கைக்குழந்தைகள் அவர்களுக்கும் இரண்டாவது அம்மா ஆகின
சகோதரங்கள் கல்வியில் சிறக்க பிரார்த்தனைகளூடாக இருந்தது. எங்கள் மகிழ்ச்சி தந்தது “சென்றிடுவீர் எட்டு கொணர்ந்திங்கு சேர்ப்பீர்” என்று பாரதிய பெற்ற நாடுகளுக்குப் போய்க் கல்வி பயின் கிராமங்களுக்குக் கொண்டு வர வேண்டு வல்லமையையும் ஈடுபாட்டினையும் எமக் விரும்பியது போலவே கலாவும் சகோத
Ꮹio8)

என்பதற்கிணங்க வாழ முற்பட்டவள் கலா. ன்றி வாய்ப்புக்களை உருவாக்கிக் கொண்டு காதரர்களின் நண்பர்களையும் ஒன்று கூட்டி ருப்தி இருக்கும். சகோதரர்கள் விடுமுறைக்கு து வைத்துக்கொண்டு எந்த உறவினர் வீட்டுக்கு அவளிடம் இருக்கும். தானும் கூடப் புறப்பட்டு துக் கொள்வதில் ஒரு பிணைப்பாக அவள் க்கும் அவள் நிரந்தரமாகவே கலா அக்கா
ல நிகழ்ச்சி நாமகள் வித்தியாசாலையில் வந்த ன முருகன் ஆக்குவோம் என்று கலா தீர் ரித்து காவடி - மயில் நடனம் ஆடவைத்து அந்த Iடபடப்புடன் கலா இருந்தது மறக்க முடியாத திரும்பும் போது நான் மூன்று நாட்களாக ஊர் ல் ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்த வேளை ந்து நோன்பு காத்து பொற்பதி விநாயகனையும் ண்ணன் முழுமையாக வந்த சேர்ந்த பின்னரே படி மறக்க முடியும்?
என்று வந்த போது, சொந்தச் சகோதரிகளுடன் புதுச் சகோதரிகளாகவே தெரிந்தார்கள். து பிள்ளைகள் போலவே அவள் பார்த்தாள். விட்டு - உடை தெரிவு செய்து - ஆபரணங்கள் த்தனை வளர்ந்தாலும் தனது சகோதரர்களின் போலவே என்று சொல்லிக் கொண்டே னாள் கலா.
5 வேண்டும் என்றது கலாவின் விருப்பம் பல்கலைக்கழக அனுமதி அவளுக்கு அமோக த் திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் பார் பாடியதைப் போல, அறிவியல் வளர்ச்சி *று அதன் பயனைத் தன் சகோதரங்கள் எமது ம் என கலா ஆழமாய் விரும்பினாள் அந்த குத் தர ஆண்டவனையும் கேட்டாள். அப்பா ரர்கள் அடிக்கடி ஊர் வந்து எமது கல்விச்
உந்தூழ்

Page 127
செல்வத்தை மற்றவர்களுக்கும் பகிர்ந்து தர தெரிந்திருந்தது. சகோதரர்கள் யாழ்பல்கலைக் தலைப்புகளின் கீழ் விரிவுரைகள் கருத்தர பின்னணியில் கலாவின் பிரசன்னமும் இருந்த நன்றாக வரவேண்டும் என விரும்பினார்.
கலா தமிழைச் சுத்தமாக எழுதவும் ( சைவ சமயத்தைப் பின்பற்றுபவர்கள் முடிந்த வேண்டும் என்பது அவளது கருத்து. தேவார வேண்டும் என்பது அவளது எதிர்பார்ப்பு. தன ஊரிலும் அயலிலும் உள்ள மாணவர்களுக்கு அழைத்துக் கல்வி புகட்டுவதில் கலா திருப்தி இறுதிகளிலும் பாடசாலை விடுமுறைக் காலங் பகல் நேரங்களில் தான் பாடசாலைப் பிள்: என்றால் வீட்டில் கலாவின் பாடசாலை நடக்( சலிப்பு. பாடசாலைக்கான பாடம் தவிர ( போன்றவற்றிலும் மாணவர்களைப் பதிவு செt தந்து வெற்றி பெற வைப்பது கலாவின் வ புத்தகங்கள், அப்பியாசக் கொப்பிகள் மட்( உடைகள் வாங்கித் தருவதையும் அப்பா ெ “ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பி. அப்பாவுக்குத்தந்துவமும் பேசுவதுண்டு.
1984ஆம் ஆண்டு சித்திரைத் திங்கள் சேகரப்பிள்ளையார் கோவில் பிரதம குரு கலைமாமணி வீரமணிஐயா முன்னிலையில் வாதத்துடன் தென் இணுவை சுவாமிநாதர் கொண்டார். 1984ஆம் ஆண்டு பேராதனை பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்.
தந்தை வழியில் சகோதரர்களின் ஆ கிளி/பூநகரி மகா வித்தியாலயத்தில் கடமைய நாகரீகம் போன்ற பாடங்களைக் கற்பித்தார் காட்டலின் மூலம் இவரது கற்பித்தல் தனி திறனையும் பெற்றிருந்தது. மாணவர்களை ம காட்டி ஆற்றல்களை இனம் கண்டு அவர்களை உயர்நிலை அடையச் செய்வதில் அவருக்கு நிக
-உந்தூழ்

வேண்டும் என்று எதிர்பார்த்தது எமக்குத் 5கழகம் சென்று நாட்டுக்குப் பொருத்தமான ரங்குகள் போன்றவற்றை நடாத்தியதன் தது. கலா கல்வியில் தானும் எல்லோரும்
பேசவும் வேண்டும் என்று விரும்பினாள். அளவுக்கு அந்த நெறிகளைப் பின்பற்ற ப் பதிகங்களைப் பொருள் உணர்ந்து ஒத து உயர்தர வகுப்புக் கல்விக்குப் பின்னர் எந்த வகுப்பு என்று இல்லாது வீட்டுக்கு கண்டாள். மாலை நேரங்களிலும் வார களிலும் வீட்டின் கூடம் மலர்ந்து கிடக்கும். ளைகளுடன் இருந்து விட்டு வருகிறேன் கும் என்பது அப்பாவின் பெருமை கலந்த பேச்சுப் போட்டி - தேவாரப் போட்டி ப்ய வைத்து தானே பயிற்றுவித்து ஊக்கம் ழக்கம். வசதி குறைந்த பிள்ளைகளுக்கு டுமன்றி போட்டிகளுக்கு அணிவதற்காக தரிந்தும் தெரியாததாக விட்டு விடுவார். ள்ளைதானாய் வளரும் அப்பா” என்ற கலா
இரண்டாம் நாள் இணுவைநகர் பரராஜ சோமஸ்கந்தர் அவர்களின் ஆசியுடனும் ல் சான்றோர்கள், சபையோர்கள் ஆசீர் நடராஜா அவர்களை கைத்தலம் பற்றிக் னப் பல்கலைக்கழகத்தின் கலைமாணிப்
சியுடன் ஆசிரியராக 1985ஆம் ஆண்டு பாற்றத் தொடங்கினார். இவர் தமிழ் இந்து . தந்தையாரின் அனுபவ ரீதியான வழி ச் சிறப்பையும். தன்னாற்றல் கொண்ட )லர்ந்த முகத்துடன் அரவணைத்து, அன்பு உற்சாகப்படுத்தி ஊக்குவித்து பரிசளித்து 5ர் அவரே தான்.
G109)

Page 128
1987ஆம் ஆண்டு பெப்ரவரி மா அன்புச் செல்வமாக ஆண்மகவைப் எல்லாவற்றிற்கும் என்றும் தலைவனான என்னும் நாமத்தை வைத்து கணப்பொழுெ மகனை அழைத்து அன்பு சொரிந்து ஆனந்த
1989ஆம் ஆண்டு கிளி/பளை சென்றார். அங்கு கல்வி கற்பித்து வருட போக்குவரத்து எதுவும் அற்ற நிலையிே இருந்து பளை வரை பல்வேறு கஷ்டங்கள்,
"எல்லாப் பிள்ளையும் திறனுள்ள கற்றவராவதும், வல்லவராவதும் ஆசிரியர் இறுதிவரையும் கடைப்பிடித்துக் கற்பித்தா
ஆசிரியரை நம்பி பாடசாலைகள் தவிக்க விடவும் கூடாது என்ற சிந்தனைய பாடசாலை செல்வதில் பின்நிற்பதில்லை.
1992ஆம் ஆண்டு யாழ்/வேம்படி பெற்று ஆசிரியராக கடமையேற்றார். த தொடங்கியதும் தனது பழைய நினைவுச் பாடசாலைப் பழைய மாணவியர் சங்கத் கொண்டார்.
1994ஆம் ஆண்டு தமிழ்மன்றப் கொண்டார். தனது சேவையின் மூலம் பெறவேண்டும் என்ற ஆர்வம் உந்த தமிழ் 2002ஆம் ஆண்டு வரை தமிழ் மன்றம் தமி ஆற்றல்களையும் திறன்களையும் வெளி பட்டது.
இயல். இசை, நாடகம் என்னு முற்பட்டார். இதனால் தமிழ்தினப் போட் போட்டிகளிலும் மாணவர்களை இணைப் இருந்த மாணவர்களை இனம் கண்டும் பய
(110)

தம் விநாயகர் அருளாலும் ஆசீர்வாதத்தாலும் பெற்றெடுத்தார். அம்மாவிற்குக் கணங்கள் கணபதியின் நாமங்களில் ஒன்றான “பிரபு” தெல்லாம் கணபதியை நினைப்பது போல தனது தம் அடைந்தார்.
மத்திய கல்லூரிக்கு இடமாற்றம் பெற்றுச் ம் காலத்தில் நாட்டின் சூழ்நிலை காரணமாக ல் உந்துருளியின் துணையுடன் கொக்குவில் துன்பங்களுடன் சென்று கற்பித்து வந்தார்.
பிள்ளைகள் தான். கல்வி கற்கையிலே, அவர் ர் அரவணைப்பிலேதான்” என்ற கொள்கையை T.
ரில் கல்வி கற்கும் பிள்ளைகளை ஏமாறவும், ாளர், எனவே என்ன கஸ்ட நிலை வந்தாலும்,
மகளிர் உயர் தரப் பாடசாலைக்கு இடமாற்றம் நான் கல்வி கற்ற பாடசாலையில் கற்பிக்கத் களை நினைந்து, நினைத்துப் பூரிப்படைவார். த்திலும் ஆயுட்கால உறுப்பினராக இணைந்து
பொறுப்பாசிரியர் கடமையையும் ஏற்றுக் தனது பாடசாலையும் மாணவர்களும் பெயர் ) மன்றத்திற்கு அளப்பரிய சேவையாற்றினார். ழ்மொழி விழாவினையொட்டி மாணவர்களின் ப்படும் களமாக மாற்றப்பட்டு செயல்படுத்தப்
ம் முத்தமிழையும் முனைப்புடன் வளர்க்க டி வழிகாட்டியில் காட்டப்பட்டுள்ள அத்தனை ப்பதற்குப் பாடுபட்டார். இலை மறை காயாக ந்த சுபாவம் கொண்ட மாணவர்களை பாராட்டி
உந்தூழ்

Page 129
ஊக்கப்படுத்தியும் முன்னிற்கச் செய்தார். "ம எல்லாப் பிள்ளையும் பங்குபற்றச் செய்யும் போட்டிகளை நடாத்தி மாணவர்களைச் தொ பெற்றிருந்தார்.
நாடகம், கூத்து, விவாதம், வினா6 பங்குபற்றச் செய்வதுடன் அவர்களுக்கு வ துறைசார் விற்பனர்களையும் அழைத்து மான போட்டிகளில் பரிசில்களைப் பெறச் செய்தார். ( போன்றவற்றிலும் சக ஆசிரியர்களுடன் இ பரிசில்கள் பெறச் செய்வார்.
அன்பான பேச்சும், புன்சிரிப்பு தவழு இவருடன் சக ஆசிரிய சமூகமும், பாடசா6ை செயற்படும் தன்மை கொண்டதுவாகச் செயற்ப பாடசாலை, கோட்ட, வலய, மாவட்ட, மாகாண L பற்றித்தங்கப் பதக்கங்களையும், பல பரிசில்கை
வருடம் தோறும் பாடசாலையில் நை நடைபெறுவதற்கு ஏற்றவாறு கல்வியியலாளர்க வரவழைத்து தமிழ்மொழித் தினத்தை மிகவும் பாடசாலைக்கும் மாணவச் செல்வங்களுக்கும் மாவட்டத்தில் நடைபெற்ற சில வேறு சமூக வர்களைப் பங்குபற்றச் செய்து தான் கற்ற கற்பி விளங்கச் செய்தவர்.
தான் கற்ற பாடசாலையில் கற்பித்துக் ஆண்டு ஆடித்திங்கள் இரண்டாம் நாள் இை கொண்டார்.
அத்திமுகவனை நித்தம் நினைப்பவர் சித்த மகிழ்வோடு முத்தி பெறுவரே
எக்காலமும் அத்தி முகவனின் பார்ை என்றும் அமைதியாக ஆனந்தமானதாக இருக்கு பொற்பதிவிநாயகனுக்கு மகாகும்பாபிஷேகம் 6 ஆனைமுகன் பாதமலர் சென்றடைந்தார். இவ என்பதில் ஐயம் இல்லை.
-உந்தூழ்

ாணவர்களிடையே வேறுபாடு காட்டாது திறன் கொண்டவர். பாடசாலையில் பல
வு செய்யும் ஆற்றலையும் திறனையும்
விடை போன்றவற்றில் மாணவர்களை ழிகாட்டுவதற்காக கல்விமான்களையும், ணவர்களை ஊக்கப்படுத்தி உற்சாகமூட்டி இசை, தனியிசை, தனிநடனம், குழு நடனம் ணைந்து மாணவர்களை ஊக்கப்படுத்தி
pம் முக வசீகரத்தன்மையும் கொண்ட Uச் சமூகமும் எப்பொழுதும் இணைந்து ட்டமை கண்கூடு. இதனால் மாணவர்கள், Dட்டப் போட்டிகளில் உற்சாகத்துடன் பங்கு ளயும் பெறக்கூடியதாக இருந்துள்ளார்.
டபெறும் "தமிழ்மொழித்தினம்" சிறப்பாக ளையும், துறைசார் விற்பன்னர்களையும் b சிறப்பாகவும் வியப்பாகவும் நடாத்திப் ) பெருமை சேர்த்தவர். அத்துடன் யாழ்
நிறுவனங்களின் போட்டிகளில் மாண த்த பாடசாலை உயர்தரப் பாடசாலையாக
கொண்டு இருக்கையிலேயே 2010ஆம் றவன் பாதார விந்தங்களில் இணைந்து
வயின் கீழ் குடியிருக்கும் எமது குடில் ம். 2010ஆம் ஆண்டு சித்திரைத் திங்கள் சய்து ஆனந்தமாக இருந்து ஆடித்திங்கள் ர் சித்த மகிழ்வோடு முத்தி பெறுவார்
1N C 111)

Page 130
அகத்துய்மையுடன் ஆசிரி
1961ஆம் ஆண்டு அமரர் அருணாசலம் தமிழ் கற்றுக் கொண்டேன்.
தமிழ் இலக்கியம் கற்பிக்கும் கம்பராமாயணப் பாடல்களுக்கு கொடு பதிந்துள்ளது. எனது வாழ்க்கையில் இ புத்திமதிகளை இன்றும் நினைவில் ந ஏனெனில் "துள்ளித் திரியும் வயதில் என என்னை வழிப்படுத்திவழிகாட்டியவர் அ
தமிழ் இலக்கணம் கற்பிப்பது இ மாணவர்களுக்குக் கசப்பாய் இருக்கு வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல இலக்கணத்தை எமக்குப் புகட்டுவதில் அவ
நான் மாணவனாக வைத்தீஸ்வ ஆண் ஆசிரியர்கள் பெரும்பாலானோர் என்பவற்றையே அணிவது (தேசிய உை ஆசான் அவர்கள் அவற்றை அணிவது மிகவும் தூய்மையாக ஆடை அண அகத்தூய்மையையும் வெளிப்படுத்துவத மதிப்பும், மரியாதையும் தானாகவே தோ
அவர் மாணவர்பால் அன்பு, கe ஆசானாகத் திகழ்ந்தவர். பாடசாலைக் க போதெல்லாம் நலம் விசாரிக்கத்தவறமா
அவருக்குச் சிலை அமைக்கப்பட முகமும் தமிழ் பண்பாடு நிறைந்த தூய்ை உறுதியான சிலையாக என்றும் நிலைத்தி
"வையத்துள் வாழ்வாங்கு வாழ்ப
வானுறையும் தெய்வத்துள் வைக் என்ற திருவள்ளுவர் வாக்கிற்கேற்ப கண்ணியமான ஆசானாய் கற்பக தருவி தெய்வத்துள் வைக்கப்படுவது உறுதி.
அன்புள்ளம் (

யப் பணியாற்றிய தமிழ் ஆசான்
க. பழனிவேற்பிள்ளை ஓய்வுபெற்ற அதிபர்.
சரவணமுத்து ஆசிரியரிடம் உயர்தர வகுப்பில்
போது அவரது சுவையான கருத்துக்களும், க்கும் விளக்கங்களும் இன்றும் என் மனத்தில் ன்ப, துன்பங்கள் ஏற்படும் போது அவர் கூறிய $றுத்திச் செயற்படுவது எனது வழக்கமாகும். து துடுக்கை அடக்கி" பல்வேறு மதியுரைகள் கூறி 5) T.
லகுவானது அல்ல. இலக்கணம் என்றால் சில ம். எமது ஆசிரியர் சரவணமுத்து அவர்கள் மிகவும் இலகுவாகவும், கவர்ச்சியாகவும் தமிழ் வருக்கு நிகர் அவரே.
ராக் கல்லூரியில் கற்றவேளை அங்கு கற்பித்த தமிழ் பண்பாட்டிற்கு அமைய வேட்டி, சால்லை >ட) வழக்கம். ஆனால் எமது உன்ளம் கவர்ந்த
அலாதியானது. உத்தரீய மடிப்புக்குலையாது ரிவார். அது அவரது புறத்தூய்மையுடன் 5ாக அமையும். அவரைப் பார்த்ததும் எமக்கு ற்றம் பெற்று அவருக்கு வணக்கம் கூற வைக்கும்.
னிவு, அக்கறை, பாசம், பரிவு கொண்ட ஒரு ல்வி விட்டு விலகிய பின்பும் என்னைக் காணும்
LITs.
டாவிடினும் அவரது கள்ளம் கபடமற்ற சிரித்த மயான தோற்றமும் அவரது மாணவர் மனதில் ருக்கின்றது. இது உண்மை உறுதி.
வன்
கப்படும்"
அவர் தனது வாழ்வில் கடமை வீரனாய், பாய் வாழ்ந்தார். எனவே இவர் வானுறையும்
கொண்ட மாணவன்
உந்தூழ்

Page 131
பள்ளித் தோழியின் உள்ளத்தி
வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையில் ந தோழியாகவும் நான் மேற்படி பாடசாலைய கட்டத்தில் என்னுடன் ஆசிரியராகவும் பணியா பிரிந்த எனது அன்புக்குரிய திருமதி கல் நினைவஞ்சலி நேரத்தில் அவரின் பயன்நோக்
1956 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆ கொக்குவில் நாமகள் வித்தியாலயத்திலும் ! உயர்தரப் பாடசாலையிலும் பட்டப் படிப்பை ே செய்து பீ. ஏ. பட்டதாரியாக ஆசிரியப் பணி டிப்ளோமாவை தேசிய கல்விநிறுவகத்தில் முட
கி/பூநகரி மகாவித்தியாலயம், பலை களில் ஆசிரியையாகப் பணியாற்றிய இவர் 19 வரை, தான் கல்விகற்ற யா/வேம்படி மகளிர் உ
பழகுவதற்கு இனியவராகவும், பண்ட் தன்னிடம் கற்கும் மாணவர்களுக்கு வழங்க ே இவர் ஆசிரியப் பணியில் இருந்த நேரத்தி:ே விட்டார்.
ஆசிரியப் பணியை ஒரு தொழிலாகக் பணியாற்றிய நல்லாசிரியரான எனது அன்பு நடராசாவின் இழப்பை ஒரு வருட காலL இருக்கிறது. என் அன்புத் தோழியின் அமை தன்னலம் கருதாத அவரது சேவையும் கண்முை
அங்கமெல்லாம் கண்களாக அழுதிட் உண்மையை உணர்ந்து மறைந்த அம்மாதர் தி C3LJTLOT35
-உந்தூழ்

ன் நீங்கா நினைவலைகள்.
திருமதி.யோகேஸ்வரி பற்குனராசா முதல்வர், யாழ் மாநகரசபை.
ான் கல்வி கற்ற காலத்தில் எனது பள்ளித் பில் ஆசிரியராகவும் பணியாற்றிய கால ற்றி 02.07.2011 ஆம் தேதி எம்மை விட்டுப் 0ாதேவி நடராசாவின் முதலாம் வருட கா பணிகளை நினைவுகூருகிறேன்.
பூம் திகதி பிறந்து தனது ஆரம்பக் கல்வியை இடைநிலைக் கல்வியை வேம்படி மகளிர் பராதனைப் பல்கலைக்கழகத்திலும் பூர்த்தி ணரியில் அடி எடுத்து வைத்து, பட்டப்பின் ஒத்தார்.
ா மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலை 192ஆம் ஆண்டிலிருந்து 2010 ஆம் ஆண்டு உயர்தர பாடசாலையில் பணியாற்றினார்.
வின் சிகரமாகவும், தான் கற்ற கல்வியை வண்டும் என்ற விருப்புடன் கடமையாற்றிய லயே இறைவனின் திருவடியை அடைந்து
கொள்ளாது ஓர் அர்ப்பணிப்பாகக் கருதிப் 5கும் மதிப்புக்குமுரிய திருமதி கலாதேவி மாகியும் இன்னமும் மறக்க முடியாமல் தியான சுபாவமும், நேரிய சிந்தனையும் ானே வந்து மனதை நெகிழ வைக்கின்றன.
டாலும் அவர் எழுந்து வரமாட்டார் என்ற லகத்தின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திப்

Page 132
இன்பத்தமிழ் பெருவிருட்சம் எ இனிய இளம் விழுதுகள்
திருமதி. கலாதேவி நடராஜா எமது பாட இணைந்து கொண்டார். பேராதனைக்
சாலையில் இணைவதற்கு முன்னர் பூநகரி யிருந்தார். அத்துடன் இவர் எமது பாடசாை
கலாதேவி தமிழ், சைவசமயம் அ திரிபின்றிக் கற்பித்திருந்தார். இந்த இன்பத் விழுதுகள் பல இன்றும் அவர் புகழ் பரப் நிலவுகின்றன.
அவர் தனது சேவைக் காலத்த செயற்பாடுகளில் பெரிதும் பங்களிப்புச் பாசிரியையாக இருந்த காலத்தில் நாடகம் களை நெறிப்படுத்தியிருந்தார். அத்துடன் ( போட்டிகளுக்கும் மாணவர்களை ஊக்குள் பரிசில்களும் பெறச் செய்து பாடசாலைக் சேர்த்தவர்.
ஏனைய ஆசிரியர்களுடனும், மா பழகும் இனிய சுபாவமுள்ளவர். இவரது வேண்டியேற்பட்டது பேரிழப்பாகும் இவரது நிலைபெறும்.
"தோன்றிற் புகழோடு தோன்றுக அஃ
தோன்றலில் தோன்றாமை நன்று”
எனும் வள்ளுவப்பேராசான் வாக் திருக்கும், இவரது ஆத்மா இறைவன் ட இறைவனை இறைஞ்சுகின்றேன்.
C 114)

ாங்கள் கலா ஆசிரியை அவர்தம் எங்கள் மாணவியர் குழாம்
திருமதி. க. பொன்னம்பலம் அதிபர், யா/வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை.
சாலையின் ஆசிரியையாக O9.01.1992 இல் கலைப்பட்டதாரியாகிய இவர் எமது பாட ரி, பளை ஆகிய இடங்களிலும் கடமையாற்றி லயின் பழைய மாணவியுமாவார்.
ஆகிய பாடங்களை மாணவர்களுக்கு ஐயம் தமிழ் பெருவிருட்சத்தின் கீழ் கற்று வேர்விட்ட பும், நிழல் அளிக்கும் ஆலமரங்களாக நின்று
நில் பாடசாலையின் இணைப்பாடவிதான செய்திருந்தார். தமிழ் மன்றத்தின் பொறுப் ), கூத்து போன்ற போட்டிகளுக்கு மாணவர் பேச்சு, பாவோதல், கட்டுரை போன்ற ஏனைய வித்து பங்கேற்கச் செய்து தேசிய மட்டத்தில் கும், மாணவர்களுக்கும் தனக்கும் பெருமை
ாணவர்களுடனும் அன்புடனும், பண்புடனும் சேவையை குறுகிய காலத்தில் நாம் இழக்க புகழ் இன்று நிலை பெற்றுள்ளது. அது என்றும்
திலார்
கிற்கிணங்க இவரது புகழ் என்றும் நிலைத் ாதங்களில் சாந்தியடைய எல்லாம் வல்ல
உந்தூழ்

Page 133
காலத்தால் அழியாத
GILD3 d56DIT
கற்றோர் பலரும் கனிவுடன் போற்று ஆசானாய் நன்றே பணிபுரிந்த எம் ஆசிரியர் தகுந்தவர்களுள் ஒருவராவார். இவர் மான கல்வியில் மேலோங்கச் செய்ததுடன் அவர் ! உறுதுணையாய் இருந்தவராவார். அவற்றுள் மகத்துவமானது.
அந்தவகையில் 1994ஆம் ஆண்டிெே 2002ஆம் ஆண்டு காலப்பகுதி வரை த6 மாணவர்களுக்கு பல வெற்றிகளை ஈட்டிக் ெ புகழையும், பெருமையையும் தேடித்தந்தார் எ
தமிழ்மொழித்தின விழாவையொட்டி திறமைகளை இனங்கண்டு கொள்வதற்காக அதில் வெற்றியும் கண்டார். முத்தமிழான இவற்றோடு இணைத்துப் போட்டிகளை நடாத்தி களை மேலும் வலுவாக்குவதற்கு ஏனைய தமி யுடன் பல்வேறு முயற்சிகளையும் மேற்கொன மாணவிகள், கோட்டம், வலய, மாவட்ட, மாகா தமிழ் மொழித்தின போட்டிகளிலும் பங்குபற்ற களையும் பெற்றனர். இதற்கான பயிற்சிகளையு இவரைக் குறிப்பிடுவது முக்கியமானதாகும்.
மேலும் எமது பாடசாலையில் வருடந்ே விழாவையும் ஒவ்வொரு வருடமும் மிகச் நடாத்தி வந்தார். அக்காலப்பொழுதுகள் மான அளப்பரிய சேவைகளை வழங்கிய இவர் இன் குறையே ஆகும். எனினும்
"ஆண்டாண்டுகாலம் அழுது புரண்டாலு
மாண்டார் வருவரோ இம் மாநிலத்தில்" என்ற கூற்றுக்கமைவாக எம் மனதைத் தேற்ற ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்
-உந்தூழ்

A
த கலைக் காவியம் ஆசிரியர்
தமிழ் மன்றம் யாழ்/ வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை.
ம் கல்லூரியாம் வேம்படியிலே நற்றமிழ் திருமதி க.நடராஜா அவர்கள் போற்றத் 1ணவர்களை நல்லொழுக்கத்துடன் கூடிய இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்கும் தமிழ்மன்றத்துக்கு ஆற்றிய பங்களிப்பே
) தமிழ் மன்றத்துடன் இணைந்த இவர் னது அளப்பரிய சேவைகளை வழங்கி கொடுத்ததுடன் எம் கல்லூரிக்குப் பெரும் ன்றால் அது மிகையல்ல.
மாணவர்களிடையே புதைந்திருக்கும் பல்வேறு போட்டிகளை ஒழுங்கு செய்து இயல், இசை, நாடகம் என்பவற்றையும் னார். அத்தடன் தாம் இனங்கண்ட திறமை ழாசிரியர்களின் கல்விமான்களின் உதவி ண்டார். இதன் விளைவே எம்பாடசாலை ண ரீதிகளிலும் மற்றும் அகில இலங்கைத் நித் தங்கப் பதக்கங்களையும் பல பரிசில் ம், ஊக்குவிப்பையும் வழங்கிய ஆசானாக
தோறும் நடாத்தப்படும் தமிழ்மொழித் தின சிறந்த முறையில் வெகு விமரிசையாக னவர்களின் பொற்காலமாகும். இவ்வாறு று எம்முடன் இல்லாதது எமக்குப் பெருங்
ம்
விக் கொள்வதே சாலச் சிறந்தது. அவரது கின்றோம்.
(115)
81

Page 134
GSGON
கலா எனும் பெயரில் உலாவந்து கல்லு காணும் மாணவியரைக் கதைபல கேட் நாளும் அவர்கள் தேவைகளை நினை தாரகை உள்ளம் கொண்டதயாபரிநீே
பேராதனையில் பல்கலைபயின்று பட்ட பள்ளிகண்டு கற்பித்தலை வெற்றியாய் நள்ளிரவிலும் தனயனுக்காக நித்திரை நீண்டநாள் வாழ்ந்து நன்மைகள் பார்த்
படைத்தவன் நினைப்பில் பாரினில் நீரு விடைதனைப் பெறவே தேதிகள் குறித் நோய்களாய்த் தந்திட்டவேளை அதில் சித்தமாய் வந்து சிறார்களுக்கான கொ
எத்தனை சொல்லியும் தனது கடமையி மெத்தன செய்திட்டு மெல்லெனச் சென் சிந்தனையில் நினைக்கையில் சிந்திட்ட வித்தைகள் புரிந்து விளையாடிய விதிை
நண்பியாகிநல்லன கூறிநயம் பல சொ பண்புடன் உறவு தொடர்ந்திட்ட வேலை விண்ணகம் செல்ல விடையொன்று இ6 கண்களில் நீருடன் காத்திருக்கின்றேன்
ܓ
G16)

)ாதீபம்
ரிச்சாலைதனில் டு கஸ்டங்கள் உணர்ந்து வினில் கொண்டு நிறைவது செய்யும்
J.
stil85G36ITITGBUGO முடித்தீர்! முழித்து திட ஆவலானிர்.
ம் பாதியில் து தேர்வுகள் சித்திகள் பெற்று ப்பிகள் திருத்தினீர்.
னைகடைசிவரைதனில் ற அந்தநாள்
கண்ணீர்
யை சொல்லிடமுடியா.
ல்லி
T
bலை ஏன்?
அன்புடன்
விக்கி
உந்தூழ்

Page 135


Page 136


Page 137
::炎參終ドシ、。縱怒،
 


Page 138


Page 139


Page 140


Page 141


Page 142


Page 143
sos,.........–...)s → ...............),精心餐綏
*劑唔鬣鲁 壽轄雲髻髻参见髮餐 シ ாரரபmாறாறஒறயிmரழிவிடுஒழிmoபmஓபறா
 


Page 144


Page 145
s@ùng)mýırsaíĝis souffmaen jsouno súpai sgïooppioonisası,soyoaeipėsøqonquæ punto sysý,
 


Page 146


Page 147


Page 148


Page 149


Page 150