கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஒர்மம்

Page 1


Page 2
சிறுக
வேல் (
வளப்புலம் ஒழுங்கை, மாயெழு
இன்றைய தெ 8/3/3 மெற்றோ மாடிமனை, 55ஆ தெர்லைபேசி 599488 தொலை நகல் 074

Djib
தைத் தொகுப்பு
குரும்பசிட்டி, தெல்லிப்பழை.
டர்பு முகவரி பது ஒழுங்கை, கொழும்பு-06. 514 396 L66öIGOTGb3F6io amuthan GDsltnet.lk

Page 3
First Edition
Copyright
Cover Concept
& Type set by
Pages
Size
Paper
Type
Binding
Copies
Printed at
Published by
Price
14.04.2(
Author
Mrs. Mu
XXν + 12
1/8
80 GSM
11 Point
300 GSM
1000
Unie Art
Author
Mayelu, V
Kurumpa
RS. 200/-

AURMUM A Collection of short stories by Vel-Ainitial
)02
hunthan Pirabajini
O = 14.4
Bank Paper
Art Board; Sectional Binding
s (Pvt) Ltd., Colombo 13.
fallappulam Lane,
siddy, Tellippalai.
8/3/3 Metro Apartment, 55th Lane, Colombo - 06 Tel : 599488 Telefax : 074 - 514396 e-mail : amuthan Osltnet.lk

Page 4
öjforirŭin
இசை வாத்தியம், நடன பஜனை, சமயச் சொற்பெ காவடி, தாளக் காவடி, ! கும்மி, வசந்தன், கோல பொய்க்காலட்டம் ஒப்ப நாடகம், நாவன்மை, சிறு கட்டுரை, விமர்சனம் புகைப்படம், புளொக் வடி செய்திப் பத்திரிகை, அ அமைப்பு, தரைப்பட தொல்பொருள் சேகரித்த ஆவணப்படுத்தல் -
முதலிய பல்வேறு கன தழைத்தோங்கிய கலை எம்முர் குரும்பசிட்டி,
எம் குரும்பசிட்டி அை விந்தங்களில் இந்நூல் ச

IGNOhio O OOO
ம், சங்கீதம், பண்ணிசை, ாழிவுகள், புராணப் படிப்பு, பறவைக் காவடி, கரகம், ாட்டம், பொம்மலாட்டம், னை, நாட்டுக் கூத்து, கதை, நாவல், கவிதை, 9 சிற்பம் , சித்ததிரம் , வமைப்பு, அச்சுப் பதிப்பு, றிவிப்புக் கலை, அரங்க ம் அரும் பொருள் = ல், வரலாற்றுப் பதிவுகள்
லைகள் வேர் விட்டுத்
ப் பூமி - கவின்மிகு கிராமம்
ர்பு மாதாவின் பாதார "nDrifiLuaurib !:
iii

Page 5
|-
-
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 6
உள்ளே.
என்னுரை
அணிந்துரை
மானுடம் சாவதில்லை
ஆத்ம சுகம்
காகித ஒடம்
உள்ளொளி
நற்சிந்தனை
திருவிளையாடல்
பிறந்தநாள் பரிசு
ஒட்டுண்ணி
இக் கதைகளில் வரும் பெயர்களு இவை எவரையும், எவற் 菁 குறிப்பிடுவ
 
 
 

105
றையும் எவ் வகையிலும் ன அல்ல!

Page 7
|-
|-|- |- る |- |-
|- |- |- |- |-- |-|-
|- | |- |-|- |- |-
· |-|-|
, ، ، ، ،
, , ,* -
 
 
 
 
 

s
|-

Page 8
என்னுரை
வேல் அமுதன்
வளப்புலம் ஒழுங்கை, மாயெழு, குரும்பசிட்டி,
தெல்லிப்பழை. 05 03. 2002
நி கழ்வுகளி காயங்கள்
பெறுகின்றன சிலவற்றின் ஊடறுத்து,
மனப்போக்க வேகத்தை சம்பந்தப்பட்ட இயல்பு கெ
இந்தகைய அநேகர். அ
அப்போது 1948ஆம் 6T601g, UIT6
குரும்பசிட் புரியும் அt முன்றில் தொண்டம திருவிழா ! மணிக்குப்
வழியில் S LL 6T வழி, தெ( பஜனையே கொண்டிரு ஒருவர் சி

ன் பாதிப்பு ஏற்படுத்தும் மனக் அநேகமாக காலத்தால் தேற்றம் 1. இருப்பினும், சில சமயங்களில் பாதிப்பு மன மேல் மட்டத்தை அதன் ஆழ் நிலையை அடைந்து, கின் பாதையையும், பருமனையும், தயும் புரட்சிகரமாக மாற்றி, -வரைப் புதியவராக மாற்றியமைக்கும் ாண்டதுமாக அமைந்தும் விடுகின்றது.
புரட்சிகர மனமாற்றத்திற்கு ஆளவோர் அவர்களுள் யானும் ஒருவன்.
O O O
எனது வயது பத்து என நினைவு. ஆண்டாக இருக்கலாம். அதாவது, ப் பருவம் அது.
டி கிழக்கில் வீற்றிருந்து அருளாட்சி ன்னை முத்துமாரி அம்மன் ஆலய இருந்து ஒரு பாத யாத்திரை ானாறு செல்வச்சந்நிதி தேர்த் மஹோற்சவத்துக்குக் காலை ஐந்து புறப்படுகின்றது.
ாம்முடன் இணைந்து கொண்டவர் ) கோஷ்டியில் சுமார் ஐம்பது பேர். வெல்லாம் சிவபுராணப் பாராயண ாடு பக்திப் பரவசமாகச் சென்று க்கின்றோம். பண்ணிசைப் பாடகர் வபுராண ஒரடியினை மனமொன்றி
vii p

Page 9
சுவையாக இசைக்க, அவ்வடியி6ை பாடியபடி யாம் சென்று கொண்
ஈழகேசரி பொன்னையா வீதி, எனப் பல இடங்களைக் கடந்து அச்சுவேலி வீதியில் ஒட்டகப்புல கடந்து, மேலும் கிழக்கு நோக்கி
வழியில் ஓர் 'தண்ணிர்ப் பந்த உடைத்து முதன் முதலில் ( சாந்திக்குப் பந்தலுக்கு ஓடிச் (
பந்தலின் வலது கை ஓரம் கிடு வைக்கப்பட்டிருந்த பெரிய வா அண்டாக்களிலும் ஊறுகாய்த் தேசிக்காய்த் தண்ணீர், மோர் மு இருந்தன.
சர்க்கரைத் தண்ணிருக்குப் பொறுட் சக்கரைத் தண்ணி” என்றேன். வெளியேயோ,” என வினவினார். அந்நேரம் எனக்கு விளங்கவில்லை சர்க்கரைத் தண்ணிரைப் பெற்றால் வாயில் வந்த ‘வெளி’ என்ற சொ
எனக்குச் சர்க்கரைத் தண்ணிர் போத்தலில் வார்த்து ஏனோ தாே தொடர்ந்து வந்தவர்கள் விளக்கமுடையவர்கள். அவர்கள் சொல்லிக் கொள்ள, அவர்களு பேணிகளில் மிகப் பக்குவமாக 6
V

ா மீள உற்சாகத்தோடும், உரக்கவும் டிருக்கின்றோம்.
பலாலி வீதி, வசாவிளான் சந்தி , யாம் இப்போது பண்டத்தரிப்புச் சம்பந்தர் வைத்தியசாலையைக் ச் சென்று கொண்டிருக்கின்றோம்.
ல்’ எமது கோஷ்டி ஒழுங்கை
முண்டியடித்துக் கொண்டு தாக சென்றவன் யான்.
கு 'ப' வடிவ அடைப்புக்களில் ங்கின் மேல் கிடாரங்களிலும், தண்ணிர், சர்க்கரைத் தண்ணிர், தலிய தாக சாந்தி நீராகாரங்கள்
பாக இருந்த பெரியவரிடம் "ஐயா, அவர் “தம்பி!. உள்ளேயோ, பெரியவரின் பேச்சின் தாற்பரியம் )! ஏதாவது சொல்லி எப்படியாவது போதும் என்ற தவிப்பில், அந்நேரம் ல்லைத் தவறுதலாகச் சொன்னேன்.
யானை மார்க் சோடா வெற்றுப் னா எனத் தரப்பட்டது. என்னைத் வயதானவர்கள் - விடய “உள்ளே” என பெரியவருக்குச் 5கான நீராகாரம் தகர மூக்குப் பழங்கப்பட்டது.
iii

Page 10
“உள்ளே', 'வெளியே' என்பன சா அவை சமூக ஒடுக்குமுறையின் யான் நன்றாக விளங்கி, அன்ன கண்டு, சீற்றம் கொண்டேன்.
என் வாழ்வில் ‘சர்க்கரைப்பந்த நிகழ்வு அல்ல; பிஞ்சு மனதில் தொடர்ந்து நிகழ்ந்த வேறும் சில என் சீற்றத்தைக் கொழுந்துவிட்
சமூக அமைப்பில் பாரிய பழுது தேவை; அப்பரிகாரமும் இலேசா
முடிந்தளவு சமூக சீர்திருத்தத்த என்ற வேகம் பெற வைத்தவை அ
யான் கட்சி அரசியல் விடயங்களி
சமூக சீர்திருத்தத்திற்கான அரசி தேடலானேன்.
சமூக சீர்திருத்தத்திற்கான உந்து இலக்கிய அமைப்புக்கள் என்ப அமைப்புக்களைத் தோற்றுவித்து, என்பதை மிக அடக்கத்தோடு
எனது உழைப்பில் உருவாகி அமைப்புக்கள் சில கீழே பட்டிய

தாரண சொற்கள் அல்ல; பரிபாஷை, வெளிப்பாடு என்பதை பின்னேதான் றைய சமூக அமைப்பின் சிறுமை
ல் நிகழ்வு உதிரியான ஒரே ஒரு நெஞ்சைப்பிளந்த அந்நிகழ்வைத் சமூகக் கொடுமையான நிகழ்வுகள் டு எரியச் செய்தன.
உண்டு; அதற்கு உடன் பரிகாரம் ன ஒன்றல்ல; இருந்தும், என்னால் நிற்கான பணி ஆற்ற வேண்டும் க்கால அக்கொடுர நிகழ்வுகள்தான்!
Iல் தலையிடுவது இல்லை. எனவே, சியற் கலப்பற்ற வழிமுறைகளைத்
விசையை வழங்கவல்லது கலை தை உணர்ந்து கலை இலக்கிய கணிசமான சேவை ஆற்றியுள்ளேன் குறிப்பிடக் கடமைப்பட்டுள்ளேன். நற்பணியாற்றிய கலை இலக்கிய
லிடப்பட்டுள்ளன.
Χ

Page 11
சங்கப்பலகை (நூ இலங்கை அறிவு தமிழ் கதைஞர் வள்ளுவர் மாமன் வேல் வெளியீட்ட மதி கலைஞர் வ
மேற்தரப்பட்ட கலை இலக்கிய அன விளைவாக 'மகவம்’ மாத்திரமே மட்டான வேகத்தில் சேவையாற்றி வேண்டிய ஒன்றாகும்.
யான் சிறந்த அரங்க அமைப்பாள வியந்து பாராட்டப்பட்டவன் என் இன்னொன்றாகும்.
O
நற்சிந்தனைகள் விதைக்கப்பட்டா என அறிந்து, எம் குடும்ப வை எதுவாயினும் அனைத்திலும்
அம்சத்தையும் இணைத்து வெற்றி
இந்நேரம் ஒரு சம்பவம் என் நிை
யான் அன்று ஒரு வகையில் அன்றைய ஒரே ஒரு பற்றுக்கோ( வேலுப்பிள்ளை வள்ளிப்பிள்ளை எனக்கு இளமையில் வறுமை. எ நில்ை இன்னொருவருக்கு நேரக்சு
X

லகம்)
இயக்கம் (அறிவகம்)
வட்டம் (தகவம்)
றம்
கம் (வேகம்)
ட்டம் (மகவம்)
மப்புக்களுள் கால நெருக்கடியின் எனது வழிகாட்டலில் இன்றும் வருகின்றது என்பது குறிப்பிடப்பட
ான் எனச் சான்றோரால் பெரிதும் பதும் குறிப்பிடப்பட வேண்டிய
Π
ல், சமூக சீர்திருத்தம் முளைவிடும்
பவம் மங்களமோ அமங்களமோ ‘சிந்தனை அரங்கம்’ எனும்
கரமாக நடத்தி வருகின்றேன்.
னவுக்கு வருகிறது.
அநாதை. அநாதரவான எனக்கு B என் அன்பு அன்னை திருமதி அவர்கள் மாத்திரமே. அத்தோடு, னக்கு நேர்ந்த அத்துர்ப்பாக்கிய டாது என்பதும் எனது நேர்த்தி.

Page 12
நாம் குரும்பசிட்டி மாயெழுவில் ஆண்டு ஊரெழு கிழக்கில் குடி பற்றுக்கோட்டையும் யான் இழந்
அன்னையின் ஈமக்கிரியையை ‘த வழமையான ஈமக்கிரியை விதி பிராமணத்துவத்திற்கும் வர்ணா வள்ளுவ வழியில், எளிமையாக
அந்தியேட்டி அன்று ‘தமிழில்
சிந்தனை அரங்கத்தை அமைத் பேராசிரியர் நா. சுப்பிரமணிய ஐ முதலிய அறிஞர்களையும் உை மனமாற்றத்திற்கு வழிவகுத்தேன்
O
எனக்குக் கிடைத்த வரப்பிரசாத
ஒன்று. யான் குரும்பசிட்டியைப்
குரும்பசிட்டி வித்தியாசமான வித்தியாசமான கலைஞர்களைச்
குரும்பசிட்டியின் ஒரே ஒரு ப8 அந்நாளில் திகழ்ந்த சன்மார்க்க சங்க 'சன்மார்க்க தீபம்’ பத்திரி நன்றாகப் புடம் போடப்பட்டேன். இரசிகமணி கனகசெந்திநாதன் கிடைத்தது என்றால் கேட்கவும்
மற்றது. யான் நீண்ட காலம் தெ Uu airp60)LD.

இருந்து புலம் பெயர்ந்து 1987 ஆம் யிருந்த வேளை என் ஒரேயொரு து விட்டேன்.
தமிழ் ஈமக்கிரியையாக' - அதாவது,
களை முற்று முழுதாக மாற்றி,
ச்சிரமத்திற்கும் இடம் கொடாது
நடத்தினேன்.
ஈமக்கடன்' என்ற மகுடத்திலான து, யாழ் பல்கலைக்கழகத் தமிழ்ப் யர், திரு. அண்ணா இராஜேந்திரன் ர நிகழ்த்தச் செய்து புரட்சிகரமான
.
O O'
ங்கள் இரண்டு.
பிறப்பிடமாகக் கொண்டமை.
கலைத்துறைகளில் ஈடுபாடுடைய 5 கொண்ட வித்தியாசமான ஊர்.
லம் வாய்ந்த சமூக நிறுவனமாக
5 சபையின் சன்மார்க்க இளைஞர்
கையின் ஆசிரியராகப் பணி புரிந்து
எம்மூர் பிரபல இலக்கிய விமர்சகர்
அவர்களின் வழிகாட்டல் எனக்குக்
வேண்டுமா?.
ல்லிப்பழை, மகாஜனக் கல்லூரியில்

Page 13
தமிழ்த் தேசிய மறுமலர்ச்சிக்கு
நன்முயற்சிகளை விரும்பி முன்னெ அவர்களின் அயரா உழைப்பில் 2 தெல்லிப்பழை மகாஜனக் கல்லூ
பாவலர் துரையப்பாபிள்ளை அவர்க செயற்படும் மகாஜனக் கல்லூரியி அவர்கள் அதிபராக இருந்த கா
வித்துவான் நா. சிவபாதசுந்தரம், எழுத்தாளர் த. சண்முகசுந்தரம் (த தமிழ் பயின்றவன் யான்.
கல்லூரிக் காலத்தில் "வெண்ணில பத்திரிகையின் ஆசிரியராக இரு ஆசிரியராகவும் இருந்தேன். 6 அளவையூர்க் கவிஞர் செ. கதிரே இருந்ததால், யான் பிரகாசிக்க மு
O
ஆக்க இலக்கியத் துறையைப் ஆசிரியரும், எழுத்தாளருமான த. என்னை ஆட்கொண்ட ஞானகுரு அ வழிகாட்டல் அவரிடம் யான் கற் சேர்ந்த காலம் வரை எனக்குக் கிடைத்த மாபெரும் பாக்கியமாகச்
ஆசிரியர் சண்முகசுந்தரம் அவர் இல்லத்தில் யான் சந்தித்தமை இ நான் மகாஜனவில் படித்த கால ஞாபகம்.
வகுப்பு நேரம்.

வித்திட்ட நாவலர் பெருமானின் டுத்த பாவலர் துரையப்பாபிள்ளை உருப்பெற்ற கல்வி நிலையம்தான் f.
ளின் அடியொட்டி அன்றும் இன்றும் ல் அமரர் தெ.து. ஜெயரத்தினம் லத்தில் யான் கல்வி பயின்றேன்.
கவிஞர் செ. கதிரேசர்பிள்ளை, சம்) முதலியோரிடம் மகாஜனவில்
ா’ எனும் வகுப்புக் கையெழுத்துப் ந்தேன். தமிழ் மன்றப் பத்திரிகை ாம் பத்திரிகை ஆக்கத்திற்கு சர்பிள்ளை ஆசிரியர் பொறுப்பாக pடிந்தது.
D
பொறுத்தவரை, மகாஜனவின் சண்முகசுந்தரம் (தசம்) அவர்களே ஆவர். ஆசிரியர் சண்முகசுந்தரத்தின் ற காலம் முதல் அவர் சிவனடி கிடைத்தமையை யான் எனக்குக்
கருதுகிறேன்.
களை முதன் முதலில் அவரின் }ன்னொரு சுவாரஸ்யமான கதை.
ம் அது. 1954-ஆம் ஆண்டு என

Page 14
சண்முகசுந்தரம் மாஸ்டர் எமது வ பாடம் கற்பித்துக் கொண்டு இரு
ஏனோ தெரியாது. கட்டுப்பாட்டு
அந்நாளில் யான் எழுதிக் கொ நாவல்மீது சென்றுவிட்டது. ஆ அப்பியாசக் கொப்பியால் கையெழு நாவலை யான் எழுத ஆரம்பித்து 6 ஆசிரியர் எப்படியோ அவதானித்து
மன்னிக்கும் சுபாவம் சண்முகசு இல்லை. சீற்றம் உற்று சீறும் 6ே வேகமாக வந்தார். எனது உடப் கொட்டியது; தேகம் பதம் பார்க்க
“என்ன அது? என்ன எழுதுகிறாய்?" இருந்த கடதாசிக் கத்தையைப் வாசித்தவர், என்ன ஆச்சரியம். படி “நாளைக்கு என்னை எங்கடை சொல்லிவிட்டு மீண்டும் குடியியல்
அன்றைய இரவு எனக்கு நித்திரை சந்திக்கும் வரை, குலை நடுக் போகவில்லை. புறம்போக்காக அவ அடி விழுமோ என்று அஞ்சிய எனக்
"நான் உன்ரை நாவலைத் திரு ஆசிரியர், தனக்கு லீவு கிடைக் மாவிட்டபுரம் கந்தசாமி கோவில் ச வீட்டிற்கு வரச்செய்து நாவலை நுட்பத்தையும் பயிற்றுவித்தார்.
O

குப்புக்கு அக்கறையாக 'குடியியல்' க்கின்றார்.
எல்லையை மீறி எனது ஆர்வம் ண்டிருந்த ‘சூழ்ச்சி வலை’ என்ற சிரியர் காணமுடியாத விதத்தில் }த்துப் பிரதியை மறைத்த வண்ணம் விட்டேன். ஆனால், யான் ஒளித்ததை விட்டார்! மாணவரின் ஒழுங்கீனத்தை ந்தரம் ஆசிரியருக்கு கிஞ்சித்தும் வங்கையாய் என்னை நோக்கி மிக Dபு நடுக்கம் எடுத்தது; வியர்வை ப் படப்போகிறது என அஞ்சினேன்.
என்ற கோப அதட்டலுடன் என்னிடம் பிடுங்கி எடுத்தார். ஒரு சிலவற்றை பப்படியாகத் தணியும் ஆத்திரத்தோடு வீட்டில வந்து சந்தி’ என்று பாடம் கற்பித்தலைத் தொடர்ந்தார்.
இல்லை. அடுத்தநாள் ஆசிரியரை கமும் என்னை விட்டு முற்றாகப் ரின் வீட்டில் ஏச்சுப் பேச்சு விழுமோ, கு, அதிர்ச்சி காத்திருந்தது அங்கே!.
த்தித் தாறன்’, என வாக்களித்த கும் வேளை எல்லாம் என்னை கிழக்கு வீதியில் அமைந்த அவரின் த் திருத்தித் தந்தார்; எழுதல்

Page 15
யான் எழுதி கையெழுத்துப் பிரதி கிரான்பாஸ் றோட், கொழும்பு 14) கருவூலங்கள் அநேகம், அவற்றுள் கணக்கானவை 1983 ஆடிக் காடையர்களால் வீட்டு சாமான்கே வீட்டு முன்வீதி மத்தியில் கொட கண் முன்னாலேயே சாம்பராக்கப் இருப்பவை ஒரு சில மாத்திரம்த
எனக்கு நேர்ந்த அவ்வகையான இ எஞ்ஞான்றும் நிகழக் கூடாது என்
D
யான் சின்ன வயதிலிருந்து சிறுக நாவல்கள் முதலிய கலை இலக்கிய
1983ஆம் ஆண்டு ஆடிக் கலவரத் மீளத் தலைநகருக்கு 1995ஆம் முதல் ஈராண்டுகள் எனக்கு வாய்ப் யான் அதிகப்படியாகச் சிறுகதைக எழுதி, இலங்கைத் தேசிய சிறுகதைகளுள் பத்தை மாத்திரம் தெரிந்தெடுத்து சில திருத்தங் தொகுதியாக இன்று வெளியிடுவ
எனது சிறுகதைகளைத் தங்களது ட ஊக்கமும் அளித்த சஞ்சீவி, வீரகேச பத்திரிகை நிறுவனத்தினருக்கு யா எனது இருதயபூர்வமான நன்றிகள்

யாக எனது இல்லத்தில் (இல. 67 பாதுகாப்பாக இருந்த இலக்கியக் மூன்று நாவல்கள் உட்பட நூற்றுக் கலவரத்துள் (25-07-1983) ளோடு சாமான்களாக வாரி அள்ளி ட்டி- குவித்து கொளுத்தி என் பட்டன. கைவசம் என்னிடம் மிஞ்சி ான்!
ழப்பு எந்த ஒரு எழுத்தாளனுக்கும், ாபது எனது பலத்த பிரார்த்தனை.
|
தைகள், கட்டுரைகள், நாடகங்கள், ப வடிவங்களை எழுதி வருகின்றேன்.
தில் கொழும்பில் பாதிக்கப்பட்டு, ஆண்டு வந்ததைத் தொடர்ந்து, பாக இருந்தன. இந்த ஈராண்டுகளில் ள் எழுதினேன். இந்தக் காலத்தில் பத்திரிகைகளில் வெளியான பிரசுரமான நாளிொழுங்குப் பிரகாரம் களோடு ஓர்மம் சிறுகதைத் தில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
த்திரிகைகளில் பிரசுரித்து ஆக்கமும்
ரி, தினத்தந்தி, தினகரன், தினக்குரல்
ன் கடமைப்பட்டவன். அவர்களுக்கு
உரித்தாகுக.
iV

Page 16
எழுதி வெளிவந்த சிறுகதைக ஊக்குவித்தவர்கள் என் பேரன்புக் சட்டத்தரணி மு. வே. மகாே முதலியவர்கள். அழகாகக் கணனி திருமதி முகுந்தன் பிரபாஜினி சரவைத்தாளை ஒப்பு நோக்கி
புலவர் அநு. வை. நாகராஜன். நூ எழுதித் தந்தவர்கள் 'தினக் சிவநேசச்செல்வன் அவர்களும், மு ஆழியான் அவர்களும். ‘அறிமுக மாவை வரோதயன், நூலைச்
கொழும்பு யுனி ஆர்ட்ஸ் அச்சகத் நின்று பல்வேறு உதவிகள் செய் ச. சண் முகநாதன் , குருட வி. ச. சுப்பிரமணியம் முதலிய என் மனமார்ந்த நன்றிகள் உரித
இந்த என்னுரையை எழுதும் இ நண்பர்கள் சிலரைக் குறிப்பிடத் த அவர்கள் என்னைப் பொறுத்தரு முன்வர வேண்டும் எனவும் அன்
எந்நிலையிலும் எனக்கு மேலான அன்பர்கள். அவர்கள் தொடர்ந்தும் எனது ஆக்கம் பற்றிய கருத்துச் 55வது ஒழுங்கை, வெள்ளவத்.ை எழுதி அனுப்பி உதவுமாறு தய
நன்றி.

ளைத் தொகுத்து நூலாக்கும்படி குரிய இலக்கிய நண்பர்கள் மாயெழு தவன், ஊரெழு செ. சத்திதரன் ரியில் அச்சமைப்பு செய்து தந்தவர் சிறிதும் சிரமத்தைப் பாராது, உதவியவர் எழுத்தாளர், சைவப் லுக்கு கனகாத்திரமான அணிந்துரை 5 குரலி பிரதம ஆசிரியர் ஆ. துபெரும் எழுத்தாளர் திரு. செங்கை க் குறிப்பு எழுதித் தந்தவர் கவிஞர் சிறப்பாக அச்சிட்டுத் தந்தவர்கள் தினர். எனக்குப் பக்கத்துணையாக பது என்னை ஆதரித்தோர் ஊரெழு ம் பசிட் டி வி. ஜெகதீஸன் , ஆத்ம நண்பர்கள். இவர்களுக்கு ந்தாகுக.
இந்நேரம் உதவி செய்த மற்றைய வறி இருக்கலாம். அப்படி இருப்பின், ளி, என்றும் போல் இனியும் உதவ பாக வேண்டுகின்றேன்.
ஆதரவு தருபவர்கள் எனது வாசக ஆதரவு நல்க வேண்டும். குறிப்பாக 5களை 8/3/3 மெற்றோ மாடிமனை, த, கொழும்பு-06 என்ற முகவரிக்கு வாக வேண்டுகின்றேன்.
வணக்கம்.
XV

Page 17
அணிந்துரை மாெ ஊராக
S9 (Upg கொண தெல்ல படித்த பல்லா
நூலாசிரியர் பற்றி.
வேல்
காலத் பங்கு களில்
சிவநேசச்செல்வன் DTBT
M.A., M.Sc. gb. àFoGj5aFöF6laF6ù6)Jor M.A., M. Sc, [NPT
பிரதம ஆசிரியர்
G e jäi தினக்குரல் கு
சேர்த் சஞ்சி வகுப் ஆசி நடத்தி கல்லு (8Lu ITL
g5 ULITI செ.
முக்கி 68, எலி ஹவுஸ் றோட் பெற்ற கொழும்பு 15. தமிழ் 09.02. 2002 புள்ளி சிறப்

யழு, குரும்பசிட்டியைச் சொந்த கக் கொண்ட வேலுப்பிள்ளை 5லிங்கம் எனும் இயற் பெயர் ட நண்பர் வேல் அமுதனை அவர் மிப்பளை, மகாஜனக் கல்லூரியில் காலத்தில் இருந்து இன்றுவரை "ண்டு காலமாக நான் நன்கறிவேன்.
அமுதன் மகாஜனவில் படிக்கும் தில் 'தமிழ் மன்றம்’ நிகழ்வுகளில் பற்றிப் பேசியவர்; பேச்சுப் போட்டி கலந்து விருதுகள் பெற்றவர்; வட ணப் பாடசாலை மாணவர் மத்தியில் A) நடைபெற்ற பேச்சுப் போட்டியில் பற்றிக் கல்லூரிக்குப் புகழ் தவர்; பாடசாலை ‘மகாஜனன்’ கையில் கதைகள் எழுதியவர்; பு “வெண்ணிலா' பத்திரிகையின் ரியராக இருந்து சிறப் பாக நியவர்; நாடகங்களில் நடித்தவர் ாரி இல்லங்களிடை நடந்த நாடகப் quo) '(36)TL60 g)6) 6)b ரித்து மேடையேற்றிய கவிஞர் கதிரேசர்பிள்ளையின் நாடகத்தில் ய பாகம் எடுத்து நடித்து பாராட்டுப் வர்; எஸ். எஸ். ஸி. வகுப்பில் இலக்கிய பாடத்திற்கு அதிகூடிய களைப் பெற்றமைக்கு “கல்லூரி
9
பரிசினைத் தட்டிக்கொண்டவர்;
Vi

Page 18
அதிபர் ஆண்டு அறிக்கையில் இ பொதுப்பணி ஈடுபாடு போற்றிக் உரைக்கப்பட்டவர்.
வேல் அமுதன் துணிவும், திடசித்த நிரம்பப் பெற்றவர்.
கல்லூரிக் காலம் தொட்டு இன்று காட்சி தருகின்றார்.
இலக்கிய உலகில் மட்டுமல்ல பல்வேறு சாதனைகள் புரிந்து ஈழத்துத் தமிழ் கூறும் நல்லுலகி: ஆற்றிய பணிகள் பசுமையானவை நெஞ்சங்களின் மனதிலே ஆழம
ஈழத்துத் தமிழறிஞர்கள் மட்டுமல்ல நல்லுலகு எங்கணும் இருந்தும் ( பதித்த இலக்கிய மேதைகளும் சமயப் பெரியார்களும் குரும்பசிட் விட்டு, நிழல் பரப்பி ஆறுதல் தர் உணர்ந்து மனநிறைவோடு சென்ற மூச்சும், ஆர்வமும், நிரம்பிய ெ பெறுவதற்கு உரிய மூலவிசையாக என்பது எனது துணிவு.
வேல் அமுதனின் இலக்கிய ஆ வளர்வதற்கு அவர் கல்வி பயின் சக்தியாக விளங்கியுள்ளது. பாவ இலட்சிய பூமியாக எழுச்சி ெ புதல்வராகிய தெ. து. ஜெயரத் "வாணியின் வீடாக எழுச்சி ெ
Χ

இவரின் கலை, இலக்கிய, சமூகப் குறிப்பிடப்பட்டு இவர் வியந்து
தமும், விடாமுயற்சியும், “பட்டறிவும்
வரை எனக்கு இவர் இப்படித்தான்
ாது தனிமனித வாழ்க்கையிலும் வருபவர் வேல் அமுதன். இவர் ல் தனிமனித நிறுவனமாக இயங்கி ப; ஒவ்வொரு சம்பவமும் இலக்கிய ாய்ப் பதிந்து உள்ளன.
), தமிழகத்திலிருந்தும், தமிழ் கூறும் வந்து யாழ்ப்பாண மண்ணில் கால் , அறிஞர்களும், கலைஞர்களும், ட்டி சன்மார்க்க சபை என விழுது 3த ஆலமர நிழலின் செழுமையை 3னர். வேல் அமுதனின் இலக்கிய கொள்கைப் பிடிப்புடன் எழுச்சியும்
அமைந்தது இச்சன்மார்க்க சபையே
பூர்வம் மாணவப் பருவத்திலிருந்து ற மகாஜனக் கல்லூரியும் உந்து லர் தெ. அ. துரையப்பாபிள்ளையின் பற்ற மகாஜனக் கல்லூரி அவர் தினம் அவர்களின் வழிகாட்டலில் பற்றது. மகாஜனக் கல்லூரியில்
vii.

Page 19
உயிர்பெற்றெழுந்த இலக்கியச் ஈழத்து இலக்கிய உலகிற் இலக்கியக்காரர்கள் உருவாகி
அ. செ. மு. அ. ந. க., மஹா இனங்காணப்பட்ட மகாஜனா ! பணி ணையில் வேரூன்றி
செ. கதிரேசர் பிள்ளை, த ம. பார்வதிநாதசிவம், சோமசு நாகலிங்கம் சண்முகலிங்கன் 6 எண்ணப்பட வேண்டிய இன்னொ
இவர் மாணவ பருவத்திலே வழிகாட்டியாகவும், ஆதர்சமாகல் புலவர் நா. சிவபாதசுந்தரம், த. ச முதலியோர் விளங்கியமை இவ மாற்றியுள்ளது. செழுமை வாய் உரமூட்டியவர் கவிஞர் செ. கத
நாடகங்களை எழுதுதல், தயாரித் இலக்கியப் படைப்புக்களுக்கு அமைத்து நடத்த வேண்டும் 6 திரு. த. சண்முகசுந்தரம் அலி அறிவு இயக்கம் (அறிவகம்), த வள்ளுவர் மாமன்றம், மதி கன சமூக இலக்கிய இயக்கங்களை உதவியோடு நாடளாவிய நிலைய பாராட்டப்பட வேண்டியது.
எண்பத்து மூன்றில் இந்த நாட்டில் மத்தியில் வேல் அமுதன் ‘அள் ப்ோனாலும் வழமையான ஆர் பணிகளை முன்புபோல தொடர

சூழலிலே வாழையடி வாழையாக கு அணிசெய்யும் பல ஆக்க வந்துள்ளனர்.
கவி எனக் கனக செந்திநாதனால் அளித்த மும்மணிகள், ஈழகேசரிப் வளர்ந்தவர்கள் . கவிஞர் 5. சண்முகசுந் தரம் , புலவர் 5ாந்தன், கோகிலா மகேந்திரன், ான்று நீளும் வரிசையில் வைத்து ருவர் வேல் அமுதன் அவர்கள்.
இலக்கிய உலக பிரவேசத்திற்கு பும் கவிஞர் செ. கதிரேசர்பிள்ளை, ண்முகசுந்தரம், கனக செந்தில்நாதன் 1ரை ஒரு பண்பட்ட எழுத்தாளராக ந்த இலக்கிய நடை கைவருவதற்கு நிரேசர்பிள்ளை.
தல், சமூக நற்பணிகளில் ஈடுபடுதல், அப்பால் இலக்கிய இயக்கங்களை ான்ற உணர்வுக்கும் பின்னணியாக பர்கள் செயற்பட்டார். இலங்கை மிழ்க் கலைஞர் வட்டம் (தகவம்), லஞர் வட்டம் (மகவம்) ஆகிய வேல் அமுதன் நிறுவி, நண்பர்களின் பில் நடாத்திச் சாதனை படைத்தமை
வெளிப்பட்ட இனவாதப் பிரளயத்தின் னைத்தையும் இழந்து தனியாளாகிப் வத்திலிருந்து விடுபடாமல், தனது முற்பட்டார். “மதி அக்கடமி' எனும் ,
xviii

Page 20
கல்வி நிறுவனத்தைத் தான் பிற நிறுவி, அதனைத் தொடர்ந்து அமைத்து, அவற்றின் அதிபராகத் தொடங்கிய வேல் அமுதனின் இலச் மிடுக்கோடு ஆரம்பமாகின. இலக் ஆக்க இலக்கியத் தேடலும் வேல் எல்லாம் ஊறியிருந்தமையை ஆ அழிக்கவோ முடியவில்லை.
கட்டுடைத்துப் பிரவாகிக்கும் இல வேல் அமுதன் என்பது உண்மை
ஓர்மம் என்ற இந்தச் சிறுகதைத் தெ யாவும் தொண்ணுறுகளில் இலங் எழுதியவை. இந்தக் கதைகளின் ஏற்றத் தாழ்வுகள் முதல், சமூக பழுதுகளை எல்லாம் தொட்டுக்
சிறுகதைகள் அனைத்தும் சமூக சீர் கொண்டு எழுதப்பட்டவை. சமூக சீ இலக்கிய ஆக்கங்கள் மூலம் 2 தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத் சிறுகதைத் தொகுப்பு மூலம் வெற் அமுதனின் பேச்சுக்களிலும் எழு நாசூக்கான நறுக்குத் தெறிக்கும் வெளிப்பாடுகளாக இக்கதைகள் அ பழக்கமில்லாத நல்ல இதயம்; த அறிவும் உணர்வும் கலந்த சாதை இவ்வாக்கங்கள் சாட்சியாக அமை
வேல் அமுதனின் கலை, இலக்க சிறக்க என் மனமார்ந்த நல்வாழ்
xix

றந்த குரும்பசிட்டி, மாயெழுவில் அதன் கிளையை ஊரெழுவில் தன்னடக்கத்துடன் பணியாற்றத் 5கியப் பணிகள், மீண்டும் தொடரும் கிய உணர்வும், சமூகப் பணியும், ) அமுதனின் நரம்பு நாளங்களில் யூடிக் கலவரத்தால் உசுப்பவோ,
)க்கிய உணர்வைக் கொண்டவர்
தாகுதியில் அடங்கியுள்ள கதைகள் கையின் தேசிய பத்திரிகைகளில் மூலமாக வாழ்க்கை ஒட்டத்தின்
அமைப்பில் காணப்படும் பாரிய காட்ட முற்பட்டுள்ளார். இந்தச் திருத்தப் பணியை உள்ளடக்கமாகக் திருத்தத்திற்கான உந்துவிசையை உருவாக்க முடியும் என்பதற்குத் து வரும் வேல் அமுதன் ஓர்மம் றி கண்டுள்ளார். மேலும், வேல் 2த்துக்களிலும் பட்டுத்தெறிக்கும் ) தூய்மையான எண்ணங்களின் மைந்துள்ளன. முதுகு சொறியும் தகுதியறிந்து ஆற்றிய கருமங்கள் னகளாகியுள்ளமைக்கு இவருடைய கின்றன.
கிய, சமூகத் தொண்டு தொடர - த்துக்கள்!

Page 21
அணிந்துரை
நூலைப் பற்றி.
கலாநிதி க. குணராசா (செங்கை ஆழியான்)
75/10A, பிறவுண் வீதி, நீராவியடி, யாழ்ப்பாணம். 10.02.2002
நண்பர்
இச் சிறு அணிந்து எனக்கு 1 நிறைவிற் ஒன்று வே இலக்கிய என்ற பை
வேல் அ
எழுதுமள தகவல்க
1938ஆம் யாழ்ப்பா கமழும்
அமுதலி lf 60, 60T 6. விழுந்த கருதுகின் பிறக்கும் இலக்கிய பொன்6ை
கலைப்ே
முதலான பெருமை (335 Tuft

வேல் அமுதனின் ‘ஓர்மம்' என்ற கதைத் தொகுதக் கு ஓர் ரையெழுத நேர்ந்தமை உண்மையில் மன நிறைவைத் தருகின்றது. மன கான காரணங்கள் இரண்டுள்ளன. 1. அமுதலிங்கம் என்ற தனிமனிதனின் இயக்கம்; இரண்டு வேல் அமுதன் டப்பாளியின் இலக்கியப் பங்களிப்பு
முதன் குறித்துத் தனியொரு நூல் விற்கு அவர் பற்றிய இலக்கியத் ளுள்ளன.
ஆண்டு ஒக்டோபர் 30ஆந் திகதி ண மாவட்டத்தின் இலக்கிய மணம் குரும் பசிட்டியில் பிறந்த ங்கத்தின் இலக்கிய ஆர்வத்திற்கான னி அந்த மண் ணில் அவர் போதே ஏற்பட்ட பந்தம் எனக் றேன். குரும்பசிட்டியில் அவர் போதே, அந்த மண்ணில் கலை ஜம்பவான்கள், ஈழகேசரி நா. எயா, இரசிகமணி கனகசெந்திநாதன், பரரசு ஏ. ரி. பொன்னுத்துரை வர்கள் அந்த மண்ணின் புகழையும் யையும் உலகறியச் செய்திருந்தனர். b களும் , தோட் டங்களும் ,

Page 22
தொழிற்சாலைகளும், பனங்கூடல் குரும்பசிட்டிக் கிராமத்தின் ஆத் இலக்கியப் பெருமக்கள் தமி யாழ்ப்பாணக் குடாநாட்டில் அழகுப் ஒருங்கே தவழ்ந்த கிராமம் குரும்ட அந்த மண்ணில் பிறந்த வேல் மலர்வதற்கு உவந்த சூழல் விளங்கியது. பொன் பரமானந்த கல்வியைக் கற்ற வேல் அமுதன் கல்லூரியில் பெற்றுக் கொண்டா பூத்த ஆசிரியர்களான கவி திரு. த. சண்முகசுந்தரம், வி திரு. சி. நாகலிங்கம் போன்றோர் புரிய வைத்தனர். வேல் அமுதல் ஆர்வலராயும் உருவாக்கப்பட்ட க சபையின் இலக்கியச் சூழலை வளர்ந்தவர் வேல் அமுதன். தீபம்’ ‘வெண்ணிலா' எனக் கையெ பலரின் பாராட்டினைப் பெற்றுக் ெ
கொழும்பில் தனியார் நிறுவனெ கடமையாற்றிய கால வேளையில் நண்பர்களோடு சேர்ந்து உருவாக்க (அறிவகம்), தமிழ் கலைஞர் வட்ட மதி கலைஞர் வட்டம் (மகவம்) எ நிறுவனங்களாம். இவற்றின் மூல அவர் தொண்டாற்றியுள்ளார். குறி மூலம், திரு. வ. இராசையாவின்
சிறந்த சிறுகதைகளை அன
Χ)

களும் இணைந்து அழகு செய்த மாவை அங்கு வாழ்ந்த கலை ழுலகு அறிய வைத்தார்கள். ம், வளமும், அமைதியும், மகிழ்வும் சிட்டி. அதற்கு நிகர் அதுவேதான். அமுதன் இலக்கியவாதியாக இயல்பாகவே அக்கிராமத்தில் தா வித்தியாசாலையில் ஆரம்பக் தன் உயர் கல்வியை மகாஜனக் ர். மகாஜனக் கல்லூரியின் புகழ் ஞர் செ. கதிரேசர் பிள்ளை, த்துவான் நா. சிவபாதசுந்தரம், அவருக்குக் கலைச் சூழலைப் ன் படைப்பாளியாகவும் இலக்கிய லைஞர். குரும்பசிட்டி சன்மார்க்க நன்கு பயன்படுத்திக் கொண்டு இளம் வயதிலேயே 'சன்மார்க்க பழுத்துச் சஞ்சிகைகளை நடாத்திப் கொண்டவர்.
மான்றில் எழுது வினைஞராகக் ஸ் சில இலக்கிய அமைப்புகளை கினார். இலங்கை அறிவு இயக்கம் -ம் (தகவம்), வள்ளுவர் மாமன்றம், ன்பன வேல் அமுதனின் இலக்கிய ம் கலை, இலக்கிய வளர்ச்சிக்கு |ப்பாகத் தகவம் என்ற அமைப்பின் துணையுடன் தமிழில் வெளிவந்த டயாளம் கண்டு, அவற்றின்
κi

Page 23
படைப்பாளிகளைப் பாராட்டி, விளங்கியுள்ளார். தகவம் பெரியதாகும். தமது சிறுகதைக் என அங்கீகாரம் வேண்டிப் படை மகவம் என்ற அமைப்பின் மூ கெளரவிக்கும் பணியை இன்று
வேலுப்பிள்ளை அமுதலிங்கம் சி அமுதன், வேல் அமுதன், வே6 திருமாறன் எனப் பல புனைப் ெ பல சிறுகதைகளைப் படைத்து உலகில் பிரவேசித்த வேல்அழு மேற்பட்ட சிறுகதைகளை ஈழத் பத்திரிகைகளிலும் படைத்தளித் நாடகத் தொகுதியையும், 1977 தொகுதியையும், 1978ல் 'மாரீசம் 1979ல் ‘வாழும் வழி’ என்ற நாடக எனும் தன் பதிப்பகத்தின் ஊட என்ற சிறுகதைத் தொகுதி 1 சாகித்திய மண்டலப் பரிசினைச் உடையது. எனவே சிறுக புதியவரல்லர். ஏற்கனவே, சுய சிறுகதைகள் மூலம் ஈழத்துச் சி
‘ஓர்மம்' வேல் அமுதனின் மூன் பத்து சிறுகதைகளின் தொகுட் அனர்த்தங்களும், துயர வடு அழுத்தமாகப் பதிந்துள்ளன. 1 ஏற்பட்ட வகுப்புவாத இனவேட்டை ஓடிவந்த வேல் அமுதன், 1986ல் ஊரெழுவுக்கு இடம் பெயர நே

பரிசு வழங்கி, உந்து சக்தியாக ஆற்றிய இலக்கியப் பணி மிகப் குத் தகவத்தின் முத்திரை கிட்டாதா ப்பாளிகள் அன்று ஏங்கி இருந்தனர். லம் கலைஞர்களை இனங்கண்டு
செய்து வருகின்றார்.
|றுகதை உலகிற்குப் புதியவரல்லர். ஸ் அமிர்தன், வேல் அமுதலிங்கம், பயர்களுள் மறைந்து நின்று நல்ல த் தந்தவர். 1954களில் சிறுகதை pதன் இதுவரை முப்பத்தைந்துக்கு ந்தின் பல்வேறு சஞ்சிகைகளிலும் துள்ளார். 1976ல் ‘அறுவடை' என்ற ல் "வைகறை' என்ற சிறுகதைத் ’ என்ற சிறுகதைத் தொகுதியையும், த் தொகுதியையும் 'வேல் வெளியீடு' டாக வெளியிட்டுள்ளார். LDTsfa#Lb 978ஆம் ஆண்டிற்கான இலங்கை சுவீகரித்துக் கொண்ட சிறப்பினை தை கலைக்கு வேல் அமுதன் தரிசனம், கருநாகம் ஆகிய தரமான றுகதை உலகிற்கு அணி சேர்த்தவர்.
ாறாவது சிறுகதைத் தொகுதியாகும். பு இது. வேல் அமுதனின் சுய க்களும் அவரது சிறுகதைகளில் 83 ஆடிக் கலவரத்தில் தலைநகரில் க்குத் தப்பி குரும்பசிட்டி மண்ணிற்கு மீண்டும் குரும்பசிட்டியைக் கைவிட்டு ந்தது.
xxii

Page 24
1990களில் குரும்பசிட்டிக் கிராமடே மண்ணைத் தாரை வார்த்துக் கொ துரவு அனைத்துச் சொத்துக்களை கிராமத்தை காடு மண்ட மாறவி இன்னும் அக்கிராம மக்களுக்கு துயரத்தின் சுவடுகளை வேல் அமு முடிகின்றது. ஓர்மம் என்ற இத் சிறுகதை 'மானுடம் சாவதில் “பொதிச்சுமைகளை விடப் ெ அமுக்குகிறது. மனம் வலிக்கிறது மூன்றாவது தடவையல்லவா.!” ம வாசிக்கும் போது இதயம் கத ஒவ்வொருவரிலும் விரவிக்கிடக்கிற நல்லதொரு படைப்பு
“காகிதலுடம் இத்தொகுதியிலுள் என்பேன். பொறுப்பற்ற ஒரு மகனா சகோதரிகளினதும் துயரக் கதை. தன் சுயநல வாழ்வை ஆரம்பிக்கு காகித ஒடத்தில் வேல் அமுதன் சி பெற்றோரும் படிக்க வேண்டும். புரிந்து செயற்பட வேண்டும். ' பரீட்சைத் திணைக்களத்தில் தத்துவமாகச் சித்திரிக்கின்றது; ெ துணை சேர்க்கும் பரிதாபநி6ை வெளிநாட்டு மாப்பிள்ளைகளின்
Χ

D முற்று முழுதாகத் தாம் வாழ்ந்த டுத்து விட்டு, வீடு, மனை, தோட்டம், யும் பறிகொடுத்து எழில் கொஞ்சிய ட்டு, அகதிகளாக வெளியேறியது.
விடியவில்லை. அந்த மாறாத தனின் சிறுகதைகளில் அவதானிக்க ந்தொகுதியில் உள்ள முதலாவது லை அதனையே பேசுகின்றது. பால்லாத மனச்சுமை வலுவாக . ஒரு தடவையா அகதி?. இது ானுடம் சாவதில்லைச் சிறுகதையை றி அழுகின்றது; மானிடசோகம் து; மனதைக் கணக்க வைக்கும்
ள மிகச் சிறப்பான ஒரு சிறுகதை ல் ஏமாந்து போகும் ஒரு தாயினதும் அக்காமாரைக் கரை சேர்க்காது நம் தம்பியை வெகு அற்புதமாகக் த்திரித்துள்ளார். இதனை ஒவ்வொரு இக்கதை சுட்டும் எச்சரிக்கையைப் திருவிளையாடல்’ என்ற சிறுகதை நிகழும் மோசடியொன்றினைத் Fய்த பாவத்திற்குத் தெய்வத்தையும் 0யை இக்கதை விபரிக்கின்றது. திருகு தாளங்களை ‘ஓர்மம்' என்ற
(iii
p

Page 25
சிறுகதை மிகத் தெளிவாகச் சி போனாலும், தன் சுயகால்களில் வியூ ஒரு புரட்சிப் பெண்ணை இச்சிறு மாதிரிக்கதை. கலைஞனின் உள்ள உள்ளம்" சிறுகதையாலும், பெரிய 'பிறந்தநாள் பரிசிலும் காணழு இத்தொகுதியிலுள்ள இன்னொரு சி சீரழிவுகளை இத் தொகுதியிலுள்ள
வேல் அமுதன் தனது மனதில் காய சிறுகதைகளாக இறக்கி வைத்துள் பூர்வமான சிறுகதைகளாக மிளிர்கின் களைப்படையவோ வைக்காத எ சிறுகதைகளை நகள்த்திச் செல்கி செய்தியை வாசகனை உய்த்துணர வைப்பது வேல் அமுதனின் படைப் தொனிக்கின்ற அளவிற்குக் கலைவ ஆதங்கம் ஏற்படக்கூடும். எனினும் நிலையொன்று எஞ்சுமாயின் அது பன சிறுகதைகள் அப்படியான உணர்வி
ஈழத்துச் சிறுகதைத் துறைக்கு ே நிறைவைச் சேர்க்கும்.
வாழ்த்

ந்திரிக்கின்றது. தான் ஏமாந்து ாமல் நிற்கமுடியும் என நிரூபிக்கும் தையில் சந்திக்கின்றோம்; வகை த்தின் மாண்பைக் கலைஞனின் மனிதரின் பச்சோந்தித் தனத்தைப் pடிகிறது. பிறந்தநாள் பரிசு, றப்பான சிறுகதையாகும். சமூகச் சிறுகதைகள் சுட்டிக்காட்டுகின்றன.
ங்களை ஏற்படுத்திய சம்பவங்களைச் 1ளார்; அதனால் அவை யதார்த்த றன. வாசகனைச் சலிப்படையவோ, ளிமையான உரைநடையில் தன் றார்; தான் கூறவிரும்பும் சமூகச் விடாது, நேரடியாகவே அனுபவிக்க பு முறை. அதனால், கருத்துவளம் ளம் மேலோங்கவில்லையோவென்ற ), வாசித்து முடிந்ததும் உணர்ச்சி டய்பின் வெற்றியே. வேல் அமுதனின் நிலையை ஏற்படுத்தும் பாங்கின.
வல் அமுதனின் ‘ஓர்மம் தொகுதி
துக்கள்!

Page 26
DICD
Iடந்த களையோ, சுமந்த களை சுமார் ஆறு மைல்களுக்கு மேல்
ஒரு சுமையும், கையில் இன்னொ சுமைகளோடு இன்னமும் நாம் நட
என்னுடன் எனது அன்பு மனைவியு இவர்களுக்கு எங்கு புகலிடம் தேட அளிப்பார்கள்? என்ன செய்வது? தெரியாது சுமைகளோடு தொடர்ந்து
பொதிச் சுமைகளை விட பொ அமுக்குகின்றது; மனம் வலிக்கிற மூன்றாவது தடவை அல்ல கொட்டாஞ்சேனையில் பல இலட்ச மிகக் கஷ்டப்பட்டுத் தேடிய கலை எரிப்பு: 1987 முற்பகுதியில் என் சொந் மீண்டுமொரு அழிப்பு சகாயநிதி
س

ம் சாவதில்லை
யோ மாத்திரமன்று எமக்கு. நாம் நடந்தும் விட்டோம்தான்! தோளில் ரு சுமையுமாக சுமக்க முடியாத ந்துகொண்டு இருக்கின்றோம்.
ம், அருமை மகளும் வருகிறார்கள். ப்போகின்றேன். ஆர் எமக்கு அபயம்
எங்கு போவது?. என்றெல்லாம் து போய்க்கொண்டு இருக்கின்றோம்.
ல்லாத மனச் சுமை வலுவாக து. ஒரு தடவையா அகதி?. இது வா!. 1983இல் கொழும்பு, * இழப்பு; என் கண்முன்னாலேயே இலக்கிய களஞ்சியச் செல்வத்தின் த ஊரான குரும்பசிட்டி மாயெழுவில் மூலதனத்தில் தோற்றுவித்த 'மதி
لط

Page 27
அக்கடமி கல்வி நிலையத்தை வி வீட்டைப் பூட்டியும் பூட்டாததுமாக உ கைக்கு அகப்பட்ட ஒரு சில பொருட் திணித்தபடி மீண்டும் அகதியாகி ஓட்ட இருக்கின்றோம்!
திரும்பி உயிருடன் வரமுடியுமா?
நிலையில் வீடாக இருக்குமா? வி விட்டு வந்த மாதிரி கிடக்குமா? 8 தேடிய ஒரு சில தேடலும் உருப்ட முடியவில்லை; நினைக்க மனம் வி
ஊழித்தாண்டவத்தின் ஆரம்பமோ? பி பயம் - எங்கும் பயங்கரம் - எங்கு
ஹெலியின் ஆரவாரம் - ஷெல்லின் அமளி.
ஆம்! ஒரு அகோர யுத்தம் நை அதன் கோர வடிவத்தை வார்த் தூரிகையால் தீட்ட முடியாது; ந6 அதனை அடக்க முடியாது.
எங்கும் அகதி வெள்ளம் - பெ6 பெருக்கெடுத்தபடி குழந்தைகள், வே - இப்படி, ஆயிரம் ஆயிரமாக
அள்ளுப்பட்டு - தள்ளப்பட்டு - அ
அப்பப்பா! எதைச்சொல்லுவது? { சொல்லுவது?.
ن

ட்டு ஓட்டம்; இன்று ஊரெழுவில்!. டுத்த ஊத்தைப் பழைய சாரத்துடன் களை மாத்திரம் சூட்கேசுகளுக்குள் மும் நடையுமாக விரைந்துகொண்டு
திரும்பி வரும்போது வீடு அதே ட்டில் வைத்த பொருள் பண்டம் 5ஷ்டப்பட்டு இளைத்து இளைத்து டியாகக் கிடைக்குமா?. நினைக்க வலி வலியென வலிக்கின்றதே!
ரளயத்தின் தொடக்கமோ?. எங்கும் ம் பீதி!
அகோரம் - துப்பாக்கி வேட்டுக்களின்
டபெற்றுக் கொண்டு இருக்கிறது. தைகளால் வர்ணிக்க முடியாது; வீன புகைப்படக் கருவி உள்ளும்
ன்னம் பெரிய அலை அலையாக யாதிபர், கர்ப்பிணிகள், நோயாளிகள் பல்லாயிரக் கணக்கான மக்கள் ல்லற்பட்டு.
எப்படிச் சொல்லுவது? எவருக்குச்

Page 28
வாழையடி வாழையாக நிலமும் வாழ்ந்து வந்த பூர்வீகக் குடிமக்க வீடு வாசல்களைப் பிரிந்து, கண்ண கணைகளாய் கால் கொண்டு செல் இருக்கின்றனரே!
வழியெல்லாம் புழுதி - புகை மண்ட - அதிர்வெடிச் சத்தம் - கெந்தக அலங்கோலங்கள் - அல்லோல கe - சரிந்த கட்டடங்கள் - தீப்பற்ற என்னென்னவோ!.
எமக்கு நேர் முன்னாக சுமார் நூறு பெரிய ஷெல் வீழ்ந்து வெடிக்கின்ற பெரிய அரசமர மறைவில் ஒது இல்லாவிட்டால், இந்நேரம் சின் அங்கமங்கமாய் சிதற அடிக்கப்பட்
இப்படி, ஒரு ஷெல்லா? ஒரு நூறா அடுத்தடுத்து. அப்பப்பா! என்ன
இந்த ஷெல்கள் வேறு விதம் - வெடித்து - வீறிட்டு - விசையாக
பயங்கரச் சத்தத்துடன் வெடித்து இலக்கினைத் தவிடுபொடி ஆ தாக்குதலை நான் நேரில் கண்ட
ஏன் இந்தப் பயங்கரச் ஷெல் தா இந்திய அமைதிப் படையினர் ஏன் இந்தியா எமது தாய் நாடு என்ற தாய் சேயை அணைப்பதா? படை
石ー

புலமுமாக, வசதியும் வளமுமாக ள் சொத்துப்பத்துக்களை இழந்து, சீரும் கம்பலையுமாக குறி தவறிய லும் தேசம் வரை போய்க் கொண்டே
லம் - சுடர் விட்டெரியும் தீப்பிழம்புகள் துர்நாற்றம் - அழிவுக்கோலங்கள் - ல்லோலங்கள். தகர்ந்த இல்லங்கள் எரியும் குடிசைகள்! இன்னமும்
று யார்களுக்கப்பால் ஒரு பென்னம் றது; சிதறிப் பறக்கிறது. நாம் அந்த ங்கியதால் தப்பிப் பிழைத்தோம். னாபின்னமாகி, சிதறுதேங்காயாய் டுச் செத்திருப்போம்.
? ஓர் ஆயிரமா? ஆயிரக்கணக்காக பயங்கரம்? என்ன கொடுமை?.
வேறு ரகம். பயங்கர ஓசையோடு முன்சென்று, மீண்டும் ஒரு தடவை பின் அதே வேகத்தில் முன் சென்று க்குகின்றன. இப்படியாக ஷெல் து இன்றுதான் முதல் தடவை.
$கல்?. அமைதி காக்கவென வந்த அழிப்புப் படையினராகி விட்டனர்? ல்லவா நாம் படிப்பிக்கப்பட்டோம்.
கொண்டு அழிப்பதா?.

Page 29
ஒன்றும் தெரியவில்லை எனக்கு, ஒ நான் சாதாரணன், அரசியற் பக்கம் த சமரின் உட் சூத்திரம் எனக்கு எப்1
இராஜ வீதி இன்று இராஜ வீதியேத இப்பழம் நெடும் வீதியில் பல்லாயிரக் க அடைந்தபடி பறக்கின்றன. சைக்கிள் ட்ரக்ரர்கள் - லொறிகள்.
பழம் நெடும் வீதி நிரம்ப பல்லாயிர காயங்களோடு சிலர். அழுதழுது நீ
எமக்குப் பின்னே என்னைத் தொட மாதக் கர்ப்பிணி, அறிவு சோர்ந்து அய அவளின் கைக்குழந்தை மண்ை ஜனவெள்ளம் திரளுகிறது. மருத்து கைமருந்து வழங்கப்படுகிறது.
ஐயையோ! சைக்கிள் ஹான்டிலில் மனைவியையும் கரியரில் தாயைய பலன்ஸ் இழந்து விழுந்து விட்டாலே ஹான்டிலில் கொழுவியபடி, தாய் ை பல யார் தூரத்தில் உருண்டு புர இதற்கு முன் நாம் கண்டதில்லை எ
அங்கே மக்கள் வெள்ளம் திர அளிக்கப்படுகின்றன.
நாம் எங்கே போகின்றோம்???.
நாம் எங்கே போவது? நாம் அனா என இந்தப் பகுதியில் எமக்கு நடக்கின்றோம், நடந்துகொண்டே இருந்து விடுபட - கால் கொண்டு ெ

ன்றும் விளங்கவில்லை எனக்கு. லைவைத்துப் படுப்பவனும் அல்ல. படி விளங்கும்?.
ான் வரலாற்றுப் பெருமைமிக்க ணக்கான வாகனங்கள் அகதிகளை - மோட்டோர் கார்கள் - வான்கள் -
5 கணக்கான அகதிகள். இரத்தக் ர் சொரியும் கண்களோடு பலர்.
ர்ந்து வந்து கொண்டிருந்த நிறை ர்ச்சியுற்று மயங்கி விழுந்துவிட்டாள் ட அடிபட எறிபட்டுக் காயம். துவ சேவையினரால் முதலுதவி,
ஸ் சிறு குழந்தையையும், பாரில் ம் சுமந்து வந்த “சுமைதாங்கி’ எ! குழந்தை வீதியோரம், மனைவி சக்கிள் கிடக்கும் இடத்தில் இருந்து ண்டபடி, இப்படி ஒரு அவலத்தை ன்ன கொடுமை! என்ன அவஸ்தை!.
ளூகிறது; அவசர சிகிச்சைகள்
தரவாளர்கள். உற்றார், உறவினர் ஆர் இருக்கிறார்கள்?. இருந்தும், இருக்கின்றோம். மரண பயத்தில் சல்லும் நெடும் தூர தேசத்திற்கு!.
لـ

Page 30
இந்த மக்கள் எங்கே போகின
பாதுகாப்பு உண்டு?.
“அச்சுவேலி, புத்தூர், மட்டுள் பிரச்சனை இல்லை. அங்ே - இப்படிக் கதை அடிபடுகி “என்னப்பா செய்வது? தமிழ நாட்டில் அகதி நிலை - விட்டு ஓடும் நிலை"
“ஓட்டமா?. அண்ணை நா விழுந்து - முள்ளுக்கம்பி லே பாருங்கோ! முதுகெங்கும் - எரிவு. அட கடவுளே!, போதும்!”
“எங்கடை அப்பு நாலடி வே6 நம்ப முடியுமா? அவன்கள் பிறகுதானே அவர் ஓட்டம் ஓடினார் - நாய் ஓட்டம் தா
"கோதாரி வருவான்கள் க சீக்கியர், கூர்க்கா என ப8 பாஷையும் விளங்குது இல்ல சுட்டு விழுத்துவதா? இந்த
“எல்லாம் எங்களாலை எங்களுக்குள்ளை ஒற்றுை
பிரிவு. இது போதாது. இ அண்ணை.”
இப்படி, அந்த அவலத்துக்குள்ளும் மக்கள் அங்கலாய்க்கின்றனர். இவ கொடுக்க அமைதி ஏது? ஆறுதல்
----

ன்றார்கள்? இவர்களுக்கு எங்கே
வில், சாவகச்சேரிப் பகுதிகளில்
க போனால் ஆறுதல்”
றது.
னின் தலைவிதி இது சொந்த அவலநிலை - வீட்டையே
ங்க பட்டபாடு. தோட்டத்துள் வலியிக்காலை பூந்து - இங்கை புண் - இரத்தக் கறை - வலி
பட்டபாடு போதுமெண்டால்
லீ பாய்ந்திருக்கிறார் அண்ணை. ர் வளவுக்குள் வந்ததுக்குப் ஓட முடியுமா? எப்படியோ "6ူ]]!’’
ண்ட நின்றபடி சுடுகிறாங்கள். ல சாதிக்காரங்கள். எங்கடை லை. இந்த அப்பாவி மக்களைச் அநியாயம் எப்ப ஒழியுமோ?.”
வந்த வினை அண்ணை. ம உண்டோ?. முப்பத்திரண்டு ன்னும் எங்களுக்கு வேணும்
கலந்துரையாடி - கருத்துப் பரிமாறி ர்களின் உரையாடல்களுக்குக் காது
) ஏது?.
5

Page 31
வேல் அமுதன்.இ
எனது பிரச்சனை இது மட்டுமல்ல மாத்திரம் தான் சுமைகளும் அல்ல
எனக்கு இழுப்பு - அஸ்மா நோய்!
வழமையாய் பொக்கற்றுள் பத்திர (Prednisoline) 96m) LDT LDT.g5 g56 வெளிக்கிட்டதால் எடுத்துவர முற் மாத்திரை டப்பியை மறந்தது எப்ட மருந்தை மாத்திரமா மறந்தேன்?. ஸ்ரைலான றலி சைக்கிளையுமல் சைக்கிளும் கையுமாக தொழில் அ சைக்கிளைப் பூட்டிப்போட்டு வரவு சைக்கிள் எனக்குக் கிடைக்குமா?
தோட்டங்களுக்கூடாக ஊரெழு - காசிப்பிள்ளை கடைச்சந்தியைக் க வீதிக்கு வந்து, சிறுப்பிட்டிச் சுடலை கடையையும் தாண்டி. மேலே செல் தாண்டித் தாண்டி மெல்ல மெல்ல
ஐயோ, இப்போது அஸ்மா நோய்
பலமாக இரைச்சலோடு இழுப்பு அ நடக்க ஏலாது என எனது மனை6 மதகுக் குந்து மதிலில் குந்தி விட
மதகு மதிலில் குந்தியதுதான் என எழும்பியது இரண்டு மணிக்கு.
இவ்வளவு நேரமாக நான் படுத்திரு
ஒருவரின் சாப்பாட்டு மேசைமேல்.
நடந்தது” என நான் என் மனைவி
石ー
=ـ

; எனது உடலிலும், மனத்திலும் ; சுவாசத்திலும் கோளாறு உண்டு.
மாக இருக்கும் பிறிற்னிசோலின் ரைகளை அவசரத்தில் இன்று று முழுதாக மறந்தும் விட்டேன். டி என்பது எனக்கே புரியவில்லை. ஏதோ கெட்ட காலம்! பழைய லவா அடியோடு மறந்துவிட்டேன். லுவலாக அலைந்து திரியும் நான் ம் மறந்து விட்டேன். இனி எனது
நீர்வேலி றோட்டில் ஏறிய நாம், 5டந்து, குறுக்குப் பாதையால் ராஜ Lப் பகுதியைத் தாண்டி, கூட்டுறவுக் ல முடியாமல் வலுவாக இளைத்து, நத்தை வேகத்தில் நகருகின்றோம்.
ஆரம்பித்து விட்டது!
ஆரம்பித்து விட்டது! இனி என்னால் வி, மகளிடம் கூறிய நான் வீதி ஒர
டேன்.
5குத் தெரியும். பிறகு கண் விழித்து
தது எங்கே?. சிறுப்பிட்டி கமக்காரர்
“எனக்கு என்ன நடந்தது, என்ன பிடம் ஆவலோடு விசாரிக்கின்றேன்.
--

Page 32
நான் அறிவு மயங்கி விழுந்ததாகவும் தூக்கிச் சென்று பரிகாரம் செய்ததாக இரண்டாவது மகள் சித்த வைத்தி எனது இழுப்பை தணித்ததாகவும்
சிறுப்பிட்டிக் கமக்காரன் வீடு திட் ஏற்பட ஏற்பட விஸ்தரிக்கப்பட்ட வீடு ஐம்பது பேரினைத் தாண்டிய எண்ணி அனைவரையும், அனைத்தையும் ச
பெருமனத்துடன் கமக்காரன் வ ஆதரிக்கின்றார். இந்த விந்தைை திக்குமுக்காடிக் கொண்டிருந்த வே
“தம்பி என்ன யோசனை? இ வேறு யாரும் அல்ல. உங்கள் நினையுங்கோ, இஞ்சை தேவையில்லை”, என்று க படுத்துகின்றார்.
“தம்பி ஹொர்லிக்ஸ் தெம்ட
வீட்டுக்கார அம்மா எனக்குக் ஹொ குடிக்கத் தருகின்றார்.
எனக்கு ஹொர்லிக்ஸ் தந்தபின், மூலையில், தோள்மூட்டில் காயங்கே முனங்கலோடு கிடக்கும் அவர்க கொடுக்கப்படுகிறது.
எனக்கு ஆச்சரியத்துக்கு ே மகனைவிட விருந்தாளி முக்கியம
石ー لصة

), கமக்காரன் வீட்டுக்காரர் என்னைத் 5வும் சொல்லப்பட்டது. கமக்காரனின் யராம். அவர் அஸ்மா ஊசி ஏத்தி
சொல்லப்பட்டது.
டமிட்டுக் கட்டப்பட்டதல்ல. தேவை அது. இன்று வீடு நிரம்ப அகதிகள். க்கையினர். கமக்காரனும் எப்படியோ மாளித்து ஆறுதல் அடைகின்றார்.
ந்தோரை வரவேற்று அன்போடு யை ஜீரணிக்க முடியாமல் நான்
്വങ്ങബ!,
து உங்கடை வீடு, நாங்கள் டை வீட்டாரே நாங்கள் எண்டு ஒன்றுக்கும் பயப்படத் மக்காரன் என்னை ஆறுதல்
புக்குக் குடியுங்கோ'
ர்லிக்ஸ் கரைத்து வந்து அன்பாகக்
நான் படுத்திருந்த அதே அறை ளோடு நோவலியின் அவஸ்தையால் 1ளின் மகனுக்கும் ஹொர்லிக்ஸ்
மல் ஆச்சரியம் !!! சொந்த ா? ஆவலோடு. “தம்பிக்கு என்ன?
لـ

Page 33
ஏன் பத்துப் போட்டிருக்கு? என்ன
கேள்வி கேட்டு விசாரிக்கின்றேன்.
பதில் சொல்கின்றார்.
“அவன் எனது இளைய மகன் பால் கறந்து கொண்டு இருக்ை ஷெல் ஒன்று பசுவின் குடலைச் பதம் பார்த்து விட்டது. அதை அவனுக்குக் காயம், அவன் வேண்டாம் எனக்கு கஸ்டம் பிள்ளை குட்டியள் என்றும் அகதிகள், ஆட்கள் எனவும் இன்று நீங்க ஐம்பத்தொன்பத ஆனால், ஆபத்திலை உதவுத அடியில் கொண்டு வந்தது பெருங்கருணைதான்.
நான் உங்கடை தகப்பன்டே ஒரு பயமும் இல்லாமல் உங் நீங்கள் இங்கேயே தங்க வே எனப் பாசமிகுதியோடு எம்மை
“தம்பி நீங்கள் இங்கேயே என அந்த வீட்டுக்கார அம்மா6
எனக்கு இந்தக் காருண்யம் பேரதிர் முனக்கம் - முணுமுணுப்பு தொடர்ச் வாய் என்னை மறந்து தன்வாரி உச்சரிக்கின்றது.

நடந்தது?" எனக் கேள்விக்கு மேல் எனது கேள்விகளுக்கு கமக்காரன்
தம்பி. நேற்று எங்கடை பசு மாட்டிலை கயில் தோட்டத்தில் விழுந்து வெடித்த 5 கிழித்து அவனின் தோள்பட்டையைப் ப் பற்றி நீங்கள் யோசிக்க வேண்டாம். ா காயப்பட்டவன் என்று யோசிக்க என்றும் நினைக்க வேண்டாம் எனக்கு
யோசிக்க வேண்டாம். வீடு நிரம்ப யோசிக்கவும் வேண்டாம். வீட்டிலை ாவது ஆள் என்பது உண்மைதான்!. ல் எங்கடை கடன். உங்களை எங்கள்
எங்கடை செல்லச் சந்நிதியானின்
ாலை. பிரச்சனை தீரும்வரை கடை வீடாக இதை நினைத்து
99
1g0)LD.
வேண்டிக் கொண்டு இருக்கையில்,
தங்க வேணும்.” வும் விண்ணப்பிக்கின்றார்.
ச்சியைத் தருகிறது. இளைய மகனின் ஈசியாக கேட்டுக்கொண்டே இருக்கிறது. யாக 'மானுடம் சாவதில்லை' என
S சஞ்சீவி 1989

Page 34
சிேரிய ஆலோசகர் இராசரத்தி வீடு வந்து சேருகின்றார்.
இப்போது இரவு நேரம் ஆறு பொழுதுபடும் வேளையே இருட்டி
அதிகாலை ஐந்து மணிக்கு நீ கடன்களை நேரத்தோடு முடித்து, போய், நேர்த்தியாகத் தொழுது, வண்டியில் மானிப்பாய் வீட்டிலிரு புறப்பட்ட ஆசிரிய ஆலோசகர் இப்ே
பிரயாணத் தொல்லை, தொழ ஆகியவற்றால் இயல்பாக ஏற்ப ஆலோசகருக்கு மனச்சோர்வை தொழிலில் அவருக்கு இருக்கும்
கல்வி வளர்ச்சி அக்கறை முதலிய வைக்கும் உந்து சக்திகள் ஆகி
石ー ســـــــ

ஆத்ம சுகம்
னம் கவலையோடும் களைப்போடும்
மணி. மழை இருட்டு. இன்று விட்டது.
த்திரை விட்டெழுந்து, காலைக் மருதடி விநாயகர் ஆலயத்துக்குப் தனது பழைய றலி சைக்கிள் ந்து தொழிலுக்கு உற்சாகமாகப் பாதுதான் வீடு வந்து சேர முடிந்தது
ற் சிரமங்கள், வேலைப்பளு டும் உடற் களைப்பு ஆசிரிய என்றும் ஏற்படுத்தியதில்லை! இயற்கை ஆர்வம், சமூகப் பற்று, 1வை அவரை அயராது உழைக்க விட்டன.
لد

Page 35
ஆனால்,
இன்று அவர் பார்வையிடச் சென் நிகழ்வு ஒன்று ஆசிரிய ஆலோசக விட்டது. வகுப்பறை ஒன்றினுள் தமிழ் இலக்கிய அறிவைச் சோதி அடைந்தார்! அதற்கான காரண பொறுப்பாசிரியரிடம் வினாவியே பொறுப்பற்ற பேச்சு ஆசிரிய ஆே விட்டெரியச் செய்தது.
“உதுகளுக்குப் படிப்பு உதுகளுக்கும் வெகுதூரம். - 1 முழுமோடுகள். எழுத வாசிக் எப்பிடிச் சேர் படிப்பிப்பது?. அ படிப்பிக்க ஏலுமே?. எங்களா? நீங்கள் ஒருக்கா படிப்பிச்சுப்
எறிந்து பேசிய இந்தக் கொடும் ஆலோசகரின் கோபம் நெய் உ
எரிந்தது!
ஆசிரிய ஆலோசகர் வீடு வந்து ே தமிழ் ஆசிரியரைச் சபித்துக் ெ
பட்டதாரி. பட்டப் படிப்புக்கு இல்லை! கெட்டித்தனமா பெரிய பாடசாலைக்கு அ ஏழைப் பிள்ளைகளின் எதி படுபாவிப்பயல்.”

ற அந்தப் பாடசாலையில் நடந்த iன் மனதைப் பெரிதும் புண்ணாக்கி
சடுதியாகச் சென்று மாணவரின் ந்துப் பார்த்தபோது, அவர் அதிர்ச்சி ாத்தை அந்த வகுப்பின் பாடப் பாது, அந்த பொறுப்பாசிரியரின் லாசகரின் ஆத்திரத்தை கொழுந்து
ஏறாது சேர்! படிப்புக்கும் மலைக்கும் மடுவுக்கும் பேர்லை.
கத் தெரியாத சக்கட்டைகளை
க்கறையே இல்லாததுகளுக்குப்
லை ஏலாது சேர்! ஏலுமெண்டா
பாருங்கோ?.”
வார்த்தைகளை இரை மீட்க மீட்க ண்ட நெருப்பாய் சுவாலை விட்டு
சர்ந்தும் சுவாலை தணியவில்லை; காண்டே இருந்தார்.
பருக்குப் பல்கலைக்கழகப் ) உவனுக்கும் ஒரு தொடர்பும் 5 தன்ரை மக்களை ரவுண் னுப்பிவிட்டு ஊர் மக்களின் - காலத்தை நாசம் செய்கிறான்.
9

Page 36
)ெ ஆத்ம சுகம்
“LDITLDMT- LDITLDMT- LDIIT...LDIT!...
எங்கிருந்தோ இந்த இதமான கு ஒரு சின்னஞ்சிறு குழந்தைக்கு உ மதிவதனாவின் மகன் கண்ணனு
மாமா வருவதை மோப்பம் பிடித்த ஆலோசகரின் றவுசரைப் பிடித்து L660ör(BLİb L660ör(Bub “LDITLDIT”, “LDITL
ஆலோசகர் அக்குழந்தையை வ சாத்தினார்; உச்சியை ஆசை கிள்ளினார்; பதிலுக்குக் “கண்ண அழைத்தபடி தலைக்கு மேல் உt கீழே இறக்கினார். குழந்தையி ஆலோசகருக்குச் சொர்க்கத்திை
குழந்தையின் பாசத்திற்கு ஆட்பட் அடியோடு மறந்தார்; களைப்பை அணங்கை அணைத்தால் இன்ப குழந்தையை நினைத்தாலே இன் ஒரு சில நிமிட வேளை சிலைய
பின் மீளக் குழந்தையை ஒற் அணைத்தபடியும் மற்றக் கையா6 சைக்கிளை அவதானமாக உரு கொட்டகைக்குள் சைக்கிளை வி
குழந்தை தன்னைப் பலாத்காரமாக கொண்டது. விறுக்கு விறுக்கெ
சென்றது.
f t

ரல் கேட்டது. இந்த அன்புக் குரல் உரியது. இது ஆலோசகரின் தங்கை டையதுதான்!
3றிந்த அக்குழந்தை ஓடோடி வந்து இழுத்து, உலுப்பி, அன்பொழுக
99.
மா’ என ஆசையோடு கூப்பிட்டது.
ாரி எடுத்தார்; நெஞ்சோடு இறுகச் யோடு தடவினார்; கன்னத்தைக் ா”, “கண்ணா”, எனப் பாசத்தோடு பரத் தூக்கி, மீண்டும் முத்தமிட்டுக் ன் மலர்க்கை வருடல் ஆசிரிய ன அனுபவிக்க வைத்தது.
ட ஆசிரிய ஆலோசகர் கவலையை
மறந்தார்; தன்னையும் மறந்தார். ம்; கரும்பைத் தின்றால் இன்பம்; ாபமல்லவா?. இன்ப மயக்கத்தில் JTáleslLLITi.
றைக் கையால் தூக்கி இறுக ல் இதுவரை நிறுத்தி வைத்திருந்த ட்டியபடியுமாக வீட்டின் பின்புறக் ட்டுப் பூட்டுவதற்கென நுழைந்தார்.
மாமாவின் கையிலிருந்து விடுத்துக் ன சமையலறைக்குள் ஓடோடிச்

Page 37
-
சமையல் வேலையில் மூழ்கியிருந் எட்டிப் பிடித்து இழுத்து, "மாமா,
வேலையில் மனம் ஒன்றிய நிை அப்போதுதான் தமையன் வீடு வர் அவசரமாகத் தேநீரைத் தயார்செய் பிரத்தியேக அறையுள் பிரவேசித்
மதிவதனா அவ்வறையுள் நுழைய நுழைந்துவிட்ட குழந்தை "மாமா அக்குழந்தை துடித்து விழுந்துகட்டி கடலைவடை ஒன்றினை எடுத்து வ வாயுள் ஆசையோடு மெல்ல மெல்6 அன்று சாப்பிட்ட அந்த வடை இதற் சாப்பிட்ட வடைகளை விடச் சுை ஆலோசகருக்கு.
நேற்றைய தினம் இதே நேரம் இன் திருட்டுத்தனமாக ஆசிரியரின் அறையுள் அழகாகத் தட்டுகளில் அடுக்கி, பாது இழுத்துக் கொட்டி அழுக்காக்கிய இச்சோக நினைவுகள் ஆலோசகளின்
ஆனால், குழந்தைக்கோ கடந்த அதன் மனதில் இல்லை. குழந்ை உரியன அல்லவா?. அது ஆலே அலுவல்களில் ஈடுபட்டு மேலும்
குழந்தை இப்பொழுது ஒரு புது சிரிக்க வைத்தது. மாமாவைத் ெ
என அழைப்பதும், பின் வட்ட 6

த தனது தாயின் முந்தானையை ாமா! ரீ, ரீ.” எனச் சத்தமிட்டது.
)யிலிருந்து விடுபட்ட மதிவதனா து சேர்ந்ததை அறிந்தார்; அவசர துகொண்டு ஆசிரிய ஆலோசகரின் தார்.
முன், முற்கூட்டியே அவ்வறையுள்
ரீ” எனச் சத்தமிட்டது; மீள
ஓடியது, சமையலறையுள் இருந்த ந்து, துண்டு துண்டாக்கி மாமாவின் 0 ஒவ்வொரு துண்டாகத் தீத்தியது. }கு முன் பல்வேறு சந்தர்ப்பங்களில் வயாக இருந்தது அந்த ஆசிரிய
னொரு நிகழ்வு நடந்தது. குழந்தை
ந்து 'சூச செய் நேரமெடுத் காட்பாக வைத்திருந்த புத்தகங்களை தால் குழந்தை அடி வாங்கியது. மனத்திரையில் அலைமோதின.
நாள் ஏற்பட்ட கசப்பு அனுபவம் தயும் தெய்வமும் வணக்கத்திற்கு சகரின் மனதை நெகிழ வைக்கும் மேலும் உற்சாகமூட்டியது.
விளையாட்டு விளையாடிக் காட்டி, ாடுவதும். தொடும்வேளை ‘மாமா' டிவமாக ஓடுவதுமாக இருந்தது.
2

Page 38
20 ஆத்ம சுகம் இப்படி, கடந்த இரண்டாண்டு கால நெருங்கிப் பழக நேர்ந்தமையால் புதுவகை அனுபவத்தைப் பெற்று
தங்கையின் குழந்தை எவ்வளவு ஒரு சில குழந்தைச் செல்வங் இதயபூர்வமாக நேசிக்கும் ( கிடைத்துவிட்டால்!.
மனக் கடலில் சிந்தனை அலை
இவை நடக்கக்கூடிய காரியங்கள ஆகாசக் கோட்டைகளா?.
என்றுமே தனிக்கட்டையாக வா முதன்மை ஆசிரியர். அந்த ம இல்லறத்தைப் பொறுத்தவரை புளியம்பழமும் போல வாழ்ந்து
தந்தை தாயை இளம் வயதி6ே சகோதரிகளுக்குத் தாய்க்குத் த - தமையனுக்குத் தமையனாகக் போல சகோதரிகளைக் காத்து வ சகோதரிகளையும் கெளரவமான ( இன்றைய நிலையில், இளைய ச வரும் ஆசிரியருக்கு இன்று வய
நாற்பத்தைந்து வரை தூய பிர இனி இல்லற வாழ்க்கையா?.
“வேண்டவே வேண்டாம்” என விரத்த்தைக் குலையவிடாது

த்திற்கு மேலாக அக்குழந்தையோடு ஆசிரியர் மிகப் பெறுமதி வாய்ந்த
றுள்ளார்.
ஆறுதலை அளிக்கிறது?. தனக்கும்
கள் இருந்துவிட்டால்!. தனக்கும் ஒரு வாழ்க்கைத் துணைநலம்
கள் அலைமோதின.
ா?. வீண் கற்பனைகளா?. வெறும்
ாழ்வோம் என விரதம் பூண்டவர் ன இறுக்கம் தளராத நிலையில்
ஒட்டியும் ஒட்டாமலுமாக ஓடும் வருகின்றார்.
லயே இழந்த இரண்டு அநாதைச் ாயாக - தந்தைக்குத் தந்தையாக கண்ணிமை கண்ணைக் காப்பது நதவர் ஆசிரிய ஆலோசகர். இரண்டு இடங்களில் வாழ்க்கைப்பட வைத்த கோதரி மதிவதனாவுடன் வாழ்ந்து து நாற்பத்தைந்து.
ம்மச்சரியம் கடைப்பிடித்தவருக்கு
மன வைராக்கியத்தோடு தன் தூய்மை காத்து வாழ்ந்துவரும்
3

Page 39
உத்தமருக்குக் கண்ணனின் குறு சஞ்சலங்களை ஏற்படுத்தாமலும் தூபமிடாமலும் இல்லை! சில வேை தூரப் பறக்கத்தான் செய்கின்றன
ஆசிரிய ஆலோசகர் தனக்கே உ கடைப்பிடிப்பவர்.
இது அவரின் குளிக்கும் நேரம். குளியலறைக்குள் புகுந்து, கதவை
செய்தார். அகமும் புறமும் அழ அவரின் கொள்கை.
இப்போது ஆசிரியரின் மனம் திரு வலம் வந்துகொண்டு இருந்தது.
இன்று சந்தித்த மரக்கட்டை பே உளி கொண்டு செதுக்குவது என உதாரண புருஷர்களை எப்படி பயன்படுத்தலாம் எனவும் நீண்ட "படார்’, 'படார்’ எனக் குளியலறை "மாமா', 'மாமா!” எனக் கூக்குரல் ஓட்டத்தைக் குழப்பி விட்டன.
குளியலறையிலிருந்து வெளியேறி எடுத்து, தோள்மேல் சாத்தியபடி
தண்ணிரில் நனைந்த அவரின் தேகம் ஒட்டிக் கொண்டதால், மெய் தீண்டற் சுகத்தை அவர் சு

க்கீடு சில வேளைகளில் மனச் இல்லை! சில கற்பனைகளுக்குத் ளகளில் கற்பனைகள் சிறகடித்துத்
ரிய சில ஒழுக்க முறைகளைக்
ப் பூட்டி தனது உடம்பைச் சுத்தம் காக இருக்க வேண்டும் என்பது
ம்ப வேகமாகப் பாடசாலைகளை
ான்ற சில ஆசிரியர்களை எப்படி ஆழமாகச் சிந்தித்தார். அதேநேரம் வெற்றிகரமாக வழிகாட்டிகளாகப் நேரமாகச் சிந்தித்தார். இந்நேரம் க் கதவினை அடிக்கும் ஓசையும், இடும் சத்தமும், அவரின் சிந்தனை
ப ஆசிரியர் அக்குழந்தையை வாரி தனது அறைக்குச் சென்றார்.
தேகத்தில் குழந்தையின் சூடான ரு புதுச்சுகம் ஏற்பட்டது. அந்த வைத்துச் சுவைத்துத் திளைத்தார்.
A

Page 40
ெஆத்ம சுகம்
சுவாமி அறைக்கு குழந்தையும் கடவுளைத் தொழுது, குழந்தை குழந்தையை அதன் தாயிடம் தொழிலுக்கான முன்வேலைகை இந்நேரம் வெளி விறாந்தையில் ஒன்று தங்கை மதிவதனாவுடை இருவருடையவை.
அவை யாராக இருக்கும்?!.
உரையாடல் இப்போது மன்றாட்ட
“தங்கச்சி சேரோடை ஒருக்க மாட்டன் என்டா நாங்க நாண்
“கதைக்க விடுகிறதிலை ஒன உதுக்குச் சம்மதிக்க மாட்டா விடயம். அவர் கொள்கைவா
“எதுக்கும் ஒருக்கா கூப்பி கதைச்சுப் பாப்பம்"
"அவர் என்னைத்தான் பேசுவ போய்விடுவீங்க. பேச்சு வாங்
“கோவிக்காமல். தங்கச்சி.
“உப்பிடிக் கூப்பிட்டுக் க ஏச்சுப்பேச்சு வாங்கிக் கட்டிவி
"தயவு செய்து தங்கச்சி. ம

தானுமாகச் சென்ற ஆசிரியர் க்கும் தனக்கும் விபூதி தரித்து, அனுப்பி விட்டு அடுத்தநாள் ள அக்கறையோடு கவனித்தார். பேசும் குரல்கள் கேட்கின்றன. யது. மற்றவை யாரோ வயதான
-மாக மாறுகின்றது.
கதைக்க விடுங்கோ! அவர் டுகொண்டு நிக்க மாட்டம்.”
ாடுமில்லப் பாருங்கோ. அவர் ர். அது நல்லாகத் தெரிந்த தி; பிடிவாதக்காரர்’
டுங்கோ தங்கச்சி! சும்மா
ார். நீங்க கதைச்சுப்போட்டு குவது நான்மட்டும்தான்.”
எங்களுக்காக!.”
தைத்து எத்தினைமுறை
'L667.'
ன்றாட்டமாகக் கேட்கிறம்.”
s

Page 41
“யா.ர.து.? என்ன வேணுமாம்?’.
அதனைத் தொடர்ந்து ஆசிரியர்
“சேர்! உங்களோட ஒ கதைக்கலாமே?”
"அப்படியென்ன. சொல்லு
“ஒரு சம்பந்தம்.”
“சம்பந்தம்?. ஆருக்கு?.”
“உங்களுக்குத் தான் சேர்
“எங்கே!?. ஆர் அந்த சொல்லுங்கோ.”
ஒரு பட்டதாரி ஆசிரியையின் வி
ஆசிரியை நன்றாகத் தெரிந்த ஒரு அபிப்பிராயம் ஆசிரிய ஆலோச தன்னைப்போன்ற ஒரு இலட் ஆலோசகருக்கு நன்றாகத் தெரிற்
ஒரு நாள் நினைவு அவரின் மன
அன்றைய நாள்.
அந்தப் பாடசாலையில் ஒரேயெ கட்டுப்பாடாக நடைபெறுகின்றது. பு நடைபாதையால் நடந்துகொண்டி வித்தியாசமான கற்பித்தலைக் ச
ئا

சற்று அதிகாரத் தோரணை. வெளியே வந்தார்.
ரு தனிப்பட்ட விசயம்
$j($85IT
??
ப் பெண் விளக்கமாகச்
பரங்கள் வர்ணிக்கப்படுகின்றன.
நவர். அந்த ஆசிரியை மீது நல்ல Fகருக்கு நிரம்ப உண்டு. அவர் சியவாதி என்பதும் ஆசிரிய ந்த விடயம்.
த்திரையில் மின்னியது.
ாரு வகுப்பு மாத்திரம் மிகவும் அந்த வகுப்புக்கு முன்னே செல்லும் ருந்த ஆசிரிய ஆலோசகர் அந்த கூர்ந்து அவதானித்தார்.

Page 42
தமிழ் இலக்கிய பாடம் அது. ஆசி மாறி உணர்ச்சியோடு பாடத்தைக் இலக்கியப்பாடம் என்ற நிலை சுருள் விரிந்து உருண்டோடுவது பாடவேண்டிய இடத்தில் பாடி, உணர்ச்சி பொங்கப் பேசவேண்டி நகைச்சுவையோடும் விறுவிறுப்பே மிக அழகாக இருந்தது. இதே பகு வெறுமையாக வாசிக்கச் செய்து சா ‘சப்' என கற்பித்தலைச்செய்யும் ஆசிரிய ஆலோசகர். இந்தக் ஒப்பிடும்போது அவர் ஒரு கண்கள்
ஆசிரியை பலமாகப் பாராட்டப்பட
"ரீச் சர் பாராட்டுக்கள் 1: கற்பிக்கின்றீர்கள்!; கிளாஸ் வகுப்பை இவ்வளவு தி வைத்திருக்க முடியும் என்பன முடிந்தது.”
“சேர்! அது எனக்குப் பாரா “ஆம் ரீச்சர், அது உண்ை நாடக பாணிதான் உங்கள் எண்டு நினைக்கிறன்.”
“சேர்! நான் கண்டு பிடித்த உ பொறுத்தவரை பிள்ளைக முக்கியம். நான் பிள் 6
شس

ரியை கதாபாத்திரங்களாக மாறி 5 கற்பிக்கின்றார். அது வெறும் மாறி ஒரு காப்பியமே நிசமாக போன்று இருந்தது. ஆசிரியை ஆடவேண்டிய இடத்தில் ஆடி, டிய இடத்தில் பேசி பாடத்தை ாடும் நடத்திச் செல்கின்ற பாணி தியைப் பிள்ளைகளைக் கொண்டு ட்டுக்கு விளங்கியதா என வினாவி பல ஆசிரியர்களைச் சந்திப்பவர் கூலிப் பட்டாளத்தோடு ரீச்சரை ண்ட தெய்வம்!
வேண்டியவர்! பாராட்டுகிறார் -
மிகத் திறமையாகக் கொன்றோல் மிகத் திறம்.
றமாகக் கட்டுப்படுத்தி த இன்றைக்குத்தான் அறிய
ட்டாக அமையுது”
மை. பாராட்டேதான்! நவீன டை வெற்றிக்குக் காரணம்
உண்மை இது கற்பித்தலைப் ளை நெஞ்சார நேசித்தல் ளைகளை நேசிக்கிறன்;

Page 43
அவர்களோடு மனம் விட்டு கற்பித்தலுக்கு இயல்ப பிள்ளைகளைக் கவரும் (
'பிள்ளைகளை நெஞ்சார நேசிக் விட்டுப் பழகுகிறன்!” என்ற வசனா திரும்பத் திரும்ப அலை மோதின் அவருடன் சேர்ந்து தனது ஆ நிறைவு கண்டு, ஆத்ம சுகமு ஆசைகள் பிறந்தன!.
“இந்த சம்பந்தப் பேச்சு தெரியுமா?” -ஆசிரிய ஆலோசகர் வின
“ஓம் சேர்! தாய், தக எல்லாருக்கும் தெரியும். எ
“எனக்கும் பூரண சம்மதப்
சகோதரி மதிவதனாவுக்குப் பெரு பேரானந்தமாகவும், சீரணிக்க முடி கால நேர்த்தி பலித்தது போன்ற அவளின் கண்கள் பனித்தன; ஓரி

பழகுகிறன். பரஸ்பர அன்பு கவே வழி சமைக்கிறது. விதத்தில் படிப்பிக்கிறன்.”
கிறன். அவர்களோடு மனம் பகள் ஆலோசகரின் மனத்தில் ா. ரீச்சர் ஒரு இலட்சியவாதி. நமார்த்த அலுவல்களுக்கும் ம் அனுபவிக்கலாம் என்ற
சம்பந்தப்பட்ட ரீச்சருக்கும்
ாவுகின்றார்.
ப்பன், ரீச்சர், சகோதரம் ல்லாருக்கும் பூரண சம்மதம்.”
) எண்டு சொல்லுங்கோ.”
நம் அதிர்ச்சியாகவும், அதேவேளை யாத ஒன்றாகவும் இருந்தது. நீண்ட ஓர் இன்ப உணர்வின் விளைவாக ரு கண்ணிர்த் துளிகளும் வடிந்தன.
S வீரகேசரி 13-08-1995
s

Page 44
Σ
நெஞ்சம் நிறைந்த அம்மாவுக்கு,
அன்பு வணக்கம்.
சோதனைப் பெறுபேறு வந்ததம்ம காகிதம் வந்த கையோடு இக்
6TQggja (p667. Result Sheet g { முகம் என்ரை மனத்திரையிலை அம்மா வாசிக்கும் போது ஆனந் ஆறுதல் பெருமூச்சு விடுவதை இருந்தது.
f ش؟

காகித ஒடம்
K
வெள்ளவத்தை 12.09.94.
T. bsT6öt CIMA (33FM g5606OT UITGrö. கடிதத்தை அவசர அவசரமாக வாசித்து முடியமுன் அம்மாவின் ) விழுந்தது. எனது கடிதத்தை தக் கண்ணிர் வடிப்பதை, அம்மா மனத்தில் காணக்கூடியதாக
9.

Page 45
இளம் வயசில் அப்பாவைப் வளர்த்தெடுக் க பட்ட பாடு. மெழுகுவர்த்தியேதான்! உங்க ஒளியூட்டியுள்ளிர்கள்!
ஆயக்கடவை விநாயகரின் சக்த நீங்கள் அடிக்கடி சொல்லுவது டே தான் எல்லாம் நல்லபடி நடந்து நேர்த்தியைச் செய்யுங்கோ. ஆய அனுப்பி வையுங்கோ.
இன்னொரு முக்கிய செய்தி அ ஒரு வேலைக்கும் Apply பண்ை Vacancy அது. அதிகமாகச் சரி தெரிந்ததும் அறிவிக்கின்றேன்.
என்ரை அடுத்த முக்கிய வே அக்காமாரைக் கரை சேர்ப்பது.
நல்ல பெடியங்களாகப் பார்க்கிறே கண்டு கதைத்தும் இருக்கிறேன்.
வெளிநாட்டுப் பெடியன் என்டால் ஏ என்றால் நன்றாக விசாரிக்க வே பெடியங்களைப் பிடிக்க பொறுத்து பார்ப்போம். பொறுத்தார் புவியால்
கமலா அக்காவுக்கும், விமலா தெரிவிக்கவும். அம்மாவுக்கு ஆ6 என்றும் தங்கள் அருமை மகன்
ئا

பறிகொடுத்த அம்மா எம்மை அப்பப் பா! நீங்கள் ஒரு களை எரித்து நீங்கள் எமக்கு
தி அபாரம் சந்தேகமே இல்லை! பால் ஆயக்கடவையான் அருளாலே முடிந்தது. அம்மா நீங்கள் வைத்த க்கடவையான் திருநீறும் கொஞ்சம்
ம்மா. பெறுபேறு வந்த கையோடு of 9(55a5(366t. Accountant Post வரலாம் என நம்புகிறேன். முடிவு
லை என்னை நம்பி இருக்கும் படித்து உத்தியோகம் பார்க்கும் ன். இதுவரை தரகர்மார் சிலரையும்
ராளம் கைவசம் இருக்கு. அவங்கள் ணும். உள்ளூரில் இருக்கும் நல்ல த்தான் இருக்க வேண்டும். எதுக்கும் iாவார்.
அக்காவுக்கும் என்ரை அன்பைத்
சை முத்தங்கள்! நன்றி அம்மா.
ஆ. தனபாலன்.
o

Page 46
ஆருயிர் அம்மாவுக்கு,
வணக்கம் பலகோடி.
பெரும்பாலும் 12.09.94 திகதியிட் கிடைத்திருக்காது என நினைக்கி கடிதச் சேவை நத்தை வேகத்தில் வர நாள் எடுக்கும்.
நான் முன்பு எழுதியதுபோல் குறிட் அம்மா. நான் இப்போது Chief AC 01.10.94 முதல் வேலைக்குப் போ கொஞ்சம் கூடுதலாகக் காசு அனு போக இருப்பதால் மேலதிக செ6 குறைந்தது 6,000/- ரூபா அனுப்பி அலுவல் ஒன்றும் சரிவரவில்6 சொல்லியிருக்கிறேன். எனக்கு பொருந்தினால் எழுதி அறிவிப்ே காசையும் எதிர்பார்க்கும் -
உங்கள் அன்பு மகன், ஆ. தனபாலன்.
:

வெள்ளவத்தை 30.09.94.
டு நான் எழுதியனுப்பிய கடிதம் ன்றேன். தமிழ்ப் பிரதேசத்துக்கான b நகர்வதால் கடிதங்கள் ஊர்ந்து
பிட்ட தொழில் கிடைத்து விட்டது 2ountant. சந்தோசம்தானே? நாளை ய் வருவேன். அம்மா இந்த முறை ப்பிவிடுங்கோ. புதிய இடத்துக்குப் 0வுகள் கொஞ்சம் ஏற்படும்தானே.
விடுங்கோ அம்மா. அக்காமாரின் லை. இரண்டொரு இடங்களில்
மனதுக்குப் பிடித்து, குறிப்பும் பன். அம்மாவின் கடிதத்தையும்

Page 47
Σ
பாசமிகு தம்பி தனபாலனுக்கு,
அன்பு வணக்கம்.
நீ 12.09.94, 30.09.94 திகதியிட்டு தம்பி நீ எழுதியது போல் உன்ன கண் கலங்கி கண்ணிர் வடிந்தது. ஆனந்தக் கண்ணிர் வராமலா இருந்திருந்தால், அவர் எவ்வ: எண்ணிப் பார்க்கிறேன். தம்பி நீ குதித்தாரடா. என்ரை மகன் ெ என்று ஆசையோடை அலட்டித் த பிறந்த அருமைக் குழந்தையட ஆசைக்கு ஒரு பெடியன் வேன நேர்த்தி வைத்து உன்னைப் டெ
அப்பா ஆசைப்பட்ட வேலை ஆசைப்பட்ட வேலைபோல ெ நீயொரு பெரிய எக்கவுண்டன்.
அப்பா பாடசாலை அதிபர். அப் மகன் சீவ் எக்கவுண்டன். பெண் இனி வேற என்ன வேணும்?

புன்னாலைக்கட்டுவன். 10.10.94.
எழுதிய கடிதங்கள் கிடைத்தன. ர கடிதங்களை வாசிக்க வாசிக்க விமோசனம் கிடைத்த புளுகமடா. விடும்? தம்பி இப்ப உன் அப்பா ளவு சந்தோசப்பட்டிருப்பார் என பிறந்தபோது மனிசன் துள்ளிக் டாக்டராவான், இன்சினியராவான் திரிந்தாரடா. தம்பி நீ தவம் கிடந்து T. மூத்ததுகள் பெண் குட்டிக்ள். ன்டுமென ஆயக்கடவையானுக்கு usioGOTLDLIT.
கிடைக்காவிட்டாலும், அப்பா பரிய வேலை கிடைத்துள்ளது. இனி எங்களுக்கு என்ன குறை? ம்மா தமிழ்ப் பட்டதாரி ஆசிரியர். பிள்ளைகள் ட்றெயின்ட் ரீச்சேர்ஸ். இரண்டு நல்ல மருமக்களும்

Page 48
கிடைத்துவிட்டால். அது உன்ரை படித்த மாப்பிள்ளைகளாக கெ கேட்டபடி காசு இத்துடன் அனுப் கேட்டாய். நான் 7,500/- ரூபா உள்ள துண்டை கொழும்பு மணி காசை அவர் உடனே தருவார்.
ஆயக்கடவையானுக்குப் பெரி ஆயிரத்தெட்டு சங்கு வைத்து மே வந்தது. விபூதியைக் கடிதத்துடன் எப்படித் தம்பி? ஒப்பீஸ் எப்படித் தம் கொஞ்சமும் மறந்து போகாதை, தபாலை எதிர்பார்க்கும் உனது
ஆ. செல்லம்மா.
அன்புக்கினிய அம்மாவுக்கு,
மிக்க வணக்கம்.
அம்மாவின் 10.10.94 திகதியிட்ட கிடைத்தன. நன்றி அம்மா. நான் வெள்ளைக்காரன் இன்ஜினியர்
石ー

கடமை தம்பி. எப்படியும் இரண்டு ாண்டுவந்து சேர்த்துவிடு தம்பி பி இருக்கு. தம்பி 6,000/- ரூபாய் ய் அனுப்பியுள்ளேன். இத்துடன் யம் முதலாளியிடம் கொடுத்தால்,
ய அபிஷேகம் செய்வித்தேன். ளமும் பிடித்து சுவாமியும் வீதியுலா வைத்துள்ளேன். உன்ரை தொழில் பி? அக்காமாற்றை அலுவல்களைக் அன்பு வணக்கத்துடன், தம்பியின் அன்பு அம்மா,
வெள்ளவத்தை
21.10.94.
கடிதமும் காசு 7,500/- ரூபாயும் வேலை செய்வது ஒரு வெளிநாட்டு ங் கம்பனியில். பெரியவருக்கு

Page 49
என்னை நன்றாகப் பிடித்துப்பே என்பதால் என்னை சீவ் எச் எனக்குப் பெரிய அழகான அறை. இருக்கு. மாதச் சம்பளம் 12,00 பெரிய குறை அம்மா. என்னிடம் 1 என்ரை சபோர்டினேர்ஸ் எல்லோ இறங்குகினம். எனக்கு பெரிய 6ெ இதைப்பற்றிக் கதைத்தேன். பெ நானும் கொஞ்சம் காசு போடே ஒரு ஒன்றரை இலட்சம் ரூபா அ மரியாதையை நினைத்து எப்ப அனுப்பி விடுங்கோ. பெரியவர் ஒ சூடாக காரியத்தை முடித்துவிட வசதியை நழுவவிடக் கூடாதம்ப காசைக் கெதியாக அனுப்பிவிடுங்
உள்ளவரைக்கும் அம்மாவின் ப
அம்மா கந்தோரில் நாங்கள் உை வேணும். நான் எடுப்பாக பே தாமாக - சுயமாக மரியாதை 1 சப்போடினேற்றைக் கட்டுப்படுத் (Status) மெயின்ரேயின் பண்ை நெரிஞ்சு பஸ்ஸில் போய்வர காசை அனுப்பி வையுங்கோ.
k

ாச்சு. B.Sc., CIMA எக்கவுண்டன் க்கவுண்டன் ஆக்கியிருக்கினம். ரெலிபோன், கொம்யூற்றர் எல்லாம் 0/- ரூபாய். ஆனால், ஒரே ஒரு மட்டும் சொந்தமாகக் கார் இல்லை. ரும் ஸ்ரைலான கார்களில் வந்து வட்கமாக இருக்கு. பெரியவரோடை ரிய லோன் ஒன்று தருகிறாராம். வேணும். நல்ல அம்மா அல்லே! அனுப்புகிறீர்களா? அம்மா மகனின் டியென்றாலும் மாறிக்கீறி காசை ம் என்ற கையோடை சூட்டோடை - வேணும். கிடைக்கும் வாய்ப்பு )ா. தயவுசெய்து உதவி பண்ணிக் கோ. அம்மாவின் உதவியை உயிர்
Dகன் மறக்க மாட்டான்.
டையார் அடிகொடி என்பது விளங்க ாய் வந்தால் தான் சபோடினேற் பண்ணுவாங்க. இந்தக் காலத்தில் த ஏலாதம்மா. ஸ்ரேற்றஸ்சையும் எ வேணும். இன்னும் இடிபட்டு, ஏலுமோ அம்மா? அம்மா பிளிஸ் அடுத்த தபாலில் காத்திருப்பேன்.
24

Page 50
அம்மாவின் அன்புக்கும் அக்க உரித்தாகுக -
உங்கள் ஆசைமகன், ஆ. தனபாலன்.
அன்பு மகனுக்கு,
வணக்கம்.
உங்கடை 21.10.94 திகதியிட்ட 8 அடைந்தேன். பெற்ற போது ே மகன் படித்து நல்ல நிலையில் பேரானந்தத்தைத் தந்தது. தம்பி ரூபா அனுப்பி வைக்கிறேன். ம6 குடுங்கோ. காசை அவர் தரு இத்தொகையை குடுத்திட்டே இலட்சணமான காராக வாங்கு அடிகொடி. நடப்பாக இருந்த
வண்டியிலேதான் போய் வருவா விட முடியாது. அடுத்த முக் பிள்ளைகளின்ரை எதிர்கால வ அக்கர்ளின் விசயத்தை முடிப்ப
A

sறைக்கும் முன்கூட்டி நன்றிகள்
উK
புன்னாலைக்கட்டுவன். 21-11-94.
கடிதம் வாசித்து மட்டற்ற மகிழ்ச்சி பெற்ற இன்பத்தை விட எனக்கு ) இருக்கிறான் என்ற நற்செய்தி க்கு இத்தோடு இரண்டு இலட்சம் வியம் முதலாளியிடம் துண்டைக் வார். நான் முதலாளி வீட்டிலே -ன். தம்பி வாங்கும் காரை
உங்கடை அப்பா உடையார் அடிகொடி. உடையார் குதிரை ர். எங்கடை அந்தஸ்தை இறங்க கிய விடயம். என்ரை பெண் ாழ்க்கை. தம்பி முதலில் மூத்த ). அவளுக்கு வயசு 38. கமலா
s

Page 51
கரை சேர்ந்த பிறகு விமலா அக் ஜேர்மனியில் இருக்கும் பெடியன் அவை நாங்க சம்பந்தம் வைக் ஓம் சொல்லவில்லை. வேறை ட் அருவருப்பாக இருக்கடா.
தம்பி அக்காவின்ரை கலியாண
வேணும். இன்னும் இன்னும் பிற்ே பதிலை ஆவலோடு எதிர்பார் கிடைத்ததுக்கு உடன் பதில் ே
உனது அன்பான அம்மா,
ஆ. செல்லம்மா.
அன்புக்கினிய அம்மாவுக்கு,
வணக்கம்.
அம்மாவுக்கு ஒரு சந்தோசமா ஒரு அழகிய லேற்றர்ஸ்ற் ரெ
உள்ளான். அம்மா அனு

ாவுக்கு தேடுவம். மூத்தவளுக்கு ஒன்றுக்கு ஒரு பார்ட்டி கேட்டவை. க் கூடிய இடமுமல்ல. நாங்கள் ற நாட்டு நடப்புகளை நினைக்க
அலுவல் ஏதோ ஒரு முடிவு இனி பாட முடியுமோ?. நான் உன்ரை க்கிறேன். மிக்க நன்றி, காசு ITG.
a.
வெள்ளவத்தை 20.12.94
ன செய்தி. அம்மாவின் பிள்ளை GuJITsipri (Latest Toyota 6hristilda பிய காசோடு இரண்டொரு

Page 52
நண்பர்களிடமும் கொஞ்சம் மாறி நல்ல எடுப்பான காராக எடுத்து
அம்மாவுக்கு இன்னுமொரு மங்கலி பிள்ளை. நல்ல சோக்கான வடி மாதிரி. அத்தோடு தங்கமான குன் அம்சம் நிரம்பிய பிள்ளை என்று திடீரெனப் பதிவுத் திருமணம் ெ அது அம்மா கோவியாதையுங்கே செய்யவில்லை என நினைத்து. ந பெரிய பிழையை விட்டு கையும் மானத்தைக் காப்பாற்ற மரியாதை திடீர் பதிவுத் திருமணம் செய்து 6 யாரும் இல்லை. நான் இருக்கும் ஒன்று; அவை எங்கடை ஆட்கள் செய்தது பிழை என்றால், ம கல்யாணத்தை 8ம் திகதி (8.01.9 வைக்க யோசனை,
கட்டாயம் அக்காவவையும் அம்ம விடயம் அம்மா. இப்ப நாங்கள் எழுதிக் கொடுத்தாச்சுது என அறி இருக்கிறது தானே நல்லது. அம்ம ஒரு வீட்டை வாங்கலாம். மு வாடகைக்கு ஒரு வீட்டை எடுக்கலி இலட்ச ரூபா தேவை. அம்மாவும்
「エ

, கம்பனி லோனையும் எடுத்து ஸ்ளேன்.
ாகரமான செய்தி. ஒரு தங்கமான டிவு. உருக்கி வார்த்த தங்கம் ணம். அம்மா பார்த்தால், தெய்வ வலுவாகச் சந்தோசப்படுவியள். சய்ய வேண்டி வந்து விட்டது. கா. உங்களை நான் கேட்டுச் நான் அவசரப்பட்டுவிட்டேன். ஒரு மெய்யுமாகப் பிடிபட்டு எங்கடை க்காக உடன் நோட்டீஸ் போட்டு விட்டேன். இந்தப் பிள்ளை வேறு
வீட்டுக்காரரின் மகள். ஆனால் ர் இல்லை. வேதக்காரர். நான் ன்னித்து விடுங்கோ அம்மா. 5) GaffréF Church 356burgOOTLDITs
ாவும் வரவேண்டும். இன்னொரு இருக்கிற வீடு மூத்த மகளுக்கு கிறேன். இனி எப்படியும் புறம்பாக ா கொஞ்சக் காசு அனுப்பினால், டியாவிட்டால் இப்போதைக்கு 0ாம். முற்பணத்திற்கு குறைந்தது மருமகளோடை வந்து தங்கலாம்
HS

Page 53
தானே. கமலாக்காவுக்கும், வ றான்ஸ்பர் (Transfer) எடுத்துக் கெ அம்மாவையும், அக்காமாரையுட ஆவலாக உள்ளேன். நன்றி
உங்கள் அருமை மகன் -
ஆ. தனபாலன்
பிள்ளைகள் பிரச்சனை என்று ஒ பிரச்சனையே என்று என்றோ உ இப்போது உண்மை எனப்படுகி
எனக்கு நானே செருப்பால அ படித்த முட்டாள். பட்டதாரி ஆசி சரியாக கட்டுப்பாடாக வளர்ச் உன்னை அளவுக்கு அதிகமாக ஏன் இவ்வளவு காசு? எப்படிச் ெ கேட்டேனா? கட்டுப்படுத்தினேன் காசை அள்ளித் தந்தது. க
4.

மலாக்காவுக்கும் சொல்லுங்கோ ாண்டு கொழும்புக்கு வரச்சொல்லி. ) என்ரை நற்காரியத்திற்கு காணும் அம்மா. உங்களை எதிர்பார்க்கும்
妥く
புன்னாலைக்கட்டுவன்.
8.1.95
ன்றும் இல்லை! எல்லாம் பெற்றோர் ளவியல் பாடத்தில் படித்த தத்துவம் றது.
டிக்க வேணும். நான் முழு விசரி. ரியையாக இருந்தும் பிள்ளையைச் கத் தெரியாத பைத்தியம். நான் செல்லம் தந்து கெடுத்துப் போட்டன். Fலவளிக்கின்றாய் எண்டு இதுவரைக் ா? மற்றப் பிழை கேட்கக் கேட்கக்
சை எப்படி எடுத்தேன், எப்படித்
28

Page 54
தேடினேன் என இன்று வரை எல்லாம் நான் விட்ட பிழையட தெரியாது. நான் ஒரு பேச்சியே
டேய்! நான் உனக்கு அனுப் தாலிக்கொடி வித்த காசடா. { கழுத்தில இருந்த பவுண் ந6 மானத்தைக் காக்க கிலுட்டு ந பேர் முக்கி முக்கி உழைச்சு இன்னும் ஏராளம் கடன். உ தெரியப்படாது; தெரிந்தால், து போகும் என்று நினைச்சு எங்கை காட்டவில்லை. முற்றும் முழுதுப Guit (3LTD.
நாங்கள் திரைபோட்டு மூடி மை வருமானம் காணாது. கையிலும் நானும் என்ரை பிள்ளைகளும் 6 நிற்பாட்டிப் போட்டு, அதனைத் வந்தோம். நானும் பிள்ளைக் களைப்பையும் பாராது, கொளு பாராது, நடுவெய்யிலுக்குள் நிை
எங்கடை தேசத்தில தோட்டம் ெ குண்டு மாரியும், ஷெல்லடியுட ஒருவனுக்கு எழுதிப்பலன் இல்ை
:

எழுதாதது இன்னுமொரு பிழை. ா. எனக்கு பிள்ளை வளர்க்கத் தான்!
பிய காருக்கான காசு என்ரை என்ரை பிள்ளைகளின் கையில கை நட்டும் ஒன்றும் இல்லை. கை போட்டிருக்கிறோம். மூன்று ம் ஒரு சதம் மிச்சம் இல்லை. உனக்கு எங்கடை கரைச்சல் க்கப்படுவாய்; படிப்புக் குழம்பிப் ட கஸ்ட நஷ்டங்களை நாங்கள் Dாக உண்மைகளைப் புதைத்துப்
றச்ச சோகக்கதையையும் கேள். மடியிலும் காசு இல்லை என்பதால் எங்கடை தோட்டக் குத்தகையை தொடர்ந்து நாங்களே செய்து களும் கூலிக்காரரைப்போலை நத்தும் கொடும் வெய்யிலையும் ன்று உழைத்து வாறோம்.
சய்யக்கூடிய வேலையா? எப்பவும் ம். இதுகளை உன்னைப்போல ல. தகப்பன் இல்லாத இடத்தில்
of

Page 55
தலைமகன் தான் முன்னின்று கு( பக்க பலமாக இருக்க வேணு இன்னுமொரு பெரியபிழை. எா முழகிப்போச்சு. இப்ப இந்தச் ெ அவள் துணிந்தும் விட்டாள்!
தகப்பன் இல்லாதவிடத்து
கடமைகளைச் சரிவர உ துணிச்சலாக முகம் கொடுத் முன்னின்று தானே சரிவரச் செ தானே!. நல்லது நீ கல்யாண பிள்ளைகளும், ஒரு ஆம்பிளை ஈமக் கடன்களை திருவடிநி
நிறைவேற்றுவார்கள்.
ஒரு பொறுப்புணர்வற்ற மகனை
ஆறுமுகம் செல்லம்மா

ம்பத்தை நடத்த வேணும். நாங்கள் ம் என ஒதுங்கியது நான் விட்ட கடை பழைய போக்காலை குடி சல்லம்மா விழித்துக்கொண்டாள்;
அவளே தலைவி. அவள் தன் ணர்ந்து பிரச்சனைகளுக்குத் து தன்ரை கடமைகளை அவள் ய்வாள். 8.1.95 சேர்ச் கல்யாணம் ாம் கட்டு!. தாயும். பொம்பளைப் Tப் பிள்ளையின்ரை இழப்புக்கான
லைக்குப் போய் முழுமையாக
ப் பெற்ற பாவி,
S தினத்தந்தி 10-09-1995
|- 80

Page 56
நீறு பூத்த நெருப்பு இதுதான் என் நீறு. உள்ளே நெருப்பு.
நெற்றியில் குங்குமப் பொட்டு. உத பூக்கள். வெளிப்பார்வைக்கு சகல LDITgÉlf.
வெளியே என்னைப்பற்றி ந6 பள்ளிக்கூடத்திலும் சக ஆசிரியர் ஆசிரியை எண்டுதான் நினைக்கி
பெயருக்கு வெளிநாட்டால் வந்த ஆசைக்கு ஒரே ஒரு குழந்தை, யார்தான் பெருமையாகப் பேசாய நினைக்கிறன். பள்ளிக்கூட நற்க என்னையும் கேட்கினம்.

உள்ளொளி
ரை உண்மையான நிலை. வெளியே
ட்டில் புன்முறுவல். கொண்டையில் ) சம்பத்தும் நிறைந்த பொம்பிளை
ல்லபிப்பிராயம். ஏன் எங்கடை
மார் ஒரு குறையுமற்ற நிறைவான 60TLD.
பெருமை வாய்ந்த மாப்பிள்ளை.
அதுவும் ஆண் குழந்தை, பிறகு பினம்? எங்கடை கலாசாரம் எண்டு ரியங்களுக்கு முன்னிண்டு செய்ய

Page 57
ஆனால், நெஞ்சுக்குள் நெருப்பு. அது, என்னைப் பலமாகச் சுடுகு மெல்ல மெல்ல உள்ளூரக் கருக
வெளியே வெறும் பூச்சு. அசல் ர தெரியும்!
எனக்கு நடிக்கத் தெரியும். நல்ல நடிகர்தானே! நானும் அப்பாபோ எனக்கு வேஷப் பொருத்தம் பிை
நான் கண்நிறைந்த கண்ணாளனே சாலி வாகனத்தில் அதிகப்படி அ பாடசாலைக்குப் போறன். பின்னே கேற்றடியில் நிற்பார். சேர்ந்து சி நாங்க குதூகலக் குடும்பம் எண்
அவர் ஆண் அழகன். இரண்டாட
மனிசன் குழந்தை போல வசீகரம் மனத்தில் கள்ளம் கபடம் இ கட்டுமஸ்தான தேகம். கறுத்த ச மீசை, நல்ல உயரம். வழமையாக ஆர்தான் ஆசை கொள்ளாய ஆசைப்பட்டுத்தான் கலியாணம் ஆகிவிட்டதே!
எனக்கு நல்லாகத் தெரியும். அழ எங்கடை ரீச்சர்மார் எல்லாருக்கும் ஏறியும் இன்னமும் கன்னியாக:ே பாவம் பாருங்கோ!
سة

கனல் விட்டு எரியும் பெருந் தீ. து. சுட்டுச் சுட்டு எரிக்குது. நான் க் கொண்டே போகிறன்.
டிப்பு. இது எனக்கு மட்டும் தான்
கத் தெரியும். அப்பா பேர் பெற்ற லை வலு அழகாக நடிக்கிறன். ழ இல்லை!
ாடை வெள்ளை நிற புத்தம் புது வற்றை தோளிலை கைபோட்டபடி ரமும் சரிநேரத்திற்கு அவர் வந்து ரித்தபடி வந்து போவம். ஆர்தான் டு நம்பாயினம்.?
ம் பேச்சுக்கே இடமில்லை!
மனமும் குழந்தை போலைதான். ல்லை. உடல் நிறம் சந்தனம். ருண்ட கேசம். ஆழமான அரும்பு அதி நவீன ரவுசர், சேட் அவரிலை பினம்? நானும் உண்மையில் செய்தன். அந்த ஆசை நிராசை
கானவர் கிடைத்து விட்டார் எண்டு வலு பொறாமை. அதுவும் வயது ப இருக்கிறதுகளுக்கு.? அதுகள்

Page 58
அவர் சந்தனம் என்றால் நான் அவர் சந்தன நிறம். நான் எம் ட நிறம்.
ஆனால் பாருங்கோ! நான் நல்ல கூந்தல் எனக்குத் தனி அழகு. கு கீழை இறங்கும்.
கறுப்பிலும் ஒரு அழகிருக்கும் பா அழகு!
இனி அவர் என்ரை மச்சான். நைஜீரியாவிலை எட்டாண்டுகள் உழைச்சு காசை அள்ளிக்கொண்
ஆக்கள் எனக்கு நேரேயும் சொல்ல கொஞ்சம் மன எரிச்சலும்தான்! எ நான் அவைக்கு ஒரே ஒரு செல்: அம்மாவின் அன்புக்கு குறைச்சே
ஆனால் அவர்!. என்ரை துரதிர்
ஒரே ஒரு ஆண்டு நெருக்கம
சந்தோஷமாக இருக்குது. பிறகு மெல்ல மெல்ல ஒதுங்கிக் கொள்
வயது வந்து வலு கட்டுப்பாடாக
அவர் ஒதுங்குகிறது மனதுக்குள்ள பாருங்கோ! - சொல்லிக் கொள்ள
ஒரே ஒரு வருட சந்தோஷ வா சின்னம். அடுத்த இரண்டு ஆண்டு
3

நிறம் குறைவு. ஓம் பாருங்கோ! மண்ணுக்குரிய மாண்பான கருமை
ஒல்லி. அளவான உயரம். என்ரை லைச்சு விட்டால், முழங்காலுக்குக்
ருங்கோ. அந்த அழகுதான் என்ரை
சொந்த இரத்தமுறை மச்சான். ஒரேயடியாக உழை உழை என ாடு வந்ததாக ஊரிலை கதை.
லீ இருக்கினம். எங்கடை சனங்கள் ன்ரை அப்பா அம்மா ஆசிரியர்கள். லப்பிள்ளை. உண்மையில் அப்பா ல இல்லை!
ஷ்டம்!
ாகப் பழகினார். நினைக்கவே ஏதோ சனியன் பிடித்ததுபோல ாளுகிறார்.
இருந்த எனக்கு என்னை விட்டு ளை ஏதோ ஒரு மாதிரி இருக்குது ா வெட்கமாகக் கிடக்குது!
ழ்க்கையால் ஒரே ஒரு ஞாபகச் }களும் ஒரே பாலைதான்!
3

Page 59
இப்ப நான் அழுகிறன். தனிமை அழுகிறன் - கண்ணிரும் கம்பை
ஆரம்பத்தில் சந்தோஷப்பட்ட அ இப்ப உண்மை நிலையைக் கவலைப்படுகினம்!
உவை கவலைப்பட்டு என்ன பல நிலைமைக்கு உவையும்தான் ( பேச்சு - வைதீகப் போக்கு சட்ட நிலமைக்குத் தள்ளி இருக்கு1.
நானும் தெரிந்தோ தெரியாமலே தோஷம் பாருங்கோ! சிலவேளை தனமாக நடந்திருப்பன். ஆசிரியர் அவற்றை மனதைப் புண்படுத்திய
இப்ப என்ன செய்யலாம்? இவை
எப்படித் திருத்தலாம்?. எனக்கு
மாமா மாமிக்கு தெரியும் பாரு போலை படிச்ச சனங்கள். டிப்பாட்மென்ட்டில் வேலை செய்த மாமி ‘றெயில்வே கிளறிக்கல் சொல்லிச் சொல்லிப் பாத்து கேட் விட்டிட்டினம். இவரைத் தங்கை சொல்லிப் போட்டினம்.
இதுகள் வெளியே சொல்லக் பேசக்கூடிய விஷயமா?. மனத் மனம் வலுவாகக் கணக்குது பா

பான நேரம் அழுகிறன். நல்லாக hou DIT85.
ப்பா அம்மா பிறகு சந்தேகப்பட்டு, கண்டு பிடித்து விட்டினம்;
ன் பாருங்கோ?. என்ரை இண்டைய பொறுப்பு உவையின்ரை குத்தல் ாம்பிள்ளைத்தனம் அவரை இந்த
ா பிழை விட்டிருப்பன்! தொழில் நான் அறியாமல் சட்டாம்பிள்ளைத் மாற்றை குணம் அதுதானே! அது பும் இருக்கும்.
ர எப்படி உணர வைக்கலாம்?.
ஒண்டுமாகத் தெரியவில்லை!.
ங்கோ! அவையஞம் எங்களைப் இரண்டு பேரும் றெயில் வே வை. மாமா றெயில்வே "ஹெட்காட்'. சேவன்ற்’. அவைகள் இவருக்கு காததினால் கதைப்பதை அடியோடு - வீட்டை வரவேண்டாம் எண்டும்
வடிய விஷயமா?. மனந்திறந்து நுக்குள்ளை அடைத்து, அடைத்து ருங்கோ.1

Page 60
எப்படி விளங்க வைப்பது? கறுப்பெண்டா என்ன பாருங்கோ?.
தாம்பத்திய சுகம் குறைஞ்சிடுமா ஒழிய, நிறம் தான் செக்ஸ் இல்ல
செக்ஸ் ஒரு வகை உணர்வு. சம்பந்தம் இல்லை! இதை நான் செ பெண்களைக் குறிப்பிட்டு, அை சீர்குலைந்து, விவாகரத்துக் கோரி, இவர் நம்பினதாகத் தெரியவில்ை
முக்கிய பிரச்சனை அது. எனக்கு பட்டம் பெற்று ஆசிரியர் தொழில் என்னை மட்டும் "ரீச்சர்” எண்டு ம தடிப்போடு நடந்தும் இருப்பன். பழக்க தோஷம். நான் இவரோடு மனதைப் புண்படுத்தி இருப்பன். வேணுமெண்டு செய்யவில்லை! S. 60660)LD
இவர் படிக்காமல் வெறுமனையே இயற்கைக் கெட்டித்தனத்தைப்
மெக்கனிக்காக வேலை பாத்தன கணக்கிட்டுள்ளார் போலை கிடக்
செய்யும் தொழிலில் என்ன ஏற் தொழிலும் அதனளவில் ம ஒண்டுதானே! காந்தி சொன்னது (6b|Tuabb. "Every work is a cog w wheel of production'. LD&EIT g5DT35 st சொன்னதாக ஞாபகம்.
{ 3 ت

செக்ஸ்சுக்கு நிறம் துணையே Dலயே! -
அதுக்கும் நிறத்துக்கும் நேரடிச் ால்லி இருக்கிறேன். சில சிவத்தப் வயின்ரை தாம்பத்திய வாழ்வு வழக்காடுவதைச் சுட்டிக்காட்டியும்,
நல்லாகத் தெரியும். நான் படித்துப் புரிவது சில சமயங்களில் சிலர் திப்பது நானும் பட்டதாரி எண்ட என்னவோ?. சில வேளைகளில் சட்டாம்பிள்ளைத்தனமாக நடந்து, என்ன எப்படியென்டாலும் நான் அதுவெண்டா உண்மையிலும்
OL வரை படித்த கையோடு, பயன்படுத்தி தான் மோட்டோ த ஏதோ தரக் குறைவு எண்டு
@。
றத் தாழ்வு? ஒவ்வொரு வகைத் திப்பும் பெறுமதியும் மிக்க எங்கேயோ எப்பவோ வாசித்த hich plays an important role in the ந்தி இந்தக் கருத்துப்படத்தான்
Bf

Page 61
D) உள்ளொளி
இதுகளை உணரவைக்க ஒவ்வொ நல்லாக பயன்படுத்துகின்றன். எ செய்யாமற் போகுமோ..?
இன்னொரு பிரச்சனை பாருங்கோ நோயுக்கு வைத்தியம் செய் வித்தாகிவிடும்தான்! என்ரை நல் சட்டாம்பிள்ளைத்தனம் எண்டு கன
உண்மையான நேரடிப் பிரச்சனை குடிப்பது இல்லை. பிறகு மெல்ல பழைய கூட்டாளிமாரால் ஏற்படுத் இப்ப நிறை வெறி. இராவிலை
கட்டுகிறார். பிறகு மனுசன் விடியும்
அப்ப புதிதாக கட்டின மனிசிபா கட்டிக் கட்டி கட்டுப்பாடாக இருந்
இவருக்கு வீட்டு வேலை இல்லை விழுந்துகட்டி சங்கக் கடை போ முழு வேலையையும் வலு கிளின முன்வந்து செய்துபோட்டு பிறகு சுமைகழுதைகளோ? நாங்கள் தா நக்கல்கள் தேவையில்லைப் ட அப்பாவைவிட அம்மா ஒருபடி ச அம்மா விண்ணி.
பொறுப்புகளைப் பகிர்ந்து ெ வேலையில்லாதவரின் மூளை பி
அப்பா, அம்மா இவரோடை கதை ச
--

ரு வாய்ப்பான சந்தர்ப்பங்களையும், ன்ரை நித்திய ஒதல்' வேலை
. சம்பந்தப்படும் நானே எங்கடை வதால் தப்பபிப்பிராயத்துக்கு bல நோக்கத்தை அவர் தப்பாக னக்கு முடிக்கிறாரோ, என்னவோ!.
க்கு வாறன். ஆரம்பத்திலை இவர் , மெல்ல குடி. இதுகள் இவற்றை தப்பட்ட பழக்கமாகவும் இருக்கும்.
போத்தல் போத்தலாக வாத்துக் வரை விறகுக் கட்டை மாதிரித்தான்.
டு?. ஆசையை அடக்கி அடக்கி ந்த என்பாடு?.
! அப்பா, அம்மா பென்சனியேர்ஸ்.
றதிலை இருந்து சமையல் வரை ாகச் செய்து போடுவினம். தாமாக
குத்தல் பேச்சு. நாங்கதான் ன் பொதிமாடுகளோ? எண்ட வித ாருங்கோ! இந்த விசயத்திலை கூட. ஊத்தைப்பாஷை பேசுவதில்
கொடுக்கவேணும் பாருங்கோ! Fாசுகளின் உறைவிடம் தானே?.
5ாரியத்தைக் குறைத்துப் போட்டினம்.

Page 62
இவர் வெளிநாட்டு அந்நிய பழக்க போனார். அதுதான் பிரச்சனை எண் இல்லை. நீங்கதான் தேடித்தந்த
சொன்னேன். அதுக்கும் மசியவில்
இன்னொரு சங்கதி பாருங்கோ. , தர்மகர்த்தா. அதுதான் அப்பா அ தலைமுறை தலைமுறையாக அ கோயில் நிர்வாகம். ஏன் அந்த கட்டுவிச்சு, புதுப்பொலிவு ஆக்கு “தாத்தா சிங்கப்பூர் சிவசுப்பிரமணி
ஆனால், இந்த ஆண்டு மாத்திரம் வலுக்கட்டாயமாக மாட்டேன்
குடும்பத்திலை ஆச்சாரம் கெட்டுப் ஆலய நிருவாகத்திற்கு ஆசைப்பட
ஆள் கிடைக்காததாலை, இவரை ஆச்சாரமோ பாருங்கோ? இவற்றை நினைச்சு, கொஞ்சம் அப்படி இப்படி ஆச்சாரமோ பாருங்கோ?.
இந்த விதண்டாவாதங்களை விட்
அப்பா பாருங்கோ, எங்கடை கு பெரிய புள்ளி. மனிசன் கதை குை யாரும் எதிர்க்கதை பேசாயினம்.
அப்பாவுக்கு இன்னொரு குணம் பா( ஆகிவிடுவார். கடுங்கோபம் எண்ட போகார். ஆமைபோல வெளி கல்லாகிவிடுவார்.

வழக்கங்களுக்கு அடிமைப்பட்டுப் டும் சொல்லிப் பார்த்தன். கேட்டினம்
உங்கடை மாப்பிள்ளை எண்டும்
)606).
அப்பாதான் இந்த அரசடி ஆலய வையின்ரை பரம்பரைக் கோவில். |ப்பாவின்ரை அடிகொடியினர்தான் க் கோவிலுக்கு இராஜகோபுரம் வித்தது, அப்பாவின்ர அப்பா - னியம்தான்.
தருமகர்த்தா வேலைக்கு அப்பா எண்டு போட்டார் கேட்டதற்கு போச்சு. ஆச்சாரம் இல்லாதவன், க்கூடாது எண்டு மறுத்திருக்கிறார்.
மாப்பிளையாகத் தேர்ந்தெடுத்தது
தொழில் குறைஞ்சதொன்று என்று டி மனநோகக் குத்தலாகப் பேசுவது
டு, சொன்னகதைக்கு வாறேன்.
றிச்சியிலை நடப்பு நாணயமான றைவு. கதைத்தால் வாய்திறந்தால்
ருங்கோ. கோவம் வந்தால் மெளனம் ால், ஏசார்; பேசார்; சண்டைக்குப் அவையவங்களை அடக்கிக்
st

Page 63
இப்ப இவரோடை அப்பா கதை
எங்கடை கெட்ட காலம். இப்ப இ
குடிவெறியிலை கத்திறது; சாப்பா போடுறது; சட்டி பானையை உை
அண்டு ஒரு மாதத்துக்கு முன்பு எ சண்டை போட்டு மண்டை உை மெளனமான அப்பா இன்றுவரை இ அம்மாவுக்கு ஆச்சாரம், அப்பாவின் நற்பேர் கெட்டது பெரிய கவலை அரசடியானுக்கு நேத்தி போட்டு கதைகாரியம் இல்லை.
இதுகளாலையோ, என்னவோ இவர் ஒரு கதை இரண்டு கதைதான் டே தான்!
நிலமை இப்பிடியென்டால் சொந்த பாருங்கோ!.
இவருக்கு ஒரே ஒரு ஆறுதல் அதுதான் எங்கடை குஞ்சின்ன அப்பாவோடை நல்லாகச் சேருவ வாரப்பாடு, இரண்டு பேரும் சே கொட்டுவினம். சேரன் ‘அப்பா, அ ஓடுவான். “சேரன்! என்னைப் பிடி இவர் கலைபட்டு ஓடுவார். இரண்டு இவர் சேரனைத்துக்கி, கொஞ்சி காட்டுவார்; சேரனுக்கெண்டே மு
3

காரியமில்லை; மெளனம்!
ப்ப இவர் கூடுதலாகக் குடிச்சிட்டு, ட்டு நேரம் கோவிக்கிறது; சண்டை ]டக்கிறது.
ண்டு ஞாபகம். இவர் குடிகாரரோடு டபட்டு வீட்டை வந்த கையோடு இறுகினாரே ஒழிய, இளகவில்லை. 1ரை தருமகள்த்தா வேலை, குடும்ப 0. இவரைத் திருத்தித் தரும்படி } விட்டு, அம்மாவும் இவரோடு
இப்ப என்னோடும் கதை குறைவு. சுவார். பிறகு இருவரும் மெளனம்
இளம் மனிசிக்கு எப்பிடி இருக்கும்
எங்கடை சேரன்தான். “சேரன்' ரை பெயர் பாருங்கோ! அவன் வன். அவரும் அவனோட நல்ல ந்து விளையாடுவினம். செல்லம் ப்பா' எண்டு கலைச்சுக் கொண்டு பாப்போம், பிடி பாப்போம", எண்டு பேரும் ஒடுப்படுவினம். சிலவேளை , உயர எறிந்து விளையாட்டுக் }ன் பெட்டி பூட்டிய புத்தம் புது
9

Page 64
ஏசியா சைக்கிள் வாங்கி சேர இடங்கள் காட்டுவார்; இனிப்புகள், குடுப்பார். சும்மா சொல்லப்படாது பாருங்கோ.
அப்பாவும், அம்மாவும் அவன் விவாகரத்துக்கு விண்ணப்பிக்கச் பவுசுதான் பெரிசு. எனக்கு
அப்படி அவசரப்பட்டு பிரிகிறதுக்கு பொறுத்திருந்து பார்ப்பம். பொறு
நீங்கள் என்ன சொல்லுறியள் இல்லையோ?.
இண்டைக்குத் தீபாவளி. போன கொண்டு வந்து அடுக்கத் தொட
இண்டைக்கு கோழி விழும்; ( இருக்கும்; இவற்றை புதுக்குடி வருவினம்.
அங்கை! என்ன சங்கதி புதினமா குளிக்கிறார். விடியவே குடி குளிகுளியெனக் குளிக்குது.
சுவாமி அறைக்கையும் ஓடுது.
'உமா இஞ்சைவா' - என்னை பேர் பாருங்கோ, அப்பா பொருத்த பார்வதிக்கு இன்னொரு பேர் உ
4.

னைக் கொண்டு ஊர் சுற்றுவார்; விளையாட்டுச் சாமான்கள் வாங்கிக் தகப்பனும் மகனும் நல்ல ஒட்டுப்
ர எனக்குப் பிடிக்காவிட்டால் சொல்லுகினம். அம்மாவுக்கு வீண் இது வாழ்க்கை பாருங்கோ. ந நான் சம்மதிக்கப் போறதில்லை! த்தார் புவி ஆள்வார்.
என்ரை பொறுமை நல்லதோ,
வாரமே போத்தல் போத்தலாக Lங்கி விட்டார்.
குடியும், கூத்தும், கும்மாளமுமாக காரக் கூட்டாளிமாரும் வந்தாலும்
கக் கிடக்குது விடிய வெள்ளணக் க்கிற மனிஷன், இண்டைக்கு
ால்லாம் புதினமாகக் கிடக்குது.
தான் கூப்பிடுது. அதுதான் என்ரை மாகத்தான் பெயர் வைத்திருக்கிறார். மாதானே!
六飞 P

Page 65
D) உள்ளொளி
“சேரனையும் கூட்டி வா உமா . நானும் சேரனுமாகச் சுவாமி அன
கற்பூரத்தைக் கொளுத்தி சிவன், கும்பிட்ட மனிஷன் ஏதோ உரு வந் தொட்டு,
'உமா! நான் இன்டையிலிருந்து குடி இது, சிவ சத்தியம்!' - எண்டு சத்தி
இல்லை!?.
ரண்டு பேருமாக அரசடிப் பிள்ை மழை மெல்லத் தூறுது. தேவ அ
கோவிலை வலம் வந்தம். கும் ஓங்கி சிதற அடித்தார். தேங்காய் நாங்கள் செய்த பாவங்கள் சிதற
நேராக வீட்டிற்கு வந்த இவர் அபூ எங்கடை முன் கராஜ் கட்டிடத்து அதுக்கு பூ சாத்துகிறார்; தொழு மோட்டார் சைக்கிள் திருத்தும் சொல்லுகிறார்.
“என்ன திடீர் மாற்றம்.” - இப்பி
கிடைத்த பதிலைச் சீர்படுத்தி சீர்த பிடிக்கிறன்.
_sー
ا

எண்டும் அன்பாகச் சொல்லுது. றயிக்கை போறம்.
பார்வதி திருவுருவப் படத்தினைக் தது போலை சேரனின் தலையைத்
டிக்க மாட்டன். உழைத்து வாழ்வன் யம் செய்யுது. நான் எதிர்பார்க்கவே
|ளயார் கோவிலுக்குப் போகிறம். ஆசீர்வாதம் பாருங்கோ!
பிட்டம். இவர் அடி தேங்காயை துண்டு துண்டாக - இல்லை!. ல்களாகப் பறக்குது!
pகான பிள்ளையார் படம் ஒன்றை |ள் அழகாகத் தொங்கவிடுகிறார். கிறார்; தான் இண்டு தொடக்கம்
வேலை செய்யப் போறதாகச்
டிக் கேட்டும் விட்டன்.
திருத்தத்திற்கான பதிலைக் கண்டு

Page 66
முந்தநாளும் இவர் வெளியே வழியிலை கொட்டு மழை. பக் அது காகம் இருக்க பனம் பழL அமைஞ்சு போச்சு.
இவர் மழைக்கு ஒதுங்கிய வீட் சனங்கள் - அறிவாளிகள். அ6 தேநீரும் கொடுத்து உள் விறா
அந்த நேரம் விறாந்தையுள் விளைவுகளைப் பற்றி உரையா ஒரு பேச்சு இவற்றை மனத்தை 'குடிகாரன் தன் பிள்ளைகளை ஒ - எண்டதுதான் அது. சேரனின் கிடக்கும் மனிஷன் சேரனை வைராக்கியமாக்கி இருக்கு.
இன்னொரு சம்பவமும் நடந்தி வந்த வழியிலை ஒரு வீட்டில் தகப்பனும் மகனும் நாய்ச்சண்ை
அந்த அசிங்கம், மனிஷனின் பலப்படுத்தி இருக்கு.
இண்டைக்குத் தீபாவளி - ஒளி ஏற்பட்ட உள்ளொளிதானே!

குடிக்கப் போயிருக்கிறார். போன கத்து வீடொண்டுள் இவர் ஒதுங்க ) விழுந்தது போல வரப்பிரசாதமாக
டுக்காரர் கல்வியிலை கரை கண்ட வை இவரை அன்பாக வரவழைத்து ந்தையுள் இருக்க விட்டிருக்கினம்.
சீரியசாக ஒழுக்கக் கேட்டின் டிக் கொண்டிருந்த கல்விமான்களின் க் அப்பிடியே கவ்விப் பிடித்திருக்கு. ஒழுக்கசாலியாக எதிர்பார்க்க ஏலாது” நல்ல எதிர்காலத்திற்காகத் தவம் நினைச்சு திருந்துவதற்கு மனத்தை
ருக்குப் பாருங்கோ! இவர் திரும்பி லை நல்ல குடி வெறியிலை ஒரு டை போல சண்டை போட்டிருக்கினம்.
மன வைராக்கியத்தை மேலும்
விழா! உண்மையான ஒளி இவருக்கு
S வீரகேசரி 22-10-1995
42

Page 67
பீடந்த இரவு அப்பாடசாலையில் கொண்டாடப்பட்டது. இன்று பாடசாை ஒரு சில ஆசிரியர்களும் மாணவி பொருள்களை ஒதுக்கும் பணியில்
முற்பகல் பத்து மணி. தேநீர் இன
வெற்றிப் பூரிப்பு உணர்வோடு தேர பாடசாலை அதிபர். அதிபரின் அை இளங்கோ. அவரை அதிபர் அன் வழங்குகின்றார்.
அதிபரும் ஆசிரியர் இளங்கோவு பற்றி கலந்துரையாடுகின்றனர்.
“விழா மிகவும் சிறப்பாக நட சொல்லுகினம். விழாவின்
4

நற் சிந்தனை
பரிசளிப்பு விழா கோலாகலமாகக் லக்கு மாணவர் வரவு மிகக் குறைவு. பர்களும் மாத்திரமே பாடசாலைப் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர்.
டைவேளை இது.
நீரை அருந்திக்கொண்டு இருந்தார்
றயுள் நுழைகிறார் இளம் ஆசிரியர் ாக வரவேற்று, அவருக்கு தேநீர்
ம் நடந்தேறிய பரிசளிப்பு விழா
ந்தது. பாராட்டி எல்லோரும் வெற்றிக்கு உழைத்த

Page 68
உங்களுக்கு கடமைப் திரும்பவும் நன்றியைத் ெ பாடசாலை அதிபர் இளங் “நன்றி சேர். உங்கடை இருந்தது. விழாப் பிரதம அ பணிப்பாளரும் அதனை த இருந்தார். ஆனால்.”
"ஆனால்’ எனப் பேச்சை அதிபர் தொடர்ந்து பேசும்
"ஆனால் ஒன்று!.”
“சொல்லுங்கோ!”
“பரிசளிப்பு விழாவின் வெற்
இடத்திலை இருட்டடிட நாடகத்தைக் குறிப்பிடும்
“குறிப்பிடும்போது!. தயங்
"நாடகத்தைக் குறிப்பிடும்ே கடுமையாக உழைத்தவ நாடகத்துக்கு தொடர்பில் இருந்தீர்கள்’
“அது சேர்”
“ஓம் சேர். விழாத் தொட * சிருஷ்டிகர்த்தாவை இரு பாடசாலை மாணவர் ந

ட்டுள்ளோம். உங்களுக்கு ரிவிக்கின்றேன்.", எனக் கூறிய காவிற்கு நன்றி நவில்கின்றார்.
அதிபர் அறிக்கை நன்றாக திதி - எமது உதவிக் கல்விப் ாது சிறப்புரையில் குறிப்பிட்டும்
நிறுத்திக்கொண்ட ஆசிரியரை படி கேட்டுக்கொண்டார்.
றிக்கு உழைத்தவரைச் சரியான ப்புச் செய்து போட்டியள். போது.”
காமல் சொல்லுங்கோ'
பாது, நாடகத்தின் வெற்றிக்குக் ர் கந்தையா மாஸ்ரர் என்று லாத ஒருவரைக் குறிப்பிட்டு
iபான அழைப்பிதழிலும் நாடக டடிப்புச் செய்து போட்டியள். க்கும் நாடகம்' என்று மட்டும்
44

Page 69
வெறுமனே நாடகத்தை அற இயக்குநர் இல்லாத நாடக
“சேர் சீனியர் ரீச் சர்.ை ஸ்ராவ்வுக்குள்ளே பிளவை ஏ ரீச்சர்சை நான் திருப்திப்படு
இக்குறிப்பு வாக்கு வாதத்திற்கு
"அப்ப ஜூனியேர்சை உயி
சேர், இந்த நாடகத்திற்கு யா கந்தையா மாஸ்ரர் ஏதாவது
“@于前”
"ஏன் சேர் தயங்குகிறீர்கள் எவ்வளவு கால இடைவெ6 ஒரு பரிசளிப்பு விழா', ' அரங்கேற்றம்' என்ற நல்ல ந uJ? ”
“சேர் கொஞ்சம் பொறுங்கே
“சேர் நீங்கள் என்னை கலைஞரான இளங்கோ கொதிப்படைந்து காணப்படு ஆசிரியர் தொடருகிறார்.
“திட்டமிட்டபடி பரிசளிப்பு என்பனவற்றுக்கு உழைத் பொறுப்பாசிரியர் என்ற உ

றிமுகப் படுத்தி இருந்தீர்கள். மா இது?”
சப் பகைக்கக் கூடாது. ற்படுத்தக் கூடாது. படிப்பிக்கும் த்த வேணும்தானே.”
சூடேற்றி விடுகின்றது.
ரோடை புதைக்கிறதா சேர்? ார் பாடுபட்டது? உண்மையில் து செய்தாரா?.”
ள். இந்தப் பாடசாலையில் விக்குப் பிறகு "ஆண்டுக்கு அதில் ஒரு நல்ல நாடக டைமுறைக்கு உயிருட்டியவர்
订.”
மன்னித்தருள வேணும்” - சூடான உணர்ச்சியால்
கின்றார். மீண்டும் இளங்கோ
விழா, நாடக அரங்கேற்றம் தவர் யார்? நாடகத்தின் டயர் ஸ்தானம் எனக்குத்
is

Page 70
தரப்படாவிட்டாலும் தகுந்த
இந்த நாடகத்தை முழு இ யார்? பாடல் ஆடல் வடிவங்
"இளங்கோ கோபப்படுகிறீ
“நெஞ்சு கொதிக்குது சேர். கொதிப்பு வரும்தானே சேர் உழைப்பாளியை உதாசீன பெரிய பாவம். நீங்கள்
உயிரோடு சமாதி கட்டிய
“சேர், சேர் கொஞ்சம் வார்த்தைகளால்.”
“தாக்கி விட்டேனோ? என்ை உங்கள் மனதைப் புண்படுத் பிழைகளைச் சுட்டிக் க நோக்கம். நெஞ்சம் கொதி நீங்களும் கொஞ்சம் யோச இளங்கோ மீண்டும் தொட
“சேர் நான் மன்றாட்டம கொஞ்சம் பேச விடு செய்யாதீங்கோ சேர்’
“எவ்வளவோ கஷ்டத்தின் உருவாக்கினன். சுய ம ஒன்றையும் வாய்விட்டு g)(36).FT85 - di Goul DIT85 நடந்தேறியது என்று கரு

ஸ்தான்ம் தந்திருக்கலாமே? ரவு கண்முழித்து எழுதியவர் களை வடிவமைத்தவர் யார்?"
56''
சூடு சுரணை உள்ளவனுக்கு
ஓடி ஓடி உழைத்த உண்மை ம் செய்யக்கூடாது சேர். அது செய்தது ஒரு கலைஞனை தற்கு சமன் சேர்.”
பொறுங்கோ. கடுமையான
ன மன்னித்துக் கொள்ளுங்கள். 3துவது எனது நோக்கம் அல்ல; ாட்டுவது மாத்திரமே எனது க்குது சேர். என் நிலைமையை சிக்க வேணும் சேர்”- ஆசிரியர் ருகின்றார்.
ாகக் கேட்கிறன். என்னைக் வ்கோ. மேலும் குறுக்கீடு
மத்தியில் இந்த நாடகத்தை யாதைக்கு அஞ்சி இதுவரை சொல்லாததால் எல்லாம் சோலிகளே இல்லாமல் துகின்றீர்களா சேர்?
46

Page 71
சொல்லுகிறன் என்று கோவிக் ஆசிரியர் குழு தெனாலி இ ஒன்றுதான் சேர். அதற்கு
சுயசக்தி; செயல்திறன் இல்ை தம் வேலையுண்டு என்று செய்யாது இருந்த ஆகிரிய மாஸ்ரரையும் இழுத்துப் பே
“அது சேர்.”
"நான் மன்றாட்டமாக மீண்டு தயவு செய்து குறுக்கிட்டு
குழப்பாதையுங்கோ. என்னைத் - இளங்கோ தொடருகின்றார்
“இதுவரை சொல்ல நினை நெருக்குவதாலே இப்ப சொ குறிப்பாக O/L பிள்ளைகள் ந தமிழ் கற்பிக்கும் கந்தையா ஒத்திகையில் பிள்ளைகள் ! கந்தையா மாஸ்ரர் O/L றி அடையும் என்ற கற்பனைக் க பெரும் இடைஞ்சல் தந்திருந்
இவருக்கு 'நாடக நெறி அறிக்கையில் மகுடம் சூட்டி ஒத்தாசையும் தராத ஆசிரிய தந்தவர்கள்’ என விருது வழங் தராவிட்டாலும், மானசீக அல்லவா?
4

காதையுங்கோ சேர். எங்கடை இராமனின் குதிரை போன்ற தன்னாரவாரம். செயற்படும் ல. சும்மா ஒதுங்கி தாமுண்டு நாடகத்துக்குப் பங்களிப்புச் Iர் குழுவையும் கந்தையா ாட்டியள் சேர்.”
ம் மீண்டும் கேட்கிறன் சேர். என் பேச்சு ஆர்வத்தைக் தொடர்ந்து பேச விடுங்கோ'
க்காத ஒன்றை நிர்ப்பந்தம் ல்லுறன் சேர். நாடகத்தில் டிப்பதை அந்த வகுப்புக்கு
மாஸ்ரர் விரும்பவில்லை. பங்குபற்றுவதைக் குழப்பிய செல்ற் இம்முறை வீழ்ச்சி தையைக் கட்டவிழ்த்துவிட்டு தார்.
யாளர்’ என்று அதிபர்
இருக்கிறியள். எந்த வித ர் குழுவுக்கு 'ஒத்துழைப்புத் கியுள்ளீர்கள். உடல் உதவி உதவி செய்திருக்கலாம்
لد

Page 72
இந்தக் காலத்தில் மா தேடிப்பிடித்தல் மிகக் கி எழுதுவித்தல், ஆடல் கொள்ளுதல் அதைவிடக்
பாடல்களுக்கு இசை அமை நடந்திருப்பேன் சேர்?.
அவன் ஒரு இசை அை தண்ணிச்சாமி சேர். அவன் சொல்ல ஏலாது. அந்த இ தவம் கிடந்து பெற்ற அரும் நாடகத்துக்கு மெருகேற். சங்கீதத்துக்கும், பண்ணிை பழக்கப்பட்ட மாணவர்க6ை பாட வைக்க முடியுமா அசைவுகளுக்கும், அட மாணவர்களை நாடகத்தில் சேர்? கல்லில் நார் உரிக் உரிக்க வேண்டி வந்தது; க பாராது உரித்தேன்; நாடக
எப்படி நாடகத்தை நிறை கேட்கக் கூடும். பாடசாை உங்கள் அனுமதியோடு
பிரதிகளில் இருந்து சில தெரிந்தெடுத்து, தலைசிறந்த அவர்களைக் கொண்டு காண்பித்தன். நான் போட் தானாக விழுந்தன; நாடகப்

ணவ இளம் நடிகர்களை ஷடம் சேர். பாடல்களை அபிநயங்களை அறிந்து கஷடம்?
ப்பிக்க எத்தனை தடவைகள்
மப்பாளன். அவன் சரியான படுத்திய பாடு வாய் திறந்து சை அமைப்பாளன் வீட்டில் இசை வடிவமைப்புக்கள்தான் றியவை. தனிய கர்நாடக சப் பண்களுக்கும் மாத்திரம் ா நவீன நாடகப் பாணியில் சேர்? தணிய அபிநய வுகளுக்கும் பழக்கப்பட்ட ) நடிக்க வைக்க முடியுமா கலாமா சேர்? எனக்கு நார் ரைச்சலையும் கஷ்டத்தையும் த்தை நிறைவேற்றினேன்.
வேற்றினேன் என்று நீங்கள் லயில் நாடகப் பட்டறைகள் ஏற்படுத்தினன். எழுத்துப் சுவாரஸ்யமான காட்சிகளைத் 5 கலைஞர்களை வரச்செய்து, அவற்றை நடிப்பித்துக் - இத் தூண்டிலில் மீன்கள்
வெற்றி பெற்றது.”
A9

Page 73
"நீங்கள் கஷ்டப்பட்டதை யார் உழைப்பால் தான் நாடகம்
"நீங்கள் மறுக்கவில்லை; உா அதனால், பெரிய பிரயோசனம் அதிபர் அச்சிட்டு வெளியிட்ட மறுக்கிறதே! பிரசுரம் அ மறைக்கிறதே. நான் நாடக பட்டதால் என்ரை தேகம் பெரி ஆனால், என்ரை பேர்ஸ் ெ எனக்கு செலவு ஏற்பட்டது. நா ஆசிரிய பயிலுநன்’
"அதுதான்”
“அதுதான் என்னை அசட்ை சேர் நான் பல்கலைக்கழக பட்டப்படிப்பு படித்துக்கொண் இறுதியாண்டு. இன்னும் ஒரு ஆசிரியர் சேர். இதைவிட ந சேர்ந்தவன். இப்பிடி நான் என் அநாகரிகம் என நினைப்பியள் சொல்ல தேவையில்லாத இ அநாகரிகம்.
சொன்ன கதைக்குத் திரும் ஆசிரியருக்கு சம்பளம் போ:

சேர் மறுக்கினம்? உங்கடை வெற்றி பெற்றது”
வகள் நெஞ்சு மறக்கவில்லை. இல்லை! மிக முக்கியமான அறிக்கை ஆணித்தரமாக ச்சொட்டாக உண்மையை த்தில் ஆத்மார்த்தமாக ஈடு தாகப் பாதிக்கப்படவில்லை. பரிதாகப் பாதிப்படைந்தது; ன் ஆர் சேர்?. ஒரு சாதாரண
ட பண்ணி இருக்கிறியள். வெளிவாரிப் பட்டதாரிப் டு இருக்கிறன். இது எனக்கு ந ஆண்டில் நான் பட்டதாரி ான் கலைக் குடும்பத்தைச் ானைப் பற்றிக் குறிப்பிடுவது சொல்லத் தேவையற்றதை டத்தில் சொல்லுவது தான்
பவும் வருகிறன். பயிலுநர் தாது என்று சொல்லித்தான்
ل

Page 74
தெரிய வேண்டிய ஒன்றல்ல. ப கைச்செலவிற்கான ஒரு பட்டறைகளுக்குப் பாடசா நடிகர்களுக்கு தேநீர்ச் செலவு குறைந்த சம்பளத்தில் சு செலவுகளுக்கு எடுத்ததால் ம வேண்டி இருக்கிறது. நான் 6 செய்து விட்டன்.
எங்கள் குடும்பத்தில் நாங்கள் ஒரு பென்சனியர். அவரைவிட ஒரே ஒரு நபர் நான் ஒருவன் அடைபட்டுக் கிடக்காமல் மேலதிகமாக உழைத்து இ செய்யவில்லை; அப்படி என் எனக்கு நாடகம் ஒரு பித்து
உணர்ச்சி வசப்பட்ட ஆசி தொடர்ந்து பேசுகிறார். "பள்ளி பிள்ளைகளின் கலை உண மாணவரின் நடிக்கும் ஆற்றல் நல்ல உணர்வுகளின் உந்துத நாடகத்தில் பங்கு பற்றினே6
பாட்டற விழுந்த பழம்பெரும் செய்ய நான் என்னை எருவ
نا

யிலுநருக்கு வழங்கப்படுவது சிறு தொகைதான் சேர். லை காசு தரவில்லை. ம் என்னோடை என்னுடைய வடிய பகுதியை வெளிச் ன வருத்தத்தோடு சொல்ல எனது வீட்டாருக்குப் பாவம்
ள் ஐந்து பேர் சேர். அப்பா குடும்பத்தில் உழைக்கும் தான். நான் பாடசாலையில் ரியூட்டரிகளுக்குப் போய் இருக்கலாம். அப்படி நான் னால் செய்யவும் முடியாது. சேர்; ஒருவித வெறி சேர்."
ரியர் இளங்கோ மீண்டும் க்கூடம் முன்னேற வேண்டும்; ர்வு வளர்க்கப்படவேண்டும்;
மேலோங்க வேண்டும் என்ற லினால்தான் நான் தீவிரமாக
ÖI.
பாடசாலையை மீள எழச் ாக்கி உள்ளேன் சேர்.
لئــــــ

Page 75
ஒருநாள் சேர். சோனாவாரி இரைச்சலோடு பேய் மழை லயிற் இல்லை. நான் போ உங்களுக்கு தெரியும்தானே இருட்டில் வயல் வெளிப்பா பலமாக அடித்ததால் மழை எனது குடை முறிந்து போச் என்று கொட்டியது. குன்றெ தெரியவில்லை. நான் ஒரு விழுந்து போனன் சேர்ட் கிழி தண்ணிர், உரசல் காயங்கள் நான் வீட்டை போய்ச் சேர்
நான் இதுகளை இப்ப அடு விளம்பரத்துக்கு ஆசைப்ட முடி சூட்டிப் போட்டியள்.
புதைத்தும் போட்டியள் எ
ஆசிரியர் இளங்கோ மீண்
"உங்களுக்கு தெரியுமா ே நனைந்ததைத் தொடர்ந்து குரல் கட்டி நான் பேச மாட தலையிடியுடனும் கஷ்டப்ப
չ` 4.

மழை, கும்மிருட்டு. காத்தும் பும். அன்று என் சயிக்கிளுக்கு ய் வரும் வயல்வெளிப்பாதை சேர்!. நாடகம் முடிந்து, முன் தையால் போகையில் காத்து க்குப் பிடித்துக்கொண்டு போன சு சேர். மழை கொட்டு கொட்டு து குழியெது என்று எனக்குத்
பள்ளத்துக்குள்ளை பாட்டற ந்து உடம்பெல்லாம் ஊத்தைத் 1. இந்த நிலையில்தான் அன்று ந்தேன் சேர்.
டுக்கிக்கொண்டு இருப்பது சுய பட்டல்ல சேர். பொய்மைக்கு மெய்மையைக் குழிதோண்டிப் ன்பதுதான் என் ஆதங்கம்"
டும் தொடர்ந்து பேசுகின்றார்.
சர்? அன்று மழையுக்குள் நான் ஒரு சில நாட்கள் எனது டாமல் இருந்ததை. காய்ச்சல் ட்டதை அறிந்திருப்பியளா சேர்?
52

Page 76
அப்பிடி இருந்தும் மருந்து பாடசாலைக்கு ஒழுங்காக லீவுக்குள்ளும் நாடகம் பழக் வந்தன்தானே சேர்?
போன தைப்பொங்கலன்று. நான் நாடகம் பழக்கிக் கொண்டு பாட வீட்டாரை கோவிலுக்குக் கூட நல்ல நாள் பெருநாளில் மா வரச் செய்த பாவம் என்6ை பாடசாலைக்கு வாறதும் காலை போவதும் இரவு 7 மணி. பாடசாலைப் பரிசளிப்பு விழாவில் பரிசு தந்திட்டியள் சேர்’
"இளங்கோ நீங்கள் இவ்வ பேசியதால் நீங்கள் பேசி மு இருந்தன். உங்கள் பேச்ச (3ug60sILDIT?”
"நான் ஆவேசமாகப் பேசவி வேகம். சரியாக இலக்கிய 6 சத்திய வேட்கை சேர்.”
"இளங்கோ உங்களுக்கு நாடகமும் வரும். ஆனால், நடைமுறை தெரியாது. பாடச ஒன்று இருக்கு. பாடசாலைகளி

எடுத்தும் எடுக்காததுமாக வந்தன். நான் பாடசாலை குவதற்காகப் பாடசாலைக்கு
வீட்டில் இல்லை. மாணவருக்கு சாலையில் இருந்தன் என்ரை வட்டிக்கொண்டு போகவில்லை. ணவர்களைப் பாடசாலைக்கு னத்தான் சேரும் சார். நான் ) 7 மணி; வீட்டுக்குத் திரும்பிப் ஒரு கடும் உழைப்பாளிக்கு ) பப்ளிக்காக பெறுமதி வாய்ந்த
ளவு நேரமாக ஆவேசமாக டியட்டும் என அமைதியாக முடிந்ததா, இனி நான்
ல்லை சேர். அது சத்திய வார்த்தைகளில் சொன்னால்,
தமிழ் நன்றாகத் தெரியும்.
பாடசாலை நிலைவரம் - ாலை பழக்கவழக்கம் என்று Iல் எழுதாத சட்ட திட்டங்கள்

Page 77
இவை. பாடசாலையைப் டெ மனிதரையும் பிரஸ்தாபிப்ப; மரபின்படி சீனியேர்ஸ் குறிப்பிடுவதும் இல்லை. எ அமைதிச் சூழலை கா கடமையாகும்.
உங்களுக்கு இன்னும் கால பாடசாலை ஆசிரியர் சேவை அதாவது அதிபர்மார் பாட தான் ஆக வேண்டும்.”
“மரபு என்ற பெயரில் கe அவமதிக்கக் கூடாது; உண் சேர். அறிவு, ஆற்றல், செய6 தட்டிக் கொடுக்க வேண்( ஒன்றைச் சொல்லுகிறன். அவசியம். இன்னும் விரும்பவில்லை சேர். இன்ன தீபாவளி. நான் உங்களுக்கு நற்சிந்தனை இதுதான் சேர் காலத்தில் வாழ வையுங்க
சத்தியவாதி இளங்கோ வின் முளைவிடுமா?.

ாறுத்தவரை எந்தவொரு தனி து இல்லை; இனி பாடசாலை இருக்க, ஜூனியேர்ஸைக் நநிலையிலும் பாடசாலையின் த்தல் எமது தலையாய
ம் இருக்கு. நீங்கள் இப்பதான் பயில் சேர்ந்த இளசு. நாங்கள் சாலை மரபுகளை மதித்துத்
லைஞர்களின் உணர்வுகளை மைகளை மறைக்கக் கூடாது ஸ்திறன் வளர கலைஞர்களைத் டும் சேர். நான் பச்சையாக கலைஞர்களுக்குப் பாராட்டு கதையை வளர்க்க நான் றைக்கு நல்ல நாள் பெருநாள். வழங்க நினைக்கும் தீபாவளி வாழும் கலைஞரை, வாழும் ள் என்பதே அது.”
தைத்த நற்சிந்தனை விதைகள்
S தினத்தந்தி 22-10-1995
54

Page 78
தி
ன்ேறு புதன்கிழமை. நேரம் பி வேலை முடிந்து அலுவலகங்க பம்பலப்பிட்டி பிள்ளையார் கோயில் விறுக்கென விரைந்து வந்த ‘ச போகும் அந்தப் பிரபல்ய ஒழுங் பத்து நிமிட நேரமாக படாதபாடு
மடை உடைத்த ஆற்றுப் பெருக் ஒன்றாக படை எடுக்கும் மோட்ட அவற்றை முந்தி ஓட முயற்சிக்கு வெட்டி ஒடும் மோட்டார் சைக்கிள் பெரு வெள்ள நெரிசல்களுக்கு இை மறு பக்கத்திற்குத் துணிந்து செ
வீதியில் வாகனங்களும் பலவன் அவற்றின் அழகே தனியழகு. இந் இரசிகனும் மெய்மறந்து மகிழ்வ

ருவிளையாடல்
ற்பகல் ஐந்து மணி. பகல் நேர ள் மூடிய வேளை. காலி வீதி லடியில் பஸ்ஸால் இறங்கி விறுக்கு 5ணா’ நிலப் பக்கமாகப் பிரிந்து பகையுள் இறங்கி நடக்க கடந்த பட்டுக்கொண்டு இருக்கின்றார்.
குப் போன்று அங்கே ஒன்றன் பின் ார் கார்கள். அதனிடை நுழைந்து ம் ஓட்டோக்கள். இவ்விரண்டையும் கள். இப்படி மோட்டார் வாகனப் டயில் வீதியின் ஒரு பக்கத்திலிருந்து ல்ல முயற்சிக்கும் ஜனக்கூட்டம்.
க; பல வர்ணம்; பல வடிவம். த அழகினைக் காணும் எந்த ஒரு

Page 79
இப்படி, இன்னும் எத்தனையோ அப்பப்பா!.
ஆனால், பாவம் கணா! எந்த மனநிலையில் இல்லை. அவர் கொண்டிருக்கும் அவரின் குடு உணர்வுகளை மரக்கச் செய்து
இந்த நேரம் கணாவைக் கடந்து மனநிலையினை மேலும் குழப்பு ஒன்றுள் நிறைவான குடும்பம் ஒன் வடிவழகனான இளைஞன். அவனி அவள் அவனின் மனைவி. பின்னா அந்த அப்பாவின் மடியில் ஒரு
கணாவிற்கும் அன்பு மனைவி : கணாவிற்கு ஒரு அழகிய மகள் ப புற அழகும், அக அழகும்
பட்டதாரிகள். இருவர் அரச ஆசி நிறுவன பிரபல்ய ரியூசன் ஆசிரி
ஆனால், கணாவின் மூன்று மக் ஆகவில்லையே! மூத்தவளு அடுத்தவளுக்கு வயது முப்பது. 8
வயது வந்த மக்களை கரைசேர்ப் கொண்டிருக்கும் கேள்வி இது. சந்திக்காதவர்கள் இல்லை. கல்

அழகிய கண்கவர் காட்சிகள்!
அழகையும் இரசித்து மகிழும் Iன் மனத்தை சதா குடைந்து ம்பப் பிரச்சினை அவரின் மன விட்டன!.
சென்ற கார் ஒன்று கணாவின் பிவிட்டது. நவநாகரிகமான கார் று. காரைச் செலுத்திச் செல்பவன் ன் பக்க ஆசனத்தில் ஒரு கட்டழகி. சனத்தில் வயதான அப்பா அம்மா. பாலகன்; அவன் அவரின் பேரன்.
உண்டு. அவள் யாழ்ப்பாணத்தில். ]ட்டுமல்ல மூவர் உண்டு. அவர்கள் அறிவும் மிக்கவர்கள். மூவரும் ரியர்கள்; ஒருவர் தனியார் கல்வி
UT.
களுக்கும் இன்னமும் திருமணம் க்கு வயது முப்பத் திரண்டு. டைக்குட்டிக்கு வயது இருபத்தேழு.
து எப்படி?. - கணாவைக் குடைந்து பெண்களுக்கு வரன் தேட அவர் ாணத்தை எப்படியாவது பொருத்த
s

Page 80
திருவிளையாடல்
எத்தனையோ கல்யாணத் தரகர்ப அலுவலகங்களுக்கும் போயுமுள்ள நேர்த்தி வைக்காத கோவில்களு கல்யாணம் கைகூடுதில்லையே!
அனைத்துக்கும் பெருந்தடை, முழுமையாகக் கொடுக்கும் வ என்றாலும் கரை சேர்ப்பதானால், - குறைந்தது பத்து இலட்சம் பண பெருந்தொகைக்கு எங்கே போவ
இந்த மனச் சுமைகளோடு கணாவ மகிழ முடியுமா? அவர் இப்பே கண்ணிறைந்த காட்சி ஒன்று கன விடை காண முடியாத வினாக்கள் திக்குத் திசை தெரியாத வழிப்ப
கணா திக்குமுக்காடுகிறார். ெ என்றபடியால், மனத்தாக்கத்தை வேளைகளில் இரத்தக் கண்ணீர்
மக்களின் எதிர்கால நலனுக்காக தாம்பத்திய இன்பத்தை காலத்து துறவி அவர். தாம்பத்திய உணர் அற்றுப் போவது ஒன்று. மனஅடக் ஒடுக்கி, வென்று, அவற்றைச் செய பாவம்! கணா இரண்டாம் வழியில் - அவற்றை வாட்டி - வதைத் வெற்றிவாகை பூண்டவர்!

ாரை நாடி உள்ளார்; பொருத்துநர் ார்; கடவுளின் அநுக்கிரகம் வேண்டி நம் இல்லை; என்ன செய்தும்,
கேட்கும் சீதனத்தை கணாவால் ல்லமையின்மையே! மூத்தவளை சொந்த வீடுவாசல் - நகை நட்டு த்தொகை வேண்டுமே!. இவ்வளவு து?. எப்படிப் பெறுவது?.
ால் அழகிய காட்சிகளை இரசித்து பாது தரிசித்த காட்சி போன்ற னாவின் வாழ்நாளில் நிசமாகுமா?. ா! தீர்வு தெரியாத பிரச்சினைகள்! யணம்
பொறுப்புணர்ச்சி மிக்க தந்தை த் தாங்கமுடியாது கணா சில
வடிக்கின்றார்.
க் கணா படாதபாடு பட்டுள்ளார். |க்கு முன்பே துறந்த உண்மைத் வு முதுமை காரணமாக இயல்பாக கம் வழியாக புலன்களை அடக்கி, லிழக்கச் செய்வது இன்னொன்று. - புலன்களுக்குத் தீனி போடாது து ஒரு அகப் போராட்டத்தில்

Page 81
இப்பொழுது நேரம் ஐந்து இ வரிசைக்கு இடைப்பட்ட ஈவு
நனவோட்டத்திற்கு வேட்டு ை பக்கமாக ஓடிக் கடக்க உதவி
குறிப்பிட்ட வீடொன்றை நோக் கொண்டிருக்கின்றார்.
தேவையே இல்லை. இருந்தும் மாறி விட்டதே என்ற ஒரே ஒரு வீட்டு அமைப்பை அடிக்கடி மினுக்கென மினுக்கும் நவநாக இரு மருங்கும் உயரிய அழகிய அழகுபடுத்தப்பட்ட ஆரணங்கு
தலையில் சூடி, கவர்ச்சிகரமாக போல சர்வதேச தொலைக்காட் அந்த அழகிய ஒற்றை மாடி வீட்
வீட்டு கேற் தூணில் பொரு மென்மையாக அமுக்குகின்றா மரியாதையாக வரவேற்கப்ட அறையினுள் அதிசொகுசு ஆக
கணாவிற்கு நன்கு அறிமுகமா சிற்றுாண்டியும், நறுமணம் ஊட்ட வீட்டுக்காரர் ‘கணா” என்றும், ! விளித்துப் பேசுகின்றனர்.
கணாவின் சரியான பெயர் கண அது. அவரின் முழுப்பெயர்

பது. அதிர்ஷ்டவசமாக கார் நீள்
ஒன்று கணாவின் பின்நோக்கிய பத்து, காலி வீதியைக் குறுக்குப் பது.
கி ஓட்டமும் நடையுமாக விரைந்து
, தேசக் கட்டிட நிர்மாண பாணி 5ாரணத்திற்காகக் காசைக் கரைத்து மாற்றி, வீட்டு முகத்தை மினுக்கு ரிக ஒழுங்கை அது. ஒழுங்கையின் கட்டிடங்கள். வெண்ணிறத் துகிலால் பொருத்தமான வெண்தாமரையைத் * தலைநிமிர்ந்து முடுக்காக நிற்பது சிச் சாதனம் முகட்டில் பூட்டப்பட்ட -டு கேற்றுக்கு கணா வந்தடைந்தார்.
நதப்பட்டிருந்த கோலிங் பெல்லை கதவு திறக்கப்படுகிறது. கணா
ட்டு குளிரூட்டப்பட்ட வரவேற்பு
னமொன்றில் அமர்த்தப்படுகின்றார்.
ன வீடு அது. அவருக்கு இன்சுவை ப்பட்ட தேநீரும் வழங்கப்படுகின்றன. கணா அங்கிள்' என்றும் ஆசையாக
T அல்ல; அவரின் செல்லப் பெயரே ணபதிப்பிள்ளை. கணபதிப்பிள்ளை

Page 82
மேல் நண்பர்களுக்கு ஏற்பட்ட பு சுருக்கிச் செல்லமாக ‘கணா’ எ
'கணா’, ‘கணா' என்றே அவர் நண்பர்களால் பிரியத்துடன் அை அலுவலகர். அவர் தொழில் புரில் கடந்த பதினைந்து ஆண்டுகளா இடமின்றி மிக நடப்பாக தொ பரீட்சைகள் சிலவற்றில் சித்தி எ கடமையாற்றுகின்றார்.
கணாவுக்கான மதிப்பு, மரியாதைக் மண்டிக் கிடக்கும் பண்பொழுக்கம் பணிவு - அத்தோடு மது, மாது புறக்கணிப்பும் ஆகும். கணாவின் என்றும் வெளுத்த மடிப்புக் குை இறுகக் கட்டிய அழகிய கறுப்பு தடவி வாரி இழுத்து பளிச்சிடும் புதியது போல் பளபளக்கும் சப்ட அழகிய புறத்தோற்றத்திற்கு மெ(
இப்போது விருந்தாளியைச் சுற்றி ( தலைவி புஷ்பம் யோகநாதன், மூத் ஆகியோர். குடும்பத் தலைவன்
வெளியே சென்றுள்ளதாகவும் இ: சேர்ந்து விடுவார் எனவும் சொல்ல பொழுதுபோக்கு உரையாடல் சு:
"கணா அங்கிள் நீங்கள் ஒ

அபாரப் பற்று, அவரின் பெயரைச் ன அழைக்கச் செய்துள்ளது.
தொழில் புரியும் கந்தோரிலும் pக்கப்படுகின்றார். கணா அரசாங்க வது பரீட்சைத் திணைக்களத்தில். க இடமாற்றம் என்ற பெயருக்கே ழிலாற்றும் அவர், திணைக்களப் ய்தி இன்று உயர் அதிகாரியாகக்
க்கான முக்கிய காரணம் அவரிடம் - கனிந்த சொற்கள் - மென்பேச்சு - போன்ற தீயபழக்க வழக்கப் புறத்தோற்றம் கவர்ச்சிகரமானது. லயாத ரவுசர், சேர்ட் - அரையில் நிற தோற்பட்டி - ஹெயார் டை கேசம் - பொலிஷ் பூசி புத்தம் ாத்துச் சோடி - இவை கணாவின் ருகு ஏற்றுகின்றவை.
வீட்டின் முக்கியஸ்தர்கள். குடும்பத் தமகன் சிவநாதன், மகள் சிவாஜினி யோகநாதன் அவசர அலுவலாக ன்னும் சொற்ப வேளையில் வந்து ]ப்பட்டது. அவர் வரும் வரைக்கும் வாரஸ்யமாக நடைபெறுகிறது.
ரு வித்தியாசமான மனிதன்”
of

Page 83
“ஏன் சிவாஜினி?
"அங்கிள் சொல்லுவார் செய்வார்.”
"கொம்பிளிமன்ற்ஸ்க்கு ந செய்திட்டன்?
“இன்டைக்கு எத்தனை ம பண்ணினிர்கள்?. ஐந்து சொன்னது சொன்னபடி (
“சிவாஜினி, நீங்கள் கெட் எப்பிடி படிப்புப் போகுது.
“எல்லாம் ரியூசன் தான் அ ரியூசன் எடுக்கிறன் அங்
“Q6ör6OT(yptib A/L 6 (g இருக்காயினம்.”
“இல்லை அங்கிள். றிசலி மாணவர்களை A/L வ நான் மேலும் பிரஷ் சயன்ஸ், கணிதம் போ ரியூசனுக்கு போய்வாறன்
“வெரிகுட் சிவாஜினி கீப்
“ஏதோ படிக்கிறன் பு பாடங்களுக்கும் ரியூசன்

; சொன்னால், சொன்னபடி
ன்றி சிவாஜினி. அப்படி என்ன
னிக்கு வருவதென ரெலிபோன் மணிக்கு என்றியள். அங்கிள் செய்து போட்டியள்.”
டிக்காரி!. இன்னொரு விடயம். ၇ား
அங்கிள். எல்லாப் பாடத்திற்கும் நிள்.”
ப்பு ஸ்கூலில் தொடங்கி
bற்றைப் பாராமல் கெட்டிக்கார குப்புக்களில் விட்டிருக்கினம். அப் பண்ணும் எண்ணத்தால் ன்ற பாடங்களுக்கு இன்னும்
இட் அப். எப்படித் தம்பி சிவா?
அங்கிள்” “நானும் எல்லாப்
எடுக்கிறன்”
== 60

Page 84
“எந்த ரியூட்டறி?
"நான் பிறைவேற் ரியூட்ட வீட்டிலும் பிறைவேற் ரியூ ரியூசன் கொஞ்சம் செலவ ஆனால், ரியூட்டேர்ஸ் சு எடுப்பினம்; நாங்களும் தெளி
“எனக்கொரு நல்ல நம்பிக்
"அப்படி என்ன அங்கிள்?
“பின்னடியில் எனக்கு நே இல்லை.”
“ஏன் அங்கிள்?"
“யோகநாதன் வீட்டில் இரண் எனக்குப் பிரச்சனை என ட்ரீட்மென்ற் செய்வினம்.”
கணாவின் ரசனை தளம்பும் பேச்சு இந்நேரம் யோகநாதன் புன்சிரிப்பு
“கணா ஹாவ் ஐ ஹெப்ற்
"நோ. நொட் அற் ஆல் ே

றிகளுக்கும் போய்வாறன், ஈன் எடுக்கிறன். பிறைவேற் | அதிகம் தான் அங்கிள். டிய இன்டியுவல் கெயார் lவாகக் கேட்டுப் படிக்கலாம்.”
கை சிவாஜினி.”
ாய்நொடி வந்தால் பயமே
ாடு டொக்ரேர்ஸ் இருப்பினம். றால், பீஸ் வாங்காமல்
அனைவரையும் மகிழச் செய்கிறது. டன் வீட்டினுள் நுழைகின்றார்.
யூ வெயிற்றிங்?"

Page 85
“கணா கான் யூ கம் அட்
“ஓ.கே. ஐ ஆம் கம்மிங்
கணாவும் யோகாவும் மேல் மாடி அலுவலக அறையினுள் பிரவே புத்தகங்களால் அழகுபடுத்தப்ட
“சொன்னபடி செய்து ே எப்படி தாங் பண்ணுவது 6 ஒரே தடவையில் நல்6 பண்ணினாள்; யோகாவி என்ற நற்பெயர் என்றதுக் சஜெஸ்ட் பண்ணிய போ எல்லாம் வெற்றி கணா!. என்ன? இன்னும் சொல்ல
“வெரி அன்போர்ச்சினற் போச்சு.”
“சொல்லுங்கோ அப்படிெ
“ஒரு ஹை ஒப்பீஸரைu வேண்டி வந்துவிட்டது!”
"அப்படியெண்டா?”
"நாங்கள் மூன்று பேர் 1
"அப்ப சொல்லுங்கோ?.

ரியேர்ஸ் போர் எ மொமன்ற்?
9
யில் உள்ள யோகாவின் பிரத்தியேக சிக்கின்றனர். பல்வேறு வகையான ட்ட அதிவசதியான அறை அது.
பாட்டியள் கணா, உங்களை ான்று தெரியவில்லை. சிவாஜினி ஸ் றிசல்ற்றோடு O/L பாஸ் ன் மகள் வலு கெட்டிக்காரி குத்தான் நீங்களாக முன்வந்து து சந்தோஷமாக ஓம் என்றன். அதுசரி உங்கடை பீஸ் (Fees) \லவில்லையே!”
சேர். சின்னச் சிரமம் ஏற்பட்டுப்
யன்ன?”
பும் விலை கொடுத்து வாங்க
இன்வோல்வ்ட்”
I
92

Page 86
“ஒரு ருவன்ரிபை தவுசன்ட்
“இருபத்தைந்தாயிரம் தாே
“இப்படியான நல்ல வேலை
“தங் யூ வெறி மச்”
இருபத்தையாயிரம் ரூபா கைமா, பிரகாசிக்கிறது.
கணா அனைவருக்கும் நன்றி தெரி பெற்றுக்கொண்டு வெற்றிப் பூரிப்ே
கணா அடுத்த முதல் முக்கிய வே விநாயகர் ஆலயத்திற்கு வந்து சே மிக விசுவாசமாகத் தொழுகிறா அழுகின்றார்.
நீண்ட நேரம் மெய் மறந்து தொழு பாவமன்னிப்பு கோருகின்றது.
“பிள்ளையாரே! நானும் ! நீர் ஞானப்பழத்தைப் பெற தருவிளையாடல ஆய திருவிளையாடல் ஒன்று குமர்ப்பிள்ளைகள் சுவாமி.
- 6.
تحصة

ஒன்லி”
ன தாறன், தாறன்!”
5கு சந்தோஷமாகத் தாறன்.”
றுகிறது. கணாவின் முகம்
வித்து அனைவரிடமிருந்தும் விடை பாடு வீறு நடை போடுகின்றார்.
லையாக பம்பலப்பிட்டி மாணிக்க ருகின்றார். விநாயகப் பெருமானை ர், நெக்கி நெக்கி நெஞ்சுருகி
ம் கணாவின் உள் மனம் கசிந்து
உம்மைப் போலை தான். குறுக்குவழியைப் பாவித்து டியது போல் நானும் ஆடினன். எனக்கு மூன்று
அதுகள் கரை சேரட்டும்

Page 87
வேல் அமுதன்.இ
என்பதற்காக எனது இத்திருவிளையாடலை அ
நிச்சயம் சித்தி எய்தக் கண்டு திறமைச் சித்தி பொய் சொல்லி வாக்களி கிடைத்தமையைக் காரி அறிந்து, அது என்ரை த எனக் கற்பனைக் கதை காசைப் பெற்றன்.
சுவாமி இம்முறையும் வ நேர்த்தி வைத்தன். நீரும் ! செய்தீர். இந்த கணா செய்பவன். இதோ உம் தருகிறன்.
என் திருவிளையாடல் ஒரு இன்னும் கட்டாயம் வருே புரிய வேணும் சுவாமி.”
கணா இரண்டு பெரிய பச்சை நே இருந்து இழுத்து எடுத்து கே கண்கள் பனித்து ஒரு சில க உண்டியல் பெட்டியை ஈரமாக்கு

புத் தரியைப் பாவித் து ஆடியிருக்கிறன்.
கூடிய பிள்ளையை இனம் நான் பெற்றுத் தாறன் என்று lத்த பெறுபேறு இயல்பாகவே ரியாலயத்தில் முற்கூட்டியே தலையீட்டால் நடந்த காரியம் தயைக் கட்டவிழ்த்து விட்டு,
ழக்கம் போல் நான் உமக்கு உம் வேலையை நேர்த்தியாகச்
சொன்னதைச் சொன்னபடி முடைய பங்குப் பணத்தைத்
ந பெரிய தொடர்கதை சுவாமி. வன். மீண்டும் எனக்கு அருள்
ாட்டுக்களை சேர்ட் பொக்கற்றுக்குள் ாவில் உண்டியலுள் திணிக்கிறார். ண்ணிர் துளிகள் வடிந்து விழுந்து நகின்றன.
கு வீரகேசரி 17-12-1995
64

Page 88
விழ்க்கைச் சாகரத்தில் வெற்றி கரை சேரும் சிவப்பிரகாசம் வர்த் பயணம் எம்மாத்திரம்?.
மூத்த மகள் கெளரியைச் சுவிசல மகளோடு கிளாலி ஊடாக இப்ே இருக்கின்றார்.
மாலை நேரம். மங்கல் பொழுது.
ஆரணங்கு வானம் வழமைக் அதிகப்படியாக மஞ்சள் பூசி - மு அணிகளில் அற்புதமாகக் காட்சி த பட்ட தங்கம் போல் ஒளிருகிறது.
9

ஒர்மம்
கரமாக எதிர் நீச்சல் அடித்துக் தகருக்குக் கிளாலிக் கடல் ஏரிப்
ாந்திற்கு வழி அனுப்ப தன் ஆசை பாது பயணம் செய்து கொண்டு
கு மாறுதலாக இன்று சற்று கம் மினுக்கி - அலங்கார ஆடை ருகிறாள். அவள் முகம் கதிரொளி
s

Page 89
இத்துணை நேரம் அவளுடன் இ ஆதவன் அவளிடம் விடை பெ தூரம் சென்று மறைந்து விடுகிற
வான் முகம் வாடுகிறது. முகத் போக மெல்ல மெல்ல அவளின்
நிலையாமைத் தத்துவத்தை இவ்வெழிற் காட்சி மெல்ல மெல்
இப்போது எங்கும் இருள்.
வானம் கறுக்கிறது. மழையும் வ பேய்க்காற்றோடு பேய்மழையும் படுவதற்கு ஒன்றும் இல்லை!
“கெளரி பயப்படுகின்றாளா?. எ
“கெளரி சட்டப் பட்டப் படிட் என்னோடு கொழும்பிலும், வர்த்தக நிலையங்களில் நி போடப்பட்டவள். அவள் வ பழக்கப்பட்டு விட்டாள். - திருப்திப்படுகின்றார்.
கெளரியின் நினைவுகள் சிவப்பிர மேலும் தொடர்ந்து நிரம்புகின்
t

ருந்த அவளின் ஆருயிர்க் காதலன் ற்றுக்கொண்டு, கண்ணுக்கெட்டாத் 3|T661.
தில் படரும் இருள் நேரம் போகப் | அங்கம் எங்கும் பரவுகிறது.
எமக்கு உணர்த்துவது போன்று லக் கலைகிறது. இருள் படருகிறது.
ந்துவிடுமோ என அச்சம் தருகிறது. சேர்ந்து கொண்டாலும் ஆச்சரியப்
னச் சிவப்பிரகாசம் ஆராய்கின்றார்.
புப் படித்து முடித்த பிள்ளை.
யாழ்ப்பாணத்திலும் எமது ருவாகியாகப் பணிபுரிந்து புடம் ாழ்க்கையின் ஏற்றத்தாழ்விற்கு என்ற முடிவுக்கு வந்து அவர்
5ாசம் வர்த்தகரின் மனத்திரையினில்
360T.
66

Page 90
so e os முதன் முதல் மருமகன் ஈஸ்வ தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தை விமரிசையாக நடந்தேறிய கல்ய சிவப்பிரகாசத்தின் மனத்தில் அ( இந்த நினைவலைகளில் திளைத்து வர்த்தகர்.
நினைவலை ஒன்று.
வெள்ளிக்கிழமை. சைவத் தமிழ் நாள். மாலை வேளை, இணு6ை கோவில் உள்ளும் புறமும் நிர
ஜனத்தோடு ஜனமாக சிவப்பிரக மகள் கெளரி, சுவிஸ் தமிழ்ப் பிரன் சண்முகம், பிரபல கல்யாணத் த
இவர்கள் பூசை காணவா வந்தவ
பூசையோடு பூசையாக பெண் பா
பெண் பார்த்துத் திருமணத்தை சடங்குப் பாரம்பரிய ஒழுங்கு மு அல்லவே!
முதன் முதலில் அமைதியைக் தரகர் கந்தையா. அவர் கெளரிக் குரலில் ஆசையாகக் கதை அள

ரனைச் சந்தித்தமை - சந்திப்பைத் }கள் - ஈஸ்வரனுக்கும் கெளரிக்கும் பாணம் முதலிய நினைவலைகள் டுக்கடுக்காக அலைமோதுகின்றன. து அக மகிழ்கின்றார் சிவப்பிரகாசம்
ப் பெருங்குடி மக்களுக்குப் புனித வயூர்ப் பரராசசேகரப் பிள்ளையார் ம்ப ஜனத்திரள்.
5ாசம் வர்த்தகர், அவரின் மூத்த ஜை ஈஸ்வரன், ஈஸ்வரனின் நண்பன் தரகர் கந்தையா முதலியோர்.
பர்கள்?
ார்க்கவும் வந்துள்ளார்கள்.
நிச்சயிப்பது தமிழ்க் கல்யாணச்
றையில் ஒரு புதினமான அலுவல்
குலைத்துக் கதை கொடுத்தவர் கும் கேட்கக்கூடிய அளவு உரத்த ாக்கிறார்.

Page 91
வேல் அமுதன்.இ
“பெடியனைப் பார்த்தீர்க பெடியளை இந்தக் காலத்
இச்சிபாரிசினால் மேலும் ஒரு ஈஸ்வரனைப் பார்த்து மதிப்பிடத்
ஈஸ்வரன் சந்தனக் கலர் - தங்க உடற்கட்டு - நல்ல உயரம், சிவ ஆசையாக இருக்கிறது!
கெளரி நிறம் குறைவு. ஆனால் அ தெளிந்த ஞானத்தாலும், தன்னம் கெளரி திறமைசாலி என்பதைச் வேண்டியதில்லை.
இவ்வகை ஒப்பீடுகளில் அமிழ்ந்து தரகரின் மேலும் ஒரு குறுக்கீடு
“இப்படி அடக்க ஒடுக்கம கான ஏலாது முதலாளி. பழக்க வழக்கங்கள், எ பெடியன்! பெடியனுக்குச் சுவிஸ் பாஷை நன்றாகத் ெ கேட்க ஆசையாக இருக்கு பலன்ஸ், கார் - இப்பிடி எல் இனி ஒன்றும் இல்லை.
என்ன முதலாளி, பெடியை தரகர் முதலாளியைக் கே
f

ளா முதலாளி?. இப்பிடிப் தில் காண ஏலாது.”
தடவை சிவப்பிரகாசம் வர்த்தகர்
தூண்டப்படுகின்றார்.
விக்கிரகம் மாதிரி! கட்டுமஸ்தான ப்பிரகாசத்திற்கே அவனைப் பார்க்க
வளின் முகத்தில் ஒருவித பிரகாசம். )பிக்கையாலும் ஏற்பட்ட ஒளி அது. சொல்லித் தான் தெரிந்து கொள்ள
விடும் சிவப்பிரகாசம் வர்த்தகரைத் திசை திருப்புகின்றது.
ான நல்ல பெடியனை இப்ப
பெடியன் குடிவெறி, கெட்ட துவும் இல்லை. சோக்கான சுவிஸ் பாஸ்போட் இருக்கு. தரியும். அவன் டொச் பேசினால் ம். சுவிசில் வீடு, நல்ல பாங் லாம் இருக்கு. யோசிப்பதற்கு
னப் பிடிச்சுதா?." - மீண்டும் ள்வியால் துளைக்கின்றார்.
68

Page 92
சிவப்பிரகாசத்தின் மெளனம் இன்னு அவருக்கு தான் வீட்டுக்குப்
வைத்திருக்கின்றேனே என்ற களி காலநிலையும் இக்கட்டாக இருக்கி
"ஊரோடு உத்தியோகம் பா அவங்கள் குடும்ப செல6 அவன்களுக்குச் சீதனம் கெ எனக்கு இருக்கா..? எல்லாத் நாட்டில் பெடியன்களுக்குப் டே - இந்த வகையில் ஆழ்ந்து ே வர்த்தகரைத் தரகரின் இன் குழப்புகின்றது.
“முதலாளி, உங்களுக்குப் ெ - தரகர் மீண்டும் வினாவுகின்றார்.
“கெளரிக்குப் பிடித்தால், என
“கெளரி! என்ன அம்மா நீங்
சில நிமிட நேரம் தமது குமருகளைக் கரை சேர்க்கும் தனது படிப்பின் பலனை அடிப்படையில் செயற்பட்டால் சகோதரிகளின் நல்வாழ்விற்கு எனச் சிந்தித்த கெளரி சொ
"அப்பாவுக்குப் பிடித்து, அ என்னைப் பிடித்தால், நான் ம

றும் கலையவில்லை. இந்த நேரம்
பாரமாக ஐந்து குமருகளை பலை ஏற்படுகின்றது. இன்றைய ன்றதே எனவும் கவலைப்படுகிறார்.
fக்கும் பெடியள் இருக்கா?. புக்கு உழைப்பாங்களா?. ாடுத்து எடுக்கும் வல்லமை துக்கும் மேலாக எங்கடை
ாதிய பாதுகாப்பு இருக்கா..? யாசித்துக் கொண்டு இருந்த னொரு கேள்வி திரும்பவும்
பெடியனைப் பிடித்திருக்கா?.
க்கு ஆட்சேபனை இல்லை!"
க சொல்லுறியள்?.”
குடும்ப நிலவரம் ஐந்து
நிலையில் உள்ளது; தான் முதன்மைப்படுத்தி சுயநல b, அடுத்து இருக்கும் நாலு
இடைஞ்சலாகி விடுவேனோ ல்லுகின்றாள்:
தே வேளை அவருக்கும் றுக்கிறதிற்கு ஒண்டுமில்லை”
لـ

Page 93
“முதலாளி, அப்ப நல்ல ச அப்படித்தானே!”
“கந்தையா! நீ வலு கெட்டி
அடுத்த அலுவல்களை மே - என பச்சை விளக்குக் காட்டப்பட் முகம் பிரகாசிக்கின்றது.
D
நினைவலை இரண்டு - - - - -
தரகர் கந்தையா வலு கிரமமாக நாள்களில் நாட்செலவுக்கு. மு இருநூறோ, இருநூற்று ஐம்பதோ
இந்நாட்களுள் ஒருநாள்.
கெளரியினதும் ஈஸ்வரனதும் சோதிடர்களிடம் காட்டிப் பலன் பிரவாகத்தோடு தரகர் கந்தைய
“எங்கடை கொக்குவில் சோ காட்டினனான். உத்தம ெ
“முதலாளி சாட் மட்டும
பாருங்கோ. வலு பொருத்தம்
திகதி. கூட்டெண் ஒண்டு. ெ பொருத்தம் வலு ஜோர்”

ம்மதம் எண்டு சொல்லுறியள், !
காரன் தானப்பா!. சரி, இனி ற்கொண்டு கவனிப்பம்.” -டு விட்டதால், தரகர் கந்தையாவின்
வந்து போகின்றார். வந்துபோகும் ழதலாளி' என்று வலியக் கேட்டு காசு வாங்கிக் கொள்ளுகின்றார்.
சாதகங்களை மேலும் சில கேட்டறிந்த வர்த்தகர், மகிழ்ச்சிப் ாவுடன் இப்படி உரையாடுகின்றார்.
திடரிட்டையும் சாதகங்களைக் பாருத்தமாம்”
ல்ல, பிறந்த எண்ணையும்
1. ஈஸ்வரன் பிறந்தது பத்தாம் களரி பிறந்தது நாலாம் திகதி.
70

Page 94
"ஒண்டுக்கு நாலு சோக் பொருத்தமும் இருக்கு!. ஈஸ்வரன்! மகளின்ரை பேர் எ என்ன?. பார்வதி! அதாவது விட வேற ஆர் பொருத்தம்?
நிறப் பொருத்தமும் இருக்கு - சிவப்பிரகாசம் தனக்குள் ே
வர்த்தகர் மீண்டும் சொல்லு
“சீதனத்தைப் பேசி முடித்தால் கந்தையா. சொல்லும். சீத
“முதலாளி, நீங்களே ெ மகள்தானே! மகளுக்கு எ6 சுவிஸ் பிரஜை அவனுக்கு எல்லாம் இருக்கு” - என நிை தொடருகின்றார். "நீங்க இr தோட்டம் எதுவும் குடுக்கத்
எல்லாவற்றையும் ரொக்கமா
“அவை என்ன கேட்கினம்”
“அவை நீங்கள் கொடுக்க என்னைக் கேட்டறியச் சொ6
“எதையும் வெட்டு ஒண்டு து பேசினால் பிரச்சினை இல்லை தர யோசித்து இருக்கிறன்.”
石ーエ 7.

கான பொருத்தம். பேர் பெடியன்ரை பேர் என்ன?. ன்ன? கெளரி கெளரி எண்டா
ஈஸ்வரனுக்கு பார்வதியை
- செம்மையும், கருமையும்’ யோசித்து திருப்திப்படுகிறார்.
கிறார்.
), கலியாணம் முடிந்த மாதிரி னம் என்ன கேட்கினம்?”
சால்லுங்கோ. உங்கடை ன்ன குடுப்பியள்? பெடியன் சுவிசில் வீடு, கார் எண்டு ]னவுபடுத்திய தரகர் மீண்டும் ங்க கெளரிக்கு வீடு, வளவு, தேவை இல்லையாம். தாற கத் தந்தால் சரியாம்'
இருப்பதை உங்களிட்டை ன்னவை'
ண்டு இரண்டாக நறுக்காகப் 0. நான் எல்லாமாகப் பத்துத்

Page 95
“காணாது முதலாளி. பெ கூடக் கேட்டவை. அவை
நீங்க பன்னிரண்டுக்கு ஒ சந்தோஷமாகப் பிக்ஸ்ட் ட
“சரி! நீயும் சொல்லிப்போட்
கதை ஒண்டும் இருக்கப்படா அவைக்குப் பன்னிரண்டு உனக்கு முப்பத்தி ஆறாu சரி தானே!"
தரகர் கந்தையா சம்மதத்தின் அ
D
நினைவலை மூன்று.
ஈஸ்வரன் - கெளரி திருமணம் ப முடிந்தது. ஈஸ்வரன் சுவிற்சலா காலமும் ஓடி மறைந்து விட்டது இன்று காலை கெளரியின் பெயரு சிவப்பிரகாசம் வர்த்தகருக்கும் ஒ
"அப்பா உங்களுக்கும் இருக்கிறார்” . கெளரி கல் சொல்லுகின்றாள்.
“என்ன பிள்ளை, மருமகன்
{ t

டியனுக்கு வேற ஒரு பகுதி பதினைந்து எதிர்பார்க்கினம்.
ம்படுங்கோ. நான் எல்லாம்
பண்ணித் தாறன்.”
டாய் கந்தையா. இனி வேறை து. கலியாண எழுத்தில் அண்டு லட்சம் குடுக்கிறன். தரகுக்கு பிரம் ரூபா தாறேன். எல்லாம்
றிகுறியாகத் தலை அசைக்கின்றார்.
D D
கெ விமரிசையாக இனிது நடந்தேறி ந்துக்குப் போய்ச் சேர்ந்து ஒருவார அடிக்கடி கடிதம் வந்து போகிறது. நக்கு ஒரு அஞ்சல் வந்தது. அதனுள் ஒரு இணைப்பு வைக்கப்பட்டிருந்தது.
அவர் ஒரு கடிதம் எழுதி னிரென்ற குரலில் ஆசையாகச்
என்ன எழுதி இருக்கிறார்?.
----

Page 96
கடிதத்தை வாசி.” கடிதம் ஆசையோடு வாசிக்கப்படுகி கொழும்பு முகவரி ஒன்றுக் ( அனுப்பப்பட்டுள்ளது என்றும், 2 மேற்கொண்டு கொழும்பு வந்து, கெ சேருவதற்கான ஒழுங்குகளைச் செt
"பிள்ளை அப்ப ஏன் சுணக்க புறப்படுகிறன். உடனே L ஒழுங்குகளைச் செய்யுங்கோ சரிவந்தால், தைப்பொங்கலை சந்தோஷமாகக் கொண்டாடுவ
“எல்லாம் திட்டமிட்டபடி நீ பிள்ளையாருக்கு ஒரு நேர் பிள்ளை” - என மீண்டும்
தெரிவித்தார்.
“சரி அப்பா! நேர்த்தியை விநாயகன் கைவிடவேமாட்ட
அதிதுரிதமாகப் பயண ஒழுங்குக!
------ இந்நேரம் சிவப்பிரகாச வர்த்தகரு அப்படகு ஒரு பேரலை மீது ஏறி ெ பயந்துவிடுகிறார்கள். வர்த்தகர் நிலைமைக்கு முகம்கொடுக்கத் த என்று விபத்து ஒன்றும் நடந்துவி

ன்றது. கடிதத்திற் குறிப்பிடப்பட்ட த ஸ் பொன் சர் பேப் பேர்ஸ் உடனடியாக பயண ஒழுங்கை ளரியைச் சுவிற்சலாந்திற்கு வந்து ப்யும்படி கேட்கப்பட்டும் இருந்தது.
ம்? இப்பவே பாஸ் எடுக்கப் புறப்படுவதற்கான பயண . கடவுளே எண்டு எல்லாம் ப் போன கையோடு சுவிசில் வியள் கெளரி.”
நிறைவேறப் பரராஜசேகரப் த்தியும் வைக்கப்போறன் சிவப்பிரகாசம் வர்த்தகர்
வையுங்கோ. பரராஜசேகர roof'
ள் மேற்கொள்ளப்படுகின்றன.
ம் கெளரியும் பிரயாணம் செய்யும் தாம் என விழுகிறது. பயணிகள்
சிவப்பிரகாசமோ கெளரியோ யாராகின்றனர்; ஆனால், கடவுளே
வில்லை!.

Page 97
இதுவரை நினைவலையில் மி படகு விழுந்ததால், நனவோட் உலகுக்கு தள்ளப்படுகின்றார்
O
ஜனவரி பதினைந்தாம் திகதி
தைப்பொங்கல் திருநாள்.
சிவப்பிரகாசம் வர்த்தகர் கெ சந்தோஷமான நற்செய்தி ஒன் சுவிஸ்போய்ச் சேர்ந்தாள் 6 சிவப்பிரகாசம் வர்த்தகருக்கு
சந்தோசம் பொங்கி வழிய அவ பஸ்ஸல்ஸ் ஒழுங்கை உறவின ஒழுங்குகளை உற்சாகமாகக்
வீட்டு முற்றம் சுத்தப்படுத்தப் அரிசிமாக் கோலம் போடப்பட்
பிள்ளையார் பிடித்து தை வைக்கப்பட்டுப் பொங்கல் நடைபெறுகின்றன.
இந்நேரம் காலை ஏழுமணி. கெளரியின் தொலைபேசி அ

தந்த சிவப்பிரகாசம், நீரலையில் ஏறி டம் படக்கென துண்டிக்கப்பட்டு, நிச
D D
திங்கட்கிழமை.
ாழும்பு வந்து மூன்றாம் நாள் இது,
று கிடைத்திருந்தது. கெளரி சுகமாகச்
ான்ற ரெலிபோன் செய்தியே அது. அளவு கடந்த ஆனந்தம். மனத்தில்
i தான் தங்கி இருக்கும் வெள்ளவத்தை
ரோடு ஒன்றிணைந்து பொங்கல் வைபவ
கவனிக்கின்றார்.
பட்டு சாணி மெழுகப்பட்டு, அழகாக டு இருக்கிறது.
லப்பு வாழை இலை மூலையில்
தொடக்க வேலைகள் வேகமாக
தொலைபேசி மணி நாதம் பேசுகிறது. ழைப்பே அது!
74 上

Page 98
தொலைபேசியைத் தூக்கிய சிவ பட்டார்! அதிர்ச்சிச் செய்திதா அவதானமாகச் செவிமடுத்தார்.
"அப்பா!. நாங்க கடைகெட் விட்டம். இந்த நடத்தை ெ பறிக்க நல்ல நாடகம் ஆடி
இந்த ஏமாத்துக்காரன் ஒ பத்தாக்குறைக்கு ஒரு ஆட் கலியாணம் முடிச்சு இருக்கி ஸ்டார் ஹோட்டலில் சனிட் என்னவென்றால் சுவிஸ்காரிக் இரண்டு பிள்ளைகளும் இரு
பரராஜசேகரப் பிள்ளையார் போட்ட பகல் வேஷதாரியை இவன் முஸ்பாத்தியான ஒரு
முருகப்பெருமானுக்குத் தன் கறுப்புமாக இரண்டுபெண்டாட் வேஷம் போட்டுக்கொண்டு
என்னை வள்ளியம்மை ே ஆகட்டாம். முழு மடையன்! இந்து சமய தத்துவத்தை
அதனை இழிவுபடுத்துகின் கழுதைக்குக் கற்பூரவாசம் (

ப்பிரகாசமே தூக்கிவாரிப் போடப் ன் அது. அவர் அதனை மிக
ட கயவனால் ஏமாற்றுப்பட்டு கட்டவன் எங்கடை காசைப்
இருக்கிறான்!
ரு பயங்கரக் குடிகாரன். டக்கார சுவிஸ்காரியையும் றான். இவனும் இவளும் ஒரு டறி லேபரர்ஸ். வேடிக்கை கு வேற புருஷன்மார்களால் க்கு.
கோவிலில் பக்தன் வேஷம் ப் பார்த்தியளா அப்பா?. கதையையும் செல்லுகிறான்.
ாக்குப்போல வெள்ளையும் டிகளாம். முருகப்பெருமானும் பெண் எடுக்க வந்தவராம். பாலை இரண்டாம் தாரம் எங்கடை பெருமை வாய்ந்த விளங்கிக் கொள்ளாததால் றான்! இந்தக் கோவேறு தெரியுமோ அப்பா!.

Page 99
இன்னொரு கதையும் வி ஒருவனோடு சேர்ந்து வா இரண்டு முறை விவா மாத்துகிற மாதிரி தன் அது வரைக்கும் என்ரை பொறுமையாகத் தன்னோ g6ö606uuub.
இதுமட்டுமில்லை. என்னை ஹவுஸ் மெய்ட் என்றும் வாழ்க் கையில் 6 பிரச்சினைகளுக்கு மு எங்களுக்கு இவன்ரை
போகும். தை பிறந்தா6 நான் படித்தது சட்டம். எனக்கு கைகொடுக்கிறது உயிரோடு இருக்க இன் முடிப்பது இலங்கைச் ச சட்டப்படியும் சட்ட விரே சட்டப்படி தண்டனைக்கு
நான் கேள்விப்பட்டிருக்க இரண்டு யாழ்ப்பாண
ஏமாற்றப்பட்டு கஷடட் பிரச்சனைக்கு எடுக்கப் இருக்கும் அந்த அபை கொண்டு வரும் என ந

டுகிறான். சுவிஸ்காரி கனகாலம் p மாட்டாளாம். அவள் முந்தியும் கரத்து எடுத்தவளாம். சேர்ட் னையும் மாத்திப் போடுவளாம். மனதைக் கல்லாக்கிக் கொண்டு டு இருக்கட்டாம். பிறகு பிரச்சனை
ா அந்த சுவிஸ்காரிக்கு சிறிலங்கா சொல்லி இருக்கிறான். அப்பா திதனையோ 6)j 60) 8E5 ULUT 60 கம்கொடுத்து அனுபவப்பட்ட றிக்ஸ்க்கு வழி தெரியாமலா ல் வழி பிறக்காமலா போகும்? என்ரை சட்டப் பட்டப் படிப்பு து. சட்டப்படி மணம் முடித்தவள் னொருத்தியை ஒருவன் மணம் ட்டப்படி போலை சுவிஸ் நாட்டு ாதம். இந்த சட்டத்தை மீறுவோர் ரியவர் ஆகிறார்.
ேெறன். என்னைப்போல இன்னும் தமிழ்ப் பெண்கள் சூரிச்சில் படுகிறார்களாம். நான் எனது போகும் நடவடிக்கை சூரிச்சில் லகளுக்கும் நல்ல முடிவினைக் DLA366t.
-76

Page 100
இப்ப அப்பா வெளிநாட்டி மாப்பிளைமார் ஊருக்கு இர இன்னும் கல்யாணம் முடிக்கா அப்பாவிப் பெண்களை ஏமாற் அவர்களிடம் இருந்து நிறை சேட்டை அதிகரிக்கிறது என்ப இந்தக் குரங்குச் சேட்டைக்குட வேணும் அப்பா. அதற்குத் ே நான் கண்டறியப் போகிறன். ( அறிமுகமான, பிரபல ட்ற மாமாவோடை உடன் தொடர் தனது அட்வகேற்றோடு கலந்த இறங்க உடனடியாகச் சூரி இருக்கக் கேட்டும்மிருந்தார். இ சொன்னமாதிரி அவர் வீட்டிற் உங்களோடு பேசுறன்.
இப்ப மாமா தீவிர நடவடிக்கை பகுதியில் உள்ள பொலிஸ் பொலிஸ் ஒ. ஐ. சீ யோடை
அப்பா அலுவல் அதிகப்படியா சார்பாகத்தான் வழங்கப்படும். பயப்படாதையுங்கோ. என்ை தெரியும்.
சரி அப்பா கனநேரம் கை கையோடு உங்களோட பே வணக்கம்.”
7

டில் கல்யாணம் முடித்த கசியமாக வந்து, தாங்கள் தவர் போல பாசாங்கு செய்து றிக் கல்யாணம் செய்வதும், யக் காசு புடுங்குவதுமான தும் உங்களுக்குத் தெரியும். b ஒரு முற்றுப்புள்ளி வைக்க தவையான வழிமுறைகளை இதற்காக எங்களுக்கு நல்ல ான்சிலேற்றர் நமசிவாயம் iபு கொண்டன். அவர் நான் ாலோசித்து நடவடிக்கையில் ச்சுக்கு வந்து தங்களோடு இப்ப நான் நமசிவாயம் மாமா கு வந்து அங்கிருந்துதான்
யில் இறங்கிவிட்டார். எங்கள் ) நிலையத்துக்குப் போய்
கதைத்தும் உள்ளார்.
க சரிவரும்; தீர்ப்பும் எனக்கு என்னை நினைத்து நீங்கள் னக் காப்பாற்ற எனக்குத்
தத்திட்டன். மாமா வந்த சச் சொல்லுறன். அப்பா!
لد

Page 101
“கெளரி, உன்னை எனக்கு கெட்டிக்காரி. உன்னை நி6 எங்களை எப்போதும் பர எதுக்கும் மாமா வந்ததும் எ காத்திருப்பன்! வைக்கிறன்.
ஈஸ்வரனின் நயவஞ்சகச் செt வர்த் தகருக்கு ஆத்திரம் ஆயிரத்துத் தொளாயிரத்து என புறத் தீய சக்திகள் எற்படுத்திய வர்த்தக நிலையத்தைத் தீண்டிச் வேகச் செய்தது. ஆனால், தன்னி அகதி இன்னொரு அகதியை வேல்கொண்டு தாக்கியது போன்று
இருந்தும், சில நிமிடங்களில் அ நடவடிக்கைகளே மேல் எனத் வர்த்தகர், கோபம் ஆறி, பெட்டி
அறிவுபூர்வமான நடவடிக்கைக்கு நல்லாலோசனையை வர்த்தகர் எதிர்பார்க்கின்றார்!

நல்லாகத் தெரியும். நீ வலு னைக்க எனக்குப் பயமில்லை. ராஜசேகரன் விடமாட்டான். ன்னோடு கதைக்கச்சொல்லு.
??
வணக்கம்
பலை நினைக்க சிவப்பிரகாசம் பொங்கிக் கொண்டு வந்தது. பத்து மூன்று கறுப்பு ஜூலையிற் தீ வர்த்தகர் சிவப்பிரகாசத்தின் சாம்பராக்கியமை மனத்தை மட்டும் ரினத்தவன் தன்னைப் போன்ற ஒரு
கருவறுத்தமை வெந்த புண்ணுள் அவரைக் கடுமையாக நெருடியது.
ஆத்திரத்தைவிட அறிவு பூர்வமான தெளிவு எய்திய சிவப்பிரகாசம்
ப் பாம்பாக அடங்கி விடுகின்றார்.
றான்சிலேட்டர் நமசிவாயத்தின் சிவப்பிரகாசம் மிக ஆவலோடு
S வீரகேசரி 14-01-1996
is

Page 102
இன்றைய தினம் நண்பகலுக்கு (
ஆரவாரம். ஆரவாரத்தின் இரகசி இருப்பீர்கள், இல்லையா?.
அப்படி ஒன்றும் பெரிய விசேடம் இன்று! அவ்வளவுதான்.
சம்பள ஆரவாரம் என்னைக் கிஞ் நித்திய சிந்தனை கலை உலை நாட்களில் கல்லூரியில் நான் ப பற்றித்தான். நாடகம் தடங்கலா கலைஞர் சிவக்கொழுந்தைக் கை என்பது எனது நம்பிக்கை.
எனவேதான், கல்லூரி விட்ட சிவக்கொழுந்தைக் காணும் அலுவ

கலை உள்ளம்
மேல் எங்கள் கல்லூரியில் பலத்த யத்தை அறிய நீங்கள் ஆவலாக
இல்லை. இம்மாத சம்பள நாள்
சித்தும் பாதிப்பது இல்லை. எனது கப் பற்றித்தான். குறிப்பாக இந்த பிற்றுவிக்கும் 'பிரளயம்’ நாடகம் கிவிடுமோ என அஞ்சுகின்றேன். ன்டால் இச்சிக்கலைத் தீர்க்கலாம்
தும் விடாததுமாகக் கலைஞர் லாகச் சைக்கிளில் விரைகின்றேன்.
of

Page 103
பிரதான வீதியால் அரசடிச் ச சந்தித்த வயதானவரிடம் க6ை போகும் பாதையை விசாரிக்கில்
“கலைஞர் சிவக்கொழுந்
“இடம் பெயர்ந்து வந்த வ
“ஓமோம்! நாடகக் கலை
“விளங்குது. அவற்றை கொஞ்சம் கஷ்டம் தம்பி
“பறவாயில்லை சொல்லு
குறிப்புக்களை வைத்துக் குறி பிடிப்பதில் நான் வலு கில்லாடி. விபரங்கள் பிரகாரம் நம்பிக்கை
ஒரு குச்சு ஒழுங்கை. அந்த ஒழு செல்கின்றேன்.
பனைவடலிக் கூடல்கள். அவ மேற்குப் பக்கமாகச் செல்கிறது. நிற சைக்கிள் குழிகளுள் தெ செல்கிறது.
வாழ்க்கையின் மிக அடிமட்டத் உள்ள குடிமனைப் பகுதிகளை வளைந்து, நெளிந்து நீண்ட து
4.

ந்திக்கு வந்துவிட்ட நான் வழியில் லஞர் சிவக்கொழுந்தின் வீட்டிற்குப் ன்றேன்.
து வீடு எங்கே ஐயா?”
யதான நாடக மாஸ்டர்தானே!”
ஞர் அவரேதான்”
வீட்டைக் கண்டு பிடிப்பது
|''
ங்கோ”
நிப்பிடப்பட்ட இடங்களைக் கண்டு அது எனக்கொரு கொடை. தரப்பட்ட யோடு பயணிக்கின்றேன்.
ங்கையில் இறங்கி மேற்கு நோக்கிச்
ற்றையும் தாண்டிப் பாதை மேலும் எனது புத்தம் புதிய ஏசியா கறுப்பு ாம்தரிகிணதொம் தாளம் போட்டுச்
தில் வாழும் மக்கள் நெருக்கமாக ஊடறுத்து மேலும் மேற்கு நோக்கி ாரம் குச்சொழுங்கை செல்கிறது.
P

Page 104
இடைக்கிடை தோட்டப்பகுதிகள்
குதித்து வரும் இளம் தென்றல தெரியவில்லை.
இதோ ஒரு பழைய பெரிய நாற்
நாற்சார் வீட்டைச் சுற்றி சுற்று ம சுண்ணாம்பைக் கண்டது, ஆக மேல் என்பது சொல்லித்தான் தெரி மதில் வெடிப்புக்களும், பொருக்குக்
'பிள்ளையார் கோயில் த சுறண்டாதே! கோயில் பெ
சனசமூக நிலையத் த நிலையம் உங்கடை பரப் தலைமுறையினருக்கும் இ
"பெல்மூடி வாத்தி, ஜாக் சேஷடை இன்னம் தொட உலை வைப்போம்! - சீர்
'சங்கக்கடை அலிபாபாவின அற்புதக் குகை ஆவ பொதுமக்களே! சிந்தியுங்க
ஆமாம் மேற்குறிப்பிட்டவை அம்ப அவை இச்சமுதாயம் சிந்திக்கத் ெ என எண்ணச் செய்கிறது.
F豪

பயிரிடை நர்த்தனமாடி துள்ளிக் ால் பயணக் களைப்பு எனக்குத்
சார் வீடு!
தில். இச்சுற்று மதில் கடைசியாக b கடைசி கால் நூற்றாண்டுக்கு ரிந்து கொள்ள வேண்டிய ஒன்றல்ல. களும் அதற்கு சான்று பகர்கின்றன.
தர்மகர்த்தாவே கோயிலைச் ாதுச் சொத்து!’
லைமைப்பீடமே! சனசமுக )பரைச் சொத்தல்ல! இளம் Lib6 (6.
கிரதை! மாணவிகளோடை டர்ந்தால், உன் உயிருக்கு திருத்தவாதிகள்."
தும் நாற்பது திருடர்களினதும்
தை அனுமதிக்கலாமா? 5ள்! விழித்தெழுங்கள்!"
)திலிற் காணப்பட்ட கிறுக்கல்கள்.
தொடங்கி விட்டது; விழித்துவிட்டது!

Page 105
எந்த நேரமும் ஒரு பூகம்பம் 6ெ அதிகார வர்க்கம் எல்லா மனிதை என நினைப்பது பகற் கனவே அறிஞன் ஒருவன் என்றோ சொ எனத் தோன்றுகின்றது.
அக்கிறுக்கல் - சுலோகங்களை ஒன்று. அதில் கலைஞர் சிவக்கெ மைகளால் பிரஸ்தாபிக்கப்பட்டுள்
‘வெகுவிரைவில் கலை 'பச்சோந்திகள்' - சமூக
இந்த விளம்பரத்தை பல மு மகிழ்கின்றேன். மானசீகமாக ப பிரார்த்திக்கின்றேன்.
வயோதிப கிராமவாசி தெரிவித்த பார்க்கின்றேன்.
பழைய நாற்சார் வீடு.
பொருக்கெடுத்த சுற்று
கிறுக்கல்கள்.
சுவரொட்டிகள்.
கலைஞர் சிவக்கொழுந்துவின் வீடு வர முடிகின்றது.
சிவக்கொழுந்து மாஸ்டர் வீட்டில் எப்படி அணுகுவது?. எனது கா அங்கலாய்க்கின்றது.
f

வடிக்கலாம் என நினைக்கின்றேன். ரயும், எல்லா நேரமும் ஏமாற்றலாம்
எனக் கருத்துப்பட சமூகவியல் ன்னது சரியாகத்தான் இருக்கிறது
அடுத்து பென்னம்பெரிய சுவரொட்டி ாழுந்துவின் பெயர் அழகாக வர்ண 1ளது.
ஞர் சிவக் கொழுந்துவின் நாடகம்’
றை இரசித்து வாசிக்கின்றேன்; ச்சோந்திகள் பெரு வெற்றியீட்டப்
த குறிப்புக்களை நினைவுபடுத்திப்
இதுவே என இலேசாக முடிவுக்கு
நிற்கிறாரா, நின்றால் பிரச்சனையை ரியம் கனியுமா?. - எனது மனம்
32

Page 106
வல்ல நடராசனே! பெரும்பொரு
எமது கல்லூரி மாணவி சாரதா
சிவனே!. 'பிரளயம்' நாடகம் ெ மனம் அம்பலத்தாடியை வேண்டு
இன்று சம்பள நாள். இந்நேரம் வேண்டும்?. என் மனைவி என் வ நிற்பாள். வீட்டை போனதும் பட்டோலை பெரும் போரைக் கிள
போன்ற நினைவலைகள் அலை
இத்தனையும் இப்படியே இருந்த இந்நேரம் சிவக்கொழுந்துவின் வீட் ஆமாம்! என்னைப் பொறுத்தவரை
O
செல்வம் சகடைக்கால் படித்திருக்கிறோம்? ஆ பொறுத்தவரை இப் பொன்
9Q6Üb60)6vo(8uu ! GöF6Üb6voLibLDI வளர்ந்தது வறுமையில்; இருப்பதும் கொடுர வறுை
கமக்காரக் குடும் பத்தி உழைப்பாளியான கமக்கா
கால் நூற்றாண்டு காலம்
f : ـــــ

ளே எனக்கு வழிகாட்டு!.
வின் மனத்தை மாற்றிவிடு!.
வற்றியீட்டக் கைகொடு - என என் கிறது.
நான் எம் வீட்டில் அல்லவா நிற்க ரவை ஆவலாக எதிர்பார்த்தல்லவா போகாததுமாக மாதச் செலவுப் புவது வழக்கம் அல்லவா? ஆசிரிய து என்பது மிகச் சிரமம் - என்பன மோதுகின்றன.
போதும், நாடக வெறி என்னை டிற்கே மீண்டும் கொண்டு வருகிறது. நாடகம் எனக்கொரு வெறியேதான்!
O
போல் வரும் என்றுதானே னால், செல்லம்மாவைப் மொழி வெறும் பொய் மொழி. .க்கால் என்றும் உருண்டது பிறந்தது வறுமையில்;
இன்று வாழ்ந்துகொண்டு Duhso
ல் பிறந்து ஒரு கடும் ான் ஒருவனைக் கரம்பிடித்து, காதல் வாழ்க்கை வாழ்ந்தும்

Page 107
ஏனோ தெரியாது செல்லம் கடைக்கண் பார்வை கிட்
பற்றாக்குறைக்கு இரண் மோசமான உள்நாட்டு ஆக்கியும் விட்டது!
அவளுக்கு நாலு மக்கள் மகன். அவனுக்கு வயது செல்வராசா. ஐந்து ஜீவ6 ஆதரிப்பாள்? ஒரு பெண் செய்விப்பாள்?.
செல்லம்மாவினதும், மூன் நட்டு கரைந்து விட்ட படிப்படியாக வீழ்ந்துவி நடவடிக்கையாக ஆசை
என்ற தோரணையில் ( அனுப்பி வைக்கிறாள். செ செல்லம் மாவின் பெu தோட்டத்தையும் அவளிட
செல்வராசா நேர்ந்தபடி ஜேர்மனி போய்ச் சேர்ந்தா6 பாராது கடுமையாக உரு
செல்வராசாவின் சிந்த குடும்பத்தைச் சகதியில் ‘வாழ்க்கைப்படாத அக் ஆகும்.

மா குடும்பத்திற்கு லஷ்மியின் டவில்லை.
டாண்டு காலத்திற்கு முன்பு யுத்தம் அவளை விதவை
ள். கடைக்குட்டி மட்டும்தான்
பதினாறு மாத்திரமே. பெயர் ன்களை ஒரு விதவை எப்படி எப்படி ஒரு தோட்டத்தைச்
ாறு பிள்ளைகளினதும் நகை து. தரித்திர எல்லைக்குள் L"L Gar6ð6olbLDT g5i85ffL i L மகன் செல்வராசாவை அகதி முகவர் மூலம் ஜேர்மனிக்கு Fல்வராசாவின் பயணச் செலவு பரில் இருந்த ஒரே ஒரு டமிருந்து பறித்து விட்டது.
எதுவித சோலியும் இன்றி ன். இராப்பகல் என வித்தியாசம் நக்குலைந்து உழைத்தான்.
னை 'கடும் உழைப்பால்,
இருந்து இழுத்தெடுப்பதும்', காமாரை வாழ வைப்பதும்’
-

Page 108
ஆனால், சகடைக்கால் நிலையில், அவன் ஜே மாதங்களில், “வாகன வி எமன் செல்வராசாவின் இன் இனி செல்லம்மாவின் & எதிர்காலம்?.
பிரளயத்தின் தாக்கம் ெ ஆக்கிவிட்டது!
செல்லம்மாவுக்கு இனிப் ப நொடி தெரியா; கஷ்ட நஷ்ட பந்த பாசம் இல்லை; கடமைகளில்லை; அவள் அலட்டியபடி
இனி அந்தக் குடும்பத்தின்
- இந்த விடை காணாக் கேள்வி நாடகக் கதை.
பிரளயம் நாடகத்தில் முக்கிய ப பாத்திரமாகவே மாறி தத்ரூபமாக ர சாரதா மாத்திரமே!
சாரதாவை விட்டால் நாடகம் ‘ச விதமாக எதிர்பார்க்காதது நடந்து ஒத்திகைக்கு வந்துபோன சார நாடகத்துக்கு வரமுடியாது’ எ பாடசாலைக்கு சரியாக வருவதுப்

டருளும் அறிகுறி தெரிந்த மணி போய் ஆறே ஆறு பத்து' என்ற பெயரில் வந்த னுயிருக்கு உலை வைத்தான். தி?. பெண்பிள்ளைகளின்
ல்லம்மாவை சித்தப்பிரமை
ஞ்சம் பிணி தெரியா; நோய் -ம் தெரியா; அவளுக்கு இனி பொறுப்புக்கள் இல்லை;
சதா சிரித்தபடி; நித்தம்
கதி?.
யோடு முடிவதுதான் பிரளயம்
ாத்திரம் செல்லம்மா. செல்லம்மா டிக்கக்கூடிய குணச்சித்திர நடிகை
’ என்று ஆகிவிடும். எதிர்பாராத
விட்டது! இதுவரை உற்சாகமாக
தா 'வீட்டுப்பிரச்சினை, இனி
ா அறிவித்துவிட்டாள்; சாரதா
இல்லை.

Page 109
இந்நாடகம் ‘தமிழ்த்தினப் போட்டி தினமும் அண்மித்து விட்டதால், ஆத்திரமும் அடைகின்றார். ஆகவேண்டும்; பொறுப்பேற்றவள் அடைகின்றார். எனக்குக் கலை தெரியும். நான் கலைஞரின் மா ஊரில் அவர் இருந்த வேளை போய் அவரைச் சந்தித்தவன். வாழ்பவர். அவர் என்னை அங் கட்டாயம் ஆதரிப்பார் என்ற நம்பி தீர்க்கும் பொறுப்பை நான் எடுக் நாள் அவகாசம் தாங்க சேர்’ 6 பெற்றுள்ளேன்.
நான் அதிபருக்கு வழங்கிய வா மசிவாளா? கலைஞர் கைகொ( நாடகம் தமிழ்த்தினப் போட்டியில் சமூகத் தாக்கத்தை ஏற்படுத்து சிவக்கொழுந்துவின் வளவுக்கு வைக்கின்றேன்.
O
வளவின் முன்பக்க கிழக்கு { ஓங்கி வளர்ந்த பென்னம் பெரிய
வேப்பமர நிழலில் என் சைக் நான், மெதுவாக வீடு நோக்கி
எந்தநேரமும் பொறிந்து, கொட்( மோசமான நிலையிலான மிகப்

$குத் தயாரிக்கப்படுவதால் போட்டித் எங்கள் கல்லூரி அதிபர் அவசரமும்,
‘சாரதா நாடகத்துக்கு வந்தே
பின்வாங்க முடியாது’ எனச் சீற்றம் ஞர் சிவக்கொழுந்துவை நன்றாகத் னசீக மாணவன். அவரின் சொந்த பலதடவை அவரின் இல்லத்துக்குப்
கலைஞர் நாடகக் கலைக்கென கீகரித்து ஆசீர்வதித்தவர். இன்று க்கையில், நாடகப் பிரச்சினையைத் கின்றேன். இதனாலே தான் "இரண்டு ான அதிபரிடமும் வேண்டி சம்மதம்
க்கைக் காப்பாற்ற முடியுமா? சாரதா டுப்பாரா? பிரளயம் மேடை ஏறுமா? வெற்றி ஈட்டுமா? துன்பியல் நாடகம் Dா? என்ற ஏக்கங்களுடன் கலைஞர் ள் வலது காலை முன்னெடுத்து
O O.
முலையில் கிளை அகலப் பரப்பி, வேப்பமரம் ஒன்று நிற்கிறது. அவ் கிளை ஸ்ராண்டில் விட்டுப் பூட்டிய நடக்கின்றேன்.
|ண்டு, இடிந்து, வீழ்ந்து, நொருங்கும் பழைய நாற்சார் வீடு அது. ஆனால்,
99 {

Page 110
EĐgóGFu u Lib! Lóla5(8LDTaFLDT60T só மிகத்துப்புரவாகவும், ஓரளவு அட
வீட்டைப் பார்த்த எவரும் சிவ கலைஞன், அதே நேரம் அவரி மிக மோசமானது என்பனவி கொள்ளுவார்கள்.
‘ஓர் ஏழை எப்படி கலையினை ( எப்படி நாடகம் தயாரிக்க முடி எப்படி மேடை ஏற்ற முடியும்? - இவை.
‘ஏனோ தெரியாது அதிகப்படிய ஈடுபடுகின்றார்கள். ஏழ்மைக்கும் சம்பந்தம்? கலைஞர்களின் ஏ கலைஞர்களுக்கு ஆதரவு அளிக் ஒன்று உருவாகாதா? - என் நெஞ் இவை.
இப்படியான கேள்விகள் மனத்து இருவர் விறாந்தையில் இருந்து கேட்கிறது.
யார் இவர்கள்? இவர்கள் என்ன கேட்கின்றேன்.
பழக்கமான அவர்களின் குரல்கள் விட்டன. ஒருவர் கலைஞர் சிவக்ெ மகளும், எங்கள் கல்லூரி மாண
غة

லையில் வீடு இருந்தபோதும், காகவும் வீடு காட்சி அளிக்கிறது.
$கொழுந்து மாஸ்ரர் நல்லதொரு * இன்றைய பொருண்மிய நிலை |ற்றை இலேசாக மட் டிட்டுக்
வளர்க்க முடியும்? சிவக்கொழுந்து பும்? பச்சோந்திகளை இவரால் என் மனத்துள் எழுந்த கேள்விகள்
ாக ஏழைகள்தான் கலைகளில் கலைகளுக்கும் ஏன் இந்தச் ழ்மையைப் போக்க முடியாதா? கும் நேசக்கரம் நீட்டும் ஸ்தாபனம் சகத்தே எழுந்த ஆவல் அலைகள்
i அலை மோதிய நேரம், யாரோ ஆர்வமுடன் உரையாடும் சத்தம்
உரையாடுகிறார்கள்?. - உற்றுக்
அவர்களை இலகுவாக இனங்காட்டி ாழுந்து; மற்றவர் அவரின் அருமை வியுமான சாரதா.
ה ثل

Page 111
w
ஆள் அடையாள ஊகம் அவர்கள் பஞ்சத்தில் உழலுக உறுதியாகின்றது.
“பிள்ளை நீ நம்பிக்கை நாடகத்தில் நடிக்கவே ே
"அம்மாவின் நிலைமை முன்கூட்டிச் சரியாக மட்டி இன்றைய நிலையில் நா படிக்க கல்லூரிக்குப் டே
“என்ன இருந்தாலும் நிறுத்தலாமா?”
"அம்மாவின் உயிர் பாதி நீங்கள் நல்லாக யோசிச் அம்மாவுக்கு கடும் ஈை நீரழிவு; பத்தாக்குறை அம்மாவை உயிர் ஆபத் நான் கொடுத்த வாக்கை கலையா? எதப்பா முக்கி
“ரெண்டும் தான்”
“மிகக் கெட்டித்தனமாகச் வேலைகளையும் ஒரே ரே அம்மாவுக்குப் பணிவிை இருக்க முடியவில்லை. ஒத்திகை என்று ஓடித்திரி

நிரூபணமானதைத் தொடர்ந்து, lன்றார்கள் என்ற எனது ஊகமும்
அளித்தபடியால் பிரளயம் வண்டும்”
இவ்வளவு மோசமாகுமென ட முடியவில்லை. அம்மாவின் ‘ன் நடிக்க மாத்திரம் அல்ல, ாகவும் இல்லை.”
நாடகத்தைப் பாதியில்
நியில் போகலாமா?. அப்பா சுக் கதைக்க வேணும். இப்ப ள, ஈளையோடு இரத்தத்தில் க்கு இரத்த அழுத்தமும். தில் இருந்து காப்பாற்றுவதா? க் காப்பாற்றுவதா?. உயிரா? கியம் சொல்லுங்கோ?”
சொல்லிப்போட்டியள். இரண்டு ரத்தில் எப்படியப்பா செய்வது? செய்ய உங்களால் வீட்டில் சதா பச்சோந்திகள் நாடக பிறியள். இன்னொன்று வீட்டிலை
--

Page 112
ஒரு சதக் காசும் இல்ை மருந்து வேண்டுவது? .ை எப்படி? கார் பிடித்து வைத் கொண்டு போவதுதான் எ
“நாடகத்தைத் தொடங்கிப் போகாது விட்டால்!.”
"நீங்கள் நாடகத்தைப் பாரு அம்மாவைப் பார்க்கிறன்.”
64
சா. ர. தா.”
“தயவு செய்து என் ை இப்போதைக்கு நெருக் நாடகத்தைவிட - நான் ஏற் - அரும்பாடு பட்டு என்னை பெரிசு. தாயிற் சிறந்ததொ சாகக் கிடக்க நான் நாடகம் பார்க்க இங்கை ஆர் இரு
இதற்கு மேல் அவர்களின் உரை நான் மேலும் பதுங்கி ஒதுங்காது { போல் “மாஸ்ரர். மாஸ்ரர்’ அழைக்கின்றேன். கலைஞர் வெள என்னைப் பண்பாக வரவேற்கிறார்
நான் வரவேற்புச் சாலையின் சு: பெரிய தில்லைக்கூத்தன் திரு போடப்பட்டிருந்த பழைய நாற்கா

\ல. காசு இல்லாமல் எப்படி வத்தியரிட்டைக் காட்டுவது தியசாலைக்கு அம்மாவைக் ЈLJIg?.”
போட்டன். தொடங்கிய நானே
ங்கோ. நான் இப்போதைக்கு
ன நடிக்கப் போகும் படி காதையுங் கோ. எனக்கு படுத்திய நம்பிக்கையைவிட ாப் பெற்று வளர்த்த அம்மா ரு கோயிலுமில்லை. அம்மா
நடிக்க ஏலுமா? அம்மாவைப் க்கினம்?.”
பாடலைச் செவி மடுக்க முடியாத ஒன்றுமே கேட்காதது - தெரியாதது
என உரத்த குரலில் கூவி யே வந்து வணக்கம் தெரிவித்து,
பரில் மாட்டப்பட்டிருந்த பென்னம் வுருவப் படத்திற்கு நேர்கீழே
லியில் அமருகின்றேன்.
ئا

Page 113
வேல் அமுதன்.இ
கலைஞர் நிலை குழம்பியதா வேதனையான விடயம் ஒன்றினை அறிகுறி எதுவும் அவரின் முகத் முற்றாக இயல்பு நிலைக்கு மாற்ற புன்முறுவல்; முகத்தில் மலர்ச்சி;
அது அன்றோ நடிப்பு. அவர் அ உண்மைக் கலைஞன். - என நா
"நான் ஒரு அலுவலாக இந்த வந்தாப்போலை அம்மாவுக்கும் போலை அம்மாவையும் பார்த்திட்டு போகலாம் என யோசித்து 6 அளக்கின்றேன்.
உபசரிப்பின் அடையாளங்களாக பனங்கட்டியும் வழங்கப்படுகின புளுக்கொடியல் கீற்றுக்களும்
புளுக்கொடியலையும் சுவைத்தே பற்றிய கருத்துக்களையும் கேட்டு மணித்தியால நேரகால உை குடும்பத்திடம் விடைபெறும்பே மேலுறையுள் இருந்த நாலு பெரிய இழுத்தெடுத்து அம்மாவின் கைய ஆறுதல் பெருமூச்சுடன் வெளிக்

க எனக்குத் தெரியவில்லை; அக்கறையாக அலசி ஆராய்ந்த
தில் தெரியவில்லை. முகபாவம்
ப்பட்டு விட்டது. அவரின் உதட்டில்
பேச்சில் நிதானம்.
ன்றோ நடிகன். அவர் அன்றோ ன் உறுதி செய்து கொள்ளுகிறேன்.
தப் பக்கம் வந்தனான். இஞ்ச சுகமில்லை என்றும் அறிஞ்சாப் }, உங்களோடையும் கதைச்சிட்டுப் வந்தனான்” என நான் பொய்
விருப்புடன் அன்பாக தேநீரும் றன. ஒரு வெள்ளித் தட்டில் பரிமாறப்படுகின்றன. தேநீரையும் தாடு கலைஞரின் நவீன நாடகம் ச் சுவைத்து ஜீரணித்த நான், ஒரு ரவிருந்துக்குப் பின் கலைஞர் ாது, சேர்ட் பொக்கற்றுள் ஒரு பச்சை நோட்டுக்களுள் ஒன்றினை ள் பலவந்தமாகத் திணித்து, சற்று கிளம்புகின்றேன்.
S தினகரன் 31-03-1996
O

Page 114
பிப்டலை அண்மித்த அந்த ஐந்: வாடிக்கையாளர்களால் நிரம்பி வ
ஞாயிற்றுக்கிழமையும் அல்லவ விடுமுறையைச் சந்தோஷமாகக் க ஹோட்டல் வேட்டை நிலந்தானே!
நாகலிங்கம் வர்த்தகரைப் பொறுத்த நாற்பதாவது பிறந்தநாள் கொண் வயதுள் புறக்கோட்டையின் மு: சர்வசாதாரண விடயமா? இவரின் பெரு வெற்றி அல்லவா அது? ஒ ஆறுதல் வேண்டாமா? இவரி கொண்டாடாமல் எப்படி விடுவ நண்பர்கள் விட்டு விடுவார்களா?.
9

றந்தநாள் பரிசு
து நட்சத்திர ஹோட்டல் இன்று ழிகின்றது.
ா? ஞாயிறு விடுமுறை நாள். ழிக்க விழையும் தனவந்தர்களுக்கு
வரை இது முக்கிய நாள். இவரின் -ாட்டம் இன்று. முப்பத்தொன்பது 5கிய புள்ளிகளுள் ஒருவரானது அயராத உழைப்புக்குக் கிடைத்த ய்வின்றி உழைக்கும் ஒருவருக்கு ன் பிறந்தநாளும் அல்லவா? து? கொண்டாடாது விட்டாலும்
-

Page 115
நாகலிங்கம் தனது ஒவ்வொரு பி பண்டிகைகளையும் பெரும் செ வியாபாரத்துக்கு அந்நேரம் தேவைப் போட்டுச் சுறாப் பிடிப்பது வழக்க ஞானத்தோடு, வர்த்தக பட்டப்ப இருக்கும?. அதுதான் நாகலிங்கத்
இன்றும், அதாவது இவரின்
கொண்டாட்டத்திற்குப் பரிசுகள் எ6 என்ற பணிவான அறிவித்தலோடு, ஏற்ற ஐந்து முக்கிய நண்பர்களை கீழ்த்தர உணர்வுகளுக்கு இை நோக்கமாக அவர்களோடு தனது வந்து இந்த நட்சத்திர ஹோட்ட
வழமையாக ஞாயிறு விடுமுறை ஹோட்டல்களில். இன்று பிறந்த பெரிய வியாபாரத்துக்கு அங்குரா நவநாகரிக நட்சத்திர ஹோட்ட இவருக்கு இன்று நட்டம் ஏற்பட ஐசுவரியம் நிறைந்த இந்த ஹோட் இருவர் இன்றுதான் முதல்
தந்துள்ளமையால் நாகலிங்கம் ( கவர்ச்சிகரமான முக்கிய இடங்க
நுழை வாசலில் ஒரு அழகிய மி அம்மணமான ஒரு அழகிய ம ஒருத்தியே அது என மயங்கச் செ செதுக்கப்பட்ட கலைச் சிருஷ்டி

றந்தநாளையும், அத்தோடு தேசிய ாண்டாட்டங்கள் ஆக்கி, தனது படும் வர்த்தகரை அழைத்து, இறால் $ம். இரத்தத்தில் ஊறிய வர்த்தக டிப்பும் கூட்டுச் சேர்ந்தால் எப்படி தின் முழு வெற்றியின் இரகசியம்!
பிறந்தநாள். மாலை வேளை. வையும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டா
தனது இன்றைய வியாபாரத்துக்கு ா வரவழைத்திருந்தார். அவர்களின் ரைபோட்டு வியாபாரம் பிடிக்கும் ஆடம்பரக் காரில் கப்சிப்” என லில் குதித்துள்ளார் நாகலிங்கம்.
நாட்களை இவர் சந்தோஷிப்பது நாள் கொண்டாட்டமும் அத்தோடு ர்ப்பணமும். எனவே இவரது தெரிவு லாக அமைந்துள்ளது. இதனால் மாட்டாது என்பது இவரின் கணிப்பு. டலுக்குத் தன்னுடன் வந்தவர்களுள்
தடவையாக இங்கே வருகை முதல் வேலையாக அவர்களுக்குக் ளைச் சுற்றிக் காண்பிக்கிறார்.
னிப் பூங்கா. பூங்காவின் மத்தியில் தின் சிலை. உயிருள்ள நங்கை ய்யும் அளவு தத்ரூபமாக சிற்பியால் அது. அந்தப் பாவை சரிவாக ஒரு
22

Page 116
குடத்தை ஏந்தி வைத்திருக்கிறா நீர் சதா சொரிந்து பாய்ந்தோடி, ப ஏற்படுத்துகின்றது.
அச்சிலையின் பிறந்தமேனி அ நாகலிங்கம் குழுவினருக்குப் பா6
“எப்படி மச்சான் வேலைப்
“சுப்பர் கிறியேசன் மச்சா6
“உயிரோடை உப்படி ஒன் - அங்கலாய்க்கின்றனர் அ
ஒரு மாதையா மட்டும் கேட்கி என்பதுபோல் அவர்களின் கண்ணெ அரை நிர்வாண நிலையில்!
ஆம்! அது ஹோட்டலின் ஒரு ஒதுக் நீச்சல் தடாகம். மெல்லிய நீ6 மின்னொளியில் ஜொலிக்கிறது அ மீன்கள்?. அல்ல, அல்ல! “மீனோ' அழகு படைத்த நீச்சலாடும் உ காளைகளும் கட்டழகிகளும்! ட உடையில் உயரிய பீடங்களில் சுழியோடி - விளையாடி மகி மகிழ்விக்கின்றார்கள்.
9

ள். அக்குடத்திலிருந்து தெளிந்த ார்வைக்கு அது மிகப் பரவசத்தை
அழகில் மனதைப் பறிகொடுத்த ல் உணர்வு கொப்பளிக்கிறது.
UITGB?”
99
ÖT
று கிடைச்சா” வர்கள்.
ன்றீர்கள்? ஒரு நூறு இதோ!. திரே ஏராளமான கனவுக் கன்னிகள்
க்குப்புறத்தில் அமைந்த நவநாகரிக லநிற வர்ணத்தில் பிரகாசிக்கும் அது. அதனுள் பல்வகை துவஞம்
என எவரையும் வியக்க வைக்கும் உள்ளுர், வெளிநாட்டு கட்டிளம் லவர்ண கவர்ச்சிகரமான நீச்சல்
இருந்து பாய்ந்து, - குதித்து - |ழ்கின்றனர்; மற்றவர்களையும்
--

Page 117
வேல் அமுதன்.இ
ஒரு சிலர் தடாகக் கரைக் கற்கட்டு கிடக்கின்றனர்; வேறு சிலர் சல் காதல் லீலைகளில் களிக்கின்றா
"6T66'60T S 6)85LDLIT2.' -6T60T நாகலிங்கம் குழுவினர் பெ
“எப்படியான வாழ்க்கை! ட
“வாழ்க்கையையே என்ஜே
“வாழப்பிறந்ததுகள்”
"நாங்களும் இருக்கிறம். உ LÓėFGFLb”
“எங்கடை மொனோட்டோனி வேணும்”
“ஒரு றிலீவ் அவசியம்”
“ஆசைகளுக்கு ஒரு வடிக
“எக்ஸாக்லி சோ”
நண்பர்கள் இப்படி, தமாசாகக் க முக்கிய கட்டிடத்தின் இரண்டாம்
ن

க்களிலும் ஓரங்களிலும் மல்லாந்து லாபிக்கின்றனர்; இன்னும் சிலர் ர்கள்.
மன வக்கரிப்புக்கு ஆளாகும் ருமூச்சு விடுகின்றனர்.
ாத்தியே மச்சான்”
ாய் பண்ணுறாங்கள்”
உழைப்பு ஒன்று மட்டும் தான்
யஸ் லைவ்க்கு ஒரு சேன்ஞ்ச்
ால் வேணும்”
தைத்தபடி, படிக்கட்டுக்களில் ஏறி,
மாடிக்கு வருகிறார்கள்.
A

Page 118
சாளர வழியாக வெளியே உற்று வெள்ளி நிலாப் பூத்திருக்கிறது மின்மினி விளக்குகள் பிரகாசிக்க விட்டது. ஆழியிலும் சில வ துறைமுகத்துள் உள்நுழைய ெ கப்பல்களில் எரியும் மின் விளக்
இந்த இயற்கை எழிற் கோலத்ை சாளரத்தின் அருகே போடப்பட்ட ே நண்பர்கள் அமர்கின்றார்கள்.
அவர்கள் இந்நேரம் அமர்ந்திருக் நாகரிக போசனசாலை.
ஜன்னல் வழியாக உட்புகும் கு படுத்துகின்றது. ஒலிபரப்பி வழி அலங்கார மின்விளக்குகளிற்கு உள்ளத்துக்கு இதமாக இருக்கின் அநுபவிக்கும் இடம் இது.
போசனசாலையில் மது நெடிவேறு இருபாலாரும் குடிக்கின்றார் சுவைக்கின்றார்கள்; சிகரட்டைப்
“என்ன மச்சான் எடுப்பம்" -
“அறாக்”

ப் பார்க்கிறார்கள். கறுத்த வானில்
நிலாவைச் சூழ்ந்து நட்சத்திர கின்றன. கடலும் கருமை நிறமாகி விளக்குகள்! அவை கொழும்பு வளியே வரிசையாக நங்கூரமிட்ட குகள்.
தைக் கண்டு மகிழும் ஆவலாகச் மேசையைச் சூழ்ந்த ஆசனங்களில்
கும் மண்டபமே ஹோட்டலின் நவ
தளிர் காற்று உடம்பை ஆறுதற் யாக பிறக்கும் மெல்லிசையும், ஊடாக ஒளிரும் தண்ணொளியும் ாறன. மேனியும், மனமும் அமைதி
பால் வேறுபாடின்றி ஆண், பெண் கள்; தின் பண்டங்களைச் புகைத்து இன்புறுகிறார்கள்.
நாகலிங்கம் விசாரிக்கின்றார்.

Page 119
“அறாக் குடிக்க இஞ்ச 6
“அப்ப பியர்'
“பொம்பிளையளின்ரை றி
“பிறண்டி’
“நோயாளிகளின் றிங்'
“நான் ஒடர் பண்ணுகிறன்
-நாகலிங்கம் அங்கே பணிவிடை கொண்டிருக்கும் வெயிற்றரிடம்
“என்ன சன்டி (Shandy) பண் தொடர்ந்து நண்பர்களை
“கொக்கா கோலா’
“எனக்கு நீற்ராக (Neat) ே
“ஒகே. ஒகே. என்ன ை
“டெவில் பீவ்”
“ஒகே!. இந்தாப்பா. உ விஸ்கி, ஐஸ்கியூப், கொ

வரவேணுமே மச்சான்”
மச்சான். விஸ்கி"
-க்கு பொறுமையாக எதிர்பார்த்துக் ஆணை இடுகிறார்.
ணப் போறியள்' - நாகலிங்கம்
விசாரிக்கின்றார்.
வேணும்”
e 99
)Lug3
உன்னைத்தான். எங்களுக்கு க்காகோலா, டெவில் பீவ்”
96.

Page 120
“ஒகே சேர்.”
அனைத்தும் மேசைமேல் பரப்பப் நண்பர்கள் ஒன்றோடு ஒன்றை மு நாகலிங்கத்தின் நல்லாரோக்கியத்
நாகலிங்கம் நண்பர்களுக்குத் தன நன்றியும் தெரிவிக்கின்றார்.
“என்ன சாப்பிடுவம்?.” - ே மெனுவில் பார்வை செலு: சகாக்களைத் தொடர்ந்து
“ஜெலோ றைஸ் வித் சிக்
“பிறைட் றைஸ் நல்லாக
“ஒகே. பிறைட் றைஸ் வி - நாகலிங்கம் ஆமோதிக்கின்றார்
நாகலிங்கம் மெனு அட்டையிற் த வகை இலக்கங்களைக் குறிப்பிட்(
“சேர் டெசேட்” - வெயிற்
“சொல்லுங்கோ’ - நா தூண்டுகிறார்.
“மிக்ஸ்ட் புறுட் சலட்”

படுகின்றன. விஸ்கிக் கிளாசுகளை ட்டி ‘ஹாற்டி சியேஸ்' என வாழ்த்தி திற்கு வாழ்த்துத் தெரிவிக்கின்றனர்.
ல தாழ்த்திப் பதிலுக்கு வாழ்த்தும்,
மசையின் மேல் பரப்பப்பட்ட த்தியபடி நாகலிங்கம் தனது
மீண்டும் விசாரிக்கின்றார்.
5கின் கறி"
இருக்கும்’
த் சிக்கின் கறி"
.
ங்களுக்கு தேவைப்படும் சாப்பாட்டு டுத் தெளிவாக ஆடர் பண்ணுகிறார்.
றரின் குறுக்கீடு இது.
கலிங்கம் நண்பர்களைத்
27

Page 121
“கேட்டுதா?”
“ஒகே சேர்” - வெயிற்றர்
அனைத்தும் அழகான பீங்கான் சே ஒருவருக்கொருவர் பரிமாறிச் சுை
“ஹலோ நாகலிங்கம் மெ6
த டே” - பிறந்தநாள் ( நண்பர்கள் திரும்பிப் பார்
அங்கே நாகலிங்கத்தின் ஆத்ம
“நாக! என்ன இன்டைக்கு - பகிடிபோல் நடா என அழைக்க விசாரிக்கிறார்.
நாகலிங்கம் தவறுக்கு மன்னி சாப்பிடுமாறு நடாவை அன்பாக
நடா, தான் சாப்பாடு முடித்து, புறப் தற்செயலாக நாகலிங்கத்தைக்
விடியற்புறம் நடந்த சம்பவம் ஒ6
“நாக, நீ காலமை கோ கிடந்துது”
f
ــــ

தலையசைக்கிறார்.
காப்பைகளில் பரப்பப்பட நண்பர்கள் )வத்து மகிழ்கின்றார்கள்.
னி ஹாப்பி றிற்ரேர்ன்ஸ் ஒவ் வாழ்த்தொலி வந்த பக்கம் க்கிறார்கள்.
நண்பன் நடா நிற்கிறார்.
என்னை மறந்துவிட்டாய்” ப்படும் வியாபார நண்பன் நடராஜா
ப்புக்கோரி தங்களுடன் சேர்ந்து அழைக்கின்றார்.
படுவதற்குத் தயாராகும் போதுதான், கண்டதாகச் சொல்லி அன்றைய
ன்றினை ஞாபகப்படுத்துகின்றார்.
யிலுக்கு போனது மாதிரிக்
-

Page 122
“ஓம் நடா. எங்கட சிவன்
“வெள்ளை வேட்டி, ஓம் தங்கச் சங்கிலியோடை ப
“சும்மா நக்கல் அடியாை
“சும்மா சொல்லயில்லை, சந்தனப்பொட்டு பூச்சுக்கு வ
“மச்சான் அம்மாவும் அப்ட அதுகளின் ரை ஆச்சாரத் வேணும்தானே'
“என்ன எப்படியென்டாலும் உனக்கு ரதி ஒருத்தி இ
99
குறை
ஹோட்டலில் எத்தனையோ எத்தனையோ இரவுகள் படுக்கை அந்த இதமான நினைவுகள் உதட்டுள் சிரித்தார்.
“நடா உதுகளை விட்டு,
என்ன விடயம்? என்ன செ பேச்சைத் திசை திருப்புக்
"மச்சான் ஜப்பானில் இருந் பண்ணி இருக்கிறாயாம். பண்ணி வைத்திரு'

கோவிலுக்கு”
முருகா சால்வை, கழுத்துத் ாக்கச் சோக்காக் கிடந்தது'
ந நடா'
வேட்டி, வெறும்மேல், வீயூதி, லு எடுப்பாகத்தான் இருந்தது'
ாவும் பழம் பஞ்சாங்கங்கள்! ந்தையும் திருப்திப்படுத்த
மன்மதக் குஞ்சுதான்டா நீ. இல்லாதது தான் ஒரே ஒரு
வகைவகையான ரதிகளுடன் ச் சுகம் அனுபவித்த நாகலிங்கம் மனத்திரையில் நிழலாட மெல்ல
வந்த விடயத்தைச் சொல்லு. ய்ய வேணும்' - நாகலிங்கம் றார்.
து ஜெனறேற்றேர்ஸ் இம்போற் எனக்கு ஒரு ஐம்பது றிசேவ்
29

Page 123
“ஒகே. இற்ஸ் லைக் ஒல்றெ நம்பிக்கை ஊட்டுகிறார் நா
வியாபாரப் பேச்சை வெற்றிகரமா பெற்று வெளியேற, நடா போட்ட
வாய்ப்பாக்கிக் கொண்டு, த ஐயிற்றங்களைக் கவர்ச்சிகரமாக அ நண்பர்கள் தங்களின் தேவைகை ஒழுங்குகளையும் பேசித் தீர்த்துக்
இன்றைய முக்கிய அலுவல் 6ெ அவருக்குக் கொள்ளை இலாபம்.
நாகலிங்கத்தின் இன்னொரு
நாகலிங்கத்தை அங்கே க விசாரிக்கிறார்கள். கதையோடு கன இன்னொரு நிகழ்வை நினைவுபடு
“மச்சான் போன வாரம் ( ஒன்றுக்குச் சிறப்பு விருந்தி
“ஓம் மச்சான் உனக்கு விழாவுக்கு வந்தியா?”
“ஓம் மச்சான் நீ வந்த மா வந்து கதைக்க ஒரு மாதி எடியுக் கேஸனலிஸ் ற்றே உன்னட்டை நான் எப்படி வ
8

டி றிசேவ்ட்” - எனச் சொல்லி கலிங்கம்.
க முடித்துக்கொண்டு நடா விடை பீடிகையை முற்று முழுதாக தன் னது இன்றைய இம் போட்டற் றிமுகம் செய்கின்றார் நாகலிங்கம். ளத் தெரிவித்து, விற்பனை முன் கொள்கின்றார்கள். நாகலிங்கத்தின் வற்றிகரமாக மேடையேறிவிட்டது!
நண்பனான பெர்ணாந்தோவும் ண் டு கொண்டதால் குசலம் தையாக பெர்ணாந்தோ நடந்தேறிய த்துகின்றார்.
எங்கடை கொலிஜ் பங்சன் lனராக வந்தாய்”
எப்படித் தெரியும்? நீயும்
திரிக்கு எனக்கு மேடைக்கு ரி இருந்துது. பெரிய பெரிய ாடை மேடையிலிருந்த ாறது. புல் சூட் உடுப்புக்கு
0.

Page 124
நல்ல எடுப்பாகவும் இருந்து பேப்பர்களிலும் படம் வந்து பெருந்தொகை வழங்கிய
பேப்பர் வர்ணித்திருந்துது
கல்லூரியின் குடிநீர் விநியோக பெருந்தொகைப் பணம் வியாப மறைத்து, வெளிப்பூச்சு வேலைய மாத்திரம் வெளிச்சம் போட்டுக்
“ஒரு இருபத்தையாயிரம் பண்ணினேன். தான தரும எல்லாம் கல்வி வளர்ச்சிச்
“வெரி குட் வெரி குட். ச
தனது நவீன வியாபார யுக்தி ( நன்குணர்ந்து உள்ளுர மக பெர்ணாந்தோவுடன் மேலும் சந் வழியனுப்புகிறார்.
நேரம் இரவு. மணி பதினொன்று அருந்திக் கலைய ஆயத்தமாகின் சிட் டை நாகலிங்கத்தின்
வைக்கப்படுகின்றது. முழுச் செ6 நாகலிங்கம் ரூபா மூவாயிரத் மடிப்புக்குள் மறைத்து வைக்கில்
--—

துது. பிறகு ஆங்கில, தமிழ்ப் இருந்துது. கலாசாலைக்குப் "வள்ளல் நாகலிங்கம்’ எனப்
ப் பொறுப்பை ஒப்பந்தம் எடுத்து ாரத்தில் இலாபம் பெற்றமையை ாக, டொனேஸன் வழங்கியமைக்கு காட்டுகிறார் நாகலிங்கம்.
மட்டும் தான் டொனேற் மும் செய்ய வேணும்தானே. 5கு மச்சான்'
ப்ே இற் அப்”
முறை நல்லாக வெற்றியீட்டுவதை கிழும் நாகலிங்கம், நண்பன் தோஷமாகக் கதைத்து அவரை
நண்பர்கள் "பிளேயின் கோப்பி றார்கள். இராப் போசனக் கட்டணச் முன்பாக ஒரு மடிப்புக் குள் 0வு மூவாயிரத்து இருநூறு ரூபாய். து ஐந்நூறுக்கு நோட்டுக்களை *றார்.
O

Page 125
வெயிற்றர் சிட்டையின் அளவு தொ முன்னூறையும் மடிப்புக்குள் வை: கொடுக்கின்றார்.
“இது உனக்கு ‘ரிப்ஸ்’ - வெயிற்றருக்கு நாகலிங்கம்
“வேண்டாம் சேர்! பத்து வீத எங்கள் எல்லாருக்குமான ரிப்ஸ் சேர்த்திருக்கு”
தனது பெருந்தன்மையை பறைசா உரத்த அதிகாரத் தோரணையில் ரி
“உங்கடை சந்தோஷம் எ - வெயிற்றர் மீளவும் மறுப்புத்
“எ.ன்.ன.!”
“ஏன் அப்பா, ஒரு பெரிய மன வேண்டாம் எண்ணுகிறாய்”
- நாகலிங்கத்தின் நண்பர் ஒ(
எழுப்புகின்றார்.
"உவரை எனக்கு நல்லாகத் ( கீழை சிற்றுாழியனாக வே மாதாமாதம் இரண்டாயிரம் மட்

கையைச் செலுத்தி, மீதி ரூபாய் த்துத் திருப்பி நாகலிங்கத்திடம்
அப்பா. நீ இதை எடு’
ஞாபகப்படுத்துகின்றார்.
சேவிஸ் சார்ஜ் அதாவது, சிட்டையிலை முற்கூட்டியே
ற்றும் நோக்கமாக, திரும்பவும் ப்ஸ்சை எடுக்கும்படி பணிக்கிறார்.
னக்கு வேண்டாம் சேர்’ 5 தெரிவிக்கின்றார்.
ரிஷன் சந்தோஷமாகத் தர
ருவர் வெயிற்றரிடம் கேள்வி
தெரியும் சேர். உவருக்குக் லை செய்தவன் நான். டும் தான் சம்பளம் தந்தவர்.

Page 126
ஐம்பது ரூபா சம்பள உய போட்டார். என்ரை அம்மால் செலவுக்கு ஒரு இரண்டாயிரம் மறுத்துப் போட்டார். உவற் நான், உவற்ரை கம்பனி
செய்துபோட்டு இந்தக் ஹோட்
oS9
(38
- நாகலிங்கத்தின் நண்பர்கள் அ
நாகலிங்கத்திற்கு உலகமே உரு 'தொம்’ என விழுந்து நொருங்கி
'ஆர் நீ?!.
- நாகலிங்கம் பேரதிர்ச்சியே
“என்னைத் தெரியவில்லைய
பழைய தொழிலாளி முத்ை
மு.த்.தை.யா.வா..?!”
இவ்வளவு நேரமாகக் கனவானாக ஆசாரப் பெட்டகமாக - தருமவா6 ஏமாற்றிய ஆசாடயூதி நாகலிங்க
f 4.

iச்சி கேட்க மாட்டன் எண்டு வின்ரை செத்தவீட்டு இழவுச் ) ரூபாய் லோனாகக் கேட்கவே
றை கஞ்சத்தனத்தால் தான்
வேலையை இராஜினாமாச் உடல் வேலையில் சேர்ந்தனான்
|யர்ந்து விடுகிறார்கள்!
நண்டு கீழே அதள பாதாளத்தில் யது போல் இருந்தது!
பாடு வினாவுகின்றார்.
ா? நான் தான் சேர் உங்கடை
தயா!'
5 - வர்த்தகச் சக்கரவர்த்தியாக - னாக இனம் காட்டி, சமுதாயத்தை த்தின் முகத்திரை பரிதாபமாகக்
六、飞 03

Page 127
கிழிந்து விழ, கேவலப்படுத்தப்பட் குறுகி, இவர் நிலை இழந்து பே கறுத்தது; உடல் மணிமணியாக வார்த்தைகள் வெளிவரவே இல்ை
கிரீடம் இழந்த வர்த்தக சக்கரவ உற்று நோக்குகின்றார்.
அவன் முத்தையாவேதான்! இது கவனிக்கத் தவறி விட்டாரே!
முத்தையாவின் இன்றைய எடுப்பா
அழகான குறுந்தாடி முதலியவை முற்றாக மறைத்து விட்டனதான்!
{1

ட துர்ப்பாக்கிய நிலையில் கூனிக் ானார். தலை கவிழ்ந்தது; முகம் வேர்த்தது; வாய் அடைத்தது;
Ꭰ6u!
Iர்த்தி திரும்பவும் முத்தையாவை
வரை நேரமாக அவனை இவர்
ன சீருடை- தடித்த, கறுத்த மீசைஅவனின் ஆள் அடையாளத்தை
SC வீரகேசரி 21-04-1996

Page 128
‘தலியார்’, ‘முகாந்தரம், 'விதானையார்’ முதலிய பட்டம், ட ஆய்வுமின்றி அவர்கள் அனைவரும் அவசர முடிவுக்கு வரும் ஒரு சாரா செய்கிறார்கள்!.
இப்படிப்பட்ட ஒருவரே பிரபல வா என்றால் ஆச்சரியமாக இருக்கிற
அது, அவரின் பலவீனம்!
முதலியார் அரசகேசரி’யைக் ே
அவர் ஊரறிந்த பிரமுகர். ராஜே கொள்ளுப்பேரன் என்ற ஒரே க விசாரணை செய்து அறிந்திராத ( நியமித்துள்ளார் வங்கி முகாமை

ஒட்டுண்ணி
‘மணியகாரன்’, ‘உடையார்’, தவிகளைக் கேட்ட உடன் எதுவித ) உயர்ந்தவர்கள் என்ற முற்கூட்டிய ர் இன்னமும் எம்முள் இருக்கத்தான்
ங்கி முகாமையாளர் அருளம்பலம் தா?.
கள்விப்பட்டிருப்பீர்கள்!.
சகரன் முதலியார் அரசகேசரியின் ாரணத்துக்காக அவனைச் சரிவர போதும் வங்கியின் சிற்றுாழியனாக யாளர் அருளம்பலம்.
;ہ:چیز:چپچمچہ

Page 129
அன்பு செலுத்தி வளர்த்தல் ஆரே வளர்த்தல் கெடுதல் தருவது. ராஜ் கொடுத்து வளர்க்கப்பட்டவன். ெ போது, அதிகப்படியான செல்லம்
செல்லத்தின் விளைவாக ராஜே வீண் படாடோபம் - துராசை - துர்க்குணங்கள் குடிகொண்டு வி
அவன் எப்பொழுதும் மடிப்புக்
அறாத சிகரெட் புகைப்பு - அதிக விலை மாதுக்களின் அணைப்பு மு
அடிமையாகிவிட்டான்.
ராஜசேகரனுக்குப் பள்ளிப் படிப் இன்னொரு பாதிப்பு அது. முக்கித் ஆனால், O/L வகுப்பைத் தாண்டி
அவனுக்கு இப்பொழுது வயசு மு இல்லாமல் - வீட்டுக்குப் பாரமாக
வழி தேடாமல் இருக்க முடியுமா
எனவேதான், செல்வாக்கைப் பா6 சேர்ந்துகொண்டான்.
ராஜசேகரன் பெரிய இடத்துப் பி
f

ாக்கியமானது; செல்லங் கொடுத்து ஜசேகரன் அதிகப்படியாக செல்லம் சல்லமே வளர்ச்சியைப் பாதிக்கும் எத்துணை தீங்கினை ஏற்படுத்தும்?.
சகரனின் அகத்தில் ஆடம்பரம் - ஆணவம் - அகந்தை முதலிய ட்டன.
குலையாத உடுப்பு - தொடர்ச்சி கப்படியான மது போதை வார்ப்பு - தலிய தீய பழக்க வழக்கங்களுக்கு
புச் செல்லவில்லை, செல்லத்தின் தக்கி O/L வரை ஒருவாறு ஏறினான்; டினான் இல்லை!
Dப்பது. இன்னமும் வேலை வெட்டி
5 ஆடம்பர செலவுக்குத் தன்னும் 2.
வித்து வங்கியில் சிற்றுாழியனாகச்
ள்ளை அல்லவா?.
06:

Page 130
எனவே, அவன் வங்கியிலும் ெ இல்லை! நீட்டுக் கயிற்றில் கட்ட
அவன் வங்கியுள் சுழன்றடித்து ஓடி அளவுக் கதிகமாக அளவளா6 செல்வாக்குள்ள ஒரு பெரியாள்
ஆனால் , அலுவலகர் யாரும் கவனிப்பதில்லை; கண்டிப்பதும்
வேறொன்று. ராஜசேகரனுக்கு சேர்ந்தவன் என்ற உணர்வும், முதலியார் பரம்பரை என அலட் பீற்றித் தள்ளுவான்.
முகாமையாளர் அருளம்பலமோ குடும்பத்தில் பிறந்தவர் - நல்ல குணக் குன்று - ஒழுக்கசீலர் -
அயராத உழைப்பால் வங்கிய நிலையிலிருந்து படிப்படியாக உய ஸ்தானத்திற்கு உயர்ந்திட்ட முய
சுருங்கச் சொன்னால், அவர் ஒரு
ஆனால் பரிதாபம்! கோணல் அள அவரைக் குறைந்த சாதிக்காரன்
f ش؟

பெரிதாகக் கட்டுப்படுத்தப்படுவது ப்பட்டுள்ளான்.
யாடித் திரிவான். அலுவலர்களுடன் புவான்; சிரித்து மகிழுவான். போன்று காட்டிக் கொள்ளுவான்.
அவனை அதிகப்படியாகக் இல்லை!
தான் பெரிய 'அடிகொடியைச்
சாதித் தடிப்பும் ஜாஸ்தி. தான் டுவான்; பெரிய சாதிமான் எனப்
எளிமையான, கண்ணியமான வர் - கல்விமான் - கனவான் - நம்பிக்கைக்குரியவர்.
பில் எழுது வினைஞன் என்ற பர்ந்து முகாமையாளர் என்ற உயர் ற்சியாளர்; மிக மதிப்புக்குரியவர்.
மாமனிதனாக மதிக்கப்படுகின்றார்!
வு கோலின் பிரகாரம் ராஜசேகரம்
என மதிக்கின்றான்.
27

Page 131
வேல் அமுதன்.இ
கடைநிலை ஊழியனான ரா வெளிப்படையாக அவமதிக்க மு
ராஜசேகரனும் அதே வங்கியி காரணத்தினால் சம்பிரதாயத்து மதிக்கின்றான். கீழ்ப்படிவு, மட் செய்கின்றான் - எல்லாம் வெறும்
ராஜசேகரனுக்கு ஆங்கிலத்தில் ே அது. ஆங்கிலத்தில் பேசுவோர் ‘ட தப்பெண்ணம் அவனுக்கு.
தமிழர் பிரதேசம், வாடிக்கையாள முகாமையாளர் பேச்சுத் தமிழில் பூஜ்ஜியமான ராஜசேகரன் புறே தள்ளுகிறான்.
ஒரு தடவை. ஒரு நல்ல முஸ்ப
‘நான் யாழ்ப்பாணப் பட்டணத்தில் வந்து "ஐ ஆம் மேட் இன் ஜப் town) என வெளுத்து வாங்கினா
இன்னொரு தடவை. நான் நன்ற
எனச் சொல்ல வந்து "ஐ ஆம் ஏ typewriter) 6T6örp 66TT fig5 g56ite

ஜசேகரன் வங்கி முதல் வரை լգավԼՕT?.
ல் தொழில் புரியும் ஒரே ஒரு க்கு வங்கி முகாமையாளரை டுமரியாதை போன்று பாசாங்கு
நடிப்பு!
மாகம் - பரம்பரை வழி மனநிலை படித்தவர்’, ‘பெரிய மனிதர்' என்ற
f தமிழர் என்ற நல்லெண்ணத்தில் பணிவாகப் பேச, ஆங்கில அறிவு ாக்கின் இன்கிலீசில் விளாசித்
ாத்தி!
) வளர்ந்தவன்’ எனச் சொல்ல OTT Joj60ör', I am made in Jaffna ன். - ஒரே சிரிப்புத்தான்!
கத் தட்டச்சு செய்யக் கூடியவன் (5' 60J Jhoomsbpff I am a good ரினான். - சிரிப்புத்தான்!
s

Page 132
மற்றொரு தடவை. பெரும் ந6 அரங்கேறியது.
வங்கி அலுவலாக வங்கி முதல்
வாடிக்கையாளர்கள் வந்திருந்
ஒருவரிடம் வந்த காரணத்தை
"குட் மோனிங் மடம்”
“வணக்கம்”
"606) (335ub?' (Why came?
"முகாமையாளரைச் சந்திக்
"அவுட்சைட் வெயிற் பிளிஸ்
வங்கி முகாமையாளரின் அறை முகாமையாளரிடம்,
“சேர், காஸ் கம் ரூ லேடீள Sir, has come two ladies. Il
முகாமைளாருக்குத் தலை சுற் வைத்திருக்கிறேன் என்று சொல் வைத்திருக்கச் சொல்லுகிறான் புரிந்துவிட்டானா?. கீழ் மை
-
ئا

கைச்சுவை நாடகமே வங்கியினுள்
வரைச் சந்திக்க இரு வங்கி பெண் தனர். ராஜசேகரன் அவர்களுள் ஆங்கிலத்தில் விசாரிக்கின்றான்.
99.
585
to' (Outside wait please)
பில் நுழைந்த ராஜசேகரன் வங்கி
b. & கீப் வன், யூ கீப் வன்.” Keep one. you keep one
றியது. ‘ஒரு பெண்ணை நான் கிறான். இன்னொருத்தியை என்னை
இவன் என்னைத் தப்பாகப் படுத்துகிறானா?. கேவலப்
09

Page 133
படுத்துகின்றானா எனப் பல்வேறு விளங்காது தடுமாறுகின்றார் முக
'விமலா இங்க வா அம்மா தனது செக்றட்டரியை அ6
“இவன் ராஜசேகரன் ஏதே ஒன்றுமே விளங்கவில்லை.
விமலா விபரமாக விசாரித்தாள்.
வங்கி முகாமையாளரை இரு வேறு வர, அவர்களில் ஒருவரை ( முகாமையாளரைச் சந்திக்க ஆங்கிலத்தில் ராஜசேகரன் சொ என்பது வெளிச்சமானது!
அதனை விமலா முகாமையாள விழுந்து சிரிக்க, விமலா சிரிக்க சிரிப்பு வேகமாகப் பரவியது. அg வந்த மற்றைய வாடிக்கையாளர் சிரித்து மகிழ்ந்தனர்.

விதமாக யோசித்து - ஒன்றுமே TGOLDu JT6TŤ.
!' - வங்கி முகாமையாளர் ழைக்கிறார்.
ா அலம்புகிறான். எனக்கு விசாரியுங்கோ அம்மா”
நடந்தேறிய விடயம் தெளிவானது.
று பெண் வாடிக்கையாளர் சந்திக்க வெளியே நிறுத்தி, மற்றவரை அனுமதிப்பதாக தான் அறிந்த ல்ல விழைந்து, வந்தது விபரீதம்
ருக்கு விளக்க, அவர் விழுந்து, , அலுவலகம் முழுவதும் வெடிச் லுவல்களைக் கவனிக்க வங்கிக்கு 5ளும், வயிறு குலுங்கக் குலுங்கச்
o

Page 134
இன்று வியாழக்கிழமை.
வங்கி முகாமையாளர் அருளம்ப வேலையை அதாவது கலியான சென்றுவிட்டார். வங்கி மிகச் சுறு:
கலியாணம் ஒரு சாயிபாபா சமி
கடந்த சில மாதங்களாகக் கூட்டு பாடும் மதுரக் குரல் பாடகன் ஒ பாடகி ஒருத்திக்கும் மெல்ல ெ கால கதியில் காதலாக முகி பெற்று மலர்ந்து, சமித்தியின் நிறைவேறியுள்ளது.
கலியாணம் சமித்தியின் முழு கல்யாணமாக, சமித்தி மண்டபத் முறைகளுக்கும், சாதாரண நடை
மிக எளிமையாக, அதேவே6 திருமாங்கல்யம் சூடல், நல்லோர் கோட்பாட்டு எல்லைகளுக்குள் ம
கலியாணப் புரோகிதர் வங்கி மு
ஆச்சரியமாக இருக்கிறதா?.
ஆச்சரியப்படுவதற்கு அப்படியொ
அடக்க ஒடுக்க பண்புகளுக்கு அது!

லம் அரை நாள் லீவில் ஒரு வெளி னம் ஒன்றினை நடத்தி வைக்கச் சுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது.
த்தியில்.
பஜனையினைத் தலைமை தாங்கிப் ருவனுக்கும், அப்பஜனைக் குழுப் மல்ல அரும்பிய பரிவு உணர்வு ழ்ந்தது. இன்று காதல் முழுமை
நல்லாசியோடு கலியாணமாய்
ழ அனுசரணையோடு சமித்திக் ந்தில் சாய் சமித்தி மார்க்க விதி முறை ஒழுங்குகளுக்கும் இணங்க ளை இனிமையாக ஆராதனை, ஆசீர்வாதம், விருந்துண்ணல் போன்ற ட்டுப்படுத்தப்பட்டு நடைபெறுகிறது.
)காமையாளர் அருளம்பலமே!
ன்றுமே இல்லை!
அவருக்குக் கிடைத்த வெகுமதி

Page 135
வேல் pg5قd ..... کے
அருளம்பலம் உண்மை சாயி வி மன ஈடுபாடோடும் சாயீசப் பக்திே பத்து மணிக்கு நிறைவெய்திட
செய்து, கலியாணத்தில் பங்குபற் வேட்டி - சேட் - வீயூதிப் பூச்சு - ச| புத்துணர்வும், புதுப்பொலிவும பதினொன்றரை மணிக்கு வந்து
கொஞ்சம் வாடிக்கையாளர்கள் மு காத்திருந்தனர்.
முகாமையாளரைச் சந்திக்க வே6 கிரமத்தில் வரிசையாக நின் புறம்போக்கான சற்சதுர கண்ணா கருமங்களை ஆற்றுவிக்கின்றனர்
அரைக்கை நாசனல் சேட், வேட்ப மெல்ல மெல்ல அருளம்பலத்தின் பார்வை அச்சத்தைப் பிரதிபலிக்கி முகம் சற்று அதிகப்படியாக செய்கின்றது.
அவர் தன்னை இரும்புக் க இம்மானுவேற்பிள்ளை என அறி
“வாங்கோ இம்மானுவேற்பி விடயம்?. சொல்லுங்கோ! :
行 شا

சுவாசி; உயர்ந்த சாயி பக்தன்! போடும் அவர் ஆற்றிய புரோகிதம்
மற்றைய கடமைகளை நிறைவு 2றிய அதே மங்கலக் கோலத்தில் ந்தன - குங்குமப் பொட்டுக்களுடன் )ாக வங்கிப் பணிமனைக்குப் சேர்ந்துவிட்டார்.
pகாமையாளரை சந்திக்க இன்னம்
ண்டியோர் வந்து சேர்ந்த ஒழுங்குக் ாறு, ஒவ்வொருவராக அவரின் ாடித் தனியறையுள் நுழைந்து தம்
டி அணிந்த ஒருவர் பயபக்தியோடு அறையுள் நுழைகின்றார். அவரின் ன்ெறது. எண்ணெய் கசியும் கருநிற எண்ணெயை முகத்தில் ஊறச்
கடை நிர்வாக உரிமையாளர் முகப்படுத்துகிறார். s
பிள்ளை! இருங்கோ. என்ன என்ன செய்ய வேணும்?”
2

Page 136
முகாமையாளர் உற்சாகமாகவி விசாரிக்கின்றார்.
"சேர் ஒரு OD ஒழுங்கு ெ
“அதுக் கென்ன! செய் 6 இம்மானுவேற்பிள்ளை கா மெய்ன் வீதியில் தானே?”
“ஓம் சேர்”
“உங்களுக்கு எங்கடை வ இருக்கு. இல்லையா?”
“என்னட்டை பிக்ஸ்ட் டிபொ சேர். இது ஒரு அவசர ே
“சொல்லுங்கோ'
“ஒரு OD ஒழுங்கு செய்து போலை கவனிப்பன் சேர்?
“மு.ந்.தி.ப். போ.லை?!.”
வங்கியின் முகடு தகர்ந்து, நொரு தலைமேலே தொம் என விழுந் அவர் மனப் பாதிப்பிலிருந்து மீ

பும் அதே நேரம் பணிவாகவும்
சய்து தரவேண்டும்”
வம் . உங்கடை தானே ட்வெயார் ஸ்ரோர்ஸ்’? அது
ங்கியில் கறன்ட் எக்கவுண்டும்
சிற் சேட்டிபிக்கற்றும் இருக்குது தவை சேர்.”
தந்தால், உங்களை முந்திப்
வ்கி, சுக்கு நூறாகி முகாமையாளரின் தது போல் இருந்தது அவருக்கு. ா ஒரு கணப் பொழுது கழிந்தது.

Page 137
உணர்ச்சிக்குப் பலி போகாது, அ முக்கிய நேரம் இது என்ற என நிதானமும் ஆனார். 'முந்திப்போ மூடுமந்திரம் என எண்ணிக்கொ6 செய்யலாம் என எண்ணினார்.
ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவரா தானே எனக் கதை தொ இம்மானுவேற்பிள்ளையை முக ஞாபகமும் பளிச்சிட்டது”
"நேற்று ஒரு சின்ன அவச
“சொல்லுங்கோ'
"செக் ஒன்று மாற்றுவித்த சின்னச் சந்தோஷம்.”
"குடுத்தீங்களா?”
“ஓம் சேர்”
மேலும் விசாரணை தொடரப்பட் அதிகாரிகள், முக்கிய சிரேஷ்ட அ அவர்களிடம் தான் உதவி பெற்ற வாங்கும் கபட நாடகம் அம்பல

றிவு ரீதியாகச் செயற்பட வேண்டிய ன்னங்கள் மேலோங்க அமைதியும் லை!" என்ற சொல் ஒரு மர்மத்தின் ண்டார். மர்மத்தைத் துலக்க என்ன
க, நேற்றும் வங்கிக்கு வந்தீர்கள் டுத் தார். முன் னைய தரினம் ாமையாளர் வங்கியினுள் கண்ட
ர வேலை சேர்”
னான். ராஜசேகரனுக்கு ஒரு
-போது ராஜசேகரன் வங்கி உயர் லுவலர்களின் பெயரைக் குறிப்பிட்டு, தாகப் பொய் சொல்லி, கைலஞ்சம் மானது!
丁丁飞

Page 138
"இம்மானுவேற்பிள்ளை!”
“ஓம் சேர்”
“எனக்கு நீங்க ஒரு சின்ன உங்களைக் காப்பாற்றுவது 6 இந்த வங்கியில என்ன கேட்டாலும் செய்வித்துத் பற்றி ஏராளம் புகார்கள் வ எப்பிடி சந்தோஷம் வாங்கி என்டதை விபரமாகச் சொல் செய்தான்?. விளக்கமாகச்
முகாமையாளரின் நட்பு சிற்றுாழி பெறுமதி வாய்ந்தது அல்லவா? 6 கணக்கிட்டு இலாபத்தை மாத் வர்த்தகர் இம்மானுவேற்பிள்ளை. வி வாக்களித்த வாய்ப்பு வசதியை
நழுவ விடவில்லை.
இம் மானுவேற்பிள்ளை ராஜ அனைத்தையும், அவனைப் ப விடயங்களையும் விபரித்தார். மு உதவினான் என்ற விபரமும் தெ

உதவி செய்ய வேணும்? ன்ரை பொறுப்பு உங்களுக்கு அலுவல் எண்டாலும், எப்ப தாறன். இவன் ராஜசேகரம் ங்கிக்கு வந்திருக்கு. இவன் றான்? என்ன செய்கிறான்? bல வேணும். நேற்று என்ன சொல்லுங்கோ.”
பனான ராஜசேகரனின் நட்பைவிட வாழ்க்கையில் இலாப நட்டத்தைக் நிரமே முக்கியப்படுத்தும் அசல் பங்கி முகாமையாளரே உதவுவதாக அவர் நழுவ விடுவாரா?.
சேகரனின் நடவடிக் கைகள் ற்றி அவர் அறிந்திருந்த சகல ன்னைய தினம் செக் மாற்ற எப்படி ரிவிக்கப்பட்டது.
s

Page 139
மிக இலேசாக செக் மாற்றக்கூடி இருந்த போதும், அதற்கு விலை தேவையானது எனச் சோடித் ராஜசேகரன் செக் பற்றிக் கதைப்ட முகாமையாளரின் புகார்க் கை நடப்பனவற்றை மங்கலாகக் க வெளியே நிற்போர் கேட்க முடிய
உண்மையில் ராஜசேகரன் இன் ஒருவரின் செத்தவீடு ஒன்று என் நாள் லீவு தரும்படியும்தான் நேற்று லீவுக்குச் சம்மதிப்பதாகத் தலை அ வெளியே தொலைவில் நின்று கூர்ந் தன் செக்கினை மாற்ற அனுமதி 6 மாற்றப்பட்ட செக் தொகையில் ஒ ராஜசேகரனுக்குக் கொடுத்தும் இ
இந்த வகையில் பலரை வெற்றிகர இரத்தத்தை உறிஞ்சி தன் சொந்த ராஜசேகரன்.
இம்மானுவேற்பிள்ளையின் OD சுை மரியாதையாக வழியனுப்பப்பட்ட
பிற்பகல் ஒரு மணி.

ய நடைமுறை ஒழுங்கு வங்கியில்
ஏற்றி முகாமையாளரின் அனுமதி து, முகாமையாளரை அணுகி து போல் பாசாங்கு செய்திருந்தான். ன்ணாடி அறையமைப்பு - உள் ாட்டும்; ஆனால், உரையாடலை
பாது.
றைய தினம் முக்கிய உறவினர் றும் அதிற்தான் பங்குபற்ற அரை
வேண்டியிருந்தான். முகாமையாளர் அசைத்ததைக் கண்ணாடி அறைக்கு 3து கவனித்த இம்மானுவேற்பிள்ளை வழங்கியதாக எடுத்துக் கொண்டார். ரு நூறு ரூபாவைக் கைக்கூலியாக இருந்தார்.
மாக ஏமாற்றி - கைக்கூலி வேண்டி,
வாழ்க்கையைச் சுவை ஆக்குபவன்
எக்கமின்றி செய்விக்கப்பட்டு, அவர் T.
s

Page 140
'குட் ஆவ்ற்ற நூண் சேர்’ என்ற முகாமையாளரின் அறையினுள் நு வங்கி முகாமையாளருக்கு கோ
அவனை வேலையிலிருந்து இர
செய்வதாக ஆங்கிலத்தில் சத்த
அவளிடம் இராஜசேகரனின்
விபரங்களையும் சொல்லி, இை
ரைப் பண்ணும்படி பணித்தார்.
“சேர்!. ஏன் சேர்?." - ரா வரவில்லை.
"நீ வங்கியின் நற்பெயரை
“சேர். சேர்.”
“நீ லஞ்ச ஊழற் பேர்வழி. இலஞ்சம் வாங்கி உள் வேலைக்குப் போதிய ஆ உன்னிலை கடும் நடவடிக்ை முதல் உடன் நடவடிக்கை இருந்து இரண்டு கிழமைக் நிறுத்தம் செய்கிறன். அதுக்கு நடைபெறும்’
f ش؟

வாழ்த்தொலியோடு ராஜசேகரன் ழைகின்றான். அவனைக் கண்டதுமே ம் கொப்பளிக்கிறது.
ண்டு கிழமைக்கு இடைநிறுத்தம் மிட்டார். விமலாவை அழைத்தார். இடைநிறுத்தத்திற்கான முழு -நிறுத்தற் கடிதம் ஒன்று உடன்
ஜசேகரனுக்கு வார்த்தைகள்
நாசமாக்கி விட்டாய்!”
எங்கடை பெயரைச் சொல்லி ளாய். உன் ரை ஊத்தை தாரம் கைவசம் இருக்கு. க எடுக்காமல் விட முடியாது. பாக உன்னை இண்டையில் கு வேலையிலிருந்து இடை |ள் அலுவலக விசாரணைகள்

Page 141
ராஜசேகரன் இன்று செத்தவீடு கொண்டான்!. அவனது உடல் மணி மணியாகக் கொட்டியது; ெ
அவனால் இன்னும் நிலையாக நிற விருட்சம் பாட்டற விழுவதுபோல் கால்களை இறுகப் பற்றினான்; ட இம்முறை - ஒரே ஒரு முறை மன்னிக்கும்படி கெஞ்சினான்; இ செய்ய மாட்டேன் எனச் சத்தி பூசையும் செய்தான்.
அருளம்பலம் உத்தமர், உய உதறுபவரோ அல்லது உதைப்
என்னவோ தெரியாது, அவருக்கு அவரின் மன்னிக்கும் - மறக்கும் ச அருளியது.
பாவமன்னிப்பு ஒரு நல்ல ஆய ராஜசேகரன் என்ற சமூக ஒட்டுள் ஆற்றல் உண்டா?.

தனக்குத்தான் என்று எண்ணிக் நடுங்கியது; வியர்த்தது; வியர்வை சய்வதறியாது மரமானான்!
}க முடியவில்லை. புயலுள் சிக்கிய பாட்டற விழுந்து முகாமையாளரின் ாதங்களைத் தடவினான்; தன்னை
- கடைசி முறையாக மனமார }னிமேல் இப்படியான வேலைகள் யம் செய்தான்; கண்ணிரால் பாத
Iர்ந்தவர்; காலைப்பிடித்தவனை பவரோ அல்ல.
) அவனில் அனுதாபம் பிறந்தது!
பாவம் அவனை மனமார மன்னித்து
தம்தான்! ஆனால், அப்பண்புக்கு ன்னியை வெட்டி வீழ்த்தும் பாரிய
S வீரகேசரி 28-07-1996
18

Page 142
எமது முன்னைய
வேல் அமுதன் எழுதி வேல் வெளியீடாக மல
L) அறுவடை - ந D வைகறை - சி 0 மாரீசம் - சிறுக (சாகித்திய மண்ட 0 வாழும் வழி -
வேல் அமுதன் பற்றிய
அமுதனின் எழு
ஓர் கண்ணோ -கலாநிதி நா. சுட்
D தனி மனித நிறு ~ கலாநிதி நாகலி
ஏனையவை
() ஈழத்தில் ஒப்ப - கலாநிதி இ. பா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ག வெளியீடுகள்
ர்ந்தவை
ாடகம்
றுகதைத் தொகுப்பு கதைத் தொகுப்பு ல தேசிய விருது பெற்ற நால்) நாடகத் தொகுப்பு
EᎧ6ᎠᎷ .نه لرله
ਤੇ ததுககள "Lub
பிரமணிய ஐயர்
வனம் ங்கம் சண்முகலிங்கன்
னைக் கலை Uசுந்தரம்

Page 143
வேல் அமுதனின்
வழித்துணை .
நிச வாழ்க்கைச் சிக்கல்கள்
 
 
 
 

அடுத்த வெளியீடு
சிறுகதைத் தொகுப்பு
ரின் அழகிய சித்தரிப்பு இது!
20

Page 144
ଐନ୍ତି l மாயெழு,
ஒரு எழுத்தாளன் மனிதன் எப்படி களுக்குச் சிறந்த
இலங்கையின் வி மக்களைப் பாதித் இழப்புக்களைச் ச என்றும் மனம் தொடரும் மிடுக்கு தொடர்பவர் மனிதம் இவர் உ தொழில் வள்ளு
எப்பொழுதும் என் அழகாகவும், சிறப் சிந்தித்துக் கொன்
இலங்கை அறிவு மகவம் எனும் அமைப்புக்கள் இ6
(5 996) 1651 பேச்சாளராக நெறியாளராக g560616) 160TTG 960) தனித்துவமானை நிறுவனம் என்ப இர்மம் இவரின்
வேட்கைக்குக் கிை
囊萎
 

குரும்பசிட்டியூர் 岛、 இமுதன்
எப்படி இருக்க வேண்டும்?. ஒரு வாழவேண்டும்?. போன்ற கேள்வி நிதர்சனம் இவர்
ரலாற்றில் 1958க்குப் பின் தமிழ் த ஒவ்வொரு அரசியல் நிகழ்விலும் ந்தித்தவர் இவர் ஆனாலும் இவர் தளர்ந்து விடவில்லை; மீண்டும் டன் தனது வாழ்க்கைப் பயணத்தைத்
யிர் மூச்சு கலை, இலக்கியம் இவர் வம் இவர் வாழ்க்கை வழி
தையும் புதிதாகவும், புதுமையாகவும், பாகவும் செய்ய வேண்டும் எனச் சதா ண்டிருப்பவர் செயலிலும் சாதிப்பவர்
இயக்கம், தகவம் மதி அக்கடமி, கலை, இலக்கிய கலாசார, கல்வி வரின் சாதனைகள்
ாக, ஆசிரியராக எழுத்தாளராக, நிர்வாகியாக நாடக ஆசிரியராக, திருமண ஆலோசகராக, குடும்பத் மயும் இவரது ஒவ்வொரு பரிமாணமும் வ; அவை இவர் ஒரு தனிமனித தை உறுதி செய்வன.
ஐந்தாவது நூல்; இவரின் இலட்சிய டத்த வெற்றி இது
கவிஞர் மாவை வரோதயன்
LLYLLLL LLL LLL LLLL SGGGL CCLLS LCCLL 0 0S SSSLSS
SS